privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்இராணுவத்துடன் படுப்பதா தேசபக்தி ? காஷ்மீர் மாணவி நேர்காணல்

இராணுவத்துடன் படுப்பதா தேசபக்தி ? காஷ்மீர் மாணவி நேர்காணல்

-

JNU நேரடி ரிப்போர்ட் – 6

ஸ்ரீநகரில் இருக்கும் தர்ஹா
ஸ்ரீநகரில் இருக்கும் தர்ஹா

“தோழர், எனது பெயர், புகைப்படம் மற்றும் வேறு அடையாள விவரங்களை நீங்கள் வெளியிடக் கூடாது என்கிற உத்திரவாதம் கொடுத்தால் தான் என்னால் பேச முடியும்”.

“ஏன்”

”உங்களுக்கே தெரிந்திருக்கும்.. இப்போது கண்ணையா குமாரை பயங்கரமான அரக்கனாக காட்டி விடலாம் என்கிற அவர்களது உத்தி பூமராங் ஆகி விட்டது. அடுத்து உமரை அப்படி சித்தரிக்கத் துவங்கியிருக்கிறார்கள். இப்போது புதிதாக வளாகத்தில் உள்ள காஷ்மீரிகளை குறிவைத்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்… எனவே “ஒரு காஷ்மீரி மாணவி” என்று மட்டும் குறிப்பிடுங்கள் போதும்”

“நிச்சயம் அவ்வாறே குறிப்பிடுகிறோம் தோழர்.. சரி, இந்தியா நூறு துண்டுகளாக உடையட்டும் என்கிற முழக்கத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?”

“இப்போது மட்டும் என்ன அது ஒரே துண்டாகவா இருக்கிறது?”

“நீங்கள் யோசித்து தான் பேசுகிறீர்களா?”

“இன்றைய நிலையில் காஷ்மீரிகளோ, வட கிழக்கு இந்தியர்களோ.. எங்களுக்கெல்லாம் யோசிப்பதற்கு நேரமில்லை. எங்களுக்காக நீங்கள் தான் யோசிக்க வேண்டும்”

“இப்படிக் குதர்க்கமாக பேசினால் எப்படி? ஏற்கனவே நீங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்கள் என்றல்லவா இங்கே பிரச்சாரம் செய்யப்படுகிறது?”

“நாங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்களா? நாங்கள் இந்தியாவை எந்தளவுக்கு வெறுக்கிறோமோ அதே அளவுக்கு பாகிஸ்தானையும் வெறுக்கிறோம். எங்களை சுதந்திரமாக விட்டால் போதும் பிழைத்துக் கொள்வோம்”

”இந்திய அரசு உங்களுக்காக நிறைய செலவு செய்கிறது நிறைய சலுகைகள் கொடுத்துள்ளது என்றெல்லாம் வெளியே பிரச்சாரம் செய்யப் படுகிறதே? அவ்வளவையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக பேசுவது நன்றி கெட்டத்தனம் என்றல்லவா ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சொல்கிறார்கள்?”

”முதலில் எங்களுக்காக செலவு செய்கிறது என்று சொல்வதே பித்தலாட்டமான வாதம்… எங்களை வைத்து செல்வு செய்கிறது என்று சொல்ல வேண்டும். அப்படி செலவு செய்யப்படும் பணம் எங்கே போகிறது தெரியுமா? ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரரை நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு. இராணுவம்தான் அத்தனை காசையும் தின்கிறது. இவர்களின் வேலை என்ன தெரியுமா? நல்ல வளமான இடத்தை ஆக்கிரமித்து முகாம் போட்டுக் கொள்கிறார்கள்.. அரசு ஒதுக்கும் காசில் நன்றாக குடித்து விட்டு பெண்கள் தனியே எதிர்ப்படும் போது அவர்கள் பார்க்கும் விதமாக தங்கள் ஜிப்பைத் திறந்து காட்டுகிறார்கள்….. உங்கள் குடும்பத்துப் பெண் பிள்ளைகளை அந்த இடத்தில் வைத்து யோசித்துப் பார்த்தால் தான் உங்களுக்கு எங்கள் வலி புரியும்”

“இந்த மாதிரியான அத்துமீறல்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கிறதல்லவா?”

“அத்துமீறல்கள் என்று ஒரே வார்த்தையில் எங்கள் வாழ்க்கையை நீங்கள் சுருக்க முடியாது. ஒன்றரை லட்சம் மக்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.. சுமார் பத்தாயிரம் பெண்கள் அரை விதவைகளாக இருக்கிறார்கள்… அரை விதவை என்ற பதத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

”சொல்லுங்கள்”

”இந்தப் பெண்களின் கணவன்மார்களெல்லாம் இராணுவத்தால் ‘விசாரணை’ என்ற பேரிலோ அல்லது வேறு முகாந்திரங்களைச் சொல்லியோ அழைத்துச் செல்லப்பட்டவர்கள்… எத்தனையோ ஆண்டுகளாகியும் அவர்களெல்லாம் திரும்பவில்லை.. கட்டியவன் இருக்கிறானா செத்துப் போய் விட்டானா என்று கூட இவர்களுக்குத் தெரியாது. இறந்து விட்டான் என்று உத்திரவாதமாக தெரிந்தால் கூட மறுமணம் செய்து கொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கலாம்.. அல்லது மனதை சமாதானப்படுத்திக் கொண்டு எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்கலாம்.. தங்கள் கணவன்மார்களுக்கு என்ன நேர்ந்ததென்றே இவர்களுக்குத் தெரியாது… ஆண்டுக்கணக்கில் இப்படி அரை விதவைகளாகவே கழித்து வருகிறார்கள்…”

”இதெல்லாம் இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் வந்ததில்லையே…”

“எப்படி வரும்? ஜே.என்.யு விவகாரத்தில் பார்க்கிறீர்கள் அல்லவா? வேட்டையாடும் வெறியோடு எங்கள் மீது பாய்ந்து குதறும் வாய்ப்புக்காகத்தானே காத்திருக்கின்றன இந்த ஊடகங்கள்.. அரை விதவைகள் பற்றிச் சொன்னேன் அல்லவா..? அதே போல் எண்பதினாயிரம் அனாதைகளை உங்கள் இராணுவம் எங்களுக்குப் பரிசளித்துள்ளது தெரியுமா. இப்போது சொல்லுங்கள் இதெல்லாம் எங்களுக்கு உங்கள் அரசாங்கம் கொடுத்த சலுகைகளா?”

“ஆனால் இவற்றையெல்லாம் நீங்கள் ஏன் இந்தியாவின் மற்ற பகுதி மக்களிடம் எடுத்துச் செல்லக் கூடாது?”

“தோழர்.. புரிந்து கொள்ளுங்கள்.. அங்கே ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரனையோ போலீசையோ உளவாளியையோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.. நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியாது.. நாங்கள் எங்களைச் சுற்றி இருக்கும் யாரையும் நம்ப முடியாது. யாரையும், எதையும் சந்தேகத்தோடு பார்த்தால் தான் பிழைத்துக் கிடக்கவே முடியும்.. ஆள் தெரியாமல் யாரிடமாவது எதையாவது பேசப் போனால் ‘எல்லையைக் கடக்க முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் புகைப்படம் இதோ’ என்று மறுநாள் ரத்தம் தோய்ந்த எங்கள் சடலங்கள் தலைப்புச் செய்தியில் வந்து விடும்.. எப்போதும் யாரோ உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கும் அந்த உளவியல் சித்திரவதையை மற்றவர்கள் உணர்வது கடினம்.”

”ஆனால், இது ஒடுக்கப்படும் எல்லா மக்களும் எதிர் கொள்வது தானே? தண்டகாரண்யாவிலும் வட கிழக்கிலும் கூட மக்கள் இதே துயரங்களைத் தானே எதிர் கொள்கிறார்கள்?”

“நான் தெளிவாக ஒன்றைச் சொல்லி விடுகிறேன். நாங்கள் புரட்சிக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்திய துணைக்கண்டமெங்கும் ஒடுக்கப்படும் மக்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை தான். அவர்களோடெல்லாம் ஒரு ஐக்கியத்தைக் கட்டமைப்பதன் மூலம் தான் இந்திய ஆளும் வர்க்கத்தை வெல்ல முடியும் என்பதும் எதார்த்தமானது தான்… ஆனால், அப்படியான ஒரு ஐக்கியம் வரும் வரைக்கும் எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? செத்து மடிய வேண்டுமா? என்றோ ஒரு நாள் வரும் புரட்சிக்காக இன்றைக்கு நாங்கள் பிணங்களை எண்ணி விளையாடிக் கொண்டிருக்க வேண்டுமா? எங்கள் மாநிலத்தில் மூன்றில் ஒருவர் உளவியல் ரீதியாக மன அழுத்த நோயால் (Dipression) பீடிக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? தோழர்… நாங்கள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முதலில் உடனடியாக நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிய வைக்க வேண்டும்.. எங்கள் குரல்கள் நின்று விட்டால் குரல்வளைகள் அறுத்து எரியப்பட்டு விடும். ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்துபட்ட ஒற்றுமைக்காக நாங்கள் என்றுமே நிற்கிறோம்.. ஆனால் அதுவரை சும்மா இருக்க முடியாது..”

”சரி. இதை ஊடகங்கள் தான் கண்டு கொள்ள மறுக்கின்றன. ஆனால், நீங்கள் அதை ஊடகங்களிடம் எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளீர்களா?

”குனான் போஷ்புரா சம்பவங்களைப் பற்றி வாசித்திருப்பீர்களே… 90 பெண்கள் உங்கள் இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டனர். அதில் எட்டு வயது சிறுமியும் 84 வயது கிழவியும் அடக்கம். நாங்கள் என்ன செய்யட்டும்? உங்கள் இராணுவம் வரும் போது எங்கள் பெண்கள் தயாராக படுத்துக் கொள்ள வேண்டுமா? அதைத் தான் தேசபக்தி என்பீர்களா? ஒன்று தெரியுமா… இந்த சம்பவங்கள் அம்பலமான போது சில இந்திய பத்திரிகையாளர்கள், காஷ்மீரி பெண்களை அவர்களது கணவன்மார்களால் திருப்திபடுத்த முடியவில்லை என்பதால் தான் இந்திய இராணுவ வீரர்களை உறவுக்கு அழைத்துள்ளனர் என்று எழுதினர்..  இப்பேர்பட்ட ஊடகங்களிடமா எங்கள் வலிகளைச் சொல்ல முடியும் என்கிறீர்கள்?”

”தோழர்.. எங்களால் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது… ஆனால், ஆர்.எஸ்.எஸ் காரர்கள் காஷ்மீரி பண்டிட்டுகளை முன்னிறுத்திக் காட்டுகிறார்கள். நீங்கள் தான் பண்டிட்டுகளை விரட்டியடித்தீர்களாமே? பண்டிட்டுகளின் துயரம் மட்டும் துயரம் இல்லையா?”

”பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறியது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது தான்…. ஆனால், நீங்கள் கதையின் ஒரு பக்கத்தை மட்டுமே வாசித்திருக்கிறீர்கள். மறுபக்கத்தையும் பாருங்கள்.. நான் எனது அம்மாவிடம் இது பற்றி கேட்டிருக்கிறேன். பண்டிட்டுகள் வாழ்ந்த பகுதிகளில் திடீரென முஜாஹிதின்கள் பெயரில் சில நோட்டீசுகள் தோன்றியிருக்கின்றன. அதில் பண்டிட்டுகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. உடனடியா இந்திய இராணுவம் அவர்களை பாதுகாப்பாக இராணுவ ட்ரக்குகளில் ஏற்றி வெளியேற்றியது என்று என் அம்மா என்னிடம் சொல்லி இருக்கிறார்… நான் ஒன்று கேட்கிறேன்.. ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு ஏதாவது பாதுகாப்புப் பிரச்சினை என்றால் அரசு என்ன செய்ய வேண்டும்? அவர்களைப் பாதுகாக்க வேண்டுமா வெளியேற்ற வேண்டுமா?”

