privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீர் : இந்தியா தோற்றுவரும் யுத்தம் !

காஷ்மீர் : இந்தியா தோற்றுவரும் யுத்தம் !

-

காஷ்மீரில் இந்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் எனும் அமைப்பைச் சேர்ந்த தளபதிகளுள் ஒருவரான புர்ஹான் வானி, ரம்ஜான் பண்டிகை முடிந்த மறுநாளே – ஜூலை 8 அன்று இரவில் அரசுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 22 வயதான, காஷ்மீர் இளைஞர்களிடையே செல்வாக்கு கொண்ட புர்ஹான் வானியைக் கொன்றதைப் பெரும் வெற்றியாக அறிவித்த மோடி அரசு, அக்கொலையையடுத்து காஷ்மீரில் வெடித்துக் கிளம்பிய மக்களின் போராட்டங்களை அடக்கமுடியாமல் தோற்றுப் போய் நிற்கிறது.

புர்ஹான் வானியின் இறுதி ஊர்வலம்
இரண்டு இலட்சம் காஷ்மீரிகள் கலந்து கொண்டதாகச் சொல்லப்படும் புர்ஹான் வானியின் இறுதி ஊர்வலம்

புர்ஹானி வானி கொல்லப்பட்ட மறுநாள் தொடங்கி கடந்த இருபது நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த பத்து மாவட்டங்களை ஊரடங்கு உத்தரவுக்குக் கீழ் கொண்டுவந்து, மக்கள் நடமாட்டத்தைத் தடைசெய்த பிறகும்; தொலைக்காட்சி, கேபிள், இணையம், கைபேசி, சமூக வலைத் தளங்கள் உள்ளிட்ட நவீன தொடர்புச் சாதனங்களை அனைத்தையும் முடக்கிய பிறகும்; காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் மீது சட்டவிரோத தடை விதித்து, அவற்றை முடக்கிய பிறகும்; ஏறக்குறைய ஐம்பது காஷ்மீரிகளை சிறிய ரக குண்டுகளால் (pellet guns) சுட்டுக் கொன்ற பிறகும்; இக்குண்டுகளால் தாக்கப்பட்டோரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமது கண்பார்வையை இழந்து, குருடர்களாக ஆக்கப்பட்ட பிறகும்; ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் காயப்படுத்தி, அவர்களை முடமாக்கிய பிறகும்; பல நூறு பேர் கருப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் இந்திய அரசுக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய காஷ்மீர் மக்களின் போராட்டம் தணிந்துவிடவில்லை.

புர்ஹான் வானி
புர்ஹான் வானி

இந்திய இராணுவத்தின், துணை இராணுவப் படைகளின் குண்டுகளை விட காஷ்மீரத்து இளைஞர்களின் கைகளில் உள்ள கற்கள் வலிமையானவை என்பதை காஷ்மீர் பள்ளத்தாக்கு உலகுக்கு எடுத்துக் காட்டி வருகிறது. ஒப்பீட்டுரீதியாகச் சொன்னால், பாலஸ்தீன மக்கள் யூத இனவெறி இசுரேலிய அரசுக்கு எதிராக நடத்திய இன்டிஃபதா போராட்டத்தைப் போன்றதொரு போராட்டத்தை காஷ்மீரத்து இளைஞர்கள் இந்து பாசிச இந்திய அரசுக்கு எதிராக நடத்தி வருகிறார்கள்.

புர்ஹான் வானியின் இறுதிச் சடங்கிலும் ஊர்வலத்திலும் தடையை மீறி இரண்டு இலட்சம் பேர் கலந்து கொண்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அதேபொழுதில், இரண்டொரு மாதங்களுக்கு முன்பு காஷ்மீரின் முதல்வர் பதவியில் இருந்தபொழுதே மரணமடைந்தத முஃப்தி முகம்மது சயீதின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை ஐயாயிரம்தான்; மலைக்கும் மடுவுக்குமான இந்த வேறுபாடு காஷ்மீர் மக்களின் அரசியல் உணர்வை    பிரதிபலிக்கிறது.

* * *

இந்திய அரசாலும், காஷ்மீரத்துக்கு வெளியே உள்ள, குறிப்பாக, வட இந்திய மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த தேசியவாதிகளாலும் தீவிரவாதி, பயங்கரவாதி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவன், பாக். கைக்கூலி என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்ட இளைஞன் மீது காஷ்மீரத்து மக்கள், குறிப்பாக இளைஞர்கள் அன்பையும் பெருமதிப்பையும் பொழிகிறார்கள் என்றால், அதற்கான காரணம் என்ன என்பதை அறிவுள்ள எவனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால், காஷ்மீர் மக்கள் நடத்திவரும் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி எழுதியிருக்கும் துக்ளக் சோ,இப்போது நடக்கும் இந்தப் போராட்டத்திற்குக்கூட, போராட்டக்காரர்களுக்கு நாளொன்றுக்குத் தலா ஐநூறு ரூபாய் தரப்படுவதாகவும், காஷ்மீருக்குத் தேவை அறுவை சிகிச்சைதான் என்றும்கூறிமக்கள்போராட்டத்தைகொச்சைப்படுத்தியிருப்பதுடன்அரசு பயங்கரவாதத்திற்கு வக்காலத்தும் வாங்கியிருக்கிறார்.

"பெல்லட்" குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீரிகள்.
“பெல்லட்” குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீரிகள்.

“ஈழத்திலிருந்து சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும்; ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்ற கோரிக்கை எந்த அளவிற்கு நீதியானதோ, நியாயமானதோ, அது போலத்தான், “காஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும்; இந்தியாவுடன் இணைந்திருப்பது குறித்து காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” எனக் கோருவதிலும் அரசியல் நியாயம் உள்ளது. 1947- இல் ஜம்மு-காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைத்துக்கொண்டபோது, பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு ஒத்துக்கொண்டதோடு, அதனை ஐ.நா.மன்றத்திலும் கையெழுத்திட்டு எழுதிக் கொடுத்தது இந்திய அரசு. காஷ்மீர் பள்ளத்தாக்கு முசுலீம்கள் இந்திய அரசிடம் புதிதாக எதையும் கோரவில்லை. “நீங்களே ஒப்புக்கொண்டபடி பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்” என்ற வரலாற்று நியாயத்தைத்தான் கோருகிறார்கள்.

“உலகிலேயே காஷ்மீர் பள்ளத்தாக்குதான் மிக அதிக எண்ணிக்கையில் இராணுவம் குவிக்கப்பட்ட பகுதி” என்கிறார், மனித உரிமை பற்றிய சர்வதேச தீர்ப்பாயம் என்ற அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளரும் சமூகவியல் பேராசிரியருமான சட்டர்ஜி. இந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளைச் சேர்ந்த 6,71,000 சிப்பாய்கள் துப்பாக்கி சனியன்களோடு காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார், அவர். இந்த எண்ணிக்கையின்படி பார்த்தால் பதினைந்து காஷ்மீரிகளுக்கு ஒரு இராணுவச் சிப்பாய். இதற்கு அப்பால், பொது பாதுகாப்புச் சட்டம், கலவரப் பகுதிச் சட்டம், ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் எனப் பலவாறான ஆள்தூக்கி கருப்புச் சட்டங்கள் அம்மாநிலத்தில் நடைமுறையில் உள்ளன.

"பெல்லட்" குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீரிகள்.
“பெல்லட்” குண்டுகளால் தாக்கப்பட்ட காஷ்மீரிகள்.

போலீசோ, இராணுவமோ ஒருவரைச் சந்தேகித்தாலே போதும், அவரை இரண்டு ஆண்டுகள் வரை விசாரணையின்றிச் சிறையில் அடைப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது, பொது பாதுகாப்புச் சட்டம். நினைத்த நேரத்தில் யாரையும் சுட்டுக் கொல்லவும், யாருடைய வீடு புகுந்து தேடவும், அவர்களது சொத்துக்களைச் சூறையாடி அழிக்கவும் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் வரம்பற்ற அதிகாரத்தை வழங்கியிருப்பதோடு, அவர்கள் நடத்திய மோதல் படுகொலை போலியாக இருந்தால்கூட, அதற்காக அரசுப் படையினர் மீது வழக்குப் பதிவு செய்யமுடியாதபடி சட்டப் பாதுகாப்பையும் அளித்திருக்கிறது, ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம்.

காஷ்மீரில் 1989 தொடங்கி 2011 முடியவுள்ள இருபது ஆண்டுகளில் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எட்டாயிரத்திலிருந்து இருபதாயிரம் பேர் வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கக்கூடும் என்கிறது அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு. 1989 ஜனவரி தொடங்கி 2016 ஜூன் முடியவுள்ள இருபத்தேழு ஆண்டுகளில் 94,391 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 22,816 பெண்கள் கைம்பெண்கள் ஆக்கப்பட்டுள்ளனர். 10,193 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடுகிறது காஷ்மீர் ஊடக சேவையகம். காஷ்மீரின் பாரமுல்லா, பண்டிபூர், குப்வாரா மாவட்டங்களில் 38 இடங்களில் 2,730 அடையாளம் தெரியாத சடலங்கள் அரசுப் படையினரின் நிர்பந்தம் காரணமாகப் புதைக்கப்பட்டிருப்பதை ஐந்தாண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் மனித உரிமை ஆணையமே அம்பலப்படுத்தியது. காஷ்மீர் மக்களின் அரசியல் கோரிக்கைகள் மட்டுமல்ல, இந்தச் சட்டவிரோத அத்துமீறல்களுக்கும்கூட அவர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை.

இந்திய அரசின் அடக்குமுறைகளுக்கு அடங்கிப் போகாத காஷ்மீர் மக்களின் வீரம்
இந்திய அரசின் அடக்குமுறைகளுக்கு அடங்கிப் போகாத காஷ்மீர் மக்களின் வீரம்

டெல்லியில் நிர்பயா என்ற பெண் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த நகரப்புறத்து நடுத்தர வர்க்கம், காஷ்மீரத்துப் பெண்கள் மீது அரசுப் படையினர் இழைத்த கொடுமைகளுக்கு எதிராக ஒரு சுண்டுவிரலைக்கூட அசைக்காமல், மௌனமாக அங்கீகரிப்பதை; ஈழத் தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்திய அட்டூழியங்களைக் கண்டிக்கவும், எதிர்த்துப் போராடவும் தயங்காத தமிழகம், காஷ்மீரில் இந்திய இராணுவம் நடத்திய அட்டூழியங்களைக் கண்டும் காணாமல் நடந்துகொள்வதை எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்திவிட முடியாது.

* * *

புர்ஹான் வானி தனது 16-ஆவது வயதில் ஏன் தீவிரவாதியானான்? புர்ஹானின் வயதையொத்த காஷ்மீரத்து இளைஞர்கள் புர்ஹானை ஏன் ஆராதிக்கிறார்கள்? குண்டடிபட்டுச் செத்துப்போவோம் அல்லது கண்களை இழந்து வாழ்நாள் முழுக்க குருடனாய்த் திரிவோம் அல்லது தனிக் கொட்டடிச் சிறையில் அடைக்கப்படுவோம் எனத் தெரிந்திருந்தும், அதையெல்லாம் ஒரு பொட்டாகக் கருதாமல், கையில் கற்களோடு தெருவில் இறங்கி இராணுவத்தோடு ஏன் மோதத் துணிகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான காரணங்களை காஷ்மீரில் இந்திய அரசுதான் ஒவ்வொரு  நாளும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதனை பாகிஸ்தானில் தேடி பயனில்லை.

இந்திய அரசின் அடக்குமுறைகளுக்கு அடங்கிப் போகாத காஷ்மீர் மக்களின் வீரம்
இந்திய அரசின் அடக்குமுறைகளுக்கு அடங்கிப் போகாத காஷ்மீர் மக்களின் வீரம்

காஷ்மீரில் 1989-ல் வெடித்த ஆயுதப்போராட்டம் அடுத்த பத்தாண்டுகளில் ஒடுக்கப்பட்ட பிறகு, அங்கே அமைதி திரும்பி விட்டதாகவும், காஷ்மீர் மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதாகவும் இந்திய ஆளும் வர்க்கங்களும், அவர்களது எடுபிடிகளும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். 2002, 2008 சட்டமன்றத் தேர்தல்கள் இந்த அமைதிக்கு ஆதாரமாகக் காட்டப்பட்டன. ஆனால், இந்த அமைதி காஷ்மீர் மக்களின் விடுதலை உணர்வை எந்தவிதத்திலும் மழுங்கடித்துவிடவில்லை என்பதை 2008-லும், 2010-லும் நடந்த மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் எடுத்துக் காட்டின.

2008-இல் அம்மாநிலத்தை ஆண்டுவந்த காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அரசு, அந்த ஆண்டு வரவிருந்த தேர்தலில் ஜம்மு பகுதி இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, வனத்துறைக்குச் சொந்தமான 39.88 ஹெக்டேர் நிலத்தை அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் அனுபவித்துக் கொள்ள அனுமதித்துச் சட்டம் போட்டது.

காஷ்மீர் இராணுவ ஆக்கிரமிப்பு
இந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளைச் சேர்ந்த 6,71,000 சிப்பாய்கள் துப்பாக்கி சனியன்களோடு காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையின்படி பார்த்தால் பதினைந்து காஷ்மீரிகளுக்கு ஒரு இராணுவச் சிப்பாய்.

இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து காஷ்மீர் முசுலீம்கள் போராடியதையடுத்து, காங்கிரசு கூட்டணி அரசு இச்சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. சட்டம் திரும்பப் பெறப்பட்டதை இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக ஊதிப் பெருக்கிய ஆர்.எஸ்.எஸ்.-சிவசேனா கும்பல், காஷ்மீர் தலைநகர் சிறீநகரை இந்தியாவோடு இணைக்கும் ஜம்மு-சிறீநகர் நெடுஞ்சாலையில் தடைகளை ஏற்படுத்தி, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியின் மீது சட்டவிரோதமான பொருளாதாரத் தடையை ஏவிவிட்டது.

இந்தத் தடையைஎதிர்த்து”ஜம்மு-காஷ்மீர் பகுதியை, ஆசாத் காஷ்மீரோடு இணைக்கும் சாலைகளைத் திறந்துவிட வேண்டும்; அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்; ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்” ஆகிய மூன்று அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து காஷ்மீர்பள்ளத்தாக்குமக்கள்நடத்தியபோராட்டத்தை ஒடுக்குவதற்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

2010-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்து வந்த டுஃபாயில் மட்டூ என்ற சிறுவன் அரசுப் படையினரால் அநியாயமாக, தெருநாயைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் 120 பேர் கொல்லப்பட்டதோடு, அப்போரட்டத்தில் கலந்துகொண்டு, அரசுப் படைகளின் மீது கல்லெறிந்த ஒரே காரணத்திற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்களும், 18 வயதுகூட நிரம்பாத சிறுவர்களும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீரில் ஒருமுறை போலீசு நிலையத்தின் வாசலை மிதித்துவிட்டாலே, அதோடு வாழ்க்கையே முடிந்துவிடும். குற்றஞ்சுமத்தப்பட்டவர்கள், போலீசார் கூப்பிடும்போதெல்லாம், அது இரவோ, பகலோ மறுக்காமல் போலீசு நிலையத்திற்குச் செல்ல வேண்டும். போலீசு நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடக்கும் அவமதிப்புகளை, அடி உதை உள்ளிட்ட சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

காஷ்மீரில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்த நிலைமை, காஷ்மீரிகளுக்கு இரண்டு வாய்ப்புகளைத்தான் வழங்கியிருக்கிறது. ஒன்று, அவர்கள் போலீசின்-இராணுவத்தின் ஆள்காட்டிகளாக மாற வேண்டும் அல்லது தீவிரவாதப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசுப் படைகளின் கொலைவெறியாட்டத்திற்குத் தனது அண்ணனைப் பறிகொடுத்த, அரசுப் படைகளின் சித்திரவதைகளுக்கும் அவமானப்படுத்தலுக்கும் ஆளான புர்ஹான் வானி பின்னதைத் தேர்ந்தெடுத்தார். போராளிஅமைப்புகளிலிருந்துவிலகி, போலீசிடம்சரணடைந்தாலும், அவ்வாறுசரணடையும்இளைஞர்கள்அமைதியாக வாழ்வதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது என்பதற்கு நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்ட அப்சல் குரு ஓர்எடுத்துக்காட்டு.

* * *

காஷ்மீர் பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம்
தினசரிப் பத்திரிகைகள் வெளிவருவதைச் சட்டவிரோதமாகத் தடை செய்த மாநில அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்து சிறீநகரில் பத்திரிகையாளர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

2000-ம் ஆண்டுக்குப் பிறகு, வாஜ்பாயி ஆட்சியின் போதும், அதன் பிறகு வந்த காங்கிரசு கூட்டணி ஆட்சியின்போதும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பது என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகள், ஆலோசனைகள், குழுக்கள் குறித்துப் பிரமாதமாகப் பேசப்பட்டாலும், அவைகளில் ஒன்றுகூட காஷ்மீர் மக்களின் மையமான அரசியல் கோரிக்கையான பொது வாக்கெடுப்பு குறித்துப் பேச மறுத்தன. குறைந்தபட்சம், காஷ்மீர் மக்களுக்கு அரசுப் படைகளால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைப்பதைக்கூட உத்தரவாதம் செய்ய மறுத்தன. குறிப்பாக, காங்கிரசு கூட்டணி ஆட்சியின்பொழுது அமைக்கப்பட்ட, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் திலீப் பட்கோங்கர், கல்வியாளர் ராதா மோகன், முன்னாள் தகவல் அறியும் உரிமை ஆணைய ஆணையர் எம்.எம்.அன்சாரி ஆகியோரைக் கொண்ட மூவர் குழு, காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என ஒப்புக்குச் சப்பாணியான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை அளித்தது. அதனை வெளியிடக்கூட காங்கிரசு அரசுமறுத்துவிட்டது. ஆர்ப்பாட்டம் செய்யும்காஷ்மீர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்குப் பதிலாக, சிறிய இரக இரும்புக் குண்டுகள் அல்லது ரப்பர் குண்டுகளைக் கொண்டு சுடுவதையே பெரிய சலுகையைப் போல அறிவித்தது. இந்த துப்பாக்கியால் ஒருமுறை சுடும்பொழுது ஐநூறுக்கும் குறையாத குண்டுகள் மழை போல ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குவதால், அவர்களின் தலை தொடங்கி பாதம் முடிய உடம்பின் எந்தப் பகுதியும் குண்டுகளால் துளைக்கப்பட்டு, சல்லடைக் கண் போலாகிவிடும். நிரந்தர ஊனமாக்கி நடைபிணமாக்கி விடும். உலகிலேயே இந்தக் கேடுகெட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தி வரும் நாடுகள் இரண்டுதான். ஒன்று யுத இனவெறி கொண்ட இசுரேல், மற்றொன்று பார்ப்பன தேசிய வெறி கொண்ட இந்தியா.

puthiya-jananayagam-august-2016-backகாஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்துவது இருக்கட்டும்; அம்மாநிலத்திற்குச் சிறப்புரிமைகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவு காகித அளவில் நீடிப்பதைக்கூட ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் ஏற்றுக் கொள்வதில்லை.

காங்கிரசு அப்பிரிவைக் கொல்லைப்புற வழியில் நீர்த்துப் போகச் செய்தது என்றால், இந்து மதவெறிக்கும்பலோ அப்பிரிவை அடியோடு நீக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகவே கொண்டிருக்கிறது. முந்தைய காங்கிரசு அரசால் அமைக்கப்பட்ட மூவர் குழு, அதன் பரிந்துரைகள்,ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுடன் நடத்தப்பட்ட இரகசிய பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட கண்துடைப்பு நடவடிக்கைகளைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவை அனைத்தையும் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படும் சலுகையாக ஊதிப் பெருக்கி எதிர்த்தது.

காஷ்மீர் இளைஞர்களுக்கு வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் அளிப்பதன் மூலம் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்துவிடுவேன் என மார்தட்டினார் மோடி.முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியின்பொழுதே, காஷ்மீரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர உதான் திட்டம், உயர் கல்வி பயிலும் இளைஞர்களுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை உள்ளிட்டுப் பல்வேறு சலுகைகளும், நிதியுதவிகளும் அறிவிக்கப்பட்டன. காங்கிரசு உருவாக்கிய திட்டத்தைத்தான் மோடி அரசு புதிய மொந்தையில் காஷமீருக்கு அளித்தது. 2013-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் உதான் திட்டம், கடந்த மூன்றாண்டுகளில் 6,621 காஷ்மீரிகளுக்குத்தான் வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறது.

வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்ற மோடியின் வாய்ப்பந்தல் படுதோல்வி அடைந்துவிட்டதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. உண்மையில், இராணுவ ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்துவது, காஷ்மீரில் இந்து மதவெறியைத் தூண்டி வளர்த்துவிடுவது ஆகியவற்றில்தான் மோடி அரசு அக்கறை கொண்டிருக்கிறது.  அமர்நாத் யாத்திரையைத் தேச பக்த யாத்திரை போலச் சித்தரிப்பது, கிராம பாதுகாப்பு கமிட்டி என்ற போர்வையில் கைக்கூலிப் படைகளை உருவாக்கியிருப்பது ஆகியவற்றோடு, இராணுவ வீரர்களுக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிரந்தர குடியிருப்புகளை உருவாக்குவது, காஷ்மீரிலிருந்து வெளியேறச் சென்றுள்ள பண்டிட் பார்ப்பனர்களுக்காகத் தனிக் குடியிருப்புகளை உருவாக்கி, அவர்களை அங்கு குடியமர்த்துவது என்ற திட்டங்களைச் செயல்படுத்த முயன்று வருகிறது, மோடி அரசு.

அதே நேரத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீனின் தளபதியான புர்ஹான் வானி, தான் இறப்பதற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில், “எங்களது இயக்கம் அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு எவ்வித ஊறும் விளைவிக்காது. யாத்திரை செல்வது அவர்களின் உரிமை, தங்களது மதக் கடமையை நிறைவேற்றுவதை நாங்கள் மட்டுமல்ல, எதுவும் தடுக்காது” என குறிப்பிட்டுள்ளார். அதே அறிக்கையில், “காஷ்மீர் பண்டிட்டுகள், தமது சொந்த ஊருக்குத் திரும்புவதோடு, காஷ்மீர் முசுலீம்களுக்கு அருகிலேயே பழையபடி வசிக்கலாம்; அதற்கு மாறாக, இசுரேலில் யூதர்களுக்குத் தனிக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் போன்று பண்டிட்டுகளுக்குத் தனிக் குடியிருப்பு ஏற்படுத்தும் முயற்சியை எதிர்க்கவே செய்வோம்” என்று எச்சரித்திருக்கிறார்.

இந்த இளைஞனை நாட்டிற்கு எதிரான ஒரு பெருந்தீமை போலச் சித்தரித்துக் கொன்று போட்டுவிட்டது, மோடி அரசு. அதனைக் கண்டித்தும், தங்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் போராடத் துணிந்த காஷ்மீர் மக்களின் மீது கொடிய “பெல்லட்” தாக்குதலை நடத்தி, கிட்டதட்ட 50 பேரைச் சாகடித்து, நூற்றுக்கும் மேற்பட்டோரின் கண் பார்வையைப் பறித்துக் குருடாக்கி, ஆயிரக்கணக்கானோரைக் கொடுங்காயப்படுத்தி, இந்து தேசிய அரசு பயங்கரவாதம் தனது இரத்தப் பசியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது. அரியானாவில் தீ வைப்பு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறை வெறியாட்டத்தை நடத்திய ஜாட் சாதிவெறியர்கள் மீதும், முசுலீம் எதிர்ப்புக் கலவரங்களை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி அமைப்புகள் மீதும் காட்டப்படாத வன்மம், காஷ்மீர் முசுலீம்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கிறது.

அரசுப் படைகள் நடத்திய தாக்குதலால் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குச் சென்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவின் தலைவர் சுதர்சன் கே.குமார், “இந்த அளவிற்கு கண்களும் பார்வையும் பாதிக்கப்பட்டவர்களைச் சமீபத்தில் நான் எங்குமே பார்த்ததில்லை. ஒரு யுத்தத்தில்தான் இத்தகைய இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும்” எனக் குறிப்பிடுகிறார்.

காஷ்மீரி மக்கள் மீது ஒரு அநீதியான போரைமோடி அரசு நடத்தி வருவதை அந்த மருத்துவரின் வார்த்தைகள் அம்பலப்படுத்துகின்றன. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இந்தப் போர் முடிவின்றி நடந்து வருகிறது. சமீபத்தில் மோடி அரசு மேலும் பத்தாயிரம் சிப்பாய்களை காஷ்மீரில் இறக்கிவிட்டிருக்கிறது. துருப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் காஷ்மீர் மக்களை அச்சுறுத்திப் பணிய வைத்துவிட முடியாது. பொது வாக்கெடுப்பு உள்ளிட்டு காஷ்மீர் மக்களின் அரசியல் கோரிக்கைகளை அங்கீகரிப்பது மட்டும்தான், காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவதற்கான நியாயமான,சாத்தியமான வழி. அதற்கு முகங்கொடுக்காமல், நெருப்புக் கோழி மண்ணுக்குள் முகத்தைப் புதைத்துக் கொள்வது போல, தேசிய ஒருமைப்பாடு என்ற பார்ப்பனிய கண் கொண்டே காஷ்மீர் பிரச்சினையை அணுகுவதும், தீர்க்க முயலுவதும் மீண்டும் மீண்டும் தோல்வியையே தழுவும் என்பதோடு, அது காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் நம்பிக்கை துரோகமும் அநீதியுமாகும்.

– செல்வம்

_____________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016
_____________________________

  1. காஷ்மீரில் என்ன சார் அரசியல் நியாயம் இருக்கிறது… காஷ்மீர் மக்களுக்கு மற்ற இந்தியா மக்களிடம் இருக்கும் உரிமையில் என்ன உரிமை இல்லை என்று உங்களால் சொல்ல முடியும்மா ?

    காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆனால் அதற்கு தடையாக இருந்தது பாக்கிஸ்தான், அது பற்றி நீங்கள் என்றாவுது சொல்லியிருக்கிறார்களா ? நேரு காலத்தில் வாக்கெடுப்பு நடத்த இந்தியா தயாராக இருந்தும், வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் காஷ்மீர் மக்கள் இந்தியாவிற்கு தான் வாக்களிப்பார்கள் என்பதால் பாக்கிஸ்தான் அப்போது ஒப்புக்கொள்ளவில்லை.

    இப்போது காஷ்மீரில் இஸ்லாமிய மதவெறி தீவிரமாக தூண்டப்பட்டு இந்தியாவிற்கு எதிரான வெறுப்பை திட்டமிட்டு வளர்த்து அதன் பிறகு இந்திய பகுதியில் மட்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தானிகளும் தீவிரவாதிகளும் கோருகிறார்கள். இது எந்த வகையில் நியாயம் ?

    தீவிரவாதத்தை வளர்ப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை, கூட்டம் அதிகம் உள்ள பொது இடத்தில் நின்று கொண்டு இருக்கும் ராணுவ வீரன் மீது துப்பாக்கியால் சுட்டால் உடனே அவன் திரும்பி சுடுவான் அப்போது அப்பாவி மக்கள் இறக்க நேரிடும், அந்த அப்பாவி மக்கள் தீவிரவாதியின் குண்டுக்கு பலியாகி இருந்தாலும் பழி ராணுவம் மீது தான் விழும். உடனே இந்தியா ராணுவம் திட்டமிட்டு காஷ்மீரிகளை கொலை செய்கிறது என்று மசூதியில் பிரச்சாரம் செய்ய வேண்டியது.

    இப்படி தானே இந்தியா மீது வெறுப்பை வளர்த்தார்கள்.

    ______________

    • என் கருத்தை முழுமையாக வெளியிடாத வினாவிற்கு துளியும் நேர்மையில்லை. கருத்து சுதந்திரத்திற்கும் வினாவிற்கு சம்பந்தம் இல்லை, அவர்கள் எஜமானர்கள் சீனாவை போல் நடந்துகொள்கிறார்கள். இதுவே இந்தியாவிற்கு எதிரான கருத்தாக இருந்தால் வினவு கொஞ்சம் கூட தயக்கமே இல்லமால் வெளியிடும்.

      தேசதுரோகி வினவு

    • காஷ்மீர் மக்கள் இந்தியாவிற்கு தான் வாக்களிப்பார்கள் என்பதால் பாக்கிஸ்தான் அப்போது ஒப்புக்கொள்ளவில்லை.

      அப்போது இருந்த இந்திய பற்று இப்போது ஏன் இல்லை காரணம் RSS போன்ற மதவெறியர்கள்தன் அவர்கள் தன் மதவெறியுட்டும் வகையில் இன்னும் பேசிவருகிறார்கள் இந்த காவிகளுக்கு பயந்த அப்பாவிகளை முஸ்லிம் திவிராவதி முளைசலைவை செய்து இந்தியவிற்கு எதிராக பயன் பாடுத்துகிறான் இப்போது வேற மத்தியில் காவிகள் ஆட்சி இன்னும் அதிக திவிரமா இந்துத்த கொள்கையை தினிக்கிறான் இப்படி இருந்தால் அவன் எப்படி இந்தியவுடன் நெருக்கமாக இருப்பான் அதன் முஸ்லிம் திவிராவதி வலையில் சிக்கதன் செய்வான் முதலில் காவிகளை அடக்கினால் அவன் தனே அடங்கிவிடுவான் எரிவதை எடுத்தால் கொதிப்பது அடங்கும்

  2. வினவு போன்ற இந்தியா விரோத பத்திரிகைகள் எல்லாம் திட்டமிட்டு பொய்களை தீவிரவாதத்திற்கு மற்றும் பிரிவினைக்கு ஆதரவாக பரப்பினாலும் சாதாரண மக்களாகிய நாங்கள் எப்போதும் இந்தியாவிற்காக நிற்போம்.

    ஒரு ஹிந்து அமைப்பை சேர்ந்த கட்சி மத்தியில் ஆட்சியில் இருப்பது வினவு போன்றவர்களுக்கு வயித்தெரிச்சலை கிளப்புகிறது அதற்காக நாட்டையே திண்டாடும் நிலைக்கும் செல்கிறார்கள். இந்தியாவிற்கு எதிரிகள் வெளியில் இல்லை வினவு போன்றவர்கள் தான் இந்தியாவின் உண்மையான எதிரிகள்.

    இந்தியா விரோத செயல்களை செய்து கொண்டு இந்தியன் என்று பெயர் வைத்துக்கொள்ளும் தேசவிரோத கூட்டம் அல்ல நாங்கள்.

    நாங்கள் இந்தியர்கள் ஹிந்து முஸ்லீம் கிறிஸ்து என்று வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழும் நாடு இது நிச்சயம் வினவு போன்றவர்கள் எங்கள் நாட்டை பிரிக்க முடியாது.

  3. காஷ்மீர் எங்கள் நாட்டின் அங்கம் அதை யாராலும் பிரிக்க முடியாது.

    • மக்கள் இல்லமால் வெறும் நிலைத்தை வைத்து என்ன செய்வது முதலில் அவர்களுக்கு இந்திய நம்மை காக்கும் என்ற நம்பிக்கையை வளர்க்கவேண்டும் பல சலுகைலை வழங்கி மக்களை காத்து திவிரவாதிகளை மட்டும் ஓழிக்க வேண்டும் இந்திய மத சார்ப்பு அற்ற நாடக இருக்கவேண்டும் காவிகளை ஓடுக்கவேண்டும் மதவெறி பிடித்த அனைவரையும் கைது செய்யவேண்டும் இது இந்து ,முஸ்லிம்,கிறுத்துவர் உள்ளபட அனைவருக்கும் பொருந்தவேண்டும்,

    • //காஷ்மீர் எங்கள் நாட்டின் அங்கம் அதை யாராலும் பிரிக்க முடியாது.//

      அதை இங்க உங்காந்துகிட்டு நீங்க சொல்லக்கூடாது சார். காஷ்மீர்ல செத்து விழுறவன் குடும்பங்கள் சொல்லனும். அவங்க உரிமையை டிஸைட் பண்ணி நீ எங்க கூடத் தான் இருக்கணும்னு உத்தரவு போட நீங்க யார் சார்? காஷ்மீர்க்காரங்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் ?
      நாளைக்கு உங்க மாநிலத்துக்கும் ஒரு ஆப்பு வைப்பான் ஹிந்திக்காரன். அப்போ இதே ராணுவம் உங்கத் தெருவிலயும் வந்து நிக்கும்.
      அன்னைக்குப் பேசுவீங்க?

      • நிச்சயம் எனக்கு உரிமை உண்டு

        1. என்னை போன்ற சாதாரண இந்தியா பிரஜைகள் கட்டும் வரி பணத்தில் தான் காஷ்மீரிகள் சுகமாக ஒரு வேலையும் செய்யாமல் வாழ்கிறார்கள். காஷ்மீருக்கு என்று எந்த வருமானமும் இல்லை (சுற்றுலா தவிர) அதையும் இவர்களின் தீவிரவாத செயல்களால் அழித்து விட்டார்கள்.

        2. காஷ்மீரில் உள்ள அனைத்து வசதிகளும் இந்தியா அரசால் தான் கட்டப்பட்டது, அதுவும் மற்ற இந்தியர்களின் வரி பணத்தில் கட்டப்பட்டது.

        3. காஷ்மீர் பண்டிட்டுகள் 5000 வருடங்களுக்கு மேலான காஷ்மீர் வரலாறு உள்ளவர்கள், அந்த மண்ணின் மைந்தர்களை அரேபியாவில் இருந்து வந்த வந்தேறிகள் விரட்டி அடித்து விட்டு இன்று அந்த மண்ணை சொந்தம் கொண்டாடினால் அதில் எந்த நியாயமும் இல்லை. காஷ்மீர் என்ற பெயரே காசியப முனிவரின் பெயர்.

        • காஷ்மீர் பண்டிட்டுகள் 5000 வருடங்களுக்கு மேலான காஷ்மீர் வரலாறு உள்ளவர்கள், அந்த மண்ணின் மைந்தர்களை அரேபியாவில் இருந்து வந்த வந்தேறிகள் விரட்டி அடித்து விட்டு இன்று அந்த மண்ணை சொந்தம் கொண்டாடினால் அதில் எந்த நியாயமும் இல்லை. காஷ்மீர் என்ற பெயரே காசியப முனிவரின் பெயர்.

          சார் ஆடு மாடு மேய்க்க வந்த அரியன் அதன் உங்க காஷ்மீர் பண்டிட்டுகள் வந்தேறிகள் காஷ்மீர்கள் அரேபியாவில் இருந்து வந்தவர்கள் இல்லை அரேபியா மதத்தை இறக்குமதி செய்தவார்கள் மண்ணின் மைந்தன் தமிழ் முஸ்லிம் கிறுத்தவன் போல காவிகளுக்கு வரலறை திரிக்க தன் தெரியும்

  4. //துப்பாக்கி ரவைகள், பெல்லட் குண்டுகள் என அடக்குமுறைகளாலோ, தேர்தல், வளர்ச்சி என்ற மாய்மாலங்களாலோ காஷ்மீரி மக்களை இந்திய அரசால் வெல்லமுடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.
    //

    மதம் தான் மனிதனை ஒன்றிணைக்கும் என்றாகிவிட்டது . ஆக ஆர் எஸ் எஸ் கூறுவது போல இந்து மதம் தான் இந்தியாவை ஒன்றிணைக்கும் என்றாகிறது .

    ஒரு வேளை வர்க்க புரட்சி நடந்து நீங்கள்(கம்ம்யூனிஸ்ட்கள் ) ஆட்சியில் இருக்கும் போது, இப்படி சீக்கியர்களும் ,தமிழர்களும் தனி நாடு கேட்டால் எப்படி ஹேண்டில் செய்வீர்கள் ?

    • கம்யூனிஸ்ட்கள் என்றுமே நம் நாட்டிற்காக பேசியது இல்லை அவர்கள் நம் நாட்டிற்கு எதிராக சீனாவிற்கு (பாக்கிஸ்தான் சீனாவின் நண்பன் அதனால் பாகிஸ்தானுக்கு) ஆதரவாக பேசுவார்கள். நல்ல வேலை கம்யூனிஸ்ட்கள் நம் நாட்டில் வலுவாக இல்லை, இருந்திருந்தால் என்றோ நம் நாட்டை நாசம் செய்து எதிரிகளிடம் விற்று இருப்பார்கள்.

    • மதம் தான் மனிதனை ஒன்றிணைக்கும் என்றாகிவிட்டது . ஆக ஆர் எஸ் எஸ் கூறுவது போல இந்து மதம் தான் இந்தியாவை ஒன்றிணைக்கும் என்றாகிறது .

      மதம் ok எந்த சாதி பிரமீன் அன மே ஜாதிதன் இந்து என்றால் கீழ் ஜாதி அதவது சுத்திரன் இந்துவா ஒத்துபிங்கள

      முதலில் மனிதன இருங்க அப்பரம் இந்து சந்து பொந்துவ இருக்கலாம்

    • தனிநாடு கேட்டா என்ன ? கூட்டுக் குடும்பத்துல நியாயமான முறையில் நம்மை நடத்தலைன்னா தனிக்குடித்தனம் போறாங்க இல்லையா ? அதுமாதிரி தான் இதுவும்.

      அவங்களை ஒழுங்கா நடத்துனா உங்ககூட இருப்பாங்க. இல்லாட்டி நான் தனியாப் போறேன்னுதான் கேப்பாங்க. உங்களுக்கு ஏன் வலிக்குது? காஷ்மீர் ஆப்பிள் கிடைக்காதுன்னா ?

      • காஷ்மீரில் வாழும் ஹிந்து பகுதியில் எந்த பிரச்சனையும் இல்லை.

        காஷ்மீரில் வாழும் புத்தர்கள் பகுதியில் எந்த பிரச்சனையும் இல்லை.

        காஷ்மீரில் வாழும் பாகிஸ்தானிய சன்னி முஸ்லீம் பகுதியில் மட்டும் தான் பிரச்சனை, அதிலும் கூட பாக்கிஸ்தான் எல்லை பகுதியில் இருக்கும் மாவட்டங்களில் தான் தீவிரவாதம் மற்றும் பிரிவினை கோஷங்கள்.

        • இந்துக்களுக்கு எப்படி பிரச்சனை வரும் ஆளுவது இந்து மதவெறிபிடித்த அரசு புத்தமதம் அதன் கிழை மதம் தக்கபடுவது சிறுபான்மை மற்றும் தலித் மக்கள்தான்

          • என்னமோ காஷ்மீர் பிரச்சனை பிஜேபி வந்த பிறகு தான் வந்த பிரச்சனை மாதிரி ஏன் கதை அழைக்கிறீர்கள் டெல்லியில் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அவர்கள் பிரச்சனை தான் செய்வார்கள். _____________ நிச்சயம் இஸ்லாமியர்கள் இது தீவிரமாக சிந்தித்து சரி செய்ய வேண்டிய ஒரு அவசர பிரச்சனையாகவே இதை நான் பார்க்கிறேன்.

      • @SPrabha

        அப்படி அவங்களை ஒழுங்கா நடத்துல என்று சொல்றீங்களே அது என்ன என்ன என்று சொன்னீர்களேயென்றால் தெரிந்து கொள்வோம் .

        வருமானம் இல்லாமல் தனி குடித்தனம் போய் என்ன செய்வார்களாம் ?
        அவர்களை பாதுகாக்க முடியுமா ? பாகிஸ்தான் அடுத்த நிமிடம் பிடித்துக்கொள்ளும் , சீனா போலி கம்யூனிஸ்டுகள் 🙂 பிடித்துக்கொள்ள மாட்டார்களஆ ?

    • ஜீப்ப கொழுத்தி போலிஸ கல்லால அடிக்குறது வீரமாம் காஸ்மீர் மக்களின் தீரமிகு போராட்டமாம் போலிஸு பொருமையா மண்டை உடைய பெற்று வரனும்மாம் ஏன்பா போலிஸிம் ராணுவ வீரர்களும் உழைக்கும் வர்க்கத்துல சேர்த்தி இல்லயா முட்டா இசுலாமிய தீவிரவாதிகளாதான் உழைக்கும் வர்க்கத்தல சேர்ப்பீகள

      • அது எப்படி ராணுவர்கள் தாக்கப்பட்டார்கள் ! கவச உடை , கவச இரும்பு ,கவசமுக கண்ணாடி,கைகளில் துப்பாக்கி , கன்னி புகைக்குண்டு வாகனம் , “பில்லர் ” குண்டு துப்பாக்கிகள் , இதையும் மீறி பாதிப்பு வருது என்றால் எல்லாம் டூப்பு ,செட்டப்பு .

        உன்னை போன்ற பார்ப்பனிய திவரவாதிகளையும் , பார்பனியவளுக்கு சொம்பு தூக்கி____களுக்ககும் ஒரு முடிவு கட்ட வேண்டிய நாள் வெகு தூரம் இல்லை .

        உங்க பாரத மாதாவை அந்நிய நாட்டு தொழில் அதிபர்களுக்கு கூறு போட்டு வித்து புட்டு , இப்ப என்ன தேசியம் பேசுகிறிர்கள் .

        • //உன்னை போன்ற பார்ப்பனிய திவரவாதிகளையும் , பார்பனியவளுக்கு சொம்பு தூக்கிகிட்டு போய் —கழுவிவிடும் கேடுகெட்ட வர்களுக்ககும் ஒரு முடிவு கட்ட வேண்டிய நாள் வெகு தூரம் இல்லை .//அரேபியக்காரன் __கழுவி சம்பாதிச்சி டொனேசன் அனுப்புறல வினவுக்கு அதுனால நீ என்ன சொன்னலும் இழிச்சிட்டே போடுவானுக நான் பாவம் ஏழை தொழிலாளி தான எப்பா என்னால டொனேசன் லாம் அனுப்பி செம்படிக்க வைக்க முடியாதப்பா உன்ன மாறி

            • மத வெறியன் p. josoph பத்தி எதவது சென்ன அத நீங்கிவிடுகிறது வினவு தலித் சமுகத்தில் பிறத்து கிருத்துவ மதத்தில் இனைந்த அவரை பாரட்டுகிறேன் அனால் அவர் சமுகம் போல்தன் இன்னும் இஸ்லாமிய சமுகமும் இன்னு வஞ்சிக்கபடுகிறது அந்த காவி கும்பலுக்கு இவர் வக்காலத்து வங்குகிறார் எங்கள் போன்ற ஜாதி இந்துகள்தன் இந்த காவிகளை அதரிப்பர்கள் அனால் நான் எதிர்கிறேன் எதிர்கவேண்டிய அவர் அதரிக்கிறார் இதற்கு முக்கிய காரணம் அல்லேலியா மத வெறி இங்கு நான் பார்த்தவரை காவிகளை விட இவர்கள் ரொம்பா விசம் பிடித்தவர்கள் மற்றவர்களை செல்ல விரும்பவில்லை ஏன் எனில் முஸ்லிம் கிறுத்தவ நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள்

              • தமிழுக்கு மிக்க நன்றி.இந்த ஜோசப்பு என்ற விசித்திரத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை.சில லாப நோக்கு கொண்ட கிறிஸ்த்தவ பெயர்தாங்கிக்ளுக்கு இஸ்லாத்தின் மேலோ முஸ்லிம்களின் மேலோ போட்டி பொறாமை இருக்கலாம்.இது புரிந்து கொள்ள கூடியதுதான்.ஆனால் இந்த ஜோசப்பை கூர்ந்து கவனித்தால் இது என்ன வகை என்றே விளங்கி கொள்ள முடியவில்லையே.முஸ்லிகளையோ இஸ்லாத்தையோ ப்ற்றி பேச்சு வந்தால் இது போன்று வெறி கக்குவது சரி.ஒட்டு மொத்த இந்திய மக்களும் சேர்ந்து எதிர்க்க வேண்டிய விஷயங்களிலும் கூட சம்மந்தமில்லாமல் உளறி சபை குழப்புவ்து என்றால், இது கிறிஸ்த்தவத்திற்க்கு மாறியதா? அல்லது மாறியதுபோல் நடிக்கிற காவிகளின் கூலியா?

                • இது கிறிஸ்த்தவத்திற்க்கு மாறியதா? அல்லது மாறியதுபோல் நடிக்கிற காவிகளின் கூலியா?

                  பாய் சத்தியமா இவர் காவி கைகூலி இல்லா காவிகள் நேரடியாகதன் மோதுவர்கள் ஏன் எனில் இந்து மத தூரேகி முஸ்லிம் அனுதாபி தலித் தோழனு செல்லி நேரடியாக என்னை வம்பிலுப்பர்கள் ஜாதி மத நம்பிக்கை இல்லவிட்டாலும் அந்த ஜாதிதன் என்னை காக்கிறாது அனால் இந்த அல்லேலியா மறைமுகமாக இருவருக்கு சண்டை முட்டுவார்கள் இவணுக்கு அதரவாய் அவணுக்கும் அவணுக்கு அதரவாய் இவணுக்கும் இடையில் புகுந்து விளையாடுவார்கள் அதைதன் p.joseph செய்கிறார், பொதுவாக தலித்க்கு ஜாதி இந்துவை பிடிக்காது, ஜாதி இந்துக்கு தலித்தை பிடிக்காது, எனக்கு ஜாதி மத வெறிபிடித்த ________பிடிக்காது

                  லால் சாலம்

                  • எனக்கும் கிறிஸ்த்தவ நண்பர்கள் உண்டுதான்.இந்துக்கள் அளவுக்கு இல்லை.எண்ணிக்கையில் குறைவு.எல்லா சமுதாயத்திலும் உள்ளதைப்போல கிறிஸ்த்தவர்களிலும் ஆழ்ந்த மதப்பற்றுள்ளவர்கள் மதத்தெளிவு உள்ளவர்கள் மதம் பற்றி பெரிய அக்கறையோ ஆர்வமோ இல்லாதவர்கள் என்று பல தரப்பட்டவர்களும் இருப்பார்கள்.என் கிறித்துவ நண்பர்களிலும் இதுபோல் பார்த்திருக்கிறேன்.இந்த ஜோசப்பு புதுவிதமாய் தெரிகிறது.அல்லேலூயா என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறேன்.எனக்கு அதில் பெரிய நெருக்கமோ பரிச்சயமோ இல்லாத்தால் தெரியவில்லை.இந்த தளத்திலேயே ரெபெக்காமேரி இன்னொரு வெளிநாடு வாழ் கிறித்தவர் எழுதுகிறார்கள்.நிறைய் கருத்து மோதல்கள் நடந்திருக்கிறது.இந்த ஜோசப்பு எதிலும் வேகாத காயாகவல்லவா இருக்கிறது.சிலுவை போரின் பழி தீர்தலா!? அப்படியும் எடுத்துக்கொள்ள முடியவில்லையா?அது அரசியல்.நாம் இங்கே சமூகம் சார்ந்து பேசும்பொழுதும் இதுபோல் அரைவேக்காட்டுத்தனமாய் உளறுவது என்றால் இது என்னவகை?முன்னெப்போதும் இல்லாதவகையில் இன்றைய இந்திய சமூகம் மிகப்பெரும் அச்சுறுத்தலை சந்தித்துக்கொண்டிருக்கிறது.காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை குரஙுகு கையில் பூமாலையாக இந்த காட்டுமிராண்டி கூட்டத்தின் கையில் ஆட்சி அதிகாரம் போய் அது தறிகெட்டு ஆட்டம் போட்டு திரிகிறது.இந்த நேரத்தில் ஜோசப்பு கூட்டம் ,குட்டையில் மீன் பிடிக்க நினைத்தால் அதனால் விளையபோகும் பயன் தான் என்ன? அவன் தான் பகிரங்கமாக கூவுகிறானே”திரிசூலம் மூன்று ஈட்டிகளை கொண்ட கூர் ஆயுதம் அதில் ஒன்று முஸ்லிகள் மற்றது கிறித்துவர்கள் இன்னொன்று கம்னியூஸ்ட்டுகள் மூவரையும் குத்தி கொல்வதே அதன் குறியீடு” தலித்துகளும் அதில் இருக்கிறார்கள்.அதை வெளியில் சொல்லமாட்டான்.இந்த மூவரையும் தலித்துகளை வைத்தே கொல்லவைக்க வேண்டும்.கொன்று முடித்த பிறகு கொன்றவர்களையும் சேர்த்து எரிக்கவேண்டும்.இதுதான் அந்த காட்டேரிகளின் நடைமுறை சாத்தியற்ற கற்ப்பனை திட்டம்.இதில் இந்த ஜோசப்புக்கு என்ன கிடைக்கப்போகிறது? இப்படியும் சில கூறுகெட்டதுகள்!

                • அது இது எது ,நபிகள் நாயக சல்லல்லாகு அலையும் சலமா அது ,உம் மதத்த சொன்னதும் பொத்க்டுகிட்டி கோவம் வருது

              • நீ யெந்த இந்து வா இருந்த எனக்கு என்னப்பா இத யேன் தேவயே இல்லமா என் கிட்ட சொல்லனும் இன்னா பூச்சி காட்டுறீகளா…

                • ஆம இவரு பெரிய பருப்பு பூச்சி காட்டுறங்க உண்மையா சென்னேன் நீங்க மட்டுமா உங்க மாதிரி ஆயிரம் போர்ரை தினமும் பார்க்கிறேன்

              • //இதற்கு முக்கிய காரணம் அல்லேலியா மத வெறி இங்கு நான் பார்த்தவரை காவிகளை விட இவர்கள் ரொம்பா விசம் பிடித்தவர்கள்//

                Prejudice. Now we know who has more venom.

      • 15 பேருக்கு ஒரு போலீசை நிறுத்தி ரோட்டில் தண்ணீர் தூக்கிட்டுப் போனா கூட அடிக்கிற போலீசும், ராணுவமும் தெருவுக்கு தெரு நிற்கிற ஊரில வாழ்ந்து பாருங்க. அப்புறம் தெரியும் ஏன் போலீசையும் ராணுவத்தையும் கல்லாலயாவது அடிக்கணும்னு ஏன் மக்கள் கிளம்புறாங்கன்னு.

        • தீவிரவாதத்தை ஆதரிச்சா அப்படிதான் .பஞ்சாபில் கூட ஒரு காலத்தில் அப்படிதான் . இன்றைக்கு தேவை இல்லாமல் போய்விட்டது . அது போல இதுவும் ஒரு நாள் மாறும்

  5. பார்ப்பனிய தீவரவாதத்தை ஒழிக்க வேண்டும் , அந்த பயங்கவாதிகளுக்கு செம்பு தூக்கும் போலிகளை ஒரு முடிவு கட்டவேண்டும் ,
    இந்த படங்களை பார்க்கும் பொழுது எனது ரெத்தம் கொதிக்கிது.

    • காஷ்மீர் பண்டிட்டுகளை இஸ்லாமிய தீவிரவாதிகள் விரட்டி அடித்த போது உங்கள் ரத்தம் ஏன் சார் கொதிக்கவில்லை ஒருவேளை உங்கள் ரத்தம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் துடிக்குமோ ?

      • இஸ்லாமிய தீவிரவாதிகள் காஷ்மீர் பண்டிட்டுகளை விரட்டி அடித்த போது ரெத்தம் கொதிக்கிது இங்கு உள்ள காவிகள் அவர்களை அரவனைத்தார்கள் அனால் அதே தீவிரவாதிகளால் அப்பவி முஸ்லிம் தாக்கபடும் போது அவர்களை அரவணைடக்கா யாரும் இல்லை என அவர் ரெத்தம் கொதிக்கிது.

        ஏன் எனில் ஒரு புறம் இஸ்லாமிய தீவிரவாதிகள் மறுபுறம் இந்து காவி தீவிரவாதிகள் மற்றும் காவி ரணுவம் வேற

      • அது என்ன “காஷ்மீர் பண்டிட் ” காஸ்மீர் இந்துக்கள் என்று கூட சொல்ல வக்கு இல்லாத நீ . .. நீயெல்லாம் இந்திய தேசியத்தை பற்றி பேச கூடாது . பார்ப்பானுவ செத்தா மட்டு தான் உயிரா ?

        இன்னு கொஞ்சம் நாள்ல முடிவு கட்ட வேண்டியதுதான் உங்களுக்கு ,

        இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் வேண்டாம் ,தலித் மக்கள் வேண்டாம் , பழங்குடி மக்கள் வேண்டாம் , கிருஷ் துவ மக்கள் வேண்டாம் , கம்னிஸ்ட்கள் வேணாம் , நாத்திகர்கள் வேணாம் ,

        ஆனால் வந்தேறி பார்ப்பன பயல்கள் மற்றும் அவங்களுக்கு சொம்பு தூக்கி___களும் தான் இந்த நட்டு மக்களா ??

        • உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் என்னால் மிக தெளிவாகவே பதில் சொல்ல முடியும் ஆனால் வினவு ஹிந்துக்களுக்கு இந்தியா தேசத்திற்கு ஆதரவாக எழுதினால் வெளியிடாது. வெளியிட்டால் வினவின் பாகிஸ்தானிய சீனா எஜமானர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

          • இப்பொழுது கொஞ்சம் கத்தரி அதிகாமாக இருக்கிறது . வரலாற்றை கூட வெட்டி விடுகிறார்கள்.

            • கம்யூனிஸ்ட் கட்சியினரின் இந்தியா எதிர்ப்பு ஹிந்து எதிர்ப்பு கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் கருத்துக்களுக்கு தடை விதிக்கிறார்கள். சீனாவில் நடப்பது போல் இருக்கிறது இவர்களின் செயல்கள்.

              நேர்மை மனிதநேயம் தேசப்பற்று துளியும் இல்லாதவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் வினவை படித்த பிறகு கம்யூனிஸ்ட் கட்சியினர் பற்றி நான் புரிந்து கொண்டது இது தான்.

              • மனிதநேயம் தேசப்பற்று

                காவிகள் மனிதநேயம் தேசப்பற்று பேச கூடாது கம்யூனிஸ்ட் கட்சியினரின் இல்லை எனில் இந்த இந்தியவை எப்பவே விற்று இருப்பார்கள் காவி மற்றும் காங்சிரஸ்

                மக்களுக்கா உழைக்கும் ஒரு இயக்கம் கம்யூனிஸ்ட்

            • வெள்ளையனுக்கு காட்டியும் கூட்டியும் குடுத்த காவி RSS வரலாற்றை போட்ட நாரிடும்

    • வெள்ளையனுக்கு காட்டியும் கூட்டியும் குடுத்த காவி RSS தியாகி மக்களுக்கா உழைக்கும் வினவு துரோகிதன்

  6. வினவு என் கருத்தை வெளியிடாது என்று தெரிந்தே தான் இதை எழுதியிருக்கிறேன்.

    காஷ்மீர் பிரச்னைக்கு மூன்று தீர்வுகள் தான் உள்ளது

    1. காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானிடம் கொடுப்பது. அதன் பின்விளைவு நம் நாட்டின் பல பகுதிகளிலும் பிரிவினைவாதம் வளரும், அதனால் தான் பாகிஸ்தானும் சீனாவும் காஷ்மீர் பிரச்னையை அனைத்து வகையில் ஊதி பெரிதாக்க பார்க்கிறார்கள். வினவு போன்ற நம் நாட்டின் எதிரிகளும் காஷ்மீர் பிரச்னையை வைத்து பெரியளவில் பிரிவினை பிரச்சாரங்களை செய்கிறார்கள்.

    2. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் ஹிந்துக்கள் ஒருவர் கூட இல்லாமல் அனைவரையும் இஸ்லாமியர்களாக மாற்றியது போல் நம் காஷ்மீரில் அனைத்து இஸ்லாமியர்களையும் ஹிந்துக்களாக மத மாற்றம் செய்து விட வேண்டும் அல்லது நம் நாட்டின் பல பகுதியில் இருந்து காஷ்மீரில் (ஹிந்து) மக்களை குடியமர்த்தி இஸ்லாமியர்களை சிறுபான்மையினராக மாற்றினால் நிச்சயம் காஷ்மீரில் பிரிவினை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. இதை பாகிஸ்தான் அவர்கள் ஆக்கிரமித்த காஷ்மீரில் செய்து இருக்கிறார்கள், நம் காஷ்மீரிலும் ஹிந்துக்களை விரட்டி இந்த காரியத்தை செய்து இருக்கிறார்கள். அதனால் நாமும் அவர்களை போல் நடந்து கொண்டால் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

    3. மீண்டும் பாகிஸ்தான் மீது போர் தொடுத்து பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக மாற்றி பாகிஸ்தானை அனைத்து வகையிலும் பலவீனமான நாடாக மாற்ற வேண்டும். மீண்டும் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் எந்த தீவிரவாத செயலை செய்ய முடியாத அளவிற்கு அந்த நாட்டை பலவீனப்படுத்தினால் காஷ்மீர் பிரச்சனை தீர்வதற்கு வழி பிறக்கும்.

    காஷ்மீர் பிரச்னைக்கு அடிப்படை காரணமே மதவெறி தான், இஸ்லாமியர்களால் பெரும்பான்மை ஹிந்துக்களோடு ஒற்றுமையாக வாழமுடியவில்லை, டெல்லியில் ஒரு மதசார்பற்ற அரசாக இல்லாமல் ஒரு சுல்தானின் (இஸ்லாமிய) ஆட்சியாக இருந்திருந்தால் நிச்சயம் காஷ்மீரில் பிரிவினை கோரி இப்படி தீவிரவாத செயலில் ஈடுபட்டு கொண்டு இருக்க மாட்டார்கள்.

    இது காஷ்மீரில் மட்டும் அல்ல உலகில் இஸ்லாமியர்கள் எங்கெல்லாம் சிறுபான்மையாக இருக்கிறார்களோ அந்த நாடுகள் அனைத்திலும் பிரிவினை பிரச்னை உள்ளது இந்தியா, சீனா, ரஷ்யா என்று உலகின் பல நாடுகளிலும் இந்த பிரச்சனை உள்ளது, அதே போல் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் சிறுபான்மையினருக்கு சம உரிமை மறுக்க படுகிறது, இந்தியாவில் உள்ளது போல் சிறுபான்மையினருக்கு உரிமைகள் உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலும் கிடையாது, சிறுபானபான்மையினருக்கு என்று தனி சட்டம், உரிமைகள், கல்வி நிறுவனங்கள் என்று அவர்கள் பெரும்பான்மை மக்களை விட அதிக உரிமைகளை சட்டப்படி பெற்று இருக்கிறார்கள்.

    காஷ்மீரில் கூட 90களில் பிரிவினை தூண்டப்பட்ட பொது காஷ்மீரில் இருக்க வேண்டும் என்றால் இஸ்லாமியராக மட்டுமே இருக்க முடியும் என்று சொல்லி ஹிந்துக்களை எல்லாம் கொலை செய்து விரட்டி அடித்தார்கள்.

    நிச்சயம் காஷ்மீர் பிரச்னைக்கு அடிப்படை காரணம் மத தீவிரவாதம் தான். இஸ்லாமியர்கள் இப்படி ஒற்றுமை சகிப்புதன்மை இல்லாமல் இருந்தால் நிச்சயம் நாளை அவர்களை பெரும் அழிவில் தள்ளும்.

    • //மீண்டும் பாகிஸ்தான் மீது போர் தொடுத்து….//

      Those periods are gone, if you touch now- you will not find India.
      Just remember Vajpayee Kargil conflict -we suffered manifold than Pakistan,additionaly we have paid Kargil surcharge(Tax).

      • நீங்கள் சொல்வது தவறு, பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்க இது தான் சரியான சமயம், பாக்கிஸ்தான் எந்த ஒரு வகையிலும் இந்தியாவிற்கு இணையான நாடு அல்ல (அணு சக்தி உட்பட) மேலும் தற்போது இந்தியா வலுவாக வளர்ந்து கொண்டு இருப்பதால் பாகிஸ்தானும் சீனாவும் பயப்படுகிறார்கள் இதே போல் தொடர்ந்து இந்தியா வளர்ந்தால் நாளை அவர்களை விட இந்தியா பெரிய சக்தியாக ஆசியாவில் இருக்கும் (சீனா இதை வெளிப்படையாக ஏற்கவில்லை என்றாலும் அவர்கள் உள்ளுக்குள் பயம் உள்ளது)

        அதனால் இந்தியாவை பலவீன படுத்த சீனாவும் பாகிஸ்தானும் கூட்டு சேர்ந்து கொண்டு அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள். இதில் வினவு போன்ற நம் நாட்டின் எதிரிகளும் நம் நாட்டை உள்ளிருந்து பலவீன அனைத்து காரியங்களையும் செய்கிறார்கள். இது எல்லாம் கூட்டு சதி.

        நிச்சயம் இந்த சதியை நாம் வெல்லலாம் தற்போதைய நிலையில் பாக்கிஸ்தான் அனைத்து வகையிலும் பலவீனமாக இருக்கிறது, இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது போர் தொடுத்தால் சுலபமாக வெல்லாம்.

        நாளை நம் நாட்டின் நலனுக்காக இன்று எடுக்க வேண்டிய முக்கியமான செயல்களில் ஒன்று இது.

        • //நீங்கள் சொல்வது தவறு, பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்க இது தான் சரியான சமயம், பாக்கிஸ்தான் எந்த ஒரு வகையிலும் இந்தியாவிற்கு இணையான நாடு அல்ல (அணு சக்தி உட்பட)//

          Not at all,
          our Armed forces can control/shoot only our people,they can do curfew/144 only with in India.
          Just our enemy drop a bomb in interior India our people run halter shelter.
          You can see in Tiruvallur district-for DENGU people vacating their villages.
          Our KAAVIS only boast in temples,RSS camps and streets.
          Though our Armed forces capable of taking enemies in all fronts BUT our Modis and Parikkars can fight through our Hindustan news papers.

        • இந்திய ராணுவ முப்படை தளபதிகளே காது கொடுங்கள். இந்திய,உலக அரசியல் போர் தந்திரங்களையெல்லாம் கரைத்து குடித்த மணிகண்டன் சொல்லிவிட்டார்.படைகளை கிளப்புங்கள்.முப்படைகளும் அணிவகுக்கட்டும்.போர் முரசு ஒலிக்கட்டும் போர்..போர்…போர்…இது மோகன்பகவத்து பிரவீந்தொகடியா போன்ற வெட்டி பேச்சு வீரர்களின் முழக்கத்தை கேட்டால் இப்படித்தான் உளறவேண்டும்.

    • மணிகண்டன் மாதிரியான கிளி பிள்ளைகளுக்கு வரலாறோ வரலாற்றின் பாடங்களோ தேவையில்லை.காவிகளின் உளறலை மனப்பாடம் ப்ண்ணி ஒப்பிப்பது மட்டுமே வேலை.இரண்டு நாடுகள் சேர்ந்து அபகரிக்க நினைக்கும் தங்களின் மண்ணை மீட்டெடுக்க நினைக்கும் மக்களின் போராட்டத்தை,அவர்களுக்கு எதிராக நடக்கும் ஈவிரக்கம்ற்ற கொடூரத்தை மத தீவிரவாதம் என்று வாந்தி எடுப்பது அப்பட்டமான காவிகளின் வழக்கமான வசனம்தான்.இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்”சிறுபான்மையினருக்கு பெரும்பான்மையினரைவிட அதிக உரிமைகள் “கொடுக்கப்பட்டிருப்பதாக புலம்புவதிலிருந்து தெள்ளத்தெளிவாக அறிந்து விடலாம்.முஸ்லிம்களுக்கு கூடுதல் உரிமை என்பது வாதத்திற்க்கே தகுதி இல்லாத முழுப்பொய்.சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் உரிமை என்பது என்ன?ஒருவருக்கு கட்டாயம் சேர வேண்டிய ஒன்றை அவரிடம் சேர்ப்பிப்பதுதான் உரிமை.ஒருவருடைய உரிமையை இன்னொருவர் ஆட்சேபிக்கவோ சொல்லிகாட்டவோ உரிமை கிடையாது.என் அப்பன் சொத்தில் எனக்குரிய பங்கை நான் அடையும் பொழுது இன்னொருவன் யார் அதை ஆட்சேபிக்க?எனக்கான உரிமை எனக்கு மறுக்கப்படும்பொழுது நான் அதற்க்காக போராடுவேன் நியாயவான் கள் அந்த நியாயத்தின் அடிப்படையில் என்னோடு திரளலாம்.இது நீதி.இதுதான் அறம்.

  7. ஏன்பா கிஸ்புல் முஜாகுதீன் அப்பிடினா என்னா அது சோசலிஸ போராளிகளானு கேட்டு ஒரு கமென்ட் போட்டா அத வெளியிடவே இல்லயே ஏனாம் அதுல என்ன் தனி மனித தாக்குதல் அசிங்கம் எல்லாம் இருக்குது ________

Leave a Reply to @HisFeet பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க