Friday, September 19, 2025
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்சமஸ்கிருத வாரத்தை கண்டித்து புமாஇமு ஆர்ப்பாட்டம்

சமஸ்கிருத வாரத்தை கண்டித்து புமாஇமு ஆர்ப்பாட்டம்

-

ந்தித் திணிப்பு, வரலாற்றுத் திரிபு எனத் தொடரும் இந்து மதவெறி பண்பாட்டுத் தாக்குதலின் ஒரு பகுதியாக சி.பி.எஸ்.ஈ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்ற மோடி அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் “தற்போது மத்திய அரசு சமஸ்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டுள்ளது, அடுத்த முறை மற்ற மொழிகளுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கலாம். எனவே இந்த உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை” என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு கூறியிருக்கிறது.

செய்தி (தினகரன்)- சமஸ்கிருத வாரம் கொண்டாட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

சமஸ்கிருத வாரம் தடை மனுபடம் : ஓவியர் முகிலன்

மோடி அரசின் சமஸ்கிருத வாரம்!                                                                    
இந்துத்துவா திணிப்பே அதன் சாரம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மாணவர்களே,

  • இந்து-இந்தி-இந்தியா என்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியக் கருத்தைத்
    திணிக்கும் சதியே சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம்!
  •  சமஸ்கிருதத்துக்கு கொண்டாட்டமாம் ஒருவாரம்
    தூக்கி எறி அதை மோடி அரசோடு (குப்பை) ஓரம்!
  • என்றோ செத்துப்போன
    சமசுகிருதம் என்ற வட மொழியை
    மக்கள் பேசுவதில்லை, எழுதுவதில்லை, பாடுவதில்லை.
    போற்றுவது இன்னமும்
    ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனர் மட்டுமே –
    பார்ப்பனீயம் சமஸ்கிருதம் இரண்டையும்
    ஒன்றாய்த் தூக்கியெறிவோம்!
  • செத்த பிணத்துக்கு அலங்காரம் செய்வதுண்டோ
    செத்த வடமொழிக்குச் சிங்காரம் செய்யலாமோ!
    வடமொழி – இந்தி மோடியின் கூப்பாடு!
    கல்வியில் இந்துமதவெறி மோடியின் ஏற்பாடு
    இந்த பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பை முறியடிப்போம்!
  • நம் தமிழுக்கு எதிர் சமஸ்கிருத சூழ்ச்சியா
    நம் மக்களுக்கு எதிர் இந்தி ஆட்சியா
    வடமொழி – இந்திக்கு கொண்டாட்டமா
    இவைகளை கூண்டோடு தூக்கியெறிவோம்!
  • இந்தித்திணிப்பு, சமஸ்கிருத மீட்பு,
    வரலாற்று திரிப்பு என்ற
    மோடி அரசின் பார்ப்பன பாசிச
    நடவடிக்கைக்களை முறியடிப்போம்!
  • அன்று இந்தித் திணிப்புக்கு எதிராக
    ஆகஸ்டு 07 முதல் 13 வரை
    சமஸ்கிருத எதிர்ப்பு வாரம் கடைபிடிப்போம்!
    பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை மீட்டெடுப்போம்!
  • இந்தி – சமஸ்கிருத திணிப்பை
    கல்வி நிலையங்களில் இருந்து ஒழித்துக்கட்ட
    கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து
    மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப் போராடுவோம்!
  • சி.பி.எஸ்.சி பள்ளிகளில்
    சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்துவோம்!
    மோடி அரசின் உத்தரவை திரும்பப்பெற வைப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

6.8.2014, காலை 11 மணி
பத்மசேஷாத்ரி சி.பி.எஸ்.சி பள்ளி
ஹபிபுல்லா சாலை (நடிகர்சங்க கட்டிடடம் அருகில் ), தி.நகர், சென்னை.

மக்கள் கலை இலக்கியக்கழகம்
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி
சென்னை 9445112675