காஷ்மீர் மக்களின் போராட்டம்: "இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம்,"
காஷ்மீர் மக்களின் போராட்டம்: “இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம்,”

“நீங்கள் இதை சதித்திட்டம் என்கிற கோணத்தில் மட்டுமே பார்க்கிறீர்களா?”

”இல்லை அப்படியும் ஒரு கோணம் இருக்கிறது என்பதை முன்வைக்கிறேன். மற்றபடி போராளிகள் பண்டிட்டுகளோடு முறையான ஒரு உரையாடலை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பதும்… சுதந்திர காஷ்மீரில் அவர்களும் ஒரு அங்கம் என்பதையும் புரிய வைத்திருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தும் கூட.. அந்த வகையில் இதில் போராளிகளின் தவறும் உள்ளது. நான் கதையின் மறுபக்கம் என்று சொன்னதில் வேறு சில அம்சங்களும் உள்ளன,,,”

“அதைப் பற்றி விளக்குங்களேன்”

”ஷேக் அப்துல்லா நிலச்சீர்திருத்தத்தை அமல் செய்வதற்கு முன் பெரும்பாலான நிலங்கள் காஷ்மீரில் சிறுபான்மையினராக இருந்த பண்டிட்டுகளிடம் தான் இருந்தது. நாங்களெல்லாம் அவர்களிடம் கூலிகளாக இருந்தோம். நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட்ட பின்பு அவர்களே கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் துவங்கியிருந்தனர். அதற்கும் முன் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் எனது தாத்தாவின் காலத்தில் பண்டிட்டுகள் தான் பெரும்பான்மையான அரசு வேலைகளில் இருந்தார்கள்.. நாங்களோ படிப்பறிவற்றவர்கள்.. எங்களை அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே நடத்தினர். எங்கள் சமூகங்களுக்குள் கலப்புத் திருமணம் போன்ற எந்த சம்பந்தங்களும் ஏற்பட்டதில்லை… நாங்கள் கிட்டத்தட்ட இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டோம். சொல்லப் போனால் பண்டிட்டுகள் வெளியேறியது தான் நான் இப்போது ஜே.என்.யுவில் சேர்ந்து படிக்கவும், உங்கள் முன் அமர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருக்கவும் காரணம்”

”சம உரிமை என்கிற அளவில் சொல்கிறீர்கள்… மற்றபடி நடைமுறையில் பண்டிட்டுகளோடு உங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தன?”

”தோழர் அதெல்லாம் மிகப் பழைய விவகாரங்கள்… சிலவற்றை எனது தாத்தா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் அரசு பதவிகளில் இருப்பதால் எங்களை கிள்ளுக்கீரைகளாகவே மதிப்பார்கள்.. உதாரணமாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாங்கள் எங்கள் நிலத்தைப் பதிவு செய்யச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்… ஒரு பண்டிட் என்ன செய்வார் என்றால்.. பத்திரத்தின் வாக்கியங்களை வேண்டுமென்றே தவறாக பொருள் வரும் படி எழுதி விடுவார்… பிறப்பு இறப்பு சான்றிதழ் தரும் அதிகாரி என்றால் குலாம் முகமது என்கிற பெயரை வேண்டுமென்றே கும்மு என்று எழுதி விடுவார்.. இதையெல்லாம் சரிசெய்ய நாங்கள் ஆண்டுக் கணக்கில் அரசாங்க அலுவலங்களின் படிகளில் ஏறி இறங்க வேண்டும்… இந்த மாதிரி நிறைய சொல்லலாம்.. ஒன்று சொல்லுங்கள், பண்டிட்டுகள் உள்நாட்டு அகதிகளாக இருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் நீலிக்கண்ணீர் வடிக்கிறதே… எங்காவது ஒரு பண்டிட் பிச்சையெடுப்பதையோ சோற்றுக்கே சிரமப்படுவதையோ காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்..”

“இருபதாம் நூற்றாண்டுத் துவக்கத்தின் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் கதையைப் போன்றதுதானோ இது?”

”உண்மை தான்.. சமீபத்தில் நான் ஒரு கட்டுரை வாசித்தேன். தமிழ்நாட்டுப் பார்ப்பனர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை.. அவர்களை திராவிட இயக்கம் தான் திட்டமிட்டு வெளியே விரட்டியடித்ததைப் போல் எழுதியிருந்தார்..”

”எல்லா பார்ப்பனர்களும் ஒன்றே போல் சிந்திப்பது ஒரு ஆச்சர்யம் தான்.. சரி, இந்து பண்டிட்டுகளை விடுங்கள்.. ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் சுதந்திர கோரிக்கை குறித்து என்ன கருதுகிறார்கள்?”

”ஜம்மு மற்றும் லடாக் பகுதி மக்கள் விடுதலையை ஆதரிக்கவில்லை. விடுதலைக்கான கோரிக்கை காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் தான் உயிர்ப்போடு இருக்கிறது. இதில் என்னுடைய கருத்து என்னவென்றால், மற்ற மக்கள் பிரிவுகளிடையே முறையான ஒரு உரையாடலை முன்னெடுக்க போராளிகள் தவறி விட்டார்கள் என்றே கருதுகிறேன். காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள இசுலாமிய மத அடையாளம் மற்றவர்களை நெருங்கவிடாமல் செய்கிறது”

”மத அடையாளம் பற்றிக் குறிப்பிட்டீர்கள்… வகாபிசம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.. எங்கள் பக்கத்தில் முசுலீம்களிடையே வகாபிய போக்கு தற்போது செல்வாக்கோடு வளர்ந்து வருகிறது…”

”சரியான கேடுகெட்டவர்கள் இந்த வகாபிகள்.. இப்போது காஷ்மீரில் தர்காக்களை இடிக்க வேண்டும் அது இது என்று உளறிக் கொண்டு திரிகிறார்கள். வகாபிய இழிமகன்கள் இந்திய அரசின் உளவாளிகளாக இருப்பார்கள் என்று எனக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் உள்ளது”

“கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்களே?”

”மேலும் கடுமையான வார்த்தைகள் கிடைக்கவில்லை தோழர். வரலாற்று ரீதியில் எங்களுக்கு இசுலாம் அறிமுகமானதே சூஃபி ஞானிகளின் வழியே தான். அது மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது என்பதை நான் சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன்… இப்போது வகாபியம் என்ன செய்கிறதென்றால் எங்கள் சுதந்திர போராட்டத்திற்கு இனம் கடந்து மத சாயம் பூசுகிறது. இசுலாமிய வெறியையும் பாகிஸ்தானையும் தாலிபானையும் முடிச்சுப் போடுவதும் அதன் தொடர்ச்சியாக எங்கள் சுதந்திரப் போராட்டத்தை பயங்கரவாதமாக கட்டமைத்துக் காட்டுவதும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எளிதானது தானே? அந்த வகையில் இவர்கள் மறைமுகமாக இந்திய ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்கிறார்கள்”

”எப்படி அவ்வளவு உத்திரவாதமாகச் சொல்கிறீர்கள்?”

“சமீபத்தில் ஒரு தர்ஹா இடிக்கப்பட்டது… எல்லாருக்கும் அதை இடித்த வஹாபிய கும்பல் யாரென்பது நன்றாகவே தெரியும்.. இந்தியாவுக்கும் தெரியும் – அங்கே தான் இந்தியாவுக்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையாதே.. ஆனால், ஒருவர் மீது கூட போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை. தர்ஹா இடிக்கப்பட்ட பின் மக்களிடையே இரண்டு பிரிவினரும் அடித்துக் கொண்டனர். இந்த சண்டை சச்சரவுகளின் போக்கில் எங்களது சுயநிர்ணய உரிமை குறித்த கேள்வியே மறந்து போனது. இந்திய ஆளும் வர்க்கம் எதிர்பார்ப்பதும் இதைத் தானே?”

”போராளி இயக்கத்திற்குள் சாதிய வேறுபாடுகள் உள்ளதெனச் சொல்லப்படுவது பற்றி?

”பக்கர்வாலா மற்றும் குஜ்ஜார் சாதி இசுலாமியர்கள் அனேகமாக போராளிகளாகவும், சையது, கான் போன்ற உயர்சாதிகளாக கருதப்படும் இசுலாமிய பிரிவினர் மட்டுமே இவ்வியக்கங்களின் தலைமையில் இருப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு. இந்தக் கூற்று முழுமையாக உண்மையும் அல்ல முழுப்பொய்யும் அல்ல. சையது, கான் பிரிவினரும் கூட போராளிகளாக மடிந்துள்ளனர். இசுலாம் காஷ்மீருக்கு அறிமுகமான போது அங்கே இருந்த அத்தனை சாதிப் பிரிவுகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டது. ஏற்றத்தாழ்வுகள் எந்த மாற்றமும் இன்றி நூற்றாண்டுகளாக அப்படியே நிலவி வந்தன. போராளி இயக்கங்களை விடுங்கள், காஷ்மீரி இசுலாமிய சமுதாயத்தில் பல்லாண்டுகளாக இந்த சாதிப் பாகுபாடு நிலவி வந்தது. இப்போதும் கூட சையது மற்றும் குஜ்ஜார் பிரிவினரிடையே திருமண பந்தங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றல்ல. அவ்வாறு அரிதாக நடக்கும் திருமண உறவுகள் கூட வர்க்கச் சமன்பாட்டை கணக்கிலெடுத்துக் கொண்டே நடக்கின்றன.  விமர்சனங்கள் வைப்பதென்றால், சமூகத்தில் நிலவிய சாதிப் பாகுபாடுகளை போக்குவதற்கு போராளி இயக்கங்கள் முழு மனதோடு முயற்சிக்கவில்லை என்று வைக்கலாம்”

”இந்திய இராணுவத்தால் நீங்கள் எதிர் கொள்ளும் துன்பங்களைப் பற்றிச் சொன்னீர்கள்… ஈழம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

”ஓ… நிறைய.. எங்களுக்கெல்லாம் பிரபாகரன் ஒரு மிகப் பெரிய நாயகன் தெரியுமா? அவரை எங்கள் சகோதரராகத் தான் நாங்கள் கருதுகிறோம். பிரபாகரன் மரணம் அடைந்த அன்று நாங்கள் பள்ளத்தாக்கில் பந்த் அனுசரித்தோம்… அதே போல் பிரபாகரனின் மகன் புகைப்படங்கள் வெளியான போதும் நாங்கள் எங்கள் குழந்தைகளில் ஒருவன் இறந்து போனதைப் போல் உணர்ந்தோம்.. அன்றைக்கு மக்கள் கூடும் பொதுவிடங்களில் எல்லாம் மரண வீட்டைப் போல் அமைதி நிலவியதை நானே பார்த்தேன்…”

“பெரியார், திராவிட இயக்கங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

“காஷ்மீரில் இருந்த வரை கேள்விப்பட்டதில்லை.  இங்கே ஜே.என்.யு வந்த பிறகு நிறைய கேள்விப்படுகிறேன்… பெரியாரை வாசிக்க வேண்டும் என்று உத்தேசித்திருக்கிறேன்”

“தமிழ்நாட்டைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்”

காஷ்மீரில் இந்திய இராணுவம்
காஷ்மீரில் இந்திய இராணுவம்

”ஓ… நீங்கள் மற்ற இந்தியர்களைப் போல் அல்லவென்று தெரியும். வடக்கே இருக்கும் தேசியக் கற்பிதங்கள் உங்களிடம் செல்லாது என்று தெரியும். ஆர்.எஸ்.எஸ் போற்றிக் கொண்டிருக்கும் தேசியம் என்கிற சித்திரத்தை நீங்கள் மதிப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எங்களைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் எல்லைக் கோடு எங்கள் பக்கத்தில் தானே இருக்கிறது? மேலும் நாங்கள் முசுலீம்களாகவும் பிறந்து தொலைத்து விட்டோமே?”

”சரி, பாரதிய ஜனதா பி.டி.பி கூட்டணி பற்றி சொல்லுங்களேன். பி.டி.பி ஒரு பிரிவினைவாதக் கட்சி என்றல்லவா அறியப்படுகிறது.. அப்படி இருக்கும் போது பாரதிய ஜனதா எப்படி அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டது?”

”தவறான தகவல்… பி.டி.பி போலி விடுதலை பேசும் – அதையும் மென்மையான குரலில் பேசும் – ஒரு துரோகத்தனமான கட்சி. போராளி இயக்கங்களில் இருந்து சரணடையும் கைக்கூலிகள் மற்றும் இராணுவமே உருவாக்கி வைத்திருக்கும் உளவாளிகளின் கட்சி தான் பி.டி.பி. நீங்கள் தோழர் தானே.. உங்களுக்குப் புரியும் விதமாக சொல்கிறேன் – இவர்கள் முதலாளிகளே உருவாக்கி விடும் தொழிற்சங்கங்களைப் போன்ற கருங்காலிகள்”

“ஆனால், அவர்கள் தானே தேர்தலில் வென்றார்கள்?”

”உண்மை தான்.. மோடியின் நாடாளுமன்ற பிரச்சாரத்திற்கு ஜம்மு ஏமாந்து போனது…. அதே நேரம் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் உமர் அப்துல்லா கெட்ட பெயர் வாங்கியிருந்தார்.. இதெல்லாம் தேர்தலில் அந்தக் கூட்டணிக்கு சாதகமாகப் போய் விட்டது.. ஆனால் இந்தக் கூட்டணி பி.டி.பியின் அரசியல் தற்கொலை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்”

“எப்படிச் சொல்கிறீர்கள்?”

“ஒரு சிறிய உதாரணம் மட்டும் சொல்கிறேன்.. சாதாரணமாக இராணுவத்தால் கொல்லப்படும் போராளி ஒருவரின் சவ ஊர்வலத்திற்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள்.. ஆனால், சமீபத்தில் இறந்து போன முப்தி முகமதுவின் சாவுக்கு சில ஆயிரம் மக்கள் கூட வரவில்லை.. ஒரு அனாதைத் தெருநாயைப் போல முப்தியை குழியில் இட்டு மூடினார்கள்..”

”சரி தோழர்.. எமது கேள்விகள் முடிந்தன. எங்களுக்கு நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?…”

”தமிழ்நாட்டு மக்களை எங்கள் பக்கம் நிற்கச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறேன்.. “எங்கள்” என்பதில் காஷ்மீரிகள் மட்டுமல்ல ஜே.என்.யுவையும் சேர்ந்தே குறிப்பிடுகிறேன்.. மிக்க நன்றி!”

–    தொடரும்

– வினவு செய்தியாளர்கள்.

முந்தைய பாகங்கள்:

inner_design2

  1. இவர்கள் தனியாக போய் என்ன பண்ண போகிறார்கள் ? தனியாக நாடு அமைந்து விட்டால் சந்தோசம் வந்து விடும் என்று கானல் கனவு காண்கிறார்கள் .

    இந்தியாவில் சம உரிமை தரப்பட வில்லை என்றால் தனி நாடு கேட்கலாம் ? மதம் இல்லாமல் வேறு காரணம் எதையும் சரியாக முன் வைக்க வில்லை.

  2. என்ன ஒரு தெளிவான சிந்தனை !!!. காழ்மீர் பெண்கள் துணிச்சலும், வீரமும் நிறைந்தவர்கள்

  3. நேர்காணல் மிக நன்றாக இருந்தது. பண்டிடுகளை வெளியேற்றியது ஜக்மோகன் என்ற பசக கவர்னர் என முனபு கேள்விபட்டிருக்கிறேன். அதனால்தான் பண்டிட்டுகள் உடனடியாக வெளியேறினார்கள். அவர்கள் வெளியறும்போது போட்ட திட்டத்திட்டதை நிறை வேற்ற முடியாத படி அரசியல் நிலைகள் உருவானதால்தான் பண்டிட்டுகள் அகதிகளாக சீரழிந்தார்கள். அதனால்தான் அவர்கள் இந்திய அரசை குறைகூறினார்கள். அரசல்பரசலாகத்தான் ஜக்மோகனுடைய தலையீடு அல்லது சதி த்திட்டம் வெளியானது. ஊடக வலிமையால் அது முழுவதும் வெளியாகவில்லை.குறைந்தது ஒரு 50000 பேர்களுக்காவது இந்த செய்தி போய்ச்சேரும் அதன் மூலம் காழீஃமீரிகளின் உணமையான நிலை தமிழகத்திற்கு அறியத் தந்தமை ஒரு நல்ல விசயம்.

    • ஓ? அப்போ உங்கள் கருத்து படி ஒரு இனமே ஒரு தனி மனிதனின் பேச்சை கேட்டு விட்டு வெழியெரினார்கல் ? மசூதிகளில் இருந்து ‘ஹிந்துக்களே, நீங்கள் வெளியேற வில்லை என்றால் உங்கள் பெண்கள் கற்பழிக்கப்பட்டு நீங்கள் கொல்லப்படுவீர்கள்’ என்று சொன்னது ஜெயமோகன், அப்படிதானே?

  4. //இவர்கள் தனியாக போய் என்ன பண்ண போகிறார்கள் ? தனியாக நாடு அமைந்து விட்டால் சந்தோசம் வந்து விடும் என்று கானல் கனவு காண்கிறார்கள் //

    சுதந்திரம் என்று ஒரு பொய் தோற்றம் கண்டு என்ன கிழித்தோம் என்று சிலர் கேட்பது போல உள்ளது! அவர்களது உரிமையை அவர்கள் வலியுறுத்துகிரார்கள், அதிலென்ன தவறு?

    இந்தியா என்ற அடிமை தேசத்தில், இந்துத்வா சக்திகளுக்கு மட்டுமே மற்றவர்கள் அடிமையாக இருக்க எந்த மானமுள்ள மனிதனும் ஒப்பமாட்டானே! ஆங்கிலேயன் ஒன்றுபடுத்திய ‘இந்தியாவை’, தாங்கள் தான் இந்துக்களின் ஏக பிரதினிதி என்று அடாவடி பேசும் ஆர் எஸ் எஸ் போன்ற, ஆதிக்க வெறியர்களிடமிருந்து எல்லா சிறுபான்மை கலாசார குழுக்களும் கிளர்ந்தெழுவது நியாயமானதே! முதலில் இந்துக்களுக்குள்நிலவும் சாதி அமைப்பை ஒழித்து சம தர்ம சமுதாயத்திற்கு வழி கோலுங்கள், பின்னர் அனைத்து தரப்பினரும், பாகிஸ்தான் உட்பட , பிரிந்து போகும் உரிமையுடன் இணைவது சாதியமே! மதவாத சக்திகளை முறியடித்து , மனிதநேய சக்திகள் ஒன்றுபடட்டும்!

    • காஷ்மிரில் முச்லிம்கல் மாட்டும் தான இருக்கிறார்களா?காஷ்மீர் பண்டிட்கள் நிலமை என்ன?In the own country they are living as refugees?வெக்கமா இல்ல?து
      Ethnic cleansing of Kashmiri Pandits was an event that occurred on 19 January 1990 when …………….https://en.wikipedia.org/wiki/Human_rights_abuses_in_Jammu_and_Kashmir

    • ஓ? அதனால்தான் காஷ்மிரி பண்டிட்களை விரட்டி அடித்தார்களா? இந்து மதத்தின் எல்லா அடையாளங்களையும் காஷ்மீரில் இருந்து அழித்து இஸ்லாமிய சின்னங்களை மட்டும் வைத்து கொள்ள நினைக்கிறார்களோ? அதனால்தான் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகள் மூலமாக பண்டிட்களை மிரட்டி வேழிஎற்றினார்களோ?

  5. hmm.. No single word on the genocide of the original inhabitants of Kashmir – Kashmiri pundits.. what a fraudulent argument!! What more do you expect from those who descend from the barbaric invaders who butchered and killed and raped our ancestors.. and these dravidian ideologists think they are heroes? When pakistan fights war in deceit, attacks India’s sovereignty, these people collude with them.. then they did ethnic cleansing of the pundits and now claim victimhood? There was not much Army present in the valley before the 1980s.. why? Because the conditions changed now.. and these blind dravidian ideologues side with them.. when will they realize that there was no Aryan Invasion and every DNA study proves it so far.. wake up my Tamilnadu.. get back to the days of the great Kamaraj.. these dravidian parties has done only looting and made TN the booze state..

  6. காஷ்மீரில் பண்டிட்களை துரத்தி அடித்து விட்டு இஸ்லாமிய மாநிலமாக மாற்றியதை பற்றி இங்கு யாருக்கும் எந்த கருதும் இல்லையோ? எப்படி இருக்கும், தப்பான வரலாற்றை படிப்பதுதானே திராவிட கொள்கை பேசுபவர்களுக்கு பிடிக்கும்.. பெருந்தலைவர் காமராஜரை தூக்கி எரிந்து விட்டு கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் கும்பிடும் இந்த அடிமைகளுக்கு காஷ்மிரி பண்டிட்களை பற்றி பேச நேரம் இருக்காதுதான்.. ஹ்ம்ம்.. ஆரம்பியுங்கள், என்னை RSS agent என்று கூறுவதற்கு.. உண்மையை பேசினால் இன்று ஒரே பெயர் தான்.. RSS, sanghi etc ..

  7. காஷ்மீர் பண்டிதள் துரத்தியடித்ததாக கூறப்படுவது திட்டமிட்ட ஆர் எஸ் எஸ் சதி! சீக்கிய மன்னர் ஆட்சியிலிருந்த ஜம்மு பகுதி , பண்டிதளின் சொர்க்கபூமி , பிரிவினைக்கு பின்னர் , கஷ்மீருடன் வலுக்கட்டாயமாக, இணைக்கப்பட்டதே உள் நோக்கத்துடந்தான்! அப்போதைய உள்துறை அமைச்சர் படேலும், பின்னர் அப்பதவி வகித்த கோவிந்த் வல்லப பந்த் அவர்களும் , தீவிர ஆர் எஸ் எஸ் ஆதரவாளர்கள், ஜம்முவிலிருந்து கஷ்மீரில் பண்டிட்டு களை பெருமளவில் குடியேற்றினர்! அதைத்தான் கஷ்மீர் மக்கள் எதிர்த்தனர்! இலங்கையில் , தமிழினத்தை ஒழிக்க , தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள மக்களை அன்னாட்டு ராணுவம் குடியேற்றியதை போன்ற செயலே அது! கஷ்மீரிகள் அல்லாதவர் அங்கு நில உரிமை க்கொண்டாட ஒள்ள தடயாணைகளிருந்த பொதும், அப்போதைய கச்மீர் கவர்னர் , ராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரசுநிலத்தை இந்து கோவிலான வைஷ்ணவோ தேவி அறக்கட்டளை என்ற தனியார் அமைப்புக்கு, தன்னிச்சையாக அளித்துமுள்ளார்! மதவாத அமைப்புகளே , கஷ்மீர் பண்டிட் என்ற இனவாதததையும் கிளப்புகின்றனர்! இன்றளவும் இந்தியாவை ஆளும் சக்திகளுள் கஷ்மீர் பண்டிட் களும் முக்கியமானவர்கள்! உயர்நிர்வாக பதவிகள் அவர்களுக்கே தரப்பட்டன! தற்போது ஆர் எஸ் எஸ் பார்பனர்கள் அந்த இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்!

    • ஐயோ ஐயோ.. யாருப்பா ஒனக்கு இந்த கதைய சொன்னது? காஷ்மீரில் பண்டிட்கள் தான் 1000 ஆண்டுகளாக இருந்து அந்த கலாச்சாரத்தை வளர்த்தவர்கள்.. இன்று இருக்கும் இஸ்லாமியர்கள் முகலாய படையெடுப்புக்கு பின் 14ஆம் நூற்றாண்டில் வந்தவர்கள்.. ஜம்முவில் இருந்து காஷ்மீருக்கு குடிய்டேற்ற பட்டார்கள் என்று சொல்வது உலக மகா பொய்.. இதைதான் இந்த திராவிட கொள்கை காரர்கள் சொல்லித்தருகிரார்களா? அதையும் கேள்வி கேட்காமல் இங்கு வந்து கமெண்ட் வேறு..

      Two Srinagar based newspapers, Al Safa and Srinagar Times, carried direct threats in April 1990, ordering Kashmiri Hindus to leave the Valley or be killed. More than 100,000 individuals left the region in a few months, and the rest followed sporadically over the following decade.

      “Among the worst victims of this conflict are the Kashmiri Pandits, descendents of Hindu priests and among the original inhabitants of the Kashmir Valley, with a recorded history of over 5,000 years. Over the millennia, this community has been integral not only to the cultural and intellectual life of the people of this region, but the bulwark of its administration and economic development as well.”

      http://www.satp.org/satporgtp/kpsgill/2003/chapter9.htm

  8. “ஜம்முவிலிருந்து கஷ்மீரில் பண்டிட்டு களை பெருமளவில் குடியேற்றினர்! அதைத்தான் கஷ்மீர் மக்கள் எதிர்த்தனர்! ”

    இதை விடகேவலமான பொய் உலகில் இருக்க முடியாது.. நானும் ஒரு கீழ் ஜாதிதான்.. அனால் இப்படி பொய் புளுகி எனது கருத்தை பரப்ப வேண்டிய அவசியம் இல்லை.. உண்மையை பேசினாலே நாட்டின் பாதி ஜாதி பிரச்சனை தீர்ந்து விடும்..

    • நன்றி! எனது விளக்கத்தையும் படித்து விட்டு , உண்மையை பேசுங்கள்! உண்மை மதவெறி, இன வெறி மற்றும் தேசீய வெறிகளுக்கு அப்பாற்பட்டது!

      • உமது விளக்கம பொயும் புரட்டுமாக இருக்கிரது. இந்திய ராணுவத்தை அவமான படுத்துவதாக உள்ளது.

        • அய்யா சீனுவாசரே! விளக்கம் என்னுடையதல்ல! விக்கிபீடியா காஷ்மீர் பற்றிய பக்கததை படிக்கவும்! அதில் 50 ஆதார குறிப்புகள் எடுத்தாளப்பட்டுள்ளன!
          ……Notes[edit]
          Jump up ^ “Jammu and Kashmir”. Britannica. Retrieved 24 March 2016.
          Jump up ^ Basham, A. L. (2005) The wonder that was India, Picador. Pp. 572. ISBN 0-330-43909-X, p. 110.
          ^ Jump up to: a b c Imperial Gazetteer of India, volume 15. 1908. Oxford University Press, Oxford and London. pp. 93–95.
          Jump up ^ “A Comparative Dictionary of the Indo-Aryan Languages”. Dsalsrv02.uchicago.edu. Retrieved 2015-05-29.
          Jump up ^ A.K. Warder, Indian Buddhism. Motilal Banarsidass 2000, page 256.
          Jump up ^ A.K. Warder, Indian Buddhism. Motilal Banarsidass 2000, pages 263–264.
          Jump up ^ Tapasyananda, Swami (2002), Sankara-Dig-Vijaya, pp. 186–195
          Jump up ^ Triadic Heart of Shiva, Paul E. Muller-Ortega, page 12
          ……….

            • அய்யா சீனுவாசரே! இதில் மகிழ்ச்சியடையவோ , இகழ்ச்சியுறவோ என்ன இருக்கிறது? உமது படில் தகுதியானதும், தரமானதாகவும் இருந்தால் விட்டாமல் முயற்சி செய்யுங்களேன்!

  9. Pravin! pl refer wikepedia https://en.wikipedia.org/wiki/Kashmir and get enlightened!

    I wish to highlight the following portion from the above reference to prove you are wrong! There was no proof of oppression of Pundits, their exodus is over several hundred years which is being exoggerated by sangh parivar!

    “The Kashmiri Pandits, the only Hindus of the Kashmir valley, who had stably constituted approximately 4 to 5% of the population of the valley during Dogra rule (1846–1947), and 20% of whom had left the Kashmir valley by 1950,[40] began to leave in much greater numbers in the 1990s. According to a number of authors, approximately 100,000 of the total Kashmiri Pandit population of 140,000 left the valley during that decade.[41] Other authors have suggested a higher figure for the exodus, ranging from the entire population of over 150[42] to 190 thousand (1.5 to 190,000) of a total Pandit population of 200 thousand (200,000)[43] to a number as high as 300 thousand[44] (300,000).
    The total population of India’s division of Jammu and Kashmir is 12,541,302[45] and Pakistan’s division of Kashmir is 2,580,000 and Gilgit-Baltistan is 870,347.[46]
    Administered by Area Population % Muslim % Hindu % Buddhist % Other
    India Kashmir Valley ~4 million (4 million) 95% 4%* – –
    Jammu ~3 million (3 million) 30% 66% – 4%
    Ladakh ~0.25 million (250,000) 46% – 50% 3%
    Pakistan Azad Kashmir ~2.6 million (2.6 million) 100% – – –
    Gilgit–Baltistan ~1 million (1 million) 99% – – –
    China Aksai Chin – – – – –
    Statistics from the BBC In Depth report.”

    RSS and Bakths are greatest LIARS ! How can I compete with them?

    • You are so much immersed in dravidian nonsense that you cant even think of yourself like a normal person can.. I said that for 1000s of years, pandits were the original residents of the kashmir valley.. 1000.. and you start from 1846? Is that the time history starts for you dravidian idiots? There are so many lies in your claims that I dont even know where to start..

      Lie 1: You say that Kashmir Pandits were pushed from Jammu into the Kashmir valley.. This is complete nonsense.. They would be called Jammu pandits then, not Kashmiri pundits.. Even the hardcore islamist separatists dont claim this..

      And you cite Wikipedia article, the chief propaganda tool these days which doesn’t even mention the only Ethnic cleansing that happened in India: the exodus of Pandits.. Even if we take your article as a proof, it means that more than 1,00,000 were driven out by the islamists.. is that OK for you?

  10. //ஐயோ ஐயோ.. யாருப்பா ஒனக்கு இந்த கதைய சொன்னது? காஷ்மீரில் பண்டிட்கள் தான் 1000 ஆண்டுகளாக இருந்து அந்த கலாச்சாரத்தை வளர்த்தவர்கள்.. இன்று இருக்கும் இஸ்லாமியர்கள் முகலாய படையெடுப்புக்கு பின் 14ஆம் நூற்றாண்டில் வந்தவர்கள்.. //

    ஐயோ ஐயோ.. யாருப்பா ஒனக்கு இந்த கதைய சொன்னது?

    1846 முதல் 1947 வரை காஷ்மீர் பண்டிட் சதவீதம் 4 – 5% தான்! அதில் 20 % அதாவது மொத்த ஜனதொகையில்

      • 1846ல் தான் வரலாறு தொடங்குகிறதோ இந்த திராவிட புழுகர்களுக்கு? 7ம் நூற்றாண்டில் அந்த அரேபிய பாலைவனத்தில் இஸ்லாம் தோன்றி வரும் வழியெல்லாம் மக்களையும் கலாச்சாரத்தையும் சூறையாடுவதற்கு முன்பு யார் இருந்தார்கள்? எப்படி இந்து – புத்த கலாசாரம் மொத்தமாக மறைந்து இஸ்லாம் என்ற death cult பிரதானமானது?

        இதோ ஒரு sample :

        The main substantive record however comes from Guru Tegh Bahadur’s son, Guru Gobind Singh in his composition, Bachittar Natak. This composition is recited in every Sikh place of workshop on the occasion of the Guru’s martyrdom. According to records written by his son Guru Gobind Singh, the Guru had resisted persecution, adopted and promised to protect Kashmiri Hindus.[4][29] The Guru was summoned to Delhi by Aurangzeb on a pretext, but when he arrived, he was offered, “to abandon his faith, and convert to Islam”.[4][29] Guru Tegh Bahadur refused, he and his associates were arrested. He was executed on November 11, 1675 before public in Chandni Chowk, Delhi. [5][29]

        1846ல் தான் வரலாறு தொடங்குகிறதோ இந்த திராவிட புழுகர்களுக்கு? 7ம் நூற்றாண்டில் அந்த அரேபிய பாலைவனத்தில் இஸ்லாம் தோன்றி வரும் வழியெல்லாம் மக்களையும் கலாச்சாரத்தையும் சூறையாடுவதற்கு முன்பு யார் இருந்தார்கள்? எப்படி இந்து – புத்த கலாசாரம் மொத்தமாக மறைந்து இஸ்லாம் என்ற death cult பிரதானமானது?

        இதோ ஒரு sample :

        The main substantive record however comes from Guru Tegh Bahadur’s son, Guru Gobind Singh in his composition, Bachittar Natak. This composition is recited in every Sikh place of workshop on the occasion of the Guru’s martyrdom. According to records written by his son Guru Gobind Singh, the Guru had resisted persecution, adopted and promised to protect Kashmiri Hindus.[4][29] The Guru was summoned to Delhi by Aurangzeb on a pretext, but when he arrived, he was offered, “to abandon his faith, and convert to Islam”.[4][29] Guru Tegh Bahadur refused, he and his associates were arrested. He was executed on November 11, 1675 before public in Chandni Chowk, Delhi. [5][29]

        சீக்கியர்கள் கூட காஷ்மிரி ஹிந்துக்களுக்கு துணை நின்றார்கள் அன்று இஸ்லாமிற்கு எதிராக… ஆனால் secular India அவர்களை கை விட்டது.. இதை நடக்கவே இல்லை என்று சில திராவிட மூடர்கள் இங்கு வாதாடுகின்றனர்.. இவர்களுக்கு வரலாறு தெரியாதென்று சொலவதா இல்லை பொய் புழுகுகிறார்கள் என்று சொலவதா ? திருவள்ளுவரையே கிறித்துவர், st thomas சொல்லித்தான் அவர் திருக்குறளை இயற்றினார் என்று வள்ளுவரையே அடகு வைத்த கூட்டத்தை என்ன சொன்னாலும் தகும்.. இந்த லட்சணத்தில் இவர்கள் தமிழின் காவலர்கள் என்று பெயர் வேறு.. கொடுமை..

        • முட்டால் பக்தர்களுக்கு தான் வரலாறு என்பதே கசப்பாயிருக்கிறதே! அவர்களது புராண புலுகு மூட்டையே அவர்களுக்கு வரலாறு! காஷ்மீர் பல்லத்தாக்கின் வரலாற்றை பேசினால் சீக்கிய-இஸ்லாமிய சண்டைக்கு தாவுகிறீரே!

          பார்பனரின் இன வெறியால்,மன்னனாக முடி சூட முடியாத king rinchan இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான்!
          Shah Mir arrived in Kashmir in 1313 along with his family, during the reign of Suhadeva (1301-1320), whose service he entered. In subsequent years, through his tact and ability Shah Mir rose to prominence and became one of the most important personalities of his time. Later after the death in 1338 of Udayanadeva, the brother of Suhedeva he was able to assume the kingship himself, Rinchan (d. 1323), a commander from Ladakh region who had entered Kashmir as a fugitive seized the throne of Kashmir, started his personal quest for religion, was not accepted into Hinduism by the Brahmins due to his race, happened to watch Sayyid Bilal (d.1327) at prayer, was enchanted by the simplicity of the Sayyid’s faith and embraced it with fervour.[25]
          Rinchan from Ladakh, and Lankar Chak from Dard territory near Gilgit came to Kashmir, and played a notable role in the subsequent political history of the valley. All the three men were granted Jagirs by the King Rinchan for three years became the ruler of Kashmir, Shah Mir was the first rular of Shah mir dynasty, which had established in 1339.

          • திராவிட புளுகர்களுக்கு marxist கள் எழுதுகிற புழுகு மூட்டை வரலாறு மட்டும்தான் தெரியும்..

            https://books.google.dk/books?id=18eABeokpjEC&pg=PA307&lpg=PA307&dq=Shah+Mir+arrived+in+Kashmir+in+1313+along+with+his+family&source=bl&ots=JE00K8GP6P&sig=7Vum2dBnRwM1FGQpdFVwkKDNFcw&hl=en&sa=X&ved=0ahUKEwjtoPrb2e3LAhVH8ywKHeRZB6MQ6AEIJTAD#v=onepage&q=Shah%20Mir%20arrived%20in%20Kashmir%20in%201313%20along%20with%20his%20family&f=false

            After Zulju’s departure, his son Ramachandra tried to establish as the ruler but Rinchana treacherously murdered him and imprisoned his family and seized the power himself.

            இஸ்லாம் எங்கெல்லாம் சென்றதோ அந்த நாட்டின் மக்களையும் கலாச்சாரத்தையும் கொன்று விட்டுதான் நிறுவப்பட்டது.. அரேபியா, ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இந்தியா வரை இதே கதைதான்.. காஷ்மீர் ஒன்னும் இதற்கு விதி விளக்கில்லை..

            It is said that after Rinchana came to power, he held discussions with both Hindu and Buddhist priests but none could satisfy him. He finally decided that he will accept the religion of the next person he sees in the morning. That person was Sayyid Sharaf Al-din, a Sufi saint..

            இதையெல்லாம் whitewash செய்து இந்த திராவிட கூத்தாடிகள் என் தமிழ் மக்களை ஏமாற்றி குடும்பம் வளர்த்தது போதும்.. உன்னை போன்ற புளுகு மூட்டைகளை social media பார்த்துக்கொள்ளும்.. இன்னும் 10 ஆண்டுகளில் திராவிடம் துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓட போகிறது..

            • ஆரிய பார்ப்பனியம் எங்கெல்லாம் சென்றதோ அந்த தேசத்தின் மக்களை கொன்று கலாச்சாரத்தை உட்செரித்து தான் வேத மதமாக தன்னை நிறுவனப்படுத்திக் கொண்டது..
              இந்திய துணைக்கண்டத்தின் எல்லா தேசிய இனங்களும் அதற்கு சாட்சி! தீபாவளி, முதல் மாபலி, மஹிசாசுரன் உள்ளிட்டு பல சாட்சிகள் இங்குள்ளது.

              திராவிட இனத்தை சேராத, மார்க்சிஸ்ட் இல்லாத அம்பேத்கரும் கூட இதை பற்றி பதிவு செய்துள்ளார்.

              வந்தேறி ஆரியப் பார்ப்பனியம் அதிகாரத்தை இழப்பது உறுதி!

              • ஆர்யன் – திராவிடன் என்ற பொய் பித்தலாட்ட propaganda வை இன்னும் எத்தனை DNA studies ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் இவர்களுக்கு பிரெச்சனை இல்லை.. பிரிட்டிஷ் historians பித்தலாட்ட wheeler மற்றும் racist max muller கூறிய பொய்களையே உண்மை என்று பொய் பிரசாரம் செய்ய மட்டும்தான் தெரியும்..

                “The recent discovery of the dried up Saraswati River further negates the Aryan invasion theory. Satellite photography from outer space shows the existence of a dried -up river bed in Northern India. The archeological evidence indicates that the river dried up completely about 1900 B.C., much before 1,500 B.C., the date ascribed to Aryan invasions. Saraswati is mentioned numerous times in the Vedic scriptures of the Aryans, indicating that these people lived in India during very ancient times.
                Recent DNA evidence further negates the Aryan invasion theory. ”

                http://uwf.edu/lgoel/documents/amythofaryaninvasionsofindia.pdf

                ராவணனை பிராமணன் என்று தெரியாமல் கொண்டாடிய திராவிட மூடர்களுக்கு DNA studies பற்றியெல்லாம் தெரிந்துருக்க வாய்ப்பில்லைதான்..

                http://uwf.edu/lgoel/documents/amythofaryaninvasionsofindia.pdf

                “”திராவிட இனத்தை சேராத, மார்க்சிஸ்ட் இல்லாத அம்பேத்கரும் கூட இதை பற்றி பதிவு செய்துள்ளார்.””

                அம்பேத்கரை உருப்படியாக படித்தவருக்கு தெரியும் அவர் தீண்டாமை எப்படி வேரூன்றியது என்று கூறுகிறார் என்று.. அவரின் கருத்துபடியே 2000 வருடத்திற்கு முன்பு வரை தீண்டாமை இல்லை.. பின்னர் அது கடுமயனதானது என்று யாருக்கும் மாற்று கருது இல்லை தான்..

                ஆனால் அதே அம்பேத்கர் இஸ்லாமை பற்றி என்ன கூறுகிறார், ஏன் தான் புத்த மதத்திற்கு மாறினார், இஸ்லாமிற்கோ க்ரிச்துவதிற்கோ இல்லை என்பதை தெளிவாக கூருகிறார் .. அதை இந்த திராவிட கூலிகள் வெளியில் பேச மாட்டார்கள்..

                • அம்பேத்கரும் திராவிட இனத்தை சேர்ந்தவர்தான் என்ற உண்மையறியாமல் பலர் உளறிக்கொட்டுகின்றனர்! அதிலும் ஆரிய சாதியினரால் பாதிக்கப்பட்ட திராவிடர்! இந்துஸ்தானம் எனப்படும் ஆரிய குடியிருப்புக்கு தெற்கெ உள்ள மகாராஷ்டிரா இன்னும் தட்ஷிண பாரதம் என்றே அழைக்கப்படுகிறது! முதலில் இருவகை சாதி, பின்னர் மூன்றுவகையாகி , சங்க்ரம சாதிகள் பெருகியதால் நாலாம் சாதியும் உண்டாயிற்றாம்! இதிலும் சேராத அய்ந்தாம் சாதியினரே இன்றைய தாழ்த்தப்பட்டவர்கள்! ஆரிய மேலாண்மயை சாராத மக்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கலாம்! பஞ்சமர் என பார்ப்பனர் குறித்தனர்! பாவம் அம்பி. மார்க்சீயத்தையும் படிக்கவில்லை, அம்பேதகரையும் அறியவில்லை! ஆர் எஸ் எஸ் புலுகு மூட்டை எழுத்தாளர்கள் விட்ட ரீல்களெல்லாம் சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டதே!

          • “காஷ்மீர் பல்லத்தாக்கின் வரலாற்றை பேசினால் சீக்கிய-இஸ்லாமிய சண்டைக்கு தாவுகிறீரே! ”

            According to records written by his son Guru Gobind Singh, the Guru had resisted persecution, adopted and promised to protect Kashmiri Hindus.

            வாசிக்க தெரியாதோ?

            அது இருக்கட்டும், Jammu வில் தான் pandit கல் இருந்தார்கள். அவர்கள் kashmir valley யில் இல்லவே இல்லை என்ற புளுகி விட்டு இப்போ கண்டதையும் பேசும் உன்னை போல இல்லை நான்..

            • Hஉ
              //திராவிட புளுகர்களுக்கு மார்க்சிஸ்ட் கள் எழுதுகிற புழுகு மூட்டை வரலாறு மட்டும்தான் தெரியும்..//
              உண்மைதான் அய்யா! உங்கள் அண்ட ,பேரண்ட புழுகு மூட்டைகளைத்தான் தினம் தினம் கேட் கிறோமே!
              அது இருக்கட்டும்,
              /…. ஜம்மு வில் தான் பன்டிட் கல் இருந்தார்கள். அவர்கள் கஷ்மிர் வல்லெய் யில் இல்லவே இல்லை என்ற புளுகி விட்டு இப்போ கண்டதையும் பேசும் உன்னை போல இல்லை நான்../ அதான் தெரிகிறதே! ஆதாரத்துடன் 1% க்கு மேல் இல்லை என சுட்டியும், அவுரங்கசீப் காலத்து கதையை எடுப்பீர்கள்! அதற்கு முன்?

              அதுமன்றி மன்னர் முதலில் யார் முதலில் வருகிராரோ அந்த மதத்தில் சேர்வாராம்! இது ஏற்கெனவே மகாபாரத கதையில் விட்ட ரீல்தானே!

              இந்துத்வா வாதிகளுக்கு திராவிடத்தை இழுக்காவிடில் தூக்கம் வராது போலும்! ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!

  11. In the same wikepedia article ……under NOTE:

    40. Zutshi 2003, p. 318 Quote: “Since a majority of the landlords were Hindu, the (land) reforms (of 1950) led to a mass exodus of Hindus from the state. … The unsettled nature of Kashmir’s accession to India, coupled with the threat of economic and social decline in the face of the land reforms, led to increasing insecurity among the Hindus in Jammu, and among Kashmiri Pandits, 20 per cent of whom had emigrated from the Valley by 1950.”
    Jump up ^
    41. Bose 1997, p. 71, Rai 2004, p. 286, Metcalf & Metcalf 2006, p. 274 Quote: “The Hindu Pandits, a small but influential elite community who had secured a favourable position, first under the maharajas, and then under the successive Congress regimes, and proponents of a distinctive Kashmiri culture that linked them to India, felt under siege as the uprising gathered force. Of a population of some 140,000, perhaps 100,000 Pandits fled the state after 1990; their cause was quickly taken up by the Hindu right.”

  12. Now a days pakistan doesnt depend upon spreading terrorism in India through ISI or any other means they are poking our eyes with our own fingers like those who support anti india activities like JNU row, HU etc. in this list our Ajathasathru also comes.

  13. நன்றி சீனுவாசன் அவர்களே! இப்படித்தான் தேச விரொதத்திற்கு புதிய இலக்கணம் வகுப்பீர்களோ? நான் தான் மக்கள் நலனே தேசநலன் என ‘தவறாக’ கருதிவிட்டேன் போலும்! இப்போது தான் புரிந்து கொண்டேன் ‘பார்பன இந்துத்வாநலனே, தேசநலன்’ என்று!

    • தேச நலன் என்பது வெறும் பொய் பிரச்சாரங்களை நம்பி வெட்டி தம்பட்டம் அடிப்பது இல்லை.. பல்லாயிரம் ஆண்டு கலாசாரத்தையும் அதன் பின்னோடி வரும் சந்ததியினரின் நலனும்தான்.. ஆனால் திராவிட புழுகர்களுக்கு வெறும் பார்ப்பணம் பேசுவது மட்டும்தான் தெரியும்.. தமிழ்நாட்டில் இஸ்லாம் பெரிய கொடூரத்தை செய்ய வில்லை என்பதற்காக இவர்கள் இஸ்லாமின் எல்லா கொடூரத்தையும் whitewash செய்து பழியை இந்துக்கள் மீது போடுவது வழக்கம்.. இஸ்லாமை கடுமையாக போராடிய வீர சிவாஜி பார்பணர் கிடையாது.. ஒரு கீழ் ஜாதி காரர் தான்.. அனால் இந்த திராவிடர் வரலாற்றில் அதை பற்றியெல்லாம் பேச மாட்டார்கள்..

      முன்பு சொன்னது போல வள்ளுவரையே கிறிஸ்துவர் என்று அடகு வைக்கும் இந்த கூட்டத்திற்கு உண்மையான வரலாற்றை பற்றி பேச பிடிக்காது தான்..

      • அணு உலைகளே கூடாது என நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவரும் வேளையில், அணு விபத்து ஏற்பட்டால், விபத்திற்குப் பொறுப்பான ஏகாதிபத்திய மற்றும் உள்நாட்டு தரகு முதலாளித்துவ நிறுவனங்களிடம் இந்திய அரசோ மக்களோ இழப்பீடு கேட்கக்கூட முடியாது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மோடி, தேசத்துரோகத்தில் மன்மோகன் சிங் உள்ளிட்ட அனைவரையும் விஞ்சிவிட்டார்.

      • கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதிவரை நடைபெற்ற உலக வர்த்தகக் கழகத்தின் பத்தாவது மாநாட்டில் விவசாய மானியம் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திலும் கையெழுத்திட்டிருக்கிறது, மோடி அரசு. அத்தீர்மானம் சில விதிவிலக்குகள் தவிர, உணவுப் பொருட்களுக்கு வழங்கப்படும் ஏற்றுமதி மானியத்தை ஏழை நாடுகள் 2018-ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ரத்து செய்துவிட வேண்டும்; விவசாயிகளிடமிருந்து உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வது; அவற்றை ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிப்பது ஆகியவை தொடர்பாக விரைந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிவுக்கு வர வேண்டும் எனக் கோருகிறது.

        ஏற்றுமதி மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் நோக்கம், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தானியத்தை இந்தியாவின் தலையில் கட்டுவதும், இந்திய விவசாயத்தையும் உணவுத் தற்சார்பையும் அழிப்பதும்தான். பொது விநியோகம், நெல் கொள்முதல் ஆகியவை ஏழைகளின், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை. அவற்றை ஏகாதிபத்தியங்களின் நிபந்தனைக்கு உட்படுத்துவதென்பது விவசாயத்தையும், மக்களின் உயிரையும் முற்றுமுழுதாகப் பலியிடுவதன்றி வேறல்ல.

        இந்திய மக்களின் உணவு உரிமை மட்டுமின்றி, அவர்களின் கல்வியுரிமையும் ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைக்கப்பட்டிருக்கிறது. காட்ஸ் ஒப்பந்தத்தில் இந்தியக் கல்வித் துறை சேர்க்கப்பட்டிருப்பதை விலக்கிக் கொண்டு, அதிலிருந்து வெளியேற வாய்ப்பிருந்தும், கல்வித் துறையைப் பன்னாட்டு கல்வி வியாபாரிகளுக்குத் திறந்துவிடுவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்த ஒப்புக்கொண்டிருக்கிறது………..

        …………….. தேச துரோக மோடி அரசு.

  14. \\ ‘பார்பன இந்துத்வாநலனே, தேசநலன்’ என்று!// ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்கய்யா

  15. இஙு ஒருவர் காஷ்மீர பள்ளத்தாக்கு ‘வரலாறு’ என்று ஒரு கதையை புருடா விடுகிறார்! இந்து அரசனுக்கு ஜால்ரா போட்டு வந்த கும்பல், காஷ்மீர் வேலியின் செல்வங்களை குவித்து வைத்துகொண்டு, அப்பாவி மக்களை ஏய்த்து கொண்டிருந்தது ,நில உச்ச வரம்பு சட்டம் வந்ததாலும், ஜனனாயக அரசில் பெரும்பான்மை மக்களின் அரசு பதவி ஏற்றதும், பாச்சா பலிக்காமல் வெளியேறினர் என்பதே சரித்திரம் பகரும் உண்மை! வழக்கம் போல இந்துத்வா வினரின் துவேஷ சரித்திரம் இதற்கு ஒத்து போகாது தான்!

    காஷ்மீரில் மட்டுமா? வட கிழக்கிலும் , தெற்கிலும் இவர்கள் செய்த சரித்திர புரட்டுகள் கொஞசமல்ல!

    தமிழ்னாட்டில் 8000 சமண முனிவர்களை கழுவேற்றியது, கேரளாவில் புத்த பிக்குகளின் தலையை வெட்டி கொணர்பவருக்கு பரிசும் , புத்த, சமணநூல்கள் உள்ளீட்ட தமிழ்நூல்கள் தீயிலும் , ஆற்றிலும் விட ‘பட்வா’ இட்டதும் ஆராய்ச்சியாளர்கள் அறிவர்! வரலாறுகளை புரட்டும் கூட்டம் வந்துவிட்டது ஜாக்கிரதை! ஜாக்கிரதை!!!!

    • “ஆதாரத்துடன் 1% க்கு மேல் இல்லை என சுட்டியும், அவுரங்கசீப் காலத்து கதையை எடுப்பீர்கள்! அதற்கு முன்?”

      The same stupid wikipedia article which doesnt talk about the main demographic changing ethinc cleansing says this:

      “According to a number of authors, approximately 100,000 of the total Kashmiri Pandit population of 140,000 left the valley during that decade.[41] Other authors have suggested a higher figure for the exodus, ranging from the entire population of over 150[42] to 190 thousand (1.5 to 190,000) of a total Pandit population of 200 thousand (200,000)[43] to a number as high as 300 thousand[44] (300,000).”

      ஆக 1 லட்சம் பேரோ அல்லது 3.5 லட்சம் பேரோ, அவர்கள் தங்கள் நிலத்தில் இருந்து இஸ்லாமிய மூடர்களால் துரத்தி அடிக்க படலாம்.. அது வெறும் 4% தானே, செத்து தொலையட்டும்.. அப்படி தானே? இந்த கொடூர பதிப்பை முன்பே பச்சையாக சொல்லியுருந்தால் இவ்வவவு நேரம் பேச வேண்டியதில்லையே.. உமக்கு இந்துக்கள் செத்தொளிந்தால் கவலை இல்லை.. அவர்களை பார்பனர்கள் என்று சொல்லி cover up செய்து விடுவீர்கள்.. மார்க்சிஸ்ட் களே defend செய்ய முடியாத பண்டிட்களின் பரிதாபத்தை அது வெறும் 1% தானே என்று சொல்ல திராவிட மூடர்களால் மட்டும் தான் முடியும்..

      “jammu வில் தான் pandit கல் இருந்தார்கள். அவர்கள் kashmir valley யில் இல்லவே இல்லை என்ற புளுகி விட்டு இப்போ கண்டதையும் பேசும் உன்னை போல இல்லை நான்..”

      இந்த பொய்க்கு எப்போது மன்னிப்பு கேட்க போகிறாய்? ஜம்முவில் இருக்கும் ஹிந்துக்கள் பண்டிட்கள் கிடையாது.. வேறு ஜாதி காரர்களும் SC க்களும் அடங்கும்.. புழுகி புழுகியே பழகிய திராவிட புழுகர்களுக்கு வாயில் இருந்து எப்போது உண்மை வர போகிறது..

    • LoL!! இந்த சொற்களை தஞ்சாவூர் கல் வெட்டில் செதுக்கி நீரும் பக்கத்தில் உக்காந்து கொள்ளும்.. உமக்கு பின் வரும் திராவிட மூடர்கள் அதை பார்த்து எப்படி பொய் புழுகுவது என்று கற்று கொள்ளட்டும்..

      பண்டிட்கள் துரத்தி அடிக்கபடவில்லை என்று ஒரு research article அல்லது news article காட்ட முடியுமா உமக்கு?

      “தமிழ்னாட்டில் 8000 சமண முனிவர்களை கழுவேற்றியது”

      அதானே பார்த்தேன், இந்த புழுகு மூட்டைகளை பல்லாண்டுகளாக சொல்லி வந்தால் உண்மையாகி விடுமோ? இதற்கு எந்த சான்றும் Jain நூல்களிலோ அல்லது வரலாற்று நூல்களிலோ கிடயாது.. இதை ஒரு legend ஆகத்தான் historians பார்கிறார்கள்..

      https://books.google.dk/books?id=WWfnXbVWjKcC&pg=PA181&redir_esc=y&hl=en#v=onepage&q&f=false – page 181

      ஆனால் அதெல்லாம் உங்களை போன்ற புழுகிகளுக்கு தேவை இல்லைதான்..

  16. இதை போன்ற புழுகு மூட்டையைத்தானே அய்யா புராணமாகவும், இதிகாசமாகவும் திரித்து கொண்டு அலைகிறீர்கள்! இதில் புழுகு புராணநயகனுக்கு பிறந்த இடமாம், அத்ற்கு கோவில் ஒன்றுதான் குறையாமே ! சமணர் களை கழுவிலேற்றும் திருவிழாவை , அது வெறும் புரட்டுதான் என்று நிறுத்திவிட வேண்டியது தானே !

    ஆரிய -திராவிட பேதமே இல்லை என , இட ஒதுக்கீடை ரத்து செய்யும் நோக்கில் இ ப்போது கூக்குரலிடும் பார்ப்பனர்கள் , தங்கள் புராணங்களை திருத்துவார்களா? டி என் ஏ டெச்டில் ஒரு மண்ணும் தெரியாது , ஆரியர் இங்குள்ள திராவிடர்களுடன் கலந்து கலப்பினமாகவே உள்ளனர் என்பது ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதானே! வேத காலத்தில் தஸ்யூக்கள் என்றும் பின்னர் திராவிட என்றதும் தெற்கத்திய மக்களை குறிக்க , திராவிடரல்லாத வந்தேறிகள் பயன்படுத்திய சொல்தானே திராவிடர் என்பது!

    ஆதி சங்கரன், பறையர் சேரியில்நுழைந்து சைவம் உபதேசித்ததால் தானே ‘திராவிட சிசு’ என்று திருஞான சம்பந்தனை குறிப்பிட்டார்! ஆச்சாரியாரை எதிர்த்த காமராஜரை ‘க்லிக்’ என்று காந்தியார் குறிப்பிட்டது போல!

    பார்பனர்களுக்கு அவர்களின் அயோகியதனத்தை சுட்டிகாட்டும்போது ஆத்திரம் வருவது, இயல்புதானே! ஆனால் இதை படிக்கும் பார்பனரல்லாதார் தெளிவு பெறட்டுமே!

    பார்ப்பனர்கள் யாரும் தூய ஆரியல்ல என்பதைநாங்கள் அறிவோம், மகாபாரதம், ராமாயணம் நாயகர்கள் , ரிஷிகள் பலரும் ஆரியனல்லாதோருக்குதானே பிறந்தனர்! வாமதெய பிறவிகளுக்கு கோத்திரம் ஒரு கேடு!

    • “டி என் ஏ டெச்டில் ஒரு மண்ணும் தெரியாது , ஆரியர் இங்குள்ள திராவிடர்களுடன் கலந்து கலப்பினமாகவே உள்ளனர் என்பது ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதானே! ”

      ஜாதி அமைப்பில் பிராமணர்களோ மற்ற ஜாதியினரோ கலக்க வில்லை.. ஜாதி கொடுமை அதிகமாக இருந்தது என்று ஒரு வாயில் சொல்லி விட்டு அதே வாயில் இப்போ கலப்பினமாகவே இருக்கிறார்கள் என்று சொல்லுவது இவர்களுக்கு பொழுது போக்கு,… அதுவும் இல்லாமல் இந்த DNA டெஸ்ட் ரிப்போர்ட்ய் படித்தால் தெரியும் அவர்கள் எத்தகைய analysis செய்தார்கள் என்று.. அனால் அதையெல்லாம் உங்களை போன்ற வெள்ளை கார அடிமைகள் படித்து தெரிந்து கொள்வீர்கள் என்று நான் எதிர் பார்க்க வில்லை..

      “ஆதி சங்கரன், பறையர் சேரியில்நுழைந்து சைவம் உபதேசித்ததால் தானே ‘திராவிட சிசு’ என்று திருஞான சம்பந்தனை குறிப்பிட்டார்!”

      திராவிட சிசு என்பது தென்னிந்தியாவின் peninsula அமைப்பை குறிப்பது.. அதை ஒரு racist ஆக மாற்றியது max muller .. எந்த தமிழனுக்கும் தெரியாத இந்த ஆரிய படையெடுப்பு ஒரு ஜெர்மனி நாட்டு racist க்கு மட்டும் தெரிந்ததோ?

      ____________________________________>>>>>>>>>>>>>>>>>

      • ஆதி சங்கரனே திராவிட தீபகர்ப்பத்தை செர்ந்தவன் ஆனாலும், திருஞான சம்பந்தனை மட்டும் திராவிட சிசு என்றது பூகோள ரீதியில் மட்டும் அல்ல! இன துவேஷத்தாலும் தான்! டெல்லி ராம லீலாவில் ராமனை சிவப்பு நிற்த்திலும், ராவணனை கறுப்புநிறத்திலும் சித்தரிப்பது இந்த ஆரிய புத்திதானே!

        ஆங்கிலேயர் இரண்டாம் உலக போரின் நடுவில் தொய்வுற்றபோது இட்லரிடம் செண்பகராமன் பிள்ளையை தூதனுப்பி , இந்திய ஆரிய தேசத்தை மீட்டு தரும்படிக்கு கெஞ்சியது உண்மையல்லவா? அதற்கு இட்லர் ,இந்தியாவில் ஆரியர் இனத்தூய்மை கொண்டவர் அல்ல, கெர்மானியர் மட்டுமே இனத்தூய்மை கொண்ட ஆரியர் என்றதும் அப்போதைய செய்தி என்பதால் சரித்திரம் மறந்து விடுமா?

        அண்மை இலங்கை போரின்போது கூட, புலிகள் போரில் ஜயித்தாலும், சிங்கள இனம் ஆரிய இனம் , அதனால் இந்தியா தங்களை கைவிடாது என ஜெயவர்த்தனா கொக்கரிக்கவில்லையா? இந்திராவின் மூக்கு, தனது மூக்கு போல னீண்டிருப்பதே ஆரிய சாமூத்திரகா லட்சணம் என கூறவில்லையா?

        அதெல்லாம் கிடக்க, மாஸ்கோ பல்கலைக்கழக முன்னால் கழக பேராசிரியர் இந்தியாவில் மகதமன்னன் பிம்பிசாரன் காலத்தில் ‘லிச்சாவி’ என்ற ஆரிய குடியரசு இருந்ததையும் , அஙு புகழ்பெற்ற ‘அம்ரபாலி’ இருந்ததையும் குறிப்பிடவில்லையா? அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சுட்ட மண் ஏடுகளின் ஆதாரத்திலேயே அப்படி கூறினார்!

        பார்ப்பானை மதிக்காத பிம்பிசாரனை, அவன் மகன் அஜாதசத்ருவை ‘அம்ரபாலி’ மூலம் வளைத்து போட்டு, மகனாலேயே தந்தையை கொல்லவைத்தார்களே, அதுதானே ஆரிய தந்திரம்! பின்னர் சந்திர குப்தனுக்கும் இந்த கதிதானே!

        எத்தனை டி என் ஏ ஆராய்ச்சிகள் வந்தாலும், பாமர மக்கள் அடிமையாவது பார்ப்பன புராண இதிகாச அபத்தங்களையே இந்து மதம் எனநம்பி புதை சேற்றில் ஆழ்ந்திருக்கும் மக்களை தெளிவுற செய்யாதவரை, இந்திய மக்களின் அடிமைத்தனம் விலகாது! காரல் மார்க்ஸ்சின் கருத்தும் அதுவே! ஆனால் தோழர் நம்பூதிரிபாட் போன்ரோர் வேத கால கம்யூனிசம் பேச, தோழர் புத்ததேவ் போன்றோர் டாடாயிசமே கம்யூனிசம் என்பர்! பாவம் அச்சுதமேனன், முதலமைச்சர் என்ற முறையில் மூனாறில் டாடாவின் அத்து மீறிய அக்கிரமிப்பை தடுக்க, கட்சியோ டாடாவிடம் பல் கோடி ‘நன் கொடை’ பெற்றிருப்பதால் , திருவாளர் மேனனையே சஸ்பென்ட் செய்தது , புதிய ஆரியம்!

        • “ஆதி சங்கரனே திராவிட தீபகர்ப்பத்தை செர்ந்தவன் ஆனாலும், திருஞான சம்பந்தனை மட்டும் திராவிட சிசு என்றது பூகோள ரீதியில் மட்டும் அல்ல! இன துவேஷத்தாலும் தான்! டெல்லி ராம லீலாவில் ராமனை சிவப்பு நிற்த்திலும், ராவணனை கறுப்புநிறத்திலும் சித்தரிப்பது இந்த ஆரிய புத்திதானே! ”

          எந்த வரலாற்றில்? திராவிட புழுகு மூட்டை வரலாற்றிலா? திராவிட சிசு என்று சொல்வது சம்பந்தரா இல்லை சங்கரரைய என்ற விவாதம் சென்று கொண்டிருக்கையில் சங்கரர் – மண்டனமிஸ்ரா விவாதத்தில் திராவிட சிசு என்று குறிப்பிடுவடிலையே உண்மை புரிந்திருக்கும்..

          இராவணன் பிராமணனாகப் பிறந்தவன் என்ற உண்மையை எதனை நாளைக்குதான் பொய் சொல்லி இப்படி propaganda செய்யப் போகிறீர்கள்?

          __ மற்ற எல்லாமே max muller மற்றும் caldwell போன்றவர்கள் ஆரம்பித்து வைத்த racism தான்..

          Dharampal அவர்களின் புத்தகமான “beautiful tree” ஒன்றே போதும்.. பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவை ஆக்கிரமிக்கும் முன் இந்தியாவின் சமுதாயம் எப்படி இருந்தது, பள்ளிக்கூடங்கள் எப்படி இருந்தது, எப்படி சூத்திரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பள்ளிகளில் படித்தார்கள் என்று விளக்கமாக கூறும்..

          • /இராவணன் பிராமணனாகப் பிறந்தவன் என்ற உண்மையை எதனை நாளைக்குதான் பொய் சொல்லி இப்படி ப்ரொபகன்ட செய்யப் போகிறீர்கள்?/
            பொய் சொல்லி ப்ரொபகண்டா செய்வது யார்? உங்கள் புராண புழுகு மூட்டைகள் தானே?
            இராமனும், கிருட்டினனும் பார்ப்பான் அல்ல! கிருஷ்ணன் மகபாரத காலத்தை சேர்ந்தவனே அல்ல என்று முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் “பாரத தரிசனம்” என்றநூலில் எழுதியுள்ளாரே,அப்படியென்றால் கீதையே இடைச்செருகல் தானே . இது புரட்டல் இல்லையா? அதை ஒப்புகொள்கிரீர்களா? பார்பன பரசுராமன் பார்ப்பானல்லாத ராமனிடம் தோற்று ஓடவில்லையா? பார்ப்பான் ஜெயிப்பது கதையில்தானே!நேரடி மோதலில் எந்த பார்ப்பானும் ஜெயித்த வரலாறே இல்லையே!

      • இந்தா வைத்துக்கொள் ..உங்கள் திராவிட புழுகு மூட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாக முழுகிக்கொண்டிருக்கின்றன..

        “The results that have come from a detailed geo-exploration (exploration conducted through GPS technology) conducted by seven IIT-Kgp departments, tracing the different stages through which civilization progressed, and how Varanasi has been able to maintain continuity as a living civilization, unlike comparable seats of human settlement in the world. The researchers have dug 100-metre-deep boring holes all over Varanasi to conclude that there is evidence of continuous settlement at least till 2000BC. There are enough indications that by the time the data collection is over, there would be enough to prove that this date can be pushed back to about 4500BC.”

        http://timesofindia.indiatimes.com/city/kolkata/Varanasi-is-as-old-as-Indus-valley-civilization-finds-IIT-KGP-study/articleshow/51146196.cms

  17. /…….இந்த புழுகு மூட்டைகளை பல்லாண்டுகளாக சொல்லி வந்தால் உண்மையாகி விடுமோ? இதற்கு எந்த சான்றும் Jஐன் நூல்களிலோ அல்லது வரலாற்று நூல்களிலோ கிடயாது.. இதை ஒரு லெகென்ட் ஆகத்தான் கிச்டொரிஅன்ச் பார்கிற//

    நீங்கள் செய்த கொலைகள் எல்லாம் லீஜென்டு? ஆதாரமில்லாமல் லட்சக்கணக்கில் பண்டிட்கள் வெளியேற்றபட்டனர் என்று திட்டமிட்டு பொய்யுரை பரப்பி வருவது சரித்திரமாகிவிடுமா?

    தஞசாவூர் என்ன அய்நா சபையிலேயே கல்வெட்டில் பொறித்து அஙேயே உட் கார்ந்து கொள்ளுங்கள்! காஸ்மீர பிரச்சினை பொது வாகெடுப்பு மூலமே தீர்த்து கொள்ளபடல் வேண்டும் என்ற அய்நா தீர்மானம் இன்னும் செல்லுபடியாகும்!

  18. பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று சொல்வார்கள்! காஷ்மீர பண்டிட்டுகள் 1990-ல் காஷ்மீர பல்லத்தாக்கை விட்டு வெளியேறியதை பற்றி பேசவந்தவர், ஆளும் வர்க்கம் மாறியதால் டெல்லிக்கு குடிபெயர்ந்த நிகழ்வை, ஆர் எஸ் எஸ் (இந்து மகாசபை) பார்ப்பன கூட்டமே ‘வெளியேற்றம்’ என திட்டமிட்டு அரசியல் செய்து வருகிறது! சித்பவன் பார்ப்பன சதி கூட்டமும், கஷ்மீர பண்டிட் சதி கூட்டமும் ஒன்றுகொன்று சதிசெய்து அரசியல் செய்வதில் சளைத்தது அல்ல! இன்னமும் இந்திய அரசியல் நிகழ்வுகள் இவர்களாலேயே தீர்மாணிக்கபடுகின்றன!
    காமராஜர் முதல்வராவதையே விரும்பாத, அவரை கருப்பு காக்கா என்றும், கிலிக் என்றும் , வசை மொழி பேசியவர்கள், காமராஜரை பதவியிழக்க செய்தும், பின்னர் டெல்லியில் அவரை கொலை செய்ய முயற்சித்ததையும், முழு பூசணிக்காயை சொற்றில் மறைப்பது போல மறைத்து , ‘காமராஜர் ஆட்சி’ என் கிறார்!

