Friday, May 9, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பாம்புகள் படையெடுக்கும் அம்மையப்பன் அரசு பள்ளி

பாம்புகள் படையெடுக்கும் அம்மையப்பன் அரசு பள்ளி

-

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,200 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மிகச்சிறந்த பள்ளியாக விளங்குகிறது. இப்பள்ளி இயற்கை சூழலோடு சிறப்பாக இயங்கி வருகின்றது. பல்வேறு அரசு பள்ளிகளுக்கிடையே இப்பள்ளி முன்னுதாரணமாக இயங்கி வருகின்றது. அம்மையப்பனைச் சுற்றி ஏறத்தாழ 20 கிராமங்களில் இருந்து ஏழை எளிய மக்களின் பிள்ளைகளே இங்கே பயின்று வருகின்றனர்.

school-frontஇந்தப் பள்ளி வளாகத்தின் மையப்பகுதியில் பெரிய பாழடைந்த கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து மாணவ,மாணவிகளின் உயிரைக் குடிப்பதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இக்கட்டிடத்தில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் ஏராளமாக உள்ளன.

பாழடைந்த கட்டிடம்
பள்ளியின் மையத்தில் உள்ள பழைய பாழடைந்த கட்டடம்.

பாழடைந்த இந்தக் கட்டிடத்தில் உள்ள கொடிய பாம்பு போன்றவைகள் மற்ற வகுப்பறை கட்டிடங்களில் செல்வதும்ர மாணவர்கள் இதனைக் கண்டு அலறி அடித்துக் கொண்டு ஓடுவதும், ஊழியர்கள் அதனை விரட்டியடிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

இந்தக் கட்டடத்தை அப்புறப்படுத்தக் கோரி, பலமுறை நேரிலும், புகார் மனுவிலும் கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதுவரை அந்தப் பாழடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் எந்த முயற்சியும் செய்யவில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அதனால், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அனைவரும் சேர்ந்து 01.12.2014 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் நேரடியாக மனு கொடுத்தனர்.

collector-petition

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

புரட்சிகர  மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
திருவாரூர் மாவட்டம்
99434 94590