Tuesday, May 6, 2025
முகப்பு பதிவு

மே தின வரலாறு | அலெக்ஸாண்டர்  ட்ராச்டென்பர்க் | பாகம் 5

முதல் உலகப் போரின்போது மே தினம்

போரின்போது சமூக ஜனநாயக கட்சித் தலைவர்கள் செய்த துரோகம் 1915 ஆம் ஆண்டு மே தினத்தின்போது வெளிப்படையாக தெரிந்தது. இது 1914 ஆகஸ்டில் ஏகாதிபத்திய அரசாங்கங்களோடு அவர்கள் செய்துகொண்ட சமரசத்தின் தத்துவார்த்த வளர்ச்சியாகும். ஜெர்மன் ஜனநாயகவாதிகளோ தொழிலாளிகளை வேலை செய்யுமாறு கூறினார்கள். பிரெஞ்சு சோஷலிஸ்டுகளோ ஒரு பிரத்தியேக அறிக்கையில் அதிகார வர்க்கத்திடம் மே தினம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார்கள். போர் நிகழ்ந்த மற்ற நாடுகளிலும் பெரும்பாலான சோஷலிஸ்டுகளிடையே இதே நிலைதான் காணப்பட்டது. ரஷ்யாவில் போல்ஷ்விக்குகளும், மற்ற நாடுகளில் சிறுபான்மையாய் இருந்த புரட்சி சக்திகளுமே சோஷலிசத்திற்கும், சர்வ தேசியத்திற்கும் உண்மையாக இருந்தனர். லெனின், லக்ஸம்பர்க், லீப்ஹ் னெட் ஆகியோர் குருட்டுத்தனமான சமூக வெறிக்கு எதிராக குரல் கொடுத்தனர். 1916, மே தினத்தன்று நடந்த சிறு திரளான தொழிலாளர் ஊர்வலமும், தெருவில் நிகழ்ந்த வெளிப்படையான சிறு சண்டைகளும் போர் நிகழும் நாடுகளில் தொழிலாளர்கள் துரோகத் தலைவர்களின் விஷப்பிடியிலிருந்து தானாகவே வெளியேறி வருகின்றனர் என்பதைக் காட்டுவதாய் இருந்தது. லெனினும் மற்ற எல்லா புரட்சிவாதிகளும் சந்தர்ப்பவாதத்தின் அழிவு (இரண்டாம் அகிலத்தின் அழிவு : ஆ-ர்) தொழிலாளர் இயக்கத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பினர். துரோகிகளிடமிருந்து மீள்வதற்கும் புதிய அகிலத்துக்கான லெனினுடைய அழைப்பிற்கும் ஏற்ற நேரமாக அது இருந்தது.

ஜிம்மாவால்டு (1915), கிந்தால் (1916) ஆகிய இடங்களில் நடந்த சோஷலிச மாநாடுகள், லெனினுடைய முழக்கமான ‘ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம்’ என்பதற்கு ஆதரவாக சர்வதேசப் புரட்சிகரக் கட்சிகள் மற்றும் சிறு சக்திகள் திரளுவதற்கு வழிவகுத்தன. 1916 மே தினத்தன்று கார்ல் லீப்ஹ்னெட்டும் மற்ற அவரது சோஷலிஸ இயக்க ஆதரவாளர்களும் சேர்ந்து பெர்லினில் போலிஸின் தடையுத்தரவையும் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையையும் மீறி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி தொழிலாளி வர்க்கம் உயிருள்ள சக்தி என்பதை நிரூபித்தனர்.

1917 ஆம் ஆண்டு அமெரிக்காவில் போர் பிரகடனப் படுத்தப்பட்டபோது அதனால் மே தினம் நிறுத்தப்படவில்லை. அப்போது ஏப்ரலில் நடந்த செயின்ட் லூயிஸ் அவசர மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யுத்த எதிர்ப்புத் தீர்மானத்தை முழுமூச்சுடன் எடுத்துக்கொண்டு மே தினத்தை அதற்காக பயன்படுத்தினர். பின்னர் 1910 மே முதல் நாள் கிலிவ்லேண்டில் சார்லஸ் ரத்தன்பர்க் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் குறிப்பிடும்படியான போர்க் குணத்தோடு இருந்தது. இவர் உள்ளூர் சோஷலிஸ்டுக் கட்சி ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.

அப்போது பொது சதுக்க வீதியிலே 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணிவகுத்துச் சென்றனர். பின்னர் இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அத்தோடு சேர்ந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தை போலிஸ் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியது. அதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். இன்னொரு தொழிலாளி கடுமையாக காயப்படுத்தப்பட்டார்.

1917 ஆம் ஆண்டு மே தினமும், ஜூலை மாதத்து நாட்களும் இறுதியாக அக்டோபர் மாதத்து நாட்களும் ரஷ்யப் புரட்சிக்கு படிப்படியாக ஒரு நினைவைக் கொடுத்தது. மனிதகுல வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கிய ரஷ்ய புரட்சியானது, மே தினத்திற்கு புதிய உத்வேகத்தையும் முக்கியத்துவத்தையும் தந்தது. 1890 ஆம் ஆண்டு மே தினத்தின்போது நியூயார்க் யூனியன் சதுக்கத்தில் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்கள் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையே பின்வருமாறு முழங்கினர். “8 மணி நேர வேலைநாளுக்காகப் போராடும் இதே நேரத்தில் நமது இறுதி லட்சியமான இந்த கூலி (முதலாளித்துவ) அமைப்பை தகர்த்தெறிவதிலிருந்து விலக மாட்டோம்.” இந்த முழக்கம் முதன் முறையாக உலகின் ஆறில் ஒரு பகுதியில் பாட்டாளி வர்க்க சக்தியின் வெற்றியாக நினைவாக்கப்பட்டது.

இந்த லட்சியத்தை அடைந்ததிலே முதலானவர்கள் என்பதை ரஷ்யத் தொழிலாளர்கள் நிரூபித்துக் காட்டினர். ஆனால் 1917 ஆம் ஆண்டின்போது, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்கள், தாங்கள் 1890ல் முழங்கிய குறிக்கோளிலிருந்து வெகுதூரத்தில் இருந்தார்கள். அவர்களின் முக்கிய நோக்கம் முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாப்பதும், அமெரிக்க ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு சுலபமான வழிவகுப்பதுமாக இருந்தது. உலகத் தொழிலாளர் ஒற்றுமை, முதலாளித்துவ அமைப்பிலிருந்து விடுதலை போன்ற பிரகடனங்களை முழங்கிய மே தினத்திற்கு புதிய சக்தியை வழங்கிய ரஷ்யப் புரட்சியினால் அமெரிக்கத் தொழிலாளர்கள் உத்வேகம் பெறுவதை அந்தத் தலைவர்கள் விரும்பவில்லை.

1923ஆம் ஆண்டு மே தினத்தின்போது ‘தொழிலாளி’ என்ற வார பத்திரிகையின் ஆசிரியர் சார்லஸ் ரத்தன்பர்க் பின்வருமாறு எழுதுகிறார். “மே தினம் உலகெங்கிலுமுள்ள முதலாளிகளின் உள்ளத்திலே அச்சத்தையும், தொழிலாளிகளின் உள்ளத்திலே நம்பிக்கையையும் உருவாக்கும் தினம். வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அமெரிக்காவில் கம்யூனிஸ இயக்கம் பலமாக இருக்கும். மாபெரும் சாதனைகளுக்கான பாதை தெளிவாக இருக்கிறது. அமெரிக்காவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் எதிர்காலம் என்பது கம்யூனிஸத்திற்கே உரியதாய் இருக்கும்.”

அதே ‘தொழிலாளி’ பத்திரிகையில் ஒரு தலைமுறைக்கு முன் 1907ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் நாள் மே தினம் குறித்து யூகின் டெப்ஸ் என்பவர் பின்வருமாறு எழுதுகிறார். “இந்த தினம்தான் முதலாவதும், ஒன்றேயுமான உலகத் தொழிலாளர் தினம். இந்த நாள் புரட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளி வர்க்கத்துக்குரிய நாளாகும்.”

மே தினத்தின் வளர்ந்து வரும் போர்க்குண பாரம்பரியத்தை எதிர்க்கும் வகையில், செப்டம்பர் முதல் திங்கட்கிழமையை மே தினத்துக்கு பதிலான தொழிலாளர் தினமாகக் கொண்டாடுவதாக அமெரிக்கக் கூட்டமைப்பின தலைவர்கள் ஊக்குவித்தனர். இந்த தினம் முதன் முதலில் 1885ல் உள்ளூர் அளவில் கொண்டாடப்பட்டது. பின்னர் பல மாநில அரசுகளால் இந்த தினம் மே தினக் கொண்டாட்டங்களை முறியடிக்கும் வகையில் நடத்தப்பட்டது.

இதே போன்று மே தினத்துக்கு எதிராக, ஹீவர் நிர்வாகம் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்போடு சேர்ந்து மே முதல் நாளை குழந்தைகள் நல தினமாக அறிவித்தது. குழந்தைகள் நாளில் திடீரென்று பிறந்த இந்த அக்கறையின் உண்மையை நாம் 1928 ஆம் ஆண்டு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாட்டில் நிர்வாகக் குழு சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அந்த அறிக்கை பின்வருமாறு சொல்கிறது.

“கம்யூனிஸ்டுகள் மே முதல் நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடுகிறார்கள். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இனிமேல் மே முதல் நாளை, அமெரிக்க மக்கள், குழந்தைகள் தினமாக கொண்டாடும்படி அழைக்க வேண்டும் என்று தலைவரைக் கேட்டுக் கொள்கிறது. ஆண்டு முழுவதும் குழந்தைகள் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம். இதுதான் மிகுந்த பயனுள்ள நோக்கமாகும். அதே நேரத்தில் இனி மே தினம் கம்யூனிஸ்டு தினமாகவோ அல்லது வேலைநிறுத்த தினமாகவோ அறியப்பட மாட்டாது.”

1929ல் ஏற்பட்ட நெருக்கடி

முதல் உலகப் போருக்குப் பத்தாண்டுக்குப் பின்னும் லட்சோபலட்ச மக்கள் முதலாளித்துவ அழிவுப் பாதையில் சிக்கியிருந்தார்கள். அனுபவங்களிலிருந்து பாடம் பெற மறுத்த பிற்போக்கு தொழிற்சங்கத் தலைவர்களோ இந்த மக்களைத் திரட்டுவதற்கு பதிலாக முதலாளித்துவத்தின் கீழ் நிரந்தர செழுமை என்ற மாயையைப் பரப்புவதில் தீவிரமாய் இருந்தார்கள். 1929 இறுதியில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. அப்போது சொத்துடையவர்களும், ஏசுபோகவாதிகளும் எல்லா சுமையையும் தொழிலாளர்கள் தலையின் மீது சுமத்தப் பார்த்தார்கள். அப்போது தொழிலாளர்களுக்கு ஒரே பாதுகாப்பாக இருந்தது வேலைநிறுத்தமும், வேலையில்லாதவர்களின் வெகுஜனப் போராட்டமுமேயாகும். கம்யூனிஸ்டுகள் இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர். இதனால் அமெரிக்கத் தொழிலாளர்கள் பெரும் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டனர். அவர்களின் ஜனநாயக உரிமைகள் விரிவுபடுத்தப்பட்டன. என்றுமில்லாத அளவுக்கு அமெரிக்க தொழிலாளர் வரலாற்றில் 1930களில் புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்த முடிந்தது. 1935ஆம் ஆண்டு சி.ஐ.ஓ. துவக்கப்பட்டது. பெரும் தொழிற்சாலைகள் வேகமாக ஸ்தாபனப்படுத்தப்பட்டன. இவையெல்லாம் அமெரிக்க முக்கியத்துவத்தைத் தந்தன. அமெரிக்கத் தொழிலாளர்களின் இந்த எழுச்சியால் நீக்ரோ மக்களின் சம உரிமைக்கான போராட்டம் நடத்துவதற்கான காலம் ஏதுவானது. அதன் காரணமாக அமெரிக்க ஜனநாயக முன்னணி மேலும் வலுவடைய முடிந்தது.

ஏகாதிபத்திய யுத்தம், புரட்சி, முன்னெப்போதும் இருந்திராத பொருளாதார நெருக்கடி இவை பதினைந்து ஆண்டுகளுக்குள் முதலாளித்துவத்தை ஆட்டங்காண வைத்தன. இதனால் அது பெரும் நெருக்கடிக்குள்ளானது. முதல் உலகப் போருக்குக் காரணமாய் இருந்த ஏகாதிபத்தியப் போட்டிகள் இப்போது இன்னும் தீவிரமாயின. மேலும் உலகின் ஆறில் ஒரு பகுதியில் முதலாளித்துவம் துடைத்தெறியப்பட்டதும், காலனி நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களின் அதிகரிப்பும், வளர்ந்து விட்ட முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஜனநாயக உரிமைக்காகவும் தீவிரமாகப் போராடியதும் இந்த பொதுவான முதலாளித்துவ நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியது. இதனால் தங்கள் அரசியல் பொருளாதார வாழ்வை காத்துக்கொள்ளவும் தவிர்க்க முடியாத வரலாற்று வளர்ச்சியினைத் தடுத்து நிறுத்தவும் வேறு வழியின்றி முதலாளிகளும் ஏகபோகவாதிகளும், பாசிச பயங்கர சர்வாதிகாரம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்தார்கள். தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனி, மற்ற நாடுகளில் தொழிலாளர் மற்றும் முற்போக்கு சக்திகளிடையே இருந்த பலவீனம் மற்றும் ஒற்றுமையின்மையாலும், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்த நாடுகளில் இருந்த பாசிச சக்திகளை ஊக்குவித்ததாலும், இந்த நாடுகளில் பாசிசம் வெற்றி பெற ஏதுவாகிறது. நூற்றாண்டு காலமாய் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமையை அழிப்பதற்கு உலகம் முழுவதுமான ஏகபோக மூலதனத்தின் முயற்சியை இது காட்டுவதோடு, இரண்டாவது உலகப்போருக்கான பாதையையும் இது தெளிவாக்குகிறது.

