சிங்கப்பூருக்கு பிழைப்பு தேடி சென்ற ஒவ்வொருவருக்கும் தனிபட்ட காரணங்கள் இருந்தாலும் தமிழர்களில் பல பேருக்கு ஒற்றுமையான ஒரு காரணம் தங்கச்சி என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் பாசத்திற்குரிய சென்டிமெண்டாக இருக்கும் இந்த தங்கச்சி விவகாரம் நிஜத்தில் பொறுப்பான அண்ணன்களின் இளமையை கேட்கும் தண்டனை எனலாம். சீர், வரதட்சணை, முறை என்று ஒன்றும் குறைவைக்க கூடாது என்றால் சிங்கப்பூருக்கு வண்டி ஏற வேண்டும். அப்படி சென்றவர்களில் ஒருவர் தனபால்.

தினமும் அரைப் பட்டினி வயிற்றோடு பாடுபட்டு இரண்டு பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து கரை சேர்த்த களைப்பில் பெற்றோர்கள் இருந்தனர். மீதமுள்ள கடைக்குட்டி பெண் கல்யாணத்திற்காவது மகன் பொறுப்பேற்க மாட்டானா என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. பட்டப்படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் சோர்ந்து போன தனபாலும் இறுதியில் கைக்கெட்டும் சொர்க்கமான சிங்கப்பூருக்கு சென்றார்.
இவ்வளவு வறுமையிலும் அவர் பட்டப்படிப்பை முடித்தது எப்படி? பகுதி நேரமாக வேலை செய்து படிப்புக்கான செலவு தேவைகளை ஏற்பாடு செய்து கொண்டார். இத்தகைய பொறுப்புணர்வே அவரை சிங்கப்பூரை நோக்கியும் ஓட வைத்தது.
எதிரே நின்ற தங்கைக்காக சிங்கப்பூர் சென்று ஏழு வருட கட்டிட தொழிலாளியாக பணி முடித்து பிறகு ஊர் திரும்பி தங்கைக்கு மட்டுமல்ல தானும் மணமுடித்து மனைவி குழந்தையுடன் வாழ்கிறார். இனி சிங்கப்பூர் அனுபவம் குறித்து அவரே பேசுகிறார்.
எப்ப சிங்கப்பூர் போனீங்க?
“1998-இல் சிங்கப்பூர் போனேன். ரெண்டு வருசத்துக்கு ஒருவாட்டி விடுமுறைக்கு ஊருக்கு வந்து போவேன். 2005-ல நிரந்தரமா வந்துட்டேன்.”

இரண்டு வருசத்துக்கு ஒரு தடவதான் விடுமுறையா?
“வருசத்துக்கு ஒரு தடவ விடுமுறை உண்டு. வந்து போகலாம். ஆனா ஒரு வருசத்துக்கு ஒரு தடவ விசாவ புதுப்பிக்கணும். அதுக்கும், வந்து போகும் செலவு கணக்கும் பாத்தா நம்ம சம்பாத்தியத்துக்கு கட்டுபடியாகாது.”
நீங்க சிங்கப்பூர் போக எவ்வளவு செலவாச்சு?
“சிங்கப்பூருக்கு போன செலவு அத்தனைக்கும் கடன்தான். ஏஜெண்டுக்கு மட்டும் 1,65,000. விமான டிக்கெட்டுலேருந்து பொட்டி ஜட்டி வரைக்கும் எல்லாம் ஆச்சு ரெண்டு லட்சத்துக்கு.”
எவ்வளவு சம்பளம்?
“தினக்கூலிதான். படிச்சிட்டு நல்ல அட்மிசன் லெவல்ல வேலை பாத்தா மாதச் சம்பளம் மதிப்பு எல்லாம் இருக்கும். தொழிலாளியா போனா எல்லா துன்பமும் பட்டாகணும். வேலை நேரம் போக ஓவர் டைம் பாத்தாத்தான் சம்பளம் கொஞ்சமாவது கட்டுப்படியாகும். அதுவும் நாம நெனச்சா மாதிரி பாக்க முடியாது. மேனேஜருக்கு வேண்டியவனுக்கும், வேலை சுறுசுறுப்பா செய்றவனுக்கும் தான் ஓவர் டைம் கெடைக்கும். வேலை நெருக்கடியா இருந்தாத்தான் மத்தவனுக்கும் ஓ.டி. கிடைக்கும். அப்ப நமக்கு உடம்பு சரி இல்லாம இருந்தாலும் செய்ய முடியாதுன்னு சொல்ல முடியாது. இதையெல்லாம் கூட்டி கழிச்சு பாத்தா 15,000 முதல் 20,000 வரை இந்திய பணம் மாதம் கிடைக்கும்”
எத்தன வருசத்துல கடன அடைச்சிங்க?

“குடும்பத்துல வேற செலவு இல்லன்னா ஒரு வருசத்துல கடனை அடைச்சிருப்பேன். போன மறுவருசமே தங்கச்சி கல்யாணம் வந்துருச்சு. நல்ல மாப்பிள்ளை விட்டா கிடைக்காதுன்னு வீட்ல ஒரே புலம்பல். சிங்கப்பூர்ல இருக்குற நம்பிக்கையில தங்கச்சிக்காக வட்டிக்கி வாங்கும்படியா போச்சு.”
மொத்தமா கடன் எவ்வளவு வாங்கினிங்க? வட்டியோட சேத்து எவ்வளவு அடைச்சிங்க?
“சிங்கப்பூர் போறதுக்கு வட்டிக்கு பணமா 50,000-ம். சொந்தக்காரங்க அஞ்சு பேருகிட்ட நகையா வாங்கி அடகு வச்சுட்டு அதுல 1,50,000-ம் புரட்டிட்டு போனேன். யாருக்கு நகைங்க அவசரமா தேவைப்படுதோ அவுங்களுக்கு முதல்ல திருப்பிக் கொடுத்தேன். தங்கச்சி கல்யாணத்துக்கு நகையோடோ சேத்து 2 லட்சம் கடன் வாங்குனேன். மொத்தம் நாலு லட்சம் கடனுக்கு வட்டி மட்டும் 2 லட்சம் கிட்டக்க வந்துருச்சு. அஞ்சு வருசத்துல அசல் வட்டின்னு ஆறு லட்ச சொச்சம் அடைச்சேன்.”
நீங்க என்ன படிச்சிருக்கிங்க?
“நான் பி.எஸ்.சி முடிச்சிட்டு ஒரு சில டிப்ளம்பா கோர்ஸ்சும் முடிச்சேன். அதுல ஒண்ணுதான் ஏ.சி சர்வீஸ் பத்தினது. சிங்கப்பூர்ல கட்டிட தொழில்தான் முதன்மையானது. அதுல ஏ.சி சம்மந்தமான வேலையின்னு இடைத்தரகர் சொல்லிதான் போனேன். ஆனா தொடப்பத்த கையில கொடுத்து பூச்சுப்பூசும் போது விழுவுற சிமெண்ட்ட கூட்டுன்னு சொன்னானுங்க. ஏன்னு வாய தொறந்தா ஊருக்கு அனுப்பிடுவானுங்கன்னு மட்டும் புரிஞ்சுச்சு. கடனா, தொடப்பமான்னு பாத்தா தொடப்பந்தான் செயிச்சுச்சு.”

படிச்சுட்டு இந்த வேலையா பாக்க போனிங்க?
“கலெக்டருக்கே படிச்சிருந்தாலும் ஒர்க்கர் விசாவுல போனா கக்கூசு கூட கழுவ சொல்லுவானுங்க. மறுக்க மடியாது.”
படிச்ச உங்கள கூட்ட சொன்னப்ப உங்க மனநிலை எப்படி இருந்துச்சு?
“நீங்க கேக்குற அளவுக்கு எனக்கு ஒன்னும் பாதிப்பா இல்லைங்க. நான் பள்ளிக்கூடம் படிக்கும் போதே கல்லு கடைக்கி வேலைக்கி போவேன். மரம் ஏறுவேன். கல்லூரி முடிஞ்சதும் பைனான்ஸ்காரங்களுக்கு கணக்கு எழுதுவேன். தண்டல் வசூலுக்கும் போவேன். அப்படி, எந்த வேலையா இருந்தா என்ன நமக்குத் தேவை காசு.”
கடைசி வரைக்கும் ஏ.சி சம்மந்தமான வேலை கிடைக்கவே இல்லையா?
“நான் மறந்தாலும் நீங்க மறக்க மாட்டிங்க போலருக்கே. இதுலயும் பல ப்ரோமோசன் கெடைச்சுது. ஒரு நாள் பெயிண்ட் அடிச்ச தொழிலாளி ஊருக்கு போயிட்டாருன்னு என்ன அடிக்க சொன்னானுங்க. அடிச்சேன். பரவாயில்லையே அவனவிட நீ கீழ ஒழுகாம நீட்டா ஆடிக்கிறியே நீயே அடின்னானுங்க.

நாலு வருச்ம கழிச்சு வேறொரு கம்பனி. அங்க போனதும் “ஏற்கனவே என்ன வேலை செஞ்சுருக்க” அப்படின்னானுங்க. “சிமெண்டு கூட்டுனேன்”னு சொன்னேன். அப்படியா “சரி மரம் வேலை நடக்கும் போது விழும் தூள்கள கூட்டுன்”னு திரும்பவும் தொடப்பத்த கையில கொடுத்துட்டானுங்க.
கொஞ்ச நாள் பொறுத்து ஆசாரி வேலை செஞ்ச தாய்லாந்து நாட்டுக்காரர் ஊருக்கு போய்ட்டார். என்ன மரம் அறுக்கச் சொன்னானுங்க. தாய்லாந்து ஆசாரி படிக்காத ஆள். அவருக்கு அளவு எடுத்து எழுதிக் கொடுக்க ஒரு உதவியாளர் இருந்தாரு. எனக்கு அது தேவைப்படல. நானே அளவு குறிச்சு வேகமாவும் வெட்டி தள்ளிட்டேன். ஒடனே அந்த வேலையை எனக்கு குடுத்துட்டானுங்க.”
திரும்பி வந்த தாய்லாந்துக்காரர் என்ன விரோதி மாதிரி பாத்தாரு. இங்க வாடாப்பான்னு கூப்புட்டு நீயும் நானும் இங்க ஒரே இனம்தான். எம்மேல கோபம் வேண்டாம். ஒன்னோட வேலையை தட்டி பறிச்சிட்டதா நினைக்காதே இத விட எனக்கு பெருக்குறதுதான் ஈசி. ஓனருட்ட சொல்லி எனக்கு பெருக்குற வேலையையே வாங்கி குடுத்துருன்னு சொல்லி நட்பானேன். ஓனரு ஒத்துக்க மாட்டேன்னுட்டான்.”
பெருக்குறதுக்கும் அறுக்குறதுக்கும் கூலி வித்தியாசம் எவ்வளவு?

“ஒரு மண்ணும் கிடையாது. அதே கூலிதான் ஒரு பத்து பைசா கூட அதிகம் தர மாட்டாங்க. மொத்தமா அவங்க எடுத்த குத்தகை மிஷினுங்கதான் தொழிலாளிங்க. எந்த மிஷினு எந்த வேலைக்கி பொருத்தமா இருக்குன்னு அவந்தான் முடிவு பண்ணனும். நமக்கு வாய் தொறக்குற வாய்ப்பெல்லாம் கிடையாது.
ஒரு ஓனரு ஒரு கட்டிடத்தையே காண்ட்ராக்ட் எடுத்துருப்பான். இல்ல ஒரு சில வேலைகளை மட்டும் எடுத்துருப்பான். நாம எந்த முதலாளிகிட்ட வேலை பாக்குறோமோ அவனோடோ காண்ட்ராக்ட் முடிஞ்சு போச்சுன்னா அடுத்து அவன் வேலை குடுக்குற வரைக்கும் சும்மாதான் இருக்கனும். அதிகப்படியான நாள் இழுத்துட்டு போச்சுன்னா சில பேர் சாப்பாட்டுக்கு காசு தருவாங்க. இல்லன்னா அதுவும் நாமதான் பாத்துக்கனும்.”
இதுதான் வேலையின்னு சொல்லி கூட்டிட்டு போயிட்டு வேற வேலையை கொடுத்து தரகர்கள் ஏமாத்துறாங்களா?
“அரசாங்க வேலையின்னு கூட்டிட்டு போயியா ஏமாத்துறாங்க. அப்படியெல்லாம் கிடையாதுங்க. சிங்கப்பூருல கட்டுமான நிறுவனம்தான் அதிகம். கட்டுமான பணிக்குதான் வேலைக்குன்னு கூட்டிட்டு போறாங்க அதுல இருக்குற கொத்தனார், ஆசாரி, பிளம்பிங்கு, ஒயரிங்கு, சென்ட்ரிங்கு எல்லாந்தான் அத்துபடி அதுல ஏதாவது ஒரு வேலைதான், இதுல என்ன ஏமாத்தறது.”

இவ்வளவு சிரமம் இருந்தும் ஏன் சிங்கப்பூரை நாடி போறாங்க?
“இந்த பகுதியில 90-கள்ல சிங்கப்பூர் போறது ஒரு ஃபேசனாவே இருந்துச்சு. பள்ளி இறுதியாண்டுல கோட்டை விட்டவங்க, கல்லூரி படிப்ப பாதியில விட்ட இளைஞர்கள் விவசாய வேலை பாக்காம வெட்டியா சுத்தறத தடுக்க நினைச்சுதான் சிங்கப்பூர் அனுப்புனாங்க. திரும்பி வரமுடியாமல் கஸ்டத்த உணர்வாங்கன்னு பெத்தவங்க நினச்சாங்க. பசங்களுக்கும் வெளிநாடு, விமானப் பயணம்னு ஒரு கவர்ச்சிய ஏற்படுத்துச்சுன்னு சொல்லலாம். அதனாலதான் திருவாரூரு, தஞ்சாவூரு, பட்டுக்கோட்டை ஆட்கள் அதிகம்”
சிங்கப்பூர் அனுபவத்துல எது முக்கியம்?
“ஊர்ல இருக்கும் போது சாராய வியாபாரிங்க கூட பழக்கம் இருந்தும் கூட குடிக்காமதான் இருந்தேன். அப்டிபட்ட என்னை குடிகானா ஆக்குன பெருமை சிங்கப்பூரையே சாரும்.”
சிங்கப்பூர் பற்றிய உங்கள் கருத்து என்ன?

“எந்த வளமும் இல்லாத ஒரு தீவுதான் சிங்கப்பூர். அத்தியாவசிய தேவைக்குக் கூட ஒரு பிடி தானியம் பயிரிட முடியாது. ஆனா கடந்து போகும் மந்த நாட்டவர்கள் இளைப்பாரும் ஒரு இடமா அமைச்சதுதான் அதன் சிறப்பு. அதை பயன்படுத்தி எந்த வகையில முன்னேத்திக்கலான்னு புத்திசாலித்தனமா செயல் பட்டுருக்காங்க.”
உங்களைப் போல உழைப்பாளியின் இரத்தத்தை உறிஞ்சிதானே இந்த சிறப்பெல்லாம்?
“இது ஏதோ சிங்கப்பூர்ல மட்டும் நடக்கறது மாறி பேசிரிங்க. எங்கயுமே உழைக்கிறவங்களுக்கு இதுதானே கதி.”
சிங்கப்பூர் போனதுல தங்கச்சி கல்யானம் செஞ்சிங்க வேற என்ன பொருளாதாரத்துல முன்னேற்றம்னு சொல்லுங்க?
“ஆறு லட்சம் கடன அடைச்சது போக, ஒரு ஏக்கருக்கு குறைவா நிலம் வாங்கினேன். இதையும் சேத்தா சிங்கப்பூர் போயி நான் சம்பாதிச்சது என்ன ஒரு ஏழு லட்சம் வரும். கடன் போக இந்த நிலந்தான் இப்ப மிச்சம். இதை ஊர்ல இருக்கும் போது குத்தகைக்கு எடுத்தே சம்பாதிச்சிருப்பேன். அப்டி பாத்தா சிங்கப்பூர்ல நான் அடைஞ்ச வருமானத்தையும் சந்தோசத்தையும் விட ஊருலேயே இருந்துருந்தா நல்லா சம்பாரிச்சி சிறப்பா வந்துருப்பேன். என்ன ஒன்னு, கொஞ்ச நாள் அதிகம் ஆகும் அவ்ளவுதான். எல்லா வசதியும் இருந்து மொதல் போட்டு சிங்கப்பூர் போறவங்க கொஞ்சம் காசு பாக்கலாம். வட்டிக்கி கடன்பட்டு லேபரா போயி குடும்பத்துல A to Z-வரைக்கும் நாமதான் நல்லது கெட்டது பாக்கனும்ணு சிங்கப்பூரு ஓடுனா கணக்குதான் வரும். வசதி வராது.”

நீங்க சிங்கப்பூர் போயி கடைசியில என்னதான் சம்பாதீச்சிங்க?
“இந்த கேள்வியதாங்க எங்க வீட்டுக்காரம்மா நிதமும் கேக்குது.”
– சரசம்மா
(ஊர், பெயர் அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)
_________________________________
சிங்கப்பூரில் ஓரளவு நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்பவர்களே அதன் அருமை பெருமை பற்றி அளந்து விடுகிறார்கள். அங்கே கடுமுழைப்புடன் வேலை செய்யும் தொழிலாளிகள் மீதான சுரண்ட்லை இவர்கள் வசதியாக மறைத்து விடுகிறார்கள்.
சிங்கப்பூர் சுரண்டல் என்பது ஒரு விசச்சூழல். ஒன்றில் மாட்டிக் கொண்டால் அதன் தொடர் விளைவாக முழுச்சுற்று முடித்து கையில் ஒன்றுமில்லாமல்தான் வரவேண்டும். அதற்குள் சிங்கப்பூர் பொருளாதாரம் ஒரு தொழிலாளியின் ஆகச் சிறப்பான இளைமைப் பருவ உழைப்பை திருடி விடும்.
இந்த சுரண்டலுக்கு அடிநாதமாக இருப்பது சிங்கப்பூர் பற்றிய கதைகள்தாம். அந்தக் கதைகளை நம்பி தொழிலாளிகள் கடன் வாங்கி செல்கிறார்கள். சென்ற பிறகு அந்த கனவு மறைந்து கடனை அடைப்பதற்காக கிடைக்கும் தொழிலை செய்ய வேண்டியிருக்கிறது. ஓவர்டைம் என்பது இங்கே ஒரு தொழிலாளியின் விருப்பத்திலிருந்து தீர்மானிக்கப்படுவதில்லை. முதலாளி சொன்னால் செய்ய வேண்டும். அதே போன்று வேலை இல்லை என்றால் தானே தனது செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டும். வேலை இருக்கும் போது தொழிலாளியை தங்க வைத்து, சோறு போட்டு வேலை வாங்கும் வேலையை கம்பெனியே செய்து விடும்.
இந்த மாறுபாடு ஏன்? இங்கே உதிரிப்பாட்டாளிகளை தங்க வைத்து நேரம் காலம் பார்க்காமல் வேலை வாங்கும் அதே உத்திதான் சிங்கப்பூரிலும். இன்னும் மருத்துவம், விடுமுறை, பொதுவான உரிமைகள் எதுவும் ஒரு தொழிலாளிக்கு கிடையாது. வேண்டுமென்றால் அதிக பணம் செலவழிக்க வேண்டும். இருப்பினும் சிங்கப்பூர் கம்பெனியின் நிறுவன முதலாளி மரணத்தின் போது மன்னார்குடியில் மலர் அஞ்சலி போடவில்லையா என்று சிலர் கேட்கலாம். அடிமைகளாக இருக்கும் போது ஆண்டைகளுக்கும் கொஞ்சம் மதிப்பு இருக்கத்தான் செய்யும். அது அடிமைத்தனத்திலிருந்து வரும் அவலம். அதற்காக பரிதாபப்படலாமே ஒழிய பெருமைப்படமுடியாது.
ஆகவேதான் சிங்கப்பூர் சென்று ஆறு, ஏழு வருடம் வேலை பார்த்து திரும்பும் ஒரு தொழிலாளிக்கு கடைசியில் ஏதும் மிஞ்சுவதில்லை. ஆனால் அவரிடமிருந்து எடுக்கப்பட்ட உழைப்பை வைத்து சிங்கப்பூர் முதலாளிகள் தங்களது வங்கி கணக்கை கூட்டிக் கொள்வார்கள்.
வீட்டு வேலை செய்யும் பெண்கள், தினக்கூலிகளாய் வாழும் தொழிலாளிகளின் கதைகளை இது வரை பார்த்து விட்டோம். அடுத்த பகுதியில் சிங்கப்பூரில் கொடிகட்டும் விபச்சாரம், சூதாட்டம், மற்றும் தொழிலாளிகளின் சமூக வாழ்க்கை குறித்து பார்க்கலாம்.
– வினவு
இப்படி கடன் பட்டு வெளிநாடு சென்று உழைத்து பணம் சேர்ப்பதற்கு பதில் வினவில் வேலை செய்திருந்தாலே சகல சவ்ரியங்களுடனும் குடும்பத்துடன் குதுகலமாக இருந்துகொண்டு அக்கா தங்கைகளை கரை ஏற்றி காணி நிலமும் வாங்கி இருக்கலாம் என தனபால்கள் புரிந்துகொள்ளும் காலம் எக்காலமோ ?
ஒருவேளை அப்படி வினவில் இணைந்து வாழ்ந்தவர்களின் கட்டுரைகள் அடுத்தடுத்து வந்தால் தனபால்கள் எதற்கு வெளிநாட்டுக்கு போகப்போகிறார்கள்?வினவு அலுவலகத்திற்கு முன்னாள் அல்லவா குவிந்திருபார்கள்?
ஒருவேளை சம்பந்தப்பட்டவர்களுக்கு வருமான வரி துறையினரால் தொல்லைகள் வரக்கூடும்என பாதுகாப்பு கருதி அத்தகையோர் வாழ்கையை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்களோ?
மேலும் இப்படி வெளிநாடு சென்று உழைத்து கஷ்டப்படுபவர்களை மேலும் கஷ்டப்படுத்த விரும்பாமல் வெளிநாட்டில் இருந்து தரும் நன்கொடைகளை வினவு ஏற்றுகொள்ளாமல் இருக்கலாமே?
ஏம்ணே சுத்தி வளைச்சு வாரீங்க! விபச்சாரம், போதை மருந்து, ரவுடியிசம், ஃபோர்ஜரி, ஃபிராடுன்னு ஏகப்பட்ட தொழில்ல இறங்குனா மாளிகை என்ன ஒரு ஊரையே விலைக்கு வாங்கலாம்ல. சிங்கப்பூர்ல் கூட விபச்சாரத்துக்கு ஏகப்பட்ட டிமாண்டாம்ல! தொழில மத்தவங்களுக்கும் சொல்லிக்க கொடுக்கலாம்ணே!
இந்த கொடுமைகளுக்கு என்றுதான் முடிவோ?
எல்லா வளமும் இருந்தும் சோவியத்தில், சீனாவில் மார்க்சியவாதிகள் கிழிச்சது தெரியாதா?? ஒரு வளமும் இல்லாமல் எப்படி சாதித்தார்கள் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இதில் இந்தியாவில் புரட்சி வேறா?? உலகில் உள்ள மற்ற நாடுகளை விட , சட்டத்தின் ஆட்சி இங்கு வெளிப்படையாக உள்ளது.
சிங்கப்பூர்ல தொழிலாளிகளுக்கு குறைந்த பட்ச சம்பளத்துக்கு சட்டம் கிடையாது. முதலாளிக்கு குறைவான வரி எப்போதும் உண்டு.
இங்கு பேட்டியளித்த முன்னால் சிங்கப்பூர் ஊழியர் உண்மையை பேசியிருக்கிறார்.அதனை நேர்மையாக கட்டுரையாளரும் வெளிப்படுத்தியிருக்கிறார்.இருவருக்குமே பாராட்டுக்கள்.அந்த ஊழியர் மிகச்சரியான ஒரு வகைமாதிரி என்பதால் அவரது உயர்வை அல்லது உயரமுடியாத சூழலை அவரது இந்த பேட்டியிலிருந்தே பரிசீலிக்கலாம் . அந்த நண்பரை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் போது நம் தமிழகத்திலிருந்து அங்கு செல்லும் பலருடைய பொதுவான பல ஒற்றுமைகள் இருப்பதால் அது அவரை மட்டுமே குறை காணுகின்ற செயலாக அவர் கருதிக்கொள்ள வேண்டாம் என அவரை வேண்டுகிறேன்.
அந்த ஊழியர் ஒரு ஒரு பட்டதாரி,கூடுதலாக தொழில் படிப்பின் அவசியம் அறிந்து ஒரு குளிர்சாதன பழுது பார்ப்பு பட்டயம் பெற்றிருக்கிறார்.மேலும் சில பட்டயப் படிப்பும் பயின்றுள்ளார்.இங்கு கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் அவர் படித்த பட்டப் படிப்பிற்கு ஏற்ற வேலையை தேடும் முனைப்பு அவருக்கு இருக்கவில்லை.அவரே சொல்லுவது போல “படிச்சிட்டு நல்ல “அட்மிநி ஸ்ட்ரேசன்”(திருத்தம் என்னது)லெவல்ல வேலை பாத்தா மாதச் சம்பளம் மதிப்பு எல்லாம் இருக்கும். தொழிலாளியா போனா எல்லா துன்பமும் பட்டாகணும்”.ஆக அலுவலக பணிக்கான நோக்கத்தில் அதற்கான தகுதியோடு அவர் வெளிநாடு செல்லவில்லை.சில பட்டயங்கள் படித்திருக்கிறார் ஆனால் அதில் அவர் அனுபவம் பெற்றிருக்கவில்லை.ஏதோ ஒரு வேலையை எதிர்பார்த்துதான் அவர் சென்றிருக்கிறார். இது தான் முழுக்க முழுக்க
இந்த நிலையில் அங்கு வருபவர்கள் நிலை என்னவாக இருக்க முடியும்? இன்னொரு செய்தி 3வருடம் கலை மற்றும் வணிகவியல் படித்தவர்களுக்கு மேற்படிப்போ குறிப்பிட்ட ஒரு துறை சார் அனுபவமோ இல்லாமல் எந்த வேலையும் இங்கு கிடையாது எனவே 5வருடம் பொறியியல் அல்லது 3 வருடம் பொறியியல் டிப்ளமோ படித்து விட்டு உடனேயே சிங்கப்பூர் வர வேண்டுமென ஏஜெண்டை பார்க்க செல்வார்கள். சிங்கப்பூர் சட்டப்படி ஒருவர் பட்டம் அல்லது பட்டய படிப்பு முடித்தபின் குறைந்தது 2 வருடம் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.அப்போது தான் அவரது படிப்பிற்கு ஏற்ற s பாஸ் அல்லது எம்பிளாய்மென்ட் பாஸ் பெற முடியும்.ஆனால் நம் நண்பர் ஏஜென்டிடம் எவ்வளவு செலவுன்னாலும் பரவாயில்லை உடனே சிங்கப்பூர் போக வேண்டும் என்பார்.அந்த முகவர் நேர்மையானவராக இருந்தால் முடியாது என்று சொல்லி விடுவார்.பிறகென்ன நண்பர் வேறொரு ‘ நல்ல’ முகவரை போய் பார்ப்பார்.அந்த ‘நல்ல’ முகவர் எந்த வேலைன்னாலும் பார்ப்பிங்களா என்று கேட்பார்.நண்பர் எதற்கும் அஞ்சாமல் “பொழைக்க போற நாட்டிலே என்ன வேலைன்னா என்ன சார்” என்று தானாகவே ஒரு தத்துவத்தை கூறி விட்டு முகவர் விரித்த வலையில் விழுவார்.முகவரும் உழைப்பின் அருமையை கூறி ஒரே வருடத்தில் படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு மாறிக் கொள்ளலாம் என்று பொய்யான ஒரு தேறுதலையும் சொல்லுவார். முகவர் இவர் படித்த பெற்ற எல்லா காகிதங்களையும்( நகல்களைத்தான்) தூக்கி குப்பையில் போட்டு விட்டு வொர்க் பெர்மிட்டுக்கு விண்ணப்பிக்க செய்வார்.நம்ம நண்பர் தனக்கு வேலை கிடைத்து விசா வந்து டிக்கெட் எடுத்து விமானம் ஏறுகின்ற முதல் நாள் வரை இது பற்றியெல்லாம் யாரிடமும் மூச்சு காட்டாமல் (பொறமை புடிச்ச பயலுவலுக்கு சொல்லக் கூடாது என்று) நமுட்டு சிரிப்புடன் நடமாடுவார். முதல் நாள் சொல்லி விட்டு அடுத்தநாள் கிளம்ப போகிற நண்பருக்கு கம்பெனி நல்ல கம்பெனியா நெட்ல போட்டு பார்த்தியா சம்பளம் பற்றி ஒப்பந்தம் எல்லாம் பார்த்தாயா என்று கேட்பவர்களுக்கு ஏஜென்ட் தங்கமான மனுசன்னு ஒரே வரி பதில் தான்.அல்லது அண்ணன் இருக்காப்பல அவரு நல்ல கம்பெனின்னு சொன்னாரு என்கிற பதில் தான் வரும்.அந்த அண்ணனுக்கு ‘சிங்கப்பூர் யதார்த்தத்தில்’ புரிந்து கொண்ட வகையில் நல்ல கம்பெனியாகத்தான் தெரியும்.இப்படியெல்லாம் சாகச பயணம் மேற்கொண்டு சென்னை ஏர்போர்ட் வரை 2 கார் வழியனுப்ப, சிங்கப்பூர் வந்திறங்கும் நம் நண்பர், அங்கு ஊழியர்களாகவும் பகுதி நேர கங்காநிகலாகவும் உள்ளவர்கள் வந்து திறந்த வெளி வேனில் அழைத்து செல்லும் போது தான் முதலில் சற்று சூடு உரைக்கும்.அதன் பின் எல்லாமே எதிர்பராததுதான் நடக்கும்.ஏனென்றால் இது எதையும் சற்று தெளிவாக முன்கூட்டியே அறிய வாய்ப்பிருந்தும் தமது ரகசியம் பேணும் சாதுர்யத்தால் அறிந்திருக்க மாட்டார்கள்.இன்னும் கூட நிறைய எழுதலாம்.சிங்கப்பூர் ‘சுரண்டல்’ என்பது ஏதோ எல்லா விபரங்களும் மறைக்கப்பட்டு பொறி வைத்து பிடிக்கப்படுகிறார்கள் என்பது போல சொல்வது உண்மையல்ல .விட்டில் பூச்சிகளாக தாமே போய் விழுகிறார்கள் என்பதற்காக இதனை சொல்கிறேன்.
Whatever u said was right. But the fact is that they are not aware of the real situation. Even though if we say anything, they will not listen to us. they will see only money.
One of friend used to go to abroad (Not Singapore). the agent took 2 lakhs from Him in Chennai & sent him (by Train – Unreserved coach) to Delhi saying that u will get direct flight in Delhi only. When he went to delhi, one more agent invited him in delhi & was demanding another 1 Lakh money. When he said I have already paid 2 lakhs, the Delhi agent told him that “that 2 lakhs form the Chennai agent & for me you have to give me additional 1 Lakh”. he didn’t pay it. The delhi agent kept him in a very small room for 25 days & didn’t give enough money for daily food. atlast I sent 2,000 rupees to Him by one of my friend in Delhi & then He had returned to Chennai.
At last what happened is his parents were scolding like anything. they said we spent 2 lakhs rupees & why did u spoil it.
Still now they have anger on me, But not on the Chennai & delhi agents….
This is True…….
சிங்கப்பூர்ல எச்சி துப்புறதக்கூட கண்டுபிடிச்சு தண்டிக்கிற அரசாங்கம், விட்டில் பூச்சியாக சிக்குற தொழிலாளிங்கள காப்பாத்தாம, நல்லா சுரண்டுங்கன்னு கண்டுக்காம இருக்குறதுக்கு என்ன சார் காரணம்?
குடும்பத்திற்காக(தங்கச்சிக்காக)சிங்கப்பூருக்கு மட்டுமல்ல, அமெரிக்காவிற்கும் ப்ளைட் ஏறிய அண்ணன் களும் உண்டு நமது சமுகத்தில்.
//வீட்டு வேலை செய்யும் பெண்கள், தினக்கூலிகளாய் வாழும் தொழிலாளிகளின் கதைகளை இது வரை பார்த்து விட்டோம். அடுத்த பகுதியில் சிங்கப்பூரில் கொடிகட்டும் விபச்சாரம், சூதாட்டம், மற்றும் தொழிலாளிகளின் சமூக வாழ்க்கை குறித்து பார்க்கலாம்.
//
வெள்ளை சட்டையில் கரும்புள்ளியை பூதகண்ணாடி கொண்டு தேடி தேடி , பாருங்க பாருங்க இது கருப்பு சட்டை தான் என்பதற்கு ஆதாரம் என்று கூறுவதற்கு பதில்
வெள்ளை சட்டை எப்படி இருக்கும் பாருங்க என்று காடிநீங்கன்னா நாங்களும் தெருஞ்சுகுறோம்
காபிலிசம் லவ் ஸ்டோரி ராமா, எல்லா நாட்டுலயும் கஷ்டப்படுற தொழிலாளி கருப்பு புள்ளியாவும், உக்காந்து துன்னுற முதலாளி வர்க்கம், அப்பால அந்த வர்க்கத்தோட கால நக்குற லவ் ஸ்டோரி வர்க்கம் வெள்ளையாவும்தான் தெரியும்.
திரு.ராமன் உங்களது கருத்தையே நானும் வழிமொழிகிரேன்.
இது நரகம்,அது நரகம் என்று சொல்லிகொண்டிருப்பதர்க்கு பதிலாக எது சொர்க்கம் என்று காட்டிவிட்டால் பிறகு யாரும் அழைக்காமலேயே அனைவரும் சொர்கத்திற்கு வந்துவிடுவார்கள் தானே?
சொர்கத்தை வரையறுக்கும் வகையில் மதவாதிகளின் கருத்தைத்தான் வினவும் பின்பற்றிகொண்டிருக்கிறது.
@ Ram and Velumani Saravanakumar, Capitalists like you are justifying dog like system of this Modern world. Instead of blaming Aunthor for showing truth, why you dont agree that Capitalism is bane of Human society. Do you think Humans are God of World? You are crazier people
@ Ananth then what is your suggestion? Is Communism a boon to our society? Show one country which follows proper communism or a country that prospers with communist ideologies. Then we can as well introspect that country with a microscope like vinavu does on Singapore.
கடந்த நூறு ஆண்டுகளில் சோசலிசம் பூத்துக்குலுங்கும் ஏதாவது சொர்க்கத்தை இந்த பூமியில் எங்கேயாவது உருவாகியிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள். அப்படியே இருந்தாலும் சிங்கப்பூரில் இருப்பதை விட ஆயிரம் குறைகள் அதிகம் இருக்கும்.
சொர்க்கத்த படைக்குற சோசலிசத்துக்கு கிடைச்ச பின்னடைவ கேலி பண்ணி, சிங்கப்பூர் மாதிரி நரகத்த படைச்சுட்டு அதுதான் சொர்க்கம்ணு உங்கள மாதிரி கோயிந்துகளை நம்ப வச்சு கொண்டாட வெக்கிறான் பாரு அங்க நிக்கிறான் சிங்கப்பூர் கவர்ன்மெண்ட், வெல்டன் பீரியசாமி
These people have formed “Singapore Appreciation Club”But,till date no one club member could tell why migrant labourers are transported in open lorries like cattle.Only solace is that Rajan admits that sort of transport in his latest comment.
Sooriyan,
What about our country?
Even in our country the labourers are taken to work locations by open lorries.
Every country is not perfect. Every place is not ideal.
There is always room for improvements.
Overall, when you compare the standard of living of all citizens, Singapore is definitely better placed than us. So, before criticizing others we need to introspect and see how we stand, where we stand.
Vinavu friends are always talking about an Ideal world, Ideal system.
Unfortunately, the world is not perfect. It is not ideal. There are imperfections.
Instead of dreaming for an Ideal world, let us make some incremental changes,
Let us treat all people equally.
Let the labourers get their salaries proportionate to their efforts.
Let the workers act responsibly.
Let peace prevail.
One step at a time, One by One, Bit by Bit, Changes can happen.
If an Ideal world is not possible, atleast, we can try to make it a better world than it is present now.
கற்றது கையளவு அவர்கள் சூரியனுக்கு எழுதியது முழுக்கவும் முதலைக்கண்ணிரே. முன்னேற்றங்கள் சிறுகச்சிறுக நடக்கவேண்டும் என்று கதறுகிற இந்த மாமனிதர் தன் கம்பெனியில் இன்னும் தொழிலாளர் நலச்சட்டங்களையே அமல்படுத்தவில்லை. தொழிற்சங்கம் அமைப்பது என்னவாயிற்று என்ற கேள்விக்கு இன்றுவரைக்கும் அன்னாரடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை என்றால் இவரது நாடகத்தின் தன்மை எந்தளவுக்கு என்று வாசகர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இந்த இலட்சணத்தில் தான் அன்னார் அவர்கள் “Let us treat all people equally.
Let the labourers get their salaries proportionate to their efforts.
Let the workers act responsibly.
Let peace prevail.” என்று கதையளக்கிறார்.
ஒரு லயன்ஸ் கிளப், லேடிஸ் கிளப், மனமகிழ் மன்றம் அளவிலான பொழுதுபோக்குகள் தான் அன்னார் முன்வைக்கும் சமூக மாற்றங்கள். ஆற்றுமணல் கொள்ளைக்கும் தண்ணீர் சுரண்டலுக்கும் அன்னார் அவர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தை நாட வேண்டும் என்று சு.சாமி போல பேசியவர் தான் இந்த கற்றது கையளவு.
ஆனால் மூலதனத்தையும் முதலாளியையும் ஒழிக்காமல் தொழிலாளிகளுக்கு விடிவு காலம் ஏது? இனியும் இந்த யோக்கியர் சீர்திருத்தம் பற்றி பேசுவாரேயானால் தொழிற்சங்கத்திலிருந்து ஆரம்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தென்றல்,
Let the workers act responsibly. என்று எழுத்த்தெரிந்த இந்த யோக்கியர் Employers க்கென்று எதுவுமே எழுதவில்லை பாருங்கள். இப்படியும் சில மனிதர்கள்!
PK,
//Let us treat all people equally.
Let the labourers get their salaries proportionate to their efforts.
Let the workers act responsibly.
Let peace prevail.//
இது தான் நான் எழுதியது.
எழுதிய நான்கு வரிகளில் தொழிலாளிகள் பொறுப்பாக செயல்பட வேண்டும் என்று சொன்னதை மட்டும் மறைந்த முன்னாள் அமைச்சர் SDS அவர்கள் வேனில் தொங்கியது போல தொங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். மற்ற மூன்று வரிகளை படிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்.
நான் ஆரம்பத்தில் இருந்து பல்வேறு பதிவுகளில் சொல்வதை எல்லாம் விட்டு விடுங்கள்.
எத்தனை பதிவுகளில் எத்தனை பின்னூட்டங்களில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, நல்ல வசதிகள் செய்து தர வேண்டும் என்று எத்தனையோ முறை சொல்லி வருகிறேன். ஒன்று நீங்கள் வினவுக்கு புதிதாக வந்திருக்க வேண்டும், இல்லை என்றால் கண்ணை மூடிக்கொண்டு நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவரை போல இருக்க வேண்டும்.
கொஞ்சம் கண்ணை திறந்து உங்களை சுற்றி என்ன நடக்கிறது, உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் என்ன நடக்கிறது என்று சுற்றி பாருங்கள்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
சிவப்பு நிற கண்ணாடியை அணிந்து கொண்டு பார்த்தால் பார்ப்பது அனைத்தும் சிவப்பாகவே தோன்றும். கம்மியுநிசத்தை பற்றி கேள்வி எழுப்பினால் உடனே அவரை முதலாளித்துவ அடிவருடி என்று ஏசாமல் கொஞ்சம் நிதானமாக யோசித்து பின் ஒரு முடிவுக்கு வாருங்கள்.
கம்மியுநிசத்தை கேள்வி கேட்பதாலேயே ஒருவர் அயோக்கியராக இருப்பார் என்று ஏன் ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்? உங்கள் சித்தாந்தத்தின் மேல் உங்களுக்கு அளவுக்கு அதிகமான பற்று இருக்கட்டும். அது பற்றி கேள்வி எழுப்புபவரை அயோக்கிய சிகாமணி என்று நீங்கள் நினைத்தால் அது உங்களது முதிர்ச்சியற்ற நிலையை தான் காட்டுகிறது.
எந்த ஒரு நாணயத்துக்கும் மறுபக்கம் என்ற ஒன்று உண்டு.
உங்கள் சித்தாந்தத்தில் குறைகளே இல்லை என்று கூறுவது இந்த மதவாதிகள் சொல்வார்களே, எங்கள் மதம் மட்டும் தான் பெரியது. எங்கள் கடவுள் மட்டும் தான் உண்மையான கடவுள். மற்ற கடவுள்கள் எல்லாம் சாத்தானின் அவதாரம் என்று கூறுவார்களே, அதைப்போல உள்ளது.
உலகில் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உண்டு.
இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரே தீர்வு என்றிராமல் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளும் உண்டு.
கம்மியுனிசம் மட்டும் தான் சர்வேரோக நிவாரணி என்று காம்றேடுகளான நீங்கள் கருதுகிறீர்கள்.
அது உங்கள் கருத்து.
முதலாளித்துவம் மட்டும் தான் தீர்வு என்று கார்பெரேட்டுகள் கருதுகிறார்கள்.
அது முதலாளிகளின் கருத்து.
உலகம் கருப்பு வெள்ளை இல்லை. மற்ற நிறங்களும் உள்ளது.
கட்டுப்பாடில்லாத பேராசை கொண்ட முழு முதலாளித்துவத்துக்கும், மக்களின் சுதந்திர உணர்வுக்கு பூட்டு போடும் சர்வாதிகார கம்மியுநிசத்திற்கும் இடையில் எங்களை போன்ற பொதுமக்களும் இருக்கிறார்கள். இந்த இரண்டு துருவங்களுக்கு இடையேயும் வழிகள் உண்டு. அது துருவத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் அறிய மாட்டார்கள். துருவங்களில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்களை சுற்றி இருப்பது மட்டும் தான் உலகம் என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். கம்மியுநிசவாதிகளே, முதலாளித்துவ வாதிகளே, உங்கள் துருவங்களை விட்டு வெளியே வாருங்கள், பூமத்திய ரேகை பக்கம் கொஞ்சம் எட்டி பாருங்கள். உலகம் மிகப்பெரிது, உங்கள் கருத்து மட்டும் தான் உண்மை, மாற்று கருத்து இருக்கவே கூடாது என்ற முதிர்ச்சியற்ற நிலையில் இருந்து கொஞ்சம் இருபக்கம் இருக்கும் நல்லவை, கெட்டவை இரண்டையும் பகுத்தறியும் திறனை வளர்க்க பாருங்கள் pk.
க கை,
சுட்டிக்காட்டியும் புரியவில்லை. பத்தி பத்தியாக பிரசங்கம் வேறு. Please spare us your lessons. I am reading these for nearly 3 years.
இந்த 4 வரிகளில் முதலில் வரியில் us என்றும் அடுத்த வரியில் labourers என்றும் அடுத்த வரியில் workers என்றும் எழுதியிருக்கிறீர்கள்.
முதலில் வரும் us யார்.
முதலாளிகள் தகுந்த சம்பளத்தை கொடுக்காமல் Labourers எப்படி வேலைக்குத்தகுந்த சம்பளத்தை பெறுவார்கள்.
தொழிலாளர்களுக்கு labourers என்றும் workers என்றும் எழுதத்தெரிந்த உங்களுக்கு Employers என்று எழுதாதது நாணயமற்ற செயல் என்பது விளங்காதது ஏன்.
தொழிலாளர்கள் மட்டும் தான் பொறுப்பாக நடந்து கொள்ளவேண்டுமா.
முதலாளிகள் ஏற்கனவே பொறுப்பாகத்தான் நடந்து கொள்கிறார்களா.
இந்த லட்சணத்தில் லிட்டர் கணக்காக முதலைக்கண்ணீர் வேறு. குஷ்டம்டா.
This is enough, This critic is enough for Mr. KK 🙂
//இந்த லட்சணத்தில் லிட்டர் கணக்காக முதலைக்கண்ணீர் வேறு. குஷ்டம்டா.//
pk அவர்களுக்கு இன்னும் பொறுமையாக, விளக்கமாக சொல்கிறேன்:
//Let the labourers get their salaries proportionate to their efforts.//
இது முதலாளிகளுக்கானது.
Employers என்று அதில் பதிவிடவில்லையே ஒழிய அதை படிக்கும் அனைவரும் அது முதலாளிகளுக்கான வரி என்பது தெளிவாகவே விளங்கும். உங்களுக்கு விளங்கவில்லை எனில் இனி இப்படி எழுதுகிறேன்.
Let Employers pay the labourers salaries proportionate to their efforts.
//Let the workers act responsibly.//
இது தொழிலாளிகளுக்கனாது.
//Let us treat all people equally.//
இது அனைவருக்குமானது – முதலாளிகள், தொழிலாளிகள், மதம், சாதி, எல்லா வகை மனிதர்களுக்கும் பொருந்தும்.
// Let peace prevail.//
இதுவும் அனைவருக்கும் பொருந்தும்.
//Vinavu friends are always talking about an Ideal world, Ideal system.
Unfortunately, the world is not perfect. It is not ideal. There are imperfections.
Instead of dreaming for an Ideal world, let us make some incremental changes,//
இது வினவில் இப்போது பின்னூட்டமிடும் pk, தென்றல், தமிழ், sooriyan, போன்ற நண்பர்களுக்கு. (சூரியன் பெயரை தமிழில் எழுதினால் அவர் கோபித்து கொள்வார், சூரியன், உங்களுக்கு தமிழே வராதா 🙂 )
அம்மா எப்ப தாலியறுக்கும்ணு ஒரு குழந்தை கேட்பதை அயோக்கியத்தனம்ணு எடுத்துக்க முடியாட்டாலும் அது அப்பாவித்தனம்ணு ஒத்துக்காம அறிவுன்னு வாதாடுனா எப்படி சார்?
இப்ப சொல்லுங்க… கம்யூனிசத்த கேள்வி கேக்குற நீங்க அறிவா இல்ல அப்பாவியா?
தென்றல்,
1. முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நான் அன்று குறிப்பிட்ட அந்த கம்பெனியில் உள்ள ஆயிரக்ககணக்கான தொழிலாளிகளில் நானும் ஒருவனாக இருந்தேன். முதலாளி அல்ல. அந்த கம்பெனி நட்டமடைந்து மூடப்பட்டது. இன்று வரையும் நான் தொழிலாளி தான். ஆனால் சிறுக சிறுக சேர்த்து ஒரு நாள் ஒரு தொழிலை தொடங்க முயற்சிப்பேன். தாங்கள் சொல்லும் கருத்துக்களில் சிலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், பெரும்பாலும் உழைப்புக்கேற்ற ஊதியம், திறமைக்கு ஏற்ற முன்னேற்றம் இவற்றில் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்.
2. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யோசிக்காமல் கொஞ்சம் பொறுமையாக நான் சொன்னதை யோசித்து பாருங்கள். எரிவதை நீக்கினால் கொதிக்கிறது அடங்கும் என்பார்கள். மணல் என்ற ஒன்றின் டிமாண்ட் மிக அதிகமாக இருப்பதால் தான் மணல் கொள்ளையர்கள் நம் ஆறுகளை மலடாக்கி வருகிறார்கள்.ஏன் மணல் என்ற பொருளின் தேவை இல்லை என்ற நிலை வந்தால் எப்படி இருக்கும். நான் சொன்னது நடைமுறையில் இல்லாத ஒன்றும் அல்ல. மீண்டும் சொல்கிறேன். LGS Construction technology என்று கூகுளில் தேடிப்பாருங்கள். மிக குறைந்த செலவில், குறைந்த நேரத்தில், தரமான கட்டிடங்களை ஸ்டீல் மற்றும் சிமன்ட் போர்டு, ஜிப்சம் போர்டு, போன்ற பொருட்களை கொண்டு மணலே இல்லாமலும் வீடு கட்டலாம். இன்னொரு முக்கிய விடயம், இந்த வகை கட்டிடங்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. கான்கிரீட் தேவையும் மிக மிக குறைவு. ஒரு பிரச்சினைக்கு தீர்வு என்பது நீங்கள் யோசிக்கும் தீர்வாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே. மாற்று தீர்வு ஒன்றும் இருக்கலாம் அல்லவா. அதைத்தான் நான் பரிந்துரைத்தேன். பெரியாரும் எரிகிறதை நீக்கினால் கொதிப்பது அடங்கும் என்ற இந்த வழிமுறையை தான் பெரியார் அவர்களும் பின்பற்றினார். கடவுள் என்ற ஒரு நம்பிக்கை இருப்பதால் தானே அந்த கடவுள் பெயரை வைத்து ஏமாற்றுகிறார்கள், சாதிக்கொடுமைகளை நடத்துகிறார்கள். அந்த கடவுள் என்ற ஒரு நம்பிக்கையே இல்லை என்றால் பின் கடவுள் பெயரைக்கொண்டு ஏமாற்ற முடியாதல்லவா. அதே போல தான் மணல் என்ற ஒன்றின் தேவை மிக மிக அதிகமாக இருப்பதால் மணல் கொள்ளையர்கள் அளவுக்கதிகம் ஆட்டம் போடுகிறார்கள். அந்த மணலே இல்லாமலும் வீடு கட்டலாம். இதில் தான் அறிவியலை, தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று சொன்னேன்.
3.முதலைக்கண்ணீர்,நாடகத்தன்மை, யோக்கியர் என்றெல்லாம் சீண்டுகிறீர்கள். சரி, எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு விட்டு விடுவேன். ஆனால் சு.சாமி போல பேசியவன் என்று சொன்னீர்களே, அதைத்தான் தாங்கவே முடியவில்லை. அய்யகோ என் செய்வேன் 🙂
கற்றது கையளவு அவர்களே!
குறிப்பிட்ட அந்தக் கம்பெனியில் தாங்களும் ஒரு தொழிலாளி என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. உங்களது வாக்குமூலத்தில் தொழிலாளர்களின் மனதிற்கு ஏற்ப, கனிவுடன் வேலை வாங்கும் மேலாளர் என்றே குறிப்பிட்டிருந்தீர்கள். எங்களது மொழியில் இதற்கு கங்காணி என்று பெயர். இது குறித்த உரையாடலை தாங்கள் ஒன்றும் மறந்துவிடவில்லையே!
அந்தக் கம்பெனி நட்டமடைந்து மூடப்பட்டது என்று கேட்கிற பொழுது கனிவாகப்பேசி வேலை வாங்கத் தெரிந்தவர் தன் தலைமைக்கு இலாபத்தை எவ்வாறெல்லாம் பிழிந்து கொடுத்திருப்பார்! இன்றைக்கு நட்டம் என்கிறாரே நட்டம் யாருக்கு தலைமைக்கா? தொழிலாளிக்கா? அல்லது இடையில் தரகு வேலை பார்த்த மேலாளர்களுக்கா? ஒரு சிங்கப்பூர் ஏஜண்டைப்போல அல்லவா இருக்கிறது உங்களது மொழி!
1. “தாங்கள் சொல்லும் கருத்துக்களில் சிலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், பெரும்பாலும் உழைப்புக்கேற்ற ஊதியம், திறமைக்கு ஏற்ற முன்னேற்றம் இவற்றில் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்.”
மேற்கண்ட இந்தக் கருத்தும் முழுக்கவும் நாடகமே! ஒரு வரியில் சொல்லுங்களேன். தொழிலாளர் நலச்சட்டங்களையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையையும் அமல்படுத்துவேன் என்று! இதைவிடுத்து தங்களுக்கு சம்பந்தமில்லாத முழுநம்பிக்கையை வெளிப்படுத்தினால் தொழிலாளர்கள் மீது இருக்கிற வெறுப்புணர்வும் மனவக்கிரமும் தெரியாமல் போய்விடுமா என்ன?
தாங்கள் தங்களது அயர்லாந்து நண்பரின் வாக்குமூலத்தில் என்ன சொல்லியிருந்தீர்கள்? அங்கெல்லாம் தொழிலாளிகள் நன்றாக இருக்கிறார்கள். சீனாவில் அப்படியா என்று முதலாளித்துவ சீனாவை கம்யுனிச நாடு என்று நினைத்துக்கொண்டு அறிவாளித்தனமாக கேள்வி ஒன்றை எழுப்பியது ஞாபகம் இருக்கிறதா? தொழிலாளர் நலன் குறித்த கரிசனத்தைத் தாங்கள் அக்கணம் வெளிப்படுத்தியிருந்தீர்கள். இங்கே அதியமான் உங்களது கருத்தை பொய்யாக்கும் விதத்தில் சீன முதலாளித்துவம் சிறப்பானது என்று காத்திரமான பின்னூட்டம் ஒன்றை இட்டிருக்கிறார். சந்தர்ப்பவாதியான தங்களால் இதுகுறித்து ஏனோ உரையாற்ற முடியவில்லை! என்னிடம் சொல்லியது போன்று அயர்லாந்து ஆட்டையில் வரக்காணோமோ! சரி அதை விடுங்கள்.
ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு அயர்லாந்து போன்று இறையாண்மை என்று ஏதும் கிடையாதா? இங்கெல்லாம் தாங்கள் அயர்லாந்திற்கு சொன்ன தொழிலாளர் நலச்சட்டங்களோ தொழிற்சங்கமுமோ இருக்கமுடியாதா?
இதை வலியுறுத்த உங்களுக்கு துப்பில்லையென்றால் இந்த நாட்டில் தொழிலாளர் மீதான சுரண்டல் எந்தளவுக்கு இருக்கும் என்பதும் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான சட்டங்கள் மலம் துடைத்த காகிதமாக நினைக்கும் உங்களைப்போன்ற மேட்டுக்குடிகளின் மனவக்கிரமும் எவ்வளவு பருண்மையானதாக இருக்கும் என்பதை அம்பலப்படுத்துகிறதல்லவா தங்களின் மறுமொழி! பிறகு ஏன் இத்துணை பாசாங்கு?
தென்றல் அவர்களே,
தொழிலாளர் நலன் பற்றிய முழு சட்டங்கள் எனக்கு தெரியாது. தொழிலாளர் நல சட்டம் பற்றிய முழு விவரம் எனக்கு மட்டுமல்ல நம் நாட்டில் தொண்ணூறு விழுக்காடு மக்களுக்கு தெரியாது தான். எனக்கு தெரிந்த வரை அவர்களுக்கு pf, esi, பணியிடத்தில் உள்ள பாதுகாப்பு நலன் (Health and Safety procedures), பணியாளர்களுக்கு பணியில் ஏதாவது காயமோ அசம்பாவிதமோ ஏற்பட்டால் அவர்களுக்கு இன்சூரன்சு வசதி இவை போன்ற வசதிகள் அந்த நிறுவனத்தில் கொடுக்கப்பட்டன. வேலையை விட்டு அவர்களாகவே நீக்கினால் மூன்று மாத சம்பளம் கொடுக்கப்படும். செய்யும் வேலையை திறமையாக செய்து நிறுவனத்திற்கு அதிக இலாபம் கொண்டு வரும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
மற்றபடி முழு தொழிலாளர் நல சட்டங்கள் பற்றி எனக்கு தெரியாது, அங்கு வேலை செய்தவர்களில், மனிதவளத்துரையினர் தவிர ஏனையோருக்கு முழு சட்டங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முழு தொழிலாளர் நல சட்டங்கள் அனைத்தும் காப்பாற்ற படுகிறதா என்று அறியும் நிலையில் அங்கு நாங்கள் இல்லை. அந்த சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரமும் எனக்கு இல்லை.
கற்றது கையளவு அவர்களே!
\\ முதலைக்கண்ணீர்,நாடகத்தன்மை, யோக்கியர் என்றெல்லாம் சீண்டுகிறீர்கள். சரி, எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு விட்டு விடுவேன். ஆனால் சு.சாமி போல பேசியவன் என்று சொன்னீர்களே, அதைத்தான் தாங்கவே முடியவில்லை. அய்யகோ என் செய்வேன் \\
1. என் செய்வேன் என்று கதறுவதற்கு முன் சு.சாமி தாங்கள் சொன்னதைத் தான் சொன்னார் என்பதை அறிந்திருக்க வேண்டாவா?
2. ஏன் தண்ணீரையும் மணலையும் சுரண்டுபவனுக்கே தாங்கள் சொல்லும் ஐடியா தெரியவில்லை? ஏன் போராடுகிற மக்களுக்கு எதிராக முதலாளிகளுக்கு இப்படி விளக்கு பிடிக்கிறீர்கள்?
3. சான்றாக மேல் நிலை வல்லரசுகள், தங்களது நாட்டில் தொழிற்சாலை அமைப்பதற்கு நீர் மற்றும் இயற்கை வளங்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிற அதே நேரம், இந்தியா போன்ற நாடுகளை வரைமுறையின்றி சுரண்டலாம் என்றிருக்கும் பொழுது, மணற்கொள்ளைக்கு எதிராக மக்கள் போராடினால் மணல் இல்லாமல் வீடுகட்டுவது எப்படி என்றா முதலாளிக்கு வகுப்பெடுப்பீர்கள்? என்ன ஒர் அயோக்கியத்தனம் இது! தெரிந்தே தான் வாழ்கிற சமூகத்திற்கு துரோகமிழைக்கின்ற மேட்டுக்குடியின் மனவக்கிரமின்றி இது வேறென்ன?
4. இது போதாது என்று எறிகிற கொள்ளியை பிடுங்கினால் பிரச்சனை தணியும் என்று புளகாங்கிதம் வேறு! உங்களது ஐடியாபடி நுகர்வுக்கலாச்சாரத்தால் நிகழ்த்தப்படும் பாலியல் வண்புணர்வு, பலாத்காரம் போன்ற கொடுஞ்செயல்களுக்கு எதிராக அறிவியல் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து வீதி தோறும் விபச்சார விடுதிகளை திறந்துவிட்டால் நமது சகோதரிகளின் மீது வன் கொடுமை நிகழ்த்தப்படாது என்றும் அதற்காக இவர்கள் அர்த்தமற்று நுகர்வுக் கலாச்சாரத்தை எதிர்த்து போராட வேண்டாமென்றும் சொல்கிறது உங்களது நியாயவாதம்! அப்படித்தானே? இது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல் அல்லவா உள்ளது?
இது அர்த்தமற்ற பிதற்றல் தென்றல்.
எதற்கு எதனுடன் உவமானம் செய்வது என்ற ஒரு எல்லை உண்டு. அது உங்களிடம் இல்லை.
மணல் இல்லாமல் நீர் இல்லாமல் குறைந்த செலவில் மிக விரைவில் வீடு கட்டுவதால் நாட்டுக்கு நன்மை தான். ஆறுகள் காப்பாற்றப்படும்.
மக்களும் சொந்த வீடு என்ற ஒரு இலட்சியத்திற்காக வாழ்நாள் முழுதும் வாயை கட்டி வயிற்ரை கட்டி சேமிக்கும் காசு மிச்சபட்டால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
மற்றபடி மணல் கொள்ளையை எப்போது நான் ஆதரிப்பதாக பேசியிருக்கிறேன்?
முதலாளிகளை எதிர்க்கிறேன் பேர்வழி என்று புதிய தொழில்நுட்பத்திற்கு தடை போடுகிறீர்கள். 🙂
கொஞ்சம் துருவத்தில் இருந்து பூமத்திய ரேகைக்கு அருகில் வாருங்கள்.
//வீதி தோறும் விபச்சார விடுதி…// சீ, நீரெல்லாம் ஒரு மனிதரா. எதற்கு எதனை உவமானம் செய்வது என்று ஒரு எல்லை இல்லையா. நரகல் வார்த்தைகள்.
தென்றல் அவருடைய ஐக்யூ பற்றிய சந்தேகம் வருகின்றது. மனிதன் இயற்கையை எவ்வாறு டெக்னாலஜி துணையோடு பாதுகாக்க முடியும் என்று நீங்கள் கூறினால் அவர் உளறுகிறார் .
இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமான துறையில் இருக்கும் நண்பரிடம் IIT ஜிப்சம் வீடு பற்றி கேட்டேன் .அந்த செய்தியை கேட்டு பதறி அவரும் பல எஞ்சிநீர்களிடம் கேட்டு இருக்கிறார் . எல்லோரும் கூறிய பதில் , “வீட்டின் மதிப்பில் ஐந்து அல்லது பாத்து சதம் கிடைகிறது . பாத்து லட்சத்திற்கு வீடு கட்டினால் லாபம் குறைவு . ஆகையால் அதனை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த மாட்டோம் என்று கூறி இருகிறார்கள்” …
ஏற்கனவே வீடு கட்டியவர்களும் தங்கள் வீடு விலை குறைவதை விரும்ப மாட்டர்கள் .எல்லோரும் வீடு விலைஉயர்ந்தது என்று நடித்து கொண்டு இருப்பார்கள் ..
வெளிநாட்டு கம்பெனி பெரிய முதலீட்டுடனும் டேக்னாலஜியுடனும் சேர்ந்து கூடிய விரைவில் சாம்பிள் மாடல்கள் வைத்து கார் மாடல் போல விற்பான் .. அப்போது இவர்கள் பன்னாட்டு நிறுவனம் கொள்ளை அடிக்கிறது என்று ஒப்பாரி வைப்பார்கள் ..
ராமன்,
வீடு கட்டும் செலவில் 10 சதம் கமிஷன் அடிக்கும் உங்கள் எஞ்சினியர் நண்பர்கள் தானே விலை குறைவதை விரும்பவில்லை. நாளை வெளிநாட்டு கம்பெனி இதில் இறங்கிவிட்டால் ஒப்பாரி வைக்கப்போவது உங்கள் எஞ்சினியர் நண்பர்களா. இல்லை நாங்களா.
கமிஷனை ஏற்றிக்கொள்வதற்காகவே செலவை ஏற்றுபவர்களுக்கு தென்றல் அவர்கள் அழகாக பெயர் வைப்பார்.
பின்னூட்டங்களில் வேண்டுமென்றே குழப்பும் நோக்கில் எந்த நாணயமும் இல்லாமல் எழுதும் உங்களுக்கு அவர் ஏற்கனவே தகுந்த பெயர்களை வைத்தி ருக்கிறார். தொடரட்டும் உங்கள் தரகு.
pk அவர்களே,
வெளிநாட்டுக்காரன் வந்து கட்ட வேண்டிய அவசியம் இல்லை.
அந்த தொழில்நுட்பத்தை நம்ம ஆட்களும் கற்று கொண்டு கட்டலாம்.
செல்போன், கணினி போல இதுவும் ஒரு புதிய தொழில்நுட்பம். கட்டிடக்கலையில் ஒரு புதிய வழி, அவ்வளவு தான். இதற்கும் முதலாளித்துவத்திற்கும் கம்மியுநிசத்திற்கும் சம்மந்தமில்லை.
நடுத்தர குடும்பங்கள் வாயை கட்டி வயிற்ரை கட்டி காட்டப்படும் வீடு குறைந்த விலையில் கட்ட முடிந்தால், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படாமல் விரைவில் கட்ட முடிந்தால் நல்லது தானே.
மிஸ்டர் லவ் ஸ்டோரி, மனிதன் இயற்கையை டெகனாலாஜி துணையோட காப்பாத்துறான்னு உளறுனா எப்படி? உங்க வாதப்படியே ஏழைங்க, தொழிலாளிங்க மாதிரி பன்னாடைங்களெல்லாம் சமூகத்திலேயே சேத்தி இல்லை. பிறவு நீங்க பில் கேட்ஸ், அம்பானி மாரி ஆளுங்களத்தான் மனிதன்னு சொல்றீங்களா?
கற்றது கையளவு,
முதலாளிகளும் ,உங்களை போன்ற முதலாளிகளின் அடுத்த நிலை உயர் அதிகாரிகளும் AC கார்களை வீடு விட்டு அலுவலகம் செல்ல பத்து நிமிட பயணத்துக்கு கூட கூட பயன்படுத்துவிங்க. அதே சமயம் தொழிலாளர்கள் வாழ்விடங்களில் இருந்து தொழில் சாலைக்கு தினம் தினம் பயணிக்க திறந்த நிலை லாரிகளா ? ஏன் இப்படி கற்றது கையளவு ? ஒரு விடயம் தெரியுமா? நீங்கள் சிலேகித்து நேசிக்கும் சிங்கபூரின், தொழிலாளர்களின் திறந்த நிலை லாரி பயணம் என்பது இந்தியாவில் குறிப்பாக சென்னையில் சாத்தியமே இல்லையே கற்றது கையளவு ? தொழிலாளர்களுக்கு வேலை நிரந்தரம் இன்றி, குறைந்த சம்பளம் வழங்க்கும் போர்ட்,ஹுண்டாய் சென்னை தொழில்சாலைகள் கூட மூன்று ஷிபிட்க்கும் பஸ் வசதி செய்து கொடுத்து உள்ளனவே ! போர்ட்,ஹுண்டாய் மட்டும் அல்ல க கை , சென்னையில் இதுவரை, கடந்த ஆண்டுவரையில் 100% அளவிற்கு உற்பத்தி திறனுடன் இயங்கிய நோக்கியா கூட அதிகபச்சம் 60 km சுற்றளவுக்கு தொழிலாளர்களுக்கு பஸ் வசதி செய்து கொடுத்து தான் இருந்தது. சென்னையை பொருத்தவரையில் அங்கு அளிக்கபடும் தொழிலாளர்களுக்கான பேருந்து வசதி என்பது சிங்கபூரை காட்டிலும் மிகவும் சிறப்பு உடையதாக தானே உள்ளது ? நினைத்து பாருங்கள் க கை , தமிழ் நாட்டில்நடைமுறையில் உள்ள தொழிலாளர் நல சட்டங்கள் , தொழிலாளர்களை திறந்த நிலை லாரிகளில் தினமும் தொழில்சாலைக்கு பயணிக்க அனுமதிக்குமா ?
அதே நேரத்தில் உங்கள் கனவுலக நாடான சிங்கபூரில் அவர்கள் நாட்டு சட்டங்கள் தொழிலாளர்களை நிலை லாரிகளில் பயணிக்க அனுமதிக்கிறதே அது எப்படி ? எச்சை துப்பினால் கூட தண்டிக்கும் சிங்கபூரின் சட்டம் அந்த எச்சைக்கு உரிய மரியாதையை கூட கொடுக்க மாட்டேன் என்கிறதே தொழிலாளர்களுக்கு ! அது… அது ஏன் அப்படி கற்றது கையளவு ?
சமுக ,அரசியல், பொருளாதார சிக்கல்களுக்கான தீர்வான சோசியலிசத்தை தான் தூர துப்பி எறிந்து விட்டிர்கள் க கை.. உங்களின் மனசாட்சியாவது மிச்சம் உங்களிடம் இருக்கின்றதா ?
ஐயா தமிழ்,
எல்லாம் அனுமானத்திலேயே எடை போடுகிறீர்கள். நான் காரில் பவனி வருகிறேன் என்று எப்போது சொன்னேன்.
என்னிடம் காரும் இல்லை, சொந்த வீடும் இல்லை. போதுமா.
நம்பிக்கை மட்டும் உள்ளது.
சிங்கப்பூரை எனது கனவுலக நாடாக நான் சொன்னேனா?
இந்தியாவில் லாரியில் யாருமே இதுவரை பயணித்ததில்லை என்று சொல்ல வருகிறீர்களா?
ஏன், நானும் தான் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊர் வர திறந்த லாரியின் பின்பகுதியில் பயணித்தவன் தான். ஏதோ சிங்கப்பூரில் மட்டும் தான் இது நடப்பதாக நண்பர் சூரியன் சொல்வதற்கு தான் நான் பதில் கூறினேன்.
சிங்கப்பூருக்கு வக்காலத்து வாங்க வில்லை, மற்ற நாடுகளை மேம்போக்காக குறை சொல்லும்போது நமது நாட்டு நிலையையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்க தான் சொன்னேன்.
சோசலிசம் பேசம் தாங்கள் சோஷலிச நாடுகளில் இன்று தேனும் பாலும் ஓடுகிறதா, அங்கு அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனாரா, அனைவரும் ஏசி காரில் பவனி வருகிறார்களா, சொல்ல முடியுமா? நீங்கள் நோக்கியா, போர்டு கம்பெனிகள் அவர்களின் தொழிலாளிகளுக்கு பேருந்து வசதி செய்து கொடுத்ததை சொல்கிறீர்கள். அதே நோக்கியா, போர்டு போன்ற கம்பெனிகள் சிங்கப்பூரில் தொழிலாளிகளை திறந்தவெளி லாரியில் பயணிக்க வைக்கிறார்களா சொல்லவும். APPLE to APPLE Comparison செய்யுங்களேன். எல்லா ஊரிலும் நல்ல கம்பெனிகளும் உள்ளது, மோசமான கம்பெனிகளும் உள்ளது. சிங்கப்பூரில் ஏதோ ஒரு டுபாக்கூர் கம்பெனி அவர்களின் தொழிலாளிகளை திறந்தவெளி லாரியில் அழைத்து சென்றார்கள் என்றால் உடனே சிங்கப்பூரில் உள்ள அனைத்து கம்பெனிகளில் இருக்கும் அனைத்து தொழிலாளிகளும் அதே திறந்தவெளி லாரியில் தான் பயணிக்க வைக்கப்படுகிறார்கள் என்று பொதுப்படையாக சொல்வீர்களோ?
குறையில்லாத நாடு என்று தற்போது உலகில் எந்த நாடும் இல்லை. இருக்கும் குறைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைக்க முயலலாம். அதே சமயம் நமது நாட்டோடு ஒப்பிட்டு பார்த்தால் சிங்கப்பூரில் மக்கள் நம்மை விட நன்றாகவே வாழ்கிறார்கள். அவர்களின் சராசரி வாழ்க்கை நம்முடைய சராசரி வாழ்க்கையை விட நன்றாகவே உள்ளது. மறுக்க முடியுமா நண்பரே?
நீங்கள் பூலோக சொர்க்கபுரியாக நினைத்துக்கொண்டிருக்கும் கியூபா, வெனிசியுலா போன்ற நாடுகளுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறீர்களா? அங்கு இருக்கும் அனைத்து மக்களும் ஆனந்தமாக உள்ளார்கள் என்று தங்களால் அடித்து சொல்ல முடியுமா? அங்கு இருக்கும் அனைத்து நிறுவனங்களும் ஒட்டு மொத்தமாக தொழிலாளிகளை ஏசி வண்டியில் அழைத்து செல்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?
முதலில் நமது காலில் உள்ள அழுக்கை நாம் சுத்தம் செய்த பின்னர் அடுத்தவன் காலில் உள்ள அழுக்கை கிண்டல் செய்யலாம்.
கற்றது கையளவு,
குதர்க்கமான வாதத்தின் உச்சமாக உள்ளது உங்கள் பதில்கள் . ஒவொன்றாக பார்ப்போமா ? முதலில் AC கார் உலா பற்றி பாப்போம். நான் பயன் படுத்தியுள்ள சொற்கள் “முதலாளிகளும் ,உங்களை போன்ற முதலாளிகளின் அடுத்த நிலை உயர் அதிகாரிகளும் AC கார்களை வீடு விட்டு அலுவலகம் செல்ல பத்து நிமிட பயணத்துக்கு கூட கூட பயன்படுத்துவிங்க.” இதில் உங்களை போன்ற என்ற வார்த்தைகளை வசதியாக மறந்துவிட்டு உங்களை மட்டுமே என்று நினைத்துகொண்டால் அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. 1000க்கு மேற்பட்ட தொழிலாளர்களை நீங்கள் நிர்வாகம் செய்ததாக நீங்களே கூறியதை என்ன வசதிக்காக இப்போது மறந்து விட்டிர்கள் ககை ?
சிங்க்கபூரை பொறுத்தவரையில் அதனை தமிழ் நாட்டின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அளவுடன் தான் ஒப்பிட முடியும். என் கேள்வி என்னவென்றால் தொழில் சாலை தொழிலாளர்களை சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் திறந்த நிலை லாரிகளில் பயணிப்பதை இங்கு உள்ள தொழிலாளர் நல சட்டங்கள் அனுமதிக்குமா ? இல்லையே . அதே சமையத்தில் எச்சைக்கே ஆயிரம் சட்டம் போடும் சிங்க்க்பூரால் தொழிலாளர் பயண பாதுகாப்பிற்கு எந்த சட்டமும் போட முடியாத நிலையில் இருக்கும் துப்புகெட்ட நிலை ஏன் ?
தொழிலாளர்கள் என்றுமே AC பேருந்துகளை தான் பயன்படுத்துவோம் என்று கூறியது கிடையாது. பாதுகாப்பான பயணமே அவர்கள் விரும்புவது. முதலாளிகள் AC காரில் பயணிக்கும் போது தொழிலாளர்கள் பாதுகாப்பான பஸ்களில் பயணிக்க விரும்புவதில் என்ன தவறு உள்ளது ?
தமிழ்,
உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேசுங்கள்.
//அந்த கம்பெனியில் உள்ள ஆயிரக்ககணக்கான தொழிலாளிகளில் நானும் ஒருவனாக இருந்தேன். // – இது 9.1.1.2 பின்னூட்டத்தில் நான் கூறியது.
//1000க்கு மேற்பட்ட தொழிலாளர்களை நீங்கள் நிர்வாகம் செய்ததாக நீங்களே கூறியதை என்ன வசதிக்காக இப்போது மறந்து விட்டிர்கள் ககை ?// – இது 9.1.2.1.1 பின்னூட்டத்தில் நீங்கள் கூறியது.
இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. சற்று நிதானமாக மூச்சு விட்டு, தண்ணீர் குடித்து விட்டு மேலும் தொடருங்கள்.
//உங்களை போன்ற முதலாளிகளின் அடுத்த நிலை உயர் அதிகாரிகளும் AC கார்களை வீடு விட்டு அலுவலகம் செல்ல பத்து நிமிட பயணத்துக்கு கூட கூட பயன்படுத்துவிங்க.”// – இது 9.1.2.1.1 பின்னூட்டத்தில் நீங்கள் சொன்னது. ஆரம்பத்தில் உங்களை போன்றவர்கள் என்று ஆரம்பித்தாலும், பிறகு பயன்படுத்துவீங்க என்று சொல்கிறீர்கள். இதில் உங்களை போன்றவர்கள் ஏசி கார் பயன்படுத்துவார்கள் என்று சொன்னால் அது பொதுப்படையாக சொன்னதாக கொள்ளலாம். ஆனால் நீங்க “பயன்படுத்துவீங்க” என்று கூறுவது நேரடியாக என்னை கூறுவதாக அர்த்தம் கொள்ளலாம்.
அடுத்து தொழிலாளர் நல சட்டங்களை பற்றி பேசுகிறீர்கள். சிங்கப்பூரையும் சென்னையையும் ஒரே தராசில் வைத்து பார்க்க சொல்கிறீர்கள். சரி, அப்படியே பார்போம். சென்னையில் உள்ள இலட்சக்கணக்கான கம்பெனிகளில் அனைத்தும் தொழிலாளர் நலனை பேனுகிறபடி நடக்கிறதா? அனைத்து கம்பெனிகளும் தொழிலாளர் நல சட்டங்களை 1௦௦ சதவீதம் பின்பற்றுகின்றனவா? இல்லை சென்னையில் உள்ள அனைத்து தொழிலாளிகளும் 1௦௦ சதவீதம் தொழில் சட்டங்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறார்களா?
சிங்கப்பூரில் உள்ள எத்தனை சதவீத கம்பெனிகள் தொழிலாளிகளை திறந்தவெளி லாரியில் எடுத்து செல்கிறார்கள். சொல்லுங்கள்? இல்லை சிங்கப்பூரில் உள்ள அனைத்து கம்பெனிகளும் அவர்களின் தொழிலாளிகளை திறந்தவெளி லாரியில் தான் பயணம் செய்ய வைக்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
மீண்டும் சொல்கிறேன், ஒரு டுபாக்கூர் கம்பெனி அவ்வாறு தொழிலாளிகளை துன்புறுத்தினால் அதற்கு உடனே இந்த சிங்கபூரே இப்படி தான் என்று சொல்வீர்களா?
கொஞ்சம் சவுதி, கத்தார், துபாய் பக்கம் போய் பாருங்கள்.அரபி முதலாளிகள் இருக்கும் கம்பெனிகளில் ஓரளவு நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் இந்திய முதலாளிகள் என்றால் அங்கு தொழிலாளிகள் பிழிந்தெடுக்கப்பட்டு, வெளியே ஒரு சம்பளம் ஆனால் கையில் வாங்குவது அதில் பாதி என்ற நிலை தான் அங்கு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வெளிநாடுகளில் இந்திய முதலாளிகள் இருக்கும் கம்பெனிகளில் வேலை செய்வதை விட இந்தியாவுக்கே திரும்பி விடலாம் என்றே அங்கு இருக்கிற இந்தியர்கள் வருத்தப்படுகிறார்கள்.
நீங்கள் தொழிலாளிகளை திறந்தவெளி லாரியில் பயணிக்க வைத்த அந்த கம்பெனியை பற்றி நன்றாக விசாரித்து பாருங்கள், ஒருவேளை நம்மவர்கள் நிர்வாகிக்கும் கம்பெனியாகவும் இருக்கலாம்.
திறந்தவெளி லாரியில் தொழிலாளிகளை வெயிலில் மாடுகளை போல அழைத்து செல்வது தவறு தான். நான் என்றும் இதை மறுக்கவே இல்லை. ஆனால் ஒரு கம்பெனி இவ்வாறு செய்வதால் ஒட்டு மொத்த சிங்கப்பூருமே இப்படித்தான் என்று கூறினால் அது எனக்கு என்னமோ நீங்கள் சிங்கப்பூரை கண்டு பொறாமையில் சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்வதை போல தான் இருக்கிறது.
கற்றது கையளவு ,
என்னாது 1000 தொழிலாளர்களை நிர்வாகம் செய்தவரேன்று உங்களை பற்றி நீங்கள் இது வரையில் கூறியது இல்லையா கற்றது கையளவு ? அது அப்ப ! ஆனால் இப்ப இல்லை என்று மீண்டும் ரிவர்ஸ் அடிக்கமாட்டிர்கள் என்று நினைக்கின்றேன். மீண்டும் அதே கேள்விதாங்க உங்களுக்கு :
எச்சைக்கு, ஆராய்ந்து சட்டம் போடும் சிங்க்கபூர் அரசுக்கு தொழிலாளியை பத்திரமாக பாதுகாப்பா வேலையிடத்தில் இருந்து ஓய்விடத்துக்கு கொண்டு செல்ல சட்டம் ஏன் இல்லை ? அப்படியென்றால் இந்தியாவில் இருக்கும் மிக குறைந்த பட்ச தொழிலாளர் நல சட்டங்கள் கூட சிங்க்கபூரில் இல்லையா ?
தொழிலாளர்களுக்கு மிக குறைந்த ஊதியம் ,வேலை நிரந்தரம் இன்மை ஆகிய விடயங்கள் சென்னை என்று அல்ல சிங்க்கபூரிலும் இதே நிலைமை தான் என்பதை ஏன் மறந்துட்டிங்க ! [இரு இடங்களிலும் உள்ள இத்தையை மோசமான தொழிலாளர் நிலமைக்காக சோசியலிசத்தை எக்கி துப்பி எரியும் நீங்க ,கண்டிப்பாக வெட்கியோ ,வெட்காமலோ தலை குனியணுங்க ]
தமிழ்,
ஆயிரக்கணக்கானவர்களை நான் நிர்வாகம் செய்தேன் என்று எங்கு படித்தீர்கள்?
நூறுக்கும் ஆயிரத்துக்கும் வித்தியாசம் உண்டென்று அறிவீர்கள் என்று நம்புகிறேன்.
பழைய பின்னூட்டங்களை மீண்டும் தேடிப்பாருங்கள். காத்திருக்கிறேன்.
அடுத்தவனை குறை சொன்னால் நாம் மேலானவர்கள் என்று பெருமிதம் கொள்ளுபவரா நீங்கள். மீண்டும் சொல்கிறேன். ஒரே ஒரு டுபாக்கூர் கம்பெனி தொழிலாளிகளை வதைத்த ஒரு காரணத்தை வைத்து கொண்டு ஒரு நாட்டையே தாக்குகிறீர்களே, சிங்கப்பூரில் எல்லா நிறுவனங்களும் அவர்களது தொழிலாளிகளை லாரியில் அழைத்து செல்கின்றனவா என்று நான் கேட்ட கேள்விக்கு பதிலைக்காணோமே.
சிங்கப்பூரில் தொழிலாளியை பாதுகாப்பாக வேலையிடத்தில் இருந்து ஒய்விடத்துக்கு கொண்டு செல்லும் சட்டம் இல்லை என்று தாங்கள் கூறுகிறீர்கள். அவ்வாறான சட்டம் சிங்கப்பூரில் இல்லையா அல்லது இருந்தும் நடைமுறையில் கடுமையாக பயன்படுத்துவதில்லையா என்று தெரியவில்லை. எனக்கு சிங்கப்பூர் சட்டம் தெரியாது. தெரியாத ஒரு விடயத்தை தெரிந்தது போல காட்டிக்கொள்ளும் ஆள் நானில்லை. அத்தகைய சட்டமே இல்லை என்பதற்கு ஆதாரம் இருந்தால் தாருங்கள். தெரிந்து கொள்கிறேன்.
எல்லா நாடுகளிலும் பணக்காரர்களும் உண்டு, ஏழைகளும் உண்டு. ஏமாற்றுபவர்களும் உண்டு, ஏமாறுபவர்களும் உண்டு. வாழ்வியல் தரத்தில் ஒரு சராசரி சிங்கப்பூர் நாட்டு குடிமகனையும் நம் சென்னைவாழ் குடிமகனையும் (நீங்கள் தான் சிங்கப்பூர் = சென்னை என்று வாதிடுகிறீர்களே 🙂 ) ஒப்பிட்டு பாருங்கள். ஒரு டுபாகூர் கம்பெனி செய்வதை வைத்து ஒரு ஒட்டுமொத்த நாட்டையே எடை போட வேண்டாம் என்று தான் கூறுகிறேன்.
நம்மிடம் இருக்கும் பிரச்சினைக்கு நிலையான தீர்வு என்ன என்று யோசிப்போம். அடுத்தவன் பிரச்சினையை இகழும் முன்னர் அவனை விட நாம் எல்லா விதத்திலும் முன்னேறி இருக்கிறோமா என்று பார்ப்போம்.
தொழிலாளர் நல சட்டங்கள் சிங்கப்பூரில் சரியில்லை என்று சொல்கிறீர்கள். நம் நாட்டில் தொழிலாளர் நல சட்டங்கள் உண்டு. இருந்தும் என்ன பயன்? எல்லா நிறுவனங்களும் தொழிலாளர் நலன்களை 1௦௦ சதவீதம் பாதுகாக்கின்றனவா?
இராமன் அவர்கள் சொன்னதை போல அடுத்தவனின் வெள்ளை சட்டையில் இருக்கும் ஒரு கரும்புள்ளியை கண்டு கைகொட்டி எள்ளி நகையாடும் நீங்கள் நம் சட்டை கிழிந்து தொங்குவதை கவனிக்காமல் இருக்கலாமா? கிழிந்த சட்டையை தைக்க முயல்வோம். அடுத்தவனின் சட்டை கரும்புள்ளியை பற்றி அப்புறம் பேசலாம்.
கற்றது கையளவு,
இந்த விவாதம் சிங்கபூரின் “முதலாளித்துவ சிறப்புகளை” எடுத்துரைக்கும் கட்டுரையை ஒட்டி நடைபெற்றுக்கொண்டு உள்ளது என்பதை மறந்து விட்டு அல்லது உங்கள் வசதிக்காக மறைத்து விட்டு வெட்டியாக பேசிக்கொண்டு உள்ளீர்கள் கற்றது கையளவு. சிங்கபூரின் சட்டங்கள் தொழிலாளர்களுக்கு சாதமானதாக இல்லை ,இன்னும் சொல்லப்போனால் தொழிலாளர்களின் பயணத்தின் போது அவர்களின் உயிர் பாதுகாப்புக்கு கூட உத்திரவாதம் தரும் அளவுக்கு இல்லை என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கின்றது. திரு சூரியன் அவர்களின் பின்னுட்டம் 9 வரையில் நீங்கள் உங்கள் கருத்துகளை எதுவும் சொல்லவில்லை. திரு சூரியன் அவர்கள் தொழிலாளர்களை பாதுகாப்பின்றி மாடுகளை போன்று லாரிகளில் சிங்கபூரில் ஏற்றி செல்வதை பற்றி தம் பின்னுட்டம் 9 ல் கேள்வி எழுப்புகின்றார்.அவருக்கான பதிலாக உங்கள் பின்னுடம் 9.1 ல் என்ன சொல்லியிருந்திர்கள் ?
“””Even in our country the labourers are taken to work locations by open lorries.”””
“””Overall, when you compare the standard of living of all citizens, Singapore is definitely better placed than us. So, before criticizing others we need to introspect and see how we stand, where we stand.”””
இது தானே உங்கள் பதில் !
விவாதமே சிங்கபூரின் “முதலாளித்துவ சிறப்புகளை” பற்றியது. அப்படி சிறப்பு வாய்ந்த சிங்கபூரில் மூன்றாம் உலகநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் லாரியில் வேலைக்கு அழைத்து செல்வதை பற்றி கற்றதுக்கு ஏதும் வருத்தமோ ,கோபமோ இல்லையா ? உங்கள் வருத்தத்தை ,கோபத்தை ஏன் இந்த விவாதத்தில் இதுவரை பதிவு செய்யவில்லை ? ஆனால் வெட்டி பேச்சுகள் மூலம் சிங்கபூரின் அடிநிலை தொழிலாளர்களின் அவலநிலையை திசை திருப்பும் மாபெரும் பாதக செயலை செய்து கொண்டு உள்ளீர்கள். இதற்காகத்தான் உங்களை பற்றி எழுதும் போது உங்கள் செயல்பாட்டை “முதலைகண்ணிர் என்று தென்றல் கூறுகின்றார். முதலில் சிங்கபூரில் தொழிலாளர் பயன முறையில் நடப்பது தவறு என்னும் போது அதனை தட்டிகேட்க வேண்டும். அதனை கூட நீங்கள் செய்ய வில்லை. உடனே வழக்கம் போன்று வெட்டி பிரசங்கம் செய்ய தொடங்கி விட்டிர்கள்.
நேரடியாக பிரச்சனைக்கு வாருங்கள் கற்றது. மீண்டும் கேட்கின்றேன் :
[1]முதலாளிகளும் உங்களை போன்ற முதலாளிகளின் கங்காணிகளும் AC கார்களில் பவனி வரும் போது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பஸ்களில் வேலை இடத்துக்கு செல்ல ஏன் வசதிகள் செய்து தரப்படவில்லை ?
[2]எச்சைதுப்பினால் கூட சட்டத்தை நடைமுறை படுத்தி தண்டிக்கும் சிங்கபூர் அரசு , தொழிலாளர் போக்குவரத்து விடயத்தில் ஏன் கண்டும் காணாமலும் இருக்கிறது ?
[3]சிங்கபூரில் மூன்றாம் உலகநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் லாரியில் வேலைக்கு அழைத்து செல்வதை பற்றி கற்றது ஏன் இது வரையில் தன் கண்டனத்தை பதிவு செய்ய வில்லை ?
தமிழ்,
சிங்கப்பூர் மட்டுமல்ல, உலகின் பெரும்பான்மையான நாடுகளிலும் தொழிலாளிகளை கசக்கி பிழியும் நிறுவனங்கள், தொழிலாளிகளின் பாதுகாப்பு குறித்து கவலையில்லாத நிறுவனங்கள் உள்ளன. அதனால் உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் நாம் பதிவிட முடியுமா? முதலில் நம் நாட்டு நிறுவனங்கள் கசக்கி பிழிவதற்கு நாம் என்ன செய்தோம்?
ம.க.இ.க குழுவினர் சரவணா ஸ்டோர்ஸ் முன்பு நின்று போராட்டம் நடத்துங்களேன், உங்களை யாராவது இழுத்து பிடித்து தடுக்கிறார்களா? அங்கு பணிபுரியும் அப்பாவிகளின் நிலைமை சிங்கப்பூரில் பணிபுரிபவர்களை விட பன்மடங்கு பரிதாபகரமானது என்பது தங்களுக்கு தெரியாததா? முதலில் நம் காலில் உள்ள அழுக்கை கழுவலாம் தமிழ், அடுத்தவன் காலை பற்றி எள்ளி நகையாடுவதற்கு முன் நம் காலை நாம் பார்த்து கொள்வது அவசியம்.
சிங்கப்பூரில் மூன்றாம் உலக நாட்டு தொழிலாளிகளை யாரும் கைது செய்து அழைத்து செல்லவில்லை நண்பரே. அவர்கள் விரும்பியே சென்றனர்.காண்டிராக்ட் உள்ள வரை அவர்களுக்கு அங்கே வேலை. அதன் பின் அவர்கள் ஊர் திரும்பலாம். காண்டிராக்ட் முடிந்த பின்னர் அவர்களை கேட்டு பாருங்கள், ஊர் திரும்ப ஆசையா என்று. அப்போது தெரியும் உங்களுக்கு. அவர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்வதை விட சிங்கப்பூரியன் என்று பெருமையாக சொல்கிறார்கள். அப்போது தமிழ் தனது முகத்தை எங்கே வைத்து கொள்வாரோ.
சிங்கப்பூர் மட்டுமல்ல, உலகில் எந்த நாடாக இருந்தாலும் தொழிலாளிகளை கசக்கி பிழியும் நிறுவனங்களுக்கு தகுந்த தண்டனை, அபராதம் வழங்கப்பட்டு அந்த தொழிலாளிகளுக்கு நல்ல ஒரு பணியிடம், பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும். இதில் உங்கள் கருத்துக்கும் எனது கருத்துக்கும் மாறுபாடே இல்லை தமிழ்.
சிங்கப்பூரின் தொழிலாளர் நலன் பற்றி சில வலைதளங்களில் காலையில் தேடினேன். அங்கு தொழிலாளிகளின் பாதுகாப்பு குறித்து சில சட்டங்கள் உள்ளன. பின்னூட்டம் 17.1 இல் நண்பர் நந்தனுக்கு அளித்த பதிலில் கூட சில லின்க்களை கொடுத்துள்ளேன். வினவு அதில் நீளம் காரணமாக சிலவற்றை வெட்டி இருக்கலாம்.
தொழிலாளிகள் பத்திரமான சூழ்நிலையில் பணிபுரிய வேண்டும் என்று சிங்கப்பூரில் தொழிலாளர் நல விதிகள் உள்ளன. ஆனால் அந்த விதிகள் இந்திய விதிகளோடு முழுமையாக ஒப்பிட்டு பார்க்க இயலவில்லை. ஒன்று நிச்சயம், குறைந்த பட்ச ஊதியம் என்று ஒன்று அங்கு இல்லை.
லாரியில் மாடுகளை போல தொழிலாளிகளை அழைத்து சென்றது தவறு என்று முன்பே
பின்னூட்டம் 9.1.2.1.1.1 இல் உங்களுக்கு பதிலளித்துள்ளேன். எனது பதிலை நீங்கள் படிக்காமல் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டால் மீண்டும் மீண்டும் அதே பதிலை தான் சொல்ல முடியும்.
லாரியில் கொண்டு செல்வது தவறு. இதில் மறுபேச்சுக்கே இடமில்லை.
ஆனால் ஒரு நிறுவனம் செய்த தவறால் ஒரு ஒட்டு மொத்த நாட்டையே நீங்கள் குறை சொல்வது சரியல்ல என்பது என் கருத்து.
இரண்டாவது, குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்க பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. உங்களோடு முழுதும் ஒத்துப்போகிறேன்.
நம்ம ஊரில் குறைந்த பட்ச ஊதியம் என்ன என்று தங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் தமிழ். தெரிந்து கொள்கிறேன். அந்த குறைந்த பட்ச ஊதியத்தை நம் நிறுவனங்கள் அனைத்தும் சரியாக கொடுக்கின்றனவா என்றும் சொல்லுங்கள்.
சிங்கப்பூர்ல மக்கள் நம்மை விட நல்லா வாழ்றாங்கன்னு சொல்றீங்களே, அந்த “மக்கள்” யாரு சார்? சிங்கப்பூர்ல வேலை செய்யுற தொழிலாளிங்க ஏன் சார் ஃபேச்சுலரா வருசக்கணக்குல வேல பாக்குறாங்க? பெண்டாட்டி புள்ளைங்களை கூட்டிட்டு போய் ஏன் வாழ முடியல? ஒருவேளை அது காஷ்மீர்ல வேலை செய்யுற இந்திய இராணுவம் மாதிரி ‘ஆபத்தான’ பணியா? இல்ல குடும்பமா வாழ நிறைய பணம் கேக்குற ரவுடிங்க நாடா?
MrKK,I am raising the issue of transport of migrant labourers in open lorries in Singapore because several of our friends called Singapore as “BOOLOGA SORGAM”.When you call one country as Sorgam,why not all its people enjoy the benefits?Why they are depriving poor migrant workers?Nobody calls India a Sorgam and your comparison does not apply here.Also please reply Nanthan about lack of minimum wages in Singapore.
நண்பர் நந்தனுக்கு அவர்களுக்கு பின்னோட்டம் 17.1 இல் பதிலளித்துள்ளேன்.
Mr.K.K,Even though our country is a developing economy,it is still listed as a Third World Country by western countries.How you can compare a Third World Country with a First World Country like Singapore?You have advised others not to make generalized statement about Singapore just because “some” companies use open lorries to transport workers.Please read the following link to know about the status of migrant workers in Singapore.maskedcrusader.blogspot.in/2014/04/singapores-kafala-system_7.html
According to this post,Singapore,like Middle East Countries,follow KAFALA SYSTEM.In this system,an employer sponsors migrant labourers by applying for visas and work permits and consequently assumes responsibility for them economically and legally for the duration of the contract.This gives employers a feeling of”ownership” over the labourers and is the root of all manner of abuse including the confiscation of passports,non-payment or withholding of salaries,restriction of movement,inhumane working conditions and unreasonable work demands.The KAFALA SYSTEM essentially makes the workers modern day slaves as they are unable to change employers or in some cases,even terminate their contract and return home.Workers are beholden to their contracted employer who may wield unethical power over them particularly as the workers would have assumed debts from high agency fees or commissions paid to secure employment in Singapore.The Kafala system ensures that the employers avoid competing domestically for these migrant workers.This reduces or preserves,the market price of migrant workers and diminishes any leverage the workers may have in improving the terms of their employment.
Singapore received a most unflattering coverage in the US 2013 Trafficking in Persons Report (TIP)in which it was ranked as a Tier 2 country,which are “Countries whose govts do not fully comply with the (US)Trafficking Victims Protection Act minimum standards,but are making significant efforts to bring themselves into compliance with those standards”.
In some cases,the pro-employer govt has been complicit in creating the current situation through a variety of means ranging from ignorance,inaction,and in some cases even the creation of new regulations specifically to allow abusive and unsafe practices to continue so that employers cannot be prosecuted.
Maximum number of migrant workers are employed by Govt Linked Companies to keep the cost of hiring workers low and to reduce welfare expenses to the minimum.The GLCs to ensure that they are not directly involved in the sticky business of employing and being liable for these workers generally choose to maintain a sufficient distance by subcontracting labour services to smaller companies.When these small companies abuse the workers,the GLCs claim ignorance and express shock in the face of accusations as such abuses are completelty contrary to their corporate values.
In the case of unsafe practice of herding labourers in the back of open trucks,the govt inexplically legalized the practice by issuing guidelines on how many workers may be transported in this way.In spite of a trail of countless number of deaths and injuries suffered in auto accidents,this practice continues.
As long as the Singapore govt has an interest in exploiting foreign labourers,it is unlikely that workers in Singapore will “be treated fairly,decently and with respect regardless of their nationality”
Sooriyan,
It is not only in Singapore. In every country there are some companies which exploit the workers and some companies who pay them properly and some companies get exploited by workers to the level that it goes bankrupt.
Take the case of Our own Chennai. Do you think Saravana Stores is providing their employees all the labour benefits? We still have better labour laws, as per Nandhan, pk and thamizh. Then how this Saravana Stores existing here?
Are you trying to say that all the companies in singapore take their employees on lorries?
Do you think 1 Company = 1 Country?
My point is – If we dont have the guts to enforce our own Saravana Stores into adhering to the labour laws of the country, then we dont need to talk about Singapore. There are lot more companies providing better amenities to their employees than this company mentioned in the article.
Another important point. At this point, when there is no guarantee that the companies will stay forever, it is difficult to get Job Security. Unfortunately this is the situation.
Also it is in the mindset of the people.
Our own Indians treat the Indian domestic helps very poorly.
Even in countries where there is a Compulsory Minimum wage to be paid, our Indian people go around the system and try to find a loop hole so that they can squeeze their domestic helps.
Take the case of Devyani Kobragade.
You know there are very strict labour laws in USA.
But our own Indians are treating the Indian labourers badly.
க கை,
//If we dont have the guts to enforce our own Saravana Stores into adhering to the labour laws of the country, then we dont need to talk about Singapore.//
நாங்கள் இந்தியாவின் நிலையைப்பற்றியும் தான் பேசியும் போராடியும் வருகிறோம். அதீத தனியுடைமையும் அது இட்டுச்செல்லும் அதீத சுரண்டலும் உலகின் பொதுவான பிரச்சனை. அந்த அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல, சிங்கப்பூர் மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளையும் நாங்கள் விமர்சிக்கிறோம். உலகத் தொழிலாள்களை ஒன்றுபட அழைக்கின்றோம்.
//Another important point. At this point, when there is no guarantee that the companies will stay forever, it is difficult to get Job Security.//
சிங்கப்பூரைப் பற்றிய இந்த விவாதம் Job Security பற்றியதல்ல. இருப்பினும் இதை இங்கே பேசுவதன் மூலம் நீங்கள் யார் பக்கம் என்பதை காட்டுகிறீர்கள்.
நீங்கள் குறிப்பிடும் இந்த நிலையால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பது தெளிவு. இந்நிலையை நீடிக்க விடக்கூடாது என்பது தான் எங்கள் நிலை. முதலாளிகள் இந்த நிலையைத்தான் பராமரித்து வருகிறார்கள், பராமரிக்கப் போகிறார்கள். இதில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனென்றால்
‘Cut throat’ competition என்று சொல்வது விளையாட்டுக்கல்ல. அவர்கள் எதையும் செய்யத் தயங்காதவர்கள். அவர்களுக்குள் அடித்துக்கொண்டு சாகடிக்கவும் தயாராகயிருக்கிறார்கள். இது அவர்களின் தெரிவு.
ஆனால் இதில் முதலில் கடைசியிலும் பாதிப்பது தொழிலாளர்கள் தான். நாங்கள் இந்த நிலையை இப்படியே விடக்கூடாது.
//We still have better labour laws, as per Nandhan, pk and thamizh.//
நான் எங்கேயும் இது போன்ற கருத்தை வெளியிடவில்லை. வெளியிட வாய்ப்பேயில்லை. நந்தன் அல்லது தமிழின் வாதம் கூட அப்படிப்பட்டதல்ல.
வினவின் மாமா வேலைக்கு சொம்படிக்க பத்து பேர் தயாரா இருக்கானுங்க எப்பவுமே….. ஒண்ணுமே படிக்காதவன் எல்லாம் எங்க ஊர்ல இருந்து சிங்கப்பூர், துபாய்ன்னு போயீ நல்லா ச்ம்பாரிச்சுட்டு வந்து வீடு,நிலம்ன்னு செட்டில் ஆனவன் ஆயிரம் பேர் இருக்கான்…. வந்து பாரு கீழக்கரையிலேயும், மன்னார்குடியிலேயும், எத்தனை பேரு எப்படி இருக்கான்னு… பீடை புடிச்ச உனக்கு பண்ணாடைங்களையும், பிச்சை எடுக்கறவனையும் தவிர வேற யாரை தெரியும்??? இவ்வளவு வேதனைப்படும் புடுங்கி ஒரு பத்து பேருக்கு இங்கேயே தொழில் தொடங்க வழி செய்யலாமில்ல??? வினவு கும்பலால் ஒரு “டீ” கூட எவனுக்கும் வாங்கி கொடுக்கமுடியாது, ஆனா எவனாவது வாங்கி கொடுத்தா அவனை “முதலாளி” “அடிமையாக்க பாக்குறான்”ன்னு ஏதாவது சொல்லி அந்த டீயிலேயும் மண்ண போட வேண்டியது… முதல்ல உன்னுடையத கழுவுடா அப்புறம் சிங்கப்பூர் போயி கழுவலாம்…..
பழைய mooto அண்ணே இப்பவும் முட்டா அண்ணன்தேன். சிங்கப்பூர்ல வேல செய்யுற முட்டாவும், சிங்கம்பட்டி ஜமீன்தார் வூட்டு நாயும் நன்றியில ஒண்ன ஒண்ணு அட்ச்சுக்க முடியாது. முட்டா இந்தியனும் பெயர் நல்லாத்தான் இருக்கு!
எழுதிய மறுபதிப்பை வெளியிட துணிவில்லாத பேடி புரட்சியாளர் வினவு. இப்படி மோசடி கட்டுரை எழுதி ஒரு மசுரும் உன்னால புடுங்க முடியாது…நீ நினைக்கும் போராட்டம், புரட்சி எல்லாம் என்னை போன்ற ஆட் கள் இருக்கும் வரை இங்கு வேகாது… ஒவ்வொருத்தனையும் ஜட்டியுடன் ஓட விடுவோம்….. ஜாக்கிரதை “பாவாடை” பின்னால் ஒதுங்கும் பேடியே…..
ஆகா.. இந்தியன் எவ்வளவு இனிய சொற்களை எல்லாம் உதிர்க்கிறார். கோபத்தில் இவர் கெட்ட கெட்ட வார்த்தைகளை எல்லாம் அள்ளி வீசுவாராம் வினவு அதை அப்படியே வெளியிட வேண்டுமாம், மட்டுறுத்தினால் ஜனநாயகம் இல்லை என்று துள்ளுவாராம். சிங்கப்பூர் நரகம் என்பது உண்மை, உண்மை எப்போதும் உண்மையாக இருக்கும் பொய் எப்போதும் பொய் தான் பொய்யை உண்மையாக்கிவிட முடியாது.
வினவு பின்னுட்ட கொள்கை படி இந்தியனுக்கு தான் வினவில் எந்த கட்டுபாடும் இல்லையே வினவு . இந்தியனின் *&&^&* %^^%^&* ** &&&*9 #$##% போன்ற வசை சொற்கள் அடங்கிய பின்னுடங்களை வெளியிட்டு இந்தியனின் பிழர் மனதையாவது[சைக்கோடிக் மைண்ட்] சிறிது இன்பம் அடைய செய்யலாமே வினவு ?
குடும்பத்தை திட்டமிடும் பொறுப்பான தந்தைகள் இருந்தால் அண்ணன்மார்களுக்கோ(அல்லது தம்பிமார்களுக்கோ) இத்தகைய சிரமம் இருக்காது
உழைப்பாளி,
//குடும்பத்தை திட்டமிடும் பொறுப்பான தந்தைகள் இருந்தால் அண்ணன்மார்களுக்கோ(அல்லது தம்பிமார்களுக்கோ) இத்தகைய சிரமம் இருக்காது//
குடும்பத்தைப் பற்றியும் மனித இனத்தின் வளர்ச்சியைப் பற்றியும் இயற்கையின் எல்லைகளைப் பற்றியும் அடிப்படை அறிவு இல்லாத கூற்று இது. குழந்தைகள் வளர வளர பெரியவர்களின் உற்பத்தி நடவடிக்கைகளில் பங்கெடுத்து வளர்கிறார்கள். வயது வரும் நிலையில் அவர்கள் முழுமையாக சம அளவில் பங்கெடுக்கும் நிலையை அடைகிறார்கள். இது இயற்கையான வளர்ச்சி. அப்போது குடும்பத்தின் தேவைகளில் சமஅளவில் அவர்களால் பங்களிக்க முடியும், வேண்டும். தனது குழந்தைகளுக்கு தாய் தந்தையர் எப்படி பொறுப்பாவார்களோ அதோ போன்று உடன்பிறந்தவர்களும் தங்களுக்குள் பரஸ்பரமாக பொறுப்பாக இருப்பது சரியே. இதுதான் சகோதரத்துவம். இதுதான் குடும்பம். என்னதான் திட்டமிட்டாலும் இளைய தலைமுறையின் பங்கீடில்லாமல் நாம் அடுத்த தலைமுறைக்குப் போகமுடியாது.
அளவுக்கதிகமான மணமகன்கொடைகள் போன்ற இயற்கைக்கு மாறான சுமைகளை ஏற்றிக் கொண்ட இந்த காலத்தில் இளைய தலைமுறை இது போன்ற சுமைகளை சுமப்பது கட்டாயமாகிறது. அதே சமயம் சுமைகள் வேண்டாமென்றால், குறைக்கப் பட வேண்டுமென்றால் இளைய தலைமுறை அதற்கான மாற்றங்களைக் கொண்டுவர போராடவேண்டும். தன்னளவிலும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எந்த சுமையோ, அதை பெற்றோர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்று கூறுவது வக்கிரமானது. இது உழைப்பாளிக்கு அழகல்ல. ஒவ்வொரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறையோடு மட்டுமல்ல முந்தைய தலைமுறையோடும் பொறுப்புகள் இருக்கின்றது. விலங்குகளிலிருந்து நாம் இதில் தான் வித்தியாசப்படுகிறோம்.
உழைப்பாளி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.
1990களில் கிரெடிட் கார்டுகள் வந்த பின்னர் பல தந்தையர் கையில் கார்டு இருக்கிற தைரியத்தில் பல்வேறு வகையில் ஊதாரித்தனமாக செலவு செய்து அவர்களின் குடும்பத்திற்கு கேடு விளைவித்தனர்.
முன்பு குடியால் பல குடும்பங்கள் வருமானத்தை இழந்ததை போல இப்போது கிரெடிட் கார்டுகளால் குடும்பங்கள் வருமானத்தை இழக்கின்றன.
குடும்ப வரவு செலவுகளை பொறுப்பாக திட்டமிட்டால் அடுத்த சந்ததியினருக்கு சொத்து விட்டு வைக்காமல் இருந்தால் கூட கடன் விட்டு வைக்காமல் இருக்கலாம்.
சிங்கபூரில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலையை பற்றி பல குறைபாடுகள், குற்றச்சாட்டுகள் உள்ளன தான். ஆனால் relative standardsஅய் வைத்து தான் எடை போட வேண்டும். இந்தியாவில் கட்டுமான தொழிலில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை தரம், வருமாத்தோடு ஒப்பிட்டால், சிங்கை பரவாயில்லை தான்.
மேலும் 50 வருடங்களுக்கு முந்தைய சிங்கையில், இது போன்ற தொழிலாளர்களின் வாழ்க்கை தரம், வருமானம் இருந்த நிலையை இன்றைய நிலையோடு ஒப்பிட்டால் சில உண்மைகள் புரியும்.
உலகெங்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும், வேலை பளு மிதமாக, நியாயமாக இருக்க வேண்டும் என்ற மனித நேய நோக்கத்தை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் அதை அடைய எந்த வழிமுறை சரியானது என்பதை பற்றி ஆராய வேண்டும். தென் கொரியா, ஜப்பான், தைவான், ஹாங்காங், சிங்கை, மலேயா போன்ற நாடுகள் கடந்து வந்தை பாதையை அலச வேண்டும். இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் என்ன பாதையில் பயணித்து என்ன விளைவுகளை சந்தித்தன என்பதையும் அலச வேண்டும்..
இதை பற்றி நிறைய பேசிவிட்டேன் இங்கு…
சிங்கப்பூரை இந்தியாவுடன் ஒப்பிடுவது சரியா?
அதியமான் மட்டுமல்ல இங்குள்ள பல வாசகர்களும், இந்தியாவின் நிலைக்கு சிங்கப்பூர் எவ்வளவோ தேவலை என்று கூறுகின்றனர். இது சரியான வாதமா என்று கவனிக்க வேண்டும்.
இதற்கு அதியமான் ஒரு வாசகத்தை பயன்படுத்துகிறார். அது ஒப்பீட்டு தரநிலையாகும். 50வருடங்களுக்கு சிங்கப்பூர் எப்படி இருந்தது என்பதையும் இப்பொழுது எப்படி உள்ளது என்பதையும் கவனியுங்கள் என்று கேட்கிறார்.
ஏன் இதே கேள்வியை 50வருடங்களுக்கு முன்னாள் உள்ள சிங்கப்பூரையும் 50வருடங்களுக்கு முன்னாள் உள்ள இந்தியாவையும் ஒப்பிடக் கூடாது? ஒப்பிட்டுப்பார்த்தால் தரகுமுதலாளித்துவத்தில் சூடு கண்ட வர்க்கங்களின் பிழைப்புவாதம் தெரியும்.
50வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூர் முகவரியற்று இருந்து பொழுது, இந்தியாவில் ரூபாயின் மதிப்பை 39% அளவிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்பந்தித்திற்கு இணங்க குறைத்திருக்கிறது ஆளும் வர்க்கம்.
அன்றைய நிலையல் நியுயார்க் டைம்ஸ் இந்தியா அமெரிக்காவிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்று கொக்கரித்தது.
அங்கே சேர்க்கப்பட்ட மூலதனம் தான் சிங்கப்பூர் போன்ற செயற்கைபொருளாதாரங்களை உருவாக்குகிறது என்றால் மூன்றாம் உலக நாடுகளில் மிகவும் சொற்பமான கூலியில் உழைப்பைத் திருடிவிட்டு சிங்கப்பூர் போன்ற வரியில்லா சொர்க்கங்களை உருவாக்குகிறதென்றால் நமது நண்பர்களின் அடிமைத்தனத்திற்கும் பிழைப்புவாதத்திற்கும் ஓர் எல்லை வேண்டாவா?
ஏகாதிபத்திய நிதிமூலதனத்தை கேள்வி கேட்காமல் சிங்கப்பூரின் பொருளாதாரத்தை ஆகோ ஓகோ என்று புகழ்வது வரலாற்றில் ரிவர்ஸ் ஓடிபஸ் என்று பதத்திற்கு இணங்க தாயைக் கவர்ந்து அவளைப் பேரழகி என்று புகழ்வதற்கு ஒப்பான இழிபுகழாகும்.
இதை மேற்கொண்டு இன்னொரு எடுத்துக்காட்டு மூலமாக பார்ப்போம்.
ஹம்பன் தோட்டா நாளைக்கு சிங்கப்பூரைப் போன்று வரக்காத்திருக்கிற மற்றுமொரு நகரமாக ஆவதற்கு வாய்ப்புகளும் உண்டு. ஈழப்போரை ஏகாதிபத்திய வல்லூறுகள் சூழ்ந்துகொண்டு நந்திக்கடலில் இரத்தம் கலந்ததற்கு ஹம்பன் தோட்டாக்கள் போன்ற பவர் செண்டர்களும் ஒரு காரணம். சீனா ஒரு வேளை நீல பட்டு கடல்வழியை தன் கைக்கு கொண்டுவந்தால் சீன ஏகாதிபத்தியம் சொல்வதுபடி சற்றேறக்குறைய 400கோடி பேரின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். அப்படி பாதிக்கிற பொழுது அங்கே ஹம்பன் தோட்டாக்கள் உருவாகும். அங்கும் இதே பிழைப்புவாத நடுத்தர வர்க்கம், ஒரு ஹம்பன் தோட்டா அன்றைக்கு எப்படியிருந்தது. இன்றைக்கு எப்படியிருக்கிறது! என்று ஈழப்போரையும் மறைத்துத்தான் புகழப்போகிறார்கள்!!!
பிழைப்புவாதிகளுக்கு வேறு என்ன முகாந்திரம் இருக்கிறது?
ஆனால் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப்போராடாத ஒரு போர்க்குணத்தை பெறாதவரை ஹம்பன் தோட்டாவை புகழப்போகிற மசகு எண்ணெய் போன்ற நடுத்தரவர்க்கத்தை எதிர்கொள்ளவே செய்ய நேரிடும். அது உழைக்கும் வர்க்கத்தின் காலை வாரிவிடவே செய்யும். அப்பொழுதும் இராஜன் போன்றவர்கள் ரொம்ப டீசண்டாக விட்டில் பூச்சிகளாய் போய் விழுந்தார்கள் என மங்களம் பாடுவர்!
மாவொவின் செஞ்சீனத்தில் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம், வருமான அளவையும், இன்றைய சீனத்தில் இவைகளின் அளவையும் ஒப்பிட வேண்டும். 1978க்கு பின் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவுகள், சீன தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை எப்படி மாற்றின, ஏன் மாற்றின என்பதையும் ஆராய வேண்டும். இதோடு இதர நாடுகளின் தொழிலாளர்களின் நிலையையும், அதில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களையும் ஆராய வேண்டும். முரண்படும் பொருளியல் கொள்கைகள், நடைமுறையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தின என்பதை பற்றியும் திறந்த மனதோடு ஆராய வேண்டும்.
நன்னோக்கங்கள், மனித நேயம் சரிதான். ஆனால் உங்களுடன் கடுமையாக முரண்படுபவர்களுக்கு அவை இருக்காது, இருக்க முடியாது என்ற அனுமானம் தவறானது.
அதியமான்,
// முரண்படும் பொருளியல் கொள்கைகள், நடைமுறையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தின//
முதலாளித்துவ கொள்கை இப்போது பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கலாம். அது எதனால் சாத்தியமாகிறது. தேவையில்லாத போட்டிகள். விளம்பரங்கள். வீண்விரயங்கள். மாசுபடுத்துதல்கள், etc. வினால் தான். முதலாளி தனது செயல்களின் கழிவுகளை சாலையோரத்தில் ஏரியில் ஆற்றில் கொட்டிவிட்டுப்போய்விடுவான். இதன் விளைவுகள் என்ன. இது எவ்வளவு நாளைக்கு இப்படியே போகும். இதனால் நமது சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்லும் சுமை என்ன.
//, மனித நேயம் சரிதான். ஆனால் உங்களுடன் கடுமையாக முரண்படுபவர்களுக்கு அவை இருக்காது, இருக்க முடியாது என்ற அனுமானம் தவறானது.//
இயற்கை வழங்கிய வளங்களை சக மனிதர்களுடன் பகிர்ந்து கொண்டு பொறுப்பான முறையில் வாழ ஏற்றுக்கொள்ளாதவர்கள் சுரண்டலுக்கு ஆட்படுவர்களுக்காக குரல் கொடுக்க முன்வராதவர்கள் மனிதநேயம் பேசுவதில் என்ன பொருள் இருக்கமுடியும். வெறும் வாய்வார்த்தையை வைத்து என்ன செய்யமுடியும்.
PK,
//, மனித நேயம் சரிதான். ஆனால் உங்களுடன் கடுமையாக முரண்படுபவர்களுக்கு அவை இருக்காது, இருக்க முடியாது என்ற அனுமானம் தவறானது.//
//இயற்கை வழங்கிய வளங்களை சக மனிதர்களுடன் பகிர்ந்து கொண்டு பொறுப்பான முறையில் வாழ ஏற்றுக்கொள்ளாதவர்கள் சுரண்டலுக்கு ஆட்படுவர்களுக்காக குரல் கொடுக்க முன்வராதவர்கள் மனிதநேயம் பேசுவதில் என்ன பொருள் இருக்கமுடியும். வெறும் வாய்வார்த்தையை வைத்து என்ன செய்யமுடியும்.//
அருமையான பதில். இதைவிட எளிமையான சிறந்த பதிலை யாரும் அளித்து விட முடியாது. அதியமான் போன்றவர்கள் தங்களை மனித நேயம் மிக்கவர்கள்/உடையவர்கள் என்று இனியும் கருத வேண்டாம். அதற்கு இந்த பதிலே சரியான சான்று.
மாவோவின் செஞ்சீனத்தையும், 1978இல் புகுத்தப்பட்ட தாராளமயக்கொள்கைகளினால் இன்றைய சீனாவையும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் ஒப்பிட வேண்டும் என்று கோரியிருக்கிறார் அதியமான்.
1978க்குப் பிறகு ஏற்பட்டது வளர்ச்சியல்ல. வீழ்ச்சி என்று குறிப்பிடுபவர்கள் யார் தெரியுமா? சாட்சாத் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு தான். தாராளமயத்தால் சீனாவின் பொருளாதாரம் சீரழிவு என்று ஹிந்து தமிழ் நாளேட்டின் வாசகனே கட்டுரையைப் படித்து விவாதிக்கிற பொழுது, அது சாதனை என்று அதியமான் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதன் காரணம், அவர் அடுத்தவர்களை முட்டாளாகக் கருதிக்கொள்கிறார் என்பது தான்.
இதோ கட்டுரையை அவருக்கே சமர்பிப்போம்.
புளுத்து நாறும் தாராளமயத்தின் வீச்சைத்தை வெளிக்கொண்டுவந்திருக்கும் ஹிந்துவின் கட்டுரை வாசகர்களின் பார்வைக்கு;
சுருங்கி வரும் சீன தொழிற்சாலைகள்
http://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7122044.ece
கட்டுரையிலிருந்து சில பகுதிகள்
1. எட்டு வருடங்களுக்கு முன்பு பாஸ்கல் லைட்டிங் என்ற நிறுவனத்தில் 20 ஆயிரம் பேர் இருந்தனர். இப்போது 2 ஆயிரம் பணியாளர்கள்தான் உள்ளனர். தெற்கு சீனாவில் மிகப் பிரம்மாண்டமான தொழிற்சாலையைக் கொண்ட இந்த நிறுவனம் இப்போது தனது ஆலையின் பல பகுதிகளை வெவ்வேறு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளது.
2. இதேபோல தெற்கு சீனாவில் செயல்பட்டு வந்த சமையலறை சாதன உற்பத்தி நிறுவனமான கான்குன்-னில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்த ஊழியர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்துக்கும் மேல். ஆனால் இன்றோ இந்நிறுவனப் பணியாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது.
3. தெற்கு சீனாவில் உள்ள சில ஆலைகளில் 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை ஆள் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
4. “கம்யூனிச நாடாக” இருந்த போதிலும் அங்கு தாராளமயத்தை அனுமதித்தனர். ஊழியர்களின் செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் வேலை நிறுத்தப் போராட்டமும் அங்கு அதிகரித்து விட்டது. ஊழியர்களில் பெரும்பாலானோர் சேவைத் துறை சார்ந்த பணிகளை தேர்வு செய்யத் தொடங்கிவிட்டதால் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடு முடங்கத் தொடங்கியுள்ளது.
5. கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வரும் நிறுவனங்கள் நாளடைவில் மூடப்படும் சூழலுக்குத் தள்ளப்படும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தொழிற்சாலையில் 20000 ஆயிரமாக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் ஆயிரங்களில் என்றால் மாவோக்கு முன்பிருந்த நிலவுடமைச் சமுதாயத்தை அல்லவா இது பிரதிபலிக்கிறது.
சொத்துமதிப்புகளையும் இனி பட்டியலிடலாம். அது சீனனை உள்நாட்டில் அகதியாக்கியது மட்டுமல்ல, ஹுனானின் விவாசய எழுச்சியைக் காட்டிலும் பன்மடங்கு எழுச்சி ஒன்றே அம்மக்களை தனியார்மய தாராளமய சூதாட்டத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றும் என்பதை அழகாக எடுத்துக்காட்டும்.
இனி அதியமானின் சீர்திருத்த புள்ளிவிவரங்களை ஹிந்து வாசகனே சீந்த மாட்டான் என்கிற பொழுது இனி இவரை வைத்து என்ன செய்ய?
தென்றல் : சொந்தமாக தொழில் செய்ய துப்பு இல்லாம , ஆனால் முதலாளித்துவத்தை ஆராதிக்கும் இவருக்கு ,இந்த மொக்கை “தினத்தந்தி ரிசர்சை எடிட்டருக்கு” இவ்வளவு விளக்கம் தேவையா தென்றல் ?அவரு ஏதாவது பெனாத்திகொண்டு இருக்கட்டும் கண்டுக்காமல் விடுங்க . வினவு வாசகர்கள் மட்டுமல்ல ஊர் உலகம் முழுக்க இவரை பற்றி நன்னா தெரியும் ,இவரு சரக்கு காலியான பெருங்காய டப்பாவென்று .
//இனி அதியமானின் சீர்திருத்த புள்ளிவிவரங்களை ஹிந்து வாசகனே சீந்த மாட்டான் என்கிற பொழுது இனி இவரை வைத்து என்ன செய்ய?//
//மாவோவின் செஞ்சீனத்தையும், 1978இல் புகுத்தப்பட்ட தாராளமயக்கொள்கைகளினால் இன்றைய சீனாவையும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் ஒப்பிட வேண்டும் என்று கோரியிருக்கிறார் அதியமான்.
//
மாவோ வினுடைய செஞ்சீனம் சிறப்பாக இருந்து இருந்தால் அவர்கள் ஏன் முதலீட்டு தத்துவத்தை நோக்கி சென்றார்கள் ?
_______________________________________________________________________________________________________________________________________ ஒரு வேலை சப்படாவது கொடுக்குது முதலீட்டுததுவம் என்றுதானே அதன் கதவுகளை தட்டினார்கள் ?
மாவோ கொடுத்த செஞ்சீனம் வேண்டும் வேண்டும் என்று அங்கே எவனாவது போராடுகிறானா ?
கற்றது கையளவு,
வாழ்த்துக்கள்…
உங்களது கருத்துக்கள் நன்றாக / பலமாக உள்ளன. நான் ரசித்து படித்தேன்.
நன்றி..
ஏனுங்க உமா ,அங்கிட்டு தென்றலும் ,pk வும் ,தமிழும் உங்க கற்றதை துவைத்து எடுத்துக்கொண்டு இருக்காங்களே …, இதற்க்கு தான் ஆசைபட்டாய் பாலகுமாரா , உமாசங்கரா ? ஏன் கற்றதுவுக்கு கொஞ்சம் கருத்துகளை எடுத்துகொடுத்து உதவுறது ?
உப்புமா,
உங்கள் நினைப்பு ரொம்ப தப்புமா!
யார் யாரை துவைப்பது 🙂
விவாதம் என்று வந்த பின், வாதம், எதிர்வாதம் என்று வாதிடாமல் விபச்சாரம், மலம் என்று அருவருக்க தக்க வார்த்தைகளை பிரயோகித்தால் வாதத்தில் வென்றுவிட்டதாக அர்த்தமா, வேடிக்கை. உங்கள் பின்னூட்டங்களை கவனித்து தான் வருகிறேன். தென்றல், pk, தமிழ் அவர்களுடைய பதிவுகளுக்கு சிங் சாக் என்று ஜால்ரா போடுவதை தவிர்த்து உங்களிடமிருந்து நேரடியாக எந்த கருத்தும் வரவில்லை. சரக்கு இல்லையா, தீர்ந்து விட்டதா, வீட்டில் யாராவது பெரிய மனிதர் இருந்தால் விவாதத்திற்கு அழைத்து வாருங்கள்.
விவாதத்தின்போது கருத்து பூர்வமாக ஆக்க பூர்வமாக விவாதிக்காமல் அசிங்கமாகவும், அருவருக்கத்தக்க வார்த்தைகளையும் பிரயோகிக்கும்போது, தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் போது விவாதத்தில் நீங்கள் தோற்கின்றீர்கள் என்று அர்த்தம்.
இங்கு உழைக்கும் மக்களுக்காக முதலை கண்ணீர் வடிப்பவர்களுக்கு,
Reality of Singapore:
Singapore doesn’t even have a minimum wage.
12% earn below $1,000!
23% earn below $1,500!
7,600 work full-time for less than $500?
Can you imagine – working full-time for less than $500 – and there were 7,600 workers!
Those earning less than $1,000 keep increasing!
This is an increase of about 3.4 per cent from 2011′s 110,400 (in spite of NWC recommendation and after accounting for inflation).
http://thehearttruths.com/2013/06/03/no-minimum-wage-and-strong-unions-in-singapore-low-wage-workers-see-incomes-drop/
நந்தன்,
முதலில் ஒன்றை சொல்லி விடுகிறேன். சிங்கப்பூரின் முழு தொழிலாளர் நல சட்டம் எனக்கு தெரியாது. தாங்கள் கொடுத்திருக்கும் லிங்கில் 2௦13இல் எழுதப்பட்ட பதிவு. தற்போது அந்த சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளார்களா தெரியவில்லை.
குறைந்த பட்ச ஊதியம் என்ற ஒன்று இல்லை என்கிறீர்கள்.
அப்படி ஒரு சட்டம் இருக்கும் நம் ஊரில் பல வீடுகளில் வீட்டு வேலை செய்பவர்களுக்கும், தொட்டக்காரர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் தொழிலாளர் நல சட்டப்படி ஊதியம் கொடுக்கிறார்களா நீங்களே சொல்லுங்கள். அடுத்த நாட்டுகாரனின் வெள்ளை சட்டையில் இருக்கும் ஒரு கரும்புள்ளியை பூதக்கண்ணாடி வைத்து பார்த்து எள்ளி நகையாடும் நாம் நம் சட்டை கிழிந்துல்லதை கவனிப்பதில்லையே நண்பரே. முதலில் நம் சட்டையில் கிழிந்துள்ள பகுதிகளை தைக்கும் வேலையை பார்ப்போம்.
மேலும் சிங்கப்பூரில் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து வலைதளங்களில் தேடினதில் கீழ் கண்டவை சிக்கின:
The Workplace Safety & Health Act defines the responsibilities for the following stakeholder groups:
If you are an employer
You must, as far as reasonably practicable, protect the safety and health of employees or workers working under your direct control, as well as all who may be affected by their work. Your duties include:
conducting risk assessments to remove or control risks to workers at the workplace
maintaining safe work facilities and arrangements for the workers at work
ensuring safety in machinery, equipment, plant, articles, substances and work processes at the workplace;
developing and implementing control measures for dealing with emergencies;
providing workers with adequate instruction, information, training and supervision.
If you are a principal
…………
– See more at: http://www.mom.gov.sg/workplace-safety-health/wsh-regulatory-framework/Pages/workplace-safety-health-act.aspx#sthash.Btklj72T.dpuf
திரு கற்றது கையளவு ,
உங்கள் சட்டையில் காக்காய் பீ பேண்டுவிட்டது என்ற உண்மையை நான் சுட்டிகாட்டினால் உடனே நீங்கள் என் சட்டையிலும் காக்கை பீ இருக்கின்றதா என்று தேடுவீர்களா என்ன ? ஏன் கேட்கின்றேன் என்றால் நந்தனின் பின்னுட்டத்துக்கு எதிர்வினையாக நீங்கள் இந்தியாவிற்கு வந்து விட்டிர்கள். சிங்கபூரின் தவறுகளை இந்தியாவின் தவறுகளுடன் இணைப்பதன் மூலம் நீங்கள் மன திருப்பதி அடைகின்றிர்கள்ளா என்ன ? இது பெயர் தான் விவாதத்தை திசைதிருப்புவது என்று கூறுவார்கள். நந்தன் அவர்கள் சிங்கபூர் தொழிலாளர்கள் பெரும் சம்பளம் பற்றிய புள்ளிவிவரங்களை கொடுத்து உள்ளார். அதனை பற்றி அத்தகைய குறைந்த சம்பளம் பற்றி உங்களுக்கு ஏதும் வருத்தமோ ,கோபமோ இல்லையா ?
KK,
//சிங்கப்பூரின் முழு தொழிலாளர் நல சட்டம் எனக்கு தெரியாது.//
//அப்படி ஒரு சட்டம் இருக்கும் நம் ஊரில் பல வீடுகளில் வீட்டு வேலை செய்பவர்களுக்கும், தொட்டக்காரர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் தொழிலாளர் நல சட்டப்படி ஊதியம் கொடுக்கிறார்களா நீங்களே சொல்லுங்கள். //
//The Workplace Safety & Health Act defines the responsibilities for the following stakeholder groups://
what do you want to say?
உப்புமா அவர்களே,
ஊரிலுள்ள எல்லோர் சட்டையிலும் உள்ள கறையை சுட்டிக்காட்ட தெரிந்த ஒருவருக்கு அவர் நரகலை மிதித்துக்கொண்டிருப்பது தெரியவில்லையாம். அது போல இருக்கிறது நீங்கள் சொல்வது.
நீங்கள் மிதித்துகொண்டிருக்கும் நரகலை முதலில் கழுவுங்கள் என்று நான் சுட்டிக்காட்டினால் உங்களுக்கு அது தவறாக தெரிகிறது.
சிங்கப்பூரை விட குறைவான சம்பளத்தோடும் மிக மோசமான வேலை சுமையோடும், மிகவும் வருந்தத்தக்க வேலை, வாழ்வியல் சூழலில் வாழும் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் போன்றவர்கள் நம்மிடம் இருக்கும் போது வெளிநாட்டில் ஏதோ ஒரு நிறுவனம் ஏசி இல்லாத வண்டியில் அழைத்து செல்வதற்கு சிங்கப்பூரை நாம் குறை சொல்ல வேண்டுமாம். முதலில் நம் தவறுகளை சரி செய்ய வேண்டும். அங்கு கஷ்டப்படுவதாக நீங்கள் சொல்பவர்கள் நம்ம ஊருக்கு வந்து சொந்த வீடு என்று வசதியாகவே வாழ்கின்றனர். ஆனால் சரானா ஸ்டோர்ஸ் ஊழியர்களுக்கு அத்தகைய விடிவுகாலம் அவ்வளவு எளிதில் அவ்வளவு விரைவில் கிடைக்குமா?
சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் காண்டிராக்ட் இரண்டு வருடமோ, மூன்று வருடமோ, அதற்கு பின் அவர்கள் நம்ம ஊருக்கு வந்து விட போகிறார்கள். எனக்கு தெரிந்தவரை அங்கு போய் வந்தவர்கள் மீண்டும் இங்கே வரும்போது குடும்பத்தை வசதியாக வாழ வழி செய்து விட்டோம் என்ற திருப்தியுடன் தான் வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அங்கிருக்கும் சிங்கபூர் தமிழர்களிடம் பேச்சு கொடுத்து பாருங்கள். தமிழக தமிழர்களை எகத்தாளமாகவே அவர்கள் விமர்சிப்பார்கள். ஒரு முறை சிங்கப்பூர் சென்ற பொது அங்கு டாக்சி ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்தேன். அவர் 3௦ வருடமாக அங்கேயே இருக்கிறார். அவரது பேச்சில் நமது தமிழர்களை பற்றி இகழ்வான ஒரு இழையோடியதை கவனித்து நீங்களும் தமிழர் தானே, தமிழர்களை ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் சிங்கப்பூரியன் என்று பெருமையாக சொன்னார்.
அதனால் தான் சொன்னேன். சிங்கப்பூரை விட மிக போசமான நிலையில் நம் ஊர் தொழிலாளிகள் இருக்கும் போது நாம் சிங்கப்பூர் தொழிலாளர்களை பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்கள் ஆரம்பத்தில் கஷ்டப்படுவது போல தெரிந்தாலும் ஓரிரு வருடங்களில் ஒரு நல்ல நிலைக்கு வந்து விடுவார்கள்.
வெளிநாடுகளில் குறைந்த சம்பளம் என்று கூறுகிறீர்களே, அந்த குறைந்த சம்பளத்தில் தொழிலாளிகளை பிழியும் நபர்கள் பெரும்பாலும் நம்மவர்கள் தான். அது உங்களுக்கு தெரியுமா.
துபாயிலும் இதே நிலவரம் தான். இந்தியர்கள் முதலாளிகளாக இருக்கும் நிறுவனங்களுக்கு போவதற்கு இந்தியர்கள் தயங்குகிறார்கள். ஐரோப்பிய, அரபு முதலாளிகள் இருக்கும் நிறுவனத்தை தேடி போகிறார்கள். இது ஒரு வருந்தத்தக்க உண்மை.
சிங்கப்பூரில் குறைந்த பட்ச சம்பளம் இல்லை என்கிறீர்களே, நம்ம ஊரில் குறைந்த பட்ச சம்பளம் என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன்?
KK,
So we should not talk about working class people of Singapore at all?
If so, why?
If not then why do you say //அடுத்த நாட்டுகாரனின் வெள்ளை சட்டையில் இருக்கும் ஒரு கரும்புள்ளியை பூதக்கண்ணாடி வைத்து பார்த்து எள்ளி நகையாடும் நாம் நம் சட்டை கிழிந்துல்லதை கவனிப்பதில்லையே நண்பரே. //
Nanthan,
Whom am I to say what you should talk or not talk?
I am just saying that there are lot more working class people living even more pathetic life conditions in our own cities. I never said that taking workers through a open lorry is good. I too condemn it. I am just saying that, for a fault of one company, the entire country of singapore is blamed in the organization. Then What do we do about our own Saravana Stores?
If I talk like vinavu people, shall I ask whether you are not at all concerned with our workers in chennai and tamilnadu?
Where is the comparison? If the workers in singapore toil hard, by one or two years of contract, they save enough money to clear up all their debts in their homeland. If they work for 5 years, they will end up buying a house in their homeland. But the question is, after 5 years, if you ask the same singapore people to come back to tamilnadu, they will hesitate to come back.
Atleast in Singapore, they workers get more money for their toil. What about Saravana stores workers? What is their future? Can they clear up all their debts and buy an own house working in Saravana stores? I am sure, the living conditions of our people are far worse than the living conditions of singapore people. There are always exceptions of one singapore company being worser than one of the Indian companies.
If you check carefully, that shitty singapore company might have been owned or managed by our own Indian blood. That is the sad reality. Our own people squeeze our own workers abroad. Atleast europen and other nationals owned companies pay and treat their workers better irrespective of their nationality. But Indians do treat Indians badly in Abroad countries.
Nanthan,
Adding to the above point, You mentioned that there is no minimum wages in Singapore.
Ok.
Now, what is the minimum wages in our own country?
If there is a minimum wage declared in our country as per labour laws, then do ALL THE COMPANIES in our country adhere strictly and pay the minimum wages in our country where our friends like thamizh claim that we have far superior labour laws?
I am telling again and again, I also condemn the conditions of taking workers in open lorries like cattle. There is no second opinion on that. But Can we blame an entire country responsible for the irresponsibility of a single company? I also checked the singapore labour laws after your statement. It does mention about employee health and safety and safe conditions of work. It is only that the particular company mentioned in the article just ignored the rules.
As I said, there is always bad apples. To throw the entire basket away just because of one bad apple may not be the right choice.
Our friend Tamil is comparing that Nokia and Ford are providing better bus facilities in chennai than “THAT SINGAPORE COMPANY” mentioned in the article. My question is, we need to do an Apple to Apple comparison. Does Singapore Nokia and Singapore Ford take their employees in open lorries? It depends on which company, who owns it? If the owner of that company is bad, then how can we blame the entire country for it?
The Author of the article should note the name of that company and inform the singapore labour law authorities. If there is a will, there is a way. Let us work towards a solution than just blaming. If the author really cares about singapore workers, he can inform the ministry of labour department in singapore about this company and ask some friends in singapore to do a followup job to ensure that the particular company is put to enquiry and not repeat the offence again.
Nanthan,
The same workers you are talking about, will be more than happy if he gets the same singapore kind of salary in India. But will you give him a job with that salary here?
Again and again Mr K.K is telling that a single company is transporting workers in open lorries.It is sad that even after pointing out how the pro-corporate(over friendly with construction companies) Singapore Govt brought some regulations for such transport in order to make it legal and after describing the role of Govt-Linked-Companies in abuse of workers,Mr K.K is doing only selective reading and want to behave as if he is sleeping.A man who is sleeping will wake up but not a man who pretend to sleep.
சூரியன்,
சிங்கப்பூர் அரசு திறந்தவெளி லாரியில் தொழிலாளிகளை அழைத்து செல்லலாம் என்று விதிகளை தளர்த்தியதாக நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா?
ஏன் இதை கேட்கிறேன் என்றால், நான் இந்த கட்டுரை, மற்றும் பின்னூட்டங்களை படித்த பின்னர் அது பற்றி தேடினேன். எந்த சட்டமும் தொழிலாளிகளை லாரியில் ஏற்றி செல்ல அனுமதித்தாக எனக்கு தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள், தெரிந்து கொள்கிறேன்.
நம்ம ஊர் கட்சி கூட்டங்களுக்கும் ஜாதி கூட்டங்களுக்கும் மக்களை காசு கொடுத்து லாரிகளில் கொண்டு வருகிறார்களே, அவர்களுக்காக வினவு நண்பர்கள் போராட்டம் நடத்துவார்களா?
சிங்கப்பூர் முதலாளித்துவ நாடு என்கிறீர்கள்.
சோஷலிச நாடான ரசியாவில் வெளிநாட்டு தொழியாலாலர்களின் கதி என்ன என்று பாருங்கள்:
http://blogs.reuters.com/photographers-blog/2012/02/01/russias-untouchables/
KK,
//Whom am I to say what you should talk or not talk?//
//What about Saravana stores workers?//
Then, this article is about Singapore working people or India’s working class?
//My question is, we need to do an Apple to Apple comparison.//
That is what we are saying. Don’t compare Singapore with Saravana store workers.
//I am just saying that, for a fault of one company, the entire country of singapore is blamed in the organization.//
This is where your cleverness comes into public discussion.
Nanthan,
Mr.Thamizh was comparing Singapore to Chennai.
He was comparing Nokia and Ford companies in Chennai to this particular singapore company.
So I said it should be an Apple to Apple comparison.
If he is comparing the workers facilities in Nokia Chennai. Ford Chennai with Singapore companies, it should be compared with equivalent Singapore Nokia and Singapore Ford companies.
If he is comparing a Consruction workers company in Singapore, let him see how the construction workers are being treated in Chennai.
I did not get any feedback about the migrant labouers plight in socialist Russia. I sent a link earlier. All over the world it is like that. Even in Dubai, Construction workers suffer extremely bad work conditions. They are taken by Non AC Buses and had to work on sun even at temperatures closing 50 degrees. World over, There is a similar situation for construction workers. Here the article targets only Singapore because they call it as a capitalist country. But what about Socialist Russia? Migrant workers who do menial jobs are facing the same problem all over the world.
Where is the cleverness. It is Thamizh who wanted me to compare this singapore construction workers company with the Nokia and Ford of Chennai. Please ask Thamizh why he was clever.
KK,
In this thread, your comments are addressed to me. Then why are you bringing Thamizh in to the picture?
//I did not get any feedback about the migrant labouers plight in socialist Russia.//
//All over the world it is like that. Even in Dubai, Construction workers suffer extremely bad work conditions. //
// Does Singapore Nokia and Singapore Ford take their employees in open lorries? It depends on which company, who owns it? If the owner of that company is bad, then how can we blame the entire country for it? //
These are your statements. What is the information do you want to convey?
Nanthan,
The Discussion of Apple to Apple comparison started with Thamizh in this thread. Hence I need to tell you about Thamizh.
//These are your statements. What is the information do you want to convey?//
Please read them carefully. They are not statements. They are questions.
I need your feedback on the link I provided about the plight of migrant workers in Socialist Russia. I want your opinion about the plight of the Construction workers in Dubai.
I always told you that there are bad apples, the companies which does not follow the rules. So, Comparing one company to that of an entire country is not correct.
Also please refer my answers to you in 22.1.1
திரு. கற்றது கையளவு….
//சிங்கப்பூர் முதலாளித்துவ நாடு என்கிறீர்கள்.
சோஷலிச நாடான ரசியாவில் வெளிநாட்டு தொழியாலாலர்களின் கதி என்ன என்று பாருங்கள்:
http://blogs.reuters.com/photographers-blog/2012/02/01/russias-untouchables///
//I did not get any feedback about the migrant labouers plight in socialist Russia. I sent a link earlier. All over the world it is like that.//
//But what about Socialist Russia? Migrant workers who do menial jobs are facing the same problem all over the world.//
தாங்கள் அனுப்பிய மேற்ப்படி இணையத்தின் மூலமாக என்ன கூற வருகிறீர்கள். சோஷலிச ரஷ்யாவில் உழைக்கும் மக்களின் அவல நிலைமையை பாரீர் என்றா? அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் 2011 ஆண்டு எடுத்தவை. அதாவது ரஷ்யா சோஷலிச பாதையை விட்டு வெளியேறி 20 ஆண்டுகள் கழித்து எடுக்க பட்ட புகைப் படங்கள். இதன் மூலமாக தாங்கள் கூறவருவது என்ன? ரஷ்யா இன்று முதலாளித்துவ பாதையில் சென்றுக் கொண்டிருக்கும் நாடு எனும் பொழுது நீங்கள் அனுப்பிய புகைப்படங்கள் அனைத்திலும் முதலாளித்துவ நாட்டின் அவல நிலையை தான் அதில் காண முடிகின்றதே ஒழிய, சோஷலிசத்தின் அவலமாக நீங்கள் கூற எத்தனிப்பது சிரிப்பை தான் வரவழைக்கின்றது. தங்களின் இந்த இணையம் சார்ந்த கருத்தினை மாற்றிக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
எதையும் தாங்கள் விமர்சிக்கலாம் அதில் தவறில்லை, சோஷலிசமும் அதற்க்கு விதிவிலக்கல்ல. ஆனால், அந்த விமர்சனம் என்பது நேர்மை திறத்தோடு இருக்க வேண்டும். நன்றி
ரெபெக்கா மேரி அவர்களே,
உங்கள் கேள்விக்கு விடை அளிக்கும் முன் தாங்கள் சென்ற ஆண்டு மே மாதம் 1௦ஆம் தேதி வெளியிட்ட பின்னூட்டத்தை இப்போது உங்களுக்கு நினைவுபடுத்த விழைகிறேன்.
கட்டுரை: தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவது என்ன?
பின்னூட்டம் எண்: 79.
பதிவிட்டது: ரெபெக்கா மேரி அவர்கள்.
//
அதை படி, இதை படி என்று கட்டுரைகளை கொடுத்தால் மட்டும் போதாது. வரலாற்றை கொஞ்சம் ஆய்வு செய்ய வேண்டும். இன்று உலகில் இருப்பது இரண்டே வகையான நாடுகள் தான். ஒண்டு கம்யுனிசத்தை ஏற்காத நாடு.. இன்னொன்று கம்யுனிச பாதையை கை கழுவிய நாடு.
சென்ற நூற்றாண்டில் ஒரு சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் ரஷ்யாவையும் காட்டி கம்யுனிச கொள்கைகளினால் தான் இந்த நாடுகள் முன்னேறிய நாடுகளாக மாறின என்று வாய் ஜாலம் செய்தார்கள். ஆனால், ஜப்பானும்.ஜெர்மனியும் இரண்டாம் உலக போரில் சுடுகாடாக மாற்றப்பட்டு மிக குறுகிய காலத்தில் இவர்களை விட வேகமாக வளர்ந்திருக்கிறது. இந்த இரண்டு நாடுகளும் கம்யுனிசத்தை பின்பற்றவில்லையே.கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவும் இன்று கம்யுனிச சித்தாந்தத்தை ஏற்று கொண்டதினால் சிதறி சின்னாபின்னமாகி விட்டது. இதற்க்கு இவர்களின் விளக்கம் ” எங்கள் சித்தாந்தத்தில் தவறில்லை. அதனை நடைமுறை படுத்திய முறையில் தான் தவறு” என்று கீறல் விழுந்த record மாதிரி கூறி கொண்டே இருக்கிறார்கள். இவர்களின் வாதத்தை பரிசீலிப்போம். ” ஒரு மருந்து கம்பெனி சொல்கிறது. எங்கள் மருந்தின் மீது குற்றமில்லை, அதை கொடுத்த மருத்துவர் சரியாக கொடுக்காததால் நோயாளி இறந்து விட்டார் என்பதை போல. கம்யுனிசம் போலந்தில் தோற்றது, செக்கோஸ்லோவாகியா தோற்றது, பல்கேரியாவில் தோற்றது.ரஷ்யாவில் தோற்றது,யுகோஸ்லாவியாவில் தோற்றது,கிழக்கு ஜெர்மனில் தோற்றது, சீனாவிலும் தோற்று போனது. ஆக, ஒரு மருந்தை இப்படி பல டாக்டர்கள் பல நோயாளிகளுக்கு பல இடங்களில் கொடுத்துள்ளார்கள். அனால்,எல்லா நோயாளிகளும் இறந்துள்ளார்கள். மருத்துவரின் குற்றமா அல்லது மருந்தின் குற்றமா. இந்த லட்சணத்தில் எதன் அடிப்படையில் கம்யுனிச சித்தாந்தம் இந்தியாவில் மட்டும் வெற்றி பெரும் என்று கூறுகிறீர்கள்.
இதிலிருந்து ஒன்று மட்டுமே தெளிவாக புரிகிறது…
Communism:The Under Achiever; Capitalism means Vibrant development
//
இந்த ஒரு வருடத்தில் கம்மியுனிசம் பற்றிய தங்களது கருத்தினில் துருவ நிலை மாற்றம் ஏற்பட்டது எப்படி?
கம்மியுனிசம் குறித்த சரியான ஒரு மாதிரி, ஒரு மாடல் எங்காவது காட்ட முடியுமா?
மக்களின் சுதந்திர உணர்வை அடக்கும் கம்மியுனிசம் – மக்களின் பேராசைக்கு தூபம் போடும் முதலாளித்துவம் – இந்த இரண்டு துருவ எல்லைகளுக்கு இடைப்பட்ட ஒரு அமைப்பு தான் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று அப்போது கூறினீர்கள்.
இப்போது உங்களுக்கு என்ன ஆயிற்று?
ரெபெக்கா மேரி அவர்களே. கொஞ்சம் விளக்குங்கள்.
KK,
What is your answer to Rebecca Mary comment 18.1.1.1.2.2.1.2? Not the history…
\\இந்த ஒரு வருடத்தில் கம்மியுனிசம் பற்றிய தங்களது கருத்தினில் துருவ நிலை மாற்றம் ஏற்பட்டது எப்படி?\\
நல்லவேளையாக விவாதிக்கிற நபரின், பிறந்த ஒரு நாளே ஆன புகைப்படத்தைக் காட்டி இன்று மட்டும் ஏன் ஆடை அணிந்திருக்கிறீர்கள் என்று கேட்காமல் விட்டார் கற்றது கையளவு!
\\கம்மியுனிசம் குறித்த சரியான ஒரு மாதிரி, ஒரு மாடல் எங்காவது காட்ட முடியுமா?\\
திருமண புகைப்படத்திலே நான் எங்கிருக்கிறேன் அம்மா என்று கேட்கும் குழந்தை உருவாக்கும் சங்கடத்தை விட ஹைகேட் கல்லறையில் உறங்கும் மார்க்சுக்கு முன்னாள் அன்றைக்கு இந்தக் கேள்வியை வைத்தனர் வர்க்கச்சூட்டில் சொகுசு கண்ட பிழைப்புவாதிகள். ஆனால் அன்று மட்டுமல்ல, அங்கு உறங்கும் மார்க்சின் சிந்தனைகள் பாட்டாளிகளை விழித்தெழச்செய்தன் மூலமாக எந்த பாட்டாளியும் அல்லது இன்னும் கறாராக சொன்னால் எந்த முட்டாளும் தான் படைக்கப்போகும் சமூகம் எங்கிருக்கிறது என்று கேட்டுக்கொண்டிருப்பதில்லை. அது கேள்வியாகவும் தொக்கி நிற்பதில்லை!
பாட்டாளிகள் படைப்பாளிகள் என்கிற பொழுது இதுவரை கண்டிராத முற்போக்குச் சமூகத்தைத்தான் படைப்பார்கள். அது எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு போராட்டங்களில் கலந்துதான் பாருங்களேன்! அதைவிடுத்து திரைவிமர்சனம் படித்துவிட்டு பாப்கார்ன் வாங்கிக்கொண்டு படம் பார்ப்பதைப்போன்றதா பாட்டாளிகளின் போராட்டம்?
Nanthan,
For Rebecca Mary’s comment 18.1.1.1.2.2.1.2, I answered in 18.1.1.1.2.2.1.2.2
திரு. கற்றது கையளவு…
உங்களை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காக நான் அப்படிக் கூறவில்லை. விமர்சனம் என்பது சரியான கண்ணோட்டத்தோடு இருக்க வேண்டும். நம் வாதத்திற்கு வலு சேர்க்க வேண்டுமே என்பதற்காக, கண்டதையும் அடித்து விடக் கூடாது. ரஷ்யாவும், சீனாவும் இன்று சோஷலிச நாடுகள் கிடையாது, சோஷலிசத்தின் ஒரு சிறு சுவடு கூட இல்லாமல் துடைத்து எறிந்து விட்டனர். ஆக, அந்த இரு நாடுகளையும் இன்றைய தேதியில் சோஷலிசத்தை மட்டம் தட்டுவதற்காக இழுப்பது மிகவும் அறிவீனமாகும். மேலும், என்னுடைய நிலைப்பாடும் எப்போதும் போல் கலப்பு பொருளாதாரமாகும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் .ஆனால் ராமன் அவர்கள் மருத்துவத்தில், பொதுப் போக்கு வரத்து என சமுகத்தின் அனைத்து துறைகளிலும் தனியார் முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்று கூறுவது மிகவும் அபத்தமாகும். இதற்க்கு சோஷலிசமே எவ்வளவோ மேல். உண்மையான சோஷலிச அரசாங்கம் ஏற்படுமேயானால் நிச்சயம் அதற்காக மன நிறைவோடு நாம் நம்முடைய பங்களிப்பை வாரி வழங்கலாம். ஏனென்றால் நம்முடைய உழைப்பின் பலன் அனைத்தும் இந்த சமுகம் முழுமைக்கும் சென்று சேரும்.
ரெபெக்கா மேரி அவர்களே,
என்னுடைய கருத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். முதலாளித்துவ நாடுகளுக்கு கூஜா தூக்குவது என் வேலை அல்ல. சிங்கப்பூரில் தொழிலாளிகளை பாதுகாப்பற்ற சூழலில் பயணிக்க வைத்தது அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் தவறு என்றும், அதற்கு ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டையே குற்றவாளி கூண்டில் ஏற்றுவது சரியல்ல என்றும் கூறினேன்.
ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர் நல சட்டங்கள் சற்றேரக்குறைய ஒரே வகையில் தொழிலாளிகளின் பாதுகாப்புக்கு சில விதிகளை விதிக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சில கேடுகெட்ட கம்பெனிகள் அந்த விதிகளை சரியாக பின்பற்றாமலோ, அல்லது அந்த சட்ட விதியின் ஓட்டைகளில் ஒளிந்து கொண்டோ தொழிலாளிகளை துன்புறுத்துகின்றனர். இது அந்த குறிப்பிட்ட கம்பெனியின் தவறு தானே ஒழிய ஒட்டு மொத்த நாட்டின் தவறல்ல.
இதற்கு எடுத்துக்காட்டாக தான் ரசியாவை சுட்டிக்காட்டினேன். கட்டுரையாளர் தெளிவாக முதலாளித்துவ சிங்கப்பூர் என்று குற்றம் சாட்டுகிறார். எனது கருத்து என்னவென்றால் முதலாளித்துவ நாடு மட்டுமல்ல, எந்த நாட்டிலும், அது சோஷலிச நாடாக இருந்தாலும் சரி, கம்மியுனிச நாடாக இருந்தாலும் சரி, ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு கம்பெனி தொழிலாளர் நலவிதிகளுக்கு புறம்பாக அவர்களை ஆபத்தான பணியில் இறக்கி விட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.
அதற்கு உதாரணமாக தான் ரசியாவை காட்டினேன். சோஷலிச ரசியா என்ற என்னுடைய வார்த்தை தவறென்றால் அதனை ஒத்துக்கொள்கிறேன். அதே சமயம் சீனாவிலும் இதே போல ஒரு நிகழ்வும் நடந்ததை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
CHINA FOXCONN FACTORY SUICIDES என்று கூகுளில் தேடிப்பாருங்கள்.
வெளிநாட்டு தொழிலாளிகளை பிழிந்தேடுப்பது சிங்கப்பூரில் மட்டுமல்ல, ரசியா, சீனா போன்ற (போலியோ, உண்மையோ, ஏதோ ஒரு கம்மியுனிச நாடு), அதே போல தாய்லாந்து, துபாய், என்று பல்வேறு நாடுகளிலும் வெளிநாட்டு தொழிலாளிகளின் துயரம் நீண்டு கொண்டு தான் இருக்கிறது.
அதே சமயம் இந்த துயரத்திற்கு காரணம் பேராசை கொண்ட அந்த குறிப்பிட்ட நிறுவனம் தானே ஒழிய ஒட்டுமொத்த நாடு காரணம் அல்ல. சிங்கப்பூரின் அனைத்து நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக தொழிலாளிகளை துன்புறுத்துகின்றனவா?
இந்தியாவிலேயே சமீபத்தில் அம்பிகா என்ற அப்பாவி பெண் நோக்கியா நிறுவனத்தில் இறந்தது நினைவிருக்கும். அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் நாம் ஒட்டுமொத்தமாக குறை சொல்ல முடியுமா?
உலகில் சோசலிசம் முழமையாக இருக்கும் நாடு ஒன்று கூட இல்லை.
ஆனால் பெயரளவிலாவது சோசலிசம் ஒட்டிக்கொண்டிருக்கும் நாடுகள் சீனாவும் ரசியாவும். இந்த இரண்டு நாடுகளிளுமே சில நிறுவனங்களில் தொழிலாளர்கள் நலன் சரியாக பாதுகாக்கபடாத நிலை உள்ளது. அதனால் குறை முதலாளித்துவத்திலோ அல்லது சோஷலிசத்திலோ அல்ல, அந்த தொழிலாளர் நல விதிகளை ஒழுங்காக நடைமுறைபடுத்தாத குறிப்பிட்ட நிறுவனங்களும், அந்த நிறுவனங்களை சரியாக கண்காணிக்காத அதிகாரிகளுமே குற்றவாளி ஆகிறார்கள்.
KK,
// சிங்கப்பூரில் தொழிலாளிகளை பாதுகாப்பற்ற சூழலில் பயணிக்க வைத்தது அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் தவறு என்றும், அதற்கு ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டையே குற்றவாளி கூண்டில் ஏற்றுவது சரியல்ல என்றும் கூறினேன். //
Only one particular organization? This is where your cleverness comes in to public discussion as I mentioned it. Either you should know the real situation by yourself or listen to other. ok?
Those who lives in Singapore sadly agrees this situation…
I am not ready to give proof. If you are genuine then read the comments sections in the previous sigapore related articles in this blog…
ரெபேக்கா மேரி அவர்களின் பின்னூட்டம் எண் 18.1.1.1.2.2.1.2.1.4 க்கு எனது பதில்:
ரெபேக்கா மேரி அவர்களே,
தங்களது வாதப்படியே ரசியாவிலும் சீனாவிலும் இப்போது கம்மியுனிசம் இல்லை என்றே வைத்து கொள்வோம். அப்படி பார்த்தால் உண்மையான கம்மியுனிசம் உலகில் தற்போது எந்த நாட்டிலும் இல்லை என்பதே உண்மையாகிறது. ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கம்மியுனிசம் எத்தனை நாடுகளில் கடைபிடிக்கப்பட்டது. ஏன் எல்லா நாடுகளும் கம்மியுநிசத்தை கைவிட்டார்கள்? எல்லா நாடுகளிலும் சொல்லி வைத்தாற்போல முதலாளித்துவவாதிகள் சூது செய்து கம்மியுநிசத்தை வீழ்த்தி விட்டார்கள் என்று தென்றல் அவர்கள் சொல்வதை நீங்களும் நம்புகிறீர்களா? அப்படி சதி செய்திருந்தால் ஏன் கம்மியுனிசம் மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்று அந்தந்த நாடுகளின் மக்களுக்கு எழுச்சி வரவில்லை. நான் கசகிஸ்தான், உக்ரைன், ரசிய நண்பர்களுடன் இது குறித்து விவாதித்தபோது கம்மியுனிசம் கோலோச்சியபோது அப்போதிருந்த காலகட்டத்தில் அதன் அவசியம் இருந்ததாகவும், இப்போது அது தேவையில்லை எனவும் கூறினார்கள்.
இப்போது சிங்கப்பூரில் தொழிலாளர்கள் நலன் பாதுகாப்படவில்லை என்று கூறும் நண்பர்கள் நம்ம ஊர் தொழிலாளர்கள் அதனை விட முகவும் மோசமான நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் வேலை செய்வதை பற்றி ஒன்றும் செய்யாமல் சிங்கப்பூர் பற்றி நாம் பேசலாமா?
வண்டியின் பின்புறம் நிழல் தரும் வகையில் கேனபி அமைத்து, வண்டியின் எல்லா புறங்களிலும் பாதுகாப்பான ரெயிலிங் அமைத்து, வண்டியில் கூட்டமாக அதிகம் பேர் உட்கார கூடாது என்று சட்டம் விதித்து, வண்டியின் வேகம் இத்தனை அளவிற்கு மேல் இருக்க கூடாது என்று சட்டம் விதித்து, வண்டியில் அபாயகரமான மெஷின்கள் இருக்கக்கூடாது என்றும், அவ்வாறு இருந்தால் அதனோடு மனிதர்களை பயணிக்க வைக்க கூடாது என்றும், வேலை செய்யும் இடங்களில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பன கடின தலைக்கவசம், பாதுகாப்புக்கு ஹேர்ணஸ், தகுந்த கையுறை, காலுறை, புலோரசன்ட் ஜாக்கெட் இவை அனைத்தும் கொடுத்துள்ள சிங்கப்புரை கண்டிக்க துணிந்த நம் நண்பர்கள் மேற்கூறிய இந்த எந்த பாதுகாப்பும் இல்லாமல் பணி செய்யும் நம்ம ஊர் தொழிலாளிகள் பற்றி மூச்சு விடக்காணோம்.
அனைத்துலக தொழிலாளர்களுக்கும் தகுந்த பாதுகாப்பான வேலை சூழ்நிலை அமைத்து தர வேண்டியது குறிக்கோள். தொழிலாளிகள் பாதுகாப்பை பொறுத்தவரை சிங்கப்பூர் மற்ற முன்னேறிய நாடுகளை போல இல்லாமல் சற்று பின்தங்கியே உள்ளது. அதை ஒரு 7௦ சதவீதம் என்று வைத்து கொள்வோம். ஆனால் நம் ஊரில் பாதுகாப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் வகையில் தானே தொழிலாளர்களை வேலை வாங்குகிறார்கள்?
நமது ஊரில் பள்ளிக்குழந்தைகளை ஆட்டோவில் எப்படி ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள் என்று நீங்கள் பார்த்ததில்லையா, கட்சிக்கூட்டங்களில், ஜாதி கூட்டங்களில் ஆள்பிடித்து கொண்டு வர திறந்த லாரியில் மக்களை நின்ற வாறு கூட்டிச்செல்வதை நீங்கள் பார்த்ததில்லையா? சரவணா ஸ்டோர்ஸ் தொழிலாளர்கள் எப்படிப்பட்ட நிலையில் வைத்திருக்கப்படுகிரார்கள் என்பது உங்களுக்கு தெரியாததல்ல. நம்மை சுற்றி இத்தனை அழுக்குகளை வைத்து கொண்டு அடுத்த நாட்டவனை நாம் கேவலமாக நினைப்பது தான் அவலம். முதலில் நம் பிரச்சினைகளை தீர்க்க வழி என்ன பார்ப்போம். சிங்கப்பூர் தொழிலாளர்கள் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் பின் அவர்கள் நன்றாகவே சம்பாதிக்கின்றனர். ஓரிரு வருடங்களுக்கு பின்னர் அதே சிங்கபூர் தமிழரிடம் நீங்கள் தமிழ்நாட்டுக்கு வாருங்கள் என்று கேட்டு பாருங்கள். வர மாட்டேன் என்றே கூறுகிறார்கள். ஏன் என்றால் கஷ்டப்பட்டாலும், அவர்களுக்கு அங்கு கிடைக்கும் வருமானம் நமது ஊரில் கிடைப்பதில்லை. ஏன் அவர்களுக்கு சிங்கப்பூரில் கிடைக்கும் வருமானத்தை உங்களால் தமிழகத்தில் அவர்களுக்கு கிடைக்க வைக்க முடியுமா? முடியும் என்றால் அனைவரும் மகிச்சியாக உங்கள் வீட்டு கதவை தட்டிக்கொண்டு இருப்பார்கள்.
அதிலும், சிங்கப்பூரை பொறுத்தவரை அந்த குறிப்பிட்ட கட்டிடவியல் தொழிலாளிகளை நடத்தும் விதத்தை பற்றி சொல்லும் நண்பர்கள் சிங்கப்பூர் முழுக்க அனைத்து கம்பெனிகளும் தொழிலாளிகளை அதே போன்ற நிலையில் வைத்திருக்கிறார்களா என்று யோசிக்க வேண்டும்.
ஊரில் ஒரு பிரச்சினை என்றால் அதற்கான சாத்தியமான தீர்வு என்ன என்று பாராமல் புரட்சி ஒன்றே தீர்வு என்று இல்லாத யூனிகார்ன் குதிரையை தேடும் தென்றலாருக்கு நீங்களும் ஜால்ரா போடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
இதே சிங்கப்பூர் தொழிலாளிகள் நலன் பிரச்சினையில் தீர்வு என்பது அங்கிருக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தில் போட்டோ ஆதாரத்துடன் சென்று அங்கிருக்கும் தொழிலாளர் நலவிரும்பிகள் வாதிட வேண்டும். அமைச்சகம் சரியான பதிலை சொல்லவில்லை என்றால், மீடியா, எதிர்கட்சிகள் துணையுடன் பொதுமக்களுக்கு இந்த பிரச்சினையின் அவலத்தை புரிய வைக்க வேண்டும். எப்பேர்பட்ட அரசாக இருந்தாலும், ஒட்டுமொத்த மக்கள் ஒரு பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றால் அந்த அரசு மக்கள் பேச்சுக்கு அடிபணிவதை விட வேறு வழி இல்லை. இன்னும் சொல்லப்போனால் திறந்த வெளி லாரியில் தொழிலாளர்களை பயணிக்க வைக்க கூடாது என்ற சட்டம் இருக்கும்போது சட்டத்தை மீறும் குறிப்பிட்ட நிறுவனத்தை சட்டப்படியே தண்டிக்க முடியும்.
சும்மா புரட்சி ஒன்று தான் தீர்வு என்று இங்கிருந்து கத்தி கொண்டிருந்தால் என்ன பயன் வந்து விட போகிறது?
Mr. Nanthan
When we ask why vinavu is criticizing only hinduism, Vinavu explains first we need to clear our dirt then criticize muslims and christians.
Now Here before clearing our dirt why is Vinavu transgressing to SIngapore.
Double standards as always
Seppu Sattai,
Really you did not come across any articles regarding Muslims and Christians? Do you think so?
Yes Nanthan,
One Article for every 200 articles. You have the archives to verify. Kindly do that if you have time
Seppu Sattai,
For you count is important or its content is important? If count is important then you can also start to write…
Nanthan,
To tell you Frankly, Vinavu is not Neutral, Not truly Secular.
KK,
Vinavu never claimed it is a Neutral blog… //Not truly secular// you have to justify this…
வெளிநாட்டு தமிழருக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். ஆனால் ஓரிரண்டு வருடங்கள் கழித்து அதே வெளிநாட்டு தமிழரிடம் தமிழ்நாட்டுக்கு வேலை செய்ய வருவீர்களா என்று கேளுங்கள். வரமாட்டேன் என்றே சொல்வார்கள்.
வெனிசூலாவில் வோல்வோ ஏசி பேருந்தில் தொழிலாளர்கள் அழைத்து செள்ளபடுவார்கள் ..
பேருந்து ஓட்டும் டிரைவர் கூட பைலட் போல உடை அணிந்து இருப்பார் ..
காண்டீன் நம்ம ஊரு பைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கும் .
தினமும் சுத்தமான சீருடை டிரை க்ளீனிங் செய்து கொடுக்கப்படும்
அரசாங்க இலவச மருத்துவ மனைகள் செவன் ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கும்
அது போல நாமும் உலகமும் மாறமாட்டோம என்ற ஏக்க பெருமூச்சுடன் ….
முக்கியமாக சொல்லாமல் விடுபட்டது , அனைவருக்கும் மாதம் ஐந்தாயிரம் அமெரிக்க டாலர் அளவிற்கு சம்பளம் …
பின்குறிப்பு : அதிக வேலை செய்யாத மேலாளர்களுக்கு வெறும் ஆயிரம் அமெரிக்க டாலர்கள்தான்
Raman thinks he is smart by giving his comment under 19.1.But,nobody,claims Venezuela as BOOLOGA SORGAM here.We would like all the inhabitants of Singapore to enjoy all luxuries of the “Sorgam.Thats all.
@Sooriyan
You claimed you enjoyed Air India flight? May I know if such trip was given to the attender in your office? You could have let attender enjoy the sorgam little bit…
@Raman,
Attenders in my office do not have occasion for air travel.As CEO of a small company,I am taking care of my attenders to get reasonable salary to run their families.Right now,I am providing my personal support to an attender to gain minimum qualification by private study so that he could be promoted as a clerk within one or two years.I have not called Singapore as BOOLOGA SORGAM and my point is without understanding the true state of affairs in that country,how you people are calling it as SORGAM?
Sooriyan,
///I have not called Singapore as BOOLOGA SORGAM and my point is without understanding the true state of affairs in that country,how you people are calling it as SORGAM?//
It is not Raman who mentioned Singapore as Boologa Sorgam.
Please be informed that It is the author of this article who started this article mentioning that Singapore is called Boologa Sorgam.
@Sooriyan
Exactly my point Sooriyan, Based on the profit one makes to the company , what kind of perks he is entitled is decided. right ?
CEO also employee , Attendar also employee does not imply , both have equal right to the perks.
And it is capitalism.
//I am taking care of my attenders to get reasonable salary to run their families.//
If it is reasonable why your attendar wants to get promotion and increase his salary?
Who gets to decide What is reasonable ?
Air flight to CEO,
Open lorry to blue scholor
may be reasonable for that Singapore company like your Company.
As YOU mentioned, If that person who travels in open lorry wants flight, he has to upgrade his skillset and get promotion. I agree with you 🙂
Silliest argument.The migrant workers in Singapore(the country considered as Sorgam by you)does not require air flight (except to visit his country)AC bus or AC`car.He wants safe journey to his work spot. It is his right and he is not a beggar but a worker.When that could not be provided by Singapore Govt (in collusion with construction companies),how you praised Lee as saviour of all his countrymen?
Since you are drowned in the materialistic world and already behaving like a robot,you do not understand the ambition of that attender.In my earlier job as bank official,I have seen persons who rose from attender to Assistant General Manager.A person who joins as attender at his age of 20 need not remain as an attender for ever.Each position has different pay structure and perks.When he is promoted as Junior Assistant,within few years,he can become Senior Assistant and then Assistant cashier and Cashier etc.
Mr Raman,not only in our company,but many private companies improve the salary pattern at the end of the settlement period(normally 3 years)in consultation with the workers union.
Having different perks for different cadre is Capitalism according to you.Trade Unions are also recognizing that.But this system of offering different salary for different cadre will not justify absence of safe transport to construction workers.Your argument saying these workers should upgrade their skillset to get safe transport is absurd.
You thought that you have cornered me.But alas!wipe out the sand from your meesai if you have one.I am loosing my patience.I cannot argue with a person who does not know labour management,bargaining power of unions,wage settlement and even personal ambitions of human beings.I never thought that you will be so dull headed.Sorry.
Sooriyan,
In your reply to Raman, you have mentioned:
//Having different perks for different cadre is Capitalism according to you.//
That is what your communist friends say. Infact I have read articles in Vinavu stating that the entire organization, from the top man to the bottom most labourer were given equal salary of 600 roubles in soviet russia.
Even our friend Thendral was arguing against me when I spoke about Incentives for the better performers.
Sooriyan,
Do you pay your employees in your company on salary basis or do you share your profits with them?
Do all your employees get job security in your company?
If somebody is non performing in your company, what will be your step?
If somebody performs more than others, what will you do?
What are the socialistic benefits given to your employees in your company?
If your company has 20% more profit than last year, what will you do with that money?
Sooriyan,
Do you have employee union in your company?
Is there a designated union leader?
How is the union leader selected, What is his responsibilities?
How much you pay for the union leader? Does your union leader also work along with your teams?
Sooriyan,
I think you missed my questions.
I am repeating them for your.
Do you pay your employees in your company on salary basis or do you share your profits with them?
Do all your employees get job security in your company?
If somebody is non performing in your company, what will be your step?
If somebody performs more than others, what will you do?
What are the socialistic benefits given to your employees in your company?
If your company has 20% more profit than last year, what will you do with that money?
Do you have employee union in your company?
Is there a designated union leader?
How is the union leader selected, What is his responsibilities?
How much you pay for the union leader? Does your union leader also work along with your teams?
Mr K.K.At first,I want to clarify that I am CEO of the company and not one of the owners.Let me answer your queries.
Our employees get salary fixed and revised every three years in consultation with the Employees”s union.Our employees get 20% bonus(share in the profit)every year.They have job security.We are in the financial services industry.We have our loyal customers and therefore there is no targets for business development.We maintain respectable market share.Our employees do not find the job very streneous and therefore there are no non-performers.If at all some of them are lacking in their customer service,they are being counselled.The top performers are rewarded with incentives and promotions.Medical Allowance and reimbursement of Medical Insurance Premium (with a cap)are part of their salary package.ESI coverage is available for the eligible employees.There is union in our company and designated union leader is elected by the union members(employees)No selection by management.The union leader also works like any other employee.There is no special treatment for him.
Thank you very much Sir,
I got all the answers and they are relevant to the point. I like this kind of debate where we discuss on the merits of our points than the slandering and shaming the others in the debate.
I am glad that your business is really running well and you are taking care of your employees well. I am happy about it. May be I should consult you about the labour benefit welfare schemes when I start my own concern in the future.
One more question, Let me ask a hypothetical question. If there are good profits for the company, everything is rosy, then it is fine. If the company is not doing well due to some reasons, may be a new competition providing cheaper services and better benefits, or the customers dont have enough money to utilize your services, then how do you come across the situation?
Also, Let me ask you a few more questions to understand.
Normally in all the companies, the increments are usually provided once in a year based on their performance. Salary revision once in 3 years is a bit too long, in my opinion. Because of high inflation, it is better to pay them more on a yearly basis.
No Targets for Business Development.
I cant understand how this is possible. When you want to provide salary revision for the employees, then proportionately the company also had to earn proportionately more, right? So if there is No Goal, No Targets, How can the company grow and sustain?
Job Security:
If the company is really running under a big loss due to one reason or the other, Then will this Job security hold good? Job security is possible only for profit making companies and for companies who can sustain temporary losses in the long run. If there is a Big loss, is it possible to provide Job security to the employees?
There are no non performers:
Glad to know if there are no non performers. But in all companies, there are always some in the group who will not try to work hard, or will try to get benefits of other’s works. There are always someone who has a real attitude problem which sometimes cannot be resolved even through counselling. How do you manage such guys?
The Other points are fine. Nothing to clarify.
Glad to know that your employees are getting the 20% Bonus out of the company profits.
Hope our Thendral doesn’t term you as “kangani” when you said that top performers are rewarded with incentives and promotions. 🙂
தென்றல் அவர்களின் 18.1.1.1.2.2.1.2.1.2 பதிவுக்கு இங்கே பதிலளிக்கிறேன்.
தென்றல் அவர்களே,
ஒரு வருடம் முன்பு அந்த கேள்வியை கேட்ட போதும் இதே போல மழுப்பினீர்கள்.
இன்றும் அதே மழுப்பல்.
இன்றைய வாழ்வில் தாங்கள் கூறுகிற வழி கம்மியுனிசம் என்பது ஏட்டுச்சுரக்காய் தான்.
அதே சமயம் முழக்க முழுக்க பேராசை முதலாளித்துவம் என்பதும் பெரும் ஆபத்து தான்.
தற்போது இதற்கு தீர்வு இந்த இரண்டு துருவங்களில் இல்லை என்பதை என்று உணர்வீர்களோ தெரியவில்லை.
ஒட்டுமொத்தமாக உலகை அப்படி தலை கீழாக மாற்ற முடியாது தென்றல். உலகம் அவ்வளவு எளிதாக மாறக்கூடிய நிலையிலிருந்து வெகு தூரம் சென்று விட்டது.
ஜனநாயக வழியில் சோசலிசம் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் சர்வாதிகாரத்தின் மூலம் கம்மியுநிசத்தை நிறுவ முயல்வது வீண். அது தோற்று தான் போகும்.
கற்றது கையளவு அவர்களே!
\\ ஒரு வருடம் முன்பு அந்த கேள்வியை கேட்ட போதும் இதே போல மழுப்பினீர்கள். இன்றும் அதே மழுப்பல்.\\
தங்களுக்கு மழுப்பலாகத் தெரிவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. தங்களுக்குப் பதில் அளிப்பது தாங்கள் புரிந்துகொள்வதற்காக அல்ல. முதலாளித்து உற்பத்தி முறையில் சொகுசு கண்ட ஒட்டுண்ணி வர்க்கங்களின் முகத்திரையை மக்கள் திரள் முன் வெளிக்கொண்டுவருவது அவசியம். அந்தவகையில் தங்கள் கபடவேடம் மிகுந்த பயனளிக்கும் என்பது எனது புரிதல். ஆய்வகங்களில் டீயுபர்குளோசிஸ் பாக்டீரியங்களைப் பார்வைக்கு வைத்திருப்பது நோயை உருவாக்குவதற்கு அல்ல. நோயைப் புரிந்து கொண்டு வேரோடு களைவதற்குத்தான். ஆகையால் தங்களது சேவையை மேற்கொண்டு தொடரவும்.
\\ இன்றைய வாழ்வில் தாங்கள் கூறுகிற வழி கம்மியுனிசம் என்பது ஏட்டுச்சுரக்காய் தான். அதே சமயம் முழக்க முழுக்க பேராசை முதலாளித்துவம் என்பதும் பெரும் ஆபத்து தான். \\
கம்யுனிசத்தை விட்டுவிடுங்கள். கம்யுனிசம் இவ்வுலகில் பெற்றெடுத்த தொழிலாளர் நலச்சட்டங்களையே காலில் போட்டு மிதிக்கிற பேராசை கபடதாரியான தாங்கள் பேராசை முதலாளித்துவத்தைப் பற்றி வகுப்பெடுப்பதுதான் கேலிக்கூத்தான ஒன்று. வீடு பற்றி எரிகிற பொழுது பீடிக்கு நெருப்பு பிடித்த சமார்த்தியத்தையும் அதன் வக்கிரத்தின் பரிமாணத்தையும் தான் ஆற்று மணல் கொள்ளை விசயத்தில் இருந்து அண்ணாச்சி கடை, சிங்கப்பூர் தொழிலாளிகள் விசயம் வரை பார்க்கிறோமே! தாங்கள் கண்ணாடியில் நின்று பார்த்தாலும் இனி காணக்கிடைக்காத கண்ணியத்தையும் இழந்துவிட்டு கம்யுனிசம் ஏட்டுச்சுரைக்காய், பேராசை முதலாளித்துவம் ஆபத்து என்று சொல்வது எதற்காக? இனியும் இந்த வேசம் தாக்குப்பிடிக்கும் என்று கருதுகிறீர்களா?
\\ தற்போது இதற்கு தீர்வு இந்த இரண்டு துருவங்களில் இல்லை என்பதை என்று உணர்வீர்களோ தெரியவில்லை.\\
அன்றைக்கு தோழர் லெனின் சொன்னதைத்தான் சொல்கிறோம். “உன்னால் முடியாது என்று சொல்லிவிட்டுப் போ!”
\\ ஒட்டுமொத்தமாக உலகை அப்படி தலை கீழாக மாற்ற முடியாது தென்றல். உலகம் அவ்வளவு எளிதாக மாறக்கூடிய நிலையிலிருந்து வெகு தூரம் சென்று விட்டது.\\
எங்கள் நோக்கம் உலகை தலை கீழாக மாற்றுவது அல்ல. புதிய உலகை புதிய சனநாயகப்புரட்சியின் கீழ் படைப்பது!
\\ ஜனநாயக வழியில் சோசலிசம் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் சர்வாதிகாரத்தின் மூலம் கம்மியுநிசத்தை நிறுவ முயல்வது வீண். அது தோற்று தான் போகும்.\\
தாட்சரும் ரீகனும் இன்னபிற ஆளும் வர்க்க கைக்கூலிகளும் முதலாளித்துவ விபச்சாரத்தை அரியணை ஏற்றிய பொழுதே தோற்றுப்போன வாசகம் ‘ஜனநாயக வழியில் சோசலிசம்’. மற்றபடி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் கம்யுனிசத்தை நிறுவ முயல்வது வீண் என்று அன்றைக்குச் சொன்னவர்கள் மேட்டுக்குடிகள், விபச்சார தரகர்கள், போதைப்பொருள் வியாபாரிகள், சுரண்டல் பேர்வழிகள். இன்றைக்கும் இதே வர்க்கங்கள் தான் இந்த வேலையைச் செய்துக்கொண்டிருக்கின்றன என்றாலும் நுகர்வு வாழ்க்கையில் சுகம் கண்ட ஒட்டுண்ணி வர்க்கங்களும் இதில் அடக்கம் என்பது என் புரிதல். இவர்கள் நீடித்திருக்கும் வரை கம்யுனிசம் தோற்றுப்போகும் வாய்ப்பை மங்கிவிடவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
தென்றல்,
உன்னால் முடியாது என்றால் சொல்லி விட்டு போ என்கிறீர்கள்.
உங்களால் முடியும் என்கிறீர்கள். சரி, அது அப்படி செயல்முறை படுத்த போகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு நேரடி பதிலில்லை. மீண்டும் சுற்றி வளைத்து தனிநபர் தாக்குதலை ஆரம்பித்து விடுவீகள். விபச்சாரம் என்பீர்கள், மலம் என்பீர்கள், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுற்றி வருவீர்கள்.
எப்போது கம்மியுனிசம் மலரும்?
அதற்கு என்ன வழி செய்துள்ளீர்கள்.
நாளுக்கு நாள் கம்மியுநிசத்தை கடைபிடிக்கும் நாடுகளின் எண்ணிக்கை குறைந்து குறைந்து இப்போது பூஜ்யமாக உள்ளது. இதற்கு மேலும் நீங்கள் எத்தனை நாள் பூசி மெழுக போகிறீர்கள்?
இந்த கிருத்துவ மத போதகர்கள் சொல்வார்களே, இயேசு இப்போது பூமியில் அவதரிக்கப்போகிறார். கெட்டவர்கள் எல்லாம் மண்ணுக்கு மண்ணாக போவார்கள். நல்லவர்கள் எல்லாம் ஆண்டவன் அருளால் விண்ணுலகத்துக்கு சொர்கத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று பரப்புவார்கள். இயேசு எப்போது தான் வருவார் என்றால், இதோ வருகிறார், வந்துகொண்டே இருக்கிறார், அவர் எப்போது எப்படி வருவார் என்று சொல்ல முடியாது, ஆனால் வரவேண்டிய நேரம் மிக அருகில் உள்ளது என்பார்கள். தங்களது கம்மியுனிச பரப்புரையும் இயேசுவின் மதகுருமார்கள் பரப்புரையும் ஒன்றாகவே உள்ளது.
கனவுலகத்தில் இருந்து நிஜ உலகத்திற்கு வாருங்கள்.
கற்றது கையளவு அவர்களே!
ஆற்று மணலைக்காக்கும் போராட்டத்தையே அறிவியல் தொழில் நுட்பம் என்று கூறி ஆளும் வர்க்கத்திற்கு ஆட்காட்டி விரலைக் காட்டிவிட்டு கம்யுனிசத்தை எப்படி செயல்படுத்துவீர்கள் என்று எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லையே?
புளிச்ச ஏப்பக்காரனையும் பசி ஏப்பக்காரனையும் ஒரே தரத்தில் நிறுத்த இயலாது அல்லவா? இதைத்தான் தனிநபர் தாக்குதல் என்று சொல்வீர்கள் என்று கருதுகிறேன். நான் அப்படி இல்லை என்று மறுக்கிறேன். ஏனெனில் உங்களைப்போன்றவர்கள் முன்னாடி கைகுலுக்கிவிட்டு பின்னாடி கருவறுப்பவர்கள். அதவாது கம்யுனிசம் எப்படி வருகிறது என்று பார்த்துவிடுகிறேன் என்று பகிரதபிரயத்தனம் செய்துகொண்டே சமாதன விபச்சாரத்தை சங்கோஜமின்றி நிகழ்த்துவார்கள். சான்றாக, உக்ரைனின் குலாக்குகள் தான் சமாதானம் என்ற வார்த்தையை பலகோடி முறை உச்சரித்த சீவராசிகள் என்று கருதுகிறேன். ஆனால் அவர்கள் சீவித்திருந்த இடமெல்லாம் இரத்தக்கவுச்சி அடித்தது. தாங்களும் அப்படிப்பட்ட ஓர் பிம்பம் தான். ஸ்டாலினிய எதிர்ப்பாளர்களை பற்றி படித்திருக்கிறீர்களா? வாசித்துப் பாருங்கள். ஏதாவது தங்களுக்கு பாயிண்டாவது கிடைக்கும்.
இன்னும் நூறு முறை விளக்கினாலும் தென்றலுக்கு விளங்கப்போவது இல்லை.
தொழில்நுட்பத்தினை கொண்டு ஆற்று மணல் தேவையே இல்லாமல் வீடு கட்டும் நிலை வரும் போது யாரும் ஆறுகளை சீந்த வேண்டிய அவசியம் இருக்காதே? ஆனால் இது உங்களுக்கு புரியாது. நீங்கள் பிடித்த முயலுக்கு முன்னூறு கால்கள் என்று தான் சொல்லிக்கொண்டிருப்பீர்கள். அதற்கு உங்களுடன் இருக்கும் ஜால்ரா கோஷ்டிகளும் ஆமாம், ஆமாம், தென்றல் சொன்னால் சரியாக தான் இருக்கும் என்று சிங் சாக் அடித்து கொண்டிருப்பார்கள். சொல்ல வந்த கருத்தினை புரிந்து கொள்ளாமல் வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருப்பார்கள். மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஆற்று மணலை காப்பாற்ற உங்களுக்கு இருக்கும் அதே அக்கறை தான் எனக்கும் உள்ளது. வழிகள் மாறலாம். ஆனால் குறிக்கோள் ஒன்று தான். ஆனால் நீங்கள் அதை புரிந்து கொள்ள மாட்டீர்கள்.
நான் சொன்ன கட்டிடக்கலை தொழில்நுட்பம் பற்றி சத்தியமாக ஆராய்ந்திருக்க மாட்டீர்கள்.
உங்களுக்கு தெரியுமா, ஆப்ரிக்க நாடுகளில் எல்லாம் அங்கு கிடைக்கும் எளிய இயற்கை பொருட்களை கொண்டு இத்தகைய ஸ்டீல் கட்டிடங்களை உருவாக்குவதினால் பலருக்கு மலிவான செலவில் வீடு கட்ட முடிந்துள்ளது. நாம் தூக்கிப்போடும் தண்ணீர் பாட்டில்களுடன் இத்தகைய ஸ்டீல் கட்டிகக்கலையை சேர்த்து அழகான செலவு குறைந்த வீடுகள் கட்டுகிறார்கள். ஆனால் அவற்றை நீங்கள் ஆராய மாட்டீர்கள். தெரியும். ஏன் என்றால் நீங்கள் தென்றல். உங்களுக்கு பிடிக்காதவர்கள் சொல்வதை ஒருபோதும் சீர்தூக்கி பார்க்க மாட்டீர்கள்.
மறுபடியும் விபச்சாரம் என்று ஆரம்பித்து விட்டீர்கள். உங்களுக்கே வெட்கமாக இல்லை. ஒரு சாதாரண விவாதத்தில் இத்தனை தடவை விபச்சாரம் பற்றிய பேச்சு தேவை தானா.
உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து சொல்பவர்களெல்லாம் விபச்சாரத்தை நிகழ்த்துபவர்கள் என்று சொல்ல நா கூசவில்லை? கூசாது, ஏன் என்றால் நீங்கள் தென்றல், நீங்கள் சொல்வது தான் சட்டம், உங்களுக்கு எதிராக யார் வாய் திறந்தாலும் அவர்கள் மூச்சை அடக்க வேண்டும் என்று சொல்வீர்கள். நடத்துங்கள்….
ஸ்டாலினின் எதிர்ப்பாளர்கள் பற்றி எனக்கு தெரியாது. __________________________________இப்போது புதினும் அதையே தான் செய்கிறார். இது தான் கம்மியுனிசத்தில் உள்ள குறை – சர்வாதிகாரம்.
கற்றது கையளவு,
//தொழில்நுட்பத்தினை கொண்டு ஆற்று மணல் தேவையே இல்லாமல் வீடு கட்டும் நிலை வரும் போது யாரும் ஆறுகளை சீந்த வேண்டிய அவசியம் இருக்காதே? //
அதுவரை ஆறுகள் இருந்தால் தானே? தாங்கள் கூறியதை மீண்டும் ஒருமுறை ஒப்பு நோக்கி பாருங்கள். சோறு இல்லாமல் கூட ஒருவன் வாழ முடியும் என்ற நிலை வரும் போதும் உணவு பஞ்சத்தை பற்றி யாரும் பேச மாட்டார்கள் என்று கூட நாம் பேசலாம். மாறாக இன்றைக்கு ஆற்று மணல் கொள்ளையையை அந்த பகுதி மக்களே எதிர்த்து தடுத்து இருக்கிறார்கள் என்றால் இங்கே தொழில்நுட்பத்தை உள்ளே கொண்டு வந்து தரகு முதலாளிகளுக்கு முட்டு கொடுப்பது யார்? உங்களை தோழர் தென்றல் சரியாகத்தான் தோலுரித்து உள்ளார்.
நாங்கள் அவரது வாதங்களின் உள்ளடகத்தை தான் பார்க்கிறோம் மாறாக நாகரிகமான வெளிபூச்சு வாதங்களையல்ல.
தாங்கள் கூறும் தொழிநுட்பங்களை மற்றவர்கள் புரிந்து கொள்வது ஒருபுறம் இருக்கட்டும். தாங்கள் கூறிய லாஜிக் தங்களுக்கே புரிகிறதா?
அப்புறம் தென்றலின் வாதங்களின் உள்ளடக்கத்தைப் பார்க்காமல் வெளிப்புற பூச்சு வேலைகளை மட்டுமே பார்கின்றீர்கள். மலம்,விபசாரம் என்று கூறாமல் யாருக்கும் நோகாமல் வாதங்களை எடுத்து விடுவதால் நடுநிலை வேடம் வேண்டுமென்றால் போடலாம் ஆனால் இங்கே நிலைப்பாடு வாதங்களும் என்பது யாருடைய நோக்கிலிருந்து வைக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
அப்புறம் ரஷ்யாவையும் சீனாவையும் கம்யுனிஸ்டு நாடுகள் என்று திரும்ப திரும்ப கூறி வருகிறீர்கள். உண்மையில் முதலாளித்துவம் என்றால் என்ன என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் தான் இத்துணை காலமாக வினவில் விவாதித்து வருகிறீர்கள் இதில் கம்யுனிசத்தை பற்றி அங்கலாய்ப்பு வேறு.
அப்புறம் கிளிப்பிள்ளையை போல இருதுருவத்திற்கு இடையில் வேறொன்று உண்டு கருப்பு வெள்ளைக்கு நடுவில் வேறு நிறங்களும் உண்டு என்று கூறி வருகின்றீர்களே அப்படியென்ன உண்டு என்று கேட்டால் பதில் இல்லையே?
மக்களுக்கு இந்த ஆளும் அதிகார வர்க்கங்களிடம் மீது கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை என்பதற்கு ஏகப்பட்ட சாட்சிகள் உள்ளன. இந்த ஆளும் அரசமைப்பை ஒழித்துகட்டாமல் அவர்களுக்கு நிம்மதியில்லை என்பது எங்களது துணிபு. ஆனால் அதற்கான வழிமுறைகள் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதை தான் தோழர்கள் செய்கின்றார்கள். இங்கே கருப்பு வெள்ளைஎன்று கோடு போட்டு அவர்களிடம் விளக்க தேவையில்லை. இங்கே சித்தாந்தங்கள் மக்களை அணிதிரட்ட கோரும் போது தோழர்கள் வேலை அதற்க்கு பணி செய்து கிடப்பதே. மாறாக உங்களை போன்ற முதலாளித்துவ பிழைப்புவாதிகள் கூறுவது போல இடையில் உள்ள நிறங்களை தேடிக் கொண்டு இருப்பது அல்ல.
உண்மையை சொல்லப்போனால் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கம்மியுனிச சித்தாந்தத்தின் மேல் பற்று கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையை விட இப்போது அது மிக மிக குறைந்தே உள்ளது. இதை என்று தான் உணருவீர்களோ சிவப்பு.
சரியான குறிக்கோள், அதற்கான வழிமுறை, வழிநடத்தி செல்ல சரியான தலைமை இல்லாமல் கம்மியுனிச சித்தாந்தம் சீரழிந்து இப்போது கம்மியுநிசத்தை கடைபிடிக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை பூஜ்யம், பூஜ்யம், பூஜ்யம் என்றான பின்னர் மக்களுக்கு எப்படி உங்களின் மேல் நம்பிக்கை வரும்?
இதில் இருக்கும் ஒன்றிரண்டு கம்மியுநிஸ்ட்களும் ஒருவருக்கு ஒருவர் நீ போலி, நான் தான் உண்மை கம்மியுநிஸ்ட் என்று குறை கூறிக்கொண்டு இருக்கின்றீர்கள். கம்மியுநிஸ்ட்களாகிய உங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. இதில் ஒட்டு மொத்த நாட்டின் தலையெழுத்தையும் புரட்சியால் மாற்றப்போகிறீர்கலாம். காத்திருக்கிறேன். எங்கும் ஒடி விட மாட்டேன்.
கற்றது கையளவு,
கம்யுனிச சித்தாந்தத்தை விடுங்கள். உங்களிடம் அப்படி என்ன இருக்கிறது மக்களின் ஆதரவை பெற? முதலில் கம்யுனிசம்,புரட்சி என்றாலே வெட்டு குத்து இரத்தம் என்ற நினைப்பில், மாயையில் இருந்து வெளியே வர முயற்சி செய்யுங்கள்.
மணல் கொள்ளை எதிர்ப்பிற்கான இந்த ஆளும் வர்க்கத்திற்கான எதிர்ப்பின் குறியீடு தான் இந்த மக்கள் கமிட்டிகள். இங்கே மக்களின் வர்க்கதன்மையும் போராடும் குணமும் தான் முக்கியமானது எனும் போது அதை ஒருங்கிணைத்து ஆளும் இந்த அதிகார வர்கத்திற்கெதிராக போர்வாளாக்கியது எது? நாத்திகர்களான தோழர்கள் சாமி நம்பிக்கை கொண்ட அந்த மக்களை ஒருங்கிணைத்தது எப்படி?
ஏன் தங்களைப் போன்ற நடுநிலைவாதிகள் அதற்கெதிராக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
————–
சரி இப்பவும் ஒன்னும் கெட்டு பொய் விடவில்லை. இணையத்தில் ஏறக்குறைய ஒரு ஆண்டு கிட்ட நாம பேசிக்கிட்டு இருக்கோம். நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உங்களிடம் உள்ளத் தீர்வை சொல்லுங்கள். நாம் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
சிப்ரோபிலாக்சின் பற்றிய வினவு கட்டுரையில் ரெபெக்கா மேரி அவர்களுக்கு கொடுத்த பின்னூட்டம் எண் 12.3.2.1 ஐ காணுங்கள் சிவப்பு.
ஆக்கபூர்வமாக, நடைமுறையில் சாத்தியமான தீர்வு என்னென்ன உண்டு என்று யோசிக்கலாம்.
\\ எப்போது கம்மியுனிசம் மலரும்? அதற்கு என்ன வழி செய்துள்ளீர்கள். \\
விதைத்த சம்பா நெல் 90நாட்களில் அறுவடைக்கே வந்துவிடுகிறது. புரட்சி வெடித்தபின் சோசலிசம் மலர்வது சம்பா நெல்லை விட சடுதியில் நடக்கும். ஆனால் புரட்சியை விதைப்பது எப்பொழுது? அங்கே தான் கொமட்டிலே கை வைத்துக்கொண்டு கம்யுனிசம் எப்பொழுது வரும் என்று கேட்கும் அதிகார மேட்டுக்குடி வர்க்கம் தடையரண்களாக வந்து நிற்கும். திருடியவனே தீர்ப்பு சொல்கிறவனாக நிற்பது இங்கு தான்!
சரி புரட்சியை எப்படி எப்பொழுது விதைப்பது என்று கேள்வி வந்தால்? மே தின சூளுரையைப் படியுங்கள்! அதிகாரமன்றங்களை கட்டியெழுப்புவது, மக்கள் கமிட்டிகளை அமைப்பது என்று திட்டமாக வரையறுத்திருக்கிறார்கள்.
சரி மக்கள் கமிட்டிகளை எப்படி எப்பொழுது கட்டியமைப்பது? மணற் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் இருந்து சாய் கல்லூரி மோசடி வரை, சமூகத்தின் சகல வர்க்கங்களையும் தட்டியெழுப்பவே செய்கிறோம். இவற்றிற்கெல்லாம் தாங்கள் எதிரானவர் அல்லவா? ஆக இதிலிருந்து தெரிவது என்ன?
மொத்தத்தில் தெளிவான திட்டத்தோடு இடையறாது புரட்சியாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால் ஆளும் வர்க்கத்தின் தொங்கு சதையாக குடலுறிஞ்சிகளாக வாழ்கிற ஆட்கள் தான் சோம்பேறிகளாக இருப்பதுமட்டுமின்றி இச்சமூகம் குறித்து திருப்திபட்டுக்கொண்ட பிறகுதான் கம்யுனிசம் எப்பொழுது மலரும் என்ற கேள்வியே எழுப்புகிறார்கள்! இதைத்தானே வெளிக்கொண்டு வர வேண்டியிருக்கிறது!!
இப்பொழுது உங்கள் முறையாகும். ஆக இப்படி கேள்வி எழுப்பவர் தான் திட்டமற்றவராகவும், முயற்சியும் பயிற்சியும் அற்றவராகவும் மாடல் அல்லாதவராகவும் சுரண்டுகிற ஆளும் வர்க்க கதகதப்பில் அண்டிப்பிழைப்பவராகவும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது இல்லையா? இதைத்தாண்டி புரட்சியைத் துரிதப்படுத்த தாங்கள் ஏதேனும் பங்களிப்பை நல்கவிரும்புகிறீர்களா? இருந்தால் உங்கள் கேள்விக்கு இன்னும் கச்சிதமாக விடையளிக்க முடியும் என்று நம்புகிறேன்.
🙂 🙂 🙂
தென்றல், தென்றல், தென்றல்,
மறுபடியும் மழுப்பல்… மேலும் மழுப்பல்… கொஞ்சம் தாக்குதல்…
அவ்வளவு தானே உங்கள் சரக்கு. கேட்ட கேள்விக்கு விடை இல்லை.
உங்களிடம் விடையில்லை என்று சொல்லி விட்டு போக வேண்டியது தானே.
கற்றது கையளவு,
மழுப்பலான பதில்களை யார் சொல்வது? மணல் கொள்ளையையை தடுக்க மக்கள் கமிட்டிகளை அமைப்பது தான் சரியான தீர்வு என்று அதை செய்தும் காட்டியிருக்கிறார்கள் தோழர்கள் என்றும் இது தான் இன்றைய இந்திய நிலைமைகளுக்கு மிகச் சரியான ஜனநாயக முறையிலான தீர்வு என்றும் நாங்கள் கூறுகிறோம் . ஏற்கனவே உங்களிடம் இதை பற்றி நிறைய பேசி இருக்கிறோம் . இதற்க்கு என்ன தீர்வு உள்ளது என்ற பொழுது ஒன்றும் பதில் இல்லை.
சரி இப்பொழுதாவது பதில் சொல்லுங்கள். கருப்பு வெள்ளைக்கு நடுவில் ஏதாவது ஒரு நிறத்தை அதாவது ஒரு நடைமுறை சத்தியம் கொண்ட ஒரு வழிமுறையை கூறுங்கள்.
சிவப்பு,
மணல் கொள்ளையை தடுக்க மக்கள் கமிட்டிகளை அமைக்கும் தங்களது முயற்சி சரியே.
அதனோடு சேர்த்து மணலின் தேவை இல்லாமல் வீடு கட்டும் கட்டிகக்கலை பற்றிய அறிவு நமது பொதுமக்களுக்கு கிடைத்தால் இனி ஆறுகளை மலடாக்கும் தேவை இருக்காது அல்லவா.
நம் இருவரது குறிக்கோளும் ஒன்று தான். உங்கள் வழி தவறு என்று நான் சொல்லவே இல்லை. அதனோடு சேர்த்து நான் சொன்ன வழியையும் சேர்த்து செய்யலாம் என்று தான் கூறுகிறேன்.
முன்பே கூறி இருக்கிறேன். கடவுள் நம்பிக்கை என்ற ஒரு சுவர் இருப்பதால் தானே சாதிமத வெறியர்கள் அதனை கொண்டு தீண்டாமை, மூட நம்பிக்கை போன்ற சித்திரங்களை வரைகிறார்கள். அதனால் அந்த கடவுள் நம்பிக்கை என்ற சுவரை உடைத்து விட்டதால் பின் எதனை வைத்து மதவாதிகள் மக்களை ஏமாற்ற முடியும் என்று பெரியார் நினைத்ததால் தான் கடவுள் மறுப்பு போராட்டம் கையிலேடுக்கப்பட்டது. அதே போல மணலுக்கான தேவை மிக அதிகமாக இருப்பதால் தான் வைகுண்டம் போன்ற பணக்கார ரவுடிகள் நம் ஆறுகளை சூறையாடுகின்றனர். அந்த மணலின் தேவையை இல்லாமல் செய்தால்? மேலும் ஸ்டீல் வீடுகளை கட்டுவதால் செலவும் குறைவு, நேரமும் மிச்சம். ஆண்டுகணக்கில், மாதகணக்கில் காத்திருக்காமல் விரைவில் வீடுகளை கட்டி மக்கள் வாழ இயலும். ஆப்பிரிக்க நாடுகளில் இது போன்ற கட்டிடங்கள் அதிகமாக கட்டப்பட்டு வருகிறது. காரணம் – பணம் மிச்சம், நேரம் மிச்சம்.
சற்று நிதானமாக நான் சொன்னதை மீண்டும் யோசித்து பாருங்கள். என் பக்க நியாயம் உங்களுக்கு விளங்கும்.
கற்றது கையளவு,
ஆறுகளை மலடாக்குவது யார்? இங்க தான் உங்க மாதிரி பிரச்சாரம் செய்பவர்கள் ஆளும் வர்க்கத்திற்கு கைக்கூலி சேவை செய்கின்றார்கள். ஆறுகளை மலடாக்குபவர்களையும் அதை எதிர்த்து போராட்டம் செய்பவர்களையும் சேர்த்து தராசின் ஒருபக்கத்திலும் தொழில்நுட்பத்தை மறுபக்கத்திலும் வைத்து, போராடும் மக்களை இழிவுபடுத்துகிறீர்கள்.
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த போராடும் மக்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் அல்ல. ஆனால் கம்யுனிஸ்டுகள் கடவுள் நம்பிக்கையற்றவர்கள். இங்கே ஆற்று மணல் கொள்ளை போவதை தடுப்பதற்காக அவர்களை ஆட்கொண்டது கடுவுளல்ல மாறாக போராடுவது என்ற நடைமுறை யதார்த்தம் தான்.
சரி தாங்களே சொல்லியது போல, எங்களது நோக்கமும் தங்களது நோக்கமும் ஒன்று தான் என்று கூறி விட்டீர்கள். அப்படியெனில், அதற்க்கு என்ன செயல்திந்திரம் வைத்துள்ளீர்கள். நீண்ட நாட்களாக அப்படி எதாச்சும் சொல்லுவீங்க நாமளும் ஏதாச்சும் பண்ணலான்னு பாத்தா ஒன்னையும் சொல்ல மாட்டேன் என்கின்றீர்கள். இப்பயும் ஒன்னு கேட்டு போகல. அந்த ரகசிய திட்டத்தை எனக்கு மட்டுமாவது சொல்லி விடுங்கள்.
\\ நாளுக்கு நாள் கம்மியுநிசத்தை கடைபிடிக்கும் நாடுகளின் எண்ணிக்கை குறைந்து குறைந்து இப்போது பூஜ்யமாக உள்ளது. இதற்கு மேலும் நீங்கள் எத்தனை நாள் பூசி மெழுக போகிறீர்கள்?\\
பூஜ்யம் என்றே வைத்துக்கொள்வோமே! உலகம் எங்கும் ஏகாதிபத்தியம் என்று தலைக்குமேலே பீக்குடையை சுமத்திவிட்டு கம்யுனிசத்தை கடைபிடிக்கும் நாடுகளின் எண்ணிக்கை பூஜ்யம் என்று சொல்வதற்கு ஏன் தாங்கள் கிஞ்சித்தும் வெட்கப்படவில்லை? யாரால் உங்களைப்போன்று கதைக்க இயலும்? ஏகாதிபத்தியம் ஒன்றுதான் வாழ்வதற்கு வழி என்று கருதிக்கொள்கிற பிழைப்புவாதக் கூட்டங்களால் இப்படிக் கருதமுடியும். கம்யுனிசத்தின் மீதான மனவக்கிரம் மிக எளிதாக அம்பலப்படுகிற இடம் இது. இதைப் பூசி மொழுகிவிட்டு ஒரு சனநாயகவாதிபோல வேசம் போடுவது ஏன்?
தென்றல்,
//பீக்குடையை// – அப்படி என்றால் என்ன அர்த்தம்?
உலகில் கம்மியுனிச நாடுகளின் எண்ணிக்கை பூஜ்யமாக இருப்பதற்கு நான் ஏன் வெட்கப்படவேண்டும். நீங்களே அதற்கு வெட்கப்பட்டதாக தெரியவில்லை.
ஏகாதிபத்திய முதலாளித்துவம் – சர்வாதிகார கம்மியுனிசம்.
இந்த இரு துருவங்களுக்கு இடையிலும் ஒரு வழி உண்டு. அது துருவத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்களுக்கு புரியாது. புரிந்து கொள்ளவும் முயல மாட்டார்கள்.
கற்றது கையளவு அவர்களே!
மதங்களைப் பற்றிய தங்களது வாதம் சந்தர்ப்பவாதமானது. தாலி குறித்து திராவிடர் கழகம் பார்ப்பனிய மோசடிக்கு எதிராக போராட்டம் நடத்திய பொழுது இதெல்லாம் தேவையில்லாத ஒன்று என்று முதலாளித்துவ பாணியில் தெரிந்தே மதங்களை அங்கு ஆதரித்துவிட்டு இங்கு மதம் மோசடியானது என்று பகல் வேசம் போடுவது ஏன்? உங்களது இந்த வாதம் எந்த அளவிற்கு அழுகி நாறும் பொய்களைக் கொண்டிருக்கிறது என்பதை பரிசீலியுங்கள்.
\\ கனவுலகத்தில் இருந்து நிஜ உலகத்திற்கு வாருங்கள்.\\
கனவுலகத்தில் வாழ்கிறவர்களுக்கு முன் நாங்கள் வைக்கும் பிரச்சார உத்தி என்னவென்றால் ஆளும் வர்க்கமும் அதை அண்டிப்பிழைக்கும் சுரண்டுகிற வர்க்கமும் வைத்திருப்பது நிஜவாழ்க்கை அல்ல என்பதை உரத்துச் சொல்வதாகும். இப்படிப்பட்ட நிசமான வாழ்க்கையை முற்றாக பறித்துவிடும் போராட்டத்தின் மூலமாக கனவுலகில் வாழ்பவர்களை மீட்டெடுத்துவிட முடியும் என்பது எமது முடிபான துணிபு!
இதைச் செயல்படுத்துவதற்கான திட்டம் உங்களைப்போன்றவர்கள் வாழ்கிற நிஜ வாழ்க்கை தொழிலாளர்கள் போட்ட பிச்சையாகும் என்பதை அரசியல் அரங்கிற்கு துணிந்து கொண்டு வருகிறோம் என்பதே!
தனிப்பட்ட வகையில் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.
அதே சமயம் ஒருவர் கடவுளை நம்பினால் அது அவர்களது நம்பிக்கை என்று விட்டு விடுவேன்.
ஆனால் கடவுள் பெயரால் சிலர் ஆண்டவர் இதோ வந்து விட்டார், நானே ஆண்டவரின் ஒரே தூதன், நானே கடவுள் என்று கூறுவார்களானால் அத்தகைய பிராடு பேர்வழிகளை சுட்டிக்காட்டவும் தயங்கியதில்லை.
இதில் சந்தர்ப்பவாதம் எங்கிருந்து வந்தது.
ஐயா தென்றல், சற்று வினவின் மத சம்பந்தப்பட்ட சாதி சம்பந்தப்பட்ட பதிவுகளில் என்னுடைய பின்னூட்டங்களை பாருங்கள். எப்பொழுதும் என் நிலை ஒரே நிலை தான். நீங்கள் தவறாக புரிந்து கொல்வதர்கேல்லாம் நான் பொறுப்பேற்க இயலாது.
//போராட்டத்தின் மூலமாக கனவுலகில் வாழ்பவர்களை மீட்டெடுத்துவிட முடியும் என்பது எமது முடிபான துணிபு!//
அதற்கு நீங்கள் முதலில் தங்களுடைய கனவுலகத்தை விட்டு வெளியே வர வேண்டும். நீங்கள் வரமாட்டீர்கள்.
அய்யா கற்றது கையளவு ,
நிஜ உலகிற்கு வாருங்கள் என்று எங்களை இருகரம் கூப்பி வரவேற்பதற்கு எமது நன்றிகள் கோடி. உண்மையில் நிஜ உலகைப் பற்றிய உங்களது புரிதல் என்ன?
உண்மையில் உலகில் கம்யுனிச நாடுகள் இருந்தனவா என்று எனக்குத் தெரியாது தாங்கள் சொல்லும் தகவல் எனக்கு புதிதாக இருக்கிறது.
இங்கே யாரும் கம்யுனிசத்தை நடைமுறைபடுத்த கோரவில்லை. இங்கு நடக்கும் அக்கிரமங்களை எதிர்பதற்கு கம்யுனிஸ்டு தேவையில்லை. இப்போ தாங்கள் ஒரு கம்யுனிஸ்டாக இல்லாத பட்சத்தில், முதலாளிக்கும் கம்யூனிஸ்டுக்கும் நடுவில், கருப்புக்கும் வெள்ளைக்கும் நடுவில் ஏதாவது ஒரு வழியில் நாட்டின் வளங்கள் கொள்ளை போவதைத் தடுக்க, சுரண்டலைத் தடுக்க என்ன வழி வைத்துள்ளீர்கள்?
Reply to Nanthan’s comment on 18.1.1.1.2.2.1.2.2.1
Nanthan,
When I say it is the fault of the company in Singapore, you generalize and say that entire Singapore is bad.
If you really generalize, the situation is almost the same in all the countries. Not only in Singapore.
Please check the links provided by me earlier about the attoricities done to workers in China, Russia, Thailand, India, etc.
If you really generalize, you can blame the whole world. All the above countries have more or less same kind of labour laws which specify about worker’s health and safety.
But many companies are not following that.
Even in the link provided by you, it is mentioned that there are steep fines for companies not following the rules for the labourer’s health and safety.
There are always Ideal conditions which we all wish for. Unfortunately the world we live is not ideal. It is not perfect. Now the question comes of what is acceptable and what is not acceptable.
If you say people travelling in vehicles in covered canopies with raised side rails with safe seat heights, safe speed limit for vehicles when there are passengers in it is not safe, then what do you think about the way our school children are taken in Autorickshaws in Chennai. What about the safety of political party cadres being shipped in open lorries without canopies, What about construction companies in India making workers travel on back of open lorries, sitting on top of sand, with nothing to hold for. Doesn’t your hear bleed for our own people? Will it bleed only for singaporeans? Doesn’t your heart bleed for the pathetic living conditions of the workers in Saravana stores?
Even when you look at the photos in the article, the workers are given a helmet and safety shoes, harness and fluorescent coats. All these are also part of the Health and Safety measures. These were not available to workers 20 years before. Now companies are more aware of the Health and safety of workers. Now is the time to stiffen the laws for the non conforming companies who violate the laws.
My point is, We should look at solution and move towards it.
No point in blaming the system and then doing nothing more about it.
The Author of the article should take photographs of the particular vehicle, first send it to the government labour ministry in singapore. If there is no action, then the photos can be sent to newspapers, and to all the opposition parties in singapore. More public in singapore should be aware of the pathetic living conditions of the workers and thus, change can be brought in.
If the author’s aim is just to blame and do nothing, then there is no use.
Most of the comments in this section refer to the conditions that were prevailing in 2011 and 2012.
Can somebody currently living in Singapore let us know the present situation there?
I see that there are laws and fines there about the health and safety of workers.
Whether is fully implemented, we need to know.
For record sake,there are rules.When the rules are flouted by many construction companies,it seems that the Singapore Govt looks at other way.When the Govt is strict in enforcing rules relating to cleanliness,why not it take action against erring companies?There are spate of reports about fatal accidents involving workers who travel in open lorries.It is for K.K to prove that it is not happening.As I said earlier,he should not compare Singapore,the first world country with a third world country like India.Nobody in this site praised socialist countries or middle east countries as Sorgam.It is for the capitalist friends like K.K to stop praising this country which do not treat its migrant workers like human beings.
Sooriyan,
Why limit to Singapore alone?
Why not all the inhabitants of Cuba and all the inhabitants of Venezuela and all the inhabitants of North Korea enjoy all the luxuries of the “Sorgam”.
Do we have any control on singapore, venezeula, north korea and cuba?
But, we can bring change in our country people’s our worker’s life.
Start with Saravana stores, Do a porattam in front of Saravana stores to ensure all their workers are getting a better life. I am not asking boologa sorgam, but just a better normal living conditions, just like all others in our country.
My opinion is that without knowing the true state of affairs,do not praise any one country.Since many admirers were there for Singapore,I cited the shortcomings and the ruler’s apathy towards the working class of that country.
Sooriyan,
Correction, It is that Individual company’s apathy towards their workers in this case. Not the ruler’s apathy.
Sooriyan,
After Mr.Nandan’s comment, I did check some websites about labour laws.
There are labour laws and rules to protect the labourers in the work environment and employers should take care of the health and safety of the employees.
If the company is flouting the labour law, then the workers can complain to the ministry of labour welfare.
KK,
For your information, http://www.onemotoring.com.sg/publish/onemotoring/en/lta_information_guidelines/maintain_vehicle/lorries_safety_regulations.MainPar.70531.collapsePar.51799.File.tmp/lorry2.pdf
Read the above official link and then compare it with your statement of
//My question is, we need to do an Apple to Apple comparison.//
Let me see, how are you going to diffuse this comment (I am not responsible for others comments!).
Nanthan,
Thanks for providing the link.
In this link, it is mentioned that the health and safety of the workers should be taken care of. The Canopies covering the Vehicle, The raised railings and other safety norms had to be followed.
Where is the question of Open Lorry. You youreself see the pictures. It is mentioned with the ‘X’ Mark, meaning that it is wrong to carry passengers in that way.
And see the bottom line, the deadlines are “Feb and Aug 2011” for light and heavy vehicles.
Still you didnt understand my Apple to Apple Comparison. It all started with the debate with Mr.Thamizh earlier. When he pointed out that Our Chennai Ford and Nokia companies provide better transport facilities than this Singapore Construction worker company, I asked him to compare with a similar company like Ford and Nokia in Singapore. The plight of the Construction company workers in Chennai are not any better than the Construction workers in Singapore. It is still worse. Irrespective of the law of the land, I still see people sitting in Sand Lorries at the back, without any sun shade, without any safety railings, actually they sit on top of the sand and there is nothing to hold for them. Atleast in Singapore, there are very heavy fines for construction companies not following the health and safety norms as provided in your link. What about our country? Do we have such heavy fines and Laws? Even if there are strict laws in India, are they abided? The laws in our country are only for Policemen to make more money. Please go to OMR and find out that Policemen stop all vans and share autos and get money from the drivers. This is how the law is implemented in our country.
By Apple to Apple, I wanted you to compare the equivalent companies. If you want to compare the construction worker in singapore, compare the same with construction worker in India. For that matter, construction workers even in Russia. Earlier I sent a link about the pathetic condition of migrant workers in Russia. If you want to compare the facillities provided by Nokia and ford in Chennai, you need to compare it with the similar Nokia and Ford companies in Singapore. This is what I meant by Apple to Apple Comparison.
KK,
//Where is the question of Open Lorry. You youreself see the pictures. It is mentioned with the ‘X’ Mark, meaning that it is wrong to carry passengers in that way. //
Did you read that link and understand it? If lorry carriage is covered with Canopy then it is ok for you?
//By Apple to Apple//
Can you prove that any other ‘developed country’ is using this kind of lorry carriage for workers transport?
Nanthan,
First please understand that I am not favouring workers to be carried like cattle in lorries.
They needed to be treated humanely and carried safely. No questions about it.
Not only the commutation part. The safety of workers is paramount in all aspects – In Work environments, in Transit, In office, In factories, everywhere.
Mr.Thamizh was telling earlier that workers were carried on Open lorries.
Now it is shown in your picture that carrying workers in open lorries is banned and incurs heavy fine.
Second point, You are asking whether Covering with Canopy is OK. You can please read the link provided by you completely. It is not only about Covering with Canopy. It also specifies the safety of Side Railings Height, Passenger sitting height, the number of passengers who can travel, the safety in terms of dangerous items and how it needs to be positioned, etc.
Have you seen how our children are travelling in Autorickshaws in Chennai city?
That journey is far more dangerous than the picture represented in your link.
Have you seen how our caste leaders and political party leaders are bringing their cadres to their meetings?
Those journeys are far more dangerous than the picture represented in your link.
Please check the below links:
http://www.alamy.com/stock-photo-farm-workers-returning-from-labouring-in-the-fields-crammed-into-the-17065528.html
https://www.google.com.ph/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=7&cad=rja&uact=8&ved=0CDoQFjAG&url=http%3A%2F%2Fwww.theguardian.com%2Fworld%2F2008%2Fapr%2F11%2Fburma.thailand&ei=iNU_VejvEcqJuwSD4YHQBg&usg=AFQjCNHcUhMb6T9wcJ5-kbDjMs8y_-l6VA&sig2=r0E41hyavuNNyUcrA_4HjQ&bvm=bv.91665533,d.c2E
Also, if you want to see how China is treating their workers, check this below link:
http://en.wikipedia.org/wiki/Foxconn_suicides
If you want to see how Russia is treating their Migrant Workers, check this below link:
http://blogs.reuters.com/photographers-blog/2012/02/01/russias-untouchables/
If you want to see how Dubai is treating their Migrant Workers, check this below link:
http://www.dailymail.co.uk/news/article-2859734/The-Dubai-DON-T-want-tourists-Photos-desperate-conditions-endured-migrant-labourers-forced-work-50C-heat-pittance.html
Have you seen how our own North Indian workers are being treated in our own “Namma Chennai”?
Please check the links from vinavu:
https://www.vinavu.com/2012/12/03/tamil-nationalists-hate-politics/
https://www.vinavu.com/2015/02/01/leather-export-made-in-ranipet-kills-10-more-workers/
You also know how many north indians were injured or died during the construction of the Chennai Metro project.
As you dig deep, you will get similar stories all over the world.
Generally the local people always treat the migrant workers as outsiders and always think that they are inferior to the locals. Unfortunately this is the truth.
So, the problem is global, Singapore is not the only country. But this situation had to change. The solution is to complain to the governing authorities in Singapore about this particular company and also create a public opinion against these inhuman activities. Once the general public realizes the need to change, they can force the governments to take stringent actions.
This is the solution we need to travel towards.
KK,
It seems that you don’t have any problem with lorry carriage covered with Canopy then it is ok (as you drag many other counties and other diluations). Don’t write another two page essay for this question.
As per your standard //Apple to Apple// Can you prove that any software company or Electronics company in singapore is using this kind of lorry carriage for workers transport? Here I am comparing Singapore constructions employees transport mode with Singapore other companies employees transport mode. As you are intelligent, could you give your answer in within few lines.
Nanthan,
First try to understand that I am not advocating that companies SHOULD take their employees in lorries. There is always room for improvement and the people can force the management to provide better amenities for their workers. My point is, when there are workers working in far more dangerous positions in our own country, our pseudos are worrying about canopies in singapore. What is your position on the living conditions of Saravna Stores people? What is your position about construction workers travelling in open lorries without any canopy, without railings, without safety protections, without skull helmets, without hareness, without proper gloves and shoes in our country. And our workers suffer all these but still are paid 5% or 10% of what the singapore workers are getting paid. I am just saying that we should first rectify the serious problems faced by our own workers and then talk about other country workers. Do yo only worry about Singapore workers and have no concern about our own country workers? Let us clean our backyard first before commenting about others.
The labour laws of singapore
தான் பெற்ற ஆண பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி அவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வரும் வரை ஒரு தந்தையின் பொறுப்பு நீள்கிறது.பெண் மக்களாக இருந்தால் அவர்களை நல்ல இடத்தில் மணமுடித்துக் கொடுப்பதும் தந்தையின் பொறுப்புதான். அவ்வாறான பொறுப்புகளை செய்ய இயலுமா என்று முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவதுதான் குடும்பத் தலைவனின் பணியாகும். அதை விட்டுவிட்டு தங்கைகளை கரை சேர்கக வேண்டும், தம்பிகளை படிக்க வைக்க வேண்டும் என்று தனது மற்ற பிள்ளைகள் மீது பொறுப்பை சாட்டும் தந்தைகள் வருங்காலங்களிலாவது திருந்தி தங்களால் எந்த அளவிற்கு தங்களது பிள்ளைகளுக்கு நல்லது செய்ய முடியுமோ அந்த அளவோடு குழநதை பேற்றை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்,
Criticizing is easy for anyone and anything. Nation building is totally a different things. Marxists can criticize ,but they are not eligible to build a nation. Because they are not pragmatic enough in handling issues. After soviet collapse, does any communist party in the world came out with a plan of do and donts after revolution? Marxism is a failed theory. They can make rhetoric statements. A classic example recently Nepal revolution. If a country or organisation or party fails based on the so called Marxists principles dont escape simply by saying it is a revisionist one. The philosophy itself flawed.
வெல்தமிழ் அவர்களே! சில பதில்கள்:
\\ Criticizing is easy for anyone and anything. Nation building is totally a different things. Marxists can criticize ,but they are not eligible to build a nation.\\
உலக வரலாற்றில் மக்கள் நலன்புரி அரசுகளை வரையறுத்து அதைக் கட்டமைத்துக்காட்டியது மார்க்சியம் தான். இதற்குப்பிற்பாடு தான் Welfare State என்ற சொல்லாடலே உலக அரங்கிற்கு அதன் உட்பொருளில் அறிமுகமாகிறது. சோவியத்தைப்பின்பற்றித்தான் ஒவ்வொரு நாடுகளும் பொதுசுகாதாரம், தொழிலாளர் சட்டம், கல்வி என்று அனைத்தையும் வடிவமைக்க வேண்டியிருந்தது. தற்பொழுது சோசலிசம் இருக்கும் இலத்தின் அமெரிக்க நாடுகள் தான் யுன்ஸ்கோ அறிக்கையின் படி எழுத்தறிவின்மையை முற்றிலும் அகற்றியிருக்கிறது. யாரையும் விமர்சிப்பது எளிது; ஆனால் இளமையில் கல் என்று சொன்னால் அது செங்கள் சூளையல்ல என்று திரைப்படம் காட்டும் அவலமான மூன்றாம் உலகநாட்டில் இருந்து இப்படியொரு கருத்து வருவது மோசடியான செயலே!
மார்க்சியவாதிகளால் ஒரு நாட்டை உருவாக்க லாயக்கற்றவர்கள் என்று சொல்வதற்குப் பதிலாக பாட்டாளிகளால் தங்களது அரசை நிறுவிக்கொள்ள இயலாது என்று ஏன் தாங்கள் சொல்லக்கூடாது?
அப்படி தாங்கள் ஒரு கருத்தை வைத்தாலாவது அதன் நியாயத்தைப் பரிசீலிக்கலாம். ஏனெனில் அதைச் சொல்பவர் ஒரு பாட்டாளியாக இருந்தால் எப்படியிருக்கும்? பணக்கார முதலாளியாக இருந்தால் எப்படியிருக்கும் என்பது அவசியமான பார்வை தானே? அங்கே தானே முன்னது விமர்சனமாக பின்னது அவதூறாக இருப்பது தெரியும். முயற்சி செய்யுங்களேன்.
\\Because they are not pragmatic enough in handling issues.\\
பயனீட்டுவாதம் (Pragmatism) பிரச்சனயை தீர்க்காது. சான்றாக புரட்சி கொடூரமானது, கம்யுனிஸ்டுகள் கொலைகாரர்கள், கம்யுனிசம் பேய் என்று அரண்ட நாடுகள் எல்லாம் பொருளாதார சீர்திருத்தங்களின் மூலமாக சோசலிசம் கண்ட நன்மைகளை கொண்டுவந்துவிட முடியும் என்று தெரிந்தே தன் சமூகத்திற்கு துரோகம் செய்தார்கள். அப்படியிருந்த பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் welfare stateன் அனைத்து அம்சங்களும் ஒவ்வொன்றாக வெட்டி எறியப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கிப்போராடுவது புரட்சியில் ஒரு நாடு பெற்றெடுத்த பலன்களைத்தானே! இதையேன் திட்டமிட்டு மறைக்கிறீர்கள்?
\\ After soviet collapse, does any communist party in the world came out with a plan of do and donts after revolution? Marxism is a failed theory.\\
ஏன் ஒவ்வொரு நாட்டு கம்யுனிஸ்ட் கட்சிகளின் செயல் திட்டங்களை படிப்பதில்லையா? ஒவ்வொரு நாட்டிலும் உள்ள புரட்சிகர இயக்கங்களின் செயல்களை போராடுவதன் மூலமாக வர்க்க உணர்வில் புடம் போடுவதன் மூலமாக அறிய இயலும். மார்க்சியம் ஒரு தோற்றுப்போன கருதுகோள் என்று சொல்கிறீர்களே! சோவியத் உடைகிற பொழுது கார்ப்பசேவிற்கு புகழாரம் சூட்டுகிற அமெரிக்க சனாதிபதியின் கடிதம், கேவலம் காங்கிரசு கட்சியின் ராகுல் காந்திக்கு கூட தெரிகிறது. ஆனால் அதற்கு முன்பும் பின்பும் கொசோவா பிரச்சனை குறித்தும், உலக நாடுகளின் கம்யுனிஸ்ட் இயக்கங்கள் அணுகிய அரசியல் பார்வை குறித்து தங்களுக்கு ஏதேனும் தெரியுமா? அது குறித்த விமர்சனம் ஏதும் அறியத் தருகிறீர்களா? சான்றாக தமிழ் நாட்டில் புரட்சிகர இயக்கங்கள் கம்யுனிசம் தோற்றதாம் முதலாளித்துவம் வென்றதா? என்று ஒரு வெளியீட்டை வெளியிட்டிருக்கிறது. அதில் முன்வைத்திருக்கிற பார்வை சரியா? அல்லது கார்ப்பசேவிற்கு புகழாரம் சூட்டுகிற அமெரிக்க சனாதிபதியாக இருக்கப்போகிறீர்களா? எதை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்?
\\\\A classic example recently Nepal revolution.\\
நேபாளப் புரட்சியை மார்க்சியத்தின் தோல்விக்கு ஒரு செவ்வியல் உதாரணமாக தாங்கள் கொண்டிருப்பது ஆச்சர்யமே! ஆனால் மார்க்சியத்தின் வெற்றிக்கு அது ஓர் கட்டியம் கூறும் வரலாற்று நிகழ்வு. இங்கு தாங்கள் ஓர் இரட்டை நாக்கை அவதானிக்க வேண்டும். சோவியத் உடைந்த போன பிறகு எத்தனையோ பிரச்சாரங்கள் புரட்சி இனி சாத்தியமில்லை. வர்க்க சமுதாயம் என்பது கிடையவே கிடையாது. அதாவது இன்றைய பாராளுமன்ற சனநாயகத்திலேயே வர்க்கமற்ற சமுதாயம் தான் நிலவுகிறதாம் என்று அடர்த்தியாக பலகோடிக்கணக்கான பிரச்சாரங்களை நிகழ்த்தியிருக்கிறது முதலாளித்துவ ஊடகம். எங்கே போயிற்று அவைகள்? அவற்றின் தோல்விக்கு என்ன பதில்? இதுவரை கூறிய பொய்களுக்கு இச்சமூகத்தில் பொறுப்பேற்கப் போவது யார்?
\\If a country or organisation or party fails based on the so called Marxists principles dont escape simply by saying it is a revisionist one. The philosophy itself flawed.\\
திருப்புவாதம் என்று சுருக்குவது மட்டும் போதாது. சமூகத்தின் உற்பத்திச் சக்திகள் எந்த வர்க்கம் தன் வசம் வைத்திருக்கிறதோ அது அரசாக நிற்கிறது. அப்படியானால் வர்க்கப்போராட்டம் என்பது மார்க்ஸ் முன்வைப்பதுபடி இதை தன் வசமாக்குகிற போராட்டம் முன்னெடுக்கப்படவேண்டும். அங்கே நிகழாமல் தோல்வியுறுகிறது என்றால் என்ன அர்த்தம்? மார்க்சியத்தின் படி பாட்டாளிகள் மூலதனத்தின் முரண்பாட்டை நீக்குகிற போரில் உற்பத்திச் சாதனங்களை உடமையாக்குவதில் தோல்வியைக் கண்டிருக்கின்றனர் என்றால் அதை தற்பொழுது தன் வசமாக வைத்திருப்பவர்கள் செய்த வேலையின் பரிமாணம் என்ன? இங்கே மார்க்சியம் எங்கே தோற்றது?
அதற்கு ஒருவரியில் பாட்டாளிகளால் தங்களது சர்வாதிகாரத்தை நிறுவ முடியாது அப்படி நிறுவினாலும் அது நிலைக்காது என்று சொல்லிவிட்டுப்போங்களேன். அப்படியாவது மார்கியம் தோற்றுவிட்டது என்ற வாதத்திற்குள் நுழையலாம் இல்லையா?
//அதற்கு ஒருவரியில் பாட்டாளிகளால் தங்களது சர்வாதிகாரத்தை நிறுவ முடியாது அப்படி நிறுவினாலும் அது நிலைக்காது என்று சொல்லிவிட்டுப்போங்களேன். அப்படியாவது மார்கியம் தோற்றுவிட்டது என்ற வாதத்திற்குள் நுழையலாம் இல்லையா?// Exactly this is what im saying. To have a welfare state,there is no need of a revolution. No need to loss thousands of lives and then party compromises with “class enemies” for some reasons(china,nepal) and those who were dead become stupids and the top cadres are smart to live a luxury life(china,nepal). Thendral , my point is same. The parties all over world start revolution and then compromise. This can be seen in the history last 200 years. As you say marxism is a science, by modern science evaluating methods , a theory always yields failure.So hence marxism = (failure+disaster+loss of lives) . Coming back to sg, it is taking care well about its people(welfare state) and providing good life and guarantee a decent living to its citizens.
வேல் தமிழ் அவர்களே, “பாட்டாளிகளால் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது அப்படியே கைப்பற்றினாலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று சொல்வதற்கு ஏதாவது ஓர் ஆதாரமாவது வைப்பீர்கள் என்று பார்த்தால் வெறும் அவதூறுகள் இருப்பதோடு மட்டுமில்லாமல் கொத்தடிமை சிங்கப்பூரை நலன்புரி அரசிற்கு எடுத்துக்காட்டாக வைக்கிறீர்களே! முன்யோசனை வேண்டாவா? உங்கள் வாதத்தின் பொய்களை ஒவ்வொன்றாக குறித்துக்கொள்ளுங்கள்.
\\ To have a welfare state,there is no need of a revolution.\\
புரட்சியின்றி மக்கள் நல அரசு அமைய முடியும் என்பதற்குத்தான் சோவியத் வீழ்ந்த பொழுது மேலை நாடுகள் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, இத்தாலி என்று கைகாட்டியதுடன் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் சூதாடினார்கள். இன்றைக்கு அந்த நாடுகளிலே மக்கள் நல அரசு கிடையாது. இதைத்தாண்டி மக்கள் நல அரசு என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டையாவது வைக்க வேண்டும். அல்லது மக்கள் நல அரசு என்னவென்பதையும் அது எவ்வாறு இன்றைய உலகில் இல்லாது இருப்பதையும் கீழ்க்கண்ட கட்டுரையை படித்தாவது தெரிந்துகொள்ளுமாறு அல்லது தங்களின் மேலான விமர்சனத்தை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் நல அரசு: தோற்றமும் மறைவும் – வரலாற்றுப் பின்புலம்!
https://www.vinavu.com/2012/10/26/welfare-state/
அதைவிடுத்து கூலிக்கு மாரடிக்காதீர்கள்!
\\ No need to loss thousands of lives and then party compromises with “class enemies” for some reasons(china,nepal) and those who were dead become stupids and the top cadres are smart to live a luxury life(china,nepal).\\
இப்படிச் சொல்கிறவர் கோடிக்கணக்கான மக்களை திட்டமிட்டு படுகொலை செய்யும் முதலாளித்துவத்தைப் பற்றி பேச மறுப்பது ஏன்? ஏன் என்றால் உங்களைப்போன்ற ஆட்களுக்கு சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு முதுகெலும்பாக இருப்பது அமைப்பு சாரா தொழிலாளர்களின் கொடூரச் சுரண்டல் என்பதை உணர்ந்தும் திட்டமிட்டு மறைக்கிறீர்கள் என்பது தான். முதலாளித்துவம் ஆட்சியில் இருந்தாலுமே அதுவும் வர்க்க எதிரிகளை அழிக்கத்தான் செய்கிறது. ஒரு வேளை தாங்கள் சொகுசு வர்க்கமாக இருப்பின் இதை ஆதரிக்கக் கூடும். அப்படியிருக்கிற பொழுது தாங்கள் நியாயத்தை இன்னேரம் மட்டைக்கு இரண்டு கீற்றாக பிளந்திருக்க வேண்டும் இல்லையா? ஆனால் மவுனம் காப்பது ஏன்?
\\ The parties all over world start revolution and then compromise. This can be seen in the history last 200 years. As you say marxism is a science, by modern science evaluating methods , a theory always yields failure.So hence marxism = (failure+disaster+loss of lives) .\\
புரட்சியைத் தொடங்குவதோ அல்லது சமரசம் செய்துகொள்வதோ இரண்டு தரப்பு பேரின் அதாவது சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுவனுக்கும் இடையிலான உடனடி விளைவுகள் என்கிற பொழுது ஒன்றின் தரப்பை ஆதரிப்பவரோ அல்லது எதிர்ப்பவரோ சுட்டிக்காட்டுவது என்ன? எது தங்களுக்குச் சாதகமாக இருக்கிறதோ அதில் அண்டுகிறார்கள் அப்படித்தானே? இப்படி அண்டுகிறவர்கள் யார்? உலகில் 95% உடமையற்றவர்களாக அடிமைப்பிழைப்பு பிழைக்கிற பொழுது 5% பேர் அட்டைகளாக ஒட்டுண்ணிகளாக வாழ்க்கையை நீட்டிக்கிற பொழுது 5% பேர் தின்றுபோடும் எச்சிலை பொறுக்குகிற கூட்டம் தானே 95% பேரிலிருந்து தன்னை பிரித்துக்காட்டுகிறது! அவர்கள் 95% பேர் எடுக்கிற முயற்சியை தோல்வி, பிரளயம், அழிவு என்று கூட்டல் குறிகளுக்குள் தலையைக் கொடுக்கிற பொழுது 5%பேர் நிகழ்த்துகிற தோல்வி, பிரளயம் அழிவிற்கு பொறுப்பேற்காமல் நிற்பது எச்சில் பாசமா? அல்லது பொறுக்கித் தின்னும் நேசமா? இது என்ன வகையான கணக்கு?
\\ Coming back to sg, it is taking care well about its people(welfare state) and providing good life and guarantee a decent living to its citizens.\\
சிங்கப்பூர் மக்கள் நல அரசு அன்று. சிங்கப்பூருக்கு சுயசார்பு பொருளாதாரமும் கிடையாது! அது முழுக்கவும் அமைப்பு சாரா தொழிலாளிகளின் முதுகெலும்பில் ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கிறது! மூலதனக் குவியலின் தற்காலிக விளைவுதான் சிங்கப்பூர். நாளைக்கு ஹம்பன் தோட்டாவும் இப்படித்தான் வரப்போகிறது! இதை எப்படி நிறுவுவது? இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்காளதேஷ், இலங்கை போன்ற நாடுகள் அடிமை உழைப்பை நல்குகிற நாடுகளாக இருக்கிற வரை, இந்தநாடுகளின் பொருளாதாரம் சுரண்டல் பொருளாதாரமாக நீடிக்கும் வரை, இந்த நாடுகள் திவாலாகி இன்று நிற்பது போல் நீடிப்பது வரை இங்கிருந்து கூலிகள் சீப்பாக ஏற்றுமதி செய்யப்படும் வரை, ஏகாதிபத்தியம் நீடிக்கும்வரை இலாபம் கசக்கிப்பிழியப்படும் வரை வரியில்லா சொர்க்கமாக சிங்கப்பூர் நிற்கும்! இதுதான் சிங்கப்பூரின் முகாந்திரம். மற்றபடி ஈயும் பீயுமாக இருக்கிற வர்க்கங்கள் எது டிரெண்டோ அதற்கொப்ப பேசுவர்! மன்னிக்கவும் வீசுவர்!
சிங்கப்பூர் குறித்த முதல் கட்டுரையிலே, பல சிங்கப்பூர் வாசகர்கள் பள்ளிக்கட்டணம், தொழிலாளர் நிலைமை, மருத்துவ வசதிகள் குறித்தெல்லாம் காத்திரமாக எழுதியிருந்தார்களே! தாங்கள் கவனிக்கவில்லையோ?
1.//அதைவிடுத்து கூலிக்கு மாரடிக்காதீர்கள்!//எச்சில் பாசமா? அல்லது பொறுக்கித் தின்னும் நேசமா?// ஈயும் பீயுமாக// —
புரட்சி சட்டை போட்டவுடன் , யாரையும் எப்படியும் திட்டலாம். முதலில் வசவு தளம் என்று வாங்கி இருக்கும் பெயரை மாற்றுங்கள். நாகரிகமாக விவாதிக்க, கட்டுரை எழுத கற்றுக் கொள்ளுங்கள் . அப்புறம் புரட்சி பற்றி வகுப்பெடுக்கலாம் . இந்த மனநிலை தான் அதிகாரம் வந்த பிறகு , சோவியத் அடக்குமுறைகளாக+ மா ஓ கலாச்சார புரட்சி கிறுக்குத்தனமாக + போல் பொட்டின் பேரழிவாக , செயல் வடிவம் பெறுகிறது.
2. //சிங்கப்பூர் மக்கள் நல அரசு அன்று. சிங்கப்பூருக்கு சுயசார்பு பொருளாதாரமும் கிடையாது! அது முழுக்கவும் அமைப்பு சாரா தொழிலாளிகளின் முதுகெலும்பில் ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கிறது! மூலதனக் குவியலின் தற்காலிக விளைவுதான் ச