Wednesday, October 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 5

அமலாக்கத்துறை: பாசிச கும்பலின் அடக்குமுறைக் கருவி

தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக கூறப்படும் பல அரசு அமைப்புகளை பாசிச பா.ஜ.க. கும்பல் தனது கைப்பாவையாக மாற்றிவருகிறது. அந்தவகையில், ஒன்றிய அரசின் கீழ் வரும் அமலாக்கத்துறை பாசிச பா.ஜ.க. அரசின் ஏவல் அமைப்பாகவே மாற்றப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அமலாக்கத்துறையை மோடி அரசு எவ்வாறு முறைகேடாக பயன்படுத்தி வந்துள்ளது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

2015 முதல் தற்போது வரையிலான அமலாக்கத்துறை வழக்குகள் குறித்து திரிணாமூல் காங்கிரசு கட்சியின் எம்.பி. சாகேட் கோகலே விரிவான தகவலை ஒன்றிய அரசிடம் கோரியிருந்தார். அதற்கு, கடந்த மாதம் ஜூலை 29 அன்று ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலளித்தார்.

அத்தகவலின்படி, ஜனவரி 1, 2015 முதல் ஜூன் 30, 2025 வரையிலான காலகட்டத்தில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறையால் மொத்தம் 5,892 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில், 1,398 புகார்கள் மட்டுமே நீதிமன்றங்களில் வழக்குகளாக தொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, 77 சதவிகித வழக்குகளில் குற்றப்பத்திரிகைக் கூட தாக்கல் செய்யப்படவில்லை.

மேலும், பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் வெறும் 300 வழக்குகளில் மட்டுமே பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றங்கள் குற்றச்சாட்டுகளை உறுதி செய்து (frame of charges) உத்தரவிட்டுள்ளன. இதில் எட்டு வெவ்வேறு நீதிமன்ற உத்தரவுகளின் இன் கீழ் 15 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது கடந்த பத்தரை ஆண்டுகளாக பதியப்பட்ட 5,892 வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 பேர் மட்டுமே. இதன் குற்ற விகிதம் 0.14 சதவிகிதம் மட்டுமே. ஆனால், தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் (NCRB) தரவுகளின்படி, சராசரி குற்ற விகிதம் 45 முதல் 50 சதவிகிதம் ஆகும். இது அமலாக்கத்துறையால் பதியப்பட்ட வழக்குகளுக்கும் அவற்றின் மீதான நடவடிக்கைகளுக்கும் இடையிலான பெரும் ஏற்றத்தாழ்வைப் பிரதிபலிக்கிறது.

மேலும், 49 வழக்குகளில் மட்டுமே மூடல் அறிக்கைகள் (closure reports) தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இத்தனை பேர் மீது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லையென்றால், ஆளுங்கட்சியின் நலனுக்காக அவர்கள் திட்டமிட்டு குறிவைக்கப்படுகிறார்கள் என்பது உறுதியாகிறது.

2019-ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் பாசிச நோக்கத்திற்கேற்ப பணமோசடி தடுப்புச் சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. சான்றாக, முன்னறிவிப்பின்றி யாரையும் கைது செய்வது, பிணை மறுப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டன.

இத்திருத்தங்கள் அமலாக்கத்துறைக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கியது. இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், தங்களுக்கு அடிபணியாத தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்து, அவர்களின் இடங்களில் சோதனைகள் நடத்துவது, கைது செய்வது உள்ளிட்ட பாசிச நடவடிக்கைகளில் மோடி -அமித்ஷா கும்பல் ஈடுபட்டது

மற்றொரு புள்ளிவிவரத்தின்படி, அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 98 சதவிகிதம் பொய் வழக்குகளாகவே உள்ளன என்பது அம்பலமாகி இருக்கிறது.

மொத்தத்தில், குதிரை பேரம் நடத்துவது, எதிர்க்கட்சியினர், கார்ப்பரேட் முதலாளிகளை மிரட்டி பணிய வைப்பது, பணம் பறிப்பது போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் சட்டப்பூர்வ கூலிப்படையாக அமலாக்கத்துறை மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக, அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டி, அவர்களை விலைக்கு வாங்குவது போன்ற நடவடிக்கைகள், “ஒரே நாடு, ஒரே கட்சி” என்ற பா.ஜ.க-வின் பாசிச திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இப்பாசிச நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் மக்களிடம் அம்பலப்படுத்தவும், போராடவும் முனையாமல், “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் வெறும் வார்த்தைப் போரை மட்டுமே நடத்தி வருகின்றன.


ஆதினி

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 01-30, 2002 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 17, இதழ் 6 | ஏப்ரல் 01-30, 2002 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஓட்டுக்கட்சிகளின் “உறவும்”, “நட்பும்” அரசியல் விபச்சாரத்தின் உச்சகட்டம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இந்து மதவெறி பாசிச ஆட்சிக்கு கல்தூண் பூசை
  • நெல் கொள்முதல் மோசடி: விவசாயிகளுக்குப் பேரிடி
  • பறிபோகும் நெய்வேலி பரிதவிக்கும் தொழிலாளி
  • குஜராத் இந்தியாவின் போஸ்னியா!
  • கோவை இந்து வெறியர்களின் பரிசோதனைக் களமா?
  • இலாப வெறியில் இந்துஸ்தான் லீவர் போராட்டத் தீயில் தொழிலாளர்கள்
  • கேரள அரசு ஊழியர் போராட்டம்: படுதோல்வியும் படிப்பினையும்
  • பி.எம்.எஸ். – போலிகள் குலாவல்: தாய் பகையாம் குட்டி உறவாம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 16-28, மார்ச் 1-31, 2002 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 17, இதழ் 7-9 | பிப்ரவரி 16-28, மார்ச் 1-31, 2002 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: குஜராத் கலவரம் பார்ப்பன பயங்கரவாதம்
  • ஆந்திரா: “இம்” என்றால் சிறை! “ஏன்?” என்றால் படுகொலை!
  • நீதிக்குக் கல்லறை இந்து மத வெறியர்களுக்கு விடுதலை
  • மேற்கு வங்கத்தை ஆள்வது
    ‘இடது’ முன்னணியா? இந்து முன்னணியா?
  • நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள்: இந்து மதவெறி மீது விழுந்த பேரிடி
  • தனியார்மயத்தின் தோல்விக்கு சென்னை துறைமுகமே சாட்சி
  • தமிழக போலீசின் பயங்கரவாதப் போராட்டம்
  • அமெரிக்கா: ஜனநாயகத் தொட்டிலா? பயங்கரவாத பாசறையா?
  • ஏகாதிபத்திய நாடுகளில் வளம் கொழிக்கவில்லை வறுமை தாண்டவமாடுகிறது
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஜி.எஸ்.டி-யே ஒரு அயோக்கியத்தனம் | டிரம்பிற்கு அடிபணியும் மோடி அரசு | தோழர் அமிர்தா

ஜி.எஸ்.டி-யே ஒரு அயோக்கியத்தனம்
| டிரம்பிற்கு அடிபணியும் மோடி அரசு | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தாராளவாதத்தை எதிர்த்துப் போரிடுக! | தோழர் மாவோ | மீள்பதிவு

இப்பதிவு முதலில் செப்டம்பர் 9, 2020 அன்று “தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !” என்ற தலைப்பில் வினவு தளத்தில் வெளியானது.

***

செப்டம்பர் 9, 2025 – தோழர் மாவோவின் 49-வது நினைவு தினம் இன்று. மார்க்சியத்தின் அடிப்படைகளை இறுகப் பற்றிக் கொண்டு ஜனநாயக மத்தியத்துவம், விமர்சனம் – சுயவிமர்சனம் ஆகிய பெரும் ஆயுதங்களைக் கொண்டு இடது, வலது சந்தர்ப்பவாதங்களுக்கு எதிராகப் போராடி புரட்சியை சாதிக்கவல்ல எஃகுறுதிமிக்க ஒரு கட்சியைக் கட்டியமைத்தார் லெனின். விளைவு – ரசியாவில் சோசலிசப் புரட்சி நடந்தது.

உலகின் முதல் சோசலிச நாடான ரசியா, தோழர் ஸ்டாலினின் தலைமையில் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுக தாக்குதல்களை ஒருபக்கம் எதிர்கொண்டு, மறுபுறத்தில் கட்சிக்குள் எழுந்த திருத்தல்வாத, வலது சந்தர்ப்பவாத  சித்தாந்தங்களையும் எதிர்கொண்டு அவற்றுக்கு எதிராகப் போராடியது.  இந்தப் போராட்டங்களின் அனுபவங்களையும், மார்க்சிய லெனினிய சிந்தனைகளையும் வரித்துக் கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியை போல்ஷ்விக் மயமாகக் கட்டியமைத்தார் தோழர் மாவோ.

சீனாவின் சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில், சீன மக்களின் பண்பாட்டு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கட்சி ஸ்தாபனத்தில் வரும் பிரச்சினைகள், கட்சிக்குள் நிலவும் தவறான போக்குகள், ஊழியர்களுக்கும்  தலைவர்களுக்கும் இடையிலான சிக்கல்கள் ஆகியவற்றை பகுத்தாய்ந்து அவற்றைக் கலைவதற்கான வழிமுறைகளை தோழர் மாவோ முன் வைத்தார்.

கட்சியில் நிகழும் பிளவுகள், குழப்பங்கள் உள்ளிட்ட எதுவும் ஒரிரு நாட்களில் தோன்றிவிடுவதில்லை. அவை வலது இடது சந்தர்ப்பவாதப் போக்கு மெது மெதுவாக  கட்சிக்குள் வேரூன்றி வளர்ந்து, ஒரு சமயத்தில் வெடிக்கும்போதுதான் கட்சியில் பிளவுகளும் குழப்பங்களும் விளைகின்றன. அதனைத் தவிர்ப்பதற்கு இருக்கும் ஒரே வழிமுறை எப்போதும் கறாராக தாராளவாதத்திற்கு எதிராக போர் தொடுப்பதும், விமர்சன சுயவிமர்சன முறையைப் பின்பற்றுவதும்தான்!

மேல்கமிட்டியோ, கீழ் கமிட்டியோ எதுவாக இருந்தாலும், மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் இருந்து தோழர்களின் திசைவிலகலைக் கண்டதும், அதனோடு எக்காரணம் கொண்டும் சமரசம் மேற்கொள்ளாமல், அதற்கு எதிராகக் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதை பின்வரும் கட்டுரையில் விவரிக்கிறார் தோழர் மாவோ !

தாராளவாதத்திற்கு எதிராக அணிதிரண்டு அதனை எதிர்த்து முறியடிப்போம் !
தோழர் மாவோவின் சிந்தனையை எங்கும் எப்போதும்  உயர்த்திப்பிடிப்போம் !!

– வினவு

***

தாராளவாதத்தை எதிர்த்துப் போரிடுக!

நாம் ஊக்கமான சித்தாந்தப் போராட்டத்துக்காக நிற்கிறோம். காரணம், அது கட்சிக்குள்ளும் புரட்சிகர ஸ்தாபனங்களுக்குள்ளும் ஐக்கியத்தை உருவாக்கவும் அவற்றைப் போராடத் தகுதியுள்ளவைகளாக்கவுமான ஆயுதமாக மாற்றவும் உதவுகிறது. ஒவ்வொரு கம்யூனிஸ்டும், புரட்சிவாதியும் இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் தாராளவாதம், சித்தாந்தப் போராட்டத்தை மறுத்து, கோட்பாடற்ற சமாதானத்துக்காக நிற்கிறது. இதன் விளைவாக உலுத்துப் போன பண்பற்ற மனோபாவம் தோன்றி, கட்சியிலும் புரட்சிகர ஸ்தாபனங்களிலும் உள்ள சில அமைப்புகளையும் தனி நபர்களையும் அரசியல் ரீதியில் சீரழிக்கிறது.

தாராளவாதம், பல்வேறு வழிகளில் வெளிப்படுகின்றது. ஒருவர் தவறிழைத்துவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தும், நீண்டகாலம் பழகியவர், சக ஊரவர், சக மாணவர், நெருங்கிய நண்பர், அன்பிற்குரியவர், பழைய சக ஊழியர் அல்லது பழைய கீழ்ப்பணியாளர் என்ற காரணத்தால் அவருடன் கோட்பாடு ரீதியில் வாதிடுவதற்கு மாறாக, சமாதானத்துக்காகவும் நட்புக்காகவும் விஷயங்களை நழுவவிடுவது அல்லது, சுற்றிலும் நெருக்கம் நீடிக்க வேண்டி முழுமையான தீர்வு காண்பதற்கு பதில் லேசாகத் தொட்டுவிடுவது இதன் விளைவாக ஸ்தாபனத்துக்கும் தனி நபருக்கும் தீங்கு விளைவிக்கப்படுகின்றது. இது தாராளவாதத்தின் முதலாவது வகை.

ஸ்தாபனத்துக்குத் தனது யோசனைகளை ஊக்கமாக முன் வைப்பதற்குப் பதிலாக முதுகுக்குப் பின் பொறுப்பற்ற விமர்சனத்தில் ஈடுபடுவது நபர்களது முகங்களுக்கும் முன் ஒன்றும் சொல்லாமல், அவர்களது முதுகுகளுக்குப் பின் வம்பளப்பது, கூட்டத்தில் ஒன்றும் பேசாமல் அது முடிந்த பின் வம்பளப்பது, கூட்டு வாழ்வுக் கோட்பாடுகளைச் சற்றும் பொருட்படுத்தாமல், தனது சொந்த விருப்பப்படி நடப்பது – இது இரண்டாவது வகை.


படிக்க: தோழர் மாவோ 131-வது பிறந்தநாள்: மாசேதுங் சிந்தனையை உயர்த்தி பிடிப்போம்


தன்னைப் பாதிக்காத விஷயங்களை அலமாரியில் வைத்துவிடுவது தெளிவாகத் தவறானவை என்று தெரிந்தவை பற்றி, இயன்ற அளவு சொற்பமாகப் பேசுவது, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தனது குறைபாடுகளைக் கண்டு விமர்சிப்பார்களே என்று அதிலிருந்து தப்புவதற்காகவும் எச்சரிக்கையாக இருந்துவிடுவது – இது மூன்றாவது வகை

கட்டளைகளுக்குப் (முடிவுகளுக்கு) பணிந்து ஒழுகாமல் தனது சொந்தக் கருத்துகளுக்கு எல்லாவற்றுக்கும் மேலான இடத்தைத் தருவது; ஸ்தாபனத்திலிருந்து விசேஷ சலுகை கோருவது; ஆனால் அதன் கட்டுப்பாட்டை நிராகரிப்பது – இது நாலாவது வகை.

ஐக்கியத்துக்காக அல்லது முன்னேற்றத்துக்காக அல்லது வேலையைச் சிறப்பாகச் செய்வதற்காக, தவறான கருத்துக்களை எதிர்த்துப் போராட்டங்களிலும் விவாதங்களிலும் ஈடுபடுவது என்பதற்குப் பதிலாக தனிநபர் தாக்குதல் தொடுப்பது; சண்டை சச்சரவுகள் செய்வது; சொந்தக் குரோதங்களைக் கொட்டித் தீர்ப்பது; அல்லது பழி வாங்குவது – இது ஐந்தாவது வகை.

தவறான கருத்துக்களைக் கேட்டதும் அவற்றை மறுத்துரைப்பதில்லை. எதிர்ப் புரட்சிவாதிகளது கூற்றுகளைக் கேட்டாலும் அதனைக் கட்சிக்குத் தெரிவிப்பதில்லை; மாறாக ஒன்றும் நடக்காதது போல அவற்றை அமைதியாகக் கேட்டு சகித்துக் கொள்வது இது ஆறாவது வகை.

மக்கள் மத்தியில் இருந்தும் கிளர்ச்சிப் பிரச்சாரம் செய்யாமல் இருப்பது அல்லது சொற்பொழிவுகள் ஆற்றாமல் இருப்பது – அவர்கள் மத்தியில் பரிசீலனைகளும் விசாரணைகளும் நடத்தாமல் இருப்பது – மக்களிடம் பாராமுகமாகவும், அவர்களது இன்ப துன்பங்களில் கவலை இல்லாமலும், தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதை மறந்து கம்யூனிஸ்ட் அல்லாதவரைப் போல் நடந்து கொள்வது – இது ஏழாவது வகை.

மக்களின் நலன்களுக்கு ஒருவர் தீங்கு விளைவிக்கக் கண்டும், ஆத்திரமடையாமல் அவருக்கு அறிவுரை கூறாமல் அல்லது அவரைத் தடுக்காமல் அல்லது அவருடன் நியாயம் கூறி வாதிடாமல், தொடர்ந்து அப்படிச் செய்ய அவரை அனுமதிப்பது – இது எட்டாவது வகை.

வரையறையான திட்டமில்லாமல், திசையில்லாமல் அரைமனதுடன் வேலை செய்வது, அக்கறையின்றி ஏனோ தானோ என்று வேலை செய்வது, ‘பூசாரியாக இருக்கும் வரை மணியடித்துக் கொண்டிருப்போம்’ என்று செயல்படுவது – இது ஒன்பதாவது வகை.

புரட்சிக்குத் தான் பெரும் சேவை செய்வதாகக் கருதிக் கொண்டு, தான் பெரும் அனுபவசாலி என்று பெருமைப்பட்டுக் கொள்வது, பெரிய பணிகளுக்குத் தகுதியில்லாமல் இருந்து கொண்டே சிறிய பணிகளை அவமதிப்பது – வேலையில் அசட்டையாகவும், படிப்பில் அக்கறையில்லாமலும் இருப்பது – இது பத்தாவது வகை.

தனது சொந்தத் தவறுகளை அறிந்திருந்தும், அவற்றைத் திருத்த எவ்வித முயற்சியும் செய்யாமல் தன்னைப் பொறுத்துத் தாராளவாதத்தை மேற்கொள்ளுதல் – இது பதினோராவது வகை.

நாம் மேலும் கூறிக்கொண்டே போகலாம். ஆனால், இந்தப் பதினொன்றுமே பிரதானமானவை. இவை அனைத்தும் தாராளவாதத்தின் வெளிப்பாடுகள்.

புரட்சிகர அமைப்புகளில் தாராளவாதம் என்பது பெருந்தீங்கு விளைவிக்கும் அது ஒற்றுமையை அரித்துத் தின்னும்; ஒருமைப்பாட்டுக்கு குழி பறிக்கும்; வேலையில் ஊக்கமின்மையை ஏற்படுத்தும்; வேற்றுமையை விதைக்கும். இது புரட்சிகர அணிகளில் உள்ள கட்டுக்கோப்பான ஸ்தாபன அமைப்பையும், கண்டிப்பான கட்டுப்பாட்டையும் அழித்துவிடும்; கொள்கைகள் முழுமையாக அமல் நடத்தப்படுவதைத் தடுக்கும்; கட்சியின் தலைமையில் உள்ள மக்களிடமிருந்து கட்சி ஸ்தாபனங்களைப் பிரித்துவிடும். இது மிகவும் தீமையான ஒரு போக்காகும்.

தாராளவாதம் என்பது குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் சுயநல உணர்விலிருந்து தோன்றுகிறது. அது தனிநபர் நலன்களை முதலாவது இடத்திலும், புரட்சியின் நலன்களை இரண்டாவது இடத்திலும் வைக்கின்றது. இதனால் சிந்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும், ஸ்தாபன ரீதியிலும் தாராளவாதம் தோன்றுகிறது.

தாராளவாதிகள் மார்க்சியக் கோட்பாடுகளைப் பொதுப்படையான வறட்டுச் சூத்திரங்களாகக் கருதுகின்றனர். அவர்கள் மார்க்சியத்தை அங்கீகரிக்கின்றனர்; ஆனால் அதனை அனுஷ்டிக்க அல்லது முழுமையாக அனுஷ்டிக்கத் தயாராக இல்லை; தங்களது தாராளவாதத்துக்குப் பதிலாக அதன் இடத்தில் மார்க்சியத்தை வைக்க அவர்கள் தயாராக இல்லை.

அந்த நபர்களிடம் மார்க்சியமும் இருக்கிறது; அதே வேளையில் தாராளவாதமும் இருக்கிறது. அவர்கள் மார்க்சியம் பேசுகின்றனர்; ஆனால் தாராளவாதத்தை அனுஷ்டிக்கின்றனர். பிறருக்கு மார்க்சியத்தையும் தங்களுக்கு தாராளவாதத்தையும் பிரயோகிக்கின்றனர். அவர்கள் இரண்டு விதமான சரக்குகளையும் இருப்பில் வைத்துக் கொண்டு இரண்டுக்கும் உபயோகம் காண்கின்றனர். இப்படித்தான் சில நபர்களின் மூளைகள் வேலை செய்கின்றன.

தாராளவாதம் என்பது சந்தர்ப்பவாதத்தின் ஒரு வெளிப்பாடு, மார்க்சியத்திற்கு அது அடிப்படையில் முரண்பாடானது. இது ஊக்கமற்ற (செயலற்ற) தன்மை உடையது. யதார்த்தத்தில் எதிரிக்கு உதவும் விளைவு கொண்டது. எனவேதான் அது நம் மத்தியில் இருப்பதை எதிரி வரவேற்கிறான். அதன் இயல்பு இப்படி இருப்பதால் புரட்சி அணிகளில் அதற்கு இடமே இருக்கக்கூடாது. செயலூக்கமற்ற தாராளவாதத்தை வெல்ல மார்க்சியத்தின் செயலூக்கமுள்ள உணர்வையும் உபயோகிக்க வேண்டும். ஒரு கம்யூனிஸ்ட் ஒளிவு மறைவில்லாது பேசுபவராக, விசுவாசமுள்ளவராக செயலூக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். புரட்சியின் நலன்களைத் தனது சொந்த உயிரைவிட மேலானதாகக் கருத வேண்டும். தனது தனிநபர் நலன்களைப் புரட்சியின் நலன்களுக்கு உட்படுத்த வேண்டும்.

எங்கும், எப்போதும் அவர் சரியான கோட்பாடுகளின் வழி ஒழுகி எல்லாத் தவறான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எதிராகச் சலியாத போராட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு கட்சியின் கூட்டு வாழ்வை ஸ்திரப்படுத்தி, கட்சிக்கும் பொது மக்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகளைப் பலப்படுத்த வேண்டும். அவர் எந்த ஒரு தனிநபரைக் காட்டிலும் கட்சியிலும் மக்களிடத்திலும் கூடுதலான அக்கறையும், தன்னைவிடப் பிறர் மீது கூடுதலான அக்கறையும் செலுத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று கருதப்பட முடியும்.

விசுவாசமான, நேர்மையான, செயலூக்கம் உள்ள உறுதியான கம்யூனிஸ்டுகள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, நம்மிடையேயுள்ள சிலரது காட்டு தாராளவாதப் போக்குகளை எதிர்த்து (திருத்தி) அவர்களைச் சரியான திசையில் இட்டுச் செல்ல வேண்டும். சித்தாந்த முனையில் உள்ள நமது கடமைகளில் இதுவும் ஒன்றாகும்.

000

(தோழர் மாசேதுங்-ன் “தலைமை தாங்கும் வழிமுறைகள்” புத்தகத்திலிருந்து)

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 2002 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 17, இதழ் 5-6 | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 2002 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆண்டிப்பட்டி தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் பித்தலாட்டம்
    எதிரிக்கட்சிகளின் கையாலாகாத்தனம்
  • மின்சார நகரத்தில் இருண்டு கிடக்கும் தொழிலாளர் வாழ்க்கை
  • உணவு மானியத்தின் உண்மைக் கதை
  • பாக். மீது நிழல் போர் மக்கள் மீது நிஜப் போர்
  • மீண்டும் சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம்
    நம்பிக்கையான தொடக்கம்
  • ஈழம்: அரசியல் மேலாண்மையில் எதிரிகள் சறுக்குப் பாதையில் புலிகள்
  • மறுகாலானியாதிக்கம்: அமெரிக்காவின் புதிய உத்திகள்
  • பாலஸ்தீனம்: அமெரிக்க ஆசியுடன் அடுத்த சுற்றுத் தாக்குதல்
  • இந்துமயமாக்கலுக்கு எதிராக பழங்குடியினர் ஆவேசம்
  • சுதந்திர வர்த்தகக் கொள்கையா? பங்குச் சந்தை பயங்கரவாதமா?
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். | பகுதி 14
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் பேரழிவுப் போர்!

லங்கையின் முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை சிங்கள இனவெறி அரசு இனப்படுகொலை செய்ததைப் போல, பாலஸ்தீனத்தின் காசா பகுதியிலுள்ள இலட்சக்கணக்கான மக்களை யூத இனவெறி இஸ்ரேல் அரசு நம் கண் முன்னே இனப்படுகொலை செய்துக் கொண்டிருக்கிறது.

ஹமாஸ் இயக்கத்தை அழிப்பதுதான் தன்னுடைய நோக்கம் என்று அறிவித்துக்கொண்டு காசா மீதான போரைத் தொடங்கிய இஸ்ரேல் அரசு, தற்போது காசாவை முழுமையாக கைப்பற்றுவதுதான் தன்னுடைய நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. “போர் நிறுத்தத்திற்கு தயார்” என்று ஹமாஸ் பலமுறை தெரிவித்துவிட்டப் போதிலும், அதன் நியாயமான கோரிக்கைகளுக்கு உடன்படாமல், தன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு போரைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

அக்டோபர் 7, 2023 அன்று தொடங்கப்பட்ட காசா மீதான இன அழிப்புப் போரில் இதுவரை 18,430-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 60,933 பாலஸ்தீன மக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 1.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர். தற்போது காசா மீது இஸ்ரேல் தொடுத்திருக்கும் பட்டினிப் போரால் பாலஸ்தீன மக்கள் சகித்துக்கொள்ள முடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இஸ்ரேல் அரசின்
பாலஸ்தீன ஆக்கிரமிப்புத் திட்டம்

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்துவரும் இப்போரில் காசாவின் 85 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பகுதிகளை இஸ்ரேல் இராணுவம் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டது. மீதமுள்ள 15 சதவிகிதத்திற்கும் குறைவான (55 சதுர கிலோமீட்டர்) ரஃபா எல்லை, காசா நகரப் பகுதிகளில்தான் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிதலமடைந்த கட்டடங்களிலும் தற்காலிக கூடாரங்களிலும் உணவு, குடிநீர் என எந்தவித அடிப்படை வசதியுமின்றி தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதியிலிருந்து 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருக்கும் காசா நகரத்தை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றத் தொடங்கியுள்ளது. காசாவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிகளை நோக்கி அம்மக்களை கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.

அதாவது, ஹிட்லரின் வதைமுகாம் போன்று, இராணுவக் கட்டுப்பாட்டின் கீழுள்ள குறுகிய பகுதிக்குள் காசா மக்களை அடைத்து வைத்து, பட்டினியாலும் குண்டுவீச்சாலும் அம்மக்களை கொத்து கொத்தாக இன அழிப்பு செய்வதே இஸ்ரேல் அரசின் நோக்கமாக உள்ளது.

மேலும், ஒட்டுமொத்த காசாவின் நிலப்பரப்பையும் ஆக்கிரமிப்பதற்காக காசா மக்களை பிற நாடுகளுக்கு குடியேற்றும் திட்டத்தையும் இஸ்ரேல் அரசு கொண்டிருக்கிறது. இதற்காக, அமெரிக்காவுடன் இணைந்து தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தி வருவது செய்திகளில் அம்பலமாகியுள்ளது.

குறிப்பாக, கடந்த ஜூலை மாதத்தில் இஸ்ரேலின் நாடாளுமன்றமான நெசட்டில், “காசாவின் ரிவியரா – பார்வையிலிருந்து எதார்த்தத்திற்கு” (The Gaza Riviera – from vision to reality) என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது. இதில், காசா மக்களை இன அழிப்பு செய்துவிட்டு அங்கு யூதர்களை குடியேற்றுவதற்கான திட்டத்தை இனவெறி பாசிஸ்டுகள் முன்வைத்தனர். காசாவை முழுமையாக கைப்பற்றி அங்கு இரண்டு நகரங்கள், பல்கலைக்கழக வளாகம், தொழிற்துறைப் பகுதி, சுற்றுலாத் தளங்கள் முதலியவற்றைக் கட்டியமைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இது, அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் ட்ரம்ப் அறிவித்தபடி, காசாவை மத்தியக் கிழக்கின் ரிவியராவாக (கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள சுற்றுலா நகரம்) மாற்றும் திட்டத்தை ஒத்ததாகும்.

அதேபோல, பாலஸ்தீனத்தின் மேற்கு கரை நிலப்பகுதியை ஆக்கிரமிப்பதற்கான நடவடிக்கையிலும் இஸ்ரேல் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் 20 அன்று மேற்கு கரையில் இஸ்ரேலியர்களுக்கான 3,400 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. “கிழக்கு 1” (E1) என்று அழைக்கப்படும் இத்திட்டமானது ஏற்கெனவே இஸ்ரேலுடன் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெருசேலமில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் மேற்குகரையில் உள்ள மாலே அடுமிம் குடியேற்ற பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைகிறது. அதாவது, கிழக்கு ஜெருசேலமிலிருந்து மாலே அடுமிம் குடியிருப்புகள் வரையிலான மேற்கு கரைப் பகுதியை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக்கொள்ள விழைகிறது.

தரைமட்டமாக்கப்படும் காசா நகரம்:

காசா நகரத்தை இஸ்ரேலியப் படைகள் கைப்பற்றத் தொடங்கியதிலிருந்து அந்நகரத்தின் மீது மிகத் தீவிரமான தாக்குதலைத் தொடுத்து வருகின்றன. காசா நகரத்தின் ஜெய்டவுன், சப்ரா, ரெமால், துஃபா ஆகிய பகுதிகள் இத்தாக்குதலின் மையமாக உள்ளன.

விமானங்கள், ட்ரோன்கள் மூலம் மக்கள் குடியிருப்புகள் மீது தொடர்ச்சியாக குண்டுகளை வீசுவது; இராணுவப் படைகள் துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டுக்கொண்டே முன்னேறுவது; டாங்கிகள் மூலம் வீடுகளை இடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மக்களை கொன்று குவித்து வருகின்றன. “நகரத்தை விட்டு வெளியேறுங்கள் அல்லது செத்து மடியுங்கள்” என்பதே இஸ்ரேல் இராணுவத்தின் கொள்கையாக உள்ளது. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான மக்கள் காசா நகரத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மேலும், காசா நகரத்தின் கட்டடங்கள் அனைத்தையும் தரைமட்டமாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் இஸ்ரேலிய இராணுவம், குண்டுவீச்சு மற்றும் புல்டோசர்கள் மூலம், தாக்குதல் தொடங்கிய 20 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களை இடித்துள்ளது.

அதேபோல, தன் கட்டுப்பாட்டில் உள்ள 85 சதவிகித காசா பகுதிகளிலும் புல்டோசர்கள் மூலம் கட்டடங்களை இடித்து வருகிறது. இதற்காக ஒப்பந்த அடிப்படையில் புல்டோசர்களை இயக்குபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான ஆட்சேர்ப்பு விளம்பரங்களை முகநூலில் வெளியிட்டு இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு “மெட்டா” நிறுவனம் உடந்தையாக செயல்பட்டிருப்பதை “தி கார்டியன்” இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. இவ்வாறு காசா முழுவதையும் தரைமட்டமாக்கி கைப்பற்றும் நோக்கத்திலிருந்து பாசிச இஸ்ரேல் அரசு செயல்பட்டு வருகிறது.

துப்பாக்கி அல்லது பட்டினி:
இருமுனை தாக்குதலில் காசா மக்கள்

உணவு, குடிநீர், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை காசாவிற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ள இஸ்ரேல் அரசு, பட்டினியை ஆயுதமாக்கி காசா மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது.

காசா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் காசாவிற்குள் அத்தியாவசியப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் அரசு முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தியது. மார்ச் 18 முதல் காசா மீதான போரை மீண்டும் தொடங்கி பாலஸ்தீன மக்களை கொத்து கொத்தாக படுகொலை செய்து வருகிறது. இதற்கெதிராக உலகம் முழுவதும் மக்கள் போராட்டங்கள் நடந்ததையடுத்து, மே மாதத்திலிருந்து காசாவிற்குள் சொற்பமான அளவில் அத்தியாவசியப் பொருட்களை அனுமதித்து வருகிறது.

காசா மக்களின் குறைந்தபட்சத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாளொன்றுக்கு 600 லாரி உணவு பொருட்கள் தேவைப்படும் நிலையில், மிகக்குறைந்த அளவில் 84 லாரிகளை மட்டுமே அனுமதித்து, மேலும் நெருக்கடியை உண்டாக்குகிறது.

மேலும், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் காசாவிற்குள் உணவு வழங்குவதற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்க-இஸ்ரேல் கைக்கூலி அமைப்பான “காசா மனிதாபிமான அறக்கட்டளை” (GHF) மட்டுமே உணவு வழங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை வெட்டவெளிகளில் உணவு மையங்களை அமைத்து நூற்றுக்கணக்கான குழந்தைகள், மக்களை அங்கு வர வைக்கிறது. அருகில் பதுங்கியிருக்கும் கொலைகார இஸ்ரேல் ராணுவத்தினர் உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்கின்றனர். மே மாதத்திலிருந்து இவ்வாறு 1,996 பேர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், காசாவில் கடுமையான உணவு பஞ்சம் உள்ள போதிலும், கொலைபொறியாக செயல்படும் இந்த அறக்கட்டளையை மூட வேண்டுமென உலகம் முழுவதிலுமிருந்து கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

ஒருபுறம், இஸ்ரேலின் பட்டினிப் போரால் காசா குழந்தைகள், மக்கள் செத்து மடிகின்றனர். பசிக்கொடுமை தாளாமல், குழந்தைகள் மண்ணைத் திண்ணும் காட்சிகளும், அழுவதற்குக் கூட தெம்பின்றி பச்சிளம் குழந்தைகள் உடல் மெலிந்து இறக்கும் செய்திகளும் நம்மை உலுக்குகின்றன. மறுபுறம், உணவு வாங்கச் செல்லும் அப்பாவி குழந்தைகள், மக்கள் இஸ்ரேல் இராணுவத்தால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஒன்று பசியால் இறக்க வேண்டும் அல்லது துப்பாக்கியால் இறக்க வேண்டும் என்பதுதான் காசா மக்களின் அவல நிலையாக உள்ளது.

குறிவைத்து வேட்டையாடப்படும் பத்திரிகையாளர்கள்

இஸ்ரேலின் இன அழிப்பு வெளியுலகிற்கு தெரியக்கூடாது என்பதற்காக காசாவில் பத்திரிகையாளர்களை குறிவைத்து இஸ்ரேல் படுகொலை செய்து வருகிறது. “அல் ஜசீரா” உள்ளிட்ட நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் அரசின் முக்கிய இலக்காக உள்ளனர்.

தற்போது, காசாவில் மருத்துவமனைகளில் மட்டும்தான் குறைந்தபட்ச வசதிகள் உள்ளதால், பத்திரிகையாளர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கு ஹமாஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாக பொய் குற்றஞ்சாட்டும் இஸ்ரேல் மருத்துவமனைகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 10 அன்று காசாவின் அல் ஷிபா மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் கூடாரத்தின் மீது தாக்குதல் நடத்தி ஏழு பத்திரிகையாளர்களை படுகொலை செய்தது. அதேபோல், ஆகஸ்ட் 25 அன்று நாசர் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அங்கு பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் நேரலை ஒளிபரப்பு செய்வதற்கும் கூடிய மீட்புக் குழுவினரையும் பத்திரிகையாளர்களையும் குறிவைத்து மீண்டுமொரு தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல்களில் ஐந்து பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர்.

காசாவிற்குள் சர்வதேச பத்திரிகையாளர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள உள்ளூர் பத்திரிகையாளர்கள்தான் இஸ்ரேலின் கொடூரங்களை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி வருகின்றனர்.

தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் இஸ்ரேலால் குறிவைத்து கொல்லப்படுவோம் என்பதை இப்பத்திரிகையாளர்கள் அறிந்துள்ளனர். ஆனால், காசாவை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பிருந்த போதிலும் காசா மக்களுடனிருந்து வீரதீரத்துடன் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க ஓநாயின் ஆதரவு

காசா மீதான இன அழிப்புப் போரை அமெரிக்காவின் ஆதரவுடனே பாசிச இஸ்ரேல் அரசு தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் இறக்குமதி செய்யும் ஆயுதங்களில் ஏறக்குறைய 65 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவை அமெரிக்க அரசால் வழங்கப்படுவதே.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, “உலகில் நடக்கும் அனைத்து போரையும் நிறுத்திவிடுவேன்” என தம்பட்டம் அடித்தார். ஆனால், தன்னுடைய மேலாதிக்க நோக்கத்திலிருந்து உக்ரைன்–ரஷ்யா போரை நிறுத்துவதற்கு முனைப்புக் காட்டும் ட்ரம்ப், அதே நோக்கத்திற்காக இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்துகொண்டு பாலஸ்தீன மக்களை இன அழிப்பு செய்து வருகிறார்.

மேலும், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உடந்தையாகவே உள்ளன. இந்நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்கின்றன.

அதேபோல, அமெரிக்க அடிமையான மோடி அரசு, ஐ.நா-வில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் வாக்களிக்க மறுத்து பாலஸ்தீன மக்களுக்கு துரோகமிழைத்து வருகிறது. மறுபுறம், இஸ்ரேலுக்கு ஏற்றுமதியாகும் அதானியின் ட்ரோன்கள் மூலம் பாலஸ்தீன மக்களை படுகொலை செய்கிறது.

நம்பிக்கையின் ஒளிக்கீற்று!

உலகின் பல நாடுகளில் “காசா மீதான இன அழிப்புப் போரை நிறுத்து” உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து போராட்டக் களத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஆஸ்திரேலியாவில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் காசா மக்களுக்கு ஆதரவாக நடந்த பேரணிகளில் 3.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

மேலும், பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்தக்கோரியும் இஸ்ரேலிய பணயக் கைதிகள் மீட்கக் கோரியும் இஸ்ரேலில் நடைபெற்றுவரும் மக்கள் போராட்டங்களால் இஸ்ரேலே ஸ்தம்பித்து போயுள்ளது.

காசாவிலும் ஹமாஸ் மக்களுடன் இணைந்து இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. பாலஸ்தீன மக்களும் காசா நிலப்பரப்பை விட்டு வெளியேற மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

மக்கள் போராட்டங்களால் ஜெர்மனி இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. துருக்கி இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிகழ்வுகள் மக்கள் போராட்டங்களே பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரை நிறுத்தும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளன.

ஆகவே, “அமெரிக்க-இஸ்ரேல் ஓநாய்களே, காசா மீதான போரை நிறுத்து!”, “காசா நிலப்பரப்பை ஆக்கிரமிப்பதைக் கைவிடு!”, “காசாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்ல அனுமதி!” என்று உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் ஓரணியில் திரண்டு போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது. மேலும், ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டு அரசை இஸ்ரேலுடனான பொருளாதார உறவுகளை துண்டிக்க வைக்க நிர்பந்திக்கும் வகையிலான போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

இந்தியாவில் “பாசிச மோடி அரசே, இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் தூண்டித்திடு!”, “அதானியின் ட்ரோன்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்!”, “இஸ்ரேலின் மீது பொருளாதாரத் தடை விதித்திடு!” உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து மோடி அரசை பணிய வைக்கும் போராட்டங்களை புரட்சிகர, ஜனநாயக சக்திகள் நடத்த வேண்டியுள்ளது.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 16-31, 2001, ஜனவரி 1-15, 2002 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 17, இதழ் 3-4 | டிசம்பர் 16-31, 2001, ஜனவரி 1-15, 2002 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பாக். மீது போர்: பயங்கரவாதத்தை ஒழிக்குமா?
  • கஜானா காலி: களவாடியது யார்?
  • உலக வங்கி கைக்கூலி ஜெயா அரசின் பகற்கொள்ளைக்கு எதிராக…
    பற்றியது நெருப்பு பரவட்டும் பெருந்தீ!
  • “ஜெயாவே டான்சி ராணி” – உயர்நீதிமன்றத் தீர்ப்பு
  • சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம்:
    தடியால் தாக்கியது போலீசு சட்டத்தால் தாக்கியது நீதிமன்றம்
  • ஆப்கான்: புதிய கைக்கூலிகள் பழைய எஜமானர்கள்
  • இந்துவெறிக் கூட்டணிக்கு “பொடோ” இடதுசாரி முன்னணிக்கு “பொகோ”
  • தோஹா மாநாடு: மறுகாலானியாதிக்கத்தில் புதிய அத்தியாயம்
  • “இது நம்ம ஆளு!” -தமிழின -தலித்திய பிழைப்புவாதிகளின் புதிய சித்தாந்தம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 | மின்னிதழ் | சிறப்பிதழ்

புதிய ஜனநாயகத்தின் 2025 செப்டம்பர் மாத மின்னிதழ், 44 பக்கங்களை கொண்ட “தூய்மை பணியாளர்கள் போராட்ட சிறப்பிதழ்“-ஆக வெளிவந்துள்ளது. மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்-ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.40

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 16-30, டிசம்பர் 1-15, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 17, இதழ் 1-2 | நவம்பர் 16-30, டிசம்பர் 1-15, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜெயலலிதா பினாமி அரசின் பகற்கொள்ளை
  • போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம்
    வயிற்றிலடித்தது தமிழக அரசு முதுகில் குத்தியது தொழிற்சங்கம்
  • ஒரு பச்சோந்தியும் சில நெருப்புக் கோழிகளும்
  • ஜெயாவுக்கு கொலை மிரட்டல்
    அம்பலமானது தமிழக போலீசின் கிரிமினல் மூளை!
  • ஆப்கான் போர் புதை மணலில் சிக்கியது அமெரிக்க வல்லரசு | சென்ற இதழின் தொடர்ச்சி
  • அமெரிக்க “மான்சாண்டோ”வின் உயிரியல் பயங்கரவாதம்
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். | பகுதி 13
  • மதச்சார்பற்ற கூட்டணி
    தோற்றம்: சட்டமன்றத் தேர்தல்-2001
    மறைவு: உள்ளாட்சித் தேர்தல்-2001
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 16-31, நவம்பர் 1-15, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 23-24 | அக்டோபர் 16-31, நவம்பர் 1-15, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: உள்ளாட்சித் தேர்தல்: உச்சகட்ட அராஜகம்
  • மறுகாலானியாதிக்க எதிர்ப்பு தீ பரவட்டும்
  • ஆப்கான் போர்
    புதை மணலில் சிக்கியது அமெரிக்க வல்லரசு
  • மருக்காலம்பட்டியில் சர்வகட்சி ஆதரவுடன் சாதிவெறியாட்டம்
  • “பொடோ” சட்டம்: பயங்கரவாதப் பீதியூட்டி பாசிசத் தாக்குதல்
  • “சிமி” தடை: இந்துவெறியர்களின் சட்டபூர்வ வேட்டை
  • கொத்தடிமைகளாய்க் கருகும் மொட்டுகள்
  • தொடரும் சாராய சாவுகள்: கொலைகாரர்கள் யார்?
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். |  பகுதி 12
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 | அச்சு இதழ் | சிறப்பிதழ்

புதிய ஜனநாயகத்தின் 2025 செப்டம்பர் மாத அச்சு இதழ், 44 பக்கங்களை கொண்ட “தூய்மை பணியாளர்கள் போராட்ட சிறப்பிதழ்“-ஆக வெளிவந்துள்ளது.
வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.40 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.45
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 16- 30, அக்டோபர் 1-15, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 21-22 | செப்டம்பர் 16- 30, அக்டோபர் 1-15, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜெயா விவகாரம்: அரசியல் – சமூக சீரழிவின் சாட்சி!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • உலகின் முதல்நிலை எதிரியான அமெரிக்காவின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
  • இந்து மதவெறியர்களின் சதி: அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு அடியாளாக இந்தியா?
  • உலகின் கொடிய பயங்கரவாதி அமெரிக்காவே!
  • இலட்சம் கொடுத்தால் பஞ்சாயத்துத் தலைவர் பதவி எத்தனை கோடிக்கு பிரதமர் பதவி?
  • மறுகாலானியாக்க எதிர்ப்பு தீ பரவட்டும்
  • ஒர்சாவில் பட்டினிச் சாவுகள்
    நிவாரணமல்ல… உணவுக் கலகமே ஒரே தீர்வு!
  • தொடர் கட்டுரை: பகுதி 3
    சவடாலுக்கு மூலஉத்தி சந்தர்ப்பவாதமே தந்திர உத்தி- “தமிழ்த் தேச”த்தின் சதிராட்டம்
  • பத்தாண்டுகளின் தாராளமயம்: பாதாளத்தை நோக்கி பாய்ச்சல்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 1-15, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 20 | செப்டம்பர் 1-15, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜெயாவிடம் விலை போகும் நீதித்துறை
  • ஜெயா – போலீசின் பாசிச தாக்குதல் சரணாகதிப் பாதையில் தமிழகப் பத்திரிகையாளர்கள்
  • திரண்டெழுந்தது தொழிலாளி வர்க்கம் ஓடி ஒளிந்தது துரோகத் தலைமை
  • ஆப்பிரிக்கக் கருப்பர்களைக் கொல்வது எது? ஆட்கொல்லி எய்ட்ஸா? அறிவுசார் சொத்துடைமையா?
  • வீதியில் ஒப்பந்த தொழிலாளி.. பீதியில் நிரந்தரத் தொழிலாளி!
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். | பகுதி 11
  • அயோத்தி வழியில் மீண்டும் ஒரு மசூதி இடிப்பு இந்துவெறி அட்டூழியத்துக்கு அரசே உடந்தை
  • மகளிர் சுய உதவிக் குழுக்கள்: அறுக்கப்படும் ஆடுகளுக்குக் கொடுக்கப்படும் அகத்திக்கீரை
  • போலீசு குண்டர்களின் வெறியாட்டம் போலி கம்யூனிஸ்டுகளின் துரோகம்
  • சவடாலுக்கு மூலஉத்தி சந்தர்ப்பவாதமே தந்திர உத்தி – “தமிழ்த் தேச”த்தின் சதிராட்டம் | பகுதி 2
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட் 1-31, 2001 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 18-19| ஆகஸ்ட் 1-31, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆக்ரா உச்சி மாநாடு: தோல்வி ஏன்?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • மனித உரிமைகள்: தமிழக போலீசின் உண்மை முகம்
  • தரைக்கடை வியாபாரிகள் மீது தடியடி; திருச்சி போலீசின் காட்டு தர்பார்!
  • கோகோ கோலா: விளம்பரத்துக்குப் பல கோடி தொழிலாளிக்குத் தெருக்கோடி
  • யூனிட் டிரஸ்டு மோசடி: அதிகாரிகள் – அரசியல்வாதிகளின் இன்னுமொரு கூட்டுக் கொள்ளை
  • நாகா போர் நிறுத்த ஒப்பந்தம்: இன விடுதலைப் போர் இனச் சண்டையாகியது
  • சவடாலுக்கு மூலஉத்தி சந்தர்ப்பவாதமே தந்திர உத்தி – “தமிழ்த் தேச”த்தின் சதிராட்டம்
  • முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். | பகுதி 10
  • உலகைக் குலுக்கிய உலகமய எதிர்ப்புப் போராட்டம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram