ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா… ஹீரோவா ஜீரோவா… ?
திராவிட இயக்கம் சீரழிந்து போனதில், சினிமா கவர்ச்சிக்கு முக்கியப் பங்குண்டு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவில் துவங்கி இன்று அ.தி.மு.கவில் பிழைக்கும் நடிகர்கள் வரையிலான கூட்டம் தமிழக அரசியலின் ‘தரத்தை’ தரணியெங்கும் பரப்புகிறது. இந்திய இராணுவத்தின் பெல்லட் துப்பாக்கிகளால் சிதைக்கப்பட்டு அலறுகிறார்கள், காஷ்மீர் மக்கள். முன்னாள் அட்வகேட் ஜெனரலும், இந்நாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான அ.தி.மு.க-வின் நவநீத கிருஷ்ணன் என்ற பிராணியோ “காஷ்மீர்..பீயுட்டிஃபுல் காஷ்மீர்” என்று நாடாளுமன்றத்தில் வாய் வழியாக மலம் கழித்து காஷ்மீர் போராட்டத்தையும் தமிழகத்தையும் ஒரே நேரத்தில் அசிங்கப்படுத்துகிறது.
சினிமா உலகின் பாராட்டு விழாக்களுக்காக ஏங்கித் தவமிருப்பவர் கருணாநிதி. காங்கிரசோ நக்மா-குஷ்பு-பாபிலோனாவை வைத்து காமராஜரின் ‘பொற்கால’ ஆட்சியை மீட்க முயற்சிக்கிறது. ரஜினியின் குரலுக்கு ஒரு காக்கை கூட செவிசாய்க்காத நிலையில், அவருக்கு மாபெரும் சக்தி இருப்பதாக ஊடகங்கள் உருவாக்கிய பில்டப்பை நம்பி, எதற்கும் இருக்கட்டும் என்று, சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, மான வெக்கம் பாக்காமல் ரஜினி வீட்டுக்குச் சென்று பல்லிளித்தார் மோடி. போலி கம்யூனிஸ்டுகளோ இந்துமதவெறி, ஆதிக்க சாதி வெறியை ஊக்குவிக்கும் மணிரத்தினம், பாரதிராஜா போன்ற நட்சத்திரங்களுக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் சினிமா நட்சத்திரங்களைக் கொண்டிராத கட்சியில்லை. சட்டமன்றத்தில் கூட கருணாஸ் எனும் சாதிவெறியன் ‘அம்மா’வால் உறுப்பினராக்கப் பட்டிருக்கிறார். தனது சினிமா செல்வாக்கை வைத்து காரோட்டிக் கொலை செய்த வழக்கிலும், மான் வேட்டை வழக்கிலும் விடுதலையை விலைக்கு வாங்கியிருக்கிறார் சல்மான் கான். கமலஹாசனையும், விஜயையும் வழிக்கு கொண்டு வர அவர்களது படங்கள் வெளியாகும் போது நெருக்கடி கொடுக்கிறது ஜெயா அரசு. மாறாக ஜெயா டி.விக்கும், ஜாஸ் சினிமாவுக்கும் கப்பம் கட்டினால் கபாலி பட குழுவினர் பகற் கொள்ளையடிக்க நேரடியாக அனுமதிக்கப்படுகிறார்கள். தங்களது படங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் ‘அம்மாவிடம்’ கொட நாட்டிலோ, போயஸ் தோட்டத்திலோ தவமிருந்து பிச்சை கேட்கிறார்கள் இளைய தளபதியும், உலகநாயகனும். சொத்துக் குவிப்பு வழக்கிற்காக ஜெயா தண்டிக்கப்பட்ட போது “தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா?” என்று கொந்தளித்தது தமிழ்த் திரையுலகம்.
கேப்டன் அடிவாங்கி மண்ணைக் கவ்விய பின்னரும், இஸ்திரி பெட்டியும் மூணு சக்கர வண்டியும் கொடுத்து, முதலமைச்சர் ஆகிவிடும் கனவிலிருந்து தமிழ்க் கதாநாயகர்கள் இன்னும் விழிக்கவில்லை. இவர்களது கனவை நிரந்தரமாக கலைத்தாலன்றி தமிழகத்துக்கு விடிவு இல்லை. தமிழ்ச் சமூகத்தை சீரழிக்கும் முதுகெலும்பற்ற இந்த ஒட்டுண்ணிக் கூட்டத்தைத் தொலுரிக்கிறது இந்த தொகுப்பு!
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
1. காந்தி, நேரு, காமராஜர் நக்மா, பாபிலோனா, குஷ்பு… !
2. ஓடு தலைவா ஓடு !
3. புதிய தலைமுறை : நடிகர் சூர்யா நமக்கு முன்மாதிரியா ?
4. அஜித்துக்கு உதவிய அப்புக்குட்டியின் பெருந்தன்மை
5. கபாலி நெருப்பா கருப்பா சொல்லுடா !
6. விஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புகள் ?
7. யு டூ புரூஸ் வில்லிஸ்…
8. கேப்டன் பீரங்கியிலிருந்து வெடிப்பது குண்டா குசுவா ?
9. ரஜினி வீட்டில் நக்கச் சென்ற மோடி !
10. சல்மான் கானின் கொலைக்கு யார் தண்டனை கொடுப்பார்கள் ?
11. பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்
12. ரஜினி – கமலுக்கு ரேசன் அரிசி வழங்கு !
13. பி.வி.ஆர் சினிமா : அபராதம் வசூலித்த மக்கள் போராட்டம்
14. பதிவர்களை அழவைத்த ‘தல’யின் மட்டன் பிரியாணி ‘மனிதாபிமானம்!’
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !
_____________