privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்அடிக்கட்டுமான ஒதுக்கீடு வேலை வாய்ப்பிற்கா, முதலாளி கொழுக்கவா ?

அடிக்கட்டுமான ஒதுக்கீடு வேலை வாய்ப்பிற்கா, முதலாளி கொழுக்கவா ?

-

னியார்மயம்-தாராளமயம் புகுத்தப்பட்ட பிறகு வருடாந்திர பட்ஜெட் தயாரிப்பு என்பது இலைமறை காயாகக்கூட இல்லாமல், மிகவும் அம்மணமாகவே உலக வங்கி உள்ளிட்ட ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் தெரிவிக்கும் திட்டங்களையும் கொள்கைகளையும் நிறைவேற்றித் தரும் அறிக்கையாகவே மாறிவிட்டது. இப்படிபட்ட விசுவாசத்தைக் காட்டுவதில் நரேந்திர மோடி அரசின் பட்ஜெட் கொஞ்சங்கூட கூச்சநாச்சம் பார்க்கவில்லை என்பதே உண்மை.

2014 பட்ஜெட்ஆனால், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்திற்காகவே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருப்பது போலவும் அதற்காகவே இந்த பட்ஜெட்டில் புதிய நகரங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலைப் பணிகள் உள்ளிட்ட அடிக்கட்டுமானத் திட்டங்கள் தீட்டப்பட்டு, அவற்றுக்கு 2.5 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி வருகிறார், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.குருமூர்த்தி.

பட்ஜெட் பற்றி குருமூர்த்தியும் ஊடகங்களும் உருவாக்கும் சித்தரிப்பு ஒரு மோசடி என்பதைப் புரிந்துகொள்ள “நாணயம் விகடன்” இதழ் (20.07.2014) வெளியிட்டுள்ள பட்டியலொன்றைக் கீழே தந்திருக்கிறோம். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அடிக்கட்டுமானத் திட்டங்களின் மூலம் கொழுத்த இலாபத்தை அறுவடை செய்யப் போகும் இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்களின் பட்டியலொன்றை வெளியிட்டுள்ள அவ்விதழ், அந்நிறுவனங்களில் உடனடியாக முதலீடு செய்து இலாபம் பார்க்குமாறு நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது.

  • துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலை மேம்பாடு திட்டங்கள்: எல் அண்ட் டி., எஸ்ஸார் போர்ட்ஸ் மற்றும் ஐ.ஆர்.பி. இன்ஃப்ரா.
  • மின்சாரம், கச்சா எண்ணெ, இயற்கை எரிவாயு திட்டங்கள்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா பவர், ஜெய்பிரகாஷ் பவர், கே.இ.சி.இண்டர்நேஷனல்.
  • ரியல் எஸ்டேட், ஸ்டீல் மற்றும் சிமெண்ட் உற்பத்தித் துறை: சோபா டெவலப்பர்ஸ், டாடா ஸ்டீல், ஜிந்தால் ஸ்டீல், ஜே.கே. லட்சுமி சிமெண்ட்.
  • இந்த அடிக்கட்டுமானத் துறைகளுக்கு அப்பால், வங்கிகள் அடிக்கட்டுமானத் திட்டங்களில் முதலீடுகளைச் செய்ய நீண்ட கால இன்ஃப்ரா பண்டுகளைத் திரட்ட அனுமதிக்கப்பட்டிருப்பதால், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ஆகியவையும்;
  • * வீட்டுக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி வரம்பு அதிகரிக்கப்பட்டிருப்பதால், ஹெச்.டி. எஃப்.சி.வங்கி, கிருக் ஃபைனான்ஸ் நிறுவனங்களும்;
  • விவசாயத் துறையில் புதிய யூரியா கொள்கை அமலுக்கு வர உள்ளதால் தீபெக் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனமும், சூரிய சக்தி மற்றும் உணவுப் பதப்படுத்தலுக்கு பட்ஜெட்டில் தரப்பட்டுள்ள முக்கியத்துவத்தால் ஜெயின் இர்ரிகேஷன், கோஹினூர் ஃபுட்ஸ் நிறுவனங்களும்;
  • நடுத்தர வர்க்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வருமான வரிச் சலுகையால் ஏற்படும் பணப் புழக்கத்தால் ஹெச்.யு.எல்., ஐ.டி.சி., கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நுகர்பொருள் நிறுவனங்களும் வளர்ச்சி அடையும் எனக் கணித்திருக்கிறது நாணயம் விகடன்”.

தேச வளர்ச்சிக்கான திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயர்களில் கொண்டுவரப்படும் எந்தத் திட்டத்தை அறுத்துப் பார்த்தாலும் கிடைக்கக்கூடிய சித்திரம் இதுதான்.
_______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
_______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க