டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த மஹிசாசுரன் வீரமரண நினைவேந்தல் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியினர் கலவரம் செய்து விழாவை சீர்குலைத்துள்ளனர். மஹிசாசுரனை நாயகனாக சித்தரித்து வெளிவந்த “பார்வர்ட் பிரஸ்” ( Forward Press) என்ற பத்திரிகை அலுவலகத்தை போலீசை கொண்டு அடித்து நொறுக்கியுள்ளனர்.

ஆரிய பார்ப்பனர்கள் இந்த மண்ணின் பூர்வகுடி மக்களை, பழங்குடிகளை இனப்படுகொலை செய்ததை கொண்டாடும் பல்வேறு பார்ப்பன பண்டிகைளில் ஒன்று துர்காபூஜை என்ற மஹிசாசுரன் படுகொலை கொண்டாட்டம். அதே சமயத்தில் மஹிசாசுரனை தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – பழங்குடி மக்களின் நாயகனாக முன்னிறுத்தும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபும் இங்கு இருந்து வருகிறது.
அம்பேத்கர், பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகள் இது போன்ற விழாக்களை ஊக்குவித்துள்ளனர். தலித் மக்கள் ஆங்கிலேயர் படையில் சேர்ந்து, பார்ப்பன மன்னனை கொன்றோழித்த தினத்தை அம்பேதக்ர் கொண்டாட வலியுறுத்தியிருக்கிறார். தமிழகத்தில் இராவண லீலா நிகழ்வுகளை திராவிட இயக்கம் நடத்தியிருக்கிறது. மக்கள் கலை இலக்கியக் கழகம் அசுர கானம் என்ற பெயரில் பாடல் ஒலிப்பேழை வெளியிட்டுள்ளது: தமிழ் மக்கள் இசை விழாவையும் பல ஆண்டுகளாக நடத்தியிருக்கிறது.
அந்த வகையில் பார்ப்பனிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கும் வரலாற்றை பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட-பழங்குடி மக்களின் பார்வையிலிருந்து மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, “வீரமரணமடைந்த மஹிசாசுரனுக்கு நினைவேந்தல் நிகழ்வு” என்று ஒரு நிகழ்வை அக்டோபர் 9-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தது, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கம். நேரு பல்கலைக்கழக மாணவர் விடுதியின் காவேரி மெஸ்சில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது அங்கு திரண்டு வந்த ஏ.பி.வி.பி குண்டர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கம் மற்றும் கலந்துகொண்ட மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். விடுதி உணவகத்தின் கதவுகள் மற்றும் கண்ணாடிகளை உடைத்து தங்கள் வெறியை காட்டியுள்ளனர். தங்களின் வன்முறை மூலம் நிகழ்ச்சியை நடக்கவிடாமல் தடை செய்துள்ளனர்.

இதே போல கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் அசுரர்கள் வாரம் கொண்டாட ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது ஏ.பி.வி.பியினரின் தூண்டுதலின் பேரில் பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது குறித்து ஏற்கனவே எழுதியிருந்தோம்.
ஏபிவிபி யின் இந்த அடாவடி செயலை செயலை கண்டித்து ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் சங்கம் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளது.
நிகழ்வில் கல்ந்துகொண்ட ஒரு மாணவர் இது குறித்து கூறும்போது “ஏபிவிபி யினரும் இதே காவேரி மெஸ்சில் தான் தங்களின் துர்கா பூஜைக்கான சிலைகளை வைத்து வழிபட்டனர்.அப்போது யாரும் இதை எதிர்க்கவில்லை ஆனால் இன்று தலித்துகள் தங்களின் நாயகன் மஹிசாசுரன் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் போது ஏபிவிபியினர், அந்தப் பகுதி குண்டர்களின் துணையுடன் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்” என்று கூறி தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நேரு பல்கலைகழக மாணவர் தேர்தலின் அனைத்து பதவிகளிலும் சி.பி.எம்.எல் (லிபரேசன்)-ன் மாணவர் அமைப்பான AISA-விடம் படுதோல்வியடைந்த ஏ.பி.வி.பி தனது கோபத்தை இந்த வன்முறை மூலம் தீர்த்துக் கொண்டுள்ளது. AISA-வின் வெற்றியைவிட “நக்சல்பாரி ஜிந்தாபாத்” “லால் சலாம்” போன்ற முழக்கங்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகங்களில் எதிரொலிப்பது ஆளும்வர்க்க எடுபிடிகளான ஏபிவிபி-யினருக்கு எரிச்சலூட்டியிருக்கிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை வெறியாட்டத்தை தொடர்ந்து, இந்துத்துவவாதிகளின் தூண்டுதலில் பேரில் அதே நாள் இரவில் “மஹிசாசுரன் சிறப்பிதழாக” வெளிவந்த தலித்-பிற்படுத்தப்பட்ட மாத இதழான பார்வர்ட்பிரஸ் பத்திரிகை அலுவலகம் டெல்லி போலீசாரால் சூறையாடப்பட்டது. அதன் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடில்லாமல் அதன் நான்கு ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்வர்ட் பிரஸ் பத்திரிகை “நீதிமன்ற உத்தரவோ அல்லது வேறு எந்த ஆணையும் இல்லாமல் போலீசார் பத்திரிகை அலுவலகத்தை அடித்து நொறுக்கி ஊழியர்களை கைதுசெய்ததோடில்லாமல் நகரின் பல இடங்களிலிருந்தும் எங்கள் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றி வருகிறார்கள். பகுஜன் – சிரமன கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அக்டோபர் மாத இதழில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் அறிவுஜீவிகள், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் மஹிசாசுரன்-துர்கா கதையை பிற்படுத்தப்பட்ட மக்களின் பார்வையிலிருந்து மறுவாசிப்பு செய்து கட்டுரைகள், படங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
யாரையும் புண்படுத்துவது நோக்கம் எங்களுக்கு இல்லை. பகுஜன் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் அடையாளங்களை கண்டுபிடிப்பதும், அதை மீட்டுருவாக்கம் செய்வதும் தான் எங்கள் நோக்கம். சொல்லப்படும் புனித நூல்களை பகுஜன் பார்வையிலிருந்து மறுவாசிப்பு செய்யும் மரபு நீண்ட நெடியது. எங்களுக்கு முன்பே அது ஜோதிராவ் பூலேவிலிருந்து ஆரம்பித்து அம்பேத்கர், பெரியார் என்று நீள்கிறது.
இது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல். பார்பனிய பா.ஜ.க சக்திகளின் உத்தரவின் பேரில்தான் இது நிகழ்த்தப்பட்டுள்ளது. தலித்-பிற்படுத்தப்பட்ட-பழங்குடி மக்களின் இதழான எங்களை இந்த பார்ப்பன சக்திகள் எப்போது அருவெறுப்பகத்தான் பார்த்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு பல முறை எங்களை தாக்கியிருக்கிறார்கள். இந்த தாக்குதல்கள் எங்களை மேலும் பலமாக்கியிருக்கிறதே ஒழிய வேறு எதையும் சாதிக்கவில்லை. இந்த பிரச்சனையிலிருந்தும் நாங்கள் மீண்டு வருவோம்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதோடு பிரேம்குமார் மணி என்பவரது கட்டுரையின் சில பகுதிகளையும் தங்கள் கண்டன அறிக்கையில் பதிவு செய்துள்ளனர். அவை முன்வைக்கும் கேள்விகள் முக்கியமானவை.
“பழங்குடிகளின் நாயகர்களான அசுரர்கள் கொல்லப்பட்டது எப்படி கொண்டாடத்தக்க விழாவானது? கொலையை கொண்டாடும் இந்த மனநிலை எதைக் குறிக்கிறது? இதே போன்று குஜராத் படுகொலைகளையோ இல்லை பீகாரின் தலித் படுகொலைகளையோ கொண்டாடினால் அதை நாம் எப்படி பார்ப்போம். ஆம் அசுரர்கள் தோற்றுவிட்டார்கள்தான். அதற்காக ஆண்டுதோறும் அதை ஏன் கொண்டாட வேண்டும். இதைக் கொண்டாடுவதன் மூலம் நீங்கள் தான் மக்களை அவமதிக்கிறீர்கள்” என்று பார்ப்பன கொண்டாட்டங்களை கேள்விக்குள்ளாக்குகிறது அந்த கண்டன அறிக்கை.

மாறாக, “மஹிசாசுரன் வீரமரணமடைந்த நாளை நினைவுகூறுவதன் மூலம் நாங்கள் யாரையும் புணபடுத்தவில்லை. நாம் ஏன் தோற்றோம் என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம். கடந்த காலத்தை கற்றுக்கொள்வதன் மூலம் தான் நிகழ்காலத்தில் எங்களை உயர்த்திக்கொள்ள முடியும். எங்களின் எல்லா சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. கிடைக்கும் சில தரவுகளின் மூலம் தான் எங்கள் ஏகலைவன் அர்ஜூனனைவிட திறமையாளன் என்பதை அறியமுடிகிறது. ஆனால் அரசு, திறமை குறைந்த அர்ஜுனன் பெயரில்தான் விருதுகள் தருகிறது. வரலாற்றிலிருந்து எங்கள் நாயகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். எங்கள் குறியீடுகள் அவமதிக்கப்பட்டுள்ளன. எங்கள் நாயகர்களின் கட்டைவிரல்கள், தலைகளை வெட்டிய மரபை நாங்ள் கேள்வி கேட்க விரும்புகிறோம். அவர்களின் அவமானம் எங்களின் அவமானம்.” என்று பார்ப்பன கலாச்சாரத்தை கேள்விக்குள்ளாக்கும் தமது நடவடிக்கைகளின் நோக்கத்தை விளக்குகின்றனர்.
இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க எந்த ஆர்.எஸ்.எஸ் காரனும் தயாராக இல்லை. அவர்களின் ஒரே பதில் வன்முறை. அரச அதிகாரம் மூலம் கேள்வி கேட்பவனின் குரல்வளையை நெறிப்பது. இதைதான் நந்தன் காலம் முதல் இன்று வரை செய்து வருகிறார்கள்.
இத்தகைய பாசிஸ்டுகள் தங்களை ஜனநாயகவாதிகள் போல காட்டிக்கொள்ள தவறுவதில்லை. அதில் ஒன்றுதான் இந்துத்துவம என்பது அனைத்து வழிபாடுகளையும் அங்கீகரிக்கரிப்பது, அதில் நாத்திகம் உள்ளிட்டு ‘பாரத’ கலாச்சாரத்தின் அனைத்தும் அடக்கம் என்று சில கபடதாரிகள் பசப்புகிறார்கள்.
இது உண்மை எனில், ‘மாபெரும் பாரத கலாச்சாரத்தின்’ சில புதல்வர்கள் அதே பாரதத்தின் கொல்லப்பட்ட புதல்வரான மகிசாசுரனுக்கு நினைவுநாள் நடத்துவது ஆர்.எஸ்.எஸ் அம்பிகளுக்கு பதற்றத்தையும், நடுக்கத்தையும் உண்டாக்குவது ஏன்? மஹிசாசுரன் என்ன ஐரோப்பிய மையவாத சிந்தனை கொண்டவரா? இல்லை பாபருக்கு பக்கத் துணையாக வந்தவரா? இல்லையே பார்ப்பனர்கள் வருவதற்கு முன்னரே ‘பாரதத்தில்’ இருந்தவர்கள் தானே. பின்னே ஏன் நடுக்கம் பதற்றம் எல்லாம்.
உண்மையில் இந்து மதம் என்றழைக்கப்படும் பார்ப்பனியம் சற்றும் சகிப்புத் தன்மை அற்றது. அதை எதிர் கொண்டு தமது உரிமைகளை நிலைநாட்டியது இங்கேயிருக்கும் உழைக்கும் மக்களின் போராட்டமே அன்றி அது இந்து மதத்தின் பொறுமை அல்ல. மாறாக பார்ப்பனியத்தின் வேரே, ஆரிய-பார்ப்பன-சமஸ்கிருத கலாச்சார மேலாதிக்கம்தான்.
குமரித்தாய் வழிபாட்டிற்கு கத்தோலிக்கம் தடை விதிப்பதாகவும், இந்துத்துவம் தான் பன்முகத்தன்மை கொண்டது என்றும் நாமெல்லாம் மாபெரும் பாரத கலாச்சாரத்தின் புதல்வர்கள் என்றும் கூறி குமரித்தாயின் ஜனநாயக உரிமைக்கு போர்க்கொடிதூக்கும் ஜோ.டி.குரூஸ் போன்றவரகள் அதே மாபெரும் பாரத கலாச்சாரத்தின் புதல்வர்களான அசுரர்களுக்கு நினைவேந்தலை தடை செய்யும் இந்த்துத்துவம் பற்றி என்ன கருதுகிறார்கள்? பேய்க்கு வாழ்க்கைப்பட்ட பிறகு இம்சைதானே நீதி?
இந்துத்துவத்தின் சாதிய வர்ணாசிரம ஜீன்களிலேயே பன்முகத்தன்மைக்கோ சமத்துவத்திற்கோ இடமில்லை. ஆதிக்க ஆரிய-பார்ப்பன-சமஸ்கிருத மொழி வழி கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள் தான் இந்த்துவம். அதில் அசுர-திராவிட-தேசிய இன மொழிவழிபட்ட கலாச்சாரத்திற்கு என்றைக்குமே இடமில்லை. அதை இழிவுபடுத்துவது தான் இந்துத்துவம். மாற்று கருத்துக்களை இடமளிக்காத பாசிஸ்டுகள்தான் பார்ப்பன இந்துத்துவவாதிகள் எனபதை மீண்டும் ஒரு முறை இந்த நிகழ்வின் மூலம் உணர்த்தியுள்ளனர்.
அடுத்தாக ஐரோப்பிய பார்வையில் இந்திய வரலாறு எழுதப்பட்டிருப்பதாகவும் அதை இந்தியப் பார்வையில் மாற்றி எழுத வேண்டும் என்று சமீப காலமாக கதைத்து வருகிறார்கள் இந்த்துவவாதிகள். அதே இந்துத்துவவாதிகள் தான் சூத்திர இந்தியனின் பார்வையில் வேத, புராண வரலாறை மறுவாசிப்பு செய்தால் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். எனில் இவர்கள் கூறும் இந்தியப் பார்வை என்பது என்ன? அது ஆதிக்க ஆரிய-பார்ப்பன-சமஸ்கிருத பார்வை மட்டுமே என்பது தெளிவாகிறது. ஆக இவர்கள் கூறும் தேசியம் என்பது பார்ப்பன தேசியம்.
நாமெல்லாம் இந்துக்கள் என்று கூறினால் யார் இந்து? ஏன் என் முன்னோரை கொன்றாய் என்று கேளுங்கள்!
– ரவி
Indhu enru sollathey Sonanvanai Serupal Adi.
அருமையான மீட்பு நடவடிக்கைகள்.
நண்பர்களுக்கு நன்றிகள்.
அருமையான கட்டுரை. இதையெல்லாம் படித்தப்பிறகும் (தீபாவளி, துர்கா பூஜை) தாழ்த்தபட்டோரையும் பழங்குடிகளையும் கொன்ற நாட்களை கொண்டாடிகொண்டு இருந்தோம் என்றால் இதைவிட வேறு அவமானம் ஒன்றும் இல்லை.
ஏ.பி.வி.பி அமைப்பினை மோடி அரசு ஒருபோதும் தடை செய்யாது. ஆனாலும் மாணவர்களை மதவெறிப் பிடித்த காலிகளாக உருவாக்கும் இவ்வமைப்பினை புறக்கணிக்க வேண்டும்.
இது ஒரு வன்மையாக கண்டிக்கத்தக்க சம்பவம்…யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வணங்கலாம்.
Good Initiative,
Why not we do the same in TN. DK or PALA can start..
Enna daa……….elaarum ennamo perusa support panrel….openaavaa neenga raakshashaanu othundu evil side serarelaa……….yen dhaan ipdi budhi poradho………
adhaan reservation kondu vandhurkaale………..Engg. paduchu ITla serndhu neengalum America poi sambhaadhikardhu………..yaaru vendaamnaa?
kadandhu alayardhugal
அப்படியே திருச்செந்துருக்கு போங்க. அங்க ஒரு தமிழ் அரக்கனை தமிழ்க்கடவுள் இன்னைக்கு கொல்றார்.. போய் தடுங்க.. என்ன சீன் போடுறீங்க திராவிடன் ஆரியன்னு?
தமிழ் கடவுள் முருகன். சுப்ரமணிய சுவாமி அல்ல. மனிதனாக இருக்கும் சுப்ரமணிய சுவாமியே தரகு மாமாவாக இருக்கிற பொழுது கடவுளாக இருந்தால் அதன் நிலை என்னவாக இருக்கும்? பழனியில் அங்கு முருகனுக்கு பேக்சைடு பஞ்சர் என்று கேள்விபடுகிறோம். ஆனால் இங்கு சுப்ரமணிய சாமி வைரக் கலசத்துடன் பார்ப்பன ஆகமங்களுடன் சொலிக்கிறார்.
வட இந்தியாவில் தேவயானை இந்திரலோகத்து அழகி. அதை அப்படியே தெய்வானை என்று மாற்றி சிறு தெய்வ முருகனை சுவாமியாக்கி அழகுபார்த்தது பார்ப்பன சனாதனம் தான். சிறு தெய்வ வழிபாட்டுக்காரனுக்கு இதுபோன்ற தப்புலிப்புத்தியெல்லாம் வராது. தமிழக முருகக்கடவுளும், ஆப்ரிக்க மொருங்காவும், யேசிடி மக்களின் முருக வழிபாடும் பழங்குடிச் சமூகத்திற்கே உரிய இயற்கை வழிபாடு. துரோகத்தின் வரலாறு தெரிந்துகொண்டு வாதாடுமய்யா.
தென்றல் அவர்களுக்கு,
தெய்வங்களுக்கு எதற்கு சிறு பெறு என்ற ஒட்டுகள். நீங்களும் எத்தர்களின் வலையில் விழுந்துவிட்டீரே. வெளியே வாருங்கள். நன்றி.
தென்றல் அவர்களுக்கு,
பின்னூட்டம் 8.1.1 ல் /தெய்வங்களுக்கு எதற்கு சிறு பெறு என்ற ஒட்டுகள்/ என்று கேட்டிருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லை போலிருக்கிறது. தொடர்ந்து தெய்வம் என்ற வார்த்தைக்கு சிறு என்ற அடைமொழியை ஒட்டுகிறீர்கள்.
இது மனிதமதத்தை பின்னுக்குக் தள்ளி பார்ப்பனியமதத்தை முன்னுக்குத் தள்ள உதவும் உபாயங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன்.
உங்கள் பதிலை மற்றும் கருத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி.
தெய்வங்களுக்கு சிறு-பெறு ஒட்டுக்கள் எதற்கு என்ற கேள்வியை இவ்விதம் அணுகலாம்.
நடைமுறையில் சிறுதெய்வங்கள் என்ற பதமே பார்ப்பனிய எதிர்ப்பு மரபைத்தான் குறிக்கிறது என்பது என் புரிதல். இந்திய நாட்டில் பெரும்பான்மை மக்கள், பெருந்தெய்வங்கள் தொடர்பான சொல்லாடல்களுக்கும், சடங்குகளுக்கும், மிகவும் அன்னியப்பட்டவர்கள். ‘கோபுரத்தைப் பார்த்து கும்பிட்டாலே கோடி புண்ணியம்’ என்ற சொலவடை இச்சமூகத்தின் அப்பட்டமான சாதிரீதியிலான சுரண்டலைச் சுட்டிக்காட்டுகிறது என்பதை நாம் கவனிக்கலாம். பார்ப்பனியத்தின் கீழ் அடங்க மறுக்கிற அனைத்து மரபுகளும் சிறு தெய்வங்களாக இருக்கின்றன.
பிரம்மா என்று சொல்கிற பொழுது கருப்பசாமி எதைக்குறிக்கும்? இதில் ஆன்மிகம் எல்லாம் ஏதும் இல்லை. வெறும் எதேச்சதிகாரம் மட்டும் இருப்பதைக் காணலாம். அதே சமயம் தாங்கள் சொல்வதைப்போல சிறுதெய்வங்கள் பார்ப்பனியத்திற்குள்ளும் இழுக்கப்பட்டிருக்கிறார்கள். மாரியம்மன் கோயிலில் கருவாடு சேர்த்து கூழ் ஊற்றுகிற நிலைமை மாற்றப்பட்டிருக்கிறது. அவாள்கள், அம்பாள் அபிசேகமாக மாற்றியிருக்கிறார்கள். குத்துவிளக்கு பூஜை இடைச்செருகலாக சொருகப்பட்டிருக்கிறது (தாலி வரம் கேட்டுவந்தேன் தாயம்மா எப்படி ஆர் எஸ் எஸ் ஸிற்கு சேவை செய்கிறது என்பதைக்கவனிக்கலாம்). இதில் போராடுவதற்கு நிறைய களவிசயங்கள் இருக்கின்றன. எனவே கருத்துருவாக மனிதமதம் என்று சொல்வதற்கு பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டியிருக்கிறது.
சான்றாக ஒரு கேள்வியைப் பரிசீலிக்கலாம். கிடா வெட்டு தடைச் சட்டம் கொண்டு வருகிற ஜெயலலிதா தன் வீட்டு நாய்க்கு கிலோ கணக்கில் கறி வாங்கிப்போடுகிறார் என்றால் பார்ப்பனியத்தின் பரிமாணம் என்னவாக இருந்திருக்கும்? இந்தக் கோணத்தைப் பரிசீலிப்பது இன்றைய அவசியம் என்று கருதுகிறேன். நன்றி.
தென்றல் அவர்களுக்கு,
//சிறுதெய்வங்கள் என்ற பதமே பார்ப்பனிய எதிர்ப்பு மரபைத்தான் குறிக்கிறது என்பது என் புரிதல்//
பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக்கொண்டவர்கள் அதாவது நாமே நமது தெய்வங்களை ‘சிறு’மைப் படுத்திக்கொண்டு அவர்களின் தெய்வங்களை ‘பெறு’மை படுத்திக் கொண்டு நாம் எதை மீட்கப் போகிறோம்?
இந்த பதஙகளுக்கு மாற்று காண வேண்டும். இடத்திற்கேற்ப நாம் சரியான பதங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அணைத்து சூழ்நிலைக்கும் ஏற்ற மாற்றுப்பதங்களை நாம் யோசிக்கவேண்டும்.
எனது தெரிவுகள்
திராவிட/தமிழ் தெய்வம்.
குல தெய்வம்
முன்னோர் தெய்வம் (முன்னோர் வழிபாடு),
இவற்றிற்கு மாறாக, பார்ப்பனியர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வத்திற்கு பார்ப்பனியதெய்வம் என்ற பதம் சரியாக இருக்கும்.
இதை பரிசீலிப்பதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் நன்றி.
// மனிதனாக இருக்கும் சுப்ரமணிய சுவாமியே தரகு மாமாவாக இருக்கிற பொழுது கடவுளாக இருந்தால் அதன் நிலை என்னவாக இருக்கும்? //
வர வர உங்கள் பகுத்தறிவு உச்சத்தை நெருங்குகிறது போலிருக்கிறதே..
தமிழ் முருகனது தொன்மையான ஆறு படை வீடுகளும் எதைக் குறிக்கின்றன என்பதை பார்ப்பன எதிர்ப்பு மரபில் நின்று கொண்டு கொஞ்சம் விளக்குங்கள்.. அறிய ஆவலாயிருக்கிறேன்..
அருகன் சமணக் கடவுள், முருகன் தமிழ்க் கடவுள்.
சிரவணன்-சமணப் பெயர், அப்படியானால் சரவணன்?
சமணத்தோடு தொடர்புபடுத்துவதற்கு நமக்கு குறீயிடுகள் இருக்கின்றன. ஆனால் இங்குமே பலவாதங்கள் உண்டு. நமது நண்பர் இராம் சமண மதம் வணிகர்களின் மதம் என்பார். இதை அப்படியே ஒதுக்காமல் சில தரவுகளுடன் தான் பார்க்கவேண்டியிருக்கிறது.
மதுரை பழமுதிர்ச்சோலை அறுபடைவீடுகளில் ஒன்றாகும். ஆனால் அழகர் மலை வைணவத் தலம். நிற்க. ஏதோ உள்குத்து இதில் இருக்கிறது என்பது ஒருபுறமிருக்க, இராமின் கருத்து இங்கு ஒப்புநோக்கத்தக்கது. அழகர் மலை முழுவதும் சமணக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இதை நேரிலே தாங்கள் ஆராய வேண்டுமானால் அடுத்த முறை தமிழ்பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதிக்கு ஆராய்ச்சிக்கு செல்கிற பொழுது தாங்களும் போக வேண்டும். ‘அறிய ஆவலாக இருக்கின்றேன்’ என்று சுமையை என் பக்கம் தள்ளுவது சரியல்ல. அப்படியே நான் எடுத்துச் சொன்னாலும் நீங்கள் பார்ப்பனீயத்திற்கு பங்கம் வராமல் பார்ப்பதற்குத்தான் மெனக்கெடுவீர்களே தவர, போராட்டங்களில் கலந்துகொள்ளப் போகிறீர்களா என்ன?
சிரவணபெலகோலா வழியாகத்தான் சமணம் மதுரைவழிவந்தது என்று குறிப்புண்டு. மேலூர் யானைமலை, திருப்பரங்குன்றம், அழகர்மலை என்று மதுரையைச் சுற்றிய குன்றுகளில் அதிகமான சமணப்படுக்கைகள் உண்டு. ஆக சமணத்திற்கும் மதுரையின் இருபடைவீடுகளுக்கும் தொடர்பு உண்டு.
தமிழ் சைவம் என்று இங்கு ஆதிக்க சாதிகள் வாதிடுவார்கள். முருகன் பிற்காலத்தில் தான் பார்பனியச் சைவத்தில் உள்ளிளுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதற்கு இரு குறிப்புகளை என்னால் சுட்ட முடியும். சமணத்தில் தலைவன் தலைவி வழிபாடு கிடையாது. இறைவனை வணங்குவதில் நாய-நாயகி முறையும் கிடையாது. பண்டைய தமிழ்சூழலில் களப்பிர்ர் கால தமிழ் சைவ நூல்கள் இதற்கு எடுத்துக்காட்டு. காரைக்கால் அம்மையாரின் சிவவழிபாட்டிலும் நாயக-நாயகி வழிபாடு கிடையாது. சுடலை என்றுதான் சிவன் சுட்டப்படுகிறான்.
அர்த்தநாரிஸ்சுவர் வடிவம் நாயக-நாயக வழிபாட்டிற்கு தொடக்கம். சம்பந்தனும் ‘தோடுடைச் செவியோன்’ என்று பார்ப்பனியத்தைத் தமிழ்படுத்துகிறான். ஆனால் சம்பந்தனுடையது காளாமுகச் சைவம். பார்ப்பனியச் பாசுபத வடிவத்தின் பிரிவு. முருகனுக்கும் இங்குதான் தெய்வானை வந்திருக்க வேண்டும். முருகனும் நாயக-நாயக வழிபாட்டிற்குள் இழுக்கப்பட்டது பார்ப்பனிய மரபு வந்தபிறகு தான் என்பது உற்று நோக்க வேண்டியது.முருகன்-தெய்வானை தொடர்பு இப்படித்தான்.
“அசுரரை வென்ற இடம்; தேவரைக் காத்த இடம்” என்று திருச்செந்தூரைப்பற்றி அவரோகணத்தில் பாடுவார்கள். வெல்வது கொல்வது புறத்திணைகளுள் வரும் என்றாலும் கூட தேவரைக்காக்கிற பிழைப்பெல்லாம் தமிழ்நாட்டில் பிற்பாடுபான். ஆக சுப்ரமணிய சுவாமியைத் தலமாகக் கொண்ட திருச்செந்தூர் பார்ப்பனிய மரபு எதிர்ப்பு மரபு உட்புகுத்தப்பட்ட தலம் என்று விளக்கலாம்.
அதுபோக, தமிழர்களின் மலைவழிபாட்டுக்கடவுளுக்கும் ஆப்ரிக்க மொருங்காவிற்கும், இராக் யேசிடி மக்களின் மயில்வாகன இறைவனுக்கும் தொடர்புகள் உண்டு. சுப்ரமணிய சுவாமிக்கு சிஐஏ தொடர்பு மட்டும் தான் உண்டு.
உடன்பிறப்பான என் தென்றலுக்கு ,
/**அழகர் மலை முழுவதும் சமணக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன.**/
நீவிர் – ஒரு சமணக் குன்றில் வைணவர்கள் கோயில் சமைத்ததாகக் கூறுகின்றீரோ?
உங்கள் கூற்றின்படி வைணவர்கள் குன்றினை கைப்பற்றிய பின்னர் ,ஏன் அந்த சமணக் கல்வெட்டுக்கள் முழுவதையும் அழித்துப் பொகட்டாமல் விட்டனர்?
அன்புடன்,
சுரேஷ்
// அருகன் சமணக் கடவுள், முருகன் தமிழ்க் கடவுள்.
சிரவணன்-சமணப் பெயர், அப்படியானால் சரவணன்? //
சமண சிரவணன் கையில் வேல் எதற்கு..?!
// அழகர் மலை முழுவதும் சமணக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இதை நேரிலே தாங்கள் ஆராய வேண்டுமானால் அடுத்த முறை தமிழ்பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதிக்கு ஆராய்ச்சிக்கு செல்கிற பொழுது தாங்களும் போக வேண்டும். ‘அறிய ஆவலாக இருக்கின்றேன்’ என்று சுமையை என் பக்கம் தள்ளுவது சரியல்ல.//
சமண முனிகள் முழையில்/குகையில் வசித்தவர்கள் ஆதலால் எங்கெல்லாம் பொந்து அமைக்கமுடியுமோ அங்கு வசித்து தவம், தொண்டு செய்தார்கள்.. எங்கெல்லாம் குன்றம் இருந்ததோ அங்கெல்லாம் அநேகமாக முருகன் கோவில் இருந்தது.. இதிலும் உள்குத்து ஏதாவது தெரிகிறதா..?!
// சிரவணபெலகோலா வழியாகத்தான் சமணம் மதுரைவழிவந்தது என்று குறிப்புண்டு. மேலூர் யானைமலை, திருப்பரங்குன்றம், அழகர்மலை என்று மதுரையைச் சுற்றிய குன்றுகளில் அதிகமான சமணப்படுக்கைகள் உண்டு. ஆக சமணத்திற்கும் மதுரையின் இருபடைவீடுகளுக்கும் தொடர்பு உண்டு.//
சிரவண என்றால் ஓண நட்சத்திரத்துக்கு வடமொழிப்பெயர்.. சிராவண என்றால் ஆடி மாதம்.. இப்போது ராவணனும் சரவணனாக வாய்ப்புள்ள போட்டியாளராவதை கவனிக்கவும்.. மதுரையில் சமணம் தழைத்தோங்கியது, அங்கே அதற்கு முன்பே இந்த படைவீடுகளும் இருந்ததை கருவாடாற்றுபடைக்கும் காலத்தால் முற்பட்ட சங்க கால திருமுருகாற்றுபடையில் காண்க..
// தமிழ் சைவம் என்று இங்கு ஆதிக்க சாதிகள் வாதிடுவார்கள். முருகன் பிற்காலத்தில் தான் பார்பனியச் சைவத்தில் உள்ளிளுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதற்கு இரு குறிப்புகளை என்னால் சுட்ட முடியும். சமணத்தில் தலைவன் தலைவி வழிபாடு கிடையாது. இறைவனை வணங்குவதில் நாய-நாயகி முறையும் கிடையாது. பண்டைய தமிழ்சூழலில் களப்பிர்ர் கால தமிழ் சைவ நூல்கள் இதற்கு எடுத்துக்காட்டு. காரைக்கால் அம்மையாரின் சிவவழிபாட்டிலும் நாயக-நாயகி வழிபாடு கிடையாது. சுடலை என்றுதான் சிவன் சுட்டப்படுகிறான்.
அர்த்தநாரிஸ்சுவர் வடிவம் நாயக-நாயக வழிபாட்டிற்கு தொடக்கம். சம்பந்தனும் ‘தோடுடைச் செவியோன்’ என்று பார்ப்பனியத்தைத் தமிழ்படுத்துகிறான். ஆனால் சம்பந்தனுடையது காளாமுகச் சைவம். பார்ப்பனியச் பாசுபத வடிவத்தின் பிரிவு. முருகனுக்கும் இங்குதான் தெய்வானை வந்திருக்க வேண்டும். முருகனும் நாயக-நாயக வழிபாட்டிற்குள் இழுக்கப்பட்டது பார்ப்பனிய மரபு வந்தபிறகு தான் என்பது உற்று நோக்க வேண்டியது.முருகன்-தெய்வானை தொடர்பு இப்படித்தான்.
“அசுரரை வென்ற இடம்; தேவரைக் காத்த இடம்” என்று திருச்செந்தூரைப்பற்றி அவரோகணத்தில் பாடுவார்கள். வெல்வது கொல்வது புறத்திணைகளுள் வரும் என்றாலும் கூட தேவரைக்காக்கிற பிழைப்பெல்லாம் தமிழ்நாட்டில் பிற்பாடுபான். ஆக சுப்ரமணிய சுவாமியைத் தலமாகக் கொண்ட திருச்செந்தூர் பார்ப்பனிய மரபு எதிர்ப்பு மரபு உட்புகுத்தப்பட்ட தலம் என்று விளக்கலாம்.//
ஆல் கெழு கடவுள் புதல்வ! மால் வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ!
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி!
வானோர், வணங்கு வில், தானைத் தலைவ! 260
மாலை மார்ப! நூல் அறி புலவ!
செருவில் ஒருவ! பொரு விறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொன்மலை!
மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!
வேல் கெழு தடக் கைச் சால் பெருஞ் செல்வ! 265 – திருமுருகாற்றுபடை
நீங்கள் கூறும் காலகட்டத்துக்கு முன்பே சரவணன் தாய், தந்தை, மங்கையர் (வள்ளி-தேவயானை) என்று உறவுகளோடும் கையில் வேலோடும் வானோர் தானைத் தலைவனாக திணை வேறுபாடின்றி தமிழ் மண் முழுவதும் வழிபடப்பட்டிருக்கிறாரே..! மேலும் வெல்வது கொல்வது எல்லாம் சிரவணர் செய்யும் வேலையும் அல்லவே.. சூர் தடிந்த (சூரனை தண்டித்த முருகன்) என்ற சொற்றொடர் திருமுருகாற்றுபடையில் பல இடங்களில் வருகிறது என்பதால் அதை முழுமையாக படித்துப் பார்க்கலாம்..
// அதுபோக, தமிழர்களின் மலைவழிபாட்டுக்கடவுளுக்கும் ஆப்ரிக்க மொருங்காவிற்கும், இராக் யேசிடி மக்களின் மயில்வாகன இறைவனுக்கும் தொடர்புகள் உண்டு. //
தமிழன் சென்ற இடமெல்லாம் முருக வழிபாடும் சென்றிருக்க வாய்ப்புண்டு..
\\சமண சிரவணன் கையில் வேல் எதற்கு..?!\\
நியாயப்படி முருகன் முதுகில் பூணுல் எப்படி என்று கேட்பதுதான் சரி. மனிதனாக வாழும் காஞ்சி-காகம், பூணுல் அணிகிற பொழுது அம்பியாக மாறுவதைப்போல கடவுள் பார்ப்பானாக மாற்றப்பட்டான் என்று சொல்வதில் துரோகத்தை உணர்த்துகொள்ளும் வரலாறு உண்டு. வேல் விசயத்திற்கு வருவோம். முருகனுக்கு வேல் ஏன் உண்டு என்று கேட்டால் அது சரி. ஏனெனில் சமணத்தையும் சிறுதெய்வ வழிபாட்டையும் பகுத்துப்புரிந்துகொள்வது இயற்கையோடு இயைந்த ஒன்று. முருகன் குறித்த பதிவுகள் வெறியாட்டுதல் நிகழ்வுகளில் காண இயலும். வெறியாட்டுதல் தமிழ்குடிகளின் தொன்மையான மரபு. இதில் வேல் இருப்பது இனக்குழுச்சமூகத்தின் மரபுதான். இதை விளங்குவதும் விளக்குவது எளிது. சமணர்கால எழுத்துகளிலும் சிரவணனோடு இதைத் தனித்தும் சேர்த்தும் இதைக் காண இயலும். ஆனால் தாங்கள் சுட்டிக்காட்டுகிற திருமுருகாற்றூப்படையில் வெறியாட்டு நிகழ்வுக் குறிப்புகள் மிகவும் குறைவு. ஆனால் இதே நிகழ்வு நற்றிணையில் நிறைய உண்டு. ஆக சிரவணன் கையில் வேல் இருப்பதை ஆழ அகலாமக நூல் பிடித்தார் போல் விளக்க இயலும். ஆனால் முருகன் முதுகில் பூணுல் எப்படி வந்தது? ஏன் வந்தது? எதற்காக வரவேண்டும்?
// நியாயப்படி முருகன் முதுகில் பூணுல் எப்படி என்று கேட்பதுதான் சரி. மனிதனாக வாழும் காஞ்சி-காகம், பூணுல் அணிகிற பொழுது அம்பியாக மாறுவதைப்போல கடவுள் பார்ப்பானாக மாற்றப்பட்டான் என்று சொல்வதில் துரோகத்தை உணர்த்துகொள்ளும் வரலாறு உண்டு. //
பூணூல் பார்ப்பனர்களின் தனி உரிமை இல்லை, தவிர பூணூலுக்கு பதிலாக குல்லா போட்டிருந்தாலும் கையில் வேல் ஏந்திய முருகன் எப்படி சமண அருகனாகவோ / சிரவணனாகவோ -இருக்கமுடியும் என்பதைத்தான் நீங்கள் விளக்கவேண்டும்..
// வேல் விசயத்திற்கு வருவோம். முருகனுக்கு வேல் ஏன் உண்டு என்று கேட்டால் அது சரி. ஏனெனில் சமணத்தையும் சிறுதெய்வ வழிபாட்டையும் பகுத்துப்புரிந்துகொள்வது இயற்கையோடு இயைந்த ஒன்று. முருகன் குறித்த பதிவுகள் வெறியாட்டுதல் நிகழ்வுகளில் காண இயலும். வெறியாட்டுதல் தமிழ்குடிகளின் தொன்மையான மரபு. இதில் வேல் இருப்பது இனக்குழுச்சமூகத்தின் மரபுதான். இதை விளங்குவதும் விளக்குவது எளிது. //
நன்று..
// சமணர்கால எழுத்துகளிலும் சிரவணனோடு இதைத் தனித்தும் சேர்த்தும் இதைக் காண இயலும். //
புதிர் போடுகிறீர்கள்..
// ஆனால் தாங்கள் சுட்டிக்காட்டுகிற திருமுருகாற்றூப்படையில் வெறியாட்டு நிகழ்வுக் குறிப்புகள் மிகவும் குறைவு. ஆனால் இதே நிகழ்வு நற்றிணையில் நிறைய உண்டு. //
மன்றமும் பொதியிலும், கந்துடை நிலையினும்
மாண் தலைக் கொடியொடு மண்ணி அமைவர,
நெய்யோடு ஐயவி அப்பி, ஐது உரைத்து,
குடந்தம்பட்டு, கொழு மலர் சிதறி,
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ, 230
செந் நூல் யாத்து, வெண் பொரி சிதறி,
மத வலி நிலைஇய மாத் தாள் கொழு விடைக்
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி
சில் பலிச் செய்து, பல் பிரப்பு இரீஇ,
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து, 235
பெருந் தண் கணவீர நறுந் தண் மாலை
துணை அற அறுத்துத் தூங்க நாற்றி,
நளி மலைச் சிலம்பின் நல் நகர் வாழ்த்தி,
நறும் புகை எடுத்து, குறிஞ்சி பாடி,
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க, 240
உருவப் பல் பூத் தூஉய், வெருவரக்
குருதிச் செந் தினை பரப்பி, குறமகள்
முருகு இயம் நிறுத்து, முரணினர் உட்க,
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்
ஆடு களம் சிலம்பப் பாடி, பலவுடன் 245
கோடு வாய்வைத்து, கொடு மணி இயக்கி,
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி,
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட,
ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே.
திருமுருகாற்றுபடையில் வரும் இத்தனை வெறியாட்டு போதாது என்கிறீர்களா..?!
// ஆக சிரவணன் கையில் வேல் இருப்பதை ஆழ அகலாமக நூல் பிடித்தார் போல் விளக்க இயலும். //
சிரவணன் ஏன் கூர் வேல் பிடித்தார் என்பதை குத்து மதிப்பாக விளக்கினால்கூட போதும்..
// ஆனால் முருகன் முதுகில் பூணுல் எப்படி வந்தது? ஏன் வந்தது? எதற்காக வரவேண்டும்? //
பூணூல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கையில் வேல் இருக்கும் வரை சிரவணன் சரவணன் ஆக முடியாதே..
\\சமண முனிகள் முழையில்/குகையில் வசித்தவர்கள் ஆதலால் எங்கெல்லாம் பொந்து அமைக்கமுடியுமோ அங்கு வசித்து தவம், தொண்டு செய்தார்கள்.. எங்கெல்லாம் குன்றம் இருந்ததோ அங்கெல்லாம் அநேகமாக முருகன் கோவில் இருந்தது.. இதிலும் உள்குத்து ஏதாவது தெரிகிறதா..?!\\
ஆமாம் உள்குத்து இருக்கிறது. ஏனெனில் இண்டு இடுக்குகளில் ஒளிந்துகொள்ளும் கரப்பான்கள் யாரென்று அம்பிக்குத் தெரியும். குன்றம் விசயத்திற்கு வருவோம். கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றைத்தொடவும். அர்ஜீன் சம்பந்தின் கருத்துப்படி, மதுரையில் சமணர்களின் சொல்லொணாத்துயரில் மக்கள் வாழ்ந்தாகவும், அவர்களைத் துயரில் இருந்து காக்கும் பொருட்டே இந்துமதப் புரட்சி ஏற்படுத்தப்பட்டதாகவும் தன்னாலான கைங்கர்யத்தை அவிழ்த்துவிட்டவர். சமணத்தை அழித்து பார்ப்பனியம் உட்புகுந்த காலம் என்பது அர்ஜின் சம்பந் சொல்லவருகிற வாதத்தில் இருந்து தெரியவருகிறது. இதை ஏற்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும்.
வாதம் இரண்டு: முருகன் என்றில்லை. குகைவரைகோயில்கள் அனைத்துமே சமணர்களுடையது. இதையும் ஏற்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். இரண்டில் எதைத்தொட்டாலும் பார்ப்பனியத்திற்கு முந்தைய முருக வழிபாடு தொல்குடிகளின் வழிபாடகத்தான் இருந்தது. தமிழனுக்கு கோயில் என்ற வார்த்தையே அரசன் உறைகிற இடம் என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றுவரை மூலவர்களின் பெயர்கள் அனைத்துமே அப்பகுதியை ஆண்ட மன்னர்களின் பெயரிலே வழங்கப்பெறுதலையும் காணலாம். இதுஒருபுறமிருக்க, சுடலையும் சேயோனும் சிவனாவதும், முருகன் சுப்ரமணியன் ஆவதும், சிவனும் முருகனும் அப்பா மகன் ஆவதும் தமிழ்நாட்டில் புராண புளுகுமூட்டைகள் புகுத்தப்பட்ட பிறகுதான். அதையும் பிற்பாடு விளக்கலாம்.
இதில் உள்குத்து என்பது என்ன? அழகர் மலை வைணவத்தலமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வைணவம் நாட்டார் கலாச்சாரமாக நின்றுபோனதை தொ. பரமசிவன் வலியுறுத்துகிறார். ஆனால் சைவம் நகர்புறக்கலாச்சாரம். பல நூற்றாண்டுகள் சைவம் அரசமதமாக இருந்தது. பழமுதிர்ச் சோலையின் தலபுரணாத்தை வாசிப்பவர்கள் அழகர்மலைக்கும் பழமுதிர்ச்சோலைக்கும் என்ன சம்பந்தம் என்று விளக்க கடமைப்பட்டவர்கள். அப்படிவிளக்குகிற பொழுது காலகட்டத்தையும் நமக்கு தருவார்கள் என்று நம்புவோமாக. இதன் அச்சாரமாக இன்னொன்றும் உண்டு. அழகர்மலை, வைணவத்திற்கும், சைவத்திற்கும், தளமாக இருக்கிற பொழுது அங்கு முதன்மைத் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பாகும். கருப்பசாமி இந்துமதத்தைச் சாராத தமிழ்நாட்டார்களின் சிறுதெய்வமாகும். ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டும் என்பார்கள் இல்லையா! சைவமும் வைணவமும் அப்படித்தான் இங்கு இருப்பதை இனம்காணலாம்.
// அர்ஜீன் சம்பந்தின் கருத்துப்படி, மதுரையில் சமணர்களின் சொல்லொணாத்துயரில் மக்கள் வாழ்ந்தாகவும், அவர்களைத் துயரில் இருந்து காக்கும் பொருட்டே இந்துமதப் புரட்சி ஏற்படுத்தப்பட்டதாகவும் தன்னாலான கைங்கர்யத்தை அவிழ்த்துவிட்டவர். சமணத்தை அழித்து பார்ப்பனியம் உட்புகுந்த காலம் என்பது அர்ஜின் சம்பந் சொல்லவருகிற வாதத்தில் இருந்து தெரியவருகிறது. இதை ஏற்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். //
ஜூனியர் புஷ் போல பேசுகிறீர்களே.. பாண்டிய மன்னர் நின்ற சீர் நெடுமாறன் தாய்ச்சமயமான சைவத்தை புறக்கணித்துவிட்டு சமணத்தை ஆதரித்ததையும், அரச ஆதரவுடன் சமணர்கள் சைவத்தை அழிக்க முனைந்ததையும்தான் அப்படிக் கூறுகிறார் என எண்ணுகிறேன்.. அப்போதுதான் பார்ப்பனியம் உட்புகுந்தது என்று நீங்கள் கூறுவதற்கு இதை எப்படி ஆதாரமாகக் கொள்ள இயலும்..?!
// வாதம் இரண்டு: முருகன் என்றில்லை. குகைவரைகோயில்கள் அனைத்துமே சமணர்களுடையது. இதையும் ஏற்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். //
கொற்றவைக்கும், முருகனுக்கும் குகைவரைகோயில்கள் இருக்கின்றன.. சமண முனிகள் மற்றும் தீர்த்தங்கரர்கள் சிலைகளுக்கும் முருகனின் சிலைக்கும் உள்ள வேறுபாடுகள் உங்களுக்கு தெரியவில்லையா..?!
// இரண்டில் எதைத்தொட்டாலும் பார்ப்பனியத்திற்கு முந்தைய முருக வழிபாடு தொல்குடிகளின் வழிபாடகத்தான் இருந்தது. //
முருக வழிபாடு இன்றைக்கும் தமிழ் தொல்குடியின் வழிபாடுதான்..
// தமிழனுக்கு கோயில் என்ற வார்த்தையே அரசன் உறைகிற இடம் என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. //
அரசன் என்ற அதிகார பதவி உருவாகிவருமுன்பே கோயில்களும், வழிபாடும் பரவியிருந்தது.. மன்னனின் அதிகாரம் கேள்விக்கிடமில்லாத வகையில் இருக்கவேண்டும் என்று அவனையும் இறைவன் என்னும் பொருளில் கோ என்றும் அழைத்தது வேறு விசயம்..
// இன்றுவரை மூலவர்களின் பெயர்கள் அனைத்துமே அப்பகுதியை ஆண்ட மன்னர்களின் பெயரிலே வழங்கப்பெறுதலையும் காணலாம். //
இடம் (ஸ்தலம்) மற்றும் காரணங்களால் அழைக்கப்படும் மூலவர்களின் பெயர்களே அதிகம்..
// இதுஒருபுறமிருக்க, சுடலையும் சேயோனும் சிவனாவதும், முருகன் சுப்ரமணியன் ஆவதும், சிவனும் முருகனும் அப்பா மகன் ஆவதும் தமிழ்நாட்டில் புராண புளுகுமூட்டைகள் புகுத்தப்பட்ட பிறகுதான். அதையும் பிற்பாடு விளக்கலாம். //
விளக்கத்துக்கு செல்வோம்..
\\சிரவண என்றால் ஓண நட்சத்திரத்துக்கு வடமொழிப்பெயர்.. சிராவண என்றால் ஆடி மாதம்.. இப்போது ராவணனும் சரவணனாக வாய்ப்புள்ள போட்டியாளராவதை கவனிக்கவும்.. மதுரையில் சமணம் தழைத்தோங்கியது, அங்கே அதற்கு முன்பே இந்த படைவீடுகளும் இருந்ததை கருவாடாற்றுபடைக்கும் காலத்தால் முற்பட்ட சங்க கால திருமுருகாற்றுபடையில் காண்க..\\
வடமொழிப்பெயர் என்று பொத்தாம் பொதுவாக அடிப்பதற்கு முன்னர் பாலியும் பிராகருதமும் மக்களின் வழக்காடு மொழிகளாக இருப்பதைக் கவனிக்க. தமிழில் உள்ள நிகண்டுகளில் காணப்படுகிற வடமொழிச் சொற்களும் சமணர்களுடையதுதான். இதைச்சுட்டுவதன் மூலமாக சமஸ்கிருதம் மக்கள் வாழ்விற்கு எவ்வித செழுமையையும் வழங்கவில்லை என்பதை பதிவுசெய்யலாம்.
விசயத்திற்கு வருவோம். களப்பிரர் காலத்திற்கு முன்னமே கூட முருகனைக்காட்ட இயலும். ஆனால் அந்த முருகனுக்கும் பார்ப்பனிய முருகனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால் தான் வெறியாட்டுதல் நிகழ்வை குறிப்பிட்டேன்.
திருமுருகாற்றுப்படை சங்கப்பாடல்களின் கீழ் தொகுக்கபடுதல் சரியா? (வீ. அரசு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் சில குறிப்புகள் உள்ளன. அதை அடுத்த பின்னூட்டத்தில் பார்ப்போம்). நக்கீர நாயனார் என்பவர் வேறு நக்கீரர் வேறு. நக்கீர நாயனார் கி.பி. எட்டாம் நுற்றாண்டு ஒன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில் பேசப்பட்டவர். இந்த சர்ச்சையை பிறகு கவனிப்போம்.
திருமுருகாற்றூப்படையை விட காலத்தால் முந்திய பரிபாடலில் உள்ள முருகனே பார்ப்பனியத்திற்கு முழுவதும் ஆட்பட்டவன். அங்கேயே புராணக்கதைகள் வந்துவிடுகின்றன.
ஆனால் காலத்தால் முந்திய முருகன் வெறும் இனக்குழுத்தலைவனாக இருப்பதையும் பல குறிப்புகளில் காண முடியும். ஒட்டுமொத்த முருகனுக்கு உண்டான பார்ப்பனியக் காலக்கோடு கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன், எஸ். இராமச்சந்திரன், திண்ணையில் இருக்கிறது. இக்கட்டுரை எக்கண்ணோட்டத்தில் இருந்து எழுதப்பட்டது என்று எமக்குத்தெரியவில்லை. திருமுருகாற்றூப்படைக்கு குறிப்புகள் தேடப்போய் வலைத்தளத்தில் கிடைத்தன. விவாதத்திற்கு ஒருவேளை பயன்படலாம்.
// வடமொழிப்பெயர் என்று பொத்தாம் பொதுவாக அடிப்பதற்கு முன்னர் பாலியும் பிராகருதமும் மக்களின் வழக்காடு மொழிகளாக இருப்பதைக் கவனிக்க. //
அது வடக்கில்..
// தமிழில் உள்ள நிகண்டுகளில் காணப்படுகிற வடமொழிச் சொற்களும் சமணர்களுடையதுதான். இதைச்சுட்டுவதன் மூலமாக சமஸ்கிருதம் மக்கள் வாழ்விற்கு எவ்வித செழுமையையும் வழங்கவில்லை என்பதை பதிவுசெய்யலாம். //
சிரவணபெலகோலா வழியாகத்தான் சமணம் மதுரைவழிவந்தது என்று குறிப்புண்டு என நீங்கள் கூறியதை வைத்து அதனாலேயே சமணர்கள் இங்கு சிரவணர்கள் என்றழைக்கப்பட்டார்கள் என்று நீங்கள் கூற வருவதாக பொருள் கொண்டேன்.. எனவே சிரவணர் என்பது இங்கே சமணர்களின் காரணப் பெயரேயன்றி மூலப்பெயரான சிரவண என்பதாக வடமொழிகளில் அழைக்கப்படும் ஓண நட்சத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்படுபவர்களும் சமணரல்லாதவரில் இருக்கக்கூடும்.. இந்தப் பெயர் முயக்கத்தை வாதத்தில் ஆதாரமாகக்காட்டுவது பொருந்துமா என்று கருதுங்கள்.. மேலும் பாலிக்கும் பிராகிருதத்துக்கும் முந்தைய தமிழ் கூறும் உலகில் முருக வழிபாடு இருந்ததில்லை எனவும் காட்ட வேண்டியிருக்கும்..
// விசயத்திற்கு வருவோம். களப்பிரர் காலத்திற்கு முன்னமே கூட முருகனைக்காட்ட இயலும். ஆனால் அந்த முருகனுக்கும் பார்ப்பனிய முருகனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால் தான் வெறியாட்டுதல் நிகழ்வை குறிப்பிட்டேன். //
சுப்ரமணிய சுவாமி என்ற பெயர் பின்னாளில் வந்ததால் முருகனுக்கு முருகனே சம்பந்தமில்லாதவன் என்று எப்படி கூறமுடியும்.. வெறியாட்டுக்கு இணையான அலகு குத்துதல், தீ மிதித்தல் என்றும் வெற்றி வேல் முருகா என விளித்துக் கொண்டும் பரவசத்தில் செல்லும் அடியார்களை சுப்ரமணிய சுவாமியாகப்பட்டவர் தடுத்து நிறுத்திவிட்டாரா..?!
// திருமுருகாற்றுப்படை சங்கப்பாடல்களின் கீழ் தொகுக்கபடுதல் சரியா? (வீ. அரசு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் சில குறிப்புகள் உள்ளன. அதை அடுத்த பின்னூட்டத்தில் பார்ப்போம்). நக்கீர நாயனார் என்பவர் வேறு நக்கீரர் வேறு. நக்கீர நாயனார் கி.பி. எட்டாம் நுற்றாண்டு ஒன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில் பேசப்பட்டவர். இந்த சர்ச்சையை பிறகு கவனிப்போம்.//
சரி..
// திருமுருகாற்றூப்படையை விட காலத்தால் முந்திய பரிபாடலில் உள்ள முருகனே பார்ப்பனியத்திற்கு முழுவதும் ஆட்பட்டவன். அங்கேயே புராணக்கதைகள் வந்துவிடுகின்றன.//
திருமுருகாற்றுப்படை பக்தி இயக்க காலகட்டத்தைச் சேர்ந்தது என்ற எண்ணத்தில் அது காலத்தால் சங்க கால பரிபாடலுக்கு பிந்தையது என்று கூறுகிறீர்கள்.. அது சரியா என நீங்கள் கூறப்போகும் விளக்கத்தில் பார்க்கலாம்..
// ஆனால் காலத்தால் முந்திய முருகன் வெறும் இனக்குழுத்தலைவனாக இருப்பதையும் பல குறிப்புகளில் காண முடியும். //
முருகனை வெறும் இனக்குழுத்தலைவனாகப் பார்த்தால் அவன் அடியார்கள் பண்டைய தமிழகம் முழுவதும், அதுவும் தீவிர பக்தி வெறியாட்டுதலில் இருந்ததை விளக்குவது கடினம்..
// ஒட்டுமொத்த முருகனுக்கு உண்டான பார்ப்பனியக் காலக்கோடு கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன், எஸ். இராமச்சந்திரன், திண்ணையில் இருக்கிறது. இக்கட்டுரை எக்கண்ணோட்டத்தில் இருந்து எழுதப்பட்டது என்று எமக்குத்தெரியவில்லை. திருமுருகாற்றூப்படைக்கு குறிப்புகள் தேடப்போய் வலைத்தளத்தில் கிடைத்தன. விவாதத்திற்கு ஒருவேளை பயன்படலாம்.//
நன்றி.. தேடிப்படிக்கிறேன்..
திருமுருகாற்றுப்படையில் உள்ள பாடலைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். இதன் தன்மையை ஆராய்வதற்கு முன்னர் நாம் வாதத்தை எங்கிருந்து ஆரம்பித்தோம் என்பதைக் கவனிக்க வேண்டும். சுப்ரமணியசுவாமியும், முருகனும் ஒன்றா உண்டா என்பதில் சுப்ரமணிய சாமி கடவுளாக இலக்கியங்களில் பார்ப்பனியம் புகுத்தபட்ட பிறகுதான் கொண்டுவரப்படுகிறான்.
சங்க இலக்கியங்கள் மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாட்டை பற்றிப்பேசுகிற பொழுது, அங்கே புராண புளுகல்களுக்கு என்ன வேலை?
இது ஒரு புறமிருக்க சங்க இலக்கியமான திருமுருகாற்றூப்படையிலே சூரனை வதம் செய்வது குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று சொல்லவருவதன் மூலமாக இது தமிழ் கலாச்சாரம் என்று அம்பி சொல்லவருகிறாரா? அசுரனை அழித்து தேவனைக்காப்பது புராணங்களில் இருந்துதொடங்குகின்றன. சங்க இலக்கியங்களின் அகமும் புறமும் இந்தக் கூத்தைப்பேசவில்லை. இதெல்லாம் பார்ப்பனியம் வந்தபிறகு நடந்தேறிய அசிங்கங்கள்.
திருமுருகாற்றூப்படையை எதன் வரிசையின் கீழ் இருத்துவது என்பதற்கு வீ. அரசுவின் கட்டுரையில் இருந்து சில பகுதிகளை இங்கு பதிவிடுகிறேன். (கட்டுரை: தமிழ்ச் செவ்வியல் இலக்கிய மரபு: நவீனத்துவம்; கீற்று, 18-04-2014)
சங்கப்பிரதிகளை ஆராய்வதற்கு முன் வீ.அரசு அவர்கள் கொடுக்கிற சுயவிளக்கம்:
“கி.பி 7ஆம் நூற்றாண்டு தொடங்கி எழுதப்பட்ட தேவார – திருவாசகப் பாடல்களில் என்னால் ஈடுபட முடியாது. அதில் ஒரு பக்திமான் தான் ஈடுபடமுடியும். ஆனால் சங்கப் பிரதிகள் அப்படியல்ல. காரணம் அவை நவீனத்தன்மையை உள்வாங்கியுள்ளன . சமயச் சார்பற்ற மனித உறவை முதன்மைப்படுத்துகின்ற இலக்கியங் களாக உருப்பெறுகின்றன. இந்தத் தன்மையை நாம் செவ்வியல் இலக்கியத்துக்கான முக்கிய பண்பாகக் கூறமுடியும்.”
சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்கள் என்று சொல்கிற பொழுது, இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட முறை பற்றி வீ. அரசு இவ்வாறாக சுட்டிக்காட்ட்டுகிறார்;
“தொகுப்பு மரபில் தொகுப்பாசிரியர்கள் சில வேலைகளைச் செய்கின்றனர். பிற்காலத்தில் இப்பணி நடைபெறுவதால் கடவுள் வாழ்த்துப் பாடலொன்றைச் சேர்த்து விடுகிறார்கள். இதனைத் தவறு என்று வாதிட முடியாது. இந்தத் தன்மையின் உச்சமாகப் பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப் படையைச் சேர்க்கின்றனர். நக்கீரநாயனார் எழுதிய 11ஆம் திருமுறையில் உள்ள ஒரு பாடல் திருமுருகாற்றுப் படைப் பாடலாகும். எப்படி ஒரு பக்திசார் தொகுப்பு, சார்பற்ற தன்மை கொண்ட சங்கப்பிரதிக்குள் வந்தது. இதற்குக் காரணம் தொகுத்தவர்களின் கைங்கரியம். அவர்களைக் குறை சொல்ல இயலாது. காரணம் அவர்களின் படிப்புமுறை அப்படிப்பட்டது. ஆனால் மிகப்பெரிய விழிப்புணர்வும், வரலாற்றுப் பிரக்ஞையும் உள்ள காலகட்டத்தில் வாழ்கின்ற நாமோ நற்றிணை, குறுந்தொகையோடு திருமுருகாற்றுப்படையையும் ஒரே தளத்தில் வைத்து வாசிக்கிறோம். இது மிகப் பெரிய சிக்கல். சங்கப் பிரதிகளை நாம் தவறாகப் புரிந்து கொண்டோம் என்பதற்கு இதுவே சான்று.
பரிபாடல் முருகன், திருமுருகாற்றுப்படை முருகன் போன்றோர் தேவார – திருவாசக மரபின் ஊடாக உருவானவர்கள். திருவிளையாடற் புராணம் மற்றும் கந்தபுராண மரபின் ஊடாக உருவானவர்கள். ஆனால் செவ்விலக்கிய மரபில் புராணீகத்திற்கு இடமில்லை. ஆனால் இந்தச் சூழ்நிலைக்கு முக்கிய காரணம் நமக்கு ஏற்பட்ட வைதீக – சமசுகிருத தாக்கம். இவற்றால் நன்மை நடந்தாலும் மிக மோசமான தீமைகளே அதிகம். காரணம் வைதீக மரபில் உருவான வேதங்கள், பாரதக்கதை, பெரிய புராணம் உள்ளிட்டவை புராணீக மரபைச் சார்ந்தவை. இயற்கையைப் பேசும் மரபல்ல. இம்மரபில் வந்த திருமுருகாற்றுப்படை சங்கப் பிரதிகளின் செவ்விலக்கிய மரபிற்கு எதிரானது. ஆகவே அதனைத் தனித்து வாசிக்க வேண்டும். இதனை எனது ‘சங்க நூல்களின் காலம்’ என்ற குறுநூலில் குறிப்பிட்டுள்ளேன். கலித்தொகையை ஆராய்ந்த ஐரோப்பியர்கள் அதனை 9ஆம் நூற்றாண்டு என்கின்றனர். எனவே சங்கப் பிரதிகளின் வைப்பு முறையைக் கூறும்போது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்பதை முதல் வைப்பு முறையாகவும், பத்துப்பாட்டில் மலைபடு கடாம், பெரும்பாணாற்றுப்படை இரண்டையும் ஒரு பிரிவாகவும் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடு நல்வாடை இவற்றை இரண்டாம் பிரிவாகவும் மூன்றாவது பிரிவில் பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை இறுதியில் மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை முதலிய வற்றையும் வைத்துப் படிக்க வேண்டும்.
ஏனென்றால் மதுரைக்காஞ்சியும், பட்டினப்பாலையும் சிலப்பதி காரத்தின் முன்வடிவம். இவற்றைச் சிலம்பின் புகார், மதுரைக் காண்டப் பகுதிகளின் முன்வடிவங்களாகப் பார்க்கமுடியும். இதற்கு ஒரு தர்க்கரீதியான காரணம் உண்டு. உலகச் செவ்விலக்கியங்களில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் முதன்மையாகவும் அதனைத் தொடர்ந்த நீண்ட செய்யுள் மரபு காவியங்களாகவும் இருக்கின்றன. இந்தப் பின்புலத்தில் தான் மதுரைக்காஞ்சியையும், பட்டினப்பாலையையும் நாம் வாசிக்க வேண்டும். ஆனால் இதனை நமது ஆராய்ச்சியாளர்களும், ஆசிரியர்களும் முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால் செவ்விலக்கியங்களில் சமகாலத் தன்மை அழிந்துபோய் புராணீகத் தன்மையை அடைவதற்கான ஆபத்தும் நிகழ்கின்றது.”
ஆக வீ. அரசுவின் கட்டுரை சங்க இலக்கியங்களில் இருந்து புராணப்புளுகுகளை தனியாக எடுத்துவிடுகிறது என்பதைப்பார்க்கிறோம். முருகன் புராணங்களில் எவ்விதம் பிறந்தார் என்பது அறுவெறுக்கத்தக்க ஆபாசக்கதைகளைக் கொண்டது என்பதை எவர் ஒருவரும் விளங்க இயலும்.
முடிவுரையாக:
1. அரக்கனைக்கொன்று தேவனைக்காத்தல் பார்ப்பனர்களின் புராணப் புளுகுகள் ஆகும். இதற்கும் தமிழ் பண்பாட்டிற்கு எந்தத் தொடர்பும் கிடையாது.
2. சைவப்பார்ப்பனீயத்தின் விளைபொருள் தான் சுப்ரமணியன். இப்பெயரில் உள்ள பிரம்மத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?
3. தமிழர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் முருகவழிபாடு வந்திருக்கும் என்கிறார் அம்பி. இதுபோன்ற அர்த்தமற்ற பெருமை பேசுவது நம் நோக்கம் இல்லை என்றாலும் நாம் இங்குவிளங்க வேண்டியது பார்ப்பனியம் வருகிற இடங்களில் எல்லாம் அசுரர்கள் அழிக்கப்பட்டு, தேவர்கள் காக்கப்படுவார்கள். அதற்கு கடவுளர்களே துணைபோவார்கள். இந்தக் கூத்து எங்கெல்லாம் பார்ப்பனியம் சென்றதோ அங்கெல்லாம் நடந்திருக்கிறது.
//திருமுருகாற்றுப்படையில் உள்ள பாடலைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். இதன் தன்மையை ஆராய்வதற்கு முன்னர் நாம் வாதத்தை எங்கிருந்து ஆரம்பித்தோம் என்பதைக் கவனிக்க வேண்டும். சுப்ரமணியசுவாமியும், முருகனும் ஒன்றா உண்டா என்பதில் சுப்ரமணிய சாமி கடவுளாக இலக்கியங்களில் பார்ப்பனியம் புகுத்தபட்ட பிறகுதான் கொண்டுவரப்படுகிறான்.
சங்க இலக்கியங்கள் மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாட்டை பற்றிப்பேசுகிற பொழுது, அங்கே புராண புளுகல்களுக்கு என்ன வேலை? //
அகப்பொருளில் பக்தியும் உள்ளடக்கம்..
// இது ஒரு புறமிருக்க சங்க இலக்கியமான திருமுருகாற்றூப்படையிலே சூரனை வதம் செய்வது குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று சொல்லவருவதன் மூலமாக இது தமிழ் கலாச்சாரம் என்று அம்பி சொல்லவருகிறாரா? //
தமிழ் கலாச்சாரத்தில் எவரையும் எந்த தெய்வமும் தண்டிப்பதில்லையா..?!
// அசுரனை அழித்து தேவனைக்காப்பது புராணங்களில் இருந்துதொடங்குகின்றன. //
முருகன் சூரனை தண்டிப்பதற்கு முன்பு பிரம்மனையே தண்டித்ததும் புராணம்தானே..
// சங்க இலக்கியங்களின் அகமும் புறமும் இந்தக் கூத்தைப்பேசவில்லை. இதெல்லாம் பார்ப்பனியம் வந்தபிறகு நடந்தேறிய அசிங்கங்கள்.//
கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்,
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,
சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை,
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப் படு நெற்றி 595
சங்க கால மதுரைக்காஞ்சியில் வரும் அவுணர் (அரக்கர்) என்போர் திராவிடர்கள் என்பது மாங்குடி மருதனாருக்கு தெரியவில்லை போலும்.. விரும்பினால் இன்னும் மேற்கோள்கள் தருகிறேன்..
// திருமுருகாற்றூப்படையை எதன் வரிசையின் கீழ் இருத்துவது என்பதற்கு வீ. அரசுவின் கட்டுரையில் இருந்து சில பகுதிகளை இங்கு பதிவிடுகிறேன். (கட்டுரை: தமிழ்ச் செவ்வியல் இலக்கிய மரபு: நவீனத்துவம்; கீற்று, 18-04-2014)
சங்கப்பிரதிகளை ஆராய்வதற்கு முன் வீ.அரசு அவர்கள் கொடுக்கிற சுயவிளக்கம்: //
உங்களிடம் விளக்கம் கேட்டால், சுமையை என்னிடம் தள்ளுவது சரியல்ல என்று கூறிவிட்டு இப்போது திரு.வீ.அரசு அவர்களை மறுக்கும் சுமையை என்னிடம் தள்ளுகிறீர்களே..!
// “கி.பி 7ஆம் நூற்றாண்டு தொடங்கி எழுதப்பட்ட தேவார – திருவாசகப் பாடல்களில் என்னால் ஈடுபட முடியாது. அதில் ஒரு பக்திமான் தான் ஈடுபடமுடியும். //
ஒரு நாத்திகர் பரிபாடலையும், திருமுருகாற்றுபடையையும் சங்க இலக்கியம் இல்லை என்று தள்ளிவைப்பது வியப்பில்லை..
//சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்கள் என்று சொல்கிற பொழுது, இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட முறை பற்றி வீ. அரசு இவ்வாறாக சுட்டிக்காட்ட்டுகிறார்;
தொகுப்பு மரபில் தொகுப்பாசிரியர்கள் சில வேலைகளைச் செய்கின்றனர். பிற்காலத்தில் இப்பணி நடைபெறுவதால் கடவுள் வாழ்த்துப் பாடலொன்றைச் சேர்த்து விடுகிறார்கள். இதனைத் தவறு என்று வாதிட முடியாது. இந்தத் தன்மையின் உச்சமாகப் பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப் படையைச் சேர்க்கின்றனர். நக்கீரநாயனார் எழுதிய 11ஆம் திருமுறையில் உள்ள ஒரு பாடல் திருமுருகாற்றுப் படைப் பாடலாகும். எப்படி ஒரு பக்திசார் தொகுப்பு, சார்பற்ற தன்மை கொண்ட சங்கப்பிரதிக்குள் வந்தது. இதற்குக் காரணம் தொகுத்தவர்களின் கைங்கரியம். அவர்களைக் குறை சொல்ல இயலாது. காரணம் அவர்களின் படிப்புமுறை அப்படிப்பட்டது. ஆனால் மிகப்பெரிய விழிப்புணர்வும், வரலாற்றுப் பிரக்ஞையும் உள்ள காலகட்டத்தில் வாழ்கின்ற நாமோ நற்றிணை, குறுந்தொகையோடு திருமுருகாற்றுப்படையையும் ஒரே தளத்தில் வைத்து வாசிக்கிறோம். இது மிகப் பெரிய சிக்கல். சங்கப் பிரதிகளை நாம் தவறாகப் புரிந்து கொண்டோம் என்பதற்கு இதுவே சான்று.//
நக்கீர நாயனார்தான் திருமுருகாற்றுப்படையை எழுதினார் என்று நம்பியதால் வந்த வினை..
// பரிபாடல் முருகன், திருமுருகாற்றுப்படை முருகன் போன்றோர் தேவார – திருவாசக மரபின் ஊடாக உருவானவர்கள். //
திருமுருகாற்றுபடையையும், நெடுநல்வாடையையும் எழுதிய மதுரை கணக்காயரின் மகனாராகிய நக்கீரனார் தேவார-திருவாசக காலத்து நக்கீர நாயனாருக்கு பல நூற்றாண்டுகள் முந்தைய சங்கப் புலவர்..
// கலித்தொகையை ஆராய்ந்த ஐரோப்பியர்கள் அதனை 9ஆம் நூற்றாண்டு என்கின்றனர். //
இப்போது இவரும் அய்ரோப்பியர்களிடம் என்னைத் தள்ளிவிடுகிறார்..
//எனவே சங்கப் பிரதிகளின் வைப்பு முறையைக் கூறும்போது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்பதை முதல் வைப்பு முறையாகவும், பத்துப்பாட்டில் மலைபடு கடாம், பெரும்பாணாற்றுப்படை இரண்டையும் ஒரு பிரிவாகவும் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடு நல்வாடை இவற்றை இரண்டாம் பிரிவாகவும் மூன்றாவது பிரிவில் பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை இறுதியில் மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை முதலிய வற்றையும் வைத்துப் படிக்க வேண்டும். //
இது அவருடைய சிந்தனைக்கேற்ற பகுப்புமுறை..
// ஏனென்றால் மதுரைக்காஞ்சியும், பட்டினப்பாலையும் சிலப்பதி காரத்தின் முன்வடிவம். இவற்றைச் சிலம்பின் புகார், மதுரைக் காண்டப் பகுதிகளின் முன்வடிவங்களாகப் பார்க்கமுடியும். இதற்கு ஒரு தர்க்கரீதியான காரணம் உண்டு. உலகச் செவ்விலக்கியங்களில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் முதன்மையாகவும் அதனைத் தொடர்ந்த நீண்ட செய்யுள் மரபு காவியங்களாகவும் இருக்கின்றன. இந்தப் பின்புலத்தில் தான் மதுரைக்காஞ்சியையும், பட்டினப்பாலையையும் நாம் வாசிக்க வேண்டும். ஆனால் இதனை நமது ஆராய்ச்சியாளர்களும், ஆசிரியர்களும் முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால் செவ்விலக்கியங்களில் சமகாலத் தன்மை அழிந்துபோய் புராணீகத் தன்மையை அடைவதற்கான ஆபத்தும் நிகழ்கின்றது.”//
எந்தெந்தப் பாடல்களில் எல்லாம் புராணக் குறிப்புகள் வருகின்றனவோ அவற்றையெல்லாம் சங்க இலக்கியமல்ல என்று முடிந்தவரை மறுதலித்து அல்லது பிற்படுத்தி வகைப்படுத்த வேண்டும் என்கிறார்..!
// ஆக வீ. அரசுவின் கட்டுரை சங்க இலக்கியங்களில் இருந்து புராணப்புளுகுகளை தனியாக எடுத்துவிடுகிறது என்பதைப்பார்க்கிறோம். //
இவ்வாறாக வகைப்படுத்துவதன் மூலமாக புராணப்புளுகற்றதாக சங்க இலக்கியத்தை ஆக்கிவிடுகிறீர்களாக்கும்..!
// முடிவுரையாக:
1. அரக்கனைக்கொன்று தேவனைக்காத்தல் பார்ப்பனர்களின் புராணப் புளுகுகள் ஆகும். இதற்கும் தமிழ் பண்பாட்டிற்கு எந்தத் தொடர்பும் கிடையாது.//
சங்க இலக்கியங்கள் தமிழ் பண்பாட்டில் இல்லையா.. சொந்த ’இனத்தவனை’(?) தண்டிக்ககூடாது என்பது தமிழ் கலாச்சாரமா..?!
// 2. சைவப்பார்ப்பனீயத்தின் விளைபொருள் தான் சுப்ரமணியன். இப்பெயரில் உள்ள பிரம்மத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? //
சு+பிரம்மம் = நல்ல, இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள்.. வடமொழிதான், ஆனால் மோசடியல்ல.. முருக பக்தி..
// 3. தமிழர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் முருகவழிபாடு வந்திருக்கும் என்கிறார் அம்பி. இதுபோன்ற அர்த்தமற்ற பெருமை பேசுவது நம் நோக்கம் இல்லை என்றாலும் நாம் இங்குவிளங்க வேண்டியது பார்ப்பனியம் வருகிற இடங்களில் எல்லாம் அசுரர்கள் அழிக்கப்பட்டு, தேவர்கள் காக்கப்படுவார்கள். அதற்கு கடவுளர்களே துணைபோவார்கள். இந்தக் கூத்து எங்கெல்லாம் பார்ப்பனியம் சென்றதோ அங்கெல்லாம் நடந்திருக்கிறது. //
இது அர்த்தமற்ற பெருமையல்ல.. வரலாற்று காலத்திற்கு முன்பிருந்தே கடலோடியவர்கள் தமிழர்கள்.. மேற்கே ரோம்,கிரேக்கம்,அரபுலகம் முதல் கிழக்கே இன்றைய பிலிப்பைன்ஸ், சீனம் வரை கடல் வாணிபம் செய்தவர்கள்.. முருக வழிபாடும் கூடவே சென்றிருக்கும்..
பார்ப்பான் சீனாவுக்கு போனாலும் அசுரர்களும் தேவர்களும் கூடவே போவார்கள்.. ஆனால் சீனர்கள் தாங்கள்தான் அசுரர்கள் என்று நம்பிக்கொள்வார்களா என்பது சந்தேகமே..!
இது அம்பியின் உச்சகட்ட உளறல் !திருமுருகாற்றுப்படை புறப்பாடல் ஆகும் என்பது தெரியாமல் அதனை அகப்பொருளில் சேர்கின்றார்
[முருகு என்று கூறப்படுகின்ற திருமுருகாற்றுப்படை, பொருநாறு என்று சொல்லப்படுகின்ற பொருநர் ஆற்றுப்படை, பாணிரண்டு என்று கூறப்படுகின்ற சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கடாம் என்று அழைக்கப்படுகின்ற மலைபடுகடாம் ஆகியவை ஆற்றுப்படை என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தவை. இவை புறப்பாடல்கள் ஆகும். இவை தவிர மதுரைக்காஞ்சியும் புறப்பாடல் ஆகும்.]
நன்றி :
http://www.tamilvu.org/courses/degree/p104/p1043/html/p1043113.htm
Thendral//திருமுருகாற்றுப்படையில் உள்ள பாடலைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். இதன் தன்மையை ஆராய்வதற்கு முன்னர் நாம் வாதத்தை எங்கிருந்து ஆரம்பித்தோம் என்பதைக் கவனிக்க வேண்டும். சுப்ரமணியசுவாமியும், முருகனும் ஒன்றா உண்டா என்பதில் சுப்ரமணிய சாமி கடவுளாக இலக்கியங்களில் பார்ப்பனியம் புகுத்தபட்ட பிறகுதான் கொண்டுவரப்படுகிறான்.
சங்க இலக்கியங்கள் மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாட்டை பற்றிப்பேசுகிற பொழுது, அங்கே புராண புளுகல்களுக்கு என்ன வேலை? //
Ambi//அகப்பொருளில் பக்தியும் உள்ளடக்கம்..
திருமுருகை அகம் என்று சற்று முன்னே உளறியவர் , அடுத்த வரியிலேயே தமிழ் கலாச்சாரத்தில் எவரையும் எந்த தெய்வமும் தண்டிப்பதில்லையா என்று கேட்டு திருமுருகுடன் புறத்துக்கு தாவுகின்றார்.
Thendral// இது ஒரு புறமிருக்க சங்க இலக்கியமான திருமுருகாற்றூப்படையிலே சூரனை வதம் செய்வது குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று சொல்லவருவதன் மூலமாக இது தமிழ் கலாச்சாரம் என்று அம்பி சொல்லவருகிறாரா? //
Ambi//தமிழ் கலாச்சாரத்தில் எவரையும் எந்த தெய்வமும் தண்டிப்பதில்லையா..?! //
வீ.அரசுவை பார்த்து இப்படி நக்கல் ,நய்யாண்டி செய்யும் அம்பி சங்க இலக்கியத்தில் புராணப்புளுகு இருப்பதை ஏற்கின்றார். [அதே திருமுருகு-புராணப்புளுகை என்னிடம் முருகன் பிறப்புக்கு ஆதாரமாக காட்டுவது தான் அப்பியின் பார்பன மூளை !]
//இவ்வாறாக வகைப்படுத்துவதன் மூலமாக புராணப்புளுகற்றதாக சங்க இலக்கியத்தை ஆக்கிவிடுகிறீர்களாக்கும்..!//
//அகப்பொருளில் பக்தியும் உள்ளடக்கம்.. //
அகப்பொருள் என்பது மனதில் தோன்றும் காதல் சம்பந்தப்பட்டது என்று சங்க நூல்கள் சுட்டும். தலைவன் தலைவி மேல் வைக்கும் காதல், தலைவி தலைவன் மேல் வைக்கும் காதல் என்று இதுவே அகப்பொருள் என்று படித்து இருக்கின்றேன். ஆனால் பக்தி எப்போது அகப்பொருள் ஆனது என்று தெரியவில்லை.
\\ கொற்றவைக்கும், முருகனுக்கும் குகைவரைகோயில்கள் இருக்கின்றன.. சமண முனிகள் மற்றும் தீர்த்தங்கரர்கள் சிலைகளுக்கும் முருகனின் சிலைக்கும் உள்ள வேறுபாடுகள் உங்களுக்கு தெரியவில்லையா..?!\\
அதற்காகத்தான் பெயர்களை விளக்கியது. அருகன் சமணக்கடவுள்; முருகன் தமிழ் கடவுள். சிரவணன் சமணப்பெயர் என்கிற பொழுது சரவணன் எதைக்குறிக்கிறது? என்றுகேட்டேன்.
ஆனால் மலைமுழுங்கியாக முருகனுக்கு பூணுல் எப்படி வந்தது என்று சொல்லவில்லை. முருகன் எப்படி சரவணன் ஆனான் என்று சொல்லவில்லை. இதற்குமாறாக சிரவணனுக்கு வேல் எப்படி வந்தது என்று திருப்புகிறீர்கள். சிரவணனுக்கு வேல், முருகன் என்ற தொல்குடிக்கடவுளிடமிருந்து வந்தது என்று வைப்போம். கடைசங்க காலமான கி,பி 250களில் வந்த ஆற்றுப்படை பாடல்கள் உதாரணம் என்கிற பொழுது கூட(கவனிக்க; திருமுருகுவை சேர்க்கவில்லை; முருக வழிப்பாட்டை பரிபாடலில் இருந்தும் எடுக்க இயலும். திருமுருகை விட்டுவிட்டு பெரும்பாணாற்றுப்படையில் இருந்தும் எடுக்க இயலும். இதே காலகட்டமான பெருங்காப்பியத்தில் அருகன் வருகிறான். திருக்குறள் இதே காலகட்டம் என்கிற பொழுது அருகக்கடவுளின் குறியீடுகள் மிகுந்து இருக்கின்றன) முருகன் எப்படி சுப்ரமணியனாக பார்ப்பனியமயமாக்கப்பட்டான் என்பதற்கு என்ன பதிலைத் தந்தீர்கள்? உள்ளக்கிடக்கையாக வாதத்தை ஒப்புகொண்டுவிட்டு, சுப்ரமணி வந்ததால் வெறியாடல் நின்றுவிட்டதா என்று கேட்கிறீர்கள்? இங்கேயே உங்கள் பித்தலாட்டம் வெளிப்படுகிறது இல்லையா?
// அதற்காகத்தான் பெயர்களை விளக்கியது. அருகன் சமணக்கடவுள்; முருகன் தமிழ் கடவுள். சிரவணன் சமணப்பெயர் என்கிற பொழுது சரவணன் எதைக்குறிக்கிறது? என்றுகேட்டேன்.//
ஏன் கேட்டீர்கள்..?!
”அருகன் சமணக் கடவுள், முருகன் தமிழ்க் கடவுள்.
சிரவணன்-சமணப் பெயர், அப்படியானால் சரவணன்?
சமணத்தோடு தொடர்புபடுத்துவதற்கு நமக்கு குறீயிடுகள் இருக்கின்றன.”
”ஆக சமணத்திற்கும் மதுரையின் இருபடைவீடுகளுக்கும் தொடர்பு உண்டு.”
என்றும் கூறியதன் மூலம் சமண சிரவணன்தான் சரவணன் என்று காட்ட முயன்றீர்கள்.. ஆனால் முருகன் கையில் வேலை வைத்துக் கொண்டு பிரச்சினை செய்கிறான் என்பதால் அவனுக்கு பூணூல் ஏன் வந்தது எப்படி வந்தது என்று தாவிவிட்டீர்கள்..
// சிரவணனுக்கு வேல், முருகன் என்ற தொல்குடிக்கடவுளிடமிருந்து வந்தது என்று வைப்போம். //
அப்படியெல்லாம் வைத்துக் கொள்வது சமண சிரவணனுக்கு பொருத்தமாக இருக்காது.. வேலுக்கு பதில் முருகனின் மயிலிடமிருந்து ஒரு கொத்து மயில்பீலிகளை எடுத்து சமண சிரவணருக்கு கொடுத்து கையில் வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்..
// கடைசங்க காலமான கி,பி 250களில் வந்த ஆற்றுப்படை பாடல்கள் உதாரணம் என்கிற பொழுது கூட(கவனிக்க; திருமுருகுவை சேர்க்கவில்லை; முருக வழிப்பாட்டை பரிபாடலில் இருந்தும் எடுக்க இயலும். திருமுருகை விட்டுவிட்டு பெரும்பாணாற்றுப்படையில் இருந்தும் எடுக்க இயலும். இதே காலகட்டமான பெருங்காப்பியத்தில் அருகன் வருகிறான். திருக்குறள் இதே காலகட்டம் என்கிற பொழுது அருகக்கடவுளின் குறியீடுகள் மிகுந்து இருக்கின்றன)//
என்ன சொல்ல வருகிறீர்கள்.. தெளிவாக சொல்லுங்கள்..
// முருகன் எப்படி சுப்ரமணியனாக பார்ப்பனியமயமாக்கப்பட்டான் என்பதற்கு என்ன பதிலைத் தந்தீர்கள்? உள்ளக்கிடக்கையாக வாதத்தை ஒப்புகொண்டுவிட்டு, சுப்ரமணி வந்ததால் வெறியாடல் நின்றுவிட்டதா என்று கேட்கிறீர்கள்? இங்கேயே உங்கள் பித்தலாட்டம் வெளிப்படுகிறது இல்லையா? //
முருகனுக்கு புதிதாக ஒரு பெயர் வந்ததால் அவன் பார்ப்பனியனாகிவிட்டானா..?! முருக வழிபாட்டின் தொடர்ச்சியில் சமணச் சாயலே இல்லையே அய்யா.. வேல் இன்னும் கையில் தானே இருக்கிறது.. யாருடைய பித்தலாட்டம் வெளிப்படுகிறது..?!
மேற்கண்ட பதிவிற்கான மறுமொழியை சற்று விரிவான குறிப்புகளுடன் கீழ்க்கண்ட கேள்வியை அணுகுதன் மூலம் முன்வைத்திருக்கிறேன்.
\\ முருகன் சுப்ரமணியாகும் முன்பே சூரர் தண்டிக்கப்பட்டுவிட்டாரே என்ன செய்வது..\\
தவறு. ஆறுபடைவீடுகளில் முதல் படைவீடு திருப்பரங்குன்றம். இதில் முருகன் சு. சுவாமி எனப்படுகிறார். சூரனை வதம் செய்வதற்காகத்தான் முருகனே பார்ப்பனியமயமாக்கப்படுகிறான். ஆனால் திருப்பரங்குன்றமே சைவத்திற்கு லேட்டஸ்ட் திணிப்பு என்கிற பொழுது திருமுருகாற்றுப்படையும் அப்படித்தான். பத்துப்பாட்டிலே திருமுருகைச் சொருகியது உவேசாவின் கைங்கர்யம்.
ஏனெனில் ஆற்றுப்படையின் இலக்கணம் அரசனிடம் பரிசில் பெற்றவர் இனி பரிசில் பெறப்போகிறவனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த செய்யுளாகும். யாழ் வாசிக்கிற சிறுபாணர்களுக்கும், பெரும்பாணார்களுக்கும் செய்யுள் அமைந்ததை காண்கிறோம். ஆனால் திருமுருகு மட்டும், முருகனிடம் வீடுபேறு அடைந்த புலவர், இனி வீடுபேறு அடையப்போகும் புலவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. வீடுபேறு பார்ப்பனியத்தின் மோசடி. திருமுருகைத்தவிர சிறுபாணாற்றுப்படையிலும் பெரும்பாணாற்றூப்படையிலும் எட்டுத்தொகையிலும் வீடுபேறு எத்துணை சதவீதம் இருக்கிறது?
சாமியாடுதல், வெறியாட்டல், தமிழ் தொல்குடிகளின் மரபு என்று நிறுவுகிற பொழுது சங்ககால முருகவழிபாடு சாங்கியத் தத்துவத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். சாங்கியம் என்பது சரியானால் பார்ப்பனிய வேதமரபிற்கும் பின் சமணத்திற்கும் காரியப்பொருளாக இருக்கின்ற வீடுபேற்றை பேசுவதில் எந்தவிதமான தர்க்கமும் இல்லை. ஏனெனில் சங்க கால அகமும் புறமும், அறம், பொருள், இன்பத்துடன் நின்றது. சமண இலக்கியங்களும், வைதீக பார்ப்பனியமும் மட்டுமே வீடுபேறைப்பற்றி பேசுகின்றன. வைதீக மரபு என்ற நைச்சியம் இல்லாமல் வீடுபேறு சாத்தியமல்ல என்கிற பொழுது முருகன் வீடுபேறு அளிக்கிறான் என்று சொல்கிற திருமுருகு, பார்ப்பனிய பித்தலாட்டமின்றி வேறில்லை.
சமணமும் வீடுபேறைப்பற்றிப் பேசுவதாக அறிகிறோம். சிலம்பும், பெருங்கதையும், திருக்குறளும், மலர்மிசை என்று அருகனையும், பிறவிப்பெருங்கடல் என்று வீடுபேற்றையும் குறிக்கின்றன.
ஆனால் திருமுருகு வைதீக மரபை பார்ப்பனிய சனாதனத்தைப் புராணப்புளுகளை உள்வாங்குவதன் மூலம்தெளிவாகக் காட்டுகிறது. வீடுபேறைத் தாங்கி பல புரணாங்கள் புகுத்தப்படுகின்றன. நீங்கள் சொல்வதைப்போல முருகன் சூரனை அழிப்பதற்காகத்தான் அவதாரமே எடுக்கிறான் என்று ஒரு சேர புராணமும், திருப்பரங்குன்ற தலபுராணமும் இயம்புகின்றன. ஆனால் இன்னபிற சங்க இலக்கியங்கள் தன் உணர்ச்சிப்பாடலாக முருகனை வெறியாட்டுதலுடன் இணப்பதாக அறிகிறோம். பார்ப்பனியம் புகுந்தபிறகு உருவாக்கப்பட்ட செட்டப்பின்றி சூரனை வதம் செய்வது சாத்தியமல்ல.
——-
சமணக்குறிப்புகளை தென்பரங்குன்றத்துடன் பேசுவோம். தென்பரங்குன்றத்தின் தமிழ்பிராமி எழுத்துக்களுக்கும் சமணர்களின் கற்படுக்கையும் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஆனால் திருமுருகு சங்கபாடல் என்று சொல்கிற பொழுது அது நிலைத்தப்படுகிற காலகட்டம் கி.பி 250. கடைச்சங்க இலக்கியம் முழுமையுமே கிறித்து பிறந்த இரு நூற்றாண்டுகளில் தான் வரையறுக்கப்படுகின்றன.
திருப்பரங்குன்றத்தின் புடைப்புச் சிற்பங்கள் சமணர் காலத்தவை. அதாவது சிற்பங்களுக்கு சாமுத்ரிகா இலட்சணம் கிடையாது. ஆனால் தமிழகத்தின் குடைவரைக்கோயில்களில் இந்துப்பார்ப்பனியம் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிற்பாடுதான் (மகேந்திரவர்மன் காலகட்டத்திலிருந்து என்கிறார் மயிலை சீனி; மேலும் பிள்ளையார்பட்டி குடைவரைக்கோயில் சமணர் காலத்தவை என்று சுட்டத்தவறவில்லை). சிலைகளைக் கவனித்தால் பார்ப்பனிய பித்தலாட்டம் புலப்படும்.
சிரவணன் தான் சரவணன் என்றால் சிரவணன் கையில் வேல் எப்படி என்ற கேள்வி நியாயமானது. சிரவணன் கடவுள் என்ற அடிப்படையில் அணுகியவிதம் சரியல்ல என்பதை ஏற்கிறேன்; ஏனெனில் மொழி என்பதன் உச்சரிப்பில் இதை அணுகியிருந்தால் சரவணன் என்பது முழுக்கவும் மோசடி என்பதை நோக்கி நகர்ந்திருக்க முடியும். காரணம், சரவணன் என்ற வார்த்தை வைதீகச்சூழலில் புழங்குவதற்கு முன்பாகவே களப்பிரர்கால வரலாற்றில் கி,பி 250 லிருந்து- கி.பி 700 முடிய சிரவணன் என்ற வார்த்தை பரவலாக இருக்கிறது. சரவண-சிரவணனைப் பற்றி பெரியார்தள கட்டுரை பாலி-சமஸ்கிருத அடிப்படையில் இருப்பதைக் காண்க. (http://www.unmaionline.com/new/archives/96-unmaionline/unmai-2014/%E0%AE%AE%E0%AF%87-01-15/2005-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html) களப்பிரர் காலத்திற்கு பிந்தைய பகுதியில் தான் தமிழ் இராமாயணமும், பார்ப்பனிய பாசுபத சைவமும் உட்புகுகின்றன. இதற்குபிந்தைய ஏற்பாடுதன் சரவணப் பிரச்சாரம்!
மேலும் சரவணன் என்று மட்டுமில்லை முருகன் கையிலும் வேல் எப்படி வந்தது? என்று பல விவாதம் இணையத்தில் கிடைக்கின்றன. எல்லா முருகன் கோயிலும் வேல், முருகன் சிலை மீது சாத்திவைக்கப்படுகிறது. ஆனால் பழநி முருகன் கையில் தண்டம் இருக்கிறது. கையில் கம்பு உள்ள முருகன் எதைக் குறிக்கிறது? வேல் சாத்தப்படுவது எதைக் குறிக்கிறது?
இலக்கியங்களில் வேலன் முருகன் சார்பாக வேல் எடுத்து ஆடுகிற பூசாரி என்று சில குறிப்புகள் கிடைக்கின்றன. தலைவி முருகனால் ஆட்கொள்ளப்படுகிற பொழுது பூசாரி தான் வெறியாட்டுதலில் ஈடுபடுகிறான். அவன் வேலன் என்று அழைக்கப்படுகிறான். சேவற்கொடி ஏற்றப்பட்டு முருகனுக்கு பூசை நடைபெறுகிறது. அப்படியானால் தண்டம் மற்றும் வேலின் மூலம் என்ன? இதில் வேல் உள்ளவன் காலத்தால் முந்தியவனா? இல்லை கம்பு உள்ள முருகன் காலத்தால் முந்தியவனா?
இவ்வளவு சிக்கல் முருகனுக்கே இருக்கிறபொழுது சுப்புணி என்பதன் சூட்சுமம் என்ன?
//பத்துப் பாட்டிலே திருமுருகைச் சொருகியது உவேசாவின் கைங்கர்யம்//
பாவம் உவேசா! இப்படியெல்லாம் திட்டுவாங்குவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கொலநெடுநல் வாடை கோல் குறிஞ்க்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
இந்த பழம் பாடல் பத்துப்பாட்டு நூல்கள் எவை என்பதை தெளிவாகக் காட்டுகின்றது.
பத்துப்பாட்டு முழுமைக்கும் கி.பி.9ம் நூற்றாண்டை சேர்ந்தவராக கருதப்படும் நச்சினார்க்கினியர் உரை எழுதிஉள்ளார்.அவர் மேற்கோள்கள் அவருக்கு முந்திய பழைய உரை ஒன்று பத்துப்பாட்டுக்கு இருக்கலாம் என்பதற்கு சான்றாகிறது.
திருமுருகாற்றுப்படை குறித்து நச்சினார்க்கினியர்”வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை,வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்தலென்று பொருள் கூறுக” என்று கூறி திருமுருகாற்றுப்படை ஒர் ஆற்றுப்படை நூல் என்று உறுதி செய்கிறார்.உவேசா குறித்த நண்பர் தென்றலின் அவதூறு ஆதாரமற்றது.
அதுதானே! எங்கடா ஆள இன்னும் காணமே என்று பார்த்தா? வந்துவிட்டீர்கள். சரி விசயத்திற்கு செல்வோம். நச்சானிர்க்கினியர் என்று தெளிவாக நீங்கள் சொல்லிவிட்டால் பிரச்சனை உவேசாவுக்குத்தானே! நச்சானிர்க்கினியர் உரையை வைத்துத்தான் திருமுருகு கடைச்சங்ககாலம் அல்ல என்று ஒரு கூட்டம் வாதிடுகிறது. இதை மறுத்தவர் மயிலை சீனி. இவர் ஒரு சைவ பக்தராவார்! இவரது புத்தகம் இணையத்தில் கிடைக்கிறது வாசிக்கவும். என்ன மாதிரியான குறிப்புகளை விவாதித்திருக்கிறார் என்று வாசித்துப்பார்க்கவும். நக்கீரர் காலத்திற்கான விவாதமும் இவரால் மறுக்கப்பட்டு திருமுருகு இனிதே கடைச்சங்க காலத்தில் வைக்கப்பட்டது. நச்சனிர்க்கினியர் உரையும் காலமும் சரியென்றால் (என் முன்முடிவுகளும் அதுவே; கி,பி ஒன்பதாம் நூற்றாண்டு என்பது சரி) உவேசாவின் மீது பிராது ஏன் வைக்கக் கூடாது? இப்படியொரு கருத்தே அவதூறு என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இப்படியொரு விவாதம் ஏன் தேவை என்று யோசியுங்கள். அல்லது வீடுபேற்றை எடுத்துக்கொண்டு, தமிழ்குடிகளின் வழிபாடு இடம்பெற்றிருக்கும் பரிபாடலில், சிறுபாணாற்றூப்படையில் எத்துனை சதம் இருக்கிறது என்று பாருங்கள்? அங்கேயும் வைதீகக் கலப்புகள் உண்டு. ஆனால் தனிச்சிறப்பாக திருமுருகு மட்டும் எப்படி கடைச்சங்க காலமான கி,பி. 250லிலேயே வீடுபேறைப்பற்றி இவ்வளவு தனித்தன்மையுடன் பாடுகிறது என்று சொல்லுங்கள்.
//நச்சானிர்க்கினியர் என்று தெளிவாக நீங்கள் சொல்லிவிட்டால் பிரச்சனை உவேசாவுக்குதான்//
எப்படி அய்யா? நான் ஒரு பழம் பாடலை சுட்டிக்காட்டினேனே! அதை உவேசா தான் எழுதினார் என்று கூறாதவரை பத்துப்பாட்டில் திருமுருகுவை சொருகினார் என்ற குற்றசாட்டு எப்படி சரியாகும்.
//நச்சானிர்க்கினியர்…..வாதிடுகிறது//
நச்சினார்க்கினியர் திருமுருகுக்கு மட்டும் உரை எழுதவில்லையே? பத்துப்பாட்டு தொகுப்பு முழுமைக்கும் அல்லவா உரை எழுதி உள்ளார்? முருகு கடைச்சங்க நூல் இல்லை மற்றவை கடைச்சங்க நூல்கள் என்று எப்படி இந்த கூட்டம் சொல்கிறது?
//இதை மறுத்தவர் மயிலை சீனி.இவர் ஒரு சைவ பக்தராவார்//
மயிலையாரின் “தமிழும் சமணமும்” படித்தவர்கள் அவரை சைவ பக்தர் என்று கூறமாட்டார்களே!! இது உங்கள் சொந்த கருத்தா? இல்லை அந்த கூட்டத்தின் கருத்தா?
//நச்சனிர்க்கினியர்……ஏன் வைக்ககூடாது//
மேலே கூறி உள்ளேன்.
தமிழர்களுக்கான தத்துவமரபு வெளியில் இருந்து வந்தது என்ற எண்ணத்தில் மீதம் உள்ள கேள்விகளை கேட்கிறீர்கள்.அதற்கான பதிலை அடுத்த பின்னூட்டத்தில் சொல்கிறேன்.
//இப்படியொரு விவாதம் ஏன் தேவை என்று யோசியுங்கள்//
தேவாசுர யுத்தம் குறித்து இரண்டு தரப்பு உண்டு.முதல் தரப்பை இந்த பதிவின் கட்டுரை பேசுகிறது.இன்னொரு தரப்பு யோக,தத்துவ மரபில் குறியீடுகளாக உள்ளதை புராணீகர்கள் புராண கட்டுகதையாக எழுதிவிட்டார்கள் என்பது.
இந்த தரப்பின் முதல் குரலாக தமிழில் ஒலிப்பது திருமூலருடையது என்பதால் இந்த தரப்பு கவனம் பெறுகிறது.
காட்டாக
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே[திருமந்திரம்-343]
முப்புரங்களை அதில் உள்ள அரக்கர்களை அழித்தது சிவன் மும்மலங்களை அழித்ததுதான் என்கிறார்.
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே[திரு.345]
திருக்கடவூரில் காலனை உதைத்தது மூலக்கனலை சிரசுக்கு ஏத்துவது என்கிறார்.
அடுத்ததாக சமணம்,சைவம் குறித்து நாளை.பணி பளு
இக
\\ எப்படி அய்யா? நான் ஒரு பழம் பாடலை சுட்டிக்காட்டினேனே! அதை உவேசா தான் எழுதினார் என்று கூறாதவரை பத்துப்பாட்டில் திருமுருகுவை சொருகினார் என்ற குற்றசாட்டு எப்படி சரியாகும்.\\
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் ஆட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறி இச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்” தொல்காப்பியம்- 1037
இது தான் ஆற்றுப்படைக்கு இலக்கணமாக தொல்காப்பியம் கூறுவது. மன்னரிடம் பரிசு வாங்குகிற நான்குவிதமான தொழிலாளர்கள் பரிசுவாங்காதவர்களை ஆற்றுப்படுத்துக்கிறார்கள். திருமுருகு இதற்குள் எவ்விதம் பொருந்துகிறது என்று எடுத்துச் சொல்லுங்கள். இப்பொழுது நச்சினார்க்கினியாரை ஏற்பீர்களா? அனாதையாக இருக்கிற பழம்பாடலை ஏற்பீர்களா? அல்லது தொல்காப்பியத்தை ஏற்பீர்களா? அல்லது திருமுருகை மூன்றாவதாக பதிப்பித்த உவேசாவை ஏற்பீர்களா? தமிழ் அறிஞர்கள் ஏன் இன்று வரை திருமுருகு என்றால் மவுனம் காக்கிறார்கள்?
கத்தும் குயிலோசை என் காதில் விழுந்தது என்று பாரதி பாடினால் மட்டும் இச்சமூகம் மரபுப் பிழை என்று பார்க்காமல் வழூவமைதி என்கிறது. அதே போல் சம்பந்தமேயில்லாமல் திருமுருகாற்றுப்படையும் இங்கே வருகிறது என்றால் ஆன்மிகத்தின் நெடிதான் என்ன? இதில் பழம்பாடல் திருமுருகை பத்துப்பாட்டோடு இணைக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிற அளவிற்கு தமிழர்கள் ஏன் தன்மானம் அற்றவர்களாக இருக்க வேண்டும்?
தமிழ், சமஸ்கிருத புலமை பெற்ற நச்சினார்க்கினியருக்கும் மற்றும் மொழியை அச்சிலேற்றிய மகோபாத்யாய உவேசாவிற்கு, இதெல்லாம் தெரியாதா என்ன? தெரியும். ஆனால் அவர்களுக்கெல்லாம் கலாச்சாரம் என்பது வெறும் ஆன்மிகம் மட்டுமே; இதற்கு மாறாக தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை ஐரோப்பிய சிந்தனை முறை முற்றிலும் வேறானது. அவர்கள் கிறித்துவத்தை தூக்கிப்பிடிக்கும் பொருட்டு சமண இலக்கியங்களை முழுவதும் ஆய்ந்திருக்கிறார்கள். நச்சினார்க்கினியரையும் ஆய்ந்து இருக்கிறார்கள். கால வைப்புமுறையில் இவர்கள் பல அதிர்ச்சிகளை முன் வைக்கிறார்கள். வைதீக மரபின் அனேக கூச்ச நாச்சங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன. இருந்தாலும் இவர்களும் சுடுதண்ணீருக்குப் பதில் கொதிக்கும் எண்ணெய்யைக் கைகாட்டியவர்கள் தான். ஆனால் தமிழ் மரபு என்றாலே நமக்கு உவேசாவிலிருந்து தான் சொல்லித்தருக்கிறார்களே தவிர, மாற்றுச்சிந்தனையை மருந்துக்கும் தொடுவதில்லை. தாங்களும் பழம்பாடலைச் சுட்டுவதோடு திருப்திபட்டு கொள்கிறீர்கள்.
திருமுருகுவில் இருந்து புறப்பொருள் வெண்பாமாலைவரை அச்சிலேற்றியவர் உவேசா. அதற்கு முன்பு, திருமுருகை பதிப்பத்தவர் ஆறுமுக நாவலர் (1850) உவேசா 1855இல் தான் பிறக்கிறார் என்றும் பார்க்கிறோம். (தமிழ் என்றால் சைவம் மட்டும் தான் என்று கருதுகிற மனப்பாங்கு நாவலருக்கு; உவேசா கூட சமண இலக்கியங்களை தொழில்முறை காரணமாக பதிப்பித்தவர்) இதற்கு முன்பு திருமுருகு, 1831 இல் மற்றொருவரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இதைவிட்டால் நச்சானிக்கினியர். அதற்குமுன்பான சமணர் காலம் முழுவதும் தமிழ்நாட்டுக்காரனுக்கு அவசியமற்றது என்பதுமாதிரி களப்பிரர் என்று கருதிவிட்டு ஒதுங்கிக்கொள்வது சைவர்களின் போக்கு; வரலாறே இப்படித்தான் அணுகப்பட வேண்டும் என்றால் பார்ப்பனீயம் ஏன் இவ்வாறு தமிழ்நாட்டில் பாடாது “அசுரர் குடி கெடுத்த ஐயா வருக!”
இதில் உவேசாவை ஏன் சேர்க்கக்கூடாது? அச்சில் ஏற்றப்பட்டது தமிழ் மட்டுமல்ல; பார்ப்பனியமும் தான்; அன்றுபோல இன்று, தமிழ் என்பது பார்ப்பனர்களுக்கும், பிள்ளைகளுக்கும் மட்டும் சொந்தமான சாதிய லெளகீகப்பொருள் அல்ல. மாறாக ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றானே பாரதிதாசன்; ‘பார்ப்பனிய எதிர்ப்பு மரபிற்கு தமிழ் என்று பெயர்’ என்று சொன்னதே புரட்சிகர இயக்கங்கள். இவையெல்லாம் வெறும் பொழுதுபோக்குகள் அல்ல. மாறாக புதிய கலாச்சார கீற்றுகள். ஆகையால் உவேசாவிலிருந்து அனைவரையும் சேர்க்கத்தான் வேண்டும்.
\\ நச்சினார்க்கினியர் திருமுருகுக்கு மட்டும் உரை எழுதவில்லையே? பத்துப்பாட்டு தொகுப்பு முழுமைக்கும் அல்லவா உரை எழுதி உள்ளார்? முருகு கடைச்சங்க நூல் இல்லை மற்றவை கடைச்சங்க நூல்கள் என்று எப்படி இந்த கூட்டம் சொல்கிறது?\\
நச்சினார்க்கினியர் பத்துபாட்டுக்கு முழுமையும் உரை எழுதினார் என்று சொல்கிற பொழுது, திருமுருகு மட்டும் அல்ல. பரிபாடலும் அப்படித்தான். இவையுமே கி,பி, ஏழாம் நூற்றாண்டுக்கு பிற்பாடானவைதான்.
எட்டுத்தொகையில் உள்ள கலித்தொகையும் கி,பிக்கு ஐந்திற்கு பிற்பாடுதான்.
வச்சர நந்தியின் திரமிள சங்கம் கி,பி. 450 என்கிற பொழுது அதற்கு பிற்பாடுதான் சங்க நூல்களின் காலம் என்று சொன்ன வையாபுரி, பாவாணாரால் ‘தமிழ்த்துரோகி’ என்று சுட்டப்பட்டதாக வீ.அரசுவின் கட்டுரை மூலமாக அறிகிறோம். தொல்காப்பியத்தையும் கி,பி. ஐந்தாம் நூற்றாண்டு பிற்பாடு நகர்த்தியவர் வையாபுரி பிள்ளை.
இதில் கடைச்சங்க காலத்தில் நூல்களை நிறுத்துவதற்கு சில தர்க்கங்களை வழங்கியவர் மயிலை சீனி. மேற்கொண்டு படியுங்கள் கீழே.
—–
\\ மயிலையாரின் “தமிழும் சமணமும்” படித்தவர்கள் அவரை சைவ பக்தர் என்று கூறமாட்டார்களே!! இது உங்கள் சொந்த கருத்தா? இல்லை அந்த கூட்டத்தின் கருத்தா?\\
மயிலை சீனி வைச பக்தர் தான். இவருடைய தமிழும் சமணமும் என்ற நூலை விட, களப்பிரர்காலத்தில் தமிழகம் என்ற நூல் தமிழ்நாட்டில் கலகக்குரலையே ஏற்படுத்தியது. சைவர்களின் சமணக்காழ்ப்புணர்வை புட்டு புட்டுவைத்தது. இருந்தபோதிலும் சைவப்பற்று அன்னாருக்கும் உண்டு. அதைக்குறிப்பிடும்பொருட்டே மயிலை சீனி சைவப் பக்தர் என்பதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டியிருந்தது. சைவப்பற்று காரணமாகத்தான் வேள்விக்குடி சாசனம் பற்றி இவர் ஏதும் குறிப்பிடவில்லை என்று பார்க்கிறோம்.
——————————–
இறையனார் கலம்பகம் கி,பி 5-6க்குள் எழுதப்பட்டதற்கு ஆதாரத்துடன் விளக்கம் தந்தவர் மயிலை சீனிதான். இறையனார் கலம்பகம் நக்கீரரால் எழுதப்பட்டது என்று கூறுகிற பொழிப்புரையை ஒட்டுமொத்தமாக மறுத்தவர். பல்வேறு ஆதாரங்களை விவாதித்து இருப்பார். அதே சமயம் திருமுருகு, நெடுநெல்வாடை ஆகியவற்றை கடைச்சங்க நக்கீரரிடம் விட்டுவிட்டு, இறையனார் கலம்பகம், கோபப்பிரசாதம் முதலிய நூல்களை நக்கீர நாயனாரிடம் விட்டுவிடுவார். கபிலருக்கும் இதேப்பிரச்சனைதான் உண்டு. குறிஞ்சிப்பாட்டு கபிலர் என்று சொல்லிவிட்டு, களப்பிரர் காலத்திற்கு பிற்பாடான கபிலரை கபில நாயனார் என்று கூறுவோரும் உண்டு.
இவ்விதம் வையாபுரி துரோகியாக வேண்டுமானால் கடைச்சங்கத்தில் நூல்கள் வைக்கப்படுவதற்கு நக்கீரரும் நக்கீர நாயனாரும் வேறு வேறாக இருந்தாக வேண்டும், கபிலர் நாயனார் ஆக வேண்டும். இவ்விதம் பல சர்ச்சைகள் தமிழ் இலக்கியங்களில் இருக்கின்றன. ஆன்மீகம் என்ற ஒற்றைக்காரணத்திற்காக இவை அணுகப்படாமலும் இருக்கின்றன.
திருத்தம்: வையாபுரி குறித்த தகவல்களை (வீ. அரசுவின் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது) வெறும் சங்க இலக்கிய காலம் என்பதுடன் தூக்கிப்பிடிக்கிற பொழுது திராவிட இயக்கம் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை குறைத்து மதிப்பிடுகிற அபாயமும் என் கருத்தில் உள்ளது. வையாபுரியின் வடமொழி குறித்த செய்திகள் மற்றும் அதன் மீதான பற்று போன்றவற்றை நாம் சுட்டாமல் சங்க இலக்கிய காலத்திற்கு மட்டும் வையாபுரியை நாடுவது நாம் விவாதிக்கிற புராணபுளுகுகளை அறிந்துகொள்வதன் மீதான பார்வையை சிதைக்கக் கூடியவை. சான்றாக இன்றைக்கு வையாபுரி இந்துவெறியன் இராமகோபலான், தினமணி வைத்தி, தினமலர் போன்ற பார்ப்பன அக்கரகாரங்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றது. இதையும் சேர்த்துக்கொண்டுதான் வையாபுரியின் பணியை கணக்கில் எடுக்க முடியும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். வரலாற்றை ஒரு பக்கமாக தெரிந்துகொள்வதன் பிழை இது. இதை வரும் விவாதங்களில் திருத்திக்கொள்கிறேன்.
கலித்தொகை 5ன் நூற்றாண்டா என்று முதலில் பார்ப்போம்.
கலிப்பாவினால் பாடப்பட்டதால் கலித்தொகை.
பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருதம் அருஞ்சோழன்
நல்லுருத்திரன் முல்லை நல்லந்துவன் நெய்தல்
கல்விவலார் கண்டகலி.
வெண்பா கூறுவது பாலைத்திணையில் அமைந்த பாலைகலியை பெருங்கடுங்கோனும் குறிஞ்சிகலியை கபிலரும் மருதக்கலியை மருதனிளநாகனும்,முல்லைக்கலியை அருஞ்சோழன்நல்லுருத்திரனும் நெய்தல் நல்லந்துவனாரும் பாடினார்கள் என்பதை.
இதில் கபிலரும்,உருத்திரசன்மனும் சங்க கால பாடல்களை பாடியவர்கள்.பாரி,கரிகால பெருவளத்தான் எனும் வரலாற்று நாயகர்களுடன் தொடர்புடையவர்கள்.இது எப்படி சாத்தியம்?
அடுத்து பரிபாடல் 13 புலவர்களால் பாடப்பட்டது.கலித்தொகை,பரிபாடல் இரண்டிலும் உள்ளவர் நல்லந்துவனார். இவரின் பாடலில் உள்ள கிரகநிலை[பரிபாடல் 11] கி.மு உள்ளதாக உரை ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.
பரிபாடல் 12ஐ இயற்றிய நல் வழுதி கடைசங்க காலத்து பாண்டிய மன்னன் என்கிறார் வரலாற்று அறிஞர் டி.வி.சதாசிவ பண்டாரத்தார்.இது எப்படி சாத்தியம்?
இன்னா நாற்பது எனும் பதினெண் கீழ்க்கணக்கு நூல் கபிலர் பெயரால் உள்ளது.புலாலுண்ணாமையை தீவிரமாக எதிர்க்கும் இந்நூலை “மட்டுவாய் ஊன்சோறு” உண்ட குறிஞ்சி கபிலர் எழுதி இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.இது சரிதானே இதில் என்ன சிக்கல்?
சகரம் மொழியின் முதலில் வராது எனவே சங்க காலம் என்பதே பொய் என்று சொல்லும் ஆய்வு கட்டுரைகள் உண்டு.நிலமை என்னவெனில் சங்க இலக்கியங்கள் எனும் தமிழரின் இலக்கிய சொத்து பல தரப்பினருக்கு உறுத்தலாக உள்ளது.எனவே கவனமாக உண்மையை அறிய முயல வேண்டும்.
திருத்தம்:புலாலுண்ணுதலை தீவிரமாக எதிர்க்கும் என்று படிக்கவும்.
//வச்சிர நந்தியின் திரமிள சங்கம் கி.பி.450 என்கிறபொழுது அதற்கு பிற்பாடுதான் சங்க நுல்களின் காலம்//
மேலோட்டமான பார்வைக்கே தெரியும் இது தவறான வாதம் என்று.கரிகால பெருவளத்தான் இலங்கையின் மீது கி.பி.முதல் நூற்றாண்டில் படை எடுத்து 10000 பேரை போர்கைதிகளாக பிடித்து வந்தான் என்று இலங்கையின் மகா வம்ச சரித்திரம் ஒத்து கொள்கிறது.பத்துப்பாட்டின் பொருநராற்றுப்படைக்கும்,பட்டினப்பாலைக்கும் கரிகாலந்தான் பாட்டுடைத் தலைவன்.திரமிள சங்கத்திற்குதான் ஆதாரம் குறைவு.
திருமுருகாற்றுப்படைக்கு வருவோம்.பத்துப்பாட்டு எப்படி தொகுக்கப்பட்டது என்று பன்னிருபாட்டியல் பின்வருமாறு விளக்குகிறது.
நூறடிச் சிறுமை நூற்றுப்பத்தளவே
ஏறிய அடியின் ஈரைம்பாட்டு
தொடுப்பது பத்து பாட்டெனப்படுமே[பன்னிரு பாட்டியல் 266-7]
புறநாநூற்றிலும்,பதிற்றுப்பத்திலும் பல செய்யுள்கள் ஆற்றுப்படைகளாக அமைந்துள்ளன.நூறடி சிறுமை என்ற விதிக்கு அவை பொருந்தாதலால் அவை பத்துப்பாட்டில் தொகுக்கப்படவில்லை.எனவே தொகுத்தல் கறாராக நடந்தது என தெளிவாகிறது.
நச்சினார்க்கினியர்க்கு காலத்தால் முந்திய பேராசிரியர் போன்ற உரையாசிரியர்கள் “பாட்டிலும் தொகையினும் வருமாறு கண்டு கொள்க” என்று சுட்டுவதால் இதை நச்சினார்க்கினியர் தொகுக்கவில்லை என்பது தெளிவாகிறது.
இலக்கணத்திற்கு தொல்காப்பியம் போன்று உரைக்கு நச்சினார்க்கினியம் என்று புகழப்படும் நச்சினார்க்கியர்,”வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை, வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்தலென்று பொருள் கூறுக”
என்று கூறி திருமுருகு ஒர் ஆற்றுப்படை நூலென்று உறுதி செய்கிறார்.இதற்கு மேலும் திருமுருகு ஆற்றுப்படை இல்லை என்பது எப்படி சரியாகும்.
வீ.அரசு சொல்வது போல் முருகு தேவார,திருவாசக நூல்களுக்கு பிறகு எழுதப்பட்டிருந்தால் கண்டிப்பாக இந்த பாட்டு இடம் பெற்றிருக்காது.அது
“சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து”
முருகனுக்கு ஆடு பலி கொடுப்பது 7ம்நூற்றாண்டில் நடைமுறையில் இருந்ததா? களப்பிரர் காலத்திய முக்கிய பண்பாட்டு மாற்றம் புலால் உண்பது கடும் பாவமாக நம்பவைக்கப்பட்டதுதான்.எனவே முருகன் கிடா கறி கேட்டது சங்க காலத்தில்தான்.முருகு சங்க கால நூல் என்பதற்கு இது ஒரு ஆதாரம்.
\\”வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை, வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்தலென்று பொருள் கூறுக”
என்று கூறி திருமுருகு ஒர் ஆற்றுப்படை நூலென்று உறுதி செய்கிறார்.இதற்கு மேலும் திருமுருகு ஆற்றுப்படை இல்லை என்பது எப்படி சரியாகும்.”\\
தாங்கள் சுட்டிக்காட்டுகிற இவ்வாதம் எவ்விதத்திலும் திருமுருகை சங்க காலத்தில் சேர்க்க போதுமானவை அல்ல. முதலில் சமகால காலத்தன்மையை உற்றுநோக்கவும். வீடுபேறு என்பது முதலில் ஆற்றுப்படைக்கு உரியதா? தொல்காப்பியல் அகம், பொருள், இன்பம் என்று லெளகீக வாழ்வை மட்டும்தான்பேசுகிறது. இதற்குப்பிற்பாடான இறையனார் கலம்பகம் மட்டுமே பேரின்பத்தைப் பேசுகிறது. தொல்காப்பிய ஆற்றுப்படை இலக்கணத்தோடு மறுபடி ஒப்பிட்டுப்பார்க்கவும். மறி அறுத்து என்றொரு வாழ்வியல் முறையை சுட்டிக்காட்டுகிறீர்கள். அதற்கு பதில் சொல்கிற பொழுது மேலும் ஆதாரங்களை முன்வைக்கிறேன். அதற்கு முன்பாக பன்னிரு பாட்டியலின் காலத்தைத் தெரிந்துகொள்ளவும். எட்டுத்தொகை தொகுக்கப்பட்டது முதலில் இறையனார் அகப்பொருளில். இது களப்பிரர் கால நூலாகும். ஆனால் பன்னிருபாட்டியல் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இங்கு ஒரு விசயத்தைக் கவனிக்கவேண்டும். தொகுக்கப்பட்டதால் நூல் எழுதப்பட்ட காலமும் அதுவே என்று சொல்லவரவில்லை. ஆனால் கால அளவை நிர்ணயப்படுத்திக்கொள்வதன் மூலமாக பத்துப்பாட்டு , எட்டுத்தொகை வெண்பா பாடலுக்கான காலத்தை நோக்கி நகர இயலும். பன்னிரு பாட்டியல் 10 ஆம் நூற்றாண்டு என்றால் நச்சினார்க்கினியர் காலம் இதற்குப் பிற்பாடு என்றாகிறது. இதையும் விவாதிக்கும் பொழுது கவனத்தில் எடுக்கவும்.
\\“சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து”
முருகனுக்கு ஆடு பலி கொடுப்பது 7ம்நூற்றாண்டில் நடைமுறையில் இருந்ததா? களப்பிரர் காலத்திய முக்கிய பண்பாட்டு மாற்றம் புலால் உண்பது கடும் பாவமாக நம்பவைக்கப்பட்டதுதான்.எனவே முருகன் கிடா கறி கேட்டது சங்க காலத்தில்தான்.முருகு சங்க கால நூல் என்பதற்கு இது ஒரு ஆதாரம்.\\
இதில் ஒன்றைத் தெளிவுபடுத்துவோம். முருகனுக்கு ஆடு பலி கொடுப்பது நற்றிணையிலே வந்துவிடுகிறது. சான்றாக நற்றிணையில்; “வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறிஅறுத்து அன்னை அயரும் முருகு”
குறுந்தொகையில் “சிறுமறி கொன்று இவள் நறுநுதல் நீவி”.
கடந்த ஒரு வாரகாலமாக, முருகன் பார்ப்பனியமயக்கப்பட்டான் என்று வாதிடுகிற பொழுது இதுபோன்ற வாதங்களை எடுத்துவைப்பார் யாரும் இலர்! தமிழ் தாகம் இதை வேறொரு பதிவில் வலியுறுத்தியிருக்கிறார். சரவணன் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மறிஅறுத்து எனும் வாதத்தை மேட்டுக்குடி வெள்ளாளர்களிடம் விவாத்திருக்கிறார். ஆனால் அப்பொழுதெல்லாம் இதை வலுப்படுத்துவதை விட்டுவிட்டு, தாங்கள் திருமுருகை சங்க காலத்தில் வைப்பதற்காக மட்டும் இதைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். இது எதிர்தரப்பு அரசியல்! இதன் பலன் முருகன் பார்ப்பனியமாக்கப்பட்டான் என்பதற்குத்தான் பயன்படுமே தவிர, முருகன் கறிசோறு திங்கிற தொல்குடிகளின் கடவுள் என்று சொல்வதற்கு பயன்படாது.
ஏனெனில் திருமுருகு அப்படிப்பட்டதல்ல. சங்க இலக்கியங்களிலே மறி அறுத்தல் வந்துவிடுவதால் திருமுருகுவில் பின்பற்றப்பட்டிருக்கிறது. அதே சமயம் திருமுருகு ஏன் கடைச் சங்க காலம் அல்ல என்பதற்கு கீழ்க்கண்ட தரவுகளை பரிசிலீக்கவும்.
1. திருமுருகாற்றின் பாடல் இணைக்குறள் ஆசிரியப்பாவாகும். நக்கீர தேவநாயனாரின் அனைத்துப்பாடல்களுமே இணைக்குறள் ஆசிரியப்பா வகையைத்தான் கொண்டிருக்கின்றன். ஆனால் நக்கீரரின் நெடுநல்வாடை நேரிசை ஆசிரியப்பாவாகும். திருமுருகு கடைச் சங்க காலமென்றால் திருமுருகு தனித்து நிற்கவேண்டியிருக்கும்.
2. திருமுருகாற்றின் கடைசி தொகுப்புப்பாடல் (தொகுப்புப் பாடல் என்பது நூலைச் சிறப்பித்துப்பாடப்படுகிற பாடலாகும்) கட்டளைக் கலித்துறையால் ஆன “ஒருமுரு காவென்ற னுள்ளங் குளிர வுவந்துடனே” என்று தொடங்குகிற பாடலாகும். ஏற்கனவே கூறியுள்ளது படி, துறை, விருத்தம் மற்றும் தாழிசை களப்பிரர் காலத்திய கண்டுபிடிப்புகளாகும் (பார்க்க; மயிலை சீனியின் புத்தகம்)
3. சங்ககால பாடல்களில் “நான்” என்பது மிகவும் அருகிய சொல்லாகும். பரிபாடலில் இரண்டொருமுறை வருவதைச் சுட்டிக்காட்டுகிற பொழுது (ஆகையால் அது அங்கு வராது என்றும் சொல்லலாம்! பரிபாடல் அங்கு வருவதும் இல்லை. தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகிற பரிபாடல் சான்றை நாம் ஆராய்வது பாக்கியாக இருக்கிறது; கவனம் செலுத்தவும்), திருமுருகையும் சுட்டிக்காட்டலாம். இதைத் தாண்டி புறப்பொருள் திரட்டில் “நான்” என்ற இடப்பெயர் வருகிறது. வையாபுரி, களப்பிரர் கால நக்கீர நாயனாரின் பாடலில் (கயிலைபாதி அந்தாதியில்) “நான்” என்ற சொல் 96 முறை பயன்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
4. களப்பிரர் காலத்தில் ஊண் உண்ணாமையைச் சுட்டிக்காட்டுவதை பொருத்தமானதாக நான் ஏற்கவில்லை. ஏனெனில் களப்பிரர் காலத்தில் தான் எண்ணற்ற சைவ நூல்கள் வெளிவருகின்றன. (பார்க்க மயிலை சீனி புத்தகம்) . திருக்கண்ணப்ப தேவர் திருமறம், இறைச்சியை சிவனுக்குப் படைப்பதைப் பேசுகிறது. இதில் சிவனைக் காட்டிலும் முருகன் தான் சங்க கால இலக்கியப்பாடல்களில் அதிகம் வருகிறான். லேட்டஸ்டா வந்தே சிவனுக்கு களப்பிரர் காலத்தில் இறைச்சி அளிக்கப்படுகிறது என்று பார்க்கிறோம்.
5. இறுதியாக புறப்பாடலில் முருகயர்தல் போருடனும், அகப்பாடலில் வெறியாட்டல் தலைவன்-தலைவியுடனுடம் முருகன் தொடர்பு படுத்தப்படுகிறான். ஆனால் திருமுருகாற்றுப்படையின் முதல் படைத்தளமான திருப்பரங்குன்றத்தில் முருகன் சூரனை அழிப்பதற்காகத்தான் அவதாரம் எடுக்கப்படுவதாக பார்ப்பனியம் தன் சொருகலைச் சொருகுகிறது. திருமுருகாற்றுப்படையில் உள்ள மீதமுள்ள புராணப்புளுகுகள் இதுவரை நாம் விவாதிக்கின்ற முருகன்-தொல்குடிகளின் கடவுள் என்பதற்கு எதிர்மாறானவை. கடைச் சங்கப்பாடல்கள் முருகனை ஒருமாதிரியாக காட்டுவதும், திருமுருகு முருகனை புராணங்களின் அடிப்படையில் காட்டுவதிலும் இருந்தே இதன் காலம் வேறானது என்பதை எளிதில் விளக்கலாம்.
திருத்தம்: \\ வையாபுரி, களப்பிரர் கால நக்கீர நாயனாரின் பாடலில் (கயிலைபாதி அந்தாதியில்) “நான்” என்ற சொல் 96 முறை பயன்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\\ இக்கருத்து தவறானதாகும். இங்கு நான் என்பது 96வது அடியில் வருகிறது. 96 முறை என்று தவறுதலாகக் குறிப்பிட்டிருக்கிறேன். “அடுகின்ற காளத்தி ஆள்வாய் நான்நல்ல படுகின்ற வண்ணம் பணி.” என்ற 96வது பாடலில் நான் என்பது எடுத்தாளப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து எண்ணிக்கை என்பதைப் பொறுத்தவரை பக்தி இலக்கியமான தேவாரத்தில் நான் என்ற சொல் மொத்தம் 339 இடங்களில் வருகிறது. சங்க காலம் தொட்டு பயன்பட்டுவரும் ‘யான்’ என்ற சொல் திருநாவுக்கரசர் தேவாரத்தில் 29 முறை மட்டுமே வருகிறது (http://www.tamilvu.org/courses/degree/d041/d0412/html/d0412112.htm). இதைக் கவனத்தில் கொள்ளவும்.
\\இதில் கபிலரும்,உருத்திரசன்மனும் சங்க கால பாடல்களை பாடியவர்கள்.பாரி,கரிகால பெருவளத்தான் எனும் வரலாற்று நாயகர்களுடன் தொடர்புடையவர்கள்.இது எப்படி சாத்தியம்\\
சங்க காலத்தில் வருகிற கபிலர் சற்றேறக்குறைய 206 செய்யுட்களைப் பாடியுள்ளார். இவையனைத்தும் பாண்டியனைப் பற்றியதோ அல்லது கூடல் மாநகரைப்பற்றியதோ அல்ல. ஆனால் கலித்தொகை பாண்டியனைப் பற்றி பாடுகிற பாடலாகும். இதற்கான ஆதாரத்தைப் பார்ப்பதற்கு முன்பாக, சங்க கால கபிலரின் சர்ச்சையைப் பார்த்துவிடுவோம்.
சங்க கால கபிலர், ஐங்குறுநூறில் குறிஞ்சித் திணையையும், அகநானூறில் பதினெட்டு செய்யுள்களையும், குறுந்தொகையில் 27 செய்யுள்களையும் புறநானூறில் 28 செய்யுள்களையும் பத்துப்பாட்டில் குறிஞ்சிப்பாட்டையும் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தையும் பாடியவர். இது சரியெனில் கபிலரின் வயது என்ன? ஒரு மனிதர் அதிகபட்சமாக நூறு ஆண்டுகள் வாழ முடியும் என்று வைத்துக்கொண்டாலும், சங்க கால இலக்கியங்களின் பெரும்பாலான பாடல்களை ஒரே நூற்றாண்டுக்குள் அடக்குவது தமிழரின் தொன்மையை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது. ஆனால் கடைச் சங்க பாடல்களின் காலத்தின் மேல்- எல்லை கி.மு 300 லிருந்து கி,பி 250 முடிய என்று நிறுத்துகிறார்கள். இது எப்படி சரி?
இரண்டாவதாக கபிலரின் பதிற்றுப்பத்து (7ஆம் பத்து) செல்வக்கடுங்கோ வாழியாதனைப்பற்றிப் பாடுகிறது. இவர் சேர மன்னர். ஆனால் கலித்தொகை பாண்டியனைப்பற்றி மதுரையைப் பற்றி பாடுகிறது. இது எப்படி சாத்தியம்?
பதிற்றுப்பத்தும் கலித்தொகையும் ஒரே காலத்தில் இயற்றப்பட்டு, கபிலர் சேரனையும் பாண்டியனையும் ஒருசேர பாடினாலே ஒழிய, தாங்கள் குறிப்பிடுவது சாத்தியமாகும்.
மேலும் கலித்தொகையில் வருகிற ஐந்து திணைப் பாடல்கள் மதுரையைப் பற்றியும் பாண்டியனைக் குறித்து பாடியதன் மூலமாக கலித்தொகையின் சமகாலத்தன்மையை நிறுவுகிறார் வையாபுரி;
வையாபுரி தரும் சான்று;
பாலைக் கலியில் (30)
மீனிவேற் றானையர் புகுதந்தார்
நீளுயர் கூடல் நெடுங்கொடி யெழவே
எனவும், குறிஞ்சிக்கலியில் (21)
பூந்தண்டார்ப் புலர்சாந்திற் றென்னவ னுயர்கூடல்
எனவும், மருதக்கலியில் (33)
பொய்யாவாட் டானைப் புனைகழற்காற் றென்னவன்
எனவும், முல்லைக்கலியில் (4)
வாடாச் சீர்த் தென்னவன்
எனவும், நெய்தற் கலியில் (26)
தென்னவற் றெளித்த தேஎம் போல எனவும் வருதலால் இது தெரியலாகும்.” (http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0326.html)
——————————————–
மேலும் வெண்பாவின் முரணை இவ்விதம் சுட்டிக்காட்டுகிறார் வையாபுரி;
“பெருங்கடுங் கோன் பாலை கபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருதம்-அருஞ்சோழ
னல்லுத் திரன்முல்லை நல்லந்துவன் நெய்தல் கல்விவலார் கண்ட கலி.
இச்செய்யுள் ’இன்னிலை’ ’ஊசிமுறி’ முதலிய நூல்களின் சிருஷ்டி கர்த்தரென்று கொள்ளத்தகும் காலஞ்சென்ற த.மு.சொர்ணம் பிள்ளையவர்கள் முதன் முதலில் வெளியிட்டது. தொகை நூல்களுள் ஒன்றாகிய கலித்தொகையில் ஒவ்வொரு திணையையும் இயற்றினாராக ஆசிரியர் ஐவரைப் பெயர்களால் விளக்குதலால், இது பழஞ் செய்யுளெனப் பலராலும் மயங்கிக் கொள்ளப்பட்டது. இச்செய்யுள் என் பார்வைக்கு வந்த இந்நூலின் ஏட்டுப்பிரதிகளில் காணப்படவில்லை. இந்நூலை முதன் முதலில் வெளியிட்ட ராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களுக்குக் கிடைத்த பிரதிகளிலும் இது காணப்பட்டதில்லை. இருக்குமாயின், அவர்கள் காட்டியிருப்பார்கள். காட்டாததனோடு, இச்செய்யுட்கு முற்றும் மாறாக நல்லந்துவனாரே நூல் முழுதும் இயற்றியவரெனவும் கருதினார்கள். இக் கொள்கை மிகவும் வன்மையுடையதென்றே தோன்றுகிறது. கலித்தொகையை நல்லுந்துவனார் கோத்தாரென்று கூறும் நச்சினார்க்கினியரும் இங்ஙனம் ஒரு செய்யுள் உளதாகக் குறித்ததில்லை. ஒவ்வொரு திணையையும் இன்னார் இயற்றினாரெனவும் இவ்வுரைகாரர் காட்டியதில்லை. அன்றியும், குறிஞ்சிக் கலியை இயற்றியவராகக் கூறும் கபிலர் மேற்குறித்த ஆறுதொகை நூல்களிலும் பத்துப் பாட்டிலுமாக 206 செய்யுட்கள் இயற்றியுள்ளார். இவற்றுள் ஒன்றிலேனும் பாண்டியனைக் குறித்தும் கூடல் நகரைக் குறித்தும் யாதொரு செய்தியும் இல்லை. இப்புலவருக்கும் பாண்டியனுக்கும் யாதோர் இயைபும் இல்லை. ஆனால் குறிஞ்சிக் கலியோவெனின் (21), பாண்டியனைப் புகழ்ந்து கூறுகிறது. இங்ஙனமாக, பிற இலக்கியச் சான்றுகளுக்கும் முரணாகவுள்ளது இச் செய்யுள்.”
—-
ஆக இதன்படி கபிலரை வைத்து கலித்தொகை சங்க இலக்கியம் என்று நிறுவ இயலாது. கலித்தொகையின் காலநிர்ணயத்தை வையாபுரியின் ஆய்வுகளை படிப்பதன் மூலமாக அறியலாம். நேரம் கிடைக்கும் போது இதைச் செய்யலாம். அதே சமயம் கி.மு 300 லிருந்து, கி,பி 250க்குண்டான கடைச்சங்க காலத்தில் கலித்தொகையை நிறுத்துவது எந்தளவிற்கு சரி?
\\ சகரம் மொழியின் முதலில் வராது எனவே சங்க காலம் என்பதே பொய் என்று சொல்லும் ஆய்வு கட்டுரைகள் உண்டு.நிலமை என்னவெனில் சங்க இலக்கியங்கள் எனும் தமிழரின் இலக்கிய சொத்து பல தரப்பினருக்கு உறுத்தலாக உள்ளது.எனவே கவனமாக உண்மையை அறிய முயல வேண்டும்.\\
தமிழின் தொன்மையை அறிவதற்கு சங்கம் என்ற வார்த்தை தேவையில்லை. ஏனெனில் தற்பொழுதைய அகழ்வராய்ச்சிகள் கூட (அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர்) போன்றவை தமிழர் தொன்மையை அறிவுப்பூர்வமாக கி,மு எட்டாம் நூற்றாண்டு வரை எடுத்துச் சென்றிருக்கிறது. இதற்கு முன்பு அசோகர் கால கல்வெட்டுகள் பாண்டியனைக் குறிப்பிடுவதாக அறிகிறோம். ஆனால் இலக்கியங்களில் அத்தகைய ஆராய்ச்சிகள் வெகுகுறைவு. தமிழரின் இலக்கிய சொத்து என்று சொல்லவருகிற பொழுது சமகாலத்தன்மையை மனம் திறந்து ஆராய முன்வருதல் வேண்டும். இதன் பொருட்டே தான் வீ. அரசு போன்றவர்களால் சில ஐரோப்பியர்களின் காலநிர்ணயத்தை தவறென்று சுட்டிக்காட்ட முடிவதுடன் பார்ப்பனியத்திலிருந்தும் தமிழர்தம் கலாச்சாரத்தை தனியாக எடுத்துவிடுகிறார்கள். ஆனால் வரலாற்று பொருள் முதல் பார்வைக்குப் பதிலாக புராணங்களையும் மன்னர் தரப்பு வாழ்க்கை முறைகளையும் பார்ப்பனப்புலவர்களின் கவிதைகளை மட்டுமே கணக்கில் கொள்கிற பொழுது அது பார்ப்பனியமாக நின்றுவிடுகிற அபாயம் உண்டு.
\\ அடுத்து பரிபாடல் 13 புலவர்களால் பாடப்பட்டது.கலித்தொகை,பரிபாடல் இரண்டிலும் உள்ளவர் நல்லந்துவனார். இவரின் பாடலில் உள்ள கிரகநிலை[பரிபாடல் 11] கி.மு உள்ளதாக உரை ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.
பரிபாடல் 12ஐ இயற்றிய நல் வழுதி கடைசங்க காலத்து பாண்டிய மன்னன் என்கிறார் வரலாற்று அறிஞர் டி.வி.சதாசிவ பண்டாரத்தார்.இது எப்படி சாத்தியம்?\\
இரு குறிப்புகளைச் சுட்ட விழைகிறேன். எட்டுத்தொகை நூல்களிலேயே கலித்தொகையிலும் பரிபாடலிலும் தான் புராணப்புளுகுகள் அதிகம். பீமன், துரியோதணன் போன்ற செய்திகள் கலித்தொகையிலும் (வலைத்தளத்தில் சேகரித்தது), முருகனின் பிறப்பு, சூரபத்மனை கொன்றழிப்பதை விரிவாக பரிபாடலிலும் பார்க்கிறோம்.
பரிபாடல் முருகன் பற்றிய பிறப்பை புராணத்துடன் இணைப்பதைப் பார்க்கிறோம். சான்றாக இந்தக் கட்டுரையை சொடுக்கிப்படிக்கவும் (http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60604074&format=print&edition_id=20060407).
இரண்டாவதாக கலித்தொகையிலும், பரிபாடலிலும் தாழிசை உள்ளுக்குள் வருகிறது. தாழிசை, விருத்தம், துறை இம்மூன்று பாவகைகளும் களப்பிரர் காலத்திய கண்டிபிடிப்புகள். இதற்குமுன்பு, தொல்காப்பியம் ஆசிரியம், வஞ்சி, கலி, வெண்பாவைச் சுட்டுகிறது. கலித்தொகையும், பரிபாடலும் தான் அதிக ஓசை நயம் உடையவை என்று ஆய்வுகள் சுட்டுகின்றன. தாழிசை எப்படி கலித்தொகைக்குள் வந்தது என்பது விவாதத்திற்குரியது.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கினும்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனார் புலவர்-[தொல்-999]
ஆடல் பாடல் இசைக்கு ஏற்றது கலிப்பாவும்,பரிபாடலும் என்கிறார்.என்மனார் புலவர் என்பதன் மூலம் அவர் காலத்துக்கு முன்பிருந்தே என்பதை அறியலாம்.
களப்பிரர் காலத்தில் இசை,நாடகத்தின் நிலை என்ன என்பது நான் சொல்ல தேவை இல்லை.தமிழின் பாணர் மரபே முடிவுக்கு வந்து விட்டது.எனவே கலிப்பாவின் தாழிசை முயற்சிகள் களப்பிரர் காலத்தியது என்பது ஏற்புடையது இல்லை.
\\ தமிழர்களுக்கான தத்துவமரபு வெளியில் இருந்து வந்தது என்ற எண்ணத்தில் மீதம் உள்ள கேள்விகளை கேட்கிறீர்கள். அதற்கான பதிலை அடுத்த பின்னூட்டத்தில் சொல்கிறேன்.\\
நன்று. அதே சமயம் விவாதத்திற்கு தேவையான கீழ்க்கண்ட கேள்விகளைப் பரிசீலிக்கவும்.
1. அசுரர் குடி கெடுத்த ஐயா வருக! என்ற பதத்திற்கு தமிழ் பக்தனின் பதில் என்ன?.
2. வெறியாட்டுதல் தன் உணர்ச்சிப் பாடல்களாக நற்றிணையில் இருந்து தொடங்குகிற பொழுது சுரா பானம் தவிர்க்கப்பட்டவர்கள் அசுரர்கள்; அத்தகைய அசுரர்கள் அழிக்கபட்டு தேவர்கள் காக்கப்பட்டனர் என்று பார்ப்பனியம் வரையறுக்கிற கலாச்சாரம், தமிழ்க்குடிகளுக்கு எவ்விதம் பொருந்துகிறது?
// தவறு. ஆறுபடைவீடுகளில் முதல் படைவீடு திருப்பரங்குன்றம். இதில் முருகன் சு. சுவாமி எனப்படுகிறார். சூரனை வதம் செய்வதற்காகத்தான் முருகனே பார்ப்பனியமயமாக்கப்படுகிறான். ஆனால் திருப்பரங்குன்றமே சைவத்திற்கு லேட்டஸ்ட் திணிப்பு என்கிற பொழுது திருமுருகாற்றுப்படையும் அப்படித்தான். பத்துப்பாட்டிலே திருமுருகைச் சொருகியது உவேசாவின் கைங்கர்யம். //
சூரனை தண்டிக்கும் குறிப்புகள் பார்ப்பனியம் புகுந்ததாக நீங்கள் கூறிய காலகட்டத்துக்கு முந்திய சங்கப்பாடல்களில் இருக்கும் போது இந்த தலைகீழ் பார்வை ஏன்..?! திருமுருகாற்றுபடை பாடிய மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் எந்த காலத்தவர்..?! போகிற போக்கில் உவேசாவையும் விட்டுவைக்கவில்லை..
// ஏனெனில் ஆற்றுப்படையின் இலக்கணம் அரசனிடம் பரிசில் பெற்றவர் இனி பரிசில் பெறப்போகிறவனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த செய்யுளாகும். யாழ் வாசிக்கிற சிறுபாணர்களுக்கும், பெரும்பாணார்களுக்கும் செய்யுள் அமைந்ததை காண்கிறோம். ஆனால் திருமுருகு மட்டும், முருகனிடம் வீடுபேறு அடைந்த புலவர், இனி வீடுபேறு அடையப்போகும் புலவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. வீடுபேறு பார்ப்பனியத்தின் மோசடி. திருமுருகைத்தவிர சிறுபாணாற்றுப்படையிலும் பெரும்பாணாற்றூப்படையிலும் எட்டுத்தொகையிலும் வீடுபேறு எத்துணை சதவீதம் இருக்கிறது? //
பாணிரண்டு என்று கூறப்படும் சிறு,பெரும்பாணாற்றுப்படை பாடல்களில், பாணர்கள் பாடினால் மன்னர்கள் பரிசில் கொடுப்பார்கள் என்றுதான் காட்டமுடியுமே தவிர வீடுபேற்றைத் தருவார்கள் என்றா காட்டமுடியும்..?! இவற்றில் ஏன் வீடுபேற்றைத் தேடுகிறீர்கள்..?!
// சாமியாடுதல், வெறியாட்டல், தமிழ் தொல்குடிகளின் மரபு என்று நிறுவுகிற பொழுது சங்ககால முருகவழிபாடு சாங்கியத் தத்துவத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். //
சாங்கியத்தில் ஏது சாமியாடுதலும், வெறியாட்டுதலும்..?!
// வைதீக மரபு என்ற நைச்சியம் இல்லாமல் வீடுபேறு சாத்தியமல்ல என்கிற பொழுது முருகன் வீடுபேறு அளிக்கிறான் என்று சொல்கிற திருமுருகு, பார்ப்பனிய பித்தலாட்டமின்றி வேறில்லை.//
வீடுபேறு என்பது வைதீக மரபு மட்டுமல்ல என்று சமணத்தையும் சரியாக காட்டுகிறீர்கள்.. சமணம், வைதிகம் இவற்றில் மட்டும்தான் வீடுபேறு சாத்தியமா..?! தமிழர்களுக்கு வீடுபேறு சிந்தனை எட்டாத சிந்தனையா..?! சூரனும் சாகவில்லை, முருகனால் தண்டிக்கப்ப்பட்டு, ஆட்கொள்ளப்பட்டு மயிலானான் என்றால் முருகனின் அடியவர்கள் அவன் பதம் சேர விரும்புவதை நிறைவேற்றிக்கொள்ள ஏன் வைதீக மரபு வந்தாக வேண்டும்..?! முருகன் அருளைப் பெற ஆற்றுப்படுத்தினால் அது எப்படி பார்ப்பனியப் பித்தலாட்டம் என்று புரியவில்லை..
// சமணமும் வீடுபேறைப்பற்றிப் பேசுவதாக அறிகிறோம். சிலம்பும், பெருங்கதையும், திருக்குறளும், மலர்மிசை என்று அருகனையும், பிறவிப்பெருங்கடல் என்று வீடுபேற்றையும் குறிக்கின்றன.
ஆனால் திருமுருகு வைதீக மரபை பார்ப்பனிய சனாதனத்தைப் புராணப்புளுகளை உள்வாங்குவதன் மூலம்தெளிவாகக் காட்டுகிறது. வீடுபேறைத் தாங்கி பல புரணாங்கள் புகுத்தப்படுகின்றன. நீங்கள் சொல்வதைப்போல முருகன் சூரனை அழிப்பதற்காகத்தான் அவதாரமே எடுக்கிறான் என்று ஒரு சேர புராணமும், திருப்பரங்குன்ற தலபுராணமும் இயம்புகின்றன. ஆனால் இன்னபிற சங்க இலக்கியங்கள் தன் உணர்ச்சிப்பாடலாக முருகனை வெறியாட்டுதலுடன் இணப்பதாக அறிகிறோம். பார்ப்பனியம் புகுந்தபிறகு உருவாக்கப்பட்ட செட்டப்பின்றி சூரனை வதம் செய்வது சாத்தியமல்ல.//
”முந்துசூர் தடிந்த முருகனம்பி யென்பா
ரைந்துருவ வம்பி னநங்கனென் றயர்வார்
கந்துகன் வளர்த்த சிங்கங்காண்மி னென்பார்
சிந்தையிற் களிப்பார் சேணெடிய கண்ணார். 2548
(இ – ள்.) சேண் நெடிய கண்ணார் – மிகவும் நீண்ட கண்ணினரான மகளிர், நம்பி முந்து சூர் தடிந்த முருகன் என்பார் – இந் நம்பி முன்னர்ச் சூரனை வீழ்த்திய முருகன் என்பார்; ஐந்து உருவ அம்பின் அநங்கன் என்று அயர்வார் – ஐந்து அழகிய அம்புகளையுடைய காமனே இவன் என்று வருந்துவார்; கந்துகன் வளர்த்த சிங்கம் காண்மின் என்பார் – கந்துக்கடன் வளர்த்த சிங்கம் போன்றவனைக் காணுங்கோள் என்பார்; சிந்தையில் களிப்பார் – மன மகிழ்வு கொள்வார். “
– முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி
”சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்,
ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல்-அன்றே-
பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு நாள்,
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே. ”
– குன்றக்குரவை, வஞ்சிக்காண்டம், சிலப்பதிகாரம்
சமணர்களான திருத்தக்கத்தேவரும், இளங்கோவடிகளும் சீவக சிந்தாமணியிலும், சிலப்பதிகாரத்திலும் முருகனை சூரனை தடிந்தவனாகவே குறிப்பாகப் பாடியிருக்கும் போது தென்றலுக்கு மட்டும் சூரனை தண்டிக்க பார்ப்பனியம் வேண்டியிருப்பது ஏனோ..?!
——-
// சமணக்குறிப்புகளை தென்பரங்குன்றத்துடன் பேசுவோம். தென்பரங்குன்றத்தின் தமிழ்பிராமி எழுத்துக்களுக்கும் சமணர்களின் கற்படுக்கையும் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஆனால் திருமுருகு சங்கபாடல் என்று சொல்கிற பொழுது அது நிலைத்தப்படுகிற காலகட்டம் கி.பி 250. கடைச்சங்க இலக்கியம் முழுமையுமே கிறித்து பிறந்த இரு நூற்றாண்டுகளில் தான் வரையறுக்கப்படுகின்றன.
திருப்பரங்குன்றத்தின் புடைப்புச் சிற்பங்கள் சமணர் காலத்தவை. அதாவது சிற்பங்களுக்கு சாமுத்ரிகா இலட்சணம் கிடையாது. ஆனால் தமிழகத்தின் குடைவரைக்கோயில்களில் இந்துப்பார்ப்பனியம் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிற்பாடுதான் (மகேந்திரவர்மன் காலகட்டத்திலிருந்து என்கிறார் மயிலை சீனி; மேலும் பிள்ளையார்பட்டி குடைவரைக்கோயில் சமணர் காலத்தவை என்று சுட்டத்தவறவில்லை). சிலைகளைக் கவனித்தால் பார்ப்பனிய பித்தலாட்டம் புலப்படும். //
குடைவரை கோயில்களை சமணர்கள் மட்டும்தான் அமைக்க வேண்டுமா..?! முக்குடையுடன் கூடிய அருகரோ, பாம்புக்குடை கொண்ட பார்சுவநாதரோ, எதுவும் இல்லாமல் இரு கைககளையும் தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கும் பாகுபலியோ முருகன் சன்னிதியிலா தென்படுகிறார்கள்..?! இல்லை அந்தக் குன்றிலிருக்கும் சிக்கந்தர் தர்க்காவில் தென்படுகிறார்களோ..?!
// சிரவணன் தான் சரவணன் என்றால் சிரவணன் கையில் வேல் எப்படி என்ற கேள்வி நியாயமானது. சிரவணன் கடவுள் என்ற அடிப்படையில் அணுகியவிதம் சரியல்ல என்பதை ஏற்கிறேன்; ஏனெனில் மொழி என்பதன் உச்சரிப்பில் இதை அணுகியிருந்தால் சரவணன் என்பது முழுக்கவும் மோசடி என்பதை நோக்கி நகர்ந்திருக்க முடியும். காரணம், சரவணன் என்ற வார்த்தை வைதீகச்சூழலில் புழங்குவதற்கு முன்பாகவே களப்பிரர்கால வரலாற்றில் கி,பி 250 லிருந்து- கி.பி 700 முடிய சிரவணன் என்ற வார்த்தை பரவலாக இருக்கிறது. சரவண-சிரவணனைப் பற்றி பெரியார்தள கட்டுரை பாலி-சமஸ்கிருத அடிப்படையில் இருப்பதைக் காண்க. (http://www.unmaionline.com/new/archives/96-unmaionline/unmai-2014/%E0%AE%AE%E0%AF%87-01-15/2005-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html) களப்பிரர் காலத்திற்கு பிந்தைய பகுதியில் தான் தமிழ் இராமாயணமும், பார்ப்பனிய பாசுபத சைவமும் உட்புகுகின்றன. இதற்குபிந்தைய ஏற்பாடுதன் சரவணப் பிரச்சாரம்! //
சரவணன், சுப்ரமணிய சுவாமி போன்ற வடமொழிப் பெயர்களை காட்டி முருகன் பார்ப்பனியன் என்று நிறுவமுடியாது, முருகன் சூரனை தண்டித்தவன் என்ற தொன்மத்தையும் மாற்றமுடியாது.. சங்கம் மருவிய காலத்து சமண இலக்கியங்களும் அதைக் கூறுவதை மேலே காட்டியிருக்கிறேன்..
// மேலும் சரவணன் என்று மட்டுமில்லை முருகன் கையிலும் வேல் எப்படி வந்தது? என்று பல விவாதம் இணையத்தில் கிடைக்கின்றன. எல்லா முருகன் கோயிலும் வேல், முருகன் சிலை மீது சாத்திவைக்கப்படுகிறது. ஆனால் பழநி முருகன் கையில் தண்டம் இருக்கிறது. கையில் கம்பு உள்ள முருகன் எதைக் குறிக்கிறது? வேல் சாத்தப்படுவது எதைக் குறிக்கிறது?
இலக்கியங்களில் வேலன் முருகன் சார்பாக வேல் எடுத்து ஆடுகிற பூசாரி என்று சில குறிப்புகள் கிடைக்கின்றன. தலைவி முருகனால் ஆட்கொள்ளப்படுகிற பொழுது பூசாரி தான் வெறியாட்டுதலில் ஈடுபடுகிறான். அவன் வேலன் என்று அழைக்கப்படுகிறான். சேவற்கொடி ஏற்றப்பட்டு முருகனுக்கு பூசை நடைபெறுகிறது. அப்படியானால் தண்டம் மற்றும் வேலின் மூலம் என்ன? இதில் வேல் உள்ளவன் காலத்தால் முந்தியவனா? இல்லை கம்பு உள்ள முருகன் காலத்தால் முந்தியவனா? //
கம்பின் உச்சியில் வேல்முனையை செருகினால் அது வேல்கம்பு.. இல்லாவிட்டால் அது வெறும் கம்பு.. பழனி ஆண்டவன் துறவு கோலத்தில் நிற்பவன், வேல் கம்பை விட வெறும் கம்பு பொருத்தமானது.. சிரவணராயிருந்தால் அதுவும் தேவையிருக்காது.. மலைக்கு கீழ் இருக்கும் ஆவினன்குடி முருகன் மயில்மேல் அமர்ந்து அபய ஹஸ்த முத்திரையுடன் இருக்கிறான்.. வேலை சாய்த்துதான் வைக்க முடியும்..
// இவ்வளவு சிக்கல் முருகனுக்கே இருக்கிறபொழுது சுப்புணி என்பதன் சூட்சுமம் என்ன? //
சிக்கல் முருகனுக்கோ, ’சுப்புணிக்கோ’ இல்லை..
\\ சூரனை தண்டிக்கும் குறிப்புகள் பார்ப்பனியம் புகுந்ததாக நீங்கள் கூறிய காலகட்டத்துக்கு முந்திய சங்கப்பாடல்களில் இருக்கும் போது இந்த தலைகீழ் பார்வை ஏன்..?! திருமுருகாற்றுபடை பாடிய மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் எந்த காலத்தவர்..?! \\
திருமுருகு கடைச்சங்க காலத்தில் வராது. தொல்காப்பிய இலக்கணத்தைப் பார்க்கவும். திருமுருகு, பரிபாடல், சீவக சிந்தாமணி எல்லாம் பிற்காலத்தியவை (முருகனின் பார்ப்பனியக் காலக்கோடு குறித்து நான் ஒரு கட்டுரையை சுட்டியிருந்தேன்; படிக்கிறேன் என்று சொன்னவர் இன்னும் இந்தப்பக்கம் திரும்பவில்லை!). நக்கீரர் காலம் குறித்த விவாதம் மயிலை சீனியின் புத்தகத்தில் இருக்கிறது! (களப்பிரர் கால தமிழகம்); மொத்தம் நான்கு நக்கீரரா? (சீனிவாச அய்யங்கார்), இரண்டு நக்கீரரா? (மயிலை சீனி), ஒரு நக்கீரரா? (இறையனார் கலம்பக பொழிப்புரைப்படி) என்பதை வாசித்து ஒரு முடிவிற்கு வரவும்.
\\ போகிற போக்கில் உவேசாவையும் விட்டுவைக்கவில்லை..\\
இராம் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். நச்சினார்க்கினியர் உரை, பழம்பெரும்பாடல் என்று இரு உதாரணங்களைச் சுட்டியிருக்கிறார். தொல்காப்பிய இலக்கணத்தை மறுமொழியாகக் கொடுத்திருக்கிறேன். இருவர் மனுவிற்கும் தனித்தனியாக பதில் எழுதுவது கடினம். பதிப்பித்தவரை பிராதில் சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை விவாதித்து தீர்க்க வேண்டியதுதான்.
\\ பாணிரண்டு என்று கூறப்படும் சிறு,பெரும்பாணாற்றுப்படை பாடல்களில், பாணர்கள் பாடினால் மன்னர்கள் பரிசில் கொடுப்பார்கள் என்றுதான் காட்டமுடியுமே தவிர வீடுபேற்றைத் தருவார்கள் என்றா காட்டமுடியும்..?! இவற்றில் ஏன் வீடுபேற்றைத் தேடுகிறீர்கள்..?!\\
சரியாகச் சொல்லியுள்ளீர்கள்! பரிசு கொடுப்பவனும் சூத்திரன்; பரிசு பெறுபவனும் சூத்திரன் என்கிற பொழுது வீடுபேற்றை அங்குதேட இயலாது என்பது இயல்புதான்!
\\ சாங்கியத்தில் ஏது சாமியாடுதலும், வெறியாட்டுதலும்..?!\\
சாமியாடுதலும் வெறியாட்டுதலும் கடவுள் இருப்பை உணர்த்துவதற்காக அல்ல. அப்படியானால் சாங்கியம் தானே சரி! இதைவிடுத்து ஆதிசங்கரர் அவிழ்த்து விடுகிற முருக-வழிபாடான கவுமாரத்திற்கும் தலைவன்-தலைவி தன் உணர்ச்சிநிலைக்கும் என்ன சம்பந்தம்?
// திருமுருகு கடைச்சங்க காலத்தில் வராது. தொல்காப்பிய இலக்கணத்தைப் பார்க்கவும். //
தொல்காப்பிய இலக்கணத்தை நெடுநல் வாடையையும், திருமுருகாற்றுப்படையையும் எழுதிய மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஏன் பார்க்கவில்லை என்று அவரிடம்தான் கேட்கவேண்டும்..
//(முருகனின் பார்ப்பனியக் காலக்கோடு குறித்து நான் ஒரு கட்டுரையை சுட்டியிருந்தேன்; படிக்கிறேன் என்று சொன்னவர் இன்னும் இந்தப்பக்கம் திரும்பவில்லை!). நக்கீரர் காலம் குறித்த விவாதம் மயிலை சீனியின் புத்தகத்தில் இருக்கிறது! (களப்பிரர் கால தமிழகம்); மொத்தம் நான்கு நக்கீரரா? (சீனிவாச அய்யங்கார்), இரண்டு நக்கீரரா? (மயிலை சீனி), ஒரு நக்கீரரா? (இறையனார் கலம்பக பொழிப்புரைப்படி) என்பதை வாசித்து ஒரு முடிவிற்கு வரவும்.//
11-ம் திருமுறையில் திருமுருகு தவிர பிற 9 பதிகங்களையும் பாடியவர் தேவார கால நக்கீர நாயனார்.. நெடுநல் வாடையையும், திருமுருகாற்றுப்படையையும் பாடிய மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் எந்த காலத்தவர் என்று நேரடியாக தெளிவாக கூறவும்..
அம்பி தன்னை அறிவாளியாக நினைத்துக்கொண்டு லாஜிக் இல்லாம பேசுராரு !
இந் நூலை [திருமுருகாற்றுப்படை] முதன்முதலில் 1834இல் சரவணப்பெருமாலையர் பக்திப் பாசுரமாகப் பதிப்பித்தார்.1851இல் ஆறுமுக நாவலரும் பதிப்பாக கொண்டு வந்தார்.ஆனால் சங்க இலக்கியம் என்னும் அடையாளத்தைக் கொண்டு பதிப்பிக்கப்படவில்லை. டாக்டர் உ. வே. சாமிநாதர் அவர்களின் 1889ஆம் ஆண்டு பத்துபாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை இடம் பெற்றது.” இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.
//தொல்காப்பிய இலக்கணத்தை நெடுநல் வாடையையும், திருமுருகாற்றுப்படையையும் எழுதிய மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஏன் பார்க்கவில்லை என்று அவரிடம்தான் கேட்கவேண்டும்..//
திருமுருகாற்றுபடையை எழுதியவர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் என்ற சங்க புலவர்.. அதை பதிப்பித்தவர்களின் கருத்துக்களை வைத்து அது சங்க இலக்கியமல்ல என்று வாதிடுவது அறிவுடமை ஆகாது..
// சாமியாடுதலும் வெறியாட்டுதலும் கடவுள் இருப்பை உணர்த்துவதற்காக அல்ல. அப்படியானால் சாங்கியம் தானே சரி!//
அப்படியா..?!!
// இதைவிடுத்து ஆதிசங்கரர் அவிழ்த்து விடுகிற முருக-வழிபாடான கவுமாரத்திற்கும் தலைவன்-தலைவி தன் உணர்ச்சிநிலைக்கும் என்ன சம்பந்தம்? //
சங்கரரையும் கவுமாரத்தையும் சங்க இலக்கியங்களுக்குள் ஏன் இழுத்துக் கொண்டுவருகிறீர்கள்.. வையாபுரிப்பிள்ளையை தெரியாத்தனமாக இழுத்துக்கொண்டுவந்து முழித்தது போதாதா..?! தலைவன்- தலைவி தன் உணர்ச்சி நிலைமைகள் தலைவியின் தாய்மார்களை எவ்வாறு கவலைக்குள்ளாக்குகின்றன என தலைவியின் வெறியாட்டுதல் குறித்து படித்தால் புரிந்து கொள்ளலாம்..
\\ வீடுபேறு என்பது வைதீக மரபு மட்டுமல்ல என்று சமணத்தையும் சரியாக காட்டுகிறீர்கள்.. சமணம், வைதிகம் இவற்றில் மட்டும்தான் வீடுபேறு சாத்தியமா..?! தமிழர்களுக்கு வீடுபேறு சிந்தனை எட்டாத சிந்தனையா..?!\\
தொல்காப்பியம் சுட்டுவதெல்லாம் அறம், பொருள், இன்பம் மட்டுமே. இதில் பேரின்பம் வீடுபேறாக சுட்டப்படுவது வைதிக மரபுகள் மற்றும் பவுத்த சமணத்தின் தாக்கத்தால் மட்டுமே. பெளத்தமும் சமணமும் பெண்களை இரண்டாம் நிலையாக கருதியாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனால் துறவு நிலை மோட்சம் பெற வழிகள். ஆனால் இந்துப்பார்ப்பனியமோ வீடுபேற்றை பார்ப்பனியத்தின் கீழ் இருத்துகிறது. மோட்சம் அடைவதற்கு அவதாரம் எடுக்கிற பித்தலாட்டம் பாரதத்தில் இருந்தே தொடங்கிவிடுகிறது!
\\ சூரனும் சாகவில்லை, முருகனால் தண்டிக்கப்ப்பட்டு, ஆட்கொள்ளப்பட்டு மயிலானான் என்றால் முருகனின் அடியவர்கள் அவன் பதம் சேர விரும்புவதை நிறைவேற்றிக்கொள்ள ஏன் வைதீக மரபு வந்தாக வேண்டும்..?! முருகன் அருளைப் பெற ஆற்றுப்படுத்தினால் அது எப்படி பார்ப்பனியப் பித்தலாட்டம் என்று புரியவில்லை.\\
ஆட்கொள்ளப்படுதல், மாபலியின் மண்டையை நசுக்குதல் போன்ற பித்தலாட்டங்கள் எல்லாம் பார்ப்பானைத்தவிர, இந்திய சமூகத்தின் எந்த தொல்குடி சமூகத்திடமும் கிடையாது. சூரன் மயிலாகிறான் என்பதெல்லாம் சகிக்கவொண்ணாதவை. ஆரம்பத்தில் உங்கள் விவாதத்தில் சூர், அணங்கு என்று பேயைக் காட்டினீர்கள். ஆனால் இப்பொழுதோ சூரன் மயிலாகிறான் என்று சொல்கிறீர்கள்! இதைத்தான் அண்டப்புளுகு என்கிறோம்.
// தொல்காப்பியம் சுட்டுவதெல்லாம் அறம், பொருள், இன்பம் மட்டுமே. இதில் பேரின்பம் வீடுபேறாக சுட்டப்படுவது வைதிக மரபுகள் மற்றும் பவுத்த சமணத்தின் தாக்கத்தால் மட்டுமே.//
இதே தொல்காப்பியம்தான் இந்திரனும், வருணனும் மருத, நெய்தல் நில தெய்வங்கள் என்று கூறுகிறது.. அதெல்லாம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கிவிட்டு இப்போது தொல்காப்பியம் கூறுவதால் தமிழன் வீடுபேற்றைப் பற்றி சிந்திக்ககூடாது என்று கண்டிசன் போடுவது கிறுக்குத்தனம்..
// பெளத்தமும் சமணமும் பெண்களை இரண்டாம் நிலையாக கருதியாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனால் துறவு நிலை மோட்சம் பெற வழிகள். //
அந்தக் குறிப்புகளை எங்கே படித்தீர்கள்.. பவுத்தமும் சமணமும் துறவுதான் மோட்சத்துக்கு வழி என்று அடம் பிடிக்கவில்லை.. இல்லறத்திலும் மனத்துறவுடன் மோட்சம் பெறலாம் என்றும் கூறுகின்றன.. துறவிகளாவதால் ஊர் ஊராய் திரிந்து சமூக, சமயத் தொண்டு செய்யும் சுதந்திரம் இருக்கும் என்பது ஒரு கூடுதல் வசதி..
// ஆனால் இந்துப்பார்ப்பனியமோ வீடுபேற்றை பார்ப்பனியத்தின் கீழ் இருத்துகிறது. மோட்சம் அடைவதற்கு அவதாரம் எடுக்கிற பித்தலாட்டம் பாரதத்தில் இருந்தே தொடங்கிவிடுகிறது! //
தமிழன் கடவுள் அருளை மறுமையிலும் பெறுவது குறித்து சுயமாக சிந்திக்கத் தெரியாதவன் என்கிறீர்கள்..
// ஆட்கொள்ளப்படுதல், மாபலியின் மண்டையை நசுக்குதல் போன்ற பித்தலாட்டங்கள் எல்லாம் பார்ப்பானைத்தவிர, இந்திய சமூகத்தின் எந்த தொல்குடி சமூகத்திடமும் கிடையாது.//
வெறியாட்டுதலும், சாமியாடுதலும் கூட ஆட்கொள்ளப்படுவதன் ஒரு வகைதான்..
// சூரன் மயிலாகிறான் என்பதெல்லாம் சகிக்கவொண்ணாதவை. ஆரம்பத்தில் உங்கள் விவாதத்தில் சூர், அணங்கு என்று பேயைக் காட்டினீர்கள். ஆனால் இப்பொழுதோ சூரன் மயிலாகிறான் என்று சொல்கிறீர்கள்! இதைத்தான் அண்டப்புளுகு என்கிறோம்.//
உங்களுக்கு சகிக்கமுடியவில்லை என்றால் நான் என்ன செய்யமுடியும்.. சூர் மா தடிந்து என்று சங்கப்பாடல்கள் இருந்து தொலைக்கின்றனவே.. சூர், அணங்கு என்று பேயை உங்களுக்கு வேறு யாராவது காட்டியிருப்பார்கள்.. முருகன் கோயிலுக்குப் போய் மயிலிடம், ஏன் தாத்தா மயிலான என்று கேளுங்கள்.. தாத்தாவா எவன்டா தாத்தா, நான் சூரன்டா என்று அகவி உச்சி மண்டையில் நச்சென்று கொத்தி வைக்கும்.. பிறகு எல்லாம் தெளிந்துவிடும்..
\\ குடைவரை கோயில்களை சமணர்கள் மட்டும்தான் அமைக்க வேண்டுமா..?! முக்குடையுடன் கூடிய அருகரோ, பாம்புக்குடை கொண்ட பார்சுவநாதரோ, எதுவும் இல்லாமல் இரு கைககளையும் தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கும் பாகுபலியோ முருகன் சன்னிதியிலா தென்படுகிறார்கள்..?! இல்லை அந்தக் குன்றிலிருக்கும் சிக்கந்தர் தர்க்காவில் தென்படுகிறார்களோ..?!\\
திருப்பரங்குன்றத்தில் இதுதான் கதை. அருகர் மட்டுமில்லை. அங்கெல்லாம் அசோக மரம் (பின்னி) இருக்கிறது. சைவக் கோயில்களில் அரச மரத்திற்கு என்ன சம்பந்தம்? சிலை மட்டுமில்லை மரம் கூட பார்ப்பனியத்தைக் காட்டிக்கொடுக்கும். எடுத்துக்காட்டாக தென்பரங்குன்ற உமையாண்டவர் சன்னதி, சமணக் கோயில் என்பது நிறுவப்பட்டிருக்கிறது (புலவர். சாந்தலிங்கம், திருப்பரங்குன்றம், கீற்று). மேலும் தொ.பரமசிவன் ஒரு பட்டியல்கொடுப்பார்; வெள்ளைச் சேலை அணிந்த சமணர்களின் வாக்யதேவி, சரஸ்வதியாக அறியப்படுகிறாள் (பார்ப்பனியம் தந்தை-மகள் புணர்ந்த கதையோடு சரஸ்வதியை பிறக்க வைத்தது!). இசக்கி மற்றும் பகவதி அம்மனும் சமண எச்சங்கள்; அய்யனார் சமணதெய்வமாக சிறுதெய்வ வழிபாட்டில் நிலைநிறுத்தப்படுகிறார். இப்படி பார்ப்பனிய துரோகங்களை நிறையச் சொல்லலாம்.
\\ சமணர்களான திருத்தக்கத்தேவரும், இளங்கோவடிகளும் சீவக சிந்தாமணியிலும், சிலப்பதிகாரத்திலும் முருகனை சூரனை தடிந்தவனாகவே குறிப்பாகப் பாடியிருக்கும் போது தென்றலுக்கு மட்டும் சூரனை தண்டிக்க பார்ப்பனியம் வேண்டியிருப்பது ஏனோ..?!\\
சூரனைத் தண்டிக்க பார்ப்பனியம் தான் தேவை. ஏனெனில் சூர் தடிந்த முருக என்ற சொற்றொடரை இரு தொடர் நிலைச் செய்யுள்களும் முருகாட்டுதலோடு, வெறியாட்டலோடு தொடர்புபடுத்தவில்லை. மாறாக சூர் தடிந்த முருகன் நிறுவனமயமாக்கப்படுகிறான்! பார்ப்பனியம் நிறுவனமயமாக்கப்படுதல் என்பதற்கு சமணமும் விதிவிலக்கல்ல. சான்றாக, திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி களப்பிரர் கால இறுதிப்பகுதியான கி,பி. ஆறு மற்றும் ஏழில் எழுதப்படுகிறது. பாசுபதம் தமிழ்நாட்டில் கி,பி. ஐந்திலேயே புகுந்துவிடுகிறது. குப்தர் கால (கி.பி 200 லிருந்து கி,பி 500 முடிய) மகாபாரதம், குமார சம்பவத்தை விரிவாக பேசுகிறது. மகாபாரத புராண புளுகல்கள் உள்ளே நுழைந்ததாக வைத்துக்கொண்டால் நமக்கு மிஞ்சுவதற்கு ஒரு இலக்கியமும் இருக்காது. சிலப்பதிகார தொடர்நிலைச் செய்யுளில் வஞ்சிக்காண்டம் குன்றக்குரவையில் “செந்தில்” எல்லாம் வருகிறான் என்றால் குழந்தையிடம் கூட பார்ப்பனியம் பிடுங்கித் திங்க தயங்காது என்றுதான் தெரிகிறது. இளங்கோவடிகள் சமணராகப் பிறந்து சைவராக மாறியிருக்கக்கூடும் என்று வெள்ளந்தியாக தமிழ்பல்கலை நூல்கள் எழுதுகிற பொழுது கோவடி காவடி எடுத்ததற்கு பார்ப்பனியத்தின் நைச்சியம் தான் காரணம் என்பது எமது துணிபு!
// திருப்பரங்குன்றத்தில் இதுதான் கதை. அருகர் மட்டுமில்லை. அங்கெல்லாம் அசோக மரம் (பின்னி) இருக்கிறது. சைவக் கோயில்களில் அரச மரத்திற்கு என்ன சம்பந்தம்? சிலை மட்டுமில்லை மரம் கூட பார்ப்பனியத்தைக் காட்டிக்கொடுக்கும். //
அசோக, அரச மரங்களை சமணர்கள்தான் உருவாக்கிக் கொண்டிருந்தார்களா..?!
// சூரனைத் தண்டிக்க பார்ப்பனியம் தான் தேவை. ஏனெனில் சூர் தடிந்த முருக என்ற சொற்றொடரை இரு தொடர் நிலைச் செய்யுள்களும் முருகாட்டுதலோடு, வெறியாட்டலோடு தொடர்புபடுத்தவில்லை. மாறாக சூர் தடிந்த முருகன் நிறுவனமயமாக்கப்படுகிறான்! //
முழு முருக வழிபாட்டையும் பாடினால்தான் அவை செல்லுமாக்கும்..?!
// பார்ப்பனியம் நிறுவனமயமாக்கப்படுதல் என்பதற்கு சமணமும் விதிவிலக்கல்ல. சான்றாக, திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி களப்பிரர் கால இறுதிப்பகுதியான கி,பி. ஆறு மற்றும் ஏழில் எழுதப்படுகிறது. //
சமணம் செழித்தோங்கிய அந்த கால கட்டத்தில், சைவ-வைணவ சமயங்களோடு மோதிக்கொண்டிருந்த காலத்தில் சமணம் பார்ப்பனியமயமாக்கப்பட்டது என்று உளறுவதற்கு துணிவு வேண்டும்.. அல்லது திருத்தக்கத்தேவரும், இளங்கோவடிகளும் உங்களை கைவிட்டுவிட்டார்கள் என்ற ஆதங்கத்தில் புலம்புகிறீர்கள்..
// குப்தர் கால (கி.பி 200 லிருந்து கி,பி 500 முடிய) மகாபாரதம், குமார சம்பவத்தை விரிவாக பேசுகிறது. //
உங்களுக்கு இது வரை கைகொடுத்து வந்த சங்ககால பெரும்பாணாற்றுப்படை மகாபாரதத்தைப் பற்றியே பேசுகிறதே..:
ஈர் ஐம்பதின்மரும், பொருது, களத்து அவிய, 415
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஆராச் செருவின் ஐவர் போல,
முருகன் வடக்கேயும், பாரதம் தெற்கேயும் சுற்றுலா போய் வந்து கொண்டிருந்ததை அறிந்து விரக்தி அடைந்து புலம்பாதிருங்கள்..
// சிலப்பதிகார தொடர்நிலைச் செய்யுளில் வஞ்சிக்காண்டம் குன்றக்குரவையில் “செந்தில்” எல்லாம் வருகிறான் என்றால் குழந்தையிடம் கூட பார்ப்பனியம் பிடுங்கித் திங்க தயங்காது என்றுதான் தெரிகிறது. //
கவுண்டமணி போல நீங்களும் பெரிய அறிவாளிண்ணே..
// இளங்கோவடிகள் சமணராகப் பிறந்து சைவராக மாறியிருக்கக்கூடும் என்று வெள்ளந்தியாக தமிழ்பல்கலை நூல்கள் எழுதுகிற பொழுது கோவடி காவடி எடுத்ததற்கு பார்ப்பனியத்தின் நைச்சியம் தான் காரணம் என்பது எமது துணிபு! //
இளங்கோவடிகளின் மீதும் வசை பட ஆரம்பித்து விட்டீர்.. மயில்தான் உங்களுக்கு தெளிவையும் அமைதியையும் கொடுக்க வேண்டும்..
\\ சரவணன், சுப்ரமணிய சுவாமி போன்ற வடமொழிப் பெயர்களை காட்டி முருகன் பார்ப்பனியன் என்று நிறுவமுடியாது, முருகன் சூரனை தண்டித்தவன் என்ற தொன்மத்தையும் மாற்றமுடியாது.. சங்கம் மருவிய காலத்து சமண இலக்கியங்களும் அதைக் கூறுவதை மேலே காட்டியிருக்கிறேன்.\\
தாங்கள் தொன்மம் என்று சொல்வதை ஆங்கிலத்தில் Myth என்று அழைத்துப்பாருங்களேன். பார்ப்பனிய அரசியல் புலப்படும்!
\\கம்பின் உச்சியில் வேல்முனையை செருகினால் அது வேல்கம்பு.. இல்லாவிட்டால் அது வெறும் கம்பு.. பழனி ஆண்டவன் துறவு கோலத்தில் நிற்பவன், வேல் கம்பை விட வெறும் கம்பு பொருத்தமானது..\\
துறவிற்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? பேரின்பக் காதலைப் பேசுவதற்குத்தான் இறையனார் கலம்பகமே படைக்கப்பட்டது. தெய்வங்களின் நாயக-நாயகி பாவம், மனிதர்கள் தெய்வங்கள் மீது கொள்கிற காதல் எல்லாம் பார்ப்பனியத்தின் வேலை. இதில் முருகனின் துறவு நிலைக்கு என்ன காரணம்?
\\சிரவணராயிருந்தால் அதுவும் தேவையிருக்காது.. மலைக்கு கீழ் இருக்கும் ஆவினன்குடி முருகன் மயில்மேல் அமர்ந்து அபய ஹஸ்த முத்திரையுடன் இருக்கிறான்.. வேலை சாய்த்துதான் வைக்க முடியும்..\\
அபய ஹஸ்த முத்திரை! இப்படி ஏதாவது அல்டா புல்டா வாசகங்களை எடுத்துவிட்டால் தானே பார்ப்பனியத்தின் கொடூரத்தை புரிந்துகொள்ள முடியும். உப தகவலாக, திருமுருகு அபயஹஸ்த முத்திரை குத்தப்பட்ட திரு ஆவினன்குடியைத்தான் பேசுகிறதாமே!
// தாங்கள் தொன்மம் என்று சொல்வதை ஆங்கிலத்தில் Myth என்று அழைத்துப்பாருங்களேன். பார்ப்பனிய அரசியல் புலப்படும்! //
சூரன் என் பாட்டன் என்று சொல்வது மட்டும் அறிவியல் உண்மையாக்கும்..?!
// துறவிற்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? பேரின்பக் காதலைப் பேசுவதற்குத்தான் இறையனார் கலம்பகமே படைக்கப்பட்டது. தெய்வங்களின் நாயக-நாயகி பாவம், மனிதர்கள் தெய்வங்கள் மீது கொள்கிற காதல் எல்லாம் பார்ப்பனியத்தின் வேலை. இதில் முருகனின் துறவு நிலைக்கு என்ன காரணம்? //
போகர் என்ற சிவயோகியிடம் கேட்டால் விவரமாக சொல்லக்கூடும்.. போகர் சமாதியும் அங்கேதான் இருக்கிறது.. சூர், அணங்கு போன்ற பேய்களை கண்ட தங்களுக்கு போகர் காட்சி தராமலா போய்விடுவார்..!
// அபய ஹஸ்த முத்திரை! இப்படி ஏதாவது அல்டா புல்டா வாசகங்களை எடுத்துவிட்டால் தானே பார்ப்பனியத்தின் கொடூரத்தை புரிந்துகொள்ள முடியும். உப தகவலாக, திருமுருகு அபயஹஸ்த முத்திரை குத்தப்பட்ட திரு ஆவினன்குடியைத்தான் பேசுகிறதாமே!//
தமிழில் சொல்வதென்றால் “யாமிருக்க பயமேன்” என்று ஆசி வழங்குவதுதான் அந்த முத்திரை.. திரு ஆவினன்குடி ஒரு அறுபடை வீடேயல்ல என்று கூற வருகிறீர்களோ..?!
சுப்ரமணிய சாமி வந்துவிட்டதால் தமிழ்க்குடி மரபான வெறியாட்டுதல் நின்றுவிட்டதா என்ற அம்பியின் கேள்வி இப்படி போகிறது;
\\ சுப்ரமணிய சுவாமி என்ற பெயர் பின்னாளில் வந்ததால் முருகனுக்கு முருகனே சம்பந்தமில்லாதவன் என்று எப்படி கூறமுடியும்.. வெறியாட்டுக்கு இணையான அலகு குத்துதல், தீ மிதித்தல் என்றும் வெற்றி வேல் முருகா என விளித்துக் கொண்டும் பரவசத்தில் செல்லும் அடியார்களை சுப்ரமணிய சுவாமியாகப்பட்டவர் தடுத்து நிறுத்திவிட்டாரா..?!\\
வினவின் மற்றொரு பதிவில் பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் கூட்டுச் சேர்ந்து மக்களைச் சூறையாடுகின்றன என்கிற கேள்வியை விளக்க இயலுமா என்று கேட்டார் அம்பி. கீழ்க்கண்டவாறு விளக்கலாம்.
அமெரிக்கா ஏகாதிபத்தியம் நம் ஆற்றுத்தண்ணீரில் சர்க்கரை சேர்த்து கலரை மாற்றி நம்மிடமே கோக்கு என்று விற்கிற பொழுது கம்யுனிஸ்டுகள் ஏகாதிபத்தியம், மறுகாலனியாதிக்கம் என்று மக்களத் திரட்டிப்போராடுகிறார்கள். ஆனாலும் ஆளும் வர்க்க அல்லக்கைகளும் அம்பிகளும் (நீங்கள் அல்லர்; நீங்கள் அடுத்த பாராவில் வருகிறீர்கள்) காசு இருக்கவன் வாங்கி குடிக்கவேண்டியதுதானே? அவன் என்ன உன்னைத் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்றா சொன்னான்? என்று கேட்கிறார்கள்.
ஏகாதிபத்தியம் மக்களை இப்படிச் சுரண்டுகிற பொழுது, பார்ப்பனியம் முருகனை சுப்ரமணியனாக்கி காசு இருக்கவன் கோக்குகுடி, கடவுள் நம்பிக்கை இருக்கவன் சுப்ரமணியக் கும்பிடு என்று சொல்கிறது; அதுமட்டுமில்லாமல் உன்னை தண்ணியைக் குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை என்று தரகுமுதலாளிவர்க்கம் சொல்வதைப்போல அம்பி அவர்கள் சுப்ரமணி சுவாமி வெறியாட்டுதலான அலகுத்துதல், தீ மிதித்தலைத் தடுத்தாரா? என்று கேட்கிறார். அம்பியின் இத்தரகுத்தனத்தைக் கண்டிப்பதோடு அம்பலப்படுத்தவும் வேண்டியிருக்கிறது.
இதுபோக, சச்சின், ஐஸ்வர்யா, கிருத்திக் போன்ற மேட்டுக்குடிகள் விளம்பரத்தில் நடிக்கிற பொழுது கோக்கை விழுங்காமல் வாய்க்குள் குறிப்பிட்ட நேரம் வைத்திருப்பதற்கு தனித்தொகையாம்! ஏகாதிபத்தியத்தில் சிலர் இவ்வாறு பொறுக்கித் திங்கிற பொழுது, சுப்ரமணிக்கு விளம்பரம் கொடுக்கிற பார்ப்பான்கள் யாரும் அலகு குத்துவதோ அல்லை தீ மிதிப்பதோ கிடையாது. விநாயகர் ஊர்வலம் என்றாலும் அதைத் சூத்திரன் தான் தூக்கிச் சுமக்க வேண்டும்.
ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை தொழிலாளிகள் தான் சூத்திரர்கள். பார்ப்பனியத்தைப் பொறுத்தவரை சூத்திரர்கள்தான் தொழிலாளிகள். இதற்குக்காரணமாக இருக்கிற தரகுவர்க்கமும் பார்ப்பனிய சுப்ரமணிய சுவாமியும் அதற்குப் பல்லக்குத் தூக்குகிற அம்பியும் தூக்கி எறியப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து உண்டா?
// வினவின் மற்றொரு பதிவில் பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் கூட்டுச் சேர்ந்து மக்களைச் சூறையாடுகின்றன என்கிற கேள்வியை விளக்க இயலுமா என்று கேட்டார் அம்பி. கீழ்க்கண்டவாறு விளக்கலாம். //
அங்கே நான் கேட்டது அந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்தைத்தான்.. (”சங்க கால கவிஞர்கள் வெறும் இன்பவாத கவிராயர்கள் இல்லை என்பதை அழகாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.. மற்ற தோழர்களின் கருத்து என்ன..?! லாபவெறியானது பார்ப்பனீயத்துடன் கைகோர்த்துதான் ஆப்ரிக்காவையும் அரேபியாவையும் சுரண்டுகிறது என்று ஒரு இந்துமத உதாரணத்துடன் நிறுவக்கூடிய கற்பனை வளம் படைத்த தோழர் தென்றலின் கருத்து என்னவோ..?!”)
உங்களிடமிருக்கும் பதிலுக்கு தக்கவாறு கேள்விகளை திரித்து இங்கே ஏன் விளக்குகிறீர்கள்..?!!!
//ஏகாதிபத்தியம் மக்களை இப்படிச் சுரண்டுகிற பொழுது, பார்ப்பனியம் முருகனை சுப்ரமணியனாக்கி காசு இருக்கவன் கோக்குகுடி, கடவுள் நம்பிக்கை இருக்கவன் சுப்ரமணியக் கும்பிடு என்று சொல்கிறது; அதுமட்டுமில்லாமல் உன்னை தண்ணியைக் குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை என்று தரகுமுதலாளிவர்க்கம் சொல்வதைப்போல அம்பி அவர்கள் சுப்ரமணி சுவாமி வெறியாட்டுதலான அலகுத்துதல், தீ மிதித்தலைத் தடுத்தாரா? என்று கேட்கிறார். அம்பியின் இத்தரகுத்தனத்தைக் கண்டிப்பதோடு அம்பலப்படுத்தவும் வேண்டியிருக்கிறது.//
பார்ப்பனர்கள் முருகனை சுப்ரமணிய சுவாமி என்று அழைத்ததால் முருகன் அம்பியாகிவிடவில்லையே என்று நான் சொன்னால், என்னை தரகு வேலை பார்ப்பதாக குற்றம் கூறுகிறீர்கள்.. பொது சிவில் சட்டம் பதிவில் ஷரியத் சட்டங்களுக்கு நீங்கள் தரகு வேலை பார்ப்பவர் என்ற தொனியில் உங்களை குற்றம் சாட்டுகிறவர்களுக்கு தெளிவான பதிலைக் கூறிவிட்டு என் தரகுத்தனத்தைப் பற்றி பேச வாருங்கள்..
// ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை தொழிலாளிகள் தான் சூத்திரர்கள். //
ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை மக்கள் எல்லோருமே அஃறிணைகள்..
\\ பொது சிவில் சட்டம் பதிவில் ஷரியத் சட்டங்களுக்கு நீங்கள் தரகு வேலை பார்ப்பவர் என்ற தொனியில் உங்களை குற்றம் சாட்டுகிறவர்களுக்கு தெளிவான பதிலைக் கூறிவிட்டு என் தரகுத்தனத்தைப் பற்றி பேச வாருங்கள்..\\
இந்த வாதம் தப்புலித்தனமானது. ஏனெனில் ஷரியத் சட்டத்திற்கு தரகுவேலை பார்க்கிறவன் என்று என்னை வைத்துக்கொள்ளுங்கள். ஷரியத் சட்டம் மக்கள் சனநாயகத்திற்கு விரோதமானது என்பதை நன்கு தெரிந்த வாசகர் என் மீது அப்படியொரு சந்தேகத்தை எழுப்புவாரேயானால் அவர் நான் விரும்புகிற இலட்சியத்திற்கு அணுக்கமானவராக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. இது ஒரு மகிழ்வான விடயம். ஆக என் தரப்பில் இருந்து கூட்டு உழைப்பை உறுதிப்படுத்த வேண்டும். அது ஏதோ நம்பிக்கையின் அடிப்படையில் வருவதல்ல. மாறாக பேசுபொருளில் விவாதத்தை கிளப்புவது; நேர் நின்று பரிசீலிப்பது.
இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால் மக்கள் என்றைக்குமே சரியாக இருக்கிறார்கள். அதனால் தான் கம்யுனிசத்தை மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள் மார்க்சிய ஆசான்கள். ஆனால் தந்திரமாக கோர்த்துவிடுகிற தாங்கள் சுப்ரமணியசாமி தமிழ்கலாச்சாரத்தின் எதிர்குறியீடு என்பதற்கு மாறாக பார்ப்பனியத்திற்கு குடைபிடிக்கிறீர்கள். அம்பி என்ற பெயரிலேயே விவாதிக்கிற பொழுது தங்களிடையே ஒரு நேர்மையான சந்தர்ப்பவாதம் இருப்பதால் எனக்குள்ள நெருக்கடி உங்களுக்கு கிடையாது. ஆகையால் இதையே ஒரு சலுகையாக எடுக்காமல் உங்களுடைய தரகுத்தனத்திற்கு பதில் சொல்லவும்.
// இந்த வாதம் தப்புலித்தனமானது. ஏனெனில் ஷரியத் சட்டத்திற்கு தரகுவேலை பார்க்கிறவன் என்று என்னை வைத்துக்கொள்ளுங்கள். ஷரியத் சட்டம் மக்கள் சனநாயகத்திற்கு விரோதமானது என்பதை நன்கு தெரிந்த வாசகர் என் மீது அப்படியொரு சந்தேகத்தை எழுப்புவாரேயானால் அவர் நான் விரும்புகிற இலட்சியத்திற்கு அணுக்கமானவராக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. இது ஒரு மகிழ்வான விடயம். ஆக என் தரப்பில் இருந்து கூட்டு உழைப்பை உறுதிப்படுத்த வேண்டும். அது ஏதோ நம்பிக்கையின் அடிப்படையில் வருவதல்ல. மாறாக பேசுபொருளில் விவாதத்தை கிளப்புவது; நேர் நின்று பரிசீலிப்பது.
இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால் மக்கள் என்றைக்குமே சரியாக இருக்கிறார்கள். அதனால் தான் கம்யுனிசத்தை மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள் மார்க்சிய ஆசான்கள். ஆனால் தந்திரமாக கோர்த்துவிடுகிற தாங்கள் சுப்ரமணியசாமி தமிழ்கலாச்சாரத்தின் எதிர்குறியீடு என்பதற்கு மாறாக பார்ப்பனியத்திற்கு குடைபிடிக்கிறீர்கள். அம்பி என்ற பெயரிலேயே விவாதிக்கிற பொழுது தங்களிடையே ஒரு நேர்மையான சந்தர்ப்பவாதம் இருப்பதால் எனக்குள்ள நெருக்கடி உங்களுக்கு கிடையாது. ஆகையால் இதையே ஒரு சலுகையாக எடுக்காமல் உங்களுடைய தரகுத்தனத்திற்கு பதில் சொல்லவும்.//
தரகுத்தனம், தப்புலித்தனம் (என்ன பொருள் ?!) என்று வசவுகளை அள்ளி வீசும் உரிமை உங்களுக்கு இருக்கிறதாம் ஆனால் உங்களிடம் அதே குற்றச்சாட்டை வைப்பவர்களிடம் உங்கள் இதயத்தை பிளந்துகாட்டி நம்பச் சொல்கிறீர்கள்..! முருகன் பார்ப்பனியன் ஆகவில்லை என்று ஆதாரங்களுடன் வாதிடும் நான் தரகுத்தனம் செய்பவன் என்றும் நம்பச் சொல்கிறீர்கள்..!
\\தரகுத்தனம், தப்புலித்தனம் (என்ன பொருள் ?!) என்று வசவுகளை அள்ளி வீசும் உரிமை உங்களுக்கு இருக்கிறதாம் ஆனால் உங்களிடம் அதே குற்றச்சாட்டை வைப்பவர்களிடம் உங்கள் இதயத்தை பிளந்துகாட்டி நம்பச் சொல்கிறீர்கள்..! \\
இது உங்களுடைய குறுகிய மனப்பான்மை! என் மீது குற்றச்சாட்டு வைப்பவர் ஷரியத் சட்டம் சனநாயகத்திற்கு விரோதமானது என்று தெளிவாகத்தானே வைக்கிறார்! இது நல்ல விசயம் தானே! இதில் என்னை அடுத்தவர்கள் நம்ப வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஏற்கனவே ஒரு முறை அருந்ததி ராயின் பெயரிலே ராய் இருக்கிறது! அவர் எப்படி அம்பேத்கரின் சாதியை ஒழிப்பது எப்படி என்ற புத்தகத்திற்கு அணிந்துரை எழுத இயலும் என்று கேட்டவர் தாங்கள் என்று ஞாபகம். சமூக அநீதிக்காக போராடுகிறவர்கள் பார்ப்பனர்களிடம் எப்பொழுதும் தடையில்லா வில்லங்க சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது என்னவகையான மனுநீதி? இதற்கு மாறாக தாங்கள் என்ன நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டாலும் வெள்ளிடைமலையாக ‘அம்பி’ என்று அம்மணமாக நிற்கிறீர்கள். ஜீனியர் புஷ் உங்களிடம் தானே இருக்கிறார்? ஆக ‘நான் அயோக்கியன் என்றால் நீயும் அயோக்கியன்’ என்கிற இந்த தப்புலித்தனத்தை வன்மையாகக் கண்டிப்பது அவசியம் தானே!
//என் மீது குற்றச்சாட்டு வைப்பவர் ஷரியத் சட்டம் சனநாயகத்திற்கு விரோதமானது என்று தெளிவாகத்தானே வைக்கிறார்! இது நல்ல விசயம் தானே! இதில் என்னை அடுத்தவர்கள் நம்ப வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? //
நல்ல விசயம் என்றால் பிறகு ஏன் அய்யா அப்படி எதிர் வாதம் செய்து கொண்டிருந்தீர்கள்..?!
// ஆக ‘நான் அயோக்கியன் என்றால் நீயும் அயோக்கியன்’ என்கிற இந்த தப்புலித்தனத்தை வன்மையாகக் கண்டிப்பது அவசியம் தானே! //
ஆக ஒரு அயோக்கியன் இன்னோரு அயோக்கியனைப் பார்த்து அயோக்கியன் என்று சொல்வதற்கு தென்றலாக இருந்தாகவேண்டும், யோக்கியனாக இருக்கத் தேவையில்லை..?!
\\முருகன் பார்ப்பனியன் ஆகவில்லை என்று ஆதாரங்களுடன் வாதிடும் நான் தரகுத்தனம் செய்பவன் என்றும் நம்பச் சொல்கிறீர்கள்..!\\
இது வரை என்ன ஆதாரங்களை வைத்துள்ளீர்கள்? பட்டியலிடுகிற கேள்விகளுக்கு உங்களது மறுமொழி என்னவாக இருந்தது?
1. முருகனுக்கும் சுப்புணிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்ட பொழுது முருகனுக்கும் சுப்புணிக்கும் சிக்கலில்லை என்றுதான் பதில் வந்ததே தவிர எப்படி பார்ப்பனியமயமானன் என்பதை தொடவேயில்லை.
2. அசுரரை வென்ற இடம்; தேவரைக்காத்த இடம் என்பதற்கு பதில் சொல்லச்சொன்னால் தமிழ் மக்கள் வணங்குகிற இந்திரனைத்தான் முருகன் காப்பாற்றினான்; இதில் என்ன தவறு என்று கேட்டீர்கள்?
3. முருகனுக்கு பூணுல் எப்படி வந்தது என்று கேட்டதற்கு பூணுல் பார்ப்பனர்களின் தனி உரிமை இல்லை என்றீர்கள்.
4. முருகன் சூரனை வதம் செய்தல் நிகழ்விற்கும் வெறியாட்டுதல் நிகழ்வு குறிப்பிடுகிற தன் உணர்ச்சிபாடலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிற பொழுது திருமுருகில் இருந்து சீவக சிந்தாமணி (இதற்கு பதில் எழுதுகிறேன்) வரை சூர் தடிந்த முருகன் என்பதைத்தான் எடுத்துக்காட்ட முடிகிறதே தவிர அகப்பாடல்களிலிருந்து தன் உணர்ச்சியை தனியாகப்பிரித்து எடுத்துவிட்டு சூரனை வதம் செய்யப்பட்டான் என்ற “பார்ப்பனிய நிறுவனமயமாதல்” என்பதற்கு தற்பொழுதுவரை பதில் இல்லை.
5. சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து முருகன்பிறந்தான் என்பது ஐதீகம் மற்றும் நம்பிக்கை என்று சொல்லிவிட்டு ஒரு வரியில் நகர்கிறீர்கள்.
6. முருகன் சமணத்தோடு தொடர்புபடுத்தி குறிப்புகள் கொடுப்பதை பரிசீலிக்க மறுத்துவிட்டு; இப்பொழுது சிந்தாமணியிலிருந்தும் சிலப்பதிகாரத்திலிருந்தும் எடுத்துகாட்டுகள் தருகிறீர்கள்!
மேற்கண்ட ஆறுவாதங்களில் முருகன் பார்பனியம் ஆக்கப்படவில்லை என்பதற்கு தாங்கள் கொடுத்த அருள்வாக்கு இவைகள் மட்டும்தான்! இது பார்ப்பனியத் தரகுத்தனம் அன்றி வேறென்ன?
// இது வரை என்ன ஆதாரங்களை வைத்துள்ளீர்கள்? //
மீண்டும் நிதானமாக படித்துப் பார்த்தால் புரியும்..
// பட்டியலிடுகிற கேள்விகளுக்கு உங்களது மறுமொழி என்னவாக இருந்தது?
1. முருகனுக்கும் சுப்புணிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்ட பொழுது முருகனுக்கும் சுப்புணிக்கும் சிக்கலில்லை என்றுதான் பதில் வந்ததே தவிர எப்படி பார்ப்பனியமயமானன் என்பதை தொடவேயில்லை. //
முருகன் பார்ப்பனியனானான் என்று நீங்கள்தான் கூவிக் கொண்டிருக்கிறீர்கள்.. நான் ஏன் தொடவேண்டும்..?!
// 2. அசுரரை வென்ற இடம்; தேவரைக்காத்த இடம் என்பதற்கு பதில் சொல்லச்சொன்னால் தமிழ் மக்கள் வணங்குகிற இந்திரனைத்தான் முருகன் காப்பாற்றினான்; இதில் என்ன தவறு என்று கேட்டீர்கள்? //
இந்திரனை ஏன் தமிழர்கள் வணங்கினார்கள் என்று தொல்காப்பியரிடம் போய் கேட்கவேண்டியதுதானே..
// 3. முருகனுக்கு பூணுல் எப்படி வந்தது என்று கேட்டதற்கு பூணுல் பார்ப்பனர்களின் தனி உரிமை இல்லை என்றீர்கள். //
முருகனில் பூணூலை கழற்றிவிட்டு வணங்கிக் கொள்ளுங்கள்.. வேல் முருகன் அருகனாகிவிடப் போகிறானா என்ன..?!
// 4. முருகன் சூரனை வதம் செய்தல் நிகழ்விற்கும் வெறியாட்டுதல் நிகழ்வு குறிப்பிடுகிற தன் உணர்ச்சிபாடலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிற பொழுது திருமுருகில் இருந்து சீவக சிந்தாமணி (இதற்கு பதில் எழுதுகிறேன்) வரை சூர் தடிந்த முருகன் என்பதைத்தான் எடுத்துக்காட்ட முடிகிறதே தவிர அகப்பாடல்களிலிருந்து தன் உணர்ச்சியை தனியாகப்பிரித்து எடுத்துவிட்டு சூரனை வதம் செய்யப்பட்டான் என்ற “பார்ப்பனிய நிறுவனமயமாதல்” என்பதற்கு தற்பொழுதுவரை பதில் இல்லை. //
சூர் தடிந்த முருகனைத்தானே வெறியாட்டு நிகழ்வுகளில் வணங்குவதாக சங்கப்பாடல்கள் கூறுகின்றன.. இதை எத்தனை முறை சொல்வது..?!
// 5. சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து முருகன்பிறந்தான் என்பது ஐதீகம் மற்றும் நம்பிக்கை என்று சொல்லிவிட்டு ஒரு வரியில் நகர்கிறீர்கள். //
தமிழர்கள் நம்பிக்கை அதுதான், முருகன் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவன் என்று நீங்கள் உங்கள் ஆராய்சித்திறமையால கண்டுபிடித்து கூறினாலும் செவ்வாய் கிரகத்தில்தான் சிவன் நெற்றிக்கண்ணை திறந்திருப்பார் என்று கூறிவிட்டு போகப்போகிறார்கள்..
// 6. முருகன் சமணத்தோடு தொடர்புபடுத்தி குறிப்புகள் கொடுப்பதை பரிசீலிக்க மறுத்துவிட்டு; இப்பொழுது சிந்தாமணியிலிருந்தும் சிலப்பதிகாரத்திலிருந்தும் எடுத்துகாட்டுகள் தருகிறீர்கள்! //
நீங்கள் கொடுத்த கவைக்குதவாத குறிப்புகளை வைத்து நீங்களே மகிழ்ந்து கொள்ளவேண்டியதுதான்.. சமணர்களே சூர் தடிந்த முருகன் என்று சங்கம் மருவிய, சமணம் உச்சத்தில் இருந்த, காலத்தில் பாடியதைக் காட்டினாலும் விதண்டாவாதத்தை தொடரும் அளவுக்கு இருக்கிறது உங்கள் தப்புலியில்லாத்தனம்..
// மேற்கண்ட ஆறுவாதங்களில் முருகன் பார்பனியம் ஆக்கப்படவில்லை என்பதற்கு தாங்கள் கொடுத்த அருள்வாக்கு இவைகள் மட்டும்தான்! இது பார்ப்பனியத் தரகுத்தனம் அன்றி வேறென்ன? //
முருகனை பார்ப்பனியன் என்று கூறி தமிழர்களிடமிருந்து முருகனையும், சங்க இலக்கியங்களையும் பிடுங்கி எறிய எத்தனிக்கும் நீங்கள் யாருக்கு தரகு வேலை பார்க்கிறவராக இருக்கக்கூடும் என்பதும் ஓரளவுக்கு புரிகிறது..
\\ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை மக்கள் எல்லோருமே அஃறிணைகள்..//
அந்த ஏகாதிபத்தியத்தை பார்ப்பனியம் விழுந்து விழுந்து ஆதரிக்கிறது.அது திணிக்கும் உலகமயமாக்க,தாராளமயமாக்க,தனியார்மயமாக்கல் இட ஒதுக்கீட்டையும் சமூக நீதியையும் குழி தோண்டி புதைப்பதால் அந்த தாராளமயமாக்கல் கொள்கைகள் பார்ப்பனிய ஆதிக்க நலன்களுக்கு உகந்ததாக இருக்கின்றன.நாட்டின் வளங்களை தங்கு தடையின்றி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடவும் ,தொழிலாளர்களை ஒட்ட சுரண்டி காரியம் முடிந்தவுடன் கசக்கி தூக்கி எறியவும் ,மின்சாரம்.தண்ணீர் முதலான வளங்களை வழங்காமல் சிறு தொழில்களை நசுக்கி விட்டு அவற்றை வாரி வழங்கி பன்னாட்டு தொழில் நிறுவனங்கள கொழுக்கவும் பார்ப்பனியம் தனது ஊடக பரப்புரை வலுவால் துணை நிற்கிறது.இந்த அயோக்கியத்தனங்களை தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்பு என்ற பெயரில் நியாயப்படுத்துவதில் பார்ப்பனிய பரப்புரை முன்னிலை வகிக்கிறது.
திப்பு,
இந்துமதம்தான் பார்ப்பனியம், பார்ப்பனியம்தான் இந்துமதம் என்று கூறும் தென்றலின் நிலைப்பாடுதான் உங்களுக்கும் என்றால், அரபு நாடுகளும், பாக்,பங்களாதேஷ் நாடுகளும் ஏகாதிபத்தியத்தின் காலடியில் விழுந்து கிடப்பதற்கு இஸ்லாம்தான் காரணம் என்று கூறமுடியுமா..?!
அந்நாடுகளின் ஆளும் கும்பல்கள்தான் ஏகாதிபத்தியங்களின் கூட்டுக்களவாணிகள் .மக்கள் அல்ல.அந்நாடுகளின் மக்கள் எப்போதுமே ஏகாதிபத்திய எதிர்ப்பை நெஞ்சில் நெருப்பாக ஏந்தியிருக்கிறார்கள்.
இத்தாலிய, பிரஞ்சு,பிரித்தானிய ஏகாதிபத்தியங்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய சூடானின் முகமது அகமது பின் அப்துல்லா லிபியாவின் உமர் முக்தார், ஈராக்கின் முகமது பர்சாஞ்சி என ஆரம்பித்து இன்றைய பாலசுதீன விடுதலை போராட்டம்,அரபு வசந்தம் வரை மிக நீண்டதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு போர் பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் அம்மக்கள்.அந்த போராட்டங்களுக்கு அவர்கள் சார்ந்த இசுலாமிய மதம் தடையாக இருக்கவில்லை.மாறாக அத்தகைய போராட்டங்களை ஊக்குவிப்பதாகவே இசுலாமிய நெறிகள் உள்ளன.அநீதியை எதிர்த்து புனிதப்போர் நடத்த சொல்லும் மார்க்கம் அது.அநியாயக்கார அரசனின் முன்னால் உயிருக்கு அஞ்சாமல் நீதியை,நியாயத்தை எடுத்து சொல்வதுதான் ஆக சிறந்த புனிதப்போர் என்கிறது இசுலாம்.
அதனால்தான் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் ஆயுதம் ஏந்திய அந்த தலைவர்களில் ஆகப்பெரும்பான்மையானோர் இசுலாமிய மத கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.அவ்வளவு ஏன் அந்த போர்களில் முசுலிம்களின் போர் முழக்கமே [ Battle cry ] ”அல்லாஹு அக்பர் ” என்பதாகத்தான் இருந்தது.
அப்புறம் நான் வைத்த குற்றச்சாட்டுக்கு இதுதான் உங்கள் பதிலா.பாருங்கள் நீங்கள் இசுலாமிய மதத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு முறையாக பதில் சொல்கிறேன்.இது விவாத நேர்மை.எனது விளக்கத்தை நீங்கள் ஏற்பதும் மறுப்பதும் பிரச்னை இல்லை.
ஒன்று பார்ப்பனர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் என ஆதாரத்தோடு சொல்ல வேண்டும் அல்லது குற்றச்சாட்டு உண்மை என ஏற்கவேண்டும்.நீங்களோ விவாதத்தை மடை மாற்றி விட்டு குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல் தப்பிக்க முயல்கிறீர்கள்.சரி,வந்த சண்டையை விடுவானேன்.அதையும் பார்க்கலாம்.
\\இந்துமதம்தான் பார்ப்பனியம், பார்ப்பனியம்தான் இந்துமதம் என்று கூறும் தென்றலின் நிலைப்பாடுதான் உங்களுக்கும் என்றால்//
சனாதன வர்ணாசிரம தர்மத்தின் அதாவது நால்வர்ண சாதிய கட்டமைப்பின் மறுபெயர்தானே இந்து மதம்.வர்ணாசிரம தர்மத்தின் நோக்கமே பார்ப்பனிய ,சாதிய ஆதிக்க நலன்களை பாதுகாப்பதுதான் என்பது வெள்ளிடை மலை.ஆகவே இந்துமதம்தான் பார்ப்பனியம், பார்ப்பனியம்தான் இந்துமதம் என்பதில் ஐயத்திற்கு இடமே இல்லை.
// அந்நாடுகளின் ஆளும் கும்பல்கள்தான் ஏகாதிபத்தியங்களின் கூட்டுக்களவாணிகள் .மக்கள் அல்ல.அந்நாடுகளின் மக்கள் எப்போதுமே ஏகாதிபத்திய எதிர்ப்பை நெஞ்சில் நெருப்பாக ஏந்தியிருக்கிறார்கள்.//
அந்நாடுகளின் ஆளும் கும்பல்கள் பார்ப்பனர்களா..?! அந்நாடுகளின் மக்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பை நெஞ்சில் நெருப்பாக ஏந்தியிருக்கிறார்களோ இல்லையோ கையில் ஒரு குச்சியைக் கூட ஏந்தி ஏகாதிபத்திய இயற்கைவள-பொருளாதார சுரண்டலை எதிர்த்து போராட்டம் நடத்தமுடியாது.. மதத்தை முன்வைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் நடத்தவேண்டுமானால் அனுமதிக்கப்படுவார்கள்..
// இத்தாலிய, பிரஞ்சு,பிரித்தானிய ஏகாதிபத்தியங்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய சூடானின் முகமது அகமது பின் அப்துல்லா லிபியாவின் உமர் முக்தார், ஈராக்கின் முகமது பர்சாஞ்சி என ஆரம்பித்து இன்றைய பாலசுதீன விடுதலை போராட்டம்,அரபு வசந்தம் வரை மிக நீண்டதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு போர் பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் அம்மக்கள்.//
சூடானின் முகமது அகமது பின் அப்துல்லா என்று யாரைச் சொல்கிறீர்கள்..?! 100 ஆண்டுகளுக்கு முன் தன்னை மகதி (mahdi) என்று கூறிக்கொண்டவரையா..?! வஹாபி முல்லாக்கள் அவரை ஆதரித்தார்களா..?!
உமர் முக்தார் இத்தாலிய ஆக்ரமிப்பு படைகளை ஒரு நூற்றாண்டுக்கு முன எதிர்த்து போராடியவர்.. இன்றைய ஏகாதிபத்தியச் சுரண்டலை லிபியாவில் எதிர்த்தது கடாபியின் சொந்த சுரண்டல்.. அவரை வீழ்த்தியது அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட லிபிய கலகம்.. ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒரு குழப்பக்கதையாகவே லிபியாவில் இருக்கிறது..
ஈராக்கின் முகமது பர்சாஞ்சி ஒரு குர்து முசுலீம்.. அன்றைய பிரிட்டீசுகாரனே பரவாயில்லை என்ற அளவுக்கு குர்துகளை ஒடுக்குவதில் யார் முன்னிலை என்ற போட்டி ஈராக்,சிரியா,துருக்கி, ஈரான் நாடுகளுக்கிடையே அன்று போல் இன்றும் நிலவுகிறது.. இது போதாதென்று ISIS காலீபா குர்துகளை அமெரிக்காவிடம் முழுமையாக தள்ளிவிடும் பணியை செவ்வனே செய்து வருகிறார்..
பாலஸ்தீனத்தைப் பற்றி பேசாமலேயே இருப்பது நல்லது.. அரபு நாடுகள் இன்னும் எத்தனை நூற்றாண்டானாலும் ஒன்று சேரமாட்டார்கள்.. அதற்குள் அமெரிக்காவும், இசுரேலும் தாமாகவே சிதறினாலும் சிதறலாம்..
// அந்த போராட்டங்களுக்கு அவர்கள் சார்ந்த இசுலாமிய மதம் தடையாக இருக்கவில்லை. //
அவர்களை ஒடுக்குபவர்களுக்கும் இசுலாமிய மதம் தடையாக இருக்கவில்லை.. கருவியாகவும், திசைதிருப்பவும் கூட பயன்படுத்தப்படுகிறது..
//மாறாக அத்தகைய போராட்டங்களை ஊக்குவிப்பதாகவே இசுலாமிய நெறிகள் உள்ளன.//
மதத்தைக் காக்கும் ஜிகாத் என்றால் மட்டும்..
// அநீதியை எதிர்த்து புனிதப்போர் நடத்த சொல்லும் மார்க்கம் அது.அநியாயக்கார அரசனின் முன்னால் உயிருக்கு அஞ்சாமல் நீதியை,நியாயத்தை எடுத்து சொல்வதுதான் ஆக சிறந்த புனிதப்போர் என்கிறது இசுலாம்.//
அது காபிர்களை மத அடிப்படையில் எதிர்க்கமட்டும்.. 6-வது காலீபா யஜித் பின் மூவாவியா, நீதி-நியாயம் என்று போராடிய இமாம் ஹுசைனையும் அவரது ஆதரவாளர்களையும் படுகொலை செய்த போது ஒரு காக்காவும் இமாம் ஹுசைனுக்கு ஆதரவாக வரவில்லை..
// ஒன்று பார்ப்பனர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் என ஆதாரத்தோடு சொல்ல வேண்டும் அல்லது குற்றச்சாட்டு உண்மை என ஏற்கவேண்டும்.//
குற்றச்சாட்டில் பார்ப்பனீயம்,பார்ப்பனீயர்கள் என்றீர்கள்.. இப்போது பார்ப்பனர்கள் என்கிறீர்கள்.. கீழே இந்துக்கள் என்றும் கூறுகிறீர்கள்.. வசதிக்கேற்ப பார்ப்பனீயர்கள்-இந்துக்கள்-பார்ப்பனர்கள் என்று மாற்றி மாற்றி எதை வேண்டுமாயினும் பயன்படுத்திக் கொள்ளலாம் போலிருக்கிறது..
உங்கள் வசதிக்கேற்ப பா-இ-பா என்று வைத்துக்கொள்வோமா..?!
உங்கள் குற்றசாட்டில் கூறும் பார்ப்பனீய ஊடகங்கள் எவை..?!
பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் செக்யூலர் ஊடகங்கள் (இந்து எதிர்ப்பு ஊடகங்கள் என்று மேற்படி பா-இ-பா.க்களால் கூறப்படும்) பற்றியும் பார்ப்போம்..:
1. NDTV (செக்யூலர் ஓனர் பிரணாய் ராய், குருப் எடிட்டர் பர்க்கா தத்);
2. India today (NDTV)
3. CNN-IBN
4. Outlook (Editorial Chairman Vinod Mehta)
5. Times Group (Owned by Bennet & Coleman)
6. Hindustan Times (Owned by Birla Group; major editorials by Barkha Dutt, Vir Sanghvi)
பட்டியல் நீளமாக போவதால் இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.. 5,6 – ல் வரும் ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு சொந்தமான ‘செக்யூலர்’ ஊடகங்கள்.. இது தவிர மாநிலங்கள் அளவில் எண்ணற்ற செக்யூலர் ஊடகங்களையும் சேர்க்க வேண்டும்.. எல்லாம் பன்னாட்டு கார்பரேட்டுகளின் சேவையில் உள்ளவை..
// சனாதன வர்ணாசிரம தர்மத்தின் அதாவது நால்வர்ண சாதிய கட்டமைப்பின் மறுபெயர்தானே இந்து மதம்.வர்ணாசிரம தர்மத்தின் நோக்கமே பார்ப்பனிய ,சாதிய ஆதிக்க நலன்களை பாதுகாப்பதுதான் என்பது வெள்ளிடை மலை.ஆகவே இந்துமதம்தான் பார்ப்பனியம், பார்ப்பனியம்தான் இந்துமதம் என்பதில் ஐயத்திற்கு இடமே இல்லை.//
ஜிகாத்தில் காபிர்களைக் கொன்று தானும் செத்தால் ஏழாவது சொர்க்கம் நிச்சயம் என்பதுதான் இஸ்லாத்தின் சாரம் என்று கூறுவதைப் போல் இருக்கிறது..
\\அந்நாடுகளின் ஆளும் கும்பல்கள் பார்ப்பனர்களா..?//
பார்ப்பனர்கள் மட்டுமே ஏகாதிபத்திய எடுபிடிகள் என்று சொல்லவில்லையே. பார்ப்பனியத்தின் ஏகாதிபத்திய சேவையை மறைக்க நீங்கள் ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கு இசுலாம்தான் காரணம் என சொல்லலாமா என கேட்டீர்கள்.இல்லை என்று வரலாற்றிலிருந்து சொல்கிறேன்.இசுலாம் அநீதியை எதிர்த்து போரிட சொல்கிறது என்கிறேன்.அதை மறுக்க முடியாமல் ஆளும் கும்பலும் இசுலாமியர்கள்தானே என்கிறீர்கள்.முசுலிம்கள் என்றாலே அத்தனை பேரும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்று சொல்லவில்லை.ஆனால் பெருவாரியான மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்கிறேன்.புரியாதது போல் நடிக்கிறீர்கள்.
அப்புறம் எடுத்துக்கொண்ட விவாதப்பொருளை நேர்மையாக பேசுங்கள்.போன நூற்றாண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளை சுட்டியது இசுலாம் ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கு காரணமில்லை என்று காட்டுவதற்குத்தான்,உங்கள் குற்றச்சாட்டு அதுதானே.அதற்கு பதில் சொன்னால் பட்டுக்கோட்டைக்கு வழி கொட்டைப்பாக்கு விலையில இருக்குன்னு ஒண்ணு கிடக்க ஒண்ணு பேசுறீங்க. முசுலிம்களின் கொள்கை வேறுபாடுகளையும் அந்நாடுகளின் இன்றைய குழப்பங்களையும் பற்றி பேசுவதுதான் எதிர்வாதமா.உங்க நிலைமை வர வர ரொம்ப பரிதாபமா இருக்கு.இப்படி பொருளற்ற வாதம் எதையாவது சொல்லி கடைசி பின்னூட்டம் போட்டு ”வெற்றி” பெற்றே ஆகணுமா அம்பி.தென்றலின் ஒரு குற்றச்சாட்டுக்கு ”நன்று.ஒன்றும் சொல்வதற்கில்லை” என்று பதில் சொல்றீங்க.இதுலாம் ஒரு வாதமா.இப்படி ஒரு வெற்றி தேவையா உங்களுக்கு.
\\ பா-இ-பா //
ஊடகங்களை கையில் வைத்திருக்கும் மேட்டுக்குடி பார்ப்பனர்கள் தொடங்கி IT அம்பிகள்.மாம்பலம்,மடிப்பாக்கம்,மயிலாப்பூர் பார்த்தசாரதிகள் ஊடாக அரசு மற்றும் தனியார் துறையில் மாத சம்பளம் வாங்கும் பார்ப்பனர்கள் ஈறாக அத்தனை பேரும் தங்கள் ஆற்றலுக்கு எட்டிய வரையில் தனியார்மயமாக்கலை ஆதரித்து பரப்புரை செய்கிறார்கள்.
இதைத்தான் குற்றச்சாட்டாக வைக்கிறேன்.நீங்களோ அதை மறுக்க முடியாமல் அவன் ஆதரிக்கிறானே இவன் ஆதரிக்கிறானே என்று விவாதத்தை திசை திருப்புறீங்க.பாவம் அம்பி நீங்க..எப்புடி இருந்த நீங்க இப்புடி ஆயிட்டீங்க.
\\ஏழாவது சொர்க்கம் நிச்சயம்//
அதே திசை திருப்பல்.இந்துமதம்-பார்ப்பனியம் பற்றி ஆரம்பித்தது நீங்கதான்.ஆனால் அது குறித்து பேசினால் மேற்கொண்டு விவாதிக்காமல் ஓடி ஒளிகிறீர்கள்.
//பார்ப்பனர்கள் மட்டுமே ஏகாதிபத்திய எடுபிடிகள் என்று சொல்லவில்லையே. பார்ப்பனியத்தின் ஏகாதிபத்திய சேவையை மறைக்க நீங்கள் ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கு இசுலாம்தான் காரணம் என சொல்லலாமா என கேட்டீர்கள்.இல்லை என்று வரலாற்றிலிருந்து சொல்கிறேன்.//
பா-இ-பா.க்களும் அன்னியப்படைகளின் ஆக்ரமிப்பை எதிர்த்து போராடியிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டீர்களா அல்லது மறைத்துவிட்டீர்களா.. இப்போது ஏகாதிபத்தியத்தை ஏன் எதிர்க்கவில்லை என்பதுதானே கேள்வி..
// இசுலாம் அநீதியை எதிர்த்து போரிட சொல்கிறது என்கிறேன்.அதை மறுக்க முடியாமல் ஆளும் கும்பலும் இசுலாமியர்கள்தானே என்கிறீர்கள்.//
இதற்கு கொடுத்த பதிலை படிக்கவில்லையா..?!
// போன நூற்றாண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளை சுட்டியது இசுலாம் ஏகாதிபத்திய அடிமைத்தனத்திற்கு காரணமில்லை என்று காட்டுவதற்குத்தான்,உங்கள் குற்றச்சாட்டு அதுதானே.அதற்கு பதில் சொன்னால் பட்டுக்கோட்டைக்கு வழி கொட்டைப்பாக்கு விலையில இருக்குன்னு ஒண்ணு கிடக்க ஒண்ணு பேசுறீங்க.//
சென்ற நூற்றாண்டில் ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்ப்பதற்கு இசுலாத்தை காரணம் காட்டும் நீங்கள் இன்றைய ஏகாதிபத்திய பொருளாதார-இயற்கைவள சுரண்டலை எதிர்க்க ஏன் இசுலாமால் முடியவில்லை என்றும் கூறவேண்டும்.. ஆளும் வர்க்கக்கும்பல் என்று சொல்லிவிட்டு நழுவமுடியாது.. ஆளும் வர்க்க கும்பல் ஏன் தடுக்கிறது, எப்படி தடுக்கிறது என்பதையெல்லாம் கூறாமல் தவிர்க்கவும் கூடாது.. பார்ப்பனியம் எப்படித் தடுக்கிறது என்று பட்டுக்கோட்டைக்கு படம் போட்டு வழி சொன்னதைப் போல் அதையும் சொல்லவேண்டும்..
// தென்றலின் ஒரு குற்றச்சாட்டுக்கு ”நன்று.ஒன்றும் சொல்வதற்கில்லை” என்று பதில் சொல்றீங்க.இதுலாம் ஒரு வாதமா.//
அவர் கழிந்து வைப்பதின் மேலெல்லாம் நான் கால் வைக்க வேண்டுமா..?!
// ஊடகங்களை கையில் வைத்திருக்கும் மேட்டுக்குடி பார்ப்பனர்கள் தொடங்கி IT அம்பிகள்.மாம்பலம்,மடிப்பாக்கம்,மயிலாப்பூர் பார்த்தசாரதிகள் ஊடாக அரசு மற்றும் தனியார் துறையில் மாத சம்பளம் வாங்கும் பார்ப்பனர்கள் ஈறாக அத்தனை பேரும் தங்கள் ஆற்றலுக்கு எட்டிய வரையில் தனியார்மயமாக்கலை ஆதரித்து பரப்புரை செய்கிறார்கள்.
இதைத்தான் குற்றச்சாட்டாக வைக்கிறேன்.நீங்களோ அதை மறுக்க முடியாமல் அவன் ஆதரிக்கிறானே இவன் ஆதரிக்கிறானே என்று விவாதத்தை திசை திருப்புறீங்க.//
பெரும்பான்மையோர் நொண்டியடித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் மேற்படி பார்ப்பனர்களை மட்டும் பார்த்து அவர்கள் ஒற்றைக் காலில் ஆட்டம் போடுவதாக கூப்பாடு போடுவதேன்..?! பார்ப்பன துவேசம்தான்..
// அதே திசை திருப்பல்.இந்துமதம்-பார்ப்பனியம் பற்றி ஆரம்பித்தது நீங்கதான்.ஆனால் அது குறித்து பேசினால் மேற்கொண்டு விவாதிக்காமல் ஓடி ஒளிகிறீர்கள். //
இந்து மதத்துக்கு கொடுக்கப்படும் விளக்கத்தைப் போல் எல்லா மதங்களுக்கும் சுருக்கி குறுக்கி விளக்கம் கொடுக்க முடியும் என்பதைத்தான் சுருக்கமாகக் கூறினேன்.. அது சரியா இல்லையா என்பதை நீங்களே கருதிப்பாருங்கள்..
\\இப்போது ஏகாதிபத்தியத்தை ஏன் எதிர்க்கவில்லை என்பதுதானே கேள்வி…………….இன்றைய ஏகாதிபத்திய பொருளாதார-இயற்கைவள சுரண்டலை எதிர்க்க ஏன் இசுலாமால் முடியவில்லை//
அரபு வசந்தம் போன நூற்றாண்டிலா நடந்தது.சொல்லவே இல்ல.
\\பெரும்பான்மையோர் நொண்டியடித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் மேற்படி பார்ப்பனர்களை மட்டும் பார்த்து அவர்கள் ஒற்றைக் காலில் ஆட்டம் போடுவதாக கூப்பாடு போடுவதேன்..?!பார்ப்பன துவேசம்தான்..//
ஆக,குற்றச்சாட்டை மறுக்க முடியவில்லை உங்களால்.அவன் அயோக்கியன்,இவன் அயோக்கியன்,அதுனால நான் அயோக்கியனா இருக்கிறத யாரும் கேள்வி கேக்க கூடாது அப்புடிங்கிறீங்க.நல்ல வாதம்,இப்புடியே நடத்துங்க.நாடு வெளங்கிரும்.
பார்ப்பனர்கள் மீது வெறுப்பு [ துவேசம் ] எல்லாம் இல்லை. அம்பி என்ற பெயரில் வந்து அதாவது ஒரு பார்ப்பனர் .ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசுவது நகை முரணாக தோன்றியது.அதை சுட்டிக்காட்டுகிறேன்.அவ்வளவுதான்.
\\இந்து மதத்துக்கு கொடுக்கப்படும் விளக்கத்தைப் போல் எல்லா மதங்களுக்கும்//
ஆக இந்த உத்தியை தவிர வேறு சரக்கு உங்களிடம் இல்லை.இந்த மலிவான உத்தி ஆயாசமூட்டுகிறது.வாதத்திற்காக மற்ற மதங்களில் நீங்கள் சொல்லும் குறைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.மற்றவர்களின் குறை நமது குறையை ரத்து செய்து விடுமா என்று நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.
திப்பு ,
புதிர் போடுகின்றேன் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் :
யார் அவர் ?
[1] பார்பனர்களை குற்றம் சுமத்தினால் அதனை ஏற்காமல் அல்லது மறுக்காமல் பிறரும் அப்படி தானே என்று அடுத்தவரை கை நீட்டுவது
[2] வால்மீகி இராமாயனத்தில் உத்தரகாண்டம் பிற்சேர்க்கை என்று தன் தேவைக்கு ஏற்ப கூறி விவாதத்தில் இருந்து தப்புவது.
[3] அதே சமையம் முருகனை பற்றி பார்பனர்கள் எழுதிவைத்து உள்ள அழுகுணி கருத்துகளை ஏற்று, தமிழ் மக்கள் இயல்பாக வணங்கும் கடவுளை பார்பன கடவுளாக ஆகம விதிகளை காட்டி false game ஆடுவது.
வினவில் வந்து இந்த அழுகுணிஆட்டம் ஆடும் இவர் யார் தெரியுமா உங்களுக்கு ?
போச்சு,ஏற்கனவே தென்றலுக்கு ஆதரவா ஏதோ எழுதிட்டேன்னு குழப்புறயே நீன்னு எம் மேல கோவமா இருக்காரு.[அவரு குழப்புறத விடவா]
இப்ப நீங்க வேறயா.என்ன கதிக்கு ஆளாவப்போறமோன்னு பயமா இருக்கு.மேக்கொண்டு பீதிய கிளப்பாதீங்க.
அம்பி,
\\கீழே இந்துக்கள் என்றும் கூறுகிறீர்கள்.//
பார்ப்பனர்கள் என்று குறிப்பாக சொன்னாலும் மொத்த இந்துக்கள் பின்னால் ஏன் ஒளிகிறீர்கள்.இந்துக்கள் என்ற சொல்லையே நான் பயன்படுத்தவில்லை.ஆனாலும் சொன்னதாக இட்டுக்கட்டலாமா.
சாமர்த்தியமா பேசுறதா ”நினைச்சுண்டு” பார்ப்பனர்கள் இந்துக்கள் இல்லையா என கேட்காதீர்கள்.சாதி பிரிவினைகள் இன்றி இந்துக்களோ இந்து மதமோ ஏது.
// இந்துக்கள் என்ற சொல்லையே நான் பயன்படுத்தவில்லை.ஆனாலும் சொன்னதாக இட்டுக்கட்டலாமா.//
”ஆகவே இந்துமதம்தான் பார்ப்பனியம், பார்ப்பனியம்தான் இந்துமதம் என்பதில் ஐயத்திற்கு இடமே இல்லை.” என்று கூறிவிட்டு இந்துக்கள் என்று நான் சொல்லவேயில்ல என்கிறீர்கள்.. அப்படியென்றால் இந்த இந்துக்கள் எனப்படுபவர்கள் யார் என்று புரியாமல் மண்டையை உடைத்துக் கொள்பவர்கள் மீது இரக்கம் வைத்து அதையும் விளக்கியிருக்கிறீர்கள்.. :
//பார்ப்பனர்கள் இந்துக்கள் இல்லையா என கேட்காதீர்கள்.சாதி பிரிவினைகள் இன்றி இந்துக்களோ இந்து மதமோ ஏது.//
சாமர்த்தியமா பேசுறதா நினைச்சுண்டு “இந்துக்களோ இந்து மதமோ ஏது” என்று இந்துமதத்தைப் பின்பற்றுபவர்கள்தான் இந்துக்கள் என்று சரியான வாக்குமூலத்தையும் கொடுக்கிறீர்கள்.. எப்புடி இருந்த நீங்க இப்புடி ஆயிட்டீங்களே திப்பு.. தென்றலுக்கு வக்காலத்து வாங்க வந்தால் நீங்களும் அந்த பேரறிஞரைப் போலவே குழம்பி,குழப்பிக் கொண்டு திரியவேண்டியதுதான்..
\\ சு+பிரம்மம் = நல்ல, இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள்.. வடமொழிதான், ஆனால் மோசடியல்ல.. முருக பக்தி..\\
மோசடிதான். முருகனுக்கு இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. முருகு, முருக்குதல் என்பதன் நிகழ்வின் வெளிப்பாடகத்தான் சங்க இலக்கியம் வெளிப்படுத்துகிறது. முருகு என்று சொல்கிற பொழுது வெறியாட்டலின் நிகழ்வையும் குறிக்கிறது. தலைவன் தலைவியின் தன் உணர்ச்சியின் பொழுது முருகன் தலைவியை முருக்குகிறான். இதைக்கட்டுப்படுத்த வேலன் என்ற பூசாரி சாமியாடுகிறான். முருகனைச் சாந்தப்படுத்த பூசைகள் நடைபெறுகின்றன. இனக்குழுவிற்கு சொந்தமான சாமியாடல் நிகழ்விற்கும் பார்ப்பானுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இதில் சூ…. பிரம்மம் என்றால் இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள் என்று சொல்வது முருக பக்தியல்ல; பார்ப்பனிய பித்தலாட்டம்.
\\ சு+பிரம்மம் = நல்ல, இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள்.. வடமொழிதான், ஆனால் மோசடியல்ல.. முருக பக்தி..\\
மோசடிதான். முருகனுக்கு இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. முருகு முருக்குதல் என்பதன் நிகழ்வின் வெளிப்பாடகத்தான் சங்க இலக்கியம் வெளிப்படுத்துகிறது. முருகு என்று சொல்கிற பொழுது வெறியாட்டலின் நிகழ்வையும் குறிக்கிறது. தலைவன் தலைவியின் தன் உணர்ச்சியின் பொழுது முருகன் தலைவியை முருக்குகிறான். இதைத்தான் வேலன் என்ற பூசாரி சாமியாடுகிறான். முருகனைச் சாந்தப்படுத்த பூசைகள் நடைபெறுகின்றன. சங்ககால முருகனின் களிதறுப்புணர்ச்சிப் பாத்திரமே குய்யஹர்களின் மரபு என்று சொல்கிறது எஸ். இராமச்சந்திரனின் கட்டுரை. இதுஒருபுறமிருக்க இனக்குழுச்சமூகத்தில் உள்ள சாமியாடுதல் நிகழ்விற்கும் பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம்? இதில் சூ…. பிரம்மம் என்றால் இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள் என்று சொல்வது முருக பக்தியல்ல; பார்ப்பனிய பித்தலாட்டம்.
தொல்குடி மரபு, உள்ளது உள்ளபடி முருகனின் பாத்திரத்தை விளக்குகிற பொழுது பார்ப்பனியம் இப்படிக்கதைக்கிறது; “இந்திரலோகத்தில் சாமிகள் கலவிகொள்கிற பொழுது விந்துத்துளி பூலோகம் நோக்கித் தெறிக்கிறது. தாமரையில் பட்டு கார்த்திக்கேயன் டெலிவரிசெய்யப்படுகிறான்.” இந்த அசிங்கத்திற்கும் தொல்குடிகளின் மரபிற்கும் என்ன சம்பந்தம்? இதில் சு பிரம்மம் என்பது இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள் என்றால் என்ன சொல்ல வருகிறது பார்ப்பனியம்?
// மோசடிதான். முருகனுக்கு இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. முருகு முருக்குதல் என்பதன் நிகழ்வின் வெளிப்பாடகத்தான் சங்க இலக்கியம் வெளிப்படுத்துகிறது. முருகு என்று சொல்கிற பொழுது வெறியாட்டலின் நிகழ்வையும் குறிக்கிறது. தலைவன் தலைவியின் தன் உணர்ச்சியின் பொழுது முருகன் தலைவியை முருக்குகிறான். இதைத்தான் வேலன் என்ற பூசாரி சாமியாடுகிறான். முருகனைச் சாந்தப்படுத்த பூசைகள் நடைபெறுகின்றன. சங்ககால முருகனின் களிதறுப்புணர்ச்சிப் பாத்திரமே குய்யஹர்களின் மரபு என்று சொல்கிறது எஸ். இராமச்சந்திரனின் கட்டுரை.//
முருகு என்றால் அழகு, இளமை.. சங்க இலக்கியம் கூறவருவது எதையென்றால் :-
1) தன் உணர்ச்சி கொண்ட தலைவியை அவள் காதல் எனும் நோய் உருக்குகிறது; அஃதறியாத (அல்லது அறிந்த ?!) அவள் தாயாகப்பட்டவள் தன் மகள் முருகனை வழிபட்டால் தப்புதாண்டாவுக்கு போகாமல் வெறியாட்டம் நிகழ்வு மூலம் மன-உடல் வலிமை மற்றும் இளமை இயல்பை மீண்டும் பெற்று பழைய நிலைக்கு திரும்புவாள் என்று முருகன் அருள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை..
2) சில தலைவன்கள் தம் தலைவிகளை டீலில் விட்டுவிட்டு பரத்தைகளிடம் போகும்காலை தலைவி முருகனை வழிபட்டாள் என்பதறிந்தால், சூர் தடிந்த முருகன் தப்பு செய்யும் தன்னை எந்த விதத்தில் முருக்குவானோ (அழிப்பானோ) என்ற அச்சம் கிளர்ந்து நல்வழிக்குத் திரும்புவர் என்ற நம்பிக்கையை..
குறிப்பு : முருக்குதல் என்றால் முறுக்கைப் போல் முறுக்குதல் அன்று.. அழித்தல், உருக்குதல் என்று பல பொருளுண்டு..
// இதுஒருபுறமிருக்க இனக்குழுச்சமூகத்தில் உள்ள சாமியாடுதல் நிகழ்விற்கும் பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம்? //
ஒரு சம்பந்தமும் இல்லை..
// இதில் சூ…. பிரம்மம் என்றால் இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள் என்று சொல்வது முருக பக்தியல்ல; பார்ப்பனிய பித்தலாட்டம். //
சூ அல்ல சு.. மறைபொருளான பரம்பொருள் அச்சம் தரத்தக்க தெய்வ வடிவங்களில் வெளிப்படும் நிகழ்வுகளும் உண்டு.. அதன்றி இனிய குணமுள்ள ஒரு தெய்வமாக வெளிப்பட்ட பரம்பொருளை சுப்ரம்மம் என அழைத்தனர்..
// தொல்குடி மரபு, உள்ளது உள்ளபடி முருகனின் பாத்திரத்தை விளக்குகிற பொழுது பார்ப்பனியம் இப்படிக்கதைக்கிறது; “இந்திரலோகத்தில் சாமிகள் கலவிகொள்கிற பொழுது விந்துத்துளி பூலோகம் நோக்கித் தெறிக்கிறது. தாமரையில் பட்டு கார்த்திக்கேயன் டெலிவரிசெய்யப்படுகிறான்.” இந்த அசிங்கத்திற்கும் தொல்குடிகளின் மரபிற்கும் என்ன சம்பந்தம்? இதில் சு பிரம்மம் என்பது இனிய குணமுள்ளதாக வெளிப்பட்ட பரம்பொருள் என்றால் என்ன சொல்ல வருகிறது பார்ப்பனியம்? //
சு பிரம்மம் என்ற பெயர் முருகனின் இனிய குணத்தைத்தான் குறிப்பிடுகிறது.. தொல்குடிமரபில் முருகனின் பிறப்பு எப்படி கூறப்படுகிறதோ..?! பரிபாடலில் வேறுவிதமாக கூறப்படுகிறது.. கந்த புராணத்தில் இன்னொரு விதமாக கூறப்படுகிறது.. முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உதித்தவன் என்பது தமிழர்களின் நம்பிக்கை.. சின்ன சிவன் என்பது சைவ நம்பிக்கை..
\\ சங்க இலக்கியங்கள் தமிழ் பண்பாட்டில் இல்லையா.. சொந்த ’இனத்தவனை’(?) தண்டிக்ககூடாது என்பது தமிழ் கலாச்சாரமா..?!\\
சொந்த இனத்தவனைத் தண்டிப்பது சரி. ஆனால் என்ன மயிருக்காக தேவர்களைக்காப்பதற்காக சொந்த இனத்தவனைத் தண்டிக்க வேண்டும்?
“அதிரப் பொருவது தும்பை-
போர்களத்துச் செருவென்றோர் மிக்கது வாகை” என்கிறது புறப்பொருள். இதில் இனக்குழுச் சண்டை விவரிக்கப்படுகிறது.
ஆனால் சூரனை வதம் செய்து தேவர்களை காக்க வேண்டிய தேவை தமிழனுக்கு எதற்கு? எந்த மாநிலத்திற்குப்போனாலும் அங்கு அசுரர்கள் அழிக்கப்பட்டனர்; தேவர்கள் காக்கப்பட்டனர் என்று சொல்வதற்கு வெட்கப்படவில்லையா? இல்லை இங்குள்ள மக்களை தன்மானமற்றவர்களாக கருதுகிறதா பார்ப்பனியம்?
புறப்பொருள் வெண்பா மாலையில் ஒரு பாடல் சொல்கிற செய்து இது; மடவரல் மகளிர்க்கும் மறமிகுத்தன்று என்று சொல்லவரும் பொழுது தலைவி தலைவன் இறக்கிற செய்தியைக் கேட்கிறாள். முலைப்பால் அருந்துகிற பாலகனை முலையில் இருந்து பிடுங்கி போருக்கு அனுப்புகிறாள் என்று ஒரு செய்தி. ஆனால் திண்ணைத்தூங்கிகளான தேவர்களை எப்பொழுதும் எவனாவது ஒருவன் காக்க வேண்டும். தேவனுக்கு ஒரு துன்பமும் நேராது. சமயத்தில் கடவுளே களத்தில் இறங்கி கையாலாகாத தேவர்களைக்காக்க வேண்டும். இது எவ்வளவு பெரிய மோசடி; இருக்கறவனெயெல்லாம் சுயமரியாதையற்றவனாக கருதுவதோடுமட்டுமில்லாமல் சுரண்டிக்கொழுக்கிறது பார்ப்பனியம். அடுத்தவன் எச்சித்தட்டு என்றாலும் பார்ப்பனியம் புடுங்கித் திங்க தயங்காத தேவர்களைப் பிரதிநிதிப்படுத்த முருகன் சுப்ரமணியாக வேண்டும்; சூரன் வதம் செய்யப்படவேண்டும்; திண்ணைத்தூங்கிகள் எல்லாம் முடிந்துபிறகு நெய் ஊற்றி யாகம் வளர்ப்பார்கள்; இதெல்லாம் மானங்கெட்ட பிழைப்பு; கலாச்சாரம் அன்று.
// சொந்த இனத்தவனைத் தண்டிப்பது சரி. ஆனால் என்ன மயிருக்காக தேவர்களைக்காப்பதற்காக சொந்த இனத்தவனைத் தண்டிக்க வேண்டும்? //
என்ன ம_ருக்கு என்பதை பின்னால் பார்ப்போம்..
// “அதிரப் பொருவது தும்பை-
போர்களத்துச் செருவென்றோர் மிக்கது வாகை” என்கிறது புறப்பொருள். இதில் இனக்குழுச் சண்டை விவரிக்கப்படுகிறது.//
சரி, அதற்கென்ன..?
// ஆனால் சூரனை வதம் செய்து தேவர்களை காக்க வேண்டிய தேவை தமிழனுக்கு எதற்கு? //
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் – தொல்காப்பியம் அகத்திணையியல்
வேந்தன் (இந்திரன்), வருணன் மேய என்று கூறுவதன் பொருள் என்னவென்றால் இவர்களெல்லாம் ஸ்டெப்பிப் புல்வெளிகளில் மேயவில்லை, முறையே மருதம், நெய்தல் நிலங்களை மேவும் தெய்வங்கள் என்பதே.. தமிழர்களால் வழிபடப்பட்ட இவர்களைக் காக்க முருகன் சென்றால் தமிழருக்கு என்ன மறுப்பு இருக்கக்கூடும்..?!
// எந்த மாநிலத்திற்குப்போனாலும் அங்கு அசுரர்கள் அழிக்கப்பட்டனர்; தேவர்கள் காக்கப்பட்டனர் என்று சொல்வதற்கு வெட்கப்படவில்லையா? இல்லை இங்குள்ள மக்களை தன்மானமற்றவர்களாக கருதுகிறதா பார்ப்பனியம்? //
புராணத்தை சொந்த புராணமாகப் பார்த்தால்தால்தான் தன்மானம் வரும் என்று பெரியார் நினைத்தார்.. பெரும்பாலானோர்க்கு இது போன்ற குழப்பங்கள் இல்லை..
// புறப்பொருள் வெண்பா மாலையில் ஒரு பாடல் சொல்கிற செய்து இது; மடவரல் மகளிர்க்கும் மறமிகுத்தன்று என்று சொல்லவரும் பொழுது தலைவி தலைவன் இறக்கிற செய்தியைக் கேட்கிறாள். முலைப்பால் அருந்துகிற பாலகனை முலையில் இருந்து பிடுங்கி போருக்கு அனுப்புகிறாள் என்று ஒரு செய்தி. //
இது தமிழரின் வீரம்.. நன்று..
// ஆனால் திண்ணைத்தூங்கிகளான தேவர்களை எப்பொழுதும் எவனாவது ஒருவன் காக்க வேண்டும். தேவனுக்கு ஒரு துன்பமும் நேராது. சமயத்தில் கடவுளே களத்தில் இறங்கி கையாலாகாத தேவர்களைக்காக்க வேண்டும். இது எவ்வளவு பெரிய மோசடி; //
இந்திரனை, வருணனை, சூரியனை, அனலோனை திண்ணைத்தூங்கிகள், கையாலாகதவர்கள் என்று தமிழர்கள் எண்ணியிருந்தால் ஏன் வணங்கினார்கள்..?!
// இருக்கறவனெயெல்லாம் சுயமரியாதையற்றவனாக கருதுவதோடுமட்டுமில்லாமல் சுரண்டிக்கொழுக்கிறது பார்ப்பனியம். அடுத்தவன் எச்சித்தட்டு என்றாலும் பார்ப்பனியம் புடுங்கித் திங்க தயங்காத தேவர்களைப் பிரதிநிதிப்படுத்த முருகன் சுப்ரமணியாக வேண்டும்; சூரன் வதம் செய்யப்படவேண்டும்; //
முருகன் சுப்ரமணியாகும் முன்பே சூரர் தண்டிக்கப்பட்டுவிட்டாரே என்ன செய்வது..
//திண்ணைத்தூங்கிகள் எல்லாம் முடிந்துபிறகு நெய் ஊற்றி யாகம் வளர்ப்பார்கள்; இதெல்லாம் மானங்கெட்ட பிழைப்பு; கலாச்சாரம் அன்று. //
நன்று.. ஒன்றும் சொல்வதற்கில்லை..
\\ வேந்தன் (இந்திரன்), வருணன் மேய என்று கூறுவதன் பொருள் என்னவென்றால் இவர்களெல்லாம் ஸ்டெப்பிப் புல்வெளிகளில் மேயவில்லை, முறையே மருதம், நெய்தல் நிலங்களை மேவும் தெய்வங்கள் என்பதே.. தமிழர்களால் வழிபடப்பட்ட இவர்களைக் காக்க முருகன் சென்றால் தமிழருக்கு என்ன மறுப்பு இருக்கக்கூடும்..?!\\
மறை என்றாலே மறுக்கப்பட்டது என்பதுதான் பார்ப்பனீயத்தின் இயங்குதளம். கடவுளை வேதத்தை மக்களுக்கு மறுத்துவிட்டு மக்கள் என்ன மறுப்பு தெரிவிக்கக் கூடும் என்று கேட்பது பார்ப்பனியத்தின் இழிந்த நிலையாகும். ‘வன்புணர்வு செய்தவனே கட்டுடா தாலியை’ என்று சொல்கிற எதேச்சதிகாரத்திற்கு ஒப்பானது.
இதில் வைதீகத்தாக்குதலில் சிறுதெய்வங்களே சின்னபின்னமாகி சீரழிந்துவிட்ட பிறகு மக்கள் எம்மாத்திரம்? எழுதப்பட்டதெல்லாம் வரலாறு என்று ஆளும் வர்க்கமும் பார்ப்பனியமும் சொல்லத்தான் செய்யும். ஆனால் தன்மானும் சுயமரியாதையும் தான் தன் சொந்த வேர்களைத் தேடிச் செல்ல ஒருவனுக்கு நிணமாக இருக்கின்றன.
அரசும் புரட்சியும் நூலில் ஒரு வாசகம் இவ்வாறாக இருக்கும்; “ஆளும் வர்க்கம் மக்களை சனநாயகம் குறித்து அதிகம் கவலைப்படாதபடி வைத்திருக்கிறது என்று”
ஆனால் பார்ப்பனியமோ மக்களை சனநாயகம் குறித்து வெட்கப்படாதப்படி வைத்திருக்கிறது; அவ்வளவுதான். அதனால் தான் தமிழருக்கு என்ன மறுப்பு இருக்கக்கூடும் என்று கேட்கிற அம்பி போன்றவர்களிடம் மஹிசாசுரனைப் போற்றுவதில் என்னடா குற்றம்? என்று கேட்கிறது இப்பதிவு.
// மறை என்றாலே மறுக்கப்பட்டது என்பதுதான் பார்ப்பனீயத்தின் இயங்குதளம். கடவுளை வேதத்தை மக்களுக்கு மறுத்துவிட்டு மக்கள் என்ன மறுப்பு தெரிவிக்கக் கூடும் என்று கேட்பது பார்ப்பனியத்தின் இழிந்த நிலையாகும். ‘வன்புணர்வு செய்தவனே கட்டுடா தாலியை’ என்று சொல்கிற எதேச்சதிகாரத்திற்கு ஒப்பானது. //
தமிழர்கள் இந்திரனையும், வருணனையும் வணங்கிக் கொண்டிருந்ததற்கும் பின்னால் வந்ததாகக் கூறப்படும் பார்ப்பனியம்தான் காரணமா..?!
// அதனால் தான் தமிழருக்கு என்ன மறுப்பு இருக்கக்கூடும் என்று கேட்கிற அம்பி போன்றவர்களிடம் மஹிசாசுரனைப் போற்றுவதில் என்னடா குற்றம்? என்று கேட்கிறது இப்பதிவு.//
பெரியாருக்கு மாலை போட்டு சூடம் காட்டி துதி பாடும் போது மகிசாசுரனுக்கு செய்தால் மட்டும் என்ன வந்து விடப்போகிறது..?!
\\ புராணத்தை சொந்த புராணமாகப் பார்த்தால்தால்தான் தன்மானம் வரும் என்று பெரியார் நினைத்தார்.. பெரும்பாலானோர்க்கு இது போன்ற குழப்பங்கள் இல்லை..\\
சரஸ்வதி உன் நாவில் குடியிருக்கிறாள் என்றால் சலமும் மலமும் எங்கே போவாள்? என்று கேட்டார் பெரியார். இக்கேள்வியின் மூலமாக ஒருவனுக்கு வராதா தன்மானமா புராணத்தை சொந்தப் புராணமாக பார்க்கும்பொழுது வரப்போகிறது? எனவே பெரும்பாலானோர்க்கு புராணங்களை சொந்தப் புராணமாக பார்க்க வேண்டிய குழப்பங்கள் ஏதும் இல்லை.
\\ இந்திரனை, வருணனை, சூரியனை, அனலோனை திண்ணைத்தூங்கிகள், கையாலாகதவர்கள் என்று தமிழர்கள் எண்ணியிருந்தால் ஏன் வணங்கினார்கள்..?!\\
இதைத்தான் ‘காலந்தோறும் பார்ப்பனியம்’ என்கிறோம்.
2014இல் கூட தலித் சிறுவன் தண்ணீர் குடிக்க கோயிலுக்கு போனால் பார்ப்பானால் மண்டை உடைக்கப்படுகிறது என்றால் மக்கள் ஏன் இன்னும் பார்ப்பனியத்தை வணங்குகிறார்கள் என்பது நியாயமான கேள்வி. மேலேயே பதில் கூறியிருக்கிறேன்; மீண்டும் நினைவுபடுத்துவோம்;
“பார்ப்பனியம் மக்களை சனநாயகம் குறித்து வெட்கப்படாதப்படி வைத்திருக்கிறது”.
// சரஸ்வதி உன் நாவில் குடியிருக்கிறாள் என்றால் சலமும் மலமும் எங்கே போவாள்? என்று கேட்டார் பெரியார். இக்கேள்வியின் மூலமாக ஒருவனுக்கு வராதா தன்மானமா புராணத்தை சொந்தப் புராணமாக பார்க்கும்பொழுது வரப்போகிறது? எனவே பெரும்பாலானோர்க்கு புராணங்களை சொந்தப் புராணமாக பார்க்க வேண்டிய குழப்பங்கள் ஏதும் இல்லை.//
வீட்டிலேயே கக்கூசு வசதி இருந்த பெரியாருக்கு வேண்டுமானால் இது போன்ற தத்துவார்த்தக் கேள்விகள் எழலாம்.. சரஸ்வதி தேவிக்கு மல,சலம் வந்தால் (?) சொம்பை எடுத்துக் கொண்டு வெளியே போய்விட்டு வருவாள் என்று சாமானியர்களும் கூறியிருப்பார்கள்..!
// \\ இந்திரனை, வருணனை, சூரியனை, அனலோனை திண்ணைத்தூங்கிகள், கையாலாகதவர்கள் என்று தமிழர்கள் எண்ணியிருந்தால் ஏன் வணங்கினார்கள்..?!\\
இதைத்தான் ‘காலந்தோறும் பார்ப்பனியம்’ என்கிறோம்.
2014இல் கூட தலித் சிறுவன் தண்ணீர் குடிக்க கோயிலுக்கு போனால் பார்ப்பானால் மண்டை உடைக்கப்படுகிறது என்றால் மக்கள் ஏன் இன்னும் பார்ப்பனியத்தை வணங்குகிறார்கள் என்பது நியாயமான கேள்வி. மேலேயே பதில் கூறியிருக்கிறேன்; மீண்டும் நினைவுபடுத்துவோம்;
“பார்ப்பனியம் மக்களை சனநாயகம் குறித்து வெட்கப்படாதப்படி வைத்திருக்கிறது”. //
பார்ப்பான் சொல்லித்தான் தமிழர்கள் வணங்கினார்களா..?! அட கடவுளே..!
//சரஸ்வதி உன் நாவில் குடியிருக்கிறாள் என்றால் சலமும் மலமும் எங்கே போவாள்? என்று கேட்டார் பெரியார்.//
கொஞ்சம் கூட முதிர்ச்சியற்ற பேச்சு… சரஸ்வதி உன் நாவில் குடியிருக்கட்டும் என்றால், நாமகளின் அருளும் ஆசிகளும் உனக்கு துணையாக இருக்கட்டும் என்று பொருள். உன் நாவினால்(மதி நுட்பத்தால்) கற்றோர் சபைதனில் நீ சிறப்பெய்துவாய் என்று பொருள். மகாலட்சுமி என்றும் உன் இல்லத்தில் நிலைத்திருக்கட்டும் என்றால் என்ன அர்த்தம்.கல்வி, ஆரோக்கியம், உணவு போன்ற சகல செல்வங்களும் பெற்று உன் இல்லம் மகிழ்ச்சிகரமாக அமையட்டும் என்று அர்த்தம். இந்த எளிய உண்மை தெரியவில்லை என்றால் அறிவு எவ்வளவு புரையோடி போய் இருக்கிறது என்று பாருங்கள்.
ஒரு மனிதனின் அறிவிற்க்கும் நாவண்மைக்கும் சரஸ்வதியை காரணம் காட்டுவதைத்தான் பெரியார் கேலி செய்கிறார் இது எப்படி முதிர்ச்சியற்ற் பேச்சாகும் இந்து மத நம்பிக்கையை நகைச்சுவையுடன் கேலி செய்கிறார் அவ்வளவே…
ஆனாலும் இங்க ராமனை கேலி செய்யலாம் ,யேசுவை கஞ்சா அடிப்பவர் என்று சொல்லலாம்,இலாமையும் முகமதின் ஸ்பிலிட் பெர்சனாலிட்டி அல்லாவையும் கேலி செய்யவோ விமர்சிக்கவோ கூடாது அப்பிடி விமர்சித்தால் அதை வெளியிட மாட்டார்கள் அல்லது அதை தனி மனித விமரிசனம் என்பார்கள் சிவப்பு சட்டை போட்டுக்கொண்டு அல்லா எங்களை சாகடிக்க மாட்டாயா என்பார்கள் ….
அய்யா ஜோசப் உமக்கு மனநிலை சரியாத்தா இருக்கா.முசுலிம் எதிர்ப்பு மதவெறி நோய் முற்றிய நிலையில் நீர் முசுலிம்கள் முரடர்கள்,இசுலாமிய சட்டங்கள் காட்டுமிராண்டிதனமானவை பாகப்பிரிவினை சட்டங்கள் முட்டாள்தனமானவை என்றெல்லாம் பழைய பதிவுகளில் கழிஞ்சு _______ அதெல்லாம் வினவில் எப்படி வெளியிடப்பட்டுள்ளன என்று யோசிச்சு பாக்க மாட்டீரா.
பல பதிவுகள்ள நபிகள் நாயகம் அவர்களை மனநிலை பிறழ்ந்தவர் என்று அவதூறு சொல்லிருக்கீறு.ஏன் இந்த பின்னூட்டத்துல கூட அதையே வாந்தி எடுத்துருக்கீறு.இதெல்லாம் வெளியிடப்பட்டுள்ளன ஆனாலும் வினவு முசுலிம் ஆதரவு தளம் னு கொஞ்சம் கூட வெக்கமில்லாம பொய் சொல்றீரு.வினவு தோழர்கள் நியாயத்தின் பக்கம் நின்று எழுதுகிறார்கள்.பல பிரச்னைகளில் நியாயம் முசுலிம்கள் பக்கம் உள்ளது.அதைத்தான் வினவு கண்ணை மூடிக்கொண்டு முசுலிம்களை ஆதரிப்பதாக உம்மை போன்றோருக்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது..நல்ல மனநிலையில் இருந்தால் வினவின் நிலைப்பாட்டை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது.
இசுலாமிய மதத்தை கடுமையாக விமரிசிக்கும் கட்டுரைகள் பல வினவில் உள்ளன.தேடி படியும்.ஒரு பதிவில் ”வெங்காய மதம் ”என்று கூட எழுதி இருக்கிறார்கள்.அந்த பதிவுகளில் முசுலிம் சகோதரர்கள் பதிலளிக்கும் விவாதங்களையும் படித்து பாரும்.நேர்மையாக குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் பதில் சொல்லியிருப்பார்கள்.இந்துவை,கிருத்துவத்தை,விமரிசித்தாயா என்று கேட்கும் அற்ப புத்தி அவர்களிடம் இருக்காது.
// பதிவுகள்ள நபிகள் நாயகம் அவர்களை மனநிலை பிறழ்ந்தவர் என்று அவதூறு சொல்லிருக்கீறு.ஏன் இந்த பின்னூட்டத்துல கூட அதையே வாந்தி எடுத்துருக்கீறு.இதெல்லாம் //நபி முகமதை மன நிலை பிறழ்ந்தவர் என்று சொன்னதற்க்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் உங்களிடம் உங்கள் மனநிலை சார்ந்து பேசுவது அவசியமாக இருப்பதால் கிட்லர் என்ற சர்வாதிகாரி எத்தனையோ யூதர்களை கொன்றொழித்தானாம் அவனை இன்றும் சில பேர்கள் மதிக்கிறார்களாம் அது போல முகமது நபியும் பல யூதர்களையும் சிலை வழிபாடு செய்த மனிதர்கலையும் அல்லாவின் பேரால் கொன்றார் என்று இசுலாமிய சரித்திரம் சொல்லுவாதால் முகமதுவும் அல்லாவும் கிட்லரை விட மன முதிர்ச்சி அடைந்தவர்கள் என்று சொல்லி மன்னிப்பு கோருகிறேன்..
\\பார்ப்பான் சீனாவுக்கு போனாலும் அசுரர்களும் தேவர்களும் கூடவே போவார்கள்.. ஆனால் சீனர்கள் தாங்கள்தான் அசுரர்கள் என்று நம்பிக்கொள்வார்களா என்பது சந்தேகமே..!\\
சந்தேகம் வருகிறவரின் பெயரிலே அம்பி இருக்கலாம். ஆனால் சீனர்கள் தங்களை அசுரர்கள் என்று கருதிக்கொள்வது மட்டும் சந்தேகமாம். இது கேலிக்கூத்து அல்ல. நூற்றாண்டு அவலம். மிகவும் கேடாக நசுக்கப்பட்ட மக்களின் முன்னோர்கள் பார்ப்பான்களுக்கு அசுரர் என்றால் இதைமுறியடிக்க அசுரர்கள் மீட்டெடுக்கப்படுவார்கள். பாட்டி கதை கூட எங்களுக்கு பார்ப்பனியத்தால் நஞ்சாக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்குத் தேவை புதிய கலாச்சாரம்! புதிய கலாச்சாரத்தில் சந்தேகங்கள் தீர்க்கப்படும். ஆனால் அம்பிகள் என்ற பெயரில் அங்கு யாரும் இருக்க மாட்டர். அது அசூரர்களான தொழிலாளிகளின் உலகம் அது.
// மிகவும் கேடாக நசுக்கப்பட்ட மக்களின் முன்னோர்கள் பார்ப்பான்களுக்கு அசுரர் என்றால் இதைமுறியடிக்க அசுரர்கள் மீட்டெடுக்கப்படுவார்கள். //
அசுரர்கள் எல்லாம் நசுக்கப்பட்ட மக்களின் முன்னோர்கள் என்று பார்ப்பான்கள் உங்களிடம் கூறுகிறார்களா..?! நீங்களாகவே உங்களை அசுர வாரிசுகளாக நினைத்துக் கொண்டு எல்லா அசுரர்களையும் மீட்டெடுக்க முயன்றால் ஃபிரான்கென்ஸ்டீன் போன்ற வகையறாக்கள்தான் நமக்கு தலைவர்களாக வாய்ப்பார்கள்..!
\\அசுரர்கள் எல்லாம் நசுக்கப்பட்ட மக்களின் முன்னோர்கள் என்று பார்ப்பான்கள் உங்களிடம் கூறுகிறார்களா..?!\\
கூறுவது மட்டுமில்லை; அழித்துவிட்டேன் என்று விழா எடுக்கிறார்கள். இத்தகைய நயவஞ்சமும் சூழ்ச்சியும் வக்கிரமும் பார்ப்பனியத்திற்கு மட்டுமே உண்டு. மகிசாசுரன், சூரன், மாபலி, சுமாலி, நரகாசுரன், பேதை சூர்ப்பனகை, மாவீரன் இராவணன் என்று இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வரலாறு நெடுகிலும் நீச பாசை பேசுகிற தஸ்யுக்கள் என்றும் சண்டாளர்கள் என்றும் மிலேச்சர்கள் என்றும் ராட்சதர்கள் என்றும் பலவாறாக இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
\\நீங்களாகவே உங்களை அசுர வாரிசுகளாக நினைத்துக் கொண்டு எல்லா அசுரர்களையும் மீட்டெடுக்க முயன்றால் ஃபிரான்கென்ஸ்டீன் போன்ற வகையறாக்கள்தான் நமக்கு தலைவர்களாக வாய்ப்பார்கள்..!\\
அடிமைகளுக்கும் அம்பிகளுக்கும் தான் தலைவர்கள் தேவை. மக்களுக்கு தலைவர்கள் தேவையில்லை. ஏனெனில் மக்களே தலைவர்கள்! போராடுவதற்கு தலைமைச் சித்தாந்தம் தான் தேவையேயொழிய தலைவர் அல்ல! பார்ப்பனியத்தை வேரொடு பிடுங்குவதும் ஏகாதிபத்தியத்தை அழிப்பதும் தலைமைச் சித்தாந்தத்தின் இருவேறு நிகழ்ச்சிநிரல்கள் அல்ல; ஒன்றுதான்.
// கூறுவது மட்டுமில்லை; அழித்துவிட்டேன் என்று விழா எடுக்கிறார்கள். இத்தகைய நயவஞ்சமும் சூழ்ச்சியும் வக்கிரமும் பார்ப்பனியத்திற்கு மட்டுமே உண்டு. மகிசாசுரன், சூரன், மாபலி, சுமாலி, நரகாசுரன், பேதை சூர்ப்பனகை, மாவீரன் இராவணன் என்று இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வரலாறு நெடுகிலும் நீச பாசை பேசுகிற தஸ்யுக்கள் என்றும் சண்டாளர்கள் என்றும் மிலேச்சர்கள் என்றும் ராட்சதர்கள் என்றும் பலவாறாக இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர். //
வேதங்கள் புராணங்களில் மேற்படி ராட்சதர்கள்தான் அசுரர்களாக குறிப்பிடப்படுகிறார்கள்.. தஸ்யூக்கள், சண்டாளர்கள் எல்லாம் அசுரர்கள் என்று குறிபிடப்பட்டார்கள் என்பதெல்லாம் உங்கள் கற்பனை..
//அடிமைகளுக்கும் அம்பிகளுக்கும் தான் தலைவர்கள் தேவை. மக்களுக்கு தலைவர்கள் தேவையில்லை. ஏனெனில் மக்களே தலைவர்கள்! போராடுவதற்கு தலைமைச் சித்தாந்தம் தான் தேவையேயொழிய தலைவர் அல்ல! பார்ப்பனியத்தை வேரொடு பிடுங்குவதும் ஏகாதிபத்தியத்தை அழிப்பதும் தலைமைச் சித்தாந்தத்தின் இருவேறு நிகழ்ச்சிநிரல்கள் அல்ல; ஒன்றுதான்.//
பகுத்தறிவின் உச்சத்தை அடைந்துவிட்ட நீங்கள் இப்போது வானத்தில் ஏறி பறக்கவும் தொடங்கிவிட்டீர்கள்..
அம்பிக்கும் ,Rebecca Mary க்கும் என் கடுமையான கண்டனங்கள் !
இக் கட்டுரையில் உள்ள விவாத கருபொருலான
“டெல்லி பல்கலைகழக மாணவர்கள் மஹிசாசுரன் வீரமரண நினைவேந்தல் கூட்டத்தில்ஆர் .எஸ்.எஸ் – பா.ஜ.க மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியினர் கலவரம் செய்து விழாவை சீர்குலைத்துள்ளமைக்கு”
ஏதும் கண்டனம் தெரிவிக்காமல் விவாதம் செய்து கட்டுரை கருபொருளை திசை திருப்பி விவாதம் செய்துகொண்டு உள்ள “சரஸ்வதி உன் நாவில் குடியிருக்கும் அதிமேதாவிக்கும்”[அம்பிக்கும்] ,அவருக்கு ஜால்ரா போடும் பார்பன ஆதரவாளருக்கும் [Rebecca Mary] என் கடுமையான கண்டனங்கள்!
நீர் இருவரும் இவ் விவாதத்தை திசை திருப்புவதன் மூலம் ஆர் .எஸ்.எஸ் – பா.ஜ.க மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியினர் கலவரம் செய்து மஹிசாசுரன் வீரமரண நினைவேந்தல் விழாவை சீர்குலைத்துள்ளமைக்கு ஆதரவு அளிக்கின்றிர்கள் அப்படி தானே ?
//திருமுருகாற்றின் பாடல் இணைக்குறள் ஆசிரியப்பாவாகும்//
இது தவறான கருத்து மட்டும் இல்லாமல் நகைப்புக்குறியதுமாகும்.நெடுநல்வாடை நேரிசை ஆசிரியப்பா என்று கண்டுபிடித்த நீங்கள் திருமுருகு இணைக்குறள் ஆசிரியப்பா என்று கண்டுபிடித்த இலக்கண விதி என்ன? திருமுருகும் நேரிசை ஆசிரியப்பாவால் பாடப்பெற்றதுதான்.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று,ஈற்றயலடி முச்சீராயும் பிற அடிகள் நாற்சீராயும்வருவது நேரிசை ஆசிரியப்பா [ஈற்றயலடி-இறுதியடிக்கு முதலடி]
1.திருமுருகின் ஈற்றயலடி “இழுமென இழிதரும் அருவி” என்று முச்சீர் பெற்றும் ஏனைய அடிகள் நாற்சீராயும் வருவதை காண்க.
2.நெடுநல்வாடையில் ஈற்றயலடி முச்சீராய் “சிலரோடு திரிதரும் வேந்தன்” என்று இருக்க ஏனைய அடிகள் அளவடி பெற்று வருவதை காண்க [அளவடி-நான்கு சீர்]
ஆசிரியப்பாவின் இலக்கணம் பெற்று முதலடியும் கடைசியடியும் நாற்சீர் பெற்று இடையில் உள்ள அடிகள் இருசீர்[குறளடி]அடிகளாயும் முச்சீர்[சிந்தடி] அடிகளாயும் வருவது இணைக்குறள் ஆசிரியப்பா.
எனவே திருமுருகு தனித்து நிற்க அவசியம் இல்லை.
நகைப்பதற்கு முன் மு.இளநங்கையின் கட்டுரையை படித்துவிடவும். http://puthu.thinnai.com/?p=20166. நேரிசை ஆசிரியப்பாவாக கருதினால் வஞ்சியடி நிரவிய நேரிசை ஆசிரியப்பா என்று கருத வேண்டும். ஆனால் இது தவறு. ஏன் இணைக்குறள் ஆசிரியப்பா என்பதை முழுதாக முதலில் படிக்கவும்.
(break…)
கட்டுரையில்.. // நக்கீரர் இயற்றிய சங்க இலக்கிய ஆசிரியப்பாக்களும் நெடுநல்வாடையும் நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்த நிலையில் திருமுருகாற்றுப்படை மட்டும் இணைக்குறளாசிரியப்பாவில் அமைந்துள்ளது // என வருகிறது..
ஆனால் கட்டுரையில் பத்துப்பாட்டின் பாவகைப்பட்ட பட்டியலில் நெடுநல்வாடை விடுபட்டிருப்பது தற்செயலானதா என்று தெரியவில்லை..:
/// நேரிசை ஆசிரியப்பா – 6 (பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,
முல்லைப்பாட்டு,மலைபடுகடாம், குறிஞ்சிப்பாட்டு)
வஞ்சியடி விரவிய நேரிசை ஆசிரியப்பா – 1 (பொருநராற்றுப்படை)
இணைக்குறளாசிரியப்பா – 1 (திருமுருகாற்றுப்படை)
வஞ்சிப்பா – 2 (பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி)
என்று பொதுவாகப் பத்துப்பாட்டு யாப்பியலை அடையாளப்படுத்தலாம். ///
திருமுருகை இணைகுறள் ஆசிரியப்பாவாக கொள்ள கட்டுரையில் காட்டப்படும் எடுத்துக்காட்டு..:
”மார்பொடு விளங்கஒருகை
தாரொடு பொலியஒருகை (திரு.112-113)”
ஒருகை என்பதை தனியான சீராகக் கொண்டு இவ்வரிகளை முச்சீர் சிந்தடியுள்ளவையாகக் கொண்டால் இணைக்குறள் ஆசிரியப்பாவாகும் என்கிறது கட்டுரை..
இதையே நெடுநல்வாடையில்,
“’இன்னே வருகுவர் இன் துணையோர்’ என,
உகத்தவை மொழியவும்
தலைவியின் வருத்த மிகுதி
ஒல்லாள், மிகக் கலுழ்ந்து”
”ஒளிறு வாள் விழுப் புண் காணிய, புறம் போந்து,”
போன்ற வரிகள் அளவடிகள் இல்லை, எனவே நெடுநல்வாடையும் நேரிசை ஆசிரியப்பா அன்று இணைக்குறள் ஆசிரியப்பா என்று கூற இயலுமே..?!
இரண்டாவதாக, நக்கீர நாயனாரும் இணைக்குறள் ஆசிரியப்பாவில் சில பதிகங்கள் இயற்றினார் என்பதால், பெயர் குழப்பத்தால் திருமுருகும் அவருடையதாகத்தான் இருக்கும் என்று எப்படி கூறமுடியும்..?!
மூன்றாவதாக, சங்ககால திருமுருகையும் சைவ நூலாகக் கருதி சைவர்கள் அதனை 11-ம் திருமுறையில் சேர்க்கும் தர்க்கம், பாவகையை வைத்து அதில் சேர்க்க முயலும் தர்க்கத்தைவிட பொருத்தமாக இருக்கிறதே..?!
நான்காவதாக, பாடியவர் பெயர் 11-ம் திருமுறையின் பிற பதிகங்களில் வெறும் நக்கீரர் என்று இருக்க திருமுருகில் மட்டும் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் என்று தனிப்படுத்தி காட்டுகிறதே..?!
(over to தென்றல் & ராம்…)
@அம்பி,
சோற்றை பிசையும் போது தட்டுப்பட்டது என்று செங்கல்லை தூக்கி காட்டுகிறார்கள் அதாவது பரவாயில்லை என்றால் உடனே கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று கலாட்டா செய்கிறார்கள்.தமிழின் முதன்மையான ஆய்வாளர்கள் யாரும் திருமுருகை இணைக்குறள் ஆசிரியப்பா என்றும் சொல்லவில்லை அதை காரணம் காட்டி நக்கீர நாயனாரும் அவரும் ஒன்று என்றும் சொல்லவில்லை.
நெடுநல் வாடை ஏன் இணைக்குறள் ஆசிரியப்பா இல்லை என்ற தென்றலின் பதிலை அறிய நானும் ஆவலாக உள்ளேன்.
\\ சோற்றை பிசையும் போது தட்டுப்பட்டது என்று செங்கல்லை தூக்கி காட்டுகிறார்கள்\\
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக! என்று சொல்லும்போது மட்டும் உங்களுக்கு சோற்றிலே செங்கல் தெரியவில்லையா?
\\ அதாவது பரவாயில்லை என்றால் உடனே கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று கலாட்டா செய்கிறார்கள்.\\
பிறகு வள்ளிக்கு எப்படி நீதி கிடைக்கும்? ஆர் எஸ் எஸ் காலிகள் பொதுசிவில் சட்டம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் இந்துக்களின் தெய்வமாக திணிக்கப்படுகிற சுப்புணிக்கு தெய்வானை வேறு! மாறாக தமிழ் தொல்குடியின் முருகனுக்கு வள்ளி மட்டும்தான் வருகிறாள். ஆக கல்யாணத்தை நிறுத்தங்கள் என்பது மட்டும் கலகம் அல்ல; சுப்புணியை அபய ஹஸ்த முத்திரையோடு தூக்கிக்கொண்டு ஓடுங்கள் என்று சொல்வதும் தான்.
//அசுரர் குடி கெடுத்த ஐயா//
இந்தியாவில் உள்ள சில இனக்குழுக்களில் சில நம்பிக்கைகள் தொன்மம்மாக நிலவி வருகிறது.ஏகலைவனின் வம்சம் என்று சிலர் கருதுகிறார்கள்.கட்டைவிரல் இல்லாமல் அம்பு எய்யும் பயிற்சி அவர்களிடம் உள்ளது.மலையாளிகள் தங்களை மகாபலியின் வம்சம் என்று கருதுகிறார்கள்.இந்த பதிவின் கட்டுரை தலித்கள்தான் அசுரர்கள் என்ற உள்ளடக்கம் உள்ளது.
தமிழ்நாட்டில் நிலமை தலைகீழாக உள்ளது.இங்கே ஒடுக்கபட்ட பிரிவை சேர்ந்த பள்ளர்கள் தங்களை தேவேந்திர குலத்தவர்களாக தங்களை அடையாள படுத்துகிறார்கள்.சங்க இலக்கியங்களில் இந்திரன் மருதநில கடவுளாக குறிக்கப்படுகிறான்.இன்றும் வேளாண் குடிகளாக அறியப்படும் பள்ளர்களின் தேவேந்திர குல தொன்மம் எளிதில் புறக்கணிக்க கூடியதல்ல.
எந்த தேவேந்திரர்களை காக்க முருகன் எந்த அசுரர் குடியை கெடுத்தான் என்பது கருப்பு வெள்ளையாக பார்க்காமல் கவனமாக ஆராய கூடிய ஒன்று.கல்யாணத்தை நிறுத்தனுமா வேண்டாமா என்பது அடுத்ததாக முடிவெடுக்க வேண்டிய ஒன்று.
பதிவிற்கு இந்தப் பின்னூட்டம் பொருத்தமாக இருப்பதால் மறுமொழி தனியாக எழுதலாம். ஆனால் அதற்கு முன் அசுரர் குடிகெடுத்த ஐயா என்பதவன் பார்வையைத் தொட்டுச்செல்வதாக இப்பின்னூட்டம் இல்லை என்று கருதுகிறேன். வேதகாலத்தைப் பொறுத்தவரை அசுரர்கள் என்பவர்கள் சுரா பானம் தவிர்த்தவர்கள். தண்ணியடிக்காதவர்களும் கஞ்சா குடிக்காதவர்களும் இந்துப்பார்ப்பனியத்திற்கு அசுரர்களாகத் தெரிகின்றனர். ஒருவரை அசுரர் என்று குறிப்பிடுகிற இந்த வார்த்தையே பார்ப்பனிய இந்து மதத்தின் எதேச்சதிகாரத்தை எடுத்துக்காட்ட போதுமானது. இதுதவிர பின்னாளில் அசுரர் என்பதன் கீழ் பார்ப்பனரை எதிர்த்தவர் எல்லாம் கீழிருத்தப்பட்டனர் என்பதன் கலாச்சாரக் குறியீட்டையும் இவ்வார்த்தை சுட்டிக்காட்டுகிறது. இவ்விரண்டு கோணங்களையும் கவனமாக தவிர்க்கிறீர்கள். இதுவரை தாங்கள் ‘கட்டுரை சுட்டுகிறது’ என்று தான் சொல்கிறீர்களே தவிர பதிவு குறித்து தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை விளக்கவில்லை. இதன் நோக்கம் முருகன் அசுரனை அழித்தது தன்னளவில் சரிதான் என்ற பார்வையையே சுட்டிக்காட்டுகிறது. இது சரியா? தங்களது பார்வையை பதிவு செய்வது விவாதத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
பொய்யுக்கும் புரட்டிற்கும் ஒரு அளவுண்டு! ஏதோ நாரத கான சபாவிலே பங்கஜம், ங்கஜம், கஜம், ஜம், ம் என்று பிரிக்கிற தொடைதட்டிகளின் கலாச்சாரம் தான் தமிழ் என்று நினைத்துவிட்டார் போலும் அம்பி.
அம்பி சுட்டிக்காட்டுகிற வரிகள் அளவடிகள் தான். தமிழில் அலகிடுதல் வாய்பாடு படித்த ஒரு பள்ளி மாணவனுக்கு தெரியும் எது அளவடியாக வருமென்று!
“இன்னே வருகுவர் இன்துணை யோரென”
“உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து”
“ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து”
இம்மூன்று அடிகளுமே அளவடிகள் தான்! இதை மூன்று சீராக மாற்றவே முடியாது; நான்கிற்கு மேற்பட்டதாக பிரிக்கவும் முடியாது. ஏனெனில் மூன்று சீர்களாக இவ்வடிகளைத் தொகுத்தால் அவை கனிச்சீர் வாய்ப்பாட்டைப்பெறும். வஞ்சிஉரிச் சீர்களான கருவிளங்கனி, கூவிளங்கனி என்று ஆசிரியப்பாவில் வருமானால் அதை நாம் ‘அம்பியப்பா’ என்று தான் அழைக்க வேண்டுமே தவிர ஆசிரியப்பாவென்று அல்ல.
நான்கு சீரைத்தாண்டி எழுதுவது ஆசிரியப்பா அல்ல; எனவே மடக்கி மடக்கி சீர்களை எழுதுகிற நரித்தனத்தை அம்பி கைவிடவேண்டும்.
மேலும் தலைவியின் வருத்த மிகுதி நெடுநல்வாடையில் எந்த அடியில் வருகிறது என்று சொன்னால் தகும்? அப்படியொரு பாடல் வரி நெடுநல்வாடையில் கிடையாது. தலைப்பைபிடித்துக்கொண்டு தொங்குகிறாரா என்று தெரியவில்லை!
திருமுருகாற்றூப்படைக்கும் மேற்சொன்ன அலகிட்டு வாய்பாட்டை பயன்படுத்தி பாவகையை நோக்கித் தெளிக. சூரனை மயிலாகி மாற்றுகிற பார்ப்பனிய நைச்சியம் தமிழ் மொழிக்கு அவசியமில்லை!
// “இன்னே வருகுவர் இன்துணை யோரென”
“உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து”
“ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து”
இம்மூன்று அடிகளுமே அளவடிகள் தான்! இதை மூன்று சீராக மாற்றவே முடியாது; நான்கிற்கு மேற்பட்டதாக பிரிக்கவும் முடியாது. ஏனெனில் மூன்று சீர்களாக இவ்வடிகளைத் தொகுத்தால் அவை கனிச்சீர் வாய்ப்பாட்டைப்பெறும். வஞ்சிஉரிச் சீர்களான கருவிளங்கனி, கூவிளங்கனி என்று ஆசிரியப்பாவில் வருமானால் அதை நாம் ‘அம்பியப்பா’ என்று தான் அழைக்க வேண்டுமே தவிர ஆசிரியப்பாவென்று அல்ல. //
மூன்று சீராக யார் மாற்றச் சொன்னது.. ஆசிரியப்பாவில் 5 சீர் நெடிலடிகளை அளவடிகளாக மாற்ற வலிந்து மூவசைச் சீர்களை உருவாக்கி இதோ பார் அளவடி என்று அளப்பது யார்..?!
மேலே குறிப்பிட்ட அடிகளில் நீங்கள் உருவாக்கி வைத்துள்ள ”மிகக்கலுழ்ந்து”, ”புறம்போந்து” என்ற இரண்டு சீர்களையும் அசை பிரியுங்கள் பார்க்கலாம்.. நெடிலடியை அளவடியாக்க, வலுக்கட்டாயமாக மூவசைச்சீர்களை உருவாக்க முயன்று பங்கஜத்துக்கு அசை பிரித்தது போல் எதையாவது பண்ணி ஆசிரியப்பாவை கழிதலப்பா ஆக்கிவிடாதீர்..
// நான்கு சீரைத்தாண்டி எழுதுவது ஆசிரியப்பா அல்ல; எனவே மடக்கி மடக்கி சீர்களை எழுதுகிற நரித்தனத்தை அம்பி கைவிடவேண்டும்.//
ஆசிரியப்பாவின் இடையில் நாற்சீர் அளவடியல்லாத 5 சீர் நெடிலடி வரினும் அது ஆசிரியப்பாதான் சிங்கமே..
//மேலும் தலைவியின் வருத்த மிகுதி நெடுநல்வாடையில் எந்த அடியில் வருகிறது என்று சொன்னால் தகும்? அப்படியொரு பாடல் வரி நெடுநல்வாடையில் கிடையாது. தலைப்பைபிடித்துக்கொண்டு தொங்குகிறாரா என்று தெரியவில்லை!//
அளவடியின் நடுவில் தலைப்பை கொடுத்து வைத்திருந்ததை வெட்டி ஒட்டும்போது கவனிக்கவில்லை..
// திருமுருகாற்றூப்படைக்கும் மேற்சொன்ன அலகிட்டு வாய்பாட்டை பயன்படுத்தி பாவகையை நோக்கித் தெளிக. சூரனை மயிலாகி மாற்றுகிற பார்ப்பனிய நைச்சியம் தமிழ் மொழிக்கு அவசியமில்லை! //
தமிழ் மொழிக்கு எந்த நைச்சியம் தேவையில்லைதான்.. உங்களுக்கு தேவையாயிருக்கிறதே..:
மேற்படி கட்டுரையில் வரும் தர்க்கம்..: //மேற்குறிப்பிட்ட இரண்டு அடிகளிலும் ஒருகை என்ற சொல் அமைந்துள்ள நிலையில் அவற்றை முச்சீராகக் கொள்ளாமல் இரண்டு சீர்களாகக் கொண்டு ஒருகை என்பதைக் கூனாக எடுத்துக் கொண்ட நிலையில் ஆசிரியடியாக இவ்வடிகள் அமைகின்றன என்று புதுவிளக்கமும் தரலாம். சோ.ந.கந்தசாமி இவ்வடிகளை இருசீராகக் கொண்டால் வஞ்சியடிகளாக விளங்கி வஞ்சியடி விரவிய நேரிசை ஆசிரியம் என்று கொள்ளவும் இடம் உள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் திருமுருகாற்றுப்படையில் வேறு எங்கும் வஞ்சியடிகள் பயிலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.// ஆனால் அதில் வேறு எங்கும் சிந்தடிகள் மட்டும் வந்திருக்கிறதா என்று பார்த்துச் சொல்லவும்..
திருத்தம்..: நீங்கள் கூறும் ”அளவடியின்” நடுவில் தலைப்பை கொடுத்து வைத்திருந்ததை வெட்டி ஒட்டும்போது கவனிக்கவில்லை..
மூன்று சீர் வராது என்று சொல்லியவுடன் நெடுநல்வாடையை ஐந்துசீர் நெடிலடியாக காட்ட அம்பிக்கு ஆசை. அதையும் பார்த்துவிடுவோம்.
ஐந்து சீர் நெடிலடி, கலித்துறையின் இலக்கணம். நெடுநல்வாடையோ நேரிசை ஆசிரியப்பா. மேலும் இதன் பாடலின் ஓசை அகவலோசையோகும். அளவடி அகவலோசை பெறும். நெடிலடி எப்படி அகவலோசை பெறும்? இட்டுக்கட்டி எழுதுவதற்கு இது பார்ப்பனர்களின் காம்போதியா ஹரிகாம்போதியா?
\\ ஆசிரியப்பாவின் இடையில் நாற்சீர் அளவடியல்லாத 5 சீர் நெடிலடி வரினும் அது ஆசிரியப்பாதான் சிங்கமே..\\
நான்கைத் தவிர்த்து அறுசீராக வரும் பா விருத்தப்பாவில் வருகிறது . தாழிசை, துறை, விருத்தம் இம்மூன்று பாவகைகளும் களப்பிரர் காலத்து கண்டுபிடிப்புகள். அறுசீர் வருகிற நெடிலடியை, அறுசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தப்பா என்று சொல்வது தான் பாவகை செய்யுள். ஆசிரிய விருத்தப்பாவும் ஆசிரியப்பாவும் ஒன்றல்ல. ஐந்து சீர் நெடிலடி கலித்துறை இலக்கணம் என்று மேலே பார்த்தோம். முழுச்சோற்றில் பூசணிக்காயைப் புதைப்பதுபோன்று நெடுநல்வாடை ஐந்து சீர் நெடிலடி ஆசிரியப்பா என்று கதைப்பதன் நோக்கம் என்ன?
// மூன்று சீர் வராது என்று சொல்லியவுடன் நெடுநல்வாடையை ஐந்துசீர் நெடிலடியாக காட்ட அம்பிக்கு ஆசை. அதையும் பார்த்துவிடுவோம். //
நெடுநல்வாடையின் முதல், ஈற்றடிகள் ஐந்து சீரிலா அமைந்திருக்கிறது..?! குறிப்பிட்ட அடி நெடிலடி என்று எடுத்துக்காட்டினால் நெடுநல்வாடை முழுவதுமே அப்படித்தான் என்று கூறுவதாக திரிப்பது ஏன்..?!
// ஐந்து சீர் நெடிலடி, கலித்துறையின் இலக்கணம். //
கலித்துறையில் எல்லா அடிகளும் நெடிலடிகளாக வரவேண்டும்..
// நெடுநல்வாடையோ நேரிசை ஆசிரியப்பா. //
திருமுருகு இணைக்குறள் ஆசிரியப்பா என்றால், நெடுநல்வாடையும் ஏன் இணைக்குறள் ஆசிரியப்பாவாக் இருக்கக்கூடாது என்பதில் தானே விவாதமே நடக்கிறது..
// அளவடி அகவலோசை பெறும். //
அளவடியில் துள்ளல் ஓசை கூடத்தான் வரும்.. எனவே ஓசையானது அடியில் எத்தனை சீர்கள் உள்ளன என்பதைப் பொருத்ததல்ல..
// முழுச்சோற்றில் பூசணிக்காயைப் புதைப்பதுபோன்று நெடுநல்வாடை ஐந்து சீர் நெடிலடி ஆசிரியப்பா என்று கதைப்பதன் நோக்கம் என்ன? //
“ஐந்து சீர் நெடிலடி ஆசிரியப்பா” என்று எங்கே கதைத்திருக்கிறேன்..?! திருமுருகு இணைக்குறள் ஆசிரியப்பா என்றால் நெடுநல்வாடையும் இணைக்குறள் ஆசிரியப்பாவாகாதா என்று தானே கேட்டிருக்கிறேன்..
\\திருமுருகு இணைக்குறள் ஆசிரியப்பா என்றால், நெடுநல்வாடையும் ஏன் இணைக்குறள் ஆசிரியப்பாவாக் இருக்கக்கூடாது என்பதில் தானே விவாதமே நடக்கிறது..\\
ஏன் இந்தப் பித்தலாட்டம்? நெடுநல்வாடையில் முச்சீர் அடிகள் வராது (நேரிசை ஆசியரிப்பாவிற்கான இலக்கணமான ஈற்று அயலடி தவிர) என்று ஆதாரத்துடன் நிருபித்தவுடன் ஐந்து சீர் நெடிலடி என்று கதைப்பதில் என்ன விவாத நேர்மை இருக்கமுடியும்? அழிச்சாட்டியத்திற்கும் ஒரு அளவு உண்டு.
\\நெடுநல்வாடையின் முதல், ஈற்றடிகள் ஐந்து சீரிலா அமைந்திருக்கிறது..?! குறிப்பிட்ட அடி நெடிலடி என்று எடுத்துக்காட்டினால் நெடுநல்வாடை முழுவதுமே அப்படித்தான் என்று கூறுவதாக திரிப்பது ஏன்..?!\\
திரிப்பது யார்? நேரிசை ஆசிரியப்பாவிற்கான இலக்கணம் என்ன? அளவடிகள் பெற்றுவந்து, ஈற்ற அயலடி மூச்சீர்களைப் பெறுவது நேரிசை ஆசிரியப்பா. நெடுநல்வாடையில் ஈற்று அயலடி தவிர எங்கு முச்சீர் வருகிறது?
அல்லது இணைக்குறள் ஆசிரியப்பாவின் இலக்கணத்தையாவது படிக்க வேண்டும். அப்படி யாராவது சுட்டிக்காட்டினால், முண்டாதட்டுத்தட்டுவதாக எழுதுவது. இத்தகைய கீழான அருவெறுக்கத்தக்க விவாத அணுகுமுறையை உங்களிடம் தான் காண்கிறேன்.
நேரிசை ஆசிரியப்பாவிற்கான அத்துனை இலக்கணங்களையும் பெற்றுவந்து, பாடலின் இடையே சிந்தடி அல்லது ஈரடி பெற்று வருமாயின் அது இணைக்குறள் ஆசிரியப்பா. இதில் கவனம் செலுத்தாமல் சம்பந்தேமேயில்லாமல் நெடுநல்வாடையைச் சுட்டிக்காட்டி நெடிலடி என்று பிதற்றுவது எதற்காக?
மேலும் நெடுநல்வாடை நெடிலடி அல்ல. மொழியைச் சிதைக்காதீர்கள் அய்யா. இதுஒன்றும் சுப்ரமணியாக மாற்ற பார்ப்பனியம் அல்ல.
அளவடி துள்ளலோசை பெறும் என்று யார் சொன்னது? ஆதாரம் தரமுடியுமா? கலித்தொகையும் பரிபாடலும் துள்ளலோசை பெறுகிறது. வண்ணம், தரவு, தாழிசை, சுரிதகம் என்று யாப்பருங்கலக்காரிகை இலக்கணம் பகிர்கிறது. நெடுநல்வாடை அகவற்பாக்கள் ஆனது.
எப்படியெல்லாம் விவாதத்தை திரிக்கிறீர்கள் என்று கவனித்துப்பாருங்கள். இச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
1.அசை சீர்களில் ஈரசைசீர் நான்கும் ஆசிரியப்பாவுக்கு உரியது[மாச்சீர் இரண்டு விளச்சீர் இரண்டு]
2.மூவசைச்சீர் எட்டில் காய்ச்சீர் நான்கும் வெண்பாவுக்கு உரியது.கனிச்சீர் நான்கும் வஞ்சிப்பாவுக்கு உரியது.
3.ஆசிரியப்பாவுக்கு உரியதால் ஈரசைச்சீர் நான்கும் ஆசிரிய உரிச்சீர் என்று வழங்கப்படுகிறது.
அம்பி சுட்டிக்காட்டிய “மிகக்கலுழ்ந்து” “புறம்போந்து” இரண்டும் மூவசைச்சீர்கள் எப்படி எனில்
மிகக்/கலுழ்ந்/து- நிரை/நிரை/நேர்- கருவிளங்காய்
புறம்/போந்/து-நிரை/நேர்/நேர்-புளிமாங்காய்
எனவே வெண்பாவுக்குறிய மூவசைச்சீர் வருவதை காணலாம்.
ஆசிரியப்பாவின் இலக்கணமான காய்ச்சீர்கள் நெடுநல்வாடையில் வருவதில் என்ன பிரச்சனை? நான்கடிகளை மூன்றாக சுருக்கினால் கனிச்சீர் வருமே! இதில் அம்பி முச்சீர்களைத் தான் சுட்டிக்காட்டினார் என்றால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நெடுநல்வாடை இணைக்குறள் ஆசிரியப்பாவல்ல என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் என்ன வேண்டும்? ஏன் இருவரும் மையமான கேள்விற்கு பதில் சொல்லாமல் காய்சீர் என்றும் நெடிலடி என்றும் சம்பந்தமில்லாமல் சுற்றுகிறீர்கள்? அல்லது சீர்களையும் அடிகளையும் குழப்புகிறீர்களா?
// ஏன் இந்தப் பித்தலாட்டம்? நெடுநல்வாடையில் முச்சீர் அடிகள் வராது (நேரிசை ஆசியரிப்பாவிற்கான இலக்கணமான ஈற்று அயலடி தவிர) என்று ஆதாரத்துடன் நிருபித்தவுடன் ஐந்து சீர் நெடிலடி என்று கதைப்பதில் என்ன விவாத நேர்மை இருக்கமுடியும்? அழிச்சாட்டியத்திற்கும் ஒரு அளவு உண்டு.//
நெடுநல்வாடையில் முச்சீர் ஈற்றயலடியைத் தவிர முச்சீர் அடிகள் வரவில்லை என்பதற்கு உங்களுடைய ஆதாரம் தேவையில்லை.. அப்படி யாரும் சொல்லவும் இல்லை.. ஆனால் ஒரு நெடிலடியை அளவடியாக்க மூவசைச்சீர்களை ”மிகக்கலுழ்ந்து”,”புறம்போந்து” என நீங்களே உருவாக்கி விடும்போது, அதே திருகுதாளத்தைச் செய்து நெடுநல்வாடையில் முச்சீர் சிந்தடியை உருவாக்க முடியாதா.. இதோ இப்படி.. :
”நல்நுதல் உலறிய சில்மெல் ஓதி” (138) என்ற அளவடி தங்கள் பாணியிலான சீர் உருவாக்கத்தில் ,
“நல்நுதல் உலறிய சில்மெலோதி” என்ற சிந்தடியாகாதா..?! ஆக்கக்கூடாது என்பதே சரி.. ஆனால் ”ஆசிரியப்பாவின் இலக்கணமான காய்ச்சீர்கள் நெடுநல்வாடையில் வருவதில் என்ன பிரச்சனை?” என்று திரு.ராமிடம் கேள்வி கேட்டு மண்ணைக் கவ்விக்கொண்டு நிற்கிறீர்கள்..
// நேரிசை ஆசிரியப்பாவிற்கான அத்துனை இலக்கணங்களையும் பெற்றுவந்து, பாடலின் இடையே சிந்தடி அல்லது ஈரடி பெற்று வருமாயின் அது இணைக்குறள் ஆசிரியப்பா. இதில் கவனம் செலுத்தாமல் சம்பந்தேமேயில்லாமல் நெடுநல்வாடையைச் சுட்டிக்காட்டி நெடிலடி என்று பிதற்றுவது எதற்காக? //
நெடுநல்வாடையை சுட்டிக்காட்டும்போதே மண்ணைத்தேடும் நீங்கள் திருமுருகில் என்ன செய்வீர்கள்..?! :
”காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே; ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ”
என்ற அடிகளில் ”ஒருமுகம்” வந்து ஒரு அடியை நெடிலடியாக்குகிறதே.. முன்னதாக ”ஒருகை” என்பதை ஒரு சீராகக் கொண்டதால் உங்களுக்கு சிந்தடி கிடைத்தது.. இப்போது ”ஒருமுகம்” சீராகி நெடிலடி கிடைக்கிறது.. என்ன செய்வீர்கள்..?!
ஒரே வழி இருக்கிறது.. ஒருமுகம், ஒருகை என்ற சீர்களை கூனாகக் கொள்ளவேண்டும்; நெடுநல்வாடையை நேரிசை ஆசிரியப்பாகவே விட்டுவிட்டு, திருமுருகை வஞ்சியடி விரவிய நேரிசை ஆசிரியப்பா என்று ஏற்று, நக்கீரர் பாட்டை நக்கீர நாயனாருக்கு பட்டா போட்டுக் கொடுக்கும் முயற்சியை கைவிடவேண்டும்..
\\நெடுநல்வாடையில் முச்சீர் ஈற்றயலடியைத் தவிர முச்சீர் அடிகள் வரவில்லை என்பதற்கு உங்களுடைய ஆதாரம் தேவையில்லை.. அப்படி யாரும் சொல்லவும் இல்லை..\\
யாரும் சொல்லேவில்லையா? இரண்டு நாட்களாக அழுகுணி ஆட்டம் ஆடவில்லையா? தெரிந்துவைத்துக்கொண்டுதான் இப்படியொரு திருவிளையாடலை மூன்று நாட்களாக நடத்திக்கொண்டிருக்கிறீரா? இத்தனைக்கும் பதிவு குறித்து விவாதிக்காமல் இருக்கிற பொழுது தமிழ் ஆர்வம் காரணமாகத்தான் கருத்துரிமையை சகித்துக்கொண்டு பதில் சொல்ல முயற்சித்தது. ஆனால் இப்பொழுது அப்படி யாரும் சொல்லவும் இல்லை, ஆதாரம் தேவையுமில்லை என்று சொல்கிற நக்கத்தனம் சகிக்க இயலாதவை. காறி துப்புதவற்கும் தகுதியற்ற பொய் இது.
\\ஆனால் ஒரு நெடிலடியை அளவடியாக்க மூவசைச்சீர்களை ”மிகக்கலுழ்ந்து”,”புறம்போந்து” என நீங்களே உருவாக்கி விடும்போது, அதே திருகுதாளத்தைச் செய்து நெடுநல்வாடையில் முச்சீர் சிந்தடியை உருவாக்க முடியாதா..\\
மூவசைச் சீர்களை வலிந்து உருவாக்குவதற்கு நானா பாட்டெழுதினேன்? பரிசிலித்துப் பார்ப்பதற்கு சொந்த புத்தி இல்லையா? எளிதாகப் படிப்பதற்கு சீர்களை பிரித்துப்போட்ட செய்யுளை எங்கோ காப்பி பேஸ்ட் செய்து இங்குவந்து போட்டுவிட்டு நெடிலடி என்று சாதித்தது தங்களது தற்குறித்தனம். உண்மை இப்படியிருக்க, நானே உருவாக்கினேன் என்று எழுதுவது என்ன வகையான நேர்மை? தவறை ஒத்துக்கொள்ள துணிவு வேண்டும் முதலில்.
\\இதோ இப்படி.. : ”நல்நுதல் உலறிய சில்மெல் ஓதி” (138) என்ற அளவடி தங்கள் பாணியிலான சீர் உருவாக்கத்தில் ,
“நல்நுதல் உலறிய சில்மெலோதி” என்ற சிந்தடியாகாதா..?! ஆக்கக்கூடாது என்பதே சரி..\\
கண்ணியம் இழந்து வெகுநேரம் ஆகிறது. “ஆக்கக் கூடாது என்பதே சரி” இன்று இப்பொழுது சொல்வது நார்னிசத்தைவிட கேவலமான ஒன்று. தனது பிம்பத்தை தானே மெச்சிக்கொள்ள ஒருவனுக்குக் கிடைத்த கடைசி போக்கிடம்.
\\ஆனால் ”ஆசிரியப்பாவின் இலக்கணமான காய்ச்சீர்கள் நெடுநல்வாடையில் வருவதில் என்ன பிரச்சனை?” என்று திரு.ராமிடம் கேள்வி கேட்டு மண்ணைக் கவ்விக்கொண்டு நிற்கிறீர்கள்..\\
நான் உரையாடிக்கொண்டிருப்பதோ கனிச்சீரைப் பற்றி. இராம் உரையாடுவதோ காய்ச்சீரைப்பற்றி! இது எதுவுமே தெரியாமல் மீசையில் மண் ஒட்டாத கதையாக நழுவுவது! இதில் வெற்றியை தனக்குத்தானே அறிவித்துக்கொள்வது! பார்த்து ரசிக்க பாதரசக் கண்ணாடி இருக்கிறது. வாழ்த்துக்களைப் பகிர்வோம் அம்பிக்கு!
\\என்ற அடிகளில் ”ஒருமுகம்” வந்து ஒரு அடியை நெடிலடியாக்குகிறதே.. முன்னதாக ”ஒருகை” என்பதை ஒரு சீராகக் கொண்டதால் உங்களுக்கு சிந்தடி கிடைத்தது.. இப்போது ”ஒருமுகம்” சீராகி நெடிலடி கிடைக்கிறது.. என்ன செய்வீர்கள்..?!\\
முறையாக தமிழ் படிக்க வலியுறுத்துவேன். மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று பெரியார் சொன்னதை வலியுறுத்துவேன்.
\\ஒரே வழி இருக்கிறது.. ஒருமுகம், ஒருகை என்ற சீர்களை கூனாகக் கொள்ளவேண்டும்; நெடுநல்வாடையை நேரிசை ஆசிரியப்பாகவே விட்டுவிட்டு, திருமுருகை வஞ்சியடி விரவிய நேரிசை ஆசிரியப்பா என்று ஏற்று, நக்கீரர் பாட்டை நக்கீர நாயனாருக்கு பட்டா போட்டுக் கொடுக்கும் முயற்சியை கைவிடவேண்டும்..\\
நேரிசை ஆசிரியப்பாவாக இருக்கிற நெடுநல் வாடையை நேரிசை ஆசிரியப்பாவாகவே வைக்க வேண்டுமாம். இல்லாதை இட்டுக்கட்டி எழுதிய குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லை. இதில் ஆர்டர் போடுறாரு அம்பி! திருமுருகை வஞ்சியடி நிரவிய நேரிசை ஆசிரியப்பாவென்று ஏற்க வேண்டுமாம்! அடுத்தவர் வாதத்தை திருடி தான் சொன்னது போல் சொல்வதற்கு சிறிதும் வெட்கப்படவில்லை. இதெல்லாம் இப்பொழுதுதான் அம்பியின் காதுக்கு வருகிறது போலும். இதில் நக்கீரர் பாட்டை நக்கீர நாயனாருக்கு கூடாது என்று தீர்ப்பு வேறு! விவாதிக்க திராணியற்றவனிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க இயலும்?
வாந்தி, பேதி எல்லாம் நின்றபின் மீண்டும் ஒருமுறை எல்லாவற்றையும் நிதானமாக படித்துப் பார்க்கவும்.. சுயமோகத்தையும் தாண்டி சுயவிமர்சனம் செய்து கொள்வது என்ற வழக்கம் ஏதாவது இருந்தால் இன்னும் நல்லது..
// அளவடி துள்ளலோசை பெறும் என்று யார் சொன்னது? ஆதாரம் தரமுடியுமா? //
கலிப்பாவில் எந்த அடி வருகிறது..?!
இரண்டாவதாக, மூன்றாவதாக, நான்கவாதாக என்று அம்பி போட்டிருக்கிற கேள்விகள் அம்பியின் நேர்மையற்ற விவாத அணுகுமுறையைக்காட்டுகிறது. நக்கீரர் குறித்த கேள்விகளுக்கு விளக்கத்துடன் மூல நூல்களை படிக்கவும், சீனிவாச அய்யங்கார், மயிலை சீனியின் இறையனார் கலம்பகம் குறித்த செய்திகள், என்று பல தரவுகளைக்காட்டியும் அதை பரிசீலிக்க மனமில்லாமல் ஓடிய தைரியசாலி! வையாபுரியின் ஆராய்ச்சியை சுட்டிக்காட்டுகிற பொழுது, விழிபிதுங்கி நான் நிற்பதாக எழுதிவிட்டு ஒடியவர்! இதுபோதாது என்று மயில் மண்டையில் கொத்தும் என்று சாபம் வேறு. நான் கழிந்துவைத்ததில் கால்வைக்க முடியாது என்று பிறரிடம் சொல்லிவிட்டு, இப்பொழுது எதற்காக அள்ளித் திங்கிறார் என்று தெரியவில்லை!
அம்பி முதலில் விவாத நேர்மையை நெஞ்சிலேந்துட்டும். முறைப்படி நான் கடைசியாக எழுதியாக நான்கு பின்னூட்ங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நான் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் முறையான பதில் வரவேண்டும். எதேச்சதிகாரத்துடன் நடந்துகொள்வதற்கு விவாதமேடை ஒன்றும் பார்ப்பனியமல்ல! ஆக முறையான அறிக்கையை என் கேள்விகளுக்குண்டான பதிலை விவாதத்தில் வைக்க வேண்டும்.
// நக்கீரர் குறித்த கேள்விகளுக்கு விளக்கத்துடன் மூல நூல்களை படிக்கவும், சீனிவாச அய்யங்கார், மயிலை சீனியின் இறையனார் கலம்பகம் குறித்த செய்திகள், என்று பல தரவுகளைக்காட்டியும் அதை பரிசீலிக்க மனமில்லாமல் ஓடிய தைரியசாலி! //
உங்களிடம் கேட்கும் கேள்விக்கு, போய் அதைப்படி இதைப்படி என்று முண்டாதட்டிக்கொண்டிருப்பதுதான் தைரியமா..?!
//வையாபுரியின் ஆராய்ச்சியை சுட்டிக்காட்டுகிற பொழுது, விழிபிதுங்கி நான் நிற்பதாக எழுதிவிட்டு ஒடியவர்!//
எங்கும் ஓடவில்லை.. எனக்கு பதில் சொல்லாமல் நீங்கள் நழுவிவிட்டு திரு.ராமிடம் விவாதத்தை தொடர்ந்தீர்கள், எனவே நானே வலிய இங்கும் உட்புகவேண்டியதாயிற்று.. வெட்டி பந்தாவுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.. வையாபுரியை விடாமல் பிடித்துக்கொண்டிருப்பது என்ன வகையான சந்தர்ப்பவாதம்..?! அதையும் பார்ப்போம்..
// இதுபோதாது என்று மயில் மண்டையில் கொத்தும் என்று சாபம் வேறு.//
எங்கெங்கோ போய் எதையெல்லாமோ எடுத்துக்கொண்டுவந்து இங்கு கொட்டுகிறீர்களே, முருகன் கோவிலுக்குப் போனாலாவது எப்படியாவது தங்களுக்கு தெளிவு பிறக்காதா என்ற அக்கறையில் அதைச் சொன்னேன்.. உங்களை சபிக்க முடியுமா.. சாயபு மந்திரித்து கொடுத்த தாயத்தை இன்னும் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா.. சூர், அணங்கு போன்ற பேய்களை வேறு பார்த்து வைத்திருக்கிறீர்கள்..
// நான் கழிந்துவைத்ததில் கால்வைக்க முடியாது என்று பிறரிடம் சொல்லிவிட்டு, இப்பொழுது எதற்காக அள்ளித் திங்கிறார் என்று தெரியவில்லை! //
எங்கிருந்து வந்ததோ அங்கேயே அதை அள்ளித் திணித்துக்கொண்டிருக்கிறேன்..
// அம்பி முதலில் விவாத நேர்மையை நெஞ்சிலேந்துட்டும். முறைப்படி நான் கடைசியாக எழுதியாக நான்கு பின்னூட்ங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நான் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் முறையான பதில் வரவேண்டும். //
பதிலைத்தான் கொடுத்துவிட்டு காத்திருக்கிறேன்.. ஏன் கடைசி நான்கு பின்னூட்டங்கள் என்கிறீர்கள், முதல் பின்னூட்டத்திலிருந்து மறுபடியும் ஆரம்பிக்க வேண்டியதுதானே..
// எதேச்சதிகாரத்துடன் நடந்துகொள்வதற்கு விவாதமேடை ஒன்றும் பார்ப்பனியமல்ல! //
இங்கே உலவிக்கொண்டிருக்கும் எதேச்சதிகாரி நீங்கள்தான்..
// ஆக முறையான அறிக்கையை என் கேள்விகளுக்குண்டான பதிலை விவாதத்தில் வைக்க வேண்டும்.//
அறிக்கையா.. இது என்ன சட்டமன்றமா, நாடாளுமன்றமா..?! இப்படியெல்லாம் மிரட்டப்படாது..
//2.திருமுருகாற்றின் கடைசி தொகுப்புப்பாடல்//
சிறப்புப்பாயிரம் பிற்காலத்தவர்களால் பெரும்பாலும் பாடப்படுகிறது.நூலின் ஆசிரியருக்கும் அதற்கும் பெரும்பாலும் தொடர்பில்லை.நூலின் காலத்தை கணிப்பதற்கு அதை ஒரு தரப்பாக கொள்ளமுடியாது.
//3.சங்க கால பாடல்களில் நான்//
தமிழ் சங்கத்தில் தலைமை புலவராய் இருந்த நக்கீரர் கயிலை பாதி காளாத்தி பாதி பாடியதாக திருவிளையாடல் புராணம் சொல்கிறது.அதை மறுப்பதற்காக வையாபுரியார் அந்த ஆய்வுகளை செய்கிறார்.திருமுருகாற்றுப்படையில் எத்தனை முறை வந்துள்ளது என்பதே முக்கியம்.நீங்கள் சுட்டி தந்துள்ள வையாபுரியின் கட்டுரைகள் அடங்கியுள்ள தொகுப்பில் திருமுருகாற்றுப்படை என்ற தலைப்பில் கட்டுரை உள்ளது அதில்
/முருகாற்றுப்படையியற்றிய நக்கீரர் மிக முற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது ஆற்றுப்படையின் நடையை நோக்கிய அளவிலே எளிதில் ஊகிக்கத்தகும்.இதன் நடை சங்கச் செய்யுட்களின் நடையோடு ஒத்துள்ளது//
என்று கூறுகிறார்.கவனித்து வாசிக்கவும்.மேலும்
நக்கீர தேவநாயனார் கி.பி.350-முருகாற்றுப்படை முதலிய 11ம் திருமுறைப் பிரபந்தங்கள் என்பதுதான் அவரின் கால பகுப்பு.
//4.களப்பிரர் காலத்தில் ஊன் உண்ணாமை//
நான் சொன்னது தேவார திருவாசக காலத்திற்கு பிறகு சிவன்,முருகன் முதலானோர் சைவம் ஆக்கப்பட்டுவிட்டனர்.ஆனால் திருமுருகின் முருகன் கிடா பலி ஏற்கிறார்.கண்ணப்ப நாயனார் அறம் எப்போதுமே விதிவிலக்கு.அவர் தன் மரபின் வழக்கப்படி பூஜை செய்தார் என்று யாரும் சொல்லவில்லை தன் மனம் விரும்பியபடி.
பி.கு.: என்னால் தங்களை போல் ஒரே நேரத்தில் அனைத்துக்கும் பதில் தர இயவில்லை.நேரமின்மை மற்றும் தட்டச்சு பயிற்சி இன்மையே காரணம்.பொறுத்துக்கொள்ளவும்.இன்று,நாளைக்குள் அனைத்துக்கும் பதில் தர முயல்கிறேன்.
\\ முருகாற்றுப்படையியற்றிய நக்கீரர் மிக முற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது ஆற்றுப்படையின் நடையை நோக்கிய அளவிலே எளிதில் ஊகிக்கத்தகும்.இதன் நடை சங்கச் செய்யுட்களின் நடையோடு ஒத்துள்ளது// என்று கூறுகிறார். கவனித்து வாசிக்கவும்\\
இதற்குபிற்பாடான பகுதியை என்ன காரணத்தாலோ அப்படியே நீக்கிவிட்டு என் பக்கம் கவனித்து வாசிக்கவும் என்று சொல்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்? வையாபுரிதான் திருமுருகு, கடைச் சங்கப் பாடலோடு தொடர்புடையதல்ல என்று அதிகமான ஆதாரங்களைத் தந்தவர். அதற்கு அவர் ஆரம்பித்த வரிகள் தான் அவை.
அதற்கு அடுத்தவரியில் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தீர்களா?
“எனினும், சில வழக்காறுகள் மயக்கத்தை உண்டுபண்ணுகின்றன.”
கடைசி முடிவுரையில் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தீர்களா? “முருகாற்றுப்படை எவ்வளவு பிற்பட்ட காலத்ததாயிருப்பினும், அது சைவ நன்மக்களுக்குப் பாராயண நூலாய் அமைந்துவிட்டது. சிறந்த ஓர் இலக்கியமாகவும் அதுகொள்ளற்குறியது.”
இதற்கிடையில் வையாபுரி பல்வேறு அம்சங்களில் திருமுருகாற்றுப்படையை ஆராய்கிறார். அதன் பகுதிகளை நாம் இவ்வாறு பட்டியலிடலாம்.
1. முடிமார் என்ற சொல்லைப்பற்றிய ஆராய்ச்சி; தொல்காப்பிய இலக்கணத்திற்கு மாறுபட்டு இருப்பது; சங்க இலக்கியத்திற்கு பொருந்தாது இருப்பது. இதைக் குறுந்தொகை, அகம், புறப்பாடல்களுடன் ஒப்பிடுகிறார்.
2. சங்ககால நக்கீரரோடு தொடர்புபடுத்துகிற பொழுது இவ்வாறு கூறுகிறார். “சங்க நூல் வழக்கோடு இங்ஙனம் மாறுபடுதலேயன்றி, நக்கீரர் இயற்றிய மற்றைச் சங்கச் செய்யுள் வழக்கொடும் மேற்காட்டிய பிரயோகங்கள் முரணுகின்றன [7]. இவற்றை நோக்கும்போது இவ்வாற்றுப்படையை இயற்றியவர் தொகை நூல்களிற் காணப்படுபவரும், நெடுநல்வாடையின் ஆசிரியருமாகிய நக்கீரரின் வேறாவரெனத் தோன்றுகிறது.”
3. நக்கீரர் மற்றும் ஆற்றுப்படை நக்கீரர் இருவரின் உலகமும் வேறு என்பதற்கு சான்றுகள் தருகிறார்.
4. சங்ககால நக்கீரரைப் பற்றி: “இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈதலே அரசன் மேற் கொள்ளவேண்டும் ஒழுக்கமென இவர் கருதினர் (புறம்.56).செல்வத்துப் பயன் ஈதலே (புறம்.189) என வற்புறுத்துகின்றார். இப் பரிசிலின் பொருட்டுச் சேர சோழ பாண்டிய நாடுகளிலும் குறுநில மன்னர் நகர்களிலும் வள்ளல்கள் ஊர்களிலும் சுற்றித்திரிந்து பாடியிருக்கின்றார். தெய்வங்களைக் கூட மக்கட் பிறப்புவரை இழித்துக் கொணர்ந்து, தாம் பரிசிலின் பொருட்டுப் பாடுகின்ற அரசர்களை ஒப்பிடற்குரிய பொருள்களாகி விடுகின்றனர். மகளிர் பொற்கலத்தில் ஏந்திக் கொடுக்கும் மதுவுண்டு களித்தலையே சிறந்த வாழ்வென அரசர்க்கு அறிவுறுத்தி ஆசி கூறுகின்றார்.”
5. ஆற்றுப்படை நக்கீரரைப்பற்றி (வையாபுரி): “இவ்வுலகத்திற்கும் ஆற்றுப்படை யியற்றிய நக்கீரர் மன வுலகத்திற்கும் பெரிதும் வேறுபாடுண்டு. மறந்தும் பொருட்பரிசில் அவ்வுலகில் இல்லை. அரசர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள் யாரும் அங்கில்லை. முத்தியாகிய பரிசிற்கே தாம் முயன்று பிறரையும் அவ்வழிச் செலுத்துகின்றார். ‘தாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்’ என்பதே இவரது கொள்கை.” இதற்கு ஆதாரமாக திருமுருகுப்பாடலையே (முருகு.223-249) கைகொள்கிறார். இதன் அடிப்படையில் கீழ்க்கண்ட கேள்விகளையும் கேட்கத் தவறவில்லை “இவர் முற்கூறிய நக்கீரரின் முற்றும் வேறாவர் என்பது சொல்லவும் வேண்டுமோ? தாம் வழிபடுந் தெய்வத்தோடு மக்கட் பிறப்பினனொருவனை இந் நக்கீரர் ஒப்புக்கூறுவரா என்பதையும், தெய்வபத்தியிற் சிறந்த இப்புலவர், ‘மதுவைப் பொற்கலத்தேந்தி மகளிர் ஊட்ட மகிழ்ச்சியோடு இனிது ஒழுகுவாயாக’ என ஓரரசனை வாழ்த்துவரா வென்பதையும் சிந்தித்தல் வேண்டும்.”
6. புராணச் செய்திகளையும், காலத்தையும் இவ்வாறு ஒப்பிடுகிறார்; “முருகாற்றுப்படை இயற்றப்பெற்றகாலத்தில் பௌராணிகச் செய்திகள் தமிழ் நாட்டிற் பரவிட்டன. சங்க காலத் தமிழ்வழக்காறுகளும் நன்குணரப்படவில்லையென்பதும் மேலே காட்டப்பட்டது. ஆதலால், சங்கப் புலவராகிய நக்கீரருக்குப் பல நூறாண்டுகளின்பின் அவர் பெயர் கொண்ட பிறரொருவரால் முருகாற்றுப்படை இயற்றப் பட்டதாகலாம். இவ்வாற்றுப்படை 11-ம் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளதும் இப்பிற்காலத்தையே ஆதரிக்கின்றது. இதன் ஆசிரியரை நக்கீர தேவநாயனார் என 11-ம் திருமுறை கூறும்.”
7. பத்துப்பாட்டு, தொகைநூல்கள் தொகுக்கப்பட்டவிதம் மற்றும் திருமுருகு வாழ்த்துப்பாடலாக அமைவதைச் சுட்டுகிறார்.
இவ்வளவு அம்சங்களில் திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியங்களுடன் மாறுபடுவதை வையாபுரி விவாதிக்கிற பொழுது இதில் ஏதும் தலையைக் கொடுக்காமல் அவர் சுட்டிய ஒரு தொடக்கவரியைச் சுட்டிக்காட்டி படித்துப்பார்க்கவும் என்று சொல்வது என்ன வகையான அரசியல்?
பின்குறிப்பு: நூல் ஆராய்ச்சி செய்கிற வையாபுரி, பார்ப்பனியத்திற்கு குழலூதவும் தயங்கவில்லை. சான்றாக ஐந்தாவது கருத்தில், வையாபுரி ‘கீழ்மக்களின் நாராசமான வழிபாட்டை’ ஆற்றுப்படை ஆசிரியர் புகழ்வதாகக் குறிப்பிடுகிறார். வாசகர்கள் இந்தப்பரிணாமத்தையும் சேர்த்து பரிசிலீக்க வேண்டும். ஏனெனில் நமது நோக்கம் அசுரர் புகழை மீட்டெடுப்பதே!
நான் வையாபுரி பிள்ளையின் காலபகுப்பை பற்றியும் சொன்னே அதையேன் பரிசீலிக்கவில்லை அதில் ஏதேனும் அரசியல் உள்ளதா? விவாதம் திருமுருகின் காலம் குறித்துதானே? வையாபுரி திருமுருகின் காலம் கி.பி.350 என குறிக்கிறார்.நீங்கள் கி.பி.7 என்கிறீர்கள்.
இவ்வளவு ஆதாரங்களை வைக்கும் வையாபுரியால் திருமுருகை கி.பி.350ஐ விட பின்னுக்கு தள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.வையாபுரி வெளிப்படையான சமஸ்கிருத ஆதரவாளர்.திராவிட கருத்தியலுக்கு எதிரான எண்ணம் உடையவர்.தமிழைவிட சமஸ்கிருதம் பழமையான மொழி என்று நிறுவ தமிழ் இலக்கியங்களின் காலத்தை மனம்போன போக்கில் பின்னுக்கு தள்ளினார்.சைவ வெறுப்பு அரசியலை காரணம் காட்டி சங்காலத்தை கி.பி.450க்கு தள்ளும் உங்களின் அரசியல்தான் எனக்கு புரியவில்லை.
வையாபுரியார் தனது ஆய்வுகளை வெளியிட்டு 50ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.இந்த காலகட்டத்தில் பல கல்வெட்டுகள்,செப்புகாசுகள்,எழுத்து பொறித்த சில்லுகள் கிடைத்துள்ளது.
மாங்குளத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன்[கி.மு.2ம்நூற்றாண்டு] கல்வெட்டு.பாண்டியன் பெருவழுதியின் பெயர் பொறித்த செப்புகாசுகள்[கி.மு.2நூற்றாண்டு]நூற்றுக்கணக்கான பெயர் பொறித்த சில்லுகள்.இந்த சில்லுகளின் காலம் கி.மு.300ல் இருந்து கி.பி.300 வரை என்று கணிக்கிறார் தொல்லியல் ஆய்வாளர் ஐராவம் மகாதேவன்.மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் எழுத்து பொறித்த சில்லுகள் மிக அதிக அளவில் குக்கிராமங்களும் கூட கிடைக்கிறது என்றும் சங்க காலத்தில் எழுத்தறிவு அனைத்து மக்களிடமும் நிலவி இருக்கலாம் என்று கருதுகிறார்.எனவே எந்த திராவிட கொம்பனாலும் சங்க காலத்தை கி.பி.450க்கு கொண்டு செல்லவும் முடியாது.களப்பிரர் காலத்துக்கு பிறகுதான் சங்க காலம் என்று புளுகவும் முடியாது.
\\ சிறப்புப்பாயிரம் பிற்காலத்தவர்களால் பெரும்பாலும் பாடப்படுகிறது.நூலின் ஆசிரியருக்கும் அதற்கும் பெரும்பாலும் தொடர்பில்லை.நூலின் காலத்தை கணிப்பதற்கு அதை ஒரு தரப்பாக கொள்ளமுடியாது.\\
தொகுப்பு பாடலைக் கூட விட்டுவிடுவோம். கலித்தொகையும் பரிபாடலும் சங்க இலக்கியங்கள் என்று காட்டுவதற்கு தொல்காப்பியத்தைச் சுட்டுகிறீர்கள் (இதற்குப் பதில் நேரம் கிடைக்கிற பொழுது எழுதுகிறேன்). இதே தொல்காப்பியம் திருமுருகைக் காட்டவேயில்லை என்று ஆதாரத்துடன் நான் காட்டியபொழுது நீங்கள் என்ன செய்தீர்கள்? கி,பி பத்திற்குப் பிற்பாடான நச்சானிர்க்கினியர் உரையைக் காட்டி இதில் என்ன சிக்கல் என்று கேட்டீர்கள்? இது என்ன வகையான நீதி? அப்பொழுது மட்டும் உங்களுக்கு பிற்காலத்தவர்கள் என்ற வாதம் புலப்படவில்லையா?
ஐயா,நான் சொன்னது ஆற்றுப்படை இலக்கணத்திற்கான நச்சினார்க்கியரின் உரையை.நீங்கள் சுட்டிக்காட்டிய தொல்காப்பிய பாடலுக்கான உரையிலும் நச்சினார்க்கினியர் வீடுபேறு ஆற்றுப்படையில் அடங்கும் என்றே விளக்குகிறார்.பழம் பாடல்களுக்கு உரையாசிரியர்களின் உரை மூலம்தானே விளக்க பெற முடியும்?
நீங்கள் சொன்னது சிறப்பு பாயிரத்தின் பாவினங்களை கொண்டு மூலநூலின் காலத்தை கணிப்பது.இரண்டும் எப்படி ஒன்றாகும்.
நான் சுட்டியுள்ள தொல்காப்பிய பாடலுக்கு உரையாசிரியர்களின் மறுப்புகள் இருந்தால் தாராளமாக கூறுங்கள்.என் நீதி எப்போதும் நடுநிலையானதுதான்.
தொல்காப்பிய பாட்டிலேயே இல்லாத வீடுபேறு, நச்சினாக்கினியர் உரையில் மட்டும் வருகிறதென்றால் நீங்கள் என்ன நியாயம் பொளக்கிறீர்கள்? அறம், பொருள், இன்பத்தை பற்றி பேசுவது தொல்காப்பியம். ஆய்வு முறையில் சமகாலத் தன்மை (Contemproariness) என்பது முக்கியமான அம்சம்! Modernity (புதுமை) என்பது வேறு! இரண்டுக்கும் கிஞ்சித்தும் தாங்கள் செவிமடுக்கவேயில்லை! தற்பொழுதும் நச்சினாக்கினியர் உரை குறித்து வாய்திறக்கவில்லை! பிறகு நடுநிலமை பற்றி பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது!
\\நீங்கள் சொன்னது சிறப்பு பாயிரத்தின் பாவினங்களை கொண்டு மூலநூலின் காலத்தை கணிப்பது.இரண்டும் எப்படி ஒன்றாகும்.\\
நச்சினாக்கினியாரின் திரிக்கப்பட்ட உரையை வைத்து திருமுருகு சங்க காலம் என்று திருப்திபட இயலுமா?
\\நான் சுட்டியுள்ள தொல்காப்பிய பாடலுக்கு உரையாசிரியர்களின் மறுப்புகள் இருந்தால் தாராளமாக கூறுங்கள்.\\
பழைய பின்னூட்டத்திலும் இப்படித்தான் எழுதி வைத்திருந்திருந்தீர்கள். முதன்மையான ஆய்வாளர்கள் யாரும் இப்படி சொல்லவில்லையென்று! உங்கள் வரையறைப்படி யாரெல்லாம் முதன்மையான ஆய்வாளர்கள்? அந்தக்காலத்தில் தமிழ், ஆங்கிலம், சட்டம், மருத்துவம் அனைத்தும் பார்ப்பனர்களிடமும் ஆதிக்க சாதிகளிடமும் இருந்தன. இன்றைக்கும் அதே நிலைமை தான். ஆனால் தமிழ் சீந்துவாரற்று சூத்திரர்களிடம் தள்ளிவிடப்பட்டிருக்கிறது. கடல் கடந்து போவது தோசம் என்று கருதிய கூட்டம் இன்றைக்கு நுனிநாக்கு ஆங்கிலத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ சொற்ப ஆய்வுத்தொகையில் பல தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். இளநங்கையின் கட்டுரையைக் கூட வாசிக்க முடியாத அளவிற்கு பார்ப்பனிய அடிமைத்தனம் இன்னும் மேலோங்கி வருவதைத்தான் விவாதத்திலும் காண்கிறேன். சமூக அறிவியற் புலத்தில் பல முதன்மையான ஆராய்ச்சிகளும் சீந்துவாரற்று கிடக்கின்றன. இதில் நச்சினார்க்கினியாரை விவாதத்திற்கு உட்படுத்தவே முடியாதென்றால் மெய்பொருள் காண்பது அறிவு என்பதெல்லாம் வெறும் பம்மாத்தா? போங்காட்டம் ஆடுகிறீர்கள்!
// ஆனால் தமிழ் சீந்துவாரற்று சூத்திரர்களிடம் தள்ளிவிடப்பட்டிருக்கிறது. //
தமிழை காப்பாற்ற வேண்டிய நிலையிலிருக்கும் ’சூத்திரர்களிடம்’ பார்ப்பன பூச்சாண்டி காட்டி, ஒரு சங்க இலக்கியத்தை தேவார கால இலக்கியம் என்று ஏமாற்றுவது என்ன ஆட்டம்..?!
// இளநங்கையின் கட்டுரையைக் கூட வாசிக்க முடியாத அளவிற்கு பார்ப்பனிய அடிமைத்தனம் இன்னும் மேலோங்கி வருவதைத்தான் விவாதத்திலும் காண்கிறேன். //
அந்த கட்டுரையை முதலில் நீங்கள் வாசித்தீர்களா..?! அந்த கட்டுரையின் தர்க்கம் குறித்து பின்னூட்டம் 21.1.1.2.1-ல் கேட்ட கேள்விக்கு ஏன் பதிலளிக்கவில்லை..?!
//ஆய்வு முறையில் சமகாலத் தன்மை//
வையாபுரியின் சொல் ஆராய்ச்சியைதான் சமகால தன்மை என்று சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.ஒரு உதாரணத்தை பார்ப்போம்.வள்ளுவர் தனது முதல் பாட்டை உலகு என்று முடிக்கிறார்.கம்பர்” உலகம் யாவையும்” என தனது முதல் செய்யுளை தொடங்குகிறார்.சேக்கிழார் “உலகெலாம் உணர்ந்து ஓதுவர்க்கு” என முதல் பாடலை பாடுகிறார்.மூவருடைய முதல் பாடலிலும் உலகு என்ற வார்த்தை வருகிறது மூவரும் சமகாலத்தவர் என்று சொல்லிவிடலாமா?
வையாபுரி பிள்ளையின் சொல் ஆராய்ச்சியை விரிவாக மறுக்கும் நூல் ஒன்றை வாசித்துள்ளேன்.மறதியாக உள்ளது.நூல் கிடைத்தால் பதிவு செய்கிறேன்.
//புதுமை//
திருமுருகுக்கு பாவினம் குறிப்பது புதுமை என்றால் தமிழ் இலக்கணத்தில் புதிய மாற்றம் செய்திருக்க வேண்டும் அல்லது பழய தமிழ் அறிஞர்கள் யாருக்கும் இந்த எளிய இலக்கணம் கூட தெரியாமல் இருக்க வேண்டும் அப்போதுதான் அது சாத்தியம்
//நச்சினார்க்கினியரின் திரிக்கப்பட்ட உரை//
நீங்கள் விதந்தோதும் வையாபுரியார் ஆய்வு கி.பி.350ஐ தாண்டாமல் நொண்டியடிக்கிறதே? அதற்கு என்ன பதில்? கி.பி 7க்கு எப்படி கொண்டு செல்ல போகிறீர்கள்
//யாரெல்லாம் முதன்மையான ஆய்வாளர்கள்//
சிந்து சமவெளி ஆய்வுக்கு கலையகம் கட்டுரை போதும் என்று நீங்கள் முடிவெடுத்து விடுகிறீர்கள்.உலகம் ரோமிலா தாப்பரை எதிர்பார்க்கிறது என்ன செய்வது?
தமிழின் காத்திரமான ஆய்வுகள் எல்லாம் கல்விதுறைக்கு வெளியில் இருந்துதான் வருகிறது.கல்வி துறை சார்ந்த ஆய்வுகளை வாசிப்பதை போன்ற வீண் வேலை எதுவும் இல்லை
//போங்காட்டம்//
எஸ்.வையாபுரி பிள்ளை,எஸ்.இராமசந்திரன் போன்ற சமஸ்கிருத ஆதரவாளர்களை உங்கள் தரப்புக்காக அழைத்து வருகிறீர்கள்.சமண,பவுத்த மதங்களை அரும்பாடுபட்டு ஆய்வு செய்த மயிலை சீனி.வெங்கடசாமி சைவ பற்றாளர் என்று ஒரே போடாக போடுகிறீர்கள்[நல்ல வேலையாக அவர் முன்பே இறந்து விட்டார்].தமிழ் தேசிய காப்பியம் இயற்றிய சமணமுனிவர் இளங்கோவடிகளும் உங்கள் கண்களுக்கு சைவ பற்றாளராக தெரிகிறார்.யார் ஆடுவது போங்காட்டம்?.
\\ வையாபுரியின் சொல் ஆராய்ச்சியைதான் சமகால தன்மை என்று சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.\\
வையாபுரியின் இலக்கணக்குறிப்புகள் சார்ந்த சொல் ஆராய்ச்சியை விரிவாக மறுக்கும் நூல் ஒன்றை வாசித்ததாக சொல்கிறீர்கள். நல்லது. பதிவு செய்யவும்.
உலகு குறித்து தாங்கள் சுட்டிகாட்டிய சொற்கள் சமகாலத்தன்மைக்கு சான்றானவையல்ல. இதில் நகைப்புதான் உள்ளதே ஒழிய ஆராய்ச்சிபாங்கு ஏதும் இல்லை. மாறாக திருமுருகை சமகாலத்தன்மையில் வைத்து கீழ்க்கண்டவாறு ஆராயலாம்.
————————————-
1. திருமுருகு பாடல் வரிகள் 91லிருந்து 100வரை, முருகனின் ஆறுமுகம் விளக்கப்படுகிறது. முருகனுக்கு ஆறுமுகம் எப்படி வந்தது? பிற சங்ககால இலக்கியங்களில் ஆறுமுகம் எங்குவருகிறது?
2. திருமுருகு பாடல் வரிகள் 110லிருந்து 120 வரை, முருகனின் 12கைகளைப் பற்றி பேசுகிறது. வேலன் வெறியாடல், முருகயர்தல் என்று புறப்பாடல் கூறுகிற பொழுது, வேறு எந்த பழமையான சங்க இலக்கிய நூல்களில் இந்தப் புராண புளுகுகள் பேசப்படுகின்றன?
3. “ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ”
இது முருகனின் பிறப்பைக் கூறும் மற்றொரு புராணப்புளுகு ஆகும். ஐவருள் ஒருவனான அக்னி, சிவனின் விந்தை கங்கையில் விடுகிறான் என்ற நாதாரித்தனமான கருத்து பேசப்படுகிறது. இது சங்க கால நூல்களில் உள்ளதா? இதற்கு அடுத்த வரி, அறுவர் பெண்களின் மகனாக கார்த்திக்கேயனைக் காட்டுகிறது. இந்த அசிங்கமும் தமிழர்கள் கண்டுபிடித்ததா?
திருமுருகாற்றுப்ப்டையில் வரும் மேற்கண்ட மூன்று குறிப்புகள் பாரத்தில் வரும் குமார சம்பவத்தை அப்படியே கூறுகிறது. பாரதத்தின் குமார சம்பவ காலம் கி,பி ஐந்தாம் நூற்றாண்டு. திருமுருகு தான் முதன்மையானது என்றால் ஒட்டுமொத்த புராணப்புளுகுகளை தமிழர்கள் தான் பார்ப்பனியத்திற்கு கற்றுக்கொடுத்தார்கள் என்றாகிறது. இப்படியொரு அபாண்டத்தை யார் செய்ய முடியும்? சமகாலத்தன்மையில் திருமுருகு அம்பலப்பட்டு போகிறதல்லவா? இதுதான் சமகாலத்தன்மையை ஆராயும் முறை.
சொற்களை வைத்து திருமுருகை பரிசீலிப்போம்.
“மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழையணி சிறப்பின் பழையோள் குழவி!”
1. இதில் மலைமகள் என்ற வார்த்தை திருமுருகுக்கு முன் பிறசங்ககால நூல்களில் எங்கு வருகிறது?
2. முருகன் எப்பொழுது எந்த இலக்கியங்களிலிருந்து பார்வதியின் மகனானான்?
3. முருகனுக்கு சிவன் தகப்பனாக்கப்பட்டது எப்பொழுது?
4. கொற்றவை எப்பொழுது சிவனின் மனைவியானாள்? இலக்கியச் சான்று என்ன?
5. திடிரென்று முருகன்-உமை-சிவன் பேமிலியாக்கப்பட்டது எப்படி?
இலக்கியங்களில் ஒரு தொடர்ச்சியே இல்லாமல் திருமுருகு மட்டும் இவ்விதம் கலந்துகட்டி அடிப்பது ஏன்?
வென் திரை பரப்பில் கடுசூர் கொன்ற
பைம்பூண் சேஎய் பயந்த மா மோட்டு
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு[பெரும்பாணாற்றுப்படை-457-459]
முருகன் சூரனை கொன்றதும் அவன் கொற்றவை மகன் என்பதும் கூறப்படுகிறது[சேஎய் பயந்த-முருகனை பெற்ற]
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்[பரிபாடல்-5-13]
சிவனின் மகன் முருகனாம்.
மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள்[பரி.5.11]
ஆறுமுகமும் பன்ணிரு கரமும் சொல்லப் படுகிறது.
முருகு முருகனை பாட்டுடை தலைவனாக கொண்டது எனவே முருகனை பற்றிய புராணங்களை விரிவாக பேசுகிறது.மாயா வாத புனைவுகள் அனைத்து தொல்குடிகளுக்கும் பொதுவான ஒன்று.எனவே முருகனை குறித்த புனைவுகள் தமிழ் மண்ணில் தோன்றி இருக்க வாய்ப்புகள் அதிகம்.இந்தியாவில் தமிழ் மண்ணில் மட்டும்தான் முருகன் முக்கிய கடவுளாக வணங்கப் படுகிறான்.அவனை வெளியில் இருந்து வந்த சமணனாக காட்டும் உங்கள் முயற்சி ஆதாரமற்றது.
பல் பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து[அக நானூறு-149.15-6]
இடைவிடாமல் விழா நடக்கும் திருப்பரங்குன்றத்தை பற்றி இந்த பாடல் சொல்கிறது.திருப்பரங் குன்றம் சமண தலம் என்றால் அகநானூறுக்கு முந்திய ஆதாரங்களை நீங்கள் தர வேண்டும்.
பிறவாயாக்கை பெரியோன் கோயிலும்
அறுமுக செவ்வேள ணிதிகழ் கோயிலும்[சிலம்பு 5 169-72]
சிலம்பு முருக வழிபாட்டை பற்றி பல இடங்களில் பேசுகிறது.சிலம்பின் காலம் சங்கம் மறுவிய காலம் ஆகிய கி.பி.2ம் நூற்றாண்டாக கருதப்படுகிறது.இதற்கு இரண்டு முக்கிய ஆதாரங்கள் உள்ளது பதிற்றுப் பத்து பாடிய பரணர் சேரன் செங்குட்டவன் கண்ணகிக்கு சிலை எடுத்த செய்தியை பதிவு செய்கிறார்.கண்ணகிக்கு சிலை எடுத்த விழாவில் கலந்து கொண்ட இலங்கை மன்னன் கயவாகுவின் காலம் மகா வம்ச ஆதாரப்படி கி.பி.2ம் நூற்றாண்டு.அவன் கண்ணகி வழிபாட்டை இலங்கையில் பரப்பினான் என்பது கூடுதல் செய்தி.
\\ முருகன் சூரனை கொன்றதும் அவன் கொற்றவை மகன் என்பதும் கூறப்படுகிறது[சேஎய் பயந்த-முருகனை பெற்ற\\
நற்றிணையில் வருகிற முருகனுக்கு, தாயைப் பெரும்பாணாற்றுப் படையில் தான் தேடுகிறீர்கள் என்றால் பார்ப்பனியம் எத்தகைய மூர்க்கமானது என்பது புரிகிறது. நற்றிணையிலேயே வள்ளி முருகனுக்கு மனைவியாக வந்துவிடுகிறாள். ஆனால் அங்கு குடும்பம் நடத்துகிற முருகனுக்கு தாயைக் காணவில்லை!
கொற்றவை அதிரை என்றும் சங்க காலப்பாடல்களில் கூறப்படுகிறாள். அதிரைக்கும் யாதொரு மகனும் கிடையாது.
கொற்றவை எப்படி முருகனுக்குத் தாயானாள்? என்கிற கேள்வியை அறிஞர்கள் விரிவாக ஆராய்ந்திருக்கின்றனர். இது பார்ப்பனியத்தின் கைங்கர்யம் என்பது தமிழர்களின் துணிபான முடிவு. இருவிதமான வாதங்கள் தங்கள் பார்வைக்கு:
1. கொற்றவை எவ்விதம் சமஸ்கிருதமயமாக்கப்பட்டாள் என்பதை “தொன்மமும் சங்ககால பெண்டிர் நிலைமையும்-பொ. மாதையன் கீற்று” என்ற கட்டுரை விளக்குகிறது. தாய்தெய்வ வழிபாட்டைக் கொண்ட தமிழர்கள் மீது, ஆணாதிக்க பார்ப்பனியம் திணிக்கப்படுகிற பொழுது எவ்வாறு கொற்றவை தாயக்கப்படுகிறாள் என்பதை மாதையன் இவ்விதம் விளக்குகிறார். “முருகன் கந்தனுடன் இணைக்கப்பட்ட நிலையில் உமையும் (பரி. 5:26, 8:126-128, திரு. 257), கந்தப்பிறப்பு முருகனுக்குக் கற்பிக்கப்பட்ட சூழலில் கார்த்திகைப் பெண்டிரும் (பரி. 5:25-54, 9:1-7) தாயராய்க் காட்டப்பட்டுள்ளனர். இவ்வாறு வடபுல மரபுவழி வந்த தாயருடன் திராவிடத் தெய்வமான கொற்றவையும் முருகனின் தாயாய்க் கற்பிக்கப்பட்டுள்ளாள்.”
வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற
பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத்
துணங்கையஞ் செல்வி (457-459)
எனத் துணங்கையஞ் செல்வியாகிய கொற்றவையை முருகனின் தாயாய்க் காட்டுகிறது பெரும்பாணாற்றுப்படை. முருகனைப் பெற்றெடுத்த வயிற்றை உடையவள் என முருகனை முன்னிறுத்திப் புகழப் படுவதே ஆண்வழிச் சமுதாயத்தை முன்னிறுத்துவதாக உள்ளது.”
2. தமிழர்களின் பண்பாடும் தத்துவமும்-வானமாமலை. முருக-ஸ்கந்த இணைப்பு, பக்கம் 7-35. இணையத்தில் இதை தரவிறக்க இயலும். (இதில் வானமாமலை, கொற்றவை முருகனின் தாய் எனக்காட்டி (இதே பெரும்பாணாற்றுப்படை பாடல் மூலமாக), உமையும் மலைமகளும் பார்ப்பனியத்திணிப்பு என்று காட்டியிருப்பார். வரைபடம் ஒன்றையும் நல்கியிருப்பார். இதில் தமிழர் கலாச்சாரத்தோடு, திருமுருகும், பரிபாடலும் எவ்விதம் வடபுலத்து மகாபாரத குமார சம்பவத்தை இணைக்கின்றன என்பதையும் காட்டியிருப்பார். படித்துப் பார்க்க.
ஆக இவ்வாதத்தில் இருந்து சங்க கால பாடல்களில் முருகு ஒரு கடவுளாகவும், கொற்றவை ஒரு கடவுளாகவும் தனித்தே இருக்க, பார்ப்பனியமே தாய்-மகன் உறவு கற்பிக்கிறது என்பது தெளிவாகிறது. ஆனால் உங்களைப்போன்றவர்கள் இதையெல்லாம் மறைத்துவிட்டு தமிழர்களின் கலாச்சாரமாக காட்டுகிறீர்கள். இது பார்ப்பனப் பாசமேயன்றி தமிழ் கலாச்சாரமன்று.
\\ காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்[பரிபாடல்-5-13]\\
வடமொழி புராணத்தில் காய்கடவுள் என்பதன் பொருள் அக்கினியைக் குறிக்கிறது. முருகன் அக்னியிலிருந்து பிறந்தவன் என்ற புராணப்புளுகை முன்ஒட்டி இவ்வரி வரிகிறது. இத்தகைய பிறப்பிற்கு தாயே கிடையாது ! (பார்க்க: தமிழர் பண்பாடும் தத்துவமும், வானமாமலை, பகுதி-2, பரிபாடலில் முருக வணக்கம், பக்கம்-35) குறிப்பாக இப்பாடல் திருப்பரங்குன்றத்தில் வெளியே நடக்கும் வெறியாட்டுப் பாடலாக வருகிறது. கடுவன் இளவெயினார் தமிழ் மக்களின் வெறியாட்டுப்பாடலை தாழ்த்தி முருகனின் செவ்வேள் பிறப்பை அதற்கு அடுத்த பாடலின் மூலமாக வைக்கிறார். இது பார்ப்பனிய அசிங்கத்தை அப்படியே கழிந்து வைப்பதாகும். மகாபாரத குமார சம்பவம் பரிபாடலில் முருகன் பிறப்பாக கூறப்படுகிறது. இதை வாசகர்கள் முன்வைப்போம். தமிழர் கலாச்சாரமான வெறியாட்டுதலில் இருந்து விலகி பார்ப்பனியப்புளுகளை எவ்விதம் வைக்கின்றன என்பதை எவர் ஒருவரும் பரிசீலிக்கட்டும்.
“ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய, 25
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஓரு வரம் கொண்டு ———————————————— 54 முடிய”
இப்பாடலுக்கான விளக்கம்: தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தில் இருந்து (http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/IV_Year/matt14/html/mat14006sp2a.htm),
“பெரும் வெற்றிச் சிறப்பினை உடைய செவ்வேளே! பிரமன் வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட பூமியாகிய தேரின் பாகனாகிச் செலுத்தினான். சிவன் அத்தேரில் ஏறினான். வாசுகி என்ற பாம்பை நாணாகவும் மேருமலையை வில்லாகவும் கொண்டான். வெள்ளி, பொன், இரும்பு என்ற மூன்று வகையாக அமைந்த அரக்கர் அரண்களை அம்பு எய்து எரித்தழித்தான்.
தக்கன் தேவர்களுக்குச் செய்த வேள்வியில் இடப்பட்ட அவிப்பாகத்தை உண்டான் சிவன். பின் உமையுடன் கூடிக் காமம் நுகரும் திருமண நாளில் இந்திரன் வரம் வேண்டியபடி ஒருநாளுடன் புணர்ச்சியைத் தவிர்த்தான். புணர்ச்சியில் தோன்றிய கருவைச் சிதைக்க இந்திரன் வேண்டியதால் வாய்மை தவறாத சிவன் ஏழுலகங்களும் வியக்கும் வண்ணம் கருவைப் பல துண்டங்களாகச் சிதைத்து இந்திரனிடம் கொடுத்தான். உமையின் வயிற்றில் தோன்றிய, குழந்தை உருவம் அமைவதற்கு உரிய, சிதைக்கப்பட்ட அந்தக் கரு ஆறுமுகனாகி அமரர் படைக்குத் தலைவனாகும் என்பதை உணர்ந்த ஏழு முனிவர்களும் வாங்கிக்கொண்டனர்.
சிதைந்த கருத்துண்டங்களை அப்படியே உண்டு கருத்தரித்தால், தம் மனைவியர் கற்புக்குக் குறை உண்டாகும் என்று நினைத்தனர். எனவே அவற்றை வேள்வித் தீயில் அவியுடன் இட்டனர். அவியோடு மூன்று வகைத் தீயால் உண்ணப்பட்ட எச்சிலாகிய கருவினை, ஏழு முனிவர்களின் மனைவியருள் அருந்ததி நீங்கலாகப் பிற கார்த்திகை மகளிர் ஆறுபேரும் உண்டனர். கணவன்மார் வேண்ட, உண்ட மகளிர் கற்புநிலையில் வழுவாதவராய் உன்னைத் தங்கள் வயிற்றில் கருவாகக் கொண்டனர்.
உயர்ந்த இமயமலையில் நீலப்பூக்கள் மலர்ந்துள்ள சரவணப் பொய்கையில் தாமரை மலராகிய படுக்கையில் அவர்கள் உன்னைப் பெற்றனர். பெரும் புகழ் வாய்ந்த முருகனே! உன்னைப் பெற்ற அன்றே, தேவர் தலைவனாகிய இந்திரன், முனிவர்க்குக் கொடுத்த வரத்தையும் மீறி வச்சிரப் படையால் உன்னைத் தாக்கினான். அதனால், வேறு வேறாக இருந்த ஆறு துண்டங்களும் ஆறுபேராகிப் பின் நீ ஒருவன் ஆனாய். இங்ஙனம் குழந்தைப் பருவத்தில் இந்திரனைப் புறங்கண்டு சிறந்த வெற்றி பெற்ற முருகனே! நீ வாழ்க’ எனப் பிறப்புத் தொன்மத்தை விளக்குகிறார் புலவர்”
—————————-
இதுதான் தமிழ் கலாச்சாரமா? இதைத் தமிழர்களின் தொன்மமாகக் காட்டுவது கயமைத்தனம் ஆகும். வன்மையாகக் கண்டிக்கிறேன்.
\\ ஆறுமுகமும் பன்ணிரு கரமும் சொல்லப் படுகிறது.\\
பரிபாடலில் இருப்பதை திருமுருகிற்கும், திருமுருகில் இருப்பதை பரிபாடலுக்கும்தான் தரவாகக்காட்ட முடியும். ஏனெனில் இவையிரண்டும் சங்க இலக்கியமல்ல. பரிபாடலும் திருமுருகும் மகாபாரத குமாரசம்பவத்திற்கு பிற்பாடனவை என்பதை தொடக்கத்திலிருந்தே விவாத்திருக்கிறோம். பரிபாடல் குறித்த செய்திகளை முந்தைய பின்னூட்டங்களிலே காணப்படுகிறது. தமிழர் மரபிற்கும் பரிபாடல், திருமுருகு சுட்டுகிற பார்ப்பனிய கலாச்சாரத்திற்கும் தொடர்பு கிடையாது. காலம் குறித்த விவாதம் ஒருபுறமிருக்க, தாங்கள் சுட்டிக்காட்டுகிற வாதங்கள் துளியும் தமிழர் கலாச்சாரத்திற்கு தொடர்பானவை அல்ல என்பதற்கான சான்றுகளை கீழ்க்கண்டவாறு முன்வைக்கிறேன்.
—-
முருகன் வள்ளியோடு வாழ்கிற வாழ்க்கை நற்றிணையிலே வந்துவிடுகிறது. அதற்கான ஆதாரம்.
“முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின் உருவுகண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே” (நற்றிணை 82: 4,5)
ஆனால் பரிபாடல் தெய்வானையை முதல் மனைவியாகக் காட்டுகிறது. இதுவே பெரும் பித்தலாட்டம். தெய்வானை மணம் பார்ப்பனிய முறைப்படி நடப்பதை பரிபாடல் இவ்வாறு சுட்டுகிறது.
“மென் சீர் மயில் இயலவர்
வாள் மிகு வய மொய்ம்பின்
வரை அகலத்தவனை____வானவன் மகள்
மாண் எழில் மலர் உண்கண்
மட மொழியவர் ____உடன் சுற்றி”
இதற்குபிற்பாடுதான் முருகன் வள்ளியை களவு மணம் புரிவதாக பரிபாடல்சுட்டுகிறது.
தெய்வானை அழுத அழுகையால் திருப்பரங்குன்றமே நிறைந்துபோகிறதாம்!
அதைச் சுட்டுகிறபாடல்;
“மையிரு நூற்றிமை யுண்கண் மான்மறித்தோள் மணந்த ஞான்
றையிருநூற்று மெய்ந்நயனத் தவன்மகள் மலருண்கண்
மணிமழை தலைஇயென மாவேனில் காரேற்றுத்
தணிமழை தலையின்று தண்பரங் குன்று” (9: 8-11)
சகக்கிழத்தி சண்டைபோடுகிறாள் தெய்வானை; இதை வானமாமலை தன் நூலில் இவ்விதம் சுட்டிக்காட்டுகிறார்;
“பரிபாடலில் தேவசேனை, வள்ளி சக்கிழத்தி ஏசல் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் முருகுகனுக்கு வள்ளி மட்டும் தான் 5ஆம் நூற்றாண்டுக்கு முன் மனைவியாக இருந்தாள். ஸ்கந்தக் கருத்து இங்கு வந்தபிறகு அவன் மனைவியான தேவசேனாவும், முருகனது மனைவியாகக் கருதப்பட்டாள்”- வானமாமலை, தமிழர் பண்பாடும் தத்துவமும்.
திருமுருகு மங்கையர் கணவ என்று முருகனை தெய்வானை வள்ளியோடு திருப்பரங்குன்றத்தைச் சேர்த்துப் பாடுகிறது. தெய்வங்களில் நாயக-நாயகி பாவம் சங்க காலத்தில் கிடையாது. இத்தகைய சிலைகள் திருப்பரங்குன்றத்தில் வருவதும் பார்ப்பனியக்கருத்துக்கள் புகுத்தப்பட்ட பின்புதான் என்பது தெளிவாகிறது.
பரிபாடலும் பார்ப்பனியமும்.
கீழே தொகுக்கபட்டகருத்துகள் பார்ப்பனியத்தின் அவலங்களை பார்வைக்கு வைக்கிறது. தமிழர் கலாச்சாரத்திற்கும் திராவிடக்கருத்தியலுக்கும் பொருந்தாத ஒன்று பரிபாடல் கூறும் செய்திகள்.
பார்ப்பானின் இருவகையை பரிபாடல் போற்றுகிறது!
‘விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப’’(பா. 11)
“விரிநூல் அந்தணர் என்போர் விரிவான வேதங்களையும் ஏனைய நூல்களையும் கற்றவர்கள்; அறவொழுக்கமுடையோர்; அறச்செயல்களை முன்னின்று ஆற்றுவோர். புரி நூல் அந்தணர் என்போர் அந்தணர்க்கு அடையாளமான பூணூலை மட்டும் அணிந்திருப்போர்; யாசகம் வாங்குவோர்.” (தகவல் மூலம்- தமிழ் இணையப்பல்கலைக்கழகம்)
—–
ஆவிணி அவிட்டம் என்று பூணுல் மாற்றுகிற பார்ப்பான்கள் தங்களை இருபிறப்பாளர்களாக கருதிக்கொள்கிற பம்மாத்தை திராவிட இயக்கங்கள் தோலுரித்துக்காட்டியிருக்கின்றன. ஆனால் பரிபாடல் பார்ப்பனர்கள் இருபிறப்பாளர்கள் என்று வியந்தோதுகிறது இப்படி!
‘‘இரு பிறப்பு, இரு பெயர், ஈரநெஞ்சத்து
ஒரு பெயர் அந்தணர்’’ (பா. 14)
“அந்தணர்கள் இருபிறப்பாளர்கள்; இரண்டு பெயர்களை யுடையவர்கள்; இரக்கமுள்ள நெஞ்சம் படைத்தவர்கள்; ஒப்பற்ற புகழையுடையவர்கள்;” (தகவல் மூலம்- தமிழ் இணையப்பல்கலைக்கழகம்)
—-
வைகையில் பிற மக்கள் குளிப்பதால், அவர்களுடைய அழுக்கு காரணமாக பார்ப்பனர்கள் குளிப்பதில்லை என்பதை பரிபாடல் இப்படிச் சொல்கிறது;
‘‘மைந்தர் மகளிர் மணவிரை தூவிற்று என்று
அந்தணர் தோயலர் ஆறு’’
—-
ஐயர்கள் வாய்கொப்புளிக்காத ஆறு !
“வையைதேம் மேவ வழு வழுப் புற்றென
ஐயர் வாய் பூசுறார் ஆறு”
—–
இதைத்தான் இராம் அவர்கள் தமிழர் கலாச்சாரம் என்று சுட்டிக்காட்டுகிறார் போலும். அதிலும் நைச்சியமாக பார்ப்பனியபுளுகுகளை தொன்மம் என்று அடக்கி பார்ப்பனிய இழிவை தமிழர்கள் மீது சுமத்துகிறார்.
உமது பிற பின்னூட்டங்களுக்கு திரு.ராம் தலையிலடித்துக் கொண்டே பதிலளிப்பார் என்றாலும் இந்த குறிப்பிட்ட பின்னூட்டத்துக்கு மட்டும் அம்பி பதிலளிப்பதுதான் பொருத்தமாயிருக்கும்..
// வைகையில் பிற மக்கள் குளிப்பதால், அவர்களுடைய அழுக்கு காரணமாக பார்ப்பனர்கள் குளிப்பதில்லை என்பதை பரிபாடல் இப்படிச் சொல்கிறது;
‘‘மைந்தர் மகளிர் மணவிரை தூவிற்று என்று
அந்தணர் தோயலர் ஆறு’’ //
மணவிரை என்றால் அழுக்கு அல்ல பெருமானே.. மக்கள் பூசிக் கொண்டிருந்த நறுமணப் பொருட்களான சந்தனம், குங்குமம் மற்றும் சூடியிருந்த பூக்களைத்தான் மணவிரை என்கிறார் சங்கப் புலவர்.
வைகையில் வரும் புதுப்புனலை வரவேற்று கரையோர மக்கள் களிப்புற்று குளித்து கொண்டாடுவதை இப்பரிபாடல் செய்யுள் பாடுகிறது.. கரையோர மக்களின் இந்தக் கொண்டாட்டம் புரிந்து கொள்ளக் கூடியதே.. பார்ப்பானும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மேற்படி மைந்தர் மகளிர் அருகில் புதுப்புனலில் குளித்து விட்டு பூசை செய்யப் போனால், சூரனின் பேரன் என்று சொல்லிக்கொண்டு யாரவது தமிழ்ப் புலவர் “பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே உன் குடுமியில் சிக்கிக்கொண்டிருக்கும் என் காதலி சூடியிருந்த பூவை விட சிறந்த பூவையா கடவுளுக்கு சூடப்போகிறாய்” என்று கிண்டலாக பாடிவைப்பார்.. சங்க காலப் பார்ப்பான் உசாராகத்தான் இருந்திருக்கிறான்..
—-
// ஐயர்கள் வாய்கொப்புளிக்காத ஆறு !
“வையைதேம் மேவ வழு வழுப் புற்றென
ஐயர் வாய் பூசுறார் ஆறு” //
நமது தென்றல் பெருமான் இந்த புதுப்புனல் நீரை ஒரு பாட்டிலில் பிடித்துக் கொண்டு போய், ஏற்கனவே தேன் கலந்திருப்பதால் சர்க்கரை போடாமலேயே தெனமும் ஒரு கப் குடித்துவிட்டு “பேஷ் பேஷ் கலரும் சுவையும் நரசுஸ் காபி மாதிரியே ரொம்ப நன்னாயிருக்கே” என்று கூறிக் கொண்டே இங்கு பின்னூட்டமென்ற பெயரில் கொப்பளித்து துப்புவார்.. இப்போது மணக்கும் கூவத்தைவிட அது கட்டாயம் மேலானதாகத்தான் இருக்கும்..
அம்பி,
30 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் வீட்டின் கழிவு நீர் எங்கள் வீதியில் எங்கள் சுவரை ஒட்டிய ஒரு சிறு குழியைத்தாண்டி எங்கும் செல்லவில்லை. இன்று கிராமம் நகரம் என்றில்லாமல் எல்லா கழிவும் நேராக நீர்நிலைகளுக்கு கால்வாய்களின் மூலம் சென்று கலக்கின்றன். 50 வருடத்திற்கு முன்னர் மாநகரில் ஒடும் கூவம் கூட தூய ஆறாகத்தான் ஒடியிருக்கிறது. இன்றும் கூட காவிரியில் ஆடிமாதத்தில் அணை திறக்கப்பட்டு புதுப்புணல் வந்து சில நாட்கள் ஆனதற்கு பிறகு மக்கள் அதில் நீராடி வாய் நிறைய நீரை எடுத்து கொப்பளித்து அருந்தியும் மகிழ்கின்றனர்.
வட இந்தியாவில் இருக்கும் வற்றாத ஜீவநதிகளின் இன்றைய நிலை உலகறிந்தது. ஜீவனில்லா சடலங்கள் முதற்கொண்டு மாநகர மற்றும் ஆலைக்கழிவுகள் வரை அணைத்தையும் தாங்கிச் செல்கின்றன. அந்த நீரிலிலும் வாய் கொப்பளிப்பதற்கு பார்ப்பனர்கள் முதல் ஆட்களாகத்தான் இருக்கிறார்கள். இதை ஆண்டு முழுக்கவும் தான் செய்கிறார்கள். அந்த நீரின் தூய்மையைப் பற்றியும் புனிதத்தைப் பற்றியும் இல்லாததையும் பொல்லாததையும் அவிழ்த்துவிடுகிறார்கள்.
அப்படியென்றால் அந்த செய்யுள்களின் காலத்தில் தமிழக ஆறுகள் எப்படியிருந்திருக்கும் என்பதை யூகிப்பதொன்றும் கடினமில்லை. அந்த நிலையிலும் பார்ப்பனர்கள் தங்களை தமிழர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொண்டு தங்கள் வயிற்றுப்பிழைப்பை நடத்தியிருக்கின்றனர் என்பது தான் தென்றல் அவர்கள் சுட்டிக்காட்டுவது. ஏதோ பதில் எழுத வேண்டுமே என்று எதையோ எழுதியிருக்கிறீர்கள். பரிதாபம்.
\\ முருகனை குறித்த புனைவுகள் தமிழ் மண்ணில் தோன்றி இருக்க வாய்ப்புகள் அதிகம்.\\
இது தங்களின் பார்ப்பனிய அடிமைத்தனமாகும். இதை கண்டித்து அம்பலப்படுத்த வேண்டியது கடமையாகிறது. ஆகையால் தமிழர் பண்பாடும் தத்துவமும் என்ற நூலை வாசித்துவிடவும். எப்படி முருகன், ஸ்கந்தனுடன் இணைக்கப்பட்டான், எவ்விதம் கொற்றவை உமையானாள்? எப்படி முருகன் சிவனுக்கு மகனாகிறான் என்பது விளக்கப்பட்டிருக்கிறது.
\\ இந்தியாவில் தமிழ் மண்ணில் மட்டும்தான் முருகன் முக்கிய கடவுளாக வணங்கப் படுகிறான்\\
இந்த வாதம் எத்தகையது என்பதை இரு தரப்புகளையும் ஒப்பிட்டு பார்ப்போம்.
தென்னிந்திய முருகன் குறித்து வானமாமலை முன்வைக்கும் தரவுகள்:
—————————————————————-
1. “தமிழ் நாட்டிலும் முருக வணக்கம் பழமையானதே. மிகவும் பழமையான தமிழ் நூல்களான அகம், புறம், குறுந்தொகை, நற்றிணை முதலிய நூல்களில் காணப்படும் முருகனது சித்திரத்திற்கும், பிற்காலச் சங்க நூல்களான பரிபாடல், முருகாற்றுப்படை போன்ற நூல்களில் காணப்படும் சித்திரத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. பிற்கால நூல்கள் வடமொழிப் பாத்திரத்திலும், இராமாயணத்திலும் காணப்படும் முருகச் சித்திரத்தோடு ஒன்றுபடுகின்றன. அதற்கு முன்னர் வேலன், முருகன் வணக்கங்கள் இருந்தன. புராண பூர்வமாக முருகன் தோற்றவரலாறுகள் முற்சான்றுகளில் கூறப்படவில்லை”
2. “தமிழ்நாட்டில் வரலாற்று முற்காலமான ஆதிச்ச நல்லூர் தாழி அடக்க காலத்திலேயே இந்த வணக்கமுறை இருந்தது என்பதற்கு அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் உள்ளன. இங்கே கிடைத்த தங்கவாய் மூடிகளும், இரும்புக்கொழுவும் பாலஸ்தீனத்தில் கிடைத்த கல்லறைச் சாமான்களை ஒத்திருக்கின்றன. இதன் காலம் கி,மு. 1150.”
3. “கிழக்கு மத்திய தரைக்கடல் நாகரிகத்திற்கும் தமிழரது ஆதிச்ச நல்லூர் நாகரிகத்திற்கும் பல பண்பாட்டு ஒற்றுமைகள் உள்ளன. அங்கே கிடைத்தது போன்ற திரிசூலம், இங்கும் கிடைத்தது. காவடியாடுவோர் வாயை மூடப்பயன்படுத்துவது போன்றன், தங்கவாய் மூடிகள், திரிசூலத்தில் சேவல் உருவங்களும் காணப்பட்டன. எனவே ஆரம்பக்கால முருக வணக்கம் இங்கிருந்தது என்பது கே.கே. பிள்ளையவர்களின் கருத்து”
4. “இங்கே திரிசூலம், கோழி உருவம், வாய்மூடி முதலியன காணப்படினும், டியேனோஸிசைப் பற்றிக் கிடைத்துள்ள நாட்டுப்பண்பாட்டியல் வழிப்பட்ட செவிவழிக்கதைகளைப்போலவோ எழுதப்பட்ட புராணங்களைப் போலவோ முருகனைப்பற்றிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.
வட இந்திய ஸ்கந்தன் குறித்து வானமாமலை முன்வைக்கும் தரவுகள்:
—————————————————————–
1. கங்கைச் சமவெளியில் ஸ்கந்த உருவம் கொண்ட அகழ்வராய்ச்சிச் சான்றுகள். உஜ்ஜயினியில் கி.மு 200, 300க்கு முந்திய ஸ்கந்த உருவம் கொண்ட காசுகள்.
2. பிரம்மணிய, ஸ்கந்த என்ற எழுத்துகளோடு கூடிய சேவல் கொடியும் மயில் உருவமும். குஷான வம்சத்தைச் சேர்ந்த ஹிவிஷ்கன் காலத்து நாணயங்கள்.
3. யெளதேய கணத்தவர் 6 தலைகளும் 2 கைகளையும் உடைய கார்த்திகேயனுடைய உருவம் பொறித்த காசுகளை பயன்படுத்துதல்.
——————————————————
மேற்கொண்ட இருதரப்புகளிலிருந்து பார்ப்பனியப்புராண புளுகுகள் தமிழ் தொல்குடிகளிடம் இல்லையென்று தெளிவாகிறது. ஆனால் தாங்களோ பார்ப்பனியத்தை தொன்மம் என்ற பெயரில் தமிழர்களின் கலாச்சாரமாக காட்டுகிறீர்கள். இத்தன்மை இவ்விதம் அம்பலப்பட்டுப் போகிறது.
//சம காலத் தன்மையில் திருமுருகு அம்பலப்பட்டு போகிறதல்லவா//
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ[முருகு-122]
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய[அக.நானூறு-149.15.6]
நெய்யோடு ஐயவி அப்பி-[முருகு-228]
ஐயவி அப்பிய நெய்-[நெடுநல்வாடை-86]
சில் காழ் அல்குல்-[முருகு-16]
பல் காழ் அல்குல்-[பொருநறாற்றுப்படை-39] காழ்-என்பது மேகலை ஆபரணம் என்ற பொருளில் சங்க காலத்தில் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.
குறும்பல் கூளியர்-[முருகு-[281]]
கொடுவிற் கூளியர்-[புற நானூறு-23-4-5]
யூகமொடு மாமுக முசுக்கலை-[முருகு-302]
மைபட் டன்ன மாமுக முசுக்கலை[குறுந்தொகை-121:2]
ஓடாப் பைட்கை பிணிமுகம் வாழ்த்தி-[முருகு-247]
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும்-[புற.நா-56-8]
சேயுயர் பிணிமுகம் மூர்ந்து-[பரிபாடல்-5]
காமரு சுணை மலர்-[முருகு-75]
காமரு தும்பி காமரம் செய்யும்-[சிறுபாணா-76-8]
காமரு உருவின் -[மதுரை காஞ்சி-422]
மடவரல் வள்ளியோடு-[முருகு-102]
மடவரல் மகளிரோடு-[பெரும் பாணாற்றுப்படை]
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க-[முருகு-56]
இணை ஒலி இமிழ் துணங்கை சீர்-[மதுரை காஞ்சி-3]
மன்றமும் பொதியிலும்-[முருகு-226]
அவை இருந்த பெருபொதியில்-[மது.காஞ்சி-161]
அவுணர் நல்வலம் அடங்க கவிழ் இணர்
மா முதல் தடிந்த-[முருகு-59-60]
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழு முதல் தடிந்த-[பதிற்று பத்து-11 4-5]
மாசற விமைக்கும் முருவினர்-[முருகு-128]
மாசற விளங்கிய யாக்கையர்-[மது.காஞ்சி-456]
மேலே உள்ள ஒப்பீடுகள் முருகுவின் சங்க கால இலக்கியத்துடனான சமகால தன்மையை நன்கு விளக்கும் என நினைக்கிறேன்.எனவேதான் வையாபுரியால் கி.பி 350ஐ விட பிற்காலத்துக்கு கொண்டு செல்ல முடியவில்லை.நீங்கள் வையாபுரியும் சைவ பற்றாளர் என்று ஒரே போடாக போடுகிறீர்கள்.வையாபுரி சைவ பற்றாளர் என்றால் இந்த ஆய்வையே நிகழ்த்தி இருக்க மாட்டார்.
திருமுருகு தேவார திருவாசக காலத்துக்கு பிற்பட்டது என்றால் பக்தி இலக்கியங்களில் இருந்து இது போன்ற ஒப்பீடலை திருமுருகுக்கு நிகழ்த்தும்படி கோருகிறேன்.அப்பொழுதுதான் அது சரியானதாக இருக்கும் ஏனெனில் திருமுருகின் அனேக சொல்லாட்சிகள் சங்க காலத்துக்கு உரியதாகவே உள்ளது.
வையாபுரியின் ஆய்வின் அடிப்படையில் திருமுருகை கி.பி நான்கிற்கு கொண்டுவந்திருக்கிறீர்கள். இதுவே இதுவே எமக்கு ஆச்சர்யம்! இன்னம் இரண்டுவாரம் விவாதித்தால் ஆறுக்குத் தள்ளலாம்!
விசயத்திற்கு வருவோம். மேற்கொண்ட மறுமொழியில் சொல்லராய்ச்சியை தொகுப்பாக விவாதிக்கிற தாங்கள், திருமுருகு குறிப்பிடுகிற செய்தியில் கவனமே செலுத்தமாட்டேன் என்கிறீர்களே! பன்னிருதிருக்கை, ஆறுமுகம், முருகனுக்கு இருமனைவி போன்ற செய்திகள் எல்லாம் சங்ககாலத்திலேயே வந்துவிட்டது என்று சொல்லிவிடவேண்டியதுதானே! விவாதம் முடிந்துபோய்விடுமே! புராணங்களே தமிழர்கள் தான் பார்ப்பனர்களுக்கு வழங்கினார்கள் என்பது ஆதாரப்பூர்வமாக நிருபீக்கப்பட்டதாகிவிடுமே! இது சரியெல்லையென்றால் சங்ககாலத்திலேயே புராணப்புளுகுகள் வந்துவிட்டன என்ற நிலைப்பாடு எடுக்கவேண்டியிருக்கும். அப்பொழுதும் நாம் கால ஆராய்ச்சிக்குள் தான் செல்ல வேண்டும். ஆகையால் அதற்கும் பதிலளித்துவிடுங்கள்.
\\திருமுருகு தேவார திருவாசக காலத்துக்கு பிற்பட்டது என்றால் பக்தி இலக்கியங்களில் இருந்து இது போன்ற ஒப்பீடலை திருமுருகுக்கு நிகழ்த்தும்படி கோருகிறேன்.\\
இதையும் செய்யலாம். நக்கீர தேவநாயனாரின் இன்னபிற சைவ இலக்கியங்களோடு இதைச் செய்யலாம். மிக முக்கியமாக இறையனார் கலம்பகத்திற்கு பிற்பாடுதான் திருமுருகு. ஏனெனில் நாயக-நாயகி வழிபாடு இதற்கு பிற்பாடுதான். இரண்டாவது முருகனின் அல்ட்ராமாடர்ன் சிலைகள் எல்லாம் ஆறாம் நூற்றாண்டிற்குப்பிற்பாடானவை (ஆதாரம்: ஐராவதம் மகாதேவன்). ஆறுமுகம், பன்னிருகையை நக்கீரன் பாடுகிறார் என்றால் திருமுருகு ஒரு கனவுப்பாடலாகத்தான் இருந்திருக்க வேண்டும்! எனினும் முயற்சி செய்வோம்!
\\\\ நீங்கள் விதந்தோதும் வையாபுரியார் ஆய்வு கி.பி.350ஐ தாண்டாமல் நொண்டியடிக்கிறதே? அதற்கு என்ன பதில்? கி.பி 7க்கு எப்படி கொண்டு செல்ல போகிறீர்கள்\\
பின்னூட்டம் 22.2.1.1.2.1 மற்றும் 22.2.1.1.2.1.1 உங்களுக்கு காலக்கோட்டை காட்டுவதற்கான தரவுகளைத்தரும் என்று கருதுகிறேன். வையாபுரியார் ஆய்வு கி,பி 350ஐ தாண்டாமல் நொண்டியடிப்பதற்கு முதன்மையான காரணம் அவரும் சைவப்பற்றாளர் தான். அப்படியிருக்கபோய் தானே திருமுருகை ஓதுவது ஒவ்வொரு தமிழனின் கடமை என்று எழுதுகிறார். திராவிடக்கருத்தியலில் சேராத பார்ப்பனப்பாசம் இது! உங்களுக்கு ஐராவதம் மகாதேவன் நம்பிக்கைக்கு உரியவர் இல்லையா? வையாபுரிக்கு பதில் எழுதுகிற பொழுது ஐராவதம் மகாதேவன் திருமுருகையும், பரிபாடலையும் பின்னுக்குத் தள்ளிய குறிப்புகளைத் தருகிறேன். வாசித்துப் பரிசீலியுங்கள்.
\\சிந்து சமவெளி ஆய்வுக்கு கலையகம் கட்டுரை போதும் என்று நீங்கள் முடிவெடுத்து விடுகிறீர்கள்.உலகம் ரோமிலா தாப்பரை எதிர்பார்க்கிறது என்ன செய்வது?\\
ஒன்றும் பிரச்சனையில்லை. உண்மையெனில் ஏற்க வேண்டியது தான். ஆனால் என்றைக்காவது கலையகம் கட்டுரையில் பார்வை செலுத்த மனம் வந்திருக்கிறதா? மேலும் ஈராக்கின் யேசிடி மக்களின் முருக வழிபாடு, ஆப்ரிக்கர்களின் மொருங்கா வழிபாடு போன்றவை தமிழ் சைவர்கள் பார்ப்பனியமயமாகிப்போனதைத் தோலுரிக்க வல்லவை!
\\தமிழின் காத்திரமான ஆய்வுகள் எல்லாம் கல்விதுறைக்கு வெளியில் இருந்துதான் வருகிறது.கல்வி துறை சார்ந்த ஆய்வுகளை வாசிப்பதை போன்ற வீண் வேலை எதுவும் இல்லை\\
சைவ மற்றும் பார்ப்பனர்களின் திரித்தல் வேலைகளை விட, இன்றைய மாணவர்கள் சிறப்பான பங்களிப்பை நல்குகின்றனர். ஏனெனில் ஆறுமுக நாவலருக்கோ, உவேசாவிற்கு அன்றைக்கு Defensive Vivaவோ அல்லது External Examinarஓ கிடையாது. ஆனால் இன்றைக்கு ஆய்வு முறைகள் முறைப்படி செய்யப்படுகின்றன. ஆகையால் இத்தகைய ஆராய்ச்சிகள் எத்திறமானது என்பதை எவர் ஒருவரும் சோதிக்க இயலும்.
\\எஸ்.வையாபுரி பிள்ளை,எஸ்.இராமசந்திரன் போன்ற சமஸ்கிருத ஆதரவாளர்களை உங்கள் தரப்புக்காக அழைத்து வருகிறீர்கள்.சமண,பவுத்த மதங்களை அரும்பாடுபட்டு ஆய்வு செய்த மயிலை சீனி.வெங்கடசாமி சைவ பற்றாளர் என்று ஒரே போடாக போடுகிறீர்கள்[நல்ல வேலையாக அவர் முன்பே இறந்து விட்டார்].தமிழ் தேசிய காப்பியம் இயற்றிய சமணமுனிவர் இளங்கோவடிகளும் உங்கள் கண்களுக்கு சைவ பற்றாளராக தெரிகிறார்.யார் ஆடுவது போங்காட்டம்?.\\
இதில் இரண்டு தவறான புரிதல்கள் இருக்கின்றன. முதலாவது மயிலை சீனி குறித்தது. இவர் குறித்து நான் எழுதிய பின்னூட்டத்தின் பொருளை தாங்கள் விளங்கிக்கொள்ளவில்லை என்று கருதுகிறேன். மயிலை சீனி சைவப்பற்றாளர் என்று சொன்னது அவர் சமயக்காழ்ப்புணர்வின்றி சமண இலக்கியங்களை ஆராய்ந்தார் என்பதற்காக குறிப்பிடப்பட்டது. இந்தப்பதிவின் பல பின்னூட்ங்களில் மயிலை சீனியின் வாதங்களை ஆதாரமாக வைத்திருக்கிறேன். மேலும் அவரது சைவப்பற்றும் தவறான முடிவுகளுக்கும் கொண்டுபோயிருக்கிறது (அ.மார்க்சின் அணிந்துரை, பாண்டிய மன்னர்களின் பிரம்மதேயம் பற்றிய வேள்விக்குடிச் சாசனம் குறித்து எழுதப்பட்டிருக்கிறது; வாசித்துப்பார்க்க; களப்பிரர் கால தமிழகம் கடைசிப் பகுதி) இந்தக்கருத்து உங்களுக்கு இந்தப்பொருளில் பிடிபடவில்லையெனில் சுட்டிக்காட்டுங்கள். தவறைத் திருத்திக்கொள்கிறேன்.
இரண்டாவது கருத்து இளங்கோவடிகள் பற்றியது. இளங்கோவடிகள் சமணராகப்பிறந்து சைவராக மாறியிருக்கக்கூடும் என்ற கருத்து தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தில் இருந்து எடுக்கபப்ட்டது. இதை கூகுளைத்தட்டினாலே பலகட்டுரைகளில் உள்ள குறிப்புகளில் கிடைக்கும். மேலும் சிலப்பதிகாரம் சமணம் குன்றத்தொடங்கியிருந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட ஒன்று என்பதும் விவாதத்திற்குரியது (பார்க்க; சிலப்பதிகாரம் குறித்த காலம்).
ஐயா தென்றல், ஐயா அம்பி,
நீங்கள் இருவரும் தமிழ் கடவுள் அழகன் முருகனை சரியாக புரிந்து கொள்ளவில்லை ! கவலைபடவேன்டாம் நான் விளக்குகிறேன்..
விரைவில்..
(தொடரும்)
@தென்றல் @ram and @அம்பி
தமிழ் கடவுள் முருகன் , கார்த்திகை மைந்தன் எனபடுகிறார் . ஆறு முகங்களும் அவருக்கு உள்ளதாக கூறபடுகிறது
கார்த்திகை நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்கள் கொண்ட ஒரு கூட்டம் . முரகன் வேறு , சுப்ரமணிய சாமி வேறு என்று கூறுகிறீர்கள் . தமிழர்கள் வணங்கும் முருகன் கார்த்திகை மைந்தன் எனபடுகிறாரா ?
முருகனும் கார்த்திகை நட்சத்திரமும் எப்போது இணைக்கபட்டார்கள் ?
ஆரியர் வருகை முன்பு என்றால் தமிழர்களுக்கு கொஞ்சம் வானவியல் அறிவு இருந்து இருக்கிறது என்று நிறுவலாம் . புரியாத மொழியில் உள்ள பாட்டுகளுக்கு விளக்கம் சொல்லும் அன்பர்கள் யாரவது தெரிந்து இருந்தால் சொல்லி உதவுங்களேன் . தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்
http://en.wikipedia.org/wiki/Pleiades
நான் நேரடியாக விசயத்துக்கு வருகிறேன்.வாணாமலை என்ன சொல்கிறார்.
//இங்கே திரிசூலம்,கோழி உருவம்,வாய்மூடி முதலியன காணப்படினும் டியேனோஸாசைப் பற்றிக் கிடைத்துள்ள நாட்டுப்பண்பாட்டியல் வழிப்பட்ட செவிவழிக்கதைகளைப் போலவோ எழுதப்பட்ட புராணங்களைப் போலவோ முருகனைப்பற்றிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை//
ஆகா! அற்புதம்.இதுதான் இந்த ஆய்வாளர்களின் நோக்கம்.இதற்காகதான் இவர்கள் செங்கல் கண்டுபிடிக்கும் ஆய்வுகளை நடத்துகிறார்கள்.திருமுருகாற்றுப்படை என்ற செவ்யியல் ஆக்கமே தமிழில் இருக்கும் போது முருகனுக்கு தமிழில் புராண ஆதாரங்கள் இல்லை என்பது பச்சை அயோக்கியதனம்.
முருகு ராமாயண கதைகளில் உள்ள முருகனின் தழுவலா? நிச்சயமாக இல்லை. ஏன்? ஏனெனில் முருகு புராணத்தை மறுஆக்கம் செய்யவில்லை மக்களிடையே நிலவிய தல வரலாறு சார்ந்த செவி வழிகதைகளை இலக்கிய படுத்துகிறது.முருகனின் புராணம் சார்ந்த தொன்மங்கள் மக்களிடம் பலநூற்றாண்டுகளாக நிலவி ஆலயங்கள் ஏற்படுத்தப்பட்டு முருகன் வழிபடப்படுகிறான்.முருகு அதை செவ்வியல் ஆக்கமாக உருவாக்குகிறது.
“வென் திரை பரப்பில் கடுசூர் கொன்ற” என்று பாடும் பெரும்பாணாற்றுப்படை சங்க இலக்கியம் இல்லையா? சூரனை முருகன் கொன்றது புராணம் இல்லையா? வென் திரை பரப்பில் என்பது திருசெந்தூர் முருகன் கோயிலை சுட்டுவது புரியவில்லையா?
“பல் பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து” [அக.நா-149]
இடைவிடாமல் திருவிழா நடக்கும் திருப்புறம்குன்றத்தை பாடும் அகநானூறு சங்க இலக்கியம் இல்லையா? தொன்ம கதைகளின் படி தேவயானை திருமணம் நடந்த தலமாக இது குறிக்கப்படுகிறது.
நற்றினை வள்ளியை மணம் புரிந்த செய்தியை சொல்கிறது.இந்த தகவல்களின் மொத்த தொகுப்பாக திருமுருகாற்றுப்படை உள்ளது.
முருகாற்றுப்படையின் புராண தன்மையை காரணம் காட்டி அதை பிற்காலத்தியது என திரிபு வாதம் பேசியவர்கள் முருகனை பற்றிய அகழ்வாராய்ச்சி சான்றுகள் கிடைக்கிறது ஆனால் புராணங்கள் கிடைக்கவில்லை என்பது எவ்வளவு அயோக்கியதனம்.
வானமாமலை செய்தது பச்சை அயோக்கித்தனமானதா என்று மயிலை சீனியிடம் தான் கேட்க வேண்டும். அவர்தான் அந்த நூலுக்கு அணிந்துரை எழுதியவர்! அயோக்கித்தனம் என்று தாங்கள் கருதுவதுன் மூலமாக தாங்கள் தான் அம்பலப்பட்டு போகிறீர்கள்.
மேலும் முருகனுக்கு தமிழ் புராண ஆதாரங்கள் காட்டுவதுதான் பச்சை அயோக்கித்தனம். சூர் என்பது அரக்கனல்ல. வெறியாடல் பழிவாங்குதல் நிகழ்வல்ல. இது தமிழ் மக்களின் களவு சார் வாழ்க்கை. தேவயானை தமிழ் கலாச்சரத்துடன் இணைப்பது தரகு வேலையை விட இழிவானது.
பார்ப்பனிய இழிவை தொன்மம் என்று தமிழர் மீது சுமத்தாதீர். இது தான் பச்சை அயோக்கித்தனமானது.
//முருகனுக்கு தமிழ் புராண ஆதாரங்கள் காட்டுவதுதான் பச்சை அயோக்கியதனம்//
முருகனுக்கு புராண ஆதாரம் இல்லை என்று சொல்லி தமிழ் கடவுள் முருகனை மத்திய தரைக்கடல்நாடுகளுக்கு கடத்துவது என்ன தனம்?.
புராணத்தை காரணம் காட்டி திருமுருகை பிற்காலத்துக்கு தள்ளவது என்ன தனம்?.
//சூர் என்பது அரக்கனல்ல//
“வென் திரை பரப்பில் கடுசூர் கொன்ற” இதற்கு என்ன பொருள்?
\\ முருகனுக்கு புராண ஆதாரம் இல்லை என்று சொல்லி தமிழ் கடவுள் முருகனை மத்திய தரைக்கடல்நாடுகளுக்கு கடத்துவது என்ன தனம்?\\
அகப்பொருளைப்பாடிய அத்துணை சமுதாயத்திற்கும் இவ்வழிபாடு உண்டு! ஆனால் சூரபத்மனையும் தராகசுரனையும் அழிக்கிற வஞ்சம் பார்ப்பனியத்திற்கு மட்டும்தான் உண்டு. ஆக மத்தியத்தரைக்கடல்நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கிற தனம், பார்ப்பனியத்தை வேரறுக்கும் தானைத்தனம்.
\\புராணத்தை காரணம் காட்டி திருமுருகை பிற்காலத்துக்கு தள்ளவது என்ன தனம்?.\\
திருமுருகு மட்டுமல்ல, பரிபாடலும் தான் அய்யா. இவையெல்லாம் சங்க கால இலக்கியமன்று! இப்படிச் சொல்கிற தனம் தன்மானத்தனம் தான்!
\\வென் திரை பரப்பில் கடுசூர் கொன்ற\\ இதற்கு என்ன பொருள்?
சூர் பிடித்திருக்கிற தலைவியை வேலன் வெறியாட்டுகிற பொழுது, மடையன் மன்ற வேலன் என்று திட்டுகிறது அகப்பாடல். ஆனால் வெண்திரையில் சூரைத் தண்டிக்கிற செயல் என்ன? சூரபத்மன், திருச்செந்தூர் கடலிலே ஒளிந்துகொள்கிறானாம். அவனைப்பிடித்து முருகன் தண்டிக்கிறானாம்? எதுக்காக தண்டிக்கிறான்? யாருக்காக தண்டிக்கிறான்? இது புராணப்புளுகை பறைசாட்டுகிறது. தலைவியின் பசலைக்குக் காரணமான சூரன், கடலில் ஒளிய வேண்டிய அவசியமென்ன? மகாபாரத குமார சம்பவம் தான் அவசியம்! ஆக வெண்தரையில் சூரனைத் தண்டிப்பது மானங்கெட்டதனம். பார்ப்பனிய அடிமைத்தனம்.
//அகப்பொருளை பாடிய அத்துணை சமுதாயத்திற்கும் இவ்வழிபாடு உண்டு//
இப்படி பொத்தாம் பொதுவாக அடித்துவிட்டால் எப்படி? குறைந்தது ஒரு பத்து சமுதாயத்தின் பட்டியலையாவது தாருங்களேன்.
டியேனோஸிசுக்கு உள்ள புராணம் என்ன? ஏன்னா புராணம் என்றாலே பார்ப்பானியம் என்று கொந்தளிக்கிறீர்கள் நீங்கள்//டியேனோஸிசைப் பற்றிக் கிடைத்துள்ள நாட்டுப்பண்பாட்டியல் வழிப்பட்ட செவிவழிக்கதைகளை போலவோ எழுதப்பட்ட புராணங்களைப் போலவோ முருகனைப்பற்றிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை// என்று வருத்தப்படுகிறார் வானாமலை.
வனாமலை சொல்லவருவது டியேனோஸிஸ் தான் தமிழ்நாட்டில் முருகனாக வழங்கப்படுகிறான் என்று.ஆனால் முருகன் தமிழ்நிலத்தின் அதி தொல்தெய்வம்.எனவே தமிழில் இருந்துதான் முருக வழிபாடு பிற இடங்களுக்கு சென்று இருக்க வாய்ப்பு அதிகம்.பார்ப்பன பூச்சாண்டி காட்டி முருகனை தமிழனிடம் இருந்து எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது.
பார்ப்பன பூச்சாண்டி காட்டி தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை தமிழர் அல்லாதவர்கள் கைப்பற்றினார்கள்.அடுத்து முருகன் சிரவனபெலகொலாவில் இருந்து வந்த சமண கன்னடன் என்று அடித்துவிட்டார் தென்றல்.அடுத்து களப்பிரர் காலத்துக்கு பின்புதான் சங்ககாலம் என்றார்[பின்ன இருக்காதா? களப்பிரர் கன்னடர்கள் இல்லையா] சங்க காலமே தேவை இல்லை என்றார்.இத்தனைக்கும் இவர் பயன்படுத்திய முகமூடி சைவ வெறுப்பு.அதை சொன்னா யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள்.இவர் வேசம் போட்டுக்கொண்டு நான் வேசம் போடுவதாக சேற்றை வாரி இறைக்கிறார்.
\\ இப்படி பொத்தாம் பொதுவாக அடித்துவிட்டால் எப்படி? குறைந்தது ஒரு பத்து சமுதாயத்தின் பட்டியலையாவது தாருங்களேன்.\\
ஒப்பியல் இலக்கியம் படியுங்களேன்! அதைவிடுத்து பார்ப்பனியத்தைப் பூனைப் பீயைப் பதுக்கியது போல் பதுக்கிவிட்டு தமிழ் கலாச்சாரமென்று பேசுவது எதற்காக?
\\ பார்ப்பன பூச்சாண்டி காட்டி முருகனை தமிழனிடம் இருந்து எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது.\\
முருகனை தமிழனாகக் காட்டவே இங்கு இவ்வளவு பெரிய விவாதம் நடந்தது. தன்மானத்தை பார்ப்பனியத்திற்கு அடகு வைத்து விட்டு முருகனை தமிழனடமிருந்து எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது என்று சொல்வது அற்பத்தனத்தின் உச்சம். எல்லா தொல்குடிகளின் கடவுளும் முருகனின் சாயலிலே இருக்க, தமிழ் நாட்டில் மட்டும் தான் முருகு வழிபாடு பார்ப்பனியத்தைப் பறைசாற்றுகிறது!
\\ பார்ப்பன பூச்சாண்டி காட்டி தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை தமிழர் அல்லாதவர்கள் கைப்பற்றினார்கள்.\\
இதுவரை தாங்கள் உடுத்திய திராவிடக்கருத்தியல் உடுப்பு எங்கே போயிற்று? வையாபுரியை திராவிடக்கருத்தியலை எதிர்த்தவர் என்று சால்சாப்பு காட்டிவிட்டு இப்பொழுது தட்டைத் திருப்பிப் போட்டு தட்டுவதேன்? இப்பொழுது சீமானின் தமிழ்தேசிய அவதாரம் எடுத்திருக்கிறீர்கள். சொந்தப் பிழைப்புவாதத்திற்காக இதுவரை வந்த பார்ப்பனிய எதிர்ப்பை உருவாக்கிய திராவிடக்கருத்தியல் இப்பொழுது கசப்பு விடமாக இருக்கிறது. வாதத்திற்கு உங்கள் வழிக்கே வந்தாலும் உங்களது வாதத்தில் தமிழர்களுக்காக எங்கு வாதாடினீர்கள்? பார்ப்பனிய எதிர்ப்பை விட பார்ப்பனிய அடிமைத்தனத்திற்குத்தானே பதில் எழுத வேண்டியிருந்தது? தமிழர் வழிபாட்டை பார்ப்பனியத்திற்கு அடகு வைத்துவிட்டு தமிழர்களின் அரசியல் அதிகாரம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
\\ அடுத்து முருகன் சிரவனபெலகொலாவில் இருந்து வந்த சமண கன்னடன் என்று அடித்துவிட்டார் தென்றல்.அடுத்து களப்பிரர் காலத்துக்கு பின்புதான் சங்ககாலம் என்றார்[பின்ன இருக்காதா? களப்பிரர் கன்னடர்கள் இல்லையா]\\
சங்க காலம் பற்றி பேசுகிறிர்கள். சங்க காலத்தில் சிரவணபெலகோலா, எருமை நாடு என்ற அழைக்கப்பட்ட தமிழ் பகுதி. எருமை நாட்டுப் புலவன் என்று சங்ககால புலவரே இருந்தார் (ஆதாரம், மயிலை சீனி, களப்பிரர் கால தமிழகம், அணிந்துரை, அ. மார்க்ஸ்). இதில் இவர்களை அன்னியர்களாக வரையறுத்து கன்னடர்கள் என்று எழுதுவதே கடைந்தெடுத்த பித்தலாட்டம். இந்த வேலையைச் செய்ததே சைவர்கள் தான். இவர்கள் முகமூடி, மயிலை சீனியின் புத்தகத்திலேயே கிழிக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது இங்கு வந்து களப்பிரர்கள் கன்னடர்கள் என்று கதை கட்டுகிறார். விவாதிக்க பொருள் இல்லை என்பதற்காக இப்படியொரு நாதாரித்தனம் எதற்கு? சமணர்களின் முருகனை விவாதிக்கமுடியவில்லை என்பது சரிதான். இங்கு முருகனையே தமிழனாக காட்ட பலபோராட்டங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. இதில் சமண முருகனைப் பற்றி அறிந்தால் என்ன? அறியாவிட்டால் என்ன?
களப்பிரர் காலத்திற்குப் பிற்பாடுதான் சங்க காலம் என்று சொன்னவர் வையாபுரி. இதற்காகத்தான் இவர் தமிழ்துரோகி என்று சாடப்பட்டார். இதில் இந்த வாதத்தை என் பக்கம் திருப்புவது மூலமாக தாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவது என்ன? திருமுருகையும் பரிபாடலையும் சங்க இலக்கியமாக கருதாதவர்கள் தமிழ் துரோகி பட்டியலில் சேரவேண்டுமா? இது என்ன சைவர்களின் மனுநீதியா? வேறு எதாவது சிறப்பாக முயற்சி செய்யவும்.
\\ சங்க காலமே தேவை இல்லை என்றார்\\
எங்கு எப்படி என்று எடுத்துக்காட்ட அழைக்கிறேன். பொய் சொல்வதற்கும் ஒரு அளவு உண்டு. ஆதிச்ச நல்லூர் என்ற வார்த்தையை டைப் செய்து, ctl+F பயன்படுத்தி என்ன வாதம் வைத்திருக்கிறேன் என்பதை ஒரு முறை பார்த்துக்கொள்ளவும். இரண்டாவது, மறிஅறுத்து என்ற வாதம் வந்த பொழுது என் தரப்பு பதில் என்ன என்பதையும் பார்க்கவும். இவையிரண்டும் தாங்கள் கூறுவது பொய் எனச் சொல்லப் போதுமானவை.
\\ இவர் பயன்படுத்திய முகமூடி சைவ வெறுப்பு.அதை சொன்னா யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள்.இவர் வேசம் போட்டுக்கொண்டு நான் வேசம் போடுவதாக சேற்றை வாரி இறைக்கிறார்.\\
முருகன் மீது சேறு இருப்பதே உங்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. ஏற்கனவே தாங்கள் பார்ப்பன சகதியில் தானே அய்யா இருக்கிறீர்கள்! இதில் உங்கள் மீது சேற்றை வாரி இறைப்பதற்கு தனியாக ஒரு செயல் திட்டம் வேண்டுமா?
சைவ-வெறுப்பு முகமூடி என்கிறீர்கள். ஒருவர் தன்னை சைவர் என்று அழைத்துக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். அதில் பார்ப்பனிய முகமூடி இல்லையா? தமிழில் பாடவே இங்கு இருக்கிற ஆதிக்க சாதிகள் சுணக்கம் காட்டின. இதில் முருகன் பார்ப்பனியமாக்கப்பட்டான் என்று சொல்கிற பொழுது இந்தக்கூட்டம் அலறியா துடிக்கப்போகின்றன?
பாரதிதாசன் பாடல்வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது;
“உமைத்தாழ்வு படுத்தாதீர்
பார்ப்பான் சொல் கேட்டபடி
உயிர்வாழாதீர்!”
//திருமுருகு மட்டுமல்ல//
திருமுருகு சங்க இலக்கியம்தான் என்பதை நீங்க ஏற்றுக்கொண்ட ஆய்வு முறைப்படியே நிறுவி உள்ளேன்.முடிந்தால் பக்தி இலக்கியங்களோடு ஒப்பிட்டு மறுக்க பாருங்கள்.திருமுருகு சங்க இலக்கியம் இல்லை என்று திரும்ப திரும்ப சொல்வதில் எந்த பயனும் இல்லை.பரிபாடல்,கலித்தொகை குறித்தும் நீங்கள் மறுக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
திருமுருகை கிபி நான்காம் நூற்றாண்டில் நிறுத்தியது தாங்கள் தான். இது எமக்கு சாதகமான விசயம். தாங்கள் தான் இதைச் சங்க காலம் என்று சாதிக்க வேண்டும். இவ்விடத்திலேயே திருமுருகு வாதம் அம்பலப்பட்டுபோய்விடுகிறது. மேலும் மலைமகளோ, ஆறுமுகமோ, பன்னிரெண்டு கையோ சங்ககாலத்தில் கிடையாது. இதைத் தாங்கள் மேற்கொண்டு படிக்கவேண்டியது உங்கள் விருப்பம் சார்ந்தது. பரிபாடலும் கலித்தொகையும் இவ்விதம் தான். கலித்தொகைக்கு எழுதப்பட்ட பாடலே டுபாக்கூர் பாடல். கபிலனின் வயைதைக்கேட்டேனே? தாங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. நினைவுபடுத்திபாருங்கள். அதுபோக சங்க இலக்கியங்களின் வரிசைக்கு வீ அரசுவின் சங்க இலக்கியங்களின் காலம் எனும் நூலைப் பரிந்துரைக்கிறேன். பரிபாடல் ஆட்டையிலேயே கிடையாது. பரிபாடலைப் பொறுத்தவரை அதிக கவனம் தேவையில்லை என்பது எமது துணிபு. ஏதாவது சைவ இணையதளத்தைப் பார்த்தே இதன் காலத்தை அறிந்துகொள்ள இயலும்!
பெரும்பாணாற்று படையில் சூரனை கொல்வது எப்படி வந்தது என்று கேட்டால் அதுக்கு பதில் சொல்லாமல் ஏன் சாமியாடுகிறீர்கள்? ஒரு வேலை பெரும்பாணாற்று படையும் கி.பி.7க்கு பிறகுதானா?
சூர் தடித்தல் என்பதற்கும் பத்மாசுரனை வதம் செய்தலுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் ஒர் எளிய கேள்விக்கு தங்களால் பதில் சொல்ல இயலவில்லை? இதையே எத்துணைமுறை விவாதிப்பது? புறப்பாடலிலே முருகயர்தல் வருகிறது. அகப்பாடலிலே சூர் தடித்தல் தலைவியின் பசலைநோயோடு வருகிறது. இதுதாண்டி சூரனை கடற்பரப்பில் தண்டிக்கிற செயல் சுட்டிக்காட்டும் நிகழ்ச்சிதான் என்ன? இதை விளக்குவதற்கு எதற்கு பெரும்பாணாற்றுப்படையை பிற்காலத்தில் தள்ளவேண்டும்? சங்க கால வரிசைக்கு ஏதாவது ஒர் முறையைப் பின்பற்றுமாறு பரிந்துரைக்கிறேன்.
தேவயானை தமிழ்நாட்டின் எந்தத் தொன்மக்கதையில் வருகிறது? தொன்மக் கதை படி தேவயானை திருமனம் நடந்த தலமாக திருப்பரங்குன்றம் குறிக்கப்படுகிறது என்று எதற்கு புளுகுவானேன்? சிலைகளில் நாயக-நாயகி பாவமே பிற்காலத்தில் தான் என்பதற்கு என்ன வாதம் வைத்தீர்கள்?
—–
\\முருகாற்றுப்படையின் புராண தன்மையை காரணம் காட்டி அதை பிற்காலத்தியது என திரிபு வாதம் பேசியவர்கள் \\
திரிபுவாதம் பார்ப்பனபாசம் எங்கிருக்கிறது என்று பார்ப்போம். திருமுருகு சங்ககாலம் என்று சொல்கிற மயிலை சீனி வானமாமலையின் தமிழர் பண்பாடும் தத்துவமும் என்ற புத்தகத்திற்கு அணிந்துரை எழுதுகிறார். தமிழர் பண்பாடு என்று சொல்கிற பொழுது ஆய்வாளர்கள் புராணப்புளுகுகளை ஒரு சேர நேர்நின்று எதிர்க்கின்றனர் என்று பார்க்கிறோம். கால அளவு மீது மாற்றுக்கருத்து இருக்கிற தங்களுக்கு இப்படியொரு நிலைப்பாடு கூட இல்லை. மாறாக புராணப்புளுகுகளை தமிழர்களின் தொன்மம் என்கிறீர்கள். இது எதைக்காட்டுகிறது? கால அளவு குறித்த உங்கள் நிலைப்பாடு எல்லாம் வெறும் பகல் வேசம் என்று ஆகிறது. மாறாக புராணங்கள் தமிழர்களுடையதே என்று காட்டுவதற்குதான் இந்த வேலை என்று தெரிகிறது. எல்லா குட்டும் உடைந்துபோன பிறகு இந்த முயற்சி எதற்காக?
பள்ளர்கள் தங்களை இந்திர குலத்தவர் என்று கூறும் தொன்ம நம்பிக்கைக்கு அய்யா ஏன் இன்னும் பதில் தரவில்லை? திருப்பரங்குன்றத்தில் தேவயானை திருமண உற்சவத்துக்கு பிறகு பள்ளர் மடத்துக்கு மறுவீடு செல்லும் சடங்கு இன்னும் நடைமுறையில் இருப்பதாக பள்ளர்நூல்களில் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.இது தொன்மமாக உங்களுக்கு தெரியவில்லையா?
நாயகன் நாயகி பாவம் இல்லையா? நற்றினை கூறும் முருகனும் வள்ளியும் யார்?
இந்தப் பின்னூட்டத்திற்கு விரிவான மறுமொழி எழுத எனக்கு விருப்பம். அசோக மித்ரன் கதையில் வரும் ஒரு விரல் தட்டச்சுக்காரர்களுக்கு மட்டும் வேலைப் பளு இருப்பதில்லை. இங்கும் வேலை என்ற ஒன்று இருக்கிறது!
விசயத்திற்கு வருவோம்.
முதலில் உங்கள் கருத்து கண்டனத்திற்குரியது. தான் தூக்கிச் சுமக்கிற பார்ப்பனிய இழிவிற்கு பதில் சொல்ல திராணியின்றி பள்ளர்கள் மீது பழிபோட்டுத் தப்பிப்பதாக தங்களது கருத்து இருக்கிறது. தங்களது வாதத்தைக் கீழ்க்கண்ட விதங்களில் அணுகலாம்.
1. ரிக் வேத காலத்து இந்திரனும், மருத நிலத்து இந்திரனும் ஒன்றா?
2. பிரதி புராணங்களில் (பார்ப்பனிய எதிர்ப்பு மரபு புராணங்கள்) இந்திரனின் நிலைமை என்ன?
3. ஐங்குறுநூற்றிற்கு முன்னர் இந்திரனைப் பற்றிய குறிப்புகள் சங்க கால இலக்கியங்களில் என்னவாக இருக்கின்றன?
4. இந்திரன் சிறுதெய்வமா? மயிலை சீனி என்ன சொல்கிறார்?
5. ஆதிக்கசாதிகளின் இந்திர வணக்கமும், பள்ளர்களின் இந்திர வழிபாடும் ஒன்றா?
6. சாதி மேலாண்மைக்கான போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடந்த பொழுது பள்ளர்களுக்கான கதை எங்கிருந்து பிறந்தன? வானமாமலை என்ன சொல்கிறார்? நாயக்கர் கால செப்புப்பட்டயங்கள் பள்ளர்கள் குறித்தும் பறையர்கள் குறித்தும் என்ன சொல்கின்றன?
7. விவசாயம் சமணர்களால் போற்றப்பட்டும், பார்ப்பனியத்தால் தூற்றப்பட்டதும் ஏன்?
இந்தக் கேள்விகள் விரிவாக பதிலளிக்கப்படவேண்டியவை. தாங்கள் சொல்வதைப் போன்று இதில் முற்காலத்து தொன்மங்கள் எல்லாம் கிடையாது. வெறும் பார்ப்பனியத்திணிப்புகள் மட்டும் தான் உண்டு. விவாதிக்க விரும்புகிற தாங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக ஒவ்வொரு கேள்விக்கும் விரிவான விடையளிக்க வேண்டும். நேரம் கிடைக்கிற பொழுது நானும் இதைச் செய்கிறேன்.
\\நாயகன் நாயகி பாவம் இல்லையா? \\
நாயகி-நாயகன் பாவம் என்றால் என்ன? பேரின்பம் என்றால் என்ன? என்பதை இறையனார் களவியலைப் படிக்கவும். பிறகு தங்களது வாதத்தை வைக்கவும். புரியவில்லை எனில் விளக்க முயற்சி செய்வேன்.
\\நற்றினை கூறும் முருகனும் வள்ளியும் யார்?\\
நற்றிணை கூறும் முருகனும் வள்ளியும் தலைவன் தலைவியால் பாடப்படுகிற அகப்பொருள் சார்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்திருக்கிற சிலை வணக்கம் தொல்காப்பிய மரபுக்கு கிடையாது. சிலைகளில் நாயக-நாயகி பாவம் எப்படி எந்தக் காலத்தில் இருந்து வருகிறது என்பதற்கு மயிலை சீனி களப்பிரர் கால தமிழகம் என்ற நூலை வாசிக்கவும்.
காமடியின் உச்சத்துக்கே பொயிவிட்டார் தென்றல்.நிறைய காமடிகள் உண்டு.தலையாய காமடி இது.
//அருகன் சமணக் கடவுள்,முருகன் தமிழ் கடவுள்
சிரவணன் – சமணப் பெயர் அப்படியானால் சரவணன்?
சமணத்தோடு தொடர்புபடுத்துவதற்கு நமக்கு குறீயிடுகள் இருக்கின்றன//-தென்றல் பின்னுட்டம்-9
//இங்கு முருகனையே தமிழனாக காட்ட பல போராட்டங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது//-தென்றல்-பின்னுட்டம் 25.1.1.1.1.2.
முருகனை தமிழனாக காட்ட அம்பியும் நானும் தென்றல்கிட்ட போராட வேண்டி இருக்கு.அவரு போராடுனா அவர் மனசாட்சிகிட்டதான் போராடனும்.
சமணக் கடவுள் அருகன்தான் முருகன் என்று கூறி இந்த விவாதத்தை தொடங்கியது தென்றல்.முருகனை தமிழனாக காட்ட போராடியதாக புளுகுவதும் தென்றல்தான்.அருகனுக்கும் தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.தமிழர்கள் சமண மதத்தை தழுவி உள்ளார்கள்.அந்த தொடர்பு மட்டும்தான்.
தென்றல் முருகனை தமிழனாக காட்டதான் இவ்வளவு நீண்ட விவாதத்தை நடத்துகிறார் என்று உண்மையாவே எனக்கு தெரியாது[ஹி,ஹி].தெரிஞ்சு இருந்தா நான் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு இருக்கவே மாட்டேன்.காமெடி செய்வதற்கும் ஒரு எல்லை உண்டு.
விவாதம் ஏறக்குறைய முடிந்து விட்டது.திருமுருகு ஒரு சங்க இலக்கியமா என்பது குறித்தே அதிகமும் விவாதம் நடந்தது.விவாதத்தை வாசிப்பவர்கள் அது குறித்து ஒரு முடிவுக்கு வரலாம்.
முருகன் குறித்த புனைவுகள் தமிழ் மண்ணில் தோன்றி இருக்கலாம் என்ற எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.அதற்கான சாத்தியங்களையும் விளக்கி விட்டேன்.தென்றல் மாறி மாறி குழப்புவதற்கெல்லாம் பதில் சொல்லி கொண்டிருக்க முடியாது.நன்றி.
இந்தப் பதிவில் முதலில் தாங்கள் மறுமொழியிட்டதே உவேசாவிற்காக! சமண விவாதம் நடந்த பொழுது தாங்கள் உள்ளே வந்து இது போல் காமெடி என்று யாதொரு நகைச்சுவையும் பகிர்ந்துகொள்ளவில்லை. அப்பொழுதெல்லாம் தமிழ் கடவுளை காப்பாற்ற வரவில்லை. சமணம் குறித்த விவாதத்தில் பங்கெடுத்து பெயருக்கு ஒரு மறுப்பு கூட தெரிவிக்கவில்லை. தற்பொழுது உங்கள் பார்ப்பனிய வேசம் கலைந்தவுடன் நான் முருகனை சமணனாக காட்ட முயற்சிக்கிறேன் என்று நாடகம் போடுகிறீர்கள். உங்கள் யோக்கியதை இதிலேயே என்னவென்று தெரியவில்லையா? உங்கள் நேர்மையை மெச்சுகிறேன். தாங்கள் வளர வாழ்த்துக்கள்.
முருகனை தமிழனாக காட்ட போராடுகிறதாக நேற்றுதானே அய்யா நீங்கள் சொன்னீர்கள்.அதுக்கு முன்பே அது எப்படி காமெடி ஆகும்?.முருகன் சமணன் என்ற கருத்தோடு நீங்கள் வாதிடுவதாக நான் நினைத்தேன்.இந்த விவாதத்திலும் பங்கெடுத்தேன்.விவாதத்தின் ஆரம்பத்திலேயே ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதெல்லாம் ஒரு கேள்வியா? நேரம் கிடைக்கும் போதுதான் பங்கெடுக்க முடியும்.நான் எந்த நாடகமும் ஆடவில்லை உண்மையைதான் சொல்கிறேன்.
” தமிழ் கடவுள் முருகன் “. //Thendral feed back 8.1 on October 29, 2014 at 4:44 pm//
\\ முருகன் சமணன் என்ற கருத்தோடு நீங்கள் வாதிடுவதாக நான் நினைத்தேன்.இந்த விவாதத்திலும் பங்கெடுத்தேன்.விவாதத்தின் ஆரம்பத்திலேயே ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதெல்லாம் ஒரு கேள்வியா?\\
இதெல்லாம் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம். இந்த விவாதமே முருகன் எப்படி பார்ப்பனியமயமாக்கப்பட்டான், அசுரர் வதம் அண்டப்புளுகு என்பதை ஆதாரத்துடன் விவாதிப்பதுதான். சமண விவாதம் எடுக்கப்பட்டதன் முக்கியமான நோக்கமே முருகன் எப்படி சரவணனாக இருக்க முடியும் என்பதுதான். எந்தநாளிலாவது இந்தக் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறீர்களா? பார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்கி விட்டு, இதற்கு செவிமடுக்காமலேயே இருந்தீர்கள். ஆனால் எப்பொழுது பார்ப்பனிய குட்டு உடைந்தபோனதோ, எப்பொழுது உங்களால் விளக்கம் அளிக்கமுடியவில்லையோ அப்பொழுதுதான் சமண விவாதத்திற்கு பதில் சொல்வதற்காகத்தான் போராடியதாகவும் பதிவில் பங்கெடுத்தது போல் நடித்தீர்கள். இது அப்பட்டமான பித்தலாட்டம்.
தேதியைப்பார்ப்போம். சிரவணன்-சரவணன் வாதம் என்னால் அக்டோபர் 30, 2014இல் வைக்கப்பட்டது. உங்களது என்ட்ரி நவம்பர் 4, 2014. அன்றிலிருந்து நவம்பர் 16வரை தாங்கள் விவாதித்த பொருள் வேறு. அதாவது செம காமெடியாக தெரிகிற சமண வாதம் உங்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. ஆனால் புராணப்புளுகுகள் குறித்த அனைத்து பார்வைகளையும் பதிவு செய்தபிறகு, அதற்கு பதில் சொல்வதற்கு பதிலாக, விவாதத்தை திசை திருப்பும் முயற்சியில் முருகனை சமணனாக காட்டும் முயற்சி ஆதாரமற்றது என்று முதன்முறையாக நீலிக்கண்ணீர் வடித்தீர்கள். ஆக இதிலிருந்து சமண விவாதத்தில் தாங்கள் துளியும் கவனம் செலுத்தவில்லையென்பது தெளிவு. ஆனால் இப்பொழுது, சமணனாக காட்ட முயற்சித்த என் பார்வையை முறியடிப்பதற்காகத்தான் விவாதத்திலே பங்கெடுத்ததாக கதை விடுகிறீர்கள். இது எத்துணை பெரிய அயோக்கித்தனம் என்பதைப் பரிசீலித்துப் பாருங்கள். விவாதிக்க பொருளின்றி தாங்கள் நடத்தியது நாடகம் என்று அம்பலப்பட்டு போகிறது. இழிவான செயல் இது.
அம்பி , முருகனை பூநுல் போட்ட பார்பன கடவுளாக மாற்றிய விடயம் இந்த விவாதத்தில் பல முறை காணப்படுகின்றது என்பது ராம் அவர்களின் கண்களுக்கு தெரியாதது எனக்கு ஒன்றும் ஆச்சிரியமாக இல்லை. ஏன் என்றால் தென்றல் அவர்கள் முருகனின் கதையில் எது பார்பன திரிபு எது தமிழர் தொன்மம் என்று விளாவாரியாக விளக்கும் போதும் அதனை காண்டும் காணாமலும் சென்ற ராமின் மன ஓட்டம் எதிர்பாராதது அல்ல. அவர் [ராம்] மற்றும் அவர் அமைத்து உள்ள புதிய கூட்டணி [தமிழ் தேசியம் + பார்பனியம் – திராவிடம் = சந்தர்பவாத நாசிசம்] என்பது பார்பனர்களையும் உள்ளடக்கி தமிழ் நாட்டின் ஆதி குடிகளான கல்பிரர்களை அன்னியர் ஆக்கும் பாசிச நிகழ்வு தான் என்பது அவர் ஒப்புதல் வாக்கு மூலம் மூலமாக தெரிகிறது அல்லவா ? திரு அருணன் அவர்கள் எழுதிய களப்பிரர் காலம் இருண்டகாலமா ? என்ற புத்தகத்தையாவது இவர் படித்து விட்டு அதன் பின் களப்பிரர் மீது அவதூருகளை பரப்ப முயலலாம்.
[Discussion will be continued]
//முருகனை தமிழனாக காட்ட அம்பியும் நானும் தென்றல்கிட்ட போராட வேண்டி இருக்கு.அவரு போராடுனா அவர் மனசாட்சிகிட்டதான் போராடனும்.//
// அம்பி , முருகனை பூநுல் போட்ட பார்பன கடவுளாக மாற்றிய விடயம் இந்த விவாதத்தில் பல முறை காணப்படுகின்றது என்பது ராம் அவர்களின் கண்களுக்கு தெரியாதது எனக்கு ஒன்றும் ஆச்சிரியமாக இல்லை. //
முருகனுக்கு பூணூலை நான் போடவில்லை.. பூணூல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முருகன் முருகன்தான் என்று நான் கூறிக்கொண்டிருப்பதை ஏன் மறைக்கிறீர்கள்..
முருகனை அருகன் என்றது பிரச்சினை இல்லையா..?! அருகன் கையில் வேல் இருக்கக்கூடாதே எனப் புரிந்து கொண்டு தலையைச் சொறிந்த தென்றல் பெருமானுக்கு பூணூல் கண்ணில் பட்டுவிட்டது.. திருமுருகு,பரிபாடல் எதுவும் சங்க இலக்கியமல்ல என்று ஆரம்பித்துவிட்டார்..
முதலில் அருகனை முருகனாக்க முயன்றவர், (வானமாமலையின் கருத்தான) கிரேக்க டயானிசிஸசின் புராணங்கள் போல முருகனுக்கு தொன்மையான புராணங்கள் இல்லாததால் தமிழர்கள் வணங்கும் முருகன் கிரேக்கர்களின் டயோனிஸசாக இருக்கவேண்டும் என்ற கருத்தையும் பிற்பாடு சொருகப்பார்த்தார்.. ஆதமை வணங்க மறுத்த மயில் ஏறும் கடவுளான யெசிடிக்களின் மலக் டவுஸ் என்ற செமிடிக் ஏஞ்சலுக்கான புராணங்களும் வழிபாடுகளும் முருகன் பார்ப்பனியனாகிவிட்டான் என்பதை தோலுரிக்கிறது என்று உளறிக்கொண்டு தென்றலார் முருகனை செமிடிக் கடவுளாக்கப் பார்ப்பதை விடவா இன்று முருகன் தமிழனுக்கு அன்னியப்பட்டுப் போனான்..?!
// அவர் [ராம்] மற்றும் அவர் அமைத்து உள்ள புதிய கூட்டணி [தமிழ் தேசியம் + பார்பனியம் – திராவிடம் = சந்தர்பவாத நாசிசம்] என்பது பார்பனர்களையும் உள்ளடக்கி தமிழ் நாட்டின் ஆதி குடிகளான கல்பிரர்களை அன்னியர் ஆக்கும் பாசிச நிகழ்வு தான் என்பது அவர் ஒப்புதல் வாக்கு மூலம் மூலமாக தெரிகிறது அல்லவா ? //
ஆக, தமிழ் தேசியம் + பார்ப்பனியம் = சந்தர்ப்பவாத நாசிசம் + திராவிடம் என்கிறீர்கள்..
தென்றல் பெருமானின்,
( பின்னூட்ட எண் 15 : “இந்திரலோகத்தில் சாமிகள் கலவிகொள்கிற பொழுது விந்துத்துளி பூலோகம் நோக்கித் தெறிக்கிறது. தாமரையில் பட்டு கார்த்திக்கேயன் டெலிவரிசெய்யப்படுகிறான்.” இந்த அசிங்கத்திற்கும் தொல்குடிகளின் மரபிற்கும் என்ன சம்பந்தம்?”) [’இந்திர லோகத்தில்’ எந்த சாமிகள் கலவிக் கொண்டார்கள் என்பதையும் தென்றலாரிடமே கேட்கலாம்..]
(பின்னூட்ட எண் 22.2.1.1.2.1 : இதற்கு அடுத்த வரி, அறுவர் பெண்களின் மகனாக கார்த்திக்கேயனைக் காட்டுகிறது. இந்த அசிங்கமும் தமிழர்கள் கண்டுபிடித்ததா?” )
மேற்படி பின்னூட்டங்களுக்கு தாங்கள் ‘மூடிக்கொண்டு செல்லாமல்’ மடைகளைத் திறந்துவிடலாமே.. கூடுதலாக டயோனிஸசின்/மலக் டவுசின் உன்னதமான புராணங்கள் மட்டும் ஒரிஜினல் முருகனை எப்படி பிரதிபலிக்கிறது என்று காட்டி முருகனின் இடையில் வந்த பூணூலை கழற்றி குல்லாவும் போட்டுவிடலாம்..
அம்பி,
முருகனுக்கு அம்பி போட்டது பூணுல் இல்லை என்றால் வேறு என்னவோ ? முருகனுக்கு போடபட்ட பூணுல் மூலம் அவன் பார்பனியமயம் ஆக்கபட்டதை தானே தென்றல் அவர்கள் சுட்டுகின்றார் . முருகனுக்கு பார்பனர்கள் செய்த திரிபுகள் மூலம் [புராண கதைகள் மூலம் ] அவன் மாசுபட்டதை தானே நீக்க சொல்கின்றார் தென்றல். பார்பன மாசு பட்ட முருகனை மாசறு முருகனாக நாங்கள் மாற்றுவதில் அம்பிக்கு உள்ள தடைகள் என்னவோ ?//பூணூல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முருகன் முருகன்தான் என்று நான் கூறிக்கொண்டிருப்பதை ஏன் மறைக்கிறீர்கள்..//
“இந்திரலோகத்தில் சாமிகள் கலவிகொள்கிற பொழுது விந்துத்துளி பூலோகம் நோக்கித் தெறிக்கிறது. தாமரையில் பட்டு கார்த்திக்கேயன் டெலிவரிசெய்யப்படுகிறான்.” இந்த அசிங்கத்திற்கும் தொல்குடிகளின் மரபிற்கும் என்ன சம்பந்தம்?” என்று அம்பி கேட்கும் போது அது பார்பனர்களின் புராண திரிபு என்ற நிலையை தென்றல் சுட்டுவது உமக்கு விளங்கவில்லையா அம்பி ? முருகனுக்கு இந்த அசிங்கத்தை பூசியது யார் அம்பி ? தென்றலா ? அல்லது பார்பனர்களா ? விடை தெரியாவிட்டால் ‘மூடிக்கொண்டு செல்லலாம்’. //மேற்படி பின்னூட்டங்களுக்கு தாங்கள் ‘மூடிக்கொண்டு செல்லாமல்’ மடைகளைத் திறந்துவிடலாமே.. கூடுதலாக டயோனிஸசின்/மலக் டவுசின் உன்னதமான புராணங்கள் மட்டும் ஒரிஜினல் முருகனை எப்படி பிரதிபலிக்கிறது என்று காட்டி முருகனின் இடையில் வந்த பூணூலை கழற்றி குல்லாவும் போட்டுவிடலாம்..//
இதற்கு அடுத்த வரி, அறுவர் பெண்களின் மகனாக கார்த்திக்கேயனைக் காட்டுகிறது. இந்த அசிங்கமும் தமிழர்கள் கண்டுபிடித்ததா? என்ற தென்றலின் கேள்விக்கு பதில் என்னவோ ? யார் எழுதிவைத்த சாக்கடை புராணம் இது ? அம்பியின் , பார்பனர்கள் தானே ?
// தென்றல் சுட்டுவது உமக்கு விளங்கவில்லையா அம்பி ? //
தென்றல் பெருமானார் எதையெல்லாம் சுட்டுகிறார், சுட்டுக்கொண்டு வருகிறார் என்பது நன்றாகவே வெளங்குது.. இந்திரா காந்தியை சுட்டுவிட்டார்கள் என்பது போன்ற சூடான செய்திகளை எனக்கு அறிவிப்பதை விட்டுவிட்டு கீழே உள்ள கேள்விக்கு முதலில் பதிலளியுங்கள்..:
மேற்படி கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்று அழைக்கப்படுவது யார்.. ’தமிழ் முருகனா’..? ’பார்ப்பனிய முருகனா’..?
என்னது அம்பிக்கு காப்பி ஆறிவிட்டதா ?
இதற்கு முதலில் பதில் சொல்லுமையா :
அறுவர் பெண்களின் மகனாக கார்த்திக்கேயனைக் காட்டுகிறது. இந்த அசிங்கமும் தமிழர்கள் கண்டுபிடித்ததா? என்ற தென்றலின் கேள்விக்கு பதில் என்னவோ ? யார் எழுதிவைத்த சாக்கடை புராணம் இது ? அம்பியின் , பார்பனர்கள் தானே ?[say yes or no]
கார்த்திகேயன் பார்ப்பான் கண்டுபிடித்த ’அசிங்கம்’ என்றால் அந்த ’அசிங்கத்தை’ குழந்தைக்கு வைத்து பேணிக்காப்பது யாரோ..?!
முன் ஜென்மத்தில் தாங்கள் கூறிய வார்த்தைகளை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்..:
[ Saravanan June 13, 2014 at 6:44 pm
Permalink
31.2
பொயரில் என்ன இருக்கு Dr.A.Anburaj?
[1]Vladimir Ilyich Lenin (Russian: Владимир Ильич Ленин) ,Joseph Stalin or Iosif Vissarionovich Stalin (Russian: Ио́сиф Виссарио́нович Ста́лин) இப் பெயர்கள் எல்லாம் தூய கிருஸ்துவ பெயர்கள் தான். இவர்கள் என்ன கிருஸ்துவர்களாக தான் வாழ்ந்தர்களா ? தம் மதத்தை புறக்கணித்து கம்யூனிஸ்ட்களாக வாழவில்லையா ?
[2]ஐயங்கார் வீட்டு பிள்ளைக்கு ஸ்ரீநிவாசன் என்று தமிழ் நீக்கம் செய்யபட்ட வட மொழீயீல் பெயர் வைப்பது இல்லையா ?ஐயர் வீட்டு குழந்தைக்கு கிருஷ்ணஸ்வாமி என்று வட மொழீயீல் பெயர் வைப்பது இல்லையா ?
[3]P. Jeevanandham,கம்யூனிஸ்ட் [Birth 21 August] அன்று பிறந்த என் குழந்தைக்கு ஜீவா என்று நான் பெயர் வைக்க ஆசை பட்டும், திரு வியாசன்[vinavu reader] அவர்கள் போன்றே சிவ பக்தரான என் மாமனார் “சிவ குரு” என்று பெயர் வைக்க விறுப்பியதும் , முருக பக்தரான என் மனைவி கார்த்திகேயன் என்று ஆசை பட்டதும் , பின்பு நான் மாமாவுக்கும் , மனைவிக்கும் இடையே சமரசம் செய்து சிவகார்த்திகேயன் என்று இருதியாக பெயர் ஈட்டதும் தமிழ் நாடு முழுதும் உள்ள நடைமுறை தானே !
[4]அடுத்து பிறக்கும் குழந்தையும் ஆண் என்றால் எங்கள் ஊரில் சிறப்பாக கல்வி அளித்த இரு கிருஸ்துவ ஆசிரியர்களின் [ஜேம்ஸ் அல்லது கமல்ராஜ்] பெயர்களில் எதோ ஒன்றை பெயர் இட உள்ளேன். ஹிந்து குழந்தைக்கு கிருஸ்துவ பெயர் வைப்பதால் என்ன ஆகிவிடும் DR ?
[5]ஒரு வேலை உங்கள் குழந்தைக்கு சவரிராஜன் ,சவரிமுத்து என்ற கிருஸ்துவ பெயர்கள் வைத்து இருப்பின் நீங்கள் உரிமையுடன் உங்கள் கிருஸ்துவ நண்பர்களீன் குழந்தைகளுக்கு ஹிந்து பெயர்கள் வைக்க கோரலாம் ! 🙂
[6]திரு பிரபாகரன் அவர்கள் தம் முதல் குழந்தைக்கு சார்லஸ் என்று கிருஸ்துவ பெயர் வைத்ததாக நினைவு. அவர் என்ன தமிழ் மொழி ,இன பற்றாளர் இல்லையா ?
//சாலமோன் டானியேல் என்று பெயர் வைக்கும் கிறிஸ்தவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு முருகன் அரச்சந்திரன் அபிமன்யு மாணிக்க வாசகன் என்ற தமிழ் பெயர்களை வைக்க மறுப்பது
ஏன்// ]
– https://www.vinavu.com/2014/06/10/remembering-robert-caldwell/ பின்னூட்ட எண் 31.2
குழந்தை வளர்ந்து பெரியவனாகி, தாங்கள் நடத்துகின்ற இந்த வெட்கம்கெட்ட விவாதத்தைப் படித்தால், தன்னை கார்த்திகேயா என்று எதை நினைத்து இந்த அப்புச்சீ இத்தனை வருடங்களாக அழைத்துக்கொண்டிருந்ததோ என்று வேதனை அடையமாட்டானா..
இன்னும் ஏதேதோ சொல்ல வேண்டும் போலிருக்கிறது, ஆனால் நம்ம அண்ணாத்தயாச்சே என்ற தயக்கம் தடுக்கிறது..
அம்பி என்று பெயரில் அருவெறுப்பை தூக்கிச் சுமக்கிற இவர், பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கட்டியமைக்கிற சரவணனை கேள்விகேட்கிறாராம். வெட்கக் கேடு! சாதியை ஒழிக்கப் போராடிய பெரியாரை ராமசாமி நாயக்கர் என்று பார்ப்பனப் பதர்கள் கூறுவதைவிடவும் அருவெறுப்பானது அம்பியின் கார்த்திகேயன் சொல்லாடல். அருந்ததி ராயை கேள்வி கேட்டு அடிபட்ட பொழுதே மானம் ரோசம் ஏதும் இல்லை. இது எதைக்காட்டுகிறது? போராடுகிறவர்களால் சாதியையோ பார்ப்பனியத்தையோ ஒழிக்கமுடியாது என்று சொல்கிற பார்ப்பனியக்கைக்கூலிகளின் திமிர்த்தனமும் இறுமாப்பும். யாரால் இப்படி சொல்லமுடியும்? சாதிய பார்ப்பனிய இழிவையே ஒரு ஆயுதமாகக் கொண்டு வயிறு வளர்க்கும் பொறுக்கிகளுக்கும் திண்ணை தூங்கிகளுக்கும் தான் இத்தகைய முகவரி இருக்கிறது.
மாறாக சரவணன், செந்தில் குமரன், சிவகார்த்திகேயன் போன்ற இன்ன பிற மக்கள்திரள் பார்ப்பனியத்திற்கே பாடை கட்ட தயாராகிவிட்டார்கள். பெயரிலிருந்து சாதியை நீக்க பெரியார் தேவைப்பட்டார். பார்ப்பனியத்தையே நீக்கி புதுவாழ்வு படைக்க மக்கள் வர்க்கப்போராட்டம் இருக்கிறது. அங்கே சரவணன் போன்றவர்கள் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். மக்களிடையே கம்யுனிசத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று தோழர்கள் கூறுவது இதைத்தான். மாறாக இந்த இரண்டு காலகட்டதிலும் பார்ப்பனியம் எரித்த சூத்திரனின் எரிதழலில் குளிர்காயந்து கொண்டு ஒட்டுண்ணி வாழ்க்கை நடத்துகிறவர்கள் மக்களிடம் தனிமைப்பட்டு அம்பலப்பட்டுபோகிறார்கள். மானக்கேடான விசயம் இது!
பார்பனர்களின் புராண திரிபுகள் எப்படி இருக்கும் என்பதற்கு அம்பியின் மேல் உள்ள பின்னுட்டமே நல்ல உதாரணம். முருகன் மீது பாப்பான்கள் பேண்டு வைத்த புராணங்களில் உள்ள அசிங்கத்தை சுட்டிக்காட்டும் போது அம்பிக்கு கார்திகேயன் என்ற தமிழ் பெயரில் என்ன அசிங்கத்தை கண்டாரோ ? கார்திகை மாதம் என்ன வடமொழியா ? கார்காலம் என்ன வடமொழியா ?இவை எல்லாம் தமிழ் சொற்களாக இருக்கும் போது, முருகன் மீது பேண்டது போன்றே அச் சொற்கள் மீதும் அம்பி அவரின் மூதாதையர் போன்றே பெயரிலும் அம்பி புராண திரிபை பேண்டு வைப்பது எதற்காக ? இந்த பெயர் வைக்கும் விடயத்தில் சரவனணின் கருத்துக்களுடன் நான் உடன்படும் நிலையில் அம்பிக்கு என்ன பிரச்சனை ?
தமிழ் மாதங்கள் எல்லாம் என்ன அம்பியின் சமஸ்கிருத வட மொழி சொற்களா ?
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும்
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும்
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும்
இவை எல்லாம் தமிழ் சொற்கள் தான் என்று தமிழர் வரலாற்றில் தடயமாக நிற்கும் சங்க இலக்கியங்கள் அடையாலம் காட்டுகின்றன. இச் தமிழ்மாத சொற்கள் மீதும்[கார்திகை மாதம் உட்பட] ,தமிழ் தொல்குடி முருகன் மீதும் அம்பியும் அவரின் மூதாதைகலும் புராண கசடுகளை கழிந்து வைத்தால் அம் மாதங்கள் எல்லாம் வட மொழிமாதங்கள் ஆகிவிடுமா ?
2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியங்களில் இருந்து தமிழ் மாதங்கள் எவை என்று சுட்டி காட்டி உள்ளேன். அம்பிக்கு ஏதேனும் துப்பு இந்தால் அவரும் அவருடைய வடமொழியில் இருந்து தை முதல் ஏனைய மாதங்கள் சம்ஸ்கிருத மொழியில் உள்ள மாதங்கள் தான்[கார்திகை உட்பட] என்று வடமொழி இலக்கியங்கள் மூலம் காட்டட்டுமே !
தமிழர் மாதங்கள் கால அளவுகள் :
சிறுபொழுது:
காலை – முதல் சிறுபொழுது ( 6 முதல் 10 மணி வரை)
நண்பகல் – இரண்டாம் சிறுபொழுது (10 முதல் 2 மணி வரை)
எற்பாடு – மூன்றாம் சிறுபொழுது (2 முதல் 6 மணி வரை)
மாலை – நான்காம் சிறுபொழுது (6 முதல் 10 மணி வரை)
யாமம் – ஐந்தாம் சிறுபொழுது (10 முதல் 2 மணி வரை)
வைகறை – ஆறாம் சிறுபொழுது (2 முதல் 6 மணி வரை)
பெரும்பொழுது:
கார் – ஆவணி, புரட்டாசி
கூதிர் – ஐப்பசி, கார்த்திகை
முன்பனி – மார்கழி, தை
பின்பனி – மாசி, பங்குனி
இளவேனில் – சித்திரை, வைகாசி
முதுவேனில் – ஆனி, ஆடி
கார்த்திகை மாதம்:
தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள்[கிரித்திகை என்று பார்பனர்களால் திரிக்கப்படது] முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது. கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.
[ அம்பிக்கு இப்ப புரிந்து இருக்கவேண்டுமே அவரின் மூதாதைகள்[பார்பனர்கள்] செய்த புராணதிரிபு என்னவென்றும், கார்திகை பெண்கள் எப்படி புராண திரிபில் வந்தார்கள் என்றும் ]
பண்டைய தமிழர்க்கு கால அளவுகள் மற்றும் கணிப்புகளில் [வானியலிலும் அதனடிப்படையிலெழுந்த சோதிடத்திலும் ] அறிவு உண்டு என்பதற்கு சாட்சியாக இன்றும் தலித் மக்களின் ஒரு பிரிவான வள்ளுவன் மக்கள் வாழுகின்றனர். அவர்களின் சோதிட அறிவு என்பது பண்டைய தமிழர்களின் கால அளவுகளை சார்ந்து இன்றும் பயன்பாட்டில் உள்ளதை நாம் நினைவில் வைத்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். போகர் சித்தர் தனது போகர் ஏழாயிரம் என்ற நூலில் அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த சாதிகளின் பெயர்களை பட்டியலிட்டு உள்ளார். அச் சாதிகளில் வள்ளுவன் சாதியையும் குறிப்பிட்டிருக்கிறார் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வள்ளுவன் சாதியில் தோன்றியவர். இவர்களில் பெரும்பாலோர் ஜோதிடத் தொழில் செய்து வருகிறார்கள். மேலும் விவசாயம், வேளாண்மை, நாட்டு வைத்தியமும் செய்து வருகிறார்கள். தொன்மையான இச்சாதியினர் பழங்காலத்தில் அரசர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்துள்ளார்கள். அனைத்து விதமான நற்காரியங்களுக்கும் நேரம் காலத்தைக் கணித்துச் சொல்லும் அரசாங்க ஜோதிடர்களாகவும், அரசர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.கேரளாவில் உள்ள வள்ளுவநாடு இச்சாதியினர் பெற்றிருந்த பெருமைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.இவர்கள் இப்போதும் நல்லநேரம், திருமணப் பொருத்தம் முதலானவற்றைப் பார்த்துச் சொல்லும் [@1கணியர்களாக] விளங்கிவந்துள்ளனர். எனினும் மேல்சாதியினரால் தீண்டத் தகாதவர் என ஒதுக்கப்பட்டு வந்த்தால் இவர்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
@1கணியர் என்பவர்கள் தமிழ்நாட்டில் வானியலிலும் அதனடிப்படையிலெழுந்த சோதிடத்திலும் வல்லவர்கள். இவர்கள் அறிவர், அறிவன், கணி, கணியன் என்றும் அழைக்கப்பட்டனர். அரசர்களின் அவையில் பெருங்கணிகள் இருந்தனர்.
// சாதியை ஒழிக்கப் போராடிய பெரியாரை ராமசாமி நாயக்கர் என்று பார்ப்பனப் பதர்கள் கூறுவதைவிடவும் அருவெறுப்பானது அம்பியின் கார்த்திகேயன் சொல்லாடல். அருந்ததி ராயை கேள்வி கேட்டு அடிபட்ட பொழுதே மானம் ரோசம் ஏதும் இல்லை. இது எதைக்காட்டுகிறது? //
எதைக் காட்டுகிறது..?! பெரியாரை ராமசாமி நாயக்கர் என்று கூறுவது உமக்கு அருவெறுப்பாகவும், பெரியார் திரைப்படம் ராமசாமி நாயக்கரு என்ற பெயரில் ஆந்திராவில் ஓடியதும், அருந்ததி ராய் தன் சாதிப் பெயரை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சாதியை ஒழிக்கப்போவதும் உமக்கு கிளுகிளுப்பாக இருப்பதையும் காட்டுகிறது.. மானம் ரோசம் பற்றி எல்லாம் நீர் பேசுவது காமெடியாக இருக்கிறது..
// போராடுகிறவர்களால் சாதியையோ பார்ப்பனியத்தையோ ஒழிக்கமுடியாது என்று சொல்கிற பார்ப்பனியக்கைக்கூலிகளின் திமிர்த்தனமும் இறுமாப்பும். யாரால் இப்படி சொல்லமுடியும்? //
நீரும், அருந்ததி ராயும் சாதியை,பார்ப்பனியத்தை ஒழிக்கப் போராடுகிறவர்களாக்கும்..?!
// மாறாக சரவணன், செந்தில் குமரன், சிவகார்த்திகேயன் போன்ற இன்ன பிற மக்கள்திரள் பார்ப்பனியத்திற்கே பாடை கட்ட தயாராகிவிட்டார்கள். //
தமிழ் தாகம் அண்ணாத்தையை ஏன் விட்டுவிட்டீர்..?! அவர் ஒருத்தரே ஆயிரம் பேருக்கு சமம்.. அவரையும் சேத்துக்கங்க.. பெருந்திரளாயிருவீங்க.. பார்ப்பனியத்துக்கு இன்று மாலைக்குள் பாடை கட்டிவிடலாம்..
// இந்த பெயர் வைக்கும் விடயத்தில் சரவனணின் கருத்துக்களுடன் நான் உடன்படும் நிலையில் அம்பிக்கு என்ன பிரச்சனை ? //
ஹிஹீ.. எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல அண்ணாத்தே.. பிரச்சினை உங்களுக்குத்தான்.. சிவகார்த்திகேயன் வளர்ந்தால் தெரியும்..
// அம்பிக்கு ஏதேனும் துப்பு இந்தால் அவரும் அவருடைய வடமொழியில் இருந்து தை முதல் ஏனைய மாதங்கள் சம்ஸ்கிருத மொழியில் உள்ள மாதங்கள் தான்[கார்திகை உட்பட] என்று வடமொழி இலக்கியங்கள் மூலம் காட்டட்டுமே !//
மாதங்கள் இருக்கட்டும்.. எனக்கு துப்பு இருக்கிறதா இல்லையா என்பதும் ஒரு பக்கமிருக்கட்டும்.. பெரிய துப்பா கொடுத்து வெச்சுருக்கீங்களே அண்ணாத்தே..:
“சிவ பக்தரான என் மாமனார் “சிவ குரு” என்று பெயர் வைக்க விறுப்பியதும் , முருக பக்தரான என் மனைவி கார்த்திகேயன் என்று ஆசை பட்டதும் , பின்பு நான் மாமாவுக்கும் , மனைவிக்கும் இடையே சமரசம் செய்து சிவகார்த்திகேயன் என்று இருதியாக பெயர் ஈட்டதும் தமிழ் நாடு முழுதும் உள்ள நடைமுறை தானே !”
கார்த்திகேயன் தமிழ் மாதத்துடன் தொடர்புள்ள தமிழ்ப் பெயரென்றால், சித்திரேயன், வைகாசியேயன் (விசாகன் என்ற பெயரும் முருகனுக்கு இருக்கிறது), ஆனியேயன், ஆடியேயன், ஆவணியேயன் ….. பங்குனியேயன் என்ற பெயர்கள் யாருக்காவது இருக்கிறதா.. பூரணை எந்த நாள்மீனுடன் கூடுகிறதோ அந்த நாள்மீனின் பெயர்தான் அந்த மாதத்துக்கும் என்று சரியாக கூறினீர்கள், கார்த்திகேயன் நாள் மீனுடன் தொடர்புள்ள பெயர் என்று நீங்களே ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. எனவே மாதங்களை விட்டுவிடுங்கள் பாவம்.. நாள்மீன் தொடர்பை மட்டும் விவாதிக்கலாம்..:
கார்த்திகேயன் தமிழ்ப் பெயர் என்கிறீர்கள்.. இரண்டு விடயங்களை விளக்குங்கள்..:
1) “ஏயன்” / “ஏய” என்பது பொதுவாக மகனைக் குறிக்கும் வடமொழி வழக்கு.. (எ.டு) ராதாவின் மகன் ராதேய(ன்), அஞ்சனாவின் மகன் ஆஞ்சநேய(ன்), கங்காவின் மகன் காங்கேய(ன்)
ஆக, கார்த்திகா/கார்த்திகை என்ற நாள்மீன் கூட்டத்தின் மகன் கார்த்திகேயன் என்று புராணங்கள் கூறுவதை எப்படி மறுப்பீர்கள்..
2) கார்த்திகை நாள்மீன் கூட்டத்துக்கும் தமிழ் முருகனுக்கும் உள்ள தொடர்புக்கு, ‘பார்ப்பன புராணங்கள்’ கூறும் மகன் என்னும் உறவைத் தவிர்த்த, தொன்மையான வேறு ஆதாரங்கள் தமிழில் உண்டா.. இருந்தால் கொடுங்கள்..
கார்த்திகேயன் தமிழ் பெயர் என்று நீங்கள் நிறுவினால் எனக்கும் மகிழ்ச்சியே..
\\ பெரியாரை ராமசாமி நாயக்கர் என்று கூறுவது உமக்கு அருவெறுப்பாகவும், பெரியார் திரைப்படம் ராமசாமி நாயக்கரு என்ற பெயரில் ஆந்திராவில் ஓடியதும், அருந்ததி ராய் தன் சாதிப் பெயரை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சாதியை ஒழிக்கப்போவதும் உமக்கு கிளுகிளுப்பாக இருப்பதையும் காட்டுகிறது.. மானம் ரோசம் பற்றி எல்லாம் நீர் பேசுவது காமெடியாக இருக்கிறது..\\
ராமசாமி நாயக்கரும், அருந்ததி ராயும் நல்ல வேளையாக சாதியை ஒழிக்கப் போராடினார்கள்; போராடுகிறார்கள். அம்பி என்று பெயர் வைத்துக்கொண்டு பார்ப்பனியத்திற்கு தரகன் வேலை பார்க்கவில்லையே!
இப்படி இருக்கிற அம்பிக்கு மானம், ரோசம் பற்றி பேசுகிற பொழுது காமெடியாக இருக்கிறதாம். அம்பி மேலும் சிரிக்கலாம். சிரிப்பது மனிதனுக்கே உரிய உணர்ச்சி. அப்படியாவது விலங்கு நிலையிலிருந்து மனிதனாக வரட்டும். வாழ்த்துக்கள்!
\\மேற்படி கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்று அழைக்கப்படுவது யார்.. ’தமிழ் முருகனா’..? ’பார்ப்பனிய முருகனா’..?\\
சிவன் சிந்திய விந்தை அருந்ததி முழுங்கமாட்டேன் என்று அடம் பிடிக்கப்போய், மற்ற ஆறுபெண்கள் முழுங்கி ஆறுமுகம் பிறந்தான் என்று மகாபாரதம், குமாரசம்பவம் கதைக்கிறது. அறுவர்பயந்த ஆரமர் செல்வ என்று திருமுருகு பார்ப்பனியமயாக்குகிறது. பரிபாடல் வெறியாடுகிற வேலனை “சொல்வதெல்லாம் உண்மையுமல்ல; பொய்யுமல்ல” என்று அசிங்கப்படுத்தி விட்டு செவ்வேள் பிறப்பு என்று பார்ப்பனியத்தை தமிழர்கள் தலையில் கட்டுகிறது. இந்த தப்புலித்தனம் தமிழர்களுக்குரியதா?
// சிவன் சிந்திய விந்தை அருந்ததி முழுங்கமாட்டேன் என்று அடம் பிடிக்கப்போய், மற்ற ஆறுபெண்கள் முழுங்கி ஆறுமுகம் பிறந்தான் என்று மகாபாரதம், குமாரசம்பவம் கதைக்கிறது. //
இந்த விந்தை விழுங்கும் விவகாரத்தையெல்லாம் யார் எழுதிய மகாபாரத்தில் படித்தீரென்று தெரியவில்லை.. வியாசரின் மகாபாரத்தின் சல்லிய பருவத்தில் வரும் கார்த்திகேயனின் பிறப்பு பற்றிய விவரணையில் இந்த விந்து விழுங்கும் சமாச்சாரமெல்லாம் இல்லை.. விவாத நேர்மையைப் பற்றி நீர் யோக்கிய சிகாமணி போன்று கதைக்கும் போதெல்லாம் அருவருப்பையும் மிஞ்சி சிரிப்புதானய்யா வருகிறது..
\\முருகனுக்கு பூணூலை நான் போடவில்லை.. பூணூல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முருகன் முருகன்தான் என்று நான் கூறிக்கொண்டிருப்பதை ஏன் மறைக்கிறீர்கள்..\\
பூணுல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முருகன் முருகன் தானாம்! சூத்திரனைக் கடவுளாக ஏற்பதற்கு பார்ப்பான் செய்த அப்பட்டமான துரோகச் செயல் இது! பூணுல் போட்ட பிறகு தானே ஸ்கந்தன், சுப்ரமண்யம் போன்ற பார்ப்பன பம்மாத்து எல்லாம்! இதையெல்லாம் விட்டுவிட்டு முருகன் முருகன் என்று முக்கிக் காட்டுகிறார் அம்பி. இதே அம்பி ஒரு கட்டத்தில் சுப்ரமண்ய சாமி, காவடி எடுத்தலையும் அலகு குத்துதலையும் தடுத்துவிட்டாரா என்ன? என்று கேட்டவர் தான். “ஜாமீன்தார் மோகனாவ நல்லா பார்த்துக்குவா!” என்று தில்லான மோகனாம்பாள் படத்தில் வைத்தி கேட்கவில்லையா? அந்த வேலையைத் தான் அம்பி செய்து கொண்டிருக்கிறார்.
\\முருகனை அருகன் என்றது பிரச்சினை இல்லையா..?!\\
ரெடிமேடாக மறுமொழி எழுதுகிற பொழுது அருகனைச் சொருகுவது அம்பிக்கு வசதியாக இருக்கிறது. சிரவணின் கையில் வேல் எப்படி வந்தது என்று முன்னர் கேட்ட அம்பி இப்பொழுது முருகனை அருகன் என்றது பிரச்சனையில்லையா என்று புது நாடகம் போடுகிறார். சமணர்களுக்கு முன்பே முருகன் தமிழ் தொல்குடிகளின் கடவுள் என்பதை வெறியாடல் சடங்கின் மூலம் விளக்கியிருக்கிறேன். இதை மறைக்கிற அம்பி, அடிவாங்கியும் புதுச்சட்டை போட்டுக்கொண்டு அடுத்த பஞ்சாயத்து போகிற வடிவேலு போல புது அவதாரம் எடுக்கிறார்! ஆயிரம் ஆண்டு கால பார்ப்பனிய இழிவில்லையா? இப்படித்தான் இருக்கும்.
குறிப்பு: புஜாவில் இருந்து வடிவேல் குறித்த வாசகம் எடுக்கப்பட்டுள்ளது.
// பூணுல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முருகன் முருகன் தானாம்! சூத்திரனைக் கடவுளாக ஏற்பதற்கு பார்ப்பான் செய்த அப்பட்டமான துரோகச் செயல் இது! //
’சூத்திரனைக்’ கடவுளாக ஏற்பதால் பார்ப்பான் யாருக்கு துரோகம் செய்தானோ..?! சூத்திரர்களுக்கா, பார்ப்பனர்களுக்கா..?!!! தமிழர்களின் கடவுளுக்கு பார்ப்பான் பூணூல் போட்டுவிட்டான் என்று கூறிக்கொண்டு அந்த சாக்கில் கடவுளை ’சூத்திரனாக்குகிறீரோ’..
// இதே அம்பி ஒரு கட்டத்தில் சுப்ரமண்ய சாமி, காவடி எடுத்தலையும் அலகு குத்துதலையும் தடுத்துவிட்டாரா என்ன? என்று கேட்டவர் தான். //
பூணூல் போட்டுவிட்டதால் காவடி, அலகு, பூக்குழி எல்லாம் வேண்டாம் என்று முருகன் சொல்லியிருந்தால் அவனை பார்ப்பனியனாக காட்டுவதற்கு காரணம் உண்டு.. பார்ப்பான் பூணூல் போட்டதாலோ, நீர் குல்லா வைப்பதாலோ முருகன் சாதிக்கடவுளாகவோ ,மதம் மாறியோ போய்விடப்போவதில்லை..
// “ஜாமீன்தார் மோகனாவ நல்லா பார்த்துக்குவா!” என்று தில்லான மோகனாம்பாள் படத்தில் வைத்தி கேட்கவில்லையா? அந்த வேலையைத் தான் அம்பி செய்து கொண்டிருக்கிறார். //
என்னை தில்லானா மோகனாம்பாள் வைத்தி என்று திட்டுவதற்காக முருகனை ஜமீந்தார் ஆக்கிவிட்டீரா.. லோக்கல் ஜமீந்தார் கூடாது என்று டயோனிசஸ், மலக் டவுஸ் என்று வகை வகையாக ஃபாரின் ஜமீந்தார்களை அழைத்துக் கொண்டு வந்து தில்லாலங்கடி வைத்தி வேலையை நீர் செய்ததை மறந்துவிட்டீரா..?!
// சிரவணின் கையில் வேல் எப்படி வந்தது என்று முன்னர் கேட்ட அம்பி இப்பொழுது முருகனை அருகன் என்றது பிரச்சனையில்லையா என்று புது நாடகம் போடுகிறார். //
என்னய்யா உளறுகிறீர்.. முருகன்தான் அருகன், அருகன்தான் முருகன் என்று ஆரம்பித்தது யார்.. நானா, நீரா..?!
// சமணர்களுக்கு முன்பே முருகன் தமிழ் தொல்குடிகளின் கடவுள் என்பதை வெறியாடல் சடங்கின் மூலம் விளக்கியிருக்கிறேன். //
அது நீங்கள் போட்ட அடுத்த நாடகம்.. அடுத்தடுத்த நாடகங்களில் டயோனிசஸ், மலக் டவுஸ் என்றெல்லாம் வரிசையாக கொண்டுவந்து தமிழர்களின் தொல்குடிகளின் கடவுளாக அடுக்கியிருக்கிறீர்..
வடிவேலு காமெடியைக்கூட புஜா-லிருந்துதான் சுட்டீரா..?!
\\ தமிழர்களின் கடவுளுக்கு பார்ப்பான் பூணூல் போட்டுவிட்டான் என்று கூறிக்கொண்டு அந்த சாக்கில் கடவுளை ’சூத்திரனாக்குகிறீரோ’..\\
அதுதானே! கடவுளைச் சூத்திரனாக்கினால் அம்பிகள் எப்படி பொறுத்துக்கொள்வார்கள்?
\\ ’சூத்திரனைக்’ கடவுளாக ஏற்பதால் பார்ப்பான் யாருக்கு துரோகம் செய்தானோ..?! சூத்திரர்களுக்கா, பார்ப்பனர்களுக்கா..?!!!\\
சூத்திரர்களுக்கு!
பார்ப்பனியக்கூட்டம் கனலிங்கத்திற்கு பூணுல் அணிவித்து ஸுத்தப்படுத்தவில்லையா? பார்ப்பன பாசிச இயங்கியல் அல்லவா இது!
\\ பூணூல் போட்டுவிட்டதால் காவடி, அலகு, பூக்குழி எல்லாம் வேண்டாம் என்று முருகன் சொல்லியிருந்தால் அவனை பார்ப்பனியனாக காட்டுவதற்கு காரணம் உண்டு.. பார்ப்பான் பூணூல் போட்டதாலோ, நீர் குல்லா வைப்பதாலோ முருகன் சாதிக்கடவுளாகவோ ,மதம் மாறியோ போய்விடப்போவதில்லை..\\
“மோகனா நல்லாதானே வாழப்போறா! அவளுக்கென்ன குறைச்சல் வைக்கப்போகிறார் சுப்ரமண்யம்?”
ஆனாலும் பாருங்கோ, திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம், சட்டையோ போடாமல் போக வேண்டுமாம். பார்ப்பான் போட்ட கட்டளை இது. பார்ப்பான் தான் நாகரிகமின்றி சட்டையேபோடாமல் மனவக்கிரத்துடன் பூணுலைப் போட்டுக்கொண்டு தாங்கள் எல்லாம் அவாள்கள் என்று ஆணவத்துடன் அலைகிறான். இதுதான் தெய்வீகம் என்று சொல்லி, வருகிற பக்தைனையும் அரை அம்மணமாகக்காட்டுவது பார்ப்பானின் கைங்கர்யம்! மறி அறுத்து முருகனுக்கு படைக்கிற நிகழ்வெல்லாம் அங்கில்லை! சுப்ரமண்யன் இவ்விதம் சாதிக்கடவுளாக நிற்கிறபொழுது அம்பியின் தரகுத்தனம் வெட்கமின்றி இருக்கிறது.
\\ என்னய்யா உளறுகிறீர்.. முருகன்தான் அருகன், அருகன்தான் முருகன் என்று ஆரம்பித்தது யார்.. நானா, நீரா..?!\\
முந்தாநாள் வாதத்தில் அருகன் கையிலே வேல் என்று ஆட்டம் போட்டீர். சிரவணனை சுட்டிக்காட்டியவுடன், இப்பொழுது வேலையே காணோம். வேசத்தை ஒழுங்காகப் போடவும்.
\\ அது நீங்கள் போட்ட அடுத்த நாடகம்.. அடுத்தடுத்த நாடகங்களில் டயோனிசஸ், மலக் டவுஸ் என்றெல்லாம் வரிசையாக கொண்டுவந்து தமிழர்களின் தொல்குடிகளின் கடவுளாக அடுக்கியிருக்கிறீர்.\\
வெறியாடல் என்பது நாடகமா? ஸ்கந்தன் சுப்ரமண்யத்திற்கு பதில் சொல்ல துப்பில்லாத அம்பிக்கு டயோனிசஸ், மலக்டவுஸ் எல்லாம் எதற்கு?
// “மோகனா நல்லாதானே வாழப்போறா! அவளுக்கென்ன குறைச்சல் வைக்கப்போகிறார் சுப்ரமண்யம்?” //
“மோகனா நல்லாதானே வாழப்போறா! அவளுக்கென்ன குறைச்சல் வைக்கப்போகிறார் ஃபாரின் ஜமீந்தார்?” ..?!
// ஆனாலும் பாருங்கோ, திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம், சட்டையோ போடாமல் போக வேண்டுமாம். பார்ப்பான் போட்ட கட்டளை இது. பார்ப்பான் தான் நாகரிகமின்றி சட்டையேபோடாமல் மனவக்கிரத்துடன் பூணுலைப் போட்டுக்கொண்டு தாங்கள் எல்லாம் அவாள்கள் என்று ஆணவத்துடன் அலைகிறான். இதுதான் தெய்வீகம் என்று சொல்லி, வருகிற பக்தைனையும் அரை அம்மணமாகக்காட்டுவது பார்ப்பானின் கைங்கர்யம்! மறி அறுத்து முருகனுக்கு படைக்கிற நிகழ்வெல்லாம் அங்கில்லை! சுப்ரமண்யன் இவ்விதம் சாதிக்கடவுளாக நிற்கிறபொழுது அம்பியின் தரகுத்தனம் வெட்கமின்றி இருக்கிறது.//
கடவுளை வணங்கப்போகும் போது பார்ப்பான் உட்பட எல்லா பக்தர்களும் மேலாடை இல்லாமல் பணிவுடன் போகவேண்டும் என்ற வழக்கம் நிலப்பிரபுத்துவ கால எச்சம்.. பூணூல் இல்லாத கடவுளாக இருந்தாலும் சட்டையுடன் எவரும் பூசையில் அப்போது பங்கு கொண்டதில்லை.. தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில் இந்த வழக்கம் இப்போது இல்லை என்பதால் அங்கெல்லாம் முருகன் சாதிக் கடவுளாக இல்லை என்றும் நீர் ஏற்றுக் கொள்வீரா..?!!!
// முந்தாநாள் வாதத்தில் அருகன் கையிலே வேல் என்று ஆட்டம் போட்டீர். சிரவணனை சுட்டிக்காட்டியவுடன், இப்பொழுது வேலையே காணோம். வேசத்தை ஒழுங்காகப் போடவும். //
உளறலின் உச்சம்..
// வெறியாடல் என்பது நாடகமா? ஸ்கந்தன் சுப்ரமண்யத்திற்கு பதில் சொல்ல துப்பில்லாத அம்பிக்கு டயோனிசஸ், மலக்டவுஸ் எல்லாம் எதற்கு? //
கையும் களவுமாக பிடிபட்டதும் உமது ஃபாரின் ஜமீந்தார்களையெல்லாம் என் தலை கட்டுகிறீரே.. இந்த தில்லாலங்கடி வைத்தி வேலையெல்லாம் இங்கே நடக்காது..
\\ கடவுளை வணங்கப்போகும் போது பார்ப்பான் உட்பட எல்லா பக்தர்களும் மேலாடை இல்லாமல் பணிவுடன் போகவேண்டும் என்ற வழக்கம் நிலப்பிரபுத்துவ கால எச்சம். பூணூல் இல்லாத கடவுளாக இருந்தாலும் சட்டையுடன் எவரும் பூசையில் அப்போது பங்கு கொண்டதில்லை..\\
1. மேலாடை அணியாமல் கடவுளை வணங்குவதற்குப் பெயர் பணிவா? அம்பியின் மனவக்கிரத்திற்கு இதுவும் ஒரு சான்று.
2. இச்சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் ஆயிரம் கால ஆண்டுகளாக கோயிலுக்குள்ளேயே நுழையவில்லை. இதில் எல்லா பக்தர்களும் பணிவு கருதி சட்டைபோடாமல் வணங்கினார்களாம்? பூசை வேறு செய்தார்களாம்! யார் அந்த எல்லா பக்தர்கள்?
3. சட்டைப்போட்டு வணங்குகிற கிறித்தவர்களும் இசுலாமியர்களும் அம்பிக்கு பணிவற்றவர்களா?
\\ தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில் இந்த வழக்கம் இப்போது இல்லை என்பதால் அங்கெல்லாம் முருகன் சாதிக் கடவுளாக இல்லை என்றும் நீர் ஏற்றுக் கொள்வீரா..?!!!\\
ஸ்கந்தனும், சுப்ரமண்யனும் இருக்கிற இடங்களில் எல்லாம் சட்டைமேலேயே கைவைத்தாயிற்று! இதுபோக தமிழ்நாட்டின் பிற இடங்களில் சோத்திலே கைவத்தாயிற்று! மறி அறுத்து படைக்கிற முருகன் தமிழ்நாட்டில் எங்கும் இல்லை. பார்ப்பனியம் பத்தும் செய்யும் என்கிற பொழுது பார்ப்பனியக்கடவுள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வீரா என்று கேட்பது தரகுத்தனம்.
\\கையும் களவுமாக பிடிபட்டதும் உமது ஃபாரின் ஜமீந்தார்களையெல்லாம் என் தலை கட்டுகிறீரே.. இந்த தில்லாலங்கடி வைத்தி வேலையெல்லாம் இங்கே நடக்காது..\\
கேட்ட கேள்விக்கு பதில் எங்கே? “வெறியாடல் என்பது நாடகமா? ஸ்கந்தன் சுப்ரமண்யத்திற்கு பதில் சொல்ல துப்பில்லாத அம்பிக்கு டயோனிசஸ், மலக்டவுஸ் எல்லாம் எதற்கு?”
// மேலாடை அணியாமல் கடவுளை வணங்குவதற்குப் பெயர் பணிவா? அம்பியின் மனவக்கிரத்திற்கு இதுவும் ஒரு சான்று.//
வழக்கம் அப்படி இருந்தது என்று சுட்டிக்காட்டினால் என் மனதுக்கும் அந்த வக்கிரத்துக்கும் முடிச்சு போடுகிறீர்.. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதே உமது தொழிலாயிருக்கிறது..
// கேட்ட கேள்விக்கு பதில் எங்கே? “வெறியாடல் என்பது நாடகமா? ஸ்கந்தன் சுப்ரமண்யத்திற்கு பதில் சொல்ல துப்பில்லாத அம்பிக்கு டயோனிசஸ், மலக்டவுஸ் எல்லாம் எதற்கு?” //
உமது தில்லாலங்கடி வைத்தி வேலையைப் பற்றிக் கூறினால் கோவம் வருகிறதாக்கும்..
வெறியாடல் என்பது நாடகமா? என்கிறீர்கள்.. அது வெறியாடியவர்களுக்குத்தான் தெரியும்..
வெறியாடல் என்றது நாடகமா? என்றால், முருகன் என்றால் வெறியாடுதல் மட்டுமே என்று நீர் கூறுவது, முருகன் சூர் தடிந்த தமிழ் கடவுள் என்பதை மறுக்க, நீர் நடத்தும் நாடகமே..
// ஸ்கந்தன் சுப்ரமண்யத்திற்கு பதில் சொல்ல துப்பில்லாத //
இதற்கு பதிலை ஏற்கனவே கூறிவிட்டேன்.. வடமொழிப் பெயர்களால் முருகனை பார்ப்பனியனாக்க முடியாது என்று கூறினாலும் திரும்பத்திரும்ப நீர் எதிர்பார்க்கும் பதிலை கூற வற்புறுத்துவது பரிதாபமாக இருக்கிறது..
// அம்பிக்கு டயோனிசஸ், மலக்டவுஸ் எல்லாம் எதற்கு? //
எனக்கு எதற்கு..?! நீர் அழைத்து வந்த இந்த ஃபாரின் ஜமிந்தார்களை நீரே வைத்துக் கொள்ளும்..
மேலாடை அணியாமல் வணங்குவது பணிவு என்று முதலில் சொன்ன அம்பி, இப்பொழுது அச்செயல் வக்கிரம் என்கிறார். இதே அம்பிக்கு, சூத்திரர்கள் இறுதிச் சடங்கு செய்யும் உரிமை, பூணுல் அணிவதன் மூலமாக மறுக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டிய பொழுது, பூணுல் தியான நிலையை குறிக்கிறது என்று மனவக்கிரத்தைக் காண்பித்தவர் தான். பார்ப்பனப் பாசிசமே தியானம், பணிவு என்று திரிகிற பொழுது, அதையே நுகர்ந்து வாழும் அம்பியிடம் வக்கிரத்தை எங்கே தனியாக காண இயலும்? அம்பி சொல்வது சரிதான். அம்பியின் மனது என்று ஒன்று பார்ப்பனிய வக்கிரம் என்ற ஒன்று என இரண்டுமே ஒன்றாக இருக்க மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டியதாய்ப் போயிற்று!
\\முருகன் என்றால் வெறியாடுதல் மட்டுமே என்று நீர் கூறுவது, முருகன் சூர் தடிந்த தமிழ் கடவுள் என்பதை மறுக்க, நீர் நடத்தும் நாடகமே..\\
இதே அம்பிதான் சூரனை முருகன் என்ன கொன்றாவிட்டான்?, மயிலாக மாற்றி தன்னிடமே வைத்திருக்கிறான் என்று தட்டைத் திருப்பிப் போட்டு தட்டியவர். அதாவது சூரன் மயிலாகிப்போனான்! அம்பியின் பார்ப்பனப் பாசம் இவ்விதம் பல்லிளிக்கிற பொழுது சூர் தடிந்த தமிழ் கடவுள் என்று அம்பி வாதாடுகிறாராம்? எத்துணை பெரிய பித்தலாட்டம்!
\\ வடமொழிப் பெயர்களால் முருகனை பார்ப்பனியனாக்க முடியாது என்று கூறினாலும் திரும்பத்திரும்ப நீர் எதிர்பார்க்கும் பதிலை கூற வற்புறுத்துவது பரிதாபமாக இருக்கிறது..\\
அம்பிக்கு பரிதாபமாக இருக்கிறதாம்! பிரம்மதேயம் என்றும் தேவஸ்தானம் என்றும் ஆதினம் என்றும் பொறுக்கித்தின்று வயிறு வளர்க்க, ஸ்கந்தன் தேவைப்பட்டது! சோற்றிலேயே கைவத்த துரோகவரலாறு அல்லவா சுப்ரமண்யனுடையது! சொந்தக்காலில் நிற்கமுடியாமல் ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்கிற பார்ப்பனியம், பரிதாப்படுகிறதாம்! பார்ப்பனியம் பத்தும் செய்யும் என்று சொல்வது இதைத்தான்.
\\ஆதமை வணங்க மறுத்த மயில் ஏறும் கடவுளான யெசிடிக்களின் மலக் டவுஸ் என்ற செமிடிக் ஏஞ்சலுக்கான புராணங்களும் வழிபாடுகளும் முருகன் பார்ப்பனியனாகிவிட்டான் என்பதை தோலுரிக்கிறது என்று உளறிக்கொண்டு தென்றலார் முருகனை செமிடிக் கடவுளாக்கப் பார்ப்பதை விடவா இன்று முருகன் தமிழனுக்கு அன்னியப்பட்டுப் போனான்..?!\\
வரலாற்றுப் பார்வையிலே இப்படியொரு வாதத்தை வைக்கிற வானமாமலையை மறுக்கிற தமிழர்கள், முருகன் இங்கிருந்து தான் வெளியே சென்றிருக்க வேண்டும் என்று தன் தரப்பு வாதத்தை வைக்கிறார்கள். ஆக உள்ளே வெளியே பிரச்சனையை பேசித்தீர்க்கலாம். ஆனால் முருகன் பார்ப்பனியமயமாக்கப்பட்ட துரோகத்தை எவர் ஒருவரும் ஒப்ப மாட்டர். இதற்கு பதில் சொல்ல துப்பின்றி வானமாமலையை கம்பு கொண்டு அடிப்பது எதற்காக? பக்கத்திலே இருக்கிற பார்ப்பானியம் தமிழர்களுக்கு எந்தவிதத்தில் சொந்தம்? பார்ப்பனிய முருகன் அந்நியப்பட்டுபோகவில்லை; அம்பலப்பட்டு போகிறான்.
\\மேற்படி பின்னூட்டங்களுக்கு தாங்கள் ‘மூடிக்கொண்டு செல்லாமல்’ மடைகளைத் திறந்துவிடலாமே.. கூடுதலாக டயோனிஸசின்/மலக் டவுசின் உன்னதமான புராணங்கள் மட்டும் ஒரிஜினல் முருகனை எப்படி பிரதிபலிக்கிறது என்று காட்டி முருகனின் இடையில் வந்த பூணூலை கழற்றி குல்லாவும் போட்டுவிடலாம்..\\
எல்லா சமூக இலக்கியங்களிலும் முருகயர்தல் இருக்கிறது. அகப்பாடல்களிலே வெறியாடல் இருக்கிறது. இதைத்தவிர்த்து, பார்ப்பனிய புளுகு எங்கிருக்கிறது? இதற்கு எதற்கு தனி ஆதாரம்? பூணுலை கழற்றி குல்லா போடத்தேவையில்லை. மறி அறுத்து உண்ணட்டும் மக்கள். எங்க வந்து உட்கார்ந்து கொண்டு தண்டசோறு தின்பது மட்டுமில்லாமல், போகிறவர் வருகிறவனையெல்லாம் தீட்டு புனிதம் என்பது! பார்ப்பனியம் ஒட்டுண்ணியாய் இவ்விதம் மக்களைச் சுரண்டுவதை வேரொடு முறியடிப்போம்.
// வரலாற்றுப் பார்வையிலே இப்படியொரு வாதத்தை வைக்கிற வானமாமலையை மறுக்கிற தமிழர்கள், முருகன் இங்கிருந்து தான் வெளியே சென்றிருக்க வேண்டும் என்று தன் தரப்பு வாதத்தை வைக்கிறார்கள். ஆக உள்ளே வெளியே பிரச்சனையை பேசித்தீர்க்கலாம். //
வானமாமலையார் கருத்து கூறியது டயோனிசஸ் விடயத்தில்.. மேற்படி யெசிடி மலக் முருகன் உங்கள் சரக்கு..
உள்ளே வெளியே பிரச்சினையை எப்படித் தீர்ப்பீர்கள்..? ’டயோனிசஸைப் போல தொன்மையான புராணங்கள் முருகனுக்கு இல்லை, எனவே தமிழ் தொல்குடிகள் வழிபட்டது கிரேக்க கடவுளைத்தான்’ என்றா..?! கூடவே மலக் முருகனை ஸ்டெப்னியாக வேறு வைத்திருக்கிறீர்..
// எல்லா சமூக இலக்கியங்களிலும் முருகயர்தல் இருக்கிறது. அகப்பாடல்களிலே வெறியாடல் இருக்கிறது. இதைத்தவிர்த்து, பார்ப்பனிய புளுகு எங்கிருக்கிறது? இதற்கு எதற்கு தனி ஆதாரம்? //
பின்னூட்டம் 22.2.1.1.2.2-ல் “ மேலும் ஈராக்கின் யேசிடி மக்களின் முருக வழிபாடு, ஆப்ரிக்கர்களின் மொருங்கா வழிபாடு போன்றவை தமிழ் சைவர்கள் பார்ப்பனியமயமாகிப்போனதைத் தோலுரிக்க வல்லவை!” என்று ’வலிமையான ஆதாரத்தைக்’ கூறிவிட்டு இப்போது இதற்கு எதற்கு தனி ஆதாரம் என்கிறீர்..
திருமுருகு, பரிபாடல் மட்டுமன்றி பெரும்பாணாற்றுப் படை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, மதுரைக்காஞ்சி, சிலம்பு, சீவக சிந்தாமணி என்று சங்க, சங்கம் மருவிய கால இலக்கியங்களில் சூர் தடிந்த, அவுணரை அடக்கிய வேல் உடையவன் என்று முருகனைப் பாடியிருக்கும் போது, நீரோ முருகன் என்றால் வெறியாட்டுதல், முருகயர்தலோடு மூடிக் கொண்டு செல்லவேண்டும் வேறு எதுவும் செல்லாது என்று தீர்ப்பளிக்கிறீர்.. இப்படியே விவாதத்தை சந்து பொந்துகளில் இழுத்துக் கொண்டு போனால் டயோனிசசையோ, மலக்கையோ முருகனாக்கிவிடலாம் என்ற நப்பாசையா..?!
\\ உள்ளே வெளியே பிரச்சினையை எப்படித் தீர்ப்பீர்கள்..? ’டயோனிசஸைப் போல தொன்மையான புராணங்கள் முருகனுக்கு இல்லை, எனவே தமிழ் தொல்குடிகள் வழிபட்டது கிரேக்க கடவுளைத்தான்’ என்றா..?!\\
எளிமையான விசயம். ஆதிச்ச நல்லூர் தாழி உண்மையென்றால் அது சுட்டுகிற காலம் கிமு எட்டாம் நூற்றாண்டு. எந்தவிதமான புராணப்புளுகளும் இல்லை என்பது தெளிவாகிறது! இன்னொரு ஆதாரமும் தருவோம். முருகன் களிதறு புணர்ச்சியிலே வள்ளியை கவர்வதற்கு யானையில் வருகிறான், கோயம்புத்தூர் பாறை ஓவியங்கள் குறத்தியர்களின் நடனத்தையும், யானையில் அமர்ந்திருக்கிற வீரனது படத்தையும் காட்டுவதாக சொல்கிறது சில கட்டுரை. பாறை ஓவியங்களின் காலம் உண்மையெனில் அதன் காலம் 3000 ஆண்டுகள் என்றாகிறது. இதன் உண்மைத் தன்மை என்பது ஒருபுறமிருக்க, பார்பனியம் பல்லிளிக்கிறது இல்லையா? தமிழ் குடிகளின் வாழிபாட்டிலே புராண அசிங்கங்கள் இல்லையென்றாகிறது இல்லையா? ஸ்கந்தனையும் சுப்ரமண்யனையும் எப்படி விளக்குவீர்? ஒரு நாள் கூட இதற்கு விளக்கம் அளித்ததில்லையே அம்பி? சிறிதளவாவது மானம் ரோசம் இருக்கிறதா?
\\ “ மேலும் ஈராக்கின் யேசிடி மக்களின் முருக வழிபாடு, ஆப்ரிக்கர்களின் மொருங்கா வழிபாடு போன்றவை தமிழ் சைவர்கள் பார்ப்பனியமயமாகிப்போனதைத் தோலுரிக்க வல்லவை!” என்று ’வலிமையான ஆதாரத்தைக்’ கூறிவிட்டு இப்போது இதற்கு எதற்கு தனி ஆதாரம் என்கிறீர்..\\
சரியாகத்தானே கேட்டிருக்கிறேன். அங்கெல்லாம் பூணுல் எப்படிவந்தது? அவர்களின் கலாச்சாரத்திலே பார்ப்பனிய அடிமைத்தனம் எங்கிருக்கிறது? இதற்கு எதற்கு தனி ஆதாரம்?
\\ முருகன் என்றால் வெறியாட்டுதல், முருகயர்தலோடு மூடிக் கொண்டு செல்லவேண்டும் வேறு எதுவும் செல்லாது என்று தீர்ப்பளிக்கிறீர்..\\
மடையர் மன்ற வேலன் என்று தலைவி பூசாரியைத் திட்டுகிறாள் என்றால் முருகனின் பரிமாணம் தமிழ் சமூகத்தில் அவ்வளவுதான் இருக்கிறது. சங்க இலக்கியம் சொல்கிற சூருக்கும் அரக்கனுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. இப்படி வாழ்கிற தொல்குடிகள் அசுரரை அழித்ததாக கதை கட்டி விடுகிறது என்றால் இது எத்துணை பெரிய மானக்கேடான விசயம்? சோறு போட்டவனையே கழுத்தறுத்த துரோகம் தானே தெரிகிறது!
// முருகன் களிதறு புணர்ச்சியிலே வள்ளியை கவர்வதற்கு யானையில் வருகிறான், கோயம்புத்தூர் பாறை ஓவியங்கள் குறத்தியர்களின் நடனத்தையும், யானையில் அமர்ந்திருக்கிற வீரனது படத்தையும் காட்டுவதாக சொல்கிறது சில கட்டுரை. பாறை ஓவியங்களின் காலம் உண்மையெனில் அதன் காலம் 3000 ஆண்டுகள் என்றாகிறது. இதன் உண்மைத் தன்மை என்பது ஒருபுறமிருக்க, பார்பனியம் பல்லிளிக்கிறது இல்லையா? //
கோவையிலுள்ள வேட்டைக்காரன் மலை பாறை ஓவியங்களை வைத்து நீர் புனையும் புராணங்களை வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களே..
” ANCIENT PAINTINGS – Narasimapuram (Vettaikkaranmalai)
The paintings of animals like elephant, deer, horse are found here. One man is shown on an elephant’s back while another is seated on a horse with a spear in his hand, which depicts the fight between the two tribes or a hunting scene. Men dancing in a row with holding their hands together is another interesting painting.
Location : 30 km from Coimbatore.”
– http://www.tnarch.gov.in/cons/paint/paint4.htm
அதில் ஆடுபவர்கள் ஆண்கள் என்று தமிழ்நாடு தொல்லியல் துறை குறிப்பிடுகிறது.. நீர் குறத்திகள் என்கிறீர்.. நல்லவேளையாக நடுவில் நிற்பதுதான் வள்ளி என்று கூறாமல் விட்டீர்.. யானை மேல் வருபவன் முருகன் என்று எப்படி கண்டுபிடித்தீர் என்று வியந்து கொண்டிருக்கும் போது அவன் களிதறு புணர்ச்சியில் வருவதாக வேறு சொல்கிறீர்.. இது போன்ற கதை வசனங்களை எல்லாம் ஆதாரம் என்று கூறி முருகனின் தொன்மையை விளக்குவது நையாண்டி செய்வது போல் இருக்கிறது..
சங்க இலக்கியங்களில் முருகனின் தொன்மை இதைவிட தெளிவாகவே இருக்கிறது..:
”அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழு முதல் தடிந்த பேர் இசை,
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு”
– பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து ( குமட்டூர் கண்ணனார் உமது குமட்டில் இடிப்பதை கவனிக்கவும்.. )
” செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.”
– குறுந்தொகை 1 (திப்புத்தோளார் திப்பு சுல்தானின் தம்பி என்று எங்கிருந்தாவது ஆதாரங்களை தூக்கிக் கொண்டுவந்து இங்கே போட முயலாதீர்..)
// சரியாகத்தானே கேட்டிருக்கிறேன். அங்கெல்லாம் பூணுல் எப்படிவந்தது? அவர்களின் கலாச்சாரத்திலே பார்ப்பனிய அடிமைத்தனம் எங்கிருக்கிறது? இதற்கு எதற்கு தனி ஆதாரம்? //
ஆதாம், மலக் படைப்பு புராணத்தில் பூணூல் எப்படி வரும்.. உளறலுக்கு அளவேயில்லையா..
// மடையர் மன்ற வேலன் என்று தலைவி பூசாரியைத் திட்டுகிறாள் என்றால் முருகனின் பரிமாணம் தமிழ் சமூகத்தில் அவ்வளவுதான் இருக்கிறது. //
கடவுளையே திட்டுமளவுக்கு இருக்கிறது தலைவியின் ’அக உணர்ச்சி’ என்று பாடல் காட்டுவதை புரிந்து கொள்ளாத மடையர் யார்..?!
கண்மண் தெரியாமல் உளறிக்கொண்டிருந்ததில் உம் உள்ளக்கிடக்கையும் வெளியே வந்து விழுந்துவிட்டது.. தமிழ் தொல்குடிகளிடையே முருகனின் பரிமாணம் இவ்வளவுதான் என்பதே உமது விருப்பக் கணிப்பு..
பதிற்றுப் பத்திலும், குறுந்தொகையிலும் இருந்து களிதறு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டுகள் காட்டி சேம் சைடு கோல் போடுகிறார்! மேலும் வியாசர் எழுதிய சல்லிய பருவம் சொல்கிற கார்த்திக்கேயன் பிறப்பில் விந்து மேட்டர் இல்லை என்று சொல்லவருகிற அம்பி கார்த்திகேயன் பிறப்பை வாய்தவறி ஒப்புக்கொள்கிறார்! களிதறு புணர்ச்சியையும் கார்த்திகேயன் பிறப்பையும் ஒப்பிடுகிற பொழுது பார்ப்பனிய இழிவு தமிழர்களின் மீது சுமத்தப்பட்டதும் முருகன் பார்ப்பனியமாக்கப்பட்டான் என்பதும் அம்பிவாயாலேயே நிருபணமாகிறது.
\\ ஆதாம், மலக் படைப்பு புராணத்தில் பூணூல் எப்படி வரும்.. உளறலுக்கு அளவேயில்லையா..\\
உளறல் என்று சொல்கிற அளவிற்கு மலக்கை சுப்ரமணியடத்திலிருந்து தனியாகப் பிரித்துக்காட்டிவிடுகிறார். பார்ப்பனியம் அங்கில்லை என்பதற்கு இது மற்றுமொரு சான்று.
\\ கடவுளையே திட்டுமளவுக்கு இருக்கிறது தலைவியின் ’அக உணர்ச்சி’ என்று பாடல் காட்டுவதை புரிந்து கொள்ளாத மடையர் யார்..?!\\
அம்பியும் இராமும். இப்படி அக உணர்ச்சி பாடல் வருகிற இடத்தில், பார்ப்பனியத்தைக்கொண்டுபோய் ஆறுமுகம், பன்னிரெண்டு கை என்று பம்மாத்துகாட்டுவதோடு அதை தமிழனின் கலாச்சாரம் என்று சொல்கிற பொழுது பார்ப்பனியக்கைக்கூலித்தனம் அம்பலப்பட்டுபோகிறது.
\\ தமிழ் தொல்குடிகளிடையே முருகனின் பரிமாணம் இவ்வளவுதான் என்பதே உமது விருப்பக் கணிப்பு..\\
சரி தான். இப்படி எளிமையாக இருக்கிற தொடர்பு பார்ப்பானால் தான் புனிதம்-தீட்டு என்றாக்கப்பட்டது. பார்ப்பனியம் இவ்விதம் மக்களை ஆண்டு ஆண்டுகாலமாக அடிமைப்படுத்தி வயிறு வளர்க்கிறது.
// பதிற்றுப் பத்திலும், குறுந்தொகையிலும் இருந்து களிதறு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டுகள் காட்டி சேம் சைடு கோல் போடுகிறார்! //
நீர் எடுத்துவிட்ட புராணம் சகிக்கமுடியவில்லை.. அதனால் களிற்றின் மீது வரும் (சூர் தடிந்த, அவுணர்களை அடக்கிய) முருகனைப் பற்றிய தொன்மையான சங்க இலக்கிய ஆதாரங்களைக் கூறினேன்.. களிதறுப் புணர்ச்சியை மட்டுமே நீர் கட்டிக் கொண்டு அழ நான் காரணமில்லை..
// மேலும் வியாசர் எழுதிய சல்லிய பருவம் சொல்கிற கார்த்திக்கேயன் பிறப்பில் விந்து மேட்டர் இல்லை என்று சொல்லவருகிற அம்பி கார்த்திகேயன் பிறப்பை வாய்தவறி ஒப்புக்கொள்கிறார்! //
நீர் புளுகிய விந்து விழுங்கி சரடுகள் அம்பலமானது குறித்த ‘கூச்ச நாச்சம்’ எதையும் உம்மிடம் காணோம்.. கார்த்திகேயன் பிறப்புக் கதைகள் இருப்பதை நானென்ன ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது..? அதனால் அந்த கதைகள் உமது கற்பனைக்கேற்ப மாறிவிடப்போகிறதா..!
// களிதறு புணர்ச்சியையும் கார்த்திகேயன் பிறப்பையும் ஒப்பிடுகிற பொழுது //
ஏன், சூர் தடிந்ததையும் கார்த்திகேயன் பிறப்பையும் ஒப்பிடவேண்டியதுதானே..?!
// உளறல் என்று சொல்கிற அளவிற்கு மலக்கை சுப்ரமணியடத்திலிருந்து தனியாகப் பிரித்துக்காட்டிவிடுகிறார். பார்ப்பனியம் அங்கில்லை என்பதற்கு இது மற்றுமொரு சான்று. //
மத்திய தரைக்கடல், கிரேக்கம் இவற்றில் பார்ப்பனீயம் இல்லை என்பதற்கு உம்மிடம் யார் சான்று கேட்டார்கள்..? அங்குள்ள செமிட்டிக், கிரேக்க புராணங்களில் பார்ப்பனியம் இருக்காது என்பது அத்தனை பெரிய கண்டுபிடிப்பா..! பார்ப்பனீயம் இல்லாததால் மலக் டவுஸும், டயோனிசசும் தான் ஒரிஜினல் முருகன்களா..? ஃபாரின் ஜமிந்தார்களை திணிக்கும் முயற்சிகளைத் தொடரும் எண்ணத்திலிருக்கிறீரா..!
எத்தனை முறை மண்ணைக் கவ்வினாலும் வாயில் மண்ணோடு நீர் வெற்றி வெற்றி என்று கூவி மார்தட்டிக் கொள்வது வெட்டி வெட்டி என்றுதான் காதில் விழுகிறது..
களப்பிரர்களின் ஆட்சியில் தமிழ் இலக்கியம் :
களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தில் தாழிசை, துறை, விருத்தம் போன்ற புதிய பாவினங்களும் அவிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காப்பியப் புறனடை, பல்கயாம், போன்ற இலக்கண நூல்களும் நரிவிருத்தம், சீவக சிந்தாமணி, எலிவிருத்தம், கிளிவிருத்தம், விளக்கத்தார் கூத்து, பெருங்கதை போன்ற சமண சமய இலக்கியங்களும் மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத்திருவந்தாதி, கயிலை பாதி காளத்திபாதி திருவந்தாதி, திருஈங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருக்கண்ணப்பதேவர் திருமறம், மூத்த நாயனார் இரட்டைமணி மாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி ஆகிய சைவ சமய நூல்களும் தோன்றின. மேலும், இவற்றோடு ‘நீதி இலக்கியங்கள் எனப்படும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பான்மை நூல்கள் இக்களப்பிரர் காலத்தில் தோன்றியவைகளே ஆகும்”3 என்று மயிலை. சீனி.வேங்கடசாமி தமது களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
நன்றி :
http://www.keetru.com/index.php/1666-2010-06-23-19-00-19/2013-sp-341/25928-2014-01-10-05-39-20
அம்பி, தமிழ் இலக்கண நன்னூல் படித்து இருக்க வாய்ப்பு இல்லை போலும் ! அதனால் தான் அதில் கூறப்படும் சாரியைகள் கூட தெரிந்து இருக்கவும் வாய்ப்பு இல்லை போலும் ! அதனால் தான் “ஏயன்” / “ஏய” என்று மங்கலம் பாடிக்கொண்டு சம்ஸ்கிருதத்துக்கு போய் விட்டார் போலும் ![ஏ , அ இரண்டுமே நன்னூல் கூறும் சாரியை தானே ]!
அன்ஆன் இன்அல் அற்றுஇற்று அத்துஅம்
தம்நம் நும்ஏ அஉ ஐகுன
இன்ன பிறவும் பொதுச் சாரியையே (நன்னூல், 244)
கார்திகை + ஏ = கார்திகே [உம் :நன்று + ஏ + செய் = நன்றேசெய் ]
கார்திகே + அ = கார்திகேய [உம் :புளி + அ + மரம் =புளியமரம்
கார்திகேய + அன் = கார்திகேயன்[உம் ஒன்று + அன் + கூட்டம் =ஒன்றன் கூட்டம்]
தொடரும்…..
//“ஏயன்” / “ஏய” என்பது பொதுவாக மகனைக் குறிக்கும் வடமொழி வழக்கு.//
தமிழ் தாகம்,
ஆறுமுகம் என்பதும் நல்ல தமிழ்பெயர் தான். ஆனால் அம்பி இதற்கு பின்னால் உள்ள புராணங்களுக்கே பதில் சொல்லவில்லை. இதில் கார்த்திகேயனின் பிறப்பு குறித்து பார்ப்பனியம் கட்டவிழ்த்துவிடும் அசிங்கங்களுக்கு எங்கு பதில் சொல்லப்போகிறார்? அம்பி கொண்டிருப்பது ஈனபுத்தி. சமஸ்கிருதத்தில் பெயர் இருப்பவர்கள் எப்படி பார்ப்பனியத்தை எதிர்க்க முடியும் என்று துப்புகெட்டதனமாக கேள்வி கேட்கிறார். தமிழகம் ‘நமஸ்காரம்’ என்கிற வார்த்தையை தூக்கி எறிந்து ‘வணக்கத்தை’ நிலைநாட்டவே அரை நூற்றாண்டு கருத்தியல் போர் நடத்தியிருக்கிறது. இன்றைக்கு பிழைப்புவாதம் கோலோச்சுகிற காலகட்டத்தில் திணமணி வைத்தி போன்றவர்கள் அலுவலக் கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாக சரஸ்வதி வணக்கமே முதன்மையாக இருக்கவேண்டும் என்று பார்ப்பனியத்திற்கு கைக்கூலி வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதே கால கட்டத்தில் சின்னக்குத்தூசியின் பார்ப்பன எதிர்ப்புமரபு என்பது அம்பி மாமாக்களின் தரகுத்தனத்தைத் தோலுரித்துக்காட்டின; காட்டுகின்றன.
நிலைமை இப்படியிருக்க சரவணன், செந்தில்குமரன், கார்த்திகேயன் என்று பெயர் வைத்தவர்கள் பார்ப்பனிய எதிர்ப்பு பேசுகிறார்கள் என்றால் அம்பிகளுக்கு பொச்சரியத்தான் செய்யும்! ஆகையால் பெயருக்கு விளக்கம் தருவதற்குப் பதிலாக பார்ப்பனியத்தை மேலும் அம்பலப்படுத்துங்கள். கார்த்திகேயன் போன்ற நாளைய தலைமுறைகள் வளர்ந்துவருகிற பொழுது தன் தகப்பன் பார்ப்பன எதிர்ப்பு மரபு பேசியிருக்கிறார் என்று சரவணனுக்கு மட்டுமல்ல முகம் தெரியாத பல கோடி போராளிகளை காத்திரமாக நினைவுகூர்வார்கள். தஞ்சை சீனிவாசன் என்றால் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திண்ணை தூங்கியா நினைவிற்கு வருவார்? மகஇக சீனிவாசன் என்றால் பார்ப்பன பாசிஸ்டு விஷ்ணு நினைவிற்கு வருவாரா? அல்லது பாசிச எம்ஜிஆரை அம்பலப்படுத்திய கம்யுனிஸ்டு நினைவிற்கு வருவாரா? இவர்கள் தங்கள் காலங்களில் பார்ப்பனியம் தலைவிரித்தாடும் பொழுதே பதிலடிகொடுக்கத்தயங்காதவர்கள்! இங்கிருந்துதான் போராட்டங்களை கற்றுக்கொள்கிறோம். வர்க்கப்போராட்டம், சமூகத்தையே மாற்றுகிற பொழுது பெயர்களை மாற்றாதா? ஆகையால் சரவணனாக இருந்தால் என்ன? கார்த்திகேயனாக இருந்தால் என்ன? பார்ப்பனிய எதிர்ப்பு மரபை கட்டியமைப்போம். பார்ப்பனக் கைக்கூலித்தனத்தை அம்பலப்படுத்துவோம். இந்து என்று சொன்னால் யார் இந்து? என்று கேட்போம்? அரக்கர்களிடமிருந்து விவாதத்தைத் தொடங்குகள். மற்றபடி அம்பியின் வாதமெல்லாம் பீ துடைத்த குச்சிகள்!
ஆறு முகம் என்பதும் , ஆறு கார்த்திகை பெண்கள் என்பதும் கிருத்திகை Pleiades என்னும் நட்சதிரதொடு தொடர்பு உள்ளது. இந்த கிருத்திகை நட்சத்திரம் எனபது ஆறு நட்சத்திரங்கள் அடங்கிய கூட்டம் . இப்போது தொலை நோக்கி மூலம் பார்த்து ஏழு என்று கூறபட்டாலும் , அந்த காலத்தில் ஆறு நட்சத்திரங்கள் மட்டுமே அறியப்பட்டன . இன்றைக்கும் சப்பானிய கார் கம்பெனி சுபறு ஆறு நட்சத்திரங்கள் தான் லோகோவில் கொண்டுள்ளது
அந்த காலத்தில் எல்லா சமுதாயத்திலும் நட்சத்திரங்களோடு தொடர்பு படுத்தி நிறைய கதைகள் புனையப்பட்டன . ஒரு விதத்தில் இந்த கதைகள் கொண்டுதான் எளிய மக்கள் புரிந்துகொண்டார்கள்
அந்த கதை சரி தவறு என்பதை விட , அதில் அவர்களுக்கு இருந்த வானவியல் அறிவு புலனாகிறது .
அதனால் தான் கேட்டேன் , ஆர்முகன் எனபது தூய தமிழனாக முருகன் இருக்கும் போதே அறியபட்டாரா இல்லை பூணூல் போடப்பட்ட பிறகு அறியபட்டாரா என்று . இது போல வானவியல் அறிவை இறந்து விட்ட செந்தமிழ் கொண்டுள்ளதா ?
அடுத்து முருகனை ஆரியபடுதி விட்டார்கள் பூணூல் போட்டு விட்டார்கள் என்று ஆதங்கப்டுகிரீர்களே , வேறு மதங்கள் வந்து இருந்தால் முருகன் கொல்லப்பட்டு இருக்கமாட்டாரா ?
தேவரடியார் பெண்கள் ஆடிய சதிர் என்ற ஆடல் மரபில் இருந்து களவாடபட்டதே பரதநாட்டியம் என்ற விடயத்தை திரு சொர்ணமால்யாவின் முனைவர் பட்ட ஆவணத்தில் இருந்து அறீந்துகொள்வதில் இராமனுக்கு என்ன மனத்தடை ? மேலும் கருநாடக சங்கிதம் என்ற இசை மரபு அப்பட்டமாக தமிழ் இசையில் இருந்து களவாடப்பட்டதே என்ற விடயம் திரு ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் பல்லாண்டு தம் செய்த தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை1917 இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் வெளியிட்டார். 1395 பக்கங்கள் உடையது இந்நூல். இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது.
இராமன் என்ன கேட்கின்றார் என்றால் ……
ஆறு முகன் எனபது தூய தமிழனாக முருகன் இருக்கும் போதே அறியபட்டாரா இல்லை “—-பார்பனர்களால்—-” பூணூல் போடப்பட்ட பிறகு ஆறுமுகன் என்று அறியபட்டாரா என்று? .
தொல் தமிழர் மரபுகள் ஒவொன்றாக தமிழ் நாட்டு வந்தேரி பார்பனர்களால் களவாட பட்ட நிலையில் இராமன் கேட்கும் இந்த கேள்வி நகைபிற்க்கு உரியது !// இது போல வானவியல் அறிவை இறந்து விட்ட செந்தமிழ் கொண்டுள்ளதா ?//
முருகன் பார்பனமயம் ஆக்கபட்டான் என்ற விடயத்தை இராமன் ஏற்ற பின் தானே “முருகனை ஆரியபடுதி விட்டார்கள் பூணூல் போட்டு விட்டார்கள் என்று ஆதங்கப்டுகிரீர்களே , வேறு மதங்கள் வந்து இருந்தால் முருகன் கொல்லப்பட்டு இருக்கமாட்டாரா ?” என்ற கேள்வியை கேட்கிறார் !//அடுத்து முருகனை ஆரியபடுதி விட்டார்கள் பூணூல் போட்டு விட்டார்கள் என்று ஆதங்கப்டுகிரீர்களே , வேறு மதங்கள் வந்து இருந்தால் முருகன் கொல்லப்பட்டு இருக்கமாட்டாரா ?//
கொடைகானலில் இருந்து பழனி செல்லும் வழியில் உள்ள கிராமத்தில் வாழும் ,நம்மால் மலைவாழ் மக்கள் என்று அழைக்கப்படும் தொல் குடி தமிழ் மக்கள் இன்றும் வானத்து வின்மீன்களையும் ,கோல்கலின் நிலைபாட்டை கொண்டு ,விவசாயம் மற்றும் வேட்டையாடுதலை செய்வது உமக்கு தெரிதிருக்க வாய்ப்பு இல்லை அல்லவா ? அதனால் தான் “இது போல வானவியல் அறிவை இறந்து விட்ட செந்தமிழ் கொண்டுள்ளதா ?” என்ற ஈன தனமான கேள்வியை கேட்கின்றீர் !
இராமன்,
வானவியல் அறிவிற்கு முன் மோடி சொல்கிற உயிர் தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்த வேண்டும்! கார்த்திகேயன், ஆறுமுகம் என்ற சொற்களுடன் வானவியல் அறிவை தொடர்பு படுத்தி பேசுகிற அளவிற்கு உங்களுக்கு பெருந்தன்மை அதிகம். மோடி மகாபாரத காலத்திலேயே ஸ்டெம் செல் சிகிச்சைவந்துவிட்டது என்று போட்டுத்தாக்கியவர்! கார்த்திகேயனை நன்றாக கவனித்தால் Artificial insemination என்றழைக்கப்படுகிற செயற்கை கருவூட்டல் அந்தக்காலத்திலேயே வந்துவிட்டது என்றாகிறதல்லவா? தங்களுக்கு ஏன் இதெல்லாம் தோன்றவில்லை !? வானவியல் அறிவுடன் நின்றுவிடுகிறீர்களே!
மங்கள்யான் திட்டத்தில் ஏற்கனவே விவாதித்திருக்கிறோம். அறிவு ஒரு சமூகத்தின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தாவரை அதை அறிவு என்று சொல்லுதல் ஏற்புடையது அன்று. வானவியல் குறிப்புகள் எழுதிவைத்த ஆரியர்கள் சூரிய கிரகணகத்தை தீட்டு என்று சொல்லவில்லையா? இது எப்படி அறிவாகும்? உங்களது பாணியிலேயே கேட்கிறேன்; What is the production value of this knowledge?
தமிழ் சமூகத்திற்கு இத்துணை பாசாங்கு எல்லாம் கிடையாது. மெய்பொருள் காண்பது அறிவு என்று மூன்றே வார்த்தைகளில் சொல்லிவிடுகிறது. அனைத்து சமூகத்திற்கும் கதைகள் உண்டு என்பது சரி. எனவே வானவியல் அறிவு பழமையான சமூகத்தில் எவ்விதம் இருந்தது என்பதற்கு இலக்கியங்களிலே ஆதாரம் தேடினாலும் பார்ப்பனியத்தால் சீரழிந்த இந்திய சமூகத்தின் ஆறாத ரணங்கள் அறிவியலில் என்ன நிலைமையைக்கொண்டிருக்கிறது என்பதை விளக்கப்போதுமானது!
ஆன்மிகத்திற்கும் அறிவியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது! ஆன்மிகத்தை அறிவியலோடு இணைக்கிற முட்டாள்தனத்தைவிட வேறொன்றை கற்பனை செய்ய இயலாது!
@தென்றல்
// வானவியல் அறிவுடன் நின்றுவிடுகிறீர்களே!
சூரிய கிரகணகத்தை தீட்டு என்று சொல்லவில்லையா? இது எப்படி அறிவாகும்? உங்களது பாணியிலேயே கேட்கிறேன்; What is the production value of this knowledge? //
கதைகளிலே இரண்டு பகுதி உண்டு . பாதி உண்மை பாதி பொய் . இந்த பாதி உண்மையை வைத்து தான் முழுவதும் உண்மை என்று மக்களை நம்ப வைக்க முடியும் . உதாரணமாக ராமாயணத்தில் இந்தியா இலங்கை அயோத்தி என இடங்கள் அனைத்தும் உண்மை . கதை கற்பனை . பிரித்து அறிய முடியாத மக்கள் ஏமாந்து போவார்கள். அவர்களுக்காகவே விரிக்கபடுகின்ர வலை . ராமன் எப்படி ஒரு கற்பனை பாத்திரமோ அதே போல ராவணனும் ஒரு கற்பனை பாத்திரம். முருகன் எப்படி கற்பனையோ மகிசா அசுரனும் ஒரு கற்பனை .
எப்படி இடம் நட்சத்திரத்தை வைத்து பொது சனம் கதையை உண்மை என்று நம்புகிறதோ அதே போல நீங்களும் அதே காரணத்தால் அசுரனை நம்புகிறீர்கள்.
கிரேக்க ,ரோமானிய பார்பன கதைகளில் , கதைகளும் நட்சத்திரங்களும்,இடமும் பின்னப்பட்டு இருக்கும் . அதில் உள்ள இடங்களும் , நட்சத்திரங்களும் உண்மை , கதை பொய் .
வானவியல் – ஜோதிடம் என்று பார்த்தால் வானவியல் உண்மை , ஜோதிடம் கற்பனை . வானவியல் என்னும் உண்மையை காட்டி ஜோதிடம் என்னும் கற்பனையை விற்பனை செய்வது , மக்களை கட்டுக்குள் கொண்டு வருவது எனபது முந்தைய மக்களின் சமுதாயத்தில் இருந்த ரிசொர்சு கண்ட்ரோல் உத்தி
ஒவ்வொரு உயரினமும் தன்னிடம் இருக்கும் திறமையை வைத்து சமுதாயத்தின் செல்வத்தை அடைய முயற்சி செய்தன . கத்தி சுத்துபவன் அவனுடைய திறமைய காட்டினாள் , தாயம் உருடியவன் அவன் திறமையை காட்டினான் . இப்படிதான் இன்றைக்கும் உலக அளவில் சமுத்யாதின் செல்வதிர்கான போட்டி வேறு வேறு வடிவில் குழுக்கள் அடைய முயற்சி செய்கின்றன
//What is the production value of this க்நோவ்லேட்கே//
காலெண்டரை வடிவமைத்தார்கள் . அதனால் தான் மக்கள் பிறந்தநாள் தெரிந்து கொள்ள முடிந்தது, விவசாயம் செய்ய முடிந்தது ,வெள்ள அபாயத்தை அறிய முடிந்தது .
சூரியனை அவர்கள் கடவுளாக கண்டதால் , சூரியனுக்கே பிரச்சினை உள்ள நேரம் , நாம் பத்திரமாக இருந்து கொள்ள வேண்டும் எனபது போன்ற சிந்தனை தான் இருந்தது .
இவ்வளவு ஏன் ஆயிளர் என்னும் கணித விஞ்ஞானி , கணித அறிவின் மூலம் கடவுள் இருக்கிறார்(?) என்று நிரூபித்தார் . அவருடைய அறிவு ஏன் அவருக்கே பயன்பட வில்லை எனபது அல்ல, அந்த கால கட்டத்தில் அப்போது இருந்த சமுதாயத்தின் சிந்தனையோடு இயந்து தான் கண்டுபிடிபாலர்களும் சிந்திகிரார்கள் . அது மனித குணம் .
ஐநூறு வருடத்திற்கு முந்தைய ஆய்லர் ந்யூட்டன் கதையே இப்படி என்றால் , இரண்டு /மூவாயிரம் முந்தைய சமுதாயத்தில் எப்படி எதிர்பார்கிறீர்கள் ?
//ஆன்மிகத்திற்கும் அறிவியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது! ஆன்மிகத்தை அறிவியலோடு இணைக்கிற முட்டாள்தனத்தைவிட வேறொன்றை கற்பனை செய்ய இயலாது!
//
நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகள் , கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்கவே நிகழ்ந்தி இருகிராகள் . ஆயிளர் கதை ஒரு துளி தான். கிரேக்க தேசத்தில் மட்டும் தான் அறிவியலும் ஆன்மீகமும் பிரிந்தது அது எல்லா இடத்திலும் நடக்கவில்லை .
\\ அடுத்து முருகனை ஆரியபடுதி விட்டார்கள் பூணூல் போட்டு விட்டார்கள் என்று ஆதங்கப்டுகிரீர்களே , வேறு மதங்கள் வந்து இருந்தால் முருகன் கொல்லப்பட்டு இருக்கமாட்டாரா ?\\
ஆதங்கம் என்று சுருக்குவது சரியல்ல. இந்தியாவில் முன்னூறு இராமயணங்கள் உண்டு. டில்லி பேராசியரின் இதைப்பற்றிய கட்டுரை ஆர் எஸ் எஸ் காலிகளின் வற்புறுத்தலால் நீக்கம் செய்யப்பட்டது. டில்லி பல்கலைக்கழகத்தில் புகுந்த இந்துத்துவ காலிகள் வரலாற்று துறையை அடித்து நொறுக்கினர். காரணம் என்ன? இந்துத்துவ காலிகளைப் பொறுத்தவரை ஒரு இராமயணம் தான் உண்டு! அதில் இராமன் நாயகன் இராவணன் அரக்கன்;இந்தியா என்றால் அது இந்து; இந்து என்றால் பார்ப்பனியம்; என்பது அடி முதல் முடி வரை மேலாண்மை செலுத்தப்படுகிறது. ஆனால் சமணர்களின் இராமயணத்தில் இராவணன் தான் கதாநாயகன். வரலாற்றில் இதைப் பிரதி புராணங்கள் என்று அழைக்கின்றனர். இப்படியொன்று இருப்பது தங்களுக்குத் தெரியுமா? சீதை இராவணன் மீது காதல் கொள்வதும் இருக்கிறது! இராவணன் சீதையின் தகப்பன் என்பது கன்னடன ஒடுக்கப்பட்ட மக்களின் செவிவழி இராமயணம்; தாய்லாந்து இராமயணம் போரைப்பற்றியது; தமிழ் படுத்திய கம்பன், அகலிகை பகுதியை கொஞ்சம் மாற்றி எழுதினார். ஏனெனில் தமிழகத்தில் அசிங்கங்களைக் காட்டி வயிறு வளர்க்க முடியாது! ஆக எதேச்சதிகாரம் என்றால் என்னவென்று புரிந்திருக்கும்; பார்ப்பனியம், பாசிசம் என்றாகிறது.
இந்தப் பதிவு கேட்கிற கேள்வி இதுதான்; மகிசாசுரனைப் போற்றுவதில் என்னடா குற்றம்? தார்மீகமான கோபத்துடன் கேள்வியைக் கேட்கிற பொழுது தாங்கள் ஆதங்கம் என்று சுருக்குகீறிர்கள். முருகனைப்பொறுத்தவரை பத்மாசுரன், தராகசுரன் யார்? அவர்கள் ஏன் அழிக்கப்படவேண்டும்? அவர்கள் ஏன் அசுரர்கள் என்றழைக்கபடுகின்றனர் என்ற கேள்விக்கு இங்கு யாரும் விடையளிக்கவில்லை. எதிர்ப்பு வந்தபிறகு சூரனை முருகன் கொன்றாவிட்டார்; மயிலாக மாற்றி கக்கத்திலே வைத்துக்கொள்ளவில்லையா என்று அடிமைத்தனத்தை நியாயப்படுத்தினார்கள்.
தாங்களோ, பிற மதங்கள் வந்திருந்தால் முருகன் கொல்லப்பட்டிருக்கமாட்டனா என்று இரண்டில் ஒன்றைத் தொடச் சொல்லி கல்லானலும் கணவன் என்று இந்து மதத்தின் கீழ் பத்தினியாக வாழச்சொல்வீர்கள் போல் இருக்கிறது. பார்ப்பனியமே தனக்குக் கட்டுப்படாதவர்களை கொல்லத் தான் செய்திருக்கிறது. முருக மரபு கொல்லப்பட்டு வெறும் பார்ப்பனியம் தான் இருக்கிறது. சிறுதெய்வ வழிபாடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பிற மதங்கள் வந்திருந்தால் முருகன் கொல்லப்பட்டிருக்கமாட்டானா என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
@thenral
//இந்தப் பதிவு கேட்கிற கேள்வி இதுதான்; மகிசாசுரனைப் போற்றுவதில் என்னடா குற்றம்? தார்மீகமான கோபத்துடன் கேள்வியைக் கேட்கிற பொழுது தாங்கள் ஆதங்கம் என்று சுருக்குகீறிர்கள். முருகனைப்பொறுத்தவரை பத்மாசுரன், தராகசுரன் யார்? அவர்கள் ஏன் அழிக்கப்படவேண்டும்? அவர்கள் ஏன் அசுரர்கள் என்றழைக்கபடுகின்றனர் என்ற கேள்விக்கு இங்கு யாரும் விடையளிக்கவில்லை //
முருகன் கடவுள் எனபது கதை
மகிசாசுரன் அசுரன் எனபது கதை
ராமன் கடவுள் எனபது கதை
ராவணன் அசுரன் எனபது கதை
மகிசாசுரன் உண்மை என்றால் முருகன் உண்மை
இராவணன் உண்மை என்றால் ராமன் உண்மை ,அனுமன் உண்மை, தமிழ் நாட்டில் குரங்குகள் இருந்தார்கள் எனபது உண்மை . அந்த குரங்குகளை கொன்று விட்டு தமிழர்கள் தமிழ் நாட்டில் குடி ஏறினார்கள் எனபது உண்மை .
ஒரு பொய்யை முழுமையாக புறம் தள்ள வேண்டும் . கற்பனையில் வரலாறு தேடுவது மடமை
// அம்பி கொண்டிருப்பது ஈனபுத்தி. சமஸ்கிருதத்தில் பெயர் இருப்பவர்கள் எப்படி பார்ப்பனியத்தை எதிர்க்க முடியும் என்று துப்புகெட்டதனமாக கேள்வி கேட்கிறார். //
பார்ப்பன ’அசிங்கம்’ என்று கூறிக்கொண்டே அந்த ’அசிங்கத்தை’ தன் குழந்தைக்கு வைத்து ஏன் ’அசிங்கத்தை’ பேணிப்பாதுகாக்கிறீர்கள் என்று நான் கேட்டிருக்கிறேன்.. அதை, சமஸ்கிருதத்தில் பெயர் இருப்பவர்கள் எப்படி பார்ப்பனியத்தை எதிர்க்க முடியும் என்று நான் கேட்டதாக திரிக்கும் உமது புத்தி என்ன புத்தி..? திருகு வேலை, பித்தலாட்டம், பதில் என்ற பெயரில் வசை பாடுவது, வாந்தியெடுப்பது, கழிந்து வைப்பது இதெல்லாம் உமது புத்தி எப்படிப்பட்டது என்று காட்டிக்கொண்டிருக்கிறதே..
// கார்த்திகேயன் போன்ற நாளைய தலைமுறைகள் வளர்ந்துவருகிற பொழுது தன் தகப்பன் பார்ப்பன எதிர்ப்பு மரபு பேசியிருக்கிறார் என்று சரவணனுக்கு மட்டுமல்ல முகம் தெரியாத பல கோடி போராளிகளை காத்திரமாக நினைவுகூர்வார்கள். //
ஒரு கோடி அவதாரங்கள் பாக்கியிருக்கிறதா..
// தஞ்சை சீனிவாசன் என்றால் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திண்ணை தூங்கியா நினைவிற்கு வருவார்? //
தஞ்சை சீனிவாசன் வழியில் போராடியவர்களை வசைபாடிய ராமசாமி நாயக்கர் கூடத்தான் நினைவுக்கு வருவார்..
// இந்து என்று சொன்னால் யார் இந்து? என்று கேட்போம்? //
அப்போதுதானே மலக்டவுஸை முருகனாக்க ஆக்கமுடியும்..
// மற்றபடி அம்பியின் வாதமெல்லாம் பீ துடைத்த குச்சிகள்! //
கால் கழுவுகிற வழக்கம் உமக்கு இல்லை என்பது உமது பின்னூட்டங்களில் அடிக்கும் கப்பிலிருந்தே தெரிகிறதே.. எல்லா இடங்களிலும் கழிந்து வைக்கும் நபர் எந்நேரமும் சொம்புடனா திரிய முடியும்..? குச்சிதான் வசதி.. அது உறுத்தும்போதெல்லாம் நான்தான் உம் நினைவுக்கு வருகிறேனா.. என்ன கருமாந்தரம்ண்டா சரவணா இது..
அம்பி, கார்திகை[மாதம்] என்ற தமிழ் பெயர் சொல்லில் இருந்து வருவது கார்திகேயன் என்று இருக்கும் போது அது தமிழ் பெயர்ச்சொல் தானா என்று வினவும் அம்பியே !, நீர் தான் அது தமிழ் சொல் அல்ல என்று சமஸ்கிருதம் என்று நிருபிக்க வேண்டும். ஏன் நிருபணம் செய்யாமல் தப்பி ஓடுகின்றீர் ?
கார்திகை + ஏ + அ + அன் =கார்திகேயன்
தொடரும்…..
முதலில் தமிழ் மாதங்களின் பெயர்கள் எப்படி வந்தது ? தமிழன் எப்படி தனது காலெண்டரை வடிவமைத்தான் ?
பஞ்சாங்கம் மூலம் என்றால் , அது இரானிய கிரேக்க பார்பன மூலம் கொண்டது .
அது எப்படி பார்பனர்கள் பின்பற்றிய அதே நட்சத்திரங்களை தமிழர்களும் பின்பற்றி உள்ளார்கள் ?
சங்க தமிழ் இலக்கியத்தில் மாதங்கள் சுட்டி காட்ட பட்டு உள்ள போது [பின்னுட்டம் 26.1.1.3.1.1.1.1.1.3]அவை தமிழ் மாதங்கள் அல்ல என்றும் , அவை பிற மொழி சொற்கள் என்றும் நிருபிக்க வேண்டிய கடமை உம்மையும் ,அம்பியையும் சார்ந்தது. //முதலில் தமிழ் மாதங்களின் பெயர்கள் எப்படி வந்தது ? தமிழன் எப்படி தனது காலெண்டரை வடிவமைத்தான் ?//
வேளாளர் வன்னியர் என்று சாதி பெயர்கள் தமிழில் இருப்பதால் அதுவும் தமிழருடைய கண்டுபிடிப்புதானே
இந்தியா முழுக்க பார்பான் வந்தேறிய இடம் எல்லாம் சாதியம் இருக்கே ராமா ! அப்படி என்றால் சாதியம் என்பது பார்பான் கொண்டு வந்த ஆரிய திணிப்பு தானே ராமா ?
ஆமாம் ராமா, “முதலில் தமிழ் மாதங்களின் பெயர்கள் எப்படி வந்தது ? தமிழன் எப்படி தனது காலெண்டரை வடிவமைத்தான் ? ” என்று நீர் கேட்ட கேள்விக்கு நான் அதற்கு முன்பே அளித்த பதிலை படித்து [பின்னுட்டம் 26.1.1.3.1.1.1.1.1.3] ஏற்கின்றீர் அல்லவா ?
அம்பி ,
இராத்திரி 1:28 மணிக்கு இப்படி சிரித்தால் உம்மை மனநல மருத்துவ மனையில் சேர்திட போறாங்க !//ஹிஹீ.. எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல அண்ணாத்தே.. பிரச்சினை உங்களுக்குத்தான்.. சிவகார்த்திகேயன் வளர்ந்தால் தெரியும்..//
சரவணன் கொடுத்த இந்த வாக்கு மூலத்தில் எனக்கு உடன்பாடு தான். ஆமாம் அதில் உமக்கு என்ன கருத்து வேறுபாடு ?
//மாதங்கள் இருக்கட்டும்.. எனக்கு துப்பு இருக்கிறதா இல்லையா என்பதும் ஒரு பக்கமிருக்கட்டும்.. பெரிய துப்பா கொடுத்து வெச்சுருக்கீங்களே அண்ணாத்தே..://
அம்பி கேட்பதற்க்கா இவர் நினைக்கும் படி எல்லாம் பெயர் வைக்க முடியாது அல்லவா ? மருதையன்,வேம்பையன் என்று எல்லாம் தமிழில் பெயர்கள் இருக்கே அம்பி. !
//கார்த்திகேயன் தமிழ் மாதத்துடன் தொடர்புள்ள தமிழ்ப் பெயரென்றால், சித்திரேயன், வைகாசியேயன் (விசாகன் என்ற பெயரும் முருகனுக்கு இருக்கிறது), ஆனியேயன், ….//
கார்திகை மாதமே தமிழ் சொல் என்னும் பொது அதில் இருந்து ஆக்கபட்டது தான் கார்த்திகேயன் என்ற பெயர் சொல் என்பது அம்பிக்கு வெலங்காதது ஏன் ? //கார்த்திகை நாள்மீன் கூட்டத்துக்கும் தமிழ் முருகனுக்கும் உள்ள தொடர்புக்கு, ‘பார்ப்பன புராணங்கள்’ கூறும் மகன் என்னும் உறவைத் தவிர்த்த, தொன்மையான வேறு ஆதாரங்கள் தமிழில் உண்டா.. இருந்தால் கொடுங்கள்.. //
// சரவணன் கொடுத்த இந்த வாக்கு மூலத்தில் எனக்கு உடன்பாடு தான். //
இதையெல்லாம் படித்தால் சிரிப்பதற்கு நேரம்,காலம் பார்க்க இயலுமா அண்ணாத்தே..
// அம்பி கேட்பதற்க்கா இவர் நினைக்கும் படி எல்லாம் பெயர் வைக்க முடியாது அல்லவா ? //
கார்த்திகேயன் என்ற பெயரை தாராளமாக வையுங்கள்.. கார்த்திகேயன் பார்ப்பான் உருவாக்கிய ‘அசிங்கம்’ என்று கூறிக்கொண்டே அதை வைத்துப் பேணுவதுதான் இடிக்கிறது.. கார்த்திகை மாதத்தின் பெயரை வைத்தேன் என்று மழுப்புவது அதை விட பெரிய கொடுமை.. எப்படி என்று பார்க்கலாம்..
// மருதையன்,வேம்பையன் என்று எல்லாம் தமிழில் பெயர்கள் இருக்கே அம்பி. ! //
இதை,
மருது+அய்யன், வேம்பு+அய்யன் என்று பிரிக்கலாம்..
மருது, வேம்பு இல்லை, மருதை, வேம்பை என்றால், மருதை+யன், வேம்பை+யன் என்று கூறலாமே தவிர மருதேயன், வேம்பேயன் என்று கார்த்திகேயனைப் போல் விளிக்க இயலுமா..
// கார்திகை மாதமே தமிழ் சொல் என்னும் பொது அதில் இருந்து ஆக்கபட்டது தான் கார்த்திகேயன் என்ற பெயர் சொல் என்பது அம்பிக்கு வெலங்காதது ஏன் ? //
கார்த்திகை மாதம் தமிழ்ச் சொல்தான்.. நீங்கள் கார்த்திகை மாதத்தின் பெயரைத்தான் வைத்தீர்கள் என்றால், கார்த்திகையன் (கார்த்திகை+யன்) என்றுதான் வருமே தவிர நடுவில் ஏகாரம் வருவதேன்..?!
மேலும் ஒரு எடுத்துக்காட்டு வேண்டுமென்றால், மொக்கை+யன் என்பது மொக்கையன் என்றாகுமே தவிர மொக்கேயன் என்றாகுமா..?!
கார்த்திகை மாதத்திற்கும், முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று நீங்கள் இன்னும் கூறவில்லை..
///மேலும் ஒரு எடுத்துக்காட்டு வேண்டுமென்றால், மொக்கை+யன் என்பது மொக்கையன் என்றாகுமே தவிர மொக்கேயன் என்றாகுமா..?!///
தமிழில் ஏயன் என்றால் தலைவன் என்றும் பொருள்படும் அத்துடன் எய்தியவன் (அம்பை) என்ற பொருளில் வீரன் என்றும் கூட பொருள்படும்.
உதாரணமாக:
முருகன் + ஈசன் (ஈயன்)= முருகீசன் என்றாகாமல் தமிழில் முருகேசன் அல்லது முருகேயன் என ஆகியதைப் போன்று,
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த தமிழர்களின் ஏயன் (தலைவன்/கடவுள்) ஆகிய முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் உருவாகியது.
கார்த்திகை + ஏயன் (தலைவன்) = கார்த்திகேயன் (முருகன்)
கங்கு(நெருப்பு/பொறி//தணல்) + ஏயன் = கங்கேயன் > காங்கேயன் (நெருப்பிலிருந்து தோன்றியவன்)
ஈழத்தில் தமிழ்க்கிறித்தவர்கள் இயேசு நாதரை நசரேயன் என்றும் குறிப்பிடுவதுண்டு.
நசரேத் + ஏயன் = நசரேயன் (நசரேத்தில் பிறந்த இயேசு)
“ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்” (திருத்தொண்டத்தொகை)
ஏயன்=தலைவன்
ஏயன்=ஈயன்! ஈன்று தரப்படும் குழந்தை, பின்பு தலைவனாகத் திகழ்வது!
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய ஏயர்கோன் கலிக்காமநாயனார் – அவர் பல ஏயன்களுக்கு (வீர மகன்களுக்கு)…கோன்-ஆக (தலைவனாக) விளங்கியதால் = ஏயர் கோன்! கலிக்காமர் என்பதே இவர் சொந்தப் பெயர்! ஏயர் கோன் = பட்டப் பெயர்!
நன்றி: மாதவிப்பந்தல்
தென்றல் ,
இவ்வளவு தூரம் விவாதித்த பின்பு அம்பிக்கு இருப்பது இரண்டே இரண்டு வாய்ப்புகள் தானே ?
@@ஒன்று சமஸ்கிருதமும் ,புராண அசீங்கங்களும் தமிழ் இலக்கியங்களில் ,தமிழ் கடவுள் முருகன் மீதும் பார்பான்களால் ஏற்றபட்டு உள்ளது என்பதை அவர் ஏற்க வேண்டும் .
அல்லது
@@தமிழ் இலக்கியங்களில் ,தமிழ் கடவுள் முருகன் மீதும் ஏதும் சமஸ்கிருதமும் ,புராண அசீங்கங்க கலப்பு இல்லை என்றாவது ஏற்க வேண்டும்.
அவர் உங்களுடன் விவாதிக்கும் போது தமிழ் கடவுள் முருகன் மீதும் ஏதும் சமஸ்கிருதமும் ,புராண அசீங்கங்க கலப்பும் இல்லை என்பவர் அதே சமயம் என்னுடன் விவாதிக்கும் போது புராண அசீங்கங்களும் தமிழ் இலக்கியங்களில் ,தமிழ் கடவுள் முருகன் மீதும் பார்பான்களால் ஏற்றபட்டு உள்ளது என்பதை அவர் பேசுகின்றார் இல்லையா ? இந்த இரட்டை வேடதாரியை ,அம்பியை குறைந்த பட்சம் வினவு வாசக்ர்களுகாவது அம்பலபடுத்த வேண்டாமா ? அதற்காக தான் அவருடன் விவாதத்தை தெடருகின்றேன் !
// இவ்வளவு தூரம் விவாதித்த பின்பு அம்பிக்கு இருப்பது இரண்டே இரண்டு வாய்ப்புகள் தானே ?
@@ஒன்று சமஸ்கிருதமும் ,புராண அசீங்கங்களும் தமிழ் இலக்கியங்களில் ,தமிழ் கடவுள் முருகன் மீதும் பார்பான்களால் ஏற்றபட்டு உள்ளது என்பதை அவர் ஏற்க வேண்டும் .
அல்லது
@@தமிழ் இலக்கியங்களில் ,தமிழ் கடவுள் முருகன் மீதும் ஏதும் சமஸ்கிருதமும் ,புராண அசீங்கங்க கலப்பு இல்லை என்றாவது ஏற்க வேண்டும். //
தமிழர்களின் கடவுள் முருகன் அவுணர் தலைவனான சூரனை தண்டித்தான் என்பது முற்றிலும் தமிழர் தொன்மம் இல்லையா..! மேலும் முருகன் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்து கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டான் என்ற தமிழர் தொன்மமும் தமிழகத்திலிருந்தே வடக்கே சென்றிருக்க முடியும் என்பதை முருக வழிபாடு தமிழகத்தில் மட்டுமே பெரிதும் நிலவுவது காட்டவில்லையா..
// அவர் உங்களுடன் விவாதிக்கும் போது தமிழ் கடவுள் முருகன் மீதும் ஏதும் சமஸ்கிருதமும் ,புராண அசீங்கங்க கலப்பும் இல்லை என்பவர் அதே சமயம் என்னுடன் விவாதிக்கும் போது புராண அசீங்கங்களும் தமிழ் இலக்கியங்களில் ,தமிழ் கடவுள் முருகன் மீதும் பார்பான்களால் ஏற்றபட்டு உள்ளது என்பதை அவர் பேசுகின்றார் இல்லையா ? //
புராணங்கள் உருவாகும் விதம் இப்படித்தான் இருக்கும்..
// இந்த இரட்டை வேடதாரியை ,அம்பியை குறைந்த பட்சம் வினவு வாசக்ர்களுகாவது அம்பலபடுத்த வேண்டாமா ? அதற்காக தான் அவருடன் விவாதத்தை தெடருகின்றேன் ! //
பழிக்குப் பழியா.. நடத்துங்கள்..
அம்பி !, தப்பித்து ஓடாமல் என் பின்னுட்டத்தை 27 ஐ படித்து விட்டு தமிழ் இலக்கண நன்னூளுக்கு பதில் கூறவும் அம்பி !
//கார்த்திகை மாதம் தமிழ்ச் சொல்தான்.. நீங்கள் கார்த்திகை மாதத்தின் பெயரைத்தான் வைத்தீர்கள் என்றால், கார்த்திகையன் (கார்த்திகை+யன்) என்றுதான் வருமே தவிர நடுவில் ஏகாரம் வருவதேன்..?!//
தங்களுடன் விவாதிக்காமல் ஓடுவதற்கு, பதிலில்லை என்பதைத் தவிர வேறு காரணங்களும் இருக்கக்கூடும் என்பதை தாங்கள் புரிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டு கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறேன்..:
கார்த்திகை+அன் = கார்த்திகையன்
மொக்கை+அன் = மொக்கையன்
மொட்டை+அன் = மொட்டையன்
கட்டை+அன் = கட்டையன்
என்றவாறு ஏ என்னும் சாரியை இல்லாமல் வெறும் அன் விகுதி வரக்கூடாது என்று நன்னூள் இலக்கணம் சொல்கிறதா.. கார்த்திகைக்கு ஏ போட்டு அன் விகுதி சேர்க்கத்தான் வேண்டும் என்றால் மொக்கேயன், மொட்டேயன், கட்டேயன் என்ற சொற்கள் ஏன் வழக்கிலில்லை..?
சரி, உங்கள் விளக்கத்தோடு, வியாசர் கூறியிருப்பது போல் முருகு+ஈசன் முருகீசன் ஆகாமல் முருகேசன் ஆவது போன்று கார்த்திகை+அன் கார்த்திகேயன் என்றானது எனவும் கூறலாம்.. எப்படியோ கார்த்திகேயன் தமிழ்ப் பெயர் என்றால் நன்று..
ஆனால் கார்த்திகைக்கும், முருகனுக்கும் என்ன தொடர்பென்று உங்கள் திருவாயால் இன்னும் சொல்லவில்லை..
இந்த விவாதம் மிகவும் சுவாரசியமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இருந்தாலும் வழக்கம் போல் தென்றல் அவர்கள் அவரது பாணியில் (விவாதத்துக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களுடன்) விவாதத்தை திசை திருப்பிக் கொண்டு போகிறார் போலத் தெரிகிறது. சிலவேளைகளில் ‘வினவு’ மட்டுறுத்தலில் ஒருபக்கச் சார்பாக நடந்து கொள்வது எல்லோரும் அறிந்ததே. ஆனால் குளத்தோடு கோபித்துக் கொண்டு, குளிக்காமல் இருப்பது போல், இருக்காமல் எனது கருத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கிடைக்கக் கூடிய எந்த வாய்ப்பையும் இழக்கக் கூடாது என்று காரணத்தால் மீண்டும் இங்கு இணைகிறேன். 🙂
ஆரியப் பார்ப்பனர்கள் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழ்மண்ணுக்கு வந்து, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழர்களுடன் கலந்து விட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் அவர்கள் இயற்றியதாகக் கூறப்படும் புராணக் கதைகள் எல்லாமே அவர்களின் கற்பனையிலிருந்தோ அல்லது வேறு நாடுகளிலிருந்தோ அவர்கள் கொண்டு வந்தவை என்று கூறமுடியாது. முருகன் சம்பந்தமான புராணங்களின் அடிப்படைக் கதைகள் எல்லாமே தமிழர்களிடமிருந்து இரவல் வாங்கியவை தான் என்பதற்கு முருகனின் பெயர்களின் வேர்கள் அனைத்தும் தமிழில் இருப்பதே சான்றாகும். சமஸ்கிருதத்தால் தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்ட சொற்களின் வேர்கள் தமிழில் தானுண்டு என்பதை உணராமல், ஆறுமுகன், கார்த்திகேயன், சரவணன் எல்லாம் ‘பார்ப்பனமயமாகக்கப்பட்ட’ முருகனின் பெயர்கள் அதனால் சரவணனுக்கும், கந்தனுக்கும், , கார்த்திகேயனுக்கும் தமிழர்களின் முருகனுக்கும் தொடர்பில்லை என்று வாதாடுவது வெறும் அபத்தம்.
கண்ணுக்குத் தெரியாத விந்தின் உருவமைப்பை தமிழ்ச் சித்தர்கள் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர். முருகனும் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு சித்தர், அந்த விந்தின் வடிவில் தான் முருகனுடைய வேல் அமைக்கப்பட்டது என்ற கருத்துமுண்டு. அந்தக் கருத்தின் அடிப்படையில், முருகன், கந்து (கந்து என்றால் நடுவில் இருக்கும் விந்தளிக்கும் ஆணுறுப்பு) வில் இருந்து தோன்றிய விந்தில் உருவாகிய ‘கந்தன்’ என்ற கதையும் கூட பார்ப்பனர்கள் தமிழர்களிடமிருந்து இரவல் வாங்கியது என்றும் கொள்ளலாம்.
சிவலிங்கத்தின் மாற்றுவடிவமாக, முருகனின் அடையாளமாக ஆறுமுகம் கொண்ட நட்சத்திர வடிவத்தை உருவாக்கியதும் பழந்தமிழர்கள் தான். கீழ்நோக்கும் முக்கோணம் பெண்ணுறுப்பையும், மேல் நோக்கும் முக்கோணம் ஆணுறுப்பையும் குறிக்கும். இரண்டும் சேர்ந்த வடிவம் முருகனைக் குறிக்கும் ஆறுமுகம் கொண்ட நட்சத்திர வடிவம். அந்தக் கருத்தின் அடிப்படையில் தான் முருகனுக்கு ஆறுமுகம், பன்னிரண்டு கைகள் என்ற கதை புனையப்பட்டது.
சரவணன் என்ற பெயருக்குக் கூட பார்ப்பனீயத் தொடர்பு கிடையாது. தமிழில் சரவணை என்றழைக்கப்படும் ஒருவகை நாணல்புல் நிறைந்த தடாகத்தில் பிறந்தவன் என்ற தமிழர்களின் கதையின் அடிப்படையில் தான் முருகனுக்குப் பெயர் சரவணன் என்றாகியது. ஈழத்தில் இன்றும் சரவணை என்ற புல்லும், அந்தப் புல் நிறைநது காணப்படுவதால் சரவணை என்ற பெயரில் ஒரு ஊருமுண்டு.
http://viyaasan.blogspot.ca/2014/10/blog-post_31.html
ஆக, முருகனின் பெயர்கள் எல்லாவற்றுக்குமான அடிப்படைக் காரணங்களும், கதைகளும் தமிழர்களிடமும் தமிழ்மண்ணிலுமிருந்தும் இரவல் வாங்கப்பட்டவையேயொழிய பார்ப்பனர்களுடையவை அல்ல. அதனால் முருகன் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், அவனுக்கு எத்தனை புராணக் கதைகள் புனையப்பட்டிருந்தாலும், அவன் தமிழர்களின், தமிழ் மண்ணின் தெய்வம் தான், எப்படித்தான், எவ்வளவு நாளைக்கு விவாதித்தாலும், அந்த உண்மையை மறுக்க முடியாது.
திரு வியாசனின் வருகை தமிழருக்கும் ,தமிழ் கடவுள் முருகனுக்கும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் அமையுமா அல்லது தமிழ் கடவுள் முருகன் மீது புராண கசடுகளை ஏற்றி அவனுக்கு பூனுல் அணிவித்து ,ஆகம விதிகளை புகுத்தி பார்பனமயம் ஆக்கிய வந்தேரி பார்பனர்களுக்கு சாதகமாக அமையுமா என்று அவரின் பின்னுட்டம் தெளிவாக விளக்கவில்லை
பார்ப்பனிய புராணம் தமிழர்கள் உருவாக்கியவை என்று சொல்கிற நக்கத்தனம் மேட்டுக்குடிகளுக்கு வழமையான ஒன்று தான். தமிழனின் புளிச்சமாவு பிடிக்காதாம்! ஆனால் புராணம் தமிழன் உருவாக்கியதாம்! அம்பலப்பட்டுபோன பொறுக்கித்தின்னும் கூட்டம் தமிழர்களை பார்ப்பனியத்திற்கு கூட்டிக்கொடுக்கின்றன! மானக்கேடு!
என்னது வேல் ஸ்பெர்ம் உடைய வடிவம் என்று தமிழர்கள் தெரிந்து வைத்து இருந்தார்கள் . மோடியின் அமைச்சரவையில் உங்களுக்குக் இடம் கிடைக்கும் 🙂
மருத்துவம், மற்றும் விஞ்ஞான அறிவு கொண்டிருந்த தமிழ்ச் சித்தர்கள் விந்தின் உருவமைப்பையும் அறிந்திருந்தனர். கடல்கோளாலும், போரினாலும் அழிந்து, மக்களின் எண்ணிக்கை குறைந்த காலத்தில் மக்களின் எண்ணிக்கையைப் பெருக்க காரணமாக, தேவையாக இருந்த விந்துவின் அமைப்பில் (Symbolic) அமைக்கப்பட்டது தான் வேலும், வேல்வழிபாடும் என்ற கருத்தும் உண்டு. நான் அந்தக் கருத்தைக் குறிப்பிட்டதன் காரணம், முருகனைப்பற்றிய, எல்லாப் புராணக் கதைகளின் அடிப்படை வேர்கள், தமிழர்களிடமும், தமிழ்மண்ணில் தானுண்டு என்பதைக் காட்டுவதற்கே தவிர, அந்தக் கதைகளை நான் அப்படியே நம்புகிறேன் என்றோ அல்லது அவை ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை என்று வாதாடுவதோ அல்ல என்னுடைய நோக்கம்.
முருகன் தமிழ்மண்ணில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவர். சித்தர்கள் விஞ்ஞானம், வானியல், மருத்துவம், மல்யுத்தம் மற்றும் போர்க்கருவிகளில் ஆராய்ச்சிகளிலும் ஈடுப்பட்டிருந்தவர்கள். உதாரணமாக. தமிழ்ச்ச்சித்தர்களில் ஒருவராகிய போதி தர்மர் சீனர்களுக்கு போர்ப் பயிற்சிகளைக் கொடுத்து சீனர்களை எவ்வாறு பாதுகாத்தாரோ, அது போன்றே முருகன் சித்தர் தமிழர்களை வெளியாட்களிடமிருந்து காப்பாற்றினார். திருச்செந்தூரில் நடைபெற்ற சூரன் போர் என்பதும் மண்ணின் மைந்தர்களுக்கும் (தேவர்கள் – தமிழர்கள்) தமிழர்களை ஆக்கிரமிக்க வந்த வெளியாட்கள் (தீயவர்கள் – சூரர்களுக்கும்) நடைபெற்ற போர். ஆனால் தமிழ்மண்ணில் தமிழர்கள் தமது ஆதிக்கத்தை இழந்து, பார்ப்பனர்களின் கைமேலோங்கி, கோயில்களில் தமிழின் இடத்தை சமக்கிருதம் கைப்பற்றிக் கொண்ட பின்னர், தமிழர்களிடமிருந்த முருகனைப் பற்றிய அடிப்படைக் கதைகள் எல்லாம் புராண மயமாக்கப்பட்டு, பார்ப்பனர்கள் தேவர்களாகவும், தமிழர்கள் சூரர்களாகவும் ஆக்கப்பட்டு விட்டனர். அது மட்டுமன்றி தமிழர்களிடமிருந்த முருகனைப்பற்றிய பாரம்பரியக் கதைகளும், முருகனின் தமிழ்ப்பெயர்களும் சமக்கிருதமயமாக்கப்பட்டு அவற்றுக்கு சமக்கிருத கருத்துக்களும் கற்பிக்கப்பட்டு விட்டன. சமக்கிருத்தால் இரவல் வாங்கப்பட்ட பல தமிழ்ச் சொற்கள் தமிழ் நாட்டில் வழக்கொழிந்து போன பின்னர், தமிழர்களே அவற்றை வடமொழிச் சொற்களிலிருந்து உருவான முருகனின் பெயர்களென ஏற்றுக் கொண்டு விட்டனர்.
கடவுளர்களை பற்றிய புராணங்கள் தோன்றியது என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகின் அனைத்து நாகரிகம் படைத்த இனங்களிலும் அவை இருக்கின்றன. கடவுளர்களை பற்றிய புராணங்கள்(தொன்மக் கதைகள்) தொன்மை வாய்ந்த மிக பழமையான நாகரீக இனத்தவர்களான சுமேரியர்கள், மேசப்போட்டேமியர்கள், மற்றும் எகிப்தியர்கள்,ரோமானியர்கள் கிரேக்கர்கள் போன்ற அனைத்து மக்கள் சமூகத்தாரிடம் இருக்கும் ஒன்று தான். நாகரீக இனத்திற்கும் கதை எழுதுவதற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கலாம்?
முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், இந்த உலகில் உள்ள அனைத்து இனங்களையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று நாகரீகம் படைத்த இனம் இன்னொன்று நாடோடி இனம். உலகினில் உள்ள எந்த இனங்களை எடுத்துக் கொண்டாலும் மேற்ப்படி உள்ள இந்த இரண்டு வகை இனங்களில் ஏதவாது ஒன்றைச் சேர்ந்ததாகத் தான் இருக்க முடியுமே தவிர வேறு ஒன்று இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அந்த வகையில் பார்த்தோமேயானால் மேற்படி பழமையான இனங்கள் ( சுமேரியர்கள், மேசப்போட்டேமியர்கள், மற்றும் எகிப்தியர்கள்,ரோமானியர்கள் கிரேக்கர்கள்) அனைத்தும் மிக நாகரீகமான( ஓரிடத்தில் நிலையாகதங்கி நன்கு கட்டமைக்கப்பட்ட நகர வாழ்வு மற்றும் உழவு தொழில் நாடாத்துதல்) இனங்களாகும். இந்த இனங்களோடு ஒப்பிடும் பொழுது நாகரீக விழுமியங்கள் அனைத்திலும் மிக உச்சத்தில் இருந்தது தமிழ் இனமாகும்.
எந்த இனம் ஓரிடத்தில் நிலையாக தங்கி நாகரீக வாழ்வு மேற்கோள்கின்றதோ அந்த ஓரினத்தில் இருந்து தான் கலையும், இலக்கியமும், தத்துவார்த்தங்களும் தோன்றும். இது தான் சமுக அறிவியல் உண்மையும் கூட. இந்த அலகுகளின்ப் படி பார்த்தால் இந்தியாவில் புழங்கும் புராணங்கள் அனைத்திற்கும் இங்கிருக்கும் பண்பட்ட இனமான தமிழ்(திராவிட) இனத்தினுடையதாகத் தான் இருக்கும், இருக்க வேண்டும்!!!!. இந்திய நாட்டின் கண் இருக்கும் மிக சிறந்த தத்துவ தரிசனங்கள்,புராணங்கள் அனைத்தும் நாகரீகத்தில் செழித்தோங்கிய தமிழ் மக்களின் அறிவினால் தான் எற்பட்டதாகுமே அல்லாமல் எங்கிருந்தோ ஆடு மேய்த்து கொண்டு இவ்விந்திய நாட்டின்கண் கைபர் கணவாய் வழியாக புகுந்த நாடோடி இனமான ஆரிய இனத்திற்கு சொந்தமானது இல்லை.
ஆரியர்கள் இவ்விந்திய நாட்டிற்க்குள் வரும் பொழுது அவர்களுடன் பயணித்து வந்தது, அவர்களுக்கு சொந்தமான மிருக வதைகளுடன் கூடிய வெறி பிடித்த யாகங்களைக் கொண்ட வேத பாடல்கள் மட்டும் தானேயன்றி வேறு எந்த அறிவுப்பூர்வமான இலக்கியங்களோ அல்லது தத்துவ தரிசனங்களோ, புராணத் தொன்மங்களோ அவர்களிடம் கிடையாது. அவர்கள் இந்த நாட்டிற்க்கு வந்தப்பிறகு மொழித்தொடங்கி அனைத்து கலைகளும் இலக்கியங்களும் இங்கிருக்கும் தொல் குடிகளிடம் இருந்து களவாடி கொண்டவைகள் தான். களவாடிக் கொண்ட புராணங்களில் அவர்களின்(ஆர்ய) கலாசாரத்திற்கு ஏற்ப வக்கிரங்களும் சேர்ந்து கலந்து புழங்கின என்பதே உண்மை வரலாறு. நாடோடி இனங்களுக்கும் இலக்கியங்கள் இருக்கலாம் ஆனால் அவை நாகரீக இனத்தாரின் இலக்கியங்களை தொடும் அளவிற்கு பண்பட்டதாக இருக்க வாய்ப்பில்லை. எ.கா: ஆரியர்களின் வேத இலக்கியங்கள் மற்றும் இன்ன பிற.
// கண்ணுக்குத் தெரியாத விந்தின் உருவமைப்பை தமிழ்ச் சித்தர்கள் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர். முருகனும் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு சித்தர், அந்த விந்தின் வடிவில் தான் முருகனுடைய வேல் அமைக்கப்பட்டது என்ற கருத்துமுண்டு. அந்தக் கருத்தின் அடிப்படையில், முருகன், கந்து (கந்து என்றால் நடுவில் இருக்கும் விந்தளிக்கும் ஆணுறுப்பு) வில் இருந்து தோன்றிய விந்தில் உருவாகிய ‘கந்தன்’ என்ற கதையும் கூட பார்ப்பனர்கள் தமிழர்களிடமிருந்து இரவல் வாங்கியது என்றும் கொள்ளலாம்.//
வியாசரே,
கந்தன் தமிழ்ப் பெயர் என்பதைக் காட்டுவதற்கு கந்து விந்து என்று பயமுறுத்துகிறீர்களே.. சூர் என்பது சூரனல்ல சூல் என்றும் ஆரம்பித்துவிடுவீர்களோ என்ற அச்சமும் தோன்றுகிறது.. தென்றல் பெருமானார் தன் இரு கைகளிலும் பிடித்து இழுத்து வந்திருக்கும் டயோனிசஸ், மலக் டவுஸ் என்ற இரண்டில் அவரது வலக்கைவசம் இருக்கும் மலக் டவுஸே பரவாயில்லை போலிருக்கிறதே..
சிவபெருமானின் நெற்றிக் கண் தன்னில் தோன்றியவன் கண் தன் கடவுள் (கந்தன், கந்தவேள்) என்று கூறியிருந்தாலாவது கொஞ்சம் கவுரதையாக இருந்திருக்குமே..
// சிவலிங்கத்தின் மாற்றுவடிவமாக, முருகனின் அடையாளமாக ஆறுமுகம் கொண்ட நட்சத்திர வடிவத்தை உருவாக்கியதும் பழந்தமிழர்கள் தான். கீழ்நோக்கும் முக்கோணம் பெண்ணுறுப்பையும், மேல் நோக்கும் முக்கோணம் ஆணுறுப்பையும் குறிக்கும். இரண்டும் சேர்ந்த வடிவம் முருகனைக் குறிக்கும் ஆறுமுகம் கொண்ட நட்சத்திர வடிவம். அந்தக் கருத்தின் அடிப்படையில் தான் முருகனுக்கு ஆறுமுகம், பன்னிரண்டு கைகள் என்ற கதை புனையப்பட்டது. //
மேல் கீழ் முக்கோணங்கள் முறையே ஆண் பெண் என்ற சிவ சக்தியரை குறிக்கும் குறியீடுகள் என்பதோடு நிறுத்தியிருக்கப்படாதா.. ஆணுறுப்பு பெண்ணுறுப்பு என்று கூறி குறியீடுகளையும் குறிகளாக்கி விட்டீர்களே.. இப்போது டயோனிசஸ் பரவாயில்லை போலிருக்கிறதே..
தங்கள் பார்ப்பன எதிர்ப்பு தமிழ் பெருமிதத்திற்கு முருகனின் கவுரவம் தான் பலியாடாக வேண்டுமா.. வேண்டாமய்யா, தமிழ்க் கடவுளையாவது விட்டுவையுங்கள்..!!!
ஆரம்பித்து வைத்துவிட்டீர்கள்.. இப்போது தமிழ்-தாகத்தின் தமிழ்க் கற்பனை கரைபுரண்டு ஓடி கார்த்திகேயனை என்னவெல்லாம் ஆக்கப்போகிறதோ..
ஐயரே!
தமிழாராய்ச்சியாளர் சிலர் முருகனுக்கும், கந்துவுக்கும், விந்துக்கும் வேலுக்குமுள்ள தொடர்பைப் பற்றி வெளியிட்ட காணொளியில் நான் கூறியதை விட மேலும் விளக்கமாக உண்டு. உங்களைப் போன்றவர்களுக்காகத் தான் அந்தக் காணொளியை நான் அப்படியே இங்கு இணைக்கவில்லை. அத்துடன் அந்தக் காணொளியில் பெரியாருக்கெதிரான கருத்துக்களுமிருப்பதால் வினவு ஒரேயடியாக என்னுடைய பதிலையும் மட்டுறுத்தல் செய்து விடலாம் என்பதும் மற்றொரு காரணமாகும்.
என்னுடைய பதிலின் சாரமென்னவென்றால் முருகனின் பெயர்கள் எல்லாவற்றுக்குமான அடிப்படைக் காரணங்களும், கதைகளும் (அவை ஆபாசமானவையாக இருந்தாலும் கூட) தமிழர்களிடமேயுண்டு. அந்த அடிப்படைக் கதைகளை தமிழர்களிடமிருந்தும், தமிழ்மண்ணிலுமிருந்தும் பார்ப்பனர்கள் இரவல் வாங்கி, சமக்கிருதமயமாக்கி, கொஞ்சம் அதிகமாக ஒப்பனை செய்து புராணங்களை இயற்றி விட்டு, இப்பொழுது அந்த புராணங்கள் தான் உண்மையானவை என்று முருகனுக்கும் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்பது தான்.
இது பார்ப்பனர்களின் வழக்கம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு தமிழர்களின் அண்மைக் கால வரலாற்றிலும் உண்டு. சென்னையில்கலாசேத்திரப் பார்ப்பனர்கள் தமிழர்களிடமிருந்து சதிராட்டத்தை இரவல் வாங்கி, (பார்ப்பனர்களின் இந்தக் குணத்தையறிந்து தான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் ருக்மணிதேவிக்கு சதிராட்டம் கற்பிக்க முதலில் தயங்கினார்) அதற்கு மெருகூட்டி, பரதம் என்ற பெயரையுமிட்டு விட்டு, அந்தப் பெயரின் அடிப்படையில் தமிழர்களின் சதிராட்டத்தை வடநாட்டுப் பரதமுனிவர்(ஒரு பார்ப்பனர்) உருவாக்கியதாகக் கதை விட்டது மட்டுமன்றி, பரதம் என்றால் கருத்து -பாவம், தாளம், ராகம் என்றெல்லாம் கூட கதை விடுகிறார்கள். அதே விளையாட்டைத் தான் பார்ப்பனர்கள் தமிழர்களின் முருக வழிபாட்டுக்கும், முருகனைப் பற்றிய கதைகளுக்கும், முருகனின் தமிழ்ப் பெயர்களுக்கும் காட்டினார்கள். அதனால் தான் நாங்கள் இன்று தமிழ்க்கடவுள் முருகனின் பெயர்கள் கூட, தமிழா அல்லது சமக்கிருதமா என்று நிரூபிக்க உங்களைப் போன்றவர்களின் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.
வியாசனின் பதில் கருத்து வந்து ஆறு நாட்கள் ஆகியும் அம்பியிடம் பதில் இல்லையே ! அப்படி என்றால் வியாசன் சுட்டிக்காட்டும் தொல்குடி தமிழ் மரபில் இருந்துதமிழ் இனத்தில் இருந்து பார்பான் செய்த அத்துனை பார்பன திருட்டுகளையும் மனம் உவந்து ஏற்றுக்கொள்கிறாரா அம்பி ?
வியாசன் நேரடியாகவே அம்பியிடம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறமால் November 26, 2014 அன்றில் இருந்து மவுனம் சாதிப்பது ,வியாசனின் கருத்துகளை ஏற்பதாகவே பொருள் ஆகிறது அல்லவா ?
ஏன் வின்மின்கள் பற்றிய அறிவு பண்டைய தமிழ் சமுகத்திற்கு இல்லை என்று கூற வருகின்றீர்களா அம்பி ?கார்த்திகை மாதத்திற்கும், முருகனுக்கும் உள்ள தொடர்பு என்னவென்றால் கார்திகை விண்மீன்கள் தனையா தொடர்பு. அதற்கு பின் பார்பனர்கள் முருகன் மீது ஏற்றிவைத்த ஆபாச புராணங்களை ஏற்கும் நீர் அதே சமயம் வியாசனின் விளக்கத்தையோ ,அல்லது தென்றலின் உலகளாவிய முருகன் என்ற விளக்கத்தையோ ஏற்காததன் காரணம் என்னவோ ? பார்பன குடுமி பார்பனின் ஆபாச புராணங்களை மட்டும் தானே பிடித்து கொண்டு ஆடும். அதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை !
// கார்த்திகை மாதத்திற்கும், முருகனுக்கும் உள்ள தொடர்பு என்னவென்றால் கார்திகை விண்மீன்கள் தனையா தொடர்பு. //
3 நாட்களாக அதைத்தானையா கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. கார்த்திகை விண்மீன்களுக்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு என்று இப்போதாவது நீங்கள் சொல்லுங்கள்..
One of the earliest references to the festival is found in the Ahananuru, a book of poems, which dates back to the Sangam Age (200 B.C. to 300 A.D.). The Ahananuru clearly states that Karthigai is celebrated on the full moon day (pournami) of the month of Karthigai, as per South Indian calendar. It was one of the most important festivals (peruvizha) of the ancient Tamils, including now the areas of modern Kerala too. Avaiyyar, the renowned poetess of those times, refers to the festival in her songs. Karthikai Deepam is one of the oldest festivals celebrated by Tamil people. The festival finds reference in Sangam literature like Ahananuru and the poems of Auvaiyar.
கார்த்திகை விளக்கீடுக்கும் பார்பனுக்கு என்னையா தொடர்பு ?
அம்பி,
6 வின்மின்களும் முருகனின் 6 முகங்களாக பண்டைய தமிழரால் உருவகம் செய்ய பட்டு கார்திகை மாத முழுநிலவு அன்று வணங்கபடுகின்றது.இதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் உள்ளமையை நீர் தேவை பட்டால் அடுத்த கேள்விளில் கேட்கலாம். நான் தருவதற்கு தயார். ஆமாம் அம்பி ,ஆரிய பார்பானுக்கு கந்த புராணம் [copy cat from வடமொழி சங்கர சங்கிதைபுராணம் to ஸ்கந்த புராணம்]தவிர வேறு என்னையா தொடர்பு முருகனுடன் ?
[1]இன்னும் நன்னூல் காட்டும் சாரியைக்கு உம்மிடம் இருந்து பதில் இல்லையே !
[2]இன்னும் ஆபாச வல்லபை கணபதி பற்றி ஏதும் [எதிர்]கருத்து உம்மிடம் இருந்து வர இல்லையே !
[3]இன்னும் ஸ்கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம் என்பது பற்றியும் கருத்து ஏதும் உம்மிடம் இருந்து வரவில்லையே !
[4]கார்திகையுடன் முருகனுக்கும் அதனுடாகஆரிய புராணங்களுக்கும் உள்ள தொடர்பு எதில் இருந்து எப்போது இருந்து தொடங் குகின்றது என்று அப்பியால் கூற முடியுமா ?
அம்பிக்கு நினைவு மறதி அதிகம் போலும் !
முதலில் “கார்த்திகை மாதத்திற்கும், முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று நீங்கள் இன்னும் கூறவில்லை..” என்றவர் இப்போது “கார்த்திகை விண்மீன்களுக்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு என்று இப்போதாவது நீங்கள் சொல்லுங்கள்..” என்று மாற்றி மாற்றி பேசுகின்றார். முதல் கேள்விக்கு பதில் என் பின்னுட்டம் November 23, 2014 at 5:15 pm Permalink 26.1.1.3.1.1.1.1.1.5 உள்ளதை ஏன் மறந்தார் ?
Note:கார்திகையுடன் முருகனுக்கும் அதனுடாகஆரிய புராணங்களுக்கும் உள்ள தொடர்பு எதில் இருந்து எப்போது இருந்து தொடங் குகின்றது என்று அப்பியால் கூற முடியுமா ?
// 6 வின்மின்களும் முருகனின் 6 முகங்களாக பண்டைய தமிழரால் உருவகம் செய்ய பட்டு கார்திகை மாத முழுநிலவு அன்று வணங்கபடுகின்றது.இதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் உள்ளமையை நீர் தேவை பட்டால் அடுத்த கேள்விளில் கேட்கலாம். நான் தருவதற்கு தயார். //
தயவு செய்து அந்த ஆதாரங்களை முதலில் கொடுக்கவும்.. 6 க்கு 6 என்பதை எந்த தொடர்பை வைத்து கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்வோம்..
// ஆமாம் அம்பி ,ஆரிய பார்பானுக்கு கந்த புராணம் [copy cat from வடமொழி சங்கர சங்கிதைபுராணம் to ஸ்கந்த புராணம்]தவிர வேறு என்னையா தொடர்பு முருகனுடன் ? //
முருகன் பற்றிய தொன்மங்கள் இங்கிருந்தே வடக்கே சென்றிருக்கமுடியும் என்று கூறியிருக்கிறேனே..
// [1]இன்னும் நன்னூல் காட்டும் சாரியைக்கு உம்மிடம் இருந்து பதில் இல்லையே ! //
நன்னூல் காட்டும் சாரியையை மறுக்கவோ, திரிக்கவோ நான் என்ன தமிழ் மேகமா.. தங்களிடம் நன்னூல் சாரியை படும்பாட்டை நான் விளக்கியதற்கு (28.1.1.1) ஏன் பதில் அளிக்கவில்லை..
// 2]இன்னும் ஆபாச வல்லபை கணபதி பற்றி ஏதும் [எதிர்]கருத்து உம்மிடம் இருந்து வர இல்லையே ! //
என்ன கருத்தை நான் கூறவேண்டும்..? நீங்கள் சொல்லவேண்டிய கருத்துக்கள் பலவும் பாக்கியுண்டு.. தென்றல் பெருமானார் எல்லோரையும் போட்டு பிடுங்கி எடுக்கும் ஆவேசத்தில் தங்களது முக்காட்டையும் சேர்த்து பிடுங்கிவிட்டிருக்கிறார் (”இந்த விவாதத்தில் மட்டுமல்ல; தமிழ்தாகம் சந்துருவோடு விவாதிக்கும் பொழுதும், இதே வியாசனுடன் விவாதிக்கும் பொழுதும் முருகன் மறி அறுத்து வணங்கப்படுகிறான் என்று அழுத்தமாகச் சொல்லியவர்.” பின்னூட்டம் – 36.1.1.1).. முதலில் முக்காட்டுக்கு பதில் சொல்லுங்கள் அய்யா.. மேலும், தென்றல் பெருமானார் விவாதத்தின் தொடக்கத்தில் சரவணனை சமண சிரவணன் என்ற போது மறி அறுக்கும் வழக்கத்தை ’அழுத்தமாக அவருக்கு சொல்லாமல்’ கமுக்கமாக இருந்தது மட்டுமல்லாது என் மீது மட்டும் வேறொரு பதிவில் பாய்ந்தீர்களே அதற்கும் சேர்த்து விளக்கம் கூறுங்கள்.. தங்களிடமிருந்து தெளிவான பதில்கள் வந்த பின் [3],[4]க்கும் சேர்த்து விளக்கம் தேடுவோம்..
முதலில் தமிழ் இலக்கான நன்னூல் கூறும் சாரியைகள் பற்றி எந்த மறுப்போ அல்லது ஏற்ப்போ தெரிவிக்காத அம்பி இன்னும் அதனை பற்றி ஒரு விளக்கமும் தர இயலாத அம்பி , _____ விவாதத்தை தேடவதேன்?
அன்ஆன் இன்அல் அற்றுஇற்று அத்துஅம்
தம்நம் நும்ஏ அஉ ஐகுன
இன்ன பிறவும் பொதுச் சாரியையே (நன்னூல், 244)
//சரி, உங்கள் விளக்கத்தோடு, வியாசர் கூறியிருப்பது போல் முருகு+ஈசன் முருகீசன் ஆகாமல் முருகேசன் ஆவது போன்று கார்த்திகை+அன் கார்த்திகேயன் என்றானது எனவும் கூறலாம்.. எப்படியோ கார்த்திகேயன் தமிழ்ப் பெயர் என்றால் நன்று.. //
தமிழ் இலக்கான நன்னூல் கற்பனை அல்ல அம்பி .தமிழர் தம் தமிழ் இலக்கான தரவுகள்.
//ஆரம்பித்து வைத்துவிட்டீர்கள்.. இப்போது தமிழ்-தாகத்தின் தமிழ்க் கற்பனை கரைபுரண்டு ஓடி கார்த்திகேயனை என்னவெல்லாம் ஆக்கப்போகிறதோ..//
சங்க பாடல்களில் புவியியல் மற்றும் வானியல் :
புவி வெப்பம் அடைதல் பற்றி :
கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி
விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம் (அகம் 164 : 1-3)
விளக்கம் : பாடலில் சூரியனானது தம்முடைய வெம்மைக் கதிர்கள் மூலம் எங்குமுள்ள ஈரப்பசையினையெல்லாம் கவர்ந்து பசுமையற்றுப் போகும்படியாகக் காய்ந்ததால் இப்பரந்த உலகம் வெடிப்புகள் மிகுந்தும் வளம் ஒழிந்தும் காணப்படுவதாக அமையும்.
காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்
நீடுசினை வறியவாக ஒல்லென
வாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
தேக்குஅமல் அடுக்கத்து ஆங்கன் மேக்கெழுபு (அகம் – 143 : 1 – 5)
விளக்கம் : இக்கதிர்கள் காடுகளின் அழகையெல்லாம் பேரளவு அழிந்து போகுமாறு கடுமையாகப் பொசுக்குவதால் தேக்கு மரங்களின் உயர்ந்த கிளைகளிலிருக்கும் பல அகன்ற இலைகள் ஈரப்பசையற்று வாடிப்போய் ஒல்லென்ற ஓசையுடன் வெப்பக்காற்றினால் உதிர்ந்து போகும். அதன்பின் அம்மரத்தின் நீண்ட கிளைகளும் வறுமையுற்றவரைப்போல வளமற்று விளங்கும்.
பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில் (அகம் – 185 : 8-10)
விளக்கம் : என்பதில் பசுமையற்றுப் போன வறண்ட பாலை நிலத்தில் வெப்பம் மிகுதி காரணமாக மேகமும் பொழியாது ஒழியும். அதனால் உயர்ந்த சிகரங்களில் அருவியும் உருவாகாது விளங்குமெனக் காட்சியாக்கப்பட்டுள்ளது
உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில் (அகம் – 141 : 5 -6)
விளக்கம் :வான் உலந்து மழையானது பெய்யும் இடத்தை விட்டு நீங்கிச் செல்வதால் உண்டாகும் துயரத்தினை,உழவுத் தொழில் மட்டுமல்லாது உலகிலுள்ள மற்ற தொழில்களும் இதனால் கெட்டு மடியுமென்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது
வம்பும் பெய்யுமார் மழையே வம்புஅன்று
கார்இது பருவம் ஆயின்
வாராரோ நம் காதலோரே (குறுந் 382 : 4-6)
விளக்கம் :காதல் பூண்ட மாந்தரிடையே இப் பருவகால
மாற்றம் விளைவித்து விடும் துன்பம் அளப்பரியது
நன்றி :
http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/13694-2011-03-21-04-53-37
//raman :இது போல வானவியல் அறிவை இறந்து விட்ட செந்தமிழ் கொண்டுள்ளதா ?
நான் கேட்டது என்ன நீங்க என்ன பேசுறீங்க ?
உணர்ச்சி வசபடாமல் பொறுமையாக சிந்தித்து ,கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவும் . பக்கங்களை நிரப்பினாலும் மார்க் பூச்சியம் தான் ஆசிரியரே 🙂
உமக்கு பதில் சொல்ல தரவுகள் இல்லை என்றால் இப்படி எல்லாம் வெம்பலமா ராமா ? வெப்பி போன மாவுக்கு என்ன மதிப்போ அதுதான் உமக்கும் ! 🙂
வியாசன் மற்றும் தென்றல் இருவருமே பொறுமை காக்க வேண்டும். வியாசன் புராணங்களுக்கு மூல வேர் தமிழில் உள்ளது என்றும் அது பார்பனர்களால் திரிக்க பட்டது என்றும் கூறுகின்றார்.அதே சமயம் தென்றல் நாம் முருகனை வழிபடுவது போன்றே உலக அளவில் முருகன் போன்றதொரு கடவுள் வேறு பல பெயர்களால் வழிபடபட்டது என்று ஆதாரத்துடன் கூறியுள்ளார். இருவர் கருத்துகளுமே ஒன்றோடு ஒன்று முரண் பட்டது அல்ல. ஆனால் தொன்மையான கடவுளை பற்றிய வேறு கருத்துகள் மட்டுமே. எனவே ஒருவரை ஒருவர் குறை காண்பதன் மூலம் புராண புளுகுகள் அம்பியும் ,இராமனும் கொண்டாட தருணத்தை நாம் உண்டாக கூடாது.விவாதம் திசை மாறக்கூடிய தருணம் இது. கவனம் தேவை .
தமிழ் தாகம்,
ஒருவர் பார்ப்பனியத்திற்கு ஆதரவாகக் கூட வாதிடட்டும். பிரச்சனையல்ல. ஏனெனில் எதிரி இன்னாரென்று தெரிகிறது. ஆனால் தமிழ் தமிழ் என்று சொல்கிற வியாசன் ஒட்டுமொத்த தமிழர்களையும் எள்ளி நகையாடியவர். அவர் தமிழ்நாட்டிற்கு வருவதால் தமிழர்களுக்கு பொருளாதார நலன்கள் கிடைப்பதாகச் சொன்னவர். ஏதோ அவர் வீட்டு நாய்களைப் போல ஏளனமாக கருதுகிற போக்கு இது. தமிழ்நாடு என்றால் புழுதியும் வெயிலுமாக இருக்குமாம்! இதுவும் அன்னாருடைய பேச்சுதான். இப்படிப்பட்டவர்களுக்கு கடவுள், ஆன்மீகம், கலாச்சாரம், மொழி என்பது சுரண்டிக்கொழுக்கும் ஒரு தந்திர உபாயமேயன்றி வேறல்ல! வர்க்க எதிரிகள் எல்லா சமூகத்திலும் உலகிங்கெலும் இவ்விதம் ஆளும் வர்க்கத்தையும் பார்ப்பனியத்தையும் நக்கிப்பிழைத்து விட்டு சொந்த மக்களையே எள்ளி நகையாடுவார்கள்! வியாசன் சொல்வதெல்லாம் தமிழ் மரபே அன்று! வெறும் பார்ப்பனியம் மட்டுமே.
மக்களைப் புறக்கணிக்கிறவர் தமிழ் கலாச்சாரம் என்று வியக்கிறார் என்றால் அவர் விவாதிப்பதில் எங்கேயிருக்கிறது தமிழுணர்வு? புல்லுருவி கூட்டம் இது!
வர்க்க எதிரிகள் புறக்கணிக்கப்படவேண்டியவர்கள் மட்டுமல்ல முறியடிக்கப்படவேண்டியவர்கள். தைரியம் இருந்தால் சுப்ரமணிய சாமியையும் வியாசனையும் தமிழ்நாட்டிற்கு நேரில் வந்து பேசச்சொல்லுங்கள். முட்டையும் தக்காளியும் ரெடியாக இருக்கிறது.
@Thenral
//மெய்பொருள் காண்பது அறிவு//
மனு தர்மம் அறிந்த அளவு கூட மக்கள் வள்ளுவம் தெரிந்து இருக்கவில்லை . ஏதோ ஒரு அறிவி ஜீவி ஒரு புத்தகம் எழுதி வைத்து விட்டான் . ஆனால் ஏதோ சமூகம் அதை பின்பற்றியதாக நினைத்து கொள்வது அறிவீனம் .
அந்த புத்தகமும் ஆரிய கலப்பு இல்லாத காலத்தில் எழுதப்பட்டது அல்ல . சமண புத்த என்று நீள்கிறது.
ஒட்டு மொத சமுதாயமும் குறள் வழி நின்றதாய் காட்டுவது நீங்கள் மொழி பெருமையில் ஊறி போய் உள்லேர்கள் என்று காட்டுகிறது
தமிழ் மீதான ராமனின் வன்மமும் வெறுப்பும் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
செந்தமிழ் செத்துப்போச்சு என்கிறார்.தமிழ் செத்துப்போச்சு ன்னு சொல்ல அவருக்கு ஆசையா இருக்கு.அது முடியாதுன்றதுனால செந்தமிழ் செத்துப்போச்சு என்கிறார்.
அய்யா அறிவாளியே, தமிழ் மொழிக்கும் செந்தமிழ்க்கும் உள்ள வேறுபாட்டை சொல்லி செந்தமிழ் செத்துப்போச்சு என்பதை கொஞ்சம் விளக்குங்களேன்.நாங்களும் தெரிஞ்சுக்குறோம்.
\\மனு தர்மம் அறிந்த அளவு கூட மக்கள் வள்ளுவம் தெரிந்து இருக்கவில்லை//
எப்படின்னு கொஞ்சம் ஆதாரத்தோடு விளக்கலாமே.மொட்டையா அடிச்சு வுட்டா எப்படி.இரண்டாயிரம் ஆண்டு கால வாழ்வியல் நிலையை ஒரே வரில சொல்லி தீத்துர முடியுமா.
\\ஏதோ ஒரு அறிவி ஜீவி ஒரு புத்தகம் எழுதி வைத்து விட்டான் . ஆனால் ஏதோ சமூகம் அதை பின்பற்றியதாக நினைத்து கொள்வது அறிவீனம் ,,,,,,,,,,,,,,,,மொழி பெருமையில் ஊறி போய் உள்லேர்கள் என்று காட்டுகிறது//
எந்த ஒரு மனிதனுக்கும் வெற்றிடத்திலிருந்து [சூன்யத்திலிருந்து] அறிவு தோன்றி வளர்வதில்லை.இந்த சமூகமே அவனுக்கு அறிவை கற்பிக்கிறது. அறிவாளிகள் அதனை மேம்படுத்தி மீண்டும் சமூகத்திற்கே வழங்குகிறார்கள்.ஆகவே அய்யன் திருவள்ளுவர் கொண்டிருந்த அறிவும் அவர் இயற்றிய வள்ளுவமும் அவர் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் நெறிகளையே பிரதிபலிக்கிறது.பல நூறு ஆண்டுகளாக சான்றோர் பலர் வள்ளுவத்திற்கு உரை எழுதி வருகிறார்கள்.அப்படியானால் தமிழ் சமூகம் விடாது வள்ளுவத்தை கடைபிடிக்கிறது என்பதுதானே அதற்கு பொருள்.
எங்கே உங்கள் மனுதர்மத்துக்கு தமிழர்கள் எழுதிய உரைகளை பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.
//இந்த சமூகமே அவனுக்கு அறிவை கற்பிக்கிறது. அறிவாளிகள் அதனை மேம்படுத்தி மீண்டும் சமூகத்திற்கே வழங்குகிறார்கள்//
புலால் உண்ணாமை அவருடைய சமூகத்தில் இருந்து வந்ததா சமண மத சிந்தனையா
//பல நூறு ஆண்டுகளாக சான்றோர் பலர் வள்ளுவத்திற்கு உரை எழுதி வருகிறார்கள்.அப்படியானால் தமிழ் சமூகம் விடாது வள்ளுவத்தை கடைபிடிக்கிறது என்பதுதானே அதற்கு பொருள்.//
எனக்கு தெரிந்து திருக்குறளை அரங்கேற்றம் பண்ண விடாமல் தொல்லை கொடுத்தவர்கள்
அதன் பிறகும் அதனை மறந்து போனவர்கள் . ஜி யு போப்பு தான் அதனை லத்தீனுக்கு மொழி பெயர்த்தார் என்று நினைவு . மற்ற உரைகள் எல்லாம் அதன் பின்னால் வந்தவையே .
மனு நீதி சோழன் கேள்வி பட்டு இருக்கிறேன் .குறள் வழி சோழன் கேள்வி பட்டது இல்லை.
திருக்குறளை பற்றி ஏதேனும் ஒரு கல்வெட்டு அல்லது செப்பேடு ?
\\புலால் உண்ணாமை அவருடைய சமூகத்தில் இருந்து வந்ததா சமண மத சிந்தனையா//
வள்ளுவர் சமணரா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு.ஆனால் சமணம் ஒரு காலத்தில் தமிழகத்தில் தழைத்தோங்கி இருந்தது.அதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.ஆகவே புலால் உண்ணாமை ஒரு சமூக பண்பாடாக இருந்திருக்க வேண்டும்.
\\ஜி யு போப்பு தான் அதனை லத்தீனுக்கு மொழி பெயர்த்தார் என்று நினைவு . மற்ற உரைகள் எல்லாம் அதன் பின்னால் வந்தவையே .//
பரிமேலழகர் உரை [13 ஆம் நூற்றாண்டு],மணக்குடவர் உரை [10 ஆம் நூற்றாண்டு],கேள்விப்பட்டதில்லையா.ஜி,யூ,போப் பிறந்ததே 19 ஆம் நூற்றாண்டில்தான்.
\\மனு நீதி சோழன் கேள்வி பட்டு இருக்கிறேன் .//
மனு நீதி சோழன் பற்றி அறிந்து கொள்ள படியுங்கள்.
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=25584:2013-11-25-16-20-25&catid=1657:12013&Itemid=903
Raman has become “Soorppanaga”according to their own puraana after reading Thamizh-Thaagam”s comments in 27.1.1.1 and 30.At least from now,let him stop calling Senthamizh as dead language.It has become a routine thing for him to talk about any subject without having deep knowledge about it.Nunippul meyaadheer Raman avargale!
What is that deep knowledge ? Dance, music all came from Tamils? What a joke?
And tamils forgot their art and other culture stole their art?
Only people who want to hear about My language is great/My race/Caste is great can believe such stories.
And I dont know ho they proved it.In my school days, one of the article said Tamils new about nuclear technology since “Anuvai thulaithu kuruga tharitha kural” hence Tamils nuclear technology is proved
Aha!We have already seen Raman”s vast knowledge in Indian Economy,Role of Nationalized banks and many other subjects.Earlier,he used to ridicule the victims of social discrimination,labour exploitation etc.Now he ridicules a great language and in turn the entire Tamil community. What a progress?Kuppura vizhundhaalum umathu meesaiyil(appadi ondru irunthaal)ottadhu Raamare!What is wrong in having pride about a great language?Original Tamils will definitely have that pride.
I meant kuppura vizhundhaalum meesayil mann ottaadhu
கிரேட் லாஙகுவேஜு அப்ப்டி சொல்றீங்களே அப்படி என்ன கிரேட்டு என்று கேட்கிறேன் .
எல்லா மொழி மாதிரி அதுவும் ஒரு மொழி . உதவாத கவிதை பாடல் இருக்கிறது , எல்லா மொழிகளிலும் அது இருக்கிறது .
புதுமையாக ஏதாவது செய்து இருக்கிறதா என்பது தான் கேள்வி .
மத பெருமை என்றால் இழிவு , சாதி பெருமை என்றால் இழிவு ஆனால் மொழி பெருமை என்றால் சிறப்பா ?
உண்மையை அது மறைத்து விடுகிறது . தமிலாசிரியர்களின் கவிதை படித்து ரெபேக்கா மேரி கிரேக்கர்களை விட உயர்ந்த சமுதாயம் அது இது என்று எழுதுகிறார் . கற்பனையில் வாழாதீர்கள், னென்கள் நினைப்பது போல பெரிய அளவில் ஒன்றும் இல்லை என்று கூறுகிறேன்.
குப்புற விழுத்தால் தானே மண் ஒட்டும் . ஆனால் நீங்களோ மொழி வெறி குட்டையில் விழுந்து கிடக்கிறீர்கள்
பின்னுட்டம் 27.1.1.1 ல் உமக்கு பதில் இருக்குராமா ராமா !
\\In my school days, one of the article said Tamils new about nuclear technology since “Anuvai thulaithu kuruga tharitha kural” hence Tamils nuclear technology is proved\\
எந்த தமிழ் புத்தகத்தில் அப்படி படித்தீர்கள். ஆதாரம் தரவும். இன்றைக்கு தமிழ்தேசியவாதிகள் இதுபோன்ற பேச்சுக்களை பேசிவருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் உங்களிடம் சொல்கிற அளவிற்கு தாங்கள் ஒன்றும் நியாயமானவரல்ல. ஏனெனில் ஆரியர்கள் நாட்காட்டியைக் கண்டுபிடித்ததாக அளந்துவிட்டீர்கள். ஆவிணி அவிட்டத்திற்கு பூணுல் மாற்றவும், திருவாதிரைக்கு புளியோதரை திங்கவும் திண்ணை தூங்கிகளின் அறிவை வானவியல் அறிவு என்று வியந்து போற்றியவரல்லவா தாங்கள்.
இரண்டாவதாக, விவசாயம் செய்தார்கள் என்று குண்டைப்போட்டீர்கள். விவசாயம் என்பது பார்ப்பனியத்திற்கு தீட்டாகும். நிலவுடமையில் பள்ளர்களும் பறையர்களும் கூலிகளாக அடிமைப்படுத்தப்பட்டதன் முதன்மையான காரணமே பார்ப்பனியம் விவசாயத்தை தீட்டு என்று கருதி ஒட்டச்சுரண்டியதுதான். இங்கேயும் தங்களது பார்ப்பனப்பாசம் அடிபட்டு போகிறது.
மூன்றாவதாக வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தியதாகச் சொன்னீர்கள். வெட்ககேடு! பஞ்ச காலத்தில் பசுதானம் செய்யாதீர்கள் என்று சமணர்களும் பெளத்தர்களும் சோம்பேறிகளை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறார்கள். பஞ்ச காலங்களில் கூட பார்ப்பான் யாகம் வளர்த்து வயிறு வளர்க்க தவறியதில்லை. இதில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தினார்களாம்.
இந்த மூன்று தொடர்புகளும் தங்களது விமர்சனம் ஒரு தலைப்பட்சமானது என்று காட்டப்போதுமானவை மட்டுமல்ல; மொழி மீதான வன்மத்தை அறிவியல் மூலமாக தீர்த்துக்கொள்கிற அரிப்பு தான் இருக்கிறது என்று காட்ட வல்லவை.
ஊருக்கே உபதேசம் சொன்ன பல்லி, கழனிப் பானையிலே செத்துக் கிடந்துச்சாம். அது மாதிரி தான் தாங்கள். பார்ப்பனியத்திற்கு சிங்கி அடித்துவிட்டு, தமிழ்மொழிக்கு ஆட்டம் பாம் டெஸ்ட் வைக்கிறீர்கள்! முதல்ல கழனிப் பானையிலிருந்து தலைய எடுங்க தல!
Thendral,In olden days,Brahmins never indulged in agriculture thinking that agriculture is beneath their dignity.Whenever there was a debate about their dominance in the education field in the fifties,Raman used to say that other caste Hindus never bothered to get right education since all of them were big landlords.He is under the impression that all farmers belonging to backward classes are big land lords.In spite of telling him about the percentage of small and marginal farmers several times,he continues to hold his view and he will wait for opportunities to pour venom on the backward class people.He will go to the extent of advocating removal of the reservation for backward classes.
வழக்கம் போல் தோழர் தென்றல் இந்த விவாதத்தை திசைதிருப்ப, இந்த விவாதத்துக்குக் சம்பந்தமில்லாத, இங்கு பேசப்படும் கருத்துக்களுக்கு எந்தவித தொடர்புமில்லாத எதையோ உளறுகிறார். நான் தமிழ்நாட்டுக்கு வருவதால் தமிழர்களுக்கு பொருளாதார நலன்கள் கிடைப்பதாக கூறியதாக எனக்கு நினைவில்லை,(நான் அங்கு வருவதால், எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வேண்டுமானால் சில நலன்கள் கிடைக்கலாம்) ஆனால் அவருக்கு விளக்கம் குறைவு என்பதால் இப்படித்தான் திரிப்பார் என்பதை அவருடன் பேச்சுக் கொடுத்தவர்கள் அல்லது இந்தத் தலைப்பின் கீழ் அவரது வாதத்தைத் தொடர்ந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மேலைநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுக்கு கோயில்களைத் தரிசிக்கவும், தமது நேர்த்திக்கடன்களைச் செலுத்தவும் உறவினர்களை, நண்பர்களைக் காணவும் பட்டுப் புடவைகள், நகைகள் வாங்கவும், சுற்றுலாக் காரணங்களுக்காகவும் தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் போது ஈழத்தமிழர்கள் தாராளமாகச் செலவு செய்கிறார்கள். உதாரணமாக, இன்னும் சில வாரங்களில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் ஐயப்ப பகதர்களால் சென்னை விமான நிலையம் நிரம்பி வழியும். அதற்குப் பின்னரும் அவர்கள் அங்கு தங்கி, ஹோட்டல்களிலும், உணவகங்களிலும் தமது பணத்தைச் செலவு செய்து விட்டுத் தான் திரும்புவார்கள். அதாவது, குறைந்தளவு பணத்துடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்து சுற்றித் திரியும் ‘பீத்தல்பறங்கி’வெள்ளைக்காரச் சுற்றுலாப் பயணிகளை (அதிலும் பெரும்பாலானோர் தமிழ்நாட்டுப் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை) விட அதிகளவு வெளிநாட்டுச் செலாவணியை (Hard Currency யை) நாங்கள் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் செலவு செய்கிறோம். அந்த வெளிநாட்டுச் செலாவணி அனைத்தும் இந்தியாவுக்குத் தான் சென்றடைகிறது. அதனால் தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் இலாபம் தான். அதையுணர்ந்து தான் இந்திய தூதரகங்களும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு எந்த வித தயக்கமுமின்றி அடுத்த நாளே விசா கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு ஈழத்தமிழர்கள் வருவதால், தமிழர்களுக்கு பொருளாதார நலன்கள் கிடைப்பதாக நான் கூறியிருந்தால், நான் மேலே குறிப்பிட்ட கருத்தில் தான் கூறியிருப்பேன். அதை எப்படியெல்லாம் திரிக்கிறார் தோழர் தென்றல் என்பதைப் பாருங்கள். இதே வேலையைத் தான் இந்த வாதத்திலும் திரு. அம்பி அவர்களுடன் இவர் செயது வருகிறார்.
சுப்பிரமணியம் சுவாமியின் வீடு ‘சோல்வந்தானில்’ தமிழ்நாட்டில் தானிருக்கிறதாம். தமிழர்களுக்கெதிராக எவ்வளவோ கருத்துக்களைக் கூறிக் கொண்டு, தமிழர்களுக்கெதிராக இயங்கிக் கொண்டு, அவரும் அடிக்கடி சோழவந்தானுக்கு வந்து போய்க்கொண்டிருப்பது மட்டுமல்ல, மக்களையும் சந்திக்கிறார்கள். ஆனால் தோழர் தென்றல் அவரது வீட்டு பின்பக்க மதில்பக்கம் ஒண்ணுக்குப் போகக் கூட ஒதுங்கியிருக்க மாட்டார், அவ்வளவு பயம். ஆனால் முட்டையும், தக்காளியும் எறியப் போகிறாராம். வாய் வீச்சில் மட்டும் குறைவில்லை. இவ்வளவுக்கும், இடைக்கிடையே வர்க்கம், தர்க்கம் என்று சில வார்த்தைகளை இழுத்து விட்டு, அதன் மூலம் தானும் ஒரு கம்யூனிஸ்ட்டு மாதிரி காட்டிக் கொள்ள முனைவது தான் வேடிக்கையிலும், வேடிக்கை. 🙂
வியாசனின் வக்கிரத்தை அனைவரும் படித்துப்பாருங்கள். இந்தப்புடுங்கிகள் தமிழனுக்கு அன்னியச்செலவாணி தருகிறார்களாம்! போதாது என்று தமிழனின் வாழ்வியல் முறைக்கு இந்தப் பதர்கள் சாட்சியாம்!
தமிழ்நாட்டில் வாழ்கிற 60000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் கொத்தடிமையாக வேலைபார்க்கிற பொழுது, இவர்கள் எல்லாம் வெளிநாட்டில் வாழ்கிற மேட்டுக்குடிகளுக்கு நினைவிற்கு வரவில்லை. ஆனால் இந்த மானங்கெட்ட மேட்டுக்குடி ஆதிக்கசாதி கும்பல்கள் தமிழ்நாட்டுத் தமிழனுக்கு அன்னியச்செலவாணியைப் பெருக்கித்தருகிறார்களாம்! நகை, ஸ்டார் ஒட்டல், பட்டுப்புடவை, தொட்டு நக்க மசாலாப் பொடி! என்று இவர்கள் காட்டும் கரிசனம் அடங்கேப்பா!
இவ்விதம் ஒரு சேர தமிழ்நாட்டுத்தமிழர்களையும் ஈழத்தமிழர்களையும் அசிங்கப்படுத்த வியாசன் போன்ற நாதாரிகளால் தான் முடியும். லைக்கா தமிழ்நாட்டிற்கு வருவதால் முதலீடு அதிகரிக்கிறது என்று மானங்கெட்ட தமிழ் தேசியவாதிகள் சொல்லவில்லையா? இந்த அற்பப்பதர்கள் கோயில் தரிசனம் பண்ணவருகிறார்களாம்? ஏன் வரமாட்டார்கள்? கோயில் தானே சாதியைத்தக்கவைத்து ஒட்டுமொத்தமாக சுரண்டுகிற அதிகார மையங்கள். பார்ப்பானும், வெள்ளாளனும் பண்டாரியாக கருமியாக உடையாராக பொறுக்கித் தின்னதை கோயில் வரலாறு சொல்லவில்லையா? இந்தத் தற்குறிகள் கோயில் என்றும் கலாச்சாரம் என்றும் பீற்றுவார்களாம்.
களவாணிகளின் கருத்துச் சுதந்திரத்தை மதித்தாலும் காறித்துப்பத் தோன்றுகிறது!
இவருக்குப் பதிலளிப்பது வீண் வேலை என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் இந்தாளுக்கு அறளை கிறளை பெயர்ந்து விட்டதோ எனக்குத் தெரியாது. இங்கு விவாதிக்கப்படும் கருத்துக்கு எந்த வித சம்பந்தமுமில்லாமல் “வியாசன் ஒட்டுமொத்த தமிழர்களையும் எள்ளி நகையாடியவர். அவர் தமிழ்நாட்டிற்கு வருவதால் தமிழர்களுக்கு பொருளாதார நலன்கள் கிடைப்பதாகச் சொன்னவர். “ என்று உளறியவர் அவர். அதற்கு நான் விளக்கமளித்த பின்னர், அந்த விளக்கத்தைப் பிடித்துக் கொண்டு மேலும் தொடர்ந்து உளறுகிறார். வேறு யாருமேன்றால், குறைந்த பட்சம் நான் எங்கே “தமிழ்நாட்டிற்கு வருவதால் தமிழர்களுக்கு பொருளாதார நலன்கள் கிடைப்பதாகச்” சொன்னேன் என்பதற்கு ஆதாரமாவது காட்டியிருப்பார்கள். தமிழ்நாட்டில் 60000 க்கும்மேற்பட்ட ஈழத்தமிழர்கள் கொத்தடிமையாக வாழ, ஒரு சில ஆயிரம் புலம்பெயர்ந்த தமிழர்கள் வசதியாக வாழ்கிறார்கள் அது உண்மை. அது போலவே தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான தமிழர்கள் அடுத்த வேளை உணவின்றி, கூலிகளாக, கூரையின்றி, கழிப்பறையின்றி, தீண்டத்தகாதவர்களாகக் கூட வாழும் போது லட்சக்கணக்கானோர் பணத்தில் புரளுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் வாழும் கோடிக்கணக்கான கூலிகளுக்காக தென்றல் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. எதற்கோ பதில் சொன்னால் அதை வேறு ஏதாவதுடன் தொடர்பு படுத்தி தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவதில் தோழர் தென்றலை யாரும் வெல்ல முடியாது. இனிமேலாவது விவாதத்தில் பேசப்படும் கருத்துக்களில் கவனம் செலுத்துவார் என்று நம்புவோம்.
ஒரு இணையத்தளத்தில் முகம் தெரியாதவர்களுடன் பேசும் போது தோழர் தென்றலின் வார்த்தைப் பிரயோகங்களைப் பார்க்கும் போது இவர் வீட்டில் அல்லது இவருக்குக் கீழ் வேலைக்கு யாராவது இருந்தால், அவர்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. மற்றவர்களுடன் எப்படிப் பேசுவது என்று கூடத் தெரியவில்லை, அதற்கிடையில் வர்க்கம், கம்யூனிசம் என்று வாய்ச்சவடால் வேறு. 🙂
\\ இனிமேலாவது விவாதத்தில் பேசப்படும் கருத்துக்களில் கவனம் செலுத்துவார் என்று நம்புவோம்.\\
அதனால் தான் சொல்கிறேன், தமிழர்களை இழிவுபடுத்தும் உம்மைப்போன்றவர்கள் விவாதிப்பதெல்லாம் வெறும் பார்ப்பனப் பாசிசம் என்று. தமிழன் என்று நீர் சொல்வதெல்லாம் பச்சோந்தித்தனம். தமிழர்களை எல்லாம் இழிவுபடுத்திவிட்டு தமிழ்கலாச்சாரம் பற்றி பேசுவது சிறிதும் நியாயமேமில்லை. இது மட்டுமில்லை வியாசன். எங்கோ ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு சம்பந்தமேயில்லாத பிள்ளையார் ஊர்வலத்திற்கு முசுலீம்கள் பங்கேற்றால் என்ன? என்று மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாக இணையத்தில் எழுதி கைக்கூலி வேலை பார்த்தவ இந்துத்துவ வெறியன் நீர்! எங்கு நீர் பின்னூட்டம் எழுதினாலும் உம்மைப்போன்ற வர்க்க எதிரிகளை எவரும் ஒப்பமாட்டர். மாற்றுக்கருத்து என்ற நிலையில் வைத்து உமது கருத்துக்களைப் பரிசீலிக்க விருப்பமில்லை. இணையத்தில் அழுகிய முட்டையை எறிய முடியாது என்பதற்காக நிம்மதியாக இருந்துவிடாதீர்! கடுமையான கண்டனங்களை மீண்டும் ஒரு முறை பதிவு செய்கிறேன்.
நான் எனது கருத்தை எனது வலைப்பதிவில் தெரிவிப்பதற்கு எந்தக் கொம்பனிடமும் அனுமதி கேட்க வேண்டுமென்று நினைக்கவில்லை. எந்த விடயத்திலும் எனது கருத்தைத் தொடர்ந்து எழுதுவதற்கு நான் வாழும்(எனது) நாட்டில் அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட முழுமையான பேச்சு, கருத்துச் சுதந்திரம் உண்டு. அதனால் நான் தொடர்ந்து எனது கருத்துக்களை எழுதிக் கொண்டேயிருப்பேன், நீரும் வினவில் உமது கண்டனத்தைப் பதிவு செய்து கொண்டேயிருமையா. நான் உமது அந்தக் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கவோ அல்லது உம்மைப் போல் ஆத்திரத்தில் உளறவோ போவதில்லை. 🙂
மதவெறியைப் பரப்புவதும், மல்லாக்கப்படுத்து துப்புவதும் பாசிஸ்டுகளுக்கு உரிமையாகத்தான் இருக்கும் வியாசன். வெறிநாய்கடிக்கு மக்கள் தானே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்!
தமிழ்நாட்டிற்கு சம்பந்தமே இல்லாத கணபதியை வைத்து ஆர் எஸ் எஸ் காலிகள் வன்முறை செய்வார்களாம். இதில் வியாசன் போன்ற இந்துத்துவ வெறியன்கள் ஒருபக்கம் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, மறுபக்கம் தமிழ் மரபு பற்றி பேசுவார்களாம். புராணங்கள் எல்லாம் தமிழர்களின் சொத்து என்று வாந்தியை அள்ளிப்பருகுவார்களாம். இவ்விதம் கைக்கூலிகளின் நிகழ்ச்சி நிரலில் தமிழனும் இல்லை; தமிழும் இல்லை. பார்ப்பனியமும் பாசிசமும் மட்டும் தான் இருக்கிறது. பார்ப்பன-வெள்ளாள கூட்டு என்பது இதுதான்.
இதையும் வரவேற்க ராம் போன்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். பிறகு என்ன செய்ய? வடுகர்களுக்கு மூத்திர பரிசோதனை செய்கிற வியாசன் போன்ற புல்லுருவிகள் யார் தமிழன் என்று தமிழ் நாட்டில் பட்டுச்சேலை, நகை வாங்கிக்கொண்டே வரையறுக்கிறார்கள்! தமிழன் அந்தளவிற்கு இந்துத்துவக்காலிகளுக்கு தொட்டு நக்கும் ஊறுகாயாகப் போனான். இதில் ராம் போன்றவர்கள் களப்பிரர்களுக்கு மூத்திரப்பரிசோதனை செய்து கன்னடர்கள் என்று அறிவிக்கிறார்கள். விவாதக்களத்தில் சூடே இல்லை என்று இராம் கூறும் பொழுது, எந்தச் சூட்டைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. இனி போகப்போகத்தான் தெரியும்.
இந்த வெள்ளாளக் கூட்டணி அம்பி போன்ற பார்ப்பனர்களை கைவிட்டும் அதே சமயம் கைகோர்த்தும் பல்லிளிக்கிறது. இராஜராஜன் காலத்திலிருந்தே இந்தப் போக்குதான் தமிழ்நாட்டில். சதுர்வேதி மங்கலம் வாங்கி கொண்ட பார்ப்பான் சோழனுக்கு ஹிரண்யகர்ப்ப தானம் செய்துகொடுத்தானாம். இது பார்ப்பான். தன் வயிறு நிரம்பி விட்டால் அத்தோடு அவ்வளவுதான். அதே சமயம் நிலவுடமையில் வெள்ளான் வகை என்றே ஒன்று இருந்ததாம். தொழிலாளிக்கு கூலி கொடுக்க கருமியாக வெள்ளாளன். கோயிலுக்கு கணக்கு பார்க்க, பண்டாரியாக பார்ப்பான். இதில் சிவன் பெயர் பெருவுடையார். உடையார் என்று ஒரு நிலப்புரவின் பெயரே சிவனுக்கு வைத்து ஒட்டச்சுரண்டிய ஆதிக்கசாதிகள், மக்களிடம் பக்தி இயக்கம் என்று பல்லைக்காண்பிப்பார்கள். ஆனால் மறுபுறமோ வரிகட்டாத விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பெயர் சிவத்துரோகி. இவர்கள் தத்துவமே இவ்வளவுதான் என்கிற பொழுது, இராம் நாளை வந்து பின்னூட்டம் போடுவாராம். கருத்துரிமையாம்! தத்துவமாம்! கதை கதையாம் காரணமாம்!
இந்தாளுக்கு உண்மையிலேயே அறளை பெயர்ந்து விட்டது போல் தான் தெரிகிறது. இங்கு பேசப்படும் தலைப்புக்கோ, கருத்துக்களுக்கும் சம்பந்தமில்லாத, எங்கேயோ தொடங்கி, கடைசியில் வழக்கம் போல் ராஜ ராஜ சோழன் பார்ப்பனர்களுக்குச் சதுர்வேதி மங்கலம் கொடுத்ததில் இழுத்துக் கொண்டு வந்து தஞ்சைப் பெருவுடையாரில் முடித்து விட்டார். உடையார் என்றொரு சாதியுண்டென்பது மட்டும் தான் நித்தமும் சாதி பேசி, சாதியை வைத்துப் பிழைப்பு நடத்துகிறவர்களுக்குத் தெரியும். தஞ்சையில் உறையும் சிவன் ஏழேழு உலகையும் உடையவன் என்று நம்பிய தமிழர்களின் முன்னோர்கள் சிவனுக்கு பெருவுடையார் என்று பெயரிட்டார்கள் என்ற தமிழர்களின் வரலாறையும் தமிழர்களின் பண்பாட்டையும் புரிந்து கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் இருக்குமென்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது தான்.
தென்றல் போன்ற வர்க்கம் பேசும் பகுத்தறிவுகளின் வேலையே இது தான். ராஜ ராஜ சோழனுக்குப் பிறகு ஆண்ட தமிழரல்லாதார் என்ன செய்தார்கள் என்பதை மறந்து அல்லது மறைத்து விட்டு, ராஜ ராஜ சோழனையும், பார்ப்பனர்களையும் பற்றி மட்டும் ஒப்பாரி வைப்பது தான் இவர்களின் வேலை. ஆனால் சோழர்ளுக்குப் பின்னர் ஆண்ட வடுகர்களும், கன்னடர்களும் முகலாயர்களும் செய்தவற்றைப் பற்றி அல்லது அவர்கள் ஏன் தமிழுக்கும், தமிழர்களுக்கும் தமிழ்நாட்டில் முன்னுரிமை கொடுக்கவில்லை என்பதைப் பற்றியெல்லாம் மூச்சு விடமாட்டார்கள். இதற்குக் காரணம் பகுத்தறிவுப் பாசறையின் ‘வர்க்கப்போராளிகள்’ பலரும் வடுக, கன்னட கலப்பினத் ‘தமிழர்கள்’ அல்லது தமது இன, மொழியடையாளத்தையும் மறக்க முடியாமல், தமிழன் என்ற முகமூடியையும் போட்டுக் கொண்டால் தான் தமிழ்நாட்டில் தமிழர்களை ஏமாற்றி பிழைத்துக் கொள்ளலாம் என்ற உண்மையை அறிந்து கொண்டவர்கள். இவர்கள் எல்லாமே அவர்களைக் கேள்வி கேட்கத் தயங்காத என்னைப் போன்ற தமிழர்களைத் தான் குறி வைப்பார்களே தவிர, தமிழனையும், தமிழ்நாட்டையும் சுரண்டும் வடுக, கன்னட, மலையாள ___________கண்டு கொள்ள மாட்டார்கள். அதைச் சுட்டிக் காட்டும் தமிழர்களுக்கும் அவசர, அவசரமாகப் பூணூல் சடங்கு நடத்தில் ஒரு மூலையில் உட்கார வைக்க முனைவார்கள். அது என்னிடம் வேகவில்லை, ஆனாலும் அடிக்கடி சம்பந்தமில்லாமல் உளறினாலும், எதையும் விட்டுக் கொடுக்காத விண்ணனாகிய அண்ணன் தென்றல் அவர்கள் மட்டும் பேசப்படும் விடயம் எதுவாக இருந்தாலும், எனக்கொரு பூணூல் போட்டு விடத் தொடர்ந்து முயல்கிறார். இந்த விடயத்தில் தோழர் தென்றல் முன்னணியில் நிற்பதைப் பார்க்கும் போது இவருக்கும் வடுகர்களுக்கும், கன்னடர்களுக்கும் ________ நெருங்கிய உறவிருக்குமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்குமோ யார் கண்டது? 🙂
\\இங்கு பேசப்படும் தலைப்புக்கோ, கருத்துக்களுக்கும் சம்பந்தமில்லாத, எங்கேயோ தொடங்கி\\
அய்யா இங்கு பேசப்படும் தலைப்பும் கருத்தும் நான் விரும்பி செய்கிற பணியாகும். நாங்கள் இதை முழுவதுமாக விவாதிக்க விரும்புகிறோம். ஆனால் அதற்கு முன்பாக உம்மைப் போன்ற வர்க்க எதிரிகளின் முகத்திரையை கிழிக்கவேண்டியது அவசியமாகும். தமிழர்களை இழிவுபடுத்திய நாதாரிக்கூட்டங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை என்பதைச் சொல்வதற்காகத்தான் இத்துணைப் பின்னூட்டங்கள். நீர் பேசுகிற தமிழர் மரபிற்கும் தமிழுக்கும் சம்பந்தம் கிடையாது வியாசன். சுப்ரமண்ய சாமியை விட கேடுகெட்ட தரகன் நீர்! உம்மைவிட யாரும் தமிழர்களை இழிவுபடுத்தியதில்லை. மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு வியாசன். ஆதலால் தான் சொல்கிறேன், எங்கு வந்து எதை எழுதினாலும் உம்மைப் போன்ற மானங்கெட்டவர்களை அம்பலப்படுத்துவது, விவாதிக்கிற விசயத்திற்கு வலு சேர்க்கும். தனிநபர் தாக்குதல் அல்ல இது. தமிழர் முகமூடியில் ஒளிந்திருக்கும் இந்துத்துவ காலிகளையும் மேட்டுக்குடி களவாணிகளையும் அம்பலப்படுத்தி முறியடிக்கும் முயற்சி இது.
தொடர்ந்து உளறிக் கொண்டேயிருப்பேன் என்கிறீர், அதனால் எனக்கொன்றும் ஆகப் போவதில்லை. நான் இனிமேல் உம்மைக் கணக்கிலெடுத்து பதிலெழுதப் போவதில்லை. ஆகவே நீர் உமது உளறலைத் தொடர்வதில் எனக்கு ஆட்சேபனையேதும் கிடையாது. 🙂
வியாசன் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மக்களுக்கு ”நல்லது” செய்யுறதுலாம் இருக்கட்டும்.போற வர்ற இடத்துல எல்லாம் அவர் தனது மேட்டிமை திமிரை காட்டி தமிழ் மக்களை இழிவு படுத்துகிறாரே அதற்கு என்ன செய்யலாம்.
அவரது பல்வேறு இழிவுபடுத்தல்களில் ஒன்று, மாதிரிக்காக.
இவுரு ஒரு முறை இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு உணவு விடுதியில் சாப்பிட போனாராம்.கடை பணியாளர் இவரது இலையில் இவர் கேக்காமலேயே பரோட்டாவை இரு கையால் பிய்த்து போட்டாராம்.அது இந்த கோமானுக்கு அருவருப்பாக இருந்துச்சாம்.என்னைய கேக்காம எப்படி பிய்த்து போடலாம் என பணியாளரை கண்டித்து விட்டு சாப்புடாம அப்புடியே எந்திரிச்சிட்டாராம்.பணியாளர் இங்க சாப்புட வர்றவுங்க பிய்ச்சு போடணும்னு சொல்றாங்க.செய்யலன்னா கோவப்படுறாங்க என்று விளக்கம் சொல்லியும் இவர் ஏத்துக்கலயாம்.இதை கடை உரிமையாளரிடமும் சொல்லிவிட்டு வெளியேறி விட்டாராம்.அப்புறம் அந்த முதலாளி பணியாளரை என்ன படுத்தினார் என்று தகவல் இல்லை.நிற்க.
இப்போ கேள்வி என்னன்னா,அந்த பணியாளர் என்ன நஞ்சையா இலையில் வைத்து விட்டார் சாப்புட மாட்டேன்னு அடம் பிடிக்க.அருகாமை இருக்கைகளில் அப்படி வைக்கப்பட்ட உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா.கொஞ்சம் விட்டுக் கொடுத்து சாப்பிட்டு விட்டால் உயிரா போய் விடும்.அதை விடுத்து பலர் முன்னிலையில் அவமானப்படுத்தும் விதமாக பணியாளரை கண்டிப்பதும் சாப்பிடும் மற்றவர்களையும் அவமானப்படுத்தும் விதமாக இதைலாம் நான் சாப்புட மாட்டேன்னு எந்திரிச்சு போறதும் அப்பட்டமான திமிர்தனம் இல்லையா.
இதுக்கு வியாசன் சொல்லக்கூடிய ஒரே சமாதானம் இரு கைகளால் உணவு பொருளை தொடுவது தூய்மை குறைவை ஏற்படுத்தும்.அதை நான் உண்ண வேண்டும் என சொல்வதற்கு நீ யார் என்பதாக இருக்கலாம்.இந்த அறிவாளி பரோட்டா எப்படி உருவாகிறது என எண்ணிப்பார்க்க வேண்டும்.
”இரு கைகளால் ” மாவை பிணைந்து [நிறைய மாவு என்றால் கால்களால் மிதித்து பிணைவதும் உண்டு] பிணைந்த மாவை ”இரு கைகளால் ” சிறு உருண்டைகளாக பிடித்து,அவற்றை ”இரு கைகளால் ”வீசி வீசி மெலிதாக்கி,”இரு கைகளால் ” அடுப்பு சட்டியில் வைத்து ,அவை வெந்தபின் ஒரு கையில் சட்டுவத்தை வைத்து மறுகையால் பரோட்டாக்களை அணைத்து எடுத்து ”இரு கைகளால் ” அவற்றை அடுக்கி நாலாபுறமும் தட்டி எடுத்து பின்னர்தான் இலைக்கு வரும். ”இரு கைகளால் ” தொட்ட உணவு பொருளை சாப்பிட மாட்டேன்னு வியாசன் ஒரு கொள்கை வகுத்து செயல்பட்டால் அவர் பெரும்பாலும் பட்டினி கிடக்க வேண்டியிருக்கும்.
இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்காமல் தமிழக சிற்றூர்புரத்து உணவு விடுதி பணியாளரையும் அவரது வாடிக்கையாளரையும் அவமதித்த வியாசனின் போக்கு தமிழ்நாட்டான்கள் நாய் கூட திங்காத உணவை தின்பவர்கள் என்ற அவரது திமிர்த்தனத்தின் நீட்சியே.
தமிழ் மக்களை இப்படி அவமதிக்கும் இந்த யோக்கிய சிகாமணிக்கு தமிழ் கலாச்சாரம் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது.
நான் இங்கு மீண்டும் விவாதங்களில் பங்குபற்ற வந்தது யார் யாருக்குப் புகைச்சலை ஏற்படுத்துமென்று நினைத்தேனோ அவர்கள் இருவருமே இங்கு பேசப்படும் விடயத்தின் பொருளை அப்படியே விட்டு விட்டு என்னை விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள். உண்மையில் இவர்களை நினைக்க எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது, அதேவேளையில் என்னுடைய கருத்துக்கள் ஒவ்வொன்றும் எந்தளவுக்கு இவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது என்பது மட்டுமன்றி, நானே மறந்து போன, நான் சும்மா போகிற போக்கில் அந்த நேரத்தில் பேசப்பட்ட விடயத்துக்கு, வலுச்சேர்க்கும் வகையில் தெரிவித்த கருத்துக்களை இவர்கள் இன்றும் மறக்காமல் இவ்வளவு நாளும் நினைவில் வைத்திருப்பதைப் பார்க்கும் போது எனது எழுத்துக்களும், கருத்துக்களும் இவர்கள் மனத்தில் எந்தளவுக்கு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் என்னால் உணர முடிகிறது. எனது கருத்துக்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நினைவில் வைத்திருக்கும் திப்பு சுல்தான், தோழர் தென்றல் போன்றவர்களை எப்படி வாழ்த்துவது என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் அந்த தில்லைக் கூத்தன் இனிமேலாவது நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டுமென்று வேண்டுகிறேன். 🙂
தமிழ்நாட்டில் நடைபெற்ற எந்த விடயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு ஊரில் நடைபெற்ற அந்தச் சம்பவத்தை நான் குறிப்பிட்டேன் என்பது எனக்கு நினைவில்லை. ஆனால் நான் சாப்பிடப் போகும் உணவில் முன்பின் தெரியாத ஒருவர் திடீரென்று தனது கைகளை வைத்தது, என்னுடைய வாழ்க்கையில் அது தான் எனது முதல் அனுபவம். நான் பலமுறை தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறேன் அனால் எந்த வெயிட்டருமே எனது பிளேட்டுக்குள் கை வைத்ததில்லை. அந்த வெயிட்டர் என்னிடம் பிய்த்துப் போடவா என்று கேட்டு விட்டுக் கையை வைத்திருந்தால் கூட. எனக்கு அது அவ்வளவு அதிர்ச்சியைத் தந்திருக்காது. அங்கு அது தான் வழக்கம் என்பதும் எனக்குத் தெரியாது.
ஒரு உணவு எத்தனை கைகள் பட்டுச் சமைக்கப்பட்டிருந்தாலும் நான் உண்ணும் பிளேட்டுக்கு வந்த பின்னர், எனது அனுமதியில்லாமல் (நெருங்கிய உறவுகள் அல்லது நண்பர்கள் தவிர்ந்த வெளியார்) யாரும் கை வைப்பது,___________ எனக்கு அது பரிச்சயமில்லை.
உண்மையில் அது தான் வழக்கம் என்று எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் அதை அந்தஉணவகத்தின் மனேஜரிடம் குறிப்பிட்டிருக்க மாட்டேன். தமிழ்நாட்டில் வெயிட்டர் வேலை, துணிக்கடைகளில் 18 மணிநேரங்களுக்கு அதிகமாக, எந்தவித ஓவர்டைமும் இன்றி தொடர்ந்து நின்றபடி வேலைசெய்யும், எத்தனையோ நண்பர்களும், தெரிந்தவர்களும் எனக்குண்டு. அவர்கள் படும் அவலம் எனக்குத் தெரியும். அதனால் திப்பு சுல்தான் திரிப்பது நான் வேண்டுமென்றே அந்த விடயத்தை மனேஜரிடம் தெரிவிக்கவில்லை. ஏன் அப்படிச் செய்தார் என்று அறிவதற்காகத் தான் கேட்டேன்.
நான் தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றி பேசுவதற்குக் காரணம் நான் ஒரு தமிழன் என்பதால் தான், அதை ______ திப்பு சுல்தானால் புரிந்து கொள்ள முடியாதது எனக்கொன்றும் வியப்பை அளிக்கவில்லை. 🙂
வியாசனின் மறுவருகையால் புகைச்சல் ஏதும் இல்லை.உண்மையில் இது எதிர்பார்த்ததுதான்.மீண்டும் வருவார்ன்னு அவர் குளத்தோடு கோச்சுக்கிட்டு போன பதிவிலேயே சொல்லிருக்கேன்.
பார்க்க; https://www.vinavu.com/2014/09/09/bjp-aap-admk-money-democracy/#comment-188192
மேலும் இவரது மறு வருகை வரவேற்புக்குரியது.ஏனெனில் திராவிட இயக்கம்,பெரியார்,பொதுவுடைமை கொள்கை,மத சிறுபான்மை முசுலிம் மக்கள் மீதெல்லாம் இணைய வெளியில் நஞ்சு கக்கித்திரியும் இவர் வினவில் தோழர்களிடம் சிக்கி சரியாக அம்பலப்படுத்தப்படுகிறார்.
இவரு ”கருத்து” ஆழமா எங்கள்ட்ட பதிஞ்சுருக்காம்.இவரு மறந்துட்டாராம்.எம் மக்களை இழிவு படுத்தும் ஆணவமும் திமிரும் எங்களுக்கு மறக்காதுதான்.எறிஞ்சவனுக்கு இனாமா கிடச்ச கல் தான் செலவு.பட்ட எங்களுக்குத்தான் வலி தெரியும்.
\\உண்மையில் அது தான் வழக்கம் என்று எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் அதை அந்தஉணவகத்தின் மனேஜரிடம் குறிப்பிட்டிருக்க மாட்டேன்.//
பணியாளர் அது தான் வழக்கம் என்று விளக்கம் அளித்த பின்னர்தான் அதை ஏற்காமல் கடைக்காரரிடம் புகார் சொல்லியிருக்கார்.
//வியாசனின் மறுவருகையால் புகைச்சல் ஏதும் இல்லை.உண்மையில் இது எதிர்பார்த்ததுதான்.மீண்டும் வருவார்ன்னு அவர் குளத்தோடு கோச்சுக்கிட்டு போன பதிவிலேயே சொல்லிருக்கேன்.///
நான் சில வாரங்கள் வினவு தளத்தில் பங்குபற்றாததற்குக் காரணமே திப்பு சுல்தான் தான். அவர் எனக்கு அளித்த பதிலை அப்படியே வெளியிட்ட வினவு நிர்வாகம், அவரது பாணியில் நான் திப்பு சுல்தானுக்கு அளித்த பதிலை மட்டுறுத்தல் செய்து விட்டார்கள், அந்த வெளிப்படையான ஒருபக்கச் சார்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் மீண்டும் வருவதை விரும்பாத திப்புசுல்தான், நான் மீண்டும் இங்கு வராமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக, “வினவில் இனிமேல் பின்னூட்டம் போட மாட்டேன் என்ற வியாசனின் சபதம் பிரசவ வைராக்கியம் போன்று தற்காலிகமானதுதான்” அதனால் நான் மீண்டும் வருவேன் என்று சவால் விட்டார் என்று எனக்கு முன்பே தெரியும். திப்பு சுல்தானின் மூளை எப்படியெல்லாம் வேலை செய்கிறது பார்த்தீர்களா?
தமிழர் என்ற முகமூடியை அணிந்து கொண்டு, தமிழ்த்தேசியம், ஈழத்தமிழர்கள், அவர்களின் விடுதலைப் போராட்டம், புலம்பெயர்ந்த தமிழர்கள், அவர்களின் மத கலாச்சார நம்பிக்கைகள் எல்லாவற்றுக்குமெதிராக நஞ்சைக் கக்கும் புல்லுருவிகளுக்கும், தமிழை இழிவுபடுத்தும் சமக்கிருதவாதிகளுக்குமெதிராக நான் வெளிப்படையாகவே எனது வலைப்பதிவில் என்னை அம்பலப்படுத்திக் கொள்ளும்போது, இவர்கள் என்னை அம்பலப்படுத்துகிறார்களாம். இதை விட வேடிக்கை வேறெதுவுமில்லை. ‘நினைப்புத் தான் பொழைப்பைக் கெடுக்கும்’ என்று சும்மாவா சொன்னார்கள். 🙂
\\ நான் மீண்டும் வருவதை விரும்பாத……….. வேலை செய்கிறது பார்த்தீர்களா?//
வீண் கற்பனை.ஒரு கணிப்பாக எழுதியதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் விதண்டாவாதம்.வினவு தளத்தில் எத்தனையோ பேருடன் கருத்து முரண்பட்டு விவாதம் செய்திருக்கிறேன்.இசுலாமிய மதத்தின் மீதும் அம்மக்கள் மீதும் கடும் விமரிசனங்களையும் அவதூறுகளையும் பொழிந்து வியாசனை விட கடுமையாக உனிவர்பட்டி ஜோசப் என எத்தனையோ பேர் பின்னூட்டம் போடுகிறார்கள்.அவர்களை எல்லாம் வினவில் எழுத விடாமல் நான் தடுக்க முடியுமா.வியாசனை மட்டும் தடுத்து என்ன பயன்.அவர் தன்னைத்தானே பெரிய வஸ்தாதாக நினைத்துக் கொண்டு கற்பனையாக குற்றம் சொல்றாரு.நினைப்பு தான் பொழப்ப கெடுக்கும் என்பதை அவருக்கே திருப்பி சொல்கிறேன்.
//அவர்களை எல்லாம் வினவில் எழுத விடாமல் நான் தடுக்க முடியுமா.வியாசனை மட்டும் தடுத்து என்ன பயன்.///
நீங்கள் தடுத்தாக யார் சொன்னார்கள். மட்டுறுத்தலில் ஒருபக்கச் சார்பாக வினவு நடந்து கொள்கிறது என்று முறைப்பாடு செய்து கொண்டு, நானாகவே விலகியது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். அதனால் தான், நான் மீண்டும் வராமலிருப்பதை உறுதி செய்து கொள்வதற்காக “வினவில் இனிமேல் பின்னூட்டம் போட மாட்டேன் என்ற வியாசனின் சபதம் பிரசவ வைராக்கியம் போன்று தற்காலிகமானதுதான்” என்று என்னுடன் சவால் விட்டீர்கள் என்கிறேன் நான்.
உண்மையில் என்மீது எந்தவித காழ்ப்புணர்வுமின்றி இங்கு நடைபெறும் விவாதங்களை கருத்துப் பரிமாறலாக மட்டும் நீங்கள் கருதியிருந்தீர்களேயானால், அன்றைக்கு என்னுடன் சவால் விட்டிருக்க மாட்டீர்கள். மாறாக இணையத்தளங்களில் இதுவெல்லாம் சகஜம், அதற்காக யாராவது போவார்களா என்றிருப்பீர்கள். உதாரணத்துக்கு, நீங்களோ அல்லது தென்றலோ, என்னைப்போல் முறைப்பாடு செய்து கொண்டு, இனிமேல் இங்கு வரமாட்டோம் என்றால், நான் உங்களைத் தடுப்பேனே தவிர இல்லை நீங்கள் திரும்பி வருவீர்கள் என்று சவால் விட மாட்டேன். ஏனென்றால் இங்கு நடைபெறும் விவாதங்களை நான் வெறும் கருத்துப் பரிமாறலாக மட்டும் தான் கருதுகிறேனே தவிர உங்களிருவர் மீதும் எனக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது.
திரு. வியாசன் அவர்கள் தமிழ்நாட்டிற்க்கு வருவதால் அந்நியச் செலவாணி உயருகிறது என்று அவர் கூறினாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது, ஆனால் அப்படி ஒரு வேளை அவர் கூறியிருப்பின் அதனால் தவறொன்றுமில்லை. அந்நியச் செலாவணி என்பது ஒரு நாட்டிற்க்கு சுற்றலா துறையால் கிடைக்கும் மிகப்பெரிய வருமானம். ஒரு நாட்டிற்க்கு வரி மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்றது தான் இதுவும். உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும்(அமெரிக்கா,இங்கிலாந்த், பிரான்ஸ் போன்ற பணக்கார நாடுகள் உட்பட) இது பொருந்தும்.தினமும் தொலைகாட்சியை திறந்தால் துபாய், மலேசியா போன்ற நாடுகளின் சுற்றுலா விளம்பரங்கள் தான் அதிகம் ஆக்கிரமிக்கின்றன. “Malaysia Truly Asia” என்றுத்தான் பாட்டுபாடி நம்மை அவர்களின் நாட்டிற்க்கு வாருங்கள் என்று அழைக்கிறார்கள். எதற்க்காக, அந்நியச் செலாவணியை பெருக்குவதர்க்காகத் தான். இதில் இழிவோ,அசிங்கமோ அல்லது பிச்சையிடுதலோ ஏதும் கிடையாது. ஆகவே, கருத்துரீதியாக பதில் அளிக்காமல் இது போன்ற அற்ப விடயங்களை வைத்து ஒருவரைத் தரக்குறைவாக தனி மனிதத் தாக்குதல் செய்வது ஒருவரின் பண்பாடற்ற அநாகரீகமான ஆளுமை தான் முப்பரிமாணங்களில் வெளிப்படுத்துகிறது.
\\ இதில் இழிவோ,அசிங்கமோ அல்லது பிச்சையிடுதலோ ஏதும் கிடையாது.\\
மோடி சொல்கிற மேக் இன் இண்டியாவும் இது தான் தாயே. அங்கு அவர் காஷ்மீரை பாலிவுட்டுக்கு திறந்துவிடுவாரம். இங்கு வியாசன் போன்றவர்கள் பட்டுப்புடவை, நகைவாங்கி தமிழர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவார்களாம். தமிழர்களின் வளங்களைச் சுரண்டுவதில் கேள்விகேட்க துப்பில்லை. இதில் இந்த அம்மாவுக்கு பணக்காரத் தமிழர்கள் அண்ணியச்செலவாணி தருவது இழிவோ, அசிங்கமோ, பிச்சையிடுதலோ கிடையாதாம். மோடியை அங்கு வறுத்தெடுத்துவிட்டு, இங்கு வியாசனைத் தாங்குகிறார் ரெபேக்கா மேரி. இந்தப் பிழைப்புவாதம் சகிக்கவில்லை. தரகுவேலை பார்க்காதீர்கள் அம்மா. அண்ணியச்செலவாணி குடுத்து பிழைக்க வேண்டிய நிலையில் தமிழர்கள் கிடையாது. ஆகையால் உங்களுக்கு தன்மானம் இருந்தால் பிழைப்புவாத அசிங்கத்தை தமிழர் தலையில் ஏற்றாதீர்கள்.
வியாசன் வினவுக்கு வரும்போதே தென்றல் மீது குற்றசாட்டு உடன் வந்து உள்ளார். எவை எல்லாம் விவாதத்துக்குக் சம்பந்தமில்லாத, இங்கு பேசப்படும் கருத்துக்களுக்கு எந்தவித தொடர்புமில்லாத தென்றலின் கருத்துக்கள் என்று கூறலாமே ! //வழக்கம் போல் தோழர் தென்றல் இந்த விவாதத்தை திசைதிருப்ப, இந்த விவாதத்துக்குக் சம்பந்தமில்லாத, இங்கு பேசப்படும் கருத்துக்களுக்கு எந்தவித தொடர்புமில்லாத எதையோ உளறுகிறார்.//
This is the replay for Viyasa’s first feedback 29. Not for 34. //இந்த விவாதம் மிகவும் சுவாரசியமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இருந்தாலும் வழக்கம் போல் தென்றல் அவர்கள் அவரது பாணியில் (விவாதத்துக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களுடன்) விவாதத்தை திசை திருப்பிக் கொண்டு போகிறார் போலத் தெரிகிறது//
//அம்பி கொண்டிருப்பது ஈனபுத்தி. //
அருமையாகச் சொன்னீர்கள் பெருமானே..
// சமஸ்கிருதத்தில் பெயர் இருப்பவர்கள் எப்படி பார்ப்பனியத்தை எதிர்க்க முடியும் என்று துப்புகெட்டதனமாக கேள்வி கேட்கிறார். //
நான் சொல்லாததையெல்லாம் சொன்னேன் என்று கூறி என்னை மிகவும் புகழ்கிறீர்கள்.. மிக்க நன்றி..
// மற்றபடி அம்பியின் வாதமெல்லாம் பீ துடைத்த குச்சிகள்! //
என் வாதங்கள் எல்லாம் தாங்கள் பீ துடைக்கும் குச்சிகளாவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. ஆகா..
(வினவு இந்த பின்னூட்டத்தை நிச்சயமாக மட்டுறுத்தாமல் மகிழ்ச்சியுடன் வெளியிடும் என்று எண்ணுகிறேன்.. )
நல்லதொரு தமிழ் விருந்து படைக்கும் இந்த விவாதத்தை நடத்தும் தோழர் தென்றலுக்கும் அம்பி,ராமுக்கும் நன்றி.இலக்கிய தரவுகளை தேடி தேடி முன்வைக்கும் மூவரின் உழைப்பும் பாராட்டத்தக்கது,
அம்பியிடம் ஒரு கேள்வி.
தமிழர்களின் தொல்குடி கடவுளான முருகனை பார்ப்பனியம் விழுங்கி ”ஸுப்ரமண்ய ஸ்வாமி ” ஆக்கியதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்.இதனை பார்ப்பனியத்தின் சூழ்ச்சி என அடுக்கடுக்கான இலக்கிய ஆதாரங்களை காட்டி தெளிவாக நிறுவுகிறார் தென்றல்.பின் எதை சாதிப்பதற்காக மல்லுக்கட்டுறீங்க.
// தமிழர்களின் தொல்குடி கடவுளான முருகனை பார்ப்பனியம் விழுங்கி ”ஸுப்ரமண்ய ஸ்வாமி ” ஆக்கியதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். //
தவறு.. வடமொழிப் பெயர்களும், பூணூலும் தமிழ்க் கடவுளான முருகனை பார்ப்பனியனாக்கிவிடாது என்பதுதான் என் தரப்பு வாதம்..
// இதனை பார்ப்பனியத்தின் சூழ்ச்சி என அடுக்கடுக்கான இலக்கிய ஆதாரங்களை காட்டி தெளிவாக நிறுவுகிறார் தென்றல். //
சூர் தடிந்த முருகன் என்பது பார்ப்பனிய சூழ்ச்சி என்று அவர் காட்டிய ஆதாரங்கள் எல்லாம் சங்க இலக்கிய ஆதாரங்களோடு எம்மால் மறுக்கப்பட்டிருப்பதை நீங்கள் கண்டுகொள்ளவில்லை..
// அம்பியிடம் ஒரு கேள்வி. //
தங்களுடையது கேள்வியல்ல, ஒரு தலைப்பட்சமான தீர்ப்பு.. நாட்டாமை தீர்ப்பை மாத்துங்கோ..
//தவறு. வடமொழிப் பெயர்களும், பூணூலும் தமிழ்க் கடவுளான முருகனை பார்ப்பனியனாக்கிவிடாது என்பதுதான் என் தரப்பு வாதம்..///
இதைத் தான் நானும் கூறுகிறேன். இப்படி ஒப்புக் கொள்வதைத் தோழர் தென்றல் பார்த்தால் அரிவாளைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. பார்ப்பனர்கள் மட்டுமல்ல, இன்றைக்கு பத்துமலை முருகனுக்குக் காவடி எடுக்கும் அவுஸ்திரேலிய, ஐரோப்பிய வெள்ளையர்கள் கூட முருகன் மீதுள்ள பக்தி முற்றிப்போய் முருகனுக்கு ஆங்கிலப் பெயரையிட்டு வணங்கலாம். அதில் தவறேயில்லை. அதனால் முருகன் வெள்ளைக்காரனாக மாறி விடப் போவதில்லை. அதனால் முருகன் தமிழ்க் கடவுள் என்ற உண்மை மாறி விடாது. அது போல பார்ப்பனர்கள் தமிழ்க்கடவுள் முருகனுக்கு வடமொழிப்பெயர்களையிட்டு, ஒரு பூணூலைப் போட்டு விட்டாலும் கூட முருகன் தமிழன் தான்.
வியாசன் போன்ற மேட்டுக்குடி இந்துத்துவ வெறிய___களுக்கும், அம்பி போன்ற பார்ப்பன எதேச்சதிகாரர்களுக்கும் ‘முருகனுக்கு பூணுல் அணிந்தாலும் முருகன் முருகன் தானாம்!’ இந்தக் கலாச்சாரக்கூட்டணியின் அசிங்கத்தை சிறிது பார்க்க வேண்டும்.
இந்த விவாதத்தில் மட்டுமல்ல; தமிழ்தாகம் சந்துருவோடு விவாதிக்கும் பொழுதும், இதே வியாசனுடன் விவாதிக்கும் பொழுதும் முருகன் மறி அறுத்து வணங்கப்படுகிறான் என்று அழுத்தமாகச் சொல்லியவர். இவ்விதம் தமிழர்கள் முருகனுக்கு மறி அறுத்து கறி விருந்து படைக்கிற பொழுது, மேட்டுக்குடி ____ வியாசன், அசைவத்தை அறுவெறுப்பாக பார்த்தவர். கோயிலில் பலி கொடுப்பதை புனிதம் கெட்டுவிட்டதாகச் சொன்னவர். அண்ணன் வறுத்து தின்னும் மாட்டுகுடலை அறுவெறுப்பு என்று சொன்னதும் இதே மேட்டுக்குடி வியாசன் தான். தமிழ்கலாச்சாரத்தில் முருகனை வணங்குகிற பெரும்பாலானோர் அசைவம் உண்டு தமிழ் மரபைப் பிரிதிபலிக்கிற பொழுது பார்ப்பன வாந்தியை அள்ளிப்பருகுகிற வியாசன் போன்றோர் பார்ப்பனியத்திற்கு மாமா வேலை பார்க்கின்றனர். இது வியாசன் தரப்பு.
மாறாக அம்பி, சூத்திரன் பூணுல் அணிவதே தியானம் என்று சொன்ன மனவக்கிரத்திற்கு சொந்தக்காரர். சட்டை இல்லாமல் வணங்குவது பணிவு என்று சொன்ன தகைமையாளர். மக்கள், தியானம் பணிவு என்று அடிமைப்படுத்தப்படுகிற பொழுது முருகன் பூணுல் அணிந்தாலும் முருகன் தானாம். இந்த அயோக்கித்தனத்தை காறித்துப்ப வேண்டாமா?
இப்படியிருக்கிற இந்தக்கூட்டம் ஒரு சேர தமிழ்கலாச்சாரத்தை மிதித்துவிட்டு பார்ப்பனியத்தையே தமிழர்களின் தலையில் சுமத்தத்துடிக்கிறது. அசைவம் உண்ணாத பழக்கம் தமிழ்நாட்டில் சமணர்களிடம் இருந்தது. ஆனால் இவர்களோ சமணர்கள் என்றாலே வெறுப்பாக நோக்குபவர்கள். இதைத்தாண்டி பெரும்பாலான மக்கள் அசைவம் உண்பவர்கள். மக்களின் கடவுளும் அசைவத்தை விரும்பி ஏற்கிறான். ஆனால் வியாசன்-அம்பி-ராம் கூட்டணி கறியைத் தவிர்த்து பூணுல் அணிந்த முருகனைத் தமிழ் கடவுள் என்று சாதிக்கிறது. பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பன அடிமைகளும் தரகுமாமாக்களும் இனம் கண்டு துரத்த வேண்டியது அவசியமாகும். இவ்வளவுதான் வியாசன்-அம்பி-இராம் கூட்டணிக்கு இருக்கிற ஒட்டுமொத்த முகாந்திரம். இவர்களுக்கு தமிழர்கள் என்ற முகமூடி பொறுக்கித் தின்னும் உபாயமன்றி வேறல்ல.
திட்டுவதுதான் விவாதம் என்ற முடிவுக்கு தென்றல் வந்துவிட்டார்.ஆத்திரகானுக்கு புத்தி மட்டு! திட்டும் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலேயே திட்டுகிறார்.அண்ணன் அடிக்கடி பயன்படுத்தும் நாதாரி என்ற வார்த்தை மதுரை பகுதியில் பன்றி மேய்க்கும் போயர்களை குறிக்கும் வார்த்தை.வடிவேலு சினிமாவில் அடிக்கடி பயன்படுத்தியதால் போயர்கள் கோர்ட்டுக்கு சென்று தடைவாங்கிவிட நாதாரியை விட்டு விட்டு நன்னாரிபயலே என்று சொல்ல ஆரம்பித்தார் அவர்.தென்றலுக்கு அர்த்தமெல்லாம் தெரிய வேண்டியதில்லை சும்மா உளர வேண்டியதுதானே.
தமிழ் தேசியத்தை டமில் தேசியம் என்று கேலி செய்யும் தென்றல் இல்லாத திராவிட தேசியத்துக்கு காவடி தூக்கி தரகுமாமா வேலை பார்க்கிறார்.இவர்களின் திராவிட பருப்பை கேரளாவிலோ,கர்நாடகாவிலோ,ஆந்திராவிலோ வேக வைக்க சொல்லுங்கள் பார்ப்போம்.வெட்டியே விடுவார்கள்.தமிழ்நாட்டில்தான் திராவிட பருப்பு நன்றாக வேகும்.தமிழர்கள் தேசிய இன உணர்வு கொண்டுவிட கூடாது என்பதில் தென்றல் போன்ற திராவிட தரகு மாமாக்கள் வெகு கவனமாக உள்ளார்கள்.யாராவது தமிழர் தொன்மை என்று ஆரம்பித்தால் பார்ப்பன பூச்சான்டி காட்டி பூனூல் கல்யாணம் செய்ய துடிக்கிறார்கள். மேகதாட்டு அணை கட்டி காவிரியில் தண்ணீர்விடாமல் தடுப்பது பாப்பானா கன்னடனா? பாலி,பிராகிருத மொழி பேசிய களப்பிரர்கள் தமிழர்கள் இல்லை என்று சொன்னால் தென்றலுக்கு கோபம் வருகிறது.வச்சிரநந்தியின் திரமிள சங்கத்துக்கு பிறகுதான் சங்ககாலம் என்று வையாபுரி சொன்னதை பதிவு செய்து அவரை தமிழ்துரோகி என்று பாவனார் சொன்னதை எப்படி சொல்லாம் என்று வாதம் செய்தவர் தென்றல்.இந்த திராவிட தரகு மாமாக்கள் தமிழனை நிரந்தரமாக சுரண்டி கொழுக்க செய்யும் பண்பாட்டு மோசடிதான் இதுபோன்ற திருகல் வேலைகள்.இதற்காக இவர்கள் அணிந்துகொள்ளும் முகமூடி சைவ எதிர்ப்பு,பார்ப்பன எதிர்ப்பு.
தமிழ்நாட்டில் தமிழர் அல்லாதவர்கள் தொடர்ந்து ஆள திராவிட பருப்பும் தென்றல் போன்ற திராவிட தரகு மாமாக்களும் தேவைபடுகிறார்கள்.எனவே தென்றல் தனது பிழைப்பு வாதத்தை திறம்பட செய்கிறார்.
“நாதாரி” என்பது சாதி ரீதியான வசவு என்ற குற்றச்சாட்டை முழுமையாக ஏற்கிறேன். இதற்காக சுயவிமர்சனம் ஏற்றுக்கொண்டு தவறைத் திருத்திக்கொள்கிறேன்.
சுயவிமர்சனத்தின் நோக்கம்: ஆதிக்க சாதிகளிடையே இருக்கிற சாதி ரீதியான வசவுகள் வட்டார வழக்குகளாக இருப்பதை நியாயப்படுத்த இயலாது. ஆக ‘நாதாரிக்கு’ பெயர்க்காரணம் தெரியாது என்று தப்பிக்க விரும்பவில்லை. தமிழ்நாட்டில் ஆதிக்க சாதி-பார்ப்பனக் கூட்டின் ஆதிக்கத்தைத் தகர்ப்பதன் மூலமாகத்தான் இந்துத்துவத்தின் செயல்பாட்டு மூச்சை நிறுத்த இயலும் என்பதும் சாதியஇழிவு வழிபாட்டில் இருந்தும் வட்டார வழக்கில் இருந்தும் தூக்கி எறிய ஆதிக்கசாதி பார்ப்பன பாசிஸ்டுகளின் பிழைப்புவாதத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்த இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த விழைகிறேன்.
ஆரம்பத்தில் திராவிடத்திற்கு ஆதரவாக பேசிய இராம், தன் குட்டு உடைந்தவுடன் தமிழ் தேசிய வேசம் போடுகிறார். கீழ்க்கண்ட பதில்கள் அவரின் இரட்டைத் தன்மையை எடுத்துக்காட்டும்.
\\தமிழ் தேசியத்தை டமில் தேசியம் என்று கேலி செய்யும் தென்றல் இல்லாத திராவிட தேசியத்துக்கு காவடி தூக்கி தரகுமாமா வேலை பார்க்கிறார்.\\
இந்த வாதம் கடைந்தெடுத்த பித்தலாட்டம். பின்னூட்டம் 22.1.1இல் வையாபுரி “திராவிடக்கருத்தியலுக்கு எதிரான எண்ணம் உடையவர்” என்று சொன்னது யார்? தாங்கள் தான்! அப்பொழுது இராம் தரகு மாமனாக இருக்கவில்லையா? எப்பொழுது பார்ப்பனிய முகமூடி கிழிந்துபோனதோ அப்பொழுதுதான் திராவிடம் என்பதற்கு எதிர்தரப்பே எடுத்தீர்கள். இந்த மோசடியை மறைத்துவிட்டு புது நாடகம் போடுவது சகிக்கவில்லை!
\\இவர்களின் திராவிட பருப்பை கேரளாவிலோ, கர்நாடகாவிலோ,ஆந்திராவிலோ வேக வைக்க சொல்லுங்கள் பார்ப்போம்.வெட்டியே விடுவார்கள். \\
யார் வெட்டுவது? அங்கேயும் ஆதிக்கசாதி-பார்ப்பனர்களின் கூட்டுதான்! எப்படி தமிழ் மக்களை தமிழ் தேசியம் பேசி ஏமாற்றுகிறார்களோ அப்படித்தான் மலையாளி மலையாள தேசியம் பேசுகிறான். கன்னடன் கன்னட தேசியம் பேசுகிறான். இவர்கள் எல்லாம் ஒரணியில் திரண்டு கொண்டு கைகோர்த்து ஆளும் வர்க்கத்திற்கு கைக்கூலி வேலை பார்க்கிற பொழுது வெட்டியே விடுவார்கள் என்று பம்மாத்து காட்டுவது எதற்காக?
\\ தமிழ்நாட்டில்தான் திராவிட பருப்பு நன்றாக வேகும்.\\
எல்லா இடத்திலும் திராவிட பருப்பு நன்றாக வெந்திருக்கிறது.
1. கோண்டு மொழிக்காரன் பார்ப்பனியம் இன்றி தான் வழிபாடு நடத்துகிறான்.
2. நான் ஏன் இந்து அல்ல என்று ஆந்திராவில் காஞ்சா அய்லைய்யா திராவிடம் பேசி பார்ப்பனியத்தைத் தோலுரிக்கவில்லையா? உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் மாட்டுக்கறி விருந்து படைத்து பார்ப்பனியத்தைத் வெளிச்சம் போட்டுக்காட்டவில்லையா?
3. கன்னடத்தில் பெரியாரின் பேச்சுக்களை சித்தலிங்க ராமையா போன்றவர்கள் எடுத்துச் செல்லவில்லையா?
4. கேரளத்தில் ஆர் எஸ் எஸ் காலிகளுக்கு எதிரான போராட்டங்கள் எதைக்காட்டுகின்றன?
5. தமிழ் நாட்டில் திராவிடத்தை நிராகரித்து தமிழ் தேசியர்கள் ஜெயலலிதாவிற்கு பால்குடம் காவடி எடுக்கவில்லையா? பாஜகவிற்கு சொம்படிக்கவில்லையா?
அம்பலப்படுவது ஒரு புறம் என்றாலும் அம்மணமாக நிற்பது எதற்காக?
முருகனை பற்றிய புனைவுகள் தமிழ் மண்ணில் தோன்றி இருக்க வேண்டும் என்று சொன்னதில் இருந்து குட்டு உடைந்த பல்லவியை விடாமல் பாடுகிறீர்கள்.அர்த்தமற்ற அந்த உளரலுக்கு பதில் கூற வில்லை.திராவிட கருத்தியல் என்று சொன்னது தமிழர்களுக்கான தனித்த பண்பாடு உண்டு என்ற தேவநேய பாவாணார் போன்றவர்களின் கருத்தைதான்.வையாபுரி இந்தியா முழுமைக்கும் சமஸ்கிருத பண்பாடுதான் என்ற எண்ணம் உடையவர்.தமிழின் தனித்தன்மை ஏற்காதவர்.எனவேதான் திராவிட கருத்தியலுக்கு எதிரானவர் என்று சொன்னேன்.வேண்டுமானால் தமிழிய கருத்தியலுக்கு எதிரானவர் என்று மாற்றிகொள்ளுங்கள்.
ஆனால் உங்கள் யோக்கிதை என்ன? உங்கள் வாதத்துக்கு ஆதரவாக வையாபுரியை பிடித்து தொங்கிய பச்சை சந்தர்பவாதி நீங்கள்.நீங்கள்தான் யோக்கிதையை பற்றி பேசுகிறீர்கள்.வெட்ககேடு.
திராவிட பருப்பு வெந்து இருக்கிறது என்று நீங்கள் கொடுப்பதெல்லாம் ஒரு ஆதாரமா? அங்கு தமிழர்களுக்கு என்ன அரசியல் பிரதிநிதிதுவம் உள்ளது? தமிழ்நாட்டில் நிலமை என்ன? திராவிடத்துக்கு தரகு பார்ப்பது என்று முடிவெடுத்த பிறகு கூச்சத்திற்கு இடமேது?
நீங்கள் அம்மணமாக நின்று கொண்டு மற்றவர்களை சொல்லாதீர்கள்.
\\முருகனை பற்றிய புனைவுகள் தமிழ் மண்ணில் தோன்றி இருக்க வேண்டும் என்று சொன்னதில் இருந்து குட்டு உடைந்த பல்லவியை விடாமல் பாடுகிறீர்கள்.அர்த்தமற்ற அந்த உளரலுக்கு பதில் கூற வில்லை.\\
இது உங்கள் பார்ப்பனியப் பாசம். ஆதிச்ச நல்லூர் ஆதாரத்தை நான் முன்வைத்த பொழுது அதில் புராணக் குறிப்புகள் எங்கே? இதன் காலம் கிமு எட்டாம் நூற்றாண்டு. பார்ப்பனிய இழிவை தமிழர்கள் தலையில் கட்டுவது எதற்காக?
\\திராவிட கருத்தியலுக்கு எதிரானவர் என்று சொன்னேன்.வேண்டுமானால் தமிழிய கருத்தியலுக்கு எதிரானவர் என்று மாற்றிகொள்ளுங்கள்.\\
இனவெறியனாக மாறிவிட்ட பிறகு திராவிடக்கருத்தியல் என்று சொல்வதோ தமிழிய கருத்தியல் என்று சொல்வதோ வேலைக்காகது. உங்களைப் பற்றிய பிம்பத்தை மாற்றிக்கொள்வதால் தமிழர்களுக்கு எல்லாம் விடிவு வந்துவிடாது. இனவெறியை ஆழமாக வெறுக்கிறேன்.
\\ஆனால் உங்கள் யோக்கிதை என்ன? உங்கள் வாதத்துக்கு ஆதரவாக வையாபுரியை பிடித்து தொங்கிய பச்சை சந்தர்பவாதி நீங்கள்.நீங்கள்தான் யோக்கிதையை பற்றி பேசுகிறீர்கள்.வெட்ககேடு.\\
இதுவும் தங்கள் சந்தர்ப்பவாதம். திருமுருகாற்றுப்படையை கிபி நான்காம் நூற்றாண்டில் வைக்க தாங்கள் பயன்படுத்தியது வையாபுரியின் வாதத்தைத் தான். சங்க கால நூல்களின் மேல் எல்லை கி.மு 300 என்றும் கீழ் எல்லை கிபி 250 என்று சொன்ன வையாபுரியின் வாதத்தைத்தான் பல்கலைக்கழகங்கள் பயன்படுத்துகின்றன. இந்த வியசம் தங்களுக்கு தெரியாவிட்டால் அதற்கு யார் பொறுப்பு? உவேசாவுக்கு சப்புக்கொட்டுகிற பொழுது வையாபுரி எப்படி உங்களுக்கு இனிக்கிறது? பார்ப்பனியத்தை அம்பலப்படுத்துகிற பொழுது இருதரப்பையும் கண்டிக்கவேண்டும். ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஒரு கண்ணில் வெண்ணைய்யும் வைப்பது என்ன வகையான நேர்மை? வையாபுரியின் சமஸ்கிருதப் பாசம் தெள்ளிதின் விளங்கும். ஆனால் சைவர்களின் பார்ப்பனப் பற்றிற்கு முகம் கொடுக்க மறுப்பதேன்? எதிரிகளை விட சந்தர்ப்பவாதிகளை வரலாறு எளிதில் இனம் காண்கிறது.
\\திராவிட பருப்பு வெந்து இருக்கிறது என்று நீங்கள் கொடுப்பதெல்லாம் ஒரு ஆதாரமா? அங்கு தமிழர்களுக்கு என்ன அரசியல் பிரதிநிதிதுவம் உள்ளது? தமிழ்நாட்டில் நிலமை என்ன?\\
தமிழர்களுக்கு என்ன அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளது என்ற கேள்வியே மோசடியானது. உழைப்பாளர்களுக்கு என்ன பிரதிநிதித்துவம் உள்ளது என்று கேட்டுப்பாருங்கள். தமிழக விவசாயியும் கன்னட விவசாயியும் ஒரு சேர நசுக்கப்படுவது புரியும். தமிழன வெறியும் கன்னட வெறியும் உங்களைப்போன்ற ஆட்களைப் பிரித்து சதிராடுவது தெரியும்.
\\திராவிடத்துக்கு தரகு பார்ப்பது என்று முடிவெடுத்த பிறகு கூச்சத்திற்கு இடமேது?\\
மகிசாசுரனைப் போற்றுவதில் என்னடா குற்றம் என்று கேள்வி தலித் மக்கள் ஆரியம் பேசுகிற ஆர் எஸ் எஸ்காலிகளிடம் கேட்கிறார்கள். இதில் ஐந்தாம் படையாக தாங்கள் அசுரனை அழித்தது தமிழனின் தொன்மம் என்று தரகு வேலை பார்த்தவர். ஆரியத்திற்கு அப்பட்டமாக தரகுவேலை பார்த்துவிட்டு கூச்சம் நாச்சம் பற்றி பேசுகிறீர்களே?
\\ தமிழர்கள் தேசிய இன உணர்வு கொண்டுவிட கூடாது என்பதில் தென்றல் போன்ற திராவிட தரகு மாமாக்கள் வெகு கவனமாக உள்ளார்கள்.யாராவது தமிழர் தொன்மை என்று ஆரம்பித்தால் பார்ப்பன பூச்சான்டி காட்டி பூனூல் கல்யாணம் செய்ய துடிக்கிறார்கள்.\\
தமிழ்நாட்டின் தமிழ்தேசியமே ‘ரா’ உருவாக்கி வைத்த கைக்கூலி இயக்கம் தான். தமிழர்கள் ஈழப்போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்பதைத் திசை திருப்புவதற்குத்தான் இவைகளே உருவாக்கப்பட்டன. மகஇக மக்களைத் திரட்டி இந்திய அரசைப் போர்க்குற்றவாளி அறிவி என்று சொன்ன பொழுது தமிழ்தேசியம் பேசியவர்கள் எங்கிருந்தார்கள்? மக்களின் போராட்டத்தைக் ஆளும் வர்க்கத்திற்கு காட்டிக்கொடுத்துவிட்டு தரகு வேலை பார்ப்பதாக தட்டைத் இங்கு திருப்புவது எத்துணை பெரிய அயோக்கித்தனம்?
மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்பவர்கள் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் தான். மெட்ரிக்குலேசன் பள்ளியை எதிர்த்து என்ன புடுங்கினார்கள் தமிழ் தேசியர்கள்? வடுகர்களுக்கும் கன்னடர்களுக்கும் மூத்திர பரிசோதனை செய்வதோடு நின்றுவிடுகிற உங்களைப்போன்ற தமிழ் தேசியர்கள் ஜெயலலிதாவையும் மோடியையும் பார்த்து நின்று கொண்டே கழிகிறார்கள். இதில் யார் தரகு மாமா?
பூணுல் தமிழன் கலாச்சாரம் இல்லை என்று கருதுகிற இராம் சுப்ரமணி விசயத்தில் வாய்மூடி மெளனியாக இருப்பது ஏன்?
திராவிட தேசியம் பேசியவர்கள் சிஐஏ யின் கை கூலி இயக்கமாமே? திராவிட நாட்டை பிரித்து நீங்களே உங்க காலனிநாடாக வைத்துகொள்ளுங்கள் என்று தீர்மாணம் நிறைவேற்றியவர்கள் யார்? காலில் விழுவதை பற்றிநீங்கள் பேசலாமா? தமிழ்நாட்டில் இன்று உள்ள எந்த தமிழ் தேசிய கட்சிமீதும் எனக்கு கடுகு அளவுக்கும் மரியாதை இல்லை.
இங்குநடக்கும் அனைத்து விவாதத்துக்கும் பதில் சொல்வதென்றால் 24 மணிநேரமும் வினவில் பின்னுட்டமிட்டுகொண்டே இருக்க வேண்டியதுதான்.நான் உங்களை போல் குட்டி முதலாளி எல்லாம் இல்லை.
\\திராவிட தேசியம் பேசியவர்கள் சிஐஏ யின் கை கூலி இயக்கமாமே? திராவிட நாட்டை பிரித்து நீங்களே உங்க காலனிநாடாக வைத்துகொள்ளுங்கள் என்று தீர்மாணம் நிறைவேற்றியவர்கள் யார்? காலில் விழுவதை பற்றிநீங்கள் பேசலாமா?\\
சிஐஏவின் கைக்கூலி இயக்கம் என்று சொல்லிவிட்டால் அங்கு திராவிடம் ஏது? தேசியம் ஏது? குட்டி முதலாளி பற்றியெல்லாம் பேசுகிறீர்களே? தேசியம் வளர்வதற்கு குறைந்தபட்சம் முதலாளித்துவ பொருள் உற்பத்தியாவது வேண்டுமென்று தெரியாதா? இந்தியாவின் அரசியல் நிலைமை தனியார்மயம், தராளமயம், மறுகாலனியாதிக்கம். இதற்கு மாமா வேலை பார்ப்பது இந்துத்துவ பார்ப்பனியம். இதை முறியடித்து மக்கள் திரள் போராட வேண்டுமானால் திராவிடக் கருத்தியலைப் பேச வேண்டும். ஆனால் தாங்களோ பிழைப்புவாதியாக பார்ப்பனியத்திற்கு சப்பைக்கட்டு கட்டுபவர். என்னுடன் பங்கெடுத்த உங்களது மூன்று விவாதங்களுமே மக்களை அடிமைப்படுத்தும் இந்துத்துவத்தைப் ஆதரித்து பேசியதாகும். மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளையோ பார்ப்பனிய அடிமைத்தனத்தையோ பேசாமல் பார்ப்பனியத்தை தமிழர் தலையில் கட்டுகிற மோசடியைத்தான் காண்கிறேன். காலில் விழுவதைப் பற்றி பிறகு பேசலாம். முதலில் நிமிர்ந்து நில்லுங்கள்.
\\தமிழ்நாட்டில் இன்று உள்ள எந்த தமிழ் தேசிய கட்சிமீதும் எனக்கு கடுகு அளவுக்கும் மரியாதை இல்லை.\\
தமிழ் தேசிய கட்சி என்று தாங்கள் நம்புகிற ஈசனே வந்து உட்கார்ந்தாலும் அது மக்களின் போராட்டத்தைக் காயடிக்கத்தான் செய்யும். தேர்தல் பாதை திருடர் பாதை. புரிந்துகொண்டு போராட வேண்டியது உங்களது பொறுப்பு.
\\இங்குநடக்கும் அனைத்து விவாதத்துக்கும் பதில் சொல்வதென்றால் 24 மணிநேரமும் வினவில் பின்னுட்டமிட்டுகொண்டே இருக்க வேண்டியதுதான். நான் உங்களை போல் குட்டி முதலாளி எல்லாம் இல்லை.\\
உளறுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று சொல்லி பாதியில் போய்விட்டு மீண்டும் வந்தவர் தான் தாங்கள். 24 மணி நேரமும் பின்னுட்டமிட்டுக்கொண்டே இருக்க இயலாது சரிதான். ஆனால் இது எதைக் காட்டுகிறது? இணையம் என்றில்லை அங்கிங்கிணாதபடி எங்குமே பகுதி நேர போராட்டம் நடத்துவதால் தீர்வு கண்டு விடமுடியாது. ஏனெனில் முதலாளித்துவமும் பார்ப்பனியமும் குளத்தில் நீந்துகின்ற வாத்தைப் போன்றது. மேற்பார்வைக்கு அசைவற்று தெரிந்தாலும், தன் மேலதிகாரத்தைத் தக்க வைக்க அதன் கால்கள் ஓயாமல் நீந்திக்கொண்டிருக்கின்றன. இதில் உங்களைப் போன்றவர்கள் தத்துவம் என்றும் காரணம் என்றும் புராணம் என்றும் தொன்மம் திருப்தியடைந்துவிட்டால் யார் குட்டி முதலாளி? குதிர் இல்லாத வீட்டை எலி கூட நக்காது. அது போல் தான் போராடாத எந்த சமூகத்தையும் வரலாறு மதிப்பதில்லை.
\\ மேகதாட்டு அணை கட்டி காவிரியில் தண்ணீர்விடாமல் தடுப்பது பாப்பானா கன்னடனா?\\
தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய செளகான் தான் காவரி நடுமன்ற தீர்ப்பாயத்தின் ஆணையர்! செயலலிதாவோ, சவுகானோ, எடியூரப்பாவோ யார்? இவர்கள் எல்லாம் கன்னடர்களா? பார்ப்பனர்களா? இனவெறிக்கும் ஒரு அளவு உண்டு. கன்னட பழங்குடி இனமக்கள் இந்த அணைத்திட்டத்தை எதிர்க்கிறார்களே இது வரை தமிழ் தேசியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? வைகோ வெறும் தண்டவாளத்தில் போஸ் கொடுக்கவில்லையா? மூன்றே விவாதங்களில் இப்படி பிழைப்புவாதியாகிப் போனால் எப்படி!
\\ பாலி,பிராகிருத மொழி பேசிய களப்பிரர்கள் தமிழர்கள் இல்லை என்று சொன்னால் தென்றலுக்கு கோபம் வருகிறது.\\
இதுவும் மோசடியான வாதம். களப்பிரர்கள் கன்னடர்கள் என்று சொன்னவர் யார்? இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னாடி யார் களப்பிரர்கள்? கன்னடம், மலையாளம் இருந்ததா? பாலி பிராகிருதம் என்று இப்பொழுது பொய் பேசுவது எதற்காக! எந்த வாதத்தில் பாலி பிராகிருதம் என்று சொல்லி களப்பிரர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். இப்படி பொய் சொல்வதற்கு தாங்கள் வெட்கப்படவில்லையா? பிராகிருதம் படித்தவன் இலக்கண நூல் எழுதினான். சைவர்கள் என்ன செய்தார்கள்? வரி கட்டாத விவசாயிகளை சிவத்துரோகி என்று அழைத்தார்கள். இதில் யார் தமிழர்கள்?
\\ இந்த திராவிட தரகு மாமாக்கள் தமிழனை நிரந்தரமாக சுரண்டி கொழுக்க செய்யும் பண்பாட்டு மோசடிதான் இதுபோன்ற திருகல் வேலைகள்.இதற்காக இவர்கள் அணிந்துகொள்ளும் முகமூடி சைவ எதிர்ப்பு,பார்ப்பன எதிர்ப்பு.\\
மொழியையும், கலாச்சாரத்தையும் அதைப் பின்பற்றுகிற மக்களையும் வர்க்கப்போராட்டம் தான் காக்கும். தமிழனைச் சுரண்டிக்கொழுப்பது தமிழ்தேசியம் தான். இந்த வகையில் இதுதான் பண்பாட்டு மோசடி! பண்பாட்டைக் காப்பதற்கு தமிழ் தேசியம் என்ன செயல்களைச் செய்திருக்கிறது? அனைவரும் பார்ப்பனியமயமாகிவிட்டு பண்பாட்டு மோசடி என்று கதைப்பது எதற்காக? இந்துத்துவத்திற்கு தரகுமாமாவாக இருந்துவிட்டு தமிழன் பண்பாடு பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது உங்களுக்கு?
\\ தமிழ்நாட்டில் தமிழர் அல்லாதவர்கள் தொடர்ந்து ஆள திராவிட பருப்பும் தென்றல் போன்ற திராவிட தரகு மாமாக்களும் தேவைபடுகிறார்கள்.\\
இன்னும் தன்னை ஆள ஒருவன் தேவைப்படுகிறான் என்று சொல்வதே அடிமைத்தனம். மக்கள், அரசைப் புறக்கணித்து போராடுவதைத் தடுக்கும் தரகு மாமா வேலை தான் தன்னை ஆள ஒருவன் தேவை என்று சொல்கிற வாதம். இராசஇராசனை சைவர்களும் பார்ப்பனர்களும் ‘பொதுநீக்கி’ என்று தங்கள் வயிற்றுப்பிழைப்புக்காக சொல்லவில்லையா? அந்தத் தரகுத்தனத்தைத் தான் வெற்றிலைப் பொட்டியைக் கக்கத்தில் வைக்காத குறையாக செய்துகொண்டிருக்கிறீர்.
நான் டெல்டா பகுதி விவசாய குடும்பம் எனவே மேகதாட்டு அணை என் பிழைப்புக்குகான வாதம்தான் அர்த்தமில்லாமல் உளருவதை இன்னும் நீங்கள் நிறுத்தவில்லை.கன்னடர்களின் தமிழ் வெறுப்பு எனக்கு நன்றாக தெரியும்.உங்களுக்கு சொம்பு தூக்க சமூக காரணங்கள் இருக்கலாம் எனக்கு எந்த காரணமும் இல்லை.
//இதுவும் மோசடியான வாதம்//
படைநான் குடன்று பஞ்சவன் துரந்து
மதுரை வவ்விய கருநடர் வேந்தன்
அருகர்ச் சார்ந்துநின் றரன்பணி யடைப்ப-[கல்லாடம்-56]
கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவன்
மானப் படைமன்னன் வலிந்து நிலங்கொள்வானாய்
யானைக் குதிரைக் கருவிப்படை வீரர் திண்டேர்
சேனைக் கடலுங் கொடுதென் திசைநோக்கி வந்தான் -[பெரிய-மூர்த்தி-11]
‘இவ்விருநூல்களுங் கூறும் கருநாடக வேந்தன் களப்பிரனாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்”-[பாண்டியர் வரலாறு – சதாசிவ பண்டாரத்தார்-பக்.34 செண்பகா பதிப்பகம்.]
அவர்கள் புரட்சி செய்த பிறகு மொழியையும் கலாச்சாரத்தையும் காக்கட்டும் அதுவரை திராவிட தேசியம் பேசுபவர்களின் கலாச்சார மோசடியை அம்பலபடுத்தியே ஆக வேண்டும்
//மேகதாட்டு அணை கட்டி காவிரியில் தண்ணீர்விடாமல் தடுப்பது பாப்பானா கன்னடனா//
இதிலென்ன சந்தேகம்.. கன்னடன் தான் இதற்க்கு காரணம்.. தமிழ்நாட்டிற்க்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்று கூறும் வாட்டல் நாகராஜ், “கன்னட ரட்சன வேதிகே” அமைப்பை சேர்ந்தவர்கள் எல்லாம் யாரம் பின்பு? திராவிடம் பேசிப் பேசியே நம்முடைய நிலங்களையும், இனப்பெருமைகளையும் அந்நியர்களிடம் இழந்து நிற்கிறோம். இனியும் இந்தத் துன்பத் திராவிடம் நமக்கு தேவையில்லை. ராஜ ராஜ சோழன் மலையாளிகளின்__________________ தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டேன் எனக் கூறும் கன்னட _________________ காவிரியை தமிழ்நாட்டிற்க்கு கொண்டு வர கரிகால சோழன் தான் மீண்டும் வரவேண்டும் .
\\நான் டெல்டா பகுதி விவசாய குடும்பம் எனவே மேகதாட்டு அணை என் பிழைப்புக்குகான வாதம்தான் அர்த்தமில்லாமல் உளருவதை இன்னும் நீங்கள் நிறுத்தவில்லை.கன்னடர்களின் தமிழ் வெறுப்பு எனக்கு நன்றாக தெரியும்.\\
கன்னடர்களின் தமிழ் வெறுப்பிற்கும் அணைப் பிரச்சனைக்கும் முன்பாக அணை கட்டுவதால் அழியப்போவது இருதரப்பு மக்கள் தான். தமிழ்நாட்டு விவசாயிக்கு வாழ்வே போவது போல, கன்னட பழங்குடிகள் தங்கள் வாழ்விடத்தை விட்டே துரத்தப்படுகிறார்கள். இதில் கன்னட வெறியர்கள் கைக்கூலிகளாக அணைத்திட்டத்தை நிறைவேற்ற ஆளும் வர்க்கத்திடம் யாசகம் பெற்றுக்கொண்டு இனவெறியைக் கிளப்புவார்கள். அதே வேலையைத் தான் தமிழ்நாட்டில் தமிழ் தேசியவாதிகள் செய்வார்கள். கனடாவில் இருந்து கொண்டு வியாசன் போன்றவர்கள் மதவெறியைக் கிளப்புவது போல.
விவசாயிகளை மகஇக விவிமு ஒன்று திரட்டி போராடுகிற பொழுது செயலலிதாவையும் மோடியையும் நக்கிப்பிழைப்பார்கள் தமிழ் தேசியவாதிகள். போராட்டத்தைக் காயடிப்பார்கள். தமிழ் நாட்டில் மட்டும் தான் இனவெறி என்பது முன்னர் கிடையாது. அது பெரியார் போராட்டங்களால் சாத்தியமானது. ஆனால் இந்நிலைமை வெகுவாக மாறிவந்திருக்கிறது. இன்றைக்கு இணைய விவாதமே இனவெறியால் நிரம்பி வழிகிறது. ஆகையால் இதெல்லாம் அர்த்தமில்லாமல் உளறுவது இல்லை.
முல்லைப் பெரியாறு அணைப்பாதுகாப்பிற்கு போடி மெட்டிலிருந்து சென்னை வரை விவிமு மகஇக போன்ற புரட்சிகர இயக்கங்கள் மக்களைத் திரட்டி போராடி வந்திருக்கின்றன. டெல்டா விவசாயிகளின் மீத்தேன் துரப்பண எதிர்ப்பு திட்டமும் போராட்டத்தில் இருக்கிறது. இப்பொழுது மேக்கே தாட்டு அணை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது. இங்கெல்லாம் இனவெறியை முன்னிறுத்தவில்லை. வர்க்க உணர்வை முன்னிறுத்தி போராடி வருகின்றன. வியாசனைப் போன்றவர்கள் ஒரு பக்கம் வர்க்கம் எல்லாம் வெறும் பம்மாத்து என்று சொல்லிவிட்டு இட்லி, தோசைக்காக தமிழர்களை விமர்சிக்கிற அற்பத்தனத்திற்கு சற்றும் குறைவில்லாமல் இருப்பது இனவெறியாகும். விவசாய குடும்பத்தில் பிறந்த உங்களைப்போன்றவர்கள் கன்னட வெறி என்று தன் பிரச்சனைக்கு முடிவு எடுத்திருப்பது கவலைக்குரியது! கண்டனத்திற்குரியது! நிலைமையை விளக்கி இனவெறியை முறியடிப்போம்!
\\உங்களுக்கு சொம்பு தூக்க சமூக காரணங்கள் இருக்கலாம் எனக்கு எந்த காரணமும் இல்லை.\\
கன்னடர் என்று சொல்லிப் பார்க்க விரும்புகிறீர்களா? இதைவிட அற்பத்தனம் ஏதாவது இருக்க முடியுமா? அப்படியே உங்கள் வழியில் கன்னடர் என்று வைப்போம். ஒரு கன்னடர் மக்களைத் திரட்டி புரட்சிக்காக போராடினால் என்ன தவறு?
\\இவ்விருநூல்களுங் கூறும் கருநாடக வேந்தன் களப்பிரனாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்”-[பாண்டியர் வரலாறு – சதாசிவ பண்டாரத்தார்-பக்.34 செண்பகா பதிப்பகம்.] அவர்கள் புரட்சி செய்த பிறகு மொழியையும் கலாச்சாரத்தையும் காக்கட்டும் அதுவரை திராவிட தேசியம் பேசுபவர்களின் கலாச்சார மோசடியை அம்பலபடுத்தியே ஆக வேண்டும்\\
கருநாடக வேந்தன் களப்பிரன் என்று சொன்ன சதாசிவ பண்டாரத்தாரின் கருத்துதான் கலாச்சார மோசடி. இந்தப் பித்தலாட்டம் ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. எளிய உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் தான் இருந்தது. மலையாளம் கன்னடம் எல்லாம் இருக்கவில்லை. இந்தளவுக்கு பித்துக்குளியான கருத்திற்கு முதன்மையான காரணம் சைவ வெறியாகும். சதாசிவம் முக்கால்வாசி சங்க இலக்கியங்களை மலையாளத்தாருக்கும் கன்னடரும் எழுதியிருப்பார்கள் என்று சொல்வார்கள் போலிருக்கிறதே! இந்த இலட்சணத்தில் பண்பாட்டு மோசடி பற்றி பேசுகிறீர்கள்! சகிக்கவில்லை!
திராவிட தரகு மாமாக்களின் முகமூடியைக் கிழித்தெறியும் அருமையான பதில். இவர்களின் நோக்கமெல்லாம் தமிழர்கள், தமிழர் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவதைத் தடுக்கும் தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பது தான். சாதியொழிப்பு, வர்க்கம், தர்க்கம் எல்லாம் வெறும் பம்மாத்து.
தோழர் தென்றலின் என்னைப்பற்றிய தனிப்பட்ட முறையிலான உளறல்கள் தவிர்த்து அவரது ஏனைய கருத்துக்களுக்குப் பதிலளிக்கலாம் என எண்ணுகிறேன். உண்மையில், தோழர் தென்றலின் கருத்துக்களையும் அவரது வார்த்தைப் பிரயோகங்களையும் பார்க்கும் போது இரத்த அழுத்த நோயினால் அவதிப்படும் அறளை பெயர்ந்து போன ஒரு வயோதிபர் தான் தென்றல் என்ற பெயரிலே இங்கே வந்து மற்றவர்கள் மீது புழுதியை வாரி வீசிக் கொண்டிருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. 🙂
//பூணுல் அணிந்த முருகனைத் தமிழ் கடவுள் என்று சாதிக்கிறது//
முருகன் பூணூல் அணிந்திருந்தாலென்ன, புலித்தோல் அணிந்திருந்தாலென்ன (வேடன் உருவில்) முருகன், தமிழ்க்கடவுள் முருகன் தான். இலங்கையில் நல்லூர்த் திருவிழாவில் இருபத்தைந்து நாளும் வெவ்வேறு அலங்காரங்களுடன் முருகன் வருவது போல் வெவ்வேறு வேடங்களையும், அலங்காரங்களையும் போட்டாலென்ன, அல்லது நான் முன்பு கூறியது போன்றே மலேசியாவில் பத்துமலை முருகனுக்குக் காவடி எடுக்கும் அவுஸ்திரேலிய, ஐரோப்பிய வெள்ளையர்கள் யாராவது முருகன் மீதுள்ள பக்தி முற்றிப்போய் முருகனுக்கு ஆங்கிலப் பெயரையிட்டு முருகனுக்கு கோட் சூட்டு அணிவித்து, அந்த அலங்காரத்தில் வணங்கினாலும் கூட, அவன் ஒரே தமிழ்க்கடவுள் முருகன் தான். அவன் தமிழர்களின் கடவுள் முருகன் என்ற அடையாளம் மாறப் போவதில்லை. இந்த சின்ன விடயத்தை தோழர் தென்றலால் விளங்கிக் கொள்ள முடியாது விட்டால், அவருக்கு Sock puppet ஐக் காட்டி விளக்கினாலும் விளங்கப் போவதில்லை.
ஆனால் முருகனுக்குப் பூணூலை மாட்டி விட்டவர்கள், அதைக் காரணம் காட்டி முருகனுக்குச் சொந்தம் கொண்டாடினால் அல்லது முருகன் தமிழ்க்கடவுள் அல்ல என்றால் அதைத் தமிழர்கள் எதிர்க்க வேண்டும். அதைத் தான் தமிழ்த்தாகம் போன்றவர்கள் கண்ணியமாகச் செய்கிறார்கள். ஆனால் தென்றல் என்னவோ ஆத்திரத்தில் அலறுகிறார். யாரோ முருகனுக்குப் பூணூலை மாட்டி விட்டார்கள் என்பதற்காக, அவன் தமிழ்க்கடவுள் முருகனே அல்ல என்று வாதாடுவது வெறும் பித்தலாட்டம். முருகன் மறியறுத்து வணங்கப்பட்டது திருமுருகாற்றுப்படைக் காலத்தில் ஆனால் இக்காலத்தில் தமிழர்களனைவரும், அதாவது பெரும்பான்மைத் தமிழர்கள் முருகனை மறியறுத்து வணங்குவதில்லை. ஆகவே முருகனை மறியறுத்து வணங்காதவர்கள் எல்லாம் தமிழர்களே அல்லது மறியறுத்து வணங்கப்படாததால் அவன் முருகனே அல்ல என்று எந்த முட்டாளும் வாதாட மாட்டான். அது முருகபக்தர்களாகிய கோடிக்கணக்கான தமிழர்களை அவமதிக்கும் செயல்.
இவ்வளவுக்கும், சகோதரர் தென்றல் இக்காலத்திலும் மறியறுத்து முருகனை வணங்குகிறாரா அல்லது மறியை அறுத்து வேறு யாரையும் வணங்குகிறாரா என்பது அந்த அல்லாவுக்கு அதாவது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
//கோயிலில் பலி கொடுப்பதை புனிதம் கெட்டுவிட்டதாகச் சொன்னவர். அண்ணன் வறுத்து தின்னும்///
கோயிலில் பலி கொடுப்பதால் புனிதம் கெட்டு விட்டதாக நான் கூறவில்லை, நான் கூறியதெல்லாம் மிருகங்களைக் குரூரமாகக் கொல்வது காட்டுமிராண்டித் தனம், அதை நாங்கள் – ஈழத்தமிழர்கள் ஒன்று கூடி நிறுத்த வேண்டும் என்பது தான். படித்துப் புரியாது விட்டால் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய அந்தக் கருத்துக்கு அடிப்படைக்காரணம், மதமல்ல, மிருகங்கள் குரூரமாகத் துடிதுடிக்கக் கொல்லப்படக் கூடாது என்பது தான்.
// மாட்டுகுடலை அறுவெறுப்பு என்று சொன்னதும் இதே மேட்டுக்குடி வியாசன் தான்.///
பெரியவர் தென்றல் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குப் புரியவில்லை. இப்படியே விட்டால், மாட்டுக்குடலை வறுத்துத் தின்பவன் மட்டும் தான் தமிழன் என்றும் உளறத் தொடங்கி விடுவாரோ என்று கவலையாக இருக்கிறது. உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம், அதில் மதமும் தலையிடக் கூடாது, தென்றலைப் போன்ற மற்றவர்களும் தலையிடக் கூடாது. நான் மீன் தவிர, இறைச்சி வகை உண்ணாததற்கு மதமல்ல காரணம் என்பதை முன்பே விளக்கியுள்ளேன். எல்லாம் ஞாபகமிருக்கிறது அது மட்டும் ஞாபகமில்லையா?
//தமிழ்கலாச்சாரத்தில் முருகனை வணங்குகிற பெரும்பாலானோர் அசைவம் உண்டு தமிழ் மரபைப் பிரிதிபலிக்கிற பொழுது///
நானும் கூடத் தான் அசைவம் (மீன்) உண்கிறேன் முருகனையும் வணங்குகிறேன் அதை யார் மறுத்தார்கள். உங்களின் உளறலுக்கு எல்லையே கிடையாதா?
.
//அசைவம் உண்ணாத பழக்கம் தமிழ்நாட்டில் சமணர்களிடம் இருந்தது.///
அதை யார் மறுத்தார்கள்.
//ஆனால் இவர்களோ சமணர்கள் என்றாலே வெறுப்பாக நோக்குபவர்கள்.///
ஐயா, நாயன்மார்களின் காலத்திலிருந்து வெளியே வாருமையா? இல்லாத சமணர்களை இக்காலத்தில் யாரும் வெறுப்பாக நோக்குவார்களா. கொஞ்சமாவது யோசித்து எழுதுவதில்லையா? 🙂
//இதைத்தாண்டி பெரும்பாலான மக்கள் அசைவம் உண்பவர்கள். மக்களின் கடவுளும் அசைவத்தை விரும்பி ஏற்கிறான். ///
இக்காலத்தில் பெரும்பாலான தமிழர்கள் அசைவம் உண்பவர்களாக இருந்தாலும் எல்லோரும் மறியறுத்து தான் முருகனைக் கும்பிடுவதில்லை. இலங்கையில் பல புகழ்பெற்ற முருகன் கோயில்களில் பார்ப்பனர்கள் பூசை செய்வதுமில்லை, பார்ப்பனீய ஆச்சாரங்களும், பூசை புனஸ்காரங்களும் கிடையாது. ஆனால் அங்கு பூசை செய்யும் பூசகர்களாகிய மீனவர்களும், வேடர்களும் கூட மிருகங்களைக் கொல்வதில்லை. அதற்கும் பார்ப்பனீயத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் முருகன் தென்றலிடம் வந்து தனக்கு அசைவம் தான் விருப்பம் என்று கூறியது போல், இலங்கையில் செல்வர் சன்னதியில் முருகனுக்குப் பூசை செய்யும் மீனவர்களுக்கும், கதிர்காமத்தில் பூசை செய்யும் வேடர்களுக்கும் நேரில் வந்து சொல்லவில்லைப் போல் தெரிகிறது. முருகன் ஒருபோதும் மிருகங்களைப் பலியிடுமாறு கேட்பதுமில்லை, அவற்றை அவன் வந்து உண்பதுமில்லை. கொல்வதும், தின்பதும் மனிதன் தான்.
\\ முருகன் பூணூல் அணிந்திருந்தாலென்ன, புலித்தோல் அணிந்திருந்தாலென்ன (வேடன் உருவில்) முருகன், தமிழ்க்கடவுள் முருகன் தான்…………………. பத்துமலை முருகனுக்குக் காவடி எடுக்கும் அவுஸ்திரேலிய, ஐரோப்பிய வெள்ளையர்கள் யாராவது முருகன் மீதுள்ள பக்தி முற்றிப்போய் முருகனுக்கு ஆங்கிலப் பெயரையிட்டு முருகனுக்கு கோட் சூட்டு அணிவித்து, அந்த அலங்காரத்தில் வணங்கினாலும் கூட, அவன் ஒரே தமிழ்க்கடவுள் முருகன் தான். \\
பூணுலும், கோட்டு சூட்டும் ஒன்று என்று கருதுகிற பாசிசக் கோமாளிகள், சோக் பப்பெட்ட்டைக் காட்டி விளக்கினாலும் நமக்கு விளங்காதாம்! சைவ வேதாந்தம் சூத்திர வேதாந்தம் என்று பார்ப்பான் சொல்கிற பொழுது வாய்பொத்தி நின்ற புல்லுருவிக்கூட்டம், பூணுல் அணிந்தாலும் முருகன் தமிழ் கடவுள் என்று சொல்வதற்கு கூச்சம் நாச்சமேயில்லை. தூக்கி எறிவதைப் பொறுக்கித் தின்பதற்கு வாய் ஒழுக நிற்கிறவர்கள் தமிழ் மரபை பார்ப்பனியத்திற்கு அடகு வைத்து விட்டு பப்பெட்டு என்றும் அலங்காரம் என்றும் நம்மிடம் அங்கலாய்க்கிறார்கள்!
\\ ஆனால் முருகனுக்குப் பூணூலை மாட்டி விட்டவர்கள், அதைக் காரணம் காட்டி முருகனுக்குச் சொந்தம் கொண்டாடினால் அல்லது முருகன் தமிழ்க்கடவுள் அல்ல என்றால் அதைத் தமிழர்கள் எதிர்க்க வேண்டும். அதைத் தான் தமிழ்த்தாகம் போன்றவர்கள் கண்ணியமாகச் செய்கிறார்கள். \\
ஆனால் போட்டு அந்தர் பல்டி அடிப்பதில் வியாசனுக்கு மட்டுமல்ல; ஆன்மீகக் கூட்டத்திற்கே அலாதிப் பிரியம். காந்தி ‘ஆனால்’ போட்டதை பெரியார் அம்பலப்படுத்தியிருக்கிறார். இதைச் சொடுக்கி வாசகர்கள் படித்துப் பார்க்கலாம். https://www.vinavu.com/2014/10/02/myth-of-gandhi-by-thanthai-periyar/
பிழைப்புவாதத்திற்கு ஆனால் எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பது அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் இருப்பதை கண்டு கொள்ள இயலும்.
இது இப்படியிருக்க, வியாசன் சொல்கிற கண்ணியம் என்ற வார்த்தைதான் நமக்கு இடிக்கிறது. களவாண்ட கடவுளை கண்ணியத்துடன் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று கைக்கூலிகள் மட்டுமே சொல்ல இயலும்! பார்ப்பனியத்தை அடித்து துவைப்பதற்கு கண்ணியம் வேண்டுமாம்!
தோழர் தென்றல் அவர்கள் பெரியாரிசம், திராவிடியனிசம், கம்யூனிசம், சோசலிசம், அவருக்கே உரித்த உளறலிசம் எல்லாவற்றுடனும் தமிழிலிருந்தும், தமிழர்களிடமிருந்தும் பிரிக்க முடியாத சைவத்தையும் போட்டுக் குழப்பியடித்து மிகவும் குழம்பிப் போய்விட்டார். அதனால் தான் அவரால் இப்படியெல்லாம் உளற முடிகிறது. ராஜபக்சவுக்கும் பிரபாகரனுக்கும் என்ன தொடர்பு இருக்குமோ அப்படியானது தான் பெரியாருக்கும் முருகனுக்குமுள்ள தொடர்பு. அந்த நிலையில், முருகன் தமிழ்க்கடவுள் தான் என்ற வாதத்துக்குப் பெரியாரை அடிக்கடி மேற்காள் காட்டும் ஒரு Dimwit உடன் முருகனைப் பற்றிய இந்த விவாதத்தை நான் தொடர்ந்தால், அந்த நல்லூர்க்கந்தனே என்னை மன்னிக்க மாட்டான். வேண்டாம் சாமி ஆளை விடு. என்னைப் பொறுத்த வரையில் முருகன் தமிழ்க் கடவுள், தமிழர்களின் கடவுள். யார் அவனை வணங்கினாலும், என்ன பெயரால் அழைத்தாலும் முருகன் தமிழன் தான். அந்த உண்மையை யாருடைய உளறல்களும் மாற்றி விடாது. 🙂
வியாசன், பார்பனர்களின் புராண திரிபுகள் முருகனை எப்படி சிறப்பிக்கின்றது என்றும் ,அதே சமயம்பெரியாரின் பகுத்தறிவு கொள்கை முருகனை எப்படி சிறுமை படுத்துகின்றது என்று கூறமுடியுமா ?
வியாசன் , நாட்டார் தெய்வமான முருகனுக்கு புனூல் போட்டு அவனை அடிமை படுத்தி அதன் மூலம் நம்மையும் அவனிடம் கருவறைக்குள் அனுகவிடாத பார்ப்பனீயம் உங்களுக்கு அனுக்கமாகவும் ,அதனை எதிர்த்து அனைவரும் அர்சகர் ஆகலாம் என்ற பெரியார் கருத்து உங்களுக்கு அந்நியமாகவும் இருக்கிறதா ?
பார்பனிய ,ஆகம சிறையில் இருக்கும் முருகனை பார்த்து, அதன் மூலம் பார்னர்களால் புறம் தள்ள பட்ட தமிழ் மக்களை பார்த்து திரு வியாசன் சிரிப்பது வேதனையாக இருக்கிறது.
//என்னைப் பொறுத்த வரையில் முருகன் தமிழ்க் கடவுள், தமிழர்களின் கடவுள். யார் அவனை வணங்கினாலும், என்ன பெயரால் அழைத்தாலும் முருகன் தமிழன் தான். அந்த உண்மையை யாருடைய உளறல்களும் மாற்றி விடாது. 🙂 //
\\ யாரோ முருகனுக்குப் பூணூலை மாட்டி விட்டார்கள் என்பதற்காக, அவன் தமிழ்க்கடவுள் முருகனே அல்ல என்று வாதாடுவது வெறும் பித்தலாட்டம்.\\
முருகன் என்று முக்கிக் காட்டினால் சுப்ரமண்யனின் முருகனாகிவிடுவானா? பன்னிரு கையும் பாசாங்குசமும் அசுரர் குடி கெடுத்த ஐயாவிற்கு சொத்தாமே? பின்னூட்டம் 40இல் தமிழ்தாகம், முருகன் மீதான ஆரியத்திரிபு பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார். மான ரோசம் உள்ளவர்கள் படித்துப் பார்த்து தெளியட்டும்.
\\ முருகன் மறியறுத்து வணங்கப்பட்டது திருமுருகாற்றுப்படைக் காலத்தில் ஆனால் இக்காலத்தில் தமிழர்களனைவரும், அதாவது பெரும்பான்மைத் தமிழர்கள் முருகனை மறியறுத்து வணங்குவதில்லை.\\
சைவர்களுக்கு இலக்கியம் என்றால் அது திருமுருகாற்றுப்படை மட்டும் தான்! திருக்குறளையும் மணிமேகலையும் படிக்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்த கணவான்கள் ஆயிற்றே! பார்ப்பனியப் பாசம் அல்லவா இது; இதனால் தான் நற்றிணையிலே மறி அறுத்து முருகனுக்குப் படைப்பது கண்ணுக்குத் தெரியாது போல; இந்த இலட்சணத்தில் இக்காலத்தில் பெரும்பான்மைத் தமிழர்கள் முருகனை மறியறுத்து வணங்குவதில்லையாம்! எப்படி வணங்குவார்கள்! முருகன் தான் சுப்ரமண்யனாக இருக்கிறானே! தமிழ் நாட்டில் தாய் தெய்வங்கள் எல்லாம் கறி சோறு தின்பதில் மக்களிடம் தீண்டாமை பார்ப்பதில்லை. முனுசாமிக்கு 100 பன்றி பலி கொடுப்பது இன்றும் நடைமுறையில் உள்ள வழக்கம். மாரியம்மனும், முனுசாமியும் இவ்விதம் தமிழ் கலாச்சாரமாக இருக்கிற பொழுது, பார்ப்பனியமயமாக்கப்பட்ட முருகன் எப்படி மறியை ஏற்றுக்கொள்வான்? முருகன் கோயில் எல்லாம் ஆதினத்திற்கும் தேவஸ்தானத்திற்கும் பிரம்மதேயத்திற்கும் எழுதிக்கொடுத்தது நுற்றாண்டுத் துரோகம். வயிறு வளர்க்க பார்ப்பன-வெள்ளாள ஆதிக்கசாதிக் கூட்டம் செய்கிற ஆகம அட்டூழியங்கள் தான் இன்றைய முருகன் கோயில்கள்! இதில் தமிழனுக்கு எங்கே இடம்?
\\ ஆகவே முருகனை மறியறுத்து வணங்காதவர்கள் எல்லாம் தமிழர்களே அல்லது மறியறுத்து வணங்கப்படாததால் அவன் முருகனே அல்ல என்று எந்த முட்டாளும் வாதாட மாட்டான்.\\
எந்த முட்டாளும் வாதாட மாட்டான் என்பது உண்மைதான். அதனால் தான் பெரியார் கடவுளை நம்புவன் முட்டாள் என்று சொல்லி, கடவுளை உருவாக்கியவன் அயோக்கியன் என்கிறார்! அயோக்கியக் கூட்டத்தை முட்டாள் மக்கள்கள் வாதிடமாட்டார்கள். அடித்து நொறுக்கி அயோக்கிக் கூட்டத்தை அப்புறப்படுத்துவார்கள். அறிவு அற்றங்காக்கும் கருவியல்லவா?!
\\ கோயிலில் பலி கொடுப்பதால் புனிதம் கெட்டு விட்டதாக நான் கூறவில்லை, நான் கூறியதெல்லாம் மிருகங்களைக் குரூரமாகக் கொல்வது காட்டுமிராண்டித் தனம், அதை நாங்கள் – ஈழத்தமிழர்கள் ஒன்று கூடி நிறுத்த வேண்டும் என்பது தான். படித்துப் புரியாது விட்டால் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும்.\\
கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள் வாசகர்களே! பலி கொடுத்தால் காட்டுமிராண்டித்தனம் என்று பார்ப்பனியக் கைக்கூலிகள் கதைக்கிறார்கள்! இப்படிப்பட்ட பார்ப்பனப் பதர்கள் தான் பெரியார் சொன்ன காட்டுமிராண்டித்தனத்திற்கு சொல்லாராய்ச்சி செய்து அவரது தாடி மயிரைப் பிடித்து தொங்கும் பிரச்சார பீரங்கிகளாக இருந்தனர்! இப்பொழுது தமிழ் தேசியர்கள் எதற்காக தமிழர்களைக் காட்டுமிராண்டி என்று சொல்கிறார்கள்? மானம் ரோசம் உள்ளவர்கள் விளக்குவார்கள் என்று நம்புவோமாக!
\\ என்னுடைய அந்தக் கருத்துக்கு அடிப்படைக்காரணம், மதமல்ல, மிருகங்கள் குரூரமாகத் துடிதுடிக்கக் கொல்லப்படக் கூடாது என்பது தான்.\\
ஜீவகாருண்யம் பேசிய போராளி வள்ளலாரை எரித்துக்கொன்றது பார்ப்பனியம்! யோக்கியத்தை மனுநீதி, தீச்சுவாலையால் சுட்டுப்பொசுக்கியது. அதையும் அகநிலை அறிவியல் என்று சொல்லி பார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்கினார்கள்! இன்றோ மீன் தின்று கொண்டு மிருகங்கள் குரூரமாகத் துடிதுடிக்கக் கொல்லப்படக்கூடாது என்று சொல்கிறார்கள் மேட்டுக்குடி வியாசன்கள்! பிழைப்புவாதிகள் பிழைப்பிற்காக இவ்விதம் பேசக்கூடும். வள்ளலாரைச் சுட்டிக்காட்டித்தான் இவர்கள் பார்ப்பனிய வாலை ஒட்ட நறுக்க வேண்டியிருக்கிறது!
\\ உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம், அதில் மதமும் தலையிடக் கூடாது, தென்றலைப் போன்ற மற்றவர்களும் தலையிடக் கூடாது.\\
மாட்டுக்குடல் அருவெறுப்பு என்று நஞ்சு கக்கிவிட்டு உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம் என்கிறார் இந்தப் பாசிசக் கோமாளி. புல்லுருவிகளின் அறிவுரைகள் நமக்கு புல்லரிக்கின்றன!
\\ மாட்டுக்குடலை வறுத்துத் தின்பவன் மட்டும் தான் தமிழன் என்றும் உளறத் தொடங்கி விடுவாரோ என்று கவலையாக இருக்கிறது.\\
இருக்காதா பின்னே! பறை இசை முழக்குகிற மக்களை ஆதி திராவிடர்கள் என்று கால்டுவெல் நிறுவிய பொழுது இருட்டடிப்பு செய்தவர்கள் சைவர்கள் ஆயிற்றே! உணவையும் இசையையும் கலாச்சாரத்தையும் இழிநிலையாக கருதியது பார்ப்பன-ஆதிக்க சாதி எதேச்சதிகாரமில்லையா?
\\ நானும் கூடத் தான் அசைவம் (மீன்) உண்கிறேன் முருகனையும் வணங்குகிறேன் அதை யார் மறுத்தார்கள்.\\
பெங்கால் பார்ப்பான் கூடத்தான் மீன் சாப்பிடுகிறான். அசைவம் தவிர்த்த இந்து, அசைவம் சாப்பிடுகிற இந்து என்று பல இந்துக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். அதனால் தான் நாங்கள் யார் இந்து என்று கேட்கிறோம்! இதில் அசைவம் சாப்பிடுகிற இந்துக்கள் வாழ்வில் அசைவம் சேர்த்துவிட்டு வழிபாட்டில் நீக்குகிறார்கள் என்றால் அதன் முதன்மையான நோக்கம் சாதியப்படிநிலையில் தங்களை உயர்வாகக் கருதுகிறே பார்ப்பனியப் பாசமின்றி வேறல்ல!
\\ முருகன் ஒருபோதும் மிருகங்களைப் பலியிடுமாறு கேட்பதுமில்லை, அவற்றை அவன் வந்து உண்பதுமில்லை. கொல்வதும், தின்பதும் மனிதன் தான்.\\
அதனால் தான் சங்க காலத்து மக்கள் முருகனைப் பூசிக்கிற வேலனை மடையர் மன்ற வேலன் என்று திட்டத்தயங்குவதில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் இல்லையா? பிறகு சுப்ரமண்யனை உருவாக்கியது யார்? கடவுளை உருவாக்கியவன் அயோக்கியன் என்று பெரியார் சொன்னதை வியாசன் தன் பங்குக்கு நிறுவிக்காட்டுகிறார்.
\\ வடமொழிப் பெயர்களும், பூணூலும் தமிழ்க் கடவுளான முருகனை பார்ப்பனியனாக்கிவிடாது என்பதுதான் என் தரப்பு வாதம்..//
அப்படியானால் பின்னூட்டம் எண் 10.3.1-ல் நீங்கள் கீழ்க்கண்டவாறு எழுதியிருப்பதற்கு என்ன பொருள்.
\\சுப்ரமணிய சுவாமி என்ற பெயர் பின்னாளில் வந்ததால் முருகனுக்கு முருகனே சம்பந்தமில்லாதவன் என்று எப்படி கூறமுடியும்.. வெறியாட்டுக்கு இணையான அலகு குத்துதல், தீ மிதித்தல் என்றும் வெற்றி வேல் முருகா என விளித்துக் கொண்டும் பரவசத்தில் செல்லும் அடியார்களை சுப்ரமணிய சுவாமியாகப்பட்டவர் தடுத்து நிறுத்திவிட்டாரா..?!//
சுப்ரமணிய சுவாமி என்ற பெயர் வைத்து அழைப்பதால் முருகனுக்கு உரித்தான மேற்படி வழிபாட்டு முறைகளை அவனடியார்கள் மாற்றி கொள்ளவில்லை, முருகனும் யாரிடமும் வந்து மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லவுமில்லை என்பதே அதன் பொருள்.. மலக்குக்கு ஏற்றவாறு மறி அறுத்து மட்டன் பிரியாணி (ஊன்சோறு) சாப்பிட்டால்தான் முருகன் என்று அடம் பிடிக்காமல், பீட்சா படைத்து சாப்பிட்டாலும் முருகன் டயோனிசஸ் ஆகமாட்டான் என்பதை தென்றல் பெருமான் உணரவேண்டும்..
\\சூர் தடிந்த முருகன் என்பது பார்ப்பனிய சூழ்ச்சி என்று அவர் காட்டிய ஆதாரங்கள் எல்லாம் சங்க இலக்கிய ஆதாரங்களோடு எம்மால் மறுக்கப்பட்டிருப்பதை நீங்கள் கண்டுகொள்ளவில்லை..\\
கதைவிடுகிறார் அம்பி. நெருக்கடி வந்த பொழுது சூரனை முருகன் கொன்றாவிட்டான்? மயிலாக மாற்றி வைத்திருக்கிறான் என்று சொல்லித்தப்பித்தவர். இந்த வாதம் சூர் தடிந்த முருகன் என்று புறப்பாடல் சொல்கிற போர்க்கலாச்சாரத்திற்கும் பார்ப்பான் கொடுக்கிற கரிசனமான சாபவிமோசனத்திற்கும் முற்றிலும் மாறானது என்பது எளிதில் விளங்கும். சூரன் மயிலாக மாறிப்போனான் என்று சொல்கிற இதே அம்பி, முருகன் களிறு ஊர்தலுக்கும் எடுத்துக்காட்டுகள் தந்தவர். அதாவது முருகன் யானையிலும் வந்து சூரைத் தண்டிக்கிறான். இங்கு வந்த யானையை பிற்காலத்தில் பிள்ளையாராக மாற்றி, இரண்டாவது மனைவி தேவசேனாவை முதலாவதாக கல்யாணம் செய்யவும், நற்றிணையில் வருகிற முதல் மனைவி வள்ளியை பிள்ளையார் துணையுடன் இரண்டாவதாக கல்யாணம் செய்யவும் கதைகட்டியது பார்ப்பனியம். இவ்விதம் அம்பிக்கு தேவைப்படுகிற பொழுது சூரன் மயிலாவதும், பார்ப்பனர்களுக்கு யானை பிள்ளையாரவதும் வழமையான ஒன்று தான்.
சூரைத் தண்டிக்கிற நிகழ்வை அத்துணைக் கலாச்சாரங்களிலும் காணமுடியும். ஆனால் பார்ப்பானுக்கு மட்டும் தான் சூரன் அரக்கனாகப்போனான். இதற்கு பதில் சொல்ல முடியாதவர்கள் முடிந்த அளவு ஓடி ஒளிகிறார்கள்.
// கதைவிடுகிறார் அம்பி. நெருக்கடி வந்த பொழுது சூரனை முருகன் கொன்றாவிட்டான்? மயிலாக மாற்றி வைத்திருக்கிறான் என்று சொல்லித்தப்பித்தவர். இந்த வாதம் சூர் தடிந்த முருகன் என்று புறப்பாடல் சொல்கிற போர்க்கலாச்சாரத்திற்கும் பார்ப்பான் கொடுக்கிற கரிசனமான சாபவிமோசனத்திற்கும் முற்றிலும் மாறானது என்பது எளிதில் விளங்கும். //
முருகன் மறக்கருணையுடன் ஆட்கொள்ளுதல் பற்றி கூறும் போது சங்க இலக்கியங்கள் சூர் மா தடிந்து என்று பாடுவதைச் சுட்டினேன்.. தவறு செய்யும் குழந்தையை தாய் வந்து தண்டித்து, அரவணைக்கும் போது புறநானூற்று மரபையும், சாபவிமோசனத்தையும் கொண்டுவந்து ஒப்பிடுதல் பொருத்தமன்று..
// இங்கு வந்த யானையை பிற்காலத்தில் பிள்ளையாராக மாற்றி, இரண்டாவது மனைவி தேவசேனாவை முதலாவதாக கல்யாணம் செய்யவும், நற்றிணையில் வருகிற முதல் மனைவி வள்ளியை பிள்ளையார் துணையுடன் இரண்டாவதாக கல்யாணம் செய்யவும் கதைகட்டியது பார்ப்பனியம். //
மயில் வாகனத்துடன், பிணிமுகம் என்ற யானை வாகனமும் இன்றும் முருகனுக்கு இருக்கிறது, அது காணாமல் போய்விட்டதாக எந்த குறிப்பும் இல்லை.. அதன் மேல் முருகன் வலம் வரும் நிகழ்ச்சியும் கோவில்களில் நடைபெறுகிறது.. அந்த யானை வாகனம் கொழுக்கட்டை தின்பதில்லை.. பிள்ளையார் தனியாகவே அதைச் செய்து கொண்டிருக்கிறார்.. நற்றிணை, வள்ளியை முதல் மனைவி என்று கூறுவதாகத் தெரியவில்லை..
// சூரைத் தண்டிக்கிற நிகழ்வை அத்துணைக் கலாச்சாரங்களிலும் காணமுடியும். ஆனால் பார்ப்பானுக்கு மட்டும் தான் சூரன் அரக்கனாகப்போனான். இதற்கு பதில் சொல்ல முடியாதவர்கள் முடிந்த அளவு ஓடி ஒளிகிறார்கள்.//
சூரை மலக்கோ, டயோனிசசோ தண்டிப்பதாகத் தெரியவில்லையே..
அசுரர்-தேவர் தொடர்பாக
புராணங்கள் கதைகளே, கதைகளுக்கு எதற்கு மதிப்பு என்று பார்ப்பனியத்திற்கு எதிர்ப்பு வந்தபிறகு இராமன் ஒரு கருத்து வைக்கிறார்! அன்னாரது சப்போர்ட் காந்தமானியின் வடக்கு தெற்கைப்போன்றது! அங்கே ஆரியர்கள் நாட்காட்டியை கண்டுபிடிப்பார்கள். ஆனால் தமிழன் மொழிப்பெருமை பேசியே காலம் கழிப்பான்.
ரெபேக்கா மேரி, புராணங்களுக்கான தொன்மக்கதைகள் இங்கிருந்து தான் வந்திருக்க வேண்டும்; ஆடுமாடு மேய்த்த ஆரிய பார்ப்பனர்களுக்கு அத்தகைய அறிவு கிடையாது என்று ஒரு வாதம் வைக்கிறார்.
இதே பதிவில், இராம், தமிழனுக்கு தத்துவம் என்பது வெளியில் இருந்து வரவில்லை. இங்கிருந்தே வந்தது என்று சிவன் திரிபுரம் எரித்ததை திருமூலர் பாடலில் இருந்து காட்டி வாதம் ஒன்றைவத்தார். மற்றபடி அரக்கனை அழித்தது தமிழன் தொன்மம் என்றும் தேவசேனாவிற்கு பள்ளர்கள் மீது கைகாட்டி இருக்கிறார்.
இந்த மூன்று பார்வைகளையும் மறுக்கும் விதமாக, அசுரர்-தேவர் குறித்த காரணங்கள், சண்டைகள் பிரதிபுராணங்களிலும் எவ்வாறு இருந்தது என்பதையும் யார் யாரெல்லாம் அசுரர்களாக, எதற்காக அசுரர்களாக மாற்றப்பட்டனர் என்பதையும் பார்ப்ப்னிய இந்துமதம் எவ்விதம் தன்னை எதிர்த்தவர்களை அழித்தது என்பதையும் மயிலை சீனியின் தமிழும் சமணமும் என்ற நூலின் ஒரு பகுதியை அடுத்து பின்னூட்டத்தில் பதிவிடுகிறேன். படித்துப்பார்த்து பரிசீலித்து பதில் சொல்லவும்.
அசுரர்-தேவர் தொடர்பாக
நூல்-சமணமும் தமிழும், ஆசிரியர்-மயிலை சீனி, பகுதி-6, ஆருகத மதத்தை ‘இந்து’ மதத்தில் சேர்க்க முயன்றது (http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=19)
—————————————————————————————–
புத்தரைத் திருமாலின் அவதாரம் என்று கூறிப்பௌத்த மதத்தை ‘இந்து மதத்தில்’ சேர்த்துக்கொண்டு பின்னர், காலப்போக்கில் அந்த மதத்தை அழித்து விட்டதுபோல, சமண மதத்தையும் ‘இந்து’ மதத்தில் இணைத்துக்கொள்ள ‘இந்துக்கள்’ பண்டைக் காலத்தில் முயன்றனர். இதன்பொருட்டு, திருமால் சமண மதத்தைப் போதித்ததாகக் கதை கற்பித்துக்கொண்டனர். சமண மதத்தை ‘இந்து’ மதத்தின் கிளைமதமாக இணைத்துக் கொள்ள அவர்கள் செய்த முயற்சிகள் சில புராணங்களில் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வாம்.
விஷ்ணுபுராணத்தில் கீழ்கண்ட கதை கூறப்படுகிறது; அசுரர்க்கும் தேவர்க்கும் நடைபெற்ற போரில் அசுரர் தேவரை வென்றனர். தோற்று ஓடிய தேவர் பாற்கடலின் வடபுறஞ் சென்று ஆங்குத் திருமாலை வணங்கித் தமது தோல்வியைக் கூறி, அசுரரை வெற்றிகொள்ளத் தமக்கு உதவி செய்யுமாறு அவரை வேண்டிக்கொண்டனர். தேவரது வேண்டுகோளுக்கிணங்கிய திருமால் அவருக்கு உதவி செய்ய உடன்பட்டுத் தமது உடலினின்று மாயா மோகர் என்பவரை உண்டாக்கி, அசுரரை மயக்கி வரும்படி அனுப்பினார். அக்கட்டளைப்படியே சென்ற மாயாமோகர், தம் உடைகளைக் களைந்து தலையை மழித்துக் கையில் மயிற்பீலி பிடித்து அசுரர் வாழ்ந்திருந்த நருமதை246 ஆற்றங்கரைக்குச் சென்று அவ்வசுரருக்கு நக்ன (சமண) மதத்தைப் போதித்து அவரை ஆருகதர் ஆக்கினார். பின்னர், மாயாமோகர் செம்பட்டாடை (சீவரம்) அணிந்து எஞ்சி நின்ற அசுரர்க்கு அகிம்சையை (பௌத்த மதத்தை) ப் போதித்து அவரைப் பௌத்தராக்கினார். இவ்வாறு அசுரர் வேத மதத்தை (வைதீக மதத்தை)க் கைவிட்டுத் தமது ஆற்றல் குன்றினர். குன்றவே தேவர், அசுரரைப் பொருதுவென்றனர்.
இக்கதையில் அசுரர் என்பது சமண பௌத்த மதத்தினரை என்பதும், தேவர் என்பது வைதீகப் பிராமணரை என்பதும் விளங்குகின்றது. சமண பௌத்த மதங்களைத் திருமால் உண்டாக்கினார் என்று கதை கற்பித்து ‘இந்து’ மதத்துடன் இந்த மதங்களையும் இணைத்துக்கொள்ளச் செய்த சூழ்ச்சி இக்கதையில் காணப்படுகிறது.
மச்சபுராணம் இதே கதையைச் சிறிது மாற்றிக் கூறுக்கிறது: ரசி என்பவரின் மக்கள் கடுந்தவஞ் செய்து பேராற்றல் பெற்றனர். ஆற்றல்பெற்ற அம்மக்கள் இந்திரனோடு போர்செய்து வென்று அவனது தேவலோகத்தைக் கைப்பற்றியதோடு, அவன் யாகத்தில் பெறுகின்ற அவிப்பாகத்தைப் பெறாதபடியுந் தடுத்துவிட்டனர். தோல்வியடைந்து உரிமையிழந்த இந்திரன் பிரகஸ்பதியிடஞ் சென்று, தனது தோல்வியைக் கூறிப் பண்டைய உயர்நிலையை மீண்டும் பெறத் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவரை வணங்கி வேண்டினான். பிரகஸ்பதி அவனது வேண்டுகோளுக்கிணங்கி அவனுக்கு உதவி செய்ய உடன்பட்டார். அவர் ரசியின் மக்களிடஞ் சென்று அவர்களுக்கு அவைதிக (சமண பௌத்த) மதங்களைப் போதித்தார். அவரும் அதனைப் பெற்றுக்கொண்டு வைதீக மதத்தைக் கைவிட்டனர். இதன் காரணமாக அவர்கள் வலிமை குன்ற, இந்திரன் அவர்களைப் பொருது வென்றான்.
தேவீபாகவதம் என்னும் நூலிலும் இக்கதை கூறப்பட்டடுள்ளது; இதில் காணப்படும் சிறு மாறுதல்யாதெனின், அசுரரின் குருவாகிய சுக்கிராசாரியார் வெளியூருக்குச் சென்றிருந்தபோது, பிரகஸ்பதி சுக்கிராசாரியார் போன்று உருவம் எடுத்து அசுரரிடஞ் சென்று அவருக்குச் சமண மதத்தைப் போதித்தார் என்பதே.
விஷ்ணு புராணம், மச்ச புராணம், தேவி பாகவதம் இவற்றிற் கூறப்பட்ட இக்கதையைத் திரட்டிச் சேர்த்து, திருமாலின் கூறாகிய மாயாமோகர் சமண பௌத்த மதங்களைப் போதித்தார் என்று பதும புராணம் கூறுகின்றது.
அக்கினி புராணம் கூறுவதாவது: தைத்தியருக்கும் தேவருக்கும் நடைபெற்ற போரில் தைத்தியர் தேவரை வென்றனர். தோல்வியுற்ற தேவர் திருமாலிடஞ் சென்று அடைக்கலம் புகுந்து முறையிட்டுத் தமது குறையை நீக்குமாறு அவரை வேண்டினர். அதற்கிணங்கிய திருமால் சுத்தோதனருக்கு மாயாமோகர் என்னும் மகனாகப் பிறந்து தைத்தியரை மயக்கி அவரைப் பொத்தராக்கினார். எஞ்சி நின்ற தைத்தியருக்கு மாயையைப் போதித்து அவரை ஆருகதராக்கினார். இவ்வாறு சமண பௌத்த மதங்கள் உண்டாயின என்று இப்புராணம் கூறுகின்றது.
இராம் கூறுகிற திரிபுரம் எரித்தது, சமண, புத்தர்களின் மூன்று ஒழுக்கங்களையே என்பதையே மயிலை அம்பலப்படுத்துகிறார்.
——————————————————————-
“காஞ்சிமகாத்மியம் என்னும் நூலிலும் இது போன்ற கதை கூறப்பட்டுள்ளது. (19 ஆம் அத்தியாயம்.) தாரகன் மக்களான வித்துமாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்பவர் கடுந்தவஞ் செய்து, நினைக்கும் இடங்களிற் பறந்து செல்லும் ஆற்றல் வாய்ந்த பொன், வெள்ளி, இரும்பு என்னும் உலோகங்களினாலாய முப்புரங்களைப் பெற்று அதில் வாழ்ந்து வந்தனர். இவ்வசுரரின் ஆற்றலைக் கண்டு பொறாமையும் அச்சமுங்கொண்ட தேவர்கள் திருமாலிடஞ் சென்று அசுரரை அழிக்க வேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டனர். வழக்கம்போலவே திருமால் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி அவருடன் சேர்ந்து அபிசாரயாகஞ் செய்து கணக்கற்ற பூதங்களையுண்டாக்கி அவற்றை ஏவி முப்புரங்களை அழித்து வரும்படி கட்டளையிட்டார். சென்ற பூதங்கள் முப்புரங்களை அழிக்க முடியாமல் புறங்காட்டி ஓடின. பின்னர், திருமால் முப்புரதியரைச் சூழ்ச்சியினால் வெல்லக் கருதித் தமது உடம்பினின்றும் ஒருவரை உண்டாக்கி அவரைப் பார்த்து. ‘நீ புத்தனென்று அழைக்கப்படுவாய். நீ முப்புராதியரிடஞ் சென்று கணபங்கம் என்னும் நூலைப் போதித்து அவரைச் சிவ நெறியினின்றும் பிறழச் செய்வாய். உன்னுடன் நாரதரையும் அழைத்துச் செல்வாய் என்று கட்டளையிட்டார்.
அவரும் அக் கட்டளையை ஏற்று நாரதரையும் உடன் கூட்டிச் சென்று முப்புராதியாருக்குக் கணபங்கத்தைப் போதித்தார். (அவர்களைப் பௌத்த சமண மதங்களை மேற்கொள்ளச் செய்தார் என்பது பொருள்.) அவர்கள் இந்த மதத்தை ஏற்றுக் கொண்டனர். பின்னர், தேவர் சிவனிடஞ் சென்று திரிபுராதியார் சிவநெறியைக் கைவிட்டனர் என்று கூற அவர், திரிபுரத்தை எரித்து அழித்தார். பின்னர், புத்தரும் நாரதரும் திரிபுராதியரை வஞ்சித்த பாவத்தைப் போக்கிக் கொள்ளக் காஞ்சிபுரத்திற்குச் சென்றபோது, ‘இரும்பு மலையொத்த பெரிய பாவப் பரப்புப் பருத்திமலையைப் போல நொய்மையாயிற்று.’ இதனைக் கண்டு வியப்படைந்த புத்தரும் நாரதரும் அவ்விடத்திற்குத் ‘திருப்பருத்திக்குன்றம்’247 எனப் பெயரிட்டனர் என்று இந்த மகாத்மியங் கூறுகின்றது.
பாகவத புராணத்தில் திருமால், புத்தர் இருஷபர் என்னும் அவதாரங்களை எடுத்துப் பௌத்த சமண மதங்களைப் போதித்தார் என்று கூறப்பட்டுள்ளது. பாத்ம தந்திரம் என்னும் வைணவ ஆகம நூல், திருமால் பாஞ்சராத்திரம் (வைணவம்), யோகம், சாங்கியம், சூனிய வாதம் (பௌத்தம்), ஆர்கத சாத்திரம் (சமணம்) ஆகிய மதங்களை யுண்டாக்கினார் என்று கூறுகின்றது. மற்றொரு வைணவ ஆகமமாகிய அஹிர்புத்நிய சம்ஹிதை, பௌத்த மதமும் சமண மதமும் பிரம்ம ரிஷிகளாலும் தெய்வங்களாலும் மக்களை மயக்குவதற்காக உண்டாக்கப்பட்டன என்று கூறுகின்றது.
திருமால் பௌத்த சமண மதங்களைப் போதித்தார் என்பதை நம்மாழ்வாருங் கூறுகின்றார்:
‘‘கள்ளவேடத்தைக் கொண்டுபோய்ப் புரம்புக்க வாறும்
கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை
விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என்னுயிரை உருக்கி யுண்ணுமே.’’
இதற்குப் பன்னீராயிப்படி உரை வருமாறு:-
‘‘கள்ளவேடத்தை = வேதபாஹ்ய புத்தரூபமான க்ருத்திர வேஷத்தை, கொண்டு = கொண்டு, போய் = போய், புரம் = த்ரிபுரத்திலே, புக்க ஆறும் = புக்கபிரகாரமும், அசுரரை = அங்குத்தை யசுரரை, கலந்து = உட்புக்குச் செறிந்து, உள்ளம் பேதம் = சித்த பேதத்தை, செய்திட்டு = பண்ணி, உயிர் = அவர்கள் பிராணன்களை, உண்ட = அபகரித்த, உபாயங்களும் = விரகுகளும்.’’
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி, 5 ஆம்பத்து, 7 ஆம் திருமொழி, 5 ஆம் செய்யுளிலும் இச் செய்தி கூறப்படுகிறது:-
‘‘எய்தக் கூவுத லாவதே எனக்கு
எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கருமேனியம்மானே.’’
இதற்கு ஈடு 36 ஆயிரம்படி வியாக்யானம் வருமாறு:
“கைதவங்கள் செய்யும் = கிருத்திரிமங்களைச் செய்யும். அஃதாவது – புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்குநின்ற அவர்களுக்குண்டான வைதிக ஸ்ரத்தையைப் போக்கினபடி. வசனங்களாலும் யுக்திகளாலுங் கிருத்திரிமத்தைப் பண்ணி வைதிக ஸ்ரத்தையைப் போக்கி அவ்வளவினாலும் கேளாதார்க்கு வடிவைக் காட்டி வாள்மாளப் பண்ணினபடி (வாள்மாளப் பண்ணினபடி = சவப்பிராயராகப் பண்ணினபடி, அஃதாவது கொன்றபடி.) தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி ஒருவன் (சிவன்) அம்புக்கு இலக்கமாம்படி பண்ணிவைத்தான்.
சிவனும் திருமாலும் சேர்ந்து முப்புரத்தை (பௌத்த சமண மதத்தை) அழித்த செய்தியை வைணவ நூல்கள் கூறியதுபோலலே தேவாரம் முதலிய நூல்களும் கூறுகின்றன.
‘‘நேசன் நீலக் குடிஅர னேஎனா
நீச ராய், நெடு மால்செய்த மாயத்தால்
ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய்
நாச மானார் திரிபுர நாதரே.’’ (அப்பர் தேவாரம்)
கூர்ம்புராணம் திரிபுரதகனம் உரைத்த அத்தியாயத்தில், திருமால் புத்த முனிவராகவும் நாரதர் சமணமுனிவராகவும் உருவம் எடுத்துச் சென்று அசுரர் அவுணர் என்பவர்களை மயக்கும்பொருட்டுப் பௌத்த சமண மதங்ளைப் போதித்தார்கள் என்று கூறுகிறது:
‘‘சாக்கிய குருவின் மாயன் ஆங்கவர் புரத்தில் சார்ந்து,
கோக்களிற் றுரிவை போர்த்த கொன்றைவே
ணியன்மேல் அன்பு
நீக்கியவ் வசுரர் தம்மை நிகழ்த்துபுன் சமயந் தன்னில்
ஆக்கிநல் இலிங்க பூசை யறிவொடும் அகற்றி னானே.’’
‘‘ஆங்கண்மா ணாக்க ரோடு நாரத னணுகி யன்பிற்
கோங்குறழ் முலையாள் பங்கன் பூசனை குறித்தி டாமல்
தீங்கினைச் செய்யா நிற்கும் சமயத்தில் சென்று நாளும்
வாங்குவில் அவுணர் நெஞ்சம் மருண்டிட மாயை செய்தான்.’’
இதே கருத்தைத் திருக்கூவப்புராணம், (திரிபுர தகனப் படலம்) கூறுகிறது:
‘‘மறமொன்று கின்ற அரணங்கள் தம்மில்
வரும் அம்பு யக்கண் இறைவன்
திறமொன்று புத்த னருகன் றயங்கு
சினனென்ன வங்கண் அடையா
அறமென்று வஞ்ச மதிநூல் மருட்டி
யறைகின்ற காலை யவுணர்
நிறமொன்று பூதி மணியோ டிலிங்க
நிலைவிட்டு அகன்ற னரரோ.’’
இதில் திருமால், புத்தன் அருகன் சினன் என்னும் மூன்று உருவங்கொண்டு முப்புரத்திலிருந்த அவுணரிடம் சென்று பௌத்த சமண மதங்களை அவர்களுக்குப் போதித்தார் என்று கூறப்படுகிறது. அருகன் என்பதும் சினன் என்பதும் சமணத் தெய்வங்களாகும். இரண்டும் ஒன்றே.
இந்தக் கதைகளிலே, அவுணர் அல்லது அசுரர் என்பவர்களுடைய திரிபுரத்தைச் சிவபெருமான் அழித்தார் என்றும் அதனால் அவ்வவுணர் அழிந்தார் என்றும் கூறப்படுகின்றன. திரிபுரம் என்றால் என்ன? இரும்பு, செம்பு, பொன் என்னும் உலோகங்களால் அமைக்கப்பட்ட நகரங்கள் என்று புராணக் கதைகள் கூறும். திரிபுரம் என்பது அவையல்ல. சைவர்கள் கூறுகிற தத்துவார்த்தக் கருத்தாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் அல்ல.
‘‘அப்பணி செஞ்சடை யாதிபு ராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே.’’
என்பது திருமூலர் திருமந்திரம். இந்தக் கருத்து சைவ சித்தாந்த சாத்திரத்திற்குப் பொருந்தும். ஆனால், இந்தக் கதைக்குப் பொருந்தாது. என்னை? ‘‘முப்புரமாவது மும்மல காரியம்’’ என்று திருமூலரே, வேறு இடங்களில் இப்புராணக் கதையையும் கூறுகிறார்:
‘‘வானவர் தம்மைவலிசெய் திருக்கின்ற
தானவர் முப்புரம் செற்ற தலைவன்’’
என்றும் கூறுகிறார். ஆகவே, முப்புரம் எரித்த கதைக்கு, வேறு கருத்தும் உண்டு. அக் கருத்து யாது?
முப்புரம் என்று கூறுவது பௌத்தர்களின் புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணியையும், சமணரின் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மணித்திரயத்தையும் குறிக்கும். பௌத்தருக்கு மூன்று கோட்டைகள் போல் இருப்பது புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணி என்பது பௌத்த மதத்தைக் கற்றவர் நன்கறிவர். அவ்வாறே சமணருக்கு உறுதியான கோட்டை போன்றிருப்பவை நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மும்மணியாகும். இவற்றைத்தான் இக் கதைகளில் திரிபுரம் என்று கூறப்பட்டன என்று தோன்றுகிறது. இவை அழிந்தால் அந்தச் சமயங்களே அழிந்துவிடும். முப்புரம் எரித்த கதையில், சிவனும் விஷ்ணும் சேர்ந்து முப்புரங்களை அழித்ததாக (பௌத்த, சமண மும்மணிகளை அழித்ததாக) க் கூறப்படுவது உருவகமாகும். இக்கதைக்கு உட்பொருள் உண்டு. அஃதாவது, சமண பௌத்த சமயங்களுடன் சைவ வைணவ சமயங்கள் சமயப்போர் இட்ட காலத்தில், சைவ சமயமும் வைணவ சமயமும் சேர்ந்து சமண பௌத்த மதங்களை அழித்த செய்தியைத்தான் முப்புரமெரித்த கதை கூறுகிறது. இதற்கு உதாரணங் காட்டி விளங்குவோம்.
மதுரையை யடுத்த யானைமலையில் பண்டைக்காலத்தில் சமண முனிவர்கள் இருந்தார்கள். திருஞானசம்பந்தரும் ‘‘யானைமாமலை யாதியாய இடங்களில்’’ சமணர் இருந்தார்கள் என்று திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார். இந்த மலையின் உருவ அமைப்பு, பெரிய யானையொன்று கால்களை நீட்டிப் படுத்திருப்பதுபோன்று இருப்பதனால் யானைமலை என்று இதற்குப் பெயர் வந்தது. இந்த மலையில் சமண முனிவர்கள் இருந்தார்கள் என்பதற்குச் சான்றாக இங்குள்ள பாறையில் அஜ்ஜநந்தி என்னும் சமண முனிவரின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். ஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு இந்த மலையிலே வைணவர்கள் நரசிங்கமூர்த்தியை அமைத்தார்கள். கி.பி. 770 இல் மாரன்காரி என்னும் வைணவர் – இவர் பாண்டியனுடைய அமைச்சர் -, யானைமலைக் குகையிலே நரசிங்கப் பெருமாளை அமைத்தார் என்று இங்குள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது248. சமணக் கோயில் களையும் பௌத்தக் கோயில்களையும் வைணவர் கைப்பற்றும்போது முதலில் நரசிங்கமூர்த்தியை அமைப்பது வழக்கம். இந்த முறைப்படி சமணர் மலையாகிய யானைமலையைக் கைப்பற்றுவதற்கு வைணவர் நரசிங்கமூர்த்தியை அமைத்தார்கள். இதற்குச் சைவர்களும் உடன்பட்டிருந்ததோடு, ஒரு புராணக் கதையையும் கற்பித்துக் கொண்டார்கள். அஃது எந்தக் கதை என்றால், திருவிளையாடற் புராணத்தில் யானை எய்த படலம் என்னும் கதை. இந்தக் கதை, சமணருடைய யானையைச் சோமசுந்தரப் பெருமான் நாரசிங்க அம்பு எய்து கொன்றார் என்று உருவகப்படுத்திக் கூறுகிறது.
‘‘இங்கித நெடுங்கோ தண்டம்
இடங்கையில் எடுத்து நார
சிங்கவெங் கணைதொட் டாகந்
திருகமுன் னிடந்தாள் செல்ல
அங்குலி யிரண்டால் ஐயன்
செவியுற வலித்து விட்டான்
மங்குலின் முழங்கும் வேழ
மத்தகங் கிழிந்த தன்றே.’’
பிறகு, இந்த யானைமலையில் சிவன் எய்த நரசிங்க அம்பு நாரசிங்கமூர்த்தியாய் அமைந்தது என்று மேற்படி புராணம் கூறுகிறது:-
‘‘வம்புளாய் மலர்ந்த ஆரான்
வரவிடு மத்தக் குன்றில்
சிம்புளாய் வடிவங் கொண்ட
சேவகன் ஏவல் செய்த
அம்புளாய்த் தூணம் விள்ள
அன்றவ தரித்தவா போல்
செம்புளாய்க் கொடிய நார
சிங்கமாய் இருந்த தன்றே.’’
யானைமலையில் அஜ்ஜநந்தி முதலிய சமணர் இருந்ததையும், திருஞானசம்பந்தர் யானைமலையில் சமணர் இருந்தனர் என்று கூறியதையும், பின்னர் பாண்டியன் அமைச்சரான மாறன்காரி யானைமலைக் குகையில் நரசிங்கமூர்த்தியை அமைத்ததையும், சொக்கப்பெருமான் நரசிங்க அம்பு எய்து சமணருடைய யானையை (மலையை) அழித்தார் என்பதையும் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி ஆராய்ந்து பார்த்தால், சைவரும் வைணவரும் சேர்ந்து சமணருடைய யானைமலையைக் கைப்பற்றினர் என்னும் உண்மை புலனாகும். இதுபோன்று வேறு செய்திகளும் உள. விரிவஞ்சி நிறுத்துகிறோம்.
இதுதான் பார்ப்பனியத்தின் இயங்கியல். அங்கே சைவம் எல்லாம் பார்ப்பனியத்தைத்தான் கடைப்பிடிக்கிறது என்பதும் தெள்ளிதின் விளங்கும். புராணங்களுக்கு சொந்தம் கொண்டாட விரும்பும் வாசகர்கள் இதைப் படித்துவிட்டு கருத்து தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
அவுணர் மற்றும் அரக்கர் என்றால் யாரென்றும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
வல்லபை கணபதி:
சூரபத்மனை எதிர்த்து போரில் சுப்பிரமணியன் தோற்ற நிலையில், விநாயகன் களத்தில் குதித்தான். அசுரர்களை அழிக்க அழிக்க வீரர்கள் புற்றீசலாக வந்து கொண்டேயிருந்தனர்.
விநாயகனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘ஏன் இந்த அசுரர்களை அழிக்க அழிக்க உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறார்களே’ என்று ஞானக்கண்ணால் ஆராய்ச்சி செய்ய, வல்லபை என்ற பெண்ணின் குறியிலிருந்து அசுரர்கள் உற்பத்தியாவதை அறிந்து அந்த பெண்ணை பிடித்து தனது இடது தொடையில் உட்கார வைத்து தனது தும்பிக்கையால் பெண்குறியின் உள்ளே விட்டு அசுரர்களை உறிஞ்சு எடுத்துவிட்டார் என்பதால் ‘வல்லபை கணபதி’ என்று விநாயகருக்கு பேர் கிடைத்தது என்று கந்தபுராணம் கூறுகிறது.
இந்த சிலை சிதம்பரக் கோவிலில் உள்ளது. இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன் இந்தக் காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது. பல ஆண் – பெண் பக்தர்கள் அதைத் தரிசித்துக் கும்பிட்டும் வருகின்றார்கள்.
பார்ப்பனன் சொல்லும் ஆயிரம் ஆபாச கதைகளை புராணம் என்று இன்றும் ஏற்றுக் கொள்வது நமது பகுத்தறிவுக்கு ஏற்றதா என்பதை யோசித்துப் பாருங்கள்!
தமிழச்சி
அம்பிக்கு வல்லபை கணபதி கிளை கதை புராணமெல்லாம் ஆபாசமாக தெரியவில்லையா ?
முதலில் வியாசனின் மறுவருகையை வரவேற்கிறேன்.வியாசர் இல்லாமல் வினவின் விவாத களமே சூடாக இல்லை.தென்றல் மயிலையாரின் தமிழும் சமணமும் நூலில் இந்துமதத்தில் சமணக் கொள்கைகள் என்ற பகுதியை வாசித்து இருப்பார் என்று நம்புகிறேன்.இல்லை என்றால் வாசித்துவிடுங்கள் விவாதத்தை அங்கிருந்துதான் தொடங்க வேண்டும்.
மற்றவர்களும் வாசிக்கலாம் தென்றல் கொடுத்துள்ள சுட்டியில் பக்க எண் 11ல் உள்ளது.அதுகுறித்த எனது பின்னுட்டத்தை நாளை பதிவு செய்கிறேன்.
முருகன் மீதான ஆரிய திரிபுகள் :
பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள், ஸ்கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம். ஸ்கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும். இது நூறாயிரம் சுலோகங்களால் ஆனது. அது ஆறு சங்கிதைகளைக் கொண்டது. இதில் சங்கர சங்கிதையும் ஒன்றாகும். சங்கர சங்கிதையில் உள்ள பல கண்டங்களில் சிவரகசிய கண்டமும் ஒன்றாகும். இக்கண்டத்தில் ஏழு காண்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் உபதேச காண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களதும் தமிழ்த் தொகுப்பே கந்தபுராணமாகும். காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாசாரியார். அவருடைய குமாரர் தான் கச்சியப்ப சிவாசாரியார். குமரக் கோட்டத்து முருகக்கடவுளுக்கு நாள்தோறும் பூசனை செய்த மெய்யன்பில் வடமொழிப் புராணத்தின் சிறப்பினைத் தமிழ்கூறு நல்லுலகம் அறியும் வண்ணம் இந்தப் புராணத்தை இயற்றினார். அதன் பின் குமரக் கோட்டத்திலேயே அரசர், பிரபுக்கள், கல்வி கேள்விகளில் சிறந்த வல்லுநர்கள் முன்னிலையில் தினம் ஒரு பகுதியாகப் பாடிப் பொருள் கூறி விளக்கி ஓராண்டுக் காலமாகத் தன் நூலினை அரங்கேற்றினார்.அரங்கேற்றம் முற்றுப் பெற்ற நாளில் கச்சியப்ப சிவாசாரியாரைத் தங்கச் சிவிகையில் ஏற்றி தொண்டை மண்டலத்தின் இருபத்துநான்கு வேளாளர்களும் காஞ்சியின் மற்றையோரும் சிவிகை தாங்கியும் சாமரம் வீசியும் குடை கொடி முதலானவைகளை எடுத்துப் பிடித்தும் வீதிவலம் வந்து நூலையும் ஆசிரியரையும் சிறப்புச் செய்தனர் என்று படிக்காசுப் புலவரின் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.மாணிக்கவாசகர், கம்பர், முதலானவர்களோடு ஒப்பிட்டு கி. பி. 7 முதல் 17 வரை பல்வேறு காலங்களைக் கந்தபுராணத்துக்குச் சார்த்துகின்றனர். மு. அருணாசலம் 14ஆம் நூற்றாண்டு என்னும் முடிவுக்கு வருகிறார்.
@Rebecca Mary
You mean to say Aryans are foraging people? The fact is all humans were during ice age. Who settled first and developed ? Early settlements happened at the crescent modern day turkey/Syria..
Which one is old? Aryan literate /Dravidian ?
//இந்த இனங்களோடு ஒப்பிடும் பொழுது நாகரீக விழுமியங்கள் அனைத்திலும் மிக உச்சத்தில் இருந்தது தமிழ் இனமாகும்.//
காமெடி கீமெடி பண்ணலையே .
//இந்தியாவில் புழங்கும் புராணங்கள் அனைத்திற்கும் இங்கிருக்கும் பண்பட்ட இனமான தமிழ்(திராவிட) இனத்தினுடையதாகத் தான் இருக்கும், இருக்க வேண்டும்!!!!//
அது மொழி வெறியர்களின் உள்ள கிடக்கை . எல்லாம் சமஸ்கிருதம் எனபது போல , எல்லாம் தமிழ் …
//அல்லாமல் எங்கிருந்தோ ஆடு மேய்த்து கொண்டு இவ்விந்திய நாட்டின்கண் கைபர் கணவாய் வழியாக புகுந்த நாடோடி இனமான ஆரிய இனத்திற்கு சொந்தமானது இல்லை.//
திராவிட இனம் என்ன இந்தியாவிலே தோன்றியதா ? கடல் வழியாக வந்தான் என்றால் நாடோடி இல்லையா ?
//வேத பாடல்கள் மட்டும் தானேயன்றி வேறு எந்த அறிவுப்பூர்வமான இலக்கியங்களோ அல்லது தத்துவ தரிசனங்களோ, புராணத் தொன்மங்களோ அவர்களிடம் கிடையாது//
அதாவது இந்தியா வருவதற்கு முன்பு இல்லை என்கிறீர்களா ? அப்படி என்றால் திராவிடன் இந்தியா வருவதற்கு முன்பு என்ன தெரிந்து வைத்து இருந்தான் ?
//அவர்கள் இந்த நாட்டிற்க்கு வந்தப்பிறகு மொழித்தொடங்கி அனைத்து கலைகளும் இலக்கியங்களும் இங்கிருக்கும் தொல் குடிகளிடம் இருந்து களவாடி கொண்டவைகள் தான்//
பொருளை திருடலாம். அறிவை திருடிக்கொண்டு போய்விட்டார்கள் . இப்போது எங்களிடம் இல்லை என்று சொன்னால் …..
//ஆனால் அவை நாகரீக இனத்தாரின் இலக்கியங்களை தொடும் அளவிற்கு பண்பட்டதாக இருக்க வாய்ப்பில்லை. //
வாய்ப்பு இல்லை என்று கூறுவதன் மூலம் அது உங்கள் ஊகம் அல்லது ஆசை என்று கொள்கிறேன்
//எ.கா: ஆரியர்களின் வேத இலக்கியங்கள் மற்றும் இன்ன பிற.//
அந்த இல்லகியதிலே வட்டத்தின் பரபலவை அளவிடும் முறை இருக்கிறது . தமிழில் எதாவது இருக்கிறதா ?
\\அந்த இல்லகியதிலே வட்டத்தின் பரபலவை அளவிடும் முறை இருக்கிறது.\\
அக்கார அடிசலும் கீரை வடையும் செய்வதற்காகத்தான் வட்டத்தின் பரப்பளவா இராமன்?
அவர்கள் கடவுள் சிலை அமைக்கவும் , மேடை அமைக்கவும் பயன்படுத்தி உள்ளார்கள் . இது கிரேக்கத்தில் இருந்து எடுக்கப்படாத ஆரியர்களின் சுய அறிவு . பூசியம் கொண்ட தசம எண்கள் முறை அவனுடையது
அவனை திட்டரையே அவனுக்கு முன்னாடி பெரிய சமுதாயம் அப்படின்னு சொன்னா தமிழிலும் இது மாதிரி காமி
நாள் காட்டி இருந்தால் தான் ஆடி மாதம் வெள்ளம் வரும் என்று தெரியும். ஆரியன் மட்டம் என்று நிரூபி என்று நான் கேட்கவில்லை தமிழன் பெரியவன் என்று காண்பி
ஆக மொத்தம் எல்லோருக்கும் தமிழன் உயர்ந்த சமுதாயம் என்று திரும்ப திரும்ப கிளிப்பிள்ளை மாதிரி சொல்ல தெரியுது ஆனால் என்ன சாதனை என்று சொல்ல தெரியவில்லை ,ஆரியனை திட்ட தெரிந்து இருக்கிறது
To Raman
\\அவர்கள் கடவுள் சிலை அமைக்கவும் , மேடை அமைக்கவும் பயன்படுத்தி உள்ளார்கள் . இது கிரேக்கத்தில் இருந்து எடுக்கப்படாத ஆரியர்களின் சுய அறிவு . \\
வட்டத்தின் பரப்பளவின் முதன்மையான பயன்பாடு சக்கரம். இதைக்கண்டு பிடித்தவன் தொழிலாளி! சக்கரத்தை வைத்து பானை செய்து அடக்கம் செய்யவும் அரிசி பொங்கவும் பழகியவர்கள் திராவிடர்கள். பார்ப்பான் பிணத்தை வெட்டவெளியில் நாகரிகமின்றி எரிக்கிற பொழுது சடலத்தைத் தாழியில் புதைத்து நாகரிக வாழ்க்கையை நிருபித்துவர்கள் திராவிடர்கள்! நிலைமை இப்படியிருக்க Pir^2 வாய்பாடு தெரிந்த ஆரியன் மேடை அமைக்கிறான் கடவுள் சிலை செய்கிறான் என்று சொன்னால் அந்த வாய்பாட்டிற்கே ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இது கிரேக்கத்தில் இருந்து எடுக்கப்படாத சுய அறிவு என்பது கேலிக்கூத்தாக இல்லையா? ஆரிய கிறக்கத்தில் இருந்து முதலில் இறங்கி வரவும். பிறகு கிரேக்கம் பற்றி கதைக்கலாம்.
\\பூசியம் கொண்ட தசம எண்கள் முறை அவனுடையது\\
பார்ப்பான் படித்ததாக வரலாற்றில் யாதொரு இடமும் கிடையாது! கல்வியும் கண்டுபிடிப்பும் புத்த சமணர்களுடையது! உண்மையை உண்மையாகவும் உண்மையல்லாதவற்றை உண்மையல்லாதவையாகவும் புரிந்துகொள் என்று புத்தர் சொன்ன காலத்தில் கஞ்சா கசக்கி சோம பானம் தயாரித்த கூட்டத்திற்கு தசம எண்கள் சொந்தமானது என்று சொல்கிற உங்கள் ஆராதனையை என்னவென்று மெச்ச?
\\நாள் காட்டி இருந்தால் தான் ஆடி மாதம் வெள்ளம் வரும் என்று தெரியும். ஆரியன் மட்டம் என்று நிரூபி என்று நான் கேட்கவில்லை தமிழன் பெரியவன் என்று காண்பி. ஆக மொத்தம் எல்லோருக்கும் தமிழன் உயர்ந்த சமுதாயம் என்று திரும்ப திரும்ப கிளிப்பிள்ளை மாதிரி சொல்ல தெரியுது ஆனால் என்ன சாதனை என்று சொல்ல தெரியவில்லை ,ஆரியனை திட்ட தெரிந்து இருக்கிறது\\
அய்யா, கிராமத்திலே ஒரு சொலடை உண்டு, “பீக்குண்டியாய் இருப்பதற்கு வெறும் குண்டியாய் இருக்கலாம்” தமிழனுக்கு சாதனைகள் எல்லாம் இருந்தது என்று சொல்லி நிருபீக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நாங்கள் பெருமையைப் பற்றி பேசவில்லை. உரிமையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்!
தமிழன் பெருமை பேசுகிறான் என்று கன்னம் சிவக்கிறீர்களே! ஓடி ஒளியாமல் பதில் சொல்லுங்கள்’ நாங்கள் ஆரியவழித் தோன்றல்கள் என்று சொல்லி இராச இராசனுக்கு விழா எடுத்த ஆர் எஸ் எஸ் காலிகளின் மீது என்ன விமர்சனம் அய்யா வைத்தீர்கள்? உங்களுக்கு இருக்கிற தமிழ் மீதான மட்டமான பார்வைக்கு இது ஓர் சான்று.
ராமன்,
வட்டத்தின் பரப்பளவைத் கணக்கிடுவதால் பெரிதாக என்ன பயன்? குறிப்பாக பழங்கால மக்களுக்கு அது எந்த விதத்தில் உதவியாக இருந்திருக்கும்?
மேடையை பரப்பளவு தெரியாமலேயே அமைக்கமுடியாதா? அப்படி பரப்பளவு தெரிந்து அமைக்கும் மேடையினால் சிறப்புப்பலன் ஏதேனும் இருக்கிறதா?
வட்டவடிவில் மேசை போன்று ஏதேனும் செய்ய வேண்டும் என்றாலும் சதுர /செவ்வக வடிவ பரப்பளவில் தான் மரப்பலகை போன்ற பொருள்கள் வாங்கமுடியும் என்பது தெரியுமா?
வட்டத்தின் பரப்பளவைப் பற்றிக்கவலைப்படாமலேயே வட்டமான பொருள்கள் செய்யமுடியும் என்பதை அறிவீர்களா?
@Univerbuddy
It is not the usability of science to common man. It is a question of capability of a civilization.
And what such civilization produced.
I will explain the area problem using pizza.
Lets say your neighbor says 8 inch pizza ( 8 inch radius= 3.14*8*8= 200 sq inch) is enough for 2 people.
You want to order for a family of four, you need not order 16 inch pizza.
A 12 inch pizza( 3.14*12*12=452 sq inch) will be good enough.
Those Vedic calculations are made to appease different gods with ratio based requirement.
If you build a fire alter for Agni, Indira needs twice that size and Bramma may need 5 times of that size.
//அப்படி பரப்பளவு தெரிந்து அமைக்கும் மேடையினால் சிறப்புப்பலன் ஏதேனும் இருக்கிறதா?//
Otherwise Gods will get angry, you risk loosing heaven 🙂
How did it feed the poor people is not the question here. That is not the way of measuring science achievement.
Raman,
பழங்காலத் மக்களுக்கு வட்டத்தின் பரப்பளவு எப்படி உதவியிருக்கும் என்ற கேள்விக்கு பதில் சொல்லத்தெரியவில்லை. பிசா கணக்கையெல்லாம் capability of a civilization என்கிறீர்கள். (If 200 sq inch pizza is enough for 2 people, can’t we order of 2 it for 4 people, why should we buy 452 sq inch pizza wasting 52 sq inch?) இந்த எடுத்துக்காட்டை கொடுப்பதற்கு நீங்கள் வெட்கப்படவில்லை என்பதை நம்மிடையே நேர்ந்த அவலமாகத்தான் நான் பார்க்கிறேன்.
வெவ்வேறு விகிதத்தில் நெருப்பை ஏதிர்பார்க்கும் அந்த சனியன்களெல்லாம் தமிழர்களுக்கோ மற்றவர்களுக்கோ என்றுமே தேவையில்லை. ‘தற்குறிகளே’ வைத்துக் கொள்ளட்டும். சமத்துவத்தை வேண்டக்கூடியவைகளே எங்கள் தெய்வங்கள்.
Here in Vinavu, we measure achievement of science through how it can feed all the people. You keep your science at where it belongs.
உங்கள் அற்பத்தனமான வாதங்களை அம்பலப்படுத்த என் பங்கிற்கு இந்த பதிவில் இது போதும்.
சிந்தனை வறட்சி .
என்ன சொல்ல வருகிறார்கள் என்கின்ற புரிதல் இல்லாமை
வறட்டு பெருமை …
என்னுடைய பொன்னான நேரம் வீணாக போனது தான் மிச்சம்.
இதுவே உனிவர்பாட்டிக்கு எனது கடைசி பதிவு
Raman,
எனக்கு சிந்தனை வறட்சி இருக்கட்டும்.
உங்கள் சிந்தனை செழுமையை வைத்து ஒரு சரியான எடுத்துக்காட்டு கொடுத்திருக்கலாமே. வட்டத்தின் பரப்பளவின் பயனை விளக்கியிருக்கலாமே. 8 இஞ்ச் பிசாவா 12 இஞ்ச் பிசாவா என்ற எடுத்துக்காட்டில் உங்கள் சிந்தனை செழுமை பல்லிளிக்க அல்லவா செய்கிறது.
பார்ப்பனியத்தை கேள்விக்கேட்கும் எங்களிடம் வந்து அவன் வெவ்வேறு விகிதத்தில் மேடை போட்டான். நீ என்ன செய்தாய் என்றால் எங்களுக்கு எதற்கு மேடை என்றும் இந்த கேள்வி அற்பத்தனமாக இருக்கிறது என்றும் தான் சொல்கிறோம். இது வறட்டுப் பெருமையா.
//இவ்விரு சமயங்களும்[சைவம்,சமணம்] மிக நெருங்கிய தொடர்புடையவையாய் இருந்து பின்னர்க் காலம் செல்ல செல்ல வேறுபட்டு வெவ்வேறு தத்துவப் பொருள்களைக் கற்பித்துக் கொண்டதாக தோன்றுகின்றன//-மயிலை சீனி.வெங்கடசாமி.தமிழும் சமணமும்.அடைப்புகுறிக்குள் உள்ளது நான் எழுதியது விளக்கத்திற்காக.
சமணர்களின் முதல் தீர்த்தங்கரர் ஆகிய ஆதி தேவருக்கும் சிவனுக்கும் உள்ள அதிசய தக்க ஒற்றுமையை பட்டியலிட்ட பிறகு மயிலையார் இவ்விதம் கூறுகிறார்.இதில் விடுபட்ட இன்னொரு ஒற்றுமை ஆதிநாதரின் இரண்டு மகன்கள் மற்றும் அவர்களின் சண்டை.
இந்தியா முழுவதிலும் உள்ள மொத்த சமணதலங்களுக்கும் ஒரே மூச்சில் பயணம் செய்த எழுத்தாளர் ஜெயமோகன் தனது “அருகர்களின் பாதை” பயணக்கட்டுரையில் ஆதிநாதர் வழிபாடு தென்னாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டுமே பிரபலமாக உள்ளது என்பதை காரணம் காட்டி ஆதிநாதர் தமிழராக இருக்கலாம் என்ற தனது கருத்தை பதிவு செய்கிறார்.
ஆதிநாதர் முதலில் சடைமுடி உடையவராக சமணத்தில் இருந்து பிறகு தலை மழித்தவராக மாற்றி வணங்கப்பட்டார் என்று மயிலையாரின் ஆய்வு சொல்கிறது.
சிவன்தான் முதல் சித்தன் என்று தமிழ்சித்தர் மரபு சொல்கிறது.
இங்கு இன்னும் ஒரு தகவலும் உண்டு.புத்தரும்,மகாவீர்ரும் தங்கள் மதத்திங்களின் 24வது தீர்த்தங்கரர்களாக கருதப்படுகிறார்கள்.அவர்களுக்கு முந்தைய தீர்த்தங்கரர்கள் இருமதங்களுக்கும் ஒன்றேதான்.
மேலே உள்ள தகவல்களின்படி தமிழர்களின் ஆதி தரிசனமாகிய ஆசீவகசித்தர்தான் சிவனாக[ஆதிநாதர்] உள்ளார்.ஆசீவகம் தொடர்ச்சியான தத்துவ மாறுபாடு அடைந்து வடநாட்டுக்கு சென்று சமணமாக உருமாறி களப்பிரர்கள் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறது.ஆசீவகத்தின் ஒரு பிரிவு சிவனை முழுமுதல் தெய்வமாக ஏற்று சைவநெறியை உருவாக்குகிறது.சைவம் வைதீகநெறியுடன் உறவுகொண்டு இன்றைய சைவமாக காட்சிதருகிறது.
தமிழுக்கு தத்துவங்கள் வெளியில் இருந்து வரவில்லை என்பதை மகாவீரருக்கு முந்தைய தீர்த்தங்கரர்களில் பலர் தென்னாட்டை தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் என்பதன் மூலம் அறியலாம்.
தொடரும்..
சகோ ராம்,வியாசன் மற்றும் ஆர்வமுள்ள நண்பர்கள் கீழ்க்கண்ட தளத்தைப் பார்வையிடவேண்டுகிறேன்!
2004 ஆழிப்பேரலையில்(சுனாமி) மீண்டெழுந்த சங்ககால முருகன் கோயில் அடித்தளம் ,கல்லால் ஆன வேல் (தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே இதுதான் மிகப்பழமையானதென கூறப்படுகிறது ) பற்றிய செய்திகளும் ,தமிழ் நாட்டின் அறிய தொல்லியல் தகவல்கள் மற்றும் ஆசீவகம் குறித்தும் இருக்கிறது.
https://www.facebook.com/thinaiyagam
திப்பு சுல்தானுக்கு மானம் மரியாதை இருந்தால் எனது சவாலையேற்று அவர் கூறியதை நிரூபிக்கட்டும் பார்ப்போம்!
//பணியாளர் அது தான் வழக்கம் என்று விளக்கம் அளித்த பின்னர்தான் அதை ஏற்காமல் கடைக்காரரிடம் புகார் சொல்லியிருக்கார்.///
இது திப்பு சுல்தானின் அப்பட்டமான பொய். என் மீதுள்ள காழ்ப்புணர்வால் இவ்வாறு பச்சைப் பொய்யைச் சொல்கிறார். உண்மையில் நடந்தது என்னவென்றால், அந்த வெயிட்டர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை, அவர் பாட்டுக்கு அவசர அவசரமாகப் பரோட்டாவைப் பிய்த்துப் போட்டு விட்டு மேசையை விட்டு அகன்று விட்டார். எனக்கு வந்த சிரிப்பையும், அதிர்ச்சியையும் சுதாரித்துக் கொள்ளவே சில வினாடிகள் எடுத்தன. நான் உணவகத்தை விட்டு வெளியேறும்போது தான், அந்த உரிமையாளரிடம் அதைப் பற்றிக் கேட்டேன், அது தான் அங்கு வழக்கம், அப்படிச் செய்யாது விட்டால் தான் வாடிக்கையாளர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்றார் அந்த உரிமையாளர். உண்மையில் அந்தப் பணியாளர் எனக்கு விளக்கம் அழைத்திருந்தால், அதை நான் அப்படியே விட்டிருப்பேன். இது தான் நடந்தது. நிச்சயமாக இதைத் தான் நான் கூறியிருப்பேன். எனக்கு பொய் சொல்லிப் பழக்கமில்லை.
ஆகவே “பணியாளர் அது தான் வழக்கம் என்று விளக்கம் அளித்த பின்னர்தான் அதை ஏற்காமல் கடைக்காரரிடம் புகார் சொல்லியிருக்கார்” என்று நான் கூரியதாக, திப்பு சுல்தான் கூறுவதை அவர் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.
அவர் அப்படி நிரூபித்தால், நான் அப்படிச் செய்தது ஒரு மனிதநேயமற்ற செயல் என்பதை ஒப்புக்கொண்டு திப்பு சுல்தானிடமும், இந்த தளத்தின் வாசகர்கள் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்புக் கேட்பேன். அவர் அதை ஆதாரத்துடன் நிரூபிக்காது விட்டால் என்மீதுள்ள காழ்ப்புணர்வினால் அவர் அப்படித் திரித்தார் என்பதை ஒப்புக் கொண்டு என்னிடம் திப்பு சுல்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது அவருக்கும் அறளை பெயர்ந்து விட்டது, அதனால் இன்றைக்குப் பேசுவதே நாளைக்கு நினைவில் நிற்பதில்லை, அப்படியிருக்க எப்படி பல மாதங்களுக்கு முன்பு பேசியது நினைவிலிருக்கும் என்ற உண்மையை ஒப்புக் கொண்டு இனிமேல் யார் மீதும் இப்படி பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூற மாட்டேன் என்று உறுதி மொழி அளிக்க வேண்டும்.
சுகாதாரமான உணவை விலைக்கு வாங்கி உண்ணும் உரிமை நமக்கு இருப்பதை திரு திப்பு அவர்கள் உணரவேண்டும். உணவு விடுதிகளில் , இனிப்பு ,கார கடைகளில் நடக்கும் சுகாதார சீர்குலைவுகள் பற்றி தனி கட்டுரையே எழுதலாம்.திரு வியாசனின் இன்றைய நிலையை,விளக்கத்தை நான் ஏற்கின்றேன்.
வியாசன் முன்வைப்பதில் சுகாதாரப் பார்வையெல்லாம் கிடையாது. தன் வாதத்திலே உறவினர்கள் மற்றும் சொந்தங்களைத் தவிர தன் தட்டில் யாரையும் கைவைக்க அனுமதிப்பதில்லை என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். கிருமிகள் உறவினர்கள் மற்றும் சொந்தங்களின் கைகளில் எல்லாம் வாழாதா? தொழிலாளியின் கைகளில் மட்டும் தான் இருக்குமா? இதெல்லாம் வெறும் மேட்டிமைத்தனம் அன்றி வேறல்ல. பாட்டில் தண்ணீருக்கு நான் டயானவுடன் யாரை வைத்து சண்டை போட்டேன். ஞாபகம் இருக்கிறதா? அங்கும் இவர் தன் பெருந்தன்மையை அப்படித்தான் நிரூபித்தார். சரி இதை விடுங்கள். ரெபேக்கா மேரி அன்னியச்செலவாணி தமிழனுக்கு கிடைப்பது இழிவோ பிச்சையோ இல்லை என்று கருதுகிறார். வியாசனோ நகை, பட்டுப்புடவை, ஸ்டார் ஓட்டல் விடுதிகளில் தங்குவதன் மூலமாக தமிழர்களுக்கு பொருளாதாரம் பெருகுவதாக சொன்னார். இயற்கை வளங்களை காவு கொடுத்துவிட்டு நிற்கும் தமிழர்களுக்கு இது ஏற்புடையதா? விவாதத்திற்கு பொருந்தாது ஒன்று என்று கருதாதீர்கள். ஏனெனில் வியாசன் தமிழ் கலாச்சாரம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். தமிழ் நாட்டை வெயிலும் புழுதியும் என்று யாரும் சொன்னதில்லை. பிடிமண் எடுத்து வணங்குகிற மக்கள் தமிழர்கள். இதற்கு என்ன பதில்? தமிழ்நாட்டான்களின் நாயும் சீண்டாத புளிச்ச மாவு என்று சொன்ன வியாசன் தான் இங்கே தமிழ்கலாச்சாரம் என்று பேசிக்கொண்டிருக்கிறார். தமிழ் தமிழ் என்று கூவுகிற இராம் இதைப் பற்றி வாய்திறக்கவில்லை. தங்களது பார்வை என்ன?
நண்பரே
உணவகங்களில் தூய்மை குறைவு பற்றிய ஒரு வேடிக்கையான அனுபவம்.விடுமுறை நாட்களில் நண்பர் ஒருவரை சந்திக்க அவரது கடைக்கு செல்வது வழக்கம்.பக்கத்து கடை ஒரு இனிப்பு காரம் விற்கும் கடை. அந்த கடை முன்னால்தான் இரு சக்கர வாகனத்தை நிறுத்த வேண்டும்.நல்ல மனிதர்.முகம் சுளிக்காமல் அனுமதிப்பார்.அதற்கு கைமாறாக அவரிடம் ஏதாவது வாங்கி ஒரு வியாபாரம் செய்யலாம் என நண்பனிடம் சொன்ன போது தடுத்து விட்டான்.பக்கத்து கடைகாரரிடம் குரோதம் பாராட்டுகிறானோ என வருத்தமாகி விட்டது.பின்னர் ஒரு நாள் பக்கத்து கடைகாரர் இல்லாத சமயம் அவனே விளக்கம் சொன்னான்.
”எங்க பில்டிங்கல பாத்ரூம் வசதி கிடையாது.பக்கத்து கடைக்காரர் தனியாளாக கடை நடத்துறாரு.அதுனால தூரமா போய் யூரின் போகணுமேன்னு பிளாஸ்டிக் பையில யூரின் போய் கட்டி வச்சிருவாரு.தெருவில் ஆள் போகாத நேரம் பாத்து வெளில வீசிருவாறு.நீ ஸ்வீட் வாங்கனும்னு சொன்ன அன்னிக்கு மதியம் அப்புடி ஒரு பையை வீசுனப்போ ஒரு மிக்சர் பாட்டிலில் பட்டு பை தெறித்து கடையின் உள்ளும் புறமுமாக ஒரே மூத்திர காடு.அவர் மூத்திரத்த நீ திங்க வேணாமேன்னு தான் தடுத்து விட்டேன்”
குழந்தையின் மிச்ச உணவை உண்ணும் என் மனைவி அதே சமயம் இனிப்பு காரம் விற்கும் கடையில் சுகாதாரதுக்காக போடும் சண்டையை பார்த்து ரசித்து இருக்கின்றேன். கை உரை இல்லாமலும் , அல்லது கரண்டி இல்லாமலும் காரவகைகளை எடுத்து எடை போடும் போது ஹெல்த் இன்ஸ்பெக்டர் கேட்கும் அத்துனை கேள்விகளையும் கேட்பார். கடைகாரர் என்னை பார்க்க ,நான் அவரை பார்த்து சிரிக்க …., இப்படி போன கதை இப்போது எல்லாம் கையுறை ,கரண்டி ,கரண்டிக்கும் உறை என்று மாறிய உடன் சுமுகமாக செல்கின்றது.[வாங்குவது 100gm காராசேவு இதுக்கு இத்துனை கேள்வியா என்று கடைகார பையன் கேட்பது கேட்டகாமல் இல்லை ]
நண்பரே,
தூய்மையான உணவு என்பது இங்கு பிரச்னை இல்லை.பசுவின் புனிதம் பதிவில் வியாசன் சொன்னது.
\\தமிழ்நாட்டில் சில உணவகங்களைப் பார்த்தால் கூடத் தான் எனக்குச் சாப்பிட மனம் வருவதில்லை. இராமநாதபுரத்தில் ஒரு உணவகத்தில் பரோட்டா சாப்பிட இருந்தவுடன், பரோட்டாவை தட்டில் வைத்த, வெயிட்டர், தனது இரண்டு கைகளாலும் என்னைக் கேட்காமலே பிய்த்துப் போடத் தொடங்கி விட்டார். அவர் தொட்ட பரோட்டாவை எனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை, நான் மறுத்து விட்டது மட்டுமன்றி, அந்த உணவகத்தின் உரிமையாளரிடம் போய் முறைப்பாடும் செய்தேன். அவர் என்னடாவென்றால், அப்படிப் பிய்த்துப் போடாது விட்டால் தான் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்று ஒரு போடு போட்டார்.//
பணியாளர் இரண்டு கைகளால தொட்டதுதான் அவருக்கு பிடிக்கவில்லையாம்.எப்படியும் ஒரு கையாலாவது தொடாமல் பரோட்டாவை தட்டில் வைக்க முடியாது.இன்னொரு கையாலும் தொட்டு விட்டால் அந்த பரோட்டா நஞ்சாகி விடுமா என்பதுதான் கேள்வி.இந்த நிகழ்வில் வெளிப்படும் அவரது மேட்டிமை திமிர் உங்களுக்கு புலப்படவில்லையா.
//எப்படியும் ஒரு கையாலாவது தொடாமல் பரோட்டாவை தட்டில் வைக்க முடியாது.///
கைகளால் தொடாமல் பரோட்டா, தோசை மற்றும் எதையும் தட்டில் வைக்கலாம். கரண்டியைப் பாவிப்பது போலவே கைக்குப் பதிலாக Tong ஐப் பாவிக்கலாம். அது ஒன்றும் விலை அதிகமான பொருள் அல்ல, அதை வாங்க முடியாதளவுக்கு தமிழ்நாட்டு உணவகங்கள் வறுமையானவையுமல்ல. சாதாரண கரண்டியை விட விலை குறைவானது தான் அது. சுகாதாரப் பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டில் பல உணவகங்கள் அக்கறை காட்டுவதில்லை. அது தான் அங்குள்ள பிரச்சனை.
http://www.mdfyw.com/tag/kitchen-tongs/
//பசுவின் புனிதம் பதிவில் வியாசன் சொன்னது.///
நன்றி, எங்கு இந்த விடயம் பேசப்பட்டது என்பதை நான் மறந்து விட்டேன். என்ன சந்தர்ப்பத்தில் நான் அந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டேன் என்பதை திப்பு சுல்தான் இன்னும் கூறவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களை இழிவு படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் நான் அதை குறிப்பிடவில்லை. இது தான் நான் திப்பு சுல்தானுக்கு அளித்த முழுப்பதில்.
///உண்மையை சொன்னால் உயிர்கள் மீது கருணையால் அசைவம் உண்பதில்லை என்பதே கேலிக்கூத்தானது. ///
திரு.திப்பு,
நான் ஏன் இறைச்சி சாப்பிடுவதில்லை என்று கூறிய காரணத்துக்கு கருணை, பொருணை என்று உங்கள் பாட்டுக்கு நீங்கள் விளக்கம் கற்பித்துக் கொள்வதைப் பார்க்க எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. உயிர்கள் மீது கருணை என்றால் நான் எல்லா உயிர்களிலும் அதாவது பாம்பு, பல்லி, பூச்சி எல்லாவற்றிலும் கருணை காட்ட வேண்டும். எனக்கு அப்படி கருணை எல்லாம் கிடையாது, அதனால் தான், மத அடிப்படை இல்லாமல் கூட சிலர் இறைச்சி உண்பதைத் தவிர்க்கலாம் என்பதற்கு, நான் இறைச்சி சாப்பிடாததைக் குறிப்பிட்ட போது, ‘உயிர்களின் மீது கருணை’ என்ற சொற்களைப் பாவிக்கவில்லை. கருணையோ அல்லது என்ன மண்ணோ, விலங்குகள் வெட்டப்படுக் கிடந்த கோலம் எனக்கு அருவருப்பைத் தந்தது, பாவமாக இருந்தது, அன்றிலிருந்து எனக்கு இறைச்சி சாப்பிட விருப்பமில்லை. அவ்வளவு தான்.
தமிழ்நாட்டில் சில உணவகங்களைப் பார்த்தால் கூடத் தான் எனக்குச் சாப்பிட மனம் வருவதில்லை. இராமநாதபுரத்தில் ஒரு உணவகத்தில் பரோட்டா சாப்பிட இருந்தவுடன், பரோட்டாவை தட்டில் வைத்த, வெயிட்டர், தனது இரண்டு கைகளாலும் என்னைக் கேட்காமலே பிய்த்துப் போடத் தொடங்கி விட்டார். அவர் தொட்ட பரோட்டாவை எனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை, நான் மறுத்து விட்டது மட்டுமன்றி, அந்த உணவகத்தின் உரிமையாளரிடம் போய் முறைப்பாடும் செய்தேன். அவர் என்னடாவென்றால், அப்படிப் பிய்த்துப் போடாது விட்டால் தான் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்று ஒரு போடு போட்டார். அப்படி அங்கு நான் பரோட்டாவை உண்ண மறுத்ததும், அவர் தனது கையை எனது உணவில் வைத்தது அருவருப்பாக இருந்ததால் தான், அதனால், மிருகங்களை வெட்டும் முறை அசிங்கமாக, அருவருப்பாக இருந்ததால் தான் நான் இறைச்சி உண்பதில்லை என்று கூட நீங்கள் வைத்துக் கொள்ளலாம். உயிர்களின் மீதுள்ள, கருணையாலா, அல்லது குற்றவுணர்வினாலா அல்லது அவருவருப்பினாலா நான் இறைச்சி சாப்பிடுவதில்லை என்பது எனக்கே தெரியாது. அதற்கு நீங்கள் ஏன் உங்களின் தலையைப் பிய்த்துக் கொள்கிறீர்கள் என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
https://www.vinavu.com/2014/01/21/pasuvin-punidham-book-review/
Dear Vinavu readers,
//கைக்குப் பதிலாக Tong ஐப் பாவிக்கலாம்.//
//இப்போது எல்லாமே கையுறை ,கரண்டி ,கரண்டிக்கும் உறை//
Enough is enough.
Use of hands is sustainable. All other ways are not. More utensils and plastic means more mining, pumping, refining, production, water, soap, washing, pollution of air and water.
Won’t tongs get contaminated? If tongs need to be sterile all the time, they need to be dipped in hot water (or UV ray lamps?), which in turn need more electricity, coal/gas leading to air and water pollution. Won’t use & throw gloves get contaminated? Can they be kept sterile all the time?
We need to draw a line. We need to return to nature. Sooner or later we have to come back to appreciate the touch of hands of fellow beings or multiply the sickness of cleanness and let our environment turn filthy and unlivable. I am for a minimum cleanliness by washing with water and if necessary, only if necessary, a bit of soaping agent.
எது அருவருப்பு?
சகமனிதனின் கை அருவருப்பு என்பது தான் உன்மையான அருவருப்பு.
திப்பு ,தென்றல்
சுகாதாரம் சார்ந்து பிய்த்த பரோட்டாவை வியாசன் மறுகின்றாரா அல்லது வேறு எதேனும் விளக்கம் கொடுகின்றாரா என்று பார்ப்போமே ? சிறு உணவகங்களில் உணவு பரிமாறுபவரும் table clean செய்பவரும் ஒருவராகவே இருப்பதும் ,அவர் table clean செய்து விட்டு கையை கழுவ மறப்பதையும் நாம் பார்த்தது இல்லையா ? //பணியாளர் இரண்டு கைகளால தொட்டதுதான் அவருக்கு பிடிக்கவில்லையாம்.எப்படியும் ஒரு கையாலாவது தொடாமல் பரோட்டாவை தட்டில் வைக்க முடியாது.இன்னொரு கையாலும் தொட்டு விட்டால் அந்த பரோட்டா நஞ்சாகி விடுமா என்பதுதான் கேள்வி.இந்த நிகழ்வில் வெளிப்படும் அவரது மேட்டிமை திமிர் உங்களுக்கு புலப்படவில்லையா.//
நான் ஊட்டும் போது என் குழந்தை வைக்கும் மிச்ச சோற்றை நான் dust bin ல் கொட்டி விடுவேன். ஆனால் என் மனைவி சாப்பிடுவார்.இது எதை பொருத்தது ? // கிருமிகள் உறவினர்கள் மற்றும் சொந்தங்களின் கைகளில் எல்லாம் வாழாதா? //
எதுவும் விளங்கவில்லை. தெடர்பை கொடுங்கள் படித்து பதில் கூறுகின்றேன். //பாட்டில் தண்ணீருக்கு நான் டயானவுடன் யாரை வைத்து சண்டை போட்டேன். ஞாபகம் இருக்கிறதா? அங்கும் இவர் தன் பெருந்தன்மையை அப்படித்தான் நிரூபித்தார். சரி இதை விடுங்கள். //
தமிழர் மட்டும் அல்ல ; எவர் வேண்டுமானாலும் உலகின் எப்பகுதியில் இருந்து வரலாம் தழகத்துக்கு! அதில் எமக்கு ஒன்றும் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதனை அவர் தம் சொந்த தேவைக்காக தான் செய்கின்றாரே தவிர தமிழக்கம் பொருள்ளதாரத்தில் சிறப்படைய வேண்டும் என்பதற்க்காக அல்ல ! இக்கருத்து வியாசனுக்கு மட்டும் அல்ல hendry ford க்கும் பொருந்தும். //ரெபேக்கா மேரி அன்னியச்செலவாணி தமிழனுக்கு கிடைப்பது இழிவோ பிச்சையோ இல்லை என்று கருதுகிறார். வியாசனோ நகை, பட்டுப்புடவை, ஸ்டார் ஓட்டல் விடுதிகளில் தங்குவதன் மூலமாக தமிழர்களுக்கு பொருளாதாரம் பெருகுவதாக சொன்னார். இயற்கை வளங்களை காவு கொடுத்துவிட்டு நிற்கும் தமிழர்களுக்கு இது ஏற்புடையதா? விவாதத்திற்கு பொருந்தாது ஒன்று என்று கருதாதீர்கள். //
வியாசன் இப்படி கூறி இருக்கும் web link கொடுங்கள். படித்து விட்டு விமர்சிக்கின்றேன். //ஏனெனில் வியாசன் தமிழ் கலாச்சாரம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். தமிழ் நாட்டை வெயிலும் புழுதியும் என்று யாரும் சொன்னதில்லை. பிடிமண் எடுத்து வணங்குகிற மக்கள் தமிழர்கள். இதற்கு என்ன பதில்? தமிழ்நாட்டான்களின் நாயும் சீண்டாத புளிச்ச மாவு என்று சொன்ன வியாசன் தான் இங்கே தமிழ்கலாச்சாரம் என்று பேசிக்கொண்டிருக்கிறார். தமிழ் தமிழ் என்று கூவுகிற இராம் இதைப் பற்றி வாய்திறக்கவில்லை. தங்களது பார்வை என்ன?//
கவனக்குறைவுதான்,வருந்துகிறேன்.கடைக்காரர்தான் விளக்கம் தந்ததாக உள்ளது.
இது விவரப்பிழைதானே அன்றி கருத்தில் மாற்றமில்லை.
நான் ஒரு தமிழன் என்ற எனது அடையாளத்தைப் பெருமையாக நினைக்கும் நானே “திமிரைக் காட்டி தமிழர்களை இழிவு படுத்துகிறேன் என்று அப்பட்டமான பொய்களைக் கூறியது மட்டுமன்றி இல்லாத பொல்லாததை எல்லாம் இட்டுக்கட்டி, இப்படி ஒரு சீனையும் போட்டு விட்டு:
“இவுரு ஒரு முறை இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு உணவு விடுதியில் சாப்பிட போனாராம்.கடை பணியாளர் இவரது இலையில் இவர் கேக்காமலேயே பரோட்டாவை இரு கையால் பிய்த்து போட்டாராம்.அது இந்த கோமானுக்கு அருவருப்பாக இருந்துச்சாம்.என்னைய கேக்காம எப்படி பிய்த்து போடலாம் என பணியாளரை கண்டித்து விட்டு சாப்புடாம அப்புடியே எந்திரிச்சிட்டாராம்.பணியாளர் இங்க சாப்புட வர்றவுங்க பிய்ச்சு போடணும்னு சொல்றாங்க.செய்யலன்னா கோவப்படுறாங்க என்று விளக்கம் சொல்லியும் இவர் ஏத்துக்கலயாம்.இதை கடை உரிமையாளரிடமும் சொல்லிவிட்டு வெளியேறி விட்டாராம்.அப்புறம் அந்த முதலாளி பணியாளரை என்ன படுத்தினார் என்று தகவல் இல்லை.நிற்க.”
எந்த ஆதாரமுமில்லாமல், திப்புவுக்கு என்மேலுள்ள காழ்ப்புணர்வினால் அவரது கற்பனை எப்படிக் கரை புரண்டோடியிருக்கிறது என்பதை மேலே பாருங்கள்.
உண்மையில் இந்த முறை நான் ஆதாரம் கேட்காது விட்டால் இவரும், இவரது சகபாடி இவரை வென்ற யோக்கியசிகாமணி தென்றலும் சேர்ந்து என்னை இங்கே வசைபாட இதைவைத்தே கொஞ்ச காலத்தைக் கழித்திருப்பார்கள். தென்றல் என்றவர் உளறியது போல் நான் “தமிழ்நாட்டிற்கு வருவதால் தமிழர்களுக்கு பொருளாதார நலன்கள் கிடைப்பதாக” நான் ஒருபோதும் கூறவில்லை. அதுவும் பச்சைப் பொய் தான் .என்னுடைய விடயத்தில் இருவருக்கும் என்மீது காழ்ப்புணர்விருப்பதால் பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள்.
//கவனக்குறைவுதான்,வருந்துகிறேன்///
தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் பெருந்தன்மையை எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாது. அந்த இயல்பு கூடக் கடவுளின் உயரிய கொடை தான், அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
வியாசன் அவர்களே,
நலம் தானா, 🙂
நீண்ட நாள் தங்களை விவாதங்களில் காண முடியவில்லை.
வேலை நிமித்தம் நானும் சில காலம் விவாதங்களில் கலந்து கொள்ளவில்லை.
இருந்தாலும் முடிந்தவரை விவாதங்களை கவனித்து வருகிறேன்.
என்னுடைய கருத்து இதுதான்:
கடவுளை எப்படி வேண்டுமானாலும் நாம் உருவகப்படுத்தி வணங்கலாம், உருவம் இல்லாமலும் வணங்கலாம். அவரவருக்கு பிடித்த வகையில் உணவுகளை படைத்து உண்ணலாம். கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றாமல், மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தாமல் அவரவர் கடவுள்களை வணங்கிக்கொள்ளுங்கள். பிரச்சினை இல்லை.
அடுத்தவருக்கு தொல்லை கொடுக்காமல் கடவுளை வணங்கிக்கொள்ளுங்கள். அது போதும்.
மன்னிப்பு கேட்பதற்கு நான் ஒன்றும் பொய்யான குற்றச்சாட்டை சொல்லி விடவில்லை.ஒரு விவரப்பிழை நேர்ந்து விட்டது.அவ்வளவுதான்.அது குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை எந்த வகையிலும் குறைத்து விடவில்லை.
சக மனிதன் ஒருவன் இரண்டு கையால் தொட்ட உணவை உண்ண மாட்டேன் என அழிச்சாட்டியம் செய்வதும் [பத்து நொடிகளுக்கு முன்னால் அதே மனிதன் இரண்டு கையால் தொட்டிருப்பது பிரச்னை இல்லையாம்.இவுரு தட்டுல உழுந்த பொறவு தொடப்படாதாம்.என்ன ஒரு புத்திசாலித்தனம்] அவ்வாறு பரிமாறப்பட்ட உணவை பக்கத்து இருக்கைகளில் மற்ற மனிதர்கள் சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது அது உண்ணத்தக்க உணவு அல்ல என புறக்கணித்து வெளியேறுவதும்,அந்த பொது இடத்தில் இது குறித்து விளக்கம் கேட்டு தான் மேலோன் என காட்டிக்கொள்ள முனைந்ததும் அங்கிருந்த அனைவரையும் அவமதிக்கும் செயல்தான்.இது நடந்த நிகழ்வுதானே.இதில் ஏதாவது பொய்யிருந்தால் மன்னிப்பு கேட்க சொல்லலாம்.உண்மையைத்தான் சொல்லி இருக்கிறேன்.அப்புறம் இவருக்கு என்ன மன்னிப்பு வேண்டிக்கிடக்காம்.
இதுவும் ஒரு வகை தீண்டாமைதான்.பள்ளு,பறை தொட்டால் தீட்டு என்கிறான் சாதி வெறியன்.அதே தலித் மக்கள் விளைவித்து தரும் அரிசியையும் பருப்பயும் அள்ளித்திங்க தீட்டு பார்ப்பதில்லை.பரோட்டா சுட்டவனும் எடுத்து வருபவனும் இரண்டு கையால் தொட்டால் குற்றமில்லையாம்.இவுரு கண்ணு முன்னாடி தொடக்கூடாதாம்.
உண்மையில் இவ்வாறு சக மனிதர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்கு வியாசந்தான் இந்த விவாதத்தின் மூலம் அந்த மக்களிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்க வேண்டும்..
\\கைகளால் தொடாமல் பரோட்டா, தோசை மற்றும் எதையும் தட்டில் வைக்கலாம். கரண்டியைப் பாவிப்பது போலவே கைக்குப் பதிலாக Tong ஐப் பாவிக்கலாம். ……….தமிழ்நாட்டு உணவகங்கள் வறுமையானவையுமல்ல//
ராமநாதபுரம் ஒரு சிறு நகரம். அங்கு போய் கிடுக்கி வைத்து உணவு பரிமாறும் விடுதியை தேடுவதை என்ன சொல்வது.அவ்வளவு ஏன் தமிழகத்தின் 99 விழுக்காடு விடுதிகளில் கிடுக்கி இருக்காது.
\\தான் செய்த தவறை………….ல்லோருக்கும் கிடைப்பதில்லை.//
ஒரு மனிதன் தன் பிழையை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தால் அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்வது பண்பாளர்களின் இயல்பு.அதனை வியாசன் போன்ற ”உயர்ந்த பண்பாளர்”களிடம் எதிர்பார்க்க முடியாதுதான்.
திப்பு .
நீங்கள் கீழேயுள்ள வரிகளில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. 🙂
[பத்து நொடிகளுக்கு முன்னால் அதே மனிதன் இரண்டு கையால் தொட்டிருப்பது பிரச்னை இல்லையாம்.இவுரு தட்டுல உழுந்த பொறவு தொடப்படாதாம்.என்ன ஒரு புத்திசாலித்தனம்]
//அவ்வாறு பரிமாறப்பட்ட உணவை பக்கத்து இருக்கைகளில் மற்ற மனிதர்கள் சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது //
நான் உணவகங்களுக்குப் போவது உணவுண்பதற்காகவே தவிர, மற்றவர்களை வாய் பார்ப்பதற்காகவோ அல்லது மற்றவர்கள் என்ன உண்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகவோ அல்ல.
//ஏன் தமிழகத்தின் 99 விழுக்காடு விடுதிகளில் கிடுக்கி இருக்காது.//
அது எனக்கும் தெரியும், கரண்டியைப் பாவிக்கிறவர்களுக்கு கிடுக்கியையும் அறிமுகப்படுத்தினால் என்ன என்பது தான் கேள்வி.
//ஒரு மனிதன் தன் பிழையை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தால்//
அப்பட்டமான பொய்யை வேண்டுமென்றே இட்டுக் கட்டிக் குற்றஞ்சாட்டி விட்டு, ஒரு சொல்லில் வருந்துகிறேன், என்றால் அதிலுள்ள நக்கலையும், நளினத்தையும் பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நினைத்துக் கொள்கிறீர்கள் போலிருக்கிறது. நீங்கள் மன்னிப்பு கேட்காததைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் மற்றவர்கள் உங்களைப் பற்றி புரிந்து கொள்வார்கள்.
\\ வரிகளில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை//
பரோட்டா எப்படி உருவாகிறது என ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.பின்னூட்டம் எண் 34.1.1.2
”இரு கைகளால் ” மாவை பிணைந்து [நிறைய மாவு என்றால் கால்களால் மிதித்து பிணைவதும் உண்டு] பிணைந்த மாவை ”இரு கைகளால் ” சிறு உருண்டைகளாக பிடித்து,அவற்றை ”இரு கைகளால் ”வீசி வீசி மெலிதாக்கி,”இரு கைகளால் ” அடுப்பு சட்டியில் வைத்து ,அவை வெந்தபின் ஒரு கையில் சட்டுவத்தை வைத்து மறுகையால் பரோட்டாக்களை அணைத்து எடுத்து ”இரு கைகளால் ” அவற்றை அடுக்கி நாலாபுறமும் தட்டி எடுத்து பின்னர்தான் இலைக்கு வரும்.
[காட்சி நினைவுக்கு;நாடோடி திரைப்படத்தில் கஞ்சா கருப்பு தட்டுவார்.]
அந்த நாலாபுறமும் தட்டுவது இலைக்கு வருவதற்கு சற்று முன்புதான் நடக்கும்.அதைத்தான் பத்து நொடி என குத்துமதிப்பாக சொல்கிறேன்.
\\நான் உணவகங்களுக்குப் போவது…………….பார்ப்பதற்காகவோ அல்ல//
உடன் இருப்பவர்களின் உணர்வுகளுக்கு எந்த ஒரு மதிப்பும் தர முடியாது அவர்களை காட்டிலும் நான் உயர்ந்தவன் என காட்டும் வகையில் எனது நடத்தை இருந்தாலும் அது பற்றி எனக்கு கவலை இல்லை என்கிறார்.இதைத்தான் மேட்டிமை திமிர் என்கிறோம்.
\\அப்பட்டமான பொய்யை…..உங்களைப் பற்றி புரிந்து கொள்வார்கள்.//
குற்றச்சாட்டு அந்த ”பொய்”யின் அடிப்படையில் அமைந்ததல்ல என்பதையும் புரிந்து கொள்வார்கள்.
// மாறாக அம்பி, சூத்திரன் பூணுல் அணிவதே தியானம் என்று சொன்ன மனவக்கிரத்திற்கு சொந்தக்காரர். சட்டை இல்லாமல் வணங்குவது பணிவு என்று சொன்ன தகைமையாளர். மக்கள், தியானம் பணிவு என்று அடிமைப்படுத்தப்படுகிற பொழுது முருகன் பூணுல் அணிந்தாலும் முருகன் தானாம். இந்த அயோக்கித்தனத்தை காறித்துப்ப வேண்டாமா? //
யோக்கிய சிகாமணி தென்றல் பெருமானார், நான் கூறியவற்றை முழுமையாக மேற்கோள் காட்டவேண்டும்.. வசை பாடுவதற்கு வசதியாக திரித்தும், வெட்டியும் தில்லுமுல்லு செய்வது யோக்கியன் செய்யும் வேலையல்ல.. அயோக்கியத்தனத்தை காறித்துப்ப வேண்டுமென்றால் மல்லாக்க படுத்துக் கொண்டு காறி காறி துப்பிக்கொண்டிருமையா..
அம்பி,
ஒரு பக்கம் “முருகன் பற்றிய தொன்மங்கள் இங்கிருந்தே வடக்கே சென்றிருக்கமுடியும் என்று கூறியிருக்கிறேனே” என்று நீர் கூறுவது அதே பதிவில் “6 வின்மின்களும் முருகனின் 6 முகங்களாக பண்டைய தமிழரால் உருவகம் செய்ய பட்டு கார்திகை மாத முழுநிலவு அன்று வணங்கபடுகின்றது” என்ற என் கருத்துக்கு ஆதாரம் கேட்பது என்ற உமது இரட்டை நிலை உமக்கே அருவருப்பாக இல்லையா அம்பி ? தேடிபாருமையா சங்க இலக்கியங்களை! முருகன் பற்றிய தொன்மங்கள் இங்கிருந்தே வடக்கே சென்றிருக்கமுடியும் என்ற உமது கருத்து உமக்கே விளங்கும்.முருகன் பற்றிய தொன்மங்கள் தமிழ் நாட்டை சார்ந்தவை ,புராண திரிபுகள் எல்லாம் ஆரிய பார்பானுடையது என்னும் நிலைபாட்டுக்கு இன்று நீர் வந்து உள்ளபோது 6 வின்மின்களும் முருகனின் 6 முகங்களாக பண்டைய தமிழரால் உருவகம் செய்ய பட்டு கார்திகை மாத முழுநிலவு அன்று வணங்கபடுகின்றது என்ற எமது கருத்து உம்க்கு ஏன் கசக்கிறது ? //தயவு செய்து அந்த ஆதாரங்களை முதலில் கொடுக்கவும்.. 6 க்கு 6 என்பதை எந்த தொடர்பை வைத்து கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்வோம்.. //
நன்னூல் கூறும் தமிழ் இலக்கணத்தில் ஏ ,அ ,அன் ஆகியவை சாரியைகளாக இருக்கும் போது அவை வட மொழி என்று திரிக்கும் நீர் தான் வெட்கி தலைகுனிய வேண்டும். வெட்கமாக இல்லையா உமக்கு தமிழ் மொழி சாரிகைகளை வட மொழி என்று கூற ! அதை பற்றிய என் பின்னுடம் 27 ஐ விட்டு அம்பி தலை தெறிக்க ஓடியது அம்பியின் வடமொழி பார்பன குடுமி புரட்டு அவிழ்ந்ததால் தானே ? //நன்னூல் காட்டும் சாரியையை மறுக்கவோ, திரிக்கவோ நான் என்ன தமிழ் மேகமா.. தங்களிடம் நன்னூல் சாரியை படும்பாட்டை நான் விளக்கியதற்கு (28.1.1.1) ஏன் பதில் அளிக்கவில்லை..//
முருகன் மீதான சங்க இலக்கியங்கள் காட்டும் தொன்மங்கள் இருக்கட்டும் அம்பி[ தேடிபாருமையா சங்க இலக்கியங்களை!!], அத்தகைய தொன்மங்கள் மீது நேற்றைய ,இன்றைய பார்பனர்கள் புராண திரிப்புகளை ஏற்றி வைத்து தமிழ் வழக்கங்கள் மீது ஆரிய கலாச்சாரத்தை ஏற்றி வைத்தது ஏன் அம்பி ? /// ஆமாம் அம்பி ,ஆரிய பார்பானுக்கு கந்த புராணம் [copy cat from வடமொழி சங்கர சங்கிதைபுராணம் to ஸ்கந்த புராணம்]தவிர வேறு என்னையா தொடர்பு முருகனுடன் ? //முருகன் பற்றிய தொன்மங்கள் இங்கிருந்தே வடக்கே சென்றிருக்கமுடியும் என்று கூறியிருக்கிறேனே..//
சந்துரு உடன் விவாதிக்கும் போது “முருகன் மறி அறுத்து வணங்கப்படுகிறான்” என்ற கருத்தை திருமுருகாற்றுபடையில் இருந்து எடுத்து நான் முருகன் அசைவ, நாட்டார் கடவுள் தான் என்பற்கு ஆதாரமாக கொடுத்து உள்ளேன்.அதில் உமக்கு உள்ள பிரச்சனை என்ன ? இக் கருத்துடன் நீர் வேறுபடுகின்றீரா ? நான் சந்துரு உடன் விவாதித்ததற்கு மட்டுமே பதில் கூற முடியும். வியாசனுடன் யார் இந்த கருத்தை விவாதித்தார்கள் என்பது எமக்கு எப்படி தெரியுமையா ?
அமபி //என்ன கருத்தை நான் கூறவேண்டும்..? நீங்கள் சொல்லவேண்டிய கருத்துக்கள் பலவும் பாக்கியுண்டு.. /// தென்றல் ://இந்த விவாதத்தில் மட்டுமல்ல; தமிழ்தாகம் சந்துருவோடு விவாதிக்கும் பொழுதும், இதே வியாசனுடன் விவாதிக்கும் பொழுதும் முருகன் மறி அறுத்து வணங்கப்படுகிறான் என்று அழுத்தமாகச் சொல்லியவர். //
தென்றல் கூறியதாக நீர் கூறும் இதற்கான ஆதாரத்தை நீர் தான் தரவேண்டும். அதற்கு பின் தான் நான் என் கருத்தை வைக்க முடியுமையா //தொடக்கத்தில் சரவணனை சமண சிரவணன் என்ற போது//
// ஒரு பக்கம் “முருகன் பற்றிய தொன்மங்கள் இங்கிருந்தே வடக்கே சென்றிருக்கமுடியும் என்று கூறியிருக்கிறேனே” என்று நீர் கூறுவது அதே பதிவில் “6 வின்மின்களும் முருகனின் 6 முகங்களாக பண்டைய தமிழரால் உருவகம் செய்ய பட்டு கார்திகை மாத முழுநிலவு அன்று வணங்கபடுகின்றது” என்ற என் கருத்துக்கு ஆதாரம் கேட்பது என்ற உமது இரட்டை நிலை உமக்கே அருவருப்பாக இல்லையா அம்பி ? தேடிபாருமையா சங்க இலக்கியங்களை! //
கார்த்திகேயன் என்று தாங்கள் வைத்த பெயருக்கு அடிப்படை 6 விண்மீன்களும் முருகனின் 6 முகங்கள் என்றால் என்ன தொடர்பு என்பதும் தெரியவேண்டும்.. சங்க இலக்கியங்களை தேடிப் பார்த்ததில் ‘அறுவர் பயந்த’ என்று கார்த்திகைப் பெண்கள் அறுவரின் மகனாக முருகன் குறிக்கப்படுகிறான்.. கார்த்திகேயன் என்ற பெயருக்கான, 6 க்கு 6 என்ற தொடர்பின் அடிப்படையும் இதுதான் என்பதை ஏன் மறுக்கிறீர்கள்.. இதை ஏற்றுக் கொண்டால் கார்த்திகேயன் பார்ப்பன ‘அசிங்கம்’ என்று கூறிக்கொண்டு, தென்றலாருக்கு கால் அமுக்கிவிடும் ஆசையில், நீங்கள் கார்த்திகேயனை அசிங்கப்படுத்துவது தெரிந்துவிடும்.. 6 க்கு 6 என்பதற்கு இதைத் தவிர வேறு தொடர்பு இருந்தால் சொல்லுங்கள்..
// முருகன் பற்றிய தொன்மங்கள் இங்கிருந்தே வடக்கே சென்றிருக்கமுடியும் என்ற உமது கருத்து உமக்கே விளங்கும். //
எனது கருத்து எப்போதுமே எனக்கு விளங்கிக் கொண்டுதான் இருக்கிறது.. தங்கள் கருத்து எல்லோருக்கும் விளங்க போக்கு காட்டாமல் தெளிவாக இதற்கு பதில் கூறுங்கள்..
// முருகன் பற்றிய தொன்மங்கள் தமிழ் நாட்டை சார்ந்தவை ,புராண திரிபுகள் எல்லாம் ஆரிய பார்பானுடையது என்னும் நிலைபாட்டுக்கு இன்று நீர் வந்து உள்ளபோது 6 வின்மின்களும் முருகனின் 6 முகங்களாக பண்டைய தமிழரால் உருவகம் செய்ய பட்டு கார்திகை மாத முழுநிலவு அன்று வணங்கபடுகின்றது என்ற எமது கருத்து உம்க்கு ஏன் கசக்கிறது ? //
கார்த்திகேயன் என்ற பெயருக்குக் காரணம் தமிழர் தொன்மமான, ‘அறுவர் பயந்த’ என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஆதாரங்கள்தான் என்பதுதான் என் நிலைப்பாடு.. 6க்கு 6 என்ற தங்கள் கருத்துக்கு அடிப்படை என்ன..?
// நன்னூல் கூறும் தமிழ் இலக்கணத்தில் ஏ ,அ ,அன் ஆகியவை சாரியைகளாக இருக்கும் போது அவை வட மொழி என்று திரிக்கும் நீர் தான் வெட்கி தலைகுனிய வேண்டும். வெட்கமாக இல்லையா உமக்கு தமிழ் மொழி சாரிகைகளை வட மொழி என்று கூற ! அதை பற்றிய என் பின்னுடம் 27 ஐ விட்டு அம்பி தலை தெறிக்க ஓடியது அம்பியின் வடமொழி பார்பன குடுமி புரட்டு அவிழ்ந்ததால் தானே ? //நன்னூல் காட்டும் சாரியையை மறுக்கவோ, திரிக்கவோ நான் என்ன தமிழ் மேகமா.. தங்களிடம் நன்னூல் சாரியை படும்பாட்டை நான் விளக்கியதற்கு (28.1.1.1) ஏன் பதில் அளிக்கவில்லை..// //
28.1.1.1-ல் நான் கேட்ட கேள்விக்கு ஏன் பதிலில்லை..: “கார்த்திகை+அன் = கார்த்திகையன்
மொக்கை+அன் = மொக்கையன்
மொட்டை+அன் = மொட்டையன்
கட்டை+அன் = கட்டையன்
என்றவாறு ஏ என்னும் சாரியை இல்லாமல் வெறும் அன் விகுதி வரக்கூடாது என்று நன்னூள் இலக்கணம் சொல்கிறதா.. கார்த்திகைக்கு ஏ போட்டு அன் விகுதி சேர்க்கத்தான் வேண்டும் என்றால் மொக்கேயன், மொட்டேயன், கட்டேயன் என்ற சொற்கள் ஏன் வழக்கிலில்லை..?”
வியாசர் கொடுத்த எடுத்துக்காட்டு போல் (முருகு+ஈசன் = முருகேசன்) நீங்கள் கொடுக்காமல் என்னை வசைபாடுவதேன்..
// சந்துரு உடன் விவாதிக்கும் போது “முருகன் மறி அறுத்து வணங்கப்படுகிறான்” என்ற கருத்தை திருமுருகாற்றுபடையில் இருந்து எடுத்து நான் முருகன் அசைவ, நாட்டார் கடவுள் தான் என்பற்கு ஆதாரமாக கொடுத்து உள்ளேன்.அதில் உமக்கு உள்ள பிரச்சனை என்ன ? இக் கருத்துடன் நீர் வேறுபடுகின்றீரா ? நான் சந்துரு உடன் விவாதித்ததற்கு மட்டுமே பதில் கூற முடியும். //
உங்களுக்கு என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை..? சமண சிரவணனுக்கு மறி அறுப்பது ஏன் என்று நீங்கள் சந்துருவிடம் கேட்டது போல் தென்றலாரிடம் ஏன் கேட்கவில்லை..?
// வியாசனுடன் யார் இந்த கருத்தை விவாதித்தார்கள் என்பது எமக்கு எப்படி தெரியுமையா ? //
K.Senthilkumaran என்ற அவதாரபுருடர்தான் அவர்..! முற்பிறவிகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லாமலிருக்கலாம்..! ஆனால் தென்றலாருக்கு கூட இருக்கிறதே.. இந்த ’செந்தில்குமரருக்கும், தமிழ்-தாகமாகிய எனக்கும் என்ன தொடர்பு’ என்று அவரிடம் கேட்கமாட்டீர்களா..!!! கேட்டால் சுப்ரமணிய சுவாமியே என்று தங்களையும் வசைபாடத் தொடங்கிவிடுவாரோ என்ற பயமா..!!!
// தென்றல் கூறியதாக நீர் கூறும் இதற்கான ஆதாரத்தை நீர் தான் தரவேண்டும். அதற்கு பின் தான் நான் என் கருத்தை வைக்க முடியுமையா //தொடக்கத்தில் சரவணனை சமண சிரவணன் என்ற போது// //
இப்படி விவாதிப்பதால் தங்களது நேர்மைதான் மேலும் மேலும் கேள்விக்குள்ளாகிறது.. மதிநுட்பம் வாய்ந்த தங்களுக்கு நான் என்ன ஆதாரம் தருவது.. இந்த விவாதத்தின் ஆரம்பத்தை படிக்கவில்லை என்று கூறிவிடாதீர்கள்..
கார்திகேயனுக்கு அம்பிகாட்டும் பார்பன புரட்டு கருத்துக்கள் :
அம்பி புரானத்தில் இருந்து காட்டும் கார்திகேயனுக்கான புராண ஆபாச ஆதாரம் எத்தகையது என்று பாப்போம். அம்பியிடம் கார்திகேயனுக்கு[பெயருக்கு ] தொன்மங்கள் என்ன என்று கேட்டால் புரான புளுகுகள் தான் தொன்மம் என்கின்றார். “கார்த்திகேயன் என்ற பெயருக்குக் காரணம் தமிழர் தொன்மமான அறுவர் பயந்த என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஆதாரங்கள்தான் என்பதுதான் என் நிலைப்பாடு” என்று ஒப்புதல் வாக்கு மூலம் வேறு கொடுத்து ஆம் முருகன் பார்பனமயம் ஆக்க பட்டதற்கு நான் சாட்சி சொல்ல தயார் என்கின்றார். நன்றி அம்பி ! திருமுருகு சங்க இலக்கியம் அல்ல என்று தென்றல் வாதாடும் போது ஓடி ஓடி ஒளிந்தவர் இப்போது திருமுருகு என்று கூறாமல்,குறிப்பிடாமல் “அறுவர் பயந்த என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஆதாரங்கள்தான்” என்று பம்முகின்றார்! இவர் கூறும் ஆதாரத்தை விட பலமான கார்திகேயனுக்கும் ,கார்திகை மாதத்துக்கும் ,அருமீனுக்கும் ஆன ஆதாரங்கள் சங்க இலக்கியடைலேயே உள்ளன என்பது அம்பியின் பார்பன சிந்தனைக்கு புலப்படாமல் இருப்பதில் ஐயம் இல்லை. நான் இவ் விவாதத்தில் முன்பே ஆதாரம் கொடுத்து இருந்தால் அம்பியின் இந்த புரான புளுகு கயமை தனம் வெளிபட்டு இருக்காது அல்லவா ? [அம்பி தென்றலுடன் நடத்திய திருமுருகு பற்றிய விவாதத்தில் தன் கருத்தை வெளிபடுத்தாமல் உம் ,சரி என்று முனங்கியதை நாம் நினைவில் கொண்டு வரவேண்டும். ]
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (த.இ.ப.)தற்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் கூறும் கருத்துகளில் இருந்து அம்பியின் பார்பன சார்பு கண்ணோட்டத்தை பார்போம்
திருமுருகாற்றுப்படை:
ஐவருள் ஒருவன் அம்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர்செல்வ!
ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை
மலைமகள் மகனே!”
புராண திரிபுகள் :
சங்க காலத்திலே தமிழகத்திலே புராண வரலாறுகள் பல வழங்கி வந்தன. மாபுராணம், பூதபுராணம் என்பவை இடைச்சங்க காலத்தில் இருந்த நூல்கள். ஆகவே கடைச்சங்க காலத்தில் புராண வரலாறுகள் தமிழ்நாட்டில் பெரு வழக்காக இருந்தன என்பதில் ஐயமில்லை. முனிவர்களைப்பற்றியும், கடவுளர்களைப் பற்றியும் மொழிவனவே புராணங்கள். புராணம்-புராதனமான வரலாறு, புராதனம் பழமை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழர்கள் புராணங்களிலே நம்பிக்கை வைத்திருந்தனர். இதற்குத் திருமுருகாற்றுப்படை சான்றாகும்.
புராண முருகனைப் பற்றியே இந்நூல் போற்றிப் புகழ்கின்றது. கந்தபுராண வரலாற்றுப் பகுதிகளை இந்நூலிலே காணலாம்.
பரமசிவன் பார்வதியை மணந்தபோது, தேவர்கள் பரமசிவனிடம் ஒரு வரங்கேட்டனர். பார்வதியுடன் கூடி பிள்ளை பெறக்கூடாது என்பதே அவ்வரம். பரமசிவனும் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கினார். பிறகு சிவனார் தனது விந்துவை இந்திரன் கையிலே கொடுத்தார். அவனால் அதன் வெப்பத்தைத் தாங்கமுடியவில்லை. அவன் அத்திரி, குச்சன், கௌதமன், பிருகு, காசிபன், அங்கிரா, வசிட்டன் என்னும் ஏழு முனிவர்களிடமும் அந்த விந்துவைக் கொடுத்துவிட்டான். அவர்களும் அதன் வெப்பத்தைப் பொறுக்க முடியாமல் அக்கினி குண்டத்திலே அதைப் போட்டுவிட்டனர்; வெப்பம் தணிந்தபின் அதனை எடுத்தனர்; தங்கள் பத்தினிகளிடம் கொடுத்தனர். அவர்களில் வசிட்டர் மனைவியான அருந்ததியைத் தவிர ஏனைய அறுவரும் அதனை அருந்தினர்; உடனே கருவுயிர்த்தனர்; அறுவரும் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். அந்த ஆறு குழந்தைகளும் இமயமலையிலே உள்ள சரவணப் பொய்கையிலே விடப்பட்டன. அவைகளைப் பார்வதி ஒன்றாக வாரியெடுத்தாள். ஆறும் ஒன்றாகி ஆறுமுகம். பன்னிரண்டு கையுமுடைய முருகனாகக் காட்சியளித்தது.
Taken from :
and
Thanks to:
http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=265&pno=36
http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=265&pno=37
//சங்க இலக்கியங்களை தேடிப் பார்த்ததில் ‘அறுவர் பயந்த’ என்று கார்த்திகைப் பெண்கள் அறுவரின் மகனாக முருகன் குறிக்கப்படுகிறான்.. கார்த்திகேயன் என்ற பெயருக்கான, 6 க்கு 6 என்ற தொடர்பின் அடிப்படையும் இதுதான் என்பதை ஏன் மறுக்கிறீர்கள்.//
//கார்த்திகேயன் என்ற பெயருக்குக் காரணம் தமிழர் தொன்மமான, ‘அறுவர் பயந்த’ என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஆதாரங்கள்தான் என்பதுதான் என் நிலைப்பாடு.. 6க்கு 6 என்ற தங்கள் கருத்துக்கு அடிப்படை என்ன..?//
// அம்பியிடம் கார்திகேயனுக்கு[பெயருக்கு ] தொன்மங்கள் என்ன என்று கேட்டால் புரான புளுகுகள் தான் தொன்மம் என்கின்றார். //
6 க்கு 6 என்ன அடிப்படை என்றே தெரியாமல் கார்த்திகேயன் என்ற பெயரை வைத்துவிட்டு அது அசிங்கம் என்று நீங்கள் கூறிக்கொண்டிருப்பது அதைவிட அசிங்கமாக இருக்கிறது..
// திருமுருகு சங்க இலக்கியம் அல்ல என்று தென்றல் வாதாடும் போது ஓடி ஓடி ஒளிந்தவர் இப்போது திருமுருகு என்று கூறாமல்,குறிப்பிடாமல் “அறுவர் பயந்த என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஆதாரங்கள்தான்” என்று பம்முகின்றார்! //
தன் வாயிலிருந்து தென்றலார் கொஞ்சம் மண்ணை எடுத்துக் கொடுப்பார்.. தாங்களும் அதை கவ்விக் கொள்ளலாம்..
// இவர் கூறும் ஆதாரத்தை விட பலமான கார்திகேயனுக்கும் ,கார்திகை மாதத்துக்கும் ,அருமீனுக்கும் ஆன ஆதாரங்கள் சங்க இலக்கியடைலேயே உள்ளன என்பது அம்பியின் பார்பன சிந்தனைக்கு புலப்படாமல் இருப்பதில் ஐயம் இல்லை. //
அந்த ஆதாரங்கள் எங்கே என்று காட்டிவிட்டு பிறகு பேசவும்.. தெரிந்தால்தானே காட்டுவதற்கு..
// தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (த.இ.ப.)தற்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் கூறும் கருத்துகளில் இருந்து அம்பியின் பார்பன சார்பு கண்ணோட்டத்தை பார்போம் //
சாமி.சிதம்பரனார் என்ற பெரியாரின் சீடர் எழுதிய உரையை காட்டுகிறீர்கள்.. பாடலில் இருப்பது என்ன உரையில் இருப்பது என்ன..? சங்கப்பாடல்களில் கூறப்படும், பிற உரைகளில் சரியாகக் குறிப்பிடப்படும் கருப்பிண்டம் சாமியின் உரையில் விந்தாகிவிட்டது..! நீங்கள் உரை எழுதினால் அதை மலம் என்று கூட கூறுவீர்கள்.. இதெல்லாம் ஒரு ஆதாரமா..?! கச்சியப்பரின் கந்த புராணத்தில் அது கருப்பிண்டம் கூட அல்ல, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறி என்கிறார்..
முருகன் பற்றிய தொன்மங்கள் இங்கிருந்தே வடக்கே சென்றிருக்கமுடியும் என்ற உமது கருத்து உமக்கே தெளிவாக விளங்கி இருந்தால் வடக்கில் இருந்து வந்தமுருகனின் பிறப்பின் புராண கதையை [அறுவர் பயந்த] கார்த்திகேயன் என்ற பெயருக்குக் காரணமாக கூறி இருப்பிரா?அடி முட்டாள் கூட இப்படி பட்ட தவற்றை செய்ய மாட்டானே !
//எனது கருத்து எப்போதுமே எனக்கு விளங்கிக் கொண்டுதான் இருக்கிறது.. தங்கள் கருத்து எல்லோருக்கும் விளங்க போக்கு காட்டாமல் தெளிவாக இதற்கு பதில் கூறுங்கள்..//
அறிவாளியாகிய தாங்கள் கார்த்திகேயனுக்கு வேறு தமிழர் தொன்மம் இருக்கிறது என்ற ஆதாரத்தை இன்னும் காட்டவில்லை..
கார்திகேயனுக்கு ஏ ,அ ,அன் மூன்று சாரியையுமே வரலாம் என்னும் போது , நன்னூள் இலக்கணம் கூறும் போது நான் எதற்கு உன் சுமையை சுமக்க வேண்டும். ? மொக்கேயன், மொட்டேயன், கட்டேயன் ஏன் வரவில்லை என்று நிர் தான் பதில் கூற வேண்டும். அம்பிக்கு அவர் சுமையை சுமப்பதில் என்ன சிக்கல். அவர் கேள்விக்கு அவரே பதில் அளிப்பதில் என்ன பிரச்சனை அவருக்கு ?
//என்றவாறு ஏ என்னும் சாரியை இல்லாமல் வெறும் அன் விகுதி வரக்கூடாது என்று நன்னூள் இலக்கணம் சொல்கிறதா.. கார்த்திகைக்கு ஏ போட்டு அன் விகுதி சேர்க்கத்தான் வேண்டும் என்றால் மொக்கேயன், மொட்டேயன், கட்டேயன் என்ற சொற்கள் ஏன் வழக்கிலில்லை..?”//
ஏ அ அன் என்று சங்கீதம் பாடச்சொல்லி நன்னூல் இலக்கணம் கட்டாயப்படுத்துகிறதா என்று கேட்டேன்.. ஆமாம் என்றால் நீங்கள்தான் எடுத்துக்காட்டுடன் பதிலளித்திருக்க வேண்டும்..
தென்றல் கூறியதாக நீர் கூறும் இதற்கான ஆதாரத்தை நீர் தான் தரவேண்டும். அதற்கு பின் தான் நான் என் கருத்தை வைக்க முடியுமையா என்று உமக்கு நான் அளித்த பதிலை என் பின்னுட்டம் 45ல் படிக்கவில்லையா அம்பி ? ஆதாரம் கொடுக்கவும். தெளிவான ஆதாரம் கொடுக்கவும் அம்பி !
//உங்களுக்கு என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை..? சமண சிரவணனுக்கு மறி அறுப்பது ஏன் என்று நீங்கள் சந்துருவிடம் கேட்டது போல் தென்றலாரிடம் ஏன் கேட்கவில்லை..? //
பின்னூட்டம் 13.1.1-ல் தென்றல் பெருமானாரே ஒத்துக் கொண்டிருப்பது தங்கள் கண்ணில் பட்டிருக்காதே..: ”சிரவணன் தான் சரவணன் என்றால் சிரவணன் கையில் வேல் எப்படி என்ற கேள்வி நியாயமானது. சிரவணன் கடவுள் என்ற அடிப்படையில் அணுகியவிதம் சரியல்ல என்பதை ஏற்கிறேன்;”
தங்களது ”மூடிக்கொண்டு செல்தல்” தத்துவத்தை மறைக்க சமண சிரவணனுக்கு மறி அறுத்து வழிபாடு நடத்தியிருக்கிறார்கள் என்றுகூட அடித்துவிடுங்கள்.. அதற்கு ஆதாரம் கேட்டால் இதோ அதோ என்று போங்காட்டம் ஆடுங்கள்.. கொஞ்சம் காமெடியும் தேவைதானே..
தமிழ் தாகம் கேட்கிற எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத அம்பி என்னுடைய வாதத்தை வெட்டி ஒட்டி காண்பிக்கிறார். சிரவணன் என்பது கடவுள் அன்று; அது சமணர்கள் மாணவர்களுக்கு வழங்கிய பெயர் என்பது தான் செய்தியில் சொல்ல வருவது. நியாயமாக சரவணனுக்கு பூணுல் எப்படி வந்தது என்று நான் கேட்ட கேள்விக்கு அம்பியிடம் எந்த பதிலும் இல்லை. இதை வெட்டிக் காண்பித்து யோக்கிய வேடம் போடுகிறார். மாறாக சரவணன் ஏன் மறி அறுத்து வணங்கப்படவில்லை என்கிற கேள்விக்கும் பதில் சொல்ல வக்கில்லை. இதில் இவர் சிரவணனைக் கோர்த்துவிடுகிறாராம். வைத்திகளுக்கு வேறு என்ன தெரியும்? அம்பி நாடகம் போடுகிற பொழுது ஒத்திகை பார்த்துக்கொண்டு போட்டால் கொஞ்சம் தாக்குப்பிடிக்கலாம்!
Tendral,Please read my replay number 52 here to mr Ambi regarding this matter
Very Good, Good Boy என்று தமிழ்-தாகத்தை ஒரு வரி பாராட்டக்கூட தென்றல் பெருமானுக்கு மனம் இல்லையோ.. இப்படியெல்லாம் பாராட்டினால் அல்லவா தன் குழந்தைக்கு கார்த்திகேயன் என்ற ’பார்ப்பன புளுகு புராண’ பெயரை வைத்தவர் ஒரு ஆயிரம் பெயர்களையாவது திரட்டிக் கொண்டுவந்து பார்ப்பனியத்து பாடை கட்டுவார்..
அம்பி,
தமிழ் தாகத்தைத் தனித்துப் பாராட்ட வேண்டிய அவசியமில்லை. அவர் பார்ப்பனியத்தைப் போலவோ உங்களைப்போலவோ யார் முதுகிலும் தொற்றிக் கொண்டு நிற்கவில்லை. சொந்தக் காலில் நிற்கிறார். மிகக் கணிசமாக பார்ப்பனியத்தை அம்பலப்படுத்த உழைத்திருக்கிறார். பாராட்டு என்பது பார்ப்பனியத்தை வீழ்த்துவதில் தான் இருக்கிறது. அதை இந்த சமூகம் புரட்சிகர இயக்கங்களின் முன்னிலையில் நிகழ்த்திக்காட்டும்.
இரண்டாவது கார்த்திக்கேயனின் சமஸ்கிருதப் பெயர் என்பது எமக்குப் பிரச்சனையில்லை. இது குறித்து விரிவாக எழுதியிருக்கிறேன். அப்படி எழுதும் பொழுதுதான் தங்களுக்கு இருப்பது ஈனப்புத்தி என்று சுட்டிக்காட்டினேன். ஏனெனில் தாங்கள் குறிப்பிடுகிற அருந்ததி ராய், ராமசாமி நாயக்கர், கார்த்திகேயன் இவர்களுக்கெல்லாம் மான ரோசம் உண்டு. அப்படியிருக்க போய்தான் இந்துத்துவக் காலிகளை எதிர்த்து சமர்புரிய முடிகிறது. வர்க்க போராட்டத்தின் மூலமாக சமூகமாக மாற்றம் நடைபெற்றால் பெயர் மாற்றுவது தானாக நடக்கும். உங்களைப்போன்று அம்பி என்று பெயர் வைத்துக்கொண்டு கைக்கூலி வேலை பார்க்கவில்லை. இந்த இழிவை எப்படியாவது புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். நன்றி.
அம்பி,
எனக்கு வினவில் விவாதம் செய்ய ஆக்கமும் ,ஊக்கமும் கொடுப்பது அம்பி மற்றும் இராமன் போன்றவர்களின் ஆரிய-பார்பன அடக்குமுறை கருத்துக்களும் ,திராவிட-தமிழ் மக்கள் பண்பாட்டு கலை வாழ்வியல் மீதான விரோத ஆரிய-பார்பன-புராண-அராஜக கருத்தாக்கங்கள் தான் என்பதை கூறிக்கொள்ள கடமை பட்டு உள்ளேன். எனவே எம் நன்றியும் பாரட்டுகளும் அம்பி மற்றும் இராமன் பென்றவ்ர்களுக்கே உரியதாகும். அதே சமயம் ஆரிய-பார்பன அடக்குமுறை கருத்துக்களை இங்கு வீரியத்துடன் எதிர்த்து எதிர்ப்பு தெரிவிக்கும் ,வினவு, தென்றல் உட்பட அனைவருமே என் தோழன்மைக்கு உரியவர்கள் தான்.
ஆரிய-பார்பன-புராண-அராஜக கருத்தாக்கங்களை அம்பலபடுத்தும் செயலில் ஈடுபடும் நாங்கள் ஒருமித்த கருத்துடன் வினவில் செயல்படுவதால் ஒருவருக்கு ஒருவர் பாராட்டு கூற ,புகழ்ந்து கூறும் தேவை வரவில்லை. ஏன் என்றால் எமது தோழன்மை என்பது உணர்வு பூர்வமானது என்ற மட்டத்தை தாண்டி அறிவு பூர்வமான நிலையில் அல்லவா இருகின்றது.
என்ன பெனாத்தல் இது ? என்ன பெனாத்தல் இது ? நான் ஏன் கேட்க வேண்டும் ?
//K.Senthilkumaran என்ற அவதாரபுருடர்தான் அவர்..! முற்பிறவிகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லாமலிருக்கலாம்..! ஆனால் தென்றலாருக்கு கூட இருக்கிறதே.. இந்த ’செந்தில்குமரருக்கும், தமிழ்-தாகமாகிய எனக்கும் என்ன தொடர்பு’ என்று அவரிடம் கேட்கமாட்டீர்களா..!!! கேட்டால் சுப்ரமணிய சுவாமியே என்று தங்களையும் வசைபாடத் தொடங்கிவிடுவாரோ என்ற பயமா..!!! //
ஆதாரத்தை முதலில் காட்டும் அம்பி ! ஆதாரத்தை முதலில் காட்டும் அம்பி ! நான் விவாதிக்க மாட்டேன் என்றா சொன்னேன் ?
//இப்படி விவாதிப்பதால் தங்களது நேர்மைதான் மேலும் மேலும் கேள்விக்குள்ளாகிறது.. மதிநுட்பம் வாய்ந்த தங்களுக்கு நான் என்ன ஆதாரம் தருவது.. இந்த விவாதத்தின் ஆரம்பத்தை படிக்கவில்லை என்று கூறிவிடாதீர்கள்..//
இதற்கே 2 முறை கேட்டு பதறுகிறீர்கள்.. ஆதாரத்தை காட்டினால் என்ன செய்வீர்களோ.. புது அவதாரம் எடுக்க வேண்டியதுதான்.. கட்டாயம் காட்ட வேண்டுமென்றால் காட்டுகிறேன்..
அம்பி://தென்றலாருக்கு கால் அமுக்கிவிடும் ஆசையில்//
அம்பியின் இக் கருத்தை வெளியிடும் வினவு ,இதற்கு நான் கொடுக்கும் பதிலையும் வெளியிடுமா ?
//தமிழ் நாட்டை வெயிலும் புழுதியும் என்று யாரும் சொன்னதில்லை..தமிழ்நாட்டான்களின் நாயும் சீண்டாத புளிச்ச மாவு என்று சொன்ன வியாசன் தான் இங்கே தமிழ்கலாச்சாரம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்.///
தமிழ்நாட்டை தந்தையர் நாடென்றும், எங்களின் முன்னோர்களின் நாடென்றும், தமிழ்நாட்டு மக்களை தொப்புள்க் கொடியுறவுகள் என்றும், தமிழ்நாட்டுக் கோயில்களையும், வரலாற்றையும், கட்டிடங்களையும் பார்த்து பெருமிதப்படவும், தமிழரல்லாதவர்கள் தமிழ்நாட்டைக் கேவலமாகப் பேசும் போது அவர்களுடன் வாக்குவாதம் பண்ணவும் எங்களுக்கு எவ்வளவு உரிமையிருக்கிறதோ, அதேயளவு உரிமை தமிழர்கள் என்ற முறையில் தமிழ்நாட்டிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவும், விமர்சிக்கவும் உரிமையுண்டு. தமிழ்நாட்டில் வெயிலும் புழுதியுமில்லாமல், குளிரும் பனியுமாகவா இருக்கிறது? உண்மையைச் சொன்னாலும் குற்றமா? தமிழ்க்கலாச்சாரம் பேசும் தமிழர்கள் தமிழ்நாட்டை விமர்சித்தால் அவர்கள் தமிழர்களல்ல என்றாகி விடுமா?
தமிழைக் காட்டுமிராண்டிப் பாசை என்று தமிழரல்லாதவர்கள் கூறியதுடன் ஒப்பிடும் போது நாயும் சீண்டாத தமிழ்நாட்டான்களின் புளிச்சமா என்று நான் கூறியது பெரிய விடயமல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் எனக்குப் பிடிக்காததும், எனக்கு ஒத்துக்கொள்ளாததும் தமிழ்நாட்டு உணவுவகைகள் தான். தமிழ்நாட்டுச் சாம்பாரும், புளிச்சமா உணவு வகைகளும் எனக்கு ஒத்துப் போவதேயில்லை. ஒரே மாவைப் புளிக்க வைத்து, அதை ஆவியில் அவித்து அதற்கு இட்லி என்று பெயரிட்டு விட்டு, அந்த இட்லி மாவுக்குள் கொஞ்சம் அதிகம் தண்ணீரை விட்டு, கல்லில் ஊற்றி, அதற்குத் தோசை என்று பெயர் வைத்து விட்டு, அதே தோசை மாவைக் கொஞ்சம் தடிப்பாகச் சுட்டு அதற்கு அடை என்று பெயர் வைத்து விட்டு, அந்த மாவில் சுட்ட இட்லியை உதிர்த்து அதை உப்புமாவாக்கி விட்டு, இவ்வாறு அந்த ஒரே புளிச்சமாவில் காட்டும் செப்படி வித்தைகள் எதுவுமே எனக்கு ஒத்து வருவதில்லை, ஏனென்றால் எல்லாமே அந்த புளிச்சமாத் தான். இவ்வளவு நீண்ட வரலாறு கொண்ட தமிழ்நாட்டில், அடிக்கடி எங்களைத் தமிழ்நாட்டுக்கு போகுமாறு ஈர்க்கும் தமிழ்நாட்டில், ஏன் புளிச்சமாத் தவிர்ந்த தமிழ்நாட்டுக்கேயுரிய வேறு நல்ல உணவு வகைகள் கிடைப்பதில்லை என்ற கேள்விக்குப் பதில் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. அப்படியில்லாது விட்டால், பிரியாணி என்ற ஒன்றைக் குறிப்பிடுவார்கள், முகலாயர்களிடம் இரவல் வாங்கிய அந்தப் பொருள் தமிழ்நாட்டில் அதன் உண்மையான தோற்றத்தையும், சுவையையும் இழந்து வேறு என்னவோவாக மாறி விட்டதென்று நான் நினைக்கிறேன். அதுவும் எனக்குப் பிடிக்கவில்லை, இன்னும் தமிழ்நாட்டுக்கேயுரிய சுவையான உணவை நான் இன்னும் தமிழ்நாட்டில் சுவைக்கவில்லையே என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு தான் “தமிழ்நாட்டான்களின் நாயும் சீண்டாத புளிச்சமா என்ற என்னுடைய கருத்தும். இதற்கு மேல் விளக்கமளிப்பதற்கு ஒன்றுமில்லை. இந்த விளக்கமே அதிகம் என்று தான் நான் நினைக்கிறேன். 🙂
தமிழருக்கு தத்துவம் என்ற தலைப்பிலே பின்னூட்டம் இடுகிற இராம் தனது முதல் பின்னூட்டத்தில் சிவன் முப்புரத்தை எரித்ததை திருமூலரின் பாடலில் இருந்து மேற்கோள் காட்டினார். ஆனால் சிவன் முப்புரத்தை எரித்தது தத்துவம் அல்ல; சமணம் புத்தத்தை அழித்த சமயப்போர் என்று மயிலை சீனியின் விவாதத்தை ஆதாரமாகத் தந்திருக்கிறேன். தத்துவம் என்று சொல்லவருகிறவர் எது தத்துவம் என்பதை முதலில் சொல்லவில்லை. தற்பொழுதுதான் ஆசிவகத்தின் வேர்களோடு சிவனைத் தொடர்பு படுத்த முயல்கிறார். ஆனால் இதுவும் பார்ப்பனியத்தை அப்படியே தமிழர்களின் தலையில் தொன்மமாக காட்ட முயற்சிக்கும் செயல் தான் என்பதற்கு கீழ்க்கண்ட வாதங்களை முன்வைக்க விரும்புகிறேன்.
1. ஆசிவகம் சமணத்தோடு புத்தத்தோடு தொடர்புடையது அல்ல என்று நிறுவ பலபேர் முயல்கிறார்கள். ஏன் இந்த முயற்சி என்றால் ஆசிவகத்தை தமிழர்களின் தொன்மையான மதமாக காட்ட விழைகிறார்கள். இதில் உள்ள சர்ச்சையை கவனம் செலுத்துவதற்குப் பதிலாக ஆசிவகம் தமிழர்களின் தொன்மையான மதம் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி பார்ப்பனியத்தை அம்பலப்படுத்துவோம்.
2. இராம் சொல்வது படி ஆசிவகம் சமணமாக மாறி தமிழ்நாட்டிற்கு வந்ததாக கருதுவோமேயானால் சிவன் முப்புரம் எரித்த கதை அதன் மூலப்பொருளில் ஆசிவகத்தை அழித்த வரலாறு என்றாகிறது. சிவனே சிவனை அழிக்கிறான்! இந்தக் கேலிக்கூத்து எப்பொழுது சாத்தியம் என்றால் சிவன் பார்ப்பானாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். அல்லது சிவனே பார்ப்பானாகத்தான் இருந்திருக்க வேண்டும். இதை விளக்க சான்றுகள் தருவோம்.
3. இந்த இடத்தில் இராம் ஆதி தேவருக்கும் சிவனுக்கும் உள்ள ஒற்றுமை பற்றி பேசுகிறார். முதலில் இவர்கள் இருவரும் முற்றிலும் வேறானவர்கள் என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆதி தேவருக்கு மீயுயர் ஆற்றல் கிடையாது. மனிதன் வாழ்விலே மேன்மை அடைவதன் மூலமாகத்தான் கடவுளாகிறான் என்பது ஆசிவகத் துறவறத்தின் முதன்மையான கோட்பாடு. ஆதி தேவருக்கு உண்டான சிலை அம்சங்கள் அனைத்துமே மனிதனையே பிரதிபலிப்பவை. ஆனால் சிவன் மீயுயர் ஆற்றல் படைத்தவன். ஆதி தேவர் தமிழரின் தொன்மையான கடவுள் என்கிற பொழுது தமிழர்களிடம் கடவுளைப்பற்றிய எந்தப் பாசாங்கோ உயர்வு நவிற்சியோ இல்லையென்றாகிறது. ஆதி தேவர் எதையும் அழிக்கவில்லை. மாறாக தன்னிடம் உள்ள மலங்களைத்தான் அழிக்கிறார். ஆனால் சிவன் அழிவுக் கடவுளாக பார்ப்பனியத்தால் முன்னிறுத்தப்படுகிறான். அவன் அளிக்கிற முப்புரம் தமிழர்களின் கலைகளஞ்சியமாக இருக்கிறது! மனிதர்களின் தன்மை கீழிறுத்தப்பட்டு மூடநம்பிக்கைகளுக்கு முதன்மை அளிக்கப்படுகிறது. இந்தப் பார்ப்பனியத்தை சைவ நெறி என்று வரையறுக்கிற ஆதிக்க சாதிகள் சம்பந்தேமேயில்லாமல் ஆதி தேவரை சிவனோடு ஒப்பிடுகிறார்கள். இதன் மூலமாக பார்ப்பனிய இழிவை தமிழர்களின் தொன்மமாக காட்டுகிறார்கள். ஆசிவகத்தை அழிக்கத் துணைபோன நெறியான சைவத்தை தமிழர்களின் நெறியாக காட்ட முயல்வது கடைந்தெடுத்த பித்தலாட்டம் என்று தெளிவாகிறது!
4. சிவன் தான் முதல் சித்தன் என்று சித்தர் மரபை காட்டுகிறார் இராம். சித்தர் மரபு அகத்தியரலிருந்து தொடங்க வேண்டுமானால் எந்த அகத்தியர் என்று சொல்ல வேண்டும்? தமிழ் இலக்கியங்களில் மொத்தம் 32 அகத்தியர்கள் இருப்பதாகச் சுட்டுகிறது தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (இலக்கிய இடங்கள் எமக்குத் தெரியவில்லை). அகத்தியர் ஆரிய உளவாளி என்பதும் தமிழர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. ஏனெனில் பழமையான தமிழை வடமொழியோடு சமன்படுத்துவதாகக் காட்டுவது பார்ப்பனியத்தின் கைங்கர்யம். தமிழின் தொன்மையைக் குறைப்பதற்குத்தான் அகத்தியர் பயன்படுகிறார் என்பது தெளிவாகிறது. இதைத்தாண்டி வருகிற இரண்டாவது முக்கியமான நபர் திரு மூலர். இவரது காலம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு. சித்தர் மரபு என்பது தொகை செய்காலத்திலிருந்து தான் என்பதை அவர்களின் செய்யுளில் இருந்தே காண இயலும். இதில் சிவன் மூத்த சித்தராக காட்டப்படுகிறார் என்றால் பார்ப்பனியத் தாக்குதலின் ஆழத்தை உணர இயலும். இது தவிர கணிசமான சித்தர்கள் நாத்திக மரபு பேசியவர்கள். இவர்களின் செய்யுள்கள் எல்லாம் சைவம் என்ன சொல்கிறதோ அதற்கு அப்படியே நேர்மாறானவை. குறிப்பாக சிவன் நான்மறைகளுக்கும் முதல்வன் என்பதை மறுக்கிறது. சிவனுக்கு சிலை வழிபாட்டை கடுமையாக எதிர்க்கிறது. சைவர்கள் இங்கேயும் பிழைப்புவாத கோஷ்டியாகத்தான் இருந்தார்கள். இருக்கிறார்கள்.
5. சங்க இலக்கியங்களிலே பல இடங்களில் முருகன் சூரைத் தண்டிக்கிறான். இந்த இடங்களில் எல்லாம் அவுணர் அழிக்கப்பட்டனர் என்று தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. அவுணர் என்பதும் அரக்கர் என்பதும் சமண புத்த மதத்தவர்களையே குறிக்கும் என்று மயிலை சீனி விளக்கியிருப்பதை மேலே உள்ள பின்னூட்டங்களில் காண்க. இதில் இடவசதியாக இப்பொழுது ஆசிவகம் வந்து சிக்கியிருக்கிறது. ஆசிவகத்தை அழித்ததைத்தான் இந்தப் பார்ப்பனிய அசிங்கள் பறைசாட்டுகின்றனவா என்பதையும் தொன்மம் என்று கதைக்கிறவர்கள் உற்று நோக்குவோர்களாக!
6. குறிப்பாக பழனி முருகன் ஆசிவகக் கடவுள் என்ற கருத்து இருக்கிறது. இது சித்தர் மரபு என்று ஒருபுறத்தார் சொல்கின்றனர். வள்ளி தெய்வானை என்று இரு மனைவிகள் இங்கு இல்லை. கையில் வேல் இல்லை. துறவறம் காண்பிக்கப்படுகிறது. சைவர்களுக்கு துறவறம் என்பது அலர்ஜியான ஒன்று. திருக்கல்யாண உற்சவம் பார்த்தே காலத்தைத் கழித்தவர்கள் தமிழ்நாட்டு மேட்டுக்குடிகள். இப்படி எதைத் தொட்டு எங்கு பார்த்தாலும் சிக்கி சீரழிவது பார்ப்பனியச் சைவமே என்றாகிறது.
மேற்கண்ட ஆறு கருத்துகளில் நாம் சொல்லவருவது. ஆசிக மரபை தமிழரின் தொன்மம் என்று கருதினால் அது அழிக்கப்பட்டது தெளிவாகிறது. ஆசிவக வாழ்வில் கடவுளர்களுக்கும் மனிதர்களுக்கும் இடைவெளி குறைவு. இப்படி மேன்மையான மரபை அழித்துதான் சைவமும் வைதீகமும் (இரண்டும் வேறு வேறு அல்ல) மக்களை இருண்ட காலத்தை நோக்கித் தள்ளியிருக்கின்றன. கடவுள்கள் வலிமைப் படைத்தவர்களாகக் காட்டப்படுகின்றனர். சமயப்போரில் சமணமும் பெளத்தமும் ஆசிவகமும் அழிக்கப்பட்டு மக்கள் அடிமைத்தனத்தில் இருத்தப்பட்டனர். எனவே சைவம் தமிழரின் நெறி என்பதை முற்றிலும் நிராகரிக்கிறேன். இதற்கு ஆசிவகத்தை துணைக்கு இழுப்பதைவிட கயமைத்தனம் வேறு ஏதும் இருக்க முடியாது. ஆதி தேவரை சிவன் என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு சைவக் கூட்டம் சிவனை தலைவன் என்கிறது! என்ன மோசடி! இவர்களின் பார்ப்பனிய பாசத்தை அம்பலப்படுத்தும் விதத்தில் அடுத்த பின்னூட்டத்தில் சைவ-பார்ப்பனிய கூட்டிற்கு சான்றுகள் தருகிறேன்.
1.தமிழரின் தொன்மையான சமயம் ஆசிவகம் என்ற கருத்தை தென்றல் ஏற்கிறார்.ஆனால் தத்துவமும் வீடுபேறும் வெளியில் இருந்து வந்தது என்று கதைக்கிறார்.துறவு கோலத்தில் நிற்கும் முருகன் ஆசிவக கடவுள் என்று சொல்லும் அவர் வீடுபேறு வெளியில் இருந்து வந்தது என்று சொல்வது கேலி கூத்தானது.துறவின்நோக்கமே வீடுபேறுதான்.பார்ப்பானியத்தை அம்பல படுத்துகிறேன் என்று தானே அம்பல படுகிறார்.ஆசீவகம் இவர் கண்களுக்கு தத்துவமாக தெரியவில்லை
2.திராவிடர்கள் அசுரர்கள்,ஆரியர் தேவர்கள் இதுதான் தென்றலின்நிலைப்பாடு.சமணர்கள்தான் அசுரர்கள் என்பதை ஏற்றால் முதலில் அடிவாங்குவது இந்த கருத்துதான்.மகாவீரர் ஆரிய அரச குலத்தவர்[சத்திரியர்].அதை அதிகம் பின்பற்றியவர்கள் ஆரிய வைசியர்கள்[வணிகர்கள்].இவர்கள் கூறும் பார்ப்பன,பனியாக்களில் பல பனியாக்கள் இன்றும் சமணர்கள் என்பது தெரியமா? அவர்கள்தான் அசுர குலத்தவரா? குழப்பாமல் பதில் சொல்லுங்கள்.
3.ஆதிதேவருக்கும் சிவனுக்கும் உள்ள ஒற்றுமையை மயிலையார் பேசுகிறார்.அதை சுட்டி காட்டிநான் சில முடிவுகளுக்கு வருகிறேன்.ஆதி தேவரை முதலில் சடைமுடியுடன் வணங்கிவிட்டு பின்பு தலை மழித்தவரா
[தவறுதலாக பதிவாகிவிட்டது தொடர்ச்சி இதில்]தலை மழித்தவராக மாற்ற அவசியம் என்ன? எதை மறைக்க? சிவனின் மீயுயர் ஆற்றல் பிற்காலத்தில் சிவன் முழுமுதல் கடவுளாக கட்டமைக்கப் படும் போது புராணிகர்களால் கட்டமைக்க படுகிறது.முப்புரமாவது மும்மல காரியம் என்று திருமூலர் தெளிவாகவே சொல்கிறார்.அரக்கர்கள் தத்துவம் என்று சொல்லும் திருமூலர் தேவரகளை உண்மையாக சொல்கிறார் என்பது எப்படி ஏற்புடையதாகும்.திருமூலருக்கு சிவலோகமே தத்துவம்தான்.
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம் உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம் உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார்நிலை சொல்வதெவ் வாறே.[திரு.129]
இங்கு தூங்குவது என்பது தியானம்.இதற்கு பிற்காலத்திய உதாரண்ம் உண்டு.புத்த மதம் புத்தரின் மறைவுக்கு பிறகு ஹினயானம்,மகாயாணம் என்று இரண்டாக உடைந்தது.ஒன்று புத்தரை கடவுளாக ஏற்றது மற்றது தீர்த்தங்கரராகவே ஏற்றது.ஆதிநாதர் ஆகிய சிவனுக்கு ஏற்பட்டது இதுதான் என்பதை எளிதாக யூகிக்கலாம்.எனவே மீயுயர் ஆற்றலை முக்கியமாக காட்டுவது சிறுபிள்ளைதனமான் வாதம்.
4.சிவன்தான் முதல் சித்தன் என்பதை திருமூலரும் குறிக்கிறார்.தன்னுடைய குருமரபு பற்றி கூறும்போது
நந்தி யருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்டருமாமே-[திரு.68]
இதில் முதல் வார்த்தை நந்தி சிவனை. திருமூலர் திருமந்திரத்தில் சிவனை நந்தி என்றே பல இடங்கலில் குறிக்கிறார்.மேலும் சிவலோகத்தை தம்முள்ளே கண்டவரே சித்தர் என்கிறார்.
“சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்”-[திரு.125]
வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே-[திரு.124]
சித்தர்கள் புற வழி பூசையை மறுத்து புலன் கடந்த அக அறிதலை வழியுறித்தியவர்கள்.எனவே சித்தர்களை கடவுள் மறுப்பாளர்கள் என்று அடித்து விட முடியாது.
அகத்தியர் ஆசிவக சித்தர் என்றே அநேக ஆய்வுகள் சொல்கின்றன.அகத்தியர் பற்றி போகர் 7000த்தில்
தேனான அகத்தீசர் சாதிபேதம்
கொற்றவனே வேளாளன் என்னலாகும்-[போக.5903] என்கிறார்.இதர அகத்தியர்கள் பற்றி நீங்கள்தான் கூற வேண்டும்.தொல்காப்பியரின் குரு அகத்தியர் என்றும் அவர் எழுதிய நூல் அகத்தியம் என்றும் கருத்து உள்ளது.
5.சமணம் களப்பிரர் காலத்தில்தான் தமிழில் பரவுகிறது.சங்க காலத்தில் சூரரை கொன்றது சமணரை என்பது உங்களது பித்தலாட்டம்.ஆசீவகம் சைவத்திற்குமான உறவு தத்துவ வளர்ச்சி சார்ந்தது.
6.சிவ யோகிகள்,சிவ சித்தர்கள் என்று எத்தனையோ துறவிகளை வரலாற்றில் காட்ட முடியும்.பழனி முருகன் சிலையை செய்த போகரும்,புலிப்பாணியும் சிவ சித்தர்கள் என்றே சித்தர் இலக்கியங்கள் சொல்கின்றன.போகர் சமாதி பழனியில் அமைந்துள்ளது.உங்கள் உளரலுக்கு அளவு இல்லாமல் போய்விட்டது.
\\தமிழரின் தொன்மையான சமயம் ஆசிவகம் என்ற கருத்தை தென்றல் ஏற்கிறார்.\\
ஆசிவகம் தமிழரின் தொன்மையான மதம் என்பது வாதத்திற்காக ஏற்றுக்கொண்ட கருத்துநிலை. இதைவைத்தே பார்ப்பனியத்தை எளிதில் அம்பலப்படுத்த இயலும் என்பதற்கான வசதிமட்டுமே. இதையே கடைசிவரை பின்பற்றுவதில் எனக்குப் பிரச்சனையில்லை. ஆனால் இதைச் சலுகையாக எடுப்பது மண்ணுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று கூறுவதற்கு ஒப்பான அற்பத்தனமாகும். ஆசிவகத்திற்கு மயிலை சீனியின் ஆய்வைத்தான் நான் முதன்மையாகச் சுட்டுவேன். பெளத்தமும் தமிழும் என்ற புத்தகத்தில் ஆசிவகம் விளக்கப்பட்டிருக்கிறது. அது சைவர்கள் சால்ரா அடிப்பதைப்போன்று சிவனோடு தொடர்புபடுத்தவில்லை. படித்துப்பார்க்க: http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=12 இது நான் விவாதிக்கிற பொருளுக்கு தேவையில்லை என்பதால் கணக்கில் எடுக்கவில்லை. ஏனெனில் ஆசிவகம் தமிழருடையதா என்பது இங்கு விவாதம் அல்ல.
\\ஆனால் தத்துவமும் வீடுபேறும் வெளியில் இருந்து வந்தது என்று கதைக்கிறார்.துறவு கோலத்தில் நிற்கும் முருகன் ஆசிவக கடவுள் என்று சொல்லும் அவர் வீடுபேறு வெளியில் இருந்து வந்தது என்று சொல்வது கேலி கூத்தானது.துறவின்நோக்கமே வீடுபேறுதான்.பார்ப்பானியத்தை அம்பல படுத்துகிறேன் என்று தானே அம்பல படுகிறார்.ஆசீவகம் இவர் கண்களுக்கு தத்துவமாக தெரியவில்லை\\
இந்த வாதம் தான் கேலிக்கூத்தானது. பழனி முருகனின் காலம் கி.பி பத்தாம் நூற்றாண்டு. ஆசிவகத்தைத் தோற்றுவித்த மற்கலி மறைந்த காலம் கிமு ஐந்தாம் நூற்றாண்டு. பழனி ஆசிவக கடவுள் என்பது சலுகையாக வைத்துக்கொண்டாலும் பழனி முருகனை வைத்து தொன்மையை விளக்க இயலாது. ஏனெனில் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். பழனி முருகன் சித்தர் மரபிலே வருகிறவன். சமண, பவுத்த, ஆசிவகம், பார்ப்பனியம் வீடுபேற்றைப் பாடுகிறது. ஆக கிமு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து வீடுபேறு என்ற கருத்தை விவாதிக்கவேண்டுமானால் ஆசிவகத்திற்கு ஆதாரம் தரவேண்டியது தாங்கள் தான். திருமுருகு, பரிபாடல், கலித்தொகை, அசுரரை அழிப்பது எல்லாம் பார்ப்பனியமாகும். இதற்கும் ஆசிவக நெறிக்கும் சம்பந்தம் இல்லை. இவையெல்லாம் தமிழர் நெறியும் அல்ல. ஆகையால் வீடுபேறு என்ற தொன்மைக்கு பழனி முருகனைக் காட்ட இயலாது. இன்னும் கொஞ்சம் சிறப்பாக முயற்சி செய்யவும். சங்க கால அறம், பொருள், இன்பம் மத்தியில் வீடுபேறு காணப்படுகிறது. அது தமிழர் மரபா என்பதை சம காலத்தை ஒப்பிடுவதன் மூலம் நிறுக்க இயலும் என்பது எமது துணிபு. அம்பலப்படுவது தாங்கள் தான்
\\ திராவிடர்கள் அசுரர்கள்,ஆரியர் தேவர்கள் இதுதான் தென்றலின்நிலைப்பாடு.சமணர்கள்தான் அசுரர்கள் என்பதை ஏற்றால் முதலில் அடிவாங்குவது இந்த கருத்துதான்.\\
ஏதாவது அவசரமா? விவாதம் பரிசீலனை என்று எதுவும் இல்லாமல் அடித்துவிடுகிறீர்களே! இந்த விவாதத்தில் அசுரர் என்பதற்கான விளக்கத்தைத் வேதகாலத்திலிருந்து தொகுத்துத் தந்திருக்கிறேன். சுரா பானம் தவிர்த்தவர்கள் அசுரர்கள் என்ற நிலை மாறி பார்ப்பனியத்தை எதிர்த்தவர்கள் எல்லாம் அசுரர்கள் என்ற அழைக்கப்படுவதற்கு மயிலை சீனியின் அத்துணை ஆதாரங்களும் பின்னூட்டம் 37 லிருந்து 37.1.3 வரை விளக்கியிருக்கிறேன். மேற்கொண்டு உங்களது கேலிக்கூத்தான வாதம் எவ்விதம் இருக்கிறது என்று கீழே கவனியுங்கள்.
\\ மகாவீரர் ஆரிய அரச குலத்தவர்[சத்திரியர்].அதை அதிகம் பின்பற்றியவர்கள் ஆரிய வைசியர்கள்[வணிகர்கள்].\\
தமிழ்நாட்டு பார்ப்பான் கருப்பாகத்தான் இருப்பான். இவன் ஆரியனா? மகாவீரரை ஆரியர் என்கிறீர்களே இது சரியா? ஆரியம் திராவிடம் என்பது தத்துவத்தின் அடிப்படையிலானது. ஆரியம் தோல் நிறத்தின் அடிப்படையிலானது அன்று. சான்றாக டிடி கோசாம்பி ஆரியக்கலப்பை சிந்துசமவெளி நாகரிகத்தை அழித்ததில் இருந்து விளக்கியிருக்கிறார். ஆரியர்கள் என்பதற்கு உயர்ந்தவர்கள், மேன்மையானவர்கள் என்பது பொருள். தற்குறிகள்தான் தன்னைத்தானே உயர்ந்தவன் என்று அறிவித்துக்கொள்வான். பூணுல் அணிந்து கொள்வான். இதை எதிர்த்தவர்கள் எவரும் தங்களை ஆரியர்கள் என்ற அழைத்துக்கொண்டதில்லை. ஆனால் உங்களைப் போன்ற பார்ப்பனிய அடிமைகள் பார்ப்பான் சொல்லிக்கொடுப்பதை அசுரர் குடி கெடுத்த ஐயா வருக என்று பாடுகிறீர்கள். இந்தக் கேவலத்திற்கு பதில் சொல்லாமல் சத்திரியர் வணிகர் என்று சனாதனம் வேறு பேசுகிறீர்கள்.
\\ இவர்கள் கூறும் பார்ப்பன,பனியாக்களில் பல பனியாக்கள் இன்றும் சமணர்கள் என்பது தெரியமா? அவர்கள்தான் அசுர குலத்தவரா? குழப்பாமல் பதில் சொல்லுங்கள்.\\
வெள்ளாளர்கள் தங்களைச் சைவர்கள் என்று அழைத்துக்கொண்டாலும் பார்ப்பனிய அடிமைகள் தான் என்பது உங்களுக்கு தெரியுமா? அதுபோலத்தான் பார்ப்பன பனியாக்களின் சமணமும்.
பார்ப்பனியத்தை எதிர்த்தவர்கள் தானே அசுரர்கள். இதில் என்ன குழப்பம் வேண்டியிருக்கிறது? பார்ப்பனியத்தை எதிர்க்காமல் எனக்கென தேமென்று எருமை மாட்டில் மழை பெய்வதைப் போல் இருப்பவர்கள் எப்படி அசுரர்கள் என்றழைக்க முடியும்? இப்படியிருக்கப் போய்தான் சமணத்தையும் பவுத்தத்தையும் இந்து மதத்தின் கீழ் இருத்துகிறார்கள் இந்துத்துவக் காலிகள். அதன் கோட்பாட்டு நீட்சிதான் உங்களுடைய கருத்து.
அது கிடக்கட்டும். நீங்கள் எந்தப் பக்கம்? நாங்கள் எல்லாம் அசுரர்வழித் தோன்றல்களே! எம்தமிழர் பெருமான் இராவணன் காண் என்று பாரதிதாசன் ஆரிய எதேச்சதிகாரத்தை தோலுரித்திருக்கிறார்.
வெளியூர் செல்லும் திரு.ராம் வந்து பதில் கூற சில வாரங்கள் ஆகலாம்.. அதற்கு முன் இதற்கு மட்டும் தற்சமயம் ஒரு பதிலைத் தருகிறேன்..:
// அது கிடக்கட்டும். நீங்கள் எந்தப் பக்கம்? நாங்கள் எல்லாம் அசுரர்வழித் தோன்றல்களே! எம்தமிழர் பெருமான் இராவணன் காண் என்று பாரதிதாசன் ஆரிய எதேச்சதிகாரத்தை தோலுரித்திருக்கிறார். //
இராவணர் எப்பேற்பட்ட புரட்சித்தலைவர் என்று அறிய வால்மீகி ராமாயணத்தில் வரும் ஒரு காட்சி..:
” Placing Ravana, the lord of demons, who was covered with linen, accompanied by blasts of various musical instruments as well as panegyrists singing his the Brahmanas (forming part of the demon’s race, which was apparently divided into four classes, like human beings) stood around him with their faces filled in tears. Lifting up that palanquin, which had been decorated with colorful flags and flowers and taking up blocks of wood, all the demons for their part, with Vibhishana in front, proceeded with their face turned towards the south.”
– http://www.valmikiramayan.net/utf8/yuddha/sarga111/yuddhasans111.htm#Verse109
திராவிட எதேச்சதிகாரி, ’தமிழர் பெருமான்’, லங்காபுரி மாமன்னர் இராவணரை மலைவாழ் பழங்குடிகளான வானரர்கள் உதவியுடன் இராமர் வீழ்த்திய பின் இராவணருக்கு இறுதிச் சடங்கு செய்ய கொண்டு செல்கிறார்கள்.. அசுரகுல பார்ப்பனர்கள் (!) கண்ணில் கண்ணீர் மல்க இராவணருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்..!
கிட்கிந்தா காண்டம், சர்கம் 41, வரிகள் 11,12-ல் குறிபிடப்படும் சேர சோழ பாண்டிய வேந்தர்கள் யாரும் ‘தமிழர் பெருமானுக்கு’ உதவ வரவில்லை என்பதும் ‘தமிழர் பெருமானின்’ பெருமையை எடுத்துக்காட்டும்..! ’தமிழர் பெருமான்’ இராவணன் காண்..: – http://www.valmikiramayan.net/utf8/kish/sarga41/kishkindhasans41.htm#Verse11
வால்மீகி இராமாயணத்தைக் காட்டி அம்பி மேலும் அம்பலப்பட்டு நிற்கிறார்.
இந்துப் பார்ப்பனியம் எப்படி இராவணனை வில்லனாகக் காட்டியது என்பதை அம்பலப்படுத்துகிறது சமணர்களின் இராமாயணம்.
“When we enter the world of Jain tellings, theR2ma story no longer carries Hindu values. Indeed the Jain texts express the feeling that the Hindus, especially the brahmans, have maligned Ravana, made him into a villain. Here is a set of questions that a Jain text begins by asking: ‘How can monkeys vanquish the powerfulrdksasa warriors like RBvana? How can noble men and Jain worthies like Riivana eat flesh and drink blood? How can Kumbhakama sleep through six months of the year, and never wake up even though boiling oil was poured into his ears, elephants were made to trample over him, and war trumpets and conches blown around him? They also say that Ravana captured Indra and dragged him handcuffed into Lanka. Who can do that to Indra? All this looks a bit fantastic and extreme. They are lies and contrary to reason.’ With these questions in mind King srenika goes to sage Gautama to have him tell the true story and clear his doubts. Gautama says to him, ‘I’ll tell you what Jain wise men say. RBvana is not a demon, he is not a cannibal and a flesh eater. Wrongthinking poetasters and fools tell these lies.’ He then begins to tell his own version of the story (Chandra 1970,234).0bviously, the Jain Ram&yana of Vimalasiiri, called Paumacariya (Prakrit for the Sanskrit Padmucarita), knows its Viilmiki and proceeds to correct its errors and Hlndu extravagances. Like other Jainpuranirs, this too is aprutipurfi!lu, an antior counter-~urnnuT. he prefix pruti-, meaning ‘anti-‘ or ‘counter-‘, is a favourite Jain affix.”
Three hundred ramayanas and five examples and three thoughts on translation; A. K. Ramanujan
இவ்விதம் பார்ப்பனியம் தன் வயிற்றுப் பிழைப்பிற்கு குடிகெடுக்கவும் தயங்காது என்பது மேற்கொண்ட ஆதாரத்திலிருந்து தெரிகிறது. பார்ப்பனியமே சொந்தக் காலில் என்றைக்கும் நின்றதில்லை என்பது இராவணனைக் கொன்றதில் இருந்து தெரிகிறது பொழுது அம்பியிடம் இதை எதிர்பார்க்க இயலாது.
கீமாயணம் என்று ஒன்று இருக்கிறதாமே, அதைப் படித்துவிட்டு இங்கு வந்து 10 பக்கத்துக்கு வசை பாடுவதுதானே..
//அசுரகுல பார்ப்பனர்கள் (!) கண்ணில் கண்ணீர் மல்க இராவணருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்..!///
அம்பி அவர்களே!
இங்கு அசுரகுலப் பார்ப்பனர்கள் என்று குறிப்பிடப்படுகிறவர்கள் நீங்கள் நினைக்கிற மாதிரி ‘பிராமணர்கள்’ தான் என்பதற்கு என்ன ஆதாரம், இது தமிழ்ப்பார்ப்பனர்களைக் கூட குறிக்கலாம் அல்லவா?
தமிழில் பார்ப்பனர்கள் என்பது இக்கால வழக்கத்தைப் போன்று வைதீகப் பிராமணர்களைக் குறிப்பதல்ல. முற்காலத்தில் தமிழ்ப்பறையர்களும் பார்ப்பனர்களாக இருந்தனர். உண்மையில் பார்ப்பனர் என்ற பதம் இக்காலத்தைப் போன்றல்லாது, ஆதியில் ஆலயங்களைப் பார்த்துப் பராமரித்த தமிழர்களைத் தான் குறித்தது என்கிறார்கள். (பார்ப்பனர்களை ஆங்கில மொழி பெயர்ப்பு ‘Brahmanas’ என்று கூறுவதால், அது உண்மையிலேயே இக்கால வைதீகப் பார்ப்பனர்களைக் குறிக்கும் என்று வாதாட முடியாது).
மிகப்பழங்காலந்தொட்டு கோயில் காரியங்கள், குறிசொல்வது, கணியம் பார்ப்பது, சவச்சடங்குகள் செய்வது முதலியவற்றைக் கவனித்து வந்தவர்களைத் தான் அக்காலத்தில் பார்ப்பனர் என்றனர். இவர்கள் ஆதித்தமிழர்கள். வடக்கிலிருந்தோ வெளி நாடுகளிலிருந்தோ வந்தோரல்லர். அதைவிட இக்காலத்தில் கூட இறுதிச் சடங்குகளில் வைதீகப் பார்ப்பனர்கள் கலந்து கொள்வதில்லை. இராவணன் காலத்தில் மட்டும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டார்களா? தமிழ்நாட்டில் போலல்லாது, திருப்பொற்சுண்ணம் முழுவதையும் பாடி உரலில் சுண்ணமிடித்து, தேவாரப்பாடல்கள் ஒலிக்க, சைவச் சடங்குகள் எல்லாவற்றுடனும் விரிவாகச் செய்யப்படும் யாழ்ப்பாணத்து இறுதிச்சடங்குகளைக் கூட குருக்கள் எனப்படும் *பார்ப்பனர்களாக மாறிய தமிழர்கள் தான் சவக்கிருத்தியங்களைச் செய்கின்றனர், அதனால் இராவணனின் இறுதிச் சடங்குகளைச் செய்த ‘அசுரகுலப் பார்ப்பனர்கள்’ தமிழர்களாக, குறிப்பாக, தமிழ்ப் பறையர் சாதியினராகக் கூட இருக்கலாம் அல்லவா?
“முந்திப் பிறந்தவன் நான்
முதல் பூணூல் தரித்தவன் நான்
சங்குப் பறையன் நான்
சாதியில் மூத்தவன் நான்” என்கிறது ஒரு தமிழ்ப்பாடல் ஆகவே தமிழன் இராவணனுக்கு இறுதிச் சடங்குகள் செய்த அசுரகுலப் பார்ப்பனர்கள் என்று குறிப்பிடுவது ஆதித்தமிழர்களாகிய பறையர்களையே தவிர இக்காலப் பிராமணர்களை அல்ல என்றும் கருத்துக் கொள்ளலாம் அல்லவா? ஆகவே கவிஞர் பாரதிதாசன் கூறியது போன்றே எம்தமிழர் பெருமான் இராவணனுக்கு அசுரகுலப் பார்ப்பனர்களாகிய தமிழ்ப் பறையர் குலத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதை வான்மீகி இராமாயணம் குறிப்பிடுவது, அண்ணன் செந்தில்குமரனின் கருத்துக்கு வலுச்சேர்க்கிறது என்று தான் எனக்குப் படுகிறது. 🙂
(*வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் இறுதிச்சடங்குகளை பணத்துக்காக வைதீகப் பார்ப்பனர்கள் செய்கின்றனர், அது வேறு விடயம்).
// இங்கு அசுரகுலப் பார்ப்பனர்கள் என்று குறிப்பிடப்படுகிறவர்கள் நீங்கள் நினைக்கிற மாதிரி ‘பிராமணர்கள்’ தான் என்பதற்கு என்ன ஆதாரம், இது தமிழ்ப்பார்ப்பனர்களைக் கூட குறிக்கலாம் அல்லவா? //
அசுர குலப் பார்ப்பனர்களை நான் நம்மவாக்கள் என்று குறிப்பிடுவதாக நினைத்து அவர்களை தமிழ்ப்பார்ப்பனர்களாக இருக்கக்கூடாதா என்கிறீர்கள்.. வால்மீகி ராமாயணம் அவர்களை ராட்சசப் பார்ப்பனர்கள் என்கிறது.. எனவே அவர்கள் தமிழ்/ஆரியப் பார்ப்பனர்கள் என்று வால்மீகி கூறியிருக்கமுடியாது..
சேர,சோழ, பாண்டிய வேந்தர்கள் ஏன் ‘தமிழர் பெருமானுக்கு’ ஆதரவளிக்கவில்லை என்பதற்கு நீங்கள் கருத்து ஏதும் கூறவில்லையே..?!
// “முந்திப் பிறந்தவன் நான்
முதல் பூணூல் தரித்தவன் நான்
சங்குப் பறையன் நான்
சாதியில் மூத்தவன் நான்” //
இது யாழ் வெள்ளாளருக்குத் தெரியாது போலிருக்கிறது.. பறையரை மீண்டும் பார்ப்பனர் நிலைக்கு கொண்டு வர வியாசர் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்..?
// ஆகவே கவிஞர் பாரதிதாசன் கூறியது போன்றே எம்தமிழர் பெருமான் இராவணனுக்கு அசுரகுலப் பார்ப்பனர்களாகிய தமிழ்ப் பறையர் குலத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதை வான்மீகி இராமாயணம் குறிப்பிடுவது, அண்ணன் செந்தில்குமரனின் கருத்துக்கு வலுச்சேர்க்கிறது என்று தான் எனக்குப் படுகிறது. //
சிவபக்தரான வேத பண்டிதர் இராவணர் மேல் வியாசர் போன்ற சைவர்களுக்கு இருக்கும் மரியாதையும், பெருமிதமும் அசுர குலப் பார்ப்பனர்கள் என்று அவர்கள் கருதும் தமிழ்ப் பறையர் குலத்தினர் மீது இல்லாதது ஏனோ..?!
தென்றலார்தான் செந்தில் குமர அவதாரமாக வந்தவர் என்று நான் நம்பவில்லை..
//வால்மீகி ராமாயணம் அவர்களை ராட்சசப் பார்ப்பனர்கள் என்கிறது.. எனவே அவர்கள் தமிழ்/ஆரியப் பார்ப்பனர்கள் என்று வால்மீகி கூறியிருக்கமுடியாது..///
இராமயணத்தில் கூறப்படும் ‘ராட்சசர்கள்’ தமிழர்கள் என்று தான் சமக்கிருதவாதிகள் கூறுகிறார்கள் என்று தான் நான் கேள்விப்பட்டேன். அதிலும் ஒருபடி மேலே போய் நம்மவாக்களின் காமகேடி பீடத்தினர் தமிழர்களைக் குரங்குகள் என்று கூட புத்தகமடித்து வெளியிட்டார்களாம். ஆனால் நீங்கள் என்னடாவென்றால் ராட்சசர் வேறு தமிழர்கள் வேறு என்கிறீர்கள்.
///சேர,சோழ, பாண்டிய வேந்தர்கள் ஏன் ‘தமிழர் பெருமானுக்கு’ ஆதரவளிக்கவில்லை என்பதற்கு நீங்கள் கருத்து ஏதும் கூறவில்லையே..?!///
இக்காலத்தில் கூட கருணாநிதிச்(சோழனும்), ஏனைய முக்கிய தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும் (அரசர்களும்) ஈழத்தில் தமிழன் பிரபாகரன் (இராவணன்) போரில் ஈடுபட்டிருக்கும் போது வடநாட்டு இராமன்களுக்கு சாமரம் வீசிக் கொண்டு, அதாவது பிள்ளை குட்டிகளின் நலன்களுக்காக கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். அதனடிப்படையில் ஈழத்திலுள்ளவர்கள் தமிழர்களே அல்ல, அதனால் தான் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பிரபாகரனுக்கு ஆதரவளிக்கவில்லை என்று கூற முடியாதோ, அதே போன்று ‘தமிழர் பெருமானுக்கு’ சேர சோழ பாண்டியர்கள் ஆதரவளிக்கவில்லை என்பதை ஆதாரமாகக் காட்டி, ராவணன் ஒரு ராட்சசன், சேர சோழ பாண்டியர்களின் இனத்தைச் சேர்ந்தவனல்ல என்று வாதாட முடியாது.
// பறையரை மீண்டும் பார்ப்பனர் நிலைக்கு கொண்டு வர வியாசர் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்..?///
பறையரை பார்ப்பனர் நிலைக்குக் கொண்டு வர தமிழர்களின் கோயில்களிலிருந்து பார்ப்பனர்களை வெளியேற்ற வேண்டும். ஆனால் அது எங்களால் முடியாத காரியம். அதனால் அவர்களின் முழு ஆதரவையும் பெற்ற, அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமைக்கு நாங்கள்- ஈழத்தமிழர்கள் முழு ஆதரவையும் அளிப்போம்.
//சிவபக்தரான வேத பண்டிதர் இராவணர் மேல் வியாசர் போன்ற சைவர்களுக்கு இருக்கும் மரியாதையும், பெருமிதமும் அசுர குலப் பார்ப்பனர்கள் என்று அவர்கள் கருதும் தமிழ்ப் பறையர் குலத்தினர் மீது இல்லாதது ஏனோ..?!///
எனக்கு தமிழ்ப்பறையர் குலத்தின் மீது மரியாதையும் பெருமிதமும் இல்லையென்பது உங்களின் வெறும் கற்பனை. என்னைப் பொறுத்தவரையில், எந்தச் சைவம் எல்லாச் சாதியினரையும்- புலையர் தொடர்க்கம் அரசர் வரை- சேர்ந்த நாயன்மார்கள் அனைவரும் சமமானவர்கள் என்று கூறியது மட்டுமன்றி அவர்களின் சிலைகளை கோயில்களிலும் ஒரே பீடத்தில் வைத்துச் சைவத்தில் சாதிக்கு இடமில்லை, சிவனுக்கு முன்னால் எல்லோரும் சமம் என்று காட்டியதோ, அந்தச் சைவத்தில் தான் பெருமையுண்டு, அந்தச் சைவத்தையும் தமிழையும் தான் பிரிக்கக் கூடாதென்று நான் கூறுகிறேனே தவிர, சைவத்தின் பெயரால், நாய், நரி எல்லாம் நக்கும் தேர்வடத்தை மனிதன் தொடக் கூடாதென்று கூறும் பார்ப்பனீய சைவத்தை அல்ல.
எனக்கு இராவணன் மீது மரியாதையும், பெருமிதமும் இருப்பதற்குக் காரணம், அவன் வடநாட்டு ஆரிய இராமனை இறுதிமூச்சு வரை எதிர்த்தான் என்பதற்காகவே தவிர அவன் வேத பண்டிதர் என்ற பார்ப்பனப் புனைகதையின் அடிப்படையில் அல்ல. எத்தனையோ தமிழர்கள் வேதங்களையும், வடமொழியையும் கற்றவர்கள் அந்த அடிப்படையில் இராவணனும் வேதங்களைக் கற்றிருக்கலாம். அல்லது இராவணன் கற்ற வேதம் தமிழர்களின் மூலமறையாகிய நான்மறைகளாகக் கூட இருக்கலாம் அல்லவா?
//தென்றலார்தான் செந்தில் குமர அவதாரமாக வந்தவர் என்று நான் நம்பவில்லை.//
Oops! பெயரைக் கவனிக்கவில்லை. ‘The artist formerly known as’ செந்தில்குமரன் தான் எழுதினார் என்று தவறாக நினைத்து தான் அவருக்கு வக்காலத்து வாங்கினேன், பெயரை மாற்றியவுடன் அண்ணன்-தம்பி பாசம் போகுமா? 🙂
\\ஆதிதேவருக்கும் சிவனுக்கும் உள்ள ஒற்றுமையை மயிலையார் பேசுகிறார்.அதை சுட்டி காட்டிநான் சில முடிவுகளுக்கு வருகிறேன்.ஆதி தேவரை முதலில் சடைமுடியுடன் வணங்கிவிட்டு பின்பு மழித்தவராக மாற்ற அவசியம் என்ன? எதை மறைக்க?\\
எதை மறைக்கவும் இல்லை. இல்லற சமணம் சிராவக தர்மம்; துறவற சமணம் யதிதர்மம் (ஆதாரம்: சமணமும் தமிழும், மயிலை சீனி). தன் வாழ்நாளில் சிராவக தர்மத்திலிருந்து யதிதர்மத்திற்கு செல்கிற சமணர்கள் தலை மழிக்க வேண்டும். தலை மழிப்பதும் ஒவ்வொரு மயிராக பிடுங்கிக்கொள்ள வேண்டும். இதற்கு லோசம் என்று பெயர். யதிதர்மம் தான் பிற்பாடு தனி சமணபிரிவாக நின்றது. இதில் என்ன மறைத்தலைக் கண்டீர்கள்? இது ஒரு புறம் இருக்கட்டும். பழனி முருகன் ஏன் மழித்து நிற்க வேண்டும்? அவன் ஆசிவகக் கடவுள் என்று சொல்கிறார்கள். உங்களது தர்க்கப்படி ஆதி நாதருக்கு மயிர் இருக்கிறது. சிவனுக்கும் மயிர் இருக்கிறது. ஆகையால் அது சைவ நெறி என்று சொல்கிற பொழுது, மழித்து நிற்கிற பழனி முருகன் சமணக் கடவுளா?
\\ சிவனின் மீயுயர் ஆற்றல் பிற்காலத்தில் சிவன் முழுமுதல் கடவுளாக கட்டமைக்கப் படும் போது புராணிகர்களால் கட்டமைக்க படுகிறது.\\
நன்றி. பார்ப்பனியத்தை ஏற்றுக்கொள்ளும் முதல் பின்னூட்டம் இது! அதே சமயம் இங்கே உங்களது தர்க்கம் பல்லிளிப்பதைக் கவனியுங்கள். ஆதிகாலத்திலே வணங்குகிற மக்கள்தான் கடவுளை சக்திபடைத்தவனாகக் காட்டுவார்கள்! ஆனால் தொன்மையான தமிழர்களோ கடவுளுக்கு யாதொரு சக்தியையும் படைக்கவில்லை. ஆனால் காலம் கடந்து பிற்காலத்தில் புராணிகர்கள் சிவனுக்கு மீயுயர் ஆற்றல் படைக்கிறார்கள்? இது கேலிக்கூத்தாக இல்லையா? காலம் செல்ல செல்ல மனிதனின் அறிவு வளரும் என்றுதான் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் இங்கே பார்ப்பனியத்தால் மனிதன் மூடநம்பிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறான். எதற்காக பிற்காலத்தில் சிவன் மீயுயர் ஆற்றல் படைத்தவனாகக் காட்டவேண்டும்? அது பார்ப்பனியத்தை உட்புகுத்தி மனிதர்களை அடிமைப்படுத்துவதற்குத்தானே ஒழிய வேறெதற்கும் இல்லை என்பது தெளிவாகிறது. இதிலிருந்தே ஆதி தேவரையும் சிவனையும் ஒன்றாகக் கருவது கற்பனை மட்டுமே.
“பழனி முருகன் ஏன் மழித்து நிற்க வேண்டும்?”
மிகத் தவறான செய்தி!!!
பழனி முருகன்சிலை தலையில் முடி,காதில் குண்டலம்,நெற்றி, மார்பில்
ஆபரணங்களுடன் தான் போகர் சித்தரால் செய்யப்பட்டுள்ளது/வடிக்கப்பட்டுள்ளது.
\\ திருமூலருக்கு சிவலோகமே தத்துவம்தான்.\\
இதெல்லாம் உங்கள் மனத் திருப்திக்காக செய்துகொள்கிற மோசடிகள். தொன்மையை விளக்குவதற்கு திருமூலர் எல்லாம் ஒரு ஆதாரமே அல்ல. செய்யுள் நடையே பிற்காலத்தியது. இதை வைத்துக்கொண்டு கிமு 4-5 நூற்றாண்டில் உருவான ஆசிவக மரபுக்கு விளக்கம் தருவது முழுக்க முழுக்க பித்தலாட்டம்.
\\ புத்த மதம் புத்தரின் மறைவுக்கு பிறகு ஹினயானம்,மகாயாணம் என்று இரண்டாக உடைந்தது.ஒன்று புத்தரை கடவுளாக ஏற்றது மற்றது தீர்த்தங்கரராகவே ஏற்றது.ஆதிநாதர் ஆகிய சிவனுக்கு ஏற்பட்டது இதுதான் என்பதை எளிதாக யூகிக்கலாம்.எனவே மீயுயர் ஆற்றலை முக்கியமாக காட்டுவது சிறுபிள்ளைதனமான் வாதம்.\\
புத்தரைக் கடவுளாகக் காட்டி விஷ்ணுவின் அவதாரம் என்று சொன்னது பார்ப்பனியம். அதுபோலத்தான் ஆதி தேவரை சிவனாக்கி, சிவனை நான்மறைக்கு முதல்வனாக்கியதும் பார்ப்பனியம். இதில் எந்த தத்துவமரபும் கிடையாது. வெறும் பார்ப்பனிய நைச்சியம் மட்டும் தான் இருக்கிறது. உங்களது வாதம்தான் சிறுபிள்ளைத்தனமானது.
\\ சிவன்தான் முதல் சித்தன் என்பதை திருமூலரும் குறிக்கிறார்.\\
திருமூலர் குறித்த எமது கருத்தை மேலேயே விளக்கிவிட்டேன். சிவன் தான் முதல் சித்தன் என்பதெல்லாம் பிற்காலத்திய ஏற்பாடு.
\\ சித்தர்கள் புற வழி பூசையை மறுத்து புலன் கடந்த அக அறிதலை வழியுறித்தியவர்கள்.எனவே சித்தர்களை கடவுள் மறுப்பாளர்கள் என்று அடித்து விட முடியாது.\\
தெரியும். உங்களது அகநிலை குறித்த அறிதல் ஏற்கனவே வினவில் மிகவும் பிரபலம்!
\\ அகத்தியர் ஆசிவக சித்தர் என்றே அநேக ஆய்வுகள் சொல்கின்றன—– இதர அகத்தியர்கள் பற்றி நீங்கள்தான் கூற வேண்டும்.\\
அகத்தியர் ஆரியப் பிரதிநிதி. அவரைப் பற்றிய் ஆய்வுகள் இணையத்தில் இருக்கின்றன. சான்றாக ஒன்று. “ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும்” வி,சிவகாமி, http://www.noolaham.net/project/04/330/330.htm
\\ தொல்காப்பியரின் குரு அகத்தியர் என்றும் அவர் எழுதிய நூல் அகத்தியம் என்றும் கருத்து உள்ளது.\\
என் பார்வையில் இது மூடத்தனமான கருத்து! இதை விளக்க விரும்புகிறேன். தொல்காப்பியரின் குரு அகத்தியர் என்று குருகுலம் என்ற ஒற்றைச் சாளரத்தின் வழியே தமிழின் வளத்தை அடக்குகிறார்கள். இது மலினமான பார்வை. முதலில் தொல்காப்பியரின் குரு அகத்தியர் என்று அடைவு கொடுத்து தமிழை வடமொழியோடு தொடர்பு படுத்துகிறார்கள். இரண்டாவது மொத்த இலக்கணமும் எழுதி முடித்தபிறகுதான் பாடலே பாடப்பட்டன என்று சொல்கிறார்கள். சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது உண்மையானால் இலக்கணங்களும் பாக்களும், பாக்களும் இலக்கணங்களும் என்று மாறி மாறி விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கும். மொத்த இலக்கியங்களையும் நாம் இவ்விதத்தில் ஒரே சீராக அடுக்கிவிட முடியும். இது தமிழரின் கடின உழைப்பாகும். தொல்காப்பியத்தின் தொன்மைக்கு நாம் சான்று கொடுக்க தேவையில்லை. ஆனால் அதன் சீரான வளர்ச்சியை விவாதிக்க முடியும். சான்றாக தொல்காப்பியம் கூறுகிற கொற்றவை நிலை இலக்கணத்திற்கு நமக்கு பாடல்கள் கிடைக்கவில்லை. அகத்திலும் புறத்திலும் ஆற்றுப்படை என்பது துறையாகும். ஆனால் துறை என்பதிலிருந்து தனிப்பெரும் பாடலாக இலக்கண வளர்ச்சி பெற்றது. ஏறு, வண்ணம் என்பது பரிபாடல், கலித்தொகைக்கு வழங்குகிற இனிமை சேர்க்கும் இலக்கணம். இது காலத்தால் வளர்ச்சியடைந்து யாப்பருங்கலகாரிகையில் சுரிதம் தாழிசை என்று வளர்ச்சி பெறுகிறது. இது ஒரு நீண்ட நெடிய மரபு. ஆனால் வடமொழிப்பற்றாளர்கள் வடமொழியை சிறப்பித்துக்கூற அகத்தியத்தோடு சேர்த்து உழைப்பை இருட்டடிப்பு செய்கிறார்கள். ஆகையால் இது என்பார்வையில் மோசடியான கருத்து.
\\ சமணம் களப்பிரர் காலத்தில்தான் தமிழில் பரவுகிறது.சங்க காலத்தில் சூரரை கொன்றது சமணரை என்பது உங்களது பித்தலாட்டம்.ஆசீவகம் சைவத்திற்குமான உறவு தத்துவ வளர்ச்சி சார்ந்தது.\\
உங்களது அறியாமைக்கு பித்தலாட்டம் என்று பழிபோடுவது சரியல்ல. சமணம் சங்க காலத்திலேயே உண்டு. சங்ககால புலவர் உலோச்சனார் மற்றும் நிக்கண்டன் கலைக்கோட்டு தண்டனார் ஆகியோர் சமணர்களே. லோசம் செய்ததால் (தலை மழித்ததால்) உலோச்சனார் மற்றும் நிக்கண்டம் என்பதற்கு பற்றற்றவர் என்பது பொருள். வடக்கிருந்து உயிர் துறப்பது சங்ககால மரபுகளுள் ஒன்று. சமணம் சாராத மன்னனும் புலவனுமே இப்படி இருந்திருக்கிறார்கள் (ஆதாரம்: தமிழ் பல்கலைக்கழகம்). ஆசிவகம் என்று அள்ளிப்போட வாய்ப்பிருக்கிறது. அப்படியாவது முயற்சி செய்யுங்கள். பார்ப்பனியத்தை மேலும் அம்பலப்படுத்துவோம். திருப்பரங்குன்று சமணப்படுகை கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது (படிக்க: சமணமும் தமிழும், மயிலை சீனி). நேமிநாதர் எவ்வாறு தமிழகம் வருகிறார் என்பது விளக்கப்பட்டுள்ளது.
சூரனைக் கொன்ற இடத்தில் அவுணர்கள் என்று வருகிற இடமெல்லாம் சமணர்களைத்தான் குறிக்கிறது. இதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை.
\\ சிவ யோகிகள்,சிவ சித்தர்கள் என்று எத்தனையோ துறவிகளை வரலாற்றில் காட்ட முடியும்.பழனி முருகன் சிலையை செய்த போகரும்,புலிப்பாணியும் சிவ சித்தர்கள் என்றே சித்தர் இலக்கியங்கள் சொல்கின்றன.போகர் சமாதி பழனியில் அமைந்துள்ளது. உங்கள் உளரலுக்கு அளவு இல்லாமல் போய்விட்டது.\\
இதிலிருந்து தாங்கள் சொல்ல வருவது என்ன? இந்த வாதம் எதற்காக? சிவனை முதல் சித்தன் என்று சித்தர் மரபு சொல்கிறது என்று சொன்னீர்கள். எனது வாதம் சித்தர் மரபு பிற்காலத்தியது என்பதாகும். இதில் மேற்கண்ட கருத்து மூலமாக என்ன சொல்ல வருகிறீர்கள்?
வானம் பொழிகிறது பூமி விளைகிறது என்று கவிதை உள்ளது அதனால் வானவியல் அறிவு உள்ளது என்கிறார் தமிழ் தாகம்
தமிழன் சக்கரம் கொண்டு பானை செய்தான் அதனால் கணித அறிவில் சிறந்தவன் என்று காமெடி செய்கிறார் தென்றல் .
வேல் வடிவத்தை கொண்டு அளந்து விடுகிறார் வியாசன் .பழனிக்கு போய் முதுகை சுரண்டி ராண்பாக்ஸ்யிடம் கொடுங்கள் , அந்த அற்புத மருந்தை எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்து தருவார்கள்
தமிழ் ஈஸ் கிரேட் லென்குவேஜையா என்கிறார் சூரியன் . என்ன கிரேட் என்றால் தெரியாது ஆனால் கிரேட்
ஆக எதற்காக பெருமை கொள்கிறோம் என்று தெரியாமல் அண்ணன் தம்பியை பாராட்டுவதும் தம்பி அண்ணன் பாராட்டுவதுமாக வீட்டுக்குள்ளேயே பாராட்டி மகிழும் ஒரு பரிதாபத்திற்கு உரிய கூட்டமாகிவிட்டது .
இதோ இதற்கெல்லாம் முன்னோடி நாங்கள் என்று எதாவது ஒரு விசயத்தில் கூற முடியுமா ? என்று கேட்டால் கவிதைகளை காட்டி உளறுகிறார்கள் .
கல் அணையும் , திருக்குறளும் தவிர தமிழ் சமுதாயத்தில் பெருமை கொள்வதற்கு வேறெதுவும் இல்லை .
கல் அணையின் அறிவியல் பற்றி கேட்டு இருந்தேன்
http://arno.unimaas.nl/show.cgi?fid=14861
சித்ரா கிருஷ்ணன் என்பவர் ஆரய்ச்சி செய்த ஐ ஐ டி பேப்பர் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை , தெரிந்தால் சுட்டி கொடுங்கள்
Chitra Krishnan and Srinivas V
Veeravalli, “Tanks and Anicuts of South India. Examples of an Alternative Science of
இன்ஜினியரிங்
திருக்குறளும் தமிழ் சமுதாயத்தில் பெரிய இடம் பெற்று இருந்திருக்கவில்லை …
இராமன் சிரமப்பட்டு நடிக்காதீர்கள். முதலாளித்துவத்தைப் பற்றியே உங்களுக்கும் ஒன்றும் தெரியாது. மென்பொருள் வேலையில் தோல்வியுற்றவருக்கு மம்மி டாடி புத்தகத்தை பரிந்துரைக்கிற அற்பத்தனமே சகிக்கவில்லை. இதில் இலக்கியங்களை எடுத்துக்கொண்டு சாதனையைத் தேடுவது எதற்காக? மங்கள்யானே மல்லாந்து நிற்கிற பொழுது மணிமேகலையில் இருந்து தாங்கள் எதிர்ப்பார்ப்பது எதை?
ஒட்டுண்ணியாக ஒரு வாழ்க்கை! அதற்கு ஆங்கிலம் ஒரு கேடு! உங்களைப் போன்றவர்கள் தினந்தந்தியில் வரும் டெலிவிசன் விருந்து பகுதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அமேசானில் அடக்கவிலை ஐந்நூறு என்று சொன்னாலும் கார்டைத் தேய்த்து கல்ச்சர் என்று பிரேக் டான்ஸ் ஆடுவீர்கள்! உங்களைப் போன்ற லும்பன் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறவர்களுக்கு எது தற்பெருமை தமிழ்பெருமை என்று புரிந்திருக்கவாய்ப்பில்லை. ஏனெனில் சாதனை என்று தாங்கள் சுட்டுவது எல்லாம் வெறும் நுகர்வுக்கலாச்சாரம். இதில் அறிவியல் பார்வை எல்லாம் ஏதும் கிடையாது!
சரக்கு தீர்ந்தவுடன் வருவது தனி நபர் தாக்குதல் , என்னை திசை திருப்ப முடியாது .
நுகர்வு கலாசாரத்தை பற்றி இங்கே எதற்கு பேசுகிறீர்கள் .
எகிப்து என்றால் பிரமிடும் கட்டட கலை , எழுத்து , கணிதம்
மெசபடோமியா என்றால் தொங்கு தோட்டம் , எழுத்து ஆரம்பம் காலெண்டர் ஆரம்பம்
கிரேக்கம் என்றால் கணிதம் ,ஜனநாயகம் , வானவியல் அறிவியல் பிலாசபி
ஆரியம் என்றால் பேஸ் டென் நம்பர் சிஸ்டம் , காலெண்டர் , இந்து மதம்
அரபு என்றால் வானவியல் , கண்ணாடி ,அல் ஜீப்ர, கெமிஸ்ட்ரி , அரபு மதம்
இந்த வரிசையிலே தமிழர் பெருமை எனபது என்ன ?
கூந்தலுக்கு மணமுண்டா என்ற ஆராயிச்சியா ?
எனது பதில் தனிநபர் தாக்குதல் அல்ல இராமன். தாங்கள் தான் அந்த முறையைக் கையாண்டது. ஒரு கட்டத்தில் ஒருமையில் அழைத்துப்பேசியது யார்? தங்களது பார்வை நுகர்வுக் கலாச்சாரம் தான். ஒரு கண்டுபிடிப்பு சமூகத்தில் என்னவிதமான தாக்கத்தைச் செலுத்துகிறது என்பதை வைத்துதான் அறிவை எடைபோட இயலும். ஆரியம் காலண்டர் கண்டுபிடித்ததால் என்ன நிகழ்ந்தது? NCRT புத்தகத்தில் ஆர் எஸ் எஸ் காலிகள் பேண்டு வைப்பதையே இங்கும் வந்து கக்கினால் எப்படி? தமிழ் சமூகத்திலே ஸ்டெம் செல் இருக்கிறது என்று ஒருவர் சொல்கிறார் என்று வைப்போம். அதற்கு பதில் என்ன? இந்தியக் கலாச்சாரத்தில் வறுமையில், உடல்நலத்தில், குழந்தைகள் முகத்தில், வறியவர்களின் வாழ்வில் இக்கண்டுபிடிப்பு தார்மீக ரீதியாக என்ன விளைவுகளை உண்டாக்கி வைத்திருக்கிறது? ஒன்றுமில்லை என்கிற பொழுது இந்தச் சமூகம் இதைச் செய்திருக்கிறது அல்லது செய்யவில்லையே என்று சொல்வதே முதலில் சரியான பார்வை அல்ல.
வட்டத்தின் பரப்பளவு வாய்பாடை வைத்து ஆரியர்கள் மேடை அமைத்ததாக சொல்கிறீர்கள். வட்டத்தின் பரப்பளவு வாய்ப்பாடு, பொருள் உற்பத்தி வளர்ச்சி அடைந்த பொழுது, உற்பத்திச் சாதனம் பெருகிய பொழுது, அடிமைச்சமூகத்திலிருந்து, நிலப்புரத்துவம் மேலெழுந்த பொழுது, நிலப்புரத்துவத்தை முதலாளித்துவம் வீழ்த்திய பொழுது ஏற்பட்ட அறிவுத்திரட்சி. அதைப்போய் ஆரியர்கள் தெரிந்துவைத்திருந்தனர் என்றாலும் அதனால் என்ன பயன்? என்ன சமூக மாற்றம் நிகழ்ந்தது? வாய்ப்பாடு தெரிந்தவன் வட்டமேடை அமைக்கிற பொழுது, வாய்ப்பாடு தெரியாத மக்கள் சக்கரம் கண்டுபிடிக்கிறார்கள் என்றால் இதைப் பெருமைக்காக சொல்லவில்லை. ஆரியமும் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லவருகிறேன். மார்க்ஸ் சொல்வார் இப்படி இந்தியா மோனநிலையில் இருக்கிறது. இங்கே என்ன பெருமை பேச வேண்டிகிடக்கு?
எந்தக் கலாச்சாரத்திலும் அது தமிழாக இருந்தாலும் அறிவியலை பின்னோக்கி தேடுவது சரியான பார்வை அன்று. சான்றாக கல்லணையை கரிகாலன் கட்டினான். ஆகையால் இது தமிழர்களின் கண்டுபிடிப்பு என்று சொல்வதை பெருமையாக கருத அக்காலகட்டத்தின் உற்பத்தி சக்திகளையும் பொருளாயத உறவுகளையும் கணக்கில் எடுக்க வேண்டும். இதன்படி பாராட்டலாம். ஆனால் தொகுபயன் என்ன? முதலாளித்துவ நாடுகளில் பரந்துபட்ட அளவில் நிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விவசாயம் நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவிலே மக்கள் சாதியால் பிரிக்கப்பட்டு நிலங்களில் கொத்தடிமைகளாக இருத்தப்பட்டிருக்கின்றனர். கல்லணை அருமையான தொழிநுட்பம் என்றாலும் நிலங்களிலே கொத்தடிமையாக இருத்தப்பட்ட மக்களுக்கு அதனால் யாதொரு பயனும் விளையவில்லை. காலம் காலமாக நீரைச் சேமிப்பதைப்போலவே நிலவுடமையை தக்கவைத்திருக்கிறார்கள். இவ்விதம் அணை ஒரு சாரருக்கு மட்டும் பயன்படுகிறது; பெரும்பாலான விவசாய மக்கள் கல்லணையை பயன்படுத்த முடியாத நிலை தான் இன்றும் உள்ளது. அறிவியல் மிகுந்திருக்கும் இந்தக் காலகட்டத்திலேயே தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. மேட்டூர் அணையின் கதவு 16லிருந்து வரும் தண்ணீரைச் சேமித்தாலே சேலம் முழுவதும் பயன்பெறும் என்று படிக்கிறோம். முதலாளித்துவமே இதைச் செய்யவில்லை; இதைக் கேள்வி கேட்க உங்களுக்கு துப்பில்லை; மாறாக அறிவியலை பின்னோக்கித் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். இது அருங்காட்சியாக மனநிலை. அங்கு போய் வட்டமேடையை பார்த்துவிட்டு பரப்பளவு என்று பீற்றுவீர்கள். ஆனால் அங்கு காணப்படும் கலாச்சாரம் பணக்காரர்களின் கலாச்சாரம். பீங்கான், பொன் நகை, பளிங்குச் சிலை எல்லாம் பெரும்பாலான மக்கள் புழங்கியிருக்கவில்லை. வெறும் பணக்காரர்கள் மட்டுமே அனுபவித்த ஒன்றைத்தான் எகிப்து என்றும் கிரேக்கம் என்றும் ஆரியம் என்றும் அரபு என்றும் கதைக்கிறீர்கள். உங்களது மூதாதையார்கள் பரோவா மன்னனுக்கு அடிமையாக இருந்து பிரமிடு கட்டினால் பிரமிடு கலாச்சாரம் என்று சொல்வீர்களா?
தஞ்சை கோயில் தமிழ்நாட்டின் கட்டிடக் கலைக்கு சான்று என்று மேட்டுக்குடிகள் கூறுவார்கள். கூலி உழைப்புத் தொழிலாளிகளாக இருக்கிற என் பெற்றோர்களின் வாழ்நிலையை வைத்து ஆராய்கிற பொழுது தஞ்சை பெரியகோயில் என்பது இலட்சணக்கான தொழிலாளர்களை கொன்று குவித்ததன் சின்னமாக இருக்கிறது. இதை யாரால் பாராட்ட முடியும்? கோபுரத்தின் நிழல் விழுவது இல்லை அது சிவில் இன் ஜினியரிங் என்று சொல்வார்கள். கோயிலில் இரத்தக்கறையே வரலாற்று இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறதே பிறகு நிழல் எப்படி விழுகும்? ஏது கலாச்சாரம்? எங்கே இருக்கிறது அறிவியல்?
ஆகையால் அறிவியல் கண்டுபிடிப்பு ஒரு வரலாற்று காலகட்டத்தில் நிகழ்ந்திருப்பின் அதன் புறச்சூழ்நிலைகளை முன்னிறுத்திதான் ஆராய முடியும் என்பது எமது துணிபு. அது யாருக்கானது என்பது கம்யுனிஸ்டுகள் முதன்மையாக கேட்கிற கேள்வி. இதற்கு வர்க்கப்பார்வை என்று பெயர்.
பின் குறிப்பு: உங்களது முந்தைய பின்னூட்டம் மிகவும் மட்டரகமானது. தமிழ் சமூகம் குறித்த மக்களை அப்படி எழுதுவது வன்மம் நிறைந்த பார்வையாகும். மின்சாரத்திற்காக மக்கள் போராடிய பொழுதே இவர்களுக்கு எல்லாம் இலவசமாக வேண்டுமாக்கும் என்று எழுதியவர் தாங்கள். இப்படிப்பட்டவருக்கு மரியாதையுடன் பதில் எழுதத்தேவையில்லை என்பது முடிவாக இருந்த காரணத்தில் தான் கடுமையைக் காண்பித்தேன். எனது மறுமொழி என்பார்வையில் சரியானதே! சொல்லப்போனால் உங்களுக்கு அது பத்தாது. எல்லாமே பிழைப்புவாதமாக இருக்கிற பொழுது பத்தோடு பதினொன்றாக பதில் எழுத வேண்டியதுதான்!
அட அட நான் முதலீட்டு தத்துவத்தை ஆதரிப்பவன் என்பதை வைத்து என்னை மட்டம் தட்டுவதன் மூலமாக தமிழர் பெருமையை நிலைநாட்டுகிரீர் .
கணித அறிவியல் கண்டுபிடிப்புதான் மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்லும் . நீங்கல்சொல்லுகிற சம பங்கு சமுதாயம் என்பதற்கு தமிழ் கவிதைகள் ஒரு வேலை உதவுகின்றனவோ ?
நீங்கள் உங்கள் மொழி வெறி சகதியில் ஊறி திளையுங்கள். வாழ்த்துக்கள்
முற்றும்
முதலீட்டுத் தத்துவத்தை ஆதரிப்பவன் என்று உங்களை நீங்களே கருதிக்கொள்வது கேலிக்கூத்தானது. ஏனெனில் தாங்கள் பேசுவது முதலாளித்துவம் அல்ல. ஆங்கிலத்தில் இதை Comptrolling capitalism என்பார்கள். இதற்கு தரகு முதலாளித்துவம் என்று பெயர். இவர்கள் மூலதனம், முதலீடு என்றெல்லாம் வேலை பார்க்கமாட்டார்கள். எங்கு பொறுக்கித் தின்ன முடியுமோ அங்கு பொறுக்கித் தின்பது. டாடா, ரிலையன்ஸ் போன்ற கம்பெனிகள். இவர்களால் தேசிய வளர்ச்சி என்ற ஒன்று இருக்காது. ஒட்டுப்புற்களை விட கேவலமானவர்கள். முதலாளித்துவத்தை ஆதரிக்கிறவராக இருந்தாலும் இந்தியாவில் புரட்சி தான் நடத்த வேண்டும். இதில் மாற்றக்கருத்து இருப்பின் இங்கேயே உங்களது பிழைப்புவாதம் உங்களுக்கு தெரிந்துவிடும்.
\\ கணித அறிவியல் கண்டுபிடிப்புதான் மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்லும். \\
தலை கீழ் பார்வை இது. மனித குலத்தின் அடுத்த கட்டம் தான் கணித அறிவியல் கண்டுபிடிப்பு. கணித முயற்சிகள் எப்பொழுது முழூவீச்சில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதை வரலாற்றைப் படித்துப் பாருங்கள்.
\\ நீங்கல்சொல்லுகிற சம பங்கு சமுதாயம் என்பதற்கு தமிழ் கவிதைகள் ஒரு வேலை உதவுகின்றனவோ ?\\
மம்மி டாடி புத்தகத்தை விட அதிகமாக உதவுகின்றன!
\\ நீங்கள் உங்கள் மொழி வெறி சகதியில் ஊறி திளையுங்கள்.\\
வயிற்றுப் பிழைப்புக்கு ஆங்கிலம், சப்பான் என்று ஆதரிக்கிற பிழைப்புவாதத்திற்கு மத்தியில் தாய்மொழியை தனது உடலின் ஒரு பாகமாக பார்க்கிறவர்கள் எங்களுக்கு மிகவும் அணுக்கமானவர்கள். நவ உலகத்தின் சிற்பிகள் அவர்கள். இதே தமிழிலே வேலை வாய்ப்பு எல்லாம் இருந்திருந்தால் தாங்கள் தமிழை உயர்வாகவும் பிற மொழியை இழிவாகவும் பார்ப்பீர்கள். தாய்மொழியை நேசிக்கிறவருக்கு இந்த சந்தர்ப்பவாதம் சுட்டுப்போட்டாலும் வராது. இதுதான் மொழிப்பற்றாளர்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம்.
//தஞ்சை கோயில் தமிழ்நாட்டின் கட்டிடக் கலைக்கு சான்று என்று மேட்டுக்குடிகள் கூறுவார்கள். கூலி உழைப்புத் தொழிலாளிகளாக இருக்கிற என் பெற்றோர்களின் வாழ்நிலையை வைத்து ஆராய்கிற பொழுது தஞ்சை பெரியகோயில் என்பது இலட்சணக்கான தொழிலாளர்களை கொன்று குவித்ததன் சின்னமாக இருக்கிறது. இதை யாரால் பாராட்ட முடியும்?//
இலட்சக்கணக்கான தொழிலாளர்களை கொன்று குவித்து தான் தஞ்சை பெரியக் கோவிலை கட்டினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம். சும்மா கூற வேண்டுமே என்பதற்காக அடித்து விடக் கூடாது. இதற்க்கு எதாவது சரித்திரப் பூர்வமான சான்றுகள் இருந்தால் அதன் அடிப்படையில் பேசவும். கோவில் கட்டுமானத்தின் போது சில உயிர்கள் பலியாகி இருக்கும் இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இது கட்டுமானத்துறையில் ஏற்படும் இயல்பான ஒன்று தான். கட்டுமானத் துறையில் இப்பொழுது அதி நவீன தொழில்நுட்பங்கள் வந்த பிறகும் கூட இது போன்ற விபரீதங்கள் நடந்து கொண்டிருக்கிறது எனும் பொழுது 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் உள்ள நிலையை கூறவும் வேண்டுமா என்ன ?
நீங்கள் சுகமாக பயணிக்க சென்னையில் கட்டப் பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தில் மட்டும் இது வரை கிட்ட தட்ட 20க்கும் மேற்ப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இறந்து இருக்கிறார்கள், இது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று தான். அதற்காக நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் இருப்பீர்களா? அவ்வளவு என், இன்று மலையாளிகள் பெரியார் அணையை இடிக்க வேண்டும் என்று எந்த வரலாற்று உணர்ச்சியும் இல்லாமல் கூறுகிறார்களே, அந்த அணையை கட்டி முடிப்பதற்குள் எத்தனை ஆயிரம் தமிழர்களின் உயிர்கள் பறிபோனது என்பதாவது தெரியுமா? மிகப்பெரிய அளவில் ஒரு கட்டுமான எழுச்சி நடைபெறும் பொழுது அங்கு உயிர் இழப்புகள் ஏற்படத் தான் செய்யும். அதற்காக நாம் மாட்டு வண்டியிலா பயணம் செய்வது!!! நீங்கள் ஒன்றுக் கேட்கலாம் அனைவருக்கும் பயணப்படும் ரயில் சேவையும் இந்த கோவிலும் ஒன்றா என்று.? அது,அது அந்த,அந்த காலத்தின் தேவையாகத் தான் இருந்திருக்கிறது. தஞ்சை கோவிலை பொறுத்த வரை அன்றைய காலக்கட்டத்தில் அது வழிபாட்டிற்கு உரிய இடமாக மட்டும் இல்லாமல், அன்றைய சோழ பேரரசின் அதன் மக்களின் பொருளாதாரக் கேந்திரமாகவும் அது விளங்கி இருக்கிறது.வயல் நிலத்தின் மீதான நிர்வாகம், வறியவர்களுக்கு கடன்(வட்டிக்குத் தான்) கொடுப்பது , விவசாய மக்களுக்கு உழு கூலிகள் கொடுப்பது போன்ற அனைத்து விடயங்களும் அங்கு தான் மேற்கொள்ளப்பட்டன.
இது கோவிலா,வழிபாட்டுத் தலமா, வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா, இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். ஒரு விடயம் எழுகிறதென்றால் அதற்க்கு பின்னால் கடுகளவு பயன் இல்லாமலா இருந்திருக்கும்.
கல்லணை பற்றி நீங்கள் கூறி இருந்தீர்கள், கடலில் வீணாக சென்று கலக்கும் நீரினை சேமித்து உழவிற்கு வழி தேடிய அற்புத திட்டம் தானே அது? இதனால் ஒரு சாரார் பயன் பெறாமல் போனர்கள் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இது எனக்கு புரியவில்லை. ஒரு வேளை தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்தவர்கள் தான் கட்டுவித்த இந்த அணையில் இருந்து வரும் நீரை பயன்ப்படுத்தக் கூடாது என்று கரிகாலச் சோழ பெருமானார் கட்டளையிட்டாரா? கல்லணை அடிமைகளை கொண்டு கட்டுவிக்கப்பட்டது தான் இதனை நான் மறுக்கவில்லை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அந்த அடிமைகள் யார்? இங்கிருக்கும் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களா? நிச்சயமாக இல்லை, அந்த 12,000 பேரும் போரில் வென்று சிறைபிடித்து வரப்பட்ட அடிமைகள். 12,000 அடிமைகளை கொண்டு அணையை கட்டுவித்தான் என்பது சோகமான விடயமாக இருந்தாலும், அந்த சோகத்திலும் அற்ப சுகமான விடயம் அந்த அடிமைகள் அனைவரும் இலங்கை தீவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிங்களர்கள் என்பது தான்.
திரு. தென்றல் அவர்களே, இந்த விவாதத்தில் ஆரம்பத்தில் இருந்து எனக்கு பேசுவதற்கு எவ்வளவோ விடயங்கள் இருந்தன!! ஆனால், முருகன் என்ன தான் தமிழர்களின் தொல்க்குடி தெய்வமாக இருந்தாலும் இப்போது முருகன் என்பவர் இந்து மதத்தின் முக்கிய தெய்வ வடிவங்களில் ஒன்று. ஆகவே, ஒரு கிறித்துவ மதத்தை சேர்ந்த பெண்ணான எனக்கு இந்து மதத்தை பார்ப்பனீயம், புரட்டு அது இது என்று விமர்சிக்க எந்த உரிமையும் எனக்கு கிடையாது. தஞ்சை பெருவுடையார் கோவில் என்பது தமிழர்களின் அறிவில் விளைந்த கலை கருவுலம் என்பதால் அதனை மதம் கடந்து ஒரு தமிழ் பெண்ணாக பெருமிதத்தோடு பார்க்கின்றேன். தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்
//தஞ்சை பெருவுடையார் கோவில் என்பது தமிழர்களின் அறிவில் விளைந்த கலை கருவுலம் என்பதால் அதனை மதம் கடந்து ஒரு தமிழ் பெண்ணாக பெருமிதத்தோடு பார்க்கின்றேன். தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.///
செல்வி. றெபேக்கா மேரி,
முகத்திலடித்தது போன்ற அருமையான பதில். தஞ்சைப் பெருவுடையார் கோயில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் தமிழ்மன்னர்களால் கட்டப்பட்ட ஒவ்வொரு கோயிலும் சாதி, மத, பேதமற்று ஒவ்வொரு தமிழனதும் சொத்துக்கள். அவை நமது முன்னோர்களின் அறிவியலின் அடையாளங்கள். அவையெல்லாம் தமிழையும், தமிழர்களையும் எதிர்ப்பவர்களின் கைகளிலிருந்து மீட்கப்பட்ட வேண்டும், அது பார்ப்பனர்களாக இருந்தாலும் சரி வேறெவராக இருந்தாலும் சரி. சாதி மதபேதமற்று தமது முன்னோர்களின் சொத்துக்களிலும், மொழியிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும், பாரம்பரியத்திலும் உரிமை கொண்டாடும், அவற்றை எம்முடையதாக நினைத்துப் பெருமைப்படும் வழக்கம் ஈழத்தமிழர்களிடமும், சிங்களவர்களிடமும் உண்டு. அதை முதல் முறையாக இணையத்தில் ஒரு தமிழ்நாட்டுக் கிறித்தவரிடம் காண்பதும், அதிலும் நீங்கள் ஒரு தமிழச்சி என்ற திமிருடன் பதிலளித்திருப்பதும் உண்மையில் மகிழ்ச்சியை அளிக்கிறது.
நாயன்மார்களின் காலத்தில் தமிழர்களின் கைகளிலிருந்த தமிழ்நாட்டுக் கோயில்கள் விஜயநகர ஆட்சியில் முழுமையாக (சில தமிழை வெறுக்கும்) பார்ப்பனர்களின் கைகளில் போய்விட்டன. அவற்றை மீட்டுத் தமிழாக்க வேண்டும் என்று கூறுவது வேறு, பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையில் அவற்றை இழிவுபடுத்துவது, தமிழர்களின் வரலாற்றை இழிவு படுத்தும் செயல் என்பதை உண்மையான தமிழர்கள் உணர வேண்டும்.
என்னுடைய அனுபவத்தில் தமிழர் என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு, எதையெல்லாம் தமிழர்கள் நினைத்துப் பெருமைப்படுத்துகிறார்களோ அவற்றை சிறுமைப்படுத்துவதும், அதன் மூலம் தம்மை முற்போக்குச் சாதியொழிப்பு, சோசலிஸ்டுக்கள் என்ற மாதிரி படங்காட்ட முயல்கிறவர்களில் பெரும்பாலானோர் தமிழரல்லாத திராவிடர்கள் தான். தமிழர்கள் இன அடிப்படையில் தமிழர்களாக ஒன்றுபட்டால், தமிழினம், தமிழர்களின் வரலாறு போன்ற விடயங்களில் பெருமிதப்பட்டால், அதன் மூலம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் தமிழ்த்தேசியம் வேரூன்றி விடும், திராவிடம், பெரியாரிசம் என்ற போர்வையில் தொடர்ந்து தமிழ்நாட்டுத் தமிழர்களைச் சுரண்ட முடியாது, தமிழர்களைப் பிரித்ததாள முடியாது, தமிழர்களை அவர்களின் சொந்த மாநிலத்திலேயே கையாலாகாதவர்களாக வைத்திருக்க முடியாது, தமிழரல்லாத வந்தான் வரத்தான் எல்லாம் தமிழ்நாட்டு அரசியலில் தலைமை வகிக்க முடியாது என்று அவர்கள் பயப்படுகிறார்கள். இவர்களின் பார்ப்பனீய எதிர்ப்பு , சாதியொழிப்பு எல்லாம் சுயநல நோக்கம் கொண்ட வெறும் பம்மாத்து.
இவர்களில் பலர் என்னைப்போன்ற ஈழத்தமிழர்களை வெறுப்பதற்குக் காரணம் கூட, ஈழத்தில் எவ்வாறு தமிழர்கள் தமிழன் என்ற அடையாளத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கிறார்களோ அதே போன்ற நிலை தமிழ்நாட்டிலும் ஏற்பட்டால், தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் வேரூன்றி விடும், உண்மையான தமிழர்கள் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்ற எண்ணக்கருத்து தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் வேரூன்றி விடும், அதனால் தமிழ்நாட்டில் அவர்களின் செழிப்பான வாழ்க்கைக்கு ஆபத்து வந்து விடுமோ என அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்களின் பார்ப்பன எதிர்ப்பும், சாதியொழிப்புக் கோசமும் கூட தமிழர்களை, தமிழன் என்ற அடிப்படையில் ஒன்றுபடாமல் பிரித்தாளும் நோக்கம் கொண்டது தான், அதைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எப்பொழுது புரிந்து கொள்கிறார்களோ அப்பொழுது தான், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு விடிவு ஏற்படும் அல்லது தமிழ்நாட்டுக்குப் பிழைப்புத் தேடி வரும் ஒவ்வொரு வேற்று மாநிலக் கூத்தாடியும், தமிழ்நாட்டை ஆளக் கனவு காண்பது மட்டுமன்றி, பொருளாதார, ஊடகபலம் கொண்ட தமிழரல்லாதோரின் துணையுடன் தமிழ்நாட்டை ஆளவும் முடியும்.
1. சீனக் கம்யூனிஸ்டுகள் கூடத் தான் சீனப்பெருச்சுவரை தமது முன்னோர்களின் சாதனையென எண்ணிப் பெருமைப்படுகிறார்கள். அதைப் பெருமையுடன் பாதுகாக்கிறார்கள். அதைப்பற்றிப் பீற்றிக் கொள்கிறார்கள் சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்த்தில் கொல்லப்பட்ட ஏழைகளின் எண்ணிக்கையை விடவா தஞ்சைப்பெரிய கோயில் கட்டப்பட்ட போது கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால் தஞ்சை பெரியகோயில் என்பது இலட்சணக்கான தொழிலாளர்களை கொன்று குவித்ததன் சின்னமாக இருக்கிறது. என்று உளறும் போலி வர்க்கப் போராளிகளை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது.
2. இன்று சிலைவணக்கத்தை எதிர்க்கும் எகிப்திய அரபு முஸ்லீம்கள் கூட, தமது முன்னோர்கள் கட்டிய பிரமிட்டுகளையும், கோயில்களையும் நினைத்துப் பெருமிதப்படுகிறார்கள், அவற்றைக் கோடிக்கணக்கான பணச்செலவில் பாதுகாக்கிறார்கள். பிரமிட்டுகள் கட்டப்பட்டபோது கொல்லப்பட்ட ஏழைகளையும், அடிமைகளையும், தொழிலாளர்களையும் விடவா, தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட போது இறந்திருப்பார்கள்? ____________
3. ஐரோப்பாவிலுள்ள பிரமாண்டமான தேவாலயங்களைப் பற்றிப் பெருமிதப்படும் ஐரோப்பியர்கள் தமது முன்னோர்களை அவர்கள் எவ்வளவு கொடிய ஆட்சியாளர்களாக இருந்தாலும் வசைபாடுவதில்லை. ஆனால் ராஜ ராஜ சோழனையும், தமிழர்களின் கட்டிட, தொழிநுட்ப, அறிவியலை உலகுக்குப் பறை சாற்றும் கோயில்களையும், வரலாற்றுச் சின்னங்களையும் சிலர் தூற்றுகிறார்கள், அவர்களைத் தமிழர்கள் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும்.
4. திராவிடியனிஸ்ராக்களும், பெரியாரிசஸ்டுக்களும், பகுத்தறிவு வாதிகளும் ராஜ ராஜ சோழனை வசை பாடுமளவுக்கு கன்னட/தெலுங்கர்களாகிய விஜயநகர ஆட்சியாளர்களை வசைபாட மாட்டார்கள். ஏனென்றால் பல திராவிடவாதிகளுக்கு அவர்களின் முன்னோர்கள் மீது இன்றும் அவ்வளவு பாசம் உண்டு. உண்மையில் ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்குப் பின்னர், கன்னட/தெலுங்கு/மராத்தியர்களின் ஆட்சியின் கீழ்த் தான் தமிழ்நாட்டில் சாதிப்பாகுபாடு வளர்க்கப்பட்டது. வந்தேறிகளுக்கு தமிழர்களின் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, தமிழர்கள் நிலமற்றவர்களாக்கப்பட்டனர். தமிழர்களின் கோயில்களிலிருந்து தமிழ் வெளியேறியது.
5. பிரச்சனை என்னவென்றால், உலகிலேயே மிகச்சிறந்த நிர்வாகிகளில் ஒருவனாகிய ராஜ ராஜ சோழன் தனது ஆட்சியில் நடந்த எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் எழுதி வைத்துப் போனான். அவனுக்குப் பின்னால் ஆண்ட கன்னடர்களும், வடுகர்களும், மராத்தியர்க்ளும் தமிழ்நாட்டைச் சுரண்டி, தமிழர்களைத் தமிழ்நாட்டிலேயே தமது அடையாளத்தை இழந்தவர்களாக்குவதில் குறியாக இருந்தார்களே தவிர, ராஜ ராஜ சோழனைப் போல் ஒன்றையும் எழுதி வைத்து விட்டுப் போகவில்லை.
6. உண்மையில் இன்று தமிழ்நாட்டிலுள்ள சாதிப்பிரச்சனைக்கும், உண்மையான தமிழர்களின் நிலமற்ற இழிநிலைக்கும் கன்னட/வடுக/ மராத்திய ஆட்சியாளர்களைத் தான் வசைபாட வேண்டும். பெரியாரிஸ்டுகளும், திராவிடியனிஸ்ராக்களும் அப்படிச் செய்வதில்லை, ஏனென்றால் அவர்களில் பெரும்பான்மையினரின் முன்னோர்கள் கன்னட/வடுகர்/மலையாளிகள் என்பதால் தான்.
7. ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சியில் சாதிப்பிரச்சனை இருந்தது பற்றிப் பேசுகிறவர்கள், அதற்குப் பின்பு ஆண்ட திராவிடர்கள் (கன்னட/வடுகர்கள்) சாதிப்பிரச்சனையை ஏன் நீக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி அவர்களை ஏன் வசைபாடுவதில்லை என்ற கேள்விக்கு இதுவரை யாரும் பதில் கூறியதில்லை?.
\\ சீனக் கம்யூனிஸ்டுகள் கூடத் தான் சீனப்பெருச்சுவரை தமது முன்னோர்களின் சாதனையென எண்ணிப் பெருமைப்படுகிறார்கள். அதைப் பெருமையுடன் பாதுகாக்கிறார்கள். அதைப்பற்றிப் பீற்றிக் கொள்கிறார்கள்\\
வியாசன் போன்ற மேட்டுக்குடிகளுக்கு, நிலப்புரபுக்களுக்கு எதிரான வர்க்கபோர் என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சீனப்பெருஞ்சுவர் கின் வம்ச காலத்தில் கட்டப்பட்டபொழுது பெரு அளவிலான விவசாயக்கிளர்ச்சி செய்தவர்கள் சீன விவசாயிகள். இலட்சணக்கான மக்கள் இறக்கிறார்கள் என்கிற பொழுது மன்னர் குலத்திற்கு செருப்படி கொடுத்த விவசாயிகளின் வர்க்க உணர்வு வியாசன் போன்ற புல்லுருவிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதே இராச இராசன் கட்டிய மதில் சுவரில் தன்னிடம் இருந்து பிடுங்கப்பட்ட நிலத்தை எதிர்த்துபோராடிய தேவதாசி பெண்கள் தற்கொலை செய்த நிகழ்வும் வியாசன் போன்றவர்கள் மறைத்துவிட்டு தான் தமிழ் கலாச்சாரம் என்பார்கள்!
1987லிலே யுனஸ்கோ சிதிலமடைந்த சீனப்பெருஞ்சுவரை பாரம்பரிய அடையாளமாக அறிவித்த பொழுது மேற்குலக நாடுகள் சீனக்கம்யுனிஸ்டுகள் சீனப்பெருஞ்சுவரை காக்கத் தவறிவிட்டார்களே என்று கண்ணீர் விட்டு கதறினார்கள். சீன தேசியவாதிகள் தனது நிலப்புரப்புகளின் சின்னம் போரிலும் நிலநடுக்கத்திலும் அழிந்து போனதற்கு கம்யுனிஸ்டுகளின் மீது பழிபோட்டு தப்பித்தார்கள். ஆனால் இங்கே வியாசனோ சீனப்பெருஞ்சுவரை கம்யுனிஸ்டுகள் தங்களின் கலாச்சாரம் என்று பீற்றிக்கொண்டார்கள் என்று திருப்புகழ் பாடுகிறார். வியாசனின் நாடகம் பல்லிளிக்கிறது. வேசத்தை ஒழுங்காக போடவும்.
\\ இன்று சிலைவணக்கத்தை எதிர்க்கும் எகிப்திய அரபு முஸ்லீம்கள் கூட, தமது முன்னோர்கள் கட்டிய பிரமிட்டுகளையும், கோயில்களையும் நினைத்துப் பெருமிதப்படுகிறார்கள், அவற்றைக் கோடிக்கணக்கான பணச்செலவில் பாதுகாக்கிறார்கள்.\\
உண்மையில்லையா. அரபு முஸ்லீம்களின் மேட்டுக்குடியை பார்வையை சுட்டுகிற அதே வேளையில் இந்திய முஸ்லீம்களின் பங்களிப்பையும் எடுத்துக்கூற வாய்ப்பளித்திருக்கிறார் வியாசன். பாபரும், திப்பு சுல்தானும் இந்தியக் கோயில்களை கட்டிக்காக்கிற பொழுது, மாராட்டிய பேஸ்வாக்கள் ஆங்கிலேயனுக்கு மாமா வேலை பார்த்து பாரதமாதவைப் கூட்டிக்கொடுத்தவர்கள் இல்லையா? இந்துத்துவக் காலிகளின் வரலாற்றுத் துரோகம் அத்துனை சிறியதா என்ன?
\\ ஐரோப்பாவிலுள்ள பிரமாண்டமான தேவாலயங்களைப் பற்றிப் பெருமிதப்படும் ஐரோப்பியர்கள் தமது முன்னோர்களை அவர்கள் எவ்வளவு கொடிய ஆட்சியாளர்களாக இருந்தாலும் வசைபாடுவதில்லை.\\
சோசலிச நாடுகளில் தேவலாயங்கள் கூட்டுப்பண்ணை ஸ்தாபனங்களின் அலுவல் கூடமாக, பள்ளிகளாக, கல்லூரிகளாக இயங்கின. உழைக்கும் மக்கள் மதத்தைக் காறித்துப்பிய காலம் அது! ஆனால் இன்றைக்கும் போப்பின் திருச்சபை பாசிஸ்டுகளின் சொத்தைப் பாதுகாக்கிற பினாமியாக இருக்கிறது. இன்றைக்கும் தஞ்சை தேவஸ்தான நிலங்களில் ஒடுக்கபட்ட மக்கள் கொத்தடிமைகளாக இருக்கின்றனர். ஆதிக்க சாதிகளின் பெரிய கோயில் பற்றும் இத்தகையதுதானே!
\\ உண்மையில் ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்குப் பின்னர், கன்னட/தெலுங்கு/மராத்தியர்களின் ஆட்சியின் கீழ்த் தான் தமிழ்நாட்டில் சாதிப்பாகுபாடு வளர்க்கப்பட்டது. வந்தேறிகளுக்கு தமிழர்களின் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, தமிழர்கள் நிலமற்றவர்களாக்கப்பட்டனர். தமிழர்களின் கோயில்களிலிருந்து தமிழ் வெளியேறியது.\\
முதன் முதலில் சமஸ்கிருதத்தை கோயில் கல்வெட்டிற்குள் கொண்டு போனவன் இராசஇராசன். வந்தேறிகளுக்கு காஷ்மீர் பார்ப்பனர்களுக்கு சதுர்வேதி மங்கலம் எழுதிக்கொடுத்ததும் இராச இராசன். களப்பிரர் கால தமிழ் மக்களின் நிலங்கள் இராச இராசன் காலத்தில் தான் பிரிக்கப்பட்டு வெள்ளான் வகை என்று மேட்டுக்குடி வெள்ளாளர்களுக்கும், தேவஸ்தானம் என்று கோயில் பெயரில் வரி பிடுங்குவதற்கும், பிரம்மதேயம் என்று பார்ப்பனர்களுக்கு அள்ளிக்கொடுக்கவும், ஜீவிதம் என்று பள்ளர்களையும் பறையர்களையும் அடிமைப்படுத்தவும் ஆரம்பிக்கபப்ட்டது சோழன் காலத்தில் தான். கன்னட தெலுங்கு மராத்தியர்களின் கால கட்டத்திலும் பொறுக்கித் தின்றது அதே ஆதிக்க வெள்ளாள-பார்ப்பனக் கூட்டம் தான். அன்றைக்கும் இன்றைக்கும் உழைப்பை புறங்கையால் நக்கிவிட்டு தமிழர் வேசம் போடுகிறார்கள் ஒட்டுண்ணிகள்.
\\ பிரச்சனை என்னவென்றால், உலகிலேயே மிகச்சிறந்த நிர்வாகிகளில் ஒருவனாகிய ராஜ ராஜ சோழன் தனது ஆட்சியில் நடந்த எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் எழுதி வைத்துப் போனான்.\\
எவ்வளவு வரி கொடுக்க வேண்டுமென்றும் ஹிரண்ய கர்ப்பம் தானம் செய்ததையும் எழுதி வைத்தான். வரிக்கு இறை என்று பெயர். சைவம் என்ற பெயரில் வரி பிடுங்கி விவசாயிகளை சிவத்துரோகி பட்டம் கட்டியதை எழுதி வைத்தான். கோயபல்சு ஹிட்லருக்கு நிர்வாகி என்பதைப்போல இராச இராசன் பார்ப்பனியத்திற்கும் ஆதிக்க சாதிகளுக்கும் திருவோலை அனுப்பிய மக்களைச் சுரண்டிய மன்னன். மாமன்னன்.
\\ உண்மையில் இன்று தமிழ்நாட்டிலுள்ள சாதிப்பிரச்சனைக்கும், உண்மையான தமிழர்களின் நிலமற்ற இழிநிலைக்கும் கன்னட/வடுக/ மராத்திய ஆட்சியாளர்களைத் தான் வசைபாட வேண்டும்.\\
இவர் ஒரு பக்கம் கன்னட, வடுகர், மலையாளிகளுக்கு மூத்திர பரிசோதனை செய்து கொண்டே தமிழர்களின் கலாச்சாரத்தை நாயும் சீண்டாத புளிச்ச மாவு என்பார். இவருக்கும் தமிழுக்கும், தமிழர் கலாச்சாரத்திற்கும் பொறுக்கித் தின்னும் அளவிற்கு மட்டும் தான் தொடர்பு.
\\ ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சியில் சாதிப்பிரச்சனை இருந்தது பற்றிப் பேசுகிறவர்கள், அதற்குப் பின்பு ஆண்ட திராவிடர்கள் (கன்னட/வடுகர்கள்) சாதிப்பிரச்சனையை ஏன் நீக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி அவர்களை ஏன் வசைபாடுவதில்லை என்ற கேள்விக்கு இதுவரை யாரும் பதில் கூறியதில்லை?.\\
சாதிப்பிரச்சனையை நீக்க வேண்டுமென்றால் ஆதினங்கள், மடங்கள் கைகளில் இருக்கிற நிலங்களை கோயில் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். சொத்தைக் காப்பதற்காக சைவம் என்ற பெயரில் மக்களை உறிஞ்சி வாழும் கூட்டம் இனங்கண்டு களையப்பட வேண்டும். அப்படிப்பட்ட கைக்கூலிகள் வியாசனிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறார்கள். பார்ப்பனிய அடிமைகளாக தமிழ் மக்களின் துரோகியாக இவர்கள் இருந்துவிட்டு பதில் எதிர்பார்க்கிறார்கள். வெட்கக் கேடு!
உங்களது மறுமொழிக்கு மாற்றுப் பார்வை கீழ்க்கண்ட பதிவில் இருக்கிறது. படித்துப் பரிசீலியுங்கள்.
இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!! https://www.vinavu.com/2011/01/05/raja-raja-cholan/
இதில் கீழ்க்கண்ட உட்தலைப்புகள் உள்ளன.
1. அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரிய கோவில்!
2. நாட்டு மக்களைச் சுரண்டிய பெரிய கோவில் பொருளாதாரம்!
3. பார்ப்பனிய நிலவுடமை ஆதிக்கத்தின் காலம்!
4. சேரிகள், அடிமை விபச்சாரம்: ராஜராஜ சோழனின் சாதனை!
5. பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்!
6. களப்பிரர் காலம்: உழைக்கும் மக்களின் பொற்காலம்!
7. சோழர் காலம் பொற்காலமா, பார்ப்பனிய மீட்சிக் காலமா?
—————————————-
கரிகாலன் சிங்கள அடிமைகளை வைத்து அணையைக் கட்டியது தாங்களே அற்ப சுகமான விடயம் என்று சொல்லிவிட்டீர்கள். இன்னொரு தகவலையும் சேர்த்துச் சொல்ல விழைகிறேன். கரிகாலன் காலத்தில் சோழ நாடு எங்கிருந்து எங்கு வரை இருந்தது? அந்த ஆட்சியில் ஒரு வேளை ஏழைக்குடியானவன் குடும்பத்தில் பிறந்திருந்தால் சிங்களவன் என்றாலும் தமிழன் என்றாலும் ஒரே நிலை தான். பார்ப்பன மேட்டுக்குடி ஆதிக்க சாதிகளில் பிறவாது இருந்திருந்தால் ஒரு வேளை அடிமையாக வாழாது இருந்திருக்கலாம்.
—
கேரளத்தில் பெரியாற்றில் உள்ள பேபி அணையை இடிக்க வந்தது ABVP என்னும் ஆர் எஸ் எஸ் இந்துத்துவக் கைக்கூலிகள். தமிழ் நாட்டில் தமிழன் என்ற போர்வைக்கும் இராசந்திரனுக்கு பேரணி சென்றவர்களும் இந்துத்துவக் கைக்கூலிகள். கன்னடத்தில் பாரதிய கிசான் என்று ஆர் எஸ் எஸ் விவசாயிகளுக்குள்ளும் ஊடுருவி வேலை பார்த்துவருகிற கைக்கூலி கூட்டம். தமிழ்நாட்டிலும் இந்தப் பிரிவு உண்டு. இந்த மூன்று கூட்டத்திற்கும் வரலாற்று உணர்ச்சி இல்லை என்பதை ஏற்கிறேன். இதைத் தாண்டிய இனவெறியர்களை முறியடிக்க வேண்டிய தேவையும் உள்ளது.
———————–
\\ முருகன் என்ன தான் தமிழர்களின் தொல்க்குடி தெய்வமாக இருந்தாலும் இப்போது முருகன் என்பவர் இந்து மதத்தின் முக்கிய தெய்வ வடிவங்களில் ஒன்று. ஆகவே, ஒரு கிறித்துவ மதத்தை சேர்ந்த பெண்ணான எனக்கு இந்து மதத்தை பார்ப்பனீயம், புரட்டு அது இது என்று விமர்சிக்க எந்த உரிமையும் எனக்கு கிடையாது.\\
இந்த வாதம் முற்றிலும் தவறானது. பார்ப்பனிய இந்து மதம் ஒரு போதும் எந்த மக்களுக்கும் பொதுவானது அல்ல. அது மதமாக என்றைக்கு நின்றதில்லை. ஒவ்வொரு தொல்குடி சமூகத்தின் கலாச்சாரத்தை அழித்து பார்ப்பனியத்தின் கீழ் இருத்துவதற்கு மதம் என்ற தகுதி இல்லை. ஆகவே முருகன் தொல்குடி தெய்வமாக இருக்கிற பொழுது, களவாடப்பட்ட கலாச்சாரத்தை தட்டிக்கேட்க அனைத்து மதத்தவரும் முன்வரவேண்டும்.
சரியான கருத்து.இந்துத்துவ,பார்ப்பனியவாதிகள் தங்கள் மீதான விமரிசனங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் எதற்கெடுத்தாலும் கிருத்தவத்தின் மீதும் இசுலாம் மீதும் கவனத்தை திருப்ப முயல்கிறார்கள்.
இந்த விவாதத்தில் கூட ராமன் பார்ப்பனியம் வந்ததால் முருகன் சுப்ரமணியாகி இன்று வரை உயிரோடு இருக்கிறான்.பிற மதங்கள் வந்திருந்தால் கொல்லப்பட்டிருப்பன் என்கிறார்.இப்படி பிற மதங்களை அவர்கள் இழுக்கும்போது அம்மதத்தவர்களும் விவாதத்தில் பங்கு கொள்வதில் தவறில்லை.
ஒரு வகையில் இசுலாமிய கிருத்தவர்கள் யோக்கியர்கள்.உன் கடவுள் வேறு.என் கடவுள் வேறு என்று சொல்லியே தமிழ் மக்களை தங்கள் மதத்தின் பால் அழைத்திருக்கிறார்கள்.
உன் கடவுளும் என் கடவுளும் ஒன்றுதான்.என் கடவுளின் விந்திலிருந்து அல்லது கருப்பிண்டத்திலிருந்து வந்தவன்தான் உன் கடவுள் என்ற பார்ப்பனியத்தின் நைச்சியத்திர்கு உண்மையை சொன்னவர்கள் எவ்வளவோ மேல்.
தோழர் தென்றல் அவர்களின் சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதாவது அவற்றைப் பற்றி விவாதிக்கும் ஆவலில் தான் நான் என்னுடைய ரோசத்தை தூக்கி ஒரு மூலையில் போட்டு விட்டு மீண்டும் இங்கு வந்தேன். அதற்கிடையில் திப்பு சுல்தானும், தென்றலும் சேர்ந்து அவர்களின் பொய்க்குற்றச்சாட்டுகளுக்கும் புனைகதைகளுக்கும் என்னை விளக்கமளிக்க வைத்து நேரத்தை வீணாக்கி விட்டார்கள். 🙂
பின்னூட்டம் 13.1.1 இல் தோழர் தென்றல் அவர்களில் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
உண்மையில் திரு தோழர் தென்றலில் வாதங்களையும் அவர் தரும் ஆதாரங்களையும் பார்க்கும் போது ஒரு சில பகுத்தறிவாளர்கள், பெரியாரிஸ்டுக்களின் கருத்துக்கள் எல்லாம் எப்பொழுதுமே சரியானவை, அல்லது நடுநிலையானவை என்று அவர் நினைத்துக் கொள்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. விடுதலை, முரசொலியில் வரும் கட்டுரைகளை எல்லாம் முருகனையும் சைவத்தையும் பற்றிய விவாதத்துக்கு ஆதாரம் காட்டுவது பகுத்தறிவுக் கருத்துக்களுக்கு வலுச்சேர்க்க காமகேடிகளின் கருத்துக்களை மேற்கோள் காட்டுவது போன்றது தான்.
தோழர் தென்றல் ஆதாரமாகக் குறிப்பிட்ட உண்மை(unmaionline) என்ற இணையச் சஞ்சிகையில் “சரவணன் யார்” என்ற தலைப்பில் வெளிவந்த கருத்து தவறானது எனபது எனது கருத்தாகும். உண்மையில் வடமொழிச் சொல் சிரவணனுக்கும் தமிழ்ச் சரவணனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதிலுள்ள வாதங்கள் எல்லாமே மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் செயல்.
நான் கீழே குறிப்பிடும் கருத்துகளை தமிழ்ச்சான்றோர்கள் சிலர் ஆசீவகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து காணொளிகளாகவும் வெளியிட்டுள்ளனர். அத்துடன் ஆசீவகத்தின் வரலாறு அறிந்த கற்றோர் (பேராசிரியர்)களுடன் கேட்டும், படித்தும் அறிந்தவற்றின் அடிப்படையில் எனது கருத்து என்னவென்றால்:
1. சமணத்துக்கும், பெளத்தத்துக்கும் முன்னோடியாகிய ஆசீவகநெறி தமிழ்மண்ணில் தான் தோன்றியது. தமிழ்மண்ணிலிருந்து தான் ஆசீவகமும் அதன் கிளையாகிய சமணமும் கர்நாடாகாவிலுள்ள சமணவெள்ளைக்குளத்தினூடாக (சிரவணபெலகோலா) வடக்கே பரவியதேயல்லாமல், வடக்கிலிருந்து தமிழ்மண்ணுக்கு வரவில்லை.
சமண (தமிழ்) > சிரவண (வடமொழி)
பெலே (கன்னடம்) > வெள்ளை (தமிழ்)
கொலா (கன்னடம்) > குளம் (தமிழ்)
2. முருகனின் பெயராகிய சரவணனுக்கும் , சிரமண அல்லது சிரவண என்ற சொல்லுக்கும் எள்ளளளவு தொடர்பு கூடக் கிடையாது.
அம்மணம் (naked) > அம்மணர் > அமணர் > சமணர்
(அ – ச ஒலி தமிழில் மாறி வருவது மரபு எடுத்துக்காட்டாக:
அம்மணம் > சம்மணம்
சமணர் என்ற தமிழ்ச் சொல் ஆரியர்களின் நாவில் (வடமொழியில்) சிரமணர் ஆகியது
சமணர் > சிரமணர்
மதங்கம் > மிருதங்கம்
மெது > மிருது
தயவு செய்து காணொளியைப் பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=hwRBmFYFzug&index=42&list=UUKO4ibaiDIngnd9Y8qe5mbg
3. ஷரஹனா என பாலிமொழியில் அழைத்தது தான் சரவணா என்றாகியது என்பதும் ஆதாரமற்ற வெறும் ஊகம் தான்.
4. ஷ்ராவன் என்றால் இளைஞர் என்று சமஸ்கிருதத்தில் பொருள்படும் என்பதும் உண்மையல்ல. கீழேயுள்ள இணைப்பில் சம்ஸ்கிருத அகராதியைக் காணலாம். அதை நீங்களே தேடிப்பார்க்கலாம்.
http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=sravaN&trans=Translate&direction=AU
5. இந்த dictionary சிலவேளை பிழையாக இருக்கலாம் என்பதால் இதற்காகவே நான் இன்றைக்குக் கோயிலுக்குப் போய் சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற ஐயர் ஒருவரையும் பொருள் கேட்டேன். ஸ்ராவன் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்குப் பல பொருள் உண்டு (உதாரணமாக ஆடி மாதம்) ஆனால் ஸ்ராவன் என்றால் சமஸ்கிருதத்தில் இளைஞன் அல்ல. இது தவறு, சமஸ்கிருதத்தில் ஷ்ராவன் என்றால் இளைஞன் என்று தென்றல் அவர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தால். அதையும் ஆராயலாம்.
6. கம்பராமாயணத்தில் சிராவண் (தமிழில் சிரவணன்) என்ற கதாபாத்திரமுண்டு. அதற்கும் சமணத்துக்கும் , சரவணனாகிய தமிழன் முருகனுக்கும் உண்டென்பது Nathan (நேதன்) என்று ஆங்கிலத்திலும் நாதன் என்று தமிழிலும் பெயரிருப்பதால், ஆங்கில நேதன்களின் முன்னோர்கள் எல்லாம் தமிழ்நாட்டிலிருந்து தான் போனார்கள் என்று கூறுவது போன்றது.
7. சரவணன் என்பது சரவணை என்ற நாணல் புல் நிறைந்த தடாகத்தில் முருகன் சித்தர் குழந்தை வடிவில் கண்டெடுக்கப்பட்டார் எனப் பழந்தமிழர்கள் நம்பியதால் ஏற்பட்ட பெயர். அதற்கும் சிரவண என்ற (தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்டு, சமக்கிருதமாக்கப்பட்ட) வடமொழிச் சொல்லுக்கும் தொடர்பு கிடையாது.
தொடரும்:
நண்பர்களுக்கு, நான் பணிநிமித்தம் வெளியில் செல்வதால் 3வாரங்களுக்கு விவாதத்தில் பங்குகொள்ள முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.இந்த விவாதம் 1000 பின்னுட்டங்களை அடைய அந்த பராச புத்திரனின் ஆசியும்,பொதிகை மழை புறப்படுவோனின் ஆசியும் உண்டு என்று கூறி விடைபெறுகிறேன்.நன்றி
அம்பி காதில் விழாத விடயத்தை அல்லது விழுந்தும் கண்டும் காணாத விடயத்தை மீண்டும் மீண்டும் திரும்ப கேட்பது தவறு இல்லையே ! அவதாரமும் ,அரிதாரமும் புசுவது என்பது புராண புளுகு பார்பன கடவுளின் வேலையல்லவா அம்பி ? என் பெயர் தமிழ் என்று இருக்கும் போது அதனுடன் தமிழ் பற்றும் சேரும் போது தமிழுக்கு தாகம் வருவது இயல்புதானே ? தமிழ் மீது புராண புரட்டு அம்பிக்கு இருக்கும் காட்டம் இயற்க்கை தானே ! சரி சரி முதலில் தென்றல் மீதான உம் குற்ற சாட்டுக்கு ஆதாரம் கொடுமையா !//இதற்கே 2 முறை கேட்டு பதறுகிறீர்கள்.. ஆதாரத்தை காட்டினால் என்ன செய்வீர்களோ.. புது அவதாரம் எடுக்க வேண்டியதுதான்.. கட்டாயம் காட்ட வேண்டுமென்றால் காட்டுகிறேன்..//
அம்பி,
திருமுருகாற்றுப்படை புறப்பாடல் ஆகும் என்பது தெரியாமல் அதனை அகப்பொருளில் சேர்கின்ற அம்பி ,திருமுருகை அகம் என்று சற்று முன்னே உளறியவர் , அடுத்த வரியிலேயே தமிழ் கலாச்சாரத்தில் எவரையும் எந்த தெய்வமும் தண்டிப்பதில்லையா என்று கேட்டு திருமுருகுடன் புறத்துக்கு தாவும் அம்பி ,வீ.அரசுவை பார்த்து நக்கல் ,நய்யாண்டி செய்யும் அம்பி சங்க இலக்கியத்தில் புராணப்புளுகு இருப்பதை ஏற்கின்ற அம்பி . [அதே திருமுருகு-புராணப்புளுகை என்னிடம் முருகன் பிறப்புக்கு ஆதாரமாக காட்டுவது தான் அப்பியின் பார்பன மூளை !] இநத தவற்றை எல்லாம் ஏற்காத பார்பனிய சிந்தனை மிளிரும் அம்பி ,இதற்கு எல்லாம் சிறிதும் மனம் வருந்தாத அம்பி ….!
ஆனால் தென்றல் ,அவரே தவறு என்று ஏற்ற கருத்தை நான் எதற்கு மீண்டும் விமர்சிக்க வேண்டும் அம்பி ? உமது கேள்வியே அறிவிலி தனமாக இல்லையா அம்பி ? சிரவணன் தான் சரவணன் என்ற கருத்தில் இருந்து பின்வாங்கும் தென்றலுக்காவது அறிவு நாணயம் இருகின்றது.
ஆனால் முருகனை வடமொழி சுபிரமணியன் ஆகிய அம்பிகளுக்கும் ,அம்பியின் பார்பன முதைகளுக்கும் ,முருகனுக்கு பூனுல் போட்டு பார்பனிய ஆகம கடவுளாக்கிய பார்பன விச கிருமிக்ளுக்கும் [வைரஸ் ] இதே அறிவு நாணயம் இருக்கா அம்பி ? முருகன் ஆரிய பார்பன ஆகம விதிகளில் இருந்தும் ,பூனுலில் இருந்தும் விடுதலை பெறுவது என் நாள் ?
//பின்னூட்டம் 13.1.1-ல் தென்றல் பெருமானாரே ஒத்துக் கொண்டிருப்பது தங்கள் கண்ணில் பட்டிருக்காதே..: ”சிரவணன் தான் சரவணன் என்றால் சிரவணன் கையில் வேல் எப்படி என்ற கேள்வி நியாயமானது. சிரவணன் கடவுள் என்ற அடிப்படையில் அணுகியவிதம் சரியல்ல என்பதை ஏற்கிறேன்;”//
// ஆனால் தென்றல் ,அவரே தவறு என்று ஏற்ற கருத்தை நான் எதற்கு மீண்டும் விமர்சிக்க வேண்டும் அம்பி ? உமது கேள்வியே அறிவிலி தனமாக இல்லையா அம்பி ? சிரவணன் தான் சரவணன் என்ற கருத்தில் இருந்து பின்வாங்கும் தென்றலுக்காவது அறிவு நாணயம் இருகின்றது. //
அவர் மேற்படி கருத்தைக் கூறி 3 நாட்கள் கழித்து பின்வாங்கியது வரை நீங்கள் பம்மிக்கொண்டிருந்ததை அவர் முழுமையாக நம்பவில்லை போலிருக்கிறது.. திரைப்படத்தின் கடைசியில் வரவேண்டிய காமெடி போலீசு 118 இடையில் வந்துவிடுவாரோ என்று அவர் சந்தேகப்பட்டிருக்கலாம்..
அம்பி, நீர் ,தென்றல் சிரவணன் தான் சரவணன் என்று கூறியதற்கு ஆதாரம் கொடுத்தது November 30, 2014 at 4:17 am .மணிக்கு. நான் அதற்கு பின்னுட்டம் 52ல் பதில் கொடுத்தது November 30, 2014 at 8:09 am மணிக்கு . காலையில் 7 மணிக்கு தான் உமது பின்னுட்டம் வினவால் வெளியிடப்பட்டது. ஒருமணி நேரத்தில் எமது பதில் உமக்கு அளிக்கபட்டு உள்ளதை கவனிக்காமல் போலீசு 118 இடையில் வந்துவிடுவாரோ என்று எல்லாம் பெனாத்தக்கூடாது அம்பி ! அது செரி ,தென்றலின் விவர பிழைக்கு அவர் திருத்திக்கொண்ட போதும் எக்கி எக்கி குதிக்கும் நீர், என் பின்னுட்டத்தில் [52] நான் காட்டியுள்ள குற்றத்துக்கு என்ன தீர்வு காண போகின்றிர்கள் ? மீண்டும் கேட்கின்றேன் :
தென்றலுக்காவது அறிவு நாணயம் இருகின்றது அதனால் அவர் விவர தவற்றை[சிரவணன் தான் சரவணன் என்ற கருத்தை] திருத்திக்கொண்டார். ஆனால் முருகன் மீதான பார்பன புரட்டு கசடுகளை நீக்க ,ஆகமத்தை நீக்க மற்றும் முருகனின் பார்பன புனுலை அறுக்க அம்பிக்கும் அவர் தம் முதைகளுக்கு அறிவு நாணயம் இருகின்றதா?
// அம்பி, நீர் ,தென்றல் சிரவணன் தான் சரவணன் என்று கூறியதற்கு ஆதாரம் கொடுத்தது November 30, 2014 at 4:17 am .மணிக்கு. நான் அதற்கு பின்னுட்டம் 52ல் பதில் கொடுத்தது November 30, 2014 at 8:09 am மணிக்கு . காலையில் 7 மணிக்கு தான் உமது பின்னுட்டம் வினவால் வெளியிடப்பட்டது. ஒருமணி நேரத்தில் எமது பதில் உமக்கு அளிக்கபட்டு உள்ளதை கவனிக்காமல் போலீசு 118 இடையில் வந்துவிடுவாரோ என்று எல்லாம் பெனாத்தக்கூடாது அம்பி ! //
பெனாத்திக் கொண்டிருப்பது நீர் தான் 118.. தென்றலார், சிரவணன் தான் சரவணன் என்றது October 30-ல் (பின்னூட்டம் எண் 9).. இக்கருத்தை திரும்பப் பெற்றது November 3-ல் (பின்னூட்டம் எண் 13.1.1).. இந்த 3,4 நாட்கள் வினவு தளத்திலேயே குடியிருக்கும் நீர் எந்த மூலையில் பம்மிக்கொண்டிருந்தீர் என்பதற்கு பதில் சொல்லாமல், ஒரு மணி நேரத்தில் என் கேள்விக்கு பதில் கூறிவிட்டதாக மங்குணிக்காமெடி செய்வது கிளைமாக்ஸ் முடிந்தபின் வரும் கூடுதல் கலகலப்பு..
நீர் என்ன லூசா அம்பி ? தென்றல் சிரவணன் தான் சரவணன் என்று கூறியதற்கு ஆதாரங்களை கேட்டேன். நீர் கொடுத்தீர்.[ ஆதாரம் இன்றி நான் எப்படி விமர்சிக்க முடியும் அம்பி ? ] நான் அதற்கு பதில் கூறி உள்ளேன். அப் பதில் உமக்கு ஏற்புடையது தானே ? அப் பதிலில் நான் எழுப்பும் கேள்விக்கு உம் பதில் என்ன ?
தென்றலுக்காவது அறிவு நாணயம் இருகின்றது அதனால் அவர் விவர தவற்றை[சிரவணன் தான் சரவணன் என்ற கருத்தை] திருத்திக்கொண்டார். ஆனால் முருகன் மீதான பார்பன புரட்டு கசடுகளை நீக்க ,ஆகமத்தை நீக்க மற்றும் முருகனின் பார்பன புனுலை அறுக்க அம்பிக்கும் அவர் தம் முதைகளுக்கு அறிவு நாணயம் இருகின்றதா?
அம்பி,
இந்த கட்டுரையில் அம்பியுடன் நான் விவாதிக்கும் கடந்த 10 நாட்களாக எனக்கு வினவின் வேறு கட்டுரைகளை கூட படிக்க நேரம் கிடைக்காதது எனக்கு சிக்கல் தான் அம்பி. சங்க ஆய்வு முடிவுகள்,சிந்துவெளி ஆய்வு முடிவுகள் அவற்றின் உண்மை தன்மையை சரிபார்த்தல் என்று என் நேரம் போகின்றது. அது போல தானே அம்பி October 30-ல் (பின்னூட்டம் எண் 9).. இக்கருத்தை திரும்பப் பெற்றது November 3-ல் (பின்னூட்டம் எண் 13.1.1) இடைபட்ட காலத்தில் நான் வேறு விவாதத்தில் இருந்து இருப்பேன் அல்லது வேறு வேலையாக இருந்து இருப்பேன். அதில் என்ன தவறு ?
ஆமாம் தென்றல் October 30-ல் (பின்னூட்டம் எண் 9) ல் தவறாக கூறிய கருத்தை November 3-ல் (பின்னூட்டம் எண் 13.1.1)ல் திரும்பப் பெற்றுகொண்ட பின் அதனை பற்றி நீர் இன்று கேள்வி எழுப்புவதில் என்ன பொருள் இருக்கின்றது ? Moreover ஆதாரம் இன்றி நான் எப்படி விமர்சிக்க முடியும் அம்பி ?
//இந்த 3,4 நாட்கள் வினவு தளத்திலேயே குடியிருக்கும் நீர் எந்த மூலையில் பம்மிக்கொண்டிருந்தீர் என்பதற்கு பதில் சொல்லாமல், ஒரு மணி நேரத்தில் என் கேள்விக்கு பதில் கூறிவிட்டதாக மங்குணிக்காமெடி செய்வது கிளைமாக்ஸ் முடிந்தபின் வரும் கூடுதல் கலகலப்பு..//
அம்பி,
நன்னூல் இலக்கணம் எல்லா விதமான சாரியைக்கும் சாத்தியத்தை காட்டும் போது அதை ஏற்க மறுக்கும் அம்பியின் ஆரிய திமிர் எம்மை பார்த்து சிரிக்கின்றது. வடமொழியில்[சம்ஸ்கிருதத்தில்] தான் ‘ஏ ‘ என்று வரும் என்று கூறிய கூறிய அம்பி அதற்கான வட மொழி இலக்கண ஆதாரத்தை இவ்வளவு நாள் கொடுக்காமல் மே மே என்று நன்நூலையே மேய்வது எதற்காக ? எழுத்து வடிவமே இல்லாமல் இருந்த நாடோடி சமஸ்கிருதத்துக்கு சாரியைக்கு எல்லாம் ஆவன படுத்தபட்ட இலக்கணம் ஏது ?
//ஏ அ அன் என்று சங்கீதம் பாடச்சொல்லி நன்னூல் இலக்கணம் கட்டாயப்படுத்துகிறதா என்று கேட்டேன்.. ஆமாம் என்றால் நீங்கள்தான் எடுத்துக்காட்டுடன் பதிலளித்திருக்க வேண்டும்..//
அம்பி ,
“முருகன் பற்றிய தொன்மங்கள் இங்கிருந்தே வடக்கே சென்றிருக்கமுடியும் என்ற உமது கருத்து உமக்கே தெளிவாக விளங்கி இருந்தால் வடக்கில் இருந்து வந்தமுருகனின் பிறப்பின் புராண கதையை [அறுவர் பயந்த] கார்த்திகேயன் என்ற பெயருக்குக் காரணமாக கூறி இருப்பிரா?அடி முட்டாள் கூட இப்படி பட்ட தவற்றை செய்ய மாட்டானே ! ” என்ற என் கருத்தை ஏற்கும் அம்பி …, ஒரு எடத்தில் முருகன் பற்றிய தொன்மங்கள் இங்கிருந்தே வடக்கே சென்றிருக்கமுடியும் என்றும் ,மறு எடத்தில் முருகனின் பிறப்பின் புராண கதையை பிடித்து கொண்டு ஆடுவதும் ஏன் ? இதற்கான பதிலை யார் உம் முதைகலா கொடுப்பார்கள் அம்பி ?
முதலில் கார்த்திகேயனுக்கு நீர் கட்டியது தமிழ் மக்கள் தொன்மம் அன்று ,அது [அறுவர் பயந்த] ஆரிய புராண ஆபாச புளுகு என்பதை திருமுருகாற்றுப்படைக்கு நச்சியார்கினியார் எழுதிய உரை மூலம் காண்க ! முதலில் உன் புராண திருபுகளை எல்லாம் வெட்டி எறிந்து ,கொளுத்தி அழித்து ,அதன் ஊடாக என் ஆதாரத்தை கார்த்திகேயனுக்கு உள்ள தமிழர் தொன்மம் எது என்பதை சங்க இலக்கியம் மூலம்,தொல்லியல் தடயங்கள் மூலமும் காட்டுகின்றேன். அது வரை ஆரிய பார்பன குடுமியை பார்பனர்கள் இறுக்கி கட்டிகொண்டு புராணம் பாடிக்கொண்டு இருக்கலாம். தடை ஏதும் இல்லை.
//அறிவாளியாகிய தாங்கள் கார்த்திகேயனுக்கு வேறு தமிழர் தொன்மம் இருக்கிறது என்ற ஆதாரத்தை இன்னும் காட்டவில்லை..//
// முதலில் உன் புராண திருபுகளை எல்லாம் வெட்டி எறிந்து ,கொளுத்தி அழித்து ,அதன் ஊடாக என் ஆதாரத்தை கார்த்திகேயனுக்கு உள்ள தமிழர் தொன்மம் எது என்பதை சங்க இலக்கியம் மூலம்,தொல்லியல் தடயங்கள் மூலமும் காட்டுகின்றேன். அது வரை ஆரிய பார்பன குடுமியை பார்பனர்கள் இறுக்கி கட்டிகொண்டு புராணம் பாடிக்கொண்டு இருக்கலாம். தடை ஏதும் இல்லை. //
குழந்தை கார்த்திகேயன் வளர்ந்து உமது பேக்கில் உதைப்பதற்கு முன்பாவது 6 க்கு 6 என்ன தொடர்பு என்று கண்டுபிடிக்கப் பாருங்கள்..
கார்திகேயன் வளரும் வரை இந்த விவாதம் தொடருமாயின் அது நல்லது தானே ! பார்பனியம் பெண்டு வைத்த புராண குப்பைகள் ஒன்றா இரண்டா ? பல ஆயிரம் அல்லவா ? அத்துணையையும் அம்பல படுத்த கால அவகாசம் எமக்கு கிடைக்கும் அல்லவா அம்பி ?
//குழந்தை கார்த்திகேயன் வளர்ந்து உமது பேக்கில் உதைப்பதற்கு முன்பாவது 6 க்கு 6 என்ன தொடர்பு என்று கண்டுபிடிக்கப் பாருங்கள்..//
அம்பி ,
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறி என்று இவ்வளவு நாள் முருக பிறப்புக்கு பஜனை பாடிய அம்பி இப்போது தான் கருப்பிண்டம் என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து உள்ளார்
தொல்குடி தமிழரர் முருகனின் பிறப்புக்கு புரானங்கள் மூலம் ஆபாச அவதுரு கதை எழுதிய அம்பி உள்பட்ட ஆரிய பார்பன பதர்கள் முருகனிடம் மண்டியிட்டு வணங்கி மன்னிப்பு கேட்காமல் வக்கணையாக ஒய்யாரமாக விந்து அல்ல அது கருப்பிண்டம் என்று மங்கலம் பாடுதுங்க! என்டா பார்பனனே எம் தமிழர் ஆதி அடையாளமான முருகனை புரானங்கள் மூலம் சிதைகின்றாய் என்று கேட்டால் சாமி.சிதம்பரனார் பெரியார் சீடர் என்று பார்பனிய பதர்கள் ஆரியம் பாடுதுங்க!
திரு சாமி.சிதம்பரனார் தன் எழுத்தில் அம்பலபடுத்தும் புராண விடயம் விந்து ஆகவுள்ளது, நச்சினார்க்கினியர் உரையில் காட்டபடும் விடயம் கருப்பிண்டம் என்று இருப்பதால், முருகன் மீது பார்பன ஆரிய ஆபாச புராண எழுத்தாளர்கள் ,பார்பன பதர்கள் எழுதிவைத்து உள்ள குப்பைகள் தொல்குடி முருகன் மீதும், அவன் பிறப்பின் மீதும் ஏற்புடையது ஆகிவிடுமா?
இப்படி எல்லாம் தமிழரையும் தமிழ் கடவுளையும் இழிவு செய்பவன்களை பார்த்து அட___________என்று என் மனம் குமுறுகின்றது.
//சாமி.சிதம்பரனார் என்ற பெரியாரின் சீடர் எழுதிய உரையை காட்டுகிறீர்கள்.. பாடலில் இருப்பது என்ன உரையில் இருப்பது என்ன..? சங்கப்பாடல்களில் கூறப்படும், பிற உரைகளில் சரியாகக் குறிப்பிடப்படும் கருப்பிண்டம் சாமியின் உரையில் விந்தாகிவிட்டது..! நீங்கள் உரை எழுதினால் அதை மலம் என்று கூட கூறுவீர்கள்.. இதெல்லாம் ஒரு ஆதாரமா..?! கச்சியப்பரின் கந்த புராணத்தில் அது கருப்பிண்டம் கூட அல்ல, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறி என்கிறார்..//
// சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறி என்று இவ்வளவு நாள் முருக பிறப்புக்கு பஜனை பாடிய அம்பி இப்போது தான் கருப்பிண்டம் என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து உள்ளார் //
பின்னூட்டம் 15.1-ல் ஏற்கனவே நான் கூறியதுதான்..: “தொல்குடிமரபில் முருகனின் பிறப்பு எப்படி கூறப்படுகிறதோ..?! பரிபாடலில் வேறுவிதமாக கூறப்படுகிறது.. கந்த புராணத்தில் இன்னொரு விதமாக கூறப்படுகிறது.. முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உதித்தவன் என்பது தமிழர்களின் நம்பிக்கை.. சின்ன சிவன் என்பது சைவ நம்பிக்கை..”
முருகனின் பிறப்பைப் பாடும் திருமுருகும்,பரிபாடலும் கருப்பிண்டம் என்கிறது என்பதற்கு நான் என்ன ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவேண்டியிருக்கிறது..?
// தொல்குடி தமிழரர் முருகனின் பிறப்புக்கு புரானங்கள் மூலம் ஆபாச அவதுரு கதை எழுதிய அம்பி உள்பட்ட ஆரிய பார்பன பதர்கள் முருகனிடம் மண்டியிட்டு வணங்கி மன்னிப்பு கேட்காமல் வக்கணையாக ஒய்யாரமாக விந்து அல்ல அது கருப்பிண்டம் என்று மங்கலம் பாடுதுங்க! என்டா பார்பனனே எம் தமிழர் ஆதி அடையாளமான முருகனை புரானங்கள் மூலம் சிதைகின்றாய் என்று கேட்டால் சாமி.சிதம்பரனார் பெரியார் சீடர் என்று பார்பனிய பதர்கள் ஆரியம் பாடுதுங்க! //
குழந்தைக்கு கார்த்திகேயன் என்ற ‘பார்ப்பன புராணப் பெயரையும்’ வைத்துவிட்டு கூச்சமில்லாமல் பார்ப்பனிய எதிர்ப்பு பேசுறதுங்களை விட கடுவன் இளவெயினனாரும், மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனாரும் தமிழரின் ஆதி அடையாளமான முருகனின் மீது அக்கறை அற்றவர்களா..?
தொல்குடி மரபில் முருகனின் பிறப்பு பற்றி கேட்கப்ட்ட கேள்விக்கு அது பற்றி அவருக்கு தெரியாது என்று கூறிக்கொண்டே , பரிபாடலில் வேறுவிதமாக கூறப்படுகிறது.. கந்த புராணத்தில் இன்னொரு விதமாக கூறப்படுகிறது என்று கூறுகின்றார். திருமுருகும்,பரிபாடலும் கூறும் கருப்பிண்டம் என்று முருக பிறப்பை கூறும் பார்பன அவதுரு புராணத்தை ஏற்கின்றார். கேட்க பட்ட கேள்வியே தொல்குடி மரபில் முருகனின் பிறப்பை பற்றி ! இவர் கூறுவதோ முருகனின் பிறப்பை பற்றிய பார்பன புராண ஆபாச அவதுருகளை !
//பின்னூட்டம் 15.1-ல் ஏற்கனவே நான் கூறியதுதான்..: “தொல்குடிமரபில் முருகனின் பிறப்பு எப்படி கூறப்படுகிறதோ..?! பரிபாடலில் வேறுவிதமாக கூறப்படுகிறது.. கந்த புராணத்தில் இன்னொரு விதமாக கூறப்படுகிறது.. முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உதித்தவன் என்பது தமிழர்களின் நம்பிக்கை.. சின்ன சிவன் என்பது சைவ நம்பிக்கை..” //
// கேட்க பட்ட கேள்வியே தொல்குடி மரபில் முருகனின் பிறப்பை பற்றி ! இவர் கூறுவதோ முருகனின் பிறப்பை பற்றிய பார்பன புராண ஆபாச அவதுருகளை ! //
கேட்க பட்ட கேள்விக்கு இதுவரை பதிலைக் கூறாமல் போங்காட்டம் ஆடிக்கொண்டு அதை பெருமையாக மேற்கோள் வேறு காட்டுகிறீர்கள்..
கார்திகை என்ற சொல் தமிழாக இருக்கும் போது, அது தமிழ் மாதத்தை குறிக்கும் போது ,நன் நூல் இலக்கணம் படி ஏ அ அன் சாரியை கார்திகை ஏற்று கார்திகேயன் என்று ஆகு பெயராகும் போது, கார்திகேயன் தமிழ் இலக்கணம் கூறும் விளக்கபடி தமிழ் வார்த்தை என்கின்ற போது அதனை வடமொழி என்று நிருபிக்க வேண்டிய அவசியம் அம்பிக்கு தான் உள்ளது.
கார்திகை மாதத்தை வடமொழி வார்த்தை என்கின்றாரா அம்பி ?
//குழந்தைக்கு கார்த்திகேயன் என்ற ‘பார்ப்பன புராணப் பெயரையும்’ வைத்துவிட்டு கூச்சமில்லாமல் பார்ப்பனிய எதிர்ப்பு பேசுறதுங்களை விட கடுவன் இளவெயினனாரும், மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனாரும் தமிழரின் ஆதி அடையாளமான முருகனின் மீது அக்கறை அற்றவர்களா..?//
கார்த்திகேயன் என்ற பெயர் எப்படி வந்தது..? 6 க்கு 6 என்று கூறிவிட்டு அது என்ன தொடர்பு என்று கூறாமல், புத்திசாலித்தனமாக திசை திருப்புவதாக நினைத்துக் கொண்டு தமிழ் வடமொழி என்று சாமியாடும் போங்காட்டம் எல்லாம் சிறுவர்கள் விளையாட்டு போல் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது..
ஆபாச படங்கள் போல் உள்ள புராண புளுகுகளை நம்பும் அம்பி,அவை அறிவியல் அடிப்படையில் இல்லாவிட்டாலும் நம்புவேன் என்று வாக்கு மூலம் கொடுக்கும் அப்பி,புராணங்களுக்கு வரலாறு கிடையாது என்று நம்பி ஒப்புக்கொள்ளும் அம்பி ,அதே நேரம் தமிழரின் கார்திகை மாதம்,கார்திகை விண்மீன் ,கார்திகை முழுநிலவு அன்று சங்க காலத்தில் இருந்து நடத்தபடும் கார்திகை விழா ,அதனூடாக தமிழ் மக்கள் ஆகிய கார்திகேயன் என்ற தமிழ் பெயர் சொல் மீது எல்லாம் கேள்வி எழுப்புகின்றார் ! இப்படி பட்ட பார்பனிய கருத்தியல் அராஜகவாதம் தொல்குடி தமிழ் இனத்தில் மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து தொல்குடி இனங்களின் மரபுகளையும் சிறுக சிறுக அழித்து வைரஸ் போல பரவி உள்ளதை நாம் உணரவேண்டும் அல்லவா ?
தமிழரின் கார்திகை மாதம்,கார்திகை விண்மீன் ,கார்திகை முழுநிலவு அன்று சங்க காலத்தில் இருந்து நடத்தபடும் கார்திகை விழாவுக்கும் கார்திகேயனுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் அது சும்மா ஒரு தமிழ் பெயர் சொல் என்று வைத்து கொள் என்கிறீர்..
கார்த்திகை விண்மீன்கள் 6, முருகனுக்கு 6 முகங்கள் என்று கூறி 6 க்கு 6 என்று சோடி போட்டவர், என்ன தொடர்பு என்பதற்கு, சட்டைப் பையில் வைத்திருப்பதாக கூறிய ஆதாரங்களை காணவில்லை என்பதால் கைக்கடிகாரத்தைக் கழற்றி மேசை மேல் வைக்கிறீர்.. இது எதற்கு..? ஆதாரம் கொடுக்கும் வரை மாவாட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்..
refer my feedbacks 61 and other related contents
முருகனை தமிழ் கடவுள் என்கின்ற அம்பி ,முருகன் பற்றிய தொன்மங்கள் இங்கிருந்தே வடக்கே சென்றிருக்கமுடியும் என்று கூறுகின்ற அம்பி ,அதே சமயம் பார்பன புராண திரிபுகளை முருக பிறப்புக்கு ஆதாரமாக காட்டவில்லையா? அது போன்றவர்கள் தான் கடுவன் இளவெயினனாரும், மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனாரும்!
//பார்ப்பனிய எதிர்ப்பு பேசுறதுங்களை விட கடுவன் இளவெயினனாரும், மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனாரும் தமிழரின் ஆதி அடையாளமான முருகனின் மீது அக்கறை அற்றவர்களா..?//
சங்க புலவர்கள் : அய்யா நான் திருடலைங்க.. இது என் பை தானுங்க..
வக்கீல் பங்குனியேயன் : இதை நீ திருடியிருக்கிறாய், ஆகையால் நீ ஒரு திருடன்.. நீ ஒரு திருடன் என்பதால் இதை நீ திருடித்தான் வைத்திருப்பாய்..
இதை ஆங்கிலத்தில், சர்க்குலர்-லாஜிக்கு என்பர்.. தமிழில் பொதுஜன வழக்கில், வாலை விரட்டுவது என்பர்.. என்னமா லாஜிக்கு பேசுறாரு பாருய்யா நம்ம வக்கீலு..
முருக பிறப்பை பற்றிய பார்பன புராண திரிபுகளை சங்க இலகியத்தில் திணித்தது அவர்கள் தானே அம்பி !
ஆமாம் அம்பி , நான் திருமுருகாற்றுப்படைக்கு உரை எழுதினால் அதில் உள்ள முருக பிறப்பின் மீதான புராண திரிபுகள் யாவும் ஆரியம் பெண்டு வைத்த பார்பன மலம் என்று தான் கூறுவேன். அதில் இப்போது அம்பி போன்றவரும் பெண்டு வைக்கும் மல புராண கசடும் சேருகின்றதையும் அம்பலப்படுத்துவேன் .
//நீங்கள் உரை எழுதினால் அதை மலம் என்று கூட கூறுவீர்கள்..//
அம்பியின் அழுவுனியாட்டம் :
——————————————-
தென்றல் அவர்கள் எடுத்து காட்டிய திருமுருகாற்றுப்படை சங்க இயக்கியம் அல்ல என்ற வீ.அரசுவின் கருத்துக்களுக்கு எதிர் கருத்து கூற இயலாத அம்பி அவரை நாத்திகர் என்று கூறி எதிர் கருத்து கூற இயலாமல் புறமுதுகு காட்டி ஓடினார்.
இப்போது திரு சாமி.சிதம்பரனார் எழுதிய திருமுருகாற்றுப்படை விளக்க உரைக்கு அவரை பெரியார் சீடர் என்று அம்பி கூறி பின்னைங்கால் பிடரியில் பட ,பார்பனிய உச்சி குடுமி தெறிக்க ஓடுகின்றார்.
இப்படி பட்ட அம்பிக்காகவே திருவள்ளுவர் ,
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
என்று கூறுகின்றார்.
வீ.அரசுவின் கருத்து தவறு என்றால் ,அம்பிக்கு அறிவு பூர்வமாக தர்க்கம் செய்யமுடியும் என்றால் ….
சாமி.சிதம்பரனார் நச்சினார்க்கினியர் உரையை அடிப்படையாக வைத்து எழுதிய திருமுருகாற்றுப்படை விளக்கம் தவறு என்றால் ,அம்பிக்கு அறிவு பூர்வமாக தர்க்கம் செய்யமுடியும் என்றால் ….
அம்பி மேல் கூறிய இருவருடைய கருத்துகளையும் பகுத்து அறீந்து அவைகள் தவறு என்று நிருபிப்பதில் அம்பிக்கு என்ன சிக்கல் ?
வினவு வாசகர்களுக்கு ,
அதே கச்சியப்பரின் கந்த புராணத்தில்@@ காட்டப்டும் வல்லபை கணபதி பற்றிய ஆபாச காட்சிகளையும் ,வல்லபை@@@ என்ற பெண்ணின்கருவை அழிக்கும் விநாயகனின் [சிங்கலவனின் இனவெறியை போன்ற,மோடியின் குஜராத் படுகொலைலில் கருவையும் ,உயிரையும் இழந்த பெண் ] காட்சியையும் இங்கு எடுத்து காட்டினால் என்னவோ அம்பி ?
பெண்ணின் கருவை அழிக்கும் விநாயகன் சிலையை உடைப்பதில் என்னடா தமிழா தவறு ? யுத்தத்தில் பெண்ணின் கருவை அழிப்பது தான் ஆரியன் காட்டும் யுத்த தர்மமா என்று கேளடா தமிழா ?
@@பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள், ஸ்கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம். ஸ்கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும்.
@@@சூரபத்மனை எதிர்த்து போரில் சுப்பிரமணியன் தோற்ற நிலையில், விநாயகன் களத்தில் குதித்தான். அசுரர்களை அழிக்க அழிக்க வீரர்கள் புற்றீசலாக வந்து கொண்டேயிருந்தனர். விநாயகனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘ஏன் இந்த அசுரர்களை அழிக்க அழிக்க உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறார்களே’ என்று ஞானக்கண்ணால் ஆராய்ச்சி செய்ய, வல்லபை என்ற பெண்ணின் குறியிலிருந்து அசுரர்கள் உற்பத்தியாவதை அறிந்து அந்த பெண்ணை பிடித்து தனது இடது தொடையில் உட்கார வைத்து தனது தும்பிக்கையால் பெண்குறியின் உள்ளே விட்டு அசுரர்களை உறிஞ்சு எடுத்துவிட்டார் என்பதால் ‘வல்லபை கணபதி’ என்று விநாயகருக்கு பேர் கிடைத்தது என்று கந்தபுராணம் கூறுகிறது.
//கச்சியப்பரின் கந்த புராணத்தில் அது கருப்பிண்டம் கூட அல்ல, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறி என்கிறார்..//
அம்பி,
பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள், ஸ்கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம். ஸ்கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும் என்று என் பின்னுட்டம் 40ல் நான் உண்மையை எடுத்து கூறியபோது மவுனம் காத்த அம்பி…….,
வல்லபை கணபதி பெண்ணின் கருவை அழித்த கதையை கந்தபுராணத்தில் இருந்து நான் என பினனுட்டம் 38ல் எடுத்து கூறியபோது மவுனம் காத்த அம்பி…… ,
இப்போது அம்பி…..
அதே வடமொழி புரட்டு ஸ்கந்த புரானத்தில் இருந்து
“கச்சியப்பரின் கந்த புராணத்தில் அது கருப்பிண்டம் கூட அல்ல, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறி என்கிறார்”
என்று கூறுவது அம்பியின் முட்டாள் தனமா ?கிறுக்கு தனமா ? ஆரிய பார்பன அடிவருடி தனமா ? அல்லது ஆரிய பார்பன மூளையின் விச தன்மையான கருத்தா ? எது எப்படி இருப்பினும் அம்பியின் ஸ்கந்தபுரான கருத்து ஆரிய பார்பனர்கள் தமிழரை இழிவு படுத்தவும் ,தொல்குடி முருகன் பிறப்பின் மீது காட்டும் வன்மம் தானே ?
//சங்கப்பாடல்களில் கூறப்படும், பிற உரைகளில் சரியாகக் குறிப்பிடப்படும் கருப்பிண்டம் சாமியின் உரையில் விந்தாகிவிட்டது..! நீங்கள் உரை எழுதினால் அதை மலம் என்று கூட கூறுவீர்கள்.. இதெல்லாம் ஒரு ஆதாரமா..?!//
கச்சியப்பரின் கந்தபுராணத்தில் வல்லபை கதை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.. தயவுசெய்து மேற்கோள் காட்டவும்.. கச்சியப்பரின் கந்த புராணத்தில் வல்லபை கதை வருவதால் சாமியப்பரின் திருமுருகு உரையில் விந்து கதை வருவதையும் ஏற்கவேண்டும் என்று விவாதிப்பது கிறுக்குத்தனம் இல்லையா..
கருபிண்டமா அல்லது விந்தா என்பது இருக்கட்டும். அதனை நான் ஏற்காமல் தானே உம்முடன் வாதம் செய்கின்றேன் என்பது உமக்கு புரியவில்லையா ? ஆனால் இந்த பார்பன புராண ஆபாசத்தை எழுதிவைத்த ஆரிய பார்பன பதர்களை என்ன செய்யலாம் அம்பி ?
அம்பியின் தாய் ,தந்தை புவியில் பிறக்க[biological mother and father ] ,ஆனால் அம்பி மட்டும் கருபிண்டமாக வேறு எங்கோ இருந்து வந்து உள்ளார் என்று வரலாறு எழுதப்படும் என்றால் அது அம்பிக்கும் அவருக்கு பின் வரும் அவரின் பல பல ஆயிரம் தலைமுறைக்கும் அசிங்கம் இல்லையா ? அது போல தானே முருகன் தொல்குடி தமிழனாக இருக்க அவனை பார்பன புராணங்கள் மூலம் இயற்க்கை அற்ற முறையில் கருபிண்டமாக காட்டி பிறக்க வைக்கும் அசிங்கமும். இது கூட புரியவில்லையா அம்பி உமக்கு ? முருகனை தன் மூத்த குடியாக நம்பி வாழும் பல கோடி தமிழர்களை பார்பன புராணங்கள் அவனின் பிறப்பை இழிவு செய்வதன் மூலம் அசிங்கம் செய்வது அம்பிக்கு ஏன் விளங்க வில்லை ?
//கச்சியப்பரின் கந்த புராணத்தில் வல்லபை கதை வருவதால் சாமியப்பரின் திருமுருகு உரையில் விந்து கதை வருவதையும் ஏற்கவேண்டும் என்று விவாதிப்பது கிறுக்குத்தனம் இல்லையா..//
// கருபிண்டமா அல்லது விந்தா என்பது இருக்கட்டும். அதனை நான் ஏற்காமல் தானே உம்முடன் வாதம் செய்கின்றேன் என்பது உமக்கு புரியவில்லையா ? ஆனால் இந்த பார்பன புராண ஆபாசத்தை எழுதிவைத்த ஆரிய பார்பன பதர்களை என்ன செய்யலாம் அம்பி ? //
என்ன செய்யலாம்..?! பேசாமல் அவர்களை கார்த்திகேயர்கள் என்று அழைக்கத் தொடங்குங்கள்..
// அம்பியின் தாய் ,தந்தை புவியில் பிறக்க[biological mother and father ] ,ஆனால் அம்பி மட்டும் கருபிண்டமாக வேறு எங்கோ இருந்து வந்து உள்ளார் என்று வரலாறு எழுதப்படும் என்றால் அது அம்பிக்கும் அவருக்கு பின் வரும் அவரின் பல பல ஆயிரம் தலைமுறைக்கும் அசிங்கம் இல்லையா ? //
வரலாறு என்றால் அறிவியல் அடிப்படை எதிர்பார்க்கப்படும்.. புராணம் என்றால் நம்பிக்கை சார்ந்தது.. என் தாய் தந்தையரின் கருப்பிண்டமாகி நான் வேறு எங்கோ இருந்துவிட்டு வந்தேன் என்ற புராணமோ, சிவ சக்தியரின் கருப்பிண்டமாக முருகன் இருந்து கார்த்திகைப் பெண்களிடம் வந்து சேர்ந்தான் என்ற என்ற புராணமோ அறிவியல் அடிப்படையில் நம்பமுடியாவிட்டாலும், என்னைப் பொறுத்தவரை இவை புராண/தொன்ம நம்பிக்கையே தவிர தூக்கு போட்டுக் கொண்டு சாகும் அளவுக்கு மானத்தைத் தூண்டும் அவமானமல்ல.. தங்களுக்கு அப்படித் தோன்றினால் தமிழரின் தொன்மையான முருகன் பிறப்பு கதை வேறு ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்..
அம்பி புராணம் கூறுவது நீர் நினைத்தபடி அல்லஅம்பி ! :
அம்பி புராணம் கூறுவது என்னவென்றால் , அம்பியின் தாய் ,தந்தை புவியில் பிறக்க[biological mother and father ] ,ஆனால் அம்பி மட்டும் கருபிண்டமாக வேறு எங்கோ இருந்து வந்து உள்ளார் என்று தானே வலியுறுத்துகின்றது ! இதனையும் உம் நம்பிக்கை ,அது உம் புராண நம்பிக்கை ,அதனை அறிவியல் அடிப்படையில் நம்பமுடியாவிட்டாலும், உம்மை பொறுத்தவரை இவை சரியே என்று நினைப்பீர்களா அம்பி ? இப்போதும் முருகனின் மீதான “கருபிண்ட” புராண அசிங்கத்தை ஏற்பிர்களா அம்பி ?
//என் தாய் தந்தையரின் கருப்பிண்டமாகி நான் வேறு எங்கோ இருந்துவிட்டு வந்தேன் என்ற புராணமோ,//
அம்பி ,
அம்பி அவர்கள் அவரின் [அம்பியின்] புராணகதையை அதில் அவரின் பிறப்பின் பற்றிய அசிங்கம் [தாய் ,தந்தை புவியில் ,ஆனால் அம்பி கருபின்டமாக “வேறு எங்கோ இருந்து வந்து உள்ளார் “] என்பதை நம்பும் அளவுக்கு மானம் ரோசம் இல்லாமால இருக்கும் ? மானம் உள்ளவராக தான் இருப்பார் என்று நம்புவோம். அதே நிலைபாட்டை தானே தொல்குடி முருக பிறப்பு விடயத்திலும் நான் செலுத்தி அணுகவேண்டும். ஆனால் எம் மூதாதையரான தொல்குடி தமிழ் முருகனை மட்டும் கருப்பிண்டமாக வேறு எங்கோ இருந்து அம்பி அவர்கள் கொண்டுவரும் அவலம் ஏன் ? அம்பி முருகன் விடயத்தில் “வெளியில் இருந்து வந்த கருப்பிண்ட” விடயத்தை நம்புகின்றார் என்றால் நாமும் அம்பி புராணத்தில் அம்பியும் “வெளியில் இருந்து வந்த கருப்பிண்ட” என்ற விடயத்தை நம்பினால் என்ன தவறு ?
//என்னைப் பொறுத்தவரை இவை புராண/தொன்ம நம்பிக்கையே தவிர தூக்கு போட்டுக் கொண்டு சாகும் அளவுக்கு மானத்தைத் தூண்டும் அவமானமல்ல.. //
// அம்பி அவர்கள் அவரின் [அம்பியின்] புராணகதையை அதில் அவரின் பிறப்பின் பற்றிய அசிங்கம் [தாய் ,தந்தை புவியில் ,ஆனால் அம்பி கருபின்டமாக “வேறு எங்கோ இருந்து வந்து உள்ளார் “] என்பதை நம்பும் அளவுக்கு மானம் ரோசம் இல்லாமால இருக்கும் ? //
என் தாய் தந்தையருக்கு உண்டான கருப்பிண்டம்தான் நான் எனும் போது நான் எங்கிருந்துவிட்டு வந்தாலும் அதில் என்னய்யா என் பிறப்பு பற்றிய அசிங்கம் இருக்கிறது..?!
// ஆனால் எம் மூதாதையரான தொல்குடி தமிழ் முருகனை மட்டும் கருப்பிண்டமாக வேறு எங்கோ இருந்து அம்பி அவர்கள் கொண்டுவரும் அவலம் ஏன் ? //
அப்படி துக்கம் வந்தால், பல தொன்மங்களில் ஒன்றான சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உதித்த முருகன் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டான் என்ற தொன்மத்தை மட்டும் ஏற்று மற்றவற்றை தவறு என்று ஒதுக்க வேண்டியது தானே.. உங்களுடைய ஆய்வாளர் அஸ்கோ பர்போலா, முருகன் செவப்பாக இருந்து கொண்டு, வந்து வணங்கும் பெண்களை கருவுறச்செய்பவன் என்று கண்டுபிடித்துக் கூறுவது மட்டும் கிளுகிளுப்பாக இருக்கிறதா..
அம்பி புராணம் கூறுவது என்னவென்றால் எங்கோ இருந்து வந்த கருபிண்டத்தை [கருவுற்றது தானே கருபிண்டம் என்பது] தாய் ,தந்தை ஏற்கின்றார்கள் என்று பொருள்!
//என் தாய் தந்தையருக்கு உண்டான கருப்பிண்டம்தான் நான் எனும் போது நான் எங்கிருந்துவிட்டு வந்தாலும் அதில் என்னய்யா என் பிறப்பு பற்றிய அசிங்கம் இருக்கிறது..?! //
வணங்கும் பெண்களை கருவுறச்செய்பவன் முருகன் என்ற கருத்து சிந்து வெளி மக்களின் நம்பிக்கை ஆகும் என்பது அஸ்கோ பர்போலா மற்றும் ஐராவதம் மகாதேவன் ஆகியயோரின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அக்கருத்தையும் உம் மூதைகள் கழீந்த புரானங்கள் போன்று திரிப்பது தான் அம்பி காணும் கிளுகிளுப்பு !
//முருகன் செவப்பாக இருந்து கொண்டு, வந்து வணங்கும் பெண்களை கருவுறச்செய்பவன் என்று கண்டுபிடித்துக் கூறுவது மட்டும் கிளுகிளுப்பாக இருக்கிறதா..//
இந்த விவாதத்தில் போங்காட்டம் ஆடுவது ,அராஜகமாக பேசுவது யார் என்பதை பார்ப்போமா அம்பி?
உமது புராண நம்பிக்கைகள் பற்றி உமது பின்னுட்டம் December 1, 2014 at 3:06 am
Permalink 60.1.1ல் என்ன கூறுகின்றிர்கள் என்று பார்போம்.
[1]புராணமோ அறிவியல் அடிப்படையில் நம்பமுடியாவிட்டாலும், என்னைப் பொறுத்தவரை இவை புராண/தொன்ம நம்பிக்கையே
[2]வரலாறு என்றால் அறிவியல் அடிப்படை எதிர்பார்க்கப்படும்.. புராணம் என்றால் நம்பிக்கை சார்ந்தது.
புராணங்கள் ஆபாசமாக இருக்கும் போது ,அவை அறிவியல் அடிப்படையில் நம்பமுடியாதைகளாக இருக்க ,அவை வரலாற்று பின்புலம் ஏதும் அற்று இருக்க அவற்றையும் நம்பும் அம்பி அதேசமயம் கார்திகேயன் என்ற பெயருக்கு நான் தொன்மமாக கூறும் அறுமீன் தொடர்புகளையும் ,கார்திகை வின்மினையும் ,நன்நூல் கூறும் சாரியை இலக்கண விடயத்தையும் கேள்வி எழுப்புவது எதன் அடிப்படையில் ? அம்பியின் அராஜக சிந்தனை அவரின் முருகன் பிறப்பின் மீதான ஆபாச புராணபுளுகுகளை நம்பும். ஆனால் நான் சங்க இலக்கியத்தில் இருந்து, நன்நூலில் இருந்து, முருகனுக்கு,கார்திகேயனுக்கு காட்டும் அறுமீன் தொடபுகளை ,இலக்கான முறைகளை நம்பாது கேள்வி எழுப்பும். ஏன் அப்படி அம்பி ? அதற்கு பெயர் தான் பார்பனர்களின் கருத்தியல் அராஜகவாதம் அல்லவா அம்பி !
//கார்த்திகேயன் என்ற பெயர் எப்படி வந்தது..? 6 க்கு 6 என்று கூறிவிட்டு அது என்ன தொடர்பு என்று கூறாமல், புத்திசாலித்தனமாக திசை திருப்புவதாக நினைத்துக் கொண்டு தமிழ் வடமொழி என்று சாமியாடும் போங்காட்டம் எல்லாம் சிறுவர்கள் விளையாட்டு போல் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது..//
கார்த்திகேயன் ஒரு தமிழ்ப் பெயர் என்பதில் நான் உடன்பட்டுவிட்டேன்.. நன்னூல் இலக்கணத்தைக் காட்டி கார்த்திகேயன் என்ற முருகனின் பெயர் கார்த்திகை மாதப் பெயர் என்று நீங்கள் கூறுவதும் ஒரு பெரிய பிரச்சினை என்று கருதவில்லை.. ஆனால், முருகனுக்கும் 6 கார்த்திகை விண்மீன்களுக்கும் அப்படி என்ன தொடர்பு என்று கேட்டால் அது அராஜகவாதமா..!
தொடர்பு என்ன என்று கூறாமல் என்னை வசைபாடுவதுதான் அராஜவாதம்..
அம்பி,
அஸ்கோ பர்போலா மற்றும் ஐராவதம் மகாதேவன் ஆகியயோரின் ஆய்வு முடிவுகள் சிந்துவெளி நாகரிகத்தை திராவிட-தமிழ் மரபுகளுடன் இணைக்கும் போது ,அதில் அறு மீன் முத்திரைகள் இருக்கும் போது, அதனை அவ் ஆயவளர்கள் இருவருமே முருகனின் அடையாளமாக ஆய்வு முடிவுகளில் கூறும் போது , அவ் ஆய்வு முடிவுகளை என் பின்னுட்டத்தில் 61ல் நான் காட்சிபடுத்தும் போது அதனை ஏற்பதில் இன்னும் அம்பிக்கு என்ன சிக்கல் ?
//முருகனுக்கும் 6 கார்த்திகை விண்மீன்களுக்கும் தொடர்பு என்ன
இதற்காக தான் கார்த்திகேயன் ஒரு தமிழ்ப் பெயர் தான் என்ற விடயத்தில் இத்துனை நாட்கள் வினவில் அழுவுணி ஆட்டம் ஆடினீர்களா அம்பி ?
//கார்த்திகேயன் ஒரு தமிழ்ப் பெயர் என்பதில் நான் உடன்பட்டுவிட்டேன்.. நன்னூல் இலக்கணத்தைக் காட்டி கார்த்திகேயன் என்ற முருகனின் பெயர் கார்த்திகை மாதப் பெயர் என்று நீங்கள் கூறுவதும் ஒரு பெரிய பிரச்சினை என்று கருதவில்லை.. //
அம்பி பாணியிலேயே பதில் கூறவேண்டும் என்றால் வினவின் பிள்ளையார் வரலாறு – தந்தை பெரியார் என்ற கட்டுரைக்கு மூன்று மாதமாக அம்பி ஏதும் மறுப்போ அல்லது எதிர் கருத்தோ கொடுக்காமல் பம்முவது ஏன் ?
https://www.vinavu.com/2014/09/01/history-of-pillaiyar-thanthai-periyar/
பெரியாரையும் ,பெரியார் சீடர்களையும் ,நாத்திகர்களையும் கண்டால் அம்பிக்கு அவ்வளவு பயமா ?
//கச்சியப்பரின் கந்தபுராணத்தில் வல்லபை கதை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.. தயவுசெய்து மேற்கோள் காட்டவும்..//
மேற்கோள் காட்ட சொன்னவுடன் பெரியாருக்குத் தாவிவிட்டீர்.. இப்படி தாவித் தாவியே பொழுதை போக்கிக் கொண்டிரும்..
மேற்கோள் காட்டாமலா போக போகின்றோம் ! அதற்கு முன் பெரியாருக்கு உம் பதில் என்ன
//மேற்கோள் காட்ட
அம்பி,
வடமொழியில் சிவரகசிய கண்டத்தின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம் என்கின்றபோது முருகனின் பிறப்பிக்கு அதில் இருந்து “கச்சியப்பரின் கந்த புராணத்தில் அது கருப்பிண்டம் கூட அல்ல, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறி ” என்றும் கருத்தை அம்பி எடுத்து கூறும் போது ,முருகன் பற்றிய தொன்மங்கள் இங்கிருந்தே வடக்கே சென்றிருக்கமுடியும் என்று அம்பி அவர்கள் முன்பு எடுத்த நிலைப்பாடு தவறாகின்ரதே !
இரண்டில் எந்த கருத்தை அம்பி இப்போது வலியுறுத்துகின்றார் ?
//கச்சியப்பரின் கந்த புராணத்தில் அது கருப்பிண்டம் கூட அல்ல, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறி//
முருகன் பற்றிய தொன்மங்கள் இங்கிருந்து அங்கு போகும் போதும், மீண்டும் அங்கிருந்து இங்கு வரும் போதும் மாறாமல் இருக்க அத் தொன்மங்கள் அறிவியல் வரையறைகள் இல்லையே.. தீப்பொறி என்ற தொன்மம் மட்டும் தமிழர்களிடையே பரவலாக நிலை பெற்றிருக்கிறது..
அம்பி,
அப்படி என்றால் ,திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் கொடுக்கும் விளக்கப்படி பார்த்தால் புராணங்களுக்கு முந்தைய ரிக் வேதத்திலேயே திராவிட மரபுகள் உட் கொள்ள பட்டு உள்ளது தெளிவாகின்றது. புராணம் என்பது சுருக்கமாக உள்ள வேதங்களை தெளிவாக விரிவாக விளக்கமாக எடுத்துக்கூறுவதே என்ற சந்திரசேகரேந்திர சங்கராசாரியின் கருத்தின் படியும் , ஐராவதம் மகாதேவன் விளக்கத்தையும் ஒருங்கினைத்து பார்த்தால் சிந்துசமவெளி நாகரிகம் மற்றும் திராவிடர் மரபுகளை உட்கொண்ட வேதத்தின் வெளிப்பாடே புராணங்கள் என்பதும் தெள்ள தெளிவாகின்றது என்ற ஆய்வு முடிவை அம்பி ஏற்கின்றார் அல்லவா ?
புராணங்களில் இருந்து திராவிடர் மரபை மட்டும் எப்படி பிரிப்பீர்கள்.. குறிப்பாக, முருகனைப் பற்றி பேசுவதால் திராவிடர் மரபு என்பதைவிட தமிழர் மரபு என்பதே சரி.. முருகு பற்றிய தொன்மங்களுக்கான ஆதாரம் இந்தியாவில் தமிழகத்திலும், சிந்து சமவெளியிலுமே கிடைப்பதால் முருகும், தமிழரும் தமிழகத்திலிருந்தே சிந்து சமவெளி சென்றிருக்கமுடியும் என்றும் கூறலாமே.. தங்கள் கருத்து என்னவோ..?
அம்பி ,
அம்பி முதல்முறையாக ரிக் வேதத்த்தில் திராவிட மரபுகள் உட் கொள்ள பட்டு உள்ளது என்று திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் கொடுக்கும் ஆய்வு முடிவுகளை ஏற்று எப்படி ஆரிய-பார்பன புராணங்களில் இருந்து திராவிடர் மரபை மட்டும் எப்படி பிரிப்பீர்கள் என்ற உண்மையிலேயே அறிவார்ந்த கேள்வியை கேட்கின்றார்.ஆரிய-பார்பன புராணங்களில் இருந்து திராவிடர் மரபை மட்டும் எப்படி பிரிப்பீர்கள் என்ற கேள்வியை விட ஏன்-எதற்காக பிரிக்க வேண்டும் என்ற கேள்வியில் இருந்து இந்த விவாதத்தை தொடங்குவது தான் மிக சரியாக இருக்கும் அம்பி. இதனை பற்றி நாம் மேலும் விவாதிக்க தாயாராகவே உள்ளேன் அம்பி.
//புராணங்களில் இருந்து திராவிடர் மரபை மட்டும் எப்படி பிரிப்பீர்கள்//
மிக சிறப்பான விவாதத்தை செழுமை படுத்த கூடிய கேள்வி அம்பியிடம் இருந்து வந்து உள்ளது. மிக்க நன்றி அம்பி. திராவிட-தமிழ் மக்கள் தெற்கில்[தமிழகம்] இருந்து வடமேற்கு[சிந்துவெளி] சென்றார்களா அல்லது வடமேற்கில் இருந்து தெற்கு வந்தார்களா என்ற கேள்வியையும் இவ் விவாதத்தில் ஆய்வுக்கு உட்படுத்துவோம்.
//முருகு பற்றிய தொன்மங்களுக்கான ஆதாரம் இந்தியாவில் தமிழகத்திலும், சிந்து சமவெளியிலுமே கிடைப்பதால் முருகும், தமிழரும் தமிழகத்திலிருந்தே சிந்து சமவெளி சென்றிருக்கமுடியும் என்றும் கூறலாமே.. தங்கள் கருத்து என்னவோ..?//
\\ புராணங்களில் இருந்து திராவிடர் மரபை மட்டும் எப்படி பிரிப்பீர்கள்..?\\
என் கடவுளின் விந்திலிருந்துதான் உன் கடவுளே வந்தான் என்று சொல்கிற கூட்டத்தைச் அடித்து விரட்டுவதன் மூலமாக புராணங்களையே துக்கி எறியலாம். இதில் பிரிப்பது ஒரு கேடா?
என் கடவுள், உன் கடவுள் என்பதெல்லாம் யாரோ..?!
சிவன் ஆரியன், முருகன் திராவிடனா..?! தமிழனுக்கு இப்போது சிவனும் அன்னியனாகிவிட்டானா..? தமிழனுக்கு யார்தானையா கடவுள்..? ’மடையர் மன்ற தலைவன்’ என்று தங்களால் அறிவிக்கப்படக்கூடிய, ஒரு மாமன் மச்சான் வகையறா கடவுள்தான் தமிழர் கடவுளாக இருக்கமுடியும் என்கிறீர்களோ..?
முருகன் பற்றிய வக்கிர புராண திருபுகளை மறுதலிக்கும் சிந்துவெளி மொஹஞ்சதாரோ தடயங்கள் : Part I
—————————–
சிந்துவெளி மொஹஞ்சதாரோ முத்திரைகளில் 6 + மீன் என்ற முத்திரைக் காணப்படுகிறது என்கிறார் சிந்துவெளி எழுத்துக்களை ஆராய்ந்து படித்துக் காட்டியிருக்கும் அஸ்கோ பர்போலா. இந்த ஆறுமீன்கள் என்பது ஆறு நட்சத்திரங்களைக் குறிப்பிடுவதாக அவர் கருதுகிறார். முத்திரைகளில் காணப்படும் மீள் உருவம் வானத்து நட்சத்திரங்களைக் குறிப்பிடுவதாக அவர் குறிப்பிடுகிறார். துருவ நட்சத்திரம் வட மீன் என அழைக்கப்பட்டு வந்திருப்பதாகவும் இந்தத் துருவ நட்சத்திரமே சூரிய, சந்திரன் மற்றும் ஏனைய விண்மீன்கள் கீழே விழுந்து விடாமல் ஒரு விண்கயிற்றினால் பிணைத்து வைத்திருப்பதாகவும் பழந் தமிழர் நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறுகிறார் அஸ்கோ.
பண்டைய திராவிடர்களுக்கு மட்டுமன்றி உலகெங்கும் வாழும் மக்களுக்கு முக்கியமான விடயமாகத் திகழ்ந்து வந்திருப்பது இனப் பெருக்கம்தான். இது இயற்கையான உந்துதலாக இருக்கின்ற போதிலும் குழந்தைப் பேறு அவர்களுக்கு பெறும் பேறாக இருந்தது. ஏனைய சக்திகள் அக்காலத்தில் இல்லாததால் மக்கள் சக்தி மிக அதிகமாகத் தேவைப்பட்டது. விவசாயம் செய்யவும் யுத்தம் புரியவும். எனவே, ஆரம்ப கால கடவுளர்கள் கருவளத்துடன் தொடர்பு பட்டவையாக இருந்ததில் வியப்பில்லை. எனவே, சிந்து வெளித்திராவிடர்களின் ஆதித் தெய்வமான முருகு அல்லது முருகன் கடவுளை சென்நிற சருமத்தையும், எடுப்பான – வசீகரமான தோற்றத்தையும் கொண்ட இளைஞனாக – பெண்களை கருவுறச் செய்பவனாக அவர்கள் கண்டார்கள். பின்னர் வந்த ஆரியர்களும் முருகக் கடவுளை ஸ்கந்தனாகவும் குமாரனாகவும் உருவகித்து கொண்டார்கள்.
அன்றைய திராவிடர்கள் கருவில் உள்ள சிசுவை, கருப்பையைத் திறப்பதன் மூலம் பிசாசுகள் அல்லது தீய சக்திகள் களவாடிச் செல்ல முடியும் என நம்பினார்கள். எனவே கருப்பை சிசுக்களை அவர்கள் காப்பாற்ற வேண்டியிருந்தது. ஒன்றோடு ஒன்றாக வளையங்களை இணைப்பதன் மூலம் கருப்பையைச் சுற்றி காப்படலாம். பாதுகாக்கலாம் என்று அவர்கள் கருதினார்கள். கருவைக் காத்தல் என்பதால் காப்பு என்றும், வளைந்து இருப்பதால் வளையல் என்றும் இன்றளவும் கை வளையல்கள் அழைக்கப்படுகின்றன. வளைகாப்பு மூலம் கருவைக் காப்பதால் இக்காத்தல் தெய்வம் முருகு என்றும் பின்னர் முருகன் என்றும் அழைக்கப்பட்டு, இன்றளவும் தமிழ்க் கடவுளாக முருகன் நிலைத்து நிற்கின்றான். கருவில் உள்ள சிசுவை காக்கும் ஒரு முயற்சியாகவே இப்பண்டைய திராவிடர் பழக்கம் இன்றளவும் வளைகாப்பு நிகழ்ச்சியாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆதித் திராவிடர்கள். ஆண் குழந்தையை வேண்டியும் இச்சிந்துவெளி முத்திரைகளில் வளையல்களைப் பொறித்து வைத்தார்கள். சிந்துவெளி முத்திரைகளை ஆராய்வோர் அவற்றில் மீன் சின்னத்தைக் கண்டுள்ளார்கள். பின்னர் இந்த மீன் சின்னங்கள் ஒன்றை ஒன்று பற்றிப்பிடித்ததாக வரையப்பட்டிருப்பதாக மாற்றம் அடைந்திருக்கின்றன. இதுவே வளையலுக்கான, காப்புக்கான ஆரம்பச் சுழி.இவை பர்போலாவின் ஆய்வுகள்.
[ஆறு வின்மீன்களுக்கும்(கார்திகை) ,முருகனுக்கும் உள்ள தொடர்பு பர்போலாவின் ஆய்வுகளில் காட்ட படுகின்றது ]
பின்னிணைப்பு : திரு இராமனுக்கு விளக்கம் :முருகன் பற்றிய வக்கிர புராண திருபுகளை மறுதலிக்கும் சிந்துவெளி மொஹஞ்சதாரோ தடயங்கள் : Part I
ஆரியர் திராவிடர் என்ற சுய உணர்வுடன் அறிவை செலுத்தி ஆய்வதை விட தொல்லியல் கண்ணோட்டத்துடன் அறிவை செலுத்தி சிந்து சமவெளி மக்களின் ம்ரபுகளை ஆய்வு செய்யும் போது இராமனின் கேள்விகள் தேவையற்றவை என்பது தெளிவாகின்றது. அதை பற்றி பாப்போம்.
சிந்துவெளி நாகரிகம்:
சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.
https://www.facebook.com/thinaiyagam/posts/352355358274031:0
நன்றி :முனைவர் தெ.தேவகலா
6 என்ற எண் குறியீடு எல்லாம் சிந்து நாகரீகத்துக்குப் பின்னால் வந்தது.. பெண்களை கருவுறச் செய்யும் புராதன கால பிரேமானந்தாதான் முருகன், வளைகாப்பு, சீமந்தம் எல்லாம் உமக்கு உவப்பாக இருக்கிறது, முருகன் தீப்பொறி என்றால் மட்டும் பற்றி கொள்கிறது..
முருகன் பற்றிய வக்கிர புராண திருபுகளை மறுதலிக்கும் சங்க இலக்கிய தடயங்கள் : Part I
இருபதாம் நூற்றாண்டில் தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாகவே விளங்கிய சங்க இலக்கியத்தின் நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டில் எப்படி இருந்தது? என்ற கேள்வியுடன் இந்த விவாதத்தை தொடங்குவது மிக சரியானதாகவும், “தமிழ் சங்க திரட்டி” என்ற என் புகழுரைக்கு பொருந்தும் திரு உ.வே.சாமிநாதர் அவர்களுக்கு சிறப்பு சேர்ப்பதாகவும் அமையும். திரு உ.வே.சாமிநாதர் அவர்கள் ‘என் சரித்திரம்’ என்ற தன் நூலில் சங்க இலக்கியங்க்களை பற்றி குறிப்பிடும் போது
‘… நான் படித்ததில்லை. என்னுடைய ஆசிரியரே படித்ததில்லை. புஸ்தகத்தைக்கூட நான் கண்ணால் பார்த்ததில்லை’ (என் சரித்திரம், ப.522) என்று சொல்கிறார்.
இத்தைகைய அவல நிலையில் இருந்த சங்க இல்க்கியங்களை[ புறநானூற்றை] உ.வே.சாமிநாதர் பதிப்பித்து வெளியிட்டதும் அன்றைய தமிழ்ச் சூழலில் முக்கியமான நிகழ்வாக மாறியது.தமிழர் வரலாற்றுக்கு ஆதாரமான பல செய்திகளைக் கொண்ட அந்நூல் பெரும் செல்வாக்குப் பெற்றது. அதன்பின் சங்க இலக்கியங்கள் தமிழக அரசியலில் தவிர்க்க இயலாத இடத்தைப் பெற்றன. அதனுடாக ஆரியம் திணித்த வடமொழி,கலை ,பண்பாட்டு திணிப்புகளுக்கு எதிராக தமிழக அரசியல் களத்தில் தமிழ் மொழி பேசும் ,தெலுங்கு மொழி பேசும் மக்கள் [திராவிட மொழி மக்கள் ] ஒருங்கினைந்து குரல் கொடுத்து போராட முடிந்தது. இத்தகைய சூழலில் பார்பன மரபில் பிறந்தாளும் தமிழ் மரபுகளை சங்கம் மூலம் நமக்கு காட்சி படுத்திய அய்யா திரு உ.வே.சாமிநாதர் அவர்களை நாம் நினைவுகூர வேண்டிய நன்றி உள்ள தமிழர்களாகவே நாம் இருக்கவேண்டும் அல்லவா ? [முருகன் மீது பக்தியை பொழியும் திருமுருகுகை சங்கத்தில் சேர்க்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டதை விமர்சன பூர்வமாக நாம் விவாதிக்க வேண்டும்.]
சங்கத்தை பதிப்பித்த அய்யா திரு உ.வே.சாமிநாதர் அவர்களின் முக்கியத்துவத்தை நாம் அறியவேண்டும் என்றால் நாம் கலித்தொகையைப் பதிப்பித்த சி.வை.தாமோதரம்பிள்ளை ‘என் காலத்தில் யான் பார்க்கப் பெற்ற ஐங்குறுநூறு இப்பொழுது தேசங்கடோறுந் தேடியும் அகப்பட்டிலது. என்று கூறி துயருறுவதை நோக்கவேண்டும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து அச்சுக்குக் கொண்டு வர முயன்றனர். இன்னும் கொஞ்சம் முன்னோக்கிப் போய்ப் பதினேழாம் நூற்றாண்டைப் பார்க்கலாம். அப்போது தோன்றிய இலக்கண நூல்களில் முக்கியமானது ‘இலக்கணக் கொத்து.’ இதை இயற்றியவர் சாமிநாத தேசிகர். அந்நூலுக்கான உரையையும் அவரே எழுதியுள்ளார். அவ்வுரையில் சங்க இலக்கியங்களைப் படிக்கக் கூடாது என்று கூறுகிறார். படிக்கக் கூடாத நூல்கள் என்று அவர் தரும் பட்டியல் இது: நன்னூல், சின்னூல், அகப்பொருள், யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன் கதை, அரிச்சந்திரன் கதை. படிக்க வேண்டிய நூல்கள் என அவர் தரும் பட்டியல் இது: தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், பட்டினத்துப் பிள்ளையார் பாடல் ஆகியன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய நூல்களைப் படிப்பவர்களைப் பற்றி ‘பாற்கடலுள் பிறந்து அதனுள் வாழும் மீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை விரும்புதல் போல’ என்று கூறுகிறார். அதாவது சங்க இலக்கியம் உள்ளிட்ட பழைய நூல்கள் அழுக்குகள் என்பது அவர் அபிப்ராயம். தேவாரம், திருவாசகம் முதலிய சைவ நூல்களையே அவர் பால் என்று கருதுகிறார்.
பதினேழாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் சைவம் சார்ந்த சிற்றிலக்கியங்கள், இலக்கண நூல்கள் ஆகியவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. சைவ ஆதிக்கம் மிகுந்திருந்த அச்சூழலில் பிற மதம் சார்ந்த நூல்களை அழுக்குகள் என்று புறந்தள்ளும் பார்வை, கருத்து நிலவியிருக்கிறது என்பதற்குச் சாமிநாத தேசிகரின் கூற்றே சான்றாகிறது. இன்றைய சூழலில் ‘சங்க இலக்கியத்தைப் படிக்கக் கூடாது’ என்று யாராவது சொன்னால் என்னவாகும்? தமிழ்த் துரோகியாகப் பட்டம் கட்டப்பட்டு மாபெரும் எதிர்ப்புக்கு உள்ளாக நேரும். ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் அப்படி ஒரு குரல் எழுந்திருக்கிறது. அது அந்நூற்றாண்டின் குரல் என்றுகூடச் சொல்லலாம். அந்த சங்க தமிழ் எதிர்ப்பு குரலை தன் சங்க நூல் பதிப்புகள் மூலம் முறியடித்து திராவிட அரசியல் குரலுக்கு வலு சேர்த்த அய்யா திரு உ.வே.சாமிநாதர் அவர்கலுக்கு எம் தமிழ் இனம் சார்பாக மிக்க நன்றியினை செலுத்திக்கொண்டு முருகன் பற்றிய வக்கிர புராண திருபுகளை மறுதலிக்கும் சங்க இலக்கிய தடயங்கள் பற்றிய எம் கருத்துகளை பதிவிட போகின்றேன்.
நன்றி : எம் தமிழ் ஆசிரியர் பேராசிரியர் பெருமாள் முருகன்
http://www.perumalmurugan.com/
சிந்து சமவெளி தமிழர்களுடையது தான் என்பதே முழுமையாக நிறுவப்படவில்லை . அதை ஆதாரமாக காட்டினால் எப்படி ?
சிந் சமவெளியில் இருந்து , காவிரிக்கு திராவிட சமுதாயம் தள்ளப்பட்டு இருந்தால் , மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் இலக்கியங்களில் அதை பற்றிய குறிப்பு இருந்திர்க்க வேண்டும் . லிங்க பிறேன்கா , புலாரா பவுனா இருக்க வேண்டும் .
ஆரிய இலக்கியத்தில் உள்ள குதிரை போல , சரஸ்வதி நதி போல எதாவது இருக்க வேண்டும் .
இரண்டாயிரம் ஆண்டு சமுதாயம் 1600 BC யில் காணாமல் போகிறது . 1000-700BC யில் எழுதப்பட்ட புத்தகத்தில் அதை பற்றி எதுவும் இல்லை ?
அதே போல இரண்டாயிரம் ஆண்டுகள் இலாத மொழி வளர்ச்சி காணமல் போன 700 ஆண்டுகளில் உருவாகிறது ?
வலமிருந்து இடமாக எழுதியவர்கள் திடீரென இடமிருந்து வலமாக எழுதுகிறார்கள் ?
சிந்து சமவெளியின் எழுத்துகளை டிக்ரிப்ட் செய்யும் வரை கடினம் தான்.
அடுத்து சிந்து சமவெளியில் இறைவனுக்கே பெரிய இடம் இல்லை. பெரிய கோவில்களோ அரண்மனையோ இல்லை. முருகன் என்னும் கடவுள் அவர்களுக்கு இருந்தான் என்று நிரூபிப்பது மிகவும் கடினம்
முருகன் பற்றிய வக்கிர புராண திருபுகளை மறுதலிக்கும் சிந்துவெளி மொஹஞ்சதாரோ தடயங்கள் : Part II
கந்தபுராணம்
முன்பே விவாதத்தில் கூறியது போன்று இந்த கந்தபுராணம் நூல் வடமொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்கபட்ட ஒன்றாகும். பார்பன மரபுகளான வேதம் ,அசுரர் எதிர்ப்பு ,தொல்குடி மரபில் வணங்கப்படும் கடவுள்களை புராணத்துடன் இணைப்பது ஆகிய நோக்கத்துடன் 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இன் நூல் புராணம் என்பது சுருக்கமாக உள்ள வேதங்களை தெளிவாக விரிவாக விளக்கமாக எடுத்துக்கூறுவதே என்ற சந்திரசேகரேந்திர சங்கராசாரியின் கருத்துக்கு ஏற்ப ஸ்கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்பாகவே கந்த புராணம் விளங்குகின்றது.
பார்பன ,ஆரிய மரபுக்கு உட்கவரப்பட்ட சிந்துவெளி மொஹஞ்சதாரோ கால நாகரிக திராவிடர்களின் கடவுலான முருகனின் தொன்மமும் அவன் பிறப்பும் பல்வேறு புராணங்களிளும் திரித்து காட்டப்படுவதை பாப்போம். ஸ்கந்தரின் தோற்றம் பற்றிய புராணங்களின் பொதுக் கருத்து என்னவென்றால் :
அரக்கன் தாரகாவினால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிடுமாறு தமது சார்ப்பில் அக்னிதேவரை அனுப்பினார்கள். சிவபெருமானும் பார்வதியும் தாம்பத்திய உறவில் இருந்த சமயத்தில் அவர் செல்ல, அதனால் சிவபெருமானின் உறவு தடைபட, அவருடைய விந்து கீழே விழுந்தது. கோபமுற்ற சிவபெருமான் அதை எடுத்து விழுங்குமாறு அக்னி தேவனுக்குக் கட்டளை இட்டார். சிவபெருமானின் கட்டளையின்படி அக்னி தேவன் அதை எடுத்து விழுங்க முயன்றார் . ஆனால் அவரால் தன் உடலுக்குள் அதை வைத்து இருக்க முடியாமல் போனதினால், கங்கை நதியில் சென்று அதைத் துப்பி விட்டார். அதனால் கங்கையும் கர்பமுற்று ஒரு குழந்தயைப் பெற்று எடுத்தப் பின் அந்தக் குழந்தயை தன் கரை ஓரத்தில் ஒதுக்கினாள். அதைக் கண்ட கிருத்திகை நட்சத்திரம் ஒரு மனித உரு எடுத்து வந்து அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வரலானாள். அதனால்தான் முருகனுக்கு கார்திகேயா என்ற பெயர் அமைந்ததாக கூறுகின்றனர்.
[இப் புராணங்களுக்கு முன்பே இருந்த சிந்துவெளி மொஹஞ்சதாரோ கால திராவிட நாகரிகத்தில் முத்திரைகளில் 6 + மீன் என்ற முத்திரை காணப்படுவதையும் அதற்கு அஸ்கோ பர்போலா கொடுத்த விளக்கத்தையும் முருகன் பற்றிய வக்கிர புராண திருபுகளை மறுதலிக்கும் சிந்துவெளி மொஹஞ்சதாரோ தடயங்கள் : Part I என்ற தலைப்பில் நாம் ஆய்வு செய்து உள்ளோம். எனவே புராணங்கள் சிந்துவெளி மொஹஞ்சதாரோ கால திராவிட தொல்லியல்-கடவுள் பற்றிய மரபுகளை உள்வாங்கி செரித்துக்கொண்டு எழுதப்பட்டு உள்ளன என்பது புலன் ஆகிறது. ]
இதைப் பற்றி பல்வேறு புராணங்களிலும் முரண்பாடுகள் உள்ளன எனவும், மார்கண்டேய புராணம், நாரதப் புராணம், மற்றும் குமாரப் புராணம் இவைகளில் ஸ்கந்த பிறந்த வரலாறு பற்றி கூறப்படவில்லை எனவும் தெரிகின்றது.விஷ்ணு புராணங்களும், வாயு புராணங்களும் காட்டுப் புதர்களில் அக்னிக்குப் பிறந்தவர் ஸ்கந்த என்ற செய்தி சிறிய அளவில் கூறப்பட்டு உள்ளது. மத்சய புராணத்தில் தேவர்கள் தாரகா என்ற அசுரனினால் துன்புறுத்தப்பட்டதை பற்றியும், சிவன்-பார்வதியின் திருமணம், ஸ்கந்த பிறப்பு என அனைத்தையும் விரிவாகக் கூறி உள்ளன. மத்சய புராணக் கதையின்படி சிவபெருமானின் உயிரணுவை பார்வதியே முதலில் பெற்று அதை வெளித் தள்ள, அது அக்கினி மூலம் மற்ற அனைத்து கடவுட்களின் வயிற்றிலும் செல்ல, அதை அவர்களாலும் தங்களுக்குள் வைத்து இருக்க முடியாமல் வெளியேற்ற, ஒரு நீர்த் தேக்கமாக அது மாறியது. அந்த நீர்த் தேக்கத்தில் இருந்த நீரையே ஆறு கிருத்திகைகளும் குடித்தபின் பார்வதிக்கும் தர, அதைக் குடித்த பார்வதியும் கர்பம் அடைந்தாள் என்றும் அதன் மூலமே ஆறு தலைகளையும், சக்தி என்ற ஆயுதத்தினையும் ஏந்தியவாறு அகில உலகினையும் பிரதிபலிக்கும் ஒரு அற்புதக் குழந்தையாக பார்வதியின் வலதுபுறத்தில் இருந்து ஸ்கந்த வெளி வந்தார் என்றும் கூறுகின்றது.
கருட புராணக் கதையில் அக்கினித் தேவனின் மகனாக நாணற் புதர்களில் ஸ்கந்த பிறந்தது, மற்றும் தக்ஷன் செய்த செயல்களை எல்லாம் விவரித்துவிட்டு, சாகா, விசாகா மற்றும் நைகமேயா என்பவர்களும் அக்கினிக்குப் பிறந்தவர்களே எனவும், குமரன் கிருத்திகைகள் முலம் பிறந்ததினால் கார்த்திகேயா என்ற பெயர் பெற்றதாகவும் எழுதப்பட்டு உள்ளது. பாகவதப் புராணத்திலும் ஸ்கந்த அக்னி மற்றும் கிருத்திகைகளுக்குப் பிறந்தார் எனவும், நிஷாகாவின் தந்தையே அக்னி எனவும் கூறப்பட்டு உள்ளது.
அதே சமயம் சிந்துசமவெளி நாகரிகம் திராவிடர் களுடையதே என்று ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கொடுக்கும் விளக்கம் என்னவென்றால் : சிந்துசமவெளி முத்திரைகளை தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றை அடையாளம் கண்டால், ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் அர்த்தங்கள் கொண்டதாக உள்ளன என்பதை அறிய முடிகிறது.அவை, தொல் திராவிட வடிவங்களே என்பதும் உறுதியாகிறது. சிந்து சமவெளி முத்திரைகளை வாசிப்பதன் மூலம், சிந்துசமவெளி மரபுகள், இரண்டு நீரோடைகளாக பிரிந்துள்ளதாக சான்றுகள் அறிவிக்கின்றன. அவை, முந்தைய திராவிட மரபின் வேர்கள், பண்டைய தமிழகத்திற்குள்ளும், சிந்து சமவெளியிலும் இருப்பதை, சிந்துவெளி முத்திரைகள் உறுதிப்படுத்துகின்றன. பாண்டியர்களின் மூதாதையர்கள், சிந்து சமவெளியில் வணிகத்தில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கலாம். அவர்கள், தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டை தமிழ் பேசியவர்களாக இருந்திருக்கலாம்.முந்தைய இந்திய – ஆரிய பண்பாட்டுக்குள் உள்ள (ரிக் வேதம்) வார்த்தைகள், சிந்துவெளியில் இருந்து, கடன் மொழியாக நுழைந்திருக்கின்றன. ரிக் வேதத்தில் வரும் பூசன் என்ற கடவுளின் பெயர், சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. சிந்துசமவெளி நாகரிகம், முன் வேத பண்பாட்டை விட, காலத்தால் மிக முந்தையது என்பது, இதனால் விளங்குகிறது.சிந்துசமவெளி குறியீடுகளுக்கும், பண்டை தமிழ் வார்த்தைகளுக்குமான தொடர்பு அதிகம் இருப்பதை, சங்க கால தமிழ் சொற்கள் மூலமாக அறியலாம். சிந்துவெளி குறியீடுகளில், மாற்றுதல், பெறுதல், சாலைகள் சந்திக்கும் தெருக்கள், வணிகன் உள்ளிட்ட குறிகளுக்கு இணையான வார்த்தைகள், தொல்தமிழில் உள்ளன. எனவே, சிந்துசமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.
[திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் கொடுக்கும் விளக்கப்படி பார்த்தால் புராணங்களுக்கு முந்தைய ரிக் வேதத்திலேயே திராவிட மரபுகள் உட் கொள்ள பட்டு உள்ளது தெளிவாகின்றது. புராணம் என்பது சுருக்கமாக உள்ள வேதங்களை தெளிவாக விரிவாக விளக்கமாக எடுத்துக்கூறுவதே என்ற சந்திரசேகரேந்திர சங்கராசாரியின் கருத்தின் படியும் , ஐராவதம் மகாதேவன் விளக்கத்தையும் ஒருங்கினைத்து பார்த்தால் சிந்துசமவெளி நாகரிகம் மற்றும் திராவிடர் மரபுகளை உட்கொண்ட வேதத்தின் வெளிப்பாடே புராணங்கள் என்பதும் தெள்ள தெளிவாகின்றது ]
// இப் புராணங்களுக்கு முன்பே இருந்த சிந்துவெளி மொஹஞ்சதாரோ கால திராவிட நாகரிகத்தில் முத்திரைகளில் 6 + மீன் என்ற முத்திரை காணப்படுவதையும் அதற்கு அஸ்கோ பர்போலா கொடுத்த விளக்கத்தையும் முருகன் பற்றிய வக்கிர புராண திருபுகளை மறுதலிக்கும் சிந்துவெளி மொஹஞ்சதாரோ தடயங்கள் : Part I என்ற தலைப்பில் நாம் ஆய்வு செய்து உள்ளோம். //
நீரும் யாரும் ஆய்வு செய்தீரோ..?!!!
எப்படியோ போகட்டும்.. சரி, அஸ்கோ பர்போலா சிந்து வெளி நாகரிகம் சரஸ்வதி டெல்டா வரை பரந்திருந்தது என்கிறாரே.. ‘ஆரியரும்’,’திராவிடரும்’ கலந்து வசித்திருக்கிறார்கள் என்கிறாரே.. எல்லாம் கலந்து போன அவியலில் உம் தோட்டத்து மாங்காயை மட்டும் எப்படி அய்யா கண்டுபிடிப்பீர்..?! பேசாமல், முதல்,இடைச் சங்கம் நிகழ்ந்த கடல் கொண்ட தமிழகத்துக்கு வாரும்.. தமிழர் தொன்மை, தொன்மங்கள் அங்குதானிருக்கிறது.. பல்யாகசாலை முதுகு குடுமிப் பெருவழுதி உமக்காக காத்துக் கொண்டிருக்கிறார்..
அம்பி,
இங்கு எனக்கும் ,அம்பிக்கும் இடையே உள்ள அறுமீன் பற்றி விவாதத்தில் ,சிந்து வெளி நாகரிகத்தில் அறுமீன்-முருகன் தொடர்புகளை திரு அஸ்கோ பர்போலா,மற்றும் ஐராவதம் மகாதேவன் ஆகியவர்கள் காட்டும் போது அதனை மறுக்க வார்த்தை இன்றி ஆறிப்போன அறிவாளியாகிய அம்பி அவர்கள் ,அடுத்த கேள்வியை கேட்கின்றார் ! அறுமீன் மீதான முடிச்சுகளை அவிழ்த்த பின்னும் அதனை இன்னும் அம்பி அவர்கள் ஏற்காமைக்கான அறிவு பூர்வமான ஆய்வு கருத்துக்களை கொடுக்க வேண்டும். அதன் பின் அவருடைய அடுத்த கேள்வியாகிய “அஸ்கோ பர்போலா சிந்து வெளி நாகரிகம் சரஸ்வதி டெல்டா வரை பரந்திருந்தது என்கிறாரே.. ‘ஆரியரும்’,’திராவிடரும்’ கலந்து வசித்திருக்கிறார்கள் என்கிறாரே.. ” என்ற சந்தேகங்கள் எல்லாம் தீர்க்க படும்
// அறுமீன் மீதான முடிச்சுகளை அவிழ்த்த பின்னும் அதனை இன்னும் அம்பி அவர்கள் ஏற்காமைக்கான அறிவு பூர்வமான ஆய்வு கருத்துக்களை கொடுக்க வேண்டும். //
முடிச்சவிழ்ப்பு வளைகாப்பில் வந்து முடிந்திருக்கிறது.. அது சரி, அறிவுபூர்வமான ஆய்வுகளுக்கும் தங்களுக்கும் என்ன சம்பந்தம் அய்யா..?!
ஆரிய பார்பன புராணம் ,ஆகமம் ,வேதம் எல்லாம் இனிக்கும் அம்பிக்கு பழம் தமிழர் மரபான வளையல் காப்பு ஏன் கசக்கின்றது ?
//ஆனால் இங்கே வியாசனோ சீனப்பெருஞ்சுவரை கம்யுனிஸ்டுகள் தங்களின் கலாச்சாரம் என்று பீற்றிக்கொண்டார்கள் என்று திருப்புகழ் பாடுகிறார். வியாசனின் நாடகம் பல்லிளிக்கிறது. வேசத்தை ஒழுங்காக போடவும்.///
நான் வேசம் போடுகிறேனோ இல்லையோ தோழர் தென்றல் தப்புத் தாளம் போடுகிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் எங்களின் கம்யூனிச வர்க்கப் போராளி தோழர் தென்றலுக்கு தோழர் மாவோ சீனப் பெருஞ்சுவரை சீனர்களின் பெருமை மிகுந்த அடையாளமாகக கருதினார் என்பது தெரியாமல் போனது தான். அது மட்டுமன்றி இன்றும் சீனர்கள் சீனப்பெருஞ்சுவரை தமது பெருமை மிகுந்த வரலாற்றின் அடையாளமாகப் பார்க்கிறார்கள் அதைப் பற்றி பீற்றிக் கொள்கிறார்கள். தோழர் தென்றலைப் போன்ற வர்க்கப் போராளிகளுக்ககெல்லாம் அப்பனான வர்க்கப்போராளி மாவோ கூட சீனப்பெருஞ்சுவரைக் கட்ட எத்தனை தொழிலாளர்கள் இறந்திருப்பார்கள் என்று கூறிச் சீனப்பெருஞ்சுவரை இழிவு படுத்தவில்லை, இலட்சக்கணக்கான் தொழிலாளர்களைக் கொன்று குவித்ததின் சின்னமாகப் பார்க்கவில்லை, மாறாக சீனப்பெருஞ்சுவரை சீனர்களின் பலத்துக்கும் பெருமைக்கும், கடும் உழைப்புக்கும் அடையாளச் சின்னமாகப் பெருமிதமாகப் பார்த்தது மட்டுமல்ல, அதை பற்றிக் கவிதைகளும் எழுதினார் என்பதை அறியாமல் உளறிய தோழர் தென்றல் உண்மையில் ஒரு போலி வாய்ச்சவடால் வர்க்கப்போராளி என்பது தெளிவாகிறது. 🙂
http://books.google.co.in/books?id=EwFYg_twIgYC&pg=PA97&lpg=PA97&dq=%E2%80%9CDuring+his+long+struggles+against+the+Nationalist+Party+and+the+Japanese,+MAO+ZEDONG+HAD+OFTEN+USED+THE+GREAT+WALL+AS+A+SYMBOL+FOR+CHINA%E2%80%99S+PROUD+AND&source=bl&ots=Eh5MOm4wnZ&sig=H6-bLqHX_4P0y7njU450SmdBQGs&hl=en&sa=X&ei=yC19VIDzGsLQmwX4woGIDw&ved=0CB4Q6AEwAA#v=onepage&q=%E2%80%9CDuring%20his%20long%20struggles%20against%20the%20Nationalist%20Party%20and%20the%20Japanese%2C%20MAO%20ZEDONG%20HAD%20OFTEN%20USED%20THE%20GREAT%20WALL%20AS%20A%20SYMBOL%20FOR%20CHINA%E2%80%99S%20PROUD%20AND&f=false
– The Great Wall of China in Western and Chinese Eyes. – By Louise Chipley Slavicek, Page 97-
///பாபரும், திப்பு சுல்தானும் இந்தியக் கோயில்களை கட்டிக்காக்கிற பொழுது//
ராஜ ராஜ சோழனோ அல்லது ராஜேந்திர சோழனோ எவரையும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றவுமில்லை, மற்றவர்களின் வணக்கத் தலங்களை அழிக்கவுமில்லை.மறுக்க முடியாத உண்மை எதுவென்றால், வந்தேறிகளாகிய திப்பு சுல்தானும், பாபரும் ராஜ ராஜ சோழனின் கால்தூசிக்கும் ஈடாக மாட்டார்கள் என்பது தான்
//முதன் முதலில் சமஸ்கிருதத்தை கோயில் கல்வெட்டிற்குள் கொண்டு போனவன் இராசஇராசன். ///
பல்லவர் காலத்திலேயே தமிழ்-சமக்கிருதக் கல்வெட்டுகள் வந்து விட்டன. பல்லவர்கள் கல்வெட்டுகளைக் கோயிலில் எழுதாமல் கழிப்பறையிலா எழுதினார்கள்? இக்காலத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவது போன்று அக்காலத்தில் தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த சமக்கிருதத்துக்கும் ராஜ ராஜ சோழன் இடமளித்திருக்கலாம். சமக்கிருதத்தை வளர்த்தவர்கள் தமிழர்கள், கிரந்த எழுத்து தமிழ்நாட்டில் உருவாகியது. சமக்கிருதம் தமிழை விழுங்க முயற்சிக்குமென்றோ தனக்குப் பின்னால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வரும் கன்னடர்களும், வடுகர்களும், கோயிலிலிருந்து தமிழையகற்றி, சமக்கிருதத்துக்கு முதலிடம் கொடுப்பார்கள் என்றோ அல்லது தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாதவர்கள் தமிழன் என்ற போர்வையில் தன்னை அவர்களின் மன்னர்களைக் குறை கூறாமல் தன்னை மட்டும் வசை படுவார்களோ என்றோ ராஜ ராஜ சோழனுக்குத் தெரியாமல் போய் விட்டது.
//வந்தேறிகளுக்கு காஷ்மீர் பார்ப்பனர்களுக்கு சதுர்வேதி மங்கலம் எழுதிக்கொடுத்ததும் இராச இராசன்.///
வந்தேறி பார்ப்பனர்களுக்கு சதுர்வேதி மங்கலம் கொடுத்தான் ராசா ராசன், வந்தேறிவடுகர்களுக்கும், கன்னடர்களுக்கும் தமிழர்களின் நிலங்களைப் பகிர்ந்து கொடுத்தனர் விஜய நகர அரசர்கள், வந்தேறி முகலாயர்களுக்கு நாட்டைக் கொடுத்து விட்டு, அவர்களுக்கு வேலைக்காரரர்களாக இருந்தனர் தமிழர்கள், இன்றைக்கு வந்தேறிய கூத்தாடி நடிக, நடிகைகளை அரசியல்வாதியாக்கி அழகு பார்த்ததும், முதல்வராக வேண்டி வெற்றிலை வைத்தும் அழைக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள், இதில் இராச இராச சோழனை மட்டும் வசை பாடுவதேன்.
//தமிழர்களின் கலாச்சாரத்தை நாயும் சீண்டாத புளிச்ச மாவு என்பார். ///
தமிழர்களின் கலாச்சாரம் புளிச்ச மாவுக்குள் இல்லை, உண்மையான ஒவ்வொரு தமிழனது இரத்தத்திலும் உண்டு என்பது மற்றவர்களுக்குப் புரியும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. ‘It’s a Tamil thing, you wouldn’t understand’. 🙂
//சாதிப்பிரச்சனையை நீக்க வேண்டுமென்றால் ஆதினங்கள், மடங்கள் கைகளில் இருக்கிற நிலங்களை கோயில் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்…///
“Koheda Yanne, Malle Pol” என்ற சிங்களப் பழமொழியுண்டு. “எங்கே போகிறாய் – Koheda Yanne? “ என்ற கேள்வியைச் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒரு Village idiot, அந்தக் கேள்விக்குப் பதிலாக “Malle Pol – என்னுடைய பையில் தேங்காய் இருக்கிறது” என்றானாம். தென்றலின் பதிலைப் பார்த்ததும், அந்தப் பழமொழி தான் எனக்கு நினைவுக்கு வந்தது.
என்னுடைய கேள்வி எதுவென்றால்: ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சியில் சாதிப்பிரச்சனை இருந்தது பற்றிப் பேசுகிறவர்கள், அதற்குப் பின்பு ஆண்ட திராவிடர்கள் (கன்னட/வடுகர்கள்) சாதிப்பிரச்சனையை ஏன் நீக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி அவர்களை ஏன் வசைபாடுவதில்லை? என்பது தான்.
ஆதீனங்கள் மடங்கள் மட்டுமல்ல, கிறித்தவ தேவாலயங்ககள், வக்பு வாரியங்களிடமுள்ள நிலங்களையும் பறிமுதல் செய்வதால் சாதிப்பிரச்சனையை நீக்க முடியுமென்றால், அவற்றைப் பறிமுதல் செய்வதில் தவறேதுமில்லை. நான் கேட்ட கேள்விக்கு முழுப்பாமல் பதிலளிக்க முடியாமல், தென்றலின் முன்னோர்களின் பாசம் அவரது கண்ணை மறைக்கிறது போலிருக்கிறது. கன்னட/வடுக விஜயநகர ஆட்சியில் சாதிப்பிளவுகளை நீக்க ஏன் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதைப் பற்றி மட்டும் ஏனோ அவர் பேச மறுக்கிறார். ஆனால் இராச இராச சோழனை மட்டும் தான் குற்றம் கூறுவாராம், பழிப்பாராம், வசை பாடுவாராம். எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்குமோ என்று சும்மாவா சொன்னார்கள் தமிழ் முன்னோர்கள். 🙂
நமது அதி உன்னத தோழர் மாவோ 1936இல் எழுதிய பனி எனும் கவிதை வியாசனுக்கும், அவர் சுட்டிக்காட்டுகிற கைக்கூலி Louise Chipley Slavicekக்கும் சீனப்பெருஞ்சுவரை போற்றியது போல் இருக்கிறதாம். மானங்கெட்டவர்கள் விசயங்களை எப்படியெல்லாம் திரிக்கிறார்கள் என்பதை தோழர் மாவோவின் கவிதையையும் மேலை நாடுகள் திரித்து எழுதிய கவிதையையும் வாசகர்களின் பார்வைக்கு முன்வைக்கிறேன். துரோகிகள் ஓடி ஒளியாமல் பதில் சொல்லட்டும்.
மாவோ 1936இல் சப்பானிய ஏகாதிபத்திய எதிர்ப்பு போர் எதிர்வருவதை முன்னிட்டு எழுதிய பனி எனும் கவிதை;
North country scene:
A hundred leagues locked in ice,
A thousand leagues of whirling snow.
Both sides of the Great Wall
One single white immensity.
The Yellow River’s swift current
Is stilled from end to end.
The mountains dance like silver snakes
And the highlands* charge like wax-hued elephants,
Vying with heaven in stature.
On a fine day, the land,
Clad in white, adorned in red,
Grows more enchanting.
This land so rich in beauty
Has made countless heroes bow in homage.
But alas! Chin Shih-huang and Han Wu-ti
Were lacking in literary grace,
And Tang Tai-tsung and Sung Tai-tsu
Had little poetry in their souls;
And Genghis Khan,
Proud Son of Heaven for a day,
Knew only shooting eagles, bow outstretched
All are past and gone!
For truly great men
Look to this age alone.
*AUTHOR’S NOTE: The highlands are those of Shensi and Shansi. (நன்றி: மார்கிஸ்ட் இணையதளம்)
மேற்கண்ட கவிதை சீனப்பெருஞ்சுவரை கலாச்சார பெருமையாக பாடவில்லை. கொத்து கொத்தான மக்கள் கொல்லப்பட்டதை நினைவஞ்சலியாக சொல்கிற பொழுது நிலப்புரபுத்துவத்தை கடுமையாக சாடுகிறார். சீனப்பெருஞ்சுவரைக் கட்டிய மன்னர் ஜின்-சி-குவாங்கையையும் ஹாண் வு டீயையும் பாடல்களில் சாடுகிறார். சொர்க்கத்தின் மகன் என்ற சொல்லப்படுகிற செங்கிஸ்கானுக்கு கழுகுகளை மட்டுமே சுடத்தெரியும் என்று மேட்டுக்குடிகளை தோலுரிக்கிறார். நிலப்புரத்துவ காலம் முடிந்துவிட்டது. இன்றைய காலகட்டத்தை நோக்குங்கள் என்று முடிவதாக இருக்கிறது பாடல்.
——-
இப்பொழுது மானங்கெட்டவர்களின் தரப்பை உற்றுநோக்குவோம்.
வியாசன் சுட்டிக்காட்டுகிற பாடல் மொழிபெயர்ப்பில் தோழர் மாவோ சீனப்பெருஞ்சுவரைக் கட்டிய மன்னர்களை தலைவணங்குவதாக திரித்திருக்கிறார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பு போருக்கு அறைகூவல் விடுக்கிற பாடலை சீனப்பெருஞ்சுவரைப் போற்றிப்பாடுவதாக திரித்திருக்கிறார்கள். இந்த அயோக்கித்தனத்தை அம்பலப்படுத்த, அந்தப் புத்தகத்தில் இருக்கிற பாடலை வாசகர்கள் கவனிக்க வேண்டும்; திரிக்கப்பட்ட பாடல் இதோ;
This is the scene in that northern land;
A hundred leagues are sealed in ice,
A thousand leagues of whirling snow.
On either side of the Great wall
One vastness is all you see.
From end to end of the great river
Thus rushing torrent is frozen and lost.
The mountains dance like silver snakes,
The highlands roll like waxen elephants,
As if they sought to vie with heaven in their height.
And on a sunny day
You will see a red dress thrown over the white,
Enchnatingly lovely!
Such great beauty like this in all our land scape
Has caused unnumbered heroes to bow in homage.
But alas, these heroes-Qin Shi Huang Di ad
Han Wu Di…
Now they are all past and gone;
To find men truly great and noble-hearted
We must look here in the present*
வியாசனின் சந்தர்ப்பவாத மாமாத்தனத்தை அம்பலப்படுத்த போய் மேற்குலகையே அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. வியாசனின் விருப்பப்படி சீனப்பெருஞ்சுவரை கலாச்சார படைப்பாக கம்யுனிஸ்டுகள் போற்றினார்கள் என்று காட்டுவதற்காக திரிக்கிறார். ஆனால் நூலாசிரியர் ஏன் மாவோவை சீனப்பெருஞ்சுவரை போற்றுவதாக காட்டுகிறார்? இது இன்னும் சுவாரசியமானது. நான் ஏற்கனவே சொல்லியபடி, இப்படியெல்லாம் மாவோவே போற்றுகிற சீனப்பெருஞ்சுவரை கம்யுனிஸ்டுகள் இடித்தார்கள்; கலாச்சார புரட்சி என்ற பெயரில் கலைச் செல்வங்களை இடித்தார்கள் என்பதைச் சொல்வதற்காக மாவோவே போற்றிப் பாடியதாக பாடலை தன் வசதிக்காக திரித்து இருக்கிறார்கள். பாடலின் அடுத்த பக்கத்தில் மேற்குலகின் சீனப்பெருஞ்சுவர் மீதான கம்யுனிஸ்டுகள் செய்த அராஜகம் என்று இப்படி கதைக்கிறார் நூலாசிரியர்;
“Mao himself turned on the great wall, ————–As part of his new “revolution,” Mao urged china’s yound people to wage war on all remnants of their country’s pre-communist past. Goaded on by Mao, squads of adolescent red gurads fanned out through the countryside demolishing anything related to china’s traditional culture from ancient Buddhist temples and statues to rare Confucian texts. Nor did the Great wall eascape the Red Gurads wrath. Hundreds of miles of walls were vandalized by mao;s adolescent strom troopers, and huge quantities of stones and bricks were hauled away to use in building roads, dams, houses and even pigsties”
இதை முந்தைய பின்னூட்டத்திலயே சொல்லியிருக்கிறேன். சீனப்பெருஞ்சுவர் அழிந்துவிட்டது என்று மேற்குலகம் மூக்கால் அழுவதற்கு கம்யுனிஸ்டுகள் மீது பழிபோட்டு தப்பிக்கவும், கலாச்சாரப் புரட்சியை திரித்து எழுதவும் மாவோவே சீனப்பெருஞ்சுவரை போற்றிப்பாடியாதக பொய்யாக பாடலைப்புனைந்து விட்டு போரில் சிதைந்த சுவரை கம்யுனிஸ்டுகள் மீது போட்டுவிட்டு, சோசலிச கட்டுமானத்தில் செங்கல்லை உருவி வீடும், அணையும் பன்றித் தொழுவம் கூட கட்டினார்கள் என்று அழுகிறார் நூலாசிரியர்.
மாறாக நிலப்புரத்துவ விழிமியங்களை மாவோ கடுமையாக சாடி ஏகாதிபத்திய எதிர்ப்பு சின்னமாக சுவரை காட்டுவதை அவரது கவிதை காட்டுகிறது.
இவ்விதம் வியாசனும் நூலாசிரியரும் ஒரு சேர அம்மணமாக நிற்கிறார்கள். இந்தப் பிழைப்பு மாமாவேலையை விட கேவலமானது. நைச்சியத்தை அம்பலப்படுத்த உதவிய வியாசனுக்கு நன்றி சொல்லலாம். ஆனால் இவர்களோ மாவோ சொல்வதைப்போல வாய்கொள்ள முடியாத அளவு துணியை விழுங்கி விட்டு விழிபிதுங்கி நிற்கிறார்கள். இவர்களாகவே துப்புவார்கள்.
அப்பொழுதுதானே மூச்சுத்திணறி சாகமாட்டார்கள் இந்த பிழைப்புவாதிகள்!
பொறுமையாக தேடியிருந்தால் தோழர் மாவோ எழுதியக் கவிதை வியாசருக்குக் கிடைத்திருக்கும் . சும்மா கூகிளில் அடிச்சு விட வேண்டியது அப்புறம் அதையே இங்க வாந்தி எடுக்க வேண்டியது. அனைத்து உணர்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு துவேச உணர்ச்சி மட்டும் கொண்டிருந்தால் இப்படி தான் உண்மை எது பொய் எது என்று தெரியாமல் அல்லாட வேண்டியது தான். இவரு வணங்கற முருகனையே திரிச்சுபுட்டாங்க. அதே அவருக் கண்ணுக்கு தெரியல. அத இங்க தம் கட்டி பொளந்து கட்டறாரு. . இதெல்லாம் எங்க தெரிய போகுது.
I asked my Chinese colleague about this poem. He said he remember it and have been taught in school
he gave me the original poem link
http://so.gushiwen.org/view_71250.aspx
And told me Mao praises the great wall. Period
நண்பர் தமிழ் தாகத்திடம் இருந்து Contextஇல் இருந்து எப்படி விசயத்தை அணுகுவது என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் இராமன். இதன் மூலமாக சீன நண்பரோ, மேற்கத்திய ஊடங்கங்களோ, பாடலை எப்படி காட்டுகிறார்கள்; எப்படி புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பது தங்களுக்கு புலப்படும்.
I get your point. But it was taught in his school that way during communist regime in China. I dont think they would have missed the essence of poem and the point mao wants to make.
கம்யுனிஸ்ட் ரிஜிம் என்று அள்ளிப்போடுகிறீர்களே! உங்களது சீன நண்பருக்கு என்ன வயது 40-50 இருக்குமா? திரிபுவாதி தெங்சியோ பிங் 1978 வந்த பொழுது இறங்கியது கம்யுனிசம்! அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்றுவரை சீனாவில் ஏற்படுத்தபட்ட மாற்றம் வரலாற்று ரீதியாக புரட்சிகர இயக்கங்கள் அடி முதல் நுனி வரை தெரிந்துவைத்திருக்கின்றன. எனவே இந்த 35 ஆண்டுகால வரலாற்றில் பள்ளிபாடங்கள் என்னவாக இருந்தன என்று விவாதிப்பதற்கு நீங்களும் உங்களது சீன நண்பரும் தயாரா? நேர்மையோடு விவாதியுங்கள். அதைவிடுத்து மொட்டையாக சீன கம்யுனிசம், கிரேட் வாலை புகழ்ந்தார்; எனது நண்பர்கள் சொன்னார்கள்; கம்யுனிசம் இப்படி என்று கதைவிடுவது அழகல்ல. எள் காய்வது எண்ணெய்க்கு; எலிப்புழுக்கை காய்வது எதற்கு?
இராச இராசனின் பார்ப்பனியப் பாசத்திற்கும் சமஸ்கிருத அடிமைத்தனத்திற்கும் சப்புக்கொட்டுகிற வியாசன், இராசஇராசனுக்கு தமிழும் தமிழரும் அடிமைப்படுத்தப்படுவது தெரியாமலேயே போய்விட்டதாம். ஆர் எஸ் எஸ் இந்துத்துவ வெறியர் தருண் விஜய் சமஸ்கிருதமே மூல மொழி என்று ஒரு புறம் சொல்லிவிட்டு தமிழர்களின் உணர்வுகளை காயடிக்கும் பொருட்டு தமிழ் பற்று வேசம் போட்டதும் அதற்கு கைக்கூலி வைரமுத்து பாராட்டு விழா எடுத்ததும் காறி துப்பப்பட்டிருக்கின்றன. வியாசனின் இந்துத்துவக்காலித்தனமும் தமிழ் போர்வைக்குள்ளே இருந்துகொண்டு இராசஇராசனின் சமஸ்கிருத அடிமைத்தனத்தை நியாயப்படுத்துவதுடன் குற்றத்தில் இருந்து தப்பிக்க வைக்கும் பொருட்டு தெரியாது என்று சான்றிதழும் தருகின்றது.
மிகவும் நைச்சியமாக, இன்று ஆங்கிலமும் தமிழும் இருப்பது போல் அன்று சமஸ்கிருதமும் தமிழும் இருந்தன என்கிறார். சமஸ்கிருதம் கருவூல ஆவண மொழியாக இருக்கிற பொழுது தமிழ் சூத்திர மொழி என்று தூக்கி எறியப்பட்டதை வரலாறு வர்க்க உணர்வுடன் கோடிட்டு காட்டுகிற பொழுது வியாசன் போன்ற கைக்கூலிகள் ஆங்கில மொழியை மறுக்கப்பட்ட சமஸ்கிருதத்தோடு தொடர்புபடுத்தி தமிழ் மீதான இழிவை நியாயப்படுத்துகின்றனர்.
இவ்விதம் பார்ப்பனியத்திற்கு வெண் சாமரசம் வீசுகின்ற தமிழ் பிழைப்புவாதிகளின் பார்ப்பன பாசமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்பதை தமிழ் மொழியை ஆங்கில-மற்றும்-சமஸ்கிருத இணைப்புச் சங்கிலியோடு இணைத்துப் பேசுவதை வைத்தே அறிந்துகொள்ள இயலும். எப்படி மோடியின் இந்துத்துவக் கூட்டம் திருவள்ளுவர் ஆண்டு கொண்டாடப்படும் என்று ஒரு பக்கம் காட்டிவிட்டு சமஸ்கிருதத்தை எல்லா பக்கமும் திணிக்கிறதோ அதே போல் தான் இராச இராசனின் தமிழ் பழக்கமும் சமஸ்கிருத அடிமைத்தனமும். எனவே இந்துத்துவக்காலிகளின் பார்ப்பன அடிமைத்தனம் இராச இராசனைத் தொட்டவுடனேயே சிணுங்குகிறது!
தோழர் தென்றலின் உளறலுக்கு ஒரு அளவேயில்லாமல் போய்விட்டது. முதலில் இராச இராசன் சமக்கிருதக் கல்வெட்டைக் கோயிலில் பதித்தான் என்றார், ஆனால் உண்மையில் பல்லவர் காலத்திலேயே தமிழ்- சமக்கிருதக் கல்வெட்டுகள் வந்து விட்டன. இக்காலத்தில் திறப்பு விழாக்களில் கட்டிடங்களில் ஆங்கிலத்தையும் தமிழையும் சேர்த்து திறந்து வைக்கும் அரசியல்வாதிகள் எல்லாம் ஆங்கில அடிமைகளா? பல்லவர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்- சமக்கிருத கல்வெட்டு வழக்கத்தை இராச இராச சோழன் அப்படியே தொடர்ந்தது குற்றம் என்று அவனை சமஸ்கிருத அடிமை என்பவர்கள், அவனுக்குப் பின்னால் ஆண்ட திராவிட அரசர்கள் ஏன் தமிழ்நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை, சாதியை ஒழிக்கவில்லை என்பதைக் கேட்கத் தயங்குவதேன். எதற்காக இராச இராசனை மட்டும் சாடுகிறார்கள் என்பதற்குப் பதிலை யாரும் கூறக் காணோம்? ஏனென்றால் அவர்களின் வந்தேறி முன்னோர்களில் அவர்களுக்கு இன்னும் பாசம் பொங்கி வழிகிறது.
இவ்வளவுக்கும் சோழர் கலாத்துக் கல்வெட்டுக்களில் தமிழ்க்கல்வெட்டுகளே அறுதிப் பெரும்பான்மையாக உள்ளன. அது மட்டுமன்றி சோழர் காலத் தமிழை அறியக் கல்வெட்டுகள் பேருதவி செய்கின்றன.முதலாம் இராசேந்திரனின் மால்பாடிக் கல்வெட்டுகள், தஞ்சைப் பெரிய கோயில் மதிற்சுவர்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், வீர ராசேந்திரனின் திருமுக்கூடல் கல்வெட்டுகள், மூன்றாம் இராசேந்திரனின் திருவேதிபுரம் கல்வெட்டுகள் என்று ஆயிரக்கணக்கில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. ‘வடசொற்களை எழுதினால், வடமொழி எழுத்துகளை அகற்றிவிட்டு, தமிழ் எழுத்துகளால் தமிழ் மொழி மரபுப்படி எழுத வேண்டும்’ என்ற இலக்கண வரையறையை நன்னூலில் காணலாம். ‘பதவியல்’ என்று ஓர் இயலே அந்நூலில் உள்ளது. சோழர் காலக் கல்வெட்டுகளில் வடமொழிச் சொற்கள் தமிழாக்கம் செய்யப் பட்டிருத்தலைக் காணலாம்.
வடசொற்கள் – சோழர் கல்வெட்டுச் சொற்கள்
ஏகபோகம் – ஒரு பூ
தாம்பூலம் – சுருளமுது
கர்ப்பக்கிரகம் – உட்கோயில், அகநாழிகை
பரிவர்த்தனை – தலைமாறு
பரிவட்டம் – சாத்துக்கூறை
நைவேத்யம் – அமுதுபடி
அவிர்பலி – தீயெறிசோறு
கும்பாபிஷேகம் – கலசமாட்டுதல்
இராச இராச சோழனுக்குப் பின்னர் ஆண்ட கன்னட, வடுக, மராத்தியர்களைக் கேள்வி கேட்க வக்கில்லாத போலித் ‘தமிழர்களுக்கு’ இராச இராச சோழனின் தமிழ்ப்பற்றையும், தமிழுணர்வையும் கேள்வி கேட்கத் தகுதி கிடையாது. எல்லாம் தமிழ்நாட்டின் சோற்றுத்தமிழர்கள் கொடுக்கும் இடம். உதாரணமாக தமிழ் நடிகர் வடிவேலுவின் தெனாலிராமன் படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்துவது போல் வடிவேலுவின் நடிப்பு இருப்பதாகக் கேள்விப்பட்ட தெலுங்கர்கள் வடிவேலுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள். கிருஷ்ண தேவராயரை இழிவு படுத்தும் வடிவேலுவின் செயல்கிருஷ்ண தேவராயரைமட்டுமல்ல, உலகம்முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தெலுங்கு மக்களையும் இழிவுபடுத்தி விட்டதாம்.
ஆனால் தமிழ்நாட்டுக்குப் பிழைப்புத் தேடி வந்த _________ கூட இராச இராச சோழனை இழிவுபடுத்துவதை எந்த தமிழனும் கண்டு கொள்வதைக் காணோம். இது தான் தமிழர்களுக்கும், வடுகர்களுக்குமுள்ள வேறுபாடு. 🙁
http://viyaasan.blogspot.ca/2014/03/blog-post_19.html
\\இக்காலத்தில் திறப்பு விழாக்களில் கட்டிடங்களில் ஆங்கிலத்தையும் தமிழையும் சேர்த்து திறந்து வைக்கும் அரசியல்வாதிகள் எல்லாம் ஆங்கில அடிமைகளா?\\
ஆங்கிலத்தையும் தமிழையும் சேர்த்து திறந்துவக்கும் அரசியல் வாதிகள் எல்லாம் ஆங்கில அடிமைகளா என்று கேட்கிறார். இதன் மூலமாக சமஸ்கிருதம் ஆங்கிலத்தைப் போன்ற நிர்வாக மொழியே என்று சான்று பகர்கிறார். தருண் விஜய்யும் இதைத்தான் சொன்னார். சமஸ்கிருதம் மூல மொழி; அதே சமயம் தமிழ்மொழி சிறந்தது என்று! இந்துத்துவக் காலிகளுக்கே உள்ள இரட்டை வேடம் இது! தமிழர்களின் மரபிலே நடுகல் கூட தமிழில் தான் எழுதப்பட்டது. ஆனால் இராசஇராசன் சமஸ்கிருதத்தை நிர்வாக மொழி என்று அறிவித்து ஹிரண்ய கர்ப்ப யாகம் முதற்கொண்டு செய்வானாம். இவர்கள் பார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்கி விட்டு தமிழ் நாட்டில் பட்டுச் சேலையும் பல்பொடியும் வாங்கிகொண்டு போய்விட்டு தமிழ் கலாச்சாரம் என்று பேசுவார்களாம்! மானங்கெட்டவர்கள்!
\\ஏகபோகம் – ஒரு பூ
தாம்பூலம் – சுருளமுது
கர்ப்பக்கிரகம் – உட்கோயில், அகநாழிகை
பரிவர்த்தனை – தலைமாறு
பரிவட்டம் – சாத்துக்கூறை
நைவேத்யம் – அமுதுபடி
அவிர்பலி – தீயெறிசோறு
கும்பாபிஷேகம் – கலசமாட்டுதல்\\
தமிழும் சைவமும் பிரிக்க முடியாது என்று சொல்லிவிட்டு பார்ப்பனியத்தை தமிழ் வழியாக தலையில் கட்டியதை மேற்கண்ட தமிழ் படுத்தல்களே சாட்சிப்படுத்துகின்றன! கலசமாட்டுதல் தீட்டு கழிக்கிற நிகழ்வாகும். பார்ப்பானின் தலைமையில் இந்த அசிங்கத்தை செய்வதற்கு ஒரு தமிழ் வார்த்தை. வெட்கக்கேடு! இப்படித்தான் வரிகட்டாத விவசாயிகளை சிவத்துரோகிகள் என்றும் அழைத்தார்கள். வரிக்கும் இறை என்று பெயர் வைத்தது பார்ப்பன-ஆதிக்க சாதி வெள்ளாள கூட்டம் அல்லவா!
///இதன் மூலமாக சமஸ்கிருதம் ஆங்கிலத்தைப் போன்ற நிர்வாக மொழியே என்று சான்று பகர்கிறார்.///
அட, கையாலாகாத தமிழர்களே தமிழ்நாட்டில் இன்றும் ஆங்கிலம் தான் நிர்வாக மொழியா? இக்காலத்திலேயே நிர்வாக மொழி தமிழ் அல்ல ஆங்கிலம் என்றால் தமிழ்நாடு என்று எதற்குப் பெயரிட்டீர்கள். சொந்த மொழியில் நிர்வாகத்தை நடத்தக் கூட வக்கில்லை/உரிமையில்லை. ஆனால் வாய்ப்பந்தலில் மட்டும் குறைவில்லை. இலங்கையில் வடக்கு, கிழக்கில் தமிழுக்குத் தான் எதிலும் முன்னுரிமை. இலங்கை முழுவதிலும் தமிழும் நிர்வாக மொழி. அப்படியிருந்தும் கூட அரசாங்க பெயர்ப்பலகைகளில் ஒரு தமிழ் எழுத்துப் பிழை என்றாலும், ஈழத்தமிழர்கள் போர்க்கொடி தூக்கி விடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 21ம் நூற்றாண்டில் கூட தமிழை நிர்வாக மொழியாக வக்கில்லாதவர்கள், அதற்கு உரிமையற்றவர்கள், நீதிமன்றங்களில் தமது தாய்மொழி தமிழில் வாதாட முடியாதவர்கள், ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இராச இராச சோழன் சில கல்வெட்டுக்களில் சமஸ்கிருதத்தையும் சேர்த்து விட்டான் என்று உளறும் கோமாளித்தனத்தை நினைக்கவே என்னால் சிரிப்பையடக்க முடியவில்லை. 🙂
///ஆனால் இராசஇராசன் சமஸ்கிருதத்தை நிர்வாக மொழி என்று அறிவித்து///
சும்மா வாய்க்கு வந்தபடி உளறாமல், இராச இராசன் சமஸ்கிருதத்தை நிர்வாக மொழி என்று அறிவித்ததற்கு முதலில் ஆதாரம் காட்டும்.
சமஸ்கிருத்திற்கு நிர்வாக மொழி என்று சான்று கொடுக்கிற வியாசன் ஆங்கிலத்தையும் தமிழையும் ஒப்பிட்டு ஒப்பேற்றலாம் நினைத்தவர் கடைசியில் இலங்கைக்குள் ஓடி ஒளிந்திருக்கிறார். இது வழமையாக இவர் செய்யக்கூடியதுதான். இப்பொழுது தமிழை நிர்வாக மொழியாக தமிழர்கள் ஆக்கவில்லை என்று பச்சோந்தித்தனமாக தமிழர்களை கையாலாகதவர்கள் என்று பேசிப்பார்க்கிறார். ஆனால் இங்கும் அன்னாரது குட்டுதான் உடைகிறது. களப்பிரர்கால வட்டெழுத்து முறைமை, இலக்கணச் செழுமை என்று தமிழ் வளர்ந்திருந்த பொற்காலத்தில் இராச இராசன் சமஸ்கிருதத்தை ஏன் ஆவண மொழியாக இருத்த வேண்டும் என்பதற்கு பதில் சொல்லமால் சில கல்வெட்டுக்கள் என்று சில என்பதன் மூலமாக பிரச்சனையை லைட்டாக்குகிறார்.
இப்பொழுது இராச இராசன் சமஸ்கிருதத்தை ஆவண மொழியாக பயன்படுத்தினான் என்பதற்கு சான்று கொடு என்று கேட்கிறார். வியாசன் முன்னர் கொடுத்த சான்றையே ஆதாரமாக வைத்து இவரது பிழைப்புவாதத்தை அம்பலப்படுத்துவோம்;
வாசகர்கள் பார்வைக்கு:
“சமஸ்கிருதத்தையும் தமிழையும் இரு கண்களாகப் போற்றி வளர்த்தவர்கள் தமிழ் மன்னர்கள். சமஸ்கிருதம், ஐரோப்பாவில் லத்தீன் மொழி எவ்வாறு சட்டங்கள், மருத்துவம், தேவாலயங்கள் மற்றும் கல்வெட்டு போன்றவைக்கும், ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு என்பன சாதாரண மக்களின் பொது மொழியாக இயங்கியதோ அதே போன்ற தேவைகளுக்காகத் தான் சமக்கிருதமும் தமிழ்மன்னர்களால் பாவிக்கபப்ட்டது. சமக்கிருதம், தமிழர்களால் தமிழிலிருந்து சமைக்கப்பட்ட கிருதம் என்ற கருத்துக் கூட உண்டு. அதனால் தமிழை விட சமக்கிருதம் விட உயர்ந்தது என்று எந்த தமிழ்ச் சைவனும் கருதுவதில்லை.”
சமஸ்கிருதத்தை ஆளவிட்டுவிட்டு வழிபாட்டில் தமிழ் பாடுகிறோம் என்று சைவ வீராப்பில் உதிர்த்த பொன்வார்த்தைகள் அவை. இத்தகைய பார்ப்பனிய அடிவருடித்தனத்தை மறைத்துவிட்டுதான் இப்பொழுது ஆங்கிலம்-தமிழ் என்று வேசம் போடுகிறார். இது இவரது இந்துத்துவ பார்ப்பனிய முகமூடியாகும்.
//களப்பிரர்கால வட்டெழுத்து முறைமை, இலக்கணச் செழுமை என்று தமிழ் வளர்ந்திருந்த பொற்காலத்தில் இராச இராசன் சமஸ்கிருதத்தை ஏன் ஆவண மொழியாக இருத்த வேண்டும் என்பதற்கு பதில் சொல்லமால் சில கல்வெட்டுக்கள் என்று சில என்பதன் மூலமாக பிரச்சனையை லைட்டாக்குகிறார்.///
இராச இராசனை இழிவுபடுத்திக் கொண்டு களப்பிரர் காலத்தை மட்டும் சிறந்ததாக, “பொற்காலமாக” காட்டுவதில் தென்றலுக்குள்ள ஆர்வத்தையும், அக்கறையையும் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இராச இராசன் சமஸ்கிருதத்தை நிர்வாக மொழியாக்கினான் என்று முதலில் உளறினார் . அதற்கு ஆதாரம் காட்ட வக்கில்லாத படியால், இப்பொழுது என்னடாவென்றால் இராச இராசன் சமஸ்கிருத்தை ஆவணமொழியாக்கினான் என்கிறார். இந்தக் கருத்துக்காவது அவரிடம் ஆதாரமிருந்தால் காட்டட்டும் பார்ப்போம். நான் முன்பே பலமுறை கூறியிருக்கிறேன். தென்றலின் வார்த்தை ஜாலங்களை ஆராய்ந்து பார்த்தால் அங்கெ ஒன்றுமேயிருக்காதென்று, பெரும்பாலான அவரது கருத்துக்களில் சம்பந்தா, சம்பந்தமில்லாத உளறல் தானிருக்கும்.
இராச இராச சோழன் சமஸ்கிருத்தை ‘ஆவண மொழியாக்கினான்’ என்ற கருத்திலுள்ள பச்சைப் பொய்யைப் பார்ப்போம்.
முழு இந்தியாவிலுமுள்ள 100,000 கல்வெட்டுக்களில் 60,000 கல்வெட்டுக்கள் தமிழில் தானுண்டு. அந்த தமிழ்க் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை சோழர் காலக் கல்வெட்டுகள். இராச இராச சோழனின் ‘Record keeping ‘ ஐப் பார்த்து பல மேலைநாட்டு வரலாற்றாசிரியர்களே வியந்து நிற்கின்றனர். அந்த 60,000 தமிழ்க் கல்வெட்டுகளில் வெறும் 5% வீதமானவை மட்டும் தான் தமிழ் தவிர்ந்த சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலுண்டு, உண்மை அவ்வாறிருக்க, இராசன் இராசன் ஆவண மொழியாக சமஸ்கிருதத்தை ஆக்கினான் என்று ஏன் தென்றல் உளறுகிறார் அவரது உள்நோக்கம் என்ன என்பதை வினவிலுள்ள உண்மையான தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
http://www.thehindu.com/2005/11/22/stories/2005112215970400.htm
“சமஸ்கிருதத்தையும் தமிழையும் இரு கண்களாகப் போற்றி வளர்த்தவர்கள் தமிழ் மன்னர்கள். சமஸ்கிருதம், ஐரோப்பாவில் லத்தீன் மொழி எவ்வாறு சட்டங்கள், மருத்துவம், தேவாலயங்கள் மற்றும் கல்வெட்டு போன்றவைக்கும், ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு என்பன சாதாரண மக்களின் பொது மொழியாக இயங்கியதோ அதே போன்ற தேவைகளுக்காகத் தான் சமக்கிருதமும் தமிழ்மன்னர்களால் பாவிக்கபப்ட்டது. சமக்கிருதம், தமிழர்களால் தமிழிலிருந்து சமைக்கப்பட்ட கிருதம் என்ற கருத்துக் கூட உண்டு. அதனால் தமிழை விட சமக்கிருதம் விட உயர்ந்தது என்று எந்த தமிழ்ச் சைவனும் கருதுவதில்லை.”
மேலேயுள்ள என்னுடைய கருத்தில் எந்த மாற்றமுமில்லை. அடிக்கடி எனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் வழக்கமும் எனக்குக் கிடையாது. ஆனால் தென்றல், நான் கேட்ட கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்லாமல், பதில் சொல்லத் தெரியாமல் என்னவோ உளறுகிறார். என்னுடைய இந்தக் கருத்துக்கும், சமஸ்கிருதத்தை இராச இராசன் நிர்வாக மொழியாக்கினான் என்று அவர் உளறியதற்கும் என்ன தொடர்பு?
நிர்வாக மொழி (official language) என்பது ஆட்சிமொழி, மன்னரும் மக்களும் தொடர்பு கொள்ளும் மொழி. அரசு நடக்கும் மொழி. ஆனால் ஐரோப்பாவில் எப்படி லத்தீன் மொழி Academic language ஆக இருந்ததோ அது போலவே கிரந்த எழுத்து வடிவத்தையும் உருவாக்கி, பல தமிழ் வேர்ச்சொற்களிலிருந்து தமிழர்களால் உருவாக்கிய மொழி தான் சமஸ்கிருதம் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு.
ஈழத்தமிழர்கள் தமிழுணர்வு மிக்கவர்கள் என்று உலகம் முழுவதும் அறியப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் இன்றும் ஆங்கிலம் தான் நிர்வாக மொழி, நீதிமன்றங்களில் அல்லது பாராளுமன்றத்தில் தமிழில் பேசமுடியாது. அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு வழக்கம் போல் தானுண்டு தன் சோறுண்டு என்று இருக்கிறார்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள். ஆனால் தமிழை இலங்கையின் நிர்வாக மொழியாக்க இரத்தம் சிந்தியவர்கள் ஈழத் தமிழர்கள். இலங்கையில் தமிழுக்கு எந்தவுரிமையையும் போராடாமல், இரத்தம் சிந்தாமல் தமிழர்கள் பெறவில்லை. அப்படியான ஈழத் தமிழர்களே சமஸ்கிருதத்தை வெறுப்பதில்லை ஏனென்றால் இலங்கையில் தமிழை இழிவுபடுத்தும் சமக்கிருதவாதிகள் இல்லாத காரணத்தால், சமஸ்கிருதம் தமிழை எதிர்க்கவில்லை, தமிழை இழிவு படுத்தவில்லை, எங்களைப் பொறுத்த வரையில் தமிழன்னை அரசாள, எந்த மொழியும் பக்கத்தில் நின்று சாமரம் வீசலாம், அந்த மொழியை நாங்கள் எதிர்க்கப் போவதில்லை. சம்ஸ்கிருதம் தமிழுக்குக் கீழ் தான் ஈழத்திலுண்டு, ஈழத்துப் பார்ப்பனர்களும் தம்மை தமிழர்களாக மட்டும் தான் அடையாளப் படுத்துகிறார்கள். எங்கள் மத்தியில் சமக்கிருதவாதிப் பார்ப்பனர்களும் கிடையாது. தமிழ்நாட்டில் சமக்கிருதவாதப் பார்ப்பனர்கள் இருப்பதற்குக் காரணம் கூட, பெரியாரியமும், திராவிடமும் தான். ஈழத்தமிழர்களிடம், பெரியாரியர்களுமில்லை, திராவிடர்களுமில்லை, சமக்கிருதவாதிகளுமில்லை, தமிழர்கள் மட்டும் தானுண்டு. ஈழத்தில் போன்று தமிழ்நாட்டிலும் தமிழர்கள் அனைவரும் ஏனைய(பெரியாரிய, திராவிட) லேபல்களை மறந்து, தமிழர்களாக மட்டும் மாறும் போது சமக்கிருதவாதிகளும், ஏன் தமிழெதிரிப் பார்ப்பனர்கள் கூட மறைந்து, எல்லோரும் தமிழர்களாகி விடுவார்கள் என்பது தான் என்னுடைய கருத்தாகும்.
\\ முழு இந்தியாவிலுமுள்ள 100,000 கல்வெட்டுக்களில் 60,000 கல்வெட்டுக்கள் தமிழில் தானுண்டு. அந்த தமிழ்க் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை சோழர் காலக் கல்வெட்டுகள்.\\
அறுபதாயிரம் கல்வெட்டுகள் எத்துணை தமிழர் நலன் பற்றியது? காணியைப் பிடுங்க ஒரு கல்வெட்டு, பிரம்மதேயத்திற்கு ஒரு கல்வெட்டு, சூடு போட ஒரு கல்வெட்டு, யாகம் வளர்க்க கல்வெட்டு; மானங்கெட்டவர்கள் வியந்து போற்றுகிறார்கள்!
\\ இராச இராச சோழனின் ‘Record keeping ‘ ஐப் பார்த்து பல மேலைநாட்டு வரலாற்றாசிரியர்களே வியந்து நிற்கின்றனர்.\\
என்ன ரெக்கார்ட் கீப்பிங் என்பதை வாசகர்களின் பார்வைக்கு முன் வைக்கிறேன். வினவு கட்டுரையிலிருந்து :
1. சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது.
2. கோவில் நிதிக் குவியலில் (பண்டாரம்) இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக (பணமாகவோ பொருளாகவோ) வசூலிக்கப்பட்டது.
3. சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகட்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது, அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.
4. பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம். ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென 4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.
5. அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
6. வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.
7. பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர்.
8. கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர்.
9. மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.
10. விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ’கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது.
11. சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர்.
12. திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர்.
13. அரசனுக்கும், கோவிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது.
14. வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.
15. பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.
16. ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான்.
17. ‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன், தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத் தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை.
18. தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.
இராசஇராசன்-சமஸ்கிருதம்-ஆவண மொழி தொடர்பாக,
‘மா’மன்னன் இராசஇராசனை ‘மா’ மேதை வியாசன் ஜாக்கி வைத்து தூக்கி நிறுத்துகிற பொழுது டங்கு சிலிப்பாகி பல ஆதாரங்களை நமக்கு தருகிறார்.இவற்றை ஆராய்வதும், மறுமொழியாக சில சான்றுகள் தருவதும் அவசியம்.
அவற்றுள் முதன்மையானது நிர்வாக மொழி என்றால் என்ன? அகடமிக் மொழி (துறை சார் மொழி) என்றால் என்ன என்பதை காத்திரமாக வரையறுக்கிறார்! சமஸ்கிருதம் இலத்தீனைப் போன்ற துறை சார் மொழி என்று ஆளில்லா கடைக்கு டீ ஆத்துகிறார். இப்படி வரையறுத்து தமிழனின் எண் சாண் உடம்பில் பூணுலைச் சொருகுகிறார். தருண் விஜய் இதே வேலையைத் தான் செய்தார். என்ன இருந்தாலும் சமஸ்கிருதம் அக்டமிக் லாங்குவேஜ் இல்லையா? அக்கரகார லாங்குவேஜ் அக்டமிக் லாங்குவேஜாக இந்தத் தரகுமாமாக்களுக்குத் தெரிகிறது என்றால் எத்துணை பெரிய பித்தலாட்டம் என்பதை தமிழர்கள் மட்டுமல்ல அனைத்து மொழிக்காரர்களும் உணரவேண்டும்.
அன்னாரது திருவுள வாக்குபடி பல தமிழ் வேர் சொற்களிலிருந்து தமிழர்கள் தான் சமஸ்கிருதத்தையே உருவாக்கினார்களாம்.!பார்ப்பானும்-வெள்ளாளனும் உருவாக்கிய வார்த்தைகளை அன்னாரே சுட்டிக்காட்டினார் இப்படி; கர்ப்பக்கிரகம் – உட்கோயில், நைவேத்யம் – அமுதுபடி, அவிர்பலி – தீயெறிசோறு, கும்பாபிஷேகம் – கலசமாட்டுதல்; ஆக தமிழ்படுத்துதல்;பார்ப்பனியமயமாதல்;சமஸ்கிருதமயமாதல் எல்லாமே ஒன்றுதானோ!
சமஸ்கிருதம் நிர்வாக மொழி என்பதற்கு சான்று கொடு என்று கேட்கிற வியாசன் பிரதிவாதி தரப்பில் சேம்சைடு கோல் போடுகிறார்; அன்னாரது வலுவான ஆதாரம் இது;
“அந்த 60,000 தமிழ்க் கல்வெட்டுகளில் வெறும் 5% வீதமானவை மட்டும் தான் தமிழ் தவிர்ந்த சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலுண்டு, உண்மை அவ்வாறிருக்க, இராசன் இராசன் ஆவண மொழியாக சமஸ்கிருதத்தை ஆக்கினான் என்று ஏன் தென்றல் உளறுகிறார் அவரது உள்நோக்கம் என்ன என்பதை வினவிலுள்ள உண்மையான தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”
60000 கல்வெட்டுகளில் சப்பைமேட்டாரக வெறும் 5% சதம் தான் சமஸ்கிருதமாம். ஆகையால் சமஸ்கிருதம் எப்படி ஆவண மொழி என்று கேட்கிறார். ஒவ்வொரு காலகட்டத்தையும் பிரித்து பார்ப்போம். இந்தியாவில் தற்போதைய பார்ப்பனர்களின் எண்ணிக்கையே மொத்தமே 3.5 சதவீதம் தான். ஆனால் இருக்கிற அரசு உத்தியோகங்களில் 49-65% பார்ப்பனர்கள். இது இன்றைய நிலை. வியாசனின் கருத்துப்படி இதே இராச இராசன் காலத்தில் 5% சதம் தான் சமஸ்கிருத கல்வெட்டுகளே இருக்கின்றன. அதாவது சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் 5% பேர்; அப்படியானால் இவர்கள் வகித்த பதவி என்ன? எது நிர்வாக மொழி? சில சான்றுகளைப் பார்ப்போம்.
1. கல்வித்துறை: ரொமிலா தாப்பரின் கல்வெட்டு ஆய்வுப்படி சோழர் காலத்தில் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. பயிற்று மொழி சமஸ்கிருதம். கல்வித் துறை காலி.
2. நிர்வாகத் துறை: குடவோலை முறை சனநாயகம் என்பார்கள். ஆனால் வேதம் தெரிந்தவர்கள் மட்டும் தான் வேட்பாளர்களாக நிற்கமுடியும். வினவுக் கட்டுரையின் ஒரு பகுதி “குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன. வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. நிர்வாகத் துறை காலி.
3. நிதித்துறை: பெருவுடையார் கோயிலின் பண்டாரியாக வேதம் கற்ற பார்ப்பனர் மட்டுமே இருக்கமுடியும். சதுர் வேதி பார்ப்பனர்களுக்கு திரிவேதி பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மதேய செப்பேடுகள் சமஸ்கிருதம்.
4. செப்பேடுகளில் சமஸ்கிருதம் என்பதற்கு விக்கியில் இருந்து ஒரு சான்று; “உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான” வாழ்த்தே சமஸ்கிருதத்தில் இருந்து தான் தொடங்குகிறது.
மேற்கண்ட வாதங்களில் 5% கல்வெட்டுகள் தான் ஆட்சியைத் தீர்மானிக்கின்றன என்பது தெள்ளிதின் விளங்கும். நிர்வாக துறை அனைத்திலும் எங்கும் நீக்கமற சமஸ்கிருதமே ஆவண மொழியாக இருந்தது என்பதற்கு சான்றுகள் கொடுத்தாயிற்று. ஆனால் வியாசன் போன்றோர் தமிழ் என்ற போர்வையில் பார்ப்பனியத்திற்கு தரகுவேலை பார்க்கின்றனர். இவருடைய வாதத்திலும் தமிழும் தமிழர் நலனும் எதுவும் கிடையாது. ஆதிக்க சாதிகளின் பார்ப்பனக்கூட்டு என்பது இதுதான். இக்கூட்டை உடைக்காமல் தமிழர்களுக்கு விடிவு ஏது?
//அறுபதாயிரம் கல்வெட்டுகள் எத்துணை தமிழர் நலன் பற்றியது? காணியைப் பிடுங்க ஒரு கல்வெட்டு, பிரம்மதேயத்திற்கு ஒரு கல்வெட்டு, சூடு போட ஒரு கல்வெட்டு, யாகம் வளர்க்க கல்வெட்டு; மானங்கெட்டவர்கள் வியந்து போற்றுகிறார்கள்!///
தோழர் தென்றலின் பிரச்சனையே இதுதான் இவருக்குக் கேட்ட கேள்விக்கு அல்லது பேசப்படும் விடயத்துக்கு மட்டும் விடை/பதில் எழுதத் தெரியாது. எதிலும் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் உளற வேண்டியது தான் வேலை. கல்லூரியில் இவரது விடைத்தாளைத் திருத்திய பேராசிரியர்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. 🙂
முதலில் இக்கால, திராவிடவாத, பெரியாரிய, பகுத்தறிவு, கம்யூனிச, சோஷலிச, தென்றலின் உளறலிச அடிப்படைடையில் ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் நடந்த விடயங்களுக்கு தீர்ப்புக் கூறுவது வெறும் முட்டாள்தனம், அந்த அடிப்படியில் இராச இராசனை சில தமிழெதிரிகள் இழிவு படுத்துவதைத் தான் நான் எதிர்க்கிறேன். எந்த நாட்டு மக்களும் அப்படிச் செய்வதில்லை. அதிலும் குறிப்பாக தமிழரல்லாதவர்களும், அவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட சில தமிழர்களும் தான் அப்படிச் செய்கிறார்கள் உதாரணமாக, இலங்கை மன்னர்கள் பலர் மிகவும் கொடியவர்களாக இருந்தனர், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூட, யானையால் மிதித்துக் கொல்வதும் தகப்பன் செய்த குற்றத்துக்காக, குழந்தைகளை உரலிலிட்டுக் கொல்லும் தண்டனை கூட இலங்கையில் இருந்தது. ஆனால் எந்தச் சிங்களவரும் தமது மன்னர்களை வசைபாடுவதில்லை. நான் இலங்கை வரலாற்றில் அடிக்கடி உதாரணங்களைக் கூறுவதன் காரணம், எனக்கு நன்றாகத் தெரிந்த விடயங்களை, நான் படித்த விவரங்களை மட்டும் பேசித்தான் எனக்குப் பழக்கம்.
முதலில் தென்றலின் வாதம் என்னவென்றால் சமஸ்கிருதத்தை இராச இராசன் நிர்வாக மொழியாக்கினான் என்பது, அதற்கு ஆதாரம் அவரிடம் கிடையாது. ஆகவே பின்னர் சமஸ்கிருதத்தை இராச இராசன் ஆவண மொழியாக்கினான் என்றார். ஆனால் சமஸ்கிருதத்தை இராச இராச சோழன் ஆவண மொழியாக்கியிருந்தால் இன்றைக்கு 95% கல்வெட்டுக்கள் சமஸ்கிருத்திலும் 5% மட்டும் தமிழிலுமிருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டியதும் அந்தக் கல்வெட்டுகள் எல்லாம் தமிழர் நலன் பற்றியதா என்று பேசப்படும் கேள்வியை மறந்து உளறுகிறார். இப்படியான ஒரு விவரங்கெட்ட மனிதருடன் எந்த விடயத்தைப் பற்றியும் விவாதிக்க முடியுமா என்பதை, இங்குள்ள நடுநிலையாளர்கள் (அப்படி யாராவது இருந்தால்) பதில் கூறுங்கள்.
இராச இராசனின் கல்வெட்டுகளில் என்ன உள்ளன, அல்லது அவற்றால் தமிழர்களுக்கு நலன்கள் உண்டா, அல்லது இராச இராசன் காலத்தில் பார்ப்பனர்களின் நிலை என்பதல்ல கேட்கப்பட்ட கேள்வி. இராச இராசன் சமஸ்கிருதத்தை ஆவண மொழியாக்கினானா, என்பது தான் கேள்வி. அதற்கு உளறாமல் பதில் சொல்ல வக்கிலாத படியால் தான், எதையெதையோ எல்லாம் வெட்டி ஒட்டி நிரப்புகிறார் அண்ணன் தென்றல். இனிமேலாவது தன்னுடைய நேரத்தையும் மற்றவர்களின் பொன்னான நேரத்தையும், இந்த இணையத்தளத்தின் பக்கங்களையும் வீணாக்காமல் கேட்ட கேள்விக்கும், பேசப்படும் விடயத்துக்கும் மட்டும் பதிலளித்துப் பழகுவார் என நம்புவோம்.
//அன்னாரது திருவுள வாக்குபடி பல தமிழ் வேர் சொற்களிலிருந்து தமிழர்கள் தான் சமஸ்கிருதத்தையே உருவாக்கினார்களாம்.!பார்ப்பானும்-வெள்ளாளனும் உருவாக்கிய வார்த்தைகளை அன்னாரே சுட்டிக்காட்டினார் ///
அட அறிவுக்களஞ்சியமே! கன்னடராகிய பெரியாரும், பல நூற்றாண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் வீட்டில் இன்றும் தமது தாய்மொழியைப் பேசும் வடுகரும், கன்னடர்களும், மலையாளிகளும் தமிழர்கள் ஆனால் வீட்டிலும், வெளியிலும் தமிழை மட்டும் பேசும் பார்ப்பனர்கள் தமிழர்கள் ஆக மாட்டார்களா? பார்ப்பானும் வெள்ளாளர்களும் தமிழ் வார்த்தைகளை உருவாக்க முடியாதா?
நான் எங்கேயாவது சோழர்களோ அல்லது இராச இராசனோ சமஸ்கிருத்தை தமிழிலிருந்து உருவாக்கினார்கள் என்று கூறினேனா? இராச இராசனுக்கு முன்னரே பழந்தமிழர்கள் தமிழிலிருந்து சமைத்த கிருதம் தான் சமக்கிருதம் என்பது தமிழறிஞர்களின் கருத்தாகும். அந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடுண்டு ஏனென்றால் சமக்கிருதச் சொற்கள் என்று கூறப்படும் பல சொற்களின் வேர்கள் தமிழில் தானுண்டு என்பதை பாவாணர் போன்ற தமிழறிஞர்கள் மட்டுமன்றி கால்டுவெல் போன்றோரும் நிறுவியிருக்கிறார்கள் என்பது தான் எனது கருத்தாகும் அது புரியாமல் உளறுகிறார் தோழர். பாவாணருக்கும், மறைமலையடிகளுக்கும் முன்பே தமிழில் தூய தமிழைப் புகுத்த இராச இராச சோழன் தனது கல்வெட்டுகளில் முயன்றிருக்கிறான் என்பதைக் காட்டத்தான், சில சொற்களை நான் காட்டினேன் அது கூடப் புரியவில்லை இவருக்கு.
தென்றல் தானது உளறல்களில் பார்ப்பன எதிர்ப்பு என்ற நஞ்சையும் சேர்த்துக் கக்கினால் அது இங்கு நன்றாக விலை போகும் என்ற நம்பிக்கையில், பேசப்படும் பொருளை விட்டு இராச இராசன் காலத்தில் பார்ப்பனர்கள் அனுபவித்த நலன்களைக் குறிப்பிடுகிறார். ஆனால் அதே பார்ப்பனர்கள் மட்டுமல்ல தென்றலைப் போன்றவர்களின் தமிழரல்லாத முன்னோர்களும் கூட இராச இராசனுக்குப் பின்பு, கன்னட, வடுக, நாயக்க அரசர்களின் ஆட்சியின் கீழ், தமிழர்களின் நிலங்களைப் பறித்தும், தெலுங்குப் பார்ப்பனர்களின் கைகளில் தமிழர்களின் கோயில்களைத் தாரை வார்த்தும் தமிழர்களைத் தமது சொந்த மண்ணிலேயே பஞ்சைகளாகவும், பராரிகளாகவுமாக்கினர். அந்த தமிழர்களின் வாரிசுகள் தான் நிலமற்ற கூலிகளாக்கப்பட்டு, பூமிப்பந்தின் தீவுகளுக்கேல்லாம் கூலிகளாகச் சென்றார்கள், அந்தக் கொடுமையை மட்டும் பேச மறுக்கும் தென்றல், ஆயிராமாண்டுகள் பின்னோக்கிப் போய் தமிழர்களின் வீரத்தின் அடையாளச் சின்னம் என்று நான் மட்டுமல்ல, பெரும்பான்மைத் தமிழர்கள் போற்றும் இராச இராச சோழனை இழிவு படுத்துவதை எந்த உண்மையான தமிழனும் பொறுத்துக் கொள்ள மாட்டான்.
\\ முதலில் இக்கால, திராவிடவாத, பெரியாரிய, பகுத்தறிவு, கம்யூனிச, சோஷலிச, தென்றலின் உளறலிச அடிப்படைடையில் ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் நடந்த விடயங்களுக்கு தீர்ப்புக் கூறுவது வெறும் முட்டாள்தனம்,\\
எந்த இராசஇராசன் சேரிகளையும் மங்கலங்களயும் உருவாக்கி நால்வகைச் சாதியை நாட்டினானோ அவனது காலத்துக்கு முன்னயே கபிலர் அகவல் பார்ப்பன எதேச்சதிகாரத்தைத் தோலுரித்ததே! அப்பாடல் என்ன இக்காலமா? அல்லது சம காலத்தில் சதுரி மாணிக்கம் இராச இராசனை எதிர்த்து உயிர் நீத்தாளே அது என்ன இக்காலமா? சமூக பாசிஸ்டுகள் சமகால எதிர்ப்பு வரலாற்றை இருட்டடிப்பு செய்துவிட்டு அக்காலத்திற்கு தீர்ப்பு கூறுவது முட்டாள் தனம் என்று கூறினால் இவர்கள் பொறுக்கித்தின்ற பரிமாணமும் சாதியம் கொடுக்கிற கதகதப்பும் தான் என்ன?
\\ அந்த அடிப்படியில் இராச இராசனை சில தமிழெதிரிகள் இழிவு படுத்துவதைத் தான் நான் எதிர்க்கிறேன். எந்த நாட்டு மக்களும் அப்படிச் செய்வதில்லை.\\
பரிதாபம். பதினாறாம் லூயிக்கு பக்க வாத்தியம் வாசித்த நிலப்பிரபுக்களுக்கு செருப்படியும் லூயிக்கு கில்லெட்டினும் கிடைத்தது வியாசனுக்கு தெரியாது போலும். ஜாரை வீழ்த்திய புரட்சியை கைக்கூலிகள் திட்டுமிட்டு மறைப்பதற்கு வானம் அளவு வாய் வேண்டும். வியாசன் வேண்டுமானால் எந்த நாட்டு மக்களும் அப்படிச் செய்வதில்லை என்று வாய்கிழியாமல் கத்திப் பார்க்கலாம்.
\\ உதாரணமாக, இலங்கை மன்னர்கள் பலர் மிகவும் கொடியவர்களாக இருந்தனர், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூட, யானையால் மிதித்துக் கொல்வதும் தகப்பன் செய்த குற்றத்துக்காக, குழந்தைகளை உரலிலிட்டுக் கொல்லும் தண்டனை கூட இலங்கையில் இருந்தது. ஆனால் எந்தச் சிங்களவரும் தமது மன்னர்களை வசைபாடுவதில்லை.\\
நிலவுடமையில் உழைப்பை உறிஞ்சி வாழ்கிற எந்த ஆதிக்க சாதிகளும் மன்னர்களை எந்த நாட்டிலும் வசைபாடியதில்லை. அது ஈழத்து ஆதிக்க சாதிகளும் பொருந்தும் என்பதால் வியாசன் சிங்களவர் என்று சுருக்கிக்கொள்கிறார்!
\\ நான் இலங்கை வரலாற்றில் அடிக்கடி உதாரணங்களைக் கூறுவதன் காரணம், எனக்கு நன்றாகத் தெரிந்த விடயங்களை, நான் படித்த விவரங்களை மட்டும் பேசித்தான் எனக்குப் பழக்கம்.\\
ஏற்கனவே இலங்கை தொடர்பான கலையரசனின் பதிவுகளை வெற்றிவேல் பதிவு செய்து கேள்வி கேட்ட பொழுது வியாசனின் ரியாக்சன் என்னவாக இருந்தது?
\\ ஆனால் சமஸ்கிருதத்தை இராச இராச சோழன் ஆவண மொழியாக்கியிருந்தால் இன்றைக்கு 95% கல்வெட்டுக்கள் சமஸ்கிருத்திலும் 5% மட்டும் தமிழிலுமிருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டியதும் அந்தக் கல்வெட்டுகள் எல்லாம் தமிழர் நலன் பற்றியதா என்று பேசப்படும் கேள்வியை மறந்து உளறுகிறார்.\\
ஆவண மொழியை ஆணவத்துடன் வரையறுத்துவிட்டு படிப்பவர்களை பெரும்பான்மை காட்டி முட்டாளாக்கப்பார்க்கிறார். இந்திய அரசின் மொழிவாரி அட்டவணை வெளியிடப்பட்டிருந்தபொழுதே 4500பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதம் அட்டவணை மொழியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 30இலட்சம் பேர் பேசும் சிந்தால் மொழிக்கு அட்டவணையில் இடமில்லை. பெரும்பான்மையின் யோக்கியம் இது. நிலைமை இப்படியிருக்க வியாசன் போன்ற பாசிச கோமாளிகளுக்கு 95% கல்வெட்டுக்கள் சமஸ்கிருதத்தில் இருந்தால் தான் அது ஆவண மொழியாம்! பார்ப்பனிய அடிமைத்தனத்திற்கும் நக்கத்தனத்திற்கும் வேறு என்ன சான்று இருக்கிறது?
\\ இராச இராசனின் கல்வெட்டுகளில் என்ன உள்ளன, அல்லது அவற்றால் தமிழர்களுக்கு நலன்கள் உண்டா, அல்லது இராச இராசன் காலத்தில் பார்ப்பனர்களின் நிலை என்பதல்ல கேட்கப்பட்ட கேள்வி. இராச இராசன் சமஸ்கிருதத்தை ஆவண மொழியாக்கினானா, என்பது தான் கேள்வி. அதற்கு உளறாமல் பதில் சொல்ல வக்கிலாத படியால் தான், எதையெதையோ எல்லாம் வெட்டி ஒட்டி நிரப்புகிறார் அண்ணன் தென்றல்.\\
பித்துக்குளிகள் இப்படிச் சொல்லித்தப்பித்தாலும் மீண்டும் கேள்வி கேட்கமாட்டோமா என்ன? கல்வித்துறையிலும் நிதித்துறையிலும் நிர்வாகத்துறையிலும் செப்பேடுகளிலும் என்ன மொழி இருந்தது என்பதற்கு நான் வைத்த வாதங்களுக்கு என்ன பதில்?
\\ பாவாணருக்கும், மறைமலையடிகளுக்கும் முன்பே தமிழில் தூய தமிழைப் புகுத்த இராச இராச சோழன் தனது கல்வெட்டுகளில் முயன்றிருக்கிறான் என்பதைக் காட்டத்தான், சில சொற்களை நான் காட்டினேன் அது கூடப் புரியவில்லை இவருக்கு.\\
பிறகு பார்ப்பனியத்தை எப்படி விற்றுத்தீர்ப்பது? இவர்கள் தீட்டுக்கழிக்கிற கும்பாபிசேகம் என்ற வார்த்தையை கலசமாட்டுதல் என்று தூயதமிழ் படுத்தினால் இதில் எங்கேயிருக்கிறது தூய்மை? எங்கே இருக்கிறது தமிழ்?
\\அந்தக் கொடுமையை மட்டும் பேச மறுக்கும் தென்றல், ஆயிராமாண்டுகள் பின்னோக்கிப் போய் தமிழர்களின் வீரத்தின் அடையாளச் சின்னம் என்று நான் மட்டுமல்ல, பெரும்பான்மைத் தமிழர்கள் போற்றும் இராச இராச சோழனை இழிவு படுத்துவதை எந்த உண்மையான தமிழனும் பொறுத்துக் கொள்ள மாட்டான்.\\
சோழப்பேரரசு என்பது பார்ப்பனியத்தை தலைமை மதமாகக் கொண்ட கொடுங்கோன்மை அரசு. இது ஏதோ தஞ்சாவூரில் மட்டும் சுருங்கிவிடவில்லை. இதன் மேல் எல்லை கலிங்க நாடாகவும், கீழ் எல்லை சிங்களமாகவும் இருக்கிறது. இதில் நிலவுடமைச் சாதிகளைத் தவிர வேறெந்த நபருக்கும் வாழ்வு என்பது கசப்பு விடம் தான். அது கன்னடரா, தமிழரா, வடுகரா, சிங்களவனா, ஈழத்தமிழனா என்ற கேள்விக்கே இடமில்லை. ஆண்டையா? அடிமையா? என்கிற வர்க்கப்போராட்டத்தில் இராச இராசன் தமிழன் என்று ஆதிக்க சாதிகளும் இந்துத்துவக் கைக்கூலிகளும் ஒருசேர கூவுவார்கள். ஏனெனில் சமூக பாசிஸ்டுகளுக்கு வரலாறு தெரிந்திருக்கவாய்பில்லை. இவர்களின் ஆண்டைத்தனத்தை மேலும் எழுதுவோம்.
வியாசன்,
நீங்கள் குறிப்பிடும் அத்தனை அவலங்களுக்கும் தோற்றுவாய்களாக இருந்ததில் முக்கிய பங்கு இந்த ராசனுக்கும் உண்டு என்பதுதான் வினவு நண்பர்களின் வாதம். இதைப் புரிந்து கொள்ள முடியாமல் Same side goal போடுகிறீர்கள்.
ஒரு கேள்வி,
ராமன் தொடர்ச்சியாக பார்ப்பனியத்திற்கு எதிராக போராடும் தமிழர்களையும் தமிழையும் சிறுமைப் படுத்தும் விதத்தில் பேசிவருகிறார். இத்தனைக்கும் அவர் தமிழரல்லாத தமிழகத்தில் பிறந்து வளர்ந்த திராவிடன் என்று அறிவித்துக் கொண்டவர்தான். அவரின் அவதூறுகளுக்கு நீங்கள் இதுவரை எந்த பதிலையும் கொடுத்ததில்லையே. ஏன்?
//இதைப் புரிந்து கொள்ள முடியாமல் Same side goal போடுகிறீர்கள்.///
திரு, Univerbuddy,
தமிழன் என்ற முகமூடியை அணிந்து கொண்டு தமிழர்களையும், தமிழர்களின் முன்னோர்களையும், தமிழர்களின் அறிவியலின் அடையாளங்களாகிய கோயில்களையும் இழிவு படுத்துவதுடன், தமிழர்கள் சாதியை மறந்து ஒன்றுபடுவதை விரும்பாத, தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரித்தாளும் நோக்கத்துடன் உளறும் தென்றல் என்ற இந்தப் பேர்வழி, உண்மையான தமிழன் என்று நான் நம்பவில்லை. அதனால் அவரை எதிர்ப்பது Same side goal போடுவதாக எனக்குத் தெரியவில்லை.
இங்குள்ள ஏனைய தமிழர்களின் கண்களை ‘பார்ப்பன எதிர்ப்பு’ என்ற வெறி மறைப்பதால் அவர்களால் தென்றல் என்பவர் தமிழர்களை, தமிழ் மன்னர்களை, தமிழர்களின் கலாச்சார, வரலாற்று விழுமியங்களைத் திட்டமிட்டுக் கொச்சைப்படுத்துவதை, இழிவுபடுத்துவதை உணரமுடியவில்லை. தமிழெதிரிகள் பார்ப்பனர்களின் மத்தியில் மட்டுமல்ல, ஏனைய தமிழரல்லாதவர்களிலும் உள்ளனர். தமிழ்நாட்டுத் தமிழர்களின் பிரச்சனை என்னவென்றால், பார்ப்பனர்களை மட்டும் குறி வைத்துக் கொண்டு ஏனைய உட்பகையை மறந்து விடுகிறார்கள்.
தென்றலின் கருத்தை அறிவதற்காகவே நானும் வடுகர், கன்னடர் போன்றோர் தமிழர்களுக்குச் செய்த அநீதிகளை நினைவூட்டினாலும், அதைப்பற்றி நேரடியாகக் கேள்வியைக் கேட்டாலும், அவற்றை எல்லாம், அப்படியே, காணாதவர், போல் அமுக்கி விட்டு, இராச இராச சோழனை மட்டும் இழிவுபடுத்துவதிலேயே அவர் குறியாக இருப்பதேன், உண்மையில் ஒரு தமிழனாக இருந்தால், இராச இராசனுக்குப் பின்னர் ஆண்ட வடுகர்களும், கன்னடர்களும், மராத்தியர்களும் தமிழர்களைச் சுரண்டியதையும், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரித்தாண்டதையும், தமிழர்களின் நிலங்களைக் கொள்ளையடித்தையும், தமிழர்களில் கோயில்களிலிருந்து தமிழை வெளியேற்றியதைப் பற்றியும் பேசலாமே. அவற்றைப் பேசத் தயங்குவதேன்?
தமிழனாக என்னையே இழிவுபடுத்தியும், பல பொய்க்குற்றச் சாட்டுகளையும், எனது கருத்துக்களையும் நான் அவற்றைக் கூறிய சந்தர்ப்பத்தையும், காரணத்தைத் திரித்து ஏனைய தமிழர்களுக்கும் எனக்குமிடையே சிண்டு முடிந்து விடப் பலமுறை முயன்றிருக்கிறார். ஆகவே தென்றலை நான் தமிழனாகப் பார்க்கவில்லை. ஆனால் செந்தில்குமரன் என்பவருடன் அவரது வெவ்வேறு அவதாரங்களின் போது நான் ஜோக்கடித்தாலும் கூட, அவர் ஒரு உண்மையான தமிழன் என்பதில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அவரது தமிழுணர்வை நான் மதிக்கிறேன். அவருக்கெதிராக, நான் பேசினால், அதை வேண்டுமானால் நீங்கள் ‘Same side goal’ என்று கூறலாம்.
தென்றலுக்கு எதிராக நான் கருத்துத் தெரிவிக்கும் போது அய்யன் வள்ளுவன் தமிழர்களுக்கு கூறிய அறிவுரை தான் எனது நினைவுக்கு வருகிறது.
“வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.”
வாளைப்போல் வெளிப்படையாக பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவிறைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
இந்த உட்பகையை உணர்ந்து அவற்றை ஆரம்பத்திலேயே களையத் தவறியதால் தான் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தமிழர்களின் இரத்த ஆறாகி நந்திக்கடலில் கலந்தது. அந்த தவறை தமிழினம் ஒருபோதும் மீண்டும் இழைக்கக் கூடாது. ஆகவே எமது மத்தியில் ‘தமிழர்களாக’, நண்பர்களாக வாழ்ந்து கொண்டு, தமிழர்களையும், அவர்களது முன்னோர்களையும் இழிவுபடுத்தும் தென்றல் போன்ற உட்பகையை நாங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பது தான் எனது கருத்தாகும்.
//ராமன் தொடர்ச்சியாக பார்ப்பனியத்திற்கு எதிராக போராடும் தமிழர்களையும் தமிழையும் சிறுமைப் படுத்தும் விதத்தில் பேசிவருகிறார். இத்தனைக்கும் அவர் தமிழரல்லாத தமிழகத்தில் பிறந்து வளர்ந்த திராவிடன் என்று அறிவித்துக் கொண்டவர்தான். அவரின் அவதூறுகளுக்கு நீங்கள் இதுவரை எந்த பதிலையும் கொடுத்ததில்லையே. ஏன்?//
தமிழரல்லாத திராவிடர்கள் எல்லோரையும் நான் எதிர்க்கிறேன் என்று எப்போதாவது கூறினேனா. என்னுடைய கருத்து என்னவென்றால் தமிழெதிரிகள் பார்ப்பனர் மத்தியில்மட்டுமல்ல, திராவிடர் மத்தியிலும் உண்டு. உதராணமாக ஈழத்தமழர்களின் அழிவுக்குக் காரணம் ‘மலையாள மாபியாக்கள்’ தான். ஆனால் தென்றலுடன் ஒப்பிடும் போது ராமன் என்பவர் கூட அவ்வளவு ஆபத்தானவராக அல்லது கவனம் செலுத்த வேண்டிய அளவுக்கு நச்சுத்தன்மையுள்ளவராக எனக்குத் தெரியவில்லை. அவர் உட்பகை அல்ல வெளிப்படையான பகை, அவரது கருத்துக்கள் எல்லாமே அர்த்தமற்றவையும், வெறுமனே சீண்டிப் பார்ப்பதற்காக கூறப்படுபவையுமே. அதைத் தவிர அவருக்கு வேறு உள்நோக்கமோ அல்லது அவர் கூறும் விடயங்களில் ஆழ்ந்த அறிவோ அவருக்கிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அம்பி அவர்களிடம் நிறைய சரக்குண்டு ஆனால் அவரிடம் கூட தென்றலைப் போன்ற தமிழெதிர்ப்புக் குணமோ அல்லது தமிழர்களை இழிவுபடுத்தவும், பிரித்தாள வேண்டுமென்ற நோக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர் கூட ஒரு பார்ப்பனராக இருப்பாரோ என்பதே சந்தேகம் தான். அவர் பெரியாரிய, திராவிட மாயையும், பம்மாத்துகளையும் வெறுக்கும் பார்ப்பனரல்லாத தமிழராகக் கூட இருக்கலாம். இவை எல்லாம் என்னுடைய அவதானங்களும், கருத்துக்களுமே தவிர, மற்றவர்கள் எனது கருத்துடன் ஒத்துப் போவார்களென்று நான் எதிர்பார்க்கவில்லை. 🙂
//நீங்கள் குறிப்பிடும் அத்தனை அவலங்களுக்கும் தோற்றுவாய்களாக இருந்ததில் முக்கிய பங்கு இந்த ராசனுக்கும் உண்டு என்பதுதான் வினவு நண்பர்களின் வாதம்//
தயவு செய்து உங்களின் கருத்தை விளக்குங்கள். இருபத்தொராம் நூற்றாண்டில் தமிழர்கள் தமது சொந்த மாநிலத்தில் தமிழை நிர்வாக மொழியாக்க முடியாமல் இருப்பதற்கும், ஆங்கில மோகம் பிடித்தலைவதற்கும், வந்தேறிகளை வாருமையா, வந்து முதல்வராகி எங்களை ஆளுமையா, என்று ஒரு கன்னடக் கூத்தாடியை இருபது வருடங்களாக வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதற்கும், ஆடிப்பாடிப் பிழைக்க வந்த நடிகைகள் கூட உடல் பருமனாகியதும் தமிழ்நாட்டில் அரசியலில் ஈடுபடத் துணிவதற்கும், தமிழ்நாட்டுக்கு பிழைப்புத் தேடி வந்தவர்கள் எல்லாம் உணவகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் முதலாளிகளாக இருக்க தமிழர்கள் அவர்களிடம் கைகட்டி கூலிகளாக இருப்பதற்கெல்லாம் இராச இராசன் தான் காரணமா? இராச இராசன் பார்ப்பனர்களை அழைத்து வந்தான் அதனால் தான் இந்த நிலை என்று கூறாதீர்கள். ஏனென்றால் நான் குறிப்பட்ட நடிக நடிகைகளும், தொழிலதிபர்களும் பார்ப்பனர்கள் அல்ல.
திரு வியாசன்,
//ஐரோப்பாவில் லத்தீன் மொழி எவ்வாறு சட்டங்கள், மருத்துவம், தேவாலயங்கள் மற்றும் கல்வெட்டு போன்றவைக்கும், ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு என்பன சாதாரண மக்களின் பொது மொழியாக இயங்கியதோ அதே போன்ற தேவைகளுக்காகத் தான் சமக்கிருதமும் தமிழ்மன்னர்களால் பாவிக்கபப்ட்டது//
ரோமர்கள் ஐரோப்பாவின் எல்லா பகுதிகளையும் தாக்கி தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தங்கள் எழுத்துக்களை ஐரோப்பா முழுவதற்குமான எழுத்துவேலைகளுக்கு பயன்படுத்தியதால் வந்த விளைவு இது. ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளும் இதே எழுத்தில் தான் எழுதப்படுகின்றன. வடமொழிக்கு இது போன்ற வரலாறு இல்லை. இது மிகப்பெரிய வித்தியாசம். இதை நீங்கள் அறிந்ததாக அல்லது கருத்தில் கொண்டதாக தெரியவில்லை.
தமிழ் திராவிட ஆண்களுக்கும் அவர்களின் ராசன்களுக்கும் பாப்பாத்திகளின் மேல் ஒரு CRUSH இருந்தது இருக்கின்றது இருக்கும். அதே போன்று தமிழ் திராவிட பெண்களுக்கும் அவர்களின் ராணிகளுக்கும் பாப்பனர்களின் மேல் ஒரு CRUSH இருந்தது இருக்கின்றது இருக்கும். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வடக்கில் இருந்து வந்தவர்களைக் கண்களால் கண்டால் கூட போதுமானதாக இருந்திருக்கிறது. அதனால் தான் இவ்வளவும் என்பது எனது கருத்து.
//இராச இராசனுக்குப் பின்னர் ஆண்ட வடுகர்களும், கன்னடர்களும், மராத்தியர்களும் தமிழர்களைச் சுரண்டியதையும், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரித்தாண்டதையும், தமிழர்களின் நிலங்களைக் கொள்ளையடித்தையும், தமிழர்களில் கோயில்களிலிருந்து தமிழை வெளியேற்றியதைப் பற்றியும் பேசலாமே//
தாராளமாக பேசுவார். பேசிக்கொண்டுதான் இருக்கிறார். இந்த ராசனைப் பற்றிய விவாதம் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிலிருந்து ஆரம்பிக்கிறது. மக்களாட்சியில் இருக்கும் நாம் ஒரு மன்னனுக்கு விழா எடுக்கலாமா என்பது நியாயமான கேள்வி. இது எனது கேள்வியும் கூட. இந்த கேள்வியின் நியாயம் உங்களுக்குப் புரியவில்லை. இந்த மன்னனின் மக்கள் விரோத செயல்கள் இங்கே வினவில் விரிவாக இருக்கிறது. நீங்கள் வடுகர், கன்னடர், மராத்தியர், மொகலாயர் என்று எல்லா ராசன்களின் மக்கள் விரோத செயல்களைப்பற்றியும் கூறுங்கள். அவர் ஏற்றுக் கொள்வார்.
//அம்பி *** பார்ப்பனரல்லாத தமிழராகக் கூட இருக்கலாம்.//
அவர் அம்பிக்களின் விசயத்தில் மட்டுமே தலையிடுவார். அந்த அளவுக்கு அம்பிக்களின் மீது அக்கறை அம்பிக்களின் கருப்பிண்டங்களுக்கு மட்டுமே வரும் என்பது எனது யூகம்.
// தென்றலைப் போன்ற தமிழெதிர்ப்புக் குணமோ அல்லது தமிழர்களை இழிவுபடுத்தவும், பிரித்தாள வேண்டுமென்ற நோக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை//
சிறுபிள்ளைத்தனமான கணிப்பு. அவர் வர்க்கமற்ற மக்கள் சமூகம் உருவாவதற்காகத்தான் பேசுகிறார். அவர் யாராக இருந்தாலும் இதைச் செய்யமுடியும். வர்க்கமற்ற மக்கள் சமூகம் தமிழர்களுக்கு விரோதமானது என்று நீங்கள் தான் நிறுவ வேண்டும்.
தொடரும்.
To all:
This post has become too big for me to contribute in this debate as much as I want.
திராவிட ,ஆரிய இன மக்களை அனைவரையுமே அவதூரு செய்கின்றார் உணிவேர். இங்கு அம்பியுடன் விவாதிப்பது அவரின் ஆரிய-பார்பனிய கருத்தாகத்துக்கு எதிராகவே தான். ஆரியத்தையும் ,பார்பனிய கருத்தாக்கத்தையும், கசட்டு புராணத்தையும் அவர் கைவிடும் நிலையில் அவர் எம்மை பேன்ற ஒரு சக தமிழரே. ஆனால் உணிவேர் அவர்களின் கருத்து ரத்தம் தெடர்பான இனவாதத்தை எதிரொலிக்கின்றது. [இதே கருத்தாக்கத்தில் பார்பனர்களும் ஆரியத்தையும் ,திராவிடத்தையும் வேறு படுத்துகின்றனர் என்பது உண்மை தான் ]
//தமிழ் திராவிட ஆண்களுக்கும் அவர்களின் ராசன்களுக்கும் பாப்பாத்திகளின் மேல் ஒரு CRUSH இருந்தது இருக்கின்றது இருக்கும். அதே போன்று தமிழ் திராவிட பெண்களுக்கும் அவர்களின் ராணிகளுக்கும் பாப்பனர்களின் மேல் ஒரு CRUSH இருந்தது இருக்கின்றது இருக்கும். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வடக்கில் இருந்து வந்தவர்களைக் கண்களால் கண்டால் கூட போதுமானதாக இருந்திருக்கிறது. அதனால் தான் இவ்வளவும் என்பது எனது கருத்து.//
TT,
//மக்களை அனைவரையுமே அவதூரு செய்கின்றார் உணிவேர். //
இதில் என்ன அவதூரு இருக்கிறது. ஆண்கள் பெண்களைப் பார்ப்பதே இல்லையா. பெற்றோர்கள் தங்கள் மகன் /மகளுக்கு கலரான பெண் /மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்பதில்லையா. கலராக இருப்பவர்கள் அதிக டிமான்டாக இருப்பதில்லையா. …
What is wrong in speaking about this?
univer,
வியாசனும் அம்பியை போன்றே முருகனின் பிறப்புக்கு பார்பனிய புராண திரிபு கசடுகளை நம்பும் பசத்தில் மட்டுமே உங்கள் கருத்து சரியானதாக இருக்கும். வியாசன் அப் புராண திரிபு கசடுகளை நம்ப மாட்டார் என்றே நம்புவோம். அம்பி ,ஆரியத்தையும் ,பார்பனிய கருத்தாக்கத்தையும், கசட்டு புராணத்தையும் அவர் கைவிடும் நிலையில் அவர் எம்மை போல் சக தமிழ் மனிதரே என்ற கருத்துபின்னணியில் வியாசனின் “அம்பி பார்ப்பனரல்லாத தமிழராகக் கூட இருக்கலாம் ” என்ற கருத்தை ஏற்கின்றேன் .
//அவர் அம்பிக்களின் விசயத்தில் மட்டுமே தலையிடுவார். அந்த அளவுக்கு அம்பிக்களின் மீது அக்கறை அம்பிக்களின் கருப்பிண்டங்களுக்கு மட்டுமே வரும் என்பது எனது யூகம்.//
யுனிவர்படி,
வியாசனுக்கு அளித்த பதில்களை வாசித்தேன். Crush சம்பந்தமாக தாங்கள் கூறிய கருத்து தவறானவை. பார்ப்பனியத்தை அம்பலப்படுத்த இக்கருத்துக்கள் உதவ மாட்டா. பார்ப்பன ஆண்/பெண்களுக்கு திராவிட பெண்/ஆண்களின் மீது கிரஸ் அல்லது திராவிட ஆண்/பெண்களுக்கு பார்ப்பன பெண்/ஆண்களின் மீது கிரஸ் என்ற கருத்தில் மனிதர்களின் இயல்பான காதல் சார் வாழ்வை வரவேற்று போற்ற வேண்டும். அதே சமயம், முதலாளித்துவ நுகர்வு கலாச்சாரத்தையும், பார்ப்பனியத்தையும் கறாராக விமர்சிக்க முன்வரவேண்டும். இதில் இருதரப்புகள் உள்ளன. பார்ப்பனியமும் முதலாளித்துவமும் அனைத்துப் பெண்களையுமே பாலியல் பண்டமாகத்தான் பார்க்கிறது.
பார்ப்பனியம் ஒட்டுமொத்த பெண்களையே சூத்திரர்களாக அதாவது வேசி மக்களாகத்தான் கருதுகிறது. ‘ஸ்த்ரீ ஸுத்ர ஷாதினாம்’ என்பது மனுசொல்கிற முதன்மையான கோட்பாடு. இப்படிச் சொல்லிவிட்டுதான் பலவகைத் திருமணங்களைப் பற்றி பேசுகிறது. அனுலோம மணம் என்பது மேல் சாதி ஆண், கீழ் சாதி பெண்ணை மணமுடிப்பதாகும். இதற்கு தண்டனை குறைவு. ஆனால் பிரதிலோம மணம் என்பது கீழ் சாதி ஆண் மேல் சாதி பெண்ணை மணமுடிப்பதாகும். இதற்கு மனுவின் பார்வையில் மன்னிப்பே கிடையாது!!! இது ஒரு தரப்பு.
மறுபுறம் வியாசனைப்போன்றோ இராச இராசனைப்போன்றோ தமிழர்கள் கிடையாது. இராச இராசன் தளிச்சேரியை நிர்மாணித்து விபச்சாரத்தை நிலைநாட்டியவன். வியாசன் குஷ்புவை வெள்ளைத்தோல் மினுமினுப்பு என்று கூறிவிட்டு தமிழர்கள் மீது பழியைப் போட்டு தப்பித்தவர். எல்லா நாடுகளிலுமே மேட்டுக்குடிகள் இவ்விதம் தான் இருக்கிறார்கள்.
இவர்கள் இப்படியென்றால் தமிழ் சமூகம் காதல் வாழ்க்கையை அகப்பாடல்களில் பேசுகிறது. பார்ப்பனியம் சொல்கிற புனிதம், கற்பு எல்லாம் அங்கு இல்லை. வள்ளியும் முருகனும் தங்களுக்குள் புரிந்துணர்வுடன் நற்றிணையிலே வாழ்கிறார்கள். ஆனால் இந்தக் காதல் வாழ்க்கையை பார்ப்பனியம் பலவகைத் திருமணங்களில் காந்தர்வம் என்று சொல்கிறது. காந்தர்வ மணத்திற்கு பார்ப்பனியம் பல தண்டனைகளைச் சொல்கிறது. ஏனெனில் இதனால் சாதிகலப்பு ஏற்படும்.
எனவே பாலியலை பண்டமாக கருதுகிற போக்கைச் சுட்டுவதாக இருந்தால் முதலாளித்துவ நுகர்வு கலாச்சாரத்தையும், பார்ப்பனியத்தையும் கறாராக விமர்சிக்க முன்வரவேண்டும். அப்பொழுதுதான் பார்ப்பனியம், முதலாளித்துவ நுகர்வுவெறி, ஆர் எஸ் எஸ் காலிகளின் லவ்-ஜிகாத் அவதூறு போன்றவற்றை முறியடிக்க முடியும். ஆனால் தங்கள் கருத்தே பாலியல் பண்டம் என்ற அளவிலே நின்றுவிடுகிறது. இதைப் பரிசீலிக்கக் கோருகிறேன்.
// இதைப் பரிசீலிக்கக் கோருகிறேன்.//
இது போன்ற கழிசடைகளிடம் கோரிக்கை வைத்து ஆகப் போவதென்ன தோழரே..? தங்களுக்கு அவ்வப்போது கொடுத்துவரும் சந்தர்ப்பவாத ஆதரவு தொடரும் என்பதைத் தவிர..! தொடரப்போவது அது மட்டுமா.. பார்ப்பன, இசுலாமிய எதிர்ப்பில் அவர் காட்டும் கழிசடைத்தனமும்தான்.. தங்களுக்குத் தேவை ஒரு கம்யூனிஸ்டின் கறாரான சுயவிமர்சனம் என்று நான் கூறியதை நீங்கள் பரிசீலிக்க வேண்டும் என மீண்டும் இப்போது உங்களை கோருகிறேன்..
அம்பி
பார்ப்பனியம் என்றைக்கும் தன் சொந்தக் காலில் நின்றதில்லை. இதே யுனிவர்படியுடன் இசுலாமிய விவாதம் நடந்த பொழுது, தங்கள் சற்றும் சம்பந்தம் இல்லாதவர் போல் இசுலாமிய வெறி Vs கம்யுனிச போராட்டம் என்பதைப் பார்த்து ரசித்த கழிசடைதான் தாங்கள். அப்பொழுது யுனிவர்படி உங்களுக்கு இனித்தார். நிலைமை இப்படியிருக்க சந்தர்ப்பவாத ஆதரவு பற்றிபேச தங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
யுனிவர்படியின் இசுலாம் சார்ந்த பிரச்சாரங்களை அதிகம் ரசித்தவர்கள் இங்கே விவாதிக்கிற அதே பார்ப்பனிய-ஆதிக்க சாதி கூட்டம் தான் என்பது வாசகர்களுக்குத் தெரியாதா!
தேனை புறங்கையால் நக்குகிற கூட்டம் ஒரு பக்கம் கம்யுனிஸ்டுகளுக்கு விமர்சனப் பார்வையை கற்றுக்கொடுத்துவிட்டு, தேன் பறித்து கொடுத்தவனையே முதுகில் குத்தி கழிசடையாக்கிவிட்டு சொகுசாக இருப்பது விவாதத்தில் மட்டுமல்ல வாழ்க்கையுமே அவர்களுக்கு இப்படித்தான் இருக்கிறது என்பதை முதலில் யுனிவர்படி பரிசீலிக்கட்டும். உங்களைப்போன்ற பிழைப்புவாதிகளுக்கு கழிசடைகள் தேவலை! ஏனெனில் அவர்கள் தங்களை அறிவித்துக்கொள்கிறார்கள். ஆனால் உங்களைப்போன்ற பிழைப்புவாதிகள் அப்படி அல்லர். ஆகையால் பரிசிலீக்கச் சொல்கிற உங்களது கோரிக்கை மானக்கேடான ஒன்று!
// பார்ப்பனியம் என்றைக்கும் தன் சொந்தக் காலில் நின்றதில்லை. //
பார்ப்பனியம் என்ற சட்டைக்கு ஏதய்யா சொந்தக் கால்கள்.. அதை அணிந்திருக்கும் நிலப்பிரபுத்துவத்திற்குத்தான் பெருநிலவுடமை, ஆதிக்கவர்க்க நலன்கள் என்ற இரண்டு வலிமையான கால்கள் உண்டு.. சட்டையை பிடித்துக் கொண்டு தொங்குவதால் மட்டுமே ஆதிக்க சக்திகளை வீழ்த்தப் போகிறோம் என்று பம்மாத்து காட்டுவதால் சட்டை சிறிது கிழியுமே தவிர வேறு எதையும் அசைக்கமுடியாது.. சட்டை கிழிந்தால் வேறு ஒரு டி-சர்ட்டையோ, கோட்டையோ மாட்டிக்கொண்டு அசையாமல் நிற்கும்..
// இதே யுனிவர்படியுடன் இசுலாமிய விவாதம் நடந்த பொழுது, தங்கள் சற்றும் சம்பந்தம் இல்லாதவர் போல் இசுலாமிய வெறி Vs கம்யுனிச போராட்டம் என்பதைப் பார்த்து ரசித்த கழிசடைதான் தாங்கள். அப்பொழுது யுனிவர்படி உங்களுக்கு இனித்தார். நிலைமை இப்படியிருக்க சந்தர்ப்பவாத ஆதரவு பற்றிபேச தங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? //
புட்டியுடன் நீங்கள் நடத்திய தேனிலவு ஊடல் காட்சிகளில் இடைபுக நான் இசுலாமிய ஆதரவாளனோ/எதிர்ப்பாளனோ அல்ல.. அந்த கூத்தில் தலையிடாமல் பார்த்துக்கொண்டிருந்த அனைவரையும், பிற தோழர்கள் உட்பட, ’பார்த்து ரசித்த கழிசடைகள்’ என்று சுட்டுமளவுக்கு தங்களுக்கு மண்டை வீங்கிப்போயிருக்கிறது..
// யுனிவர்படியின் இசுலாம் சார்ந்த பிரச்சாரங்களை அதிகம் ரசித்தவர்கள் இங்கே விவாதிக்கிற அதே பார்ப்பனிய-ஆதிக்க சாதி கூட்டம் தான் என்பது வாசகர்களுக்குத் தெரியாதா! //
அதிகம் ரசித்தவர்கள் அவர்கள் என்றால் கொஞ்சம் குறைவாக ரசித்தீர் என்பதற்கு இது ஒப்புதல் வாக்குமூலமா..?
// தேனை புறங்கையால் நக்குகிற கூட்டம் ஒரு பக்கம் கம்யுனிஸ்டுகளுக்கு விமர்சனப் பார்வையை கற்றுக்கொடுத்துவிட்டு, தேன் பறித்து கொடுத்தவனையே முதுகில் குத்தி கழிசடையாக்கிவிட்டு சொகுசாக இருப்பது விவாதத்தில் மட்டுமல்ல வாழ்க்கையுமே அவர்களுக்கு இப்படித்தான் இருக்கிறது என்பதை முதலில் யுனிவர்படி பரிசீலிக்கட்டும். //
பார்ப்பனிய எதிர்ப்பில் உங்கள் பங்காளியான புட்டிக்கு, எதிர்தரப்பில் இருப்பவர்களாக நீர் அடையாளம் காட்டுபவர்கள் முதுகில் குத்தி துரோகம் செய்தார்களா..? எதிரிதான் கழிசடையாக்கினான், முதுகில் குத்தினான் என்று ஒப்பாரி வைக்க வெட்கமாயில்லை..? மூக்கில் குத்தும்போது முதுகைக் காட்டிவிட்டு முதுகில் குத்திவிட்டான் என்று வீரம் பேசுவது உமது வழக்கமான வார்த்தை சாலம் மட்டுமல்ல, உமது வழக்கமான காறி காறி துப்பிக்கொண்டு இருக்க வேண்டிய கோழைத்தனமும் கூட.. இந்த சந்தர்ப்பவாத கூட்டுக்கு மாற்றாக சுயவிமர்சனத்தை சுட்டிக்காட்டினால் கோவம் வருகிறது.. கம்யூனிஸ்டு என்ற முகமூடியே இத்தனை கனமாக இருக்க, சுயவிமர்சனம் என்ற சுமையையும் உம் மீது ஏற்றுவதாக நீர் புலம்புவது புரிகிறது.. ______________
// உங்களைப்போன்ற பிழைப்புவாதிகளுக்கு கழிசடைகள் தேவலை! ஏனெனில் அவர்கள் தங்களை அறிவித்துக்கொள்கிறார்கள். //
தங்களை அறிவித்துக் கொண்டு கழிசடைத்தனம் செய்தால் தேவலை என்று கூறுவது பிழைப்புவாதத்தைவிட கேவலமான பிழைப்புவாத கழிசடைத்தனம்.. புட்டிக்கு அது குணம் என்றால் உமக்கு அது விருப்பத் தேர்வு..
// ஆனால் உங்களைப்போன்ற பிழைப்புவாதிகள் அப்படி அல்லர். ஆகையால் பரிசிலீக்கச் சொல்கிற உங்களது கோரிக்கை மானக்கேடான ஒன்று! //
உம்மிடம் போய் பரிசீலிக்கச் சொல்லி கோரிக்கை வைத்தது இப்போது எனக்கும் மானக்கேடாகத்தான் தெரிகிறது.. கூடவே உம் முகமூடி இப்போது கிழிந்திருப்பதால் என் சுய அகங்காரம் அடிபட்டதை நான் பொருட்படுத்தவில்லை..
திரு வியாசன்,
//உங்களின் கருத்தை விளக்குங்கள்//
தமிழகத்தில் தமிழ் தான் ஆட்சி மொழி. மத்திய அரசு சம்பந்தப்பட்ட விசயத்தில் ஆங்கிலம் கட்டாயமாவது இயற்கை தான். வேறு வழியில்லை. இதில் வெட்கப்படுவதற்கு பெரிதாக ஒன்றுமே யில்லை. வடமொழிக்கு ஆட்பட்டோம், மொகலாய மொழிக்கு ஆட்பட்டோம், ஆங்கிலத்துக்கு ஆட்பட்டோம், இதெல்லாம் நம்மிடம் ஒற்றுமையில்லாததால் தான் வந்தது. ராசன்களின் பங்கு இதில் முக்கியம். சமத்துவமான சமூகத்திற்காக அவர்கள் பாடுபட்டிருந்தால் அந்நியர்களின் படையெடுப்பை அனைவரும் ஒன்றாக நின்று தடுத்திருக்கலாம். அப்படித்தான் இல்லையே. எல்லோருக்கும் அடிமைப்பட்டுத்தான் போக வேண்டும். ஒரு கிராமத்திலேயே 1000 பிரச்சனைகள். எனவே தற்சார்பான பொருளாதாரமில்லை. பிழைப்பிற்காக ஆங்கில அடிமைகளாகத் தான் தமிழர்கள் திராவிடர்கள் இருக்கிறார்கள். யாரை நொந்து கொள்ள முடியும், நம் முன்னோரைத்தவிர. நமது வெள்ளைத்தோல் மோகமும் இதற்குகாரணம் தான். இதைத்தான் நான் கூறிவருகிறேன்.
//இலங்கை முழுவதிலும் தமிழும் நிர்வாக மொழி.//
You seem to be too proud about the situation of Tamil in SL. You should not forget that is a proverbial ISLAND, with just 2 languages, as husband and wife. It is not the case in TN, where we are in a federation with 20 languages. We cannot have 20 languages in every place.The sea is a great barrier to the movement of people. But here in TN itself, we have people from all over. We have big linguistic minorities from adjacent states too migrated from long back.
//இலங்கையில் தமிழுக்கு எந்தவுரிமையையும் போராடாமல், இரத்தம் சிந்தாமல் தமிழர்கள் பெறவில்லை.//
I know who gives life fighting for rights and who get to enjoy the rights and boast.
முற்றும்.
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது, இந்த முறை என்ன சொல்கிறதென்று பார்ப்போம். 🙂
இன்னும் நான் சொல்வதை தோழர் தென்றல் புரிந்து கொள்ளவில்லை போல் தெரிகிறது. என்னுடைய கருத்து என்னவென்றால், அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக நடைமுறைகளுக்கு அமையத் தான் தமிழ் மன்னர்கள் மட்டுமன்றி எல்லா நாட்டு மன்னர்களும் ஆண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆட்சியை பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொண்டதால் தான் அவர்களால் பேரரசர்களாகி, பாரிய நிலப்பரப்பைக் கட்டியாள முடிந்தது. பெரும்பான்மை மக்கள், தமது மன்னர் கொடுமையானவர் என்று உணரும் போது எந்தப் பெரிய வல்லரசும் கவிழ்ந்து விடும், நாட்டில் பஞ்சமும், கலவரமும் பெருகும், மக்கள் மன்னரகளுக்கெதிராக திரண்டெழுவார்கள், பல நாடுகளின் வரலாற்றில் இவை நடைபெற்றதுண்டு. சோழப் பேரரசு முஸ்லீம் படையெடுப்பினால் வீழ்ந்ததே அன்றி, மக்கள் புரட்சியினால் வீழவில்லை.
ஆகவே எங்களுக்கு, இக்காலத்தில் பெரியாரிய, கம்யூனிச, சோஷலிச சிந்தனைகளால் ஏற்பட்ட மனமாற்றத்தால் அல்லது ‘விழிப்புணர்வால்’ மனிதவுரிமைக்கு எதிரானவை என்று நாங்கள் நினைக்கும் சாதீய, சமூகக் கொடுமைகள் எல்லாம் அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆட்சி முறையாக இருந்தது, அல்லது இவ்வளவு கடவுள் பக்தியுள்ள இராச இராச சோழன் வேண்டுமென்றே தனது மக்களுக்கு அநீதி விளைவித்துக் கொண்டு, எங்கிருந்தோ அழைத்து வரப்பட்ட பார்ப்பனர்களுக்கு சலுகைகள் அளித்து விட்டு, அதை கல்லிலும் எழுதி வைத்து விட்டும் போயிருக்க மாட்டான். அவனது மனதில், தான் ஒரு சிறந்த ஆட்சியை மேற்கொள்வதாகத் தான் நிச்சயமாக நினைத்திருப்பான். ஆனால் இக்காலத்தில் எங்களுக்கு திராவிடவாத, பெரியாரிய, பகுத்தறிவு, கம்யூனிச, சோஷலிச, தென்றலின் உளறலிச அடிப்படையில் அவையெல்லாம் தவறானவையாகத் தெரிகின்றன. ஆகவே நான் கூறுவதென்னவென்றால் எங்களின் இக்காலக் கொள்கைகளினதும் சட்டங்களினதும் அடிப்படையில் ஆயிரமாண்டுகள் பின்னோக்கிப் போய் எமது முன்னோர்களின் செயல்களுக்குத் தீர்ப்புக் கூறுவதும் அவரக்ளுக்குத் தண்டனை அளிப்பதும் வெறும் அபத்தம் என்பதாகும்.
கபிலர் அகவல் பார்ப்பன எதேச்சாதிகரத்தை தோலுரித்தது உண்மையானால்(உங்களைப் போன்றவர்களின் எந்த வரலாற்றுக் கருத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்ள எனக்குப் பயம், ஏனென்றால் எல்லாவற்றிலும் திரிப்பும், பகுத்தறிவு ‘லொள்’உம் இருக்கும்) ராஜ ராஜா சோழனுக்கு முன்பே கபிலர் போன்றவர்களுக்கு சாதியொழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு சிந்தனைகள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களால் மக்களை ஒன்று திரட்டி மக்களின் ஆதரவைப் பெற முடியாமல் போயிருக்கலாம். உதாரணமாக, வினவு குழுவினர் கூட நல்ல முற்போக்கு கருத்துக்களையும் எண்ணங்களையும் தான் கொண்டுள்ளனர். அவர்களால் எத்தனை பேரால் மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெல்ல முடியும். தில்லையை மீட்கும் போராட்டத்திலேயே அவர்களுக்கு மக்களிடையே உள்ள ஆதரவைப் பார்க்க முடிந்தது. 🙂
சதுரி மாணிக்கம் மட்டுமல்ல கோயில் பணியாளர் ஊதியம் தராமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிராமணர்கள் கூடத் தான் தீக்குளித்தனராம், இதிலிருந்து என்ன தெரிகிறது? இராச இராசன் காலத்தில் கோயில் ஊழியர்கள் என வரும்போது, நாடககக் கணிகை சதுரி மாணிக்கத்தினதும், பார்ப்பனர்களினதும் நிலை ஒன்றாகத் தானிருக்கிறது. அவர்கள் ஒன்றுபட்டுத் தான் ஊதியம் வேண்டிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அக்காலத்தில் நடைபெற்ற தவறுகள் இக்காலத்திலும் நடக்காமலிருப்பதை நாங்கள் உறுதி செய்து கொள்ளவதில் தவறில்லை ஆனால் ஆயிரமாண்டுகளுக்கு முன்பு வரலாற்றில் நடந்தவைக்காக, இக்காலத்தில் நாங்கள் எமது முன்னோர்களை பழிப்பதும், தீர்ப்புக்குக் கூறுவதும், தண்டனை அளிப்பதும், இணையத்தளங்களில் உளறுவதும், வெறும் அபத்தம் மட்டுமல்ல, வெறும் அதிகப்பிரசங்கித்தனம் கூட.. அதிலும் தமிழ் மண்ணில் பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் வாரிசுகள் எமது தமிழ் முன்னோர்களை பழிப்பது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் நன்றி கெட்ட செயல். அதை எருமை மாதிரிப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் உண்மையான தமிழர்களல்ல என்பது தான் எனது கருத்தாகும்.
///பரிதாபம். பதினாறாம் லூயிக்கு பக்க வாத்தியம் வாசித்த நிலப்பிரபுக்களுக்கு செருப்படியும் லூயிக்கு கில்லெட்டினும் கிடைத்தது வியாசனுக்கு தெரியாது போலும். ///
தெரியும், எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் எடுத்துக்காட்டுகளைத் தரும்போது அவை நடைமுறைக்கு ஒத்து வருமா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை போல் தெரிகிறது. “பதினாறாம் லூயிக்கு பக்க வாத்தியம் வாசித்த நிலப்பிரபுக்களுக்கு செருப்படியும் லூயிக்கு கில்லெட்டினும்’ கொடுத்தவர்கள் அக்காலத்தில் அவன் கீழ் வாழ்ந்த பிரெஞ்சு மக்கள். இக்காலப் பிரஞ்சுக்காரர் எவருமே, உங்களைப் போன்று, நீங்கள் ராஜ ராஜ சோழனை விமர்சிப்பது போல, அவனை இழிவு படுத்துவதைப் போல, அவன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயிலை இழிவு படுத்துவது போல, பதினாறாம் லூயியை இழிவு படுத்துவதில்லை, மாறாக, அவர்கள் அவனது மாளிகையின் பழமையையும், அவன் படுத்த கட்டிலைக் கூட, அதன் அழகையும், சிறப்பையும் கொஞ்சமும் மாற்றாமல், மேலும் மெருகூட்டி அப்படியே பாதுகாப்பது மட்டுமன்றி, அதை வெளிநாட்டு மக்களிடம் பீற்றி, அவர்களிடம் காட்டி பணமும் பறித்துக் கொள்கிறார். உங்களைப் போன்றவர்களின் தலிபானிசம் பிரஞ்சுக் கார்களிடம் கிடையாது. அது தான் உங்களுக்கும், அவர்களுக்குமுள்ள வேறுபாடு.
_________
///ஏற்கனவே இலங்கை தொடர்பான கலையரசனின் பதிவுகளை வெற்றிவேல் பதிவு செய்து கேள்வி கேட்ட பொழுது வியாசனின் ரியாக்சன் என்னவாக இருந்தது?///
உங்களைப் போல் எனக்குத் தெரியாத விடயங்களை எல்லாம் தெரியுமென வாதாடியதாக எனக்கு நினைவில்லை. என்னைப் பொறுத்த வரையில் கலையரசன் என்பவர் உங்களில் ஒருவர், அவரது கருத்துக்கள் எதனுடனும் என்னால் உடன்பட முடியாது. ஆகவே நான் அதை மறுத்திருக்கலாம்/மறுத்திருப்பேன்.
//வியாசன் போன்ற பாசிச கோமாளிகளுக்கு 95% கல்வெட்டுக்கள் சமஸ்கிருதத்தில் இருந்தால் தான் அது ஆவண மொழியாம்! பார்ப்பனிய அடிமைத்தனத்திற்கும் நக்கத்தனத்திற்கும் வேறு என்ன சான்று இருக்கிறது?///
தென்றல் போன்ற சோஷலிச கோணங்கிகளுக்கு, உண்மையில் இராச இராசன் ஆவணமொழியைச் சமஸ்கிருதமாக்கியிருந்தால், 95% கல்வெட்டுகள் எப்படி தமிழில் இருக்க முடியும் என்ற கேள்வியிலுள்ள நியாயமும், கருத்தும் இன்னும் புரியாத காரணத்தால் தான் இந்திய அரசின் இன்றைய மொழிவாரி அட்டவணையை, ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இராச இராசன் சமஸ்கிருத்தை ஆவண மொழியாக்கினானா, என்பதைப் பற்றிப் பேசும் போது உதாரணத்துக்கு இழுத்து வருவார்கள். கேள்வியின் அடிப்படையே புரியாத போது இப்படியான குழப்பங்கள் ஏற்படுவது இயற்கையே. 🙂
//நிதித்துறையிலும் நிர்வாகத்துறையிலும் செப்பேடுகளிலும் என்ன மொழி இருந்தது என்பதற்கு நான் வைத்த வாதங்களுக்கு என்ன பதில்?///
செப்பேடுகளையும் சேர்த்துத் தான் 95% Inscriptions தமிழில் உள்ளன என்கிறார்கள். நிர்வாக மொழியாகத் தமிழ் இருந்ததால் தான், ஆவணங்களில் பெரும்பான்மை (95%) தமிழில் உண்டு. இக்காலத்தில், இலங்கையில் கூட, ஈழத்தமிழர்களின் செலவில் சமஸ்கிருதத்தில் தான் பார்ப்பனர்களுக்கு வேத பாடசாலைகள் நடக்கின்றன. அது எங்களிடம் (கோயில்களில்) வேலை செய்கிறவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு முதலீடு செய்வது போன்றது. அதனால் ஈழத்தமிழர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டு, தமிழை அழித்து விட்டார்கள் என்று சொல்வது போன்றது தான், இராச இராசன் வேதம் கற்க பார்ப்பனர்களுக்கு மானியம் அளித்ததைக் காட்டி, அவன் தமிழுக்கு எதிரி என்பது போல் உளறுவதும், அவனை வசை பாடுவதும்.
///இவர்கள் தீட்டுக்கழிக்கிற கும்பாபிசேகம் என்ற வார்த்தையை கலசமாட்டுதல் என்று தூயதமிழ் படுத்தினால் இதில் எங்கேயிருக்கிறது தூய்மை? எங்கே இருக்கிறது தமிழ்?///
இராச இராசன் கூட பாவாணர், மறைமலையடிகள் போன்றே தூய தமிழ்ச் சொற்களைக் கல்வெட்டுகளில் பாவித்திருப்பது அவனது தமிழ்ப்பற்றைக் தான் காட்டுகிறதல்லவா? கலசமாட்டுதல், குடமுழுக்கு போன்ற தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாக நீங்கள் கூறுவது தீட்டுக்கழிப்பது என்று கூறினாலும் சரிதான். உங்களின் கோயில் கலசமாட்டுதலின் போது தீட்டுக்கழித்தல் என்றே அழைப்பிதழை வெளியிடுங்கள், யாரும் தடுக்க மாட்டார்கள்.
ஆயிரமாண்டுகள் பின்னோக்கிப் போய் இராச இரசானின் வரலாற்றை ஆராயும் முன்பு, இராச இராசனின் தவறுகள் என்று கூறி, நீங்கள் தண்டனை கொடுக்கும் ‘செயல்களை’, அவனுக்குப் பின்னர் ஆண்ட தமிழரல்லாதவர்கள் (உங்களின் முன்னோர்களாகக் கூட இருக்கலாம், யார் கண்டது) ஏன் அந்த தவறுகளைத் திருத்தவில்லை, என்பதையும் ஆராய்ந்து அவர்களை முதலில் இழிவு படுத்துங்கள். சோழப் பேரரசு மட்டுமல்ல, கன்னட, வடுகர்களின் விஜய நகர அரசு கூட பார்ப்பனீயத்தை தலைமை மதமாகக் கொண்ட கொடுங்கோன்மை அரசு தான், அதுவும் தஞ்சாவூருடன் மட்டும் சுருங்கி விடவில்லை, ஆனால் இராச இராசனை இழிவு படுத்தும் உங்களைப் போன்ற முற்போக்கு, சோசலிசப் போராளிகள், இராச இராசனுக்குப் பின்னர் ஆண்ட கன்னட/வடுக விஜயநகர அரசர்களை இழிவு படுத்துவதில்லையே, ஏன்?, தமிழர்களுக்குச் சுரணையில்லை, ஆனால் வடுகர்களும், கன்னடர்களும் வாலை ஓட்ட நறுக்கி விடுவார்கள் என்ற பயமா??
வியாசன்,
//இலங்கையில் வடக்கு, கிழக்கில் தமிழுக்குத் தான் எதிலும் முன்னுரிமை//
//அப்படியிருந்தும் கூட அரசாங்க பெயர்ப்பலகைகளில் ஒரு தமிழ் எழுத்துப் பிழை என்றாலும், ஈழத்தமிழர்கள் போர்க்கொடி தூக்கி விடுவார்கள்//
நீங்கள் இலங்கைக்கு பயணம் சென்று ஒரு இருபது முப்பது ஆண்டுகள் இருக்குமா?
முருகன் பற்றிய வக்கிர புராண திருபுகளை மறுதலிக்கும் சிந்துவெளி மொஹஞ்சதாரோ தடயங்கள் : Part III
தொல்லியல் ஆய்வு முடிவுகளில் மொழியியல் பயன்பாடு [ஓமன் நாட்டில் கண்டெடுத்த தமிழ் எழுத்து ஓட்டுச் சில்லுகள்# ] :
வரலாற்றில் மறைந்து உள்ள காட்சிகளை வெளிகொண்டு வருவதற்கு தொல்லியல் துறை சார் ஆய்வாளர்கள் எடுக்கும் பெரும் முயற்சிகளுக்கு மொழியியல் ஆய்வுகளும் பயன்படுகின்றன.திராவிட மொழியான தமிழுக்கு எழுத்து வடிவம், தமிழ் எழுத்துக்கள் கிறித்து பிறப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே எழுதப்பட்டுஓமன் நாட்டில் கண்டெடுத்த ஓட்டுச் சில்லுகளைப்போல , ஈழத்தில் அனுராதபுரம், தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் மற்றும் பொருந்தல் போன்ற இடங்களில் கிடைத்த ஓட்டுசில்லுகளில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் குறைந்த பட்சம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறுதி இடப்பட்டுள்ளது. இருப்பதையும் , அன் நாகரிகத்தை உட்கொண்ட வேத-ஆரிய நாகரிகத்துக்கும் அதன் மொழியான வேத- சமஸ்கிருதத்துக்கும் எழுத்து வடிவம் இல்லாது இருந்ததையும் பின்பு அதற்கு எழுத்து வடிவம் கடன் வாங்க பட்ட வரலாற்று நிகழ்வுகளை இப்போது காண்போம்.
இன்று நாம் சமஸ்கிருதத்தை தேவநாகரி என்றும், கிரந்தம் என்றும் இரண்டு இரவல் வாங்கப்பட்ட எழுத்து வடிவில் எழுதிப்படிக்கிறோம். இது இரவல் வாங்கியது! சமஸ்கிருதத்திற்குச் சொந்தமில்லாதது. கி.பி.5 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்திற்குத் தமிழ்நாட்டில் கிரந்தம் என்ற தமிழ் எழுத்துக்கள் உள்ளடக்கிய எழுத்து வடிவம் தமிழகத்து சிவாச்சாரியார்களால் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் அதற்கு பல்லவ கிரந்தம் என்றே பெயர். அதற்குப்பின் பல நூற்றாண்டுகட்குப்பின் இந்தி மொழி உருவாகிய பின் வடநாட்டினர் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவத்தை இந்தி வடிவில் கொடுத்ததுதான் தேவநாகரி.
நன்றி : திணையகம்
https://www.facebook.com/thinaiyagam
முருகன் பற்றிய வக்கிர புராண திருபுகளை மறுதலிக்கும் சிந்துவெளி மொஹஞ்சதாரோ தடயங்கள் : Part III தொடர்சி :
தொல்லியல் ஆய்வு முடிவுகளில் மொழியியல் பயன்பாடு [ஓமன் நாட்டில் கண்டெடுத்த தமிழ் எழுத்து ஓட்டுச் சில்லுகள்# ] :
தொடர்சி…
சமஸ்க்ருததிற்கு எழுத்து வடிவம் கொடுத்தது, முதலாம் ருத்ரதாமன் என்ற சகா வம்சத்து மன்னன் ஆவான். இவன் கி.பி.150 ஆண்டைச் சேர்ந்தவன். சகா வம்சத்தினர், ஈரான் நாட்டைச் சேர்ந்த சைத்திய பழங்குடி இனத்தை சார்ந்தவர் ஆவர். வட பிரம்மி எழுத்துக்களைக் கொண்டு சமஸ்கிருததிற்கு எழுத்துக்களை உருவாக்கினான். இந்த எழுத்துக்களுக்கு 500 – 600 ஆணடுகளுக்கு முன்னமே தமிழில் தமிழி என்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன என்பற்க்கான் ஆதாரங்கள் கி.மு 3-வது நூற்றாண்டிலேயே எழுந்த ‘சமவயங்ககத்தா’ என்ற பிராகிருதத்தில் எழுதப்பட்ட சமண நூல் உள்ளன.அதில் தமிழி உள்பட 18 வகையான எழுத்துவகைகள் குறிப்பிடபட்டு உள்ளன.
[எனவே சிந்து சமவெளி நாகரிகத்தை கணக்கில் எடுக்காமல் கூட தமிழ் ,சஸ்கிருத மொழிகளின் எழுத்து வடிவ தொன்மையை ஆய்வு செய்தால் நமக்கு கிடைக்கும் முடிவுகள் திராவிட-தமிழ் மொழியே மிகவும் தொன்மையானது என்பது புலனாகின்றது ]
#28-10-2012 ஆம் நாளிட்ட ஆங்கில ஏடான இந்து நாளிதழில் வந்திருந்த ஒரு கட்டுரை. தலைப்பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”.
தமிழர்களை அறிவு ஏதுமற்ற ஆட்டு மந்தை கூட்டமாக சித்தரிக்கும் ராமனின் தமிழின வெறுப்பு கண்டனத்துக்குரியது.வரலாற்று அறிவு ஏதுமின்றி பிதற்றும் இந்த அறிவாளிக்கு பண்டைய தமிழர்களின் அறிவாற்றலுக்கு சான்றாக அவர்களின் நீரியல் மேலாண்மை மற்றும் பாசன பொறியியல் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன்.
மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது வைகை ஆறு.அந்த நகரில் இன்னொரு ஆறும் ஓடுகிறது என்பது பலரும் அறியாத செய்தி.அதன் பெயர் கிருதுமால் ஆறு.இது ஒரு வேடிக்கையான ஆறு.இதன் போக்கில் ஏதேனும் பெரிய கண்மாய் குறுக்கிட்டால் ஆறு காணாமல் போய் விடும். அந்த கண்மாயின் உபரி நீர் வெளியேறும் கலுங்கு பகுதியிலிருந்து மீண்டும் ஆறு துவங்கும்.இதற்கு காரணம் இது இயற்கையான ஆறு அல்ல. புவியியல் மதி நுட்பத்துடன் தமிழர்கள் உருவாக்கிய செயற்கையான ஆறு,இப்படியாக மதுரை நாகமலையில் துவங்கும் இந்த ஆறு சுமார் 80 கி,மீ. பயணித்து முதுகுளத்தூர் அருகே குண்டாறு பின் மலட்டாறு உடன் இணைந்து வங்க கடலில் கலக்கிறது.
மதுரை அருகே உள்ள நாகமலையில் புல்லூத்து, நாகதீர்த்தம், காக்கா ஊத்து முதலான இயற்கை சுனைகளில் பெருக்கெடுக்கும் நீர் சிறு ஓடையாக ஓடி துவரிமான் கண்மாயில் விழுந்து வந்திருக்கிறது.கண்மாய் நிரம்பிய பின் உபரி நீர் கலுங்கு வழியாக வெளியேறி சிறு ஓடையாக அடுத்தடுத்த கண்மாய்களில் போய் விழுந்திருக்கிறது.வைகையாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தவும் அதனால் மதுரையில் ஏற்படும் வெள்ள சேதத்தை தவிர்க்கவும் வைகையில் ஓடி கடலில் கலக்கும் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தவும் அன்றைய தமிழர்கள் இந்த ஓடையை பெரும் ஆறாக உருவாக்கினர்.
வைகை ஆற்றிலிருந்து ஒரு கால்வாய் வெட்டி பகுதியளவு நீரை துவரிமான் கண்மாய்க்கு திருப்பி விட்டுள்ளனர்.மிகுதியான நீர் வெளியேறி ஓடும் பாதையெங்கும் சங்கிலி தொடராக 76 கண்மாய்களை வெட்டி பாசன வசதி ஏற்படுத்தியுள்ளனர்.வழி நெடுக உள்ள மழை நீர் பிடிப்பு பகுதிகளிலிருந்தும் வெள்ள நீர் இந்த ஆற்றுக்கும் அதன் கண்மாய்களுக்கும் ஓடி வரும் வகையில் நில அமைப்புக்கு உரியவாறு இந்த கட்டுமானங்களை அமைத்துள்ளனர்.இதற்கான கல்வெட்டு ஆதாரம் உள்ளது.அந்த கல்வெட்டு 1961-ல் மதுரை குருவிக்காரன் சாலை பகுதியில் வைகை கரையில் கண்டெடுக்கப்பட்டு தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த ஆறு காணாமல் போய் விட்டது.வைகையில் வரைமுறையின்றி மணல் அள்ளியதால் ஆழம் அதிகமாகி கிருதுமால் இணைப்பு கால்வாயில் தண்ணீர் ஏறிப்பாய முடியவில்லை.வைகை நீர் வரத்து தடைப்பட்டதாலும் ஆக்ரமிப்புகளாலும் சிறு ஓடையாக சுருங்கி மதுரையில் யாருக்கும் தெரியாமல் சாக்கடையாக இந்த ஆறு ஓடுகிறது.ஆண்டில் பத்து,பதினோரு மாதங்கள் நீர் ஓடிய இந்த ஆற்றின் கண்மாய்கள் வறண்டு போய் அதன் பாசன நிலங்கள் வானம் பார்த்த பூமியாய் வாடிக்கிடக்கின்றன.
அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு பண்ணருவா என்ற கதையாக இன்றளவும் மதுரை சித்திரை திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் கிருதுமால் ஆற்றை மையமாக வைத்தே நடைபெறுகின்றன. வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு கலாச்சாரத்தை மட்டும் கொண்டாடி என்ன பயன் என நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.அந்த கலாச்சாரங்கள் நம் உரிமைகளை மீட்டெடுக்கும் ஆயுதங்களாக மாற வேண்டும்.
தமிழ் மக்களின் திறன் குறித்த விரிவான செய்திகளுக்கு பார்க்க;
http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=03200804&week=mar2008
தமிழ் மக்களின் நீர் மேலாண்மை திறன் குறித்த மேலும் விரிவான செய்திகளுக்கு பார்க்க;
http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-1566181832/15146-2011-06-14-10-24-05
முருகன் பற்றிய வக்கிர புராண திருபுகளை மறுதலிக்கும் சிந்துவெளி மொஹஞ்சதாரோ தடயங்கள் : Part IV
பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களுடன் அம்பி ,இராமன் நடத்தும் மெய்நிகர் நேர்காணல் :
கேள்விகள் :
அம்பி :6 என்ற எண் குறியீடு எல்லாம் சிந்து நாகரீகத்துக்குப் பின்னால் வந்தது.. ?
இராமன் :வலமிருந்து இடமாக எழுதியவர்கள் திடீரென இடமிருந்து வலமாக எழுதுகிறார்கள் ?
பேராசிரியர் இரா. மதிவாணன் பதில் :
சிந்துவெளி முத்திரை எழுத்து இடமிருந்து வலமாக எழுதப்பட்டது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் 5000 எழுத்துச் சான்றுகளைத் தமிழாகப் படித்துக் காட்டியுள்ளேன்,3 ஒரு மொழியில் எழுத்துக்களைத் திசை மாற்றி எவராலும் படிக்க முடியாது. சிந்துவெளி எண்களும் 115, 183, 2400 போன்று இடமிருந்து எண்மானமாக எழுதப் பெற்றுள்ளன. பெரிய எண்ணை முதலில் சொல்லி அடுத்த எண்ணை வரிசைப்படுத்திச் சிந்துவெளி நாகரிகக் காலத்திய இடமிருந்து வலமாக எழுதும் எண்ணுமுறை தமிழ்க் (தமிழ் பிராமி) கல்வெட்டுக்களிலும்
பின்பற்றப்பட்டுள்ளது என்பதைக் கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு வாயிலாக நான் நிறுவியுள்ளேன். மயிலை சீனி. வேங்கடசாமியும் இவை எண் குறித்த குறியீடுகள் எனக் குறிப்பிட்டுள்ளார். அராபிய எண்கள் எனக் கருதப்பட்ட இன்றைய எண்கள் இந்திய எண்களே என அராபிய ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்திய எண்கள் எனக் குறிக்கப் பட்டுள்ள சிந்துவெளி நாகரிகக் காலத்திய வரிவடிவங்கள் திரிபுற்ற தமிழ் எண்களே என நான் நிறுவிக் காட்டியுள்ளேன்.
அரபி, உருது, பாரசீக மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படும் வடசெமித்திக் எழுத்து மரபைச் சார்ந்தவை. இம்மொழியில் எண்களுக்குரிய குறியீடுகளை முறைப்படி அவர்கள் வலமிருந்து இடமாகத்தான் எழுத வேண்டும். ஆனால் எல்லோரும் வியக்கும் வகையில் எண்களை மட்டும் இந்திய மொழிகளைப் போல் இடமிருந்து வலமாக எழுதுகின்றனர். இதன் காரணம் என்ன?பழந்தமிழரின் எண்களை வணிகர் வாயிலாக பொனீசியர் காலம் (கி.மு.1200) முதலாக மேற்காசிய வணிகர் அனைவரும் பின்பற்றினர். அதனால்தான் அரபி போன்ற மொழிகளில் 125 எனும் எண் 521 என வலமிருந்து இடமாக எழுதப்படாமல் நம்மைப் போன்றே 125 என எழுதப்படுகின்றன என்னும் உண்மையை ஐராவதம் மகாதேவன் போன்றோர் எண்ணிபார்க்க வேண்டும். மொழியளவில் வலமிருந்து எழுதுவோர் இடமிருந்து எழுதுவதாக மாற்றிக் கொண்ட வரலாறு உலகில் இல்லை. இது இந்தியாவில் மட்டும் நடந்ததா?
இந்திய எண்கள் என்னும் பழந்தமிழ் எண்கள் காலப்போக்கில் வரிவடிவத்
திரிபுகளாகக் கிடைத்த போதிலும் இன்று உலகம் முழுவதும் ஆளப்படும் 1, 2, 3
போன்ற எண்கள் குறிப்பாகத் தமிழர் உலகத்திற்கு நல்கிய நாகரிகக் கொடையாக
விளங்கி வருகின்றன. எண்களை இடமிருந்து வலமாக எழுதிய பழந்தமிழ் மக்களும் சிந்துவெளி மக்களும் மொழியை மட்டும் வலமிருந்து எழுதியிருக்க முடியாது. சிந்துவெளி எழுத்துக்களின் எண்களே தமிழி (தென்பிராமி) கல்வெட்டுக்களில் எண்களாக ஆளப்பட்டிருப்பதால் சிந்துவெளி மொழி வலமிருந்து இடமாக எழுதப்பட்டது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.
Thanks to
பேராசிரியர் இரா. மதிவாணன்
// Thanks to
பேராசிரியர் இரா. மதிவாணன் //
என்னமோ பேராசிரியர் இரா. மதிவாணன் உம்மிடம் மேற்படி நேர்காணலைச் சொன்னது போல் தாங்சு எல்லாம் சொல்றீர்..?
அம்பி :6 என்ற எண் குறியீடு எல்லாம் சிந்து நாகரீகத்துக்குப் பின்னால் வந்தது.. ?
பேராசிரியர் மார்கழியேயன் பதில் : இது தமிழ்-சோகம் என்று பெயர் வைத்துக் கொண்டு பெனாத்துகிறவர்கள் செய்யும் திரிபு.. மீனுக்கு வலப்பக்கத்தில் ஆறு கோடுகள் இருப்பது கார்த்திகை மீனைக் குறிக்கிறது.. அதைத்தான் இவர்கள் 6+மீன் என்று உளறுகின்றனர்.. 6 என்ற இன்றைய எண் குறியீடு அதில் இல்லை.. முருகைக் குறிக்கும் குறியீடுகள் கொண்ட சில்லுகளுக்கும், அறுமீனை குறிக்கும் சில்லுகளுக்கும் என்ன தொடர்பு என்பதற்கான ஆதாரங்களை தேடாமல் ததாயேயன் என்ற ஒரு ஆய்வாளர் இரண்டு சில்லுகளையும் சாரியை என்றழைக்கப்படும் பசையைப் போட்டு ஒட்டிக் கொண்டிருப்பதை பார்த்தேன்.. ஏனய்யா இப்படி செய்கிறீர் என்றால், என் மகன் என்னை உதைப்பான் என்று என்னமோ சொல்கிறார்.. யாராவது அப்படி ஒட்டுச் சில்லைக் கொண்டுவந்து ஆதாரம் என்று காட்டினால் நம்பிவிடப்படாது..
…வளைகாப்பு, சீமந்தம் என்று பத்திரிக்கை கூட வைப்பார்கள்.. அப்பவும் நம்பிடப்படாது..
அம்பி,
பேராசிரியர் இரா. மதிவாணன் மற்றும் அஸ்கோ பர்போலா,மற்றும் ஐராவதம் மகாதேவன் ஆகியவர்கள் சிந்துவெளியில் எண்களின் பயன்பாடு இருந்து உள்ளதை தொல்லியல் தடையங்கள் மூலம் காட்டும் போது அவற்றை தவறு என்று காட்ட அம்பியிடம் என்ன தடையமும் ,ஆய்வு முடிவுகளும் இருகின்றது என்பதை அறிய ஆவலுடன் இருக்கின்றேன்
தொல்லியல் காட்டும் சிந்துவெளி மொஹஞ்சதாரோ முத்திரைகளில் 6 + மீன் என்ற முத்திரைக் காணப்படுகிறது என்ற தடையத்தையும் ,அதற்கான அஸ்கோ பர்போலா,மற்றும் ஐராவதம் மகாதேவன் ஆகியயோரின் நிறுவும் அவை முருகனின் குறியீடு தான், அவை வானத்து நட்சத்திரங்களைக் குறிப்பிடுவது தான் அது என்ற ஆய்வு முடிவுகளை மறுதலிக்க அம்பியிடம் ஏதாவது ஆய்வு விளக்கம் இருக்கின்றதா ?
//அறுமீனை குறிக்கும் சில்லுகளுக்கும் என்ன தொடர்பு என்பதற்கான ஆதாரங்களை தேடாமல்//
Ambi that is the essay-sub content from Pro. R.Mathivaanan and that sub content is answering your question “6 என்ற எண் குறியீடு எல்லாம் சிந்து நாகரீகத்துக்குப் பின்னால் வந்தது.. ?”
//என்னமோ பேராசிரியர் இரா. மதிவாணன் உம்மிடம் மேற்படி நேர்காணலைச் சொன்னது போல் தாங்சு எல்லாம் சொல்றீர்..?//
Dear Vinavu,
This post and debate have become too large.
If possible and appropriate, please create a separate post, with just a title and a small intro, to continue this debate, so that it is easy for all of us.
Thanks for your understanding.
முருகன் பற்றிய வக்கிர புராண திருபுகளை மறுதலிக்கும் சிந்துவெளி மொஹஞ்சதாரோ தடயங்கள் : Part V
முனைவர் தெ.தேவகலாஅவர்களுடன் இராமன் நடத்தும் மெய்நிகர் நேர்காணல் :
கேள்விகள் :
சிந் சமவெளியில் இருந்து , காவிரிக்கு திராவிட சமுதாயம் தள்ளப்பட்டு இருந்தால் , மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் இலக்கியங்களில் அதை பற்றிய குறிப்பு இருந்திர்க்க வேண்டும்?
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் ‘சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.
சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்
பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.
பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும். எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது.
நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.
நன்றி :
முனைவர் தெ.தேவகலா
பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்)
தமிழ்-தாகம் first time you are answering with proper understanding of Context.
I am happy that you address the question spot on.
அம்பி
அஸ்கோ பர்போலா மற்றும் ஐராவதம் மகாதேவன் ஆகியயோரின் ஆய்வு முடிவுகள் சிந்துவெளி நாகரிகத்தை திராவிட-தமிழ் மரபுகளுடன் இணைக்கும் போது “ஆறிய” அறிவாளி அம்பிக்கு கோபம் வருவது இயல்புதானே ! ஆனாலும் பெண்களை கருவுறச் செய்யும் என்பதன் பொருள் முருகனை தொழுது பிள்ளை வரம் கேட்ட்கும் தமிழ் பெண்கள் என்று இருக்கும் போது ,அம்பி [எங்கோ இருந்து பூமிக்கு வந்த கருபிண்டம்-அம்பிபுராணம் ] தமிழ் பெண்களை இழிவு செய்யும் படி ,தொல் தமிழர் முருகனை பிரேமானந்தா அளவுக்கு இழிவு செய்யகூடாது அல்லவா அம்பி என்கின்ற எங்கோ இருந்து பூமிக்கு வந்த கருபிண்டம் ?
//பெண்களை கருவுறச் செய்யும் புராதன கால பிரேமானந்தாதான் முருகன்,//
// ஆனாலும் பெண்களை கருவுறச் செய்யும் என்பதன் பொருள் முருகனை தொழுது பிள்ளை வரம் கேட்ட்கும் தமிழ் பெண்கள் என்று இருக்கும் போது ,அம்பி [எங்கோ இருந்து பூமிக்கு வந்த கருபிண்டம்-அம்பிபுராணம் ] தமிழ் பெண்களை இழிவு செய்யும் படி ,தொல் தமிழர் முருகனை பிரேமானந்தா அளவுக்கு இழிவு செய்யகூடாது அல்லவா அம்பி என்கின்ற எங்கோ இருந்து பூமிக்கு வந்த கருபிண்டம் ? //
நீர் கொடுத்த வரிகள் அப்படி இருக்கிறது..:
”எனவே, சிந்து வெளித்திராவிடர்களின் ஆதித் தெய்வமான முருகு அல்லது முருகன் கடவுளை சென்நிற சருமத்தையும், எடுப்பான – வசீகரமான தோற்றத்தையும் கொண்ட இளைஞனாக – பெண்களை கருவுறச் செய்பவனாக அவர்கள் கண்டார்கள். ”
ஒரு அறிவு கெட்ட முண்டமாக இருப்பதைவிட, எங்கிருந்தோ வந்த கருபிண்டம் என்ன அவ்வளவு கேவலமா..?
அம்பி,
தொழப்படுவது தான் தெய்வம் என்பது கூட அறியாத ” ஆறிய “அறிவாளி அம்பியே ,
என் வாக்கியத்தில் காட்டபடும் தெய்வம்[தொழப்படுவது தான் தெய்வம்] என்ற அடிப்படை கூட தெரியாமல் இருக்கும் அம்பி அவரை ஒரு அறிவு கெட்ட முண்டமாக , எங்கிருந்தோ வந்த கருபிண்டம் என்று ஏற்றுக்கொள்வது மிக சரியான கருத்து தான். ஆனாலும் அம்பி அவர்கள் அவரையே ” தற்கொலை செய்துகொள்வது ” போன்று சுயமாக அவர்மீதே அவர் தனிநபர் தாக்குதல் செய்து கொள்வதை வினவு தணிக்கை செய்து இருக்கலாம் ! 🙂
தமிழ்-தாகம் ://”எனவே, சிந்து வெளித்திராவிடர்களின் ஆதித் தெய்வமான முருகு அல்லது முருகன் கடவுளை சென்நிற சருமத்தையும், எடுப்பான – வசீகரமான தோற்றத்தையும் கொண்ட இளைஞனாக – பெண்களை கருவுறச் செய்பவனாக அவர்கள் கண்டார்கள். ”//
அம்பி//ஒரு அறிவு கெட்ட முண்டமாக இருப்பதைவிட, எங்கிருந்தோ வந்த கருபிண்டம் என்ன அவ்வளவு கேவலமா..?//
// தொழப்படுவது தான் தெய்வம் என்பது கூட அறியாத ” ஆறிய “அறிவாளி அம்பியே ,//
’கல்கி பகவான்’ போலவா.. தங்களைக்கூட, தெய்வமே எங்களை ஏன் இப்படிப் போட்டு படுத்துகிறீர்கள் என்று செந்தில்குமர யுகத்திலிருந்தே கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் வினவு வாசகர்கள்.. நீரும் விடுவேனா என்று அடம் பிடிக்கிறீர்..
கார்திகை 19 அன்று[Tomorrow] அம்பி முழுவதும் தொல்குடி முருகனின் ஆசிபெற்று முழுவதும் தெளிவாகிவிடுவார் என்று நம்புகின்றேன். ச்ரணனை சிரனவன ஆகியதற்கு அம்பிக்கு கோபம் வரும் போது ,அதே அம்பி அவர்கள் அதே முருகனை பிரேமானந்தா ,கல்கி பகவான் சாமியார் அளவுக்கு சிறுமை படுத்தும் போது நம் தொல்குடி முருகனுக்கு என்ன கோபம் வருமோ தெரியவில்லை. சிறுபிள்ளை அம்பியின் அவ்தூரு குரலை முருகன் மன்னிக்க வேண்டுகின்றேன்
அம்பி,
தொல்லியல் காட்டும் சிந்துவெளி மொஹஞ்சதாரோ முத்திரைகளில் 6 + மீன் என்ற முத்திரைக் காணப்படுகிறது என்ற தடையத்தையும் ,அதற்கான அஸ்கோ பர்போலா,மற்றும் ஐராவதம் மகாதேவன் ஆகியயோரின் நிறுவும் அவை முருகனின் குறியீடு தான், அவை வானத்து நட்சத்திரங்களைக் குறிப்பிடுவது தான் அது என்ற ஆய்வு முடிவுகளை மறுதலிக்க அம்பியிடம் ஏதாவது ஆய்வு விளக்கம் இருக்கின்றதா ?மேலும் சிந்துவெளி நாகரிகத்துக்கு பின் வந்த சங்க இலக்கிய காலத்திலும் 6 + மீன் பற்றிய செய்திகள் இருப்பதை முருகன் பற்றிய வக்கிர புராண திருபுகளை மறுதலிக்கும் சங்க இலக்கிய தடயங்கள் : Part I1 வில் நாளை பார்க்க தானே போகின்றோம் அம்பி !
//6 என்ற எண் குறியீடு எல்லாம் சிந்து நாகரீகத்துக்குப் பின்னால் வந்தது
சிந்துவெளியில் கிருத்திகை மீனுக்கு (மீனுக்குப் பக்கத்தில் ஆறு கோடுகள், 6+மீன் அல்ல)ஆதாரம் இருக்கிறது.. முருகுக்கும் ஆதாரம் இருக்கிறது.. சரிதான்.. இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் வளையல்,காப்பு, சீமந்தம் என்று வளைத்து வளைத்து முடிச்சு போட பார்க்கிறீர்கள்..
தோழர் தென்றல் அவர்கள் வினவிலுள்ள வாசகர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று தப்புக்கணக்குப் போட்டுக் கொண்டு உளறுகிறார் போல் தெரிகிறது. ஒரு மொழியிலுள்ள கவிதையை இன்னொரு மொழியில் மொழிபெயர்க்கும் போது மொழி பெயர்ப்பாளரின் மொழி வல்லமை, அந்த மொழியில் அவருக்குள்ள ஆளுமைக்கு ஏற்றவாறு சொற்கள் மாறலாமே தவிர அதன் பொருள் மாறுவதில்லை.
ஆனால் உளறல் மகாப்பிரபு தென்றல் அவர்கள் ‘விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டவில்லை’ என்று காட்டுவதற்காக மொழிபெயர்ப்பைக் குறை கூறுவதையும், மேலைநாட்டு நூலாசிரியர்கள் திரித்து விட்டார்கள் எனக் குதர்க்கம் கற்பிப்பதையும் பார்க்க அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
தென்றல் குறிப்பிட்ட மாக்சிஸ்ட் இணையத்தளத்தில் உள்ள கவிதையிலுள்ள ஆங்கிலச் சொற்களுக்கும், நான் குறிப்பிட்ட மாவோவின் அதே கவிதையின் மொழிபெயர்ப்பிப்பில் பாவிக்கப்பட்ட ஆங்கிலச் சொற்களுக்குமிடையே சில வேறுபாடுகள் உண்டு(எல்லோருடைய மொழி பெயர்ப்பும் ஒன்றாக இருப்பதில்லை) அதை வைத்துக் கொண்டு, பொருளில் வேறுபாடு உள்ளதாக உளறுகிறார். அப்பனே! அந்தக் கவிதையின் மொழிபெயர்ப்புகளில் சொல்லில் தான் வேறுபாடுண்டே தவிர பொருளில் எந்த வேறுபாடுமில்லை. 🙂
தோழர் தென்றல் குறிப்பிட்ட மாவோவின் அதே பாடலுக்கு Yang –Sang NG என்ற சீன எழுத்தாளரின் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழேயுள்ளது. இதிலும் ஆங்கிலச் சொற்களில் வேறுபாடுண்டே தவிர பொருளில் வேறு பாடில்லை. Yang –Sang NG இந்த மொழிபெயரப்பை Chinese Communist Literature (1963) க்காக மொழி பெயர்த்தார்.
The grandeur that is the northern country-an expanse
of the good earth ice-bound,
snow-covered for thousands of miles around.
Surveying the Great Wall, to its north and south,
nothing but whiteness meets the eye.
The torrents of the mighty Huang Ho into
insignificance pale.
Silver snakes dance atop the mountains,
waxen elephants roam the plains,
as if to wrest heaven’s domain.
Let us wait for the sky to clear when, clothed in
radiant colours,
the land becomes more magnificently dear.
For such an enchanting empire, little wonder
countless heroes matched wits with one another.
Alas! The ambitious emperors of Ch’in and Han could
scarcely boast of literary lore.
E’en the founders of the great houses T’ang and Sung
became nought before the sages of yore.
As to the redoubtable Genghis Khan,
pampered child of fortune he was,
excelled only on the field of battle.
(YONG-SANG NG – “The Poetry of Mao Tse-tung”- The China Quarterly, No 13 (Jan. – Mar, 1963 – PP. 6.-73)
இந்தக் கவிதையை நான் குறிப்பிட்டதற்குக் காரணம் மாவோ தனது கவிதையிலும் சீனப்பெருஞ்சுவரை வியந்து எழுதியிருக்கிறார் என்பதைக் காட்டுவதற்காகத் தான். மாவோ ஜப்பானியர்களுடன் யுத்தம் புரியும் போது சீனர்களின் உணர்சிகளைத் தூண்டுவதற்காக சீனப்பெருஞ்சுவரை சீனர்களின் வலிமைக்கும், பெருமைக்கும் அடையாளமாகக் காட்டி விட்டுப், பின்னர் அடிமட்ட கம்யூனிஸ்டுகள் போராளிகளை பழமையான, மன்னர் கால அடையாளமாகிய சீனப்பெருஞ்சுவரை உடைக்குமாறும் எழுதியது, கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதத்தைத் தான் காட்டுகிறது. வாய்ச்சவடால் வர்க்கப் போராளிகளின் சந்தர்ப்பவாதத்துக்கு இப்படிப் பல உதாரணங்களைக் காட்டலாம். சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குக் குடியேறியவர்கள் இந்த வர்க்கப் போராளிகளின் வக்கிரங்களைப் பற்றிக் கதை கதையாகக் கூறுவார்கள்.
சீனர்கள் ஒவ்வொருவரும் இன்றும் சீனப்பெருஞ்சுவரை தமது பெருமை மிகுந்தவரலாற்றின் அடையாளமாக எண்ணிப் பெருமைப்படுகிறார்கள் என்பது தான் என்னுடைய வாதம், தோழர் தென்றலுக்கு எத்தனை சீன நண்பர்கள் இருக்கிறார்களோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஒவ்வொருநாளும் அலுவலகத்தில் பல சீன நண்பர்களுடன் கருத்துக்களைப் பரிமாறுவதுடன், எனக்கு தனிப்பட்ட முறையிலும் சீன நண்பர்கள் உண்டு. அவர்கள் அனைவரும் மட்டுமல்ல, சீனக் கம்யூனிச அரசும் கூட சீனப் பெருஞ்சுவரை சீனர்களின் பெருமை மிகுந்த வரலாற்றின் அடையாளமாகத் தான் பாதுக்காகிறதே தவிர, தமிழர்களின் அறிவியலில் அடையாளச் சின்னமாகிய தஞ்சைப் பெருவுடையார் கோயிலை இந்த வாய்ச்சவடால் வர்க்கப் போராளி இழிவு படுத்துவது போல், சீனர்கள் எவருமே சீனப்பெருஞ்சுவரை இழிவு படுத்துவதில்லை.
தென்றலின் உளறலைப் பார்ப்போம்:
///மேற்கண்ட கவிதை சீனப்பெருஞ்சுவரை கலாச்சார பெருமையாக பாடவில்லை. கொத்து கொத்தான மக்கள் கொல்லப்பட்டதை நினைவஞ்சலியாக சொல்கிற பொழுது நிலப்புரபுத்துவத்தை கடுமையாக சாடுகிறார். சீனப்பெருஞ்சுவரைக் கட்டிய மன்னர் ஜின்-சி-குவாங்கையையும் ஹாண் வு டீயையும் பாடல்களில் சாடுகிறார். சொர்க்கத்தின் மகன் என்ற சொல்லப்படுகிற செங்கிஸ்கானுக்கு கழுகுகளை மட்டுமே சுடத்தெரியும் என்று மேட்டுக்குடிகளை தோலுரிக்கிறார். நிலப்புரத்துவ காலம் முடிந்துவிட்டது. இன்றைய காலகட்டத்தை நோக்குங்கள் என்று முடிவதாக இருக்கிறது பாடல்.///
இந்தக் கவிதையில் தோழர் தென்றல் உளறுவது போல் நிலப்பிரபுத்துவத்தையும் சாடவில்லை, ஒரு மண்ணாங்கட்டியையும் சாடவில்லை. மாறாக, பரந்து விரிந்த தனது நாட்டின் தென்பகுதி பனிக்கட்டியால் மூடப்பட்டு பல்லாயிரம் மைகளுக்கு நீண்டது எனவும், அதனை அளந்து பார்ப்பது போல் சீனப்பெருஞ்சுவர் வடக்கிலிருந்து தெற்குவரை காணப்படுகிறதென்றும், அங்கிருந்து பார்த்தால், வானம் வரை பனியாக (Snow) வெண்மையைத் தவிர வேறெதுவும் கண்ணுக்குத் தெரியாது எனத் தனது நாட்டையும், மஞ்சள் ஆற்றின் அலைகளையும், மலைகள் எல்லாம் வெள்ளிப்பாம்பு நெளிவது போல் தெரிகிறதென அதன் அழகையும், மெழுகினால் செய்த யானைகள் போல மின்னும் அவரது நாட்டின் வானை முட்டும் மலைகளெல்லாம், உயரத்தில் விண்ணுடன் போட்டி போடுகிறதாம், எனத் தனது தாய்நாட்டை வியந்து, புகழ்வது மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் சளைக்காத எண்ணற்ற மாவீரர்களை (Heroes) கண்டது இந்த நாடு (சீனா). ஆற்றல் மிக்க பேரரசர்களாகிய Chin உம் T’ang உம் கல்வியில் சிறந்த மேதாவிகள் அல்ல (ஆதாவது வீரம் நிறைந்த படிக்காத மேதைகள் என்று புகழ்கிறார் மாவோ). புகழ்பெற்ற அரச குடும்பங்களை நிறுவிய T’ang உம் Sung க்கும் கூட கவிதை என்றால் என்னவென்றே தெரியாது அதாவது அவர்களுக்கும்
படிப்பறிவில்லை (இருந்தாலும் அவர்கள் சீனாவின் வீரர்கள் (Heroes) – “This land so rich in beauty -Has made countless heroes bow in homage”. என்கிறார். உலகிலேயே கொடூர அரசர்களில் ஒருவனாகிய செங்கிஸ் கானையே“Proud Son of heaven “ என்கிறார் மாவோ. அவன் மிக உயரத்தில் பறக்கும் கழுகையே தனது அம்பினால் எய்து வீழ்த்தும் வல்லமையுள்ளவன். அவனுக்கு அது தான் தெரியும் (அதாவது அவன் தனது துறையில் திறமை பெற்றவன்). இன்று . அந்த மாவீரர்கள் எல்லாம் போய்விட்டார்கள் அவர்களின் காலம் முடிந்து விட்டது. அவர்கள் இன்றில்லை. ஆகவே உண்மையான மாவீரர்களை இக்காலத்தில் தேடுவோம். (சொர்க்கத்தின் மகன் என்பது செங்கிஸ்கானை மட்டும் குறிக்காது, நான் கூட ராஜ ராஜ சோழனின் ஆற்றலையும், வீரத்தையும் வியந்து ‘Proud Son of Heaven’ என்று கூறலாம்.)
இந்தக் கவிதையில் தனது நாட்டின் அழகைப் புகழ்ந்து, தனது நாட்டு மாமன்னர்களை வியக்கும் அதே வேளையில் அவர்கள் எல்லாம் இன்றில்லை ஆகவே உண்மையான தலைவர்களை நிகழ்காலத்தில் (எங்கள் மத்தியில்) தேடுவோம் என்கிறார். அதாவது தன்னை உயர்த்துகிறார், கம்யூனிச வழக்கமாகிய தனிமனித துதியையும் தற்புகழ்ச்சியையும் தானே செய்கிறார். இது அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது என்றும் சிலர் வாதாடுவதுண்டு,
என்னைப் பொறுத்தவரையில் இந்தக் கவிதையிலுள்ள நயம் என்னவென்றால், தனது தாய்நாட்டையும், சீன வரலாற்றில் புகழ்பெற்ற நான்கு மாமன்னர்களையும் மட்டுமன்றி மங்கோலிய பேரரசன் செங்கிஸ்கானையும் நினைவு கூர்ந்து அவர்களின் வீரத்தை வியக்கும் மாவோ, தனது தன்னம்பிக்கையையும், ஆளுமையையும் தன்னையும் அவர்களுக்கு ஈடாகக் காட்டும் வகையில் அவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள், ஆகவே மாவீரர்களை, தலைவர்களை, ஹீரோக்களை இக்காலத்தில் எங்கள் மத்தியில் தேடுவோம் என்கிறார். அதாவது சீனாவின் பேரரசர்களை விடத், அதன் ஹீரோக்களை விட தான் ஆற்றல் மிக்கவனாக இருக்க வேண்டுமென மாவோ எண்ணுகிறார்.
இது உண்மையில் தேசிய உணர்வைச் சீனர்களுக்கு ஓட்டுவதற்காக மாவோவால் எழுதப்பட்ட கவிதையேயல்லாமல் தென்றல் உளறுவது போல், தமது முன்னோர்களைச் சாடுவதற்காக எழுதப்பட்டதல்ல. ஜப்பானியர்களுக்கெதிராக சீனர்கள் அனைவரையும் எந்த இன, பிரதேச வேறுபாடுகளுமின்றி ஒன்றிணைக்கத் தான் மாவோ, சீனாவின் நான்கு புகழ்பெற்ற சீனப் பேரரசர்களைக் குறிப்பட்டது மட்டுமன்றி, மங்கோலிய பேரராசன் செங்கிஸ்கானையும் குறிப்பிட்டார். இந்தக் கவிதையின் பொருள் என்னவென்றால் இந்த அழகான எமது தாய்மண்ணை, இந்த மாவீரர்கள் எல்லாம் ஆண்டாலும், நிகழ்காலத்தில் தலைவர்களை எம்மிடையே தேடுவோம், அவர்களின் தலைமையில் சீனர்களே ஒன்றுபடுங்கள் என்பது தான்.
இந்தச் சின்னஞ்சிறு கவிதையின் தாற்பரியத்தையே புரிந்து கொள்ள முடியாத தென்றல் அவர்கள் வர்க்கப் போராளி என்ற போர்வையில் தமிழர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதற்குப் பதிலாக, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம். 🙂
சின்னஞ்சிறு கவிதையின் தாத்பரியத்தை விளக்க வியாசன் மேற்கொண்ட பக்கம் பக்கமான அறிவு நாணயம் அலாதியானது. இதற்கு செங்கிஸ்கானின் கழுகைச் சுடும் ஆற்றலே தேவலை! வேசம் களைந்த பிறகு ஒத்திகை பார்க்கிற அற்ப மனங்கள் அடுத்த முறையாவது கொஞ்ச நேரம் தாக்கு பிடிக்கும் விதத்தில் நாடகம் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
‘ஓடி ஒளியாமல் பதில் சொல்லட்டும்’ என்று சவால் விட்டார் தென்றல். இப்பொழுது பதில் சொல்லத் தெரியாததால், தனது தவறை மறைக்க நாடகம், ஒத்திகை என்று உளறுகிறார். பரவாயில்லை, உங்களின் நிலைமை எனக்குப் புரிகிறது, இனிமேலாவது அவசரத்தில் நிலப்பிரபுத்துவம், மேட்டுக்குடிகள் என்ற சொற்களை எந்த நேரமும், எல்லா இடங்களிலும் பாவிக்க முடியாதென்று உணர்ந்து கொள்வீர்களென நம்புகிறேன். 🙂
இப்படிச் சொன்னால் எப்படி வியாசன்? நேற்றே இதன் முகமூடி கிழிந்து போனாலும் எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறீர்? மூன்று மொழிபெயர்ப்புகள்! திடிரென்று சீன நண்பர்கள்! பாடலுக்கு சொந்தக் கதை வேறு! என்று தலைகீழாக நின்று பார்த்தாலும் இனவாதிகளை மக்கள் முன் தனிமைப்படுத்தி அம்பலப்படுத்திய பாடல் அல்லவா அது! என்னதான் சிரமப்பட்டு ரூம் போட்டு பாடலை மொழிபெயர்த்தாலும் உங்களைப்போன்றவர்களின் வேசம் களையத்தான் செய்யும். வேசத்தை ஒழுங்காக போடவும் வியாசனே! பார்ப்பனர்களுக்கு கைக்கூலி வேலை பார்ப்பது போதாது என்று கோமிங்டாங்கிற்கும் சாங்கே-சேக்கிற்கும் காலை நக்கினால் எப்படி?
கம்யுனிச எதிர் முகமையில் இருக்கிற Robert Bayneனின் மொழிபெயர்ப்பையும் தருகிறேன்! படித்துவிட்டு நாடகம் போட ஆள் பிடிக்கவும். அது வரை எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
“In this north country in the flaming wind
A thousand acres are enclosed in ice,
And ten thousand acres of whirling snow.
Behold both sides of the Great Wall—
There is only a vast confusion left.
On the upper and lower reaches of the Yellow River
Only a great tumbling of waves.
The mountains are dancing silver serpents,
The winter plains are full of scudding elephants.
I desire to compare my height with the skies!
О wait for the pure sky,
Like a red-faced girl clothed in white,
Altogether enchanting.
Such is the charm of these rivers and mountains,
Innumerable heroes bow themselves to the ground.
The Emperors of Ch’in and Han were barely cultured,
The Emperors of Tang and Sung lacked awareness.
For a whole generation Genghis Khan was a favorite of heaven,
But he knew only how to bend the bow at eagles.
All these have passed away.
Today, if we should look for the true heroes,
We shall find them all around us!”
தயவு செய்து இந்தப் கவிதையின் நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என்பதை ஒவ்வொரு வரியாக தமிழில் கூறுங்கள். எனக்கென்னவோ உங்களுக்கு இன்னும் இந்தக் கவிதையின் மொழிபெயர்ப்புகள் தான் வேறுபடுகின்றன ஆனால் பொருள் ஒன்று தான் என்ற உண்மை உங்களுக்குப் புரியவில்லை அல்லது வரட்டுக் கெளரவத்துக்காக புரியாதது போல் நடிக்கிறீர்கள் என்று தான் தெரிகிறது. இந்தக் கவிதையின் எந்த மொழிபெயர்ப்பிலும் அதன் பொருள் மாறவில்லை என்பது தான் எனது கருத்தாகும். உங்களுக்குத் தெரிந்த சீனர்கள் யாராவதிருந்தால் அவர்களிடமாவது போய்ப் பொருளைக் கேளுங்கள். அப்பொழுதாவது பித்தம் தெளியும். 🙂
\\ இந்தக் கவிதையின் எந்த மொழிபெயர்ப்பிலும் அதன் பொருள் மாறவில்லை என்பது தான் எனது கருத்தாகும்.\\
இப்படிச் சொல்லிவிட்டு போவதற்குபதில் பாடல் தெரிந்ததைப்போலவும் மன்னரைப் போற்றுவதைப் போலவும் இட்டுக்கட்டி மொழிபெயர்ப்பது போலவும் பாசாங்கு செய்வது வெட்ககரமானது! சான்றாக கழுகையே சுட்டு வீழ்த்துவானாம் செங்கிஸ்கான் என்று அர்த்தம் தருகிற அளவிற்கு எந்த தற்குறியும் எழுதவில்லை. ஆகையால் உமது பாசாங்கு இங்கு செல்லாது. எல்லா மொழிபெயர்ப்பும் இங்குதான் இருக்கின்றன. யாரும் அழித்துவிட மாட்டார்கள். ஆர்வமுள்ளவர்கள் தேடி பொருள் கொள்ளட்டும். வரலாற்றை அறிந்து கொள்ளட்டும்.
\\ உங்களுக்குத் தெரிந்த சீனர்கள் யாராவதிருந்தால் அவர்களிடமாவது போய்ப் பொருளைக் கேளுங்கள்.\\
கோமிங்டாங்கின் குலக் கொழுந்துகளாக வியாசனே இருக்கிற பொழுது சீனரிடம் போய் கேள் என்ற வார்த்தை ‘நான் தமிழர்’ என்று சொல்கிற நைச்சியத்திற்கு ஒப்பானது. வர்க்கபார்வையின் அடிப்படையில் இராச இராசனைப்போற்றுகிற வியாசனும் பார்ப்பனியத்திற்கு நிகரான கன்பூசியஸ் பாசிசத்தை அரியணையில் ஏற்றிய ஹான் வூ டியை மாவோ போற்றினார் என்று இன்றைய சீனத்தலைமுறைகளும் தற்குறிகளும் பிழைப்புவாதிகளும் வரலாறு தெரியாத அடிமுட்டாள்களும் தான் கூறுவார்கள்.
இராச இராசன் காலத்திலே சதுரி மாணிக்கம் போராடி தன்னைத்தானே சுவற்றில் இருந்து குதித்து மாய்த்துக்கொண்டதற்கு நாங்கள் நாளை வீர மரண நினைவேந்தல் போராட்டம் எடுக்கிற பொழுது சதுரி மாணிக்கம் யாரென்றே தெரியாதா வியாசன்கள் இருப்பார்களேயானால் கோமிங்டாங்கைத் தெரியாத சீனர்களும் இருக்கத்தான் செய்வார்கள்! பாசிச பிற்போக்குத்தனத்தின் பிழைப்புவாத கால கட்டத்தில் அல்லவா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்! அங்கே தமிழனுக்கும் சீனனுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது! ஆகையால் அம்பலப்படுத்தி பிழைப்புவாத பித்தத்தைத் தெளியவைப்போம்.
மாவோவின் கவிதையின் இன்னொரு மொழிபெயர்ப்பு:
“In the first half Mao praised the grandeur beauty of northern China in the winter. The more interesting part is the second half, where Mao listed some of the greatest Emperors in China, include Qin Shihuang, the first Emperor of China; Han Wudi, the great Han emperor who defeated Huns; Tang Taizong(Li Shimin), the second Emperor of Tang Dynasty; Emperor Taizu of Song, the Emperor who started Song Dynasty; and Genghis Khan. Here Mao hints he ASPIRES to be even greater than these emperors.”
Snow On the Pattern of Qinyuanchun
February,1936
Look at the landscape of northern China:
The vast frozen land is covered with ice.
And the snow flits far-flung in the sky.
On both sides of the Great Wall.
The empty wilderness survives;
From upriver to downstream,
The roaring currents disappear.
The mountains dance like silver snake,
The highlands slither like huge wax elephants.
Vying with the sky for height.
When comes the sunny day,
The land is dressed up with bright sun and
clear white snow,
What a gorgeous and attractive scene it is!
Such a beautiful land
Has infatuated countless heroes.
However
Pioneer emperors Qin Shihuang and Han Wudi
Were men lack of poem’s grace talent;
Great emperors Tang Taizong and Song Taizu
Were short of spirit and strength.
That proud son of Heaven,
Genghis Khan
Only enjoys shooting the big Hawk with
his bow.
Alas,They are now gone as history:
The real great hero,
Is coming up now.
The grandeur that is the northern country-an expanse
of the good earth ice-bound,
snow-covered for thousands of miles around.
Surveying the Great Wall, to its north and south,
nothing but whiteness meets the eye.
The torrents of the mighty Huang Ho into
insignificance pale.
Silver snakes dance atop the mountains,
waxen elephants roam the plains,
as if to wrest heaven’s domain.
Let us wait for the sky to clear when, clothed in
radiant colours,
the land becomes more magnificently dear.
For such an enchanting empire, little wonder
countless heroes matched wits with one another.
Alas! The ambitious emperors of Ch’in and Han could
scarcely boast of literary lore.
E’en the founders of the great houses T’ang and Sung
became nought before the sages of yore.
As to the redoubtable Genghis Khan,
pampered child of fortune he was,
excelled only on the field of battle.
Gone are they all.
For leaders truly worthy of homage,
must yet be sought among men of our own age.
முருகன் பற்றிய வக்கிர புராண திருபுகளை மறுதலிக்கும் சங்க இலக்கிய தடயங்கள் : Part II
[அறுமீன்-முருகன் தொடர்புகள் ]
நேரடியாகவே விடயத்துக்கு வருவோம். அறுமீன்-முருகன்-கார்திகை விளக்கு ஒளி திருவிழா பற்றிய தொடர்புகள் என்ன என்பதை சங்க இலக்கிய சான்றுகள் மூலம் காண்போம்.
கார்த்திகை விழாவும் அறுமீன்களும் வேலவனும் :
கார்த்திகை விழா பற்றி முனைவர் சி. சேதுராமன் கூறும் கருத்துக்களை காண்போம். சங்க காலத் தமிழர்கள் கொண்டாடிய சமய விழாக்களில் குறிப்பிடத்தகுந்தது கார்த்திகைத் திருவிழாவாகும். கார்த்திகை விண்மீனை, ‘அறுமீன்’ என்று நற்றிணைச் செய்யுள் ஒன்று குறிக்கின்றது. அஃது அறஞ்செய்யத்தக்க சிறப்புடையது. எனவே கார்த்திகைத் திங்களை ‘‘அறஞ்செய் திங்கள்’’ என்றும் நற்றிணை குறிப்பிடுகின்றது (நற்றிணை, பா.எ. , 185). கார்த்திகை விழாக்களின் போது வீடுகளும், தெருக்களும் ஒளிவிளக்குகளால் அழகுறுத்தப் பெற்றமையை,
‘‘மழைக்கால் நீங்கிய மாசறு விசும்பின்
குறுமுயல் மறுநிறம் கிளர் மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர’’ (அகம்., பா.எ., 141).
என்ற அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகின்றது.
இலவ மரத்தில் நெருக்கமாக மலர்ந்துள்ள பூக்கள் பெரு விழாவில் ஏற்றப்பட்ட விளக்குப் போல் தோன்றியதாக,
‘‘அருவி யான்ற உயர்சிமை மருங்கில்
பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
இலையில்மலர்ந்த இலவமொடு
நிலையுயர் பிறங்கல்மலையிறந்தோரே’’ (அகம்.,பா.எ., 185)
என்ற செய்யுள் பேசுகின்றது.
விழாக்களை வளர்பிறை மற்றும் மதி நிறைந்த நாட்களில் தொடங்கியதை அகநானூறு கூறகிறது (அகம்., பா.எ. , 141.) விழாவில் காணப்படும் செயல்முறைகளை ஆற்றுவோரை விழாவாற்றுவோர்; என்பர். வெறியாட்டில் வேலன் விழாவாற்றுவோனாகச் சுட்டப்படுகிறான். சங்ககாலத்தில் குயவர்கள் விழாக்களில் முக்கியப் பங்கு வகித்தனர்; என்பதை,
‘‘மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி
புலிக்களார் கைப்பார் முது குயவன்
இடுபலி நுவலும் அகன்றலைமன்றத்து
விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்’’ (நற்றிணை, பா.எ., 293)
என்று தெரிவிக்கிறது. இக்குயவர்கள் இன்றும் சிறுகோயில்களில் பூசாரிகளாகச் செயல்படும் நிலை உள்ளது. இதனைப் பண்டைய தமிழ் மரபின் தாக்கம் எனக் கருதலாம். விழாவை அறிவிப்பவராக குயவர் இருந்ததையும் நற்றிணை உணர்த்துகிறது.
நன்றி : முனைவர் சி. சேதுராமன்
[
[இப்படி பட்ட திராவிட-தமிழர் தொன்மமான மரபுகளுடன் ஆரிய-பார்பன கசட்டு திரிபுகளை பார்பன வேதத்தின் விரிவாக்கமான பார்பன-சமஸ்கிருத புராணங்கள் மூலம் திணித்த பெருமை அம்பியையும் அவரின் ஆரிய பார்பன மூதைகளையே சாரும்.
]
//இப்படி பட்ட திராவிட-தமிழர் தொன்மமான மரபுகளுடன் ஆரிய-பார்பன கசட்டு திரிபுகளை பார்பன வேதத்தின் விரிவாக்கமான பார்பன-சமஸ்கிருத புராணங்கள் மூலம் திணித்த பெருமை அம்பியையும் அவரின் ஆரிய பார்பன மூதைகளையே சாரும். //
தென்னை மரத்தைப் பற்றி விளக்கம் கேட்டால் மாட்டைப் பற்றி விளக்கிவிட்டு அதை தென்னை மரத்தில் கட்டலாம் என்கிறீர்..
கார்த்திகை விழா இருக்கிறது, கார்த்திகை மீன்கள் இருக்கின்றன, முருகன் இருக்கிறான்.. சரி.. கார்த்திகைக்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கு பதில் எங்கே..? மெட்ராசில 10 வீடு இருக்கு, ஊட்டியில 4 எஸ்டேட் இருக்கு எல்லாம் சரிதான் இருக்கட்டும் உமக்கு என்ன இருக்கிறது என்பதுதானே கேள்வி.. தங்களது மங்குணி ஆட்டத்தை கண்டு ரசிக்கும் ஆர்வம் எனக்கு போய்விட்டது.. சரியான பதிலுடன் வரவும்..
திராவிட-தமிழர்-முருகன் பற்றிய சிந்துவெளி அறுமீன் முத்திரை தொன்மத்தையும், சங்க இலக்கிய அறுமீன் குறிப்புகளையும் அம்பி அவர்கள் மறுக்காத வரை ,ஆதாரபூர்வமாக மறுக்க இயலாத வரை எமக்கு அவர் பேசும் தென்னை .மாடு ,மெட்ராஸ் வீடு பேன்ற விடையங்கள் பற்றி ஏதும் ஆர்வம் இல்லை !
முருகன் பற்றிய வக்கிர புராண திருபுகளை மறுதலிக்கும் கடலில் மூழ்கிய பூம்புகார் தொல்லியல் தடயங்கள் : Part I
————————————————————————————————–
அம்பி :முருகு பற்றிய தொன்மங்களுக்கான ஆதாரம் இந்தியாவில் தமிழகத்திலும், சிந்து சமவெளியிலுமே கிடைப்பதால் முருகும், தமிழரும் தமிழகத்திலிருந்தே சிந்து சமவெளி சென்றிருக்கமுடியும் என்றும் கூறலாமே.. தங்கள் கருத்து என்னவோ..?
பதில் :மிக சிறப்பாக விவாதத்தை செழுமை படுத்த கூடிய கேள்வி அம்பியிடம் இருந்து வந்து உள்ளது. மிக்க நன்றி அம்பி. திராவிட-தமிழ் மக்கள் தெற்கில்[தமிழகம்] இருந்து வடமேற்கு[சிந்துவெளி] சென்றார்களா அல்லது வடமேற்கில் இருந்து தெற்கு வந்தார்களா என்ற கேள்வியையும் இவ் விவாதத்தில் ஆய்வுக்கு உட்படுத்துவோம். அண்மையில் [2000]பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு வியப்பு தரும் செய்திகளை வெளியிட்டார். அது யாது எனில் :
“நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கவேண்டும்” —கிரஹாம் ஹான்காக்
இவரின் ஆய்வு முடிவுகள் மூலம் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ”மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் முதன்முதலாக நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் அறிவு பூர்வமாக உணரமுடிகின்றது.கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இதன் மூலம் பல தடையங்கள் கிடைத்தாலும் அவாய்வுகளை தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது. இந்நிலையில் கிரஹாம் ஹான்காக் கடந்த 2000ஆம் ஆண்டு “சானல் 4” ,”லர்னிங் சானல்” ஆகிய இரு தொலைக்காட்சி நிறுவனங்களின் நிதிஉதவி மூலம் மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ”சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார். இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ”ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.
இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று கணிக்கும் கிரஹாம் ஹான்காக் தன் ஆய்வு முடிவுவை கிழ் காண்டவாறு தீர்க்கமாக வெளியிடுகின்றார்.
” பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர்”—-கிரஹாம் ஹான்காக்
[காலத்தை கருத்தில் கொண்டாலும் ஐராவதம் மகாதேவன் கார்பன் டேடிங் முறைபடி நிறுவும் 7000 ஆண்டு மூத்த சிந்துவெளியைவிட ,11 ஆயிரம் ஆண்டுகள் மூத்த பூம்புகார் நகர நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பது நமக்கு புலனாகின்றது.]
பூம்புகார் அகழ்வாய்வு தரும் பிற செய்திகள்:
—————————————————————————
1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர். 2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. 5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.
10. கி.மு. 17000 – 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.14.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. 15. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை. 16. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை. 17. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை. 18. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை. 19. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
20. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.
முரளி மனோகர் ஜோஷியின் கயமை தனம் :
—————————————————————————-
இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).
இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார்.
நன்றி :
(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)
Sir, Please check if this computer belongs to our ancestors
http://www.engadget.com/2014/12/01/antikythera-mechanism-is-even-older/
You are rewriting the history of human kind with conspiracy theories..
Raman, Your web link content is not relevant to my feedback 77’s Context of Pumbukar archeological servery and its findings . Let you discuss and debt my feedback 77’s content pls. Any way Thanks for your new info regarding Antikythera Mechanism.
What else you can expect from Raman?When you are not able to reply for the enormous facts in support of the theory that Tamils had a glorious past,you can choose this dubious way of calling all those facts as “conspiracy theory”No body can beat you people in creating conspiracy theories.Nogatha nombu iruppom yedhayum aashamaaga padikkamaattom yaarum appadi paditthu pinnoottam ittaal “conspiracy theory”yendru sollivittu ESCAPE aagividuvom.meendum aduttha katturayil idhe pokkai thodaruvom
@Sooriyan and @தமிழ்-தாகம்
They are not facts a mere hypothesis. Nobody can argue over facts.
These are from a pseudo archaeologist who makes interesting novel and sell it.
http://en.wikipedia.org/wiki/Graham_Hancock
He has written book about ancient people/aliens sending message from Mars
http://www.amazon.com/The-Mars-Mystery-Connection-Between-ebook/product-reviews/B003FCVE6Y/ref=cm_cr_dp_qt_hist_one?ie=UTF8&filterBy=addOneStar&showViewpoints=0
Where there is mystery, this guy will be there milking money.
If we can spend 450 crores just for the recognition that Tholkappiam was 3000 year old, Tamil Nadu can afford to spend money for excavation. Dravidian parties are in power, and can prove our 10000 year old history
Reality is Tamil Brahmi itself was not proved to be invented by Tamils.There are hypothesis but no evidence.
இராமன்,
இது வழக்கமான இராமனின் ஆறிய காப்பி தான். இராமனின் காபி ஆறியது என்பற்காக ,பழைய விச நஞ்சு ,அவதுரு கருத்து ,என்பற்க்காக நாமும் கண்டும் காணாமல் செல்லகூடாது அல்லவா ? அதனால் இவர் கருத்துக்களை பார்ப்போம் :
என்ன சொல்ல வருகின்றார் என்பதே அவருக்கே தெரியாமல் உளறுகின்றார் இராமன். They are not facts a mere hypothesis. Nobody can argue over facts.என்பதன் பொருள் என்ன ? அவைகள் உண்மை[facts] அல்ல கருதுகோள் மட்டுமே ! எவருமே உண்மைகள் மீது விவாதிக்க முடியாது ![example “nobody was at home”] ஏன் இந்த வெற்று உளறல் இராமன் ?//They are not facts a mere hypothesis. Nobody can argue over facts.
உண்மைகளை ஆரிய-பார்பான் ஏற்க மாட்டான் என்பற்கு உரிய அழகிய சான்று தான் பூம்புகார் பற்றிய கிரஹாம் ஹான்காக் அவர்களின் கண்டுபிடிப்புகளை விட்டுவிட்டு அவரின் மேல் தனிப்பட்ட தாக்குதல் செய்யும் இராமனின் அறிவு அற்ற அராசக செயல். கிரஹாம் ஹான்காக் அவர்களின் கண்டுபிடிப்புகளை மறுதலிக்க இராமனிடம் என்ன ஆய்வு கருத்துக்கள் இருகின்றது என்று அறிய ஆவலுடன் இருக்கின்றேன்.
//These are from a pseudo archaeologist who makes interesting novel and sell it. Where there is mystery, this guy will be there milking money.
இந்திய தொல்லியலில் துறையில் கண்டுபிடிக்க பட்ட கல்வெட்டுகள் மூலம் தமிழ் பிம்மி எழுத்துக்கள் தான் மிகவும் தொன்மையானது என்பது அறுதியிட்டு நிருபிக்க பட்டு உள்ளது என்பதை பாப்போம் :
கிமு 3 நூற்றாண்டு ‘சமவயங்ககத்தா’ என்ற பிராகிருதத்தில் எழுதப்பட்ட சமண நூல் 18 வகை எழுத்துக்களைக் குறிப்பிடுகிறது. அவற்றில் ஒன்று தமிழி. தமிழி என்ற தமிழ் எழுத்து வடிவத்தை தமிழோடு பிராமி என்று வடமொழியை ஒட்டுசேர்த்தவன் வேண்டுமென்றே ஓர் உள்நோக்கத்துடன் ஒட்டு சேர்த்திருக்கிறான்! அந்த உள்நோக்கம் தமிழின் தொன்மையைக் குறைக்க வேண்டும் – மாறாக வடமொழிக்கு முதன்மையை ஏற்ற வேண்டும் என்பதுதான். இது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
இரண்டு விடயங்கள் குறித்து அலசவேண்டும்.
1. சமஸ்க்ருததிற்கு எழுத்து வடிவம் கொடுத்தது, முதலாம் ருத்ரதாமன் என்ற சகா வம்சத்து மன்னன் ஆவான். இவன் கி.பி.150 ஆண்டைச் சேர்ந்தவன். சகா வம்சத்தினர், ஈரான் நாட்டைச் சேர்ந்த சைத்திய பழங்குடி இனத்தை சார்ந்தவர் ஆவர். வட பிரம்மி எழுத்துக்களைக் கொண்டு சம்ச்க்ருததிற்கு எழுத்துக்களை உருவாக்கினான். இந்த எழுத்துக்களுக்கு 500 – 600 ஆணடுகளுக்கு முன்னமே தமிழில் பிரம்மி எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன
2. அசோகன் தென்னகம் நோக்கி வந்தபோது ஆந்த்ராவில் பட்டிப்ரோலு என்ற இடத்தில, ப்ராக்ருத மொழியில் எழுதப்பட்ட எழுத்துக்கள் பிரம்மி என அழைக்கப்பட்டது. இந்த எழுத்து வடிவத்தில் தமிழ் மொழிக்கென, உள்ள சிறப்பு எழுத்துக்களான ழ ள, ற, ண போன்ற எழுத்துக்களும் அடக்கம். இன்று வரை ஆய்வாளர்கள், அசோகனே பிரம்மி எழுத்துக்களின் தந்தை என்று நம்பி வந்தனர் மேலும், தமிழ் நாட்டில் இது காறும், கிடைத்துள்ள, ஓட்டுசில்லுகள் நீங்கலாக பல சங்க காலக் கல்வெட்டுகள் சமண மதம் சார்ந்தே கிடைத்துள்ளன அதனால் இந்த எழுத்துக்களை தமிழ் பிரம்மி என அழைத்தனர். உண்மையில் இந்த எழுத்துக்கள் தமிழி என்றே ஆதித் தமிழர் அழைத்தனர். இது பிரம்மி வந்த வரலாறு.
அசோகனின் காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு. தமிழில் கிடைத்த மிகவும் பழமையான கல்வெட்டாக. தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியனின், சமணர்க்கு அவன் அளித்த சமணப் பாழிகளை குறிக்கும் கல்வெட்டை, கி.மு இரண்டாம் நூற்றாண்டு என வகைப்படுத்தி உள்ளனர். இந்த நிலைப்பாட்டால், பல ஆண்டுகளாக, தமிழி எழுத்துக்கள், அசோகனின் வட பிரம்மி எழுக்களில் இருந்து சங்கமம் ஆனவை என நம்பப்பட்டது. எனினும் அனமைக்காலமாக, ஈழத்தில் அனுராதபுரம், தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் மற்றும் பொருந்தல் போன்ற இடங்களில் கிடைத்த ஓட்டுசில்லுகளில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் குறைந்த பட்சம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறுதி இடப்பட்டுள்ளது. அதிலும், பொருந்தலில் (பழனிக்கு அருகில் உள்ளது – மயிலுக்குப் போர்வை அளித்த பேகன் ஆண்ட பூமி) கிடைத்துள்ள தாழியில் உள்ள அரிசிகள் கார்பன் அகவைக்கு உட்படுத்தப்பட்டு கி.மு ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி : திணையகம்
//Reality is Tamil Brahmi itself was not proved to be invented by Tamils.There are hypothesis but no evidence.
\\Reality is Tamil Brahmi itself was not proved to be invented by Tamils.There are hypothesis but no evidence.\\
இராமன் தமிழ் பிராமி என்பதன் அரசியலே முதலில் தெரியாததுபோல் நடிக்கிறார். தமிழுக்கும் பிராமிக்கும் சம்பந்தமே கிடையாது. சமணர்கள் பட்டியலிட்ட வழக்காற்று மொழிகளில் தமிழி என்று தான் உள்ளது. பொறுக்கித் தின்னும் கூட்டம் பிராமி என்று சேர்ந்து சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் உருவானதாக காட்டுவதற்காகத்தான் பிராமி என்பதே. இது தவிர பிராகிருதம் என்ற வழக்காற்று மொழிகள் புத்த மதத்தவர்களாலும் சமணர்களாலும் பயன்படுத்தப்பட்டுவந்தன. இதை வைத்து எழுதப்பட்ட கல்வெட்டுகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் கூட ஒரு தொடர்பும் கிடையாது. ஆகவே பார்ப்பன பாசத்தை வைத்து இராமனால் எதையும் திரிக்க இயலாது. வேண்டுமானால் வட்ட மேடை செய்யலாம்.
இராமன், இங்கு எது சதி [conspiracy] என்றால் திரு கிரஹாம் ஹான்காக் அவர்கள் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு செய்து வெளியிட்ட பும்புகார் ஆய்வு முடிவுகளை பார்பனிய-ஆரிய சார்பு இந்திய அரசாங்கம் என்று வரை வெளியிடாமல்,அங்கிகாரம் கொடுக்காமல் ,அடிகாரபூர்வமாக வெளியிடாமல் மறைத்து வைத்து உள்ள செயல் தான். அவரின் ஆய்வு முடிவுகள் திராவிட-தமிழ் இனத்தின் வரலாற்று காலத்தை 10,000 ஆண்டுகளுக்கு மேல் உயர்திவிடும் அதனால் ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தேரியவ்ர்கள் என்ற உண்மையை அதிகாரபூர்வமாக ஏற்பதாகிவிடும் என்ற காரனத்தால் தான் பார்பனிய-ஆரிய சார்பு இந்திய அரசாங்கம் அதனை வெளியிடாமல் இருக்கின்றது.
குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை [உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதி] அதன் அகவை கி.மு. 7500 என்பதால் அது சிந்துவெளி நாகரிகத்தின் வரலாற்று காலத்தை மேலும் அதிகமாக்குவதால் அதனை பற்றிய உண்மை விவரத்தை வெளியிட தயங்கியது தானே பார்பனிய-ஆரிய சார்பு இந்திய அரசாங்கம்?இருதியில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். கயமை தனமும் மற்றும் சதி யாருடையது ?
//You are rewriting the history of human kind with conspiracy theories..//
மாற்றம் : இராமன் பார்பனிய-ஆரிய சார்பு இந்திய அரசாங்கம் என்பதை பார்பனிய-ஆரிய சார்பு இந்திய அரசு என்று மாற்றி படிக்கவும்
இராமன்,
பார்ப்பனர்களை போல தமிழிசையைக் களவாடி கர்நாடக இசையென்று பீத்திகொள்ள வேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கு வரவில்லை. தமிழனுக்கென்று ஒரு வரலாறு உள்ளது. நிலையாக வாழ்ந்த ஒவ்வொரு சமூகத்திலும் ஏதாவது அறிவியல் ரீதியிலான வளர்ச்சி நடந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. நாடோடிகளான ஆரியர்களே வேதத்துல அது இருக்கு இது இருக்கு என்று பினாத்திக் கொண்டிருக்க நிலையான சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் சமூகம் அறிவியல் ரீதியில் அன்றைய காலகட்டத்திற்கு தேவையான அறிவியல் வளர்ச்சியுடன் இருந்தது என்று கூறினால் உமக்கு என்ன நோவுகிறது. அதை மறுப்பதென்றால் நேர்மையாக தரவுகளை வைத்து மறுக்க வேண்டும். இங்கே நண்பர் தமிழ் தாகம் எடுத்தாண்டிருக்கும் கருத்துகளுக்கும் விளக்கம் சொல்ல துப்பில்லாமல் கிறுக்குத் தனமாக எதையாவது போட்டு உளறிக் கொண்டிருப்பதே உமக்கு வேலையை பொய் விட்டது.
@Red, “Dont ask questions accept as is.” is sure a right way for enlightenment
Some entertainment , enjoy!
common Tamil wisdon says “வெள்ளையா இருகிறவன் பொய் சொல்ல மாட்டான் 🙂 ”
//பார்ப்பனர்களை போல தமிழிசையைக் களவாடி கர்நாடக இசையென்று//
One cannot steal art. Period
அம்பி ,
பூம்புகார் அகழ்வாய்வு தரும் பிற செய்திகலுக்கு பின்பும் கூற முடியுமா உம்மால் “முருகு பற்றிய தொன்மங்களுக்கான ஆதாரம் இந்தியாவில் தமிழகத்திலும், சிந்து சமவெளியிலுமே கிடைப்பதால் முருகும், தமிழரும் தமிழகத்திலிருந்தே சிந்து சமவெளி சென்றிருக்கமுடியும் என்றும் கூறலாமே என்று” ?
இரு மாபெரும் நகரங்கள் சிந்து சமவெளி மற்றும் பூம்புகார் ஆகியவை முறையே 7 ஆயிரம் ,மற்றும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலைபெற்று இருந்து இருக்கும் போது அவை இரண்டுமே திராவிட-தமிழ் மரபு கூறுகளை காட்சி படுத்தும் போது ,காலத்தில் முந்தையது என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் முருகு பற்றிய தொன்மங்கள் பூம்புகாரில் இருந்து சிந்து சமவெளிக்கு சென்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவா ? 2000கிமி தொலைவிற்கும் அதிக தொலைவில் இருந்த இரு நகரங்கலுமே திராவிட-தமிழ் மரபு கூறுகளை காட்சி படுத்தும் செய்தி எதை உள்ளார்ந்து சொல்கின்றது என்றால் ……
“இந்த இரு நகரங்களையும்[சிந்து சமவெளி மற்றும் பூம்புகார்] வட ,தென் திராவிட-தமிழ் இனத்தின் நில எல்லைகளாக கொண்டு பழமையான நில அளவில் மிக பரந்து விரீந்த சீன நாகரிகத்தை போன்ற ஒரு நாகரிகமாகவே ,இனமாகவே திராவிட-தமிழ் இனம் இருந்து உள்ளது என்பது புலனாகின்றது.”
அம்பி மேலும் விவாதிப்போம் …..
குறிபபாக அம்பிககு ,
முருகன் பற்றிய வக்கிர புராண திருபுகளை மறுதலிக்கும் கடலில் மூழ்கிய பூம்புகார் தொல்லியல் தடயங்கள் : Part II
————————————————————————————————–
முந்தைய பின்னுட்ட பதிவில் 78ல் …
“இந்த இரு நகரங்களையும்[சிந்து சமவெளி மற்றும் பூம்புகார்] வட ,தென் திராவிட-தமிழ் இனத்தின் நில எல்லைகளாக கொண்டு பழமையான நில அளவில் மிக பரந்து விரீந்த சீன நாகரிகத்தை போன்ற ஒரு நாகரிகமாகவே ,இனமாகவே திராவிட-தமிழ் இனம் இருந்து உள்ளது என்பது புலனாகின்றது.”
என்று தொல்லியல் ஆய்வுகள் அடிப்படையில் கூறினேன் அல்லவா ? அதை பற்றி விரிவாக பாப்போம். திராவிட-தமிழ் இனத்தின் சிந்து சமவெளி மற்றும் பூம்புகார் நகரங்களுக்கு இடைபட்ட நிலப்பரப்பில் திராவிட-தமிழ் இன மக்கள் வாழ்ந்தார்கள் ,இன்னும் வாழ்கின்றனர் என்பதர்க்கான தடையங்களை ஆய்வு செய்வோம்.
திராவிடமொழிகள் :
கிமு 1500 அளவில், ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், இந்தியா முழுவதும் திராவிட மொழிகளே வழங்கி வந்தது என்பது பல ஆய்வாளர்களது கருத்து[Trask, Robert Lawrence (2000). The Dictionary of Historical and Comparative Linguis]. திராவிட மொழிக் குடும்பம் (dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்த கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலையெழுதிய கால்டுவெல் அடிகளார், 1856 இல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த, வேறு சில மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் என்று பெயரிட்டார். பின்னர் வந்த ஆய்வாளர்கள், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட இந்தியா, பாகித்தானிலுள்ள பலூச்சித்தான், நேபாளம் ஆகிய இடங்களில் வழங்கிவருவதை எடுத்துக் காட்டினர். திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:
தென் திராவிடம்
தென்-நடுத் திராவிடம்
நடுத் திராவிடம்
வட திராவிடம்
வகைப்படுத்தப்படாதவை
என்பனவாகும்.
இவற்றுள் தென் திராவிடப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் திராவிடப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வட திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன.
இவற்றை ஆய்வுகள் மூலம் நிறுவி இருந்தாலும் அதன் மூலம் திராவிட இன மக்கள் தான் இந்தியாவின் பூர்வகுடிகள் என்பது புலன் ஆனாலும் மேலும் அதற்கான ஆய்வு சான்றுகளை தருவதற்கு நான் கடமைபட்டு உள்ளேன்.
1. பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்கள் தம் ஆய்வில் ஒரிசாவில் வாழும் பழங்குடி மக்கள் சிந்துவெளி எழுத்துகளை இன்னும் தன் மரபின் பொக்கிசமாக பாதுகாக்கின்றனர் என்று ஆய்வுகள் மூலம் கண்டுஉணர்ந்த விடயம் . மேலும் சிந்துவெளி எழுத்துகளையும் , ஒரிசாவில் வாழும் பழங்குடி மக்கள் எழுத்துகளையும் ஒப்பிட்டு படித்து காட்டிய நிகழ்வுகள்.
2. சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை. சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.
3.தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.
4.“பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கின்றன.
5.வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.
[ இத்தகைய தொல்லியல் ,மொழியியல் ,சங்க இலக்கிய தடையங்கள் அனைத்துமே திராவிட-தமிழ் இனத்தின் நில எல்லைகளாக வடக்கே இமையத்தையும்,வடமேற்கே சிந்துவெளியையும் தெற்கே பூம்புகார் நகரத்தையும் தாண்டி அழீந்து விட்ட குமரிக்கண்டம் வரையும் ,கிழக்கே வங்க கடலும் , வடகிழக்கே மேற்கு வங்கமும் இருக்க முருகனை பற்றிய தொல்லியல் தடையங்கள் இன் நில எல்லைகளுக்குள் எங்கு வேண்டுமானாலும் எதிர் காலத்தில் கிடைக்க சாத்தியம் உண்டு அல்லவா ? (அதனால் தான் சொல்கின்றேன் முருகன் சிந்துவெளியில் இருந்து இன்றைய தமிழ் நாட்டுக்கோ அல்லது தமிழ் நாட்டில் இருந்து சிந்துவெளிக்கோ செல்லவில்லை என்று )சிந்து சமவெளியை உள்ளடங்கிய தொன்ம இந்தியாவின் மீது மிருக தோலும் ,மரவுரியும் தரித்த காட்டுமிராண்டி ஆரியர்கள்-பார்பனர்கள் செய்த படைஎடுப்புகளையும் ,அவர்கள் திராவிட மரபுகளை உட்கொண்டு தமதாக்கிக்கொண்ட விடயத்தையும் அடுத்த பின்னுட்டத்தில் பாப்போம் ! ]
நன்றி :
ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு ஆர்.பாலகிருஷ்ணன்
பேராசிரியர் இரா. மதிவாணன்
// எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம். //
கார்த்திகை மீன்களுக்கும், முருகனுக்கும் உள்ள தொடர்பு, அத்தகைய தொன்மத்திலிருந்து நக்கீரர், கடுவன் இளவெயினனாரால் பாடப்பட்டிருக்கலாம் அல்லவா..
// தொன்ம இந்தியாவின் மீது மிருக தோலும் ,மரவுரியும் தரித்த காட்டுமிராண்டி ஆரியர்கள்-பார்பனர்கள் செய்த படைஎடுப்புகளையும் ,அவர்கள் திராவிட மரபுகளை உட்கொண்டு தமதாக்கிக்கொண்ட விடயத்தையும் அடுத்த பின்னுட்டத்தில் பாப்போம் ! //
வடமேற்கு இந்தியா வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே சமூக, கலாச்சார, வணிக, அரசியல் ரீதியாக என பல வகைகளில் மத்திய ஆசியாவுடனும், பாரசீக அரபு யவன நாகரிகங்களுடனும் தொடர்பில் இருக்கிறது.. ஆகையால் அப்பகுதியில் கிரேக்க, சுமேரிய, பாரசீக மற்றும் பிற கலாச்சாரங்களின் தாக்கம் தவிர்க்க முடியாதது.. திராவிட மொழிகளுடன் தொடர்பில்லாத, பாலி,பிராகிருத,சமஸ்கிருத மொழிகள் தோற்றமும் இதில் சாத்தியமே.. இந்த கலாச்சாரக் குழம்பில் பார்ப்பனர்களை மட்டும் எப்படி குறி வைக்கிறீர்கள்.. மரவுரி தரித்த காட்டுமிராண்டிகள் என்ற அடைமொழி வேறு..
அடுத்து வரும் கேள்வி, பாலி-பிராகிருத-சமஸ்கிருத மொழிகளுக்கு முந்தைய தொன்ம இந்தியா முழுதும் பரவியிருந்தது தமிழா அல்லது பல திராவிட மொழிகளா..?
அம்பி,
நன்றி அம்பி ! விவாதத்தை முன்னோக்கி எடுத்து செல்கின்றிர்கள் ! வாழ்த்துகள் அம்பி !
அறுமீன் என்ற சங்க குறிப்புகள் தமிழர்-முருகன் பற்றிய சிந்துவெளி முத்திரை தொன்மத்தையும் ,”அறுவர் பயத்த ” என்ற சங்க குறிப்புகள் பார்பன-புராண திரிபுகளையும் குறிக்கின்றன அம்பி. மிக்க எச்சரிக்கையுடன் புராணங்களை தமிழர் தொன்மங்களில் இருந்து பிரிக்க வேண்டியது அவசியம் ஆகிறது அல்லவா ? இப்போது கூறுங்கள் :
நக்கீரர், கடுவன் இளவெயினனாரால் பாடப்பட்டிருக்கும் முருகனை பற்றிய பாடல்களில் முருகனை பற்றிய எத்தகைய குறிப்புகள் உள்ளது என்று ? தமிழர்-முருகன் பற்றிய சிந்துவெளி முத்திரை அறுமீன் குறிப்பு அல்லது அறுவர் பயத்த போன்ற புராண குறிப்பு ?
//கார்த்திகை மீன்களுக்கும், முருகனுக்கும் உள்ள தொடர்பு, அத்தகைய தொன்மத்திலிருந்து நக்கீரர், கடுவன் இளவெயினனாரால் பாடப்பட்டிருக்கலாம் அல்லவா.. //
இந்த பின்னுட்டங்கள் நீண்டு இருந்தாலும் அதை முழுவதும் படிக்கின்றிர்கள் என்பதை உணரமுடிகின்றது.நடு இரவு 2,3 மணிக்கு எல்லாம் பின்னுடம் போடுவதை விட்டு விட்டு நன்கு தூங்கி என்று போலவே காலையில் பின்னுட்டம் இடுங்கள் அம்பி ! தூக்கம் உடல் நலத்துக்கு மிக்க அவசியம் அல்லவா ?
தென்றல் ,வியாசன் ,Red,raman,and others
இன்று சோசியலிச சீனாவின் தந்தை மாசோதுங் அவர்கள் மேற்கித்திய முதலாளித்துவ நாடுகளுக்கு மட்டும் எதிரி அல்ல .அவர் எந்த நாட்டுக்காக போராடினாரோ அன் நாட்டின் சோசியலிச பெயரளுவுக்கு வைத்துக்கொண்டு முதலாளித்துவத்தை நடைமுறை படுத்தும் இன்றைய சின தலைமுறைக்கும் அவர் எதிரி தான். இத்தகைய சூழலில் நாம் பார்த்தால் அவர் எழுதிய அக்கவிதை [ஜப்பானிய போரின் போது சின தேசிய உணர்வை தூண்ட ,தேச பக்தியை தூண்ட அவர் எழுதிய கவிதை ] இன்றைய சின தலைமுறையால் ,அரசால் அல்லது மேற்கித்திய முதலாளித்துவ நாடுகளின் சோசிலிச எதிர்ப்பின் காரணமாக அறிவுசிவிகலால் அல்லது மொழிபெயர்ப்பில் சிதைத்து இருக்க பட்டு இருக்கலாம். எனவே அக் கவிதையின் சின மூலம் கிடைக்கும் என்றால் வினவில் வெளியிடுங்கள். நாம் என்றைய நவின மொழிபெயர்ப்பு வசதிகளை கொண்டு அக்கவிதையை வார்த்தை வார்த்தையாக ஆயலாம்.
https://translate.google.co.in/
என்ற நேரலை மென்பொருள் [online s/w ] நமக்கு வார்த்தை வார்த்தையாக மொழிபெயர்க்க பெருதவி செய்யும்.
நன்றி
[pls send that poem in chines language to vinavu feedback]
தமிழ்-தாகம்,
வியாசன்களுக்கு கம்யூனிஸ்ட்டுகளின் உரைநடையே புரியாதபோது கவிதை புரியாதது ஒன்றும் ஆச்சரியமில்லை.
ஆனால் உங்களுக்கும் புரியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
Univerbuddy,
நடுவு நிலைமை
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
பகைவர், அயலார், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.
தனக்குத் தெரியாத விடயம் ஒன்றுமேயில்லை என்ற எண்ணத்திலோ என்னவோ, கேட்ட, கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், சம்பந்தமில்லாதவற்றை எல்லாம் எழுதி, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று முட்டாள்தனமாக உளறும் தோழர் தென்றலுடனும் அவரது வாலாயங்களுடனும், மாவோவின் கவிதையின் தாற்பரியத்தை தொடர்ந்து விவாதிப்பது, மாவோவை மட்டுமன்றி, அவர் மீது இன்றும் பெருமதிப்புக் கொண்டுள்ள கோடிக்காணக்கான சீனர்களையும் (எனது நண்பர்கள் சிலரையும் கூட) அவமதிப்பதாகும்.
தென்றலின் உளறலைத் தாங்க முடியாமல் கம்யூனிச சீனாவின் கீழ், அதாவது மாவோயிசத்தின் கீழ் வாழ்ந்து, இங்கு இடம்பெயர்ந்த ஒரு சீனப் பெரியவரிடம் கூட இந்தக் கவிதையை பற்றிக் கேட்டேன். அவரது கருத்தின் படி, மாவோ முதல் முறையாக விமானத்தில் பறந்து அவரது தாய்நாட்டின் அழகை, சீனப்பெருஞ்சுவரின் நீளத்தை அதன் பாரிய தோற்றத்தை மேலிருந்து பார்த்த பெருமிதத்தின் விளைவாகத் தான் இந்தக் கவிதையை இயற்றினாராம். “Mao was moved by the majestic beauty of his land and the great rulers who had ruled the country before him.” இருந்தாலும், மாவோவுக்கு சீனாவை ஆண்ட மாமன்னர்களை விட தான் சிறந்தவன் என்ற எண்ணம் அல்லது தனது மக்கள் தன்னை அவ்வாறு ஏற்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், தனக்கு முன்னால் ஆண்டவர்கள் எல்லாம் மாவீரர்கள் தான், ஆனால் அவர்களுக்கு இலக்கியமும், கவிதையும் தெரியாது ஆனால் எனக்கெல்லாம் தெரியும் (தற்பெருமை பேசிப் பீற்றிக் கொள்வது கம்யூனிஸ்டுகளின் இயல்பு போலிருக்கிறது.) என்று காட்டிக் கொண்டு, அவர்கள் எல்லாம் போய்விட்டார்கள், தலைவனாக நானிருக்கிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற அவரது தன்னம்பிக்கையின் வெளிப்பாடு தான் இந்தக் கவிதை.
அதைவிட தென்றல் உளறுவது போல் எந்த மேலைநாட்டு முதலாளித்துவ வாதிகளும் மாவோவின் கவிதையின் கருத்தை மாற்றவுமில்லை. அல்லது நிலப்பிரபுத்துவத்தையும், மேட்டுக்குடிகளையும், சீனர்களது முன்னோர்களையும் அந்தக் கவிதை சாடவுமில்லை.
மாவோயிசத்தின்கீழ வாழ்ந்த, சீனாவில் கல்விகற்ற ஒரு பல்கலைகழப் பட்டதாரியாகிய ஒரு சீனரை விட, இணையத்திலுள்ளவற்றை வெட்டி ஓட்டி ‘விவாதம்’ நடத்தும் , ஒரு அதிகப்பிரசங்கிக்கு மாவோவின் கவிதையின் தாற்பரியம் பற்றி அதிகம் தெரியும் என்று நான் நம்பவில்லை.
இந்தியர்கள் அதிலும், தமிழர்கள் கம்யூனிசத்தைப் பற்றிப் பீற்றிக் கொள்ளுவதைப் பார்க்கும் போது உண்மையில் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. எப்படா எனக்கொரு றப்பர் டியூப் கிடைக்கும்,அதில் மாய்ஞ்சு மாய்ஞ்சு காற்றை நிரப்பி, அதைப் பிடித்து நீந்திக் கொண்டு (கடலில் சுறாக்களுக்கு இரையானாலும் பரவாயில்லை), அமெரிக்காவின் புளோரிடாவை அடைந்து விடலாம் என்று துடிக்கும் எத்தனையோ கியூபாவின் இளைஞர்களை நான் கியூபாவிலேயே நேரில் பார்த்தது மட்டுமல்ல, என்னைக் கம்யூனிச நாடுகளில் பிறக்காமல் செய்ததற்காக ஹவானாவில் வைத்தே வானத்தை அண்ணாந்து பார்த்து முருகனுக்கு மானசீகமாக நன்றியும் கூறியுள்ளேன். ___________உண்மையில் தென்றலின் பதில்களைப் பார்த்தாலே எனக்குச் சிரிப்பை அடக்க முடிவதில்லை. அவருக்குப் பதிலெழுதுவது வீண்வேலை என்று தெரிந்தும் கூட, உண்மையில் ஒரு Fun க்காகத் தான் நான் பதிலெழுதுகிறேன். 🙂
இட்டுக்கட்டி எழுதுகிற வியாசன் தனது சொந்தத் தயாரிப்பைக் காட்டி மேலும் மேலும் கோமாளியாகிறார். இந்த முறை இவரது நாடகம் மிகவும் சுவாரசியமானது. ஒன்றன் கீழ் ஒன்றாக பார்ப்போம்.
\\தென்றலின் உளறலைத் தாங்க முடியாமல் கம்யூனிச சீனாவின் கீழ், அதாவது மாவோயிசத்தின் கீழ் வாழ்ந்து, இங்கு இடம்பெயர்ந்த ஒரு சீனப் பெரியவரிடம் கூட இந்தக் கவிதையை பற்றிக் கேட்டேன்.\\
பாஜக கட்சி மாநாட்டிற்கு குவார்ட்டர் பிரியாணி வாங்கிக்கொடுத்து ஆள் சேர்ப்பது கூட ஒரு நாளுக்கு தாக்குப் பிடிக்கும். ஆனால் வியாசன் உருவாக்குகிற சாட்சிகள் ஐந்து நிமிடங்களில் தோலுரிந்துவிடுகின்றன. எப்படியென்று பார்ப்பதற்கு முன்னர் இவர் தயாரித்த சாட்சிகளின் தன்மையைப் பரிசிலிக்க வேண்டும்.
1. மாவோ கவிதைக்கு சீனப்பெரியவர் சாட்சியவார். இதற்கு முன்பு வரை சீன நண்பர்கள் என்று சொல்லிப்பார்த்தவர் இப்பொழுது அதிக வயதுடன் ஒரு ஆளை ஆஜர் படுத்தி மாவோயிச காலத்தில் வாழ்ந்தவர் என்று ‘அதாவது’ போட்டு விளக்குகிறார். இது அவதாரம் ஒன்று.
2. ஷிராவன் என்ற வார்த்தை விளக்கத்திற்கு சமஸ்கிருத புலமை பெற்ற ஐயர் ஒருவரிடம் விளக்கம் கேட்டாராம். இது சாட்சி வகை இரண்டு.
3. ராவுத்தர்களைப் பற்றி இவரது முஸ்லீம் நண்பர் சொல்லித்தான் இவருக்கு தெரியுமாம். இது சாட்சி வகை மூன்று.
4. தமிழர்களின் வெள்ளைத்தோல் ஆசையை, இவர் ஒரு தமிழ் நண்பருடன் சினிமாவுக்கு சென்று பார்த்த பொழுது நேரிடையாகவே கண்டு கொண்டாராம். இது சாட்சி வகை நான்கு.
மேற்கொண்ட நான்கு சாட்சிகளுமே அதாவது சீனப்பெரியவர், சமஸ்கிருத ஐயர், முஸ்லீம் நண்பர், தமிழ் நண்பர் அனைத்துமே வியாசன் தான் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. கொண்டை வைத்த சங்கி மங்கியான வியாசன் ஐந்தே நிமிடத்தில் தன் சொந்த வார்த்தைகளிலே சாட்சியங்களை உருவாக்கி தன்னையே முன் நிறுத்துவார். Very Funny!
இப்பொழுது சீனப்பெரியவர் கதையை முழுமையாகப்பார்ப்போம்.
வியாசனின் திரித்தல் இப்படி இருக்கிறது; “அவரது கருத்தின் படி, மாவோ முதல் முறையாக விமானத்தில் பறந்து அவரது தாய்நாட்டின் அழகை, சீனப்பெருஞ்சுவரின் நீளத்தை அதன் பாரிய தோற்றத்தை மேலிருந்து பார்த்த பெருமிதத்தின் விளைவாகத் தான் இந்தக் கவிதையை இயற்றினாராம். “Mao was moved by the majestic beauty of his land and the great rulers who had ruled the country before him.”
இவர் உருவாக்கிய ஆங்கில வார்த்தைகள் Mao Zedong’s Poetry Book Reviewலிருந்து உருவப்பட்டு எழுதப்பட்டவை. மற்றுமொரு முதன்மையான எழுத்தாளர் Robert Bailey முதன் முதலில் மாவோவின் பாடல்களுக்காக பேட்டி எடுக்கிற பொழுது தொகுத்து எழுதிய வார்த்தைகளைத்தான் மேலை நாட்டு பத்திரிக்கைகள் பலவாறாக பயன்படுத்துகின்றன என்ற விசயம் தெரியாமலேயே சாட்சி தேடுகிறார். அதைச் சீனப்பெரியவர் கூறியதாக அப்படியே சொல்வதற்கு வெட்கப்படவேயில்லை வியாசன். இவ்வகையில் மேலை நாட்டு பிரச்சார புத்தகத்தையே சீனப்பெரியவராக்கி போங்காட்டம் போடுகிறார். சொல்ல வருகிற அரசியல் புரியாத வியாசன் இவ்விதம் வெட்டியாக வேசம் போடுவது மானங்கெட்டதனமானது என்று உணரவில்லை போலும். சாட்சியங்களைக் கேட்டால் நானே தருவேன். அடுத்த முறை இதற்கு மறுமொழி எழுதுகிற பொழுது கோமிங்டாங் பார்ட்டியைச் சேர்ந்த கன்பூசிய சீனர்களையோ அல்லது பாடத்திட்ட புத்தகங்களையோ ஹாங்காங் எழுத்தாளர்களையோ கூட காட்டினால் ஒரளவு வியாசன் தாக்குப்பிடிக்கலாம் என்பதை அவர் உணர வேண்டும். அதைவிடுத்து இப்படி டிம்விட்டாக இருப்பதில் அர்த்தம் இல்லை.
———————————————————————————-
வியாசனின் இரண்டாவது தயாரிப்பு இது “இருந்தாலும், மாவோவுக்கு சீனாவை ஆண்ட மாமன்னர்களை விட தான் சிறந்தவன் என்ற எண்ணம் அல்லது தனது மக்கள் தன்னை அவ்வாறு ஏற்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், தனக்கு முன்னால் ஆண்டவர்கள் எல்லாம் மாவீரர்கள் தான், ஆனால் அவர்களுக்கு இலக்கியமும், கவிதையும் தெரியாது ஆனால் எனக்கெல்லாம் தெரியும் (தற்பெருமை பேசிப் பீற்றிக் கொள்வது கம்யூனிஸ்டுகளின் இயல்பு போலிருக்கிறது.) என்று காட்டிக் கொண்டு, அவர்கள் எல்லாம் போய்விட்டார்கள், தலைவனாக நானிருக்கிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற அவரது தன்னம்பிக்கையின் வெளிப்பாடு தான் இந்தக் கவிதை.”
இடுப்பில் அவிழ்ந்த வேட்டிகூட தெரியாமல் லைட்டாக தனது நிலைப்பாட்டை மாற்றி சீனப்பெருஞ்சுவரை விட்டுவிட்டு மாவோவை விமர்சிக்கிறாராம். அதற்கு ஒரு பத்தி!
\\ மாவோயிசத்தின்கீழ வாழ்ந்த, சீனாவில் கல்விகற்ற ஒரு பல்கலைகழப் பட்டதாரியாகிய ஒரு சீனரை விட, இணையத்திலுள்ளவற்றை வெட்டி ஓட்டி ‘விவாதம்’ நடத்தும் , ஒரு அதிகப்பிரசங்கிக்கு மாவோவின் கவிதையின் தாற்பரியம் பற்றி அதிகம் தெரியும் என்று நான் நம்பவில்லை.\\
வெட்டி ஒட்டி விவாதம் நடத்தியதைப் பார்த்தோம். விசயம் என்னவென்று தெரியாமலேயே கூகுள் காட்டுகிற புத்தகத்தைக் காட்டி இப்பொழுது சீனப்பெரியவராக மாறியிருக்கிற வியாசனின் பல அவதாரங்கள் கண்ணுக்கு குளுமையானவை! தமிழ்நாட்டு தமிழர்களைப் பற்றி இட்லி தோசை அளவுக்குத்தான்தான் தெரிகிற பொழுது வியாசன் மாவோ கவிதையின் தாத்பரியம் பற்றியும் பல்கலைக்கழக சீனர்களைப் பற்றியும் பேசுவாராம்! வாழ்த்துக்களும் எமது அனுதாபங்களும்
\\ இந்தியர்கள் அதிலும், தமிழர்கள் கம்யூனிசத்தைப் பற்றிப் பீற்றிக் கொள்ளுவதைப் பார்க்கும் போது உண்மையில் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. எப்படா எனக்கொரு றப்பர் டியூப் கிடைக்கும்,அதில் மாய்ஞ்சு மாய்ஞ்சு காற்றை நிரப்பி, அதைப் பிடித்து நீந்திக் கொண்டு (கடலில் சுறாக்களுக்கு இரையானாலும் பரவாயில்லை), அமெரிக்காவின் புளோரிடாவை அடைந்து விடலாம் என்று துடிக்கும் எத்தனையோ கியூபாவின் இளைஞர்களை நான் கியூபாவிலேயே நேரில் பார்த்தது மட்டுமல்ல, என்னைக் கம்யூனிச நாடுகளில் பிறக்காமல் செய்ததற்காக ஹவானாவில் வைத்தே வானத்தை அண்ணாந்து பார்த்து முருகனுக்கு மானசீகமாக நன்றியும் கூறியுள்ளேன்.\\
ரப்பர் டீயுப்பில் காற்று நிரப்பி போன கீயுபா இளைஞர்கள் மட்டுமல்ல மேட்டுக்குடி வெள்ளாள ஆதிக்க சாதிகளுக்கும் கூட அமெரிக்காதான் அடைக்கலம். போரிலே மாண்டு போன பல்லாயிரக்கணக்கான பதின்மய வயது போராளிகளை நினைவுகூறாத இந்த வர்க்க எதிரிகள் பட்டுச்சேலைக்காகவும், ஸ்டார் ஓட்டலுக்காவும் இட்லி தோசைக்காவும் பண்பாடு பற்றி பேசுகிறார்கள் என்றால் இவர்கள் எல்லாம் ரப்பர் டீயுப்பிலா தப்பித்து போயிருப்பார்கள்?
நமது தோழர் மார்க்ஸ் அழகாகச் சொல்வார்; ஏதுமற்ற ஏழைகள் தான் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். தியாகிகளுக்கு வீர மரண நினைவேந்தல் நடத்துகிற கூட்டம் எங்கே? வானத்தை அண்ணாந்து பார்த்து கம்யுனிச நாடுகளில் பிறக்காமல் போனதற்காக முருகனுக்கு நன்றி சொல்கிற பிழைப்புவாதிகளின் கூட்டம் எங்கே? இப்படிப்பட்ட கூட்டம் தான் கோர்ட்டு சூட்டும் பூணுலும் ஒன்று என்று சொல்கிறார்கள்! ஆதிக்க சாதிகளின் ஆன்மிகம் என்பது வானத்தை அன்னாந்து பார்க்கிற அற்பத்தனம் போலும்! கம்யுனிச எதிர்ப்பிற்காக இவர்களது முகமே முதன்முறையாக வானத்தை நிமிர்ந்து பார்க்கிற பொழுது முதுகெலும்பு மட்டும் நிமிரவே மாட்டேன் என்கிறது! புல்லுருவிகளுக்கு ஏது முதுகெலும்பு?
அண்ணன் தென்றலின் கோணங்கிப் புத்தி எப்படியெல்லாம், வேலை செய்கிறது என்பதைப் பார்த்து எனக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் தன்னைப் போலவே எல்லோரையும் நினைத்துக் கொள்கிறார் போல் தெரிகிறது. 🙂
இவருக்குப் பதில் எழுதுவதே வெறும் அபத்தம், எழுதாது விட்டாலும் பயந்தோடி விட்டதாக நினைத்துப் பீற்றிக் கொள்வார்.வேறு வழியில்லை. எந்தக் கொம்பனாக இருந்தாலும் எதிர்க்கவோ அல்லது எனது கருத்தைத் தெரிவிக்கவோ தயங்காத நான் இந்த வெறும் உளறல் திலகத்தின் உளறல்களுக்குப் பதிலளிக்கும் போது பொய் சொல்வேன் என நினைத்து, தன்னை ஏதோ பெரிய ‘இவராக’ நினைத்துக் கனவு காண்கிறார் போல் தெரிகிறது.
முதலில் நான் ஒன்றும் ஏதோ ஒரு கிராமப்பக்கத்தில் வாழவில்லை, எனது பக்கத்து வீட்டுக்காரர்கள், அயலவர்கள் கூட சீனர்களும், வெள்ளையர்களும் தான். எனது நண்பர் குழுவில் ஐக்கிய நாடுகள் சபையே இருக்கிறது. அத்துடன் தென்றலைப் போல் எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் எனக்குக் கிடையாது, எனக்குச் சந்தேகம் ஏற்பட்டால், அதை நான் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் தயங்குவதில்லை. உண்மையில் எதையும், யாருடனும் பேசி உறுதிப்படுத்தாமல்., அதைப் பற்றிக் கேள்விகள் கேட்காமல் நான் இணையத்தளங்களில் எழுதுவதோ பேசுவதோ இல்லை. இதை நான் கூறுவதற்குக் காரணம், நானும் அவரைப் போலவே அறளை பெயர்ந்த வயதில் நண்பர்கள் இல்லாமல் வினவில் குந்தியிருந்து முன்னுக்குப் பின் முரணாக, எனக்குத் தான் எல்லாம் தெரியும் அல்லது நான் சொல்வது தான் சரி என்று அடம் பிடித்துக் கொண்டிருப்பதாக தென்றல் நினைத்துக் கொண்டிருக்கிறார் போல் தெரிகிறது, அதனால் தான்.
இதற்கு மேல் இந்த கவிதையை பற்றிப் பேசுவதில் பயனில்லை. நான் எத்னையோ சீனர்களுடன் இந்தக் கவிதையைப் பற்றிக் கேட்டு விட்டேன். ஆனால் யாருமே தென்றல் கூறியது போன்று
//“மேற்கண்ட கவிதை சீனப்பெருஞ்சுவரை கலாச்சார பெருமையாக பாடவில்லை. கொத்து கொத்தான மக்கள் கொல்லப்பட்டதை நினைவஞ்சலியாக சொல்கிற பொழுது நிலப்புரபுத்துவத்தை கடுமையாக சாடுகிறார். சீனப்பெருஞ்சுவரைக் கட்டிய மன்னர் ஜின்-சி-குவாங்கையையும் ஹாண் வு டீயையும் பாடல்களில் சாடுகிறார். சொர்க்கத்தின் மகன் என்ற சொல்லப்படுகிற செங்கிஸ்கானுக்கு கழுகுகளை மட்டுமே சுடத்தெரியும் என்று மேட்டுக்குடிகளை தோலுரிக்கிறார். நிலப்புரத்துவ காலம் முடிந்துவிட்டது. இன்றைய காலகட்டத்தை நோக்குங்கள் என்று முடிவதாக இருக்கிறது பாடல்” //
என்று கூறவில்லை. அது வெறும் உளறல் என்பது இங்குள்ள வாசகர்களுக்கு மட்டுமல்ல, எனக்குத் தெரிந்த எந்தச் சீனரும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆகவே தென்றல் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவர் தெளிவாகக் கூற வேண்டும்.
1. இன்னும் மேலை நாட்டு எழுத்தாளர்களோ அல்லது மொழிபெயர்ப்பாளர்களோ மாவோவின் கவிதையை மாற்றி விட்டாரகள் என்றால் இவர் எங்காவது நல்ல மருத்துவரைத் தான் பார்க்க வேண்டும்.
2. மாவோ தனது நாட்டையும் புகழவில்லை, அது கம்யூனிஸ்டுகளின் வழக்கமல்ல, அந்தக் கவிதையில் தனது நாட்டு மன்னர்களை , தென்றல் ராஜ ராஜ சோழனை வசைபாடுவது போல் வசை பாடுகிறார் என்றால், அதிலும் உண்மையில்லை.
3. தென்றல் தன்னுடைய கருத்து என்ன என்பதை தெளிவாக ஆதாரத்துடன் விளக்கினால், நானும் அதை எனது சீன நண்பர்களிடம் காட்டி, அவர்களுக்கு அவர்களின் நாட்டைப்பற்றியோ அல்லது அவர்களின் தலைவரைப் பற்றியோ அல்லது அவர்கள் நாட்டின் புகழ்பெற்ற கவிதையைப் பற்றியோ எதுவுமே தெரியாது, தமிழ்நாட்டில் தென்றல் என்ற பெயரில் ஒரு பெரியவர் இருக்கிறார், அவரிடம் அவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவரும் மாவோவும் பால்யகாலத்து நண்பர்கள், மாவோவின் சிந்தனை அவரது உள்ளக் கிடக்கை எல்லாவற்றையும் அறிந்தவர் அந்த தமிழ்நாட்டுப் பெரியவர் தானே தவிர சீனர்கள் அல்ல என்று கூறி அவர்களைக் கேலி பண்ண முடியும். (நான் வாழும் நாட்டில், அதுவும் நான் வாழும் நகரத்தில் தான் சீனாவிலும், ஹாங்காங்கிலும் உயர்கல்வி கற்ற சீனர்கள் பெரும்பாலானோர் வாழ்கின்றனர் என்பது தென்றலுக்குத் தெரியாது என்பது மட்டும் அவரது உளறலிலிருந்து புலனாகிறது.)
4. மொழி பெயர்ப்பில் சொற்கள் மாறுவதை வைத்து, பொருள் மாறி விட்டதென்று உளறாமல், கவிதையின் பொருள் மாறியா கவிதையை விளக்கி தோழர் தென்றல் அவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும், அல்லது அவரது கருத்துடன் மாவோவின் கவிதைகளைப் படித்த அல்லது ஆராய்ந்த யாராவது உடன்படுவதை ஆதாரத்துடன் காட்ட வேண்டும் காட்ட வேண்டும். அதை விடுத்து சும்மா உளறுதால் பயனில்லை.
இவர் கொண்டு வந்து நிறுத்திய மாவோயிஸ்டு காலத்து சீனப்பெரியவர் இப்பொழுது இல்லை! இருந்தால் தானே வரமுடியும்! இதுதான் வியாசனின் சுயமுகம்! மாவோ நிலப்புரத்துவ மன்னர்களையும் சீனப்பெருஞ்சுவர் கலாச்சாரத்தையும் புகழ்ந்ததாக ஆயிரம் வாக்குமூலங்கள் பெற முடியும். ஆனால் இந்த சோம்பேறிகளுக்கு அதற்கெல்லாம் நேரமே தேவைப்படவில்லை! மோசடியாக இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டாமா? கைக்கு வந்ததை எழுதி புத்தகத்தை பெரியவராக்கி குட்டு உடைந்தவுடன் நண்பர்கள் குழுவில் ஐநா சபையே இருக்கிறது என்கிறார். போராளிகள் சர்வதேசியவாதிகள் என்பது பித்துக்குளிகளுக்கு தெரியாதுபோலும். இந்த இலட்சணத்தில் கிராமத்துக் கலாச்சரத்தை இழிவுபடுத்துகிற மேட்டுக்குடித்தனம் வேறு! இவர் கிராமத்திலே வாழவில்லையாம். இந்தா இருக்கிற சீனபஜாரில் பார்க்காத வெள்ளைக்காரனையும் சீனரையும் இவர் மான்ட்ரிலில் அக்கம் பக்கத்தில் பார்க்கிறாராம். மேட்டுக்குடிகளின் அற்பத்தனத்திற்கு அளவில்லை!
//இவர் கொண்டு வந்து நிறுத்திய மாவோயிஸ்டு காலத்து சீனப்பெரியவர் இப்பொழுது இல்லை!///
தோழர் தென்றல், இப்படியே மற்றவர்கள் கூறியதைத் திரித்தும், குதர்க்கம் கற்பித்தும் தான் தனது உளறலை இங்கு தொடர்கிறார் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும். இந்தக் குரங்குப் புத்தியை, பேசப்படும் கருத்துக்கு விளக்கமளிக்க முடியாத பலர் விவாதங்களின் போது காட்டுவதுண்டு என்பதை யாவரும் அறிவர். இதுவரை அந்தக் கவிதையைப் பற்றித் தனது கருத்தைத் தெளிவாக, ஆதாரத்துடன் தென்றல் தெரிவிக்கவில்லை, அதற்கு வக்கில்லை என்று கூடக் கூறலாம். சிறுபிள்ளைத்தனமாக,School yard சண்டை போல, கடைசியில் எனக்கு, உண்மையில் பல்வேறு நாடுகளைச், சேர்ந்த பல மொழிகளைப் பேசும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கூடச் சந்தேகிக்கும் அவரது சிறுமைத்தனத்தை எப்படி வர்ணிப்பதென்று எனக்குத் தெரியவில்லை. சும்மா ‘மேட்டுக்குடி’, ‘நிலப்பிரபுத்துவம்’ என்று உளறியே எல்லாம் தெரிந்ததாக காட்டிக் கொள்வதை விடுத்து, இங்கு பேசப்படும் கருத்தில்/கேள்வியில் கவனம் செலுத்திப் பதிலளிப்பார் என நம்புவோம்.
ஆகவே தென்றல் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவர் தெளிவாகக் கூற வேண்டும்.
1. இன்னும் மேலை நாட்டு எழுத்தாளர்களோ அல்லது மொழிபெயர்ப்பாளர்களோ மாவோவின் கவிதையை மாற்றி விட்டாரகள் என்றால் இவர் எங்காவது நல்ல மருத்துவரைத் தான் பார்க்க வேண்டும்.
2. மாவோ தனது நாட்டையும் புகழவில்லை, அது கம்யூனிஸ்டுகளின் வழக்கமல்ல, அந்தக் கவிதையில் தனது நாட்டு மன்னர்களை , தென்றல் ராஜ ராஜ சோழனை வசைபாடுவது போல் வசை பாடுகிறார் என்றால், (நானறிந்த வரை) அதிலும் உண்மையில்லை.
3. தென்றல் தன்னுடைய கருத்து என்ன என்பதை தெளிவாக ஆதாரத்துடன் விளக்கினால், நானும் அதை எனது சீன நண்பர்களிடம் காட்டி, அவர்களுக்கு அவர்களின் நாட்டைப்பற்றியோ அல்லது அவர்களின் தலைவரைப் பற்றியோ அல்லது அவர்கள் நாட்டின் புகழ்பெற்ற கவிதையைப் பற்றியோ எதுவுமே தெரியாது, தமிழ்நாட்டில் தென்றல் என்ற பெயரில் ஒரு பெரியவர் இருக்கிறார், அவரிடம் அவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவரும் மாவோவும் பால்யகாலத்து நண்பர்கள், மாவோவின் சிந்தனை அவரது உள்ளக் கிடக்கை எல்லாவற்றையும் அறிந்தவர் அந்த தமிழ்நாட்டுப் பெரியவர் தானே தவிர சீனர்கள் அல்ல என்று கூறி அவர்களைக் கேலி பண்ண முடியும். (நான் வாழும் நாட்டில், அதுவும் நான் வாழும் நகரத்தில் தான் சீனாவிலும், ஹாங்காங்கிலும் உயர்கல்வி கற்ற சீனர்கள் பெரும்பாலானோர் வாழ்கின்றனர் என்பது தென்றலுக்குத் தெரியாது என்பது மட்டும் அவரது உளறலிலிருந்து புலனாகிறது.)
4. மொழி பெயர்ப்பில் சொற்கள் வேறுபாடுவதை வைத்து, பொருள் மாறி விட்டதென்று உளறாமல், பொருள் மாறிய, இரண்டு கவிதைகளை ஒப்பிட்டு விளக்கி தோழர் தென்றல் அவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும், அல்லது அவரது கருத்துடன் மாவோவின் கவிதைகளைப் படித்த அல்லது ஆராய்ந்த யாராவது உடன்படுவதை ஆதாரத்துடன் காட்ட வேண்டும் காட்ட வேண்டும். அதை விடுத்து சும்மா உளறுவதால் பயனில்லை.
வியாசன் ,தென்றல் ,
அன்றைய சூழலில் 1930களில் சீனாவின் எல்லைகளை ஜப்பானியர்களிடம் இருந்து காக்க சீனர்களின் [சீன தேசிய இனத்தின் ] தேசிய உணர்வை ,தேச பக்தியை துண்டுவது அவசியம் ஆன ஒன்றாக இருந்து.அத்தருணத்தில் சீனாவின் அரசு அதிகாரத்தில் இருந்து சீன கம்யூனிஸ்ட்கள் அல்ல. அவ்வரசு நிலபிரபுத்துவ ,முதலாளித்துவ அரசாக இருந்து. அப்படி பட்ட அரசியல் சூழலில் கூட சீனாவின் எல்லைகளை, தேசியத்தை காக்க அவ்வரசுடன் சீன கம்யூனிஸ்ட்கள் வர்க்க வேறுபாடுகளை தற்காலிகமாக சமரசம் செய்து கொண்டனர்.அதனால் வலிமையான சீன தேசிய இனம் ஜப்பானியர்களை வீழ்தியது.[அச் அரசியல்-வர்க்க சமரசம் ஜப்பானிய போருக்கு பின் சீன கம்யூனிஸ்ட்களுக்கு தான் பெருத்த பின்னடைவையும் ,அதிகாரத்தில் இருந்த பிற்போக்கான அரசுக்கு மிக்க ஆதாயத்தையும் அரசியல் ரீதியில் கொடுத்தது நிண்ட வரலாற்று அடிப்படையில் அச் சமரசம் சீன தேசிய இனத்துக்கு ஆதாயமாக இருந்து. அது கம்யூனிஸ்ட்டுகளின் அரசியல் ரீதியான பெரும் தியாகம் என்று கூட சொல்லலாம்] இக்கருத்தை தமிழ் தேசியத்தை முன்னெடுக்கு நண்பர் வியாசன் அவர்களும் சோசியலிசத்தை முன்னெடுக்கு நண்பர் தென்றல் அவர்களும் அறிவுபூர்வமாக உணரவேண்டும்.
இது போன்ற அரசியல் சூழல்,அனுபவம் சோவித் ரஷ்ய புரட்சியின் போதும் ரஷ்ய இன மக்களுக்கும் ஏற்பட்டது. வர்க முரண்பாடுகள் முற்றி பாட்டாளி வர்க்கம் திரு லெனின் அவர்களின் தலைமையில் வெற்றிகாணும் [1917] தருனத்தில் அந்நாட்டு jar இராணுவமே பாட்டாளி வர்க்க புரட்சிக்கு ஆதரவாக மாறி தன் தேசிய இனமாகிய ருசிய இனமும் அதன் நில எல்லைகளும் சிதையாமல் ,சிதராமல் பார்த்துக்கொண்டது. மேலும் சோசியலிச ருசியாவை முதலாளித்துவம் வென்ற 1990களில் அம் மக்களும் ,சோசியலிச ருஷ்ய இராணுவமும் அதிபர் கோர்பசேவ் அவர்களை நீக்கிவிட்டு எழுந்த Communist தற்காலிக அரசை [Canadi yakkanvi 10 நாட்கள் அரசு ]ஆதரிக்காமல் அதிபர் எல்சினுக்கு ஆதரவு அளித்தனர்.அதன் மூலம் ருசிய தேசிய இனம் ,அதன் நிலப்பரப்பு சிதையாமல் ,பிளவு படாமல் காத்தனர். இன்றும் கிட்ட தட்ட சம அளவில் ரஷ்யா மக்கள் முதலளித்துவம் மற்றும் சோசியலிசம் கருத்துகளுக்கு ஆதரவாக தான் இருக்கின்றனர் என்பது இன்றைய ருசிய கம்யுனிஸ்டு கட்சி முக்கிய எதிர் கட்சியாக இருப்பதன் மூலம் நாம் உணரலாம். நாளை வர்க முரண்பாடுகள் முற்றும் போது மீண்டும் சோசியலிசம் ஆட்சி செய்ய அதே ரஷ்யா மக்கள் ஆதரவு அளிக்காமலா போவார்கள் ? இந்த இரு அரசியல் ரஷ்யா அனுபவம் மூலம் எவ் வர்கத்தின் ஆட்சி என்பதை விட தன் தேசிய இனம் பிளவு படாமல் இருபதை அவர்கள் ருசியர்கள் விரும்புகின்றனர் என்பது புலன் ஆகிறது
திராவிடம் என்ற Ancient தேசிய இனத்தை ஆரிய பண்பாட்டு ,மொழி தினிப்பால் பல்வேறு தேசிய இனமாக சிதைவுற்ற இந்தியாவில் இத்தகைய ஒரே தேசிய இனம் என்ற சூழல் இந்திய மக்களுக்கு அமையாதது தான் பாட்டாளி வர்க புரட்சிக்கு பெரும் தடையாக உள்ளது. இந்தியாவில் திராவிட தேசிய இனத்தில் இருந்து சிடைவடைந்த அனைத்து தேசிய இனங்களுமே இந்திய பார்பனிய-தரகு-முதலளித்துவ பிற்போக்கான அரசுக்கு அடிமையாக தான் உள்ளது. இன் நிலையில்
[1] தேசிய இனங்களின் விடுதலை முக்கியமானதா ? அதனை எப்படி பெறுவது ?
அல்லது
[2]அடிமைபடுத்த பட்ட பல்வேறு தேசிய இனங்களின் வர்க புரட்சி முக்கியமானதா ? அதனை எப்படி பெறுவது ?
என்ற கேள்வி எழுகின்றது.
அடிமை பட்ட தேசிய இனத்தில் வர்க புரட்சிக்கு தலைமை ஏற்பது யார் என்ற கேள்வி எழுவதால், எனக்கு தேசிய இனங்களின் விடுதலை முதன்மையான சாதியமாகவும் அதனை தொடர்ந்து விடுதலை பெற்ற தேசிய இனங்கள் வர்க புரட்சிக்கு ஆயத்தம் ஆவதும் அடுத்த சாத்தியம் ஆன வழியாக தெரிகின்றது. எப்படி என்றாலும் தேசிய இன விடுதலையை முன்னெடுப்பவர்களும் ,வர்க போராட்டத்தை முன்னெடுப்பவர்களும் இன்றைய இந்திய அரசியல் சூழலில் ஒருவருக்கு ஒருவர் நட்பு சக்திகளே என்பதை உணரவேண்டும்
நண்பர் வியாசன் ,நண்பர் தென்றல் அவர்களின் கருத்துகளை எதிர் பார்கின்றேன்.
நண்பர் தமிழ் தாகம்,
இடையில் புகுந்து கருத்து சொல்வதற்கு மன்னிக்கவும். தாங்கள் கூறியது போல ஒவ்வொரு தேசிய இன விடுதலையும் சாத்தியமானதே மட்டுமல்லாமல் ஒவ்வொரு தேசிய விடுதலைப் போராட்டமும் ஒரு வர்க்க போராட்டம் ஆகும். ஆனால் யாதார்த்தம் என்னவெனில்,ஈழமாகட்டும்,தமிழ் நாடாகட்டும்(?) வர்க்க விடுதலை சாத்தியமாகாமல் இன விடுதலை சாத்தியமல்ல.
இந்திய அளவில், இங்கே போலித் தமிழ் தேசியவியாதிகள் கூவிக் கொண்டிருப்பது போல தமிழ் நாடு தனியாக பிரிந்து போக இயலாது. இங்கேயும் ஒட்டுமொத்தமாக வர்க்க விடுதலை அடைந்த பின்னரே தேய இன விடுதலை சாத்தியப்படும்.
எடுத்துகாட்டாக , தற்போதய(சர்வதேசிய) சூழலில், அதாவது தனி நாடு வேண்டுமா இல்லையா என்பது ஈழத் தமிழரின் விருப்பத்தை விட ஏகாதிபத்தியங்களின் உட்கிடையைப் பொறுத்தே உள்ளதால் ஈழத் தமிழர் தனியே இன விடுதலையை முன்னெடுத்து செல்ல சாத்தியமில்லாது உள்ளனர். வியாசன் போன்ற தமிழ் தேசியவாதிகள் கற்பனையில் மிதப்பது போல ஈழ விடுதலை என்பதன் சாத்தியக்கூறுகள் தற்போது இல்லையென்றே உறுதிபட கூறலாம். அதுமட்டுமல்லாமல் சிங்கள பாசிச அரசால் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் பாதிக்கபடுகின்றனர். அதனால் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு ஐக்கியப்பட்ட பாட்டாளிவர்க்கமாக ஒன்று சேர்ந்து வர்க்க விடுதலை அடைந்து பின்னர் உருவாகும் சோஷலிச அரசில் மட்டுமே அது சாத்தியம்.
நன்றி.
உங்கள் பின்னுட்டத்துக்கு மிக்க நன்றி நண்பர் சிகப்பு. நண்பர் தென்றல் ,மற்றும் நண்பர் வியாசனின் கருத்துக்கள் வந்த உடன் நாம் விரிவாக பேசலாமே !
//அதுமட்டுமல்லாமல் சிங்கள பாசிச அரசால் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் பாதிக்கபடுகின்றனர். அதனால் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு ஐக்கியப்பட்ட பாட்டாளிவர்க்கமாக ஒன்று சேர்ந்து வர்க்க விடுதலை அடைந்து பின்னர் உருவாகும் சோஷலிச அரசில் மட்டுமே அது சாத்தியம்.//
திரு. சிவப்பு,
கொஞ்சம் கூட இலங்கையையும், சிங்களவர்களையும் பற்றி புரிந்து கொள்ளாத இந்தக் கருத்து இங்கு வினாவில் ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்ட விடயம் தான், நீங்கள் கொஞ்சம் லேட்டாக வந்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது. ஆகவே கீழேயுள்ள இணைப்புக்குச் சென்று முழுவதையும் வாசித்து இலங்கையையும், சிங்களவர்களையும் பற்றிய உங்களின் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும். நன்றி. 🙂
https://www.vinavu.com/2013/12/09/eelam-tamilchavinists-politics/
நண்பர் சிவப்பு,
அருணன் (CPM),ஐயா மணியரசன்(தமிழ் தேசிய பேரியக்கம்) இருவரிடையே நடக்கும் விவாதத்தை நேரமிருப்பின் பார்க்கவும்.
//] தேசிய இனங்களின் விடுதலை முக்கியமானதா ? அதனை எப்படி பெறுவது ?
//
This will always lead to war and violence with no end results.
Reconciliation is the right way. That was the realization by Nelson Mandela
அம்பி புகழ் பாடல் [தினை :புறத்திணை ]
திராவிட-தமிழர்-முருகனை பற்றிய சிந்துவெளி அறுமீன் முத்திரை தொன்மத்தையும்[காத்திகை வின்மீன் ], சங்க இலக்கிய அறுமீன் குறிப்புகளையும் அம்பி அவர்கள் ஏற்கும் இன் நாள் [காத்திகை 18 ] மிக்க நன்னாள். தோல்குடி முருகன் அம்பியின் அறிவில் ஆழ புதைந்து உள்ள முருகன் பற்றிய கருபிண்ட புராண திரிபுகளை முழுவதும் கலைவானாக ! அம்பிக்கு நல் வாழ்வும் ,நல்ல உடல் நலமும் கொடுப்பானாக ! அம்பிக்கு உள்ள ஆரிய பார்பனிய பண்பாட்டு சிந்தனைகளை கலைந்து தமிழரொடு அவரை கலக்க செய்வானாக !
ambi feedback 73.1//சிந்துவெளியில் கிருத்திகை மீனுக்கு (மீனுக்குப் பக்கத்தில் ஆறு கோடுகள், 6+மீன் அல்ல)ஆதாரம் இருக்கிறது.. முருகுக்கும் ஆதாரம் இருக்கிறது.. சரிதான்.. இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் வளையல்,காப்பு, சீமந்தம் என்று வளைத்து வளைத்து முடிச்சு போட பார்க்கிறீர்கள்..//
ambi feedback 79.1//கார்த்திகை மீன்களுக்கும், முருகனுக்கும் உள்ள தொடர்பு, அத்தகைய தொன்மத்திலிருந்து நக்கீரர், கடுவன் இளவெயினனாரால் பாடப்பட்டிருக்கலாம் அல்லவா.. //
அம்பி ,
அம்பி , உமது புராணங்கள் முருகன் சிவனுக்கு பிறந்தவனா அல்லது முருகன் அக்கினிக்கு பிறந்தவனா என்ற கேள்வியை எழுப்பி முருகனையும் ,சிவனையும் [நீர் கோரும் தந்தை மகன் உறவையே ] அசிங்கபடுத்துவது ஏன் உன் ஆறிய அறிவுக்கு புரியவில்லை ?முருக பிறப்பை பற்றிய பல்வேறு புராணங்களிலும் முரண்பாடுகள் உள்ளன எனவும், மார்கண்டேய புராணம், நாரதப் புராணம், மற்றும் குமாரப் புராணம் இவைகளில் ஸ்கந்த பிறந்த வரலாறு பற்றி கூறப்படவில்லை என தெரிகின்றது.விஷ்ணு புராணங்களும், வாயு புராணங்களும் காட்டுப் புதர்களில் அக்னிக்குப் பிறந்தவர் ஸ்கந்த என்ற செய்தி சிறிய அளவில் கூறப்பட்டு உள்ளது.மத்சய புராணத்தில் தேவர்கள் தாரகா என்ற அசுரனினால் துன்புறுத்தப்பட்டதை பற்றியும், சிவன்-பார்வதியின் திருமணம், ஸ்கந்த பிறப்பு என அனைத்தையும் விரிவாகக் கூறி உள்ளன.கருட புராணக் கதையில் அக்கினித் தேவனின் மகனாக நாணற் புதர்களில் ஸ்கந்த பிறந்ததாக உள்ளது.
சிவனை பற்றிய குறிப்புகள் எல்லாம் 7000 ஆண்டுகளுக்கு [proved by carbon dating method ] முந்தைய சிந்துவெளியில் காணப்படுகின்றன என்பது உண்மைதான். முருகனை பற்றிய குறிப்புகள் சிந்துவெளியில் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். ஆனால் இருவரையும் இணைக்கும் உமது ஆரிய-பார்பன புராணங்கள் ஓவொன்றும் அவர்களை இணைக்க வேறு வேறு கதைகளை கூறி சிவனையும் அசீங்கம் செய்கின்றனவே அம்பி !
//சிவன் ஆரியன், முருகன் திராவிடனா..?! தமிழனுக்கு இப்போது சிவனும் அன்னியனாகிவிட்டானா..? தமிழனுக்கு யார்தானையா கடவுள்..? ’மடையர் மன்ற தலைவன்’ என்று தங்களால் அறிவிக்கப்படக்கூடிய, ஒரு மாமன் மச்சான் வகையறா கடவுள்தான் தமிழர் கடவுளாக இருக்கமுடியும் என்கிறீர்களோ..?//
வட இந்திய புராணங்களை முருகனின் தொன்மத்திற்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டிய கட்டாயம் என்ன.. நம்மிடமுள்ள திருமுருகும் சங்க இலக்கியங்களும், பக்தி இலக்கியங்களும் தீப்பொறியை/கருப்பிண்டத்தை அக்கினி தாங்கிச் சென்றதாகத்தானே குறிப்பிடுகின்றன.. அக்கினிதான் தந்தை எனும் புராணங்கள் தமிழர் தொன்மங்களின் திரிபுகளே என்பது தெரிவதால் அவற்றை புறக்கணிக்க வேண்டியதுதான்..
சிலபதிகாரதுல குமரி கடலில் மாய்ந்தது என்கின்ற வார்த்தையை வைத்து , குமரி கண்டம் என்னும் மாபெரும் சாம்ராஜ்யம் எழுப்பப்பட்டது .
சிந்து சமவெளி கண்டுபிடிக்கப்பட்டவுடன் , அட நாங்க தாங்கோ நாங்க தாங்கோ
பூம்புகார் , என்ன கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை (ஆரியர்கள் மறைத்து வைத்துவிட்டார்கள் 🙂 ) , பத்தாயிரம் வருட வரலாறு பின்னபடுகிறது
துவாரகை(?!) என்று இரண்டு பானை கண்டுபிடித்தார்கள் , அட அதுவும் நாங்க தாங்கோ
இதெல்லாத்தையும் பக்கத்துவீட்டுகாரன் பொறாமையால் ஏற்றுகொள்ள மாட்டான் என்கிறார்கள், சரி பக்கத்துக்கு ஊருக்கு போய் நிலை நாட்டவேண்டும்
இந்த சமணர்கள் புத்தர்கள் என்று சொல்லபடுபவர்கள் எல்லாரும் திராவிடர்களா ?
அடுத்து தமிழர்கள் ஆன்றமடா கேலக்சி மக்களோடு தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் 🙂
http://en.wikipedia.org/wiki/Ancient_astronaut_hypothesis
http://en.wikipedia.org/wiki/Nebra_sky_disk
டிஸ்க் நல்லா பாருங்க கார்த்திகை நட்சத்திரம் மட்டும் அல்ல , அவர் சிவா மைந்தன் என்னும் பொருளில் பிறை நிலாவும் வரையப்பட்டு உள்ளது . தமிழர்கள் வியாபாரம் செய்ய போன இடத்தில தொலைத்து இருக்கலாம் அல்லது தமிழர்கள் உலகம் முழுவதும் இருந்து இருக்கலாம் 🙂
திரு அம்பி,
முருகனின் தொன்மத்தையும் அதன் மூலம் திராவிட-தமிழ் மக்களின் தொன்மத்தையும் வெளிக்கொண்டு வருவதற்கு எமக்கு இவ் விவாதத்தில் பேருதவி செய்த அம்பி அவர்களுக்கு தொல்குடி முருகனின் சிறப்பான நாளான நாளை கார்திகை 19 அன்றுக்கான “கார்திகை விளக்குஒளி திருநாள் ” வாழ்த்துகள். நாளை அம்பியுடன் நான் ஏதும் விவாதிக்க போவது இல்லை . அவருக்கு அவரின் ஆரிய-பார்பன-புராண பண்பாட்டு கசடுகளை பற்றி அவர் மறு சிந்தனை செய்யவும் அதன் மூலம் அவர் அவரும் தமிழர் என்ற நிலையை அடையவும் கால அவகாசம் கொடுக்க போகின்றேன். தமிழுக்கும் ,தமிழர் தொன்மையை காட்ட சங்கத்தை தேடி திரிந்து தொகுத்து தொண்டாற்றிய பார்பனனுக்கு தமிழ் தாத்தா என்ற பெயர் [நான் கொடுத்த பட்டம் சங்க தமிழ் திரட்டி ] வந்தையும் ,மீசை வைத்த பார்பனுக்கு அவனுக்கு இருந்த தமிழ் காதல், சாதியை அழிக்க வேண்டும் என்ற கருத்தாகத்தின் மூலம் தமிழ் மகா கவி என்ற பட்டம் வந்தையும் அம்பி அவர்கள் நினைவு கூர வேண்டுகின்றேன். நன்றி
தங்களுக்கும் எனது கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்.. சிவபெருமானின் நெற்றிக்கண் தன்னில் தோன்றிய கண் தன் கடவுளே கந்தன் என்ற கந்தவேள் எனும் தொன்மமும், சிவசக்தியரின் கருப்பிண்டம் எனும் தொன்மமும் சற்றே வேறுபட்டாலும் இவை முற்றிலும் தமிழரின் தொன்மங்களே என்பதை தாங்கள் உணர எம்பெருமான் முருகன், இவ்விரு தொன்மங்களிலும் வரும் கார்த்திகை அன்னையரின் தினமான இன்று, கார்த்திகேயனாக தங்களுக்கு அருள் புரிவானாக.. இவையெல்லாம் ஆரிய-பார்ப்பன-புராணக் கசடு என்ற தங்கள் தவறான எண்ணத்தை மாற்றுவானாக..
இராமன் அவர்கள் எமது பின்ன்னுட்டைங்களை சரியாக அறிவு பூர்வமான ஆதாரங்களுடன் எதிர்த்து நிற்காத வரை அவருக்கு பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கோ ,பிற நபர்களுக்கோ இல்லை என்று நினைக்கிறேன். அவருக்கு அவரின் கிறுக்கு தனமான பின்னுட்டங்களுக்கு எதிர் கருத்தை வைப்பதால் நமது நேரம் ,இராமன் பாணியிலேயே சொல்வது என்றால் நமது பொன்னான நேரம் தான் வீண் ஆகும்.
பிற நபர்களுக்கோ-> பிற நன்பர்களுக்கோ
தென்றல் அவர்களுக்கு,
//பார்ப்பனியத்தை அம்பலப்படுத்த இக்கருத்துக்கள் உதவ மாட்டா//
தோலின் நிறம் ஒரு சக்தி வாய்ந்த ஈர்ப்பைக் கொண்டிருக்கிறது. இது நம்மை ஆட்டிப்படைக்கிறது. இந்த ஈர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் பார்ப்பனர்களுக்கு நமது முன்னோர்கள் கொடுத்த இடத்தை நம்மால் வேறு விதத்தில் விளக்கவே முடியாது. அவர்களும் நமது நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள் (abused not used). அவர்களுக்காகவே சிறிதும் பெறிதுமாக கோயில்கள் கட்டப்பட்டன என்றால் அது மிகையில்லை. இந்த கோயில்களிளால் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு வேறு பலன்களும் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. பார்ப்பனர்கள் மணியாட்டுவது போன்ற எளிய வேலைகளைக் கொடுக்கப்பட்டு நிலங்களையும் வீடுகளையும் வேலைக்கு ஆட்களையும் கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டிருக்கிறார்கள். இதை வேறு விதத்தில் விளக்கவே முடியாது. இதைப்பற்றி வெளிப்படையாக நம்மால் பேசமுடியாவிட்டாலும் இதுதான் உன்மை. அதனால் தான் அம்பிக்கு இவ்வளவு கோபம் வருகிறது. முன்னர் ஒரு பதிவில் என்னுடைய இந்த கருத்துக்கு அவருடைய எதிர்வினையை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களுடைய வேறு சரக்கெல்லாம் ஒன்றுக்கும் உதவாதது என்பதால் தான் Internal circulation only என்றார்கள். நாமும் அதைப்பற்றிக் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் நமது கண்கள் அவர்கள் வைத்திருந்த எள் செடியை சுற்றி மூடியிருந்த துணி மூட்டையின் மீது இல்லை. நாம் இன்னும் நடிகைகளை வடக்கிலிருந்து தான் அதிக விலை கொடுத்து கொண்டு வருகிறோம் என்பதை வைத்தும் இதைப் புரிந்து கொள்ளலாம். 1000 வருடத்திற்கு முன்னர் நடந்ததும் இதைப் போன்றது தான்.
ஒரு முறை இடம் கிடைத்தவுடன் அதை தக்கவைத்துக் கொண்டார்கள். பெரிதுபடுத்திக் கொண்டார்கள். வழிவழியாக சாசுவதப் ( இதற்கு தமிழ் வார்த்தைத் தெரியவில்லை) படுத்திக் கொண்டார்கள். இனக்கலப்பின் மூலம் தங்கள் நிறம் மங்காமல் பார்த்துக்கொள்வதற்காகத்தான் ஆணாதிக்க வக்கிரபுத்தியுள்ள மனுக்கள் செய்யுள்கள் எழுதினார்கள். ஆனாலும் அவர்களின் பருப்பு சரியாக வேகவில்லை என்பது தான் உன்மை. இயற்கை வேறு வழிகளைக் கண்டுபிடித்துவிட்டது.
அவர்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்களைப் போல சீன் போடுவதையும் மற்ற சிலரும் இதை நம்பிக்கொள்வதையும் (ஆதாயத்திற்காகவோ அல்லாமலோ) அம்பலப்படுத்த இந்த உன்மை பயன்படும். நாம் இப்படியும் பார்ப்பனியத்தை சரிகட்டலாம். குறைந்த பட்சம் இணையத்தில் இதைப் பற்றி விழிப்புணர்வு பரப்பப் படவேண்டும். நமது weakness யையும் நாம் அங்கீகரிக்கவேண்டும். இங்கே ‘நமது’ எனும் போது ‘நாம் எல்லோரும்’ என்று கூட எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. குறிப்பிட்ட அளவிலானவர்கள் என்று எடுத்துக் கொண்டாலே போதும். நாம் கொடுத்த இடத்தை மீட்கவேண்டும் என்றால் நமது சமூகத்தை சமத்துவ சமூகமாக்க வேண்டுமென்றால் நாம் மறந்து விட்ட மறக்கடிக்கப்பட்ட உன்மைகளை நினைவுக்குக் கொண்டுவரவேண்டும்.
//சாதி//
இந்த வார்த்தைக்கு கீழ் மேல் என்ற ஒட்டுக்கள் அருவருப்பானது. அவற்றை ஒட்டாமலேயே நாம் கூறவேண்டியதை கூற முடியும். அப்படி கூற முடியாத பட்சத்தில் அந்த விசயத்தைப்பற்றியே பேசாமல் இருப்பது நல்லது. அதி புரட்சிகர வினவின் அதிமுக்கிய பின்னூட்ட போராளியான நீங்களே இப்படி இருந்தால் நாம் எப்படி சமத்துவத்தை மீட்கப்போகிறோம். இரு முறை சுட்டிக்காட்டியும் இன்னும் தெய்வத்திற்கு சிறு என்ற ஒட்டைப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நாம் எப்போது அடிப்படைகளில் தேறப் போகிறோம். நாம் ஏன் இவ்வளவு பின் தங்கி விட்டோம் என்பதற்கு நீங்களே ஒரு சான்று. எனக்கு மலைப்பாகத்தான் இருக்கிறது. பார்ப்பனர்கள் ஏன் நம்மை ஆதிக்கம் செய்ய மாட்டார்கள்.
//தங்கள் கருத்தே பாலியல் பண்டம் என்ற அளவிலே நின்றுவிடுகிறது//
இல்லை. நான் நுகர்வு கலாச்சாரத்தை நிராகரித்தவன். ஆனாலும் எதிர் பாலினத்தை கண்களால் ரசிப்பதையும் நுகர்வு என்ற சொல்வது சரியல்ல என்று தான் நான் நினைக்கிறேன். ஈர்ப்பு என்று தான் சொல்ல வேண்டும்.
Dear Viyasan,Thendral,
Regarding Snow poem:
The first Part of the original Chines version says…
北国风光,千里冰封,万里雪飘。
望长城内外,惟余莽莽;
大河上下,顿失滔滔。
山舞银蛇,原【原注】驰蜡象,欲与天公试比高。
须晴日,看红装素裹,分外妖娆。
Google translation:
Northland scenery, ice, A thousand Piao.
Hope the Great Wall, but I vast;
Up and down the river, lose their surging.
Mountain Dance Silver Snake, the original [Note] original Chi like wax, with heaven in stature.
Shall sunny day, watching the red dress wrapped, particularly enchanting.
The last part of the original Chines version says…
江山如此多娇,引无数英雄竞折腰。
惜秦皇汉武,略输文采;
唐宗宋祖,稍逊风骚。
一代天骄,成吉思汗,只识弯弓射大雕。
俱往矣,数风流人物,还看今朝。
Google translation:
Land so countless heroes bow in homage.
Xi Qin and Han, slightly lost literary talent;
Tang SONG Zu, lagged.
Genghis, Genghis Khan, only shooting eagles, bow knowledge.
All to the men, a few heroes, also see today.
Mao அவர் நாட்டின் அரசர்களை கிண்டல் கேலி செய்கின்றார் ! 🙂
While explaing the last past of the poem Snow,
Our motherland so rich in beauty
Has made countless heroes vie to pay her their duty.
But alas! Qin Huang and Han Wu In culture not well bred,
And Tang Zong and Song Zu In letters not wide read.
And Genghis Khan6, proud son of Heaven for a day,
Knew only shooting eagles by bending his bows。
They have all passed away;
Brilliant heroes are those ,Whom we will see today!
Here Mao Teased and doing parody in his country kings !
Mao அவர் நாட்டின் அரசர்களை கிண்டல் கேலி செய்கின்றார் 🙂
//Dear Viyasan,Thendral,
Regarding Snow poem://
Dear Senthil anna,
I am sorry to burst your bubble, but you can’t rely on google for translating anything, not to mention a poem. Comrade Thendral is not accepting the translation of known scholars and academics but you want him to accept a google translation? 🙂
வியாசனை அவரின் இணைய தளத்தின் ஊடாகவும் ,எமது அனைத்துலக ஈழ சொந்தங்கள் மூலமாகவும் அவரை எமககு [தமிழ் ஆகிய நான்] வினவுக்கு அறிமுகம் ஆவதற்க்கு முன்பிருந்தே தெரியும். சீன மொழியை பயில்வதோ அல்லது பனி கவிதையின் உள்முகத்தை அறிவதோ இன்றைய நவீன யுகத்தில் மொழிபெயர்ப்பு ஒன்றும் பெரிய சிக்கல் இல்லை வியாசன். ஆனால் 10 வரிகளுக்கு உட்பட்ட அக்கவிதையை மொழிபெயர்ப்பு என்ற பெயரில் 25 வரிகளாக்குவது ,அதன் மூலம் கவிதை சொல்லாதா கதையை எல்லாம் மேற்கு கவிஞர்கள் தன் சொந்த கருத்தாக ஏற்றிவைப்பதில் எல்லாம் எமக்கு உடன்பாடு இல்லை வியாசன்
//Mao அவர் நாட்டின் அரசர்களை கிண்டல் கேலி செய்கின்றார் :)///
உண்மையில் மாவோவின் நோக்கம் தனது நாட்டு அரசர்களைக் கிண்டல் செய்வதாக இருந்தால் அவர்களை Heroes என்று வர்ணித்திருக்க மாட்டார். சீனர்களின் தாய்நாட்டுப் பற்று, அவர்கள் உலகின் பழமையான கலாச்சாரத்தைக் கொண்ட மக்கள், உலகில் பல அறிவியல் விடயங்களைக் கண்டு படித்தவர்கள் அவர்களின் முன்னோர்கள், அவர்களின் பேரரசர்களின் ஆற்றல் என்பவற்றை எண்ணிப் பெருமிதம் கொள்ளும் இயல்பை அறியாதவர்கள் மட்டுமே, சீனர்களை ஒரு கொடியின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டிய நிலையில் இருந்த மாவோ சேதுங், அந்த நாட்டின் மன்னர்களை கிண்டல் செய்கிறார் என்று கூறுவார்கள் என்பது தான் என்னுடைய கருத்தாகும். வேண்டுமானால் நீங்களே யாரும் சீனர்களிடம் முயற்சி செய்து பாருங்கள், இந்தக் கவிதையில் மாவோ சீனப் பேரரசர்களை இழிவு படுத்துகிறார், கேலி செய்கிறார் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
1. நான் கூட ராஜேந்திர சோழன் கங்கை முதல் கடாரம் வரை படையெடுத்து, இலங்கையையும் தன்னுடைய ஆட்சிக்குள் வைத்திருந்த மாவீரன். அவனது ஆட்சிக் காலத்தில் தமிழர்களை அவன் சென்ற நாடுகளில் எல்லாம் குடியேற்றிதமிழர்களுக்கு நாடு பிடித்திருக்கலாம், ஆனால் அவன் அதைச் செய்யவில்லை, அகவே அவன் எதிர்காலம் பற்றிய தீர்க்கதரிசனமற்ற முட்டாள் என்று நான் கூறினால் அது நான் ராஜேந்திர சோழனைக் கேலி பண்ணுவதாக அல்லது ராஜேந்திர சோழனை இழிவு படுத்துவதாக கருத்துக் கொள்ள முடியுமா?
2. இராச இராசன் ஒரு மாவீரன், அவனுக்குச் சண்டை பிடிக்கத் தான் தெரியும், போர்க்களத்தில் ஆயிரம் எதிரிகளை ஒரே வீச்சில் வெட்டி வீழ்த்துவான் ஆனால் அவனுக்குப் பாடவோ ஆடவோ தெரியாது. இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாது, அவன் எழுதியதாக எந்த இலக்கியமும் கிடையாது என்றால், நான் அவனைக் கிண்டலும் கேலியும் செய்கிறேன் என்று கருத்துக் கொள்ளலாமா?
ராஜராஜனின்[செங்கிஸ்கான்] பெருமைகள் மக்கள் பார்வையில் :
பார்பனர்களுக்கு நிலத்தை தானம் செய்த முதல் பெருமை பல்லவனை சேரும் என்றால் முறைமை படுத்தப்பட்ட நிலபிரபுத்துவ சமுகத்தை தன் ஆட்சியில் கட்டமைத்த பெருமை நண்பர் வியாசன் அவர்களின் அன்பிற்கும் ,அரவனைப்பிற்க்கும் உரிய ராஜராஜனையே சேரும். 7ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய நிலபிரபுத்துவ சமுகத்தை பேன்ற ஒரு நிலபிரபுத்துவசமுகத்தையே இராஜராஜன் தான் ஆண்ட நிலபரப்பில் விரிவாக்கம் செய்தார். அந்த பெருமை இராஜராஜனையே சாரும்.
1000 ஆண்டு பழமை உடைய தஞ்சை சிவன் கோவிலை கட்ட அவர் காட்டிக்கொண்ட முக்கியத்துவம், அதனால் தமிழ் இனம் செலவு செய்த உடல் உழைப்பு, மனித பேரழிவு ,மக்கள் உழைப்பு விவசாயத்தில் இருந்து திருப்பிவிடபட்ட நிகழ்வுகளை பார்த்தாலும் அவரின் முயற்சிகள் 2009 ஆண்டு ஈழத்த்து மானுடவியல்பேரழிவை அடுத்து கலைஞர் அவர்கள் நடத்திய செம்மொழி மாநாட்டையும் அதன் சிறப்புகளையும் தான் நமக்கு நினைவு கூறுகின்றது.
தளிசசேரி பெண்கள் ஆடல் மகளிர் என்றாலும் அவர்கள் ராஜராஜனால் அங்கிகாரம் செய்ய பட்டவர்கள் என்றாலும் அவர்களின் வாழ்வியல் முறை கலைஞ்ர் அவர்கள் ரசித்து விரும்பி பார்த்த ஆடலுடன் பாடல் தொலைகாட்சி நிகழ்சிகளை,கலைஞர் tv மானாட மயிலாட தொலைகாட்சி நிகழ்சிகளை எமக்கு நினைவு கூற தவறுவது இல்லை.
இவை எல்லாம் நான் கூறும் உண்மைகள். இவற்றின் உள்நோக்கம் ராஜராஜனை புகழ்வதா அல்லது நக்கல் நையாண்டி செய்வதா ? இப்போது பனி கவிதையின் விடயத்துக்கு வருவோம்.Land so countless heroes bow in homage. என்ற வாக்கியம் எதை,யாரை காட்டுகின்றது. அவ்வாக்கியத்தின் விளக்கமான Our motherland so rich in beauty Has made countless heroes vie to pay her their duty. எதை,யாரை சுட்டுகின்றது. அவர் அரசர்களை தான் சுட்டுகின்றார் என்றால் எண்ணற்ற ஹீரோஸ் என்று எழுதியிருக்க தேவை என்ன ? ஒரு சில என்று எழுதியிருக்க முடியுமே ! mao சுட்டும் countless heroes [எண்ணற்ற ஹீரோஸ்] என்பது அவர் நாட்டில் வரலாற்றில் வாழ்ந்து மறைந்த மக்களை தான் மரியாதை செய்ய வேண்டும் என்பதை சுட்டிகாட்டி அடுத்த 3 வரிகளில் அவர் நாட்டு மன்னர்களை நாக்கல் ,நையாண்டி ,கிண்டல் செய்வதை கிழே காண்போம்.
சீன பூமி எண்ணற்ற மைந்தர்களை [மக்களை] மரியாதை செலுத்த ….,
ஆனால் அந்தோ! சின் ஹுவாங் மற்றும் ஹான் வூ, மன்னர்களிடம் இலக்கிய தரம் இல்லை …,
டாங் சாங்ஸ் Zu எழுத்துக்களை வாசிப்பதில் மிகவும் பின்தங்க..,,
மற்றும் செங்கிஸ்கான் , சொர்கத்து திருமகன், வில்லால் கழுகை வீழ்த்த மட்டும் அறிய …,
இவர்கள் எல்லாம் மரணிக்க ….,
ஹீரோஸ் யார் என்றால் .., இன்று நாம் காண்பவர்களே !
முதல் மற்றும் இருதி வரிகள் சீன மக்களை புகழ்ந்தும் ,இடைபட்ட வரிகள் சீன மன்னர்களை கேலி ,கிண்டல்,நையாண்டி செய்தும் இருப்பதை நம்மால் அறிய முடிகின்றதது.
அம்பி,
“அறுவர் பயத்தை” என்று கூறும் திருமுருகுக்கு நச்ச்சியார்கினியார் எழுதிய உரை ,பக்தி இலக்கியங்கள் ஆகியவை வடமொழி ஆரிய பார்பன புராணத்தை அடிப்படையாக கொண்டு தான் முருக பிறப்பை கூற கருப்பிண்டத்தை அடிப்படையாக கொண்டு இருகின்றது என்னும் போது அம்பிக்கு அவற்றை ஏற்பதில் எந்த சிக்கலும் இல்லாத நிலையில் நமக்கு அம்பியின் அராசகவாத பார்பன சார்பு மட்டுமே தெரிகின்றது. முருக பிறப்பை விளக்கும் புராணங்கள் அனைத்துமே ஆரிய பார்பன மூலத்துடன் இருக்க அவற்றில் இருந்து அம்பி எடுத்து உரைக்கும் கருபிண்ட மாதிரி முருக பிறப்பை மட்டும் தமிழர்கலாகிய நாம் நம்ப வேண்டிய அவசியம் என்ன ? முருகனை வேளியர் குடி [குறிஞ்சி நிலத்து மக்கள்] தம் நிலத்தின் தலைவனாக நம்ப அவற்றை மறுதளிக்கும் அம்பியின் ஆரிய பார்பன புராணத்தை தமிழர்கலாகிய நாம் நம்ப வேண்டிய அவசியம் என்ன ?
இப்படியாக அம்பியின் ஆரிய அராசக மனம் இருக்க அவர் தன்னை, தன் மனதை சுயபரிசோதனை செய்து கொள்வதும் ,சுயவிமர்சனம் செய்து கொள்வதும் மிக்க அவசியம் ஆகின்றது !
இன்று ஒரு அம்பி ,ஒரு ஆரிய பார்பன புராணத்தை அடிப்படையாக கொண்டு சிவனை முருகனின் அப்பனாக ஏற்க சொல்கின்றார் அம்பி ! நாளை வேறு ஒரு அம்பி அல்லது தும்பி வேறு ஒரு ஆரிய பார்பன புராணத்தை அடிப்படையாக கொண்டு அக்கினியை முருகனுக்கு அப்பன் என்று ஏற்க சொல்லுவார் ! இதை எல்லாம் கேட்டுக்கொண்டு தலையாட்ட தமிழனுக்கு என்ன தலை எழுத்தா ?
// “அறுவர் பயத்தை” என்று கூறும் திருமுருகுக்கு நச்ச்சியார்கினியார் எழுதிய உரை ,பக்தி இலக்கியங்கள் ஆகியவை வடமொழி ஆரிய பார்பன புராணத்தை அடிப்படையாக கொண்டு தான் முருக பிறப்பை கூற கருப்பிண்டத்தை அடிப்படையாக கொண்டு இருகின்றது என்னும் போது அம்பிக்கு அவற்றை ஏற்பதில் எந்த சிக்கலும் இல்லாத நிலையில் நமக்கு அம்பியின் அராசகவாத பார்பன சார்பு மட்டுமே தெரிகின்றது. //
கருப்பிண்டம், தீப்பொறி என்பவை தமிழர் தொன்மங்களாக இருக்கமுடியாது என்று நீங்கள்தான் கூறுகிறீர்கள்.. அவை தமிழர் தொன்மங்களாகத்தான் இருக்கும் என்பதுதான் என் கணிப்பு..
// முருக பிறப்பை விளக்கும் புராணங்கள் அனைத்துமே ஆரிய பார்பன மூலத்துடன் இருக்க அவற்றில் இருந்து அம்பி எடுத்து உரைக்கும் கருபிண்ட மாதிரி முருக பிறப்பை மட்டும் தமிழர்கலாகிய நாம் நம்ப வேண்டிய அவசியம் என்ன ? //
முருகனின் தொன்மங்கள் இங்கிருந்து சென்றிருக்கும் போது, வட இந்திய புராணங்களில் எவை திரிபு புராணங்கள் என்று கண்டுகொண்டு ஒதுக்கி வைக்க நம்மிடம் சங்க ஆதாரங்கள் இருக்கின்றனவே..
// முருகனை வேளியர் குடி [குறிஞ்சி நிலத்து மக்கள்] தம் நிலத்தின் தலைவனாக நம்ப அவற்றை மறுதளிக்கும் அம்பியின் ஆரிய பார்பன புராணத்தை தமிழர்கலாகிய நாம் நம்ப வேண்டிய அவசியம் என்ன ? //
முருகன் பரவலாக தமிழகம் முழுவதும் எல்லாத் திணை மக்களாலும் வழிபடப்பட்டிருக்கும் போது குறிஞ்சியில் மட்டும் அவனை குறுக்கப்பார்ப்பது அவனை தமிழர் கடவுள் என்ற நிலையிலிருந்து ஒரு சில குலங்களின் தலைவனாக மட்டும் குறுக்குவதற்கு ஒப்பானது..
// இன்று ஒரு அம்பி ,ஒரு ஆரிய பார்பன புராணத்தை அடிப்படையாக கொண்டு சிவனை முருகனின் அப்பனாக ஏற்க சொல்கின்றார் அம்பி ! //
சிவன் முருகனின் அப்பன் என்று ஒரு ஆரிய பார்ப்பன புராணம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.. சங்க இலக்கிய ஆதாரங்கள் நம்மிடம் உண்டு..
// நாளை வேறு ஒரு அம்பி அல்லது தும்பி வேறு ஒரு ஆரிய பார்பன புராணத்தை அடிப்படையாக கொண்டு அக்கினியை முருகனுக்கு அப்பன் என்று ஏற்க சொல்லுவார் ! இதை எல்லாம் கேட்டுக்கொண்டு தலையாட்ட தமிழனுக்கு என்ன தலை எழுத்தா ? //
ஏன் தலையாட்ட வேண்டும்..?!
தென்றல் ஒரு மலக்கையும் ஒரு கிரேக்க கடவுளையும் கொண்டு வந்து ரெடியாக நிறுத்தி வைத்திருக்கிறார்.. வியாசர், முருக சித்தர், விந்து ஈட்டி,கந்து வட்டி என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்.. என்னமோ போங்கப்பா, முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றி கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்பது தமிழர் தொன்மம்தான் என்பதுதான் என் நிலைப்பாடு.. இதற்கு மேல் விவாதித்துக் கொண்டிருப்பதில் ஆர்வம் போய்விட்டது..
அம்பி,
\\புட்டியுடன் நீங்கள் நடத்திய தேனிலவு ஊடல் காட்சிகளில் இடைபுக நான் இசுலாமிய ஆதரவாளனோ/எதிர்ப்பாளனோ அல்ல..\\
தேனிலவு ஊடல் காட்சிகள் என்று எழுதுகிற அம்பி தான் யுனிவர்படியின் பாலியல் கருத்தை எதிர்ப்பவர்! அங்கே பார்ப்பனர்கள் என்ற வார்த்தை வந்ததற்காகத்தான் அம்பியின் பூணுல் அதிர்ந்திருக்கும். ஆனால் தேனிலவு ஊடல் காட்சிகள் என்று இங்கே எழுதுவதற்கு எந்தத் தசை உணர்ச்சியும் தேவை இல்லை இல்லையா! என்ன இருந்தாலும் அவாள் அவாள் இல்லையா?
‘இடைபுக இசுலாமிய ஆதரவாளனோ எதிர்ப்பாளனோ அல்லன்’ என்கிறார் அம்பி. இதன் உண்மையைப் பரிசீலிப்போம். யுனிவர்படி பார்ப்பன எதிர்ப்பு பேசிய பொழுது ரேச்சல் கோரியை கொன்றைதை விபத்து என்று சொன்னதற்கு தோழர்கள் உம்மை துரத்தினார்களே என்று அங்கு எழுதியபொழுது இசுலாமிய விடயம் அம்பிக்கு தொட்டு நக்கும் ஊறுகாயாக இருந்தது. இங்கு பார்ப்பனத் தரகுத்தனம் என்று நான் சுட்டுகிற பொழுது சரியத் சட்டத்திற்கு நீர் தரகுத்தனம் பார்த்ததாக சொல்கிறார்களே என்று அம்பிக்கு இப்பொழுது இசுலாமிய மதவெறி எதிர்தரப்பாக இருந்தது. இதில் ஆதரவாளனாகவும் எதிர்ப்பாளனாகவும் இசுலாமியத்தைப் பயன்படுத்த அம்பி தயங்கவேயில்லை. தன் சொந்த நலன்களுக்காக தீவைக்க தயங்காத பார்ப்பன பாசிசக் கொழுந்தாக இருந்தார். இந்த இலட்சணத்தில் ஆதரவாளனோ எதிர்ப்பாளனோ அல்லன் என்கிறார். வைத்திகள் வரலாற்றில் ஆதரவாளனாகவோ எதிர்ப்பாளனாகவோ இருந்ததாக வரலாறு கிடையாது! அம்பி அதையொட்டியே கம்யியாக நீள்கிறார். நீட்சியும் பார்ப்பனிய மீட்சியும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் என்பதை கருத்திலும் களத்திலும் முறியடிப்போம்!
\\அந்த கூத்தில் தலையிடாமல் பார்த்துக்கொண்டிருந்த அனைவரையும், பிற தோழர்கள் உட்பட, ’பார்த்து ரசித்த கழிசடைகள்’ என்று சுட்டுமளவுக்கு தங்களுக்கு மண்டை வீங்கிப்போயிருக்கிறது..\\
யுனிவர்படியை கண்டித்த பொழுது தோழரே என்று முயன்று பார்த்த அம்பி இப்பொழுது பிறதோழர்கள் என்று புதுநாடகம் போடுகிறார். பரிவட்டம் கட்டி ஒடுக்கப்பட்ட மக்களை ஒட்டச்சுரண்டிய கூட்டம் பஞ்சாட்சரம் வைத்து துளசித்தண்ணீர் தருவதில்லையா? அதைப்போல்தான் இதுவும்!
\\ அதிகம் ரசித்தவர்கள் அவர்கள் என்றால் கொஞ்சம் குறைவாக ரசித்தீர் என்பதற்கு இது ஒப்புதல் வாக்குமூலமா..?\\
மவுண்ட் ரோடும் மகாவிஷ்ணுவும் இப்படித்தானே கேள்விகேட்டார்; மக்களே உழல்வாதிகளாக இருக்கிறார்கள்! இதில் ஜெயாவைத் தண்டிக்கிறார்களே என்று! இதே வேலையை அம்பியின் மனுநீதி கறாராகச் செய்கிறது! ‘கொஞ்சம் குறைவாக ரசீத்தீர் என்பதற்கு இது ஒப்புதல் வாக்குமூலமா?’ என்று கேட்கிற அம்பிக்கு பதில் என்னவாக இருந்தாலும் இசுலாமிய வெறியை அதிகம் ரசித்தவர்களுக்கு அல்லல்பட்டு அயாரது உழைக்கும் அடிவருடியாக இருக்கிறார் என்பதில் தெளிவாக இருக்கிறார். பார்ப்பனப் பாசம் என்பது திணமணி வைத்தி என்றாலும் மவுண்ட் ரோடு என்றாலும் அம்பி என்றாலும் ஒன்றாகத்தான் இருக்கிறது. இதில் இவர் பார்ப்பனியத்தை சட்டை என்று சொல்லிவிட்டு பெருநிலவுடமை, ஆதிக்க நலன்கள் இரண்டும் கால்கள் என்பார்!
\\ பார்ப்பனிய எதிர்ப்பில் உங்கள் பங்காளியான புட்டிக்கு, எதிர்தரப்பில் இருப்பவர்களாக நீர் அடையாளம் காட்டுபவர்கள் முதுகில் குத்தி துரோகம் செய்தார்களா..? எதிரிதான் கழிசடையாக்கினான், முதுகில் குத்தினான் என்று ஒப்பாரி வைக்க வெட்கமாயில்லை..? மூக்கில் குத்தும்போது முதுகைக் காட்டிவிட்டு முதுகில் குத்திவிட்டான் என்று வீரம் பேசுவது உமது வழக்கமான வார்த்தை சாலம் மட்டுமல்ல, உமது வழக்கமான காறி காறி துப்பிக்கொண்டு இருக்க வேண்டிய கோழைத்தனமும் கூட.. இந்த சந்தர்ப்பவாத கூட்டுக்கு மாற்றாக சுயவிமர்சனத்தை சுட்டிக்காட்டினால் கோவம் வருகிறது.. கம்யூனிஸ்டு என்ற முகமூடியே இத்தனை கனமாக இருக்க, சுயவிமர்சனம் என்ற சுமையையும் உம் மீது ஏற்றுவதாக நீர் புலம்புவது புரிகிறது.. \\
காறி காறி துப்பிக்கொண்டு இருக்க வேண்டிய கோழைத்தனம் என்று சுட்டிக்காட்டுகிற அம்பிதான், தன்னை விமர்சிக்கிற யுனிவர்பட்டியை எனக்கு பங்காளியாகவும், தமிழ் தாகத்தை எனக்கு கால் அமுக்கிவிடுபவராகவும், நான் கக்குகிற மண்ணை தமிழ்தாகத்தை கவ்வச் சொல்வதாகவும் எழுதுகிறார் என்றால் இதில் காறி காறித் துப்புகிற கோழைத்தனம் எங்கிருக்கிறது?
இது ஒருபுறமிருக்க யுனிவர்படியை எதிர்தரப்பில் இருப்பவர்கள் தான் கழிசடையாக்கி முதுகில் குத்திய துரோகிகளாக என்று கேட்கிறார்? அம்பியின் துரோகத்தை முதலில் கவனிப்போம். பார்ப்பன பெண்களின் மீது கிரஸ் என்று சொல்கிற யுனிவர்படி லவ்-ஜிகாத்திற்கும் இதே வாதத்தைத் தான் பயன்படுத்தினார். கைக்கூலி யுனிவர்படி என்று எழுதியபொழுதெல்லாம் பார்ப்பன ஆதிக்க சாதிகள், இசுலாமிய வெறி கொண்டவர்கள் எல்லாம் அப்பொழுதும் தங்களுக்குள் அணி அமைத்துக்கொண்டு யுனிவர்படியை நியாயப்படுத்தினார்களே தவிர ஒருவரும் கண்டிக்கவில்லை, அம்பி கண்டிப்பதே அதில் பார்ப்பனர் வந்திருக்கிறார் என்ற ஒற்றைச் சொல் மட்டுமே. இதில் இந்தக் கூட்டம் ஓரணியில் நின்றுகொண்டு யுனிவர்படி கழிசடையாகவும் இருக்கவேண்டும்; அதே சமயம் பார்ப்பனிய எதிர்ப்பு பேசுவதால் எனக்கு பங்காளியாகவும் இருக்கவேண்டும்; இதுபோதாது என்று இசுலாமிய மதவெறிப்பிரச்சாரத்திற்கு யுனிவர்படியும் வேண்டுமென்றால் அம்பி முதற்கொண்டு துரோகியல்லாமல் வேறென்ன? ஏவி விட்டு வாழ்க்கை நடத்துகிற இந்தக்கூட்டம் நம்மிடம் யோக்கியவனாக கேள்வி கேட்கிறது!
இதில் சுயவிமர்சனம் என்ற வார்த்தையை அனிச்சையாக பயன்படுத்துவதில் அம்பி சளைக்காதவராக இருக்கிறார்! சுயவிமர்சனம் போராட்டவடிவங்களில் ஒன்று தெரியாத அளவிற்கு அம்பிகளுக்கு சுய அகங்காரம் அடிபட்டோ அடிபடாமலோ இருக்கிறது.
\\ தங்களை அறிவித்துக் கொண்டு கழிசடைத்தனம் செய்தால் தேவலை என்று கூறுவது பிழைப்புவாதத்தைவிட கேவலமான பிழைப்புவாத கழிசடைத்தனம்.. புட்டிக்கு அது குணம் என்றால் உமக்கு அது விருப்பத் தேர்வு..\\
லவ்ஜிகாத் பிராச்சாரத்திலேயே கழிசடைத்தனத்தைச் சுட்டிக்காட்டாத அம்பி கேவலமான பிழைப்புவாத கழிசடைத்தனம் பற்றி பாடம் எடுக்கிறார். கேவலாமன பிழைப்புவாத கழிசடைத்தனம் என்ற வார்த்தையை மேலும் நீட்டி முழக்காமல் அம்பி என்றே அழைப்போம்.
\\ உம்மிடம் போய் பரிசீலிக்கச் சொல்லி கோரிக்கை வைத்தது இப்போது எனக்கும் மானக்கேடாகத்தான் தெரிகிறது.. கூடவே உம் முகமூடி இப்போது கிழிந்திருப்பதால் என் சுய அகங்காரம் அடிபட்டதை நான் பொருட்படுத்தவில்லை..\\
நைச்சியத்தை கோரிக்கை என்று சொல்வது மானக்கேடாக தெரியவில்லை. இதில் என் முகமூடியை கிழித்தெறிந்தபின் உங்களுக்கு மானக்கேடாக தெரிவது வியப்பு. பாராட்ட பலபேர் இருக்கிறார்கள். என்ஜாய் பண்ணுங்கள். வாழ்த்துக்கள்.
// தேனிலவு ஊடல் காட்சிகள் என்று எழுதுகிற அம்பி தான் யுனிவர்படியின் பாலியல் கருத்தை எதிர்ப்பவர்! அங்கே பார்ப்பனர்கள் என்ற வார்த்தை வந்ததற்காகத்தான் அம்பியின் பூணுல் அதிர்ந்திருக்கும். ஆனால் தேனிலவு ஊடல் காட்சிகள் என்று இங்கே எழுதுவதற்கு எந்தத் தசை உணர்ச்சியும் தேவை இல்லை இல்லையா! என்ன இருந்தாலும் அவாள் அவாள் இல்லையா? //
ஊடலில் தசை உணர்ச்சி தேவை என்கிறீரா, தேவை இல்லை என்கிறீரா..?! ஊடல் என்றதும் கூடல் நினைவுக்கு வந்துவிட்டதோ..
// ‘இடைபுக இசுலாமிய ஆதரவாளனோ எதிர்ப்பாளனோ அல்லன்’ என்கிறார் அம்பி. இதன் உண்மையைப் பரிசீலிப்போம். யுனிவர்படி பார்ப்பன எதிர்ப்பு பேசிய பொழுது ரேச்சல் கோரியை கொன்றைதை விபத்து என்று சொன்னதற்கு தோழர்கள் உம்மை துரத்தினார்களே என்று அங்கு எழுதியபொழுது இசுலாமிய விடயம் அம்பிக்கு தொட்டு நக்கும் ஊறுகாயாக இருந்தது.//
தோழர் போல் படம் காட்டிய புட்டிக்கு நடந்ததை நான் நினைவு படுத்தியது உமக்கு தொட்டு நக்கும் ஊறுகாய் போல தெரிகிறது..
”தோழர் என்பது ரச்சேலுக்கு இருக்கட்டும். நம் இருவருக்குமே அதுவேண்டாம். அப்பொழுதாவது நம்மைப் போன்ற பின்னூட்ட கம்யுனிஸ்டுகளுக்கு போராட்டத்தின் மகத்துவம் நமக்கு புரிகிறதா என்று பார்ப்போம்.
தூக்கிவாரிப்போட்டது தாங்கள் அல்லர். இசுரேல் குறித்த உங்களது பின்னூட்டங்களால் நான் உட்பட பல நண்பர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம். நீங்கள் தான் இதை விமர்சனமாக ஏற்க வேண்டும்.” என்று அந்தப் பதிவில் ( https://www.vinavu.com/2014/07/22/rachel-corrie-dies-fighting-for-palestenian-rights-in-gaza/ ) நீர் புட்டியிடம் இதம்பதமாக கோரிக்கை வைப்பது இன்றுவரை தொடர்கிறது.. வெற்றிவேல் என்ற தோழர் உமக்கு அளித்த பதில் : “தோழர் தென்றல், விவாதங்களில் வரும் விருச்சுவல் ஆசாமிங்களை தோழருங்கன்னு எடுத்துக்குற உங்க அப்பாவித்தனம் பாவமா இருக்கு!”..
வெற்றிவேல் புட்டியை தோழர் இல்லை என்று சரியாக கண்டுபிடித்தார்.. ஆனால் உம்மை ஒரு அப்பாவித் தோழர் என்று எண்ணி ஏமாந்திருக்கிறார்..
// இங்கு பார்ப்பனத் தரகுத்தனம் என்று நான் சுட்டுகிற பொழுது சரியத் சட்டத்திற்கு நீர் தரகுத்தனம் பார்த்ததாக சொல்கிறார்களே என்று அம்பிக்கு இப்பொழுது இசுலாமிய மதவெறி எதிர்தரப்பாக இருந்தது. //
சாயிரா பானுவும் இசுலாமிய மதவெறி எதிர்ப்பாளராகத்தான் உமக்கு தெரிவார்.. அம்பி தெரிவதில் ஆச்சரியமென்ன..
// இதில் ஆதரவாளனாகவும் எதிர்ப்பாளனாகவும் இசுலாமியத்தைப் பயன்படுத்த அம்பி தயங்கவேயில்லை. //
ரச்செல் படுகொலையை விபத்து என்ற புட்டியின் பம்மாத்தை எடுத்துக் காட்டினால் அது இசுலாமிய ஆதரவா..? சரியத்துக்கு தரகுவேலை பார்த்தவர் என்ற குற்றம்சாட்டுகிறார்களே என்று உம்மைக் கேட்டது இசுலாமிய எதிர்ப்பா..?
இசுலாமியர்களை பகடையாக்கி படம் காட்டிக்கொண்டிருப்பது நீரும் புட்டியும்..
// தன் சொந்த நலன்களுக்காக தீவைக்க தயங்காத பார்ப்பன பாசிசக் கொழுந்தாக இருந்தார். //
அல்லக்கையிடம் கோரிக்கை வைத்து தனக்களிக்கும் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும் போலி புரட்சிக்கொழுந்து பேசுது..
// இந்த இலட்சணத்தில் ஆதரவாளனோ எதிர்ப்பாளனோ அல்லன் என்கிறார். வைத்திகள் வரலாற்றில் ஆதரவாளனாகவோ எதிர்ப்பாளனாகவோ இருந்ததாக வரலாறு கிடையாது! //
உம்மைப் போன்ற தில்லாங்கடி வைத்திகள் ஒரே நேரத்தில் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிப்பதில் வரலாறு படைப்பது பெருமைக்குரிய விசயமா..
// அம்பி அதையொட்டியே கம்யியாக நீள்கிறார். நீட்சியும் பார்ப்பனிய மீட்சியும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் என்பதை கருத்திலும் களத்திலும் முறியடிப்போம்! //
கருத்து கூறுவதாக எண்ணிக்கொண்டு அம்பி கம்பி நீட்சி மீட்சி என உளறிக் கொண்டிருக்கும் நீர் களத்தில் என்னத்தை முறியடிப்பீர் என்று தெரிகிறதே..
///
\\அந்த கூத்தில் தலையிடாமல் பார்த்துக்கொண்டிருந்த அனைவரையும், பிற தோழர்கள் உட்பட, ’பார்த்து ரசித்த கழிசடைகள்’ என்று சுட்டுமளவுக்கு தங்களுக்கு மண்டை வீங்கிப்போயிருக்கிறது..\\
யுனிவர்படியை கண்டித்த பொழுது தோழரே என்று முயன்று பார்த்த அம்பி இப்பொழுது பிறதோழர்கள் என்று புதுநாடகம் போடுகிறார். பரிவட்டம் கட்டி ஒடுக்கப்பட்ட மக்களை ஒட்டச்சுரண்டிய கூட்டம் பஞ்சாட்சரம் வைத்து துளசித்தண்ணீர் தருவதில்லையா? அதைப்போல்தான் இதுவும்!
///
புட்டியிடம் கோரிக்கை வைத்ததைக் கூட, கண்டித்துவிட்டோமே என்று எண்ணி வருத்தம் அடைகிறீர்..
உம்மைத் தோழரே என்று அழைத்தது ’அதி உன்னத தோழர்’, ’பெருமான்’ போன்ற பொருளில் அல்ல.. நீர் ஒரு கம்யூனிஸ்டு என்று கூறிக்கொள்வதை உமக்கே நினைவுபடுத்த.. பார்த்து ரசித்தவர்கள் கழிசடைகள் என்று அவதூறு செய்துவிட்டு அதை மறைக்க புதுநாடகம் போடுவது யார்..? பரிவட்டம் பஞ்சாட்சரம் என்று வாய்க்கு வந்ததை உளறி திசை திருப்புவது உமது அடுத்த நாடகம்..
///
\\ அதிகம் ரசித்தவர்கள் அவர்கள் என்றால் கொஞ்சம் குறைவாக ரசித்தீர் என்பதற்கு இது ஒப்புதல் வாக்குமூலமா..?\\
மவுண்ட் ரோடும் மகாவிஷ்ணுவும் இப்படித்தானே கேள்விகேட்டார்; மக்களே உழல்வாதிகளாக இருக்கிறார்கள்! இதில் ஜெயாவைத் தண்டிக்கிறார்களே என்று! இதே வேலையை அம்பியின் மனுநீதி கறாராகச் செய்கிறது! ‘கொஞ்சம் குறைவாக ரசீத்தீர் என்பதற்கு இது ஒப்புதல் வாக்குமூலமா?’ என்று கேட்கிற அம்பிக்கு பதில் என்னவாக இருந்தாலும் இசுலாமிய வெறியை அதிகம் ரசித்தவர்களுக்கு அல்லல்பட்டு அயாரது உழைக்கும் அடிவருடியாக இருக்கிறார் என்பதில் தெளிவாக இருக்கிறார். பார்ப்பனப் பாசம் என்பது திணமணி வைத்தி என்றாலும் மவுண்ட் ரோடு என்றாலும் அம்பி என்றாலும் ஒன்றாகத்தான் இருக்கிறது. இதில் இவர் பார்ப்பனியத்தை சட்டை என்று சொல்லிவிட்டு பெருநிலவுடமை, ஆதிக்க நலன்கள் இரண்டும் கால்கள் என்பார்!
///
மென்னியைப் பிடித்தால் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு, மனுநீதி என்று கைக்கு சிக்கியதை எல்லாம் இழுத்து முடிச்சு போட்டு வாய்ப்பந்தலில் தோரணமாக கட்டி தொங்கவிட வேண்டியது.. நீர் உளறிய உளறலில் ஏதேனும் பொருள் இருக்கிறதா..
///
\\ பார்ப்பனிய எதிர்ப்பில் உங்கள் பங்காளியான புட்டிக்கு, எதிர்தரப்பில் இருப்பவர்களாக நீர் அடையாளம் காட்டுபவர்கள் முதுகில் குத்தி துரோகம் செய்தார்களா..? எதிரிதான் கழிசடையாக்கினான், முதுகில் குத்தினான் என்று ஒப்பாரி வைக்க வெட்கமாயில்லை..? மூக்கில் குத்தும்போது முதுகைக் காட்டிவிட்டு முதுகில் குத்திவிட்டான் என்று வீரம் பேசுவது உமது வழக்கமான வார்த்தை சாலம் மட்டுமல்ல, உமது வழக்கமான காறி காறி துப்பிக்கொண்டு இருக்க வேண்டிய கோழைத்தனமும் கூட.. இந்த சந்தர்ப்பவாத கூட்டுக்கு மாற்றாக சுயவிமர்சனத்தை சுட்டிக்காட்டினால் கோவம் வருகிறது.. கம்யூனிஸ்டு என்ற முகமூடியே இத்தனை கனமாக இருக்க, சுயவிமர்சனம் என்ற சுமையையும் உம் மீது ஏற்றுவதாக நீர் புலம்புவது புரிகிறது.. \\
காறி காறி துப்பிக்கொண்டு இருக்க வேண்டிய கோழைத்தனம் என்று சுட்டிக்காட்டுகிற அம்பிதான், தன்னை விமர்சிக்கிற யுனிவர்பட்டியை எனக்கு பங்காளியாகவும், தமிழ் தாகத்தை எனக்கு கால் அமுக்கிவிடுபவராகவும், நான் கக்குகிற மண்ணை தமிழ்தாகத்தை கவ்வச் சொல்வதாகவும் எழுதுகிறார் என்றால் இதில் காறி காறித் துப்புகிற கோழைத்தனம் எங்கிருக்கிறது?
///
பங்காளியின் ஆதரவை இழந்துவிடும் பயம்தான் கோழைத்தனம்..
// இது ஒருபுறமிருக்க யுனிவர்படியை எதிர்தரப்பில் இருப்பவர்கள் தான் கழிசடையாக்கி முதுகில் குத்திய துரோகிகளாக என்று கேட்கிறார்? அம்பியின் துரோகத்தை முதலில் கவனிப்போம். பார்ப்பன பெண்களின் மீது கிரஸ் என்று சொல்கிற யுனிவர்படி லவ்-ஜிகாத்திற்கும் இதே வாதத்தைத் தான் பயன்படுத்தினார். //
அப்போதும் நீர் ஊடலில்தான் இருந்தீர்.. டைவர்ஸ் செய்யும் துணிவில்லை, மனமில்லை..
// கைக்கூலி யுனிவர்படி என்று எழுதியபொழுதெல்லாம் பார்ப்பன ஆதிக்க சாதிகள், இசுலாமிய வெறி கொண்டவர்கள் எல்லாம் அப்பொழுதும் தங்களுக்குள் அணி அமைத்துக்கொண்டு யுனிவர்படியை நியாயப்படுத்தினார்களே தவிர ஒருவரும் கண்டிக்கவில்லை, அம்பி கண்டிப்பதே அதில் பார்ப்பனர் வந்திருக்கிறார் என்ற ஒற்றைச் சொல் மட்டுமே. இதில் இந்தக் கூட்டம் ஓரணியில் நின்றுகொண்டு யுனிவர்படி கழிசடையாகவும் இருக்கவேண்டும்; அதே சமயம் பார்ப்பனிய எதிர்ப்பு பேசுவதால் எனக்கு பங்காளியாகவும் இருக்கவேண்டும்; இதுபோதாது என்று இசுலாமிய மதவெறிப்பிரச்சாரத்திற்கு யுனிவர்படியும் வேண்டுமென்றால் அம்பி முதற்கொண்டு துரோகியல்லாமல் வேறென்ன? //
புட்டியின் கழிசடைத்தனத்துக்கு அவரை திப்பு செமத்தியாக சாத்தியபோது புட்டிக்கு ஆதரவாக நானோ வேறு யாருமோ (’பார்ப்பன ஆதிக்க சாதிகள்’!) வராதது இசுலாமிய எதிர்ப்பு கழிசடைத்தனத்தில் புட்டிக்கு யாரும் பங்காளிகள் இல்லை என்பதைக் காட்டுகிறதே.. அதனால்தான் புட்டிக்கு துரோகம் செய்துவிட்டதாகப் புலம்புகிறீரோ..
கழிசடைத்தனம் தேவலை என்ற பிழைப்புவாத கழிசடைத்தனம் உம்மைத் தவிர இந்த தளத்தில் வேறு யாருக்கும் இருப்பது போல் தெரியவில்லை..
// இதில் சுயவிமர்சனம் என்ற வார்த்தையை அனிச்சையாக பயன்படுத்துவதில் அம்பி சளைக்காதவராக இருக்கிறார்! சுயவிமர்சனம் போராட்டவடிவங்களில் ஒன்று தெரியாத அளவிற்கு அம்பிகளுக்கு சுய அகங்காரம் அடிபட்டோ அடிபடாமலோ இருக்கிறது.//
வினவின் மட்டுறுத்தலால் தப்பியது உமது யோக்கியதை..
///
\\ தங்களை அறிவித்துக் கொண்டு கழிசடைத்தனம் செய்தால் தேவலை என்று கூறுவது பிழைப்புவாதத்தைவிட கேவலமான பிழைப்புவாத கழிசடைத்தனம்.. புட்டிக்கு அது குணம் என்றால் உமக்கு அது விருப்பத் தேர்வு..\\
லவ்ஜிகாத் பிராச்சாரத்திலேயே கழிசடைத்தனத்தைச் சுட்டிக்காட்டாத அம்பி கேவலமான பிழைப்புவாத கழிசடைத்தனம் பற்றி பாடம் எடுக்கிறார். கேவலாமன பிழைப்புவாத கழிசடைத்தனம் என்ற வார்த்தையை மேலும் நீட்டி முழக்காமல் அம்பி என்றே அழைப்போம்.
///
இசுலாமிய எதிர்ப்பில் புட்டி காட்டிய கழிசடைத்தனத்தை அம்பி சுட்டிக்காட்டவில்லை என்றால் அது பிழைப்புவாதமா.. அது கழிசடைத்தனம் என்று தெரிந்து கொண்ட நீர் அவருடன் சந்தர்ப்பவாத கூட்டணியை தொடர்வது என்ன வாதம், கழிசடைத்தனம் தேவலை என்பது என்ன தனம்.. அதைத்தான் உமது கேவலமான பிழைப்புவாத கழிசடைத்தனம் என்றேன்.. மாட்டிக்கொண்டவுடன் மூட்டையை எதிராளியின் தலையில் வைக்கும் தில்லாலங்கடி வைத்தி வேலையை நீர் இன்னும் விடவில்லை..
///
\\ உம்மிடம் போய் பரிசீலிக்கச் சொல்லி கோரிக்கை வைத்தது இப்போது எனக்கும் மானக்கேடாகத்தான் தெரிகிறது.. கூடவே உம் முகமூடி இப்போது கிழிந்திருப்பதால் என் சுய அகங்காரம் அடிபட்டதை நான் பொருட்படுத்தவில்லை..\\
நைச்சியத்தை கோரிக்கை என்று சொல்வது மானக்கேடாக தெரியவில்லை. இதில் என் முகமூடியை கிழித்தெறிந்தபின் உங்களுக்கு மானக்கேடாக தெரிவது வியப்பு. பாராட்ட பலபேர் இருக்கிறார்கள். என்ஜாய் பண்ணுங்கள். வாழ்த்துக்கள்.
///
உமது புனிதக்கூட்டணி ஒரு கம்யூனிஸ்டுக்கு பொருந்தாதது தோழர் என்று கூறுவது நைச்சியமா.. அப்படிக் கூறியும் நீர் தரித்துக் கொண்டிருப்பது கம்யூனிஸ்டு வேசம்தான் என்று நீரே காட்டிவிட்டபின் தோழர் என்று அழைத்தது மானக்கேடாகத்தான் தெரிகிறது..
\\ஊடலில் தசை உணர்ச்சி தேவை என்கிறீரா, தேவை இல்லை என்கிறீரா..?! ஊடல் என்றதும் கூடல் நினைவுக்கு வந்துவிட்டதோ..\\
மானங்கெட்டவர்கள் இப்பொழுது கூடலை நினைவுறுத்தும் வேலையை செய்கிறார்கள்!
\\தோழர் போல் படம் காட்டிய புட்டிக்கு நடந்ததை நான் நினைவு படுத்தியது உமக்கு தொட்டு நக்கும் ஊறுகாய் போல தெரிகிறது.. \\
பெரியாரின் விவாதத்தில் பார்ப்பனியத்தை விமர்சிக்கிற பொழுது தப்பிப்பதற்கு வாய்ப்பாக யுனிவர்படியின் இசுலாமிய வெறி இருந்தது. பல்லாயிரம் ஆண்டு கால பார்ப்பனிய இயங்கியல் அல்லவா அது! துஷ்டன் துரோணாச்சாரியை துரோகி கிருஷ்ணன் குருசேத்திரத்தில் நேர் நின்றா கொன்றான்? வஞ்சத்தாலும் சூழ்ச்சியாலும் தானே கொன்றான்? வீடு பற்றி எரிகிற பொழுது பீடிக்கு நெருப்பு பிடித்த சாமர்த்தியமல்லவா அம்பியினுடையது!
\\ வெற்றிவேல் புட்டியை தோழர் இல்லை என்று சரியாக கண்டுபிடித்தார்.. ஆனால் உம்மை ஒரு அப்பாவித் தோழர் என்று எண்ணி ஏமாந்திருக்கிறார்.\\
பாவம் அம்பிக்கு தெரிந்தது தோழர் வெற்றிவேலுக்கு தெரியவில்லை! பெரியவர் மாவோவிடமும் இதம் பதமாக கோரிக்கை வைத்ததை தோழர் சிவப்பு ஒரு முறையும் சரவணன் பலமுறையும் சுட்டிக்காட்டினார்கள். மாவோவுடனான சந்தர்ப்பவாதக் கூட்டணி மட்டும் அம்பிக்கு தெரியாமல் போய்விட்டதே! பார்ப்பனிய பாசமாக இருக்குமோ? பொதுவெளியில் விவாதம் நடக்கிற பொழுதே சூழ்ச்சியில் பார்ப்பனப்புத்தி இப்படி இருக்கிற பொழுது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இடங்கை சாதிகளைப்பற்றி வலங்கை சாதிகளிடமும் வலங்கை சாதிகளைப் பற்றி இடங்கை சாதிகளிடம் கூறி வயிறு வளர்த்த பார்ப்பனியத்தின் நைச்சியம் அத்துணை லேசுபட்டதா என்ன?
\\ சாயிரா பானுவும் இசுலாமிய மதவெறி எதிர்ப்பாளராகத்தான் உமக்கு தெரிவார்.. அம்பி தெரிவதில் ஆச்சரியமென்ன………. ரச்செல் படுகொலையை விபத்து என்ற புட்டியின் பம்மாத்தை எடுத்துக் காட்டினால் அது இசுலாமிய ஆதரவா..? சரியத்துக்கு தரகுவேலை பார்த்தவர் என்ற குற்றம்சாட்டுகிறார்களே என்று உம்மைக் கேட்டது இசுலாமிய எதிர்ப்பா…………… இசுலாமியர்களை பகடையாக்கி படம் காட்டிக்கொண்டிருப்பது நீரும் புட்டியும்..?\\
சாயிரா பானு, ரேச்சல், சரியத் சட்டம் என்று பேசுகிற அம்பிதான் காஷ்மீர் பார்ப்பனர்களை ஜிகாதிகள் விரட்டி விட்டனர் என்று அள்ளிப்போட்டவர். அங்கே ஆஜராகி பூணுலை உருவியவர், ரேச்சல் கோரிக்கு ஆஜராகவில்லை. ஆனால் பெரியார் விவாதத்தில் அம்பிக்கு ரேச்சல் பயன்பட்டார்! முருகனைப்பற்றி பேசுகிற இந்த விவாதத்திலும் சரியத் சட்டத்திலிருந்து சிக்கந்தர் தர்காவரை குல்லா போட்டார். இதில் இசுலாமியர்களை பகடையாக பயன்படுத்திய அம்பிக்கு நாணயமோ நாணமோ ஏதும் இல்லை. இந்த யோக்கியவான் பகடைக்காய் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். பரமபதம் ஆடியே பாராண்ட கூட்டம் அல்லவா?
\\ அல்லக்கையிடம் கோரிக்கை வைத்து தனக்களிக்கும் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும் போலி புரட்சிக்கொழுந்து பேசுது..\\
காந்தியவாதிகளே தனக்குத்தெரிந்ததை சுவற்றிலே துண்டுப்பிரச்சாரங்களாக ஒட்டத்தயங்காத பொழுது அம்பி ஆதரவைப் பற்றி பாடம் எடுக்கிறாராம்! வாதம் வைப்பவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லாமல் கால் அமுக்கபோ என்று அடுத்தவர்களைச் சொன்னவர் ஆதரவு பற்றி பேசுகிறார்.
\\ உம்மைப் போன்ற தில்லாங்கடி வைத்திகள் ஒரே நேரத்தில் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிப்பதில் வரலாறு படைப்பது பெருமைக்குரிய விசயமா..\\
ஆமாம். பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம். உழைக்கும் மக்களின் விழுமியங்களை ஆதரிக்கிறோம். இப்படி ஒரே நேரத்தில் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தால் தானே வரலாறு படைக்கமுடியும்? ஆதரவாளனும் அல்லன் எதிர்ப்பாளனும் அல்லன் என்று சொல்வதற்கு ஒட்டுண்ணிகள் அல்லவே!
\\ கருத்து கூறுவதாக எண்ணிக்கொண்டு அம்பி கம்பி நீட்சி மீட்சி என உளறிக் கொண்டிருக்கும் நீர் களத்தில் என்னத்தை முறியடிப்பீர் என்று தெரிகிறதே..\\
தெரிந்தால் வாழ்த்துக்கள். இருந்தாலும் மான ரோசம் இருந்தால் எங்களுடன் வேலை பார்க்க வரலாம். என்னத்தை முறியடிக்கலாம் என்பதை நேரில் வந்து மேலும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
\\ புட்டியிடம் கோரிக்கை வைத்ததைக் கூட, கண்டித்துவிட்டோமே என்று எண்ணி வருத்தம் அடைகிறீர்.. உம்மைத் தோழரே என்று அழைத்தது ’அதி உன்னத தோழர்’, ’பெருமான்’ போன்ற பொருளில் அல்ல.. நீர் ஒரு கம்யூனிஸ்டு என்று கூறிக்கொள்வதை உமக்கே நினைவுபடுத்த..\\
கூடலை நினைவுபடுத்துகிறீர்கள்! கம்யுனிஸ்டு என்று நான் கூறிக்கொள்வதை நினைவுபடுத்துகிறீர்கள். நிறைய சிரத்தைகள் எடுத்துக்கொள்வீர்கள் போல் இருக்கிறது!
\\ பார்த்து ரசித்தவர்கள் கழிசடைகள் என்று அவதூறு செய்துவிட்டு அதை மறைக்க புதுநாடகம் போடுவது யார்..?\\
தங்கள் முயற்சிதான் முதல் தரமே அடிபட்டுபோய்விட்டதே! “பார்த்து ரசித்த கழிசடை தாங்கள்” என்ற வாக்கியத்தில் தாங்களைத் தூக்கிவிட்டு ஏதாவது பொறுக்கலாம் என்று ஆசைப்பட்டீர்! பருப்பு வேகவில்லை. அவதூறு என்று நிரூபிக்க மேற்கொண்டு வாழ்த்துகிறேன். தளராமல் முயற்சி செய்யவும்.
\\ பரிவட்டம் பஞ்சாட்சரம் என்று வாய்க்கு வந்ததை உளறி திசை திருப்புவது உமது அடுத்த நாடகம்..\\
உங்களுக்கு நாடகம் என்று தெரிந்தால் வேறுவிதமாகச் சொல்லவிழைகிறேன். இந்தக் கீழான முயற்சியை கைவிடலாம். தோழர்களை அவதூறு செய்தார்! வெற்றிவேல் ஏமாந்து போனார் என்று எழுதுவதற்கு இது ஒன்று பிரம்மதேயம் வாங்கிப் பிழைக்கும் பார்ப்பனப் தர்பார் அல்ல.
\\ மென்னியைப் பிடித்தால் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு, மனுநீதி என்று கைக்கு சிக்கியதை எல்லாம் இழுத்து முடிச்சு போட்டு வாய்ப்பந்தலில் தோரணமாக கட்டி தொங்கவிட வேண்டியது.. நீர் உளறிய உளறலில் ஏதேனும் பொருள் இருக்கிறதா..\\
பொருள் இருக்கிறதா என்று பார்ப்பதற்கு முன்னர் மென்னியைப் பிடிக்க தாங்கள் என்ன நாயா? என்பதைப் பார்க்கவும். கவ்விக்கொள்ளவும் என்று ஒருபக்கம் எழுதுகிறீர்கள். மென்னியை பிடித்தேன் என்று இங்கு எழுதுகிறீர்கள்! கொஞ்சம் வெறியைத் தளர்த்தி ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும்.
“அதிகம் ரசித்தவர்கள் அவர்கள் என்றால் கொஞ்சம் குறைவாக ரசித்தீர் என்பதற்கு இது ஒப்புதல் வாக்குமூலமா..?” இது கேள்வி. மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவும் இதைத்தான் பயன்படுத்தினார். ஜெயலலிதா ஊழல்வாதி என்றால் மக்கள் ஊழல் செய்யவில்லையா என்று? பழியைப்போட்டுத் தப்பிக்க நடத்திய வாக்குமூலக்கோரலின் கேடுகெட்டதனம் இது! திணமணி வைத்தியின் நேர்மாறல் கணக்கும் இப்படித்தான். 60 கோடி கொள்ளைக்கு நான்காண்டு சிறைத்தண்டனை என்றால் 1.77 இலட்சம் கோடிக்கு எத்துணை ஆண்டுகள் தண்டனை என்று கேட்ட கூட்டத்தின் எதிரொலி தான் ஒப்புதல் வாக்குமூலமும். ஆகையால் ஜெயா மாமிக்கு கூஜாதூக்கினாலாவது திணமணி வைத்திபோன்று அஞ்சு பத்து பொறுக்கித் தின்னலாம். இங்கே குறைவாக ரசித்தது நீயா என்று கேட்பதன் மூலமாக ஒன்றும் சாதிக்க இயலாது. மேற்கொண்டு தற்காத்துக்கொள்ளவும்.
\\பங்காளியின் ஆதரவை இழந்துவிடும் பயம்தான் கோழைத்தனம்..\\
கவ்விக்கொள்ளச் சொன்ன கால் அமுக்கச் சொன்ன தைரியசாலி கோழைத்தனம் பற்றி பேசலாமா?
\\அப்போதும் நீர் ஊடலில்தான் இருந்தீர்.. டைவர்ஸ் செய்யும் துணிவில்லை, மனமில்லை..\\
காஷ்மீர் பார்ப்பான்களுக்காக ஜிகாதி ஜிகாதி என்று கோசமிட்டு விடுதலைப்போராளிகளின் மீது வன்மத்தைக் கக்கிய அம்பி இசுலாமிய எதிர்ப்பு பேசும் யுனிவர்படியை டைவர்ஸ் செய்ய துணிவில்லை என்று புலம்புகிறார். துரோகத்திற்கும் அளவில்லா அழுகை இது!
\\ புட்டியின் கழிசடைத்தனத்துக்கு அவரை திப்பு செமத்தியாக சாத்தியபோது புட்டிக்கு ஆதரவாக நானோ வேறு யாருமோ (’பார்ப்பன ஆதிக்க சாதிகள்’!) வராதது இசுலாமிய எதிர்ப்பு கழிசடைத்தனத்தில் புட்டிக்கு யாரும் பங்காளிகள் இல்லை என்பதைக் காட்டுகிறதே.. அதனால்தான் புட்டிக்கு துரோகம் செய்துவிட்டதாகப் புலம்புகிறீரோ..\\
திப்புவையும் எனக்கு ஆதரவாக பேசுகிறார் என்று பற்களைக் கடித்த அம்பி இப்பொழுது திப்புவையே தன் வாதத்திற்கு பயன்படுத்துகிறார். அடேங்கப்பா! அரக்கர்கள் அழிக்கப்பட்ட வரலாற்றை கண் முண் கொண்டு வந்து நிறுத்துகிறது அம்பியின் பார்ப்பனப்புத்தி! குழந்தை பால் குடித்தாலும் குறுக்கே புகுந்து முலை அறுக்கத் தயங்காத வெறி இது! இதில் அம்பியின் அடுத்த வரி இவ்வாறாக இருக்கிறது “கழிசடைத்தனம் தேவலை என்ற பிழைப்புவாத கழிசடைத்தனம் உம்மைத் தவிர இந்த தளத்தில் வேறு யாருக்கும் இருப்பது போல் தெரியவில்லை..” செம!
\\ வினவின் மட்டுறுத்தலால் தப்பியது உமது யோக்கியதை..\\
தன் கருத்துரிமையின் மீதே நம்பிக்கையில்லாமல் வினவின் மட்டுறுத்தலை விமர்சித்த அம்பி இங்கு அதே மட்டுறுத்தலை வைத்து எனது யோக்கியதைக்கு சான்று பகிர்கிறார். நல்லவேளையாக அம்பியின் வெறியில் இருந்து மட்டுறுத்தாளர் தப்பித்திருக்கிறார்!!!
\\ இசுலாமிய எதிர்ப்பில் புட்டி காட்டிய கழிசடைத்தனத்தை அம்பி சுட்டிக்காட்டவில்லை என்றால் அது பிழைப்புவாதமா.. அது கழிசடைத்தனம் என்று தெரிந்து கொண்ட நீர் அவருடன் சந்தர்ப்பவாத கூட்டணியை தொடர்வது என்ன வாதம், கழிசடைத்தனம் தேவலை என்பது என்ன தனம்.. அதைத்தான் உமது கேவலமான பிழைப்புவாத கழிசடைத்தனம் என்றேன்.. மாட்டிக்கொண்டவுடன் மூட்டையை எதிராளியின் தலையில் வைக்கும் தில்லாலங்கடி வைத்தி வேலையை நீர் இன்னும் விடவில்லை..\\
இதே முருகன் விவாதம் நடந்த பொழுது இணையாக யுனிவர்படியுடனும் ஜோசப்புடனமும் நான் நடத்திய விவாதத்தின் போது அம்பி எங்கே போயிருந்தார்? அப்பொழுதெல்லாம் சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று சொல்ல வக்கில்லாத அம்பி, தன் சுயம் சீரழிந்தபிறகு சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று புலம்புவது எதற்காக? தன்னை எதிர்த்தவர்களுக்கெல்லாம் நேர் நின்று பதில் சொல்ல துப்பில்லாத அம்பி மூட்டையை எதிராளியின் தலையில் வைப்பதாக அங்கலாய்க்கிறார். இவரெல்லாம் எதிராளியாம்! வெட்கக்கேடு!
\\ உமது புனிதக்கூட்டணி ஒரு கம்யூனிஸ்டுக்கு பொருந்தாதது தோழர் என்று கூறுவது நைச்சியமா.. அப்படிக் கூறியும் நீர் தரித்துக் கொண்டிருப்பது கம்யூனிஸ்டு வேசம்தான் என்று நீரே காட்டிவிட்டபின் தோழர் என்று அழைத்தது மானக்கேடாகத்தான் தெரிகிறது..\\
இவர் கடுப்புல புனிதக்கூட்டணிய கண்டுபிடிப்பாராம்! அது கம்யுனிஸ்டுகளுக்கு பொருந்தாது என்று சோசியம் பார்ப்பாராம்! ஆனால் யுனிவர்படி பயன்படுத்திய பாலியல் எல்லாமே பார்ப்பனர்கள் எழுதிவைத்த செளந்தர்ய லஹரியிலும் இருக்கிறது. மனுவின் ஸ்மிருதியிலும் இருக்கிறது. சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று அம்பலப்படுத்த விரும்புகிறவர் இதுபோன்ற பார்ப்பனக் கழிசடைத்தனங்களுக்கு பதில் சொல்லலாம். அதைவிடுத்து மானங்கெட்டதனமாக கம்யுனிஸ்டுக்கு பொருந்தாது என்று தீர்த்தம் கொடுப்பாராம். இப்படி விவாதங்களே ஏதும் அற்ற அம்பியின் வெறிக்கு கம்யுனிசம், தோழர் எல்லாம் தேவைப்படுகிறது. கொடுமை!
தென்றல், அம்பி, மற்ற நண்பர்கள் கவனத்திற்கு,
பொருள் சார்ந்து ஆரம்பிக்கும் விவாதம் பிறகு நபர், அதிலும் நபரை மட்டும் பேசுவதாக ஆகிவிடுகிறது. விவாதங்களை விரும்பி படிப்பவர்கள் இதை படிக்க மாட்டார்கள், பயனுமில்லை. கருத்துக்களை வைத்து மட்டும், விளக்கியோ, மறுத்தோ பேசுவது பயனளிக்கும். இறுதியில் ஒரு நபர் இப்படித்தான், இன்ன கொள்கை வைத்திருப்பவர் என்பதை அவரது கருத்துக்களின் மூலமே விளக்கலாம். அதில் கொஞ்சம் தவறி கருத்துக்கள் பின்னுக்கு போய் நபர் மட்டும் முன்னுக்கு வந்து விட்ட, விடும் உரையாடல்களை தவிர்க்குமாறு கோருகிறோம். நன்றி!
அம்பி,
உணிவேரை கழிசடை என்று திட்டுவதற்கு முடியும் போது உணிவேரை போன்றே தேனிலவு ,கால்அமுக்குதல் என்று பேசும் அம்பிக்கும் கழிசடை என்றே பெயர் வைப்பதில் என்ன தவறு ?
அம்பி://இது போன்ற கழிசடைகளிடம் கோரிக்கை வைத்து ஆகப் போவதென்ன தோழரே..? //
ஒரு கூட்டணியின் தேனிலவு ஊடலுக்கு எடுத்துக்காட்டு வேண்டுமா.. இதோ..:
”THE TWO decades long honeymoon of BJP-Shiv Sena, marriage of mutual understanding, is coming to an end, if sources in the parties are to be believed. Broadly hinting at the imminent end of its long-standing alliance with the Shiv Sena in Maharashtra, the state BJP president Nitin Gadkari asked his colleagues to be “mentally prepared” to fight the next assembly elections on their own. ”
– http://www.theverdictindia.com/politics.asp
இதை தங்களது நம்பிக்கைக்கு பாத்திரமான கூகுள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் மொழி பெயருங்கள்.. எனக்கென்னமோ இதுதான் கிடைத்தது..:
”கட்சிகள் ஆதாரங்கள் நம்பப்படுகிறது வேண்டும் என்றால், இரண்டு தசாப்தங்களுக்கு பிஜேபி-சிவசேனாவின், பரஸ்பர புரிதல் திருமணம் நீண்ட தேனிலவு, ஒரு முடிவுக்கு வரும். இந்நோக்கத்தை மகாராஷ்டிரத்தில் சிவசேனையின் அதன் நீண்டகால கூட்டணி உடனடி முடிவு புலப்படுகிறது, மாநில பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, தங்கள் மீது அடுத்த சட்டசபை தேர்தலில் போராட “மனதளவில்” என்று தனது சக கேட்டார்.”
தங்களுக்கு வேறு ஏதாவது கிடைக்கலாம்..
அம்பி அவரின் மற்ற அசீங்கமான பேச்சுகளுக்கு[கால்அமுக்குதல் etc ] விளக்கம் ஆரியபார்பன புராணத்தில் பொதித்து வைத்து உள்ளாரா ?
ஆமாம்.. புத்திரர்களும்,சிஷ்யகோடிகளும் தாய்,தந்தை,குரு போன்றோரின் கால் பிடித்துவிட்டு பணிவிடை செய்வதை புராணங்களில் காணலாம்.. எடுத்துக்காட்டாக சங்கீதம் பாடி களைத்துப்போன ஏமநாத பாகவதரின் கை,காலை செஞ்சுருட்டியும்,வெறுஞ்சுருட்டியும் பிடித்து அமுக்கிவிடுவதை திருவிளையாடல் திரைப்படத்தில் காணலாம்..
விவாதம்-தில்லைப்போராட்டம்-ஒரு பார்வை
பூணுல் அணிந்தாலும் முருகன் முருகன் தான் என்று சொல்கிற வியாசன் போன்றவர்கள் தில்லையை மீட்கும் போராட்டத்திலேயே புரட்சிகர இயக்கங்களுக்கு மக்களிடையே உள்ள ஆதரவு என்னவாக இருந்தது என்று என்று மஞ்சப்பந்து போட்டு புன்னகைக்கிறார். இப்படிச் சிரிக்கிற இவர் சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவை என்று சொன்னவர். இவர் ஒரு வகை.
தமிழனுக்கு தத்துவம் இங்கிருந்தே வந்தது என்று சொல்கிற இராம், சைவத்தை ஆசிவகத்தோடு தொடர்புபடுத்தி வைதீக நெறியோடு கலந்துவிட்டது என்று சொல்லி ஆதிக்க சாதிகளின் பார்ப்பன மதமான சைவத்தை தமிழர்களின் தலையில் கட்டப்பார்க்கிறார். இவர் இரண்டாம் தரப்பு.
வியாசனின் சல்லிய பருவத்தில் வருகிற குமார சம்பவத்தை மேற்கோள் காட்டிய அம்பி ஒரு கட்டத்தில், வடமொழி புராணங்களை எதற்கு இழுக்க வேண்டும்? தமிழ் சங்க இலக்கியமே முருகு பற்றி தொன்மங்களைக் கூறுகிறது என்று தாயின் மீது பழிபோடுவது போன்று தமிழ் சமூகத்தின் மீது புராண இழிவை சுமத்திவிட்டு நைச்சியமாக ஒதுங்கிக்கொண்டார்.
இந்த பார்ப்பன-சைவக் கூட்டு தில்லைப்போராட்டத்தில் என்னவாக இருந்தது? சைவமும் பார்ப்பனியமும் ஒன்றுக்கொன்று குலாவியதற்கு கீழ்க்கண்ட செய்தியை நாம் பரிசீலிக்க வேண்டும்.
சிவனடியார் ஆறுமுகம், தீட்சிதர்களால் தாக்கப்பட்டும் இழிவுபடுத்தப்பட்டும் இருந்த காலக்கட்டத்தில் தான், பார்ப்பனியக் கொளுந்துகள் மாணிக்க வாசகர் சபை என்றும் அப்பர் உழவார சபை என்றும் சைவத்தின் மூலமாக அண்டி துரோகக் கூட்டு வைத்திருந்தன வைத்திருக்கின்றன. கீழ்க்கண்ட கோவில்பட்டியில் ஒட்டப்பட்ட போஸ்டரில் உள்ள செய்தி தோழர் அதிஅசுரன் பார்வைக்கு வந்து வீச்சாக அம்பலப்படுத்தப்பட்டது. போஸ்டரில் உள்ள செய்தி தமிழ் பற்றாளர்களின் பார்வைக்கு;
—————————————————————————-
“சைவப்பெரியோர்களே!
சமீப காலமாக தெய்வ நம்பிக்கை சிறிதும் இல்லாத நாத்திகர்கள் சிலர், தமிழ் வேதம் என்ற போர்வையில், சைவ சமயத்துள்ளும், சிவாலயங்களில் செய்யப்பட்டுவரும் ஆகம வழிபாட்டு முறைகளிலும், பல குழப்பங்களைச் செய்து வருகிறார்கள். நம்முடைய சைவ மடாதிபதிகளை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்தியும் வருகிறார்கள். இவர்கள் கூற்று, தமிழ் மொழியால் மட்டுமே அர்ச்சனை, மற்றும் நித்திய நைமித்திக பூஜைகள், கும்பாபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்பது. இவர்கள் கூற்று சைவ சமயப்பற்றினாலோ, தமிழ் மொழிப்பற்றினாலோ எழுந்தது அல்ல. சம்ஸ்கிருத மொழி துவேசத்தாலும், இன துவேசத்தாலும் எழுந்தது. தமிழ் மந்திரங்கள் தமிழ் அர்ச்சனை என்பது ஒரு மாயை.
சிவாலயங்கள் அங்கு வழிபாடு செய்யும் சைவர்களுக்கு மட்டுமே உரிமையுடையது. அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு தெய்வ நம்பிக்கையே இல்லாத இவர்கள் யார்? அவர்கள் நோக்கமெல்லாம் இது போன்ற குழப்பங்களைச் செய்து, மொழி வெறியைத் தூண்டி, சுய விளம்பரமும், அரசியல் ஆதாயமும் தேடுவது தான். இவர்களிடம் சைவ மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களின் சாதுர்யப் பேச்சுக்களை உதாசீனம் செய்யுங்கள்.
சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்கும் உரிய பொதுவான சநாதன தர்மம், அதைத் தோற்றுவித்தவரும், வேத ஆகமங்களை அருளிச் செய்தவரும், அனாதி மூத்த சித்துரு ஆகிய சிவபெருமானாரே.
சைவம் நம்முடைய சமயம், தமிழ் நம்முடைய மொழி, சமஷ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், எல்லா உலகத்தவர்களுக்கும், எல்லா இனத்தவர்களுக்கும் உரிய பொதுமொழி, மொழி வெறியைத் தூண்டி நம்முடய சமயத்தை அழிக்க முயலும் வேடதாரிகளை ஒதுக்கித் தள்ளுங்கள்.
இது பற்றிய விரிவான உண்மைகளை அடியோங்கள் 14-4-1998ல் வெளியிட்ட “சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்! ஏன்?” என்ற வெளியீட்டில் கண்டு தெளிக.
இப்படிக்கு
திருமறை மன்றம், கோவில்பட்டி
ஸ்ரீ அப்பரடிகள் சிவாலய உழவரப்பணித் திருக்கூட்டம், கோவில்பட்டி
ஸ்ரீ மாணிக்கவாசகர் சைவ சபை, கோவில்பட்டி”
நன்றி (போர்ப்பறை இணையதளம், தோழர் அதிஅசுரன்)
—————————————————————————–
மொத்த விவாதத்தின் மறுபக்கமாக இந்தப் போஸ்டரில் உள்ள செய்தி இருக்கிறது. இதன் குரலாகத்தான் பின்னுட்ட பெட்டியும் முருகன் சுப்ரமணியனாக மாறினாலும் தமிழ் சடங்குகள் மாறிவிட்டனவா என்று அம்பிகள் கேட்டனர். கோர்ட்டு சூட்டும், பூணுலும் ஒன்று என்றனர் கோமாளிகள். தத்துவம் என்றனர் ஏமாளிகள். இதுதான் இன்றைய தமிழ் சூழல். ஆறுமுக சாமியும் புரட்சிகர இயக்கங்களும் பார்ப்பன கூட்டத்தோடு போராடிய பொழுது மக்கள் ஆதரவு என்னவாக இருந்தது என்று பல்லிளிக்கிற வியாசன் மற்றும் சைவம் தமிழர்களின் மதம் என்று சொல்கிற ஆதிக்க சாதிகளின் பார்ப்பன பிழைப்புவாதம் இந்தப் போஸ்டரில் மூலமாக தெரியவரும்.
—————————–
சிறிய இடைவேளை:
பொதுவாக தமிழகம் பார்ப்பன எதிர்ப்பு மரபின் அடையாளமாகத்தான் கண்டுகொள்ளப்படுகிறது. இதை வீச்சாக இறுகப்பற்றுவதற்கு இது போன்ற அசுரர்-தேவர் தொடர்பான பதிவுகள் உதவும். வினவிற்கு நன்றி. ஆதிக்கசாதி-பார்ப்பனக் கூட்டை முறியடிப்பதற்கு இது போன்ற விவாதங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும். முருகன் தொல்குடிகளின் கடவுள் என்பது கூட இங்கு மிக மிகக் குறைவாகத்தான் விவாதிக்கப்பட்டது. பார்ப்பனியம் கடவுளை பீ துடைத்த குச்சியாக பார்க்கிறது என்பதை பல மறுமொழிகள் உணர்த்துவதைப் பார்க்கிறோம். அதைத் தாண்டி கடவுளை தத்துவத்தின் கீழ் இணைப்பவர்களின் நிலை அவர்களின் வாழ்நிலையைப் பிரதிபலிக்கிறது. மறுகாலனியாதிக்க தனியார்மய சூழல் எவர் ஒருவருக்கும் கடவுளைப் பற்றி சிந்திக்கிற வாய்ப்பை பிரச்சனைக்களுக்கு தீர்வு என்ற அளவில் சுருக்குகிறது. இதைத்தாண்டி கடவுளைத் தத்துவமாக நிலை நிறுத்துகிற வாய்ப்பு வெகு சில குழுக்களுக்கு மட்டுமே உண்டு. தத்துவத்திற்காக வேலை செய்தவர்கள் ஆதிதேவரில் இருந்து ஆரம்பித்து சிவனில் கொண்டுபோய் நிறுத்தினார்கள். ஆதி தேவர் மனிதராக வாழ்ந்தவர் என்பதற்கும் புராணிகத்தின் பாரிய வீச்சிற்கும் கடவுள் என்கிற வடிவம் பயன்படுத்தபடவேயில்லை. மாறாக சிவன் உடையாராக மாற்றப்பட்டு நிலவுடமைச் சமூகம் ஒட்டச் சுரண்ட, மதம் எவ்வாறு பயன்பட்டது என்று இராச இராசனை முன்வைத்து பார்த்தோம்.
தமிழ் தாகம் போன்றவர்கள் மறி அறுத்து உண்கிற கடவுளை கொண்டு வந்துகாண்பித்தார்கள். பல சான்றுகளை முன்வைத்தார். வாழ்த்துக்கள். தமிழ் தேசியம் தொடர்பாக இவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாமல் இருந்தது. ஆனால் மூன்று விசயங்களைச் சுட்ட விழைகிறேன்.
1. பார்ப்பனியத்தை எதிர்க்காமல் தமிழ் தேசியம், தமிழர்களின் மதம், வழிபாடு, கலாச்சாரம் என்னவென்று வரையறுக்க இயலாது.
2. இந்திய தேசியத்தை எதிர்க்காமல் தமிழ் தேசியமும் என்பது என்ன? அப்படி பேசுபவர்களின் தேசியம் தரகுமுதலாளிகளின் சட்டமன்ற, பாராளுமன்றங்களை ஏற்றுக்கொண்டவர்களின் பிழைப்புவாதத்தில் போய்முடிகிறது. இதில் மக்களின் சுயநிர்ணய உரிமை நிர்ணயிக்கப்படுவதில்லை. வினவின் பல கட்டுரைகளை வாசித்து தமிழ் தேசியத்தின் பார்வை என்ன என்பதை விரிவாக விவாதிக்கலாம்.
3. பட்டுச்சேலை வாங்குவதற்காக தமிழ் நாடு வருகிற வியாசன் தமிழன் என்றால் கனிம வளங்களை கொள்ளையடித்து ஏற்றுமதி செய்கிற வைகுண்ட ராசனும் தமிழனே! இவ்விதம் தமிழன் என்ற வார்த்தை நம்மைச் சுரண்டுகிற முதலாளிகளுக்கும், மேட்டுக்குடிகளுக்கும் ஓடி ஒளிந்து கொள்ளும் முகமூடியாகவும் இருக்கிறது. மாறாக மொழியும் அதைச் சார்ந்த மக்களின் நலன்களும் காக்கப்பட வேண்டும் என்று கருதுபவர்கள் வர்க்கப்போராட்டம் பற்றி பேச வேண்டும். ஏனெனில் ஏகாதிபத்தியம், மறுகாலனியாதிக்கம், தனியார்மயம், தாராளமயம் போன்றவை முறியடிப்பதன் மூலமே மக்களின் மொழி பண்பாடு கலாச்சாரத்தைக் காக்க இயலும்.
இந்த விவாதத்தை இங்கு நிறுத்துகிறேன். விருப்பமுள்ள நபர்கள் மேற்கொண்டு விவாதியுங்கள். கூடியவரை நானும் கலந்து கொள்கிறேன். நன்றி.
// மஞ்சப்பந்து போட்டு புன்னகைக்கிறார். //
வியாசர் மஞ்சப்பந்து போட்டு புன்னகைத்தாரா எங்கே பந்து என்று யாரும் தேடப்படாது.. வியாசர் போடும் ஸ்மைலிக்கு தென்றல் மகரிஷி உருவாக்கிய படிமம்தான் இது என்று அறிக.. இந்த நவீன புராணீகர் தென்றல்தான் சரஸ்வதி நாவில் குடியிருந்தால் எங்கே கக்கூசு போவாள் என்று தன் தலைவரின் மதிநுட்பமிகுந்த கேள்வியை இங்கே எழுப்பியவர் என்பதும் நினைவு கூறத்தக்கது..
// வியாசனின் சல்லிய பருவத்தில் வருகிற குமார சம்பவத்தை மேற்கோள் காட்டிய அம்பி ஒரு கட்டத்தில், வடமொழி புராணங்களை எதற்கு இழுக்க வேண்டும்? தமிழ் சங்க இலக்கியமே முருகு பற்றி தொன்மங்களைக் கூறுகிறது என்று தாயின் மீது பழிபோடுவது போன்று தமிழ் சமூகத்தின் மீது புராண இழிவை சுமத்திவிட்டு நைச்சியமாக ஒதுங்கிக்கொண்டார்.//
அய்யா, பாரதத்தில் வரும் குமாரசம்பவத்தை மேற்கோள் என்ற பெயரில் முதலில் நீர் திரித்து புளுகியதை சுட்டிக்காட்ட வியாசரின் சல்லிய பருவத்தில் வரும் முருகன் பிறப்பை மேற்கோள் காட்டினேன்.. அதிருக்கட்டும், வியாச மகாபாரத்தில் மலையத்துவஜ பாண்டியனும்தான் பாண்டவர் சார்பாக தன் படைகளுடன் சென்று யுத்தம் செய்கிறார்.. பாண்டவ-கவுரவ படைகளுக்கு போரின்போது சோறு போட்டார் சேரலாதன் பெருஞ்சோற்றுதியன் என்று முரஞ்சியூர் முடிநாகர் புறநானூற்றில் பாடியிருக்கிறார்.. தமிழ்-ஆரியவர்த்தங்களிடையே அத்தனை நெருக்கம் நிலவிய போது தமிழரின் முருக தொன்மங்கள் ஆரியவர்த்தம் சென்றிருக்கக்கூடாதா.. தாங்கள் உருவாக்கிய மஞ்சப்பந்து படிமம் போல வட இந்திய கவிராயர்கள் சிலபல படிமங்களை உருவாக்கி வெவ்வேறு வகையில் முருகன் பிறப்பை பாடிவைத்திருக்கிறார்கள்.. நம்மிடமே முருகன் பற்றிய சங்கத் தொன்மங்கள் இருக்கும்போது வடபுல தொன்மங்களை ஏற்க தேவையில்லை என்று கூறினேன்.. உமக்கு முருகன் பற்றிய தமிழர் தொன்மங்களைக்கூட பார்ப்பன புளுகு என்று காட்டும் அளவுக்கு திராவிட ஆவேசம் இருப்பதால் நான் கூறுவதை தாய் மீது பழி போடுவது போல் என்று அவதூறு செய்கிறீர்..
\\நம்மிடமே முருகன் பற்றிய சங்கத் தொன்மங்கள் இருக்கும்போது வடபுல தொன்மங்களை ஏற்க தேவையில்லை என்று கூறினேன்..\\
கிமு முதல் இரு நூற்றாண்டில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் பல்யாகசாலை முதுகுகுடுமி பெருவழுதி என்ற பார்ப்பன அரசனும் இன்னபிற பாண்டிய மன்னர்களும் அசுவமேதயாகம் செய்ததற்குச் சான்றாக அக்காலத்து காசுகள் நிற்கின்றன. இரவு முழுவதும் கொழுத்த ஆண் குதிரையின் குறியை மன்னனின் மனைவிகள் பிடித்துக்கொண்டு நிற்க விடிந்தவுடன் யாகசாலையில் பார்ப்பனர்கள் அக்குதிரையை பொசுக்கி விருந்து உண்ணுவார்களாம் (தத்தோத்ச்சாரியார்). அசுவமேத யாகம் செய்யப்போய் ஸ்கலிதம் செய்த பார்ப்பனர்களின் விந்திலிருந்து பல அவதாரப்புருசன்கள் வேறு தோன்றியிருக்கிறார்கள். இந்த அசுவமேதயாக அசிங்கத்தையும் தொன்மம் என்று சொல்லி தமிழன் கண்டுபிடித்தது தான் அன்று அம்பி போன்ற பார்ப்பனத் தரகர்கள் சொல்வார்கள். நாம் தான் சொம்பைத் தூக்கி உள்ளே வைத்து கம்பை எடுத்து வெளியே வைக்கவேண்டும்.
உத்தரகாண்டம் என்ற ராமாயண பிற்சேர்க்கையில் ராணி இல்லாமலேயே ராமர் அசுவமேதயாகம் நடத்துகிறார்.. செத்துப்போன குதிரையின் ……யை அப்போது யார் பிடித்தது என்று தத்தோத்ச்சாரியாருக்குத்தான் தெரியும்..
// இந்த அசுவமேதயாக அசிங்கத்தையும் தொன்மம் என்று சொல்லி தமிழன் கண்டுபிடித்தது தான் அன்று அம்பி போன்ற பார்ப்பனத் தரகர்கள் சொல்வார்கள். நாம் தான் சொம்பைத் தூக்கி உள்ளே வைத்து கம்பை எடுத்து வெளியே வைக்கவேண்டும். //
அசுவமேத யாகம் பல்வேறு காலகட்டங்களிலும் பலரால் பலவிதங்களில் நடத்தப்பட்டது.. இது என்ன வழக்கம் என்று ஆராய்சி செய்து பார்க்கவும்.. சொம்புக்கு மாற்றாக குச்சி வைத்திருந்தீர்.. இப்போது அது கம்பாகிவிட்டதா.. கழிஞ்சுது போ..
இந்த விவாதத்தை தொடர வேண்டுமென்பதல்ல என்னுடைய நோக்கம், எந்த விவாதத்திலும், முடிவுரையாற்ற (Closing Statement) பங்குபற்றிய அனைவருக்கும் வாய்ப்பளிப்பது தான் வழக்கமே தவிர, ஒருவர் மட்டும் முடிவுரையை ஆற்றி விவாதத்தை முடித்து வைக்க முடியாது.
//வியாசன் போன்றவர்கள் தில்லையை மீட்கும் போராட்டத்திலேயே புரட்சிகர இயக்கங்களுக்கு மக்களிடையே உள்ள ஆதரவு என்னவாக இருந்தது என்று என்று மஞ்சப்பந்து போட்டு புன்னகைக்கிறார். இப்படிச் சிரிக்கிற இவர் சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவை என்று சொன்னவர்..///
வினவுடன் கருத்து வேறுபாடு இருந்த போதிலும் அவர்களின் தில்லையை மீட்கும் போராட்டத்துக்கு நான் எனது முழு ஆதரவையும் அளித்தேனா இல்லையா என்பது அவர்களுக்குத் தெரியும். அத்துடன் எனது வலைப்பதிவினூடாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை நன்கொடை அளித்துப் போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு கேட்டும், அத்துடன் சைவத்தமிழர்களின் அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு தில்லைச் சிதம்பரம் எவ்வளவு முக்கியமான கோயில் என்பதையும், அது தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய கட்டாயத்தையும் வலியுறுத்தி, அடிக்கடி எனது வலைப்பதிவில் எழுதி வருவதன் காரணமும் கூட, சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை என்று நான் நம்புவதால் தான். சரியாகப் புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் மீது புறணி பாடுவதில் தோழர் தென்றல் வல்லவர் என்பது யாவரும் அறிந்ததே.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களே உதவுங்கள்!
http://viyaasan.blogspot.ca/2013/12/blog-post.html
தில்லைக்கோயிலில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றுபடுவோம்!
http://viyaasan.blogspot.ca/2013/11/blog-post_30.html
கலைஞர் வேண்டுகோள்: தீட்சிதர்களுக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது!
http://viyaasan.blogspot.ca/2013/12/blog-post_736.html
சிதம்பரத்தில் ஈழத்தமிழர்களின் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்குமாறு செல்வி.ஜெயலலிதாவிடம் வேண்டுகோள்.
http://viyaasan.blogspot.ca/2013/04/blog-post_4167.html
ஈழத்து வன்னியர் செப்புப்பட்டயம் – சிதம்பரம் கைலைவன்னியனார் மடமும், நிலங்களும் எங்கே?
http://viyaasan.blogspot.ca/2013/05/blog-post_26.html
இது உண்மையா?
http://viyaasan.blogspot.ca/2013/12/blog-post_15.html
///இந்த பார்ப்பன-சைவக் கூட்டு தில்லைப்போராட்டத்தில் என்னவாக இருந்தது? ///
தில்லைப் போராட்டத்தில் பார்ப்பனச்- சைவக்கூட்டு உருவாகக் காரணமாக இருந்தவர்களே பெரியாரிஸ்டுகளும், பகுத்தறிவு திராவிடவாதிகளும், இராச இராசன் போன்ற, தமிழர்களின் முன்னோர்களைத் திட்டமிட்டுப் பழித்து, அவர்களின் கோயில்களை இழிவு படுத்தும், தென்றல் போன்ற, ‘தமிழரல்லாத’ வர்க்கப் போராளிகளும், அவர்களுக்கு ஜால்ரா போடும் தமிழ்த்தொண்டரடிப்பொடிகளும் தான்.
வாழ்நாள் முழுவதும், பெரும்பான்மைத் தமிழர்களின் மதவுணர்வை, அவர்களின் மதநம்பிக்கையை புண்படுத்தி அவர்களின் தெய்வங்களையும், தமிழ் தேவார, திருவாசகங்களையும், அவற்றை எழுதிய நாயன்மார்களையும் இழிவு படுத்தி விட்டு, திடீரென்று, தமிழில் தேவாரம் பாடுவதை அனுமதிக்கிறார்கள் இல்லை, அதற்காகப் போராடப் போகிறோம் என்றால் யார் நம்புவார்கள். எல்லோருமே, அதிலும் கடவுள் நம்பிக்கையுள்ள பெரும்பான்மைச் சைவத் தமிழர்கள் அவர்களின் உள்நோக்கத்தை சந்தேகக்கண் கொண்டு தான் பார்ப்பார்கள். தமிழில் தேவாரம் பாட முயன்ற தமிழன் சிவனடியார் ஆறுமுகசுவாமியைத் தீட்சிதர்கள் நடத்திய விதம் உண்மையான ஒவ்வொரு தமிழனது மனதையும் நிச்சயம் புண்படுத்தியிருக்கும் என்பது தான் உண்மை. அப்படியிருந்தும், பெரும்பான்மைத் தமிழர்கள் வினவு குழுவினரின் போராட்டத்துக்கு ஏன் ஆதரவளிக்கவில்லை என்பதை தோழர்கள் சிந்திக்க வேண்டும் என்பது தான் என்னுடைய பணிவான வேண்டுகோளாகும்.
கம்யூனிஸ்டுகளும், பெரியாரிஸ்டுகளும், திராவிடவாதிகளும் எவ்வாறு இஸ்லாமிய, கிறித்தவ மக்களின் மதவுணர்வை புண்படுத்துவதில்லையோ, அது போன்றே பெரும்பான்மைத் தமிழர்களின் மதங்களாகிய சைவ/வைணவத்தையும், அவர்களின் மதவுணர்வையும் புண்படுத்தாதிருந்தால் சைவத் தமிழர்கள் பார்ப்பனர்களுடன் இணைவதற்குப் பதிலாக, தமிழ்ச் சகோதர்களுடன் இணைந்து தில்லையை மீட்கப் போராடியிருப்பார்கள். தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றாகிய தில்லைச் சிதம்பரம் இன்றைக்குத் தீட்சிதர்களின் கைகளில் இருப்பதற்கும், தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே, தமது முன்னோர்களின் கோயிலில் தமிழில் பாட முடியாமலிருப்பதற்குமான இழிநிலைக்கு யார் காரணமென்றால் அதில் கணிசமான பழி, பகுத்தறிவு, திராவிட வாதிகளையும், பெரியாரிஸ்டுகளையும், பெரும்பான்மைச் தமிழர்களாகிய சைவ/வைணவர்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெற எந்தவித முயற்சியையும் செய்யாமல், தில்லைக் கோயில் போன்ற மதசம்பந்தமான போராட்டங்களில் மூக்கை நுழைக்கும் கம்யூனிஸ்டுகளையும் தான் சேர வேண்டும்.
///சிவாலயங்கள் அங்கு வழிபாடு செய்யும் சைவர்களுக்கு மட்டுமே உரிமையுடையது. அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு தெய்வ நம்பிக்கையே இல்லாத இவர்கள் யார்?///
இது நியாயமான கேள்வி என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்காகத் தான் பெரும்பான்மைத் தமிழர்களின் மதவுணர்வையும் மதித்து நடக்க வேண்டுமென நான் தொடர்ந்து கூறி வருகிறேன். பார்ப்பனீயத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் பெரும்பான்மைத் தமிழர்களின் மதவுணர்வைப் புண்படுத்தி, அவர்களின் மத நம்பிக்கைகளையும் அவமதித்து விட்டு, போராட்டத்தில் எங்களுடன் இணையுங்கள் என்றால் யார் இணைவார்கள். ஆகவே தமிழர்கள் அனைவரையும் சாதி, மத வேறுபாடின்றி நேசியுங்கள், அவரகளின் மதவுணர்வுகளை மதியுங்கள், தமிழர்கள் எல்லோரும், தமிழர்களாக உங்களுடன் இணைவார்கள்.
//போஸ்டரில் உள்ள செய்தி தோழர் அதிஅசுரன் பார்வைக்கு வந்து வீச்சாக அம்பலப்படுத்தப்பட்டது. ///
அதி அசுரன் என்ன நடுநிலையாளரா? அவரது வேலையே பல(ரின்) கட்டுரைகளை வெட்டியும், ஒட்டியும் தமிழ்த்தேசியத்துக்கு எதிராக வசை பாடுவது தானே. 🙂
//பார்ப்பனியத்தை எதிர்க்காமல் தமிழ் தேசியம், தமிழர்களின் மதம், வழிபாடு, கலாச்சாரம் என்னவென்று வரையறுக்க இயலாது.///
பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம் என்ற போர்வையில், பெரும்பான்மைத் தமிழர்களின் மதவுணர்வைப் புண்படுத்தியும், அவர்களின் கோயில்களை இழிவு படுத்தியும் (தஞ்சைப் பெரிய கோயிலைத் தென்றல் இழிவு படுத்தியது போன்று) தமிழர்களை ஒன்றுபடுத்தவோ, சாதியை ஒழிக்கவோ முடியாது. என்னுடைய அனுபவத்தில் தமிழரல்லாத திராவிட பகுத்தறிவாளர்களின் நோக்கமே தமிழர்களைத் தமிழர்கள் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுவதைத் தடுப்பது தான்.
///இந்திய தேசியத்தை எதிர்க்காமல் தமிழ் தேசியமும் என்பது என்ன?///
தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் இந்திய தேசியத்தை எதிர்க்கிறார்களா? திராவிட, பெரியாரிஸ்டுகள் எல்லோருமீ தமிழ்த் தேசியத்தை எதிர்க்கிறார்கள் அவர்கள் எல்லோருமே இந்திய தேசியத்தை, இந்திய ஒருமைப்பாட்டையும் எதிர்க்கிறார்களா என்பதை தயவு செய்து தெளிபடுத்தவும்.
தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியத்தை தமிழர்கள் நிலை நிறுத்துவதற்கு, இந்திய தேசியத்தை எதிர்க்க தமிழர்கள் ஏன் எதிர்க்க வேண்டுமென்று தோழர் தென்றல் விளக்க வேண்டும். இந்திய தேசியத்தை எதிர்க்காமலும் தமிழர்கள், தமிழ்த்தேசியத்தின் கீழ் ஒன்றுபட முடியும்.
இந்தியாவில் ஒவ்வொரு மொழிவழித் தேசிய இனமும் தமது சொந்த மாநிலங்களில் தமது மொழியையும், கலாச்சாரத்தையும், அவர்களின் பாரம்பரியத்தையும் பேணிக்காத்துக் கொண்டு, தம்மைத் தாமே ஆண்டு கொண்டு, தமது மொழி, இன அடிப்படையிலான தேசியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் அதே வேளையில் ஒரு இந்தியனாக, இந்திய தேசியத்தையும் அரவணைத்துச் செல்ல மொழிவழி மாநிலங்கள் அவர்களுக்கு உதவுகின்றன, ஆனால் தமிழ்நாட்டில் மட்டும், திராவிட, பெரியாரிய அரசியலின் காரணமாக தமிழரல்லாதவர்களின் கரங்களில் தமிழ்நாட்டின் பொருளாதாரமும், அரசியல் அதிகாரமும் இருப்பதால், தமிழ்நாட்டிலேயே தமிழ்த் தேசியதை தலை தூக்க விடாமல் திட்டமிட்டு நசுக்கப்படுகிறது. அதைத் தமிழர்கள் உணராமாலிருப்பதற்காக பகுத்தறிவு, வர்க்கப்போராட்டம், பார்ப்பனீய எதிர்ப்பெனும் பம்மாத்துகளின் மூலம் தமிழர்களை ஏமாற்றுகின்றனர் சிலர். ஆனால் அண்மைக்காலமாக, தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தப் பம்மாத்துகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்டு வருகிறார்கள் என்பதைக் காணக் கூடியதாக இருப்பது, என்னைப் போன்ற தமிழர்களுக்கு அறுதலை அளிக்கிறது.
///மாறாக மொழியும் அதைச் சார்ந்த மக்களின் நலன்களும் காக்கப்பட வேண்டும் என்று கருதுபவர்கள் வர்க்கப்போராட்டம் பற்றி பேச வேண்டும்.///
தமிழ்நாட்டில் தமிழர்களின் மொழியும், தமிழ்மக்களின் நலன்களும் காக்கப்பட வேண்டுமெனில், தமிழர்கள், சாதி, மத, வர்க்க பேதங்களை மறந்து தமிழர்களாக ஒன்று பட வேண்டும். முதலில் தமிழர்கள் மத்தியில் காணப்படும் உட்பகையை தமிழ்நாட்டுத் தமிழர்கள் இனங்கண்டு அவர்களை ஒதுக்க வேண்டும்.
திரு.வியாசன்,
உங்கள் கருத்துகளை தென்றல் ஏற்பது சந்தெகமே. இவர்,மற்றும் இவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் தொ.ப ஆகியோரின் சைவ விரோதம் வெளிப்படையானது. அதேவேளையில் கம்யூனிஸ்டுகளின்மீதான உங்கள் பார்வை முற்றிலும் தவறு.
நன்மாறன் , வியாசன் ,
ராஜராஜனும் அவன் அப்பனும் ,அவன் அப்பனுக்கு அப்பனும் ஆந்திரா ,கர்நாடக ,கேரளா என்று பல மாற்று மொழிமக்களிடம் இருந்து பெண் எடுக்கலாம் ,பெண் கொடுக்கலாம் …, ஆனால் அதே காரியத்தை ஒரு எளிய,சாமானிய தமிழ் மகன் செய்யும் போது உங்களுக்கு இனத்தூய்மை முதன்மையாக படுகின்றதா ?
தூய இனவாதம் பேசுவது, வந்தேறிகள் என்று பேசுவது ஆகியவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.
நான் சொல்ல வருவது மைய கருத்தாகிய “மஹிசாசுரனை போற்றுவதில் என்னடா குற்றம்” என்பதை பற்றிய விவாதத்திற்கு பதில் தனநபர் வசையாக மாரிகொன்டிருப்பதை. விவாதம் மைய கருத்தை நோக்கி சென்றால் வாசகர்கள் பயனுள்ள தகவல்களை பெறமுடியும்.
உதாரணமாக மஹிசாசுரனை தமிழகத்தில் கொண்டாடிய இயக்கங்கள் யாவை,மஹிசாசுரனை பற்றிய உன்மைகள் என்பது போல.
உங்கள் விளக்கத்துக்கு நன்றி நன்மாறன்
திரு.தமிழ்-தாகம்,
இதைப் பற்றி முன்பே நாங்கள் பேசியிருக்கிறோம். பெண் எடுப்பது அல்லது பெண் கொடுப்பதை வைத்து இங்கு யாரும் இனத்தூய்மை பேசவில்லை. ஒருவருடைய முதல் அடையாளம் தமிழர் என்பதாக மட்டும், அதாவது அவருக்கு தமிழர் என்பதைத் தவிர வேறு இன, மொழி அடையாளமில்லாதிருந்தால், அல்லது தம்மைத் தமிழனாக மட்டும் சனத்தொகைக் கணக்கெடுப்பில் குறிப்பிடுகிறவர்கள் அனைவரும் தமிழர்களே. ஒருவருக்குத் தமிழன் என்பதை விட வேறு இன, மொழி அடையாளம் இருக்கும் போது அவரை எப்படித் தமிழன் என்று அழைக்க முடியும் என்று நீங்கள் தான் விளக்க வேண்டும்.
ஒருவர் தமிழைப் பேசுவதாலோ அல்லது தமிழ்நாட்டில் வாழ்வதாலோ மட்டும் தமிழனாக முடியாது. உதாரணமாக இங்கிலாந்தில் வாழ்ந்து ஆங்கில மொழியைப் பேசும் ஈழத்தமிழர்களை ஆங்கிலேயர்கள் என்று யாரும் அழைப்பதில்லை.
குடியாட்சி காலத்தில் எல்லா நாட்டு மன்னர்களும் தமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தமது அரசை விரிவு படுத்தவும் வெவ்வேறு நாடுகளில் திருமண பந்தங்களை ஏற்படுத்தினர். அது சோழர்களுக்கு மட்டுமல்ல, ஐரோப்பிய நாட்டு அரசர்களுக்கும், உலகம் முழுவதிலுமுள்ள அரசர்களின் வரலாற்றிலும் காணப்படும் பொதுவான முறை. உதாரணமாக ஆங்கிலேய அரச குடும்பங்கள அனைத்தும், எலிசபெத் மகாராணி உட்பட, ஜேர்மன் இரத்தக் கலப்புடையவர்கள். அதன் அடிப்படையில் அவர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல என்று எந்த வரலாற்றாசிரியரும் கூறுவதில்லை. அவர்கள் ஆங்கிலேயர்கள் தான். அதே போன்று ராஜ ராஜ சோழனும், அவனது அப்பனும் வேறு நாடுகளில் பெண் எடுத்திருந்தாலும், அவர்களின் இன அடையாளம் தமிழர்கள் என்பது தான்.
உதாரணமாக, இலங்கையில் சிங்களவர்களின் இரண்டாயிரமாண்டு வரலாற்றிலே “the Great” என்று போற்றப்படும் ஒரேயொரு பேரரசன் முதலாம் பராக்கிரமபாகு தான். அவன் இலங்கை முழுவதையுமாண்டதுடன் தான் சீனாவுக்குக் கூடப் படையெடுத்தான், தமிழ்நாட்டுக்கும் படையெடுத்து, சோழர்களுடன் போரிட்டு, பல ஆண்டுகள் ராமேஸ்வரம் கோயிலையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தான். அவனை இன்றும் சிங்களவர்கள் உலகப் புகழ்பெற்ற சிங்கள மாமன்னன் என்று போற்றுவதுடன் அவனைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். இலங்கையின் வரலாற்றில் பராக்கிரமபாகு மட்டும் தான் உண்மையான அரச குடும்பத்திலிருந்து வந்தவன், அத்துடன் அவனது பட்டத்தரசியும் தமிழ்ப்பெண்ணாக இருந்ததால், தமிழர்களுடைய ஆதரவுமிருந்தது. அவனது காலம் இலங்கையின் பொற்காலமாகக் கருதப்படுகிறது.
மாமன்னன் பாராக்கிரமபாகுவின், தந்தை ஒரு தமிழன், மானாபரணன் என்ற பாண்டிய இளவரசனுக்கும், சிங்கள அரசன் விஜயபாகுவின் தங்கை மித்தாவுக்கும் பிறந்தவன் தான் பாராக்கிரமபாகு. அதை சிங்களவர்களின் மகாவம்சமே மறைக்கவில்லை. ஆனால் ஒரு தமிழனுக்குப் பிறந்தவன் எப்படி சிங்களவன் ஆவான், அவன் தமிழன் தானென வாதாடுகிறவர்களுக்குச் செருப்பால் அடிப்பார்கள் சிங்களவர்கள். பராக்கிரமபாகுவைச் சிங்களவன் என்று தான் வரலாற்றாசிரியர்களும் ஒப்புக் கொள்கின்றனர். அது போன்றே யாரை மணந்தாலும், வரலாற்றாசிரியர்களின் பார்வையில் ராஜ ராஜ சோழனும் அவனது அப்பனும் தமிழர்களே.
141. PARAKRAMA BAHU I 1140-1173 AD – Grandson of Vijaya Bahu I, Prince of Royal Blood, Pandyan descent, son of Manabharana and Vijaya Bahu’s sister, Mitta –
http://www.rootsweb.ancestry.com/~lkawgw/slm-kings.htm
அம்பி,
திராவிய-தமிழ் மக்கள் சிந்துவெளி நாகரிக காலம் கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், ஆரிய-பார்பன வேதகாலம் கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது இருக்க , ஆரிய-பார்பன புராணங்களின் காலம் கி.மு.6 அல்லது கி.மு. 7-ஆம் நூற்றாண்டு என்று இருக்க , திருமுருகு என்ற சர்சைக்குரிய கடைச்சங்க இலக்கிய காலம் என்பது கி.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ம் நூற்றாண்டு வரை இருக்க,திருமுருகு காட்டும் “அறுவர்பயத்த” என்று என்ற மேற்கோள் மற்றும் அதற்ககு நச்ச்சியார்கினியார் எழுதிய உரையில் “கருபின்டம்” என்று இருக்க அதுவும் ” ஆரிய-பார்பன பிரும்ம புராணத்தில் ” “கருபின்டம்” என்று இருக்க அவற்றை எல்லாம் தமிழர் தொன்மம் என்று நாகூசாமல் கூறும் அம்பிக்கு என்ன ஆயிற்று ?????
குறிப்பு :
திரு பேராசிரியர் :என். கங்காதரன் அவர்களின் புராணம் தொடர்பான கட்டுரைகளுக்கு மிக்க நன்றி
நன்றி :
Dr. N. Gangadharan is retired Professor of Sanskrit at the University of Madras and ex-Director of the Ananthacharya Indological Research Institute, Bombay. He is now Joint Director of the Sree Sarada Education Society Research Centre, Chennai.
//கருப்பிண்டம், தீப்பொறி என்பவை தமிழர் தொன்மங்களாக இருக்கமுடியாது என்று நீங்கள்தான் கூறுகிறீர்கள்.. அவை தமிழர் தொன்மங்களாகத்தான் இருக்கும் என்பதுதான் என் கணிப்பு..//
காலத்தால் முற்பட்ட வால்மீகி ராமாயணம் இடைச்சங்க பாண்டியரின் கபாடபுரத்தை விவரிக்கிறது, காலத்தால் பிற்பட்ட புறநானூற்று நெட்டிமையார் கடல் கொண்ட பஃறுளி ஆற்றையும், அதனினும் பிந்தைய சிலம்பு கடல் கொண்ட பஃறுளியாற்றையும், பன்மலை அடுக்கத்து குமரிக் கோடையும் பேசுவதால் இவை காலத்தால் முற்பட்ட ’பார்ப்பன வால்மீகி ராமாயண கபாடபுரப் புளுகின்’ நீட்சி என்று கதைப்பீர்களா..?! பாடப்படும் காலத்துக்கு முன்பே நிலவிக்கொண்டிருப்பதுதான் தொன்மம் என்பது ஏன் புரியவில்லை..?!
திருமுருகு காட்டும் “அறுவர்பயத்த” என்ற மேற்கோள் மற்றும் அதற்ககு நச்ச்சியார்கினியார் எழுதிய உரையில் “கருபின்டம்” என்று இருக்க அதுவும் ” ஆரிய-பார்பன பிரும்ம புராணத்தில் ” “கருபின்டம்” என்று இருக்க அவற்றை எல்லாம் தமிழர் தொன்மம் என்று நாகூசாமல் கூறும் அம்பிக்கு என்ன ஆயிற்று ?????
பாடப்படும் காலத்துக்கு முன்பே நிலவிக்கொண்டிருப்பதுதான் தொன்மம் என்பது ஏன் புரியவில்லை..?!
அம்பி,திருமுருகுவின் கடை சங்கத்துக்கு முற்பட ஆரிய-பார்பன புராணங்களின் இருந்த முருகபிறப்புக்கான “கருபிண்ட” கசடுகளை திருமுருகு தன்னுள் ஏற்று இருப்பதை தான் அம்பியுடன் விவாதிக்கும் இத்துனை நாட்களும் நான் கூறிக்கொண்டு இருகின்றேன் என்பது கூடவா அம்பியின் அறிவுக்கு புலப்படவில்லை ???
//முருகனின் தொன்மங்கள் இங்கிருந்து சென்றிருக்கும் போது, வட இந்திய புராணங்களில் எவை திரிபு புராணங்கள் என்று கண்டுகொண்டு ஒதுக்கி வைக்க நம்மிடம் சங்க ஆதாரங்கள் இருக்கின்றனவே..//
அம்பி,அதற்காக தான் முருகனின் முதுகுக்கு பூனூலும் ,அவனின் வழிபாட்டுக்கு ஆகம விதிகளையும் ஏற்றி அவனை சிறையில் ஆரிய சிறையில் அடைத்திர்கலா அம்பி ?முருகனை வேளியர் குடி [குறிஞ்சி நிலத்து மக்கள்] தம் நிலத்தின் தலைவனாக நம்ப அவை முருகனின் தொன்மமாக இருக்க அவற்றை மறுதளிக்கும் அம்பியின் ஆரிய பார்பன புராணத்தை தமிழர்கலாகிய நாம் நம்ப வேண்டிய அவசியம் என்ன ?
//முருகன் பரவலாக தமிழகம் முழுவதும் எல்லாத் திணை மக்களாலும் வழிபடப்பட்டிருக்கும் போது குறிஞ்சியில் மட்டும் அவனை குறுக்கப்பார்ப்பது அவனை தமிழர் கடவுள் என்ற நிலையிலிருந்து ஒரு சில குலங்களின் தலைவனாக மட்டும் குறுக்குவதற்கு ஒப்பானது..//
அம்பி , இவர் கூறும் அராசகமான ஆரிய-பார்பன புராணங்களின் இருந்த முருகபிறப்புக்கான “கருபிண்ட” என்ற கருத்தாக்கத்தை நாம் ஏற்க நாம் வேண்டுமாம் ,இவர் ஏதோ மிகவும் முயன்று ஆதாரங்களை கண்டுபிடித்தும் அதனை நாம் ஏற்காதது போன்று அல்லவா இதற்கு மேல் விவாதித்துக் கொண்டிருப்பதில் ஆர்வம் போய்விட்டது.என்று புலம்புகின்றார் !
//தென்றல் ஒரு மலக்கையும் ஒரு கிரேக்க கடவுளையும் கொண்டு வந்து ரெடியாக நிறுத்தி வைத்திருக்கிறார்.. வியாசர், முருக சித்தர், விந்து ஈட்டி,கந்து வட்டி என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்.. என்னமோ போங்கப்பா, முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றி கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்பது தமிழர் தொன்மம்தான் என்பதுதான் என் நிலைப்பாடு.. இதற்கு மேல் விவாதித்துக் கொண்டிருப்பதில் ஆர்வம் போய்விட்டது..//
அதை தானே தென்றல் , சேதன் பகத் அவர்கள் 2 ஸ்டேட் my marriage story என்ற நாவலில் தன் காதல் கதையை கூறிக்கொண்டே தமிழ் நாட்டு பார்பானின் இயல்புகளை தோலுரிப்பார் ! படித்து பாருங்கள் தமிழ் நாட்டு பார்பனர்களின் இயல்புகளை அம்பல படுத்த முடியும்
//பார்ப்பன ஆண்/பெண்களுக்கு திராவிட பெண்/ஆண்களின் மீது கிரஸ் அல்லது திராவிட ஆண்/பெண்களுக்கு பார்ப்பன பெண்/ஆண்களின் மீது கிரஸ் என்ற கருத்தில் மனிதர்களின் இயல்பான காதல் சார் வாழ்வை வரவேற்று போற்ற வேண்டும்.//
தாங்கள் நிறைய ஆங்கில நாவல்கள் படிக்கிறீர்கள் என்பது புரிந்துவிட்டது.. வினவுதான் எதையுமே தானும் விமரிசிப்பதில்லை, தங்களையும் விமரிசிக்க விடுவதில்லை.. தமிழ் பெருங்குடிகளுக்கு பெருத்த நட்டமய்யா..
இந்துமதத்தில் சமணக் கொள்கைகள் பற்றியும் மயிலை சீனி எழுதியிருப்பதை சுட்டியில் பக்கம் 11-ல் பாருங்கள் என்று ராம் சுட்டிக்காட்டியவுடன் தென்றல் மயிலையாரைப் பற்றி பேசுவதையே விட்டுவிட்டார்.. இப்போது சேதன் பகத்தை வவா சங்கம் வலை போட்டு பிடித்திருக்கிறது.. எத்தனை தலை உருளப்போவுதோ..
தமிழ்தாகம்,
சேத்தன் பகத்திற்கு போவதற்கு முன் பார்ப்பன துரோகங்களை தமிழ்நாட்டு நாட்டுப்புற வழக்காற்றியலிலும் நாம் நிறையக்காணலாம். சான்றாக காத்தவராயன் கதைப்பாடல் (வானமாமலை).
பறையரான காத்தவராயன் பார்ப்பனப்பெண் ஆரியமாலாவை காதலித்து மணம் செய்வான். முதலில் மன்னர் இவர்களை விட்டுவிட்டாலும் பார்ப்பனக்கூட்டம் மொத்த ஊரையும் கூட்டி இவர்களை எரித்துவிடுவார்கள். யுனிவர்படி இந்தத் துரோகத்தைச் சுட்டாமல் பாலியல்பண்டமாக கருத்தை நிறுத்தினார். இவர் கருத்துப்படி காத்தவராயன் கலருக்காகத்தான் ஆரியமாலாவைக் காதலித்தான் என்றாகும். இது சரியா? அதே சமயம் சாதிக்கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இவர்கள் எரித்துக்கொல்லப்பட்டார்கள் என்கிற பொழுது பார்ப்பனக் கூட்டம் இதை மனுவடிவிலே அனுலோம பிரதிலோம சங்கரங்களாக செயல்படுத்தியது என்பதும் தெளிவாகும்.
காத்தவராயன் பறையரா? இலங்கையில் காத்தவராயர் வழிபாடு தொன்று தொட்டு வழக்கிலிருந்து வருகிறது. காத்தவராயன் கதையில் பறையர்/பார்ப்பனர் என்ற சாதிப்பேச்சுக்கே இடம் கிடையாது. நா. வானமாமலை அவர்கள் அவரது நூல் வெளிவரு முன்னர் வெளிவந்த காத்தவராய சுவாமி கதை பற்றிய ஏனைய நூல்களையோ அல்லது அவரது கதைக்கு, வேறுபட்ட காத்தவராயன் கதைப் பாரம்பரியமும் உண்டென்பதைக் குறிப்பிடாதது பெருங்குறையாகவே அமைகிறது என ஈழத்தில் வெளிவந்த காத்தவராயன் கதை பற்றிய நூல் ஒன்று கூறுகிறது. அதாவது அவர் ஏனைய காத்தவராயன் கதை, கலாச்சாரப் பாரம்பரியங்களை அப்படியே இருட்டடிப்பு செய்து விட்டு, சாதியடிப்படையிலான (அதாவது திராவிட, பெரியாரிய சாயம் பூசி) அந்தக் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு விட்டார்.
இலங்கையில் தமிழர்கள் மத்தியில் காத்தவராயன் வழிபாடு இன்றும் பரவலாகக் காணப்படுகிறது. அங்கு காத்தவராயன் முருகனின் அவதாரமாகவும், தமிழர்களின் கிராமியத் தேவதையாகிய முத்துமாரியம்மனின் மகனாக பூவுலகில் அவதரித்த அரசனாகத் தான் காத்தவராயன் அல்லது காத்தலிங்கசுவாமி கருதப்படுகிறார். ஆரியப்பூமாலையை மணந்து கொள்ள காத்தவராயன் விரும்பினாலும் கூட முத்துமாரியம்மன் அனுமதிக்கவில்லையாம். ஆனால் அவர் பிடிவாதமாக ஆரியப்பூமாலையையே மணந்து கொள்ளப் போவதாக அடம்பிடித்தாதால் தான், மாரியாத்தா திருமணத்துக்கு சம்மதித்தாராம். இலங்கையில் இன்றும் காத்தவராயர் வழிபாட்டில் பார்ப்பனீயச் சடங்குகள் எதுவும் கிடையாது. ஆடு, கோழி என்பனவற்றை என்பவற்றைப் பலியிடும் பழக்கமுமுண்டு. ஆனால் இக்காலத்தில் கோயிலில் பலிய்டுவதற்குப் பதிலாக நேர்த்திக்கு விடப்பட்ட, ஆடு, கோழி என்பன ஏலத்தில் விடப்பட்டு அந்தப் பணம் கோயிலுக்குச் சேர்க்க்கப்படும்.
யாழ்ப்பாணத்துச் சிறுவர், சிறுமிகளின் காத்தவராயன் கூத்து
https://www.youtube.com/watch?v=lYf-vVaUGPY
பிரபாகரனின் ஊரில் காத்தவராயன் பூசையும், ஆடு, கோழி பலியும்.
காத்தவராயன் பறையனா என்பதற்கு பாடலில் இருந்தே சான்றுகள் தருவோம். காத்தவராயன் கூத்து தலித்துகளின் நாட்டுப்புற நிகழ்த்துக்கலையின் முதன்மையான வடிவம். காத்தவராயன் சுவாமி கதை என்று அளப்பதன் மூலமாக எந்த வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய இயலாது. மற்றபடி வியாசனின் வானமாமலையின் மீதான கருத்துகள் வெற்று அவதூறுகள். அவை விவாதத்திற்கும் தேவையற்றவை. இப்பொழுது சான்றுகளைக் கவனிப்போம்.
காத்தவராயன் பாடலை தரவிறக்கம் செய்யவிரும்புவர்கள் இதைப் பயன்படுத்தலாம்: http://www.thamizhagam.net/nationalized%20books/Vanamaamalai%20Naa.html
காத்தவராயனின் வளர்ப்புத்தாய் பாடுவது:
“பின்புத்திதான் நினைக்கும் பறச்சி பெத்த பிள்ளையவள்
நாம் பெத்தபிள்ளை யென்றால் நம்மைப்போல் ஆகாதோ?”
காத்தவராயன் பாடுவது:
“ஆத்தங் கரைதனிலெ அநேகம் பேர் பார்த்திருக்க
இதமுள்ள நீராட ஏகினேன் நீர் கேளும்
தண்ணீர் துறைதனிலே தான்கண்டு மாதயரும்
என்னழகைக்கண்டு இனிது மையல் தானாகி
என் கிண்ணாரச் சத்தம் கேட்டு மிகநடந்தாள்
மாதயரே என்பின்னே வராதே என்று சொன்னேன்
சோக்க் கிளிமொழியாள் என் வசனம் கேட்காமல்
வாரதைக்கண்டு மனதில்பயம் பிடித்து
பார்தனிலே நானும் பறையன், பறையன் என்றேன்”
//வியாசனின் வானமாமலையின் மீதான கருத்துகள் வெற்று அவதூறுகள். அவை விவாதத்திற்கும் தேவையற்றவை. இப்பொழுது சான்றுகளைக் கவனிப்போம்.///
தனக்குத் தான் எல்லாம் தெரியுமென்ற எண்ணமும் இப்படியான அதிகப்பிரசங்கத்தாலும் தான் தோழர் தென்றல் எல்லோரிடமும் அடிக்கடி குட்டு வாங்கிறார் போலத் தெரிகிறது. ஆதாரம் கேட்பது வேறு, அதிகப்பிரசங்கித்தனம் வேறு. அண்ணன் தென்றலைப் போல் எல்லோரும் ஆதாரமில்லாமல் உளறுவதில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் இ. பாலசுந்தரத்தின் “ காத்தவராயன் நாடகம்” என்ற நூலின் ஆய்வுரையில் தான், திரு. வானமாலை பற்றிய கருத்து கூறபட்டுள்ளது. அந்த நூலின் பக்கத்தின் படத்தை எனது வலைப்பதிவில் காணலாம். என்னுடைய சான்றுகளையும் கீழேயுள்ள பதிவில் காணலாம்.
காத்தவராயன் பறையரா? ஆனால் ஈழத்தில் அவனுக்குச் சாதியில்லையே?
http://viyaasan.blogspot.ca/2014/12/blog-post_9.html
வெற்று அவதூறு என்று சொல்லியபிறகு பாலசுந்தரத்தைக் கூட்டி வந்து சபையில் அமரவைத்தாலும் அவதூறு என்பது மாறிவிடப்போவதில்லை. ஏனெனில் வானமாமலை தன் முன்னுரையிலேயே பல கதைப்பாடல்கள் உள்ளன என்பதை சொல்லியிருக்கிறார். தமிழகத்திலிருந்து நாட்டுப்புற பாடல்கள் இலங்கை செல்கிற பொழுது அது அடைந்தமாற்றங்களும் பேசப்பட்டிருக்கின்றன. சான்றாக மலையக நாட்டார் இலக்கியம்-மரபும் மாற்றமும் : லெனின் மதிவானம் http://inioru.com/?p=22527
காத்தவராயனை சாதியற்றவர்களாக இவர்கள் பார்க்கிறார்கள் என்பது பாசாங்கு. இவர்களின் ஆதிக்க சாதிவெறியை மறைக்கப் போடுகிற நாடகமே. கிணற்றிலே தண்ணீர் எடுக்கவிடாத வெள்ளாள சாதிவெறியர்கள் பங்கருக்கு பயந்துதான் சாதியைத் தொலைத்ததாக காட்டிக்கொண்டார்கள். ஆனால் இன்றோ வெளிநாட்டில் குந்திக்கொண்டு எமது காணி நிலத்தை பல்பொடிகள் ஆளுகின்றன என்று வெள்ளாள இணையதளத்தில் சாதிவெறியர்களாக காட்டிக்கொள்ளவும் தயங்கவில்லை என்பது தான் இன்றைய வரலாறு. காத்தவராயன் பாடலே ஆரிய மேலாண்மையைத்தான் நாட்டுகிற பொழுது, இவர்கள் அதையும் உருவி வரலாறு காட்டுகிறார்களாம். வெட்கக்கேடு!
தோழர் தென்றலின் பிரச்சனை என்னவென்றால், அவர் ஒப்பீடுகளை மேற்கொள்ளும் போது, அல்லது எடுத்துக்காட்டுகளைக் கூறும்போது, சிந்தித்துப் பார்ப்பதில்லை. லெனின் மதிவானத்தின் கருத்து மலையகத் தமிழர்களுக்குப் பொருந்தும், ஆனால் எப்படி ஈழத்தமிழர்களுக்குப் பொருந்தும். நாங்கள் ஒன்றும் அண்மையில் அல்லது முற்றாகவே தமிழ்நாட்டிலிருந்து இலங்கையில் குடியேறியவர்கள் அல்லவே.
ஈழத் தமிழர்கள் அனைவரும் இக்காலத்தில் தமிழ்நாடு என்றழைக்கப்படும் (வேங்கடத்தை இழந்த) குறுகிய நிலப்பரப்பிலிருந்து இலங்கைக்கு குடியேறவில்லை. தொன்று தொட்டு இலங்கைத் தீவும், தமிழ்நாடும் சேர்ந்த நிலப்பரப்பின் இருபகுதியிலும் வாழ்ந்த தமிழர்கள், கடல்கோளாலும், அல்லது ஆழமற்ற பாக்குநீரிணையில் மணல் திட்டுகள் மறைந்து காலப்போக்கில், வெறும் கால்களால் நடந்து கடக்க முடியாதவாறு ஆழமாகியதால், தமிழ்நாட்டுக் கரையில் வாழ்ந்த தமிழர்களுடன் நெருக்கமான தொடர்பற்றுப் போனதால், தனித்துவமான தமிழர்களின் மொழி, மற்றும் பாரம்பரியங்களை அழியாமல் பாதுகாத்துக் கொண்ட ஆதித்தமிழர்களின் வழி வந்தவர்கள் தான் ஈழத்தமிழர்களே தவிர அண்மைக்காலத்தில் குடியேறியவர்கள் அல்ல. ஆகவே எங்களிடம் காணப்படும் கதைகளும், கலாச்சார விழுமியங்களும் எங்களின் தமிழ் முன்னோர்களிடமிருந்து, எங்களின் நாட்டில் நாங்கள் பெற்றவையே தவிர, இக்காலத்தில், தமிழரல்லாதாரின் தொடர் படைஎடுப்பினாலும்,ஆட்சியினாலும், நெருக்கத்தாலும், தமது தமிழ்ப் பாரம்பரியத்தை, இழந்து விட்ட அல்லது இழந்து கொண்டிருக்கிற தமிழ்நாட்டுத் தமிழர்களிடமிருந்தல்ல. 🙂
// வானமாமலை தன் முன்னுரையிலேயே பல கதைப்பாடல்கள் உள்ளன என்பதை சொல்லியிருக்கிறார்.//
அவர் அவற்றைத் தெளிவாகக் குறிப்பிடாததைத் தான் பேரா. பாலசுந்தரம் பெருங்குறையாகக் கருதுகிறாரோ என்னவோ, அவரிடம் தான் கேட்க வேண்டும். அதாவது காத்தவராயன் பற்றிய வேறுகதைகளும் உண்டு, என்பது உங்களுக்கும், வானமாமலைக்கும் தெரியுமென்று நீங்கள் ஒப்புக் கொள்வதாக எடுத்துக் கொள்கிறேன். 🙂
தமிழர்கள் சாதி, மதம், மொழி பேதம் இல்லாமல் ஒன்றுபடவேண்டுமென வகுப்படுக்கிற வியாசன்தான் மலையகத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் ஒன்றல்ல என்பார். சிறுபான்மைத் தேசிய இனங்களை நாங்கள் வரையறுக்கிற பொழுது தமிழ் தேசியம் என்று வீராப்பு காட்டிய வியாசன் கலாச்சாரம் என்று வருகிற பொழுது பாசிஸ்ட்டாக வேடம் போட்டு இது எங்கள் கலாச்சாரம் என்பார். தங்கள் உயிரையும் உழைப்பையும் நல்குகிற மலையகத் தமிழர்களுக்கு இந்தியனும் ஈழனும் சிங்களவனும் இனவெறியின் அடிப்படையில் தான் கலாச்சாரத்தை எடைபோடுகின்றனர் என்றால் இவர்களின் தமிழ் தேசிய யோக்கியதையை அனைவரும் கேள்வி கேட்க வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, மலையகத் தமிழர்கள் வந்தேறிகள் என்பதால் காத்தவராயன் கதைக்கு இதைச் சான்றாகக் கொள்ள முடியாது என்கிறார். இவரது பார்வைப்படியே வருவோம். காத்தவராயன் கதை உருவானதாக சொல்லப்பட்ட காலம் விஜய நகரப் பேரரசுக்கு சற்று முந்தையது. காலத்தை சற்று இன்னும் பின்னோக்கி கிபி எட்டாம் நூற்றாண்டு என்று சொல்கிற கட்டுரைகளும் இணையத்தில் உள. காத்தவராயனும் ஆர்யமாலாவும் கழுவேற்றி கொல்லப்படுவதாக பாடலும் கூத்தும் திருவிழாவும் இன்றளவும் அமைகின்றன. இந்தப் பொதுத் தன்மை எல்லா கூத்து வடிவங்களிலும் உள்ளன. இதுதான் விவாதத்திற்குத் தேவையான முதன்மையான அம்சம். காத்தவராயன் ஏன் கொல்லப்பட வேண்டும் என்பதில் பார்ப்பனியம் ஒற்றைத் துருவமாக இருக்கிற பொழுது அன்னாரது ஈழக்கலாச்சாரம் மட்டும் வெளிக்கி இருந்துகொண்டு வெள்ளரிக்காய் தின்பதாக இருக்கிறது. ஆளைக்காலி பண்ணிய கூத்தை குச்சிமிட்டாய் தின்றுகொண்டு இரசித்துவிட்டு எங்கள் கலாச்சாரத்தில் காத்தவராயனுக்கு சாதி பார்க்கப்படுவதில்லை என்று வியக்கிறார். இது இதோ அற்பத்தனம் மட்டுமல்ல; பார்ப்பனியத்தையே எங்கள் கலாச்சாரம் என்று போற்றுகிற அடிமைத்தனமும் ஆகும். கேட்டால் பார்ப்பனியச் சடங்குகள் இல்லை என்பார். ஆடு கோழி பலியிடல் சடங்கு நடக்கிறது என்று கூறுவார். ஆனால் இதே வியாசன் தற்பொழுது ஆடு கோழிக்கு பதிலாக காசை கோயிலில் சேர்க்கிறோம் என்று வழிபாட்டு முறையை ஆதிக்க சாதிகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை டங்கு சிலிப்பாகி நியாயப்படுத்தியிருக்கிறார். இராசபக்சே கோயில்களை இடிக்கிற பொழுதெல்லாம் பம்மி இருந்துவிட்டு, ஆடு கோழி பலியிடுவதை தடுப்பதற்கு அறவழியில் போராடுவார்கள் ஆதிக்கசாதிகள். இவரது வாதத்தின் தன்மையே இதைச் சுற்றிதான். காத்தவராயன் கலாச்சாரம் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து.
///தமிழர்கள் சாதி, மதம், மொழி பேதம் இல்லாமல் ஒன்றுபடவேண்டுமென வகுப்படுக்கிற வியாசன்தான் மலையகத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் ஒன்றல்ல என்பார். ///
தோழர் தென்றலைப் பற்றி எந்தளவுக்கு நான் புரிந்து வைத்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கே பயமாக இருக்கிறது. நான் எழுதுவதைத் திரித்து இப்படி ஏதாவது உளறுவார் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். தமிழர்கள் சாதி, மத, பேதம் இல்லாமல் ஒன்றுபட வேண்டுமென்றால் வரலாற்றை மறந்து விட வேண்டுமென்று கருத்தல்ல. லெனின் மதிவானத்தின் கருத்து ஈழத்தமிழர்களுக்குப் பொருந்தாது என்ற உண்மையைக் கூறினால் அதன் கருத்து மலையகர்த் தமிழர்கள் தமிழர்களாக ஒன்றுபடுவதைத் தடுக்கும் அல்லது விரும்பாத செயல் என்று தென்றலைப் போன்ற விளக்கமில்லாதவர்கள் தான் உளறுவார்கள்.
//தமிழ் தேசியம் என்று வீராப்பு காட்டிய வியாசன் கலாச்சாரம் என்று வருகிற பொழுது பாசிஸ்ட்டாக வேடம் போட்டு இது எங்கள் கலாச்சாரம் என்பார். ///
வரலாற்றைத் திரிப்பதல்ல தமிழ்த்தேசியம். தமிழர்களாக ஒன்றுபடுவது தான் தமிழ்த்தேசியம். தமிழ்நாட்டிலேயே ஒவ்வொரு பிரதேசத்துக்கும், ஏன் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கூட தனித்துவமான பேச்சு வழக்கு, கலாச்சாரம், பரம்பரைக் கதைகள், பாரம்பரியம் என்பன உண்டு. அது போன்று ஈழத்தமிழர்களுக்கும் தனித்துவமான சில பாரம்பரியமும், கலாச்சாரமும் உண்டு. அவை எல்லாம் தமிழனது பண்பாட்டின் அடையாளங்கள். அவற்றை எல்லாம் இழந்து விடாமல் தமிழர்களாக ஒன்று படுவது தான் தமிழ்த்தேசியம்.
//தங்கள் உயிரையும் உழைப்பையும் நல்குகிற மலையகத் தமிழர்களுக்கு இந்தியனும் ஈழனும் சிங்களவனும் இனவெறியின் அடிப்படையில் தான் கலாச்சாரத்தை எடைபோடுகின்றனர் ///
இன அடிப்படியில் மலையகத் தமிழர்களும் தமிழர்கள் தான் என்பதை அறியாத தமிழரல்லாத ஒருவரால் தான் இப்படி உளற முடியும்.
//இது ஒருபுறமிருக்க, மலையகத் தமிழர்கள் வந்தேறிகள் என்பதால் காத்தவராயன் கதைக்கு இதைச் சான்றாகக் கொள்ள முடியாது என்கிறார். ///
உளறுவதற்கு மட்டுமல்ல, மற்றவர்களின் கருத்துக்களைத் திரிப்பதிலும் வல்லவர் தென்றல், ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், வினவிலுள்ள வாசகர்கள் எந்தக் கேள்விக்கு, அவ்வாறு பதிலளிக்கப்பட்டது என்பதை, சிறிது மேலே போய் படித்துத் தெளிவடையத் தெரியாத முட்டாள்கள் என்ற நினைப்பில் தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்கிறார் தென்றல்.
“தமிழகத்திலிருந்து நாட்டுப்புற பாடல்கள் இலங்கை செல்கிற பொழுது அது அடைந்தமாற்றங்களும் பேசப்பட்டிருக்கின்றன. சான்றாக மலையக நாட்டார் இலக்கியம்-மரபும் மாற்றமும் : லெனின் மதிவானம் http://inioru.com/?p=22527 “ என்ற தென்றலின் கருத்து ஈழத்தமிழர்களுக்குப் பொருந்தாது என்ற எனது கருத்தில் எங்கே வந்தேறிகள் வந்தது.
இருநூறு வருடங்களுக்கு முன்னர் ஒருநாட்டில் குடியேறியவர்கள் வந்தேறிகள் என்று தென்றல் கூறுவாரேயானால் மலையகத் தமிழர்கள் வந்தேறிகள் தான், அதே போல் தமிழ்நாட்டிலும் இலட்சக்கணக்கான தமிழரல்லாத வந்தேறிகள் உள்ளனர். அவர்கள் எல்லோரும் தாங்கள் தமிழர்கள் என்று வாதாடுகிறார்கள், அது தான் கொடுமை.
//இதுதான் விவாதத்திற்குத் தேவையான முதன்மையான அம்சம். காத்தவராயன் ஏன் கொல்லப்பட வேண்டும் என்பதில் பார்ப்பனியம் ஒற்றைத் துருவமாக இருக்கிற பொழுது அன்னாரது ஈழக்கலாச்சாரம் மட்டும் வெளிக்கி இருந்துகொண்டு வெள்ளரிக்காய் தின்பதாக இருக்கிறது.///
விடிய விடிய இராமர் கதை…. பழமொழி இந்த ஆளுக்குத் தான் நன்றாகப் பொருந்துகிறது, இலங்கையில் நடைபெறும் காத்தவராயன் கூத்தில் சாதிக்கோ, பார்ப்பனீயத்துக்கோ, பார்ப்பன ஆதரவு அல்லது எதிர்ப்புக்கோ இடமில்லை என்பது தான் என்னுடைய வாதம். இலங்கையில் எந்த வித சாதித்தொனியும் இல்லாமல், மழையைத் தருபவளும், வெப்பத்தால் வரும் நோய்களைத் தீர்ப்பவளுமாகிய மாரியம்மனை மகிழ்விக்க, அவளது அருளைப் பெற அவளது மகனாகிய, காத்தவராயனின் கூத்து பயபக்தியுடன் ஆடப்படுகிறது. அதற்கும் எந்த சாதிக்கும் தொடர்பு கிடையாது. எதற்கெடுத்தாலும் சும்மா பார்ப்பான், பார்ப்பனீயம் என்று உளறி, தமிழர்களைத் திராவிட வந்தேறிகளின் அட்டகாசங்களின் பக்கம் தமது கவனத்தைத் திருப்பாமல் செய்வது தான் தென்றலின் நோக்கம் என்பது தான் எனது கருத்தாகும்.
//இதே வியாசன் தற்பொழுது ஆடு கோழிக்கு பதிலாக காசை கோயிலில் சேர்க்கிறோம் என்று வழிபாட்டு முறையை ஆதிக்க சாதிகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை டங்கு சிலிப்பாகி நியாயப்படுத்தியிருக்கிறார்.///
வழிபாட்டு முறையில் மாற்றமேதுமில்லை, கோயில்களில் ஆட்டையும், மாட்டையும் வெட்டி கோயில்களை அசிங்கப்படுத்தாமல், அந்த ஆட்டையும், கோழியையும் கோயிலில் காத்தவராயனின் பெயரில் மஞ்சள் தண்ணி தெளித்து விட்டுத் தமது வீடுகளில் வெட்டி உண்கிறார்களே தவிர அவற்றை வளர்ப்பதில்லை. தமிழ்நாட்டிலும் ஆடு, கோழிகளை காத்தவராயன் வந்து உண்பதில்லை, வெட்டுகிற மனிதர்கள் தான் உண்கிறார்கள். கோயில்களில் ஆடு, கோழிகளை வெட்டுவதை சுகாதார அடிப்படையில் நிறுத்தியது ஆதிக்க சாதியினரல்ல, அனைவரும் தான். ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி, முழு இலங்கையையுமே சுத்தத்திலும், சுகாதாரப் பழக்க வழக்கங்களிலும் இந்தியாவை விட மட்டுமன்றி முழு தெற்காசியாவிலும், பல மடங்கு முன்னணியில் நிற்கிறது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
//இராசபக்சே கோயில்களை இடிக்கிற பொழுதெல்லாம் பம்மி இருந்துவிட்டு, ஆடு கோழி பலியிடுவதை தடுப்பதற்கு அறவழியில் போராடுவார்கள் ஆதிக்கசாதிகள்.///
இலங்கைத் தமிழர்களைப் பற்றி தோழர் தென்றலுக்கு அதிகம் தெரியாது. இலங்கையில் ஆதிக்க சாதியாகிய வெள்ளாளர்கள், தமிழ்நாட்டுச் சைவ வெள்ளாளர்கள் போலவும், பார்ப்பனர்கள் போலவும் சைவ உணவுக்காரர்கள் என்று நினைத்து குழம்பிப் போயிருக்கிறார் தென்றல். இலங்கையில் சைவ வெள்ளாளர்கள் என்பது அவர்களின் உணவுப் பழக்க வழக்கத்தைக் குறிப்பதில்லை. யாழ்ப்பாணச் சைவ வெள்ளாளர்கள் என்றால் கருத்து, அவர்களின் பரம்பரையினர் சிவனை முழுமுதல் கடவுளாக வணங்குகிறவர்கள், திருநீற்றை அணிபவர்கள் என்பது மட்டும் தானே தவிர, அவர்கள் மரக்கறி உணவை உண்பவர்கள் என்ற கருத்தல்ல. ஆடு, கோழி, மீன், இறைச்சி வகைகளை விரும்பி உண்பதில் இலங்கையில் பறையருக்கும், ஏனைய சாதியினருக்கும், வெள்ளாளருக்கும் வேறுபாடு கிடையாது. உணவு விடயத்தில் இலங்கையில் சாதி வேறுபாடு கிடையாது என்றே கூறலாம். சில கோயில் விழாக்கள், ஒரு சில நாட்கள் தவிர, மற்ற நாட்கள் எல்லாம், மீன், இறைச்சி அல்லது குறைந்த பட்சம் கருவாடு இல்லாமல் இலங்கைத்தமிழர்கள் (சாதி வேறுபாடின்றி) அனைவருமே உணவருந்த மாட்டார்கள். அதிலும் புலம்பெயர்ந்த தமிழர்களில் வெள்ளாளர்கள் பலர் முழுமாட்டை மட்டுமல்ல, வெண்பன்றி உட்பட, வெள்ளைக்காரர்கள் என்ன உண்கிறார்களோ அவை எல்லாவற்றையும் உண்ணுகிறார்கள். இலங்கைச் சைவம் கூட, மரக்கறி உணவைப் பெரிதாக வலியுறுத்தவில்லை. அதனால் ஆடி, கோழி பலியிடுவதை சாதியடிப்படையில் தடுப்பதற்கு இலங்கையில் யாருமில்லை.
திருடித்தின்றவன் தண்ணீருக்கு விக்குவதைப்போல மலையகத் தமிழகர் மீது மேட்டிமைத் திமிரைக் காட்டிவிட்டு தற்பொழுது டன் கணக்கில் கரிசனத்தைக் கொட்டுகிறார். இவர் தற்போது தந்துள்ள விளக்கமும் வெற்றுப் பாசாங்கு மட்டுமே. இந்தக் கோமாளித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுதவிர இரு கருத்துக்களைச் சுட்டிக்காட்டுகிறார் வியாசன். அதன் தன்மையைப் பரிசிலீப்போம். நீயெல்லாம் இந்து என்று சொன்னால் யார் இந்து என்று கேட்கச் சொல்லி இந்தப் பதிவு ஒரு முதன்மையான கேள்வியைக் கேட்கிறது. இதன் வீரியத்தை வியாசனின் கருத்துக்கள் மூலமாக பரிசீலிப்போம்.
1. காத்தவராயன் வழிபாடு சாதி தொடர்பானது அல்ல என்றும் அது மழைதரும் மாரியம்மனை வேண்டி நடத்துகிற கூத்து ஆகும் என்கிறார். இவர் கொடுக்கிற விளக்கம் கேலிக்கூத்தானது. கூத்தில் கடைசியாக நடைபெறும் கழுவேற்றுதல் நிகழ்ச்சிக்கு அன்னார் எந்தப்பதிலும் தற்போது வரை சொல்லவில்லை. காத்தவராயன் ஆரியமாலையை ஏன் மணமுடிக்கக் கூடாது என்பதற்கு பல புராணங்கள் வந்து நிற்கின்றன. முன் சென்ம பாபவினைகள் அறிவுறுத்தபடுகின்றன. பார்ப்பனர்கள் துஷ்ட தேவதையாக கருதும் மாரியம்மா மகனுக்கு பல பெண்கள் பார்க்கிறாராம். இப்படி கதை முழுவதும் வரலாற்று துரோகங்கள் நிரம்பியிருக்க வியாசனோ முனைமழுங்கியாகவும் மலைமுழுங்கியாகவும் வரலாற்று உணர்ச்சியற்றவராகவும் மழையைக் காட்டி நனைந்து நிற்கிறார்.
2. இரண்டாவதாக சைவப் பிள்ளைகள் குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். பெயரில் தான் சைவம் இருக்கிறதே ஒழிய அசைவத்தில் வெளுத்துக்கட்டுவோம் என்று காத்திரத்தோடு கூறுகிறார். இப்படிச் சொல்லிவிட்டு கோயிலில் சுகாதாரத்திற்காக ஆடு கோழி பலியிடவில்லை என்று ஒட்டுமொத்த ஆதிக்க சாதிகளின் பார்ப்பனிய அடிமைத்தனத்தை தோலுரிக்கிறார். சபாஷ்!!! வியாசன் சுத்தப்புருசனாக சுகாதாரம் என்று ஒரு படி மேலே நிற்கிறார். திணமணி வைத்தி முனியப்பன் கோயிலில் 100 பன்றி பலியிட்டதற்கு பார்ப்பனிய வன்மத்துடன் எழுதிய செய்தியை வியாசன் மற்றும் வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறேன். பார்ப்பனியத்தின் எதேச்சதிகாரத்தையும் சுகாதாரம் என்றும் சொல்லும் வியாசனின் பார்ப்பன நக்கத்தனத்தையும் மேலும் புரிந்துகொள்ளலாம்.
செய்தி இது: “முனியப்பன் கோவிலில் சுவாமி அழைத்தல் மற்றும் படுகளம் அமைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து பல்வேறு வேண்டுதலுக்காக 100-க்கும் மேற்பட்ட பன்றிகளையும், 150 ஆட்டுகிடாக்களையும், 200 சேவல்களையும் பக்தர்கள் பலியிட்டனர். இதனால் கோவில் முன்புற மைதானம் ரத்த வெள்ளமாக காட்சியளித்தது. திருப்பூர், உதகை, குன்னூர், பொள்ளாச்சி, உடுமலை, கோவை மற்றும் கர்நாடக மாநிலத்தின் மைசூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். பல்லடம்-பொள்ளாச்சி பிரதான சாலையில் இருபுறமும் 1 கி.மீ. தூரத்துக்கு பன்றி இறைச்சிக் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. கோவில் அருகே பொள்ளாச்சியிலிருந்து பல்லடம் நோக்கி வரும் ஒருவழிப் பாதையில் வாகனங்கள் செல்லாத அளவுக்கு தார்ச் சாலையிலேயே பலியிடப்பட்ட பன்றிகளை சுத்தம் செய்து கூறு போட்டு விற்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு மிருகவதைச் சட்டம் கடுமையாக இருந்தபோது பன்றிகளை பலியிட்டவர்கள், ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பன்றியை இறைச்சியாக்கி விற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு எந்தவிதமான நடைமுறையும் பின்பற்றப்படாமல், சுற்றுப்புற சுகாதாரம் பாதிப்படையும் வகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.”
வியாசனைப் போல திணமணி வைத்தியும் சுற்றுப்புற சுகாதாரம் பாதிப்படையும் என்று முத்தான கருத்தையும் மிருகவதைச் சட்டம் கடுமையாக இருந்தபொழுது (ஜெயலலிதாவிற்கு ஒரு ஜால்ரா) ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பன்றி விற்றதாகவும் கோயில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக ஒரு டெரரான பிக்சரையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
நூற்றுக்கு நூறு திணமணி வைத்தி மற்றும் வியாசனது கருத்து ஒன்றுபடுவதைக் காணலாம். வைத்தியின் பூணுலுக்கு ஆட்டம் வருவது இயல்பானது. அது இல்லாத வியாசனுக்கும் வியர்க்கிறது என்றால் பார்ப்பனியத்தின் அடிவேர் ஆதிக்கசாதிகளிடம் எவ்விதம் இருக்கிறது என்பதையும் பார்ப்பன-ஆதிக்க சாதிகளின் இந்துத்துவ வெறியை மேலாண்மையை முறியடிக்காமல் தமிழர் மட்டுமல்ல யாருக்குமே விடிவு இல்லை என்பதையும் கண்டுகொள்ளலாம்.
திரு வியாசன்,
//கலாச்சாரப் பாரம்பரியங்களை அப்படியே இருட்டடிப்பு செய்து விட்டு, சாதியடிப்படையிலான (அதாவது திராவிட, பெரியாரிய சாயம் பூசி)//
காத்தவராயனின் சாதியை இருட்டடிப்பு செய்து விட்டு வேறு என்ன வகையான கலாச்சாரப் பாரம்பரியங்களை அப்படியே வைத்திருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள்?
காத்தவராயனின் வரலாறு நடந்த இடம் திருச்சிக்கு அருகில் முக்கொம்புப் பகுதி. இங்கே அவருக்கு கோயில் இருக்கிறது. காத்தவராயன் ஒரு வளர்ப்பு மகன். வளர்ப்புப் பெற்றோர் பிள்ளை சாதியினர் என்று நினைக்கிறேன். மேலதிக விவரம் கொண்ட ஒரு நூலின் விவரங்கள் நாளைத்தருகிறேன்.
திரு. Univerbuddy & தமிழ்த்தாகம்,
இலங்கையில் காத்தவராயன் வழிபாடு தொன்று தொட்டு வழக்கிலிருந்து வருகிறது. அத்துடன் ஈழத்தமிழர்களின் கலை மரபுகளில் ஒன்றான கூத்து வடிவத்திலும் காத்தவராயன் கதை வடக்கிலும், கிழக்கிலும் இன்றும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. ஆனால் எந்தக் கூத்திலும் காத்தவராயன் என்ன சாதியைச் சேர்ந்தவன் என்று அவனது சாதியைக் கூறி, அந்தச் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இலங்கைத் தமிழர்களின் கூத்து மரபில் காத்தவராயன் கூத்தும், கோவலன் கூத்தும் முக்கிய இடம் பெறுகின்றன. ஆனால் கோவலன் கூத்திலும், எவ்வாறு அவன் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சாதியைச் சார்ந்தவன் என்று கூறி அவனது சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ அது போலவே காத்தவராயன், என்ன சாதி என்றும் பேசப்படுவதில்லை.
தமிழ்நாட்டில் காத்தவராயனைப் பறையன் என வர்ணித்து, அந்தக் கதைக்கும், கலைவடிவத்துக்கும் சாதிப்பூச்சு பூசி, அதை ஆரிய- திராவிட சச்சரவுடன் இணைத்தவொரு கதை நிலவி வருகிறது என்பதை உங்களின் பதில் உறுதிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் தமிழர்கள் என்ற இன அடையாளத்தை விட ஒவ்வொருவரின் சாதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாலும், அங்கு தமிழர்களின் மொழி, அரசியல், பொருளாதாரம், வாழ்க்கை அமைப்பு, வேலைவாய்ப்பு, கல்வி, வாழ்க்கைத்தரம் என்பவற்றை மட்டுமன்றி தமிழர்களின் வரலாற்றைக் கூட சாதியே தீர்மானிக்கிறது என்பதையும் நாமறிவோம். தமிழர்களின் முன்னோர்களாகிய சேர, சோழ பாண்டியர்களையே சாதியடிப்படையில் பங்கு போட்டுக் கொண்டு ஆளுக்காள் அடிபட்டுக் கொள்ளும் தமிழ்நாட்டில், ஆதிக்க சாதியினர்கள் எல்லாம் ராஜ ராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும், கொற்கைப் பாண்டியர்களையும், சேரன் செங்குட்டுவனையும் அவரவர் சாதியென்று சண்டை பிடித்துக் கொண்டிருக்க, சத்தம் சந்தடியில்லாமல், சும்மா இருந்த காத்தவராயனை பறையர் சாதியினர் தம்முடைய சாதிக்காரனாக்கிக் கொண்டதில் தவறேதுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாட்டுக் கிராமங்களில் வாழும் நாய் நரி, பன்றிகளுக்குக் கூட வெவ்வேறு சாதிப்பெயர்கள், தேவர், வெள்ளாளர், கவுண்டர், வன்னியர் என்று சாதிப்பெயர்கள் இருக்குமோ என்னவோ, யாருக்குத் தெரியும்.
காத்தவராயன் உண்மையில் பறையனா அல்லது பார்ப்பானா என்று வாதாடுவதல்ல என்னுடைய நோக்கம், ஈழத்தில் காத்தவராயன் மரபில் காத்தவராயன் கதையின் மரபில் பறையன் மட்டுமல்ல, எந்தச் சாதி லேபலும் கிடையாது என்பது தான் எனது கருத்தாகும். இலங்கையில் தமிழர்கள் மத்தியில் காத்தவராயன் வழிபாடு இன்றும் பரவலாகக் காணப்படுகிறது. அங்கு காத்தவராயன் முருகனின் அவதாரமாகவும், தமிழர்களின் கிராமியத் தேவதையாகிய முத்துமாரியம்மனின் வளர்ப்புமகனாக பூவுலகில் அவதரித்தவனாகத் தான் காத்தவராயன் அல்லது காத்தலிங்கசுவாமி கருதப்படுகிறார். இலங்கையில் காத்தவராயர் வழிபாடு தொன்று தொட்டு வழக்கிலிருந்து வருகிறது. காத்தவராயன் கதையில் பறையர்/பார்ப்பனர் என்ற சாதிப்பேச்சுக்கே இலங்கையில் இடம் கிடையாது. தமிழ்நாட்டைப் போன்று தமிழர்களின் வரலாற்றையும், கலை கலாச்சாரத்தையும் சாதீய அடிப்படையில் பிரிக்கும் வழக்கம் ஈழத்தில் இல்லாத படியால், ஈழத்திலுள்ள காத்தவராயன் கதை மரபு தான் சரியானது என்றும் வாதாடலாம்.
நாட்டார்வழக்கில் அறிஞரான நா வானமாமலை அவர்கள் 1970 இல் ‘காத்தவராயன் கதைப்பாடல்’ என்ற நூலை வெளியிட்ட பின்னர், காத்தவராயன் பறையர் சாதியைச் சேர்ந்தவன் என்ற கதை பிரபலமடைந்ததா என்பது எனக்குத் தெரியாது. அவரது நூல் வெளிவருமுன்பே முன்பே காத்தவராயன் பறையர் என்ற அந்தக் கதை, மட்டுமன்றி காத்தவராயன் சம்பந்தமான வேறு கதைகளும் – இலங்கையில் போன்று காத்தவராயனை முருகனின் அவதாரமாக, தமிழர்களின் கிராமிய தேவதையாகிய மாரியின் மகனாக உருவகிக்கும் கதைகளும்- தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் வழக்கில் இருந்தன. திரு. நா. வானமாமலை அவர்கள் அவரது நூல் வெளிவரு முன்னர் வெளிவந்த காத்தவராய சுவாமி கதை பற்றிய ஏனைய நூல்களையோ அல்லது அவரது கதைகக்கு, வேறுபட்ட காத்தவராயன் கதைப் பாரம்பரியமும் தமிழர்களிடையே உண்டென்பதைக் குறிப்பிடாதது பெருங்குறையாகவே அமைகிறது என ஈழத்தில் வெளிவந்த ‘காத்தவராயன் நாடகம்’ என்ற நூல் ஒன்று கூறுகிறது. அதாவது அவர் ஏனைய காத்தவராயன் கதை, கலாச்சாரப் பாரம்பரியங்களை அப்படியே இருட்டடிப்பு செய்து விட்டு, சாதியடிப்படையிலான (அதாவது திராவிட, பெரியாரிய சாயம் பூசி) அந்தக் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு விட்டார்.
காத்தவராயனின் வளர்ப்புத்தாய் ஒரு ‘பறைச்சி’ என்று தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் பறையர் சாதி மக்களிடம் காணப்படுவதாக கம்யூனிச சார்புள்ள திரு. வானமாமலை அவர்கள் தனது நூலில் கூறுகிறார் என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றோ அவரது நூலிலுள்ள கதை மட்டும் தான் உண்மையானது என்றும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. காத்தவராயன் பற்றிய வேறு கதைப் பாரம்பரியங்கள் ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் உண்டு என்பதைச் சுட்டிக் காட்டக் கூடாது, என்பது வெறும் அபத்தம் மட்டுமன்றி அதிகப் பிரசங்கித்தனமும் கூட.
“கருப்புடுத்துக் கச்சை கட்டி தொட்டியத்து ராசன் –அவர்
கள்ளவாள் உள்ளணிந்தார் பாளையத்து ராசன்
தன்னுடைய மாளிகைக்கோ தொட்டியத்து ராசன் – நானும்
தானோடி வந்து நின்றேன் தொட்டியத்து ராசன்”
ஆனால் ஈழத்துக் காத்தவராயன் அரச வேடம் பூண்டவனாக, அவனது உற்ற தோழன் தொட்டியத்துச் சின்னான், தொட்டியம் என்ற இடத்தை ஆளுபவனாக நாடகத்தில் வர்ணிக்கப்ட்டாலும் கூட, இன்றும் காத்தவராயன் வழிப்பாடு பார்ப்பனீயச் சடங்குகளுக்கு அப்பாற்பட்டதாக, பார்ப்பனீயச் சடங்குகளின் கலப்பற்றதாக, ஆடு, கோழி என்பவற்றை வெட்டிக் காத்தவராயனுக்குப் பலி கொடுக்கும் வழக்கமுள்ளதாக இன்றும் நிலவி வருவதால், காத்தவராயனுக்கும் ஆதித் தமிழராகிய பறையர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் ஈழத்துக் காத்தவராயன் கதையில் காத்தவராயனின் சாதியைப் பற்றிப் பேசப்படவில்லை, மாறாக, அவன் பழந்தமிழர்களின் கிராமிய தேவதையாகிய முத்துமாரியம்மனின் வளர்ப்பு மகனாகத் தான் வர்ணிக்கப்படுகிறான். இலங்கையின் ஈழத்தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் காத்தவராயனுக்குக் கோயில் இருப்பதுடன், காத்தவராயன் கூத்துக் கூட பயபக்தியுடன் அம்மனுக்குச் செய்யும் ஒருவகை வழிபாட்டு நெறியாக, புனிதத் தனிமையுடனேயே ஆடப்படுகிறது.
“வேப்பிலையும் கைப்பிடித்தே முத்துமாரி அம்மன் நானும்
வீசி விளையாடி வாறேன் மாரிதேவி அம்மன்
பொற்பிரம்பும் கைப்பிடித்தே முத்துமாரி அம்மன் நானும்
போற்றி விளையாடி வாறேன் மாரிதேவி அம்மன்”
மாரி என்பது மழை என்பது மழை எனவும் பொருள்படும். ஆதித் தமிழர்கள் மாரியம்மனை மழை தரும் தெய்வமாகவே வணங்கினர். மழை பொழிந்து வளத்தையும், பயிர் வளர்ச்சியைத் தருபவளாகவும், குளிர்ச்சியைத் தந்து வெப்பத்தைத் தணித்து வெப்பத்தால் வரும் நோய்களை போக்குகிறவளாகவும் அருள் தருகிறாள் என தமிழர்கள் நம்பினர். ஆகவே மாரியின் பிள்ளையாகிய காத்தவராயன் கூத்தை பயபக்தியுடன் நடத்தி மாரியின் அருளை வேண்டுகின்றனர் ஈழத் தமிழர்கள்.
தமிழ்நாட்டில் சிலர் கூறுவதைப் போல் காத்தவராயன் பறையர் சாதியைச் சேர்ந்தவரல்ல என்று நிரூபிக்க வேண்டுமென்ற நோக்கம் எனக்கில்லை. உண்மையில் காத்ததவராயன் பறையர் சாதியினரைச் சேர்ந்தவர் என்பது எனக்கு எந்தவித மன உளைச்சலையும் தரவில்லை. காத்தவராயன் பறையனாக, உண்மையான தமிழனாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் தமிழர்கள் சாதியடிப்படையில் ஆளுக்காள் பிரிந்து கொண்டதுடன், தமிழர்களின் முன்னோர்களாகிய தமிழ் மன்னர்களை மட்டுமன்றி தமிழர்கள் வணங்கும் தெய்வங்களையும் சாதியடிப்படையில் பிரித்துக் கொள்வதும், கொஞ்சம் கூட வெட்கமின்றி அதற்குச் சில பாடல்களையும் ஆதாரம் காட்டுவது எனக்கு மிகுந்த எரிச்சலையூட்டுகிறது.
காத்தவராயர் பாட்டு :
சோமன் உடுத்தெல்லவோ காத்தலிங்க சாமி –ஒரு
சொருகு தொங்கல் ஆர்க்க விட்டேன் தம்பியவர் தானும்
பாளையத்தை வெல்லவென்று காத்தலிங்க சாமி – நானும்
வாளுருவிக் கைப்பிடித்தேன் சாமிதுரை நானும்”
ஈழத்தில் ஆடப்படும் காத்தவராயன் கூத்தில் ‘மாரியின் பிள்ளை’யாகிய காத்தவராயன், மணந்தால் ஆரியப்பூமாலையையே மணப்பேன் என்று அடம்பிடிக்கிறான். முத்துமாரியம்மன் எவ்வளவோ அறிவுரை கூறியும், அவனது மூத்தம்மானின் பெண்களை அல்லது வேறு பெண்களை மணந்து கொள்ளுமாறு கூறியும், அதை மறுத்த காத்தவராயனுக்கு பல கடினமான தடைகளையும், சவால்களையும் போட்டிகளையும் வைக்கிறார் அவனது தாயார் முத்துமாரியம்மன். அந்தப் போட்டிகளில்/ சோதனைகளில் வெல்ல காத்தவராயன், பாம்பாட்டியாக, குறவனாக, வண்ணானாக எல்லாம் உருவமெடுக்கிறார். அந்த அடிப்படையில் பறையர் சாதியினர் மட்டுமன்றி ஏனைய சாதியினரும் அவர் தம்முடைய சாதிக்காரர் என்று வாதாடலாம் அல்லவா?
இந்தப் பாட்டின் அடிப்படையில் காத்தவராயன் பறையர் என்றால்:
காத்தவராயனின் வளர்ப்புத்தாய் பாடுவது:
“பின்புத்திதான் நினைக்கும் பறச்சி பெத்த பிள்ளையவள்
நாம் பெத்தபிள்ளை யென்றால் நம்மைப்போல் ஆகாதோ?” ….
ஈழத்தில் காத்தவராயன் கூத்திலுள்ள இந்தப் பாட்டின் அடிப்படையில் காத்தவராயன் வண்ணார் சாதியைச் சேர்ந்தவர் என்று வண்ணார்கள் வாதாடலாமா?
இடம்: வண்ணார நெல்லி வீடு
காத்தவராயன்: தண்ணி விடாய்க்குதெணை மாமியாத்தை எனக்கு – தண்ணி கொஞ்சம் தாவேனெணை மாமியாத்தை
நெல்லி: தம்பி நீ என்ன முறையில என்னை மாமியாத்தை என்கிறாய்?
காத்தவராயன்:
“வண்ணார வடிவெடுத்தார் காத்தலிங்கம் நானும்
வடிவழகன் போறாராம் மாரிபிள்ளை – நானும்
கழுதையின் மேல் எங்க மாமி அழுக்கெடுக்கும் –அந்தக்
கந்த வண்ணான் எனக்கு அண்ணனெணை
தாய்பேரோ மாமியாத்தை, காமாச்சி –எந்தன்
தகப்பன் பேரோ மாமியாத்தை, ஏகாம்பரம்
என்பேரோ மாமியாத்தை, காத்தவண்ணான்
எங்கள்குலக்கொடியை மாமியாத்தை அறிந்திடணை”
ஆகவே தமிழர்களின் வரலாற்று நாயகர்களுக்கும், கதைகளின் கதாபாத்திரங்களுக்கும் சாதிப்பூச்சு பூசுவதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டுமென்பது தான் என்னுடைய அன்பான வேண்டுகோளாகும். சாதியொழிப்பைப் பற்றி வாய்கிழியப் பேசுகிறவர்கள் கூட, சாதி சம்பந்தமான கதைகள் பார்ப்பனர்களைச் சீண்டிப் பார்க்க உதவுமென்றால், அவர்களும் சாதியைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் சாதிமான்களாகி விடும் வேடிக்கையைத் தான் நாங்கள் இங்கே காண்கிறோம்.
காத்தவராயன் எதற்காக கொல்லப்படுகிறான் என்ற கேள்விக்கு விடையளிக்காமலேயே எங்கள் இலங்கையில் காத்தவராயனின் சாதி பற்றி பேசப்படுவதில்லை என்று கதையின் வரலாற்றை இருட்டடிப்பு செய்கிறார் வியாசன். இதற்கு அறிவு நாணயமின்றி இத்துணை பிதற்றல்கள்.
திரு வியாசன்,
காத்தவராயனைப்பற்றிய நூலின் தகவல்கள் நாளை தருகிறேன். இந்த நூல் களஆய்வு செய்து எழுதப்பட்டது. தலைப்பிலேயே ‘துரோக வரலாறு’ என்று வரும் என்று நினைவு.
காத்தவராயன் ஏன் கொல்லப்படவேண்டும் என்பதைப்பற்றி தென்றல் கேட்டிருக்கிறார். அதை எனது கேள்வியாகவும் சேர்த்துக் கொள்ளவும். (அறிவு நாணயமின்றி ஏன் இத்துணை பிதற்றல்கள்?)
தென்றல் குறிப்பிட்டது தமிழகத்தின் வரலாற்று மகனான காத்தவராயன். இலங்கையின் கதை இங்கே விவாதப் பொருளல்ல. தொட்டியம் முக்கொம்பு ஆகிய ஊர்கள் அருகருகே இன்றும் இருக்கின்றன. இப்பகுதி மக்கள் காத்தவராயனை மறந்துவிடாமல் வைத்திருக்கிறார்கள். தெய்வமாக்கி கோயில் கட்டி விழா எடுத்து கும்பிடுகிறார்கள். அவரின் செடல் ஏற்றம் வருடாவருடம் நடப்பது. இவை மக்கள் பார்ப்பனிய எதேச்சதிகாரத்தை எதிர்க்கும் வடிவங்கள்.
//சந்தடியில்லாமல், சும்மா இருந்த காத்தவராயனை பறையர் சாதியினர் தம்முடைய சாதிக்காரனாக்கிக் கொண்டதில் //
// நாய் நரி, பன்றிகளுக்குக் கூட வெவ்வேறு சாதிப்பெயர்கள், தேவர், வெள்ளாளர், கவுண்டர், வன்னியர் //
இவை அருவருப்பான வரிகள்.
//ஈழத்தில் ஆடப்படும் காத்தவராயன் கூத்தில் *** சோதனைகளில் வெல்ல காத்தவராயன், பாம்பாட்டியாக, குறவனாக, வண்ணானாக எல்லாம் உருவமெடுக்கிறார்.//
இவையெல்லாம் ஆர்ய மாலா- காத்தவராயன் காதல் வரலாற்றை மறக்கடிப்பதற்காக வெறும் கற்பனையாக்குவதற்காக எவ்வளவு தூரம் திரித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இதையும் ஒரு ஆதாரம் என்று காட்டுவதற்கு நீங்கள் வெட்கப்படுவதில்லை. காத்தவராயனை பாம்பாட்டியாக, குறவனாக, வண்ணானாக எப்படி எடுத்துக் கொண்டாலும் வரலாற்றின் கரு மாறிவிடப்போவதில்லை. அதற்கு நீங்கள் பதில் சொல்லவும் போவதில்லை.
//*** தமிழர்களின் வரலாற்றைக் கூட சாதியே தீர்மானிக்கிறது//
இன்று வரை தமிழர்களுக்கு மொழியைத் தவிர பொதுவான அம்சம் என்று வேறெதுவும் இல்லை. அதிலும் கூட பல வார்த்தைகள் சாதி அடையாளங்களுடனே தான் இருக்கின்றன.
//எங்களிடம் காணப்படும் கதைகளும், கலாச்சார விழுமியங்களும் எங்களின் தமிழ் முன்னோர்களிடமிருந்து, எங்களின் நாட்டில் நாங்கள் பெற்றவையே//
அப்படியென்றால் இலங்கைத் தீவும், தமிழ்நாடும் சேர்ந்த நிலப்பரப்பின் இருபகுதியும் கடல்கோளாலும் அல்லது நீரிணையில் மணல் திட்டுகள் மறைந்து போனதாலும் பிரிந்து போவதற்கும் முன்னரே ஆர்ய மாலாவின் முன்னோர்கள் அங்கே வந்து விட்டார்கள் என்கிறீர்களா.
//காத்தவராயனைப்பற்றிய நூலின் தகவல்கள் நாளை தருகிறேன். இந்த நூல் களஆய்வு செய்து எழுதப்பட்டது. //
திரு. Univerbuddy,
1. நீங்கள் கூறும் காத்தவராயன் கதை பொய்யானது என்றோ அல்லது அப்படி எதுவும் நடக்கவில்லை என்றோ நான் ஒருபோதும் கருத்துத் தெரிவித்ததில்லை. நான் மட்டுமல்ல, யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் பாலசுந்தரம் கூறுவது கூட, காத்தவராயன் கதையில் பல Versions உண்டென்பது தான். அதில் இலங்கையில் பாரம்பரியமாக ஆடப்படும் காத்தவாராயன் கூத்தில் காத்தவராயன் பறையர் அல்ல, அவரது சாதி அங்கு பெரிதுபடுத்தப்படவில்லை. அது தமிழ்நாட்டில் நடந்த உண்மைக்கதையாக அல்லாமல், வெறும் கோயிலுடன் மாரியம்மன் Cult உடன் சம்பந்தபப்ட்ட புராணக்கதையாக மட்டும் தான் இலங்கையில் காணப்படுகிறது.
2. முதல் முறையாக இங்கு, உங்களின் மூலமாகத் தான் பறையராகிய காத்தவராயன் ஆரியமாலா என்ற பிராமணப் பெண்ணைக் காதலித்தால் கழுவிலேற்றப்பட்டான் என்ற கதையைக் கேள்விப்பட்டேன். இக்காலத்தில் இளவரசனின் மரணம் கூட காத்தவராயனின் கதையுடன் ஒப்பிடக் கூடியது தான். ஆகவே அப்படிடி ஒரு சம்பவம், அக்காலத்தில் திருச்சியில் நடைபெற்றிருக்கலாம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமேற்படவில்லை.
3. ஆனால் தோழர் தென்றல் திடீரென்று “காத்தவராயன் கதை உருவானதாக சொல்லப்பட்ட காலம் விஜய நகரப் பேரரசுக்கு சற்று முந்தையது” என்றதும் தான், புராணக் கதையுடன் சம்பந்தப்பட்ட காத்தவராயனும் ஆரியப்பூமாலையும் வேறு, திருச்சியில் வாழ்ந்த காத்தவராயனும், பார்ப்பன ஆரியப்பூமாலையும் வேறாக இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
4. ஏனென்றால் விஜயநகர ஆட்சியின் கீழ் (1336-1646) கழுமரத்தில் ஏற்றும் பழக்கம் பரவலாக வழக்கில் இருந்ததாக, அதுவும் சாதிப்பிரச்சனைக்கு கழுவிலேற்றும் வழக்கம் இருந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. தூக்கில் மாட்டியிருப்பார்கள், யானையை விட்டு மிதித்துக் கொன்றிருப்பார்கள் அல்லது அகழியில் முதலைக்கு உணவாக வீசியிருப்பார்கள். ஆனால் நாயன்மார் காலத்தின் பின்னரும் தமிழ்நாட்டில் கழுமரத்திலேற்றும் வழக்கம் இருந்தது என்பதை என்னால் நம்பமுடியவில்லை.
5. அதை விட விஜயநகர ஆட்சிக்கு முன்பாகவே இலங்கையில் காத்தவராயன் வழிபாடு வழக்கில் இருந்து வருகிறது. உதாரணமாக காத்தான்குடி போன்ற கிராமங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இலங்கையில் உண்டு.
6. அத்துடன் தமிழர்களின் சாத்தன்- ஐயனார் வழிபாடு தான் காத்தான் வழிபாடாக உருவாகியது என்ற கருத்தும் உண்டு. காத்தாயி என்ற கிராமியப் பெண் தெய்வமும் உண்டு.
சாத்தன் (ஐயனார்) > காத்தான் > காத்தான் > காத்தவராயன் > காத்தலிங்கம் > காத்தலிங்கசாமி Etc.
7. நீங்கள் கூறுவது போல், காத்தவராயன் என்ற பறையர் சாதியைச் சேர்ந்த இளைஞனும், பார்ப்பனப் பெண்ணும் காதலித்து, அவர்களின் காதலுக்கு எதிர்ப்பேற்பட்டு, பார்ப்பனர்களுக்கு விஜயநகர ஆட்சியில் இருந்த செல்வாக்கைப் (அதை நான் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறேன். உண்மையில் பார்ப்பனீயத்தை வளர்த்து விட்டதற்காக, வசைபாடப்பட வேண்டியவர்கள் கன்னட/வடுகர்களே தவிர இராச இராசன் அல்ல). பயன்படுத்தி, காத்தவராயன் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.
8. பிற்காலத்தில் அந்தக் கதை, காத்தவராயன் கதையுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். அதனால் தான் இலங்கையில் நீங்கள் குறிப்பிடும் Version இல்லை.
9. தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போல், இலங்கைத் தமிழர்கள், தமிழரல்லாத கன்னட, வடுக, மராத்தி, வடநாட்டுப் படையெடுப்புகளாலோ, மொழி, கலாச்சார தாக்கங்களாலோ பாதிக்கப்படவில்லை, தமிழ்நாட்டில் தமிழர்களின் ஆட்சி வீழ்ந்து பல நூற்றாண்டுகளின் பின்னரும் நிலைத்து நின்ற ஒரே தமிழரசு யாழ்ப்பாண அரசு தான். ஆகவே, எங்களிடமுள்ள கதைகளும், கூத்துகளும், பாரம்பரியங்களும் Original ஆக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டல்லவா?
//இவை அருவருப்பான வரிகள்.//
சாதி, அதிலும் தமிழ்நாட்டில் காணப்படும் சாதிவெறியும், சாதிக்கொடுமைகளும் மிகவும் அருவருப்பானவை என நான் நினைக்கிறேன். எனது அந்த உணர்வு எனது எழுத்தில் வெளிப்பட்டிருக்கலாம்.
//. காத்தவராயனை பாம்பாட்டியாக, குறவனாக, வண்ணானாக எப்படி எடுத்துக் கொண்டாலும் வரலாற்றின் கரு மாறிவிடப்போவதில்லை. அதற்கு நீங்கள் பதில் சொல்லவும் போவதில்லை.///
பதில் சொல்ல நான் ஒரு போதும் தயங்கியதில்லை. ஒரு கருவை வைத்துப் பல கதைகளை உருவாக்குவதுண்டு. உதாரணமாக, பெரும்பாலான தமிழ்ப்படங்கள் எல்லாம் காதல் என்ற ஒரே கருவில் உருவாகிய பல கதைகளே.
//இன்று வரை தமிழர்களுக்கு மொழியைத் தவிர பொதுவான அம்சம் என்று வேறெதுவும் இல்லை. அதிலும் கூட பல வார்த்தைகள் சாதி அடையாளங்களுடனே தான் இருக்கின்றன //
உலகில் பல இனங்களுக்குப் பொதுவாக இருப்பது அவர்களின் மொழி தான், வெளிநாடுகளில், ஐரோப்பியர்களின் குடும்பப் பெயர்களை வைத்தே அவர்களின் முன்னோர்கள் என்ன தொழில் செய்தாரகள் என்று ஊகிக்கலாம், அது போன்றது தான் இதுவும்.
//அப்படியென்றால் இலங்கைத் தீவும், தமிழ்நாடும் சேர்ந்த நிலப்பரப்பின் இருபகுதியும் கடல்கோளாலும் அல்லது நீரிணையில் மணல் திட்டுகள் மறைந்து போனதாலும் பிரிந்து போவதற்கும் முன்னரே ஆர்ய மாலாவின் முன்னோர்கள் அங்கே வந்து விட்டார்கள் என்கிறீர்களா.///
கடல்கோள் என்று நான் குறிப்பிட்டது, குமரிக்கண்டம் கடலில் மூழ்கிய போது ஏற்பட்ட கடல்கோள் அல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கூட, மணல் திட்டுகளில் தங்கி இலகுவாகப் பாக்குநீரிணையைக் கடந்து விடக் கூடியதாக இருந்ததாகவும், தனுஸ்கோடி அழிந்த புயலில் தான் மணல் திட்டுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது என்றும் கூறுவர். ஆனால் சங்க காலத்திற்கு முன்பே ஆரியப் பார்ப்பனர்கள் தமிழ்மண்ணுக்கு வந்து விட்டனர். அத்துடன், மகாவம்சத்தில். இலங்கையின் வரலாற்றிலும் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பே பிராமணர்கள் இலங்கையில் வாழ்ந்தது பேசப்படுகிறது.
வாசக நண்பர்களுக்கு,
காத்தவராயனைப் பற்றிய கிளைவிவாதத்தை மேலும் வளர்ப்பது செத்தபாம்பை அடிப்பதைப் போன்று பயனற்றதென்பதால் விவாதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
காத்தவராயன் வரலாற்றைப் பற்றி கள ஆய்வு நூல்:
கொலைக்களங்களின் வாக்குமூலம்: நந்தன், காத்தவராயன், மதுரை வீரன், முத்துப்பட்டன்.
ஆசிரியர்: அருணன்.
பதிப்பு: வசந்தம் வெளியீட்டகம், மதுரை,
போன்: 0452-2625555, 2641997
Email: vasanthamtamil@yahoo.co.in
Price: 120Rs.
இந்நூலின் துனைத் தலைப்பு குறிப்பிடுவதைப்போல, இது நால்வரைப் பற்றிய கள ஆய்வு. பயனுள்ள நூல்.
திரு.Univerbuddy,
நீங்கள் இந்த நூலை ஏற்கனவே வாசித்திருந்தால், இந்தக் காத்தவராயன் கதையும், அவனைக் கழுவேற்றும் சம்பவமும், எந்த நூற்றாண்டில் நடந்ததாக, அவர்களின் கள ஆய்வின் மூலம் கண்டு பிடித்தார்கள் என்பதைக் கூறுங்கள். நன்றி.
திரு வியாசன்,
படித்து ஒரு வருடமாகிறது . காலம் மறந்து விட்டேன். திங்கட்கிழமை கொடுக்கிறேன்.
திரு வியாசன்,
காலத்தைப் பொறுத்தவரையில் ஆசிரியர் அருணன் அவர்கள் திரு வானமாமலை அவர்களின் கூற்றையே, அதாவது விஜயநகர பேரரசுக்கு முந்தைய காலம் என்று யூகிக்கலாம் என்ற கருத்தையே, மேற்கோள் காட்டுகிறார்.
தோழர் தென்றல் சிந்தித்துப் பார்த்து தனது கருத்தைத் தெரிவிப்பதில்லை, நான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். பேசப்படும் விடயத்துக்குப் பொருந்தினாலும், பொருந்தாது விட்டாலும் ‘மேட்டுக்குடி, மேட்டிமை, நிலப்பிரபுத்துவம்’ போன்ற வழக்கமான வார்த்தைகளை என்றெல்லாம் அவிழ்த்து விட்டால் அவரது தோழர்கள் அப்படியே அசந்து போய்விடுவார்கள் என்று நினைக்கிறார் போல் தெரிகிறது.
அவர் யாருடன் எதைப்பற்றிப் பேசினாலும், பேசப்படும் விடயத்துக்கு எந்த வித தொடர்பில்லாது விட்டாலும் கூட, மறக்காமல் ‘மேட்டிமை, மேட்டுக்குடி, நிலப்பிரபுத்துவம் போன்ற சொற்களை தனது பதில்களில் அள்ளி வீசுவதைக் காணலாம். அதன் மூலம் அவரது விசிறிகளுக்கு அவர் கூறுவதென்னவென்றால், அவர் எப்படி உளறினாலும் இன்னும் நிலை தடுமாறவில்லை, அதாவது அவர் இன்னும் கம்யூனிசத்தையும், வர்க்கப்போராட்டத்தையும் பற்றி தான் பேசுகிறார் என்று அவர்களை ஆசுவாசப்படுத்தும் நோக்கத்தில் தான் போலிருக்கிறது. அல்லது இரண்டு நூற்றாண்டுகளுக்கும் குறைவான காலத்துக்குள் இலங்கைக்கு வந்த மலையகத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டின் இலக்கிய, பேச்சு வழக்கிலுள்ள நெருங்கிய தொடர்பை, இலங்கையின் பூர்வீக குடிகளாகிய ஈழத்தமிழர்களுடன் ஒப்பிட முடியாது என்ற உண்மையைக் கூறுவது மேட்டிமையைக் காட்டும் செயல் என்று எந்த முட்டாளும் கூறமாட்டான்.
//நீயெல்லாம் இந்து என்று சொன்னால் யார் இந்து என்று கேட்கச் சொல்லி இந்தப் பதிவு ஒரு முதன்மையான கேள்வியைக் கேட்கிறது.///
உண்மையிலேயே இந்தக் கேள்வி எனக்குப் புரியவில்லை. அல்லது இணையத்தளத்தில் முன்பின் தெரியாதவர்களுடன் பேசும் போது, ஒருமையில் பேசுவது தவறு என்று கூடத் தெரியாத மடச்சாம்பிராணியுடன், நான் எனது நேரத்தை வீணாக்குகிறேனா என்றும் எண்ணத் தோன்றுகிறது.
1. இலங்கையில் நடைபெறும் காத்தவராயன் நாடகத்தில் பறையன், பார்ப்பான் என்று யாரும் கிடையாது. அது முற்று முழுதாக பக்தி சம்பந்தமான ஒரு நிகழ்ச்சி(கூத்து). உதாரணமாக, யாழ். நல்லூர் முருகன் கோயிலில், மாம்பழத் திருவிழா என்ற பெயரில், முருகன் மாம்பழம் தரவில்லை என்று கோபித்துக் கொண்டு பழனிக்குப் போவதை எவ்வாறு நடத்திக் காட்டுவார்களோ. அதே போல் மாரியம்மனின் மகன் காத்தவராயன், தனது முற்பிறப்பில் செய்த தவறுக்காக பூவுலகில் பிறந்து, ஏழு சப்த கன்னிகளில் ஒருவராகிய ஆரியப்பூமாலையும், பூமியில் பிறந்து, இருவரும் ஒருவரையொருவர் காதலித்து, அவள் ஒரு சாபம் காரணமாக கழுமரத்துடன் பிறந்ததால், தனது காதலை நிறைவேற்றுவதற்காக, அவளை மணப்பதற்காக, மனமுவந்து அவனாகவே முன்வந்து கழுவில் ஏறுகிறான். அவனது காதலின் உறுதியைக் கண்ட காளியும், கடவுள்களும் வந்து அவனைக் கழுவிலிருந்து மீட்டு, அவன் கடைசியில் ஆரியப்பூமாலையை மணந்து, மகிழ்ச்சியாக விண்ணுலகில் வாழ்கிறான். மங்களம், சுப மங்களம். தமிழ்நாட்டிலுள்ள ‘hang-ups’ ஒன்றும் அங்கு கிடையாது.
2. இந்தப் புராணக் கதையைத் தான் ஈழத்தமிழர்கள் மாரியம்மனைக் குளிர்விக்கவும், காத்தவராயனின் அருளை வேண்டியும் பயபக்தியுடன் காத்தவராயன் கூத்தாக, தொன்று தொட்டு ஆடுகின்றனர். அதில் பார்ப்பானுமில்லை, பறையனுமில்லை எந்தச் சாதிக்குமிடமில்லை. ஆனால் தமிழ்நாட்டில் காத்தவராயன் கதை சாதியோடு இணைக்கப்பட்டு, அது திராவிடவீரர்களுக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும், வர்க்கப் போராளிகளுக்கும், உளறலிசஸ்டுகளுக்கும் வலுவான ஆயுதமாகப் பயன்படுகிறது என்பது சில நாட்களுக்கு முன்பு தான் எனக்குத் தெரியும். இது தெரியாமல், காத்தவராயன் கதைக்கு நான் கருத்து சொல்லப் போய், சும்மா வெறுவாயை மென்று கொண்டிருந்த தோழர் தென்றலுக்கு அவல் கொடுத்த மாதிரி போய் விட்டது. 🙂
3.நான் ஒன்றும் பார்ப்பன விசிறி அல்ல என்பதை இங்கேயே பலருக்கும் தெரியும். ஆனால் சும்மா தேவையில்லாமல் உண்மையை மறைக்கும் பழக்கமும் எனக்குக் கிடையாது. பார்ப்பனர்கள் சென்ம வினையாக மாரியம்மவைப் பார்க்கிறார்கள் என்பதும் தென்றலின் கற்பனை மிகுந்த உளறல் தான், நானறிய பல பார்ப்பனர்கள் மாரியம்மன் பக்தர்கள்/உபாசகர்கள்.
4. பிரச்சனை என்னவென்றால், தனக்குத் தெரியாததை எல்லாம் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள விரும்பும், அண்ணன் தென்றலுக்கு இலங்கையைப் பற்றி ஒரு இழவும் தெரியாது. தமிழ்நாட்டைப் போல் தான் இலங்கையிலும் பார்ப்பனர்கள், வெள்ளாளர்கள் என்று “ஆதிக்க சாதிகள்” இருப்பதாக நினைத்துக் கொண்டு, ஒரே மாதிரியே உளறிக் கொண்டிருக்கிறார்.
5. இலங்கையில் குறிப்பிடுமளவு எண்ணிகையில் பார்ப்பனர்களோ அல்லது பார்ப்பன ஆதிக்கமோ கிடையாது. இருக்கிற பார்ப்பான்களும் நாங்களும் தமிழர்கள் தான் என்பது மட்டுமன்றி, புலிகளுடன் இணைந்து, நாட்டைக் காக்கும் போரிலும் தம்மை மாய்த்துக் கொண்டார்கள் (உதாரணம்: மாவைக்குமரன் – தமிழ்ச் செல்வனின் bodyguard) . அதேவேளையில் வெள்ளாளர்களுக்கும் ஏனைய தாழ்ந்த சாதியினருக்கும் கூட, உணவுப் பழக்கங்களில் பெரிய வேறுபாடில்லை. அதனால் உணவு சம்பந்தமான விடயங்களில் யாரும், யாரையும் ஆதிக்கம் செலுத்துவதில்லை, செலுத்தவும் முடியாது.
6. உதாரணாமாக, வல்வெட்டித்துறையில் (மேலேயுள்ள காணொளி), புலிகள் தலைவர் பிரபாகரனின் ஊரில் ஆதிக்க சாதியினர் வெள்ளாளர் அல்ல, கரையார் என்றழைக்கப்படும் மீனவர்கள் தான். சாதியில் அவர்கள் வெள்ளாளரை விடத் தாழ்ந்தவர்கள் ஆனால் வல்வெட்டித்துறையில் அவர்கள் தான் ஆதிக்க சாதியினர். (நான் கேள்விப்பட்டளவில்) வெள்ளாளர்கள் அங்கே வாலையாட்ட முடியாது. அந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் தான் ஒன்று சேர்ந்து தமது ஊரில், தங்களின் கோயில்களில் ஆடு, கோழியை வெட்டி, அசுத்தப் படுத்தாமல், ஏலம் போடுவோம் எனத் தீர்மானித்துக் கொண்டார்கள். அதனால் தென்றலின் பார்வையில் மீன்பிடிக்கும் வல்வெட்டித்துறைக் கரையார் எல்லோரும் பார்ப்பனர்களாகி விட்டனர். 🙂
7. இலங்கையில் ஆடு, கோழிகளை வெட்டும் மிகப்பெரும் வேள்வி நடக்கும் பிரசித்தி பெற்ற முன்னேஸ்வரம் காளி கோயிலில் கூட, கோயிலுக்கு முன்னால் மிருகங்களை வெட்டுவதில்லை, அதற்கென ஒதுக்கப்பட்ட சுத்தமான, மண்டபங்களில் வைத்து தான் வெட்டப்படுகிறது. ஆகவே எதற்கெடுத்தாலும், சம்பந்தமில்லாமல் பார்ப்பனீயத்தை இணைத்து (குறைந்த பட்சம் இலங்கை சம்பந்தமான விடயங்களிலாவது) உளறுவதை இனிமேலாவது நிறுத்திக் கொள்வாரென நம்புவோம். ஏனென்றால் இல்லாத பிரச்னையைப் பற்றிப் பேசுவதும், அதற்குப் பதிலளிக்க வேண்டியிருப்பதும் எரிச்ச்சலையூட்டுகிறது.
8. இதில் வேடிக்கை என்னவென்றால் காந்தியடிகள் வெள்ளையர்களுக்கெதிராக சட்ட மறுப்பு இயக்கம் நடத்தியது போன்று, ஆடு, கோழி போன்ற வாயில்லாத ஜென்மங்களை துடிக்க, துடிக்க கொலை செய்வது தான் பார்ப்பனர்களையும், பார்ப்பனீயத்தையும் எதிர்க்கும் ஒரே வழி என்பது போல் உளறும் தென்றலின் கருத்தை ஆதரிப்பவர்களும் இந்த இணையத்தளத்தில் இருக்கிறார்கள். அதைப் பார்க்கும் போது தான், தமிழ்நாட்டில் தமிழினத்தின் எதிர்காலத்தை நினைத்துக் கவலையேற்படுகிறது.
வியாசன் கொடுத்த மறுமொழிகள் மேற்கொண்டு மேட்டுக்குடிகளின் பார்ப்பனிய நக்கத்தனத்தை அறிந்த கொள்ள உதவும் என்பதால் அவர் அளித்த பதில்களின் அரசியலைக் கவனிப்பது அவசியமாகும்.
1. “இரண்டு நூற்றாண்டுகளுக்கும் குறைவான காலத்துக்குள் இலங்கைக்கு வந்த மலையகத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டின் இலக்கிய, பேச்சு வழக்கிலுள்ள நெருங்கிய தொடர்பை, இலங்கையின் பூர்வீக குடிகளாகிய ஈழத்தமிழர்களுடன் ஒப்பிட முடியாது” என்பது உண்மை என்கிறார். ஆனால் இப்படிச் சொல்கிற வியாசன் மலையகத் தமிழர்களின் காத்தவராயன் கூத்திற்கும் ஈழத்தமிழர்களின் காத்தவராயன் கூத்திற்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படியெந்த முயற்சியும் எடுக்காமல் இனவெறியோடு அவர் கூறிய கருத்து மேட்டுக்குடிகளின் அப்பட்டமான பாசிசமாகும். மலையகத் தமிழர்கள் மீது மேட்டுக்குடிகளின் இத்தகைய வெறுப்பு, சாதி ரீதியிலானது என்பதுதான் இதன் மூலம். தனித்த பண்பாடு, கலாச்சாரம் என்பதன் அடிப்படையில் மலையகத் தமிழர்களைச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் என்று கம்யுனிஸ்டுகள் வரையறுத்த பொழுது கொக்கரித்த வியாசன் போன்ற பாசிஸ்டுகள் இன்றைக்கு காத்தவராயன் கதையில் வரும் சாதி என்பதை மறைப்பதற்காக மலையகத் தமிழர்களின் கலாச்சாரமும் பண்பாடும் வேறு என்று சொல்வார்கள் என்றால் இந்தக் கூட்டத்தின் பிழைப்புவாதம் எத்துணை அறுவெறுக்கத்தக்கது என்பதைக் கவனிக்க வேண்டும்.
2. இரண்டாவதாக காத்தவராயன் கதையில் பறையனும் இல்லை பார்ப்பானும் இல்லை எந்தச் சாதியும் இல்லை என்கிறார். இப்படிச் சொல்கிற வியாசன் ஆறாவது கருத்தில் அந்தர்பல்டி அடிக்கிறார். அன்னாரது ஆறாவது கருத்து ஆதிக்க வெள்ளாள சாதிகளைத் தற்காப்பதற்காக, தாழ்த்தப்பட்ட கரையார் சாதிகளே தங்களுக்குள் ஆடு கோழி பலியிடுதலை தவிர்த்துக்கொண்டனர் என்று சொல்லவருகிறார். உணவிற்கு தாழ்த்தப்பட்ட சாதிகளை கைகாட்டி இவர்கள் இன்ன சாதி தான் என்று அறிவித்து அவர்கள் வெள்ளாளர்களுக்கும் கீழானவர்கள் என்று சொல்ல முடிகிற வியாசன், அவர்கள் கொண்டாடுகிற காத்தவராயன் கூத்தை காணொளியாகக் காட்டி சான்று பகர தயங்கவில்லை. ஆனால் அங்கு மட்டும் கரையார் சாதியினர் என்று யாரும் வரவில்லை. பார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்குகிற பொழுது காத்தவராயன் கூத்து இலங்கை முழுவதும் பொதுவானது; சாதியம் இல்லை என்று சமத்துவம் பேசுகிறவர்கள் சைவ உணவிற்கு மட்டும் இவர்கள் இன்ன தாழ்ந்த சாதியார் என்று சொல்லி காட்டுவதில் முனைப்புடன் இருக்கின்றனர் என்றால் இவர்களின் பார்ப்பனியத்துடன் எவ்விதம் ஈயும் பீயுமாக இருக்கின்றனர் என்பதை நோக்கித் தெளிய வேண்டும்.
3. பார்ப்பனியத்தை விமர்சிக்கிற பொழுது அன்னார் சொல்கிற வாதம் இலங்கையில் பார்ப்பனர்கள் அதிகம் கிடையாது என்பதாகும். இலங்கையில் வெள்ளாள (ஈழம்)-கொவிகம (சிங்கள) மேலாதிக்கமே பார்ப்பனியத்திற்கு தலைமையேற்கிற பொழுது அய்யர்களைக் காட்டி அழுகுணி வேசம் போடுகிறார். எது பார்ப்பனியம் என்பதற்கு வியாசனின் வார்த்தைகளையே கவனிக்கலாம். ‘எங்களை எதிர்த்து பார்ப்பனர்கள் எதுவும் செய்ய முடியாது’ என்று அடிக்கடி கூறுவார். இங்கு சாதி இல்லாமையைப் பேசவில்லை; மாறாக அனைத்து சாதிக்கும் வெள்ளாளர்களே மேன்மையானவர்கள் என்ற பார்ப்பனிய இயங்கியல் பேசுகிறது. ஆள் மாறினாலும் பூணுல் மாறாத மேலாண்மை இது. தமிழகத்திலும் இதைத் தான் செய்தார்கள். வருண சிந்தாமணி எழுதி பார்ப்பனர்களைக் காட்டிலும் தாங்களே உயர்வானவர்கள் என்று அறிவித்த வெள்ளாளர்கள் தங்களுக்கு கீழ் சூத்திர சாதிகளை நிர்மாணிக்கவும் தயங்கவில்லை. இதுதான் ஆதிக்க சாதிகளின் பார்ப்பனிய முறையை நிர்வகிக்கிற கணக்குப் பிள்ளைத்தனமாகும்.
4. தியாகராச ஆராதனை விழா நடத்திய பார்ப்பனக்கூட்டத்திற்கு மத்தியிலேயே மாட்டுக்கறி விருந்து வைத்து பார்ப்பனிய எதிர்ப்பு மரபை புரட்சிகர இயக்கங்கள் காட்டிவிட்ட பிறகு ஆடு கோழிகளை வெட்டுவதுதான் பார்ப்பனியத்தை ஒழிக்கும் வழியோ என்று சீவகாருண்யம் பேசி வியாசன் சீரழிந்து நிற்கிறார். தில்லைப்போராட்டத்திலே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் மூக்கை நுழைக்கின்றனர் என்று பார்ப்பனர்களுக்கு முன் பீக்கு முந்திய குசுவாக இருந்த வியாசன், ஆடு கோழிகளைத் தின்பதால் பார்ப்பனியத்தை முறியடிக்க முடியுமா என்று கேட்கிறார் என்றால் புல்லுருவிகளின் பிழைப்புவாத வாழ்க்கை எவ்விதம் மக்களைச் சுரண்டுகிறது என்பதையும் கவனித்துத் தெளியலாம்.
5. ஆரியமாலாவும் காத்தவராயனும் விண்ணுலகில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். இதுதான் இலங்கை கதையாம். விண்ணுலகிற்கு அனுப்புகிற கேங்-அப்பே தெரியாத தெள்ளவாரிகள் தமிழ்நாட்டில் உள்ள கேங்-அப் இலங்கையில் கிடையாதாம். வேறு எதெல்லாம் மேட்டுகுடி ஆதிக்கசாதிகளுக்கு கிடையாது? மான ரோசமாவது மேட்டுகுடி பார்ப்பனிய அடிமைகளுக்கு இருக்கிறதா? இல்லையா?
6. இலங்கை முன்னேஸ்வரம் காளி கோயிலில் சுத்தமான மண்டபத்தில் தான் பலியிடல் நடக்கிறதாம். இப்படிச் சுத்தமான (!!!) முறையில் பலியியடல் நடக்கிற பொழுது பலியிடலுக்கு எதிராக அறவழியில் ஆதிக்கசாதிகள் போராடுகிறார்கள் என்றால் இவர்களின் உடனடி பிரச்சனை உண்டகட்டி பிரச்சனை என்பது சொல்லித் தெரியவேண்டுமென்பதில்லை. இந்துத்துவக்கைகூலிகளுக்கு வேறென்ன பிழைப்பு இருக்கிறது?
வியாசனுக்கு காத்தவராயன் கதையில் தமிழர் மரபு எது ,ஆரியர்கள் புகுத்திய புராணம் எது என்று நாம் விவரிக்கும் அளவிற்கு பார்பன மோகத்தில் திளைக்கின்றார் ! என்ன செய்வது ஹும் நாமும் அவருக்கு புரியும் அளவிற்கு விளக்குவோம் !
தமிழர் நம்பும் நாட்டார் மரபு :
பறையர் சாதியில் பிறந்த காத்தவராயன் தன் சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமனம் செய்து வாழ்ந்து வந்தான். ஒரு நாள் ஆற்றில் குளிக்கும்போது அவன் அழகில் மயங்கிய ஒரு பிராமணப் பெண் அவனையே திருமனம் செய்வேன் என்று அடம் பிடிக்கிறாள். அவளை அவன் இரண்டாம் திருமனம் செய்துகொண்டான். இது தெரிந்த பிராமணர்கள் மன்னரிடம் முறையிட மன்னரின் உத்தரவுப்படி அவன் கழுவிலேற்றிக் கொல்லப்பட்டான். பின் அவன் தெய்வமானான். பறைசாதி மனைவி ஒரு புறமும், பிராமணச் சாதி மனைவி மற்றொரு புறமுமாக அமைந்த காத்தவராயன் சிலை, பார்பனிய மேலாண்மைக்கு அறைகூவல் விட்டது. எனவே இதற்கும் ஒரு முற்பிறவியை உருவாக்கினார்கள்.
ஆரிய பார்ப்பனீயம் கட்டிவிட்ட கதை :
ஆரிய பார்ப்பனீய கதை படி, ‘மான் வயிற்றில் பிறந்த காத்தவராயன் தேவலோகத்தில் நந்தவனம் காக்கும் பொறுப்பில் ஈடுபட்டிருந்தான். அங்கு நீராட வந்த ஏழு தேவ கன்னியரின் சாபத்திற்கு ஆளாகிப் பறையனாகப் பிறந்தான். நந்தவனத்திற்கு நீராடவந்த ஏழு தேவ கன்னியரில் ஒருத்தியே ஆரியமாலாவாகப் பிறந்தாள். கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட பின்னர் காத்தவராயன் மீண்டும் தேவலோகத்திற்கு வந்து சேர்வான் என்று சாப விமோசனத்தையும் சிவ பெருமான் வழங்கியிருந்தார்.’ என திரிபு கதைகள் உருவாக்கப்பட்டன.
வியாசன் எந்த மரபை சார்ந்து காத்தவராயன் கதையை நமக்கு விளக்குகின்றார் என்பது புலனாகின்றது அல்லவா ? அப்பட்டமான ஆரிய-பார்பன மரபு தானே காத்தவராயன் கதையில் அவருக்கு முன் வந்து நின்று அவரின் அறிவை நாறடிக்கின்றது !
//1. இலங்கையில் நடைபெறும் காத்தவராயன் நாடகத்தில்……
//2. இந்தப் புராணக் கதையைத் தான் ஈழத்தமிழர்கள் மாரியம்மனைக் குளிர்விக்கவும்…
நன்றி பாரதி தம்பி
தென்றல் அவர்களுக்கு,
// யுனிவர்படி *** கருத்துப்படி காத்தவராயன் கலருக்காகத்தான் ஆரியமாலாவைக் காதலித்தான் என்றாகும்//
எனது கருத்து ஆர்யமாலாவின் பெற்றோர்கள் அல்லது முன்னோர்கள் எதற்காக இந்கே கோயிலில் வேலை செய்ய அழைத்துவரப்பட்டனர் என்பதைப் பற்றியது.
காத்தவராயன் ஊர் காவலாளி. பாடிக்கொண்டே ரோந்து வருவது அவர் வழக்கம். அவரின் பாட்டு மிகவும் புகழ் பெற்றது. அவரின் பாட்டினில் மயங்கிய ஆர்யமாலாதான் காத்தவராயனை அனுகுகிறார். காதலை தெரிவிக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு காத்தவராயனுடனேயே வந்து விடுகிறார். அவர்கள் பிடிபடும் வரையில் ஒரு மலையின் அடிவாரத்தில் உள்ள காட்டில் மறைந்து சிறிது காலம் கூடி வாழ்ந்தனர்.
அதே போன்று முத்துப்பட்டன் என்ற பட் பார்ப்பனர் அருந்ததியப் சகோதரிகளைக் கண்டு மனம் மயங்கி அவர்களின் தந்தையைப்பார்த்து பெண் கேட்கிறார். தந்தையின் நிபந்தனைக்கிணங்க செருப்புத் தைக்கும் வேலையைக் கற்றுக்க கொண்டு தான் தைத்த ஒரு ஜோடி செருப்புடன் வந்து அந்த பெண்களை மணமுடிக்கிறார். சில காலத்திற்குப்பிறகு அவரும் கொல்லப்படுகிறார்.
நான் காத்தவராயனைப் பற்றியும் அம்பியிடம் குறிப்பிட்டிருக்கிறேன். அருந்ததியப் சகோதரிகளைக் மணந்து கொண்ட முத்துப்பட்டனைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.
நான் இது போன்ற கலப்பைத் தான் வரவேற்கிறேன். இவற்றை நான் ஏன் மறைக்கிறேன். அந்த ஜோடிகளுக்கு நேர்ந்த துரோகங்களை நான் ஏன் மறைக்கிறேன். நீங்கள் என் பின்னூட்டங்களை சந்தேகத்துடன் பார்ப்பதால் வந்த விளைவு இது.
வியாசன் ,தென்றல்,அம்பி ,தமிழகத்து காத்தவராயன் கதையும் ,பஞ்சாபின் சேத்தவராயன் கதையும் காட்டும் படிமம் ஒன்று தான். ஆரியம்-பார்ப்பனீயம் தன் சாதி பெருமைகளையும் , தன் ஆரிய இன பார்பன மரபுகளையும் அவ்வளவு விரைவில் விட்டு கொடுக்காது என்பது தான். வியாசன் , ஈழ காத்தவராயனுக்கு கோழி ,ஆடு வெட்டப்படுவதால் ,அவனை பார்பனிய மரபு அற்றவன் என்று எடுத்துக்கொண்டு அவன் கதையை மீண்டும் படிக்கின்றேன். நன்றி! பின்னுட்டம் 100.1 இட்ட அம்பி தான் காத்தவராயனுக்கும் ,சேத்தவராயனுக்கும் பதில் சொல்லவேண்டும் !பாப்பான் மேல் ஒரு தூசு கூட விழ விடமாட்டேன் என்று சபதம் செய்து உள்ள அம்பிக்கு இப்ப நல்ல ஆடுகளம் கிடைத்து உள்ளது. களத்தில் காத்தவராயனையாவது அல்லது சேத்தவராயனையாவது கருபொருளாக எடுத்துக்கொள்வது அம்பி அவர் தம் விருப்பம். நான் எவ்விவாதத்துக்கும் தயார் !
உள்ளே காத்தவராயன் .., வெளியே பஞ்சாபின் சேத்தவராயன்! யாரிடம் அம்பி ஆடுகளத்தில் அடிபட போறாரு என்று தெரியவில்லை !
உள்ளே காத்தவராயன், வெளியே சேத்தவராயன்.. அய்யகோ என்ன செய்யப்போகிறேன்.. காத்தவராயன் சாமி, சேத்தவராயன் ஆசாமி.. அதனால் ஆசாமி சேத்தவராயனையே எதிர் கொண்டு, இன்னும் ஒரு வருடத்திற்கு தங்களுடன் விவாதம் என்ற பெயரில் தண்டனையை அனுபவிக்க வேண்டியதுதான்.. ஆகட்டும் தொடங்குங்கள் உங்கள் கட்&பேச்ட் கைங்கரியத்தை.. முதல் 50 பக்கங்களை வெட்டி அதை இங்கே ஒட்டி ஆரம்பியுங்கள் உங்கள் பார்ப்பன எதிர்ப்பு புரட்சியை..
அம்பிக்கு , வியாசனுக்கு ,
காத்தவராயன் என்ற ஆசாமியை அவன் பார்பனன் வீடு பெண்ணை மணந்தான் என்ற ஒரே காரணத்துக்காக கொன்ற ஆரிய பார்பன கூட்டம், இப்போது அவனை சாமியாக்கி அவன் மீது பார்பன கதையை ஏற்றி வியாசன் போன்ற அம்பாவி தமிழ் மக்களை நம்பவைத்து ஏமாற்றும் போது பார்னியத்துக்கு கொடிபிடிக்கும் அம்பிக்கு கொண்டாட்டம் தானே ?
ஒரு பறையர் தன் காதலினால்,காதலுக்காக சாமியாக முடியுமென்பதை ’விவரமான’ நீங்களே ஏற்காமல் அவரை ஒரு ஆசாமி மட்டுமே என்று மட்டுப்படுத்தும் போது, வியாசர் போன்ற ‘அப்பாவி’ தமிழ் மக்கள் தங்கள் சாமி ஒரு பறையர் என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.. தாங்களும் வியாசரும் சாதி என்ற ஒரே நுகத்தடியை வலம் இடமாக இருந்து மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைத்தான் காணமுடிகிறது..
//வியாசர் போன்ற ‘அப்பாவி’ தமிழ் மக்கள் தங்கள் சாமி ஒரு பறையர் என்பதை ஏற்க மறுக்கிறார்கள்..///
இதைத்தான், இலங்கையில், ‘கள்ளப் பிராமணியளோட கவனமாயிருக்க வேணும், எப்பிடியெண்டாலும் கடைசியில புத்தியைக் காட்டி விடுவார்கள்” என்பார்கள். அதாவது தருணம் பார்த்து சிண்டு முடித்து விடுவது தான் பார்ப்பனர்களின் வேலை.
நான் வரலாற்றின் அடிப்படையில், அதாவது கழுமரமேறும் வழக்கம் காத்தவராயன் கதை நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் இருக்கவில்லை என்ற நம்பிக்கையில் தான் இலங்கைக் காத்தவராயன் பறையராக இருக்க முடியாதென்று வாதாடினேனே தவிர, பறையராகிய காத்தவராயனை வணங்கக் கூடாதென்றல்ல. உண்மையில், சிலநேரங்களில், தென்றலின் கருத்துடன் ஒத்துப் போகக் கூடாதென்பதற்காகக் கூட வாதாடினேன் என்று கூடக் கூறலாம். ஆனால், அம்பி தன்னுடைய கருத்தை அப்படியே என் தலையில் கட்டி விடப்பார்க்கிறார்.
// இதைத்தான், இலங்கையில், ‘கள்ளப் பிராமணியளோட கவனமாயிருக்க வேணும், எப்பிடியெண்டாலும் கடைசியில புத்தியைக் காட்டி விடுவார்கள்” என்பார்கள். அதாவது தருணம் பார்த்து சிண்டு முடித்து விடுவது தான் பார்ப்பனர்களின் வேலை. //
ஒவ்வொரு சாதிக்கும் உங்கள் கைவசம் இப்படி ஒரு முதுமொழி இருக்கும் போலும்.. வெளிப்படையாக வசைபாடும் தென்றலை நானும் எதிர்த்து விவாதிப்பதால் தங்கள் தரப்பில் நானும் இருப்பதாக உங்களை யார் நம்பச்சொன்னது..? எந்த நேரமும் முதுகில் கத்தி வைத்து/ காலை வாரக்கூடிய தங்களுக்கு அவ்வப்போது ஜால்ரா அடிக்க நான் என்ன ஒரு மறை கழண்ட ’பேராசிரியரா’..?!
// நான் வரலாற்றின் அடிப்படையில், அதாவது கழுமரமேறும் வழக்கம் காத்தவராயன் கதை நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் இருக்கவில்லை என்ற நம்பிக்கையில் தான் இலங்கைக் காத்தவராயன் பறையராக இருக்க முடியாதென்று வாதாடினேனே தவிர, பறையராகிய காத்தவராயனை வணங்கக் கூடாதென்றல்ல. உண்மையில், சிலநேரங்களில், தென்றலின் கருத்துடன் ஒத்துப் போகக் கூடாதென்பதற்காகக் கூட வாதாடினேன் என்று கூடக் கூறலாம். ஆனால், அம்பி தன்னுடைய கருத்தை அப்படியே என் தலையில் கட்டி விடப்பார்க்கிறார். //
தாங்கள் பார்ப்பனர்களையும், அவர்களுக்கு மூத்தவர்களாக நீங்கள் கூறும் பறையர்களையும் வேற்றுமையின்றி தங்களுக்கு கீழே அமுக்கி வைப்பீர்கள் என்ற கணிப்பில் அப்படிக் கூறினேன்.. தாங்கள் காத்தவராயன் பறையராக இருந்தாலும் வணங்கத் தயார் என்று கூறுவது தாங்கள் ஒரு சாதி வேற்றுமைகளை கடந்த தமிழ் தேசியவாதி என்பது தற்போதைக்கு புலனாகிறது..
தமிழ்-தாகம் உங்களை பார்ப்பனக் கூட்டாளி என்று குற்றம் சாட்டிக் கொண்டே, தங்களைப் போன்ற அப்பாவிகளை நம்ப வைத்து பார்ப்பனர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று பார்ப்பனர்களின் மீதும் குற்றம் சாட்டுகிறார்.. இதற்கு,அவரது முதல் குற்றச்சாட்டில் இருந்தே அவருக்கு பதிலளித்தேன்.. (1) காத்தவராயன் சாமியல்ல ஆசாமிதான் என்று தமிழ்-தாகம் கூறுவதும் (2) தாங்கள் கூறும் காத்தவராயன் சாமி வேறு-காத்தவராயன் ஆசாமி வேறு என்ற வாதமும் இணைவதைத்தான் எடுத்துக் காட்டியிருக்கிறேன்; தமிழ்-தாகமும், வியாசரும் காத்தவராயன் என்ற ஆசாமி சாமியாக வழிபடப்படுவதை ஏற்காததன் காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறேன்.. ஏனெனில் காத்தவராயன் என்ற ஆசாமியை சாமிக்கவேண்டிய அவசியம் பார்ப்பனர்களுக்கு ஏன் வரப்போகிறது..? பார்ப்பனப் பெண்களை திருமணம் செய்தால் மரணம்தான் என்ற எச்சரிக்கையைத் தரும் ‘வில்லன்கள்’தானே பார்ப்பனர்கள் இவர்கள் (தமிழ்-தாகம் போன்ற பார்ப்பனிய எதிர்ப்பு போராளிகள்!) வாதப்படி..
காத்தவராயனை சாமியாக்கியது பார்ப்பனர்கள் என்று பார்ப்பனர்களை குற்றம் சாட்டுவதன் மூலம் காத்தவராயனை ஆசாமியாகவே நிலைநாட்டுவதில் ஒளிந்திருக்கும் சாதியுணர்வு யாரிடமெல்லாம் இருக்கிறது என்ற கேள்வியும் எழுவதுதானே இயல்பு.. தமிழ்-தாகத்தால் பார்ப்பன-கூட்டாளி என்று குற்றம் சாட்டப்படும் வியாசர் போன்ற ‘அப்பாவிகளிடம்’ மட்டுமல்ல, தமிழ்-தாகத்திடமும் அவ்வுணர்வு இருக்கிறது என்று நான் கூறியது இக்கேள்விக்கு பதிலாக இருப்பதை நீங்கள் உங்கள் சார்பாக மறுத்திருக்கிறீர்கள், அவர் இன்னும் மறுக்கவில்லை.. மாறாக அவருக்கு பதில் என்னை மறுபடியும் நுகத்தடியில் பூட்டிவிட்டு நழுவுகிறார்..
நீங்களும் என்னை மட்டுமே நுகத்தடியில் மாட்டிவிட்டு நழுவுவதற்கு முன், கழுமரத்துடன் பிறந்த ஆரியபூமாலையை மணக்கவேண்டும் என்று காத்தலிங்க சாமி மாரியம்மனிடம் அடம்பிடித்ததும் ‘வெள்ளைத்தோல்’ காரணமாகத்தானா என்பதையும் விளக்கியருளவேண்டும்..
///தங்கள் தரப்பில் நானும் இருப்பதாக உங்களை யார் நம்பச்சொன்னது..? ///
‘நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்கும்’ என்பார்கள். என் தரப்பில் நீங்கள் இருப்பதாக நான் நினைத்துக் கொண்டதாக நீங்கள் கற்பனை செய்து கொண்டதற்கு நான் பாடா? என்னால் எங்குமே தனித்தியங்க முடியும், எதிலுமே நான் மற்றவர்களை எதிர்பார்ப்பதில்லை. இங்குள்ளவர்களை என்னால் தனியே சமாளிக்க முடியாதென்று நான் நினைத்திருந்தால் இந்தப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுத்திருக்க மாட்டேன். உங்களின், அதாவது பார்ப்பனர்களின் சிண்டு முடித்து விடும் பழக்கத்தை தமிழர்கள் அறிவர். அதைத் தான் நான் குறிப்பிட்டேன்.
நான் தமிழர்களின் சைவத்தை தமிழாக்க வேண்டும், சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை, எங்களின் முன்னோர்கள் (இலங்கையில்) அந்த அடிப்படையில் தான் சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்கள் என்றதை, நான் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனீயத்துக்கும் ஆதரவு என்று நீங்கள் தப்புக் கணக்குப் போட்டதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும். பார்ப்பனீயத்தை நானும் எதிர்க்கிறேன் ஆனால் தென்றல் போல, தமிழர்களை எல்லாம் பிரித்து, தமிழர்களையும், தமிழர்களின் முன்னோர்களையும் இழிவு படுத்தியல்ல, அது தான் எனக்கும் தென்றலுக்குமுள்ள முரண்பாடு.
உங்களுக்கு என்னுடன் கூட்டுச் சேரும் எண்ணமிருந்திருக்கலாம் போல் தெரிகிறது. அந்த எண்ணத்துடன் எனது கருத்துக்களை நீங்கள் அவதானித்தால் தான், ஏமாற்றத்துடன் “எந்த நேரமும் முதுகில் கத்தி வைத்து/ காலை வாரக்கூடியவன்” என்ற முடிவுக்கு தாங்கள் வந்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுடன் கூட்டுச் சேரும் எண்ணம் எனக்கு ஒருபோதுமிருந்ததில்லை. 🙂
/// தாங்கள் காத்தவராயன் பறையராக இருந்தாலும் வணங்கத் தயார் என்று கூறுவது தாங்கள் ஒரு சாதி வேற்றுமைகளை கடந்த தமிழ் தேசியவாதி என்பது தற்போதைக்கு புலனாகிறது.///
உங்களின் புரிந்துணர்வுக்கு நன்றி.
//காத்தவராயன் என்ற ஆசாமியை சாமிக்கவேண்டிய அவசியம் பார்ப்பனர்களுக்கு ஏன் வரப்போகிறது..? பார்ப்பனப் பெண்களை திருமணம் செய்தால் மரணம்தான் என்ற எச்சரிக்கையைத் தரும் ‘வில்லன்கள்’தானே பார்ப்பனர்கள் இவர்கள் (தமிழ்-தாகம் போன்ற பார்ப்பனிய எதிர்ப்பு போராளிகள்!) வாதப்படி..//
காத்தவராயனை பார்ப்பனர்கள் சாமியாக்கியதன் காரணம், என்ன தான் அவர்களின் பெண்களைத் தொட்டவனை, அரசனின் உதவியுடன் பொய்க்குற்றம் சாட்டிக் கொன்றாலும், அதன் பின்னரும், அவர்கள் தமிழ்நாட்டில், காத்தவராயனின் மக்களுடன் (தமிழர்களுடன்) தான் வாழ வேண்டும். காணி, வீடு, துரவுகளையும், தமிழர்களைச் சுரண்டுவதையும் விட்டு, கங்கைக்கரைப் பக்கம் திரும்பியோடினால் வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்வது, அதனால் தான், கிராமத்து மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க, வழக்கம் போல் காத்தவராயனுக்கு புராணக் கதை கட்டி, சாமியாக்கினார்கள் என்றும் கூட வாதாடலாம்.
// கழுமரத்துடன் பிறந்த ஆரியபூமாலையை மணக்கவேண்டும் என்று காத்தலிங்க சாமி மாரியம்மனிடம் அடம்பிடித்ததும் ‘வெள்ளைத்தோல்’ காரணமாகத்தானா என்பதையும் விளக்கியருளவேண்டும்..///
வெள்ளைத் தோல் மோகம் தான் அதற்குக் கூட காரணம் என்றும் வாதாடலாம் என்று நான் ஏற்கனவே கூறியதையும், அதற்கான ஆதாரத்தையும் பார்க்கவில்லையா? என்னுடைய கருத்தென்னவென்றால் வெள்ளைத் தோலைத் தவிர, அவனது மூத்தம்மானின் பெண்களுக்கும், கிழக்குத் தெருத் தமிழ்ப்பெண்களுக்கும் ஆரியப்பூமாலைக்கும் வேறென்ன பெரிய வேறுபாடு இருந்திருக்க முடியும்??
// நான் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனீயத்துக்கும் ஆதரவு என்று நீங்கள் தப்புக் கணக்குப் போட்டதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும். //
ஒரு கணக்கும் போடத் தேவையில்லை.. கடந்த கால விவாதங்களிலேயே, தாங்கள் பார்ப்பனர்களை எதிர்க்கும் பார்ப்பனீயர் என்பதை கூறியிருக்கிறேன்..
// காத்தவராயனை பார்ப்பனர்கள் சாமியாக்கியதன் காரணம், என்ன தான் அவர்களின் பெண்களைத் தொட்டவனை, அரசனின் உதவியுடன் பொய்க்குற்றம் சாட்டிக் கொன்றாலும், அதன் பின்னரும், அவர்கள் தமிழ்நாட்டில், காத்தவராயனின் மக்களுடன் (தமிழர்களுடன்) தான் வாழ வேண்டும். காணி, வீடு, துரவுகளையும், தமிழர்களைச் சுரண்டுவதையும் விட்டு, கங்கைக்கரைப் பக்கம் திரும்பியோடினால் வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்வது, அதனால் தான், கிராமத்து மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க, வழக்கம் போல் காத்தவராயனுக்கு புராணக் கதை கட்டி, சாமியாக்கினார்கள் என்றும் கூட வாதாடலாம்.//
காத்தவராயனை கழுவேற்றியதால் கிராமத்து மக்களின் எதிர்ப்பை பார்ப்பனர்கள் சமாளிக்க வேண்டியிருக்கும் என்கிறீர்கள்.. அந்த கிராமத்து மக்கள் ஏன் காத்தவராயன் கழுவேற்றப்பட்டதை தடுக்கவோ எதிர்க்கவோ இல்லை..? அன்றைய சாதிய நிலவரம் தெரியாமல் கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. காத்தவராயன் ஆரியமாலாவைக் காதலிக்காமல் கிராம நாட்டாமை மகளைக் காதலித்து மணம் செய்து கொண்டிருந்தால் சுவடே இல்லாமல் ’காணாமல்’ போயிருந்திருப்பார்..
// வெள்ளைத் தோல் மோகம் தான் அதற்குக் கூட காரணம் என்றும் வாதாடலாம் என்று நான் ஏற்கனவே கூறியதையும், அதற்கான ஆதாரத்தையும் பார்க்கவில்லையா? என்னுடைய கருத்தென்னவென்றால் வெள்ளைத் தோலைத் தவிர, அவனது மூத்தம்மானின் பெண்களுக்கும், கிழக்குத் தெருத் தமிழ்ப்பெண்களுக்கும் ஆரியப்பூமாலைக்கும் வேறென்ன பெரிய வேறுபாடு இருந்திருக்க முடியும்?? //
அய்யா, நான் கேட்டது நீங்கள் கூறும் ’உங்கள் ஊர் காத்தலிங்கசாமியைப்’ பற்றி.. நீங்கள் கதைத்துக் கொண்டிருப்பது முக்கொம்பு காத்தவராயனையும், அவரது முறைப்பெண்களையும் பற்றி.. குழப்பாமல் சரியாக பதில் கூறவும்..
ஆரிய பார்பனியத்தின் அத்தாரட்டியான பார்பனர்களுக்கு மட்டும் அல்ல ,அதை ஆதரிக்கும் எவருக்குமே அது நல் வழி காட்டாது என்பதற்கு உதாரணம் அம்பியும் ,வியாசனுமே ஆகும் ! அம்பி, காத்தவராயன் பார்பனன் வீடு பெண்ணை மணந்தான் என்ற ஒரே காரணத்துக்காக அவனை கொன்ற ஆரிய பார்பன கூட்டத்தையும் , காத்தவராயன்-ஆரியமாலா காதலை கொச்சை படுத்த “வெள்ளைத்தோலாசை” என்று வியாசன் கூறுவதன் மூலம் சாதியத்தையும் ஆதரிப்பதன் மூலம் ஆரிய-பார்பனியம் என்ற இரட்டை மாட்டு வண்டியின் இருபக்க மாடுகளாக இவர்கள் இருவருமே இருகின்றார்கள் என்பது நமக்கு புலனாகின்றது !
//காத்தவராயன்-ஆரியமாலா காதலை கொச்சை படுத்த “வெள்ளைத்தோலாசை” என்று வியாசன் கூறுவதன் மூலம் சாதியத்தையும் ஆதரிப்பதன்….//
காத்தவராயன் – ஆரியமாலா காதலைக் கொச்சைப்படுத்துவதற்காக நான் ஒன்றும் தமிழர்களின் வெள்ளைத்தோலாசையைப் பற்றிக் குறிப்பிடவில்லை. உண்மையில் இந்துமதப்பற்றை விட தமிழரசர்களின் வெள்ளைத்தோலாசை தான் பார்ப்பனர்கள் செல்வாக்கும், நிலங்களும் பெறக் காரணமாக இருந்தது என்பதைத் தமிழர்களின் வரலாற்றை நன்கு கற்ற வேறு சிலரின் கருத்தையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த வெள்ளைத்தோலாசை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்தும். ‘வெள்ளையனே வெளியேறு’ என்று போராடி மாகாத்மா காந்தி வாங்கித் தந்த சுதந்திரத்தை ஒரு வெள்ளைக்காரப் பெண்ணின் காலடியில் கொண்டு போய்ப் போட்டது ஹிந்தியன் ஒருவரின் வெள்ளைத் தோலாசை, பார்ப்பன எதிர்ப்பு என்ற அடிப்படையில் தொடங்கிய திராவிட இயக்கத்தைப் பிரித்துக் கொண்டு போய், ஒரு பார்ப்பனப் பெண்ணின் காலடியில் போட வழி செய்து விட்டுப் போனது ஒரு வெள்ளைத்தோல் திராவிடனின் வெள்ளைத் தோலாசை. பெரும்பான்மை கறுப்பு அல்லது மண்ணிறமான தமிழர்களைப் பற்றிய திரைப்படங்களில் நடிக்க, வெள்ளை, வெளேரென்ற தமிழரல்லாத கதாநாயகிகளைத் தயாரிப்பாளர்கள் தேடுவதற்குக் காரணம், தமிழ்நாட்டு இளைஞர்களின் வெள்ளைத்தோலாசை. இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். உண்மையில், ஆராய்ந்து பார்த்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் இந்த வெள்ளைத்தோலாசை தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஈழத்தமிழர்களுக்கும் அழிவைத் தான் தேடித்தந்திருக்கிறது என்று மட்டுமல்ல, காத்தவராயனின் வெள்ளைத்தோலாசை தான் அவனை கழுமரத்திலேற்றியது என்று கூட வாதாடலாம்.
திரு வியாசன்,
//வெள்ளைத்தோலாசை தான் அவனை கழுமரத்திலேற்றியது என்று கூட வாதாடலாம்.//
உங்கள் பிதற்றலுக்கு ஒரு அளவேயில்லையா? வெள்ளைத்தோலாசை இருந்தால் கழுமரத்திலேற்றிவிடவேண்டுமா?
உங்கள் வாதங்கள் கோர்வையாகவோ (Consistent) தர்க்கத்துடனோ (logical) நேர்மையுடையதாகவோ இல்லை. எங்கள் நேரத்தை வீணாக்குவதற்காக சுற்றிச்சுற்றிப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் (தென்றலிடம் போங்காட்டம் ஆடுகிறேன் என்றதைப் போன்று) என்று நினைக்கிறேன்.
திரு. Univerbuddy,
பார்த்தீர்களா? நீங்கள் கூட, உங்களின் வாதங்கள் எல்லாம் ‘கோர்வையாக’, ‘தர்க்கத்துடனும்’, ‘நேர்மையுடனும்’, மற்றவர்களுக்கு உதவும் வகையில் இருப்பதாகத் தான் , இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போல் தெரிகிறது. அப்படி நினைத்துத் தான் வாதாடுபவர்கள், யாராயிருந்தாலும் வாதாடுகிறார்கள். இதைப் பற்றி, செந்தில்குமரன் aka தமிழ்-தாகத்துக்கும், கீழே விளக்கம் கொடுத்திருக்கிறேன். அதையும் பார்க்கவும். நன்றி. 🙂
வியாசன் ஏதாவது கழன்று விட்டதா உங்களுக்கு ?
first stmt//காத்தவராயன் – ஆரியமாலா காதலைக் கொச்சைப்படுத்துவதற்காக நான் ஒன்றும் தமிழர்களின் வெள்ளைத்தோலாசையைப் பற்றிக் குறிப்பிடவில்லை. //
last stmt//காத்தவராயனின் வெள்ளைத்தோலாசை தான் அவனை கழுமரத்திலேற்றியது என்று கூட வாதாடலாம்.//
//வியாசன் ஏதாவது கழன்று விட்டதா உங்களுக்கு ?//
திரு. தமிழ்-தாகம்,
நீங்கள் ஒரு பேராசிரியர் என்று நினைக்கிறேன். ஆனால் வாதாட்டம் எல்லாம் எப்பொழுதும் நியாயமானதாக, சரியானதாக, ஆதாரபூர்வமாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை என்பது கூட உங்களுக்குத் தெரியவில்லை. எல்லா வாதங்களும் சரியானவை, ஆதாரபூர்வமானவை, சரியானவை என்றால் எந்த மொழியிலும் விவாதம் என்ற ஒன்றே இருக்காது. நீங்கள் உட்பட , இன்னும் பலரும், இந்த தளத்தில், , “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்” என்பது போல், தொடர்ந்து வாதாடிக் கொண்டு தானிருக்கிறீர்கள். மற்றவர்கள் விதண்டாவாதம் என்று நினைப்பதைக் கூட, வாதாடுபவர் வாதாட்டம் என்று நினைத்துத் தான் வாதாடுகிறார்.
இங்கே நான் கூறியது “என்று கூட வாதாடலாம்”, என்பது. இதைக் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை உங்களால். இந்த தளத்தில் உங்களின் வாதாட்டங்களை (உளறல்களைப்) பார்த்து, உங்களிடம் நான் பலமுறை கேட்க நினைத்து, உங்களின் மீது எனக்கிருக்கும் ஒருவகை அன்பு,அல்லது மரியாதை காரணமாக வெளிப்படையாகக் கேட்காமலிருந்த “ஏதாவது கழன்று விட்டதா உங்களுக்கு” என்ற கேள்வியை நீங்கள் என்னைக் கேட்பதைப் பார்த்து உண்மையில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 🙂
நீங்க எப்படி வேண்டுமானாலும் வாதாடுவிங்க வியாசன் ! எதிராளி தென்றல் என்றால் அவரை உமது பரம்பரை எதிரியா கருதிக்கொண்டு உங்களின் கருத்துகளுக்கே எதிராக கூட வாதாடுவிங்க வியாசன் ! ஆமாம் உங்களுக்கே கூட எதிராக வாதாடுவிங்க வியாசன் ! 🙂
எனவே நீங்கள் எதுவும் கழன்றவர் இல்லை. ஆனால் உங்களுடன் வினவில் விவாதம் செய்பவர்கள் தான் கழன்றவர்கள்! ஜமாயுங்கள் வியாசன் !:)
இதற்குப் பதிலெழுதி, இந்த விவாதத்தை நான் தொடர்ந்தால், இலங்கையில் நடந்தது போன்றே தேவையில்லாத சகோதர யுத்தம் தான் நடக்கும். ஆகவே நான் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறேன். வேறொரு கட்டுரையில் சிந்திப்போம். 🙂
தோழர் தென்றல் ,அம்பி,வியாசன்,ஒன்றுக்கும் உதவாத உங்களின் விவாதத்தை விட்டு திசை திரும்புங்கள் மதமும் அது பற்றிய கோட்பாடுகளும் சிந்தனைகளும் மனித குல முன்னேற்றத்துக்கு உதவா ,முருகன் கடவுளா இல்லையா என்ற பேச்சு வீண் பேச்சாகவே கருதுகிறேன் மதம் மற்றும் சாதி சார்ந்த கருத்தாக்கங்களை தவிர்த்து விட்டு பொதுத்துவம் அதாவது கம்மூனிசம் எப்படி ஏற்படுத்தலாம் செயல்படுத்தலாம் என்பது பற்றிய உங்களின் அறிவு சார்ந்த கருத்துகள் நடை முறையில் மக்களிடம் புரிந்து கொள்ளப்படுவது மாறு வையுங்களேன் ,உங்களுக்குள் தனிப்பட்ட முறையில் விவாதம் செய்து மக்கள் படுகிற துயறங்களுக்கும் துன்பங்களுக்கும் காரணம் யாதென்று தெரிந்து கொண்டு அதற்க்கான் தீர்வை இங்கு முன் மொழியுங்களேன் ,ஏனென்றால் கூட்டு முயற்ச்சி மிகவும் பலன் அளிக்குமே ,ஏனென்றால் நீங்கள் எல்லோறும் சமூகத்தின் மீது மிகவும் அக்கறை கொண்டவர்களாக தெரிகிறது நீங்கள் இனைந்தால் நல்லதுதானே ______________ …
p.joseph அவர்கள் இக்கட்டுரையை பின்னுட்டங்கள் படித்தாரா என்பதே சந்தேகத்துக்கு இடமளிக்கின்றது.
காரணம் : முருகனை பற்றிய ஆரியம்-பார்ப்பனீயம் செய்து உள்ள திரிபுகளை எமது பின்னுட்டங்கள் அம்பலபடுத்தும் போது அது இவருக்கு முருகன் கடவுளா இல்லையா என்ற பேச்சு வீண் பேச்சாக தெரிகின்றது.
வியாசனுக்கு ,
ஆரிய பார்பனர் ,பார்பனர் அல்லாதவர்[தமிழர்] என்ற வேறுபாட்டின் காரணமாக இருதியில் கொல்லப்படும் காத்தவராயன் கதையின் கருவை மறைத்து அவனின் சாதியை பற்றிய விடயத்தை மட்டும் முதன்மை படுத்தி விவாதம் செய்யும் வியாசனின் உள் நோக்கம் ஆரிய பார்பனர் ,பார்பனர் அல்லாதவர்[தமிழர்] இடையே உள்ள முரண்பாடுகளை அதனால் தமிழ் மக்கள் அடைந்து உள்ள இன்னல்களை மறைப்பது தான் என்பது புலனாகின்றது. சேத்தன் பகத் மூலம் பார்ப்பனியத்தை அம்பலபடுத்த முடியும் என்றதற்கு தென்றல் காத்தவராயனை முன்னிறுத்தி பார்ப்பனியத்தையும் அம்பல படுத்தலாம் என்றார். பார்பனியத்தின் மறைமுக கூட்டாளி வியாசன் அதில் உள்ள காத்தவராயனின் சாதியை மட்டும் முதன்மை படுத்தி விவாதிபதன் மூலம் கதையில் காட்டப்படும் பார்பனியத்தின் சாதி வெறியை அதனால் உயிர் இழந்த காத்தவராயனின் முடிவை எல்லாம் வெளிக்காட்டாமல் மறைப்பதன மூலம் பார்பனியத்தின் கூட்டாளி ஆகின்றார்.
அம்பிக்கு
“அறுவர் பயத்த ” என்ற திருமுருகின் பாடலுக்கு ந்ச்சியார்கினியார் எழுதிய 8 ஆம் நூற்றாண்டு உரை [முருகனின் பிறப்பை பற்றிய கருபின்டம் என்ற விவரம் ] புராணங்களை அடிப்படையாக கொண்டு உள்ளது என்பதை ஆரியபார்பன திரிபு புராணங்களை சாட்சியாக கொண்டே நிருபித்து உள்ளேன் ! ஆனாலும் இவ் விவரங்கள் எல்லாம் தமிழர் தொன்மங்கள் என்று மனம் அறிந்தே பொய் கூறுகின்றார் அம்பி!. முருகனின் பிறப்பை பற்றிய கருபின்டம் என்ற விவரம் தமிழர் முருகனின் பிறப்பை பற்றிய தொன்மமாக ஏற்பார் எனில் அதற்கான ஆதாரம் என்னவோ ?
அம்பிக்கு,
அதைத்தானே கேட்கின்றேன் அம்பி! பாடப்படும் காலத்துக்கு முன்பே நிலவிக்கொண்டிருப்பதுதான் தொன்மம் என்றால் “அறுவர் பயத்த” என்று கூறும் திருமுருகு அதனை விளக்கும் ந்ச்சியார்கினியார் கருபின்டம் என்று முருகனின் பிறப்பை இழிவு செய்யும் விடயத்தில் தமிழ் தொன்மைத்துகான [அதற்கான] ஆதாரம் என்ன ? நான் இதற்கான ஆதாரத்தை புராணத்தில் இருகின்றதை காட்டியுள்ளேன். நீர் திருமுருகு கருபின்டம் என்று முருகனின் பிறப்பை இழிவு செய்யும் விடயத்துக்கு ஆதாரத்தை தமிழர் மரபில் இருந்து உம்மால் காட்ட முடியுமா அம்பி ? திருமுருகு கருபின்டம் என்று புராணத்தில் இருந்து கூறுகின்றதே என்று கூறாமல் தமிழ் மக்கள் மரபில் எதேனும் அதற்கான ஆதாரம் இருக்கின்றதா அம்பி ?
அம்பி: //பாடப்படும் காலத்துக்கு முன்பே நிலவிக்கொண்டிருப்பதுதான் தொன்மம் என்பது ஏன் புரியவில்லை..?!//
வியாசனுக்கு ,
ஈழத்தில் காத்தவராயன் கதை
”காலச்சுவடான ஒற்றையடிப்பாதை” -ஈழத்து கவி வ.ஐ.ச.ஜெயபாலன்
காலச்சுவடான ஒற்றையடிப்பாதை என்ற கவிதை தொகுப்பில் ஈழத்து கவி வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்கள் பாலைப் பாட்டு என்ற கவிதையில் வரும் காத்தவராயன் குறிப்புகள் :
பாலைப் பாட்டு
காத்தவராயன் ஆரியமாலா
மதுரை வீரன் பொம்மியென்று
பிறபொக்கும் மானுடம் பாடி
காதலிலும் இருளிலும்
ஆண் பெண்ணன்றி
சாதி ஏதென மேடையை உதைத்து
அதிரும் பறையுடன்
ஆயிரம் கதைகள் பறைவாள் என் சதுரி.
குறிப்பு :
ஈழத்து காத்தவராயன் கூத்து பாடலில் சாதியம் இல்லாமலா “சாதி ஏதென மேடையை உதைத்து” என்று கூவுகின்றார் எம் ஈழத்து கவி வ.ஐ.ச.ஜெயபாலன் ?
//ஈழத்து காத்தவராயன் கூத்து பாடலில் சாதியம் இல்லாமலா “சாதி ஏதென மேடையை உதைத்து” என்று கூவுகின்றார் எம் ஈழத்து கவி வ.ஐ.ச.ஜெயபாலன் ?///
கவிஞர் ஜெயபாலன் அவர்கள் காத்தவராயன் & ஆரியமாலாவைக் குறித்த, அடுத்த வரியில் மதுரை வீரனையும் பொம்மியையும் குறிப்பிடுவதால், அவரும் தமிழ்நாட்டில் முக்கொம்பில் நடந்த காத்தவராயன் கதையைப் பற்றித் தான் பேசுகிறார் போல் தெரிகிறது.
அந்த மனுசன் அவரது இன்னொரு கவிதையில் “ஏழை விறகு வெட்டிக்கு பொற்கோடரியும் தருகிறாள் வனதேவதை” என்கிறார். அவர் அந்தக் கதையையும் உண்மையென்று நம்புகிறார் போலும், அதனால் அவர் எந்தக்கதையையும் இலகுவில் நம்பி விடுவார் போல் தெரிகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், மார்க்சிச, லெனினிச முற்போக்கு கவிஞராகிய வ.ஜ.ச. ஜெயபாலன், ஏழை விறகு வெட்டிக்கு, பொன்னைக் கொடுத்து அவனது ஏழ்மையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, பொற்கோடரியைக் கொடுத்து அவனைத் தொடர்ந்து ஏழையாகவே, விறகு வெட்டும் தொழிலாளியாகவே, வைத்த வனதேவதைக்கேதிராக வர்க்கப் போராட்டத்தைத் தொடங்கியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக கவிதை பாடுகிறார். அப்படிப் பாடலாமா, அது அடுக்குமா? ஆகவே தோழர் தென்றலை அவர் மீது ஏவி விடுங்கள். 🙂
“…..என் இருப்பு நதியின்
எதிர் புதிர்க் கரைகள்.
நதியின் அக் கரையோ
முன்பொரு காலத்தில்
அங்கு உண்மை பேசியதால்
ஏழை விறகு வெட்டிக்கு
பொற்கோடரியும் தருகிறாள்
வனதேவதை.
இக் கரையோ எதிர்காலத்தில்,
அங்கு மனிதனையே
பிரதிமை செய்கிறார்கள் விஞ்ஞானியர்கள்.
காற்றரனாய்
தீபத்தில் கூப்பிய கரம்போல்,
அலைப்புறும் என்மீது
நம்பிக்கைகளும் விஞ்ஞானங்களூம்”
வியாசனுக்கு ,
கவிதைகளை அவதானிப்பதில் வியாசனுக்கு உள்ள சிரமம் பனி கவிதையில் இருந்தே நமக்கு நன்கு புரிகின்றது. இக்கரை ,அக்கரை …, அதில் எக்கரையை எமது கவி தன் கரையாக உணருகின்றார் என்பது வியாசனுக்கு விளங்கவில்லை. ! அதற்கு நாம் என்ன செய்ய முடியும். இதில் தென்றலை வேறு கவியுடன் சிண்டு முடிக்க ,சண்டை போட வைக்க முனைகின்றார் வியாசன். நான் ,எம் கவி வ.ஐ.ச.ஜெயபாலன்,நண்பர் தென்றல் அனைவரும் இக்கரையில் நிற்கின்றேம். அக்கரையில் இருந்து வியாசன் பார்பனியத்தை தன் குரலாக கூவுவதை கேட்டுக்கொண்டு தான் நாங்கள் இருக்கின்றேம் !
வியாசனுக்கு ,
தமிழ் நாட்டின் தொன்மமான மரபு கதைகளான கோவலன் கதைப்பாடல்கள், கண்ணகி வழக்குரை, ஆகியவை கூட தான் ஈழத்தின் அடையாளமாக இன்றும் இருகின்றன வியாசன் ! அவை எங்கிருந்து ஈழத்துக்கு சென்றது என்ற கேள்வியை எழுப்பினால் பார்ப்பனியத்தை முன்வைக்கும் ஆரியர்களுக்கு தான் கொண்டாட்டம் ஆகும் வியாசன். [நம்மிடையே சர்சை ஏற்படுவதால் ] எனவே அக்கேள்விகளை தவிர்த்து விட்டு ஏன் இன்னமும் நீங்கள் காத்தவராயன் கதையில் ஏற்றபட்டு உள்ள பார்பனிய திரிபுகளை ஈழத்து மரபாக நினைத்து கொண்டு இருகின்றிர்கள் வியாசன் ? அது உங்களின் தவறான அவதானிப்பு என்றால் திருத்திகொள்ளுங்கள் ! இல்லை உங்கள் பார்பனிய கருத்து சரி என்று இன்னும் நீங்கள் நினைத்தால் விவாதியுங்கள் வியாசன்
//கவிஞர் ஜெயபாலன் அவர்கள் காத்தவராயன் & ஆரியமாலாவைக் குறித்த, அடுத்த வரியில் மதுரை வீரனையும் பொம்மியையும் குறிப்பிடுவதால், அவரும் தமிழ்நாட்டில் முக்கொம்பில் நடந்த காத்தவராயன் கதையைப் பற்றித் தான் பேசுகிறார் போல் தெரிகிறது. //
திரு. தமிழ்-தாகம்,
//தமிழ் நாட்டின் தொன்மமான மரபு கதைகளான கோவலன் கதைப்பாடல்கள், கண்ணகி வழக்குரை, ஆகியவை கூட தான் ஈழத்தின் அடையாளமாக இன்றும் இருகின்றன.///
முற்றிலும் உண்மை. பாக்குநீரிணைக்கு இருபுறமும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான தொன்மங்கள் உள்ளன. கண்ணகி வழக்குரை காதை, கோவலன் கூத்து, காத்தவராயன் கூத்து என்பன அவற்றுட் சில. ஆனால் அந்த தொன்மங்களில் சில இன்று தமிழ்நாட்டில் வழக்கொழிந்து போன பின்னரும், ஈழத்தில் இன்றும் மெருகு குறையாமல், அதன் கருப்பொருள் சிதையாமல், மாற்றங்களும், திரிபுகளும் ஏற்படாமல், மாற்றுக் கலாச்சாரத் தாக்கத்தால் அதன் தமிழ்த்துவம் அழியாமலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் வழக்கொழிந்து போன கண்ணகி வழிபாடு, ஈழத்தில் இன்றும் அழியாமல் தொடர்ந்து வருகிறது. கண்ணகியின் வழக்குரை காதை ஒவ்வொரு ஈழத்துக் கிராமத்தில் இன்றும் பாடப்படுகிறது. ஆகவே ஈழத்தமிழகத்தில் தமிழர்களின் தொன்மங்கள் அப்படியே பேணப்படுகின்றன. என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு, நாங்கள் இந்த விவாதத்தை தொடர வேண்டும் என்பது தான் எனது கருத்தாகும்.
//வியாசன் ! அவை எங்கிருந்து ஈழத்துக்கு சென்றது என்ற கேள்வியை எழுப்பினால் பார்ப்பனியத்தை முன்வைக்கும் ஆரியர்களுக்கு தான் கொண்டாட்டம் ஆகும் வியாசன். ///
மதுரையில் நடைபெற்ற கண்ணகியின் கதையில் மதுரைத் தமிழன் மட்டும் தான் சொந்தம் கொண்டாட முடியும், மட்ராஸ் தமிழனுக்கும், மட்டக்களப்புத் தமிழனுக்கும் பங்கில்லை என்று யாரும் கூற முடியாது. ஆகவே தமிழர்களின் காப்பியங்களில் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பங்குண்டு.
//ஏன் இன்னமும் நீங்கள் காத்தவராயன் கதையில் ஏற்றபட்டு உள்ள பார்பனிய திரிபுகளை ஈழத்து மரபாக நினைத்து கொண்டு இருகின்றிர்கள் வியாசன் ? ///
பார்ப்பனீயத் திரிபுகள் தமிழர்களின் கதைகளில், வரலாற்றில் எல்லாம் ஊடுருவியும், தமிழிலிருந்தே சொற்களை இரவல் வாங்கி விட்டு அவற்றைத் தமிழ் இரவல் வாங்கியதாகக் கதை பரப்பியதும் பற்றி எல்லாம் எனக்குத் தெரியும், நானும் அவற்றை எதிர்க்கிறேன் என்பது உங்களுக்கும் தெரியும். அதில் எனக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு கிடையாது.
எனக்குள்ள ஐயம் அல்லது கருத்து வேறுபாடு என்னவென்றால், ஈழத்தில் ஆடப்படும் காத்தவராயன் கூத்து உண்மையில், விஜயநகர ஆட்சிக்காலம் அல்லது சோழர் காலத்தின் பின்னர் “முக்கொம்பில் நடந்த காத்தவராயன் கொலை, பார்ப்பனீய மயமாக்கப்பட்டதன் வடிவமா அல்லது சாத்தான் எனப்படும் ஐயனார் வழிபாட்டின் வழிவந்த- காத்தன் > காத்தான் & காத்தாயி போன்ற கிராமியத் தெய்வங்களின் கதையா என்பது தான். தமிழர்களின் பாரம்பரிய தெய்வமாகிய காத்தவராயன் அல்லது காத்தானின் கதை, அந்தக் கதைக்குப் பிற்காலத்தில் நடைபெற்ற பறையர் சாதியைச் சேர்ந்த காத்தவராயன் என்ற தமிழரின் படுகொலைச் சம்பவத்துடன் இணைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் ஒரே கதையாக மாற்றப்பட்டிருக்கலாம் அல்லவா? அந்த கதை மரபு வழிக்கதையாக அப்படியே தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு இன்றும் பேசப்படலாம்.
வீரச் சாவடைந்தவர்களை மட்டுமன்றி, அநீதியாகக் கொல்லப்பட்டவர்கள், உடன்கட்டை ஏறியவர்கள், குடும்ப கெளரவத்தைக் காப்பற்ற தம்மை மாய்த்துக் கொண்ட பெண்கள் போன்ற எல்லோரையும் தெய்வமாகப் போற்றி, நாளடைவில் அவர்களின் கதையையும் தெய்வீகமயப்படுத்தும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. இதை மேலைநாடுகளில் பாப்பாண்டவர், இறந்த குருமார்களை, கன்னியாஸ்திரிகளை, கடவுள் நம்பிக்கையுள்ள கத்தோலிக்கர்களை புனிதர்களாகப் பிரகடனம் செய்வதுடன் ஒப்பிடலாம்.
என்னுடைய கருத்து என்னவென்றால், கோவலன், கண்ணகி கதையில் தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் எந்த மாற்றமுமில்லை. ஈழத்திலும் ஒரே மாதிரியான, ஒரே வடிவான (Version) கண்ணகி கதை தான் உண்டு. ஆனால் காத்தவராயன் கதையில் பல வடிவங்கள் இருப்பதால், அந்தக் கதைகள் நடந்த காலங்கள், கழுமரத்திலேற்றுதல், தமிழர்களின் பழமையான சாத்தன் (ஐயனார்), காத்தான் வழிபாடு என்பவற்றையும் கருத்தில் கொள்ளும் போது, ஈழத்துக் காத்தவராயன் கதையும், முக்கொம்புக் காத்தவராயன் கதையும் வெவ்வேறு காலங்களில் நடைபெற்ற ஒரேமாதிரியான கதைகளாக இருக்கலாம் அல்லது ஈழத்துக் காத்தவராயன் கதை, வெறும் கற்பனையில் உருவாகிய, மாரியம்மன் புகழ் கூறும் புராணக் கதை ஆனால் தமிழ்நாட்டிலுள்ள காத்தவராயன் கதை என்பது ஒரு தாழ்த்தப்பட்ட தமிழன், பார்ப்பனப் பெண்ணில் ஆசைப்பட்டு, பார்ப்பனீய சாதிக்கொடுமைக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கேயுரிய வெள்ளைத்தோலாசைக்கும் பலியான உண்மையான சம்பவத்தைக் கூறும் கதையாக இருக்கலாம் என்பது தான் எனது கருத்தாகும். யார் என்ன நினைத்தாலும், இதற்கு மேல் என்னால் விளக்கம் தர முடியாது.
வியாசனுக்கு ,
காத்தவராயன் கதையில் இருவேறு மரபுகள் இருப்பதை முன்பே எமது பின்னுட்டம் 100.2.1.2.2.2ல் விளக்கி இருந்தேன் .ஒன்று தமிழர் நாட்டார் மரபு மற்றது ஆரிய பார்ப்பனீயம் கட்டிவிட்ட கதை. இது[ஆரிய பார்ப்பனீயம் கட்டிவிட்ட கதை] ஏதோ ஈழத்தில் மட்டும் நிலவுவதாக நான் கூறவில்லையே வியாசன்! பார்பனியம் ஊடுருவியுள்ள தமிழகத்திலும் ,தமிழ் ஈழத்திலும் இரண்டு இடத்திலுமே ஊடுருவியுள்ளது. தமிழ் நாட்டில் காத்தவராயன் மீது ஏற்றபட்டு உள்ள ஆரிய பார்ப்பனீயம் கட்டிவிட்ட கதை அப்படியே தமிழ் ஈழத்திலும் பொருந்துகின்றதே வியாசன் !
காத்தவராயன் கதையில் மட்டும் அல்ல வியாசன் ,தமிழ் மக்கள் மரபில் நடமாடும் எந்த மரபு ரீதியிலான கதையிலும் ஆரிய பார்ப்பனீயம் கட்டிவிட்ட திரிபு கதை உள்ளதா என்பதை நாம் அறிவது ஒன்றும் கடினமானது இல்லையே வியாசன் ! உங்கள் பின்னுட்டம் 100.2.1.2.2ல் முதல் இரு பாயிண்ட்டிலும் சுட்டி காட்டும் காத்தவராயன் கதையில் ஆரிய பார்ப்பனீயம் கட்டிவிட்ட கதை அல்லவா ஊடுருவியுள்ளது. அத்தகைய திரிபுகளை நாம் நம் அறிவின் ஊடாக ஊடறுத்து நம் தமிழ் மக்களுக்கு சுட்டி காட்ட வேண்டியது நமது கடமையாகின்றது அல்லவா ?
அத்தகைய வேலையை ,கடமையை விட்டுவிட்டு நாம் விவாதிக்கும் பிற விடங்கள் [ஐயனார் ,காத்தவராயன் கதைகள் ஒன்றா ? எக்காலத்தை சார்ந்தது போன்ற விடங்கள் ] மூலம் தமிழ் சமுகத்துக்கு என்ன பயன் அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வியாசன் ?
மேலும் பழம் தமிழ் மரபுகளை,கதைகளை [கோவலன் கதைப்பாடல்கள், கண்ணகி வழக்குரை, ]ஆகியவை ஈழ தமிழர் தமதென்று உரிமை கொண்டாடினாலும் எமக்கு அதில் மகிழ்சியே வியாசன் !
எம்மால் இந்த “வெள்ளைத்தோலாசை” போன்ற காதலில்,அகவியலில் நிறத்தின் மூலம் இன வேற்றுமைகளை நிலைநிறுத்தும் விடயங்களை எல்லாம் ஏற்க முடியாது வியாசன். கதைபடி பார்த்தாலும் காத்தவராயன் மீது காதல் வயப்படுவது ஆரியமாலா என்னும் போது காத்தவராயன் மீது “வெள்ளைத்தோலாசை” குற்றச்சாட்டு எல்லாம் தவறு என்று ஆகிறது அல்லவா ? அதே போன்று சமுகத்தில் சமுக ,பொருளாதார நிலையில் கடை நிலையில் இருந்த காத்தவராயன் மீது ஆரியமாலா கொண்ட அன்பிலும் ஏதும் பொருள் சார்ந்த எதிர்பார்ப்புகள் இல்லையே வியாசன் !
//தமிழ்நாட்டிலுள்ள காத்தவராயன் கதை என்பது ஒரு தாழ்த்தப்பட்ட தமிழன், பார்ப்பனப் பெண்ணில் ஆசைப்பட்டு, பார்ப்பனீய சாதிக்கொடுமைக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கேயுரிய வெள்ளைத்தோலாசைக்கும் பலியான உண்மையான சம்பவத்தைக் கூறும் கதையாக இருக்கலாம் என்பது தான் எனது கருத்தாகும். யார் என்ன நினைத்தாலும், இதற்கு மேல் என்னால் விளக்கம் தர முடியாது.//
திரு. தமிழ்-தாகம்,
திரு.நா.வானமாமலை அவர்களின் பதிப்பில் வெளிவந்த காத்தவராயன் கதைப்பாடலை,(TVU இல்) இப்பொழுது தான் நான் ஒன்றுவிடாமல் படித்தேன். அதைப் படித்த பின்பு தான், காத்தவராயன்கதை என்ற புராணக் கதையுடன், பிற்காலத்தில் நடந்த பரிமண(ள)ம் (காத்தவராயன்) என்ற தாழ்த்தப்பட்ட இளைஞன் சாதிக்கொடுமையால் காதலில் தோல்வியுற்ற சோகக் கதையும், அவனது கொலையும் இணைக்கப்பட்டு ‘தமிழர்நாட்டார் மரபு’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறதென்ற எனது கருத்து சரியாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழர் நாட்டார் மரபு ஆரியப் புராணக் காத்தவராயன் கதைக்கு பிற்பட்டதாகத் தானிருக்க வேண்டும்.
திரு.வானமாமலை அவர்களின் கருத்துப்படி, காத்தவராயன் கதை நடந்த காலம், விஜயநகர ஆட்சிக்கு முந்தைய காலம் (சோழர் காலத்துக்கும் விஜயநகர காலத்துக்கும் இடைப்பட்ட காலம் என நம்புகிறேன்). ஆனால் அக்காலத்தில் உண்மையில் கழிவிலேற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்ததா என்று எனக்குத் தெரியாது. நாயன்மார் காலத்தில் சமணர்களின் கழுவேற்றம் கூட வெறும் Exaggeration (அல்லது உவமானம் நாளடைவில் உண்மையாக ஏற்கப்பட்டிருக்கலாம்) என்பது தான் எனது கருத்தாகும்.
இந்தக் காலத்தில் கூட சாதி பார்த்துத் தான் தத்தெடுப்பார்கள், ஆனால் அந்தக் காலத்திலேயே பிள்ளைமார் சாதியைச் சேர்ந்த சேப்பிளையான் ஒரு ‘பறைச்சி’ பெற்ற மகனை தனது சொந்த மகனாக அன்போடு வளர்த்திருக்கிறார்கள் என்பதைப் பாடல் காட்டுகிறது, வானமாமலை அவர்களின் காத்தவராயன் கதைப் பாடலில் அவனது வளர்ப்புத்தாய் சங்கப்பிள்ளை, அழுகிறாள்:
“வருசைமகன் செய்தபிழை மனசுமிகத் தான்வாடி
கண்ணாளா ! கட்டழகா ! காத்த பரிமணமே
பண்ணாத காரியமாய் பாப்பாரப் பெண்தனையே
ஆற்றில் சிறையெடுக்க லாகுமோஇக் காலம்தன்னில்
காத்தவனே உன்னைநான் கனமாய் வளர்த்தேனே”
அத்துடன் காத்தவராயன் பாடலில்
“செம்மையாய் சீமையைக் காவலும் காக்கின்ற
சேப்பிளை யான்பெற் றெடுத்த
தீரனெனும் காத்தவன் ஆரிய மாலையைத்
திருடியே கொண்டு செல்ல”
என்ற அடியும் வருகிறது. ஆகவே அந்த அடியை ஆதாரம் காட்டி, காத்தவராயன் உண்மையில் சேப்பிள்ளையான் பெற்றெடுத்த மகன் என்றும் கூட வாதாடலாம். இந்தக் காத்தவராயன் கதை மிகவும் சிக்கலானது போல் தெரிகிறது. அதனால் இனிமேலும் இதைப்பற்றி நான் பேசப் போவதில்லை.
//கதைபடி பார்த்தாலும் காத்தவராயன் மீது காதல் வயப்படுவது ஆரியமாலா என்னும் போது காத்தவராயன் மீது “வெள்ளைத்தோலாசை” குற்றச்சாட்டு எல்லாம் தவறு என்று ஆகிறது அல்லவா//
கருப்பாயி என்ற பெண்ணையும் ஒதுக்கி விட்டு, தனது மூத்தம்மானின் பெண்களையும்
“மூத்தம்மான் பெண்கள் எல்லாம் அம்மா பெண்கள் எல்லாம் – அந்த
மூதேவிகள் எனக்கு வேண்டாம் அம்மா
கிழக்குத் தெருப் பெண்கள் எல்லாம் அம்மா பெண்கள் எல்லாம் – அந்தக்
கிழவிகளோ எனக்கு வேண்டாம் அம்மா”
என்று மறுத்து விட்டு, ஆரியமாலாவின் காதலை மட்டும் ஏற்றுக் கொண்டதற்கு வெள்ளைத்தோலும் ஒரு காரணமாக நிச்சயமாக இருக்கலாம். ஏனென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் வெள்ளைத்தோலாசைக்கு வரலாற்றில் மட்டுமல்ல நடைமுறையிலும் எடுத்துக் காட்டுகள் உண்டு. கறுப்பு என்றால் அழகில்லை என்ற கருத்து தமிழர்களின் மனதில், குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. அந்தக் கருத்து, தமிழ்ச் சினிமா மூலம் சிறு குழந்தைகளின் மனதில் கூட விதைக்கப்பட்டு, கறுப்பாக இருக்கும் தமிழ்க் குழந்தைகள் கூட தாங்கள் அழகில்லாதவர்கள் என்று நினைக்கச் செய்து, அவர்கள் தமது தன்னம்பிக்கையை இழந்து, வெள்ளைத் தோலுள்ளவர்களை ஏக்கத்துடன் பார்க்கும் நிலையைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி விட்டது.
உண்மையில் பெரும்பான்மைத் தமிழர்களின் நிறம் கறுப்பு அல்லது மண்ணிறம் (brown) தானே தவிர, வெள்ளையல்ல. இதே காரணத்துக்காக, முழு உழுந்துக்கு என்னே பூசிய மாதிரி இருக்கின்ற உண்மையான தமிழர்களைப் பற்றிய கிராமக் கதையாக இருந்தாலும் கூட வெள்ளைத்தோலுடன் இருக்கிற தமிழரல்லாத கதாநாயகிகளைத் தேடி தமிழ்ப்பட இயக்குனர்கள் அலைகிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களின் வெள்ளைத்தோல் மோகத்தால் தான் குஷ்பு கூட தமிழ்நாட்டில் அரசியலுக்கு வரமுடிகிறது. 🙂
எப்படியோ போங்கள் வியாசன் ! தெளிவான சிந்தனை ,தமிழ் தேசியத்தின் மீதான சிந்தனை என்பது பார்ப்பனியத்தின் கூறுகளை தமிழ் மரபில் இருந்து வெட்டி எறிவது தான் முதன்மை என்பது மட்டுமே எதார்த்தம். காத்தவராயன் கதையில் பார்ப்பனியத்தின் கூறுகளை வெட்டி எறியுங்கள் என்று நான் கூறும்போது பார்பன திரிபுகள் முதலில் இருந்ததாகவும் அதன் பின் தமிழ் மரபில் காத்தவராயன் கதை உருவானதாகவும் கூருகின்றிர்கள். உண்மையில் காத்தவராயன் கதை தமிழ் மரபில் அவன் கொல்லப்பட்ட பின் அவன் தெய்வமானான். பறைசாதி மனைவி ஒரு புறமும், பிராமணச் சாதி மனைவி மற்றொரு புறமுமாக அமைந்த காத்தவராயன் சிலை, பார்பனிய மேலாண்மைக்கு அறைகூவல் விட்டது. எனவே இதற்கும் ஒரு முற்பிறவியை உருவாக்கினார்கள். அதன் மூலம் ஆரிய பார்ப்பனீயம் கட்டிவிட்ட கதைகளை ஏற்றினார்கள் என்ற விடயத்தை அவதானிப்பதில் உங்களுக்கு என்ன சிக்கல் என்று புரியவில்லை.
தமிழ் ,பார்பன இன வேறுபாடுகளை பற்றி பேசும் போது பெண்களை இழிவு செய்யும் பாலியல் ரீதியிலான கருத்துகள் கொண்ட உங்களை திருத்த முடியாது என்று எமக்கு தெரியும். எனவே “வெள்ளைத்தோலாசை” , “வெள்ளைத்தோல் மோகத்தால் தான் குஷ்பு” ஆகிய உங்கள் அவல சிந்தனைகளுக்கு தமிழகம் சார்பில் எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் !
வியாசனுக்கு ,
ஏன் இப்படி அம்மணமாக அறிவிழந்து நிற்கின்றிர்கள் வியாசன் ?எளிய பனி கவிதையில் உங்களுக்கு ஏற்பட்ட அதே சிக்கல் தான் இங்கும் உங்களுக்கு ஏற்பட்டு உள்ளது. எம் ஈழ கவி
” இக் கரையோ எதிர்காலத்தில்,
அங்கு மனிதனையே பிரதிமை செய்கிறார்கள் விஞ்ஞானியர்கள்.
காற்றரனாய் தீபத்தில் கூப்பிய கரம்போல்,
அலைப்புறும் என்மீது நம்பிக்கைகளும் விஞ்ஞானங்களூம்”
என்று தன் நம்பிக்கைகளை அழகாக அனைவருக்கு புரியும் படி தானே கூறுகின்றார் வியாசன்.
புரிதலில் என்ன சிக்கல் உங்களுக்கு ?
//அந்த மனுசன் அவரது இன்னொரு கவிதையில் “ஏழை விறகு வெட்டிக்கு பொற்கோடரியும் தருகிறாள் வனதேவதை” என்கிறார். அவர் அந்தக் கதையையும் உண்மையென்று நம்புகிறார் போலும், அதனால் அவர் எந்தக்கதையையும் இலகுவில் நம்பி விடுவார் போல் தெரிகிறது. //
நன்றிவியாசன் ,எமது ஈழ கவியின் மிக சிறப்பான இக் கவிதையை எமக்கு இன்று நீங்கள் அளித்தமைக்கு ,மிக்க நன்றிவியாசன்
வியாசன்,அம்பி,
பார்ப்பனியத்தை தூக்கி பிடிக்கும் அம்பியாவது முருக பிறப்பை அசிங்க படுத்தும் ‘கருபிண்ட’ விடயத்துக்கு புராணத்தை ஆதாரமாக காட்ட தமிழர்களிடம் அம்பலப்படுவோம் என்ற காரணத்தால் அச்சப்ப்டுகின்றார்.[நான் அவ் விடயம் புராணத்தில் இருகின்றது என்பதை ஆதாரத்துடன் காட்டியும் அதனை ஏற்க அச்சப்படுகின்றார்] ஆனால் தமிழ் ,தமிழர்,தமிழ் தேசியம் என்று போலியாக கூவும் வியாசன் அவர்கள் வாய் கூசாமல் ,மனம் அறீந்து ஆரிய-பார்பனியம் கட்டிவிட்ட கதையை காத்தவராயன் தலையில் ஏற்றி பார்பன-ஆரிய போதையில் திளைக்கின்றார்.
வியாசன் said in feedback 100.2.1.2.2:
/1. இலங்கையில் நடைபெறும் காத்தவராயன் நாடகத்தில்……
//2. இந்தப் புராணக் கதையைத் தான் ஈழத்தமிழர்கள் மாரியம்மனைக் குளிர்விக்கவும்…
// பார்ப்பனியத்தை தூக்கி பிடிக்கும் அம்பியாவது முருக பிறப்பை அசிங்க படுத்தும் ‘கருபிண்ட’ விடயத்துக்கு புராணத்தை ஆதாரமாக காட்ட தமிழர்களிடம் அம்பலப்படுவோம் என்ற காரணத்தால் அச்சப்ப்டுகின்றார்.[நான் அவ் விடயம் புராணத்தில் இருகின்றது என்பதை ஆதாரத்துடன் காட்டியும் அதனை ஏற்க அச்சப்படுகின்றார்] //
தங்கள் குழந்தையின் பெயருக்கும் (கார்த்திகேயன்), கார்த்திகை மீன்களுக்கும் என்ன தொடர்பு..?
இதற்கு பதிலளிக்க நீங்கள் ஏன் அச்சப்படுகிறீர்கள்..?!
தமிழ்-முருகனின் குறியிடான அறுமீன்கள் சிந்துவெளி தடையங்களில் இருக்க , மேலும் தமிழ் மாதமான கார்திகை மாதத்தின் குறியிடாக தான் கார்திகேயன் என்ற பெயர் வந்ததை ஏற்க இயலாத அம்பி என்ன சொல்ல வருகின்றார் ? தமிழ்-முருகனின் குறியிடான அறுமீன்களை பார்பன புராணங்கள் திரித்ததையா ? அல்லது தமிழ்-கார்திகை மாதத்தை பார்பனர்கள் சம்ஸ்கிருதத்தில் ஏற்றுகொண்டதையா ?
“என் பின்னுட்டம் 105 ல் கேட்கபட்ட கேள்விக்கு பதில் சொல்ல அறிவு நாணயம் இன்றி தப்பி ஓடிய அம்பியே மறுபடியும் கேட்கிறேன் :
தமிழ்-முருகனின் குறியிடான அறுமீன்கள் சிந்துவெளி தடையங்களில் இருக்க, அதில் இருந்து எடுத்து ” அறுவர் பயத்த” என்று திரித்து கூறும் திருமுருகு அதனை விளக்கும் ந்ச்சியார்கினியார் கருபின்டம் என்று முருகனின் பிறப்பை இழிவு செய்யும் விடயத்தில் தமிழ் தொன்மைத்துகான [அதற்கான] ஆதாரம் என்ன ? நான் இதற்கான ஆதாரத்தை புராணத்தில் இருகின்றதை காட்டியுள்ளேன். நீர் திருமுருகு கருபின்டம் என்று முருகனின் பிறப்பை இழிவு செய்யும் விடயத்துக்கு ஆதாரத்தை தமிழர் மரபில் இருந்து உம்மால் காட்ட முடியுமா அம்பி ? திருமுருகு கருபின்டம் என்று புராணத்தில் இருந்து கூறுகின்றதே என்று கூறாமல் தமிழ் மக்கள் மரபில் எதேனும் அதற்கான ஆதாரம் இருக்கின்றதா அம்பி ?
// “என் பின்னுட்டம் 105 ல் கேட்கபட்ட கேள்விக்கு பதில் சொல்ல அறிவு நாணயம் இன்றி தப்பி ஓடிய அம்பியே மறுபடியும் கேட்கிறேன் : //
அய்யா, தாங்கள் கேட்பதாக கூறும் அதிபுத்திசாலித்தனமான கேள்விகள் எல்லாம் மங்குணித்தனமாக இருப்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.. பின்னூட்டம் 96-ல் விவாதித்துக்கொண்டிருக்கும் போதே அங்கே பதில் சொல்லாமல் ஓடி 105-ல் மீண்டும் அதே கேள்வியை எழுப்பி பதில் சொல்லச்சொல்லி சவடால் அடிக்கும் தாங்கள் அறிவு நாணயத்தைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது..
1. அறிவு நாணயம் உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு அவதாரம் எடுத்து நான் அவனில்லை என்று அழிம்பு செய்வதில்லை..
2. அறிவு நாணயம் உள்ளவர்கள் தங்கள் குழந்தைக்கு கார்த்திகேயன் என்று ‘பார்ப்பன புளுகு புராண’ பெயரையும் வைத்துவிட்டு ’பார்ப்பன புராண புளுகுக்கு’ எதிராக வாய்ப்பந்தல் கட்டுவதில்லை..
நீங்கள் ஆடுவது சிறுபிள்ளைத்தனமான போங்காட்டம்.. இதை பலமுறை சுட்டிக்காட்டியும் தொடர்கிறீர்கள்.. இறுதியாக ஒருமுறை உங்கள் மங்குணியாட்டத்துக்கு பதில் கூறி முடிக்கிறேன்..:
// தமிழ்-முருகனின் குறியிடான அறுமீன்கள் சிந்துவெளி தடையங்களில் இருக்க, //
சிந்து வெளி தடையங்களில் ஒன்று அறுமீன்களைக் குறிக்கிறது.. இன்னோரு தடையம் முருகுக்கு இருக்கிறது.. மெட்ராசில் 10 வீடுகள், 5 ரெஸ்டாரண்டுகள் இருக்கிறது என்பது போல்தான் இதுவும்..
‘தமிழ்-முருகனின் குறியிடான அறுமீன்கள்’ என்று அவற்றுக்கு நீங்கள் இங்கே முடிச்சு போடுமுன் எப்படி அறுமீன்கள் முருகின் குறியீடு என்கிறீர்கள், தொடர்பு என்ன..? முருகன் கருவுறச் செய்யும் தெய்வம், அந்த கருவை காக்க வளைகாப்பு போடுவார்கள், ஆறு மீன்களும் வளையலைக் குறிக்கின்றன, எனவே முருகு-கருப்பம்-வளையல்-அறுமீன்கள் என்று அஸ்கோ பர்போலா அடித்துவிடுவதை தாங்கள் பள்ளிச் சிறுவர்களிடம் வேண்டுமாயின் ’முருகன்-கார்த்திகை’ தொடர்புக்கான ஆதாரம் என்று பசப்பலாம்.. மீண்டும் கேட்கிறேன், கார்த்திகேயனுக்கும் கார்த்திகை மீன்களுக்கும் உள்ள தொடர்பு என்ன..?
// அதில் இருந்து எடுத்து ” அறுவர் பயத்த” என்று திரித்து கூறும் திருமுருகு அதனை விளக்கும் ந்ச்சியார்கினியார் கருபின்டம் என்று முருகனின் பிறப்பை இழிவு செய்யும் விடயத்தில் தமிழ் தொன்மைத்துகான [அதற்கான] ஆதாரம் என்ன ? நான் இதற்கான ஆதாரத்தை புராணத்தில் இருகின்றதை காட்டியுள்ளேன். நீர் திருமுருகு கருபின்டம் என்று முருகனின் பிறப்பை இழிவு செய்யும் விடயத்துக்கு ஆதாரத்தை தமிழர் மரபில் இருந்து உம்மால் காட்ட முடியுமா அம்பி ? திருமுருகு கருபின்டம் என்று புராணத்தில் இருந்து கூறுகின்றதே என்று கூறாமல் தமிழ் மக்கள் மரபில் எதேனும் அதற்கான ஆதாரம் இருக்கின்றதா அம்பி ? //
தங்களுக்கு பிடிக்காத தொன்மங்களை பரிபாடலோ, திருமுருகோ, கந்தபுராணமோ பேசினால் அவை ஆரிய பார்ப்பன புராணங்களில் இருந்து எடுத்தாண்டவை என்கிறீர்கள்.. வட மொழி வால்மீகி ராமாயணத்தில் கபாடபுரமும் தான் வருகிறது.. வால்மீகி ராமாயணத்துக்கு காலத்தால் மிகவும் பிற்பட்ட இறையனார் களவியல் உரைக்கு முந்தைய தமிழ் இலக்கிய ஆதாரங்கள் கபாடபுரத்துக்கு இல்லை என்பதால் கபாடபுரமும் புராணப்புளுகு என்பீர்களா..? வட மொழி புராணம் சொல்லித்தான் தமிழருக்கு கபாடபுரம் பற்றித் தெரியும், அவர்களிடம் கடல் கொண்ட கபாடபுரத் தொன்மங்கள் எதுவும் இருந்திருக்காது என்பீர்களா..? பஃறுளியாறும், பன்மலை அடுக்க குமரிக்கோடும் தமிழரிடையே தொன்மங்களாக நிலவிக் கொண்டிருக்கவில்லையா..? இல்லை, கபாடபுரம் தமிழர் தொன்மமில்லை, ராமாயணப்புளுகு என்று கூறினால் அது உளறல்..
முருகன் பற்றிய தமிழரிடையே வெகுகாலமாகவே நிலவிக்கொண்டிருக்கும் தொன்மங்கள் வடபுலம் சென்று அங்கு புராணங்களாக சிலபல மாறுதல்களுடன் இருப்பதாலேயே மேற்படி புராணங்கள்தான் முருகன் பற்றிய சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தொன்மங்களுக்கும் ஆதாரம் என்று உளறுவதும் அதுபோலத்தான்..
கேள்வி கேட்பதாயிருந்தால் கொஞ்சம் அறிவு முதிர்ச்சியுடன் (அறிவு நேர்மை இல்லை என்பது தெரிந்ததுதான்) கேட்கவும்.. மங்குணிக் கேள்விகளையே திரும்பத்திரும்ப கேட்டுகொண்டு இருப்பதாயிருந்தால் என்னிடம் பதிலை எதிர்பார்க்க வேண்டாம்..
வியாசனுக்கு ,
இன்றும் தமிழ் சமுகத்தில் கலப்பு சாதி திருமணங்கள் மிகவும் அருகி தான் உள்ளன. 100க்கு 1 என்பது கூட மிகவும் அதிகபடியான புள்ளிவிவரம் தான்.அத்தகைய நிலையில் அன்றைய தமிழ் சமுகத்தில் 100000 ல் 1 என்ற கலப்பு சாதி திருமண கணக்கு என்பது கூட மிக அதிகமான புள்ளிவிவரம் தான். நிலைமை இப்படி இருக்க தமிழ் மக்கள் “வெள்ளைத்தோலாசை” , கொண்டு இருந்தார்கள் என்று நீர் கூறுவதன் சாரம் என்ன்வென்றால் தேவரடியார் பெண்கள் பார்பன்ர்களுடன் கலப்புற்று பெற்றேடுத்த யாழ் வெள்ளாள சமுகத்தை வேண்டுமானால் காட்சி படுத்தலாம்.அச் சமுகத்தின் பிரதிநிதியாக வள்லாருடன் முரண் பட்டவரையும் வேண்டுமானால் உதாரணம் காட்டலாம் வியாசன் ! நீர் கூறிய “வெள்ளைத்தோலாசை” விடயத்தை வரலற்றின் ஊடாக இம்முறையில் கொண்டு செல்லலாம் என்று உள்ளேன். வியாசன் விவாதத்துக்கு தயாரா ?
திரு தமிழ் தாகம் அவர்களுக்கு,
தாங்கள் நீண்ட ஆய்வு செய்து points கொடுத்து உள்ளீர்கள். நீண்ட ஆய்வு தான். ஆனா பல விசயத்தை தப்பு தப்பா quote செய்து உள்ளீர்கள். அவற்றை இங்கே சுட்டிகாட்ட விழைகிறேன்.
//தமிழ்-முருகனின் குறியிடான அறுமீன்கள் சிந்துவெளி தடையங்களில் இருக்க, அதில் இருந்து எடுத்து ” அறுவர் பயத்த” என்று திரித்து கூறும் திருமுருகு//
முருகனுக்கு நம் இப்போதைய குறியீட்டில் ஒன்று அறு மீன். அனால் சிந்துசமவெளி முருகுக்கும் அறுமீனுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. முதலில் அது மீனே இல்லை! இரு வளையங்கள் ஒன்று இணைந்தது போல இருக்கும், கடவுளை குறிக்கும் சின்னத்தை, நீங்கள் சொல்லும் அறு கோடுகள் கொண்ட மீன் உருவம் அறுமீன் என பொருள்படுவது இல்லை. அது ஒரு மனிதன் மற்றும் அவனின் மார்பு எலும்புகள் என கூறுகிறார் ஐராவதம். சிந்துசமவெளி கடவுளுக்கும், தமிழின் செய்யோன்னுக்கும் உள்ள ஒற்றுமைகள் காரணமாகவே (இருவரும் உருவம் அற்றவர், போர் கடவுள்) ஐராவதம் அவர்கள் தமிழ் முருகனும், சிந்துசமவெளி கடவுளும் ஒன்றாக இருக்கலாம் என கருதுகிறார். அவர் தன் paperஇல் இந்த சிந்துசமவெளி கடவுளும், இந்தியாவில் உள்ள மற்ற வாய்மொழி அல்லது வழக்கு கதைகளில் உள்ள ஒற்றுமையையும் ஆராய்கிறார். பல ஒற்றுமைகள் உள்ளன. இதில் பீஷ்மரும், புத்தரும் கூட ஆரயாபடுகிறார்கள். அந்த பதிப்பை இந்த இடத்தில் படிக்கலாம்:
http://murugan.org/research/mahadevan.htm#III
அதே போல கிரகாம் ஹான்காக் எழுதிய எதுவும் உண்மை என்று நிரூபிக்கபடவில்லை. ஒரு பார்வையை எடுத்துக்கொண்டு அதற்க்கு பொருந்தும் ஆதாரத்தை மட்டும் வைத்து புத்தகம் எழுதும் எழுத்தாளர் அவர் என்பது பரவலான உண்மை. அவர் சொல்லும் எந்த விசயமும் இதுவரை academiaவில் ஏற்றுகொள்ளபடவில்லை. எனவே அதை ஆதாரமாக கொள்ள முடியாது.
அரிய படையெடுப்பு என்னும் விளக்கமும் பல காலமாக தவறு என நிரூபிக்க பட்டு விட்டது. அரியர் எனப்படும் மக்கள் பல காலமாக இந்திய பெருங்கண்டதில் வாழ்ந்து வந்தனர் (இப்போதைய கணிப்பு ராவி நதியின் இரு கரை), அவர்கள் மெல்ல மெல்ல கங்கை சமவெளியை நோக்கி விரிவடைந்தனர் என்பதும் தொல்லியல் மற்றும் மரபணுவியல் மூலம் நிரூபிக்கபட்டு உள்ளது. சிந்துசமவெளி நாகரிகத்தை அழித்தது அரியர் இல்லை, பருவநிலை மற்றும் புவியியல் மாற்றமே என்பது இன்று அனைவராலும் ஏற்றுகொள்ளபட்ட உண்மை. சயின்ஸ் பதிக்கையில் வெளிவந்த ஆராய்ச்சி முடிவுகள் இங்கே:
http://www.sciencemag.org/content/320/5881/1281
கடைசியாக, அஸ்கோ பர்போலா அவர்கள் திராவிட மொழி அல்லது தமிழுக்கு தான் சிந்துசமவெளி மொழிபெயர்ப்பு ஆய்வில் முக்கியத்துவம் தந்தது தமிழின் இலக்கியம் மற்றும் அதன் வடிவம் அடிபடையில் மாறாமல் இருப்பதன் காரணமாக என்று கூறுகிறார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டும் சிந்துசமவெளி மொழியை பாதுகாதத்தில் சம பங்கு வகித்தது என்றும், தூய தமிழ் அல்லது தூய சமஸ்க்ருதம் என்பது இல்லை, அவற்றை ஒன்றுக்கு ஒன்று எதிராக பாவிக்க கூடாது என்றும் கூறுகிறார். பேட்டி இதோ:
http://www.deccanherald.com/content/79062/sanskrit-has-contributed-indus-civilisation.html
தாங்கள் கூறுவது போல தமிழ் கலாச்சாரம் சிந்துசமவெளி அடிப்படை மட்டும் அல்ல. வேத கலாச்சரத்தினால் எப்படி அடிப்படை சிந்துசமவெளி கடவுளர் மாற்றம் அடைந்தனரோ, அதே போல சிந்துசமவெளி பாதிப்பால் வேத கலாச்சாரமும் மாற்றம் அடைந்தது. இந்திரன், அக்னி முதலிய வேத கடவுளர் புறம் தள்ளபட்டார்கள். சிந்துசமவெளியின் பசுபதி (சிவன்), பெண் தெய்வ வழிபாடு ஆகியவை அன்றாட கடவுளர் ஆனார்கள். அதுவரை வேட்டையும், புலம் பெயர்தலையும் அடிப்படையாக கொண்ட வேத கலாச்சாரம் விவசாயத்தை முன்னிருத்தி, ஓரிடத்தில் வாழும் சிந்துசமவெளி கலாச்சாரத்துடன் சேர்ந்ததால் இரண்டும் மாற்றம் அடைந்தன. இந்த மாற்றங்கள் எப்போது இரு கலாச்சாரம் சந்தித்தாலும் நடப்பவை. இதில் புராண அசிங்கம் எல்லாம் இடம் இல்லை. கொடுக்கல் வாங்கல் தான்.
நீங்கள் இதற்க்கு பிறகும் தமிழ் கலாச்சாரத்தை, வேதம் சீரழித்துவிட்டது என்று குற்றம் சாட்டினால், அது உலகில் எல்லா கலாச்சாரத்துக்கும் பொருந்தும் என்பதை மறக்க வேண்டாம். இதே குற்றச்சாட்டை இன்று ஆரியர் இருந்தால், நம் மீதும் சுமத்த முடியும். சிந்துசமவெளி தான் எங்கள் இந்திரனையும், அக்னியையும் இரண்டாம் நிலை கடவுளாக மாற்றிவிட்டது, உங்கள் செய்யோன் எங்கள் அக்னிபுகனை முருகனாக மாற்றி அசிங்கபடுத்தி விட்டான் என்றால் என்ன பதில் கூற முடியும் (அதர்வண வேதத்தின் படி குமரன் அக்னியின் வடிவம்)?
மறுவாசிப்பு செய்வது, நம் வரலாற்றை அறிவது எல்லாம் நல்லதுதான். அதற்க்கு நிராகரிக்கப்பட்ட, நிரூபிக்கபடாத, ஒரு பக்கம் மட்டுமே ஆராயும் விளக்கம் தேவை இல்லை. வரலாற்றை வாசிக்கும் போது நிறைய கவனம் தேவை. இதை கருத்தில் கொண்டு விவாதத்தை தொடருமாறு கேட்டு கொள்கிறேன்.
சந்துரு சார்,
தமிழ் தாகத்திற்கு தாங்கள் சுட்டிகாட்டிய பார்வைகள் பல தவறானவையாகும். மேற்கொண்டு அவை பலவிசயங்களை திட்டமிட்டு மறைக்கவே செய்கின்றன.
முதலாவதாக தாங்கள் சயின்ஸ் சஞ்சிகையில் சுட்டிக்காட்டியுள்ள ஆராய்ச்சி முடிவுகள். இத்தகைய ஆராய்ச்சி முடிவுகள் ஆரிய மேலாண்மையையோ பார்ப்பனியத்தையோ விளக்காது. ஏனெனில் இங்கு கண்ணின் கருவிழியும் தலை முடியும், தோலும், நகமும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால் நாங்கள் ஆரிய வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற கூட்டத்தின் முதுகைத் தடவிப் பார்த்திருந்தாலே பதில் என்னவென்று தெரிந்திருக்கும். இதற்கு தீர்க்கமான ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. தமிழ்நாட்டு கருப்புப் பார்ப்பான்களை வட இந்திய சிவப்புப் பார்ப்பான்கள் இழிவாக பார்ப்பது ஆரியத்தின் அடிப்படையிலேயே. டி டி கோசாம்பி இம்மாதிரி ஆர் எஸ் எஸ் கூட்டங்களும் அறிவு சீவிகளும் அறிவியலைக் காட்டி அழுகுணி ஆட்டம் ஆடும் பொழுது கலை, கலாச்சாரம், பண்பாடு என்னவாக இருந்தது என்பதை காலகோடாகவும் இன்றைய மானக்கேடாகவும் அழகாக காட்டியிருக்கிறார். ஆரியத்தை மறுப்பவர்கள், முதலாக ஆர் எஸ் எஸ்ஸை, நாசிச ஹிட்லரை பிறகு வேதப் பாரம்பரியத்தை மற்றும் அதில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களுக்கு விரிவாக விடையளிக்க வேண்டும். இது தான் முறையே தவிர, ஆரியம் ஜெனிட்டிகலி நாட் புரூவ்டு என்பது பித்தலாட்டமே.
இரண்டாவதாக தமிழ் கலாச்சாரத்தை வேத கலாச்சாரம் அழித்தது என்று சொன்னால் பிறகலாச்சாரங்களையும் பேச வேண்டியிருக்கும் என்று சொல்கிறீர்கள். இது உங்கள் தரப்பில் மைல்டான சீனி வெடியாக இருக்கிறது. ஆனால் ஆர் எஸ் எஸ் தளங்களில் அநீ போன்றவர்கள் எடுத்த எடுப்பில் கிறித்தவமும் இசுலாமும் அழிக்காத ஒன்றையா வேதம் அழித்துவிட்டது என்று தப்பிப்பார்கள். இவர்கள் இந்து என்பது மதமா என்ற கேள்விக்கே பதில் சொல்லாமல் ஓடியவர்கள் தான். அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். எதன் அடிப்படையில் பார்ப்பனியத்தை மதம் என்று வரையறுக்கிறீர்கள் எப்படி அது அனைவருக்கும் பொதுவானது என்று தாங்களாவது வரையறுக்க முன்வரவேண்டும். அப்பொழுதுதான் பிற மதங்களைப் மதம் என்ற கொள்கையளவில் இருந்தாவது கோதாவில் குதிக்கலாம். இது இந்த விவாதத்தின் முதுகெலும்பு என்பதால் சிறிது முயற்சி செய்யுங்கள்.
மூன்றாவதாக சிந்துசமவெளி தான் இந்திரனையும் அக்னியையும் இரண்டாம் நிலை கடவுளாக மாற்றிவிட்டது என்கிறீர்கள். இதெல்லாம் சும்மா என்று எடுத்துக்கொள்ளப்போவதில்லை. மாறாக இந்தக் கருத்து ஒட்டுமொத்த பார்ப்பனிய இயங்கியலுக்கு சான்று பகர்கிறது. வேதத்தை மறுக்கிறவர்களை நாத்திகம் என்று வரையறுத்து அவர்களுக்கு தண்டனையும் வழங்கிவிட்டு சிந்துசமவெளி இந்திரனை இரண்டாம் நிலைக் கடவுளாக மாற்றிவிட்டது என்று சொல்வது என்ன வகையான நேர்மை என்று விளக்க முன்வரவேண்டும்?
நான்காவதாக வேதத்திலிருந்து தமிழ் கலாச்சாரமும் தமிழ் கலாச்சாரத்திலிருந்து வேதக் கலாச்சாரமும் பெற்றுக்கொண்டதாக சொல்கிறீர்கள். வேதக் கலாச்சாரம் யாருக்கு எதைக் கொடுத்தது என்று சான்றுகளுடன் விளக்கவும். வேதங்கள் உதவாக் கரை நூல் தொகுதியாகும் என்பது உண்மை ஒன்று. அதை மக்களுக்கு தெரியாத மொழியில் எழுதியது உண்மை இரண்டு. மறுக்கப்பட்டதால் தான் வேதத்திற்கு மறை என்று பெயர். இது உண்மை மூன்று. 2014இல் ஒருவர் வேதத்திலிருந்து பல விசயங்களைப் பெற்றுக்கொண்டனர் என்று சொல்வது ஒட்டுண்ணி வாழ்வு அளிக்கும் பிழைப்புவாத சந்தர்ப்பங்களாகும். தவிடு தின்னும் அரசனுக்கு அமைச்சர் முறம் பிடித்த கதையாக உங்கள் கருத்து இருக்கிறது.
ஐந்தாவதாக வேதம் விவசாயத்தை முன்னிறுத்தியது என்பது பச்சைப்பொய்யாகும். நான்கு வேதங்களில் எங்காவது விவசாயம் இருக்கிறது. உழைத்துப் பெறவேண்டிய விசயங்களையே இந்திரனுக்கு கஞ்சா கசக்கி சோம பானம் படைத்து வேண்டி வேண்டி வழிகிற தொகுப்பு பாடல்கள் தான் வேதத்தில் இருக்கின்றன். இதில் விவசாயம் எல்லாம் இந்தக் கூட்டம் செய்யவில்லை. விவசாயத்தைத் தீட்டு என்று வரையறுத்து இந்திய நிலவுடமையை சாதியோடு இணைத்ததே இந்த பார்ப்பன இந்து மதம் தான்.
உங்களுக்கு கொஞ்சம் தான் படிக்க முடியும் போல இருக்கு. என்னால் முடிந்த வரை விளக்கம் தருகிறேன்.
நீங்க முதல் பத்தியில் என்ன சொல்ல வருகீர்கள் என்றே புரியலை! கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க. நான் அந்த சயின்ஸ் article தந்தது ஆரிய படையெடுப்பு தியரி தவறு என்று நிரூபிக்க பட்டு விட்டது என்பதை நிரூபிக்க. ஆரிய படையெடுப்பு என்பது நடக்கவில்லை என்று தான் நான் ஆதாரத்துடன் கூறி உள்ளேன். இதுவும் பார்பன சதி என்றால் கோசாம்பி எழுதிய புத்தகத்தின் ஒரு சிறு பகுதி இங்கே:
http://ddkosambi.blogspot.com/2008/04/kosambi-on-aryan-invasion.html
ஆரிய படையெடுப்பு எல்லாம் இல்லை. வேத கலாச்சாரம் அவ்வாறாக வளர அது சந்தித்த மக்களும், இந்தியாவின் தனித்துவமான அம்சங்கள் தான் காரணம் என்று அவர் முடிக்கிறார். அந்த பகுதி உங்கள் பார்வைக்கு:
In essence, Indian civilization whether Hindu, Buddhist or Jain, or any other, developed primarily from the unique (and varied) conditions of Indian geography and the human exertion that went into modifying those conditions to advance agriculture and settled civilization. Taken in the general context of say three or four thousand years of Indian history, it is hard to ascribe to an “Aryan” invasion/s the sort of paramountcy assigned by the British.
//நாசிச ஹிட்லரை//
இங்க ஹிட்லர் எதுக்கு வந்தான்? ஆரியன் என்று வந்தால் உடனே ஹிட்லரா? ஹிட்லரின் ஆரியன் நீல நிற கண்கள், பொன்னிற முடி கொண்ட வெள்ளையன். ஆரியன் என்று வேதம் கூறுவது எதை என்பதையும் கோசாம்பி தெளிவாக கூறுகிறார். படிக்கவும்.
Another criticism of the invasion theory lies in the interpretation of the word “Arya” to mean race, nationality or even linguistic group. Critics suggest that the word Arya as used in the Rig Veda and other texts is better translated as one who was noble in character (or noble in deed) or perhaps hailing from a noble (or royal) background. Hence, to use the term “Aryan” to describe the racial or national characteristics of an invading clan or clans would naturally be erroneous.
மேலும் சில பத்திகள் தங்கள் வசதிக்காக:
This is not to say that India could have never been invaded by Caucasian or other clans, but rather that even if such invasions may have taken place, these invasions would have been neither unique nor decisive in shaping Indian history.
While it is not inconceivable that some of the ruling clans described in the Rig Veda may have entered India as invaders, the notion that the “Aryans” were exclusively outsiders, and that too European, and brought with them the entire text of the Vedas, and hence, laid the foundations of Indian civilization is what is most untenable, and is easily exposed if developments in Indian culture and philosophy are adequately studied in depth and with unbiased eyes.
As Indian critics of the Aryan invasion theory have demonstrated, (apart from the few common gods that are also referenced outside India) much of the imagery of the Vedas is indigenous. To many Indians – the references to plants and animals, and the climactic and geographical descriptions suggest a connection to Indian soil. Some of the spiritual values (and cultural mores and traditions) that emerge from the Rig Ved seem to have a distinctly Indian sources that many Indians can identify with intuitively and instinctively.
இப்பவும் ஆரியம் நாட் புரூவ்டு என்பது பித்தலாட்டமா? அப்படி என்றால் ஆதாரம் கொடுக்கவும். சும்மா நம்ம ஊர் பத்திரகை கட்டுரை எல்லாம் செல்லாது. ஆராய்ச்சி முடிவுகள், peer review மூலம் ஏற்றுகொள்ளபட்ட ஆதாரம் வேண்டும்.
//இரண்டாவதாக தமிழ் கலாச்சாரத்தை வேத கலாச்சாரம் அழித்தது என்று சொன்னால் பிறகலாச்சாரங்களையும் பேச வேண்டியிருக்கும் என்று சொல்கிறீர்கள்//
அழித்தது என்று நான் சொல்லவில்லை மக்கா! இரண்டும் மாற்றம் அடைந்தது என்று தான் சொன்னேன். என்னுடைய வார்த்தைகள் இதோ
//நீங்கள் இதற்க்கு பிறகும் தமிழ் கலாச்சாரத்தை, வேதம் சீரழித்துவிட்டது என்று குற்றம் சாட்டினால், அது உலகில் எல்லா கலாச்சாரத்துக்கும் பொருந்தும் என்பதை மறக்க வேண்டாம்//
மாற்றம் வேறு, அழிவது வேறு. உலகில் மாறாத கலாச்சாரம் என்பதே கிடையாது. இரு கலாச்சாரம் சந்திக்கும் போது இரண்டும் மாறும். உலகில் பல உதாரணம் உள்ளது. தேடி படிக்கவும்.
//மாறாக இந்தக் கருத்து ஒட்டுமொத்த பார்ப்பனிய இயங்கியலுக்கு சான்று பகர்கிறது. வேதத்தை மறுக்கிறவர்களை நாத்திகம் என்று வரையறுத்து அவர்களுக்கு தண்டனையும் வழங்கிவிட்டு சிந்துசமவெளி இந்திரனை இரண்டாம் நிலைக் கடவுளாக மாற்றிவிட்டது என்று சொல்வது என்ன வகையான நேர்மை என்று விளக்க முன்வரவேண்டும்?//
இந்திரன் இந்து மதத்தில் இரண்டாம் நிலை கடவுளாக மாற்றப்பட்டான் என்பதும் என் கருத்து இல்லை. நிரூபிக்க பட்ட உண்மை. வேதத்தில் முக்கிய கடவுளான இந்திரன், அக்னி முதலானோர் இந்து மதத்தில் வழிபாட்டில் பின்னுக்கு தள்ளபட்டார்கள். இது கோசாம்பி அவர்களும் சுட்டிகாட்டிய உண்மை. அதே கோசாம்பி பதிப்பில் இருந்து அதற்கான வரிகள்:
For instance, one of the most popular gods in the Indian pantheon – Shiva – appears to have no connection with any possible “Aryan” invasion, and may in fact have its prototype in the fertility god of the Harappans. Similiarly, Hanuman, Ganesh, Kali or Durga, or Maharashtra’s Vithoba – none could have any external “Aryan” connection, since they don’t even find any mention in the Rig Veda. Whether in matters of popular religion or in matters of high philosophy, there is little contribution of note that can be traced directly to a supposed “Aryan invasion”.
இதுவும் பத்தவில்லை என்றால் திரு. ஸ்டீபன் க்னப்ப் எழுதிய Advancements of Ancient India’s Vedic Culture எனும் புத்தகத்தில் இருந்து, அவர் முழுமையாக ஆரியர் வெளியில் இருந்து வந்தனர், ஆரிய படையெடுப்பு நடந்தது என்பதை எல்லாம் முழுமையாக நொறுக்கி இருக்கும் பகுதி இங்கே:
http://www.stephen-knapp.com/aryan_invasion_theory_the_final_nail_in_its_coffin.htm
//வேதத்தை மறுக்கிறவர்களை நாத்திகம் என்று வரையறுத்து அவர்களுக்கு தண்டனையும் வழங்கிவிட்டு//
வேதத்தை மறுத்ததால் தண்டிக்க பட்டனரா? சில ஆதாரங்கள் தரவும். அப்படியே இருந்தாலும் இது என்னமோ இந்து மதம் மட்டும் செய்தது இல்லையே. இன்றும் சில இஸ்லாமிய தேசங்களில் அல்லா தவிர வேறு கடவுள் வழிபட கூடாது என்று சட்டமே இருக்கும் போது இதை நீங்கள் பெரிய குற்றமாக சுமத்துவது ஏன் என்று புரியவில்லை. மேலும், உலகில் கடவுள் இருக்கிறரா இல்லையா என்ற கேள்வியை முதன் முதலில் கேட்டது இந்து மதம் (கவனிக்கவும், மதம்), அதுவும் ரிக் வேதம் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். படிக்க இங்கு செல்லவும்:
http://en.wikipedia.org/wiki/Atheism_in_Hinduism
http://en.wikipedia.org/wiki/Atheism#History
//வேதக் கலாச்சாரம் யாருக்கு எதைக் கொடுத்தது என்று சான்றுகளுடன் விளக்கவும்//
தாராளமாக. முதலில் இருந்து ஆரம்பிப்போமா? நம்ம மொழி, தமிழின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வேத கலாச்சாரத்துக்கு உண்டு. தொல்காப்பியம் முன்னுரையில்
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
என்று வருகிறது. (முழு தொல்காப்பியம் project madurai வலைத்தளத்தில் உள்ளது. வேண்டுபவர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்). இதில் ஐந்திரம் என்பது பாணினியின் அச்தத்யாயி என்னும் நூலில் உள்ள 11 சமஸ்க்ருத பிரிவில் ஒன்றான ஐந்தர (இந்திர) பிரிவை குறிப்பது என்பது ஆராய்ச்சியின் முடிவு. இந்த சமஸ்க்ருத – தமிழ் உறவை ஆராய்ச்சி மூலம் நிரூபித்த ப்ருநெல் அவர்களின் முழு புத்தகத்தை இங்கே படிக்கலாம் (நம்மக்கு தேவையான பகுதி ஆரம்பிப்பது பக்கம் 8)
https://archive.org/details/onaindraschools00burngoog
இந்த ஆராய்ச்சியை, மீண்டும் தன் முனிவர் பட்டத்துக்காக university of pennsilvaniyaவில் திருமதி. ராஜம் என்பவர் செய்தார். அந்த பதிவு இங்கு கிடைக்கும்.
http://franklin.library.upenn.edu/record.html?id=FRANKLIN_4969033
இது புத்தக வடிவில் வெளிவரவில்லை என்பதால் தேவையான பகுதியை மட்டும் இங்கே தங்களுக்காக:
“The variation among these texts prevents me from proposing a common source for them, whereas the characteristics they share with each other prevent me from proposing mutually exclusive models as their sources… This situation provides us with a nebulous picture of a manifold ancient Indian grammatical tradition. In a tree model one can concretely talk about the definite relationship between the existing branches and nodes. But this study demonstrates that the relationship between our branches and nodes are not very definite.”
Rajam, V. S., A comparative study of two ancient Indian grammatical traditions: The Tamil Tolkappiyam compared with the Sanskrit Rk-pratisakhya, Taittiriya-pratisakhya, Apisali siksa, and the Astadhyayi (Ph.D. thesis, University of Pennsylvania: 1981). Page. 1-5, and 464-466.
அதாவது தமிழும், சமஸ்க்ருதமும் தனித்தனியாக வளரவில்லை என்று கூறுகிறார். இரண்டு மொழியும் ஒரு மொழியில் இருந்து பிரியவில்லை, இரண்டும் கொடுக்கல் வாங்கல் மூலமாக சேர்ந்து வளர்ந்தன என்கிறார். இதில் சம்ஸ்க்ருதம் வேத கலாச்சாரத்தின் மொழி என்று நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை. வேத கலாச்சாரத்தின் ஊடுருவல் அனைத்தும் வெளியே போக வேண்டும் என்றால் தமிழின் நிலைமை என்ன? அஸ்திவாரமே ஆட்டம் காணும் போது வேற விசயம் எதுக்கு? (தொல்காப்பியரின் ஆசானாக கூற படும் அகத்தியர் ரிக் வேத ரிஷிகளில் ஒருவர் என்பது கொசுறு செய்தி).
//ஐந்தாவதாக வேதம் விவசாயத்தை முன்னிறுத்தியது என்பது பச்சைப்பொய்யாகும்//
தப்பு தப்பா படிக்க ஒரு திறமை வேணும். உங்க கிட்ட நிறைய இருக்கு. நான் சொன்னது
//வேட்டையும், புலம் பெயர்தலையும் அடிப்படையாக கொண்ட வேத கலாச்சாரம் விவசாயத்தை முன்னிருத்தி, ஓரிடத்தில் வாழும் சிந்துசமவெளி கலாச்சாரத்துடன் சேர்ந்ததால் இரண்டும் மாற்றம் அடைந்தன//
இதில் நான் எங்கே வேதம் விவசாயத்தை முன்னிருத்தியது என்று சொன்னேன்? மொதல்ல ஒழுங்கா படிங்க. அப்புறம் பொங்குங்க.
//உழைத்துப் பெறவேண்டிய விசயங்களையே இந்திரனுக்கு கஞ்சா கசக்கி சோம பானம் படைத்து வேண்டி வேண்டி//
பின்றீங்க சார். சோமா செடி எதுனே இன்னும் தெளிவா தெரியல. சோம என்னும் வார்த்தை வரும் அனைத்து ரிக் வேத வரிகளும் உங்களுக்காக:
http://www.intratext.com/IXT/ENG0039/_PL9.HTM
http://www.intratext.com/IXT/ENG0039/_PIK.HTM
http://www.intratext.com/IXT/ENG0039/_PK7.HTM
http://www.intratext.com/IXT/ENG0039/_PK8.HTM
http://www.intratext.com/IXT/ENG0039/_PKB.HTM
http://www.intratext.com/IXT/ENG0039/_PKD.HTM
http://www.intratext.com/IXT/ENG0039/_PL9.HTM
We have drunk Soma and become immortal; we have attained the light, the Gods discovered.
Now what may foeman’s malice do to harm us? What, O Immortal, mortal man’s deception?
இந்த பகுதியை அடிபடையாக கொண்டு தான் சோம செடி கஞ்சா என்ற தியரி வந்தது. அது மதிமயக்கும் பொருள் அல்ல, அது சுறுசுறுர்ப்பை தரும், இன்றும் பார்சி மக்கள் பயன்படுத்தும் ephedra என்னும் செடி என்று ஹாரி பால்க், ஜான் ஹௌபேன் போன்ற ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பால்க் அவர்களின் பதிப்பு இங்கே:
http://www.jstor.org/discover/10.2307/617914?uid=3739600&uid=2&uid=4&uid=3739256&sid=21104842377891
நீங்க சொன்ன அனைத்து குற்றச்சாட்டையும் இல்லை என்று ஆதார பூர்வமாக, ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சி முடிவுகள் மூலமே காண்பித்து உள்ளேன். இனிமேல் நீங்கள் விவாதிக்க விரும்பினால் ஆதாரம் கொண்டு விவாதிக்கவும். உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள் மட்டுமே தான் உங்கள் பதிலில் இருக்கும் என்றால், தயவு செய்து என்னுடன் விவாதிக்க முயற்சிக்க வேண்டாம். ஆதாரம் இல்லாத உளறல்களுக்கு பதில் சொல்லும் பொறுமையோ, நேரமோ என்னிடம் இல்லை.
விட்டகுறை ,தொட்ட குறை உம்மிடம் நிறையஇருக்கே சந்துரு!, அதை எல்லாம் விட்டுவிட்டு நேரா சிந்துசமவெளிக்கு போனா எப்படி ?முதலில் நீர் பதில் சொல்லாமல் ஓடிப்போன விடயத்தில் இருந்து தொடங்குவோமா ?
https://www.vinavu.com/2014/10/24/can-a-muslim-take-deepavali-sweet/#comment-247628
இதில் என் பின்னுட்டம் 36,37,38க்கு பதில் சொல்லுமையா ! நாம் சமுகத்தை பற்றி பேசும் போது சமூகம் என்பது மக்களால் ஆனது. நானும் அதுல ஒருத்தன் தான். என்ன சமூகத்துல இருந்து ஒதுக்க நீ யார்? என்று கேட்டு ஓடியவர் தானே நீர் !
ஓட எல்லாம் இல்லை சார். படிக்க தெரியாத கடிவாளம் கட்டிய குதிரை கிட்ட விவாதித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உங்கள் கேள்விக்கு பதில் அதே விவாதத்தில் கமெண்ட் 35இல் இருபதனாலும், நீங்கள் என் கேள்விக்கு விடை அளிக்காமல் இருந்ததனாலும் நான் கடுப்பில் எடுத்த முடிவு தான். மறுக்கவில்லை. இப்போது தெளிவான பதில் அளித்து விடுகிறேன்.
நீங்கள் கூறியது போல //சக மனிதரை இழிவு படுத்தும் ஹிந்து மத ஆகம விதிகளை நீக்குவது பற்றி பேசும் போது// ஆகம சாஸ்திரத்தில் எதாவது இருக்கிறதா என்று அரிய ஆகம சாஸ்திரத்தை படிக்க தேடிக்கொண்டு இருக்கிறேன். பதிப்பில் வைஷ்ணவ சாஸ்திரம் மட்டும் திருப்தியில் கிடைக்கிறது என்று தெரிகிறது. இன்னும் வலையில் கிடைக்கவில்லை. ஆகம சாஸ்திரம் மட்டுமே நூற்றுக்கும் மேலான புத்தகங்கள் இருப்பதால் கிடைத்தாலும் சில காலம் பிடிக்கும். இப்போதைக்கு தெரிந்த விசயத்தின் படி, வினவில் எங்கோ கூறப்பட்டது போல கும்பாபிசேகம் தீட்டு கழிக்கும் வழக்கம் இல்லை என்று தெரிகிறது. தெய்வ சிலையை பீடத்தில் வெயக்கும் போது நன்றாக அமர வைக்க படும் ஒரு வித கலவை அஷ்டபந்தனம் எனவும், அது தினசரி பூஜை, அபிஷேகம் மற்றும் காலத்தால் கட்டி தட்டும் போது சிலை பாதிக்க படாமல் இருக்க, சிலையை அகற்றி மறுபடியும் அந்த களிம்பை பூசி, சிலையை அங்கு மீண்டும் வைக்க செய்யப்படும் செயலே கும்பாபிசேகம் என்று தான் கூற படுகிறது. அதற்க்கு கிடைத்தது இரண்டு வீடியோ மட்டுமே. பார்க்க இங்கே செல்லவும்:
https://www.youtube.com/watch?v=eybAj6NscQc
https://www.youtube.com/watch?v=YJ1699jc_Vc
//பார்பனர்களில் நல்லவர்கள் இருக்க முடியாதா என்று உம்மால் தொடங்கபட்ட இவ் விவாதம் யாருக்கு ஆதரவானது என்று யாரால் தான் உணரமுடியாது ?//
சாதி வெறிக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் எனும் கருத்தை முன்வைத்த, ஆதரித்த எனக்கு இது தான் மிச்சம். இன்னும் உங்களுக்கு எவளோ தெளிவா சார் சொல்லணும்? எனக்கு இந்து மதத்தில் உள்ள கெட்டதை மட்டும் நீக்கினால் போதும். உங்களை பொறுத்த வரை இந்து மதத்தின் அடிப்படை சாதி. நான் அது தவறு, நால் வேதத்தில் சாதியை பற்றி வருவது ஒரே இடத்தில். அந்த புருஷ சுகத பாடலும் பிற்கால இடைச்சொருகல் என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்க பட்டுவிட்டது. எனவே எனக்கு வேதத்தை ஏற்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு சாதி வேண்டாம், அனால் ஆஞ்சநேயர் பிடிக்கும், கர்ணனை பிடிக்கும், விநாயகரை பிடிக்கும். எனவே நான் பார்பனீய ஆதரவாளனா? சாதி மறுப்பு கொண்டு நான் விநாயகரை போற்றலாமா? இல்லை அதுவும் பார்பனீய ஆதரவுதானா? நீங்கள் இதை ஏற்பீர்களா இல்லையா? இல்லை என்றால் ஏன் என்று விளக்கம் தரவும்.
உலகில் எல்லா மதங்களும் நன்மை, தீமை இரண்டுக்கும் பயன்படுத்தபட்டு உள்ளன. பைபிள் அடிபடையாக கொண்டு தான் அடிமைமுறையை செய்தனர், KKK அனைத்து அக்கிரமங்களையும் செய்தது. அதே பைபிள் வைத்து தான் மார்டின் லூதர் கிங் தன் உரிமை போரை நடத்தினார். குரானை அடிபடையாக கொண்டு தான் அத்தனை படையெடுப்பும், இப்போதைய இசலாமிய தீவிரவாதமும் நடக்கிறது. அதற்காக குரானை தூக்கி எறிந்து விட்டோமா? அதில் வேண்டாதவற்றை எறிந்து விட்டு நல்லதை மட்டும் நாம் இன்றளவும் பேணி பாதுகாக்கிறோம். அதையே இந்து மதத்தில் செய்யலாம். ராஜா ராம் மோகன் ராயும், பிரம்மோ சமாஜம், விவேகனந்தர் செய்த பணியை இன்று நாம் முடிக்கலாம் சாதியை அழித்து விட்டு இந்து மதம் சொன்ன தத்துவங்களை மட்டும் நாம் வைத்துகொள்வோம்.
இதை சொன்னால் உடனே நீங்கள் பார்பனீய ஆதரவாளன் என்று குதிப்பீர்கள். இந்த பதில் பற்றி எதாவது விளக்கம் வேண்டும் என்றால் கேட்கவும். இப்போது நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். இந்து மதத்தில் சாதி, வர்ணம் என்று வரும் அனைத்து பகுதிகளையும் அழித்து விடலாம். அப்போது சாதியால் வந்த எந்த கட்டுப்பாடும் இருக்காது. பிராமணர் அல்லாத ஒருவர், கோவில் கருவறையில் நின்று மந்திரம் சொல்லி தீபாராதனை காட்டினால் நான் இறைவனை வழிபட எதாவது தடை உள்ளதா? அந்த வழிபாட்டை என்னால் ஏற்க முடியும். இதற்க்கு உங்களின் பார்வை என்ன? ஏற்பீர்களா?
அதே படிக்க தெரியாத கடிவாளம் கட்டிய குதிரை கிட்ட விவாதிக்க வந்து இருக்கிங்க சந்துரு! வாங்க பிரயாணத்தை தொடரலாம் !
[1] முதலில் ஆகம விதிகள் என்னவென்றும் ,அது பார்பனர் அல்லாத மற்ற மனிதர்கள் எப்படி எல்லாம் அவமரியாதை செய்கின்றது என்பதையும் சிறங்கம் கோவிலில் கருவரை நுழைவு போராட்டத்துக்கு பின் பார்பனர்கள் கோவிலுக்கும் ,கருவறைக்கும் சிலைக்கும் தீட்டு கழித்த ஆகமத்தை அதற்க்கான பூஜைகளை பற்றி மயிரலவுக்கும் கவலை படாத சந்துரு….! இச் இச் இச் உமது விவாதத்தின் நோக்கம் பார்பனர்களுக்கு கூலிக்கு மாரடிப்பது என்பது இங்கு யாருக்குதான் தெரியாது ! இந்த விடயத்தை முதலில் நீர் பார்பான் இடமே முதலில் ஏன் என்று கேளுமையா !
[2]புருஷ சுகத பாடல் என்ன ….,? 4 வேதமுமே இடை சொருகல் என்று நீர் கூற தயாராக தான் இருபிர். அதனை பார்பனன் ஏற்கின்றானா என்பது தானே முக்கியம். என் மொழியில் இல்லாத வேதத்தை நான் எதற்கு ஏற்க்க வேண்டும் !என் தமிழ் மொழியில் சிவனை,முருகனை வணங்க பக்தி இலகியங்கள் இருக்க பார்பான் அதனை பாடாமல் என் சமஸ்கிருத வேதத்தை கூவறான் என்று பார்பனனையே கேளும் !
[3]எதற்கு எமக்கு உமது வேதமதம் ?சாதியை அழிக்க பெரியார் பக்கம் நீர் போகலாமே ! //ராஜா ராம் மோகன் ராயும், பிரம்மோ சமாஜம், விவேகனந்தர் செய்த பணியை இன்று நாம் முடிக்கலாம் சாதியை அழித்து விட்டு இந்து மதம் சொன்ன தத்துவங்களை மட்டும் நாம் வைத்துகொள்வோம். //
[4]//இதை சொன்னால் உடனே நீங்கள் பார்பனீய ஆதரவாளன் என்று குதிப்பீர்கள்//இல்லை இல்லை நீர் கடைதெடுத்த பார்பன அடிவருடி
இதற்க்கு மேலும் உங்க மாதிரி ஆளுங்க கிட்ட பேசி என்னை நானே அசிங்க படுத்த விரும்பவில்லை. நீங்க உங்க தமிழ் கலாச்சாரத்தை கட்டி கொண்டு, காப்பாற்றி வாருங்கள். உங்களை பொறுத்த வரை நான் பார்பன அடி வருடி ஆகவே இருந்து விட்டு போகிறேன். நான் தமிழகத்தை விட்டு உலகத்துக்கு செல்கிறேன். உங்கள் பணியை நீங்கள் செவ்வனே தொடருங்கள்.அப்படியே உங்கள் மொழியில் இல்லாத எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு, 2000 வருஷமா வந்த மாற்றம் அனைத்தையும் அழித்து விட்டு கற்காலத்துக்கு சென்று சந்தோஷமாக வாழுங்கள். நான் மனிதத்தின் வருங்காலத்தை நோக்கி செல்கிறேன்.
Hi Chandru,
Your Feedbacks are scolding us like…
தென்றலுக்கு :
உங்களுக்கு கொஞ்சம் தான் படிக்க முடியும் போல இருக்கு. என்னால் முடிந்த வரை விளக்கம் தருகிறேன்.
எனக்கு :
ஓட எல்லாம் இல்லை சார். படிக்க தெரியாத கடிவாளம் கட்டிய குதிரை கிட்ட விவாதித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.இதற்க்கு மேலும் உங்க மாதிரி ஆளுங்க கிட்ட பேசி என்னை நானே அசிங்க படுத்த விரும்பவில்லை.
பாதி பாதியா படிச்சுட்டு உளறுனா அப்படி தான் சார் பதில் வரும். நீங்க பாதி படிக்காம முழுசா பதிச்சுட்டு பேசுங்க, நானும் நீங்க பாதி மட்டும் தான் படிகீர்கள் என்று சுட்டி காட்ட மாட்டேன். செஞ்சத சொன்னா உடனே திட்டுகிறேனா?
பெரியார் சொன்னது தான் சமூக சீர்திருத்தம் என்று பேசும் உங்களை கடிவாளம் கட்டிய குதிரை என்று சொல்வதில் தவறு இருப்பதாக எனக்கு படவில்லை. பெரியாருக்கு பல காலம் முன்பே சமூக சீர்திருத்தத்தை மேற்கொண்ட ராஜா ராம் மோகன் ராய் (பதினெட்டாம் நூற்றாண்டு) வழியில் நான் வருகிறேன் என்றால் நீங்க கையை பிடித்து இழுத்து பெரியார் கிட்ட கொண்டு வரீங்க! பெரியாரை நான் ரொம்பவும் மதிக்கிறேன். ஆனா அவருக்கும் முன்னோடியான ராஜா ராம் மோகன் ராயை இன்னும் மதிக்கிறேன். இதை பார்க்க முடியாமல் திரும்ப திரும்ப பெரியாருக்கும், ஹான்காக்க்கும் நீங்கள் வருவதால் தான் கடிவாளம் கட்டிய குதிரை என்றேன். உங்கள் கண்களுக்கு பெரியார் மட்டும் தான் தெரிகிறார். எனக்கு ராஜா ராம், கேஷுப் சந்திர சென், தேவன்றநாத் தாகூர், ஜ்யோதிராவ் ப்ஹுலே, தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், திலகர் போன்றோர் பெரியாருக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை. இன்னும் சொல்ல போனால் பெரியாருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் உரிமைக்காக போராடியதால் பெரியாரை விட கொஞ்சம் மரியாதை அதிகம். எந்த விதத்திலும் பெரியாரை விட குறைந்தவர்கள் இல்லை. பெரியாரின் போராட்டங்களை நான் எந்த விதத்திலும் குறை கூறவோ, குற்றம் கூறவோ இல்லை. அவ்வாறு செய்தால் என்னை விட கேடு கெட்டவன் இந்த உலகத்தில் இருக்க முடியாது. ஆனால் பெரியாரை மட்டுமே நீங்கள் ஏற்பதை நான் கண்டிக்கிறேன். சாதி தவறு என்றும், இந்து மதத்தை சரிபடுத்த பெரியாருக்கு பல காலம் முன்பே போராட்டத்தை துவக்கிய தலைவர்களை நான் ஏற்பதை உங்களால் ஏற்க முடியாததால் உங்களை கடிவாளம் கட்டிய குதிரை என்னும் என் கூற்று என்னை பொறுத்த வரை மிக சரி. நான் பெரியாரை பின் பற்றவில்லை என்று சொல்லவில்லை, பெரியாரோடு சேர்த்து அவருக்கு முன்னால் வந்தவரையும் நான் பின் பற்றுகிறேன்.
// என் தமிழ் மொழியில் சிவனை,முருகனை வணங்க பக்தி இலகியங்கள் இருக்க பார்பான் அதனை பாடாமல் என் சமஸ்கிருத வேதத்தை கூவறான் என்று பார்பனனையே கேளும் ! //
மேற்படி பக்தி இலக்கியங்களைப் படித்து பரவசமடைந்துதான் கார்த்திகேயன் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்..
//இதுவும் பத்தவில்லை என்றால் திரு. ஸ்டீபன் க்னப்ப் எழுதிய Advancements of Ancient India’s Vedic Culture எனும் புத்தகத்தில் இருந்து, அவர் முழுமையாக ஆரியர் வெளியில் இருந்து வந்தனர், ஆரிய படையெடுப்பு நடந்தது என்பதை எல்லாம் முழுமையாக நொறுக்கி இருக்கும் பகுதி இங்கே:///
திரு. சந்துரு,
உங்களின் பதிலை இன்றைக்கு காலை தற்செயலாகப் பார்க்கும் வரை எனக்கு இந்த ‘ஆரியப்படையெடுப்பு’ கருத்தில் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. ஆகவே அதைப்பற்றி உங்களைப் போல் விவரமாக, ஆழமாக எல்லாம் தெரியாது. உங்களின் பதிலிலிருந்து அதைப்பற்றி மேலும் கற்றுக் கொள்ளலாம் என்றால், நீங்கள் தரும் இணைப்புகளை subscription இல்லாமல் படிக்க முடியவில்லை. நீங்கள் உங்களின் பாட்டுக்கு இணைக்கும் இணைப்புக்களுக்கெல்லாம் subscription வாங்கிக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் தரும் இணைப்புக்களை நீங்களே உண்மையில் படித்துப் பார்த்தீர்களா என்பதும் அந்த முருகனுக்குத் தான் வெளிச்சம். ஆகவே நீங்கள் படித்துப் பார்த்து, மற்றவர்களும் படிக்கக் கூடிய இணைப்புகளை மட்டும் தரவும். நன்றி.
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் தம்மை ஆரியர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஐரோப்பியர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளவும், அவர்களுக்கும் தங்களுக்கும் ஒரு வித பரம்பரைத் (Genetic affinity) தொடர்பிருப்பதாக காட்டிக் கொண்டு, அதாவது ஏனைய இந்தியர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள், சமஸ்கிருதம் இந்தோ- ஆரிய மொழி என்ற அடிப்படையில் ஆரிய மகாசபைகளையும், தியோசொபிகல் சொசைற்றி போன்றவற்றையும் உருவாக்கிக் கொண்டு, ஒல்கொட், அன்னிபெசன்ட் போன்ற அமெரிக்க, ஐரோப்பிய நாசிகளுடன் உறவாடவும், , அவர்களுடன் சொந்தம் கொண்டாடி, அவர்களிடம் “நக்கிப்பிழைக்க”(Thanks to Comrade Thendral)’ ஆரியப் படையெடுப்பு தியறி (Theory) இந்திய, குறிப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு உதவியது. ஆனால் ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி மாறியவுடன், சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மை மக்கள், ஆரியப்படையெடுப்பை ஆதாரம் காட்டி, பார்ப்பனர்களை வெளியார் என அழைக்கத் தொடங்கியதால், அதை மறுக்க வேண்டிய கட்டாயத்துக்கு இந்திய பார்ப்பனர்கள் தள்ளப்பட்டனர். அதனால் தான் Stephan Knapp, David Frawley போன்ற இந்துத்துவா நம்பிக்கையுள்ள, அமெரிக்க வெள்ளைக்கார, (முன்னாள்) ஹிப்பி சாமிகளின் கட்டுரைகளை வைத்துக் கொண்டு ஆரியப்படையெடுப்பு ‘பொய்’ என்று நிரூபிக்கப் படாத பாடுபடுகின்றனர் என்பது தான் என்னுடைய கருத்தாகும்.
1970களின் தொடக்கத்தில், அவர்களின் இளமைக்காலத்தில் சுதந்திரமாக கஞ்சா புகைப்பதற்காக, இந்தியா வந்து தங்கியதால், தமது இளமையை மறக்க முடியாமல் அலையும் பல வயதான முன்னாள் ஹிப்பிகள், இன்றைக்கும் வேதங்கள், தியானம், சோதிடம் என்று உளறிக் கொண்டு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இருக்கிறார்கள். அவர்களில் பலர் கங்கைக் கரையிலேயே அதாவது வடநாட்டிலேயே சுற்றித் திரிந்து கஞ்சா அடித்ததால், சும்மா வேதங்கள் தான் இந்தியாவில் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்று நினைத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலானோருக்கு தமிழர்களையும், இந்தியாவில் அவர்களின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் பற்றித் தெரியாது.
யாராவது வெள்ளைக்காரர்களை மேற்கோள் காட்டினால், தமிழர்கள் நம்பி விடுவார்களென, இணையத்தளங்களில் உலவும் சில இந்த்துத்துவாக்களும், சமக்கிருதவாதிகளும் அசட்டுத் தனமாக நினைத்துக்கொள்கிறார்கள் என்பது என்னுடைய அனுபவமாகும். Stephan Knapp (ஸ்ரீ நந்தனந்ததாஸ்), David Frawley (பண்டிதர் வாமதேவ சாஸ்திரி) போன்றவர்கள் உண்மையில் பல்கலைக்கழகங்களில் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர்களோ அல்லது வரலாற்று அகழ்வாய்வுத் துறையில் ஈடுபட்டு வரும், தகைமை பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்களோ அல்ல. அவர்கள் தம்மை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் என்று கூறிக் கொள்வதுமில்லை. அவர்களின் கட்டுரைகள் எதுவுமே வரலாற்றாசிரியர்களால் Peer review வுக்கு உட்பட்டவையும் அல்ல. அவர்களின் ‘ஆராய்ச்சி’ எல்லாம் Vedic Spirituality பற்றியது மட்டும் தான்.
அப்படியிருக்க, ஆரியப்படையெடுப்பு ‘பொய்’ என்று நிரூபிக்க, ஹரே கிருஸ்ணா இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ நந்தனந்ததாஸ் என்றழைக்கப்படும் Stephan Knapp இன் கட்டுரையை ஆதாரம் காட்டி, ஆனானப் பட்ட தோழர் தென்றலுக்கே, தண்ணி காட்ட முயன்ற சந்துருவின் ‘தில்’ ஐ என்னால் பாராட்டாமலிருக்க முடியவில்லை. ஆனால் வரலாறு சம்பந்தமான முக்கியமான விவாதத்துக்கு ஹரே கிருஸ்ணா இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ நந்தனந்ததாஸ் சுவாமிகளின் கட்டுரையை எந்த முட்டாளும் ஆதாரம் காட்ட மாட்டான் என்பதையும் நினைக்க சிரிப்புத் தான் வருகிறது. 🙂
மேலைநாடுகளில் ஹரே கிருஷ்ணாக்காரர்கள் இலவசமாகத் தரும் புத்தகங்களைக் கூட யாரும் வேண்டுவதில்லை, அவர்களைத் தூரத்தில் கண்டாலே ஓடுபவர்கள் (நான் உட்பட) தான் வெளிநாடுகளில் அதிகம்.
என்னுடைய கேள்வி என்னவென்றால், நீங்கள் உண்மையில் ஆரியர்கள் வெளியிலிருந்து வரவேயில்லை, அவர்கள் மண்ணின் மைந்தர்கள் என்று வாதாடுகிறீர்களா அல்லது ஆரியப் படையெடுப்பு என்பதில், ‘படையெடுப்பு’ என்ற வார்த்தைப் பிரயோகம் தவறானது. அவர்கள் படையெடுத்து வரவில்லை, நாடோடிகளாக, கூட்டம், கூட்டமாக, இப்பொழுது வட இந்தியக் கூலிகள் தமிழ்நாட்டுக்கு வருவதைப் போல், ஆரியர்கள் ஆர்மீனியா, மத்திய ஆசியா, ஈரான் போன்ற நாடுகளிருந்து வந்தார்கள் என்று கூறுகிறீர்களா? வட இந்தியக் கூலிகளின் சென்னை வருகையைக் கூட, அதிகம் பேர் ஒரே முறையில் வருவதன் அடிப்படையில், வட இந்தியத் தொழிலாளர்கள் சென்னையை நோக்கிப் ‘படையெடுப்பு’ என்று கூறுவது தவறாகாது என்பது உங்களுக்கும் தெரியும். சோமபானம், மற்றும் உங்களது கருத்துக்களைப் பற்றிய கேள்விகளைப் பின்பு பார்ப்போம்.
ஆரியப்படையெடுப்பு பொய் அல்லது ஆரியக்குடியேற்றம் நடைபெறவில்லை என்று, வேறு யாராவது, இந்துத்துவா சார்பற்ற, நடுநிலையான, வரலாற்றில் (தகைமை பெற்ற) மேலைநாட்டு ஆரய்ச்சியாளர்களின் கட்டுரைகளை திரு, சந்துரு அவர்கள் ஆதாரம் காட்டுவாரேயானால், அவற்றைப் படித்துப் பார்க்க நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.
//இப்பவும் ஆரியம் நாட் புரூவ்டு என்பது பித்தலாட்டமா? அப்படி என்றால் ஆதாரம் கொடுக்கவும். சும்மா நம்ம ஊர் பத்திரகை கட்டுரை எல்லாம் செல்லாது. ஆராய்ச்சி முடிவுகள், peer review மூலம் ஏற்றுகொள்ளபட்ட ஆதாரம் வேண்டும்.///
திரு.சந்துரு,
இதைத் தான் நானும் கேட்கிறேன். ஆரியப்படையெடுப்பு பொய் அல்லது ஆரியக்குடியேற்றம் நடைபெறவில்லை என்று, வேறு யாராவது, இந்துத்துவா சார்பற்ற, நடுநிலையான, peer review மூலம் ஏற்றுகொள்ளப்பட்ட, வரலாற்றில் (தகைமை பெற்ற) மேலைநாட்டு அல்லது இந்திய ஆரய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆதாரம் காட்டுங்கள்.
நீங்களே வெறும் வலைப்பதிவை ஆதாரமாகத் தந்து விட்டு, இவ்வளவுக்கு அதிகப்பிரசங்கித்தனம் பண்ணுவதைப் பார்க்க சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை. அதிலும் நீங்கள் கோசாம்பியின் கட்டுரை என்று தந்த வலைப்பதிவிலுள்ள கட்டுரையைக் கூட, உண்மையில் கோசாம்பி தான் எழுதினாரா என்பதே சந்தேகத்துக்குரியது. 🙂
அந்தக் கட்டுரை இவ்வாறு கூறுகிறது:
//The following article has been retrieved from a Korean site. Since the page no longer exists, I have copied the full text here, and the reference to DD Kosambi is highlighted in maroon color. The name of THE AUTHOR OF THIS ARTICLE DOES NOT SEEM TO APPEAR AT THE SITE.//
இந்திய கணிதப்பேராசிரியர் கோசாம்பியின் கட்டுரையைக் கூட, ஆரியன் படையெடுப்பு பொய் என்று நிரூபிக்க ஆதாரமாகக் காட்டுவது முட்டாள்தனம் என்பது தான் எனது கருத்தாகும். கோசாம்பி இந்தியாவின் வரலாற்றைக் கூட மார்க்சியப் பார்வையுடன் எழுதினாராம். வரலாற்றுப் பாடத்துக்கே தன்னுடைய Marxist Twist ஐக் கொடுத்த ஒருவரின் கருத்தை, இவ்வளவு முக்கியமான, விவாதிக்கப்படும் விடயத்துக்கு ஆதராமாகக் கொள்ளலாம் என நான் நினைக்கவில்லை.
As a historian, Kosambi REVOLUTIONISED INDIAN HISTORIOGRAPHY WITH HIS MARXIST APPROACH, crucially diverting from the mainstream nationalist and imperialist schools. He understood history in terms of the dynamics of socio-economic formations rather than just a chronological narration of “episodes” or the feats of a few great men – kings, warriors or saints. In the very first paragraph of his classic work, An Introduction to the Study of Indian History, he gives an insight into his methodology as a prelude to his life work on ancient Indian history:
“THE light-hearted sneer “India has had some episodes, but no history“ is used to justify lack of study, grasp, intelligence on the part of foreign writers about India’s past. The considerations that follow will prove that it is precisely the episodes — lists of dynasties and kings, tales of war and battle spiced with anecdote, which fill school texts — that are missing from Indian records. Here, for the first time, we have to reconstruct a history without episodes, which means that it cannot be the same type of history as in the European tradition.”
வியாசன் சார்,
வெச்சுகிட்டா வஞ்சன பண்றேன் 🙁 article subscription கேட்பதால் தான் நான் அந்த article தரும் நிலைமைக்கே தள்ள பட்டேன். அது நடக்கலை என்று சொல்பவன் தானே இந்த மாதிரி ஆராய்ச்சியை அடிப்படையாக வைத்து article எழுதறான். அது நடந்தது என்று சொல்பவன் எதுவும் எழுதறது இல்லை. நான் என்ன செய்ய. வலையில் கிடைக்கும் சில புத்தகங்கள், ஆராய்ச்சி கட்டுரைகளை படிக்க லிங்க் தருகிறேன். அது போக ஒரு நடுநிலை இருக்கும் சரித்திர ஆராய்ச்சியாளர், மாணவர் விவாதிக்கும் forum லிங்க் தருகிறேன் (நூறு பக்கங்கள் கிட்ட தேறும். முதல் முறை புரியாத terminology சில இருக்கும். நிறைய நேரம் இருக்கும் போது படிக்கவும்). அதுவும் கூட மொத்த ஆராய்ச்சி கட்டுரை லிங்க் தருகிறேன். தேடி பிடிக்க முடிந்தால் தாங்கள் படிக்கலாம்.
http://koenraadelst.bharatvani.org/downloads/books/aid.htm
http://books.google.nl/books?id=KpIWhKnYmF0C&printsec=frontcover&dq=introduction+to+hinduism&hl=nl&sa=X&ei=dKU4Us7XCOag4gTIjIG4Bw&ved=0CD4Q6AEwAA#v=onepage&q=introduction%20to%20hinduism&f=false
http://books.google.nl/books?id=NDRRNGj17EMC&pg=PA454&dq=aryan-dravidian+divide&hl=nl&sa=X&ei=IAtZUr8-5ZbRBZfVgIAG&ved=0CDUQ6AEwAA#v=onepage&q=aryan-dravidian%20divide&f=false
http://ac.els-cdn.com/S0002929707605412/1-s2.0-S0002929707605412-main.pdf?_tid=bc02f43c-835b-11e4-a72f-00000aab0f01&acdnat=1418539254_4b38a313ddb4a75d1b7e8a902591a512
https://archive.org/stream/EdwinBryantLauriePattonIndoAryanControversyEvidenceAndInferenceInIndianHistoryRoutledge2005/Edwin%20Bryant%2C%20Laurie%20Patton-Indo-Aryan%20Controversy_%20Evidence%20and%20Inference%20in%20Indian%20History-Routledge%20%282005%29#page/n3/mode/2up
http://www.royalasiaticsociety.org/site/files/Part%203%20-%20Aryans%20and%20Nomads.pdf
http://books.google.nl/books?id=A6ZRShEIFwMC&printsec=frontcover&hl=nl#v=onepage&q&f=false
http://books.google.nl/books?id=yitBhzsd9OIC&pg=PA4&dq=hindutva+aryan+migration&hl=nl&source=gbs_toc_r&cad=3#v=onepage&q=hindutva%20aryan%20migration&f=false
http://www.pnas.org/content/103/4/843.full
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1380230/?tool=pubmed
http://www.ejvs.laurasianacademy.com/ejvs0501/ejvs0501article.pdf
_______
கடைசியாக நான் கூறிய அந்த forum:
http://historum.com/asian-history/18133-aryan-invasion-theory-india.html
இந்த விவரம் உங்களுக்கு போதும் என்று நினைக்கிறன். மீண்டும் article தந்தர்காக மன்னிப்பு கோருகிறேன். இதை வழக்காக படிக்கும் எனக்கே சில சமயம் இந்த ஆராய்ச்சி கட்டுரை எல்லாம் தலைகால் புரியாததால் (முக்கியமாக அந்த மரபு சார்ந்த ஆராய்ச்சிகள்), அனைவருக்கும் புரியும்
வகையாக இருக்க வேண்டும் என்று article தந்தேன். நல்ல நோக்கம், ஆனா தவறான விளைவு.
எனக்கும் கோசாம்பி கிட்ட போக தயக்கம் தான். ஆனா நம்ம தென்றல் அவரை பிடித்து தானே தொங்கிக்கொண்டு இருக்கிறார். இதோ அவர் கூற்று:
//தமிழ்நாட்டு கருப்புப் பார்ப்பான்களை வட இந்திய சிவப்புப் பார்ப்பான்கள் இழிவாக பார்ப்பது ஆரியத்தின் அடிப்படையிலேயே. டி டி கோசாம்பி இம்மாதிரி ஆர் எஸ் எஸ் கூட்டங்களும் அறிவு சீவிகளும் அறிவியலைக் காட்டி அழுகுணி ஆட்டம் ஆடும் பொழுது கலை, கலாச்சாரம், பண்பாடு என்னவாக இருந்தது என்பதை காலகோடாகவும் இன்றைய மானக்கேடாகவும் அழகாக காட்டியிருக்கிறார்//
கோசாம்பி அவர்களின் பதிவுகள் எவ்வளவு காலத்துக்கும், ஆராய்ச்சிக்கும் பின் தங்கியவை என்று காண்பிக்க அந்த ப்ளாக் எனக்கு உதவியது. அவர் எழுதிய பதிவுகள் அனைத்தும் ஆரியர் சிந்து சமவெளி நாகரிகத்தை அழித்து, மக்களை கொன்று குவித்து படை எடுத்த மக்கள் என்ற பார்வையில் எழுதிருப்பார். உங்களுக்கு முழு புத்தகம் வேண்டும் என்றால் இங்கு செல்லவும்:
http://www.arvindguptatoys.com/arvindgupta/introhisddk.pdf
மூன்றாம் சாப்ட்டர் முடிவின் சில பக்கங்களுக்கு முன் அவர் இந்த பேச்சை ஆரம்பிப்பார் என்று நினைவு. படித்து பார்க்கவும். ஆராய்ச்சி முடிவும், என் கருதும் இது தான் சார். ஆரிய படையெடுப்பு என்பது 19-ஆம் நூற்றாண்டுக்கு முன் இந்திய வரலாற்றில் இல்லை. பிரித்து ஆளும் சூழ்ச்சிக்கு வெள்ளையர்கள் ஏற்படுத்தி கொண்ட ஒரு உக்தியே அது. அப்போதைய லாபத்துக்காக அதை ஆதரித்து, தூபம் போட்டு வளர்த்தன மேல் சாதி கிறுக்குகள். இப்போது அதை ஆராய்ச்சி மூலம் இல்லை என்றாலும், ஐம்பது வருடத்துக்கும் முந்தைய புத்தகங்கள், பிரச்சாரம் சொல்வது தான் சரி என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. சமத்துவம் என்று பேசிவிட்டு இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கோஷம் போடுவது தான் கடுப்பை கிளப்புகிறது.
பி.கு: இதற்க்கு பிறகு வினவை என் பிளாக் லிஸ்டில் சேர்த்து விட்டு என் வேலையை பார்க்க போகும் எண்ணம் இருக்கிறது. எனவே நான் இங்கு திரும்பி வந்து பதில் தர முடியாமல் போகலாம். ஆனால் அனைவரயும் லேட்டஸ்ட் ஆராய்ச்சிகளையும், ஆய்வுகளையும் படிக்குமாறு மிக மிக வேண்டி கேட்டு கொள்கிறேன். ஏற்கனவே நம்மல ரொம்ப பிரிச்சு வெச்சு அழிச்சுட்டாங்க. அதை பிடித்து தொங்கிக்கொண்டு நம்மை நாமே அழித்து கொள்ள வேண்டாம். இதை நான் இந்துத்துவ, தமிழினவாத கொள்கை பேசும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் சமத்துவம் பேசுபவருக்கும் வேண்டுகோளாக கேட்கிறேன். சமத்துவம் என்பது அனைவரையும் ஒன்றாக நடத்துவது. உங்களுக்கு விருப்பமான விசயத்தில் மட்டும் சமத்துவம் பேசி விட்டு, பிடிகாததை அழிக்க முயன்றால் அது சமத்துவம் அல்ல. கயவாளித்தனம். அப்புறம் அவனுக்கும், உங்களுக்கும் வித்யாசம் இருக்காது. தப்பு செஞ்சத எல்லாம் அழிச்சா உலகத்துல எதுவும் மிஞ்சாது. எனக்கு பிடித்த பாடல் வரியுடன் இதை முடிக்கிறேன், யோசிக்கவும்.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
திரு. செந்துரு,
இந்த இணையத்தளத்திலுள்ளவர்களுக்கு படிக்கத் தெரியாது என் எண்ணத்தில் தான், நீங்கள் படித்துப் பார்க்காமலே கூகிளில் ‘Aryan Invasion Theory’ என்று தேடினால் வருவதையெல்லாம் இங்கே இணைத்து விட்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், இதற்கு முன்பு நீங்கள் யாரிடமுமோ அல்லது எந்த இணையத்தளத்திலோ இந்த விடயத்தை விவாதித்ததில்லை. அல்லது நீங்கள் தந்த இணைப்புக்களை படித்துப் பார்த்து, எந்தப் பக்கத்தில், உங்களின் வாதத்துக்கு, அதாவது ஆரியர் படையெடுப்பு அல்லது குடியேற்றம் பொய், என்பதற்கு வலுச் சேர்க்கும் கருத்துக்கள் உள்ளன என்பதைக் குறிப்பிட்டிருப்பீர்கள். நீங்களே Peer Review செய்யப்பட்ட ஆதாரங்கள் வேண்டும், வரலாற்றாசிரியர்களின் கருத்தாக இருக்க வேண்டும், அதுவும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும் என்றெல்லாம் வாய்ஜாலம் காட்டி விட்டு, இந்துத்துவாக்களின் வலைப்பதிவையும், Introduction to Hinduism போன்ற நூல்களை மட்டுமன்றி Royal Asiatic Society இல் (நூற்றாண்டுக்கு முன்பு) வெளிவந்த கட்டுரையையும் இணைத்து விட்டால், எல்லோரும் உங்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்ற நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது. இங்குள்ளவர்கள் எவருமே நீங்கள் நினைக்கிற மாதிரி இளிச்ச வாயர்கள் அல்ல. ஒரு ஆதாரத்தைக் கொடுத்தால், அதை அக்கு வேறு, ஆணிவேறாகப் பிரித்து, வாதாடும் விண்ணர்கள் எல்லாம் இங்கேயுள்ளனர். ஆனால் உங்களின் விடயத்தில் மட்டும், பிதற்றி விட்டுப் போகட்டுமென்று இருக்கிறார்கள் போலிருக்கிறது. 🙂
நீங்கள் தந்த இணைப்புகளில் உள்ள நூல்களில் ஆரியப் படையெடுப்பைப் பற்றி நடைபெறும் இருபக்க விவாதத்தையும் குறிப்பிடுகிறார்களே தவிர, உங்களின் வாதமாகிய ஆரியப்படையெடுப்பு அல்லது ஆரியக் குடியேற்றம் பொய் என்று தீர்க்கமாக தெரிவிக்கவில்லை. ( முதலாவது இணைப்பு இந்துத்துவா சார்புள்ளது அதை நான் தவிர்த்து விட்டேன், பார்க்கவேயில்லை.)
ஆரியப்படையெடுப்பு அல்லது ஆரியக் குடியேற்றம் பொய், ஆரியர்கள் எல்லாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் என்று உங்களைப் போன்றவர்களும், இந்துத்துவாக்களும் வாதாடிக் கொண்டு தானிருக்கிறார்களே தவிர அது தான் உண்மை, நீங்கள் சொல்வது தான் சரி என்று எந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக் கொள்ளவில்லை. விவாதம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் நீங்கள் என்னடாவென்றால் ஹரே கிருஸ்ணா இயக்கத்தின் Stephan Knapp மற்றும் ஹிப்பி சாமியார்கள், மேலைநாட்டு Vedic Scholars, இந்துமதத்தில் ஆன்மீகத்தைத் தேடுகிறவர்கள், மற்றும் இரண்டுபக்க வாதங்களையும் பற்றி எழுதிய சில மேலைநாட்டவர்களின் இந்துமதம் பற்றிய கட்டுரைகளையும் இணைத்து விட்டு, இங்கேயுள்ளவர்களின் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று கனவு காண்கிறீர்கள்.
1. முதலில் கேட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பழகுங்கள். நீங்கள் உண்மையில் ஆரியர்கள் வெளியிலிருந்து வரவேயில்லை, அவர்கள் மண்ணின் மைந்தர்கள் என்று வாதாடுகிறீர்களா அல்லது ஆரியப் படையெடுப்பு என்பதில், ‘படையெடுப்பு’ என்ற வார்த்தைப் பிரயோகம் தவறானது. அவர்கள் படையெடுத்து வரவில்லை, நாடோடிகளாக, கூட்டம், கூட்டமாக, இப்பொழுது வட இந்தியக் கூலிகள் தமிழ்நாட்டுக்கு வருவதைப் போல், ஆரியர்கள் ஆர்மீனியா, மத்திய ஆசியா, ஈரான் போன்ற நாடுகளிருந்து வந்தார்கள் என்று கூறுகிறீர்களா?
2. நீங்கள் Aryan Invasion நடக்கவில்லை ஆனால் Aryan Migration நடந்தது என்று ஒப்புக் கொள்கிறீர்களா. அல்லது ஆரியர்கள் இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் அவர்கள் வெளியிலிருந்து வரவேயில்லை என்கிறீர்களா?
3. ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்றால் சமஸ்கிருதம் எப்படி இந்தோ-ஆரிய மொழியாகியது. சமஸ்கிருதத்துக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் உள்ள தொடர்பை எப்படி விளக்கப் போகிறீர்கள்?
4. நாடோடிகளாக அல்லது வரட்சியால் இந்தியாவை நோக்கி நகர்ந்த மக்கள், அவர்களின் மொழியுடன், திராவிட மொழிச் சொற்களை இரவல் வாங்கித் தான் சமஸ்கிருதம் இந்தியாவில் உருவாகியது. அதனால் தான் ரிக் வேதத்திலேயே தமிழ் வேர்ச்சொற்கள் உள்ளன. சமஸ்கிருதத்திலுள்ள பல சொற்களின் வேர்கள், திராவிட மொழிகளில், குறிப்பாக தமிழில் உண்டு என்ற கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளையில் பல ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொற்களும் சமஸ்கிருதத்தில் உண்டு. ஆகவே ஆரம்பத்தில் படையெடுப்பாலோ, அல்லது நாடோடிகளாகவோ, வெளியிலிருந்து ஐரோப்பிய மொழிகளின் (ஆரிய மொழிகளின்) வேர்களைக் கொண்ட மொழிக் குழுவினர் வெளியிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டுமல்லவா?
5. சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழியாக இருப்பதை ஆதாரம் காட்டினால், ஒரு சில இந்துத்துவாக்களும், சமக்கிருதவாதிகளும் இந்தியாவிலிருந்து தான் ஆரியர்கள் வெளியேறி, ஐரோப்பாவுக்குச் சென்றார்கள் என உளறுவதை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
6. ஆரியர்கள் இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் என்றால், தம்மை ஆரியர்கள் என ஆதாரத்துடன் நிரூபிக்கும் ஈரானியர்கள் இந்தியாவிலிருந்து, ஈரானுக்குப் போனார்கள் என்று நீங்கள் வாதாடுவீர்களா? அப்படி யாராவது ஈரானியர்களிடம் கூறினால் ஓட்ட நறுக்கி விடுவார்கள், கவனம். 🙂
7.
I am Darius, the great king, the king of kings
The king of many countries and many people
The king of this expansive land,
The son of Wishtaspa of Achaemenid,
Persian, the son of a Persian,
‘ARYAN’, from the Aryan race
“From the Darius the Great’s Inscription in Naqshe-e-Rostam” – See more at: http://www.iranchamber.com/people/articles/aryan_people_origins.php#sthash.GgbKln1P.dpuf
8. முதலில் ஈரானியர்களிடம் வாதாடி, அவர்கள் ஆரியர்கள் அல்ல, ஆரியர்கள் இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள், அவர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்பதை நிரூபித்து விட்டு வாருங்கள், பின்பு இதைப் பற்றிப் பேசுவோம்.
9. நீங்கள் மேற்கோள் காட்டிய சாமியார்களையும், எழுத்தாளர்களையும் விட BBC இன் மைக்கல் வூட்ஸ்(Michael Woods), எல்லோராலும் அறியப்பட்ட, தகைமை பெற்ற வரலாற்றாசிரியர் (Historian) அவர் சமஸ்கிருதம் இந்தியாவின் மொழியல்ல, அது வெளியிலிருந்து வந்தது என்று மட்டுமல்ல, ஆரியர்களின் படையெடுப்பு அல்லது அவர்களின் இந்தியக் குடியேற்றம் நடந்த பாதையில், அவர்கள் இந்தியாவுக்கு வந்த வழியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஒரு ரஷ்ய வரலாற்று ஆராய்ச்சியாளரைச் சந்தித்து உரையாடுவதை, கீழேயுள்ள இணைப்பிலுள்ள காணொளியில் காணலாம். அதையும் பார்த்து விட்டுப் பதிலெழுதுங்கள்.
சமஸ்கிருதம் இந்திய மொழியுமல்ல, இந்துக்களின் மொழியுமல்ல??
http://viyaasan.blogspot.ca/2014/08/blog-post_14.html
அராய்ச்சியாளர் கட்டுரை (புப்ளிஷ் செய்யப்பட்ட) லிங்க் தந்தால் subscription கட்ட முடியாது, படிக்கும் படியாக article கேட்டீர்கள். சரி என்று அதை எழுதிய article தந்தால் ஹிந்துத்வா வெப்சைட் அது படிக்க மாட்டேன் என்கிறீர்கள். சரி. ஒத்து கொள்கிறேன். ஹிந்துத்வா, இல்லை நீங்கள் கூறியது போல கஞ்சா அடிக்க வந்த சாமியார் அல்லாத அல்லாத ஒரு வெப்சைட் அல்லது பதிப்பு இந்த விசயத்தை பேசி இருந்தால் (கம்முனிச தளமாக இருந்து விட்டால் இன்னும் சிறப்பு) தாங்கள் லிங்க் தரவும். நான் தேடி அலுத்து விட்டேன். எனக்கு என் கல்லூரி மூலம் ஆராய்ச்சி கட்டுரைகளின் susbcription தரப்பட்டு உள்ளது. எனவே எனக்கு அவற்றை படிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.
இதில் இந்துத்வா பதிப்பு பற்றிய உங்கள் விமர்சனத்தை நான் ஏற்று கொள்கிறேன். நீங்கள் கூறியது போல subscription இல்லாத காரணத்தால் இலவச article என எனக்கு உடனே இவை தான் கிடைத்தது. இன்னும் கொஞ்சம் நடுநிலைமை உள்ள இடங்களை தேடி இருக்கலாம் தான். ஆனா அவசரத்தில் செய்த தவறு. இனிமேல் இது நேராமல் பார்த்து கொள்கிறேன். ஆனால் Introduction to Hinduism புத்தகத்துடன் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று புரியவில்லை. Oxford பல்கலைகழகத்தின் பேராசிரியர் Gavin Flood எழுதிய hindology மற்றும் indiology பற்றிய படிப்புக்கு பரிந்துரைகபடும் புத்தங்களில் ஒன்று அது. நான் கொடுத்த லிங்க் கொஞ்சம் பழைய பதிப்புதான். ஆனா undergrad படிக்கும் மாணவருக்கு கல்லூரியில் பரிந்துரைகபடும் புத்தகத்தில் ஒன்றான அதுவும் ஹிந்துத்வா பாதிப்பு கொண்டது என்பதால் அதை உதறுகீர்களா? இல்லை அது ரொம்ப basic புத்தகம் என்பதாலா? basic புத்தகமாக இருந்தாலும் நம் கேள்விக்கு விடை கிடைக்கிறதா என்பது தானே நமக்கு தேவை! அடுத்து Royal Asiatic Society. society பழசுதான், ஆனா நான் கொடுத்தது அஸ்கோ போர்போலா எடிட் செய்த கட்டுரை 😀 முதல் சாப்டரின் தலைப்பு The Face Urns of Gandhâra and the Nâsatya Cult, ASKO PARPOLA. நீங்கள் உதாசீனம் செய்தது பார்போலா அவர்களின் பதிப்பை. நான் கூறியது போல சரி பார்த்து தர எனக்கு நேரம் இல்லாததால் ஒரு சில தவறான லிங்காக இருக்கலாம். அதை சுட்டிகாட்டினால் மன்னிப்பு கோரி திருத்திக்கொள்ள முயல்வேன். அதனால் என்னமோ நான் முழுவதுமாக தோன்றியதை எல்லாம் உளறவில்லை. அதோடு,உங்கள் கேள்விகளுக்கு பதிலும் தந்து விடுகிறேன்:
1, 2. ஆரிய படையெடுப்பு என்பதில் உள்ள படையெடுப்பு என்னும் சொல்லைத்தான் நான் இல்லை என்று வாதிடுகிறேன். அரியர் மண்ணின் மைந்தர் என்று கூறும் தியரியில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்போதைய சான்றுகள் எல்லாம் கூறுவது போல ஆரிய migration நடந்து என்பதை நான் நம்புகிறேன். படையெடுப்பு எல்லாம் இல்லை என்பது தான் என் வாதம்.
3. Proto Indo-Iranian மொழிபேசிய ஆரியர் இந்தியாவுக்குள் வந்தனர். ஏற்கனவே இருந்த சிந்துசமவெளி மக்கள் மற்றும் proto-dravidian மொழி பேசிய மக்களுடன் நடந்த கலப்பில் வேத சமஸ்க்ருதம் உண்டானது. இதே கலப்பின் காரணமாக proto-dravidian மொழியிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இதை பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி தன் The Dravidian Languages என்னும் நூலில் கூறுகிறார். அதை நானும் ஏற்கிறேன். சமஸ்க்ரிததின் மூலம் indo-iranian. ஆனால் அதன் மாற்றத்துக்கும், பிற்கால வடிவுக்கும் காரணம் proto-dravidian மொழியை சந்தித்தது தான். இது மறுக்க முடியாத உண்மை. இதை தான் நான் கொடுக்கல் வாங்கல் மூலமாக இரு மொழியும் வளர்ந்தது என்றேன்.
இந்த இரு பதிலும் உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் விடை அளித்து விட்டது என்று நினைக்கிறன். ஆரியர் வெளியில் இருந்து வந்தனர் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் திராவிட மொழிகள் எவ்வளவு இந்திய மொழிகளோ அதே போல தான் சம்ஸ்க்ருதமும். சம்ஸ்க்ருதம் உருவாக மிக முக்கிய காரணம் அதற்க்கு proto-dravidian மொழிகளுடன் ஏற்பட்ட பறிமாற்றம் தான். இதே தான் proto-dravidian மொழிகளின் நிலைமையும். உலகில் பல மொழிகளுடன் proto-iranian உறவாடியது. ஆனால் இந்தியாவில் மட்டுமே சமஸ்க்ருதம் உருவானது. அதே போல அது வாங்க மட்டும் இல்லை. கொடுக்கவும் செய்தது. proto-aryan மற்றும் proto-dravidian ஆகிய இரு மொழிகள் உறவாடலில் தான் தமிழும், சமஸ்க்ருதமும் தோன்றி வளர்ந்தன (The Smile of Murugam by Kamil Zvelebil என்னும் புத்தகத்தில் பக்கம் 11. லிங்க் இங்கே: https://archive.org/stream/TheSmileOfMuruganOnTamilLiteratureOfSouthIndia/01.theSmileOfMurugan#page/n1/mode/2up).
proto-iranian அல்லது proto-aryan இந்திய மொழி அல்ல. ஆனால் சமஸ்க்ருதம் உருவாக காரணம் இந்தியா என்பதை மறுக்க முடியாது. இதே போல தான் இந்து மதமும். இந்திய மொழி, கலாச்சாரத்துடன் ஆரியரின் கலாச்சாரம் உறவாடியதால் தான் வேத கலாச்சாரமும், சமஸ்க்ருதம் ஆகியவை உருவாகின. இந்த உறவாடலில் திராவிட மொழிகுடும்பமும், இங்கு முன்பே இருந்த கலாச்சாரமும் மாற்றம் அடைந்தன. இந்த உறவாடலின் விளைவு தான் இந்து மதம், சமஸ்க்ருதம் போன்றவை. இந்து மதத்தின் இந்தியாவில் உருவானதன் காரணம் இதுதாம். இந்தியாவில் இருந்த விசேஷ சூழ்நிலை தான் இந்த மாற்றங்கள் அனைத்துக்கும் காரணம். உலகில் proto-iranian மக்கள் சென்ற வேறு எந்த இடத்திலும் இந்து மதம் இல்லாமல் இந்தியாவில் உருவாக காரணம் இது தான்.
ஆரியரும் இந்தியாவின் வரலாற்றில், கலாச்சாரத்தில் ஒரு நீக்க முடியாத பகுதி என்னும் என் கருத்தின் அடிப்படை இதுதான். இங்கு சிலர் கூறுவது போல இந்து மதம் இப்போது இருப்பதை போல வெளியில் இருந்து இறக்குமதி ஆகவில்லை. இங்கு இருந்த கலாச்சாரத்தை அது அழிக்கவும் இல்லை. இரண்டு கலாச்சாரம் சந்தித்த காரணத்தால், இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான ஒரு புதுமையான கலாச்சாரம் உருவானது. இதில் சந்தித்த இரு கலாச்சாரமும் சில விஷயங்களை பெற்றன, சிலவற்றை இழந்தன. ஒரு எடுத்துக்காட்டு: தமிழனின் செய்யோனும், வேதத்தின் அக்னிபுகனும் கலந்து இன்றைய முருகன் உருவானான். இதில் அக்னிபுகன் கேவலபடுதப்பட்டான் என்று சொல்வது எவ்வளவு சிரிப்புக்கு உடையதோ அவ்வளவு சிரிப்புக்கு உடைய விசயம் தான் செய்யோன் கேவலபடுதப்பட்டான் என்று சொல்வது. இரு கலாச்சாரத்தில் ஒன்று மட்டும் தன் தனிதன்மையை இழந்து இருந்தால் இந்த கூற்றை நாம் ஆதரிக்கலாம். ரெண்டுக்கும் அதே நிலைதான் என்னும் போது நாம் என்ன செய்ய? இதையும் மீறி வேத கலாச்சாரத்தின் பாதிப்பு அனைத்தும் வெளியே சென்றாக வேண்டும் என்றால் அனைத்தையும் எறிந்து விட்டு proto-dravidian மொழிக்கே போக வேண்டியது தான்.
//ஆரியர் மண்ணின் மைந்தர் என்று கூறும் தியரியில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்போதைய சான்றுகள் எல்லாம் கூறுவது போல ஆரிய migration நடந்து என்பதை நான் நம்புகிறேன். படையெடுப்பு எல்லாம் இல்லை என்பது தான் என் வாதம். ஆரியர் வெளியில் இருந்து வந்தனர் என்பதை நான் மறுக்கவில்லை.////
திரு.சந்துரு,
பூ….இவ்வளவு தானா? இதற்குத் தானா இத்தனை ஆலாபனை எல்லாம். நானும் என்னவோ, இவர் பெரீய ஆளா இருப்பார் போலிருக்கிறது, ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவுக்கு வரவில்லை, ஆரியக் குடியேற்றம்ம் என்பது பொய், ஆரியர்கள் மண்ணின் மைந்தர்கள் என்றெல்லாம் நிரூபிக்கும் பல துருப்புச் சீட்டுகளைத் தனது சட்டைப்பைக்குள் ஒழித்து வைத்திருக்கிறார், அதனால் தான் இங்கு அவர் ஒரு பெரிய தாக்குதலை ஆரம்பிக்கும் முன்பு ஏதோ முற்றுகையிடுகிறார் போலிருக்கிறது என்று என்று நினைத்துக்கொண்டு, நீங்கள் தந்த இழவுகளை அதாவது இணைப்புகளை எல்லாம், ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் மினக்கெட்டு வாசித்தேன். ஆனால் நீங்கள் என்னாடாவென்றால் ஆரியர்கள், அதாவது இக்காலப் பார்ப்பனர்கள் தமது முன்னோர்கள் என்று பீற்றிக் கொள்ளும் ஆரியர்கள், இந்தியாவின் மீது படையெடுத்து வரவில்லை, பஞ்சம் பிழைக்க வந்தார்கள் என்று, உள்ள மரியாதையையும் கெடுக்கிற மாதிரிப் பண்ணி விட்டீர்கள். இப்படி ஒரு வஞ்சப் புகழ்ச்சியை செய்யுமளவுக்கு, ஆரியர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? 🙂
/// Introduction to Hinduism புத்தகத்துடன் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று புரியவில்லை. Oxford பல்கலைகழகத்தின் பேராசிரியர் Gavin Flood எழுதிய hindology .///
நாங்கள் இங்கே இந்துசமயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கவில்லை. மாட்டைப்பற்றி எழுதக் கேட்டால், தென்னை மரத்தைப் பற்றி எழுதி விட்டு, தென்னை மரத்தில் தான் மாட்டைக் கட்டி விடுவார்கள் என்று எழுதிய மூன்றாம் வகுப்பு மாணவன் செய்தது போன்றது தான், நீங்கள் Aryan Invasion ஐப் பற்றி ஆதாரம் காட்ட Introduction to Hinduism புத்தகத்தைத் தந்ததும். அந்தப் புத்தகத்தில் Page 33-35 இல் ஆரியப் படையெடுப்புக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்த்தோ கருத்துத் தெரிவிக்கவில்லை, பதிலாக இருபக்க வாதங்களையும் பற்றித் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் எதற்காக, அந்த நூலை ஆதாரமாகத் தந்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
//Proto Indo-Iranian மொழிபேசிய ஆரியர் இந்தியாவுக்குள் வந்தனர். ஏற்கனவே இருந்த சிந்துசமவெளி மக்கள் மற்றும் proto-dravidian மொழி பேசிய மக்களுடன் நடந்த கலப்பில் வேத சமஸ்க்ருதம் உண்டானது. சம்ஸ்க்ருதம் உருவாக மிக முக்கிய காரணம் அதற்கு proto-dravidian மொழிகளுடன் ஏற்பட்ட பறிமாற்றம் தான். ///
ஆகவே சமஸ்கிருதம் தமிழுக்கும் தாய் என்று கூறும் சில சமக்கிருதவாதிகள் சரியான மறை கழன்ற லூசுகள் என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். அதாவது, சமஸ்கிருதம் திராவிட மொழிகளில் (குறிப்பாக தமிழில்) இருந்து இரவல் வாங்கிய சொற்களின் மூலம் இந்தியாவில் சமைக்கப்பட்ட மொழி என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
//ஆரியர் வெளியில் இருந்து வந்தனர் என்பதை நான் மறுக்கவில்லை. சமஸ்க்ரிததின் மூலம் indo-iranian. ஆனால் அதன் மாற்றத்துக்கும், பிற்கால வடிவுக்கும் காரணம் proto-dravidian மொழியை சந்தித்தது தான்///
என்னைப் பொறுத்த வரையில் இந்த விவாதம் முற்றுப் பெற்று விட்டது, விரும்பினால், நீங்கள் தொடர்ந்து தனி ஆவர்த்தனம் பண்ணலாம். 🙂
//இப்படி ஒரு வஞ்சப் புகழ்ச்சியை செய்யுமளவுக்கு, ஆரியர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?//
உண்மைய தானே சொல்றேன். இதில் வஞ்ச புகழ்ச்சி எல்லாம் இல்லை. உண்மை எதுவோ அது தான் பேசுகிறேன் 🙂 நான் பேசியது எல்லாம் ஒரு பக்கத்தை (தமிழ் அல்லது சமஸ்க்ருதம்) இன்னும் ஒன்றைவிட மேல் என கூறுவது தவறு என்று சுட்டி காட்ட மட்டுமே.
introduction to hinduism மூலமாக இரு விவாதமும் தங்களுக்கு தெரியவந்தது அல்லவா? அது தான் நோக்கம். ஒரு பக்கத்தை மட்டும் பேசும் சந்தர்பவாதம் இல்லாமல் இரு பக்கமும் தங்களுக்கும், மற்றவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக அந்த புத்தகம். நமக்கு தெரிந்தது எல்லாம் ஆரிய படையெடுப்பு மட்டும் தானே 😀
//அதாவது, சமஸ்கிருதம் திராவிட மொழிகளில் (குறிப்பாக தமிழில்) இருந்து இரவல் வாங்கிய சொற்களின் மூலம் இந்தியாவில் சமைக்கப்பட்ட மொழி என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.//
சமஸ்க்ருதம் இந்தியாவில் உருவான மொழி என்பது உண்மைதான் (சமைக்கப்பட்ட என்ற வார்த்தையை நான் உபயோகிக்க தயங்குகிறேன். சமைக்கப்பட்ட என்பது சிறிது தவறான வார்த்தை ப்ரோயோகம். உருவான என்பது அதை விட பொருத்தம் என்பது என் கருத்து). எல்லா மொழிகளும் கடன் வாங்கி வளருவது போல, proto-aryan மொழியில் இருந்து சமஸ்க்ருதம் உருவானது.
//ஆகவே சமஸ்கிருதம் தமிழுக்கும் தாய் என்று கூறும் சில சமக்கிருதவாதிகள் சரியான மறை கழன்ற லூசுகள் என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். //
அவர்களை மட்டும் மறை கழன்ற லூசுகள் என்று ஒப்பு கொள்ளவில்லை. தமிழ் சமஸ்க்ருததுக்கும் தாய் என்று கூறுபவனையும் அதே மறை கழன்ற லூசுகளுடன் சேர்த்து விடுவேன். proto-aryan மற்றும் proto-dravidian மொழிகளின், கலாச்சாரத்தின் சந்திப்பால் இரண்டும் மாற்றம் அடைந்தது. தமிழ் எவ்வளவு சமஸ்க்ருததுக்கு தாயோ அதே அளவு சமஸ்க்ருதமும் தமிழின் தாய். இரண்டு கலாச்சாரமும் ஒன்றில் இருந்து மற்றொன்று வாங்கி, கொடுத்து ஒன்றாக வளர்ந்தன. இதை விட்டு விட்டு ஒன்றை விட மற்றது உயர்ந்தது, ஒன்று மற்றொன்றை சீரழித்துவிட்டது என்பது எல்லாம் சுத்த புலம்பல். இதை புரியவைக்க தான் இத்தனை முயற்சியும்.
பி.கு: ஆர்வ மிகுதியால் ஒரு சின்ன கேள்வி. சமஸ்க்ருதத்தை, வேதம், அதற்க்கு பின்னால் வந்த இந்து மதம் ஆகியவற்றை நீங்கள் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் பகுதி என்று ஒத்து கொள்கீர்களா? (அது நல்லதா, கெட்டதா என்று எல்லாம் நான் கேட்கவில்லை. அது ஒரு பகுதியா என்பது மட்டுமே கேள்வி).
ஒரு விசயத்தை சொல்ல மறந்துட்டேன். எல்ஸ்ட் அவர்கள் கொஞ்சம் ஹிந்துத்வா வாதி தான். ஆனால் அவர் Out of india தியரியின் முக்கியமான பேச்சாளர்களில் ஒருவர். அவருடைய இந்துத்வா உளறலை தவிர்த்து விட்டு அவர் தரும் ஆராய்ச்சி முடிவை படிக்கலாம். நான் ஒத்து கொள்ளாத தியரி என்றாலும் சில arguments இல்லாமல் போகவில்லை.
மிக நீண்ட ஆனால் மிகவும் பொருள் பொதிந்த விளக்கத்துக்கு மிக்க நன்றி வியாசன் [REGARDING FEDBACKS 111,112]
ஜால்ரா அடிக்குமுன் படித்துப் பார்த்து புரிந்து தெளிந்து அடிக்கலாமே..
”இந்திய கணிதப்பேராசிரியர் கோசாம்பியின் கட்டுரையைக் கூட, ஆரியன் படையெடுப்பு பொய் என்று நிரூபிக்க ஆதாரமாகக் காட்டுவது முட்டாள்தனம் என்பது தான் எனது கருத்தாகும். கோசாம்பி இந்தியாவின் வரலாற்றைக் கூட மார்க்சியப் பார்வையுடன் எழுதினாராம். வரலாற்றுப் பாடத்துக்கே தன்னுடைய Marxist Twist ஐக் கொடுத்த ஒருவரின் கருத்தை, இவ்வளவு முக்கியமான, விவாதிக்கப்படும் விடயத்துக்கு ஆதராமாகக் கொள்ளலாம் என நான் நினைக்கவில்லை.”
என்று வியாசர் கூறுவதில் அப்படி என்ன பொருள் பொதிந்திருக்கிறதோ..?!
////ஆரியர் மண்ணின் மைந்தர் என்று கூறும் தியரியில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்போதைய சான்றுகள் எல்லாம் கூறுவது போல ஆரிய migration நடந்து என்பதை நான் நம்புகிறேன். படையெடுப்பு எல்லாம் இல்லை என்பது தான் என் வாதம். ஆரியர் வெளியில் இருந்து வந்தனர் என்பதை நான் மறுக்கவில்லை.//////
Aryan invasion thru war is not Aryan theroist tell. They know what it means. Aryan mix in to India happened in all forms, mutual consent, with occupation, Slavery, war, trade, cultural – everything in a prolonged period of thousands of year in consequtive waves
அம்பி,
வியாசனாவது தன் கருத்துக்களை உள்நோக்கம் இன்றி [சரியோ ,தவறோ ] வெளியிடுகின்றார். ஆனால் அம்பி நயவஞ்சகமாக தன் கருத்துகளை வெளியிடாமல் மற்றவரை பார்த்து கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டு தருமியின் நிலையில் அல்லவா இவ்விவாதத்திலும் ,எவ்விவாதத்திலும் ஈடுபடுகின்றார் ! பார்பான் மீதுதூசு விழக்கூடாது என்ற வெகு மலிவான மனநிலையில் அல்லவா ஈடுபடுகின்றார் ! வியாசன்தவறான கருத்துக்களுடன் விவாதிக்கும் போது அதனை வன்மையாக சுட்டிக்காட்டுவதும் , சரியான கருத்துக்களுடன் விவாதிக்கும் போது அதனை மனபூர்வமாக பாராட்டுவதும் தான் சரியான விவாத முறைமை என்பது பார்ப்பனீயம் என்ற ஒற்றை காலில் நிற்கும் அம்பிக்கு தெரிய நியாயம் இல்லை !
//ஒவ்வொரு சாதிக்கும் உங்கள் கைவசம் இப்படி ஒரு முதுமொழி இருக்கும் போலும்.. வெளிப்படையாக வசைபாடும் தென்றலை நானும் எதிர்த்து விவாதிப்பதால் தங்கள் தரப்பில் நானும் இருப்பதாக உங்களை யார் நம்பச்சொன்னது..? எந்த நேரமும் முதுகில் கத்தி வைத்து/ காலை வாரக்கூடிய தங்களுக்கு அவ்வப்போது ஜால்ரா அடிக்க நான் என்ன ஒரு மறை கழண்ட ’பேராசிரியரா’..?! //
சந்துருவின் பொய்மைகளும் உளறல்களும் :
[1] “சிந்துசமவெளி முருகுக்கும் அறுமீனுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. முதலில் அது மீனே இல்லை” என்று தன் மனம்போன போக்கில் உளரும் சந்துருவிற்கு தொல்லியல் ஆய்வாளர்கள் ஐராவதம் மகாதேவன்,அஸ்கோ பர்போலா ஆகியவர்கள் அறுமீனுக்கும் முருகுக்கும் உள்ள தொடர்புகளை எடுத்து வைத்த விடயங்களை ஐராவதம் மகாதேவன் அவர்களின் பேட்டி மூலமாக காண்போம்.
Parpola’s Work:
http://www.harappa.com/script/mahadevantext.html#8
[2] அடுத்ததாக “கிரகாம் ஹான்காக் எழுதிய எதுவும் உண்மை என்று நிரூபிக்கபடவில்லை” என்று தன் மனம்போன போக்கில் உளரும் சந்துருவிற்கு என் பதில் என்னவென்றால் :
கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இதன் மூலம் பல தடையங்கள் கிடைத்தாலும் அவாய்வுகளை தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது. இந்நிலையில் கிரஹாம் ஹான்காக் கடந்த 2000ஆம் ஆண்டு “சானல் 4” ,”லர்னிங் சானல்” ஆகிய இரு தொலைக்காட்சி நிறுவனங்களின் நிதிஉதவி மூலம் மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதன் மூலம் அவர் கண்ட தடையங்கள் பற்றி ஏதும் பேசாமல் சந்துரு ஓடுவது ஏன் ? மேலும் அவருக்கு முன்பே 1990ஆம் ஆண்டு பூம்புகார் நகர கடற்பகுதியில் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நடத்தியதன் மூலம் பல தடையங்கள் கிடைத்ததை பற்றி பேசாமல் சந்துரு ஓடுவது ஏன் ?
தொடரும் ….
ஏன் சார் இப்படி எதையும் முழுசா படிக்காம எல்லார் நேரத்தையும் வீணடித்து, என்னையும் கடுப்பு ஏற்றுகீர்கள்?
சிந்துசமவெளியில் மீன், அறுமீன் இருக்கிறது என்று நான் மறுக்கவில்லையே! நீங்கள் கூறியது போல அது முருகை குறிப்பிடுகிறது என்பது தவறு என்று சுட்டிக்காட்டுகிறேன். மீன் சின்னம் விண்மீனை குறிக்கிறது என்று கூறுகிறார் மகாதேவன். அவளோதான். அது முருகு என்று அவர் குறிப்பிட வில்லை. வேறு யாரும் அப்படி கூறவும் இல்லை. அவர் பதிலில் தேவையான வரிகள் மட்டும் இங்கே:
I still think that the fish-meen-star homophony is a good one, although I readily admit that it has not been proved. That could only come if the word “meen” was written elsewhere syllabically or if you have a bilingual.
There are some corroborative details. The numbers three, six and seven before the fish correspond to the well known asterisms, three-fish in the warrior constellation, six-fish for Pleades, seven-fish the Great Bear and so on
அவர் முழு பதிலிலும் மீன் என்பது முருகு என்பதன் சின்னம் என்று அவர் கூறவில்லை (நான் கொடுத்த முருகு பற்றி அவர் பேசும் பதிவிலும் அவர் மீன் சின்னத்தை முருகுடன் சேர்க்க வில்லை). சிந்து சமவெளியில் முருகு என்று எடுதுகொள்ளபடும் சின்னம் முற்றிலும் வேறானது.அது அவரின் அந்த பேட்டியை தாங்கள் முழுவதுமாக படித்து இருந்தாலே தங்களுக்கு தெரிந்து இருக்கும். அதே பேட்டியில் பர்போலா அவர்களின் ஆராய்ச்சியை பற்றி பேசும் போது இவ்வாறு கூறுகிறார் மகாதேவன்:
Q: Lets talk about the bangles decipherment by Parpola.
A: Parpola has pointed out that the bangles are inscribed, and among the signs the sign of the interlocking circle or ovals are very common and they occur with greater frequency on these bangles. So I am fairly convinced that perhaps the interlocking circles do pictorially represent a pair of bangles. It is very likely. Now very large quantities of stoneware bangles have been discovered from Mohenjo-daro by [Michael Jansen’s] German team. But when you try to give a phonetic value for it, it becomes very difficult. Parpola has chosen a word which means twisted wire bangle, or twisted wire amulet or a twisted wire earring or nose ring, where the operative word is twisting, the root there is murugu, which means in old Dravidian “to twist.” But the stoneware, the polished vitrified stoneware bangles have no twists on them, so that is very unlikely. There are other words for bangles but he doesn’t choose them because they are not homophonous with the word for Murukan that he is looking for. I personally believe that if the Indus Valley people were Dravidians, one of their gods was called Murukan – it is very likely, but he is hiding in still some other sign.
முருகு-முறுக்கு என்னும் சம்பந்தத்தில் தான் சிந்து சமவெளியில் முருகன் நுழைகிறானே தவிர அறுமீனால் இல்லை. இப்போது நான் கூறியதை முழுதாக quote செய்கிறேன்:
//சிந்துசமவெளி முருகுக்கும் அறுமீனுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. முதலில் அது மீனே இல்லை! இரு வளையங்கள் ஒன்று இணைந்தது போல இருக்கும்//
உங்களுக்கு முழுதாக படிக்க நேரம் இல்லை என்றால் அதே வெப்சைட்டில் இருக்கும் உத்தேசமான சிந்துசமவெளி மொழி சின்னம்-அதன் வார்த்தைகள் என்று மகாதேவன், போலோ கூறும் ஒரு dictionary இங்கு இருக்கிறது:
http://www.harappa.com/script/diction.html
அறுமீன்-விண்மீன்-கடவுள் என்ற விளக்கத்தையும், வளையல்-முறுக்கு-முருகு என்ற விளக்கமும் அங்கே உள்ளது.
இதையும், இதன் பின்னர் சொன்ன வரிகளையும் கொஞ்சம் தெளிவாக சொல்லிருக்கலாம். ஆனா நான் என்ன சொல்லுகிறேன் என்பது என் முழு பதிலையும், நான் கொடுத்த லிங்கில் இருக்கும் தகவலையும் படித்தாலே புரிந்து விடும். இதை செய்யாமல் அரைகுறையாக படித்து விட்டு வந்து உடனே சந்துருவின் பொய் மற்றும் உளறல்கள் என்று ஆரம்பிப்பீர்கள். இதை சுட்டி காட்டி, முதலில் முழுமையாக படித்து விட்டு வந்து விவாதிக்கவும் என்று சொன்னால் ஏற்க மாட்டீர்கள். நீங்க முழுசா படிக்காம விவாதிப்பதை நிறுத்தினாலே இங்க பாதி பிரச்சனை இல்லை.
//அடுத்ததாக “கிரகாம் ஹான்காக் எழுதிய எதுவும் உண்மை என்று நிரூபிக்கபடவில்லை” என்று தன் மனம்போன போக்கில் உளரும் சந்துருவிற்கு//
கிரகாம் ஹான்காக்கின் புத்தகம், அல்லது டாகுமெண்டரி பார்த்து இருந்தால் நான் ஏன் அவர் கூறுவது உண்மை இல்லை என்று சொல்கிறேன் என்று புரியும். வழக்கமாக ஆராய்ச்சி செய்யும் போது கிடைத்த ஆதாரத்தை கொண்டு என்ன நடந்தது என்று தியரி வரும். பிறகு புது சான்றுகள் கிடைக்கும்போது அந்த தியரி modify அல்லது முழுவதுமாக reject செய்யப்பட்டு வேறு தியரி வைக்கப்படும். இருக்கும் எல்லா ஆதாரத்தையும் (வேறு எந்த supernatural அல்லது myth துணை இல்லாமல்) செவ்வனே விளக்கும் விளக்கம் ஏற்றுகொள்ளபடும். கிரகாம் ஹான்காக் அவர்களின் approach முற்றிலும் மாறுபட்டது. ஏலியன்கள் பூமிக்கு வந்து, நாகரீகத்தை நிறுவியதாகவும், பின்னர் அந்த நாகரீகம் ice age முடிவில் பனி உருகி உடனே கடல்மட்டம் உடனடியாக உயர்ந்ததால் அந்த நாகரிகம் அழிந்தது என்னும் தியரியை அடிப்படையாக கொண்டு அதற்க்கு சான்று தேடி வருபவர். அவரை பொறுத்தவரை அவர் தியரி சரி. அதற்க்கு ஒத்துவராத ஆதாரம் தவறு. இதை தான் நீங்கள் ஏன் பேசவில்லை என்று கேட்கீர்கள். நான் கூறுவது போய் என்று நினைத்தால் அவரின் டாகுமெண்டரி இங்கு இருக்கிறது. காணவும்.
https://www.youtube.com/watch?v=wPWQ-Ax0o84
கான்ஸ்பிரசி தியரி என்பது இது தான். ஆதாரம் இல்லாமல் இப்படி நடந்து இருக்கலாம் என்று கூறுபவரை அறிவியல் தவறு என்று நிரூபிக்கும் போது, நான் மனம் போன போக்கில் உளறுகிறேன் என்று கூறுவது உச்ச பட்ச காமெடி.
போனது போகட்டும். அவர் கண்டுபிடித்த ஆதாரம் எவ்வளவு உண்மை, அவர் கூற்று எவ்வளவு உண்மை என பார்ப்போமா? தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி கழகம் (National Institute of Oceanography) தளத்தில் 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Shoreline changes along the Poompuhar Tranquebar region எனும் ஆராய்ச்சி கட்டுரையின் முடிவில் புயல் அல்லது சுனாமி இல்லாத பட்சத்தில் கடந்த 300 ஆண்டுகளில் பூம்புகார் கடற்கரை 300 மீட்டர்கள் உள்ளேவந்து இருப்பதாக கூறி உள்ளனர். அந்த ஆராய்ச்சி கட்டுரை இங்கே:
http://drs.nio.org/drs/bitstream/2264/807/2/7_Indian_Conf_Mar_Archaeol_I.O_Countries_2005_100.pdf
கிரகாம் ஹான்காக் கொஞ்சம் வித்யாசம். ஆராய்ச்சி எல்லாம் இல்லை. computer modelling மூலம் கடல் மட்டம் உயரும் போது எந்த வருடத்தில் எந்த அளவு என்று கணகிட்டார். அவர் கணக்கு படி 23 மீட்டர் = பத்தாயிரம் வருடம் என்ற கணக்கை அவர் முன்வைத்தார். இதில் சில பிழைகள் உள்ளன. அவை:
1. சுனாமி, புயல் போன்றவற்றால் கடல் பொங்கி கடற்கரை மாறுவதை அவர் கணக்கில் கொள்ளவில்லை. பூம்புகார் கடல் பொங்கி வந்ததால் அழிந்தது என்பது நம் இல்லகியம் கூறுவது. அது இங்கே அடிபட்டுபோகிறது. ஆனால் ஆய்வு முடிவில் இது சாத்தியமே என்று ஆழ்கடல் ஆய்வு கழகம் கூறுகிறது. அதாவது ஆழ்கடல் ஆராய்ச்சி கழகம் ஆராய்ச்சி செய்து முடிவு செய்ததற்குக்கும் நம் இலக்கியத்துக்கும் ஒற்றுமை இருக்கிறது. ஆனா ஹான்காக் கூற்று படி சுனாமி எல்லாம் இல்லை.
2. அவர் குறிப்பிட்டு உள்ள அந்த தடயங்களும் கடற்கரயில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. பத்து அல்ல. வருடத்துக்கு ஒரு மீட்டர் என்ற கணக்கின்படி அது அதிகப்படி 5000 வருடம் தான். அதுவும் இந்த வருடத்துக்கு ஒரு மீட்டர் என்னும் கணக்கு கடந்த 300 வருட கடலின் நகர்வை கொண்டு கணக்கிடப்பட்டது. ஒரு வேலை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அது இதை விட அதிகமாக இருந்து இருக்கலாம். அந்த சாத்தியம் இல்லாமல் இல்லை. அத்துடன் கடல் கொண்டுவிட்டது என்பதையும் சேர்த்து பார்த்தால் இப்போதைய சங்க காலம் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) என்பது சாத்தியமாகவே இருக்கிறது. அங்கு இருக்கும் சில தடயங்கள் (ring wells) அறிக்கமேட்டிலும், சின்னவனகரியிலும் கிடைத்து இருப்பதை பார்க்கும் போது, மிஞ்சி போனால் சங்க காலம் தான்(கி.மு.மூன்றாம் நூற்றாண்டு) அதன் காலமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த ஆராய்ச்சி கட்டுரை இங்கே:
http://drs.nio.org/drs/bitstream/2264/807/2/7_Indian_Conf_Mar_Archaeol_I.O_Countries_2005_100.pdf
3. ஹான்காக் அவர்கள் ரேடியோ கார்பன் முறையில் டேடிங் செய்ய பட்டு கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதை அது கடலுக்கு அடியில் 23 மீட்டர் ஆழத்தில் இருபதால் அதற்க்கு முந்தையது என்கிறார் (இங்கு கவனிக்க வேண்டிய விசயம் இது ஆழம். ஆழ்கடல் ஆராய்ச்சி கழகம் கடற்கரை வருடத்துக்கு ஒரு மீட்டர் உள்நோக்கி நகர்கிறது என்று தங்கள் ஆய்வில் கூறி உள்ளனர். அது கடற்கரை மணல், தாது ஆகியவற்றை கொண்டு இதை கணகிட்டது. இது அறிவியல் முறை. கிரகாம் ஹான்காக் அவர்கள் கடல் ஆழத்தை ice age முடிவில் பனி உருகி கடல் மட்டம் உயர்ந்தது என்ற அடிபடையில் computer simulation மூலம் இந்த ஆழம் என்றால் இந்த வருடம் என்று கணக்கிடுகிறார். இதை வைத்து தான் 23 மீட்டர் ஆழம் என்றால் அது கி.மு. 9500 என்கிறார். இதற்க்கு அறிவியல் சான்று இல்லை. இது அவரின் நிரூபிக்கபடாத தியரி). அவர் கணக்கு படி கடல் பொங்கி பூம்புகாரை அழித்தது என்பதற்கு இடம் இல்லை (மணிமேகலை இந்திர விழா கொண்டாட படாததால் கடல் பொங்கி பூம்புகாரை அழித்தது என்கிறது). 1991-இல் செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவின் கட்டுரை இங்கே:
http://drs.nio.org/drs/bitstream/2264/3295/2/Mar_Archaeol_2_5.pdf
ஆக மொத்தத்தில் பூம்புகாரை கடல் கொண்டு விட்டது என்பதற்கு இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிகழகம் தன் ஆய்வின் மூலம் பல சான்றுகளை தந்து விட்டது. அவர்களின் கணக்குப்படி பூம்புகாரை கடல்கொண்டது என்பது உண்மை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் அங்கு கலாச்சாரம் இருந்தற்கான சான்றுகள் இருக்கின்றன என்று அவர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கூறுகின்றனர் (இந்த ஆராய்ச்சி மறைக்கப்பட எல்லாம் இல்லை. ஆழ்கடல் அழிவு கழக தளத்தில் அனைவரும் படிக்க வசதியாக இருக்கிறது. பூம்புகார் பற்றிய அனைத்து ஆய்வுகளும் இங்கே: http://drs.nio.org/drs/simple-search?query=Poompuhar&submit=Go).
இவ்வளவு ஆராய்ச்சி முடிவும் கிரகாம் ஹன்கோச்கின் கூற்று தவறு என்னும் போது அவரை காப்பாற்றி கொண்டு இருப்பது என்ன தெரியுமா? அவர் குறிப்பிடும் அந்த 23 மீட்டர் ஆழத்தில் இருக்கும் வடிவமைப்பு இது வரை ரேடியோ கார்பன் டேடிங் செய்ய படவில்லை என்பது தான். அதற்கு பக்கத்தில் இருக்கும், அவருடன் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்த (ரேடியோ கார்பன் டேடிங் செய்ய பட்ட) கப்பல்துறை, ஆனைமுத்து (wharf) ஆகியவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டு. எனவே அந்த சுவரும் அதே நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கருதுவதை அவர் ஏற்கவில்லை. அந்த சுவர் கார்பன் டேடிங் செய்ய படவில்லை எனவே அது 11000 ஆண்டுக்கு முற்பட்டது என்று அவர் இன்னும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
ஒரு மனிதனின் அறிவியல் இல்லாத கூற்றா அல்லது அனைத்து அறிவியல் தரும் முடிவா என்னும் போது நான் அறிவியலை நம்புகிறேன். ஹான்காக்ஐ அல்ல. ஹான்காக் அவர்களின் தியரி சரி என்று கூறும் ஏதேனும் அறிவியல் ஆராய்ச்சி முடிவு இருந்தால் தரவும். அவர் கூற்று தவறு என்பதற்கு போதுமான ஆதாரம் தந்துவிட்டேன் (நீங்கள் மறைக்கப்பட்டதாக கூறிய ஆய்வு முடிவுகளும் இதில் அடக்கம்)
எனவே நீங்கள் கூறியது போல:
//மேலும் அவருக்கு முன்பே 1990ஆம் ஆண்டு பூம்புகார் நகர கடற்பகுதியில் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நடத்தியதன் மூலம் பல தடையங்கள் கிடைத்ததை பற்றி பேசாமல் சந்துரு ஓடுவது ஏன்//
ஓட எல்லாம் இல்லை. அந்த ஆய்வு முடிவை வைத்துதான் ஹான்காக் கூற்று தவறு என்று கூறுகிறேன். அந்த ஆராய்ச்சியை முதலில் நீங்க படிச்சு இருந்தாதானே நான் சொல்வது உண்மையா, பொய்யா என்று தெரியும். நீங்க தான் இந்த ஆராய்ச்சி எல்லாம் இருக்கிறது, யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்று தெரியாமல் இன்னும் ஹான்காக் அவர்களின் வார்த்தையை மட்டும் நம்பிக்கொண்டு இருபதால் தான் பிரச்சனை.
சந்துரு,
ஏன் இப்படி அலட்டிகிரிங்க சந்துரு ? நீர் கொடுக்கும் வெப் லிங்க் லச்சணம் தான் வியாசன் மூலம் நாறடிக்கபடுகின்றதே ! ஏதோ வியாசனுக்கு பொறுமை அதிகம் அதனாலே உமது கூறுகெட்ட லிங்க் எல்லாத்தையும் பார்த்து அதன் பின் அவற்றின் கேடுகெட்ட தனத்தை கண்டு கடுப்பாகி உம்மை விளாசிய விளாசில் உண்மையை ஒத்துகொண்டு மன்னிப்பு கேட்டீர் அல்லவா ? நீர் காட்டும் ஆடம் பாம் வெப் லிங்க் கண்டு பயந்து தென்றல் வேறு கிரேட் எஸ்கேபே! மாட்டிகொண்டது நானும் வியாசனும் தான்.சரிசரி எவ்வளவு நேரம் நீர் போடும் பார்பன -ஆரிய குசு நாற்றம் அடிக்கும் ஆடம் பாம் வெப் லிங்க் எம்மாலும் மயங்கி விழாமல் தாக்கு பிடிக்க முடிகின்றது என்று பாப்போம்
//ஏன் சார் இப்படி எதையும் முழுசா படிக்காம எல்லார் நேரத்தையும் வீணடித்து, என்னையும் கடுப்பு ஏற்றுகீர்கள்? //
இப்போது சிந்துசமவெளியில் மீன், அறுமீன் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளும் சந்துரு,அவரின் பின்னுட்டம் 110ல் என்ன உளறியுள்ளார் என்று பார்ப்போமா ?
“முருகனுக்கு நம் இப்போதைய குறியீட்டில் ஒன்று அறு மீன். அனால் சிந்துசமவெளி முருகுக்கும் அறுமீனுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. முதலில் அது மீனே இல்லை! இரு வளையங்கள் ஒன்று இணைந்தது போல இருக்கும், கடவுளை குறிக்கும் சின்னத்தை, நீங்கள் சொல்லும் அறு கோடுகள் கொண்ட மீன் உருவம் அறுமீன் என பொருள்படுவது இல்லை.” என்று சந்துரு கூறியதை இப்போது சிந்துசமவெளியில் மீன், அறுமீன் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கின்றார் !
சரிசரி அவ் அறுமீன் முருகனை தான் குறிக்கின்றது என்பதற்கு நாம் மேலும் விளக்கம் கொடுப்போம் .இவரே இவரே கொடுக்கும் கொடுக்கும் web link ல்
http://www.harappa.com/script/diction.html
பர்போலா அவர்கள் அறுமீன்க்கு கொடுக்கும் கமெண்ட் என்னவென்று பாப்போம் :
In The New Year asterism Pleiades has this name in Tamil. In myths the wives of the Seven Sages and mothers or wet nurses of the god of war
கார்திகை மீன்களும் ,போர்கடவுளும் முருகனை குறிப்பது என்பது கூட சந்துருவுக்கு வெலங்கவில்லை என்றால் நாம் என்ன செய்வது ?
அடுத்த விளக்கத்தை கொடுப்போம் :
செம்மொழி மாநாட்டில் பர்போலாவின் ஆய்வு கட்டுரை :
http://timesofindia.indiatimes.com/city/chennai/Parpola-posits-Dravidian-solution-to-Indus-script/articleshow/6092938.cms
Unveiling his first clue from among Harappan seals, Parpola referred to a peculiar symbol sequence in which six vertical strokes are followed by a fish. As fish’ was a symbol to depict a star too (the Tamil word miin’ is common to both fish and star), the 6+fish’ could refer to aru-miin’, the Tamil term for the constellation Pleiades. He also cited old Tamil texts that describe Murukan as aru-miin kaatalan’ (one beloved of the Pleiades).
முருகனுக்கும் அறுமீனுக்கு உள்ள தொடர்பு இப்பவாது புரியுதா சந்துரு?
//சிந்துசமவெளியில் மீன், அறுமீன் இருக்கிறது என்று நான் மறுக்கவில்லையே! நீங்கள் கூறியது போல அது முருகை குறிப்பிடுகிறது என்பது தவறு என்று சுட்டிக்காட்டுகிறேன். மீன் சின்னம் விண்மீனை குறிக்கிறது என்று கூறுகிறார் மகாதேவன். அவளோதான். அது முருகு என்று அவர் குறிப்பிட வில்லை. வேறு யாரும் அப்படி கூறவும் இல்லை. அவர் பதிலில் தேவையான வரிகள் மட்டும் இங்கே//
நான் உங்களுடன் நடத்திய விவாதத்தில் கொடுத்த dictionary லிங்க், நீங்கள் தந்த websiteஇல் மற்றும் ஒரு பகுதி என்பது கூட தெரியாத தமிழ்-தாகம் அவர்களுக்கு,
இந்த Pleiades கதையே மகாபாரத்தில் உள்ள முருகனின் கதையில் வருவது. அது கூட தெரியாமல் அது தமிழின் தொன்மை என்று புலம்புகீர். விக்கிபீடியா மூலம் தேவையான பகுதி:
The first elaborate account of Kartikeya’s origin occurs in the Mahabharata. In a complicated story, he is said to have been born from Agni and Svaha, after the latter impersonated the six of the seven wives of the Saptarishi (Seven Sages). The actual wives then become the Pleiades. Kartikeya is said to have been born to destroy the Asura Mahisha.[7] (In later mythology, Mahisha became the adversary of Durga.) Indra attacks Kartikeya as he sees the latter as a threat, until Shiva intervenes and makes Kartikeya the commander-in-chief of the army of the Devas. He is also married to Devasena, Indra’s daughter. The origin of this marriage lies probably in the punning of ‘Deva-sena-pati’. It can mean either lord of Devasena or Lord of the army (sena) of Devas. But according to Shrii Shrii Anandamurti, in his master work on Shiva[8] and other works, Kartikeya was married to Devasenā and that is on the ground of his name as Devasena’s husband, Devasenāpati, misinterpreted as Deva-senāpati (Deva’s general) that he was granted the title general and made the Deva’s army general.
இந்த கதையை அடிபடையாக கொண்டு தான் பார்போலா அவர்கள்:
In The New Year asterism Pleiades has this name in Tamil. In myths the wives of the Seven Sages and mothers or wet nurses of the god of war
என்று அந்த சின்னத்தை மொழி பெயர்கிறார். இப்போ முருகனுக்கு ஒரு சின்னம் வேண்டும் என்பதால் வளையல்-முறுக்கு-முருகு என்னும் தியரி மூலம் வளையல் சின்னத்தை முருகனின் சின்னம் ஆக்கினார். இதை ஐராவதம் அவர்கள் ஏற்க தயங்குவது அவர் பதிலில் தெரியும்.
இந்த விளக்கம் எல்லாம் ஒரு உத்தேசம் தான். நாளையே ஒரு bi-lingual ஆதாரம் கிடைத்து அறுமீனும், முருகும் சிந்துசமவெளி சின்னம் இல்லை அதற்க்கு விளக்கம் வேறு என்று தெரிந்தால் ஆராய்ச்சியும், நானும் அதை ஏற்போம். ஆனால் தமிழ் தாகம் தான் பாவம்.
இத்துடன் இந்த விவாதத்தை முடித்து கொள்கிறேன். இதில் மேலும் நேரத்தை விரயம் செய்ய என்னிடம் நேரம் இல்லை.
முதலில் அருமீனே இல்லை என்றாரு சந்துரு! அடுத்தது அறுமீன் தான் ஆனா அது முருகனை குறிக்க வில்லை என்ராறு சந்துரு! என்னா இப்ப இந்த Pleiades கதையே மகாபாரத்தில் உள்ள முருகனின் கதையில் வருவது தான் என்ற உல்டா அடிக்கிறாரு சந்துரு! அறிவு சந்துருவுக்கு !
அறுமின்கள் பற்றிய தடையம்,முத்திரை திராவிட தமிழ் சிந்துவெளி நாகரிகத்தில் [7000BC to 3000BC ]இருக்க அவை முருகனை குறிக்க !ஆனா அதற்கான விளக்கம் திராவிட தமிழ் சிந்துவெளி நாகரிகத்திற்கு பின் வந்த ஆரிய புராணத்தில் [300 BC to 300ac ] இருக்கு என்று புலம்புறாரு சந்துரு! எது முன் எது பின் என்பது கூட தெரியாதா சந்துருவுக்கு …. இன்னும் விளக்க வேண்டும் என்றால்
செம்மொழி மாநாட்டில் பர்போலாவின் ஆய்வு கட்டுரை :
Unveiling his first clue from among Harappan seals, Parpola referred to a peculiar symbol sequence in which six vertical strokes are followed by a fish. As fish’ was a symbol to depict a star too (the Tamil word miin’ is common to both fish and star), the 6+fish’ could refer to aru-miin’, the Tamil term for the constellation Pleiades. He also cited old Tamil texts that describe Murukan as aru-miin kaatalan’ (one beloved of the Pleiades).
மேலும் ஆரிய வேதங்களுக்கு முந்தைய சிந்துவெளியில்[நாகரிகத்தில் ] முருகன்-அருமீன்கள் தொடர்பு இருக்க ,அவை வேதத்தில் ஸ்கந்தனாக-கிருத்திகையாக திரிக்க பட அவ் வேதத்தில் இருந்து ஆரிய பார்பன புராணங்கள் எழுதப்பட………….எது முன் எது பின் என்பது கூட தெரியாதா சந்துருவுக்கு யார் தான் விளக்குவது ?
முருகனின் ஒரிஜினல் தடையம் ,முத்திரை சிந்துவெளியில்[நாகரிகத்தில் ] இருக்க அதன் copy கதைகள் அதற்கு பின் ஆரிய பார்பன புராணங்கள் எழுதப்பட…. இன்னுமா உமக்கு புரியவில்லை சந்துரு!
Glenn A. Milne Department of Earth Sciences, University of Ottawa, Canada;என்ற அறிவியலாளரின் கன்டுபிடிப்பான Far-field sea level data applications இதை முதன்மையாக கொண்டு தான் பூம்புகாரில் மூழ்கியுள்ள கட்டிட அமைப்புகள் 11,000 years க்கு முந்தையது என்று கிரகாம் ஹான்காக் கணக்கிடு செய்கின்றார்.Far-field sea level data applications நிருபிக்க பட்ட அறிவியல் முறைமை என்பதால் அதன் மூலம் கணக்கிட பட்ட முழ்கிய பூம்புகாரில் வயதும் 11,000 years க்கு முந்தையது என்பதும் சரியானது தான்.
//கிரகாம் ஹான்காக்கை பற்றி
அம்பி,
தொல்லியல் தடையங்களுடனும்,சங்க இயக்கிய சான்றுகளுடனும் என்மால் கேட்ட்கபட்ட கேள்விகள் எல்லாம் அம்பி என்ற மங்குணிக்கு மங்குணித்தனமாக இருப்பது எமக்கு வியப்பளிக்கவில்லை.
சரி விடயத்துக்கு வருவோம். ஆரிய-பார்பான புராணங்களில் முருகனின் அப்பனை சிவன் என்றும் அக்கினி என்றும் கூறும் ஆபாசங்கள் , மேலும் அவனை [,முருகனை ] கருபின்டம் என்று ஆரிய-பார்பான புராணங்களில் கூறப்பட்டு இருபது எல்லாம் அம்பியை போன்ற மானம் ,மரியாதையற்றவர்களுக்கு வேண்டுமானால் இனிமையாக இருக்கலாம். ஆனால் இந்த ஆரிய-பார்பான புராணங்களுக்கு எல்லாம் வேதம் தானே ஆதாரம் என்றால் வாய் முடிச்சொல்வது அம்பிதானே ? வேதங்கள் ஆரியனின் சோமபான குடிகார உளறல்களாக இருக்க அதனையும் ஏற்று வினவில் வந்து சதிராட்டம் போடும் அம்பிக்கு தொல்லியல் துறை சார் அஸ்கோ பர்போலா,ஐராவதம் மகாதேவன் ஆகியவர்கள் கூறும் முருகன் ,அறுமீன் தொடர்புகள் ,விடயங்கள் எல்லாம் சும்மா அடித்துவிடும் கதைகளாக இருக்கின்றது என்பது அம்பியின் அறிவியல் அற்ற ஆரிய-பார்பான புராணங்கள் மீது உழலும் பார்பன சிந்தனையைத்தான் எதிரொலிக்கின்றது.
அம்பி என்ன கூறுகின்றார் என்றால் , புராணங்களில் தானே அருமீன்கள் கார்திகை பெண்களாக சித்தரிக்கபட்டு உள்ளது என்கின்றார்.அது ஒரு உருவகம் தானே ? அதற்கு முன்பே சிந்துவெளியில் முருகனை அறுமீன்ளாக உருவகம் செய்யபட்ட நிகழ்வை தான் தொல்லியல் துறை சார் அஸ்கோ பர்போலா,ஐராவதம் மகாதேவன் ஆகியவர்கள் விளக்குகின்றார்கள். அதைதானே நான் …..
“ஆரிய வேதங்களுக்கு முந்தைய சிந்துவெளியில்[நாகரிகத்தில் ] முருகன்-அருமீன்கள் தொடர்பு இருக்க ,வேதத்தில் இருந்து ஆரிய பார்பன புராணங்கள் எழுதப்பட அதன் பின் வந்த திருமுருகில் புராண அசீங்கமான கருபின்டம் எடுத்தாளப்பட்டு உள்ளதே ”
என்று பல முறை கேட்டு உள்ளேன் அம்பியிடம். அதற்கு பதில் சொல்ல வக்கற்ற அம்பி ஏதோ புராணம் தான் முதலில் தன்னிசையாக எழுதபட்டது போன்றும் அதில் இருந்து தமிழர்கள் கார்திகை ,கார்திகேயன் என்ற சொற்களை எடுத்து பயன்படுத்துவது போன்றும் பெனாத்துகின்றார் அம்பி ! என்ன செய்வது அம்பியின் பார்பன சார்பு மூளை அதற்கு மேல் வேலைசெய்யாது அல்லவா ?
சிந்துவெளியில் நாகரிகத்தில் அம் மக்களாவது எளிமையாக வானத்து அருமீன்களை[கார்திகை ]முருகனுக்கு தொடர்பு படுத்தி சித்திரம் வரைந்தார்கள்.ஆனால் ஆரிய பார்பன புராணங்கலில் பார்பனர்கள் எவ்வளவு ஆபாசமாக முருக பிறப்புக்கு கதை எழுதிவைத்து உள்ளார்கள். அத்தகைய கதைகளுக்கும் அருமீன்க்ளுக்கும் என்னையா தொடர்பு ?கார் ,கார்திகை ,கார்திகேயன் எல்லாம் வடமொழி புராணங்களில் இருப்பதாக நினைக்கும் அம்பியின் மங்குணித்தனமான மூளை முருகன் பற்றிய சிந்துவெளி தொன்மங்களை,தடையங்களை, அறிவை புறம் தள்ளிவிட்டு கேள்வி எழுப்பதானே செய்யும் ?
// my replau for ambi’s feedback Permalink 108.2.1
// அம்பி என்ன கூறுகின்றார் என்றால் , புராணங்களில் தானே அருமீன்கள் கார்திகை பெண்களாக சித்தரிக்கபட்டு உள்ளது என்கின்றார்.அது ஒரு உருவகம் தானே ? அதற்கு முன்பே சிந்துவெளியில் முருகனை அறுமீன்ளாக உருவகம் செய்யபட்ட நிகழ்வை தான் தொல்லியல் துறை சார் அஸ்கோ பர்போலா,ஐராவதம் மகாதேவன் ஆகியவர்கள் விளக்குகின்றார்கள். அதைதானே நான் …..
“ஆரிய வேதங்களுக்கு முந்தைய சிந்துவெளியில்[நாகரிகத்தில் ] முருகன்-அருமீன்கள் தொடர்பு இருக்க ,வேதத்தில் இருந்து ஆரிய பார்பன புராணங்கள் எழுதப்பட அதன் பின் வந்த திருமுருகில் புராண அசீங்கமான கருபின்டம் எடுத்தாளப்பட்டு உள்ளதே ”//
புராணங்களில் மட்டுமல்ல, பரிபாடலிலும் திருமுருகிலும் அறுமீன்கள் கார்த்திகைப் பெண்களாக அவை இயற்றப்பட்ட கடைச் சங்க காலத்துக்கு முன்பிருந்தே நிலவிக் கொண்டிருந்த தமிழர் தொன்மங்களின் படி சித்தரிக்கப்பட்டுள்ளது என்றேன்..
சிந்துவெளியில் முருகனை அறுமீன்களாக உருவகம் செய்யபட்ட நிகழ்வை தான் தொல்லியல் துறை சார் அஸ்கோ பர்போலா,ஐராவதம் மகாதேவன் ஆகியவர்கள் விளக்குகின்றார்களா..?! ஐராவதம் மகாதேவன் அஸ்கோ பர்போலாவின் முறுக்கு-வளையலை மறுக்கிறார்.. சிந்துவெளி கல்வளையங்கள் எதிலும் முறுக்குமில்லை, முருகுமில்லை என்கிறார்.. சிந்து வெளி அறுமீன் தடையங்களும், முருகின் தடையங்களும் தனித்தனியானவை.. அவற்றை வளையலோ, வளைகாப்போ இணைப்பதாக அஸ்கோ கூறுவதை ஐராவதம் மகாதேவன் ஏற்கவில்லை..
அஸ்கோ பர்போலா கூறியதை நீங்கள் மேலே ஒரு பின்னூட்டத்தில் மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள்..:
” He also cited old Tamil texts that describe Murukan as aru-miin kaatalan’ (one beloved of the Pleiades). ”
முருகனை அறுமீன் காதலன் (கார்த்திகை மீன்களின் மகன்; அகராதியில் காதலனுக்கு மகன் என்ற பொருளும் உண்டு) என்ற முடிவுக்கு அஸ்கோ வந்ததற்கு காரணம் எந்த சிந்து வெளி தடையங்களிலும் இல்லை.. அவரது முடிவுக்கு அவர் குறிப்பிடும் பழைய தமிழ் ஆதாரம் திவாகர நிகண்டு என்ற சேந்தன் திவாகரத்தைத் தான்.. அதில் தான் அறுமீன் காதலன் என்று முருகனைப் பற்றி கூறப்படுகிறது.. திவாகரம் கி.பி.8ம் நூற்றாண்டைச் சார்ந்தது.. நான் தங்களுக்கு அதனினும் தொன்மையான சங்க இலக்கியங்களைக் காட்டி அவற்றுக்கும் அடிப்படை அப்போது நிலவிக்கொண்டிருந்தத தமிழர் தொன்மங்கள் என்பதையும் பலமுறை கூறிவிட்டேன்..
நான் கூறுவதை புரிந்து கொள்ள இயலாவிட்டால் அல்லது மனமில்லாவிட்டால், அஸ்கோ பர்போலா என்ன கூறினார் என்பதையாவது, ஐராவதம் மகாதேவன் என்ன கூறுகிறார் என்பதையாவது புரிந்து கொள்ள முயலுங்கள்..
ஐராவதம் மகாதேவன் அவர்கள் அஸ்கோ பர்போலா அவர்கள் விளக்கும் சிந்துவெளி தடையங்களை [அறுமீன்,முருகன் ,வளையல்] விடயங்களை தன் நேர்காணலில் நேர்மறையில், இனக்கதுடன் தான் விவாதிப்பதை கீழ் காணும் அவரின் நேர்காணலில் காணலாம் .
12. Parpola’s Work
http://www.harappa.com/script/mahadevantext.html#12
8. The Fish Sign
http://www.harappa.com/script/mahadevantext.html#8
அம்பி:// சிந்து வெளி அறுமீன் தடையங்களும், முருகின் தடையங்களும் தனித்தனியானவை.. அவற்றை வளையலோ, வளைகாப்போ இணைப்பதாக அஸ்கோ கூறுவதை ஐராவதம் மகாதேவன் ஏற்கவில்லை.. //
அஸ்கோ பர்போலா சிந்துவெளி அறுமீன் முத்திரையை தான் முருகனுக்கு உருவக படுத்துகின்றார் என்ற விடயத்தை அம்பிக்கு பர்போலா வார்த்தைகள் மூலமே மீண்டும் விளக்குவோம்
Parpola referring Facts:
[1]6+fish’ could refer to aru-miin
[2]old Tamil texts that describe Murukan as aru-miin kaatalan
Question:
Who is reffered by aru-miin in Tamil claasical text and Indus civilization?
Answer:
That is Murugan
Parpola Says….
Unveiling his first clue from among Harappan seals, Parpola referred to a peculiar symbol sequence in which six vertical strokes are followed by a fish. As fish’ was a symbol to depict a star too (the Tamil word miin’ is common to both fish and star), the 6+fish’ could refer to aru-miin’, the Tamil term for the constellation Pleiades. He also cited old Tamil texts that describe Murukan as aru-miin kaatalan’ (one beloved of the Pleiades).
மேலும் அறுமின்கள் பற்றிய குறிப்புகள் கார்த்திகை மாதம் அல்லது கார்த்திகை நாள் என்ற பொருளுடன் தமிழ் இலகியத்தில் பல இடங்களில் வருகின்றனவே அம்பி !
முருகன் அறுமீன் காதலன்
——————————
அறுமீன் – கார்த்திகை மாதம் அல்லது கார்த்திகை நாள்.
அறுமீன் காதலன் – முருகன்.
“அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள் ”
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் செல் சுடர் நெடுங்கொடி போல – கார்த்திகை நாளின் பெயராலே பெற்ற அறஞ் செய்தற்குரிய திங்களின் எடுக்கப்பட்ட விசும்பிலே செல்லுகின்ற ஒளியையுடைய நீண்ட விளக்கங்களின் வரிசைபோல; பல் பூங் கோங்கம் அணிந்த நுந்தை காடு கண்டிசின்[ பாலைபாடிய பெருங்கடுங்கோ]
அகநானூறிலும்ஒரு பாடல் கார்த்திகை விளக்கீட்டைப் பற்றிக் கூறுகிறது.
“அறுமீன் சேறும் அகல் இருள் நடுநாள்”
கார்த்திகையைச் (Pleiades) சேரும் இருள் அகன்ற நடு இரவில் , தெருக்களில் விளக்குகளை வரிசையாக ஏற்றி விழாக் கொண்டாடா வருவாரோ!’ என்கிற பொருளில் அமையும் பாடல்.
முருகனுக்கு கார்கால அறுமின்கள் மட்டுமே குறியீடாக இருக்க அத்தகைய குறியீட்டின் மீது ஏற்றபட்டு உள்ள முருகனை பற்றிய ஆரிய பாப்பார புராணங்களை தமிழர் தொன்மமாக அம்பி இன்னும் அலந்து விடுவது ஏன் ?
அம்பி://முருகனை அறுமீன் காதலன் (கார்த்திகை மீன்களின் மகன்; அகராதியில் காதலனுக்கு மகன் என்ற பொருளும் உண்டு) என்ற முடிவுக்கு அஸ்கோ வந்ததற்கு காரணம் எந்த சிந்து வெளி தடையங்களிலும் இல்லை.//
அம்பி,
ஆரிய பார்பன புராணங்களின் உள்ளடக்கம் பரிபாடலில் , திருமுருகில் , கந்தபுராணத்தில் இருக்க, அவற்றை நானும் அம்பலபடுத்த ,அவ்வாறு இருப்பினும் அவை தமிழர் தொன்மங்கள் தான் என்று சாதிக்கும் அம்பிக்கு ஏதாவது சூடு சுரணை இருக்கின்றதா ? எனக்கு பிடிக்கவில்லை என்பதால் அவற்றை நான் புறம் தள்ளவில்லை. அவை[ஆரியப்பார்பன புராணங்கள] ஆபாச அறிவுக்கு பொருந்தாத க்ட்டுகதைகளாக இருப்பதாலும் முருகனின் பிறப்பை அசீங்க படுத்துவதாலும் ,அவைகள்[ஆரியப்பார்பன புராணங்கள] தமிழர் மரபு இல்லாமையாலும் , தமிழ் மக்கள் மீது ஓட்டுனி ஆரிய பார்பனர்கள் திணிப்பதாலும் தான் அவற்றை [ஆரியப்பார்பன புராணங்களை] தமிழ் மக்களிடம் அம்பலபடுத்தி அப் புராணங்களை புறம்தள்ள கோருகின்றோம் !
my replau for ambi’s feedback Permalink 108.2.1அம்பி://தங்களுக்கு பிடிக்காத தொன்மங்களை பரிபாடலோ, திருமுருகோ, கந்தபுராணமோ பேசினால் அவை ஆரிய பார்ப்பன புராணங்களில் இருந்து எடுத்தாண்டவை என்கிறீர்கள்.. //
இதை 108.2.1-லேயே கேட்டிருக்கலாமே.. இங்கு தாவி வந்து ஏன் கேட்கிறீர்கள்.. முழு பதிலும் அங்கேயே நான் கொடுத்திருப்பதை மறைக்கிறீர்களாக்கும்.. இதைத்தான் உங்களது வழக்கமான மங்குணியாட்டம் என்றேன்..
108.2.1-ன் முதல் வரியை மட்டுமே எடுத்துக்கொண்டு பாக்கியை நீங்கள் மறைக்க முயன்றால் நான் விடுவேனா..?! இதோ முழு பதிலும்..:
” தங்களுக்கு பிடிக்காத தொன்மங்களை பரிபாடலோ, திருமுருகோ, கந்தபுராணமோ பேசினால் அவை ஆரிய பார்ப்பன புராணங்களில் இருந்து எடுத்தாண்டவை என்கிறீர்கள்.. வட மொழி வால்மீகி ராமாயணத்தில் கபாடபுரமும் தான் வருகிறது.. வால்மீகி ராமாயணத்துக்கு காலத்தால் மிகவும் பிற்பட்ட இறையனார் களவியல் உரைக்கு முந்தைய தமிழ் இலக்கிய ஆதாரங்கள் கபாடபுரத்துக்கு இல்லை என்பதால் கபாடபுரமும் புராணப்புளுகு என்பீர்களா..? வட மொழி புராணம் சொல்லித்தான் தமிழருக்கு கபாடபுரம் பற்றித் தெரியும், அவர்களிடம் கடல் கொண்ட கபாடபுரத் தொன்மங்கள் எதுவும் இருந்திருக்காது என்பீர்களா..? பஃறுளியாறும், பன்மலை அடுக்க குமரிக்கோடும் தமிழரிடையே தொன்மங்களாக நிலவிக் கொண்டிருக்கவில்லையா..? இல்லை, கபாடபுரம் தமிழர் தொன்மமில்லை, ராமாயணப்புளுகு என்று கூறினால் அது உளறல்..
முருகன் பற்றிய தமிழரிடையே வெகுகாலமாகவே நிலவிக்கொண்டிருக்கும் தொன்மங்கள் வடபுலம் சென்று அங்கு புராணங்களாக சிலபல மாறுதல்களுடன் இருப்பதாலேயே மேற்படி புராணங்கள்தான் முருகன் பற்றிய சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தொன்மங்களுக்கும் ஆதாரம் என்று உளறுவதும் அதுபோலத்தான்..“
சேம் சைடு கோல் போடும் உமக்கு விளக்கம் வேறு வேண்டுமா அம்பி ?
கபாடபுறம் என்பது தமிழ் நாட்டில் ஒரு இடத்தை சுட்டும் பெயர் சொல். அதற்கான ஆதாரமும் இறையனார் களவியல் உரையில் இருக்க ,அது கற்பனையாக புனைய பட்ட வால்மீகி இராமாயணத்தில் ஒருவேளை இருந்தால் அதற்காக கபாடபுறம் என்ற இடமும் கற்பனையாகிவிடுமா அம்பி ? அதுபோல தானே உமது ஆரிய-பார்பன புளுகுகளில் கார்திகை ,கார்திகேயன் ஆகிய தமிழ் பெயர் சொற்களும் பயன் படுத்த பட்டு உள்ளது ! அம்பி ஆரிய பாப்பார புராணங்களை தொடாமல் ஓடுவதன் மூலம் அப் புராண அசிங்கங்கள் தம்மையும் அசிங்கபடுத்தி விடுமோ என்று அஞ்சுகின்றார் ! எனவே தான் முருகனின் பிறப்பை பற்றிய கருபிண்ட அசிங்கத்தையும், முருகனுக்கு அங்கினி அப்பன் ,சிவன் அப்பன் என்ற அவதுருகளையும் ஆரிய பாப்பார புராணங்களில் இருந்தாலும் அவை தமிழர் தொன்மமாக திரிகின்றார் ! இன்னும் இவர் முருகனை திரித்து பேசும் புராணங்களை தமிழ் நாட்டு தொன்மம் என்று கூறுவார் என்றால் நாமும் அம்பி புராணம் மூலம் அம்பி பிறந்த கருபிண்ட அசிங்க கதையை ,புராணத்தை விலாவரியாக[முருக பிறப்பை அம்பி அசிங்கப்டுதுவதற்கு இணையாக] கூறியாகவேண்டிய நிலைக்கு அல்லவா மீண்டும் தள்ளபட்டு விடுவோம் !