பத்மாவதி – சஞ்செய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்திப் படம். ரஜபுத்ர ராணி பத்மினி அல்லது பத்மாவதியின் கதையை ஒரு இலக்கியத்தின் அடிப்படையில் கூறும் இந்த மசாலா படத்தை பல்வேறு இந்துமத இயக்கங்கள் எதிர்க்கின்றன. ஒருவேளை இந்த எதிர்ப்பு கூட விளம்பரத்திற்கான செட்டப்பாகவும் இருக்கலாம். ஏனெனில் தயாரிப்பாளர்களில் ஒருவர் அந்த சந்தேகத்தை எழுப்புகிறார். இது போக ஒரு புகழ்பெற்ற இந்து ராணியை படத்தில் கேவலப்படுத்தி விட்டார்கள் என்பதே இந்து மதவெறியர்களின் குற்றச்சாட்டு. இனி வினாடி வினாவில் பதிலளிப்பதன் மூலம் இதன் வரலாற்றுப் பின்னணியை நீங்களும் அறியலாம்.
- பத்மாவதி திரைப்படத்தின் கதையை தீர்மானிக்கும் பத்மாவத் நெடுங்கவிதையை கி.பி 1540-ம் ஆண்டில் எழுதியவர் யார்?மாலிக் முகமது ஜெயஷி
ராணா பிரதாப் சிங்
காளிதாசர்
துளசிதாசர் - ராஜ்புத் வார்த்தையின் மூலமான சம்ஸ்கிருத வார்த்தையின் பொருள் என்ன?மன்னனின் மகன்
ஆண்ட பரம்பரை
அரசர்களின் அரசன்
சக்கரவர்த்தி - ராஜபுத்திரர்கள் எனப்படும் குழு அல்லது சாதி என்ன தொழிலை அடிப்படையாக கொண்டிருந்தது?போர் தொழில் முதல் விவசாயம் வரை
போர் வீரர்கள்
புரோகிதர் வேலை
கிராம தலைவர்கள் - பத்மாவதி திரைப்படத்தை பன்சாலியுடன் தயாரித்திருக்கும் Viacom 18 நிறுவனம் யாருடையது?முகேஷ் அம்பானி
கோயங்கா
அமிதாப் பச்சன்
அதானி - ராணி பத்மினியின் கதையைக் கூறும் பத்மாவத் நெடுங்கவிதை எந்த மொழியில் எழுதப்பட்டது?அவாதி
சம்ஸ்கிருதம்
இந்தி
உருது - பத்மாவத் காப்பியத்தின்படி ராணி பத்மினி பிறந்த பகுதியாக கூறப்படும் சிம்கலவிபா எந்த இடத்தில் உள்ளது?இலங்கை
பாகிஸ்தான்
ராஜஸ்தான்
குஜராத் - ராணி பத்மினியின் நாடான சித்தூர் மீது படையெடுத்துச் சென்ற அலாவுதீன் கில்ஜியின் காலம் என்ன?கி.பி 1296 – 1316
கி.பி 1415 – 1466
கி.பி 1695 – 1712
கி.பி 1332 – 1378 - அலாவுதீன் கில்ஜியோடு சென்ற இந்த அரசவைக் கவிஞர், தனது மன்னன் பத்மாவதிக்காக படையெடுத்தார் என்று குறிப்பிடவில்லை. அவர் யார்?அமீர் குஸ்ரோ
அல்பரூணி
மாலிக் கபூர்
சையத் அஸ்ரப் - ராணி பத்மினியின் கணவரான ரத்தன்சென்னின் பெயரில் 16 -ம் நூற்றாண்டில் ஒரு மன்னன் சித்தூரை ஆண்டான். அவனது ஆட்சிக் காலத்தில் குஜராத்தின் பகதூர் ஷா படையெடுத்த போது உயர்குடி ரஜபுத்ர பெண்கள் தீக்குளித்தனர். இந்த சம்பவமே இதற்கு முந்தைய பத்மினியின் காலத்தில் கடத்தப்பட்டு காவியமாக்கப்பட்டிருக்கலாம். இதைக் கூறும் வரலாற்றறிஞர் யார்?ரம்யா ஸ்ரீனிவாசன்
ரொமிலா தாப்பார்
டிடி கோசாம்பி
எம் சீனிவாசன் - டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி, சித்தூர் மீது படையெடுத்த ஆண்டு எது?கி.பி 1303
கி.பி 1374
கி.பி 1456
கி.பி 1572 - பத்மாவத் புராணப் பாடல் படி அலாவுதீன் கில்ஜி, சித்தூர் மீது படையெடுக்க முதன்மையான காரணம் என்ன?பத்மினியின் கணவன் ரத்தன்சென்னால் வெளியேற்றப்பட்ட பார்ப்பனர்
அலாவுதீன் கில்ஜியின் பெண்ணாசை
அலாவுதீன் கில்ஜியின் போர் வெறி
ரத்தன்சென்னின் போட்டி ரஜபுத் அரசர்கள் - வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் அலாவுதீன் கில்ஜி யார்?ராஜதந்திரம் மற்றும் சிறப்பான நிர்வாகத்துடன் ஆண்ட மன்னன்
சுகபோகி
படையெடுப்பில் ஆர்வம் கொண்டவர்
கலை இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர் - அலாவுதீன் கில்ஜி, சித்தூரை வென்றிருந்தாலும், வரலாற்றில் பத்மாவதி என்ற பாத்திரத்திற்கு ஆதரமோ தடயமோ இல்லை என்று வரலாற்றறிஞர்கள் கூறுவது உண்மையா?உண்மை
இல்லை
அப்படி அறுதியிட்டு கூறவில்லை - பன்சாலியின் திரைப்படம் சித்தரிப்பது போன்று அலாவுதீன் கில்ஜி ஒரு காட்டுமிராண்டி என்பதை வரலாற்றறிஞர்கள் ஒத்துக் கொள்கிறார்களா?நிச்சயம் இல்லை
ஓரளவுக்கு ஏற்கிறார்கள்
முழுமையாக ஏற்கிறார்கள் - ஒரு ஸ்டிங் ஆபரேசனின் படி பத்மாவதி திரைப்படத்தை எதிர்க்கும் ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா எனும் ராஜபுத்திர சாதி சங்கத்தின் நோக்கம் என்ன?தயாரிப்பாளரிடம் பணம் பறிக்கும் திட்டம்
சாதிப் பெருமை
வரலாற்று அறியாமை - படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து விட்டு இந்தப் படம் ரஜபுத்திரர்களின் குலப்பெருமையை நிலைநாட்டுகிறது என்று கூறிய புகழ்பெற்ற ஊடகவியலாளர் யார்?அர்னாப் கோஸ்வாமி
ராஜ்தீப் சர்தேசாய்
பர்காதத் - இந்தப் படமும், பத்மாவத் நெடுங்கவிதையும் கூறும் பத்மாவதியின் பாத்திரப் படைப்பு என்ன?அழகான பெண் கற்புக்காக தீக்குளிக்கும் பெண்ண்டிமைத்தனம்
படையெடுக்கும் மன்னனின் கைகளில் சிக்காமல் மாண்ட வீரம்
அழகான பெண்ணை அடைய விரும்பும் ஆணாதிக்கம் - இந்தப் படம் ரஜபுத்த்திர மக்களின் உணர்வை புண்படுத்துகிறது என்று கூறிய கட்சிகள் யார்? (இரண்டு தெரிவுகள் செய்ய வேண்டும்)காங்கிரஸ்
பாஜக
கம்யூனிஸ்டு
திரிணாமூல் காங்கிரஸ் - பன்சாலி மற்றும் தீபிகா படுகோனே தலைகளைக் கொண்டு வருவோருக்கு ஹரியாணா பாஜக ஊடக தலைவர் நிர்ணயித்த தொகை எவ்வளவு?பத்து கோடி ரூபாய்
ஐந்து கோடி ரூபாய்
பதினைந்து கோடி ரூபாய்
இரண்டு கோடி ரூபாய் - இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் – ஒரு ராஜபுத்திர ராணி கூன்காட் இல்லாமல் எப்படி நடனமாட முடியும் என்று பாஜக தலைவர் ராஜ் கே புரோகித் கூறியிருக்கிறார். கூன்காட் என்றால் என்ன?முகத்தை மறைக்கும் தடுப்புத் துணி
முழு உடலையும் மறைக்கும் புர்கா
நெற்றியில் பெரிதாக வைக்கப்பட்டிருக்கும் பொட்டு