privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்காவிரி உரிமை : தடைகளைத் தகர்த்த சீர்காழி பொதுக்கூட்டம் !

காவிரி உரிமை : தடைகளைத் தகர்த்த சீர்காழி பொதுக்கூட்டம் !

பல தடைகளைத் தாண்டி சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் பகுதியில் கடந்த 08.05.2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

-

தடைகளைத் தகர்த்த மக்கள் அதிகாரம் ! மக்கள் வெள்ளத்தில் திருமுல்லைவாசல் பொதுக்கூட்டம் !!

டந்த 21.04.2018 அன்று துவங்கி 30.04.2018 வரை மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட காவிரி உரிமை மீட்பு பிரச்சார நடைபயணத்தின் இறுதி நிகழ்வாக சீர்காழி வட்டம் திருமுல்லைவாசலில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற பிரச்சார நடைபயணம். (கோப்புப் படம்)

முதலில், மக்கள் அதிகாரத்தின் காவிரி உரிமை மீட்பு பிரச்சார நடைபயணத்துக்கு அனுமதி மறுத்தது தமிழக போலீசு .

இதை எதிர்த்து நீதிமன்றம் சென்று நடைபயணத்துக்கான அனுமதியைப் பெற்றது மக்கள் அதிகாரம். அந்த நடைபயணத்திற்கும் ”முப்பது பேருக்குமேல் பங்கேற்கக்கூடாது, ஆறுமணிக்கு மேல் நடக்கக்கூடாது” என்ற ஏகப்பட்ட ‘கூடாது’களுடன்  பல கட்டுபாடுகள் விதித்து மக்கள் மத்தியில் நமது பிரச்சாரம் சென்றடையாது தடுக்க முயன்றது போலீசு. அதைத் தாண்டி பல கிராம மக்களின் ஆதரவுடன் பிரச்சார நடைபயணம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஆனால் இறுதி நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி மறுத்தது போலீசு. மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அனுமதி பெறவேண்டியிருந்தது.

நீதிமன்ற அனுமதிக்குப் பின்னரும், போலீசு விதித்த பல நிபந்தனைகள், கெடுபிடிகளைத் தாண்டி, கடந்த 08.05.2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த பொதுக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம், வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி தலைமை தாங்கினார்.

திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய் சுற்றுவட்டார மீனவ பஞ்சாயத்தார் – தலைவர்கள் முன்னிலை வகிக்க பல்வேறு விவசாய சங்கத் தலைவர்களும், ஜனநாயக சக்திகளும் இப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்கள்.

முன்னாள் நீதிபதி திரு கோபாலகிருஷ்ணன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தோழர் குணசேகரன், கொள்ளிட பாசன விவசாய  சங்க தலைவர் ஆச்சாள்புரம் திரு சிவபிரகாசம், வேட்டங்குடி திரு வில்வநாதன், விருத்தாசலம் திரு நந்தகுமார், தமிழர் தேசிய முன்னணி தோழர் ராஜராஜன், மனிதநேய மக்கள் கட்சி சீர்காழி திரு மசாகுதீன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் பெரியார் செல்வம், மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க தலைவர் திரு வேலுகுபேந்திரன், தமிழக காவிரி விவசாய சங்க மாநில இணை செயலாளர் திருவாரூர் வரதராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இறுதியாக மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் மற்றும் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் நிறைவுரையாற்றினார்கள்.

அருகதையிழந்த அரசுக் கட்டமைப்பு !

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த தீர்ப்பை அமல்படுத்துவதற்கு கூட கர்நாடகா தயாராக இல்லை.

நடுவர் மன்றம், மேலாண்மை வாரியம், காவிரி ஆணையம் உச்ச நீதிமன்றம், மத்திய அரசு என காவிரி விவகாரம் ஒரு விஷச் சக்கரம் போல சுற்றிகொண்டே இருக்கிறது.

இவ்வாறு திட்டமிட்டே தமிழக விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ளவும், விவசாயத்தைவிட்டு விவசாயிகளை வெளியேற்றவும், மோடி அரசு வழி செய்கிறது.

நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் அவமானப்படுத்தப்படுகின்றனர். பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் பெருகிவருகின்றன. இக்குற்றங்களில் பாஜக அமைச்சர்களும், போலீசு மற்றும் அதிகாரிகளே முதன்மைக் குற்றவாளிகளாக உள்ளனர். இவை அனைத்தும் இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியையே காட்டுகின்றன.

எனவே இனி இந்த கட்டமைப்புக்குள்ளேயே நின்று தீர்வை தேடுவது முட்டாள்தனம். அமைச்சர்கள், அதிகாரிகள் என்ற அதிகார வர்க்க தாழ்வாரத்தின் கீழ் பெரும்பான்மை மக்களுக்கு நியாயத்தை பெறமுடியாது.  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதிகள் எனும் கிரிமினல்களிடமே மனுகொடுத்து நியாயத்தை பெறமுடியாது.

மாறாக இவர்களை அப்புறப்படுத்தி மக்களுக்கான புதிய அதிகாரத்தை பெறுவதுதான் தீர்வு. இதை நோக்கி மக்கள் போராட்டங்கள் வளர்ந்து செல்வதைக் கண்டுதான் இவர்கள் அஞ்சுகிறார்கள்.

அதனால் தான் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பிரச்சாரம் ஆகிய அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கூட தடை செய்கிறது  அரசு.

எத்தகைய தடைகள் வந்தாலும் சரி அவற்றை மக்கள் போராட்டங்கள் தூளாக்கும்.

பொதுக்கூட்டத்தில் கலைநிகழ்ச்சிக்கு போலீசு அனுமதி மறுத்ததால் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடல்கள் பேச்சின் இடையிடையே பாடப்பட்டன.

துவக்கம் முதல் இறுதிவரை மக்கள் கூட்டம் கலையாமல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் ஒவ்வொரு பேச்சாளரின் உரையின் போதும் மக்களின் கரவொலி விண்ணைப் பிளந்தது.

இறுதியாக மக்கள் அதிகாரம் வட்டார குழு உறுப்பினர் தோழர் வீரசோழன் நன்றி கூற பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க