privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமீண்டும் மனுதர்ம ஆட்சி ! நாளை சென்னை பொதுக்கூட்டம் - வாருங்கள் !

மீண்டும் மனுதர்ம ஆட்சி ! நாளை சென்னை பொதுக்கூட்டம் – வாருங்கள் !

-

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை – 2016
மீண்டும் மனுதர்ம ஆட்சி! மீண்டும் காலனியாக்கம்! சேட்டுகள்-பார்ப்பனர்களின் சதித் திட்டத்தை முறியடிப்போம்!

rsyf-meeting-against-new-education-policy-notice-1அன்பார்ந்த மாணவர்களே – இளைஞர்களே!

அன்று, உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஊழியர்களை உருவாக்க மெக்காலே கல்வித் திட்டத்தை புகுத்தியது ஆங்கிலேய அரசு. இன்று, இந்து – இந்தி – இந்தியா எனும் பார்ப்பன தேசியத்தை கட்டுவதற்கு மாணவர்களை தயார்படுத்த புதிய கல்விக் கொள்கை எனும் நவீன மெக்காலே திட்டத்தை புகுத்துகிறது மோடி அரசு.

பார்ப்பனர்கள் வேதம் ஓத மட்டுமே பயன்படுத்தக் கூடிய, செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு சிங்காரமாம் – ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தனிப்பாடப் பிரிவாம். இது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யின் சமஸ்கிருத – வேத கலாச்சாரத்தைத் திணிக்கும் முயற்சியே!

‘படிப்பில் பின் தங்கும் ஏழை மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்புக்கு மேல் இனி கல்வி இல்லை. அதன்பின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி’ என்று பார்ப்பன நரி ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க துடிக்கிறது மோடி அரசு.

“200 வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் கிளை தொடங்க அனுமதி; தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கல்வித் துறையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பு; கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணம், நன்கொடை, உள்கட்டுமான வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் அரசோ, நீதிமன்றமோ தலையிடக் கூடாது. இதற்கென தனியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்”. இதன் மூலம் கல்வியை கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றி கொள்ளையடிப்பதையும், அவர்களுக்குத் தேவையான படித்த திறமையான அடிமைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த புதிய கல்விக் கொள்கை.

கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சங்கம் வைக்கத் தடை – கல்லூரி வாயிலில் போலீசு பூத் வைத்து கண்காணிப்பு என்று மாணவர்கள் படிக்கும் கல்விக் கூடத்தை குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறைக்கூடமாக மாற்றுகிறது மோடி அரசு!

rsyf-meeting-against-new-education-policy-notice-2மொத்தத்தில் இது தேசிய கல்விக் கொள்கையல்ல, பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுக்கும் கொள்கை. இந்த சதித் திட்டத்தை முறியடிக்க ஓரணியில் திரள்வோம்!

இந்துத்துவா கொள்கை, மறுகாலனியாக்கத்தையும் ஒன்றாக சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டுரகமான புதிய கல்விக் கொள்கையை (2016) முறியடிப்போம்.

சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பின் மூலம் நாட்டை பார்ப்பனிய மயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து ராஷ்டிர கனவைத் தகர்த்தெறிவோம்.!

புதிய கல்விக் கொள்கைக்குஎ திரான சென்னைக் கூட்டத்தில் அணி திரள்வீர்!

மீண்டும் மனுதர்ம ஆட்சி!மீண்டும் காலனியாக்கம்!
சேட்டுகள் – பார்ப்பனர்களின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து…
செப்டம்பர் 1, 2016 மாலை 5 மணி

பொதுக்கூட்டம்

மதுரவாயல்
எம்.எம்.டி.ஏ EB ஆபிஸ் அருகில், சென்னை

நிகழ்ச்சி நிரல்
தலைமை : தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு, தமிழ்நாடு

சிறப்புரை :
திரு. பேரா. அ கருணானந்தம், வரலாற்றுத் துறை முன்னாள் தலைவர், விவேகானந்தா கல்லூரி, சென்னை
திரு ரமேஷ், அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம், ஐ..ஐ.டி, சென்னை
திரு பழ கருப்பையா, எழுத்தாளர், சென்னை
திரு பேரா. D. ரமேஷ் பட்நாயக், ஒருங்கிணைப்பு செயலர், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு, ஹைதராபாத்
தோழர் சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னை, 94451 12675

2. கும்பகோணத்தில் புதியக் கல்வி கொள்கை-2016 யை விளக்கி கடைவீதி பிரச்சாரம்

புதிய கல்விகொள்கை2016 யை கண்டித்து சென்னையில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக நடைபெற உள்ள பேரணி கருத்தரங்கத்துக்கு கும்பகோணம் பகுதி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக கும்பகோணம், அரித்துவாரமங்கலம், அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர் கடைவீதி பிரச்சாரமும் தெருமுனை பிரச்சாரமும் நடைபெற்றது. பிரச்சாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. கல்விக்கு வரும்பேர் அபாயத்தை உணர்ந்து நிதி அளித்தனர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கும்பகோணம்

  1. தோழர்,கும்பகோணம் பிரச்சாரம்ங்கிற பேரால முதல் வரில புதிய கல்விகொள்கை 2016 க்கு பதில் 2106 னு போட்டிருக்கு சரிபார்க்கவும்.

  2. இந்த எதிர்ப்புக் கூக்குரல் வெட்டி அரசியல் அன்றி வேறில்லை.

    சுதந்திரம் அடைந்த பின்னர், வரலாறு காணாத வகையில், மத்திய அரசு எடுக்கப் போகும் கொள்கை முடிவுக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டு, பொது மக்களிடம் கருத்துக் கேட்டு விளம்புகை செய்திருக்கிறது. இது வரை வெறுமனே அதிகாரிகள், பாராளுமன்ற அரசியல்வாதிகள் மட்டுமே கொள்கை முடிவு எடுத்து வந்திருக்கின்றனர். முதன்முறையாக வெளிப்படைத் தன்மையோடு அரசு தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கூட இந்த வரைவு கொள்கையின் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது. மக்களிடம் கருத்துக் கேட்டு வாய்ப்பும் அளித்திருக்கிறது.

    http://mhrd.gov.in/consultation-theme
    http://mhrd.gov.in/consultation-framework
    http://mhrd.gov.in/relevant-documents
    http://mhrd.gov.in/nep-event-view

    வரைவு கொள்கை அமைக்கும் முன்னர் மக்களது கருத்துக் கேட்கும் விதமாக அறிவித்திருப்பதை என்னமோ முடிவு எடுத்துவிட்ட மாதிரியும் திணிப்பு என்றும் திரித்து எழுதி, பிரசாரம் செய்வது வெட்டி அரசியல் மட்டும் அல்ல, வெறுப்பு அரசியலும் கூட. இது நாகரிகமான அரசியல் அல்ல.

    ஆக்கபூர்வமாகச் செய்வதானால், கொள்கை குறித்த உங்கள் கருத்துக்களை ஒரு வரைவு அறிக்கையாக வெளியிட்டு வாசகர்களின் கருத்துக்கு விடுங்கள். நாங்களும் கூறும் கருத்துக்களை உள்ளடக்கி, உங்கள் வரைவு அறிக்கை/பதிலின் இறுதி வடிவத்தை வெளிப்படையாக வலைத்தளத்தில் பதியுங்கள். அரசுக்கும் குறித்த காலக் கெடுவுக்குள் அனுப்புங்கள். அதை விட்டு விட்டு தெருவில் இடுகின்ற கூக்குரல் வெட்டியான வீணான ஆனால் வெறுப்பை மட்டும் விதைக்கின்ற செயல்தானே அன்றி வேறல்ல.

    முதன் முறையாக மத்திய அரசு தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளில் வரைவை வெளியிட்டுள்ளது. மொழித் திணிப்பு குறித்து முழங்குபவர்கள் இது குறித்துக் கண்டு கொள்ளாமல், திணிப்பு என்று கூறுவது வெறுப்பு அரசியல் ஆகும்.

    http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/he/Tamil.pdf
    http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/se/Tamil.pdf

    தேசத்தின், மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையுடன், வெட்டி, வெறுப்பு அரசியல் செய்யாமல் உங்களைப் போன்றவர்கள் அரசின் நல்ல நடவடிக்கைகளை அனுசரித்துப் போனால் நாடு முன்னேறும். அரசும் அத்தகைய கருத்தை ஏற்க ஊக்கம் அளிப்பதாக அமையும்.

    மக்களிடம் இப்படி அரசுக்கு உங்கள் கருத்தை அனுப்பலாம் என்ற பரப்புரையைச் செய்யுங்கள், வெறும் தெருமுனைக் கூட்டங்களை விடவே அரசுக்கு அனுப்பும் கருத்துரைகள் வலிமையானவையாக அமையும்.

  3. வர வர வினவின் எழுத்துப் பிழைகளையும், கவனக் குறைவினால் ஏற்படும் தவறுகளையும் சுட்டிக்காட்டுவதே வாசகர்களுக்குத் தனி வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறது.

    பதிவேற்றுவதில் இவ்வளவு மெத்தனம் ஏன் ?

Leave a Reply to அனானியன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க