Wednesday, June 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 4

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 1-31, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 10-11 | 1993 ஏப்ரல் 1-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பாரதீய ஜனதாவுக்குப் பாய்விரிக்கும் தரகு முதலாளிகள்
  • குடிநீருக்கான கண்ணீரை போக்க வக்கற்ற ஆட்சியாளர்கள்
  • பம்பாய் குண்டு வெடிப்பு பயங்கரம்: இந்துவெறீ பாசிச அட்டூழியத்தின் எதிர்விளைவு!
  • பா.ஜ.க. – காங் – அ.தி.மு.க. இந்து வெறியர்களுக்குள் கூட்டணி காட்சிகள்?
  • ருஷ்ய அரசியல் நெருக்கடி: ஏகாதிபத்திய தயவில் யேல்ட்சினின் சதிராட்டம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • மே-1 சிறீரங்கம் கோயில் கருவறை நுழைவுப் போராட்டம்
    பார்ப்பன – இந்துமதவெறி ஆதிக்கத்தை கருவறுப்போம்!
  • இந்துவெறீ போதையில் இந்தியப் போலீசுத்துறை
  • பங்கு – வங்கி மோசடி: தப்பிக்கும் தமிழகப் பார்ப்பனக் கும்பல்
  • பாரப்பரிய உரிமை பறிப்பும் ஏகாதிபத்திய கொள்ளையும்
  • தீண்டாமைக் கொடூரமும் நீதிமன்ற இழுத்தடிப்பும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மனநல ஆலோசகர்களும், அரசுக் கட்டமைப்பின் அலட்சியமும்

ளவியலில் முதுநிலை (M.Sc. Counselling Psychology) படித்துவிட்டு, ஒரு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மனநல ஆலோசகராகப் பணி செய்யும் நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது.

அவரது பணி தொடர்பாகவும், உளவியல் துறை சார்ந்த கல்வி தொடர்பாகவும் பல்வேறு விசயங்களை விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் குறிப்பிட்டுச் சொன்ன ஒரு விசயம் அதிர்ச்சிகரமாக இருந்தது.

உளவியல் சார்ந்து படிப்பவர்களில் 20 சதவிகிதம் பேர் மட்டுமே அத்துறை சார்ந்து மனநல ஆலோசகர்களாக பணிபுரிகின்றனர் என்று அவர் கூறினார்.

”பல்வேறு தரப்பட்ட மனநலப் பிரச்சினைகளோடு வருகிறார்கள். தொடர்ச்சியாக இப்படிப்பட்டவர்களை அணுகுவதால், சிகிச்சை அளிக்கும் மனநல ஆலோசகர்களும் உளவியல் ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. கவலை, மனச்சோர்வு, அதிர்ச்சி, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய சூழலால் வேறு துறைக்குச் சென்று விடுகின்றனர்” என்று அவர் கூறினார்.

”அப்படியென்றால், அதற்கு கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்பில் என்ன தீர்வு சொல்கிறார்கள்” என்று கேட்டேன்.

“அவ்வாறு உளவியல் பிரச்சினைகள் ஏற்படும்போது மனநல ஆலோசகர்கள் வேறு ஏதாவது ஒரு விசயத்தில் கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், தியானம் செய்ய வேண்டும் எனவும் வழிகாட்டுதல் உள்ளது” என்று நண்பர் கூறினார்.

மேற்கண்ட தீர்வுகள் எல்லாம் இணையத்திலேயே கிடைக்கின்றன. இதைச் சொல்வதற்கு ஒரு அரசு நிர்வாகக் கட்டமைப்பு அவசியம் இல்லை. இது எந்த வகையிலும் தீர்வளிக்கவில்லை என்பதைத்தான், 20 சதவிகித மனநல ஆலோசகர்களே அத்துறை சார்ந்து பணிபுரியும் அவலநிலை எடுத்துக் காட்டுகிறது.

அதாவது, இந்தக் கல்விக் கட்டமைப்பு எவ்வாறு இருக்கிறதென்றால், நீ காசு கொடுத்து படித்துக் கொள். படிப்பு சொல்லிக் கொடுப்பதற்கு மட்டும்தான் நாங்கள் பொறுப்பு. மற்றபடி வேலை தேடுவது உன் பிரச்சினை. உளவியல் பிரச்சினை ஏற்பட்டால் தீர்த்துக் கொள்வதும் உன் பிரச்சினை என்று உளவியல் சார்ந்து படிப்பவர்களை வீதியில் தள்ளி விட்டுள்ளது. மேற்கொண்டு எந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொள்வதில்லை.


படிக்க: கோட்டா பயிற்சி மைய மரணங்கள்: தனிப்பட்ட மனநல பிரச்சனையா?


உண்மையில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிறுவனக் கட்டமைப்பை அரசு உருவாக்கியிருக்க வேண்டும். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தொடர்ச்சியான பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் உளவியல் ஆலோசகர்கள் சீரான மனநிலையில் சிகிச்சை அளிக்க முடியும்.

இன்றைய மறுகாலனியாக்க சூழல் காரணமாக உருவாகியிருக்கும், கொடூர சுரண்டலின் காரணமாக இன்னும் ஆழமாகியிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வு, இயந்திரமயமான தனித்து விடப்பட்ட வாழ்க்கை முறை, டிஜிட்டல் உலகம் ஏற்படுத்துகின்ற தொடர்ச்சியான தாக்கம், ஏகாதிபத்திய சீரழிவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எண்ணிலடங்கா மனநிலைப் பிரச்சினைகளுக்கு மனிதர்கள் ஆட்பட்டு வருகின்றனர். இதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பொறுத்தவரை, அவையும் இன்றைக்கு இலாபம் கொழிக்கும் கார்ப்பரேட் தொழிலாக மாற்றப்பட்டுள்ளது.

இத்தகைய அவலமான சூழலைப் பற்றி அரசுக்கு எந்தப் பொறுப்புணர்ச்சியும் கிடையாது. மறுகாலனியாக்கத்தை மேலும் தீவிரப்படுத்துவது ஒன்றே இன்றைக்கு அரசுக் கட்டமைப்பின் பணியாக மாறிப் போய்விட்டது. இப்படிப்பட்ட சூழலில் இத்தகைய பிரச்சினைகளுக்கு ஆலோசனை அளிக்கும் ஆலோசகர்களின் மனநிலையைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

இது ஒரு மிகவும் சிக்கலான பிரச்சினையாகும். இதற்கு இந்தக் கட்டமைப்பில் எந்தத் தீர்வும் இல்லை. மேலும் மேலும் சிக்கலை விரிவுபடுத்துகின்ற வகையில்தான் இந்தக் கட்டமைப்பே உள்ளது. அதாவது மனிதர்களின் மனநலனை மோசமாகச் சிதைத்துள்ளது.

மனிதர்களின் உடல்நலன், மனநலன் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கின்ற, அதைத் தன்பொறுப்பாக எடுத்துக் கொண்டு அதன் மீது முழுமையான அக்கறை செலுத்துகின்ற, மாற்றுக் கட்டமைப்பைப் பற்றி இன்னும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தேவையை நண்பருடனான சந்திப்பு உணர வைத்தது.


தமிழன்பன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 1-31, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 08-09 | 1993 மார்ச் 1-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கிரிமினல்மயமாகும் தமிழகம்
  • சுடுகாட்டையும் பட்டா போட்ட பாதகர்கள்! மக்கள் போராட்டம்!
  • காங் – ஜெயா – பா.ஜ.க. பாசிஸ்டுகளுக்குள் ஜோடி மாற்றம்
  • பட்ஜெட்: குடிக்கக் கூழில்லை கொண்டைக்குப் பூ
  • கோஷ்டிச் சண்டை முற்றுகிறது காங்கிரசு நொறுங்குகிறது
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • டெல்லி பேரணி இந்து ராஷ்டிரத்தை நோக்கி இன்னுமொரு தாக்குதல்
  • பினாமி நிலமோசடியில் பிரதமர் குடும்பம்
  • கூலி விவசாயிகளின் போர்! ஜமீன் கும்பலின் தாக்குதல்!
  • அணு உலை ஆபத்து காற்றும் நீரும் நஞ்சானது
  • யுத்தத்திற்கு பின் ஈராகின் அவலம் அமெரிக்காவின் பலமுனைத் தாக்குதல்
  • “இந்து வெறியுணர்வு மாநாடு”
  • திரிபுரா தேர்தல் தள்ளிவைப்பு பாகப்பிரிவினைத் தகராறு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஈவிரக்கமின்றி 8,000 வீடுகளை இடித்துத் தள்ளிய குஜராத் பா.ஜ.க அரசு

குஜராத்தின் சியாசத் நகரில் அடித்தட்டு மக்கள் வசிக்கும் 8,000 வீடுகளை கடந்த மே இறுதியில் ஒரே இரவில் இடித்து தரைமட்டமாக்கியது பாசிச பா.ஜ.க அரசு. இது வரலாற்றில் மிகப்பெரும் இடிப்பு நடவடிக்கையாகும். இடிக்கப்பட்டவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை.

அம்மக்கள் பல பத்தாண்டுகளாக அங்குதான் வசித்து வந்தனர். ஆதார் அட்டைகள், வாக்காளர் அட்டைகள், ரேசன் அட்டைகள் வைத்திருந்த பல குடும்பங்களின் வீடுகளும் இடித்துத் தள்ளப்பட்டன. அப்பகுதியில் வங்கதேசத்தவர் சட்டவிரோதமாக வசித்து வருவதாகவும், இது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் கூறி பாசிச பா.ஜ.க அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் வீடுகளை இழந்தவர்களில் 90 சதவிகிதம் பேர் இந்திய குடிமக்களாகி விட்டனர் என்பதையெல்லாம் பொருட்படுத்த பாசிசக் கும்பல் தயாராக இல்லை.

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பெயரில் இவ்வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. பா.ஜ.க அரசு வீடுகளை இடிக்கப் போவதாக எந்த முன்னறிவிப்பும் இன்றி நடவடிக்கைக்குத் தயாரானது. மக்கள் வசிக்க மாற்று இடங்களைக் கூட ஏற்பாடு செய்யவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் குஜராத் உயர்நீதிமன்றமோ, தேச பாதுகாப்பு காரணங்கள் என்பதால் தடைவிதிக்க முடியாது என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.

மக்கள் சிறுகச் சிறுக சேமித்து, பெரும் உழைப்பைக் கொட்டிக் கட்டிய அவர்களின் வீடுகள் அவர்களின் கண்முன்னே ஈவிரக்கமின்றி இடித்துத் தள்ளப்பட்டன. “நாங்கள் இந்தியர்கள், வங்கதேசத்தவர் அல்ல. அருகில் உள்ள பராஜேடி கிராமத்தில் நான் பிறந்தேன்; என் சகோதரி மோதிபாய் மருத்துவமனையில் பிறந்தார். எனது குழந்தைகள் அனைவரும் இங்குதான் பிறந்தார்கள். 45 ஆண்டுகளுக்கு முன் நான் திருமணம் செய்து கொண்டேன். எனது சேமிப்பு அனைத்தையும் இங்கு முதலீடு செய்தேன். எனக்குச் செல்ல இடமில்லை. என் இதயம் வலிக்கிறது. இப்போது என்னிடம் எதுவும் மிச்சமில்லை. என்வீட்டுப் பொருட்கள் திறந்த வெளியில் கிடக்கின்றன. இனி வாடகைக்கு ஒரு வீட்டைத் தேட முயல்வேன்” என்று கண்ணீர் வடிக்கிறார், பஷீர் பாய்.


படிக்க: காஷ்மீர்: முன்னறிவிப்பின்றி வீடுகளை இடித்த அதிகாரிகள்


ஆயிரக்கணக்கான மக்கள் இதேபோல துயரங்களைச் சுமந்து கொண்டு, அங்கே தெருவில் நிராதரவாக நிற்கின்றனர்.

பஹல்காம் தாக்குதலை முகாந்திரமாக வைத்துக் கொண்டு, முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் பாசிச கும்பல் தொடர்ச்சியாகப் பரப்பிக் கொண்டிருக்கிறது. தற்போது, தேசப் பாதுகாப்பு என்று நயவஞ்சகமாக அவர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இந்த புல்டோசர் இடிப்புகள் என்பவை நிறுவனமயமாக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பின் பரந்த வடிவத்தின் ஒரு பகுதியாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

இந்த நடவடிக்கையின் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் மீட்கப்பட்டதாக அகமதாபாத் மாநகராட்சி கூறியது. அவ்வாறு மீட்கப்பட்ட நிலங்கள் கார்ப்பரேட் வளர்ச்சி என்ற பெயரில் அதானி, அம்பானி கார்ப்பரேட் கும்பலுக்குத் தாரைவார்க்கப்படலாம்.

வீடுகளை இழந்து நிர்க்கதியான மக்களோ குற்றவாளிகளாக்கப்பட்டு, செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். துயரங்கள் இதோடு நிற்கப் போவதில்லை. ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அதானி – அம்பானி பாசிசக் கும்பலுக்கு முடிவு கட்டுவதன் மூலமே இத்துயரங்களைத் தடுத்து நிறுத்த முடியும்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 16-28, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 07 | 1993 பிப்ரவரி 16-28 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆந்திரா: அரசு பயங்கரவாதத்துக்கு பதிலடி
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • புலி கப்பல் மீது தாக்குதல்: ஆழ்கடல் ஆதிக்கம்
  • “கட் அவுட்” நாயகியின் ஆட்சியில் “ரேஷன்” அட்டைக்குப் பரிதவிப்பு!
  • பஞ்சாப்: பாசிசமயமானது பஞ்சாயத்துத் தேர்தல்
  • ஐ.எம்.எப். – உலக வங்கி அடுத்த தவணை அடகு வைப்பு
  • திவாலானது காங்கிரசு
  • ரஷ்யாவில் மீண்டும் கம்யூனிச எழுச்சி
  • கோவையில் மதக்கலவர அபாயம்! கரசேவைக் காலிகளுக்கு காவடி தூக்கும் ‘ஜெ’ போலீசு
  • இந்தியாவின் இந்துவெறியும் பாக்.-வங்கதேச எதிர்ப்பும்
  • இந்துவெறிக்கு எதிராக தெருமுனைப் போர்
    கைது! சிறை! தாக்குதல்!
  • கிசுகிசு ஏடுகள்: அரசியல் போதை வியாபாரம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 16-31, பிப்ரவரி 01-15, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 05-06 | 1993 ஜனவரி 16-31, பிப்ரவரி 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காவி அங்கி நீதிபதிகள்!
  • காஷ்மீர், பஞ்சாப்: அரசு பயங்கரவாத ரத்தச் சுவடுகள்!
  • இந்து வெறியர்களின் ஆவேசத் தாக்குதல்! அடிபணியுது காங். அரசு!
  • மசூதி இடிப்புக்குப் பிறகு… நாடெங்கும் நடந்த நரவேட்டை
  • திருச்சி பாய்லர் ஆலையில் மதவெறியர்களுடன் ‘மார்க்சிஸ்டு’கள் கள்ளக்கூட்டு
  • கேள்வி – பதில்
  • தமிழகம்! இந்துவெறியர்களின் சொர்க்க பூமி! ஜெயா ஆசி!
  • சோமாலியாவை மயானமாக்கிய குற்றவாளிகள் ஏகாதிபத்தியங்களே!
  • 355, 356: மாநில அரசுகளின் கழுத்துக்கு கயிறு
  • தெருமுனையெங்கும் ராமனுக்கு தீ! பார்ப்பன – இந்துமத ஆதிக்கத்திற்கு அடி!
  • சவடாலும் சவுக்கடியும்
  • போலிக் கம்யூனிஸ்டுகள்: காங்கிரசை தூக்கி நிறுத்தும் முட்டுக்கட்டைகள்!
  • விமானிகளின் போராட்டமும்! அரசின் ஒடுக்குமுறையும்!
  • சாமி – மாமி மோதல் ஆபாச அரசியல்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 16-31, 1992 ஜனவரி 01-15, 1993 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 03-04 | 1992 டிசம்பர் 16-31, 1993 ஜனவரி 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மில் தொழிலாளர் போராட்டம்! படிப்பினைகளை மறவாதீர்! ஒற்றுமை, உறுதி குலையாதீர்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • பார்ப்பன பாசிஸ்டுகளின் கூட்டணி: டெல்லிக்கு அத்வானி தமிழகத்துக்கு அல்லிராணி
  • அயோத்தி: நாசகார கும்பலின் இலக்கு இந்துமத பாசிச பயங்கரவாத ஆட்சி
  • இடிப்பு சதியில் குற்றவாளிகள் யார்? யார்?
  • சமரசம் சர்வநாசம்! கொலைவாளை எடு! கொடியோர் செயல் அறு!
  • பொன்னூர்: சாதிச் சண்டையில் குளிர்காயும் போலீசும் சுயநலமிகளும்!
  • மூடப்பழக்கத்தின் கோரப்பிடியில் புறக்கணிக்கப்பட்ட ஆதிவாசிகள்
  • பெண் உயிருடன் எரிப்பு சாதிவெறிக் கொடுமை!
  • சவடாலும் சவுக்கடியும்
  • மக்களுக்குச் சீரழிவு! அரசுக்கு வருமானம்!
  • எதிர்ப்பு வெள்ளத்தில் தத்தளிக்கும் யேல்ட்சின்
  • மராட்டியத்தை ஆட்டுவிக்கும் மாஃபியா எம்.எல்.ஏக்கள்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 16-30, டிசம்பர் 01-15, 1992 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 01-02 | 1992 நவம்பர் 16-30, டிசம்பர் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இட ஒதுக்கீடு வழக்கு: உச்சநீதிமன்ற மோசடி
  • கொள்ளை நோயல்ல அரசின் கொலை
  • பாசிச ஆட்சியின் கோரமுகம்
  • அவதூறு வழக்கு ‘ஜெ’யின் புது ஆயுதம்
  • முஸ்லீம்கள் படுகொலை: இனவிடுதலைக்கு எதிராக புலிகளின் சீர்குலைவு
  • விளைச்சல் கண்டும் வேதனை தீரவில்லை!
  • கேள்வி – பதில்
  • ஆசிரியர் போராட்டம்: தேவை விரிந்த பார்வை
  • புஷ்ஷுக்குப் பதிலாக கிளிண்டன்: புதிய மொந்தையில் பழைய கள்ளு
  • புயல்-வெள்ளத்தில் மக்கள் சுய விளம்பரத்தில் ஜெயா
  • பெண் குழந்தை தத்து: ‘புரட்சித் தலைவி’யின் புரட்டுத் திட்டம்
  • பஞ்சாப்: அரசு பயங்கரவாதத்தின் புதிய கொலை உத்திகள்
  • போராடிய தொழிலாளர்களை பழிவாங்கும் ‘பெல்’ நிர்வாகம்
  • சவடாலும் சவுக்கடியும்
  • நச்சுக் காளானாக நவீன நாஜிகள்
  • கருத்துக் களஞ்சியம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 16-31, நவம்பர் 01-15, 1992 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 20-22 | 1992 அக்டோபர் 16-31, நவம்பர் 01-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பிச்சை தடுப்புச் சட்டம் விபரீதமானது, குரூரமானது, வக்கிரமானது
  • நவம்பர் புரட்சி நாள்: ஏகாதிபத்தியம் வீழும்! கம்யூனிசமே வெல்லும்!
  • அரசின் மனித உரிமை கமிஷன்: பாலுக்குப் பூனை காவலா?
  • வெறிக்கூத்தாடும் தமிழகப் போலீசு
  • மேலாதிக்கத்துக்கும் பாசிசத்துக்கும் மரண அடி கொடுப்போம்!
  • உரவிலையேற்றம்: விவசாயிகளுக்குப் பேரிடி! அமெரிக்கா கோலெடுத்தால் ஆட்டம் போடும் குல்லாய்கள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • தன்னுரிமை தேசத்துரோகமல்ல ஜனநாயக உரிமையே!
  • கேள்வி – பதில்
  • வங்கி – பங்குச் சந்தை மோசடி மறைந்துள்ள இரகசியங்கள் ஏப்பம் விடப்பட்டது பொதுத்துறை
  • சலவையாளர்களை கசக்கிப் பிழியும் ‘சகோதரர்கள்’! போலீசு உடந்தை!
  • இந்தியாவின் காட்டுமிராண்டித்தனம்
  • போராடும் தொழிலாளர்கள் மீது போலீசு வன்முறை வெறியாட்டம்
  • சிலுவையணிந்த சாத்தான் ரபேலின் ரௌடித்தனம்
  • மாநிலக் கல்லூரித் தேர்தலில் மாஃபியாக்களின் கைவரிசை
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 1-31, அக்டோபர் 1-15, 1992 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 20-22 | 1992 செப்டம்பர் 1-31, அக்டோபர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜார்கண்ட் : தீர்வு காணவில்லை; ஆதாயம் தேடுகிறது காங்கிரசு
  • ஊழலை மறைக்க ஜெயாவின் நாடகம்
  • ஆட்சிக் கவிழ்ப்பு பீதியில் அடக்குமுறையை ஏவும் பாசிச ஜெயா கும்பல்
  • கடற்படையினரின் கொலைவெறியாட்டம்
  • காங்கிரசின் கயவாளித்தனம்
  • செர்பிய இனவெறியாட்டம் போஸ்னிய சுடுகாடாகிறது
    குருதிச் சேற்றில் யூகோஸ்லாவியா
  • மருத்துவக் கல்லூரி மணவர் போராட்டம்: படிப்பினை பெறுவோம் புதிய பாதை வகுப்போம்
  • வங்கி – பங்குச் சந்தை மோசடி மறைந்துள்ள இரகசியங்கள்
  • நாற்காலி சுகத்தில் போலிகள் நரக வேதனையில் மக்கள்
  • ஜெயா ஆட்சியை அகற்றிட அணிதிரள்வோம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



அனகாபுத்தூரில் மக்கள் வீடுகளை இடித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் திமுக அரசு!

23.05.2025

அனகாபுத்தூரில் மக்கள் வீடுகளை இடித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் திமுக அரசு!

பத்திரிகை செய்தி

சென்னை பல்லாவரத்திற்கு அருகில் உள்ள அனகாபுத்தூரில் தாய்மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதியில் வாழும் உழைக்கும் மக்களின் வீடுகளை புல்டோசர் இயந்திரங்களைக் கொண்டு அராஜகமாக இடித்து தள்ளி வருகிறது திமுக அரசு. இதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த சில நாட்களாக தாம்பரம் மாநகர துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி தலைமையில் அனகாபுத்தூரில், 300க்கும் மேற்பட்ட போலீசை குவித்து சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் மூன்றாம் தெரு, காயிதேமில்லத் நகர் போன்ற பகுதிகளில் வாழும் 700க்கும் மேற்பட்ட வீடுகளையும் இடித்து 3500 க்கும் மேற்பட்ட மக்களை சொந்த மண்ணில் அகதிகளாக்கி வருகிறது. மேலும் அப்பகுதியில் கல்லூரி மற்றும் பள்ளியில் பயின்று வரும் 400க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அனகாபுத்தூரில் வாழும் மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பட்டா வைத்துள்ள மக்களின் வீடுகளையும் இடிப்பதாக அடாவடியாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிக்கிறோம் என்று கூறுகிறது தமிழ்நாடு அரசு. அதே நீதிமன்றத்தில் அதே மக்கள் தொடுத்த வழக்கு இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த வருடம் அவர்கள் போட்ட மேல் முறையீடு நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு அரசோ புதிய நிறுவனத்தை CRTCL உருவாக்கி அந்த நிறுவனத்தின் மூலம் டென்டர் விடப்பட்டு பிரைவேட் கம்பெனி PRIME MERIDIAN SURVEYS PRIVATE LIMITED மூலம் சர்வே எடுத்து அப்பகுதி மக்கள் ஆக்கிரமித்து உள்ளனர் என்று சதித்தனமாக புதிதாக ஒரு சர்வே மேப்பை தயார் செய்து அதன் மூலம் பகுதி மக்களை அப்புறப்படுத்தி வருகிறது.

புதிதாக எடுக்கப்பட்ட சர்வேயின்படி உழைக்கும் மக்கள் வாழ்கின்ற பகுதியை மட்டும்தான் நீர்வழி ஆக்கிரமிப்பு பகுதி என்று வரையறுத்து உள்ளது. ஆனால் ஆற்றை எதிர்புறத்தில் ஆக்கிரமித்துள்ள காசா கிராண்ட் நிறுவனத்துக்கு பட்டா வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு இதுக் குறித்தான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அடையாறு நதியை முழுவதுமாக புனரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை அறவே தடுத்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால், கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்றுவது அவசியம் எனத் தெரிவித்துள்ளது.

அடையார் ஆற்றை முழுமையாக புனரமைப்பு செய்வது என்று கூறுவதெல்லாம் பச்சை பொய். அது இவர்களின் நோக்கமும் இல்லை. ஆற்றை ஆக்கிரமித்து காசா கிராண்ட் போன்ற பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும் அதில் வாழும் மேட்டுக்குடி வர்க்கங்களுக்கு நடைபாதை அமைப்பதற்காகவும், பொழுதுபோக்கு வளாகங்கள் கட்டுவதும்தான் உண்மையான நோக்கம்.

சமூக நீதி, திராவிட மாடல் எனப் பேசும் தி.மு.க. அரசும் ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை 2.0 போன்ற திட்டங்கள் மூலம் புதிய நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் காசா கிராண்ட், ஜி ஸ்கொயர், அதானி எண்டர்பிரைசஸ் போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உழைக்கும் மக்கள் நிலங்களை அபகரித்து தருகின்றது. சொந்த நாட்டு மக்களை அகதியாக்கும் வேலையை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

இதை கண்டித்து மே 17 இயக்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் களத்தில் நின்று மக்களோடு போராடி வருகிறோம். அனகாபுத்தூரில் மக்களுக்காக அனைத்து ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராடுவது ஒன்றே தீர்வு!


தோழமையுடன்
தோழர் அமிர்தா,
சென்னை மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
73584 82113

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!

சுக்மா மாவட்டத்தில் துணை இராணுவப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் உடல்கள்

நாட்டில் நக்சலிசம் 2026-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதிக்குள் ஒழிக்கப்படும் என்பதை நான் அவையில் பொறுப்புடன் கூறுகிறேன்” கடந்த மார்ச் 21-ஆம் தேதி மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய வார்த்தைகள் இவை.

நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் அப்பாவி பழங்குடி மக்களையும் கனிமவளக் கொள்கைக்கு எதிராக போராடும் மாவோயிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்களையும் ஈவிரக்கமின்றி, கொடூரமாக நரவேட்டையாடி வருகிறது பாசிச மோடி அரசு. சத்தீஸ்கரின் பஸ்தர், ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம், மகாராஷ்டிராவின் கட்சிரோலி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் மோடி அரசின் இத்தாக்குதலுக்கு இரையாகி வருகின்றனர்.

குறிப்பாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 டிசம்பரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தப் பிறகு, “ஆபரேஷன் ககர்” (Operation Kagar) என்ற பாசிச திட்டத்தின் மூலம் படுகொலை செய்யப்படும் பழங்குடி மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. “தெற்காசிய பயங்கரவாத போர்டல்” (South Asia Terrorism Portal) என்ற இணையதளத்தின் தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் 235 மாவோயிஸ்ட் தோழர்களும், 2025-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 140 தோழர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2023-ஆம் ஆண்டில் 23 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடி அரசு நூற்றுக்கணக்கான மவோயிஸ்டுகளை கொன்று குவித்துள்ளது. உண்மையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்புள்ளி விவரங்களை விட அதிகமாகவே இருக்கும்.

அதேசமயம், மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் அப்பாவி பழங்குடியின மக்களையும் கேள்விகிடமற்ற வகையில் பாசிச மோடி அரசு கொன்று குவித்து வருகிறது. “சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து 140-க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் மாவோயிஸ்டுகள் என்ற முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்” என்று “ப்ரண்ட்லைன்” (Frontline) இதழுக்கு அளித்த பேட்டியில் காந்திய ஆர்வலரான ஹிமான்ஷு குமார் தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் உள்நாட்டுப் போர்

சத்தீஸ்கர் மாநிலம் கனிம வளங்கள் நிறைந்த மாநிலமாகும். இந்தியாவின் இரும்புத் தாதுவில் 38 சதவிகிதம், அலுமினியத் தாதுவில் 20 சதவிகிதம், நிலக்கரியில் 17 சதவிகிதம் சத்தீஸ்கரில் உள்ளது. மேலும், சமீபத்தில் லித்தியம் உள்ளிட்ட அரியவகைத் தனிமங்களும் சத்தீஸ்கரில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இந்த கனிமங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு அங்கு வாழும் பழங்குடி மக்களும், கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடும் மாவோயிஸ்டுகளும் தடைக்கல்லாக உள்ளனர். எனவே, இவர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்தி கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காகவே ஆபரேஷன் ககர் என்ற சதித்திட்டத்தை ஜனவரி 2024-இல் இருந்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் சத்தீஸ்கரில் செயல்படுத்தி வருகிறது.

ககர் திட்டத்தின்படி, சத்தீஸ்கரில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட துணை இராணுவப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இப்படைகள் ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், செயற்கைக்கோள்கள் மூலம் பழங்குடி மக்களின் சிறு நடவடிக்கைகளைக் கூட கண்காணித்து அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றன. பழங்குடி மக்களை ஈவிரக்கமின்றி அழித்து வருகின்றன. பசுமையான காடுகள் பாசிச கும்பலின் நரவேட்டையால் சிவந்து போயிருக்கின்றன. துப்பாக்கி மற்றும் குண்டு வெடிச் சத்தங்கள் நாள்தோறும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

இத்திட்டத்தினால், சொந்த நாட்டு பழங்குடி மக்களை கொல்லும் கூலிப்படைகளாக துணை இராணுவப் படைகள் மாற்றப்பட்டுள்ளன. வெறிபிடித்த நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை அள்ளிவீசுவதைப் போல, மாவோயிஸ்ட் தோழரையோ அல்லது ஏதேனும் ஒரு பழங்குடி நபரையோ மாவோயிஸ்ட் என்று கூறி துணை இராணுவப் படை கொன்றால், அப்படைக்கு 2 முதல் 25 லட்சம் ரூபாய் பணத்தை பா.ஜ.க. அரசு அள்ளிவீசி வருகிறது. இதன்விளைவாக, அப்பாவி பழங்குடி பெண்களை துணை இராணுவப் படைகள் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கொன்றுவிட்டு மாவோயிஸ்ட் என்று கணக்கு காட்டும் கொடூரங்களும் பஸ்தரில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பழங்குடி மக்களை மலைகளில் விரட்டியடிப்பதற்கு, பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்முறையை ஒரு ஆயுதமாக துணை இராணுவப் படைகள் பயன்படுத்துகின்றன.

மேலும், ககர் திட்டத்தின்கீழ் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள் இராணுவமயமாக்கப்பட்டுள்ளன. பஸ்தரில் மட்டும் 182 இடங்களில் தற்காலிக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இராணுவ முகாம்கள் நேத்ரா 3, பாரத் ட்ரோன்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களுடன் மக்களைத் தொடர்ந்து கண்காணிக்கின்றன. மக்களின் சிறு நடவடிக்கைகளைக் கூட கண்காணித்து புகைப்படங்கள் எடுக்கின்றன. மக்களிடையேயான உரையாடல்கள், தொலைபேசி அழைப்புகள் கூட பதிவு செய்யப்படுகின்றன. அதாவது பா.ஜ.க. அரசானது எதிரி நாட்டுப் படைகளை கண்காணிப்பதைப் போல பழங்குடி மக்களை கண்காணிக்கிறது.

அதேபோல, பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்ய இஸ்ரேல் பயன்படுத்தும் வெடிபொருட்களை சுமந்து செல்லும் ஹெரான் என்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை இப்பகுதிகளில் மோடி அரசு பயன்படுத்துகிறது. ஏப்ரல் 7, 2023 அன்று பிஜாப்பூர் மாவட்டத்தின் மோர்கெமெட்டா மலைகளில் அமைந்துள்ள நான்கு கிராமங்களில் ட்ரோன்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இவ்வாறு, போரில் அந்நிய நாட்டு படைகள் மீது குண்டுகளை வீசுவதைப் போல, சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுகளை வீசி கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.

மேலும், இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இராணுவ முகாம்களை ஒருங்கிணைந்த மேம்பாட்டு மையங்களாக (Integrated Development Centres) மாற்றும் முயற்சியிலும் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த மையங்களில் பழங்குடி மக்களுக்கான குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கிய இராணுவ முகாம்கள் ஏற்படுத்தப்படும் என்று மோடி அரசு விளம்பரம் செய்கிறது. மாவோயிஸ்ட் அபாயத்தினால் பழங்குடி மக்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியவில்லை, அதனாலேயே ஒருங்கிணைந்த மேம்பாட்டு மையங்களை உருவாக்குவதாக மோடி அரசு கூறுகிறது. ஆனால், பழங்குடி மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் அடைத்து வைத்து அவர்கள் மீது நிரந்தர ஒடுக்குமுறையை செலுத்தவே மோடி அரசு இந்த மையங்களை உருவாக்கி வருகிறது.

இத்தகைய இராணுவமயமாக்க நடவடிக்கைகள் மூலம், சுரங்க நடவடிக்கைகளுக்காக பழங்குடி மக்களிடமிருந்து அவர்களின் பூர்விக நிலங்கள் பறிக்கப்பட்டு, அம்மக்கள் தாங்கள் வாழும் பகுதிகளிலேயே அகதிகளாக மாற்றப்படுவார்கள்.

மேலும், மோடி அரசின் பழங்குடியின மக்கள் மீதான இந்தத் தாக்குதல் குறித்து பா.ஜ.க. சார்பு ஊடகங்கள் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளின் ஊடகங்கள் மற்றும் நடுநிலை ஊடகங்கள் என்று கூறிக்கொள்பவை கூட செய்திகளை வெளியிடுவதில்லை. இதன்மூலம், இந்த ஊடகங்கள் கனிம வளக் கொள்ளைக்காக பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு துணைபோகின்றன. மாறாக, சமூக அக்கறையுள்ள சில ஊடகங்கள் மட்டுமே இச்செய்திகளை உலகின் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன.

அம்பானி – அதானிகளின்
கனிம வளக் கொள்ளைக்கான போர்

சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மக்கள் போராட்டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஹஸ்தியோ அரந்த் காடுகளில் அதானி நிறுவனத்தால் இயக்கப்பட்டு வரும் பர்சா கிழக்கு மற்றும் காந்த பாசன் நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சத்தீஸ்கர் வனத்துறை பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அளித்த அறிக்கையின்படியே, 2024-ஆம் ஆண்டில் ஹஸ்தியோ அரந்த் காடுகளில் உள்ள 81,866 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஆனால், உண்மை எண்ணிக்கை இதைவிட அதிகம் என்று சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக போராடும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, சுரங்க விரிவாக்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் மீது கொடிய ஒடுக்குமுறைகளை செலுத்தியே விரிவாக்க பணிகளை சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும், சத்தீஸ்கரில் தன்னுடைய ஆக்டோபஸ் கரங்கள் விரிவடையும் வகையில் அதானி குழுமமானது பல துறைகளில் முதலீடு செய்து வருகிறது. சான்றாக, கடந்த ஜனவரி 12-ஆம் தேதி சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாயை அவரது இல்லத்தில் சந்தித்த அதானி, ராய்ப்பூர், கோர்பா, ராய்கரில் உள்ள தன்னுடைய அனல் மின்சார உற்பத்தி ஆலைகளை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.60,000 கோடி முதலீடு செய்வதாகவும், சிமெண்ட் ஆலைகளின் மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்காக ரூ.5,000 கோடி முதலீடு செய்வதாகவும் அறிவித்திருக்கிறார்.

அதேபோல, சத்தீஸ்கரில் சமீபமாக லித்தியம், சுண்ணாம்புக் கல், இரும்புத் தாது, பாக்சைட், தங்கம், நிக்கல்-குரோமியம், கிராஃபைட் உள்ளிட்ட தனிமங்கள் புதைந்திருக்கும் இடங்களைக் கண்டறிந்து ஏலம் விடுவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், நாட்டிலேயே முதல் லித்தியம் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை சத்தீஸ்கர் அரசு வழங்கியிருக்கிறது. சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள கட்கோரா லித்தியம் தொகுதியில் சுரங்கம் அமைக்க கொல்கத்தாவை தளமாகக் கொண்ட மைக்கி சவுத் மைனிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. இப்பகுதியில் 250 ஹெக்டேர் பரப்பளவில் லித்தியம் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கனிம வளச் சுரண்டலுக்கு எதிராகப் போராடும் பழங்குடி மக்கள், அமைப்புகள் மீது பாசிச ஒடுக்குமுறைகளை செலுத்தியே சத்தீஸ்கர் அரசானது கனிம வளச் சுரண்டலை நிகழ்த்தி வருகிறது. ஹந்தியோ அரந்த் காடுகளை அழித்து நிலக்கரி சுரங்களை அமைப்பதற்கு எதிராக “ஹஸ்தியோ அரந்த் பச்சாவ் அந்தோலன்” என்ற அமைப்பின் தலைமையில் போராடிவரும் சல்ஹி, ஹரிஹர்பூர், காட்பரா, ஃபதேபூர் ஆகிய கிராம மக்கள் மீது மிருகத்தனமான ஒடுக்குமுறைகளை செலுத்தி வருகிறது. பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் “மூலவாசி பச்சான் அபியான்” என்ற அமைப்பை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சட்டவிரோத அமைப்பு என்று தடை செய்துள்ளது.

ஆகவே, இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பா.ஜ.க. அரசானது சத்தீஸ்கரின் காடுகளிலும் மலைகளிலும் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காகவே பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து பாசிச இராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பது உறுதியாகிறது.

மோடி அரசே,
பழங்குடிகள் மீதான போரை நிறுத்து
என முழங்குவோம்!

சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீது அரசின் தாக்குதல் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதால், மார்ச் 28 அன்று மாவோயிஸ்ட் கட்சி, “அரசு மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதாகவும், புதிய இராணுவ முகாம்களை நிறுவுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும்” கடிதம் வெளியிட்டிருந்தது. ஆனால், மாநில அரசானது மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை ஏற்காமல், அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசின் மறுவாழ்வுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு சரணடைய வேண்டும் என்று தனக்கே உரிய பாசிசத் திமிருடன் பதிலளித்துள்ளது. இதன்மூலம், பழங்குடியின மக்கள் மீது உள்நாட்டுப் போரை தொடுத்து கனிம வளங்களை சூறையாட வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது தெளிவாகிறது.

ஆனால், சத்தீஸ்கர் மலைகளிலிருந்து பழங்குடி மக்கள் விரட்டியடிக்கப்பட்டு கனிம வளங்கள் சூறையாடப்படுவது அம்மக்களின் பிரச்சினை மட்டுமல்ல. தற்போது சத்தீஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் நடக்கும் இக்கனிமவளக் கொள்ளை நாளை நாடுமுழுவதும் விரிவடையும்.

ஏற்கெனவே, கனிம வளக் கொள்ளைக்காக மணிப்பூரில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் தூண்டப்பட்ட இனக்கலவரம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட தமிழ்நாட்டின் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு மக்கள் எதிர்ப்பினால் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதன் பின்னணியிலும் லித்தியம் உள்ளிட்ட அரிய வகைத் தனிமங்களை கொள்ளையடிப்பதற்கான சதித்திட்டம் உள்ளது.

ஆகவே, சத்தீஸ்கரின் கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காக ஆபரேஷன் ககர் என்ற பாசிச இராணுவ சர்வாதிகாரத் திட்டமானது மாவோயிச பீதியூட்டி அமல்படுத்தப்படுகிறது என்றால், நாட்டின் பிற மாநிலங்களில் அந்தந்த மாநில சூழலுக்கேற்ப இக்கனிம வள சூறையாடலுக்கான திட்டம் அரங்கேற்றப்படும்.

எனவே, கனிம வளக் கொள்ளைக்காக பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் பாசிச பயங்கரவாதத் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டியது இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் கடமையாகும்.

அதேசமயம், பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக்கொள்கின்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பழங்குடி மக்கள் மீதான தாக்குதலைப் பற்றி நாடாளுமன்றத்திலோ பத்திரிகையாளர்கள் சந்திப்பிலோ கூட பேச மறுக்கின்றனர். இதன் மூலம் பழங்குடி மக்கள் மீதான பாசிஸ்டுகளின் தாக்குதலுக்கு மறைமுகமாக துணைபோகின்றன. தங்களுடைய கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கையிலிருந்தே இவ்வாறு செயல்பட்டு வருகின்றன.

ஆகவே, பாசிச மோடி அரசின் பழங்குடி மக்கள் மீதான இந்த உள்நாட்டுப் போருக்கு எதிராக புரட்சிகர, ஜனநாயக சக்திகள் நாடு முழுவதும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்கள் மூலம் பழங்குடி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மாவோயிஸ்டுகளுடன் அமைதி பேச்சுவார்த்தைக்குச் செல்ல பாசிச மோடி அரசை நிர்பந்திக்க வேண்டும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – மே 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 16-30, ஆகஸ்டு 1-31, 1992 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 17-19 | 1992 ஜூலை 16-30, ஆகஸ்டு 1-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கயமையின் அரசாங்கம்
  • சுபமங்களா – கோமல் சுவாமிநாதனின் முற்போக்கு முகத்திரை கிழிந்தது
  • அண்ணாமலை நகர்: போலீசு நடத்திய குண்டு வெடிப்பு
  • ரஜினி: கவர்ச்சி அரசியலின் அடுத்த நாயகனா?
  • மருத்துவக் கல்லூரி கொள்ளையில் உடையாரின் உடன்கட்டை ஜெயலலிதா
  • அயோத்தி: ராமர் கோயில் கட்ட அடித்தளம் நிறுவப்பட்டது, சட்டமும் நீதியும் செல்லாகாசாகியது
    இந்து மதவெறி பாசிசத்தின் தாக்குதல்
  • வரிக் கொள்ளைக்கு எதிராக லாரி உரிமையாளர் போராட்டம்
  • சி.பா. ஜெயலலிதாவின் சித்தப்பா
  • வச்சாத்தி ஆதிவாசிகள்மீது வனத்துறை – போலீசு காட்டுமிராண்டித்தனம்
  • எம்.ஜி.ஆர். ஒரு புரட்டுத்தலைவர்! – ஒரு விவசாயின் வாக்குமூலம்
  • குஜராத்: இந்துவெறியர்களின் இரத்த யாத்திரை
  • சுற்றுச் சூழல் – உயிரியல் மாநாடு ஆடுகள் மீது பழிபோடும் நரிகள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • தீனபிஹா விவகாரம்: பாதையை மறிக்கும் இந்துவெறி நந்திகள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பாசிச கருநாகத்தின் கரையான் புற்றுகள்!

டந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க-வையும் அதன் தலைவர்களையும் அவமதித்ததை பொறுத்துகொள்ள முடியாமலேயே எடப்பாடி இம்முடிவை எடுத்ததாக அச்சமயத்தில் பலரும் பேசினர். அ.தி.மு.க. திடீரென புனிதமடைந்து விட்டதை போன்று, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி அக்கட்சிக்கு ஆதரவளித்தார்; எஸ்.டி.பி.ஐ. கட்சி அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்கு சென்றது. ஜனநாயக சக்திகளில் ஒரு பிரிவினர் கூட இக்கூட்டணி முறிவை பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென சந்தர்ப்பவாதமாக கருத்து தெரிவித்தனர்.

ஆனால், 2023 அக்டோபர் மாத புதிய ஜனநாயகம் இதழில் “கூட்டணியை முறித்த எடப்பாடி: சுயமரியாதைத் தூண்டுதலா? எலும்புத் துண்டுக்கான சீற்றமா?” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில், எடப்பாடி பழனிச்சாமியின் அடித்தளமாக உள்ள கொங்கு மண்டலத்தையும் அ.தி.மு.க-வின் கட்சி கட்டமைப்பையும் அண்ணாமலை அபகரிக்க முயல்வது மட்டுமே எடப்பாடியின் சீற்றத்திற்கு காரணம் எனவும் இது சுயமரியாதை தூண்டுதலோ, பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் பயன்படுத்தப்படக் கூடியதோ அல்ல எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அவசர அவசரமாக அண்ணாமலையை பதவி விலகச் செய்துவிட்டு அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி அமைத்திருப்பதானது புதிய ஜனநாயகத்தின் கூற்றை நிரூபித்திருக்கிறது.

புஸ்வாமாகும் மோடி-அமித்ஷா கும்பலின் வியூகங்கள்

‘வியூகம்’ என்ற பெயரில் பார்ப்பனிய சூதுகளாலும் சதிகளாலும் பல மாநிலங்களில் ஆட்சிகளை கவிழ்த்து, மாநிலக் கட்சிகளுடன் உறவாடி கெடுத்து அங்கு பா.ஜ.க. ஆட்சியை நிறுவுவதற்கு திட்டம் போட்டுக்கொடுக்கும் அமித்ஷாவின் வியூகமானது தமிழ்நாட்டில் எப்போதுமே புஸ்வானமாகிக் கொண்டேதான் இருக்கிறது.

“மிஷன் சவுத்” என்ற திட்டத்தின் அடிப்படையில் பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தது. கூட்டணியில் இருந்துகொண்டே அ.தி.மு.க-வின் கொங்கு மண்டல அடித்தளத்தை செல்லரித்துவிட்டு தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் திட்டம்.

ஆனால், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்காமலேயே தமிழ்நாடு முழுக்க கட்சியை வளர்த்தெடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துவிடலாம் என்று அண்ணாமலை முன்வைத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு கூட்டணியை விட்டு தனித்து களமிறங்கியது பா.ஜ.க கும்பல்.

ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் அண்ணாமலையின் திட்டம் படுதோல்வியை தழுவியது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் மீண்டும் மண்ணை கவ்வும் நிலை உள்ளது.

இதன் காரணமாக, தனது தோல்வியை மறைத்துக்கொண்டு அ.தி.மு.க-வுடன் மீண்டும் கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலை அமித்ஷா-மோடி கும்பலுக்கு ஏற்பட்டது. இருப்பினும் கூட்டணி அறிவிப்பை பிரம்மாண்டமாக நிகழ்த்தி தன் மீசையில் ஒட்டிய மண்ணை துடைத்துவிடலாம் என்று திட்டமிட்ட அமித்ஷா, ஏப்ரல் 10 அன்று இந்தி-ஆங்கில ஊடகவியலாளர்களுடன் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். ஆனால், எடப்பாடியை சந்திக்க முடியாமல் ஒருநாள் முழுக்க அமித்ஷா அலைக்கழிக்கப்பட்டது தமிழ்நாட்டின் கடைக்கோடி ஊடகங்கள் வரை சந்தி சிரித்தது.

ஏப்ரல் 11 அன்று மாலை வரை அமித்ஷாவால் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க முடியாததால், குமரி ஆனந்தனின் இறப்புக்கு இரங்கல் தெரிவிப்பது போல தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு செல்வது; சங்கி துக்ளக் குருமூர்த்தி வீட்டிற்கு செல்வது என ஊடகவியலாளர்களிடம் இருந்து தப்பித்து பொழுதை போக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை விலக்கினால் மட்டுமே கூட்டணி அறிவிப்பை வெளியிட முடியும் என்பதை உணர்ந்த அமித்ஷா அன்றைய தினமே தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தி, நயினார் நாகேந்திரனை தலைவராக்கிவிட்டு, அதற்கான அறிவிப்பையும் தானே எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இதன் பிறகே எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்து, கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அமித்ஷா இவ்வாறு அலைக்கழிக்கப் பட்டதானது தமிழ்நாட்டின் சங்கி கும்பலிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், ஒரு மாநிலக் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக தனது கட்சியின் மாநிலத் தலைவரையே பா.ஜ.க. மாற்றியிருப்பது பொதுவெளியில் விவாதப்பொருளாகி பா.ஜ.க-வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் அமித்ஷாவிற்கு நேர்ந்த அவமானத்தை மூடிமறைக்க “அமித்ஷாவின் வியூகம் வெற்றி” என சங்கி கும்பல் பிரச்சாரம் செய்துவந்த நிலையில், “பா.ஜ.க. உடன் கூட்டணி உள்ளதே தவிர கூட்டணி ஆட்சி கிடையாது” என்று எடப்பாடி பழனிச்சாமி திடீரென பல்டி அடித்தது பா.ஜ.க. கும்பலுக்கு தலைவலியாகிப் போனது.

இதற்கிடையில் பா.ஜ.க-வின் அடிவருடியான அன்புமணிக்கு பதிலாக, இனி தானே பா.ம.க. தலைவராக தொடரப்போவதாக ராமதாஸ் அறிவித்தது பா.ஜ.க. கும்பலுக்கு தலைவலியை மேலும் கூட்டியிருக்கிறது.

வெற்றி கூட்டணி அல்ல, கடத்தல் கூட்டணி

“பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை” என மேடைகள் தோறும் முழங்கிவிட்டு தற்போது எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது அ.தி.மு.க-வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் அண்ணாமலையை தலைவர் பதவிலிருந்து நீக்கியதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தனது வியூகத்தில் வெற்றியடைந்துவிட்டதாக அ.தி.மு.க. கும்பல் பிரச்சாரம் செய்கிறது. மறுபுறம், இரண்டு கட்சிகளுமே இக்கூட்டணியை வெற்றி கூட்டணி என்று பேசி வருகின்றன.

ஆனால், இது வெற்றி கூட்டணி அல்ல, எடப்பாடி பழனிச்சாமியை கடத்திக்கொண்டுபோய் அமைக்கப்பட்ட கடத்தல் கூட்டணி என்பதே உண்மை.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த பா.ஜ.க., அ.தி.மு.க. உடன் கூட்டணியின்றி தமிழ்நாட்டில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது என்பதை நன்குணர்ந்தது. அப்போதிலிருந்தே அ.தி.மு.க-வை தனது வழிக்கு கொண்டுவந்து கூட்டணி அமைப்பதற்கான அனைத்து அஸ்திரங்களையும் பா.ஜ.க. கையாளத் தொடங்கியது. அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்ன வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது; அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது அமலாக்கத்துறை, வருவமான வரித்துறை சோதனை நடத்தியது; எடப்பாடி பழனிச்சாமி மகனின் ஊழல் விவகாரத்தை கையிலெடுத்தது; “ஒருங்கிணைந்த அ.தி.மு.க. வேண்டும்” என்ற கோரிக்கையை கட்சிக்குள் தீவிரமடையச் செய்து அதற்கான நகர்வுகளை மேற்கொண்டது; கட்சியை உடைப்பதற்கு எஸ்.பி. வேலுமணியுடன் ஈஷா யோகா மையத்தில் திட்டம் தீட்டியது; செங்கோட்டையன் தலைமையிலான கோஷ்டியை எடப்பாடிக்கு எதிராக தூண்டிவிட்டது என பலவகைகளில் அ.தி.மு.க. எனும் நெல்லிக்காய் மூட்டையை சிதறடிப்பதற்கான வேலைகளை பா.ஜ.க மேற்கொண்டது.

இதனையடுத்து, கூட்டணிக்கு செல்லாவிட்டால் கட்சியே இருக்காது என்ற நிலை உருவான காரணத்தினாலேயே அ.தி.மு.க., பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. மொத்தத்தில், இக்கூட்டணிக்காக எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக கடத்தப்படவில்லையே தவிர பிற அத்துணை அஸ்திரங்களையும் பா.ஜ.க. கையாண்டது.

மேலும், கூட்டணி அறிவிப்பின் போது அ.தி.மு.க-வின் உள்விவகாரங்களில் தலையிட மட்டோம் என அமித்ஷா தெரிவித்திருந்தாலும் தேவர் சாதி மக்களின் வாக்குகளை தனதாக்கிக் கொள்வதற்காக, சசிகலா-தினகரன்-ஓ.பன்னீர்செல்வம் உள்ளடங்கிய ‘ஒருங்கிணைந்த அ.தி.மு.க.’-வை உருவாக்கும் திட்டத்தை பா.ஜ.க. நிகழ்ச்சிநிரலில் வைத்துள்ளது என்பதை சங்கி குருமூர்த்தியின் நேர்காணல்கள் நிரூபிக்கின்றன. எனவே, அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்ன வழக்கு, அ.தி.மு.க-வினர் மீதான ஊழல் வழக்குகள் ஆகியவற்றை வைத்து மிரட்டி எடப்பாடி கும்பலை தனது நோக்கத்திற்கேற்ப பா.ஜ.க. பணிய வைக்கும் என்பதே நிதர்சனமாகும்.

கரையான் புற்றுகளை இடிக்காமல்
கருநாகத்தை நசுக்க முடியாது

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிக்க வேண்டும் என எத்தனிக்கும் பாசிச பா.ஜ.க. கும்பல் அதற்கான முக்கிய காய்நகர்த்தலாக அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. பா.ஜ.க. என்ற பாசிச கருநாகம் தமிழ்நாட்டில் கொழுத்து வளர்வதற்கு ஏதுவான கரையான் புற்றாக அ.தி.மு.க. உள்ளது. இப்புற்றுக்குள் குடிபுகுந்து அதனை கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்துவிட்டு தமிழ்நாட்டை சுற்றிவளைக்கும் மலைப்பாம்பாக வளர வேண்டும் என்று எத்தனிக்கிறது பாசிச கும்பல்.

அ.தி.மு.க. கட்சியின் தன்மையானது இப்பாசிச கும்பல் உள்நுழைவதற்கு கனகச்சிதமாக உள்ளது. எந்தவித கொள்கை-கோட்பாடுமற்ற அடிமை கூட்டமாக எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நேரடியாக பார்ப்பன கும்பலின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது. ஜெயலலிதா இறப்பிற்குப் பிறகு அ.தி.மு.க-விற்குள் பா.ஜ.க. நேரடியாக அதிகாரம் செலுத்தத் தொடங்கியதன் மூலம் அக்கட்சி பாசிச பா.ஜ.க. கும்பலின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. பல இடங்களில் அ.தி.மு.க. என சொல்லிக்கொள்ளும் சங்கிகள் பாசிச எதிர்ப்பு சக்திகள் மீது தாக்குதல் தொடுப்பது அக்கட்சிக்குள் நிகழ்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலையும் ஆதிக்கத்தையும் வெளிக்காட்டுகிறது.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தை பாசிஸ்டுகள் தமிழ்நாட்டில் அடித்தளமிடுவதற்கான நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டனர். ஆர்.எஸ்.எஸ். கும்பலை வளர்த்துவிட்டது; அரசு கட்டமைப்பிற்குள் சங்கிகளை புகுத்தியது; சாதிய சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலை தீவிரப்படுத்தியது என பாசிச ஊடுருவல் அனைத்து மட்டங்களிலும் நடந்தேறியது. மேலும், நீட் உள்ளிட்ட பாசிச சட்டத்திட்டங்களுக்கு அடிமை அ.தி.மு.க. தமிழ்நாட்டை திறந்துவிட்டது. இந்திய அளவிலும் சி.ஏ.ஏ., காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து உள்ளிட்ட பாசிச சட்டத்திட்டங்களுக்கு ஆதரவளித்து இஸ்லாமியர்களுக்கும் பரந்துபட்ட இந்திய மக்களுக்கும் துரோகமிழைத்தது.

எனவே, அ.தி.மு.க-விற்கும் பா.ஜ.க-விற்கும் கொள்கை வேறுபாடு உள்ளது என்று பேசுவதெல்லாம் முட்டாள்தனத்தின் உச்சம். கொங்கு மண்டலம் பறிபோனால் தனது கட்சியால் பொறுக்கித் தின்ன முடியாது என்ற ஒற்றை காரணத்தினாலேயே பா.ஜ.க-வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்தது. தற்போது துளியும் வெட்கமின்றி அண்ணாமலையை விலக்கியதாலும் ஊழல் வழக்குகளை கொண்டு மிரட்டியதாலும் பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறது. அந்தவகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாசிச கும்பலின் நோக்கத்திற்கேற்ப செயல்படும் முதன்மை வாகனமாக அ.தி.மு.க. பயன்பட இருக்கிறது. எனவே, அ.தி.மு.க-வை பாசிச எதிர்ப்பில் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான சந்தர்ப்பவாதமும் மக்களை பாசிச படுகுழியில் தள்ளுவதுமாகும்.

அ.தி.மு.க. மட்டுமின்றி பா.ஜ.க. கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கும் வன்னியர் சாதிவெறி கட்சியான பா.ம.க., கொள்கை-சித்தாந்தமற்று விஜயகாந்தை வைத்து பிழைப்பு நடத்தும் தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் பாசிச கும்பலுக்கான கரையான் புற்றுகளேயாகும். மேலும், தமிழ்நாட்டில் பலமுனை போட்டி நிலவினால் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் சிதறடிக்கப்பட்டு, தி.மு.க. வெற்றி பெறுவதற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்துள்ள பா.ஜ.க., நாம் தமிழர் கட்சியை தனது கூட்டணியில் இணைத்து கொள்வதற்கான பேரத்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரடியாக, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்காவிட்டாலும், பெரியார் எதிர்ப்பு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கான கருத்தியல் அடியாள் வேலையைத்தான் சீமான் செய்து வருகிறார். எனவே, நா.த.க. வளர்ச்சியும் பா.ஜ.க-விற்கு துணைபுரிவதாகவே அமையும்.

அதேபோல், இந்தியாவில் பாசிசம் அரங்கேறிவரும் சூழலில் கொள்கை-சித்தாந்தம் ஏதுமின்றி கவர்ச்சிவாதத்தையும் பிழைப்புவாதத்தையும் மட்டுமே முன்வைத்து தொடங்கப்பட்டுள்ள விஜய்-இன் கட்சியும் பாசிஸ்டுகளுக்கான கரையான் புற்றே. எப்போது வேண்டுமானாலும், பா.ஜ.க-வால் விஜய் கட்சியை தன்வயப்படுத்திக்கொள்ள முடியும் என்ற நிலையில்தான் அக்கட்சி உள்ளது.

எனவே அ.தி.மு.க. உள்ளிட்டு இக்கட்சிகளிடம் ஜனநாயகம் பாராட்டுவதும் அவற்றை பயன்படுத்திக்கொள்ள எத்தனிப்பதும் பாசிச கும்பலிடத்தில் பலியாவதற்கே வழிவகுக்கும். இந்த கரையான் புற்றுகளை இடித்துத் தள்ளுவதானது தமிழ்நாட்டில் பா.ஜ.க. எனும் கருநாகத்தை நசுக்குவதில் முதன்மை கடமையாகும்.

2026 சட்டமன்றத் தேர்தல்:
உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க என்ன வழி?

கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. மூலமும் அண்ணாமலையை முன்னிறுத்தியும் கவுண்டர் சாதி வாக்குகளை அறுவடை செய்வது; வட மாவட்டங்களில் பா.ம.க. மூலம் வன்னியர் சாதி வாக்குகளை கவர்வது; தென்மாவட்டங்களில் பா.ஜ.க-வின் புதிய மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரனை முன்னிறுத்தியும் தினகரன்-சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் கும்பல் மூலமும் தேவர் சாதி மக்களின் வாக்குகளை அறுவடை செய்வது; அதே பகுதியில் அடர்த்தியாக வாழும் பள்ளர் சாதி மக்களை கவர கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்ற கருங்காலிகளை பயன்படுத்துவது என 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திட்டத்தை வகுத்து பாசிச கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மேலும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பல் மூலம் மதக்கலவரங்களையும் சாதிவெறியாட்டங்களையும் தூண்டிவிட்டு சாதி-மத முனைவாக்கத்தை தீவிரப்படுத்தி தமிழ்நாடு மக்களின் வாக்குகளை அபகரிக்கத் திட்டமிடுகிறது. மதுரை திருப்பரங்குன்றத்தில், “சிக்கந்தர் தர்காவை இடித்து தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்றுவோம்” என இந்து முன்னணி கும்பல் மதக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் சாதிய சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி சாதியப் படுகொலைகளையும் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வருகிறது.

மறுபுறம், தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க-வும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. கடந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு வியூகங்களை வகுத்துக்கொடுத்த “ஷோ டைம்” மற்றும் “பென்” ஆகிய கர்ப்பரேட் நிறுவனங்களின் துணையுடன் 2026 தேர்தலுக்கான உத்திகளை தி.மு.க. வகுத்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை அறிய, கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி அதன் அடிப்படையில் கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிடுவது; சாதி வாக்குகளை பெறும் வகையில் கட்சியை புனரமைப்பது என தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது போராடிய மக்கள் பிரிவினருக்கும் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களுக்கும் அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. காற்றில் பறக்கவிட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு நான்காண்டுகளாக கார்ப்பரேட் மாடல் ஆட்சியை நடத்தி வருகிறது.

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற பெயரில் பரந்தூர் விமான நிலையத் திட்டம், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம்  என கார்ப்பரேட் திட்டங்களுக்கு துணைபோவது; தமிழ்நாடு முழுவதும் சிப்காட் பூங்காக்களை அமைக்கிறேன் என்ற பெயரிலும் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரிலும் விவசாய மக்களையும் பூர்வகுடி மக்களையும் விரட்டியடிப்பது; எல்லை விரிவாக்கம் என்ற பெயரில் உள்கட்டமைப்புகளை கார்ப்பரேட்மயமாக்குவது, மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றுவது; முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தமிழ்நாட்டை கார்ப்பரேட் சுரண்டலின் குவிமயமாக்குவது என கார்ப்பரேட் சேவைத் திட்டங்களை தி.மு.க. செவ்வனே அமல்படுத்தி வருகிறது. இக்கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடினால் அவர்களை கடுமையாக ஒடுக்குகிறது. கார்ப்பரேட்-காண்ட்ராக்ட்-டிஜிட்டல்மயமாக்கத்தை தீவிரப்படுத்தி உத்தரவாதமற்ற பணி முறையையும் உதிரி தொழிலாளர்களையும் உருவாக்கி வருகிறது.

மறுபுறம் பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டே ஒன்றிய அரசின் கார்ப்பரேட் திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது; முருகன் மாநாடு, ஆன்மீக அரசியல் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு கருத்தியல் அடியாள் வேலை பார்ப்பது; ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலை வேடிக்கை பார்ப்பது; புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி., நீட் உள்ளிட்டு பாசிச சட்டத்திட்டங்களை எதிர்த்து களம் காணாமல் அதனை தமிழ்நாட்டு மக்களின் தலையில் சுமத்துவது; பாசிச கும்பலின் நிதி நெருக்கடிக்கு அடிபணிந்து போவது என தி.மு.க. சந்தர்ப்பவாதமாக நடந்துகொள்கிறது. தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி முடக்கம், தொகுதி மறுவரையறை, மாநில உரிமை பறிப்பு ஆகியவற்றை தனது தேர்தல் வெற்றிக்கு பயன்படும் வகையில் வரம்புக்கு உட்பட்ட அளவிலேயே எதிர்க்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதனைத் தடுத்து நிறுத்தாமல் வேங்கைவயல் உள்ளிட்ட விவகாரங்களில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்குகிறது. போலீசு துணையுடன் சாதியத் தாக்குதல்களை தனிப்பட்ட மோதலாக சித்தரிக்கிறது.

மறுபுறம் தமிழ்நாட்டில் கல்குவாரி, மணல் கொள்ளை போன்றவை தீவிரமடைந்து வருகின்றன. இந்த இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுப்போர் கிரிமினல் கும்பலால் படுகொலை செய்யப்படுவதும், தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

ஆனால், ஐ.டி. விங்குகள், இணைய குண்டர் படையை வைத்துக்கொண்டு தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பையும் போராட்டத்தையும் மூடிமறைத்து மக்களை திசை திருப்புகின்றன; தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்வதாக சித்தரிக்கின்றன. 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. எதிர்ப்பை பயன்படுத்தி கொண்டும் பிரஷாந்த் கிஷோர் என்னும் தேர்தல் புரோக்கரின் வழிகாட்டுதலாலும் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை அறுவடை செய்து ஆட்சிக்கு வந்ததை போலவே 2026 தேர்தலிலும் வெற்றிபெற்று விடலாம் என தி.மு.க. கனவு காண்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் நாள்தோறும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஆசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள், மீனவர்கள் என பலதரப்பட்ட மக்கள் நாள்தோறும் போராடி வருகின்றனர். அடிப்படை வசதிகளை செய்துத்தர கோரியும், கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராகவும், மாநகராட்சி விரிவாக்கத்தை நிறுத்தக் கோரியும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

ஆனால், தி.மு.க. அரசு இதுகுறித்தெல்லாம் வாய் திறப்பதில்லை. தி.மு.க. கூட்டணி கட்சிகளும் அத்தி பூத்தாற் போன்று சில விவகாரங்களுக்கு மட்டும் அறிக்கை விடுவது, கண்டனம் தெரிவிப்பதுடன் நிறுத்திக் கொள்கின்றன. தி.மு.க-வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் கட்சிகள் சடங்கிற்காக கூட மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. அதேசமயம், தி.மு.க. மீதான இந்த மக்கள் எதிர்ப்பை பயன்படுத்தி வாக்குகளை அறுவடை செய்துகொள்ள வேண்டும் என பாசிச பா.ஜ.க. கும்பல் தீவிரமாக வேலை செய்துவருகிறது.

இந்நிலையில், போராடும் மக்கள் தங்களது கோரிக்கைகளை சொந்தமுறையில் போராடி நிலைநாட்டிக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தேர்தல் சமயத்தில், ஆளும் வர்க்க கட்சிகளை போல உழைக்கும் வர்க்கமும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான பேரத்தை நடத்த வேண்டியுள்ளது. அதற்கான சரியான வடிவம் களப்போராட்டங்களே!

பாசிச எதிர்ப்பு போராட்டத்திலும் மக்கள் நலனிலும் உறுதியாக இருக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தின் இந்தப் போராட்டத்தில் முன்னிற்க வேண்டும். களப்போராட்டங்களுக்கு தலைமையளித்து மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க பாடுபட வேண்டும். இதுவே பா.ஜ.க. கும்பலை வீழ்த்துவதற்குமான வழியாகும்.


துலிபா

(புதிய ஜனநாயகம் – மே 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 16-30, ஜூலை 1-15, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 15-16 | 1991 ஜூன் 16-30, ஜூலை 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அரசுத் தலைவர் தேர்தல்: வினோதக் காட்சிகள்
  • ஜூன் 16 பொது வேலை நிறுத்தம்: தேவை: அரசியல் வழி
  • மக்களை வதைக்கும் பீடையின் பேயாட்சி
  • போலீசு-கிரிமினல்-அரசியல்வாதி
    சமூக விரோத கூட்டு!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • சுற்றுச் சூழல் – உயிரியியல் மாநாடு
    ஆடுகள் மீது பழிபோடும் நரிகள்
  • ஜெயா அதிகார போதை அடக்குமுறை வெல்லாது
  • தலித் தலைவர்களின் தப்புக் கணக்கு
  • ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிந்திய தி.மு.க. எதிர்மறை அரசியல்
  • மித்தல் விவகாரம்: இந்தியா – பாக்
    தோதர்களே உளவாளிகளே… பகைமையே வரலாறாக…
  • இந்தியா மீது அமெரிக்கா தடை: ஏகாதிபத்திய அடாவடி
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram