privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்தஞ்சை மானோஜிப்பட்டி டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பெண்கள் !

தஞ்சை மானோஜிப்பட்டி டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பெண்கள் !

-

ஞ்சை நகரில் இருக்கும் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள மானோஜிப்பட்டி எனும் கிராமத்தின் முக்கிய சாலை சந்திப்பில், மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் பள்ளிக்கு அருகாமையில் 15 ஆண்டுகளாக ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. அதை எதிர்த்து அப்பகுதி வாழ் மக்கள் பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியருக்கும், தாசில்தாருக்கும், காவல்துறை கண்காணிப்பாளருக்கும் என அனைத்து அதிகாரிகளுக்கும் தொடர்ச்சியாக பலமுறை மனுக்கள் கொடுத்து நொந்து போயினர்.

தற்போது தஞ்சையில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் பல ஊர் குடிகாரர்கள் இந்த மானோஜிப்பட்டி கடைக்கு படையெடுத்தனர். அந்த சிறிய கடைவீதியில் தினமும் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் குவிகின்றனர். அப்பகுதி சாலைகள் அனைத்தையும் பார்களாக மாற்றிவிட்டனர். அப்பகுதி மக்கள் இக்கடைவீதியில்  நடமாட முடியாமல் தவித்தனர். பெண்கள், பள்ளிக் குழந்தைகள் தினந்தோறும் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் இருப்பவர்கள் எவ்வாறு இந்த கடையை மூடுவது என்ற குழப்பத்தில் மக்கள் அதிகார அமைப்பை நாடினர்.

உடனே மக்கள் அதிகார அமைப்பை சார்ந்த தோழர்கள் அப்பகுதியில் உள்ள வணிகர்கள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் இந்த டாஸ்மாக் கடைக்கு எதிராக திரட்டினர். மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த அரசு மனு கொடுப்பது, உண்ணாவிரதம் இருப்பது என்று கெஞ்சிக்கொண்டிருந்தால் மூடமாட்டார்கள். கடையை இங்கு நடத்த முடியாத அளவுக்கு நெருக்கடி கொடுத்து விரட்டியடிக்க வேண்டும் என்று திரட்டி 18.04.2017 அன்று காலை  11:00 மணிக்கு மக்கள் அதிகார தஞ்சை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையில், சுமார் 300 பேர் திரண்டு கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டனர்.

கடை திறக்காவிட்டால் இந்த அரசே ஸ்தம்பித்து விடும் என்பது போல் தாசில்தார், மாவட்ட துணை கண்காணிப்பாளர், டாஸ்மாக் மாவட்ட துணை மேலாளர், கோட்ட கலால் அலுவலர் என ஒட்டுமொத்த அதிகாரவர்க்க கும்பலும் காவலர் புடைசூழ போராட்டக் களத்திற்கு வந்தனர். போராடும் மக்களை ஏய்த்துவிடலாம் என்றும், காவல் துறையினர் கலவரத்தை தூண்டி மக்கள் அதிகார அமைப்பு தோழர்களை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தி விடலாம் என்றும் பல சூழ்ச்சிகளில் ஈடுபட்டது. ஆனால் அனைத்தையும் அங்கு திரண்டுள்ள பெண்களும், மக்கள் அதிகார தோழர்களும் முறியடித்தனர்.

வேறு வழியில்லாமல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பெண்கள் இன்று மூடிவிட்டுதான் வீட்டிற்கு செல்வோம் என்று உறுதியாக இருந்தனர். இறுதியாக மே 5-க்குள் மூடிவிடுகிறோம் என்று அதிகாரிகள் கெஞ்சி கூத்தாடி மக்களிடம் அனுமதி கோரினர். பிறகு பெண்கள் இதை ஏற்றுக்கொண்டு அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்கும் வகையில் அனைத்து அதிகாரிகளும் கடிதமாக எழுதி கையெழுத்திட்டு கொடுத்தால் தான் கலைவோம் என்று எழுதி வாங்கிக்கொண்டு, மே 5க்குப் பிறகு கடையிருந்தால் இடித்துவிடுவோம் என்றும் அரசை எச்சரித்துவிட்டு சென்றனர்.

இப்போராட்டம் அப்பகுதி மக்களிடையே உற்சாகத்தையும், அனைத்து பிரச்சனைகளுக்கும் களத்தில் இறங்குவது தான் ஒரே தீர்வு என்பதையும் விதைத்தது. மக்கள் அதிகார அமைப்பை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடலாம் என்ற அதிகாரிகளின் நப்பாசையும் பொய்த்துப் போனது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க