Sunday, February 9, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமுஸ்லீம்களுக்கு வீடு என்ன.... உயிரையே கொடுப்போம் !

முஸ்லீம்களுக்கு வீடு என்ன…. உயிரையே கொடுப்போம் !

-

சென்னை தாம்பரம் பகுதியில் படகில் சென்று மக்களைக் காப்பாற்றும் த.மு.மு.க தொண்டர்கள்.
சென்னை தாம்பரம் பகுதியில் படகில் சென்று மக்களைக் காப்பாற்றும் த.மு.மு.க தொண்டர்கள்.

வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் முஸ்லீம் அமைப்புகளின் பங்களிப்பு குறித்து மக்கள் மனதார பாராட்டியிருந்ததை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். கழுத்தளவு தண்ணீரில் சென்று மக்களுக்கு உணவு வழங்கியதாகட்டும், சாக்கடைகளை சுத்தம் செய்ததாகட்டும் அனைத்தும் அர்ப்பணிப்போடு நடந்தன. பணியில் ஈடுபட்ட முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள், அந்த முனைப்பை இயக்கியது எது? அவர்களை சந்தித்து உரையாடினோம்.

முஸ்லீம் அமைப்புக்கள், இஸ்லாம் மதம் குறித்த விமரிசனங்கள் வினவு தளத்தில் நிறைய இருக்கின்றன. இந்துமதவெறியர் குறித்து எமது விமரிசனங்களை தேடி படிக்கும் பல முஸ்லீம் நண்பர்கள் முதலில் இதை படிக்கும் போது அதிரச்சியடைகிறார்கள். பின்னர் காலக்கிரமத்தில் அந்த விமரிசனங்களின் அடிப்படையை, நேர்மையை ஓரளவிற்கேனும் புரிந்து கொள்கிறார்கள்.

ஒரு மனிதனை மதம் சார்ந்து திரட்டக் கூடாது, அப்படி திரட்டுவது ஆளும் வர்க்கத்திற்கே இறுதியில் உதவுவதாய் இருக்கும் என்பதற்கு நிறைய வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. மத நம்பிக்கையோ, மத சடங்குகளோ, இறை வழிபாடோ அனைத்தும் ஒரு தனிநபரின் உரிமை மட்டுமே. நமது அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளுக்காக எந்த மதத்திலும் தீர்வோ, வழியோ கிடையாது. அதனால்தான் அனைத்து மதங்கள், சாதிகளைச் சார்ந்த உழைக்கும் மக்கள் வர்க்கமென்ற முறையில் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்துகிறோம்.

சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகளில் இதுதான் நடந்திருக்கிறது. தாங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்காகத்தான் நிவாரணப் பணிகளை செய்தோம் என்று சில முஸ்லீம்கள் கூறினாலும் அவர்களை அப்படி சேவை செய்ய வைத்தது, மதமல்ல. கஷ்டப்படும் மக்களை நேரில் பார்த்ததாலும், பிறகு மற்ற பிரிவு மக்கள் பாராட்டுவதால் வரும் உற்சாகமுமே முஸ்லீம் அமைப்பு தொண்டர்களை இயங்க வைத்தன என்பது எமது கருத்து.

tntj-releif-work
நிவாரணப் பணியில் ஈடுபடும் டி.என்.டி.ஜே தொண்டர்கள்

மேலும் மதம் சார்ந்து மட்டும் அதிகம் போராடும் அந்த இயக்கங்கள் முதன் முறையாக ஒரு பொதுப் பிரச்சினைக்காக அனைத்து பிரிவு மக்களுக்காகவும் பெருமளவில் அணிதிரண்டு வேலை செய்திருக்கின்றனர். இந்த இணைப்பு மக்களிடம் இணக்கத்தையும், ஜனநாயகத்தையும், சகோதர உணர்வையும் ஓரளவிற்கேனும் அறிமுகப்படுத்தும்.

முஸ்லீம் மக்கள் குறித்து இந்துக்களின் பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் வன்மத்தையும் இந்த வெள்ள நிவாரணப் பணி அழித்து விட்டிருக்கிறது. ஊடகங்களில் முஸ்லீம் அமைப்புகள் குறித்த செய்திகள் பெரும்பான்மையாகவும், ஆர்.எஸ்.எஸ் குறித்த செய்திகள் சிறுபான்மையாகவும் வருவதைக் கண்டு இந்துமதவெறியர்கள் தாங்கவொண்ணா எரிச்சலில் இருக்க வேண்டும். உண்மையில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களின் பேரைச் சொல்லி இயங்கும் மதவெறியர்களை தோற்கடித்திருக்கிறார்கள்.

தவ்ஹித் ஜமா அத் அமைப்பினரை ஆபாசமாக வசைபாடிய கல்யாணராமன் எனும் பா.ஜ.க மதவெறியனுக்கு இந்துக்களே திருப்பி அடித்திருக்கின்றனர், முகநூலில். இவையெல்லாம் தமிழக மண்ணில் இந்துமதவெறிக்கு எதிராகவும் அதே நேரத்தில் ஜனநாயக உணர்வின் அடிப்படையிலும் மக்கள் திரள்வதற்கும் சேர்வதற்கும் வழியெடுத்துக் கொடுக்கும்.

இனி அந்த இளைஞர்கள் பேசுவதைக் கேட்போம்.

சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு – மசூதி தோட்டம் பகுதி. இப்பகுதியில் கடந்த ஏழு நாட்களாக உணவு உறக்கம் மறந்து வேலை செய்து கொண்டிருக்கிறார் மனித நேய மக்கள் கட்சியின் வட்ட செயலாளர் சேட் (எ) அஷ்ரப் உசைன். நாம் சென்ற போது அங்கே போர்வைகளை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.

muslims-flood-relief-photos-21
சேட் என்ற உசைன், ஆட்டோ தொழிலாளி, மனித நேய மக்கள் கட்சியின் வட்டச் செயலாளர்.

“பாய் தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க மாடி வீடு. கீழ் வீடுகளில் தான் பாதிப்பு உங்களக்கு கொடுக்க முடியாது”- என்று உரிமையோடு ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார், உசைன். இதைக் கேட்டு மாடியில் வசிக்கும் பாய் பின்னால் செல்ல தரைதளங்களில் வசிக்கும் ஏனைய ‘இந்து’, மற்றும் ‘முஸ்லீம்கள்’ நிவாரணப் பொருட்களை பெற்று செல்கிறார்கள். அவரிடம் பேசினோம்.

கேள்வி : கடந்த ஒரு வாரமா நீஙக செய்து வரும் பணிகள் குறித்து சொல்லுங்க?

உசைன்: முதல் நாள் பகலில் தண்ணீர் கரண்டை கால் வரை தான் வந்தது. மக்களும் இதுக்கு மேல வராதுனு நெனச்சிட்டு இருந்தாங்க. நைட்டு திடீருனு தண்ணி அளவு அதிகரிக்க ஆரம்பிச்சிருச்சு. உடனடியா மக்களை வெளியேற்றினோம். நடக்க முடியாத பெரியவர்களை டிரை சைக்கிளில் ஏற்றி கூட்டிச் சென்றோம். சீக்கிரமாகவே இந்த பகுதி தண்ணீரால் சூழப்பட்டு விட்டது.

காப்பாற்றப்பட்ட மக்களை தங்க வைக்க இடமில்லை. மசூதிக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று இருந்தது. அது பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைக்க காவலாளி எதிர்ப்பு தெரிவித்தார். “போலீஸ் கேஸ் வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் மக்களை தங்க வைக்கணும்” என்று காவலாளிக்கு எடுத்துச் சொல்லி துணிந்து பூட்டை உடைத்து மக்களை தங்கவைத்தோம்.

சில பகுதிகளில் மக்கள் வெளியேற முடியாமல் மாடிகளில் சிக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இரண்டு நாட்கள் உணவு, பால் வீடு வீடாக கொடுத்தோம். இது சபரிமலை சீசன். ஏரியா இந்து சகோதரர்கள் பலர் மாலை போட்டிருந்தார்கள். அவங்களுக்கு பிரியாணி கொடுத்தால் நம்மை தப்பா நினைக்கமாட்டார்களா. அவர்களுக்காக பிரிஞ்சி , லெமன் சாதம் சமைத்து கொடுத்தோம்.

ஓ.எம்.ஆர் கந்தன்சாவடி அருகிலிலுள்ள பகுதிகளிலும் மீட்பு பணியில் ஈடுபட்டோம். விநாயகபுரம் பகுதியில் கரண்டைகாலுக்கு மேல்வரை சேறு. அன்சர்பாஷா, அலாவுதீன் மற்றும் பகுதி இளைஞர்கள் சிறப்பாக உதவினார்கள்.

muslims-flood-relief-photos-13
நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சேற்றுப் புண்!

(நாம் பார்த்த வரை மீட்பு பணியில் ஈடுபட்ட முஸ்லீம் இளைஞர்கள் பலரும் காலில் சேற்றுப்புண் மற்றும் மீட்பு பணியின் போது அடிபட்ட காயங்களோடு இருப்பதைப் பார்க்க முடிந்தது.)

கேள்வி : நீங்க என்ன தொழில் செய்யறீங்க? இந்த உதவி வேலைகள் செய்யுறதால உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பில்லையா?

உசைன்: ஆட்டோ வெச்சிருக்கேன். 7 நாள் வேலைக்கு செல்லவில்லை. பலரும் உதவி செய்து வருகிறார்கள். தனிப்பட்ட முறையில் சில நகைகளை அடகுவைத்திருக்கிறேன்.

கேள்வி: மறுமையில் சொர்க்கம் கிடைக்குமுனு உதவி செய்யுறதா சில முஸ்லீம் தொண்டர்கள் சொல்லுறாங்க. உங்க கருத்து என்ன?

உசைன்: மனுசனுக்கு மனுசன் மனிதநேயம் தான் சார் முக்கியம். மார்க்கம் இரண்டாவதுதான். எங்க மார்க்கமும் மனிதநேயத்தை தான் சொல்லுது. இப்போ உங்க அப்பா அம்மாவை உங்க கண் முன்னால யாராவது அடிச்சா எந்த உணர்ச்சி வருமோ அப்படி தான் சார் மக்கள் இப்படி துயரப்படும்போது இருக்கும்.

கேள்வி: எப்போதும் அடித்தட்டு மக்கள் பகுதியிலேயே வெள்ளம் வருதே, போயஸ் தோட்டம் பகுதியில வெள்ளம் ஏன்
வருவதில்லை?

உசைன் : சட்டம்னா என்ன சார்? இங்க எல்லாருக்கும் ஒரே சட்டம் கிடையாது. கனிமொழி எவ்ளோ கொள்ளையடிச்சி இப்போ வெளியே இருக்கு. ஜெயலலிதாவ ஒரு நீதிபதி ஜெயில்ல போட்டா இன்னொருத்தர் விடுதலை பண்ணிட்டார். போலீஸ் நினைத்தால் தவறுகளை தடுக்க முடியும் ஆனா அவர்களுக்கு கட்டிங் செல்கிறது. அரசு மருத்துவமனைக்கு போங்க. குழந்தை பிரசவத்துக்கு ஆண் குழந்தைக்கு 2000, பெண் குழந்தைக்கு 1000 ரூபா கொடுக்கணும். அதை கொடுக்கலேன்னா நம்மை மதிக்கவே மாட்டாங்க. என் காலுல் அடிபட்ட போது அரசு மருத்துவமனையில் கட்டு போடவே பல மணி நேரம் ஆக்குறாங்க. சாதாரண ஜனங்கள்னாலே அலட்சியம் தான்.

முஸ்லீம்ல கூட கொஞ்சம் பேரு பாதுகாப்பா வெளியூருக்கு கிளம்பிட்டாங்க. திருநெல்வேலி அங்க இங்கனு. போன் போட்டு திட்டுனேன். அங்கயும் தண்ணிவந்துட்டா எங்கடா போவீங்கணு.

கேள்வி: முஸ்லீம்களில் பலர் கோவில் பிரசாதம் சாப்பிடுவதில்லை. ஆனால் இந்த நிவாரணப் பணிகளில் பல கோவில்கள் மற்றும் சிலைகளை சுத்தம் செஞ்சுருக்கீங்க? அதை எப்படி பாக்குறீங்க?

உசைன்: பல அமைப்புகள் நிவாரணப் பணி செய்யுறாங்க. இந்து, முஸ்லீம் என்று தனித்தனியாக பிரிச்செல்லாம் சுத்தம் செய்ய முடியாது. இஸ்லாம் ஒரிறை கொள்கை கொண்டது. பிரசாதம் சாப்பிடக் கூடாது தான். ஆனா சில சமயங்களில் நண்பர்களில் மனது கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சாப்பிட்டிருக்கிறேன். ஐந்து வேளை தொழுவதால் மட்டும் யாரும் சொர்க்கத்திற்கு போக முடியாது. அடுத்தவர் மனது புண்படுத்தக்கூடாதுனும் மார்க்கம் சொல்கிறது. சமூகத்திற்கு என்ன செய்தோம், குடும்பத்தை எப்படி வழிநடத்தினோம்னு பல விசயம் இருக்கிறது.

muslims-flood-relief-photos-19
நிவாரணப் பொருட்களை பெற்றுச் செல்லும் பெண்கள்!

கேள்வி : இப்போது முஸ்லீம் அமைப்புகள் பாராட்டப்படுவதற்கு காரணம் வெள்ளம் என்ற அனைத்து மக்களுக்குமான பொதுப்பிரச்சனையில் இறங்கி உதவி செய்திருப்பதால் தான். ஆனால் சில முஸ்லீம் அமைப்புகள் மதம் சார்ந்த பிரச்சனையை மட்டும், முஸ்லீம் மக்களுக்கான கோரிக்கைகளை மட்டும் எடுத்து போராடுவது சரியா?

உசைன்: பிராபகரன் பையன் கொல்லப்பட்ட செய்த வந்த போது நாங்கள்தான் முதலில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டோம். எங்களுக்கு அடுத்து தான் வை.கோ-வே வந்தார். பொதுப் பிரச்சனைகளுக்கும் செல்கிறோம். நாலு பேரும் நமக்கு தேவைதான். மற்ற சமுதாயத்தை சேக்காம பண்றது தவறு.

கேள்வி : அப்படியே சென்றாலும் விஸ்வரூபம் பிரச்சனைக்கும், கார்டூன் பிரச்சனைக்கும் திரள்கிற பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பொதுப் பிரச்சினைகளுக்கு வருவதில்லையே ?

உசைன்: எங்க பகுதியிலிருந்து எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே அளவு எண்ணிக்கையில தான் செல்கிறோம். ஆனாலும் நபிகள் நாயகம் கார்டூன் எல்லாம் உணர்வு ரீதியான பிரச்சினை அதனால் மக்கள் அதிகமாக வருவாங்க.

கேள்வி : நீங்கள் பொதுப் பிரச்சனைக்கு வருவதாக சொல்கிறீர்கள். நல்ல விசயம்தான். சில முஸ்லீம் அமைப்புகள் பொதுப் பிரச்சனைக்கு வரலேன்னாலும், உங்கள மாரி வாரவங்களை முஸ்லீம் இல்லைன்னு சொல்றாங்களே?

உசைன்: தவ்ஹீது ஜமாதை தானே சொல்கிறீர்கள். ஒருத்தர் முஸ்லீமா இல்லையா என்பதை அல்லா தான் முடிவு பண்ணனும். நானும் நீயும் முடிவு பண்ண முடியாது. அங்க பள்ளம் இருக்குப்பா பாத்துப்போ என்று சொல்லத்தான் முடியும். கேக்கமாட்டேன் போய் விழுவேனு போனா நாம என்ன செய்ய முடியும். ஆனா வெள்ள நிவாரண பிரச்சனையில அவங்க நல்லா செயல் படுறாங்க. முதல் முறையா ஒரு சமூக பிரச்சனையில தவ்ஹீது ஜமாதை பாக்குறேன். இதை முதல்லயே செஞ்சிருந்தா எங்கேயோ போயிருப்பாங்க. இத தொடர்ந்து செய்யனும்.

கேள்வி : மக்கள் அரசு மீது குற்றம் சாட்டுகிறார்களே, உங்க கருத்து என்ன?

உசைன்: யாருக்கும் அறிவிக்காமல் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத தவறு. இவ்வளவு தண்ணீர் வரும் என்று மக்களுக்கு தெரியாது. கால் அளவு தண்ணீர் வரும் என்று தான் நினைத்தார்கள். நாங்கள் அழைக்கும்போது கூட மக்கள் முதலில் வெளியேறவில்லை. காரணம் இவ்வளவு பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அப்படி மக்கள் வரவிட்டால் கூட அரசின் கடமை அறிவிப்பதுதானே. அதை ஏன் செய்யவில்லை. அதனால் இது அரசின் மீதான தவறுதான்.

கேள்வி : நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் கட்சி இதுவரை இதை கண்டிக்கவில்லையே?

உசைன்: அது பற்றி தெரியவில்லை. நிவாரணப்பணியில் இருக்கிறேன். கட்சி தலைவர்களை சந்தித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. இது கண்டிக்க வேண்டிய ஒன்று. நாங்கள் கண்டிக்கச் சொல்லி வலியுறுத்துவோம்.

கேள்வி : அப்படி கண்டிக்காவிட்டால் என்ன செய்யவீர்கள்?

உசைன் : மக்களுக்கு வேலை செய்யத்தான் கட்சி. எங்கள் கட்சியில் அனைவரும் கருத்து சொல்ல முடியும். 17 வயது பையன் கூட சொல்லலாம். அப்படி சொல்லுவோம். கேட்கவில்லை என்றால் வெளியேறிவிடுவேன். இது அரசின் தவறுதான்.

அப்துல் மஜித், எஸ்.டி.பி.– சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா.

muslims-flood-relief-photos-12
இடமிருந்து இரண்டாவதாக நிற்பவர் (சட்டை, பேண்ட் அணிந்திருப்பவர்) அப்துல் மஜித், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தென் சென்னை வர்த்தக பிரிவில் பொறுப்பு வகிக்கிறார்.

சைதாப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதிக்கு சென்ற போது கழுத்தளவு தண்ணீரில் முஸ்லீம் இளைஞர்கள் உணவு கொண்டு தந்ததை மக்கள் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்கள். விசாரித்த போது அப்பகுதியில் இருக்கும் எஸ்.டி.பி.ஐ -யின் ஆட்டோ சங்கமும் அதோடு தொடர்புடைய இளைஞர்கள் குறித்தும் கூறினார்கள். அவர்களிடம் பேசினோம். அக்கட்சியின் அப்துல் மஜித், தென்சென்னை வர்த்தக அணியை சேர்ந்தவர் பேசினார்.

“செவ்வாய் இரவு இப்பகுதி முழுவதும் வெள்ளம் நிறைந்து விட்டது. மக்கள் மாடிகளில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். செய்தி அறிந்ததும் உடனடியாக கிச்சடி தயார் செய்தோம். ரப்பர் டியூப்கள் தயார் செய்து அதை கொண்டு உணவுப் பொருட்களை வீட்டிற்கு வீடு கொண்டு சேர்த்தோம். சிறிய குறுகலான சந்துகளில் கயிறு கட்டி சென்றோம். தண்ணீர், வத்திபெட்டி, சின்ன டார்ச், மெழுகுவர்த்திகளை விநியோகித்தோம். இரவு எங்களால் முடிந்த அளவுக்கு செய்தோம். மறுநாளும் தொடர்ந்தோம்.

தெருவில் மக்கள் அடித்துக்கொள்ளும் வகையில் கொடுக்ககூடாது என்பதால் வீடு வீடாக கொண்டு சென்றோம். மழை முடிந்ததும் சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபட்டோம். சந்துகளில் இருந்த குப்பைகள், சாக்கடைகளை வாரி அரசு ஊழியர்கள் கொண்டு செல்ல வசதியாக தெருமுனைகளில் குவித்து வைத்தோம்.

மக்களை எங்களை பாராட்டும் போது இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.”

கேள்வி : முஸ்லீம் அமைப்புகளை மக்கள் பாராட்டுவதற்கு காரணம் பொதுப் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதால் தான். ஆனால் சில அமைப்புகள் மதம் சார்ந்த பிரச்சனையை மட்டும் , இஸ்லாமியர்கள் சார்ந்த கோரிக்கைகளை மட்டும் எடுத்து போராடுவது சரியா?

மஜித்: எங்கள் அமைப்பை பொறுத்தவரை நாங்கள் எல்லா அரசியல் விசயங்களுக்கு குரல் கொடுக்கிறோம். சமீபத்தில் கூட டாஸ்மாக் பிரச்சனைக்கு ஒரு மாதமாக போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தினோம். ஈழம் முதலிய எல்லா விசயங்களுக்கும் போராடுகிறோம்.

சங் பரிவாரம் நாட்டின் பல பகுதிகளிலும் வெற்றி பெறுகிறான். ஏன் கேரளாவில் கூட கால் ஊன்றிவிட்டான். தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை. இதற்கு இஸ்லாமிய அமைப்புகளா காரணம்? இல்லை. பெரியார் நாடு என்பதால் தான் முடியவில்லை. முஸ்லீம் நினைத்து மட்டும் சி.எம் ஆக முடியுமா சார். நடக்ககூடிய காரியமா? மற்றவர்களுடன் சேர்ந்து செய்வது தான் காலத்தின் கட்டாயம். சங் பரிவாரத்திற்கு எதிரானவர்களை அனைவரையும் இணைத்து பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஏற்படுத்தி போராடுகிறோம்.

muslims-flood-relief-photos-17
நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள்.

கேள்வி : ஆனால் சில இஸ்லாமிய அமைப்புகள் மதப் பிரச்சினைகளைத்தானே பிரதானமாக செய்கிறார்கள்.? இப்போது கூட தவ்ஹித் ஜமாஅத் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தப் போகிறார்கள்.?

மஜித் : மார்க்கம் தனிப்பட்ட விசயம். அரசியல் பொதுவான விசயம். நான் விரலை ஆட்டி தொழுவேன். தொப்பி போட்டு தொழுவேன், போடாமல் தொழுவேன். இப்படி செய்தால் தான் முஸ்லீம் செய்யாவிட்டால் முஸ்லீம் கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது.

கேள்வி : மற்ற கடவுள்களுக்கு படைக்க்ப்பட்ட பிரசாதங்களை சாப்பிடக் கூடாத நீங்கள் கோயிலை சுத்தப்படுத்துவது மார்க்கப்படி சரியா?

மஜித் : இஸ்லாம் ஒரிறை கொள்கை கொண்டது. சிலை வணக்கம் தான் செய்யக்கூடாது. கோவிலை சுத்தம் செய்வதில் பிரச்சனை இல்லை. இஸ்லாமியர் ஒருவர் அப்படி வணங்கினாலும் அவரை இஸ்லாமியரல்ல என்று சொல்ல நமக்கு உரிமை கிடையாது. அதை அல்லா தான் முடிவு செய்வான். அவரை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்றெல்லாம் யாரும் சொல்ல முடியாது.

கேள்வி : மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்கிறீர்கள். சரியானதுதான். இதற்கு காரணமான அரசுக்கு எதிராகவும் போராடுவீர்களா?

மஜித் : இந்த அரசு மக்களை அலட்சியமாகத்தான் கருதுகிறது. கடந்த நாலரை ஆண்டுகளில் தொழில் பாதிப்பு, வருவாய் இழப்பு என பல வகைகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். டாஸ்மாக்கிற்கு எதிராக பலரும் போராடினார்கள். அரசு அதை மதிக்கவிலை. இந்த அரசுக்கு மக்கள் மீது அக்கறையில்லை.

முஸ்லீம் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பகுதி மக்களான ‘இந்துக்கள்’ சிலரிடம் கருத்து கேட்டோம்.

muslims-flood-relief-photos-2
முஸ்லீம்களுக்கு வீடு என்ன உயிரையே கொடுப்போம் என்று சொன்ன அம்மா.

முஸ்லீம்கள் என்றால் பயங்கரவாதிகள், குண்டு வைப்பார்கள், நம்மிடம் ஒட்டமாட்டார்கள் என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால்
இப்பொழுது உங்கள் தெரு சாக்கடையை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டோம்.

தாங்கள் அப்படி கருதவில்லை என்று பலர் கூறினார்கள். முன்னாடி எங்களுக்கு அப்படிதான் சொன்னாங்க. நாங்களும் அப்படி தான் நினைத்திருந்தோம். வீடு வாடகைக்கு விடும்போது கூட யோசிப்போம். அத எல்லாம் காதால்தான் கேட்டிருந்தோம். அது தவறு என்பதை இப்போ கண்ணால் பாக்றோம் என்றார்கள்.

அப்படியானல் இனி வாடகைக்கு வீடு கொடுப்பீர்களா? என்று கேட்ட போது, “வீடென்ன உயிரையே கொடுப்போம்” என்றார் ஒரு பெண்மணி.

–    வினவு செய்தியாளர்கள்

  1. அட வீணா போன வினவே

    செத்த வீட்ல உன்னோட ஒன்னத்தும் ஒதவாத அரசியல் பேசுறியேடா

    இந்த நேரத்துலயும் தவ்ஹீத் ஜமாஅத்த சொரிற உனக்கும் கல்யாண ராமனுக்கு எந்த வித வித்தியாசமும் இல்லை. அவன் காவி தீவிரவாதி நீ சிகப்பு தீவிரவாதி.

    என்ன சொன்ன முதல் முறையா தவ்ஹீத் ஜமாஅத் பொது விசயத்துக்கு இறங்கி இருக்கா சூனாமி வந்தப்ப நீ எங்க போய் _______ இருந்தே….. போ போய் கேட்டு பாரு சூனாமியே நேர்ல கண்ட நாகை போன்ற கடலோர மாவட்ட மக்கள்டே களத்துல முதலில் யார் வந்து நின்னது யாருனு.

    அப்ப சமுக வலைதளம் இல்ல அதான் வழக்கமா ஊடகத்தின் பாரபட்சத்தால் அதிகம் செய்தி வெளிவரல இன்னக்கி சமுகவலைதளம் வெளிகொண்டு வந்துவிட்டது.

    நீ என்ன தான் அரசியலை மையமாக கொண்டு இயங்கும் இஸ்லாமிய கட்சியே சார்ந்தவர்களை பேட்டி என்ற பெயரில் எடுத்து போட்டு தவ்ஹீத் ஜமாஅதின் செயல்பாடுகளை மட்டம் தட்ட நினைத்தாலும் தெரிந்து கொள்.

    தவ்ஹீத் ஜமாஅத் களத்தில் நிற்க்க முக்கிய காரணம் மர்மை வெற்றிக்கும் அல்லாஹ்வின் திருப்பொருத்தை நாடியும் நபிகள் நாயகம் காட்டி தந்த மனிதநேயத்தின் அடிப்படையில் தான்.

  2. மதம் என்றாலே அபின் என்ற போதையில் இருக்கும் வினவிற்கு முஸ்லிம்களை நிவாரணப்பணியில் ஈடுபடுத்தியது இஸ்லாம் இல்லை என்ற தன் சொந்த கருத்தை கூறி இல்லாத ஒன்றை பரப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது…..மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் மதசார்பற்ற முஸ்லிமை தவிர அனைத்து முஸ்லிம்களும் இஸ்லாம் என்ற பதிலை தவிர வேறொன்று இல்லை என்றே கூறுவார்கள்….

  3. Vவர்க்க அடிப்படையில் மனிதர்களை பிரித்துப் பார்து அரசியல்நடதுபவர்கள் பலநேரஙளிள் சிலை வணங்கி ஜாதி பார்க்கும்பார்பனர்களை விடகேவலமாக சிந்திப்பவர்கலள் என்று உனர்த்தும் பதிப்புகளில் இதுவும் ஒன்று.

    வர்க்க பேத புரட்சிகள் 19ம்நூற்றான்டின் கன்டுபிட்ப்பு என்பதும் அதை முன்னின்று பின்னின்ட்றுநடதியது மன்னரட்சியை வீழ்தி தஙகளது ஆதிக்கம்நிலை பெற யூத வங்கி முதலாலிதுவம் என்பதும் புரியாத போதயில் இன்னும் எத்தனை காலம் இருப்பார்கல் என தெரியவில்லை.

    இறை மற்றும் மறுமையின் சிந்தனை எத்தனை சுயனலமட்ரவனாக ஆக்கும் என்ட்ர உஙலின் ஆஷரியதை உன்மயாக சொல்வதை விடுது இப்படி வர்க்க இன அபின் போதயில் உளராதீர்கள்

  4. இந்த கட்டுரையில் அப்படியென்ன பிரச்சனை பாய்களுக்கு ? வினவை இவர்கள் ஆள் ஆளுக்கு வெட்டி கூறுபோடுவதை பார்த்தால் நான் மீண்டும் ஒருமுறை இந்த கட்டுரையை ஊன்றி படிக்கவேண்டுமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. எப்படி இருப்பினும் மார்க்க முதன்மை நெறியாளர் அவர்களை இந்த கட்டுரை எந்த வகையிலும் சிருமைப்டுத்த வில்லையே! பின்பு ஏன் இப்படி கடும் கோபத்துடன் பின்னுட்டம் இடுகின்றார்கள் பாய்கள்?

  5. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்க மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட,ஈடுபடும் அனைவருமே சமூகத்தின் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.ஆனாலும் முசுலிம்கள் ஆற்றிய பணிகள் பரவலாக பேசப்படுகிறது.அதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம்.

    ஒன்று மீட்பு பணியில் அவர்களது பங்கு மகத்தானது.இப்போது வழங்கப்படும் நிவாரணங்களை விட ஆபத்தான கட்டத்தில் மக்களின் உயிர் காத்த அவர்களின் மகத்தான பணி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.[அதற்காக இப்போது நடைபெறும் நிவாரணப்பணிகளை குறைத்து மதிப்பிடுவது நோக்கமில்லை].இரண்டு,முசுலிம்கள் பற்றி தவறான பிம்பம் பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.அதனால்தான் ”இப்படிப்பட்டவர்களையா மதவெறியர்கள்,தீவிரவாதிகள்,மற்ற பிரிவு மக்களோடு ஒட்ட மாட்டார்கள் என்றெல்லாம் கருதியிருந்தோம் என்ற ஆச்சரியம்,இப்போது உண்மையை விளங்கி கொண்ட மன நிறைவு ஆகியனவே முசுலிம்கள் ஆற்றிய பணிகள் பரவலாக பேசப்படுவதன் காரணங்களாக இருக்க வேண்டும்.

    அடுத்து இன்னொரு உண்மையையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.இப்படி தங்கள் உயிருக்கும் உடல்நலத்திற்கும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை பொருட்படுத்தாமல் செயலாற்றிய பிள்ளைகளை உருவாக்கித்தந்த ஒட்டு மொத்த முசுலிம் சமூகமும் பாராட்டுக்குரியது.மழையில் நனையாதே,சளி பிடிக்கும் என்று பொத்தி பொத்தி பிள்ளைகளை வளர்க்கும் இன்றைய காரியவாத சமூகத்தில் அந்த முசுலிம் பிள்ளைகளை அனுப்பி வைத்த பெற்றோரும் நன்றிக்குரியவர்கள்.முசுலிம் சமூகத்தின் மனித நேயம் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.ஆம்,மக்களுக்கு பயன் தரும் நன்னீரிலும் கடல் நீரிலும்தான் மீன்களும் பயிர்களும் விளையும்.

    • சகோதரர் திப்பு,
      ஆபத்தான கட்டத்தில் மக்களைக் காப்பாற்றியவர் பலர். அதில் முசுலீம் சகோதரர்களும் அடக்கம். சளி பிடித்தாலும் பரவாயில்லை, போய் மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று வந்த பிள்ளைகளில் எல்லா மதமும் அடக்கம். இதன்றி அழுத்தம் கொடுப்பது உண்மையும் அல்ல, பணிவும் அல்ல.

      • \\உண்மையும் அல்ல, பணிவும் அல்ல.//

        தோழர்,

        பின்னூட்டத்தின் முதல் வரியே ”வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்க மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட,ஈடுபடும் அனைவருமே சமூகத்தின் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர்கள் ஆனாலும் முசுலிம்கள் ஆற்றிய பணிகள் பரவலாக பேசப்படுகிறது” என்றுதான் ஆரம்பிக்கிறேன்.கவனிக்கவும்.நாங்கள்தான் உசத்தி என்று பேசுவதாக கருதப்பட்டுவிடக்கூடாது என்ற கவனத்துடன்தான் எழுதியிருக்கிறேன்.

        • சகோதரர் திப்பு

          //ஒன்று மீட்பு பணியில் அவர்களது பங்கு மகத்தானது.இப்போது வழங்கப்படும் நிவாரணங்களை விட ஆபத்தான கட்டத்தில் மக்களின் உயிர் காத்த அவர்களின் மகத்தான பணி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது//
          இதில் தாங்கள் குறிப்பிட்ட கவனம் புரியவில்லை. மக்களைக் காப்பாற்றியவர்களில் முக்கியமானவர்கள் அந்தந்த பகுதி இளைஞர்கள், இரண்டாவதாக மீனவர்கள், மூன்றாவதாக மற்ற அனைவரும்…

          இசுலாமிய சகோதரர்களின் சேவை பேசப்படுவதற்கு தமிழகத்தின் பெரியாரிய, இடதுசாரிய இயக்க சிந்தனைகளே பிராதான காரணியாக கருதுகிறேன். அது மிகச்சரியானது என்றே கருதுகிறேன். ஆனால் உங்கள் பொருளில் இல்லை..

          • பணிவன்று என்று கொந்தளித்த தாங்களே பெருமையல்ல என்று மனமிரங்கி வந்திருப்பதால் தொடர்கிறேன்.

            முசுலிம்களின் மீட்பு பணி மகத்தானது என எழுதியதில் பெருமை தொனிக்கிறது என்கிறீர்கள்.முசுலிம்களின் பணி ஏன் பரவலாக பேசப்படுகிறது என்பதற்கான காரணமாகத்தான் அப்படி எழுதியிருக்கிறேன். பெருமைக்காக அல்ல.இதற்கு ஒரு நிகழ்வை பதிவு செய்வது தகுந்த விளக்கம் பெற உதவும்.

            டிசம்பர் 1-ம் தேதி இரவு யூனுஸ் என்ற நுங்கம்பாக்கத்தை சேர்ந்த இளைஞரும் அவரது மூன்று நண்பர்களும் [அதில் ஒருவர் இந்து சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது] சொந்த செலவில் ஏழு படகுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மீனவ சகோதரர்களையும் அழைத்துக்கொண்டு ஊரப்பாக்கம் பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.அப்போது கழுத்தளவு நீரில் மகப்பேறு வலியால் துடித்துக்கொண்டிருந்த சித்ரா என்கிற பெண் ஒருவரை காப்பாற்றி இருக்கிறார்கள்.அதே நாளில் அந்த பெண்மணி ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்.தங்களை காப்பாற்றிய யூனுசுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அந்த பெண்குழந்தைக்கு யூனுஸ் என்றே பெயர் சூட்டி இருக்கிறார்கள் அந்த பெற்றோர்.

            யூனுசின் உதவிக்கு அதை விட மிகப்பெரிய கைம்மாறு செய்திருக்கிறார்கள் அந்த இந்து சகோதர சகோதரியர்.அந்த குழந்தை வாழப்போகும் வரவிருக்கும் நூறாண்டு காலத்திற்கும் அந்த குழந்தையும்,அதன் பெயரும் தமிழகத்தின் மத நல்லிணக்கத்திற்கு உயிர் வாழும் சாட்சியமாக இருக்கப்போகிறது.

            இது போன்ற நிகழ்வுகள் ஏராளம் நடந்திருக்கின்றன.அதனால்தான் முசுலிம்களின் மீட்பு பணி மகத்தானது என காரணம் சொன்னேன்.நீங்களோ மட்டம் தட்டும் விதத்தில் ”மக்களைக் காப்பாற்றியவர்களில் முக்கியமானவர்கள் அந்தந்த பகுதி இளைஞர்கள், இரண்டாவதாக மீனவர்கள், மூன்றாவதாக மற்ற அனைவரும்…”என்கிறீர்கள்.வினவிலேயே முதலில் மீனவர்களும் முசுலிம்களும்தான் வந்தார்கள் என்று ஒரு பதிவு வந்துள்ளது.எதையும் எண்ணிப்பார்த்து எழுதுங்கள்.யாரையும் குறைத்து மதிப்பிடுவது என் நோக்கமில்லை.இதை முதல் பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்கிறேன்.நம் மக்களை காப்பாற்றிய பகுதி இளைஞர்கள், மீனவர்கள்,வட இந்தியர்கள் அனைவருமே நன்றிக்குரியவர்கள்.

            \\இசுலாமிய சகோதரர்களின் சேவை பேசப்படுவதற்கு தமிழகத்தின் பெரியாரிய, இடதுசாரிய இயக்க சிந்தனைகளே பிராதான காரணியாக கருதுகிறேன்//

            என்ன பேசுகிறீர்கள்.ஒரு சேவையை பாராட்டுவதற்கு கூட கொள்கை பின்புலம் இருக்க வேண்டுமா.நன்றியுணர்வு என்பது மனிதர்களின் இயல்பு தோழரே.வியாசனுக்கு கிடைத்தது தமிழுணர்வு.உங்களுக்கு பெரியாரிய ,பொதுவுடைமை கொள்கைகளா.

            பெரிதும் இந்து சகோதரர்கள் இட்டுள்ள முகநூல் பதிவுகளை தொகுத்து தந்திருக்கும் இந்த பதிவுகளை பாருங்கள்.

            http://vanjoor-vanjoor.blogspot.in/2015/12/3.html

            http://vanjoor-vanjoor.blogspot.in/2015/12/2.html

            http://vanjoor-vanjoor.blogspot.in/2015/12/1.html

            தங்களின் மீதி கேள்விகளுக்கும் வியாசனுக்கும் நாளை மறுமொழி இடுகிறேன்.

  6. உண்மையில் தமிழ் முஸ்லீம்கள் தமிழ்நாட்டு வெள்ளத்தின் போது ஆற்றிய சமூக சேவைப் பணிகள் தமிழர்கள் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியதொன்று. ஆனால் உண்மையில் அவர்களின் இந்த தொண்டுணர்வுக்கும், சேவை மனப்பான்மைக்கும் வெறும் மதவுணர்வு தான் காரணம் எனக் கூறுவது விவாதத்துகுரியது மட்டுமன்றி அவர்களின் உண்மையான மனிதநேயத்தைக் கொச்சைப்படுத்துவதும் கூட. அது மட்டுமன்றி, இவ்வளவு திட்டமிட்ட அரபுமயமாக்கலின் பின்பும், சக மனிதன் அதுவும் இன்னொரு தமிழன் துன்பப்படுவதை பார்த்துக் கொண்டு சகித்துக் கொள்ள முடியாதளவுக்கு இன்னும் அவர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழினவுணர்வு தான் அதற்குக் காரணமென்றும் கூட வாதாடலாம். ஏனென்றால் தமிழ்நாட்டு முஸ்லீம்களிடம் காணப்படும் இந்த மனிதநேயம், முகம்மது நபியினதும், இஸ்லாத்தினதும் பிறப்பிடமான அரேபியாவிலோ அல்லது அரபுக்களிடமோ காணப்படுவதாகத் தெரியவில்லை. 21வது நூற்றாண்டிலும் பெண்களைக் கூடக் கல்லெறிந்து கொல்லத் தூண்டும் காட்டுமிராண்டித்தனமும், அவர்களின் வீடுகளில் வேலைக்காகப் போகும் ஏழை, அபலைப் பெண்களை, அதுவும் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும் கூட, நாள் முழுவதும் தூக்கமின்றி, வேலை வாங்கி, உணவுமின்றி துன்புறுத்துவது மட்டுமன்றி, சித்திரவதை (பாலியல் உட்பட) செய்யும் கொடுமை தாண்டமாடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். சவுதி அரேபியாவுக்கு வேலைக்குப் போகும் எத்தனையோ அபலை, ஏழை இலங்கைப் பெண்கள் சவப்பெட்டிகளில், உருக்குலைந்து திரும்பி வருகிறார்கள். அதிலும் சிலர் திரும்பி வருவதேயில்லை. ஆகவே தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழ்நாட்டு வெள்ளத்தில் காட்டிய மனிதேநேயத்துக்குக் காரணம் வெறுமனே மதம் தான் என்பது விவாதத்துக்குரியது. அது மட்டுமன்றி, அதற்கு முழுக்காரணமும் அவர்களின் மதம் தானென்றால்,. அதை நாங்கள் அரபுக்களிடமோ அல்லது ஏனைய முஸ்லீம்களிடமோ ஏன் காண முடிவதில்லை. தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழ்நாட்டு வெள்ளத்தில் காட்டிய மனிதநேயத்துக்குக் முழுக் காரணம்மும் மதம் தானென்றால் இன்றைக்கு சிரியாவின் அரபுக்கள் எல்லாம் உயிர் போனாலும் பரவாயில்லை என்று கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குப் படையெடுக்க மாட்டார்கள் மாறாக, சவூதி அரேபியாவிலோ, அல்லது கதாரிலோ அல்லது மத்திய கிழக்கின் எண்ணெய் வளமுள்ள பணக்கார நாடுகளில் குடியேறியிருப்பார்கள்.

    அத்துடன் தமிழ்நாட்டு வெள்ளத்தில் முஸ்லீம்கள் மட்டுமன்றி சீக்கியர்களும், சில இந்து நிறுவனங்களும், ஏன் மார்வாடிகளும் கூடத் தான் உதவிப் பணிகளைச் செய்திருக்கிறார்கள் (BBC யில் கூட செய்தியுள்ளது) ஆனால் முஸ்லீம்கள் குழுக்கள் அதிகளவில் பணிகளைச் செய்திருக்கலாம் அல்லது , அவர்களின் பணிகள் அதிகளவில் விளம்பரப்படுத்தப் பட்டதும் கூட அதற்குக் காரணம் என்றும் கூறலாம்.

    • அன்பு நண்பரே இஸ்லாம் தான் இதற்கு தூண்டுகோள் என்பதை விபரமாக விளக்கியுள்ளேன் எனது தளத்தில் காணவும் வினவுக்கு விளக்கம் என்ற தலைப்பில்…..

      • சென்னை வெள்ள நிவாரண பணிக்கு முஸ்லிம்களின் பங்குக்கு மார்க்கம் மட்டுமே காரணம் என்றால் (முஹம்மது அலீம் வினவுக்கு விளக்கம்) வியாசனின் விவாத பொருட்களையும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டியுள்ளது ஆகின்றது.

        [1] சேவை மனப்பான்மைக்கும் வெறும் மதவுணர்வு தான் காரணம் எனக் கூறுவது விவாதத்துகுரியது மட்டுமன்றி அவர்களின் உண்மையான மனிதநேயத்தைக் கொச்சைப்படுத்துவதும் கூட.

        [2]தமிழ்நாட்டு முஸ்லீம்களிடம் காணப்படும் இந்த மனிதநேயம், முகம்மது நபியினதும், இஸ்லாத்தினதும் பிறப்பிடமான அரேபியாவிலோ அல்லது அரபுக்களிடமோ காணப்படுவதாகத் தெரியவில்லை. 21வது நூற்றாண்டிலும் பெண்களைக் கூடக் கல்லெறிந்து கொல்லத் தூண்டும் காட்டுமிராண்டித்தனமும், அவர்களின் வீடுகளில் வேலைக்காகப் போகும் ஏழை, அபலைப் பெண்களை, அதுவும் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும் கூட, நாள் முழுவதும் தூக்கமின்றி, வேலை வாங்கி, உணவுமின்றி துன்புறுத்துவது மட்டுமன்றி, சித்திரவதை (பாலியல் உட்பட) செய்யும் கொடுமை தாண்டமாடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

        [3]சவுதி அரேபியாவுக்கு வேலைக்குப் போகும் எத்தனையோ அபலை, ஏழை இலங்கைப் பெண்கள் சவப்பெட்டிகளில், உருக்குலைந்து திரும்பி வருகிறார்கள். அதிலும் சிலர் திரும்பி வருவதேயில்லை. ஆகவே தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழ்நாட்டு வெள்ளத்தில் காட்டிய மனிதேநேயத்துக்குக் காரணம் வெறுமனே மதம் தான் என்பது விவாதத்துக்குரியது. அது மட்டுமன்றி, அதற்கு முழுக்காரணமும் அவர்களின் மதம் தானென்றால்,. அதை நாங்கள் அரபுக்களிடமோ அல்லது ஏனைய முஸ்லீம்களிடமோ ஏன் காண முடிவதில்லை.

        [4]தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழ்நாட்டு வெள்ளத்தில் காட்டிய மனிதநேயத்துக்குக் முழுக் காரணம்மும் மதம் தானென்றால் இன்றைக்கு சிரியாவின் அரபுக்கள் எல்லாம் உயிர் போனாலும் பரவாயில்லை என்று கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குப் படையெடுக்க மாட்டார்கள் மாறாக, சவூதி அரேபியாவிலோ, அல்லது கதாரிலோ அல்லது மத்திய கிழக்கின் எண்ணெய் வளமுள்ள பணக்கார நாடுகளில் குடியேறியிருப்பார்கள்.

        மேலும் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் அரபுமயமாக்கபட்டார்கள் என்ற வியாசனின் கருத்தை மறுதலிக்கின்றேன்.சவுதி அரேபிய முஸ்லிம்களின் ரவுடித்தனம் என்றுமே எமது தமிழ் முஸ்லிம்களின் மனதுள் நுழையாது என்பதில் இந்த கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். அரபுமயமாக்கபட்டார்கள் என்ற கருத்து தமிழ் மறந்த இலங்கை வடகிழக்கு முஸ்லிம்களுக்கு ஒருவேளை பொருந்தலாமே தவிர தமிழ் நாட்டு முஸ்லிம் மக்களுக்கு சிறிதும் பொருந்தாது. மதம் மட்டுமே ஒரு மனிதனின் எண்ணத்தையும் , உணர்வுகளையும் தீர்மானிக்க இயலாது. அவர்கள் இனம் ,மொழி , அவர்கள் விரும்பும் அரசியல் கொள்கைகள் கூட அவர்களின் எண்ணத்தையும் , செயலையும் முடிவு செய்யும் காரணிகளாகும்.

        • நண்பர் இனியன்,நீங்களுமா

          முதலில் சேவை மனப்பான்மையை பரிசீலிக்கலாம்.ஒரு மனிதனின் விழுமியங்கள் வெறுமனே வெற்றிடத்திலிருந்து தோன்றி வளர்வதில்லை.அவன் வாழும் சமூக சூழல்,ஏற்றுக்கொண்ட கொள்கைகள்,போன்றவையே அவற்றை தீர்மானிக்கின்றன.மனித நேயம்,மக்கள் மீது நேசம் ஆகியன எல்லோருக்கும் ஏதோ ஒரு அளவில் இருந்தாலும் அனைவரிடமும் அது செயலூக்கம் பெறுவதில்லை.அதனை அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே தீர்மானிக்கின்றன.இதனை ஒரு சான்று மூலம் பார்க்கலாம்.

          கல்விக்கொள்ளையை எதிர்த்து அதனால் பெரிதும் பாதிக்கப்படாத அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் குறிப்பாக இடது சாரி இயக்க மாணவர்கள் போராடி காவல்துறையினரின் குண்டாந்தடி தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.பாதிக்கப்படும் தனியார் பொறியியல்,மருத்துவ கல்லூரி மாணவர்களோ மௌவுனமாக அந்த கொடுமையை சகித்துக்கொள்கிறார்கள்.
          புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும்,இந்திய மாணவர் சங்கமும் போராடுவதற்கு காரணம் அவர்களின் மனித நேயம் பொதுவுடைமை சித்தாந்தத்தால் செயலூக்கம் பெறுகிறது.

          இதையே இப்போது வெள்ள நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்ட முசுலிம் இளைஞர்களுக்கு பொருத்திப்பாருங்கள்.அவர்களின் மனித நேயம் செயலூக்கம் பெறுவதற்கு அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கை [அதாங்க இசுலாமிய மதம்] தவிர வேறு எது காரணமாக இருக்க முடியும்.

          பி.கு.
          தமிழின உணர்வு என்ற வியாசனின் வாதத்தை மேற்கோள் காட்டாதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.மனித நேயத்திற்கு மொழி,இன,வர்க்க பேதங்கள் கிடையாது என்ற எளிய உண்மை கூட புரியாமல் பேசுகிறார்.சென்னையில் வாழும் வட இந்தியர்கள் கூட மிக சிறப்பாக துயர் துடைப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.அவர்களை தூண்டியது என்ன உணர்வு.

          • நண்பர் திப்பு ,

            ஒவ்வொரு நற் செயலுக்கும் பின்னணியில் பொதுவாக மதம் மட்டுமே காரணம் எனில் கிருஸ்துவ பின்னணியில் உள்ள அமேரிக்கா என்றுமே உலக ஏகாதிபத்தியமாக இருந்து இருக்காது. உலக ரச்சகனாக தான் அது பைபிள் கோட்பாடுகளை நடைமுறை படுத்தி இருக்கும். ஆனால் நடைமுறையில் ?

            மேலும் இந்த கட்டுரை கூறும் விசயத்தில் நான் உடன் படுகிறேன்.அதாவது “சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகளில் இதுதான் நடந்திருக்கிறது. தாங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்காகத்தான் நிவாரணப் பணிகளை செய்தோம் என்று சில முஸ்லீம்கள் கூறினாலும் அவர்களை அப்படி சேவை செய்ய வைத்தது, மதமல்ல. கஷ்டப்படும் மக்களை நேரில் பார்த்ததாலும், பிறகு மற்ற பிரிவு மக்கள் பாராட்டுவதால் வரும் உற்சாகமுமே முஸ்லீம் அமைப்பு தொண்டர்களை இயங்க வைத்தன என்பது எமது கருத்து.” என்ற விசயத்தில் நான் 100% உடன்படுகின்றேன்.

            //அவர்களின் மனித நேயம் செயலூக்கம் பெறுவதற்கு அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கை [அதாங்க இசுலாமிய மதம்] தவிர வேறு எது காரணமாக இருக்க முடியும்.//

          • பி.கு: நண்பர் திப்பு ,குறிப்பிட்ட ஒரு மதத்தை தவிர்த்து நாம் விவாதத்தை பொதுமை படுத்திக்கொண்டால் நலமாக இருக்குமென்று நினைக்கிறன். மனிதர்களின் நற்செயல்களுக்கு மதம் மட்டுமே காரணமாக அமையுமா? என்று விவாதத்தை பொதுமை படுத்திகொள்ளலாம் என்று நினைகின்றேன்.

            • வினவு குறிப்பிடும் ”உற்சாகம்” ஏற்கத்தக்கதுதான்.அதை சொந்த முறையில் நானே உணர்ந்திருக்கிறேன்.அவ்வாறு பலரையும் உற்சாகப்படுத்தியிருக்கிறேன்.ஆனால் முஸ்லிம்களை சேவை செய்ய வைத்தது சிரமப்படும் மக்களை நேரில் பார்த்ததுதான் , மதமல்ல என்று சொல்லுவது ஏற்புடையது அல்ல.

              மக்களின் துயரங்களை பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே உதவிக்கு ஓடோடி செல்வதில்லை.சாலை விபத்தில் சிக்கி காயம்பட்டோரை காண்பவர்கள் பலரும் ”அய்யோ பாவம்”என்று ”உச்”கொட்டிக்கொண்டே நகர்ந்து செல்கிறார்கள்.ஒரு சிலர்தான் அவர்களை தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.அந்த ஒரு சிலரை இயக்குவது எது.அதுதான் சமூகத்திலிருந்து அவர்கள் கற்று வளர்த்துக்கொண்ட விழுமியங்கள்.இங்கு அது இசுலாமிய மதமாக இருக்கிறது.அவ்வளவுதான்.

              \\ மனிதர்களின் நற்செயல்களுக்கு மதம் மட்டுமே காரணமாக அமையுமா? //

              நல்ல கேள்வி.நிச்சயம் மனிதர்களின் நற்செயல்களுக்கு மதம் மட்டுமே காரணமல்ல.ஒரு மனிதனின் பண்புருவாக்கத்தில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.மதமும் ஒரு காரணம் என்ற அளவில் ஏற்கலாம்.ஒரு தனி மனிதனின் பண்பு,குணநலன்கள அவன் வாழும் சமூகத்தின் விழுமியங்களையே பிரதிபலிக்கின்றன.

              • சகோதரர் திப்பு,

                வினவு கட்டுரை சொல்லும் மனித நேய காரணத்தை ஏற்கிறேன், நானே உணர்ந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த வரியிலேயே அந்த மனிதாபிமானம் இசுலாமிய மதமாக இருக்கிறது என்கிறீர்கள். மதம்தான் காரணமென்று வெளிப்படையாக சொல்லுவது தவறல்ல. விளக்கவும்.

                நீங்கள் சொல்வது போல மதம்தான் காரணம் என்றால் இந்த உலகில் மனிதநேயம், மனிதாபிமானம் அனைத்திலும் இசுலாம்தான் நெம்பர் ஒன்றாம் இடத்தில் இருக்க வேண்டும். சரிதானே?

                • \\இசுலாம்தான் நெம்பர் ஒன்றாம் இடத்தில் இருக்க வேண்டும்//

                  இசுலாமியர்கள் அனைத்து பகுதிகளிலும் மத நெறிகளை முறையாக பின்பற்றி நடந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும்.

                  • சகோதரர் திப்பு

                    //இசுலாமியர்கள் அனைத்து பகுதிகளிலும் மத நெறிகளை முறையாக பின்பற்றி நடந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும்.// இதில் இசுலாமியர்கள் வார்த்தையை நீக்கிவிட்டு இந்துக்கள், கிறித்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள்,போட்டுவிட்டு அவரவர் தரப்புகளும் எப்போதும் இந்தவாறு பேசத்தானே செய்கிறார்கள்? என்ற படியால் இசுலாமியர்கள் பின்பற்றி நடந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் என்ன விசேஷம் சகோதரரே? அப்படியும் தாங்கள் எதிர்காலத்தில் ஜோசியம் மாதிரி நல்லவற்றை எதிர்பார்க்கிறீர்கள், இசுலாமிய பொற்கால சிறப்புக்கு ஒரு இறந்த காலம் கூடவா இல்லை?

                    தங்களைப் போன்ற சகோதரர்களின் அடி மனத்திலும் இத்தகைய பொற்கால மத நம்பிக்கை இருப்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது.

                    • நான் உங்களுக்கு அளித்த அதிர்ச்சி இருக்கட்டும்.நீங்கள் அளிக்கும் அதிர்ச்சியையும் பார்ப்போம்.

                      பாபர் மசூதி பிரச்னை தீவிரமடைந்த 80-களின் கடைசியில் அதற்கு கூறு கெட்டதனமான தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டது.இருசாராருக்கும் பொதுவாக அங்கு பிரமாண்டமான மருத்துவமனை அமைக்கவேண்டும்.அது மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழும் என்று ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டது.அதை மதசார்பற்ற,இடதுசாரி இயக்கங்கள் பலவும் ஆதரித்த போது ம.க.இ .க.மட்டுமே அப்படி செய்வது முசுலிம்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதாகும்,மசூதியை மீண்டும் முசுலிம்களிடம் ஒப்படைப்பதே சரியான தீர்வாகும் என்று ஏடுகளில் எழுதியும் பேசியும் அதை எதிர்த்தது.

                      அப்படிப்பட்ட இயக்கத்திலிருந்து வரும் நீங்கள் ஒரு வேலையை செய்தவன் அதை செய்ய காரணம் என்னுடைய மதத்தின் போதனைதான் என்று சொன்னாலும் அதை ஏற்க மாட்டேன்,அவன் ஆழ் மனதில் புகுந்து வேறொரு காரணம் கண்டுபிடிப்பேன் என்று அடம்பிடிப்பதற்கு என்ன காரணம்.நிச்சயம் அது இசுலாமிய மதத்தின் மீதான வன்மம் என சொல்ல மாட்டேன்.ஆனால் அதன்பால் உங்களுக்கு ஒரு வெறுப்பு இருப்பதை உணர முடிகிறது. அது தேவையில்லை தோழர்.மதம் தனிநபர்களின் சொந்த வாழ்வோடு நின்று விடும்போது அதில் உங்களுக்கு என்ன பிரச்னை.இதயமற்ற உலகின் இதயமாக கடவுள் இருக்கிறார் என்றுதானே மார்க்சும் சொல்லியிருக்கிறார்

                  • \\இசுலாம்தான் நெம்பர் ஒன்றாம் இடத்தில் இருக்க வேண்டும்//

                    இசுலாமியர்கள் அனைத்து பகுதிகளிலும் மத நெறிகளை முறையாக பின்பற்றி நடந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும்.

                    இதிலிறுந்தே தெரிகிறது திப்பு எனபவர் உனது கம்மூனிஸ கோமனத்த அவிழ்த்து விட்டி விட்டார் ஒன்று கம்மூனிஸம்தான் சிறந்த சித்தாந்தம் என்று திப்புவிற்கு மறுப்பு எழுதி இருக்க வேண்டும் இல்லனா இசுலாமிய நெறிகள்தான் சிறந்தது என்று ஒப்புக்கொன்று இருக்க வேண்டும் இரண்டும் இல்லாமல் மானமோ சுரனயோ அற்று உனது கோமனத்த மழை வெள்ள பாதிப்பை பயன் படுத்தி அவிழ்க்க நினைப்பத ஒப்புக்கொள்வதாகவே நான் நினைக்கிறேன் அல்லது எங்களுக்கு கம்மூனிஸ் கோவனத்தை விட இசுலாமிய ஆதரவு முகமுடிதான் தேவை என்றால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது நல்லது அதை விடுத்து இசுலாம் நெறிமுறைகள என்றால் என்ன என்று திப்புவிற்கு நான் கேட்ட கேள்விக்களில் எவ்வித ஆபாசமோ அருவறுப்போ இல்லாத போது அதை வெளியிட தயங்குவது ஏன்

                • தோழர்,

                  திரிக்க வேண்டாம்.”உற்சாகம்” என்பதை ஏற்கிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.பாராட்டுதலும் அதனால் உற்சாகமாக மேலும் பணி செய்வதும் முதலில் பணி செய்த பின் வருவது,அந்த பணியை செய்ய வைத்தது எது என்பதுதான் கேள்வி..

                • \\மதம்தான் காரணமென்று வெளிப்படையாக சொல்லுவது தவறல்ல. விளக்கவும்.//

                  தோழர்,

                  மதம் காரணமில்லை என்ற முன்முடிவோடு நீங்கள் எழுதுகிறீர்கள்.அதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் ”மக்களின் துன்பத்தை நேரில் கண்டதால் வந்த மனித நேயம் ” என்று ”தீர்ப்பு”தான் வழங்குகிறீர்கள்.

                  நான் மதம்தான் காரணம் என்று வெளிப்படையாகவே சொல்கிறேன். ”மனித நேயம்,மக்கள் மீது நேசம் ஆகியன எல்லோருக்கும் ஏதோ ஒரு அளவில் இருந்தாலும் அனைவரிடமும் அது செயலூக்கம் பெறுவதில்லை.அதனை அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே தீர்மானிக்கின்றன.இதனை ஒரு சான்று மூலம் பார்க்கலாம்”.என்று ஏற்கனவே விளக்கியும் இருக்கிறேன்.

                  நீங்கள் சொல்வது போல் பெருமை அடிப்பதாக படிப்பவர்கள் கருத வாய்ப்புண்டு என்பதால் இது குறித்து மேலும் விவாதிக்க விருப்பமில்லை.

                  • சகோதரர் திப்பு நீங்கள் பெருமை அடிப்பதாக அடியேன் கருதவில்லை. இருந்த போதும் இந்த உதவிடும் செயலுக்கு மதம்தான் காரணம் என்று பகிரங்கமாக ஏற்றதற்கு நன்றி. அந்த காரணம் நான்றிந்த வரை மறுமையில் சொர்க்கம் என்ற உத்தரவாதத்தைத்தான் அஸ்திவாரமாக வைத்திருக்கிறது. இந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சகோதரர் மனிதநேயம் முதலாவது, மார்க்கம் இரண்டாவது என்கிறார். தாங்கள் முதலாவதாக கருதுகிறீர்கள்.

                    இறுதியாக ஒன்று. தீண்டாமை, ஆணாதிக்கம், இதர பண்ணையார் கொடுமைகள், மத வன்மங்கள் அனைத்தையும் எதிர்ப்பதற்கு ஒரு மதமும், புனித நூலும், புனித வரலாறும் தேவைப்படும் என்றால் கண்ணெதிரே எந்த முசுலீம் சகோதரரும் அநியாயத்தை எதிர்க்க முடியாது என்றாகிறது.

                    முசுலீம் சகோதரர்கள் எப்படி மழையால் தத்தளித்த மக்களை காப்பாற்றினார்களோ அப்படித்தான் முழு சமூகமும் மழையில்லாத நேரத்தில் மற்ற மக்களை காப்பாற்ற வேலை செய்கிறது. சென்னை முழுவதையும் பிரம்மாண்டமான குப்பைகளை அன்றாடம் எடுத்து, கழிவில் முங்கி நமக்காக பணி செய்யும் அருந்ததிய சமூகத்தின் சேவையெல்லாம் நமக்கு பொருட்டே இல்லையா சகோதரரே?

          • சகோதரர் திப்பு
            கல்வி கொள்ளையை எதிர்த்து போராடுவதற்கு முசுலீம் பிள்ளைகள் ஏன் வரவில்லை? இந்த விவகாரத்தில் மனித நேயம் இல்லையா? மீட்பு பணிக்கு இசுலாமிய மதம்தான் காரணமென்று தாங்கள் வலியுறுத்துகிறீர்கள். சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த இளம் பிள்ளை ரிசானா சபீக்கை கொன்ற போது கூட இங்கேயுள்ளவர்கள் அச்சிறுமியை விலைமாது, ஷரியத் மேலானது, தலை வெட்டுவது சரியானது என்று வாதிட்டதுகூட இசுலாம் உருவாக்கிய மனிதாபிமானம்தானா? வெள்ள நிவாரணம், ரிசானா கொலை இரண்டையும் ஒரு மனம் மனிதாபிமானமாக செய்கிறதா? சகோதரர் விளக்கமளிக்க வேண்டும்.

            • \\கல்வி கொள்ளையை எதிர்த்து போராடுவதற்கு முசுலீம் பிள்ளைகள் ஏன் வரவில்லை?//

              கல்விக்கொள்ளையை எதிர்த்து முசுலிம்கள் போராடுவதே இல்லை என்று சொல்ல வருகிறீர்களா.

              • சகோதரர் திப்பு

                //கல்விக்கொள்ளையை எதிர்த்து அதனால் பெரிதும் பாதிக்கப்படாத அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் குறிப்பாக இடது சாரி இயக்க மாணவர்கள் போராடி காவல்துறையினரின் குண்டாந்தடி தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.பாதிக்கப்படும் தனியார் பொறியியல்,மருத்துவ கல்லூரி மாணவர்களோ மௌவுனமாக அந்த கொடுமையை சகித்துக்கொள்கிறார்கள்.
                புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும்,இந்திய மாணவர் சங்கமும் போராடுவதற்கு காரணம் அவர்களின் மனித நேயம் பொதுவுடைமை சித்தாந்தத்தால் செயலூக்கம் பெறுகிறது.

                இதையே இப்போது வெள்ள நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்ட முசுலிம் இளைஞர்களுக்கு பொருத்திப்பாருங்கள்.அவர்களின் மனித நேயம் செயலூக்கம் பெறுவதற்கு அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கை [அதாங்க இசுலாமிய மதம்] தவிர வேறு எது காரணமாக இருக்க முடியும்.//

                இதில் முசுலீம் பிள்ளைகள் எதற்கு வருகிறார்கள், வரவில்லை என்று பிரித்து விளக்கியது தாங்கள் மட்டுமே. அதை வைத்த யான் கல்விக் கொள்ளையை எதிர்த்து ஏன் வரவில்லை என்று கேட்டேன். வரவில்லையா என்று தாங்கள் கேட்பது சரிதானா? கூடவே இலங்கை பெண்ணின் தலைவெட்டு குறித்தும் கேட்டிருந்தோம்.

                • செயலாற்றுவதற்கு மனித நேயம் மட்டும் போதாது.அதை தூண்டி செயலாற்ற வைப்பதற்கு ஒரு தூண்டுகோள் தேவை என்பதை விளக்கவே கல்விக்கொள்ளையை எடுத்துக்காட்டி விளக்கி இருக்கிறேன்.அதனால் பெறப்பட வேண்டிய கருத்தை விட்டு விட்டு எடுத்துக்காட்டையே விவாதமாக்குகிறீர்கள்.

                  கல்விக்கொள்ளையை எதிர்த்து முசுலிம் அமைப்புகளும் போராடியே வருகின்றன.இன்னொன்றையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.முசுலிம் அமைப்புகள் உங்களைப்போல சமூக மாற்றத்தையும் அதற்காக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றலையும் குறிக்கோளாக கொண்டவை அல்ல..அவை நிலவுகின்ற சமூக அமைப்பில் சிறுபான்மை முசுலிம் சமூகத்தின் உரிமைகளையும்,நலன்களையும் பாதுகாப்பதற்காக தோன்றி செயல்படுகின்றன.அதனால் அவர்கள் செயல்பாட்டில் எவை எவற்றிற்கு முதன்மைத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவை செயல்படுகின்றன.அதனால் அவர்களுடைய போராட்டங்கள் உங்கள் அளவுக்கு இல்லாமல் இருக்கலாம்.அதற்காக முசுலிம்கள் போராடுவதே இல்லை என சொல்லாதீர்கள்.

                • ரிசானா ரபீக் கொலையை பொருத்தவரை சவூதி நீதிபதிகளாக அமர்ந்திருக்கும் முட்டாள் முல்லாக்கள் ஆராயாமல் அளித்த தீர்ப்பை பாரபட்சமற்ற விசாரணையின் அடிப்படையிலான நியாயமான தீர்ப்பு என்று சில முசுலிம்கள் நம்பியதால் நீங்கள் சொல்வது போல் மனித நேயம் அவர்களிடம் வெளிப்படாமல் போனது,அப்படி அவர்கள் நம்புவதற்கு ஏதுவாக சவூதி மன்னர் குடும்பத்தை சேர்ந்தவருக்கு கூட தலை வெட்டு தண்டனை வழங்கப்படுகிறது.அதனால் முல்லாக்களின் தீர்ப்பை அப்பாவித்தனமாக நம்புகிறார்கள்.அதே சமயம் ரிசானா ரபீக்குக்கு அளிக்கப்பட தண்டனை அநியாயமானது என்று கண்டிக்கும் முசுலிம்களும் உள்ளனர்,

          • நல்லது பண்ணினா மதம் தான் காரணம் . கெட்டது செய்தா அது செய்தவர்களின் பிழை . மதத்திற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை .

        • திரு. இனியன்,

          தமிழ் முஸ்லீம்கள் திட்டமிட்டு அரபுமயமாக்கப்(Arabization) படுகின்றனர் என்பதை உங்களைப் போன்ற தமிழர்கள் உணராதிருப்பது மிகவும் கவலைக்குரியது.தமிழ் முஸ்லீம்கள் எந்தளவுக்கு அரபுமயமாக்கப்படுகின்றனர் என்பதற்கு அரேபிய நாட்டுப் பாலைவன ஆடைகளை அணிந்த முஸ்லீம் ஆண்களினதும், பெண்களினதும் எண்ணிக்கை தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் கூட அதிகரித்திருப்பதை அவதானித்த எவருமே ஒப்புக் கொள்வர். இவ்வளவுக்கும் அரபுக்களின் ஆடைகளையோ அல்லது கலாச்சாரத்தையோ தான் முஸ்லீம்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என முகம்மது நபிகள் ஒரு போதும் கூறவில்லை(யாம்). கடந்த சில ஆண்டுகளில் தீவிரவாத வகாபியிசத்தின் தாக்கம் தமிழ்நாட்டின் பட்டி, தொட்டிகளில் எல்லாம் பரவி விட்டது என்பது தான் உண்மை. பல நூற்றாண்டுகளாக தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தி, தமிழின உணர்வுடன் தமிழர்களாக வாழ்ந்த தமிழ் முஸ்லீம்களுக்கும், தமிழர்களுக்குமிடையே இந்த அரபுமயமாக்கலும், வஹாபியிசமும் ஒரு நிரந்தர இடைவெளியை ஏற்படுத்தி, இலங்கையில் தமிழைப் பேசிக் கொண்டே தமிழர்களின் முதுகில் குத்தும் முஸ்லீம்களைப் போன்றே தமிழ்நாட்டு முஸ்லீம்களும் மாறும் நிலைமை உருவாகிக் கொண்டு வருகிறது என்பதை தமிழ்நாட்டில் அரபுமயமாக்கலை அவதானித்து வரும் எவருமே ஒப்புக் கொள்வர்.

          அரபுமயமாக்கலையும், சவூதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த தீவிரவாத வஹாபியிசத்தையும் தமிழினத்தின் ஒற்றுமையை, தமிழினத்தின் நலனை விரும்பும் ஒவ்வொரு தமிழனும் எதிர்க்க வேண்டுமென்பது தான் எனது கருத்தாகும். தீவிரவாத இந்துத்துவா கொள்கைகள் எந்தளவுக்கு தமிழினத்தின் நலன்களுக்கு எதிரானதோ, அதை தமிழர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டுமோ, அது போன்றே தீவிரவாத இஸ்லாமியத்துவமும், தீவிரவாத கிறித்தவமும் கூட தமிழர்களின் நலன்களுக்கும், தமிழினத்தின் ஒற்றுமைக்கும் எதிரானதே. அவற்றையும் தமிழர்கள் எதிர்க்க வேண்டும்.

          உதாரணத்துக்கு –திப்பு அவர்களின் கருத்தை எடுத்துக் கொள்வோம். தமிழ்நாட்டு வெள்ளத்தின் பொது தமிழ் முஸ்லீம்களின் சேவை மனப்பான்மைக்குக் காரணம் மதம் தான் என சிலர் வாதாடுவது போலவே, இன்னொரு தமிழன் துன்பப்படுவதைப் பாரத்துச் சகித்துக் கொள்ள முடியாத தமிழின உணர்வு தான், அதற்க்குக் காரணமென்றும் கூட ‘வாதாடலாம் ‘ என்ற எனது கருத்தை, அதாவது தமிழ் பேசும் , தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தும் தமிழ் நாட்டு முஸ்லீம்களுக்கு தமிழின உணர்வுண்டு, அதனால் அவர்கள் உந்தப்பட்டிருக்கலாம் என – ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்-, என்ற எனது கருத்தை, – ஒரு காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக தமிழுணர்வுடன் தீக்குளித்த தமிழ் முஸ்லீம்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில்- இன்று வெறும் வாதத்துக்குக் கூட சகித்துக் கொள்ள முடியாதளவுக்கு திப்பு போன்ற தமிழ் முஸ்லீம்கள் மாறியதற்கு காரணம் இந்த அரபுமயமாக்கல் தான். அதை விளக்குவதற்கு இதை விட வேறு நல்ல எடுத்துக் காட்டு கிடைக்கவே முடியாது.

          சென்னையில் வாழும் சீக்கியர்களும் வட இந்தியர்களும் கூட வெள்ளத்தின் போது ‘சிறப்பான பணியில்’ ஈடுபட்டனர் என்பது முற்றிலும் உண்மை. ஆனால் முஸ்லீம்களுக்கு கிடைத்தது போன்ற விளம்பரம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஏனெறால் சீக்கியர்களும், மார்வாடிகளும் தமிழில் வலைப்பதிவுகளோ, இணையத்தளங்களோ அல்லது பத்திரிகைகளோ நடத்துவதில்லை. தமிழ்நாட்டில் தமிழர்களுடன் வாழ்ந்து தமிழர்களைச் சுரண்டி வாழ்க்கை நடத்தும் எத்தனையொ தமிழரல்லாத இனக்குழுக்கள் பல சும்மா பார்த்துக் கொண்டிருக்க, சீக்கியர்களும், மார்வாடிகளும் நன்றிக்கடனுடன் சிறப்பான பணியில் ஈடுபட்டனர்,அவர்கள் தமிழுணர்வினால் உந்தப்பட்டனர் என வாதாட முடியாது, ஏனென்றால் அவர்கள் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் முஸ்லீம்களில் பலர் இன்னும் தம்மைத் தமிழர்களாகவே அடையாளப்படுத்துவதால், அவர்களது ‘தமிழின உணர்வு’ அவர்களின் பணிக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் ‘வாதாடலாம்’, என்ற எனது கருத்தைக் கூட திப்பு அவர்களால் தாங்க முடியவில்லை.

          மண்ணடி மஸ்தான்கள், சுவனப்பிரியன்கள், ஜெய்னுலாப்தீன்கள், முத்துப்பேட்டைகள் எல்லாமே இந்த தமிழ் முஸ்லீம்களை அரபுமயமாக்கும் திட்டத்தின் கங்காணிகள் அல்லது ஏஜென்டுகள் என்ற எண்ணம் தான் அவர்களின் கருத்துக்களை, வலைப்பதிவுகளில் , இணையத்தளஙகளில் படிக்கும் போது எனக்கு ஏற்படுவதுண்டு. ஆனால் இந்த தளத்தில் திப்பு அவர்களுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, இதுவரை அவரை அப்படி நினைத்ததில்லை, — 🙂

          • வியாசன் இந்த கட்டுரையில் மட்டுமன்றி தமிழ் ஹிந்து நாளிதழ் பத்திரிகையிலும் முஸ்லிம் மக்கள் ஆற்றிய வெள்ள நிவாரண பணிகளை பிரசுரம் செய்யப்பட்டு இருந்து. அதில் உள்ள புகைபடங்களில் உள்ள முஸ்லிம் நிவாரண பணியாளர்களின்-தன்னார்வலர்களின் உடைகள் எமது தமிழ் நாட்டு மக்களீன் உடைகளை போன்றே லுங்கி ,சட்டை, pant ,ஜீன்ஸ் என்று மேற்கத்திய நாகரிகத்துடன் ஒன்றி போன தமிழ் மக்களின் உடை நாகரிகத்துடன் தானே உள்ளன? அரபு உடை நாகரிகம் எங்குமே இல்லையே?

          • தமிழக முசுலிம்களின் இனப்பற்றும் தாய்மொழிப்பற்றும் வியாசன்களின் சான்றிதழுக்காக காத்திருக்கவில்லை.அது ஒரு பகலைப்போல் வெளிப்படையானது.முன்னர் அப்படி இருந்தது இப்போது இல்லை என்று கதைக்கிறார்.இப்போது மட்டுமல்ல எப்போதுமே தமிழக முசுலிம்களின் இனப்பற்றும் தாய்மொழிப்பற்றும் மாறாது.அதனால்தான் ஈழப்பிரச்னைக்காக ஆந்திராவில் இருபது தமிழர்கள் கொல்லப்பட்டது என தமிழினத்துக்காக அவர்கள் எப்போதும் போராடுகிறார்கள்.இந்த பதிவில் கூட மனித நேய மக்கள் கட்சி சகோதரர் ஒருவர் ஈழப்பிரச்னைக்காக போராடுவதை குறிப்பிடுகிறார்.மே 17 இயக்கம் போன்ற தமிழ் உணர்வாளர்கள் நடத்தும் அத்தனை போராட்டங்களிலும் அரங்க கூட்டங்களிலும் இசுலாமிய அமைப்புகள் பங்கேற்கின்றன,எங்கோ ஒரு மேற்கத்திய நாட்டில் கணினி முன்னால் உட்கார்ந்து கொண்டு ஈழ விடுதலை பேசும் வியாசனை விட களத்தில் தோள் கொடுத்து நிற்கும் தமிழக முசுலிம்கள் இனப்பற்றில் ஆயிரம் மடங்கு மேலானவர்கள்.

            இப்போது தமிழக முசுலிம்கள் ஈழப்பிரச்னைக்காக தீக்குளித்தது பற்றி பேசுகிறாரே ,அந்த நிகழ்வை முன்னர் வியாசனும் கலந்து கொண்ட வினவு விவாதம் ஒன்றில் நான் பதிவு செய்த போது அதை ஏற்று பாராட்டி ஒரு சொல் கூட சொல்லாமல் வாயை மூடிக்கொண்டிருந்தார்.

            • தமிழ் முஸ்லீம்கள் தமது தமிழுணர்வினால் உந்தப்பட்டு தமிழ்ச் சகோதரர்களுக்கு உதவியிருக்கலாம், என்ற கருத்தை வெறும் வாதத்துக்காக கூட ஒப்புக் கொள்ள மறுத்த திப்புக்காக்காவின் இனப்பற்றையும், மொழிப்பற்றையும் எனது பதில் உசுப்பி விட்டதைப் பார்த்து நான் அப்படியே மகிழ்ச்சியில் பூரித்துப் போய் விட்டேன். நாங்களும் தமிழர்கள் தான் என்று கூறிக்கொண்டே, தமிழுணர்வை மறுதலித்தால், நான் மட்டுமல்ல, எத்தனயோ தமிழ் வியாசன்கள் உங்களின் தாய்மொழிப்பற்றிலும், இனப்பற்றிலும் சந்தேகப்பட்டு இப்படிக் கேள்விகள் கேட்கத் தான் செய்வார்கள். பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும். 🙂

              ஆரம்ப காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக ‘தமிழுணர்வுடன்’ தீக்குளித்தவர் ஒரு தமிழ் முஸ்லீம் என்பதே எனக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் தெரியும். நீங்கள் முன்பே கூறியதாக எனக்கு நினைவில்லை. உங்களின் கருத்தைப் படிக்கத் தவறியமைக்கு மன்னிக்கவும். ஆனால் நானும், நீங்களும் முன்னர் கலந்து கொண்ட வினவு விவாதத்தில் உங்களின் அந்த தகவல், எனது கருத்துக்கு வலுச் சேர்க்காது என்று நினைத்திருந்தால், அதைப் பெரிது படுத்தியிருக்க மாட்டேன் என்பதும் உண்மை, ஆனால் குறைந்த பட்சம் அந்த முஸ்லீம் சகோதரனின் தியாகத்தையும், தமிழுணர்வையும் நினவு கூர்ந்து ஒரு வரியிலாவது நன்றி தெரிவித்திருப்பேன், அதற்காக வருந்துகிறேன்.

              • \\.வெறும் வாதத்துக்காக கூட ஒப்புக் கொள்ள மறுத்த//

                வாதத்துக்காக ஒன்று,உண்மையில் ஒன்று என இருவிதமான நிலைப்பாடுகள் எடுப்பது பச்சோந்தித்தனம்.உண்மையை பேசுவதுதான் மனிதர்க்கு அழகு.

                \\சந்தேகப்பட்டு இப்படிக் கேள்விகள் கேட்கத் தான் செய்வார்கள்//

                இதுதான் பாசிசம்.நான் ஒரு கருத்தை சொல்வேன் அதை ஏற்காவிட்டால் அவனுடைய மொழி,இனப்பற்றை ஐயுறுவேன் என்கிறார் வியாசன்.அதான் முதல்லயே சொல்லிட்டேனே.உங்களை போன்ற இசுலாமிய எதிர்ப்பு வன்மம் கொண்டோரிடமிர்ந்து சான்றிதழ் எதுவும் எங்களுக்கு தேவையில்லை.எங்களின் இனப்பற்றும்,மொழிப்பற்றும் ஊரறிந்தது.உலகறிந்தது.

                • //வெறும் வாதத்துக்காக கூட ஒப்புக் கொள்ள மறுத்த//

                  அண்ணன் திப்பு அவர்களுக்கு தமிழில் கூட விளக்கம் அளிக்க வேண்டியிருக்கிறது,. வாதத்துக்கு என்று நான் குறிப்பிட்டது “ஒரு பேச்சுக்கு” என்று தமிழில் பேச்சு வழக்கில் குறிப்பிடுவார்களே, அதைத் தான்.

                  //உங்களை போன்ற இசுலாமிய எதிர்ப்பு வன்மம் கொண்டோரிடமிர்ந்து//

                  சிலரது கருத்துக்களை எதிர்ப்பவர்கள் அல்லது சில விடயங்களை விவாதிப்பவர்கள் / விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் வன்மம் கொண்டவர்கள் என்றால், இந்த தளத்தில் ஈழத்தமிழர் எதிர்ப்பு வன்மம் கொண்டோர், இந்து மத எதிர்ப்பு வன்மம் கொண்டோர், என்மீது வன்மம் கொண்டோர் என்று பலர் (திப்பு உட்பட) இருப்பதாக நானும் கூடத் தான் கூறலாம். 🙂

                  • எனது சிற்றறிவுக்கு எட்டாமல் போனதை வியாசன் பேரறிவு கொண்டு விளக்கியதற்கு நன்றி.ஆகவே எனது பதிலை இப்படி மாற்றிக்கொள்கிறேன்.

                    ”பேச்சுக்காக ஒன்று,உண்மையில் ஒன்று என இருவிதமான நிலைப்பாடுகள் எடுப்பது பச்சோந்தித்தனம்.உண்மையை பேசுவதுதான் மனிதர்க்கு அழகு.

                    ”பேச்சுக்கு ஒப்புக்கொள்” ”தமிழ் இன உணர்வு என்று கூட வாதாடலாம்” என்று சாமர்த்தியம் காட்ட இங்கென்ன வெட்டி அரட்டை பட்டிமன்றமா நடக்குது.ஒரு சமூக பிரச்னை பற்றி பேசும்போது இந்த மாதிரி ”இப்படியும் வச்சுக்கலாம்” ”ஒப்புக்கு வச்சுக்கோ” என்று பேசுவது என்ன வகை அறிவு நாணயம்.

                  • யார் யார் மீது வன்மம் கொண்டு அலைகிறார்கள் என்பதை விவாதங்களை படிப்பவர்கள் எளிதாக முடிவு செய்ய முடியும்.இந்த விவாதத்திலேயே மட்டுறுத்தலில் அடிபடும் அளவுக்கு கீழ்த்தரமான சொற்களால் முசுலிம்,மற்றும் அரபு மக்களை குறிக்கிறார் வியாசன்.அவருடன் விவாதிக்கும் மீரான்சாகிப் என்ற முசுலிம் சகோதரரை மட்டுறுத்தலில் அடிபட்ட சொல்லால் விளித்து விவாதத்தை துவங்குகிறார்.எதிர்க்கருத்து சொல்கிறார் என்பதற்காக ஒருவரை அழைக்கும்போதே -விவாதத்தின் நடுவில் கூட அல்ல- துவக்கத்திலேயே அவரை அடைமொழியிட்டு அழைப்பதற்கு என்ன காரணம்.வன்மம் அன்றி வேறு என்னவாக அது இருக்க முடியும்.

                    இலங்கை முசுலிம்கள் தமிழர்களை முதுகில் குத்தினார்கள்,தமிழர்களின் குரல் வளையை குறி பார்க்கிறார்கள் என்று ஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகிறார். நாங்கள் ஈழத்தில் முசுலிம்கள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்களை பற்றி எழுதும்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தை விமர்சிக்கிறோமே ஒழிய மொத்த ஈழ தமிழினத்தை குறை கூறுவதில்லை.ஏனென்றால் ஒரு சில கிறுக்கன்களின் செயலுக்கு அவர்கள் சார்ந்த சமூகத்தையே பொறுப்பாக்க முடியாது என்ற அறிவு சிற்றறிவு கொண்ட எங்களுக்கு உண்டு.ஒரு சிலரின் செயலுக்கு ஒரு சமூகத்தையே கூட்டுப்பொறுப்பாளியாக்க முடியாது என்ற அறிவு பேரறிவு பெருமான்களுக்கு கிடையாது போலும்.

                    https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#comment-130264

                    முன்னர் நடந்த விவாதத்தின் சுட்டி இது. இந்த கேள்விகளுக்கு இன்று வரை பதில் சொல்ல வக்கற்ற வியாசனுக்கு ஈழ முசுலிம்களை குறை கூற என்ன யோக்கியதை இருக்கிறது.

                    சுட்டியிலிருந்து —
                    \\ஆனால் நீங்கள் ஏற்றிப்போற்றும் விடுதலை புலிகளின் யோக்கியதையையும் பார்ப்போமா.உங்கள் சொற்களில் ”காட்டிக் கொடுத்த தமிழர்களை நடுச்சந்தியில் கொன்று தூக்கிய புலிகள் ” அதே போன்ற ”துரோகம்” செய்த முசுலிம்களை மட்டும் கொன்று தூக்க வேண்டியதுதானே.அதை விடுத்து 60.000 முசுலிம்களை அவர்களின் வாழ்விடங்களை விட்டு துரத்தி அடித்தது அவர்களின் குறுந்தேசிய இன வெறியை காட்டவில்லையா.
                    அந்த கொடும் நிகழ்வை ”முசுலிம்களை பாதுகாப்பாக” வெளியேற்றியதாக சொல்லும் வியாசன் அவர்களே உங்களுக்கு சிங்கள இனவெறியன் தரக்கேடில்லை போலிருக்கிறது.இன தூய்மைவாத நடவடிக்கை பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கானது என சொல்ல முடியும் என்றால் நீங்கள் உச்ச நீதி மன்றத்திற்கே நீதிபதியாக வேண்டியவர் என புலனாகிறது.

                    காத்தான்குடியிலும் எராவூரிலும் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த 200 க்கும் அப்பாவி முசுலிம்களை கொன்று குவித்த தமிழ்க் காடையர்களை ஏவிவிட்ட விடுதலை புலிகள்தான் இனவெறியர்கள்.அநியாயக்காரர்கள்.மீலாது நபி ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்திய கொலைகார விடுதலை புலிகள்தான் இனவெறியர்கள். அநியாயக்காரர்கள். முசுலிம்கள் அல்ல.

                    ஈழ இறுதி யுத்தம் எப்படி ஆரம்பித்தது.நினைவிருக்கிறதா.மாவிலாறு அணையின் மதகுகளை திறப்பது குறித்த சர்ச்சையிலிருந்து துவங்கியது.அப்போது மூதூர் முசுலிம்களை ஊரை விட்டு வெளியேற உத்தரவிட்டது பாசிச விடுதலை புலிகள் இயக்கம்.அப்படி வெளியேறி மூன்று பள்ளிக்கூடங்களில் தஞ்சமடைந்திருந்த முசுலிம்கள் மீது பீரங்கி குண்டுகளை வீசி கொன்று குவித்த விடுதலை புலிகளை முசுலிம்கள் மொழிவழி சகோதரர்களாக பார்க்கவில்லை என குற்றம் சொல்வது எந்த வகையில் நியாயம்.எட்டி உதைக்கும் கால்களையும் நக்கிப் பிழைக்கும் ஈனப்பிறவிகள் வேண்டுமானால் எதிரியையும் பணிந்து வாழ்த்தலாம்.//

                    இந்து மதத்தின் மீது எங்களுக்கு வன்மம் ஏதும் கிடையாது.இந்து மத வெறியர்களை விமரிசித்திருக்கிறோம்.அப்பாவி இந்துக்களை குறை கூறி எழுதியதில்லை.மொத்த முசுலிம்கள் குறித்தும் வியாசன் எழுதுவது போல் தரக்குறைவாக நான் இந்து மக்களை பற்றி ஒரு வரி எழுதியிருப்பதாக காட்டினாலும் வினவில் பின்னூட்டம் போடுவதையே நிறுத்திக்கொள்கிறேன்.

                    இப்போது சொல்லலாம் யார் யார் மீது வன்மம் கொண்டு அலைகிறார்கள் என்று.

                    பி.கு.
                    சுட்டி கொடுத்துள்ள பழைய பின்னூட்டத்தை படிக்கவில்லை என வியாசன் பதில் சொல்லக்கூடும் அதற்கும் பதில் இருக்கிறது,சொல்லட்டும் பார்க்கலாம்.

                    • சகோ. திப்பு,

                      நான் ஒன்றும் கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தவில்லை. அப்படி எனக்குப் பழக்கமுமில்லை. முஸ்லீம்கள் என்று வரும் போது மட்டும் பயந்து நடங்கும் வினவின் மட்டுறுத்துனர் தேவையில்லாமல் எனது சொற்களை நீக்கி விடுகிறார். உதாரணமாக சகோதரர் மீரான்சாகிப்பை நான் ‘ஜனாப்’ மீரான்சாகிப் என்று குறிப்பிட்டதை அதன் கருத்து தெரியாத வினவுகாரர் ஒருவர் ‘அடித்து’ விட்டார். ஜனாப் என்பது கீழ்த்தரமான சொல் என்றால், இலங்கை முஸ்லீம்கள் ‘திரு’ என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக ஜனாப் என்ற சொல்லைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பது உங்களுக்கும் தெரியும். இப்படி நீங்கள் என்மீது குற்றம் கூறுவீர்கள் என முன்பே தெரிந்ததால் தான் இந்த விளக்கத்தை சில நாட்களுக்கு முன்பே அளித்தேன். ஆனால் வினவு அதை வெளியிடவில்லை. இந்த விளக்கத்தையாவது வெளியிடுவார்களென நம்புகிறேன். பெண்களை அடிமைப்படுத்துவதும், முகத்திரையிட்டு மறைத்து வைப்பதும் காட்டுமிராண்டித்தனம் என்று நான் கருதுகிறேன், அதையும் வினவு மட்டுறுத்துனர் அகற்றி விட்டார். உண்மையில் இப்படியான ஒருபக்கச் சார்பான நடவடிக்கைகளால் தான் வினவுகாரர்களின் கம்யூனிச லேபலின் உண்மைத் தன்மையைக் கூடச் சிலர் சந்தேகப்படுகின்றனர்.

                      உங்களின் கருத்துக்கெல்லாம் தொடர்ந்தும் பதிலளிக்க எனக்கும் விருப்பம் தான் ஆனால் அந்தளவுக்கு எனக்கு நேரமில்லை. ஆகவே நீங்கள் தமிழ்ப்பெண்களுக்கு யார் ரவிக்கை போடக் கற்றுக் கொடுத்தார்கள் என்பதையும், அவர்களின் ஆடையணிகளின் பரிமாண வளர்ச்சியையும் பற்றிய உங்களின் கட்டுரையைத் தொடருங்கள். நாங்கள் இங்கு பேசிக் கொண்டிருக்கும் தமிழ்முஸ்லீம்களின் அரபுமயமாக்கலுக்கும் உங்களின் கட்டுரைக்கும் ஏதாவது தொடர்பிருப்பதாக நான் உணர்ந்தால் நிச்சயமாக நேரம் கிடைக்கும் போது பதிலளிக்கிறேன். நன்றி.

                    • வியாசன் பொய் சொல்கிறார்.”கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தவில்லை. அப்படி எனக்குப் பழக்கமுமில்லை.”என்று சொல்லும் அவர்தான் இந்த விவாதத்தில் ”துலுக்க” என்ற சொல்லை தயக்கமின்றி பயன்படுத்துகிறார்.இதற்கு முன்னரே அவர் அந்த சொல்லை சில சமயங்களில் பயன்படுத்திய போது அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறேன்.

                      பார்க்க சுட்டி;

                      https://www.vinavu.com/2014/06/10/remembering-robert-caldwell/#comment-142249

                      சுட்டியிலிருந்து.

                      ”அகராதியில் இருக்கிறது என்பதற்காக அனைத்து சொற்களையும் பொதுவெளியில் நாகரீக மனிதர்கள் பயன்படுத்துவதில்லை.துலுக்கன் என்ற சொல் இழிவுபடுத்தும் தன்மையிலானதுதான்.[Derogatory in nature].நடைமுறையில் முசுலிம்களை இழிவாக குறிக்கத்தான் அந்த சொல் பயன்படுகிறது. அதனால்தான் பொது இடங்களில் முசுலிம்களை குறிக்க அந்த சொல்லை யாரும் பயன்படுத்துவதில்லை………………….

                      …………..இழிவு படுத்தும் சொல் அல்ல என வியாசன் கருதினால் அதை பயன்படுத்துவது தவறில்லை என கருதினால் தமிழகத்திற்கு வரும்போது ஒரு பொது இடத்தில் அந்த சொல்லை பயன்படுத்த அவர் தயாரா.
                      யாருக்கும் முன்னறிவிப்பு செய்ய வேண்டாம் வியாசன். ”பார்த்த” ஊரின் பெயரை கேட்டதற்கே முகவரி கேட்பதாக பிலாக்கணம் பாடிய தொடை நடுங்கி வீரர் நீங்கள்.இயல்பான ஒரு பேருந்து ,தொடர்வண்டி பயணத்திலோ,உணவகங்களிலோ உங்களுக்கு தைரியம் இருந்தால் ஒரு பத்து பேர் காதுல உழுவுற மாதிரி அந்த சொல்லை பயன்படுத்தி பேசி பாருங்கள்.

                      பி.கு.

                      பாதுகாப்பான இடத்தில் அடையாளம் காட்டாமல் இருந்து கொண்டு பரமசிவன் கழுத்து பாம்பு போல் வீரம் காட்ட வேண்டாம்.

                      பதிலுக்கு நீங்களும் என்னை நோக்கி இந்த கேள்வியை எழுப்பலாம்.வினவில் நான் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் நீங்கள் சொல்லும் பொது இடத்தில் நீங்கள் சொல்லும் நேரத்தில் உங்கள் முன்னிலையில் பேசுவதற்கு நான் தயார். யாரையும் இழிவு படுத்தி பேசும் இழிகுணம் இல்லாத காரணத்தால் என் மடியில் கனமில்லை. அதனால் மனதில் அச்சமும் இல்லை.

                      அந்த பின்னூட்டத்திற்கு பதிலேதும் சொல்லாமல் ஓடிப்போன வியாசன் மறுபடியும் அதே சொல்லை இப்போது பயன்படுத்துகிறார்.

                      \\பெண்களை அடிமைப்படுத்துவதும், முகத்திரையிட்டு மறைத்து வைப்பதும் காட்டுமிராண்டித்தனம் என்று நான் கருதுகிறேன்//

                      அப்பட்டமான இழிவு படுத்தல்.ஒரு சமூகத்தின் நடைமுறை தவறு என்று கருதினால் அந்த சமூகத்தாரோடு பேசும்போது அதை நாகரீகமான சொற்களால் வெளிப்படுத்துவதுதான் பண்பாடு கொண்ட மனிதர்களுக்கு அடையாளம். இழிவுபடுத்தும் சொற்களை தயங்காமல் பயன்படுத்தும் வியாசன் என்ன வகை மனிதர் என்பதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

                      எனது கருத்தை சொன்னேன்.இழிவு படுத்தல் அல்ல என முழ நீளத்தில் எதையாவது எழுதி வியாசன் சமாளிக்க கூடும்.அதனால் சில கேள்விகள் எழுப்பி பார்க்கலாம்.என்ன சொல்கிறார் பார்க்கலாம்.

                      இந்து மதத்தில் பெண்ணடிமைத்தனம் இல்லையா என்ன.அதனால் அந்த மதத்தை பின்பற்றும் வியாசனை நான் காட்டுமிராண்டி என்று விளித்தால் ஏற்றுக்கொள்வாரா.அங்கே கூடுதல் இங்கே குறைவு என்ற தகிடுதத்தங்கள் கூடாது.தலைக்கு மேல போற வெள்ளம் சாண் இருந்தா என்ன,முழம் இருந்தா என்ன.தண்ணிக்கு உள்ளே மாட்டிக்கிட்டவனுக்கு எல்லாம் ஒன்னுதான்.

                      முகத்தை மூடியதால் அராபியர்களை காட்டுமிராண்டிகள் என முகத்தை மூடாத வியாசன்கள் சொல்லலாம் என்றால் தொடையை மூடாத குட்டைப்பாவாடையும் அரைக்கால் சட்டையும் அணிந்த மேலை நாட்டவர் அவற்றை மூடிய வியாசன்களை காட்டுமிராண்டிகள் என சொல்லலாமா.

                      அய்யன் வள்ளுவன் அழகாக சொல்லியிருக்கிறான்.

                      இனிய உளவாக இன்னாத கூறல் கனி

                      இருப்பக் காய்கவர்ந் தற்று.

                      வியாசனை பொருத்தவரை அதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான் போலும்.

                    • துலுக்கர்கள் என்ற சொல் துருக்கி என்ற வேர் சொல்லை கொண்டு உருவானது தான். உலக இஸ்லாமிய ஆட்சி துருக்கியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியது. அப்பொழுது, இஸ்லாத்தைப் பின்பற்றும் இந்திய முஸ்லிம்களை துலுக்கன் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப் பெற்றனர். ஆரியர்களை போன்றே துலுக்கர்கள் என்ற சொல்லும் வந்தேரிகள் என்ற உண்மையை உணர்த்துகின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

                    • தைமூர் இனம் சார்ந்த பாபர் துருக்கிய மற்றும் பாரசீகப் பண்பாட்டைத் தழுவிக்கொண்டு, இசுலாம் மார்க்கத்தைச் சார்ந்தும் இருந்தமையால் ,அவர் தோற்றுவித்த மொகலாய பேரரசின் வழி வந்த முஸ்லிம்கள் துலுக்கர்கள் என்ற சொல் கொண்டு அழைக்கப்ப்டனர்.

                    • வினவு முசுலிம்களுக்கு ஆதரவாக பக்க சார்புடன் மட்டுறுத்தல் செய்கிறது என்பதும் வியாசனின் அப்பட்டமான புளுகு,இப்படி முன்னர் வியாசன் குற்றம் சாட்டியபோது நடந்த விவாத சுட்டி இது.

                      https://www.vinavu.com/2015/01/22/perumal-murugan-vs-kongu-vellala-gounders-part-two/#comment-382532

                      சுட்டியிலிருந்து

                      \\வியாசன்,திப்பு என்ற இரண்டு தனிநபர்களுக்கு இடையே கணக்கு தீர்க்கும் விதமாக விவாதம் செல்வதற்காக வருந்துகிறேன்,இந்த திசையில் விவாதத்தை தள்ளுவது நானல்ல என்பதையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வினவு தோழர்கள் மற்றும் வாசகர்களின் நேரத்தை மேலும் வீணடிக்க கூடாது என்பதால் இந்த இழையில் இதுவே எனது கடைசி பின்னூட்டம்.

                      \\ திப்பு எனக்கு எப்படிப் பதிலளித்தாலும் வினவு நிர்வாகம் மட்டுறுத்தல் செய்வதில்லை ஆனால் நான் பதிலளிக்கும் போது மட்டும் அப்படியே மட்டுறுத்தல் செய்து விடுகின்றனர். //

                      ”எப்படிப் பதிலளித்தாலும்”என்று குற்றம் சாட்டும் வியாசன் அப்படி என்ன தரம் தாழ்ந்து எழுதி விட்டேன் என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டும். வியாசன் யுனிவர்பட்டி போன்ற இசுலாமிய எதிர்ப்பு மதவெறியர்கள் விவாதப்பொருளை விட்டு விலகி இசுலாமிய எதிர்ப்பு மதவெறியை கக்கிய போது ”மதவெறியார்களா”என்றும் ,” மதவெறி மொக்கைகள் ”என்றும் அழைத்திருக்கிறேன்.இவை உண்மைதான் என்பதை காய்தல் உவத்தல் இன்றி அவர்களது எழுத்துக்களை படிப்பவர்கள் உணர முடியும்.மேலும் மொக்கை என்பது ஆபாச சொல் அல்ல.பொருளற்ற விதண்டாவாதங்களை, வெட்டி பேச்சுக்களை அப்படி அழைப்பதை இணையத்தில் புழங்கும் எவரும் அறிவர்.

                      அது போல் வியாசனின் வாதங்களை முட்டாள்தனமானவை என்று சொல்லி இருக்கிறேன்.அது கூட நானே வலிந்து சொன்னதல்ல.அவர் எனது வாதங்களை முட்டாள்தனமானவை என்று அகங்காரத்துடன் பேசிய போது யாருடைய வாதம் முட்டாள்தனமானது பார்க்கலாமா என்று கேட்டு இருவரின் வாதங்களையும் திறனாய்வு செய்து வியாசனின் வாதங்கள்தான் முட்டாள்தனமானவை என்று முடித்திருப்பேன்.

                      இவை அனைத்துக்குமே ஆதாரமாக சுட்டிகள் தர முடியும்.இவை தவிர என்ன தரம் தாழ்ந்து எழுதி விட்டேன் என்று வியாசன்தான் இப்போது விளக்கவேண்டும்.//

                      இதற்கு வியாசன் அறிவு நாணயத்துடன் அளித்த விளக்கம் என்ன தெரியுமா.
                      Thippu,

                      Whatever you say…. 🙂

                      இதுதான் விளக்கமாம்.சிரிப்பு பொம்மை போட்டு இப்படி ஒரு வெட்கங்கெட்ட விளக்கத்தை பதிவு செய்து விட்டு விவாதத்திலிருந்து விலகி ஓடிப்போன வியாசன் இப்போது மறுபடியும் அதே குற்றச்சாட்டை சொல்கிறார்.என்ன வகை நேர்மை இது.

                    • ஜனாப். திப்பு அவர்கள் ஒன்றிலிருந்தொன்று, மாறி மாறி, அதாவது இங்கு நாங்கள் பேசிக் கொண்டிருந்த ‘தமிழ் முஸ்லீம்களின் அரபுமயமாக்கல்’ பற்றிய விடயத்தை திசை திருப்புவதற்காக, அதற்குச் சம்பந்தமில்லாத விடயங்களுக்கெல்லாம் தாவிக் கொண்டேயிருக்கிறார், அதைப் பார்க்க எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது.

                      திப்புகாக்கா தந்த பழைய விவாத இணைப்பிலேயே, தான் சொல்வதையும் சொல்லி விட்டு அவர் எப்படியெல்லாம் “ஒவர்சீன்” போடுவார் என்பதை திரு. Univerbuddy எடுத்துக் காட்டியிருக்கிறார். அதனால் நான் எனது நேரத்தை வீணாக்கப் போவதில்லை.

                      (“நீங்கள் என்னை அக்ரினையில் அழைத்தவர்தான் என்பதை உங்களுக்கும் மற்ற வாசகர்களுக்கும் நினைவு படுத்துகிறேன். மேலும் பல பெயர்களையும் பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஒவர் சீன் போட வேண்டாம்.”- Univerbuddy)

                      //“…… இருவரின் வாதங்களையும் ‘திறனாய்வு’ செய்து வியாசனின் வாதங்கள்தான் முட்டாள்தனமானவை என்று முடித்திருப்பேன்.”//

                      இந்த தளத்தில் என்னுடைய கருத்துக்கள் எல்லாம் அறிஞர் திப்பு அவர்களின் திறனாய்வுக்குட்படுவது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் திறனாய்வின் முடிவு எப்படியிருக்குமென்றால், அவரது வாதங்கள் தான் உயர்ந்தவை, என்னுடைய கருத்துக்கள் எல்லாம் முட்டாள்தனமானவை என்று முடித்துக் கொள்வாராம். அவர் அப்படித்தான் முடித்துக் கொள்வாரென்பது திப்புநானாவின் ‘வாதங்களை’ இந்த தளத்தில் இரசித்து மகிழ்ந்த எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான், ஆனால் அதில் வேடிக்கை என்னவென்றால் அவரே அதை ஒப்புக் கொள்வது தான். அவர் தன்னைப் பற்றிப் பீற்றிக் கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை, ஆனால் “நினைப்புத் தான் பொ(பி)ழைப்பைக் கெடுக்கும்” என்பார்கள்..

                    • திட்டமிட்ட அரபுமயமாக்கல் பற்றித்தான் பின்னூட்டம் 25 மற்றும் அதன் தொடர்ச்சியில் மறுப்பு சொல்லியிருக்கிறேனே. [வியாசன் பார்க்கவில்லை என சொல்வாரோ]..இந்துமதம் மீது,ஈழத்தமிழர் மீது எனக்கு வன்மம் இருப்பதாக வியாசன் சொன்னதற்கும்,வினவு பக்க சார்பு மட்டுறுத்தல் என்ற வியாசனின் குற்றச்சாட்டுக்கும் பதில் சொன்னால் மாறி மாறி பேசுவதாக குற்றம் கண்டுபிடிக்கிறார்.முன்னால் போனால் கடிக்குது பின்னால் வந்தால் உதைக்குது என்பது போல இப்படி விதண்டாவாதம் பண்ணினால் எப்படி.

                      ”மாறி மாறி பேசுவதில்” முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற வியாசனுக்கு ”சிரிப்பு” வருதாம்.

                      யுனிவர்பட்டியின் முதுகுக்கு பின் ஒழிஞ்சு பயனில்லை. ”ஓவர் சீனுக்கு ” அந்த பதிவிலேயே பதில் சொல்லியிருக்கிறேன்.

                    • கீழ்த்தரமான சொற்களை பயன்படுத்தவில்லை என்பதற்காகத்தான் இருவர் வாதங்களை ஒப்பிட்டதை சொல்லியிருக்கிறேன்,உயர்வு,தாழ்வு கற்பிப்பதல்ல அந்த வாதம்.இது கூட விளங்கலையா வியாசனுக்கு.புத்திசாலிதான்.

  7. அன்புள்ள வினவுக்கு தெளகீத்ஜாமாத்தொடு உஙகலுக்குள்ள குறோதம் புரிந்து கொள்ளவே முடியவில்லை.யெனக்கு தெரிந்து உங்கலைப்போலவேதான் அவர்களும் அவர்களின் கொள்கையில் உறுதியாக இருந்து செயல் படிகிரவர்கள்.னீங்கள் “களள கம்னியுஸ்டுகள்’யென்று உங்கள் சகாக்களை இழிவதில்லயா?ஷிர்க் மானாடு யென்பது அவர்கள் கொள்கயை அவர்கள் பறைசாற்றும் மானாடு.இதில் உங்களுகென்ன பிரட்ச்சனை?உங்கள் கொள்கையைநிலைநாட்ட எந்த ஒன்றிர்கும் உஙகள் கொள்கையை மய்யமாய் வைத்து எழுதுவதில்லயா?அவர்களின் கருதுகள் எதுவும் சமூகநீதிகெதிராக சமத்துவதிற்கெதிராக இருக்கிறதா?அல்லது ஒட்டு மொத்த மக்களையும் மத அடிப்படையில் ஒன்று திரட்டி விடுவார்கள் என்று அச்சப்படுகிரீர்களா? சுனாமி காலத்திலிருந்து அவர்கள் பம்பரமாய் தொண்டாடறவெ செய்கிறார்கள்.வரதட்சனைகு எதிராக,மாற்று மத மக்கள் மத்தியில்நல்லினக்க பிரச்சாரம்,தீவிரவாதத்திற்கெதிரான தொடர் பிரச்சாரம்,தொடர்ந்து ரத்த தானத்தில் பல வருடங்கலாக முத்லிடம்.சொல்லபோனால் பல இச்லாமிய இயக்கஙள் போட்டிபோட்டுக்கொண்டு இது போன்ற இடர் பாடுகளில் இறங்குவதற்க்கு முன்னோடியே இவர்கள் தான்.ஒரு செய்தியாளராய் கண்டிப்பாய் இது உங்களுக்கு தெரிந்திருக்கும்.இருந்தும் ஏன் இந்த வன்மமோ தெரியவில்லை.கல்யாணராம களை இனங்கண்டு ஒதுக்கி விடலாம்.ஜெயமோகன் கலே மிக ஆபத்தனவர்கள்.வினவின் மேல் எங்களுக்குநம்பிக்கை உண்டு.உஙகளையும் அறியாமல் அவர்கள் மேல் ஏதேனும் காழ்ப்பிருந்தால் பரிசீலித்து பாருங்கள்.அவர்கள் தான் உசத்தி என்றெல்லாம் நான் வாதாட வில்லை.

    • சகோதரர் மீரான்சாகிபு

      தவ்கீத் ஆட்சியில் கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள், இறை மறுப்பாளர்கள் ஆகியோருக்கு என்ன தண்டனை? முசுலீம்களில் கம்யூனிஸ்டுகளாகவோ,நாத்திகர்களாகவோ பலர் பல நாடுகளில் இருக்கிறார்கள். முசுலீமாக இருந்து கொண்டே பலர் வேறு மத மக்களோடு காதல் திருமணம் செய்கிறார்கள். இவர்களையெல்லாம் முசுலீம் மதத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற தவ்கீத் கூறுகிறது. இது சரியா? விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்

    • meerasahib,மதத்தை அரசியலுடன் கலக்கும் விடயத்தில் நீங்கள் எப்படி RSS -> BJP உடன் வேறுபட்டுகின்றிர்கள் என்று கூறமுடியுமா? அவர்கள் பெரும்பான்மை ,நீங்கள் சிறுபான்மை என்ற நிலையை தாண்டி அதன் விளைவுகளை தாண்டி வேறு என்ன வேறுபாடு இருக்கிறது?

      அரசியல் வேறு மதம் வேறு என்ற நிலையை தாண்டி இரண்டையும் ஒன்றாய் பார்க்கும் உங்கள் நிலை மிகவும் ஆபத்தானது. RSS -> BJP போன்ற கருத்தாக்கம் கொண்டது தான் மதம் என்ற விடயத்தை, அதன் கொள்களைகளை நீங்களும் அரசியல் என்ற சாயத்துடன் முன்னிறுத்துவது. RSS -> BJP என்ற வகைமை பெரும்பான்மை மதவெறி அரசியல் என்றால் உங்களின் மதத்தை அரசியலில் முன்னிறுத்தும் நிலைப்பாடு சிறுபான்மை மதவாதம் தான். அதில் ஏதும் சந்தேகம் இல்லை.
      //தெரிந்து உங்கலைப்போலவேதான் அவர்களும் அவர்களின் கொள்கையில் உறுதியாக இருந்து ..//

      ஒட்டு மொத்த மக்களையும் மத அடிப்படையில் ஒன்று திரட்டி விடுவார்கள் என்று எல்லாம் யாரும் அச்சம் படவில்லை நண்பரே. அதற்கு எதிரான பயம் தான் ஏற்படுகின்றது. ஆம் மக்களை மேலும் மேலும் பிளவு படுத்துவார்கள் என்ற பயம் தான் ஏற்படுட்கின்றது.
      //ஒட்டு மொத்த மக்களையும் மத அடிப்படையில் ஒன்று திரட்டி விடுவார்கள் என்று அச்சப்படுகிரீர்களா? //

    • துலுக்கர் என்று துருக்கியரைக் குறிப்பிட்டால், தமிழராகிய, தமிழர்களை முன்னோர்களாகக் கொண்ட திப்புவுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. துருக்கியரைத் தான் தமிழில் துலுக்கர் எனக் குறிப்பிடுகிறேன் என்பதைக் காட்டத் தான் (துருக்கியர்) என்றும் நான் அடைப்புக்குறிக்குள் எழுதியதை திப்பு அவர்கள் கவனிக்கவில்லை போல் தெரிகிறது. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள், திப்பு விடயத்தில் அது சரியாகத் தானிருக்கிறது. துருக்கியர் தான் தமிழில் பேச்சு வழக்கில் துலுக்கர் என மருவி வந்துள்ளது. அதனால் தான் திருவரங்கத்தில் கூட துலுக்க நாச்சியாருக்கென தனிச் சன்னதியுள்ளது, அது மட்டுமன்றி, பெரும்பான்மைத் தமிழர்கள் துலுக்க நாச்சியாரை வணங்குகின்றனரே தவிர அவரை இழிவுபடுத்தும் நோக்கில் அப்படி அழைப்பதில்லை. எந்த நாட்டிலும் வலைப்பதிவுகளில் இணையத்தளங்களில் தம்முடன் பேசுகிறவர்களை, விவாதிப்பவர்களை நேரில் வா, இந்த முகவரிக்கு வா என்று யாரும் அழைத்ததை நான் பார்த்ததில்லை. தமிழ்நாட்டு முஸ்லீம்கள், அதுவும் வினவு தளத்தில் மட்டும் தான் இப்படியான சண்டித்தனத்தையும், அடாவடித்தனத்தையும் நான் பார்க்கிறேன். நேரில் வந்து பார்த்து நேரத்தை வீணாக்காமல் மற்றவர்களுடன் பேசவும் தொடர்பு கொள்ளவும் தான் விஞ்ஞானிகள் இணையத்தைக் கண்டு பிடித்தார்கள். உலகில் எந்தப் பகுதியிலுள்ளவர்களுடனும் பேசவும், விவாதிக்கவும் அது எங்களுக்கு உதவுகிறது. நேரில் பேசினாலும் இங்கு பேசுவதைத் தானே பேசப் போகிறீர்கள். எங்கு பேசினாலும் சட்டியிலுள்ளது தான் அகப்பையில் வரும்.

    • “நாங்கள் தான் கடவுள், பெரியவன்,நல்லவன்,உத்தமன் மற்றும் எல்லாமே. நாங்கள் குற்றம் செய்யாதவர்கள் அப்படி குற்றம் செய்துகொண்டிருந்தாலும் அது கணக்கில் வராது. எங்கள் கொள்கைகளுக்கு நீங்கள் எல்லோரும் அடிமைகள். சுத்தமில்லாத எங்கள் கைகளால் மனிதர்களை தண்டிக்கும் சர்வ வல்லமைகளும் எங்களிடம் மட்டும்தான் உள்ளது. எங்களை படைத்ததாக கருதும் எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல தூய இறைவனிடம் கூட மனிதர்களை தண்டிக்கும் அதிகாரம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை, மேலும் இறைவன் என்பவர் எது நடந்தாலும் தூரமாக நின்று வேடிக்கை பார்ப்பவன் அவ்வளவே. அதாவது நாங்கள் நம்பும் இறைவன் எங்கே வந்து எப்போது மனிதர்களை நியாயம் விசாரித்து.. தண்டித்து… இதெல்லாம் நடக்கிற காரியமாகவே எங்களுக்கு தெரியவில்லை. அதனால்தான் மலம், ஜலம் முதலிய இயற்கை உபாதைகளை கழிக்கிற சாதாரண மனிதர்களாகிய நாங்களே எங்கள் கறை படிந்த கைகளால் மக்களை நியாயம் தீர்க்க கிளம்பிவிட்டோம். எல்லோருடைய இரத்தத்தையும் குடித்துவிட்டு இறுதியில் நாங்கள் மட்டும் சொர்க்கத்திற்கு சென்று ஜாலியாக இருப்போம்” என்கிற ஐஎஸ்ஐஎஸ் அதிமேதாவிகளின் கர்வம் மானுட வர்க்கத்துக்கு பேராபத்தை விளைவித்து கொண்டிருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் தோன்ற ஆயிரமாயிரம் கதைகளை காரணம் காட்டினாலும், அதன் கொள்கைகளை ஆராய்ந்து பார்த்தால் ஐஎஸ்ஐஎஸ் முகத்தில் காரி துப்ப வேண்டும் என்றுதான் தோன்றும்.

      அதன் கொள்கைகள்:
      1. உலக நாடுகளை கைபற்றி இஸ்லாமிய பேரரசை தோற்றுவித்து மதவெறி கொள்கைகளை மக்கள் மீது கட்டாயமாக திணித்து மக்களை அடிமை படுத்த வேண்டும் என்பதே.
      2. இதனால் பெண்கள் சிறுவர்கள் அடிமைப்படுத்தபடுவார்கள்.
      3. யாரும் கல்வி பயில முடியாது.
      4.மக்களாட்சி முறை ஒழிக்கபடும்.
      5.குற்றங்களுக்கு மரணம் மற்றும் கடும் தண்டனைகள் தான்.
      6.ஷியா போன்ற முஸ்லிம்களையும், இஸ்லாமை ஏற்று கொள்ளாதவர்களையும் தலை துண்டித்து கொள்ளபடுவார்கள்.
      7.இறைவனின் திருப்பெயரால் எங்கும் மனித பிணங்களாகதான் இருக்கும்.

      ஐஎஸ்ஐஎஸ் கொடுர தாக்குதலுக்கும், இவர்களுடன் மோதும் சதிகார கூட்டு விபச்சார நாடுகளின் அதிபயங்கர தாக்குதலுக்கும் தேவையில்லாமல் பொதுமக்கள் பரிதாபமாக பலியாகி வருகிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் மதவெறி கனவான இஸ்லாமிய பேரரசை நிறுவுவது என்பது ஒருபோதும் நிறைவேற போவதில்லை.

  8. சகோதரர் இனியன்,”அரபுக்களிடம் மனிதநேயமே இல்லை” என்று எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள்?மனிதநேயம் என்பது எல்லா மனிதர்களிடத்திலும் இயல்பிலேயே சுரக்கக்கூடியதுதான்.இதற்க்கு ஜாதியோ மதமோ நாடோ மொழியோ எநத பேதமும் இருக்க முடியாது.ஒரு தாயின் மார்பில் சுரக்கும் பாலைப்போல அவள் உள்ளத்தில் பொங்கும் தாய்மை உண்ர்வைப்போல.எப்படி, சுரக்கும் பாலுக்கும்,பொங்கும் தாய்மைக்கும் ஒரு தாய் காரணமில்லயோ அதைப்போல ஒவ்வொரு மனித உள்ளத்திலும் சுரக்கும் மனிதநேயத்திற்க்கும் மனிதன் காரணமல்ல நம்மைப்படைத்த இறைவனின் கருணை என்பது எஙகளது நம்பிக்கை.இதிலிருந்து சுயநலம்.பேராசை, பொறாமை போன்ற குண்ங்களால் மனிதனை திருப்பி விடுவது ஷைத்தானின் சூழ்ச்சி.ஒவ்வொரு தொழுகையிலும் ஷைத்தானின் ஊசலாட்டத்திலிருந்து பாதுகாக்க, பிரார்திக்குமாறும் நாஙகள் பணிக்கப்பட்டிருக்கிறோம்.இவையெல்லாம் நீஙகள் மதத்தின் அடிப்படையில் கேட்டதால்தான் விளக்க வேண்டி வந்தது.அரபுக்களை பொறுத்தவரை பெரும்பாலும் மூர்க்கர்களாக மூடர்களாகத்தான் இருக்கிறார்கள்.அது பெரும் முயற்ச்சியோ பெரும் உழைப்போ இன்றி தாறுமாறாய் வந்த பணம் அதில் நிதானமிழந்து ஆடுகிறார்கள்.காட்டுமிராண்டிகளாய் இருந்த ஆதி அரபுக்களை பண்பட்டவர்களாய் மாற்றியது இஸ்லாம்தான் என்பது சத்தியம்.தென் தமிழகத்து முஸ்லிம்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதில் இவர்களின் குணநலனுக்கும் பங்குண்டு.ஆக இஸ்லாமிய இளைஙர்கள் உயிரை கொடுத்து வேலை செய்ததில் கண்டிப்பாய் மதத்தின் பஙுகுண்டு.இதில் மறைப்பதற்க்கு ஒன்றுமில்லை.அதாவது நான் சொல்ல வருவது இயல்பாய் எல்லா மனிதரிடத்திலும் சுரக்கும் மனிதநேயத்தை இஸ்லாமிய போதனை பன்மடஙகு அதிகப்படுத்தியது.

    • நண்பரே என்னை பொருத்த வரையில் சவுதி அரேபிய ரவுடிகளுக்கு நான் எந்த மரியாதையும் காட்டுவது இல்லை.நீங்கள் கூறுவது படி மதம் மனிதனை பண்பாடு உடையவனாக மாற்றி இருக்கும் எனில் பாக்தாத் மீது குண்டு பொழிந்த ஒவொரு கிருஸ்துவ அமெரிக்கனும் அதனை செய்து இருக்க மாட்டான். பாக்தாத் மீது அமெரிக்கங்கள் குண்டு பொழிந்து சின்னம் சிறு தளிர்களை அழித்துக்கொண்டு இருந்த அமெரிக்கன்களுக்கு சவுதி பொறுக்கிகள் சவுதி அரேபியாவில் ராணுவ தளம் அமைத்து கொடுத்து இருக்க மாட்டார்கள். அதே போன்றே மதம் மனிதனை பண்பாடு உடையவனாய் மாற்றி இருக்கும் எனில் ஹிந்துத்துவா வெறி நாய்களால் குஜராத்தில் சிறுபான்மை மக்கள் ஆயிரகணக்கில் கொல்லபட்டு இருக்க மாட்டார்கள், எம் தமிழ் மக்கள் ஈழத்தில் பவுத்த பன்றிகளால் கொல்லபட்டு இருக்க மாட்டார்கள், இன்னும் பின் சென்றால் சிலுவைபோர்களுக்கு சாத்தியமே இருந்து இருக்காது. மதத்தின் தேவையும் அதன் மதிப்பிடுகளும் இன்று சிறிதும் தேவையற்று நாற்றம் அடித்துக்கொண்டு தானே உள்ளது. இன்றைக்குசெய்த வெள்ள நிவாரண உதவிக்கு மதம் தான் காரணம் என்றால் , இது வரை மதத்தின் பெயரால் நடைபெற்ற கொலை பாதக செயல்களுக்கும் மதம் தானே காரணமாகின்றது? மதம் மக்களை நல்வழி படுத்துகின்றது என்பதனை நான் மனபூர்வமாகவும் , அறிவு பூர்வமாகவும் ஒருவேளை ஏற்றுகொண்டால் மதத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்ட அல்கொய்தாகலும், விஷ்சுவஹிந்துபரிசத்களும் , “ஆற்றிய மானுட சேவை” என்ன என்ற கேள்விக்கு பதிலையும் நான் கூறவேண்டிய கடமை உடையவனாகின்றேன் தானே ?

  9. இஸ்லாமிய நண்பர்களுக்கு ,

    இன்றைக்கு ஹிந்துத்துவா வெறி நாய்களால் நாடு மனதளவில் மத ரீதியாக 25% மற்றும் 75% என்ற விகிதாசாரத்தில் பிளவு பட்டு இருக்கும் அக சூழலில் இயற்க்கை பேரிடர் ஏற்படும் போது மத சிறுபான்மை மக்கள் மத பெரும்பான்மை மக்களுக்கு உதவுவது என்ற செயலுக்கு மதத்தின் கோட்பாடுகள் தான் காரணம் என்று கூறி மேலும் மேலும் பிளவுகளை ஏற்படுத்துவதை விட “நாங்கள் எங்கள் சக மனிதனுக்கு ஆற்றிய சிறு உதவி” என்று பெருந்தன்மையுடன் கூறிவிட்டு செல்வது தான் அரசியல் ரீதியிலான நலனை இருபான்மை மக்களுக்கும் பயக்கும் என்பதனை இங்கு விவாதம் செய்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் அல்லவா? வாழ்வில் நாம் கேட்கும் வெட்டி வசனங்களை விட இந்தகைய தக்க நேரத்தில் செய்யபடும் உதவிகள்-செயல்பாடுகள் மிகுந்த நன்மையையும் , இரு மத மக்களிடம் நட்பு உறவையும் ஏற்படுத்தும் தானே? இந்த கட்டுரையின் நோக்கமும் அதுவாக தான் இருக்கும் போது மீண்டும் மீண்டும் மதத்தின் பெயரால் தான் இந்த உதவிகள் செய்யபட்டது என்று கூறிக்கொண்டு இருபது நன்று அல்ல அல்லவா?

    • meerasahib,

      வெள்ள நிவாரண பணிக்கு களத்தில் நின்று பணியாறிய முஸ்லிம் மக்கள் தம் சேவைக்கு தம் மதம் தான் காரணம் ,தம் மதம் மட்டும் தான் காரணம் என்று கூறுவார்கள் எனில் அந்த சேவை உதவிய மனிதர்களின் மதத்தை தான் முதன்மை படுத்துமே தவிர மனித நேயத்துடன் தக்க நேரத்தில் அவர்கள் செயல்பட்டு உதவிய செயல் பின்னுக்கு சென்றுவிடும் என்ற சிறிய உண்மைகூட மீராசாஹிப் அவர்களுக்கு புரியாதது கண்டு வருத்தம் கொள்ளவே செய்கின்றேன்.

  10. ஒரு கொள்கை கோட்பாடு எஙகளை தீவிரமாக செயல்பட தூண்டியது என்பது ஏன் சார் பிளவுகளை ஏற்ப்படுத்துகிறது?களத்தில் நின்று பணியாற்றியவன் அதுதான் காரணம் என்று கூறும்போது அப்படி சொல்லாதே என்று நீஙகள் ஏன் சார் மல்லு கட்டுகிறீர்கள்?” நீ முஸ்லிமாக இருப்பதால் தான் குண்டு வைத்தாய்,முஸ்லிமாக இருப்பதால் உனக்கு வீடு தர மாட்டோம்,என்றெல்லம் கட்டமைத்து வைதத சமூகத்தில்,” நான் முஸ்லிமாக இருப்பதால் தான் இதைச்செய்தேன் என்று அவன் கூறுவதில் என்ன சார் தவறு.சவூதி அரேபிய ரவுடிகளுக்கு உஙகளை யார் மரியாதைத் தர சொன்னது?அல் காயிதாவையோ ஆர் எஸ் எஸ் சையோ ஏன் உதவி செய்த மக்களோடு சேர்க்கிறீர்கள்?மதத்தை வைத்து பிழைப்புநடத்துகிறவர்களும் ஆட்சி அதிகார வெறி பிடித்தவர்களும்-மதத்தால் பண்பட்ட மக்க்ளும் ஒன்றா?எந்த ஒரு சித்தாந்த்த வாதிகாளும் மூர்க்கமாக மோதி பிள்வுண்டு அழிந்து இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் மதம் மட்டும்தான் அழித்தது.மதம் மட்டும்தான் மனிதனை பிரித்தது என்பது போல காட்டுகிறீர்கள்.அதற்கு மத வெறி பிடித்த சில மிருகங்கள் உஙக்ளுக்கு உரம் சேர்க்கிறார்கள்.

    • பொதுவில் மதம் அதனை மனிதன் பின்தொடர்வது தனி மனித உரிமை என்று ஆகும் போது ,பொதுவெளியில் அதனை பற்றி பேசி பெருமிதம் படுவதில் உள்ள குறை உங்களுக்கு தெரியவில்லை போலும். மதத்தை பற்றி பேசுவதல்ல மத சார்பின்மை. எம்மதத்தையும் பற்றி பொதுவெளியில் பேசாமல் இருபது தான் மதசார்பின்மை.

      //களத்தில் நின்று பணியாற்றியவன் அதுதான் காரணம் என்று கூறும்போது அப்படி சொல்லாதே என்று நீஙகள் ஏன் சார் மல்லு கட்டுகிறீர்கள்?”//

  11. இனியவன், விநாயகர் சிலையை தூக்கிக்கொண்டு பள்ளிவாசல் அருகில் நின்று”பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு,துளுக்கனை வெட்டு துளுக்கச்சிய கட்டு”.என்று கூவுபவனும் அதே விநாயகர் சிலையை பக்தி சிரத்தையோடு வணங்கி அக்கம்பக்கத்தார்க்கு கொலுக்கட்டை கொடுத்து விடும் இந்துவும் ஒன்றாசார்?

    • இப்படி பேசும் ஹிந்துத்துவா மத வெறியர்களை எப்படி எதிர்கொள்வதாகஉத்தேசம்? தனித்து நின்று உங்கள் மதத்தை முதன்மை படுத்தி போராட போகின்றீர்களா ? அல்லது ஜனநாயக பூர்வமான , மத சார்பற்ற சக்திகளுடன் இணைந்து நின்று போரட்ட போகின்றிகளா?

      //இனியவன், விநாயகர் சிலையை தூக்கிக்கொண்டு பள்ளிவாசல் அருகில் நின்று”பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு,துளுக்கனை வெட்டு துளுக்கச்சிய கட்டு”.என்று கூவுபவனும் அதே விநாயகர் சிலையை பக்தி சிரத்தையோடு வணங்கி அக்கம்பக்கத்தார்க்கு கொலுக்கட்டை கொடுத்து விடும் இந்துவும் ஒன்றாசார்?//

  12. வியாசன் அவர்களே தமிழ் முஸ்லிகள் அரபு மயமாக்க படுகிறார்கள் என்பதெல்லாம் உஙகளது தவறான புரிதல்.முஸ்லிம் பெண்களின் உடையை வைத்துக்கொண்டெல்லாம் இந்த முடிவுக்கு வராதீர்கள்.அப்படி என்றால் ஆண்கள் ஏன் அந்த உடை அணிவதில்லை?புர்கா எனற இந்த பெண்கள் உடை வருவதற்க்கு முன்பு சேலையை முக்காடிட்டு இடுப்பு பகுதி தெரியாமல் வருவார்கள்.சிலர் துப்பட்டி என்று பெரிய துணியை சேலை மேல் போர்த்திக்கொள்வார்கள்.இன்றைக்கு பல வகையிலும் இது வசதியாக இருப்பதால் அணிகிறார்கள்.ஒருவேளை இது காலப்போக்கில் மாறி வேறு வகையான உடையும் வரலாம்.தஙகளுடைய அஙகஙகளை வெளிக்காட்டும் விதமாக உடைகள் இருக்கலாகாது என்பதுதான் அவர்களுக்குரிய விதி.பொதுவாக தமிழ் பெண்கள் இன்று சுடிதாருக்கு மாறிவிட்டார்கள்.அதனால் வடக்கத்திய மயமாக்கப்படுகிறர்கள் என்று அர்த்தமா?அரபுக்களின் கலாச்சரம் என்பது வேறு இஸ்லாமியநடைமுறை என்பது வேறு.அதில் நாஙகள் தெளிவாகவே இருக்கிறோம்.எஙகளின் உணவு உடை மொழி பாரம்பரியம் எதிலும் இஸ்லாம் தலையிடுவதில்லை.அதற்க்காக பொஙகல் என்ற் பெயரில் சூரியனை கும்பிடமாட்டோம்.ஜனநாயகத்தை ஏற்றுக்கொன்டிருக்கின்றோம்.வாக்களிக்கின்றோம்.எங்களின் உரிமைகளுக்காக அற வழியில்தான் போராடுகிறோம்.எஙகளின் சக மககளை எஙகளின் பந்துக்களாகவேதான் பார்க்கின்றோம்.வகாபியிஸ்ம் என்பதை அதி பயங்கர அரசியல் சித்தாந்தமாகவே கருதி அதை அப்படியே அடியொட்டி நடக்கிற் கூட்டம் தமிழ் நாட்டில் பெருகி விட்டதாக ஒரு மாயை நடுத்தரவாதிகளிடம் கூட வந்து கொன்டிருக்கிற்து.இது தவறு .’முஸ்லிம்கள் ஆன்மீகரீதியாக பின் பற்ற தகுந்தது குரானும் நபியின் கட்டளைகளும் மட்டுமே என்பது சட்டம்.கண்டவன் காலிலும் விழுவது கண்டதையும் தெய்வாம்சம் பொறுந்தியதாக கருதுவது என்பதை இஸ்லாத்திற்க்கு முறநானதாக நாங்கள் கருதுகிறோம்.இது பொதுவான இஸ்லாமிய சித்தாம்தான்.இதை அப்துல்வகாப் என்ற் தனி மனிதர் தஙளுடைய அரசியல் போராட்டங்களுக்கு பல் வேறு இன மக்களை ஒன்றினைக்க இதையும் ஒரு பிரச்சாரமாய் செய்தார்.சிலுவை போர்களில் சிலுவையைக்கொண்டு பாதிரிகள் மக்களை திரட்டவில்லையா அது போல.அதற்க்காக சிலுவை என்றாலே போர் என்ற் அர்த்தமா?அவர் பெயரைக்கொண்டே இது வகாப் வகாபியிசம் என்று வந்தது. இந்த அடிப்படையான இஸ்லாமிய கருத்தை எத்தனையோ அறிஞர்கள் சொன்னார்கள்.ஆனால் இவர் அரசியல் ரீதியாக வலுவானவராக இருந்ததால் பெரிய அள்வில் பிரபலமானார்.

    • ___மீராசாஹிப்,

      உண்மையிலேயே நீங்கள் தெரிந்து கொண்டு தான் பேசுகிறீர்களா அல்லது சும்மா சப்பைக்கட்டு கட்டுகிறீர்களா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ் முஸ்லீம்கள் அரபுமயமாக்கப்படுவது குறித்து என்னைப் போன்ற தமிழர்கள் தமது கவலையைத் தெரிவித்துக் கொள்வது மட்டுமன்றி, இஸ்லாம் அரபுமயமாக்கப்படுவது குறித்து அரபுக்களல்லாத பன்னாட்டு முஸ்லீம்களும் விவாதித்துக் கொண்டும், தமது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டுமுள்ளனர் என்பதை நீங்கள் அறியாதது தான் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. நீங்கள் விரும்பினால் அதைப்பற்றி வெறும் கூகிள் தேடுதலிலேயே அறிந்து கொள்ள முடியும். இந்த விடயத்தில் அரபுக்கள் அல்லாத பாரசீக(ஈரானியர்), துருக்கிய முஸ்லீம்களின் நிலைப்பாடு என்ன என்பதை நீங்கள் எப்பொழுதாவது அவர்களுடன் பேசி அறிந்து கொண்டீர்களா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய அனுபவத்தில் இஸ்லாம் அரபுமயமாக்கப்படுவதை, இஸ்லாத்தில் அரபு ஆதிக்கத்தை அவர்களும் எதிர்க்கிறார்கள் என்பது தான் உண்மை.

      இஸ்லாம் அரேபியாவில் தோன்றியதுடன், நேரடியாக இறைவனிடமிருந்து இறங்கியதாக முஸ்லீம்கள் நம்பும் திருக்குரான் அரபு மொழியிலிருந்தாலும், கூட அரபுக் கலாச்சாரத்தையும், ஆடையணிகளையும், அரபுக்களின் பழக்க வழக்கங்களையும் முஸ்லீம்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுமென்றோ அல்லது முஸ்லீம்கள் எல்லோரும் ஒரே மாதிரியான சீருடையணிய வேண்டுமென்றோ நபிகள் நாயகம் ஒரு போதும் கூறவில்லை.

      இஸ்லாம் அரபுமயமாக்கப் படுவதையும், அரபு ஆதிக்கத்தையும் ஊக்குவிப்பது வஹாபியிசம் தான், இந்த விடயத்தில் வஹாபியிசத்துக்கும், இந்துத்துவத்துக்கும் பெரிய வேறுபாடு கிடையாது . இந்துத்துவாக்களும் இந்து என்ற போர்வையில் சமக்கிருத, பார்ப்பனீய ஆதிக்கத்துக்குள் தனித்துவமான வரலாறும், மொழியும், கலாச்சாரமும் கொண்ட தமிழர்களை இணைத்து தமிழர்களை இந்துத்துவ நீரோட்டத்தில் காணாமல் போகச் செய்யலாம் எனக் கனவு காண்கிறார்கள்.

      உலக முஸ்லீம்களில் அரபுக்கள் வெறும் 18% தான், அதிலும் இஸ்லாம் தோன்றி, குறுகிய காலத்தில் இஸ்லாத்தை பலநாடுகளில் பரப்பியதில், அரபுக்களை விட பாரசீகர்களுக்கும், துருக்கியர்களுக்கும் தான் பெரும்பங்குண்டு. அவ்வாறிருக்க, இஸ்லாத்தை அரபுமயமாக்குவதால், அரபு மொழியும் , அரபுக்களின் பண்பாடும், கலாச்சாரமும் அவர்கள் மீது திணிக்கப்படுவதால் தமது வரலாறும், பழமையும், வாய்ந்த மொழியும் கலாச்சாரமும் காணாமல் போவதாக, எண்ணி அவர்களும் அரபுமயமாக்கலை எதிர்க்கிறார்கள். உலகில் மிகப்பெரிய இஸ்லாமிய நாடாகிய இந்தோனேசியாவில் கூட இஸ்லாம் அரபுமயமாக்கபடுவது குறித்து எதிர்ப்பு உண்டு. பல உலமாக்கள் அதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உங்களைப் போன்ற தமிழ் முஸ்லீம்கள் மட்டும் அரபுமயமாக்கலை மகிழச்சியுடன் ஏற்றுக் கொள்வதுடன் அப்படி எதுவுமில்லை என்று மறைக்கவும் முயல்கிறீர்கள்.

      அர‌புக்க‌ளின் க‌லாச்சார‌த்துக்கும், ப‌ழ‌க்க‌ வ‌ழக்கங்க‌ளுக்கும் இஸ்லாத்துக்கும் அத‌ன் போத‌னைக‌ளுக்கும் தொட‌ர்பு கிடையாது என்ப‌து தான் உண்மை. உண்மையில் அக்காலத்தில் அர‌புக்க‌ளின் பண்பாட்டுக்கும் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்களுக்கும் எதிராக‌, அவர்களைத் திருத்துமுகமாகத் தான் இஸ்லாம் என்ற‌ மார்க்க‌ம் உருவான‌து. புனித‌ குரானில் கூற‌ப்ப‌டும் பெரும்பாலான‌ போத‌னைக‌ள் எல்லாம் அக்கால‌ க‌ட்ட‌த்தில் வாழ்ந்த‌ அர‌புக்க‌ளின் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளுக்கு எதிரான‌வை. உதார‌ண‌மாக‌ பெண்க‌ளின் உரிமை என்ற‌ விட‌யத்தில் ந‌பிக‌ள் நாய‌க‌ம்(ஸல்) அவ‌ர்க‌ளின் போத‌னைக‌ளுக்கும் அர‌புக்க‌ளின் க‌லாச்சார‌த்துக்கும் பாரிய‌ வேறுபாடுண்டு. அப்படியிருக்க‌ அர‌புக்க‌ளின் ந‌டையுடை பாவ‌னைக‌ளை, ப‌ண்பாட்டைக் க‌லாச்சார‌த்தைக் க‌டைப்பிடித்தால், அர‌பு மொழியை அதிக‌ள‌வில் த‌மிழில் க‌ல‌ந்து பேசினால் தான், உண்மையான‌ முஸ்லீமாக‌லாம், அவ்வாறு க‌ருதப்ப‌டுவார்க‌ள் என்ற‌ மாதிரியான‌ உண‌ர்வூட்ட‌ப்ப‌ட்டு இன்று த‌மிழ் முஸ்லீம்க‌ள் அர‌பும‌ய‌மாக்க‌ப் ப‌டுகிறார்க‌ள் என்ப‌தை, என்னைப் போல் த‌மிழ்நாட்டிலும், இல‌ங்கையிலும் முஸ்லீம்க‌ளுட‌ன் ப‌ழ‌கிய‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ளை ப‌ள்ளிக்கால‌ம் முத‌ல் ந‌ண்ப‌ர்க‌ளாக‌க் கொண்ட‌ த‌மிழ‌ர்க‌ளால் இல‌குவாக‌ உணர‌முடியும். இல‌ங்கையில் அறுப‌து வ‌ருட‌ங்க‌ள் கால‌ம் எடுத்த‌ அர‌பும‌யமாக்க‌ல், த‌மிழ்நாட்டில் வெறும் ப‌த்து வ‌ருடங்க‌ளில் ப‌ட்டி தொட்டியெல்லாம் ப‌ர‌வி விட்ட‌தென்ப‌தை, தமிழ்நாட்டில் முஸ்லீம்க‌ள் வாழும் கிராம‌ப்ப‌க்க‌ங்க‌ளுக்குச் சென்ற‌வ‌ர்க‌ளுக்குப் புரியும்.

      அர‌புமய‌மாக்க‌லின் நோக்க‌மெல்லாம் த‌மிழ் முஸ்லீம்க‌ள் பார‌ம்ப‌ரிய‌மாக‌, ப‌ல‌நூற்றாண்டுக‌ளாக‌க் க‌டைப்பிடித்து வ‌ந்த‌ த‌மிழ்க்க‌லாச்சார‌ம் சார்ந்த‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளையும், அவ‌ர்க‌ளின் முன்னோர்க‌ளின் உண‌ர்வு பூர்வ‌மான‌ வ‌ழிமுறைக‌ளை, ந‌ம்பிக்கைக‌ளை எல்லாம் அர‌புக்க‌ளின் ப‌ண்பாட்டையும், அரேபிய‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளால் ஈடுசெய்வ‌தும். அத‌ன் மூல‌ம் பொதுவான, அர‌புக்க‌ளின் வ‌ர‌லாற்றுட‌ன் அவ‌ர்க‌ளின் கலாச்சார‌த்தை அடிப்ப‌டையாக‌ கொண்ட நாடுக‌ட‌ந்த‌ இஸ்லாமிய‌ அடையாள‌த்தை உண்டாக்குவ‌துமாகும். இந்த‌ அர‌பும‌ய‌மாக்க‌லால், த‌மிழ் ம‌ண்ணுட‌னும், த‌மிழ‌ர்க‌ளுட‌னும், நாம் என்ன‌ ம‌த‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்தாலும் நாங்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் என்ற‌ இர‌த்த‌த்துட‌ன் க‌ல‌ந்த‌ உண‌ர்வை, எந்த‌ உண‌ர்வு த‌மிழ‌ர்கள‌னைவ‌ரையும் ம‌த‌வேறுபாட‌ற்று ஓற்றுமையாக‌ ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ வாழ‌ வ‌ழி வ‌குத்த‌தோ, அந்த‌ உண‌ர்வை மீட்க‌வே முடியாத வேக‌த்தில் இழ‌ந்து கொண்டிருக்கிறார்க‌ள் என்ப‌த‌ற்கு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் அழிவில் த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் எனக்கென்ன‌ போச்சு என்று ந‌ட‌ந்து கொண்ட‌ வித‌மும், ஒரு சில‌ர் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் அழிவை மகிழ்ச்சியுட‌ன் புலிக‌ள் அழிக்க‌ப்படுகிறார்க‌ள் என்ற‌ போர்வையில் வ‌ர‌வேற்ற‌தும் ந‌ல்ல‌ உதார‌ண‌ங்க‌ளாகும். பி.ஜெய்னுலாப்தீன் போன்ற‌வ‌ர்க‌ள் எவ்வாறு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கெதிராக‌, அவ‌ர்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌த்தைக் கொச்சைப்ப‌டுத்தும் வ‌கையில், சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்காத‌ர‌வாக‌ பொய்ப்பிர‌ச்சார‌ம் செய்தார்க‌ள் என்ப‌தை இன்றும் காணொளிக‌ளில் காண‌லாம்.

      அர‌புக்க‌ளல்லாத‌ முஸ்லீம்க‌ளின் மேல் அர‌பு முஸ்லீம்க‌ளின் மேலாதிக்க‌ம் திருக்குரானில் எந்த‌வித‌த்திலும் நியாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ போதிலும் த‌மிழ்நாட்டின் இஸ்லாமிய‌ ம‌றுமல‌ர்ச்சி இய‌க்க‌ங்க‌ளெல்லாம் இஸ்லாத்துட‌ன் அர‌புக்க‌ளின் க‌லாச்சார‌த்தையும் தொட‌ர்புப‌டுத்தி த‌மிழ் முஸ்லீக‌ளை அர‌பும‌ய‌மாக்கி த‌மிழர்க‌ளுக்கிடையிலிருந்த‌ இன‌ ஒற்றுமையில், பாச‌ப்பிணைப்பில் ஒரு தொய்வை ஏற்ப‌டுத்தி விட்ட‌ன‌ர் என்ப‌தை த‌மிழ்நாட்டில் முஸ்லீம்க‌ளை ந‌ண்ப‌ர்க‌ளாக‌ கொண்ட‌ அனைவ‌ராலும் உண‌ர‌ முடியும்.

      அத்துட‌ன் ந‌ல்ல‌ ந‌ம்பிக்கையுள்ள‌ முஸ்லீமாக‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளால் க‌ருத‌ப்ப‌ட வேண்டுமாயின் க‌ட்டாய‌மாக‌ பாலைவனத்துக் ______ உடைக‌ளை அணிய‌ வேண்டும் அப்ப‌டியான‌ தோற்ற‌த்தையும் கொண்டிருக்க‌ வேண்டுமென்ற‌ நிலை கொஞ்ச‌ம், கொஞ்ச‌மாக‌ த‌மிழ் முஸ்லீம்க‌ளின் ம‌த்தியில் தோற்றுவிக்க‌ப்ப‌டுகிற‌து. முஸ்லீம்க‌ள் எல்லோரும் ஒரே மாதிரியான சீருடையையோ அல்ல‌து அர‌புக்க‌ள் ம‌த்திய‌கிழ‌க்குப் பாலைவ‌ன‌த்தில் அணிந்த‌ ஆடைக‌ளை ம‌ட்டுமே பாலைவ‌ன‌மேதும‌ற்ற‌ த‌மிழ்நாட்டிலும், இல‌ங்கையிலும் அணிய‌ வேண்டுமென்ப‌து திருக்குரானில் இல்லை.

      இக்காலத்தில் தமிழ்ப்பெண்கள் சுடிதார் அணிவதையும் தமிழ் முஸ்லீம் பெண்களின் புர்காவையும் ஒப்பிடும் உங்களின் ஒப்பீடு நகைப்புக்குரியது ஏனென்றால் தமிழ்ப்பெண்கள் சுடிதார் அணியும் பின்னணியில் எந்த விதமான மதம் சம்பந்தமான காரணமும் கிடையாது. இந்த புர்க்கா கலாச்சாரத்தை, தமிழ்நாட்டுக்கு அதாவது பாலைவனத்தை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தவர்கள் வஹாபிஸ்டுகள் தான். தமிழ்நாட்டிலிருந்து கூலிகளாகவும், குமாஸ்தாக்களாகவும் சவூதி அரேபியாவுக்குப் போன தமிழ் முஸ்லீம்களை, அங்கு வாழும் அரபுக்கள் தமது சகோதரர்கள் என்று அரவணைத்து ஆரத் தழுவவில்லை. அவர்கள் எதிர்பார்த்த ‘Homecoming’ வரவேற்பு அவர்களுக்கு அரேபியாவில் கிடைக்கவில்லை. அரபுக்கள் தமிழ் முஸ்லீம்களை தமக்கு இணையாகக் கருதுவதுமில்லை. ஆனால் அவர்களின் சொந்த தயாரிப்பான, அரபு மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் தீவிரவாத வஹாபியிசத்தைப் பரப்ப தமிழ்/ இந்திய முஸ்லீம்களைப் பயன்படுத்த அவர்கள் தயாராக இருந்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இன்றைக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் இணைவதற்காக மதவுண ர்வும் , வீரமும் பொங்கித் ததும்ப சிரியாவுக்குப் போகும் தமிழர்களையும் (இந்தியர்களையும்) ISI தீவிரவாதிகள் கக்கூஸ் கழுவத் தான் அனுப்புகிறார்களாம் என்பதை நிச்சயமாக நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என ந்மபுகிறேன். தமிழர்களின் விடயத்தில் அரபுக்கள் மாறவே மாட்டார்கள் போல் தெரிகிறது அல்லவா? 🙂

      அரேபியாவில், உடல், முகம் முழுவதையும் மறைத்துக் கொண்டு கணவனின் பின்னால் வேள்விக்கு வெட்டக் கொண்டு போகும் ஆடு போல் போகும் பெண்களைப் பார்த்தவுடன், அப்படித்தான் உண்மையான முஸ்லீம் பெண்கள் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்ட தமிழ் முஸ்லீம்களில் ஒருவர் விடுமுறையில் திரும்பு வந்த போது ஒரு புர்க்காவை வாங்கி வந்து அவரது மனைவியையும் வெளியில் கூட்டிப் போனதைப் பார்த்து மற்றவர்களும் அதைக் காப்பியடித்துக் கொண்டார்கள் போலிருக்கிறது. ஏனென்றால் இந்த புர்க்கா இல்லாமலும், பல நூற்றாண்டு காலமாக உங்களின் முன்னோர்கள், தமிழ் முஸ்லீம் தாய்மார்கள் தமிழ்நாட்டில் உண்மையான, ஒழுக்கமான, இறைவனுக்கு பணிந்த முஸ்லீம்களாக மட்டுமன்றி தமிழ்ச் சகோதர்களின் மதிப்புக்கும், மரியாதைக்குமுரியவர்களாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அவர்களுக்கு தேவைப்படாத புர்க்கா இப்பொழுது ஏன் தேவைப்படுகிறது.

      -த‌மிழ்முஸ்லீம்க‌ளின் அர‌பும‌ய‌மாக்க‌ல் த‌மிழ‌ர்க‌ளை மேலும் பிள‌வுப‌டுத்தும்-
      http://viyaasan.blogspot.ca/2013/02/blog-post_6.html

  13. பண்பட்ட மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்வதற்கு மதம், சாதி, இனம் என்ற அடையாளம் தேவையில்லை. மனிதம் தழைத்திருப்பதால் நாம் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறோம்.

    உதவியவர் எந்த சமுதாயத்தவர் என்று ஆராய்வது தேவையில்லை.
    உதவியர் அனைவரும் மேன்மக்களே.

  14. இனியவன் உஙகள் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது.மதமற்ற கடவுள் நம்பிக்கையற்ற உஙகளுக்கு மதம் கடவுள் என்று நாஙகள் முன்னிருத்தும்போது அது உறுத்துகிறது.நீஙகள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்,மனித சேவை என்றில்லை,எந்த ஒன்றிர்க்கும் கடவுளை முன்னிருத்தல் என்றே நாஙகள் பழகி இருக்கிறோம்.’என்னால் நடந்தது என்னால் தான் முடிந்தது ‘என்று நாங்கள் சொல்வதே இல்லை.நாளை செய்யப்போவதை இறைவன் நாடினால் செய்வேனென்றும் செய்து முடித்ததை இறைஅருளால் செய்து முடித்தேன் என்றுமே சொல்லுவோம்.மனிதநேயம் எல்லா மனங்களிலும் சுரக்கத்தான் செய்கிற்து.கடவுளை நம்பாத உள்ளத்திலும் மனிதநேயம் இருக்கிற்து.இது படைத்தவனின் கருணை என்பதே எஙகள்நம்பிக்கை.ஆக இப்படிபட்ட இரக்க குண்த்தை எஙகளுக்கு அருளிய இறைவனுக்கே புகழ் அனைத்தும் என்பதே அதற்க்கு அர்த்தம்.தய்வு செய்து புரிந்து கொள்ளுங்கள் இனியன்.இது மனிதனை ஆண்வம் கொள்ளாமல் இருக்க செய்யலாம்.இழ்ப்புகள் ஏற்பட்டால் இடிந்து விடாமல் இருக்கச்செய்யலாம்.

  15. முஸ்லீம்களை இயக்கியது மதமல்ல மனிதநேயம்தான். இது சென்னை மழையில் பட்டவர்த்தமாகவே தெரிந்தது. முஸ்லீம்கள் தாங்கள் செய்யும் செயலை எப்போதுமே தங்களது கடவுளுடனே தொடர்பு படுத்திக்கொள்வார்கள். மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் போன்ற வார்த்தைகள் யாவும் இதற்கானதே. இந்த செயலை ஏன் செய்தாய்? நீ எப்படி செய்தாய்? எனக் கேட்டுப் பாருங்கள், அல்லாவுக்கே அனைத்துப் புகழும் என்பதுதான் அவர்களது பதில். இதையேதான் சென்னை மீட்பு பணியில் ஈடுபட்டவர்களும் பிரதிபலிக்கிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை மனிதனுக்கு மனிதன் உதவி செய்வதை மனிதநேயமாக கற்றுத்தரப்படவில்லை. அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதெல்லாம் அல்லாஹூ அக்பர் தான். அதனால்தான் சென்னை மழைக்கு ஒருவிதமாகவும் ரிசானாவிற்கு ஒருவிதமாகவும் வினையாற்றுகிறார்கள். ஒருவேளை மனிதநேயத்தைக் கூட (அல்லாவின்) வரம்பிற்குட்பட்டுதான் செய்வார்கள் என நினைக்கின்றேன்.

    • Ferouce Babu,meerasahib,

      எல்லா புகழும் இறைவனுக்கே என்ற மனநிலையில் நாம் செய்யும் நற்காரியங்களை முதன்மை படுத்துவதில் எந்த விதமான தவறும் இல்லை. அதனை விடுத்து என் மதம் கூறுவதால் தான் இந்த நற்காரியங்களை செய்கிறேன் என்று கூறுவதில் தான் அதில் உள்ள மனித நேயம் துடைத்தெறியபடுகின்றது. மனித நேயமற்று மதத்தின் பால் நடத்தும் எந்த நற்காரியங்களும் மக்களிடம் பிரிவினையை தானே உருவாக்கும் என்ற எளிய உண்மையை meerasahib அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் அல்லவா? அதனை விடுத்து மத்திய கிழக்கு ஆசியாவில் மாபெரும் அழிவை உருவாக்கி உள்ள வகாபி இஸத்தை தானே meerasahibஅவர்கள் ஆதரிகின்றார். இது சரியா?

  16. விஸ்வா, எந்த அடிப்படை ஆதாரமுமற்ற கற்பனையில் இருக்கிறீர்கள்.எங்களை எவ்வளவு தவறாகவும் மோசமாகவும் எடை போட்டிருக்கிறீர்கள் என்று நினைக்க ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் இருக்கிற்து.எத்தனை மக்கள் இன்னும் எத்தனை விஷயஙகளில் இது போல் தப்பபிப்பிராய்ம் வைத்திருப்பார்கள் என்று நினைக்க வருத்தமும் பயமும் வருகிற்து.நீங்கள் சொல்வது போல் எந்த நாட்டில் சார் முஸ்லிம் அல்லாத மக்கள் விரட்டப்பட்டார்கள் கொல்லப்பட்டார்கள்?வகாபி இஸத்தை பின் பற்றுவதாக நீஙகள்நம்பும் சவூதியிலேயே யூதர்கள் கிறித்துவர்கள் ஏன் நம் தமிழ் நாட்டு பிராமணர்கள் கூட மிக உயந்த பொறுப்பில் இருக்கிறார்கள்.நீஙகள் சொல்வது போல் எந்த காலத்திலும் எந்த பகுதியிலும் நடந்ததும் இல்லை நடக்கப்போவதுமில்லை.அதிகாரவெறி பிடித்த சில ஆட்சியாளர்கள் தஙகளை தக்கவைக்க மதவெறியை கிளப்பி மக்களை மோத விட்டிருக்கலாம்.ஆனால் இஸ்லாமிய நெறிமுறையில் ஆள்பவர்கள் அப்படி இருக்க முடியாது சார்.ஒரு மனசாட்சியற்ற் மத்க்கொள்கையையா சார் நாஙகள் ஏற்று சப்பை கட்டு கட்டுவோம்.உஙகளால் ஏற்க முடியாத பல விஷயஙகள் இதில் இருக்கலாம்.ஆனால் கொடூரமானதாக கொலைகார மதமாக இதை எண்ணிவிடாதீர்கள்.சமரசமற்ற கொள்கை உறுதியை இந்த மதம் எதிர் பார்ப்பது உண்மை.’உன்னை பெற்ற தாயாக இருந்தாலும் மகனாக நல்ல முறையில்நடந்து கொள்.கொள்கையில் தளர்ந்து விடாதே என்று போதிக்கிற்து.மாற்று கொள்கையில் உள்ளவர்களை துன்புறுத்தவோ ஒதுக்கிவைக்கவோ கொல்லவோ சொல்லவில்லை.சொல்லவில்லை.சொல்லவேஇல்லை.ஒரு வேளை சமரசமற்ற அதன் கொள்கை உறுதிதான் உஙகளை தவறாக புரியவைத்ததோ தெரியவில்லை.

    • வகாபி இஸத்தை ஆதரிக்கும் தாங்கள் சிரியாவில் , ஈராக்கில் அதே வகாபி இஸத்தை நடைமுறை படுத்த ISIS ஆதரிக்கும் சன்னி முஸ்லிம்கள் நடத்தும் கோரதாண்டவத்தை பார்த்துக்கொண்டு தானே உள்ளீர்கள். ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் வெடிவைத்து தகர்க்கபடுவதும் , ஷியா முஸ்லிம்கள் வகாபி இஸத்த்தின் பெயரால் தினம் தினம் கொல்லப்படுவதும் , அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தப்டுவ்தும், சிரியாவின் புரதான சின்னங்கள் அழிக்கப்டுவ்தும் நடந்து கொண்டு தானே உள்ளது. ISIS இயக்கம் முழுமையான விசையுடன் வகாபி இஸத்தை நடைமுறை படுத்துவதை அதனால் விளையும் கோர மானுட தர்மம் அற்ற கொடும் செயல்களை பார்த்துகொண்டுமே நிங்கள் அந்த இசத்தை ஆதரிகின்றிர்கள் அல்லவா?

  17. இனியன்,நான் தெளிவாய் சொன்ன பிறகும் பயங்கரவாத இயக்கங்களோடும்,அரசியல் பிரிவுகளோடும் ஒரு சாதாரண மக்களின் ஆன்மீக கொள்கைகளை கோர்த்துவிடுவது பக்கா டவுசர்களின் பாணி.வாகாபி வகாபி என்று திரும்ப திரும்ப கூறுகிறீர்களே நாங்கள் எங்காவது எங்களை வகாபிகள் என்று சொன்னோமா? நீஙகளாக ஒரு பட்டத்தை எங்களுக்கு சூட்டி என்னவோ நாங்களெல்லாம் அதற்கு கொடிபிடித்து போவதுபோல் காட்டி’ அவர்கள் கொல்கிறார்களே குண்டு வைக்கிறார்களே நீஙகள் ஆதரிக்கிறீர்கள்தானே?’எனறு கேள்வி வேறு!நாங்கள் முஸ்லிம்கள் நாங்கள் இஸ்லாத்தை பின்பற்றக்கூடியவர்கள் வேறு எந்த இஸத்தையும் பின் பற்ற்க்கூடியவர்களல்ல.இதில் வியாசன் வேறு தமிழ் உணர்வு கொப்பளிக்க’இவர்கள் தமிழ் அடையாளத்தையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு அரபிகளாய் மாறி விடுவார்களோ’என்று விசனப்படுகிறார்.எஙகளின் தமிழ் உணர்வும் மொழிப்பற்றும் உஙகளுக்கு தெரியுமா சாதம் என்று எந்த தமிழ் முஸ்லிமும் சொல்லுவதே இல்லை.சோறு என்றுதான் சொல்கிறோம்.ரசம் என்ற் வார்த்தை எஙகள் வீட்டில் கிடையாது புளியானம்தான் நாஸ்டா என்பதை பசியாறா என்றே சொகிறோம்.மசூதி என்று நீஙகள் சொல்ல பள்ளிவாசல் என்று நாஙகள் சொல்கிறோம்.நமாஸ் போனீஙகளா என்று கேட்பவர்களுக்கு தொழுதுவிட்டு வந்தோம் என்றே நாங்கள் சொல்கிறோம்.எந்த நாட்டில் இருந்தாலும் தமிழ் அடையாள்த்தையே முன்னிலைபடுத்துகிறோம்.இதெல்லாம் உஙகளிடம் கண்க்கு காட்டுவதற்க்கல்ல.எஙகள் ரத்தத்தில் ஊறியது.இந்த விடுதலைபுலி ஈழத்தமிழர் கதையெல்லாம் வேண்டுமென்றே சீண்டிவிடுகிற் கதை என்று தெறிகிறது.இருந்தும் சொல்கிறேன் புலிகள் பயஙகரவாதிகளே அவர்கள் கொடும் ஆதிக்கசக்திகள்.அவர்களிடம் அதிகாரம் போயிருந்தால் இதை அனைவரும் உணர்ந்திருபோம்.ஈழததமிழர்களை நாஙகள் புலிகளாக பார்க்கவில்லை.இயக்க பயங்கரவாதத்திற்க்கும் அரசபயஙகரவாதத்திற்க்கும் இடையில் சிக்கிக்கொண்ட அப்பாவிகள் என்றே கருதுகிறோம்.

    • உங்க பின்னுட்டம் 16 மற்றும் 20 ஆகியவற்றை பாருங்கள் அண்ணாச்சி. அதன் மூலம் யாரு வாகாபி வகாபி வாகாபி வகாபி வாகாபி வகாபி என்று விளம்பர படுத்திகொண்டு இருப்பது தெரியும். உங்க பின்னுட்டம் 16ல் வாகாபியிசம் பற்றிய உங்களின் கருத்துகளை மீண்டும் படித்து பாருங்கள் அண்ணாச்சி. கீழ் உள்ள உங்களின் வாகாபியிச சார்பை மீண்டும் படியுங்கள் அண்ணாச்சி.:

      “வகாபியிஸ்ம் என்பதை அதி பயங்கர அரசியல் சித்தாந்தமாகவே கருதி அதை அப்படியே அடியொட்டி நடக்கிற் கூட்டம் தமிழ் நாட்டில் பெருகி விட்டதாக ஒரு மாயை நடுத்தரவாதிகளிடம் கூட வந்து கொன்டிருக்கிற்து.இது தவறு”

      இதே வகாபியிச கருத்துகளை தான் ISIS பதர்கள் ,கொலையாளிகள் நடைமுரைப்டுத்துகின்றார்கள் என்னும் நிலையில் தான் நான் உங்களுக்கு வாகபி பற்றி உண்மையை உரைக்க வேண்டியது ஆகின்றது.

    • உங்க பின்னுட்டம் 20 வகாபி இஸத்தை பற்றி என்ன சொல்லுதுன்னு பார்கலாமா அண்ணாச்சி ?

      “:வகாபி இஸத்தை பின் பற்றுவதாக நீஙகள்நம்பும் சவூதியிலேயே யூதர்கள் கிறித்துவர்கள் ஏன் நம் தமிழ் நாட்டு பிராமணர்கள் கூட மிக உயந்த பொறுப்பில் இருக்கிறார்கள்.நீஙகள் சொல்வது போல் எந்த காலத்திலும் எந்த பகுதியிலும் நடந்ததும் இல்லை நடக்கப்போவதுமில்லை”

      இதுல நீங்க எதுக்கு வக்காலத்து வாங்குறிங்க அண்ணாச்சி? சவுதி பொருக்கிக்கா ?இல்ல சவுதி பொருக்கி நடைமுறை படுத்தி உள்ள வகாபி இஸத்துக்கா ? விளக்கம் கொடுத்தால் நன்னா இருக்கும். வகாபி இஸத்தை பற்றி அதனை நீங்களே ஆதரித்து பேச ஆரம்பித்துவிட்டு பின்பு நான் தான் பேச தொடங்கினேன் என்று கூறுவதில் உண்மை கடுகளவு கூட இல்லையே அண்ணாச்சி.

    • RSS அரை டவுசர் மாதிரி நீங்க பேசிய விசயத்தை இல்லை என்று மாற்றி பேசாதிர்கள் அண்ணாச்சி. வகாபி இஸத்தை ஆதரித்து பேசியது , தெளகீத்ஜாமாத் அரசியலை மதத்துடன் கலந்தது எல்லாம் நீங்க தான் அண்ணாச்சி. அதுக்கு பதில் மட்டும் தான் நான் கொடுத்து இருக்கேன்.

      //இனியன்,நான் தெளிவாய் சொன்ன பிறகும் பயங்கரவாத இயக்கங்களோடும்,அரசியல் பிரிவுகளோடும் ஒரு சாதாரண மக்களின் ஆன்மீக கொள்கைகளை கோர்த்துவிடுவது பக்கா டவுசர்களின் பாணி.வாகாபி வகாபி என்று திரும்ப திரும்ப கூறுகிறீர்களே நாங்கள் எங்காவது எங்களை வகாபிகள் என்று சொன்னோமா?//

  18. இனியன், அரசியலோடு மதம் கலந்து நான் பேசவே இல்லையே சார்.முஸ்லிம் இளைஙர்கள் ஒரு பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றிருக்கிறார்கள்.இதற்க்கு’ நாஙகள் எந்த பிரதிபலனையும் எதிர் பார்க்கவில்லை.இறைபொறுத்தம் நாடியே இதைச்செய்தொம்”என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.இதுதான் விவாதப்பொருள்.அதில் நீஙகள்தான் வாகாபி ஷியா சன்னி என்றெல்லாம் போனீர்கள்.இதில் அரசியலில் மதம் கலந்து நான் எங்கு பேசினேன்.

    • விவாதத்தில் ஒரு தொடர்ச்சி இருந்தால் தான் படிக்கிறவர்களுக்கு தெளிவு கிடைக்கும் அண்ணாச்சி. உங்க பின்னுட்டம் 9 க்கு நான் அங்க கொடுத்த பதிலுக்கு எதுக்கு இங்க வந்து பேசுறிங்க? உங்க பின்னுட்டம் 9 ல் தெளகீத்ஜாமாத் பற்றி பேசுறிங்க இல்லையா? அதுக்கு தான் நான் என் பின்னுடம் 9.2 ல் அரசியலில் மதத்தை கலக்கக்கூடாது என்று பதில் கொடுத்து இருந்தேன்.

      // இதில் அரசியலில் மதம் கலந்து நான் எங்கு பேசினேன்.//

  19. இனியன் தவராகவே புரிகிறீர்கள்! தவ்கீத் ஆட்சியில் கம்னியுஸ்டுகளுக்கு நாத்திகருக்கு என்ன தண்டனை என்ற கேள்விக்கு சவூதியில் நீஙகள் சொல்கிற வகாபி ஆட்சிதானெ நடக்கிறது.அவர்களுக்கு அங்கு என்ன தண்டனை கொடுத்து விட்டார்கள் என்ற அர்த்தத்தில் கேட்டிருந்தேன்.ச்வூதியில் சிறந்த ஆட்சியும் தலைசிறந்த ஆட்சியாளர்களும் இருக்கிறார்கள் என்றெல்லாம் நாங்கள் எண்ணவில்லை.மீண்டும் சொல்கிறேன் வகாபிகளின் கடவுட் கோட்பாடு போன்ற சிற்சில விஷயஙகளில் நாஙகள் ஒன்றுபடலாம்.இது பொதுவானது.”ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று திருமூலரின் கொள்கை கூட எஙகளோடு உடன் பட்டதுதான்.அதற்க்காக அடிக்குஅடி திருமூலரையா பின்பற்றி கொண்டிருக்கிறோம்.வகாபி இஸ அரசியலுக்கும் எங்களுக்கும் எந்த சம்ம்ந்தமுமில்லை.அதோடு இந்துத்துவ சக்த்திகளை எதிற்கொள்ள யாரோடு கைகோர்க்க போகிறீர்கள்?என்று கேட் க்கிறீர்கள்.நாங்கள் எப்போதும் எல்லா நல்ல மக்களோடும் கைக்கோர்த்துதான் நிற்கிறோம்.என்ன செய்திக்காக இங்கே கருத்துகளை மாங்குமாங்கென்று பதிகிறோமோ அந்த செய்தியே சொல்லுமே எம்சாகோதரர்கள் என்ன ஜாதி மதம் இனம் ஊர் என்று பார்காமல் அனைவரோடும் கரம் கோர்த்து ஆரத்தழுவி அன்பொழுகத்தான் நிற்க்கிறோம் என்று. எஙகளை தவறாக எண்ணும் மக்களும் உள்ளார்ந்து புரிந்து எங்களோடு கைக்கோர்க்க இறைவன் அருள்வான். உங்களை போன்ற உள்ளங்களும் துணையிருப்பீர்கள் இன்ஷாஅல்லா

    • இதுவரையில் உங்கள் கருத்துகளை பொறுமையாக விளக்கியதற்கு நன்றி சகோ

  20. ஒரு சின்ன விளக்கம்.ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் வகாபிகள் என்பது கற்பனை.எஙகளையெல்லாம் அடிக்குஅடி வகாபி இசத்தை பின்பற்றுபவர்கள் என்று ஊதுவதைப்போல பயங்கரவாதிகள் அனைவரையும் வகாபிகளாக முத்திரை குத்துவது. சவூதி, அப்துல்வகாபை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்ட நாடு.சவூதி உருவாக்கத்தில் அவரின் பங்கு நீங்கள் அறிந்ததே.ஆக சவூதியை வகாபி நாடு என்று தாராளமாக சொல்லலாம்.சொகுசும் உல்லாசமும் ஊதாரித்தனமான வாழ்க்கையும்,நபியும் நபித்தோழர்களும் இருந்த நிலைக்கு நேர்மாறான நடைமுறைகளுமாய் இன்றைய அரபுக்கள் இருந்தாலும் பயஙகரவாதம் அங்கு இல்லை.அவர்களுக்கு உலகத்தை பற்றிய கவலையும் இல்லை.வகாபி இசம் பயங்கரவாதமும் இல்லை.நாஙகள் அதை பின்பற்றுபவர்களும் இல்லை

    • meerasahib, பாலியல் தொடர்பான முறைமீரல்கலுகாக இலங்கை பெண் கல்லால் அடித்து கொள்ளபடுவது தொடர்பான சவுதியின் தீர்ப்பை கூட சவுதி அரேபிய ரவுடிகளின் வாகபியிசத்தின் அடிப்டையில் குறை கூறலாம். பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஆணுக்கு ஒரு நீதி , பெண்ணுக்கு வேறு நீதி என்ற நிலைபாட்டை அப்துல் எங்கு இருந்து கொண்டு வந்தார்? குரானை அடிப்படையாக கொண்டு தானே? அப்படி என்றால் மதம் அரசியலில் நுழைய ஆதரவை தானே நீங்களும் அளிகின்றிகள். ஹிந்துதுவாகள் ஹிந்து மத கோட்பாடுகளை அரசியல் படுத்துவதற்கும் , நீங்கள் உங்கள் மத நம்பிக்கைகளை அரசியல் படுத்துவதற்கும் என்ன வேறுபாடு நண்பரே?

      http://tamil.thehindu.com/bbc-tamil/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8022327.ece

      //சவூதி, அப்துல்வகாபை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்ட நாடு.சவூதி உருவாக்கத்தில் அவரின் பங்கு நீங்கள் அறிந்ததே.ஆக சவூதியை வகாபி நாடு என்று தாராளமாக சொல்லலாம்.//

      • change : அரேபிய ரவுடிகளின் வாகபியிசத்தின் “””அடிப்டையை””” குறை கூறலாம்

    • பாலியல் தொடர்பான முறைமீரல்கலுகாக அந்த இலங்கை பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் அவருடன் குற்றவாளியாக காணப்பட்ட இலங்கை ஆணுக்கு 100 கசையடிகள் வழங்க வேண்டும் என்றும் சவுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது. குரான்-வாகபி அடிபடையிலான இந்த நீதி ஒரவஞ்சனையை பற்றி வாழ்வியல் வழிகாட்டியாக குரானை ஆதரிக்கும், அதனை அரசியல் ரீதியாக நடைமுறை படுத்த முயலுபவர்கள் தான் பதில் கூற வேண்டும்.

  21. ஆடை அணியும் பழக்கத்தை வைத்து தமிழக முசுலிம்கள் அரபுமயமாக்கப்படுகிறார்கள் என்ற வியாசனின் கூற்று அபத்தமானது.ஆடை அணிமணிகளில் ஏற்படும் மாற்றங்கள் பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.நம் கண்ணெதிரில் கடந்த இரு நூற்றாண்டு காலத்தில் இந்து,முசுலிம் இரு மதத்தவர்களிடமும் ஏற்பட்ட மாற்றங்களை பார்ப்போம்.

    19-ஆம் நூற்றாண்டு,ஏன்,20-ஆம் நூற்றாண்டு துவக்க காலம் வரை பெரும்பான்மையான தமிழக இந்து தாய்மார்கள் சட்டை அணியும் வழக்கம் இருக்கவில்லை.சேலையாலேயே உடலை மூடி இருந்தார்கள்.அப்படி சேலை கட்டிய ஒரு மூதாட்டி இன்றும் சென்னை உயர்நீதிமன்ற வாயிற்பகுதியில் வேர்க்கடலை,பட்டாணி விற்பதை அங்கு செல்வோர் காணலாம்.முன்பெல்லாம் அந்த மூதாட்டி உயர்நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயே வந்து விற்பார்.இப்போது அந்த கிழவி பட்டாணி கூடையுடன் உள்ளே நுழைந்தால் நீதிபதிகள் நீதி வழங்கும்போது பாதுகாப்பாக உணர முடியாது என பாதுகாப்பு காவலர்கள் அவரை உள்ளே விடுவதில்லை.அந்த சேலையால் கூட மார்பு பகுதியை மறைப்பதற்கு சில சாதியினருக்கு உரிமை இல்லாமலிருந்தது.மார்பை மறைக்கும் உரிமையை பெறுவதற்கு கூட அவர்கள் போராட வேண்டியிருந்தது.அல்லது மதம் மாற வேண்டியிருந்தது .

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது மாற தொடங்கியது.

    வங்கப் பெருங்கவி ரவீந்திரநாத தாகூரின் சகோதரரான சத்யேந்திரநாத் தாகூரின் மனைவி ஞானதநந்தினி தேவிதான், சேலைக்கு உள்ளே பெண்கள் அணியக்கூடிய ரவிக்கை, சட்டை போன்ற மேலாடைகளை பிரபலப்படுத்தியவர் என்று கூறப்படுகிறது.
    அந்நாளில் ரவிக்கை இல்லாத வெறும் சேலையுடன் ”கிளப்”களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், இவர் ரவிக்கை அணியத் துவங்கினார் என்று தெரிவிக்கப்படுகிறது.இப்படியாக மேட்டுக்குடி சீமாட்டிகளிடம் துவங்கிய பழக்கம் படிப்படியாக அனைத்து மக்களிடமும் பரவியது.நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்வது இயல்புதானே.
    அப்படி சட்டை அணிந்த பின்னரும் அன்றைய தமிழக தாய்மார்கள் இப்போது அணிவதை போன்று சேலை அணியவில்லை.சேலை தலைப்பு இப்போது போன்று வலமிடமிருந்து இடமாக இல்லாமல் இடமிருந்து வலமாக அணிவார்கள்.கொசுவம் வெளிப்புறமாக இருக்கும்.”தட்டு சுத்தி உடுத்துதல்”என்று அதற்கு பெயர்.அப்படி உடுத்துவதற்கு தாய்மார்கள் உள்பாவாடை அணிய வேண்டியதில்லை.விவசாய வேலை,வீட்டு வேலை என கடும் உழைப்பாளிகளான அவர்களுக்கு அது சௌகரியமாக இருந்ததால் அதுவே வெகு காலம் நீடித்தது.

    தொடரும்.

    • உண்மையில் அபத்தம் என்றால் என்னவென்று அண்ணன் திப்புவுக்கு விளக்கம் குறைவு போல் தான் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில், தமிழர்களுடன் தமிழர்களாக, தமிழ்ப்பெண்களைப் போலவே புடவையணிந்து, முஸ்லீம்களாக முக்காட்டிட்டு, தமிழ்ச் சகோதர்களின் மதிப்புக்கும், மரியாதைக்குரியவர்களாகவும் வாழ்ந்து காட்டிய தமிழ் முஸ்லீம் பெண்கள், இன்றைக்கு கறுப்புக் கோணிப்பையால் முகத்தையும் தலையையும் மூடிக் கொண்டு அதே தமிழர்களைப் பயமுறுத்துவதற்குக் காரணம் அரபுமயமாக்கல் தான் என்பதை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் திப்பு அவர்களுக்கு இல்லை. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீவிரவாத வஹாபியிசத்தின் மீது அவருக்குள்ள அளவு கடந்த ஈடுபாட்டால், – அந்த வகாபியிசத்தின் தாக்கத்தாலும், வஹாபியிச எஜெண்டுகளாலும் தான், ஆணுக்குப் பெண்ணை அடிமைப்படுத்தும் அரேபியக் __________ கலாச்சாரத்தின் அடிப்படையிலும், அரேபியர்கள் மணல்காற்று, அனல்காற்று என்பவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், உருவாக்கிய ஆடையணிகளை 21வது நூற்றாண்டில், தமிழ்நாட்டில் தமிழ்முஸ்லீம் பெண்களும் அணியும் நிலை ஏற்பட்டது என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வக்கில்லாததால் – சம்பந்தமில்லாத விடயங்களை எல்லாம் ஒப்பிட்டு தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதற்கு திப்புக்காக்கா தீவிரமாக முயல்வதைப் பார்த்து எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ‘தொடரும்’ என்று அடாவடித்தனம் வேறு. 🙂

      அதிலும் வேடிக்கை என்னவென்றால் வங்காளி தாகூரின் மனைவி தான் தமிழ்ப்பெண்களுக்கு ரவிக்கை போடக் காட்டிக் கொடுத்தார் என்று கதை விடுவது தான், இலங்கையில் அரசன் காசியப்பன் (தமிழ்/சிங்கள கலப்பு) காலத்து பழமை வாய்ந்த சிகிரியா ஓவியங்களில் கூட சில பெண்கள் ரவிக்கையுடன் காணப்படுகின்றனர். அதனால் ரவிக்கை அணிவதை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியதோ அல்லது பிரபலப்படுத்தியதோ தாகூரின் மனைவி அல்ல. தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் காலநிலை மட்டும் ஆடையணிகளைத் தீர்மானிக்கவில்லை. சமூகத்தில் அவர்களின் நிலை, பணம் என்பவையும், சாதியும் கூட ஆடை அணிகளைத் தீர்மானித்தன. ஏதோ காரணங்களுக்காக முஸ்லீம்களாக மதம் மாறிய/மாற்றப்பட்ட தமிழர்களிடம், அவர்களை மதம் மாற்றிய துலுக்க(துருக்கிய)/முகலாயர்களின் கலாச்சாரத் தாக்கத்தின் விளைவால், ஆடை அணிகளில், உதாரணமாக சேலையின் முந்தானையால் முக்காடிட்டுக் கொள்வது, முழு நீளக்கை கொண்ட ரவிக்கை அணிவது போன்ற பழக்க வழக்கங்கள் ஏற்பட்டன. அதற்கு முன்னால் அவர்களின் முன்னோர்களும் ரவிக்கை அணியாமல் தானிருந்திருப்பர். இக்காலத்தில் சவூதி அரேபியாவின் பணத்தினால் அல்லது சவுதி சார்பு வஹாபியிச ஏஜென்டுகளால் தமிழ் முஸ்லீம் பெண்களின் ஆடையணிகளில் மட்டுமன்றி ஆண்களின் ஆடையணிகளிலும், பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப் படுகின்றன, அவர்கள் திட்டமிட்டு அரேபிய கலாச்சாரத்தின் ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர், அதாவது அரபு மயமாக்கப் படுகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏறபட்ட துலுக்க/முகலாய மயமாக்கல் தமிழ் முஸ்லீம்களின் தமிழர்கள் என்ற அடையாளத்தையோ அல்லது தமிழ்ப்பண்பாட்டையோ அழிக்கவில்லை, அவர்களைத் தமிழர்களிடமிருந்து பிரிக்கவில்லை, ஏனென்றால் ______முகலாய ஆட்சியாளர்கள் இஸ்லாத்தில் காணப்படும் சூபியிசம் போன்ற பல்வேறு வழிபாட்டு முறைகளை எதிர்த்து அழிக்கவோ அல்லது ஏனைய இன, மத மக்களிடையேயும், மதங்களிடையேயும் வெறுப்பையும், இன, மத பேதத்தையும் தூண்டவோ முயலவில்லை. அதாவது இக்கால வஹாபியிசத்துடன் ஒப்பிடும்போது ________முகலாய ஆட்சியின் கீழ் மத தீவிரவாதம் காணப்படவில்லை என்றே கூறலாம். ஆனால் இக்கால தீவிரவாத வஹாபியிசம் சகோதர்களாக, தாய் பிள்ளைகளாக வாழ்ந்த/வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் முஸ்லீம்களுக்கும், தமிழர்களுக்குமிடையே நிரந்த இடைவெளியை ஏற்படுத்தி விடும். இந்த அரபுமயமாக்கல் தொடர்ந்தால் இலங்கையில் முஸ்லீம்கள் எவ்வாறு தமிழர்களின் குரல்வளைக்கு குறி பார்க்கிறார்களோ, அதே நிலை தமிழ்நாட்டிலும் ஏற்பட்டு விடும் என்பது தான் எனது கருத்தாகும்.

      இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே சீருடையணிந்து, அரபுக் கலாச்சாரத்தைத் தான் கடைப்பிடிக்க வேண்டுமென்று திருக்குரானோ அல்லது முகம்மது நபிகளோ கூறவில்லை. அதனால் தான் அரபுக்களல்லாத பன்னாட்டு முஸ்லீம்கள் இஸ்லாம் அரபுமயமாக்கப்படுவதை எதிர்க்கின்றனர். ஆனால் திப்பு போன்ற தமிழ் முஸ்லீம்கள் மட்டும் அரபுமயமாக்கலுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். அது மிகவும் கவலைக்குரியது மட்டுமன்றி தமிழர்கள் அனைவரும் கூர்ந்து நோக்க வேண்டியதும் கூட.

    • இந்த பாணி சேலை 60-களில் இப்போதைய பாணிக்கு மாறத்துவங்கியது.பழைய பாணி கட்டுப்பெட்டித்தனமாகவும் புதிய பாணி நாகரீகமானதாகவும் கருதப்பட்டது.அடுத்து 80-களின் இறுதியில் 90-களின் துவக்கத்தில் ”நாகரீகத்தின்”இடத்தை பஞ்சாபி சுடிதார் கைப்பற்றியது.கடந்த பத்தாண்டுகளில் சுடிதார் கட்டுப்பெட்டி இடத்துக்கு தள்ளப்பட்டு காற்சட்டை,T சட்டை நாகரீக இடத்துக்கு வந்துள்ளது.

      இதே கால கட்டத்தில் பார்ப்பன சமூக பெண்களிடம் மடிசார் கட்டும் பழக்கம் இருந்தது.அதை கட்டிக்கொண்டு வடாம் சுற்றலாமே தவிர வேறு எந்த வேலையும் செய்ய முடியாது.ஏன்,வேகமாக நடக்க கூட முடியாது.அதனால் மற்ற சமூக பெண்களிடம் இந்த பழக்கம் பரவவில்லை.60-களுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் அந்த சமூக பெண்மணிகளுக்கும் பொருந்தும்.

      ஆண்களை பொருத்தவரை இந்த கால கட்டத்தில் ஆங்கிலேயரின் தாக்கத்தால் வேட்டி சட்டையிலிருந்து காற்சட்டைக்கு மாறினார்கள்.மடிப்பு கலையாத காற்சட்டையிலிருந்து இன்றைய jeans வரை அந்த ஆடைகளிலும் ஏகப்பட்ட மாறுதல்கள் வந்து போய்க்கிட்டு இருக்கு.

      முசுலிம்களை எடுத்துக்கொண்டால் இதே காலகட்டத்தில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தை தொடர்ந்து அதுவரை விவசாயத்தையே நம்பியிருந்த அவர்கள் பிழைப்பு தேடி மலேயா,பர்மா போன்ற நாடுகளுக்கு செல்ல துவங்கினர்.சில குடும்பங்களில் ஆண்கள் மட்டும் சென்றனர்.சிலர் குடும்பத்தோடு அந்த நாடுகளுக்கு சென்றனர்.அப்படி போனவர்கள் ஆண்,பெண் இருபாலரும் அந்த நாட்டு மக்களின் உடைகளை அணியத்துவங்கினர்.ஆண்கள் வேட்டி சட்டையிலிருந்து கைலி சட்டைக்கு மாறினர்.பெண்கள் சேலை சட்டையிலிருந்து கைலி,நீண்ட மேல்சட்டை,தாவணி அணிய ஆரம்பித்தனர்.அந்த முசுலிம்கள் தாயகத்துக்கு வந்து சென்ற போது அவர்களை பார்த்தும்,அவர்களால் பரிசளிக்கப்பட்ட உடைகளாலும் இங்கிருந்த முசுலிம்களும் அந்த ஆடைக்கு மாறினர்.

      இன்றும் கைலி முசுலிம்கள் ஆண்களின் முதன்மையான ஆடையாக இருந்து வருகிறது.அவர்களை பார்த்து ஆண் இந்துக்களும் கைலி கட்ட ஆரம்பித்து இன்று கைலி தமிழக மக்களின் தவிர்க்க முடியாத ஆடையாக உள்ளது.உழைக்கும் வர்க்க இந்து ஆண்களுக்கு கைலி இயல்பான ஆடையாகவும் நடுத்தர வர்க்கத்திற்கு ஓய்வு நேர ஆடையாகவும் ஆகிவிட்டிருக்கிறது.70 – 80-க்களுக்கு பிறகு படித்த இளைஞர்கள் [இந்து,முசுலிம்,கிருத்துவர் அனைவரும்] காற்சட்டை அணிய ஆரம்பித்து படிப்படியாக காற்சட்டை தமிழக ஆண்களின் ஆடையாக ஆகி விட்டது.

      கைலி ,சட்டை,தாவாணி அணிந்த முசுலிம் பெண்கள் 70-80-களுக்கு பிறகு [இது பெரும்பாலும் தென் மாவட்டங்களின் நிலவரம்] சேலைக்கு மாற துவங்கினர்.இன்றும் கூட கைலி ,சட்டை,தாவாணி அணிந்த முசுலிம் மூதாட்டிகளை தென்மாவட்டங்களில் காணலாம்.சென்னையிலும் கூட பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த தென் மாவட்ட முசுலிம்கள் செறிவாக வாழும் தண்டையார்பேட்டை நேதாஜி நகர்,[வெள்ளத்தை பார்க்க அசமந்தமாக வந்த அ.தி.மு.க. அமைச்சர்களை ஓட ஓட விரட்டினார்களே அந்த ஊர்தான்] வியாசர்பாடி சர்மாநகர் ,போன்ற பகுதிகளில் கைலி கட்டிய முசுலிம் மூதாட்டிகளை இன்றும் காணலாம்.

      இன்னும் கொஞ்சம் எழுத வேண்டியிருக்கிறது.அதை நாளை எழுதுகிறேன்.இந்த தகவலை சுருக்கமாக ”தொடரும்” என்று தெரிவித்தால் கூட அது அடாவடியாக தெரிகிறது வியாசனுக்கு.அவருக்கு பயந்து இவ்வளவு நீளமா சொல்ல வேண்டியிருக்கு.என்ன இருந்தாலும் பேரறிவு பெருமான் அல்லவா.

    • தொடர்ச்சி;

      70-களில் அரபு நாடுகளில் எண்ணெய் பொருளாதாரம் பெருக ஆரம்பித்தபின் தமிழகத்திலிருந்து முசுலிம் ஆண்கள் அந்நாடுகளுக்கு வேலை தேடி செல்ல துவங்கினர்.குடும்பத்தை அழைத்துக்கொள்ளும் அளவுக்கு வருமானம் கிடையாது என்பதால் ஆண்கள் மட்டுமே அரபு நாடுகளுக்கு சென்றனர்.அங்கிருந்து திரும்பி வரும்போது இந்தோனேசிய கைலி ,சிங்கப்பூர் சட்டை,ஜப்பான் சேலை என்றுதான் வாங்கி வந்தனர்,யாரும் கருப்பு புர்கா வாங்கி வரவில்லை.இந்தோனேசிய கைலிகள் 80-களில் தமிழகத்தில் மிகப்பிரபலமாக இருந்தது.அந்த வடிவத்தில் தமிழ் நாட்டிலும் நெய்யலானார்கள்.இன்றும் கூட அந்த வடிவம் [design ]விற்பனையில் உள்ளது. இப்படியே இரண்டு பத்தாண்டுகள் போயின.இந்த கால கட்டத்தில் தமிழக முசுலிம் பெண்களிடம் கருப்பு புர்கா அணியும் பழக்கம் ஏற்படவில்லை.முன்னரே நாம் பார்த்த பழக்க வழக்கங்களே தொடர்ந்தன.

      அடுத்து 90-களில் படித்த முசுலிம் இளைஞர்கள் பலர் நல்ல சம்பளத்தில் அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்றார்கள்.இதற்கிடையே அங்கு முன்னரே சென்றிருந்த முசுலிம்களில் சிலர் அந்நாடுகளில் சிறு வணிகர்களாக மாறி இருந்தார்கள்.இந்த பிரிவினர் நல்ல வருமானம் இருந்ததால் குடும்பத்தையும் அழைத்து செல்லலானார்கள்.இப்படியாக சென்ற முசுலிம் பெண்கள் அங்கு நிலவிய ஆடைப்பழக்கத்துக்கு மாறினர்.அவர்களை பார்த்தும் அவர்கள் பரிசளித்த உடைகளாலும் படிப்படியாக புர்கா அணியும் பழக்கம் தமிழக முசுலிம் பெண்களிடம் வந்தது.

      அப்படியும் கூட அரபு பெண்கள் அணியும் புர்காக்களுக்கும் தமிழ்நாட்டில் அணியப்படும் புர்காக்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன.அவர்கள் அணிவது எந்த வேலைப்பாடுகளும் இல்லாத plain கருப்பு துணியால ஆனவை.இங்கோ சேலைகளில் இருப்பது போன்றே பூ வேலைப்பாடுகள்,வண்ணத்துணிகள் ஒட்டி தைக்கப்பட்டவை,கண்ணாடி கற்கள் பதிக்கப்பட்டவை என பல வடிவங்களில் புர்காக்கள் விற்பனை ஆகின்றன.நிற்க.

      இப்படியாக முசுலிமாகட்டும் இந்துவாகட்டும் அவர்கள் ஆடை அணியும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவை.அவை பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொறுத்து இயல்பாக மாறுகின்றன,யாரும் திட்டம் போட்டு ஏற்படுத்துவதில்லை.மதமும் ஒரு காரணமே அன்றி மதம் மட்டுமே காரணமல்ல.நாம் பார்த்த இத்தனை மாற்றங்களுக்கும் எந்த ”மயமாக்கலையும்” ”வெங்காயமாக்கலையும்” யாரும் காரணமாக சொல்லவில்லை.இப்போது மட்டும் வியாசன் சொல்லும் ”திட்டமிட்ட அரபுமயமாக்கல்” எங்கிருந்து வந்தது.

      நாளைக்கே முசுலிம்கள் பணி நிமித்தம் துருக்கிக்கு சென்று வர நேர்ந்தால் அந்த நாட்டு பெண்கள் அணியும் புர்க்கா தமிழகத்திலும் பிரபலமாகலாம்.ஐரோப்பிய பாணி தாக்கத்திலான துருக்கி புர்கா தளர்வான காற்சட்டை,மழைக்கோட்டு போன்ற நீண்ட மேலங்கி,தலையில் அழகு மிளிரும் வேலைப்பாடு கொண்ட பெரிய கைக்குட்டை [scarf ]என இன்னும் சிறப்பாக இருக்கும். அப்படி துருக்கி புர்கா அணிந்தால் அது துருக்கியமயமாக்கல் என்பார்களா.என்ன பைத்தியக்காரத்தனம் இது.

      • தமிழ்நாட்டில் பல தமிழ் முஸ்லீம்கள் அரபுமயமாக்கலை ஆதரிப்பது மட்டுமன்றி, தமிழ்த்தோல் போர்த்திய அரபு விசிறிகள் சில, ஒரு படி மேலே போய், தமிழ் முஸ்லீம்கள் திட்டமிட்டு அரபுமயமாக்கப்படுவதையும், அவர்கள் எவ்வாறு தமது தமிழ்க் கலாச்சாரத்தை இழக்கிறார்கள் என்பதையும். அவர்களுக்கும் அவர்களின் தமிழ்ச்ச்சகோதரர்களுக்குமிடையே நிரந்தர கலாச்சார இடைவெளி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற உண்மையையும் மறைக்க சம்பந்தமில்லாத உதாரணங்களையெல்லாம் காட்டி அரபுமயமாக்கலுக்கு வக்காலத்து வாங்கும் போது, மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதிர் முஹம்மதின் மகள் மரீனா முஹம்மது மலேசிய முஸ்லீம்கள் அரபு மயமாக்கப்படுவதையும், அரேபிய ஆடை அணிவதையும் அரேபிய காலனியாக மலேசியா மாறி வருகிறது (Arabisation” of Islam in Malaysia) என்றும், எதிர்ப்பு தெரிவிப்பதை கீழேயுள்ள இணைப்பில் காணலாம்.

        http://www.themalaymailonline.com/malaysia/article/marina-mahathir-malaysia-undergoing-arab-colonialism

        இதில் வேடிக்கை என்னவென்றால் முஸ்லீம்கள் திட்டமிட்டு அரபுமயமாக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை துணிச்சலாக ஒப்புக் கொள்ளும் துணிவு ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு இருக்கிறது ஆனால் சில ‘தமிழர்களுக்கு’ அந்த துணிச்சல் இல்லாமல் போய் விட்டது என்பதை நினைக்கும் போது இந்த ‘தமிழச்சாதியை என் செயக் கருதி இருக்கின்றாயடா; என்று பாரதியார் விதியை நொந்து கொண்டது தான் நினைவுக்கு வருகிறது.

        இதில் வேடிக்கை என்னவென்றால் முஸ்லீம்கள் அரபுமயமாக்கப்படுவதை (Arabization) பல முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம்கள் எதிர்க்கின்றனர். வெறும் கூகிள் தேடுதலிலேயே அதைப்பற்றிய எத்தனையோ கட்டுரைகளையும், செய்திகளையும் பார்க்கலாம், அப்படியிருக்க எங்களின் திப்பு காக்கா மட்டும் அப்படி எதுவும் கிடையாது என்கிற மாதிரி மறுப்புக் கட்டுரை எழுதுகிறார். அப்படியான, உண்மையை மறைக்கும் ‘தில்’ அவரைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. 🙂

        “Datin Paduka Marina Mahathir has criticised the “Arabisation” of Islam in Malaysia amid the institutionalisation and growing conservatism of the faith here.
        The social activist pointed out that that it is very difficult to find traditional “baju Melayu” for women during Hari Raya as Arab attire like kaftans, which are long tunics, became more popular instead over the years.

        “THIS IS JUST ARABISATION. OUR CULTURE — it’s colonialism, ARAB COLONIALISM,” Marina told Malay Mail Online in a recent interview here.

        “Kaftans are easy to wear. But what happened to our tradition, culture, everything? It’s lost,” she lamented, pointing out that Malay women below 50 generally do not know how to tie the ‘baju kurung’ skirt so that it falls into pleats and makes it easier to walk in.”

        • ஆடை அணியும் பழக்கத்தை வைத்து அரபுமயமாக்கல் என்ற வியாசனின் அபத்தத்தையே மகாதிர் மகள் மரினாவும் உளறி வைத்துள்ளார்.அந்த அம்மையார் அதை ”அரபு காலனியாக்கம்” என்று வேறு உளறியிருக்கிறார்.ஏகாதிபத்தியம்,காலனியாக்கம்,ஏகாதிபத்திய சுரண்டல் பற்றியெல்லாம் எந்த அறிவுமற்ற முட்டாள் ஒருவரால்தான் அதை காலனியாக்கம் என்று உளறமுடியும்.[ஒரு பொருள் பற்றி தெரியாமல் இருப்பது குற்றமல்ல.ஆனால் அதை தெரிந்தது போல் பேசுவது முட்டாள்தனம்தானே].அது வியாசனுக்கு பிடித்துப்போய் அந்த குப்பையை தூக்கிக்கொண்டு வந்து இங்கு கொட்டுகிறார்.அது சரி,கற்றாரை கற்றார்தானே காமுறுவர்.

          மரினா முகமது மலேய பெண்கள் பாரம்பரிய உடைகளை அணியாமல் [அதை பஜு மலாயு என தவறாக சொல்கிறார்.பஜு மலாயு எனபது ஆண்கள் அணியும் உடை.பஜு குறுங் என்பதே பெண்கள் அணியும் உடை].கப்தான் அணிவது அரபுமயமாக்கல் என்கிறார்.இந்த கப்தானும் கூட கருப்பு வண்ண அரபு நாட்டு புர்க்கா வடிவில் அமைந்தது அல்ல.பல வண்ணங்களில் பல வடிவங்களில் அவை வருகின்றன.கப்தானுக்காக கோபப்படும் மரினா பாரம்பரிய உடையில் இல்லாமல் மேற்கத்திய பாணியில் T சட்டை அணிந்திருக்கிறார்.அவரது அளவுகோலின்படி பார்த்தால் அவர் மேற்கத்தியமயமாகி விட்டார் என்றாகிறது.அப்படிப்பட்ட அவர் பாரம்பரிய உடை பற்றி ”கவலைப்படுகிறார் ” .யாரை ஏய்க்க இந்த நாடகம்.கப்தான் அணிவது சவுகரியமாக இருப்பதாக அவரே சொல்கிறார்.எது மக்களுக்கு வசதியாக இருக்கிறதோ அதுவே புழக்கத்தில் நிலை பெறும்.பாரம்பரியம் என்ற பெயரில் அசௌகரியத்தை யாரும் தூக்கி சுமக்க மாட்டார்கள்.நம்மையே எடுத்துக்கொண்டால் வே ட்டியோ,கைலியோ கட்டிக்கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டுவது கடினம் போன்ற காரணங்களால் காற் சட்டையைத்தானே அணிகிறோம்.வியாசன்கள் பாரம்பரியத்தை தூக்கி கடாசினால் தவறில்லை.மலாய் மக்கள் கடாசினால் தவறா.

          மரினா முகமதுவுக்கு மறுப்பும் அந்த மலேயாவிலிருந்தே வருகிறது.அவையும் இணையத்தில காணக்கிடைக்கின்றன.காமாலைக்கண்களுக்கு அவை தட்டுப்படாது.நல்ல கண்களின் பார்வைக்கு;

          https://www.reddit.com/r/singapore/comments/3d3per/arabisation_of_malay_culture/

          வியாசன்களின் கற்பனையான அரபுமயமாக்கலுக்கு ‘தமிழகமுசுலிம்கள் ‘ஆளான”பின்னும் ”புரோட்டாவும் சால்னாவும்”எங்களை விட்டு போய் விடவில்லை.”நெய்சோறும்” எலும்பு போட்டு தாளித்த ”தாள்ச்சா”வும் எங்களை விட்டு போய் விடவில்லை. அரபு நாட்டினர் போல் காய்ந்த ரொட்டியும் பேரீச்சம் பழமும் கொண்டு நாங்கள் நோன்பு துறப்பதில்லை.எங்கள் நோன்பு கஞ்சியின் சுவைக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவும் இல்லை என்று இறுமாப்பு கொண்டால் கூட அது மிகையாகாது.

          எங்கள் வீடுகளில் சாதம் உண்பதில்லை.சோறுதான் உண்கிறோம்.சோற்றுக்கு நாங்கள் குழம்பு ஊற்றுவதில்லை.”ஆணம் ” தான் ஊற்றிக்கொள்கிறோம்.ஆணம் ,வெஞ்சணம் போன்ற அழகான சங்க கால தமிழ்ச்சொற்கள் இன்றும் எங்கள் வீடுகளில் உயிர்வாழ்கின்றன .

          .பார்ப்பனியத்திற்கும்,வடமொழிக்கும் எங்கள் மொழியை நாங்கள் காவு கொடுக்கவில்லை.”பள்ளிவாசல்” ”நோன்பு” ”தொழுகை” ”பெருநாள்”என எங்களின் தூய தமிழ் கண்டு தமிழன்னை எங்கள் வீடுகளில் மகிழ்ச்சியோடு வளைய வருகிறாள்.வணக்க வழிபாடுகளை அரபு மக்களிடமிருந்து கற்றுக்கொண்டதால் சில அரபு சொற்கள் முசுலிம்களிடத்தில் புழக்கத்தில் உள்ளன.அவை இன்று நேற்று வந்தவை அல்ல .பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இசுலாம் வந்த போதே அவையும் வந்து விட்டன.அதனால் எல்லாம் நாங்கள் அரபு மயமாகி விடவில்லை.இதை வியாசனால் கூட மறுக்க முடியவில்லை.புர்க்கா வருவது வரை [இருபது ஆண்டுகளாகத்தான் புர்கா புழக்கத்தில் உள்ளது] அரபுமயமாகவில்லை என்றுதான் அவரும் சொல்கிறார்.

          ஆடைகளில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவை.அது திட்டமிட்டு வருவதில்லை என இவ்வளவு விரிவாக விளக்கியபின்னும் சீதைக்கு ராமன் சித்தப்பா என்றால் எப்படி.அதிலும் புர்க்கா அணிவதால் தமிழ் சாதிக்கே அழிவு வந்து விடும் என்று ஒரு பூச்சாண்டியை வேறு அவுத்து விடுறாரு வியாசன்.ஒரே ஒரு கேள்விக்கு வியாசன் நாணயமாக பதில் சொல்லட்டும்.

          சேலையை புறக்கணித்து சுடிதார்,காற்சட்டை அணியும் இந்து பெண்களும்,செருப்பு,வேட்டி,துண்டு ஆகியவற்றை புறக்கணித்து காற்சட்டை,ஷூ.காலுறை,டை என மாறிய இந்து ஆண்களும் ஆங்கிலமயமாகி விட்டார்கள் அல்லது மேற்கத்தியமயமாகி விட்டார்கள் என்று வியாசன்கள் கோபப்படுவதில்லையே என்ன காரணம்.

          • திப்புகாக்காவிடம் ஒளிந்திருந்த வஹாபி ஜிகாதி அவரையறியாமலே வெளியே வந்து, அவர் இந்த தளத்தில் இவ்வளவு நாளும் அணிந்திருந்த அவரது மென்போக்கு (மிதவாத) தமிழ் முஸ்லீம் என்ற முகமூடியைக் கிழித்துப் போட்டு விட்டு ஓடிப் போய்விட்டதைப் பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

            அவரது வாதம் என்னவென்றால் ஆடையணியும் பழக்கம் என்பது அரபுமயமாக்கல் அல்ல, அதாவது ரவிக்கை அணியாமல் இருந்த தமிழ்ப்பெண்கள் எல்லாம், எவ்வாறு ரவிக்கை அணியத் தொடங்கினார்களோ, அது போன்றே தமிழ்நாட்டிலுள்ள தமிழ் முஸ்லீம் பெண்கள் எல்லாம் நவீன நாகரீகத்தில் கொண்டுள்ள அளவு கடந்த ஈடுபாட்டினால், நவீன நாகரீக ஆடையணிகள் அணியும் மோகத்தில், உலகப் புகழ்பெற்ற, Trendy ஆடையணிகளில் ஒன்றாகிய, கறுப்புக் கோணிப்பையை தலையில் போட்டுக் கொண்டு தமிழர்களை பயப்படுத்துகிறார்களே தவிர, அதன் பின்னணியில் மதவாதிகள் யாரும் கிடையாது, அதாவது முஸ்லீம் பெண்களின் ஆடையணிகளுக்கும் மதத்துக்கும், அரபுமயமாக்கலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை, எல்லாம் ‘செகரியத்துக்காகத்’ தான் என்பது தான். ஆனால் இப்பொழுது செல்வி.மரினா மஹாத்திர், அணிந்திருக்கும் ஆடையின் அடிப்படையில் அவரது முஸ்லீம் என்ற அடையாளத்தை, இஸ்லாமிய நம்பிக்கையை கேள்விக்குறியாகுவதுடன், அவர் மேலைத்தேய மயமாகி விட்டாரென, -அவர் அணிந்திருக்கும் ஆடையின் அடிப்படையில்-, அவரை அரபுமயமாக்கல் பற்றிப் பேச தகுதியவற்றவராக்க முயல்கிறார். இத்தகைய பழமைவாத சிந்தனையும் கூட அரபுமயமாக்கலின் விளைவு தான். அதையும் தான் அரபுமயமாக்கலை எதிர்க்கும் மென்போக்கு முஸ்லீம்கள் எதிர்க்கிறார்கள் அதாவது அரபுக்களைப் போன்று தாடி வைத்துக் கொள்ளும் ஆண்களும், அரேபியாவில் பாலைவனக் காலநிலைக்கேற்பவும், அரபுக்களின் பெண்களை அடிமைப்படுத்தும் பாரம்பரியத்தின் விளைவாலும் உருவாக்கப்பட்ட கறுப்புக் கோணிப்பைகளால் தலையை மூடிக் கொள்ளும் பெண்களும் மட்டும் தான் உண்மையான முஸ்லீம்கள், அத்தகைய ஆடையணிகளையும், அடையாளங்களையும் கொண்டிராத முஸ்லீம்கள், அவர்கள் எவ்வளவு தான் இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் உண்மையான முஸ்லீம்கள் அல்ல. அதாவது இந்த ‘அரபுமயமாக்கல்’ வெளியடையாளங்களின் அடிப்படையில் இருவகையான முஸ்லீம்களை உருவாக்கிறது. ‘அரபுமயமாக்கல்’ என்பது வெறுமனே ஆடையணிகளுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல.

            வகாபியிசத்தின் தூண்டுதலால் ஊக்குவிக்கப்படும் அரபுமயமாக்கலையும், அடிப்படை வாதத்தையும் கேள்வி கேட்கும் அல்லது விமர்சிக்கும் முஸ்லீம்களை, அதிலும் குறிப்பாக பெண்களை அவர்களின் ஆடையணிகளில் அடிப்படையில் தண்டிப்பது அல்லது அவர்கள் முஸ்லீம்களே அல்ல என்பதும், அவர்கள் மேற்கத்தியமயமாகி விட்டவர்கள் என்பதும், அவர்களுக்கெதிராக பாட்வா அறிவிப்பதும் அவர்களின் ஒழுக்கத்துக்கு இழிவு கற்பிப்பது போன்ற செயல்களை தலிபான்களும், இஸ்லாமிய தீவிரவாத குழுக்களும் தான் இதுவரை செய்து வந்தன என்பதை நாம் அறிவோம். ஆனால் இங்கு எங்களின் மத்தியில் தமிழனாக வாழ்ந்து கொண்டு தானும் தமிழன், அதிலும் பொதுவுடைமைக் கொள்கையிலும், பெண்ணுரிமையிலும் ஈடுபாடு கொண்டவர் போலவும் எங்களுக்கு இவ்வளவு நாளும், இந்த தளத்தில் படம் காட்டிய திப்பு மஸ்தான் அவர்கள், தலிபான்களும், இஸ்லாமிய தீவிரவாதிகளும் எவ்வாறு தீவிரவாதத்தையும், அடிப்படைவாத வஹாபியசத்தால் ஊக்குவிக்கப்படும் அரபுமயமாக்கலையும் எதிர்க்கும் முஸ்லீம்களை, அவர்கள் முஸ்லீம்களே அல்ல மேற்கத்தையமயமாகிய (கூலிகள்) என்று கூறினார்களோ அது போன்ற சிந்தனையை, புகழ்பெற்ற சமூக சேவகியும், பெண்ணுரிமையிலும், மலேசிய மக்களின் பாரம்பரிய பண்பாடுகள் அரபுமயமாக்கலால் அழிந்து போவது போன்ற விடயங்களிலும் வழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபாடும் கொண்ட முஸ்லீம் பெண்ணாகிய செல்வி மரீனா மஹாத்திர் அவர்கள் “உளறுவதாக” மட்டம் தட்டுவதைப் பார்க்கும் போது, உண்மையில் திப்பு போன்ற தமிழ்நாட்டு முஸ்லீம்கள் எந்தளவுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும், அரபுமயமாக்கலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பதை உணரக் கூடியதாக உள்ளது, இது தமிழர்கள் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டியதும் கூட.

            இதில் வேடிக்கை என்னவென்றால், இதுவரை அரபுமயமாக்கல் என்ற ஒரு மண்ணும் கிடையாது அரபுமயமாக்கல்- “வெங்காய மயமாக்கல்” என்றெல்லாம் வாய்ச்சவடால் விட்டது மட்டுமன்றி, தனக்குத் தெரியாத விடயத்தைப் பற்றி ஆராய்ந்து அறிந்து கொள்வதை விடுத்து, மதப்பின்னணியோ அல்லது மதவாதிகளின் எந்தவித உந்துதலும் இல்லாமல் தமிழ்ப்பெண்களின் ஆடையணிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் சிலவற்றையும், வஹாபியிச அரபுமயமாக்கலின் விளைவால் தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்கள் மத்தியில் ஏற்பட்ட புர்க்கா கலாச்சாரத்தையும் ஒப்பிட்டு, முழுப்பூசணிக்காயை ஒரு பிளேட் குஸ்காவுக்குள் (குஸ்காவும் அரபுச்சொல்லோ அல்லது என்ன இழவோ எனக்குத் தெரியாது, நிச்சயமாக தமிழ் அல்ல) மறைக்கப் பார்த்த திப்புநானா, இப்பொழுது என்னடாவென்றால் “மரினா முகமதுவுக்கு மறுப்பும் அந்த மலேயாவிலிருந்தே வருகிறது.அவையும் இணையத்தில காணக்கிடைக்கின்றன” என்று அரபுமயமாக்கலுக்கு மறுப்புக் கருத்தும் காணப்படுகின்றது என்று இணைப்பையும் தருகிறார். அந்தக் கிறுக்குத் தனத்தைப் பார்த்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

            இவ்வளவு நாளும் அரபுமயமாக்கல் என்ற ஒன்றே கிடையாது எல்லாம் “வியாசன்களின் வெறும் கற்பனை” என்று கதை விட்டவர், இப்பொழுது மரினா மஹாதிரின் அரபுமயமாக்கல் கருத்துக்கு எதிர்க்கருத்தும் உண்டென்கிறார். அதாவது அரபுமயமாக்கலுக்கு எதிராக இணையத்திலுள்ள கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறார், ஆனல் அரபுமயமாக்கல் “வியாசன்களின் கற்பனை” என்கிறார். அரபுமயமாக்கல் என்ற ஒன்று இருந்தால் தானே அதைப் பற்றி விவாதம் நடைபெறும், அதற்கு சார்பாகவும், எதிர்த்தும் கருத்திருக்க முடியுமென்பதை இப்பொழுதாவது உணர்ந்து கொண்டிருப்பார் என நம்புகிறேன். இல்லாத ஒன்றுக்கு யாரும் எதிர்க்கருத்து தெரிவிப்பதில்லை. ஆகவே இனிமேலாவது அரபுமயமாக்கல் என்பது வெறும் கற்பனை என்பது போல், உண்மையை மறைப்பதற்காக தொடர்ந்தும் உளறி, தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்ள மாட்டாரென நம்புவோம்.

            முற்போக்கு எழுத்தாளரும், சமூக சேவகியுமான செல்வி. மரீனா மஹாதிர் அவர்கள் ‘கப்தான்’ அணிவது செளகரியமானது என்பதற்காக மட்டும் அதனை ஆதரிக்கவில்லை, அது மலேசியப் பெண்களின் பாரம்பரிய ஆடையனிகளில் முக்கியமானதொன்று, அதை நாங்கள் (மலேசியர்கள்) அரபுமயமாக்கலால் இழந்து கொண்டிருக்கிறோம் என மலேசியப் பெண்ணாகிய மரீனா முகம்மது கூறியதை தப்புத் தப்பாகத் திரிக்கிறார் திப்பு. அத்துடன் செளகரியமாக, அதாவது அணிவதற்கு இலகுவான ஆடைகள் தான் நிலைக்கும் என்பது திப்புவின் கருத்தாகும். ஆகவே கொதிக்கும் தமிழ்நாட்டு வெய்யிலில் கறுப்புக் கோணிப்பையை தலையில் போட்டு முகத்தையும் தலையையும் மூடிக் கொள்ளும் அரேபிய ஆடையணிகள் அதிக காலம் தமிழ் முஸ்லீம்களிடம் நிலைக்காது என்று இப்பொழுதே ஆரூடம் கூறுகிறார் போலிருக்கிறது. தமிழ் நாட்டில் தமிழ் முஸ்லீம்கள் தமது தமிழ்ப்பாரம்பரியத்தைக் கடாசி விட்டு – அதுவும் அரேபிய ஆடையணிகளை ‘செளகரியத்துக்காக’ மட்டும் தான் அணிகிறார்களே தவிர அதன் பின்னணியில் அரபுமயமாக்கலும், அடிப்படைவாத வஹாபியிசமும் இல்லை என்பது தான்- இன்னும் திப்புவின் வாதமென்றால் அவரைப் போன்ற நகைச்சுவை மன்னன் வேறு யாரும் இருக்கவே முடியாது.

            ஒரு முஸ்லீம் அல்லாத என்னுடைய கருத்தை அல்லது பெண்களின் கருத்துக்களை மதிக்காத வஹாபிய அரேபிய கலாச்சாரத்தின் ஈடுபாட்டாலோ என்னவோ ஒரு முஸ்லீம் பெண்ணாகிய மரீனா மகாதிரின் அரபுமயமாக்கல் கருத்தை ஜனாப் திப்பு அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போல் தெரிகிறது. பல முஸ்லீம் ஆண்கள் எழுதிய கட்டுரைகளும் இணையத்தில் உள்ளன, அவற்றைப் படித்துப் பார்த்து அதைப்பற்றி அவர் அறிந்து கொண்டால் அரபுமயமாக்கல் வெறும் கற்பனையென முட்டாள்தனமாக தொடர்ந்து உளற மாட்டாரென நம்புகிறேன். திருக்குரானோ அல்லது முகம்மது நபிகளோ முஸ்லீம்கள் அனைவரும் அரபுக்கள் போன்று ஆடையணிய வேண்டுமென்றோ அல்லது அரபுக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றோ கூறாத போதிலும், திட்டமிட்ட அரபுமயமாக்கல் தொடர்வது பற்றி எவ்வளவோ ஆதார பூர்வமான கருத்துக்களும், விவாதங்களும் இணையம் முழுவதுமுள்ள போதும், பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டதாக நம்புவது போல’ இங்கே வினவு தளத்தில் மட்டும் இன்னும் அரபுமயமாக்கல் வெறும் கற்பனையென திப்பு அவர்கள் கூறிக் கொள்வதைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று எனக்குத் தெரியவில்லை.

            சும்மா பீற்றிக் கொள்வதற்குக் கூட ஒரு தமிழ் உணவைக் கூற திப்புநானாவால் முடியவில்லை என்பதை நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது. புரோட்டாவும் சால்னாவும் (தமிழர்களின் பாரம்பரிய உணவும் அல்ல) அவை தமிழ்ச் சொற்களும் அல்ல. சால்னா என்பது உருது அல்லது இந்திச் சொல்லாக இருக்கலாம். சால்னா வந்ததால் குழம்பு என்ற தமிழ்ச் சொல் தமிழ்நாட்டு வழக்கில் அருகி விட்டது, ஈழத் தமிழர்கள் இன்னும் குழம்பு என்கிறோமே தவிர சால்னா என்பதில்லை. ஆகவே உருது முஸ்லீம்களின் சால்னா உங்களை விட்டுப் போகாதது ஒன்றும் பீற்றிக் கொள்ள வேண்டிய விடயமல்ல. சங்ககாலம் தொட்டு தமிழர்களின் உணவாகிய நெய்ச்சோறு இன்னும் உங்களை விட்டுப் போகாதது எனக்கும் மகிழ்ச்சியே, நோன்புக்கஞ்சி முற்றிலும் தமிழர்களுடையதல்ல, துலுக்கர்களின் உணவுப் பழக்கத்தின் விளைவு அது. அரபுமயமாக்கலின் விளைவால் ஒவ்வொரு வருடமும் நோன்புக் காலத்தில் இலங்கை அரசால் பெருமளவு பேரீச்சம் பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சில வேளைகளில் பழுதாகிய, அழுகிய பேரீச்சம் பழங்களை சவூதி அரேபியா குறைந்த விலையில் நன்கொடை என்ற பெயரில் கொடுப்பதுமுண்டு. பேரீச்சம்பழம் கொண்டு நோன்பு திறப்பதுடன் அது தான் சரியான முறையென வாதாடும் தமிழ்நாட்டு முஸ்லீம்களையும் எனக்குத் தெரியும் .

            தமிழில் அரபு மொழிச் சொற்களை கண்டபடி திணிப்பதுடன், அரபுப் பெயர்களை வைத்துக் கொண்டால் மட்டும் தான் உண்மையான முஸ்லீம்களாகலாம் என்றோ என்று திருக்குரானோ அல்லது முகம்மது நபிகளோ கூறாத போதிலும் வாயில் நுழையாத, அதன் கருத்தும் தெரியாத அரபுப் பெயர்களை மட்டும் வைக்கும் நீங்கள் ( அதாவது இஸ்லாத்துக்கு மதம் மாறும் பாண்டியன் என்ற பெயர் கொண்ட தமிழரைப் பரூக் அப்துல்லா என்று பெயர மாற்றினால் தான் அவர் சொர்க்கத்துக்குப் போவார் என்றெல்லாம் குர்ஆனில் கூறவில்லை), 100 % தமிழர்கள் மட்டும் வாழும் தமிழ்க் கிராமங்களில் கூட ‘பாங்கு’ என்ற பெயரில் நேரம் காலம் தெரியாமல் அரபு மொழியில் அலறி உயிரை வாங்கும் நீங்கள், தமிழர்கள் தமிழைக் காவு கொடுத்தது பற்றிப் பேசுவது கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகத் தான் எனக்குப் படுகிறது. பார்ப்பனர் மறுத்தாலும் தேவாரத்தை தமிழில் மட்டும் பாடி கடவுளை வணங்க எங்களால் முடியும், எங்களின் கடவுளுக்கும் தமிழ் விளங்கும், தமிழுக்குத் தான் அவர் முதலில் செவிமடுப்பார் என்பதற்கும் எத்தனையோ ஆயிரம் கதைகள் எங்களிடம் உண்டு, ஆனால் உங்களால் ஒரு நாளாவது தமிழில் பாங்கு கூற முடியுமா? . அப்படிப் பேசினாலே, உங்களுக்கெதிராக பாட்வா அறிவித்து விடுவார்கள்.

            தமிழன்னை உங்களின் வீடுகளில் தொடர்ந்து பெருமையுடன், வலம் வர வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கும் தமிழைப் பேசும் தமிழன்னையின் பிள்ளைகளாக தம்மையும் நினைக்க வேண்டிய தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்டது போன்ற நிரந்தர இடைவெளி, அப்படியான நிலை, வஹாபியிசத்தாலும் திட்டமிட்ட அரபுமயமாக்கலாலும் தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தினாலும், அப்படி எதுவும் நடக்கக் கூடாதென்ற ஆதங்கத்தினாலும்,அது பற்றியதொரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமென்ற நோக்கத்தினாலும் மட்டும் தான் நான் உங்களுடன் இங்கே வாதாடுகிறேன், எனது வலைப்பதிவிலும் எழுதுகிறேனே தவிர உங்களுடன் மட்டுமன்றி எந்த முஸ்லீமுடனும் எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது,

            • அண்ணன் வியாசன் பயிற்சி பெற்ற ஆலீம்கள் முன் முடிவுடன் எதையும் பேசுவார்கள் இசுலாம் என்ற மதத்துக்கு பின்புதான் மற்றது எல்லாம் என்பது அவர்களின் நினைப்பு அந்த வகையில் பேசும் ஆலீமகளுடன் பேசினால் உங்களுக்கு மண்டை காய்வது உறுதி என்னதான் விளக்கினாலும் செந்தில் ஸ்டைலில் அந்த வாழப்பழம்தான் இது என்பார்கள் அதனால அவர்களை விட்டு விட்டு வேலைய பாருங்க முடிஞ்ச அளவுக்கு உங்கள பாணியில் இசுலாம் என்ற அரபு பாஸ்ஸத்தை காலாயுங்கள் இது எனது வேண்டுகோள் அப்பதான் இந்த மாறி ஆலிம்களை திருத்த முடியும்…

            • வியாசன் எப்போதுமே தனது முட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் எந்த விவாதத்தையும் விட்டு விலகியதில்லை.இப்போதும் அதை கச்சிதமாக செய்து விட்டார்.இந்த அழகில் எம்மை பார்த்து முட்டாள்தனமாக பேசுவதாக சொல்லி சிரிக்கவா அழவா என்று தெரியாமல் கேட்கிறார்.சிரிக்கலாம்.ஏனென்றால் இங்கு கெக்கே பிக்கே என சிரிப்பதுதான் அவரது பொருளற்ற உளறலுக்கு பொருத்தமாக இருக்கும்.

              \\மரினா மஹாத்திர், அணிந்திருக்கும் ஆடையின் அடிப்படையில் அவரது முஸ்லீம் என்ற அடையாளத்தை, இஸ்லாமிய நம்பிக்கையை கேள்விக்குறியாகுவதுடன், //

              அறிவாளியே,அவரது இசுலாமிய நம்பிக்கையை நான் கேள்விக்குள்ளாக்கவே இல்லையே.ஆடையை வைத்து அளவிடும் அவரது அளவுகோலை அவருக்கே பொருத்திப்பார்க்க சொல்கிறேன்.அந்த அளவுகோல் படி பார்த்தால் அவர் மேற்கத்தியமயமாகி விட்டார் என்றாகிறது என்றுதான் சொல்கிறேன். அவரே பின்பற்றாத பாரம்பரிய உடையை மற்ற பெண்கள் பின்பற்ற வேண்டும் என சொல்வதற்கு அவருக்கு என்ன யோக்கியதை இருக்கு என்பதுதான் அதன் பொருள்.இதில் இசுலாமிய நம்பிக்கையை எங்கே கேள்வி கேட்கிறேன்.

              \\அதாவது முஸ்லீம் பெண்களின் ஆடையணிகளுக்கும் மதத்துக்கும், அரபுமயமாக்கலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை, எல்லாம் ‘செகரியத்துக்காகத்’ தான் என்பது தான்//

              அறிவாளியே ,நான் எழுதியதை மறுபடியும் சொல்கிறேன்.

              ”இப்படியாக முசுலிமாகட்டும் இந்துவாகட்டும் அவர்கள் ஆடை அணியும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவை.அவை பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொறுத்து இயல்பாக மாறுகின்றன,யாரும் திட்டம் போட்டு ஏற்படுத்துவதில்லை.மதமும் ஒரு காரணமே அன்றி மதம் மட்டுமே காரணமல்ல.”

              மதமும் ஒரு காரணி ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல மேலும் திட்டம் போட்டு யாரும் கொண்டுவர முடியாது.அது இயல்பானது என்றுதான் சொல்கிறேன்.

              \\அத்தகைய ஆடையணிகளையும், அடையாளங்களையும் கொண்டிராத முஸ்லீம்கள், அவர்கள் எவ்வளவு தான் இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் உண்மையான முஸ்லீம்கள் அல்ல.//

              அறிவாளியே,உலகின் பல பகுதிகளில் பல நாடுகளில் முசுலிம்கள் வாழ்கின்றனர்.அங்கெல்லாம் பல்வேறு வகைகளில் புர்க்கா உடை பேணப்படுகிறது.அதில் ஒன்றாக துருக்கி நாட்டு புர்க்காவை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.பின்னாளில் தமிழகத்தில் கூட அந்த புர்கா புழக்கத்திற்கு வரலாம் என்றும் சொல்லியிருக்கிறேன்.இதன் பொருள் கருப்பு புர்கா அணியாதவர்கள் முசுலிம்கள் அல்ல என்றாகுமா.முட்டாள்தனத்திற்கும் ஒரு அளவில்லையா.

              \\ அரபுமயமாக்கலையும் எதிர்க்கும் முஸ்லீம்களை, அவர்கள் முஸ்லீம்களே அல்ல மேற்கத்தையமயமாகிய (கூலிகள்) என்று கூறினார்களோ அது போன்ற சிந்தனையை,……………………………மரீனா மஹாத்திர் அவர்கள் “உளறுவதாக” மட்டம் தட்டுவதைப் பார்க்கும் போது, உண்மையில் திப்பு போன்ற தமிழ்நாட்டு முஸ்லீம்கள் எந்தளவுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும், அரபுமயமாக்கலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பதை உணரக் கூடியதாக உள்ளது//

              நான் எந்த இடத்திலும் மரினாவின் இசுலாமிய நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கவில்லை,அவரது கருத்து அபத்தமானது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.எதிர் கருத்து சொல்பவருக்கு மறுப்பு சொல்லாமல் அவர்களை அடிப்படைவாதிகள் என வசை பாடுவது யோக்கியமான செயலில்லை.

              ஆம்.மரினா உளறத்தான் செய்கிறார்.அரபு காலனியாக்கம் பற்றி கேட்டதற்கு என்ன பதில்.அந்த உளறலை வியாசனும் வாந்தி எடுத்து வைத்துள்ளார்.

              \\அரேபிய காலனியாக மலேசியா மாறி வருகிறது (Arabisation” of Islam in Malaysia) என்றும்,//

              இதுதான் அவரது வாந்தி.வியாசனுக்கு துப்பிருந்தால் மலேசியா எவ்வாறு அரபு காலனியாக மாறி வருகிறது என்று இப்போது விளக்க வேண்டும்.வியாசனுக்கு அறிவு நாணயம் என்று ஒன்று இருந்தால் மலேசியா அரபு காலனியாகி வருகிறது என்று விளக்கி மெய்ப்பிக்க வேண்டும்.அல்லது முட்டாள்தனமான உளறல்தான் என ஒப்புக்கொள்ள வேண்டும்.

              \\இவ்வளவு நாளும் அரபுமயமாக்கல் என்ற ஒன்றே கிடையாது எல்லாம் “வியாசன்களின் வெறும் கற்பனை” என்று கதை விட்டவர்,//
              \\அரபுமயமாக்கலுக்கு மறுப்புக் கருத்தும் காணப்படுகின்றது என்று இணைப்பையும் தருகிறார். அந்தக் கிறுக்குத் தனத்தைப் பார்த்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை//

              .அரபுமயமாக்கல் பற்றிய வாத பிரதிவாதங்கள் யாரும் அறியாதவை அல்ல,வியாசன் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.
              ஆடை அணியும் பழக்கத்தை வைத்து அரபுமயமாக்கல் என்று சொல்வது அபத்தம் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.வியாசன்களின் கற்பனை என்று ஒரு போதும் சொன்னதில்லை.கூசாமல் பொய் சொல்லி தனது யோக்கியதையை வெளிக்காட்டுகிறார் .விவாதங்கள் கண் முன்னால் உள்ளன,பார்த்துக்கொள்ளலாம்.

              இப்ப தெரியுதா.யார் கிறுக்கன் என்று.

              \\புரோட்டாவும் சால்னாவும்//

              அறிவாளியே;அவற்றை எதற்காக சொல்லியிருக்கிறேன்.அரபுமயமாக்கல் கள்ளப்பரப்புரையின்படி நாங்கள் ”அரபுமயமான” பின்னும் எங்களின் பழைய உணவுப்பழக்க வழக்கங்கள் மாறவில்லை என காட்டுவதற்காக குறிப்பிட்டிருக்கிறேன்,உணவும் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்பதை அறிவாளிகள் அறிய மாட்டார்களா.,மற்றபடி பேரீச்சம் பழங்களை நாங்களும் நோன்பு துறக்க உண்கிறோம்.ஆனால் அது எங்களின் முதன்மை உணவு அல்ல.அரபுக்களுக்கு அது முதன்மை உணவு.கஞ்சிதான் எங்களின் முதன்மையான உணவு.

              \\தமிழில் அரபு மொழிச் சொற்களை//

              தமிழில் அரபு சொற்கள் ஏராளமாக .கலந்துள்ளன.அவை சமத்கிருதம் போல பண்பாட்டு படையெடுப்பு காரணமாக வரவில்லை.முசுலிம்கள் ஆயிரம் ஆண்டுகள் இந்திய துணை கண்ட பகுதியில் ஆட்சியாளர்களாக இருந்ததால் வந்தவை.எடுத்துக்காட்டாக வக்காலத்து,வக்கீல்.ரசீது போன்றவற்றை சொல்லலாம்.

              அரபு மொழியில் பெயர் வைப்பது பழைய அடையாளங்களை முற்றிலும் துறப்பதர்காகத்தான்.அதில் சமரசம் செய்திருந்தால் பார்ப்பனிய சாதி படிநிலை இந்திய கிருத்துவத்தில் தொடர்வதை போல எங்களிடமும் தொடர்ந்திருக்கும்.அரபு பெயர்கள் இசுலாமிய அடையாளத்தை மட்டுமே காட்டும்.பழைய தமிழ் பெயரில் தொடர்ந்திருந்தால் சாதியும் பின்னாலேயே வந்திருக்கும்.

              \\ஒரு நாளாவது தமிழில் பாங்கு கூற முடியுமா?//

              பல்வேறு மொழி பேசுபவர்களும் இசுலாத்தை பின்பற்றுகிறார்கள்.அனைவருக்கும் புரியும் வகையில் பொதுவாக அரபு மொழி பயன்படுத்தப்படுகிறது.தமிழ் மட்டுமே பேசுகிற சிற்றூரில் தமிழில் பாங்கு என்று ஆரம்பித்தால் அது பல பிரிவினைகளுக்கு அழைத்து செல்லும்.ஒவ்வொரு பகுதியிலும் வேறு வேறு பாங்கு என பிற மொழியாளர்களுக்கு புரியாத ஒன்றாக இசுலாம் மாறிப்போகும்.அதை தவிர்க்கவே பொதுவான ஒரு மொழியில் பாங்கு சொல்லப்படுகிறது.

              \\நிரந்தர இடைவெளி, அப்படியான நிலை, வஹாபியிசத்தாலும் திட்டமிட்ட அரபுமயமாக்கலாலும் தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிடுமோ//

              வியாசன் போன்ற இசுலாமிய எதிர்ப்பு வன்மம் கொண்டோரெல்லாம் தமிழ் மக்கள் ஒற்றுமை பற்றி கவலைப்படுகிறார்கள்.இதுதான் சாத்தான் வேதம் ஓதுவதோ.இலங்கையின் இடைவெளி பற்றி கதைக்கும் யோக்கியர் பின்னூட்டம் எண் 8.1.1.2.2.1.1.1.2 க்கு ஒரு பதிலும் சொல்லாமல் சகலத்தையும் மூடிக்கொண்டிருப்பது ஏன்.

              • திப்புக்காக்கா இவ்வளவு விரைவில் தொப்பியைப் பிரட்டுவார் என்று நான் நினைக்கவேயில்லை. தொப்பி பிரட்டும் கலையில் இலங்கை முஸ்லீம்களை யாரும் வெல்ல முடியாது, இலங்கையில் தொப்பி பிரட்டிகள் என்பதன் கருத்து என்னவென்றால், தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடமாகாணத்தில் இருக்கும் போது தம்மைத் தமிழர்களின் சகோதரர்களாகக் காட்டிக் கொண்டு/நடித்துக் கொள்ளும் தமிழ் பேசும் முஸ்லீம்கள், சிங்களப்பகுதிகளில் வாழும் போது சிங்களச் சார்பாக மாறி விடுவார்கள். அதாவது அவர்களின் நிலைப்பாட்டை சந்தர்ப்பத்துக்கேற்றவாறு உடனே மாற்றிக் கொள்வார்கள் என்பது தான், அதை இலங்கையில் தொப்பி பிரட்டி முஸ்லீம்கள் என்பார்கள்.

                நான் இதுவரை வகாபியிசத்தின் தீவிர தாக்கத்தால் தமிழ்நாட்டில் எந்தளவுக்கு அரபுமயமாக்கல் நடைபெற்றுள்ளது என்பதற்கு “செளகரியத்துக்காக” கறுப்புக் கோணிப்பையை தலையில் போட்டுக் கொண்டு தமிழர்களைப் பயமுறுத்தும் தமிழ் முஸ்லீம் பெண்களை மட்டும் அரபுமயமாக்கலுக்கு ஆதரமாகக் காட்டவில்லை, தமிழ் முஸ்லீம்கள் அரபுக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்பது, அரேபியாவைப் பற்றி பீற்றிக் கொள்வது, அரபுப் பெயர்களை வைத்துக் கொள்வது, அளவுக்கதிகமாக அரபு மொழியைத் தமிழில் கலப்பது போன்ற பல விடயங்களையும் குறிப்பிட்டேன். ஆனால் முதலில் அரபுமயமாக்கல் என்ற ஒன்றே கிடையாது, எல்லாம் கற்பனை எனவும். ‘அரபுமயமாக்கல் அல்ல வெங்காயமயமாக்கல்’ எனவும், “வியாசன்களின் கற்பனையான அரபுமயமாக்கலுக்கு ‘தமிழகமுசுலிம்கள் ‘ஆளான” பின்னும்” எனவும் அரபுமயமாக்கல் என்பதையே கற்பனையென மறுத்தவர் அல்லது மறுக்க முயன்றவர், இப்பொழுது என்னடாவென்றால் அரபுமயமாக்கல் உண்மை, அதை நான் மறுக்கவில்லை, நான் மறுத்ததெல்லாம் ஆடையணியும் பழக்கத்தை வைத்து அரபுமயமாக்கல் இல்லை என்பது தான் எனச் சளாப்புகிறார் என்பதை விடத் திப்புக்காக்கா தனது தொப்பியை மாற்றி போட்டுக் கொண்டார் என்று தான் கூற வேண்டும்.

                பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில், தமிழர்களுடன் தமிழர்களாக, தமிழ்ப்பெண்களைப் போலவே புடவையணிந்து, முஸ்லீம்களாக முக்காட்டிட்டு, தமிழ்ச் சகோதர்களின் மதிப்புக்கும், மரியாதைக்குரியவர்களாகவும் வாழ்ந்து காட்டிய தமிழ் முஸ்லீம் பெண்கள், இன்றைக்கு கறுப்புக் கோணிப்பையால் முகத்தையும் தலையையும் மூடிக் கொண்டு அதே தமிழர்களைப் பயமுறுத்துவதற்குக் காரணம் அரபுமயமாக்கல் தான் என்பதை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் திப்பு அவர்களுக்கு இன்னும் வரவில்லை. ஆனால் தமிழ் முஸ்லீம்கள் அரபுமயமாக்கப் படுகிறார்கள் என்பதை இப்பொழுது ஒப்புக் கொள்கிறாராம்.

                அப்படியானால், தமிழ்நாட்டிலுள்ள தமிழ் முஸ்லீம் பெண்கள் எல்லாம் நவீன நாகரீகத்தில் கொண்டுள்ள அளவு கடந்த ஈடுபாட்டினால், நவீன நாகரீக ஆடையணிகள் அணியும் மோகத்தில், உலகப் புகழ்பெற்ற, Trendy ஆடையணிகளில் ஒன்றாகிய, கறுப்புக் கோணிப்பையை தலையில் போட்டுக் கொண்டு தமிழர்களை பயப்படுத்துகிறார்களே தவிர, அதன் பின்னணியில் மதவாதிகள் யாரும் கிடையாது, அதாவது முஸ்லீம் பெண்களின் ஆடையணிகளுக்கும் மதத்துக்கும், அரபுமயமாக்கலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை, எல்லாம் ‘செகரியத்துக்காகத்’ தானா?.

                தமிழ் முஸ்லீம் பெண்கள் சில வருட காலமாக கறுப்புக் கோணிப்பையை தலையில் போட்டுக் கொண்டு தமிழர்களைப் பயமுறுத்துவ்தற்குக் காரணம் செளகரியமும், புதிய அரேபிய ஆடை அலங்காரத்தில் அவர்களுக்கு உள்ள நாட்டத்தினாலே தவிர, அல்லது அதன் பின்னணியில் மதவாதிகளும், சவூதி வஹாபியிசத்தின் தூண்டுதலும் இல்லை என்று அவர் அல்லா சாட்சியாகக் கூறுவாரா?

                நான் திப்புவை வெல்ல வேண்டுமென்ற நோக்ககத்தில் இங்கு இந்தக் கருத்துப் பரிமாறத்தில் கலந்து கொள்ளவில்லை. திப்பு அவர்களின் கையில் தேவைக்கதிகமாக நேரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறாரோ என்னவோ எனக்குத் தெரியாது. எனக்கும் அவரது கோமாளித்தனத்துகெல்லாம் பதிலளிக்க வேண்டுமென்ற ஆர்வமிருந்தாலும் கூட, குறிப்பாக வாரநாட்களில் அந்தளவுக்கு நேரமில்லை. ஆனால் பதிலளிக்காமல் விட்டால், “…… இருவரின் வாதங்களையும் ‘திறனாய்வு’ செய்து வியாசனின் வாதங்கள்தான் முட்டாள்தனமானவை” என்று அவரே முடித்துக் கொள்வார்.

                எந்த விவாதத்திலும் நடுவர் அல்லது பார்வையாளர்கள் தான் யார் வென்றவர், யார் முட்டாள் என்பதைத் தீர்மானிப்பார்கள் ஆனால் திப்புவுடன் யாராவது வாதாடினால் இருவரின் வாதங்களையும் அவரே “திறனாய்வு’ செய்து அவரை எதிர்ப்பவரின் கருத்துக்கள் எல்லாம் முட்டாள்தனமானவை என்று அவரே முடித்துக் கொள்வாராம். இப்படியானதொரு நகைச்சுவை மன்னனுடன் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்தவுடனேயே என்னையறியாமல் எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது.

                ///வியாசனுக்கு அறிவு நாணயம் என்று ஒன்று இருந்தால் மலேசியா அரபு காலனியாகி வருகிறது என்று விளக்கி மெய்ப்பிக்க வேண்டும்///

                மரீனா மஹாதிர் கூறிய கருத்தை சரியாக விளங்கிக் கொள்ள முடியாமல் போனதால் அவரிடம் விளக்கம் கேட்பதற்குப் பதிலாக, அவரது கருத்துக்கு என்னிடம் இவ்வளவு வலுக்கட்டாயமாக விளக்கம் கேட்கும் இவருக்கு, என்ன இசகு பிசகோ, யாருக்குத் தெரியும். அவருக்கு விளக்கம் குறைவென்றால், அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்.

                முதலில், மரீனா மகாதிரின் கல்விப்பின்னணி, சமூகசேவை, உலகளாவிய எழுத்தாளர்களுடனும், பெண்ணியவாதிகளுடனான தொடர்பு, முற்போக்கு சிந்தனைகள், எழுத்துகள் என்பவற்றையும், எங்களின் அருமை அண்ணன் திப்பு நானா இங்கு உளறுவதையும் ஒப்பிட்டுப் பார்க்கும் எவருக்குமே தெரியும், உண்மையில் செல்வி. மரீனா மகாதிரா அல்லது திப்புநானாவா உளறுகிறார்கள் என்பது. 🙂

                திப்புக்காக்கா மிகவும் குழம்பிப் போன சொல் என்னவென்றால் ஆங்கிலத்தில் Colonization (தமிழில் காலனித்துவம்) என்ற சொல். Colonization என்றால் கப்பலில் பீரங்கிகளுடன் வந்திறங்கி, அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து குதிரையில் வந்து கோயில்களை இடித்து, அவற்றைக் கொள்ளையடித்து நாட்டைப் பிடித்து ஆள்வது தான் என்ற ஒரு கருத்தைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. ஆகவே திப்பு நானாவின் குழப்பத்தைப் போக்க Colonization க்கு சில உதாரணங்களைக் காட்ட முயல்கிறேன்.

                Colonization என்றால் ஐரோப்பியர் காலத்து அந்தக் காலனித்துவம் மட்டுமல்ல. வெளியிலிருந்து அதிகளவில் குடியேறும் அல்லது அடிக்கடி வருகை தருபவர்களால் அந்த நாட்டில் அல்லது அந்தப் பகுதிகளில் வாழ்கிறவர்களுக்கு இடைஞ்சல், அவர்களின் மொழி கலாச்சாரம், வேலைவாய்ப்பு என்பவற்றில் தாக்கம் ஏற்படுவதைக் கூட ‘Colonize’ பண்ணுதல் என்ற சொல்லால் குறிப்பிடலாம். மலேசியாவுக்கு அரபுக்களின் வருகை, தீவிரவாத வஹாபியிசம் என்பனவற்றால் மலேசிய மக்களின் ஆடையணி மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் என்பவை அரபுமயமாக்கப் படுவதை ‘Arab Colonization’ என்கிறார் மரீனா மகாதிர். அதன் பொருள் அரபுக்கள் எல்லாம் மலேசியாவில் குடியேறி மலேசியர்களை வாள்முனையில் ஆளுகிறார்கள் என்று அவர் கூறுவதாகப் பொருள் அல்ல.

                உதாரணமாக, இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் குடியேறுவது அல்லது குடியேற்றப்படுவது ‘State Sponsored Sinhala Colonization’ என அழைக்கப்படுகிறது. இலங்கைக் குடிமக்களாகிய சிங்களவர்கள் இலங்கையின் வடக்கில் குடியேறுவதையும் Colonization என்ற சொல்லால் குறிப்பிடுவதை அவதானிக்கவும். அதாவது அவர்களின் வருகையால் அங்கு வாழும் தமிழர்களின் எண்ணிக்கையில், அவர்களின் கலாச்சாரத்தில், பண்பாட்டில், மொழியில் தாக்கங்கள் ஏற்படுகின்றன. அது போலவே அரபுக்களாலும் வஹாபியிசத்தாலும் மலேசிய மக்களின் கலை, கலாச்சார, பண்பாடு, ஆடையணிகள் என்பன அரபுமயாக்கப் படுகின்றன அதனால் அதை Arab Colonization’ என அழைக்கிறார்/ஒப்பிடுகிறார் செல்வி மகாதிர்.

                இந்தியாவில் கூட பீஹாரிகள் மற்றும் ஹிந்தியர்களின் குடியேற்றத்தை மகாராஸ்டிர மக்கள் எதிர்த்த போது ‘Internal Colonization’ என்று குறிப்பிட்டனர். வட இந்தியக் கூலிகள் தமிழ்நாட்டுக்குப் படையெடுப்பதும் ஒருவகை Internal Colonization தான். அத்துடன் எறும்புகள் கூட்டமாக, அதிகளவில் வீட்டுக்குள் குடியேறுவதைக் கூட Colonization’ என்று தான் ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றானர். ஆகவே என்ன கருத்தில் மரீன மகாதிர் Arab Colonization’ என்று கூறினார் என்பது இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்குமென நம்புகிறேன்.

                அரபுக்களைப் பற்றிப் பீற்றிக் கொள்வதில் அளவு கடந்த ஆசை கொண்ட தமிழ்நாட்டு முஸ்லீம்கள் எல்லாச் சொற்களும் அரபிளிருந்தே வந்தவை என்று கூடக் கூறுவார்கள் யார் கண்டது.

                வக்கீல் அரபுச் சொல் அல்ல. அரபுக்கள் ஆங்கிலத்திலிருந்து இரவல் வாங்கிய சொல்.

                வக்கீல் லத்தீன் வேர்ச்சொல் vocare இலிருந்து உருவாகிய சொல். to call one who intercedes for another

                Middle English advocat, from Anglo-French, from Latinadvocatus, from past participle of advocare to summon, from ad- + VOCARE to call, from voc-, vox voice — more at voice

                ரசீதும் அரபுச் சொல் அல்ல:

                late Middle English: from Anglo-Norman French receite, from medieval Latin recepta ‘received,’ feminine past participle of Latin recipere . The -p- was inserted in imitation of the Latin spelling.

                ///பின்னூட்டம் எண் 8.1.1.2.2.1.1.1.2///

                இந்த விடயத்தை திசை திருப்புவதற்காக நீங்கள் புலிகளை இழுத்து வர முயற்சிக்கிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு, அதாவது யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப் பட்டதற்கு நான் பலமுறை பதிலளித்து விட்டேன். முதலில் யாழ்ப்பாணத்தின் வரலாற்றிலேயே 100,000 முஸ்லீம்கள் அங்கு வாழ்ந்ததில்லை. எல்லாம் உங்களைப் போன்றவர்களும், ஈழத்தமிழர் எதிர்ப்பு பார்ப்பனப் பத்திரிகைகளும் ஊதிப்பெருக்கியவை தான். 12000 பேருக்கு அதிகமாக யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் வாழ்ந்ததில்லை. அது மட்டுமன்றி சிஙகள்- தமிழ் யுத்தத்தில் இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் அப்பாவிகள் அல்ல, சிங்களவர்களுக்கு உளவு பார்த்தும், துணை போயும், பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றுக் கொடுத்தும், இலங்கையில் தமிழினத்தின் அழிவுக்குக் காரணமாக இருந்தவர்கள். இலங்கை மண்ணின் மைந்தர்களாகிய தமிழரும் சிங்களவரும் தேவையில்லாமல் அடித்துக் கொண்டு சாக, அதில் பயனடைந்தவர்கள் இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள்.

                கிழக்கில் ஈழத்தமிழர்களுக்கு இலங்கை முஸ்லீம்கள். இளைத்த கொடுமைகள், கொலைகள், கற்பழிப்புகள் எல்லாவற்றையும் ஆதார பூர்வமாக எனது வலைப்பதிவில் வெளியிட்டிருக்கிறேன். தேடுங்கள் கிடைக்கும். அல்லது நீங்கள் அந்த ‘Can of Worms’ மீண்டும் இங்கே திறக்கத் தான் வேண்டுமென்று அடம்பிடித்தால், நான் என்ன செய்ய முடியும்.

                • வியாசனின் புலம்பலை பார்க்கவே பரிதாபமாக உள்ளது.பாவம் விவாதத்தை விட்டு ஓடிப்போக [பல கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பதில்லை என்பதை இங்கு நினைவு படுத்திக்கொள்ளலாம்.]ஒரு சாக்காக நேரமில்லை,நேரமில்லை என சொல்லிக்கொண்டே கடந்த ஒரு மாதமாக இந்த பதிவில் பின்னூட்டம் போட்டுக்கிட்டேதான் இருக்கிறார்.

                  அரபுமயமாக்கல் என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுவது உண்மைதான் .ஆனால் தமிழக முசுலிம்கள் அரபுமயமாகி விட்டார்கள் என்பது வியாசனின் கற்பனை என்று நான் எளிமையாகத்தான் சொல்கிறேன்.இந்த விவாதத்தை ஒரு உயர்நிலைப்பள்ளி மாணவனிடம் கொடுத்து படிக்கச்சொன்னால் அவன் கூட இதை புரிந்து கொள்வான்.வியாசனின் விதண்டாவாத மூளையோ பசப்புகிறது.

                  \\\நான் இதுவரை வகாபியிசத்தின் தீவிர தாக்கத்தால் தமிழ்நாட்டில் எந்தளவுக்கு அரபுமயமாக்கல் நடைபெற்றுள்ளது என்பதற்கு “செளகரியத்துக்காக” கறுப்புக் கோணிப்பையை தலையில் போட்டுக் கொண்டு தமிழர்களைப் பயமுறுத்தும் தமிழ் முஸ்லீம் பெண்களை மட்டும் அரபுமயமாக்கலுக்கு ஆதரமாகக் காட்டவில்லை, தமிழ் முஸ்லீம்கள் அரபுக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்பது, அரேபியாவைப் பற்றி பீற்றிக் கொள்வது, அரபுப் பெயர்களை வைத்துக் கொள்வது, அளவுக்கதிகமாக அரபு மொழியைத் தமிழில் கலப்பது போன்ற பல விடயங்களையும் குறிப்பிட்டேன்//

                  எங்கே குறிப்பிட்டிருக்கிறார்.முன்னர் அவர் எழுதியது.

                  \\தமிழ் முஸ்லீம்கள் திட்டமிட்டு அரபுமயமாக்கப்(Arabization) படுகின்றனர் என்பதை உங்களைப் போன்ற தமிழர்கள் உணராதிருப்பது மிகவும் கவலைக்குரியது.தமிழ் முஸ்லீம்கள் எந்தளவுக்கு அரபுமயமாக்கப்படுகின்றனர் என்பதற்கு அரேபிய நாட்டுப் பாலைவன ஆடைகளை அணிந்த முஸ்லீம் ஆண்களினதும், பெண்களினதும் எண்ணிக்கை தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் கூட அதிகரித்திருப்பதை அவதானித்த எவருமே ஒப்புக் கொள்வர். இவ்வளவுக்கும் அரபுக்களின் ஆடைகளையோ அல்லது கலாச்சாரத்தையோ தான் முஸ்லீம்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என முகம்மது நபிகள் ஒரு போதும் கூறவில்லை(யாம்). கடந்த சில ஆண்டுகளில் தீவிரவாத வகாபியிசத்தின் தாக்கம் தமிழ்நாட்டின் பட்டி, தொட்டிகளில் எல்லாம் பரவி விட்டது என்பது தான் உண்மை. பல நூற்றாண்டுகளாக தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தி, தமிழின உணர்வுடன் தமிழர்களாக வாழ்ந்த தமிழ் முஸ்லீம்களுக்கும், தமிழர்களுக்குமிடையே இந்த அரபுமயமாக்கலும், வஹாபியிசமும் ஒரு நிரந்தர இடைவெளியை ஏற்படுத்தி//

                  [அய்யோ, அப்பா;கழுதை விட்டை போட்ட மாதிரி அள்ளி கொட்டுறதுல வியாசனை யாரும் மிஞ்ச முடியாது.]

                  கருப்பு புர்கா போடும் இந்த தலைமுறைக்கு முந்தைய தலைமுறை பற்றி வியாசன் முன்னர் சொன்னது.

                  \\ பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில், தமிழர்களுடன் தமிழர்களாக, தமிழ்ப்பெண்களைப் போலவே புடவையணிந்து, முஸ்லீம்களாக முக்காட்டிட்டு, தமிழ்ச் சகோதர்களின் மதிப்புக்கும், மரியாதைக்குரியவர்களாகவும் வாழ்ந்து காட்டிய தமிழ் முஸ்லீம் பெண்கள், இன்றைக்கு கறுப்புக் கோணிப்பையால் முகத்தையும் தலையையும் மூடிக் கொண்டு அதே தமிழர்களைப் பயமுறுத்துவதற்குக் காரணம் அரபுமயமாக்கல் தான்//

                  அதாவது முந்தைய தலைமுறை அரபுமயமாகவில்லை என்று சொல்கிறார்.ஆனால் அவர்களும் அரபு பெயர்களைத்தான் கொண்டிருந்தார்கள் அப்போதும் அரபு சொற்களை முசுலிம்கள் பயன்படுத்தினார்கள் என்பதை மறந்து விட்டு இப்போது இப்படி புரட்டி பேசுகிறார்.

                • \\றுப்புக் கோணிப்பையை தலையில் போட்டுக் கொண்டு தமிழர்களைப் பயமுறுத்தும் தமிழ் முஸ்லீம் பெண்களை மட்டும் அரபுமயமாக்கலுக்கு ஆதரமாகக் காட்டவில்லை, தமிழ் முஸ்லீம்கள் அரபுக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்பது, அரேபியாவைப் பற்றி பீற்றிக் கொள்வது, அரபுப் பெயர்களை வைத்துக் கொள்வது, அளவுக்கதிகமாக அரபு மொழியைத் தமிழில் கலப்பது போன்ற பல விடயங்களையும் குறிப்பிட்டேன். //

                  எங்கே குறிப்பிட்டிருக்கிறார் என எனது ஊன் கண்ணுக்கு தெரியவில்லை.எங்கே ஞானக்கண் கொண்டு அவர் பார்த்து சொல்லட்டும்.

                • .வியாசன் திருவாய் மலர்ந்தது.[ஒன்று இந்த உளறலை எழுதிய மூளைக்கு கிறுக்கு பிடித்திருக்கவேண்டும்.அல்லது இதை படிப்பவருக்கு கிறுக்கு பிடிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்]

                  \\பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில், தமிழர்களுடன் தமிழர்களாக, தமிழ்ப்பெண்களைப் போலவே புடவையணிந்து, முஸ்லீம்களாக முக்காட்டிட்டு, தமிழ்ச் சகோதர்களின் மதிப்புக்கும், மரியாதைக்குரியவர்களாகவும் வாழ்ந்து காட்டிய தமிழ் முஸ்லீம் பெண்கள், இன்றைக்கு கறுப்புக் கோணிப்பையால் முகத்தையும் தலையையும் மூடிக் கொண்டு அதே தமிழர்களைப் பயமுறுத்துவதற்குக் காரணம் அரபுமயமாக்கல் தான் என்பதை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் திப்பு அவர்களுக்கு இன்னும் வரவில்லை//

                  இந்த நாற வாய் அடுத்த வரியிலேயே என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்.

                  \\ஆனால் தமிழ் முஸ்லீம்கள் அரபுமயமாக்கப் படுகிறார்கள் என்பதை இப்பொழுது ஒப்புக் கொள்கிறாராம்.//

                  அடுத்து ஒரு உளறல்,

                  \\அதாவது முஸ்லீம் பெண்களின் ஆடையணிகளுக்கும் மதத்துக்கும், அரபுமயமாக்கலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை, எல்லாம் ‘செகரியத்துக்காகத்’ தானா?.//

                  மதமும் ஒரு காரணம் என்று திருப்பி திருப்பி சொல்கிறேன்.ஆனாலும் இப்படி விதண்டாவாதம் பண்ணுறதை பார்க்கும்போது

                  ”அய்யோ ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோட எல்லாம் கூட்டு சேர வைக்கிற”
                  என்று கவுண்டமணி ஒரு நகைச்சுவை காட்சியில் சலித்துக்கொள்வது யாருக்கும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை.

                  இந்த இணைப்பில் உள்ள படக்காட்சியில் பேசும் எச்,ராஜாவை போலவே பேசுறார் வியாசன்.

                  https://www.youtube.com/watch?v=sE9zWM5JRho

                  அனைத்து மதவெறியர்களும் இப்படித்தான் முன்னுக்கு பின் முரணாக புரட்டி புரட்டி பேசுவார்கள் போலும்.

                • \\மரீனா மஹாதிர் கூறிய கருத்தை சரியாக விளங்கிக் கொள்ள முடியாமல் போனதால் அவரிடம் விளக்கம் கேட்பதற்குப் பதிலாக, //

                  ஒருவரின் கருத்தை மற்றொருவர் ஏற்று பரப்புரை செய்தால் அவருக்கும் அந்த கருத்தின் மீதான விமர்சனத்திற்கு பதில் சொல்ல கடமை இருக்கிறது.மேலும் மெரினா இங்கு நம்மிடையே வந்து விவாதிக்கிறாரா என்ன .

                  \\ Colonization க்கு சில உதாரணங்களைக் காட்ட முயல்கிறேன்.//

                  இவர் கூறும் எடுத்துக்காட்டுகள் எல்லாமே சிங்களர் குடியேற்றம்,வட இந்திய,பீகார் மக்கள் பிழைக்க போனது,[எறும்புகள் உட்பட ] எல்லாமே குடியேற்றத்தையே காட்டுகின்றன.ஆனாலும் அரபுக்கள் குடியேறாமல் மலேசியாவை காலனியாக்குவதை இந்த எடுத்துக்காட்டுகள் மெய்ப்பிக்கின்ரனவாம்.அரபுக்கள் மட்டும் ”ரிமோட் கண்ட்ரோல்” கொண்டு மலேசியாவை காலனியாக்குகிறர்களா.இதென்ன லூசுத்தனமா இருக்கு.

                  சுற்றுலாவுக்கு ,வணிகத்திற்கு,கலாச்சார பரிவர்த்தனைகளுக்கு என வரும் பிற கலாச்சார மக்களின் வருகையால் ஒரு நாட்டில் ஆடையணி,மொழி,உணவு பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களை பண்பாட்டு தாக்கம் என்றுதான் சொல்ல முடியும்.காலனியாக்கம் என்று சொல்ல முடியாது,

                  வக்கீல் என்பது ஆங்கில சொல்லாகவே இருந்து விட்டு போகட்டும்.ஆனால் அது அரபு மொழி மூலமாக இங்கு வந்தது எனபது உண்மைதானே,அரபு சொற்கள் வந்ததால் நாங்கள் அரபுமயமாகி விடவில்லை என்பதற்காகத்தான் அவற்றை சுட்டிக்காட்டியுள்ளேன்.

                  \\‘Can of Worms’//

                  மதவெறியால் புழுத்துப்போன மூளையிலிருந்து வேறு என்ன வரப்போகிறது.ஆனாலும் நான் கேட்டதற்கு மட்டும் பதில் வரவே மாட்டேங்குது.ஒரு இலட்சமா பநிரெண்டாயிரமா என்பதல்ல கேள்வி.[எனக்கு தெரிந்த தகவலை வைத்து 60,000 என்றுதான் எழுதியிருக்கிறேன்.வகுப்பு வாத வெறி கொண்ட மூளைக்கு எல்லாமே தாறுமாறாத்தான் தெரியும் போல] .”குற்றம் செய்த நபர்களை மட்டும் தண்டிப்பதை விட்டு அவர்கள் சார்ந்த சமூகத்தையே தண்டிப்பது இனவெறி பாசிசமா இல்லையா என்ற கேள்விக்கு வியாசன் நாணயமாக பதில் சொல்லட்டும்.

          • பின் குறிப்பாக எழுதியது இது.சேர்க்கையில் விடுபட்டுவிட்டது.இதையும் சேர்த்துக்கொள்ளவும்.\\வியாசன்களின் கற்பனையான அரபுமயமாக்கலுக்கு ‘தமிழகமுசுலிம்கள் ‘ஆளான”பின்னும் ”புரோட்டாவும் சால்னாவும்”எங்களை விட்டு போய் விடவில்லை//என்று நான் சொல்லியிருப்பதன் பொருள் தமிழகமுசுலிம்கள் அரபுமயமாகிவிட்டார்கள் என்பது வியாசனின் கற்பனை என்பதுதான்.அரபுமயமாக்கல் என்ற குற்றச்சாட்டே வியாசனின் கற்பனை என ஒருபோதும் சொன்னதில்லை.

            • தமிழ் சமூகம் பேன்ட் சுடிதார் மாறியதை போல , இசுலாமிய பெண்கள் வசதிக்காக வண்ண புர்கா அணிகிறார்கள்.அதுவும் கூட வெளிநாடு போனவர்கள் பரிசாக கொண்டுவந்து கொடுத்தால் தான் என்கிறீர்கள் . வெளிநாடு போன இசுலாமிய ஆண்கள் வெள்ளை புர்கா அணியவில்லையே ?

              வண்ண புர்காவை சியா ஜாதியினரும் கருப்பு புர்காவை சன்னி ஜாதியினரும் போடுவார்கள் என்பதே ஏன் அறிவு.

              என்னுடைய நண்பன் பெண் பார்க்கும் போது புர்கா போடாத போட்டோவை பார்த்து அந்த பெண் இறை பயம் இல்லாதவள் ஆகவே வேண்டாம் என்று கூறி விட்டான்.

              தமிழ் சமூகத்தில் ,அவள் புடவை கட்டவில்லை அதனால் வேண்டாம் என்றெல்லாம் சொல்லி கேள்வி பட்டது இல்லை . வசதிக்காக ஏற்பட்ட மாற்றம் எனபது உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ள சொல்லி கொள்வது .

              வியாசனுக்கு பதில் கூறும் போது இந்த கருத்தை அம்போ வென விட்டு விட்டேர்களே

              • \\\வெளிநாடு போன இசுலாமிய ஆண்கள் வெள்ளை புர்கா அணியவில்லையே ?//

                தமிழ் சமூகம் அரபுமயமாகவில்லை என்பதற்கான சான்றாகத்தான் இதை சொல்ல முடியும்.அரபு கலாச்சாரத்தின் மீது மோகம் கொண்டு அலைபவர்களாக நாங்கள் இருந்திருந்தால் ஆண்களும் அரபு உடைக்கு மாறி இருக்க வேண்டுமே.அப்படி நடக்கவில்லையே.ஆனாலும் இதை அரபுமயமாக்கலுக்கு ஆதாரமாக தூக்கிட்டு வர்றாரு இந்த அறிவாளி.அய்யோ ராமா,இவுங்களுக்கு நல்ல புத்திய குடுக்க கூடாதா நீ.

                இதைத்தான் நண்பர் இனியன் இசுலாமிய ஆண்களும் பெண்களும் அரபு உடைக்கு மாறி வருவதாக அப்பட்டமாக புளுகிய வியாசனிடம் கேட்டார்.அந்த மேதாவியோ இன்று வரை பதிலேதும் சொல்லாமல் கள்ள மவுனம் சாதிக்கிறார்.

                \\என்னுடைய நண்பன் பெண் பார்க்கும் போது புர்கா போடாத போட்டோவை பார்த்து //

                இந்த அறிவாளிகளுக்கு பல முறை சொல்லிவிட்டேன்.இணையத்தில் விவாதிக்கும்போது சொல்பவரை சாராமல் சொந்தமாக சரி பார்க்க கூடிய தகவல்களைத்தான் முன் வைக்க வேண்டும்.எனக்கு தெரியும்,நான் பார்த்தேன் என்பதெல்லாம் நானே வாதி,நானே நீதிபதி என்ற வகையில் சேரும்.எங்கே நிரூபியுங்கள் என்று கேட்டால் போச்சு.அய்யய்யோ பாத்துட்டான்,பாத்துட்டான் என கூவும் கவுண்டமணி போல மண்ணடிக்கு கூப்பிட்டுட்டான் ,மண்ணடிக்கு கூப்பிட்டுட்டான் ,என ஓலமிட வேண்டியது.என்னய்யா வாதம் இது.

                • முதலில் புர்கா ஒரு உடை என்பதே எமாற்றுவாதம் . இசுலாமிய பெண்கள் சுடிதார் அல்லது புடவை அணிந்து அதற்கு மேல் அணியும் உடை தான் புர்கா ! அதை பேன்ட் சட்டை போல உடை அலங்கார அப்கிரேடு என்று நீங்கள் எண்ணிக்கொண்டு கட்டுகிறீர்கள் .

                  மதவாதிகளுக்கு பிற மதவாதிகள் செய்யும் தவறுகள் எளிதாக புரியும் . தனது மதத்தில் உள்ள தவறுகளுக்கு சப்பை கட்டு நியாயம் வைத்திருப்பார்கள் .

                  பின் குறிப்பு :
                  புர்கா ஒரு உடை அல்ல உள்ளே உணமையான உடை அணிந்து இருப்பார்கள் எனபது எனது அனுமானம் . அதை நான் சரி பார்க்க முடியாது அதனால் இந்த கருத்தை ஏற்று கொள்ள மாட்டீர ?

                  • பெண்கள் ஆடை உடுத்துவது பற்றி உள்ளே வெளியே என்றும் அதை சரி பார்க்க முடியாது என்றும் பேசும் வக்கிரம் பிடித்த இந்த மனிதப்பதரெல்லாம் விவாதிக்க வந்து விட்டது.தனது வீட்டு பெண்கள் ஆடை பற்றி எவனாவது பொறுக்கி கிண்டல் பண்ணினால் கூட இந்த பதர் வாயை பொத்திக்கொண்டு போகும் போலும்.அதனால்தான் அடுத்த வீட்டு பெண்களின் ஆடையை சரி பார்க்க முடியாது என தடித்தனமாக பேசுது.தூ,மானங்கெட்ட ஜென்மம்.இதுலாம் மனுசன்னு உலாவிக்கிட்டு திரியுது.

                    வாதத்துக்கு ஒரு வரி கூட மறுப்பு எழுத துப்பு கெட்ட ——- லொள்ள பாரு,எகத்தாளத்த பாரு.

                    பி.கு.

                    கோடு மட்டுறுத்தல் செய்பவர் போட்டதல்ல.நானே போட்டதுதான்.பொருத்தமான சொல்லை வாசகர்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

                    • நூறு சதவீத சரிபார்த்த தகவல் வைத்து தான் விவாதம் செய்வேன் என்று நீங்கள் கூறியதை மனதில் வைத்து அதை கிண்டலடித்து எழுதியதை அனர்த்தம் ஆக்கிவிட்டீர்கள் .

                      பெண்களை புர்காவில் அடைக்கும் ஆணாதிக்கம் பிடித்த நீங்கள் இங்கே பெண்ணியத்தின் மாண்பை காப்பது போல கூப்பாடு போட்டு நடிகிறீர்கள் . செவாலியே விருது தர வழி மொழிகிறேன்

                      இந்த கூச்சலில் புர்கா , பூணூல் போல ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் என்கின்ற விவாதத்தை மறைக்க பார்கிறீர் .

  22. அடி செருப்பால ஒரு பின்னூட்டதயே வெளியிட தயங்கும் நீ என்ன மயித்குக்கு கம்மூனிஸ்ட்டு என்று சொல்லிக்கொள்கிறாய்

  23. இவ்வளவு அசிங்கமாக நடந்துகொள்வார்கள் வினவு தள்த்தினர் என்று நான் நினைக்கவில்லை திப்பு என்பவர் இங்கு மத பர்ப்புரை செய்கிறார் அவருக்கு நான் அளித்த பதிலில் எந்த அசிங்கமே தனிநபர் தாக்குதலோ இல்லை ஆனாலும் அதை வெளியிட வினவு தளம் தயங்குவதை பார்க்கும் போது வினவின் கோழைத்க்தனம் பளிச்சென்று தெரிகிறது

  24. இனியன்,தலைப்பிற்க்கு தொடர்பில்லாமல் நாம் உரையாடுகிறோம் என்றாலும் உஙகளுக்கு சிலதை தெளிவுபடுத்த இதை பயன்படுத்திக்கொள்கிறேன்.நாம் இந்திய முஸ்லிகள் பற்றியும் இந்தியாவில் அவர்களின் வாழ்வு நிலைப்பற்றியும்தான் பேசிகொண்டிருக்கிறோம்.சவூதியைப்பற்றியோ இஸ்லாமிய சட்டஙகளைப்பற்றியோ அல்ல. நாஙகள் முஸ்லிகள். எஙகள் சமய நம்பிக்கையில் நாஙகள் உறுதியாக இருந்தாலும் நாஙகள் வாழும் இந்த நாட்டின் சட்ட திட்டங்களை இறையாண்மையை ஏற்றுக்கொண்டோம் கட்டுப்படுகிறோம்.இது மதச்சார்பற்ற நாடு.இங்கே யாரும் மதத்தை அரசியலோடு கலக்கக்கூடாது கலக்கமுடியாது.முழுக்க ஒரு மதச்சார்போடு இருக்கிற ஒரு நாட்டின், அதுவும் ஒரு குற்றவியல் சட்டத்தின் ஒரு பிரிவை மட்டும் வைத்துக்கொண்டு என்னிடம் விளக்கம் கேட்டால் சரியா?இஸ்லாமிய சட்டங்களை நான் ஏற்றுக்கொள்கிறேனா இல்லையா? அது வேறு விவாதம்.பல் வேறு கருத்துகளும் கொள்கைகளும் உள்ள, நாம் எல்லோரும் சேர்ந்து வாழும் இந்த நாட்டில் அரசியலில் மதம் கலக்கலாமா என்றால் கூடாது என்பதே என் கருத்து.இந்திய்ர்கள் அனைவரும் பொது உடைமை சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் இங்கே கம்மிநியுஸ்ட் சட்டங்கள் அமலாகும்.அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் ஷரியா சட்டம் அமலாகும். இப்போதைக்கு நம் அனைவருக்கும் இந்திய அரசியல் சாசன சட்டமே பொதுவாகும்.

    • மீராசாஹிப் அண்ணாச்சி இரு வேறுபட்ட மனிதர்களுடன் இங்கு விவாதம் நடத்திக்கொண்டு உள்ளேன். ஒருவர் நீங்க, மற்றுமொருவர் ஜோசப். இருவருக்கும் என்ன வேறுபட்டு என்றால் அவர் கம்யுனிச வெறுப்பின் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாக இல்லாத விஷத்தை இருப்பது போன்று அதாங்க நாத்திகம் ராமசாமியின் கட்டுரையில் இல்லாத ஆபாசத்தை இருபதாக நினைத்துக்கொண்டு தன் உணர்வுகளை அறிவை நீங்கிவிட்டு கொட்டிக்கொண்டு உள்ளார். ஆனா நீங்க பாருங்க என்ன செய்கின்றிர்கள் என்று? தெரிந்தே ,அறிந்தே , உங்கள் அறிவுக்கு உட்பட்டே வாகபியிசத்தை சில நேரங்களில் நேரடியாகவும், பல நேரங்களில் மறைமுகமாகவும், ஸ்டீபன் ஸ்பெயில்புர்க் படத்தோட முதல் காட்சி போன்று இலை மறைவாக ஆதரிக்கின்றிகள். என்னுடைய விவாதத்தின் மூலமாக நெருகடி ஏற்படும் தருணங்களில் மட்டும் இல்ல இல்ல நாங்க அப்படி இல்ல , வாகபியிசத்தை ஆதரிக்கவில்லை என்று கூருகின்றிகள்.

      கடைசியா சொன்னிங்க பாருங்க செம பஞ்சி டயலாக். என்னாது “”” இந்திய்ர்கள் அனைவரும் பொது உடைமை சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் இங்கே கம்மிநியுஸ்ட் சட்டங்கள் அமலாகும்.அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் ஷரியா சட்டம் அமலாகும்.””” ஒரு பக்கம் அரசியலில் மதம் கலக்க கூடாது என்ற கருத்துக்கு ஆதரவு, மறுபக்கம் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் ஷரியா சட்டம் அமலாகும் என்றும் முரண்பட்டு பேசுகின்றிகள். மதம் அரசியலில் கலக்க கூடாது என்ற நிலையில் இஸ்லாமிய-ஷரியா சட்டத்துக்கு மட்டும் எதற்கு தனி சிறப்பான அந்தஸ்து? அடுத்தது பாருங்க கம்யுனிச சட்டத்தை இஸ்லாமிய-ஷரியா சட்டத்துக்கு இணையாக வைத்து பேசுகின்றிகள். என்னத்துக்கு அப்படி சிந்தனை செய்ய உங்களுக்கு தோன்றியது? கம்யுனிஸம் மத உரிமைகளை தனி மனித உரிமையாக மட்டுமே பார்கின்றது. மதத்தால் ஏற்படும் தேவையற்ற பூசல்களை நீக்குவதற்காக மதத்தை அரசியலில் இருந்து விடுவித்து அதனை தனிமனித உரிமையாக மாறுகின்றது. லாப வெறியுடன் நடைபோடும் முதலாளித்துவ பொருளாதாரத்தை அது மாற்றி அமைத்து மக்கள் நலனை முன்னிட்ட சோசிலிச பொருளாதாரத்தை முன்னிறுத்துகின்றது. சரி சில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும் என்றால் முயன்று பாருங்கள் அண்ணாச்சி.

      1. அந்த ஆணுக்கும் ,பெண்ணுக்கும் வேறு வேறு நீதியை ஒரவஞ்சனையுடன் சவுதியின் குற்றவியல் சட்டங்கள் கூட எந்த அடிப்படையில் உள்ளன? குரானை அடிப்படையாக கொண்ட வாக்பியிசத்தை தான் அந்த சட்டங்கள் வேர்களாக கொண்டு உள்ளன. அப்படி என்றால் இஸ்லாமிய-ஷரியா சட்டத்துக்கு மட்டும் வேறு எது ஆணிவேராக உள்ளது அண்ணாச்சி? அதே குரான் தானே? அப்ப நீங்கள் முன்னிறுத்தும் இஸ்லாமிய-ஷரியா சட்டங்களும் மானுடத்துக்கு எதிரானதாகவும் , பாலின பேதங்கள் உடையதாகவும் தானே இருக்கும்.

      2.சரி நேரடியாகவே விசயத்துக்கு வருகிறேன். திருமணம் ஆன ஆண்-பெண் திருமணத்துக்கு வெளியே பாலியல் உறவுகளில் ஈடுபட்டால் உங்கள் இஸ்லாமிய-ஷரியா சட்டம் ஆணுக்கு என்ன தண்டனையை , பெண்ணுக்கு என்ன தண்டனையை கொடுக்கும் ?

      3. அரசியலில் இருந்து மதத்தை முழுமையாக விளக்க கோரும் கம்யுனிச அரசியலில் உங்களுக்கு என்ன பிரச்சனை? (கம்யுனிச அரசியல் பின்னணியில் தான் வெள்ள நிவாரண பணிகளுக்கு மதத்தை முன்னிருத்தாதிர்கள் என்று கூறினேன்)

      இருதியாக ஒன்று. இந்த கட்டுரையின் விவாதத்தில் மத விடயங்களை வெள்ள நிவாரண பணியுடன் கலந்துகட்டியது, வாகபியசத்தை பற்றிய தேவையற்ற விவாதத்தை தொடங்கி வைத்தது நீங்கள் தான் என்பதை மீண்டும் ஒருமுறை விவாதங்களை படிப்பதன் மூலம் உணருங்க அண்ணாச்சி.

      • அண்ணன் ஒரிஜினல் + அக்மார்க்+நயம் கம்மூனி?ஸ்டு இனியன் அவர்களே எனக்கு அறிவு இல்லை என்பதை எதைக்கொண்டு சொல்லுகிறீர் நீங்களும் நாத்தம் ராமசாமியும் சொல்லும் ஆபாசம் மற்றும் ஆபாசம் இல்லை சாதாரன எழுத்து நடை என்பதை நான் நம்பியே ஆக வேண்டும் இல்லை என்றால் நான் அறிவு அற்றவன் ஏலே ஈர வெங்காயம் இது தாண்டா ஒரிஜினல் அக்மார்க பாஸிசம் என்பது, சரி விடுங்க நியமான அசிங்கம் அதனால் அதை ஏற்றுக்கொண்டோம் என்று சொன்னால் எந்த வகையிலோ___ அசிங்கதை ஏற்று ___அவ்வளவுதான் இல்ல நாத்தம் ராமசாமியின் கருத்துகள் சமூகத்தை திருத்தவும் நல்லது செய்யவுமே என்று நம்பினால் அதுக்கு நான் என்ன செய்ய முடியும் நாத்தம் ராமசமியின் நாத்திக தொன்டரகள நடத்தும் கல்லூரிகளில் இலவசமாக அணைவரையும் படிக்க வைக்கிறாரகள் அதனால் அவர் சமூக அக்கரையுடந்தான் எழுதி இருக்கிறார் என்பதை _ இல்லை என்றால் பின்புறத்தை பொத்தி கொண்டு போய் _________ எனக்கு என்ன காண்டு கம்மூனிஸ்டுகள் மீது என்றால் இசுலாமியர்கள எல்லாம் நல்லவர்கள் அவர்கள் தொண்டு செய்வதில் சிறந்தவர்கள் என்ற பரப்புரையை கம்மூனிஸ்டுகள் வலிந்து செய்வதின் காரணம் என்னவோ எனக்கு நேரம் இல்லை என்பதால் பிறகு பேசுகிறேன்…

        <