privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்விருதாச்சலம்: பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யவைத்த மக்கள் அதிகாரம் !

விருதாச்சலம்: பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யவைத்த மக்கள் அதிகாரம் !

-

மிழகம் முழுக்க டெங்குவால் பலர் இறந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் கூட எடப்பாடி அரசும், நகராட்சியும் பொது சுகாதாரத்தைப் பற்றி எள்ளளவும் அக்கறை காட்டாமல் இருந்து வருகிறது.

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மழையின் காரணமாக பேருந்துநிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. பேருந்துநிலையத்துக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் மூக்கை பொத்திக் கொண்டு கடந்து செல்லும் நிலையே இருந்தது. இதனை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்ற வகையில், கடந்த 3.11.2017 அன்று விருத்தாச்சலம் பேருந்துநிலைத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக அங்குள்ள வணிகர்களை அணிதிரட்டி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் இணைந்தனர். பின்னர் மக்களின் போராட்டமானது சாலை மறியலாக மாறியது. அதன் பின்னர் போலீசு வந்து பேச்சு வார்த்தை நடத்தியது.

“உடனடியாக பேருந்துநிலையத்தில் உள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் சுத்தம் செய்யும் வரை போராட்டம் தொடரும். என தோழர்களும் பொதுமக்களும் உறுதியாக கூறினர்.

அதன்பின்  போலீஸ் தரப்பில் “5 நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள், உடனடியாக சுத்தம் செய்து தருகிறோம்” என உறுதிமொழி அளித்தார்கள். பின்னர் பேருந்து நிலையத்தைச் சுற்றி முழக்கமிட்டு பேரணியாக சென்ற போது அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் பயணிகள் நமது போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர்.

பின் நகராட்சி ஊழியர்கள் வந்து கொசு மருந்து அடிப்பது, குப்பைக் கழிவுகளை அகற்றுவது மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிப்பது என சுகாதாரப்பணிகளை செய்தனர்.

மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற வக்கில்லாத இந்த அரசை மக்கள் போராட்டங்களே பணியவைக்கின்றன. உங்கள் ஊரில், உங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வு போராட்டங்களே!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க