Skip to content

பார்ப்பனியம் – ஒரு விவாதம்! (அல்லது) ஆர்வியும் ஜெனோடைப்பும் !!

இந்தக்கட்டுரை குறித்து புதிய வாசகர்களுக்கு சிறு அறிமுகம். பார்ப்பனிய இந்து மதம் குறித்த எமது பதிவுகளின் விவாதத்தில் பங்கேற்கும் நண்பர் ஆர்வி பார்ப்பனியம் என்ற வார்த்தையில் எல்லா பார்ப்பனர்களையும் குற்றவாளிகளாக பார்ப்பது தவறு என்று வாதிடுகிறார். மருத்துவர் ருத்ரன் சென்ற ஆண்டு அவரது வலைப்பபதிவில்  ஆர்.வியின் கருத்தை அவரது  ஜேனாடைப்பே தீர்மானிக்கின்றது என்று எழுதியதை ஆர்வி பலமுறை கண்டித்திருக்கிறார். பார்ப்பனர்களின் சாதிய உயர்வு கண்ணோட்டம் பிறப்பிலா, வளர்ப்பிலா என்பதை விட பார்ப்பனிய சாதி அமைப்பு ஒழிக்கப்பட வேண்டியதா, நியாயப்படுத்த வேண்டியதா என்ற கேள்வியை இக்கட்டுரை முன்வைத்து வாதிடுகிறது.தன் சாதியினரைக் குற்றவாளிகள் என்று அழைப்பதால் வரும் கோபம் இந்த அநீதியான சாதி அமைப்பு அழியவேண்டும் என்று ஏன் வரவில்லை என்பதை இக்கட்டுரை கேள்வி கேட்கிறது.பார்ப்பனியம், ஜெனோடைப் குறித்து நாம் விவாதிக்க வேண்டிய மையமான கருத்து எது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது இக்கட்டுரை. நிதானமாக படியுங்கள். தெளிவாக கருத்துக்களை முன்வைத்து வாதிடுங்கள்.

vote-012வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில், நிரூபிப்பதில் பயனில்லை. பிறப்பால் ஒரு மனிதனின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை என்று ஆர்வி கூறுகிறார். மகிழ்ச்சி. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். இனி மேலே போவோம். வேறு எதனால் சிந்தனை தீர்மானிக்கப்படுகிறது என்று ஆர்வி கருதுகிறார்? சில மனிதர்கள் சில மாதிரி சிந்திப்பதற்கும், வேறு சிலர் வேறு மாதிரி சிந்திப்பதற்கும் என்ன காரணம்? அவர்களது அறிவா, அறியாமையா, நல்லெண்ணமா, விபத்தா, வாழ்நிலையா?

ஜெனோடைப் என்ற வார்த்தைக்கு மருத்துவ அகராதியில் பொருள் தேடுவது இருக்கட்டும். சமூகத்தைப் பார்ப்போம். ஏன் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் நடுத்தரவர்க்கமாகவும், பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் ஏழைகளாகவும் இருக்கின்றனர்? ஏன் சிறுபான்மையினரான பார்ப்பனர்கள் கூட விவசாயிகளாக இல்லை? ஏன் பெரும்பான்மையினரான பார்ப்பனர்களும், முதலியார்களும், செட்டியார்களும், வெள்ளாளக் கவுண்டர்களும் தங்களை உயர்ந்த சாதி என்று இன்னமும் கருதுகிறார்கள்? ஏன் பெரும்பான்மையான தலித்துகள் தங்களை தாழ்ந்த சாதி என்று முன்னர் கருதிக் கொண்டிருந்தார்கள்? ஏன் இப்போது அவ்வாறு கருதுவதில்லை?

இவற்றையெல்லாம் ஜெனோடைப் தீர்மானிக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் எது தீர்மானிக்கிறது, என்ன காரணம் என்ற கேள்விக்கு விடை வேண்டும்.

காரணம் எதுவாக இருந்தால் என்ன? வெங்காயம்! எதற்கு இந்த ஆராய்ச்சி என்ற அடுத்த கேள்வியும் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு இதுதான் காரணம் என்று வேறுபட்ட காரணங்களை முன்வைத்து விவாதிக்கும் அறிவியலாளர்கள் எதற்காக அந்த விவாதத்தை நடத்துகிறார்கள்? தமது அறிவின் மேன்மையை நிரூபிக்கவா? அல்லது நோய் முதல் நாடுவதன் மூலம் அதற்கு மருந்து கண்டுபிடிக்கவா?

இந்த விவாதத்தில் காரணம் குறித்து இரு வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் விவாதிப்பவர்களிடையே நோக்கத்தில் ஒற்றுமை இருக்கிறதா? சாதி என்பது இந்த நாட்டையும் சமூகத்தையும் கெடுத்து, முடமாக்கி, சீரழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாபக்கேடு மட்டுமல்ல, ஒழுக்கக் கேடுகளிலெல்லாம் தலையாய ஒழுக்கக்கேடு என்பதை ஆர்வி ஒப்புக் கொள்கிறாரா? அதன்பால் மென்மையான அணுகுமுறையைக் காட்ட முடியாது. அதை ஈவு இரக்கமின்றி ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறாரா? அப்படி ஒரு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் எப்படி அதை ஒழிக்கலாம் என்பது பற்றி நாம் விவாதிக்கலாம். எப்படித் தோன்றியது யார் காரணம் என்ற ஆராய்ச்சி அதற்காகத்தான். அதற்காக மட்டும்தான்.

இப்படி ஒரு நோக்கம் இல்லாமல் வெறும் அகெடமிக் இன்டெரெஸ்ட்டுக்காக நடத்தப்படும் விவாதமாக இது இருக்க முடியாது. அல்லது நீ பெரியவனா நான் பெரியவனா விவாதத்துக்கோ, வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதற்கோ இங்கு வேலை இல்லை.

ஜெனோடைப் என்று மருத்துவர் ருத்ரன் சொன்னது அறிவியல் பூர்வமாகத் தப்பு என்பதை வினவு ஒத்துக் கொள்கிறதா இல்லையா என்பதுதான் சாதிப்பிரச்சினை தொடர்பாக இப்போது ஆர்வியுடைய கவலை. ஜெனோடைப்பின் பெயரால் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை முடமாக்கி வைத்திருக்கும் சித்தாந்தம், மதம், சாதி அவற்றின் புனிதம் போன்ற கருத்துகள்;  இன்னமும் அவற்றை நியாயப்படுத்துவது மட்டுமல்ல, சூத்திரன் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் வாதாடுபவர்கள் .. இவர்களை என்ன செய்யலாம்? கருத்தை கருத்தால் வெல்ல வேண்டுமா, அல்லது இவர்கள் மீது வேறு எதையாவது பிரயோகிக்கலாமா, ஆர்வி எதை சிபாரிசு செய்கிறார்?

ஜெனோடைப் என்று ஒரு வார்த்தையை டாக்டர் ருத்ரன் சொன்னதற்கு வரிந்து கட்டிக் கொண்டு எழுதும் அளவுக்கு, அந்த ஜெனோடைப்பை சித்தாந்தமாக்கி பல நூற்றாண்டுகளாக அதனையே ஒரு மதமாகவும் உறுதிப்படுத்தியிருக்கும் நபர்கள், அவர்களில் பெரும்பாலோர் “தற்செயலாக” ஒரு சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது ..என்பனவற்றைப் பற்றி ஆர்வி எவ்வளவு கவலைப்படுகிறார்? அல்லது கோபப்படுகிறார்?

இதனை எளிமைப்படுத்திக் கூறுவதானால், “பரப்பயலுக்கு அவ்வளவுதான் புத்தி” என்று இந்தக் கணம் வரை உயர்சாதியினர் என்று தம்மைக் கூறிக்கொள்வோர் பேசி வருவதில் பலருக்கு உறுத்தல் இல்லை. “மேல் சாதிகளை”ச் சேர்ந்த படித்த அறிவாளிகளைப் பொருத்தவரை அது முதியவர்களின் அறியாமை, அல்லது சம்பிரதாயப் பிடிப்பு இன்ன பிற, இன்னபிற. ஆனால் “பாப்பார புத்தி” என்று ஒரு சூத்திரனோ தலித்தோ போகிற போக்கில் சொல்லி விட்டால் கூட உடனே சுர் என்று வந்து விடுகிறது. உடனே இந்த ஜெனோடைப் கொள்கையை லண்டன் ராயல் இன்ஸ்டிடியூட்டின் லேப்புக்கு அனுப்பி நிரூபிக்கத் தயாரா என்ற அளவுக்கு தாண்டிக் குதிக்கிறார்கள். இது அறிவியல் மீது உள்ள பிடிப்பு தோற்றுவிக்கும் கோபமா, அல்லது வேறா? கொஞ்சம் நியாயமாக யோசித்துப் பார்த்தால், அல்லது சுய பரிசீலனை செய்து பார்த்தால் விடை கிடைக்கும்.

“நான் அப்படி இல்லை”, அல்லது “நான் சாதியை ஆதரிக்கவில்லை” என்ற எதிர்மறையான தன்னிலை விளக்க ஸ்டேட்மென்டுகள், தார்மிக ரீதியில் தன் நிலையை நியாயப்படுத்திக் கொள்ள மட்டுமே உதவும்.

“நான் அப்படி இல்லை” என்பது கிடக்கட்டும். என் சாதியைச் சேர்ந்தவர்கள் (பார்ப்பனர்களை மட்டும் சொல்லவில்லை) பெரும்பாலான பேர் என்னைப் போல ஏன் இல்லை என்ற கேள்விக்கு ஆர்வி போன்றோர் விடை தேடவேண்டும். “இட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ” என்பது பதிலாக முடியாது. சாதிய சமுதாயத்தின் ஆதாயங்களை மரபுரிமையாக (இது ஜெனோடைப் அல்ல என்று கூறலாம், ஹெரெடிடரி பிரிவிலேஜ் என்று வாதிடலாம். பூவுன்னும் சொல்ல்லாம், புட்பம்னும் சொல்லலாம், அய்யிரு சொல்றமாதிரியும் சொல்லலாம்) அனுபவிக்கும் யாருக்கும் அப்படி ஒரு பதிலைச் சொல்லும் உரிமை கிடையாது. ஏனென்றால், you have grown, drinking from that cup.. அந்தக் கோப்பையிலிருந்து அருந்தித்தான் நீங்கள் இப்போதிருக்கும் நிலையை அடைந்திருக்கிறீர்கள்.

இந்தக் கோணத்திலிருந்து இப்பிரச்சினையைப் பார்த்தால் மட்டும்தான்

“ஆர்.எஸ்.எஸ் பற்றி எனக்கு அரசல் புரசலாகத்தான் தெரியும்” என்ற தனது கூற்று அறியாமை ignorance சார்ந்ததும் மன்னிக்கத்தக்கதும் அல்ல, மாறாக அறம் வழுவியது, immoral, எனவே குற்றவுணர்வு கொள்ளத்தக்கது என்பதை ஆர்வி புரிந்து கொள்ள முடியும். “மோடி பிரதமராக வேண்டும்” என்று “கருத்து” வைத்திருக்கும் டோண்டு ராகவன் தனக்கு ஃப்ரெண்டாக இருக்க முடியாது என்பதை ஆர்வி உணர்ந்து கொள்ளவும் முடியும்.

மொத்தத்தில், இந்த விவாதம் ஒரு அறிவுசார் சுய இன்ப நடவடிக்கையாக இருக்கக்கூடாது என்றால் விவாதத்தின் “உணர்ச்சி”, விவாதிப்பவர்களின் (கவனிக்க ஆர்வியை மட்டும் சொல்லவில்லை) அறிவை நெறிப்படுத்த வேண்டும். விவாதிப்பவர்களுக்கு ஒத்த நோக்கம் இருக்க வேண்டும்.

அப்படி ஒரு ஒத்த நோக்கம் இருப்பின், தன்னுடைய கூற்றை “சரி” என்று நிரூபித்துக் கொள்வதில் காட்டும் அக்கறையை விட, சமூகத்தில் உள்ள தவறைச் “சரி” செய்வதின் மீதான நமது அக்கறைக்கு முதலிடம் கொடுப்போம். அப்போது மட்டுமே நடுநிலையான, பக்கசார்பற்ற அறிவியல் ஆய்வுகளும் சாத்தியப்படும்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

Print

422 Comments

  1. tamilhindu

    ‘ சூத்திரன் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் வாதாடுபவர்கள் .’
    You got it wrong. Even Shankaracharya has no right to perform those rituals in temples.So even his touch would not be permissible.It is a question of customary rights.There are many temples where brahmins are not priests and there too not all can enter the sanctum sanctorum and perform rituals. There are rights and rules and procedures that have been followed for ages. The case was whether government could change them. The answer was obvious- govt. had no right to interfere or make changes in them. The court affirmed the fundamental right to follow ones faith and right to prevent governments from overstepping its limits. Can the government make changes in rituals at mosques and churches. If it cannot why target hindu temples. The Hindus have the consitutionally guaranteed rights and no government can be allowed to trample upon them or modify them.You communists want to destroy Hinduism because you are against Hinduism AND
    India as a sovereign nation.Your anti-caste ideology is a mask for your anti-Hindu AND anti-India
    ideology. We know that too well, Mr.Vinavu.

    Posted on 19-Nov-09 at 10:57 am | Permalink
    • SuperHindu

      //Even Shankaracharya has no right to perform those rituals in temples//

      Is it so. If yes, is this before the killing of Sankararaman or after. //many temples where brahmins are not priests// You are right. But Brahmins never visit these temples.

      Posted on 19-Nov-09 at 2:14 pm | Permalink
    • JAR Fernando

      சூத்திரன் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் வாதாடுபவர்கள் – this sentence is just a symbol. Not knowing that, you went on describing the nitty-gritty of your religion.

      The sentence does not only mean what is overtly revealed, which you have understood and replied to, but it also means that, based on births, the brahmins discriinated against dalits racially in practising their religion, using genotype theory and exploiting the verses in Gita attributed to Lord Krishna. Who has asked you what your religious rituals are and who should and shouldnt enter your temples. Tell us, why one group of people were called by you, the brahmins, untouchables, meaning, even shadow will pollute your religiously and that pollution can be erased only with religious rituals. Dont say, it is not the case and cite your verses. It was and is still now, at certain places, the practice to treat dalits as religious pariahs whose company should be avoided by brahmins, and who should not enter temples as they pollute the god. Tell us why Lord Krishna does not say where these peopel were born, while he said all others were born from his different body parts. This essay deplores the semantic exercises RV did over the word, Genotype, as a subterfuge to escape the large question of upper caste and lower caste. YOUR ARE COMMITTING THE SAME ERROR AS RV DID, PLAYING OVER WORDS.

      Posted on 19-Nov-09 at 2:18 pm | Permalink
      • Mayannan

        How can lord Krishna say about the parts of body from where these people were born. Do u believe in that..? It is simple common sense. These people just communicate their ideas as if it is Lord Krishna’s ideas, and as if it is told by lord Krishna.

        Do u think Lord Krishna ever published any book saying all these bull shit..?

        Posted on 23-Nov-09 at 12:14 pm | Permalink
    • வேல்

      வெங்காயம், எந்த பிராமணன் கருவறைக்குள் நுழைந்தாலும் 2 நாள் தீட்டு. அதே வாத்தியார் எந்த பிராமணன் வீட்டுக்குள்ளும் பின் வாசல் வழியாதான் போகனும். இதுதான்…….. இந்து மதம், பிராமணயிசம் வேறென்ன சொல்ல.

      Posted on 19-Nov-09 at 2:47 pm | Permalink
      • JAR Fernando

        தக்காளி…இங்கு பேசப்படுவது…யார் கருவறைக்குப்போனால் தீட்டு என்பதல்ல. தலித்துக்களுக்கு ஏன் தீண்டாமையை வைத்தார்கள் உங்கள் மதத்தில். ஏன் பார்ப்பனனை ஒரு தலித்து தன்னையறியாமல் தீண்டிவிட்டால் அது ஒரு தீட்டாகிறது என்பதுதான் கேள்வி. ஏன் பார்ப்பன்னுக்கு மட்டும் பூணால்?

        கோயிலுக்கே போனாலும், கருவறையில் மட்டும்தான் பார்ப்பனர் நுழையமுடியாது. ஆனால் தலித்து கோயிலுக்குளே நுழைய முடியாதே! இதற்கென்ன வேல் பதில்?

        Posted on 19-Nov-09 at 3:39 pm | Permalink
        • வேல்

          தக்காளி, இது தமிழ் இந்துக்காக இட்ட பின்னுட்டம், தலித் நுழைந்தால் 48 நாள் தீட்டு, சீறிரங்கத்தில்தான் அதை கண்டோமே. கொலைகார சங்சராச்சாரி மட்டுமல்ல எந்த பிராமணனும் செல்ல முடியாது என்பதற்காக இட்ட பின்னுட்டம். மன்னிக்கவும் தவறு இருந்தால் ஒன்று தெரியுமா ஆண்டாண்டு கால மரபை மாற்ற முடியாது என வாதிடுகிறான் இவன். எவனாது குடுமியோடு அமெரிக்கா போயிருக்கான பார். இதுதான் இவர்கள் செய்கை

          Posted on 20-Nov-09 at 10:46 am | Permalink
        • M.Mani

          உங்கள் இந்துமதம் என்று போட்டிருப்பதாலும் உங்கள்
          பெயரிலிருந்தும் நீங்கள் கிறித்துவர் என்று தெரிகிறது.
          கிறித்துவ மதத்தில் தீண்டாமை இல்லையா? இல்லை
          என்பது மறுமொழியானால் மணப்பெண் மணமகன்
          தேவை விளம்பரத்தில் கிறித்தவ நாடார். முதலியார்
          என்று ஏன் விளம்பரம் செய்கின்றனர்?

          Posted on 11-May-10 at 12:14 pm | Permalink
      • வெங்காயம்,என்றதுமே த்ந்தை பெரியார் அவர்கள் தான் ஞாபகத்துக்கு வருகிறார், பார்ப்பண ஆதிக்க சக்தியே ஒளிப்பதற்க்காக பாடுப்பட்ட ஒரே தலைவர் பெரியார் , திட்டு திட்டுனு திட்டியும் திருந்தாத ஜென்மம் பார்ப்பண ஜென்மம், தான் தீட்டாவது புடலைங்காய்யாவது, திருந்தாத ஜென்மம் இருந்தால் என்ன இறந்தால் என்ன?????????

        Posted on 20-Nov-09 at 12:06 am | Permalink
    • தமிழ் இந்து

      //There are rights and rules and procedures that have been followed for ages. The case was whether government could change them. //ஆமாம்,,ஆமாம்…நீங்க சொல்றது எப்படி சரியாகாம போகும்? கோவில் கருவறைக்குள்ளே சூத்திரப்பசங்க போகலாமான்னு பேச்சு வந்தாக்க மட்டும் நாம மறக்காம ‘அரசுக்கு’ உரிமை ஏதுன்னு கேக்கணும்!! கோவில்ல எல்லாம் கெடா, கோழி வெட்டப்புடாதுன்னு அரசு தலையிட்டா..அப்ப எல்லாம் ‘அரசு மூக்கு நுழைப்பதை’க் கண்டுக்கப்புடாது..இந்திய அரசை யாராவது எதிர்த்தால் அரசியல் சட்டத்தின் எல்லா வழிமுறைகளின்படியும் அவர்களைத் தண்டிக்கணும்..அதே சட்டம் தீண்டாமையை சட்டப்படிக் குற்றமாக அறிவித்தாலும், சித்தியடஞ்ச பெரியவாள் சொன்னாளே ‘அதெல்லாம் (தீண்டாமை) ஷேமகரமானது’ அதனைக் கடைப்பிடிக்கணும்..இல்லையா? எல்லா இடத்திலேயும் நடைமுறையில் இருக்கும் பி.சி.ஆர். ஆக்ட், வன்கொடுமை தடுப்புசட்டம் கருவறைக்குள்ள மட்டும் செல்லுபடியாகக் கூடாது..நீங்க சொல்றது 100 சதம் சரி..ஆனா எவனாவது ‘ஏண்டா இந்திய சட்டம் அமுலாகுற இடத்திலேதானே கர்ப்பகிரகம் இருக்குது? அது மட்டும் பாகிஸ்தான்லயாடா இரூக்கு’ன்னு கேட்டா என்னங்க ‘தமிழ் இந்து’ங்கற முறையில நான் பதில் சொல்றது? பல ஆண்டுப் பழக்கம் இது..அரசு தலையிடக்க்கூடாது..வாஸ்தவம்தான்…ஏனுங்க..நம்ம வீட்டிலெ தாத்தாவோ அப்பாவோ மண்டையப் போட்டுட்டா, உயிரோடு இருக்கும் ஆச்சியையும், அம்மாவையும் அதே சுடுகாட்டுல கொளுத்தறதுதானே நம்ம தர்மம்.. ஏனுங்க செய்ய மாட்டேங்கறீங்க..இப்ப மட்டும் சதியை ஒழிக்க அரசு தலையிடறதை ஆதரீக்கலாமா?

      Posted on 19-Nov-09 at 4:04 pm | Permalink
    • Sukdev

      I suspect this person is from RSS who is running a blog in the name ‘tamilhindu’. It is full of abuses on all people who won’t fall into the line of Hindutva. I once saw a bluntly written article on Elam that Elam struggle is orchestrated by Christians. My comments there were summarily rejected by the blog owners. But here he enjoys everything. The person seems to be the same one who has come here and spews venom that the government interferes only on Hindu temples and not on other worship places. For this he has conveniently forgotten the history of government taking over the Hindu temples. These people owe much to Karunanidhi, in spite of his strong anti Brahmin stance, for renovating the old temple structures and regulating various other rituals to happen on a regular pattern in all major temples. While writing this, I am being handicapped of not knowing various other works of Hindu Endowments Department.

      Posted on 21-Nov-09 at 4:37 pm | Permalink
  2. காளமேகம்

    அதியமான்ட்ட கூட விவாதிச்சுக்கிடலாம் பாருங்க நம்ம ஆர்.வி அண்ணாச்சியோட மட்டும் பேசுரது ரொம்ப சிக்கல். மனுஷன் வார்த்தையத்தான் பாத்துக்கிடுவாரு தவிர வாக்கியத்தோட பொருளை எப்பையுமே பேசமாட்டாருல்லா. இந்தக் கட்டுரையில ஆர்வியோட எப்புடி விவாதிக்கனும்முனு கனஜோரா கத்துக்குடுத்துருக்காக. வா, மக்கா வந்துஆட்டையப் போடலாம்லா?

    Posted on 19-Nov-09 at 12:58 pm | Permalink
    • SuperHindu

      The argument with Mr. Athiaman is Capitalism Vs Communism. But with Mr. R.V is Parpaneeyam Vs Samathuvam

      Posted on 19-Nov-09 at 2:18 pm | Permalink
      • JAR Fernando

        RV’s credentials are suspect for two reasons, as I understand from reading him: He says poonul is the birth right of brahmins just as skull cap for mulsims and other distinctive features for other castes. He suppresses the fact conveniently that poonul is worn as a religious ceremony initiatiing one into brahminhood, Brahminhood is a religious act and makes the person intiiated accept varnashradharmam whereby he concedes the fact that the touch of a dalit will pollute him. RV is clever to suppress all this, and he equates poonul just as an act without any meaning. Next, he is dishonest, whereas persons like Dondu are honest, in the sense they dont pretend to believe in equality of castes. RV pretends to say everyone is equal. In short, RV is for parppaneeyam for which he plays with meanings.

        Posted on 19-Nov-09 at 2:35 pm | Permalink
  3. சிறிய பதிவு என்றாலும் மிக அருமையான சிறந்த பதிவு.
    விவாதிக்கும் முறை என்ன என்பதை சில விசயங்களில்
    மட்டுமே நின்று தொங்கிக்கொண்டிருப்பவர்களின்
    முகத்துக்கு நேரே உறைக்கும் பதிவு.

    Posted on 19-Nov-09 at 1:12 pm | Permalink
  4. சிறிய கட்டுரையே ஆனாலும் விவாதம் பற்றியும், அதில் தன்னிலை மற்றும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சாதிய மரபுரிமை வகிக்கும் பாத்திரம் பற்றியும் தெளிவாக விளக்குகிறது. சிறப்பான பதிவு!

    Posted on 19-Nov-09 at 1:54 pm | Permalink
  5. rudhran

    எழுத இயலாத ஒரு மெத்தனத்திலிருந்து மீள இப்பதிவு எனக்கு உதவுவது இருக்கட்டும்..ஜீனோடைப் விஷயம்…ஆர்வி என்பவர் என்னுடைய ஆங்கிலப்பதிவுக்கு “உனக்கு யார் இப்படி பேச அதிகாரம் கொடுத்தது” என்கிற தொனியில் ஒரு பின்னூட்ட்ம் போட, அந்நேரம் நான் அதைப்பார்த்ததால் உடனே இது உங்கள் பலநூற்றாண்டு கால ஜீனோடைப்பின் விளைவால் வரும் பேச்சா என்று கேட்டேன். அவரே அடிக்கடி புலம்புவது போல் அந்த என் பதில் அவர் பின்னூட்டம் இட்டஓரிரு நிமிடங்களில் சொன்னதுதான். என் பதிவு, காலங்காலமாய் அடிபட்டுக்கிடந்த தலித் இளைஞர்கள் திருப்பி அடிக்க முன்வந்ததைப்பற்றியது! அத‌ற்கு முன் ஆர்வி என் எந்த பதிவிலும் பின்னூட்டம் இட்டதில்லை.
    ஜீன்கள் சிலவற்றாஇ சந்ததியினருக்குத்த்ருகின்றன. எல்லரும் ஒரே ஆப்ரிக்கத்தாயின் பிள்ளைகள் என்று இருந்தாலும், என் அமெரிக்க நண்பன் என்னைப்போல் சிந்திப்பதுமில்லை நடந்துகொள்வதுமில்லை.மனித உருவ அமைப்புகளிலும் கூட அந்த ஆதியின் அப்பட்டமான நகல் இல்லைஎனும் போது, கொழுப்பும் குயுக்தியும் எப்போதிருந்து ஆரம்பித்திருக்கும்? ஆரம்ப ஜீன் தான் அடிப்படை என்றால் எல்லா மனிதர்களூம் தீட்டு பார்க்காமல் எல்லா கறியும் சாப்பிட்டிருக்கலாமே.இது விதண்டாவாதமென்றால்..ஒரு வேளை there is a genetic mutation in me!
    sorry if i have taken up space. i had to reply because it somehow links with me directly

    Posted on 19-Nov-09 at 2:02 pm | Permalink
  6. PUNJAB Ravi

    Dear VINAVU/RV/Dr.RUDRAN,
    ALL of you are just beating around the bush!!!. Brahmninsm is a way of life which no longer exists!. Brahmnis are running leather business hence he ie equal to a cobler!,They are running hotels,some evern brothels.. THE DEFINITION FOR A TRUE BRAHMIN no longer EXISTS in the world,..Have spoken to Vinavu a couple of times about this word used again and again,..Vinavu you’ve got an excellant tool with you and why don’t you use it for a better causeAnd why you people are bent on scratching the old healed wound called casteism!!!.In fact you must try to discourage any casteist remarks in this column,..

    Posted on 19-Nov-09 at 2:09 pm | Permalink
    • SuperHindu

      //THE DEFINITION FOR A TRUE BRAHMIN no longer EXISTS in the world// What is the definition for True Brahmin. I am interested to know.

      //
      Brahmnis are running leather business hence he ie equal to a cobler// What made you to write a statement like this. Is this due to Genotype. Why don’t you think or say that both are humans hence equal.

      Posted on 19-Nov-09 at 2:29 pm | Permalink
    • வேல்

      பஞ்சாப் ரவி அவர்களுக்கு, மீன் மற்றும் இறால் பண்ணை நடத்திய பிராமண பெரிய மனிதர்களை தெரியும், எஸ் அன்ட் எஸ், சீறி ராம். போன்றோர் பிராமணர்களே. அவர்கள் என்ன கடலில் இறங்கி மீனும் இறாலும் பிடித்தார்களா. இல்லை எமாந்த விவசாயிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி விவசாயத்தோடு நிலத்தையும் பாழாக்கினர். அடுத்தவன் பணத்தில் தரகர் வேலை செய்தார்கள். அதுபோலவே காலணி ஏற்றுமதியும். இதில் பிராமணன் மட்டுமில்லை எனக்கு நேரிடையாகவே தெரியும் செட்டியார்கள், முஸ்லிம்கள் எத்தனை கோடி கடன் பெற்றார்கள். எத்தனை வங்கிகளை (பொது மக்களின் வைப்பு தொகையில் பெற்ற கடனை) எப்படி ஏமாற்றினார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இவர்கள் ஆட்டு தோலை உரித்து அதிலிருந்து செருப்பா செய்தார்கள். புரோக்கர்கள், இத்தாலியில் ஒரு புரோக்கரை தெரியும் அவனின் ஆர்டர் பெற்று நிறுவனமே இல்லாமல் எவனோ ஒருவனுக்கு அதை கை மாற்றி கொடுத்து பணம் பார்க்கும் இடைத் தரகர்களே அன்றி, வேறு அடையாளம் இவர்களுக்கு கொடுக்க இயலாது எந்த சாதிக்காரனாக இருந்தாலும்.

      THE DEFINITION FOR A TRUE BRAHMIN no longer EXISTS in the world,.. பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டாயிருக்கிறது என்பதை போலவே இதுவும்.

      Posted on 19-Nov-09 at 2:32 pm | Permalink
    • வேல்

      இதுநாள்வரை இந்துயிசம் என்பதே ஒரு வாழ்க்கைமுறை என்று கூறிவந்தனர். இப்போது பிராமணயிசமே வாழ்கைமுறை என்று இவர் கூறுகிறார்.

      ஓ மன்னிக்கவும் இரண்டும் ஒன்றுதான் என்பதை மறந்து இதை பதிந்துவிட்டேன்

      Posted on 19-Nov-09 at 2:44 pm | Permalink
    • சுந்தரராமசமி அய்யர்

      ஏன்னா பஞ்சாப் ரவி, மலம் அள்ளும் பிராமணாள் எங்காச்சும் உண்டா ஓய்? “ஓனிக்ஸ் கம்பெணி மேனேஜர் என் அத்திம்பேருதான்..அதனால அவரு கூட சக்கிலியர்தான்”னு ஒரே போடா போட்டுராதேயும் ஓய்..

      Posted on 19-Nov-09 at 3:26 pm | Permalink
      • sundar

        Why?Many brahmins are doing that in the middle east and the west where all of us have to do scavenging?The debate here shows only a desire to portray brahmins in bad light as though they do not have a right to follow certain personal beliefs and faith  with which others  have no right to question They think  thats demeaning to them It is out of their inferiority complex.

        Posted on 19-Nov-09 at 9:53 pm | Permalink
      • பிராமணன் என்ன வானத்தில் இருந்தா குதித்தான் அவனும் மற்றவர்களை போல தானே பிறந்திருப்பான்,ஏன் பிராமணன் மலத்தை அள்ளினால் என்ன தப்பு மலத்தை சக்கிலியர்கள் தான் அள்ள வேண்டும் என்று சட்டமா எழுதப்பட்டிருக்கிறது, பிராமணன் உலகத்தை அடித்து உலையில் போடும் அயோக்கியன்,என்பதை எவராலும் மறுக்க முடியாது, அதற்க்கான சரியான உதாரணம் எஸ் அன்ட் எஸ், சீறி ராம்

        Posted on 20-Nov-09 at 12:21 am | Permalink
    • JAR Fernando

      ravi, புணூல் போட்டு ஆவணிஅவிட்டத்தில் இன்றும் மாட்டுக்கொள்கிறார்கள். அதை ஆர்.வி பிறப்புரிமை என்கிறார். பூணால் போட்ட பார்ப்பனரைவிட போடாதவர் எண்ணிக்கையில் குறைவு. எனவே, பார்ப்பனீயம் இன்னும் ஜோராக இருக்கிறது.

      Posted on 19-Nov-09 at 3:44 pm | Permalink
  7. Yazhini

    Good to know that TamilHindu understood that we are against Hindu-Indian-Nationalism(!). If court doesnt have the rights to intefere in the long-time followed faiths/beliefs , why laws like “Anti-Slaughter” were passed?! . So, its the Question of “whose” beliefs that the Govt. can interfere or trample and whose it cannot/should not…

    Posted on 19-Nov-09 at 2:16 pm | Permalink
    • JAR Fernando

      பதிவு இந்து மதத்தைப்பற்றியது அல்ல. பார்ப்பனர்களின் சமூகநடத்தைப்பற்றி. அது எப்படி மற்றவர்களை, குறிப்பாக, மற்ற இந்துக்களைத்தாக்கிகிறது. எடுத்தக்காட்டாக, தலித்துகள், சாதி என்ற அஸ்திரத்தைப்பயன்படுத்தி. அதைப்பற்றி ஏதாவது சொல்லுங்கள், திசை திருபப் முய்லாதீர்.

      Posted on 19-Nov-09 at 3:50 pm | Permalink
      • Yazhini

        That was for tamilhindu…

        Posted on 20-Nov-09 at 12:21 pm | Permalink
      • pugal

        பார்பனர்களின் சமூக நடத்தையே இந்து மதத்தை அடிப்படையாக வைத்து தானே உள்ளது mr jar

        Posted on 18-Mar-10 at 5:24 pm | Permalink
  8. rudhran

    there are times when we have to jump into the drainage to clear whatever is clogging. casteism is a convenient word to be used, brahminism is a synonym for the same i think that the topic of discussion here is about discrimination, opportunistic manipulation of social structure and a ‘habitual convenience’ to rule even if defacto. a brahmin running leather business would still not accept a dalit as his son/daughter in law. brahminism by the way not a casteist definition but a description of an attitude and life ethos.

    Posted on 19-Nov-09 at 2:20 pm | Permalink
    • Dr Rudhran, it seems that you are confused or i am not able to comprehend your language. I don’t think anyone can dispute the discrimination, opportunistic manipulation and everything else that is associated with casteism and brahminism. In india, brahimin / any other castes do do not accept other castes to be their son/daughter in law. So, your point ?   I don’t really understand what genotype is ! But if you mean the behaviour of parents / social environment  that he/she is brought up/ relatives define a person attitude, i completely agree with you unless he is intelligent enough to come out of the emotional pressures.

      Posted on 19-Nov-09 at 2:56 pm | Permalink
      • rudhran

        ok fodder for the grazers….when you say bullshit you dont mean the excreta of the bovine, you mean crap/rubbish/nonsense/or simply indescribable yuk. words mean more than what they appear as when thy have a written fom, and many meanings are sub text- like brahministic attitudinal cultural (?)inheritance.

        Posted on 19-Nov-09 at 3:00 pm | Permalink
        • To mean bullshit  if you keep on repeating the same words, meaning gets lost but only the word sticks out. That is where these sub texts goes for a toss i suppose.

          Posted on 19-Nov-09 at 3:22 pm | Permalink
        • கேள்விக்குறி

          @@@ if you keep on repeating the same words, @@@ இதையாராவது ஆர்.வி யிடம் சொல்லுங்களேன். மருத்துவர் ஒருமுறை சொன்னதை ஆர்.வி ஒரு வருடமாய் சொல்லிக்கொண்டிருக்கிறார். அது தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு விவாதம் வளராமல் தடுப்பதற்கு அல்லது திசை மாறி போவதற்கு அது காரணமாக உள்ளது.

          இந்த பதிவு ஒரு தெளிவை ஏற்படுத்தும் வழிகாட்டலாக உள்ளது. நன்றி தோழர்களே

          Posted on 19-Nov-09 at 3:34 pm | Permalink
  9. வேல்

    வினவு கூறியது போலவே, ஆர் வி அவர்கள் எப்போதும் நேரிடையான பதில் தருவதில்லை. அவர் என்னுடைய பதில்களுக்கு மறுபதில் தருவதாக நினைத்து சம்பந்தமில்லா ஏதோ ஒன்றை கூறி தப்பித்தே வந்தார். அவருக்காகவே இந்த இடுகை எனம் போது………. பார்ப்போம் மாறுவரா? இல்லை எப்போது போல மாற்ற முயற்சிப்பாரா என்று

    Posted on 19-Nov-09 at 2:38 pm | Permalink
  10. என் வழி தனி வழி...

    //ஏன் பெரும்பான்மையினரான பார்ப்பனர்களும், முதலியார்களும், செட்டியார்களும், வெள்ளாளக் கவுண்டர்களும் தங்களை உயர்ந்த சாதி என்று இன்னமும் கருதுகிறார்கள்?//

    உயர்ந்த சாதி என்ற எண்ணம் இடத்தாலும் வரும். கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தங்களை உயர்ந்த சாதி என்று கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் தான் நினைத்துக் கொள்ள முடியும். அதே போல் நாடார்கள் தங்களை உயர்ந்த சாதி என்று திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் தான் நினைத்துக் கொள்ள முடியும். வன்னியர்கள் மற்றும் மற்ற சாதியினரும் அப்படித்தான் தாங்கள் பெருன்பான்மையாக உள்ள பகுதிகளில் அவர்கள் உயர்ந்த சாதியினராக கருதிக் கொள்ளலாம். ஆனால் அவரவர்கள் இடம் மாறினால் அவர்கள் சாதியின் உயர்வு தாழ்வும் மாறுகிறது. எனவே சாதியின் உயர்வு தாழ்வை பிறப்பு மட்டும் இன்றி இடமும் தீர்மானிக்கிறதோ? அப்படி என்றால் தலித் மக்கள் மட்டும் எங்கும் கீழ் சாதியினராகவே பார்க்கப் படுவதேன்?

    Posted on 19-Nov-09 at 2:57 pm | Permalink
    • JAR Fernando

      பார்ப்பனரின் உயர்ந்த ஜாதி எண்ணம் இடம் காலம் இவற்றால் மாறுவதில்லை தோழரே. அதுதான் பிரச்சனை இங்கே.

      Posted on 19-Nov-09 at 3:53 pm | Permalink
  11. mani

    நான் மணி

    எனக்கு கட்டுரையின் தலைப்பு பற்றியும், வினவு குறிப்பிடும் விவாதமுறைக்கான வழிகாட்டல் பற்றியும், தற்போது விவாதம் சென்று கொண்டிருக்கும் பாதை பற்றியும் சில கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் உள்ளன. விவாதிக்கும் பொருளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத கருத்துக்கள் என்னுடையவை. அனைவரும் அனுமதிக்கும் பட்சத்தில் எனது கருத்துக்களை கூற விரும்புகிறேன். (ஆர்.வி உட்பட)

    Posted on 19-Nov-09 at 2:59 pm | Permalink
    • rudhran

      please

      Posted on 19-Nov-09 at 3:01 pm | Permalink
    • வினவு

      தோழர் மணி,

      இந்தப் பதிவே விவாதத்தை சரியான முறையில் கொண்டு செல்வதற்காகத்தான் எழுதப்பட்டிருக்கிறது. இதை மீண்டும் விவாதப் பொருளுக்கு வெளியே எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் முக்கியத்துவம் இல்லாத கருத்துக்கள் என நீங்களே ஒப்புதல் கொடுத்திருப்பதாலும் அதை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. பதிவின் மையப்பொருள் தவிர மற்ற விவாதங்கள் திசையை மாற்றுவதாகவே இருக்கும்.

      Posted on 19-Nov-09 at 3:19 pm | Permalink
  12. காளமேகம்

    ஒரு பாப்பாரக் குழந்தை அம்மையோட வயித்துல இருக்கச்சே அந்த பாப்பாவுக்கு பெயரு, எந்த சாமியைக் கும்பிடணும், எங்கே குடிக்கிற த்ண்ணி மோளணும், யாரு கூட நட்பு வச்சுக்கிடணும், யாரையெல்லாம் வீட்டுத சேக்கப்படாது, எந்த பொண்ணை கட்டணும், செத்துப்போன எந்த சுடுகாட்டுல எந்த ஐயரை வைச்சு சடங்கு செய்யணும் எல்லாம் தீர்மானிச்சுக்கிடுதாகளே, இதுக்கு என்ன சொல்லுதீக?

    Posted on 19-Nov-09 at 3:52 pm | Permalink
    • அலுவலக ரீதியான தொடர்பில் இருக்கும் பார்வர்ட் கம்யூனிட்டியை சேர்ந்த ஒருவர் தன் குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது, நியுமரலாஜி, நட்சத்திரம், ஜாதகம் என எல்லாமும் பார்த்து வைத்த பெயர் தருண் கிருஷ்ணா. பெயரை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது,
      முதல் எழுத்து D என எழுதக் கூடாதாம். ஏனென்றால், தருண் என்றால்… சூரியனாம். சூரியனின் தாக்கம் அதிகமாக இருந்து, குழுந்தையை பாதிக்குமாம். இதுவே, T எழுதினால் சுக்ரனின் அனுக்கிரகம் அதிகமாக கிடைக்குமாம்.

      Posted on 19-Nov-09 at 5:53 pm | Permalink
  13. JAR Fernando

    To mean bullshit if you keep on repeating the same words, meaning gets lost but only the word sticks out. That is where these sub texts goes for a toss i suppose.-

    Manikantan

    You’re dreaming. Words can never be without meaning. If they are repeated, they may only get a new menaing as the original meaning get exhausted and withered away and finally distorted to give birth to new meanings. Even babies cries, which dont have words, have meanings intelligible to mothers. Then, think about words, with meanings with their original meanings, and getting distorted menaings and finally new meanings. This is the basic thing a lingusitic student is asked to explore in his study by examples. Take the word, Fuck. Original meaning all of us know. It still gives that meaning. But its repeated use in general conversations is so much that it was taken to mean an expression of annoyance. Now, not only for occasions that annoy you, but in other contexts too, it is used, getting new meanings. A well known example. So, never say, words are expressed without meaning.

    Posted on 19-Nov-09 at 4:01 pm | Permalink
  14.  ஒகே சார்.

    Posted on 19-Nov-09 at 4:16 pm | Permalink
  15. gmohan54

    can you find a bramin girl named as valli? kannaki? or a boy as murugan? whereas the family is devoted to lord murugan temple archkas and enjoy the caste benefits as priests.they seggregate the lords of gods into the different castes to suit their needs and cheat the devotees inthe name of bakthi.Tirupathi,Guruvayur, Varansi are to quote as brahimins and other locals in the cities are as sathrian and the final village mariamman,kaliamman,ayyanar are daltis. we are not dare enough to question the social differnce though we think alike.

    Posted on 19-Nov-09 at 4:27 pm | Permalink
    • கள்ளபிரான்

      Mohan54′s is a general complaint against tamil brahmins: they name their children in Sanskrit only. All over India, hindus name their children in Sanskrit, albeit with surnames in their own tongue, just as an ethnic identity: for e.g. Dilip Padgoanker. Aparna sen. The first names are in Sankrit followed by the second names in their mother tongue. But Tamil brahmins name all in Sanskrit, except the first initial which stands for the village their anccestors hailed from: e..g Rasipuram Krishnasamy Narayan (R.K.Naraiin)..

      I dont find this anomolous. Sanskrit names show their loyalty to the Vedic Relgion. Such loyalty is not found in any other community in TN; even Saiva Pillais owe the loyalty to a separatebrand of Hindu religion, called Saiva Sithandam, which takes something from Vaideega Matham – thats all. However, the charge does not strictly apply to all brahmins of TN. For instance, the Iyengaars sometimes adopt the names of Thirumaal as spelt by Azvaars, in pure Tamil: ஆராவமுதன், மணாளன், அழகிய நம்பி, அலர்மேல் வல்லி, செந்தாமரைக்கண்ணன், ஒப்பிலி (short for ஒப்பில்லாப்பன்) etc. In fact, in ancient times, the iyengaar names were in pure Tamil. It is a pity Iyenagaars have now deserted the names alvaars gave them. So also, the Iyers in ancient India. The trend of going for pure Sanskirt name appears to be modern: that is, not found in anicent
      When they dont worship village tamil deities, why should they name their children after such peith theivangal or demon gods and goddesses. If you worship, do it; dont compel others. Murugan? You are saying half truth. The Iyer brahmins do name their boys Murugan. I have seen umpteen number of Murugan Iyers, although it is not visible to you because the children with sanskrit names preponderate. Go to any place of arubadaiveedu. You will see the priests with murugan’s different names in pure tamil. It is therefore incorrect to say they dont want the names of Murugan. .

      Posted on 19-Nov-09 at 5:28 pm | Permalink
  16. கேள்விக்குறி

    Dayavu Seithu Thamizhil Pinnotam Idavum – பிளீஸ் புட் த பின்னூட்டம்ஸ் இன் டேமில்

    Posted on 19-Nov-09 at 5:40 pm | Permalink
  17. விவாதத்தை சரியான முறையில் கொண்டு செல்ல இந்த பதிவு உதவும் என நினைக்கிறேன்.

    விவாதத்தை எடுத்து செல்கிறவர்கள், தமிழில் எழுதுவது நல்லது. சம்பந்தபட்டவர்களுக்கு மட்டும் புரியாமல் அனைவருக்கும் புரியும் படி செய்யுங்கள்.

    Posted on 19-Nov-09 at 5:41 pm | Permalink
  18. ////தன் சாதியினரைக் குற்றவாளிகள் என்று அழைப்பதால் வரும் கோபம் இந்த அநீதியான சாதி அமைப்பு அழியவேண்டும் என்று ஏன் வரவில்லை என்பதை இக்கட்டுரை கேள்வி கேட்கிறது//// இதே கோபம் தேவர் ஜாதிக்காரர்களுக்கு வரவில்லை என்று அவர்களை எதிர்த்தும் கட்டுரை போட தைரியம் கிடையாது. தேவரீயத்தை எதிர்ப்போம் என்று முரசுகொட்டும் வீரம் எங்கே? செட்டியாரீயத்தை ஒழிப்போம் என்று எதிர்க்க தைரியம் வராது.. நாடாரீயத்தி ஒழிப்போம் என்று எதிர்க்க தைரியம் வராது. வன்னியரீயத்தை எதிர்ப்போம் என்று சொல்ல தைரியம் வராது. பிள்ளைமாரீயத்தை ஒழிப்போம் என்று சொல்ல தைரியம் வராது. இப்படி பல ஈயம் பித்தாளை பேரிச்சம்பழங்கள் தமிழ் நாட்டில் இருக்கு அடுத்த வேளை கூழுக்கு வக்கில்லாத பிராமணனாக இருந்தாலும் அந்த பிராமணனை ஒழித்தால் தான் தமிழகத்திற்கு விடிவு என்று என்னி ஒரு தரப்பாகவே காழ்புணர்ச்சியுடனும் கொலை வெறியுடனும் விஷம் பரப்புவது மனிதத்தன்மை இல்லாத செயலே. தமிழ் கோவில் களில் பார்ப்பனர்களிடம் தமிழில் தான் ஓத வேண்டும் என்று சட்டம் போடும் தைரியசாலிகள் இஸ்லாமியர்களிடம் மசூதிகளில் தமிழில் ஓதுங்கள் என்று சட்டம் போட தைரியம் வராது. கோழைகள். தமிழை மசூதிகளில் காக்க முற்படாத முதுகெலும்பில்லா கோழைகள். தங்கள் வீரத்தை எதிர்ப்பே இல்லாத பார்ப்பனர்களிடம் தான் காட்டுகிறீர்கள். கொஞ்சம் நிதானமாக இருங்கள். பார்ப்பனர்கள் சீக்கிரம் ஒழிந்து விட்டால் உங்களுக்கு திட்டுவதற்கு வேறு ஜாதிக்காரர்கள் கிடையாது. எனவே அவசரப்பட்டு அழித்து விடாதீர்கள் பார்ப்பனர்களை. உங்கள் பிழைப்பு கெட்டு விடும்.

    Posted on 19-Nov-09 at 5:53 pm | Permalink
    • // பார்ப்பனர்கள் சீக்கிரம் ஒழிந்து விட்டால் //

      கன்னாபின்னாவென்று வரும் கோபத்தில் பதிவின் சாரம் மறந்து போய்விட்டது உங்களுக்கு. பார்ப்பனர்களை ஒழிப்பது என எங்கே இருக்கிறது? பார்ப்பினியம் என்று தானே இருக்கிறது.

      சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டுகிற எந்த சாதியினரையும் கண்டிக்கிறோம். பழைய பதிவுகளை தேடிப்பிடித்து படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்.

      // பார்ப்பனர்கள் சீக்கிரம் ஒழிந்து விட்டால் உங்களுக்கு திட்டுவதற்கு வேறு ஜாதிக்காரர்கள் கிடையாது. எனவே அவசரப்பட்டு அழித்து விடாதீர்கள் பார்ப்பனர்களை. உங்கள் பிழைப்பு கெட்டு விடும்.//

      எங்கள் நோக்கம் திட்டுவது என்பதெல்லாம் கிடையாது. சாதியில்லா, ஏற்ற தாழ்வில்லா சமூகத்தை உண்டாக்குவது. உங்களுக்கு வருகிற கோபத்தை பார்த்தால், சாதி, சனாதன தருமம் ஒழிந்துவிடக்கூடாது என்பதில் தான் அக்கறை தெரிகிறது. எங்கள் பிழைப்பு இதுவல்ல. ஏற்கனவே எல்லோரும் வெலை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

      Posted on 19-Nov-09 at 7:17 pm | Permalink
    • ஈயம்

      செட்டியாரீயம், நாடாரீயம், வன்னியரீயம், தேவரீய்ம, பிள்ளைமாரீய்ம – போன்றவைகளுக்கும், பார்ப்பனீர்யத்தும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு.

      மத்த ஈயங்கள் இந்துமதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த்வையில்லை. அவைகள் சமூகவாழ்க்கையிலிருந்தே உருவானவை. அவைகள் அல்லது அவர்கள் தம்மை, வைசியர், சத்திரியர் என்றெல்லாம் அழைத்துக்கொள்வதில்லை. த்ததம் வகுப்புபெயரிலேயே தம்மை அழைத்துக்கொள்கிறார்கள். மாறாக, பார்ப்பனர்கள், தமை, பிராமணர் என்று வருணசிரம்ப்பெயரை விடாப்பிடியாகக்கொண்டு, அச்சிரம்த்த்தில் சொன்ன படி சட்ங்குகள்ச் செய்து அவை தமக்கென்றே என்று சொல்லி பிறமக்களிட்மிருந்து தம்மைப்பிரித்துக்கொண்டு, அதே அம்மககளை தம்க்க எப்ப, எப்படி தேவையோ அப்படி பய்ன்படுத்தி வாழ்கின்றன. இப்படி தனியாகத் தம்மைப்பிரித்து வாழ்வதை அவர்கள் தாம் ஒழுக்கமாக வாழ்வதாகவும், பிறருக்க்த்த்தொல்லையில்லாமல் வாழ்வதாகவும் சொல்கிறார்கள். இதை பெரியார், ‘ஒரு பெண் தன் வீட்டில், ‘ இது ஒழுக்கமான் பெண் வாழும் வீடு’ என்று போர்டு போட்டால், மற்றவ்ர்கள் வீடுகள் தேவடியாக்கள் வாழும் வீடுகள் என்றுதானே பொருள்? இதைத்தான், பார்ப்பனீயம் செய்கிறது. மற்ற ஈயங்கள் செய்யவில்லை. இது மதத்தின் தொடர்பு இல்லாம்லிருந்தால் வேறு ஈயங்களோடு சேர்ந்ததாகு இருக்கும்; இதை மட்டும் குறிப்பிட்டு யாரும் சொல்ல்மாட்டார்கள். பார்ப்ப்னீயம், வெறும் பூணால் ச்மாச்சாரம் மட்டுமல்ல. அதோடு ப்லகூறுகள் உண்டு. அவை ஒவ்வொன்றும் பார்ப்பனர்கள் தம்நல் வாழ்வுக்காக மதம் என்ற பேரில் எழுதிக்கொண்டவை. என்வே, இங்கு அப்பார்ப்பனீயம்தான் பேசப்படுகிறது. இதை எதிர்னோக்க் மனதிடம் இல்லாமல், பார்ப்பனர்கள் அழிக்க மற்றவர்கள் நினைக்கிறார்கள் என கோழைத்தனமாக சொல்லி ஏமாற்றப்பார்க்கிறீர்கள்.

      Posted on 19-Nov-09 at 10:58 pm | Permalink
      • /////மத்த ஈயங்கள் இந்துமதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த்வையில்லை. அவைகள் சமூகவாழ்க்கையிலிருந்தே உருவானவை////// என்ன ஒரு கோழைத்தனமான பிழைப்பு வாத பேச்சு. மத்த ஈயங்கள் எல்லா சமூகவாழ்க்கையிலிருந்தே உருவானவையென்பதால் அவற்றை எதிர்க்க மாட்டார்களாம். அதனால் அந்த ஜாதிக்காரர்கள் வாயில் மலத்தை தினித்தாலும் ருசித்து தின்பீர்கள் எதிர்க்கமாட்டீர்கள். ஏனென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அவர்கள் மூத்திரத்தை உங்கள் வாயில் ஊற்றினாலும் ருசித்துக் குடிப்பீர்கள். ஏனென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அவர்களை அல்லது அந்த தேவரீயத்தை, செட்டியாரீயத்தை, பிள்ளைமாரீயத்தை, முதலியாரீயத்தை, வன்னியரீயத்தை, நாடாரீயத்தை என்று எந்த ஈயத்தின் பீயையும் எதிர்ப்பில்லாமல் தின்பீர்கள். ஆனால் உங்கள் உங்கள் வாயில் மலம் தினிக்காமல், உங்களை மூத்திரம் குடிக்கச் சொல்லாமல், உங்களுக்கு ரெட்டை தம்பளர் முறை கடைபிடிக்காமல் தங்கள் பிழைப்பை நடத்துவதே பெரும்பாடென வாழ்ந்து கொண்டிருக்கும், உங்களைப் போன்றவர்களை எதிர்க்க திரானி கூட இல்லாதிருக்கும் இந்தக் கால பார்ப்பான்களை அந்தக்கால வர்ணாசிரம சட்டம் என்று எதையோ சொல்லி தொடர்ந்து துன்புறுத்துவீர்கள். அவமதிப்பீர்கள். அழிக்க நினைப்பீர்கள். இது என்ன நியாயமோ? சுத்த கோழைத்தனம் தவிற வேறில்லை.

        Posted on 20-Nov-09 at 8:26 am | Permalink
        • //திரானி கூட இல்லாதிருக்கும் இந்தக் கால பார்ப்பான்களை //
          அப்படியா! பார்ப்பனர்கள் என்ன தொழிலில் இருக்கிறார்கள். எப்படியெல்லாம சிரமப்பட்டு வாழ்கிறார்கள் என கொஞ்சம் புரியவையுங்களேன். பார்க்கலாம்.

          தில்லையில், தீட்சிதர்கள் போடும் ஆட்டம் என்ன? ஆட்டைய போட்டு தின்றது என்ன? அவர்களின் ஆட்டத்தை ஒடுக்க எவ்வள்வு போராட வேண்டியிருக்கிறது. தங்களுக்கு ஆதரவாக நீதமன்றங்களிலும், அரசு நிர்வாகத்திலும் வேலை செய்ய, என்னென்ன லாபி வேலை பார்த்தார்கள் என்பது ஊரறியும்.

          Posted on 20-Nov-09 at 11:03 am | Permalink
        • தமிழ் இந்து

          //உங்களைப் போன்றவர்களை எதிர்க்க திரானி கூட இல்லாதிருக்கும் இந்தக் கால பார்ப்பான்களை அந்தக்கால வர்ணாசிரம சட்டம் என்று எதையோ சொல்லி தொடர்ந்து துன்புறுத்துவீர்கள். அவமதிப்பீர்கள். அழிக்க நினைப்பீர்கள். இது என்ன நியாயமோ? // அடேங்கப்பா..என்ன சாதுவானவங்க இவிங்க..இவிங்க ஹிட்லர் காலத்தில யூதர்கள் படும் வதையை அனுபவிக்கிறாங்க தெரியுமா..அசோகமித்திரனுக்கு அடுத்து நீங்க்கதான்ங்க இந்த உண்மையச் சொல்லி இருக்கீங்க! நாங்க அவமதிக்கிறோம்..அப்படித்தானே..தமிழ்ல பாடறதுக்காக போன சிவனடியாரை சிதம்பரத்திலே என்னவோய் செஞ்சீங்க? வீடு தேடி சென்னையில் அலைந்தால் ‘ஒன்லி பிராமின்ஸ்’ னு போட்டுக்கிட்டது யாரு ஓய்? திருவையாறிலே தமிழில் பாடச் சொல்லிப் போராடினவங்களை மண்டைய உடைத்தது யாரு ஓய்? சீரங்கம் கோயில் கருவறையில் நுழைந்தவர்களை ரத்தக்காயப்படுத்தியவர்கள் எல்லாம் யாரு ஓய்? அதெல்லாம் இருக்கட்டும்..சங்கர்ராமனை என்ன ஓய் பண்ணினீங்க? அவர் இத்தனைக்கும் சனாதனத்தைக் காப்பாத்தத்தானே லெட்டெ மேல லெட்டர் எழுதினார்..எழுதினதுக்கே அவரை சொர்கக்வாசலுக்கு அனுப்பிச்சிட்டேளே..உங்களை எப்போ யாரு அவமதிச்சா? இன்னமும் வர்ணாசிரமத்தைக் காப்பதற்காகவும் தன் மேலாதிக்கத்தைக் கட்டிக்காக்கவும்தானே..கோயில்களை தனியாரிடம் ஒப்படை என்றும் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டு என்றும் கூச்சல் போடுறீர்?

          Posted on 20-Nov-09 at 11:38 am | Permalink
        • Kandu

          மேல உள்ள Comment போட்டது Doondu

          Posted on 20-Nov-09 at 4:39 pm | Permalink
  19. சித்தீக்

    குருத்து அவர்களின் கூற்றை நான் ஆமோதிக்கின்றேன். 

    Posted on 19-Nov-09 at 5:58 pm | Permalink
  20. கள்ளபிரான்

    தமிழ் பிராமணாள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடுவதில்லை என்பது ஒரு குறையாகவும், அன்னாருக்குத் தமிழ்ப்பற்று இல்லயென்பதாகவும், அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது. இங்கு மோகன் அதைச்செய்கிறார். அவர் சொல்கிறார்: மாரியம்மன், காளியம்மன், அய்ய்னார் என்ற தெய்வங்களில் பெயர்களையும், முருகனின் பெயரையும் அவர்கள் இடுவதில்லை என்கிறார்.

    இது சரியா? முருகன் என்ற பெயரும், அத்தெய்வத்தின் பிறபெயர்களும் இடப்பட்ட அய்யர் குழந்தைகளை நான் நிறைய பார்த்திருக்கிறேன். திருனெல்வேலியில் பெயர்கள் அப்படித்தான் இருக்கும். முருகனின் அறுபடைவீட்டுக்கோயில்களில் அர்ச்சகராக இருப்பவர்கள் பெயர் தமிழில் உண்டு. ஐயங்கார்களப்பொறுத்தவரை, சைவக்கடவுளர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு இடுவது தடைசெய்யப்பட்டதொன்று. அவர்கள் வைணவப்பெயர்கள் இடுவர். அவை பல தூயதமிழில் வரு. அத்திருப்பெயர்கள் ஆழ்வார்கள் இட்ட பெயர்கள். எடுத்துக்காட்டு: ஆராவமுதன், மணாளன், ஒப்பிலியப்பன் (அனைத்தும் குடந்தைப்பெருமாளை ஆழவாரகள் அழைத்தது), சுந்தரம், சுந்தரராஜன் (இவை திருக்கண்ணபுரம் பெருமாளுக்கு, மற்ற பெருமாளுக்கும் வரும்) அழகர்சாமி, அழகர் (இவை, மதுரைக்குப்பக்கத்தில் உள்ள கள்ளழகர் திருநாமம்), பெண்குழந்தைகளுக்கு, அலர்மேல் வல்லி, (இத்திருநாமத்தில் திரிபு அலமேலு, அம்மு), மதுரவல்லி (கூடலழகரின் துணைவியாரின் திருப்பெயர் – மதுரை). ஆதிகாலத்தில் தூய தமிழ்ப்பெயர்கள்தான், தற்போதுதான் மாற்றம். மற்றவர்களும் எப்படி? எல்லாரும், கார்த்திக், சஞ்சய், ராஹுல், விஜய், ஆனந்த், ப்ரியா, வைஷ்ணவி, ஸ்வாதி, ஐஸ்வர்யா, என்றுதானே இடுகிறார்கள்? ஈயத்தைப் பார்த்து பித்தளை இளிச்சதாம்? மற்றொன்று, பிராமணாள் வைதீக இந்து மதத்தைக் கொண்ட்வர்கள். கிராமத்துத் தேவதைகளை வணக்கம் செயவதில்லை. மதிப்பர். மதிப்பு வேறு, தொழுவது வேறி. இல்லயா? அப்பிடியிருக்க, அன்னார் ஏன் அத்தேவதைகளைன் பெயரை இடவேண்டும். திரு மோகன்? மோகன் என்பதே வடசொல்லயிற்றே! ஹா..ஹா..

    (I have written in Tamil my earliier message, in deference to the wishes of many)

    Posted on 19-Nov-09 at 6:11 pm | Permalink
    • முதல் தலைமுறை

      //ற்றொன்று, பிராமணாள் வைதீக இந்து மதத்தைக் கொண்ட்வர்கள். கிராமத்துத் தேவதைகளை வணக்கம் செயவதில்லை. மதிப்பர். மதிப்பு வேறு, தொழுவது வேறி. இல்லயா? அப்பிடியிருக்க, அன்னார் ஏன் அத்தேவதைகளைன் பெயரை இடவேண்டும். திரு மோகன்? மோகன் என்பதே வடசொல்லயிற்றே! ஹா..ஹா..//

      அப்படின்னா பாப்பர மதமும், கிராம தெய்வங்களும் வேறு மதங்களா?

      நன்றி கள்ளபிரான் அவர்களே

      Posted on 19-Nov-09 at 6:21 pm | Permalink
      • வேல்

        ஆம், பிராமண தெய்வங்களும், கிராம தெய்வங்களும் வேறு வேறே. கிராம தேவதைகள் நாம்மோடு வாழ்ந்து மடிந்த நமது முன்னோர்கள். கூட்டமாக வாழ்ந்து, அக் கூட்டத்தின் தலைவனாய், வீரமிக்க செயல் பல புரிந்து, மடிந்த நபர்களையே, கடவுளாய் வணங்குகின்றனர். இவர்களுக்கு ஆறுகால பூசை கிடையாது, வருடத்திற்கு ஒருமுறை திருவிழா/கொடை நடைபெறுகிறது. நரித்தனமாய் பிராமணர்களே நீயும் இந்து என்று அவர்களை அழைத்து அவர்களின் சடங்குகளை இங்கேயும் புகுத்தி வருகின்றனர்.

        Posted on 20-Nov-09 at 10:07 am | Permalink
        • இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எங்கள் சிற்றூரில் உள்ள நாட்டார் வழக்கு கோயிலில் முதலில் தெய்வங்கள் பெயரை, முதலில் கருப்பசாமியை கருப்பணசுவாமி என பெயர் மாற்றினார்கள். ஆடு, கோழி வெட்ட ஜெயலலிதா தடை செய்யப்பட்ட பொழுது, அதையே பயன்படுத்தி, ஏற்கனவே பிற்படுத்த பட்ட சாதியை சேர்ந்தவர்கள் அந்த கோயிலின் பூசாரி வகையினர் இருந்தனர். அந்த கோயிலை நிர்வாகம் செய்யும் செட்டியார் சாதியினர் அவர்களை வெளியேற்றி விட்டு, அய்யரை பூசாரியாக்க முயற்சித்தனர். பிறகு, எதிர்ப்பின் காரணமாக கைவிட்டார்கள். ஆனால், இன்னும் முயற்சி நடந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

          Posted on 20-Nov-09 at 11:14 am | Permalink
  21. kalagam

    நண்பர் ஆர்வீ,

    தாங்லள் தயவு செய்து வந்து விவதியுங்கள், பார்ப்பனீய சிந்தனை ஒழிக்கப்பட வேண்டுமா இல்லையா? அமைதி அதற்கு சப்பை கட்டுகட்டுவது போல் ஆகிவிடும் .

    வினவு அவர்களுக்கு,

    ,மிகச்சிறப்பான கட்டுரை, பறையன் வாயில மலத்தை திணிச்சாங்கன்னு சொன்னா பாவம் என்று சொல்பவர்கள், அது நடந்ததே தப்பு என்று சொல்வதில்லை. இதில் பெரிய அரசியலே இருக்கிற்து தப்பு என்றால் தீர்வு தேவை இல்லை அல்லவா? ஒரு எடுத்துக்காட்டு பிரேமானந்தாவை கைது செஞ்சப்ப எந்த கள்ளன் போராட்டம் செஞ்சான், ஆனால் சங்கராச்சரிக்கு மேட்டர் தலை கீழ

    கலகம்

    Posted on 19-Nov-09 at 6:19 pm | Permalink
  22. கேள்விக்குறி

    இந்த பதிவை இத்தோடு நான்காவது முறை படித்துவிட்டேன், இவ்வளவு சிறிய பதிவு (500 வார்த்தை இருக்கமா?) ஆனால் எத்துனை பொருட்செறிவோடு உள்ளது. பார்ப்பனிய இந்து மதத்தை பற்றி எந்த ஒரு விவாதமானாலும் இந்த வழிகாட்டுதலை பயன்படுத்துவது சரியான திசை நோக்கி விவாதத்தை கொண்டு செல்லும்

    டிஸ்கி – இந்த முறையில் விவாதிக்க குறைந்த பட்ச நேர்மையும், சமூக அக்கறையும் தேவை, எனவே ஆர்.எஸ்.எஸ் அம்பிகள், போலி முற்போக்காளர்கள், (பல) மதவெறியர்கள் உள்ளிட்டோர் வேடிக்கை மட்டும் பார்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்

    Posted on 19-Nov-09 at 6:19 pm | Permalink
  23. The Problem lies with the word ‘Paarpaniyam’ or ‘Brahminism’ being continuously used against ‘Casteism’. Though it is largely accepted that ‘Brahmins’ were the perpetrators of such a social hierarchy, to call the system in the name of the caste which founded it, is excluding all other castes which are vehemently practicing casteism in the real sense.  The other castes which benefited largely by this system in India are going scot-free due to usage of the term ‘Brahminism’ time and again.  
    It is very much evident from a deep study into the history of India & various castes that the system had a liquid model, rather than a solid model which came to fore in the later times (Probably British era and post-Independence era). There were kings and landlords from each every caste possibly here. Parayars, Naadars, Pallars, Sakkiliyars, Thevars, kounders…everyone had their share of the pie when the system allowed for the raise and fall of their kiths and kins like a wave in the sea. The Only thing that never changed was the supremacy of the Brahmins in this Order. Whoever came to be in a dominant position in the society embraced ‘Brahmins’ and ‘Brahminstic’ rituals and beliefs and sub-ordinated themselves to their Pseudo Godly posture in the society. It seemed a mutual Symbiotic agreement between all other Castes and ‘Brahmins’, While all other castes were unaware of the fact that actually ‘Brahmins’ were using all other societies for their ‘Parasitic’ Livelihood. 
    Brahmins used the Inherent ‘Selfishness’ of mankind for their own means and ends. When the Moghuls came they were the first to join them as the Court Chief ministers while the lower strata went onto join the Army and other posts. When the British came They were the first to go and shake hands with them to keep their position in the society intact, while the others joined the lower ranks. It is not that the other castes didn’t knew they were being used for thousand of years by the ‘Brahminism’ – which was keen in having the lions share whoever may be in the dominant position. But these castes approved of it because of the position & wealth they were gaining by subjugating others. It is like the Priest Educating a common man about God, who is all pervading and higher than everyone else which will eventually jusitfy his own better livelihood. In a similar Equation, the other castes kept ‘Brahmin’ in the higher position and tried to fight within themselves for the left over share. 
    Periyaar &  Ambedkar were the first few persons to identify this brilliant and cunning way of ‘Brahmin’ dominance and questioned it. They asked priviledged reservations for the ‘then’ downtrodden castes and achieved it through their constant protests and dialogues. The very roots of Brahminism were shaken and slowly their Social Dominance is coming to an End. But in this Game of Ladder and Snakes, the Other Castes which have come to the forefront, which are taking a larger share of the pie now in comparsion to their ancestors have completely disowned their social responsibility of creating an atmosphere where in all humans are equal. Once dominant Brahmins have by and large come to terms with this reality (though there are few murmurs about their lost glory) and are moving away from the game field and fending after themselves. Though the religious Dominance attached with them is something which is difficult to wither away, it will happen eventually in the time course. Iam only apprehensive about the ‘Other’ castes which will behave more violently than ‘Brahmins’,  in not allowing a lower caste into the ‘Sanctum’ of  a Temple when the priesthood is lawfully made available to them. 
    We can even do a scientific or Stastical research on which caste is marrying into other caste in a larger percentage. My gut feeling is that the finding will be surprising and more and more brahmins will be into inter-caste marriages rather than the other castes (Ok for a inter-caste marriage we need one other caste, but as a caste group Brahmins will be into more of inter-caste marriage than other caste is my central arguement/feeling). More and more brahmins are becoming meat-eaters. The holiness around them are slowly fading away. A sacred – thread wearing Brahmin is considered a ‘Gnana Pazham’ and slowly they are doing away with it,  apart from the ‘Avani Avittam’ day which holds some religious significance. Now Brahmins as a Caste group are not like the ones that we could find all along the history. They are slowly coming to terms with the social reality. 
    This new socio-economic state is a matter for keen research and study, as to how the inter mediate castes have taken over the centrestage and playing a vital game in manipulating the minds of the mass by de-constructing the past. The Vanniyars, Thevars and kounders whom I would call neo-brahmins are more vehemently practising Casteism. We can see all around us how this power struggle had demoralised and also demonised the whole society. The Attack on ‘Brahminism’ is a convenient Vehicle for these Neo-Brahmins, that they take the common man for a Ride. We as liberal Socialists need to look into this aspect and ponder over it. When we shout aloud ‘Brahminism’ these anti-social elements too join in that scream and come out clean. This is an Irritant phenomenon for ‘Brahmins’ who are finding themselves in a side-lined position in this power struggle. The coinage was rightfull in its historical context of ‘Periyaar’s period., Had periyaar been alive, probably he would’ve stopped telling ‘Paambayum Paarpanayum onna Paartha Paamba vittuttu Paarpaana adi’ to ‘Thevaryaum Thevadiyavayum paartha thevadiyaava vittuttu Thevana Adi’ (the word Thevadiyaa  Here is Purely for a rhetoric sense – Do Not Deconstruct) or something along that line for other castes. 
    There is more to write…later. 

    Posted on 19-Nov-09 at 6:33 pm | Permalink
    • bmurali80

      I believe you are cutting the article’s basis at its knees. It is a similar theme that RV and the likes has been saying but this site blames (and doubts) them for playing with words for academic interest and pleasure of winning an argument.

      Posted on 19-Nov-09 at 11:40 pm | Permalink
  24. Will Try to Write the same in tamil  by Tommorrow 

    Posted on 19-Nov-09 at 6:35 pm | Permalink
  25. சரியான சாட்டையடி

    Posted on 19-Nov-09 at 7:55 pm | Permalink
  26. rudhran

    “”வினவு, அவரோட நண்பர்கள், எதிரிகள் எல்லோரும் அடிச்சுண்டு சாகட்டும். நாம் வேடிக்கை பார்ப்போம்.”"-
    http://dondu.blogspot.com/2009/11/blog-post_19.html
    !!!

    Posted on 19-Nov-09 at 8:45 pm | Permalink
    • கேள்விக்குறி

      தோழர்களே!, டோண்டு ராகவன் என்னும் பார்ப்பன நரியின் சாயம் இங்கே வெளுத்துள்ளது. நமக்கு வேலை மிச்சம்.

      http://dondu.blogspot.com/2009/11/blog-post_19.html

      @@@@@@@@@@
      பலே ஆர்வி அவர்களே
      இப்போதுதான் வினவின் வன்மம் நிறைந்த பதிவைப் பார்த்தேன். அது உங்களைக் குறிவைத்து எழுதப்பட்டுள்ளது. இதுவரை உங்கள் பின்னூட்டம் அதில் இல்லை. இனிமேலும் வராது என நம்புகிறேன். அப்படியே கீப் இட் அப்.

      வினவின் பதிவுக்கு பின்னூட்டம் போடுவதை விட வேறு பல நல்ல வேலைகள் உள்ளன. வேண்டுமெனவே உங்களை ப்ரவோக் செய்து எல்லோரும் எழுதுகிறார்கள். அம்மாதிரியானவர்களை இக்னோர் செய்யவும் (முக்கியமாக வினவு போன்ற மனிதர்களை). அவர்களுடன் வாதம் செய்வது முட்டாள்களுடன் பேசுவது போன்றதே. யாராவது நடுவில் வந்து பார்த்தால் யார் முட்டாள் என்பது கூட தெரியாமல் போய்விடும்.

      ஒரு வேளை நீங்கள் வேறு எங்காவது பிசியாக இருந்து இதை பார்த்திருக்காமலும் இருந்திருக்கலாம். கூப்பிட்ட மரியாதைக்கு போக வேண்டும் என நீங்கள் போனால் உங்களை திட்டுவதுதான் நடக்கும். கூடவே அபத்தமான வாதங்களும் வரும். போக மாட்டீர்கள் என நம்புகிறேன்.

      கள்ளர்சாதிப் பெண் கொலை பற்றிய பதிவிலேயே பார்த்தீர்கள்தானே. எப்படியெல்லாம் வார்த்தைகளை திரித்து பேசினார் என்று. முதலில் கள்ளர் சாதியை கண்டித்தவர் யாரிடம் செருப்படி பட்டாரோ தெரியவில்லை, பார்ப்பனீயம் பற்றி பேச ஆரம்பித்து, அப்பதிவையே ஒட்டு மொத்தமாக திசை திருப்பினார்.

      அப்பதிவில் நான் உங்களுக்குக் கூறியதைத்தான் இங்கேயும் கூறுவேன். Avoid Vinavu like a plague. மற்றப்படி அங்கு செல்வதும் செல்லாததும் உங்கள் விருப்பம். இப்பதிவை அச்சேற்றும்வரை நீங்கள் அங்கு செல்லவில்லை என்பதை கண்டேன். அதுவே சரியான முறை.

      அதையே maintain பண்ணுவீர்கள் என நம்புகிறேன். உயர் சாதீயம் என்னும் வார்த்தை இருக்க எல்லாவற்றையும் பார்ப்பனீயம் என ஜல்லியடிக்கும் வினவு, அவரோட நண்பர்கள், எதிரிகள் எல்லோரும் அடிச்சுண்டு சாகட்டும். நாம் வேடிக்கை பார்ப்போம்.

      அன்புடன்,
      டோண்டு ராகவன்

      Posted on 19-Nov-09 at 9:07 pm | Permalink
      • காளமேகம்

        டோண்டு அய்யங்கார்வாள் சொல்லுத பேச்ச கேட்டு ஆர்.வி அண்ணாச்சி வினவுக்கு வரலையின்னா அது ஆர்.விக்கு தோல்வி, அய்வாளுக்கு வெற்றி. டொண்டு பேசதொக்க மீறி ஆர்.வி வினவுக்கு வந்தா அது டொண்டுவாளுக்கு தோல்வி. மதில் மேல் நிக்குத பார்ப்பனியம் எந்த பக்கம் சாயப்போவுதோ ஹிட்ச்காக் படம் கணக்கால்ல இருக்குது.

        சாயம்போன கிழட்டுநரியை இங்கன இழுத்து வந்து கட்டிப்போட்டதுக்கு தம்பி கேள்விக்குறிக்கு இன்னொரு உம்மா

        Posted on 19-Nov-09 at 10:44 pm | Permalink
    • அடுத்தவர் கஸ்ட்டப்பட்டு வேலை செய்வதை பார்த்துக்கொண்டிருப்பது தானே பாப்பானின் மிக முக்கியமான கடமை

      Posted on 20-Nov-09 at 12:26 am | Permalink
    • வேல்

      கோழைகள் கதவை மூடிக் கொண்டு கத்துவார்கள். அதுபோலதான் இவரும் தனியாக கூப்பிட்டு advise செய்கிறார். எனினும் எனக்கு நம்பிக்கையுண்டு, ஆர் வி கண்டிப்பாக அனைத்தையும் படித்து மொத்தமாக பின்னுட்டம் இட வேண்டும் என்பதே எனது அவா.

      Posted on 20-Nov-09 at 10:31 am | Permalink
    • ஆம் இப்படி சமூகச்சூழலி அடித்துக் கொண்டு யாரேனும் மனநிலை பாதிக்கப்பட்டால் தானே உங்களுக்கு வியாபாரம். நால்லா வளர்த்து விடுங்கள் இந்த பிரிவினை வாத ஜாதீயத்தீயை. உங்கள் வியாபாரம் செழிக்கட்டும்

      Posted on 20-Nov-09 at 10:43 am | Permalink
    • டாக்டர் சார் டோண்டு போன்ற பார்ப்பன கிழட்டு கோமளிகளுக்கு பதிலளிக்க வேண்டாம் அது முடியாது ஏனென்றால் பன்றிகளோடு மனிதன் பேச முடியாது.

      Posted on 25-Dec-09 at 12:24 pm | Permalink
  27. அது புட்பம் இல்ல!

    புய்பம், சரியா சொல்லனும் தோழரே!

    Posted on 19-Nov-09 at 9:03 pm | Permalink
    • கேள்விக்குறி

      வாலு, அப்படியே அது ‘அடிச்சுண்டு சாகட்டும்’ இல்ல ‘அடிச்சுகிட்டு சாகட்டும்’ அப்பிடீன்னு நோண்டு மாமாகிட்ட சொல்லிடுங்க…! என்ன இருந்தாலும் சரியா சொல்லோனும் இல்லீங்

      Posted on 19-Nov-09 at 9:16 pm | Permalink
  28. சாகித்

    என்னைப்போல் ஆங்கிலத்தை டிக்ஸனரி இல்லாது படிக்க முடியாதவர்களும் புரிந்துகொள்ள ஏதுவாக தமிழில் எழுதலாமே!
    \\இவற்றையெல்லாம் ஜெனோடைப் தீர்மானிக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் எது தீர்மானிக்கிறது, என்ன காரணம் என்ற கேள்விக்கு விடை வேண்டும்\\ வேறு எதனால் சிந்தனை தீர்மானிக்கப்படுகிறது என்று ஆர்வி கருதுகிறார்? சில மனிதர்கள் சில மாதிரி சிந்திப்பதற்கும், வேறு சிலர் வேறு மாதிரி சிந்திப்பதற்கும் என்ன காரணம்? அவர்களது அறிவா, அறியாமையா, நல்லெண்ணமா, விபத்தா, வாழ்நிலையா?

    எது தீர்மானிக்கிறது என்று யாரும் பதில் எழுதியதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் பார்பனர்களின் குணாங்களைய்யே பின்னோட்டம் எழுதுவது படிப்பதற்கும்
    கருத்து பரிமாற்றத்திற்கும் அலுப்பைத் தருகிறது.
    \\சாதி என்பது இந்த நாட்டையும் சமூகத்தையும் கெடுத்து, முடமாக்கி, சீரழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாபக்கேடு மட்டுமல்ல, ஒழுக்கக் கேடுகளிலெல்லாம் தலையாய ஒழுக்கக்கேடு என்பதை ஆர்வி ஒப்புக் கொள்கிறாரா? அதன்பால் மென்மையான அணுகுமுறையைக் காட்ட முடியாது. அதை ஈவு இரக்கமின்றி ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறாரா? அப்படி ஒரு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் எப்படி அதை ஒழிக்கலாம் என்பது பற்றி நாம் விவாதிக்கலாம். எப்படித் தோன்றியது யார் காரணம் என்ற ஆராய்ச்சி அதற்காகத்தான். அதற்காக மட்டும்தான்.\\
    வினவின் அடுத்த கேள்வியாக இது உள்ளது. சாதியுடன் மதத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் என்பது என்கருத்து.

    Posted on 19-Nov-09 at 9:14 pm | Permalink
  29. //Author: கேள்விக்குறி
    Comment:
    வாலு, அப்படியே அது ‘அடிச்சுண்டு சாகட்டும்’ இல்ல ‘அடிச்சுகிட்டு சாகட்டும்’ அப்பிடீன்னு நோண்டு மாமாகிட்ட சொல்லிடுங்க…! என்ன இருந்தாலும் சரியா சொல்லோனும் இல்லீங்//

    கேள்விகுறி,
    பார்பனியர்களுடன் பேசுவதற்கும், பார்பனியத்தை எதிர்பதற்கும் நிறிய வித்தியாசம் இருக்கு! அதனால புரிஞ்சிகிட்டு பேசுங்க, நான் இங்கே எந்த வாதமும் செய்ய வரவில்லை, கற்று கொள்ளவே வந்திருக்கிறேன்!

    Posted on 19-Nov-09 at 9:35 pm | Permalink
    • கேள்விக்குறி

      வாலு .. ஒய் டென்சன்.. ஜஸ்ட் காமிடிம்மா லைக் புய்பம்

      Posted on 19-Nov-09 at 10:15 pm | Permalink
  30. i want to comment in Tamizh. But I dont know how to type in Tamizh. Like some other blogs Vinavu should bring Tamizh support to type

    Posted on 20-Nov-09 at 3:13 am | Permalink
    • சுதாகர்

      கூகிளிள் nhm writer என்று தேடவும்…. உங்களுக்கு உதவலாம்….

      Posted on 07-Apr-10 at 2:08 pm | Permalink
  31. //“”வினவு, அவரோட நண்பர்கள், எதிரிகள் எல்லோரும் அடிச்சுண்டு சாகட்டும். நாம் வேடிக்கை பார்ப்போம்.””-
    http://dondu.blogspot.com/2009/11/blog-post_19.html
    !!!// காலம் காலமாக பிரித்தாளும் சூழ்ச்சி, அது முடியாவிட்டால், பலிக்காவிட்டால் வெள்ளைக்காரர்களுக்கும், முகலாய மன்னர்களுக்கும் அடிவருடியாக சேவகம் செய்தது இப்படியான குருகுலம் படித்துவந்தவர்கள் தான் நாங்கள் என்பது தான் திரு டோண்டு இராகவன் ஐயாவின் திருவாய் வழியாக சொல்லி இருக்கும் குறியீட்டுத்தகவல், இதுக்குப் போய் அலட்டிகலாமா ? :)

    Posted on 20-Nov-09 at 6:54 am | Permalink
  32. /////மத்த ஈயங்கள் இந்துமதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த்வையில்லை. அவைகள் சமூகவாழ்க்கையிலிருந்தே உருவானவை////// என்ன ஒரு கோழைத்தனமான பிழைப்பு வாத பேச்சு. மத்த ஈயங்கள் எல்லா சமூகவாழ்க்கையிலிருந்தே உருவானவையென்பதால் அவற்றை எதிர்க்க மாட்டார்களாம். அதனால் அந்த ஜாதிக்காரர்கள் வாயில் மலத்தை தினித்தாலும் ருசித்து தின்பீர்கள் எதிர்க்கமாட்டீர்கள். ஏனென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அவர்கள் மூத்திரத்தை உங்கள் வாயில் ஊற்றினாலும் ருசித்துக் குடிப்பீர்கள். ஏனென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அவர்களை அல்லது அந்த தேவரீயத்தை, செட்டியாரீயத்தை, பிள்ளைமாரீயத்தை, முதலியாரீயத்தை, வன்னியரீயத்தை, நாடாரீயத்தை என்று எந்த ஈயத்தின் பீயையும் எதிர்ப்பில்லாமல் தின்பீர்கள். ஆனால் உங்கள் உங்கள் வாயில் மலம் தினிக்காமல், உங்களை மூத்திரம் குடிக்கச் சொல்லாமல், உங்களுக்கு ரெட்டை தம்பளர் முறை கடைபிடிக்காமல் தங்கள் பிழைப்பை நடத்துவதே பெரும்பாடென வாழ்ந்து கொண்டிருக்கும், உங்களைப் போன்றவர்களை எதிர்க்க திரானி கூட இல்லாதிருக்கும் இந்தக் கால பார்ப்பான்களை அந்தக்கால வர்ணாசிரம சட்டம் என்று எதையோ சொல்லி தொடர்ந்து துன்புறுத்துவீர்கள். அவமதிப்பீர்கள். அழிக்க நினைப்பீர்கள். இது என்ன நியாயமோ? சுத்த கோழைத்தனம் தவிற வேறில்லை. பார்ப்பனன் ஆவனியாவிட்டத்திற்கு பூனூல் போட்டுக்கொள்வது தாங்களை மற்றவர்களிடத்திலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதற்க்காகத்தான் என்பவர்கள் குல்லா போட்டுக்கொள்ளும் அல்லாக்காரர்களிடம் அதே வீரத்தை காட்டுவதில்லை. சமஸ்கிரதத்தை வட மொழி என்று எதிர்க்கும் வீரர்கள் வெளிநாட்டு மொழியான அரபுவை தமிழ் நாட்டில் ஓதக்கூடாது என்று எதிர்க்க திராணியற்ற கோழைகளாக இருக்கிறீர்கள். ‘இது பத்தினி வீடு’ என்று ஒருவன் போர்டு மாட்டிக்கொண்டால் பக்கத்து வீட்டுக்காரணுக்கு தன் வீடு என்ன தேவிடியா வீடா என்று கோபம் வராதா என்று பார்ப்பனன் பூனல் போடுவதைப் பார்த்து கேட்கிறீர்கள். ஒருவன் இது பத்தினி வீடு என்று போர்டு போட்டுக் கொண்டால் பக்கத்து வீட்டுக்காரண் அவனைப் பார்த்து பரிதாபப் படவேண்டும். இப்படி போர்டு மாட்டி தான் தன் பொண்டாட்டி யோக்கியதைய சொல்ற நிலைமையில் இவன் வீடு இருக்கிறது பார் என்று ஏளனம் செய்ய வேண்டும். அப்படி இல்லாம்ல் அவனுக்கு தன் வீட்டுப் பெண்கள் பற்றிய நினைப்பு வந்தால் பிரச்சனை போர்டு மாட்டினவன் வீட்டில் இல்லை. கோபப்படுபவன் வீட்டில் தான் என்பதை இந்த கேவலமான வாதத்தில் ஈடுபடுபவர்கள் கவனிக்க வேண்டும். இன்றைய பாப்பானுக்கு ஜாவா பற்றி தெரியும். தண்ணீருக்கு வேதியல் பேர் கேட்டால் சொல்வான். அவனிடம் வேதங்களிலிருந்து ஒரு சுலோகம் சொல்லென்றால் சொல்லத்தெரியாது. சுக்லாம் பரதரத்தை சத்தமாக சொல்லென்றால் பேந்த பேந்த விழிப்பான். கூட்டத்தோடு கோவிந்தா போடுவதோடு சரி. இப்படி தற்கால பார்ப்பனர்கள் மறந்து போன வேதங்களையும் வர்ணாசிரமங்களையும் கற்றுக் கொண்டு அதே பார்ப்பனீயத்தை மற்றவர்கள் செய்வது விசித்திரம். எதை எதிர்க்க வேண்டும் என்று சொல்கிறீர்களோ அதை நீங்களே செய்கிறீர்கள். அது தான் கொடுமை.

    Posted on 20-Nov-09 at 8:39 am | Permalink
    • தமிழ் இந்து

      //இன்றைய பாப்பானுக்கு ஜாவா பற்றி தெரியும். தண்ணீருக்கு வேதியல் பேர் கேட்டால் சொல்வான். அவனிடம் வேதங்களிலிருந்து ஒரு சுலோகம் சொல்லென்றால் சொல்லத்தெரியாது. // ஏன்..கொஞ்சமா நிறுத்திட்டேள்? மூத்திரம் பத்திக் கேட்டால் சொல்வான்..கோத்திரம்னு கேட்டால் தெரியாது..தீட்சிதர்பையனையே கேட்டுப்பாருங்க்கோ..வேதசூத்திரம் கேட்டால் தெரியாதும்பான்..போனவாரம் திருடிட்டுப் போன பாத்திரம் கேட்டால் சொல்வன். பெரியவாளையே எடுத்துக்கோங்கோ…அவராண்ட போய் ‘பாஸ்யம்’ கேட்டால் தெரியுமோ? ஆர்லிக்ஸ் மாமி சமைச்சுத்த்ந்த பாயாஸ்மா அப்படிம்பார்? பஜகோவிந்தம் கேளுங்கோ..’நேக்கு ஸ்வர்ணமால்யா ஸ்தோத்திரம்தான்’ தெரியும்பார்..வேதபுஸ்தகம் போட்ட குப்புஸ்வாமியா முக்கியம் ஓய்..கூலிக்கு நன்னா வேலை பாத்த அப்பு முக்கியம் இல்லையா? லோகம் இப்படிப் போயிண்டிருக்கச்சே…தெரியாத் தனமா? போர்டு மாட்டினவா மேல பரிதாபப்படச் சொல்றேரே…நியாயமா என்ன பண்ணுவா..’மரியாதையா போர்டக் கழட்டிடு..இல்ல..கழட்டிப்புடுவோம்’பா…முடியாதுன்னு இப்படி குசும்புத்தனம் பண்ணினா என்ன நடக்கும்? அயோத்தியா மண்டபத்திலே அறுத்த மாதிரிதான் அறுத்துப் போடுவா? ஸ்வாமீ..நானும் பாத்திருக்கேன் ஓய்..வாய் பேச ஆரம்பிக்கும்போதே நம்ம புள்ளையாண்டனுக்கெல்லாம் “மாமாகிட்டே ஸ்லோகம் சொல்லு கண்ணு இல்ல’ன்னு மாமிங்க சொல்றதெல்லாம் பொய்யா ஓய்? சும்மாங்காச்சும் கதை அழக்காதீர்? “குல்லா போட்டுக்கொள்ளும் அல்லாக்காரர்களிடம் அதே வீரத்தை காட்டுவதில்லை” என்கிறீரே..அவராண்ட இவாளுக்கு ஏன் ஓய் ஆத்திரம் வரப்போறது? அவா ரெண்டு பேருக்குமே சாப்பாடு விசயத்திலே பேதமில்லே…இன்னோண்ணு இருக்கு..குல்லாக்காரன் யாரும் அவாளை ‘தேவடியாப்பயங்களா’ (அதான் ஓய் சூத்திராள்)ன்னு பார்க்கிறதில்லே..’சகோதரன்’ன்னு தான் அழைச்சிக்கிறா (பாயி)..போன நூற்றாண்டிலே இவாள் (சூத்திராள், பஞ்சமாள்) எல்லாம் இங்க நம்ம மூதாதையா ஆடின ஆட்டம் சகிக்காமத்தானே ரூட்ட மாத்திண்டா..ஏன் ஓய் அவாளிட்டே ராம.கோபாலய்யர் மாதிரி சிண்டு முடியறேள்? மாமிக்கிட்டே சொல்லி ஒம்மள சுளுக்கெடுக்கணுமா?

      Posted on 20-Nov-09 at 12:09 pm | Permalink
    • ஈயம்

      பிறருக்கும் வருணாசிரமத்திற்கும் தொடர்பு இல்லை. அவர்கள் தீண்டாமையை மதம் சொன்னது என்று சொல்லி கடைபிடிக்கவில்லை. அவர்கள் காரணம் வேறு. உங்கள் காரணம் வருணாசிரமதர்மம். அது பார்ப்பனீயத்தில் ஒரு கூறு. இன்று தீண்டாமையைகடைபிடிக்கவில்லையென்று சொல்லும் நீங்கள், வருணாசிரமத்தை விட்டுவிட்டீர்களா என்று மட்டும் சொன்னால் போதும்.
      ஆம்…விட்டுவிட்டோம் என்றால், உங்களுக்கு இன்னும் ஏன் ‘பிராமணாள்’ என்று பேர்? இன்னும் ஏன் பூணூல்? இன்னும் ஏன் சமஸ்கிருதம் மந்திரங்கள்? இன்னும் ஏன் குடுமி? பஞசக்ட்சம்?

      Posted on 20-Nov-09 at 3:32 pm | Permalink
      • ram

        ///ஆம்…விட்டுவிட்டோம் என்றால், உங்களுக்கு இன்னும் ஏன் ‘பிராமணாள்’ என்று பேர்? இன்னும் ஏன் பூணூல்? இன்னும் ஏன் சமஸ்கிருதம் மந்திரங்கள்? இன்னும் ஏன் குடுமி? பஞசக்ட்சம்///
        இது என்ன லூசுத்தனமான கேள்வி? ஒரு சர்தார்ஜி தான் மேல் ஜாதி என்று நினைக்காமல் வாழ்கிறேன் என்று கூறுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்புறம் எதுக்கு உனக்கு மண்டையில் கொண்டை, மூஞ்சியில் தாடி என்பீர்களா? அவரவர் மத மற்றும் வழிபாட்டு உரிமையை மாற்றச்சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அதன் பெயரால் மற்றவர்களை இழிவு படுத்தாமல் வாழ வேண்டும் என்பதே வலியுறுத்தப்படவேண்டும். பிராமணன் பூனூல் உங்களை உறுத்தினால் பிரச்சனை பூனூலில் இல்லை. உங்கள் துவேஷ மனப்பான்மையில் தான் இருக்கிறது. வெறுப்புக்கருத்தை மட்டுமே உமிழும் மிருகத்தனத்திலிருந்து மனித குணத்திற்கு நீங்கள் இறங்கி வந்தால் அதுவும் சரியாகி விடும். ஆகவே பிராமணர்களை எதுக்கு பூனூ, ஏன் சமஸ்கரிதம் என்று பகுத்தறிவில்லாமல் கேட்கக்கூடாது.

        Posted on 20-Nov-09 at 6:06 pm | Permalink
        • rasathy

          ok ma why r u wearing that nool. i want to know the exact reason. if that reason will not hurt other peoples why we ask that so-called stupid questions

          Posted on 20-Nov-09 at 6:12 pm | Permalink
    • சித்தீக்

      நீங்கள் நேரிடையாக மலத்தை திணித்ததாக நாங்களும் கூறவில்லை. எந்தக் காலத்தில்தான் நீங்கள் களத்தில் இறங்கி வேலை செய்திருக்கிறீர்கள். எப்பொழுதுமே நீங்கள் அறிந்துவைத்திருந்தது சூழ்ச்சிதான். மற்ற சாதிக்காரர்களை மோதவிட்டு அதன் பலனை அறுவடை செய்து கொண்டவர்கள் நீங்கள். இந்தியாவின் அதிஉயர் பதவிகளில் அனேக இடங்களிலும் மனுதர்மத்தின் மறுபதிப்பாக இந்திய தண்டனைச் சட்டத்தையும் வைத்துக்கொண்டு தங்கள் பிழைப்பை நடத்துவதே பெரும்பாடாக‌ வாழ்ந்து வருவதாகவும், எதிர்க்க திரானியற்று இருப்பதாகவும் நீலிக்கண்ணீர் வடிப்பது ஒரு மோசடி நாடகம்.

      Posted on 20-Nov-09 at 4:33 pm | Permalink
  33. மதி.இண்டியா

    ஆர்வி ,

    உங்களையும் சேர்த்து மொத்தமே மூன்று பேர்தான்இந்த தளத்தில் பின்னூடாமிடுவது அல்லது விவாதிப்பது ,

    மற்றதெல்லாம் இவர்களுக்கு இவர்களே சொறிந்து விடுவது , எதிர்கருத்து எதுவும் வந்தால் மாவோ பாணியில் பன்றி வார்த்தைகள் பேச துவங்கிவிடுவார்கள் ,

    இவர்களுக்கு இந்த ருத்ரன் என்ற மனநிலை சரியில்லாத டாக்டர் வேறு துணை ,

    (திடீர்ன்னு இந்த இங்கிலீஸ்காரரு தமிழ்ல பேச வேற ஆரம்பிச்சுட்டாரு , )

    இந்த பதிவிற்க்கு மறுமொழி அளிக்கவேண்டாமென டோண்டு சொவது சரிதான்

    Posted on 20-Nov-09 at 9:47 am | Permalink
    • ///இவர்களுக்கு இந்த ருத்ரன் என்ற மனநிலை சரியில்லாத டாக்டர் வேறு துணை ///
      உங்கள் கூற்று முற்றிலும் உண்மை. ஒரு பகுத்தறிவாளனாக ஆமோதிக்கிறேன்.

      Posted on 20-Nov-09 at 10:34 am | Permalink
      • ராம்,

        நீ என்ன பகுத்தறிவாளன்? விவாதிக்க வந்தால், விவாதி. இப்படி தனிப்பட்ட முறையில் தாக்குகிற வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதே!

        Posted on 20-Nov-09 at 11:31 am | Permalink
        • ram

          பகுத்தறிவாளன் என்ன பாலிடெக்னிக் பட்டமா? யார் வேணும்னாலும் சொல்லலாமே! நான் பகுத்தறிகிறேன்.அதனால் பகுத்தறிவாளன் என்று சொல்லிகொள்கிறேன். அதில் உங்களுக்கென்ன வயிற்றெரிச்சல்.

          Posted on 20-Nov-09 at 1:44 pm | Permalink
    • மதி இல்லா இண்டியா,

      மருத்துவர் ருத்ரனைப் பற்றி என்ன தெரியும்? போகிற போக்கில், ஒரு முட்டாளை போல, அவரைப் பற்றி பேச வந்துவிட்டாய்.

      எனக்கு தெரிந்து இந்த சமூகத்தில் பல டாக்டர்களும் கல்லா கட்டுவதில் கவனமாய் இருக்க, சமூக மாற்றத்திற்கான பணிகளில், தன்னை தொடர்ந்து ஈடுபடுத்தி வருபவர். அவர் ஒரு அருமையான நாடக இயக்குநர். புகழ்பெற்ற சமூக நல மருத்துவர். ஓவியர். நல்ல எழுத்தாளர்.

      ம.க.இ.க வை ஆதரிப்பதானால், உனக்கு எரிகிறது.

      Posted on 20-Nov-09 at 11:30 am | Permalink
  34. selva.

    தயவு செய்து…. வினவு, ருத்ரன் அல்லது யாராவது இதற்கு மறு மொழி சொல்லுங்கள்…. PLEASE……டோண்டு மறுபடி மறுபடி இதை சுட்டிக் காட்ட தெளிவான பதில் ஏன் எதுவும் இல்லை. முந்தைய பதிவுகளில் இது குறித்து விளக்கம் இருந்தால் தயவு செய்து சுட்டி தரவும்.

    // மத்த ஈயங்கள் எல்லா சமூகவாழ்க்கையிலிருந்தே உருவானவையென்பதால் அவற்றை எதிர்க்க மாட்டார்களாம். அதனால் அந்த ஜாதிக்காரர்கள் வாயில் மலத்தை தினித்தாலும் ருசித்து தின்பீர்கள் எதிர்க்கமாட்டீர்கள். ஏனென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அவர்கள் மூத்திரத்தை உங்கள் வாயில் ஊற்றினாலும் ருசித்துக் குடிப்பீர்கள். ஏனென்றால் அவர்கள் சமூகத்திலிருந்து உருவானவர்கள். அவர்களை அல்லது அந்த தேவரீயத்தை, செட்டியாரீயத்தை, பிள்ளைமாரீயத்தை, முதலியாரீயத்தை, வன்னியரீயத்தை, நாடாரீயத்தை என்று எந்த ஈயத்தின் பீயையும் எதிர்ப்பில்லாமல் தின்பீர்கள். ஆனால் உங்கள் உங்கள் வாயில் மலம் தினிக்காமல், உங்களை மூத்திரம் குடிக்கச் சொல்லாமல், உங்களுக்கு ரெட்டை தம்பளர் முறை கடைபிடிக்காமல் தங்கள் பிழைப்பை நடத்துவதே பெரும்பாடென வாழ்ந்து கொண்டிருக்கும், உங்களைப் போன்றவர்களை எதிர்க்க திரானி கூட இல்லாதிருக்கும் இந்தக் கால பார்ப்பான்களை அந்தக்கால வர்ணாசிரம சட்டம் என்று எதையோ சொல்லி தொடர்ந்து துன்புறுத்துவீர்கள். அவமதிப்பீர்கள். அழிக்க நினைப்பீர்கள். இது என்ன நியாயமோ //

    Posted on 20-Nov-09 at 11:02 am | Permalink
    • முதல் தலைமுறை

      யோவ் வினவு தளத்துல தேவர் சாதி முதல் பலவற்றையும் எதிர்த்து கட்டுரைகள் வந்துள்ளன. ஒரே கட்டுரைல எல்லாததையும் தர முடியாது.

      Posted on 20-Nov-09 at 12:52 pm | Permalink
      • selva.

        முதல் தலைமுறை ,
        நன்றி.
        ஒரு சில அல்லது ஒரே ஒரு சுட்டி மட்டுமாவது தர முடியுமா…? நான் தமிழ் இணைய உலகிற்கு புதியவன் தோழரே. மிக்க நன்றி. .

        Posted on 20-Nov-09 at 1:53 pm | Permalink
  35. Sangu

    //எல்லாவற்றையும் பார்ப்பனீயம் என ஜல்லியடிக்கும் வினவு, அவரோட நண்பர்கள், எதிரிகள் எல்லோரும் அடிச்சுண்டு சாகட்டும். நாம் வேடிக்கை பார்ப்போம்//

    எங்க ஊர் பக்கம் பாப்பார பயலுவளப் பத்தி ஒரு சொலவடை உண்டு – “ஆனா கழுத்தப் பிடி ஆகலைன்னா காலைப் பிடி” இது தான் பாப்பார தந்திரம்..

    ”முடிஞ்ச வரைக்கும் முட்டிப் பாரு.. முடியலைன்னா போலி டோண்டு கும்பல்னு முத்திரை குத்து” – என்பது தான் டோண்டு கும்பலின் இத்தனை நாள் தந்திரமாக இருந்தது.. பெரியாரிஸ்ட் பதிவர்கள் பலரை ப்ரொவோக் செய்து வார்த்தைகளைப் பிடுங்கி போலி டோண்டு முத்திரை குத்துவதில் இத்தனை நாள் ஓராளவு வெற்றி பெற்றே வந்தனர்.. ( துபாய் முத்துகுமரன் ஒரு உதாரணம்)

    ஆனால் நம்மிடம் அந்தப் பருப்பு வேகாததால், ச்சீச்சீய் இந்தப் பழம் புளிக்கும் என்று ஓட எத்தனிக்கிறார்கள்..

    பாப்பானுவ பாவம்னு நம்ம பயலுகளுக்கு ஒரு நெனப்பு உண்டு.. அந்தக் கெழட்டுப் பாப்பானோட விஷம் தோந்த வார்த்தைகளை படிச்சா திரைக்குப் பின்னே இருக்கும் வன்மமும் விஷமும் நல்லாவே தெரியும்…

    டோண்டு சார்’வால்’… உங்க நெனப்பு நடக்காது வால்..

    Posted on 20-Nov-09 at 11:12 am | Permalink
  36. selva.

    நானறிந்த சில யதார்த்த உண்மைகள்.
    1 . சாதி ஏற்ற தாழ்வு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுய லாபத்துக்காக பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்ட சதி என்றாலும், இன்று அதை காப்பதற்கு பல வழிகளிலும் போராடுபவர்கள் பிற உயர் சாதியினரே. அவர்கள் மனதில் அந்த விஷ விதையை தூவி, வளர்த்தது பார்ப்பானாகவே இருப்பினும் இந்த கணத்தில் சாதியை ஒழிக்க போராடுவதாக சொல்பவர்கள் பிற உயர் சாதியினரின் மன மாற்றத்திற்காய் எதுவும் செய்வதாக தெரியவில்லையே – பார்ப்பனீயத்தை திட்டுவதைத் தவிர… அப்படி இருப்பின் தயவு செய்து தெரியப்ப் படுத்தவும்.

    2 . ஒரு ஆதி திராவிடனான என்னுடன் மற்ற உயர் சாதியினரை விட ஒரு பிராமனானால் அதிக சிரமம் இன்றி பழகவும், கூட சாப்பிடவும் நண்பனாக ஏற்றுக் கொள்ளவும் முடிகிறதே..? எல்லா இடத்திலும் இப்படியா… அல்லது எனது சூழல் ஒரு விதி விலக்கா என தெரியவில்லை. 3 . மிக மிக யதார்த்தமான உண்மை. இன்றைய தமிழக கிராமமாகட்டும் நகரமாகட்டும் சாதி ஏற்ற தாழ்வை தூக்கி பிடிப்பவர் பார்ப்பனர் தவிர்த்த பிற உயர் சாதியினரே. இது நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த உண்மை.

    Posted on 20-Nov-09 at 11:35 am | Permalink
    • லெனின்

      Mr. Selva,

      //1 . சாதி ஏற்ற தாழ்வு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுய லாபத்துக்காக பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்ட சதி என்றாலும், இன்று அதை காப்பதற்கு பல வழிகளிலும் போராடுபவர்கள் பிற உயர் சாதியினரே. அவர்கள் மனதில் அந்த விஷ விதையை தூவி, வளர்த்தது பார்ப்பானாகவே இருப்பினும் இந்த கணத்தில் சாதியை ஒழிக்க போராடுவதாக சொல்பவர்கள் பிற உயர் சாதியினரின் மன மாற்றத்திற்காய் எதுவும் செய்வதாக தெரியவில்லையே – பார்ப்பனீயத்தை திட்டுவதைத் தவிர… அப்படி இருப்பின் தயவு செய்து தெரியப்ப் படுத்தவும்.//

      இன்றைய சமூகத்தில் பார்ப்பனியம் மிகவும் உயர்ந்த இடங்களில் (உதாரணமாக இந்திய நீதித் துறை, விண்வெளித் துறை, பாராளுமன்றம் மற்றும் சில முதலாளித்துவ இடங்கள்) கடைப்பிடிக்கப்படுகிறது. (பிராமணர்கள் அதிகம் வாழும் இடங்களில் எப்படி என்று தெரியாது). ஆனால் இன்றைய சாதாரண சமூக சூழலில் சாதியை தீவிரமாக கடைப் பிடிப்பவர்கள் என்னவோ பிற மேல் சாதியினர்தான். அதையும் எதிர்த்து வினவு தளத்தில் சில கட்டுரைகள் வந்துள்ளது. தேடித் பார்த்து படிக்கவும்.

      //2 . ஒரு ஆதி திராவிடனான என்னுடன் மற்ற உயர் சாதியினரை விட ஒரு பிராமனானால் அதிக சிரமம் இன்றி பழகவும், கூட சாப்பிடவும் நண்பனாக ஏற்றுக் கொள்ளவும் முடிகிறதே..? எல்லா இடத்திலும் இப்படியா… அல்லது எனது சூழல் ஒரு விதி விலக்கா என தெரியவில்லை.//

      நண்பர்கள் என்று வரும் போது நிச்சயம் பழகுவார்கள். எனக்கும் நண்பர்கள் தெரியும் (நானும் ஆதி திராவிடன் தான்). ஆனால் அதே நண்பர்கள் எத்தனை பேர் உங்களை அவர்கள் வீட்டிற்கு சாப்பிட அழைத்திருக்கிறார்கள்? (அவர்கள் குடும்பத்துடன் அமர்ந்து).

      Posted on 23-Nov-09 at 12:05 pm | Permalink
      • PRAKASH

        yetharkku veettukkul saappita alaika vendum? its pure personal.

        Posted on 01-Apr-10 at 3:48 pm | Permalink
  37. mani

    நான் மணி

    இந்த விவாதம் அதற்கான வழிகாட்டலின்படி செல்வதை சில பங்கேற்பாளர்கள் திசைதிருப்பி உள்ளனர். இதனை சரிசெய்ய வேண்டும் எனக் கருதுகிறேன். ஆர்.வி என்பவரின் தனிப்பட்டப்பணிச்சூழலை மற்றும் அவர் இதுவரை வந்து மறுமொழி இடவில்லை என்பதை கணக்கில் கொள்ளாமல் அவரை டோண்டுவுடன் முடிச்சுப் போடும் வேலை விவாதம் முன்னேறுவதற்கு உதவாது. சாதிக் போன்ற தோழர்கள் இதனை முறைப்படுத் முயன்றதை பிற பங்கேற்பாளர்கள் பின்தொடரவில்லை. மாறாக விவாதம் சிறுதெய்வங்கள் மற்றும் ஜோதிடம் என மாறிச் செல்கின்றது. விவாத்த்திற்கு வரும் பார்ப்பனீய ஆதரவாளர்களில் பலரும் ஒரே தன்மையுடன் இருப்பதில்லை என்பதாலும் அவர்கள் நோக்கம் வேறுபட்டவை தமக்குள்ளும் மற்றும் வினவு உடனும் என்பதை கவனத்தில் கொண்டால விவாதம் ஆர்வி ஐப் போல சிந்திக்கும் பலரையும் விவாத்த்தில் பங்கேற்க வைக்கும் எனக் கருதுகிறேன். தங்களை வழிநடத்திய உணர்ச்சியையும் அனைவரும் புரிந்துகொண்டு மாற்றுவார்கள் என நம்புகிறேன்.

    Posted on 20-Nov-09 at 11:40 am | Permalink
  38. வித்தகன்

    இந்தப் பதிவிலிருந்தும் ஆர்.வி. யின் முந்தைய விவாதங்களிலிருந்தும் நான் புரிந்து கொண்டது….

    சாதி வேறுபாடுகளை பார்ப்பனீயம் என்று சொல்வது தவறென்று ஆர்.வி. கருதுகிறார். காரணம் எல்லாரும் சாதி பார்க்கிறார்கள், பிராமணர்களை மட்டும் குற்றம் சாட்டக் கூடாது என்பதுதான் அவர் கருத்து. சதுர்வர்ண வகைப்பாடு பிராமணர்களால் உருவானது, அவர்களது ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது. எனவே பார்ப்பனீயம் என்ற பதம் சரியென்று வினவு குழுவும் பிற பதிவர்களும் கருதுகிறார்கள்.

    பார்ப்பனீயம் என்ற பதத்தில் எனக்கு உடன்பாடும் கருத்து வேறுபாடும் கலந்து உள்ளன. எல்லா இடத்திலும், மதத்திலும் பிறப்பால் உயர்வு தாழ்வு பார்ப்பது பிராமணர்கள் கற்றுக் கொடுத்ததுதான். இந்து மதத்தை வளர்ப்பதாக சொல்லிக் கொண்டு சிறு பான்மையினரை, குறிப்பாக முஸ்லீம்களை, குறிவைக்கும் ஆர். எஸ். எஸ். புத்திக்கு அடிப்படை சித்தாந்தம் பிராமணர்களிடம் தோன்றியதுதான். அந்த வகையில் பார்த்தால் பார்ப்பனீயம் என்ற பதம் சரியானதே. எல்லாவகை சாதி மத ரீதியான பிரச்சினைகளையும் ஒரு குடையின் கீழ் (பார்ப்பனீயம்) கொண்டு வருவதன் மூலம் வருணாசிரம சித்தாந்தத்தின் ஆணி வேர் அசைக்கப் படுவது மிகவும் சரியே. ஆனால், இந்தப் பிரயோகத்தால் பிற உயர் சாதி இந்துக்கள் செய்யும் சாதி ரீதியான அட்டூழியங்கள் கண்டுகொள்ளப் படாமல் போய் விடுமோ என்ற அச்சம் இருக்கிறது. உதாரணமாக, தலித்துகளை வன்முறைக்கு ஆட்படுத்தும் (பெரும்பாலான சமயங்களில்) முக்குலத்தோரும் வன்னியரும் பிராமணர்கள் எல்லோருக்கும் பொது எதிரி என்ற பெயரில் தப்பி விடக் கூடாது.

    பார்ப்பனீயம் – சாதீயம் ஆகிய பதங்கள் இடத்திற்கேற்றாற் போல் சரி வரப் பயன் படுத்தப் பட வேண்டும் என்று கருதுகிறேன். இரண்டிற்கும் நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. எப்போதும் ஒரு பதத்தையே பயன் படுத்துதல் எல்லாக் குற்றங்களயும் ஒரு சமூகத்தின் மேல் சுமத்துவதற்கோ, அல்லது ஒரு சமூகம் செய்த குற்றங்கள் அனைத்தையும் பொய்யாக மறைப்பதற்கோ வழி வகுத்துவிடும். எதை எப்போது பயன் படுத்த வேண்டும் என்பது குறிப்பிட்ட பிரச்சினையில் அவரவர் எடுக்கும் நிலைப்பாடு சார்ந்தது. ஆனால் நான் பார்ப்பனீயம் என்று சொல்லவே மாட்டேன் அல்லது அப்படி மட்டும்தான் எப்போதும் சொல்லுவேன் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

    Posted on 20-Nov-09 at 12:05 pm | Permalink
    • வித்தகன்,

      //வேறு எதனால் சிந்தனை தீர்மானிக்கப்படுகிறது என்று ஆர்வி கருதுகிறார்? சில மனிதர்கள் சில மாதிரி சிந்திப்பதற்கும், வேறு சிலர் வேறு மாதிரி சிந்திப்பதற்கும் என்ன காரணம்? அவர்களது அறிவா, அறியாமையா, நல்லெண்ணமா, விபத்தா, வாழ்நிலையா?//

      இது குறித்தும் கருத்து சொல்லுங்கள். மேலும் விவாதிக்க வசதியாக இருக்கும்

      Posted on 20-Nov-09 at 12:16 pm | Permalink
      • வித்தகன்

        இதற்கு என்னால் எப்படி பதில் சொல்ல இயலும் என்று தெரியவில்லை. என்னால் என் நிலைப்பாடு குறித்துத்தான் பேச முடியும். ஆர்.வி. தானாகவே முன் வந்து கலந்து கொண்டால் அவரது கருத்துக்களைக் கேட்கலாம்.

        Posted on 20-Nov-09 at 12:28 pm | Permalink
      • ‘Pachai Suyanalam’ 

        Posted on 20-Nov-09 at 12:46 pm | Permalink
    • I fully support vitthakan

      Posted on 21-Nov-09 at 12:39 am | Permalink
  39. ரியல் என்கவுண்டர்

    பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவது உண்மை. ஆனால் எங்கெல்லாம் சாதி இந்துக்கள் தலித்துகளை தாக்கி கலவரம் செய்தார்களோ அங்கெல்லாம் பார்ப்பனிய அமைப்புக்களான ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி முதலானவை ஆதிக்க சாதி இந்துக்களை அதாவது தேவரியம், வன்னியம், கவுண்டரியத்தை கண்டிக்காமல் இந்துக்கள் இப்படி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளக்கூடாது என்று சமரசம் செய்வது ஏன்? இதன் மூலம் பார்ப்பனர்களின் அரசியல் அதிகார மத அமைப்புகள் அத்தனையும் ஆதிக்க சாதி இந்துக்களைத்தான் ஆதரிக்கின்றன என்பது பகிரங்கமான உண்மை. ஆகவே பார்ப்பனியம் நேரடியாக தலித்துக்களை இப்படி ஒடுக்கி வருகிறது என்பதை தலித்துக்கள் உணரவேண்டும்.

    Posted on 20-Nov-09 at 12:10 pm | Permalink
  40. ரியல் என்கவுண்டர்

    90களின் மத்தியில் நடந்த தென்மாவட்டக் கலவரங்கள் என்பது ஆதிக்கசாதி தேவர் சாதி வெறியர்கள் தலித்துக்களான பள்ளர்கள் மீது நடத்தியதாகும். அன்று இந்து முன்னணி ராமகோபாலன் ஐயர் முன்வைத்த தீர்வு இருபிரிவினரும் தயிர் சாதம் கொண்டு வந்து ஒன்றாக சாப்பிட வேண்டும், பேதத்தை களைந்து கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் ம.க.இ.க அன்று தேவர் சாதி வெறியை நேரடியாக கண்டித்து தலித்துக்கள் பக்கமுள்ள நியாயத்தை எடுத்துரைத்து பிரச்சாரம் செய்து பல இடங்களில் சாதி வெறியர்களின் தாக்குதலை சந்தித்தது. எனில் தேவர் சாதி வெறியை ஆதரித்த பார்ப்பனிய இந்துமுன்னணியின் பின்னணியில் பார்ப்பனர்கள்தான் இருக்கிறார்கள் எனில் சாதி வெறிக்கு, கொடுமைக்கு துணைபோவது யார்?

    Posted on 20-Nov-09 at 12:18 pm | Permalink
    • சமநிலை

      தேவர்களுக்கும் பள்ளர்களுக்கும் சண்டையை வளர்த்துவிட்ட ம.க.இ.கவினர் நடுநிலயளர்கள். அவர்களை சமாதானமாக போகசொன்னவர்கள் சாதிவேறியர்களா? நல்ல நியாமையா.

      Posted on 20-Nov-09 at 4:25 pm | Permalink
      • ரியல் என்கவுண்டர்

        ஆதிக்கம் அறியாத சமநிலை! தேவர்களும் பள்ளர்களும் சரிசம்மாக இருக்கும் சாதிகளா என்ன? தேவர்கள் அதிகமாக இருக்கும் ஊரில் தனிக்குவளை, இறைவழிபாடு மறுப்பு, தனி சுடுகாடு இப்படி தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. இந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆதரவாக போராடும் தேவர் சாதி வெறியர்களை இந்து முன்னணி பார்ப்பனர்கள் ஆதரிக்கின்றார்கள். இதன்மூலம் ஆதிக்கசாதி வெறிக்கு ஒரு அரசியல் அங்கீகாரம் கொடுக்ககிறார்கள். இதன் மூலம்தான் இந்து முன்னணியின் தலைமைப்பார்ப்பனர்கள் தமதுவட்டாரத் தலைமைகளுக்கு இத்தகைய ஆதிக்க சாதி தலைவர்களை பெறுகிறார்கள். அந்த சமூக அடிப்படையை நியாயப்படுத்துவதுதான் அவர்களுடைய வேலை. பலரும் சொல்வது போல தலித்துகளை பார்ப்பனர்கள் நேரடியாக தாக்குவதில்லை என்பது இந்து முன்னணியின் செயல்பாட்டால் பொய் என நீருபிக்கப்பட்டுள்ளது.

        Posted on 22-Nov-09 at 7:23 pm | Permalink
  41. ரியல் என்கவுண்டர்

    கன்னியாகுமரியில் அம்மன் கோவில் அருகே உள்ள முக்கியமான இடத்தில் விசுவ இந்து பரிஷத்தின் யஜீர் வேத பாடசாலை உள்ளது. இங்கே நியாயமாக எல்லா இந்துக்கள்தானே மாணவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ பார்ப்பன மாணவர்கள் மட்டுமே. அந்த பள்ளி முதல்வரிடம் இது குறித்து சுற்றுலா சென்றிருந்த நான் கேட்ட போது அவர் பதிலளித்த்து என்னவென்றால்,” இங்கே எல்லா இந்துக்களும் பாடம் கற்க வரலாம், ஆனால் ஒரே ஒரு கண்டிஷன், அவா சந்ததியில கடைசி மூன்று தலைமுறை காயத்ரி மந்திரம் சொல்லி சந்தியா வந்தனம் செயதிருக்க வேண்டும்” இன்று கிராமத்து பூசாரிகளை சங்கமாக சேர்த்து பார்ப்பனிய மயமாக்கும் விசுவ இந்து பரிஷத்தின் உண்மை முகம் என்ன? பார்ப்பனியமா? சமத்துவமா?.

    Posted on 20-Nov-09 at 12:25 pm | Permalink
    • வித்தகன்

      வேதம் எல்லோருக்கும் கற்றுத்தரவேண்டும் என்பது உங்கள் வாதம்.
      அது வெட்டி வேலை; வாழ்க்கைக்கு உதவாது என்பது என் வாதம்.

      வெட்டி வேலை மட்டுமல்ல. வேதம் படிப்பவர்கள் பிறப்பால் எக்குலத்தோராயினும் அக்கல்வியால் தன்னை உயர் நிலையில் வைத்துக் கொண்டு பிறரைத்தாழ்த்துப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் (பார்ப்பனீயம்). எனவே சமூக ரீதியாக இப்போராட்டத்தில் நியாயம் இருந்தாலும் நெடுங்கால நன்மைக்கு வேதப் பள்ளிகளை ஒதுக்கி விட்டு தொழில் ரீதியான கல்வி போதிக்கப் படுவதே வருங்கால சந்ததியினருக்கு நல்லது. இது அப்பள்ளிகளுக்குள் வறுமையின் காரணமாகவோ, பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவோ சேர்க்கப் பட்டிருக்கும் பிராமணக் குழந்தைகளுக்கும் பொருந்தும்.

      Posted on 20-Nov-09 at 1:28 pm | Permalink
      • ரியல் என்கவுண்டர்

        வித்தகன், வேதம் கற்றுக் கொடுக்கும் இந்த வெட்டிவேலைக்கு பணக்கார பார்ப்னர்கள் நிதியுதவி செய்வது ஏன்? வேதங்கள், புராணங்கள், ஸ்மருதிகள், அத்தனையும் இன்று வரை காப்பாற்றப்படுவது யாரால்? எனவே முதலில் இந்த வெட்டி வேலைக்கு கூட சமத்துவத்தை கொண்டுவருவோம். அதன் பிறகு அங்கு சேர நினைக்கும் நம்மாளுக்கு இது தேவையில்ல என்பதை புரியவைப்போம். தலித்துகளில் பெரும்பாலோனோரும், பிற்படுத்தப்பட்டவர்களில் கணிசமானோரும் நிலமற்ற ஏழை விவசாயிகள்தான். அவர்களை அப்படி கட்டிப்போட்டிருப்பது பார்ப்பனியத்தின் சமூக, பொருளாதார அடக்குமுறைதான். முதலில் அதை தகர்ப்போம்.

        Posted on 22-Nov-09 at 7:28 pm | Permalink
        • வித்தகன்

          ரியல் என்கவுண்டர்… வேதம் படிப்பவன் எவனாக இருந்தாலும் அவனுக்கு தன்னைப் பற்றிய உயர்வான எண்ணம் வரும். அதைப் படிக்காதவன் தன்னை விடத் தாழ்ந்தவன் என்று தோன்றும். இதற்குப் பெயர்தான் பார்ப்பனீயம். வேதங்கள் எல்லாம் குப்பைகள். தொழில் கல்வியும், அறிவியல் வணிகம் பொருளாதாரம் சட்டம் மருத்துவம் சார்ந்த படிப்பும், கலை இலக்கிய அறிவும்தான் பொருளாதார, கலாசார ரீதியாக எல்லோரும் உயர்வடைய உதவும். பல ஆயிரம் வருடங்கள் முன்பாக காட்டு மிராண்டிக் கூட்டம் நதிக்கரை ஓரம் அமர்ந்து எழுதிய பினாத்தல்களைப் படித்து ஒன்றும் சாதிக்கப் போவதில்லை. இதற்கு வடமொழி வேறு கற்றாக வெண்டும். அந்த நேரத்தில் ஆங்கிலமோ பிரஞ்ச்சோ ஹிந்தியோ படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். தமிழில்கலைச் சொற்கள் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபடலாம். அடுத்தடுத்து முன்னேறிச் செல்ல வழி பார்ப்போம். கற்காலத்தைக் கொண்டாடுபவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன?

          Posted on 22-Nov-09 at 8:18 pm | Permalink
        • ரியல் என்கவுண்டர்

          உங்கள் சொந்த அனுபவத்தில் இவைகளை குப்பைகள் என்று அறிந்து வைத்திருக்கும் நண்பர் வித்தகன் முக்கியமான ஒன்றை பரிசீலிக்கவேண்டும். இந்த நாட்டில் படித்தவர்கள் படிக்காதவர்கள் எல்லாருடைய வாழ்க்கையிலும் பார்ப்பனிய மதம் தனது புனிதத்தை எல்லா வழிகளிலும் நாட்டி வருகிறது. ஆதிக்க சாதி நபர் புது வீடு கட்டினால் அங்கே பார்ப்பனர்களை அழைத்து கணபதி ஹோமம் செய்வார். தலித்துகளை உள்ளேயே நுழைய விடமாட்டார். சங்கராச்சாரிக்கு கோடிக்கணக்கில் நன்கொடை கொடுக்கும் அம்பானி முதலான தொழிலதிபர்கள் இருக்கும் வரை இந்துமதத்தின் புனிதம் பல்வேறு வகைகளில நிலைநாட்டப்பட்டதாகவே இருக்கும். இந்த நாட்டில் ஏழைகள் ஏழைகளாக இருப்பதற்கு காரணம் அவர்கள் படிக்கவில்லை என்று எளிமையாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். இல்லை, அவர்களை அப்படி குலத்தொழிலோடு கட்டி போட்டது பார்ப்பனியம்தான். அதனால்தான் இன்றும் அருந்ததி மக்கள் மலம் அள்ளுகிறார்கள். பார்ப்பனர்கள் அமெரிக்காவில் இருந்துகொண்டு இந்து பேப்பருக்கு குலம் கோத்திரம் பார்த்து திருமண விளம்பரம் கொடுக்கிறார்கள். எனவே மத சாதி வாழ்வில் சமத்துவம் வரும்போதே பொருளாதார வாழ்விலும் சமத்துவத்திற்காக குறைந்தபட்சம் போராடும் நிலையாவது வரும். இந்து மதத்தை மற்ற மதங்கள் போல வெறும் மூடநம்பிக்கை மதம் என்று மட்டும் நீங்கள் மதிப்பிடுகீறீர்கள். அது உண்மையல்ல. அந்த மதம் பொருளாதார வாழ்வை சாதியத்தால் பாதிக்கும் ஒரு அடக்குமுறை சுரண்டல் நிறுவனம், அந்த நிறுவனத்தின் எல்லாவகை ஏற்றத்தாழ்வுகளையும் நாம் களைந்தால்தான் நீங்கள் விரும்பும் தொழில் கல்வி கற்கும் காலம் வரும்.

          Posted on 22-Nov-09 at 8:33 pm | Permalink
        • வித்தகன்

          //எல்லாவகை ஏற்றத்தாழ்வுகளையும் நாம் களைந்தால்தான் //

          சரிதான். ஆனால் எல்லோரும் வேதம் படிப்பதன் மூலம் இது எப்படி சாதிக்கப் படும் என்று புரியவில்லை. இதனால் இன்னும் சில தலை முறைகள் வீணாகக் கூடாது!

          //அந்த மதம் பொருளாதார வாழ்வை சாதியத்தால் பாதிக்கும் ஒரு அடக்குமுறை சுரண்டல் நிறுவனம்//

          நிறுவன மதங்களில் கிறித்துவமும் இஸ்லாமும் எந்த விதத்திலும் குறைந்தவை இல்ல. இறை சார்ந்த நேர்கோட்டு சித்தாந்தங்கள் எங்கிருந்து வந்தாலும் அவை மூட நம்பிக்கைகளே.

          //உங்கள் சொந்த அனுபவத்தில் இவைகளை குப்பைகள் //

          என் சொந்த அனுபவம் பற்றி நானாக சொல்லும் வரை நீங்கள் ஊகிக்க வேண்டிய அவசியமில்லை.

          Posted on 22-Nov-09 at 9:06 pm | Permalink
        • ரியல் என்கவுண்டர்

          வித்தகன் உங்களது சொந்த அனுபவத்தை நான் யூகித்தது தவறுதான். ஆனால் மதங்களைப்பற்றிய உங்களது சொந்த அறிவு மிகவும் தவறாக உள்ளது. கிறித்தவ, முசுலீம் மதங்களின் நிறுவனத்திற்கும், இந்து மதத்தின் நிறுவனத்திற்கும் பாரிய வேறுபாடு உண்டு. நாவிதர், வண்ணார், அருந்ததியர், பறையர் அப்புறம் பார்ப்பனர் முதலானோர் தாங்கள் எந்த சாதியியல் பிறந்தார்களோ அந்த தொழிலைத்தான் செய்யவேண்டும் என்ற பிறப்பினால் வாழ்க்கையை தீர்மானிக்கும் ‘ஏற்பாடு’ கிறித்தவ, முசுலீம் மதங்களில் உண்டா? இல்லை என்றால் என்? அதற்கும் இந்து மதத்திற்கும் என்ன வேறுபாடு?

          Posted on 22-Nov-09 at 9:23 pm | Permalink
        • வித்தகன்

          //பிறப்பினால் வாழ்க்கையை தீர்மானிக்கும் ‘ஏற்பாடு’ கிறித்தவ, முசுலீம் மதங்களில் உண்டா? //

          உண்டு. கத்தோலிக்க ப்ராட்டஸ்டண்டு வேறுபாடுகளும் (இடுகாட்டில் தனித்தனி பிரிவுகள் உட்பட), ஷியா-சுன்னி மோதல்களும் எந்த மதத்திலும் பிறப்பினால் பல முத்திரைகள் குத்தப்படுவதையே காட்டுகின்றன. இந்து மதத்தில் தொழில் உட்பட வாழ்க்கை முறை சாதியால் நிர்ணயிக்கப் படுவது போல நீங்கள் இரானில் ஷியாவாகப் பிறந்தாலும் சுன்னியாகப் பிறந்தாலும் உங்கள் தலையெழுத்து வேறு வேறாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. பார்ப்பனீயம் இந்துமதத்தினுள் இருக்கும் ஆழமான விஷம். மதம் உலமெங்கும் இருக்கும் விஷம். ஒன்றை அழிக்க இன்னொன்றைப் புகழக் கூடாது. எந்த மதமேனும் உட்பிரிவுகள் இன்றி அந்த சிந்தாந்தத்தைப் பின்பற்றுபவர் அனைவரும் சமமென்று நடத்துகிறதா? அந்தந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பெரும்பானமை உட்பிரிவினர் (உம்: உருது பேசும் முஸ்லீம்கள் vs தமி்ழ் பேசும் முஸ்லீம்கள்) சிறு பான்மையினரை தாழ்வாகத்தான் நடத்துகிறார்கள்.

          இப்போது சிறையில் இருக்கும் தீவிரவாதி கசப் இறைச்சி வியாபாரம் செய்யும் குலத்தில் பிறந்தவன் என்கிறார்கள். “கசாப்புக் கடை” யில் இருக்கும் கசாப் தானா இது? அப்படியானால் அவனது பிறப்பு அவனுக்கு முஸ்லீம் என்பதையும் தாண்டி வேறு ஒரு உப குல அடையாளம் தருகிறதா?

          Posted on 22-Nov-09 at 9:44 pm | Permalink
        • ரியல் என்கவுண்டர்

          வித்தகன் இந்து மதத்தை மற்ற மதங்களோடு ஒப்பிடும் உங்கள் வாதப்படி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் கிறித்தவர்களிடமும், வளைகுடா நாடுகளில் இருக்கும் முசுலீம்களிடமும் வண்ணார், நாவிதர், நகரசுத்தி தொழிலாளி அல்லது அருந்த்தியர், பனையேறும் நாடார்கள், முதலான சாதிகள் உண்டா இல்லையா? பார்ப்பனர்கள்தான் கருவறையில் நுழைந்து பூஜை செய்யும் குருக்களாக முடியும் என்பது போல பாதிரிகள், மௌல்விகள் ஆவதற்கு குறிப்பிட்ட சாதிகளிலிருந்துதான் முடியும் என்று உள்ளதா?

          Posted on 22-Nov-09 at 10:59 pm | Permalink
        • வித்தகன்

          அப்படியானால் அம்மதங்களில் உட்பிரிவுகளுக்குள் ஏற்ற தாழ்வுகளே இல்லையென்கிறீர்களா? சுஃபீக்களைப் பற்றி வஹாபிக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியுமா? அமெரிக்காவில் ப்ராட்டஸ்டண்டு பெண் கத்தோலிக்க ஆணை மணமுடிக்க முடியுமா? கறுப்புத் தோல் கிறித்தவரும் வெள்ளைத் தோல் கிறித்தவரும் ஒரு தட்டில் இருக்கிறார்களா? முஸ்லீம் ஆண்களுக்கும் முஸ்லீம் பெண்களுக்கும் சம அந்தஸ்து உள்ளதா?

          சாதி என்ற வார்த்தையும் ஆதிக்க சாதியினர் பூசை செய்யும் உரிமையும் இந்து மதத்தின் தனிச் சொத்தாக இருக்கலாம். ஆனால் பிறப்பினால் ஏற்ற தாழ்வு பார்ப்பது எல்லா மதங்களிலும் உள்ளது. தலித் இந்து சுயமரியாதை வேண்டி கிறுத்துவனாக மாறினாலும் வெள்ளைத் தோல் கிறுத்துவனுக்கு கீழாகத்தான் அவர் இருப்பார். தலித் பெண்மணி முஸ்லீமாக மாறினால் தாலிபானிய ஆணுக்கு அடங்கத்தான் வேண்டும்.

          எல்லா மதங்களுமே பிறப்பால் ஏற்றத் தாழ்வு பார்ப்பவைதான். சில சமயம் சாதி என்ற அடையாளம . சில சமயம் செய்யும் தொழில். சில சமயம் தோலின் நிறம். சில சமயம் வணங்கும் ஆலயம் (கத்தோ – பிராட்). சில சமயம் இனப்பெருக்க உறுப்பு. உண்மையான சமௌரிமைச் சமுதாயம் உருவாக எந்த மததிலும் இடமில்லை.

          Posted on 22-Nov-09 at 11:22 pm | Permalink
  42. Vithagan,

    You have hit the Bulls Eye! 

    Posted on 20-Nov-09 at 12:41 pm | Permalink
  43. ரியல் என்கவுண்டர்

    பிரேமானந்தா கைது செய்யப்பட்டபோது, திருவாடுதுறை ஆதினப் பிரச்சினைகளின் போது, பல சூத்திய சாமியார்கள் மோசடியில் சிக்கியபோதெல்லாம் அந்தந்த சாதி மக்கள் தமது சாமியார்களை காப்பாற்ற வரவில்லை. ஆனால் ஜெயேந்திதரன் ஊர் மேய்ந்து, கூலிப்படையை வைத்து கொலையும் செய்து கைதான போது பார்ப்பனர்கள் நூற்றுக்கு நூறு சதம் ஜெயேந்திரனை விட்டுக்கொடுகாகமல் காப்பாற்ற முயன்றார்கள், பேசினார்கள், எழுதினார்கள், கூடினார்கள், கொதித்தார்கள் – ஏன்?

    Posted on 20-Nov-09 at 1:06 pm | Permalink
    • Anonymous

      ஆந்த ஜெயேந்திரரை கைது செய்தது கூட ஒரு பார்ப்பான சி.எம் ஜெயலலிதா தான் என்பதை ஏன் சொல்ல மாட்டீர்கள் போலி என்கவுண்டர் அவர்களே ?

      Posted on 20-Nov-09 at 3:33 pm | Permalink
      • ரியல் என்கவுண்டர்

        அந்த ஜெயலலிதாதான் சட்டசபையில் தன்னை பாப்பாத்தி என பெருமையாக அறிவித்தார். மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்து இந்துமதவெறி அமைப்புகளின் வயிற்றில் பால் வார்த்தார். ஆடு, கோழி பலி தடைச்சட்டம் கொண்டு வந்தாதர். கோவில்களில் இலவச அன்னதானம் கொண்டு வந்தார். இதனாலேயே இந்து முன்னணி இராமகோபாலனால் ” இதுவரை தமிழகம் கண்ட முதல்வர்களில் ஒரே இந்து முதல்வர்” என்று பாராட்டப்பட்டார். ஜெயேந்திரனை ஜெயலலிதா கைது செய்தது அவாள்களுக்குள் நடந்த வர்த்தக பேரத்தின் தோல்வியும் அப்போது அதற்கு தோதாக ஜெயேந்திரன் செய்த கொலையுமே காரணம்.

        Posted on 20-Nov-09 at 3:55 pm | Permalink
        • சமநிலை

          இதுதானா உண்மையான காரணம்? இதைபோய் கோர்ட்டில் சாட்சி சொல்லி இருவருக்கும் தண்டனை வந்கித்தருவிர்களா?

          Posted on 20-Nov-09 at 4:12 pm | Permalink
        • வேல்

          தமிழ்நாடு மருத்துவமனை வேலுச்சாமியை கேளுங்கள் அவாளைப் பற்றி விலாவரியா சொல்வார்.

          Posted on 20-Nov-09 at 5:04 pm | Permalink
  44. ரியல் என்கவுண்டர்

    ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி, அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (மாணவர் அமைப்பு), பாரதிய மஸ்தூதர் சங்கம் (தொழிலாளர் அமைப்பு) ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவிகா (பெண்கள் அமைப்பு), சேவா பாரதி, வனவாசி கல்யான் கேந்திரா, ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சுதேசி ஜாக்ரன் மன்ஞ்ச், இன்ன பிற பார்ப்பன இந்து மதவெறி அவதாரங்களில் முழுநேர ஊழியர்களாக இவ்வியக்கங்களை கட்டுப்படுத்தும் பிரச்சாரக்குகளில் பெரும்பான்மையினர் பார்ப்பனர்களாக இருப்பது தற்செயலா, விபத்தா, வாழ்நிலையா…..எது?

    Posted on 20-Nov-09 at 1:14 pm | Permalink
  45. ரியல் என்கவுண்டர்

    பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவதற்கு பல ஆண்டுகள் கலவரம் செய்து, ஆட்சியைப்பிடித்து ‘இந்துக்களை’ அணிதிரட்டி போராடும் இந்துமதவெறி அமைப்புகள் எங்காவது தலித்துக்களின் கோவில் நுழைவு போராட்டங்களையோ, தீண்டாமைஒழிப்பு போராட்டங்களையோ நடத்தாமல் இருப்பதன் மூலம் சாதி வெறிக்கு துணைபோவதற்கு என்ன காரணம்?

    Posted on 20-Nov-09 at 1:18 pm | Permalink
  46. ram

    ////இந்துமதவெறி அமைப்புகள் எங்காவது தலித்துக்களின் கோவில் நுழைவு போராட்டங்களையோ, தீண்டாமைஒழிப்பு போராட்டங்களையோ நடத்தாமல் இருப்பதன் மூலம் சாதி வெறிக்கு துணைபோவதற்கு என்ன காரணம்?///// தலித்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற தூண்டிவிட்டு மதம் மாறிய கிறிஸ்தவர்களோடு சேர்ந்து இந்து கோவிலுக்குள் நுழைவேன் என்றால் யார் ஆதரிப்பார்கள். தலித்துக்களும் இந்துக்கள் தான் என்றும் இந்துக்களுக்குளேயே நாம் சமத்துவம் உண்டாக்குவோம் என்ற போராட்டம் தான் நீங்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பை தரவல்லது. இந்த மதமே தலித்துக்கெதிரானது என்று சொல்லிவிட்டு பிறகு அந்த மதத்தினர் தலித்துகளை காக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்.

    Posted on 20-Nov-09 at 1:51 pm | Permalink
    • ஈயம்

      உத்தபுரம் தலித்துகள் கிருத்துவர்கள் இல்லை. அவர்கள் கோயில் நுழையத் தடுக்கப்பட்டார்கள். கமயுனிஸ்டுகள் இப்போதுதான் வந்தார்கள். இப்படி பல கிராமன்ங்களில் தலித்துகள் இந்துக்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் கோயிலுக்குள் நுழையமுடிவதில்லை. அதே கோவிலில் மேல் ஜாதி இந்துக்களிடம் கூலி வாங்கிகொண்டு அர்ச்சகர் வேலை பார்ப்பது யார்?

      Posted on 20-Nov-09 at 3:37 pm | Permalink
      • Anonymous

        யார்?
        பார்ப்பானர்களா ?
        அவர்களைத்தான் அண்ணா காலத்திலேயே கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு விரட்டியாகிவிட்டதே!

        வினவு மற்றும் கம்பெனிக்கு ஒரு வேண்டுகோள்:

        இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரே ஒரு பிரச்சனைக்காவது பார்ப்பானர்கள் காரணம் அல்ல என்று முடிவுக்கு வரும் வகையில் ஒரே ஒரு பதிவு நீங்கள் போடவேண்டும். முடியுமா ?

        Posted on 20-Nov-09 at 5:46 pm | Permalink
  47. Anonymous

    ஆர்.வீ. என்பவர் வராமலேயே 100 பின்னூட்டம் அடித்திருக்கும் வினவு மற்றும் அவரது ஜால்ராக்களைப் பார்க்கும்போதே தெரிந்துவிட்டது, இது ஒரு கம்யூனிஸ்டு கீழ்பாக்கம் என்று.

    Posted on 20-Nov-09 at 1:56 pm | Permalink
    • நெத்தியடி முஹம்மத்

      haa…..haaaaa…….haaaaaaaaaaaa………….haaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

      Posted on 20-Nov-09 at 2:11 pm | Permalink
      • சித்தீக்

        நாத்திகர்களை எதிர்க்க பார்ப்பனர்களுடன் கூட்டு, பார்ப்பனர்களை எதிர்க்க நாத்திகர்களுடன் கூட்டு. ஹா.. ஹா…

        Posted on 20-Nov-09 at 4:46 pm | Permalink
        • நெத்தியடி முஹம்மத்

          சித்திக்,
          இந்துமதவெறி பாசிஸ்ட்டுகளை எந்த இஸ்லாமிய உணர்விலிருந்து விமரிசிக்கிறோமோ, அதே உணர்விலிருந்துதான் நாத்திக கம்யூனிச பாசிஸ்டுகளையும் விமரிசிக்கிறோம். அதனால் இரு மதத்து பழமைவாதிகளும் இஸ்லாத்தை தூற்றுகிறார்கள். அது சரியா என்பதை நீங்கள்தான் பரிசீலிக்க வேண்டும்.

          \\\\\\\\\\\\\\\\\\\\\\ ///அப்படி அல்லாமல், இந்தியாவில் மட்டும் பெரும்பான்மை சமூகத்துக்கு – அதுவும் அடக்கி ஆளும் பிரிவினரால், பெரும்பான்மை இன அரசுக்கு ஆதரவாய் (!), சிறுபான்மை இன மக்களுக்கு எதிராய்(!) எதற்காக RSS என்ற ஒரு தீவிரவாத இயக்கம்?/// —- I asked,//

          //ஆர்.எஸ்.எஸ். பற்றி கேட்டிருந்தீர்கள். எனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளைப் பற்றி அரசல் புரசலாகத்தான் தெரியும். ஆர்.எஸ்.எஸ். குற்றவாளியா இல்லையா என்பது பற்றி என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. அப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது, அவ்வளவுதான்///—–Mr.RV said. I will explain you.\\\\\\\\\\\\\\\\\\\\

          >>> இதற்கு அப்போதே அங்கேயே பதில் கொடுத்துள்ளேன்.
          http://www.vinavu.com/2009/11/06/caste-killing/#comment-12080
          http://www.vinavu.com/2009/11/06/caste-killing/#comment-12367
          என் பார்ப்பனீய எதிர்ப்பு பற்றி தெரியவில்லை என்றால், இங்கெல்லாம் சென்று விட்டு வரவும்.

          மற்றபடி இந்த அனானியின் பின்னூட்டத்திற்கு சிரிப்பு வராமல் இருந்தால் உங்கள் மனதில் நிறைய வன்மம் உள்ளது என்று அர்த்தம். (அதாவது நீங்கள் கம்யூனிஸ்ட்) ரிலாக்ஸ், சித்திக்…. ஹா…..ஹா….ஹா

          Posted on 20-Nov-09 at 6:36 pm | Permalink
    • வேல்

      கீழ்பாக்கத்திற்கு யாரும் வெத்திலை பாக்கு வைத்து அழைக்கவில்லை

      Posted on 20-Nov-09 at 5:00 pm | Permalink
      • Anonymous

        அது தானே, கீழ்ப்பாக்கத்துல இருந்துகிட்டு எப்படி கீழ்ப்பாக்கத்துக்கே வெத்தில பாக்கு வெச்சு அழைக்கிறது. ஞாயமாத்தான் பேசுறீங்க வேல்.

        Posted on 20-Nov-09 at 9:30 pm | Permalink
  48. வினவு

    பூனூல் போடும் பாசிஸ்டுகள் என்ற பெயரில் பின்னூட்டமிடும் நண்பர். வினவை தனிமடலில் தொடர்பு கொள்ளவும்

    Posted on 20-Nov-09 at 2:05 pm | Permalink
  49. mughil

    சிறிய பதிவு என்றாலும் மிக அருமையான சிறந்த பதிவு.
    விவாதிக்கும் முறை என்ன என்பதை சில விசயங்களில்
    மட்டுமே நின்று தொங்கிக்கொண்டிருப்பவர்களின்
    முகத்துக்கு நேரே உறைக்கும் பதிவு.

    Posted on 20-Nov-09 at 2:38 pm | Permalink
  50. மதி.இண்டியா

    மனநல மருத்துவரென்றால் கொஞ்சம் நிதானம் வேண்டும் , எதிர்தரப்பை எதிரியாக கருதி நாகரிகமிலாமல் மாவோ பாணியில் மட்டையடி அடிப்பது ஒரு மனோதத்துவ நிபுணர்(?)க்கு அழகா என்ன ?

    தாடி பெருசா வைச்சா பெரியார் ஆகிட முடியாது.

    Posted on 20-Nov-09 at 4:21 pm | Permalink
    • ram

      உண்மை பகுத்தறிவாளன் என்ற முறையில் நான் ஆமோதிக்கிறேன்.

      Posted on 22-Nov-09 at 7:54 am | Permalink
    • பைத்தியமென்றால் நல்லா கத்தவேண்டும்’பட்டை’யடி மட்டும் அடித்தா பத்தாது,
      வாயி நல்லா நாறி போயிருந்தா நீ சங்கராச்சாரி ஆக முடியாது

      Posted on 25-Dec-09 at 12:03 pm | Permalink
  51. rudhran

    நண்பர்களே தோழர்களே, இது வழக்கமான திசைதிருப்பும் சாதுர்யம். இங்கே, ஆர்வியா ருத்ரனா என்ற விவாதம் இல்லை. பார்ப்பனீயம் என்பது உண்டா இல்லையா, அதன் விகாரம் என்ன வீச்சு என்ன, அதன் கோரமான குயுக்தியிலிருந்து சமுதாயமீஈட்சி எவ்வாறு..இவையே விவாதத்திற்குரிய விஷயங்கள். என்மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புகளை இந்த தளத்தில் நான் எதிர்கொள்ளப்போவதில்லை. அவர்களை மீண்டும் மைய விவாதத்திற்கு கொண்டு வருவதே ந்ம் முக்கிய நோக்கமாக இருக்கட்டும்

    Posted on 20-Nov-09 at 4:39 pm | Permalink
    • ram

      ///பார்ப்பனீயம் என்பது உண்டா இல்லையா,/// ஜாதீயம் என்று பொதுவாக பார்ப்பதே ஒரு சமூதாயத்தில் மதிக்கப்படும் மனிதருக்கு அழகு. சொந்த காழ்புணர்ச்சிகளின் காரணமாக முந்தைய தலைவர்கள் உண்டாக்கிய பார்ப்பனீயம் என்ற சொல்லை ஓயாமல் பயன்படுத்தி பார்ப்பனர்களை மட்டுமே அழிக்க நினைப்பது மனிதத்தன்மையற்ற கோழைத்தனமான செயல். பார்ப்பனர்களை விட வீரியமாக வெட்டு குத்து லெவலுக்கு ஜாதி வெறியர்கள் யாரோ அவர்களிடம் உங்கள் ஜாதி எதிர்ப்பு வீரியத்தை தைரியமிருந்தால் காண்பியுங்களேன்.

      Posted on 20-Nov-09 at 6:12 pm | Permalink
      • ரியல் என்கவுண்டர்

        ராம் இதிலிருந்து ஒன்று தெரிகிறது, வெட்டு குத்து லெவலுக்கு இறங்கும் சாதி வெறியர்களை நீங்கள் எதிர்ப்பதில்லை. ஆர்.எஸ்.எஸ் அப்படித்தான் உங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. இதன்படி பார்ப்பனியமும்,பார்ப்பனர்களும் சாதி வெறியர்களை இயக்கும் பணியை நன்கு செய்து வருகிறது என்பது புரிகிறது. சாதி ஏற்றத்தாழ்வை அரசியல் சட்டம் போல இந்து மத புராண, இதிகாச, சாத்திரங்களை வைத்துபுனிதப்படுத்தும் வேலையை, சம்ஸ்கிருத மொழியுடன் செய்துவரும் நபர்கள் யார்? நிச்சயமாக பார்ப்பனர்களைத் தவிர வேறு இல்லை. இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் வட்டார அளவில் இருக்கும் இந்துமதவெறி அமைப்புகளின் தலைவர்கள் எல்லோரும் சாதி வெறியர்களே. இது வட இந்தியாவில், இந்தி பேசும் மாநிலங்களில் வெளிப்படையாக இருக்கிறது.

        Posted on 22-Nov-09 at 7:35 pm | Permalink
    • ஏறகனவே அடி பட்ட மதிகெட்ட இண்டியா தனக்கேயுரிய பார்ப்பன சூழ்ச்சியைஅவிழத்து விடுகிறார், காந்தி பாணியில் பட்டையடி அடிக்கும் மதி இண்டியாவை பட்டையடி மதுஇந்தியா என்றே அழைக்கலாம்

      Posted on 25-Dec-09 at 11:56 am | Permalink
  52. mani

    நான் மணி

    ஒருவரது சிந்தனையை தீர்மானிப்பது எது அவரது ஜினோடைப்பா அல்லது பினோ டைப்பா என்பது முக்கியமானதுதான். அதனை விட முக்கியமானது ஒன்று உள்ளது. இரண்டுமே வளர்ச்சியை நோக்கி உள்ளதா அல்லது வீழ்ச்சியை நோக்கி உள்ளதா என்பதுதான அது. ஜினோவும் பினொவும் வீழ்ச்சியை நோக்கி இருந்தால் உங்களுக்கு கிடைப்பது டோண்டு ராகவன் போன்றவர்கள். இரண்டுமே வளர்ச்சியை நோக்கி இருந்தால் தோழர்களும் கிடைப்பார்கள். இதனை எளிதில் பிரித்துப் பார்த்து விடலாம்.

    ஆனால் இரண்டில் ஒன்றை வீழ்ச்சியாக வைத்திருப்பவர்களும் பெற்றிருப்பவர்களும் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் சொர்க்கத்தை கண்ட்டைகின்றார்கள். இந்த வகையினரில் பல வண்ணமயமான பிரிவினர் உள்ளனர். தனது உடலுழைப்பு சாதியை பிறப்பாக கொண்டு சிந்தனையால் பார்ப்பனீயத்தை உயர்வாக கருதி அதற்கு இயைந்ந முறையில் தன்னைப் பயிற்றுவிக்கும் நபர்கள் ஒரே மாதிரியான அச்சில் இருப்பதில்லை. பிறப்பால் நிகழ்ந்த இழிவைப் போக்க இவர்கள் கடுமையாக சிந்தித்து உழைத்து தங்களை மேன்மைப்படுத்துகிறார்கள். இவற்றை கலாச்சார பண்பாடு மொழி குடும்ப உறவு திருமணம் மதம் கல்வி என பல துறைகளில் காண முடியும். இதற்கு மாற்றாக இருப்பவர்கள் பிறப்பால் பிற்போக்கை பெற்ற நடைமுறையில் முற்போக்காளர்கள். சிலர் தோழராகவும் வருகின்றனர்.

    மூன்றாவது ஒரு வகையினர் உள்ளனர். இவர்களிடம் விவாதிப்பது சிரம்மானது. வரலாற்றின் இயக்கவியலை தங்களது எந்த வாழ்வின் பகுதியிலும் புரிந்து கொள்ளாமல் நமது நிலவுகின்ற உற்பத்தி உறவின் எதிரோலியாக தங்களது சிந்தனை அமைவதை புரிந்துகொள்ள இயலாமல் தாங்கள் ஜனநாயகத்திற்காக வாதிடுவது போன்ற தோற்றத்துடன் ஒரு பாசிசத்தின் மென்மையான மற்றும் சில நேர்ங்களில் வன்மையாகவும் நடந்து கொள்ள ஆதரவு தருகின்றனர். அல்லது அவர்களே
    அப்படி நடந்தும் கொள்கின்றனர். அவர்கள் எந்த எந்த முகாம்களில் இருக்கின்றனரோ அதற்கேற்ப
    தங்களை மாற்றிக் கொள்கின்றனர். மாறிக் கொள்ள முடியாமல் சிலர் ஊசலாடுகின்றனர்.
    அந்த ஊசலாட்டம் பிற்போக்கு முகாமில் அதீத நியாய உரிமையுடன் விவாதிக்க அவர்களை முன்
    தள்ளுகிறது.

    ஒரு செடியின் வளர்ச்சியுடன் இதனை ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம். செடி தன்னுடைய வளர்ச்சியில் சில கணுக்களைப் பெற்றுள்ளது. கணுக்களுக்கிடையிலான வளர்ச்சியும் வீழ்ச்சியும் விதையும் தீர்மானிக்கிறது மண்ணும் தீர்மானிக்கிறது. மண்ணை எவ்வளவுதான வளமாக வைத்திருந்தாலும் விதை சரியானதாக இல்லாத போது விளைச்சல் இருக்காது. மண் சரியாக இல்லாத போது விதை மட்டுமே விளைச்சலை தீர்மானித்து விடாது. நமக்கு கருப்பு பார்ப்பான்தான் கிடைப்பான்.

    இரண்டுமே நன்றாக இருந்தால் நல்ல விளைச்சல் கிடைக்கிறது. விதை சரியாக இல்லாத போது உரம் இட்டு வளர்த்தால் ஆர்வி கிடைக்கலாம். ஆர்வி வளர்ந்த்தற்கு மண் காரணமா அல்லது உரம் காரணமா அல்லது விதை காரணமா என்று எப்போதுமே வரையறுக்க முடியும்தான். அதுவல்ல பிரச்சினை. மாறாக ஒரு விவாத்த்தின் போக்கில் அவரது சொல்லை தீர்மானித்த்து எது என்றும் கூற முடியும். இல்லை என்றால் நிருபிக்க வேண்டியது அவர்தான்.

    ஆனால் மருத்துவர் அவரது சொல்லை அவதானிப்பதில் தவறிழைக்கிறார். அது கணுக்கலுக்கு இடையில்தான் விதையும் வேரும் இருப்பதாக கருதும் அல்லது அதற்கு அருகிலே கனிகளையும் அதற்குள் இருக்கும் விதைகளையும் காண நேர்ந்த்தால் அதுதான தமக்கான நிலம் என்றும் புரிந்து கொள்ளும் ஆர்வி போன்ற நபர்களை அவர்களது தவறான புரிதலான இதனை சுட்டிக்காட்டி அதாவது அங்கிருந்துதான் ஜனநாகத்தை பேச வேண்டும் என்ற அவர்களது புரிதலை சமூகத்தின் உற்பத்திமுறையில் நிலவிய உறவுகளுடன் பொருத்திப் புரிந்து விளக்க வேண்டும். ஜனநாயகம் இன்ன தேதியில் இருந்து உங்களது நாட்டுக்கு, இன்ன தேதியில் நிலசீர்திருத்தம் செய்து நிலபிரபுத்துவத்தை ஒழிப்போம்,.. என உள்ள தேசத்தில் பிற்ப்பெடுக்கும் முதலாளித்துவ ஜனநாயகவாதி மாத்திரம் எப்படி இருப்பான.

    Posted on 20-Nov-09 at 5:24 pm | Permalink
    • இரண்டு முறை படித்துவிட்டேன். உங்களின் வார்த்தைகளில் “பினோ டைப்பா” “சொர்க்கத்தை கண்ட்டைகின்றார்கள்” (எந்த அர்த்தத்தில் சொர்க்கம்!), “கணுக்கலுக்கு” சில வார்த்தைகள் புரியவில்லை. உங்கள் கவனம் ஆர்.வி.க்கானதாக இருக்கிறது என நினைக்கிறேன். சீரியசாக சொல்லிக்கொண்டு பொழுது, “உங்களது நாட்டுக்கு, இன்ன தேதியில் நிலசீர்திருத்தம் செய்து நிலபிரபுத்துவத்தை ஒழிப்போம்,.. என உள்ள தேசத்தில்” என கிண்டலாகவும் (!) எழுதுகிறீர்கள். எல்லோரையும் கணக்கில் கொண்டு பின்னூட்டமிடுங்கள்.

      Posted on 20-Nov-09 at 6:37 pm | Permalink
  53. ஈயம்

    //பகுத்தறிவாளன் என்ன பாலிடெக்னிக் பட்டமா? யார் வேணும்னாலும் சொல்லலாமே! நான் பகுத்தறிகிறேன்.அதனால் பகுத்தறிவாளன் என்று சொல்லிகொள்கிறேன். அதில் உங்களுக்கென்ன வயிற்றெரிச்சல்.//
    பார்ப்பனன் ஆண்ட்வன் தலையிலிருந்து வந்தான் எனவே அவனுக்குத்தான் கல்வி வரும்…சூத்திரன் காலிலிருந்து வந்தான் எனவே அவன் மத்தவனுக்கு அடிமைசெய்யவேண்டும். தலித்து வரவே இல்லை. எனவே அவன் பன்னியோடுத்தான் வாழனும் – என்று நம்பி மற்றவனை ஏமாற்ற வருணாசிரமம் ஒன்றை ஏற்படுத்தை சுகங்கண்ட்வன் பகுத்தறிவைப்பற்றிப் பேச அருகதையில்லாதவன்.

    Posted on 20-Nov-09 at 5:33 pm | Permalink
    • ram

      ////பார்ப்பனன் ஆண்ட்வன் தலையிலிருந்து வந்தான் எனவே அவனுக்குத்தான் கல்வி வரும்…சூத்திரன் காலிலிருந்து வந்தான் எனவே அவன் மத்தவனுக்கு அடிமைசெய்யவேண்டும். தலித்து வரவே இல்லை. எனவே அவன் பன்னியோடுத்தான் வாழனும் – என்று நம்பி மற்றவனை ஏமாற்ற வருணாசிரமம் ஒன்றை ஏற்படுத்தை சுகங்கண்ட்வன் பகுத்தறிவைப்பற்றிப் பேச அருகதையில்லாதவன்.///// நீங்கள் பேசும் தற்கால பிராமணனுக்கே தெரியாத இந்த வர்ணாசைர தர்மமெல்லாம் அதாவது யார் யார் எந்த வாழ்க்கை வாழனும் யார் எங்கே வரக்கூடாது என்பதெல்லாம் இப்போது தி மு க விலும் தி க விலும் தான் இருக்கிறது. அந்த வர்ணாசிரமத்தை தட்டிக்கேட்க உங்களில் யாருக்குமே முதுகெலும்பு கிடையாது.

      Posted on 20-Nov-09 at 6:16 pm | Permalink
      • ரியல் என்கவுண்டர்

        ராமின் கூற்றிலிருந்து கக்கூ’ஸ் கழுவுவது, மலத்தை சுமப்பது, துணி துவைப்பது, முடி வெட்டுவது, ஏரோட்டுவது, செத்த மாட்டை புதைப்பது, செருப்பு தைப்பது, முதலியவற்றை இந்தியாவெங்கும் பார்ப்னர்கள்தான் செய்கிறார்கள். தலித்துகள் சென்னையிலும், டெல்லியிலும், லாஸ் ஏஞ்செல்சிலும் வசதியான நடுத்தரவர்க்கமாக வாழ்க்கையை கழிக்கிறார்கள் போலும். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும் ராம்.

        Posted on 22-Nov-09 at 7:40 pm | Permalink
  54. ஈயம்

    அன்புள்ள இராமா!

    பகுத்தறிவுக்கு ஒவ்வா பலபல விடயங்களை வைதீக இந்து மதம் நம்புகிறது. அம்மதத்தை நம்புவறே பார்ப்பனர்கள் ஆவார். அவர்கள் தங்களை வருணாசிரமத்தின்பட ‘பிராமணாள்’ என்று அழைத்துகொள்கின்றனர். அச்சிரமப்த்தை அவர்களோடு சேர்ந்து நம்புகிறவர்களும் உங்களைப் ‘பிராமணாள்’ என்று அழைக்கின்றனர். ‘\பிள்ளைவாள்’, ‘தேவர்வாள்’, ‘முதலியார்வாள்’, ‘செட்டியார்வாள்’ – இவர்களையெல்லாம் அச்சிரம்த்தின்படி அழைக்கப்படுவதில்லை.

    எனவே, நீங்கள் தான் வைதீக இந்துமத்ததின் பிரதினிதிகள். நீங்கள் சொல்லலாம் – நாங்கள் அதன்படி வாழவைல்லை. உண்மைதான். ஒரு இசுலாமியனோ, கிருத்தவனோ, அம்மதத்தின் சொற்படி கடைபிடித்து வாழ்வதில்லை. அது நம் வாழ்க்கையில் யதார்த்தகரணியங்களால் இயலாமல் போகிறது. இசுலாமியன் 5 வேளை தொழவேண்டும். முடிகிறதா? அதற்காக, அப்படித்தொழாமலிருப்பதே சரியென வாதிடுவானா? அதைப்போலத்தான் நீங்களும். வைதீக இந்துமதத்தின்படி வாழ இயலாமை வேறு. அம்மதத்தை ஏற்றுக்கொள்வது வேறு. இவ்வாறாக, நீங்கள் வருணாசிரமத்தை ஏற்றுக்கொள்கிறீகள். பூணால் உங்களை அக்கொள்கையை ஏற்றவர் என்பதைக்காட்டவே போட்டுக்கொண்டு, பார்ப்பனர் எனத்தங்களை அழைத்துக்கொள்ளாமல், ‘பிராமணாள்’ என அழைத்துகொள்கிறது. இப்படி உண்மையிருக்க், அப்பேச்சைத்திசை திருப்ப, கழகங்களின் உதவியை நீங்கள் நாடுவதை, ‘கோழைத்தனம்’ என்கிறேன்.

    Posted on 20-Nov-09 at 6:27 pm | Permalink
    • ஈயம்,
      பதிவை ஒட்டித்தானே நீங்கள் விவாதிக்கிறீர்கள்! விவாதத்தை திசை திருப்புவதற்கான நோக்கம் கேள்வியை எழுப்புவர்களிடம் இருக்கலாம். நாம் கவனமாய் இருக்கலாமே!

      Posted on 20-Nov-09 at 6:42 pm | Permalink
      • ஈயம்

        பார்ப்பனீயத்தின் ஒரு அடிப்படைக்குணம் தன் குணத்தை மறுத்துக்கொண்டே காத்துக்கொள்ளுதல். அதுதான் இராமரிடம் தென்பட்டது. அதைச் சுட்டிக்காட்டினேன்.

        Posted on 21-Nov-09 at 12:52 pm | Permalink
  55. மதி.இண்டியா

    ஆமாம் , கவனமா திட்டுங்க , வேற யாராவது திட்டி திசைமாத்திட போறாங்க ,

    ருத்ரன் அய்யா , ஜாதியம் உள்ளது உங்களுக்கும் எனக்கும் தெரியும் , உங்கள் தின வாழ்வில் ஜாதியை தூக்கி பிடிப்பவர்களில் எத்தனை பேர் அய்யர்கள் ?

    நிஜமாகவே ஜாதி அராஜகம் செய்யும் மற்ற ஜாதியனர் தங்களை காத்துக் கொள்ள போடும் குண்டுதான் பிராமணியம் , 

    பழைய நூலகளில் உள்ள முட்டாள்தனங்களை ஒருவேளை பின்பற்றினாலும் அதை வெளியில் சொல்ல வெட்கப்படும் இந்துக்களை அளவில்லாமல் தூற்றும் நீங்கள் 

    வெட்கமே இல்லாமல் ஒரே புத்தகமே உலகமென , அத்தனை அடிமைதனங்களுக்கும் அந்த புத்தகமே லைசன்ஸ் என உலக நிம்மதியை காவு கேட்கும் வேறு யாரையும் நீங்கள் கேள்வி கேட்டு நான் பார்க்கவில்லை (ஒரு வேளை உங்க தேவபாசை இங்கிலீசுல எழுதினீங்களோ?)

    உங்க மேல எனக்கு எந்த தனி காழ்ப்பும் இல்லை ,சொல்ல போனால் வினவில்தான் உங்களை முதலில் பிளாகில் பார்த்தேன் , உங்கள் புத்தகங்களுக்கு வாசகனும் கூட ,  

    Posted on 20-Nov-09 at 7:17 pm | Permalink
  56. திருச்சி காரன்

    சாதி பிறப்பினால் உருவாகிறதா என்று, மீண்டும் இப்போது ஆராய்ச்சி தொடங்கி விட்டது.

    //
    பிறப்பால் ஒரு மனிதனின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை என்று ஆர்வி கூறுகிறார். மகிழ்ச்சி. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். இனி மேலே போவோம். வேறு எதனால் சிந்தனை தீர்மானிக்கப்படுகிறது என்று ஆர்வி கருதுகிறார்? சில மனிதர்கள் சில மாதிரி சிந்திப்பதற்கும், வேறு சிலர் வேறு மாதிரி சிந்திப்பதற்கும் என்ன காரணம்? அவர்களது அறிவா, அறியாமையா, நல்லெண்ணமா, விபத்தா, வாழ்நிலையா?//

    ஒரு குழந்தை சிறுவனாக கேட்கும், புரிந்து கொள்ளும் சக்தி பெற்றவன் ஆன நேரத்தில் இருந்து அவன் கேட்கும் கருத்துக்கள், அவன் படிக்கும் புத்தகங்கள், அவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவன் நண்பர்களின் கருத்துக்கள், ஆசிரியர்கள், படிக்கும் இதழ்கள், அவன் பிறந்த இடம், நாடு இவற்றின் அடிப்படியில் ஒரு மனிதனின் சிந்தனைகள் அமைவதாக எண்ணுகிறேன்.

    இந்த தளத்திலேயல்லாமல், இன்னும் பல தளங்களிலும் பலரும் தங்களின் சாதி,மத இன, மொழி வெறியையும், காழ்ப்புணர்ச்சி யையும் கொட்டித் தீர்ப்பதைக் காணும் நேரத்திலே, வெறிக்கும், காழ்ப்புணர்ச்சிக்கும், பிரிவினைக்கும், பிறரை அவமதிப்பதற்கும் காரணமான வெறுப்புக் கருத்துக்களை மாற்றும் வகையிலே


    அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்), சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),கருண ஏவ ச (கருணையுடன் ), நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)”

    அன்பின் அடிப்படையிலான மனிதத்தை முன்னெடுக்கும் கருத்துக்களை கூறி இந்த விவாதத்திலே என் முதல் பதிவை இடுகிறேன்.

    Posted on 20-Nov-09 at 9:36 pm | Permalink
    • ரியல் என்கவுண்டர்

      குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொலை செய்த அன்பின் அடிப்படையிலான அந்த உணர்ச்சியின் பெயர் என்ன திருச்சிக்கார்ரே?

      Posted on 22-Nov-09 at 7:43 pm | Permalink
      • Thiruchchik kaaran

        அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்), சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக), கருண ஏவ ச (கருணையுடன் ), நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)”

        இந்த‌ வார்த்தைக‌ள் ஒப்புக்கு சொல்ல‌ப் ப‌ட்ட‌வை அல்ல‌. உல‌கில் உள்ள‌ எல்லா ம‌க்களையும் இதே க‌ண்ணோட்ட‌த்துட‌ன் தான் பார்க்க‌ வேண்டும் என்ப‌து தெளிவு. ச‌ர்வ‌ பூதான‌ம் மைத்ர‌ என்றால் எல்லா உயிர்க‌ளையும் சினேக‌ பாவ‌த்துட‌ன் என்று பொருளும் கொடுத்து உள்ளோம்‍ இந்துக்க‌ளை ம‌ட்டும் நேசி என்று அர்த்த‌ம் இல்லை.. இசுலாமிய‌ப் பெண்களை ச‌கோத‌ரியாக‌ என்னுகிறோம். அப்பாவி முசுலீம் பாதுகாக்க‌ப் ப‌ட‌வேண்டும், ச‌ம‌ உரிமை, ம‌ரியாதை வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டும்.

        இசுலாமிய‌ர் த‌வ‌று செய்தால், ச‌ட்ட‌த்தின் ப‌டி நேர்மையாக‌ விசாரித்து த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டுமேய‌ல்லாது யாரும் ச‌ட்ட‌த்தைக் கையில் எடுக்க‌க் கூடாது. இசுலாமிய‌ர் உட்ப‌ட‌ எல்லா ம‌த‌த்தின‌ருக்கும் வ‌ழிபாட்டு உரிமைக‌ள் வழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டும். அதே நேர‌ம் ச‌முதாய‌த்துக்கும், ம‌னித‌த்துக்கும் தீங்கு விளைவிக்க‌க் கூடிய‌ க‌ருத்துக்க‌ள் பிற மத‌ங்க‌ளில் இருந்தால் அதை அம்ப‌ல‌ப் ப‌டுத்த‌ த‌ய‌ங்குவ‌தில்லை. இதுவே எம் கோட்பாடு. குசராத்திலே இசுலாமிய‌ருக்கு எதிராக‌ கொலை வ‌ன்முறையில் ஈடு ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு அதிக‌ ப‌ட்ச‌ த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ வேண்டும், கோத்ரா ர‌யில் எரிப்பு செய‌லில் ஈடு ப‌ட்ட‌வ‌ருக்கும் அதிக‌‌ ப‌ட்ச‌ த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ வேண்டும்- இதுவே எம் கோட்பாடு. இந்து ம‌த‌த்தை வ‌ன்முறை, ர‌வுடித்த‌ன‌, சுய‌ன‌ல‌, வாதிக‌ள் கைப்ப‌ற்றுவ‌தை எதிர்க்கிரோம்.

        Posted on 23-Nov-09 at 1:28 am | Permalink
  57. வினவு மேலும் மற்றவர்களுக்கு
    // வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில், நிரூபிப்பதில் பயனில்லை. பிறப்பால் ஒரு மனிதனின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை என்று ஆர்வி கூறுகிறார். மகிழ்ச்சி. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். இனி மேலே போவோம். // என்று வினவு ஆரம்பிக்கிறார்.

    ஏறத்தாழ ஒரு வருஷத்துக்கு முன்னால் இந்த ஜெநோடைப் விஷயம் இந்த தளத்தில் என்னால் பிரஸ்தாபிக்கப்பட்டது. ஒரு வருஷம் கழித்து பிறப்பால் ஒரு மனிதனின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை என்று வினவு குழுவினர் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் “நாங்களும் அதைத்தான் சொல்கிறோம்” என்று சொல்கிறார்கள். எத்தனை நாளாக சொல்கிறார்கள்? இரண்டு நாட்களுக்கு முன் இந்த பதிவில் எழுதியதுதான் முதல் முறையாக “அவர்களும் அதைத்தான் சொல்வது.”

    ஜெநோடைப் என்பது பழக்கத்தில் உள்ள வார்த்தை. Obscure வார்த்தை இல்லை. அடிப்படை அறிவியல் தெரிந்தவர்களுக்கு சர்வ சாதாரணமாக புரியும் வார்த்தை. அகராதிகளில் சுலபமாக பொருள் கண்டு பிடிக்கக்கூடிய வார்த்தை. இணையத்தில் சுலபமாக ஜெநோடைப் என்றால் என்ன கருத்து என்று தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு வார்த்தை பிறப்பு மட்டுமே சம்பந்தப்பட்டது என்று வினவை ஒத்துக்கொள்ள வைக்க எனக்கு ஒரு வருஷம் போராட வேண்டி இருக்கிறது. அவர்கள் கவனிக்காமல் இல்லை – நான் பல முறை கண்டித்திருப்பது அவர்களுக்கு தெளிவாகவே தெரிந்திருக்கிறது. அவர்களுக்கு இதன் சாரம் புரியாமலும் இல்லை. “நாங்களும் அதைத்தான் சொல்கிறோம்” (இரண்டு நாட்களாகத்தான்) என்று எழுதுகிறார். அவர்களுக்கு இதன் significance புரியாமலும் இல்லை. ராசாத்தி என்பவர் “ரத்தத்தில் ஊறிய விஷயம்” என்பது தவறான சொல்லாட்சி என்று சமீபத்தில் சுட்டிக் காட்டியபோது உடனே சுய விமரிசனம் செய்து திருத்தியும் கொண்டார்கள். இத்தனைக்கும் “ரத்தத்தில் ஊறிய விஷயம்” ஒரு idiom. ஜெநோடைப் அப்படி இல்லை.

    அற்ப விஷயம், உங்களுக்கு தெளிவாக தெரிந்த விஷயம், எளிதில் நிரூபிக்கக் கூடிய விஷயத்தைப் பற்றி ஒரு வருஷம் விதண்டாவாதம் புரிதிருக்கிரீர்கள். ஜெநோடைப் விஷயத்துக்கு எத்தனையோ மறுமொழி எழுதி இருக்கிறீர்கள். இதற்கு முன் ஒரு முறை கூட பிறப்பு சிந்தனையை தீர்மானிக்கவில்லை என்று சொன்னதில்லை. முதல் முறை நான் இதைப் பற்றி எழுதியபோது நீங்கள் பிறப்பு சிந்தனையை தீர்மானிக்கவில்லை என்று நீங்கள் உணரவில்லையா? இல்லை நிச்சயமாக உணர்ந்திருக்கிறீர்கள். ஆனாலும் விதண்டாவாதம். இது என் நேரத்தை அனாவசியமாக வீணடிப்பது இல்லையா?

    அற்ப விஷயத்துக்கு இவ்வளவு போராட்டம் என்றால்; உங்களுக்கும் தெளிவாக தெரிந்த, நான் சொல்வதோடு உங்களுக்கும் இசைவு இருக்கிற கருத்தை உங்களை வெளிப்படையாக ஒத்துக் கொள்ள செய்ய இவ்வளவு போராட்டம் என்றால், என்ன நம்பிக்கையில் உங்களுடன் விவாதிப்பது? மாற்றுக் கருத்துகளை காது கொடுத்து கேட்கும் பழக்கம் உங்களுக்கு இல்லை. நான் சொல்வதே சரி, என் கருத்தியலே சரி, எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஒற்றைப்படைத்தன்மை, சர்வாதிகார மனப்பான்மை, உண்மையில் பாசிச மனப்பான்மையே உங்கள் அலட்சியமான “மேலே போவோம்” கமென்ட்டில் தெரிகிறது.

    என் நேரம் வீணாவது பற்றி உங்களுக்கு எந்த வித அக்கறையும் இல்லாமல் இருக்கலாம். எனக்கும் அப்படி இருக்க முடியாது இல்லையா? விவாதம் செய்ய சில அடிப்படை புள்ளிகளில் இசைவு இருப்பது மிக அவசியம். அடுத்தவர் மீது basic courtesy, அவர் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று கொஞ்சம் அக்கறை, வார்த்தைகளின் பொருள் பற்றிய இசைவு ஆகியவை இல்லாவிட்டால் விவாதிப்பவன் முட்டாள் ஆகிவிடுகிறான். அது உங்களிடம் இல்லை. நாளை யாராவது சூரியன் மேற்கே உதிக்கிறான் என்று எழுதுவார்கள், நீங்கள் அதற்கு மேற்கு என்றால் கிழக்கு என்று புரிந்து கொள்ள சொல்வீர்கள், நான் அகராதிகளிலிருந்து பொருள் எடுத்துக் கொடுத்தால் மணி மாதிரி யாராவது நான் உண்மைகளைத் திரிக்கிறேன் என்பார்கள், கிழக்கை கிழக்கு என்று சொல்வது பார்ப்பனீய சதி என்று நாலு பேரு வரிந்து கட்டிக்கொண்டு எழுதுவார்கள், பிறகு ஒரு வருஷம் கழித்து நாங்களும் ஆர்வி சொன்னதையேதான் சொல்கிறோம், மேலே போவோம் என்று நீங்கள் விவாதத்துக்கு அழைப்பீர்கள். மன்னிக்கவும், என் நேரம் எனக்கு அவ்வளவு துச்ச்சமானது இல்லை.

    நாலைந்து நாட்களுக்கு முன்தான் இனியும் இங்கே என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று.எழுதி இருந்தேன். என் எண்ணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. இந்தப் பதிவை இன்று காலைதான் பார்த்தேன். பதில் எழுதுவோமா வேண்டாமா என்று கொஞ்சம் யோசித்தேன். பிறகு நான் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்பதை மிக தெளிவாக, வெளிப்படையாக சொல்லிவிட மட்டுமே இதை எழுதுகிறேன்.

    இரண்டு பின் குறிப்புகள்:
    1. டாக்டர் ருத்ரனை மன நோயாளி என்று மதி இந்தியா எழுதி இருந்தார். மதி இந்தியா, உங்களுக்கு என் மீது ஏதாவது கொஞ்சம் மரியாதை உண்டென்றால் இப்படி இனி மேல் எழுதாதீர்கள்.
    2. நான் இந்த தளத்தில் ஒரே ஒருவரை மட்டும்தான் பர்சனலாக கேள்வி கேட்டிருக்கிறேன். பெண்களுக்கு முன்னோர்கள் இழைத்த அநீதிக்கு மணி எங்கே மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்று. மணி அதைப் பற்றி எழுதிவிட்டேன் என்று சொன்னார். தேடித் பார்த்தேன் தென்படவில்லை. மணி, சுட்டியோ இல்லை கொஞ்சம் எளிமையாக ஒரு மறுமொழியோ தர முடியுமா?

    Posted on 21-Nov-09 at 12:54 pm | Permalink
    • கேள்விக்குறி

      ஆர்.வி, உங்களால் விவாதிக்க முடியாமல் போகலாம் அதற்காக பொய் செல்லக்கூடாது. கடந்த ஒரு வருடமாக நீங்கள் வினவு தளத்தில் ஜினோடைப்பை பற்றி மட்டும் தான் விவாதித்திருக்கின்றீர்களா? அது பொய்யில்லையா? இந்த மாதம் எழுதிய ஒரு பதிவில் கூட கடந்த வருடம் நடந்த அந்த ஜினோடைப் பிரச்சனையை மறக்காமல் குறிப்பிட்டிருந்த காரணத்தால் இந்த பதிவு எழுதப்பட்டதாகவே நான் கருதுகிறேன். நீங்கள் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு அப்பட்டமாக கூச்சமே இல்லாமல் பொய் ்சொல்கிறீர்கள்

      இரண்டாவது, உங்களின் முந்தயை ஒரு பதிவின் பின்னூட்டத்தின் படியே வினவு ஜினோடைப்பை பற்றி ்பேசினால் வளர்ப்பு என்று தவறான விளக்கம் கொடுப்பதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு தெரிந்து இந்த ‘வளர்ப்பு’ பற்றிய பிரச்சனையை அவர்கள் சொல்லி ஒரு வருடம் ஆயிற்று ஆனாலும் அவர்கள் ஒரு வருடம் கழித்துதான் அதை சொல்கிறார்கள் என்று மீண்டும் பொய்.

      மூன்றாவது , இந்த ஜீனோடைப் பிரச்சனையை இங்கே எழுப்பியது யார்? நீங்கள்.
      ருத்ரனின் தளத்தில் நடந்த விவாத்தை ஒட்டி அவர் உங்களை செய்த விமரிசனத்தை இங்கே பஞ்சாயத்துக்கு கொண்டுவந்த்து நீங்கள். நீங்களாக ஒரு பிரச்சனையை விவாதத்துக்கு கொண்டு வந்து அதில் வினவுக்கு கருத்து மாற்றம் ஏற்ப்ட வேண்டும் என்று ஒரு வருடமாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சம்பந்தமே இல்லாத இடங்களில் கூட விவாதித்துவிட்டு. இறுதியாக வினவுக்கு நேர்மையில்லை என்று சொல்லிவிட்டு…. சரி வாங்க ஆர்.வி. என்னான்னு பேசலாம் என்று அழைக்கும் போது வினவு உங்கள் நேரத்தை வீண்டித்ததாக சொல்வது அடி முட்டாள்தனம் மட்டுமல்ல அயோக்கியத்தனமாதும் கூட

      நான்கா்வது – மேலே போவோம் என்பதை பற்றியது…. உங்கள் பிரச்சனை மேலோ போவாம் என்ற வார்த்தையில் அல்ல மாறாக ‘மேலே’ போவதிலேயே உள்ளது. அதாவது இந்த பதிவு வைக்கும் மையமான கேள்விகை எதிர்கொள்ளும் துணிவோ நேர்மையோ கொஞ்சம் கூட உங்களிடம் இல்லை. அது தெரியக்கூடாது என்ப்தற்காக சர்வாதிகார வெங்காய வியாக்கியானம். எனக்கு தெரிந்து ”ஏன் துணி எனக்கு வேணும்” எனும் கோமாளி ரசினி காந்தை விட மோசமாக சொன்தை சொல்லும் கிளிப்பிள்ளயாக நீங்கள் இங்கே வந்து ஜல்லியடித்ததும் அதை பல தோழர்கள் பல வழிகளில் உங்களுக்கு புரியவைக்க முயற்சித்த டையநோசரை சோற்றில் ்மறைக்க உங்களுக்கு எப்படித்தான் முடிகின்றதோ. வேறு வார்த்தைகளில் சொன்னால் ஆர்வி அவர் கருத்தை மாற்றாமல் இருந்தால் அது ஜனநாயகம், வினவு சரி ஆர்வி, நீங்க உங்க கருத்த வச்சுகங்க நாம அடுத்த விசயத்துக்கு போவோம் என்றால் அது சர்வாதிகாரம்

      ஐந்தாவது அதி முக்கியமான நேரம் பற்றிய பிரச்சனை – நொண்டி சாக்கு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இந்த சாக்கின் முன் நொண்டியென வாதம்கூட வெட்கப்படும். அடுத்தவர்களின் நேரத்தை பற்றி பாடம் போதிக்கும் நீங்கள் இங்கே வந்து என்ன பிரவுசரிடமும், கிராவதாரிடமா விவாதித்து வந்தீர்கள். உங்களிடம் விவாதித்தவர்கள் மனிதர்கள் இல்லையா? வினவு உங்களிடம் விவாதித்த்தை விட பல மடங்கு அதிகமாக மற்றவர்கள் விவாதித்து இருக்கின்றார்கள். அவர்க்ளெல்லாம் நேரத்தையென்ன தயார் செய்தா வருகின்றனர்.உங்களுக்கு இருப்பதுதானே அவர்களுக்கும், பிடித்த ்கழு்தைக்கு 3 கால் என்று பேசிக்கொண்டிருக்கும் உங்களிடம் விவாதிப்பது நேர விரயம் என்று அவர்கள் கருதவில்லை. ஆனால் ஒற்றை வரியில் அவர்்கள் அனைவரையும் அவமானப்படுத்தி ஏளனம் செய்து விட்டீர்கள், இது எப்படிப்பட்ட குணம். உங்களின் மட்டுமல்ல எங்களின் நேரத்தையும் மிச்சப்படுத்தும்ம்முகமாவே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதை ஏற்கும் துணிவு உங்களிடம் இல்லை

      இதுநாள் வரை உங்களிடம் வெளிப்பட்ட குணங்கள்தான் உங்களுடைய பதில்களிலேயே அடிமுட்டாள்தனமான இந்த பதிலிலும் வெளிப்பட்டுள்ளது

      1) பதிவின் பொருளுக்கு சம்பந்தமேயில்லாமல் வேறொரு விசயத்தை பற்றி விவாதிப்பது

      2) பதிவின் மையமான விசயங்களை பற்றி கருத்தே கூறாமல் வார்த்தைகளை பிடித்து தொங்குவது

      3) ஒரு முன்முடிவுடனேயே விவாதத்தை அனுகி அதையே விவாதத்தின் மையப்பொருளாக மீண்டும் மீண்டும் விவாதித்துக்கொண்டிருப்பது

      4) நம்ப முடியாத கற்பனைவளமற்ற அறிவியலற்ற அறிவற்ற குற்றச்சாட்டுகள்

      5) ஒவ்வொரு முறையும் தீர்கமாக உங்கள் பக்கம் தோற்கும் அல்லது நீங்கள் கருத்தை மாற்ற வேண்டும் என்ற கட்டாயம் வரும் போதெல்லாம் மேற்கூறிய அனைத்தையும் செய்வது

      டோண்டு ராகவன் உள்ளிட்ட பார்ப்னிய அடிவருடிகள் உங்களை இங்கே விவாதிக்க வேண்டாம் என்றனர் அதை கேட்டிருக்கலாம் இங்கே வந்து இப்படிப்பட்த பதில் எழுதி உங்களை நீங்கள் அம்பலப்டுத்திக்கொண்டதற்கு நன்றி சொல்வதா இல்லை இத்தனை நாளும் உங்களைப்போன்ற ஒரு டுபாக்கூரிடம் விவாதித்த முட்டாள்தனத்தை எண்ணி நாங்களெல்லாம் வருத்தப்படுவதா??

      நாங்கள் இதை கடந்து சென்று விடுவோம். உங்களைப்போல சிந்தனைததள்த்தில் ஒருவராகவும் நடைமுறையில் வேறொருவராகவும் இருக்கும் ”வாய்ப்பை” பெற்றவர்களலல்ல நாங்கள். மக்களிடையே பணி செய்பவர்கள். அவர்களுடன் இது போன்ற விவாதங்கள் செய்துதான் பார்ப்பனியத்தையே சாதியையோ உணர்த்த வேண்டும் என்பது இல்லை. இது உங்களைப்போன்ற ‘வீழ்ச்சியடையும்’ சலுகைபெற்ற ஒரு சிறு பிரிவின் சாபக்கேடு. சில மணி நேரங்களைல்ல வாழ்க்கை முழுவதும் கூட செலவழித்தும் உங்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை மட்டுமல் எந்த ஒரு சமூக பிரச்சனைகளையும் உணர முடியாது. அதுதான் ஏன் என்று இந்த கட்டுரை கேட்கிறது? ”நேரமிருந்தால்” யோசித்து பாருங்கள். கட்டாயமில்லை! கழுதையெல்லாம் யோசித்து பார்த்தா பொதி சுமக்கிறது?????

      Posted on 21-Nov-09 at 2:38 pm | Permalink
      • பொறுக்க முடியாமல்தான் இதை எழுதுகிறேன். // ஆர்.வி, உங்களால் விவாதிக்க முடியாமல் போகலாம் அதற்காக பொய் செல்லக்கூடாது. கடந்த ஒரு வருடமாக நீங்கள் வினவு தளத்தில் ஜினோடைப்பை பற்றி மட்டும் தான் விவாதித்திருக்கின்றீர்களா? அது பொய்யில்லையா? இந்த மாதம் எழுதிய ஒரு பதிவில் கூட கடந்த வருடம் நடந்த அந்த ஜினோடைப் பிரச்சனையை மறக்காமல் குறிப்பிட்டிருந்த காரணத்தால் இந்த பதிவு எழுதப்பட்டதாகவே நான் கருதுகிறேன். நீங்கள் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு அப்பட்டமாக கூச்சமே இல்லாமல் பொய் ்சொல்கிறீர்கள் // ஒரு வருஷம் என்பது நீங்களே இந்த பதிவிற்கான வேறு ஒரு மறுமொழியில் சொன்னது. பல முறை இதைப் பற்றி பேசி இருக்கிறேன் என்பது வினவு சொன்னது. “ஜினோடைப்பை பற்றி மட்டும் தான் விவாதித்திருக்கின்றேன்” என்று யார் சொன்னது? நானா? நீங்களா? எங்கே ஒரு இடத்தில் இதை மட்டும்தான் விவாதிருக்கிறேன் என்று நான் சொல்லியதை காண்பியுங்கள் பார்ப்போம்! ஒரு வருஷத்தில் பல முறை இதை பேசி இருக்கிறேன் என்பதை நான் சொல்லவில்லை, நீங்கலும் வினவுமேதான் சொல்லுகிறீர்கள். பல முறை என்பதற்கும் “மட்டும்தான்” என்பதற்கும் வித்தியாசம் தெரியாத முட்டாளிடம் என்னத்தை பேசுவது? ஒன்று neengaL பெரிய முட்டாள், இல்லை நீங்கள் பெரிய பொய்யர். இது போன்ற பொய்கள், மிகைப்படுத்துதல், விதண்டாவாதம் செய்யும் முட்டாள்கள்/பொய்யர்களிடம் பேசத்தான் எனக்கு நேரமில்லை. கொஞ்சாமாவது மனசாட்சி என்று ஒன்று இருந்தால் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். அனேகமாக ஒரு வருஷம் கழித்து ஆர்வி அப்படி சொல்லவில்லை என்பது உண்மைதான், நாங்களும் அதையேதான் சொல்லுகிறோம், மேலே போகலாம், ஏனென்றால் இது முக்கியம் இல்லை, லொட்டு லொசுக்கு என்று ஒருவர் எழுதுவார் அது வரையில் நான் மீண்டும் மீண்டும் இந்த பிரச்சினையை இங்கே கிளப்பி போராட வேண்டும். அப்புறம் அய்யா நீங்கள் எத்தகைய ஜனநாயகவாதி, மாற்று கருத்துகளை ஆரோக்யமான முறையில் சந்திக்கிறீர்கள் என்று பேச வேண்டும்! நல்ல விவாத முறை!

        Posted on 21-Nov-09 at 3:55 pm | Permalink
        • கேள்விக்குறி

          யார் ்பொய் சொல்வது ஆர்.வி…

          @@@ஒரு வருஷத்தில் பல முறை இதை பேசி இருக்கிறேன் என்பதை நான் சொல்லவில்லை, நீங்கலும் வினவுமேதான் சொல்லுகிறீர்கள். பல முறை என்பதற்கும் “மட்டும்தான்” என்பதற்கும் வித்தியாசம் தெரியாத முட்டாளிடம் என்னத்தை பேசுவது? @@@

          உங்களது இன்றைய பின்னூட்த்திலிருந்து

          1) ஏறத்தாழ ஒரு வருஷத்துக்கு முன்னால் இந்த ஜெநோடைப் விஷயம் இந்த தளத்தில் என்னால் பிரஸ்தாபிக்கப்பட்டது. ஒரு வருஷம் கழித்து பிறப்பால் ஒரு மனிதனின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை என்று வினவு குழுவினர் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

          2) அற்ப விஷயம், உங்களுக்கு தெளிவாக தெரிந்த விஷயம், எளிதில் நிரூபிக்கக் கூடிய விஷயத்தைப் பற்றி ஒரு வருஷம் விதண்டாவாதம் புரிதிருக்கிரீர்கள்.

          இதிலிருந்து தெரிவது

          1) குறைந்த பட்சம் இரண்டு முறை ஒரு வருடம் என்று நீங்கள் செல்லியிருக்கிறீர்கள்

          2) நேரடியாக இதை மட்டும் தான் விவாதித்த்தாக நீங்கள் செல்லவில்லை ஆனால் ஒரு வருஷம் இது தொடர்பாக வினவு உங்களோடு விதண்டாவாதம் செய்ததாக சொல்கிறீர்கள்

          மேலும் ஒரு வருடமாக வினவின் இந்த போக்கினால் உங்களுடையை நேரம் கடுமையாக விரயமானதாக பல முறை உங்கள் பின்னூட்டத்தில் சொல்கிறீர்கள்.

          வினவு ஒரு வருடம் என்ற நேரக்கணக்கை பிராதான்மாக வைத்து எழுதவில்லை. ஆனால் அதற்கு பதிலளிக்கையில் உங்கள் பதிதே கால விரயத்தை சுற்றியிருக்கிறது. ஆக ஒரு வருடமாக வினவிடம் இதை மட்டும் விவாதித்ததை போல கட்டமைக்கபட்டிருப்பது உங்கள் பதில்தான்

          நான் அது தவறு. பொய் என்று மறுக்கிறேன். அதாவது உண்மையை சொல்லியிருக்கிறேன்.
          அவ்வளவே.

          தவிர நான் அதை மட்டும் சொல்வில்லை அதன் பின்னர் பல வரி்களை எழுதியிருக்கிறேன் ஆனால் நீங்கள் வழக்கம் போல முதல் வரியை பிடித்துக்கொண்டு பதலிளிக்கின்றீர்கள். இதற்கு நான் பதி்லெழுவது எனக்கு நேரவிரயாமா என்று தெரியவில்லை… ஆனாலும் நீங்கள் விவாதத்துக்கு வந்து கலந்து கொண்டதை மதிக்கின்றகாரணத்ால் எழுதுகிறேன்.

          Posted on 21-Nov-09 at 4:28 pm | Permalink
        • கேள்விக்குறி

          ஆர்வியின் அயோக்கியத்தனம் அல்லது ஒரு அரைக்கிழத்தின் ஞாபகமறதி ..ஆதாரங்கள்

          இங்கே திருவாளர் ஆர்.வி அவர்கள் வினவு என்னவோ ஒரு வருடமாக விதண்டாவாதம் செய்து அவரது நேரத்தை வீண்டித்துவிட்டதாகவும் மிகவும் தாஆஆஆஆஆஆஆமதமாக தங்கள் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியதாகவும் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்….

          இதில் துளிக்கூட உண்மையில்லை

          இதோ ஆதாரம் …

          ஆர்.வி வினவு தளத்தில் ஜீனோடைப் பிரச்சனையை விவாதத்துக்கு கொண்டு வந்தது இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம் என்ற கட்டுரையில். http://www.vinavu.com/2009/03/18/ramsena/ அதற்கு முன்னர் அவர் இங்கே பொறி பறக்க விவாதித்த பிரச்சனை வக்கீல்கள் போராட்டம் – சுப்பிரமணிய சாமியின் கருத்துரிமை பற்றியது

          ஜீனோடைப்புக்கு வருவோம்,,,

          கீழே காணும் இந்த ்பின்னூட்டத்தை இடுகிறார்
          March 18
          http://www.vinavu.com/2009/03/18/ramsena/#comment-4184

          இதனை தொடர்ந்து மருத்துவர் ருத்ரன் விளக்கமளிக்க

          http://www.vinavu.com/2009/03/18/ramsena/#comment-4239

          அவர்கள் விவாதம் ஒரு புறம் போய்க்கொண்டிருக்கிறது…

          இடையில் வினவு இப்படி ஒரு பின்னூட்டத்தை எழுதுகிறது – March 19 2009
          http://www.vinavu.com/2009/03/18/ramsena/#comment-4249

          RV
          ஒருவன் பிறப்பதினாலேயே பிராமனனாக அவதரிப்பதில்லை. ஆனால் ஒரு பிராமனக் குடும்பத்தில் பிறக்கும் ஒரு குழந்தை பார்ப்பனிய மதிப்பீடுகளுடன்தான் வளரும் என்பது மிக மிக எளிய உண்மை. இந்த LKG சமாச்சாரத்திற்காக டாக்டர்.ருத்ரனை வம்புக்கிழுப்பதும், மெரியம் வெப்ஸ்டரை தேடுவதும் தமாசாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது
          நட்புடன்
          வினவு

          வினவின் இந்த நிலைப்பாட்டை பாராட்டி ஆர்.வி.
          இப்படி எழுதுகிறார் – March -19
          http://www.vinavu.com/2009/03/18/ramsena/#comment-4260

          // ஒருவன் பிறப்பதினாலேயே பிராமனனாக அவதரிப்பதில்லை. ஆனால் ஒரு பிராமனக் குடும்பத்தில் பிறக்கும் ஒரு குழந்தை பார்ப்பனிய மதிப்பீடுகளுடன்தான் வளரும் என்பது மிக மிக எளிய உண்மை. இந்த LKG சமாச்சாரத்திற்காக டாக்டர்.ருத்ரனை வம்புக்கிழுப்பதும், மெரியம் வெப்ஸ்டரை தேடுவதும் தமாசாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது //
          எளிய உண்மை புரிகிறது. வளர்ந்த சூழ்நிலை உங்கள் மதிப்பீடுகளை நிர்ணயித்துவிட்டது என்று பேசினால் அவரிடம் வாதிக்கலாம். ஆனால் Genotype எங்கிருந்து வந்தது? முடிந்தால் டாக்டரிடம் கேட்டு சொல்லுங்கள். இது அவரை வம்புக்கிழுப்பது இல்லை. வயதிலும் அனுபவத்திலும் பெரியவர் இப்படி கீழ்த்தரமாக பேசுகிறாரே என்ற வேதனை.

          ஆக இந்த பிரச்சனை மார்ச் 18 2009 அன்று ஆர்வியால் எழுப்பப்பட்டு மார்ச் 19 அன்று வினவு தனது கருத்தை தெளிவுபடுத்திய பின் அதே மார்ச் 19 அன்று ஆர்.வி வினவை பாராட்டி விட்டார். அதாவது வினவின் நிலைப்பாட்டை ஒரே நாளில் அறிந்து கொண்டார்.

          இப்படி நடந்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை ஆர்.வி அவர்கள் எப்படி திரித்து எழுதியிருக்கிறார் என்று நீங்களே பாருங்கள். இது ஒன்று பச்சை அயோக்கியத்தனம் அல்லது ஒரு அரைக் கிழத்தின் ஞாபக மறதி. இதில் எது என்பதற்கு ஆர்.வி. நேர்மையாக பதில் சொல்லியே ஆகவேண்டும்…
          அவரின் அவதூறுகளுக்கு விளக்கமளித்தே தீரவேண்டும்

          இது அத்தனையும் அறிந்த வினவு வாருங்கள் ஆர்.வி மேலே போகலாம் என்று அன்போடு அழைத்திருக்கிறது
          போகலாமா ஆர்வி????

          Posted on 21-Nov-09 at 5:15 pm | Permalink
        • ஆர்.வியின் பதில் அயர்ச்சியை தருகிறது. மேலே செல்லலாம் என்பதற்கு… தெளிவாக (!) பதில் சொல்லாமலே போய்விட்டார். அவருக்கு நிறைய சொந்த வேலைகள் இருக்கிறது. அவருடைய நேரம் மகத்தானது! நமக்கு நிறைய பொது வேலைகள் இருக்கின்றன. நாம் மேலே முன்னேறலாம்.

          Posted on 21-Nov-09 at 5:48 pm | Permalink
        • காளமேகம்

          ஆர்.வி அண்ணாச்சி நீங்க வார்த்தைகள பிடிச்சுக்கிட்டு தொங்குதையே தாங்க முடியல, இப்போ அபாண்டமா பொய்யெல்லாம் வேற சொல்ல ஆரம்பிச்சிருக்கீக, வினவுக்காரவுகளோட நண்பர்கள், எதிரிங்க எல்லாம் அடிச்சிண்டு சாவட்டும்னு உங்க ஃபிரண்ட் டோண்டு எழுதுன பதிவுக்கு நன்றி சொன்னீக. இங்க வினவுக்ககாரவ்வுகள சர்வாதிகாரம்னு தூத்துதீக. ஆனாலும் தம்பி கேள்விக்குறி உங்கள கையும் களவுமா பிடிச்சு வீசியிருச்சு. அப்பவும் மீசையில மண்ணு ஒட்டலேலான்னுதான் சொல்லுவீக. பாப்பார ஆளுங்க வரலாத்த திரிப்பாங்கன்னு பெரியவுக சொல்லுவாக. அதை ஆர்வியும் நீரூபிச்சுப்புட்டாரு. ஆர்.வி அண்ணாச்சியோட பொய் வரலாற்ற கண்டுபிடிச்ச தம்பி கேள்விக்குறிக்கு இன்னொரு உம்மா தாராளமா தரலாம்லா?

          Posted on 21-Nov-09 at 6:08 pm | Permalink
        • என்ன தலைவலி அய்யா! டோண்டு சொல்வது போல பொய் மேல் பொய் பேசி provoke செய்து கொண்டே இருக்கிறீர்கள்!

          கேள்விக்குறி என் மேல் இரண்டு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.

          1. நான் இதை பிரஸ்தாபித்தது மார்ச் மாதத்தில், எட்டு மாதங்கள்தான் ஆகி இருக்கின்றன, ஒரு வருஷம் இல்லை.
          கேள்விக்குறியேதான் இதே பதிவில் வேறொரு மறுமொழியில் ஒரு வருஷத்துக்கு முன் இதைப் பற்றி நான் பேசியதாக சொன்னார். என்னை நம்பாதவர்கள் தேடித் பார்த்துக் கொள்ளலாம். இது தகவல் பிழைதான். கேள்விக்குறி தந்த தகவலை நான் டபிள்செக் செய்திருக்க வேண்டும். அவர் முட்டாள்/பொய்யர் என்று அப்போது உணராத நான் அவர் சரியாகத்தான் சொல்லி இருப்பார் என்று தவறாக நினைத்துவிட்டேன். எந்த பதிவில் இதைப் பற்றி பிரஸ்தாபித்தேன் என்று நினைவில்லாததால் தேட முடியவில்லை. ஆனால் என் வார்த்தைகளுக்கு, என் தகவல் பிழைக்கு நானே பொறுப்பு, எனக்கு தகவல் கொடுத்தவர் திட்டமிட்டு சதியே செய்திருந்தாலும் பொறுப்பு என்னுடையதுதான்.
          எட்டு மாதம் என்றாலும் ஒரு வருஷம் என்றாலும் இங்கே இனி மேல் எதையும் விவாதிக்க விரும்பவில்லை, வினவு தன விதண்டாவாதத்தால் அடுத்தவர்களின் நேரத்தை விரயம் செய்கிறார் என்ற நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

          2. வினவு ஜெநோடைப் பற்றி விளக்கியதை நான் paarattinen (!!) இப்போது அதை திரித்து பேசுகிறேன்.
          கேள்விக்குறி மிக சவுகரியமகா நான் எழுதிய மறுமொழியின் கடைசி வரியை விட்டுவிடுகிறார். கடைசி வரி – நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள், இந்த ஜெநோடைப் கருத்து தவறு என்று யாருக்கும் தோன்றவே இல்லையா? இதுதான் கேள்விக்குறியின் கண்ணில் வினவைப் பாராட்டுவது, அவர் நிலையை ஏற்றுக் கொள்வது. கேள்விக்குறி, உங்களைப் போல நண்பர்கள் இருந்தால் போதும் வினாவுக்கு வேறு எதிரிகளே தேவை இல்லை. இந்த லட்சணத்தில் இதற்கு அரை வேக்காட்டுத்தனமாக ஜால்ரா அடிக்க காளமேகம் மாதிரி சில பேர் வேறு. கேள்விக்குறி, ஆர்விதான் இங்கு நேர விரயம் செய்வதில்லை என்று சொல்லி ஆயிற்றே, என்ன வேண்டுமானாலும் உதார் விடலாம், திரிக்கலாம், மிகைப் படுத்தலாம், பொய் சொல்லலாம் என்று கிளம்பி இருக்கிறீர்கள். போன முறை மட்டும்தான் என்று எழுதினீர்கள். நான் எங்கே காட்டுயா என்றால் இல்லை அப்படி எழுதவில்லைதான், ஆனால் நீ சொல்வது பொய் என்று அடித்து விடுகிறீர்கள். இப்போது மிக கச்சிதமாக கடைசி வரியை கட் செய்துவிட்டு என் மறுமொழியை பேஸ்ட் செய்துவிட்டு நான் பாராட்டினேன் என்று எழுதுகிறீர்கள். வினாவுக்கு சரியான கோயபல்ஸ் வந்து வாய்த்திருக்கிரீர்கள்!

          அவர் இங்கே கொடுத்திருக்கும் வரிகளில் கூட கண்ணில் எண்ணெய் விட்டுப் பார்க்கிறேன், எங்கே பாராட்டு என்று தெரியவில்லை. நீங்கள் எளிய உண்மை என்று சொல்வது புரிகிறது, ஆனால் அந்த எளிய உண்மையில் ஜெநோடைப் எங்கிருந்து வந்தது என்று கேட்பது வினவின் நிலையை நான் பாராட்டுவதா? ஏற்றுக் கொண்டதா? அய்யா ஜெநோடைப்புக்கு புது விளக்கம் கொடுக்காதீர், ஜெநோடைப் என்றால் வளர்ப்பு இல்லை, அவர் வளர்ப்பு என்று சொல்லவில்லை, ஜெநோடைப் என்றால் பிறப்பு, டாக்டர் ருத்ரன் சொல்வது கீழ்த்தரமான கருத்து, நீங்களும் ஜெநோடைப்பை வளர்ப்பு என்று தவறாக விளக்காதீர்கள் என்று சாதாரண வார்த்தைகளிதானே எழுதி இருக்கிறேன்? என்ன கொடுமைடா சாமி! கேள்விக்குறிக்கு தடித்த வார்த்தைகள் மட்டுமே புரிகிறது. என்ன செய்வது, ஒரு காலத்தில் எல்லாருக்கும் benefit of doubt கொடுத்திருந்தேன், தடித்த வார்த்தைகளை கூடுமான வரையில் தவிர்த்து வந்தேன். அதுவும் வினவின் நேர்மையில் நம்பிக்கை இருந்த காலம்.

          டோண்டுவிடம் எனக்கு பல வேறுபாடுகள் உண்டு. ஆனால் பெரியவருக்கு உலகம் தெரிந்திருக்கிறது, எனக்குதான் தெரியவில்லை. முட்டாள்களிடம் பேசுவது வீண்.

          Posted on 22-Nov-09 at 12:56 pm | Permalink
        • கேள்விக்குறி

          இதற்கு எனது பதில் கீழே நம்பர் 81 http://www.vinavu.com/2009/11/19/parpaniyam-rv-genotype/#comment-13025

          Posted on 22-Nov-09 at 5:02 pm | Permalink
        • ரியல் என்கவுண்டர்

          ஆர்.வி, வினவு பல மாதங்களுக்கு முன்னரே ஜெனோடைப் பற்றி தெளிவாக, சரியாக கருத்து சொல்லியும் அதை தோழர் கேள்விக்குறி நிரூபித்த பிறகும் உங்களிடம் நேர்மையில்லை . காரணம் உங்களின் இலக்கு ஏற்றத்தாழ்வான இந்த பார்ப்பன சாதிய அமைப்பை அழிக்கவேண்டுமென்பதல்ல, பிறப்பால் உள்ள பார்ப்பனர்களின் பெருமைகளை காப்பாற்றுவதே உங்கள் நோக்கம். அதனால்தான் இந்த இடுகையின் மையமான எந்த கேள்விக்கும் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை. அப்படி பதில் சொல்ல முயன்றால் உங்களின் அநீதி உங்களுக்கே தெரியுமென்பதால் நீங்கள் அதை விரும்பவில்லை போலும்.

          Posted on 22-Nov-09 at 8:21 pm | Permalink
  58. ஈயம்

    //அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்), சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),கருண ஏவ ச (கருணையுடன் ), நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)”/./

    இக்குண்ங்கள் தமக்கே இருப்பதாக வெளிப்புறத்தோற்றங்களை தனக்கெனவே சிறப்பாக அமைத்து, எழுதி, பிறரை நமப் வைத்து மோசடி செய்தது பார்ப்பனீயம் என்பது அரக்க பரக்க சொல்லப்ப்டும் கருத்து. இங்கு பிறப்பினாலா, வள்ர்ப்பினாலா என்ற கேள்விக்கு இடமில்லை. இங்கு, ‘தற்போது நாங்கள் அம்மோசடி செய்யவில்லை’ என்றும் சொல்லமுடியாது. ‘பிறப்பிலால் இல்லை’ என வாதிடும் ஆர் வி, பூணூல் பார்ப்பனரின் பிறப்புரிமை என்கிறார். தமிழகத்தில் ‘கோயில் பூசாரியாக கருவறையில் பிராமணரே நுழைய முடியும், மற்றவ்ரென்றால் தீட்டு’ என்று சொல்வதிலும் செய்வதிலும் பிறரை நம்ப வைப்பதிலும், தமிழுக்கு இறைவனின் காதிற்குச்சென்றடையும் தகுதியில்லை என புறம்பேசுவதிலும், இன்னும், இப்பொழுதும், இம்மோசடி தொடர்கிறது. பார்ப்பனீயம் எனப்து இம்மோசடிகளில் அடிப்படையில் அமைகிறது. கேள்வி: இம்மோசடி செய்தல் ஜெனோடைப்பில் வருமா என்பதுவே.

    Posted on 21-Nov-09 at 1:00 pm | Permalink
  59. mani

    நான் மணி

    பெண்களிடம் மன்னிப்பு கேட்பது பற்றி ஏற்கனவே எழுதியதாலும் அது இப்பதிவுக்கு சம்பந்தமில்லையாதலாலும் பதில் சொல்ல தவிர்க்கிறேன்.

    அறிவியலை திரிப்பதாக குற்றம்சாட்டியதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டேன் அடுத்த சில நிமிடங்களில் என நினைக்கிறேன். காலம்தான் ஆர்விக்கு பிரச்சினை என்றால் அல்லது ஒரு சிறிய விளக்கத்திற்கே இவ்வளவு விளக்கமா என்று கேட்டால் இதனை வர்ணாசிரம தர்ம்ம் , பூணூல் அணிதல் போன்றவற்றுக்கும் அதனால் நேர்ந்த சமூகத்தவறை யார் பொறுப்பேற்பது என்பதற்கு அறிவு உடைய நேர்மையாளர்கள் இரண்டாயிரம் வருடமாகியும் தானாக முயற்சி செய்யவில்லையே ஏன் அதற்கும் காரணம் பிறப்பா அல்லது வளர்ப்பா எதனை மட்டும் முன்னிறுத்த வேண்டும் என அறிவியல் முறைப்படி சொல்ல்லாமே…

    ஒரு சரியான விசயத்தை அடைவதற்காக விவாதித்துதான் சமூக வரலாறு வளர்ந்திருக்கிறது. இதனை பண்டைய கிரேக்க சமூகம் தொட்டு நீங்கள் காண முடியும். நீங்கள் வியந்தோதும் மேலைத்தேய நாடுகளின் ஜனநாயகத்தில் இதனை விடவும் எளிய உண்மைகளைப் புரிந்துகொள்ளாமல் விவாதிக்கும் சில அறிவுஜீவிகளை நீங்கள் காண முடியும். அதற்காக அவர்களிடம் விவாதிக்க மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஆனால் உங்களை நோக்கி விமர்சனம் வரும்போது அதுவும் உங்களது முன்னோர்களால் வஞ்சிக்கப்பட்ட சமூகத்திடமிருந்து வரும்போது பேச முன்வருபவர்களிடம் பேசுவதை தவிர்க்கின்றீர்கள். இதற்கு உங்களது வளர்ப்பு முறை எந்த பங்களிப்பும் செய்யவில்லையே.. இதனை அப்புறம் எது தீர்மானித்த்து…

    Posted on 21-Nov-09 at 1:42 pm | Permalink
  60. ஈயம்

    ஜெனோ டைப் – இதுதான் ஆர்.வியை வருத்தப்படவைக்கிறது. ஆனால், இந்த ஜெனோடைப்பை வைத்துதான் தலித்துகள் ஒடுக்கப்பட்டு நசுக்க்ப்பட்டார்கள் என அறிந்த கதை. செய்தவர் பிராமனர்கள்.

    இன்றும் பார்ப்பனர்கள் திருந்தியாடில்லை.

    இன்றும் சத்வகுணம் உள்ளவன் பிராமணன் என்று சொல்லி பிராமனனே சிறந்த ஆசிரியராக இருக்கமுடியும் என்றும் சொல்கிறார்கள்.

    அப்பிராமணன் என்பதற்கு அடையாளமாக் இன்னும் பூணுல் போடுகிறார்கள். அதை ஆர்வி உணர்ச்சிப்பூர்வமாக ஆதரிக்கிறார். ஜெனோ டைப்பு தமக்கு பொருந்தாது என ஒரு பக்கம் சொல்லிவிட்டு, மற்றொரு புறம் ஆம் அது உணமை என செயல்கள் மூலம் காட்டுகிறார்.

    இதைத்தான் நான் சொன்னேன்: பார்ப்பன்ரகள் தங்கள் குணத்தை மறுதலித்துக்கொண்டே காத்துவருகின்றனர் என்று.

    Posted on 21-Nov-09 at 2:07 pm | Permalink
  61. திருச்சிக் கார‌ன்

    சகோதரர் ஈயம் அவர்களே

    ////அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),

    சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக), கருண ஏவ ச (கருணையுடன் ),

    நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)”/./

    இக்குண்ங்கள் தமக்கே இருப்பதாக வெளிப்புறத்தோற்றங்களை தனக்கெனவே சிறப்பாக அமைத்து, எழுதி, பிறரை நமப் வைத்து மோசடி செய்தது பார்ப்பனீயம் என்பது அரக்க பரக்க சொல்லப்ப்டும் கருத்து.//

    இந்த கருத்துக்கள் எந்த ஒரு சாதிக்கோ, இனத்துக்கோ, மொழிக்கோ, நாட்டுக்கோ ம‌ட்டும் சொல்ல‌ப் ப‌ட‌வில்லை.

    இந்த கருத்துக்களை உலகில் உள்ள எவரும் கேட்கலாம். இந்த கருத்து நல்ல கருத்தா, சமூகத்திற்கு, நாட்டிற்கு, உலகிற்கு , மனிதத்திற்கு உதவக் கூடிய கருத்தா என்று எல்லோரும் சிந்திப்பதற்கும், அப்படி நல்ல கருத்தாக தோன்றினால் தனிப் பட்ட அளவிலும்,பிறகு கூட்டமாகவும் இந்தக் கருத்துக்களை மனதளவிலும், பேச்சளவிலும், செயல் அளவிலும் பின்பற்றுவதர்க்ககவும் தான் இந்தக் கருத்துக்களை இங்கே எழுதினோம்.

    என‌வே ச‌கோத‌ர‌ர் ஈயம் அவ‌ர்கள், ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌ , இன்னும்
    உல‌கிலே உள்ள‌ ப‌ல‌ கொடுமையான‌ பிர‌ச்சினைகளுக்கு தீர்வு காண‌ இந்த‌க் க‌ருத்துக்க‌ள் உப‌யொக‌ப் ப‌டுமா என்று சிந்தித்து ப‌திலை அளிக்க‌லாம். அர‌க்க‌ ப‌ர‌க்க‌ பிற‌ர் எழுதினாலோ, சொன்னாலொ சொல்ல‌ட்டும்.
    நீங்கள் ந‌ன்கு சிந்தித்து உங்க‌ள் கருத்தை கூற‌லாம்.

    பூசாரியாக‌ எல்லா பிரிவு ம‌க்க‌ளும் வ‌ர‌லாம், குறிப்பாக‌ ந‌சுக்க‌ப் ப‌ட்ட‌ பிரிவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் பூசாரியாக‌ க‌ருவ‌றைக்குள் பூச‌னை செய்வ‌தை வ‌ர‌வேற்க்கிறோம்.

    Posted on 21-Nov-09 at 2:16 pm | Permalink
  62. திருச்சிக் கார‌ன்

    //
    கேள்வி: இம்மோசடி செய்தல் ஜெனோடைப்பில் வருமா என்பதுவே.//

    மோசடி செய்வ‌தில் எல்லா பிரிவின‌ரும் போட்டி போட்டுக் கொண்டு ஒருவ‌ரை ஒருவ‌ர் மிஞ்சும் வ‌கையிலே செய‌ல‌ ப‌டுவ‌தால், இந்த‌ ”மோச‌டி” என்ப‌து த‌னியாக‌ ஒரு சில‌ருக்கு ம‌ட்டுமே சொந்த‌மான‌ ஒன்றாக‌ இருக்க‌ யாரும் விட‌ப் போவ‌து இல்லை.

    Posted on 21-Nov-09 at 2:20 pm | Permalink
  63. ram

    /////ஜெனோ டைப் – இதுதான் ஆர்.வியை வருத்தப்படவைக்கிறது. ஆனால், இந்த ஜெனோடைப்பை வைத்துதான் தலித்துகள் ஒடுக்கப்பட்டு நசுக்க்ப்பட்டார்கள் என அறிந்த கதை. செய்தவர் பிராமனர்கள்///

    ஜெனோடைப் ரீதியாக தலித்துக்கள் அடிமைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று எப்படி தலித்து சகோதரர் உணர்கிறார்களோ அதே போல ஜெனோடைப் ரீதியாக ஆதிக்க பார்ப்பனர்கள் ஜாதியினர் இல்லை என்பதை பார்ப்பனரும் உணர்ந்து கொள்ள முடியும் அல்லவா. அவர்கள் திருந்தியபாடில்லை, அவர்கள் திருந்த மாட்டார்கள் என்று கொஞ்சம் கூட அவகாசம் கொடுக்காமல் துவேசிப்பதும் பார்ப்பனர் களை அழிக்கவேண்டும் என்ற வெறியும் மட்டுமே கொண்டிருந்தால் சமத்துவம் எப்படி மலரும். பார்ப்பனர்கள் எப்படி மாறுவார்கள் என்று வேண்டாம்? ஜெனோடைப் ரீதியாக தலித்துகள் அடிமைகள் இல்லை என்று அவர்களால் உணர முடியும் போது பார்ப்பனர்களும் ஜெனோடைப் ரீதியானவர்கள் இல்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. அதனால் ஜெனோடைப்பாக பழிவாங்கும் படலம் நடத்துவதை விட்டு விட்டு கொஞ்சம் பொறுமையாக கையாளுங்கள்.

    Posted on 21-Nov-09 at 2:42 pm | Permalink
    • வேல்

      மனிதன் சக மனிதனை நான் பிறப்பால் பிராமணன், ஆதலினால் இன்ன இன்ன வகையில் நான் உயர்ந்தவன் எனக்கு மட்டுமே இத்தகைய குணாதிசயங்கள் உண்டு இதற்கு தேவர்கள், கடவுளர்கள் சாட்சி என்கின்றனர்.

      பெரியார் தொடங்கி நடந்து வரும் நீண்ட போராட்டத்தின் காரணமாக சிலர் மாற முற்படுகின்றனர், ஆனால் முழுமையாக மாற இயலவில்லை, அவர்களுக்கு ஏதோ புரிகிறது ஆனாலும் சப்பை கட்டுகின்றனர். மனது அந்த படிமானங்களை விட்டு வெளி வர மறுக்கிறது. அதனால்தான் ஆர் வி மைய கருத்தை விட்டு விலகி பதில் தருகிறார் அல்லது பதிவிலுள்ள ஒரு வார்த்தைக்கு மட்டும் நீணட் விளக்கமளிக்கிறார். ராம் பொறுமையாக கையாளுங்கள் என உபதேசிக்கிறார்.

      மனிதனை மனிதன் ஏன்
      வெறுக்க வேண்டும். அவன் செயல்பாடுகளே அதற்கு காரணம். ஒரு ஓட்டு மொத்த சமூகமே நாங்கள் தனி எனும்போது அதிலிருந்து ஒரு குரல் மட்டும் அங்கேயே இருந்து கொண்டு நான் அவனில்லை என்றால் எப்படி? மொத்தமாக மாறுங்கள்/வாருங்கள் என நான் வரவேற்கிறேன்.

      Posted on 24-Nov-09 at 1:56 pm | Permalink
  64. ram

    ///அதே போல ஜெனோடைப் ரீதியாக ஆதிக்க பார்ப்பனர்கள் ஜாதியினர் இல்லை என்பதை பார்ப்பனரும் உணர்ந்து கொள்ள முடியும் அல்லவா. /// அதாவது பார்ப்பனர்கள் ஜெனோடைப் ரீதியாக ஆதிக்க வாதிகள் இல்லை என்பதை பார்பணர்களாலும் உணர முடியும்.

    Posted on 21-Nov-09 at 2:45 pm | Permalink
  65. திருச்சிக் கார‌ன்

    ந‌ம்முடைய‌ நோக்க‌ம் என்ன‌? ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைப்ப‌தா? அல்ல‌து பார்ப்ப‌ன‌ர்க‌ள் பூணூல் அணிவ‌தை நிறுத்த‌ சொல்வ‌தா? பார்ப்ப‌ண‌ர்க‌ள் பூணுல் அணிவ‌தை நிறுத்தி விட்டால் சாதிக் கொடுமைக‌ள் ஒழிந்து ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் உருவாகி விடுமா?

    வ‌ன்னிய‌ர் , தேவ‌ர், க‌வுண்ட‌ர், முத‌லியார் ஆகியோர் சாதி வேறுபாடு பார்ப்ப‌து இல்லையா? அப்போது அவ‌ர்க‌ளின் சாதி அடையாள‌ம் என்ன? இடுப்பிலே அணியும் அரை ஞான் கொடியா?

    சாதி உண்ர்வு இருப்ப‌து ஒரு ம‌னித‌னின் ம‌ன‌திலே. அது அவ‌ர்களின் காதுக‌ள் வாழியாக‌ அவ‌ர்களின் ம‌ன‌திலே பிற‌ந்த‌து முத‌ல் கூற‌ப் ப‌ட்டு வ‌ருகிற‌து. அந்த‌ முறை மாற‌ ம‌க்க‌ளின் ம‌ன‌திலே மாற்ற‌ம் வேண்டும். ம‌க்க‌ளின் ம‌ன‌திலே ப‌ர‌ஸ்பர‌ அன்பு உருவாக‌ வேண்டும். ம‌க்க‌ள் கனவானாக‌ மாற வேண்டும். பீடிக்கு நெருப்பு கேட்ட‌ விவ‌கார‌ம் கூட‌ கொலையில் முடிந்து, பெரிய‌ க‌ல‌வ‌ரமாக‌ உருவாக்கும் வ‌ண்ண‌ம் நிதான‌மில்ல‌ம‌ல் வ‌ன்முறையில் ஈடுப‌டும் ம‌க்க‌ள் கூட்ட‌த்தை வைத்து, வாயிலே பீ திணிக்கும் ம‌க்க‌ளை வைத்து, நான் உய‌ர்ந்த‌வ‌ன் என‌ நின‌க்கும் ம‌க்க‌ளை வைத்து ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌ முடியாது.

    த‌மிழ‌க‌த்தில், ப‌ல‌ கிராம‌ங்களில், ப‌ல‌ சிற்றூர்க‌ளில் பார்ப்ப‌ன‌ர்க‌ளே இல்லை. அங்கே
    ப‌ள்ளியில் ப‌யிலும் சிறுவ‌ர்க‌ள், எல்லோரும் ஒரெ சீருடை அணிகின்ற‌ன‌ர். ஆனாலும் சாதி வேறுபாடு க‌ட்டிக் காக்க‌ப் ப‌டுவ‌து எப்ப‌டி? பார்ப்ப‌ன‌ர்க‌ள் ந‌ட‌த்தும் ப‌ள்ளியிலே எல்லா சிறுவ‌ரும் ஒரே ட‌ம்ள‌ரில் நீர் அருந்துகின்ற‌ன‌ர். ஆனால் ப‌ல‌ க‌வ‌ருமென்டு ப‌ள்ளிக‌ளிலே பார்ப்ப‌ன‌ர‌ல்லாத‌ ஆசிரிய‌ர்க‌ளே த‌லித் இன‌த்தை சேர்ந்த‌ சிறுவ‌ர்க‌ள் அதே ட‌ம்ள‌ரில் நீர் அருந்த‌ அனும‌திப்ப‌து இல்லை.

    பூணூலை அணிந்த‌வ‌ர்க‌ள், குறிப்பாக‌ பார்ப்ப‌ன‌ர்க‌ள் (செட்டியார், ஆச்சாரியார் ஆகிய‌வ‌ரும் பூணூல் அணிகின்ற‌ன‌ர்)ஒரு அம்ப‌து வ‌ருட‌ம் முன்பு வ‌ரை த‌ங்க‌ளை உய‌ர் சாதியின‌ராக‌ க‌ருதிக் கொண்ட‌ன‌ர் என‌ப‌து உண்மையே. இப்போதும் யார‌வ‌து பிராம‌ண‌ர்க‌ள் சாதி உண‌ர்வு உடைய‌வ‌ர்க‌ளாக இருந்தால், த‌ய‌வு செய்து உட‌னே மாறி ச‌ம‌த்துவ‌ப் பாதைக்கு வாருங்க‌ள் என‌க் கேட்டுக் கொள்கிறேன்.
    ஆனால் இந்த‌ பூணூல் தான் சாதியின் அடிப்ப‌டையா? பார்ப்ப‌ன‌ர் ஒருவ‌ர் நான் பூணூலை அறுக்கிறேன், என்று எல்லோர் முன்னாலும் அறுத்து விட்டு, அதை அணியாம‌ல் இருந்தால் அவ‌ர் ம‌ன‌த‌ள‌விலே சாதி வெறி இல்லாத‌வ‌ர் என‌ ஆகி விடுமா?

    என‌வே ம‌னித‌ரிட‌ம் உய‌ர்வு தாழ்வு க‌ருதாத‌ வ‌ரையிலே, எல்லா ம‌னித‌ரையும் ச‌கோத‌ர‌ராக‌ க‌ருதும் ம‌ன‌ப் பாங்கு உடைய‌வ‌ர் பூணூல் அணிந்தால் என்ன‌, அணியாவிட்டால் என்ன‌? அவ‌ர்களை, க‌ட்ட‌ப் ப‌ஞ்சாய‌த்து பாணியிலே, பூணுலை க‌ழ‌ட்டு என்று கூற‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌? வேண்டுமானால் , விருப்ப‌ப் ப‌டும் எவ‌ரும் பூணூலை அணிந்து கொள்ள‌லாமே? ர‌ங்க‌ நாத‌ன் தெருவிலே எத்த‌னையோ க‌டைக‌ளில் கிடைக்கிற‌தே? அதை வாங்கி அணிந்து கொள்வ‌தை யாரும் த‌டுக்க‌ வில்லையே?

    ச‌ரி பூணுலை அணியாம‌ல் நிறுத்தி விட்டு, அத‌ற்க்குப் ப‌தில் க‌ழுத்திலே அணியும் த‌ங்க‌ ச‌ங்கிலியை பூணூலாக‌ நினைத்துக் கொண்டு சாதி அபிமான‌த்தை தொட‌ர்ந்தால் என்ன‌ செய்ய‌ போகிறீர்க‌ள்? த‌ங்க‌ ச‌ங்கிலி அணிய‌க் கூடாது என்று கூற‌ப் போகிறீர்க‌ளா?

    என‌வே தேவை என்ன‌வென்றால் ம‌க்கள் மன‌திலே மாற்ற‌ம். வன்முறை, அத‌ற்க்கு முக்கிய‌ கார‌ணமான‌ குடிப் ப‌ழ‌க்க‌ம் ஆகிய‌வ‌ற்றைக் கை விட்டு, க‌ன‌வானாக‌ உருவெடுக்க‌ வேண்டும். ‍வ‌ள்ளுவ‌ர் சொல்லிய‌ ப‌டி, செய்ய‌ வேண்டிய‌தை செய்து, செய்ய‌க் கூடாத‌தை த‌விர்த்து சிற‌ப்பான‌ வாழ்க்கை வாழ‌ உறுதி பூண்டால் தான் ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌ம் அமைக்க‌ முடியும்.

    பிராம‌ண‌ர்க‌ள் இன்னும் யாராவ‌து, சாதீய‌க் க‌ருத்துக்க‌ளை வைத்து இருந்தால், விரைவில் திருந்தி விடுங்க‌ள்.

    Posted on 21-Nov-09 at 3:48 pm | Permalink
  66. திருச்சி காரன்

    பிராமணர்கள் பூணூல் அணிவதால் அவர்கள் தனித்துவ சாதியாக இருப்பதாக கருதினால், அவர்களின் அந்த தனி சிறப்பை அழிக்க சிறந்த வழி மற்றவர்களும் பூணூல் அணிவதுதான். பார்ப்பனர் அல்லாதவர்கள் அனைவரும் பூணூலை கடையிலே வாங்கி அதை உடலின் குறுக்கே அணிந்து கொண்டால் அப்போது பார்ப்பனர்கள் என்ன செய்ய முடியும்? சுப்பிரமணிய சாமியை வைத்து சுப்ரீம் கோர்ட்டிலே பார்பனர் அல்லாதவர்கள் உடலின் குறுக்கே நூலை அணியக் கூடாது என்று ஸ்டே ஆர்டர் வாங்க முடியுமா? அப்படி எந்த கோர்ட்டும் ஸ்டே தர முடியாது. ஆனால் வாங்கும் போது நல்ல தரமான பூணூலாக வாங்கி கம்பீரமாக அணிந்து வேற்று உடம்புடன் தெருவிலே நடந்து சொல்லுங்கள். பல பார்ப்பனர்களுக்கு அப்போதுதான் அவர்கள் உடலில் பூணூல் இருப்பதே நினைவுக்கு வரும்!

    இப்படியாக பூணூலை அணிந்து நானும் மார்பிலே பூணூல் உள்ளவன்தான் என்ற நிலையை உருவாக்கினால் பார்ப்பனர்களால என்ன செய்ய முடியும்?
    சாதி ஒழிப்பிற்கு இதுவே சிறந்த வழி. அடுத்தவனை பூணூலை அணியாதே என்று கூற நமக்கு உரிமை இல்லை. அதைப் போல வேறு யாரும் பூணூல் அணியக் கூடாது என்று சொல்லும் உரிமையும் பாரப்பனருக்கு இல்லை.

    Posted on 21-Nov-09 at 4:37 pm | Permalink
  67. திருச்சி காரன்

    பூணூலை அணிவது மட்டுமல்ல. பல புத்தகக் கடைகளில் பார்ப்பனர் செய்யும் சந்தியா வந்தனம் முதலான புத்தகங்களும், அதற்க்கான குறுந் தகடுகளும் கிடைக்கின்றன. அந்த சம்ஸ்கிருத செய்யுள்களுக்கு பதவுரையும் எழுதப் பட்டுள்ளது.

    என் அறிவைத் துண்டும் ஒளியே , உனக்கு நன்றியும் வணக்கமும் என்பதுதான் முக்கியமான மந்திரத்தின் பொருள். அதை அனைவரும் தமிழிலே கூட ஓதலாம். சூரியனின் ஒளியினால் தான் பயிர் பச்சை விளைவது முதல் , எல்லா வேலைகளும் நடக்கிறது. சூரிய ஒளியிலே நாம் எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்ய முடியும். எனவே “என் அறிவு தூண்டப் படட்டும், என் சிந்திக்கும் திறன் வளரட்டும்” என்று எண்ணியவாறே மனக் குவிப்பு பயிற்ச்சியில் ஈடுபட்டால், இந்த பார்ப்பனர்கள் எல்லாம் உங்கள் காலில் விழுந்து உங்களிடம் பாடம் பெற வேண்டிய நிலை உருவாகும் என்பது திண்ணம்.

    Posted on 21-Nov-09 at 4:57 pm | Permalink
  68. திருச்சி காரன்

    இன்றைக்கு இருக்கும் பார்ப்பனர்களுக்கு தெரிந்த ஒரே ஆன்மீக பழக்கம் என்னவென்றால் ஏதாவது காழு கொழுத்த பில்லியனேர் சாமியைத் தேடித் பிடிப்பது. அவருக்கு முறை வாசல் செய்வது, அவர் அப்படி, இப்படி என நம்ம அரசியல் தலைவர்களை புகழ்வது போல புகழ்வது. அங்க வஸ்திரத்தை அவிழ்த்து இடுப்பிலே கட்டிக் கொண்டு, ஜெயலலிதா காலில் அதிமுக காரர் விழுவது போல விழுவது என பரிதாபகரமான நிலையிலே அவர்கள உள்ளனர். கடைசியில் அந்த பில்லியனேர் சாமிக்கு ஏதாவது சங்கடம் வந்தால் சாதி சங்க உறுப்பினர் போல போராட்டம் நடத்துவது என மிக பரிதாபமாக கழக அரசியலையே தங்கள் ஆன்மிகம் ஆக்கிக் கொண்டு விட்டனர் பார்ரபனர்கள் என்பதே வருத்தமான உண்மை. எனவே அறிவின் அடிப்படையிலான ஆன்மீகத் தேடலில் ஈடுபட நசுக்கப் பட்ட பிரிவினருக்கு இதுவே சரியான சந்தர்ப்பம். அதை விட்டு, செத்த குதிரையை அடிப்பது போல மல்லுக்கு நிற்பது காமெடியாக உள்ளது. இப்போது பார்ப்பனருக்கும், பார்ப்பனர் அல்லாதவருக்கும் உண்மையில் என்ன வேறுபாடு? எதுவுமே இல்லை. ஆனால் பார்ப்பனர்களால் அவர்களின் மடம், அதன் தலைமை ஆகியவற்றை தாண்டி ஆன்மீகத்தில் எதுவுமே சிந்திக்க இயலாது. ஆனால் மற்றவர்களோ பகுத்தறிவின் அடிப்படையிலே சரியான ஆன்மீகத்தைப் பிடித்தால் புத்தரைப் போல, விவேகானந்தரைப் போல பரிணமிக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது பிராமணர்கள் இடத்தை மாற்றி உங்களைப் பார்க்க வந்து லைன் கட்டுவார்கள்.

    Posted on 21-Nov-09 at 5:12 pm | Permalink
  69. Anbu Selvan

    Vinavu Iyer and Eeyam Iyengar

    You have now got the right place as the Neo Brahmins.
    Let the Neo Brahmins rule the world

    Posted on 21-Nov-09 at 5:44 pm | Permalink
  70. vaigai puyal Vadivelu

    //இப்படியாக பூணூலை அணிந்து நானும் மார்பிலே பூணூல் உள்ளவன்தான் என்ற நிலையை உருவாக்கினால் பார்ப்பனர்களால என்ன செய்ய முடியும்?
    சாதி ஒழிப்பிற்கு இதுவே சிறந்த வழி//

    எனக்கு உங்க அப்ரோச் பிடிச்சிருக்கு

    Posted on 21-Nov-09 at 6:02 pm | Permalink
    • திருச்சிக் கார‌ன்

      ச‌கோத‌ர‌ர் வ‌டிவேலு அவ‌ர்க‌ளே, ஆக்க‌ பூர்வ‌மான‌ சிந்த‌னைகளை தொட‌ருவோம். ஆரோக்கிய‌மான‌ உணவுப் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளை வைத்துக் கொள்வோம். இர‌வில் முன் தூங்கி காலையில் விரைவில்
      எழுவோம். எந்த‌ அளவுக்கு நாம் ந‌ம் ம‌ன‌திலே வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை குறைக்கிரோமோ அந்த‌ அள‌வுக்கு ந‌ம‌க்கு உண்மையில் ம‌ன‌ வ‌லிமை அதிக‌ரிக்கிற‌து.

      Posted on 21-Nov-09 at 8:30 pm | Permalink
  71. சுய சாதி அபிமானம் / அடையாளம் பெரும்பாலனவர்களிடம் உள்ளது. நண்பர் ஆர்.வியிடம் அது மிக மெலிதாக உள்ளது. அது பெரிய குற்றமல்ல. சாதி வெறிதான் குற்றம். தேசியம், இனம், மொழி, சாதி, வர்கம் : இவை ஒரு வகையான அடையாளங்களை (identity / sense of belonging) தருகிறது. minimum levelஇல் இவை இருப்பதால் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் வெறியாக, ஃபாசிசமாக உருமாறும் போதுதான் பிரச்சனை.

    பார்பனியம் என்ற சொல்லாடலுக்காக நண்பர் ஆர்.வி hurt ஆகத் தேவையில்லை. சாதியம் என்ற சொல்லே சரியானது என்று அவர் முன்மொழிவதற்க்கு இத்தனை பெரிய விவாதம் / பதிவு தேவையில்லை. இது முக்கிய பிரச்சனை இல்லை.

    பூணுல் அணிவது பிறப்புரிமை என்று கருதுவது அவரின் சுதந்திரம். அதற்க்கு இத்தனை ‘கண்டனங்கள்’ தேவையில்லை. உருப்படியான களப்பணிகள் ஆற்றும் பெரியாரியவாதிகள் இவற்றை பொருட்படுத்தமாட்டார்கள். கிராமங்களில் இன்று தலித்துகள் மீது நடக்கும் அடக்குமுறைகளை தடுக்க செயலாற்றுபவர்கள் தான் உருப்படியான செயல் வீரர்கள். இது போன்ற பதிவுகள் பார்பனர்கள்(பார்பனியத்தின் மீது அல்ல) மீது வெறுப்பை மட்டும் தான் நடைமுறையில் வளர்க்கும். யாரும் மாறப்போவதில்லை. குரோதம் தான் அதிகரிக்கும்.

    Posted on 21-Nov-09 at 11:15 pm | Permalink
    • ஈயம்

      இங்கு பேசப்படுவது ‘பார்ப்பனீயம்’ பற்றி மட்டுமே. எல்லாருக்கும் உள்ள் சாதியுணர்வு அதை எப்படி அழிப்பது பற்றியலல். அது தனி விவாதம்.
      பார்ப்பனீயம் நல்லதா கெட்டதா? ஜெனோடைப் என்ற பிரிவில் வருகிறதா? அல்லது அப்படி ஒன்றுமே இல்லையா?  என்பதைப்பற்றித்தான்.  பூணூள் அணிவது என் பிறப்புரிமையென்று ஆர்வி சொல்வதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் அதை ஏன் அணிகிறார்கள், எப்படி அணிகிறார்கள் என்று சொல்லுவதை அவர் மறுக்கிறார். அது தன்னை பிராமணன் என பிறருக்கு அடையாளம் காட்டவே..அது இந்து மதத்தில் பிராமணனுக்கு வைக்கப்பட்ட ஒரு சட்ங்கு.  அதை மாற்றிக்கொள்ள ஆவணி அவிட்டம் வரைக் காத்திருக்க வேண்டும். இதைப்பற்றியெல்லாம் பலர் இணையதளங்களில் எழுதியிறுக்கிறார்கள்.  இப்பொழுத் சொல்லுங்கள். ஆர்வி சொல்வது தனிமனித உரிமையா அல்லது ஒரு தனி வகுப்பாரின் உரிமையா? இவர் பூணுல் போடுவது இவர் சொந்த விசயமா? இல்லை இவர் வகுப்பு விஷம்யா? ஒரு கிருத்தவன் ஞானஸ்னானம் Baptisim சர்ச்சில் பண்ணப்பட்டாலே கிருத்தவனாகிறான். அவனிடம் போய் இதை ஏன் பண்ணுகிறாய் என்றால், நான் கிருத்தவன் இது எம்மதக்கட்டளை அதை நான் செய்கிறேன்.என்பான். தனிமனித உரிமை என போலி வாதம் பண்ணமாட்டான்.  ஆர்வி அந்த hypocricy பண்ணுகிறார்.  ஆம்..நான் பிராமணன், இது எம் சாதிச்சடங்கு…நான் பிராமணன் என் தெரிவிக்க வேண்டும் எனவே என் பூணூல்’ என்று தைரியமா தொண்டு ராகவனைப்போல் சொல்லவேண்டியதுதானே?

      //மிக மெலிதாக உள்ளது. அது பெரிய குற்றமல்ல. சாதி வெறிதான் குற்ற// 

      வெறியாக மாறுவதற்குமுன் ‘மெல்லியதாகத்தான்’ இருக்கும். ஒரு ருபாய் எடுத்தாலும், ஒரு லடசம் எடுத்தாலும், திருட்டுதான். சட்டத்தில் தண்டனை குறைவாகக் கிடைக்க்லாம். According to moral theory, it is an immoral act.

      சாதிகளை அழிப்பதும், அதை சடங்குகளின் மூல செய்து சாதிகளை நிலைப்படுத்து சமுதாயத்தை சீர்கெடவைப்போரையும் எதிர்த்துபோராடாமல், பெரியாரிஸ்டுகள் களப்பணி பண்ணமுடியாது.

      Posted on 22-Nov-09 at 10:44 am | Permalink
  72. சுய சாதி அபிமானம் / அடையாளம் பெரும்பாலனவர்களிடம் உள்ளது. அதிலிருந்து 100 % வெளியேறியவர்கள் மிக மிக அரிதானவர்கள். Socio-economic conditioningஇல் அது நடைமுறையில் சாத்தியமில்லை. பிறப்பால் யாரும் உயர்ந்தவர் / தாழ்ந்தவர் இல்லை என்ற எண்ணம் இருந்தாலே போதுமானது. அது 60 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமையை விட இன்று பரவாயில்லை. குரோதம், வெறுப்பை வளர்க்காமல், அன்பான முறையில் பேதங்களை வெல்லாம். அதை தான் காந்தியடிகள் முயன்றார். ஓரளவு வெற்றியும் பெற்றார்.

    Posted on 21-Nov-09 at 11:23 pm | Permalink
    • முதல் தலைமுறை

      //அன்பான முறையில் பேதங்களை வெல்லாம். அதை தான் காந்தியடிகள் முயன்றார். ஓரளவு வெற்றியும் பெற்றார்.//

      வழக்கம் போல அதியமான் இந்த விசயத்திலும் தலைகீழாக சிந்திக்கிறார். காந்தி சாதியை ஒழித்தாராம்? அதுவும் இன்றைக்கு ஓரளவு முன்னேற்றம் இருக்கிறது என்று சொல்லி விட்டு அடுத்த வரியில் இப்படி ஒரு பொய்யைச் சொல்கிறார்.

      அப்போ, பெரியார், அம்பெத்கர் எல்லாம் காந்தியை சாதி ஒழிப்பு விசயத்தில் அம்பலப்படுத்தியது என்னவாம்?

      அதியமான் பொருளாதாரத்தில்தான் தலைகீழ் வவ்வால் என்றால் வரலாற்றிலுமா?

      Posted on 23-Nov-09 at 11:37 am | Permalink
      • என்னை பொருத்த வரையில், தலைகீழாக பார்பது நீங்கதான், நான் இல்லை. ஓ.கே.

        இதை நிதானமாக படிக்கவும் :

        காந்தியும், சாதியும் : http://jeyamohan.in/?p=4103

        Posted on 23-Nov-09 at 1:58 pm | Permalink
        • mani

          அதியமான்

          ஏற்கனேவே ஜயமோகனது கருத்துக்கு பதில் சொல்லி விட்டேன். படித்த பதில்சொல்லாமல் போய்விட்டு இங்கு வந்து எழுதுவது நியாயமா

          Posted on 23-Nov-09 at 2:16 pm | Permalink
        • முதல் தலைமுறை

          காந்தி கொல்லப்படுவதற்கு 1945க்கு பிறகுதான் வர்ணாஸ்ரம் தரமம், சாதி தவறு என்று ஒத்துக் கொண்டார். அப்படியிருக்கு சாதியை ஒழிக்க அவர் மேற்கொண்ட வழி பங்களிப்பு செய்தது என்று சொல்வது சுத்த மடத்தனம். ஜெயமோகனேகூட அந்தக் கட்டுரையில் அவ்வாறு வலியுறுத்தவில்லை.

          ஜெயமோகன் சொல்லியுள்ளது:
          .//ஒருவேளை மத ஒற்றுமைக்காக காந்தி உயிர்த்தியாகம் செய்யவில்லை என்றால் சாதி ஒழிப்புக்காக அவர் உயிர்தியாகம் செய்ய நேரிட்டிருக்கும். அவர் சென்றுகொண்டிருந்த திசை அது.

          அன்புள்ள ஜெபமாணிக்கம், தயவுசெய்து யோசித்துப்பாருங்கள். இந்த வரலாற்றுப்பின்னணியில் நீங்கள் குறிப்பிட்ட ஆரம்பகாலகட்டத்து உதிரி மேற்கோள்கள் மூலம் காந்தியை ஒரு சாதி வெறியராக முத்திரை குத்துவதனால் யாருக்கு என்ன லாபம்? அந்தப்பொய்யை நாம் சுமந்துகொண்டு காழ்ப்பை வளர்த்துக்கொள்வதனால் நாம் அடைவது என்ன?//

          அதியமான் இப்படி ஒவ்வொரு விசயத்தையும் அவரது மன எழுச்சிக்கு ஏற்ப புரிந்து கொள்வதிலிருந்து என்றைக்கு விடுபடப் போகிறாரோ?

          Posted on 23-Nov-09 at 3:24 pm | Permalink
        • லெனின்