privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவெள்ளாற்றில் 180 கோடி மணல் கொள்ளை ! அதிமுக ஆட்சியில் ஒரு துளி !

வெள்ளாற்றில் 180 கோடி மணல் கொள்ளை ! அதிமுக ஆட்சியில் ஒரு துளி !

-

வெள்ளாற்றில் நடந்த மணல் கொள்ளைக்கு நீதி விசாரணை கோரி பாதிக்கப்பட்ட பகுதி விவசாயிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள்!

வெள்ளாற்றில் இரு மணல் குவாரிகளில் மட்டும் 180 கோடி ஊழல்!
அதிமுக ஆட்சியின் ஊழல்களில் ஒரு துளி!
ஆதாரங்களுடன் பத்திரிக்கையாளர்களை சந்திதார்கள் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தினர்!
நாள்  : 22-6-2017 வியாழன்
நேரம் : காலை 11-00
இடம்  : பத்திரிக்கையாளர் மன்றம்,
சேப்பாக்கம், சென்னை.

கலந்து கொண்டவர்கள் :

சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
ஆர்.வெங்கடேசன், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், கூடலையாத்தூர்.
சி.மலர்மன்னன், கா.ஆசைதம்பி, கூடலையாத்தூர்.
எம்.ஜி.பஞ்ச மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்,வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், கருவேப்பிலங்குறிச்சி,
நந்தகுமார் , தெய்வக்கண்ணு, ராஜவன்னியன்,வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், பவழங்குடி,சி.கீரனூர், மேல்பாளையூர்.
அ.தமிழரசன், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம். மதகளிர் மாணிக்கம்,
வீ.பட்டுசாமி, ராமச்சந்திரன், ராயர், ஜான்சன், மதகளிர்மாணிக்கம்

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் வழங்கப் பட்ட மனு :

எம்.ஜி.பஞ்சமூர்த்தி, மருங்கூர்
சி.செங்குட்டுவன், காவாலாகுடி
ஆர்.வெங்கடேசன், கூடலையாத்தூர்
அ.தமிழரசன், மதகளிர்மாணிக்கம்

வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம்
702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம்.
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு – 99651 91023, 9865131060, 99429 46797

_____________

நாள் 22-06-201

பெறுதல் :
உள்துறைச் செயலாளர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை.

அரசு செயலாளர் அவர்கள்,
பொதுப்பணித்துறை,
தலைமைச் செயலகம்,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை.

பொருள் :

1. கடலூர் மாவட்டம், திருமுட்டம் தாலுக்கா, வெள்ளாறு – மதகளிர் மாணிக்கம், கூடலையாத்தூர் மணல் குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி

2. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுக்கா,வெள்ளாறு-கார்மாங்குடி,குவாரி மற்றும் சிதம்பரம் கோட்டம், முடிகண்டநல்லூர் குவாரிகளில் அரசின் கணக்கில் வராமல் நடந்த சுமார் 180 கோடி ஊழல் முறைகேட்டிற்கு விசாரணைக்கு உத்திரவிடக்கோரி

3. வெள்ளாறு மணல் குவாரிகளில் விதிமுறைகளை மீறி மணலை எடுத்து ஆற்றின் இயல்பை சீர்குலைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி

மதிப்பிற்குரியீர்,  வணக்கம் !

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுக்கா, கார்மாங்குடி மணல் குவாரியில், புல.எண்.398/1- 19.10 எக்டேர் பரப்பளவில் 191000 c.m மட்டுமே அனுமதி வழங்கபட்டது. ஆனால் ஜனவரி 2014 முதல் டிசம்பர் 2014 வரை அனுமதிக்கபட்ட அளவைவிட சுமார் மூன்று மடங்கு அரசின் கணக்கில் வராமல் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.

மாநில சுற்றுசூழல் ஆணையத்தின் உத்திரவுப்படி எந்த விதி முறைகளையும் கடைபிடிக்காமல் 5 பொக்லைன் வைத்து மணல் அள்ளபட்டுள்ளது. 3 அடி என்ற அளவை தாண்டி 30 அடிக்கு மேல் மணல் எடுக்கபட்டுள்ளது. அதற்கான வீடியோ,புகைப்பட ஆதாரங்கள், சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு போராட்டங்கள் மூலமாகவும், கோரிக்கை மனுக்கள் மூலமாகவும் அனுப்பி தெரிவித்தோம். இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் வெள்ளாறு சிதைந்துள்ளது. 40 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இன்று  250 அடிக்கு கீழ் சென்றுள்ளது. ஆயிரக்கணக்கான போர்கள் செயலிழக்கும் அபாயம் உள்ளது. நெய்வேலி சுரங்கம் ஒரு புறம் நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றி வருகிறது.

மழையும் பொய்த்து வருகிறது. வெள்ளாறுதான் நிலத்தடி நீரை காக்க ஒரே வழி. பாசனத்திற்கு போர்வெல்தான் வேறு வழியில்லை. வெள்ளாற்றில் மீண்டும் மணல் குவாரி அனுமதிக்க பட்டால், நூற்றுக்கணக்கான கிராம மக்கள் குடிநீருக்கே அலையும் நிலை ஏற்படும். விவசாய நிலங்கள் பாழாகும். கடல்நீர் அருகில் உள்ளதால் உட்புகுந்து விடும். கண்காணித்து முறைபடுத்த வேண்டிய அதிகாரிகள் யாரும் ஆறுகள் சிதைந்து போவது பற்றியும், விதி முறைகள் மீறப்பட்டு மணல் கொள்ளை அடிப்பது பற்றியும் பொறுப்பில்லாமல் குற்றம் செய்பவர்களுக்கு துணை போகின்றனர்.

கார்மாங்குடி குவாரியில் ஊராட்சி மற்றும் மணல் குவாரி சார்பில் தினசரி லோடுகளை கணக்கெடுக்க நியமிக்க பட்ட நபர் தினம்தோறும் எழுதிய கணக்கு விபரங்கள்படி சுமார் 48,500 நடைகள். ஒரு லோடு ஆறு யுனிட் என்ற அளவில் அள்ளப்பட்டது. ஆனால் அரசு பதிவேட்டில் இரண்டு யுனிட்தான் குறிக்கபடுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் கொடுக்க பட்ட தகவலின்படி 8,247 லோடு என குறிப்பிட பட்டுள்ளது. ஆனால் இரண்டு யுனிட் என கணக்கிட்டால் 1,45,000 லோடுகள் வரை மணல் அள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு சுமார் 150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கபட்ட இடத்தை தாண்டி பல இடங்களில் மணல் அள்ளியுள்ளனர். ஜி.பி.எஸ். கருவி வைத்து நாங்கள் ஆய்வு செய்து உறுதி படுத்தியுள்ளோம்.

இணைக்கப்பட்ட புகைப்படம், மற்றும் வீடியோவை பார்த்தால் விதிமுறை மீறியது தெளிவாக தெரியும். மணல் அள்ளிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் விதி முறை மீறியதுடன் மணல் கொள்ளைக்கு துணைபோயிள்ளனர். மேலும் கண்காணிக்க வேண்டிய மாவட்ட அளவிலான, தாலுக்கா அளவிலான கண்காணிப்பு படையும் நேரடியாக வெள்ளாற்றிற்கு சென்று ஆய்வு செய்யாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.. நாங்கள் பல முறை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம் என்பதற்கு நிறை சான்றுகள் உள்ளன.

சிதம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட முடிகண்ட நல்லூர் குவாரியிலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாநில சுற்றுசூழல் ஆணயை உத்திரவை மீறியுள்ளனர். உத்திரவுப்படி 106528 c.m. தான் அள்ள வேண்டும். அதாவது சுமார் 37593 யுனிட்தான் மணல் அள்ள வேண்டும். ஆனால் சுமார் 150000 யுனிட் வரை அள்ளியுள்ளனர். மார்க்கெட் மதிப்பின்படி சுமார் 30 கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் வந்தால் முறையாக செல்லமுடியாத படி ஆற்றின் நீரோட்டங்களை சீர்குலைத்துள்ளனர். வெள்ளாற்றில் மணல் அள்ள வேண்டும் என்பதற்காக வீராணம் ஏரி உபரி நீரை அதிகாரிகள் பாழ்வாய்க்காலுக்கு திருப்பிவிட்டுள்ளனர். அனுமதிக்கபட்ட அளவைவிட மணல் கொள்ளையை கண்காணித்து தடுக்க வேண்டிய அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதனால் பகுதி மக்கள் போராடி மணல் கொள்ளையை தடுத்தால் காவல் துறையை வைத்து பொய் வழக்கு போடுவது, கீயு பிரிவு போலீசார் மூலம் மிரட்டுவது. குண்டர் சட்டத்தில் போடுவேன் என மக்கள் மத்தியில் பீதியை உருவாக்குவது,பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர் என கோட்டாட்சியர் விசாரணைக்கு அலைகழிப்பது என போலீசார் அத்துமீறுகின்றனர். குவாரிக்கு தகுந்தார் போல் கிராமத்தில் சிலருக்கு லஞ்சம் கொடுத்து போராட்டத்தை சீர்குலைக்க சதி செய்கின்றனர்.

எனவே நாங்கள் இத்துடன் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை பரிசீலித்து நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். மேலும் வெள்ளாற்று பகுதி கிராம மக்களை அழைத்து பொது விசாரணை நடத்தினால் முழு உண்மைகளை கொண்டுவரமுடியும். ஒருலாரி மணல் கடைமடைக்கு வந்து சேர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது ஜே.சி.பி.எந்திரத்திற்கு தெரியாது. வெள்ளாற்றின் இயற்கை அமைப்பை சிதைத்த, மணல் கொள்ளைக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறாம்.

கடலூர் மாவட்டம், வெள்ளாற்றில் பல ஆண்டுகள் பல இடங்களில் அளவுக்கு மீறி மணல் அள்ளப்பட்டுவிட்டது. மேலும் மணல் அள்ளுவது எதிர்காலத்தில் அனைத்து மக்களுக்கும், விவசாயத்திற்கும் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் எனவே தற்போது அனுமதிக்கபட்ட மதகளிர் மாணிக்கம், கூடலையாத்தூர் மணல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்து மணல் குவாரிகளை மூடு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க