பாசிசத்திற்கு எதிரான யுத்தம்

1933லிருந்து 1939 வரை ஜெர்மன் பாசிசம் உலகெங்குமுள்ள பிற்போக்குத்தனத்தின் முன்னோடியாய் திகழ்ந்தது. சோஷலிச நாடுகளுக்கு எதிராக ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் நாஜி ஜெர்மனியை ஆதரித்தன. ஜெர்மனி பாசிசமோ உலகம் முழுவதையும் தன் கீழ் கொண்டுவர எண்ணியது. இதன் காரணமாக இரண்டாம் உலக யுத்தத்துக்கான தயாரிப்புகள் முறைப்படி செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஜப்பானிய ஏகபோகவாதிகளும் தங்கள் சொந்த நலனுக்காக இந்த சதியில் கை கோர்த்து நின்றனர். இந்த யுத்தம் அதன் சொந்தத் தன்மை காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் சுதந்திரத்திற்கு எதிராகத் திருப்பப்பட்டது. இச்சூழ்நிலையில் மனிதகுல முன்னேற்றத்தின் விதி மற்ற இடங்களில் உள்ள விவசாய மற்றும் ஒடுக்கப்பட்ட காலனி மக்களோடு இணைகின்ற தொழிலாளர்களின் கையிலேதான் உள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. ஏகபோக முதலாளிகள் வளர்ந்து வரும் அழிவு சக்தியைத் தடுக்கும் பொருட்டு ஜனநாயக மற்றும் தேசிய சக்திகளைத் திரட்டுவது என்பது இவர்களின் முயற்சி, ஒற்றுமை, எதிர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருந்தது. எனவே முப்பதுகள் முழுதும் நடந்த மே தினம், புதிய உலக அழிவைத் தடுக்கும் பொருட்டு, பாசிச ஆக்ரமிப்புக்கு எதிராக, உலக மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒற்றுமைக்காக குரல் கொடுப்பதாக இருந்தது.

உழைக்கும் வர்க்கம் நாட்டின் முதுகெலும்பு என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது உலக யுத்தம் நிரூபித்தது. உழைக்கும் மக்கள் மட்டும் பிளவுபட்டிருந்தால், பாசிசம் தனது அதிகாரத்திற்கு உலகையே நாசகர யுத்தத்தில் மூழ்கடித்திருக்கும். ஆனால், பாசிசத்தால் ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்தைப் பாதுகாக்க உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மையான ஜனநாயக சக்திகளைத் திரட்டி, போராடக்கூடிய உழைக்கும் வர்க்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லை.

சுதந்திரம், ஜனநாயகம், வளர்ச்சி இவற்றிற்காக இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் இருந்தது. இந்தப் போராட்டத்தின் முன்னணியில் சோவியத் யூனியனும், மற்ற நாடுகளின் உழைக்கும் மக்களும் இருந்ததை உலகெங்கிலுமுள்ள ஜனநாயக சக்திகள் கண்டனர். யுத்தத்தின் போது வேலைநிறுத்தம் மூலமும், பாசிச படையை அழிப்பதற்கான ஆயுதங்களைத் தயாரிப்பதன் மூலமும் எல்லா இடங்களிலும் உழைக்கும் வர்க்கம் மே தினத்தை அனுஷ்டித்தது. 1945ல் யுத்தம் முடிவுற்றபோது பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் விடுதலையும், வெற்றியும் அடைந்த ஐரோப்பிய நாடுகளில் மே தினங்களின்போது திரண்டதை எல்லா நாடுகளும் கண்டன . அந்த ஆர்ப்பாட்டங்களின்போது, பாசிசத்தின் மிச்ச சொச்சங்களை வேரொடு அழிக்க தொடர்ந்து போராடுவது என்றும், பாசிச ஆயுதத்தை மீண்டும் கையிலெடுக்காத வண்ணம் ஏகபோகத்தை அழித்தொழிக்க மற்ற முற்போக்கு சக்திகளோடு தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைப் பூரணமாக்குவது என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாத்து விரிவுபடுத்தவும், மக்கள் சக்தியை ஆட்சியாக்கவும், நிலையான அமைதியை உருவாக்கவும், சுரண்டலும் ஒடுக்கு முறையும் அற்ற சோஷலிஸ உலகை நிர்மாணிக்கப் பாதை வகுக்கவும் தொழிலாளி வர்க்கம் உறுதி பூண்டது.

மனித குலத்தின் அமைதி மற்றும் மகிழ்வான எதிர்காலத்திற்காக போராடுவதன் மூலமும் எல்லா நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கம், சர்வதேச ஐக்கியம் மற்றும் தோழமையுணர்வு அடிப்படையில் மே தினத்தன்று உலக மக்களை வணக்கம் செய்கிறது.

(முற்றும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 மார்ச், 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 8 | 1991 மார்ச் 01-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஏகாதிபத்திய வெற்றியும் எதிர்விளைவுகளும்
  • கழக கண்மணிகளின் கட்சிப் பற்று!
  • ’பட்ஜெட்’ தள்ளிவைப்பு ஏன்?
  • நாடாளுமன்ற ஜனநாயகம்: பிரமை தேவையில்லை
  • சூதாட்டக்களம்
  • கேள்வி – பதில்
  • போர் எதிர்ப்புப் புயல்
  • சதாமின் மறுபக்கம்
  • பிணந்தின்னியின் ஜனநாயக மோகம்!
  • உ.பி. – பீகார்: கொலைக் கிரிமினல்கள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ’மார்க்சிஸ்டு’ குண்டர்களின் மகத்தான ‘சாதனை’!
  • பதுக்கல் போர்வழிக்கு பாதுகாப்பு போராளிகளுக்கு பொய் வழக்கு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



கார்ல் மார்க்ஸ்: ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை! | மீள்பதிவு

இந்தப் பதிவு ஜூன் 29, 2018 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது. பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் காரல் மார்க்ஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது மீள்பதிவு செய்யப்படுகிறது.

***

மார்க்ஸ் பிறந்தார் – 14
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

6. “யதார்த்தத்தை இரக்கமற்ற முறையில் விமர்சனம் செய்தல்”

ஒரு அரசாங்கம் மக்களுக்கு விரோதமாக இருக்குமானால் அதன் நடவடிக்கைகள் அனைத்தும் – “நல்லவை” கூட- எதிரானவையாக மாறிவிடுகின்றன. “சட்டத்தை” அமுலாக்க முயற்சிக்கின்ற பொழுது அது அராஜகத்தை, சட்டத்தை மீறலைத் துணையாகக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறது. அது தான்தோன்றித் தனத்தைச் சட்டத்தின் நிலைக்கு உயர்த்துகிறது.

பத்திரிகைகள் விமர்சனம் செய்கின்ற உரிமையை அது பறிப்பதனால் அரசாங்க அதிகாரிகளின் மீது விமர்சனக் கடமையைச் சுமத்துகிறது, “தனிநபர்களே” ஆதரிப்பதன் மூலம் அது தனிநபரைக் கீழிறக்குகிறது; அந்தத் தனிநபர் சொந்தக் கருத்தை வைத்துக் கொள்கின்ற உரிமையைக் கூடப் பறித்து விடுகிறது.

தேசிய உணர்ச்சியை அதிகப்படுத்த முயற்சிக்கும் பொழுது அது “தேசிய இனத்தை அவமதிக்கின்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.” அரசாங்க ஆணை “அதிகாரிகளிடம் அளவுக்கு மீறிய நம்பிக்கையைக்” கோருகிறது; “அதிகாரிகள் அல்லாதவர்களிடம் அளவுக்கு மீறிய அவநம்பிக்கையிலிருந்து முன்னே செல்கிறது”.

பிரஷ்ய அதிகாரி “பாதுகாவலர்” என்ற பாத்திரத்தில் செயல்படுகிறார், “மூளையைக் கட்டுப்படுத்துகின்ற” பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விஞ்ஞானத் தகுதியுடைய விஷயங்களைப் பற்றித் தீர்ப்பு வழங்குவதற்கு அவருக்கு விஞ்ஞானத் தகுதி இருக்கிறதா என்பதைப் பற்றி மிகச் சிறிதளவு சந்தேகம் கூட ஏற்படுவதில்லை.

இந்த அதிகாரவர்க்கக் கோட்பாட்டில் அமைந்திருக்கும் கிண்டலை மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார். சிந்தனையாளர்களைப் பற்றித் தகுதியுடன் மதிப்பிடுவதற்கு அதிகாரி எல்லாத் துறைகளிலும் அவர்களைக் காட்டிலும் உயர்ந்த தகுதியுடையவராக இருக்க வேண்டும்.

ஒரு வேளை “அரசாங்கத்துக்குத் தெரிந்த சர்வாம்ச மேதைகள் கூட்டம்” உண்மையாகவே பிரஷ்யாவில் வசிக்கலாம். அப்படியானால் இந்தக் “கலைக்களஞ்சிய மேதைகள்” எழுத்தாளர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் ஏன் முன்வருவதில்லை?

எண்ணிக்கையில் ஏராளமாகவும் விஞ்ஞான அறிவினாலும் மேதாவிலாசத்தினாலும் மாபெரும் பலமுடையவர்களாகவும் இருக்கின்ற இந்த அதிகாரிகள் சமூக மேடையில் தோன்றி பரிதாபகரமான எழுத்தாளர்களைத் தங்களுடைய கணத்தினால் ஏன் நசுக்கவில்லை?

சிந்தனைத் துறையில் ஒழுங்கை பாதுகாப்பவர்களை நியமித்து, அவர்களையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற இந்த அதிகாரிகளின் மேதாவிலாசம் இன்னும் எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும்? “இந்த அறிவின் அதிகாரவர்க்கத்தில் எவ்வளவு மேலே நாம் போகிறோமோ அந்த அளவுக்கு நாம் சந்திக்கின்ற மூளைகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.”

ஒரு அதிகாரவர்க்க, போலீஸ் அரசில் எல்லாத் தணிக்கைக்கும் மேலே இன்னொரு உயர்ந்த தணிக்கை இருக்கிறது; ஒவ்வொரு அதிகாரியின் எதேச்சாதிகாரமும் அவருக்கு மேலே இருக்கின்ற அதிகாரியின் எதேச்சாதிகாரத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

அத்தகைய அமைப்பில் “மூன்றாவது அல்லது தொண்ணூற்று ஒன்பதாவது கட்டத்தில் சட்டத்தை மீறல் தொடங்குவது” தவிர்க்க முடியாதது. அதிகாரவர்க்க அரசு இந்தத் துறையை நம் கண்களுக்குத் தெரியாமலிருக்கும்படி மிகவும் உயரத்தில் வைப்பதற்கு முயற்சி செய்கிறது.

“தணிக்கை முறையை ஒழிப்பதே அதற்குத் தீவிரமான மருந்து; ஏனென்றால் அந்த அமைப்பே மோசமானதாகும்.” என்ற இயற்கையான முடிவுக்கு இந்தப் பகுப்பாய்வு மார்க்சை இட்டுச் சென்றது.

முதலாளித்துவ அரசின் “அதிகாரவர்க்க” இயந்திரத்தை அழிக்க வேண்டிய அவசியத்தை மார்க்ஸ் இங்கே போதிக்கவில்லை; ஆனால் அந்தக் கருத்தை மிகவும் நெருங்கி வருகிறார்.

மார்க்ஸ் தன் முதிர்ச்சிக் காலத்தில் தணிக்கை அரசாணையைப் பற்றிய இந்தக் கட்டுரையை மிக உயர்வாக மதிப்பிட்டார் என்பது 1851ம் வருடத்தில் வெளிவரத் தொடங்கிய அவருடைய கட்டுரைகளின் தொகுப்பில் முதல் கட்டுரையாக அதை வைத்தார் என்பதிலிருந்து விளங்கும் (முதல் தொகுதி வெளியான பிறகு அரசாங்க நிர்ப்பந்தம் காரணமாக இப்பதிப்பு நிறுத்தப்பட்டது).

அக்கட்டுரை மிகவும் தீவிரமான முறையில் எழுதப்பட்டிருந்தபடியால் அதை ஜெர்மனியில் அச்சடிக்கின்ற பேச்சுக்கே இடமில்லை. மார்க்ஸ் எதிர்பார்த்ததைப் போல தணிக்கை முறை அக்கட்டுரையைத் தடை செய்தது; அதன் மூலம் அக்கட்டுரையில் அதைப் பற்றி எழுதப்பட்டிருந்த வர்ணனை எவ்வளவு துல்லியமானது என்பதை நிரூபித்தது. அக்கட்டுரை முதல் தடவையாக 1843-இல் ஸ்விட்சர்லாந்தில் வெளியிடப்பட்டது.

ஆனால் 1842ம் வருடத்தின் வசந்தகாலத்தில் Rheinische Zeitung பத்திரிகையில் ரைன் மாநில சட்டசபையில் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றிய விவாதங்களைப் பற்றிக் கட்டுரை எழுதினார். அதில் இப்பிரச்சினையை வேறொரு கோணத்திலிருந்து அணுகினார்.

பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றி சபையின் உறுப்பினர்கள் தெரிவித்த பல்வேறு கருத்துக்களுக்கும் அவர்களுடைய சமூக-வர்க்க அந்தஸ்துக்கும் இடையிலுள்ள நேரடியான இணைப்பை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். அவர் பின்பற்றிய புதிய அணுகுமுறை இந்த உண்மையில் அடங்கியிருக்கிறது. இது முன்னே வைக்கப்பட்ட முக்கியமான காலடியாகும்.

பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றிய விவாதத்தில் “சமூகக் குழுக்களின்” நலன்கள் சமரசப்படுத்த முடியாதபடி மோதுவதால், “பொதுவான” சுதந்திரம் இல்லை என்பது தெளிவாயிற்று, ஒவ்வொரு சமூகப் பிரிவும் தன்னுடைய “சொந்த” சுதந்திரத்தை ஆதரிக்கிறது.

முதலாளி வர்க்க, விவசாய வர்க்கக் குழுக்கள் கூட பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றித் தங்களுடைய கோரிக்கைகளின் குறுகிய தன்மையை விளக்கிவிட்டார்கள் என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். முதலாளி வர்க்க பத்திரிகைச் சுதந்திரம்-அது அப்பொழுது பிரான்சில் இருந்த வடிவத்தில்கூட- போதுமான சுதந்திரத்தைக் கொண்டிருப்பதாக மார்க்ஸ் கருதவில்லை.

பிரெஞ்சுப் பத்திரிகைகள் “ஆன்மிகத் தணிக்கைக்கு உட்பட்டிருக்காவிட்டாலும்… அவை பெருந்தொகைகளைப் பிணையாகக் கட்ட வேண்டியிருப்பதால் பொருளாயதத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன”, அவை “பெரும் வர்த்தக சூதாட்டத் துறைக்குள் இழுக்கப்பட்டிருக்கின்றன.”

இங்கே ஒரு புதிய கருத்து தோன்றுவதைத் தெளிவாகப் பார்க்கிறோம்: “ஆன்மிகத் தணிக்கை” “பொருளாயதத் தணிக்கையை”, முதலாளித்துவச் சமூகத்தின் வர்த்தக – பணவியல் உறவுகளைச் சார்ந்திருக்கின்றது. இக்கருத்து மார்க்ஸ் அடுத்தடுத்து எழுதிய ஒவ்வொரு புத்தகத்திலும் மேலும் வளர்த்துக் கூறப்படுவதை நாம் காண்கிறோம்.

ஜெர்மானிய மிதவாத அறிவுஜீவிகள் முதலாளித்துவ சுதந்திரங்களைத் தம்முடைய இலட்சியமாகக் கொண்டிருந்தனர்; ஆனால் மார்க்ஸ் அவற்றைத் தன் இலட்சியமாக ஒருக்காலும் கருதவில்லை என்பதை அவருடைய முதல் பத்திரிகைக் கட்டுரையே எடுத்துக்காட்டுகிறது. அவர் ஆரம்பத்திலேயே புரட்சிகர ஜனநாயகவாதியாகத் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மிகவும் தீவிரமான முதலாளிவர்க்க மிதவாதிகள் செய்ய முடிந்ததைக் காட்டிலும் அதிக ஆழமான, முரணில்லாத முறையில் ஜெர்மானிய யதார்த்தத்தை விமர்சனம் செய்தார்.

ஒரு முறை சுதந்திரத்தை அனுபவித்த பிறகு ஒரு நபர் அதற்காக “ஈட்டிகளை மட்டுமல்லாமல் கோடரிகளையும் உபயோகித்துப்” போராட வேண்டும் என்று ஹெரடோடஸ் கூறியதை மேற்கோளாகக் காட்டி பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது விவாதத்தைப் பற்றிய தன்னுடைய கட்டுரையை மார்க்ஸ் முடிக்கிறார்.

Rheinische Zeitung பத்திரிகையில் மார்க்ஸ் மேதாவிலாசத்துடன் எழுதத் தொடங்கிய பொழுது அது உண்மையிலேயே பரபரப்பூட்டியது. மார்க்ஸ் தன்னுடைய திறமைகளை நிரூபிக்க வேண்டும் என்று நெடுங்காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள் திருப்தியடைந்தனர். பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றியும் அதை ஆதரித்தும் இப்படி மிக ஆழமான, நன்கு வாதிக்கப்பட்ட முறையில் இதற்கு முன்பு ஒருபோதும் எழுதப்படவில்லை என்று அ. ரூகே கூறினார்.

Rheinische Zeitung பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் மார்க்சின் செல்வாக்கு இதற்கு முன்பு கணிசமாக இருந்தது. அது இக்கட்டுரைத் தொடருக்குப் பிறகு மிகவும் அதிகரித்துவிட்டபடியால் மார்க்ஸ் அதன் தலைவர்களில் ஒருவரானார். சிறிது காலத்துக்குப் பிறகு அப்பத்திரிகையின் தலைமை ஆசிரியராக அவர் நியமிக்கப்பட்டார். ரைன் மாநில சட்டசபையில் மரங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் சட்டத்தின் மீது நடைபெற்ற விவாதங்களைப் பற்றி இப்பத்திரிகை 1842 அக்டோபரில் ஒரு புதிய கட்டுரைத் தொடரை வெளியிட்டது.

மார்க்சின் படைப்பாற்றல் நிறைந்த வாழ்க்கையில் இக்கட்டுரைகள் முக்கியமானவையாகும். முதல் தடவையாக அவர் சூக்குமக் கருத்தாக்கம் என்ற வானத்திலிருந்து “உறுதியான பூமிக்கு” வரும்படி, அதாவது ஹெகலின் தத்துவஞான அமைப்பில் இடம்பெறாத பொருளாயத நலன்களைப் பற்றி எழுதும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இந்தச் சமயத்திலிருந்து மார்க்சினுடைய சிந்தனை சமூகத்தின் வர்க்க மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பைப் பகுத்தாராய்கின்ற திசையில் செலுத்தப்பட்டது. மரம் திருடப்படுவதைப் பற்றிய விவாதங்களைப் பற்றிய கட்டுரையைப் படிக்கின்ற பொழுது புதிய கருத்துக்களின் “உதயத்தை” அறிவிக்கின்ற முதல் “மின்னல் வீச்சுக்களை” நாம் கற்பனை செய்ய முடிகிறது.

மரங்கள் திருடப்படுவதும் வேட்டையாடுதல் மற்றும் காடுகளைப் பாதுகாத்தலைப் பற்றிய சட்டங்கள் மீறப்படுவதும் பொருளாதார வாழ்க்கையில் அற்பமான விஷயமாகத் தோன்றும். ஆனால் அவற்றுடன் தொடர்புடைய சந்தர்ப்பங்களைப் பற்றி செய்யப்பட்ட ஆராய்ச்சி பெருந்திரளான ஏழை மக்களின் வறுமை நிலையையும் அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் மறுக்கப்பட்டிருப்பதையும் முழுமையாக எடுத்துக் காட்டியது.

பெரிய நிலவுடைமையாளர்களின் நலன்களுக்குச் சாதகமான முறையில் அடிப்படை மனித உரிமைகள் எவ்வளவு அவமானகரமான முறையில் மீறப்பட்டன, தனிச் சொத்துடைமைக்காக மக்கள் எப்படி பலியிடப்பட்டார்கள் என்பதை மார்க்ஸ் கண்டார்.

“தனிச் சொத்துடைமை” மனித விரோதமானது, அது தனி நபருக்கு எதிராக இருக்கிறது, தனி நபருக்கு எதிராக எல்லாவிதமான குற்றங்களையும் நியாயப்படுத்துகிறது, அது மனிதனை மிருகத்தின் நிலைக்குத் தாழ்த்திவிடுகிறது என்பவை அவருக்கு மிகவும் தெளிவாயிற்று.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மே தின வரலாறு | அலெக்ஸாண்டர்  ட்ராச்டென்பர்க் | பாகம் 4

உலக மே தினம் குறித்து எங்கெல்ஸ்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஜெர்மன் நான்காவது பதிப்புக்கு 1890, மே 1ஆம் தேதி எங்கெல்ஸ் முகவுரை எழுதுகிறார். அதில் உலக பாட்டாளி வர்க்க ஸ்தலங்களை விமர்சிக்கும் போது முதலாவது உலக மே தினம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். “நான் இந்த வரிகளை எழுதிக்கொண்டிருக்கும் இதே நேரத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பாட்டாளி வர்க்கம் தனது பலத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. அது முதன்முறையாக ஒரே கொடியின் கீழ் ஒரு படையாக 8 மணி நேர வேலைநாள் சட்டமாக வேண்டும் என்ற ஒரே உடனடியான நோக்கத்திற்காகத் திரண்டிருக்கிறது. நாம் பார்க்கக் கூடிய இந்த அற்புதமான காட்சி உலகெங்கிலுமுள்ள முதலாளிகளையும் நிலப்பிரபுக்களையும் எல்லா நாடுகளிலுமுள்ள பாட்டாளிகளும் இணைந்துவிட்டனர் என்ற உண்மையை உணரச் செய்யும். மார்க்ஸ் மட்டும் இந்த காட்சியைப் பார்ப்பதற்கு என்னுடன் இன்று உயிரோடிருந்தால்…”

உலகம் முழுவதும் இப்போராட்டம் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது. இது உலகத் தொழிலாளர்களின் புரட்சிகர உணர்வையும் சிந்தனையையும் ஆழமாகத் தொட்டது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

1893ல் அகிலத்தின் மாநாடு ஜூரிச்சில் நடைபெற்றது. அதில் எங்கெல்ஸ் கலந்து கொண்டார். அப்போது நிறை வேற்றப்பட்ட மே முதல் நாள் தீர்மானத்தில் சேர்க்கப்பட்ட சேர்க்கை தொழிலாளர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

உழைக்கும் வர்க்கத்தின் பிரதான விருப்பம் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்கப் பாகுபாடுகளை அழித்தொழிப்பது, மற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவது ஆகும். மே தின ஆர்ப்பாட்டங்கள் எட்டு மணி நேர வேலைநாளுக்காக மட்டுமல்லாமல் மேற்கூறிய விஷயங்களுக்கும் பயன்பட வேண்டும்.”

மே தினத்தைப் போராட்ட தினமாக அனுஷ்டிப்பதற்கு பதிலாக கேளிக்கை மற்றும் ஓய்வு தினமாக மாற்றுவதன் மூலம் பல கட்சிகளின் சீர்திருத்தத் தலைவர்கள் மே தினத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைக்க முயற்சித்தார்கள். இதற்காக மே தினத்தை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை தள்ளி வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஞாயிற்றுக் கிழமை ஏற்கனவே விடுமுறை நாள். எனவே அவர்கள் வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம். சீர்திருத்தத் தலைவர்களுக்கு மே தினம் பூங்காவில் விளையாடுவதற்கும், கலை நிகழ்ச்சிக்குமான உலக விடுமுறை நாளாகும். ஜூரிச் மாநாடு மே தினம் முதலாளித்துவச் சுரண்டல், அடிமைத்தனம் வர்க்க வேறுபாடுகள் ஆகியவற்றை அழித்தொழிப்பதற்காகப் போராடும் நாள் என்று தீர்மானித்தது. இந்த தீர்மானம் இந்தத் தலைவர்களை ஒரு சிறிதும் பாதிக்கவில்லை. ஏனெனில், அகிலத்தின் முடிவுகள் தங்களைக் கட்டுப்படுத்தும் என்பதையே அவர்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. சர்வதேச சோஷலிச மாநாடு என்பது அவர்களைப் பொறுத்தவரை போருக்கு முன்பு ஐரோப்பிய தலைநகரங்களில் நடந்த பல்வேறு மாநாடுகளைப் போல சர்வதேச நட்பு மற்றும் நல்லெண்ணத்திற்கான ஒரு கூட்டமாகவே இருந்தது. பாட்டாளி வர்க்க நடவடிக்கைகளை அவர்கள் முறியடிக்கவும் அலட்சியப்படுத்தவும் எல்லா வேலைகளையும் செய்தார்கள். தங்களுக்கு ஒத்துவராத மாநாட்டுத் தீர்மானங்களைக் கிடப்பிலே போட்டார்கள். இருபதாண்டுகளுக்குப் பின் இந்த சீர்திருத்தவாதத் தலைவர்களின் சோஷலிஸமும் சர்வதேசியமும் நிர்வாணமாக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டது. 1914ல் இந்த சர்வதேச மேடை சீர்குலைந்தது. காரணம் இது தோன்றிய நாளிலிருந்தே இதன் அழிவு சக்தியாக தவறான பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய சீர்திருத்தவாதத் தலைவர்கள் இதனுள்ளே இருந்துவந்தார்கள்.

1900 ஆம் ஆண்டு நடைபெற்ற அகிலத்தின் பாரிஸ் மாநாட்டில், முந்திய மாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மேலும் தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில்,மே முதல் நாள் வேலைநிறுத்தம். மே தின ஆர்ப்பாட்டத்தை மேலும் பயனுள்ளதாக்கும் என்ற வாக்கியமும் சேர்க்கப்பட்டது. அடுத்து வந்த மே தின ஆர்ப்பாட்டங்கள் மேலும் பலத்தோடு திகழ்ந்தன. ஆர்ப்பாட்டத்திலும் வேலைநிறுத்தத்திலும் கலந்துகொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வந்தது. உலகெங்கிலுமுள்ள ஆளும் பிற்போக்கு சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கையாக வரக்கூடிய மே தினங்கள் ஒரு சிவப்பு தினமாக மாறியது.

மே தினம் குறித்து லெனின்

மே தினத்தை ஓர் ஆர்ப்பாட்ட, போராட்ட தினமாக ரஷ்ய தொழிலாளர்களுக்கு லெனின் தன்னுடைய ஆரம்பகால ரஷ்யப் புரட்சி இயக்க நடவடிக்கையின்போதே அறியச் செய்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர் விடுதலைப் போராட்ட சங்கம் ரஷ்யாவில் இருந்த ஒரு மார்க்சிய அரசியல் குழு. இந்த சங்கத்துக்காக 1896 ஆம் ஆண்டு லெனின் சிறையில் இருந்தபோது மே தின துண்டுப் பிரசுரம் ஒன்றை எழுதினார். அந்தப் பிரசுரம் சிறையிலிருந்து கடத்தப்பட்டு 200 பிரதிகள் எடுக்கப்பட்டு 40 தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடையே விநியோகிக்கப்பட்டது. அந்தப் பிரசுரம் மிகவும் சுருக்கமாக, லெனினுக்கே உரிய நேரிடையான மற்றும் எளிமையான முறையில் சாதாரண தொழிலாளியும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதப்பட்டது. “பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப் பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆரம்ப உத்வேகத்தைத் தந்ததே அந்தச் சிறிய மே தினப் பிரசுரம்தான்” என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார். தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் முதலாளிகளின் நலனுக்காக எங்ஙனம் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், தங்களின் நிலையில் முன்னேற்றத்தைக் கோருபவர்கள் எவ்வாறு அரசாங்கத்தால் தணிக்கப்படுகிறார்கள் என்பதையும் சொல்லிய பிறகு, மே தினத்தின் முக்கியத்துவம் குறித்து லெனின் எழுதுகிறார்.

“பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டுத் தொழிலாளர்கள் ஏற்கனவே வலுவான சங்கங்களின் கீழ் அணிதிரண்டு தங்களின் பல உரிமைகளை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் ஏப்ரல் 19 (மே 1. ரஷ்ய நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாட்காட்டியைவிட 13 நாட்கள் பிந்தியது) அன்று பொது வேலைநிறுத்த நாளாக அனுஷ்டித்தார்கள். காற்று வசதியற்ற தங்கள் தொழிற்சாலைகளை விட்டு, விரிந்த பதாகைகளுடன் தொழிலாளர்கள் தெருவிலே இறங்கினர். முதலாளிகளுக்கும் அவர்களின் வளர்ந்து வரும் சக்திக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இசைக்கு ஏற்ப நகரங்களின் முக்கிய வீதிகள் வழியே அணிவகுத்துச் சென்றனர். மாபெரும் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஒன்றுகூடினார்கள். அங்கே அவர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கடந்த ஆண்டு தாங்கள் பெற்ற வெற்றிகளையும், வருங்கால போராட்டத்திற்கான திட்டங்களை குறித்தும் பேசினார்கள். இந்த வேலைநிறுத்தத்தின் அச்சுறுத்தல் காரணமாக, தொழிலாளர்களுக்கு அவர்கள் தொழிற்சாலைகளுக்கு அன்று வராததற்காக அபராதம் விதிக்கக் கூடிய துணிவு அவர்களின் முதலாளிகளுக்கு இல்லை. அந்த நாளில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் தங்களின் முக்கிய கோரிக்கையான 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேரப் பொழுதுபோக்கு என்பதை நினைவுபடுத்தவும் தவறவில்லை. இதைத்தான் மற்ற நாட்டு தொழிலாளர்களும் தற்போது கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”

ரஷ்யப் புரட்சி இயக்கம் மே தினத்தை பெருமளவில் பயன்படுத்திக் கொண்டது. 1900 ஆம் ஆண்டு நவம்பரில் பதிப்பிக்கப்பட்ட ‘கார்கோவில் மே தினம்’ என்ற பிரசுரத் தின் முன்னுரையில் லெனின் பின்வருமாறு எழுதுகிறார். “இன்னும் ஆறு மாதத்தில் ரஷ்யத் தொழிலாளர்கள் தங்களின் புதிய நூற்றாண்டின் முதலாண்டு மே முதல் நாளைக் கொண்டாடுவார்கள். எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் மே தினத்தை சிறப்பாக, விரிவாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய இதுதான் நேரம். மே தின நிகழ்ச்சியில் பங்கு கொள்வது எத்தனை பேர் என்பது முக்கியமல்ல. பங்கு கொள்பவர்கள் வெளிக்காட்டும் ஸ்தாபனக் கட்டுப்பாட்டு உணர்வும், வர்க்க உணர்வும். ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒடுக்க முடியாத போராட்டத்திற்கு அவர்கள் காட்டும் உறுதியும் தான் முக்கியமானது. இதன் விளைவாக பாட்டாளி வர்க்க வளர்ச்சிக்கான வசதியான சந்தர்ப்பமும், சோஷலிஸத்திற்கான வெளிப்படையான போராட்டமும் வளரும்.”

மே தின ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஆறு மாதங்கள் முன்னமேயே கவனத்தை இழுத்திருக்கிறாரென்றால், அதை லெனின் எவ்வளவு முக்கியமாய் கருதியிருக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது. லெனினுக்கு மே தினம் என்பது “ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான அடக்கமுடியாத போராட்டத்திற்கும் பாட்டாளி வர்க்க மேம்பாட்டிற்கும், சோஷலிஸத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்கும் மக்களை அணி திரளச் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும்.”

மே தின விழாக்கள் எங்ஙனம் ஒரு மாபெரும் அரசியல் ஆர்ப்பாட்டமாக மாறும் என்று பேசுகையில், 1900 ஆம் ஆண்டு கார்கோவ் மே தின விழா எப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மாறியது என்ற கேள்விக்கு லெனின் பின்வருமாறு பதிலளிக்கிறார். “வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்ட பெருந்திரளான தொழிலாளர்கள், தெருக்களிலே நடந்த மாபெரும் வெகு ஜனக் கூட்டங்கள், செங் கொடிகளின் பதாகை, கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்கள், அவற்றின் புரட்சித்தன்மை, எட்டு மணி நேர வேலைநாள், அரசியல் விடுதலை இவைகள்தான்.”

கார்கோவ் கட்சித் தலைவர்கள் 8 மணி நேர வேலைநாள் கோரிக்கையோடு சாதாரண, வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளையும் சேர்த்துக்கொண்டதை லெனின் சினந்துகொண்டார். காரணம், மே தினத்தின் அரசியல் தன்மை எந்த விதத்திலும் மங்கக் கூடாது என்று விரும்பினார். அவர் இந்த முன்னுரையில் பின்வருமாறு எழுதுகிறார்.

“8 மணி நேர வேலை எனும் இந்த முதல் கோரிக்கையானது உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்கள் வைத்துள்ள பொதுவான கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை முன்வைத்ததிலிருந்து கார்கோவின் வளர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் சர்வதேச சோசலிஸ தொழிலாளர் இயக்கத்தோடு தங்கள் ஐக்கியத்தை உணர்கிறார்கள் என்பது தெரிகிறது.”

குறிப்பாக இந்த காரணத்திற்காகவே, இது போன்ற ஒரு கோரிக்கையை மேஸ்திரி ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும். பத்து ஸென்ட் ஊதிய உயர்வு வேண்டும் போன்ற சாதாரண கோரிக்கைகளுடன் சேர்த்து வைக்கக்கூடாது. எட்டு மணி நேர வேலை நாள், பாட்டாளி வர்க்க முழுமைக்குமான ஒரு கோரிக்கையாகும். அது சமர்ப்பிக்கப்படுவது தனிப்பட்ட முதலாளிகளிடத்தில் அல்ல. உற்பத்திக் கருவிகளின் சொந்தக்காரர்களான முதலாளித்துவ வர்க்கத்திடம் தற்போதைய அரசியல், பொருளாதார அமைப்பின் பிரதிநிதியாக இருந்து சமர்ப்பிக்கப்படுவதாகும்.

மே தின அரசியல் முழக்கங்கள்

உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்களுக்கு மே தினம் ஓர் ஈர்க்கும் முனையாக மாறியது. மே தின ஆர்ப்பாட்டங்களின்போது 8 மணி நேர வேலைநாள் என்ற பிரதானக் கோரிக்கையோடு மற்ற முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் தொழிலாளர்கள் அழைக்கப்பட்டார்கள். உலகத் தொழிலாளர் ஒற்றுமை; எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஓட்டுரிமை; ஏகாதிபத்தியப் போர் மற்றும் காலனி ஆதிக்க எதிர்ப்பு; தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை; அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தாபனம் கட்டும் உரிமை போன்றவை அந்தக் கோரிக்கைகளில் சிலவாகும்.

1904 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் மாநாட்டில்தான் பழைய அகிலம் மே தினத்தைப் பற்றிக் கடைசியாகப் பேசியது. ஆர்ப்பாட்டத்தின் போது முழங்கப்படும் பல்வேறு கோரிக்கைகளை விமர்சனம் செய்த பின்பு ஒரு முக்கியமான உண்மை கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இன்னும் சில நாடுகளில் மே தினம் மே முதல் நாளுக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது என்பதுதான் அந்த உண்மை. அந்த தீர்மானம் பினவருமாறு முடிகிறது.

“ஆம்ஸ்டர்டாமில் நடைபெறும் இந்த சர்வதேச சோசலிஸ்டு மாநாடு அனைத்து சமூக ஜனநாயக ஸ்தாபனங்களையும், எல்லா நாடுகளிலுமுள்ள தொழிற்சங்கங்களையும் மே முதல் நாள் அன்று எட்டு மணி நேர வேலைநாளை சட்டமாக்கவும், பாட்டாளி வர்க்க கோரிக்கைகளுக்காகவும், உலக அமைதிக்காகவும் முழுமையான சக்தியோடு போராடுமாறு கேட்டுக்கொள்கிறது.”

மே முதல் நாள் ஆர்ப்பாட்டத்திற்கு வேலைநிறுத்தமே சிறந்த வழியாகும். எனவே மாநாடு எல்லா பாட்டாளி வர்க்க ஸ்தாபனங்களுக்கும். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தொழிலாளர்களை பாதிக்காத வண்ணம் மே முதல் நாள் வேலை நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதை கட்டளையாகச் சொல்கிறது.

1912 ஏப்ரல் சைபீரியாவில் வேலைநிறுத்தம் செய்த தங்கவயல் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது பாட்டாளி வர்க்க வெகுஜன புரட்சிகர நடவடிக்கை என்பது மீண்டும் ஒரு பிரச்சினையாக இருந்தது. ஆனால் அந்த ஆண்டு மே தினத்தின்போது ஆயிரக்கணக்கான ரஷ்யத் தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு வீதிக்கு இறங்கி ஜாரட்சிக்கு எதிராக சவால் விட்டனர். 1905ஆம் ஆண்டு நிகழ்ந்த புரட்சியின் தோல்விக்குப் பின் நடந்த இந்த மே தினம் பற்றி லெனின் பின்வருமாறு எழுதுகிறார்.

“ரஷ்யாவெங்கும் நடந்த மாபெரும் மே தின வேலை நிறுத்தங்களும், அதையொட்டிய பெருந்திரளான தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டமும், புரட்சிகரப் பிரகடனங்களும், பேச்சுகளும் ரஷ்யா மீண்டும் வளர்ந்து வரும் ஒரு புதிய புரட்சிகரச் சூழ்நிலைக்குச் சென்று விட்டதைத் தெளிவாகக் காட்டுகிறது.”

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-28 பிப்ரவரி, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 7 | 1991 பிப்ரவரி 16-28, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆட்சிக் கலைப்பும் அடுத்த தேர்தல் பேரங்களும்
  • விலைவாசி உயர்வுக்கு வளைகுடாப் போர் காரணமா?
  • பொய்யும் அவதூறும் போர்ச் செய்தியாக..
  • கேள்வி – பதில்
  • கொலைகார அரசு விளைவித்த கோரம்
  • அமெரிக்க ஆக்கிரமிப்பு போருக்கு பின்புலமாக இந்தியா!
  • ”திருவாளர் பரிசுத்தம்” போய் “திருவாளர் ஒழுக்கக்கேடு” ஆட்சியில்..
  • கொட்டடிக் கொலைகளும் ‘கோர்ட்டு’களின் தலையீடும்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ’மார்க்சிஸ்டு’ தலைவரின் மண்டை கனம்
  • மாயனூர் ‘டான்செம்’ நிறுவனம் எதற்கெடுத்தாலும் காண்ட்ராக்ட்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்! | தோழர் டங்ஸ்டன் பிரகாஷ்

சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்!
| தோழர் டங்ஸ்டன் பிரகாஷ்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகம் – மே 2025 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் மே 2025 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மே தின வரலாறு | அலெக்ஸாண்டர்  ட்ராச்டென்பர்க் | பாகம் 3

மே தினம் உலக தினமாக மாறியது

சாமுவேல் கோம்பர்ஸ் அவர்கள் தனது சுயசரிதையில் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு எங்ஙனம் மே தினம் ஒரு உலகத் தொழிலாளர் விடுமுறை தினமாக மாறுவதற்கு வழி செய்தது என்பது குறித்துக் கூறுகிறார். “எட்டு மணி நேர இயக்கத்துக்கான தயாரிப்புகள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. நாங்கள் தொடர்ந்து எங்கள் நோக்கத்தைப் பரவலாக்குவது குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தோம். பாரிஸில் சர்வதேச தொழிலாளர் காங்கிரசுக்கான நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த காங்கிரசின் மூலம் உலகளாவிய ஆதரவைப் பெறுவதின் மூலம் எங்கள் இயக்கம் பயனடைய முடியும் என்று நான் நினைத்தேன்.” கோம்பர்ஸ் தனது சந்தர்ப்பவாதத்தையும், சீர்திருத்தவாதத்தையும் ஏற்கனவே வெளிக்காட்டியுள்ளார். பின்னர் அது அவரின் வர்க்க சமரசக் கொள்கையில் முழுமையாக வெளிப்பட்டது. முன்பு தீவிரமாக எதிர்த்துப் போராடிய சோஷலிஸ்டு தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் அவர் தயாராய் இருந்தார்.

1889 ஆம் ஆண்டு 14ஆம் நாள் பாஸ்டில் வீழ்ச்சியின் நூற்றாண்டு விழா பாரிஸில் நடந்தது. இதற்காக உலகெங்கிலுமிருந்து சோஷலிச இயக்கத் தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். 25 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் மாபெரும் ஆசான்களான மார்க்ஸும், எங்கெல்சும் உருவாக்கிய அகிலத்தைப் போன்ற ஒன்றை உருவாக்கவே அவர்கள் அங்கு கூடினர். பின்னர் அதுவே இரண்டாவது அகிலம் என்று அழைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்தவர்கள் அமெரிக்கப் பிரதிநிதிகளிடமிருந்து 8 மணி நேர இயக்கப் போராட்டத்தைப் பற்றியும், சமீபத்தில் அதற்கு புத்துயிர்ப்பு அளிக்கப்பட்டது பற்றியும் தெரிந்துகொண்டார்கள். அதன் விளைவாக பாரிஸ் மாநாடு கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.

“எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. 1888 டிசம்பரில் செயிண்ட் லூயிஸில் கூடிய அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு 1890 மே முதல் நாளை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதால் அதே நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே அந்த குறிப்பிட்ட நாளில் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் அவர்களின் நாட்டுச் சூழ்நிலைக்கேற்ப இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாநாடு அறிவிக்கிறது.”

1890 ஆம் ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் மரவேலைத் தொழிலாளர்களும் கட்டிட வேலைத் தொழிலாளர்களும் சோஷலிஸ்ட்டான பீட்டர் மெக்கியூரி தலைமையில் 8 மணி நேர வேலைநாளுக்காக பொது வேலைநிறுத்தத்தில் இறங்கினர். ஜெர்மனியில் சோஷலிஸ்டுகளுக்கு எதிராக பல விசேஷ சட்டங்கள் இருந்தபோதிலும் பல தொழில் நகரங்களில் தொழிலாளர்கள் மே தினத்தைக் கொண்டாடினார்கள். அதேபோல் மற்ற ஐரோப்பிய தலைநகரங்களிலும் அதிகார வர்க்கத்தின் எச்சரிக்கையையும் ஒழுங்குமுறையையும் மீறி தொழிலாளர்கள் மே தினத்தைக் கொண்டாடினர். அமெரிக்காவில் சிக்காகோவிலும், நியூயார்க்கிலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாய் இருந்தன. ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் 8 மணி நேர கோரிக்கையை வலியுறுத்தி அணிவகுத்தனர். முடிவில் முக்கிய மையங்களில் திறந்த வெளிக் கூட்டங்கள் நடைபெற்றன.

1891ல் அகிலத்தின் அடுத்த மாநாடு பிரான்ஸில் நடந்தது. மே முதல் நாளின் உண்மையான நோக்கம் 8 மணி நேர வேலைநாள் என்பதை மீண்டும் எடுத்துறைத்தது. பொதுவான வேலை நிலைமைகளை சீர் செய்ய வேண்டும், நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காகவும் அத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றது. மாற்றியமைக்கப்பட்ட தீர்மானம் குறிப்பாக 8 மணி நேர வேலைநாள் மே தின ஆர்ப்பாட்டத்தின் வர்க்கத் தன்மையை வலியுறுத்துவதாக இருந்தது. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் வேலைநிறுத்தம் நடைபெற வேண்டும் என்று தீர்மானம் சொன்னது. அதே நேரத்தில் மே தின ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தவும் ஸ்தூலப்படுத்தவும் அகிலம் முயற்சி எடுத்தது. பிரிட்டிஷ் தொழிலாளர் தலைமையே ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளோடு சேர்ந்துகொண்டு, மே முதல் நாள் வேலை நிறுத்தத்தை ஏற்க மறுத்து அதை அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று வாக்களித்தது. இதன் மூலம் அது தன் சந்தர்ப்பவாத்தை வெளிக்காட்டியது.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 பிப்ரவரி, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 6 | 1991 பிப்ரவரி 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நாடாளுமன்ற – சட்டமன்ற ரௌடித்தனம்! எதுவுமே புனிதமில்லை! ஏன் இந்தப் பம்மாத்து!
  • மதுரை சட்டக்கல்லூரி: அநீதிக்கு எதிராக தொடரும் பயணம்
  • எருமைத்தோல் அதிகாரிகளுக்கு புரியும் மொழியில் போராட்டம்!
  • வளைகுடா யுத்தம் எண்ணெய்க்கு ரத்தம்!
  • உளவியல் யுத்தம்! புரட்சியாளர்கள் தடுமாற்றம்!
  • வளைகுடா போருக்கு எதிராக…
  • காவிரி நீர்: வஞ்சகத் தீர்ப்புக்கு எதிராக
  • ராஜீவின் சந்தேக நோய்
  • பா.ஜ.க.வின் பாசாங்கு கலைந்தது
  • அரசின் சில்லறைத்தனம்!
  • வீட்டுமனைப் பிரச்சினை: தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக சாதிவெறியர்கள் எதிராக கொட்டம்
  • நெருப்பின் மேல் இந்தியா!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • கோர்பச்சேவின் கதி என்ன?
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பஹல்காம் தாக்குதல்: தேசவெறியில் மூழ்கடிக்கப்படும் உண்மைகள்

காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு, “நாங்கள் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், பிரதமர் மோடி அரசாங்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து பயங்கரவாத சூழலையும் அழித்துள்ளது” என்று கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற “ஜே&கே மற்றும் லடாக் த்ரூ தி ஏஜஸ்” (JK & Ladakh Through The Ages) என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கொக்கரித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஆனால், சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டப் பிறகு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்தே வந்துள்ளன.

அத்தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டப் பிறகு, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் அதிகப்படியான மக்கள் உயிரிழந்துள்ளது இந்த பஹல்காம் தாக்குதலில்தான்.

இத்தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் மற்றும் தாக்குதலைத் தடுக்க முயன்ற சையது ஆதில் ஹூசைன் என்ற காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த குதிரை சவாரிக்காரர் என மொத்தம் 26 பேர் பயங்கரவாதிகளால் ஈவிரக்கமின்றி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் தங்கள் கண்முன்னே படுகொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்ததை பார்த்து பாதிப்புக்குள்ளான மக்கள் அதிர்ச்சியிலிருந்தும் சோகத்திலிருந்தும் இன்னும் மீளவில்லை. திருமணமான ஒரு வாரத்திலேயே பெண் ஒருவர் தனது கணவனை இழந்திருப்பது, ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் கொல்லப்பட்டிருப்பது என இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் ஆறுதல்படுத்த முடியாதவை.

இத்தகைய கொடியத் தாக்குதல் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆன போதிலும், இத்தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது, எத்தனை பேர் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான விவரங்கள் அரசு தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. மாறாக, ஊடகங்கள்தான் சந்தேகம் என்ற பெயரில் நொடிக்குநொடி பரப்பரப்பாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. தாக்குதல் நடத்தியதற்கு “லக்‌ஷர்-இ-தொய்பா” பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான “தி ரெசிஸ்டென்ஸ் ப்ரண்ட்” என்ற அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது என்றும் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூவரின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களில் ஒருவன் பாகிஸ்தானின் இராணுவப் பிரிவான எஸ்.எஸ்.ஜி-யைச் சேர்ந்தவன் என்று சந்தேகம் உள்ளதாகவும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

சங்கிகளின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு கிடைத்த சம்மட்டி அடி

இஸ்லாமிய வெறுப்பைக் கக்குவதற்காக நாக்கைத் தொங்கவிட்டு காத்துக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பலும், அதன் ஆதரவு ஊடகங்களும் பஹல்காம் தாக்குதல் நடந்த உடனேயே இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கின.

பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளிடம் இந்துவா? முஸ்லீமா? என்று கேட்டும், ஆடைகளை அவிழ்த்து முஸ்லீம் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டும், இந்துகளை மட்டும் படுகொலை செய்ததாக தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதன் உண்மைத்தன்மை சோதிக்கப்படும் முன்பே இச்செய்திகளை பரப்பி காவிக் கும்பல் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்கியது; காஷ்மீரில் வாழும் இஸ்லாமிய மக்கள் பயங்கரவாதத்திற்கு துணைபோவதாகப் பொய்யாக சித்தரித்தது. பா.ஜ.க-வை சேர்ந்த சுவேந்து அதிகாரி, இத்தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணிடம், அவருடைய கணவர் இந்து என்பதால் கொல்லப்பட்டார் என்று சொல்லக் கூறி மிரட்டும் காணொளிகள் வெளியாகி பாசிசக் கும்பலின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தின.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள்தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று சித்தரிக்கும் வகையிலான கருத்துகள், புகைப்படங்கள், காணொளிகளை காவிக் கும்பல் சமூக வலைத்தளங்களில் பரப்பியது. பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்களில் “பாகிஸ்தான் வாழ்க” என்று முழக்கங்கள் எழுப்பப்படுவதாக காணொளிகளை திரித்து வெளியிட்டது. மேற்குவங்கத்தில் உள்ள பிதான் சந்திரா வேளாண் பல்கலைக்கழகத்தின் விளம்பர சுவரில் “நாய்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அனுமதியில்லை” என்று சுவரொட்டி ஒட்டப்பட்டது. வட மாநிலங்களில் சில சாலைகளில் பாகிஸ்தான், வங்கதேசம், பாலஸ்தீன நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்டன. இதன் உச்சமாக, உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் இந்துமதவெறி போதை தலைக்கேறிய காவிக் குண்டர், இஸ்லாமிய இளைஞர் இருவரை சுட்டுக்கொன்ற கொடூரமும் அரங்கேறியது.

ஆனால், பஹல்காமில் தாக்குதலுக்குள்ளான மக்களை காஷ்மீரின் இஸ்லாமியர்கள் காப்பாற்றிய காணொளிகள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி காவிகளின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தன. காயமடைந்த சிறுவனை பல கிலோமீட்டர் தொலைவிற்கு முதுகில் சுமந்து சென்று காப்பாற்றிய சஜ்ஜாத்தின் காணொளி; காஷ்மீர் மக்கள்தான் தங்களை பாதுகாத்தார்கள் என்பதை காஷ்மீரில் இருந்து திரும்பிய சுற்றுலாப் பயணிகள் ஊடகங்களில் தெரிவித்தது; தாக்குதலில் தந்தையை பறிக்கொடுத்த பெண் ஒருவர் தனக்கு காஷ்மீரில் இரண்டு அண்ணன்கள் கிடைத்துள்ளார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறியது போன்றவை சங்கிக் கும்பலின் வெறுப்புப் பிரச்சாரத்தின் மீது காரி உமிழ்ந்தன.

இஸ்லாமியர்கள்தான் இத்தாக்குதலுக்கு காரணம் என்று சங்கிக் கும்பல் ஊளையிட்டுக் கொண்டிருந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது சங்கிக் கும்பலின் சதித்திட்டத்தில் மண்ணை அள்ளிப்போட்டது. அதிலும், ஜனவரி 23 அன்று ஜம்மு காஷ்மீரில் இப்பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் காஷ்மீர் மக்கள் பயங்கரவாதத்தை ஒருபோதும் விரும்பவில்லை என்பதை எடுத்துக்காட்டியது. இவையன்றி, பல்வேறு ஜனநாயக சக்திகளும் நடிகர்களும் சமூக வலைத்தளங்களில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும் மதநல்லிணக்கத்தை உயர்த்திப்பிடித்தும் கருத்துக்களை தெரிவித்து பாசிசக் கும்பலால் இஸ்லாமிய வெறுப்பை தீவிரமாக எடுத்துச் செல்ல முடியாமல் செய்தனர்.

தேசவெறியில் மூழ்கடிக்கப்படும் உண்மைகள்

தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் எடுபடாததை உணர்ந்துகொண்ட மோடிக் கும்பல், தேசவெறிப் பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுக்க ஆரம்பித்தது. பாகிஸ்தானுக்கு எதிராக தேசவெறியை தூண்டிவிடும் வகையில், தாக்குதல் நடந்த அடுத்த நாளே பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டுமென உத்தரவிட்டது; இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தண்ணீர் விநியோக ஒப்பந்தமான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்தது; வாகா எல்லையை மூடியது உள்ளிட்ட ஐந்து நடவடிக்கைகளை மோடி அரசு அடாவடித்தனமாக மேற்கொண்டது. பா.ஜ.க. அடிவருடி ஊடகங்களின் துணையுடன் வடமாநில மக்களை இலக்கு வைத்து இந்நடவடிக்கைகளை ஊதிப்பெருக்கியது. இந்தியாவை பார்த்து பாகிஸ்தான் நடுங்கிக் கொண்டிருப்பதை போன்ற தோற்றத்தை மோடி ஊடகங்கள் கட்டமைத்தன.

ஆனால், பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் துளியளவும் நெருக்கடியை ஏற்படுத்தாத மோடி அரசின் இந்நடவடிக்கைகளால், மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்த மக்களும், பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்துவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவி மக்களுமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மறுபுறம், பாகிஸ்தான் அரசும் தன்பங்கிற்கு போர் தயாரிப்புகளில் ஈடுபடுவதை போன்று அறிவிப்புகளை வெளியிட்டு உள்நாட்டு நெருக்கடியில் இருந்து மக்களை திசைதிருப்ப முயற்சிக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் தனது அரசியல் நெருக்கடியை தீர்த்துகொள்வதற்கான நல்வாய்ப்பாகவே இத்தாக்குதலை பார்க்கின்றன. இந்தியாவில் தேசவெறியை தூண்டிவிடும் வகையில் நாள்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டுவரும் மோடி அரசு, இதன்மூலம் உண்மைகளை மறைத்து பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மக்களைத் திசைத்திருப்பும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளது.

முதலாவதாக, பஹல்காம் தாக்குலையொட்டி மோடி அரசின் பாதுகாப்பு குறைபாடு குறித்து பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடைபெற்ற பஹல்காம் பகுதியில் மட்டும் ஏன் இராணுவ வீரர்கள் இல்லை? தாக்குதல் நடந்த பிறகும் மக்களை காப்பாற்ற உடனடியாக இராணுவ வீரர்கள் ஏன் அங்கு வரவில்லை?

அதேபோல், காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கசிந்திருந்த போதிலும், நடவடிக்கை எடுக்கவில்லை என “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 19-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த மோடியின் காஷ்மீர் பயணம் கடைசி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதும் சந்தேகத்தை எழுப்புகிறது.

அதேபோல, காஷ்மீரில் தாக்குதல் நடந்தவுடன் தன்னுடைய சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசரமாக இந்தியாவிற்கு வந்த மோடி, தாக்குதல் நடத்தப்பட்ட காஷ்மீருக்கு செல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்காமல் பீகாருக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டது நமக்கு புல்வாமா தாக்குதலையே நினைவுப்படுத்துகிறது.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலின் போது இதேபோன்று சங்கிக் கும்பலால் தேசவெறி கிளப்பிவிடப்பட்டது. ஆனால், புல்வாமா தாக்குதலின்போது காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் மோடிக்கு தெரிந்தே அல்லது மோடியால் அனுமதிக்கப்பட்டே நடைபெற்றது என்பதை அம்பலப்படுத்தினார். இதன்மூலம் தன்னுடைய தேர்தல் ஆதாயத்திற்காக 40 உயிர்களை மோடிக் கும்பல் தெரிந்தே பலிக்கொடுத்தது என்பது அம்பலமானது.

தற்போதும், பஹல்காம் தாக்குதலை பயன்படுத்தி பீகார் தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகிறது. இதனைப் பார்க்கும்போது பஹல்காம் தாக்குதலையும் மோடி அரசு தெரிந்தே அனுமதித்துள்ளாதா? என்று கேள்வி நமக்கு இயல்பாக எழுகிறது.

ஆனால், நியாயப்பூர்வமான இக்கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தனக்கே உரிய பாசிசத் திமிருடன் மோடி அரசு நடந்து கொள்கிறது. மோடி அரசை பார்த்து கேள்வியெழுப்பியதற்காக பாடகர் நேஹா சிங் ரத்தோர், டாக்டர் மெடுசா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்துள்ளது. அதன்மூலம் காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியாத தன்னுடைய கையாலாகத்தனத்தை மறைத்துக்கொள்கிறது.

பாசிச கும்பலின் சதித்திட்டம்

ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற போதெல்லாம் மாநில அரசாங்கத்தைக் கலைக்க வேண்டும், பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று கூச்சலிட்ட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், தற்போது இத்தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு ‘இந்துக்களின் மீட்பர்’, ‘தேசத்தின் பாதுகாவலர்’ என்றெல்லாம் மோடிக்கு பொய்யான பிம்பங்களை கட்டியமைக்க முயற்சிக்கிறது.

ஏனென்றால், விவாசாயிகள் போராட்டம் உள்ளிட்டு நாடுமுழுவதும் நடந்த மக்கள் போராட்டங்களால் பாசிசக் கும்பல் தோல்வி முகத்திற்கு தள்ளப்பட்டதையடுத்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே மோடியின் ‘வளர்ச்சி நாயகன்’, ‘தேசத்தின் பாதுகாவலன்’ போன்ற முகமூடிகள் கிழிந்துவிட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றாலும் பெரும்பான்மையை பெற முடியாமல் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டது. ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள் பா.ஜ.க-விற்கு உத்வேகத்தை அளித்தாலும் அது நீண்ட நாட்களுக்கு கைக்கொடுக்கவில்லை.

நாடுமுழுவதும் நடந்துவரும் மக்கள் போராட்டங்கள், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க-விற்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகள், இராமன் கோவில் திறப்பிற்கு பிறகு நாடுத்தழுவிய நிகழ்ச்சிநிரலை உருவாக்க முடியாத தோல்விகள், சர்வதேச அளவில் பாசிச டிரம்பின் வரி விதிப்புகள் போன்றவை பாசிச கும்பலின் நெருக்கடியையும் தோல்வி முகத்தையும் மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இதிலிருந்து சமாளித்து கொள்வதற்காக பஹல்காம் தாக்குதலை பயன்படுத்தி இந்தியா முழுவதும் தேசவெறியை கிளப்பிவிடுகிறது. இதனை தனது தேர்தல் ஆதாயத்திற்கு பயன்படுத்த திட்டமிடுவதுடன், வக்ஃப் திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் உள்ளிட்டு நாடுமுழுவதும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கத் துடிக்கிறது.

பஹல்காம் தாக்குதலில் மோடி அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து நியாயமான கேள்விகளையெழுப்பும் ஊடகவியலாளர்கள், ஜனநாயக சக்திகள் மீது தேச விரோதி என்ற முத்திரையைக் குத்தி சிறையிலடைத்து வருகிறது பாசிச கும்பல்.

மறுபுறம், பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு ஜம்மு-காஷ்மீரில் வாழும் இஸ்லாமிய மக்கள் மீது இராணுவ அடக்குமுறைகளை அதிகரித்திருக்கிறது. இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்று கூறி ஆதரங்கள் ஏதுமின்றி இதுவரை 12-க்கும் மேற்பட்ட மக்களின் வீடுகளை இடித்து, காஷ்மீர் இஸ்லாமிய மக்கள் மீது புல்டோசர் பயங்கரவாதத்தை ஏவி வருகிறது.

அதேபோல், ஏப்ரல் 24-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை அழைக்காமல் புறக்கணித்தது; “காஷ்மீரில் தேர்தலை நடத்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்குமா?” என்று சங்கி அர்ணாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தை நோக்கி கேள்வி எழுப்பியிருப்பது ஆகிய நடவடிக்கைகள் காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்து காஷ்மீரை இராணுவ சர்வாதிகார பிடியின் கீழ் இருத்த வேண்டும் என்ற பாசிசக் கும்பலின் நோக்கத்தை அம்பலப்படுத்துகின்றன.

குறிப்பாக, காஷ்மீரில் மிகப்பெரும் அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் உள்ளிட்ட அரியவகைத் தனிமங்களை சூறையாடும் நோக்கிலேயே பாசிசக் கும்பல் 370 சட்டப்பிரிவை இரத்துச் செய்தது. அதனையடுத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் காஷ்மீரை சூறையாடிவந்த நிலையில், கடந்த ஆண்டில் ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு தேர்தல் நடந்து அங்கு தேசிய மாநாடு கட்சி ஆட்சியமைத்தது பாசிச கும்பலை எரிச்சலூட்டியது. அதன் தொடர்ச்சியாக, காஷ்மீரில் சந்தேகத்திற்குரிய வகையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்ததுயடுத்து, “இது தேசிய மாநாடு கட்சியின் ஆட்சியை கலைப்பதற்கான முயற்சியாக இருக்கலாம்” என அக்கட்சியை சார்ந்த ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்தார். தற்போது பஹல்காம் தாக்குதல் நடந்துள்ள நிலையில், காஷ்மீரில் மோடி அரசின் அதிகாரத்தை விரிவுப்படுத்திக்கொண்டு அங்கு கனிமவளச் சூறையாடலை தீவிரப்படுத்துவதற்கான சதி அரங்கேறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

இவ்வாறு இத்தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு பாசிச கும்பல் பல்வேறு காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது. தேசவெறி பிரச்சாரங்கள் மூலம் மக்களை திசைதிருப்பிவிட்டு தனது பாசிச சதித்திட்டங்களை அரங்கேற்ற துடிக்கிறது. ஆனால், பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மோடி கும்பலின் தேசவெறி பிரச்சாரத்திற்கு பலியாகி அதன் ஊதுகுழலை போல கருத்து தெரிவித்து வருகின்றன. இச்சூழலில், மோடி அரசின் சதித்திட்டங்களை முறியடிக்க வேண்டிய கடமை இந்தியா முழுவதுமுள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் தோள்களிலேயே சுமத்தப்பட்டுள்ளது.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – மே 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகம் – மே 2025 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் மே 2025 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – மே 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மே தின வரலாறு | அலெக்ஸாண்டர்  ட்ராச்டென்பர்க் | பாகம் 2

மே தின வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்புகள்

1877ல் மிகப் பெரிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிரப் போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கெதிராக ராணுவம் ஏவப்பட்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர். இப்போராட்டம் தொழிலாளர் இயக்கம் முழுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின் முதல் மாபெரும் தேசிய அளவிலான வெகுஜன இயக்கமாக விளங்கியது. அரசு மற்றும் முதலாளிகளின் கூட்டுச் சதி காரணமாக இவ்வியக்கம் தோற்கடிக்கப்பட்டது.

இப்போராட்டங்களின் விளைவாக அமெரிக்கத் தொழிலாளி வர்க்கம் தன் வர்க்க நிலைப்பாடு குறித்து மேலும் தெளிவை அடைந்தது. அதன் போர்க்குணமும் ஒழுக்கநெறியும் மேலும் செழுமையடைந்தன. இப்போராட் டங்கள் பென்சில்வேனியா சுரங்க அதிபர்களுக்கு ஒரு வகையான பதிலடியாக அமைந்தன.

ஏனெனில், இரண்டாண்டுகளுக்கு முன்புதான் 1875ம் ஆண்டு சுரங்கத் தொழிலாளர் சங்கங்களை அழிக்கும் பொருட்டு தீவிரப் போர்க்குணமுள்ள பத்து தொழிலாளர்களை சுரங்க அதிபர்கள் தூக்குமரத்திலேற்றினார்கள்.

அமெரிக்கத் தொழிற்துறை மற்றும் உள்நாட்டுச் சந்தை 1880-90க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் தீவிர வளர்ச்சியடைந்தது. ஆனபோதிலும் 1884-85க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு மந்த நிலை நிலவியது. இந்நிலை 1873ல் ஏற்பட்ட நெருக்கடியின் தொடர்ச்சியாகும். அப்போது வேலையில்லாத் திண்டாட்டமும் மக்கள் துன்பமும் பெருகியது. இது குறைவான வேலைநாளுக்கான இயக்கத்திற்கு உந்துதல் சக்தியைத் தந்தது.

கூட்டமைப்பு அப்போதுதான் உருவானது. ‘நைட்ஸ் ஆப் லேபர்’ என்ற தொழிலாளர் ஸ்தாபனம் அதற்கு முன்பே இருந்தது. அது தொடர்ந்து வளர்ந்து வந்தது. எட்டு மணி நேர வேலை என்ற கோஷத்தின் கீழ் இவ்விரு அமைப்புகளுக்கும் வெளியே உள்ள தொழிலாளர்களைத் திரட்ட முடியும் என்று கூட்டமைப்பு உணர்ந்தது. 8 மணி நேர வேலைநாள் இயக்கத்துக்கு ஆதரவு தருமாறு ‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தைக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. அனைத்துத் தொழிலாளர்களும் பொதுவாக ஒரு நடவடிக்கையில் இறங்கினால்தான் தனக்கு சார்பான பலனைப் பெற முடியும் என்று கூட்டமைப்பு உணர்ந்திருந்தது.

1885ல் கூட்டமைப்பு மாநாடு, அடுத்த ஆண்டு மே முதல் நாள் வேலைநிறுத்தம் செய்வது பற்றி மீண்டும் எடுத்துரைத்தது. பல தேசிய சங்கங்கள் போராட்டத்துக்கான தயாரிப்புகளில் இறங்கின. குறிப்பாக மரவேலை மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் தயாரிப்புகளில் இறங்கினர். இந்தப் போராட்டத்தின் காரணமாக அப்போதிருந்த தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்தது. கூட்டமைப்பைக் காட்டிலும் பிரபலமாக விளங்கிய ‘நைட்ஸ் ஆப் லேபரின் உறுப்பினர் எண்ணிக்கை 20 லட்சத்திலிருந்து 70 லட்சத்திற்கு உயர்ந்தது. அதே நேரத்தில் 8 மணி நேர இயக்கத்தையும் அதற்கான நாளையும் நிர்ணயித்த கூட்டமைப்பின் மதிப்பு உயர்ந்தது. அதன் உறுப்பினர் எண்ணிக்கையும் பெருமளவு உயர்ந்தது. வேலைநிறுத்தத்திற்கான நாள் நெருங்க நெருங்க ‘நைட்ஸ் ஆப் லேபர்’ அமைப்பின் தலைமை, குறிப்பாக, டெரன்ஸ் பௌடர்லி என்பவன் நாச வேலைகளில் இறங்கினான். தன்னுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாமென ரகசியமாக அறிவுறுத்தினான். இந்த விஷயம் வெளியானதும் கூட்டமைப்பின் புகழ் மேலும் உயர்ந்தது. இரு ஸ்தாபன ஊழியர்களும் போராட்டத் தயாரிப்புகளில் உற்சாகத்தோடு இறங்கினர். 8 மணி நேர வேலைநாள் குழுக்களும் சங்கங்களும் பல நகரங்களில் எழுந்தன. தொழிலாளர் இயக்கம் முழுவதும் போர்க்குணத்தின் தன்மை மேலிட்டது. திரட்டப்படாத தொழிலாளர்களையும் இது பற்றிக்கொண்டது. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு புதிய நாள் அப்போது விடிந்துகொண்டிருந்தது.

தொழிலாளர்களின் அப்போதைய மனநிலையை அறிய சிறந்த வழி அவர்களின் போராட்ட அளவையும், ஆழத்தையும் ஆராய்வதே ஆகும்.  அப்போது நிகழ்ந்த பல வேலை போராட்ட குணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கின.  முந்திய ஆண்டைக் காட்டிலும் 1885-86ல் வேலை நிறுத்தங்களின் எண்ணிக்கை அதிகமாகியது.  1886 மே முதல் நாளுக்கான வேலைநிறுத்தத் தயாரிப்புகளோடு 1885 ஆம் ஆண்டு எண்ணிக்கையும் ஏற்கனவே பெருகியது.  1881-84ல் நிகழ்ந்த வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 500. வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,50,000.  ஆனால் 1885ல் வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 700 ஆகவும், பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,50,000 ஆகவும் உயர்ந்தது.  1885ல் நடைபெற்ற வேலைநிறுத்தங்களைப் போல் இரு மடங்கு 1886ல் நடைபெற்றது.  கிட்டத்தட்ட 1572 வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன.  6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.  1885ல் 2467 ஆக இருந்த பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 1886ல் 11562 ஆக உயர்ந்ததிலிருந்து வேலை நிறுத்தங்கள் பரவிய வேகத்தை தெரிந்து கொள்ளலாம்.  ‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தின் நாசவேலையில் இருந்த போதிலும் 8 மணி நேர வேலைநாளுக்கான போராட்டத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள்  கலந்துகொண்டார்கள் எனக் கணக்கிடப்படுகிறது.

இவ்வேலைநிறுத்தத்தின் மையமாக விளங்கியது சிக்காகோ நகரமாகும்.  இங்குதான் வேலைநிறுத்த இயக்கம் மிகப் பரவலாக பரவி இருந்தது.  மேலும் பல நகரங்களில் மே முதல் நாள் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன.  நியூ யார்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சிநாட்டி, செயின்ட் லூயிஸ், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களில் வேலைநிறுத்தங்கள்  சிறப்பாக நடைபெற்றன.  உதிரி மற்றும் பயிற்சி பெறாத தொழிலாளர்களின் எண்ணிக்கை அப்போது அதிக அளவில் இருந்தது.  இவர்களும் இப்போராட்டத்தால் கவரப்பட்டது இவ்வியக்கத்தின் சிறப்பம்சமாகும்.  ஒரு புரட்சிகரமான உணர்வு நாடு முழுவதும் நிலவியிருந்தது.  முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் இதை சமூகப் போர் என்றார்கள்.  மூலதனத்தின் மீதான வெறுப்பு என்றார்கள்.  அப்போது கீழ்மட்ட ஊழியர்களிடையே நிலவிய அற்புதமான உற்சாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.  மே முதல் நாள் வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களில் பாதிப்பேர் வெற்றி கண்டதாகச் சொல்லப்படுகிறது.  மற்ற இடங்களிலும் 8 மணி நேர வேலைநாளை அடைய முடியா விட்டாலும் ஏற்கனவே இருந்த வேலை நேரத்தில் கணிசமான அளவு குறைக்கப்பட்டது.

சிக்காகோ வேலை நிறுத்தமும் ‘ஹே’ சந்தையும்

சிக்காகோவில் மே முதல் நாள் வேலைநிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது. தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் குறித்து போதுமான தெளிவு இல்லாவிட்டாலும் அது ஒரு போராட்ட இயக்கமாக விளங்கியது. தொழிலாளர் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை விருத்தி செய்யும் பொருட்டு எந்த நேரத்திலும் தொழிலாளர்களை போராட்டத்தில் இறங்க வைப்பதாயும், அவர்களின் போராட்ட உணர்வைக் கூர்மைப்படுத்துவதாகவும் அவ்வியக்கம் விளங்கியது.

போர்க்குணமுள்ள தொழிலாளர் குழுக்களால் சிக்காகோவின் வேலைநிறுத்தம் பெருமளவுக்குப் பிரகாசித்தது. வேலை நிறுத்தத்திற்கு வெகுமுன்பே அதற்கான தயாரிப்புகளைச் செய்ய 8 மணி நேர சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த 8 மணி நேர சங்கம் ‘நைட்ஸ் ஆப் லேபர்’ சோஷலிஸ்ட் தொழிலாளர் கட்சி (அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்தின் முதல் அரசியல் சோஷலிஸ்ட் கட்சி) போன்ற ஸ்தாபனங்களில் இணைந்துள்ள ஐக்கிய முன்னணி ஸ்தாபனமாக விளங்கியது. இந்த 8 மணி நேர சங்கத்துக்கு இடதுசாரி தொழிற்சங்கங்களைக் கொண்ட மத்திய தொழிற்சங்கமும் முழு ஆதரவு அளித்தது. மே முதல் தினத்துக்கு முந்திய நாளான ஞாயிற்றுக்கிழமையன்று மத்திய தொழிற்சங்கம் ஏற்பாடு செய்த தொழிலாளர்களைத் திரட்டும் ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 25,000 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

மே முதல் நாள் சிக்காகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது. எட்டு மணி நேர வேலைநாள் கோரிக்கையின் முக்கியத்துவமும், வேலை நிறுத்தத்தின் பரந்த மற்றும் தீவிரத் தன்மையும் இந்த இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அரசியல் முக்கியத்துவத்தைத் தந்தது. அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இந்த முக்கியத்துவம் மேலும் தீவிரமானது. 1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகோன்னத அத்தியாயத்தை உருவாக்கியது.

அதே நேரத்தில் தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்க்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கிவிடலாம் என கனவு கண்டார்கள். மே 3, 4 தேதிகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் வைக்கோல் சந்தை (ஹே சந்தை) விவகாரம் என்றழைக்கப்படும் நிகழ்ச்சிக்கு வழி வகுத்தன. மே 3ம் நாள் வேலைநிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை எதிர்த்து மே 4 ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தக் கூட்டம் அமைதியாக நடந்தது. போலீஸ் மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பிக்கும்போது கூட்டம் தள்ளிவைக்கப்பட இருந்தது.  கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவனைக் கொன்றது.  இதன் விளைவாக எழுந்த ஒரு மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லபட்டனர்.  வைக்கோல் சந்தை சதுக்கத்தில் ஏற்பட்ட ரத்த ஆறும், போர்க்குணமிக்க சிக்காகோ தொழிலாளர் தலைவர்களைச் சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியதுதான் சிக்காகோ நகர  முதலாளிகளின் பதிலாயிருந்தன.  நாடெங்கிலுமுள்ள முதலாளிகளும் சிக்காகோ நகர முதலாளிகளுக்கு ஆதரவு தந்தனர்.

1886ஆம் ஆண்டின் பிற்பாதி முழுவதும் முதலாளிகளின் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் தொடர்ந்தது.  இதன் மூலம் வேலைநிறுத்த இயக்கத்தின்போது இழந்த தங்கள் பழைய நிலையை மீண்டும் அடைய அந்த முதலாளிகள் தீர்மானித்தார்.

சிக்காகோ தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு 1888ல் செயின்ட் லூயிஸில் கூட்டமைப்பு கூடியது.  (தற்போது அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்று அறியப்படுகிறது).  அப்போது 8 மணி நேர இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்கத் தீர்மானித்தது.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு வர்க்க அரசியல் பிரச்சினையை அடிப்படையாக வைத்து, ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்திய மே முதல் நாளையே மீண்டும் 8 மணி  நேர இயக்கத்தைத் துவக்குவதற்கான நாளாக அறிவித்தார்கள்.  1889 ஆம் ஆண்டு சாமுவேல் கோம்பர்ஸ் தலைமையில் நடந்த அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாடு வேலைநிறுத்த இயக்கத்தை முறைப்படுத்துவதில்  வெற்றிகண்டது.  வலுவான முறையில் தயாரிப்புகளோடு விளங்கிய மரவேலைத் தொழிலாளர் சங்கம் முதலில் வேலைநிறுத்தத்தில் இறங்குவது என்றும் வெற்றி பெற்ற பின் மற்ற சங்கங்கள் இறங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஜனவரி, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 5 | 1991 ஜனவரி 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: போர்முனையில் ஆதிக்கவெறியன் அமெரிக்காவும் ஆக்கிரமிப்பாளன் ஈராக்கும்
  • கரும்பு விவசாயிகளைச் சாறுபிழியும் அதிகாரி
  • இந்து மதவெறிக்கெதிராக
  • பத்தாண்டுகளில் வலுத்தோர் கொழுத்தனர் உழைத்தோர் மெலிந்தனர்
  • புலிவாலைப்பிடிக்கும் புது அரசாங்கம்
  • மான் கொடுத்த மனுவில் இருப்பது இதுதான்!
  • சாலையார் மீதான மதிப்பீடு சரிதான்
  • பாசிஸ்டுகளே! சிந்தனையைச் சிறையிட முடியுமா?
  • சமூக விரோதிகளின் பிடியில் தொலைபேசியகம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • போலிக் கம்யூனிஸ்டு ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். அமோக வளர்ச்சி
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 ஜனவரி, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 4 | 1991 ஜனவரி 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜெயலலிதா: தமிழ்நாட்டின் அரசியல் சீக்கு
  • வாசகர் கடிதம்
  • மத்தியப் படைகள் குவிப்பு மாநில அதிகாரம் பறிப்பு
  • பொருளாதாரத் தாக்குதலின் துவக்கம்
  • அரசியல் சூதாட்ட துருப்புச் சீட்டுகள்
  • கூட்டுக் கொள்ளைக்குக் கூட்டுறவு சங்கங்கள்
  • கொலையாளிகளின் காவலர்களாக போலீசு
  • இதில் யார் முஸ்லீம்? யார் இந்து? மதவெறி -நரபலி
  • விலைபோகும் நீதித்துறை
  • அவதூறுகளையே விமர்சனங்களாக்கும் வீரமணி கும்பல்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • வானளாவிய அதிகாரத்தின் விளைவு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மே தின வரலாறு | அலெக்ஸாண்டர்  ட்ராச்டென்பர்க் | பாகம் 1

மே 1, 1909 அன்று நியூயார்க் நகரில் நடந்த பேரணி

குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப் பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஓர் அமைப்பாக வளர்ந்தபொழுது இப்போராட்டம் வெளிப்பட்டது.

இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஆரம்ப நாட்களில் பல வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘அதிக ஊதியம் வேண்டும்’ என்பதுதான் இந்த வேலை நிறுத்தங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப்பட்டது. இருந்தபோதிலும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வகுத்த போதெல்லாம் குறைந்த வேலை நேரம், சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சினைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் வெகுவாக சுரண்டப்பட்ட காலகட்டம் அது. நீண்ட வேலை நேரங்கள் அவர்களை மேலும் துன்பப்படுத்தின. எனவே, வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக எழுப்பப்பட்டது.

‘அதிகாலை முதல் அந்தி சாயும்வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக் குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதினான்கு, பதினாறு, ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள். 1806 ஆம் ஆண்டு பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களின் தலைவர்கள் மீது சதி வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மின்போது தொழிலாளர்கள் பத்தொன்பது. இருபது மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டார்கள் என்ற விஷயம் வெளியே வந்தது.

1820 மற்றும் 30களில் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று பற்பல வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘பத்துமணி நேர வேலைநாள்’ என்ற கோரிக்கை பல தொழில் மையங்களில் முன் வைக்கப்பட்டது. பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற்தொழிற்சங்கமாகக் கருதப்படுகிறது. இந்த தொழிற்சங்கம் உருவான இரு ஆண்டுகளுக்குப் பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் துவங்கின. பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன்முதலாக வைத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு. 1827ல் பிலடெல்பியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தில் தான் இந்தக் கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. 1834ல் நியூயார்க்கில் ரொட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த ரொட்டித் தொழிலாளர்கள் எகிப்திய அடிமைகளைக் காட்டிலும் அதிகம் துன்புற்றனர். நாளொன்றுக்கு அவர்கள் பதினெட்டிலிருந்து இருபது மணி நேரம் வேலை செய்ய வேண்டி வந்தது என்ற செய்தியை அப்போது வெளியான ‘தொழிலாளருக்காக வாதிடுபவன்’ (Workingmen’s Advocate) என்ற பத்திரிகை வெளியிட்டது. பத்து மணி நேர வேலைநாளுக்கான இப்போராட்டங்கள் விரைவிலேயே ஓர் இயக்கமாக உருவெடுத்தன. 1837ல் ஏற்பட்ட நெருக்கடி ஒரு தடையாக இருந்தபோதிலும் வேன் பியுரன் தலைமையிலான அரசாங்கம், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலைநாள் அறிவித்தது. எல்லோருக்கும் பத்து மணி நேர வேலைநாள் என்பதற்காக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய உடனே தொழிலாளர்கள் 8 மணி நேர வேலைநாள் என்ற கோஷத்தை எழுப்பினர்.

