Thursday, June 11, 2026
முகப்பு பதிவு பக்கம் 7

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர், 2014 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 12 | அக்டோபர், 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பிரம்மஸ்ரீ கிரிமினல்கள்
  • இதுதாண்டா அம்மா போலீசு!
  • சுப்பிரமணிய சாமி :‘தேசிய’ அசிங்கம்!
  • இடைத்தேர்தல் தோல்விகள் : மதவெறியைக் கைவிடுமா பா.ஜ.க.?
  • மோடியின் நூறு நாள் ஆட்சி : சவடால்களே சாதனையாக….!
  • பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க்காதல் : பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!
  • விசாரணைக் கைதிகள் விடுதலை : இது நீதித்துறை புரட்சியா?
  • வறுமை… பட்டினி…. காசநோய் : இந்தியக் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயம்!
  • தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொள்ளைக்கு நீதிமன்றத்தின் நல்லாசி!
  • ஆம் ஆத்மி : பிறப்பு இரகசியம்!
  • கேட்ஸ் பவுண்டேஷன் : மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!
  • மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட், 2014 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 10 | ஆகஸ்ட், 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: குடந்தை வழக்கில் அநீதித் தீர்ப்பு : மக்கள் எழுச்சியே நீதி பெறும் வழி!
  • சூரத் குண்டுவெடிப்பு வழக்கு : நிரபராதிகளின் கொலைக்களமாக குஜராத்
  • மெட்ரிக் கொலைக்கூடங்கள்
  • மீத்தேன் எடுப்புத் திட்டத்தைத் தடுப்போம் ! காவிரி டெல்டாவைப் பாதுகாப்போம்!!
  • பட்ஜெட் : கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை
  • பட்ஜெட் பற்றாக்குறை : கஞ்சிக்கில்லாத மக்கள் பணத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மானியம்
  • மரபணு மாற்றுப் பயிருக்கு அனுமதி : இந்திய விவசாயத்தைத் தூக்கிலேற்றுகிறார் மோடி!
  • சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம்!
  • சமஸ்கிருத வாரம் : இந்து – இந்தி – இந்தியாவை நோக்கி…
  • பாலஸ்தீனம் – உக்ரைன் : மேற்குலக ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!
  • ஆம் ஆத்மி : பிறப்பு இரகசியம் 3
  • நரேந்திர மோடி அரசு : சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை!
  • தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் : பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது!
  • பட்ஜெட்டின் குறுக்குவெட்டுத் தோற்றம் !

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை, 2014 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 9 | ஜூலை, 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்தித் திணிப்பு: மீண்டும் வாலாட்டும் பார்ப்பனத் திமிர்!
  • லவுட் ஸ்பீக்கர் மோடி, காவி கல்லுளிமங்கன் ஆனார்!
  • சுற்றுச் சூழல் பாதுகாப்பு: மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலிகிடா!
  • என்.ஜி.ஓ.க்கள் பற்றிய உளவுத்துறை அறிக்கை: சுரங்க முதலாளிகளின் கூலிப்படையாக மோடி அரசு!
  • காவி கிரிமினல்களின் புதுத்திமிர்
  • கொலைகாரர்களுக்குப் பாதுகாப்பு! நீதிக்காகப் போராடினால் பொய்வழக்கு!!
  • கத்ரா, பாக்னா பாலியல் வன்கொடுமைகள்: சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது!
  • அரசு வங்கிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் வல்லூறுகள்!
  • 15 ஆண்டுகளாக வராத குடிநீரைக் கொண்டுவந்த வி.வி.மு.வின் போராட்டம்!
  • உருக்குலைந்த இராக்கில் உள்நாட்டுப் போர் ஏன்?
  • ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் – பகுதி -2
  • சென்னை கட்டிடச் சரிவுப் படுகொலை: குற்றவாளிகள் யார்?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஆரவல்லி: உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் கரசேவை

னிதகுலம் உயிர்ப்புடன் இயங்குவதற்கு முதன்மை பங்காற்றுவது இயற்கை அமைப்புதான். ஆனால், கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக இந்தியா முழுவதும் இயற்கை வளங்களை கூறுபோட்டு விற்று வருகிறது பாசிச மோடி அரசு. அந்த வரிசையில் தற்போது உச்சநீதிமன்றத்தின் துணையுடன் பழைமையான ஆரவல்லி மலைத்தொடரை சிதைத்து கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடுவதற்கான சதி அரங்கேற்றப்பட்டு வருகிறது.

ஆரவல்லி மலைத்தொடர் என்பது வெறும் கற்களாலும் பாறைகளாலும் ஆன நிலப்பரப்பு அல்ல; அது வட இந்தியாவின் உயிர்நாடி. சுமார் 3.2 பில்லியன் (320 கோடி) ஆண்டுகள் பழைமையான இந்த மலைத்தொடரானது குஜராத் முதல் டெல்லி வரை சுமார் 650 கிலோ மீட்டர் நீளத்திற்குப் பரவியுள்ளது.

தார் பாலைவனத்தின் மணல், தூசிப் புயல் ஆகியவற்றை வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுத்து, கோடிக்கணக்கான மக்கள் சுவாசிப்பதற்கு தூய்மையான காற்றை வழங்குவதன் மூலம் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துகிறது. மேலும், சிறுத்தைகள், கோடிட்ட கழுதைப்புலிகள், நீலமான்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அரியவகை பறவை இனங்கள் உள்ளிட்டவற்றுக்கு புகலிடமாக விளங்குகிறது.

இவ்வாறு பல்வேறு வகைகளில் மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் உயிராதாரமானதாக திகழும் ஆரவல்லி மலைத்தொடர், ஒட்டுமொத்த இந்தியாவின் இயற்கை சமநிலையை பாதுகாப்பதிலும் அரணாகத் திகழ்கிறது. இந்த மலையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டாலே அது மீளமுடியாத இயற்கைப் பேரிடரை நோக்கி நம்மை தள்ளும்.

ஆனால், இம்மலையில் காப்பர், ஜிங்க், ஈயம், வெள்ளி, இரும்புத் தாது மட்டுமின்றி லித்தியம், நிக்கல் உள்ளிட்ட அரிய வகை தனிமங்கள் நிறைந்திருக்கும் காரணத்தினால், கார்ப்பரேட் கழுகுகள் மலையை வேட்டையாட காத்துக்கிடக்கின்றன, வேட்டையாடியும் வருகின்றன.

குறிப்பாக, ஆரவல்லி மலைகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சுரங்கங்களுக்கு 1980-களிலிலேயே எதிர்ப்புக்குரல் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து 2000-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வழக்குகளில் ஆரவல்லி பகுதிகளில் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் பல்வேறு தடைகளை விதித்திருந்தது. எனினும் சட்டங்களிலிருந்த ஓட்டைகளைப் பயன்படுத்தியும் சட்டவிரோதமாகவும் கார்ப்பரேட்டுகளின் இயற்கைவளச் சுரண்டல் தொடர்ந்தது.

இத்தகைய சூழலில்தான் ஒட்டுமொத்த ஆரவல்லி மலைத்தொடரையே கார்ப்பரேட்டுகளுக்கு  காவு கொடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆரவல்லியை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் தீர்ப்பு

ஆரவல்லி மலைத்தொடர் பரந்துவிரிந்துள்ள டெல்லி, ஹரியானா, குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களும் ஆரவல்லி மலைக்கென்று எந்த வரையறையையும் வகுக்கவில்லை. இராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஆரவல்லி மலையை வேறுபடுத்தும் பொருட்டு சில வகைப்படுத்தும் முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2024 மே மாதத்தில், மேற்குறிப்பிட்ட நான்கு மாநிலங்களுக்கும் ஆரவல்லி மலை தொடர்பான ஒரே சீரான வரையறையை கொண்டுவரும் பொருட்டு, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது. சீரான வரையறையை உருவாக்க நிபுணர் குழுவை அமைக்குமாறு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆரவல்லி மலை தொடர்பான வரையறை என்ற ஒன்றே இல்லாததால், இது குழப்பத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கை  என்று கூறியது.

ஆனால், ஒரு சூழலியல் சிக்கலைத் தீர்க்க அமைக்கப்படும் குழுவில் அந்தத் துறை சார்ந்த விஞ்ஞானிகளும் சூழலியல் வல்லுநர்களும்தான் (Ecologists) முதன்மையாக இடம்பெற வேண்டும். ஆனால், ஆரவல்லி வழக்கில் அமைக்கப்பட்ட ‘நிபுணர் குழு’வில் இடம்பெற்றவர்கள் பெரும்பாலும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள்தான்.

சுரங்கத்துறை மற்றும் தொழில்துறைக்கு நிலங்களை ஒதுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களே, அந்த நிலங்களைப் பாதுகாக்கும் குழுவிலும் இருப்பது எவ்வளவு முரணானது!

வரையறையை நிர்ணயிப்பதில் முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த 2025 ஆகஸ்டில், “வரையறையை நிர்ணயித்து கொள்கை முடிவு எடுப்பதற்கு ஏன் இரண்டு மாத காலத்திற்கும் மேல் அவகாசம் எடுத்துக் கொள்கிறீர்கள்?” என்று எவ்வித சமூகப் பொறுப்புணர்வும் இன்றி அவசரகதியில் முடிவெடுக்க துடித்துக் கொண்டிருந்தது, அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான கவாய் தலைமையிலான அமர்வு.

இதனையடுத்து சீரான வரையறையை தீர்மானிக்க முடியாது என்று முதலில் கூறி வந்த நிபுணர் குழு அதற்கு நேர்மாறாக வரையறையை நிர்ணயித்தது. “நிலையான சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு உள்ளூர் தரைமட்டத்திலிருந்து 100 மீட்டர் அல்லது அதற்கு மேல் உயரம் கொண்ட நிலப்பரப்புகள் மட்டுமே ஆரவல்லி மலைகள். 500 மீட்டர் தூரத்தில் இரண்டு மலைகள் அருகருகே இருந்தால் மட்டுமே அதனை மலைகளின் தொடர்ச்சியாக கருத முடியும்” என்ற நாசகர வரையறையை முன்வைத்தது.

இதற்கு முன்னர் 2010-இல் “இந்திய வன ஆய்வு” (Forest Survey of India – FSI) உச்சநீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில், ஆரவல்லி மலைத்தொடருக்கு ஒரு வரையறையை கொடுத்திருந்தது. இந்த வரையறையானது முழுமையான பாதுகாப்பை கொடுக்கும் வகையில் இல்லை எனினும், தற்போது நிபுணர் குழுவால் கொடுக்கப்பட்ட வரையறையை விட சற்று பாதிப்பு குறைந்தது ஆகும். ஆனால், நீதிமன்றத்தில் 2010 எஸ்.எஃப்.ஐ. வரையறையை ஏற்காமல், நிபுணர் குழுவின் வரையறையை நடைமுறைப்படுத்தினால் ஆரவல்லியின் பெரும்பகுதி பாதுகாக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சகம் அப்பட்டமாக பொய்யுரைத்தது.

இந்த இரண்டு வரையறைகளிலும் எவ்வளவு மலைப்பகுதி உள்ளடங்கும் அல்லது வெளியேற்றப்படும் போன்ற தரவுகளை ஒப்பிட்டு வாதத்தின் உண்மைத் தன்மையை ஆராயாமல், வேதங்கள் ஓதுவதைக் கேட்பது போல ஒன்றிய அரசு முன்வைத்த கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்ற அமர்வு.

இந்த வரையறையினால் ஆரவல்லிக்கு ஏற்படப் போகும் எதிர்மறை விளைவுகள் குறித்து ஒரு பத்தி கூட தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்பதிலிருந்தே இந்த விவகாரத்தை நீதிபதிகள் எவ்வளவு அலட்சியமாக கையாண்டுள்ளனர் என்பதை புரிந்துகொள்ளலாம்.

கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாகும் ஆரவல்லி!

இந்தப் புதிய வரையறையினால் 99 மீட்டர் உயரம் கொண்ட ஒரு குன்று, 100 மீட்டர் மலைக்கு இருக்கும் அதே சூழலியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தாலும், இந்த 100 மீட்டர் விதியின்படி அது “மலை அல்லாதவை” என்று அறிவிக்கப்படும்.

அறிவியலுக்குப் புறம்பான இந்த வரையறையினால், இராஜஸ்தானில் உள்ள சுமார் 12,081 குன்றுகளில், வெறும் 1,048 குன்றுகள் மட்டுமே “பாதுகாக்கப்பட்ட மலைகள்” என்கிற பட்டியலில் இடம்பெறும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, இப்பகுதியில்தான் ஆரவல்லியின் பெரும்பாலான “நீர்ப்பிடிப்புப் பகுதிகள்” உள்ளன. இவற்றை அழிப்பது என்பது ஒரு தலைமுறையின் நீர் ஆதாரத்தையே அழிப்பதற்குச் சமம். இதில் இராஜஸ்தான் மாநிலம்தான் மிக மோசமாகப் பாதிக்கப்படும்.

மேலும், புதிய வரையறையினால் ஆரவல்லியில் 91 சதவிகித பகுதிகள் இதுவரை பெற்றுவந்த சட்டப்பூர்வ பாதுகாப்பை இழந்துவிடும். இதன்மூலம், வேதாந்தா (Hindustan Zinc) மற்றும் அதானி குழுமம் (Adani Group) போன்ற பெருநிறுவனங்களுக்கும் இனானி (Inani Marbles) போன்ற பளிங்கு மற்றும் கிரானைட் நிறுவனங்களுக்கும் ஆரவல்லியின் வளமிக்க தாதுக்கள் மற்றும் உலோகங்களை கொண்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தாரைவார்க்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

மேலும், ஆரவல்லி மலைத்தொடரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி (Reserved Forest), அறிவிக்கப்பட்ட வனப்பகுதி (Notified Forest), உத்தேச வனப்பகுதி (Deemed Forest) உள்ளிட்ட பகுதிகள் உள்ளதால் அவை பிரிவு ஏ மற்றும் பி (Category A and B) ஆகிய சட்டப்பூர்வ பாதுகாப்பையும், அவற்றில் சில பகுதிகள் “சூழலியல் உணர்திறன் மண்டலம்” (Eco-Sensitive Zone – ESZ) என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன. இங்கு எந்தவிதமான சுரங்கப் பணிகளும் மேற்கொள்ள அனுமதி கிடையாது.

ஆனால், 2024-25-ஆம் ஆண்டுகளில் சுற்றுச்சூழல் அனுமதி (Environment Clearance) பெறுவதற்கு பல்வேறு சட்டத் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை விதிமீறித் தொடங்கப்பட்ட திட்டங்களுக்குப் பின்னேற்பு அனுமதி (Ex-post Facto – சுரங்கம் போன்ற செயல்பாடுகளை தொடங்கிவிட்டு பின்னர் அனுமதி பெறுவது) பெற வழிவகை செய்வதோடு, சிறிய அளவிலான சுரங்கங்களுக்குப் பொதுமக்களின் கருத்தைக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலையையும் உருவாக்கியுள்ளன. அதேபோல், 2023-இல் கொண்டுவரப்பட்ட வன (பாதுகாப்பு) திருத்தச் சட்டங்களிலும் பல்வேறு சட்டத் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த வாய்ப்புகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் கார்ப்பரேட் சுரங்க நிறுவனங்கள், ஒரு பெரிய மலைப்பகுதியைச் சிறிய துண்டுகளாகப் பிரித்துக் காட்டி அவற்றை பிரிவு பி2 (Category B2 – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தேவையில்லை) என்கிற வரையறைக்குள் கொண்டுவந்து அனுமதி பெறுவது (Salami Slicing); ஆவணங்களில் “மலை” அல்லது “வனம்” என்பதை “தரிசு நிலம்” என மாற்றுவது போன்ற உத்திகளைக் கையாண்டு மலைகளை கூறுபோடுகின்றன.

இத்தகைய சூழலில், உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பானது ஆரவல்லி மலையை கேள்விக்கிடமற்ற வகையில் கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கே அடித்தளமிட்டுக் கொடுத்துள்ளது.

மக்கள் போராட்டங்களுக்கு அடிபணிந்த உச்சநீதிமன்றம்

பகாசுர சுரங்க நிறுவனங்களுக்கு ஆரவல்லியை படையலிடுவதற்கு சாதகமாக வெளிவந்த இந்தத் தீர்ப்பையடுத்து, இராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள “சேவ் ஆரவல்லி” அறக்கட்டளை (Save Aravalli Trust) போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டங்களில் இறங்கினர். இது ஒட்டுமொத்த நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது.

மக்களின் போராட்டத்தைக் கண்டு பாசிச கும்பல் குலைநடுங்கி போனது. எனவேதான், கடந்த டிசம்பர் 29, 2025 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்கை எடுத்து “100 மீட்டர் விதி”யை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.

ஜனவரி 21, 2026 அன்று மீண்டும் நடைபெற்ற வழக்கு விசாரணையில், பழைய குழுவில் இருந்தவர்கள் சூழலியலை விட அரசு நிர்வாகத்திற்கே முன்னுரிமை அளித்தனர் என்று கூறி, அவர்களின் பரிந்துரையை நிராகரித்து இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது. மேலும், உண்மையான சூழலியல் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய ஒரு புதிய “உயர் அதிகாரக் குழுவை” அமைக்க உத்தரவிட்டுள்ளது. புதிய நிபுணர் குழுவின் அறிக்கை வரும்வரை, ஆரவல்லி பகுதிகளில் எந்தப் புதிய சுரங்கக் குத்தகையும் வழங்கப்படக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், புதிய நிபுணர் குழுவானது “கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீட்டை எளிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூவிவந்த முன்னாள் நீதிபதி ஹேமந்த்‌ குப்தா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது அக்குழுவின் லட்சணத்தைக் காட்டுகிறது. இனி எத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டாலும் அவை பழைய சுரண்டலைப் புதிய முறையில் செய்வதற்கு அரசு பயன்படுத்தும் ஒரு திரையாக இருக்குமே ஒழிய, ஒருபோதும் சுரண்டலைத் தடுக்காது என்பதே எதார்த்தம்.

நீதிமன்றத்தின் துணையுடன் நாசமாக்கப்படும் இயற்கை வளங்கள்

இது ஒருபுறமிருக்க, நிக்கோபார் பழங்குடியின மக்களையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் “தி கிரேட் நிக்கோபார் மெகா திட்டத்தை” நடைமுறைப்படுத்துவதில் ஒன்றிய மோடி அரசு தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்தது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் (என்.ஜி.டி.) காடுகளை அழிப்பது குறித்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும் இரு வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவ்வழக்குகளில் இறுதித் தீர்ப்புகள் முடிவாகவில்லை என்றாலும் இந்த நாசகர திட்டத்தை எந்த தங்குதடையுமின்றி நைச்சியமாக நடைமுறைப்படுத்தி வருகிறது பாசிச கும்பல். நிக்கோபார் பழங்குடியின மக்களை அவர்களது முன்னோர்களின் பாரம்பரிய நிலங்களை கைவிட்டு “சரணடையும் சான்றிதழில்” (Surrender Certificate) கையெழுத்திடுமாறு கூட்டம் நடத்தி மிரட்டுவது; கார்ப்பரேட் முதலீடுகளை ஈர்ப்பது என முன்னேறிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றமோ இதனை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆரவல்லி வழக்கிலும் போதிய அளவில் வாதங்களை கேட்டறியாமலும், இறுதி விசாரணையை வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே நடத்தியும் தீர்ப்பெழுதியது உச்சநீதிமன்றம்.

ஆரவல்லி மற்றும் நிக்கோபார் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மாசுபாடு, காடுகள், வனவிலங்கு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு வழக்குகளும் அவசரகதியிலும் பாதிக்கப்படும் தரப்பினரின் கருத்துக்களை கேட்காமலுமே நடத்தப்படுகிறது. இதன் உச்சமாக, கார்ப்பரேட்டுகள் திட்டங்களை தொடங்கிவிட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு (Ex-post Facto) விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்தாண்டு இறுதியில் நீக்கி உத்தரவிட்டது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு.

இவ்வாறு ‘தேசிய பாதுகாப்பு’ மற்றும் ‘பொருளாதார வளர்ச்சி’ என்கிற போர்வையில் சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்து, மீள முடியாத இயற்கை பேரழிவை நோக்கி இந்தியாவைத் தள்ளிக் கொண்டிருக்கும் பாசிச கும்பலுக்கு பக்கபலமாக செயல்படுகிறது உச்சநீதிமன்றம்.

களப்போராட்டம் ஒன்றே தீர்வு!

பாசிச கும்பலின் இந்த மக்கள் விரோத சட்டத்திட்டங்களை நிறைவேற்றித் தரும் வகையில் நீதித்துறை முழுவதுமே மறுவார்ப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், சட்டப் போராட்டத்தின் வழியாக மட்டும் உரிமைகளை மீட்டுவிடலாம் என்று நம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அது  புதைக்குழிக்குள்ளேயே உழன்று கொண்டிருப்பது போன்ற நடவடிக்கையே ஆகும்.

மறுபுறம், காஞ்சா கச்சிபவுலியில் காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராக ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் போராடியது முதல் டெல்லி மாசுபாட்டிற்கு எதிரான மக்கள் போராட்டம் வரை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு இந்தக் கட்டமைப்பை எதிர்த்து வீதியில் இறங்கி உறுதியாக போராடிவரும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளாய் திகழ்கின்றன.

இதனை உணர்ந்து, “சுற்றுச்சூழல் பாதுகாப்பை சிதைக்கும் அனைத்து சட்டங்களையும் உடனடியாக இரத்து செய்!”, “சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களில் எந்தவிதமான சுரங்கப் பணிகளையும் தொடராதே, தொடங்காதே!”, “சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்திவரும் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து இயற்கை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்!” உள்ளிட்ட முழக்கங்களின் கீழ் இந்திய உழைக்கும் மக்களை அணிதிரட்டி களப்போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

அதோடு நின்றுவிடாமல், ஆர்.எஸ்.எஸ்‌. – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிச கும்பலை முறியடிக்கும் பாசிச எதிர்ப்பு‌ ஜனநாயகக் குடியரசு என்கிற மாற்றுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான பாதையில் மக்களை களமிறக்குவது சுற்றுச்சூழல் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், அனைத்து ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர இயக்கங்களின் உடனடி கடமையாகும்.


ஜென்னி லீ

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன், 2014 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 8 | ஜூன், 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



இந்துராஷ்டிரத்தின் புதிய சோதனைச்சாலையாகும் ஒடிசா

காவிக் கும்பலின் தாக்குதலை எதிர்த்து போராடும் கிறிஸ்தவ மக்கள்.

பா.ஜ.க. கும்பல் தான் ஆட்சியைக் கைப்பற்றும் மாநிலங்களில் அரசு – அதிகார வர்க்கத்தின் துணையுடன் சட்டப்பூர்வமாகவும், ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் குண்டர்கள் மூலம் சட்டவிரோதமாகவும் இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறது. அந்தவகையில், குஜராத், உத்தரப்பிரதேசம், அசாம் போன்ற இந்துராஷ்டிரத்திற்கான சோதனைச்சாலைகளின் வரிசையில் தற்போது ஒடிசா மாநிலமும் இணைந்திருக்கிறது.

ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான “பிஜூ ஜனதா தளம்” கட்சியின் 24 ஆண்டுகால ஆட்சியை வீழ்த்தி கடந்த 2024 ஜூன் மாதத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. அதிலிருந்து ஒடிசாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித் மக்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள் இதுவரை இல்லாத வகையில் உச்சநிலையை அடைந்து புதிய இயல்புநிலையாக மாற்றப்பட்டு வருகிறது.

கிறிஸ்தவர்கள்: காவிகளின் முதன்மை இலக்கு

2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ஒடிசா மாநிலத்தில் 11.6 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 70 சதவிகிதம் பேர் (8 லட்சத்திற்கும் அதிகமாக) பழங்குடியின மக்கள் ஆவர். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த பழங்குடியின மக்களே காவிகளின் முதன்மை இலக்காக உள்ளனர்.

ஜனவரி 4-ஆம் தேதி, ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தின் பஜ்ராங் கிராமத்தில் வழிபாட்டுக் கூட்டத்தை நடத்துவதற்காக சென்றிருந்த பாதிரியார் பிபின் பிஹாரி நாயக், கட்டாய மதமாற்றம் செய்வதாகக் கூறி சங்கப் பரிவாரக் குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். மூங்கில் கம்புகளால் அடித்து, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்டார்; வலுக்கட்டாயமாக கழிவுநீரை அவர் வாயில் ஊற்றி, மாட்டுச் சாணத்தை வாயில் திணித்து சகித்துக்கொள்ள முடியாத சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்பவம் ஒடிசாவில் கிறிஸ்தவர்கள் மீது தொடுக்கப்படும் கோரத் தாக்குதலுக்கு ஒரு சான்று மட்டுமே.

இதேபோல், கன்னியாஸ்திரீகள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசுப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த தெருவோர வியாபாரிகள், தேவாலயங்களில் வழிபடும் பழங்குடியின மக்கள் என கிறிஸ்தவர்கள் பலரை ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் கொடூரமாகத் தாக்கும் காணொளிகள் அவ்வப்போது வெளியாகிக் காண்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன.

உண்மையில், காவிக் குண்டர் படையே ‘கர்வாப்சி’ (தாய் மதத்திற்கு திரும்புதல்) என்ற பெயரில் கிறிஸ்தவ பழங்குடியின மக்களை வன்முறையின் மூலம் இந்து மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்து வருகிறது.

இதன் உச்சமாக, இறந்த கிறிஸ்தவர்களின் உடலைக்கூட இந்து மதவெறிப்பிடித்த மிருகங்கள் விட்டு வைப்பதில்லை. பழங்குடி கிராமங்களில் இறந்த கிறிஸ்தவர்களின் உடலை ஊரின் பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய மறுப்பது; உடலை சடங்குகள் மூலம் ‘இந்துவாக மதம் மாற்றிய’ பிறகே அடக்கம் செய்ய அனுமதிப்பது என்ற புதிய வகையிலான வன்முறை ஒடிசாவில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மதம் மாறாமல் அடக்கம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் உடலை குழியிலிருந்து தோண்டி எடுத்து சிதைப்பது, திருடிச் செல்வது என பிணங்களையும் வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனர்.

படுகொலைக்கு உள்ளாக்கப்படும் இஸ்லாமியர்கள்

கடந்த ஜனவரி 14-ஆம் தேதி, ஒடிசாவின் பாலசோர் நகரத்தின் ஜெயதேவா கஸ்பா பகுதியிலிருந்து கால்நடைகளுடன் வாகனத்தை ஓட்டிச் சென்ற ஷேக் மகந்தர் முகமது என்பவர் பஜ்ரங் தள் குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உடலில் தாக்குதலுக்கு உள்ளாகாத பாகங்களே இல்லை எனும் அளவிற்கு அவர் உடல் சிதைக்கப்பட்டிருந்தது. அவர் மயக்கமடைந்த நிலையிலும் மரக்கட்டைகளால் அவரைத் தாக்கி “ஜெய் ஸ்ரீ ராம்”, “கௌ மாதா கி ஜெய்” என்று கோஷமிட கட்டாயப்படுத்தும் காணொளி காண்போரை பதைபதைக்க வைக்கிறது.

மகந்தர் பசுக் கடத்தலில் ஈடுபடுபவர் அல்ல, கொத்தனாராக வேலை செய்பவர் என்று அறிந்தேதான் காவிக் குண்டர்கள் இத்தாக்குதலை தொடுத்துள்ளனர். இது காவிக் கும்பலின் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பையும் திட்டமிட்டு கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற சதி நோக்கத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

இதேபோல, இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் கட்டாக் பகுதியில் தசரா பண்டிகையின் போது ஊர்வலங்களை நடத்தி திட்டமிட்டு கலவரத்தை நடத்தியிருக்கிறது காவிக் கும்பல்.

மேலும், ஒடிசாவில் தங்கி வேலை செய்யும் மேற்குவங்கத்தை சேர்ந்த இஸ்லாமிய புலம்பெயர் தொழிலாளர்களை ‘சட்டவிரோதக் குடியேறிகள்’, ‘வங்கதேச ஊடுருவிகள்’ என்றெல்லாம் பொய்யாகக் கூறி தாக்கி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து தாக்குவது; தெருக்களில் நடந்து சென்றால் “நீ இந்தியனா? வங்கதேசியா?” என்று கேள்வியெழுப்பி தாக்குவது என்று இக்குண்டர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இத்தாக்குதல்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

வன்முறைக்கு இரையாகும் தலித்துகளும் பெண்களும்

கடந்தாண்டு ஜூன் மாதத்தில் கஞ்சம் மாவட்டத்தில் தலித் பனா சமூகத்தை சார்ந்த இரண்டு ஆண்கள் பசுக்களை கடத்தினர் என்று பொய் குற்றஞ்சாட்டி அவர்கள் மீது மனிதத்தன்மையற்ற தாக்குதலை நடத்தியது காவி குண்டர் படை.  தலையில் ஒரு பகுதியை மொட்டையடித்து, பற்களுக்கு இடையில் புல் அரிவாளை வைத்து, ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு கால்நடையைப் போல முழங்கால்களில் ஊர்ந்துவரச் செய்துள்ளது அக்கொடூர கும்பல்; புற்களை தின்ன வைப்பது, கழிவுநீரை குடிக்கச் செய்வது போன்ற கொடூரங்களையும் அரங்கேற்றியது. இச்சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒடிசாவில் ‘பசு பாதுகாப்பு’ என்ற போர்வையில் சாதி இந்துக்கள் தலித் மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருவதாக “தி வயர்” இணையதளம் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளது.

அதேபோல, ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்கள், சிறுமிகள் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும், காதலனுடன் பேசிக் கொண்டிருக்கும் பெண்களை மிரட்டி வன்கொடுமை செய்வதும் கட்டுங்கடங்காத அளவிற்கு அதிகரித்து அன்றாட நிகழ்வாகி வருகிறது.

2025 ஜூலையில் பாலசோரில் உள்ள பக்கீர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் 20 வயது மாணவியை துறைத் தலைவர் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளான். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம், பாலசோர் போலீசு, பாலசோர் பா.ஜ.க. எம்.எல்.ஏ-விடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாணவி கல்லூரியிலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இம்மாணவி ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி-யைச் சார்ந்தவர் என்பது காவிக் கும்பலின் யோக்கியதையை திரைக்கிழித்துக் காட்டுகிறது. இவ்வழக்கில் ஏ.பி.வி.பி-யின் இணைச்செயலாளர் உட்பட இருவரை போலீசு கைது செய்துள்ளது.

இவ்வாறு, பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகள் மீதான குற்றச் சம்பவங்களில் அரசுக் கட்டமைப்பு முழுவதும் சங்கப் பரிவாரக் குண்டர்களுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது. குற்றச் செயல்களில் பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் குண்டர்கள் ஈடுபடுவது அம்பலமானாலும், அக்குண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது; தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது; தாக்குதல் நடந்துகொண்டிருக்கும் இடத்திற்கு காலதாமதமாக செல்வது என்று ஒடிசா போலீசு அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் மற்றொரு குண்டர் படையைப் போலவே செயல்பட்டு வருகிறது.

இவையெல்லாம், சங்கப் பரிவாரக் குண்டர்களின் கும்பலாட்சி ஒடிசாவில் அரங்கேறி வருவதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

அதானி – அகர்வால்களின் ஆதிக்கமே இந்துராஷ்டிரம்

ஒடிசா மாநிலமானது இரும்புத்தாது, பாக்சைட், குரோமைட், நிலக்கரி, மாங்கனீசு உள்ளிட்ட கனிம வளங்கள் நிறைந்து காணப்படும் மாநிலமாகும். இந்தியாவின் மொத்த இரும்புத்தாது இருப்பில் 50 சதவிகிதம் ஒடிசாவில் மட்டுமே உள்ளது. அதானி-அகர்வால்-ஜிண்டால் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்களும் இந்த கனிம வளங்களை பல பத்தாண்டுகளாக சூறையாடி வருகின்றன. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து இச்சூறையாடல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு கட்டாக் மாவட்டத்தில் உள்ள கண்டரேய், கந்துவாலி, ரஹாங்கோல் மற்றும் தலுவா கிராமங்களில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நிலக்கரி அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கையில் பா.ஜ.க. அரசின் துணையுடன் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தேவையான நிலக்கரிக்காக பிஜஹான், கோட்பஹேரி உஜெனி மற்றும் கோண்டுல்பாரா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

மேலும், பழங்குடியின மக்களின் நிலங்களை அதானி-அகர்வால் கும்பலுக்கு தாரைவார்ப்பது; முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கி சுரங்கத்துறையில் முதலீடுகளை குவிப்பது; ‘நக்சல் ஒழிப்பு’ என்ற பெயரில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பா.ஜ.க அரசு கனிம வளக் கொள்ளையை தீவிரப்படுத்தி வருகிறது.

அம்பானி – அதானி – அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலின் கொள்ளையை கட்டற்ற வகையில் மேற்கொள்வதற்கே, தனது பிளவுவாத அரசியல் மூலம் மக்களைத் துண்டாடி இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கிறது பாசிச கும்பல். ஒடிசாவில் சிறுபான்மையினர், பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருக்கும் அதேவேளையில், கனிமவள சூறையாடல் தீவிரமாகி வருவது இதனை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

மக்களிடையே வேர்பரப்பும் சங்கப் பரிவார அமைப்புகள்

ஒடிசாவில் “சிக்ஷ்ய விகாஸ் சமிதி” என்ற கல்வி அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகள், வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் கீழ் செயல்படும் ‘தொண்டு’ அமைப்புகள், ஏகல் வித்யாலயா என்ற ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் ஆகியற்றின் மூலம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் மக்கள் அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறது.

சிக்‌ஷ்ய விகாஸ் சமிதி என்ற கல்வி அமைப்பானது ஆர்.எஸ்.எஸ்-இன் வித்யா பாரதி என்ற கல்வி அமைப்பின் கீழ் செயல்பட்டுவரும் ஒடிசா மாநிலத்திற்கான பிரத்தியேக அமைப்பாகும். இதன் கீழ் சரஸ்வதி சிசு வித்யா மந்திர் மற்றும் சரஸ்வதி வித்யா மந்திர் என்ற பெயர்களில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் ஒடிசா முழுவதும் பற்றிப் படர்ந்திருக்கின்றன. நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளிகளில் படிக்கின்றனர். இப்பள்ளிகள் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளின் மூலம் இந்துத்துவ சித்தாந்தத்தை மாணவர்கள் மத்தியில் திட்டமிட்டு புகுத்துகின்றன.

வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற அமைப்பானது பழங்குடி மக்களை குறிவைத்து வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ்-இன் அமைப்பாகும். அதன் இணையதளத்தில், ஒடிசாவின் 24,931 பழங்குடி கிராமங்களில் இவ்வமைப்பு செயல்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. பள்ளிகள், மாணவர்களுக்கான விடுதிகள், சுகாதார மையங்களை நடத்துவதன் மூலம் பழங்குடி மக்களுக்கு சேவையாற்றுவதாகக் கூறிக்கொண்டு, கிறிஸ்தவ எதிர்ப்பின் மூலம் அம்மக்களிடம் இந்துத்துவ சித்தாந்தத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது. “கர் வாப்சி” என்ற பெயரில் கிறிஸ்தவ பழங்குடி மக்களை இந்து மதத்திற்கு மாற்றும் நடவடிக்கையிலும் இவ்வமைப்பு ஈடுபட்டு வருகிறது. கிறிஸ்தவ மக்கள் மீது பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் குண்டர்களால் நடத்தப்படும் தாக்குதல்களிலும் இவ்வமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது.

மேலும், ஏகல் வித்யாலயா என்ற ஒற்றை ஆசிரியர் பள்ளிகளும் பழங்குடி மக்கள் மத்தியில் இந்துத்துவ சித்தாந்தத்தை விதைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களே இப்பள்ளிகளின் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். பழங்குடி மக்களின் நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கங்களை சிறு வயதில் இருந்தே அவர்கள் மனதிலிருந்து அழித்து, கிறிஸ்தவ வெறுப்பை விதைக்கின்றனர்.

இத்தகைய சங்கப் பரிவார அமைப்புகள் மூலம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தனக்கான மக்கள் அடித்தளத்தை விரிவுப்படுத்தி வருகிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவதற்கு இத்தகைய வலைப்பின்னல் முக்கியமான காரணமாகும்.

பாசிஸ்டுகளின் குதிகால் நரம்பை அறுத்தெறிவோம்!

ஒடிசாவில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் மக்கள் மத்தியில் வேர்பரப்பி வளர்ந்து வந்ததற்கு தற்போது எதிர்க்கட்சியாக உள்ள நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்திற்கு முக்கியப் பங்கு உள்ளது. 2000-ஆம் ஆண்டில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துதான், நவீன் பட்நாயக் முதன்முறையாக ஒடிசாவின் முதல்வரானார். அவரது ஆட்சிக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மக்கள் மத்தியில் வேகமாக வளர்ந்தன.

பின்னாளில், சிறுபான்மை மக்களின் வாக்குகளை தக்கவைத்துக் கொள்வதற்காக நவீன் பட்நாயக் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டாலும், நவீன் பட்நாயக் மேற்கொண்டுவந்த மிதவாத இந்துத்துவ, கவர்ச்சிவாத அரசியல் பாசிச கும்பலுக்கே சாதகமாக அமைந்தது. சான்றாக, பா.ஜ.க-வின் “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கத்திற்கு எதிராக “ஜெய் பூரி ஜெகன்நாதர்” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்களின் வாக்குகளை கவர விரும்பினார் நவீன் பட்நாயக். ஆனால், அந்த “ஜெகன்நாதரே மோடியின் பக்தர்தான்”, “ஜெகன்நாதர் கோயிலுக்கு ஆபத்து” என்று பிரச்சாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றது பா.ஜ.க. கும்பல்.

இதன் விளைவாக, ஒடிசாவில் பிஜூ ஜனதா தளத்தின் மக்கள் அடித்தளத்தையும் பா.ஜ.க. கும்பல் தனதாக்கிக் கொண்டுள்ளது. தற்போது, ஒடிசாவில் எதிர்க்கட்சியே இல்லாத நிலை உருவாகியிருப்பதாக முதலாளித்துவப் பத்திரிகையாளர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாசிச எதிர்ப்பு சித்தாந்தமும் திட்டமுமின்றி பாசிச சக்திகளை எதிர்ப்பதாக எதிர்க்கட்சிகள் சொல்வது ஒரு தற்கொலை பாதை என்பதையே இது உணர்த்துகிறது. ஒடிசா, ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வால் துடைத்தெறியப்பட்டு வருவதும் இதனையே நிரூபிக்கிறது. மாறாக, பாசிஸ்டுகளின் குதிகால் நரம்பான மக்கள் அடித்தளத்தை சரிக்கும் வகையிலான மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே பாசிசத்தை வீழ்த்துவதை நோக்கி முன்னேற முடியும்.

ஒடிசாவிலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தசரா பண்டிகையின் போது கட்டாக்கில் மதக் கலவரத்தை தூண்டிய குண்டர்களுக்கு எதிராக கட்டாக் மக்கள் மதநல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து பேரணி நடத்தியிருக்கின்றனர்.

அதேபோல், ஒடிசாவின் ராயகடா மற்றும் கலாஹண்டி மாவட்டங்களில் உள்ள சிஜிமாலி மலைப் பகுதிகளில் வேதாந்தா நிறுவனம் பாக்சைட் சுரங்கத்தை அமைப்பதற்கு எதிராக அம்மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் 2023-ஆம் ஆண்டிலிருந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு நெஞ்சுரத்துடனும் மலையை விட்டு வெளியேற மறுத்தும் போராடி வருகின்றனர்.

அதேபோல, பர்கர் மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்கள் புனிதமாக கருதும் காந்தமர்தன் மலைகளை சுற்றியுள்ள கிராமங்களில் 45 ஹெக்டேர் நிலத்தை “மகாநதி மைன்ஸ் அண்ட் மினரல்ஸ் லிமிடெட்” எனும் அதானி குழுமத்தின் துணை நிறுவனத்திற்கு தாரைவார்த்ததற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஒடிசாவில் அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் ஒடிசா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல்களை தடுக்கிறோம் என்ற பெயரில் டிஜிட்டல் முறைப் பதிவுகளை கட்டாயமாக்கி எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பொது விநியோக அட்டையை நீக்கியிருப்பது; விவசாயிகளிடமிருந்து உணவு தானியக் கொள்முதல் குறைக்கப்படுவது; தங்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அரசு அதிகாரிகள் மீது பா.ஜ.க. குண்டர்கள் வெளிப்படையாக தாக்குதல் நடத்துவது; வேலையின்மை அதிகரித்திருப்பது போன்றவை பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான எதிர்ப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கின்றன.

ஆகவே, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தனித்தனியாக போராடும் மக்களை “பாசிச எதிர்ப்பு” என்ற அடிப்படையில் ஒன்றிணைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகள் போராட வேண்டும்.  அப்போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலை தடை செய்யும் வகையிலும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்றுக் கட்டமைப்பை நிறுவும் வகையிலும் வளர்த்தெடுக்க வேண்டும்.

அப்போராட்டங்களே சங்கிக் கும்பலுக்கு சம்மட்டி அடி கொடுக்கும்.. ஒடிசா இந்துராஷ்டிரத்தின் சோதனைச்சாலையாக மாற்றப்படுவதை தகர்த்தெறியும்!


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே, 2014 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 7 | மே, 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தேவை: மாற்று அதிகாரத்துக்கான மக்கள் எழுச்சி !
  • புரட்சிக அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சார இயக்கம்.
  • நீதிமன்றம், தேர்தல் ஆணையம் : ஜெயாவின் குற்றக் கூட்டாளிகள்!
  • ஒளிரும் குஜராத் : இராம ஜென்மபூமி | பாகம் 2
  • புதுவை பல்கலைக்கழகம் : பார்ப்பனக் கொட்டத்தை அடக்கிய மாணவர் போராட்டம்!
  • உண்மை சுடுகிறது! பா.ஜ.க அலறுகிறது!!
  • “தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது! மக்கள் போராட்டமே தீர்வு !! – கூடங்குளத்தில் நடத்தப்பட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கருத்தரங்கம்
  • ஆம் ஆத்மி: சிறப்பு இரகசியம்!
  • இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் : இந்தியா மீது பூட்டப்பட்ட பொன்விலங்கு!
  • வெனிசுலா : அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடுத்த ஆக்கிரமிப்புப் போர் !
  • கொத்தடிமைத்தனம், விபச்சாரம் : தனியார்மயம் தீவிரப்படுத்தும் பேரபாயங்கள்!
  • ‘வளர்ச்சி’ : கொழுத்தது யார்? தெருவில் நிற்பது யார்?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல், 2014 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 6 | ஏப்ரல், 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தேர்தல் கமிசனின் கெடுபிடிகள் : அதிகாரத் திமிரில் நடக்கும் கோமாளிக் கூத்து!
  • மறுகாலனியாக்கம் – ஆணாதிக்கம் வீழ்த்துவோம் ! பெண் விடுதலையைச் சாதிப்போம்!!
  • யாருக்கு வேண்டும் தேர்தல்?
  • தேர்தல் : கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் சூதாட்டம்! – உங்கள் ஓட்டு!
    அவர்கள் சீட்டு !!
  • காங்கிரசு – பா.ஜ.க : நீயும் நானும் ஒண்ணு ! வாக்காளர் வாயில மண்ணு!!
  • பிரபஞ்சப் பெருங்கடமை முடித்து, ஓட்டுப் பொறுக்கப் புறப்பட்டார் உதயகுமாரன்!
  • போலி கம்யூனிஸ்டுகள் : பாசிச ஜெயலலிதாவின் பிழைப்புவாத அடிமைகள்!
  • ஊடக விலை மாந்தர்கள்!
  • ஏழைகள் என்றால் அத்தனை இளப்பமா? – உசிலை ஸ்டேட் வங்கியின் அடாவடித்தனத்திற்கெதிராக வி.வி.மு.வின் ஆர்ப்பாட்டம்
  • உக்ரைன் : அமெரிக்காவின் மேலாதிக்கப் பேராசையில் விழுந்த மண்!
  • ‘தி இந்து’க்கள் கேட்கிறார்கள், “எதுவெல்லாம் தேசதுரோகம்?”
  • நெய்வேலி : தொழிலாளியைக் கொலை செய்து தொழிலைப் பாதுகாக்கும் படை!
  • மர்மக் காய்ச்சலும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை!
  • இயற்கை மனித-குலத்தின் முதல் எதிரி முதலாளித்துவ பயங்கரவாதமே!
  • நீலநரியின் சாயம் வெளுத்தது!
  • ஏழு தொழிலாளர் படுகொலை: முதலாளித்துவ பயங்கரவாதத்தின் பேயாட்டம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச், 2014 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 5 | மார்ச், 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ராஜீவ் கொலை வழக்கு – எழுவர் விடுதலை : பார்ப்பன ஜெயாவின் கபடத்தனமும் பாசிச காங்கிரசின் தமிழின விரோதமும்
  • த.மு.மு.க. – தமிழக தாலிபான்
  • தரகு முதலாளிகளின் சேவையில்… மோடி – ராகுல் போட்டா போட்டி !
  • மோடி 24×7 தேசிய இம்சை !
  • வழக்கறிஞர்களுக்கு, நீதியரசர்களுக்கு கிரிமினல் சட்ட மேதை ஜெயலலிதாவின் சவால்கள்!
  • “புரட்சிகரப் போராட்டமின்றி பார்ப்பன-பாசிசத்தை முறியடிக்க முடியாது!” – தில்லை கோயில்-மீட்பு ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு விடுத்த அறைகூவல்
  • “நமது நாட்டுக்குத் தேவை ஒரு புரட்சி” – மாருதி சுசுகி முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள தொழிலாளர்களின் போராட்ட அனுபவங்கள் உணர்த்திய உண்மை.
  • செய்திப் பதிவுகள்
    1. நிடோ டானியம் படுகொலை : இந்து-இந்திய தேசியத்தின் இனவெறி!
    2. சாலை சுங்க வரி : தனியார் முதலாளிகளின் சட்டபூர்வ வழிப்பறி!
    3. பூஷண் ஸ்டீல்: முதலாளித்துவ பயங்கரவாதத்தின் கோரம்!
  • இந்திய – ஜப்பானிய ஒப்பந்தம் : அமெரிக்காவின் போர்ச்சக்கரத்தில் இந்தியா
  • போஸ்கோவின் கனிம வளக் கொள்ளை – உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் சூறை
  • கனிமவளக் கொள்ளைக் கும்பலின் பிடியில் ஒரிசா! நீதிபதி ஷா கமிசன் அம்பலப்படுத்திய உண்மைகள்
  • சத்திய சோதனை

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஈரான்: மதக் கொடுங்கோன்மை – ஏகாதிபத்திய முற்றுகைக்கு இடையில் வெடித்தெழும் மக்கள் போராட்டம்!

ஒரு மாதத்திற்கும் மேலாக உறுதியுடன் போராடிவரும் ஈரான் மக்கள்.

ரலாற்றின் மிக இக்கட்டானதொரு அரசியல் சூழலில் ஈரான் சிக்கியுள்ளது. ஒருபுறம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரமான பொருளாதாரத் தடைகள்; மறுபுறம், அந்தத் தடைகளையே வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு தன் சொந்த மக்களைச் சுரண்டும் ஈரானிய மத அடிப்படைவாத அரசின் பாசிச ஒடுக்குமுறை. இந்த இரட்டைத் தாக்குதலுக்கு நடுவில் சிக்கித் தவிக்கும் ஈரானிய உழைக்கும் வர்க்கம், இன்று வீதிக்கு வந்துள்ளது. ஈரானிய வரலாற்றில் இது முக்கியமான தருணமாகும்.

“ரொட்டி, வேலை, சுதந்திரம்” என்று ஈரானிய தெருக்கள் தோறும் எழுப்பப்படும் முழக்கங்கள் வெறும் ஆட்சி மாற்றத்திற்கானவை மட்டுமல்ல; அவை நாற்பது ஆண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தின் ஜனநாயக வேட்கைக்கான எரிமலை வெடிப்பாகும்.

இந்தப் போராட்டங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஈரானின் மதவாத அரசைக் கவிழ்த்து, இலங்கை – வங்கதேச பாணியில் தனது பொம்மை அரசை நிறுவத் துடிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். எந்த வகையிலும் இதைச் செய்து முடிக்க வேண்டுமென்ற வெறியுடன் கடற்படைகளைக் கொண்டு ஈரானை முற்றுகையிட்டு வருகிறது.

இந்தச் சூழலில், ஈரான் மக்கள் போராட்டத்தின் வேர்களைப் புரிந்துகொள்ள, கடந்த நாற்பது ஆண்டு கால ஈரானின் பொருளாதாரப் பாதையை ஆய்வு செய்வது அவசியமாகிறது. குறிப்பாக, மக்கள் சொத்துக்கள் எவ்வாறு மதகுருமார்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றன என்பதிலிருந்து இதைத் தொடங்க வேண்டும்.

அரசு-மதத் தரகு முதலாளித்துவம்: ‘போனியாதுகளின்’ ஆதிக்கம்

1979-இல்  ஷா மன்னன் ஆட்சியதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டதற்கு பிந்தைய காலகட்டத்தில், ஷா மன்னன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டன. மேலோட்டமாகப் பார்க்கும் போது சோசலிசத் திசையிலான நடவடிக்கையாகத் தோன்றிய இது, உண்மையில் மக்கள் சொத்துக்களை மதகுருமார்களின் இரும்புப் பிடிக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாகவே முடிந்தது. ஈரானின் ஆளும் வர்க்கம் எப்படி மாறியது என்பதைப் புரிந்துகொள்ள இது மிக அவசியம்.

இவ்வாறு அரசுடைமையாக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் “போனியாதுகள்” (Bonyads) எனப்படும் மத அறக்கட்டளைகளிடம் ஒப்படைக்கப்பட்டன. ‘அஸ்தான் குத்ஸ் ரசாவி’ மற்றும் மதத் தலைவரின் நேரடிப் பார்வையில் இயங்கும் ‘செதாத்’ போன்ற அமைப்புகள், ஈரானின் எண்ணெய் அல்லாத பொருளாதாரத்தில் சுமார் 20 முதல் 30 சதவிகிதம் வரை (சில மதிப்பீடுகளில் 40 சதவிகிதம் வரை) கட்டுப்படுத்துகின்றன. இதன் மூலம் அரசுக்குள்ளேயே இயங்கும் ஒரு நிழல் அரசாகவே திகழ்கின்றன.

இந்த அறக்கட்டளைகள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கோ கணக்குக் காட்ட வேண்டியதில்லை; இவற்றுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இவை உச்சபட்ச மதத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு ‘கும்பல் பொருளாதாரமாக’ மாறி, நாட்டின் பொதுச் செல்வத்தை ஒரு சிறு கூட்டத்திடம் குவித்துள்ளன.

பின்னாட்களில் அரசு முன்னெடுத்த ‘தனியார்மயமாக்கல்’ நடவடிக்கைகளில், அரசு நிறுவனங்கள் விற்கப்பட்டபோது, அவற்றை வாங்கியது உண்மையான தனியார் முதலாளிகள் அல்ல; மாறாக, இந்த மத அறக்கட்டளைகளும், ஈரானியப் புரட்சிகரப் பாதுகாவலர் படையின் துணை நிறுவனங்களும்தான். இதுபோல, மக்கள் நலனுக்கு பயன்படாத வகையில் செல்வத்தைக் குவித்ததே ஈரானியப் பொருளாதாரத்தின் தேக்கநிலைக்கு முக்கியக் காரணமாகும். இவ்வாறு மதகுருமார்களின் கையில் குவிந்த பொருளாதாரம், அடுத்த கட்டமாக உலக வங்கியின் வழிகாட்டுதலோடு நவதாராளவாதச் சுரண்டலுக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டது.

‘நவதாராளவாதத்’ தாக்குதல்: ஐ.எம்.எஃப். வழியில் ஈரான்

1988-இல் ஈரான்-ஈராக் போர் முடிவுக்கு வந்த பிறகு, ஈரானியப் பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. அதுவரை “ஏகாதிபத்திய எதிர்ப்பு” மற்றும் “தற்சார்பு பொருளாதாரம்” என்று பேசிவந்த ஈரானிய ஆட்சியாளர்கள், போருக்குப் பிந்தைய “மறுகட்டமைப்பு” என்ற பெயரில், தங்களது கொள்கையைத் தலைகீழாக மாற்றினர். அரசியல் மேடைகளில் “பெரிய சாத்தான்” என்று அமெரிக்காவை விமர்சித்துக் கொண்டே, பொருளாதாரக் கொள்கையில் அதே அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் விசுவாசமான சீடர்களாக மாறினர்.

1990-களில் அப்போதைய அதிபர் அக்பர் ஹுசைனி ரஃப்சஞ்சானி, ஐ.எம்.எஃப்-இன் “கட்டமைப்புச் சீரமைப்புத் திட்டத்தை” ஏற்றுக்கொண்டார். இதன் விளைவாக, மக்களுக்கான உணவு மற்றும் எரிபொருள் மானியங்கள் வெட்டப்பட்டு, பொருட்கள் சந்தை விலைக்கு விற்கப்பட்டன. 2011-இல் பயனாளிகளுக்கு நேரடியாக மானியத்தைக் கொடுக்கும் ஈரானின் “மானியச் சீர்திருத்தச் சட்டத்தை” உலக வங்கி பாராட்டியது, ஈரான் அரசின் மக்கள் விரோதப் போக்கிற்குச் சான்றாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 44 திருத்தப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. ஆனால், இந்த நிறுவனங்களை “இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாவலர் படை” (IRGC) மற்றும் மத அறக்கட்டளைகள் வாங்கியதன் மூலம், அரசுக்குள்ளேயே ஒரு ‘தனியார் சாம்ராஜ்யம்’ உருவானது.

இந்த நவதாராளவாதக் கொள்கையின் மிகக் கொடூரமான தாக்குதல் தொழிலாளர் வர்க்கத்தின் மீதுதான் விழுந்தது. ஈரானியத் தொழிலாளர் செய்தி நிறுவனம் மற்றும் தொழிற்சங்கத் தரவுகளின்படி, இன்று ஈரானில் ஆகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பணிப்பாதுகாப்பற்ற தற்காலிக ஒப்பந்தங்களில் உள்ளனர். ஊதியம், பணிக்காலம், சலுகைகள் என எதுவும் குறிப்பிடப்படாத வெற்றுத் தாள்களில் கையெழுத்திடக் கட்டாயப்படுத்தும் “வெள்ளை ஒப்பந்தங்கள்” ஒரு நவீனக் கொத்தடிமை முறையாக மாறியுள்ளது.

ஈரானியத் தொழிலாளர் செய்தி நிறுவன அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்களின் உண்மையான ஊதியம் பன்மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு தொழிலாளியின் மாதச் சம்பளம், அவரது குடும்பத்தின் 5 அல்லது 6 நாட்களுக்கான செலவுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்ற அளவுக்கு மோசமான அவலநிலை நிலவுகிறது.

தடைகளும், ஐ.ஆர்.ஜி.சி. எனும் ‘இராணுவ-வணிக’ ஏகபோகமும்

ஈரானிய மக்களின் துயரத்திற்கு மற்றொரு முக்கியக் காரணம் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள். 2012-இல் ஸ்விஃப்ட் (SWIFT) வங்கி அமைப்பிலிருந்து நீக்கம் மற்றும் 2018-இல் டிரம்ப் அறிவித்த “அதிகபட்ச அழுத்தம்” (Maximum pressure campaign) ஆகியவை ஈரானின் பொருளாதார நரம்புகளைத் துண்டித்தன. உயிர் காக்கும் மருந்துகளைக்கூட இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால், அரியவகை தோல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருந்துக் கட்டுகள் கிடைக்காமல், 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

முரண்பாடாகத் தோன்றினாலும், அமெரிக்கத் தடைகள் ஈரானின் ஆளும் வர்க்கமான ‘இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாவலர் படைக்கு’ (ஐ.ஆர்.ஜி.சி.) ஒரு பொன்னான வணிக வாய்ப்பாகவே அமைந்தது. தடைகளை மீறி வர்த்தகம் செய்வதில் வெனிசுலா மற்றும் கியூபா போன்ற நாடுகளுடன் ஈரானை எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. கியூபா போன்ற நாடுகள் ஏகாதிபத்தியத் தடைகளைத் தகர்த்து மக்களின் பசியைப் போக்குவதற்காகப் போராடுகின்றன. ஆனால், ஈரானில் நிலைமை நேர்மாறானது. இங்கு ‘தடைகளை உடைத்தல்’ என்ற பெயரில் நடக்கும் நிழல் வர்த்தகம் மக்களின் நலனுக்கானது அல்ல; மாறாக, ஐ.ஆர்.ஜி.சி-யின் கஜானாவை நிரப்பும் ஏகபோக வணிகமாகும்.

இந்த ஐ.ஆர்.ஜி.சி. என்பது போனியாதுகளைப் போன்றே மதவாத சர்வாதிகாரத்தின் ஒரு தனிச்சிறப்பான சுரண்டல் கட்டமைப்பாகும். ஈரானின் அதிகாரப்பூர்வ இராணுவத்தைக் காட்டிலும் அதிநவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் விரிவான உளவுப் படை ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இது, ‘அரசுக்குள் இயங்கும் அரசு’ ஆகும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, உச்சபட்சத் தலைவருக்கு மட்டுமே கட்டுப்படும் இந்த இராணுவம், நடைமுறையில் ஈரானின் பெரும் பொருளாதார ஏகபோகங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு கார்ப்பரேட் கும்பலாகச் செயல்படுகிறது.

ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் (2011), ஐ.ஆர்.ஜி.சி-யை “எங்கள் கடத்தல் சகோதரர்கள்” என்று அழைத்தார். அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இரகசியத் துறைமுகங்கள் வழியாக, வரி ஏய்ப்புச் செய்யப்பட்ட சொகுசுப் பொருட்களும், தரம் குறைந்த நுகர்வுப்பொருட்களும் உள்ளே வருகின்றன. இது சட்டப்படி வரி செலுத்தி பொருட்களை இறக்குமதி செய்யும் வணிகர்களின் முதுகெலும்பை ஒடிக்கும் செயலாகும். அமெரிக்கத் தடையைப் பயன்படுத்தி, வெளிநாட்டுப் போட்டி நிறுவனங்களை விரட்டிவிட்டு, ஈரானின் எண்ணெய், எரிவாயு மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளை ஐ.ஆர்.ஜி.சி-யின் கட்டுமானப் பிரிவான ‘காதம் அல்-அன்பியா’ ஏகபோகமாகக் கைப்பற்றியுள்ளது. இந்த நிழல் பொருளாதாரத்தின் லாபம், சிரியா மற்றும் லெபனானில் ஈரானின் செல்வாக்கை நிலைநாட்டவும், தளபதிகளின் தனிப்பட்ட ஊழல் கணக்குகளுக்கும் செல்கிறது.

பஜார் வர்த்தகர்களின் போர்க்குரல்: கடைசித் தூண் சரிந்தது

ஈரானிய அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் சக்தியாக எப்போதும் தெஹ்ரானின் “பெரிய பஜார்” இருந்துள்ளது. 1979-இல் ஷா மன்னனின் ஆட்சியை வீழ்த்த, மதகுருமார்களுக்குப் பக்கபலமாக இருந்த வர்த்தகர்கள், இன்று அதே மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். இது இஸ்லாமியக் குடியரசு தனது கடைசித் தூணையும் இழந்துவிட்டதைக் காட்டுகிறது.

இதற்கு முக்கியக் காரணம் நாணய மதிப்புச் சரிவு மற்றும் ஐ.ஆர்.ஜி.சி-யின் நியாயமற்ற போட்டியாகும். டிசம்பர் 2025 இறுதியில், கள்ளச்சந்தையில் ஒரு டாலரின் மதிப்பு 15 லட்சம் ரியால்களைத் தொட்டது. இதனால் வர்த்தகம் செய்வது சாத்தியமற்றதாகிவிட்டது. மேலும், ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, சாதாரண வர்த்தகர்கள் இறக்குமதிக்கு அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், ஐ.ஆர்.ஜி.சி. தங்களுக்குச் சொந்தமான துறைமுகங்கள் வழியாக வரி ஏதுமின்றி அதே பொருட்களைக் கொண்டு வந்து, சந்தையில் குறைந்த விலைக்கு விற்றுப் பாரம்பரிய வர்த்தகர்களை அழிக்கிறது.

இதன் விளைவாக, வழக்கமாகப் பொருளாதாரச் சலுகைகளுக்காக மட்டுமே போராடும் வர்த்தகர்கள், இம்முறை அரசியல் முழக்கங்களை முன்னெடுத்துள்ளனர். “பீரங்கிகள், டாங்கிகள், வெடிகுண்டுகள் – இனி எதற்கும் பயனில்லை, முல்லாக்களே வெளியேறுங்கள்” என்ற முழக்கம் 2018-க்குப் பிறகு இப்போது 2026-இல் மீண்டும் வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

2026 நிதிநிலை அறிக்கை: மக்கள் மீது தொடுக்கப்பட்ட பொருளாதாரப் போர்

ஏற்கெனவே கொதிநிலையில் இருந்த மக்கள் கோபத்தை, ஒரு பெரும் எழுச்சியாக மாற்றிய உடனடித் தூண்டுகோல், டிசம்பர் 2025-இல் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான வரைவு நிதிநிலை அறிக்கையாகும். அதிபர் மசூத் பெசெஷ்கியான் தலைமையிலான அரசு தாக்கல் செய்த இந்த நிதிநிலை அறிக்கை, ஒரு “வரிப் பயங்கரவாதப் பிரகடனமாகவே” பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு மன்றம் (Middle East Forum) மற்றும் ஐ.எஸ்.டபுள்யூ. (ISW) அறிக்கைகளின்படி, அமெரிக்கத் தடைகளால் எண்ணெய் வருவாய் குறையும் என்பதை உணர்ந்த அரசு, அந்த நட்டத்தை ஈடுகட்ட வரி வருவாய் இலக்கை முந்தைய ஆண்டை விட மிக அதிகமாக உயர்த்த முன்மொழிந்தது. ஏற்கெனவே பணவீக்கத்தால் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நடுத்தர வர்க்கம் மற்றும் வர்த்தகர்களிடம், “பாதி வருமானத்தை வரியாகக் கொடு” என்று கேட்பது அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுவதற்குச் சமம்.

மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால், மக்களிடம் அதீத வரியைப் பிடுங்கத் திட்டமிட்ட அதே அரசு, அடக்குமுறைக் கருவியான இராணுவத்திற்கு நிதியை வாரி வழங்குகிறது. மக்கள் நலத்திட்டங்கள் வெட்டப்பட்ட நிலையில், ஐ.ஆர்.ஜி.சி. உள்ளிட்ட இராணுவ அமைப்புகளுக்கான பட்ஜெட் பெருமளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களுக்கான “விருப்ப நாணய மாற்று விகிதம்” இரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு, உணவுப் பொருட்களின் விலையை ஒரே இரவில் பன்மடங்கு உயர்த்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

ஈரானிய அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே, அது விரும்பும் அதே சுரண்டல் பொருளாதாரத்தைத்தான் உள்நாட்டில் நிறுவியுள்ளது. அதீத வரி உயர்வு கொண்ட இந்த நிதிநிலை அறிக்கை மூலம் அரசு சொல்லவரும் செய்தி ஒன்றுதான்: “எங்களுக்குத் தேவை இராணுவமும் அணுகுண்டும் அதிகாரமும் மட்டும்தான். அதற்காக மக்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை.”

எனவே, ஈரானிய மக்கள் இன்று நடத்துவது வெறும் அமெரிக்கத் தடைக்கு எதிரான போர் மட்டுமல்ல; அந்தத் தடையையே முதலீடாக வைத்துத் தங்கள் இரத்தத்தைச் சுரண்டும் உள்நாட்டுச் சுரண்டல் கூட்டத்திற்கு எதிரான போரும் கூட. ஷாவின் ஆட்சியை வீழ்த்தப் பயன்பட்ட அதே ‘பஜார் சாவி’, இன்று இஸ்லாமியக் குடியரசின் பூட்டை உடைக்கத் திரும்பியுள்ளது. எதிரி மாறியிருக்கிறான்; ஆனால், போராட்டம் ஓயவில்லை. இந்த ‘வரிப் பயங்கரவாதப் பிரகடனம்’தான் ஈரானியத் தெருக்களைப் போராட்டக்களங்களாக மாற்றியது. மக்களின் இந்த வாழ்வாதாரப் போராட்டத்தை எதிர்கொள்ள வழியில்லாத மதவாத அரசு, தனது அடக்குமுறைக் கரங்களை ஏவி இரத்த ஆறாக ஓடச் செய்தது.

அரசின் பாசிசப் பேயாட்டம் மற்றும் படுகொலைகள்

பொருளாதார நெருக்கடியால் வீதிக்கு வந்த மக்களை, ஈரானிய அரசு எதிர்கொண்ட விதம், வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயமாக மாறியுள்ளது. ஈரானிய மக்களின் நினைவில் “கருப்பு ஜனவரி” என்று இரத்தம் தோய்ந்த எழுத்துக்களால் பொறிக்கப்படும் அளவுக்கு அரசின் கொடிய அடக்குமுறை வெளிப்பட்டுள்ளது.

அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்கள் உண்மையை இருட்டடிப்பு செய்தாலும், கள நிலவரம் பதைபதைக்க வைக்கிறது. “தி கார்டியன்” இதழ் வெளியிட்ட கள ஆய்வின்படி, மருத்துவமனைகள் மற்றும் பிணவறைகளிலிருந்து மருத்துவ ஊழியர்கள் மூலம் கசியும் இரகசியத் தகவல்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இணைய முடக்கம் காரணமாக முழுமையான விவரங்கள் வெளியுலகுக்கு இன்னும் வராத நிலையில், நாடு முழுவதும் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் ஒடுக்குமுறையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் சொந்த மக்கள் மீது நிகழ்த்திய இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்த, ஈரானிய அரசு வழக்கம் போலத் தனது கோயபல்ஸ் பாணியிலான பிரச்சார இயந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளது. ஜனவரி 2026 இறுதி நிலவரப்படி, ஈரான் அரசுத் தொலைக்காட்சியும், ‘தியாகிகள் அறக்கட்டளை’யும் வெளியிட்ட அறிக்கையில், வன்முறையில் மொத்தம் 3,117 பேர் மட்டுமே இறந்ததாகக் கூறியுள்ளன. அதிலும் பெரும்பான்மையானவர்கள் பாதுகாப்புப் படையினர் என்றும் மற்றவர்கள் ‘வன்முறையாளர்கள்’ என்றும் முத்திரை குத்தியுள்ளது. ரொட்டிக்காகவும் வேலைக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராடும் சாமானிய மக்களைத் தீவிரவாதிகள் என்று அழைப்பது, அந்த அரசின் பாசிச மனநிலையைத்தான் அம்பலப்படுத்துகிறது.

அரசுப் படைகள் மக்களைக் கலைப்பதற்காகச் சுடவில்லை; மாறாக, அவர்களைக் கொடூரமாகத் தண்டிப்பதற்காகவே சுட்டுள்ளனர் என்பதற்கு மருத்துவர்கள் அளிக்கும் சாட்சியங்களே ஆதாரம். “தி கார்டியன்” மற்றும் “அம்னஸ்டி இன்டர்நேஷனல்” அறிக்கைகளின்படி, ஜனவரி 9-க்குப் பிறகு மருத்துவமனைக்கு வந்த காயமடைந்தோர் பலரும், நெஞ்சு, கண்கள் மற்றும் பிறப்புறுப்புகளில் மிக அருகில் வைத்துச் சுடப்பட்டுக் குண்டுக் காயங்களுடன் வந்துள்ளனர். இது தற்செயலானது அல்ல.

ஏற்கெனவே 2022-இல் நடந்த “ஹிஜாப் எதிர்ப்பு” போராட்டங்களின் போதும், இத்தகைய பாலியல் வன்முறை சார்ந்த பாசிச உத்தி பாதுகாப்புப் படையினரால் கையாளப்பட்டது அம்பலமாகியிருந்தது. அன்று பெண்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல், இன்று ஒட்டுமொத்த மக்கள் மீதான ஒரு “திட்டமிட்ட குற்றமாக” விரிவடைந்துள்ளது.

மறுபுறம், ஈரானில் மக்கள் இரத்தம் சிந்திப் போராடிக் கொண்டிருக்கும் அதேவேளையில், இந்தத் துயரமான சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள கழுகுக் கண்களோடு காத்திருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

அமெரிக்கக் கழுகின் ஆதரவு: ஜனநாயக ஆதரவா? ஆட்சி மாற்றச் சதியா?

ஈரான் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காக நடத்தும் போராட்டத்தின் முதுகில் சவாரி செய்து, தனது நீண்டகாலக் கனவான “ஆட்சி மாற்றத்தை” நிகழ்த்தத் துடிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிய மக்களின் மரணங்களுக்கு வருந்துவது போலத் தோன்றினாலும், அவரது வார்த்தைகளில் அதிகார வெறியே நிரம்பி வழிகிறது.

போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், “ஈரான் அரசு தனது சொந்த மக்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், ஈரான் இதுவரை கண்டிராத விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று நேரடியாக மிரட்டல் விடுத்தார். ஒருபுறம் பொருளாதாரத் தடைகளால் மருந்து கூட கிடைக்காமல் மக்களைச் சாகடிப்பது, மறுபுறம் அதே மக்களுக்காகக் கண்ணீர் வடிப்பது ஏகாதிபத்தியத்தின் உச்சக்கட்ட நாடகமாகும்.

ஜனவரி 8-ஆம் தேதி முதல், ஈரான் அரசு இணையத்தைத் துண்டித்து வெளியுலகத் தொடர்பைத் துண்டித்தபோது, எலான் மஸ்க், தனது “ஸ்டார்லிங்க்” செயற்கைக்கோள் ஈரானில் இலவசமாக இணையச் சேவையை செயல்படுத்துவதாக அறிவித்தார். ஈரானிய வான்பரப்பில் அமெரிக்காவின் தகவல் ஆதிக்கத்தை நிறுவுவதும், போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து மேற்கத்தியச் சார்புள்ள தலைமையை உருவாக்குவதுமே இதன் நோக்கம்.

இணைய உதவிகளைத் தாண்டி, அமெரிக்கா தனது இராணுவக் கொடுங்கரங்களை ஈரானை நோக்கி நீட்டியுள்ளது. பாரசீக வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படை குவிக்கப்பட்டு, ஒரு அறிவிக்கப்படாத முற்றுகை நடந்து வருகிறது. இது ஈரானிய அரசை மிரட்டுவதற்காக மட்டுமல்ல; தேவைப்பட்டால் இராணுவ ரீதியாகத் தலையிட்டு, தனக்கு விசுவாசமான ஒரு பொம்மை அரசை நிறுவுவதற்கான தயாரிப்புப் பணியாகும்.

அமெரிக்காவின் ‘மூலவுத்தி’: ஈரானை வீழ்த்தி சீனாவை முடக்குவது

ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா காட்டுவது வெறும் “ஜனநாயகக் கரிசனம்” அல்ல; இது ஒரு ஆழமான ஏகாதிபத்தியச் சதி. வெனிசுலா மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுமே அமெரிக்காவின் “செயல்தந்திர ரீதியான இலக்குகள்” மட்டுமே; அதன் உண்மையான “போர்த்தந்திர ரீதியான இலக்கு” சீனா மற்றும் ரஷ்யாவாகும். சீனாவுடன் நேரடியாகப் போரிடுவதோ அல்லது வர்த்தகத் தடைகள் மூலம் அதைக் கட்டுப்படுத்துவதோ இனி சாத்தியமில்லை என்று அமெரிக்காவுக்கு நன்றாகத் தெரியும். எனவே, சீனாவின் “தொழிற்துறை நுரையீரலை” தாக்கும் உத்தியை அமெரிக்கா கையில் எடுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்ட வெனிசுலாவையும், ஈரானையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலம், சீனாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகக் கட்டமைப்பைத் தனது பிடிக்குள் வைப்பதே அமெரிக்காவின் திட்டம். தற்போது சீனாவின் எண்ணெய் இறக்குமதியில் கணிசமான பகுதி ஈரானிலிருந்து செல்வதைத் தடுக்கவே இந்த முற்றுகையைத் தீவிரப்படுத்தி வருகிறது.

அதைவிட முக்கியமாக, சீனாவின் புதிய “பட்டுச் சாலைத் திட்டத்தின்” (Belt and Road Initiative – BRI) மிக முக்கியமான புவிசார் இணைப்புப் பாலமாக ஈரான் திகழ்கிறது. ஈரானில் தனக்கு விசுவாசமான ஒரு பொம்மை அரசை நிறுவுவதன் மூலம், சீனாவின் ஐரோப்பிய வர்த்தகப் பாதையைத் துண்டிப்பதும், ரஷ்யாவின் தெற்கு வாசலான “வடக்கு-தெற்கு தாழ்வாரத்தை” அடைப்பதும் அமெரிக்காவின் நீண்டகாலத் திட்டமாகும். இது தனது ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கத்தைத் தக்கவைப்பதற்கான ஒரு வெறித்தனமான முயற்சியாகும்.

அதே சமயம், ஈரானிடம் ரஷ்யாவின் “எஸ்-400” வான்பாதுகாப்பு அமைப்பும், சீனாவின் நவீன ஏவுகணைகளும் இருப்பதால், ஒரு முழுமையான போரைத் தொடங்குவதை விட, அமெரிக்கா ஒரு “முட்டுக்கட்டை” நிலையை உருவாக்க விரும்புகிறது.

ஜனவரி இறுதியில் டிரம்ப் அனுப்பிய இரண்டு கடற்படைத் தொகுப்புகள் மூலம் ஒரு “கடற்படை முற்றுகையை” உருவாக்கி, ஈரானின் கழுத்தை நெரித்து, சீனாவைக் கச்சா எண்ணெய்க்காக அலைய விடுவதுதான் டிரம்பின் “ஸ்லோ பாய்சன்” உத்தி. ஈரானிய மக்கள் பசியால் சாகும்போது ஏற்படும் உள்நாட்டுக் கலவரத்தைப் பயன்படுத்தி, போரில்லாமலேயே ஆட்சியை மாற்றுவதே இந்தத் திட்டத்தின் சாராம்சம்.

சர்வதேசப் போர்க்களம்: வல்லரசுகளின் சதுரங்கம்

ஈரானின் உள்நாட்டுப் போராட்டம் என்பது தனியொரு நாட்டில் நடக்கும் நிகழ்வல்ல; அது உலகளாவிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை மையமாக வைத்து வல்லரசுகள் நடத்தும் சதுரங்க ஆட்டம் இப்போது பகிரங்கமாகத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் கடற்படை நகர்வுகளைச் சீனா உன்னிப்பாகக் கவனிக்கிறது. ஜனவரி 29 அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய சீனத் தூதர் ஃபூ காங், அமெரிக்காவின் பெயரைச் சுட்டிக்காட்டாமல், “எந்தவொரு இராணுவச் சாகசமும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்” என்று மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார். சீனாவின் இந்தக் கோபம் ஈரானிய மக்கள் மீதான பாசத்தினால் அல்ல; மாறாக, ஈரானில் போர் வெடித்தால் தனது எரிசக்தி விநியோகம் துண்டிக்கப்படும் என்ற அச்சத்தின் வெளிப்பாடே ஆகும்.

மறுபுறம், ஐரோப்பிய நாடுகள் இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தக் காத்திருக்கின்றன. ஜெர்மன் சான்சிலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஈரான் அரசுக்கு ஆட்சி செய்யத் தகுதியில்லை; இந்த ஆட்சி கவிழ்வது இன்னும் சில வார கால விவகாரமே” என்று கூறியிருப்பது, ஐரோப்பிய வேட்டைநாய்களும் ஈரானின் வீழ்ச்சியை எதிர்பார்த்துத் தயாராகிவிட்டதைக் காட்டுகிறது.

இவ்வாறு ஈரான், வல்லரசுகளின் சதுரங்க ஆட்டக்களமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கான உண்மையான தீர்வு வெளியிலிருந்து வராது; அது ஈரானிய மக்களின் சுயேட்சையான போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும்.

வரலாற்றுப் பாடமும் ஐக்கிய முன்னணியின் தேவையும்

ஈரானின் இன்றைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பது என்பது வெறும் உணர்ச்சிவேகமான முழக்கங்களால் சாத்தியமாகாது; கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்பதன் மூலமே சரியான அரசியல் திசையைத் தீர்மானிக்க முடியும். 1979-இல் ஷா மன்னனுக்கு எதிரான எழுச்சியின் போது கொமேனியை இடதுசாரிகள் ஆதரித்தனர். ஆனால், அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, கொமேனி தலைமையிலான இஸ்லாமிய அரசு இடதுசாரிகளை வேட்டையாடியது. சொந்த மக்களை ஒடுக்கும் ஓர் அரசால், ஒருபோதும் அந்நிய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை வரலாறு நமக்குத் திரும்பத் திரும்ப உணர்த்துகிறது. எனவே, இந்த அரசுக்கு வால்பிடிக்கும் பழைய தவறை இடதுசாரிகள் மீண்டும் செய்யக்கூடாது.

ஈரானிய அரசு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவோ, அமெரிக்காவை உண்மையாக எதிர்க்கவோ விரும்பினால், முதலில் சொந்த மக்கள் மீதான போரை நிறுத்த வேண்டும். சிறைக் கதவுகளைத் திறந்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். நாட்டு மக்களுக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் வழங்க வேண்டும். ஏனெனில், ஏவுகணைகளை விட சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் மக்களால் மட்டுமே ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட முடியும். ஆனால், தன் சொந்த மக்களையே எதிரிகளாகக் கருதி ஒடுக்கும் இந்த அரசு, நடைமுறையில் நாட்டை அமெரிக்கக் கழுகுகளுக்கு இரையாக்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது. எனவே, தீர்வு அரசின் கையில் இல்லை; போர்க்களத்தில் நிற்கும் மக்களின் கைகளிலேயே உள்ளது.

இன்றைய சூழலில், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் உள்நாட்டுச் சர்வாதிகாரம் ஆகிய “இரட்டை எதிரிகளை” ஒரே நேரத்தில் எதிர்கொள்ள, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான ஒரு பரந்த ஐக்கிய முன்னணியைக் கட்டமைப்பதே காலத்தின் கட்டாயமாகும். இந்த ஐக்கிய முன்னணி என்பது வெறும் அரசியல் கட்சிகளின் கூட்டணி அல்ல; அது போராடும் வர்க்கங்களின் கூட்டணியாக அமைய வேண்டும். மதவாத அரசின் ‘பணப்பையை’ காலி செய்யும் வல்லமை கொண்ட எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைத் தொழிலாளர்கள், ஈரானின் ஜனநாயகத்திற்காகப் போராடும் பெண்கள், மாணவர்கள் மற்றும் அடக்குமுறைக்கு உள்ளாகும் குர்து, பலுச் உள்ளிட்ட தேசிய இனச் சிறுபான்மையினர், ஆளும் வர்க்கங்களில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரிவு ஆகிய அனைவரையும் உள்ளடக்கியதாக இந்த முன்னணி அமைய வேண்டும். மதவாத சர்வாதிகாரத்தை எதிர்ப்போரும், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போரும் இந்த ஐக்கிய முன்னணியின் கீழ் ஓரணியில் திரள்வதே வெற்றிக்கான வழியாகும்.

ஈரானிய வீதிகளில் இன்று ஆக்ரோஷமாக எதிரொலித்துக் கொண்டிருக்கும், “ஒடுக்குமுறை செய்பவருக்கு மரணம்; அவர் ஷாவாக இருந்தாலும் சரி அல்லது உச்சத் தலைவராக இருந்தாலும் சரி!” என்ற முழக்கமும், “அமெரிக்க ஏகாதிபத்தியமே வெளியேறு! மதவாதச் சர்வாதிகாரமே ஒழிக!” என்ற அறைகூவலும், நீண்டகாலப் போராட்டத்தின் விளைவாக உருவாகியுள்ள ஈரானிய மக்களின் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகின்றன.

இறுதியாக, “எங்களுக்குத் தேவை – ரொட்டி, வேலை, சுதந்திரம் மற்றும் மக்கள் அதிகாரம்!” என்ற புரட்சிகர முழக்கத்தை முன்னெடுத்து, உழைக்கும் மக்களைப் போர்க்களத்தில் அணிதிரட்டுவதும், அவர்களுக்குச் சரியான அரசியல் தலைமை வழங்குவதும் ஈரானிய புரட்சிகர – ஜனநாயகச் சக்திகளின் முன் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உடனடிக் கடமையாகும். அவ்வாறு வர்க்க ரீதியாகத் திரட்டப்படும் மக்கள் சக்தியே, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பையும் உள்நாட்டு மதச் சர்வாதிகாரத்தையும் ஒரே நேரத்தில் முறியடிக்கும் தகர்க்க முடியாத இரும்புக் கோட்டையாகும்!


வாகைசூடி

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி, 2014 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 4 | பிப்ரவரி, 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: … ஆதலினால் தேசத் துரோகம் செய்வீர் !
  • “அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்து! அனைத்துத் தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு!!”– புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் முற்றுகைப் போராட்டங்கள்
  • நாடும், நாட்டின் வளங்களும் பார்ப்பன – பனியாக்களின் கோரப்பிடியில்…
  • பத்ரிபால் போலிமோதல் கொலை தீர்ப்பு : கொலைகாரர்களை நீதிபதிகளானால்…
  • தேசம், தேசபக்தி, அதிகாரவர்க்க அயோக்கியர்களின் புகலிடம்!
  • நாய் வாலை நிமிர்த்துவாரா கேஜ்ரிவால்
  • தில்லைக் கோயில் தீர்ப்பு : பார்ப்பன “காப்” பஞ்சாயத்து
  • நம்மாழ்வார் : ஒரு இயற்கை வேளாண்மை மீட்புப் போராளி!
  • முசாஃபர் நகர் அகதிகள் முகாம் : கிழிந்தது சமூகநீதி ஆட்சியின் கருணைமுகம்!
  • எதிர்கொள்வோம்!
  • தமிழக போலீசின் அட்டூழியங்கள்: சமூகத்தின் மனசாட்சிக்கு விடப்படும் சவால்!
  • தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டு உரிமை மறுப்பு: அரசு-ஆதிக்க சாதிவெறியர்களின் கூட்டுச் சதி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி, 2014 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 3 | ஜனவரி, 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஆம் ஆத்மி: சீரழிந்த நாடாளுமன்ற அரசியலைச் சிங்காரிக்க வந்த புதிய துடைப்பம்!
  • தில்லைக் கோயில் தீட்சிதர் சொத்தா?  ஜெ அரசு – சு.சாமி – பார்ப்பனக் கும்பலின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!
  • ஏற்காடு ‘புரட்சி’
  • ராஜீவ் கொலைவழக்கு கைதிகள் அனைவரையும் விடுதலை செய்! விசாரணை அதிகாரிகளைச் சிறையிலடை!!
  • “தில்லை தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம்!” – வெண்மணி நினைவு நாளில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய முற்றுகைப் போராட்டம்
  • பொதுநலன் – தனியார்மயத் திருடர்களின் முகமூடி!
  • “வைப்பாறில் நவீன இயந்திரங்களால் மணல் கொள்ளை நடப்பதைத் தடுப்போம்! மாட்டு வண்டியில் மணல் அள்ளும் பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவோம்” – மாட்டு வண்டித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்
  • நேபாளப் புரட்சியின் பின்னடைவு உணர்த்தும் உண்மைகள்
  • உ.வ.க. பாலி மாநாடு: ரேசன் கடையின் சாவி இனி அமெரிக்காவின் கையில்
  • மண்டேலாவின் மறுபக்கம்
  • அதிகார போதையில் ஆட்டம் போட்டு அம்பலப்பட்டு நிற்கும் ஓம்சக்தி சேகர் கும்பல்
  • நோக்கியா: கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை!
  • எதிர்கொள்வோம்!
  • “வேலைபறிப்பு – தற்கொலைகள் – ஆலைச் சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” – பு.ஜ.தொ.மு.வின் பேரணி – ஆர்ப்பாட்டம்
  • கரும்பு விவசாயிக்குத் தூக்குக் கயிறு! சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு பம்பர் பரிசு!!
  • 37-வது சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விதைகள் மசோதா: விதை, கார்ப்பரேட்டுகளின் பிடியில் விவசாயம் கல்லறையில்!

னிதகுல நாகரீக வளர்ச்சிக்கு மாபெரும் பங்களிப்பு செய்த விதை, இன்று உலகெங்கும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளால் பண்டமாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், விவசாயத்தின் உயிர்நாடியான விதை பண்டமாக அல்லாமல் ஒரு சமூக சொத்தாக இருத்தல் வேண்டும். விவசாயிகளின் கைகளில் உள்ள விதைகளே நாளைய உணவுப் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் விவசாயத் தன்னிறைவு ஆகியவற்றின் அடித்தளமாகும்.

ஆகவே, விதைகள் மீதான கார்ப்பரேட்டுகளின் பிடியை தளர்த்தி விவசாயிகளின் நலன் காக்கும் வகையிலும் பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் வகையிலும் விதைச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது இந்திய விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை.

ஆனால், பாசிச மோடி அரசோ விதைகளின் மீது விவசாயிகளுக்கு இருக்கும் மிச்சமீதி உரிமைகளையும் கட்டுப்பாடுகளையும் பறித்து, அவற்றை முற்றுமுழுதாக கார்ப்பரேட்டுகளின் வசம் கொண்டுசெல்வதற்காக “விதை மசோதா-2025”-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

நடைமுறையில் உள்ள “விதைகள் சட்டம், 1966” மற்றும் “விதைகள் (கட்டுப்பாட்டு) ஆணை, 1983” ஆகிய இரு சட்டங்களையும் தன்னிச்சையாக இரத்து செய்யும் இம்மசோதா, கார்ப்பரேட்டுகள் “வணிகம் செய்வதை எளிதாக்குவது” (Ease of business) என்பதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விதை-விவசாயம்-உணவு என்ற சங்கலியை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளின் பிடியில் கொண்டுசெல்வதற்கான அடித்தளமாகவே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய மக்களும் எதிர்கொண்டுள்ள பேரபாயமாக முன்னெழுந்துள்ளது.

இம்மசோதாவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அம்சமும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்றாலும், இயன்றவரை அவற்றில் சில முக்கியமான அம்சங்களை இங்கு குறிப்பிடுகிறோம்.

மாற்றப்படும் வரையறைகள்
பறிக்கப்படும் உரிமைகள்!

பழைய சட்டங்களுடன் ஒப்பிடும்போது மோடி அரசு தற்போது கொண்டுவந்துள்ள விதைகள் மசோதாவில் “விதை”, “விவசாயி” உள்ளிட்டு பலவற்றிற்கான வரையறைகளை மாற்றியுள்ளது.

சான்றாக, விதைகள் சட்டம், 1966-இன் படி, விதை என்பது “விதைப்பதற்கோ அல்லது நடுவதற்கோ பயன்படுத்தப்படும் உணவுப் பயிர்களின் விதைகள், பருத்தி விதைகள், கால்நடைத் தீவன விதைகள், சணல் விதைகள்…” என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், புதிய விதைகள் மசோதாவில் விதை என்ற வரையறைக்குள், உயிருள்ள கருக்கள் (Living embryos), இனப்பெருக்கம் செய்யும் தாவரங்கள் (Propogules), திசு வளர்ப்பு தாவரங்கள் (Tissue culture plants) மற்றும் செயற்கை விதைகள் (Synthetic seeds) என பலவற்றை கொண்டுவந்துள்ளது மோடி அரசு.

இதுநாள்வரை பொது சாகுபடி மற்றும் வர்த்தகத்திற்கான விதைகள் மட்டுமே அரசங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது; விவசாயிகள் பயன்படுத்துகின்ற, தங்களுக்குள் பரிமாறிக் கொள்கின்ற விதைகள் சமூக சொத்தாகவே கருதப்பட்டு வந்தது.

ஆனால், புதிய மசோதாவில் விதை என்பதற்கான வரையறையை விரிவுப்படுத்தியுள்ளதன் மூலம், எல்லா விதைகளையும் வர்த்தக விதைக்கான வரையறைக்குள் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. இதன் மூலம், வர்த்தக விதைகளுக்கான கட்டுப்பாடு, நெறிமுறைகள் விவசாயிகளின் கையிலுள்ள விதைகளுக்கும் திணிக்கப்படும்.

இது, பன்னாட்டு ஏகபோக கார்ப்பரேட்டுகளின் பண்டமாக்கப்பட்ட விதைகளையும் எளிய விவசாயிகளிடமிருக்கும் மரபு விதைகளையும் ஒரே தராசில் நிறுத்துவதன் மூலம், விவசாயிகளிடமுள்ள மரபு விதைகளை ஒழித்துக்கட்டும் அயோக்கியத்தனமாகும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை

விதை என்பது சமூக சொத்து என்ற அடிப்படை ஒழித்துக் கட்டப்பட்டு ஒரு பண்டமாக மாற்றப்பட்டு, விதை மீதான விவசாயிகளின் உரிமை பறிக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளின் ஏகபோகத்திற்கு வித்திடும்.

மேலும், புதிய மசோதாவில் “செயற்கை விதைகள்” என்ற சொல் இணைக்கப்பட்டிருப்பது மரபணு மாற்றப்பட்ட விதைகளை திணிப்பதற்கான சதி என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

டிஜிட்டல்மயமாக்கம்:
இனி, கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் விதைச் சங்கிலி

விதைச் சங்கிலியை முழுமையாக கண்காணிப்பிற்குள் கொண்டுவருவதற்காக பல்வேறு டிஜிட்டல்மய நடவடிக்கைகளை இம்மசோதா நடைமுறைப்படுத்துகிறது. இதற்காக மோடி அரசு ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும் “சதி” (SATHI) என்ற இணையதளம் பயன்படுத்தப்படும்.

மேலும், விற்பனை செய்யப்படும் விதை பைகளின் மீது கியூ.ஆர். குறியீடு (QR code) கட்டாயம் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகாரிகளும் நுகர்வோரும் விதையின் தோற்றம் (Origin), பதிவு நிலை (Registration status) மற்றும் விநியோகச் சங்கிலியில் அது எவ்வாறு நகர்ந்துள்ளது என்பதை சரிபார்க்க முடியும் என்கிறது.

ஆனால், இத்தரவு திரட்டலின் மூலம் கார்ப்பரேட்டுகள் விதைச் சங்கிலியை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தங்கள் விருப்பம்போல் விவசாயிகளை ஆட்டுவிக்க முடியும்.

ஒழித்துக்கட்டப்படும் உள்ளூர் விதை அமைப்புகள்

புதிய மசோதாவில், உற்பத்தி செய்யப்படும் அனைத்து விதைகளும் குறைந்தபட்ச முளைப்பு மற்றும் தூய்மை தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்கான சோதனைகளில் தேர்ச்சி பெற்று, அரசின் டிஜிட்டல் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட பிறகே விற்பனை செய்யப்பட வேண்டும்; விதை விற்பனையாளர்களும் (நர்சரி உரிமையாளர்கள் கூட) அரசிடம் பதிவு செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் கிராமப்புற விதை அமைப்புகளை ஒழித்துக்கட்டுவதே ஆகும். கிராமப்புற உள்ளூர் விவசாயிகளால் நடத்தப்படும் சமூக விதை வங்கிகள் (Community seed banks) உள்ளிட்ட பல்வேறு விதை பராமரிப்பு, விநியோக அமைப்புகள் முறைசாரா விதை அமைப்புகள் (Informal Seed System) என்று அழைக்கப்படுகின்றன. இந்திய விவசாயிகள் தங்களுடைய விதை தேவைகளுக்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை விட, இந்த முறைசாரா விதை அமைப்புகளையே பெரிதும் சார்ந்திருக்கின்றனர்.

ஏனென்றால், இந்த முறைசாரா விதை அமைப்புகள் சந்தையை விட மலிவான விலையில் விதைகளை விவசாயிகளுக்கு வழங்குகின்றன. பேரிடர்களால் பயிர்கள் நாசமடையும் போது, விவசாயிகள் மீண்டும் விளைச்சலை மேற்கொள்ள சேமிப்பு விதைகளிலிருந்து விதைகளை இலவசமாக வழங்கி விவசாயிகள் நொடித்துப் போகாமல் பாதுகாக்கின்றன. இவை நவதான்யா, சஹஜா சம்ருதா உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் அரசு சாரா அமைப்புகளாலும் நிர்வாகம் செய்யப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன என்பதே அதற்கான காரணங்களாகும்.

புதிய விதைகள் மசோதா சட்டமாக்கப்பட்டால் முறைசாரா விதை அமைப்புகள் தங்களுடைய அமைப்பையும், தாங்கள் பராமரிக்கும் விதைகளையும் அரசிடம் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட பகுதியின் விதைச் சந்தையை கைப்பற்ற விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அதிகாரிகளுடன் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு விதை அமைப்புகளுக்கும் அவற்றின் விதைகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் அவற்றை இல்லாதொழிக்க முடியும்.

மேலும், போலி மற்றும் பதிவு செய்யப்படாத விதைகளை விற்பனை செய்வது; விதை விற்பனை நிறுவனங்கள் பதிவு செய்யாமல் இருப்பது உள்ளிட்டவற்றுக்கு ரூ.5 லட்சம் வரை இருந்த அபராதத் தொகை ரூ.30 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டு வரை இருந்த சிறைத் தண்டனை மூன்று ஆண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முறைசாரா விதை அமைப்புகள் மீது அடக்குமுறை செலுத்தி அவற்றை அழித்தொழிக்க வேண்டும் என்ற நோக்கம் இதில் அடங்கியுள்ளது.

போலி விதைகளும்
பறிக்கப்படும் விவசாயிகளின் இழப்பீடும்

தரம் குறைந்த மற்றும் போலி விதைகள் என்பது இந்திய விவசாயிகள் எதிர்கொண்டுவரும் முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இலட்சக்கணக்கான விவசாயிகள் இப்போலி விதைகளால் பாதிப்படைந்துள்ளனர். பல மாநிலங்களில் விவசாயிகள் இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, 2022 முதல் 2025 வரை பரிசோதிக்கப்பட்ட சுமார் 6 லட்சம் விதை மாதிரிகளில், ஏறக்குறைய 43 ஆயிரம் மாதிரிகள் தர நிர்ணயங்களை பூர்த்தி செய்யவில்லை. மேற்குவங்கம், தமிழ்நாடு மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கான தரமற்ற விதைகள் கண்டறியப்பட்டதாகப் பதிவாகியுள்ளது.

ஆனால், இவ்வாறு போலி விதைகளால் நட்டமடையும் விவசாயிகளுக்கு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எந்த இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. இந்நிலையை மேலும் மோசமாக்கும் விதமாக, “தரம் குறைந்த அல்லது போலியான விதைகளால் விவசாயிகள் நட்டமடைந்தால் அதற்கான நிவாரணத் தொகைகளை நீதிமன்றங்கள் மூலமே பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று இம்மசோதா கூறுகிறது. இது அப்பட்டமாக விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுவதை ஒழித்துக்கட்டி, கார்ப்பரேட்டுகளை இழப்பீடு வழங்குவதிலிருந்து தப்பிக்க வைக்கும் சதியாகும்.

நாட்டிலுள்ள பெரும்பாலான சிறு-குறு விவசாயிகள் நீதிமன்றங்களை அணுகுவதற்கு வாய்ப்பில்லாதவர்கள் என்பது ஒருபுறம். மறுபுறம், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இழப்பீடுகளை பெற்றுத்தர வேண்டிய அரசு, அப்பொறுப்பிலிருந்து கைக்கழுவிக் கொள்வதாகும்.

பஞ்சாப்: விவசாயிகளும் மின் ஊழியர்களும் மின்சாரத் திருத்த மசோதா மற்றும் விதை மசோதாவின் பிரதிகளை எரித்து போராட்டம்.

இதுகுறித்து அகில இந்திய கிசான் சபா (AIKS) பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் கூறுகையில், “ஒரு விதை தோல்வியுற்றால், விவசாயி அப்பயிரை மட்டுமல்ல, ஒரு முழுப் பருவத்தையே இழக்கிறார். ஆனால், இம்மசோதா விவசாயியைப் பாதுகாக்காமல், பரிவர்த்தனையை மட்டுமே பாதுகாக்கிறது” என்கிறார்.

கேலிக்கூத்தாகும் ‘கூட்டாட்சி தத்துவம்’

இந்த புதிய விதை மசோதா விதைகளை பதிவு செய்வது, அங்கீகாரம் அளிப்பது, விலை நிர்ணயிப்பது உள்ளிட்ட அனைத்து உரிமைள், அதிகாரங்களையும் மாநில அரசுகளிடமிருந்து பறித்து, ஒன்றிய அரசிடமும், சொல்லபோனால் கார்ப்பரேட்டுகளின் கரங்களிலுமே குவிக்கிறது.

இம்மசோதாவில், 27 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய விதைக் குழு (Central Seed Committee – CSC) அமைக்கப்படும். இந்தியாவை ஐந்து “புவியியல் மண்டலங்களாக” (Geographical Zones) பிரித்து அம்மண்டலங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இக்குழுவில் ‘மாநில உறுப்பினர்கள்’ பங்கேற்பர். விதைச் சட்டம் – 1966, மத்திய விதைக் குழுவில் 22 மாநில பிரதிநிதிகள் இடம்பெற அனுமதியளித்த நிலையில், அது தற்போது வெறும் ஐந்தாக சுருக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு மாநில அரசுக்கும் 15 உறுப்பினர்களை கொண்ட மாநில விதைக் குழு (State Seed Committee – SSC) அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை சந்தையில் விற்கப்படும் ஒவ்வொரு விதையும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், விவசாயப் பல்கலைக்கழகங்கள் போன்ற அங்கீகாரம் பெற்ற மையங்களால் நடத்தப்படும் “சாகுபடிக்கும் பயன்பாட்டிற்குமான மதிப்பு” (VCU) சோதனைக்குப் பிறகே பதிவு செய்யப்படும்.

ஆனால், ​​இந்த வரைவு மசோதா, விதைகளை சோதனை செய்வதற்கான அதிகாரத்தை தனியார் அமைப்புகளுக்கும் வழங்குகிறது. இதன்மூலம், கார்ப்பரேட் நிறுவனங்கள் குறுக்குவழியில் இச்சோதனைகளை கடந்துவிடும்.

அதேபோல், புதிய மசோதாவின் பிரிவு 17(8)-இன் படி, பல மாநிலங்களில் செயல்படும் விதை நிறுவனங்களுக்காக ஒன்றிய அரசு தகுதி அடிப்படையிலான “மத்திய அங்கீகார அமைப்பை” (Central Accreditation System) உருவாக்கும் என்றும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் இந்த அமைப்பில் அங்கீகாரம் பெற்றுவிட்டால், அவை மாநிலப் பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட்டவையாகக் கருதப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதாவது, ஒன்றிய அரசு விதை நிறுவனத்திற்கு அங்கீகாரம் அளித்தால் போதும், மாநில அரசுகளிடம் அங்கீகாரம் பெறத் தேவையில்லை என்று கூறுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் சூழலியல், தட்பவெப்ப நிலை, மண்ணின் தன்மை, மக்களின் உணவு பண்பாடு வேறுபட்டதாக இருக்கும் சூழலில் மாநில அரசு சோதிக்காமல் விதை அனுமதிக்கப்படுவது நாசகர விளைவுகளையே ஏற்படுத்தும்.

அதேபோல், ‘அவசர சூழ்நிலைகளில்’ (emergent situations) மட்டுமே ஒன்றிய அரசு விதைகளின் விலை நிர்ணயத்தில் தலையிடும் என்று இம்மசோதா கூறுகிறது. அதாவது, இனி கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் விரும்பும் போல் விதைகளின் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம். இது தொலைதொடர்புத் துறையில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் எவ்வாறு தங்களுடைய ஏகபோக ஆதிக்கத்தை நிறுவினவோ அதேபோல் விதை சந்தையிலும் ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோகத்தை நிலைநாட்டுவதை நோக்கி இட்டுசெல்லும்.

காற்றில் பறக்க விடப்படும் ‘இறையாண்மை’

பாசிச மோடி அரசின் கார்ப்பரேட் சேவையின் உச்சமாக, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விதைகளுக்கு வெளிநாட்டு விதை பரிசோதனை ஆய்வகங்களால் அளிக்கப்படும் தரச் சான்றிதழ்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று இம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்களே தரச் சான்றிதழ் அளித்துக்கொண்ட விதைகளை, ஒன்றிய-மாநில அரசுகளின் எந்தவித சோதனை உட்படுத்தாமல் நம் நாட்டிற்குள் திணிக்கும்.

ஒரு விதையின் செயல்திறனை உள்ளூர் மண் நிலைமைகள், மழைப் பொழிவு, பூச்சி மற்றும் நோய்கள் மற்றும் விவசாய நடைமுறைகள்தான் பிரதானமாக தீர்மானிக்கின்றன. ஆனால், அந்நிய மண்ணில் பரிசோதிக்கப்பட்ட ஒரு விதையை எந்தவித பரிசோதனையுமின்றி உள்நாட்டில் அனுமதிப்பது என்பது நிச்சயம் பேரழிவை ஏற்படுத்தும்.

முழுமையான பரிசோதனை இல்லாமல் அனுமதிக்கப்படும் விதைகளால், பயிர் விளைச்சலும் பல்லுயிர்ப் பெருக்கமும் பாதிக்கப்படும், நம் தாய் மண் மலடாகும். மேலும், விதைகள் என்பது உணவுப் பாதுகாப்புடன் பிணைந்தது என்பதால் பிஞ்சுக் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உண்ணும் உணவை நஞ்சாக்கும் அபாயம் இதில் அடங்கியுள்ளது. ஒட்டுமொத்தத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபவெறிக்காக இந்திய ‘இறையாண்மை’யை காற்றில் பறக்கவிட்டுள்ளது மோடி அரசு.

கார்ப்பரேட்மயமாகும் விதை சந்தை

இந்தியாவில் 1990-களில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, இந்திய விதை சந்தையை தங்களுக்கு திறந்துவிடக்கோரி பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன. அதனடிப்படையில் 2004, 2010 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் விதை சட்டங்களில் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகத் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால், விவசாயிகளின் கடும் எதிர்ப்பினால் அவற்றை நடைமுறைப்படுத்த இயலவில்லை.

ஆனால், “தாவர வகைகள் மற்றும் விவசாய உரிமைகள் சட்டம், 2001” இந்திய விதைச் சந்தையை கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தது. இச்சட்டம் ஒரு குறிப்பிட்ட விதையை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனத்திற்கு மட்டும், அதனை விற்பனை, மறு உற்பத்தி செய்யக்கூடிய பிரத்தியேக காப்பு உரிமைகளை அளிக்கிறது.

மரபணு மாற்றப்பட்ட கொடிய நச்சு விதையான பி.டி. பருத்திக்கான (BT Cotton) காப்புரிமையை அமெரிக்காவை சார்ந்த பகாசுர கார்ப்பரேட் நிறுவனமான மான்சாண்டோ இச்சட்டத்தின் அடிப்படையிலேயே பெற்றிருக்கிறது. இந்தியாவில் பயிரிடப்படும் பருத்தி விதைகளில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவை பி.டி. பருத்தி விதைகள் எனும் அளவிற்கு தன்னுடைய ஏகபோக ஆதிக்கத்தை நிலைநாட்டி இருக்கிறது.

எனவே, இம்மசோதா சட்டமாக்கப்படும் பட்சத்தில் மான்சாண்டோ போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் இந்திய விதைச் சந்தையில் நிலைநாட்டப்படும்.

குறிப்பாக, அமெரிக்க கார்ப்பரேட் விதை நிறுவனங்களின் ஆதிக்கத்தை இந்திய விதைச் சந்தையில் நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே இம்மசோதாவை பாசிச மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது.

அமெரிக்க-இந்திய காம்பாக்ட் திட்டத்தின் அடிப்படையில், இந்தியாவின் விவசாயம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை திறந்துவிடக் கோரி அமெரிக்க டிரம்ப் அரசு மோடி அரசிற்கு நிர்பந்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதன் பின்னணியில் அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் நலன் உள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மேலும், பி.டி. கத்திரிக்காய் போன்ற மற்ற பி.டி. விதைகளை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதும், பி.டி. விதைகளை இந்தியாவிற்குள் அனுமதிப்பதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வருங்காலங்களில் பி.டி. விதைகளை அனுமதிப்பதற்கான விதிகளும் மோடி அரசால் திருத்தப்படலாம்.

அதேபோல, இம்மசோதா சட்டமாக்கப்படும் பட்சத்தில் பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்கள் மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பானி, அதானி வகையறா கார்ப்பரேட்டுகளும் இந்திய விதை சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்கான நடவடிக்கைகளில் வருங்காலங்களில் ஈடுபடலாம்.

இவ்வாறு, இந்திய விதை சந்தையில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவது இந்திய நாட்டின் கோடானுகோடி மக்களின் உணவு உரிமையின் மீது தொடுக்கப்படும் பயங்கரவாதமாகும். ஏனென்றால், கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கத்தால் இந்திய விவசாயிகளும் மக்களும் தங்களுடைய உணவிற்காக ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய அபாயகரமான நிலைமை உருவாகும்.

இந்நிறுவனங்கள் தங்களுடைய இலாப நோக்கத்திற்காக கலப்பு (ஹைபிரிட்) மற்றும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்திய விவசாயிகளிடையே திணிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இவ்விதைகள் மக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதை பல்வேறு சூழலியல் செயற்பாட்டாளர்களும் ஆய்வுகளும் நிரூபித்திருக்கின்றன. இவ்விதைகள் பயன்படுத்தப்பட்டால் உரத்தேவைகள் அதிகரித்து, மண் வளம் நாசமாகும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

விதை: விவசாய கார்ப்பரேட்மயமாக்கத்தின் கண்ணி

இந்திய விவசாயிகளிடமிருந்து விதைகளின் மீதான உரிமைகளைப் பறிப்பது என்பது விவசாயத்தின் மீதான விவசாயிகளின் கட்டுப்பாட்டை பறிப்பதாகும். இது விவசாயிகளை விதைகளுக்காக கார்ப்பரேட்டுகளிடம் கையேந்தச் செய்து ஒப்பந்த விவசாயத்தையே ஊக்குவிக்கும். இது, விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறுவதை மிகப்பெரிய அளவில் தீவிரப்படுத்தி, அதனை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றுவதை எளிதாக்கும்.

மேலும், விவசாய இடுபொருட்களுக்கான விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, அரசின் மானிய வெட்டு, விளைபொருட்கள் உரிய விலைகளில் கொள்முதல் செய்யப்படாமை உள்ளிட்ட காரணங்களால் விவசாயம் என்பதே நட்டமான தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், விதைகளின் விலை உயர்வு அதனை மேலும் தீவிரப்படுத்தும். விவசாயிகளின் தற்கொலைகளை அதிகரிக்கும்.

அதாவது, விதைகள் மசோதாவானது இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாயிகளில் 80 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள சிறு, குறு விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றி, கார்ப்பரேட் கும்பல்களின் பண்ணை வடிவிலான விவசாயத்தை நிலைநாட்டுவதற்காக மோடி அரசால் அமல்படுத்த முயன்ற மூன்று பாசிச வேளாண் சட்டங்களின் நோக்கத்தை கொண்டுள்ளது.

இம்மசோதாவின் பின்னணியில் இத்தகைய பேரபாயம் ஒளிந்திருப்பதால்தான் விவசாய சங்கங்களும் ஜனநாயக சக்திகளும் இதனை தீவிரமாக எதிர்த்து வருகின்றன. கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி இம்மசோதா மற்றும் மின்சார சட்டத் திருத்த மசோதா, 2025-இன் நகல்களை கிழித்தெறியும் போராட்டங்களை நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் நடத்தியிருக்கின்றன.

பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் தங்களுடைய வர்க்க சார்பிலிருந்து இம்மசோதாவிற்கு பெயரளவிலான எதிர்ப்புடன் தங்களை வரம்பிட்டுக் கொண்ட போதிலும் விவசாய சங்கங்கள் இப்பாசிச சட்டங்களை அமல்படுத்த விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

தங்களின் நெஞ்சுறுதிமிக்க போராட்டங்களே மோடி அரசை பணிய வைக்கும் என்று தங்களது சொந்த அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கும் விவசாயிகள் இப்பாசிச சட்டங்களுக்கெதிராக போராட்டங்களை கட்டியமைத்துக் கொண்டிருக்கிறார்கள். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மக்களையும் அணிதிரட்ட வேண்டியது புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர், 2013 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 2 | டிசம்பர், 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை : பாதாளம் வரை பாயும் பணம் புதுச்சேரி நீதிமன்றம் வரை பாயாதா ?
  • “நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி!”– புரட்சிகர அமைப்புகளின் திருவிழாக்கள்
  • “ஜெயேந்திரனைக் கூண்டிலேற்று! தில்லைக் கோயிலைக் காப்பாற்று!!”– புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள்
  • காமன்வெல்த் மாநாடு!– மீண்டும் அதே நாடகம்!
  • தாதுமணற்கொள்ளை : திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம்!
  • கிரிமினல் போலீசைக் காப்பதற்கு பாசிச ஜெயாவின் சீர்திருத்தச் சட்டம்
  • கையால் மலம் அள்ளும் வேலை : இதற்கு மட்டும் இட ஒதுக்கீடு கோர மாட்டீர்களா?
  • தனியார் மயம் – தாராள மயம்! கார்ப்பரேட் கொள்ளையர் தேசம்
  • தாழ்த்தப்பட்டோரின் உயிர் கிள்ளுக்கீரைதான்!
  • பெண்கள் மீதான வன்முறை! தமிழகத்தின் இழிநிலை!
  • செய்திப் பதிவுகள்
    அ. கொலைகார மேட்டுக்குடி எஜமானிகள்
    ஆ. முருங்கைக்காய் பறித்த அப்பாவிகளுக்குச் சிறை! தங்கம் திருடிய போலீசுக்கு மன்னிப்பு!
    இ. மைய அரசு திணிக்கும் மாதிரிப் பள்ளிகள் : கேள்விக்குறியாகும் தமிழ்வழிக் கல்வி
    ஈ. மோடியின் பயங்கரவாத ஆட்சியில் சமூக ஆர்வலர்களுக்கு இடமில்லை!
  • எதிர்கொள்வோம்!
  • ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிப்பு! நோக்கியாவின் முதலாளித்துவப் பயங்கரவாதம்!!– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஆர்ப்பாட்டம்
  • தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! தாது மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடு– 23.11.2013 அன்று தூத்துக்குடியில் மணல் கொள்ளை மாஃபியா கும்பலை நடுநடுங்க வைத்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பொதுக்கூட்டம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர், 2013 இதழ் | PDF

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 1 | நவம்பர், 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தனியார்மயக் கொள்ளையும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்
  • கடற்கரை வளங்களைக் கொள்ளையடித்து, மீனவர்களின் வாழ்வைச் சூறையாடிய
    வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!
    சொத்துக்கள் முழுவதையும் நட்ட ஈடின்றி பறிமுதல் செய்!!
    – மக்களின் அச்சத்தை உடைத்தெறிந்த புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்
  • மாட்டுக்குச் சூடு! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு!!
  • தீவிரவாத ஒழிப்பா, முசுலீம் வேட்டையா?
  • பாவ் நகர் – மிதி விர்தி : குஜராத்தின் கூடங்குளம்
  • ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!
  • அமெரிக்காவின் கண்காணிப்புக்கு ஒத்தூதும் இந்தியா!
  • லஷ்மண்பூர் – பதே படுகொலைத் தீர்ப்பு : நீதிமன்றத்தின் வன்கொடுமை
  • நகரத் தெருகள் : சீமான்களுக்கா, சாமானியர்களுக்கா?
  • “வியாபாரிகளின் ஒற்றுமையைக் கட்டிக் காப்போம்! போலீசின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்போம்!”
    – அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்.
  • சி.பி.எம்: சமூக விரோதக் கழிசடைகளின் புகலிடம்!
  • இலஞ்சம்: தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் கவசம்!
  • புதிய கார்ப்பரேட் வங்கிகள்: திருடன் கையில் பெட்டிச்சாவி!
  • 29-ம் ஆண்டில் புதிய ஜனநாயகம்
  • ஈக்கள் பல்கிப் பெருகி கிராமங்களின் சுகாதாரத்தைச் சீர்குலைக்கும் பி.கே.பி. கோழிப்பண்ணையை இழுத்து மூடு!” – கிராம மக்களின் போராட்டம்
  • இது மணற்கொள்ளை மாஃபியாக்களின் ஆட்சி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram