Tuesday, June 24, 2025
முகப்பு பதிவு

விழிஞ்சம் துறைமுகம்: கேரள சி.பி.எம். அரசின் அதானி சேவை

கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் விழிஞ்சம் பகுதியில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை (Vizhinjam International Seaport) கடந்த மே 2-ஆம் தேதி பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம். அரசு திறந்து வைத்துள்ளது. இத்துறைமுகத்தை அரசு-தனியார் பங்களிப்பு (Public-Private Partnership) என்ற திட்டத்தின் அடிப்படையில், அதானி குழுமத்துடன் இணைந்து சி.பி.எம் அரசானது கட்டியமைத்துள்ளது.

இத்துறைமுகத்தை “கேரளாவின் கனவுத் திட்டம்” என்றும் “கேரளாவின் வளர்ச்சியையும், நாட்டின் வளர்ச்சியையும் இத்துறைமுகம் மேம்படுத்தும்” என்றும் சி.பி.எம். அரசு பெருமையாகப் பரப்புரை செய்து வருகிறது. மேலும், இத்திட்டத்தை ‘வளர்ச்சி’த் திட்டம் என்று கேரளாவின் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வரவேற்பதுடன் தங்களால்தான் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததாக சி.பி.எம். கட்சியுடன் மல்லுக்கட்டி வருகின்றன. ஆனால், இது விழிஞ்சம் பகுதியைச் சார்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை சுற்றுச்சூழலையும் நாசமாக்கிக் கொண்டுவரப்பட்டுள்ள நாசகர திட்டம் என்பதே உண்மை.

‘வளர்ச்சி’ என்ற பெயரில்
அப்பட்டமான அதானி சேவை

விழிஞ்சம் துறைமுகம் இந்தியாவின் முதல் ஆழ்கடல் கொள்கலன் பரிமாற்ற துறைமுகம் (Deep-Water Container Transshipment Port) ஆகும். உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் நிறுத்தும் வகையில் 20 மீட்டர் கடல் ஆழத்தை இயற்கையாகக் கொண்டிருப்பது; அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கான சர்வதேச கப்பல் போக்குவரத்து வழித்தடத்திற்கு 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது ஆகிய காரணங்களால் விழிஞ்சம் பகுதியில் இத்துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கார்ப்பரேட் முதலாளி அதானியின் முன்னிலையில் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட விழிஞ்சம் துறைமுகம்.

மேலும், துறைமுகத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் மட்டுமே தற்போது நிறைவுற்றுள்ள நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணிகள் 2028-ஆம் ஆண்டிற்குள் நிறைவுறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இத்துறைமுகம் ஆண்டுக்கு 12 லட்சம் கொள்கலன்களை (இருபது அடி சமமான அலகு – Twenty-foot Equivalent Unit – கொண்ட சரக்குகளைக் கொண்டுவரப் பயன்படுத்தப்படும் கொள்கலன்கள்) கையாளும் வகையிலான தானியங்கி தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. மூன்று கட்டப் பணிகளும் நிறைவடைந்தவுடன் இத்துறைமுகத்தால் ஆண்டுக்கு 45 லட்சம் கொள்கலன்களை கையாள முடியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேபோல, இந்தியாவிற்கான சரக்குகள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு, சிறிய கப்பல்கள் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், இனி அவை நேரடியாக விழிஞ்சம் துறைமுகத்தின் மூலமே கொண்டுவரப்படும் என்று சொல்லப்படுகிறது.

புவியியல் ரீதியாக முக்கியமான இடத்தில் இவ்வளவு தொழில்நுட்ப வசதியுடன் துறைமுகம் கட்டப்பட்டிருந்தாலும், இதனால் கொழுத்த லாபம் பெறப்போவது அதானி குழுமம் மட்டுமே. ஏனென்றால், 2034-ஆம் ஆண்டிலிருந்துதான் இத்துறைமுகத்தில் கிடைக்கும் வருவாயிலிருந்து கேரள அரசுக்குப் பங்கு அளிக்கப்படும் என்று அதானி குழுமத்துடன் அயோக்கியத்தனமாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஆனால், விழிஞ்சம் துறைமுகத்தைக் கட்டுவதற்கு அதானி குழுமத்தை விட கேரள அரசே அதிக நிதி செலவழித்துள்ளது. துறைமுகத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய கேரள அரசு ரூ.5,370 கோடியும் அதானி குழுமம் ரூ.2,497 கோடியும் செலவழித்துள்ளன. ஒன்றிய மோடி அரசால் செலவிடப்பட்ட ரூ.818 கோடியும் கேரள அரசின் முதுகில் கடன் சுமையாக ஏற்றப்பட்டுள்ளது. இத்துறைமுக நிர்வாகமும் அதானி கையில் நிரந்தரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதாவது கேரள சி.பி.எம். அரசானது ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து, அதானி லாபம் கொழுக்க ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளது.

அதேசமயம், இத்திட்டத்திற்காக ஆயிரக்கணக்கான மக்களை கிராமங்களில் இருந்து வெளியேற்றி சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாக்கியுள்ளது. மேலும், அதானி துறைமுகத்திற்கு அரணாக, கடலுக்குள் 3 கி.மீ தூரத்திற்கு அலை தடுப்பரண்களை அமைப்பதற்காக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லாரி சுமைகளுக்கு சமமான கற்களை சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுத்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நிலச்சரிவுகள் தொடர் நிகழ்வாகிவரும் போதிலும் அதானியின் நலனிற்காக அம்மலைகளை நாசப்படுத்தி கனிமவளக் கொள்ளையனைப் போல சி.பி.எம் அரசு செயல்பட்டுள்ளது.

மேலும், விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிரான மீனவ மக்களின் போராட்டத்தை கடும் அடக்குமுறைகளை செலுத்தி ஒடுக்கியது; மீனவர்களின் போராட்டம் அந்நிய சக்திகளால் தூண்டப்பட்டது என்று பா.ஜ.க-வினரைப் போல மீனவ மக்களை இழிவுபடுத்தியது. இன்னுமொருபடி மேலே சென்று துறைமுகத்திற்கு ஆதரவாகப் பாசிச பா.ஜ.க-வுடன் இணைந்து போராட்டங்களிலும் ஈடுபட்டது.

இவையெல்லாம் கேரள சி.பி.எம். அரசு முன்னிறுத்தும் “நவ கேரள மாடல்” என்பது அப்பட்டமான கார்ப்பரேட் மாடல் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது.

50,000-த்திற்கும் மேற்பட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு கொஞ்சமும் கூச்சமின்றி விழிஞ்சம் துறைமுகத்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்று சி.பி.எம். அரசு பேசி வருகிறது. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் அப்பட்டமாக அதானி சேவையில் சி.பி.எம். அரசு ஈடுபட்டு வருகிறது. கேரளாவின் மின்சார விநியோகம், சிமெண்ட் உற்பத்தி உள்ளிட்ட துறைகளிலும் அதானியின் ஆக்டோபஸ் கரங்கள் வேகமாக விரிவடையத் துணைசெய்கிறது.

இந்தியாவில், அம்பானி – அதானி – அகர்வால் வகையறா கார்ப்பரேட் கும்பலின் பொருளாதார ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் செயல்பட்டு வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் தொலைத்தொடர்பு, மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகளில் இக்கும்பலின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு வருகிறது. இச்சூழலில் பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் கேரள சி.பி.எம் அரசு, அதானியை வளர்ச்சியின் நாயகனாகவும் தங்களின் கூட்டாளியாகவும் பிரச்சாரம் செய்து கார்ப்பரேட் சேவையில் ஈடுபட்டு வருகிறது. பாசிச எதிர்ப்பு உணர்விலிருந்து தங்களுக்கு வாக்களித்த கோடிக்கணக்கான மக்களுக்கு அப்பட்டமாக துரோகமிழைத்து வருகிறது.

இடதுசாரி போர்வையில்
கார்ப்பரேட் மாடல் அரசு

விழிஞ்சம் துறைமுகத்தை பயன்படுத்திக் கொண்டு கேரளாவை நோக்கி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் சி.பி.எம். அரசு செயல்பட்டு வருகிறது. “விழிஞ்சம் கேரளத்தின் புதிய வெற்றி கீதம்”, “புதிய கேரளம் புதிய வழிகள்” போன்ற முழக்கங்களின் கீழ் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தாண்டு தொடக்கத்திலிருந்து, கேரள முதலீட்டாளர்கள் உலகளாவிய உச்சி மாநாடு, விழிஞ்சம் மாநாடு, உலகப் பொருளாதார மன்ற மாநாடு போன்றவற்றின் மூலம் உள்நாட்டு மற்றும் அந்நிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது. விழிஞ்சம் மாநாட்டில் மட்டும் 51 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக போராடிய மீனவர்கள் மீது அடக்குமுறை செலுத்தும் போலீஸ்.

மேலும், கார்ப்பரேட் முதலாளிகள் கேரளாவைக் கொள்ளையடித்துச் செல்வதற்கு ஏதுவான வகையில் மக்களின் வரிப்பணத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறது. விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, 66,10.7 கி.மீ தொலைவில் உள்ள பாலராமபுரம் ரயில் நிலையம், 16 கி.மீ தொலைவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையம் ஆகியவற்றை இணைப்பதற்கான உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த உள்கட்டமைப்பு பணிகளையும் அரசு-தனியார் பங்களிப்பு என்ற முறையிலேயே கேரள சி.பி.எம். அரசு மேற்கொண்டு வருகிறது.

அதேபோல, 1,456 சதுர கி.மீ பரப்பளவில் விழிஞ்சம் – கொல்லம் – புனலூர் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சி முக்கோணத் திட்டம், 78 கி.மீ நீளமுள்ள விழிஞ்சம் – நவைக்குளம் வெளிப்புற வளர்ச்சி வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் விழிஞ்சம் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பொருளாதார மண்டலங்களாகவும், தொழிற்துறைப் பூங்காக்களாகவும் உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இத்திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை மக்களிடமிருந்து அபகரிப்பதற்காக “சிறப்பு முதலீட்டு மண்டல மசோதா” எனும் மக்கள்விரோதத் திட்டத்தை சி.பி.எம் அரசு உருவாக்கியுள்ளது. இம்மசோதா நில கையகப்படுத்தலை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றியமைக்கிறது. இதன்மூலம், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்கள் மீது கடும் அடக்குமுறை செலுத்தி விழிஞ்சம் துறைமுகத்தைக் கட்டமைத்ததைப் போல, விவசாய மக்களின் மீதும் தாக்குதல் தொடுக்கக் கேரள அரசு ஆயத்தமாகி வருகிறது என்பது தெளிவாகிறது.

மேலும், இத்திட்டங்கள் மூலம் மூன்று லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கேரள அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் இத்திட்டங்களால் கேரளாவின் நிலமும் நீரும் காற்றும் நஞ்சாக்கப்பட்டு, கேரள மக்கள் தங்களுடைய பூர்வீக நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக்கப்படுவதும், தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக ஆக்கப்படுவதுமே நடந்தேறும்.

இவ்வாறு விழிஞ்சம் துறைமுகத்தின் மூலம் முதலீடுகளை ஈர்த்து கேரளாவை கார்ப்பரேட்டுகளின் சொர்க்கபுரியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே சி.பி.எம். அரசு செயல்பட்டு வருகிறது. கார்ப்பரேட் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுடன் போட்டிப்போட்டு வருகிறது. கேரள அரசின் இந்நடவடிக்கையானது மோடி அரசின் சாகர் மாலா, கதி சக்தி, இந்தியாவை உற்பத்தியின் குவிமையமாக மாற்றுவது ஆகிய நோக்கங்களோடு ஒன்றிணைந்ததாகும்.

அதேபோல, கேரள சி.பி.எம். அரசானது விழிஞ்சம் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் மட்டுமின்றி, அரசுத்துறைகள், மாநிலத்திற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளையும் அரசு – தனியார் பங்களிப்பு என்ற முறையில் நிறைவேற்றி கார்ப்பரேட் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அதன்மூலம், அரசுத்துறைகளில் கார்ப்பரேட்மயமாக்கத்தை தீவிரப்படுத்தி வருகிறது. சான்றாக, கேரளாவில் தனியார் பல்கலைக்கழகங்களை செயல்பட அனுமதிக்கும் “கேரள தனியார் பல்கலைக்கழகங்கள் (நிறுவன அமைப்பு மற்றும் ஒழுங்குமுறை) மசோதாவை” கடந்த மார்ச் மாதத்தில் நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம், கேரளாவில் அரசு பல்கலைக்கழகங்கள் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலைமைக்கு முடிவுரை எழுதியுள்ளது.

ஆகவே, கேரள சி.பி.எம் அரசானது இடதுசாரி போர்வையில் அப்பட்டமான கார்ப்பரேட் மாடல் அரசையே நடத்திக் கொண்டிருக்கிறது. மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, அதானியை வளர்ச்சி நாயகனாக முன்னிறுத்தி கார்ப்பரேட் சேவையில் ஈடுபடுவது, அப்பட்டமாக மக்களைப் பாசிசத்திற்கு பலியிடும் வேலையாகும்.  எனவே, மக்களையும் கம்யூனிசத்தையும் நேசிக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் சி.பி.எம். அரசின் இந்த மக்கள் விரோத, பாசிச கும்பலுக்கு ஆதரவான நடவடிக்கைகளை எதிர்த்துக் குரலெழுப்ப வேண்டும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1995 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 3-4 | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கத்தி எடுப்போம்! ரத்தம் சிந்துவோம்! ஏகாதிபத்திய மேலாதிக்கத் தளையறுப்போம்!
  • “சிவானந்தா ஸ்டீல்ஸ்” பயிற்சி தொழிலாளர்கள் போராட்டம்
  • சர்வ கட்சியும் லஞ்ச ஊழல் சி.பி.ஐ.-யிடம் சிக்கிய ‘டயரி’
  • கொடும்பாவி எரித்து உ.வ.க.விற்கு எதிர்ப்பு
  • காங்கிரசுக்கு கொள்ளி வைக்க கோஷ்டி சண்டை
  • நீலிகளின் ஆட்சியில் தலித் மக்கள் தவிப்பு
  • புதிய பொருளாதாரக் கொள்கை ஏழைகள் என்ன இடிதாங்கியா?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • பாசிசத்தில் முடிந்தது யேல்ட்சினின் ‘புரட்சி’
  • சேஷனின் குறுக்கு புத்தி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 16-31, 1994, ஜனவரி 1-15, 1995 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 3-4 | டிசம்பர் 16-31, 1994, ஜனவரி 1-15, 1995  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆந்திரா, கர்நாடகா தேர்தல் முடிவுகள்: ஓநாய்களுக்குப் பதிலாக நரிகள்
  • சாதித் தீ வேண்டாம்! வர்க்கத் தீ மூட்டுவோம்!
  • பிரேமானந்தா குற்றங்கள்: காவிக்குத் துணையாக காக்கிகள்
  • ஜெயா வீரப்பன் யார் தலைமையை ஏற்பது? போலீசு திணறல்
  • திராவிடக் கட்சிகளின் தமிழ்த் துரோகம்
  • ரவுடி எம்.எல்.ஏ-வைச் சிறை வைத்து அரசுப் பணியாளர்கள் போராட்டம்
  • மலிவானதோ மக்கள் உயிர்!
  • உறுதிமிக்க போராட்டத்தால் சாதிவெறிக் கும்பல் பணிந்தது
  • இந்துவெறிக் கும்பலின் பேடித்தனம்
  • பாக். எதிர்ப்பு அற்பத்தனம் நாட்டுக்கே அவமானம்
  • மார்வாடி எதிர்ப்புப் போராட்டம்: மறைக்கப்பட்ட உண்மைக்கு மணியரசன் குழு வாக்குமூலம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



எச்.ராஜா மதுரைக்குள் வரக்கூடாது – போலீஸ் ஆணையரிடம் புகார்

எச்.ராஜா மதுரைக்குள் வரக்கூடாது – போலீஸ் ஆணையரிடம் புகார்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 16-30, டிசம்பர் 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 1-2 | நவம்பர் 16-30, டிசம்பர் 1-15, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அயோத்தி: காவிக் கறை படிந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
  • நவம்பர் 7 – ரஷ்ய புரட்சிநாள் உழைக்கும் மக்களின் விழா
  • சேஷனின் பார்ப்பனத் திமிர் கழகங்களின் உண்மை முகம்
  • ஐ.எம்.எப். – உலக வங்கியின் 50ம் ஆண்டு விழா
    ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்ட வரலாறு
  • ராஜகோபாலன் கொலை: முன்வினைப் பயனே!
  • இலங்கை: திசநாயகா படுகொலையும் பரம்பரை ஆட்சியும்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • மார்வாடி எதிர்ப்புப் போராட்டம்: மறைக்கப்பட்ட உண்மைக்கு மணியரசன் குழு வாக்குமூலம்
  • தமிழக சட்டமன்றம்: ஜனநாயகம் படும்பாடு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



கீழடி: ‘‘ஆரிய மேன்மைக்கு’’ விழுந்த செருப்படி! | மீள்பதிவு

நவம்பர் 2019 புதிய ஜனநாயகத்தில் வெளியாகியிருந்த இக்கட்டுரை நவம்பர் 6, 2019 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது. சூழல்கருதி இக்கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.

***

   கீழடி: ‘‘ஆரிய மேன்மைக்கு’’ விழுந்த செருப்படி !

ரு கரித்துண்டின் ஆயுளை வைத்துக்கொண்டு தமிழின் வயது மூத்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? இப்படியெல்லாம் பேசி, நீங்கள் வேண்டுமானால் சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள். இதை வெளிநாட்டு ஆய்வாளர்கள் கேட்டால் சிரிப்பார்கள்.” –  கீழடி தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் பத்திரிகையாளர் பி.ஏ.கிருஷ்ணன். விவாதத்தில் துறைசார் வல்லுநர்கள், முன்னாள் துணைவேந்தர் முனைவர் ராசேந்திரன் மற்றும் பேராசிரியர் ராஜவேலு ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அதே விவாதத்தில் கீழடியைக் குறித்து, அதன் தொடக்கம் முதலே பேசி, எழுதிச் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் இருந்தார். இவர்களுடன், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் வரலாற்று ஆய்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத இருவர், “அவாள்” தரப்பை முன்வைக்க வந்திருந்தனர். ஒருவர் பி.ஏ. கிருஷ்ணன், மற்றொருவர் பத்திரிகையாளர் மாலன்.

கீழடியில் அகழாய்வு நடத்தப்பட்ட பகுதியும், அதனை நேரில் காண குவிந்திருக்கும் தமிழக மக்களும்.

காலத்தால் பிந்தைய பானையோடுகளை யாரேனும் ஆழமாகக் குழி தோண்டிப் புதைத்து இருக்க வாய்ப்பு உள்ளதாகவும்; எனவே, அதே மட்டத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கரித்துண்டுகளின் ஆயுளைக் கொண்டு அதனுடன் கிடைத்த பானையோடுகளின் ஆயுளை நிர்ணயிப்பது தவறு என்பது பி.ஏ.கிருஷ்ணனின் வாதம். அதே போல் கீழடியில் இதுவரை தோண்டப்பட்ட இடங்களில் தெருக்கள் ஏதும் இருந்த அடையாளம் கிடைக்கவில்லை என்றும், கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்கள் இல்லை என்றும் குறிப்பிட்ட பி.ஏ.கிருஷ்ணன், இதே காரணங்களுக்காக அதை ஒரு நகர நாகரிகம் எனக் குறிப்பிடுவது தவறு என்றார். மேலும், நதிக்கரை நாகரிகம் என்பது பெரிய நதிக்கரையில் தான் இருக்கும்” என்றொரு கருத்தைச் சொல்லி விவாத அரங்கில் இருந்த அனைவரையும் திடுக்கிட வைத்தார்.

பி.ஏ. கிருஷ்ணனுக்குப் பதிலளித்த ராஜவேலு, ராசேந்திரன் மற்றும் சு.வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் உலகம் முழுவதும் அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் தொன்மையைக் கணிக்க ஆய்வாளர்கள் சார்ந்திருப்பது கரிமப் பரிசோதனை என்பதை சுட்டிக்காட்டினர். அதேபோல் அகழாய்விற்காகத் தோண்டப்படும் குழியில் வெவ்வேறு மட்டங்களில் கிடைக்கும் பொருட்களுடைய காலம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது என்பதை விளக்கினர். மேலும், கீழடியில் கிடைத்திருக்கும் எழுத்துக்களின் தொன்மையை பி.ஏ. கிருஷ்ணன் சொல்வது போல் ஒரு “கரித்துண்டை”க் கொண்டு மட்டும் தீர்மானிக்கவில்லை எனவும், பிற இடங்களில் இதே போல் கிடைத்த எழுத்துக்களுடன் ஒப்பிட்டே அவற்றின் காலத்தை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர் எனவும் குறிப்பிட்டனர்.

கீழடியில் நகர நாகரிகம் நிலவியதற்குச் சான்று பக்ரும் நீளமான செங்கல் கட்டுமானம்.

மேலும், தோண்டப்பட்ட இடம் ஒரு சிறிய பகுதி என்பதையும் அது பிரதானமாகத் தொழிற்கூடம் அமைந்திருந்த பகுதி என்பதையும், மக்கள் வசிப்பிடம் அகழ்வாய்வு செய்யப்படும்போது தெரு அமைப்புகள் வெளிப்படும் என்பதையும் பிறர் சுட்டிக்காட்டினர். இந்த விவாதங்களின் போது சமஸ்கிருத எழுத்துக்களுக்கான தொல்லியல் ஆதாரங்கள் கிறிஸ்துவுக்கு பிந்தைய நூற்றாண்டிலேயே கிடைப்பதையும், தமிழுக்கான ஆதாரம் கிறிஸ்துவுக்கு முன் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிடைப்பதையும் கீழடியை முன்வைத்துப் பேசினார் பேராசிரியர் ராஜவேலு.

இதற்கு பதிலளித்த பி.ஏ.கிருஷ்ணன், சமஸ்கிருதத்தின் தொன்மையை அகச்சான்றுகளைக் கொண்டே அளவிட வேண்டும் எனக் கூச்சலிட ஆரம்பித்தார். அதை இடைமறித்த சு.வெங்கடேசன், தமிழின் தொன்மை என்று வரும் போது அறிவியல் சான்றுகளைக்கூட நுணுகி ஆராய்வதையும் சமஸ்கிருதத்தின் தொன்மை என்று வரும்போது அகச்சான்றே போதும் என கண்களை மூடிக் கொள்வதையும் சுட்டிக்காட்டினார். பி.ஏ.கிருஷ்ணனிடம் அதற்குப் பதில் இல்லை.

பார்ப்பன வட்டாரங்களில் கீழடி ஆய்வு முடிவுகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதைச் சந்தேகமின்றிப் புரிந்து கொள்வதற்கு இந்த விவாதம் ஒரு சிறிய உதாரணம்.


படிக்க: அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்: மிரட்டிப் பணிய வைக்க நினைக்கும் பாசிச கும்பல்!


♦ ♦ ♦

கீழடியின் நான்காம் கட்ட முடிவுகளைத் தமிழகத் தொல்லியல் ஆராய்ச்சித் துறை வெளியிட்டதை அடுத்து அரசியல் அரங்கில் அது வெவ்வேறு வகைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவில் ஜனநாயக மற்றும் முற்போக்கு அரசியல் பேசும் பிரிவினர் கீழடியில் மதச்சார்பு கொண்ட அடையாளங்கள் கிடைக்காததையும் தமிழின் தொன்மை மேலும் ஒரு மூன்று நூற்றாண்டுகள் பின் சென்றிருப்பதையும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஆனால், வலதுசாரிகளான ஆர்.எஸ்.எஸ். மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட வட்டாரங்களில் இந்த ஆய்வு முடிவு ஏற்படுத்திய தாக்கம் நமது அக்கறைக்கு உரியது.

அதைப் புரிந்து கொள்ள கீழடியின் நான்காம் கட்ட அகழாய்வு முடிவுகளின் கேந்திரமான அம்சங்களை பார்க்க வேண்டும்.

முதலாவதாக, இதுவரை சங்ககாலத்தின் காலவரையறை கி.மு 3 நூற்றாண்டு என்று இருந்த புரிதல், கீழடிக்குப் பின் கி.மு. ஆறாம் நூற்றாண்டு எனப் பின்னோக்கி நகர்த்தப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் வாழ்வியல் முறை, தொழில்கள், பழக்க வழக்கங்களை கீழடியில் கிடைத்த பொருட்களைக் கொண்டு பொருத்திப் பார்க்க முடிகிறது. சங்க இலக்கியம் புறச்சான்று எதுவும் இல்லாத மனிதக் கற்பனைதான் எனக் கருதப்பட்டு வந்தது தகர்ந்து போனது. சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட வாழ்க்கை முறைக்கான தொல்லியல் சான்றாக கீழடி கருதப்படுகின்றது.

இரண்டாவதாக, ஆரியர் வருகைக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகம் இந்தியாவின் முதல் நகர நாகரிகம் எனக் கருதப்படுகின்றது. ஏறத்தாழ கி.மு ஆறாம் நூற்றாண்டில் கங்கை நதிக்கரையிலும் அதே காலப்பகுதியில் சிந்து சமவெளிப்பகுதியிலும் இரண்டாம் நகர நாகரிகம் உருவானது. இதே காலகட்டத்தில் தமிழகத்தில் நகரங்கள் உருவாகவில்லை எனவும், துண்டு துக்கடாவாக சில வீடுகள், ஊர் அமைப்புகள் இருந்தது என்றாலும், ஒரு முழுமையான நகரம் உருவாகவில்லை எனவும் கருதப்பட்டு வந்தது. தற்போது கீழடியில் கிடைக்கும் ஆதாரங்கள் தமிழகத்திலும் நகர நாகரிகம் இருந்ததையும் அதுவும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நிலவியதையும் உறுதிப்படுத்துகின்றது. மேலும், கீழடியின் தொல்லியல் மேட்டின் கீழ் அடுக்குகளில் அகழாய்வுகள் செய்யப்படும் போது தமிழகத்தின் நகர நாகரீகத்தின் காலம் மேலும் காலத்தால் முந்தையது என உறுதிப்படும் வாய்ப்பும் உள்ளது.

கீழடி ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தால் செய்யப்பட்ட காதணி, மணி உள்ளிட்ட ஆபரணங்கள் மற்றும் தாயக் கட்டைகள் : ஓர் உயர்வான நாகரிகத்தின் சாட்சியங்கள்.

கீழடியில் கிடைத்துள்ள தடயங்கள் அது நகர நாகரீகம் என்பதை உறுதிப்படுத்துவதுடன் ரோம் உள்ளிட்ட நாடுகளோடு இருந்த வணிகத் தொடர்பையும் நிரூபிக்கின்றது. மேலும், இந்தியாவின் பிற பகுதிகளில் கிடைத்த ரோமானியப் பானைகளில் இருந்த மூலப்பொருட்கள் ரோமைச் சார்ந்தவையாக இருக்கும்போது கீழடியில் கிடைத்த ரோமானிய பொருட்களின் மூலப்பொருட்கள் இதே பகுதியைச் சார்ந்தவை என்பதும் உறுதியாகியுள்ளது. அதாவது, பண்டைய இந்தியாவின் மற்ற பகுதிகள் ரோமில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்துள்ளன. அதே சமயம் தமிழகத்தில் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்துள்ளனர் என்பது உறுதியாகின்றது.

மூன்றாவதாக, தமிழ் பிராமி என்பது அசோகன் பிராமியில் இருந்து உருவானது என்றும் தமிழ் பிராமியின் காலம் கி.மு. 2- நூற்றாண்டு என்றும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால், கீழடியில் கிடைத்துள்ள எழுத்துருக்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என உறுதியாகியிருப்பதன் மூலம் தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கும் முந்தையது என நிரூபிக்கப்பட்டுள்ளது. சில ஆய்வாளர்கள் இதற்கு மேலும் தமிழ் பிராமி எனக் குறிப்பிடத் தேவையில்லை எனவும், பண்டைய தமிழ் எழுத்துக்களைத் தமிழி எனக் குறிப்பிட வேண்டும் எனவும் முன்வைக்கின்றனர். அதே போல் பேராசிரியர் ராஜவேலு உள்ளிட்டவர்கள், அசோகன் பிராமியே தமிழி எழுத்துருவில்இருந்துதான் உருவாகியிருக்க வேண்டும் என முன்வைக்கின்றனர். பிராமி எழுத்துக்களின் மூலம் தமிழி என்பதை ஆய்வுகளை மென்மேலும் விரிவுபடுத்துவதன் வழியாகத்தான் உறுதி செய்ய இயலும்.


படிக்க: கீழடியை கருவறுக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் தொல்லியல் துறை!


மேலும், கீழடி அகழாய்வில் 1001 ஓடுகள் இத்தகைய எழுத்து வரி வடிவங்களுடன் கிடைத்துள்ளன.  தமிழ்நாடு அரசு மேற்கொண்ட அகழ்வாய்வில் மட்டுமே 56 தமிழி எழுத்துகளைக் கொண்ட பானையோடுகள் கிடைத்துள்ளன. இந்த எழுத்துகள் பெரும்பாலும் பானைகளின் கழுத்துப் பகுதியில் எழுதப்பட்டுள்ளன. பானையில் கிடைக்கும் எழுத்துகள் பெரும்பாலும் பானை செய்வோரால் சுடுவதற்கு முன்பாக ஈர நிலையில் எழுதப்படும். கீழடியில் பானைகள் சுடப்பட்டு, உலர்ந்த பிறகு எழுதப்பட்ட எழுத்துகள் கிடைத்துள்ளன. அவற்றின் எழுத்தமைதி (கையெழுத்து) ஒரே மாதிரியாக இல்லை. ஆகவே வெவ்வேறு ஆட்கள் இவற்றை எழுதியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் எழுத்துகளின் பரவலான பயன்பாடு தெரியவந்துள்ளது. அதாவது, எழுத்தறிவு அன்றைக்கு சாதாரண மக்களிடையே பரவலாக இருந்தது என்பதை இது சுட்டுகின்றது.

நான்காவதாக, சிந்து சமவெளியில் கிடைத்த சில்லுக் குறியீடுகளுக்கும் பிராமி எழுத்துக்களுக்கும் இடையில் கீறல் வடிவ எழுத்து முறை ஒன்று உள்ளது. இன்னமும் படித்தறிய முடியாத இந்தக் கீறல் வடிவ எழுத்துக்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும், சிந்து சமவெளியிலும் கிடைத்துள்ளன (கங்கை சமவெளியில் இது கிடைக்கவில்லை). இந்த கீறல் வடிவ எழுத்துக்களே சிந்து சமவெளியின் முத்திரைகளில் காணப்படும் எழுத்துருக்களுக்கும், பிராமி எழுத்துருவுக்கும் இடைக்கட்டமானது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தற்போது கீழடியிலும் அதே விதமான கீறல் எழுத்துக்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் சிந்து சமவெளியின் மொழி பண்டைய திராவிட மொழியாக இருக்க வேண்டும் என்கிற கருதுகோள் மேலும் வலுவடைந்துள்ளது.

அரியானா மாநிலம் ராகிகரி என்ற இடத்தில் நடந்த அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட 4500 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு. இதன் மரபணுக்கள் தென்னிந்தியர்களின் மரபணுக்களுடன் ஒத்துப் போகின்றன.

ஐந்தாவதாக, திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு போன்றவற்றின் எலும்புகள் மக்கள் வாழ்விடங்களில் கிடைத்ததன் மூலம் அவ்விலங்குகளை வேளாண்மைக்குப் பயன்படுத்தியிருப்பதனை அறியமுடிகின்றது. இதன்மூலம் சங்ககாலச் சமூகம் வேளாண்மையினை முதன்மைத் தொழிலாகவும், கால்நடை வளர்ப்பினைத் துணைத் தொழிலாகவும் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மேலும், தானியங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் பானைகளும் கிடைத்துள்ளன. பானை செய்யும் தொழிற்கூடங்களை ஒத்த அமைப்புகளும், கைத்தறி நெசவுத் தொழிலில் பயன்படுத்தப்படும் கருவிகளும் கிடைத்திருப்பதால் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச் சமூகம் வணிகத்திற்கான பொருள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தது தெரிய வருகின்றது.

இறுதியாக, கீழடியில் கிடைத்த நூற்றுக்கணக்கான சான்றுகளில் எதுவும் அங்கே பெருந்தெய்வ வழிபாடு –  அதாவது பார்ப்பன, வைதீகக் கடவுளர்களின் வழிபாடு – இருந்ததற்கு எந்தவொரு ஆதாரத்தையும் வழங்கவில்லை. அங்கே வாழ்ந்த மக்கள் ஒருவேளை இயற்கை அல்லது முன்னோர் வழிபாடு செய்திருக்கலாம். ஆனால், வேதங்களில் குறிப்பிடப்படும் ஆரியக் கடவுகள்களை அவர்கள் வழிபட்டதற்கு எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.

♦ ♦ ♦

நாங்கள் ஆரியரும் இல்லை திராவிடரும் இல்லை. “நாம் தமிழர்கள்” என்பது நாம் தமிழர் கட்சியினரின் முதற்கட்ட பிரகடனம். ‘அண்ணன் உட்பட கட்சியின் முக்கிய தலைகள், செல்ல வேண்டிய திசையை சுட்டிக்காட்டிய பின் களத்தில் இறங்கினர் தம்பிமார்கள்.  திராவிடமும் சொறியானும் வந்த பின்தான் தமிழன் கல்வியறிவு பெற்றான் என்று சொன்னீர்களே? இப்போது கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எந்தச் சொறியான் வந்து எங்கள் பெரும்பாட்டன் ஆதனுக்கு எழுதப்படிக்க சொல்லிக் கொடுத்தான்?” என ஆர்ப்பரித்தார் நாம் தமிழர் தம்பி ஒருவர்.

இணையவெளியில் கீழடி ஆய்வு முடிவுகளை முக்காடாகப் போட்டுக் கொண்டு பெரியாரை குறிவைத்து நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட “களமாடல்களில்” பல இடங்களில் பா.ஜ.க.வினரும் கைகோர்த்துக் கொண்டதை கவனிக்க முடிந்தது.  சமீப நாட்களாக ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க. பெருச்சாளிகளின் ட்வீட்டுகளில், “தமிழன் பெருமை, ராஜராஜ சோழன், அங்கோர்வாட் கோயில்” என இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

“கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே கல்வியறிவு பெற்ற தமிழனின் இன்றைய வாரிசுகளின் தந்தையரும் பாட்டன்மார்களும் ஏன் கைநாட்டுகளாகப் போனார்கள்?” எனவும், “முப்பாட்டன் முருகன் மற்றும் பெரும்பாட்டன் மாயோனின் சிலைகள் கீழடியில் கிடைக்காததன் மர்மம் என்ன?” என்றும்  முற்போக்கு முகாமில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து தம்பிமார்கள் அடக்கி வாசிக்கத் தொடங்கினர்.

எனினும், நாம் தமிழர் கட்சியின் பங்காளிகளான ஆர்.எஸ்.எஸ். கும்பல் தங்கள் முகத்தில் கீழடி பூசியுள்ள கரியை எப்படிக் கழுவுவது எனத் திகைத்துப் போயுள்ளனர் என்பதைத்தான் தொலைக்காட்சி விவாதங்களில் அவர்கள் பதைப்பதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. பொது வெளியில் “தமிழர்களின் ஆதிகாலப் பண்பாட்டு மேன்மை” பேசு பொருள் ஆனதைத் தொடர்ந்து சங்கப் பரிவாரத்தின் கைத்தடியான தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் களமிறக்கி விடப்பட்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் “கீழடி தமிழர் பண்பாடு அல்ல; அது பாரதப் பண்பாடு” என்றார் பாண்டியராஜன்.

இந்தியத் துணைக்கண்டத்தின் அறிவுச் செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதிமூலம் வேதங்கள் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள். எனவே, சமஸ்கிருதம் அனைத்து இந்திய மொழிகளுக்கும் மூத்த மொழி. எனவே, சமஸ்கிருதம் தெய்வீகத் தன்மை கொண்டது. எனவே, சமஸ்கிருதம் அறிவியல் தன்மையும் கொண்டது (இதை நாசாவே சொல்லி விட்டது). எனவே, பிற பிராந்திய மொழிகளைப் பேசும் மக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கும் அரிய வகை அறிஞர்களான “அவாள்களுக்கு” கடன்பட்டவர்கள். எனவே, சாதியும் சாதித் தூய்மையும் பேணப்பட வேண்டும்.  இவையெல்லாம் பார்ப்பனியக் கும்பலும் அதன் குண்டாந்தடிகளான ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகள் மக்களிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்கள்.

இவையனைத்திற்கும் ஒரே வீச்சில் ஆப்பறைந்துள்ளது கீழடி.


சாக்கியன்

(புதிய ஜனநாயகம் நவம்பர் 2019)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



கீழடி அகழாய்வு: பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம்! | மீள்பதிவு

மார்ச் 2017 புதிய ஜனநாயகத்தில் வெளியாகியிருந்த இக்கட்டுரை மார்ச் 23, 2017 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது. சூழல்கருதி இக்கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.

***

ந்தியா வேதங்களின் நாடு என்றும், வேத கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம் என்றும் கூறிக்கொண்டு  இன்றைக்கு ஆட்சியில் உள்ள இந்து மதவெறிக் கும்பல் ஆரியப் பார்ப்பனியக் கலாச்சாரத்தை நம்மீது திணித்து வருகிறது. ஆனால், ஆரியர்களுக்கு முன்பே, அவர்களைவிடச் சமூக அமைப்பிலும், கலாச்சாரத்திலும், கலை இலக்கியங்களிலும் முன்னேறிய சமூகமாக, திராவிட சமூகம் விளங்கியது என்பது கால்டுவெல் போன்றவர்களின் மொழி ஆய்வுகள் மூலமாகவும், சங்க இலக்கிய ஆய்வுகள் மூலமாகவும், சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் மூலமாகவும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஆரிய கலாச்சாரத்திற்கு முந்தைய, அதற்குச் சற்றும் தொடர்பில்லாத, சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த ஒரு நகர சமூக அமைப்பு தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரலாற்றுச் சான்றுகள் கீழடி அகழ்வாய்வின் மூலம் தற்போது கிடைத்துள்ளது. இந்து மதவெறிக் கும்பலின் ஆரிய பித்தலாட்டங்களுக்கு எதிரான மிக முக்கியமான இந்தக் கண்டுபிடிப்பை இருட்டடிப்பு செய்வதுடன், கீழடி ஆய்வைத் தொடரவிடாமல் முட்டுக்கட்டை போடும் வேலையிலும் மத்திய அரசு இறங்கியது. பா.ஜ.க.  அரசின் இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராகத் தமிழகத்தின் அறிவுத்துறையினர்,  அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் எனப் பலரும் கண்டனங்கள் எழுப்பிய பிறகு, கீழடி ஆய்வுகள் தொடரும் என அறிவித்துத் தற்காலிகமாகப் பின்வாங்கியிருக்கிறது, இந்து மதவெறிக் கும்பல்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திற்கு அருகில் உள்ள கீழடியில் மைய அரசின் தொல்லியல் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக, இரண்டு பிரிவுகளாக அகழாய்வு நடத்தியது. வைகையாற்றுக் கலாச்சாரம் என ஆய்வாளர்களால் அழைக்கப்படும் கீழடி  பள்ளிச்சந்தைத் திடலில் காணப்படும் தொல்லியல் மேடு 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் வெறும் 50 செண்ட் நிலப்பரப்பில் நடந்த அகழாய்வு மூலம், ஏறக்குறைய கி.மு. 1000-இல் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றை நிரூபிப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

வரிசை வரிசையாகக் கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளி வருவதற்குமான அமைப்புகள்; கால்வாய் தடத்தை ஒட்டிச் சிறியதும் பெரியதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள் – என்றவாறு ஒரு முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென்னிந்தியாவில் முதன் முறையாகக் கீழடியில்தான் கிடைத்திருக்கிறது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட பகுதி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் பூதமாக வெளிவந்து, ஆரிய-பார்ப்பன திரிபுகளுக்கு ஆப்பறைந்தது

பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அல்லது கட்டிடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் மேற்கூரைகள் ஓடுகளால் வேயப்பட்டு இருந்திருக்கலாம் எனவும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் எனவும் இங்கு கிடைத்துள்ள சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் சூது பவளத்திலான மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும், வட இந்திய பிராகிருத எழுத்துக்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1,000 கிலோகிராம் எடையளவுக்கு மண் ஓடுகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன.

சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட மட்பாண்டங்கள் வெளிப்புறத்தில் சுடப்பட்டதைக் குறிக்கும் வகையில், அவற்றின் வெளிப்புறம் கருநிறத்தில் இருந்தன. ஆனால், கீழடியில் கிடைத்த மட்பாண்டங்கள் உட்புறத்திலிருந்து சுடப்பட்டதைக் குறிக்கும் விதமாக அவற்றின் உட்புறம் கருநிறத்தில் இருக்கிறது. கீழடியில் வாழ்ந்த சமூகம் தொழில்நுட்பரீதியில் முன்னேறிய சமூகமாக இருந்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சுடுமண் உறைகேணிகள் இருந்ததற்கான சான்று.

கீழடியில் தொழிற்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற எளிய தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் கண்டறியப்பட்ட சுமார் 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில் வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் சான்றுகளைக் காண முடிகிறது. மொத்தத்தில், ஒரு மேம்பட்ட நாகரிகத்தைக் கொண்ட சமூக அமைப்பாக கீழடி இருந்துள்ளது.

சென்ற ஆண்டு (டிசம்பர் மாதம்) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் கீழடி அகழாய்வு தொடர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றட்டிருக்கிறது.  அந்த அமர்வுக்குத் தலைமை வகித்த வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், “கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும்” என்று உரையாற்றியிருக்கிறார்.

கீழடியில் கிடைத்துள்ள சான்றுகள் அனைத்தும், வெறும் 50 செண்ட் நிலத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்தவை. மொத்தமாக உள்ள 110 ஏக்கர் நிலத்திலும் அகழ்வாய்வு செய்தால், அது தமிழக வரலாற்றை மட்டுமல்ல; இந்திய வரலாற்றையே திருப்பிப் போடும் ஒரு அகழ்வாராய்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 1970-க்குப் பிறகு தமிழகத்தில், மைய அரசின் தொல்லியல் துறையால் நடத்தப்படும் மிகப்பெரிய ஆய்வு கீழடி மட்டுமே.

கீழடியில் இதுவரை கிடைத்துள்ள பொருட்களை ஆய்வுசெய்கையில் ஒன்றில்கூட மதம் தொடர்பான அடையாளங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏனென்றால், பழங்காலத் தமிழர்களின் பண்பாடு மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில்தான் மதங்கள் தோன்றியிருக்கின்றன. சங்க இலக்கியங்கள் கூறுகின்ற, மதங்கள் தோன்றுவதற்கு முந்தைய நாகரிகத்தின் அடையாளம்தான் கீழடி.  “தமிழ் மொழியை ஒரு சமயச்சார்பற்ற மொழி” என்று மதிப்பீடு செய்த மொழியியல் அறிஞர் கால்டுவெல்லின் கருத்துக்குச் சான்றாக கீழடி நாகரிகம் இருப்பதை இந்த ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பெருந்தெய்வங்கள் மற்றும் மதமற்ற சமூகம் இந்தியாவில் இருந்துள்ளது என்பதை நிறுவுகிற ஆய்வுகளை, இந்தியச் சமூகமே வேத-வைதீக மரபுடையது எனப் பிதற்றிக் கொண்டிருக்கும் காவிக் கூட்டத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மட்பாண்டங்கள் உட்புறத்தில் சுடப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான சான்று

அதனால்தான் இந்த ஆய்வை, அதன் துவக்க நிலையிலேயே நிறுத்தி வைப்பது என்ற முடிவை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்தது. குஜராத்தின் தொலவிராவில் 13 ஆண்டுகள், லோத்தலில் 5 ஆண்டுகள், ஆந்திராவின் நாகார்ஜுன கொண்டாவில் பத்து ஆண்டுகள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  கீழடி ஆராய்ச்சியை மட்டும் இரண்டே ஆண்டுகளோடு மங்களம் பாடுவதற்கு பா.ஜ.க. அரசு முனைப்புடன் செயல்பட்டது. தற்போது வேறு வழியின்றி மூன்றாம் கட்ட அகழ்வாய்வு நடைபெறும் என அறிவித்திருக்கிறது. தமிழக மக்கள் விழிப்போடு இல்லையென்றால், இந்த அறிவிப்பைக் கிடப்பில் போட்டுவிடவும் காவிக் கும்பல் தயங்காது.

மேலும், அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களில் எத்தனை பொருட்களின் மூலக்கூறு மாதிரிகளை கார்பன்-14 (கார்பன் தேதியிடல்) பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்திய தொல்லியல் துறைதான் முடிவு செய்யும். இந்நிலையில் இராஜஸ்தான் காளிபங்கன் அகழாய்வில்  இருந்து 28 பொருட்களையும், தொலவிராவில் இருந்து 20 பொருட்களின் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கீழடியில் கண்டறியப்பட்ட மூலப் பொருட்களின் மாதிரியில் குறைந்தது பத்து மாதிரிகளையாவது ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என ஆய்வாளர்கள் கூறி வந்த நிலையில், இரண்டை மட்டுமே கார்பன்–14 பகுப்பாய்வுக்கு அனுப்ப மத்திய தொல்லியல் துறை அனுமதித்துள்ளது.

இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டறியவும், அந்நதியே சிந்து சம்வெளி நாகரிகத்திற்கான தொடக்கம் எனக் கூறி, தாங்கள் இதுவரைப் பிரச்சாரம் செய்தது அனைத்தும் உண்மை என நிரூபிக்கக் கோடிக்கணக்கில் செலவிட்டுக் கொண்டிருக்கிற இக்காவிக்கூட்டம், அறிவியல்பூர்வமாக கீழடியில் நடத்தப்படும் ஆய்வை மட்டும் மாற்றந்தாய் மனப்பாங்கு கொண்டு பார்க்கிறது. மேலும், அயோத்தியில் இராமாயண அருங்காட்சியகம் அமைக்க ரூ.151 கோடியை ஒதுக்கியுள்ள மத்திய அரசு, கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களைக் காலப் பகுப்பாய்விற்கு அனுப்ப வெறும் ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது.

ஆரியர்கள் வந்தேறிகள் என்ற உண்மையை இந்துத்துவா கும்பல் எப்போதும் ஏற்றுக் கொள்வது கிடையாது. காவிக்கு ம்பலின் வரலாற்றுத்  திரிபின் படி , ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள். அதேபோன்று வேதங்களில் கூறப்பட்டுள்ள கலாச்சாரம்தான் இந்தியாவின் கலாச்சாரம், அதனைத் தாண்டி வேறு எந்த கலாச்சாரமும் இந்தியாவில் இருக்கவில்லை. சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் என்றும், மற்ற இந்திய மொழிகள் அனைத்தும் அதிலிருந்துதான் தோன்றின என்று அவர்கள் கூறிவருகின்றனர்.

மேலும், திராவிடர் என்ற கருத்தாக்கம், ஆரிய-திராவிடப் பாகுபாடு, திராவிடர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்தியது ஆகியவை ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி எனக் கூறி,  தொன்மை வரலாறையெல்லாம் மறுத்து வருகிறது.

வட்டவடிவிலான உலைகள்

ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே நாடு – இந்து, இந்தி, இந்தியா என்ற தங்களது அரசியல் நோக்கத்திற்கு ஏற்றவாறு நம் நாட்டின் வரலாற்றைக் கட்டமைக்கவே இந்துத்துவா கும்பல் விரும்புகிறது. ஆனால், இதனை உண்மை என நிறுவுவதற்கு அவர்களிடம் சான்றுகள் எதுவும் இல்லை. புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ள கற்பனைகளை, கட்டுக் கதைகளை மட்டுமே அவர்களால் சான்றுகளாகக் காட்ட முடிகின்றது. இந்தக் கட்டுக்கதைகளை உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்களைத் தேடுவதையே இந்தியத் தொல்லியல் துறையின் முழுநேரப் பணியாக அவர்கள் மாற்றியிருக்கின்றனர்.

காவிக்கும்பலின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்திற்கு வரலாறு நெடுகிலும் தமிழகம்  ஒரு எதிர்ப்பின் அடையாளமாக இருந்து வந்துள்ளது. ஆரிய-திராவிட முரண்பாட்டையும் ஆரியர்கள் திராவிடர்களை அடிமைப்படுத்தியதையும் முன்வைத்துத் தமிழகம் தொடர்ந்து போராடி வந்துள்ளது. இந்திய மொழிகள் அனைத்திற்கும் சமஸ்கிருதம்தான் தாய் மொழி என்ற பிரச்சாரத்திற்கு எதிராக, தமிழ் மொழி சமஸ்கிருதத்தின் சார்பு இல்லாமல் தனித்து இயங்கக் கூடிய செம்மொழி என்றும், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் கால்டுவெல்லால் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமஸ்கிருத, ஆரிய கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவ விரும்பும் காவிக் கும்பலின் வரலாற்று மோசடியின் மீது விழுந்த சம்மட்டி அடியாக  கீழடி அகழ்வாய்வு அமைந்திருக்கிறது.  சீப்பை ஒளித்துவைத்துவிட்டுக் கல்யாணத்தை நிறுத்திவிடும் முட்டாள்தனம் போல, கீழடி அகழ்வாராய்ச்சியைத் தடுப்பதன் மூலம் திராவிட வரலாற்றை இருட்டடிப்பு செய்துவிடலாம் எனப் பகற்கனவு காண்கிறது, காவிக் கும்பல்.


அழகு

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2017)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 1-31, நவம்பர் 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 22-23-24 | அக்டோபர் 1-31, நவம்பர் 1-15, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பாரதீய ஜனதா – காங். தூண்டும் கன்னடவெறி
  • காட்-டங்கல் எதிர்ப்பு இயக்கம்
  • பிளேக் சாவிற்கு அரசே பொறுப்பு
  • ஏழைநாடுகளின் வளர்ச்சிக்கு மக்கள் தொகையல்ல அந்நிய கொள்ளையே தடை
  • கரூரில் சாதிக்கலவரம் ஆதிக்கசக்திகள் ஆதாயம்
  • உத்தர்கண்ட் விவகாரம்: இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மேல்சாதியினர் போராட்டம்
  • மார்வாடி எதிர்ப்புப் போராட்டம்: மறைக்கப்பட்ட உண்மைக்கு மணியரசன் குழு வாக்குமூலம்
  • “கோலா”க்களின் யுத்தம் ‘சுதேசி’களின் கேலிக்கூத்து
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 1-31, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 20-21 | செப்டம்பர் 1-31, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: “தடா” சட்டம் ரத்தாகுமா? முஸ்லீம்களின் ஓட்டுக்காக ஜனநாயக மாய்மாலம்
  • கொதிகலன் வெடித்துப் பலியான பெண் தொழிலாளர்கள்
  • விவசாயத்தை விழுங்கும் இறால் முதலாளிகள்
  • அயோத்தி: சாமியாரை வைத்து ஆதாயம் தேடும் காங்., பா.ஜ.க.
  • இலங்கையில் ஆட்சி மாற்றம்: பிறவி ஊனம்
  • ராஜீவ் கொலை ‘சதி’ வழக்கு: வெங்காயத் தோலை உரித்து வீரர்கள் கண்டதென்ன?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • நல்வாழ்வுத் திட்டத்திற்கு மூடுவிழா செயலிழந்து கிடக்கும் அரசுகள்
  • உமையாள் மில் முதலாளிகளின் சாதிவெறி, கொலைவெறியாட்டம்
  • மேமன் கைது விவகாரம்: மோடி மஸ்தான் வித்தை
  • பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!
  • போலீசின் அத்துமீறலை மறைக்க இனச்சாயம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



இஸ்ரேலின் போர்வெறிக்கு ஜி7 நாடுகள் ஆதரவு

னடா தலைமையில் அந்நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணம் கனானாஸ்கிஸ் பகுதியில் இரண்டு நாள்கள் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாடு செவ்வாய்க்கிழமை (17.06.2025) நிறைவடைந்தது.

ஜி7 கூட்டமைப்பில் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதன் உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் பங்கேற்றனர்.

அதேவேளையில், கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் ஜி7 கூட்டமைப்பைச் சேராத இந்திய பிரதமர் மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில், ஜி7 நாடுகள் போர்வெறிப் பிடித்த இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் ஜி7 தலைவர்கள் உள்ளார்ந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். அதேவேளையில், தன்னை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஜி7 தலைவர்கள் ஆதரவு அளிக்கின்றனர். மத்திய கிழக்கில் ஸ்திரமற்ற நிலைக்கும் பயங்கரவாதத்துக்கும் ஈரான் பிரதான காரணமாக உள்ளது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதே ஜி7 தலைவர்களின் நிலைப்பாடு“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை ‘தற்காத்துக்கொள்ள’ இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாம்!

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் அச்சுறுத்தல் இருப்பதாகப் பொய்யான குற்றசாட்டை முன்வைத்து இஸ்ரேல்தான் ஈரான் மீது முதலில் தாக்குதல் தொடுத்தது. ஏழு நாட்களாக தொடரும் இப்போரில், நூற்றுக்கணக்கான ஈரானிய மக்களை இஸ்ரேல் கொன்றொழித்துள்ளது. தன்னை தற்காத்துக்கொள்ள ஈரான் தொடுக்கும் தாக்குதலைக் கண்டிக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், ஈரானில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து வாய்திறக்க மறுக்கின்றன.


படிக்க: பொய்க்குற்றச்சாட்டு, போர் வெறிக் கூச்சல்!


ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பேசுவது பொய் என்பதை அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துள்சி கபார்ட்-டின் கருத்து அம்பலப்படுத்தியுள்ள நிலையிலும், பாசிஸ்ட் ட்ரம்பின் கட்டளைக்கிணங்க இஸ்ரேல் போரைத் தொடர்ந்து வருகிறது.

அதேசமயம், ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதாக பீதியூட்டும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் இஸ்ரேலின் அணு ஆயுத இருப்பு குறித்து கேள்வியெழுப்புவதில்லை. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடாத இஸ்ரேலிடம் 750 முதல் 1,110 கிலோ வரை புளூட்டோனியம் உள்ளது. இது 187 முதல் 277 அணு ஆயுதங்களை உருவாக்க போதுமானதாக இருக்கும் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. “தங்களிடம் அணு ஆயுதம் உள்ளது என்பதை மறுக்கவும் மாட்டோம், ஒப்புக்கொள்ளவும் மாட்டோம்”  என்ற கொள்கையை இஸ்ரேல்  கொண்டுள்ளது.

எனவே, ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறது என்று அமெரிக்கா – இஸ்ரேல் குற்றஞ்சுமத்துவது, தங்களுடைய போர்வெறியை நியாயப்படுத்துவதற்காக கூறப்படும் அப்பட்டமான பொய். இந்த பொய் குற்றச்சாட்டை காரணம் காட்டி ஜி7 கூட்டமைப்பில் உள்ள நாடுகளும் அமெரிக்கா – இஸ்ரேலின் போர்வெறிக்கு துணைநிற்கின்றன.

எனவே, மத்திய கிழக்காசிய நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும், ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதற்கும் இஸ்ரேல் மூலம் ஈரான் மீது அமெரிக்க தொடங்கியுள்ள பதிலிப் போருக்கு எதிராக உலகம் முழுவதுமுள்ள மக்கள் குரலெழுப்ப வேண்டும்.


அகதா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்டு 1-31, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 18-19 | ஆகஸ்டு 1-31, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பங்குச்சந்தை ஊழலறிக்கை: நாடாளுமன்ற முறை நிர்வாணாமானது
  • ஓட்டுக் கட்சிகளின் ஓட்டாண்டி நிலை
  • நரியைப் பரியாக்கும் நவீன திரிபுவாதி நம்பூதிரி
  • பாசிச ஜெயாவின் ‘அமைதிப் பூங்கா’ வில் பெருகும் போலீசின் கொலை – ‘கற்பழிப்பு’
  • தெலுங்கு தேசம் வாரிசு போர் எம்.ஜி.ஆர். வழியில் என்.டி.ஆர்.
  • வடகொரிய அதிபர் கிம் இல் சுங்: ஒரு தேசியவாதியின் மறைவு
  • விவசாயத்தில் நவீனமயம் சிறு விவசாயிகளுக்கு சுருக்கு
  • கொங்கு வேளாள கவுண்டர்கள் மிகவு பிற்படுத்தப்பட்டவர்களா?
  • பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 16-31, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 17 | ஜூலை 16-31, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காங்கிரசு – கிரிமினல் கள்ளக்கூட்டு
  • விடுதியின் அவலம் மாணவர்கள் குமுறல்
  • 69% இட ஒதுக்கீடு பிரச்சினை: யாருக்கு லாபம்?
  • தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அடித்துக் கொலை!
    கலப்புத் திருமணம் செய்த தலித் இளைஞன் படுகொலை!
    சாதிவெறி அட்டூழியம்
  • காஷ்மீர்: பஞ்சால் தீயணைக்க முயற்சி
  • உள்நாட்டு நிர்வாகத்தில் ராணுவத் தலையீடு
  • போதை விளையும் பூமி
  • பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 16-30, ஜூலை 1-15, 1994 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 15-16 | ஜூன் 16-30, ஜூலை 1-15, 1994  பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சேஷன் அதிகார குறைப்பு: விசுவாச தடுமாற்றம், சுருதியில் பேதம்
  • ‘மார்க்சிஸ்டு’ நிலப்பிரபுக்கள்!
  • கிரிமினல் அரசியலில் ஜெயா கும்பல் சாதனை
  • புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரிடமிருந்து ஒரு கடிதம்
  • சர்க்கரை: கசப்பு!
  • பகாசுர கம்பெனிகளின் பிடியில் சிக்கியது உலகம்
  • இறால் மீன் பண்ணைகள்: தஞ்சை பஞ்சு பூமியாகிறது
  • பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



முருக பக்தர்கள் மாநாடு: வெறுப்பைக் கக்கும் விசக் கிருமிகளின் மாநாடு | தோழர் ராமலிங்கம்

முருக பக்தர்கள் மாநாடு:
வெறுப்பைக் கக்கும் விசக் கிருமிகளின் மாநாடு | தோழர் ராமலிங்கம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



அமெரிக்க அடிமை மோடியும் வேட்டைக்காடாகும் இந்தியாவும்

பா.ஜ.க-வின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மோடியை ‘விஷ்வகுரு’வாக (உலகத் தலைவர்) முன்னிறுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பிரிட்டனை பின்னுக்குத்தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை இந்தியா பிடித்தது; நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்டது; ஜி20 கூட்டமைப்பிற்கான தலைமை பொறுப்பு சுழற்சி முறையில் இந்தியாவிற்கு கிடைத்தது போன்றவற்றை ஊதிப்பெருக்கி, இந்தியா தெற்காசிய நாடுகளின் குரலாக இருப்பது போல பா.ஜ.க. கும்பல் சித்தரித்தது.

இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், உலக மேலாதிக்க பயங்கரவாதியும் பாசிஸ்டுமான டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்றார். இது இந்தியாவில் மோடி தலைமையிலான பாசிச கும்பலுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதலாக அவர் வெளியிட்டுவரும் அடாவடித்தனமான அறிவிப்புகள், பாசிச நடவடிக்கைகள் மோடி கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்பின் கட்டளைகளுக்கு அடிபணிந்து தனது அமெரிக்க விசுவாசத்தை மோடிக் கும்பல் காட்டிக்கொண்டிருக்கிறது.

ட்ரம்ப் கும்பலின் அடாவடித்தனங்களும் அடிபணியும் அடிமை மோடியும்

அமெரிக்காவின் அதிபராக பாசிஸ்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற உடனேயே, ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்ற பெயரில் அமெரிக்காவில் புலம்பெயர்ந்துள்ள மக்களை மிகவும் இழிவான முறையில் வெளியேற்றத் தொடங்கினார். நூற்றுக்கணக்கான இந்தியர்களை கைகளில் விலங்கிட்டு, கால்களைக் கட்டி, முகத்தில் முகமூடி அணிவித்து, போர்க் குற்றவாளிகளைப் போல இராணுவ விமானத்தில் நாடு கடத்தியது ட்ரம்ப் தலைமையிலான பாசிச கும்பல். இவ்வாறு இந்தியர்கள் இழிவுபடுத்தப்படும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர்கள் மீது வக்கிரத்தைக் கக்கியது.

ஒட்டுமொத்த இந்திய மக்களையும் கொந்தளிக்கச் செய்த இந்த நடவடிக்கையை, இந்தியப் பிரதமர் மோடி பெயரளவிற்குக் கூட கண்டிக்கவில்லை. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரோ, அது அமெரிக்காவின் சட்டவிதிகள் சம்பந்தப்பட்ட விசயம் என்று துளியும் மான உணர்ச்சியின்றி பேசினார். மெக்சிகோ, கொலம்பியா போன்ற சிறிய நாடுகள் கூட தங்கள் நாட்டுக் குடிமக்கள் இழிவான முறையில் வெளியேற்றப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. ஆனால், இந்தியர்களை கண்ணியமான முறையில் அழைத்து வருவதற்காக சிறு துரும்பைக் கூட மோடிக் கும்பல் நகர்த்தவில்லை.

அதேபோல், சமீபத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்திய மக்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவதாகக் கூறி மோடி-அமித்ஷா கும்பல் “ஆப்பரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானின் மீது தாக்குதல் தொடுத்தது. இத்தாக்குதலின் மூலம் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டப் போவதாகப் பாசிச கும்பல் சவடாலடித்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் போர்வெறியையும்-இந்துமத வெறியையும் தூண்டி வந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திகொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எக்ஸ் தளத்தில் அறிவித்தார்.

போர்நிறுத்தம் குறித்து ட்ரம்ப் அறிவித்து அரை மணி நேரத்திற்கு பிறகே இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. காஷ்மீர் விவகாரத்தில் அந்நிய நாடுகள் தலையிடக் கூடாது என்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், இந்தியாவின் பெயரளவிற்கான இறையாண்மையையும் கேள்வியெழுப்பும் வகையில் ட்ரம்பின் நடவடிக்கை அமைந்தது.

இது இந்திய மக்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பிய நிலையில் அமெரிக்கா இவ்விவகாரத்தில் தலையிடவில்லை என்று பூசி மெழுக முயற்சித்தது மோடி அரசு. ஆனால் ட்ரம்போ பத்துக்கும் மேற்பட்ட முறை தான்தான் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் மத்தியஸ்தம் செய்ததாகவும் இரு நாடுகளுடனும் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என்று மிரட்டியவுடன் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக்கொண்டதாகவும் இழிவுபடுத்தினார்.

மேலும், அமெரிக்காவின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, ஈரானிடமிருந்து எண்ணெய் (ஒப்பீட்டளவில், தரமானதும் விலை மலிவானதுமாகும்) வாங்குவதை மோடி அரசு நிறுத்தியுள்ளது. ட்ரம்பின் முதலாவது பதவிக் காலத்தில், அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணிந்து, வெனிசூலா நாட்டிடமிருந்து மலிவு விலையில் கிடைத்துவந்த பெட்ரோலிய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை மோடி அரசு நிறுத்தியது. பின்னர், பைடன் பதவிக் காலத்தில் வெனிசூலாவிடமிருந்து மீண்டும் எண்ணெய் வாங்கிவந்த நிலையில், இப்போது ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானதும், அவரது அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து வெனிசூலாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளது. விலை அதிகமாக இருந்தாலும் அமெரிக்காவிடமிருந்து பெருமளவுக்குப் பெட்ரோலிய கச்சா எண்ணெய்யை வாங்க மோடி அரசு தீர்மானித்துள்ளது.

இவையன்றி, அமெரிக்காவின் நோக்கங்களுக்கும் வரி விதிப்புகளுக்கும் மோடி அரசைப் பணிய வைப்பதற்காக ட்ரம்ப் கும்பல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் கல்வி பயின்றுவரும் நிலையில் புதிய மாணவர்களுக்கு விசா வழங்குவதை ட்ரம்ப் அரசு நிறுத்தி வைத்திருப்பது; அமெரிக்காவில் குடிமக்கள் அல்லாதவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கு ஐந்து சதவிகித கலால் வரி விதிக்கப்பட்டிருப்பது; இந்தியாவில் ஒன்றுகோர்க்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்பனை செய்தால், ஆப்பிள் நிறுவனத்திற்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று மிரட்டியிருப்பது ஆகியவை மோடி அரசை அடிபணிய வைப்பதற்கான நடவடிக்கைகளே ஆகும்.

மோடி, ட்ரம்பின் கோலுக்கு ஆடும் குரங்கு!

ட்ரம்பின் பாசிச நடவடிக்கைகளையும் வரி விதிப்புகளையும் எதிர்த்துப் பல நாடுகள் எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மோடி கும்பலோ ட்ரம்ப் அதிபரான உடனேயே தனது அமெரிக்க எஜமான விசுவாசத்தை காட்டத் தொடங்கிவிட்டது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், போர்பன் விஸ்கி (Bourbon whiskey), ஈதர்நெட் சுவிட்சுகள் (Ethernet Switches), ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் (Harley Davidson Bikes) போன்ற சில அமெரிக்கத் தயாரிப்புகளுக்கான வரிகளைக் குறைப்பதாக மோடி அரசு அறிவித்தது. கூகுள் (Google) போன்ற அமெரிக்க மென்பொருள் நிறுவனங்களுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில், ஆறு சதவிகித டிஜிட்டல் வரியை இரத்து செய்துள்ளது.

மேலும், கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வர்த்தகக் குழுவினர் முன்வைத்த “சமச்சீர் வர்த்தகம்” (Balanced Trade) இரு நாடுகளுக்கிடையில் உறுதியாகியுள்ளது. அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டு அவை இந்தியச் சந்தையில் தடையற்ற முறையில் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இது இந்தியச் சந்தையை அமெரிக்கப் பொருட்களின் குப்பைக் கிடங்காக்கும் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகும்.

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 2 அன்று 57 நாடுகளின் மீது பரஸ்பர வரி (Reciprocal Tariff) விதிப்பை ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பது) விகிதத்திற்கேற்ப இந்த வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகப் பற்றாக்குறை நீடிக்கும் வரை வரி விதிப்பு தொடரும் என ட்ரம்ப் அடாவடித்தனமாக அறிவித்தார். அதனடிப்படையில், இந்தியாவிற்கு 26 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியதாகும்.

ட்ரம்ப் கும்பலின் இந்த வரி விதிப்பானது அப்பட்டமாகப் பிற நாடுகளின் சந்தையைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையாகும். வர்த்தகப் பற்றாக்குறையைக் களைவது என்ற பெயரில் அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்கச் செய்வது, பிற நாடுகளின் இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, அமெரிக்கா உடனான இருதரப்பு பொருளாதார ஒப்பந்தத்திற்கு பணியவைப்பது என பிற நாடுகளின் சந்தையை முற்றுமுழுதாக அமெரிக்கப் பொருட்களுக்கு திறந்துவிடச் செய்வதே இதன் நோக்கமாகும். ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை சீரழிக்கக்கூடிய இந்த திட்டத்திற்குப் பிற நாடுகள் பணிந்து வருவதற்கேற்ப பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு ட்ரம்ப் கும்பல் நிறுத்தி வைத்துள்ளது.

ட்ரம்பின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா, மெக்சிகோ, பிரேசில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சீனா போன்ற நாடுகள் அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரி விதித்தும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டும் பதிலடி கொடுத்த நிலையில், மோடி கும்பலோ இந்த வரி விதிப்பைப் பெயரளவிற்குக் கூட எதிர்க்கவில்லை. மாறாக, ட்ரம்பின் மிரட்டலுக்குப் பணிந்து அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில், 55 சதவிகித பொருட்களுக்கு இறக்குமதி வரியைக் குறைத்து இந்தியச் சந்தையை அமெரிக்காவிற்குத் திறந்துவிட்டுள்ளது.

மேலும், உலக நாடுகளில் முதல் நாடாக அமெரிக்கா உடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமிட தீர்மானித்து அதற்கான பேச்சுவார்த்தையிலும் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்குப் பல நன்மைகளைப் பயக்கப் போவதாக பா.ஜ.க. அடிவருடி ஊடகங்கள் பொய்யைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அமெரிக்கா உடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால் இந்தியா மறுகாலனியாவது மிகத் தீவிரமாக நடந்தேறும்.

ஏனெனில், இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்டால், இந்தியாவில் விவசாய மானியங்கள் குறைக்கப்படுவது; விவசாய விளைப்பொருட்கள் அமெரிக்க நிறுவனங்கள் கொள்முதல் செய்வதற்குத் திறந்துவிடப்படுவது; அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் வகையில் காப்புரிமைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது; கட்டுப்பாடற்ற தரவு ஓட்டங்களை (Data flow) இந்தியாவில் அனுமதிப்பது உள்ளிட்டு இந்தியாவில் கார்ப்பரேட் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

முறிக்கப்படும் “இந்தியாவின் முதுகெலும்பு”

அமெரிக்க பெட்ரோலிய கச்சா எண்ணெய், நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, விமானம் போன்ற அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிகளுக்கு இந்தியாவில் ஏற்கெனவே மிக மிகக் குறைந்த வரியே விதிக்கப்படுகிறது. இந்நிலையில், விவசாயப் பொருட்கள், பால் பொருட்கள் மற்றும் சில முக்கிய உற்பத்திப் பொருட்கள் மீதான வரியையும் குறைத்து அத்துறைகளிலும் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்க வல்லரசு துடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது, ட்ரம்ப் தலைமையிலான பாசிச கும்பல் இந்த நோக்கத்தை ஈடேற்றும் வகையில் பரஸ்பர வரி விதிப்பைப் பயன்படுத்தி வருகிறது.

இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் (ICRIER) அறிக்கையின்படி, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை விவசாயத் துறையிலேயே அதிகமாக உள்ளது. மேற்கத்திய நாடுகளின் விளைப்பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவது இதற்கான காரணமாகும். இவ்வாறான அதிக வரி விதிப்பினால், மேற்கத்திய நாடுகளின் விளைப்பொருட்கள் இந்தியச் சந்தையில் கொட்டப்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான், இந்திய விவசாயம் ஓரளவேனும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், விளைப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைத்து இந்திய விவசாய சந்தையை அமெரிக்க விவசாயப் பொருட்களுக்குத் திறந்துவிடுவது; இந்தியாவில் விவசாய உள்ளீடு பொருட்களுக்கான கொஞ்சநஞ்ச மானியங்களையும், குறைந்தபட்ச ஆதார விலையையும் வெட்டுவது; இந்தியாவின் பொது விநியோக முறையை முடிவுக்குக் கொண்டுவருவது; அரசு கொள்முதலை முற்றாகக் கைவிட்டு அமெரிக்க கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றைச் செயல்படுத்துமாறு அமெரிக்க வல்லரசும் அதன் அடியாளான உலக வர்த்தகக் கழகமும் இந்திய அரசைப் பல ஆண்டுகளாகவே மிரட்டி வருகின்றன.

இவை படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வந்தாலும், இந்திய விவசாயிகளின் எதிர்ப்புக்கு அஞ்சி இந்திய ஆட்சியாளர்கள் இக்கட்டளைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில், ட்ரம்பின் மிரட்டலுக்கு அஞ்சி அமெரிக்க சோளம், சோயாபீன்ஸ், பருத்தி, அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட அமெரிக்க விளைப்பொருட்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க மோடி அரசு தீர்மானித்துள்ளது. இது ஏற்கெனவே செத்துக் கொண்டிருக்கும் இந்திய விவசாயத்தைப் படுகுழிக்குத் தள்ளும் நடவடிக்கையாகும்.

அமெரிக்க விவசாயத்துறையானது பன்னாட்டு ஏகபோக வேளாண் கார்ப்பரேட்களால் கட்டுப்படுத்தப்படக்கூடியது. இந்த கார்ப்பரேட்டுகளுக்கு அமெரிக்காவில் அதிகளவிலான மானியங்கள் வழங்கப்படுவதால் அமெரிக்க விவசாயப் பொருட்கள் ஒப்பீட்டளவில் மலிவு விலையில் கிடைக்கின்றன. ஆனால், இந்திய விவசாயத்துறை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளால் பின்னி பிணையப்பட்டது. மேலும், மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், டீசல், மின்சாரம் போன்ற விவசாய உள்ளீடுகளின் மானியங்கள் வெட்டி சுருக்கப்பட்டு அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது; இந்திய விவசாயத்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டு வருவது போன்றவற்றால் இந்திய விவசாயம் மிகப்பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

இத்தகைய சூழலில் அமெரிக்க விளைப்பொருட்களுக்கு இந்தியச் சந்தை திறந்துவிடப்பட்டால் இந்திய விவசாயிகளால் அதனுடன் போட்டிப்போட முடியாமல் மிகப்பெரும் நட்டத்தை எதிர்கொண்டு நொடிந்து போவர்.

மேலும், இந்திய விவசாயிகளுக்கு ஏற்படும் நட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்காவின் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய விளைப்பொருட்களை அடிமாட்டு விலைக்குக் கொள்முதல் செய்யும் சதித்திட்டமும் இதில் ஒளிந்துள்ளது. அதானி-அம்பானி கும்பலும் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும். இந்தியாவில் அரசு கொள்முதல் ஏறக்குறைய ஒழித்துக்கட்டப்பட்டிருப்பது இந்த சதியை மேலும் எளிதாக்கும்.

விவசாயத்துறையை போல இந்தியாவின் பால் உற்பத்தித்துறையும் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக திகழும் இந்தியாவின் பால் உற்பத்தித் துறையானது சுமார் எட்டு கோடி சிறு உற்பத்தியாளர்களைக் கொண்டது.

மறுபுறம், இந்தியாவிற்கு அடுத்து இரண்டாம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பால் உற்பத்தித்துறை மிகப்பெரும் தொழிற்சாலை, பால் பண்ணைகளை நடத்தக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதாகும். உலகளவில் அதிக மானியங்களை பெறுபனவாகவும் இவை உள்ளன. இந்நிறுவனங்கள் வைத்திருக்கும் சராசரி கால்நடைகளின் எண்ணிக்கை 337 ஆகும்.

ஆனால், இந்தியாவின் சிறு உற்பத்தியாளர்கள் சராசரியாக இரண்டு அல்லது மூன்று கால்நடைகளை மட்டுமே கொண்டுள்ளனர். பெரும்பாலும் விவசாயிகளாக உள்ள இந்த சிறு உற்பத்தியாளர்கள் கூட்டுறவுகளின் மூலம் இந்தியாவின் பால் தேவையை ஈடுகட்டுவதுடன் உலக பால் உற்பத்தியில் 22-25 சதவிகிதத்தை உற்பத்தி செய்பவர்களாகவும் உள்ளனர். தற்போது அமெரிக்காவின் பால் பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருப்பது விவசாயத்துறையை போலவே இந்தியப் பால் உற்பத்தித் துறையையும் கடுமையாகப் பாதிக்கும்.

ட்ரம்ப் – மஸ்க் கும்பலுக்கு படையலிடப்படும் இந்தியா

அமெரிக்காவின் ஏகபோக பெருமுதலாளியான எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் – ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் இணையச் சேவையை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இந்தியாவில் வழங்குவதற்கு ஏற்பாடாகியுள்ளது. ஏற்கெனவே தொலைத் தொடர்புத் துறையில் 100 சதவிகித நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதியளித்துள்ள மோடி அரசு, இப்போது எலான் மஸ்க்-இன் ஸ்டார்லிங்க் நிறுவனத்தை இணையச் சேவையில் அனுமதிப்பதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியத் தொலைத்தொடர்புத் துறையையும் அமெரிக்காவுக்கு அடிமைப்படுத்தியிருக்கிறது.

2ஜி வழக்கில் உச்சநீதிமன்றமானது, தொலைத்தொடர்புத் துறையில் வெளிப்படையான ஏலமுறையின் அடிப்படையில்தான் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால், எவ்வித ஏல அறிவிப்புமின்றி செயற்கைக்கோள் அலைக்கற்றைகள் எலான் மஸ்க்-இன் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்பட்டு, எலான் மஸ்க்-இன் ஏகபோகம் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது. மேலும், எலான் மஸ்க்-இன் டெஸ்லா மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்கவும் மோடி அரசு தீர்மானித்துள்ளது.

அதேபோல, இந்தியாவில் அதிகளவிலான ஆயுதங்களை திணிப்பதற்கும் ட்ரம்ப் கும்பல் ஆயத்தமாகியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) நிறுவனத்தின் அதிநவீன எஃப்-35 (F-35) ஸ்டெல்த் ரக போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வது உறுதியாகியுள்ளது. ஏறத்தாழ 968 கோடி ரூபாய் மதிப்புடைய இந்தப் போர் விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு ஏறத்தாழ 28 லட்சம் ரூபாய் அளவிற்கு செலவாகும் நிலையில் இதனைப் பராமரிக்கவும் பல லட்ச ரூபாய் தேவைப்படும். அமெரிக்காவுடன் குவாட் (QUAD) எனப்படும் இராணுவக் கூட்டணியில் உள்ள இந்திய அரசு, இவற்றைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய உழைக்கும் மக்களுக்குப் பயனற்ற இந்த ஆயுதங்களுக்கான விலையை இந்திய மக்கள் தங்கள் வரிகளின் மூலமே சுமந்தாக வேண்டும். இதுமட்டுமின்றி, போர்த்தந்திர ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் இந்தியாவைக் கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்காவுடன் பத்தாண்டுகால இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு மோடி அரசை ட்ரம்ப் நிர்வாகம் நிர்பந்தித்து வருகிறது.

மேலும், இந்தியாவில் அணுசக்தித் துறையில் கார்ப்பரேட்களின், குறிப்பாக அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு மோடி அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 2007-இல் கையெழுத்தான இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் சிறிய அணு உலைகளை அமைப்பதற்கு அமெரிக்காவின் ஹோல்டெக் இண்டெர்நேஷனல் (Holtec International) என்ற நிறுவனத்திற்கு அந்நாட்டு எரிசக்தித்துறை ஒப்புதலளித்துள்ளது.

இவ்வாறு இந்திய அணுசக்தித் துறையில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கேற்ப அணுசக்திச் சட்டம் 1962 மற்றும் அணு சேதங்களுக்கான சிவில் பொறுப்புச் சட்டம் 2010 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக மோடி அரசு அறிவித்துள்ளது, அதற்கான குழுவையும் அமைத்துள்ளது. இச்சட்டத்திருத்தங்கள், இந்தியாவில் அணுசக்தி நிலையங்களைக் கட்டுவது, அதற்கான இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் இறக்குமதி, எரிபொருள் மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவற்றில் கார்ப்பரேட்டுகள் தன்னிச்சையாக செயல்படுவதற்கு அனுமதிப்பதுடன் அணுசக்தி நிலையங்களை கார்ப்பரேட்டுகள் சொந்தமாக்கிக் கொள்வதற்கும் வழிவகுக்கும். அதேபோல், அணு விபத்து ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட கார்ப்பரேட்டுகள் பொறுப்பேற்கத் தேவையில்லை என்ற வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இது போபால் நச்சுவாயு படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் காட்டிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இவையெல்லாம் இந்திய நாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலனியாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதைத் துலக்கமாக எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ள ட்ரம்ப்-மஸ்க் பாசிச கும்பலானது உலகம் முழுக்க தனது வேட்டையைத் தீவிரப்படுத்துவதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடாலடியான நடவடிக்கைகளின் மூலம் சுரண்டலைத் தீவிரப்படுத்தி உடனடி பயன்களை அடையத் துடித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவை ஆட்சி செய்துவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பல் அம்பானி-அதானிகளுக்காக இந்திய நாட்டை சூறையாடிவருவது ஒருபுறமெனில், ட்ரம்பின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து இந்தியாவை அமெரிக்காவின் காலனியாக்குவதற்கான அடியாளாகவும் செயல்படுகிறது. இதன்மூலம் ஒட்டுமொத்த இந்திய உழைக்கும் மக்களைப் பேரழிவிற்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது.

இவையெல்லாம் இந்திய நாட்டு மக்கள் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது என்பதைத் துலக்கமாக எடுத்துக்காட்டுகிறது. இதனடிப்படையில், இந்துராஷ்டிர நோக்கத்துடன் இந்தியாவைச் சூறையாடிக் கொண்டிருக்கும் பாசிச கும்பலை வீழ்த்துவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகியுள்ளது.


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram