privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் : தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் : தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

-

க்கள் அதிகாரம் மதுரை மாவட்ட ஒருங்கிணப்பு குழுவின் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள், மக்கள் மீது நடத்தப்பட்ட தமிழக காவல்துறையினரின் வன்முறையை கண்டித்து மதுரை பழங்காநத்தம் அருகில் 30.01.2017 அன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது தலைமை வகித்தார்.

வட இந்திய மக்களின் மத்தியில்தமிழ் சமூகத்தை கூனிக்குறுக செய்த அதிமுக-வின் காலில் விழும் கலாச்சாரத்தை தோலுரித்த அவர்  இந்தக் கூட்டம் தான் போராடும் மாணவர்களை வன்முறை கும்பலாக சித்தரிக்கிறது என்றார். இவர்களுக்கு பின்புலமாக செயல்படுவது ஆர்.எஸ்.எஸ் கும்பல். இவர்களை தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடிப்பது தான் நம்முடைய உரிமைகளை பெறுவதற்கு முதல் படியாகும் என உரையாற்றி சுற்றி கூடியிருந்த பொதுமக்களின் கவனத்தை ஆர்ப்பாட்டத்தில் குவியவைத்தார்.

Madurai PP Protest (5)அடுத்து பேசிய புமாஇமு-வை சேர்ந்த கல்லூரி மாணவர் தோழர் ஆனந்த் ஓ.பி.எஸ் பின்லாடன் பூச்சாண்டி காட்டுகிறார்.  ஆனால் வன்முறை கும்பலாக செயல்பட்டது காவல்துறைதான். நீங்கள் வராவிட்டாலே போதும் நாங்களே பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வோம், பரமக்குடி துப்பாக்கிச் சூடு முதல் கூடங்குளம் போராட்டம் வரையிலும் காவல்துறையின் வன்முறையே இதற்கு உதாரணம் எனக்கூறி உரையாற்றினார்

பாபர் மசூதி இடிப்பு முதல் குஜராத் கலவரம் வரை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க எப்படி நடந்து கொண்டதோ அதே போல்தான் இங்கே காவல் துறை நடந்து கொண்டது. எனவே இந்த வன்முறை முழுவதிலும் அர்.எஸ்.எஸ், பாஜக-வின் அடியாட்படையாகத் தான் காவல்துறை நடந்து கொண்டது எனக்கூறி  ஆர்.எஸ்.எஸ்-க்கும் காவல்துறைக்கும் இருந்த தொடர்பை தோலுரித்தார் புஜதொமு வை சேர்ந்த தோழர் பிரகாஷ்.

முற்போக்கு மாணவர் கழகத்தின் மதுரை மாவட்ட துணை அமைப்பாளர் தோழர் இனியன் தருமபுரியில் பா.ம.க  தலித் மக்களின் சொத்துக்களை சூறையாடியது காவல்துறைதான். சாதி மத வெறியர்களுக்கும் காவல்துறைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை இவர்கள் அனைவருமே தலித் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிரிகள் எனக்கூறி உழைக்கும் மக்களின் எதிரிகளை அம்பலப்படுத்தினார்.

அடுத்தாக  6 அமைப்புகளுக்கு தடையாம், யார் அந்த 6 அமைப்பு? டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி போராட்டம் செய்தவர்கள், விவசாயிகள் தற்கொலைக்கு எதிராக போராடியவர்கள், முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்காக போராடியவர்கள். இவர்கள் தான் ஓ.பி.எஸ் மற்றும் காவல்துறை சொல்லும் சமூக விரோதிகள் எனில் இவர்களுடைய திட்டம் இதை சாக்காக வைத்து மக்களுடைய பிரச்சினைகளுக்காக போராடக் கூடிய  அமைப்புகளை மாணவர்களிடமிருந்து தனிமைப்படுத்த முயற்ச்சிக்கிறார்கள். உண்மையில் இந்த நாட்டின் பிரதமரே ஒரு பயங்கரவாதப் பிரதமர்தான். இவர்கள்  மாணவர்கள் அரசியல் பேசுவதை வன்முறை கொண்டு தடுத்து விடலாம் என முயல்கிறார்கள். மாணவர்கள் இவர்களை புரிந்து கொண்டு தமிழக உரிமையை நிலை நாட்டி சாதிப்பார்கள். இவர்கள் சமூக விரோதிகள் எனச்சொல்லும் அந்த அமைப்புகள்தான் உண்மையில் தேசப்பற்றாளர்கள் என கூறி மாணவர்கள் அரசியல் கற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசிமுடித்தார், விவசாயிகள் விடுதலை முன்னணியி-ன் தோழர் ஆசை.

அடுத்ததாக பேசிய  தமிழ் புலிகள் கட்சியின் மாநில அமைப்பு செயலர் முகிலரசன், எச்.ராஜா என்ற தரங்கெட்ட அரசியல்வாதிதான் முதலில் இந்த போராட்டத்தை இந்து முஸ்லிம் கலவரமாக மாற்றப் பார்த்தார். இதை ஒட்டித்தான் ஓபிஎஸ்–ம் பின்லேடன் படம் கதை விடுகிறார். ஆனால் இந்த வன்முறை என்பது ஒரு திட்டமிடப்பட்ட ஒன்று. இல்லையென்றால் அங்கே எப்படி வெண் பாஸ்பரஸ் வந்தது? முதல் நாள் இரவே இதற்காக பயிற்சி கொடுத்துள்ளனர். அதனால்தான் அந்த பெண் போலீஸ் யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற தயக்கம்கூட இன்றி வீடுகளை எரிக்கிறார். பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிலும் இப்படித்தான் காவல்துறை வன்முறையை திட்டமிட்டு நடத்தியது. நடுக்குப்பத்தில் புகுந்த காவல்துறை அருகில் இருந்த மைலாப்பூர் அக்ரஹாரத்தில் நுழையவில்லையே ஏன். ஏனெனில் அவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்   கும்பலுக்கு அடிப்படை. அடித்தட்டு மக்களை தாக்கும் இந்த காவல்துறை எப்போதும் கிரிமினல்களை, அரசியல் ரவுடிகளை நெருங்காது. ஏன் அவர்களுடைய வீட்டு வாட்ச்மேனைகூட நெருங்காது. எனவே வன்முறையில் ஈடுபட்ட அந்த காவல்துறை அதிகாரிகளை பதவிநீக்கம் செய்ய வேண்டுமேன கோரினார்.

இறுதியாக சிறப்புறையாற்றிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் பேசும்போது இந்த தீவிரவாதி பயங்காட்டுவது யார்? மத்திய மாநில அரசில் அங்கம் வகிக்கும் அதிமுக ஆர்.எஸ்.எஸ் மற்றும் காவல் துறை மட்டும்தான்.  மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இதை கண்டிக்கின்றன.

அங்கே வன்முறை நடந்தது உண்மை, அதை செய்தது காவல் துறைதானே தவிர மாணவர்களோ முற்போக்கு அமைப்புகளோ அல்ல. உதாரணமாக அலங்காநல்லூரில்  மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்பதற்காக வயதான பெண்மனிகளைகூட அரக்கத்தனமாக தாக்கியுள்ளது காவல்துறை. மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு வீட்டில் குடும்பத்தோடு தாக்கி “ஆண்களுக்கு பெண்கள் இருக்கும் இடத்தில் அடைக்கலம் கொடுத்துள்ளாயே நீ என்ன பெண்களை வைத்து வியாபாரம் பார்க்கிறாயா” என்று மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதை அந்த வீட்டில் உள்ள ஒரு சிறுவன் சொல்கிறான். அதே போல் மதுரையில் ரயில் மறியல் செய்த இடத்தில் சுற்றி இருந்த தொழிலாளர்கள் தள்ளு வண்டி கடைக்காரர்கள், ஆற்றில் வேடிக்கை பார்த்தவர்கள் என ஒருவர் விடாமல் தாக்கியுள்ளது. ஏன் இந்த வன்மம் என்றால் முற்போக்கு அமைப்புகள் மக்களுடைய பிரச்சினையை இந்த போராட்டத்தினூடாக எழுப்பியதும் அதற்கு மக்கள் ஆதரவு கிடைத்ததும் தான் போலீஸ் மற்றும் அரசின் இந்த வன்மத்திற்கு காரணம். மதுரை தமுக்கத்தில் நாங்கள் வழக்கறிஞர்கள் இருந்ததால் தடியடி நடத்தவில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி   அமைப்புகள்தான் இறுதிவரை கலையமாட்டோம் எனக்கூறி இறுதியில் மாணவர்களை கைவிட்டு சென்றார்கள். அவர்களை ஏன் தேசவிரோதிகள் பட்டியலில் சேர்க்கவில்லை. உண்மையில் இவர்கள்தான் தேசவிரோதிகள். இவர்களைத்தான் தடை செய்யவேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் இவர்களுடைய  அரசை கலைக்க வேண்டும். ஆனால் அதை செய்ய மாட்டார்கள். எனவே மக்களுடைய போராட்டமே ஒரே தீர்வு என பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை திரளன மக்கள் நின்று கவனித்தனர். இறுதியில் மக்கள் அதிகாரத்தின் தோழர் ராஜா நன்றியுரையாற்ற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை.

____________________

திருவாரூர் ஆர்ப்பாட்டம்

மெரினா : போலீசின் கொலைவெறித் தாக்குதலைக் கண்டிப்போம் என்ற அடிப்படையில் திருவாரூர் பேருந்து நிலைம் எதிரில் 31.01.17 அன்று மக்களதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை இடைமறித்து திருவாரூர் DSP தலைமையில் தோழர்களை கைது செய்து காட்டூர் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

  • வரவேற்புரை :
    தோழர்
    சண்முகசுந்தரம்,
    மக்கள் அதிகாரம்.
  • தலைமை :
    தோழர் முரளி, 
    மக்கள் அதிகாரம், திருவாரூர் மாவட்ட அமைப்பாளர்.
  • கண்டன உரை :
    திரு கூடூர் சீனிவாசன், மதிமுக மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர்.
    நாத்திகம் சம்சுநிசியா.
    மாணவர் பிரசாந்த்.
    திரு சி.மகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள்.
    தோழர் ஆசாத் புதிய ஜனநாயகம் முகவர்.
  • சிறப்புரை :
    தோழர் கரூர் ராமசாமி மக்கள் அதிகாரம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.

____________________

தஞ்சாவூர் ஆர்ப்பாட்டம்

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்து தஞ்சை ரயிலடியில் மக்கள் அதிகாரம் சார்பில் 30.01.17 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை சுற்றியிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கவனித்துச் சென்றனர்.

தலைமை :
தோழர் அருள், மக்கள் அதிகாரம்.

கண்டன உரை :
தோழர் தேவா, மக்கள் அதிகாரம் தஞ்சை ஒருங்கிணைப்பாளர்.
தோழர் சேவையா, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர்.
திரு பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் இயக்கம்.
தோழர் மாதவராஜ், ஆட்டோ ஓட்டுனர் சங்க கூட்டமைப்பு.
தோழர் ராஜா, மக்கள் அதிகாரம் திருச்சி.

சிறப்புரை :
தோழர் காளியப்பன், மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர். மக்கள் அதிகாரம்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
தஞ்சை.

____________________

கோத்தகிரி ஆர்ப்பாட்டம்

டந்த 16.01.2017 முதல் சல்லிகட்டு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் இளைஞர்கள் தொடர்ந்து 6-நாள் போராட்டம் நடத்தினார்கள்.  மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டம் கட்டுக் கோப்பான பண்பாடு எல்லாம் இந்தியாவையே வியப்படையச் செய்தது.  ஒன்றும் செய்ய முடியாத அரசு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களின் கோரிக்கைக்கு அடிபணிந்து அவசர சட்டம் இயற்றி சல்லிக்கட்டு நடத்த முடிவு செய்து அதை அறிவித்தது.

அவசரச் சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டம் தான் வேண்டும் என்று தொடர் முழக்கத்துடன் போராட்டத்தை தொடர்ந்தனர்.  ஆனால் அரசு ஊடகங்கள் மற்றும் துரோகிகளை வைத்து நிரந்தரச் சட்டம் இயற்றப்பட்டது.  நாம் இத்தோடு போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தனர்.  எங்களுக்கு நிரந்தர சட்டம் இயற்றி அதன் நகலை எங்கள் கையில் கொடுக்க வேண்டும் என்று தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர்.

அதனை ஏற்றுக் கொள்ளாத மத்திய மாநில அரசு இணைந்து போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கி பெண்களை மானபங்கம் செய்தும், பாலியல் தொந்தரவு கொடுத்தும் விரட்டைடித்தது. மேலும் ஆட்டோக்களை காவல்துறையே எரித்தது, வீடுகளுக்கு தீ வைத்தது.  காவல்துறை தனது வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டது.  வீடு புகுந்து பெண்களை அடித்து விட்டு ஆண்களை கைது செய்து சென்று உள்ளது.

அதை நியாயப்படுத்தும் விதமாக சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக கூறி திசை திருப்ப வெறியாட்டத்தை நியாயப்படுத்தியது.  இதனை கோத்தகிரி மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கின்றது.  கொலை வெறி தாக்குதலில் ஈடுப்பட்ட காவல்துறை கண்டிக்கிறோம்.  மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை 03.02.2017 அன்று காலை 10 மணிக்கு கோத்தகிரி மக்கள் அதிகாரம் சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
கோத்தகிரி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க