Tuesday, October 21, 2025
முகப்பு பதிவு

ஜி.எஸ்.டி. 2.0: இந்துராஷ்டிர வரிக் கொள்ளையில் மாற்றமில்லை!

டந்த 8 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax) வசூல் முறையின் மூலம் இந்திய நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் இரத்தத்தை ஒட்டச்சுரண்டிக் கொண்டிருந்த மோடி அரசானது, பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதங்களில் சில திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது. இதனை “அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.டி”, “ஜி.எஸ்.டி. 2.0” என்ற பெயர்களில் ஆரவாரத்துடன் பிரச்சாரம் செய்து வருகிறது.

2017-இல் நள்ளிரவில் ஜி.எஸ்.டி-யை அறிமுகப்படுத்திய மோடிக் கும்பல், “இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. ஜி.எஸ்.டி. வரி விலைகளை குறைக்கும், ஏற்றுமதியை அதிகரிக்கும், வரி ஏய்ப்பைத் தடுக்கும், வரி முறையை எளிதாக்கும், வருவாயை அதிகரிக்கும், வளர்ச்சியை துரிதப்படுத்தும், வேலைவாய்ப்பை உருவாக்கும்” என்று வாய்ச்சவடால் அடித்தது. தற்போது ஜி.எஸ்.டி. 2.0-வை அறிவிக்கும் போதும்​ அதே பொய் வாக்குறுதிகளையே மீண்டும் கூறுகிறது. இதிலிருந்தே மோடிக் கும்பலின் பொய் மோசடிகளை புரிந்துகொள்ள முடியும்.

உண்மையில், அமெரிக்க டிரம்ப் அரசின் அடாவடித்தனமான வரிவிதிப்பினால் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை, உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிப்பதன் மூலம் தற்காலிகமாக நிவர்த்தி செய்வதற்காகவே மோடி அரசு இத்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக அந்நிய முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறி வந்தது; கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்கிக் கொண்டிருந்தது உள்ளிட்டவை ஏற்கெனவே மோடி அரசிற்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

மறுபுறம், கார்ப்பரேட்டுகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனையாகாமல் சந்தையில் தேங்கி நிற்கின்றன. சான்றாக, கடந்த 2024-ஆம் ஆண்டில் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் விற்பனையாகாமல் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தரப்பிலிருந்தும் வரிகளை குறைக்க வேண்டுமென மோடி அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஜி.எஸ்.டி-யில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மோடி அரசு திட்டமிட்டு வந்தது.

இந்நிலையில், அமெரிக்க வரிவிதிப்பானது இந்நெருக்கடியை மேலும் தீவிரமாக்கும் விதமாக அமைந்தது. எனவேதான், மோடி அரசு ஜி.எஸ்.டி-யில் திருத்தம் செய்து நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு, பீகார், மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் மக்களின் வாக்குகளை கவர்வதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

ஜி.எஸ்.டி. 2.0: ஓர் அறிமுகம்

டெல்லியில் செப்டம்பர் மூன்றாம் தேதி நடைபெற்ற 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. 2.0 இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஏற்கெனவே 5, 12, 18, 28 என நான்கு வரி விகிதங்களில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யானது தற்போது 5, 18, 40 என மூன்று வரி விகிதங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 375 பொருட்களின் விலை குறையும் என்று மோடி அரசுத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொலைக்காட்சி, ஏசி, குளிர்சாதனப் பெட்டி, இரு சக்கர வாகனம், கார் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும், தலைமுடி எண்ணெய், பற்பசை, சோப், ஷாம்பு, ஷேவிங் கிரீம் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகவும், நெய், பன்னீர், நாப்கின், பாத்திரம் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொருட்களுக்கான வரிக் குறைக்கப்பட்டுள்ளதை மட்டுமே பிரச்சாரம் செய்யும் மோடி ஆதரவு ஊடகங்கள், சில பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளதை திட்டமிட்டு மறைக்கின்றன. சான்றாக, அச்சிடப்படாத காகிதங்களுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும், ரூ.2,500 மேல் உள்ள ஆடைகளுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

உழைக்கும் மக்களுக்கு பலனில்லை

ஜி.எஸ்.டி. வரிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி, சுதந்திர தின உரையில் கூறியதிலிருந்து 28 சதவிகித வரி விதிக்கப்படும் பொருட்களின் (வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள்) உற்பத்தியில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு வரிக் குறைப்பு அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தன. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரிக் குறைப்பு பற்றி அறிவிக்கப்பட்டவுடன் பல்வேறு சலுகைகளை அளித்து தேங்கியிருந்த தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.

இதன்விளைவாக, பொலிரோ, தார், ஸ்கார்பியோ போன்ற கார்களின் விலை ரூ.2.56 லட்சம் வரை குறைந்துள்ளது; யெமகா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் விலை ரூ.7,759 முதல் ரூ.17,581 வரை குறைந்துள்ளது; எல்.ஜி. தொலைக்காட்சிகளின் விலை ரூ.2,500-யிலிருந்து ரூ.85,000 வரை குறைந்துள்ளது என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மேலும், இந்தியாவில் சிமெண்ட் விற்பனையில் ஈடுபடும் பாரதி சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட், மருந்து விற்பனையில் ஈடுபடும் “போஹ்ரிங்கர் இங்கெல்ஹெய்ம்” (Boehringer Ingelheim) எனும் ஜெர்மனியைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் ஆகியவை தங்களுடைய உற்பத்தி பொருள்களுக்கு வரிக் குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்றிருக்கின்றன. இத்தகைய நிகழ்வுகளிலிருந்தே ஜி.எஸ்.டி. 2.0 என்பது கார்ப்பரேட்டுகளின் நலனுக்கானது என்பது தெளிவாகிறது.

அதேபோல, தலைமுடி எண்ணெய், சோப்,பாத்திரம், பன்னீர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்களுக்கு வரிக் குறைக்கப்பட்டாலும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே ஆகும்.

ஏனென்றால், கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அதிகபட்ச விற்பனை விலையின் (MRP) அடிப்படையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. அதிகபட்ச விற்பனை விலை என்பது பொருட்களின் அடிப்படை விலை மற்றும் ஜி.எஸ்.டி-யின் கூட்டுத்தொகையாகும். எனவே, ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டால் பொருட்களின் அதிகபட்ச விற்பனை விலை குறைய வேண்டும்.

ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வரிக் குறைப்புக்கு ஏற்ப பொருட்களின் அடிப்படை விலையை உயர்த்தி அதிகபட்ச விற்பனை விலையை குறையாமல் வைத்துக் கொள்கின்றனர். மேலும், ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பிற்கேற்ப பொருட்களின் எடையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பின் சிறு பலன்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களே அபகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளே உள்ளன.

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யினால் கார்கள், இரு சக்கர வாகங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதை கார்ப்பரேட் நிறுவனங்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், பற்பசை, தலைமுடி எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விலை குறைப்பை பற்றி பெரியளவில் செய்திகள் வெளிவராமல் இருப்பதும் அதனை உறுதிப்படுத்துகின்றன.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவினும் நெய், பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான அடிப்படை விலையை உயர்த்தி பொருட்களின் விலையைக் குறைக்க மறுத்திருக்கிறது. தற்போது, விழாக்கால சலுகை என்ற பெயரில் விலையை குறைத்திருந்தாலும் நவம்பர் 31-க்குப் பிறகு அதுவும் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும்.

மேலும், வரிக் குறைக்கப்பட்டுள்ள ஒரு சில பொருட்களும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பிராண்டட் (Branded) பொருட்களாக இருப்பதால், பிராண்டட் அல்லாத பொருட்களையே பிரதானமாக பயன்படுத்தும் கிராமப்புற மக்கள் வரிக் குறைப்பால் பலனடைய வாய்ப்பில்லை. இவ்வாறாக, நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோரான கிராமப்புற மக்கள், மோடி அரசு சொல்லும் வரிக் குறைப்பு பலனிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

மேலும், ஜி.எஸ்.டி. 2.0-வில் கடைகளில் விற்பனை செய்யப்படும் சப்பாத்திக்கு வரி இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் சப்பாத்தி மாவிற்கு வரி நீக்கப்படவில்லை, 5 சதவிகித வரி நீடிக்கவே செய்கிறது. அரிசி, பால் பவுடர் போன்ற பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. நீக்கப்படவில்லை.

அதாவது, நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தங்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குக் கூட வரி விதித்து அம்மக்களை ஒட்டச்சுரண்ட வேண்டும் என்ற பாசிச மோடி அரசின் கொள்கை, ஜி.எஸ்.டி. 2.0-விலும் தொடர்கிறது என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அதேபோல, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் ஏடு, புத்தகங்களுக்கான வரியை குறைத்துள்ளதாக மோடி அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால், அவற்றை தயாரிப்பதற்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் அச்சிடப்படாத காகிதங்களுக்கான ஜி.எஸ்.டி-யை 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக அதிகரித்திருப்பதன் மூலம் அதனை ஈடுகட்டும் நடவடிக்கையிலும் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.

ஆகவே, மோடி அரசின் ஜி.எஸ்.டி. 2.0-வினால் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் எந்த ஆதாயமும் அடையப் போவதில்லை. அம்மக்கள் மீதான வரிச் சுரண்டல் வழக்கம் போலத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

எதிர்க்கட்சி மாநிலங்களின்
வரி வருவாய்க்கு வேட்டு!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யினால் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் எட்டு மாநிலங்கள் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூட்டாக அறிவித்திருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.6,000 கோடி வரையிலும், கேரள அரசுக்கு ரூ.10,000 கோடி வரையிலும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

அதாவது, கடந்த எட்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யினால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனுபவித்துவரும் நிதிப் பற்றாக்குறையை ஜி.எஸ்.டி. 2.0-வானது மேலும் அதிகரித்திருக்கிறது. மோடி அரசும் தன்னுடைய நெருக்கடியை தற்காலிகமாக நிவர்த்தி செய்வதற்காக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் வரி வருவாயில் கை வைத்திருக்கிறது.

ஜி.எஸ்.டி. 2.0-வினால் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களின் வரி வருவாயும் பாதிக்கப்படும் என்றாலும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மோடி அரசு ஈடு செய்துவிடும்.

ஏற்கெனவே, ஜி.எஸ்.டி. வரி பங்கீடு என்பது வரி வசூல் அதிகமாக உள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைவான தொகையையும், வரி வசூல் குறைவாக உள்ள பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு அதிகமான தொகையையும் வழங்குவது என்ற பாசிச முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல், ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்களை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கே அறிவித்து அதிகப்படியான பணத்தை வாரி இறைக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரணத் தொகையைக் கூட வழங்காமல் வஞ்சித்து வருகிறது.

இந்நிலையில், ஜி.எஸ்.டி. 2.0-வினால் ஏற்படும் வருவாய் இழப்புகளை ஈடுகட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மோடி அரசிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றன. 2024-25 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு வருவாய் இழப்பு வழங்குதல், 40 சதவிகித வரி விதிக்கப்பட்ட பொருட்களின் மீது விதிக்கப்படும் கூடுதல் வரிகளை மாநிலங்களுக்கு முழுமையாக வழங்குதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

ஆனால், இக்கோரிக்கைகள் குறித்து 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்வது குறித்தும் எந்த அறிவிப்புகளும் வெளியிடவில்லை.

“தீபாவளி பரிசு, வருவாய் இழப்பு”
மோடி கும்பலின் பொய் பித்தலாட்டங்கள்

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் கடந்த எட்டு ஆண்டுகளாக உழைக்கும் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். சிறு, குறு வணிகர்கள் முற்றிலும் நொடிந்துபோய் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகினர். பலர் ‘தற்கொலை’ செய்துக் கொண்டுள்ளனர். ஜி.எஸ்.டி-க்கு எதிராக மக்களின் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் வளர்ந்துள்ளன.

இத்தகைய பொருளாதார பயங்கரவாதத் தாக்குதலை நாட்டு மக்கள் மீது தொடுத்த மோடிக் கும்பல் இன்று ஜி.எஸ்.டி. திருத்தம் மூலம் மக்களுக்கு ‘தீபாவளி பரிசு’ அளிக்கிறோம் என்று கூறுவது எவ்வளவு வக்கிரமானது?

அதேபோல், திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யினால் ஆண்டிற்கு ரூ.2 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று மோடி அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், ஆண்டிற்கு ரூ.48,000 கோடி மட்டுமே வருவாய் இழப்பு ஏற்படும் என்பதை ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தன்னுடைய ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் மோடி அரசின் பொய்ப் பிரச்சாரம் அம்பலப்பட்டுள்ளது.

மேலும், 2024-2025-ஆம் ஆண்டிற்கான ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.22.08 லட்சம் கோடியுடன் ஒப்பிடும் போது மோடி அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு மிகவும் சொற்பமானது. ஆனால், இந்த வருவாய் இழப்பைக் கூட மோடி அரசு எவ்வாறு ஈடு செய்யும்? கார்ப்பரேட் மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கான நேரடி வரிகளை மோடி அரசு நிச்சயம் அதிகரிக்காது.

மாறாக, கல்வி, சுகாதாரம், நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டிச் சுருக்குவதன் மூலம் இதனை ஈடுகட்ட பார்க்கும். ஏற்கெனவே, நிதிநிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம் மற்றும் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் பங்கு 16.2 சதவிகிதத்திலிருந்து (2021–2022) 14.2 சதவிகிதமாக (2025–2026) குறைந்துள்ளது. இந்த நிதி மேலும் வெட்டிச் சுருக்கப்பட்டால் நெருக்கடி இன்னும் தீவிரமாகும்.

ஜி.எஸ்.டி. 2.0: இந்தியப் பொருளாதாரத்தை
நெருக்கடியிலிருந்து மீட்குமா?

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யினால் உள்நாட்டில் பொருட்களின் விற்பனை அதிகரித்து அமெரிக்க வரி விதிப்பினால் ஏற்பட்ட நெருக்கடி தணிந்துவிடப் போவதில்லை என்பது தெரிந்திருந்தும் மோடி அரசானது மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால், கார், இரு சக்கர வாகனம், தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களை பண்டிகை நாட்களில் வாங்கும் பழக்கம் இந்திய மக்களிடையே உள்ளது. அனைத்து ஆண்டுகளிலும் இப்பொருட்கள் பண்டிகைக் காலங்களில் குறிப்பிட்ட அளவு விற்பனையாகின்றன. இந்த ஆண்டு, திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யினால் இப்பொருட்களின் விற்பனை கடந்த ஆண்டை விட சிறிதளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நவம்பருக்குப் பிறகு அதுவும் குறைந்துவிடும்.

மேலும், மோடி அரசின் பாசிச பொருளாதாரக் கொள்கையால் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்தியும் படிப்படியாக குறைந்துகொண்டே செல்கிறது. வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. அரசின் சலுகைகளும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து வழங்கப்படுவதால் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது.

அதேபோல, இந்தியப் பொருளாதாரம் அதன் இயல்பிலேயே உள்நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து, உற்பத்தி மிகுதியை ஏற்றுமதி செய்யும் சுயசார்பு பொருளாதாரமாக கட்டியமைக்கப் படவில்லை. மாறாக, அம்பானி, அதானி உள்ளிட்ட இந்திய கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய கார்பப்ரேட் முதலாளிகளின் நலனிலிருந்தே கட்டியமைக்கப்பட்டுள்ளது.

ஆத்ம நிர்பார் பாரத் (சுயசார்பு இந்தியா) என்று மோடி அரசு பிரச்சாரம் செய்தாலும் அனைத்துத் துறைகளிலும் அம்பானி, அதானிகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது; அதில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலைமைகள் இந்தியப் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும்.

மாற்று வரி வசூல் முறையே தீர்வு!

இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது என்பது நாட்டின் பெரும்பான்மை மக்களை வரிப் போட்டு ஒட்டச்சுரண்டி அப்பணத்தை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரியிறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே ஆகும். அதாவது, மக்களின் மீதான மறைமுக வரி அதிகரிப்பு; கார்ப்பரேட் முதலாளிகள் மீதான நேரடி வரிக் குறைப்பு என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் தொடர்ச்சியே ஆகும்.

அதன் அடிப்படையில்தான், 2018-19-ஆம் ஆண்டில் ரூ.11.22 லட்சம் கோடியாக இருந்த ஜி.எஸ்.டி. வசூலை நாட்டு மக்களை ஒட்டச்சுரண்டி 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாக மோடி அரசு அதிகரித்திருக்கிறது. மறுபுறம், 2023-24-ஆம் ஆண்டில் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரி சலுகைகளால் ரூ.99,000 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசே தெரிவித்திருக்கிறது.

தற்போது, ஜி.எஸ்.டி-யின் வரி விகிதங்களில் திருத்தங்களை மேற்கொண்டிருந்தாலும் பாசிச கும்பலின் இந்துராஷ்டிரக் கொள்ளை தொடரவே போகிறது.

மேலும், ஜி.எஸ்.டி. என்பது பல்வேறு தேசிய இனங்களின் பொருளாதாரத்தை சிதைத்து குஜராத்தி – மார்வாரி – பார்ப்பன – பனியா வகையறா கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்ற பாசிச பொருளாதாரக் கொள்கை. மாநிலங்களின் வரி வசூலிக்கும் அதிகாரங்களை பறித்து, மாநிலங்களை இந்துராஷ்டிரத்திற்கு கப்பம் கட்டும் காலனிகளாக மாற்ற வேண்டும் என்பதே பாசிச கும்பலின் நோக்கம். ஜி.எஸ்.டி. 2.0 அந்த நோக்கத்திலிருந்து துளியும் விலகாமல் உள்ளது.

இத்தகைய கொடிய, பாசிச தன்மைகளைக் கொண்ட ஜி.எஸ்.டி. 2.0-வை எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டிய எதிர்க்கட்சிகளோ அதனை வரவேற்றுக் கொண்டிருக்கின்றன. “நாங்கள்தான் ஜி.எஸ்.டி-யை மாற்றக் கூறினோம்” என்று பா.ஜ.க. அரசுடன் போட்டி போடுகின்றன. மாநில உரிமைகளை ஒழித்துக்கட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி-யை இரத்துச் செய் என்று வலியுறுத்துவதற்கு பதிலாக மோடி கும்பலிடம் கோரிக்கை வைத்து கொண்டிருக்கின்றன.

ஜி.எஸ்.டி. என்பது மூன்று குற்றவியல் சட்டங்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர மறு ஆய்வு, தொகுதி மறுவரையறை போன்று இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களில் ஒன்றாகும். இதன் மூலம் நாட்டின் வரி வசூலிக்கும் கட்டமைப்பையே மோடி அரசானது இந்துராஷ்டிரத்திற்கேற்ப, அம்பானி-அதானிகளின் பொருளாதார ஆதிக்கத்தை நிறுவுவதற்கேற்ப மறுவார்ப்பு செய்து கொண்டிருக்கிறது.

எனவே, ஜி.எஸ்.டி. வரி வசூல் முறையை முற்றிலுமாக இரத்து செய்து மாற்று வரி வசூல் முறையை நிலைநாட்டுவதன் மூலமே நாட்டின் பெரும்பான்மை மக்கள் மீதான வரிச் சுரண்டலை தடுத்து நிறுத்த முடியும். அதனை அம்பானி-அதானிகளின் பொருளாதார ஆதிக்கத்திற்கு தடை விதிக்கின்ற, அக்கும்பலின் சொத்துகளை பறிமுதல் செய்கின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்று அரசுக் கட்டமைப்பிலேயே நிலைநாட்ட முடியும்.

ஆகவே, ஜி.எஸ்.டி. வரி சுரண்டலால் பாதிக்கப்படுகின்ற சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருடன் ஒன்றிணைந்து ஜி.எஸ்.டி-யை இரத்து செய்வதற்கான போராட்டத்தை புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கட்டியமைக்க வேண்டும். மேலும், அப்போராட்டங்களை மாற்று அரசுக் கட்டமைப்பையும் மாற்று வரி வசூல் முறையையும் நிலைநாட்டும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 01-30, 2005 இதழ் | PDF

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 6 | ஏப்ரல் 01-30, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: போலீசு விசுவாசத்துக்கு ஏலம்! மு.க. – ஜெயா போட்டா போட்டி!
  • சக்கிலியனாப் பொறந்தா பீ திங்கணுமா?
  • பயங்கரவாத மோடி: இந்திய நாட்டின் அவமானச் சின்னம்
  • சிவகங்கை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் வண்டவாளம்: அகிலாண்டபுரத்தை அமுக்கிய புராணம்
  • பட்ஜெட்: நரியைப் பரியாக்கும் ‘மார்க்சிஸ்டு’கள்
  • நகர்ப்புற ‘ஆக்கிரமிப்பு’ இடிப்பு: ஏழைகள் மீதான போர்! நீதிமன்ற அக்கிரமம்!
  • தமிழக சட்டமன்றம்: ஜெயாவின் அடாவடித்தனம் எதிர்க்கட்சிகளின் கையாலாகாத்தனம்
  • நக்சல்பாரி புரட்சியாளர்கள் – ஆந்திர அரசாங்கம் சண்டை நிறுத்தம் – பேச்சு வார்த்தை: கானல் நீர் தாகம் தீர்க்காது
  • சி.பி.எம். பாட்டாளி வர்க்க கட்சியா? முதலாளித்துவ கம்பெனியா?
  • ஏழைகளுக்கு நீதி எட்டாக் கனி
  • கால்நடை வளர்ப்பில் தாராளமயம் விவசாயிகளின் கழுத்துக்குச் சுருக்கு
  • உயிர் குடிக்கும் தரைப்பாலம்: ஆளும் கும்பலைப் பணிய வைத்த மக்கள் போராட்டம்
  • இந்த அநீதிக்குப் பழிதீர்ப்பது எப்போது?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மஞ்சள் பட்டாணி இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு: அதானி-குஜராத்திகளுக்காக ஒழித்துக்கட்டப்படும் இந்திய விவசாயிகள்

20.10.2025

மஞ்சள் பட்டாணி இறக்குமதி வரி விலக்கை நீட்டிக்கும் மோடி அரசு!

இந்திய விவசாயிகளின் வருமானத்தை ஒழித்துக்கட்டி,
அதானி-குஜராத்திகளுக்கு தரை வார்க்கும் நடவடிக்கை!

பத்திரிகை செய்தி

டந்த செப்டம்பர் 25 அன்று மஞ்சள் பட்டாணி மீதான இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கை எதிர்த்து “கிசான் மகாபஞ்யாத்து” என்ற விவசாயிகளின் அமைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து ஒன்றிய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.

முதலில், மஞ்சள் பட்டாணிக்கான இறக்குமதி வரியை மூன்று மாத காலத்திற்கு மட்டும் ரத்து செய்து, அதற்கான அறிவிப்பை டிசம்பர் 8, 2023 அன்று மோடி அரசு வெளியிட்டது. ஆனால், அதன் பின்பு இந்த வரி விலக்கு ஏழு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, மே 31, 2025 அன்று இந்த வரி விலக்கை மார்ச் 31, 2026 வரை நீட்டிப்பதற்கான அறிவிப்பு வெளியானது.

பாசிச பி.ஜே.பி 2014-இல் ஆட்சிக்கு வந்தது முதல், உணவு பொருட்களுக்கான இறக்குமதியை அதிகரித்து வருகிறது. தற்போது உலகில் பருப்பு வகைகளை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்திய விவசாயிகளை மேலும் நட்டத்திற்கு தள்ளும் வகையில், மஞ்சள் பட்டாணி இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு 2026 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, மஞ்சள் பட்டாணி கனடா, ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், இப்போது இறக்குமதி வரிக்கு விலக்கு நீட்டிக்கப்பட்டதானது, மிகப்பெரும் பாதிப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும்.

உள்நாட்டு பருப்பு வகைகளுக்கு விலைகளைக் கட்டுப்படுத்தி நுகர்வோர் பயனளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல், விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளைப் பாதுகாப்பதையும் கைவிட்டு மஞ்சள் பட்டாணி இறக்குமதி செய்வதானது, இந்திய சந்தையில் நுகர்வோரான பெரும்பான்மை ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை உருவாக்கும்.

மோடி அரசின் இந்த முடிவானது உள்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. குறிப்பாக நாட்டுக் கொண்டைக்கடலை மற்றும் துவரம் பருப்பு உற்பத்தி பற்றாக்குறை நிலையில் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மஞ்சள் பட்டாணி இறக்குமதி என்பது அதிகரித்ததுதான் இதற்குக் காரணம். உள்நாட்டு பருப்பு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு 7,000 – 8,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதைவிட இரண்டு மடங்கு குறைவாக அதுவும் இறக்குமதி வரியே இல்லாமல் மஞ்சள் பட்டாணி இறக்குமதி செய்யப்பட்டு குவிண்டாலுக்கு 3,500 ரூபாய் என சொற்ப விலைக்கு விற்கப்படுகிறது. இது உள்நாட்டு விவசாயிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாகும்.

தற்போது இந்த வகையான இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகள்தான் சந்தையில் கிடைக்கும். மேலும் இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ளது.

இந்த சந்தையையும், லாபத்தையும் வெளிநாடுகளிலிருந்து மஞ்சள் பட்டாணியை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நிறுவனமான அதானி வேர்ஹவுசிங் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் (Adani Warehousing Services Pvt Ltd) உள்ளிட்ட குஜராத்தி நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்கின்றன. அதானி நிறுவனம் ஒட்டுமொத்த மஞ்சள் பட்டாணி இறக்குமதியில் சுமார் 19 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது. அதேபோல், குஜராத்தி படேல்களுக்குச் சொந்தமான ஈ.டி.சி அக்ரோ புராசசிங் இந்தியா பிரைவேட் லிமிடட் (ETC Agro Processing India Private Limited) நிறுவனமும் இதில் ஆதிக்கம் செலுத்துகிறது.

அதானி உள்ளிட்ட குஜராத்தி நிறுவனங்களின் லாபத்திற்காக உள்நாட்டு பருப்பு உற்பத்தியையும், விவசாயிகளையும் அழிக்கத் துடிக்கிறது பாசிச மோடி அரசு.‌ எனவே, மஞ்சள் பட்டாணி இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.

அதே சமயத்தில், குஜராத்தி, மார்வாடி, பார்ப்பன பனியா பின்னணி கொண்ட அம்பானி, அதானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் கும்பலின் லாபத்திற்காக, சூறையாடலுக்காக கட்டமைக்கப்பட்டு வரும், ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்ற பாசிச பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், உள்நாட்டு உற்பத்தியை மையப்படுத்திய, பெரும்பான்மை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கின்ற மாற்றுப் பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டியுள்ளது.

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 01-31, 2005 இதழ் | PDF

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 5 | மார்ச் 01-31, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வரி விதிப்புகளில் நரித்தனங்கள்
  • அரசு அலுவகலகமா? இந்துக் கோயிலா? நியாயத்தைக் கேட்ட ஊழியருக்குச் சித்திரவதை! சிறை தண்டனை!
  • சுனாமி துயரம் ஏகாதிபத்திய தந்திரம்
  • நக்சல்பாரி புரட்சியாளர்கள் – ஆந்திர அரசாங்கம்
    சண்டை நிறுத்தம் – பேச்சு வார்த்தை
    கானல் நீர் தாகம் தீர்க்காது
  • வடிவுரிமைச் சட்டத் திருத்தம்
    இயற்கைச் செல்வங்களுக்கும் வந்தது ஆபத்து
  • வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள் இரையாகும் கிராமப் பொருளாதாரம்
  • நேபாளத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு: சூழ்ச்சி – சதிகளில் மேலாதிக்கவாதிகள் புரட்சிப் போரில் மாவோயிஸ்டுகள்
  • “போராடாமல் வாழ்வில்லை!” – அறைகூவியது மாநாடு எதிரொலிக்கிறது போராட்டம்
  • அமெரிக்கா ஏகாதிபத்தியம் காகிதப் புலிதான் வெனிசுலா மக்களின் போராட்ட அனுபவங்கள்
  • திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளின் பிடியில் ராஜகம்பீரம்
  • இராமதாசு – திருமாவளவன் வழங்கும் “தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்”
  • “பாஸ்” உண்டு; “பஸ்” இல்லை! பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 01-28, 2005 இதழ் | PDF

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 4 | பிப்ரவரி 01-28, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சங்கரமட விவகாரம்: கருணாநிதி – ஜெயலலிதா அரசியல் மாறாட்டம்
  • “ஸ்டார்ட், காமிரா, ஆக்‌ஷன்!…” விவேக் ஓபராய் நடித்து வழங்கிய “நிவாரண உதவி!”
  • ஆழ்கடலையே வென்றவர்கள் அதிகார கும்பலிடம் தோற்பதா?
  • மோட்டாண்டி தோப்பு – மணியன் தீவு
    நிலத்தை இழந்த விவசாயிகள் அலட்சியப்படுத்தும் அதிகார வர்க்கம்
  • சோறு-துணிமணி-கடன்: மீனவர் வாழ்வை மீட்குமா?
  • அன்று கொன்றது சுனாமி! நின்று கொல்கிறது அரசு!
    பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் புரட்சிகர அமைப்புகள்
  • தாழ்த்தப்பட்ட ஏழையின் பூர்வீக நிலம் அபகரிப்பு! சிவகங்கை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் இழிசெயல்!
    நிலத்தை மீட்டெடுக்க வி.வி.மு. போராட்டம்
  • தனியார்துறை இடஒதுக்கீடு: கொந்தளிக்கும் சமூக நெருக்கடிக்கு ஒரு வடிகால்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 01-31, 2005 இதழ் | PDF

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 3 | ஜனவரி 01-31, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பேரலைகள் – பேரழிவுகள்
    இறந்தவர்களுக்கான ஒப்பாரியில் எஞ்சியர்வர்களின் துயரங்கள் மூழ்கடிக்கப்படுவதா?
  • தேசிய ஊரக வேலை உத்திரவாத சட்டம்: காங்கிரசின் துரோகம் போலிகளின் புலம்பல்
  • சங்கர மடத்தின் புதிய கைக்கூலிகள்
  • இந்தியா: ஏகாதிபத்தியங்களின் குப்பைத் தொட்டியா?
  • இராணுவ ஆக்கிரமிப்பு: ஈராக்கில் மட்டுமல்ல; இந்தியாவிலும்தான்!
  • இராணுவச் செலவு அதிகரிப்பு மக்களின் பாதுகாப்புக்கா?
  • “சங்கர மடத்தை இழுத்து மூடு! சொத்துக்களைப் பறிமுதல் செய்! ஜெயேந்திரனை கிரிமினலாக நடத்து!” – புரட்சிகர அமைப்புகளின் சூறாவளிப் பிரச்சாரம்
  • போபால்: அவமானத்திற்கு பழிதீர்ப்பது எப்போது?
  • பெருகிவரும் நவீன சொகுசு கார்கள்: பொருளாதாரப் புற்று நோய்
  • உக்ரைன்: அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு தேர்தலும் ஆயுதம்
  • ஊழலை எதிர்த்தால் “துரோகி” பட்டம்! – ‘மார்க்சிஸ்டு’களின் புதிய ஊழியர் கொள்கை
  • இதுதான் இன்றைய ‘நீதி’!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



41-ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | சந்தா செலுத்துவீர்!

புதிய ஜனநாயகம் | மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு

உழைக்கும் மக்களின் அரசியல் போர்வாள்

41 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம்

சந்தா செலுத்துவீர்! நன்கொடை அளித்து ஆதரிப்பீர்!

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

நாற்பது ஆண்டுகளுக்கு முன் 1985-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் ரசியப் புரட்சி தினத்தன்று மார்க்சிய -லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புதிய ஜனநாயகம் முதல் இதழ் வெளியானது. அன்று முதல் இன்றுவரை, 41 ஆண்டுகளாக தொடர்ச்சியாக புரட்சிகர அரசியலை உயர்த்திப் பிடித்து வெளிவரும் ஒரே அரசியல் இதழ் புதிய ஜனநாயகம் ஆகும். பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் இன்றளவும் தொடர்ச்சியாக பாட்டாளி வர்க்கத்தின் போர்வாளாக புதிய ஜனநாயகம் திகழ்ந்து வருகிறது.

இந்த வெற்றிகள் – பெருமைகளுக்குப் பின்னே பலநூறு தோழர்களின் அயராத உழைப்பு பொதிந்துள்ளது. மார்க்சிய -லெனினிய இயக்கத் தோழர்கள் மற்றும் திராவிட, தலித்திய, தமிழின அமைப்புகளின் தோழர்கள், விவசாய சங்க – தொழிற்சங்கத் தோழர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் ஆதரவோடுதான் இந்த வரலாற்றுப் பணியை இதுகாறும் தொடர்ந்து வருகிறோம். உங்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியம் இல்லை.

இந்த 41 ஆண்டுகளில் நமது நாடு பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து வந்துள்ளது. உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மேலும் மேலும் கீழ்நிலைக்குச் சென்றுள்ளது. இந்த எல்லா காலங்களிலும் புதிய ஜனநாயகம் உழைக்கும் மக்கள் பக்கம் நின்று, சமரசமின்றி குரல் கொடுத்து வந்துள்ளது. மக்களின் துன்ப துயரங்களுக்கான தீர்வு இந்த போலி ஜனநாயக அரசியல் கட்டமைப்புக்கு வெளியே இருப்பதைத் தொடர்ந்து உணர்த்தி வந்துள்ளது.

இன்று பாசிச அபாயம் மேலோங்கி வரும் காலகட்டம். பாசிச பா.ஜ.க கும்பலுக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டங்கள்தான், பாசிசத்தை வீழ்த்துவதற்கான ஆயுதம் என்பதை புதிய ஜனநாயகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதோடு, நாடு முழுவதும் நடக்கும் உழைக்கும் மக்களின் எல்லா போராட்டங்களுக்கும் ஆதரவு கரங்களை நீட்டி வருகிறது, வழிகாட்டி வருகிறது. மக்கள் பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வை பாசிச எதிர்ப்புடன் இணைக்கிறது.

அதன்மூலம் “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” என்ற மாற்றை மக்களிடையே கொண்டு சேர்க்கிறது. இன்றைய காலகட்டம் விவசாயம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்கும் விதமாக இந்த மாற்றை விரிவாக்கியும் வருகிறது.

இச்சூழலில், ஊடகங்கள் மீது தொடர்ச்சியாக பாசிச தாக்குதல்களை தொடுத்துவரும் பாசிச கும்பல் கடந்தாண்டு “அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவுச் சட்டத்தை” நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தின் மூலம், பத்திரிகைகளுக்கு நிர்வாக ரீதியாக பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.

இத்துடன், 1990-களிலிருந்து தனியார்மய தாராளமயக் கொள்கை தீவிரமாகச் செயல்படுத்தப்பட்ட பின்னர், அச்சு ஊடகங்கள் குறிப்பாக, புரட்சிகர – ஜனநாயக இயக்கங்களின் சிறு பத்திரிகைகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அச்சுத்தாள் உள்ளிட்ட பொருள்களின் விலையேற்றம், சமூக ஊடகங்களின் செல்வாக்கு ஆகியவற்றால் பல வார இதழ்கள், மாத இதழ்கள் தமது விற்பனைப் படிகளைப் பெருமளவு குறைத்துவிட்டன. இதற்கு புதிய ஜனநாயகம் இதழும் விதிவிலக்கல்ல.

புதிய ஜனநாயகம் இதழை முறையாக மாதந்தோறும் உரிய தேதியில் வெளியிடுவதோடு, இன்றைய காலகட்டத்தின் தேவைக்கேற்ப புதுப்பொலிவுடனும் கொண்டுவர வேண்டி உள்ளது. இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களிடம் புதிய ஜனநாயகம் இதழின் புரட்சிகர அரசியலை பரப்ப வேண்டி உள்ளது. ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் எமக்கு இவை இமாலயப் பணிகளாகும்.

இத்தனை ஆண்டுக் காலமும் ஒரு புரட்சிகர அரசியல் பத்திரிகையை பல்வேறு நெருக்கடிகளையும் கடந்து எம்மால் நடத்திவர முடிகிறதென்று சொன்னால், அதற்கு வாசகத் தோழர்களின் பேராதரவுதான் முதன்மையான காரணமாகும்.

அந்த நம்பிக்கையில் எமது பணிகளைத் தொடர்கிறோம். நிதி நெருக்கடியை ஈடுசெய்ய சந்தா மற்றும் நன்கொடை சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

  • உழைக்கும் மக்களின் அரசியல் போர்வாளான புதிய ஜனநாயகம் இதழின் சந்தா மற்றும் நன்கொடை திரட்டும் பணி வெற்றியடைய தோள் கொடுங்கள்!
  • சந்தா செலுத்தி இதழைப் பெற்றுக் கொள்ளுங்கள்!
  • தங்களது நண்பர்களையும் சந்தாதாரர் ஆக்குங்கள்!
  • புதிய ஜனநாயகம் இதழுக்கு நன்கொடை அளித்து ஆதரியுங்கள்!

புரட்சிகர வாழ்த்துகள்!

தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

***

ஆண்டுச் சந்தா என்ற அடிப்படையில் ஓராண்டுச் சந்தா, ஈராண்டுச் சந்தா, ஐந்தாண்டுச் சந்தா என வாசகர்கள் பணம் செலுத்தலாம்.

ஆண்டுச் சந்தா: ரூ.360

இரண்டாண்டுச் சந்தா: ரூ.720

ஐந்தாண்டுச் சந்தா: ரூ.1,800

அச்சிதழ் ஒரு படி: ரூ.30 (சந்தா இல்லாமல் ஒரு இதழை அஞ்சல் மூலம் பெறுவதற்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டும்)

மின்னிதழ் ஒரு படி: ரூ.30 (ஒரு இதழைப் பெறுவதற்கான தொகை)

G-Pay மூலம் பணம் கட்ட: 94446 32561

குறிப்பு: ஜி-பே (G-Pay) முறையில் பணம் செலுத்துபவர்கள், அதன் திரைப்பதிவையும் (ஸ்கிரீன் சாட்) முகவரியையும் சேர்த்து எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

வினவு தளத்தில் மின்னிதழ் கிடைக்கும்: vinavu.com

வங்கி கணக்கு விவரம்:

Bank: SBI
Branch:
Kodambakkam
Account Name:
PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

தொடர்பு விவரங்கள்:

தொலைபேசி / வாட்ஸ்-அப்: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 01-31, 2004 இதழ் | PDF

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 2 | டிசம்பர் 01-31, 2004 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பார்ப்பன “மாஃபியா” சங்கராச்சாரி!
  • ‘ஜெகத்தெரு’ கைது: காஞ்சிபுரம் கூட சீந்தவில்லை
  • பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்
  • “காம கே(ா)டி பீடம்!”
  • ஜெயேந்திரன் கைது: எதிர்க்கட்சிகளின் மௌனம் – மர்மம் என்ன?
  • “சங்கர மடத்தை மூடு! ஜெயேந்திரனைத் தூக்கிலிடு!” -ஓங்கி ஒலிக்கும் புரட்சிக் குரல்
  • பெட்ரோலியப் பொருள் விலையேற்றம்
    அம்பானியின் சேவையில் அரசு
  • அமெரிக்கத் தேர்தல்: மீண்டும் சர்வதேச பயங்கரவாதி ஜார்ஜ் புஷ்!
  • ரிலையன்ஸ்: மோசடியே மூலதனம் ஆட்சியாளர்களே பக்கபலம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



நோபல் பரிசின் மூலம் போர்க் குற்றங்களை மறைக்க நினைக்கும் டிரம்ப் | தோழர் வெற்றிவேல் செழியன்

நோபல் பரிசின் மூலம் போர்க் குற்றங்களை
மறைக்க நினைக்கும் டிரம்ப் | தோழர் வெற்றிவேல் செழியன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தமிழ் மீனவனின் கண்ணீர்த் தூது! | கவிதை

லங்கையின் நடுக்கும் குளிரில்,
நடுநிசியின்
பசி தின்னும் பொழுதில்,
எம் வயிற்றின் பசிக்காகவும்,
உம் நாக்கின் ருசிக்காகவும்,
மீன் கவ்விய வாடையுடன்,
கரையோரம் வலைகளைப் பின்னி
பழகிய கரங்கள் இப்போது,
வலியின் சொற்களை,
இரத்தம் கவ்விய கொடுமையின் வாடையுடன்,
சிறைக் கம்பிகளுக்குள் இருந்து
பின்னி அனுப்பும்
தமிழ் மீனவனின் கண்ணீர்த் தூது இது!

பெருங்கடலின் கர்ஜிக்கும் அலைகளில்
மிதக்கும் கச்சத்தீவு எல்லைக் கோட்டில்
சுருக்குக் கயிற்றில் தொங்கியபடி
நூறு நூறு மீனவர்கள்,
பிணங்களாய்!
எல்லையை அச்சுறுத்தும்
பயங்கரக் குறியீடாய்!

அலையின் ஓசை
அவ்வப்போது அழுகையின் ஓலமாகும்,
சிறைபிடிக்கப்பட்ட
மீனவக் குடும்பங்களின் கதறல்களால்;
கரையில் மட்டுமல்ல
கடலிலும் ஒலிக்கும்,
எங்களுக்காய் விம்மும்
கடல் தாயின் ஒப்பாரி நாதம்;
ஆழ்கடலின் துயர மடியில்,
கண்ணீர் வடிக்கும்
அவளின் அரவணைப்பில்,
கொத்துக் கொத்தாய்
கொல்லப்பட்டோரின் சடலங்கள்;
அவர்கள்,
ஆண்டாண்டு காலமாய்
இலங்கைக் கடற்படையின்
எல்லை மீறல் குற்றச்சாட்டில்,
சுட்டுக் கொல்லப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள்!

கண்ணை மூடிக் கொண்ட
ஒன்றிய – மாநிலத்தின்
கள்ள மௌனம் கடலில் கலக்க,
சுட்டழித்து,
சிறையில் கொடுமை தொடர,
எம் உயிர்கள் பறிக்கப்பட்டு,
உறவுகளின் கதறலும் கண்ணீரும்
கடலோடு கரைந்து விடுமோ?

இவ்வினாக்குறி
எங்களின் விடுதலைக்கான
துவக்கமாகட்டும்!
உங்கள் மனசாட்சியைத்
தட்டி எழுப்பி,
மௌனத்தை உடைக்கும்
சுத்தியலாகட்டும்!
உரிமைக்கான
எங்கள் கனவு நனவாகட்டும்!

இப்படிக்கு,
துயரத்தோடு தூது அனுப்பும்
உங்கள் மீனவன்!


பார்த்திபன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 01-30, 2004 இதழ் | PDF

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 1 | நவம்பர் 01-30, 2004 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல் முடிவுகள்: பதவி வெறியை மறைக்க மதச்சார்பின்மை முகமூடி
  • வீரப்பன் இரத்தத்தால் போலீசின் பாவங்களை கழுவும் முயற்சி
  • இராமேசுவரம் மீனவர் வாழ்க்கை: தொழிலுக்கு உத்திரவாதமில்லை
    உயிருக்குப் பாதுகாப்பில்லை
  • சினிமாவுக்குப் பலகோடி! உழைப்போருக்குத் தடியடி!
  • இந்தத் திண்ணைப் பேச்சு புரட்சியாளரைத் தெரியுமா?
  • வல்லரசுகளின் நயவஞ்சகமும் இந்தியாவின் துரோகமும்
  • சிறுபொறி பெருங்காட்டுத் தீயை மூட்டும்!
    டாடாவைப் பணிய வைத்த தொழிலாளர் வர்க்கப் போராட்டக் கதை
  • பிழைப்புவாதமே தலித்தியமாக… ஒட்டுண்ணிகளே தலைவர்களாக… | தொடர்கட்டுரை: பகுதி 6
  • பாலஸ்தீனம்: இசுரேலின் இன அழிப்புப் போர் | சென்ற இதழின் தொடர்ச்சி
  • புரட்சிகர மணவிழா: தாலி மறுப்பு மணவிழாவில் தாலி அறுப்பு!
  • நக்சல்பாரி புரட்சிகர குழுக்களின் ஐக்கியத்தை வரவேற்போம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 01-31, 2004 இதழ் | பி.டி.எஃப்.

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 19, இதழ் 12 | அக்டோபர் 01-31, 2004 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அடியொற்றி காங்கிரசு கூட்டணி ஆட்சி
  • “பொடா” சட்டத்தைப் பின் தேதியிட்டுத் திரும்பப் பெறு!”
    சிறைச்சாலையிலிருந்து எழுந்த இடிமுழக்கம்!
  • வை.கோ.வின் வெங்காய மறுமலர்ச்சி நடைபயணம்
  • சூஃபி மார்க்க்க தர்கா – மசூதி ஆக்கிரமிப்பு இந்து மதவெறியர்களின் நயவஞ்சகத் திட்டம்
  • ஈராக் ஆக்கிரமிப்பு: அமெரிக்க இராணுவம் வந்தது முன்னே… கிறித்துவப் பாதிரிகள் வந்தனர் பின்னே…
  • பிழைப்புவாதமே தலித்தியமாக… ஒட்டுண்ணிகளே தலைவர்களாக… | தொடர்கட்டுரை: பகுதி 5
  • பாலஸ்தீனம்: இஸ்ரேலின் இன அழிப்புப் போர்
  • கட்டாய இலவசக் கல்வி: கனவு மெய்ப்படுமா? கானல் நீராகுமா?
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 01-30, 2004 இதழ் | பி.டி.எஃப்.

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 19, இதழ் 11 | செப்டம்பர் 01-30, 2004 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: புதியன புகுதல் அரசியல் வித்தகர்களா? வில்லன்களா?
  • கொங்கரார் ஸ்பின்னர்ஸ்
    தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கும் கொள்ளைக் கூட்டம்
  • தினவெடுத்துத் திரியும் தமிழக போலீசு
  • பிழைப்புவாதமே தலித்தியமாக… ஒட்டுண்ணிகளே தலைவர்களாக… | தொடர் கட்டுரை: பகுதி 4
  • நீதிமன்ற பாசிசம்
  • தலைமை நீதிபதியா? பதினெட்டுப்பட்டி நாட்டாமையா?
  • ஊழல் கொள்ளைக்கு எதிராக ஒரு தனிமனிதனின் போராட்டம்
  • “கல்விக் கொள்ளைக்குத் தீ வைப்போம்”! – புரட்சிகர அமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
  • விவாசாயிகள் தற்கொலை: தாராளமயத்தின் கோரத்தாண்டவம் | தொடர் கட்டுரை: பகுதி 3
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட் 01-31, 2004 இதழ் | பி.டி.எஃப்.

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 19, இதழ் 10 | ஆகஸ்ட் 01-31, 2004 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: குடந்தை: கல்விக் கொள்ளையர்கள் வைத்த தீ!
  • இந்திய இராணுவத்தின் காமவெறி! கொலை வெறி!
    குமுறும் மணிப்பூர்
  • காவிரி-சட்லஜ் நதிநீர் பிரச்சினைகள்: மத்திய அரசின் மாற்றாந்தாய் அணுகுமுறை
  • பட்ஜெட்: மீண்டும் அதே பாதையில்…
  • பெர்ணாண்டசுக்கு ஆடை அவிழ்ப்பு: அமெரிக்காவின் எஜமானத்தனம்
  • வில்லியம் ஹிண்டன்: கம்யூனிச சீனாவின் அமெரிக்க மனசாட்சி
  • “கல்விக் கொள்ளைக்குத் தீ வைப்போம்”! – புரட்சிகர அமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
  • விவசாயிகள் தற்கொலை: தாராளமயத்தின் கோரத்தாண்டவம் | தொடர்கட்டுரை: பகுதி 2
  • பிழைப்புவாதமே தலித்தியமாக… ஒட்டுண்ணிகளே தலைவர்களாக… | தொடர்கட்டுரை: பகுதி 3
  • அம்பேத்கர் நூற்றாண்டு விழா: பெருமை யாருக்கு?
  • பட்டினியால் சாகும் பழங்குடி இனக் குழந்தைகள்: அரசே நடத்தும் படுகொலைகள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதுச்சேரி பல்கலை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்களை கைது செய்!

10.10.2025

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
அளித்த பேராசிரியர்களை கைது செய்!

பத்திரிகைச் செய்தி

புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கோரி போராடிய மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் தொடுத்து வலுக்கட்டாயமாக கைது செய்தது புதுச்சேரி போலீசு.

புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தின் கிளை காரைக்கால் நேரு நகரில் இயங்கி வருகிறது. இங்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பல்கலைக்கழகத்தில் கடந்த பல நாட்களாக அங்கு பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளதுள்ளனர். இதையொட்டி பாதிக்கப்பட்ட மாணவிகள் நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்களுக்கு ஆதரவாகவே பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டு வந்துள்ளது.

பாலியல்  தொடர்பான புகார் அளிக்க  ஐ.சி.சி (ICC) கமிட்டி இருந்த போதிலும், அது யுஜிசி விதிகளின் படி மாணவர்களைக் கொண்டு அமைக்கப்படவில்லை. பேராசிரியர்கள் மட்டுமே கொண்ட  அக்கமிட்டி, மாணவிகளின் பாலியல் புகார்களை நேர்மையாக விசாரிக்காமல் பாலியல் பொறுக்கிகளை காப்பாற்றும் வகையில் செயல்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மாணவி ஒருவரின் ஆடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில்  “துறைத்தலைவரரான மாதவைய்யா தொடர்ச்சியாக  தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இரவு நேரங்களில் போன் செய்வது, நிர்வாணப் புகைப்படம் அனுப்ப சொல்லுவது, தனியாகச் சந்திக்க வர சொல்லுவது என தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும்,

மேலும், நிர்வாணப் படங்களை அனுப்ப வில்லையென்றால் இன்டர்நெல் மதிப்பெண் போட மாட்டேன் என மிரட்டுவதாகவும்” அந்த ஆடியோவில் பேசி இருந்தார்.

பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பாக புகார் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் மாதவைய்யா மீது எடுக்கப்படவில்லை. அப்பாலியல் பொறுக்கி எப்போதும் போல் கல்லூரியில் சுதந்திரமாக சுற்றி திரிந்துள்ளான்.

இம்மாணவியைப் போலவே பல்கலைக்கழகத்தில் 30 முதல் 40 மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிப்பதாக அந்த மாணவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இப்படிப்பட்ட பாலியல் பொறுக்கி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து  பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் ஐ.சி.சி கமிட்டியை யுஜிசி-யின் விதிகளின்படி மாணவர்களை உள்ளடக்கிய கமிட்டியாக மாற்றியமைக்க வலியுறுத்தியும்  துணை வேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  நேற்று (அக்டோபர் 9 தேதி) மதியம் முதல் இந்திய மாணவர் சங்கம் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

8 மணி நேரத்தைக் கடந்து போராட்டம் நீடித்த போதும் முறையான தீர்வு எட்டப்படவில்லை. துணைவேந்தர் இல்லாமல் முதல்வரை வைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது நிர்வாகம். ஆனால், பேச்சுவார்த்தையில் மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதனால் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் அமைதியாக போராடிய மாணவர்கள் மீது நள்ளிரவில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுத்து கைது செய்தது புதுச்சேரி போலீசு.

மாணவிகளின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்தும், மாணவர்களை காலால் எட்டி உதைத்தும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி  6 மாணவிகள் உட்பட மொத்தம் 24 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்றுள்ளது.

  • பாலியல் பொறுக்கி பேராசிரியரை கைது செய்ய வக்கற்ற போலீசு போராடிய மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது  செய்தது கண்டனத்திற்குரியதாகும்.
  • மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய மாதவைய்யா உட்பட குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து பேராசிரியர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
  • பாலியல் குற்றத்திற்கு துணைபோன அப்பல்கலைக்கழக நிர்வாகம் மீதும் மாணவர் மீது தாக்குதல் நடத்திய போலீசு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களை உள்ளடக்கிய ஐ.சி.சி கமிட்டியை உடனே அமைக்க வேண்டும்.


தோழர் சக்தி,
மக்கள் அதிகாரக் கழகம்,
சென்னை மாவட்டம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram