privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!

சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!

-

vote-012“என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை” என்ற ரொமான்டிக்கான தலைப்பில், சென்னை மாநகரத்தில்  ஒரு கூட்டம் நடக்கப் போகிறதாம். பெயர் வைக்கும் உரிமையை நமக்குக் கொடுத்திருப்பதால் ஒரே ஒரு சொல்லை மட்டும் இந்த தலைப்பில் சேர்க்க விரும்புகிறோம். “என் கவிதைகளுக்கு கம்யூனிசத்தை எதிர்த்தல் என்று பெயர் வை” என்பதே அவர்கள் சொல்லத் தயங்குகின்ற உண்மையான தலைப்பு.

எதற்கு இந்தக் கூட்டம்? உலகின் அழகிய முதல் பெண்ணும், பெண் படைப்பாளிகளின் ஏகப் பிரதிநிதியுமான லீனா மணிமேகலை எனும் பெயர் தாங்கிய சீமாட்டியின் கவிதைகளுக்காக அவர் மீது வழக்கு போடச்சொல்லி இந்து மக்கள் கட்சியின் யாரோ ஒரு தல போலீசில் பெட்டிசன் கொடுத்தானாம். அந்தப் புகார் மீது போலீசு எப்.ஐ.ஆர் கூடப் போடாமல், அந்தக் காகிதத்தைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது.

போடாத அந்த வழக்கின் விளைவாக பெண் படைப்பாளிகளுக்கு நேரக்கூடிய ஆபத்து பற்றி மீடியாவில் கவரேஜ். ஏனென்றால் இந்து மக்கள் கட்சி ஸ்ரீமான்கள், கவிதாயினியாகிய ஸ்ரீமாட்டி ஆகிய ரெண்டு தரப்புக்குமே மீடியாவில் ஆள் உண்டு. இப்படியாக கமிசனர் ஆபீஸ் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட புகார் வரலாற்று ஆவணமாகிவிட்டது.

பெண் படைப்பாளிகளுக்கு நேர்ந்திருக்கும் இந்த ஆபத்து இணையம் வரைக்கும் வந்துவிட்டதாம். அதனை எப்படியாவது தடுத்து நிறுத்துவதற்காக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். தனக்கு ஏற்பட்ட ஆபத்தை ஒண்டியாக நின்று சமாளிக்கும் கலை தெரியாதவரல்ல சீமாட்டி. அவருக்கு பெரிய்ய்ய இடத்திலெல்லாம் ஆள் இருக்கிறது. என்ற போதிலும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு 20, 30 அறிஞர்களை பக்கவாத்தியம் வாசிக்க வைத்தால், அப்படியே தானும் ஒரு பாடகியாக (படைப்பாளி) அரங்கேற்றம் பெற்று விடலாம் என்பது சீமாட்டியின் திட்டமாக இருக்கக் கூடும். பக்கவாத்தியக் கலைஞர்கள் இந்த மேட்டர் புரிந்துதான் போகிறார்களா என்று தெரியவில்லை.

சரி. மெய் உலகில் இந்து மக்கள் கட்சியால் ஆபத்து. மெய்நிகர் உலகில் யாரால் ஆபத்து? சீமாட்டியோ அவரது படைப்பு உரிமைக்கு காவல் நிற்கும் ஸ்ரீமான்களோ அதனை வெளிப்படையாகச் சொல்லவில்லை. கவிதாயினி என்பதால் தனது உதடுகளுக்குள் அந்த கவித்துவ உண்மையை அவர் ஒளித்து வைத்திருக்கக் கூடும்.

அந்தச் சொல் வினவு.

லீனா மணிமேகலை – ஷோபாசக்தி – செங்கடல் விவகாரம் குறித்து முதன்முதலில் வினவு தளத்தில்தான் எழுதினோம். தினத்தந்தி கிரைம் நியூஸ் பகுதியின் வாயிலாகத்தான் லீனா என்ற படைப்பாளி எங்களுக்கு அறிமுகமானார். செங்கடல் என்ற ஆவணப்படத்தின் படப்பிடிப்புக்குப் பின், தமக்குரிய பேட்டாவை ஒரு வாரமாக கேட்டும் பெறமுடியாத தொழிலாளிகள் படப்பதிவை எடுத்துச் சென்றுவிட்டனர்.  தீபக் என்ற தொழிலாளிதான் (காமெரா அசிஸ்டென்ட்)  இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டி, மேற்படி படைப்பாளிகள் தீபக்கைத் தாக்கினர். தீபக் போலீசிலும், தனது தொழிற்சங்கத்திலும் புகார் கொடுத்தார். மேலிடத்துத் தொடர்புகளைப் பயன்படுத்தி, சிறைக்குப் போகாமல் ஃபைன் மட்டும் கட்டிவிட்டு, எஸ்கேப் ஆனார்கள் இந்தப் படைப்பாளிகள்.

சம்பள பாக்கியோ வேறு வில்லங்கங்களோ இருந்தால், பாக்கியைக் கொடுக்கும் வரை படச்சுருளை லேப் இலேயே முடக்கி வைப்பது திரையுலகின் விதி. பிரசாத் லேப் முதலாளியாக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார். தொழிலாளியை அடித்த படைப்பாளிகள் அந்த முதலாளியை அடித்திருப்பார்களா?

அம்மையாரின் படைப்புத்திறனால் பாதிக்கப்பட்டவர் தீபக் மட்டுமல்ல, இன்னும் பலர் என்ற விவகாரமும் தெரிய வந்தது.  எழுதினோம். கேஸ் போடுவேன் என்று மிரட்டினார் சீமாட்டி. பணத்தைப் பறிகொடுத்த ஈழத்தமிழர் லீனா செய்த மோசடியை தேசம் நெற் தளத்தில் எழுதி, “தைரியமிருந்தால் கேஸ் போடு” என்றார். அப்புறம் அடிபட்ட தொழிலாளி தீபக்கின் பேட்டி இனியொரு தளத்தில் வெளிவந்தது.

லீனாவும் ஷோபாசக்தியும் படவேலை முடிவதற்காக அமைதி காத்தார்கள். “ஆமா அடிச்சேன், 1700 ரூபாய் அபராதம் கட்டினேன். அடிச்சது சரிதான்” என்று தெனாவெட்டாய் திமிருடன் தனது தளத்தில் எழுதினார் ஷோபாசக்தி. அந்தக் கட்டுரையைத் தனது தளத்தில் வெளியிட்டு வன்மத்துடன் ஆமோதித்தார் லீனா.

மீண்டும் வினவுக்கு வருவோம். தீபக்கை அடித்த சம்பவத்தைப் பார்த்த பிறகுதான், ‘தோழர்’ லீனாவும், ‘தோழர்’ ஷோபாசக்தியும் சித்தாந்த ரீதியிலும், நடைமுறையிலும் வெறி கொண்ட தொழிலாளி வர்க்க எதிரிகள் என்பது தெளிவானது. அம்மாவின் கவிதையில் வழியும் கொழுப்பும், திமிரும் தீபக்கின் மீது விழுந்த அடியில் வெளிப்பட்ட கொழுப்பும் வேறு வேறல்ல என்பதை அவரது கவுஜையைப் படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். இவையிரண்டுக்கும் உள்ள உறவை நாங்கள் அம்பலப்படுத்தினோம். அதைத்தான் தனிப்பட்ட தாக்குதல் என்று கூவுகிறார் சீமாட்டி.

__________________________________________

உக்கிரமான அல்லது உன்மத்தமான நிலையில் வெளிப்படுவதல்லவோ கவிதை. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் லீனா குழுவினர் தொழிலாளிகளின் கன்னத்தில் எழுதிய கவிதையையும் (பிளஸ் ஆர் மைனஸ் மொழி) இணையத்தில் எழுதிய கவிதையையும், அதாவது உணர்ச்சி வெளிப்பாட்டின்  இந்த இரு களங்களையும் ஒன்றாக்கி விட்டோம் என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டு.

