privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்சீர்காழி : பயிர்க் காப்பீட்டிற்கு பகவானிடம் கேட்கச் சொன்ன கலெக்டர் !

சீர்காழி : பயிர்க் காப்பீட்டிற்கு பகவானிடம் கேட்கச் சொன்ன கலெக்டர் !

-

சீர்காழி தாலுகா மாதனம் தொடக்க வேளாண்மை வங்கிக்கு உட்பட்ட பச்சைபெருமாநல்லூர், மகாராஜபுரம், உமையாள்பதி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட விவாசாயிகள் பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி மாதனம் தொடக்க வேளாண்மை கடன் சங்கம்(லிட்) முன்பு 26.10.2017 வியாழன் அன்று காலை 11 மணிக்கு மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது தனது கண்டன உரையில் தோழர் ரவி “பச்சைபெருமாநல்லூர், மகாராஜபுரம், உமையாள்பதி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் பயிர்காப்பீடு பதிவு செய்தும் இதுவரை காப்பீடு வழங்கப்படவில்லை. குறிப்பாக பச்சைபெருமாநல்லூர் கிராம விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு இது வரை அறிவிக்கவும் இல்லை. இது தொடர்ப்பாக நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அவர்களிடம் விவசாயிகள் மனுக்கொடுத்து காப்பீடு வழங்க கேட்டபோது என்னால் ஒன்றும் செய்ய முடியாது. கடவுளிடம் தான் சொல்ல வேண்டும் என்றார்.

சீர்காழி வட்டாட்சியர் பாலமுருகனிடம் மனுகொடுத்து முறையிட்டபோது ஆவன செய்வதாக சொன்னார். தொடக்க வேளாண்மை கடன் சங்க செயலர் மேகவண்ணனிடம் கேட்டபோது எங்களுக்கு தெரியாது என்கிறார். மூன்று மாதமாக அரசு அலுவலகங்களில் அலைந்தும் பயனில்லை இதற்கெல்லாம் காரணம் கடவாசல் வேளாண்மை விரிவாக்க அலுவலர் சுரேஷ் சம்மந்தபட்ட அலுவலகத்தில் கணக்கை கொடுக்காதது தான் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே பச்சை பெருமாநல்லூர் உள்ளிட்ட கிராமத்திற்கு உடனடியாக பயிர் காப்பீடு வழங்க வேண்டும்! இல்லையென்றால் இதே இடத்தில் தொடர் போராட்டத்தை அறிவித்து நடத்துவோம்” என்று எச்சரித்து கண்டன உரையை நிறைவு செய்தார்.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பிகாபதி பேசுகையில்; “உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மூன்று மாத காலமாக போராடியும் காப்பீடு தர மறுக்கிறது இந்த அரசு. விவசாயிகள் சாகுபடிக்கு இன்னும் புதுமணியாற்றில் இதுவரை தண்ணீர் விட மறுக்கிறார்கள். இந்த அரசு கட்டமைப்பு மக்களுக்கு எதிராக மாறிவிட்டது ஆகையால் அனைத்து கிராமங்களிலும் மக்கள் கமிட்டி அமைப்போம், அதிகாரத்தை கையில் எடுப்போம்” என்று கூறி முடித்தார்.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் வட்ட அமைப்பாளர் தோழர் ஸ்டாலின் பேசுகையில்  “மூன்று மாத காலமாக  மாதனத்தை சுற்றியுள்ள ஐந்து கிராமங்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக விவசாயிகள் பலமுறை போராடியும் பலன் இல்லை. இந்த அரசு கட்டமைப்பு தோற்றுவிட்டது அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் உள்ள பிரச்சனை பற்றிதான் ஊடகங்களில் விவாதம் நடக்கிறது மக்களை பற்றி கவலை இல்லை” என்று கூறினார் .

போலீசும் மக்கள் போராட்டங்கள் எங்கு நடந்தாலும் மக்களை போராட விடாமல் தடுப்பதும், கந்து வட்டிகாரனுக்கு மாமா வேலை பார்ப்பதும், அரசு அதிகாரிகளைப் பாதுகாப்பதும், அவர்கள் கொள்ளை அடித்து வைத்திருக்கும் சொத்தை காவல் காக்கவும் தான் செய்கிறார்கள். மக்களை பாதுகாக்க வக்கற்ற இந்த அதிகார வர்க்கத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும். மக்கள் நாம் அனைவரும் அமைப்பாக இருந்தால்தான் இவர்களின் சட்டையை பிடித்து கேள்வி கேட்க முடியும்.   ஆகையால் ஒன்றுசேர்ந்து கிராமம்தோறும் மக்கள் அதிகாரத்தினை நிறுவுவோம்” என்று கூறி முடித்தார்.

இறுதியாக தோழர் வீரசோழன் நன்றியுரை கூறி முடித்தார். இப்போராட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க