privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்சீர்காழியில் தோழர் அம்பிகாபதி நினைவேந்தல் கூட்டம் || மக்கள் அதிகாரம்

சீர்காழியில் தோழர் அம்பிகாபதி நினைவேந்தல் கூட்டம் || மக்கள் அதிகாரம்

தோழர் அம்பிகாபதியின் புரட்சிகர வாழ்வை அனைவரும் வரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியை சீர்காழி மக்கள் அதிகாரம் ஏற்பாடு செய்துள்ளது.

-

தோழர் ந. அம்பிகாபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி || அனைவரும் வருக !

க்கள் அதிகாரம் சீர்காழி பகுதித் தோழர் அம்பிகாபதி, கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதியன்று (27/06/2021) இயற்கை எய்தினார். 37 ஆண்டுகளுக்கும் மேலாக நக்சல்பாரி புரட்சியாளராக இறுதிவரை ஆளும் வர்க்கத்துக்கும் வர்க்க எதிரிகளுக்கும் எதிராக மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடித்தவர் தோழர் அம்பிகாபதி.

சீர்காழி பகுதி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளராகவும், பின்னர் விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளராகவும் பல ஆண்டுகள் இருந்து வந்தார். விவசாயிகள் விடுதலை முன்னணி நடத்திய பல்வேறு போராட்டங்களில் தலைமையேற்று நடத்தியவர். இறால் பண்ணைக்கு எதிரான போராட்டத்தினை நடத்தி ஆளும் வர்க்கத்தின் நெருக்கடிகளையும் போலீசின் அடக்குமுறையையும் எதிர்த்த போராட்டத்தில் தோழரின் பங்கு அளப்பரியது.

அவரது புரட்சிகர வாழ்வை அனைவரும் வரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியை சீர்காழி மக்கள் அதிகாரம் ஏற்பாடு செய்துள்ளது. அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாள் – நேரம் : 22.08.2021, ஞாயிறு, மாலை 4:30 மணி
இடம் : பத்மாவதி திருமண மண்டபம், பழைய பேருந்து நிலையம், சீர்காழி

தலைமை : தோழர். வி.ஸ்டாலின்
வரவேற்புரை : தோழர். முருகானந்தம், ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்

நினைவேந்தல் உரை :

திரு எம்.பன்னீர் செல்வம் M.A., B.L., சட்ட மன்ற உறுப்பினர், சீர்காழி
தோழர் M.செல்லப்பன், CPI ஒன்றிய செயலாளர், சீர்காழி
தோழர் K.அசோகன் CPIM ஒன்றிய செயலாளர், சீர்காழி
தோழர் N.குணசேகரன் மாவட்ட செயலாளர், CPI.ML (விடுதலை)
திரு O.M.A. முசாஹுதீன், மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்
வழக்கறிஞர் வேலு.குபேந்திரன் மண்டல செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர் கோ.நீதிவளவன் மாநில துணை செயலாளர், வி.சி.கட்சி
தோழர் ப.கோபாலகிருஷ்ணன் நீதிபதி ஓய்வு, சீர்காழி
திரு சாமி காமராஜ், நிறுவனர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், சீர்காழி தோழர் பெரியய்யா தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அரசு பணியாளர் அமைப்பு தோழர் இராமலிங்கம் ஆசிரியர் (ஓய்வு)
தோழர் தெ.மகேசு மாவட்ட தலைவர், திராவிடர் விடுதலை கழகம்,
தோழர் முத்து.அன்பழகன் மாவட்ட செயலாளர், மா.பெ.பொ.க. சீர்காழி
Er. இரா.கல்யாணசுந்தரம் M.E., P.hD.,
பேராசிரியர் முரளிதரன் மாவட்ட தலைவர், தமிழர் தேசிய முன்னனி
தோழர் க.மா.இரணியன் மாவட்ட செயலாளர், தமிழ் தேச மக்கள் முன்னணி
திரு ந. பரமசிவம் B.A., சென்னை வழக்கறிஞர்,
S.P. நெடுஞ்செழியன், M.A., B.L.,
திரு R. தங்க வேல், முதல்வர், ச.மு.இ.மே.நி.பள்ளி, சீர்காழி
தோழர் ஜீவா, உடையூர்
தோழர் திலிபன், சமூக செயற்பாட்டாளர்
திரு சிவக்குமார், தி.மு.க, சீர்காழி
தோழர் த.செயராமன், நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்
டாக்டர் P.முத்துக்குமார், M.D., குமார் மருத்துவமனை, சீர்காழி
திரு. இமயவரம்பன், ஒருங்கிணைப்பாளர், காவேரி படுகை பாதுகாப்பு இயக்கம் தோழர் சம்பூகன், கும்பகோணம்
தோழர் சுப்பு. மகேசு, தமிழக அமைப்பாளர், தமிழர் உரிமை இயக்கம்
தோழர் ம. குணசேகரன், மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்
தோழர் ம. சந்திரசேகரன், சீர்காழி ஒன்றிய செயலாளர், திராவிடர் கழகம்
தோழர் கோ. நடராஜன், தமிழ்த் தேசிய பேரியக்கம்
தோழர் பரசுராமன், மாவட்ட தலைவர், த.பெ.தி.க
தோழர் அ. நேதாஜி, ஊராட்சி மன்ற தலைவர், புளியந்துறை
தோழர் விடுதலையாளன், மாவட்ட செயலாளர், தமிழர் உரிமை இயக்கம்
தோழர் குணசேகரன், இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மா.லெ)
தோழர் கென்னடி, மக்கள் போராட்ட மையம்
தோழர் இராமலிங்கம், மக்கள் அதிகாரம், கடலூர்
தோழர் செந்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்

தோழர் மருது, செய்தி தொடர்பாளர்
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை

தோழர் அம்பிகாபதி நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! அனைவரும் வாரீர் !!


இவண்
தோழர் ந.அம்பிகாபதி நினைவேந்தல் குழு – சீர்காழி.
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்
செல்: 9791286994

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க