privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்இந்தியாஐ.சி.ஐ.சி.ஐ. - வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் !

ஐ.சி.ஐ.சி.ஐ. – வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் !

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது கஜானா சாவியைத் திருடனிடம் கொடுப்பதற்கு ஒப்பானது என்பதை நிரூபிக்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வீடியோகான் நிறுவனத்துக்குக் 3,250 கோடி கடன் கொடுத்த விவகாரம்.

-

2810 கோடியைத் திருட 63.91 கோடி இலஞ்சம் !

கோச்சார் குடும்பத்தாருக்கும் வீடியோகான் நிறுவன முதலாளி வேணுகோபாலுக்கும் சுமார் இருபதாண்டு காலத் தொழில் தொடர்பு உள்ளது. கிரெடென்சியல் பைனான்ஸ் எனும் நிறுவனத்தை சாந்தா கோச்சார் உள்ளிட்டு அவரது குடும்பத்தின் ஆறு உறுப்பினர்கள் கூட்டாகச் சேர்ந்து 1995 ஆண்டு தொடங்கினர். இந்நிதி நிறுவனத்தில் 2001 ஆண்டு ஒரு பங்குதாரராக வேணுகோபால் இணைகிறார். இதே காலகட்டத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் உயர் பொறுப்புகளில் மளமளவென உயர்ந்து வருகிறார் சாந்தா கோச்சார்.

அதே சமயத்தில், 2008 ஆண்டு டிசம்பர் மாதம் வேணுகோபால் தூத், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருடன் கூட்டுச் சேர்ந்து “நு பவர்” எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். இருவரும் அந்நிறுவனத்தில் சரிபாதியாக முதலீடு செய்திருப்பதாகக் கூறப்பட்டது.

அந்நிறுவனத்தை ஆரம்பித்த சில மாதங்களிலேயே தன் வசமிருந்த 25,000 பங்குகளை தீபக் கோச்சாருக்கு மாற்றிக் கொடுத்து விடும் வேணுகோபால் தூத், அந்நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறார். இது நடந்த அடுத்த சில மாதங்களிலேயே (2010 மார்ச்) தன்னுடைய துணை நிறுவனமான சுப்ரீம் எனர்ஜி என்கிற உப்புமா கம்பெனியின் வழியாக சுமார் 64 கோடியை நு பவருக்கு வழங்குகிறது வேணுகோபாலின் வீடியோகான் நிறுவனம்.

இந்தக் கடனுக்கு ஈடாக நு பவர் நிறுவனத்தின் பங்குகளைப் பெற்றுக் கொள்ளும் சுப்ரீம் எனர்ஜி, பின்னர் அதை வேணுகோபாலின் பினாமியான மகேஷ் சந்திர புங்காலியா என்பவருக்குக் கைமாற்றி விடுகிறது. தன்னிடம் கிடைத்த நு பவரின் பங்குகளை வெறும் ஒன்பது இலட்சத்திற்கு பினாக்கில் டிரஸ்ட் என்கிற உப்புமா கம்பெனிக்கு விற்கிறார் புங்காலியா. இந்தப் பினாக்கில் டிரஸ்டின் அறங்காவலராக உள்ளவர் தீபக் கோச்சார்.

புரியும் விதமாகச் சொன்னால், தீபக் கோச்சாருடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தை சரிபாதிக் கூட்டு முதலீட்டுடன் தொடங்குவது போல் போக்கு காட்டி விட்டு, பின்னர் தனது பங்கு முதலீட்டுத் தொகையைக் கள்ளத்தனமாகச் சுற்றி வளைத்து தீபக் கோச்சாருக்கே கையளித்துள்ளார் வேணுகோபால் தூத். அதாவது நு பவர் நிறுவனத்தில் தான் முதலீடு செய்த 64 கோடி மதிப்பிற்கான பங்குகளை வெறும் 9 இலட்சத்திற்கு தீபக் கோச்சாருக்கு மாற்றிக் கொடுத்துள்ளார் வேணுகோபால்.

ஒரு பக்கம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமைச் செயல் அலுவலரான சாந்தா கோச்சாரின் கணவருக்கு இலஞ்சப் பணத்தைச் சுற்றுப்பாதையில் மாற்றிக் கொண்டிருந்த வீடியோகான் நிறுவனம், இன்னொரு பக்கம் வங்கிகளிடம் கடன் வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தது.

பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 20 வங்கிகளின் கூட்டமைப்பில் இருந்து வீடியோகான் நிறுவனம் ரூ.40,000 கோடியை கடனாக வாங்குகிறது. இதில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மட்டும் 3,250 கோடியைக் கடனாக வழங்கியிருக்கிறது. இவ்வாறு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வேணுகோபாலுக்கு வழங்கிய கடனில் 86 சதவீதம் – அதாவது 2,810 கோடி ரூபாயை வாராக்கடனாக அறிவித்துள்ளது.

எலி அம்மணமாகச் சுற்றி வந்ததன் காரணம் இப்பொழுது புரிகிறதா?

-புதிய ஜனநாயகம் மே 2018

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க