டாஸ்மாக் கடையை உடைப்பதற்காக போலிசிடம் அடிபட்டு, மண்டையுடைந்து போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை இழிவு படுத்துகிறது “தி இந்து” நாளிதழ்.புரட்சிகர மாணவர் இளைஞர் மாணவர் முன்னணியின் தோழர் கணேசனின் கண்டன உரை!
04.08.2015 அச்சிடப்பட்ட தி இந்து தமிழ் நாளிதழில் மாணவர்களின் போராட்டத்தை விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது இணைய பக்கத்தில் மாணவர்களை இழிவு படுத்தும் விதமாக அவர்கள் மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு சென்றார்கள் என்று எழுவது பாரிய தவறு. இதை பரிசீலித்து தி இந்து அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.