privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்டெங்கு மரணங்கள் : உசிலையில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !

டெங்கு மரணங்கள் : உசிலையில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !

-

யிரக்கணக்கான மக்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ள நிலையிலும் அவற்றை மறைப்பதிலேயே எடப்பாடி அரசு குறியாக உள்ளது. செயலற்ற அரசை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் “தொடரும் டெங்கு மரணம்!! குற்றவாளி யார்? கொசுவா? அரசா?”-என்ற தலைப்பில் 19.10.2017 அன்று போடியில்  மாலை 5:00 -மணிக்கு மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு தோழர் பா.ஜோதிபாஸ் தலைமையேற்றார்.இதில் கண்டன உரையாற்றிய மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பா.மோகன் மக்களை காக்க துப்பில்லாத அரசை அம்பலப்படுத்தி பேசினார்.மேலும் ஆர்ப்பாட்டத்தின் இடையே புரட்சிகர பாடல்கள் பாடபட்டது. மக்கள் அதிகாரம் தோழர்கள் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். காவல்துறையினர் கூட்டத்தின் முடிவில் இந்த ஆர்ப்பாட்டம் தற்போதய சூழலில்  அவசியமானது என தோழர்களிடம் கூறி சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தேனி மாவட்டம்.

***

தனித் தனி பிரச்னைகளுக்கு தனித் தனி தீர்வு சாத்தியமில்லை
அரசியல்
அக்கிரமங்களுக்கு அராஜகங்களுக்கு முடிவு காட்டும் போராட்டங்கள் தேவை

துரை மாவட்டம், உசிலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கடந்த 21.10.2017 அன்று மாலை சுமார் 4:00  மணியளவில் மக்கள் அதிகார தோழர்கள் தெருமுனைப் பிரச்சாரத்தை தொடங்கினர்.

தோழர். குருசாமி அவர்கள் தலைமையில் பிரச்சாரம் தொடங்கியது. பின் வத்தலக்குண்டு சாலையிலும், தேனி சாலையிலும் நடந்தேறியது. தோழர் குருசாமி  பேசுகையில். “எடப்பாடி மற்றும் பன்னீரின் கூட்டு மோசடிகளை” வெட்ட வெளிச்சமாக்கினார்.  “ஜெயா எப்படி செத்தால் நமக்கு என்ன…. டெங்கு தொடர் மரணங்கள் தான் குறையுமா அல்லது நம் வீட்டில் உலை தான் கொதிக்குமா ?” போன்ற கேள்விகள் மக்களை உலுக்கின. அரசை, அரசு அதிகாரிகளை விமரிசனம் செய்ய பயப்படும் மக்களுக்கு தோழர்களின் பேசசுக்கள் உணர்வூட்டின.

பின்னர் தோழர் ஆசை அவர்களின் எழுச்சி கொண்ட பேச்சு வீரியமாக வெடித்தது. பாஜக மற்றும் மோடியின் சதித் திட்டங்களையும், மக்கள் விரோத நடவடிக்கைகளையம் பட்டியலிட்டார். மக்களை சிந்திக்க விடாமல், சிந்தனையை மழுங்கடிக்கும் ஊடகங்களை  “கேடு கெட்ட ஊடகங்கள்” எனச் சாடினார். “பாஜக பேசுவது தேச பக்தி…செய்வது தேச துரோகம்” என்பதை தோழர்கள் பகிரங்கப் படுத்தினர்.

ஊழலில் ஊறி ஊரெங்கும் நாறி… மக்களை முட்டாள்களாக்கும் இந்த கட்டமைப்பை தூக்கி  எறிய உத்வேகம் கொடுத்தனர். இந்த நாற்றமடிக்கும் கட்டமைப்பில் ஒரு நல்லவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்க நம்மை நிர்பந்திப்பது…. அழுகிய மீன் கூடையில் நல்ல மீனைத் தேடும் முட்டாள்தனம் எனப் புரிய வைத்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
உசிலம்பட்டி.

____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க