அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா? தீர்ப்பு கூறுவது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் 02.12.2017 அன்று சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் வீடியோ…
தோழர் மருதையன் உரையின் சுருக்கம்:
நவ 26, 1957 -ல் பெரியார் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் நடத்தினார். அரசியல் சட்டம் 25, 26 பிரிவு சாதி அதிகாரத்தையும், சாதிக்கான உரிமையையும் நியாயப்படுத்துகிறது என்று கூறி சட்ட எரிப்பு போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கானோரை கைது செய்து ரிமாண்டு செய்தது அரசு.
அதில் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் பேசிய அதிகாரி ஒருவர், “தெரியாமல் செய்துவிட்டேன், செய்தது தவறு” என எழுதிக் கொடு. உன்னை விட்டுவிடுகிறேன் எனக் கூறியிருக்கிறார். ஆனால் அச்சிறுவனோ தான் செய்தது நியாயம் என்று கூறினார். “என்னை வெளியே விட்டாலும் மீண்டும் கொளுத்துவேன்” என்று கூறினார். அப்போராட்டத்தில் உயிரிழப்பு மொத்தம் 20 பேர்.
சாதாரண மக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். சாதி என்னும் இழிவை நியாயப்படுத்தும் அரசியல் சாசன சட்டத்தை கொளுத்தினால் போதும் என்று தெரிந்து வைத்திருந்தனர்.
இன்று கேரளாவில் யதுகிருஷ்ணா என்றொரு தலித் இளைஞர் அர்ச்சகர் பயிற்சி பெற்று அங்கு அர்ச்சகர் ஆகியிருக்கிறார். அவருக்கு பயிற்சியளித்த குரு, “யதுகிருஷ்ணா 10 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்கிறார். இப்போது அவர் எல்லாவிதங்களிலும் ஒரு பார்ப்பனர்” என்று கூறியிருக்கிறார்.
ஒரு சூத்திரன் பார்ப்பனியத்தைக் கடைபிடித்து அர்ச்சகர் ஆவதை ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. அக்காரணத்தால் தான் ஆர்.எஸ்.எஸ். இந்த நியமனத்தை வரவேற்கிறது. அது தான் இப்போது கேரளாவில் நடந்திருப்பது. இது தான் ஒழிக்கப்படவேண்டும். பெரியார் ஜாதியை அழிக்க விரும்பினார். ஆர்.எஸ்.எஸ். கும்பல் சாதியை நிலைநாட்ட விரும்புகிறது.
அரசுக்கு கோவில் மீது உரிமை கூடாது என்கிறது ஆர்.எஸ்.எஸ். இந்து அறநிலையத் துறையை மூடத் திட்டம் தீட்டுகிறது ஆர்.எஸ்.எஸ். கோவில்களை மீட்போம் என்ற பெயரில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது. சுப்பிரமணிய சாமி புள்ளி விவரங்களோடு பேசுகிறார். தமிழகத்தில் கோவில்களுக்குச் சொந்தமாக கிராமப்புறங்களில் 4.7 இலட்சம் ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. 2.6 கோடி சதுர அடி நிலம் இருக்கிறது. நகர்ப்புறங்களில், 20 கோடி ச.அடி. இடம் இருக்கிறது. இதனை மொத்தமாக சுருட்டிக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பல் விழைகிறது. வெறும் விநாயகர் ஊர்வலத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாடு முழுக்க இவ்வளவு பெரிய கலவரங்களைச் செய்தவர்கள், கோவில்களைக் கைப்பற்றினால் என்ன நடக்கும்?
சி.பி. இராமசாமி ஐயர் கொடுத்த அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு கோவில்களின் விக்கிரகங்கள், நகைகள், நிலங்கள் பிராமணர்களால் திருடப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் இந்து அறநிலையத் துறை வசம் கோவில்கள் ஒப்படைக்கப்பட்டன.
கடந்த 1993 -ம் ஆண்டு மே மாதம், ம.க.இ.க கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தியது. மே -1 அன்று சுமார் 1000 பேரை தடுத்து கைது செய்து ரிமாண்ட் செய்தது. மே 24 அன்று பெண்கள் உட்பட தோழர்கள் கருவறைக்கு உள்ளே நுழைந்து பெரியார் அம்பேதக்ர் படம் வைத்தும் போட்டோ எடுத்தனர். அப்போது ம.க.இ.க. -வினர் நீதிமன்றத்தில் உள்ளே சென்றோம் எனக் கூறினர். ஆனால் சாட்சி சொல்ல வந்த பார்ப்பனர்கள் யாரும் அவர்களைப் பார்க்கவில்லை எனக் கூறிவிட்டுச் சென்றனர்.
இவ்வழக்கு வெற்றி எனப் பேசுகிறார்கள். அது நடைபெறவில்லை. அரசியல் சட்டம் அப்படி ஒளிரவில்லை. தற்போது அர்ச்சகர் வழக்குத் தீர்ப்பு, யானையை பானைக்குள் அடைக்கத் தடையில்லை என்பதைப் போன்றதுதான்.
அன்று நூற்றுக்கணக்கான பாளையக்காரர்கள், குறுநில மன்னர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்தது போல் இன்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் செய்கின்றன. சாதி உரிமைகளை அரசியல் சட்டம் 25, 26 பாதுகாக்கிறது. வெறும் இந்துத்துவம் மட்டும் அல்ல அனைத்தும் மதங்களிலும் நடக்கும் ஒடுக்குமுறைக்கு துணை நிற்கிறது.
அம்பேத்கர் இந்த அரசியல் சட்டத்தை கொளுத்துவேன் என்றார். பெரியார் 1957 -லேயே கொளுத்திவிட்டார். இது கொளுத்தப்பட வேண்டியது. இப்பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்க்க முடியாது. பிரச்சினையை தெருவில் தான் தீர்க்கவேண்டும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று கடவுள் மறுப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது /// லாஜிக் எங்கயோ இடிக்குதே
Would you please explain a little ?
இதே இடிப்பு எனக்கும் இடித்தது மேனன், பின்பு சில தோழர்கள் கூறினார்கள் முதலில் இந்த உரிமைகளை பறித்தெடுப்பது என்பது ஒரு பின்னைய மதமற்ற ஒரு சமூகத்துக்க்கான prerequisite.
நான் ஏற்று கொண்டுவிட்டேன். உங்க லாஜிக் எப்படி?
மதமற்ற சமூகம் என்பதை மட்டும் லட்சியமாக கொண்டு பெரியார் போன்றவர்கள் இதை போராட்டமாக எடுக்கவில்லை.
பெரியார் மிகத்தெளிவாக கூறுகிறார்
//கடவுளுக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட தகறாரும் இல்லை.கடவுளின் பெயரால் நடக்கும் மூடத்தனங்கள் ஏற்றத்தாழ்வுகள் பிரிவினைவாதங்கள் இவைகளே நான் எதிர்ப்பவை.
இவை இல்லாத கடவுளை மதத்தை காட்டு நான் ஏற்கிறேன்//
என் கிறார்.
//நீ ஒன்றை கடவுளாக நம்புகிறாயா…நம்பு..நெறுங்கு வணங்கு .
க்டவுளின் அருகில் வர உனக்குத்தகுதி இல்லை என்று துரத்துகிறானா..
இதோ நான் வருகிறேன்.
கடவுள் இருக்கிறானா இல்லையா நம்பலாமா நம்பக்கூடாதா என்பது வேறு
கடவுளைவிட ஒரு மனிதனின் தன்மானமும் சுயமரியாதையுமே எனக்கு மிகப்பெரிது//
இதுதான் பெரியார்.
இதற்க்குத்தான் அவர் வாழ்நாளெல்லாம் உழைத்தார்.சாகும்வரை தள்ளாடி தள்ளாடி சுற்றித்தீர்த்தார்.
மக்களை, அவர்களின் சுயமரியாதையை மட்டுமே அக்கறையாய் கொண்டு அலைந்த அந்த மாபெரும் மனிதரை
வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும் சுறுக்கி அடைத்தது பார்பணியம்.
அதற்க்கு இரையானது பெரியாரின் இளவல்கள் என்று சொல்லித்திரிகிற கூட்டம்.
அர்ச்சகராய் ஆவதை பெரியார் ஆதரிக்கவில்லை.அர்ச்சனையை சொல்லி மனிதனை தரம் பிரிப்பதையே அவர் எதிர்த்தார்.
“அவன் என்னடா உன்னை நிராகரிக்க…போடா நீ ..நீ நம்பும் கடவுளை வணங்க..
தோழர் செங்கொடி சொன்னதுபோல் காவிகள் பெரியார் என்னும் வானத்தை வெறும் ‘இறைமறுப்பு’ என்னும் கிண்ணத்தில் அடைக்கும் வேலை செய்கின்றனர். அதாவது ஏற்கனவே ஊட்டிய மதவெறியை வைத்தே அதை தக்க வைக்கும் தந்திரம். ஆனால் ஒரு சின்ன பிரச்சினை,
மனித குல வரலாறு என்பது பெரியாரிசத்தொடு நிட்கபோவதில்லை, மனிதகுலம் நீங்கள் குதிரை ஓட்டும் மதம் என்னும் குண்டுசட்டியை விட கற்பனைகெட்டாத சாத்தியங்களை கொண்டது (இதற்கு மதம் ஏன் ஒழிக்கப்பட வேண்டும் அல்லது தானாக மறையும் என்பது தனி கட்டுரை)
அடிப்படையில் வருணாசிரம பாகுபாட்தனாலே இறைமறுத்தாலும், நீங்கள் கூறுவதுபோல் ‘சுயமரியாதை’ மட்டும் குறிக்கோளாக கொண்டு அவர் சுற்றவில்லை. இதற்குதான் கேப்ல கடைய விரிக்கிரதுக்கு ஏதுவா வசதியான ‘போடா நீ ..நீ நம்பும் கடவுளை வணங்கு’ போன்ற கூற்றுகளை அள்ளி தெளிக்கிறீர் அதேநேரம் ‘சுயமரியாதையின்’ அப்பனான பகுத்தறிவு பற்றி ‘மறந்து’ விட்டீர்.
ஆம் பகுத்தறிவில்லாமல் எப்படி சுயமரியாதை வரும்? அப்படி வந்தால் அது உண்மையான சுயமரியதையாக இருக்குமா? பகுத்தறிவென்றால் அனைத்தையும் ஆராய்ந்து ஆதாரங்கள் மூலம் ஆப்ஜெக்டிவ் அக நிருபிக்க கூடியவைகலையே ஏற்று கொள்வது. மதம் வெறும் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டது. அதனால பாயி என்னதான் முக்கினாலும் பெரியாரிசதில் மதமறுப்பு என்பது அடிப்படை அங்கம். அது பெரியாரே அப்போது இந்து மத அயோக்கியத்தனம் பொறுக்க முடியாமல் புத்தத்துக்கு போ இசுலதுக்கு போ என கூறியிருந்தாலும். பெரியார் தான் நமக்கு தனது ‘இரண்டு வரிகளை’ வேத வசனங்களாக பின்பற்ற சொல்லவில்லையே.
//அனைத்து சாதியினரும் அர்ச்சகராக இறை மறுப்பாளர்களுக்கு என்ன அக்கறை//
இதுதான் கேள்வி..கேள்வி நியாயம்..
அதற்க்கான பதில், கடவுள் மறுப்பாளர்கள், இந்த விசயத்தில் மதம் சார்ந்து போராடவில்லை..மக்கள் நலன் சார்ந்து போராடுகிறார்கள்.
இது பெரியார் வகுத்து கொடுத்ததுதான்…அல்லது பெரியாரால் பிரபலமானது.
வைக்கம் போராட்டம்…. தன்னை கோவிலுக்குள் அனுமதிக்க பெரியார் மக்களை திரட்டி போகவில்லை.அவன் நம்பும் வணங்கும் கடவுளை தன்மானத்தோடு எவனுக்கும் அடிமையாகாமல் போய் வணங்கி வர வேண்டும் என்றே பெரியார் போராடினார்.
இந்த கேள்விக்கான பதில் இவ்வளவுதான்.
இங்கே வந்து பகுத்தறிவு, மத மறுப்பு ,இரண்டு வரி வேதவசனம்…
இதெல்லாம் தேவையில்லாத அனாவசிய வார்த்தைகள்.
இதைப்பற்றிய கட்டுரைகள் வரட்டும்….பேசுவோம்.
விவாதம் என்பது தலைப்பு சார்ந்து இருந்தால்தான் அவை கூர்மை பெறும்.
சம்மந்தமில்லாமல் ஜெயேந்திரை சொன்னால் அரபு நாடு என்பது..
அர்ச்சகர் விவகாரத்தில் மத மறுப்பு என்று இழுப்பது…
உங்களுக்கு இருக்கும் விசாலமான அறிவை மெச்சுகிறோம்.அதை சந்தர்ப்பம் வரும்போது
வந்து தீறந்து அருவியாய கொட்டுங்கள்.
பெரியார் கடவுள் மறுப்பு ஒன்றையே வேலையாக கொண்டு இயங்கவில்லை.அது அவருக்கு தேவையும் இல்லை. அவர் கவலையெல்லாம் மக்கள்…மக்கள்….மக்கள்…
அந்த மக்களுக்காக அந்த மக்களின் விடிவுக்காக அவர்களின் தன்மானத்திற்க்காக எதையும் செய்வேன் என்ற வீரியத்தோடுதான் காலமெல்லாம் சுற்றித்திரிந்தார்.
இஸ்லாத்தில் சேர்வதால் விடியல் கிட்டுமா பெளத்தத்தில் சேர்ந்தால் விடுதலை பெறுவாயா …
போய்விடு …
இஸ்லாம் உண்மையானதா பெளத்தம் உண்மையானதா என்ற ஆராய்சியெல்லாம் அவர் நிகழ்த்தவில்லை.மனிதன் மனிதனாக நடத்தப்படவேண்டும்.அவ்வளவுதான்.
கடவுள் என்பது அவர் கவனத்திலேயே இல்லை.மக்கள் நலன் மட்டுமே அவரை வியாபித்திருந்தது.
பெண்கள் மணமுடிக்க வேண்டாம் என்றார்…கூந்தலை கத்தரித்து விடுங்கள் என்றார்..
அவரே ஒரு பெண்ணை மணமுடித்தார்.
தனக்குத்தானே முரண்பட்டதாக இருக்கிறதா…எதிரிகளின் ஆயுதத்தை அவரே கூர் தீட்டி கொடுத்ததுபோல் இருக்கிறதா…
இதற்க்கெல்லாம் அவர் கவலைப்படவில்லை.அனைத்திற்க்கு பின்னாலும் இருந்த மக்களின் நலன் சார்ந்த அக்கறையே..
அவர் கூட இருந்தவர்களே அதிகாரபசியில் அவரை கொச்சைப்படுத்தி போகும்போதும் “போங்கடா ” என்று இருந்தவர்.
இன்றைக்கு வரைக்கும் அவரை எதிர்கொள்ள திராணியற்ற காவி வெறிக்கூட்டம் அவரின் திருமணத்தையே பேசி அவரை அசிங்கப்படுத்துவதாக நினைத்து தான் அசிங்கப்படுதுகள்.
இப்படி பெரியாரின் பல வார்த்தைகளை நேரடி பொருளில் விளங்க முடியாது.அதற்க்கு பின் உள்ள நோக்கமே முக்கியம்..
நாங்கள் புரிந்து கொண்ட பெரியார் இவர்தான்.அவர்க்கு கடவுள் இருப்பது பற்றியோ இல்லாதது பற்றியோ எந்த அக்கறையும் இல்லை.மனிதன் இருக்க வேண்டும் ….தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் மனிதன் இருக்க வேண்டும்.
இந்த பெரியார்தான் என் பெரியார்.அவர் ஒருபோதும் என் கடவுள் நம்பிக்கையை நிந்திக்க மாட்டார்.
அவரின் மானசீக பேரன் நான்.
இதைத்தவிர அவரை போற்ற எனக்கு எந்த உள்நோக்கமுமில்லை.பிள்ளையாரை உடைத்தார் என்பதற்க்காக அவரை போற்றுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.அந்த செயலை நான் ஆதரிக்கவேஇல்லை. அவரின் சமூக கோபத்தின் மற்றொரு பிரதிபலிப்பே பிள்ளையார் சிலை உடைப்பு.
கடவுள் இல்லை என்று சொன்னதைப்போலவே அந்த சிலை உடைப்பையும் எடுத்துக்கொள்கிறேன்
அப்போ என்ன சொல்ல வரிங்க, பெரியார் இசுலாம் பவுத்தம் உண்மையா என ஆராய்ச்சி பன்ன்னவில்லை, அதனால மதம் ஓகே என்றா? அறிவு, ஏற்கனவே பெரியார் ‘பகுத்தறிவு பகலவன்’ என அழைக்க படுவதற்கு காரணம் இருக்கிறது, பகுத்தறிவு என்பதே அடிப்படையில் மதமறுப்பு என்பதை 3.1 இறுதி பகுதில் விளக்கியாச்சு, மேலும் ஏன் அரைத்தத மாவை அரைக்கிரீர்??
//இதெல்லாம் தேவையில்லாத அனாவசிய வார்த்தைகள்.
இதைப்பற்றிய கட்டுரைகள் வரட்டும்….பேசுவோம்.
விவாதம் என்பது தலைப்பு சார்ந்து இருந்தால்தான் அவை கூர்மை பெறும்.
சம்மந்தமில்லாமல் ஜெயேந்திரை சொன்னால் அரபு நாடு என்பது..
அர்ச்சகர் விவகாரத்தில் மத மறுப்பு என்று இழுப்பது…//
என்ன தேவைல்லியாத வார்த்தைகள்? இந்த கட்டுரைகளியே உங்கள் மத ப்ரோமோசன் பற்றி விவாதிக்க தேவையான பிடிகளை நீங்க தெரிந்தோ தெரியாமலோ கொடுத்து விட்டர்கள், இப்போது வேறு கட்டுரைகள் வரட்டும் என விலகி ஓடுவது ஏன் ?? விவாதம் தலைப்பு சார்ந்து இருக்கத்தான் நீங்க விடுறீங்க இல்லையே ??எந்த இந்துத்வா பதிவு போட்டாலும் வந்து தொடங்க வேண்டியது, நாம கேள்வி கேட்டவுடன் சம்பதமில்லை மொட்டையாக கேக்கிறார் கொட்டையக கேக்கிறார் என புலம்ப வேண்டியது. இப்போதே அருவியாய் கூட முடிவு செய்துவிட்டேன். முடிந்தால் ஏற்றத்தாழ்வு இறைவன் எம்மை சோதிக்க தந்தது என அடிப்படையில் நம்பும் நீங்கள் இந்துத்வா பதிவுகில் வந்து விமரிசித்து சமூக நலனுக்கு என்ன புடுங்க போரிங்கோ? இது தான் சாமி ஏன் கேள்வி. (விஜேந்திரன் பதிவில் இறுதியில் ‘மதம்’ படித்து பெரியார் பற்றிய மொண்ணை கேள்விக்காக அட்வோகேட் மற்றும் பேக்குடன் கூட்டு சேர்ந்தது பற்றி இல்லை இந்த கேள்வி. சத்தியமாக)
இது என்னவகை வாதம் என்பதை சகோதரர்களின் பார்வைக்கே விட்டு விடுகிறேன்…
ஏதோ ஒரு வெறுப்பிற்க்கு ஆளான மனநிலையே தெரிகிறது.எவனோ ஒரு துளுக்கனால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டு, கண்ணில் மாட்டுகிற எல்லா துளுக்கனையும் வச்சி செய்கிற மனநிலையில் அலைகிறார் போல.. பாவம்
நண்பரே எனக்கு எந்த இஸ்லாமிய அடையாளம் கொண்ட மனிதரும் எந்த பாதிப்பும் செய்யவில்லை. இஸ்லாமிய அடையாளம் என்ற ஒன்றுக்காகவே ‘சட்டரீதியாக’ அம்மக்களை பாகிஸ்தான் போக சொன்ன குமாரை விமர்சித்தவன் நான். துளுக்கன் அது இது ன்னு ஏன் பேசுறிங்க? என் பிரச்சினைஎல்லாம் மதநம்பிக்கை எப்படி யதார்த்த மனிதசமூக வளர்ச்சிக்கு தடை என்பது பற்றியே –
பயம்(இறப்பின்பின்னரானசூனியம்)-மத பதில்-சொக்கம் நரகம் மறுபிறப்பு கன்னிகள் கிழவிகள்
அறியாமை(பிரபஞ்ச,புவி,மனித தோற்றம்..etc)-மத பதில்-புராணங்கள்,கட்டுக்கதைகள்
சமூகஏற்றத்தாழ்வு(சாதி,பொருளாதாரம்,அந்தஸ்து..etc)-மத பதில்-‘இறைவனின் பரீட்சை, முன்வினை பயன்..
இவ்வாறு அனைத்து மத நம்பிக்கையும் தான் சாடுகிறேன், இதில் யாரையும் குறிப்பிட்டு செய்ய எனக்கு எந்த குரோதமும் இல்லை நண்பரே. என் குரோதமெல்லாம் நீங்கள் பெரியார் ‘சுயமரியாதை’ மட்டும் போதித்தார் மதநம்பிக்கையை பற்றி பெரியார் குறைகூறவில்லை (அதே பெரியாரின் பகுத்தறிவு கொள்கை மதநம்பிக்கையை கூட்டிகுப்பை தொட்டியில் போடுவது என விளக்கியும்) என உங்கள் மதநம்பிக்கையை பெரியாரூடாக வலுப்படுத்த முயட்சிப்பதிலேயே. தனிப்பட முறையில் இஸ்லாமியர்கள் மெது எனக்கு எந்த குரோதமும் இல்லை நண்பரே.
பி-கு
இந்து மத பெற்றோருக்கு பிறந்தாலும், சில இசுலாமிய நண்பர்கள் நான் அவர்களோடு மாட்டிறைச்சி உண்பது, கோவிலுக்கு போகாதது பற்றி வியப்பில் பார்ப்பார்கள். அவர்களுக்கு கூட ஏதோ ஒரு மதமோ எதையாவது பின்பற்றாவிடில் ஒரு வியப்புதான். மதங்களின் பிடி அப்படி.
மீண்டும் சொல்றேன் சின்னா, அந்த பதிவின் விவாதத்தில் நான் சொன்ன கருத்துகளை புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள முயற்சிக்காமல் இங்கே தொடர்பின்றி பேசிகிட்டு இருக்கீங்க சின்னா.. உங்களுக்கு மீண்டும் சவால் விடறேன்… மீண்டும் அந்த பதிவுக்கு வந்து அந்த விசய்த்த்தை ஓப்பன் செய்து விவாதிக்க நீங்க துப்புடன் இருகிண்றீக்ளா ?
//‘சட்டரீதியாக’ அம்மக்களை பாகிஸ்தான் போக சொன்ன குமாரை விமர்சித்தவன் நான்.//
குமார் என்னை வெறுமனே இசுலாமிய வெருப்பாலன் என சந்தேகிக்கும் மீரானுக்கு அப்படி இல்லை இசுலாமிய அடையாளம் என்பது மக்கள் நலன் மட்டுமே அக்கறை கொண்ட எனக்கு தடையில்லை என விளக்கவே உங்களை விமர்சித்ததை சொன்னேன். விமர்சிப்பதற்கும் வாதம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு, அந்த பதிவில் கூட உங்கள் ‘சரத்து மற்றும் சட்ட’ மேட்கொள்களுக்கு நான் எந்த பதில் வாதமும் வைக்க வில்லை. எதோ என் உள்ள கிடக்கையான குமாரின் ‘சட்டரீதியான பாகிஸ்தான் அனுப்பும்’ மனநிலை பற்றி சாடினேன். அவ்வளவுதான். மட்ட்றபடி உங்க சட்ட அறிவுப்படி எந்த சரத்து மூலமாவேனும் அந்த மக்களை பாகிஸ்தான் போக சொல்லுங்கள். நான் சவால் விடுக்க போவதில்லை.
சின்னாவின் தரம் தாழ்ந்த எழுத்துகளை வினவு ஏன் வெளியிடவேண்டும்?
/முடிந்தால் ஏற்றத்தாழ்வு இறைவன் எம்மை சோதிக்க தந்தது என அடிப்படையில் நம்பும் நீங்கள் இந்துத்வா பதிவுகில் வந்து விமரிசித்து சமூக நலனுக்கு என்ன “”””””புடுங்க போரிங்கோ?”””””””””//
தனிப்பட்ட வெறுப்பின் காரணத்தால் சிக்கி சீரழிந்து “சின்னா”பின்னமாகி மனநலன் பாதிக்கப்பட்டு
கண்ணில் கண்டவரையெல்லாம் பாய்ந்து பிராண்டும் நிலைக்கு ஆளாகி இருக்கிற சின்னாவை நினைத்து அனுதாபப்ப்டுவோம் குமார்.
இவர் விவாதிக்கும் தகுதியை இழந்துவிட்டவர்.இவரைப்போலவே பலரை நான் இந்த வினவு தளத்திலேயே பார்த்திருக்கிறேன்.வலிப்பு வந்தவனை போல கத்திவிட்டு பிறகு வந்த இடம் தெரியாமல் மறைந்திருக்கிறார்கள்.
வெறுப்பால் நிதானமிழந்த அவரின் நிலை அவரின் எழுத்துப்பிழையிலும் தெரிகிறது
வினவு பின்னூட்ட கொள்கைபடி கருத்தை சற்று கோபமாக தான் சொன்னேன், உங்கள் பின்னூட்டத்தில் வசதிக்கு என்னவோ ‘ம..’ என்ற வார்த்தையை சேர்த்து உள்ளீர்கள், அது வினவால் கத்தரிக்கபட்டுள்ளது. எனது பின்னூட்டத்தில் அந்த வார்த்தையை நான் போடவும் இல்லை, வினவு கத்தரிக்கவும் இல்லை.
சின்னா , இரண்டு பக்கமும் டபுள் கொட்டேசன் போட்டு “”””””புடுங்க போரிங்கோ?””””””””” என்று நான் சொன்னால் அதுக்கு பேரு ‘ம..’ என்ற வார்த்தையை நான் சேர்த்து அதனை வினவு கத்தரிக்கபட்டுள்ளது என்று நீங்க பதில் அளித்தால் , அப்படி நீங்க நினைத்தால் கண்டிப்பாக நீங்க ஒரு நல்ல மன நல மருத்துவரை தான் பார்க்கவேண்டும் …. எதற்கு என்றால் உங்க சந்தேக புத்திக்கு… ஆனாலும் அதற்கு மருத்துவரிடம் நிவர்த்தி இருக்கா என்று தெரியவில்லை… சொல்யுசனை உங்களிடம் இருந்து தான் நிங்க தேடனும் தோழர்…..
சின்னா அவர்கள் ஹிந்துத்துவாவையும் ,இஸ்லாமையும் சமன் செய்து பார்க்க துடிகின்றார்….
//முடிந்தால் ஏற்றத்தாழ்வு இறைவன் எம்மை சோதிக்க தந்தது என அடிப்படையில் நம்பும் நீங்கள் இந்துத்வா பதிவுகில் வந்து விமரிசித்து சமூக நலனுக்கு என்ன புடுங்க போரிங்கோ?//
முதலில் விஜயேந்திரன் பதிவில் ஒப்பீட்டை தொடங்கியதே மீரான், அந்த விவாத தொடர்ச்சியாக இருப்புகொடாமல் இங்கும் வந்து பெரியாரை ‘சுயமரியாதையாளர்’ மட்டும் தான் என கூறி (காவிகள் இறைமறுப்பாளர் மட்டும் என்பது போல்) என மதநம்பிக்கைகளுக்கு எதிரான பெரியாரின் பகுத்தறிவு பற்றி தவிர்த்து விட்டு பேசினார். அதற்கு உரிய கேள்வி கேட்டால் உடனே ஹிந்துதுவாவையும் இஸ்லாமையும் ஒப்பீடு செய்ய துடிக்கிறார் என்பதா? நீங்கள் தான் கூறுங்களேன் – ‘ஏற்றதாழ்வு இறைவனின் பரீட்சை’என்பதற்கும் ‘ஏற்றத்தாழ்வு முன்பிறவி வினை, பார்ப்பன எச்சை இலையில் புரண்டால் அடுத்த பிறவி ஆகாஓகோ’ என ஏமாற்றுவதற்கும் சமன் இல்லையா? இதை சிற்றறிஞர் சின்னா தான் சமனாக்கி காட்டவேண்டுமா உங்களுக்கு? இப்படி ஒத்து போபவர்கள் பெரியாரை ‘மத மறுப்பாளர்’ இல்லை என காட்ட முயல்வது எதற்கு?? இதுதாங்க என் பிரச்சினையே, வேறு ஒன்றுக்கும் நான் துடிக்கவில்லை.
சின்னா,
பைத்தியக்காரத்தனமாய் பேசிக்கொண்டு அதை நியாயப்படுத்த பொய்யை கூறி நிலை நாட்டத்துடிப்பது பக்கா அயோக்கியத்தனம்.
ஜெயேந்திரன் தொடர்பான விவாதத்தில் நானே கருத்து பதிந்தேன்….
பல முறை அதை நான் விளக்கியும் செவிட்டுத்த்னமாய் சொன்னதையே சொல்லி வெறும் வெறுப்பு கக்கும் வாந்தியை நிறுத்துவது நல்லது.
உமாசங்கரை நினைவிருக்கிறதா….
உமக்கு பிடித்து தொங்குவதற்க்கு இத்த கயிறை கொடுத்தவர் அவர்தான்.
அந்த மனிதரிடம் அவர் சொன்ன பொய்யிக்கு ஆதாரம் கேட்டதோடு, தமிழ்தாய் வாழ்த்து இஸ்லாமிய கொள்கைக்கு எந்த வகையிலும் முரண்பட்டதாகவும் இல்லை.எழுந்து நிற்பதால் அது இஸ்லாத்திற்க்கு முரணானதும் இல்லை.
என்று முடித்து விட்டேன்.
பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டவர் பிறகு சுருட்டிக்கொண்டு போய்விட்டார்.
பொய் மூட்டைக்கு முதலில் முட்டு கொடுத்தவர் “தமிழர் தந்தை” பெரியசாமி.
அவர் முஸ்லிம்களை காட்டுமிராண்டிகள் என்றார்.
அதற்க்கும் நான் பதில் கொடுத்தேன்.தமிழ் தேசியவாதிகளின் நடைமுறையிலிருந்தேதான் என் பதில் இருந்ததே அன்றி மதரீதியாக இல்லை.
இதற்க்கு பிறகுதான் அட்வகேட் வாய் திறக்கிறார்.
போன பதிவின் தொடர்ச்சி….
அட்வகேட் என்ன சொல்கிறார்….”அவர் மதக்காரனாக இருந்தால் இப்படி பேச மாட்டார்
இந்து மதம் என்பதால் பேசுகிறார்”
என் கிறார்.
இப்படி சொன்னபிறகு என் மதக்கொள்கையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.ஜேயேந்திரனின் மதக்கொள்கையே மொழியில் உயர்வு தாழ்வு காண்கிறது.
மனித பிறப்பில் உயர்வு தாழ்வு காண்கிறது.தமிழ் அவருக்கு நீச மொழி.
ஆகவே அவரின் ஆணவம் அகம்பாவம் வெளிப்படுகிறது.
இவ்வளவுக்கு பிறகே என் பதில் மதத்தை அடிப்படையாய் கொண்டிருந்தது.
ஜேயேந்திரன் என்ற தனிமனிதனின் ஒரு செயலை மத ரீதியாய் மடை மாற்றியது யார்?
நானா….சின்ன புத்தி சின்னாவே மீண்டும் ஒரு முறை நம் விவாதத்தை முதலிலிருந்து வாசித்தால் தெரியும்.
நான் பலமுறை சொன்னதை மீண்டும் சொல்கிறேன்
ஜேயேந்திரன் பற்றிய விவாதத்தில் கருத்து சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை.
உமாசங்கரின் அந்த பொய் மட்டும் வரவில்லை என்றால் இவ்வளவு நேரம் ஒரு கருத்து குருடிடம் நான் ஆவியை தொலைக்க அவசியமே வந்திருக்காது.
பொருளாதார ஏற்றத்தாழ்விற்க்கும் மொழி பற்றிய விவாதத்திற்க்கும் என்னய்யா சம்மந்தம்?
ஏழை பணக்காரன் என்ற வர்க்கம் இருக்கும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை.
உலக வாழ்வின் செயல்களுக்கு ஏற்ப இறந்த பின் இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பதுதான் என் நம்பிக்கை.
அதனால்தானைய்யா நான் முஸ்லிம்.அது இல்லாத்தால் நீங்கள் கம்யூனிஸ்ட் அல்லது நாத்திகர்.
இதில் என்ன பெரிய அரிய கண்டு பிடிப்பை நீர் கண்டுபிடித்துவிட்டீர்..
உலகம் முழுக்க பல்வேறு நம்பிக்கை சித்தாந்தம் நடமுறையை கொண்டுதான் நாம் வாழுகிறோம்.
ஜேயேந்திரனின் செயலை அவர் இந்து என்பதாலா நாம் விமர்சித்தோம்.இந்துக்களாக இருக்கிற பல தமிழரும் கூட விமர்சித்தார்களே
என் மதத்தில் இருக்கிற சடங்குகள் நம்பிக்கைகள் ஏதேனும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா அநீதியை உண்டாக்குகிறதா
குறிப்பிட்டு கூறுங்கள்… விவாதிப்போம்.
இந்து என்பதற்க்காக ஒரு மனிதன் அவமதிக்கபட்டால் எனக்கு அதில் எந்த மகிழ்ச்சியும் இல்லை.இந்து மதம் விமர்சிக்கப்படுகிறது என்பதற்க்காக நான் வந்து ஆஜராகவும் இல்லை.
என்னை மத ரீதியாய் காயப்படுத்தும் வேலையை கடுமையாய் செய்தது பெரியசாமி.
ஆரம்பித்து வைத்தது உமாசங்கர்.கச்சிதமாய் திருப்பியது அட்வகேட்
பைத்தியக்காரத்த்னமாய் பல நட் களாக தொங்கிக்கொண்டு திரிவது சின்ன மதியாளன் சின்னா
உங்கள் விளக்கத்தை எல்லாம் ஏற்கும் அளவுக்கு சின்னாவின் மனநிலை இல்லை மீரான் பாய்…
உங்கள் 3.1.2.3.1.1 மற்றும் 3.1.2.3.1.1.1 இற்கு,
முதலில் நான் உங்கள் மீது வைத்த குற்றச்சாட்டு முதல் அதன் சப்போர்ட் வாதங்கள் எல்லாமே உங்கள் வாயால் மற்றும் உங்கள் பிரிய மதநம்பிக்கையே கூறும் கூற்றுக்களே, இதில் நானாக எந்த பொய்யும் உரைக்க அவசியம் இல்லை.
விஜயேந்திரன் பதிவில் உமாசங்கர் எடுத்து கொடுத்தார் பெரியசாமி விளக்கு பிடித்தார் சரி நான் பிடித்து கொண்டு தொங்குவது உமாசங்கரின் கயிற்றை (இசுலாமிய தமிழ் விரோத அறிவுரைகள்) அல்ல, அட்வோகேட் கேட்டார் –
“அவர் மதக்காரனாக இருந்தால் இப்படி பேச மாட்டார்
இந்து மதம் என்பதால் பேசுகிறார்” அதற்கு நீங்கள் கூறியது என்ன?? –
“என் மதக்காரர் ஒருபோதும் மக்களை மேலோன் என்றும் கீழோன் என்றும் பிரிக்க மாட்டான்” என்று மொழிக்கு சம்பந்தமில்லாத அற்புதசமத்துவம் என இசுலாத்தை தூக்கி பிடித்தீர்கள், அதற்கு ‘சவூதி’ என மொட்டையாகவும் பின்பு தாங்கள் தனி வெறுப்பு என புலம்பியதால் இசுலாத்தின் பொருளாதார ஏற்றதாழ்வு மற்றும் சாதி பற்றி கேட்டவுடன் இப்போது “ஜேயேந்திரனின் மதக்கொள்கையே மொழியில் உயர்வு தாழ்வு காண்கிறததாம்’
சாமி நீங்க மத பிரச்சாரம் செய்யாவிடின் பேசாமல் ‘என் மதத்துக்காரன் தமிழை அவமதிக்க மாட்டான்’ என்னுட்டு போயிருக்கலாமே?? ஏன் தற்காத்து கொள்ள முடியாதென்று தெரிந்தும் “என் மதக்காரர் ஒருபோதும் மக்களை மேலோன் என்றும் கீழோன் என்றும் பிரிக்க மாட்டான்” என ப்ரோமோசன் பண்ணினீங்க??
இப்படி கூட நான் சொல்லாலாம் பாய் ‘உமாசங்கரின் அந்த பொய் (பொய் என்றே வைத்துகொள்வோம்) மட்டும் வரவில்லை என்றால் உங்கள் மிக சாதுரியமாக இசுலாம் உயர்ந்தது என்னும் பிரசாரத்தை கிடைக்கும் சிறு கேப்பிலும் சொருக திரிபவர்கள் என நிருபிக்க நானும் ஆவியை தொலைக்க வேண்டி வந்திராது!
//பொருளாதார ஏற்றத்தாழ்விற்க்கும் மொழி பற்றிய விவாதத்திற்க்கும் என்னய்யா சம்மந்தம்?
ஏழை பணக்காரன் என்ற வர்க்கம் இருக்கும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை.
உலக வாழ்வின் செயல்களுக்கு ஏற்ப இறந்த பின் இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பதுதான் என் நம்பிக்கை.
அதனால்தானைய்யா நான் முஸ்லிம்.அது இல்லாத்தால் நீங்கள் கம்யூனிஸ்ட் அல்லது நாத்திகர்.
இதில் என்ன பெரிய அரிய கண்டு பிடிப்பை நீர் கண்டுபிடித்துவிட்டீர்..//
பாய் நீங்க பேசாம ‘என் மதத்துக்காரன் தமிழை அவமதிக்க மாட்டான் என்னுட்டு போயிருக்கனும், பொதுவாக இஸ்லாம் மேலோன் கீழோன் என பிரிக்காதென்றால், எல்லாமும் (பொருளாதாரம், சாதி) தானே அடங்கும் ?? அதை பற்றிதானே கேள்விகளே இப்போது விடிய விடிய ஹதீஸ் விடிஞ்சப்புறம் என்னையானு கேக்கிரிங்க?
//என் மதத்தில் இருக்கிற சடங்குகள் நம்பிக்கைகள் ஏதேனும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா அநீதியை உண்டாக்குகிறதா
குறிப்பிட்டு கூறுங்கள்… விவாதிப்போம்.//
நண்பரே மக்களின் பிரச்சினைகளின் காரணங்களை மறைத்து CULPRITS களுக்கு துணை போவது மத / கடவுள் நம்பிக்கை என்பது என் நிலைப்பாடு (உதாரணம் உங்கள் ‘வாழ்க்கை பரீட்சை’ வாதம், இந்து மத கரும வினை பயன் போன்றன நானோ மக்களுக்கு உலக பொருளாதார சமூக இயங்கியல் பற்றி அறிவூடினால் தீர்வுக்கு வழி கோலும் என நம்புபவன்). அதில் உங்கள் (எந்த) மதமோ அதில் இருக்கிற சடங்குகளோ எனக்கு பிரச்சினை இல்லை , மதமே பிரச்சினை என்பது தான். அதனால் தான் நீங்கள் “என் மதக்காரர் ஒருபோதும் மக்களை மேலோன் என்றும் கீழோன் என்றும் பிரிக்க மாட்டான்” என்றதும் என்னை கேள்வி கேட்க தூண்டியது. அதற்கு உருப்படியான பதிலை வைக்காமல்
எனக்கு இஸ்லாமிய வெறுப்பு மனநலன் பாதிப்பு சின்னமதியாளன் என பட்டங்கள் அளிப்பது ஏன் ? அதற்கு குமார் ஜால்ரா வேறு.
மீரான் பாய் விவாதங்களில் சின்னாவை விட்டு விலகி இருபதே உத்தமம்….!
சின்னா நீங்க “ஒப்பீடு” செய்து இருந்தால் நான் எதுக்கு இந்த விவாதத்தில் குறுக்கே வேறென் சொல்லுங்க? நீங்க இரண்ரையும் “சமன்” செய்து தானே மீரானிடம் என்ன ….போறிங்க என்று கேள்வி கேட்கிண்றீகள்!
//அதற்கு உரிய கேள்வி கேட்டால் உடனே ஹிந்துதுவாவையும் இஸ்லாமையும் ஒப்பீடு செய்ய துடிக்கிறார் என்பதா?//
அந்த பதிவில் இஸ்லாமை பற்றி தொடர்பின்றி கேள்வி எழும் போது அதற்கு பதில் அளிக்க மீரானுக்கு தகுதி இல்லை என்றா நினகிண்றீகள்?
//முதலில் விஜயேந்திரன் பதிவில் ஒப்பீட்டை தொடங்கியதே மீரான், அந்த விவாத தொடர்ச்சியாக…. //
அடுத்ததாக பெரியாரின் என்பது ஆண்டு கால பொது வாழ்வில் அவர் சந்த்தித்த பிரச்சனைகள் அதற்கு அவர் எடுத்த கொள்கை நிலைபாடுகள் காலத்துக்கு ஏற்ப மாறிய ஒன்று தான்… உங்களுக்கு அவர் இறை மறுப்பாளராக தெரிந்தால் மீரானுக்கு சுயமரியாதை காரராக தெரிகின்றார் என்றால் அதில் ஏதும் பிழை இல்லை…ஏன் என்றால் அது தான் பெரியாரின் சிறப்பு வாய்ந்த ஆளுமை…
தமிழகத்தில் இறையுணர்வு உள்ளவர்களுக்கும் பெரியார் இன்று தேவைப்படுகின்றார் என்ற எளிய உண்மையை உணருங்க தோழர்… ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்று கூரிகிட்டு திமுக வினர் கோவிலுக்கும் போய்கிட்டு பெரியாரை தலைவராக ஏற்க்கவில்லையா? அதே போன்று பெரியார் அவர்கள் மீரானுக்கும் தேவைபடுகின்றார் என்பதனையும் உணருங்க….
எக்ஸாக்ட்லி குமார்…
கச்சிதமாய் உண்மையை பிடித்தீர்..
தீவிர இறைநம்பிக்கையாளனாகிய எனக்கு கடவுள் மறுப்பாளராக அறியப்பட்ட பெரியார் அவசியம் தேவைப்படுகிறார்.
அவர் விலை மதிப்பில்லா பொதுச்சொத்து.அவரை இகழும் நன்றி கெட்டவர்களுக்கும் அவர் தேவைப்பட்டிருக்கிறார்…தேவைப்பட்டுக்கொண்டும் இருக்கிறார்.
எவனும் அவரை தனிப்பட்டு சொந்தம் கொண்டாட முடியாது.தனக்குள் ஒளித்துக்கொள்ளவும் முடியாது.
மோகன் தாஸ் காந்திகளெல்லாம் அவர் கால் தூசுக்கு சமம்.
//நீங்க இரண்ரையும் “சமன்” செய்து தானே மீரானிடம் என்ன ….போறிங்க என்று கேள்வி கேட்கிண்றீகள்!//
““என் மதக்காரர் ஒருபோதும் மக்களை மேலோன் என்றும் கீழோன் என்றும் பிரிக்க மாட்டான்” என பெருமை பேசுபவரிடம் சமன் செய்துதானே கேட்க வேண்டும்?? நீங்க ‘துடிக்கிறீர்கள்’ என நான் ஏதோ இசுலாத்தை பிராண்டுவதே என் நோக்கம் என நினைத்துவிட்டீர்.
//அந்த பதிவில் இஸ்லாமை பற்றி தொடர்பின்றி கேள்வி எழும் போது அதற்கு பதில் அளிக்க மீரானுக்கு தகுதி இல்லை என்றா நினகிண்றீகள்?//
முன்னைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல அவர் மத நம்பிக்கையை மட்டும் காக்கவில்லை, ““என் மதக்காரர் ஒருபோதும் மக்களை மேலோன் என்றும் கீழோன் என்றும் பிரிக்க மாட்டான்” என்றால் எதிர் கேள்விகளும் வரத்தானே செய்யும், அவற்றை கேட்டால் சம்பந்தம் இல்லை வேறு பதிவு வரட்டும் எனக்கு வெறுப்பு என மாய்மாலம் காட்டுகிறார்.
//அடுத்ததாக பெரியாரின் என்பது …… என்பதனையும் உணருங்க….//
அவருக்கு பெரியாரின் சுயமரியாதை கொள்கை பிடித்திருப்பதில் உங்களை விட மகிழ்ச்சி கொள்பவன் நான். பிரச்சினை என்னவென்றால் இங்கு ஆரம்ப பின்னூட்டத்தில் அவரை ‘சுயமரியாதையை’ மட்டுமே குறிக்கோளாக கொண்டவர் (மத நம்பிக்கை பெரியாருக்கு ஓகே) என இவர் மதநம்பிக்கைக்கு வலுவூட்டும் விதத்தில் கருத்து வெளியிட்டது (பின்னோட்டம் 3) அதை பற்றியே எனது அக்கபோரெல்லாம் அவருடன்.
சின்னா,
எவன் கிடைக்கமாட்டான்….சும்மா வாயை கிண்டி எதையாவது உளறிவைத்து நேரத்தை போக்கலாம் என்ற உமது குணம் புரிகிறது…
அதற்க்கு இது நேரமும் அல்ல…தலைப்புமல்ல…
ஓநாய் கூட்டம் முன் எப்போதும் இல்லாத அளவிற்க்கு வெறி பிடித்து நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அலையும் நேரம் இது.
பல வேடங்களில் ஓநாய்கள் அலைகின்றது.அவைகள் அத்த்னைக்கும் திராவிட கூட்டம் புதைந்து போக வேண்டும் என்பதே நோக்கம்.
இன்றைக்கு அவைகளுக்குள் சண்டை இட்டுக்கொள்வதுபோல பாசாங்கு காட்டுகின்றன்.
அவை நிஜமில்லை.நாளை எல்லாம் ஒன்று சேரும்.அவ்வளவு ஆபத்து மிகுந்த காலம் இது.
கார்த்திகேயன் , மாணவன் குமார் இருவருமே உமது சொத்தை வாதத்தை சுட்டிக்காட்டிவிட்டார்கள்.
இதற்க்கிடையில் அவர்கள் சிறு சிறு கருத்துவேறுபாடு கொண்டவர்களாகவும் இருந்தும் உம்முடைய அவசரக்குடுக்கைத்த்னத்தை சுட்டுவதில் ஒன்றினைந்தார்கள்.
உம்மோடு ஒப்பிட்டால் நான் அவர்களுக்கு கொஞசம் தூரம்தான்.
ஆனால் அவர்கள் அப்படி பார்க்கவில்லை அவர்களுக்கு தோன்றிய உண்மையை சொன்னார்கள்…அப்ப்டி இருந்தும் உமக்கு உரைக்கவில்லை என்றால், நீர் கருத்து சார்ந்து விவாதிக்கவில்லை.
எதையாவது சொல்லி நம்மை தனிப்பட்டு நிலைநாட்டிக்கொள்ள வேண்டும்
என்ற தன்முனைப்பே உம்மிடம் இருக்கிறது
அது உண்மையையும் உம்மை அறியவிடவில்லை சூழலையும் அறியவிடவில்லை.
நான் இஸ்லாத்தை முழுமையாய் சார்ந்திருக்கிற ஒரு முஸ்லிம்.எனக்கு என் சமயம் உயர்ந்தது..உண்மையானது.அதனால்தான் நான் முஸ்லிம்.
நான் முஸ்லிமாக இருப்பது இஸ்லாத்தை பின் பற்றுவது என் தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்தது.
அந்த நம்பிக்கை பின்பற்றல், பெரியாரை பெரியாரின் கொள்கைகளை போற்றுவதை,
பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுபவ்ர்களோடு நெருங்கி இருப்பதை
எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
வெறும் வாய் பேச்சிற்க்காக நான் பெரியாரை புகழ்வதில்லை..அவரை படிக்க படிக்க அவர்மேல் உள்ள உயர்ந்து கொண்டேதான் போகிறது.
நான் தீவிரமான கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருந்தாலும் எனக்கு அவர் மேல் எந்த கோபமும் வருத்தமும் வந்ததில்லை.
அவ்ர் தீவிரமாய் இந்து மதத்தை எதிர்த்தார் என்பது காரண்மல்ல.அந்த சின்ன புத்தியும் எனக்கில்லை.அப்படி பார்த்தால் தமிழ்தேசீயவாதிகளும் இந்துத்துவத்தை எதிர்ப்பதாகவே காட்டுகிறார்கள்.நான் அவர்கர்களை ஏற்கவில்லை.
பெரியார் என்ற மாமனிதனின் உளப்பூர்வமான சமூக அக்கறையும் அதை வெளிக்காட்ட அவர் கொண்ட உழைப்பும் உறுதியும் சமரசமற்ற நெஞ்சுரமும் …
நினைக்க நினைக்க கண்களில் ஈரம் சுரக்கும்.
என் மதநம்பிக்கையை விட்டு நான் பெரியாரை ஆதரிக்கவில்லை.நான் ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டேதான் பெரியாரின் பற்றாளனாக இருக்கிறேன்.
பெரியாருக்கு மதநம்பிக்கை ஓகே என்று நான் சொல்லவில்லை.அவருக்கு மதம் பற்றியோ கடவுள் பற்றியோ அக்கறையில்லை.மக்களைப்பற்றியே அக்கறை என்றே சொன்னேன்.
“சாதி சங்கிலியிலிருந்து நீ விடுபட முடியுமா…அப்படி முடிந்தால் எந்த மதத்திலாவது போய் தொலை.உன்னை கேவலமாய் பார்க்கும் எந்த ஒன்றிர்க்குள்ளும் அடங்காதே”
இதுதான் பெரியாரின் பார்வை.
இதைச்சொன்னால் பெரியார் மதத்தை ஆதரித்தார் என்று சொல்வதாக ஆகுமா?
மிக எளிமையாக என் வார்த்தை இருந்தும் உமக்கு வேறாக விளங்குகிறது என்றால்
அது உம்மிடம் இருக்கிற வெற்று ஈகோ..
நாம் கொஞசம் தடுமாறிவிட்டோம் என்பது தெரிந்தும் அதை ஒத்துக்கொண்டால் நாம் தோற்றுவிட்டோம் என்றாகிவிடும்.
ஆகவே பொய் சொல்லியாவது சமாளிப்போம் என்று உமக்குள் இருக்கும் ஈகோ உம்மை பதட்டமடைய வைக்கிறது.
இதுவே பெரியாரின் நேர்மையான சமரசமற்ற போக்கிற்க்கு எதிரான நிலை.
உமது மனநிலையில் தீவிர கவனம் செலுத்திப்பாரும்.உண்மை விளங்கும்
உங்கள் முன்பகுதி பத்திகள் வெறுமனே புலம்பும் பல்லவிகள் என்பதால் நேரடியாக விசயத்துக்கு வருகிறேன், எனது முதல் பின்னூட்டத்தில் (2) இல் //ஒரு பின்னைய மதமற்ற ஒரு சமூகத்துக்க்கான prerequisite.// மதமற்ற என நான் சொன்னது அரசு கூட தேவையில்லாமல் உதிர்ந்து போய்விடும் கம்யூனிசசமூகத்தை பற்றியது. இதை வெறுமனே ‘மதத்தை’ வெறுக்கும் கூற்றாக (மார்க்சியத்தை மதம் என என்னிகொண்டிருக்கும் புத்தி) புரிந்து கொண்ட உங்கள் ‘மதம்’ தலைக்கேறி ‘பெரியாரின்’ ‘சுயமரியாதையை’ மட்டும் கட்டி பிடித்து கொண்டு மதநம்பிக்கையை காக்கும் வேலையையே செய்கிறீர். பெரியாரை பத்தி நெச்சா கண்ணீர் சொரக்குறது முக்கியமில்ல, அவரை முழுமையாக (குறிப்பாக பகுத்தறிவு) புரிந்து கொண்டு பேசணும். தீவிர முஸ்லிமாக இருந்து கொண்டு பெரியாரை ‘முழுதும்’ புரிந்தது போல சுயமரியாதையை மட்டும் தான் போதித்தார் என வசதிக்கு உவப்பாக சப்பு கொட்டுவது தான் நடக்குது உங்க பதில்களில். பூனை கண்ணை மூடிட்டா உலகம் இருண்டுடாது. இதில எனக்கு எத்தினி பட்டங்கள்!
சின்னா,
ஒரு மத நம்பிக்கையாளர் பெரியாரை பற்றி கண்ணீர் மல்க உயர்வாக பேசுகிறார் என்றால் அவரை பாராட்டுவது சரியா? இல்லை அவருக்கு பெரியாரை பற்றி முழுவதும் தெரியவில்லை என்பதற்காக விமர்சிப்பது சரியா?
நீங்கள் பெரியார் சுயமரியாதைகாரர் மட்டுமல்ல பகுத்தறிவுவாதி என்று கூறியதை அவர் மறுக்கவில்லையே!
மாட்டுக்கறி சாப்பிடுவது இழிவு என்ற இருக்கும் பொதுபுத்தியில், அதை உணவாக ஏற்றுக்கொண்ட சமுதாயம் ஒப்பீட்டளவில் புரட்சிகரமானதுதானே! அந்த வகையில் அவர் ரங்கராஜனுக்கு இஸ்லாமில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று கூறிய பதில் ஏற்புடையதாகத்தான் தெரிகிறது. உங்கள் கூற்றுப்படி அவர் மதப்பிரச்சாரம் செய்கிறார் என்றால் செய்யட்டுமே! நல்ல கருத்துக்கள் இருந்தால் எடுத்துக்கொள்வோம், முரண்பாடுகளை விவாதிப்போம். இஸ்லாமில் உள்ள சாதி பற்றி விவாதிக்க இது சரியான இடமில்லை என்று கருதுகிறேன்.
சற்று சிந்தியுங்கள் நண்பரே!
கார்த்திகேயன்,
நண்பரே தாங்ங்கள் கூட இந்த victim card விளையாட்டுக்கு பலியாவது வருத்தம்.
பெரியாரை பற்றி முழுவதும் தெரியவில்லை என்று தூற்றவுமில்லை நான் பெரியாரை எண்ணி கண்ணீர் விடுவதை மதியாமலும் அல்ல நான். பெரியாரை ஆதரிக்கிறார் என்பதற்காக அதே பெரியாரை இவரின் மதநம்பிக்கையை நியாயபடுத்தும் வகையில் திரிப்பதை ஏற்று கொள்ள முடியாது. இதே வகையான வாதங்கள் இவர்களுக்கு அத்துபடி, வினவில் காலங்காலமாக நடக்கிறது.
//ரங்கராஜனுக்கு இஸ்லாமில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று கூறிய பதில் ஏற்புடையதாகத்தான் தெரிகிறது.//
சமூக ஏற்றத்தாழ்வை பாதுகாப்பதில் மதங்கள் எல்லாம் ஒரே அணி நண்பரே, அதில் சில மதங்கள் சில ‘சலுகைகளை’ பெயரளவில் அளித்தாலும் (இஸ்லாமிய சமத்துவ பேச்சு, ஆனால் யதார்த்தம் அப்படியா??)
என்ன நண்பரே வெறும் மாட்டுகறி உண்பதை வைத்தா இவரின் கூற்றை நியாயப்படுத்த பார்ப்பது, அப்படியென்றால் அல்லுலோயா கூட்டங்களும் தான் உண்கின்றன, அவையும் ‘ஒப்பீட்டளவில்’ புரட்சிகாரமானவை என்று கூறலாம் தானே. இங்கு பிரச்சினை எது ‘ஒப்பீட்டளவில்’ புரட்சிகரம் என்பதல்ல. ஒரு புதைகுழியிலிருந்து இன்னொரு புதைகுழியில் மக்கள் விழ வேண்டாம் என்பதே. சட்டி கொதிக்குது கொஞ்சம் ஆறலாம் என எண்ணி அடுப்புக்குள் விழ அனுமதிக்கலாமா?? ஆக இவ்வாறன சந்தர்ப்பவாத சமூக ‘ஆர்வலர்களை’ , பெரியார் ‘மெச்சிகளை’ அம்பல படுத்தியே ஆகவேண்டும்.
சின்னா முதலில் நீங்கள் சார்ந்த அமைப்பு தோழர்களிடம் உங்கள் கருத்துகளை விவாதித்து விட்டு வந்து இங்கே பதிவு செய்யலாம்… உங்களை யாரோ தவறாக கிண்டிவிட்டு வேடிக்கை தான் பார்கின்றார்கள் என்றே உணருகின்றேன். அல்லது நீங்க தனி ஆளாக தான் இருக்க வேண்டும்..(குழப்பத்தில்)
சின்னா நண்ப,
‘சராசரி இந்து’ ‘பள்ளர்சாதி-சாதி எதிர்ப்பாளி’ ‘குரான் சயின்டிஸ்ட்’
ஆகியவற்றில் உங்கள் நிலைப்பாடு புரிகிறது.
ஆனால் ‘பெரியாரிஸ்ட் முஸ்லிம்’ல் எனக்கு புரியவில்லை. எனக்கு புரிந்தவரை பகிர்ந்து கொண்டேன்.
நன்றி!
கார்திகேயன்,
அது என்ன “சராசரி இந்து பள்ளர்சாதி சாதி எதிர்ப்பாளி குரான் சயிண்டிஸ்ட்”
புரியவில்லையே…
விமர்சனமிருந்தால் எவ்வளவு கடுமையாகவும் கூறுங்கள்…
அவரவர் அவரவரின் கொள்கையில் தீவிரமாய் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கசப்புகளை நீக்கிக்கொள்ள வெளிப்படையான கருத்து பரிமாற்றங்கள் உதவலாம்.
மீரான் பாய்,
அது வேறொரு பதிவில் சின்னா ஒருவருக்கு அளித்த பதிலில் இருந்து copy paste செய்திருக்கிறேன்.அதனால் உங்களுக்கு குழப்பம். அந்த சொற்கள் எல்லாம் இங்கே பல நாட்கள் பலருடன் நடந்த விவாதங்களின் சாறு. அதை விளக்கினால் நீண்ட நேரமும், விவாத திசை திருப்பலும் ஆகிவிடும்
அமைப்பின் செய்திகளை கூட்டங்களை நேரலையாக வழங்குவதைவிட எடிட் செய்த வீடியோக்களாக தரவிறக்கம் (video or mp3 audio only option)உடன் வினவு தளத்தில் பதிவேற்றம் செய்தால் உடன் பொதுமக்கள் பார்வைக்கு சென்றடையும் ஊருக்கூறு சாராயம் பாடல்இப்படிதான் உலகம் முழுவதும் சென்றது.இதன் மூலம் பேச்சாளர்களின் உரைகளை மழுவதும் எழுத்து வடிவில் தரும்நேரம் குறையும் அனைவரும் சினிமா பாடல்களுக்கு பதிலாக இவ்வுரைகளை ஹெட்போன் மூலம் எந்நேரத்திலும் கேடகலாம்(நான் videoder app மூலம் video to mp3ஆக download செய்து கேட்கிறேன்,இதனை பரசீலிப்பீர்கள் என நினைக்கிறேன்
கார்திகேயன்,
உங்களுக்கும் மாணவன் குமாருக்கும் சிற்சில கருத்து வேறுபாடுகள் இருப்பதை அறிகிறேன்…
இருக்கலாம்…இருக்கும்…அவைகளே நம் சிந்தனைகள் இன்னும் கூர்பட காரணமாக இருக்கும்.
இந்த சின்னா அந்த வகையை சார்ந்தவராக தெரியவில்லை..இந்த மனிதரிடம் நேரிடையாய் விவாதிக்கவே முடியாத அளவிற்க்கு முதிர்ச்சியின்மையும் அவசரக்குடுக்கைத்தனமும் தான் பெரிய கொள்கை குன்று என்ற நினைப்பும் மண்டி கிடக்கிறது.
ஆகவே மாணவன் குமார் சொன்னதைப்போல அவரிடம் நேரிடையாய் விவாதிப்பதை நான் நிறுத்திக்கொண்டேன்.
நான் முஸ்லிமாக இருக்கிறேன் இஸ்லாத்தை முழுமையாய் ஏற்றுக்கொண்டவனாக இருக்கிறேன்
ஆனாலும் தவத்திரு குன்றகுடி அடிகளாரை நான் மிகவும் மதிக்கிறேன்.
அவரும் காவி கட்டிய துறவி என்றாலும் குறுகிய மதப்போக்கு இல்லாதவர்.அரசியல் செய்யாதவர்
இன்றைக்கு வரைக்கும் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்.
துறவிகள் என்று சொல்லிக்கொள்கிற எல்லா சாமியார் பயல்களும் பஜக என்ற அரசியல் கட்சியோடு குலாவுவதை பார்க்கிறோம்.இது என்ன வகை துறவு?
மதுரை ஆதீனம் பஜக வோடு ஒட்டவில்லை என்றாலும் எனக்கு அவர் பெரிய மரியாதை வரவில்லை.
இப்படி நான் சொல்வதால் ஒரு காவி குஞ்சு, “நீ எப்படி பொன்னம்பல அடிகளாரை புகழ்ந்து பேசுவாய்..நீ மாட்டுக்கறி தின்னுகிற துலுக்கன்.அவர் மாட்டுக்கறியா உண்ணுகிறார்….
என்று உளறுவதற்க்கு ஒப்பானதுதான் இந்த சின்னாவின் உளறல்.
எனக்கு ஐயா நல்லகண்ணு மேல் எப்போதும் தீராத மதிப்பும் மரியாதையும் உண்டு…
இது அவர் கட்சியையும் தாண்டி அவர் மேல உள்ள தனிப்பட்ட மரியாதை.
நம்முடைய கூமுட்டை தமிழினம் அவரைப்போல் உள்ள நல்லவரை அரசியலில் தேர்ந்தெடுக்காது
ஊடக கார எச்சைகளும் அவருக்குரிய சிறப்பை வெளியில் காட்டாது.
ஆகவே குடியரசு தலைவராகவாவது அவர் ஒரு முறை இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
இதைக் கேட்ட ஒரு கத்துக்கட்டி கம்யூனிஸ்ட்,” நீ எப்படிடா அவரை மதிப்பாய் நீயே ஒரு மதவாதி…
உனக்கென்ன ஒரு கம்யூனிஸ தலைவரை போற்றுகிற நரித்தனம்”
என்று கேட் கிற கிறுக்குத்தனம் தான் இந்த சின்னாவின் வாதம்.
இந்த சின்னாவிடம் இருப்பது காவிகளிடம் இருக்கிற அதே வெறுப்புற்ற மனம்தான்.ஆழமற்ற பார்வை
அர்த்தமற்ற பேச்சு..மாற்று கருத்தாரை மாற்று மதத்தாரை தேச விரோதி என்று சித்தரிப்பதைப்போல
இவரும் என்னை சித்தரிக்கிறார்
நான் என் மத நம்பிக்கையை நியாயப்படுத்துகிறேனாம்…..பெரிய கண்டுபிடிப்பு
நான் மத நம்பிக்கையோடுதானே இருக்கிறேன்..இதில் என்ன நியாய படுத்துவதற்க்கு இருக்கிறது.
என் மதம் எனக்கு நியாயம் …உண்மை…அதனால் தான் நான் இஸ்லாமியன்
என் மதத்தை ஒளித்துக்கொண்டு நான் பெரியாரை ஆதரிக்கவில்லை…அவரைப்போல நான் கடவுளை வணங்காமலும் இல்லை.
என் மதக்கடமைகள் அனைத்தையும் இயன்ற்வரை செய்கிறேன்.அதுவே ஈடேற்றம் என்றும் நம்புகிறேன் பகிரங்கமாய் சொல்கிறேன்.
பெரியாரிஸ்ட்டுகளை நான் இஸ்லாமியனாக மாற்றிவிடுவேன் என்று பதறுகிறாரா..
அவ்வளவு பல்வீனமாகவா நீங்களெல்லாம் இருப்பதாக அவர் நினைக்கிறார்.
இந்துத்துவ வெறியர்களுக்குத்தான் இந்த பயம் பதட்டம் இருகிறது..
பெரியார் மதத்தை உருவாக்கவில்லையே…அவரால் உருவானவர்களை அவர் எந்த நிர்பந்தத்திற்க்கும்
உள்ளாக்கவில்லை…அவர்களுக்கு அவர்களின் சிந்தனையை திறந்து விடுவதே பெரியாரின் பணி
தனக்குள் பிடித்து வைத்திருப்பது பெரியாரின் விருப்பமல்ல.
காவி மூளையும் கம்யூனிஸ நாக்கும் கொண்ட சின்னாவிடம் விவாதிப்பது,எச் ராஜா வகையறாக்களோடு விவாதிப்பதுதான்
சாமி உங்களுக்கு எத்தின வாட்டி சொல்றது, நீங்க முஸ்லிமா இருந்து கொண்டு பெரியாரை படிப்பதோ மேச்சுவதோ என் பிரச்சினை அல்ல. எனது ஒரிஜினல் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட ‘மதமற்ற’ சமூகம் என்ற வார்த்தை உங்கள் ஆள்பிடிக்கும் மனநிலைக்கு உவப்பாக இல்லாத படியால், பெரியாரை இழுத்து அவர் சுயமரியாதையை மட்டும் தான் போதித்தார் என்கிறீர். கிளி பிள்ளை போல் எத்தனை வாட்டி இத குறிப்பிடுவது நான்?
அடையாள படுத்தியவுடன் வசதியாக எடுத்து வைத்திருக்கும் காவி போர்வையை எனக்கு போர்த்தி விடுகிறீர், பச்சோந்திதனம். இதில சாமியார் என்னவகை துறவு, நல்லகண்ணுவ பிடிக்கும் , மாடுகரி தின்பதை இகழும் காவிகளோடு ஒப்பிடுவது என எங்கெங்கோ அலையுறார் பாய். அதாவது தாங்களாகவே தம்மை ‘மாட்டுக்கறி தின்னும் துலுக்கன்’ என ஏசுவதாக பழி போட்டு பரிதாபம் தேடுவது. நண்பரே அந்த ரீதியில் எங்கும் இந்த விஇவாததில் பேசவில்லை நான்.
//நான் என் மத நம்பிக்கையை நியாயப்படுத்துகிறேனாம்…..பெரிய கண்டுபிடிப்பு
நான் மத நம்பிக்கையோடுதானே இருக்கிறேன்..இதில் என்ன நியாய படுத்துவதற்க்கு இருக்கிறது.//
நீங்க முஸ்லிமா இருப்பதை நியாய படுத்துவதாக கூறவில்லை நண்பரே, பெரியாரை சுயமரியாதைகாரர் என மட்டும் சுருக்க வேண்டாம் என்று தான் கூறுகிறேன் , காவிகளும் இதேபோல்தான் அவரை இறைமறுப்பாளர் என சுருக்க முயற்சிப்பவர்கள். அவர்களோடு ஒத்து போவது போல் இல்லை ?? (தட் இஸ் டு சே, பெரியார் சுயமரியாதையை AND பகுத்தறிவுவாதி. இதில் பகுத்தறிவு என்பது அடிப்படையில் ஆதாரம்/தர்க்கம்/காரணகாரியம் மறுக்கும் மதத்தின் எதிர்மறை. இப்படி இருக்கும் பொது நீர் எப்படி அவர் ‘சுயமரியாதை காரர்’ மட்டும் என்பீர் ?? பெரியாரை புரிந்து கொண்டது அவ்வளவுதானா?? அப்படி சொல்லியே ஆக வேண்டிய அவசியம் குறிப்பாக தங்களுக்கு வந்தது ஏன்???)
அதுவே எனது கவலை நீங்க பெரியாரிஸ்டுகளை இஸ்லாமியராக மாற்றுவது என் கவலையோ பதட்டமோ அல்ல. (அப்படி மாறினால் அங்கு என்ன நடந்திருக்கும் என ஊகிக்கும் பகுத்தறிவு தந்திருக்கார் அதே பெரியார்(தாசன் அல்ல!)) ஆரம்பத்தில் வந்து வாயை குடுத்து விட்டு இப்போ வழமை போல நான் காவி என்று புலம்புங்கள்.
நீர் என்ன RSS நிறுவனத்திடம் பயிற்சி பெற்ற கம்யுனிஸ்டா? என்றைக்கு மீரான் பாய் அவர் மதத்தை நோக்கி வினவு இணையதளம் மூலமாக ஆள் பிடிக்கும் வேளையில் ஈடுபட்டார்.? அறிவிழந்த மாண்டுகள் போன்று பேசும் உமக்கு கூறினாலும் புரியாதா? இல்ல புரியாத மாதிரியே நடிப்பீரா? //உங்கள் ஆள்பிடிக்கும் மனநிலைக்கு உவப்பாக இல்லாத படியால்//
மறுபடியும் சொல்றேன்….பெரியாரின் என்பது ஆண்டு கால பொது வாழ்வில் அவர் சந்த்தித்த பிரச்சனைகள் அதற்கு அவர் எடுத்த கொள்கை நிலைபாடுகள் காலத்துக்கு ஏற்ப மாறிய ஒன்று தான்… உங்களுக்கு அவர் இறை மறுப்பாளராக தெரிந்தால் மீரானுக்கு சுயமரியாதை காரராக தெரிகின்றார் என்றால் அதில் ஏதும் பிழை இல்லை…ஏன் என்றால் அது தான் பெரியாரின் சிறப்பு வாய்ந்த ஆளுமை…
தமிழகத்தில் இறையுணர்வு உள்ளவர்களுக்கும் பெரியார் இன்று தேவைப்படுகின்றார் என்ற எளிய உண்மையை உணருங்க தோழர்… ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்று கூரிகிட்டு திமுக வினர் கோவிலுக்கும் போய்கிட்டு பெரியாரை தலைவராக ஏற்க்கவில்லையா? அதே போன்று பெரியார் அவர்கள் மீரானுக்கும் தேவைபடுகின்றார் என்பதனையும் உணருங்க….//பெரியாரை இழுத்து அவர் சுயமரியாதையை மட்டும் தான் போதித்தார் என்கிறீர். கிளி பிள்ளை போல் எத்தனை வாட்டி இத குறிப்பிடுவது நான்?//
//என்றைக்கு மீரான் பாய் அவர் மதத்தை நோக்கி வினவு இணையதளம் மூலமாக ஆள் பிடிக்கும் வேளையில் ஈடுபட்டார்//
உமக்கு இவர் மதத்தை பகுத்தறிவு பகலவன் மறுக்கவில்லை என்னும் தன்முரண் வாதத்தின் மூலம் இங்கு என்ன செய்ய முயற்சிகிறார் (2010 களில் வெளிப்படையாக செய்வார்கள், தற்போது பூனை கண்ணை மூடிகொண்டு பால் குடிப்பது போல இந்துத்துவா பதிவுகள், அறிவியல் சம்பந்த பதிவுகளில் மட்டும் வந்து ‘அக்கறையை’ வெளிப்படுத்துவது போல் நைசாக கடையை விரிப்பது. அவர் கடையை விரிப்பது கூட பிரச்சினை இல்லை! அதற்காக பெரியார் போன்றோரின் அடிப்படை கொள்கைகளில் தமக்கு ஏற்றவட்ட்ரை மட்டும் பயன்படுத்துவது, அப்படியே பயன்படுத்தினால் கூட எதாவது மக்கள் நலனுக்க்கா பயன்படுத்துகிறார்கள்?? இல்லை! மதம் மதம் மதம்.) என புரியாவிட்டால், புரிந்தும் ஜால்ரா போட்டால் உமக்கு தான் யாரோ ட்ரைனிங், டப்பு எல்லாம் குடுக்கிறாங்க.
இந்த சின்னாவிடம் இருப்பது காவிகளிடம் இருக்கிற அதே இன வெறுப்பே அன்றி வேறு எதுவும் இல்லை என்பதை என்னோடு இவர் விவாதித்ததை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு எளிதாய் புரியும்.
உமாசங்கர் என்ற ஒருவர் ஒரு பொய்யை கூறி திருப்பும்பொழுது,” இருக்கும் நடந்திருக்கும் உமா சங்கர் இல்லாமல் சொல்ல மாட்டார்”
என்பதாக யூகிப்பதையே ஆதாரமாய் காட்டுகிறார்.அதாவது ஒரு சமூகத்தின் மேல் உள்ள வெறுப்புதான் அவரை, இல்லாத ஒன்றை “இருக்கும் இருக்க வேண்டும் “என்று ஆசைப்பட வைக்கிறது.
அதற்க்கு திப்பு சட்டசபையில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்படும்பொழுது முஸ்லிம் உறுப்பினர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்றதை ஆதராமாய் காட்டுகிறார்.
எழாமல் இருந்ததற்க்கு ஏது ஆதாரம் என்ற கேள்விக்கு குற்றசாட்டு வைத்தவரிடமும் ஆதாரம் இல்லை…அவர் அதன் பிறகு தலைகாட்டவும் இல்லை.
“தமிழின் திரு உருவம்” பெரியசாமி முஸ்லிம்களை காட்டுமிராண்டிகள் என்ற்தோடு அவரும் மூட்டையை கட்டிக்கொண்டு போய்விட்டார்.
“ஜேயேந்திரன் இந்துவாக இருப்பதால் வந்து பேசுகிறீர்கள்” அட்வகேட் வாய் திறக்கிறார். (இதையே அட்வகேட்டிற்க்கு இந்த சின்னாதான் எடுத்து கொடுக்கிறார்) உங்கள் மதக்காரராக இருந்தால் இப்படி பேசுவீர்களா என் கிறார்…
“இது மதக்காரன் பற்றிய பேச்சே அல்ல..என் மதத்தில் இப்படி மொழியும் மனிதனும் மேலோன் கீழோன் என்று பிரிக்கப்படவில்லை”
என்று நான் சொல்ல, மாட்டியதுடா பிடி திருவாளர் சின்னா, அந்த மேலோன் கீழோனையே பல நாட் கள் பிடித்து தொங்கினார்.
என்னிடமிருந்து மத ரீதியான வார்த்தை முதலில் வரவில்லை…ஜேயேந்திரனின் கட்டுரைக்கும் முதலில் நான் முந்தவில்லை..
என்று பல் பதிவுகளில் நானும் மன்றாடி முடித்தேன்.
ஆக சின்ன சங்கராச்சாரி பற்றிய கட்டுரைக்கு அவரை ஆதரித்தவர்களையெல்லாம் விடுதலை செய்துவிட்டு என்னை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு , ஏதாவது ஒரு குற்றச்சாட்டை மாறி மாறி என் மேல் சுமத்தி குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறார் இந்த சின்னா….ஆச்சாரி.
அவரும் தன் பிடியை போராடி முயன்று திணறிக்கொண்டிருக்கையில்
அர்ச்சகர் போராட்டம் கட்டுரைக்கு பெரியார் பற்றிய என் பதிவு வந்து மாட்டுகிறது.
உடனே பழையதை அப்படியே விட்டுவிட்டு அப்படியே ஜம்பாகி, “பெரியாரை வெறும் சுயமரியாதைக்காரர் பகுத்தறிவுவாதி இல்லை” என்று நான் சொன்னேனாம்.
இதை வைத்து சில நாள் வண்டியை ஓட்டி இப்போது
பகுதறிவு பகலவன் என் மதத்தை மறுக்கவில்லை என்று நான் சொன்னதாக புதுச்சரடை அவிழ்த்து விடுகிறார்…இதை இவர் காதில் சொன்னேனா அல்லது கனவில் சொன்னேனா எனக்கு நினைவில்லை. ஆனால் வினவில் சொல்லவில்லை அதை உறுதியாகச்சொல்லமுடியும்.
கடவுளைப்பற்றிய விளக்கம் பெரியார் வாயிலிருந்து வந்தது…உன் மதம் உன்னை இழிவுக்குள்ளாக்குகிறதா அதிலிருந்து மாறி எங்காவது ஓடு….மதமற்று இரு..அல்லது வேறு மதத்தில் மாண்போடு இரு…இதுவும் பெரியாரிடமிருந்து வந்தது.
இதை பெரியார் மதத்தை ஆதரித்தார் என்று ஆகுமா…அல்லது மனிதர்களை நேசித்தார் என்று ஆகுமா..
அதிலும் என் மதத்தை பெரியார் ஆதரித்தார் என்று நான் சொல்வதாக துணிந்து இவர் புழுகுவதாக இருந்தால் , எச்ச ராஜாவை வச்சி உரிச்சத்துபோல் அல்லவா இருக்கிறார்..
இது கடும் வெறுப்பை நெஞ்சில் சுமந்தவனின் வெளிப்பாடு…பச்சையாக பொய் சொல்லி அந்த வெறுப்பை மேலும் மேலும் உமிழ்கிற வன்மத்தின் வெளிப்பாடு….
இங்கே இருப்பவர்கள் அனைவரும் இவரைப்போலவே என் மேல் வெறுப்பு கொள்ள வேண்டும் என்று என் ஒவ்வொரு வார்த்தைக்கும் உள் நோக்கம் இருப்பது போல காட்டுகிற மிக தீய குணம் இது..
என்னிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை..நான் யாரையும் என்னோடு வளைக்கவும் விரும்பவில்லை…அது எனக்கு தேவையும் இல்லை.
பெரியார் என்ற ஒருவரை மட்டும்தான் நான் மதிக்கிறேன். சின்னாவின் வெறுப்பு மண்டிய மனம் குணமடைய சில காலங்கள் பிடிக்கலாம்
//இந்த சின்னாவிடம் இருப்பது காவிகளிடம் இருக்கிற அதே இன வெறுப்பே அன்றி வேறு எதுவும் இல்லை//
நண்பரே, நான் திரும்ப திரும்ப சொல்லிவிட்டேன், இசுலாத்தை பற்றி நேரடி விமரிசனம் செய்ய வேண்டுமென்றால் அதை நான் அசக் என்பவருடன் வேறொரு பதிவில் செய்துவிட்டேன். நீங்கள் உங்கள் வாதத்தை காக்க பேசும்போது நானும் இஸ்லாத்தை பற்றி கேள்விகேக்கதாநே செய்வேன் ? ஒன்று அதை சம்பந்தம் இல்ல கேள்வி என விலகி ஓடுகிறீர் (சவூதி) அல்லது உடனே காவி போர்வையை போர்துகிறேர். அது என்னங்க ‘இன வெறுப்பு’?? நான் இங்குள்ள முஸ்லிம்களை இனமாக பார்ப்பதில்லை, அவர்கள் கூட இறைவன் என்ற கருதுகோள் தேவை என்ற நிலைப்பாட்டில் உள்ள என் இனத்தவரே என எண்ணுகிறேன். இறைவன் என்ற ஒரு கருதுகோளுக்காக என் இனத்தையே நான் வெறுப்பேனா? அப்போ உங்க வாயாலேயே இங்குள்ள இஸ்லாமியர் வேறு ‘இனம்’ என்கிறீரா??? அரேபிய இனமா???? அதெப்படி மதக்கொள்கை ‘இனம்’ மாற்றும்?? (விவாதத்துக்கு சம்பந்தம் இல்லை என சொல்லகூடாது, பேசும்போது கவனமாக பேசவேண்டும்.)
ஓகே உமாசங்கர் பொய் உரைத்தார், ஆதாரம் இல்லை. பெரியசாமி ஓடிவிட்டார். ஒத்து கொள்கிறேன், இஸ்லாமிய கூடங்களில் வெறுப்பு,இரகசிய தனித்துவம் போதிக்கபடுவதில்லை என்றே கொள்வோம் (அதற்கு தங்களின் மேற்கண்ட ‘இன வெறுப்பு’ கூற்று முரண்நகை யாக இல்லை?) எனக்கும் இஸ்லாமிய ‘மேலோன் -கீழோன் ‘ பிடி மாட்டியது, நான் மறுக்கவில்லையே? அதை தானே கேட்டுகொண்டிருக்கிறேன்?? ஒழுங்கான பதிலைத்தான் கானோம்., நீங்க நைசாக கடை விரிக்கும்பொது நாம ‘பிடியை’ விடமுடியுமா??? இப்போது கூட வசதிக்கு அந்த கூற்றில் ‘மொழியை’ சேர்த்துள்ளீர்கள் –
ஒரிஜினல் கூற்று – ““என் மதக்காரர் ஒருபோதும் மக்களை மேலோன் என்றும் கீழோன் என்றும் பிரிக்க மாட்டான்”
தற்போது மாடிபை பண்ணிய கூற்று – “என் மதத்தில் இப்படி மொழியும் மனிதனும் மேலோன் கீழோன் என்று பிரிக்கப்படவில்லை”
ஒரிஜினல் கூற்றுக்கு நான் கேட்ட கேள்விகளுக்கு தற்காக்க சிரமம் என்பதை உணர்ந்தவர் இப்போது தான் ‘மொழி மனிதன்’ என்று புது வியாக்கியானம் கொடுக்கிறார். (அரபி மொழி பே