Thursday, June 11, 2026
முகப்பு பதிவு பக்கம் 11

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு (1925-2025): ஏகாதிபத்திய உலக மேலாதிக்கத்தையும் பாசிச சர்வாதிகாரத்தையும் முறியடிக்க உறுதியேற்போம்!

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு (1925-2025):

ஏகாதிபத்திய உலக மேலாதிக்கத்தையும்
பாசிச சர்வாதிகாரத்தையும்
முறியடிக்க உறுதியேற்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

டிசம்பர் 25, 2025, மாபெரும் இந்திய கம்யூனிச இயக்கமானது தனது நூற்றாண்டை நிறைவு செய்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மைக்கு எதிராகவும் உயர்ந்த செங்கொடியின் கீழ், விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என சமூகத்தின் பெரும் உழைக்கும் வர்க்கங்கள் போராடினர்; அவர்கள் சிந்திய இரத்தத்தால், செங்கொடி மேலும் சிவந்து வர்க்கப் போராட்டத்தை முன்னகர்த்தி வருகிறது.

இந்திய கம்யூனிச இயக்கம் தொடங்கிய காலம் முதலாகவே, சமரசமின்றி மக்களின் வாழ்வுக்காகவும் நாட்டின் விடுதலைக்காகவும் போராடி தமது பாதையை செப்பனிட்டு வந்துள்ளது. அதனால்தான், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, செல்வாக்கு செலுத்திய திரிபுவாதத்தை முறியடித்து நக்சல்பாரி இயக்கம் முன்னேறியது. அந்த இயக்கத்தில், 1970-களில் தலைதூக்கிய இடது தீவிரவாதத்தையும் முறியடித்து, முதலாளித்துவவாதிகளுக்கும் பிற்போக்கு பாசிச சக்திகளுக்கும் இன்றளவும் அச்சுறுத்தலான சக்தியாகவே உள்ளது.

நாடாளுமன்றப் பாதை என்னும் புதைகுழியில் சிக்கிய சி.பி.ஐ., சி.பி.எம்., சி.பி.ஐ(எம்-எல்) லிபரேசன் போன்ற கட்சிகளின் தேர்தல் தோல்விகளை எடுத்துக்காட்டி கம்யூனிசம் தோற்று வருகிறது என இப்பிற்போக்கு சக்திகள் ஊளையிடுகின்றன. மா-லெ குழுக்களிடம் இருக்கும் பிளவுகளைக் காட்டி “கம்யூனிசம் இனி கதைக்குதவாது” என்று எக்காளமிடுகின்றன.

அதேசமயம் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்தான் நாட்டை விடுதலை செய்யும், ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்பின் நெருக்கடிகளைத் தீர்க்கும் என்று ஆரூடம் கூறிய தனியார்மயத்தின் தாசர்கள், “ஐயோ! நெருக்கடி முற்றுகிறதே!” என்று ஒப்பாரி வைக்கின்றனர். “விலைவாசி விண்ணை முட்டுகிறதே! வேலையின்மை அதிகரிக்கிறதே! கொலை, கொள்ளை, பாலியல் வெறியாட்டங்கள், போதைக் கலாச்சாரங்கள் அதிகரித்துவிட்டதே! புவி வெப்பம் அதிகரித்து பூமி அழியப்போகிறதே!” என்று இந்த ஒப்பாரியின் அலறல்கள் நமது காதுகளைக் கிழிக்கின்றன.

எனினும், தாங்கள் பின்பற்றி வந்த இந்த நாசகரக் கொள்கைகளை பின்வாங்கிக் கொள்ளவில்லை; தங்கள் முதலாளித்துவ சுரண்டலை குறைத்துக் கொள்ளவுமில்லை. உழைக்கும் வர்க்கத்தை கசக்கிப் பிழிவது இயற்கை வளங்களை மென்மேலும் ஒட்டச் சுரண்டுவது என இரத்த வெறிபிடித்து அலைகின்றனர்.

நேரடி மற்றும் மறைமுகப் போர்கள், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மேலாதிக்கக் கழுத்தறுப்புப் போட்டிகள் நாளும் தீவிரமடைகின்றன. எந்நேரமும் அணு ஆயுதப் போர் மூண்டுவிடுமோ என்ற கலக்கத்தில் ஏகாதிபத்தியவாதிகள் நிம்மதியின்றி தவிக்கின்றனர்.

நான்காவது தொழிற்புரட்சியால் ஊக்குவிக்கப்படும் டிஜிட்டல்மயமாக்கம், தானியங்கிமயமாக்கம், செயற்கை நுண்ணறிவுமயமாக்கம் போன்றவற்றால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள், ஊழியர்கள், கலைஞர்கள் செல்லாக்காசாக்கப்பட்டு வீதியில் வீசப்படுகின்றனர். இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு அத்துக்கூலிகளாக ஆக்கப்படுகின்றனர். உண்ண உணவின்றி, தங்குவதற்கு வீடின்றி வீதிகளில் அலைகின்றனர்; இதனால், சமூக குற்றங்கள் பெருகி வருகின்றன. மக்களின் தனியுரிமைகள் பறிக்கப்பட்டு அனைவரும் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இன்னொருபுறம், இயற்கை வளக் கொள்ளை மனித குலத்தின் முன்னுள்ள மாபெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த தொழிற்புரட்சி 4.0 என்பது அரியவகை கனிமங்களின் மீதான ஏகாதிபத்திய கும்பல்களின் கட்டுப்பாடுகளை மென்மேலும் தீவிரப்படுத்துகிறது.

இந்தியாவில் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட பார்ப்பனிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கமானது, ஏகாதிபத்தியங்களின், குறிப்பாக அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் நலன்களுக்கு ஒத்திசைவான முறையில் வளர்ந்து வந்துள்ளது. பாசிச மோடி-அமித்ஷா கும்பல் அமெரிக்காவுக்கு நாட்டையே அடிமையாக்கி வருகிறது. இதற்கு உகந்த வகையில் நாட்டை இந்துராஷ்டிரம் என்னும் திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றி வருகிறது.

ஏகாதிபத்தியம் – பாசிசம் இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஏகாதிபத்திய சுரண்டல் ஒருபுறமும் பார்ப்பனிய சாதி ஆதிக்க ஒடுக்குமுறைகள் மறுபுறமும் என்று இந்திய உழைக்கும் மக்களும் தாழ்த்தப்பட்ட சிறுபான்மையின மக்களும் மிகத்தீவிரமான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகின்றனர்.

இச்சூழலில் கம்யூனிசம் ஒன்றே உழைக்கும் மக்களுக்கு தலைமை தாங்கும் வலிமை கொண்ட ஒரே தத்துவமாக விளங்குகிறது. மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையின் அடிப்படையில், புரட்சிகர மா-லெ இயக்கங்களின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும் வலுப்படுத்துவதும் நம் முன்னேயுள்ள உடனடியான உயிராதாரமான பணியாக உள்ளது.

அதன்கீழ், பார்ப்பன பாசிசத்திற்கு எதிராகப் போராடுகின்ற தலித்தியம், திராவிடம் உள்ளிட்ட சீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இப்போதைய கடுமையான சூழலில் ஏகாதிபத்திய கும்பல்களுக்கும் இந்திய பாசிஸ்டுகளுக்கும் எதிராக நிராயுதபாணியாக போராடிக்கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒருமுகப்படுத்தவும்; ஆற்றலும் வளமும் கொண்ட நமது இந்திய நாட்டில் புரட்சியை முன்னெடுத்து செல்லவும் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை இன்னும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தற்போது ஆதிக்கத்தில் இருக்கும் பாசிசத்தை ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி வகைப்பட்ட பாசிசம் என்ற வரையறுப்புதான் சரியாக அடையாளப்படுத்துகிறது. நிலவுகின்ற நாடாளுமன்ற போலி ஜனநாயகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, இந்த பாசிசத்தை வீழ்த்த முடியாது.

மாறாக, இந்தக் கட்டமைப்பிற்கு வெளியே பாசிசத்திற்கு எதிராகப் போராடுகின்ற சக்திகளை ஒருங்கிணைத்து மக்கள் எழுச்சியைக் கட்டியமைக்க வேண்டும். அதன் வளர்ச்சியில், பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியின் தலைமையில் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்பதே தீர்வாகும். இவ்வாறு ஒரு அரசியல்-பொருளாதார-சமூக மாற்றுத்திட்டத்தின் மூலமாகத்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும்; சோசலிசத்தை நோக்கி உழைக்கும் மக்களை அணிதிரட்டி வழிநடத்திச் சென்று முன்னேற முடியும். இதன் மூலமாகத்தான், சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒற்றுமையையும் கட்டியமைத்து ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து உலகை மீட்க முடியும்.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டை நிறைவு செய்யும் இத்தருணத்தில் இக்கடமைகளை வரித்துக்கொண்டு முன்னேறுவோம்!

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!
சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக!
புரட்சி நீடூழி வாழ்க!


ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



கைது அல்ல கடத்தல்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரணக்குழியாகட்டும் வெனிசுலா!

2026 ஜனவரி 3-ம் தேதி, உலக வரலாற்றின் பக்கங்களில் ஒரு கறுப்பு நாளாகப் பதிவாகியுள்ளது. ‘போதைப்பொருள் கடத்தல்’ என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில், வெனிசுலாவின் இறையாண்மையைக் காலில் போட்டு மிதித்து, அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது துணைவியையும் அமெரிக்கா கடத்திச் சென்றிருக்கிறது. இது வெறும் கைது நடவடிக்கை அல்ல; இது ஓர் உலக ரவுடி தனக்குக் கீழ்ப்படியாத நாடுகளை எப்படி நடத்துவான் என்பதற்கான அப்பட்டமான பாசிச முன்னுதாரணம்.

“ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்” (Operation Absolute Resolve) என்ற பெயரில் ஜனவரி 3 அன்று நள்ளிரவு அமெரிக்கா இத்தாக்குதலை நடத்தியது. சுமார் 150-க்கும் மேற்பட்ட அதிநவீன போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரைச் சூழ்ந்தன. தாக்குதல் தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் “சைபர் கட்டளை மையம்” வெனிசுலாவின் மின் விநியோகக் கட்டமைப்பை முடக்கி, தலைநகரை இருளில் மூழ்கடித்தது. இருளில் பதுங்கி, ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த “சீல் டீம் 6” மற்றும் “டெல்டா ஃபோர்ஸ்” கூலிப்படைகள், மதுரோவையும் அவரது துணைவி சிலியா ஃப்ளோரஸையும் சிறைபிடித்துச் சென்றன.

கண்கள் கட்டப்பட்டு, விலங்கிடப்பட்டு, ஒரு போர்க்கைதியைப் போல இழுத்துச் செல்லப்பட்ட மதுரோவின் புகைப்படம், அமெரிக்கா பேசும் ‘மனித உரிமை’யின் யோக்கியதையையும், அமைதிக்கான நோபல் பரிசுக்கு அலையும் டிரம்ப்பின் பாசிச வெறியையும் அம்பலப்படுத்தியது.

வெனிசுலாவைச் சூறையாட, “ஃபெண்டானில்” (Fentanyl) எனும் போதைப்பொருள் வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்கு கடத்திவரப்படுவதாக பொய்யை பரப்பி அதனை பேரழிவு ஆயுதமாக அறிவித்துள்ளது டிரம்ப் நிர்வாகம். அமெரிக்காவின் சொந்தப் போதைப்பொருள் தடுப்புத் துறையே, ஃபெண்டானில் மூலப்பொருட்கள் சீனாவிலிருந்து மெக்சிகோ வழியாகவே அமெரிக்காவிற்குள் நுழைகின்றன என்று தரவுகளுடன் ஒப்புக்கொண்டு விட்டது. அதன் பிறகும், மதுரோ மீது பழி சுமத்துவதற்கு ஒரே காரணம், என்ன செய்தேனும் வெனிசுலாவை அடிமைப்படுத்த வேண்டுமென்ற அமெரிக்காவின் மேலாதிக்கவெறி மட்டுமே.

இது போதைப்பொருளுக்கு எதிரான போர் அல்ல; கடந்த பல பத்தாண்டுகளாக அமெரிக்கா கட்டிக்காத்து வந்த டாலர் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான போர். நவீன டிஜிட்டல் சகாப்தத்தில் மேலாதிக்கம் செலுத்த அடிப்படையாக உள்ள அரிய வகை கனிம வளங்களைக் கொள்ளையிடுவதற்கான போர். முன்பு, தங்களின் எண்ணெய் வளத்தை டாலரில் விற்க மறுத்த ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனும், லிபியாவின் முன்னாள் பிரதமர் கடாபியும் அமெரிக்காவால் கொல்லப்பட்டனர். இப்போது டாலருக்கு மாற்றாக சீன யுவானிலும், ரஷ்ய ரூபிளிலும் வர்த்தகம் செய்யத் துணிந்த வெனிசுலா அதிபர் மதுரோ குறிவைக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கடத்தலின் பின்னணியில் இருப்பது “கச்சா எண்ணெய்” மற்றும் “லித்தியம்”தான் என்பதை டிரம்ப்பும் அவரது கையாட்களும் துளியும் கூச்சமின்றி வெளிக்காட்டி வருகின்றனர். மதுரோ கடத்தப்பட்ட உடனே, “நாங்கள் எண்ணெய் வணிகத்தில் இருக்கிறோம்; எங்கள் நிறுவனங்கள் உள்ளே சென்று பணத்தை ஈட்டும்” என்று டிரம்ப் மிகத் திமிராகப் பேசியிருப்பது, இது ஒரு திட்டமிட்ட பகல் கொள்ளை என்பதற்கான சான்று. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பான 303 பில்லியன் பேரல்களைக் கொண்ட வெனிசுலாவின் வளங்களை, செவ்ரான் மற்றும் எக்ஸான்மொபில் போன்ற அமெரிக்கக் கார்ப்பரேட் முதலைகளுக்குத் தாரைவார்ப்பதே இக்கும்பலின் உடனடி நோக்கம்.

மறுபுறம், எலான் மஸ்க் போன்ற தொழில்நுட்பப் பெருமுதலாளிகள் வெனிசுலாவின் ஒரினோகோ சுரங்க வளைவிலும், சிலி – பொலிவியா – அர்ஜெண்டினா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய லித்தியம் முக்கோணத்திலும் குவிந்து கிடக்கும் லித்தியம் மற்றும் அரிய வகை கனிமங்கள் மீது கண் வைத்துள்ளனர். 2019-இல் பொலிவியா ஆட்சிக்கவிழ்ப்பின் போது “நாங்கள் விரும்பும் எவர் மீதும் ஆட்சிக்கவிழ்ப்பு செய்வோம்! அதை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று திமிராகப் பதிவிட்ட எலான் மஸ்க், இன்று மதுரோவின் கைதை “உலகிற்கான வெற்றி” என்று கொண்டாடுகிறார்.

மதுரோ கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள், வெனிசுலாவில் தனது “ஸ்டார்லிங்க்” இணையச் சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமாக வழங்குவதாக மஸ்க் அறிவித்திருப்பது, அந்நாட்டின் வலதுசாரி கும்பல்கள், மதுரோ அரசுக்கு எதிராக தமது அவதூறு பிரச்சாரங்களைத் தடையின்றி நடத்துவதற்கான ஏற்பாடாகும். இது எதிர்காலத்தில், வெனிசுலாவின் டிஜிட்டல் கட்டமைப்பைக் கைப்பற்றும் சதித்திட்டத்திற்கான முன்னோட்டமும் கூட.

அமெரிக்காவின் இந்த அத்துமீறலை ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளும், பிரேசில், கொலம்பியா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளும் “கடத்தல்” என்றும் “ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு” என்றும் கண்டித்துள்ளன. அதே சமயத்தில், ரஷ்ய – சீன ஏகாதிபத்தியங்கள், தமது நெருங்கிய கூட்டாளியான வெனிசுலா மீதான தாக்குதலைக் கைவிடவும், மதுரோவை விடுதலை செய்யவும் அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை – ஏற்றுமதிகளை மையமாக வைத்து நெருக்கடி கொடுக்க முடியும். அவ்வாறு செய்தால், அருமண் தனிமங்கள், இரசாயன உரங்கள் உள்ளிட்ட தனது அத்தியாவசியத் தேவைகளுக்காக இவ்விரு நாடுகளைச் சார்ந்திருக்கும் அமெரிக்காவைப் பணிய வைக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அது அமையும். ஆனால், தங்களின் பொருளாதார நலன்களை முன்னிறுத்திச் சிந்திக்கும் இவ்விரு ஏகாதிபத்தியங்களும் கண்டன அறிக்கையுடன் நிறுத்திக் கொண்டிருக்கின்றன.

மறுபுறம், “விஸ்வகுரு” என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மோடி அரசோ, அமெரிக்காவின் பெயரை உச்சரிக்கக் கூட அஞ்சி, “ஆழ்ந்த கவலையை” மட்டும் தெரிவித்துவிட்டுப் பதுங்கிக் கொள்கிறது. உக்ரைன் போரில் நடுநிலை என்று வேடம் போட்ட இந்தியா, வெனிசுலாவின் இறையாண்மை நசுக்கப்படும்போது வாயை மூடிக்கொண்டிருப்பது ஏன்? அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஈடு இணையில்லாத அடிமையாக மோடி கும்பல் மாறிவிட்டதையே இந்த “கள்ள மௌனம்” காட்டுகிறது.

அரசு மௌனமாக இருந்தாலும், இந்திய மக்களும், இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் அமைதியாக இருந்துவிடவில்லை. சென்னை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில், “அமெரிக்காவே, வெனிசுலாவிலிருந்து வெளியேறு!”, “இது கைது அல்ல, கடத்தல்!” என்ற முழக்கங்களுடன் அமெரிக்கத் தூதரகங்களை முற்றுகையிட்டுப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பாவில் பிரஸ்ஸல்ஸ், மாட்ரிட் நகரங்களிலும், அமெரிக்காவிற்குள்ளேயே நியூ-யார்க், சிகாகோ, சான் டியாகோ, போஸ்டன், வாஷிங்டன், ஃபிலடெல்பியா போன்ற நகரங்களிலும், வெனிசுலாவிலும், உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். பாசிச டிரம்ப்பின் திமிரையும், அமெரிக்க ஏகாதிபத்திய வெறியையும் சகித்துக்கொள்ள முடியாது என்பதே இப்போராட்டங்கள் வெளிப்படுத்தும் ஒற்றை உணர்வாக உள்ளது.

நியூயார்க் நீதிமன்ற விசாரணையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட மதுரோ, “நான் ஒரு குற்றவாளி அல்ல; நான் வெனிசுலாவின் ஜனாதிபதி. நான் ஒரு போர்க்கைதி ” என்று நீதிபதியின் முகத்திற்கு நேராக முழங்கினார். தன்னை விசாரிக்கும் தகுதி அமெரிக்க நீதிமன்றத்திற்கு இல்லை என்று அவர் விடுத்த சவால், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு துணிவுமிக்க போர்க்குரல்.

அமெரிக்கா ஒரு தலைவரைக் கைது செய்திருக்கலாம்; ஆனால் ஒரு தேசத்தின் ஆன்மாவைச் சிறைபிடிக்க முடியாது. கடந்த 25 ஆண்டுகளில், முன்னாள் அதிபர் ஹூகோ சாவேஸ் மற்றும் மதுரோவின் ஆட்சியின் கீழ் சுமார் 45 இலட்சம் வெனிசுலா மக்கள் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளனர். “பொலிவேரியன் மக்கள் படை” என்ற பெயரில் ஆயுதமேந்தத் தயாராக உள்ள இம்மக்களோடு, கொரில்லாப் படைகளும் மைய இராணுவத்தின் ஒரு பகுதியும் இணைந்து காடுகளையும், நகரங்களையும் போர்க்களமாக்குவது திண்ணம். எனவேதான், நேரடியாகப் போரில் ஈடுபடாமல் திடீர்த் தாக்குதல் நடத்தி மதுரோவை மட்டும் கடத்திச் சென்றுள்ளது அமெரிக்கா. மேலும், புதிய ஆட்சியாளர்களுடன் ‘ஒப்பந்தம்’ போட்டு எண்ணெய் ஏற்றுமதியை முழுவதுமாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்வதை உறுதி செய்வோம் எனப் பேசி வருகிறார் டிரம்ப்.

வியட்நாமிலும், ஆப்கானிஸ்தானிலும் வாங்கிய உதையை அமெரிக்கா மீண்டும் வெனிசுலாவிலும் வாங்கும். மதுரோவின் கைது என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் வெற்றியல்ல; அது அதன் வீழ்ச்சியின் தொடர்ச்சி. அமெரிக்க ஏகாதிபத்தியம் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர், 2010 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 26, இதழ் 2 | டிசம்பர், 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: 2-ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்கையின் புதிய சாதனை!
  • ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்: இராணுவத்தின் தேசபக்தி சந்தி சிரித்தது!
  • நோக்கியாவின் கொலைக் கரங்கள்
  • தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…
  • பிரம்மரத மரியாதைக்குத் தடை: ஒருங்கியது பார்ப்பனத் திமிர்! வென்றது புரட்சியாளர்களின் போராட்டம்!!
  • அமெரிக்க பயங்கரவாதம்: புதைக்கப்பட்ட உண்மைகள் பூதமாகக் கிளம்பின!
  • டாடா குழுமத்தின் கோர முகம் (சென்ற இதழின் தொடர்ச்சி)
  • இந்தியா, அமெரிக்காவின் சுமைதாங்கியானது
  • போஸ்கோ ஒப்பந்தம்: காங்கிரசின் கபடத்தனம்
  • காஷ்மீர்: காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு!
  • வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர், 2010 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 26, இதழ் 1 | நவம்பர், 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிப்பு: பாசிச ஒடுக்குமுறைக்கான இன்னுமொரு ஆயுதம்
  • மகத்தான மக்கள் மருத்துவர் துவாரகநாத் சாந்தாராம் கோட்ன்னிஸ் நூற்றாண்டு விழா
  • அயோத்தி தீர்ப்பு: பார்ப்பனப் புரட்டு!
  • காங்கிரசின் இந்து மதவெறி எதிர்ப்பு: காரியவாதிகளின் வெற்றுக் கூச்சல்!
  • கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்
  • மணற்கொள்ளை: பேரழிவுக்குள் தள்ளப்படும் தமிழகம்!
  • சட்டிஸ்கருக்கு சல்வா ஜூடும் மே.வங்கத்துக்கு ஹர்மத் வாகினி
  • தேசிய அடையாள அட்டை: மக்கள் நலனுக்கான திட்டமா? மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?
  • டாடா குழுமத்தின் கோர முகம்
  • ராஜஸ்தான் மாநில அரசு – சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட ஈ
  • ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்
  • காஷ்மீர் சலுகைத் திட்டம்: மீண்டுமொரு மோசடி நாடகம்!
  • பழங்குடி வேட்டையே காட்டு வேட்டை! அம்பலமாகும் எல்லைப் பாதுகாப்புப் படையின் அட்டூழியங்கள்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர், 2010 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 12 | அக்டோபர், 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அயோத்தி: தீர்ப்பு வழங்க நீதித்துறைக்கு அருகதை உண்டா?
  • ஜவுளித் தொழில் நெருக்கடி: முதலாளிகளா, தொழிலாளிகளா?
  • அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?
  • ராகுல்: பழங்குடி அவதார்!
  • இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம்
  • இராக்: அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்!
  • ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி
  • போபால்: கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!
    -புரட்சிகர அமைப்புகளின் தொடரும் இயக்கமும் பிரச்சாரமும்
  • நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்
  • அநீதியைத் தட்டி கேட்ட மாணவன் படுகொலை! குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது போலீசு!
  • மன்மோகன் சிங்: ஏகாதிபத்திய எடுபிடியா? ஏழைகளின் பிரதிநிதியா?
  • கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது விவசாயி போண்டியாகிறான்
  • போபால்: ராஜீவ், மனித உணர்ச்சி இல்லாத பிண்டமா?
  • மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர், 2010 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 11 | செப்டம்பர், 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அணு விபத்து கடப்பாடு சட்டம்: சந்தி சிரித்தது மன்மோகனின் களவாணித்தனம்!
  • இதைவிட வக்கிரம் இருக்க முடியுமா?
  • போபால்: கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!
    புரட்சிகர அமைப்புகளின் முற்றுகை
  • காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!
  • சோராபுதின் போலி மோதல் கொலை: முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!
  • நல்லகாமன் வழக்கு: தோல்வி நிலையென நினைத்தால்…
  • தொடரும் அரசியல் கூத்துக்கள்
  • நேபாள அரசியல் நெருக்கடி: குளிர்காயும் இந்தியா
  • செல்போன் பெருகியது; வறுமை ஒழிந்தது!
    -செட்டிநாடு சிதம்பரத்தின் அபாரக் கண்டுபிடிப்பு!
  • இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலுக்கும் இந்திய மேலாதிக்கத்துக்கும் எதிராக…
    தமிழகத்திலும் இலண்டனிலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள்
  • நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்
  • நீதிபதிகள்: ஊழல் பெருச்சாளிகள்!
  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: ஊழலுக்குக் கவசமாகும் ‘தேசிய கவுரவம்’!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



அடையாளமே குற்றமானால்… “சிறை” திரைப்படம் எழுப்பும் கேள்விகள்

ந்து ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக சிறையில் அடைபட்டு நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் ஓர் இளம் இஸ்லாமிய கைதி அப்துல் ரவுஃப். அவனது விடுதலைக்காகக் காத்திருக்கும் காதலி கலையரசி. தண்டனையா, விடுதலையா என அவர்களால் அறிந்துகொள்ளக் கூட முடியாத நிலை. சிறை, போலீசு நிலையம், சட்டம், நீதிமன்றம் என இந்த அரசு கட்டமைப்புக்குள் அப்துலுடைய வாழ்க்கை புயலில் மாட்டிய துரும்பாக எவ்வாறு சிக்கி சின்னாபின்னமாகிறது என்பதைத் திரைப்படமானது எதார்த்தமான காட்சிகளின் வழியாக உண்மைக்கு நெருக்கமாக நமக்குக் காட்டுகிறது.

திரைப்படத்தில் ஒரு காட்சியில் விசாரணைக்காக வரும் அப்துல் தனக்குப் பதற்றமாக இருப்பதாகக் கூறி கதிரவன் எனும் போலீசின் அனுமதியோடு நீதிமன்றத்தின் வெளியே நமாஸ் (தொழுகை) செய்கிறான். அப்போது அங்கு வரும் மற்றொரு போலீசு அதிர்ச்சியடைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அப்துல் நமாஸ் செய்யும்போது அவனுக்கு பின்னால் நின்று அதே நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் கலையரசி சாமி கும்பிடுகிறாள்.

‘மதச்சார்பற்ற’ ஒரு நாட்டில், அரசு அலுவலகங்களில் இந்து கோவில்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி ஏற்படாத போது நீதிமன்ற வளாகத்தில் ஒரு இஸ்லாமியர் நமாஸ் செய்தால் அதிர்ச்சி ஏற்படுகிறது. இதுதான் இந்த நாட்டில் பார்ப்பனியம் புகுத்தி இருக்கும் பொதுப்புத்தி. இந்தப் பொதுப் புத்திக்குப் பலியாகி இருக்கும் ஓர் ‘இந்து’விடம் சங்கி கும்பலால் மிக எளிமையாக ‘இஸ்லாமியர் நமது எதிரி’ என்று கட்டமைத்து விட முடியும். பார்ப்பனியம் கட்டமைத்த இந்தப் பொதுப் புத்தியை மூலதனமாகப் பயன்படுத்தியே இந்தியாவில் காய் நகர்த்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல்.

அதேசமயம், அப்துல் வசிக்கும் கிராமத்தில் அவனுடைய ஒரு குடும்பம் மட்டும் இஸ்லாமியராக இருந்தாலும் உழைக்கும் மக்கள் யாரும் அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதற்காக ஒதுக்குவதில்லை, இணக்கமாகவே வாழ்கிறார்கள். அப்துலின் மீதான கலையரசியின் காதலும் அவ்வாறே மதத்திற்கு அப்பாற்பட்டுப் பூக்கிறது. சக கைதிகள் அப்துல் சிறையிலிருந்து சென்று நல்லபடியாக வாழ வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆனால், அப்துல் இஸ்லாமியர் என்பதற்காகவே துப்பாக்கியில் தோட்டாவை நிரப்பிக்கொண்டு வருகிறது போலீசு. இதுதான் அதிகாரத்தினுள் திணிக்கப்பட்டிருக்கும் இந்துத்துவ பொதுப்புத்தி.

இது ஓர் அப்துலின் கதை மட்டுமல்ல. இந்த நாட்டின் சிறைக்கூடங்களில் செய்யாத தவறுக்காகவும், குற்றம் நிரூபிக்கப்படாமலும் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல நூறு அப்துல்களின் கதை.

தமிழ்நாட்டில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டுப் பல பத்தாண்டுகளாக அப்பாவி இஸ்லாமியர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பதாக வாக்குறுதியளித்த தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகியும் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் வஞ்சித்து வருகிறது.

சி.ஏ.ஏ போராட்டத்தின் போது சங்கி கும்பலால் தூண்டப்பட்ட கலவரத்தில் பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டு உமர் காலித் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களை ஐந்து ஆண்டுகளாக ஜாமீன் கூட வழங்காமல் விசாரணைக் கைதிகளாகவே சிறையில் அடைத்துள்ளது பா.ஜ.க. கும்பல். மக்கள் எதிர்ப்பால் ஏழு பேருக்கு மட்டும் ஜாமீன் வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், உமர் காலித், ஷர்ஜீல் இமாம் இருவரும் ஓராண்டுக்கு ஜாமீனுக்கு விண்ணப்பிக்கக் கூட தடை விதித்து அவர்களைச் சிறைக் கொட்டடியிலேயே முடக்க எத்தனிக்கிறது.

அப்சல்குரு வழக்கில் அவர் 2001 நாடாளுமன்றத் தாக்குதல் சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்கான நேரடி ஆதாரம் இல்லை என்றும், அவர் பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இல்லை என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், “புனிதமான நாடாளுமன்றம் தாக்கப்பட்டது இந்திய மக்களின் மனசாட்சியை வேதனைப்படுத்திவிட்டது. அதை சாந்தப்படுத்த இப்படி ஒரு தண்டனை தரப்படுவதே சரியானது” என்று கூறி அப்சல்குருவை தூக்கிலேற்றிக் கொன்றது.

“பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மசூதியை இடித்தது தவறுதான். ஆனால், இஸ்லாமியர்கள் அந்த இடத்தை இந்துக்களுக்கு விட்டுத்தர வேண்டும்” என தீர்ப்பு எழுதியதுடன், அத்வானி உள்ளிட்ட பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் அனைவரையும் குற்றத்திலிருந்து விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பானது இந்திய அரசியல் சாசனத்தின் உள்ளே இந்து ஆன்மா ஒளிந்துகொண்டிருப்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தனது இயல்பிலேயே பார்ப்பனிய இந்து மதவெறியை அடித்தளமாக வைத்திருக்கும் இந்தக் கட்டமைப்பை இன்று கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் இந்தக் கட்டமைப்பை பாசிசமயமாக்கி வருகிறது. நீதித்துறையில் ஏற்கெனவே இருந்த இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு (ஐ.பி.சி.) மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா போன்ற புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இது கார்ப்பரேட் சர்வாதிகாரத்திற்கான சங்க பரிவாரம் மற்றும் போலீசின் கும்பலாட்சியை நிறுவுவதற்கு வழிவகுக்கிறது.

பாபர் மசூதிக்கு வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பினை போன்று, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதிலும் நீதிமன்றத்தால் அநீதியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் தங்களது பாசிசத் திட்டங்களின் அடிப்படையில் காய்களை நகர்த்த முடியும் என்பதை பாசிசக் கும்பல் நிரூபித்திருக்கிறது.

இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, இந்தக் கட்டமைப்பானது பெரும்பான்மை ‘இந்து’ உழைக்கும் மக்களுக்குமே எதிரானதுதான். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், அவர்களுக்காகப் போராடும் ஜனநாயக சக்திகளுக்கும் எதிரானதுதான் இந்தக் கட்டமைப்பு. பழங்குடி மக்களுக்காகப் போராடிய ஸ்டேன் சாமியை சிறையில் வைத்துக் கொன்றது. நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காகப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திக் கொன்றது. ஜல்லிக்கட்டுக்காகப் போராடியவர்களின் மண்டையை உடைத்தது. எட்டு வழிச் சாலை, ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயத்தையும், மக்களையும் கொல்லும் திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்கள் இந்தக் கட்டமைப்பில் தேசத் துரோகிகளாக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இத்திரைப்படம், திரையினுள் அப்துலை காட்சிப்படுத்தும் அதேவேளையில், எதார்த்தத்தில் சிறைக் கொட்டடியில் முடக்கப்பட்டுள்ள ஆயிரம் ஆயிரம் அப்துல்களையும், மக்களுக்காகப் போராடி சிறைவாசம் அனுபவிப்பவர்களையும் நினைவூட்டுகிறது. இந்தக் கட்டமைப்பு அவர்களுக்கு இழைத்துவரும் அநீதிகளைக் கண்ணுற்றுப் பார்க்குமாறு நம் முகத்தில் அறைகிறது.

எனினும், கதிரவன் போன்ற சில நல்லவர்கள் தங்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தினால் அப்துல் போன்ற அப்பாவிகளை இந்தக் கொடூரக் கட்டமைப்புக்கு பலி கொடுக்காமல் தப்பிக்கலாம் என்கிற இறுதிக்காட்சி மூலம் மறுபடியும் நம் விரல் பிடித்து இந்தக் கட்டமைப்புக்குள் நம்பிக்கை வைக்க அழைத்துச் செல்ல எத்தனிக்கிறது. இந்த நம்பிக்கையைப் பார்வையாளர்களுக்குக் கடத்தி அவர்களை ஆசுவாசம் கொள்ளச் செய்கிறது.

“விசாரணை” திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் குற்றம் இழைக்காத அப்பாவி இளைஞர்களையும் அந்த இளைஞர்களுக்குப் பரிவு காட்டும் போலீசையும் இந்தக் கட்டமைப்பு எப்படி கொல்கிறது என்பதை இயக்குநர் வெற்றிமாறன் காட்டியிருப்பார். ஆனால், வெற்றிமாறனுக்கு இருந்த அந்த அனுகூலம் அவரின் உதவியாளரான இத்திரைப்படத்தின் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு இல்லை. ஏனெனில், “சிறை” திரைப்படத்தில் வரும் அப்துல் ஓர் இஸ்லாமியர். “இஸ்லாமியர் எதிர் இந்திய அரசு” எனக் காட்டுவதில் மிகப்பெரிய சிக்கல்களை இயக்குநர் எதிர்கொள்ள வேண்டிவரும்.

ஒரு வகையில் தப்பிக்க வாய்ப்பு இருந்தும் தப்பிக்காமல் மீண்டும் மாட்டிக்கொள்ளும் அப்துல் போலத்தான், இயக்குநர் சுரேசும் இந்தக் கட்டமைப்பின் மீது கேள்வி எழுப்பி மறுபடியும் இந்தக் கட்டமைப்புக்குள்ளேயே வந்து சிக்கிக் கொள்கிறார். பார்வையாளர்களுக்கும் வேறு மாற்று வழி இல்லாததால் இந்த முடிவையே ஏற்றுக்கொண்டு வீடு திரும்புகிறார்கள். ஆனால், எதார்த்தமானது மாற்றத்தைக் கோரி அங்கேயே நிற்கிறது.

இந்தக் கட்டமைப்புக்குள் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதைப் புறக்கணிப்பதற்கு இல்லை. ஆனால், இந்தக் கட்டமைப்பு யாருக்கானது என்பதைப் புரிந்துகொண்டு வினையாற்றுவது மிக முக்கியமானது. பாசிசமயமாகியிருக்கும் இந்தக் கட்டமைப்பின் உள்ளேயே நாம் தீர்வை தேடிக் கொண்டிருந்தால் பல அப்துல்களை நாம் இழக்க வேண்டிவரும். மாறாக, மாற்றுக் கட்டமைப்பிற்கான போராட்டத்தில் அப்துல்களையும், கலையரசிகளையும், கதிரவன்களையும் இணைத்துக்கொண்டு நாம் களமிறங்க வேண்டிய அவசியம் உள்ளது.


செங்குரல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட், 2010 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 10 | ஆகஸ்ட், 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-இன் பங்கு: வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள்
  • வறுமை: ஆப்பிரிக்காவை வென்றது ‘வல்லரசு’ இந்தியா!
  • உணவு தானியத்திலிருந்து சாராயம்: ஏழைகள் மீது ஏவிவிடப்படும் இன்னுமொரு போர்!
  • கயர்லாஞ்சி-மேலவளவு தீர்ப்புகள்: நீதிமன்றங்களின் வன்கொடுமை
  • நோக்கியா: பன்னாட்டு வர்த்தக கழக ஆட்சி!
  • வீர வணக்கம், தோழர் ஆசாத்!
  • பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்: சுரங்கத் தொழில் மாஃபியாக்கள்
  • உமாசங்கரின் வியக்கத்தக்க உறுதி! கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை!
  • இந்தியாவின் ஆசியுடன் ராஜபக்சவின் ஆதிக்கம்
  • ஆப்பிரிக்கா: பன்னாட்டு முதலாளிகள் நடத்தும் நிலப்பறிப்பு
  • தில்லைக்கோயில் தீண்டாமைச் சுவர்: ‘மார்க்சிஸ்டு’-கலைஞர் நிழற்சண்டை!
  • திரவியம் தேடிப் போனவர்களின் துயரக்கதை
  • பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம்: தடையற்ற கொள்ளைக்கு அனுமதி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஜனவரி 2026 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: கைது அல்ல கடத்தல்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரணக்குழியாகட்டும் வெனிசுலா!
  2. பெட்ரோ டாலர் வீழ்ச்சியும் புதிய கனிமவளப் போரும்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கவெறி
  3. புதிய அணுசக்தி சட்டம்: மோடி அரசின் தேச துரோகம்!
  4. விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா: உயர்கல்வியின் மறுகாலனியாக்க சவக்குழி!
  5. “விபி-ஜி ராம் ஜி” நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்டும் பாசிச சட்டம்
  6. சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி
  7. ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டு எழுச்சி நாள்
  8. புரட்சிகர மணவிழாவில் தோழர்களின் உரைகள்
  9. மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும் (பாகம் 4)
  10. திருப்பரங்குன்றம்: இந்து மதவெறி பாசிஸ்டுகளின் குரலாக இரு நீதிபதிகள் தீர்ப்பு!
  11. இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு (1925-2025): ஏகாதிபத்திய உலக மேலாதிக்கத்தையும் பாசிச சர்வாதிகாரத்தையும் முறியடிக்க உறுதியேற்போம்!
  12. கார்ப்பரேட் கும்பலின் கனிமவள வேட்டைக்காடாக மாற்றப்படும் ஆரவல்லி!


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை, 2010 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 09 | ஜூலை, 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: போபால்: நீதியின் பிணம்
  • போபால்: துரோகிகளின் இரத்தச் சுவடுகள்
  • மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…
  • விபத்தா, படுகொலையா?
  • உயிர் பிழைத்த துர்பாக்கியசாலிகள்
  • அவர்கள் தங்களுக்காகப் போராடவில்லை
  • ராஜீவ் காந்திக்கு ஒண்ணுமே தெரியாதாம்!
  • ஓட்டுநர் செய்த தவறுக்கு ஓனரையா தண்டிக்க முடியும்?
    உச்ச நீதிமன்றத்தின் மரத்தடி பஞ்சாயத்து
  • அமைச்சர்கள் குழுவா? அடிவருடிகள் கும்பலா?
  • யோக்கியன் வர்றான்…
  • இந்தியா வல்லரசாகிறதா? வல்லரசுகளின் குப்பைத் தொட்டியாகிறதா?
  • அமெரிக்கக் கடலில் கலந்த எண்ணெய் இந்தியக் காற்றில் கலந்த நஞ்சு
    பேரரசின் நீதி
  • பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள்- பி.சாய்நாத்
  • டௌ கெமிக்கல்ஸ்: பன்னாட்டு கொலைத் தொழிற்கழகம்
  • ஆண்டர்களின் அடிச்சுவட்டில் அணுசக்தி கடப்பாடு மசோதா
  • அன்னியரும் துரோகியரும் கிளப்பிய நச்சுக்காற்று சுழன்றடிக்கிறது
    செத்து மடிவீரோ? விடுதலைக்காய் வெகுண்டெழுவீரோ?
  • இதற்குப் பெயர் நிவாரணமா?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன், 2010 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 08 | ஜூன், 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நீதித்துறையை ஆள்கிறது இந்து மனசாட்சி!
  • கொலைகார போலீசைப் பாதுகாக்கும் சித்திரவதைத் தடுப்பு மசோதா!
  • அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக ஒரிசா மக்களின் கலகம்
  • தரகு முதலாளிகள் தயாரித்து வழங்கும் “வளர்ச்சி வேட்டை!”
  • மாவோயிஸ்டு வேட்டையா? பழங்குடியின வேட்டையா?
  • “நீங்கள் எங்களோடு இல்லையென்றால்…”
    அறிவுத்துறையினருக்கு எதிராக ப.சி.யின் பகிரங்க மிரட்டல்
  • “மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி, இயற்கை வளங்களைச் சூறையாடுவது உலகெங்கும் புரட்சியைப் பெற்றெடுக்கிறது!”
    -நிகராகுவா நாட்டு மனித உரிமைப் போராளி பியாங்கா ஜாக்கருடன் ஒரு நேர்காணல்.
  • தனியார் நகரங்கள்: நவீன சமஸ்தானங்கள்!
  • சட்டபூர்வமானது கல்விக் கட்டணக் கொள்ளை
  • சாதி கௌரவக் கொலைகள்: கேலிக்கூத்தானது இந்தியக் ‘குடியரசு’
  • ஜாட் சாதிவெறித் தீயில் கருகிப் போன தாழ்த்தப்பட்டோர் வாழ்வு
  • பா.ம.க. இராமதாசின் சமூக நீதி பாரீர்!
  • அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு: இந்து பயங்கரவாதத்துக்கு இன்னுமொரு சான்று
  • காட்டுவேட்டை: அம்பலமானது இந்திய அரசின் பித்தலாட்டம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே, 2010 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 07 | மே, 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சிதம்பரத்தின் காட்டுவேட்டைக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி
  • பத்திரிகை செய்தி
    “மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!”
    -மாநில அமைப்புக் கமிட்டி, பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-இன் எட்டாவது பிளீனச் சூளுரை.
  • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்: பசியைப் போக்குமா? பட்டினியில் தள்ளுமா?
  • ரவுடி போலீசாருக்கு அரணாக நிற்கும் கருணாநிதிக்குக் கருப்புக் கொடி!
    வழக்குரைஞர்களின் கலகம்!
  • கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!
  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமா? ஏகாதிபத்தியக் கைக்கூலி நிறுவனமா?
  • நக்சல்பாரி புரட்சி நாயகன் தோழர் கனு சன்யாலுக்கு வீர வணக்கம்!
  • இராணுவச் செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா?
  • முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் குலுங்கியது புதுச்சேரி!
  • நிதிச் சூதாட்டத்தால் திவாலானது கிரீஸ்!
  • முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு விழுந்த முதல் அடி! ஓசூர் கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர் போராட்டம் வெற்றி!
  • பாசிச மோடிக்குப் புரியுமா, ஒரு தாயின் பரிதவிப்பு!
  • காவிக் கறை படிந்த தீர்ப்புகள்
  • இருதலைக் கொள்ளி எறும்பாய் ஐதராபாத் நகரம்
  • காமுகர்களின் கூடாரமாகக் கத்தோலிக்கத் திருச்சபை!
  • பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் வேட்டைக்காடாகிறது இந்தியா!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல், 2010 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 06 | ஏப்ரல், 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அணு உலை விபத்து இழப்பீடு மசோதா:
    அமெரிக்காவின் இலாபவெறிக்கு இந்திய மக்கள் பலிகிடா!
  • மோசடி தொழில் நிறுவனத்தின் அட்டூழியத்துக்கு எதிராக
    தொழிலாளி வர்க்கத்தின் அதிரடி போராட்டம்!
  • பட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை
  • பழங்குடியினத் தலைவர் லால் மோகன் டுடூ படுகொலை: அரசு பயங்கரவாத அட்டூழியம்!
  • சாதி கௌரவக் கொலைக்கு உச்சநீதி மன்றத்தின் வக்காலத்து
  • தரகு முதலாளித்துவ சேவையில் மோடியின் இந்துத்துவா ஆட்சி
  • பாரம்பரிய விவசாயத்தை அழிக்கவரும் கருப்புச் சட்டம்
  • கருப்புப் பணம்-காமக் களியாட்டம்: இதுதான் கார்ப்பரேட் ஆன்மீகம்!
  • ராஜபக்சே குடும்பத்தின் பாசிசப் பிடியில் இலங்கை
  • “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!”
    – மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் (HRPC) போராட்டம்
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம்: சோளக் காட்டுப் பொம்மை
  • மோடி கும்பலைக் காக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு
  • கொட்டமடிக்கும் ஆதிக்க சாதி வெறியன்! உடந்தையாக நிற்கும் அதிகார வர்க்கம்!
  • காவி இருளில் சிக்கித் தவிக்கும் கடலோரக் கர்நாடகா!
  • சட்டப்பேரவையின் எழிலும் தொழிலாளர்களின் அவலமும்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச், 2010 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 05 | மார்ச், 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: முல்லைப் பெரியாறு: கருணாநிதி மறைக்கும் உண்மை
  • “மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!”
    -புரட்சிகர அமைப்புகள் நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்
  • விலைவாசி உலகத்தரமானது பட்டினி நிரந்தரமானது
  • கிராமப்புற மருத்துவர்கள்: பஞ்சு மிட்டாய்த் திட்டம்!
  • நூதனக் கல்விக் கொள்ளை தி.க. வீரமணியின் ‘சாதனை’!
  • நுண் கடன்… மீப்பெரும் கொள்ளை!
  • வாழ்வுரிமைக்குப் போராடுவது தேச விரோதச் செயலா?
  • “உயிரைப் பறித்தாலும் நிலத்தைப் பறிக்க முடியாது!”
  • “நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்! மறுகாலனியாக்க எதிர்ப்புப் போரில் அணி வகுப்போம்!”
    -தமிழகமெங்கும் தொடரும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்
  • அறிவுத்துறையினர் மீது பாயும் அரசு பயங்கரவாதச் சட்டம்
  • சி.பி.எம்.இன் பரிணாம வளர்ச்சி: முதலாளிகளே ஊழியர்களாக…
  • பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலும் சி.பி.ஐ.
  • மராத்திய இனவெறி சிவசேனா உருவாக்கும் வில்லன்கள்!
  • மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா: மீனவர் மீதான இந்திய அரசின் போர்!
  • ஹெய்தி நிலநடுக்கம்: பிணந்திண்ணி அமெரிக்கா!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



வெனிசுலா அதிபர் கைது! பாசிச ட்ரம்ப்-இன் மேலாதிக்க வெறி!

04.01.2026

வெனிசுலா அதிபர் கைது!

பாசிச ட்ரம்ப்-இன் மேலாதிக்க வெறி!

கண்டன அறிக்கை

வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப், வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மாதுரோவையும் அவரது துணைவியாரையும் நாடு கடத்தியுள்ளார். மேலும் மதுரோவும் அவரது துணைவியாரும் நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து வெனிசுலா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் இராணுவத் தடைகளையும் அமெரிக்கா விதித்திருந்தது. சில வாரங்களுக்கு முன்பு வெனிசுலாவை சட்ட விரோத அரசாங்கம் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெனிசுலாவிலிருந்து சென்ற வணிக கப்பல்கள் எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தார்.

அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத்தில் சரிந்து கொண்டு அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெனிசுலாவில் இருக்கக்கூடிய எண்ணெய் வளங்களை கொள்ளை அடித்து அதன் மூலம் தன்னுடைய பொருளாதாரத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறது பாசிச ட்ரம்ப் அரசு. இப்பொழுது இனி வெனிசுலாவை அமெரிக்கா வழி நடத்தும் என்றும் தெரிவித்திருப்பது மிகவும் ஆபத்தானதாகும். அதுமட்டுமின்றி இன்னொரு உலகப்போருக்கு வித்திடும் அபாயகரமான செயலை பாசிச ட்ரம்பின் அரசு மேற்கொண்டுள்ளது.

பாசிஸ்ட் ட்ரம்ப் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அமெரிக்க மக்களுக்கு எதிராகவும் புலம்பெயர் மக்களுக்கு எதிரானதாகவே இருந்தை நடைமுறை நிரூபிக்கிறது.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடியும் குரல் கொடுத்தும் வந்த வெனிசுலா மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் உலக மக்கள் அனைவரின் மீதும் நடத்தப்பட்டத் தாக்குதல் ஆகும்.

இதற்கு எதிராக அமெரிக்காவின் மக்கள் மட்டும் அல்ல; உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பாசிஸ்ட் ட்ரம்ப் வீழ்த்தப்படும் வரை போராட வேண்டும்.

பாசிச ட்ரம்பின் கூட்டாளியான மோடி அரசு வெனிசுலாவின் மீதான நடவடிக்கையை இதுவரை கண்டிக்கவில்லை. அதனை மக்கள் அதிகார கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் இணைந்து அமெரிக்க மேலாதிக்க போர் வெறியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram