Wednesday, June 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 5

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025: மோடி அரசை பின்வாங்க வைப்பது எப்படி?

டந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சியிலிருக்கும் பாசிச பா.ஜ.க. கும்பல், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களை உரிமைகள் ஏதுமற்ற இரண்டாந்தர குடிமக்களாக மாற்றுவதற்கான பல்வேறு பாசிச நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் உச்சமாக இஸ்லாமியர்கள் மீது இதுவரை இல்லாத வகையில் பாசிச பயங்கரவாதத் தாக்குதலை தொடுப்பதற்கு ஏதுவாக, வக்ஃப் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் திருத்த மசோதாவில், தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவைச் சார்ந்த பா.ஜ.க. உறுப்பினர்கள் முன்வைத்த 14 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு முன்பை விட மேலும் அபாயகரமானதாக இச்சட்டம் மாற்றப்பட்டுள்ளது.

குறுக்கு வழியில் நிறைவேற்றப்பட்ட பாசிச சட்டம்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஏப்ரல் 3-ஆம் தேதி அதிகாலையிலும் மாநிலங்களவையில் 4-ஆம் தேதி அதிகாலையிலும் “வக்ஃப் திருத்த மசோதா 2024”-யை எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் எதிர்ப்பை மீறி மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது. இம்மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அடுத்த நாளே ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், 1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, “ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாட்டு சட்டம்” (UMEED – Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கலவர கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ள வாகனங்கள்

மக்களின் எதிர்ப்பு காரணமாக தடாலடியாக வக்ஃப் திருத்த மசோதாவை நிறைவேற்ற இயலாத மோடி அரசு, கடந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்காக அம்மசோதாவை அனுப்பி வைத்திருந்தது. ஆனால், இவையெல்லாம் வெறும் கண்துடைப்பிற்காகத்தான் என்பது நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டபோதே அம்பலமாகிவிட்டது. பா.ஜ.க. உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் முறையாக விவாதங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இதுவரை நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை நீக்கிவந்த மோடி அரசு, நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது பொய் குற்றம் சாட்டி அவர்களை இடைநீக்கம் செய்தது. இதன்மூலம் நாடாளுமன்ற கூட்டுக் குழு என்ற முறையையே கேலிக் கூத்தாக்கியுள்ளது. இறுதியாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்த 500-க்கும் மேற்பட்ட திருத்தங்களை நிராகரித்துவிட்டு, பா.ஜ.க. உறுப்பினர்கள் பரிந்துரைத்த 14 திருத்தங்களை மட்டும் கூட்டுக் குழு ஏற்றுக் கொண்டு மசோதாவை தாக்கல் செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி கூட்டத்தொடர் முடிவடையும் கடைசி இரண்டு நாட்களில் வஃக்ப் திருத்த மசோதாவை தாக்கல் செய்த மோடி அரசு, அதிகாலை வரை விவாதங்களை நடத்தி, தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி அவசர அவசரமாக மசோதாவை நிறைவேற்றியது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது; அதிகாலை வரை விவாதம் நடத்தியது என ஜனநாயகப் பூர்வமாக இம்மசோதா நிறைவேற்றப்பட்டதாக பா.ஜ.க. கும்பல் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. ஆனால், மூன்று குற்றவியல் சட்டங்கள், வனப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல பாசிச சட்டங்களைப் போல, வக்ஃப் திருத்தச் சட்டத்தையும் பெயரளவிலான ஜனநாயக வழிமுறைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு குறுக்கு வழியிலேயே மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது. இதன்மூலம், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தன்னுடைய பாசிச ஆட்சியை அரங்கேற்றுவதற்கு ஒத்திசைவாகவே இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பு செயல்படுகிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது.

காவி-கார்ப்பரேட் கும்பலுக்காக அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்

இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் இறையருளை நாடி ஏழை, எளிய மக்களின் நலனுக்காக தானமாக வழங்கும் அசையும், அசையா சொத்துகளே வக்ஃப் சொத்துகள் என்றழைக்கப்படுகின்றன. இச்சொத்துகளில் பள்ளிவாசல்கள், தர்காகள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களும் உள்ளன. சிறுபான்மை விவகார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, வக்ஃப் வாரியத்திடம் இந்தியா முழுவதும் சுமார் 8.7 லட்சம் சொத்துகள் உள்ளன. அவை 9.4 லட்சம் ஏக்கர் நிலத்தில் பரவியுள்ளன.

வக்ஃப் சொத்துகளை நிர்வாகம் செய்வதில் பல முறைகேடுகள் நடக்கின்றன, அவற்றை முறைப்படுத்துவதற்காகவும் ஏழை இஸ்லாமியர்களின் நலனுக்காகவுமே வக்ஃப் திருத்தச் சட்டத்தை கொண்டுவந்திருப்பதாக மோடி அரசு கூறுகிறது. “ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்” என்ற பழமொழிக்கேற்ப உள்ளது மோடி அரசின் இந்த நாடகம். ஆட்சிக்கு வந்ததிலிருந்து சி.ஏ.ஏ., முத்தலாக் தடை சட்டம், லவ் ஜிகாத் தடை சட்டம், மத மாற்ற தடைச் சட்டம், தூக் ஜிகாத் சட்டம், பொது சிவில் சட்டம் என சட்டப்பூர்வமாகவும்; பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உலாவும் காவிக் குண்டர்கள், வி.எச்.பி., பஜ்ரங் தள் உள்ளிட்ட சங்கப் பரிவாரங்கள் மூலமும் நாள்தோறும் பல்வேறு தாக்குதல்களை இஸ்லாமியர்கள் மீது பா.ஜ.க. கும்பல் தொடுத்து வருகிறது. இஸ்லாமியர்களின் வீடுகளை அழித்து அவர்களை அகதிகளாக மாற்றுவதற்காக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் புல்டோசர் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு அனுதினமும் இஸ்லாமியர்கள் மீது பாசிச தாக்குதலை தொடுத்துவரும் மோடி கும்பல் ஏழை இஸ்லாமியர்களின் நலனுக்காக வக்ஃப் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது.

உண்மையில், சி.ஏ.ஏ., பொது சிவில் சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் இஸ்லாமியர்களின் குடியுரிமை, தனியுரிமை போன்றவற்றை பறிப்பதுபோல, வக்ஃப் திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துகளை பறித்து பொருளாதார ரீதியாக அவர்களை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் உள்ள சில அம்சங்களை பரிசீலித்தாலே, இதனை புரிந்துகொள்ள முடியும்.

2024 ஆகஸ்டில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் திருத்த மசோதாவில், வஃக்ப் சொத்துகளை நிர்ணயிக்கும் மற்றும் கணக்கெடுக்கும் அதிகாரம் வக்ஃப் வாரியத்திடம் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டிருந்தது. இதன்மூலம், வக்ஃப் வாரியங்கள் அதிகாரம் பறிக்கப்படுவதுடன், அரசுக் கட்டமைப்பில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகள் மூலம் வக்ஃப் சொத்துகள் அபகரிக்கப்படுவதற்கான அபாயம் இருந்தது. ஆனால், தற்போது சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தில், வக்ஃப் சொத்துகளை நிர்ணயம் மற்றும் கணக்கெடுப்பதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்குப் பதிலாக, மாவட்ட ஆட்சியரை விட உயர் பதவியில் உள்ள அதிகாரிக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரோ அரசு அதிகாரியோ, யாராக இருந்தாலும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தைப் பறித்து, வக்ஃப் சொத்துகளை கொள்ளையடிக்க வேண்டும் என்ற பாசிச கும்பலின் சதித்திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை.

அடுத்ததாக, தற்போது திருத்தப்பட்டுள்ள இச்சட்டத்தில், வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் “வக்ஃப் பயனர்” (Waqf by user) என்ற விதியின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட சொத்துகள் வக்ஃப் சொத்துகளாகவே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் முகலாய மன்னர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து வக்ஃப்களாக உள்ள சொத்துகள் காவி-கார்ப்பரேட் கும்பலிடமிருந்து பாதுகாக்கப்படலாம் என்று தோன்றலாம். ஆனால், இங்குதான் காவிக் கும்பலின் சூட்சுமம் உள்ளது. இதில், பகுதியளவு அல்லது முழுமையாக சர்ச்சைக்குரிய வக்ஃப் சொத்திற்கும், அல்லது அரசாங்க இடத்திற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் அரசு சொத்தா அல்லது வக்ஃப் சொத்தா என வக்ஃப் சொத்துகளை நிர்ணயம் செய்வதற்கான அதிகாரம் அரசு அதிகாரிக்கு வழங்கப்பட்டிருப்பதை இணைத்துப் பார்க்க வேண்டும். இதன்மூலம் முகலாய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சொத்துகளையும் அரசு சொத்துகள் என்று கூறி காவி-கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாகவே இச்சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

அடுத்ததாக, வக்ஃப் சொத்துகளுக்கான பதிவுகள், ஆண்டுக்கணக்குகள், வழக்குகளை கையாள்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்காக மையப்படுத்தப்பட்ட இணையதளப் பக்கம் (Web Portal) உருவாக்கப்பட வேண்டும் என்று வக்ஃப் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சட்டம் இயற்றப்பட்ட ஆறு மாதங்களுக்குள், வக்ஃப் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்திற்குள் பதிவேற்ற முடியாத போது முத்தவல்லி (வக்ஃப் சொத்துகளை நிர்வகிப்பவர்) விண்ணப்பிக்கும் பட்சத்தில் கால நீட்டிப்பு குறித்து வக்ஃப் தீர்ப்பாயம் முடிவு செய்யும் என்றும் இஸ்லாமியர்கள் வக்ஃப்களுக்கு தானமாக வழங்கும் சொத்துகளை இந்த இணையதளத்தின் மூலமே வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட வக்ஃப் நிறுவனங்கள் வக்ஃப் சொத்துகளை நிர்வாகம் செய்து வருகின்றன. இவற்றின் அனைத்தின் செயல்பாடுகளையும் மோடி அரசு இனி மையப்படுத்தப்பட்ட இணையதளம் மூலம் கட்டுப்படுத்தப்போகிறது. இதன்மூலம், மாநில வக்ஃப் வாரியங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் குவிக்கப்படும். பல துறைகளில், மோடி அரசு டிஜிட்டல்மயமாக்கம் என்ற பெயரில் இவ்வாறான அதிகார பறிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, மத்திய, மாநில வக்ஃப் வாரியங்களில் இரண்டு இஸ்லாமியர் அல்லாதவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்ற விதி கூட்டுக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகும் நீடிக்கிறது. அப்பட்டமாக, வக்ஃப் வாரியங்களில் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளை நியமித்து அதனை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே மோடி அரசு இந்த விதியை தக்கவைத்துள்ளது. தஞ்சாவூர் மாவாட்டம் பாபநாசம் அருகே உள்ள கோவில் ஒன்றில், அறங்காவலராக இஸ்லாமிய பெயர்கொண்ட ஒருவர் ( உண்மையில் இந்து மதத்தைச் சார்ந்தவர்) நியக்கமிப்பட்டதற்கே வானத்திற்கும் பூமிக்கும் குதித்தது சங்கிக் கும்பல். ஆனால், இஸ்லாமியர்களின் வக்ஃப் வாரியங்களில் மட்டும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நியமிக்க வேண்டுமாம். இதுதான் பாசிசக் கும்பலின் இரட்டை நீதி.

கூடுதலாக, நாட்டின் பல மாநிலங்களில் வக்ஃப் சொத்தா அல்லது அரசு, தனியார் சொத்தா என்று சர்ச்சைக்குரிய நிலங்களில் பல கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் திருச்செந்துறை, பீகாரில் கோவிந்பூர், கர்நாடகாவில் விஜயபுரா, சித்ரதுர்கா, பல்லாரி ஆகியவை அதற்கு சான்றுகளாகும். இவற்றில் சில கிராம நிலங்களை தங்களுடைய வக்ஃப் சொத்துகள் என்று வக்ஃப் வாரியங்கள் வாதிடுகின்றன. சில கிராம நிலங்கள் வக்ஃப் சொத்துகள் இல்லை என்பதை வக்ஃப் வாரியங்களே உறுதி செய்து இருக்கின்றன.

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம்.

அவற்றின் உண்மைத் தன்மைகளை ஆராய்வதற்கு பதிலாக, வக்ஃப் திருத்தச் சட்டமானது சட்டப்பிரிவு 40-இன் படி கிராம நிலங்களை வக்ஃப் சொத்துகளாக கருத இயலாது என்று கூறுகிறது. இதன்மூலம் மோடி அரசு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வக்ஃப்களிடம் இருந்து பறிப்பதுடன், சர்ச்சைக்குரிய நிலத்தில் வாழும் மக்களை தனக்கு அடித்தளமாக திரட்டிக் கொள்ள காவிக் கும்பலுக்கு வழியேற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு மோடி அரசானது மேற்குறிப்பிட்ட ஒரு சில திருத்தங்கள் மட்டுமின்றி, 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் மேற்கொண்டுள்ள அனைத்து திருத்தங்களும் இஸ்லாமியர்களிடமிருந்து வக்ஃப் சொத்துகளை அபகரித்து காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிடும் வகையிலேயே உள்ளது.

காவி பயங்கரவாதத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்

வக்ஃப் சட்டத்தை பயன்படுத்தி இஸ்லாமியர்கள் இந்துக்களின் சொத்துகளை அபகரிப்பதாக பல ஆண்டுகளாக நச்சுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காவிக் கும்பல், தற்போது இச்சட்டத்திருத்தத்திற்குப் பிறகு இஸ்லாமியர்கள் மீது பாசிச பயங்கரவாதத் தாக்குதல்களை தீவிரப்படுத்த தொடங்கியிருக்கிறது.

“வக்ஃப் சட்டப்பிரிவு 40-யைப் பயன்படுத்தி இந்துக்களின் சொத்துகளை வக்ஃப் சொத்துகளாக அறிவித்துக் கொள்ள முடியும்”, “இந்தியாவில் உள்ள வக்ஃப் சொத்துகளின் மொத்த பரப்பளவு பாகிஸ்தானின் பரப்பளவை விட அதிகம்”, “இந்தியாவிற்குள் இன்னொரு பாகிஸ்தான் உருவாகி வருகிறது” என்று பல பொய், வெறுப்புப் பிரச்சாரங்கள் நம்முடைய கற்பனைக்கெட்டாத வகையில் பரப்பப்பட்டு வருகின்றன. வக்ஃப் சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்கள் இந்துகளின் நிலங்களை அபகரித்துக் கொள்ளும் “நில ஜிகாத்” நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற வெறுப்புப் பிரச்சாரம் காவிக் கும்பலால் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஒருபுறம் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும் காவிக்கும்பல், மறுபுறம் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மீது கலவரங்களை கட்டவிழ்த்துவிடுவதற்கும் ஆயுத்தமாகி வருகிறது.

மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம் இதன் தொடக்கமே. மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் பகுதியில் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடிய மக்கள் மீது காவிக் கும்பல் தாக்குதல் தொடுத்து போராட்டத்தை கலவரமாக்கியது. இந்த வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டவிழ்த்துவிட்ட காவி கும்பல், இம்மாநிலத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது.

இதேபோல், தமிழ்நாட்டில் வேலூர் காட்டுக்கொல்லை கிராமத்தில் 60 குடும்பங்கள், 5 ஏக்கர் வக்ஃப் நிலத்தில் வசிப்பதாக மசூதி நோட்டீசு அனுப்பியிருந்த நிலையில், இந்த விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு இந்து முன்னணி-பா.ஜ.க. கும்பல் இந்து மக்களின் நிலங்களை தர்கா அபகரிப்பதாக மதவெறுப்பு பிரச்சாரம் செய்துவருகிறது. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் திருச்செந்துறை பகுதியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் உட்பட அக்கிராம மக்கள் வசிக்கும் பல ஏக்கர் நிலங்கள் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று பொய் பிரச்சாரத்தில் காவி கும்பல் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து இஸ்லாமிய மக்களை இனப்படுகொலை செய்து தனக்கான பாசிச அடித்தளத்தை உருவாக்கியதுபோல, நாடுமுழுவதும் பல இடங்களில் சர்ச்சைக்குரிய வக்ஃப் சொத்துகளை குறிவைத்து கலவரங்களைத் தூண்டுவதற்கான பாசிச கும்பலின் சதித்திட்டமும் இச்சட்டத்திருத்தத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கிறது. ஏற்கெனவே, வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு எதிராக காவி கும்பல் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டத்தின் மூலம் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை நீர்த்துப் போக செய்ய வேண்டும் என்ற நோக்கமும் பாசிச கும்பலுக்கு உள்ளது.

அதேபோல், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இஸ்லாமிய மக்களின் சொத்துகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசரால் இடிக்கப்பட்டுவரும் நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களின் சொத்துகள் மீது புல்டோசர் பயங்கரவாதம் ஏவப்படும் அபாயமும் உள்ளது. அதாவது சட்டவிரோதமாக உள்ள புல்டோசர் பயங்கரவாதம் சட்டப்பூர்வமாக்கப்படும்.

யூதர்களை இனப்படுகொலை செய்வதற்கு ஹிட்லர் ‘கெட்டோமயமாக்கல்” (Ghettoisation) என்ற முறையை கையாண்டான். யூதர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து, அவர்களின் குடியிருப்புகளை அழித்து, பொருளாதார ரீதியில் ஒடுக்கி ‘கெட்டோ’களில் (குறிப்பிட்ட இன/சமய மக்கள் நெருக்கமாக தனித்து வாழும் சேரிப்பகுதி) அடைத்து இனப்படுகொலை செய்தான். இந்தியாவில் காவிக் கும்பல், இஸ்லாமியர்களை இராண்டாந்தர குடிமக்களாக்குவதற்கு பின்பற்றி வழிமுறையும் ஹிட்லரின் கெட்டோமயமாக்கலை ஒத்ததாகவே உள்ளது.

ஆகவே, இந்தியாவில் வக்ஃப் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதை, மோடி அரசின் கடந்த பத்தாண்டுகால பாசிச ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காவி பயங்கரவாதத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

உச்சநீதிமன்றத்தால் வக்ஃப் திருத்தச் சட்டத்தை தடுத்து நிறுத்த முடியுமா?

வக்ஃப் திருத்தச் சட்டம் மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட பிறகும், அதற்கு முன்னரும் அதனை எதிர்த்து 73 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகளாலும் இஸ்லாமிய அமைப்பை சார்ந்தவர்களாலும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்களை ஏப்ரல் 16, 17 தேதிகளில் விசாரித்த உச்சநீதிமன்றம், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடையை விதித்து அடுத்த விசாரணையை மே 5-ஆம் தேதி தள்ளி வைத்திருக்கிறது.

உச்சநீதிமன்றம், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்பு அளித்திருக்கின்றன. இத்தடையை தங்களுடைய சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக மக்களிடம் பிரச்சாரம் செய்து கொள்கின்றன. ஆனால், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரந்த அளவில் நடைபெற்றுவரும் மக்கள் போராட்டங்களால்தான் உச்சநீதிமன்றம் வக்ஃப் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

மேலும், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், அடுத்தடுத்த விசாரணைகளில் நிரந்தர தடை விதித்துவிடும் என்று நாம் கருதிக்கொண்டு இருக்க முடியாது. ஏனென்றால், கடந்த பத்தாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் பல்வேறு பாசிச நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் உடந்தையாகவே இருந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம், பாபர் மசூதி இடிப்பு, தேர்தல் பத்திரங்கள் உள்ளிட்ட பல வழக்குகளை அதற்கு சான்றுகளாக நாம் கூற முடியும். இவ்வழக்குகளில் பாசிச கும்பலின், நடவடிக்கைகள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக இருந்த போதிலும் பாசிச கும்பலுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிரான வழக்கிலும், வக்ஃப் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14, 25, 26, 20, 246 ஆகிய பிரிவுகளுக்கு எதிராக உள்ளதை பல வழக்கறிஞர்களும் அம்பலப்படுத்தியுள்ளனர். ஆனால், “வக்ஃப் திருத்தச் சட்டத்தில் நேர்மறையான விஷயங்கள் உள்ளன” என்று கூறி நரகலில் நல்லரிசி தேடும் வேலையை செய்கிறது உச்சநீதிமன்றம்.

ஒருவேளை, வக்ஃப் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடைக்கல்லாக இருக்கிறதென்றால், அதை பாசிஸ்டுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். சான்றாக, டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை நியமிப்பதற்கு முதல்வருக்கு அதிகாரம் உள்ளதா அல்லது துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்று தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் முதல்வருக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கிய போது அதனை முறியடிக்கும் விதமாக மோடி அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தப் பிறகு உச்சநீதிமன்றத்தை “ஷரியா கோர்ட் ஆப் இந்தியா” என்றும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கலவரத்தை தூண்டுகிறார் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கத் தொடங்கியிருக்கிறது காவி கும்பல்.

ஆகவே, சட்டப்போராட்டம் என்பதற்குள் மட்டும் தங்களை வரம்பிட்டுக் கொள்வது எந்தவகையிலும் வக்ஃப் திருத்தச் சட்டத்தை பின்வாங்க வைக்காது. மாறாக, அது காவிக் கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணை செய்வதாகவே அமையும்.

நாட்டை ஷாகின்பாக்களாக்குவோம்!

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் வக்ஃப் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதென்பது இஸ்லாமியர்களுக்கு சொந்தமான வக்ஃப் சொத்துகளை காவி-கார்ப்பரேட் கும்பல் அபகரிப்பதற்கான நடவடிக்கை மட்டுமல்ல. கிறித்துவம், சீக்கியம், ஜைனம் உள்ளிட்ட பிற மத நிறுவனங்களின் சொத்துகளை காவி-கார்ப்பரேட் கும்பல் அபகரிப்பதற்கு அடித்தளமிடும் நடவடிக்கையாகும். குறிப்பாக, இந்து மத நிறுவனங்களின் சொத்துகளை காவி-கார்ப்பரேட் கும்பல் அபகரிப்பதற்கு அடித்தளமிடும் நடவடிக்கையும் ஆகும்.

பாசிச கும்பலின் இச்சதித்திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்-இன் ஊதுகுழலான “ஆர்கனைசர்” தளத்தில், “இந்தியாவில் யாருக்கு நிலம் அதிகம் உள்ளது? கத்தோலிக்க திருச்சபை எதிர் வக்ஃப் வாரியம்” என்று தலைப்பில் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியான கட்டுரை அம்பலப்படுத்தியது. நாடு முழுவதும் கத்தோலிக்க திருச்சபை சுமார் 17.29 கோடி ஏக்கர் நிலங்களை சொந்தமாகக் கொண்டுள்ளது என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதன் நிலம் பெரும்பான்மையாக பிரிட்டிஷ் ஆட்சியின் போது கையகப்படுத்தப்பட்டது என்று அவதூறை அள்ளிவீசியிருந்தது. இக்கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு பாசிச கும்பலின் சதித்திட்டத்தை எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்தத் தொடங்கியவுடன் அத்தளத்தில் இருந்து கட்டுரை நீக்கப்பட்டுவிட்டது.

அதேபோல், தமிழ்நாட்டில் கோயில்களை நிர்வாகம் செய்துவரும் இந்து அறநிலையத்துறையைக் கலைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக இந்து முன்னணியைச் சார்ந்த குண்டர்களும் கார்ப்பரேட் சாமியாரன ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டவர்களும் குரல் கொடுத்து வருவதன் பின்னணியில் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கமே ஒளிந்துள்ளது.

எனவே, வக்ஃப் திருத்தச் சட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டியது இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி, இந்து, கிறித்துவம் உள்ளிட்ட மதங்களைச் சார்ந்த நாட்டின் கோடானுகோடி உழைக்கும் மக்களின் கடமையாகும். மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பாசிச சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலிருந்து மோடி அரசை பின்வாங்க வைத்திருப்பது விடாப்பிடியான, உறுதியான, போர்க்குணமிக்க களப் போராட்டங்களே ஆகும்.

குறிப்பாக, 2019 ஆம் ஆண்டில் மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு டெல்லி ஷாஹீன்பாக் பகுதியில் இஸ்லாமிய பெண்கள் முன்னெடுத்த தொடர் போராட்டம் முன்னுதாரணமாக அமைந்தது. நாட்டின் பல பகுதிகளில் ஷாஹீன்பாக் வடிவிலான போராட்டங்கள் பற்றிக்கொள்ளத் தொடங்கின. காவிக் குண்டர்கள் மற்றும் போலீசு படையினரின் கடும் அடக்குமுறைகளைத் தாங்கி மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்த ஷாஹீன்பாக் வடிவிலான போராட்டங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக பின்வாங்க வைத்தது.

களப் போராட்டங்கள் மூலமே மோடி அரசை வக்ஃப் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தவிடாமல் தடுத்த நிறுத்த முடியும் என்பதை இஸ்லாமிய அமைப்புகளும் மக்களும் உணர்ந்திருக்கின்றனர். அதன்விளைவாகத்தான், உச்சநீதிமன்றம் வக்ஃப் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்த போதும், அச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து வருகின்றன. ஆகவே, வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஷாஹீன்பாக் வடிவிலான போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்களை வக்ஃப் திருத்த சட்டத்தை பின்வாங்கும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


கதிர்

(புதிய ஜனநாயகம் – மே 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 16-31, ஜூன் 1-15, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 13-14 | 1991 மே 16-31, ஜூன் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜெயாவின் சாராய சதிராட்டம்
  • நக்சல்பாரி எழுச்சியின் 25-ஆம் ஆண்டு: இந்திய மக்களின் விடிவெள்ளி
  • புலி தடை ஏன்?
  • ரூ.2500 கோடி பங்குச் சந்தை மோசடி புதிய பொருளாதாரக் கொள்கையின் ‘சாதனை’!
  • பாசிச ஜெயலலிதா அரசின் கொடுமை காரணமின்றி ஈழத் தமிழருக்குச் சிறை
  • அமெரிக்கா: கறுப்பின மக்களின் பேரெழுச்சி
  • நாகரீகக் கோமான்களின் காட்டுமிராண்டடித்தனம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • உலக வங்கி – ஐ.எம்.எப். உத்திரவு நாசமாக்கப்படும் விவசாயம் சுதந்திர வர்த்தகத் திட்டம் நாட்டைச் சூறையாடுவதற்கே!
  • ஆப்கான்: போராளிகளின் வெற்றி இந்தியாவின் பீதி
  • தி.மு.க. உட்கட்சி தேர்தல்: அம்மணமாகியது ஜனநாயக வேடம்
  • ‘தடா – என்.எஸ்.ஏ தோழர்கள் விடுதலை உறுதி குன்றா தோழர்களுக்கு உற்சாக வரவேற்பு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 1-31, மே 1-15, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 10-11-12 | 1991 ஏப்ரல் 1-31, மே 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காங்கிரசு மாநாடு: இரட்டை வேடம்
  • “தடா-வுக்கும் அஞ்சிடோம்!” எதிரியின் கோட்டைக்குள் இடிமுழக்கம்
  • பத்திரிக்கை மீது பாயும் பாசிச கும்பல் பல்லுடைபடும்
  • போபார்ஸ்: கொள்ளையை மறைக்க புதிய சதி
  • பட்டினிச் சாவுகள் இந்தியா எத்தியோப்பியா ஆகிறது
  • கேடயம் – மனஓசை கும்பலின் அரசியல் இரட்டை வேடம் – அம்பலப்படுத்துகிறார்கள் வாசகர்கள்
  • அயோத்தி: இந்து வெறியர்களின் கடப்பாரை சேவை
  • இந்தியாவில் இட்லரின் வாரிசுகள்
  • “சி.பி.எம்.” துரோகம் ஊழியர் படுகொலை
  • பா.ம.க.வின் வன்னிய சாதிவெறி – இதோ சான்றுகள்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • டங்கல் திட்டம்: விவசாயிகளுக்கு சுருக்குக் கயிறு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மதுரை ஆதீன மடம் முற்றுகை | தடையை மீறி வெற்றிகரமாக நடந்த ஆர்ப்பாட்டம் | தோழர் ரவி

மதுரை ஆதீன மடம் முற்றுகை
| தடையை மீறி வெற்றிகரமாக நடந்த ஆர்ப்பாட்டம் | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 16-31, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 9 | 1991 மார்ச் 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆசிரியர் வக்கிரம் போலீசு பாராமுகம்
  • உலகப்பொது எதிரி அமெரிக்கா
  • ‘ஜெயா’வின் அரசியல் சித்து வேலைகள்
  • காங்கிரசின் சகுனித்தனம்
  • பட்ஜெட்: வஞ்சகத் தாக்குதல்
  • உலக வங்கி – ஐ.எம்.எஃப் உத்திரவு நாசமாக்கப்படும் விவசாயம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • செத்தும் அழியாக்கறை
  • ஆய்வு ஆய்வுக்காகவா?
  • மன்னை மாணவர் போராட்டம் வெற்றி! அடக்குமுறை நீடிப்பு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 7-8 | 1991 பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராக பார்ப்பன, பனியா – பாசிசத் தாக்குதல்
  • போலீசு அக்கிரமம் “தராசு” ஏட்டின் யோக்கியதை!
  • பஞ்சாப் தேர்தல்: இராணுவமே நடத்திய ஜனநாயக நாடகம்
  • ஜெயா கும்பலின் கிரிமினல் அரசியல்
  • உபதேசம் – உல்லாசம் மாண்புமிகுகளின் இரட்டை வாழ்க்கை
  • காஷ்மீர்: “ஏக்தா யாத்திரை”யும் எதிர் விளைவும்
  • ராஜீவ் கொலை வழக்கு – விசாரணை காங்கிரசின் கைவரிசை
  • விலையேற்றம்: மக்கள் ஆவேசம்
  • “இங்கே இருந்தால் சித்திரவதை! அங்கே போனால் படுகொலை!” – ஈழ அகதிகளின் கண்ணீர் பேட்டி
  • மேலைநாடுகளில் பெருகிவரும் நிறவெறி – புதிய நாஜிக்கள்
  • காங்கிரசு – பாகிஸ்தான் – வங்கப் பிரிவினை: காங்கிரசுக்காரர்களே பிரிவினைவாதிகள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • உதட்டிலே சாதிய ஒற்றுமை! உள்ளத்திலே வன்னிய சாதிவெறி!
  • காவிரிநீர் பிரச்சினை: மீண்டும் துரோகம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 1-31, பிப்ரவரி 1-15 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 4-5-6 | 1991 ஜனவரி 1-31, பிப்ரவரி 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வரலாறு திரும்புகிறது
  • கருங்காலிகளாக, துரோகிகளாக போலிகளின் சங்கத் தலைமை
  • காவிரி நீர்ப் பிரச்சினை: தமிழக உரிமை பலி பார்ப்பன – பாசிச துரோகம் ‘தேசிய வாதி’களின் ஓரவ்ஞ்சனை
  • சோவியத் ஒன்றியக் கலைப்பு இன்னுமொரு ஆட்சி கவிழ்ப்பு
  • சிதைத்தாலும் எரித்தாலும் செங்கொடி அழிந்து விடுமா?
  • “தடா” கைது ஏன்?
  • காவிரியில் தமிழக உரிமைப் போராட்டம் திருச்சி நகர் குலுங்கியது
  • ‘நீரோ’யினி ஜெயலலிதா!
  • அசாமை ரணமாக்கும் ‘காண்டாமிருக ராணுவம்’
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • போலிகளின் மாநாடு: வெங்காயத் தோலை உரித்த கதை
  • ஆந்திராவில் பயங்கரவாத ஆட்சி
  • காங்கிரசு – பாகிஸ்தான் – இரண்டாவது வங்கப் பிரிவினை
    கான்கிரசுக்காரர்களே பிரிவினைவாதிகள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 1-31, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 2-3 | 1991 டிசம்பர் 1-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காவிரி: தண்ணீருக்காகத் தமிழனின் இரத்தம்
  • துணை ராணுவத்தின் கும்பல் கற்பழிப்பு மறைக்க முயன்றன அரசும் ராணுவமும்
  • பாசிச வேட்டையின் நோக்கங்கள்
  • இடைத்தேர்தல்கள்: தில்லுமுல்லுச் சாதனைகள்
  • இட ஒதுக்கீடு மோசடிகள்: திராவிடக் கட்சிகளை அம்பலப்படுத்தும் மண்டல்
  • காங்கிரசு – பாரதீய ஜனதா கள்ளக்கூட்டு
    இந்து வெறியர்களின் இரத்த யாத்திரை
  • பரவும் பட்டினிச் சாவுகள்
  • ஆளும் துரோகிகளால் நாடு மீண்டும் காலனியாகிறது
  • அகதிகள் முகாம் அவலம் ஈழத் தமிழரின் குமுறல்
  • புலிகளை ஆதரிக்காதவர்களின் மீதும் “தடா”
  • காங்கிரசு – பாகிஸ்தான் இரண்டாவது வங்கப்பிரிவினை
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தென்மாவட்டங்கள்: மாணவர்களிடையே அதிகரிக்கும் அரிவாள் கலாச்சாரம்

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பள்ளிக்கல்லூரி மாணவர்களிடையே சாதிவெறி போதையும் அரிவாள் கலாச்சாரமும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. நாங்குநேரியில் நன்றாக படித்த காரணத்திற்காக பள்ளி மாணவன் சின்னதுரை மீது ஆதிக்கச் சாதிவெறிப்பிடித்த சக மாணவர்கள் அரிவாளைக் கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியது; தூத்துக்குடியில் கபடி போட்டியில் வெற்றி பெற்றதற்காக தேவேந்திர ராஜா என்ற மாணவன் அரிவாளால் வெட்டப்பட்டது; தூத்துக்குடியில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் எட்டாம் வகுப்பு மாணவனான ரஹ்மத்துல்லாஹ் அரிவாள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது ஆகிய சம்பவங்கள் தென்மாவட்டங்களில் மாணவர்கள் மத்தியில் அரிவாள் கலாச்சாரம் தீவிரமடைந்து வருவதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

இவ்வாறு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சக மாணவர்களாலேயே அரிவாளால் தாக்கப்படுவது தமிழ்நாட்டில் புதிய-அபாயகர போக்காக வளர்ந்து வருகிறது. மேற்குறிப்பிட்ட தாக்குதல்களில் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் தீவிரமடைந்துவரும் சாதித் தாக்குதல்கள் ஒவ்வொன்றிலும் 18 வயதுக்குட்பட்ட, அதிலும் 17 வயதுடைய சிறுவர்களே கூலிப்படையைப் போல பயன்படுத்தப்படுகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில் கொலைக் குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது குறித்து சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “சிறுவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களை மூளைச்சலவை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி, இது சாதிப் பிரச்சினை அல்ல, ஊடகங்கள் அவ்வாறு உருவகப்படுத்த வேண்டாம். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் சாதிப் பிரச்சினை இல்லை. குறிப்பாக திருநெல்வேலியில் இல்லவே இல்லை. தனிப்பட்ட பிரச்சினை சாதிப் பிரச்சினையாக பெரிதுப்படுத்தப்படுகிறது” என அவர் அப்பட்டமாக பொய்யுரைத்தது ஜனநாயக சக்திகளிடையே எதிர்ப்பை கிளப்பியது.

அப்பாவு மட்டுமின்றி தி.மு.க. அரசு-அதிகார வர்க்கம், அதன் ஊடகங்கள்  என அனைவரும் தென்மாவட்டங்களில் சிறுவர்கள் மத்தியில் வளர்ந்துவரும் சாதி மற்றும் அரிவாள் கலாச்சாரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் அதனை மூடிமறைப்பதிலேயே முனைப்புக் காட்டுகின்றன. ஆனால், தென்மாவட்டங்களில் நடந்துகொண்டிருக்கும் சாதியத் தாக்குதல்களும் படுகொலைகளும் தென்மாவட்டங்கள் சாதித் தாக்குதலின் குவிமயமாக மாறிக்கொண்டிருக்கிறது என்கிற யதார்த்தத்தை நம் முகத்தில் அறைகின்றன.

சாதிவெறியூட்டும் ஆதிக்கச் சாதி சங்கங்கள்!

மாணவர்கள் மத்தியில் அரிவாள் கலாச்சாரமும் சாதியத் தாக்குதல்களும் அதிகரிப்பதை ‘சிறுவர்களுக்கு இடையிலான சாதாரண மோதல்’ என்றே‌ தி.மு.க. அரசும் அதன் ஊடகங்களும் சித்தரிக்கின்றன. ஆனால், அரிவாள் கொண்டு தாக்குவது‌ என்கிற அளவிற்கு வீரியம் பெற்றுள்ள தாக்குதல்களை பற்றி சற்று சிந்தித்தாலே மாணவர்களை பின்னாலிருந்து யாரோ இயக்குகிறார்கள் என்கிற உண்மையை நம்மால் புரிந்துகொள்ள முடியும். உண்மையில், ஆதிக்கச் சாதி சங்கங்களே மாணவர்கள்-இளைஞர்கள் மத்தியில் சாதிவெறியை கட்டவிழ்த்துவிடுவதில் முதன்மை பங்காற்றுகின்றன.

தமிழ்நாட்டிலேயே அதிகளவிலான சாதி சங்கங்கள் தென்மாவட்டங்களில்தான் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கணக்கில் இயங்கும் தேவர் (முக்குலத்தோர்) மற்றும் நாடார் சாதி சங்கங்கள் சாதிவெறியூட்டும் வேலைகளை அனைத்து வழிகளிலும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

கே.என். இசக்கிராஜா தேவர், ஏ. மூர்த்தி தேவர், ஸ்ரீவை சுரேஷ் தேவர் போன்ற சாதிவெறியர்கள் தேவர் சாதி மக்களிடையேயும், சுபாஷ் பண்ணையார், ராக்கெட் ராஜா, ஹரி நாடார், பந்தல் ராஜா போன்ற சாதிவெறியர்கள் நாடார் மற்றும் வெள்ளாளர் சமூகத்தினரிடையேயும் சாதிய சங்கங்களின் மூலமாக வெளிப்படையாக ஆதிக்கச் சாதிவெறியை ஊட்டுகின்றனர். இவர்கள் அனைவரும் பிற சாதி மக்களுக்கு எதிராக, குறிப்பாக பட்டியலின மக்களுக்கு எதிராக, வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டு, வன்முறையை தங்களது சாதியின் வரலாற்று அடையாளமாக சித்தரித்து சாதிக் கலவரத்தை உண்டாக்க முயற்சித்து வருகின்றனர். பள்ளிக் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களிடையே பரவிவரும் அரிவாள் கலாச்சாரத்திற்கு அடித்தளமிடுபவர்களும் பட்டியலின மாணவர்களை வெட்டுவதற்கு தைரியமூட்டுபவர்களும் இதுபோன்ற ஆதிக்கச் சாதி சங்கங்களின் தலைவர்களே ஆவர்.

சான்றாக, சில மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் ஆதிக்கச் சாதிவெறியர்கள் வேகமாக கார் ஓட்டிச் சென்றதை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக பாலிடெக்னிக் மாணவர் மனோஜ் ஆதிக்கச் சாதிவெறியர்களால் வெட்டப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து ஆதிக்கச் சாதியினரின் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது, “இங்குள்ளவர்கள் பட்டியல் சாதி மக்களுடன் சாதி பார்க்காமல்தான் பழகி வந்தோம். ஆனால், சாதி சங்கங்களால் எங்களிடம் ஆதிக்கச் சாதிவெறி மனப்பான்மை வளர்த்துவிடப்படுகிறது. எங்கள் ஊரில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சாதி சங்கங்களைச் சேர்ந்தவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். சாதி ரீதியான பேனர்கள் வைப்பது, சாதிவெறியூட்டும் பாடல்களை வேண்டுமென்றே ஒலிப்பது, பிற சாதியினரைப் பற்றி பொய்-வெறுப்புப் பிரச்சாரங்களை மேற்கொள்வது என்று எல்லா வகைகளிலும் ஆதிக்கச் சாதி மனப்பான்மையை நிலைநாட்டும்‌ நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்” என்று ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்கள்- இளைஞர்களே வெளிப்படுத்தினர்.

இந்த ஆதிக்கச் சாதி சங்கங்கள் மாணவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அவர்களை சாதிய வலைக்குள் கவர்ந்திழுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, சாதிவெறியர்களை தலைவராக பாவித்து சாதிப் பாடல்களுக்கு ரீல்ஸ்-வீடியோ போடும் கலாச்சாரம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதில் எந்தவித பேதமுமின்றி அனைத்து சாதியைச் சேர்ந்த ஆண்-பெண் என இருபாலரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். “வீர பரம்பர டா வீறு கொண்ட வம்சமடா… பகைச்சா பதற வைக்கும் பரம்பரைக்கு சொந்தமடா”, “எங்க அக்குளுக்குள்ள எந்நாளும் வீச்சருவா இருக்கும்”, “வேலுக்கம்பு வீச்சருவா எங்க சாமிடா” போன்ற சாதிவெறியூட்டும் பாடல் வரிகள் பின்னணியில் ஒலிக்க, கையில் அரிவாளுடன் நிற்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படுவது ஆதிக்கச் சாதி மாணவர்களிடம் சாதிவெறியையூட்டி அரிவாளை கையிலெடுக்கவே ஊக்குவிக்கின்றன.

ஆதிக்கச் சாதி வெறியர்களால் கொண்டாடப்படும் கோகுல்ராஜ் கொலைக்குற்றவாளி யுவராஜ்

கவுண்டம்பாளையம், திரௌபதி, திலகர், சண்டியர் போன்ற ஆதிக்கச் சாதிவெறியூட்டும் திரைப்படங்கள், அதன் இயக்குநர்கள் மற்றும்‌ நடிகர்களின் வன்மத்தை கொட்டும் பேச்சுகள் ஆகியவை ஏற்கெனவே சாதிய வலைக்குள் சிக்கியுள்ள இளைஞர்களிடையே சாதிய வன்மத்தை தீவிரப்படுத்துகின்றன. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய தாழ்த்தப்பட்ட சாதியைச்‌ சேர்ந்த கோகுல்ராஜ் படுகொலையின் முக்கிய குற்றவாளியான யுவராஜ் சமீபத்தில் பெயிலில் வெளிவந்தபோது, அவன் தியாகியைப் போல் கொண்டாடப்பட்டதும் அதனை தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்ததும் ஆதிக்கச் சாதிவெறி வன்மத்திற்கு தீனிப்போட்டன.

அதேபோல், முத்துராமலிங்கத் தேவர் போன்ற சாதிவெறித் தலைவர்களின் சிலைகளை நிறுவி பாதுகாத்து சாதிப் பெருமையைப்‌ பேசுவதும், சமூகத்திற்காக தியாகம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., இமானுவேல் சேகரன் போன்ற தலைவர்களை சாதியத் தலைவர்களாக சித்தரித்துக் கொண்டாடும் அவலமும் தொடர்கிறது. இவ்வாறு பண்பாட்டு ரீதியாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் சாதிவெறியைத் தூண்டும் வேலைகளையே சாதிவெறி சங்கங்கள் செய்துவருகின்றன. இவற்றின் மூலம் எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் ஒருவன் சாதிய சிந்தனையிலேயே இருத்தி வைக்கப்படுகிறான்.

இவையன்றி, பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற வன்முறையைத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுகள் மாணவர்களிடத்தில் வன்முறையை ஊக்குவிக்கின்றன. அதேபோல், மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கப்படும் சாதிவெறி மிருகத்தனத்தை உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கேற்ப தென்மாவட்டங்களில் பள்ளி-கல்லூரி மாணவர்கள்‌ மத்தியில் கஞ்சா, கூல்-லிப் போன்ற போதைப்பொருள் கலாச்சாரம் இயல்பாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளிலேயே மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் சரளமாக வலம்வருகின்றன. இதனை பரப்பும் போதைப்பொருள் மாஃபியா கும்பலால் போலீசின் துணையின்றி இத்துணை சுதந்திரமாக செயல்பட முடியாது என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இது தென்மாவட்டங்களில் மாணவர்கள் மத்தியில் சாதிவெறி ஊட்டப்படுவது, ஆதிக்கச் சாதி சங்கங்கள்-போதைபொருள் மாஃபியா கும்பல்-போலீசு ஆகியவற்றின் ஒற்றுமையுடன் மிகவும் நிறுவனமயமாக நடக்கிறது என்பதை உணர்த்துகிறது.

தீர்ப்பு எழுதும் தமிழ்நாடு போலீசு!

தமிழ்நாட்டில் தீவிரமடைந்துவரும் சாதித் தாக்குதல்களை தனிப்பட்ட தாக்குதலாக சித்தரிப்பதை தி.மு.க. அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இதனை தமிழ்நாடு போலீசு முன்னின்று செய்கிறது. இதற்கு சில சமீபத்திய சான்றுகளை சுட்டிக்காட்ட முடியும்.

கபடி போட்டியில் வென்றதற்காக தேவேந்திரராஜா வெட்டப்பட்ட சாதியக் கொடூரத்தை இளைஞர்களுக்கு இடையே நடந்த கைகலப்பு மோதலாகவே போலீசு சித்தரித்தது. மேலும், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த லட்சுமணனின் தங்கையை தேவேந்திரராஜா காதலித்து வந்ததாகவும் அதன் காரணமாக தேவேந்திரராஜா மீது லட்சுமணன் தாக்குதல் நடத்தியதாகவும் அப்பட்டமான பொய்யைப் பரப்பி போலீசு கீழ்த்தரமாக நடந்துகொண்டது. இதன்மூலம் இச்சம்பவத்தை சாதிவெறிச் செயல் என்ற கோணத்திலிருந்து திசைத்திருப்பி இளைஞர்களுக்கு இடையிலான முன்விரோத மோதல் என்ற வட்டத்திற்குள் சுருக்க முயன்றது. ஆனால், தேவேந்திரராஜாவிற்கு நடந்தது அப்பட்டமான சாதியத் தாக்குதலே, முன்விரோதம் போன்ற வேறெதுவும் காரணமல்ல என்பதை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

எட்டாம் வகுப்பு மாணவனான ரஹ்மத்துல்லாஹ் தாக்கப்பட்டபோது, இரு மாணவர்களுக்கிடையில் பென்சில் பிரச்சினை கடந்த ஒரு மாத காலமாகவே இருந்து வந்ததாகவும் அந்த மோதலில் ரஹ்மத்துல்லாஹ் அரிவாளால் வெட்டப்பட்டதாகவும் பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஒரு பென்சில் பிரச்சினைக்காக 13‌ வயதேயான சிறுவன் புத்தகப்பையில் அரிவாளை எடுத்துவந்து சக மாணவனை வெட்டுவான் என்பதை குழந்தை கூட நம்பாது. ஆனால், போலீசுதுறையோ இது மாணவர்களுக்கு இடையிலான பிரச்சினை மட்டுமே, இதில் சாதி ரீதியிலான நோக்கம் எதுவுமில்லை என்று தயங்காமல் பொய்கூறுகிறது.

அதேபோல், நாங்குநேரி மாணவன் சின்னதுரை கடந்த மாதத்தில் மீண்டும் தாக்கப்பட்டபோது, “சின்னதுரை மீதான முந்தைய சாதித் தாக்குதலுக்கும் தற்போதைய தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை. இது தனிப்பட்ட விவகாரம்” என்றார் போலீசு துணை ஆணையர் சந்தோஷ். “சின்னதுரையை வெட்டியது ஒரு பிக்-பாக்கெட் கும்பல். அவரிடம் காசு இல்லை என்பதால் அவரை வெட்டியுள்ளது” என்று தமிழ்நாடு போலீசு டி.ஐ.ஜி. தெரிவித்தார். சின்னதுரைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் நண்பர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று போலீசிடம் சொல்லிவிட்டுச் சென்றபோதே இத்தாக்குதல் நடந்ததாகவும் கூறி சின்னதுரைக்கு உரிய பாதுகாப்பு வழங்காமலிருந்த தனது தவறை மறைத்து சின்னதுரை மீது பொய்குற்றம் சுமத்தியது தமிழ்நாடு போலீசு. மேலும் கிரண்டர் (Grindr) என்ற எல்.ஜி.பி.டி.க்யூ. (LGBTQ+) சமூகத்தினருக்கான செயலியை சின்னதுரை பயன்படுத்தி வந்ததாகவும் அதில் அறிமுகமானவரை சந்திக்க சென்றபோதே இத்தாக்குதல் நடந்ததாகவும் சில போலீசு அதிகாரிகள் பொய்யைப் பரப்பியதையடுத்து சமூகவலைத்தளம், ஊடகங்களில் சின்னதுரை அவமானப்படுத்தப்பட்டார்.

இதன்மூலம் சாதியத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கும் வேலையை போலீசு செய்து வருகிறது. சாதித் தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் அதனை மூடிமறைப்பதற்கான வேலைகளில் போலீசு ஈடுபடுவதுடன் எந்தவித முறையான விசாரணையும் இன்றி வழக்குகளில் தீர்பெழுதும் பணியையும் தானே ஏற்று செய்கிறது.

உண்மையில், மாணவர்களை சாதிவெறியர்களாக மாற்றும் சாதிவெறித் தலைவர்களை சிறையிலடைப்பதை விட்டுவிட்டு அவர்களுக்கு 24 மணிநேரமும்‌ உயர்மட்ட பாதுகாப்பளிக்கும் பணியைதான் போலீசு மேற்கொண்டு வருகிறது. போலீசின் துணையுடனேயே சாதி சங்கங்களின் தலைவர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.

ஆதிக்கச் சாதித் தலைவர்கள் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் தலையிடுவதற்கும் சாதி ரீதியாக மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கும் இந்துத்துவ வர்ணாசிரம-சனாதன கருத்துக்குப் பலியாகியுள்ள போலீசு துறை உதவிபுரிகிறது என்பதே களநிலவரம். “அவன நீ என்கவுண்டரில் போட்டு தள்ளு. முடியலன்னா எங்ககிட்ட விட்டுவிடு. நாங்க பார்த்துக்கிறோம்” என்று சாதிவெறியர்கள் போலீசுக்கு உத்தரவிடும் அளவிற்கு தமிழ்நாட்டில் ஆதிக்கச் சாதிவெறியர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த போலீசு துறையிலும் பலர் ஆர்.எஸ்.எஸ்-இன் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு அவ்வமைப்பின் மறைமுக கைக்கூலிகளாக செயல்படுகின்றனர். சாதித் தாக்குதல்கள் தடுத்துநிறுத்தப்படாமல் அது தீவிரமடைந்து வருவதற்கு இதுவும் மிகமுக்கியமான காரணமாகும். அதேபோல், சாதிக் கொடுமைகளை அனுபவிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பல அடக்குமுறைகளையும் மீறி குற்றவாளிகள் மீது புகாரளிக்க முன்வந்தால், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக சித்தரித்து அவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்கிறது போலீசு. இதனை எதிர்த்து போராடினால் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொலை செய்யவும் துணிகிறது.

தமிழ்நாட்டில் வேர்பரப்பும் பாசிச சக்திகள்
கள்ளமௌனம் காக்கும் தி.மு.க. அரசு!

2014-ஆம் ஆண்டு ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றினாலும், பாசிச கும்பலுக்கு தமிழ்நாடு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. பிற மாநிலங்களில் மதக்கலவரத்தையும் இனவெறியையும் தூண்டிவிட்டு அரசியல் செய்யும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. மதவெறிக் கும்பல் எவ்வளவு முயற்சித்தும் தமிழ்நாட்டில் மதக்கலவரங்களை ஏற்படுத்த முடியவில்லை. எனவே தமிழ்நாட்டில் வேரூன்றியிருக்கும் சாதிவெறியைத் தூண்டிவிட்டு சாதிக் கலவரத்தை உருவாக்கி அதன்மூலம் தமிழ்நாட்டில் காலூன்றிவிடலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாகவே அனைத்து சாதி சங்கங்களிலும் ஊடுருவி இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடத்தில் சாதி வெறியூட்டும் வேலையை செய்து வருகிறது.

குறிப்பாக, தென்மாவட்டங்களில் உள்ள சாதி சங்கங்களில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பல் முன்னெப்போதையும் விட தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுதான் அதிகரித்துவரும் சாதித் தாக்குதல்களும் படுகொலைகளும். சாதி சங்கத் தலைவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு நைச்சியமாக அடியாள் வேலை பார்க்கின்றனர் என்பதே உண்மையாகும்.

அந்தவகையில், தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் உள்ள பா.ஜ.க. எதிர்ப்புணர்வின் காரணமாக நேரடியாக இந்துத்துவ அரசியலை மேற்கொள்ள முடியாத பாசிச கும்பல் சாதி சங்கத் தலைவர்கள் மற்றும் சாதி ரீதியாக அரசியல் செய்பவர்கள் மூலம் தனது இந்துத்துவக் கொள்கையை அமல்படுத்தி வருகிறது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் பா.ஜ.க.-வின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ்-இன் ஊடுருவலை தீவிரப்படுத்தி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் சாதிக் கலவரங்களை இன்னும் வீரியமாக கட்டவிழ்த்து விடுவதற்கான சதித்திட்டமே ஆகும்.

கபடி போட்டியில் வென்றதற்காக ஆதிக்கச் சாதி வெறியர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவன் தேவேந்திர ராஜா

இதன் காரணமாக, வடமாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் மீது கும்பல் படுகொலைகள் நடப்பது போல தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிவெறி கொடுமைகள் அரங்கேறும். சாதிய சங்கங்களில் ஊடுருவி அந்தந்த சாதி மக்களை பாசிஸ்டுகள் தங்களுடைய அடித்தளமாக மாற்றிக்கொள்வார்கள். பாசிசத்திற்கு எதிராக வீரியமாகக் களமாடக் கூடிய மாணவர்களும் இளைஞர்களும் பாசிஸ்டுகளின் அடித்தளமாக மாற்றப்படுகின்றனர் என்பது மிகப்பெரும் ஆபத்தாகும்.

இவற்றின் விளைவாக, தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பு மிகப்பெரும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. ஆனால், தனது ஆட்சியை சமூக நீதி ஆட்சி என்றும் பாசிசத்திற்கு எதிரான ஆட்சி என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்ளக் கூடிய தி.மு.க. இப்பிரச்சினைக்கு முகங்கொடுக்க கூட தயாராக இல்லை.

சாதியக் கட்டமைப்பை எதிர்ப்பதாக கூறிக் கொண்டாலும் வெறும் சீர்திருத்தங்களை மட்டுமே கொண்டுவந்து தங்களின் ஓட்டு அரசியலுக்காக இந்த வர்ணாசிரம கட்டமைப்பை தக்கவைக்கவே முயற்சிக்கிறது. வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளாக குற்றவாளிகளை பாதுகாத்துவந்த தி.மு.க. அரசு, தற்போது பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருப்பது அதன் சாதியத் தன்மையை வெளிக்காட்டுகிறது.

அதேபோல், 2023-இல் மாணவன் சின்னதுரை வெட்டப்பட்ட சம்பவத்தின் போது, மாணவர்களிடம் குடிகொண்டுள்ள சாதிவெறியை ஒழிப்பதற்கும் சாதியத் தாக்குதல்களைத் தடுப்பதற்கும் பரிந்துரைகளை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது தி.மு.க. அரசு. ஆய்வுகள் முடித்து 2024-இல் கல்வித்துறை அமைச்சரிடம் அவ்வறிக்கை ஒப்படைக்கப்பட்டாலும் தற்போது வரை அதன் பரிந்துரைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளது தி.மு.க. அரசு.

16 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில், வருகை பதிவேட்டில் மாணவர்கள் குறித்த சாதி விவரங்கள் இடம்பெறக்கூடாது; உதவித்தொகை குறித்த விவரங்களை வகுப்பறையில் தெரிவிக்கக் கூடாது; சாதியைக் குறிக்கும் வகையில் பொட்டுகள் இடுவதையும் கயிறுகள் கட்டுவதையும் தடை செய்ய வேண்டும் உட்பட 20 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சமூகப் பணிகளில் கள நடவடிக்கைகளில் இறங்கும்போது மட்டுமே ஜனநாயகப்படுத்தப்படுவார்கள்; இதனை உறுதிப்படுத்தும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் எல்லா சாதி மாணவர்களையும் ஒருங்கிணைத்து “சமூக நீதி மாணவர் படை” என்ற மாணவர் அமைப்பை தொடங்க வேண்டும் என்பது போன்ற முக்கிய பரிந்துரைகளை கொடுத்துள்ள அவ்வறிக்கையை அமல்படுத்தினால் ஆதிக்கச் சாதியினரிடத்தில் எதிர்ப்பு கிளம்பும் என்பதற்காகவே தி.மு.க. அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, நம் களப்போராட்டங்களின் மூலமே சாதி வெறியாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முடியும்.

அனைத்து சாதி மக்களுக்கு இருக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்துத்துவக் கட்டமைப்பை நீடிக்கச்செய்யவே ஆதிக்கச் சாதியினரிடையே தலித்துக்கள் எதிரிகளாக முன்னிறுத்தப்படுகின்றனர். நம் கண்முன்னே இளைய தலைமுறை திசைமாறிச் செல்வதைப் பார்த்துக்கொண்டு இனியும் அமைதி காக்கப் போகிறோமா? அல்லது இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கப்போகிறோமா?

தமிழ்நாடு அரசே!

  • மக்களை மத, சாதிரீயாக‌ப் பிளவுபடுத்தும் பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பலை தடை செய்! ஆதிக்கச் சாதி சங்கங்களைத் தடை செய்
  • சாதிவெறியை தூண்டும் திரைப்படங்கள், பாடல்களை தடை செய்! நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உடனே நடைமுறைப்படுத்து!

என முழங்குவோம். அதிகரித்துவரும் தலித் மாணவர்கள் மீதான சாதியத் தாக்குதல்களுக்கு எதிராக களப் போராட்டங்களைக் கட்டியமைக்க அமைப்பாய் திரள்வோம்!


ஜென்னி லீ

(புதிய ஜனநாயகம் – மே 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 16-31, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 01 | 1991 நவம்பர் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பேரிடியென விலைவாசி ஏற்றம்
  • இமாலயப் பேரழிவும் அரசின் பொய்களும்
  • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அட்டகாசங்கள் பாசிச ஜெயா கும்பலின் ரௌடி ராச்சியம்!
  • ஜெர்மனிக்கு நாஜிகள் இந்தியாவுக்கு பாரதீயஜனதா
  • சிவசேனா இந்து வெறியர்களின் இளைய பங்காளிகள்
  • இடஒதுக்கீடு மோசடிகள்: திராவிடக் கட்சிகளை அம்பலப்படுத்தும் மண்டல்
  • தமிழக மாணவர் போராட்டம் தரும் படிப்பினைகள் வெற்றிக்கான படிப்பினைகள்
  • தொழிலாளரைப் பலிகேட்கும் புதிய தொழிற்கொள்கை
  • பாசிச மும்மூர்த்திகள் பாசிச ஜெயாவை நம்பி தற்கொலைப் பாதையில் பார்ப்பனர்கள்
  • சர்வதேசக் கடலிலும் புலிவேட்டை!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 1-31, நவம்பர் 1-15 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 22-23 | 1991 அக்டோபர் 1-31, நவம்பர் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நவம்பர் புரட்சி நாள்: மீண்டும் உதிக்கும்!
  • மருத்துவர் களின் அலட்சியம் ஏழைப்பெண்ணின் அவலம்
  • தனியார்துறை மோகம் தீர்வாகாது
  • அ.தி.மு.க. – காங்கிரசு – பாரதீய ஜனதா பாசிச மும்மூர்த்திகள்
  • அயோத்தி விவகாரம்: இந்து வெறி பாசிஸ்டுகளின் அக்கிரமம் பாசிச காங்கிரசின் ஒத்துழைப்பு
  • பேருந்துக்கட்டண உயர்வு: பாசிச ஜெயாவின் ஆணவம் மாணவர்கள் போர்க்கொடி
  • படரும் பாசிச அடக்குமுறை தொடரும் புரட்சிகர இயக்கம்
  • உயிரோடு எரிப்பு நிர்வாண ஊர்வலம் அடித்துக் கொலை நரவேட்டையாடப்படும் தாழத்தப்பட்டோர்
  • புதிய ஜனநாயகம் மீது பொய்வழக்கு விற்பனையாளர்கள் மீது போலீசின் தாக்குதல்
  • விலைபோன வீரமணியின் இனத் துரோகம்
  • சங்கர் குகா நியோகி கொலை: ஒரு தொழிற்சங்கவாதியின் மரணம்
  • பாசிச பாதுகாப்புச் சட்டம்
  • போலிக் கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாத சாகசம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 16-30 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 21 | 1991 செப்டம்பர் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வயிற்றை நிரப்பிக்கொண்டு அடிமையாய் வாழ்வதா? உரிமை – மானத்துக்குப் போராடி தியாகியாய் மடிவதா?
  • ஜெயாவின் திமிர்ப்பேச்சு மாணவர்களின் பதிலடி
  • தமிழருக்கு எதிராக பார்ப்பன – பாசிச ஜெயாவின் போர்
  • ”இது நம்மவா ஆட்சி” பார்ப்பன சங்கம் பிரகடனம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • முதலாளித்துவ முட்டாள்களே! சிலைகளைத் தகர்க்கலாம் சித்தாந்தத்தை என்ன செய்வீர்?
  • இந்தியப் போலிகளின் சந்தர்ப்பவாத சாகசங்கள்
  • முதலாளித்துவத்தின் பெருந்தோல்வி! அழுகும் அமெரிக்காவே சாட்சியம்!
  • உத்திரப் பிரதேசம்: ராம ராஜ்ஜியத்தின் முக விலாசம்
  • விவசாயிகளின் வயிற்றில் அடித்து வாழ்வைப் பறிக்க உலக வங்கி சதி
  • நெய்வேலி ஜவஹர் பள்ளி: ஆசிரியர்களா? கொத்தடிமைகளா?
  • பங்காரப்பா – நரசிம்மராவ் – மன்மோகன் சிங்: கொடும்பாவி எரிப்பு போராட்டம் காவிரி நீர் உரிமைக்கான இயக்கம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-31 ஆகஸ்ட், 01-15 செப்டம்பர் 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 18 – 20 | 1991 ஆகஸ்ட் 01-31, செப்டம்பர் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

(இந்த இதழின் அட்டை கிடைக்கப்பெறவில்லை)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சோவியத் ஒன்றியத்தில் அரண்மனைப் புரட்சி தோற்றது! நெருக்கடிகள் தீர்ந்தனவா?
  • காவிரி நீர் பிரச்சினை: கோஷ்டிப் பூசலுக்கான பகடைக்காயா?
  • சி.பி.ஐ.யின் தகிடுதத்தங்கள்!
  • பட்ஜெட்: கட்டுப்பாடற்ற கொள்ளைக்கு கதவு திறந்தது
  • இரத்த வெள்ளத்தில் தாழ்த்தப்பட்டோர்
  • நாடு கடத்தப்படுவோமா?
  • வதைபடும் ஈழ அகதிகள்
  • புலிகளின் பாசிசம்
  • பி.சி.சி.ஐ. விவகாரம்: புதைந்து கிடக்கும் உண்மைகள்
  • சவால் விட்டு சதிராடிய காங்கிரசு கோழைகள்
  • காக்கிச் சட்டை ரௌடிகளின் கயவாளித்தனம்!
  • கேள்வி – பதில்
  • குன்னூர்: போலீசு தாக்குதல்: அப்பாவிகள் பரிதவிப்பு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஜூலை 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 17 | 1991 ஜூலை 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: விநோதமான ஜனநாயகம் திவாலான பொருளாதாரம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ஒண்ட வந்த பிடாரியே, ஈழத் தமிழரை விரட்டாதே!
  • பொருளாதார நெருக்கடி: மறு சீரமைப்பல்ல மறு அடகுவைப்பு
  • செல்லாக்காசாகிவிட்ட ரூபாயின் மதிப்பு
  • அமைந்திருப்பது அரசு பயங்கரவாத ஆட்சி பார்ப்பன – பாசிச ஒடுக்குமுறைக்கு அட்டிகை
  • பா.ம.க. புலம்பலுக்கு வந்த பதிலடிகள்
  • பீகாரை ஆளும் யுத்தப் பிரபுக்கள்
  • அப்பாவி சிறுவன் மீது கொலை வெறித் தாக்குதல் தஞ்சை போலீசின் காட்டுமிராண்டித்தனம்
  • கேள்வி – பதில்
  • ’மார்க்சிஸ்ட்’ கட்சிப் பொதுச் செயலாளர் நம்பூதிரிபாடுக்கு கட்டாய ஓய்வு
  • அரசு ஆலைகள் தனியாருக்கு ஏலம்!
  • ”முஸ்லீம் பிணம் இந்து கோயில் வழியே செல்லக்கூடாது” இந்து வெறியர்களின் அட்டகாசம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 ஜூன், 01-15 ஜூலை 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 15-16 | 1991 ஜூன் 16-30, ஜூலை 01-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காங்கிரசு கனவு நொறுங்கியது
  • விடுதலைப் புலிகளின் இழிசெயல்: ராஜீவ் கொலைக்கு புதிய ஜனநாயகம் – புதிய கலாச்சாரம் மீது வீண்பழி!
  • ராஜீவ் கொலை விசாரணை அரசியல் பழிவாங்கும் முயற்சி
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ராஜீவ் கொலை: எதிர்க்கட்சிகளின் இரங்கல் அறிக்கைகள்: கோழைத்தனம்!
  • மாநிலத்தை “பிளாக்மெயில்” செய்கிறது போலீசு
  • எத்தியோப்பியா: சர்வாதிகார எதிர்ப்புப் போரில் சதிகார அமெரிக்காவின் கைவரிசை
  • அல்ஜீரியா: போலி சோசலிசத்துக்கு மரண அடி
  • கோவை மத்திய சிறை: காக்கிச் சட்டை கைதிகள்
  • காஷ்மீர்: பனிமலையில் இரத்த ஆறு
  • அடக்குமுறைகளை மீறி தேர்தல் புறக்கணிப்பு இயக்கம்
  • கேள்வி – பதில்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram