Thursday, March 23, 2023
முகப்புசமூகம்நூல் அறிமுகம்நூல் அறிமுகம் : பசுவின் புனிதம்

நூல் அறிமுகம் : பசுவின் புனிதம்

-

பசுவின் புனிதம்
பசுவின் புனிதம்

“பசுவதை தடை சட்டம் வேண்டும்.”

“பசு புனிதமானது அதன் கறியை உண்ணுவதை தடை செய்ய வேண்டும்.”

“பசுவதை என்பது இசுலாமியர்களின் ஆட்சியினால் ஹிந்துகளுக்கு வந்த சோதனை.”

“பசு ஹிந்துக்களின் கடவுள். பசுவின் மூத்திரம் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி படைத்த சர்வ ரோக நிவாரணி.”

மேற்சொன்ன கூற்றுகளை இந்துமதவெறி கும்பல் நரிப் பிள்ளை போல் சொல்லி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக பாஜக ஆட்சிக்கு வரும் மாநிலங்களில் முதல் வேலையாக பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்படுவதை நாம் கவனிக்கலாம்.

இந்த கும்பலின் இந்த “பசுவின் புனிதம்” என்ற கூற்று ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள இசுலாமியர்கள், கிறிஸ்துவர்கள், தலித் மக்களை குறி வைத்து தாக்குகிறது. இந்தியா முழுவதும் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் ஆயிரகணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், அதிக புரத சத்துள்ள மாட்டுக் கறி போன்ற உணவுகள் அவர்களின் உயிரை காக்க உதவும். ஆனால் இந்த இந்துத்துவ கும்பல் சிறுபான்மை மக்களை ஒடுக்கவும், பெரும்பான்மை இந்து மக்களை அவர்களுக்கு எதிராக திருப்பவும் “பசுவின் புனிதம்” எனும் இந்த தந்திரப் பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.

“பசு புனிதமானது”

“கோமாதா பால் கொடுக்கிறது”

“பசுவின் கோமியம் பாவங்களை தீர்க்கவும், தோஷங்களை போக்கவும், பல நோய்களை தீர்க்கவும் உதவுகிறது”

“இந்துக்களின் புனித பசுக்களை கொல்வது பாவத்திற்குரிய செயல்”

என்கிறார்கள் இந்துமத வெறியர்கள்.

பசுவின் மாமிசம் உண்ணும் பழக்கம் இந்துக்களுக்கு இருந்ததா இல்லையா?

அதை இசுலாமியர்கள் தான் இந்தியாவில் அறிமுகப் படுத்தினார்களா?

பார்ப்பனர்கள் மாட்டுக் கறியை உண்ட வரலாறு என்ன?

Myth of the Holy Cowஇந்தக் கேள்விகளுக்கு விடை தரும் விதமாக வரலாற்று ஆய்வாளரான டி.என்.ஜா மிக முக்கியமான புத்தகம் ஒன்றை தந்துள்ளார். மேட்ரிக்ஸ் புக்ஸ் நிறுவனத்தின் பதிப்பில் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ள “The Myth of Holy Cow” எனும் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் “பசுவின் புனிதம்” என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது.

வேதங்கள் மற்றும் இதர பார்ப்பன வரலாறு நூல்கள், இலக்கியங்கள், பவுத்த, சமண சமய நூல்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு பண்டைய கால இந்தியாவில் மாட்டுக் கறி உண்ணுவதும், பசுவை பலியிடுவதும், குறிப்பாக பசுவின் மாமிசத்தை உண்ணுவதும், இந்து, பவுத்த, சமண சமய மக்களிடம் மிக இயல்பாக இருந்த ஒரு நிகழ்வு என்பதை பல ஆய்வுகள மூலம் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். முழு முடிவுகளும், ஆதாரங்களும், வேதம் மற்றும் பிற இந்து சமய நூல்களில் இருந்தே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மதவாதிகள் இந்த புத்தகத்தை வெளிவரவிடாமல் செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டனர். முதலில் இதை பதிப்பிக்க ஒப்புக் கொண்ட டெல்லியை சேர்ந்த புத்தக பதிப்பகம், மதவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து ஒதுங்கியது. பின்னர் இதை மேட்ரிக்ஸ் நிறுவனம் பதிப்பிக்க முன் வந்தது. ஆனால் 2001 ஆகஸ்டில் வந்த இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கி விட்டார்கள் மதவாதிகள். அதனால் லண்டனில் இருக்கும் வெர்சோ பதிப்பகத்தாரின் மூலம் உலகம் முழுவதும் இந்த புத்த்கம் முதலில் வெளியிடப்பட்டது. இந்து மதவெறியர் ஒருவர் டி.என். ஜாவுக்கு மரண தண்டனை அறிவித்து ‘பத்வா’ கொடுத்து விட்டார்.

வேத காலத்தில் மக்கள் பசுவை முக்கிய உணவாக உண்டு வந்தது மட்டுமில்லாமல், மதிப்பிற்குரிய உணவாகவும் கருதி வந்தனர். யாகங்களில் பசுவை பலி இடுவதும், பசுவின் கறியை கொண்டு சமைத்த உணவை பிரசாதமாக உண்டதையும் வேதங்களும், பிற பார்ப்பனிய நூல்களும் பதிவு செய்துள்ளன. அவை தொடர்பான ஆதாரங்கள் மிகவும் விரிவாக புத்தகத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ளன.

the-myth-of-the-holy-cowவேத கால மருத்துவ நூல்களில் பசுவின் இறைச்சியும், நெய்யும், காரமும் கலந்து சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு நல்லது என்றும் பல நோய்களுக்கு மருந்தாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை சுஸ்ருதர் எழுதிய மருத்துவ நூல்களில் காணலாம். வேத காலத்திலேயே மருத்துவத்தை உலகிற்கு சொன்னவர் என்று சுஸ்ருதரை குறித்து பெருமை அடித்துக் கொள்ளும் இந்துத்வா கும்பல் அவரின் நூல்களை படிக்கவில்லை என்பது தான் உண்மை என்று இதிலிருந்து தெரிகிறது.

பொதுவாகவே “பசுவின் புனிதம்” புத்தகத்தில், பல ஆதாரங்கள் வேதத்திலும், இந்து மத நூல்களில் இருந்து மேற்கோள் காட்டப்படும்போது. இப்படி ஆதாரங்கள் இருக்க இந்து மதத்தை பற்றி பல பொய்களை இந்துத்துவா கும்பல் பெருமையாகவும், வெளிப்படையாகவும் சொல்லி வருவதை என்னவென்று சொல்வது? பொதுவில் மதவெறியர்கள அனைவரும் தமது மதப் புனிதத்தை இப்படித்தான் பொய்களாலும், புனைவுகளாலும், மற்ற பிரிவினர் மீதான கசப்புணர்விலும் கட்டியமைக்கின்றனர். அதில் இந்துமதவெறிப் பாசிஸ்ட்டுகள் முன் வரிசையில் இருக்கின்றனர்.

வளர்ந்து வரும் இந்துத்துவ சக்திகளின் பொய்களை அம்பலப்படுத்த அவர்கள் முன்வைக்கும் நூல்களில் இருந்தும், வரலாற்றில் இருந்தும் உண்மைகளை ஆய்வு செய்து தொகுத்து அம்பலப்படுத்த வேண்டியது அறிவுத் துறையினர், ஆய்வாளர்களின் கடமை. அதை மக்களுக்காக செய்பவர்களே உண்மையான அறிவுஜீவிகள். அந்த வகையில் டி.என். ஜா மிக அரும்பணியை செய்திருக்கிறார்.

டி.என். ஜாவின் “பசுவின் புனிதம்” எனும் நூல் வேத காலம் முதல் மக்கள் பசுவின் மாமிசத்தை உண்டு வந்ததை மட்டும் ஆதாரத்துடன் நம் முன் அம்பலப்படுத்தவில்லை, இந்து மதவாதிகள் எப்படிப்பட்ட பொய்களை வாய் கூசாமல் சொல்லுகிறார்கள், இந்து-இந்தியா என்று வெற்று கோஷங்கள் போடும் கூட்டம் எப்படி இந்தியாவின் உண்மையான மக்களின் வாழ்க்கையும் வரலாற்றையும் மறைத்து விட்டு தங்கள் பொய்களை திணிக்கிறது-திரிக்கிறது, என்றும் அம்பலப்படுத்தியுள்ளார். அவருக்கும் நம் நன்றிகள்.

பசுவின் புனிதம்
ஆசிரியர் : டி.என்.ஜா
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

கிடைக்குமிடம்: பாரதி புத்தகாலயம் கடைகள் போக கீழைக்காற்றிலும் கிடைக்கும்.

கீழைக்காற்று வெளியீட்டகம்
10, அவுலியா தெரு. எல்லீஸ் சாலை. சென்னை – 600002
புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண் : 369, 370

  1. I am not meaning any holiness to Cattle (buffalo, cow, etc).

    But they are a natural way to recycle the agricultural by-products (straw,etc) and food wastes. In natural agriculture (Read some works of Nammaalvaar), they are inseparable companions to us. It would be better if we can allow cattle to do this work for most of their life. It will balance our food cycle.

    We can discuss this more in subsequent comments.

    • I support Organic, which doesn’t mean eating cow meat is in-organic or anti-green. onthe bright side cow meat is itself organic. eating cow or any other animals won’t spoil eco cysle or food cycle. will you prove how food cycle will be imbalance if we eat cow or any other animals. and also why cow meat is inorganic?

      • Hi Thoratti,

        Thanks for the questions.

        My point is not about organic or inorganic.

        As i already said, cattle is an inseparable link in the food cycle, by consuming straw, other farm wastes, kitchen and food wastes, turning them into dung and urine (leave alone milk). The dung and urine in turn give us a natural compost to our crops there by returning the nutrients to the soil and enriching the yield. The conversion of agri and food waste to dung is a main link in our food chain. Less cattle means less dung which is affecting our food security.

        So, let me repeat. It would be better if we can allow cattle to do this work of recycling for most of their life for a balanced food cycle.

        I hope i made it clear this time.

        • ஒரே நாளில் அத்தனை கால்நடைகளையும் கொன்று தின்று விட முடியாது.அவற்றின் இனப்பெருக்க வேகத்திற்கு ஏற்பத்தான் உணவு தேவைக்கு அறுப்பதற்கு விற்கப்படும்.ஆடு,மாடு வளர்ப்போருக்கு அது செல்வம்.அதுதான் பிழைப்புக்கு வழி .இனப்பெருக்கத்தால் உபரியாக இருப்பவற்றையே அவர்கள் விற்கிறார்கள்.விவசாய தேவைகளுக்கு போக மீதி இருந்தால் மட்டுமே விவசாயி விற்கிறான்.மேலும் இனப்பெருக்கத்துக்கொ,பாலுக்கோ,உழவுக்கோ பயன்படாத வயதான மாடுகளை அடிமாடுகளாக விற்கிறார்கள்.ஆகவே இயற்கை உரம் தாராளமாக கிடைக்கும்.யாரும் கவலை பட வேண்டியதில்லை.பஞ்ச கவ்யம் கிடைக்காமல் போய் விடுமோ என்று கோபப்பட்டு லச்சாரில் மாட்டுதோலை உரித்ததற்காக ஐந்து தலித்களை போட்டு தள்ளியது போல் யாரும் புறப்பட்டு விட வேண்டாம்.

          • Tippu,

            //வயதான மாடுகளை அடிமாடுகளாக விற்கிறார்கள். ஆகவே இயற்கை உரம் தாராளமாக கிடைக்கும். யாரும் கவலை பட வேண்டியதில்லை//

            Not only old cattle, very young (இனப்பெருக்கத்துக்கொ, பாலுக்கோ, உழவுக்கோ பயன்படாத) male cattle are regulary slaughtered. I won’t blame butchers at all. Due to tractors and artificial insemination, farmers don’t want these male calves. Chemical fertilizers promoted by Capitalism have made the farmers to ignore dung. This is the picture both in East and West. This is an error whose side-effects will be costly on near future generations. I wish the current system changes to sustainable system before it is too late.

            //லச்சாரில் மாட்டுதோலை உரித்ததற்காக ஐந்து தலித்களை போட்டு தள்ளியது//

            I strongly condemn this barbarity.

  2. மிஸ்டர் யுனிவர்ஸல், மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல, இக்கால பார்ப்பனர்களும் முன்னாளில் கறி சாப்பிட்டே வந்தனர் என்பதுதான் புத்தகம் மற்றும் கட்டுரையின் செய்தி. விவசாயம், சைவம் உணவு சிறந்தது என்பதெல்லாம் வேறு விடையங்கள்

    மேலும் ஒரு சைவ அன்பரிடம் இந்த பதிவை காட்டிய போது அவர் சொன்னார் : சம்ஸ்கிருதத்தில் ஒரு வார்த்தைக்கு நிறைய பொருட்கள் உள்ளன : உதாரண்த்திற்கு மகாபாரத்தில் துரோணரைக் கொல்ல, அஸ்வத்தாமன் (துரோணரின் மகன், யானை) இறந்தான் என்று இரு பொருளில் சொல்லியதை உதாரணமாகச் சொல்கின்றார், விடயம் தெரிந்த யாராவது எடுத்து சொல்லி விளக்கினால் வாதத்திற்கு நன்றாக இருக்கும்.

    • [1]எந்த பசு கொல்லப் பட்டதோ அதன் இறைச்சியை சமைத்து பிராமணர்களுக்கு படைக்க வேண்டும் “(2 .5 . 2 )என்று “அஷ்டகா விதானம்” சொல்லுகிறது! இந்த அஷ்டகா விதானம் குறித்து, அதாங்க …பசுவை எப்படி கொல்ல வேண்டும் ?எந்த மந்திரத்தைச் சொல்லி கொள்ளவேண்டும்? என்கிற வழிமுறையை, கிருஹஜ்ய சூத்திரம் இரண்டாவது அத்தியாயம் நான்காவது கண்டிகையில் சொல்லப் பட்டு உள்ளது!

      [2]இ ந்து மத, பார்பன வேதங்களில் “பசு மாமிசம்” ,குடிப்பழக்கம் (சுராபானம் , சோம பானம்) கண்டிப்பாக அனுமதிக்கப்படுகிறது.

      ஆதாரம்:

      ……..”மாமிசம் இல்லாமல் மது பார்க்கம் முடியாது” என்று கிருஹஜ்ய சூத்திரம் இருபத்தியாறு சொல்லுகிறது! இப்படி கொல்லப்பட்ட பசுமாடு, அல்லது எருது இவைகளின் இறைச்சியை நெய்யில் வருது, தேன் விட்டு பிசைந்து, உருண்டை செய்து விருந்தினருக்கு படைப்பதே மது பர்க்கமாகும்!

      • “A java script on this page is causing too many windows to open. If it continues to run ,your computer may become unresponsive. Do you want to abort the script?
        Note : Even you press “Yes” the script will continue to run.”

        [Yes] [No]

        • அம்பி,

          உங்கள் “கணினி ஒப்புமை” நய்யாடி நயம் மிக்க அழகு! மற்றவர்களுக்கு”ம்” புரியுமா ?

          Others pls refer my comment

          No UB Sir,

          I am only referring Thiru Ampi.
          Most of my comments are from old comments in the essay..

          https://www.vinavu.com/2013/10/22/gujarat-cattle-matter-more-than-people/

          //I think you address me here, as you use the word ‘cycle’ that i have used and pose the question கிழட்டு பசுவை என்ன செய்ய?//

          அன்புடன் ,
          கி.செந்தில்குமரன்

    • Dear vinavu Readers,

      எது அறிவு சார்ந்த மற்றும் முன்னேறும் மானிலம் ? குஜராத்தா அல்லது தமிழ்நாடா ?

      தமிழ்நாடு
      —————–
      தமிழ்நாடு கால்நடை பாதுகாப்பு சட்டம் 1958:

      அனைத்து வயது எருமைகள் ; எருதுகள் ,பசுக்கள் , காளைகள் வயது 10 ஆண்டுகலுக்கு மேல் இருந்து , வேலை மற்றும் இனப்பெருக்கத்திற்கான தகுதி பெறாத அல்லது நிரந்தரமாக வேலை செய்ய முடியாத மற்றும் காயம் குறைபாடு அல்லது எந்த தீரா நோய் காரணமாக இனப்பெருக்கத்திற்கான திறன் இல்லதாது எனில் …..

      நாம் அவற்றை உணவு மற்றும் எந்த வேறு தேவைக்கும் Industrial use பயன்படுத்தலாம்!!!!

      குஜராத்
      ————-
      மும்பை விலங்கு பாதுகாப்பு சட்டம் 1954:

      குஜராதில் மாநில கால்நடை படுகொலை , மாடுகள் படுகொலை , மாடுகள் , எருதுகள் மற்றும் எருதுகள் மற்றும் கன்றுகளுக்கு “முற்றிலும்” தடைசெய்யப்பட்டுள்ளது . எருமைகள் படுகொலை சில நிபந்தனைகளை அனுமதிக்கப்பட்டது

      எது அறிவு சார்ந்த மற்றும் முன்னேறும் மானிலம் ? குஜராத்தா அல்லது தமிழ்நாடா ?

      அன்புடன் ,
      கி.செந்தில் குமரன்

    • Dear vinavu friends,

      [1]இந்தியாவில் , 2012 ல் மாட்டுக்கறி 3,643 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி!!!

      [2]1,963 மில்லியன் மெட்ரிக் டன் உள்நாட்டில் விற்பனை !!!!

      [3]மற்றும் 1,680 மில்லியன் மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்பட்டது.

      [4] இந்தியாவின் மாட்டிறைச்சி உள்நாட்டு நுகர்வு 7 வது, மாட்டிறைச்சி உற்பத்தியில் உலகின் 5 வது மற்றும்

      [5]இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதி ல் 1 வது இடத்தில்.

      [6]குஜராத்தில் “மாட்டு இறைச்சி தடை” செயல்படுத்தும் “அறிவாளி மோடி” தனது இந்து சமய நம்பிக்கையின் அடிப்படையில் இதையெல்லாம் நிறுத்த முடிமா ?

      அன்புடன் ,
      கி.செந்தில் குமரன்

    • மகபாரதத்தில் அசுவதாமன் எனும் சொல்லுக்கு இரண்டு பொருள் இல்லை. அசுவதமான எனும் யானை இறந்த்து என்று சொல்லும்போது. எனும் யானை என்ற சொல் வருவத்ற்குள் கிருணன் வஞ்சகமாக சங்கை ஊதிவிட்டான்.அத்னால் துரோணர் குழம்பினார்.. சம்ஸ்கிரதத்திலொரு வார்த்தைக்கு இரண்டு பொருள் என்றாலும், நூலில் பல ஸ்லோகங்கள் முழுமையாக ஆய்வு செய்யபட்டு இரண்டு வார்த்தைகளின் பொருட்கள வந்தால் எது சரியானதாக் இருக்கும் எனவும் கவந்த்தில் கொள்ளபட்டுள்ளது

    • ஆதவன்,

      மிஸ்டர் யுனிவர்ஸல் என்று என்னைத்தான் விழிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

      எனது கருத்துக்கு தொடர்பில்லாமல் ஏதோ எழுதியிருக்கிறீர்கள்.

      //மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல//

      நான் நன்கு அறிவேன். அவர்கள் இறந்து போன கால்நடைகளையே உணவாகக் கொண்டனர். புத்தரின் உன்னத வழியில் அவர்கள் மற்றவர்களை சுரண்டுவதற்கோ ஏய்ப்பதற்கோ மறுத்தவர்கள். அதனாலேயே மேன்மேலும் ஒடுக்கப்பட்டவர்கள். அவர்களின் வாழ்க்கை நெறி முறையை விட சிறந்தது உலகில் வேறொன்றும் இல்லை.

  3. நமது இந்திய அரசியலமைப்பு சட்ட படி, நாம் நமது சொந்த உணவு,உடை,கலாச்சாரதை,பழக்கத்தை பின்பற்ற உரிமைகள் உண்டு.

    மாட்டு இறைச்சியை சாப்பிட அல்லது சாப்பிடாமல் இருக்க உரிமை உண்டு.

    இந்தியாவில் ஒரே மொழி ,ஒரே மதம், ஒரே இனம் என்ற கோட்பாடு இந்தியாவில் சாத்தியமா ?
    சாத்தியமாக்க முயன்றால் நாடு பிரியாதா ?ரத்த ஆறு ஓடாதா?

    மிகவும் சட்ட திட்ங்கள் கடுமையாக உள்ள சிவப்பு சீனாவில் கூட உணவு விசயதில் இந்த கட்டுபாடு இல்லையே ! நாம் குப்பை உணவு [junk food],சிகரெட் இவற்றை தடை செய்ய வேண்டுமா அல்லது ……!

    மக்கள் தங்கள் சம்பிரதாயப்படி மாட்டு இறைச்சியை சாப்பிட அல்லது சாப்பிடாமல் இருக்க உரிமை உண்டு அல்லவா ?

  4. இந்து மத உணவு வழக்கங்கள் பன்முக பட்டது அல்லவா ! தமிழ் நாட்டில் மாட்டுக்கறி உண்ணும் ஹிந்து, காஷ்மீரில் மாட்டுக்கறி உண்பது இல்லை அல்லவா !! கேரளாவில் மிக பெரும்பான்மையான ஹிந்து மக்கள் மாட்டுக்கறி உண்ணும் மக்கள் அல்லவா ?ஏன் ஹிந்து மக்களிடமே இந்த மாறுபாடு? ஏன் என்றால் உணவு பழக்கம் என்பது நமது தட்பவெப்ப நிலை , வேலை தன்மை, உணவு கிடைக்கும்தன்மை ஆகிய காரனிகளை சார்தது.

    இந்தியாவில் பசு வதை சட்டம் எல்லா மாநிலதிலும் ஒரே மாதிரியாகவா உள்ளது ?
    ஏன் இந்த மாறுபாடு? பல்வேறு மொழி, வெவ்வேறு இனம், வெவ்வேறு பண்பாடு உள்ள மக்கள் நாம் அல்லவா !! மக்கள் தங்கள் சம்பிரதாயப்படி மாட்டு இறைச்சியை சாப்பிட அல்லது சாப்பிடாமல் இருக்க உரிமை உண்டு அல்லவா ?

  5. நாம் பசு வதை சட்டதை ஹிந்து மக்களுக்காக நடைமுறை படுதினால்…,முஸ்லிம் மக்களுகாக பன்றி வதை சட்டதையும், புத்த மற்றும் ஜைன மக்களுக்காக அனைத்து விலங்கு வதை சட்டதையும் நடைமுறை படுத்த வேண்டும் அல்லவா?

    But India is a secular state. We should not do this!!!

  6. உயிரியல் வாழ்க்கை சுழற்சியில் [biological life cycle] எதுவும் வீண் ஆகாது !!!!
    —————————————————————————————

    என் அன்பு தம்பி அம்பி ,
    நமக்குள் உள்ள ஒரே முரண்….கிழட்டு பசுவை என்ன செய்ய?
    கிழட்டு பசுவை B 12 உயிர்ச்சத்து[vitamin] மூலப்பொருள் [Raw material] ஆக்கலாமா ?
    உயிரியல் வாழ்க்கை சுழற்சியில் [biological life cycle] எதுவும் வீண் ஆகாது !!!!

    கிழட்டு பசுவின் இறைச்சி சாப்பிட்டால் நமக்கு பி 12 உரமாகும்!!
    கிழட்டு பசுவின் சடலத்தை புதைத்தால் தாவரத்துக்கு எறு ஆகும் !!!
    தாவரத்தை நீயும் , பசுவின் இறைச்சிஐ நானும் வாயால் தானே உண்கிறோம்
    உயிரியல் வாழ்க்கை சுழற்சியில் [biological life cycle] எதுவும் வீண் ஆகாது !!!!

    நீ உன் வழக்க படி கிழட்டு பசுவின் சடலத்தை புதைத்து …. B 12 ஊசி ஏற்றிகொள்!!
    நான் என் வழக்க படி கிழட்டு பசுவின் இறைச்சி சாப்பிட்டு B 12அய் செறித்து ஏற்றிகொள்கின்றேன்!!!
    நான் உன் பண்பாட்டில் தலைஇட மாட்டேன் ! நீயும் என் பண்பாட்டில் தலைஇடாதே!!!!
    உயிரியல் வாழ்க்கை சுழற்சியில் [biological life cycle] எதுவும் வீண் ஆகாது !!!!

    பல மொழி , பல இனம் ,பல மதம் இந்த நாடு
    ஒத்திசைவு சமநிலையில்[harmonic balance] இருக்க…
    நாம் மற்றவர் முறைக்கும் இடம் கொடுப்போம்
    உயிரியல் வாழ்க்கை சுழற்சியில் [biological life cycle] எதுவும் வீண் ஆகாது !!!!

    அன்புடன் ,
    கி.செந்தில் குமரன்

  7. என் அன்பு தம்பி அம்பி ,

    மாட்டு மந்திரம் [cow magic]
    ————-

    ஓடி விளையடு பாப்பா
    பால் குடித்து புரதம் ஏற்று பாப்பா !
    பால் தரும் கல்சியம்-பாப்பா எலும்பு,பல் வளர்திடும்!!
    கன்றுக்குட்டியையும் கொஞ்சம் குடிக்கவிடு பாப்பா!!!.//

    ஓடி விளையடு பாப்பா
    பசு ஈன்ற கன்றோடு!
    கன்றை குளிப்பாடி-மீண்டும் பால் குடித்து அறிவை வளர்திடு பாப்பா
    அடிக்கடி பால் குடிப்பது ஒரு வகையில் நல்லதுதான் பசுவும் கன்றும் என்ன நினைத்துக் கொள்ளுமோ//

    ஓடி விளையடு பாப்பா
    பசும் பாலை அப்பாவுக்கு கொடு
    அப்பாவின் இரத்த அழுத்தம் சீராகும் !!!
    நன்று, நன்று..//

    ஓடி விளையடு பாப்பா
    ஓடிய ஓட்டததில் நீ வளர்ந்தால்
    பசுவிற்கும் வயது ஆகும் அல்லவா!!
    கட்டாயமாக பாப்பாவுக்கும் பசுவுக்கும் வயதாகும்…..//

    ஓடி விளையடு பாப்பா
    கிழட்டு பசுவை என்ன செய்ய?
    நீ கிழட்டு பசுவை என்ன செய்வாய் ?
    தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதாதா..//

    ஓடி விளையடு பாப்பா
    கிழட்டு பசுவை–ரோட்டில் விட்டால் பஸ் மோதும்
    ட்ரக்க்ல் விட்டால் ரயில் மோதும்
    பாப்பா ஏன் பசுவை ரோட்டில்-[ட்ரக்க்ல்] விடவேண்டும்..//

    //நம்ம பாப்பா அடிக்கடி சாப்பிடும்போதெல்லாம்…
    அந்த பசுவுக்கும் நாலு கைப்பிடி வைக்கோலைப் போட்டால்
    அதுவும் அசை போட்டுக் கொண்டு,
    ஓடி விளையாட முடியாவிட்டாலும், தேமே என்று இருக்குமே..//

    ஓடி விளையடு பாப்பா
    கிழட்டு பசுவின் இறைச்சி சாப்பிடு !!
    கிழட்டு பசுவின் இறைச்சி சாப்பிடு-அது
    உன் குழதைக்கும் பி 12 உரமாகும் !!!!

    //பாப்பா, உன் பாப்பாவுக்கு பி12 வேணும்னா ஊசி போட்டுக்கோ பாப்பா.. பால் கொடுத்து, கூட விளையாடிய பசுவை பி12-க்காக நீ அடித்துத் தின்றால், நாளை உன் பாப்பா, தேவைப்பட்டால் உன் கிட்னியை உருவத் தயங்காது பாப்பா.. பெரிய பாப்பா.. இப்போதாவது நான் நான் என்று ஓடாமல் கொஞ்சம் உக்காந்து யோசி பாப்பா.. என் செல்லப் பாப்பா..// Ampi said

    பாப்பாவின் தொப்புல் கொடியை
    பாதுகாத்தல்-செல் சிகிச்சை முறையில் [stem cell therapy]
    சிறுநீரக செயலிழப்பை
    சரி செய்துகொள்லுமே பாப்பா!
    அம்மாவின் கிட்னியை ஏன் உருவ போவுது பாப்பா!!

    பாப்பாவும், அம்மாவும் இன்னும் அருந்தும்
    அனைத்து இரும்பு டானிக்லும் மாட்டின் இறைச்சியின் [ஈரல்] b12 vitamin
    தான் உள்ளது !!!

    அன்புடன் ,
    கி.செந்தில் குமரன்

    நன்றி:

    இந்த கவிதை சிறப்பு அடைய செய்த திரு என் அன்பு தம்பி அம்பி அவர்களுக்கு

  8. நாங்க என்ன மாட்டையும், யானையையும்,குதிரையையும் “அஸ்வமேத யாகம் நெருப்பிளா” போட்டோம் !!!
    ———————————————————————————————-
    குறிப்பு:

    ஏன் அக்னிப் புகை…? பிராமணர்கள் சொன்னார்கள், “ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண்டும். வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகிறோம். பிராணிகளையும், தட்சணையையும் கொடுத்து நீங்கள் புண்ணியம் பெறுங்கள்” என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய் சொன்னார்கள்.(அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.

    “அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே…”என போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி ‘வழிபட வேண்டிய’ முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

    இரவு இந்த கடமை முடிந்ததும்… மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வ மேத யாகம்.
    ———————————————————————————————

    வயீது பசிக்கா தானே மாட்டை சாப்பிடுகிறேன்.

    மாட்டின் இறைச்சி பாவம் என்றால் …

    மாட்டின் பால் மட்டும் புனிதமா !!!

    அன்புடன்,

    கி.செந்தில்குமரன்

  9. Dear Vinavu Readers,

    [1]இந்தியாவில் பசு வதை சட்டம் எல்லா மாநிலதிலும் ஒரே மாதிரியாகவா உள்ளது ?
    ஏன் இந்த மாறுபாடு? பல்வேறு மொழி, வெவ்வேறு இனம், வெவ்வேறு பண்பாடு உள்ள மக்கள் நாம் அல்லவா !! மக்கள் தங்கள் சம்பிரதாயப்படி மாட்டு இறைச்சியை சாப்பிட அல்லது சாப்பிடாமல் இருக்க உரிமை உண்டு அல்லவா ?

    [2]இந்து மத உணவு வழக்கங்கள் பன்முக பட்டது அல்லவா ! தமிழ் நாட்டில் மாட்டுக்கறி உண்ணும் ஹிந்து, காஷ்மீரில் மாட்டுக்கறி உண்பது இல்லை அல்லவா !! கேரளாவில் மிக பெரும்பான்மையான ஹிந்து மக்கள் மாட்டுக்கறி உண்ணும் மக்கள் அல்லவா ?ஏன் ஹிந்து மக்களிடமே இந்த மாறுபாடு? ஏன் என்றால் உணவு பழக்கம் என்பது நமது தட்பவெப்ப நிலை , வேலை தன்மை, உணவு கிடைக்கும்தன்மை ஆகிய காரனிகளை சார்தது.

    [3]நீங்கள் ஒரு குறிப்பிட்ட உணவு பழக்கத்தை உங்கலுக்காக தடை செய்ய விரும்பினால்,நாம் எப்படி மற்ற மக்களையும் கட்டாயப்படுத்த முடியும்? நமது இந்திய அரசியலமைப்பு சட்ட படி, நாம் நமது சொந்த உணவு,உடை,கலாச்சாரதை,பழக்கத்தை பின்பற்ற உரிமைகள் உண்டு அல்லவா !!

    [4] மிகவும் சட்ட திட்ங்கள் கடுமையாக உள்ள சிவப்பு சீனாவில் கூட உணவு விசயதில் இந்த கட்டுபாடு இல்லையே ! நாம் குப்பை உணவு [junk food],சிகரெட் இவற்றை தடை செய்ய வேண்டுமா அல்லது ……!

    [5]நாம் பசு வதை சட்டதை ஹிந்து மக்களுக்காக நடைமுறை படுதினால்…,முஸ்லிம் மக்களுகாக பன்றி வதை சட்டதையும், புத்த மற்றும் ஜைன மக்களுக்காக அனைத்து விலங்கு வதை சட்டதையும் நடைமுறை படுத்த வேண்டும் அல்லவா? சட்ட மோதல்[conflict of law] ஏற்படும் அல்லவா ?

    [6]இந்த உலகத்தில் எந்த நாட்டிலாவது இத்தனை இனம் ,மதம் ,மொழி பேசும் மக்கள் உள்ளார்களா ? இந்தியாவில் ஒரே மொழி ,ஒரே மதம், ஒரே இனம் என்ற கோட்பாடு இந்தியாவில் சாத்தியமா ?
    சாத்தியமாக்க முயன்றால் நாடு பிரியாதா ?ரத்த ஆறு ஓடாதா?

    [7] இவை என் சிந்தனை மட்டும் அல்ல, ஆனால் என் ஆழ்ந்த கவலையும் தான்.இந்தியாவின் வரலாற்றை திரும்பி பார்த்தால் மதம் சார்ந்த போர்களும்- படுகொலைகளும் ,இன மோதல்களும் மிக்க அச்சத்தை எனக்கு உண்டாகுகிறது.

    அன்புடன்,

    கி.செந்தில்குமரன்

  10. இதை போல் முஸ்லீம்கள் எங்கெல்லாம் பன்றி கறி சாப்பிடுகிறார்கள் என்று எவனாவது எழுதினால், அது பற்றியும் வினவு கட்டுரை வெளியிடுமா?? பேடித்தனமான கட்டுரை…

  11. பன்றி இறைச்சி கொலஸ்டரோல்இல்லாத மிகவும் நல்ல உணவு, மேலைநாட்டவர்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை, அனைவரும் உண்ணுகிறார்கள். பண்டைய எகிப்தியர்கள் பன்றி இறைச்சியை கடவுளுக்குக்குக் கூடப் பலி கொடுத்தனர். பலஸ்தீனத்திலும், ஈராக்கிலும், துருக்கியிலும் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் வளர்ப்புப் பன்றிகளின் (domesticated pigs) எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனால் இக்கால அரபுக்களின் முன்னோர்கள் பன்றியை உணவாக உண்டனர் என்பது தெரிகிறது, அதனால் முஸ்லீம்களும் பன்றியை உண்பதில் என்ன தவறு என்று, யாராவது புத்தகம் எழுதி வெளியிட்டால் அது எவ்வளவு நாகரீகமற்றதும், முஸ்லீம்களின் மதநம்பிக்கையை புண்படுத்தும் செயலோ அது போன்றது தான், இந்துக்களின் முன்னோர்கள் எல்லாம் மாட்டிறைச்சி உண்டார்கள் அதனால் இப்பொழுது மட்டும், இந்துக்கள் பசுவைக் கொன்று அதன் இறைச்சியைத் தின்றால் என்ன என்பதும்.

    • வியாசன் ,

      என்ன சொல்ல வருகிறீர்கள் ?

      மாட்டு கறி தின்பவர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லை என்று சொல்கிறீர்களா ?

      இந்துக்களின் முன்னோர்கள் யாருன்னு சொன்னா ரொம்ப புண்ணியமா போய்டும்..

    • பார்ப்பனர்கள் மட்டும் தான் இந்துக்கள் என்று சொல்கிறீர்கள் இல்லையா வியாசன்? மேலும் யாழ்ப்பாணத்து வெள்ளாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் மாட்டு இறச்சியும்,பன்றி இறச்சியும் உண்பதில்லையா கூடவே பீருடன்.

      • சைவ(தாவரவுணவு)உணவை மட்டும் ஒவ்வொரு நாளும் உண்ணும் பார்ப்பனர்களல்லாத இந்துக்கள் இலங்கையில் குறைவாக இருந்தாலும், இந்தியாவில் அதிகளவில் உள்ளனர். கோழியிறைச்சியை விரும்பியுண்ணும் எத்தனையோ தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் மேலைநாடுகளில் உள்ளனர். நான் கூறுவதெல்லாம், இந்துமத அடிப்படையில் அதாவது மத நம்பிக்கையின் அடிப்படையில், மாட்டைப் புனிதமானதாகக் கருதி அதைக் கொன்று தின்னாதது மட்டுமன்றி, வேறு உயிர்களைக் கொல்வதையும் தவிர்த்து, சைவ உணவை மட்டும் உண்ணும் இந்துக்களை Orthodox இந்துக்கள் என அழைக்கலாம் என்பது தான்.

        மாடு, பன்றி எல்லாவற்றையும் உண்ணும் யாழ்ப்பாண வெள்ளாளர்கள், அப்படி மீன், இறைச்சி வகைகளை உண்டிருந்தால் அந்த நாளில் எந்தக் கோயிலுக்குக் கிட்டவும் போக மாட்டார்கள். அதாவது விலங்குணவை உண்டதால், தமக்கு தீட்டுப்பட்டு விட்டதாக அவர்கள் கருதுகின்றனர் என்பது தெளிவாகிறது. ஈழத்தமிழர்கள் எவருமே மீன், இறைச்சி போன்ற எந்த உணவை உண்டாலும் அடுத்த நாள் குளித்து முழுகிய பின்பு தான் கோயிலுக்குள் நுழைவார்கள். தமிழ்நாட்டில் திருவிழாக் காலங்களில் கூட கோயில்களில் தேவாரம் பாடப்படுவதைக் காண்பது அரிது. ஆனால், தமது வீட்டில் நடக்கும் நல்லது, கேட்டது எல்லாவற்றுக்கும் தேவாரம் பாடும் வழக்கம் ஈழத்தமிழர்களிடமுண்டு. ஆனால் ஒருவர் மீன், இறைச்சி சாப்பிட்டிருந்தால், யாரும் பாடச் சொல்லிக் கேட்டாலும் கூட, இன்றைக்கு நான் மச்சம் சாப்பிட்டு விட்டேன் என்று கூறி, தேவாரம் பாட மறுத்து விடுவார்கள் யாழ்ப்பாணத்தமிழர்கள். அதாவது மச்சம் (மீன்/இறைச்சி வகை) சாப்பிட்டதால், அவர் தீட்டுப்பட்டு விட்டார், (அந்த தீட்டுப்பட்ட வாயால், புனிதமான தேவாரங்களைப் பாடக் கூடாது,) அதனால் ஐயரையே தேவாரம் பாடச் சொல்லுங்கள் என்று கூறியதை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன்.

        அதிலும் விரத காலங்களில் அல்லது அவரவர்களின் ஊர்க்கோயிலில் கொடியேற்றம் தொடங்க சில நாட்களுக்கு முன்பே, யாழ்ப்பாண வெள்ளாளர்கள் தமது, மீன், இறைச்சி சமைத்த சட்டி பானைகளை எல்லாம், ஒதுக்கி வைத்து விட்டு, மரக்கறி உணவு மட்டும் சமைக்கவென அவர்கள் வைத்திருக்கும் பண்ட பாத்திரங்களை எல்லாம் எடுத்து அல்லது புதிதாக வாங்கி சமையல் தொடங்கி விடுவார்கள். கத்தி, கரண்டி எல்லாவற்றிலும் கூட நுணுக்கம் பார்ப்பார்கள். உதாரணமாக, நல்லூர் முருகனின் திருவிழா நாட்களிலும், புரட்டாதிச்சனிக்கிழமை போன்ற விரத நாட்களிலும் எங்களின் வீட்டில், கடையில் வாங்கிய Vegetarian Pizza வைக் கூட வீட்டுக்குள் கொண்டு வர யாருக்கும் அனுமதி கிடையாது. அப்படியான, பழக்க வழக்கங்களை, பல யாழ்ப்பாணத் தமிழர்கள் வெளிநாடுகளில் கூட இன்றும் கைவிடாமலிருக்கின்றனர். அதனால், யாழ்ப்பாண வெள்ளாளர்கள் மாடு, பன்றி போன்றவற்றை வெளிநாடுகளில் உண்டாலும், அது சைவத்துக்கு எதிரானது, அப்படியான செயல் தவிர்க்க வேண்டியவை என்று ஒப்புக் கொள்கின்றனர், அதனால் தான் அந்த நாட்களில் அவர்கள் கோயிலுக்குப் போவதில்லை. கோயிலுக்குப் போகும் நாட்களில் குளித்து, முழுகி, சுத்தமான ஆடையணிந்து, கோயிலுக்குப் போய் விட்டு வந்து தான் உணவருந்துவார்கள்

        • இதெல்லாம் ஒரு பெருமையா மிஸ்டர் வியாசன். ஐரோப்பாவில் இருந்தாலும் சாதிவெறி போகவில்லை. பார்ப்பனனை விட கேவலமான சாதிவெறியுடன் நடந்துகொள்ளும் யாழ்ப்பாண வெள்ளாள சாதி அதை பெருமைபீற்றித்திரிவது மனிதன் என்கிற வகையில் எனக்கு அசிங்கமாக இருக்கிறது.

          விசயம் இது தான், ஐரோப்பாவில் யாழ்ப்பாணத்துக்காரர்கள் மாட்டு இறச்சியும், பன்றி இறச்சியும் உண்கிறார்களா இல்லையா. அவ்வாறு உண்பவர்களை உங்களுடைய இந்து சட்டப்படி என்ன செய்யப்போகிறீர்கள்? மேலும் இந்துக்கள் என்று அறியப்படும் பெரும்பாண்மையான மக்களும் இந்த இறச்சி வகைகளை உண்கின்றனர் அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?

          • இதென்னடா அநியாயமா இருக்கிறது. கேள்வியைக் கேட்கும் போது “யாழ்ப்பாணத்து வெள்ளாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் மாட்டு இறச்சியும்,பன்றி இறச்சியும் உண்பதில்லையா” என்று அந்தக் குறிப்பிட்ட சாதியினரை மட்டும் குறிப்பிட்டுக் கேள்வியைக் கேட்டார் திப்புசுல்தான். அதற்கு பதிலை விளக்கமாகக் கொடுத்ததும், நான் சாதிப் பெருமை பேசுவதாக கூச்சலிடுகிறார். என்னுடைய பதிலில் எங்கே சாதி வெறியிருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை அப்படியானால், அவர் கேட்ட கேள்வியிலேயே சாதியைத் தவிர்த்து, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் என்று மட்டும் குறிப்பிட்டிருக்கலாம். சாதியைக் குறிப்பிட்டு அவர் கேட்ட கேள்வியைப் பார்த்த போது எனக்கும் தான் அசிங்கமாக இருந்தது. ஏதோ, அவருக்கு தெரிந்தது அவ்வளவு தான், அவர் கேட்ட கேள்விக்கு பதிலையளிப்போம் என்று நினைத்து பதிலெழுதினால் குய்யோ, முறையோ என்று குளறுகிறார் திப்பு. நான் எனது சாதியைப் பற்றி எங்குமே பேசியதில்லை. எனக்கு சாதியில் நம்பிக்கையுமில்லை, சாதிப்பெருமையை இணையத்தளங்களில் பீற்றிக் கொள்ள வேண்டிய தேவையும் எனக்குக் கிடையாது. கேட்கும் கேள்வியைப் பொறுத்து தான் எனது விடையும் அமையும்.

            அதை விட, விலங்குணவை உண்டிருந்தால், கோயிலுக்குப் போகாமலிருப்பதும், கோயில் திருவிழாக் காலங்களில் அல்லது விரத காலங்களில் மிகவும் தீவிரமான வகையில் சைவ உணவைக் கடைப்பிடிப்பதும், சமைக்கும் பாத்திரங்களைக் கூட மாமிச உணவின் தீட்டுப்படாததாக வைத்திருப்பதும், யாழ்ப்பாண வெள்ளாளர்களுடைய வழக்கம் மட்டுமல்ல, ஈழத்தில் தாழ்த்தப்பட்ட சாதிமக்களுக்கும், அதாவது எல்லா இந்துக்களுக்கும் அந்த வழக்கம் பொதுவானது, அப்படியான விரத காலங்களில் யாழ்ப்பாண வெள்ளாளர் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்து “தலித்”துகளும் கூட மாட்டையுண்ணும் சோனக(முஸ்லீம்) வீடுகளில் தண்ணி கூட வாங்கிக் குடிக்க மாட்டார்கள். அதாவது, இந்த வழக்கம் சாதிக்கப்பாற்பட்டது. ஈழத்துச் சைவத்தின் அடிப்படையில், எப்பொழுதும் கொல்லாமை என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது விட்டாலும் கூட, குறைந்த பட்சம் புண்ணியகாலங்களிலாவது அதைக் கடைப்பிடிப்பது என்பது ஈழத்துச் சைவர்கள் அனைவருக்கும் பொதுவான, சாதிக்கப்பாற்பட்ட, வழக்கமாகும்.

            //அவ்வாறு உண்பவர்களை உங்களுடைய இந்து சட்டப்படி என்ன செய்யப்போகிறீர்கள்? மேலும் இந்துக்கள் என்று அறியப்படும் பெரும்பாண்மையான மக்களும் இந்த இறச்சி வகைகளை உண்கின்றனர் அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?///

            ஒன்றும் செய்யப்ப் போவதில்லை, ஒன்றும் செய்யவும் முடியாது. இந்துமதத்தில் பாட்வா அறிவிக்கவும் முடியாது. ஊரிலிருந்து அல்லது கோயிலிலிருந்து ஒதுக்கி வைக்க இந்துக் கோயில்களில் ஜமாஅத்தும் கிடையாது. 🙂

            • அவலை நினைத்து உரலை இடிப்பது என்பது இதுதானோ.யாரோ கேட்ட கேள்விக்கு என்னை இழுப்பது ஏனோ.நிதானத்தில்தானே இருக்கிறீர்கள் வியாசன்.

              புலம் பெயர்தல் ,தலித்கள்,சோனகர்கள் (முஸ்லீம்கள்) என்ற சொற்கள் அடிபடுவதால் அது குறித்து ஓரிரு சொற்கள்.

              போரை சாக்கிட்டு ஈழத்து உயர்சாதியினர் பசுமையான மேய்ச்சல் நிலம் தேடி அற்ற குளத்து அறுநீர் பறவையாய் புலம் பெயர்ந்து ஓடியபோதும் அந்த மண்ணிலேயே கொட்டியும் ஆம்பலும் போல் உறவாடிக்கிடந்த உன்னத மக்கள் இந்த தலித்கள்,சோனகர்கள் (முஸ்லீம்கள்) .

              • திரு. திப்பு,

                ஈழத்தில் தலித் என்ற வார்த்தை உபயோகத்தில் இல்லை. அதை நான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்து கொள்வதற்காகச் ‘சும்மா’ பாவித்ததேன், ஆனால் தலித்துகளும் இலங்கைச் சோனகர்களும் “கொட்டியும் ஆம்பலும் போல் உறவாடிக்கிடந்த உன்னத மக்கள்” என்ற உங்களின் பம்மாத்தில் எள்ளளவும் உண்மை இல்லை. தெரிந்து தான் இந்த பம்மாத்தை விடுகிறீர்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. இலங்கையின் தமிழ் பேசும் சோனகர்கள் கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் படுகொலைகளிலும், தமிழ்ப்பெண்களின் கற்பழிப்பிலும் சிங்கள இராணுவத்துடன் இணைந்து ஈடுபட்டனர், பல தமிழ்க்கிராமங்களில் இருந்து, தமிழர்களை அடியோடு விரட்டினர், கோயில்களில் கூட தமிழர்களைப் படுகொலை செய்து, இரத்த ஆற்றை ஓடவிட்டனர், இந்த உண்மையைப் பலர் கூறத் தயங்கினாலும், உங்களைப் போன்றவர்களின் “கொட்டியும் ஆம்பலும் போல் உறவாடிக்கிடந்த உன்னத மக்கள்” என்ற உளறலைப் பார்த்த பின்பு அதைப் பற்றிப் பேசாமலிருக்க என்னால் முடியவில்லை.

                ஆனால் கொட்டியும் ஆம்பலும் போல் உறவாடிக்கிடந்த உன்னத மக்கள்” என்ற வரிகள் ஈழத்துத் தலித்துகளுக்கும் (ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கும்) சோனகர்களுக்கும் (முஸ்லீம்களுக்கும்) பொருந்தாது ஆனால் ஈழத்துத் தலித்துகளுக்கும், ஈழத்தமிழ்ப் பார்ப்பனர்களுக்கும் பொருந்தும். இலங்கைச் சோனகர்கள் தமிழ் அவர்களின் தாய் மொழியாக இருந்தாலும் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. ஆனால் ஈழத்தில் பார்ப்பனர்களும் தங்களைத் தமிழர்களாகத் தான் அடையாளப்படுத்துகிறார்கள், தமிழ் பேசும் முஸ்லீம்கள் தான், தமிழைப் பேசிக்கொண்டே தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. பார்ப்பனர்களும் கூடத்தான் தமிழீழப் போரில்போராடி தமது உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள். மாவைக் குமரன் போன்ற பார்ப்பன மாவீரர்கள் தமிழ் மண்ணுக்காக உயிரை நீத்தார்கள் ஆனால் எமது மொழிவழிச் சகோதரர்களாகிய இலங்கை முஸ்லீம்கள், சிங்களவருடன் இணைந்து ஈழத்தமிழர்களைக் கருவறுத்தார்கள். இன்றைக்கும் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப்பெண்ளைக் கற்பழித்துக் கொலை செய்த இலங்கை இராணுவம் பார்ப்பனப் பெண்களைத் தமிழர்களல்ல என்று விட்டு வைக்கவில்லை. அவர்களும் தமிழர்கள் என்று தான் கொல்லப்பட்டனர். ஆனால் சில தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் தமிழ் எதிர்ப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த என்னைப் போன்ற ஈழத்தமிழர்கள், இணையத்தளங்களில் பார்ப்பனர்களை எதிர்த்தாலும் கூட, தமிழ்நாட்டில் உள்ளது போன்ற பார்ப்பன வெறுப்பை எல்லா ஈழத்தமிழர்களிடமும் எதிர்பார்க்க முடியாது.

              • திப்பு,

                Oops..தவறு என்னுடையது தான் மன்னிக்கவும், ஆனால் “அவலை நினைத்து உரலை இடிப்பது” என்ற பழமொழியை இங்கு குறிப்பிடுவதும் பொருந்தாது. 🙂

            • பத்வா, ஜாமாத் என்றெல்லாம் பேசிவிட்டு சாதாரணமாக இருப்பதைப் போல காட்டிக்கொள்ள ஸ்மைலி போட்டுக்கொள்றீர்கள், இது உங்களுக்குக்குள் இருக்கும் சிறுபாண்மை மதங்களின் மீதான வெறுப்புணர்வை காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ் காரன் என்றால் காக்கி அரை டவுசர் போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை, உங்களுக்குள்ளும் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன் இருக்கிறான் என்பதை நான் முன்னமே கனித்திருந்தேன், எனினும் அது இப்போது தான் அம்பலமாகியிருக்கிறது.

              உங்களை வேண்டுமானால் (உங்களை என்றால் வியாசன் என்கிற தனிநபரான உங்களை மட்டுமே குறிக்கும், உங்கள் சாதியில் உள்ள அனைவரையும் அல்ல) பார்ப்பன கும்பலோடு இந்து என்று அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள். இந்துக்கள் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் கோடிக்கணக்கான தமிழ் மக்களை அவ்வாறு அழைக்காதீர்கள். எந்த அடிப்படையில் அனைவரையும் இந்து என்று வரையறுக்கிறீர்கள்?

              அவர்கள் இந்துக்கள் அல்ல,நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதைப் போல நீங்களும் இந்து அல்ல, எனினும் நீங்கள் பார்ப்பன கும்பலுடன் உங்களையும் இந்து என்று அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் அது உங்களுடைய விருப்பம், ஆனால் அள் உங்களை சேர்த்துக்கொள்வார்களா இல்லையா என்பது அடுத்த விசயம்.

        • Mr, Viyasan,

          நீங்கள் யாழ்ப்பாண வெள்ளாளர்களை வைத்துக் கொண்டு எல்லா இந்துக்களைப் பற்றி எழுதுவதைப் படிக்க வாந்தி தான் வருகிறது.

          • திருவாளர் Univerbuddy,

            உங்களின் பதில்களைப் பார்க்கும் போது நீங்கள் படித்துப் பார்க்காமல் தான் பதிலெழுதுகிறீர்கள் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுவதுண்டு, உங்களின் இந்தப் பதிலைப் பார்த்ததும் அது உண்மை என்று தெளிவாகிறது. 🙂

  12. Hi K Senthil kumaran,

    //என் அன்பு தம்பி,//

    I think you address me here, as you use the word ‘cycle’ that i have used and pose the question கிழட்டு பசுவை என்ன செய்ய?

    I did not say don’t eat the cattle at all. The கிழட்டு cattle would only be happy to become food to you as a way of thanking you for having taken care of them for their entire productive life.

    However, ideal would be to butcher it when it has breathed its last and consume it just as dalit bretheren have been doing it for ages. Every one should emulate this kindest way of life.

  13. Mr. Selvakumar,

    //என்ன சொல்ல வருகிறீர்கள் ? மாட்டு கறி தின்பவர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லை என்று சொல்கிறீர்களா ?///

    இக்காலத்தில் மாட்டுக்கறி தின்பவர்களை Orthodox Hindus என்று சொல்ல முடியாது ஆனால் நான் சொல்ல வருவதென்னவென்றால், பன்றி இறைச்சி நல்ல உணவு, முற்காலத்தில் மத்திய கிழக்கில் அரபுக்கள் கூட பன்றியை உண்டனர். ஒரு நல்ல வகையான இறைச்சியாகிய பன்றி இறைச்சி ஏன் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் என்று எவருமே புத்தகம் எழுதத் துணிய மாட்டார்கள். அதற்குக் காரணம், முஸ்லீம்கள் பாட்வா அறிவித்து விடுவார்கள் என்ற பயம் மட்டுமல்ல அது முஸ்லீம்களின் மனதைப் புண்படுத்தும், நாகரீகமற்ற செயலும் கூட. ஆனால் இந்துக்கள் மாடு தின்ற அக்கால வழக்கத்தையும்( அது 5000 வருடங்களுக்குமுன்பாக இருந்தாலும் பரவாயில்லை), இக்கால வழக்கத்தையும் ஒப்பிட்டு எப்படி வேண்டுமானாலும் புத்தகம் எழுதலாம். கேட்பார் எவரும் கிடையாது, ஏனென்றால் அதை எதிர்ப்பவர்களை, இந்துத்துவா என்று பட்டம் சூட்டி, ஒரு மூலையில் இருத்தி விடலாம் அல்லவா? அத்துடன் இந்துமதம் என்பது தனிமனித சுதந்திரத்தை மதிக்க்கும் ஒரே மதம் இந்துமதமாகத் தானிருக்க வேண்டும்.

    ///இந்துக்களின் முன்னோர்கள் யாருன்னு சொன்னா ரொம்ப புண்ணியமா போய்டும்..///

    உதாரணமாக, முஸ்லீம்களுக்கு, அவர்களுக்கு நாடு, மொழி, இன வேறுபாடு கிடையாது, யார் அல்லாவை வழிபடுகிறார்களோ அவர்கள் எல்லாம் முஸ்லீம்கள். அவர்களின் ஒற்றுமை அந்த அடிப்படையில் தான் உள்ளது. அதனால் தான் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படும் போது, ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யாத தமிழ்நாட்டு முஸ்லீம்கள், பலத்தீனத்தில் ஒரு அரபுக்குழந்தையின் பல்லுடைந்தால் கூட, அதற்காக அமெரிக்காவை, இஸ்ரேலை எதிர்த்தெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். ஏனென்றால் அவர்களின் மொழி, இனவழிச் சகோதரர்களாகிய ஈழத்தமிழர்களை விட, முஸ்லீம்களாகிய அரேபியர்களும், ஆபிரிக்கர்களும் அவர்களுக்கு நெருங்கியவர்கள், ஏனென்றால் அவர்கள் முஸ்லீம்கள். உதாரணமாக, அண்மையில் அமேரிக்கா ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்தவர் பி,ஜெய்னுலாப்தீன்.

    மேலே குறிப்பிட்ட உதாரணத்திலிருந்து நான் சொல்ல வருவதென்னவென்றால், இந்துக்களின் முன்னோர்கள் யாரென்றால், முற்காலத்தில் எவர் இந்துக்கடவுள்களை வணங்கினார்களோ அவர்கள் எல்லாம், இக்கால இன, மொழி வேறுபாடற்று இந்துக்களின் முன்னோர்கள். அது இந்துமதத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு தமிழனாக இருந்தாலென்ன, தன்சானியனாக இருந்தாலென்ன வேறுபாடு கிடையாது.

    நாங்கள் தமிழர்கள் எமக்கென்று தனித்துவமான சைவ/மாலிய பாரம்பரியங்களை தமிழாக்க வேண்டும், பார்ப்பனீயத்தை(பார்ப்பனர்களையல்ல) தமிழ்நாட்டின் கோயில்களிலிருந்து அகற்றி, சாதிப்பாகுபாடற்று தமிழர்களின் முன்னோர்களின் கோயில்கள் எல்லாம் தமிழுக்கு முன்னுரிமை தரும் வகையில் தமிழாக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் இந்துக்களின் முன்னோர்கள் யார் என்ற கேள்விக்குப் பதில், எவர் முற்காலத்தில் இந்துக்களாக இருந்தார்களோ, தமது உயிரையும் கொடுத்து, அன்னியர்களிடமிருந்து இந்து தர்மத்தைக் காத்தார்களோ அனைவரும் இக்கால இந்துக்களின் முன்னோர்கள் என்பது தான் என்னுடைய கருத்தாகும். அதன் அடிப்படையில் சைவத்தைக் காத்த தமிழனாகிய யாழ்ப்பாண ஆறுமுகநாவலர், காஸ்மீரத்து பார்ப்பான் ஒருவனின் இந்து முன்னோர் ஆகிறார். இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்குமென நம்புகிறேன்.

    • முசுலிம்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை.உண்மை.அதற்காக விரும்புபவர்கள் அதை உண்பதை எதிர்ப்பதில்லை.ஆனால் மாட்டுக்கறி உண்ணாத ”இந்துக்கள்” அதை விரும்புபவர்களை உண்ண கூடாது என தடுக்கிறார்களே.ஏன்.அந்த நியாயத்தை கொஞ்சம் பொளந்து கட்டுங்களேன்.

      • திப்புகாக்கா,

        //முசுலிம்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை.உண்மை.அதற்காக விரும்புபவர்கள் அதை உண்பதை எதிர்ப்பதில்லை.//
        /
        இன்னொரு முஸ்லீம் பன்றியை உண்டால், நீங்கள் நிச்சயமாக அவரை எதிர்ப்பீர்கள். அவரை அருவருப்பாக பார்ப்பீர்கள். தமிழ்நாடு ஜமாஅத்துக்குத் தெரிந்தால் அவரை ஊரிலிருந்து ஒதுக்கி வைப்பார்கள். பி.ஜெய்னுலாப்தீன் அறிந்தாரேயானால் அறம் பாடியே அவரை மவுத்தாக்கி விடுவார். 🙂

        காபீர்கள் பன்றியை உண்டால் நீங்கள் எதிர்க்கமாட்டீர்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அதை உண்பவர்களை அருவருப்பாக பார்ப்பீர்கள், அவர்கள் சுத்தமில்லை என்று நினைத்துக் கொள்வீர்கள். அதிலும் வஹாபிஸ்டாக இருந்தால் காபீர்களின் இப்படியான பழக்கவழக்கங்களை தனிமையில் நண்பர்களுடன் பேசி உங்களின் அருவருப்பைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

        இந்துக்களும், முஸ்லீம்களும், கிறித்தவர்களும் வாழும் இராமநாதபுரக் கரையோரக் கிராமங்களுக்கு முஸ்லீம் நண்பர்களுடன் போனால் அங்கு திரியும் கட்டாக்காலி பன்றிகளைக் காட்டி, பார், எவ்வளவு அசிங்கத்தை எல்லாம் உண்ணுகிறது, அதனால் தான் குர்ஆனில் பன்றியை உண்ணுவது தடுக்கப்பட்டிருக்கிறது என்று இஸ்லாத்தையும், விஞ்ஞானத்தையும் தொடர்பு படுத்தி விளக்கம் எல்லாம் தருவார்கள். அதைத் தான் தலித்துக்கள் உண்ணுகிறார்கள் என்று அதையும் சுட்டிக்காட்டத் தயங்கவும் மாட்டார்கள். இப்படி எல்லாம் பேசுவதும் கூட ஒருவகையான துவேசம்/ இனவாதம் தான் என்று அவர்களிடமே நேரடியாகக் கூறுமளவுக்கு நெருக்கமான, முஸ்லீம் நண்பர்கள் எனக்கும் உண்டு. நான் தமிழ்நாட்டுக்கு செல்லும் போதெல்லாம், அவர்களின் கிராமங்களுக்கும் செல்வதுண்டு, நான் பன்றி, மாடு எதுவும் உண்ணாததால் அவர்களுக்கு அது ஒரு பிரச்சனை இல்லையென்று நினைக்கிறேன், நான் பன்றியை உண்ணாததால் தான், பன்றி உண்பவர்களைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை என்னிடம் கூறுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

        ///ஆனால் மாட்டுக்கறி உண்ணாத ”இந்துக்கள்” அதை விரும்புபவர்களை உண்ண கூடாது என தடுக்கிறார்களே.ஏன்.அந்த நியாயத்தை கொஞ்சம் பொளந்து கட்டுங்களேன்.///

        உங்களுக்குத் தெரிந்த ஒரு முஸ்லீம் பன்றியைத் தின்றால் நீங்கள் எப்படி புத்திசொல்லித் தடுப்பீர்களோ அதைத்தான் மாடு தின்னும் இந்துக்களை இந்தியாவிலுள்ள இந்துக்கள் தடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஈழத்தில் மாட்டிறைச்சியை உண்பதற்கு எதிர்ப்பெல்லாம் கிடையாது. ஈழத்துச் சைவர்கள் மாடு, மீன், அல்லது எந்த மாமிச உணவையுண்டாலும் அன்று கோயிலுக்குப் போக மாட்டார்களே தவிர, கோயிலுக்குப் போகாத நாளில் எதை விரும்பினாலும் உண்ணலாம். ஒருவர் மாட்டிறைச்சி உண்ணாதததால் அவர் உயர்ந்த இந்து, உண்பவர்கள் எல்லாம் தாழ்ந்த இந்து என்றெல்லாம் கிடையாது. உணவில் பாகுபாடெல்லாம் இலங்கையில் கிடையாது. நான் மாடு, பன்றியை உண்ணாததற்கு இந்து மதம் காரணமல்ல. மேலைநாடுகளில் மிருகங்களை வரிசை வரிசையாக சித்திரவதை செய்து கொல்வதையும்,தலை வெட்டுப்பட்ட பின்பும் அவை துடி துடித்துக் கொண்டு கிடப்பதையும் நேரில் ஒருமுறை பார்த்தததால் தான் நான் மீனைத் தவிர எந்த இறைச்சியையும் உண்பதில்லை. பெரும்பான்மை யாழ்ப்பாணச் சைவர்களுக்கு மீன் அல்லது இறைச்சி இல்லாமல் சோறு இறங்காது. விரத நாட்களில் அல்லது கோயிலுக்குப் போகும் நாட்களில் மட்டும் தான் மரக்கறி உணவை உண்பது வழக்கம். அதனால் மற்றவர்கள் மாட்டிறைச்சி உண்பதைத் தடுக்கும் இந்திய இந்துக்களிடம் தான் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும், அவர்களால் தான் உங்களைப் போல் இந்த விடயத்தைப் பொளந்து கட்ட முடியும்.

        • வியாசன்,
          இணைய தள விவாதங்களில் பொதுவாக அனைவரும் சரிபார்க்க கூடிய தகவல்களை தந்து விவாதம் செய்யுங்கள்.எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்று சொல்லி வாதிட்டால் மெய்ப்பிக்க சொல்லி கேட்க வேண்டியிருக்கிறது.அவனடி என்பவரை அப்படி கேட்டபோது ஏதோ அவரை கொலை செய்வதற்காக கேட்பது போல் குற்றம் சொல்லி தப்பித்துக் கொண்டார்.

          \\மேலைநாடுகளில் மிருகங்களை வரிசை வரிசையாக சித்திரவதை செய்து கொல்வதையும்,தலை வெட்டுப்பட்ட பின்பும் அவை துடி துடித்துக் கொண்டு கிடப்பதையும் நேரில் ஒருமுறை பார்த்தததால் தான் நான் மீனைத் தவிர எந்த இறைச்சியையும் உண்பதில்லை.//

          வலையில் சிக்கிய மீன்கள் மூச்சுக்காற்றுக்கு தவி தவித்து துள்ளித்துடித்து சாகும்.அப்போது இந்த இரக்க உணர்ச்சி கீழை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் போய் விட்டதோ.

          • கடற்கரையில் நின்று மீன்கள் பிடித்து தொகை தொகையாக, உயிரோடு பிடித்து வரப்படுவதையோ அல்லது துடி துடித்துக் கொண்டு சாவதையோ நான் இதுவரை பார்த்ததில்லை. அல்லது மீன்கள் துடி துடித்துக் கொண்டு சாவது என்னையறியாமலே என்னிடம் ஒரு அருவருப்பையும், குற்ற உணர்வையும் ஏற்படுத்தவில்லை என்பது தான் அதன் கருத்தாகும். அப்படியான அருவருப்பை பார்க்க நேரிடும் என்பதால் தான், நான் சீனர்களின் கடைகளுக்குப் போக விரும்புவதில்லை, அதை விட,அந்த அருவருப்பினால் தான் அங்கு அப்படிப் போக நேர்ந்தாலும், மீன் விற்கும் பகுதிகளுக்குப் போவதில்லை. அப்படி மீன்கள் துடி துடித்துச் சாவதை நான் பார்த்தாலும் கூட, மிருகங்கள், கம்பிகளில் கொழுவப்பட்டு வந்து, வரிசையாக, வந்து விழுந்தது, துடி துடித்ததைப் பார்த்த போது எனக்குள் ஏற்பட்ட குற்ற உணர்வும், அருவருப்பும் மீன்கள் சாவதைப் பார்க்கும் போது வராமல் கூட போகலாம். அந்த உதாரணத்தை நான் கூறியதற்குக் காரணம், நான் இறைச்சி சாப்பிடுவதில்லை என்பதைக் காட்டிக் கொள்வதற்காக அல்ல. மத அடிப்படையில் அல்லாமல் கூட, பலர் இறைச்சி உண்பதில்லை என்பதைச் சுட்டிக் காட்டத் தான். தயவு செய்து எந்த சந்தர்ப்பத்ததில் கருத்துக்கள் கூறப்பட்டன என்பதைப் பார்த்த பின்னர் கருத்து எழுதினால், மீண்டும் இப்படி பதிலெழுதி நேரத்தை வீணாக்குவதை மற்றவர்கள் தவிர்க்கலாம். மீன், இறைச்சி சாப்பிடாதவர்கள் சமுதாயத்தில் ஏதோ உயர்ந்தவர்கள், அல்லது அவர்கள் பெரிய சாமியார்கள் என்று நான் நினைக்கவில்லை. பெரும்பான்மை ஈழத்தமிழர்களுக்கு (எங்களின் குடும்பம் உட்பட)மீன், இறைச்சி இல்லாமல் (வாரத்தில் ஒரு சில நாட்களைத் தவிர) சோறு சாப்பிட மாட்டார்கள்

            //இணைய தள விவாதங்களில் பொதுவாக அனைவரும் சரிபார்க்க கூடிய தகவல்களை தந்து விவாதம் செய்யுங்கள்.எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்று சொல்லி வாதிட்டால் மெய்ப்பிக்க சொல்லி கேட்க வேண்டியிருக்கிறது.///

            உங்களின் கேள்வி எனக்குப் புரியவில்லை, முஸ்லீம்களைப் பற்றிய உண்மையைக் கூறியது கசக்கிறது போல் தெரிகிறது. என்னுடைய அனுபவத்தைத் தான் நான் குறிப்பிட முடியும், உங்களைப் போன்றவர்கள் நம்ப வேண்டுமென்பதற்காக இணையத்தளங்களில், நண்பர்களின் பெயர், முகவரி எல்லாம் தந்தா நிரூபிக்க முடியும். பேசப்படும் விடயத்துக்கு அமைய, எனக்கும் ஏதாவது அனுபவங்கள், சம்பவங்கள் நடந்தால் அதைக் குறிப்பிடுவது சாதாரணமானதொன்று. உங்களைப் போன்ற நீதிபதிகள் வருவார்கள், அவர்களைத் திருப்திப்படுத்த, அவர்களின் குறுக்கு விசாரணையில் இப்படியான கேள்விகளைக் கேட்பார்கள் என நினைத்து, விசாரணைக்கு ஏற்றவாறு யாரும் பதிலெழுதுவதில்லை. 🙂

            • விவாதங்களில் நீங்கள் சொல்லும் தகவல்கள் உங்களை சாராமல் சரி பார்க்க கூடிய வகையில் இருக்க வேண்டும்.அப்போதுதான் அதன் உண்மை தன்மை உறுதிப்படும்.மாறாக எனக்கு தெரியும், நானே பார்த்தேன் என்பன போன்ற வாதங்கள் வாதியும் நானே நீதிபதியும் நானே என்ற வகையில் சேரும்.

              மீன் இறைச்சிக்கு இவ்வளவு சுற்றி வளைத்து விளக்கம் சொல்லி ஒரு பயனுமில்லை.வரிசையாக ஆடு மாடுகள் வெட்டுண்டு கிடப்பதை பார்த்ததிலிருந்து அவ்விறைச்சியை துறந்த கருணாமூர்த்தியான நீங்கள் மீன்கள் சாவதை பார்த்ததில்லை,அந்த இடங்களுக்கு போக மாட்டேன் அதனால் மீன் தின்பேன் எனபது நகைப்புக்குரியது.மனிதனுக்கு அழகே பகுத்தறியும் திறன் தான்.நாம் சாப்பிடும் உணவு எப்படி வந்தது என்று கூட எண்ணிப்பார்க்காமல்,எண்ணிப்பார்க்கவும் மாட்டேன் எனபது ஒரு கருணாமூர்த்திக்கு அழகில்லையே.

              உண்மையை சொன்னால் உயிர்கள் மீது கருணையால் அசைவம் உண்பதில்லை என்பதே கேலிக்கூத்தானது.ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் உயிர்களை அழித்து உணவாக்கி உண்பதால்தான் ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உயிர் தரித்திருக்கிறது.அசைவம் உண்ண விருப்பமில்லையா.தாராளமாக உண்ணாதிருங்கள்.ஆனால் அது கருணையினால் என்று சொல்லி உண்பவர்களை இரக்கமற்றவர்கள் என சொல்லாமல் சொல்லி இழிவு பட