privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்கும்பகோணம் யாருக்குச் சொந்தம் ? சிறப்புக் கட்டுரை

கும்பகோணம் யாருக்குச் சொந்தம் ? சிறப்புக் கட்டுரை

-

kumbaonam-magamagamகும்பகோணத்து புராணம்… பாடல் பெற்ற தலங்களும் பாவப்பட்ட சனங்களும்!

ரே நாளில் 10 லட்சம் பக்தர்கள் தீர்த்தமாடி, பாவத்தின் ஓவர் லோடில் மகாமக் குளமே காவியாகி விட்டது. கடந்த பத்து நாட்களாக 45 லட்சம் பக்தர்கள், ‘பரம’ சாதுக்கள், நவீன செல்போன் அசரீரியுடன் ஆசி வழங்கிய அகோரிகள், நெய்யால் தொந்தி வளர்த்து பொய்யால் சமயம் வளர்த்து, ஊரான் வீட்டு கையால் கோயில் நிலத்தில் பக்தி வளர்த்து குலநாசம் செய்து சிவன் சொத்து சேர்த்த தகத்தாய மடாதிபதிகள், முற்றும் துறந்த சங்கராச்சாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அடியார்க்கும் அடியார்கள் என கும்பகோணமே குலுங்கிவிட்டதாக பூரிக்கின்றன ஊடகங்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட ஒன்பது நதிகளும் பரமசிவனிடத்தில் போய், “மக்கள் கொடிய பாவங்களைச் செய்துவிட்டு எங்களிடத்தில் மூழ்கி, பாவங்களை இறக்கிவிட்டு போய்விடுகிறார்கள், இதைப் போக்கிக் கொள்ள நாங்கள் என்ன செய்வது?” என்று முறையிட, பரிகாரமாக சிவன், “கும்பகோணத்தில் தென்கிழக்கு தீர்த்தமான மகாமக குளத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மாத மகாமக நாளன்று குளித்தீர்களானால் உங்கள் பாவங்கள் தொலைந்து போகும்!’’ என்று கூறியதாகவும் எனவே அந்நாளில் போய்க் குளித்தால் சர்வ பாவங்களும் நிவர்த்தியாகி புண்ணியம் கிடைக்கும் என்று புராணம் எழுதி வைத்திருக்கிறது. பார்ப்பனீய கட்டுக் கதை இலாகா கம்பெனி.

“ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் குளத்தில் இறங்கி அழுக்கையும், சேறையும் கலக்கி அடக்க முடியாமல் அங்கே சிறுநீரையும் கழித்தால் புண்ணியம் வருமா? காலரா, மலேரியா வருமா?” என்று பெரியார் கேட்டால், நாத்திகர் புண்ணிய தீர்த்தத்தை இழிவுபடுத்துகிறார் என்பவர்கள் அந்த காலத்து மகாமக குளத்து யோக்கியதையை எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு தனது “பசித்த மானிடம்’’ என்றpasitha-maanidam நாவலில் கணேசன் என்ற கதாபாத்திரத்தின் நனவோடையாக இப்படி காட்டியிருப்பார். “இவன் நாற்பது வருசங்களுக்கு முன் பார்த்த குளம் இல்லை அது. பச்சைப் பசேலென்று பாசி பிடித்துக் கிடக்கும் முன்பெல்லாம். படிகளெல்லாம் வழுக்கும். காற்றில் பாசியும் அழுக்கும் ஒரு புறமாய் ஒதுங்கி அந்த மூலையிலிருந்து குடலைக் குழப்பும். நாற்றம் வீசும். படித்துறைகளில் எல்லாம் சாயம் தோய்த்த நூல் கத்தைகளைக் கயிறுகள் கட்டிக் காய வைத்திருப்பார்கள். அந்த நாற்றமும் வீசும். குளக்கரைகளை ஒட்டிப் பாவுகளைப் பெரிய பெரிய கடப்பாரைகளை நட்டு இழுத்துக் கட்டி நூல்களாய் இழையைப் பிரித்துவிட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தத் தொழிலாளர்களில் யானைக்கால் இல்லாத ஒருவரைக் கூடப் பார்க்க முடியாது. அந்த பாவுகளையும் காணவில்லை. தெருவும் சுத்தமாயிருந்தது.’’ பெரியார் பார்வையில் மக்களை பழிபாவத்திற்கு ஆளாக்கிய பார்ப்பனியத்தின் மீதான வெறுப்பு வெளிப்படுகிறது. கரிச்சான் குஞ்சு பார்வையில் குளக்கரையைப் பயன்படுத்தும் வர்க்கத்தின் மீதான குமட்டலாக முடிந்து விடுகிறது. உண்மையில் உள்ளூர் வழக்கிலான மாமாங்குளத்தின் ‘கீர்த்தி’ தெரிந்து தீர்த்தமாடாத பாவப்பட்ட ஜென்மங்களில் ஒருவன் என்ற முறையில் குளத்தை பெரிதும் அசுத்தப்படுத்த வாய்ப்புள்ளவர்கள் குளக்கரையைச் சுற்றியுள்ள கரிச்சான் குஞ்சுவின் கணேசர்களே என்பதைப் பார்த்திருக்கிறேன். நாலுகட்டு, அஞ்சு கட்டு வீட்டுக்குள் இருந்து கொண்டு நாள் கிழமை என்று கட்டுகட்டாக தலைவாழைகளை கட்டிவிட்டு குளக்கரையில் வீசி எறிவதும், அதில் கும்பகோணத்து பன்றிகள் பாய்ந்து ஏமாறுவதும் குளக்கரையில் சிரார்த்தம், தர்ப்பணம் என்று பிண்டம் வைத்து குப்பை போடுவதுமாக நீர்நிலையை மாசுபடுத்திய போது எச்சிலையைப் போட்டு மாமாங்குளத்தை அசுத்தப்படுத்தாதே என்று நீர் நிலைக்கு குரல் கொடுத்தவர்கள் அந்தக் கால திராவிடர் கழகத்தினர்.

திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்துதான் அரசியலே நாசமாப் போச்சு என்ற பார்ப்பன வன்மத்தின் உளவியல்தான், இவாள்’ அசுத்தப்படுத்திய வரைக்கும் புனிதம் பேசியவர்கள் “கண்டவர்களும் வந்து மாமாங்குளத்து லட்சணமே போச்சு’’ என்று மக்களின் பயன்பாட்டில் மாசுப்பட்டபோது கருவினர். எனக்கு நினைவு தெரிந்து எண்பதுகள், எண்பத்தைந்து வரைக்கும் கூட மாமாங்குளம் மக்கள் பயன்பாட்டுக்காக தடையின்றி தான் இருந்தது. தேங்கிய நீரை வெளியேற்றுவது துப்புரவு செய்வது குளக்களை கால்வாய் சீரமைப்பு என்று எந்த பராமரிப்பையும் நகராட்சி நிர்வாகம் சீராக செய்யாதபோது பயன்படுத்துபவர்களால் பாதிப்பு என ஆகி பார்ப்பன புனிதம் மெல்ல மெல்ல வேலிகட்ட வைத்து வெறும் பாவம் கழுவும் குளமாகி விட்டது. மகாமகக் குளத்தைவிட மக்களின் பயன்பாட்டுக்கு நெருக்கமாக பல குளங்கள் கும்பகோணத்தில் உண்டு. நால்ரோடு குளம், அன்னம்மா ஆஸ்பெட்டல் பக்கம் இருந்த குளம், செல்வம் தியேட்டர் பக்கமிருந்த குளம், ஆயி குளம், அம்மா சத்திரம் குளம், வளையப் பேட்டை குளம், தாராசுரம் சத்திரத்துக் குளம், ரயிலடி குளம், பேட்டை நாணயக்காரத் தெரு குளம், தாலுகா போலீஸ் ஸ்டேசன் குளம்… போன்றவைகள் எல்லாம் மக்கள் சரளமாக புழங்கிய குளங்கள். ஏழை உழைக்கும் மக்களுக்கு பசியாற கொட்டிக் கிழங்கும், குரவை மீனும் தந்த பல குளங்களுக்கு ஈடாகாது இந்த மகாமகக் குளம். ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் போன்றோருக்கு அடைக்கலமாக இருந்த மாமாங்குளங்கரையை மதத்தின் பெயரால் தட்டிப் பறிக்கப்பட்டதைப் பார்க்கையில் உண்மையிலேயே அது பாவக்குளம்தான். தாராசுரத்திலிருந்து பட்டீஸ்வரம் போகும் சாலையில் ஒரு அய்யர் பண்ணை வீட்டில் குளம் வெட்டி, மீன் வளர்த்து வியாபாரம் செய்ததும் ஏனோ நினைவுக்கு வருகிறது. அது சரி குலத்துக்குதான் கோத்திரம், குளத்துக்கு இல்லை போலும்!

“செஞ்ச பாவத்த எல்லாம் குளத்துல தீர்த்திடலாம்னா எவனுக்காவது ஒழுக்கம் வருமா? பாவ காரியங்களைச் செய்யத் periyar-magamagamதயங்குவானா? தவறுவானா? மத்த நதிகளின் பாவம் மகாமக குளத்துல போகும்னா, மகாமக குளத்து பாவம் எங்க போய் போகும். அது எந்த தண்ணியில பாவத்த கழுவும்…’’ என்று பெரியார் தர்க்கவியலாக எழுப்பிய கேள்விகள் மூட நம்பிக்கை ஒழிப்பைத் தாண்டி மக்களின் பண்பாட்டு அக்கறை பற்றியது. கும்பகோணத்தை கோவில் நகரமாகவும், புண்ணிய ஷேத்திரமாகவும் மட்டும் அடையாளப்படுத்தும் பாவத்தை முதலில் கழுவ வேண்டும். எந்த மக்களின் பார்வையில் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து ஊரின் முகம் மாறுபடுகிறது. ஆதிக்க சாதிகளின் பார்வையில் ஊர் இனிய முகமாக இருக்கலாம். அங்கே அனுமதிக்கப்படாத தாழ்த்தப்பட்டவர்களின் பார்வையில் அது பயம், கொடூரம்!

பக்தி மார்க்கமாக இருந்தாலும் கூட அதையும் ஆரியப் பார்ப்பன சமஸ்கிருதமயமாக்கும் அடையாளத்தின் குறியீடாகத்தான் ’கும்பகோணம்’ என்ற பெயரே உள்ளது. பிரளய காலத்தில் அமிர்த கும்பம் மிதந்து வந்தபோது சிவபெருமான் அதை விழச் செய்த இடமாதலால் இது கும்பகோணம். தமிழில் குடமூக்கு என்று தலபுராணம் கதை அளக்கிறது. அவாளின் மணிக்கொடி மாமாக்களே கும்பகோணம் என்றவுடன் அமிழ்தம் ஓடியதாக மறந்தும் பேசுவதில்லை. தி. ஜானகிராமன் தனது ஆஸ்திரேலிய பயண அனுபவக் கட்டுரையில் “பொதுவாக வெள்ளை நாடுகளைப் பார்த்தால் கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஜனங்கள் வாழ்கிற இடத்தில் ஒரு துப்புரவு, நறுவிசு பளிச்சென்ற தோற்றம் கும்பகோணம் போன்ற ஊர்களின் சாக்கடைகள் ஞாபகத்திற்கு வராமல் என்ன செய்யும்.’’ (அடுத்தவீடு ஐம்பது மைல் நூலில் தி.ஜா.ரா) “நவராத்திரிக் கூட்டம் நடமாடத் தொடங்கிவிட்டது. புசு புசுக்கும் புதுப்புடவைகளும், பாவாடைகளும், நடந்த வண்ணம் இருந்தன. கடந்து போகும் ஒவ்வொரு கும்பலும் கதம்ப மனத்தை வீசி வீசிப் போயிற்று. நவராத்திரி முடிவு நெருங்க நெருங்க, வீதியில் கூட்டமும் புதுமையும் பெருகிக் கொண்டிருந்தன. நாளை ஒன்பதாவது நாள். சரஸ்வதி பூசை கட்டுக்கடங்கா பூரிப்பாக ஊர் மலர்ந்து கொண்டிருக்கும். பாபநாசத்தில் என்ன இருக்கப் போகிறது? எப்போதும் போல் மங்கலும் இருளுமாக அழுது வடிந்து கொண்டிருக்கும் இந்தக் கோலாகலத்தில் கும்பகோணத்தை விட்டுப் போவதென்றால் மனசு வரவில்லை. என்ன செய்வது?’’ என்று மோகமுள் நாவலில் அக்கிரகாரத்து கும்பகோணத்தில் மகிழ்ந்த மனம் ஆஸ்திரேலியாவுக்கு போனவுடன் சாக்கடை கும்பகோணத்தை வெறுக்கிறது. சாக்கடையின் தயாரிப்பாளர்களே சாக்கடைக்கு முகம் சுழித்தால், அதை சுத்தம் செய்வதற்கென்றே ஒதுக்கப்பட்ட சாதியினர்க்கு அந்த ஊர் எப்படி இருக்கும்?

thi-janakiranam-bookஒட்டச் சுரண்டி ஊரைப் பழித்தவுடன் இது ஊரா நியூயார்க் போல வருமா, நியூ ஜெர்சி போல வருமா என வளர்ச்சிக்குத் தாவி லௌகீக உபாசகர்கள் அடுத்தவர் மண்ணை ஆட்டையைப் போடுவதுடன், அதற்கு தன் நோக்கில் கதை கட்டுவது புராணம் எழுதுவது, என்பதுடன் பொருத்தமாக ஊர் பெயரையே வேர் மண் சொல்லையே வெட்டி எறிந்து ஆரியப் பெயராக்குவதையும் செய்வதுண்டு. அதன் வழியில் தான் கும்பகோணத்து தலபுராணமும், குடந்தை என்ற பெயரையே கும்பகோணமாக்கியதும். மயிலாடுதுறையை ‘மாயவரம்’ என்றும் திருமுதுகுன்றத்தை ‘விருத்தாசலம்’ என்றும் திருகு வேலை செய்தது போல பெயரிலேயே புகுந்து கலக்கும்போது குளத்தை கலக்க எம்மாத்திரம்? கும்பகோணம் விசுவநாத கோவில் தேவாரப்பதிகத்தில் கூட “குடந்தை’’ என்றே வந்துள்ளது. திருமழிசையாழ்வார் பாசுரத்திலும் “கடந்த கால் பரவி காவிரிக்கரை குடந்தையும் கிடந்தவாறே எழுந்திருந்து பேசு வாழி கேசனே! என்று வருகிறது. பக்தியே ஆனாலும் சரி, சரக்கு என்னதாய் இருந்தாலும், படத்துக்கு தமிழில் பெயர் வச்சாலாவது போதும்! என்ற கோடம்பாக்கத்து சுதந்திரம் கூட ஆரியக் கற்பனையில் இல்லை.

அவிழ்த்து விடப்படும் பெயர்களுக்கு மட்டுமல்ல, ஊரை பார்ப்பன அடையாளமாக்கும் கட்டுக் கதைகளுக்கும் சைவ வெள்ளாக் கூட்டணியே சாதிக் களத்தில் நிற்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ன் தருண் விஜய்க்கு தமிழ் அடையாளம் கொடுக்கும் தமிழ் ஆழ்வார்கள் இப்போதும் இருக்கிறார்கள். பார்ப்பனர்களால் மட்டும் பார்ப்பனியம் உயிர் வாழ்வதில்லை என்பதற்கு கும்பகோண புராணமும் சான்றாக இருக்கிறது. வடமொழியில் புனைந்து விட்ட புராணத்தை தமிழ் மக்களுக்கு அடையாளமாக்க சைவ வெள்ளாளக் கூட்டணியின் கைங்கர்யத்தை புரிந்து கொள்ள “மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரத்தில் உ.வே.சா எழுதியிருக்கும் இந்த நிகழ்வுகளைப் பாருங்கள்,’’ அக்காலத்தில் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுருநாதபிள்ளை என்பவரும், பல சைவப் பிரபுக்களும் கும்பகோண புராணத்தை இக்கவிஞர் தலைவரைக் கொண்டு தமிழ்ச் செய்யுளாக இயற்றுவிக்க வேண்டுமென்று எண்ணினார்கள். அவர்களுடைய வேண்டுகோளின்படி குரோதன வருஷம் (1865) இவர் திருவாவடுதுறையிலிருந்து கும்பகோணம் சென்று பேட்டைத் தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தை தம்முடைய இருப்பிடமாகக் கொண்டு பரிவாரங்களுடன் இருந்தார். கும்பகோண புராணத்தை வடமொழியிலிருந்து முதலில் தமிழில் வசனமாக மொழிபெயர்த்து வைத்துக் கொண்டார். அவ்வாறு மொழிபெயர்த்ததற்கு உதவியாயிருந்தவர்கள் ஸ்ரீ சங்கராச்சாரியர் மடத்து வித்வானாகிய மண்டபம் நாராயண சாஸ்திரிகள் முதலியவர்கள். பின்பு புராணத்தை இவர் செய்யுள் நடையாக இயற்ற ஆரம்பித்தார்… (பக்: 259, 5-ஆம் பதிப்பு 2014, டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல் நிலையம்) இப்படி பார்ப்பன வெள்ளாள கூட்டுக் கலவையுடன் கும்பகோணத்து புராணம் ரீ மேக் ஆனது. இதுவும் அவாளின் மேக் இன் இந்தியா தான்! எனவே கும்பகோணத்து தீர்த்தக் குளங்கள் சாதாரண தீர்த்தக் குளங்கள் அல்ல. வரலாற்றையும், மக்களையுமே ‘தீர்த்த குளங்கள்’.

என்னைக்கோ கும்பகோணத்தின் காபி ருசியிலேயே வளர்ந்த ஜீவராசிகளின் நாக்கு நீளத்தை நம்பி இன்றும் தேசிய நெடுஞ்சாலை kumbakonam-cofeeஓரங்களில் ‘கும்பகோணம் டிகிரி காபி’ என்று பெயரை வைத்தே ஏமாற்ற முடியுமென்றால், ‘கும்பகோணம்’ என்பதையே பிராண்ட் வேல்யூவாக ஆக்கியிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தின் வெற்றிக்கு காரணம் பார்ப்பன ருசி, சூத்திர நாக்கு என்றால் மிகையில்லை. மடாதிபதிகளின் மகா சன்னிதானங்களின் கைங்கர்யம் மட்டுமல்ல, இலக்கிய சன்னிதானங்களும் கும்பகோணத்து காபி கடைகளையும், கோயில் தீர்த்தங்களையும், இசை, நாட்டியங்களையும் எழுதி உசுப்பேற்றினர். கும்பகோணத்து சீவல், திருவையாறு தாம்பூலம், தஞ்சாவூர் அசோகா என டிகிரி காபியில் மூழ்கி, தலைவாழை மேய்ந்து இலக்கிய எச்சில் ஒழுகினர். ஏதோ கும்பகோணம் என்றாலே கொண்டாட்டம், மகிழ்ச்சி, அழகு என்று இவர்கள் ஏற்றிவிட்ட பாவத்தை எந்த மாமாங்குளமும் தாங்காது!

கும்பகோணம் மட்டுமல்ல, தஞ்சை மாவட்டம் முழுக்கவும், தலம், மூர்த்தி, தீர்த்தம், மடம், ஆதினம் என்று சூழ்ந்திருந்த இடமெங்கும் பண்டைய சோழ மன்னர்களின் ஆட்சியில் பார்ப்பனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட பிரம்ம தேயங்கள், மடம், கோவிலுக்கு வழங்கப்பட்ட இறையிலிகள் என்ற நிலங்களில் கொடூரமாக சுரண்டப்பட்ட கூலி விவசாயிகளின் மரண ஓலம்தான், கோவில் மணிகளைத் தாண்டி காதில் ஒலிக்கிறது. பிற்காலத்தில் தேசிகர், மூப்பனார், வாண்டையார், நாயுடுக்கள், வெள்ளாளர் என பண்ணையார்களின் கீழே கடுமையாக வேலை வாங்கி வாரம், குத்தகை என அளந்து கொடுத்துவிட்டு வற்றிய வயிரோடு, எதிர்த்துக் கேட்டால் சவுக்கடி வலிக்க, சாணிப்பால் ஊற்றி பட்டபாட்டை நினைத்தால் உழைக்கும் மக்களுக்கு குறிப்பாக தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளுக்கு இவைகள் கோவில் நகரமாக இல்லை, ஆயுள் சிறையாக இருந்தது. தஞ்சை மாவட்டத்திலேயே இவர்களின் உழைப்பை உண்டு கொழுத்த இலக்கியவாதிகள், வேத வியாசகர்கள், தத்துவ போஷினிகள் யாராவது இந்த கொடூர பக்கங்களை கும்பகோணத்து பாவங்களாக காட்டியிருக்கிறார்களா? குறைந்தபட்சம் பட்டுநூல் நெசவாளர்களின் நடுத்தர வர்க்க இருப்பை பேசும் எம்.வி. வெங்கட்ராமை விட அக்கிரகாரத்து பாலியல் நெளிவு சுளிவுகளை அனுபவமாக்கித் தரும் தி.ஜா.ரா. வை அல்லவா திகட்டாத தெள்ளமுதாய் படையல் போடுகிறார்கள். இத்தகைய இலக்கிய பாவங்களும் சேர்ந்த கும்பகோணத்தின் உண்மை முகத்தை துல்லியமாக படம் பிடித்து காட்டுவார் தந்தை பெரியார். “சாதாரணமாக கும்பகோணம் ஒரு அழகான பட்டணம் என்றோ, சுகாதார வசதியான பட்டணமென்றோ வேறு ஏதாவது வழியில் மக்கள் அறிவுக்கோ, தொழிலுக்கோ, பயன்படத்தகுந்த விசேசம் பொருந்திய பட்டணமென்றோ யாரும் சொல்லிவிட முடியாது… அதில் வசிக்கும் மக்களோ பெரும்பாலோர் பார்ப்பனர்களும், மேல்சாதி மிராசுதாரர்களுமாகும்.’’

“பார்ப்பனர்கள், மிராசுதாரர்கள் இரண்டு கூட்டமும் சிறிதாவது சரீரத்தினால் உழைக்காமல் ஏழைகள், உழைப்பாளிகள் ஆகியவர்களின் பாட்டினாலையே வாழ்த்து வருகிறார்கள். இதைத் தவிர மற்றபடி இந்த ஜில்லாவுக்கும் கும்பகோணத்துக்கும் வேறு உண்மையான யோக்கியதை ஒன்றும் கிடையாது…’’ (குடியரசு தலையங்கம் 12.2.1933) என்ன ஒரு துல்லியம் உழைக்கும் மக்களின் பார்வையில் உண்மையை போட்டுடைக்கிறார் பெரியார்.

chola-hirstoryமக்களாட்சி என்று சொல்லக்கூடிய காலத்திலேயே இதுதான் நிலைமை என்றால் மன்னராட்சியில் ஊர்களின் யோக்யதை எப்படி இருந்திருக்கும்? ‘இவர்களுடைய வடமொழிப் புலமையையும், சீலத்தையும் கண்டு மகிழ்வெய்திய பொதுமக்கள் அன்னோரின் நல்வாழ்வின் பொருட்டு ஊர்ப்பொது நிலங்களுள் சிலவற்றை வேதவிருத்தி, பட்டவிருத்தி, பாரத விருத்தி, புராண விருத்தி என்ற பெயர்களோடு இறையிலி நிலங்களாக அவர்கட்கு வழங்கிப் பெரிதும் ஆதரித்து வந்தனர் என்பது பல கல்வெட்டுகளால் நன்குணரக் கிடக்கின்றது. அன்றியும் திருக்கோயில்களில் நாள்தோறும் உச்சியம் போதில் பார்ப்பனர்களுக்கு உணவளிக்கும் பொருட்டு அரசர்களும், அரசியல் தலைவர்களும் பிற செல்வர்களும் நிவந்தங்கள் வழங்கியுள்ளமை அறியத்தக்கதாகும்’ என்று அறியத் தருகிறார். சி.வை. சதாசிவபண்டாரத்தார். (நூல்: பிற்கால சோழர் வரலாறு).

பொதுமக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் ஒரு படி நெல் கூலி உயர்வாகக் கேட்டால் ஆளையே கொளுத்தும் ஆதிக்க கும்பல் தான் மக்களின் சொத்தை கோவிலின் பெயரால் பார்ப்பனர்களுக்கு தானம் செய்துள்ளது. நாகர்கோவில் அருகே உழைக்குடி விளை எனும் குடியானவர் கிராமம் உள்ளூர் அரசனால் கையகப்படுத்தப்பட்டு பார்வதிபுரம் என்று பெயரிடப்பட்டு பிராமண மையமாக மாற்றப்பட்டது. செலவுக்கு வளமானதும், பாரியதுமான நிலம் ஒதுக்கப்பட்டது என்கிறது கி.பி. 866-ன் பார்வதிபுரம் சாசனமும் கி.பி. 1125-ன் திருவல்லம் கோயில் சாசனமும். (தமிழ்நாட்டு வரலாறு, கே. ராஜய்யன்).

பார்ப்பன மேலாண்மைக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த மன்னர்கள் மக்களின் மீதோ, தலைவரி, கால்வரி, முலைவரி, முடிவரி, மீசைவரி, சாணார் வரி, வாள் வரி, தாலிவரி, தலைப்பாகை வரி, வெல்ல வரி, ஈழம் பச்சை, தென்னல் திருகு வரி, கூடை வரி, தகன வரி, மரண வரி என பிடுங்கி பெற்றுள்ளனர். (The Dravidian languages – A Social Historical Study, M. Imanuvel, Nagarcoil, 2002). இதுமட்டுமல்ல, திருவாலங்காட்டு வேதாரணி ஈசுவரர் கோவிலுள்ள மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டு மடமொன்றின் நிலங்களில் பயிர் செய்ய ஆண், பெண் அடிமைகள் விற்கப்பட்டதை குறிப்பிடுகிறது. மக்களையே கோயிலுக்கும், பார்ப்பனர்களுக்கும் மடத்திற்கும் அடிமையாக்கியிருக்கிறது சோழப் பேரரசுகள்.

பழைய பாணியில் குலத்தையே ‘இசைவுத்திட்டாக’ எழுதி வாங்க முடியாததால் குளத்திலாவது போட்டு அமுக்குவோம் என்பதுதான் மகாமகத்தின் நீட்சி. அந்த காலம் மாதிரி ஓசியில் உழைப்பை வாங்க முடியாது பாவ புண்ணிய பயமுறுத்தல் காட்டி கையிலிருக்கும் காசையாவது உண்டியலில் சேர்க்கலாம், தட்டில் வாங்கலாம் என்று சந்தைப் பொருளாதாரத்திற்கேற்ற பார்ப்பன இறையிலிகள் தான் கோவில் திருவிழாக்கள்! மகாமங்கள்! தமிழ் மன்னர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டு கோயிலைக் கட்டிய உழைக்கும் மக்களையே உள்ளே விடாமல் தூரத்தில் நின்று கோபுரத்தை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள் என்று உயரமான கோபுரங்களை கட்டுவித்து ‘கோபுர தரிசனம் பாவவிமோசனம்’ என்று பார்ப்பனர்களுக்கு செங்கோல் பிடித்து சுரண்டலின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துபவர்கள்தான் சோழ மன்னர்கள், உத்திராட்சயை உருட்டிய மடாதிபதிகளும், சூத்திர ஆதிக்கசாதி பண்ணைகளும், கோவில் நகரங்களின் கொடூர முகங்கள் இப்படிப்பட்ட இதை கோவிலின் பெயரால் அடையாளப்படுத்தி உயர்த்திப் பிடிப்பது நவீன ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் கட்டுப்படுத்தும் கலாச்சார உளவியலாகும்.

வரலாற்றில், அரசன், பார்ப்பனர், வெள்ளாளக் கூட்டணியின் அதிகாரம் மீது, கொடிய அடக்குமுறை மீது குகையிடிக்கலகம் செய்த இடங்கை, வலங்கை சண்டை வராதிருக்கத்தான் கோயில், சத்திரமும் கும்பகோணத்தில் பெருகின. அதுமட்டுமில்லாமல் தஞ்சை மாவட்டத்து விவசாயிகள் உழைத்து உருவாக்கும் உபரியை சுருட்டிக் கொள்ளவும் பாடல் பெற்ற தலங்கள் தேவைப்பட்டன. மக்களின் உழைப்பையும், உடமைகளையும் தட்டிப் பறித்து ஒட்ட உறிஞ்சிய வலி தெரியாமலிருக்க மடத்துல தின்னுக்க, சத்திரத்துல படுத்துக்க என வழிகாட்டப்பட்டது. அதிலும் சாதிக்கேற்ற நீதி நிலவியது. “மகாமகக் குள கீழக்கரை சிவன் கோவிலில் துவாதசிகளில் பலருக்கு சோறு போடுவார்கள். வெற்றிலைச் சீவலும், காலனா தட்சினையும் கொடுப்பார்கள். சத்திரா போஜனா மடா நித்திரா என்ற வசனமும் உண்டு… இரவில் கம்மென்று மோர் சாதமும் ஊறுகாயும், தினம் அம்மாமிக்கும் பாட்டிக்கும் பலகாரத்திற்காகச் செய்த இட்லி, தோசை, உப்புமா, பிடி கொழுக்கட்டை, அடை போடுவார்கள் வயிறு நிரம்பியது. வேறு கவலைகளும் தெரியவில்லை” என்று கரிச்சான் குஞ்சின் ‘பசித்த மானிடம்’ நாயகன் கணேசன் காட்டும் கும்பகோணம் வேறு, இது உறிஞ்சி வாழும் கும்பகோணம். உழைத்து வாழும் தஞ்சை மாவட்ட மக்கள் நிலையோ வேறு. 1947-இல் கம்யூனிச விவசாய சங்க தலைவர் தோழர் சீனிவாச ராவ் காட்டும் காட்சி இது.’’

seenavasarao
தோழர் பி.சீனிவாசராவ்

பண்ணையாட்களெல்லாம் பெரும்பாலும் ஆதி திராவிட மக்களே, இவர்கள் நாள் முழுவதும் வேலை செய்தால், 1/2 மரக்கால் நெல்தான். அதாவது பட்டணம் படியில் ஒருபடி நெல்தான் அளந்து கொடுப்பார் மிராசுதார். சமீபத்தில் தான், இவர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு பண்ணையாளர் குடும்பம் முழுவதற்கும் வருசத்தில் மொத்த வரும்படி 160 முதல் 170 ரூபாய் வரை கிடைக்கிறது. இது குடும்பத்தின் மொத்த வருமானம் என்பதை மறந்து விடாதீர்கள்…) பண்ணையாட்களும் அவர்களுடைய மனைவி மக்களும் நிலத்துடன் பிணைக்கப்பட்டு பிறப்பிலேயே அடிமைகளாக இருக்க வேண்டியுள்ளது. பண்ணையாட்களுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் தினம் ஒரு வேலைதான் சுடுசோறு கிடைக்கும். சுடுசோறு என்று சொல்லுவதை விட சுடுகஞ்சி என்று சொல்லுவதே பொருத்தம். பருப்பு இல்லாமல் சொத்தைக் கத்தரிக்காயைப் போட்டு, கழுநீர் தண்ணீர் போல தயாரித்திருப்பார்கள். அதற்கு சாம்பார் என்று பெயரிடப்பட்டிருக்கும். மற்ற இரண்டு வேலைகளிலும் பழைய கஞ்சியும், உப்பு போட்ட நீராகாரமும் தான், இறைச்சி வாங்க அவர்களுக்கு சக்தியில்லை. ஏன், மாதத்திற்கு ஒரு தடவை கருவாடு வாங்கக் கூட சக்தியில்லை. அப்படியிருக்க மாமிசத்தைப் பற்றி பேசுவானேன்! வருசத்தில் ஓரிரு தடவை தீபாவளியன்றாவது இறைச்சி சாப்பிட்டு விட்டால், அது அவர்களுக்கு ஆடம்பரமிக்க ஆர்ப்பாட்ட விருந்தாகும். மிராசுதார்கள் எங்களை சைவர்களாக்கி விட்டார்கள் என்று பண்ணையாட்கள் தமாஷாகச் சொல்வதுண்டு. ஆனால் இந்த தமாஷிற்குள்ளே எத்தகைய சோகத்தை உள்ளடங்கிக் கிடக்கிறதென்பதை நாமறிவோம்… (நூல்: தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன? ப. சீனிவாசராவ்) ஆயிரக்கணக்கான கூலி விவசாயிகளையும், குத்தகை விவசாயிகளையும் இப்படி சோகத்தில் தள்ளிதான் கோயில்கள் நடந்திருக்கின்றன. மடங்கள் சைவத்தை நெய்யால் உருக்குகின்றன. உழைக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் வியர்வை சிந்துவதை நிறுத்தியிருந்தால் கும்பகோணத்தின் அமிர்த கலசத்தோடு கோயில் பார்ப்பன, சைவ மடங்களின் கும்பியும் சேர்ந்து நாறிப் போயிருக்கும்.

கும்பகோணத்தைப் பொறுத்தவரை கோயில்கள் மட்டும் நிறைய அல்ல. கொசுக்களும் நிறைய. கொசுக்களின் நகரம் என்றும் சொல்லலாம். எண்பதுகளில் கூட யானைக்கால் நோயும், தொழுநோயும் கூட கோயில் நகரத்தின் திவ்ய தேச விசேசங்கள்! பாடல் பெற்ற தலங்களின் பகவான்களால் தீர்க்க முடியாத பெருவியாதியை தொழுநோயை முத்துபிள்ளை மண்டபத்தின் கிறித்துவ ஆஸ்பத்திரிதான். தடுத்தாட் கொண்டது. உலகின் பாவத்தை ஒழிக்கப் போவதாய் கனைக்கும் ஜகத்குரு என்ற சங்கரமடத்தால் ஒரு கொசுவைக் கூட ஒழிக்க முடியவில்லை. கொசு மருந்தடிக்கும் துப்புரவு தொழிலாளிகளைத்தான் மக்கள் தெய்வமாய்த் தேடினர்.

கோபுரங்களின் மறைப்பை விலக்கிப் பார்த்தால் தான் ஊரின் உண்மை வரலாறு தெரியவரும். ‘‘வருக தெள்ளமுதே, வருக செங்கரும்பே, வருக செந்தாமை மகளே, வருக பொற்கொம்பே..’’ என சாரங்கபாணி கோமளவல்லித் தாயாருக்கு கோட்டையின் கோமளவல்லி ரேஞ்சுக்கு தலபுராணத்தில் கட் அவுட் வைத்த பார்ப்பன சைவ பரிவாரம் ஊரை வாழவைக்கும் உழைக்கும் மக்களைப் பாடாதது வியப்பில்லை. கோபுரங்கள் மறைத்த உண்மைகள் அவைகள்.

இப்போது நினைத்தாலும் குடந்தையின் அதன் சுற்றுப்புறங்களின் கள வரலாறு உண்மையான தல வரலாற்றை என்னுள் அலைஅலையாக எழுப்புகிறது. கும்பகோணத்தைப் பற்றிப் பேசினால் அந்தகால ‘சூத்திர நாக்கு: பார்ப்பன ருசிகளுக்கு’ பஞ்சமி அய்யர் காபி கிளப்பும் பொற்றாமரைப் பகுதி கொழுந்து வெற்றிலையும் நினைவுக்கு வருகிறது. ஆனால் பஞ்சமி அய்யர் காபி கிளப்புகள் போல பல கடைகளுக்கு பால் கொண்டுவர சூரியன் விழிக்கும் முன்னே கண் விழித்து 5 கிலோ மீட்டர், 7 கிலோ மீட்டர் சுற்றளவில் பம்பப்படையூர், பட்டீசுவரம், முளையூர், கொள்கை, கோவிந்தகுடி போன்ற ஊர்களிலிருந்து சைக்கிளில் பால்கேனைக் கட்டிக் கொண்டு விலா எலும்பு வியர்த்து வடிய தடதடவென்று குலுங்கும் சாலைகளில் வைக்கோல் பிரியால் பால்கேனை மூடி சட்டையின் மேல் பட்டன்களை அவிழ்த்துவிட்டு நெஞ்சுக் காற்று சூடேறி விரையும் பால் வியாபாரிகளின் சைக்கிள் மணி காதுகளில் ஒலிக்கிறது. இந்த சைக்கிள் மணி இல்லையேது ஏது கோயில் மணி! அபிசேகம்!

வாழை மட்டையில் வாகாக மடித்து காம்புகள் கணக்கு வெளியே தெரியும்படி கிழியாமல் மடித்து வெற்றிலைகளை அடுக்கி, தன்முகம் வியர்வையால் கழுவி வெற்றிலையில் தண்ணீர் தெளித்து வெற்றிலை நரம்புகளுக்கு விரல் நரம்பால் உயிரோட்டம் பாய்ச்சும் பெரும்பகுதியான அந்த இசுலாமியத் தொழிலாளர்கள் இல்லையென்றால் கும்பகோணத்து வெற்றிலைக்கு உயிர் ஏது?

சக்கரைப் படித்துறையும், காவிரித் தீர்த்தமும் புனிதம் என்று கை நனைப்பவர்களைப் பார்த்து காவிரியே நகைக்கும். அதே காவிரி பாலக்கரையில் ஊர் உறங்கும் நேரத்திலும், முட்டைக்கோசு, பீட்ரூட், வெங்காய மூட்டைகளை இறக்கி, முழு நிலாவையும் ஒரு மூட்டையாக காவிரியில் இறக்கியது போல நீரில் நிலா களைந்து வியர்த்த உடலை நினைக்கிறானே, அந்த சுமை தூக்கும் தொழிலாளிகள் கை பட்டே காவிரி புனிதமடையும்.

m-v-venkatram-1
எம்.வி.வெங்கட்ராம்

தலைச்சுமை வியாபாரிகள் தயாராகி தேனீர் கடையில் நிற்கையில், அத்தனைப் பேர் கணக்கையும், தலையாட்டி மனதில் வாங்கி, ‘தர்’ என்ற ஓசையோடு கீழிருக்கும் தகரக் குவளையில் தலைக்கு மேலே தூக்கிய தகரக் குவளையில் வளைத்து ஊற்றும்போது, திடீரென ஒரு நிமிடம் தேநீர் செடி அசைவது போல தெரியும். உழைப்பின் உன்னதத்தை விடியல் சூரியனும் வேடிக்கைப் பார்க்கும். தாராசுரத்திலிருந்து நான் கல்லூரிக்கு நடந்து போகையில் போகிற வழியெங்கும் எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளிகள் குடம், அடிக்கும் ஓசை உழைப்பின் ஓசையாய் என்னுள் இறங்கும். அந்த நேரம் நாம் என்ன வாக்கியம் நினைக்கிறோமோ அதையே அடிக்கணக்கில் திரும்பச் சொல்வது போல அது ஒரு உணர்வைத் தருவதுண்டு. அதை உழைப்பின் ரிதம் என்பதா? எந்த இலக்கியங்களும் சொல்லித் தராத வர்க்கத்தின் பாடலை அது என்னுள் விதைத்தது. பாத்திரம் தயாரிக்கும் அந்த உழைப்பாளிகளின் மூச்சோடு வெளிவரும் வெப்பக் காற்றும், பல பேர் சேர்ந்து ஒரே இடத்தில் தகடுகளைத் தட்டும் ஓசையும் தான் ஊரின் உயிர் துடிப்பு. கரி படிந்த முகத்தோடு அன்றாடம் வேலை முடிந்து வருகையில், பக்கத்து குடியிருப்பில் இருந்த எனக்கு கடலை பக்கோடா வாங்கி வரும் அவரை கரி ‘மாமா’ என்றே அழைத்திருக்கிறேன். சிறு தொழில்களை வாழவைத்த இந்தத் தொழிலாளர்களின் கைகள்தான் குடந்தையை உருவாக்கியவை!

பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சையின் போதெல்லாம் எங்கள் ஊரான தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலுக்கு அமைதியாக இருக்கும் என்று படிக்கப் போனதுண்டு. ஆனால் மண்டபங்களின் வவ்வால் வாடையும் சோழப் பேரரசின் அந்தப் பிரம்மாண்ட தனிமையின் மர்மமும், பேசத் துடிக்கும் சில கற்சிலைகளின் துயரமும் என்னை அங்கே இருக்க விட்டதில்லை. பெரும்பாலும் கோயிலுக்கு வெளியே வருகையில் இரும்பு கடப்பாறைகள் நட்டு பட்டு நூல் பிரித்து சிக்கெடுத்துக் கொண்டிருக்கும் தாராசுரம் சவுராஷ்ட்டிர நெசவாளர்களின் உழைப்புக் களம் என்னை ஈர்த்து விடும். தம்பி போய் படிப்பா! என்று அவர்களின் அக்கறையைத் தாண்டி அவர்கள் குடும்பம் குடும்பமாக ஈடுபடும் வேலை கவனிக்க வைக்கும். சோழப் பேரரசின் ஐராதீஸ்வரர் கோயிலைச் சுற்றி அந்த ஏழைப் பேரரசுக் குடும்பங்கள் நாள் முழுக்க முகுது தண்டு முறிய உழைக்கும் காட்சிகள் புளிய மரங்களின் நிழல் எங்கும் விரியும். தொலைவிலிருந்து பார்த்தால் அவர்களின் ரத்த நாளங்களையே எடுத்து உலர வைத்தது போல இருக்கும். கும்பகோணம், தாராசுரம், திருபுவனம், அம்மாசத்திரம் என்று சுற்றுப்புறங்களில் உடம்பும் ஒரு நூலாக வெளியும் இவர்களின் அன்றைய அலுப்புக்கு மருந்து ஆனை மார்க் சுருட்டும், எம்.ஜி.ஆர். சினிமாவும்தான். “இந்தக் கஷ்டத்திலும் எத்தன புள்ள பாரு” என்று அவர்களைப் பார்த்து சிலர் கருவுவது உண்டு. உழைப்பிற்கு எண்ணற்ற கைகள் தேவைப்படும் அவர்களின் வாழ்க்கைச் சூழலை அறியாத திண்ணைப் பேச்சு கும்பகோணங்கள் அது! நூல் விரிக்கும் அளவுக்குக் கூட வீடு இல்லாததால் வெளியே நூல், சாயம் பார்ப்பதும் வீடுகளுக்குள் பெருங்குடும்பமாக அவர்கள் மடித்துப் படுத்துக் கொள்வதுமான அந்தத் தொழிலாளிகள் இல்லாவிடில் சாமிகளுக்கு ஏது சரிகைப் பட்டு! மாமிகளுக்கு ஏது மடிசார் கட்டு!

தாராசுரத்தில் எம்.எஸ். ஸ்டாலின் என்ற R.I.M.P ஒரு டாக்டர் இருந்தார். அனுபவ வைத்தியர். அவர் தி.க.காரர் பெரியார் படம், புத்தகங்களை வருபவர்கள் பார்வையில் படும்படி வைத்திருப்பார். பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகங்களைத் தாண்டி மக்களின் கண்களுக்கு புத்தகங்களைக் காட்டியது அந்தப் பகுதியில் அவர்தான். பார்ப்பனியம் பூஜைகளையும், விபூதியையும் காட்டி புத்தகங்களை மறைத்த காலத்தில் ஊரில் அவர் மட்டுமின்றி பல முடிதிருத்தும் கடைகளில் பெரியார் நூல்கள் மூளையைத் திருத்தும். இவர்களின் பங்களிப்பு விளம்பரமில்லாத சமூகத் தொண்டு. பார்ப்பனர்களும், மடாதிபதிகளும் தீபாராதனைகளைக் காட்டி கண்ணைக் கட்டும் காலத்தில் கண்களைத் திறந்த இவர்கள் அல்லவா கும்பகோணத்தின் குரு பரம்பரைகள்! அதுவும் மண்ணில் விளையாண்டு, சொறி சிரங்கு வந்தபோது ஸ்டாலினிடம் போக அவர் புண்ணைத் துடைக்கையில் அலறினேன். “ஏண்டா பல ஆண்டுகளாய் நம்ம மேல இருக்குற பார்ப்பன சிரங்கையே பொறுத்துகிட்டுருக்கோம், இந்த சொறிசிரங்கு எரியூதாடா? இத விட பெரிய எரிச்சல் அது, அதையே பொறுத்துக்கிட்டு இருக்கோம்! இது போயிடும், அத என்ன செய்ய போறோம்… ஹூம் சொல்லுடா?’’ என்று பேசிக் கொண்டே மருந்து போட்டு, மாத்திரை கொடுத்தது நினைவுக்கு வந்து போகிறது. அது மட்டுமல்ல ஊசி போடும்போது ஆ… என்று சிலர் கத்தும்போது, ஏண்டா! அத்தன ஊசியக் குத்திக்கிட்டு காவடி போட்டுக்கிட்டுப் போற இப்ப கத்துற? என்று இடித்துரைப்பார்! இதில் வியப்பு என்னவென்றால் அவர் தி.க. நாத்திகர், பகுத்தறிவுவாதி, பகுதி மக்களுக்கோ அவர் கைராசி டாக்டர்.

tarun-vijay-magamagam
மகாமகத்தில் ஆர்.எஸ்.எஸ் தருண் விஜய்

குருஸ்தலம், ராகுஸ்தலம், கேதுஸ்தலம் இப்படி கும்பகோணத்தை சுற்றி இருக்கும் பல ஊர்களும் விவசாயிகளின் வேலைக்களம்தான். இந்த விவசாயிகள், சிறு தொழிலாளிகள், வாகன ஓட்டுநர்கள், தெருவுக்கு கீரை கட்டு சுமக்கும் பெண்கள், பொற்றாமரைக்கும், மாமாங்குளத்திற்கும் காலரா வராமல் தடுக்கும் நகர சுத்தி தொழிலாளர்கள் இவர்கள்தான் உழைக்கும் கும்பகோணத்தின் தலைகள்! இவர்கள் இல்லாமல் இவர்களைப் பற்றி பேசாமல் என்னடா தலபுராணம்! இவர்களை அடிமைப்படுத்தும், சுரண்டும் சூழலை எதிர்க்காமல் ஊர் உருப்படுமா? எத்தனை மகாமகம் குளித்தாலும் பாவம் போகுமா? “சாமி கும்பிடுவதற்காக ஏன்? பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க வேண்டுமா?’’ என்று பெரியார் கேட்ட கேள்வியில் எவ்வளவு நியாயமும், உண்மையும் இருக்கிறது. பெரியாராவது பகுத்தறிவுவாதி. பார்ப்பனர் காளமேகப் புலவரே, “தோளை முறித்ததுமன்றி, நம்பியானையும் கூடச் சுமக்கச் செய்தாய்; நாளை இனியார் சுமப்பார். எந்நாளும் உன் கோயில் நாசந்தானே!’’ என கோயில் நாசமாய் போகட்டும் என்று குருக்களையும் பல்லக்கில் சுமந்ததை நொந்து பாடியுள்ளார்.

பார்ப்பன இந்துவெறியை பல்லக்கில் ஏற்றி நம் தோள்களை முறிக்கும் தொலைநோக்குத் திட்டத்தில் ஒன்றுதான் மகாமகத்துக்கு வடக்கிலிருந்து அகோரிகளை அழைத்துவருவது, துறவியர் மாநாடு நடத்துவதெல்லாம், மெல்ல மெல்ல வடக்கே கும்பமேளா போல திருவிழாக்களை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆரிய பரிவாரத்தின் கைக்கருவிகளாக தீட்டிக் கொண்டு மக்களை இந்து மதவெறிக்குள் திரட்டுவது என்பதுதான் அவர்களின் திட்டம். சாதாரண மக்களின் கடவுள் நம்பிக்கையை மெல்ல மெல்ல இந்துமதவெறி நம்பிக்கையாக மாற்றும் காவியுலக பாவிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற உழைக்கும் வர்க்கத்தின் விசுவரூப எழுந்தருளை வேண்டி நிற்கிறது உலகம்!

– துரை. சண்முகம்

    • காஞ்சி ‘காம’ கேடி பீடாதிபதி சதி வரலாறு மன்னிக்கவும் ஸ்தல வரலாறு……காத்திருங்கள் சீனு அங்கிள்…..

      • சீனு அங்கிள் மூளையை கழட்டி வச்சிட்டுவந்துட்டேளா? எஸ்தர் கிறிஸ்தவ பேர்னதும் படிகாமலே கமெண்ட்ஸ் போடறேளே..செத்த படிங்கோ…..(மூளையில்லாத மேட்டர வெளியே சொல்லாதேள்-முண்டம்பாஆஆஆ…தேவையா நோக்கு……….

        • தம்பி கருப்பு I didnt comment anything about எஸ்தர் அக்கா.இல்லாததை கமெண்ட்ஸ் என்று பெயரால் அநாகரீகமாக போடறேளே.\\மூளையில்லாத மேட்டர வெளியே சொல்லாதேள்//. YOU ARE CORRECT I HAVE TO ARGUE ONLY WITH HUMANS HAVING BRAIN NOT WITH MUD.தேவையா நோக்கு……….

              • அட நட்டு கழண்ட சீனு சொந்தமாக கூட பின்னூட்டம் போட தெரியாதா…..அதிலும் ஈயடிச்சான் காப்பிதானா….(இதையும் கட் & பேஸ்ட் பண்ணிடாதீங்கோ மாமா)

  1. ரத்தமும் சதயுமான கும்மோனம் தோழர்.துரைசண்முகத்தின் வர்கப்பார்வைக்கு தப்பமுடியுமா? அருமை தோழர். நான் பார்த்தறியாத போனதலைமுறையையும் சேர்த்து படமாக ஓட்டியதற்கு நன்றிகள் பல.

  2. OF COURSE APPLICABLE !
    ஆனா ஒன முதுகுல அழுக்குன்னா ஒடனே
    பாய் முதுக பாருங்கிறியே என்ன ஜென்மம் நீ?

  3. மிக அருமை .. பல உண்மைகள் தெரிகிறது. சோழ மன்னர்கள் மக்களை அவ்வளவு கொடுமை படுத்தி உள்ளது தெரிகிறது. அவ்வளவு ஏமாளிகளாக இருந்துள்ளார்கள். பார்பனர்களின் அன்றைய வெறி இன்றும் தொடர்வது வேதனை.

  4. கும்பகோணத்தை அவ்வளவு எளிதாக கடக்க முடிவதில்லை…
    பேருந்தில் ஒரு பெரிசு….எத்தினி நதி கீழ ஓடுது தெரியுமா?ன்னு
    என்னை கேட்டார்….
    தெரியாது…ஆனால், சாக்கடை ஓடுது சாக்கோட்டை வழியான்னு சொன்னேன்…
    பெரிசு கழுத்தை அப்புறம் திருப்பவே இல்லை

  5. சோழர்களை விட பார்ப்பனீயத்தை வளர்த்தவர்கள், ஆதரித்தவர்கள், சாதிப்பாகுபாட்டை ஊக்குவித்தவர்கள், தமிழைக் கோயில்களிலிருந்து அகற்றியவர்கள் எல்லாம் வடுக-நாயக்க அரசர்கள் தான். ஆனால் ஆயிரமாண்டுகள் பின்னோக்கிப் போய் ராஜராஜசோழனைத் தாக்கும் எந்த ‘முற்போக்கும்’ சும்மா வெறும் பேச்சுக்குக் கூட நாயக்க அரசர்களை கொஞ்சமும், குற்றம் கூறுவதில்லை. ஏனென்றால் நாயக்க அரசர்களைப் பற்றி ஏதாவது கூறினால், வடுகர்கள் எல்லாம் வருங்கால முதல்வர் விஜயகாந்தின் தலைமையில் வினவு அலுவலகத்துக்குப் படையெடுத்து வந்து _____ பல்லையுடைத்துக் கையில் கொடுத்து விட்டுப் போய்க் கொண்டேயிருப்பார்கள் என்ற பயம் தான் காரணமே தவிர வேறொன்றுமில்லை. அதற்கு இன்னொரு காரணமும் என்னவென்றால், முற்போக்கு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பெரியாரிஸ்டுகள் என்ற பெயரில் தமிழ் இணையத் தளங்களில் வலம் வருகிறவர்களின் பெரும்பாலானோர், தமிழரல்லாத திராவிட எச்சங்கள். முற்போக்கு, சாதியொழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரில் தமிழர்களின் முன்னோர்களை இழிவுபடுத்தி, , தமிழர்களின் வரலாற்றைக் கொச்சைப்படுத்தி, தமிழ், தமிழுணர்வு என்பன பற்றிப் பேசும் தமிழர்களை நக்கலடித்து, தமிழர்களைத் தமிழர்களாக ஒன்றுபடுவதைத் தடுப்பது தான் அவர்களின் நோக்கம். தமிழர்கள் ஒன்றுபட்டால், தமிழ்நாட்டில் தமக்கு, தமிழரல்லாத திராவிட எச்சங்களின் ஆதிக்கத்துக்கு ஆபத்து வந்து விடும் என்ற பயம் அவர்களுக்கு. மாகமகத்தில் மக்கள் கூட்டத்தை நக்கலடிப்பது போல, மக்காவில் கூடும் மக்கள் கூட்டத்தை நக்கலடித்து துரை சண்முகம் ஒரு வரி கூட எழுதமாட்டார். ஏனென்றால் இந்துமதம் மட்டும் தான் அந்த பேச்சு/ எழுத்துச் சுதந்திரத்தை அவருக்கு அளிக்கும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதற்காக, இந்துமதத்துக்கு ஒரு வரியிலாவது நன்றியைக் தெரிவித்திருந்தார் என்றால் உண்மையில் இவர் ஒரு முற்போக்கு தான் என்று நம்பலாம்.

    • தமிழன் என்று தமிழனாக இருந்தான் என்று அண்ணாத்த கொஞ்சம் சொன்னீங்கனா நல்ல இருக்கும்.
      கள்ளன்,சைவ வெள்ளாளன்,கவுண்டன்,பார்பனன் போன்ற கொளுத்த ஆதிக்க சாதிகளாகவும் பள்ளன்,பறையன் சக்கிலி என்று இழிவுபடுத்தப்பட்ட சாதிகளாகவும் தானே இருந்தான்,இருக்கிறான்.

      மீச மொளைக்காத பயலுவ கூட மூக்குக்கு கீழ தடவிப் பாத்து தேவன்டா கவுண்டண்டா என்று தானே கூவரனுங்கோ தமிழன்னு இல்லையே.

      கம்யூனிஸ்டுகளும் பெரியாரிஸ்டுகளும் தாம், டேய் ஏன்டா இப்படி சாதி பேர சொல்லி இழிந்த வாழ்க்கை வாழறீங்க சாதிய ஒழிச்சு தமிழன்னு சொல்லுங்கடாங்கறாங்க.

      இங்க உமக்கு என்ன எரிச்சல் வேண்டி கிடக்கு? இங்க உண்மையிலேயே மனமுள்ள தமிழர்கள் என்றால் கம்யூனிஸ்டுகளும் பெரியாரிஸ்டுகளும் மட்டும் தான். நீரென்ன தமிழருக்கு அதாரிட்டியா?

      • ஐயா தெரியாதையா! தமிழர்கள் தமிழர்களைப் பற்றிப் பேசுவதற்கும், அவர்களின் மன்னர்களை, வரலாற்றை, மதத்தைக் கொச்சைப்படுத்துகிறவர்களை, தமிழர்களை பிரித்தாள நினைப்பவர்களை எதிர்த்துக் கருத்துத் தெரிவிக்கவும் கூட, தோழர் சிவப்புக்கு எழுதி அனுமதி பெற்றுக் கொண்டால் தான் எந்த தமிழனுக்கும் “அதாரிட்டி” கிடைக்குமென்று உணமையிலேயே எனக்குத் தெரியாதையா. கம்யூனிஸ்டுகளும், பெரியாரிஸ்டுகளும் தான் மானமுள்ள தமிழர்கள் என்று தோழர் சிவப்பு ‘அதாரிட்டியோடு’ கூறுவதால் அது நிச்சயமாக உண்மையாகத் தானிருக்கும்.

        ///கம்யூனிஸ்டுகளும் பெரியாரிஸ்டுகளும் தாம், டேய் ஏன்டா இப்படி சாதி பேர சொல்லி இழிந்த வாழ்க்கை வாழறீங்க சாதிய ஒழிச்சு தமிழன்னு சொல்லுங்கடாங்கறாங்க.///

        இது எதைக்காட்டுகிறதென்றால், தோழர் சிவப்புக்கு கம்யூனிஸ்டுக்களைப் பற்றியும் தெரியாது, பெரியாரிஸ்டுக்களைப் பற்றியும் தெரியாது. கம்யூனிஸ்டுகள் ‘சாதியை ஒழிச்சு தமிழன்னு சொல்லுங்கடா’ என்று சொல்லவில்லை. அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால், ஆபிரிக்க காப்பிரியும் கூலி வேலை செய்கிறான், தமிழ்நாட்டிலும் தமிழன் கூலி வேலை செய்கிறான். ஆகவே இரண்டு கூலிகளும் தான் ஒரேயினம். அதாவது அவர்களின் பார்வையில் எல்லாக் கூலிகளும் ஒன்று தான். தமிழ், மொழி, இனம், வரலாறு எதிலுமே உண்மையான கம்யூனிஸ்டுகளுக்கு அக்கறை கிடையாது. ஆனால் கம்யூனிசக்கொள்கை எதுவுமே நடைமுறையில் சாத்தியமாகாது, அதனால் தான், கம்யூனிசம் பிறந்த நாடுகளிலேயே கம்யூனிசத்தை தூக்கிக் குப்பையிலெறிந்து விட்டார்கள்.

        பெரியாரிஸ்டுகளுக்கும், தமிழ், தமிழர், தமிழினம் எதிலும் அக்கறை கிடையாது. _____உழுத்துப்போன திராவிடம் என்ற மிளகாயை தமிழர்களின் தலையில் தொடர்ந்து எப்படி அரைப்பது என்பது தான் பெரியாரிஸ்டுகளின் கவலையே தவிர, அவர்களும் ‘தமிழன்னு சொல்லுங்கடா’ என்று சொல்லவில்லை. உண்மையில் தமிழர்கள் தமிழன் என்று தன்னை அடையாளப்படுத்தி, நாம் தமிழர்களாக ஒன்றுபட்டு விடுவார்களோ என்பது தான் பெரியாரிஸ்டுகளின் பயம். தமிழர்கள் தம்மைத் தமிழன்னு சொல்லாமல் திராவிடன் என்று சொல்ல வேண்டுமென்பது தான் பெரியாரிஸ்டுகளின் நோக்கம். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் தோழர் சிவப்பு எதையுமே சிந்தித்துப் பார்த்து எழுதுவதில்லை.

      • சிவப்பு….

        //தமிழன் என்று தமிழனாக இருந்தான் என்று அண்ணாத்த கொஞ்சம் சொன்னீங்கனா நல்ல இருக்கும்.//

        இந்தக் கேள்வியிலேயே உங்களுக்கு வரலாற்று அறிவு கொஞ்சமும் இல்லை என்பது தெளிவாக புலனாகின்றது. தமிழன் எப்போது தமிழனாக இருந்தான் என்பதை தெரிந்து கொள்ள நினைத்தால் கொஞ்சமேனும் வரலாற்றை புரட்டிப் பாருங்கள் தெரியும்.

        தமிழர்கள் வரலாற்றில் சாதிய சழக்குகள் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றன, ஆனால் அதை தாண்டி மாற்றார் இந்த மண்ணிற்கும் மொழிக்கும் கேடு நினைக்கும் பொழுதெல்லாம் அனைத்தையும் மறந்து எவ்வாறு ஒன்று பட்டு போராடினார்கள் என்பதை நீங்கள் சிங்களர்களின் முதுகெலும்பை உடைத்து கல்லணை கட்டிய கரி கால சோழன் தொடங்கி நடந்து முடிந்த இந்தி திணிப்பு போராட்டம் வரை அனைத்திலும் காணலாம்.

        கனக விசயரின் தலையினில் கல்லினை சுமக்க வைத்து கண்ணகிக்கு கோவில் கட்டிய எங்கள் சேர மகனாகட்டும் அல்லது காந்தளூர் சாலை களமறுத்து, மலையாளிகளின் சிரம் கொய்த எங்கள் தமிழ் குடியின் “ஜனநாதனான்” ராஜ ராஜ சோழனாகட்டும், எங்கள் தமிழ் குடிகளின் ஒற்றுமை இல்லாமல் நிச்சயம் வெற்றி வாகை சூட முடியாது .

        சம கால வரலாறும் அதைத் தான் நிருபித்தது. தமிழகத்தில் 3 கட்டங்களாக நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், இந்தி திணிப்பை புற முதுகிட்டு ஓட செய்தது, முல்லை பெரியாறு அணையை காக்க 50,000 பேர் ஒன்று திரண்டு போராடி மலையாளிகளின் கொட்டத்தை அடக்கியது என அனைத்துமே, எங்கள் தமிழர்களின் ஒன்றுப் பட்ட வீரத்தின் சமகால சான்றுகள் !!!!!!! மாற்றானை, எதிரியை வெல்வதில் என்றுமே நாங்கள் ஒன்று பட்டு தான் இருக்கின்றோம். தமிழர்களை பிடித்த சாதி என்கிற கொடு நோய் விரைவிலேயே குணம் அடையும். ஆக, வரலாட்ட்று பொருள்முதல் வாதம் என்று வாய் கிழிய வக்கனையாய் பேசினால் மட்டும் போடாது, கொஞ்சமேனும் வாசிப்பும் இருக்க வேண்டும்.

    • //மக்காவில் கூடும் மக்கள் கூட்டத்தை நக்கலடித்து துரை சண்முகம் ஒரு வரி கூட எழுதமாட்டார். ஏனென்றால் இந்துமதம் மட்டும் தான் அந்த பேச்சு/ எழுத்துச் சுதந்திரத்தை அவருக்கு அளிக்கும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதற்காக, இந்துமதத்துக்கு ஒரு வரியிலாவது நன்றியைக் தெரிவித்திருந்தார் என்றால் உண்மையில் இவர் ஒரு முற்போக்கு தான் என்று நம்பலாம்.//

      வியாசன் அவர்களின் இந்த கருத்துக்கு 1000 likes போட்றன்….

      • யாரு எவ்வளவு லைக் போட்டாலும் அதில் விவாதத்தை திசை திருப்பும் கயமைத்தனம் தான் முதன்மையாக இருக்கிறது.

  6. @வியாசன்

    //ஆனா ஒன முதுகுல அழுக்குன்னா ஒடனே
    பாய் முதுக பாருங்கிறியே என்ன ஜென்மம் நீ?// என்று சிலந்தி அவர்கள் கேட்டது உமக்கும் பொருந்துகிறது.
    இசுலாத்தைப் பற்றிய விமர்சனத்திற்கு எத்தனையோ வினவு கட்டுரைகளைக் காட்டுகளாகக் கூறலாம். நீர் படிப்பதில்லையா, படிக்காதது போல் நடிக்கின்றீரா? அதேபோல் கிறித்தவ சமயத்தில் தெரசாவைக் கூட விட்டுவைத்ததில்லை. பெரியார்தாசன் இசுலாமியராக மாறியதையும் கிழித்துத் தொங்கவிட்டுள்ளனர். வடுகர் என்னும் சொல்லாடல் கொண்டு ஏதோ நகைச்சுவை செய்ய முயன்றுள்ளீர். மன்னிக்கவும், சிரிப்பு வரவில்லை. விஜயகாந்த், கட்சி தொடங்கியதிலிருந்தே நேரடியாகத் திரைகிழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார். அதனால் கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்க வேண்டிய தேவை இல்லை.

    இறுதியாக வினவிற்கு வேண்டுகோள் ஒன்று. எழுத்துப்பிழைகள், நிறுத்தற்குறிப் பிழைகள் நிரம்ப உள்ளன. எனவே மிக்க கவனம் செலுத்தவும்.

    கடப்பாறை – கடப்பாரை
    வயிரோடு – வயிற்றோடு

    • வடுகர் என்ற சொல் தான் தெலுங்கர்களைக் குறிக்கும் உண்மையான பழந்தமிழ்ச் சொல். தமிழர்களின் முன்னோர்கள் தெலுங்கு பேசும் மக்களை வடுகர் என்று தான் அழைத்தனர். அதனால் நான் தெலுங்கர்களை நற்றமிழில் வடுகர் என அழைத்தது கார்த்திக்கரனுக்குப் பிடிக்கவில்லை, அதற்கு என்ன காரணம் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் சங்க காலத்திலேயே தெலுங்கர்களை, தமிழர்கள் வடுகர்கள் என்று தான் அழைத்தனர் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. அகநானூற்றில் வடுகர்களை ‘‘கல்லா நீண்மொழிக்கத நாய்வடுகர், என்று குறிப்பிடப்படுகிறது. சோழன் இளஞ்சேட்சென்னி ‘வம்ப வடுகர்களை’ விரட்டியது பற்றிக் கூறுகிறது இந்த அகநானூற்றுப் பாடல்:

      “..எழாஅத் திணிதோட் சோழர் பெருமகன்
      விளங்குபுகழ் நிறுத்த இளஞ்சேட் சென்னி
      குடிக்கட னாகலிற் குறைவினை முடிமார்
      செம்புறழ் புரிசைப் பாழி நூறி
      வம்ப வடுகர் பைந்தலை சவட்டி”

      • சத் சூத்திரர்கள்* என்று தம்மை பெருமையுடன் அழைத்துக்கொள்ளும் ஆறுமுக நாவலரின் மரபில் வந்த யாழ் சைவ வெள்ளாளர்களுக்கு எதற்கு இந்த விவாதம்.. இந்து பார்பனியம் அளித்த பட்டமான “நல்ல தேவு….பையன்” என்ற சொற்கள் உங்களுக்கு இனிக்கும் போது அந்த பார்ப்பனியத்தை தமிழ் நாட்டில் அதிகமாக வளர்த்தவர்கள் சோழர்களா அல்லது மதுரை நாயகர்களா ? என்ற பொங்கல் திருநாள் தொலைகாட்சி விவாதம் உங்களுக்கு எதற்கு வியாசன். வீழ்த்தபடவேண்டியது பார்ப்பனீயம் என்றால் இன்றைய தேவை action தானே தவிர விவாதங்கள் அல்லவே!

        • ஈழத்தமிழர்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் ஈழத்தமிழர்களுக்கெதிராக உளறித்தள்ளும் எத்தனையோ __________ இணையத்திலுண்டு. அவர்களுக்கெல்லாம் எந்த ஈழத்தமிழனும் பதிலளிப்பதில்லை. உங்களைப் போன்ற ஒரு lightweight உடன் எனது நேரத்தைச் செலவிட எனக்கு விருப்பமில்லையேயானாலும் நானும் நீங்களும் ‘அண்ணன்-தம்பியாக’ இந்த தளத்தில் பழகிய பாவத்துக்காக உங்களுக்கு கடைசிமுறையாக விளக்கமும் அறிவுரையும் கூற விரும்புகிறேன். 🙂

          உண்மையில் தமிழர்களின் சாதிப்பிரச்சனை என்பதே சூத்திரர்களாகிய தமிழர்கள், அவர்களில் யார் உயர்ந்த சூத்திரர் என்று ஆளுக்காள் அடிபட்டுக் கொள்வது தான். உதாரணமாக, உண்மையான தமிழர்களாகிய பறையர்கள் தம்மைச் சாம்பவர்கள் என்பதும், வன்னியர்கள் சத்திரியர்கள் என்பதும் போன்றது தான் ஆறுமுகநாவலர் சற்சூத்திரர் என்றதும். ஆகவே சாதி விடயத்தில் யாழ்ப்பாண வெள்ளாளனும், தமிழ்நாட்டு வன்னியனும், பறையனும், தேவனும் ஏனைய சாதிவெறித் தமிழர்களும் (நீங்கள் உட்பட) ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

          முதலில், தமிழ்நாட்டையும் யாழ்ப்பாணத்தையும் அல்லது ஈழத்தையும் ஒப்பிட்டு உங்களையும் குழப்பி, மற்றவர்களையும் குழப்ப முயல்வதை நீங்கள் நிறுத்திக் கொள்ளாது விட்டால், உங்களை எந்த ஈழத்தமிழனும் சீரியஸாக எடுக்க மாட்டான். உதாரணமாக, ஜீ.ஜீ. பொன்னம்பலமும், சேர். இராமநாதன் பொன்னம்பலமும் ஒரே ஆட்கள் என்று நினைத்து நீங்கள் உளறியதை நினைத்தால் எனக்கு இப்பொழுதும் சிரிப்பை அடக்க முடிவதில்லை.

          தமிழ்நாட்டைப் போல் இலங்கையில் பார்ப்பனர்களும் கிடையாது, பார்ப்பன ஆதிக்கமும் கிடையாது. இருக்கிற ஒரு சிலரும், கோயில்களில் வேலை செய்வதற்காக யாழ்ப்பாண வெள்ளாளர்களால் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள், தமிழ்நாட்டுச் சோற்றுத் தமிழர்களைப் போல, பார்ப்பனர்கள் எங்களுக்குப் பட்டம் தருமளவுக்கு நாங்கள் அவர்களை அனுமதிக்கவில்லை. பார்ப்பனர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் வாழும் வடுகர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் கூடத் தான் உங்களை (தமிழர்களை) மதிப்பதில்லை. ஆனால் பெரியாரி(ன்)யத்தின் மூளைச் சலவையால் தமிழ்நாட்டில் அவர்களின் (திராவிடர்களின்) ஆதிக்கத்தையும் அட்டகாசத்தையும் நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்கள், பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்கிறீர்கள். பார்ப்பனீயத்தை வளர்த்து விட்ட வடுக-நாயக்கர்களை, பெரியாருக்காக மறந்து விட்டு, தமிழர்களின் முன்னோர்களை மட்டும் வசை பாடினால், நான் மட்டுமல்ல, எந்த மானமுள்ள தமிழனும் உங்களின் வாதத்திலுள்ள ஓட்டையைச் சுட்டிக் காட்டத் தான் செய்வான். அதைக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையே. உங்களின் மாணவர்களை நினைத்தால் தான் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.

          • ஆறுமுக நாவலர் தம்மையும் , தம் சாதியினரையும் சத் சூதிரர்கள் (நல்ல தெவுடியா பையன்கள்) என்று அழைதுக்கொண்டமைக்ககவா இத்துணை விளக்கம் அளிகின்றிகள் வியாசன். ஆனாலும் அந்த விளக்கத்தில் நீங்கள் அந்த சத் சூதிரர்கள் (நல்ல தெவுடியா பையன்கள்) என்ற ஆறுமுக நாவலரின் கருத்தை ஏற்கின்றிக்லா இல்லையா என்று கூறவே இல்லையே சத் சூதிர வியாசன் அவர்களே!

          • சாம்பவர்கள் என்ற சொல் தமிழ் மக்களில் ஒரு இனத்தை குறிக்குமே தவிர அது ஹிந்து மத நான்கு வருணத்தில் எதனையும் குறிக்காது :

            சாம்பவர்கள் என்ற சொல் தமிழ் மக்களில் ஒரு இனத்தை குறிக்குமே தவிர அது நான்கு வருணத்தில் எதனையும் குறிக்காது என்ற உண்மையை உங்களுக்கு கூற விரும்புகிறேன். பறையர்கள் தங்களை சாம்பவ்ர்கள் என்று அடையாலபடுத்துவ்தில் எங்கு ஹிந்து மதத்தின் நால் வருண பேதம் வருகின்றது வியாசன் அவர்களே? தமிழகத்தின் வட மாவட்டங்களில் பறையர் என்றும், தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை [மறையர்] வள்ளுவ வேளாளர் /ஆதி திராவிடர் என்றே அறியப்பட விரும்புகின்றனர்.சங்க காலத்தில் பறையர்கள், மிகச்சிறந்ததொரு நிலையினை சமூகத்தில் பெற்றிருந்தனர். களப்பிரர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் பறையர்கள் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி அடைந்தார்கள், அதுமட்டுமின்றி பிற (சோழ, பல்லவ) மன்னர்களால் கொடுமை செய்யப்பட்டனர் என ஏ.பி. வள்ளிநாயகம் தன் ஆய்வின் மூலம் எடுத்துரைக்கிறார். பின்னர் பிற்கால பறையர்கள் உழவையும், நெசவையுமே தொழிலாக கொண்டிருந்தனர். பறையர்களில் ஒரு பிரிவினர் “வள்ளுவர்” என்று அழைக்கப்படுவர். இவர்கள் சோதிடத்திலும், மாயாஜாலங்களிலும் பெயர் பெற்று இருந்தனர். அரசர்களின் ஆலோசகர்களாகவும் இவர்கள் பணி புரிந்திருக்கின்றனர்.

            //உண்மையில் தமிழர்களின் சாதிப்பிரச்சனை என்பதே சூத்திரர்களாகிய தமிழர்கள், அவர்களில் யார் உயர்ந்த சூத்திரர் என்று ஆளுக்காள் அடிபட்டுக் கொள்வது தான். உதாரணமாக, உண்மையான தமிழர்களாகிய பறையர்கள் தம்மைச் சாம்பவர்கள் என்பதும், வன்னியர்கள் சத்திரியர்கள் என்பதும் போன்றது தான் ஆறுமுகநாவலர் சற்சூத்திரர் என்றதும். ஆகவே சாதி விடயத்தில் யாழ்ப்பாண வெள்ளாளனும், தமிழ்நாட்டு வன்னியனும், பறையனும், தேவனும் ஏனைய சாதிவெறித் தமிழர்களும் (நீங்கள் உட்பட) ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.//

          • யாழ் பானத்தில் பார்பனர்களின் ஆதிக்கமும் ஹிந்து மத நால் வர்ணங்களும் இல்லை என்றால் அப்புறம் ஏன் ஆறுமுகநாவலர் அவர்கள் சற்சூத்திரர்(நல்ல தெவுடியா பையன்கள்) என்ற சொற்பிரயோகத்தை தன் சாதியினராகிய சைவ வெள்ளாளர்கள் மீது வைக்கின்றார்? தமிழ் மக்களுக்கு எதிரிகளான பாபனர்கள் தான் சூத்திரர்(தெவுடியா பையன்கள்) என்ற பதத்தை தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கின்றனர். அதே சொற்பதத்தை ஆறுமுகநாவலர் அவர்கள் தன் சாதி மீது பயன் படுத்தும் நோக்கம் என்ன? யாராவது தன்னையே, தன் இனத்தையே, தன் சாதி மக்களையே சற்சூத்திரர்(தெவுடியா பையன்கள் ) என்று கூறிக்கொண்ட வரலாறு யாழ்ப்பான சைவ வெள்ளாளரகளை தவிர வேறு யாருக்காவது உண்டா வியாசன்?

            இந்து சாஸ்திரப்படி,“சூத்திரச்சி”என்றால் தாசி, வேசி என்றுதான் பொருள். “சூத்திரன்” என்றால் தாசி மகன், வேசி மகன் என்றுதான் பொருள். இன்னும் சற்சூத்திரர் என்ற பதத்தை வியாசன் ஏற்பார் எனில் அதன் பின்னணியை வியாசன் அவர்கள் தான் விரிவாக கூறவேண்டும்.

            மேலும் வன்னியர்கள் தங்களை என்றுமே சூத்திரர்கள் என்று கூறிக்கொண்டது இல்லையே வியாசன்..அவர்கள் தம்மை சத்திரியர்கள் என்று தானே கூறிக்கொண்டு தம் சாதி பெருமையை , ஆண்ட சாதியாக காட்டிகொள்கிறார்கள்.

            //தமிழ்நாட்டைப் போல் இலங்கையில் பார்ப்பனர்களும் கிடையாது, பார்ப்பன ஆதிக்கமும் கிடையாது. இருக்கிற ஒரு சிலரும், கோயில்களில் வேலை செய்வதற்காக யாழ்ப்பாண வெள்ளாளர்களால் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள், தமிழ்நாட்டுச் சோற்றுத் தமிழர்களைப் போல, பார்ப்பனர்கள் எங்களுக்குப் பட்டம் தருமளவுக்கு நாங்கள் அவர்களை அனுமதிக்கவில்லை.//

          • நீங்கள் கூறுவது போன்று வடுக ரெட்டிகளும், நாயுடுகளும் தமிழ் நாட்டில் பெரும் நிலபரப்பை, கணிசமான நிலப்பரப்பை தனியுடமையாக வைத்து உள்ளார்கள். சரி பிரச்சனை சரியாக நமக்கு தெரிகிறது. அதற்கு தீர்வு என்ன? பிரிட்டிஷ் ஆட்சி ஆளர்கள் அப்படி அதிகபடியாக இருந்த நிலங்களை விவசாய கூலிகளாக இருந்த ஆதி திராவிட மக்களுக்கு பங்கிட்டு அளித்த வரலாறு தமிழ் நாட்டில் உண்டு. அத்தகைய நிலங்களுக்கு நத்தம் புறம்போக்கு என்ற பெயரும் உண்டு. ஆதி திராவிட மக்களை தவிர வேறு யாரும் அந்த நிலங்களை வாங்க உரிமை கீடையாது என்ற சட்டம் புத்தகத்தில் மட்டுமே உண்டு. அத்தகைய நிலங்களை ஜெயா-சசிகலா கும்பல் கூட வாங்கி அனுபவிக்கும் வரலாறு தமிழ் நாட்டில் உண்டு.

            என்ன செய்யலாம் வியாசன். வடுகரிடம் உள்ள அதிகபடியான தமிழ் நாட்டு நிலங்களை கைபற்றி விவசாய கூலிகளான தலித் மக்களிடம் ஒப்படைக்க என்ன செய்யலாம் வியாசன்? தெலுங்கான புரட்சி? நக்சல் பாரி புரட்சி? என்ன தீர்வு வியாசன். வெறுமனே வடுகன் வடுகன் என்று நீங்கள்ஊளையிடுவ்தால் எதுவும் நடக்காது வியாசன். என்ன செய்யலாம் கூறுங்கள்? தமிழ் நாட்டு விவசாய கூலிகளை வெண்மணியில் கொன்று ஒழித்த வடுகர்களை (நாயுடுகளை) பழி தீர்த்த வரலாறு எங்கள் தமிழ் நாட்டு கம்யுனிடுகளுக்கு உண்டு வியாசன்? தமிழ் நாட்டுக்கு வாருங்கள் நடவடிக்கையில் இறங்குவோம் வியாசன்.

          • திரு வியாசன்,

            தெரிந்தே யாராவது தம்மை சத் சூதிரர்கள்-தாசி மக்கள் என்று அழைத்துக்கொள்வார்களா வியாசன்?

            தமிழ் நாட்டில் மக்களை பார்த்து பார்பனர்கள் தான் சூத்திரர்கள் என்று இழிவாக கூறுகின்றார்களே தவிர தமிழ் மக்கள் தம்மை அப்படி தம்மையே கூறி இழிவு படுத்திகொண்ட வரலாறு கிடையாது. 1900களின் தொடக்கத்தில் வடுக சாதிகளான ரெட்டி ,நாயுடு போன்றவர்கள் தான் தம்மை சத் சூதிரர்கள் என்று அழைத்துக்கொண்டு இருந்தார்கள். திரு இராமசாமிநாயகர் அவர்கள் அதாங்க பெரியார் அவர்கள் சத் சூதிரர்கள் என்பதன் தமிழ் பொருள் நல்ல தெவுடியா பையன்கள் என்று விளக்கி கூறிய உடன் அவர்களும் அந்த சொற்களை பயன்படுத்துவதை விட்டுவிட்டார்கள். ஆனாலும் இலங்கையில் யாழ்பாண சைவ வெள்ளாளர்களை பெருமை படுத்துவதாக நினைத்துகொண்டு திரு ஆறுமுக நாவலர் அவர்கள் சத் சூதிரர்கள் என்ற இழிவான சொற் பிரயோகத்தை பயன்படுத்தினார். அதனை இன்னும் நீங்கள் தொடர்ந்து பயன் படுத்துவது என்பது இலங்கை தமிழ் மக்களை கீழ்மை படுத்தும் செயல் தானே? ?

            தெரிந்தே யாராவது தம்மை சத் சூதிரர்கள்-தாசி மக்கள் என்று அழைத்துக்கொள்வார்களா வியாசன்?

            //உண்மையில் தமிழர்களின் சாதிப்பிரச்சனை என்பதே சூத்திரர்களாகிய தமிழர்கள், அவர்களில் யார் உயர்ந்த சூத்திரர் என்று ஆளுக்காள் அடிபட்டுக் கொள்வது தான்//

      • நீங்கள் கூறும் இந்த அகநானுற்று பாடலில் தானே மற்றும் ஒரு கருத்தும் உள்ளது. நீங்கள் காண தவறியது ஏன் ? வ்டுகருக்கு முன் இருந்த பார்பன ஆதிக்கத்தை இந்த பாடல் அழகாக கூருகிறேதே பின்வருமாறு :

        “””மகனை முறை செய்த மனுமுறை கண்ட சோழனும், கி.மு.2ஆம் நூற்றாண்டினராயிருந்திருக்கலாம். மனுமுறை என்றது சமசுகிருத மனு தரும சாத்திர முறையையன்று, அந் நூலின் காலம்கி.பி.2ஆம் நூற்றாண்டு. அதற்கு முன் தோன்றிய பிராமணீய தரும நூல்களும், நடுநிலையின்றிக் குலத்திற்கொரு முறை கூறுவனவே, கன்றைக் கொன்றதற்குக் கழுவாய் அல்லது தண்டனை யென்னென்று சோழன் வினவிய போது, பொற்கன்று செய்து பிராமணர்க்குக்கொடுத்து ஆநிரையொடு காடு சென்று ஒரு மாதம் புன்மேய்ந்து வரவேண்டுமென்று பிராமணர் கூறினர், அதை அவன் ஒப்புக்கொள்ளாது, உயிருக் குயிரேயீடென்று தன் மகன்மேல் தேரேற்றிக் கொன்றான், ஆதித்தொட்டே தமிழரின் தீரா குடிப்பகையாக வடுகர் இருந்துள்ளதை பாவாணர் சுட்டிக்காட்டியுள்ளார்.””

        இந்த பாடலின் கூற்றுப்படி வடுகர் எதிர்கள் தான். அப்படி என்றால் தமிழ் மக்களுக்கு பார்பனர்கள் யார்? மாமன மச்சானா? என்ன உறவு?

      • நான் வடுகர் எனும் சொல்லுக்கு சொற்பிறப்பியல் (Etymology) விளக்கம் கேட்கவில்லை வியாசன் அவர்களே. வடுகர் எனும் சொல்லுக்கான விளக்கத்தையும் அது எவ்வாறு திரிபடையும் என்பதையும் பாவாணர் நூல்களில் ஏற்கனவே பயின்றுள்ளேன். அச் சொல்லை வைத்து நீர் சிண்டு முடியும் வேலையைப் பார்ப்பதைத்தான் அவ்வாறு கூறினேன்.

        அது சரி, என்னுடைய பிற செய்திகளுக்கான மறுமொழியை நீர் கூறாது விடுத்தமைக்கான காரணம் என்னவோ? அது உமக்கு மட்டும்தான் தெரியும் என நான் கூறமாட்டேன், எமக்கும் தெரியும். ஏனெனில் வினவின் நடுவுநிலைமை வெள்ளிடைமலை. அது உம்மைக் கூறவிடாது (சப்பைக்கட்டு வேண்டுமானால் கட்டலாம்).

        • நானும் வடுகர் என்ற சொல்லுக்கு சொற்பிறப்பியல் விளக்கம் கொடுக்கவில்லை. முதலில் வடுகர் என்ற சொல்லாடல் கொண்டு நான் நகைச்சுவை செய்ய முயல்வதாகக் குறிப்பிட்டார் கார்த்திக்கரன். வடுகர் என்ற தமிழ்ச் சொல்லில் என்ன நகைச்சுவை இருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை. இப்பொழுது என்னடாவென்றால் நான் சொற்பிறப்பியல் விளக்கம் கொடுக்கிறேனாம். உண்மையில் சொற்பிறப்பியல் விளக்கம் கொடுப்பதாக இருந்தால், வடுகு என்ற சொல்லின் மூலம் எதுவென்பதையும், தமிழில் அதன் வேர், அந்த வேரிலிருந்து எவ்வாறு வடுகர் என்ற சொல் உருவாகியது என்றெலாம் நான் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். அப்படி எந்த விளக்கமும் நான் கொடுக்கவில்லை. அகநானூற்றுப் பாடல்களில் தெலுங்கர்களை வடுகர்கள் என்று தான் குறிப்பிட்டுள்ளது என்று பாடல் வரிகளைக் காட்டியதை, நான் சொற்பிறப்பியல் (Etymology) விளக்கம் கொடுப்பதாகக் குறிப்பிடுவதைப் பார்க்கும் போது எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. நான் தமிழில் எழுதும் விடயங்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள் கற்பிக்கிறார். அண்ணன் கார்த்திக்கரன், வெளியில் தமிழும் வீட்டில் வேறு ஏதாவது மொழியும் பேசுகிறாரோ என்னவோ யார் கண்டது.

          //அது சரி, என்னுடைய பிற செய்திகளுக்கான மறுமொழியை நீர் கூறாது விடுத்தமைக்கான காரணம் என்னவோ?//

          அது என்ன செய்தியோ நானறியேன். பெரியார்தாசன் இசுலாமியராக மாறியதையும், விஜயகாந்தையும், மதர் திரேசாவையும் கூட வினவு விமர்சனம் பண்ணி எழுதியிருக்கிறார்கள் என்ற ‘செய்தியை’ உங்கள் மூலமாக அறிந்து கொண்டேன், அந்த மகத்தான ‘செய்திக்கு’ என்னிடமிருந்து மறுமொழியை ஆவலோடு எதிர் பார்த்து நீங்கள் காத்திருப்பது எனக்குத் தெரியாது. அது மட்டுமன்றி, உங்களின் அந்த மகத்தான செய்திக்கு, அப்படியா, என்பதை விட வேறு என்ன மறுமொழியை எதிர்பார்க்கிறீர்கள் என்றும் எனக்குத் தெரியவில்லை. 🙂

  7. வியாசன் அவர்களே,
    வடுக-நாயக்க அரசுகள், அவற்றின் மக்கள் விரோத செயல்களை எங்கு படிக்கச் முடியும். முன்பு எப்படியோ இருக்கட்டும், நீங்கள் சாதியொழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு போன்றவற்றை எதிர்த்து பேசுவது மிக அவலம். சில நாட்கள் நீங்களோ , உங்கள் குழந்தைகளோ பல பொது இடங்களில் சாதி, பார்பனியம் ஆகியவற்றை அனுபவித்தால் தான் அதன் வலி தெரியும். மேலே இருந்து கொண்டு பேசும் போது அந்த வலி வேதனை தெரியாது. பார்பான் மட்டும் எல்லா காலங்களிலும் எல்லா சுக போகங்களையும் அனுபவித்து கொண்டே போக வேண்டுமா? எதற்கு? இதை கேட்டால் இஸ்லாமியரை பார் என்கீறீர்கள்…! எங்கு சக மனிதனை இழிவாக நடத்தி, எதன்பெயராலோ அவர்களின் சம உரிமையை பறித்தாலும் அது பார்பனியம். அதற்கு அநீதி என்பது மட்டுமே பொருள். மனிதனாக இருந்து சக மனிதனை மனித நேயத்தோடு பார்க்க ஊக்குவியுங்கள்.

    • வடுக – நாயக்க ஆட்சியாளர்கள் பார்ப்பனீயத்தை வளர்த்து விட்டதை, கோயில்களிலிருந்து தமிழை வெளியேற்றியதை, ஆந்திராவிலிருந்து ரெட்டிகளையும், நாயுடுகளையும், நாயக்கர்களையும் அழைத்து வந்து தமிழ்நாட்டுக் கிராமங்களில் தமிழர்களின் நிலங்களைப் பறித்து, அவர்களிடம் கொடுத்து அவர்களைக் கிராமத் தலைவர்களாக, பாளையக்காரர்களாக, ஜமீந்தார்களாக மாற்றியது எல்லாம் நானூறு ஆண்டு காலத்துக்கு மேலாக தமிழ்நாட்டில் தமிழரல்லாதோரின் ஆட்சியில் கீழ் நடந்த வரலாறு, இன்றும் கூடத் தமிழ்நாட்டுக் கிராமங்களில் உண்மையான தமிழர்கள் நிலமற்ற கூலிகளாக இருக்க, ரெட்டிகளும், நாயுடுகளும், நாயக்கர்களும் நிலச் சொந்தக்காரர்களாக, கல்வீடுகளில் வாழ்வதைக் காணலாம். அதை நானும் கூட நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் நாயக்கர் அரசர்கள் பார்ப்பனீயத்தை வளர்த்து விட்டதையும், தமிழையும், தமிழர்களையும் ஒதுக்கியதையும் எழுதுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள எழுத்தாளர்களுக்குப் பயம். நடிகர் வடிவேலு, தெனாலிராமன் என்ற நகைச்சுவைப் பாத்திரத்தை இழிவுபடுத்தியதாக போர்க் கொடி தூக்கிய வடுகர்கள், நாயக்கர் பற்றிய் உண்மையைக் கூறினால் விடுவார்களா. அதனால் தான் யாரும் எழுதுவதில்லை.

      ஆனால் தமிழ்நாட்டில் எந்தப் _________________ ராஜராஜசோழனைப் பற்றி இழிவாகப் பேசலாம், எழுதலாம். பெரியாரியத்தாலும், திராவிடத்தாலும் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழ்நாட்டுச்_______________தமிழர்கள் அதைப் பொறுத்துக் கொள்வார்கள். அது மட்டுமன்றி, ராசராசனை அதிகளவில் இழிவு படுத்தி எழுதுகிறவர்களும் , பேசுபவர்களும் கூட பெரியாரிஸ்டுகளும், தமிழரல்லாத திராவிட் ______________, அவர்களால் மூளைச் சலவை செய்யப்பட்ட ஒரு சில தமிழர்களும் தான்.

      தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் மட்டுமா சாதிப் பாகுபாடு காட்டுகிறார்கள், வடுகர்கள், கன்னடர்கள், மலையாளிகள் எல்லோரும் சாதிப்பாகுபாடு காட்டாமல் தலித்துக்களுடன் மணவுறவு வைத்துக் கொண்டிருக்கிறார்களா? பார்ப்பனர்களை விட அல்லது அவர்களைப் போலவே ரெட்டிகளும், நாயக்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், கூட சாதி வெறி பிடித்தவர்கள் தான், இதில் பார்ப்பனர்களை மட்டும் எதிர்ப்பது ஏன், அதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. பார்ப்பனீயம் என்பது பார்ப்பனர்களிடம் மட்டுமல்ல, எல்லாச் சாதியினரிடமுமுண்டு. இக்காலத்தில் பார்ப்பனர்களை விட, ஏனைய ஆதிக்க சாதியினரிடம் பார்ப்பனீயம் அதிகமாக உண்டு

      • பார்ப்பனீயம், பார்ப்பனர்களை விட, ஏனைய ஆதிக்க சாதியினரிடம் பார்ப்பனீயம் அதிகமாக உண்டு.
        இது நிச்சயம் ஏற்று கொள்ளகூடிய கருத்து. ஆதிக்க சாதியினரே அநீதியை அதிகம் செய்கின்றனர். ஆனால் அவர்கள் இப்படி நடக்க பார்ப்பனியத்தை கொள்கையாக கொண்ட கீதையை சொல்கின்றனர். ஆக அதை திணித்த பார்பானையும், அவன் கற்பித்த புளுகி வாய்த்த கடவுளையும் சாடுவது எப்படி தவறு. இதனை அடிப்படையாக கொண்டே மற்றவர் இப்படி கொட்டமடிகின்றனர். ஆக அடிப்படை ஒழிந்தால் அல்லது குறைந்தால், மற்றவரின் மோகம் குறைந்து மக்கள் நலம் பெற வாய்புள்ளது.

        • நான் உட்பட எனக்குத் தெரிந்த எந்த தமிழனும் பகவத்கீதையைப் போற்றுவதில்லை. முஸ்லீம்கள் குரானையும்அல்லது கிறித்தவர்கள் பைபிளையும் மத நூலாக நினைப்பது போல, எனக்குத் தெரிந்த இந்த இந்து (சைவ) தமிழனும் பகவத்கீதையை தனது மதநூலாகப் போற்றுவதில்லை. குறிப்பாக ஈழத் தமிழர்கள் எல்லோருக்கும் தேவாரம் தெரியுமே தவிர பகவத்கீதை (பற்றியும்) தெரியாது. தமிழ்மண்ணில் உருவாகிய, சிவனியமும், மாலியமும் தான் தமிழர்களின் வழிபாட்டு நெறிகள். அவற்றின் புனித நூல்கள் தமிழ்த் தேவாரமும் திருவாய்மொழியுமே தவிர பகவத்கீதை அல்ல. தேவாரங்களிலும், திருவாய்மொழியிலும் மட்டுமன்றி, தமிழ் நாயன்மார்களினதும், ஆழ்வார்களினதும் வாழ்க்கை வரலாற்றில் கூட சாதி எதிர்ப்பு உள்ளதைக் காணலாம். சைவத்தின் தூண்களாகிய அறுபத்து மூன்று நாயன்மார்களின் அடிப்படையே சிவனுக்கு முன்னால் அவனடியார்கள் அனைவரும் சமமானவர்கள், அவர்கள் மத்தியில் சாதி வேறுபாடு கிடையாது என்பது தான். ஆகவே தமிழர்களாகிய நாங்கள் பகவத்கீதையைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதை வெறும் பார்ப்பன நூலாகவே ஒதுக்கி விடலாம்.

          நாங்கள் செய்ய வேண்டியதென்னவென்றால், பெரியாரிஸ்டுகளைப் போல, கம்யூநிஸ்டுகளைப் போல எமது தமிழ் முன்னோர்களின் பாரம்பரிய மதங்களாகிய சிவனியத்தையும், மாலியத்தையும் மட்டும் எதிர்க்காமல், அவற்றைத் தமிழாக்க வேண்டும், தமிழை எதிர்க்கும் பார்ப்பனர்களிடமிருந்து எமது முன்னோர்களின் பழம் பெரும் கோயில்களை மீட்க வேண்டும். அது பெரியாரிய மூளைச் சலவைக்குட்பட்ட தமிழர்களால் முடியாது, அதற்கு பெரியாரியம், திராவிடம் எல்லாவற்றையும் மறந்து நாங்கள் தமிழர்கள் அனைவரும் நாம் தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும். அப்பொழுது மட்டும் தான் எமது முன்னோர்கள் கட்டிக்காத்த மதநெறியும் தமிழாகும், சாதியும் ஒழியும்.

  8. கம்யூனிசம் தான் அது உருவாகிய இடங்களில் எல்லாம் அழிந்து விட்டதாக சொல்பவர்கள் எதற்காக பொதுவுடைமையை பற்றி கட்டுரை எழுதினால் மட்டும் அலறி அடித்து கொண்டு கம்யூனிசம் செத்துவிட்டது, அது ,இது என ஊளை இடுவது எதற்காக உட்கார்ந்து உடல் வளர்ப்பவர்களுக்குஆழ்மனதில் அதன் மீது இருக்கும் மரண பயமே காரணம் என்று நினைக்கிறேன். மாபெரும் அரசாங்கங்களே பொதுவுடைமை சிந்தனை வளராமல் இருக்கவே இலவசங்களையும் கட்டற்ற நுகர்வு முறையையும், சக மனிதனின் துன்பத்தை அறிய முடியாத மட்டமான கல்வியையும் வழங்கி வருகின்றன என்பது ஆறறிவுள்ள அனைவரும் அறிவர். உழைப்பு என்பது ஊரை ஏய்ப்பது அல்ல, உலகை உய்விப்பது. தான் மட்டுமே வாழ வேண்டும் , தன் இனம் மட்டுமே வாழ வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு பொதுவுடைமை எட்டிக்காயாய் கசக்கும் என்பதில் வியப்பேதும் இல்லை.

  9. கேரள கம்யூனிஸ்டுகளிடம் மலையாள இன உணர்வு இருக்கும்.ஆனால் தமிழகத்தில் இருக்கும் கம்யூனிஸ்டுகளிடம் தமிழ் உணர்வு என்பது இன வாதமாக மட்டும் தெரியும்.

    • \\ஆனால் தமிழகத்தில் இருக்கும் கம்யூனிஸ்டுகளிடம் தமிழ் உணர்வு என்பது இன வாதமாக மட்டும் தெரியும்.// In tamil nadu most of the communists are of Telugu as Mother Tongue than how tamil feelings will come?

  10. திரு.வியாசன் அவர்களே! மற்ற மாநிலங்களில் எப்படியோ, தமிழ்னாட்டில் என்றைக்கு பல்யாக சாலை முதுகுடுமி பெருவழுதி பார்பனரை தருவித்து யாகம் செய்தானோ அன்றிலிருந்தே தமிழ்நீச மொழியாகவும், பார்பனர்கள் அரசியல் செய்யவும் ஆரம்பம் செய்யப்பட்டது! பார்ப்பன அரசியல் சதியாலும், பெண்மோகத்தாலும் மதியிழந்த அசுரர்கள் , மக்கள்நலனை மறந்து மேல்சாதி , கீழ்சாதியென்று ஆயினர்! அயோத்தி ராமன் போன்ற அயோக்கிய ராமன் போன்றோரால் பார்பனரல்லோதார் படிப்பும் கோவிந்தா ஆயிற்று! எம் கடன் பார்பனருக்கு பணிந்தேவல் செய்வதே எனும் பக்தி மார்க்கம், தமிழ்னாட்டில் கோலோச்சியது!நன்றாக வளர்ந்திருந்த செம்மொழியான தமிழை, பக்தியின் பெயரால் மணிபிரவாளமாக மாற்றி, தமிழ் வேர்ச்சொல் அழிப்பு வேலையும் நடபெற்றது!நீங்கள் பார்பன எதிர்ப்பாளராக கருதிகொண்டாலும், தமிழ் பக்தி இலக்கியத்தில் புகுந்துவிட்ட ஆரிய நச்சை மறைக்க முடியாது!

  11. ஆரிய அகத்தியன் காலத்தில் ‘உயர்ந்திருந்த’ தென்னாடு, அகத்தியன் வருகைக்கு பின்னர் தாழ்வடைந்தது என்னவோ உண்மை தானே! அகத்தியன் மாணாக்கர் இருவர் காதல் வயப்பட்டதும், அதனாலும், சீடர்களின் தமிழ் புலமையால் பொறாமையும் கொண்ட ஆசான், சீடன் கபிலனை சபித்துநாடு கடத்தியதும், சீடன் காதலி லோபமுத்திரையை வீட்டு சிறையிலடைத்ததும் உண்மையா?
    மற்றொரு சீடனான தொல்காப்பியன்நூல் கிடைத்திருக்க , அகத்தியமும், அதற்கு முன்னதான அய்ந்திரமும் எப்படி வழக்கொழிந்தன? தமிழர் வழக்குக்கு மாறான ஆரிய கருத்துக்கள் புகுத்தப்பட்டதால் இருக்கலாம்! அன்றைய தமிழர் வாழ்வை காட்டும் புறனாற்று பாடல்கள் போல, அதற்கு முந்தைய எத்தனை இலக்கியங்கள் அழிந்து பட்டனவோ?

    சங்க கால இலக்கியங்களுள் , பாயிரம் பாடும் வழக்கம் எப்போது ஆரம்பித்தது? முந்தைய சமண, புத்த இலக்கியங்களில் தெய்வத்தையும், அரசனையும் பாடும் வழக்கு இருந்ததா? வள்ளுவமும், அவ்வையார்களும் பாயிரம் பாடியுள்ளார்களா? பிறநீதிநூல்கள் பாயிரமின்றி இருக்க, பார்பன மன்றத்தில் அரங்கேறிய நூல்கள் மட்டுமே பாயிரம் கொண்டிருப்பது எவ்வாறு?

    தங்களது ஆசிவக விளக்கங்கள் படித்திருக்கின்றேன், அப்போது சாதிமுறை இருந்ததா? சற்று விளக்கவும்!

  12. இயல்பில் பச்சை தமிழர்களை விட தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் சாதியினர் அதிக சாதி வெறியும் சடங்குகள், சாங்கியங்கள், பழைமை மீது பெரு விருப்பமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் (பெரியார் என்னும் ஒரு மாமனிதர் எப்படி இவர்களில் இருந்து உருவானார் என அதிசயமாக இருக்கிறது). இவர்களில் பலர் வீட்டில் தமிழ் பேசி வாழும் சாதியினரை மட்டமானவர்களாக நினைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நாயுடுகளில் ஒரு சாராருக்கு பார்ப்பனர்கள் கூட மட்டம் தான். கடந்த பல நூற்றாண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி மற்றும் ஆதிக்கம் செலுத்தியதால் ஏற்பட்ட உணர்வு இது. சாதி அடுக்கில் அடிமட்டத்தில் வரும் தெலுங்கு பேசும் ஒட்டர்கள் கூட கடுமையான வகையில் சாதிக்கட்டுப்பாட்டையும் சம்பிரதாயங்களையும் அனுசரிக்கிறார்கள். மலையாளம் பேசும் சாதிகளின் இயல்பு பற்றி சரியாக தெரியாது. சித்திரை ஒன்றாம் தேதியில் வருவதாக சொல்லப்படும் தமிழ் புத்தாண்டை ஆரியச்சரக்கு என ஒதுக்குகிறது திராவிட அரசியல். ஆனால் இதே திராவிட அரசியல் தெலுங்கு புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்கிறது. இதனால் தான் திராவிட அரசியல் என்பது போலி. தமிழின விரோதம் கொண்டது என்கிறோம்.

Leave a Reply to கருப்பன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க