privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்இதர நாடுகள்மியான்மர் அரசால் குதறப்படும் ரோஹிங்கியா முசுலீம்கள் - படக்கட்டுரை

மியான்மர் அரசால் குதறப்படும் ரோஹிங்கியா முசுலீம்கள் – படக்கட்டுரை

-

ரு பச்சிளம் குழந்தை அதனுடைய தாயின் மடியில் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறது. குழந்தையின் முகம், கைகள் மற்றும் உடல் முழுதும் எரிந்துள்ளது. ஒரு பெண் உடல் முழுவதுமான தீக்காயங்களுடன் ஒரு மூலையில் தனியாக உட்கார்ந்து இருக்கிறார்.

“இராணுவம், என் வீட்டைக் கொளுத்தும் போது  நான் வீட்டிற்குள் இருந்தேன். தப்புவதற்கு வழியேதுமின்றி  தீயினால் சூழப்பட்டேன். மேலும் என் முழு உடலும் எரிந்தது” என்கிறார் 30 வயது ஷாகிதா பேகம். “இந்த வலி தாங்க முடியாதது. இதை விட செத்துப்போவதே மேல்” என்று அவர் கூறுகிறார்.

இராசிடாங் கிராமத்தில் இருக்கும் ஷாகிதாவின் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன் வைக்கப்பட்ட தீயில் அவரது மகன்களில் மூவர் கொல்லப்பட்டனர். “அந்த வாழ்க்கை மீண்டும் ஒருபோதும் திரும்பாது” என்கிறார் அவர்.

தில்தர் பேகம் மற்றும் அவரது 10 வயது மகள் நூர் கொலிமா இருவரும் ஐந்து நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது குடும்பத்தில் தப்பிப்பிழைத்தவர்கள் அவர்கள் மட்டுமே. கணவர், பச்சிளங்குழந்தை மற்றும் மாமியார் என மூவரையும் அவர் வன்முறையில் இழந்திருக்கிறார்.

“எனது குடும்பத்தினர் ஆகஸ்டு 29 ஆம் தேதி தாக்கப்பட்டனர். இராணுவம் கண்மூடித்தனமாக அங்கு துப்பாக்கிச்சூட்டை நடத்தியது” என்று தில்தர் கூறுகிறார்.

“என் மகளும் நானும் தாக்குதலில் இருந்து எப்படியோ தப்பிவிட்டோம். இராணுவத்தோடு இருந்த இரண்டு புத்ததுறவிகள் ஒரு பெரியக் கத்தியைக் கொண்டு எங்களைக் கொல்ல முயன்றனர். நாங்கள் இறந்துவிட்டோம் என்று நினைத்தார்கள். மூன்று நாட்களாக வீட்டில் மறைந்திருந்து பின்னர் நாங்கள் தப்பினோம்.” என்று கூறினார். எல்லையை அடைய நாங்கள் சென்ற அந்த பயணம் திக்கற்றதாக இருந்தது. நான் மிகவும் வேதனையில் இருந்தேன்.” என்று தில்தர் கூறுகிறார்.

மியான்மரில் இருந்து தப்பியோடியபோது கிழே விழுந்ததில் எட்டு வயதான முகம்மது அனஸிற்கு முகத்தில் காயமேற்பட்டது. மருத்துவமனையில் அவரது மாமா சையத் ஆலம் உடன் இருக்கிறார்.

“நாங்கள் மாண்டுவா மாவட்டத்தைச் சேர்ந்த லங்காலி கிராமத்தில் இருந்து வருகிறோம். ஈகைத் திருநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அங்கே தாக்குதல் நடத்தப்பட்டது” என்று சையத் விளக்குகிறார். “அருகிலுள்ள மலைக்கு எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர்கள் தப்பி ஓடிவிட்டோம். ஆனால் எங்களில் ஆறு பேரால் மட்டுமே இங்கு வர முடிந்தது. மற்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது எனக்குத் தெரியவில்லை.” என்கிறார்.

வங்கதேசத்தின் துறைமுக நகரமான காக்ஸின் பஜார் நகரில் இருக்கும் சதார் மருத்துவமனையில் இத்தகையக் காட்சிகள் வழக்கமான ஒன்றாகிவிட்டன. அண்டை நாடான மியான்மரின் ராக்கின் மாநிலத்தில் மியன்மார் இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பியவர்கள் இவர்கள்.

