privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்புத்தகத்தைப் பார்த்து புதுக்கோலம் போடுவதல்ல மகளிர் தினம் !

புத்தகத்தைப் பார்த்து புதுக்கோலம் போடுவதல்ல மகளிர் தினம் !

-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மார்ச் 8 – ஆம் தேதி உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி  பெ.வி.மு தோழர்.ஜெயமணி தலைமையில் மாலை அணிவித்து பெண் விடுதலைக்கான முழக்கங்களை தோழர்கள் எழுப்பினர். வெடிவெடித்து முழக்கமிட்டு, அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்குள் சென்று பிரசுரங்கள் விநியோகித்து இனிப்பு கொடுக்கப்பட்டது.

மகளிர் தினம் என்பதையே அறியமுடியாத அளவு நிறைய பெண்கள் இருப்பதை அங்கே காண முடிந்தது. தேநீர் கடைகள், உணவகங்களில் பணியாற்றும் பெண்களிடம் சென்று பிரசுரம் கொடுத்து விளக்கப்பட்டது. அதன்பிறகு மாலை அரங்குக்கூட்டம் நடத்தப்பட்டது.

திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் உள்ள சுமங்கலி மகாலில் தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

தலைமையேற்ற பெ.வி.மு தலைவர் நிர்மலா இன்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கு போராட்டத் தீ பற்றியுள்ளது. மெரினாவின் போராட்டம் போட்ட விதை நெடுவாசலில் முளை விட்டுள்ளது. கோக், பெப்சி கம்பெனிகளை தடுத்து நிறுத்த கோரி, தாமிரபரணி தண்ணிரை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என நெல்லையில்கூடியுள்ளனர்.

கடலில் மீன்பிடிக்க சென்று தொடர்ந்து தமது உடமைகளை சிங்கள கடற்படைக்கு பறிகொடுத்து இறுதியில் 2O வயதில் உயிரையும் கொடுத்துவிட்டு மீனவ மக்களையும் போராட்டக்களத்தில் குதிக்க வைத்துள்ளான் அந்த இளைஞன் பிரிட்ஜோ. மகளிர் தின வரலாறும், போராட்டத்தை உள்ளடக்கியதுதான். ஐரோப்பா, அமெரிக்காவில் வீதியில் திரண்டபெண்கள் முதலாளித்துவ சுரண்டலுக்கு சாவுமனி அடித்தனர்.

இந்தப் போர்க்குணத்துக்கு தலைவணங்கி சோசலிசப் போராளி கிளாரா ஜெட்கின், சர்வதேச மகளிர் தினம் கடைப்பிடிப்பதன் தேவையை உலகுக்கு அறிவித்தார். தோழர் மாமேதை லெனினும் அதை வழிமொழிந்தார். ஆக இந்த போராட்டதினம், பெண்கள் மீதான கொடுமைகளை தொடர்ந்து பொசுக்கும் என்றார்.

தோழர் சிவானந்தம் குடும்பமும், மகளிர் எனும் தலைப்பில் பேசும் போது பெண் எப்போது அடிமையாக்கப்பட்டாள்? அது தனியாக நடந்த நிகழ்வு அல்ல சமூகமாற்றத்தின் போக்கே என்பதை விளக்கினார்.

மனிதர்கள் தமது வாழ்க்கை மீதான பயம், அவமான உணர்ச்சி, வேதனை, தாழ்வு மனப்பான்மை, வாழ்வுக்கான வழிதெரியாமல் கையறு நிலை இவைகளை தனித்து பார்த்து திகைப்பதை விட இந்த சமூகமே அனைத்துக்குமான காரணிஎன்பதை உற்றுப் பார்ப்பதே முதன்மையானது.

சுயநலத்தை விட்டொழித்து பொதுநலத்தை பேணும் போது உடலில் உள்ள நோய்களும் ஓடிப்போய்விடும். அதை நடைமுறையில் சாத்தியமாக்கும் போராட்டத்தில் ஒன்றிணைவோம் வாரீர் என அறைகூவினார்.

அவரைத் தொடர்ந்து. பெண் விடுதலை இந்த கட்டமைப்புக்குள் சாத்தியமா? என  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் பேசினார்.

பெண்கள் இன்று ஒன்று திரள துவங்கியுள்ளார்கள். மெரினாவுக்கு பின் இன்று போராட்டம் என்றால் வருகிறார்கள். மெரினாவில் நாம் பறை அடித்து பாடும் போது பெண்கள் 5 வயதிலிருந்து 70 வயது வரை உள்ளவர்கள் என அனைவரும் அங்கு  ஆதரவு தருகின்றனர்.

மாணவர்களை நாங்கள் தவறாக நினைத்திருந்தோம். போன், வாட்ஸ்அப், என உருப்படாம போகிறார்கள் என்று நினைத்திருந்தோம் அதே போதில் மெரினா புரட்சிக்கு வித்திட்டவர்கள் இவர்கள் தான் என்ற போது ஒரு தாய் அங்கே மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

அடுப்படியில் கிடந்த பெண்ணின் நிலை மாறி உள்ளது. ஆனால் ஆணின் சிந்தனை மாறி உள்ளதா? அது இன்னும் வக்கிரமாக, இரக்கமற்றதாக மாறியுள்ளது. நிர்பயா துவங்கி, சுவாதி முதல் இன்று நந்தினி, ஹாசினி, ரித்திகா என எண்ணிலடங்கா பெண்கள், குழந்தைகள் ஈவிரக்கமற்று பாலியல் துன்புறுத்தலுக்கும் கொடுர ஆணாதிக்க வெறியாலும் குதறப்படும் நிலையை வார்த்தையால் சொல்ல முடியாது. அதிகாரியாலும் அடிமட்ட ஊழியர்களாலும் சிதைக்கப்பட்டு நடைப்பிணங்களாக எத்தனைபேர் வாழ்கின்றனர்.

சந்தேக கேசுன்னு ஸ்டேசனில் வைத்து மானபங்கம் செய்து வெளியில் தெரியாமலே புதைக்கப்பட்டனர். சிறுமிகள் எத்தனை பேர் பாலியல் துன்புறுத்தல் உறவினர்களால் செய்யப்பட்டு, புகார் கொடுக்க சென்று காவல்துறையை சேர்ந்த 10, 15 பேரால் கூட்டுபாலியல் வன்முறைக்குள்ளானது தமிழகமே அதிர்ச்சியடைந்தது.

நீதி கேட்டு நீதிமன்ற படியேறினால் அங்கும் பாலியல் வெறியர்கள். இந்த நிலைத் தொடர்ந்தால் பெண்கள் யாரிடம் பாதுகாப்புக்கு செல்ல முடியும். அதிகார வர்க்கம், காவல்துறை, நீதிமன்றம் என ஒட்டு மொத்த அருவருப்பான இந்தகட்டமைப்புதாரர்கள் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்தரமுடியாது.

சமூக விடுதலையை சாதிக்கும் போது பெண் விடுதலை தானாய் வரும், பெண்ணின் பாதுகாப்பு பலப்படும். இத்தகைய மாற்றத்தை நோக்கி பயணிப்போம், நன்றி என்றார்.

இறுதியில் பெ.வி.மு தோழர்களின் நாடகம் – பஞ்சாயத்தை கலைக்கிறான் பா.ஜ. என நெடுவாசலில் மக்களின் விவசாயத்தை காக்கும் போராட்டம் வெல்ல வேண்டும், அதை மடைமாற்றும் அரசியல்வாதிகளை தோலுரிப்போம், எனும் களத்தை வைத்து நடத்தப்பட்டது. புரட்சிகர பாடல்கள், நடனத்துடன் பெண் தோழர்களால் அரங்கேற்றப்பட்டது. சமூக விடுதலையே பெண் விடுதலை என மூன்று பெண் தோழர்கள் கவிதைவாசித்தனர்.

நன்றியுரையாக பெ.வி.மு தோழர். ஜெயமணி பேசினார். அரங்குநிறைந்த கூட்டமாக 250க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரங்கு வளாகத்தில் புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. சமீபகால பெண்களின் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வரவேற்பை பெறுவதை எடுத்துக்காட்டி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது, அது பெண் தோழர்களை மேலும் ஊக்கப்படுத்துவது போல் இருந்தது.

மகளிர் தின நிகழ்ச்சிக்கு இடம் தேடுவது பெரும்பாடானது.

ஜனநாயக நாடு என பேசும் விளக்கெண்ணைகள் உள்ள நாட்டில் ஒரு கூட்டம் போட மண்டபம் வாடகைக்கு கிடைக்கவில்லை, காரணம் மண்டப உரிமையாளிடம் போய் பேசும் போது என்ன அமைப்பு, என்ன விலாசம் இதை நீங்க அருகில் உள்ள காவல் நிலையத்தில் எழுதி கொடுங்கள் இல்லையேல் மண்டபம் தர இயலாது என்றனர்.

ஏங்க மகளிர்தினத்தை பெண்களிடம் பேச எதுக்குங்க காவல்நிலையம் போகணும் என்றதற்கு, எங்களுக்கு இப்படி தாம்மா ஆர்டர் போட்டிருக்காங்க என்றனர். இறுதியாக ஏற்பாடு செய்த மண்டப உரிமையாளரிடம் என்ன பேசுறாங்க என கேட்டது போலீசு. அதற்கு அவர் “வாடகைக்கு கொடுக்கிறது மட்டும் தான் எங்க வேலை, யார் வருவாங்க என்ன பேசப் போறிங்க என்று கேட்பது நாகரீகமில்ல, அது எங்க வேலையும் இல்ல என மூக்குடைத்து அனுப்பியுள்ளார்.”

மக்களை, புரட்சிகரஅமைப்புகளை வேவுபார்க்கும் இந்தகேடுகெட்டஅரசைகாறிஉமிழ்வோம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க