    • “பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று சொல்வார்கள்! காஷ்மீர பண்டிட்டுகள் 1990-ல் காஷ்மீர பல்லத்தாக்கை விட்டு வெளியேறியதை பற்றி பேசவந்தவர், ஆளும் வர்க்கம் மாறியதால் டெல்லிக்கு குடிபெயர்ந்த நிகழ்வை, ஆர் எஸ் எஸ் (இந்து மகாசபை) பார்ப்பன கூட்டமே ‘வெளியேற்றம்’ என திட்டமிட்டு அரசியல் செய்து வருகிறது!”

      where’s the proof ? I have asked you to prove this with 1 article or newspaper. You still cant give even 1.. and still keep talking nonsense..

  19. சைனா திபெத் நாட்டை ஆக்ரமித்தது, இந்தியாவின் மீது படை எடுத்தது, மல்லிகை புரட்சி என்னும் பெயரில் ஜனநாயகத்திற்காக அமைதியாக போராடிய 2 லக்ஷம் மக்களை சைனா ராணுவம் மூலம் கொன்றதை பற்றி. இந்தியாவில் உள்ள எந்த கம்யூனிச்ட் உண்டியல் குலுக்கிகளுக்கும் பேச துப்பு இருக்காது. சைனாவில் முகநூல் தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால் இந்திய ராணுவத்தை பற்றி ஆதாரம் இன்றி உங்க குரூப் பேசும்.

  20. proof?
    https://en.wikipedia.org/wiki/Kashmiri_Pandit

    ….According to a number of authors, approximately 100,000 of the total Kashmiri Pandit population of 140,000 left the valley during the 1990s.[22] Other authors have suggested a higher figure for the exodus, ranging from the entire population of over 150,000,[23] to 190,000 of a total Pandit population of 200,000,[24] to a number as high as 350,000.[25] The nature of the planned exodus has remain controversial, with the involvement of then Governor Jagmohan in organizing a clandestine exodus been a subject of controversy.[26] …..

    • Wikipedia is a propaganda tool. Anyone can write anything there.. Show me 1 newspaper article or any other research paper that stated that the ethnic cleansing did not happen and nothing happened in 1990.. I can show 1000 proof..

  21. how come wikipedia is a propaganda tool when it doesn’t suits you? 1000 of your authors too exagerate exodus theory ! Is their any neutral National / International research without RSS bias, to proove your point? Given the Hindutva groups single point agenda of bringing Hinduraj, every move is suspicious and have larger backround to achieve RSS goal!

    • You give me anything.. newspaper article, research article.. anythiing.. I have posted the below links already.. so many times.. ONly haters and dravidian fools think otherwise.. unless you think Farooq Abdullah, the Nero, also as a Hindutvaadi..

      http://www.thehindu.com/news/national/farooq-seeks-forgiveness-for-ethnic-cleansing/article1063770.ece

      “What happened in the years between 1947 and 1990? Why did the Muslims not stand up and say that we will protect you to the Pandits? We need to study that.”

      Hinting at involvement of Pakistan in the turmoil that the State now battles, he said: “The wave that came from the neighbour gradually grew into hatred. God exists in all forms and religions. As a Muslim I seek the Pandits’ forgiveness.””

      http://indianexpress.com/article/opinion/columns/fifth-column-remember-kashmiri-pandits/

      “Prominent Kashmiri Pandits were already being targeted and killed. BJP leader and prominent social activist Tika Lal Taploo was killed in broad day light in down town Sringar…Justice Nilakanth Ganjoo was gunned down and it took hours for his body to be picked up from the road. Advocate Prem Nath Bhat was brutally killed in Anantnag area of South Kashmir. Many more not so well known were killed. The message was loud and clear. Kashmiri Pandits were targets and no one could save them. It seemed nobody cared about whether they lived, died or perished. It still wasn’t January, 1990. But Kashmiri Pandits hoped against hope that the powerful Indian nation would come to their rescue. They stayed put in the only place they knew as home.

      On January 4, 1990, Aftab published a press release of Hizbul Mujahideen asking all Hindus to leave. Another newspaper Al-Safa published the same press release. Soon notices to leave were pasted on the doors of Pandits. ”

      http://www.dailyo.in/politics/kashmiri-pandits-exodus-habbakadal-hizbul-mujahideen-yasin-malik-pakistan/story/1/8533.html

  22. Again and again one big lie is coming out from vested interested twisters of history.
    The biggest lie is that Vedic(Brahminsm) religion is the only oldest religion in India.This is not true.Even in RigVeda itself says,Non Aryans speaking unknowing languages(mridhavak), they don’t do the Vedic karmas, they don’t believe in vedic devas.They don’t have faith in Vedic dharma.They don’t do yanjas.
    Ref: Dr.Radha Kumdha Mukerji in his “Hindu Sabhayatta”.

    The people who are not belonging to Vedic religion,according to rigveda is belonging to which religion?
    Truth is not really invisible.

    Vedic literature is glorifying Yagnas or Yagams.After all what are those Yagnas?
    Brahmins chant mantra’s and butchered animals in to pieces and putting in to the fire.What spirituality is this?

    Dravidian’s religious history is very older than vedic history. Pre historic jainism and Siva, Sakthi and Muruga worshiping were existed several centuries before Vedic inversions.
    -FROM PreAryan blogspot.com

    • Who is saying that? It’s your crooked Dravidians and marxist historians who are building up this. My sect worships ‘Suyambu’ lingam.. we dont follow vedic rituals. I’m a Hindu still.. believes in the overall principles of Hinduism..

      But dont believe in this dravidian nonsense.. Especially when none of the Tamil or any other south Indian literature never mentions anything about it.. and something only max muller and mortimo wheeler knows ? BS..

  23. நெருப்பு கோழிகள் ஆபத்து காலங்களில் தலையை மணலுக்குள் புதைத்துக்கொண்டு, சுற்றிலும் இருட்டுதான் என்றுநினைத்து கொள்ளுமாம்! இந்துத்வா வாதிகளுக்கும் அதே பழக்கம்தான்! https://en.wikipedia.org/wiki/Indo-Aryan_peoples

  24. “The difference between linguistic and genetic distinction of South Asians. According to Reich et. al (2009), while the Indo-Aryan linguistic group comprises of mainly northern parts of India, genetically, all South Asians across the subcontinent are a mix of both Indo-Aryan and Dravidian gene groups. Recent studies have indicated a distinct Ancestral North Indian (ANI) population and Ancestral South Indian (ASI) population which mixed over thousands of years to produce the current South Asian population. Northern Indians and traditionally upper castes (such as Kashmiri Pandits and Telugu Brahmins) are more related to Western Eurasians while Southern Indians and lower castes are less related to Western Eurasians.”

    https://en.wikipedia.org/wiki/Indo-Aryan_peoples

  25. “Dravidians are native speakers of any of the Dravidian languages of South Asia. There are around 220 million native speakers of Dravidian languages. They form the majority of the population of South India. Dravidian-speaking people are natively found in India, Pakistan, Afghanistan, Nepal, Maldives, Bangladesh and Sri Lanka.

    Historically the Sanskrit word “drāviḍa” is used to denote the geographical region of South India,[4] and was devoid of any ethnic or linguistic identity.[4] In Prakrit, words such as “Damela”, “Dameda”, “Dhamila” and “Damila” which later evolved into “Tamila” could have been used to denote an ethnic identity”

    https://en.wikipedia.org/wiki/Dravidian_peoples

  26. “The term Aryan originates from the Sanskrit word ārya (Devanāgarī: आर्य), in origin an ethnic self-designation, in Classical Sanskrit meaning “honourable, respectable, noble”.

    In the 18th century, the most ancient known Indo-European languages were those of the ancient Indo-Iranians. The word Aryan was therefore adopted to refer not only to the Indo-Iranian peoples, but also to native Indo-European speakers as a whole, including the Romans, Greeks, and the Germans. It was soon recognised that Balts, Celts, and Slavs also belonged to the same group. It was argued that all of these languages originated from a common root—now known as Proto-Indo-European—spoken by an ancient people who were thought of as ancestors of the European, Iranian, and Indo-Aryan peoples. The ethnic group composed of the Proto-Indo-Europeans and their modern descendants was termed the “Aryans”.

    This usage was common among knowledgeable authors writing in the late 19th and early 20th century. An example of this usage appears in The Outline of History, a bestselling 1920 work by H. G. Wells. In that influential volume, Wells used the term in the plural (“the Aryan peoples”), but he was a staunch opponent of the racist and politically motivated exploitation of the singular term (“the Aryan people”) by earlier authors like Houston Stewart Chamberlain (see below) and was careful either to avoid the generic singular, though he did refer now and again in the singular to some specific “Aryan people” (e.g., the Scythians). In 1922, in A Short History of the World, Wells depicted a highly diverse group of various “Aryan peoples” learning “methods of civilization” and then, by means of different uncoordinated movements that Wells believed were part of a larger dialectical rhythm of conflict between settled civilizations and nomadic invaders that also encompassed Aegean and Mongol peoples inter alia, “subjugat[ing]”—”in form” but not in “ideas and methods”—”the whole ancient world, Semitic, Aegean and Egyptian alike”.

    However, in a climate of burgeoning racism it proved difficult to maintain such nuanced distinctions. Even Max Mueller, a linguist who wrote in 1888 that “an ethnologist who speaks of Aryan race, Aryan blood, Aryan eyes and hair, is as great a sinner as a linguist who speaks of a dolichocephalic dictionary or a brachycephalic grammar,”[8] was on occasion guilty of using the term “Aryan race.”[9] So it was that despite the injunctions of writers like Wells, the notion of an Aryan race took root in mainstream culture.

    https://en.wikipedia.org/wiki/Aryan_race

  27. மிகவும் சிறந்த ஒரு நேர்காணல், காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் இந்த நேர்காணலில் வஹாபிகளை பற்றி சகோதரி ஒரு இடத்தில், “வஹாபிய இழிமகன்கள் காஷ்மீரில் தர்காக்களை இடிக்கவேண்டும் என உளறுவதாக” கூறுகிறார். வஹாபியிசத்தை பற்றி ஒன்றுமே தெரியாமல் அதுபற்றி ஏன் கருத்து சொல்கிறார் என தெரியவில்லை. தரை மட்டத்திற்கு மேல் இருக்கும் அடக்கஸ்தலங்களை இடிக்க வேண்டும் என நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். அது வணங்கும் இடமாக மாறி விடும் என்று…
    அப்படித்தான் ஆகிவிட்டது… இறந்துபோன எலி பூனை யானை போன்றவற்றிற்கெல்லாம் தர்கா கட்டி வணங்குகிறார்கள்.தர்கா நிர்வாகி கூட்டம், மக்கள் மடமையை காசாக்குகிறார்கள். மக்களை சுரண்டும் பிராமண பூசாரித்தனத்தை தோலுரித்து காட்டும் நீங்கள் (வினவு) தர்கா பூசாரித்தனத்தையும்தானே சாடவேண்டும் ? வஹாபிகள் இதைத்தானே செயகிறார்கள் ?
    காவி கயவர்களால் ஏதேனும் தர்காவிற்கு ஆபத்து என்றாலும் அதை காக்க போராடுவதும் வஹாபிகள்தான்…

Leave a Reply to Ajathasathru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க