ஆகஸ்ட் 25-ல் இருந்து 4,00,000 ரோஹிங்கிய அகதிகள் வங்கதேசத்திற்கு வந்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளினல் நடைபெற்ற மோசமான அகதி நெருக்கடிகளில் இதுவும் ஒன்று” என்று ஐ.நா. அகதிகள் அமைப்பு கருதுகிறது.

காக்ஸின் பஜார் சதார் மருத்துவமனையில் 30 வயதான ரோஹிங்கிய அகதி முகம்மது உல்லாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை முடிந்தவுடன் மருத்துவமனையிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதி முகாமிற்கு நோயாளிகள் அனுப்பப்படுவார்கள்.

முகம்மது அனாஸ் – இச்சிறுவனின் கிராமத்தின் மீது மியான்மர் இராணுவம் நடத்திய தாக்குதலில் தப்பி ஓடும் போது அவனது முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

40 வயதான ஷாகிதா பேகத்தின் உடல் முழுவதிலும் தீக்காயங்கள் இருக்கின்றன.

டாலு ஹுசைனுக்கு 50 வயதாகிறது. மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 39 ரோஹிங்கிய அகதிகளில் அவரும் ஒருவர்.

மியான்மரில் உள்ள டன்ஸெவரா கிராமத்தைச் சேர்ந்த இமான் ஹுசைன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தப்பி ஓடும் போது அவர் எல்லாவற்றையும் இழந்துவிட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர் எதிர்நோக்கவிருக்கும் நிச்சயமற்றத் தன்மையையும் நம்பிக்கையின்மையையும் கண்டு அச்சப்படுவதாகக் கூறுகிறார்.

இமான் ஹுசைனின் காலில் புதைந்திருக்கும் துப்பாக்கி தோட்டா ஒன்றை ஊடு-கதிர் (X-Ray) படம் காட்டுகிறது.

26 வயதான சலீம் உல்லா அவரது இடது தொடையில் சுடப்பட்டார்.

காயமடைந்த தன்னுடைய 10 வயது மகள் நூர் அருகே தில்தார் பேகம் அமர்ந்திருக்கிறார். அவர்களது குடும்பத்தில் அவர்கள் மட்டுமே உயிர் தப்பியவர்கள்.

சதார் மருத்துவமனையில் கடந்த ஒன்பது மாதமாக 25 வயதான ஷேக்கீபா ஒரு செவிலியராக     பணிபுரிந்து கொண்டிருக்கிறார். ரோஹிங்யா அகதிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஆறு முதல் எட்டு வார்டுகளில் ஒன்றான இந்த வார்டுக்கு நான்கு வாரங்களுக்கு முன்னர் அவர் மாற்றப்பட்டார். “மருத்துவமனையில் தற்போது நோயாளிகளுக்கு போதுமான மருத்துவ வசதிகள் கிடைப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்துகிறது” என்று அவர் கூறுகிறார். “புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பினாலும் (International Organization for Migration) மருந்துகள் வழங்கப்படுகின்றன” என்று மேலும் கூறினார்.

மருத்துவமனையில், ரோஹிங்கியா  அகதிகள் சேர்க்கை எண்ணிக்கையை காட்டும் ஒரு தகவல் பலகை.

கடுமையான தீக்காயங்களினால் துயருறும் பச்சிளம் குழந்தை முகம்மது ஹரிஸ்-ஐ தனது மடியில் கிடத்தியிருக்கிறார் அவனது தாய் குர்ஷீதா பேகம். மியான்மர், புச்சிடோங் மாவட்டத்தின் தாமி பகுதியிலிருந்து வந்தவர்கள் அவர்கள். குர்ஷீதாவின் கணவர் மற்றும் ஐந்து குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். வன்முறையில் இருந்து தப்பி ஓடும் போது அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.

“அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது ஆனால் அவர்கள் உயிருடன் இருப்பதாக நான் வலிமையாக உணர்கிறேன்” என்கிறார் அவர்.

நன்றி : அல்ஜசீரா

_____________

இனவெறி மதவெறி ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து எதிர்க்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி