Friday, February 7, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அமெரிக்க அரசு ஒடுக்குமுறையை எதிர்க்கும் பழங்குடிகள் - படங்கள்

அமெரிக்க அரசு ஒடுக்குமுறையை எதிர்க்கும் பழங்குடிகள் – படங்கள்

-

மெரிக்காவின் வடக்கு டகோட்டா மாகாணத்தில் சுமார் $3.8 பில்லியன் டாலர் திட்ட மதிப்பிலான வேலைகளை டகோட்டா ஆக்சஸ் பைப்லைன் எண்ணெய் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டம் நிறைவேறினால் தங்களது நீர் வளம், நில வளம் அழிக்கப்படும் என அங்குள்ள பூர்வகுடி மக்கள் போராடி வருகிறார்கள். உள்ளூரில் தொடங்கிய போராட்டம், தேசிய அளவில் விரிவடைந்து இன்று உலகம் முழுவதும் விவாதப் பொருளாகிவிட்டது. அந்த அளவுக்குத் தன் சொந்த மக்களையே அடக்கி ஒடுக்குகிறது அமெரிக்க அரசு.

ஏற்கனவே கடந்த அக்டோபரில்(28.10.2016) நூற்றுக்கும் மேற்பட்ட போலீசு அதிகாரிகள் தானியங்கி துப்பாக்கிகள் பொருத்திய வாகனங்களில் சென்றிருக்கின்றனர். கண்ணீர் புகை குண்டு, மிளகு கலவை, ரப்பர் குண்டுகள், குதிரைப்படை என அனைத்து வகையான ஒடுக்குமுறைகளும் போலீசால் கையாளப்பட்டன.

இரவு, பகல் என்று கூட பாராமல் மக்கள் மேல் தீவிரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டனர் அமெரிக்க அரசின் சட்ட அமலாக்கப் பிரிவு போலீசு அதிகாரிகள். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் அங்கே போராடி வருகின்றனர்.

1.இரவிலும் தாக்குதல் நடத்தும் இரக்கமற்ற போலீசு. இரும்பு முள்வேலிக்கப்பால் இருந்து கொண்டு, இரப்பர் குண்டுகளால் சொந்த மக்களையே தாக்கும் கொடூரம்…
இரவிலும் தாக்குதல் நடத்தும் இரக்கமற்ற போலீசு. இரும்பு முள்வேலிக்கப்பால் இருந்து கொண்டு, இரப்பர் குண்டுகளால் சொந்த மக்களையே தாக்கும் கொடூரம்…
காயம்பட்ட ஒரு போராட்டக்காரருக்கு முதலுதவி அளிக்கும் சக போராட்டக்காரர்கள்…
காயம்பட்ட ஒரு போராட்டக்காரருக்கு முதலுதவி அளிக்கும் சக போராட்டக்காரர்கள்…
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தைக் கடக்க முயலும் மக்களைத் தாக்கும் போலீசு
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தைக் கடக்க முயலும் மக்களைத் தாக்கும் போலீசு
இரப்பர் புல்லட்டும், அதனால் போராட்டக்காரருக்கு ஏற்படுத்தப்பட்ட காயமும்…
இரப்பர் புல்லட்டும், அதனால் போராட்டக்காரருக்கு ஏற்படுத்தப்பட்ட காயமும்…
கடுங்குளிரிலும் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பாய்ச்சியடிக்கத் தயாராக உள்ள போலீசு அதிகாரிகள்
கடுங்குளிரிலும் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பாய்ச்சியடிக்கத் தயாராக உள்ள போலீசு அதிகாரிகள்
பாலத்தைக் கடக்க முற்பட்டதால் போலீசால் தாக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது
பாலத்தைக் கடக்க முற்பட்டதால் போலீசால் தாக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது
தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் கூட போலீசு குவிக்கப்பட்டிருப்பதால் போராடி வரும் மக்கள்
தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் கூட போலீசு குவிக்கப்பட்டிருப்பதால் போராடி வரும் மக்கள்
கடுங்குளிரிலும் தண்ணீரைப் பாய்ச்சியடிக்கும் போலீசு
கடுங்குளிரிலும் தண்ணீரைப் பாய்ச்சியடிக்கும் போலீசு
மெளனமாக அமர்ந்து போராடும் பழங்குடிகள்
மெளனமாக அமர்ந்து போராடும் பழங்குடிகள்
பதாகைகளுடன் தங்களின் புனித நிலத்தைக் காக்க போராடும் பழங்குடிகள்.
பதாகைகளுடன் தங்களின் புனித நிலத்தைக் காக்க போராடும் பழங்குடிகள்.

நன்றி: அல் ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க