சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணிய சாமிக்கு முட்டையடி !
வக்கீல்களிடமிருந்து தப்பி நீதிபதியிடம் மேசைக்கு அடியில் ஒளிந்தார் சு.சாமி !
ஹைகோர்ட்டில் சு.சாமிக்கு ஸ்பெஷல் பூஜை!
“சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறை மேற்கொண்டது தவறு” என்று தீட்சிதர்கள் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவில், தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்ய இன்று சென்னை உயர்நீதி மன்றத்துக்கு வந்தார் சுப்பிரமணியசாமி.
எதிர் மனுதாரராக அதே நீதிமன்றத்தின் அறைக்குள் நின்று கொண்டிருந்தார் ஆறுமுகசாமி.
அந்தப் பக்கம் சுப்பிரமணியசாமியும் தீட்சிதர்களும்.
இந்தப் பக்கம் ஆறுமுகசாமியும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களும்.
வெளியே ஈழப்பிரச்சினைக்காக சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தம்.
கொந்தளித்துக் கொண்டிருந்த நீதிமன்ற வளாகத்துக்குள் கறுப்புப் பூனைகளும் நூற்றுக் கணக்கான போலீசாரும் புடைசூழ அசட்டுத் தைரியத்துடன் நுழைந்தார் சு.சாமி.
நீதிமன்ற அறைக்குள் போலீசு நுழையக்கூடாது என்பதால் பூனை, எலியெல்லாம் வெளியே நின்றன. உள்ளே சாமி நுழைந்த்துதான் தாமதம், சு.சாமியின் மூஞ்சியை நோக்கிப் பறந்தன முட்டைகள். எழுந்தன முழக்கங்கள்.
“வேசம் போடுறா ஜெயல்லிதா
கொம்பு சீவுறான் இந்து ராம்
ஊளையிடுறான் சு.சாமி
ஊதிவிடுறான் துக்ளக் சோ
கொழுப்பெடுத்த பார்ப்பனக் கும்பல்
கொக்கரிப்பது கேக்கலியா
பார்ப்பனக் கும்பலின் கொட்டமடக்க
கொதித்தெழுவாய் தமிழகமே !”
ஜனவரி 26 அன்று ம.க.இ.க சென்னை வீதிகளில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள், நீதிமன்றத்தின் அறைக்குள் எதிரொலித்தன. கொதித்தெழுந்த்து தமிழகம்.
மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும் மூஞ்சியில் வழிய, கவிச்சி வாடையுடன், கனம் நீதிபதிகளின் மேசைக்கு கீழே ஓடி ஒளிந்தார் சு.சாமி.
பக்கத்தில் போன ஒரு வழக்குரைஞர் சு.சாமியைக் கூப்பிட்டிருக்கிறார். நமக்கு ஆதரவுக் குரல் போலும் என்று எண்ணி சு.சாமி தலையை நிமிர்த்தியவுடனே, ‘பளார்’ என்று கன்னத்தில் விழுந்திருக்கிறது ஒரு அறை.
“என்ன நடக்கிறது இங்கே? கீப் தி டெகோரம்” என்று சத்தம் போட்டார்கள் நீதிபதிகள் மிஸ்ராவும் சந்துருவும்.
பூனைகளை உள்ளே அனுப்புங்கள் யுவர் ஆனர், என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று அலறினார் சு.சாமி.
பூனைகள் நுழைந்தன.
“என்ன விசயமாக வந்திருக்கிறீர்கள்?” என்று சு.சாமியைக் கேட்டார்கள் நீதிபதிகள்.
“சிதம்பரம் வழக்கில் என்னையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்” என்றார் சு.சாமி.
“சிதம்பரம் வழக்கின் மனுதார்ருடைய (தீட்சிதர்களுடைய) வக்கீல் எங்கே?” என்று கேட்டார்கள் நீதிபதிகள்.
அவர் ஏற்கெனவே எஸ்கே…ப். தீட்சிதர்களோ ஒரு ஓரமாக பம்மிக் கொண்டிருந்தார்கள்.
வழக்கை 19 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்கள் நீதிபதிகள். நீதிமன்றத்தின் உள்ளே முறைகேடாக நடந்து கொண்ட வக்கீல்கள் மீது விசாரணை நடத்துமாறும் போலீசுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.
“கான்ஸ்டிடியூசனல் பெயிலியர். 356 இல் ஆட்சியைக் கலைக்க வேண்டும்” என்று நிருபர்களிடம் அலறிக் கொண்டிருந்தார் சு.சாமி.
கடவுளே பெயிலியர் ஆகும்போது கான்ஸ்டிடியூசன் அப்பப்போ கொஞ்சம் பெயிலியர் ஆவதில் ஒண்ணும் தப்பில்லையே!
tail piece:
அது என்னான்னு கேட்டா…
சென்ற வெள்ளிக்கிழமையன்று சு.சாமி, சந்திரலேகா, விசுவ இந்து பரிசத் தலைவர் வேதாந்தம் ஆகியோர் சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு போனார்களாம்.
வழக்கில் சுப்பிரமணியசாமி ஜெயமடைவதற்காக
தில்லை நடராசப் பெருமானுக்கு
ஒரு மணி நேரம் ஸ்பெசல் பூஜை நடத்தி
பிரசாதமும் கொடுத்தார்களாம் தீட்சிதர்கள்.
ஈஸ்வரனே கைவிட்டுட்டானே…
சிதம்பரத்தில் தீட்சிதர்கள் பூஜை போடலாம்.
ஹை கோர்ட்டில் தமிழ்மக்கள் பூஜை போடக்கூடாதா?
இதுவும் ஸ்பெசல் பூஜைதான்.
இங்கே முட்டைதான் பிரசாதம் ஸ்வாமி
முட்டை மட்டுமல்ல.. அவன் மூஞ்சியில ம்லத்தையும் கரைச்சு அடிச்சிருக்கணும்..
பார்ப்பன நச்சுக்கிருமியை இன்னமும் விட்டு வச்சிருக்கமே!
தியாகு
ஆர்.எஸ்.எஸ்,இந்து முண்ணனி,இந்துமக்கள் கட்சி போன்ற பயங்கரவாதிகள் சிதம்பரத்தில் களமிறங்கி விட்டார்கள்,சுப்பிரமணிய சாமியோ உங்களுக்கு நான் கோயிலை மீட்டே தருவேன் எனக் கூறுகிறார். வேதாந்தியின் வருகைக்கு கூட நாள் குறிக்கப்படலாம்.எல்லாம் நடக்கலாம் .நாம் என்ன செய்யப்போகிறோம் .
\\பக்கத்தில் போன ஒரு வழக்குரைஞர் சு.சாமியைக் கூப்பிட்டிருக்கிறார். நமக்கு ஆதரவுக் குரல் போலும் என்று எண்ணி சு.சாமி தலையை நிமிர்த்தியவுடனே, ‘பளார்’ என்று கன்னத்தில் விழுந்திருக்கிறது ஒரு அறை.ஹை கோர்ட்டில் தமிழ்மக்கள் பூஜை போடக்கூடாதா?\\
\\இதுவும் ஸ்பெசல் பூஜைதான்.
இங்கே முட்டைதான் பிரசாதம் ஸ்வாமி!\\
இதற்கு பெயர் சுயமரியாதை பூசை,
எப்போதும் கடவுளுக்கு பூசை செய்து தன் வாழ் நாள் முழுவது சேவை செய்யும் பிராமணாளுக்கு ஏதோ தமிழனால முடிஞ்சது இவ்வளவுதான்.
//என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று அலறினார் சு.சாமி.
//
முட்டையாலே அடிச்சாலே இந்த கூமுட்டை தலையன் செத்துடுவாரா?? அய்யோ, அய்யோ..
ஒரு தடவை அ தி மு க அன்டர்க்ர்வுன்ட் தரிசனம்.. இப்போ முட்டை அபிஷேசம்.. சாமி சாமி
Hi
உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.
உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.
வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
மக்களுக்கு போராடினால் இது தான் கதி. காந்திக்கும் இது மாதிரி ஆயிருக்கு.
dey venna.. gandhi uh pathi unakku enna theryum, read real history about gandhi and come here , he’s selfish
தட்டிக் கேட்க்க ஆளில்லாத தமிழகம்னு மெதப்பில்தானே காங்கிரஸ் காவாளிகளும், ஆர் எஸ் எஸ் பன்னாடைகளும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அதிலும் இந்த கோமாளி வில்லன் சு.சுவாமியின் திமிருக்கு நியாயமாக ஆசிட் அடைத்த முட்டையை வீசிறியிருக்க வேண்டும்.
புரச்சி
he is a mad . people gave correct punishment. very good.
இவன் காமெடியன்யா!! நெசமான வில்லனுங்க சோவு, ராமு மாமா, அம்சா, தங்கபாலு, மாலனு, தின மலக்காரன் இவனுங்கள விட்டுப் புட்டீங்களே அப்பு! அதுவும் மோடின்னு ஒருத்தன் தெகிரியமா தமிழ் நாட்டுக்கே வந்துபுட்டு போயிருக்காய்ன், மதுரை, சென்னைன்னு ரெண்டு எடத்துல பேசிட்டு வேற போயிருக்காய்ங்கறாங்க, அந்த வில்லனயும் மொட்டைத் தலயனயும் மேடைல வெச்சே அடிச்சிருக்க வேணாமா? அதுவும் புஷ்சுக்கு கொடுத்த மாரி.. சான்ஸ விட்டுப் புட்டீங்க அப்பு, விட்டுப் புட்டீங்க!!!
// மக்களுக்கு போராடினால் இது தான் கதி. காந்திக்கும் இது மாதிரி ஆயிருக்கு.//
என்னது மக்களுக்கு போராடினானா? சரிதான்!
Very very interesting, Cho, Ram will get it soon
/*மக்களுக்கு போராடினால் இது தான் கதி. காந்திக்கும் இது மாதிரி ஆயிருக்கு.*/
Semma Commedy
Commediyala utcha katta commedy
முட்டையால் சு.சாமியை அடித்த வழகறிஞர்களிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். முட்டை ஒரு நல்ல உணவு அதை சு.சாமி மீது அடிக்கலாமா?
சு.சாமி போன்ற கிரிமினல்களுக்கு மலத்தை கரைத்து ஊற்றியிருக்கவேண்டும் அதுதான் சரியானது!
சமிபத்தில் ஈழத்திற்காக மாணவர்கள் நடத்திய போராட்டதை “போராட்டம் நடத்துவதெல்லாம் கல்லூரிக்குப் போகாத ரவுடிகள், பொறுக்கிகளின் வேலை.”
என்றும் தியாகி முத்துகுமரனின் தியாகத்தை கொச்சை படுத்தி பேட்டி கொடுத்தவந்தான் இந்த அயோக்கியன்.
இந்த பார்ப்பன நாய்கள் தெருவில் மக்களால் அடித்து விரட்டபட வேண்டும் .
சென்னை: சென்னை உயர்நீதி்மன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியை வக்கீல்கள் சிலர் அடித்து உதைத்தனர். மேலும் அவர் மீது அழுகிய முட்டைகளையும் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை, தீட்சிதர்கள் பிடியிலிருந்து மீட்கும் வகையில் கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது.
தீட்சிதர்களால் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களைப் பாட முடியாத நிலையும் இருந்து வந்தது.
இதுதொடர்பாக சிவனடியார் ஆறுமுகச்சாமி தலைமையில் நீண்ட காலமாக போராட்டமும் நடைபெற்று வந்தன.
இந் நிலையில், சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு அரசு கொண்டு வந்தது. இதை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது.
இந்த நிலையில் அரசின் முடிவை எதிர்த்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இன்று மனு தாக்கல் செய்வதற்காக உயர் நீதிமன்றத்திற்கு வந்தார்.
இந்த வழக்கை நீதிபதி பி.கே. மிஸ்ரா, நீதிபதி கே.சந்துரு ஆகியோர் விசாரித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களது ஹாலுக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் அங்கிருந்த போலீசாரை வெளியே போக சொல்லிவிட்டு கதவை உள்பக்கமாகப் பூட்டினர்.
பின்னர் நீதிபதிகளின் கண் முன்பாகவே சுப்பிரமணியம் சுவாமியை வக்கீல்கள் சரமாரியாக அடித்து உதைக்க ஆரமிபித்தனர். அடி வாங்கிய வெளியே போக முடியாத நிலையில் உள்ளேயே சுற்றி வந்தார். ஆனாலும் விடாமல் அவரை அறைந்தும், குத்தியும் வழக்கறிஞர்கள் தாக்கினர்.
சுவாமியின் பாதுகாப்புக்கு வந்த சிஆர்பிஎப் படையினரையும் ஹாலுக்குள் வழக்கறிஞர்கள் அனுமதிக்கவில்லை. அழுகிய முட்டைகளை எடுத்து சுவாமியின் முகத்தில் வீசியடித்தனர். அழுகிய தக்காளிகளையும் வீசினர்.
இதனால் உயர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேறு சில வக்கீல்கள் விரைந்து வந்து சுவாமியை மீட்டு அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவாமி இவ்வாறு நீதிமன்றத்தி்ல் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானபோது அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகளைத் தொடர்ந்த சுவாமியை அதிமுகவினர் எல்லா இடங்களிலும் தாக்க முயன்றனர்.
உயர் நீதிமன்றத்தில் வைத்துக் கூட தாக்கும் முயற்சி நடந்தது. அப்போது அவரை வட சென்னை திமுகவினர் தான் காப்பாற்றினர்.
நீதிமன்றத்தையே அசிங்கப்படுத்தும் வகையில் சில மகளிர் அணியினர் சுவாமியின் கண் முன்னே புடவைகளை உயர்த்திக் காட்டிய மகா அசிங்கமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
//பின்னர் நீதிபதிகளின் கண் முன்பாகவே சுப்பிரமணியம் சுவாமியை வக்கீல்கள் சரமாரியாக அடித்து உதைக்க ஆரமிபித்தனர். அடி வாங்கிய வெளியே போக முடியாத நிலையில் உள்ளேயே சுற்றி வந்தார். ஆனாலும் விடாமல் அவரை அறைந்தும், குத்தியும் வழக்கறிஞர்கள் தாக்கினர்.//
சூப்பரப்பு….
wow………
சூப்பர்….சு.சாமி……சூ…சாமி..ஆக்கிட்டீங்களே….!
இப்படியெல்லாம் அடிபட்டாலும் இவனுகளுக்கெல்லாம் புத்திவருமா ….?
சீ….மானங்கெட்ட பொறப்புகள்.
பொங்கும் தமிழகமே, தணிக்காதே உன் வேகத்தை.
போ இன்னும் போ, …..உன் முதுகில் ஏறியிருக்கும் சனியன்களையெல்லாம் சாக்கடையில் தள்ள சரியான தருணமிது.
மதுரையில் பிரேம்குமார் என்ற காவல்துறை எஸ்.பி.க்கு விழுந்த அதே செமத்தியான அடி இப்பொழுது சு.சாமிக்கும் கிடைத்திருக்கிறது. போனசாக, தக்காளி, முட்டையால் அடி.
அடி வாங்கிய சு.சாமிக்கு குழம்பி போயிருப்பார். இந்த அடி எதுக்காக! ஈழ போராட்டத்தில் கருத்து சொன்னதற்காகவா! அல்லது தில்லை விசயத்தில் தலையிட்டதற்காகவா! அதுக்கு பாதி அடி! இதுக்கு பாதி அடியோ!
ஆனா, நீங்க போட்டிருக்கிற படத்தப் பார்த்த,
இவன் எவ்வளவு அடிச்சாலும், எங்க வச்சு அடிச்சாலும் தாங்குவான்யா! என்று தான் சொல்ல தோன்றுகிறது.
அடித்து துவைத்த அத்தனை உள்ளங்களுக்கும் நமது அன்பான நன்றிகள்!
உரிமைகள் மறுக்கப்படும்போதும், பரிக்கப்ப்படும்போதும்
அவற்றை மீட்டெடுக்க,
ஆயுதம் எந்துவதே உரிமையாகிறது…
அங்கே தீவிரவாதம் தலையெடுக்கிறது….
இதை நான் சொல்லவில்லை…..
உண்ணாவிரத மேடையில் கமல் சொன்னார்…..
கம்ப்யூட்டர திறந்ததும் ஒரு திவ்யமான செய்தி..
சூப்பர்.. தூள்.. அருமை… ம்ம்ம்ம் வேறென்ன சொல்றதுன்னே தெரியலயே கலக்கிட்டேள் போங்கோ..
இது தொடர என் மனமர்ந்த வாழ்த்த்க்கள்
சூப்பர்.. தூள்
இவர்களுக்கு எல்லாம் இது போதாது,இவர்களை அரசியலில் இருந்து தனினம படுத்தவேண்டும்
Anbe Sivam Endru Pesikondey… Kaiyil “KADALAI” Thoanda Soolam Vaithirikkum Paarpana Indhu Madha Verikku Vaayil Thinikkapaata Malam namadhu indha Thillai Vetri.
This s.samy dog must be killed we can’t let this animal to live in this world and other animals K.Thankabalu, So, Ram and Karunanithy
தமிழக சட்ட வல்லுனர்களே , தணிக்காதே உன் வேகத்தை.
தமிழினத்தின் முதுகில் ஏறியிருக்கும் சனியன்களையெல்லாம் சாக்கடையில் தள்ள சரியான தருணமிது.
ஒற்றுமை காப்போம்! வெல்வோம்!!!
இந்த செல்லாக் காசு சூப்பிரமணிகளை தமிழ்நாட்டிலிருந்தே அடித்துத் துரத்த வேண்டும். நன்றி வழக்குரைஞர்களே. நானே அடித்தமாதிரி ஒரு பீலிங்.
Sun TV crew held in Vavuniya
P K Balachandran First Published : 17 Feb 2009 05:23:46 PM ISTLast Updated : 17 Feb 2009 06:35:32 PM ISTCOLOMBO: Four Sri Lankan nationals allegedly employed by the Chennai-based SUN TV, were taken into custody together with their equipment in Vavuniya in North Sri Lanka, for suspected links with the LTTE ,the police said on Tuesday.
Police spokesman Ranjith Gunasekera told Daily Mirror that the arrests had been made by the army on Monday, and the detainees were handed over to the Vavuniya police for further investigations.
SUN TV, the police said, had been operating in Sri Lanka without a valid license. It is also probable that the SUN TV crew were trying to video the high security refugee camps in Vavuniya. The LTTE and those sympathetic to it, have been alleging that the refugee camps are but “concentration camps” with the inmates not being allowed to come out or interact with any outsiders except those allowed by the Security Forces and the government. The government has been vigorously denying that the camps are concentration camps, with certificates from the international aid agencies to vouch for this, But it has not allowed independent media institutions and journalists to meet the refugees, despite persistent requests, especially from the foreign media.
\\இதுவும் ஸ்பெசல் பூஜைதான்.
இங்கே முட்டைதான் பிரசாதம் ஸ்வாமி!\\
இதற்கு பெயர் சுயமரியாதை பூசை,
BRAVO!!!
Vinavu! Please attach the video clip if available.
itha paarunga….
http://www.writermugil.com/?p=380
முத்துக்குமார் தீக்குளித்தது உலகம் அறிந்ததே! சுப்பிரமனிய சுவாமி அதை ஒரு கொலையாக இருக்கவேண்டும் என காவற்துறை விசாரிக்க வேண்டும் எனக் கருத்துக் கூறியிருந்தார்.
ஒன்றில் அவர் முட்டாளாக இருக்க வேண்டும். அல்லது,
ஒரு சமூக விசமியாக இருக்கவேண்டும்.
பேச்சுரிமை அவருக்கு உண்டு என்றால், முட்டை எறிதல் ஒன்றும் கொலை முயற்சி இல்லை.
அவர் மற்றவர்களை முட்டாளாக்குவதை ஜனநாயகம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்காது.
முட்டை எறிந்தவர்களை அட்க்க முற்பட்டால், நாளை அவர்கள் கடும் தீவிரவாதிகளாக மாறுவார்கள்.
விசமிகள்தான் தீவிரவாதிகளை உருவாக்குகின்றார்கள்.
புள்ளிராஜா.
மனிதர்களிடம் பேசலாம்:
விவாதிக்கலாம்:
சில ஜென்மங்களிடம்
முட்டையால்
பேசுகிற பேச்சு!
அழுகிய தக்காளியால்
பேசுகிற பேச்சு
அடி, உதையால்
பேசுகிற பேச்சு தான் சரி!
முகிலின் நல்ல பகிடி
++++++++++++++++++++++++++++++
கோழிகளின் கவனத்துக்கு!
இது ஐஎஸ்ஐ கோழிகளின் சதி
– சு.சுவாமி கொக்கரிப்பு
நாமக்கல், பிப். 17 – தன் மேல் நடத்தப்பட்ட முட்டைவீச்சுக்குக் காரணம் ஐஎஸ்ஐதான் என்று சு.சுவாமி தலைமறைவு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது –
‘சித்தம்பரம் தீட்சிர்ஸ்க்கு ஆதரவா நான் மனுதாக்கல் செய்ய போனுது. அப்போ வக்கீல்ஸ் முட்டைல என்ன தாக்னாங்க. அந்த முட்டைஸ் எங்கர்ந்து வந்த்துதுனு என்க்கு தெர்யும். எல்லாம் ஒஸாமா பின்லேடன் இஸ்லாமாபாத்லே சீக்ரட்டா நடத்துற ஒரு கோலி பண்ணேல இர்ந்து வந்தது. ஐஎஸ்ஐ மூல்மா இந்த்யாவுக்குள்ளே மும்பை வழ்யா சப்ளை ஆகியிருக்கு. முட்டே கடத்துன எல்லாவங்க பத்தியும் எல்லா டீடெய்லும் என் லேப்டாப்லே இருக்கு. இதுபத்தி எனக்கு ஏற்கென்வே ஒபாமா தக்வல் கொட்த்துட்டார்.
எலெக்ஷ்ன் முட்யற வர, இந்த்யாவுக்குள்ளே முட்டயே தடை செய்ணும்னு நான் கேஸ் போடப்போறேன். சத்துணவிலே முட்டே கொடுத்து ஸ்டூடன்ஸ்கிட்டே வன்முற வளர்க்கற கர்ணாநிதியே நான் கண்டிக்றேன். இந்த்யாவுக்குள்ள எல்லா கோலிக்கும் கருத்தடே செய்ய சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தர்வு போட்ணும். ஆம்லெட் சாப்டவறங்களே தேஸ்ய பாத்காப்பு சட்டத்லே கைது செய்ணும். எல்லா கோலிப்பண்ணே உரிமையாளர்களேயும் ‘பொடா’வுலே உள்ள போட்ணும்.
நூறு வாத்து முட்டே, வன்னிலே இர்ந்து ராமேஸ்வர்ம் வள்யா சப்ளை ஆகிருக்கு. அது சோ தலேல எர்யறதுக்காகன்னு என்க்கு காஞ்சி மட்லேர்ந்து இன்பர்மேஷ்ன் வந்த்ருக்கு. சோ, ஜாக்ரதயா இர்க்கணும்னு கேட்டுக்றேன்.’
இவ்வாறு அவர் தன் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
http://www.writermugil.com/?p=380
++++++++++++++++++++
நன்றி முகில்
தமிழகத்தில் சூடு, சொரணை உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் தான் இந்த நிகழ்வு.
மாப்பு….
வெச்சிடான்கய்யா… ஆப்பு…..
சுப்பு அம்பி… ஜெயா மாமிக்கிட்ட கம்லைனட் பண்ணிடேளா.. இல்லையா…..
மொகத்த கழுவிக்கோங்கோ… கவுச்சி வாட அடிக்கறது….
– சென்னைத்தமிழன்
கருத்து வேறுபாட்டை கருத்தால் மோதி வெல்லுங்கள் – வாதம் செய்ய முடியாதவன்தான் வன்முறையில் ஈடுபடுவான். சுப்ரமணிய சாமி ஒரு கோமாளிதான் – அதற்காக அவர் மேல் முட்டை அடிப்பது சரியாகிவிடுமா? நாளை வினவு கருத்து எனக்கு பிடிக்கவில்லை என்று நானும் முட்டை அடிக்கலாமா? பிறகு முட்டை யாரிடத்தில் இருக்கிறதோ அவர்கள் சொல்வதுதான் சரி என்று ஆகிவிடாதா? புள்ளி ராஜா முட்டை எரிந்தது கொலை முயற்சி இல்லை என்று பெருமைப்பட்டுக்கொல்கிறார். அப்புறம் சீமானின் டயர் எரிந்தது என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு குறை சொல்வது?
பதிவும் மறுமொழிகளும் மிக கேவலமாக இருக்கின்றன. வினவு தளத்தில் இதை நான் எதிர்பார்க்கவில்லை.
நீண்ட நாட்கள் ஆகிவிட்டன, அதனால் மீண்டும் குறிப்பிடுகிறேன். நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன். பார்ப்பன திமிர், குடுமி, அம்பி போன்ற பல கருத்து பரிமாற்றங்களை எதிர்பார்க்கிறேன்.
அய்யா ஆர்.வீ , நீர் பார்ப்பனர் என்பதனால் தானே சூசாமிக்காக பேச வந்திருக்கிறீர்கள். இதில் என்ன அப்ரூவர்போல ஆக்டிங் வேறு. சூசாமி கோமாளி மட்டுமல்ல அதிகார வர்க்கத்திலுள்ள வலுவான தொடர்பு மூலமாக மக்களின் வயிற்றிலடிக்கும் கொடூரன். அவனிடத்தில் பணமும் அதிராகமும் உள்ளது. கருத்தை கருத்தால் மோதுவது போல பணத்தாலும் அதிகாரத்தாலும் மோத நாங்க ரெடி… ஆனால் எங்களை போன்ற ஏழைகளிடம் பணமும் இல்லை அதிகாரமும் இல்லை முட்டை இருக்கிறது.
பிறகு, சூசாமி ஒரு கூமுட்டை என்று மனதின் ஓரத்தில் கருதியதால் தான் முட்டை…..
ஆர்.வி பார்பனர் என்பதர்காக வந்தாரா இல்லை முட்டை சுப்புவை பற்றி தெறியாமல் வந்தாரா. அவரு அமெரிக்காவுல இருந்து படிக்குறாரு இங்க தமிழ்நாடே கொண்டாடுது. முட்டை சுப்பு எத்தன பேர் வயத்தெறிச்சல கொட்டிருக்கான்னு இப்பதான் புரியுது.
இவர் போன்ற வங்குரோத்துக் கோமாளி அரசியல்வாதிக்கு இதை விட மேலும் கிடைக்கும்.. பேசாமல் சினிமாப் பக்கம் வந்தால் வடிவேலுவுக்கு சவால் விடலாம்..
கோழிகள் பாவம்.. 😉
வினாவுக்கு வாழ்த்துக்கள்.. tamilstudioவழங்கும் முதலாவது விருது உங்களுக்கு என அறிந்தேன் .. கலக்குங்கள்..
அய்யா முரளிகிருஷ்ணன்,
நீர் பார்ப்பனர் இல்லை என்பதால்தானே சு. சாமியை எதிர்க்கிறீர்? இதில் என்ன சு. சாமியின் கோமாளித்தனம், அதிகார வர்க்கம் என்று வேஷம் வேண்டிக்கிடக்கிறது?
முரளி அவர்களே, இது உங்கள் வரிகள். சும்மா மாற்றி எழுதி இருக்கிறேன். அந்த காலத்தில் பறையன் என்று திட்டினார்கள், நீங்கள் பார்ப்பான் என்று திட்டுகிறீர்கள். என்ன வித்தியாசம்? சு. சாமியிடமும் முட்டை வாங்க பணம் இருக்கும், அதனால் அவர் உங்கள் மீது முட்டை வீசுவது சரியாகிவிடுமா?
ஏனய்யா விவாதத்தில் ஜாதி பார்க்கிறீர்கள்? நான் கருப்பா சிவப்பா குட்டையா நெட்டையா என்பதை விட்டுவிட்டு விவாதிக்க முயற்சி செய்யுங்களேன்! சு. சாமி சொல்வது சரி இல்லை. ஆனால் தவறான வாதம் செய்பவர்கள் மீது முட்டை வீசுவது சரி என்றால் நீங்கள் கூடத்தான் தவறாக ஜாதியை இழுக்கிறீர்கள். உங்கள் மீது நான் முட்டை வீசலாமா?
கருத்தைக் கருத்தால் மோதுவதுன்னா என்னங்கிறதை பத்தி ஷோபா சக்தி ஒரு புதினத்தில் எழுதி இருப்பார்..
‘எதுடா கருத்து.. ஆயிரம் பேருக்கு முன்னாடி..உன் பெண்டாட்டியை நான் …ணும்னு ஒருத்தன் சொல்லுவான். அதைக் கருத்துன்னு சொல்லிக்கிட்டு கருத்தைக் கருத்தாலே மோதுவீயா” சொன்னது ஷோபா சக்தி..
கடைந்தெடுத்த கிரிமினல் கூடாரமான தீட்சிதப் பார்ப்பன வெறியனுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கிட்டு வந்த இந்த சூனா.சாமி முத்துக்குமாரின் சாவையே கொச்சைப்படுத்திப் பேசினவன்.. அதை எல்லாம் கருத்துன்னு கருதுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!
ஆர்.வீ..! ஷோபா சக்தி சொன்ன அதே உதாரணத்தை உனக்கும் பொருத்திப்பாரு.. சூடு இருந்தா உனக்கும் கோபம் கொப்பளிக்கும்..இல்லைன்னா நீ மானங்கெட்ட பெய..
குப்பன்
அருமையான கருத்து ஆர்வி,
நீங்கள் என்ன சாதி என்று யாருக்கும் தெரியாது ஆனால் ஒவ்வொருமுறையும் நான் பிராமணன் என்று விளக்கு பிடித்து சொல்லுகிறீர்களே எதற்காக?
பார்ப்பனீயம் என்றால் என்ன என்று கேள்வி கேட்பீர்களே அதுதான் உங்களின் பதில்.”நான் பிராமணன் ஆனாலும் சாதி பார்ப்பதில்லை”
ஆர்வி எதற்காக இந்த நாய்க்கு ஆதரவாய் பேசுகிறீர்கள்? ஈழத்திலே செத்துக்கொண்டிருக்கும் மக்களை கொச்சை படுத்தும் இந்த சொறிநாய்மேல் தங்களிடம் ஏன் கரிசனம்?
உங்கள் கோயிலை விபச்சார விடுதியாக்கிய தீட்சிதருக்கு ஆதரவாய் உறுமுகிறாரே ஏன் அவர் மேல் உங்களுக்கு பாசம்?
சாதியைத்தவிர வேறென்ன.
உழைக்கும் மக்கள் பாதிக்கப்படும் போது யாரும் மனித உரிமைகளை பற்றி பேச மாட்டீர்கள் ஆனால் அதிகாரவர்க்கத்தின் மீது காயம் பட்டால் பலரது மனமும் துடிக்கும் .
இவ்வளவு செஞ்சவங்களுக்கு அடி வாங்கிய மூஞ்சியை செல்போனில் ஒரு போட்டோ பிடிக்க தோணலியா ? முன்யோசனை போதவில்லை.
RV: “மீண்டும் குறிப்பிடுகிறேன். நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன். பார்ப்பன திமிர், குடுமி, அம்பி போன்ற பல கருத்து பரிமாற்றங்களை எதிர்பார்க்கிறேன்.”
RV: “ஏனய்யா விவாதத்தில் ஜாதி பார்க்கிறீர்கள்? நான் கருப்பா சிவப்பா குட்டையா நெட்டையா என்பதை விட்டுவிட்டு விவாதிக்க முயற்சி செய்யுங்களேன்!”
மன்னிக்கவும் ஆர்.வீ நான் பிறப்பால் பார்பான் தான்.
ஆனால் அதை நான் சொல்லிக்கொள்ளவில்லை நீங்கள் சொல்லிக்கொண்டீர்கள். அதை தவிர்க்காமல் என்னை கடிந்து என்ன பயன். இப்பவும் சொல்கிறேன் சு.சாமியை முட்டையால் அடித்தால் முட்டைக்குத்தான் கேவலமே தவிர சு.சாமிக்கு அல்ல ஏனென்றால், அவன் வெட்கம், மானம், ரோசம், சூடு, சுரணை என முற்றும் துறந்தவன். புஷ்ஷின் மேல் ஷூ எறிந்தார்கள், பில் கேட்சின்/ சார்லஸ் மேல் ‘பை’ எரிந்தார்கள் இதெல்லாம் உலகெங்கிலும் உள்ள கலக நடைமுறை இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.
இந்து மத்தஃதில் ஹோலி என்ற பண்டிகை உண்டு தெறியுமல்லவா?
கலகம் அவர்களே,
ஏற்கனவே பல முறை சொல்லி இருக்கிறேன் – நீங்கள் கேள்வி கேட்டதால் பதிவே எழுதி இருக்கிறேன். நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன் என்று சொல்வது ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே – நான் அதை சொல்லாவிட்டால் தமிழ் ப்ளாக் உலகில் பலரும் நீ குடுமியாக இருக்க வேண்டும், அதனால்தான் எதிர் கருத்து சொல்கிறாய் என்று கிளம்புகிறார்கள். அது எனக்கு மிகவும் கடுப்பை கொடுக்கும் விஷயம். அதனால் நானே முன் எச்சரிக்கையாக சொல்லி விடுகிறேன்.
அது சரி, கலகம் நீங்கள் என்ன தருமி பரம்பரையா? கேள்வி மட்டும் கேட்பீர்கள், பதில் சொல்ல மாட்டீர்களா? பல கேள்விகள் கேட்டீர்கள், பொறுமையாக பதில் சொன்னேன். நான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட நீங்கள் பதில் சொல்ல வில்லையே, அது ஏன்?
சு. சாமி கோமாளிதான், முட்டாள்தான், கண்டிக்கப்பட வேண்டிய பல வாதங்களை வைப்பவர்தான். நான் அவரது வாதங்களை ஆதரிக்கவில்லை என்பதற்காக அவருக்கு வாதம் செய்யும் உரிமை மறுக்கப்படக்கூடாது. முட்டாள்தனமான கருத்துகள் சொல்பவர்களை எல்லாம் அடிக்கலாம் என்றால் நீங்கள் சொல்லும் பல கருத்துகள் எனக்கு முட்டாள்தனமாக தெரிகிறது. உங்களை அடிக்க வேண்டும் என்று நான் சொன்னதில்லை, சொல்லவும் போவதில்லை. உங்களுக்கு ஒரு value system, சு. சாமி பார்ப்பனர் என்பதால் அவருக்கு வேறு ஒரு value system என்று நான் வைத்துக் கொள்ளப் போவதில்லை. நீங்களும் அப்படி வைத்துக் கொள்ளாதீர்கள் என்றுதான் தலை தலையாக அடித்துக் கொள்கிறேன்.
தீட்சிதருக்கு ஆதரவாக உறுமுகிறார், அவர் மேல் என்ன கரிசனம் என்று கேட்டீர்கள். காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவர் மீது உங்களுக்கு கரிசனம் உண்டா? பார்ப்பானையும் பாம்பையும் பார்த்தால் பார்ப்பானை முதலில் அடி என்று ஜாதி வெறி பிடித்து பேசியவர் நல்ல கருத்துகளை சொன்னதே இல்லையா? கீழ் வெண்மணியில் கூலி கேட்ட கம்யூனிஸ்ட்கள்தான் குற்றவாளிகள் என்று சொன்னதற்காக அவர் சிலை மீது முட்டை அடிப்பீர்களா? பாம்பையும் என் ஐந்து வயது பெண்ணையும் பார்த்தால் என் பெண்ணை முதலில் அடிக்க வேண்டும் என்று சொன்னவர் மீதே கரிசனம் இருக்கும்போது சு. சாமியின் கருத்து சுதந்திரத்துக்காக நான் வாதாடக் கூடாதா என்ன?
உழைக்கும் மக்கள் மீது எனக்கு கரிசனம் இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? நான் என்ன உட்கார்ந்து சாப்பிடும் வர்க்கமா? நீங்கள் என் செலவுக்கு பணம் கொடுக்கிறீர்களா என்ன? மேலும் உழைக்கும் மக்களுக்கு மட்டுமே உரிமைகள் உண்டு, அதிகார வர்க்கத்துக்கு எந்த உரிமையும் இல்லை என்பதுதான் ஃபாஸிஸத்துக்கு செல்லும் சாலை.
குப்பன்,
ஷோபா சக்தி சொன்னதை விட ஆலிவர் வெண்டல் ஹோல்ம்ஸ் என்பவர் நல்ல உதாரணம் சொல்லி இருக்கிறார் – ஆயிரம் பேர் உள்ள தியேட்டரில் தீ, தீ என்று கத்துவது என்று கருத்து சுதந்திரம் இல்லை என்று.
உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறீர்கள். சு. சாமி சொல்வது அவரது கருத்து இல்லாமல் வேறென்ன?
பிரபா,
கழகத்துக்கு எழுதிய மறுமொழியை படிக்கவும். இது பற்றி பல முறை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் இதே தளத்தில் பேசியதால் இந்த முறை முழு விளக்கமும் அளிக்கவில்லை.
முரளி,
சு. சாமிக்கு வெட்கம் இல்லை என்பதற்காக அவர் மீது முட்டை வீசுவது சரியாகிவிடுமா என்று யோசித்துக்கொள்ளுங்கள்.
எது வன்முறைங்க ஆர் வீ ஐயா? நந்தன எரிச்சதா, வள்ளலாராப் போட்டுத் தள்ளியதா, ஒரு மொத்த இனத்தையே பல நூற்றாண்டுகளா
கறுப்பன், கடையன், கீழானவன், பாலியல் தொழிலாளி மவென்னு கதை புனைஞ்சு தீண்டத்தகாதவென்னு ஒதுக்கி வெச்சதா, அவனுங்க சகோதரனுங்கள விட்டே அவனுங்க கூட சண்ட போட வெச்சு ஆண்டாண்டுகளா சாதிப்போரை மூட்டி விட்டது வன்முறை இல்லீங்களா ஐயா? நாங்க குனிஞ்சு குனிஞ்சு நடந்து துண்டக் கக்கத்துல வெச்சுக் கிட்டே போனோமே ஐயா? எங்க பெண்டுக வெத்து மாரோட போனாகளே ஐயா? படிக்கவே உடலீங்களே ஐயா? போங்க ஐயா!
இதுலாம் வன்மொற இல்ல.. கூமுட்ட அடிச்சாத் தான் வன்முற… ?!!?
எனக்கும் இதுல உடன்பாடு இல்லீங்க ஐயா. ஏன்னா அடிபட்டிருக்க வேண்டியது ‘hanibal’ மோடியும் ரெம்பா நாளா காட்டிக் கொடுப்புகள்ள ஈடுபட்டு வரும் சோவும் (80களிலேயே ஈழப் போராளி பயிற்சி முகாம்கள் எஙெங்க இருக்குன்னு போயி ஜெயவர்த்தனனுக்கு வரை படம் வரெஞ்சு கொடுத்துட்டு வந்தவென் ஆச்சே), மேட்டுக் குடி திமிரன் ராமும் தானுங்க ஐயா.. ஆஃப்டர் ஆல் நம்ம கூ.மு.சாமி வெறும் கோமாளி தானுங்களே!!
மேல போட்டா பட்டியலு சின்னதுங்க ஐயா, நீளமா ஒரு பட்டியல் தமிழங்கிட்டவும் இருக்குங்கையா. ஆனாலும் அம்புட்டையும் மறக்கத் தேன்யா விரும்புறோம். ஆனாலும் பாருங்கைய்யா, நிகழ் காலத்துலயும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரா, தமிழ் மொழிக்கு எதிரா, ஈழ விடுதலைக்கு எதிரா, தமிழரு ஒண்ணாவதுக்கு எதிரா கெளம்பிருக்கரெங்க யாருன்னு பார்த்தா எவன்லாம் எங்களா வரலாற்றுல அடக்கி ஆண்டானோ , சூழ்ச்சி பண்ணானோ அவனு தானுங்களேய்யா!!!
பார்ப்பனியத்தை காக்கும், பார்ப்பனியத்துக்காக உருவான ‘இந்து’யா, அதன் தேசியம், அசிங்கம் புடிச்ச செயக்கை மொழி சமசுகிருதத்த மையமா வெச்சு, அருவருப்பானா பொராணங்களோட ஒற்றை ஓரினத்த, மதத்த புனைய, காக்க முற்படும் அரசு கிட்ட அதிகார வருக்கத்துக் கிட்ட நாயமோ, முறையீடோ செய்ய முடியாதுங்க ஐயா.. ஆகவே முடிஞ்சது உள்ளே கனலும் நூற்றாண்டுக் கோவத்த குறைஞ்ச பச்சம் கூமுட்டை, தக்காளில மட்டும்
தானுங்களே காட்டா முடிது…
// ஷோபா சக்தி சொன்னதை விட ஆலிவர் வெண்டல் ஹோல்ம்ஸ் என்பவர் நல்ல உதாரணம் சொல்லி இருக்கிறார் – ஆயிரம் பேர் உள்ள தியேட்டரில் தீ, தீ என்று கத்துவது என்று கருத்து சுதந்திரம் இல்லை என்று.//
இருந்தாலும் குப்பனுக்கு நல்ல ஷொட்டுங்கைய்யா..
‘சோ’பா செக்திலாம் ஒரு ஆளுன்னு அவன் ஒதாரணத்தோட வந்ததுக்கு!!
ஆப்பு ஃபார் பாப்பு அவர்களே,
பேசுகிற விஷயத்தை விட்டு எங்கெங்கோ போகிறீர்கள். பல நூறாண்டுகளாக என் முன்னோர்களுக்கு, ஏன் எனக்கே பல கொடுமைகள் நடந்திருக்கின்றன, அதனால் சு. சாமிக்கு அவர் கருத்தை முன் வைக்க உரிமை கிடையாது என்கிறீர்களா? நாட்டில் சட்டங்கள் இருக்கின்றன, சாமி அந்த சட்டத்தை மீறாத வரையில் அவர் எந்த முட்டாள்தனமான கருத்தையும் முன் வைக்கலாம். அது முட்டாள்தனம் என்று கை கொட்டி சிரிப்போம், போடா கேனையனே என்று அவரை ஒதுக்குவோம், கடுமையான மொழியில் மாற்று கருத்துகளை வைப்போம். அவர் மீது முட்டை அடிக்கலாம் என்று சொன்னால் நாளை சீமானின் கார் டயரை எரித்தும் சரி என்று ஆகி விடும். உங்கள் வீடு புகுந்து ஒருவர் உங்களை அடிக்கலாம், ஏனென்றால் நீங்கள் அவர் ஜாதியை, மதத்தை, குடும்பத்தை, மனைவியை, குழந்தைகளை, தாத்தாவை, குல தெய்வத்தை, பள்ளியை ,கல்லூரியை, மொழியை, மாகாணத்தை, கேவலப்படுத்திநீர்கள் என்று அவர் நினைக்கிறார். கவனிக்கவும், நீங்கள் கேவலப்படுத்த வேண்டும் என்று நினைக்காமல் இருக்கலாம். அவர் கேவலப்பட்டுவிட்டேன் என்று நினைத்தால் அதுவே போதும்.
இது சரி அல்ல. வினவு தளத்தில் இப்படி ஒரு கட்டுரை வந்தது வருத்தப்பட வேண்டிய விஷயம்.
நானு இது வரை படர்க்கையில தானுங்க ஐயா பேசிட்ருக்கேன். நீங்க அத முன்னிலையா எடுதுக்கிட்டு தன்னிலையாச் சொல்லுறீங்க எங்க முன்னோருன்னு. உங்க முன்னோருக்கு ஆத்தங்கர வழிய நெறைய பிரம்மதேயங்கள் கெடச்சிருக்கும் ஐயா, எங்க முன்னோருக்கு மலமும், சூடும் தானுங்க ஐயா கெடச்சுது.
போகட்டும் நானு ஏன் இவ்வளோ பட்டியல் போட்டு எழுதியிருக்கேன்னு புரியாதது வருத்தம் தானுங்க ஐயா. பார்ப்பனியருக்கு எங்கைய்யா சட்டம் திட்டம் ? அவங்களக் காக்கத் தானுங்கைய்யா இந்த தேசமே?
ரெம்ப நாள் சூழ்ச்சியால தன்ன அடிமயா வெச்சிருந்து பிழிஞ்செடுத்து, ஒண்ணு சேர உடாமத் தடுத்து பிரித்தாண்ட ஒரு எசமான, இறுதில தெகிரியம் வந்து அடிமையாளு மூஞ்சில ஒரு அறை வுட்டுட்டு வெளியேறுறது
மாரித் தானுங்க ஐயா.. அடிமையோட ஆண்டாண்டூ கோபத்துக்கு ஒரு அறை நாயம் ஐயா, அவன் இதுவர பண்ண தமிழர் எதிர்ப்பு செயல்களுக்கு கூமுட்ட, தக்காளி நாயமுங்க ஐயா.
மத்தப் படி சட்டப் படி தப்பாவே இருக்கட்டுமுங்க ஐயா. அறச்சீற்றமுனு ஏதும் கேளிப்பட்டிருக்கீங்களா ஐயா? அத்தோட சீமான், பாண்டியன் காரைலாம் எரிச்சவெங்க இப்ப உள்ள தேன் கம்பி எண்ணிட்டு இருக்காங்க போல..! :-p ஆனா கு.முட்ட அடிச்ச வக்கீலுங்கள உடனே உள்ள போட்ட்ருவாங்க ஐயா. அதன் மூலம் நீதி நிலைச்சிடும்! மனு நீதி!
ஆர்.வி ஐயா,
குமுட்டைங்க என்ன கருத்து வேணா உளறலாம். மெத்த படித்த மேதாவி சு.சாமி பேசலாமா?
அதுக்குத்தான் முட்டை அடி. இனி கொஞ்சம் யொசிப்பான் தாயொளி
ஆர்.வி,
நீர் என்ன சொல்ல வருகிறீர்? வன்முறை கூடாது என்கிறீர் அல்லவா? சரிதான் – புரிகிறது.
எது வன்முறை? எது எதிர் வன்முறை ? அதனதன் வடிவங்கள் என்ன வென்று புரிந்து கொள்ள நீங்கள் முயல்வது நல்லது..
சுப்பிரமணியசாமி, சோ, இந்து ராம், ஜெயா, காங்கிரஸ் – போன்றோர் கொண்டிருக்கும் கருத்தியல் ரீதியிலான வன்முறையின் தாக்கம்
அவரை முட்டையால் தாக்கிய தோழர்கள் செய்த வன்முறையை விட பலப் பல மடங்கும் வீரியமும் தாக்கமும் கொண்டது. பல தமிழ் மக்களின் வாழ்க்கை சம்பந்தப் பட்டது.
உங்க ஊட்ல எழவு விழுந்து நீங்களெல்லாம் மனசொடிந்து உட்காந்திருக்கும் போது ஒரு நாதாறி நாய் உள்ளே வந்து, சமய சந்தர்ப்பம் பாராமல் டமுக்கு டிப்பா டப்பா என்று ஆட்டம் போட்டால் அவன் சங்கை அறுத்து எறியும் வெறி உங்களுக்கு வரும் தானே? அட…. குறைந்தது அவன் பொடனியில் ஒன்று போட்டு வெளியே தள்ள மாட்டீர்கள்?
அய்யா.. அங்கே எங்கள் உறவுகள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்… எங்கள் பெண்களின் கருப்பைக்குள் கைய்யை விட்டு குழந்தைகளை கொல்கிறான் சிங்கள வெறியன்… எங்கள் இனமே கருவறுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இது போன்ற ராஸ்கல்களின் சிங்கள ஆதரவுப் பேச்சு எங்கள் மனதில் எந்தளவுக்கு ரணத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று உங்களால் உணர முடியவில்லையா?
//வினவு தளத்தில் இப்படி ஒரு கட்டுரை வந்தது வருத்தப்பட வேண்டிய விஷயம்.//
ஆம்…. பலரின் சந்தோஷம் சிலரின் வருத்தமாய்த்தான் இருக்கும். எல்லோரையும் எல்லா நேரத்திலும் சந்தோஷப்படுத்தி விடமுடியாது தான். இன்றைக்கு தமிழ் நாட்டில் மனித சங்கிலியில் கைகோர்த்து நின்ற முப்பது லட்சம் தமிழர்களிடம் போய்க்கேளுங்கள் – இந்த சம்பவத்துக்காக அவர்கள் சந்தோஷப்படுவார்கள்.. உங்களைப் போல் “லாரி லோடுக்கு நாலு பேர் குறையர” கூட்டம் ஒன்றிரண்டு பேர் வருத்தப் படுவீர்கள் தான்.. ஆனால் அதற்கும் சேர்த்து நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்கிறோம்.
கருத்துரிமை பற்றிச் சொன்னீர்கள் அல்லவா? எங்கள் மக்கள் உயிரோடு வாழும் உரிமையைக் கேலி பேசுவதற்கு எங்களிடமே கருத்துரிமை கேட்கிறீர்கள் அப்படித்தானே?
எனக்கு ஏனோ சம்பந்தமில்லாமல் சில வருடங்களுக்கு முன் அக்யூஸ்டு ஜெயேந்திரன் ஜெயில் ப்ரவாஸம் போயிருந்தபோது அதைப் பற்றி பத்திரிகைகள் எழுதியதற்கு குடுமிகள் தங்கள் பத்திரிகைகளில் ”பத்ரிகா தர்மம்” குறித்து நீட்டி முழக்கியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. உரிமைகளில் ஆர்வம் கொண்டவரல்லவா நீங்கள்? உங்களுக்கு நினைவில்லையென்றால் அப்போது வந்த ( உங்கள் கலெக்ஷனில் இருக்கும் ) துக்ளக் இதழ்களையெல்லாம் வாசித்துப் பாருங்கள்.
//சு. சாமிக்கு வெட்கம் இல்லை என்பதற்காக அவர் மீது முட்டை வீசுவது சரியாகிவிடுமா என்று யோசித்துக்கொள்ளுங்கள்//
உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன். வெறும் முட்டை வீசியது சரியில்லை என்று தான் நானும் நினைக்கிறேன் – அமில முட்டை வீசியிருக்க வேண்டும். கவலையை விடுங்கள் அடுத்த முறை சரி செய்து விட்டால் போகிறது.
ஆப்பு ஃபார் பாப்பு அவர்களே,
என்றோ படித்த படர்க்கை என்ற வார்த்தை எல்லாம் பயன்படுத்துகிறீர்கள். தமிழ் அறிந்தவர் போலிருக்கிறது.
ஆனால் நான் ஒன்றை பற்றி பேசுகையில் நீங்கள் இன்னொன்றைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். சு. சாமிக்கு தன் கருத்தை முட்டை அடி பயம் இல்லாமல் தெரிவிக்க சுதந்திரம் இருக்க வேண்டுமா இல்லையா என்பதுதான் கேள்வி. பிரம்ம தேயங்களும் மலம் சுமப்பதும் பேச வேண்டிய விஷயங்கள்தான் – ஆனால் இந்த பதிவும் சரி, இதில் உள்ள மறுமொழிகளும் சரி, அவற்றை பற்றி பேசவில்லை. சு. சாமி பார்ப்பனர், முட்டாள், தீசிதர்களுக்காக வாதிடுகிறார், தமிழ் சரியாக தெரியாது, அதனால் அவர் மீது முட்டை அடிக்கலாம், முட்டை பத்தாது என்றுதான் இருக்கின்றன. இதை நினைவில் கொள்ளுங்கள். அவருக்கு அந்த சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
சீமானின் காரை தாக்கியவர்கள் சிறை சென்றார்களா என்று கேட்டிருந்தீர்கள். உறுதியாக தெரியாது, ஆனால் சென்றிருக்க மாட்டார்கள். சு. சாமியை, கவனிக்கவும் அவரது காரை அல்ல, ரோட்டோரத்தில் தாக்கவில்லை, நீதி மன்றத்தில், நீதிபதியை சாட்சியாக வைத்துக்கொண்டே தாக்கியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? ஒரு எஃப். ஐ. ஆர். இது வரை போட்டு விட்டார்களா? தெரிந்தால் சொல்லுங்கள்.
சிறை சென்றார்களோ இல்லையோ, சீமானின் காரை தாக்கியவர்கள் சிறை செல்ல வேண்டியவர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதே போல்தான் சு. சாமியின் மேல் முட்டை அடித்தவர்களும் சிறை செல்ல வேண்டியவர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்ன, முட்டை அடித்தவர்களுக்கு ஒரு நாள், இரண்டு நாள் சிறை போதும். காரை தாக்கியவர்களுக்கு ஒரு மாதம், இரண்டு மாதம் ரேஞ்சில் சிறை தண்டனை இருக்க வேண்டும்.
சீமானுடனும் எனக்கு பல கருத்து வேறுபாடுகள் உண்டு என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.
ஆர்.வி. பாக்கிஸ்தானும் லூசனுங்கதான் அதுக்காக அடிக்காமல் இருக்கலாமா? பிராமண ஆளும் வர்க்கங்களின் ஊடக சுதந்திரங்களுக்கும் கருத்துச் சுதந்திரங்களுக்கும் மிக அண்மையான உதாரணம் சொல்கிறேன். ராஜஸ்தானில் (இந்தியா) ஒரு முஸ்லீம் விவசாயி வீட்டடில் விமானக்குண்டுவீச்சு. சொந்த நாட்டு விமானம் குண்டு வீசியதாக அவர் பொலிசில் புகார் சொல்ல விமானப்படை சொல்லிவிட்டது தாங்கள் வீசவில்லை என்று. இவ்வளவற்றிக்கும் விமான குண்டு வீச்சுப் பயிற்சி தளத்திற்கு அருகிலே நடந்துள்ளது. அது சரி அப்ப இந்தியாவிற்குள் வந்து குண்டு வீசியது யார் என்று எந்த பத்திரிகையோ எந்த தொலைக்காட்சியோ சந்தேகம் தெரிவிக்கவில்லை. ஒரு மயிரும் கிடையாது. இந்திய அரசாங்கமே சொல்லிவட்டது தாம் வீசவில்லை என்று. அப்ப பாக்கிஸ்தான் தானே உடனே சொல்லுவீர்களே? என் மெளனம். காரணம் இந்திய விமானப்படையின் தவறு தெரிந்துவிடும் என்பதற்காக சொந்த நாட்டில் குண்டு வீசி தவறு செய்துவிட்டு இன்றுவரை எந்த ஊடகமும் இதைப்பற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்க வில்லை. இதுதான் இந்தியாவின் ஊடக சுதந்திரம். பார்ப்பன ஊடக சுதந்திரம். சும்மா சாமிக்காக பரிந்து பேசவேண்டாம். (என்கொரு சந்தேகம். வன்னியில் மக்களுக்கு குண்டுவீசுவதற்கான பயிற்சிதான் ராஜஸ்தானில் நடந்ததோ தெரியாது. இருக்கட்டும்.
// ஷோபா சக்தி சொன்னதை விட ஆலிவர் வெண்டல் ஹோல்ம்ஸ் என்பவர் நல்ல உதாரணம் சொல்லி இருக்கிறார் – ஆயிரம் பேர் உள்ள தியேட்டரில் தீ, தீ என்று கத்துவது என்று கருத்து சுதந்திரம் இல்லை என்று.//
மாப்பு
சோபா சக்திய கருத்துச் சுதந்திரத்திற்கு உதாரணம் காட்டுக் கொண்டு வருகிறீரா? நல்ல காமெடியப்பா!
சில மாதங்களுக்கு முன் தமிழச்சி சோபாசக்தியை கருத்துச்சுதந்திரத்துக்கு வேட்டு வைக்கிறாயா பேடின்னு கிழிகிழி என்று கிழித்தது தெரியாதா?
So sad to hear this and this should be condemned, please lawyers don’t repeat this next time, just replace the rotten egg with acid egg. He should not open his mouth here after..
மானமுள்ள தமிழா… நீ வாழ்க… ஆனால் இது மட்டும் போதாது. வேட்டியையும் உருவியிருக்க வேண்டும். வரும் காலங்களில் நாம் இந்த இனிய நாளைக் கொண்டாடவேண்டும். உன் இன உணர்வு தொடரவேண்டும்.
ஆர்.வீ ஐயா நீங்க சொல்றதுக்கு நேர்கோட்டுல தான் ஐயா பதிலு சொல்லிட்டு இருக்கேன். நீங்க தான் ஐயா புரிஞ்சுக்க மட்டெங்குறீங்க.
(இப்ப கூட அவங்கன்னு தான்யா பேசிட்ட்ருகேய்ன், நீங்க தாம்யா அந்த அவனுங்க’ல உங்களையும் வலுக்கட்டாயமாத் திணிச்சுக்கறீங்க!)
கூ.மு.சாமி முட்டாள், பார்ப்பனர் (பார்ப்பனியத்துல பார்ப்பனர் இருக்கணுங்கர அவசியம் இல்ல ஐயா!), தமிழ் சரியா பேசத் தெரியாது இதெல்லாம் ஒரு வெசயமா நாங் கருதல ஐயா! அவர் அடி வாங்கினதே அவர் இம்புட்டு நாளுஞ் செஞ்சு வந்த தமிழ் இன எதிர்ப்பு ஈனசெயல்களுக்கும், இப்போ எங்க தமிழினத்துக்கு எதிரா கெளம்பலாம்னு காத்துகெடந்து ஆவலா வந்த அந்த மனப் பான்மைக்கும் தான்யா. அவருக்கு அவரொட கும்பலின் (பொந்து ராமு, சோவு & co.) பிரதிநிதியாத் தாமுயா அடி கெடச்சிருக்கு. இந்த ஆளு பாவம்யா. அடி வாங்க வேண்டியதே வேற வகையறா தொகயறாக்க.. அத மேல சொல்லிருக்கறேன்யா.
இந்த மேட்டுக் குடி கும்பல் தங்கள் உயர் சாதி மனநிலையோட தமிழ்க் குடி மீது நிகழ்த்தி வரும் கருத்தாடல் தளத்திலான வன்முறை, செய்திமறைப்பு வன்முறை, ஈழப் படுகொலை ஆதரவு என்ற ஒரு வன்முறை இத எல்லாம் விடவா ஐயா ஒரு முட்டை வீச்சு வன்முறையாப் போயிட்டு? இதெல்லாம் வன்முறை இல்லன்னு நென்னச்சுட்டு இருந்தீங்களா ஐயா? இதெல்லாம் அவங்க சொதந்திரம்பீங்க ஐயா! இது அவனுங்க சொந்தந்திரம்னா அவனுங்களுக்கு முட்டை வீசுறது எங்க சொதந்திரம் தானுங்க. வன்மொறைக்கு வன்மொற சரியாகாதும்பீங்க ஐயா. மொதல்ல சொதந்திரம், வன்மொற எது எதுன்னு வரயற செஞ்சு சொல்லிபுடுங்க ஐயா!
அசைக்க முடியாத, சட்டம் கிட்டம் எதுவும் பண்ண முடியாத ஒரு கும்பலுக்கு எங்களாலான சிறு அன்பளிப்புங்க ஐயா, நாங்க அதிபலம் மிக்க இஸ்ராயேல் இராணுவத்த எதிர்ப்புக் காட்ட முன்ன வந்து கல்லு உட்டு அடிச்சுச் செல்லும் பாலஸ்தீனச் சிறுவர்களாவே இருந்துட்டுப் போரோமுங்க ஐயா! ஆனா எதிர்ப்பு வந்துட்டே இருக்குமுங்க ஐயா! இன்னைக்கு கூ.மு. சாமிக்கு, நாளை சோவு, மாலனு, ராமு, தின மலக்காரனுங்களுக்கு..