privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்பெரியார் பிறந்த நாள் : இந்து மதவெறி பயங்கரவாதத்தை முறியடிப்போம் !

பெரியார் பிறந்த நாள் : இந்து மதவெறி பயங்கரவாதத்தை முறியடிப்போம் !

-

சென்னை சேத்துப்பட்டு

செப்டம்பர் -17 தந்தை பெரியார் பிறந்த நாளில் இந்து மதவெறி பயங்கரவாதத்தை முறியடிக்க உறுதியேற்போம்!

தந்தை பெரியார் பிறந்தநாள்ந்தை பெரியாரின் 137-வது பிறந்த நாளையொட்டி சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் அமைந்துள்ள பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு காலை 8:00 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் பகுதி தோழர்கள் மாலை அணிவித்தனர்.

இன்றைய சூழலில் அதிகாரத்தில் அமர்ந்துள்ள பார்ப்பன பாசிஸ்டுகள் ஜனநாயகவாதிகளையும், பகுத்தறிவுவாதிகளையும் அட்டவணையிட்டு படுகொலை செய்யும் அளவுக்கு ஜனநாயக எதிர்ப்பும் பாசிசமும் கோலோச்சுகிறது.

இச்சூழலில், ‘தமிழகத்திற்கு, ஏன் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பார்பனிய எதிர்ப்பிற்கும் முன்னோடியாக திகழ்ந்த தந்தை பெரியார் பிறந்த தமிழகத்தில் எப்படியும் கால் ஊன்றிவிட வேண்டும். இதற்கு மக்களின் மத உணர்வுகளை மதவெறியாக மாற்றும் நோக்குடன் உழைக்கும் மக்கள் வாழும் பகுதியில் பிள்ளையார் சிலை அமைப்பது, பிள்ளையார் ஊர்வலம் நடத்துவது அதன் மூலம் கலவரங்களைத்தூண்டி விடுவது என செயல்படும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, இந்துத்துவ கும்பல்களை நாம் நமது பகுதிகளில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். இவர்கள் சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமல்ல பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் விரோதமானவர்கள் என்பதை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.

இது வரை இல்லாமல் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஜெகன்நாதபுரம், பள்ளிச் சாலையில் அமைந்துள்ள துளுக்கானத்தம்மன் கோவிலில் பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணியால் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. காவல் துறை சென்ற ஆண்டு பிள்ளையார் சிலைகள் வைத்த இடங்களைத் தவிர்த்து புதிய இடங்களில் சிலைகள் வைக்கக்கூடாது எனக் கூறியுள்ள போதிலும் இம்முறை புதிதாக அந்த பகுதியில் சிலை வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்து மதவெறிக் கும்பலால் வைக்கப்பட்ட சிலையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இந்து முன்னணி கும்பல்களை ஊருக்குள் விட்டால் காலம் காலமாக சகோதரர்களாக பழகிவந்த இசுலாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே பிளவு ஏற்படுத்துவார்கள் இதற்கு தமிழகத்தில் நடந்த மண்டைகாடு கலவரமே சாட்சி.

சமீபத்தில் கூட சென்ற பிள்ளையார் ஊர்வலத்தின் போது சேத்துப்பட்டு பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தின் மீது கல்லெறிந்துள்ளனர். சென்ற ஆண்டு புதுப்பேட்டை பகுதியில் கொலை வரை சென்றுள்ளனர் இந்த இந்து மதவெறிக் கும்பல்.

ஆகவே உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும் இக்கும்பலை அனுமதிப்பது நம் வீட்டை நாமே கொளுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும் என அந்த கோவில் நிர்வாகிகள் மற்றும் பகுதியில் உள்ள ஜனநாயக சக்திகள் மற்றும் கட்சி பேதம் இல்லாமல் அனைத்து கட்சியினரையும் சந்தித்து விளக்கியுள்ளோம். அவர்களும் நமது கருத்துக்களை ஏற்றுக் கொண்டதுடன் அச்சிலையை உடனடியாக அகற்ற ஏற்பாடு செய்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

பெரியார் பிறந்தநாள்
பெரியாரின் வாரிசுகளான களத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள்

ஆனால், “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும், எங்கள் கல்லூரி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்” என்று போராடிய பச்சையப்பன் மாணவர்களையும், மாணவிகளையும் வெறி கொண்டு தாக்கிய சேத்துபட்டு போலீசார் மக்களிடம் துவேசத்தை பரப்பும் இச்சிலையை அகற்றுவதில் அவ்வளவு வேகம் காட்டவில்லை.

எனவே நேரில் காவல் நிலையம் சென்று மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் இந்து முன்னணியினரால் வைக்கப்பட்டுள்ள சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வாளரிடம் சொல்லப்பட்டுள்ளது. காவல் துறை அச்சிலையை அகற்றாத பட்சத்தில் சேத்துப்பட்டு பகுதி வாழ் உழைக்கும் மக்கள் அதை நிறைவேற்றுவார்கள்.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை

திருவள்ளூர் கிழக்கு

பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்துக்கு கல்லறை கட்ட தந்தை பெரியார் பிறந்த நாளில் உறுதியேற்போம்! என்கிற முழக்கத்தின் அடிப்படையில் திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக பொன்னேரியில் பறை ஓசையுடன், விண்ணதிரும் முழக்கங்களுடன் மாவட்ட செயலாளர் தோழர் விகந்தர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பெரியார் பிறந்தநாள்மாவட்ட துணைத் தலைவர் தோழர் நாகராஜ் அவர்கள், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பி.ஜே.பி ஆட்சி அமைந்த பிறகு பற்றி படரும் இந்துமதவெறி பாசிசத்தையும், அதற்கு ஊது குழலாக இருக்கின்ற பாசிச ஜெயாவையும் அம்பலப்படுத்தி, இதனை முறியடிக்க பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்தி பிடிக்க வேண்டும் என உரை நிகழ்த்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கூடி  பிரசுரம், இனிப்பு கொடுத்து விழாவினை சிறப்பித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பிள்ளையாரை வைத்து அரசியல் செய்யும் பார்ப்பன-பாசிச கும்பலை விரட்டியடிக்க மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்தி பிடிப்போம்!

இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.

திருவள்ளூர் மேற்கு

திருவள்ளூர் மேற்கு மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்துக்கு கல்லறை கட்ட தந்தை பெரியார் பிறந்த நாளில் உறுதியேற்போம்! என்ற தலைப்பில் பட்டாபிராம் மற்றும் இந்துக் கல்லூரி அருகில் உள்ள அண்ணாநகர் சேக்காடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைகளின் அருகில் பெரியார் படம் வைத்து பூமாலை அணிவித்தும், ஆவடி பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கும் பூமாலை அணிவித்து மூன்று இடங்களில் தந்தை பெரியாரின் 137-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பெரியார் பிறந்தநாள்செப்டம்பர் 17, காலை 8 மணிக்கு பட்டாபிராம், CTH சாலையில் உள்ள (கிரேஸ் மருத்துவமனை) அம்பேத்கர் சிலை அருகில் தந்தை பெரியாரின் படம் வைத்து பிறந்த நாள் விழா கொண்டாடபட்டது. இக்கூட்டத்திற்கு தோழர் முகிலன் தலைமை தாங்கினார். இன்றைய சூழலில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை நடத்த வேண்டிய அவசியம் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக தந்தை பெரியாருக்கு ஜெய தென்னரசு பூமாலை அணிவித்தும், அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு தோழர் விஜயகுமார் பூமாலை அணிவித்தனர். அப்பகுதி மக்களுக்கு இனிப்பும், பிரசுரமும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கிய பு.ஜ.தொ.மு செயற்குழு உறுப்பினர் தோழர் எழில்மாறன் தான் படிக்கும் காலத்தில் பாட புத்தகத்தில் எவ்வாறு பார்ப்பன புரட்டுகள் இருந்தது என்பதை நினைவு கூர்ந்ததுடன், மனுதர்மத்தை அம்பலப்படுத்தியும், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் இந்துமதவெறி பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராக நடத்திய போராட்டங்களை பற்றியும் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

பகுத்தறிவு கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்நெறி பு.ஜ.தொ.மு நடத்தும் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் இது போன்ற கூட்டங்களை அதிக அளவில் நடத்த வேண்டும் எனவும் கூறினார்.

அம்பேத்கர் அமைப்பை சேர்ந்த நீலக்கொடி ஜெயராமன் கள்ளுண்ணாமைக்காக தனது தோப்பில் உள்ள தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார் பெரியார். ஆனால் இன்று பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் திராவிட கட்சிகள் (அ.தி.மு.க) பெரியாரின் கொள்கைக்கு மாறாக டாஸ்மாக்கை திறந்து கொள்ளையடித்து வருகிறது என்று கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த சார்லஸ் பேசும் போது அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றோரின் இது போன்ற கூட்டங்களை பு.ஜ.தொ.மு நடத்துவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

பழங்குடியினர் நலமுன்னேற்ற சங்கத்தின் சார்பில் வாழ்த்துரை வழங்கிய ஜெய தென்னரசு தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் பல போராட்டங்களை எளிய மொழியில் நினைவு கூர்ந்து தனது வாழ்த்துகளை பதிவு செய்தார். விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சார்ந்த தயாளன் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கடைசியாக பேசிய பு.ஜ.தொ.மு மாநிலப் பொருளாளர் தோழர் பா. விஜயகுமார்  நாட்டை கவ்வியுள்ள காவி பயங்கரவாதம் தற்போது பாசிசமாக உருவெடுத்து வரும் அபாயத்தை அம்பலப்படுத்தியும், இத்தருணத்தில் தந்தை பெரியாரின் பிறந்த தமிழக மண்ணில் பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்தின் கல்லறையாக்க அணிதிரள வேண்டிய அவசியத்தையும் விளக்கி உரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கூட்டத்தில் புஜதொமு-வின் கிளை மற்றும் இணைப்பு சங்கத்தை சார்ந்த தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்.