தொழிலாளி : வியர்வையின் மணம்
வரலாறு நெடுக மனித உழைப்பு கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையைப் புரிந்து கொண்டு மூலக்கனிவளங்களை வெட்டியெடுத்து பலவித கருவிகளை உண்டாக்கிச் சிறுகச் சிறுக உருவாகி வளர்ந்ததன் நீட்சியே இன்று நாம் காணும் உலகம். விண்ணை முட்டும் கட்டிடங்களும் தேசத்தின் குறுக்கு நெடுக்காக ஓடும் சாலைகளும் அதன் மேல் ஊர்ந்து செல்லும் வாகனங்களும் பறக்கும் விமானங்களும் மிதக்கும் பிரம்மாண்டமான கப்பல்களும் அந்த வரலாற்றின் சாட்சியங்கள் !
எங்கோவொரு சுரங்கத்தின் குறுகிய பொந்துக்குள் பிராணவாயுவைக் கோரி விம்மும் நுரையீரலுக்கு கந்தகத்தின் நெடியை சுவாசமாய் அளித்துக் கொண்டு இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, புற்றுநோயை சம்பளமாகவும் மரணத்தை ஓய்வூதியமாகவும் பெற்றுக் கொண்டு ஏதோவொரு தொழிலாளி வெட்டியெடுத்து அனுப்பும் நிலக்கரியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரமே நமது இரவுகளை ஒளிர வைக்கிறது.
தொழிலாளிகள் இல்லாதவொரு உலகம் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் ! நாம் பயணிக்கும் பேருந்து, இரயில், தார்ச்சாலை, தண்டவாளங்கள், எரிபொருள், கட்டிடங்கள், பாலங்கள், இரும்புக் கம்பிகள் …
சட்டென்று ஒரு நாள் இவையெல்லாம் திடீர் என்று மறைந்து விட்டால் ? மொத்த உலகின் நாகரீகமும் ஒரு நான்காயிரம் ஆண்டுகள் பின்னோக்கி ஓடிவிடும். நாம் கற்களை வைத்துக் கொண்டு மிருகங்களைத் துரத்திக் கொண்டிருப்போம்.
இயற்கையிலிருந்து மனிதகுலம் போராடிப் பெற்ற நாகரீகக் கொடை அனைவருக்கும் பொதுவானதே, எந்த தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல. தனிச்சொத்துடைமையின் உச்சகட்டமான முதலாளித்துவம், இயற்கையினதும் உழைப்பினதும் பலன்களை லாபமாக ஒரே இடத்தில் குவித்துக் கொள்கிறது. செங்குத்தாய் நிற்கும் முக்கோணத்தின் தலைப்பாகமாக வீற்றிருக்கும் முதலாளித்துவம், அதன் கீழ்ப்புறத்தில் தன்னையே தாங்கி நிற்கும் உழைப்பையும் இயற்கைச் செல்வங்களையும் சுரண்டிக் கொழுக்கிறது.
ஆம். நமது நாகரீக உலகை உயிரைக் கொடுத்து உருவாக்கி பராமரிக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது? அவர்களின் உலகிற்கு அழைத்துச் செல்கிறது இந்நூல்.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- நோக்கியா : 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி
- ஐ.டி. பிரமிடில் பாலாஜி அண்ணாவுக்கு இடமில்லை
- பிரெட்டும் ஜாமும் இல்லையா மம்மி ?
- 42 வருடங்களாக மாதம் 15 ரூபாய் சம்பளம் !
- உங்கள் ஷூக்களை உருவாக்குபவர்களின் கதை இது !
- சென்னையில் சிவப்பு தொழிலாளிகள் !
- சிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் !
- உங்கள் உடைகளுக்காக உருக்கப்படும் தொழிலாளிகள் !
- உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம் !
- உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை கோலார் : தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள்
- இன்னா பண்றது ? சோறு துன்னாவணுமே !
- கூலித் தொழிலாள்ர்களைக் கொன்றது சுடுநெருப்பா ? இலாப வெறியா?
- ஒரு மெக்கானிக் தொழிலாளி பார்வையில் அரசு பேருந்துகள்
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !
_____________
நான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய கலாசாரம் புத்தகத்துக்கு சந்தா செலுத்தினேன். ஆனால் எனக்கு இரண்டு மாதமாக புத்தகம் வரவில்லை. இந்த மாத இதழும் வரவில்லை. அனுப்பிவைக்கும் பாடி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி