Friday, May 9, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விJNU - மாணவருக்காக தோள் கொடுக்கும் அரசு பள்ளி மாணவர்கள் !

JNU – மாணவருக்காக தோள் கொடுக்கும் அரசு பள்ளி மாணவர்கள் !

-

விருத்தாச்சலம்

விருத்தாச்சலம் பாலக்கரை பகுதியில் 25-02-2016 அன்று மாலை 4.30 மணியளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் அணியின் விருத்தாச்சலம் இணைச்செயலர் தோழர் மணிவாசகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளி மாணவர் தோழர் சுரேஷ், வழக்கறிஞர் தாழை மு.க.கருணாநிதி மற்றும் பு.மா.இ.மு செயலர் தோழர் கதிர்வேல் கண்டன உரையாற்றினர்.

jnu-vdm-demo-2டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னையா குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது மோடி அரசு. இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்நிலை பல்கலைக் கழகங்களில் இந்து மனு தர்மத்தைத் திணிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி, பா.ஜ.க கும்பல் செய்யும் முதல் முயற்சி அல்ல இந்தக் கைது.

jnu-vdm-demo-1சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர்-பெரியார் படித்து வட்டத்திற்குத் தடை, ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் தலித் ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை, பனாரஸ் இந்து பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி கிரீஷ் சந்திர திரிபாதியால் பல்கலைக் கழகத்தை காவிமயமாக்க இடையூறாக இருந்த பேராசிரியர் சந்தீப் பாண்டே நீக்கம், புனே திரைப்பக் கல்லூரி இயக்குனராக ஆர்.எஸ்.எஸ் வெறியன், செக்ஸ் பட நடிகன் கஜேந்திர சவுகான் நியமனத்தை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி தாக்குதல் இப்படி கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல, மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக கொலை, மூட நம்பிக்கையை எதிர்த்து எழுதிய எழுத்தாளர்க்ள மீது தாக்குதல், நீதித்துறையை காவிமயமாக்குவதை எதிர்த்த வழக்கறிஞர்கள் வழக்காட தடை என்று நாடு முழுவதிலும் சாத, மதக் கலவரங்களைத் தூண்டி விடும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி பயங்கரவாத காவி கும்பலை நாட்டை விட்டே விரட்டியடிப்போம்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம்

தருமபுரி

jnu-dpi-demo-1சென்னை ஐ.ஐடி, ஹைதராபாத்தைத் தொடர்ந்து டெல்லி ஜே.என்.யு-வை ஆக்கிரமிக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிச நடவடிக்கைகளை முறியடிப்போம்!

என்ற தலைப்பின் கீழ்

  • கைது செய்யப்பட்ட ஜே.என்.யு மாணவர் பேரவைத் தலைவர் கன்னையா குமாரை உடனே விடுதலை செய்!
  • பேராசிரியர், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க, ஏ.பி.வி.பி குண்டர்களை கைது செய்!

மாணவர்களே!

  • மாணவர்களிடம் சாதி, மதக் கலவரங்களை தூண்டிவிடும் பயங்கரவாதிகளான ஏ.பி.வி.பிய-ஐ கல்விக்கூடங்களிலிருந்து விரட்டியடிப்போம்!
  • புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள்வோம்!
  • ஏறிவந்து தாக்கும் பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு பதிலடி கொடுப்போம்!

என்ற முழக்கங்களுடன்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் தருமபுரி தந்தி அலுவலகம் முன்ம்பு 27-02-2016 அன்று மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.மா.இ.மு தோழர் அன்பு தனது தலைமையுரையில் பார்ப்பன பாசிசம் பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-ஏ.பி.வி.பி மூலம் தாக்குதல் நடத்துவதையும் மாணவர் மத்தியில் சாதி மதக் கலவரங்களை தூண்டும் சதித்தனத்தை அம்பலப்படுத்தியும், மாணவர்கள் வர்க்க ஒற்றுமையை நிலைநிறுத்தி காவி இருளை திரை கிழிக்க வேண்டும், புதிய ஜனநாயக சமூகத்தை படைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்து பேசினார்.

jnu-dpi-demo-2அடுத்ததாக கண்டன உரையாற்றிய பு.மா.இ.மு தோழர் வனிதா கல்வித்துறையில் நிலவுகின்ற பார்ப்பன பாசிசம் குறித்தும், புதிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வி காட்ஸ்-க்கு அடகு வைக்கப்படுவதையும் பற்றியும் பேசினார்.

வி.வி.மு பென்னாகரம் வட்டார செயலாளர் தோழர் கோபிநாத் பேசுகையில், “ஜே.என்.யு பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவர் கண்ணையாகுமாரை கைது செய்து தேசவிரோத வழக்கு போட்டுள்ள மத்திய அரசின் பாசிச நடவடிக்கைக்கு எதிராக மக்கள் களத்தில் இறங்கி பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. நீதிமன்றம் மக்களுக்கானது இல்லை, எனவே இந்த அரசுக் கட்டமைப்புக்குள் இதற்கு தீர்வு காண முடியாது” என்று விளக்கி பேசினார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தருமபுரி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜானகிராமன் பேசுகையில், “எது தேசவிரோதம்? எது தேசப்பற்று என்று கேள்வி எழுப்பி, விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் துரோகம், இன்று மோடியின் மத்திய அரசு நாட்டை அன்னிய ஏகாதிபத்திய நலன்களுக்கு விற்பது இவற்றை தோலுரித்து பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியாக பு.மா.இ.மு தோழர் ஸ்டாலின் நன்றியுரையாற்றினார்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்
தொடர்புக்கு 8148055539

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க