தொழிற்சங்க இயக்கத்தின் அதிவேக வளர்ச்சியால் 1850களில் இக்கோரிக்கை புதிய உத்வேகத்தை அடைந்தது. 1857ல் ஏற்பட்ட நெருக்கடி இந்த உத்வேகத்திற்கு ஒரு தடையானது. இருந்தபோதிலும் நன்கு வளர்ச்சி பெற்ற தொழிற்சங்கங்கள் அதற்கு முன்பே இக்கோரிக்கையை அடைந்தன.இவ்வாறு குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட அனைத்து வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக வெகுதூரத்தில் இருந்த ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேரப் பொழுது போக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன்வைத்து 1858ல் அதை அடைவதில் வெற்றியும் பெற்றனர்.

எட்டு மணி நேர இயக்கம் அமெரிக்காவில் துவங்கியது

1884ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின்போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன. ஆனாலும், இதற்கு ஒரு தலைமுறை முன்பே தேசிய தொழிற்சங்கம் குறைந்த வேலை நேரத்துக்கான கோரிக்கையை முன்வைத்து பரந்த இயக்கத்தையே நடத்தியது. ‘தேசிய தொழிற்சங்கம்’ அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க ஸ்தாபனமாக அப்போது விளங்கியது.

1861-62ல் உள்நாட்டுப் போர் துவங்கியது. இதற்கு சற்று முன்பே துவங்கப்பட்ட வார்ப்பட அச்சுத் தொழிலாளர் சங்கம், இயந்திரத் தொழிலாளர்கள் சங்கம், கொல்லர்கள் சங்கம் போன்ற தேசியத் தொழிற்சங்கங்கள் அப்போது மறையத் துவங்கின. ஆனபோதிலும் அதற்கடுத்த சில ஆண்டுகளில் பல உள்ளூர் தேசியத் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் எழுச்சியும் உருவானது. இவ்வாறு பல தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து 1866 ஆகஸ்டு 20ம் நாள் பால்டிமோர் என்னுமிடத்தில் தேசியத் தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இதன் தலைவராக வில்லியம் எச். சில்விஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாற்றியமைக்கப்பட்ட வார்ப்பட அச்சுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராவார். தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியமானவராய் கருதப்பட்ட இவர் ஓர் இளைஞர். இவர்லண்டனில் இருந்த முதலாவது இண்டர் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். இதன் நேஷனல் காரணமாக தேசிய தொழிற்சங்கத்துக்கும் இன்டர்நேஷனலின் பொதுக் குழுவுக்கும் இடையே உறவை ஏற்படுத்தியது அவரால் முடிந்தது.

தேசியத் தொழிற்சங்கத்தின் முதல் மாநாடு 1866ல் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலைநாள் என்பதை சட்டமாக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ அடிமைத்தனத்திலிருந்து நாட்டின் உழைப்பை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனையடைய நாம் நமது சக்தி அனைத்தையும் ஒன்றுத் திரட்டத் தீர்மானிக்கிறோம்.”

மேலும் இம்மாநாட்டில் 8 மணி நேர வேலைநாளை சட்டபூர்வமாக சுயேச்சையான அரசியல் நடவடிக்கை வேண்டும் மற்றும் தொழிலாளர் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. தேசியத் தொழிற்சங்கப் போராட்டங்களினால் 8 மணி நேரக் குழுக்கள் ஏற்பட்டன. மேலும், இச்சங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் பல மாநில அரசுகள் அரசு வேலைகளில் எட்டு மணி நேர வேலைநாளை அமுல்படுத்தின. 1868ல் அமெரிக்க காங்கிரசும் இதே போன்ற ஒரு சட்டத்தை இயற்றியது. பாஸ்டனைச் சேர்ந்த இயந்திரத் தொழிலாளியான ‘ஐராஸ் டூவர்டு’ என்பவர்தான் இந்த 8 மணி நேர இயக்கத்தின் எழுச்சியூட்டும் தலைவராக விளங்கினார். ஆரம்ப தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் பழமையானதாக இருந்தன. இவை எல்லா நேரங்களிலும் சரியாக இருந்தன என்றும் சொல்ல முடியாது. ஆனாலும், அடிப்படையில் இந்த இயக்கம் பாட்டாளி வர்க்கத்தின் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருந்தது. மேலும் திருத்தல்வாதத் தலைவர்கள், முதலாளித்துவ அரசியல் வாதிகள் இந்த இயக்கத்தில் ஊடுருவாமல் இருந்திருப்பார்களினால் இந்த இயக்கம் போர்க்குணமிக்க தோழிலாளர் இயக்கத்தின் ஆரம்ப கட்டமாக இருந்திருக்கும். இவ்வாறு நான்கு தலைமுறைகளுக்குப் பின் அமெரிக்காவில் தேசியத் தொழிற்சங்கமானது முதலாளித்துவ அடிமைத்தனத் திற்கெதிராகவும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்காகவும் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டது.

சில்விஸ் தொடர்ந்து லண்டனிலுள்ள இண்டர்நேஷனலோடு தொடர்பு கொண்டிருந்தார். இவரைத் தலைவராகக் கொண்ட 1867ல் நடைபெற்ற தேசியத் தொழிற்சங்க மாநாடு சர்வதேச தொழிலாளிவர்க்க இயக்கத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என முடிவு செய்தது. 1869ல் இண்டர்நேஷனலில் பொதுக்குழுவின் அழைப்பிற்கிணங்க பேச்சில் நடைபெற்ற இண்டர்நேஷனல் காங்கிரசுக்கு ஒரு பிரதிநிதியை அனுப்ப முடிவு செய்தது. ஆனால், துரதிஷ்டவசமாக மாநாட்டிற்குச் சற்று முன்பு சில்விஸ் மரணமடைந்தார். எனவே சிக்கா கோவிலிருந்து வெளிவந்த “வொர்க்கிங்மென்ஸ் அட்வகேட்” பத்திரிகையின் ஆசிரியரான ஏ.சி. காமெரான் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார்.

மாநாட்டில் பொதுக்குழு அந்த நம்பிக்கையூட்டும் இளம் அமெரிக்கத் தொழிலாளர் தலைவனுக்கு ஒரு சிறப்பு தீர் மானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. “பாட்டாளி வர்க்க ராணுவத்தின் தளபதியாக பத்தாண்டு காலம் மாபெரும் திறமையோடு பணியாற்றிய சில்விஸ் எல்லோருடைய கவனமும் திரும்பும் வகையில் செயல்பட்டவர். ஆம் அந்த சில்விஸ்தான் இறந்துவிட்டார்” என்றது அஞ்சலித் தீர்மானம். சில்விஸின் மறைவு தேசியத் தொழிற்சங்கத்தின் அழிவுக்கு ஒரு காரணமாகி பின்னால் அது மறையவும் காரணமாயிற்று.

எட்டு மணி நேர இயக்கம் குறித்து மார்க்ஸ்

1866ஆம் ஆண்டு 8 மணி நேர வேலைநாள் என்ற முடிவை தேசியத் தொழிற்சங்கம் எடுத்தது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் கூடிய இண்டர் நேஷனலின் காங்கிரசும் இதே கோரிக்கையைப் பின்வருமாறு முழங்கியது.

“வேலைநாளுக்கு சட்டபூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது… வேலைநாளுக்கான சட்டபூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும் என்று இம்மாநாடு முன்மொழிககிறது”. தேசிய தோழிற் சங்கத்தின் இந்த 8 மணி நேர இயக்கத்தைக் குறித்து மார்கள் 1867ல் வெளியான ‘மூலதனம்’ புத்தகத்தில் ‘வேலை நாள் குறித்து’ எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார். கறுப்பு மற்றும் வெள்ளைத் தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையைப் பற்றிய அந்த புகழ்பெற்ற பத்தியில் பின்வருமாறு எழுதுகிறார்: “அமெரிக்க ஐக்கியக் குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என்று முத்திரையிடப்பட்டிருக்கும் வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலை தேடிக்கொள்ள முடியாது. ஆனால், அடிமைத்தனத்தின் அழிவிலிருந்துதான் புதிய உத்வேகமுள்ள வாழ்க்கை பிறந்தது. உள்நாட்டுப் போரின் முதல் பலனே 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டமாகும். இது ஒரு இயக்கமாக அதி வேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசிபிச் வரையிலும், நியூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது.”

இரு வார வித்தியாசத்தில் நடைபெற்ற பால்டிமோர் தொழிலாளர் மாநாடும், ஜெனிவா இண்டர்நேஷனல் காங்கிரசும் ஒரே சமயத்தில் 8 மணி நேர வேலைநாளை முன்மொழிந்தன என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு அட்லாண்டிக்கின் இருபுறமும் உற்பத்தி முறை நிலைமையால் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இயல்பாக ஏற்பட்ட வளர்ச்சி ஒரே விதமான இயக்கத்தை அதாவது எட்டு மணி நேர வேலைநாளுக்கான இயக்கத்தை உருவாக்கியது.

ஜெனிவா காங்கிரஸ் முடிவு எவ்வாறு அமெரிக்க முடிவோடு ஒத்துப்போகிறது என்பதை தீர்மானத்தின் பின்வரும் பகுதி காட்டுகிறது. “வடஅமெரிக்க ஐக்கிய நாட்டுத் தொழிலாளர்களின் பொதுவான கோரிக்கையாக இந்த அளவு இருப்பதால், இந்த காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை உலகத்தின் அனைத்து தொழிலாளர்களுக்குமான பொது மேடையில் முன்வைக்கிறது.”

அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்தின் இந்த செல்வாக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு இதே போன்ற காரணங்களுக்காக இன்னும் வேகமாக சர்வதேச காங்கிரசில் செலுத்தப்பட்டது.

அமெரிக்காவில் மே தினம் பிறந்தது

முதல் இண்டர்நேஷனல் 1872ல் தன் தலைமையகத்தை லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு மாற்றியது. அது அப்போது சர்வதேச ஸ்தாபனமாக விளங்கவில்லை. பின் 1876ல் இது அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. பின் இது மாற்றியமைக்கப்பட்டு இரண்டாவது இண்டர்நேஷனல் என்று அழைக்கப்பட்டது. இதன் முதல் மாநாடு 1889ல் பாரிஸில் நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் மே முதல் நாள் என்பது உலகத் தொழிலாளர்கள் தங்கள் அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் கீழ் மிக முக்கிய அரசியல் கோரிக்கையாக 8 மணி நேர வேலைநாளுக்கு போர்க் குரல் கொடுக்க வேண்டிய தினம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1884, அக்டோபர் 7ம் நாள் சிக்காகோவில் அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பின் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு முடிவே பாரிஸ் மாநாட்டு முடிவுக்கு அடிகோலாக விளங்கியது. அம்மாநாட்டில் அமெரிக்க மற்றும் கனடா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்கள் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

“1886 மே முதல் நாள் முதல் சட்டப்பூர்வமான வேலை நாள் என்பது 8 மணி நேரம்தான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் ஸ்தானப் படுத்தப்பட்ட தொழிற்சங்கம் மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தீர்மானிக்கிறது. எனவே எல்லா தொழிலாளர் அமைப்புகளும் தங்கள் அதிகார வரம்பிற்குரிய இடத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இத்தீர்மானத்திற்கு ஏற்ப தங்கள் சங்க விதிகளை அமைத்துக்கொள்ளுமாறு இம்மாநாடு பரிந்துரைக்கிறது.”

எட்டு மணி நேர வேலை நேரத்தை எப்படி கொண்டு வருவது என்பது பற்றி கூட்டமைப்புத் தீர்மானத்தில் ஏதும் சொல்லப்படவில்லை. இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50,000க்கு உட்பட்டது. தங்கள் உறுப்பினர்கள் வேலை செய்யும் கடை, ஆலை, சுரங்கங்களில் போராடி இன்னும் அதிகமான தொழிலாளர்களைத் திரட்ட வேண்டும் என்பதை அறிந்திருந்தது. அப்போதுதான் 8 மணி நேர வேலைநாளை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பதை அறிவிக்க முடியும் என்பதையும் உணர்ந்திருந்தது. 1886, மே முதல் நாள் 8 மணி நேர வேலைக்காக போராடும் தொழிலாளிகளுக்கு உதவும் பொருட்டே “தீர்மானத்திற்கேற்ப சங்க விதிகள் அமைய வேண்டும்” என அறிவித்திருந்தது. வேலைநிறுத்தத்தின்போது வெகு நாட்கள் வெளியே தங்க நேரிடலாம். அப்போது சங்கத்தின் உதவி தேவை. மேலும், இவ்வேலைநிறுத்தம் தேசிய அளவில் நடைபெறுவதாலும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் கலந்துகொள்வதால் அவர்கள் விதிப்படி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு தங்கள் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகிறது. இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கூட்டமைப்பானது தற்போது அமெரிக்கத் கூட்டமைப்பைப் போலவே சுயேச்சையாகக் கூட்டமைப்பு முறையில் தொழிலாளர் உருவானது. எனவே கூட்டமைப்பில் இணைந்த தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்தால்தான் தேசிய மாநாட்டின் முடிவுகள் அவற்றைக் கட்டுப் படுத்தும்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram