Thursday, January 16, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்முன்னோடிகள்கும்மிடிப்பூண்டி, கடலூரில் நவம்பர் தின விழா !

கும்மிடிப்பூண்டி, கடலூரில் நவம்பர் தின விழா !

-

நவம்பர் புரட்சி தின கொண்டாட்டங்கள் – 5

17. திருவள்ளூர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக 97-வது நவம்பர் புரட்சி தின விழா கும்மிடிப்பூண்டி பகுதியில் SMV மஹாலில் நடத்தப்பட்டது.

nov7-thiruvallur-poster

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின், திருவள்ளூர் மாவட்ட தலைவர் தோழர். விகந்தர் தலைமை உரையாற்றினார்.

தனது தலைமை உரையில், ரஷ்ய புரட்சி நாளை நாம் உயர்த்தி பிடிக்க வேண்டிய அவசியமென்ன என்று தொடங்கி, இது தொழிலாளி வர்க்கம் அரசாள வந்த நாள், முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டிய நாள் என்றும் அத்தகைய பயங்கரவாதத்தை நாமும் நாள்தோறும் சந்தித்து வருகிறோம் அதை முறியடிக்க வேண்டியுள்ளது என்று தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில், புரட்சிகர பாடல்களும் கல்வி தனியார்மயம் குறித்த நாடகமும் நடத்தப்பட்டது. கல்விக் கொள்ளையர்களின் லாப வெறிக்கு இளந்தளிர்கள் ‘நரபலி’ தரப்படும் அவலத்தை சித்தரிக்கும் வகையில் அமைந்த நாடகம் பார்வையாளர்களை உறைய வைத்தது. பகத்சிங் வேடமணிந்த மூன்று இளம் சிறுவர்கள் “லால் சலாம், இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டது “அந்த வீரன் இன்னும் சாகவில்லை” என்ற பாடலை நினைவூட்டுவதாக அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் SRF மணலி கிளையை சேர்ந்த தோழர். ராஜா முற்போக்கு கவிதைகள் வாசித்தார். இக்கவிதை அனைவரையும் ஈர்த்தது.

நவம்பர் புரட்சி தினத்துக்காக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் துரை.சண்முகம் எழுதிய கவிதையை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர். சுப.தங்கராசு வாசித்தார்.

பகத்சிங் குறித்து கிளைச் சங்க தோழரின் மகள் 10 நிமிடம் உரையாற்றினார். சிறுவர்கள் முதல் முறையாக மேடையில்  பங்கேற்றது மற்ற பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் உற்சாகமூட்டுவதாக இருந்தது.

பிரச்சாரக்குழுவின் “குப்பை உணவு”, “நவம்பர் புரட்சி” ஆகிய பாடல்கள் பார்வையாளர்களை பலத்த கரகோஷத்தோடு வரவேற்கச் செய்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அடுத்ததாக எழுச்சியுரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலாளர் தோழர் சுதேஷ்குமார், நிலவுகின்ற சமூக அமைப்பில் உள்ள பண்பாட்டுச் சீரழிவுகளையும், இந்த சீரழிவுகளின் விளைவாக உழைக்கும் மக்களின் எழுச்சி தள்ளிப் போவதையும் விளக்கினார். ஸ்மார்ட் போன் கலாச்சாரத்தின் காரணமாக சிறுவர்கள் முதற்கொண்டு சீரழிவதையும், “ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் தாம் அவர் அப்பா இல்லன்னா வெறும் டப்பா” எனுமளவுக்கு செல்போன் மீதான் மோகம் திணிக்கப்பட்டுள்ளதை சாடிய தோழர், ஆபாச சீரழிவு கலாச்சாரம் குடும்ப உறவுகளையும் விட்டுவைக்கவில்லை என்பதை தோலுரித்துக்காட்ட மறக்கவில்லை. குடும்பம் ஒரு கோவில், அன்னை அதில் தெய்வம் என்பதெல்லாம் காலாவதியாகி, நுகர்வே சகலமும் என்ற ஒரு நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள அவலத்தை எடுத்துரைத்தார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட பிரச்சாரக் குழு இந்து மதவெறி பயங்கரவாதத்தை திரைகிழித்தும், ரஷ்ய புரட்சி நாளை உயர்த்திப் பிடித்தும் பாடல்களை பாடினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர். சுப.தங்கராசு இருவரும் நினைவுப் பொருட்களை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக, சங்கத்தின் செயலாளர் தோழர் ரமேஷ் நன்கொடையாக புது ஆடை வழங்கியதை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர். சுப.தங்கராசு பெற்றுக்கொண்டார்.

320-க்கும் மேற்ப்பட்ட தொழிலாளிகள் தம் குடும்பத்துடன் கலந்து கொண்ட இந்த விழா, தொழிலாளிகளிடமும், அவர்தம் குடும்பத்தினரிடமும் உற்சாகத்தை தந்துள்ளது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கும்மிடிப்பூண்டி பகுதி தலைவர், தோழர். கோபாலகிருஷ்ணன் நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம்.- 9444213318

18. கடலூர் அண்ணாகிராமம்

உழைக்கும் மக்கள் அலையென எழுந்து அதிகாரத்துக்கு வந்த நாள்
உழைக்கும் மக்களின் உன்னதமான விழா.

நவம்பர் 7 ரசிய புரட்சி நாள் நீடூழி வாழ்க!

வம்பர் 7 ரசிய புரட்சி நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக அண்ணாகிராமம் பகுதியில் கொண்டாடபட்டது. தோழர்கள்,ஆதரவாளர்கள் மற்றும் அந்த ஊர் பொதுமக்கள் என்று அனைவரும் கலந்து கொண்டார்கள்.அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டு இருந்தது. பெருந்திரளான மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

முதல் நிகழ்ச்சியாக நவம்பர் புரட்சியை விளக்கும் விதமாக “ஸ்டலின் சகாப்தம்” படத்தை பெரிய திரையில் போட்டு காட்டப்பட்டது. பின்னர் தலைமை உரையாக தோழர் கருணாமூர்த்தி நவம்பர் 7-ன் முக்கியத்துவத்தையும் பற்றியும், இந்த நாளில் உழைக்கும் மக்கள் ரசிய நாட்டில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததையும், உலக பாட்டாளிகளுக்கு வழி காட்டியதையும் விளக்கி கூறினார்.

இந்நாளை ஒவ்வொரு உழைக்கும் மக்களும் தங்களுடைய பண்டிகை போல கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இன்று நம் நாட்டில் மறுகாலனியாக்கத்தாலும், பார்ப்பன பாசிசத்தாலும், உழைக்கும் மக்களுக்கு ஏற்படும். பாதிப்புகளை விளக்கி பேசினார். உழைக்கும் மக்கள் இன்று நாள்தோறும் விலைவாசி உயர்வு, மானியவெட்டு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள், ஆனால் இன்று பெரும் முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து மக்களைச் சுரண்டி வாழ்கிறார்கள்.

ஆகையால், உழைக்கும் மக்களாகிய நாம் ஒன்று சேர்ந்து மக்கள் கமிட்டிகளை கட்டவேண்டும். அதன் ஊடாக ஒரு புதிய ஜனநாயகக் குடியரசை ஏற்படுத்த வேண்டும் என்று விளக்கி பேசினார்.

பின்னர் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பின்பு அனைத்து மக்களுக்கும் உணவளிக்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

கடலூர் மாவட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க