புஷ் முதல் மார்க்ஸ் வரை அனைவரது வழித்தோன்றல்களும் ஆணாதிக்கப் பொறுக்கிகளே என்பது அவரது கருத்து. சுதந்திரப் பாலுறவு பற்றிய லெனினுடைய கருத்து எள்ளி நகையாடத்தக்கது என்றும் அவர் ஃபிராய்டைப் புணர்ந்து பாலியல் உறவு குறித்த தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் லெனினுக்கு அவர் வழங்கும் உபதேசம். தனது மாற்றுக் கருத்துகளை அம்மையார் தாராளமாக கருத்தியல் தளத்தில் விவாதத்துக்கு கொண்டு வந்திருக்கலாம். மாறாக கவிதைக்குள் புகுந்து கொள்கிறார். மூளையின் இடது பகுதிக்கு அதிகம் வேலை கொடுக்காததால் சற்று ஊனமுற்றவர்கள், அதனை சரிக்கட்ட வலது பகுதியை சார்ந்திருக்கும் முயற்சி இது. யோனி, குறி என்று எழுதி புரட்சிப் பட்டம் வாங்கும் இந்த அறிவுத்துறை தப்பிலித்தனத்துக்கு கவிதை என்று பெயர் சூட்டிக் கொள்வதும், எனது வெளிப்பாட்டு மொழி கவிதை என்பதும் ஒரு தரம் தாழ்ந்த தந்திரம். அல்லது சீமாட்டியின் தரத்துக்குப் பொருத்தமான தந்திரம்.

_____________________________________________

சீமாட்டியின் கவிதையில் வழியும் கொழுப்பை அம்பலப்படுத்தினால் அது தனிப்பட்ட தாக்குதலாம். பிரதிகளை முடிவின்றி கட்டுடைக்கும் உரிமை அவர்களுக்கு மட்டும்தானா, மற்றவர்களுக்கு கிடையாதா?

தெரியாமல்தான் கேட்கிறோம். லீனாவின் கவிதையை நாங்கள் விமரிசித்திருக்கிறோம். அதற்கு லீனாவும், லீனா ரசிகர் மன்றத்தினரும் பதில் சொல்லியிருக்கிறார்கள். மறுபடி நாங்கள் எழுதுவோம். நீயும் எழுது. இதில் எது சரி என்பதை படித்து வாசகன் முடிவுக்கு வரட்டுமே? இதில் படைப்பாளி சுதந்திரத்திற்கு என்ன ஆபத்து?

உன் வாதம் என்ன? உன் கருத்துக்கு யாரும் மறுப்பு சொல்லக்கூடாது. அல்லது நீ விரும்புகிற முறையில் விமரிசிக்க வேண்டும் என்பதுதானே! இதுதான் உண்மையான பாசிசம்.

லீனாவின் மீதான விமரிசனம், பெண் எழுத்தின் மீதான கலாச்சார அடிப்படை வாதிகளின் தாக்குதலாம்! இப்போது குரல் கொடுக்காவிட்டால், இனி பெண்கள் எழுதவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமாம். அடேங்கப்பா, சீமாட்டி இப்போது பெண்குலத்தின் பிரதிநிதியாகிவிட்டார். “பெண்ணென்றும் பாராமல் என்னை… ” என்று டயலாக் பேசி முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றிய அம்மாவின் ஞாபகம்தான் வருகிறது.

படைப்பாளி என்று அழைத்துக்க கொள்ளும் ஒரு பாசிஸ்டு குழு தனது உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கு, இன்னொரு பாசிஸ்டு கும்பலான இந்து மக்கள் கட்சியை வில்லனாக சித்தரிக்கிறது. லீனா – இந்து மக்கள் கட்சி சண்டை என்பது அசப்பில் ஜெயல்லிதா பாரதிய ஜனதா சண்டை மாதிரியே இருக்கிறது. நல்ல தமாஸ்தான்.

இந்து மக்கள் கட்சி பெரியார் சிலையை உடைத்த போது ம.க.இ.க தோழர்கள் சீரங்கம் கோயில் வாசலில் ராமன் படத்தைக் கொளுத்தினார்கள். ஓசூரில் மோதி மண்டை உடைந்து சிறை சென்றார்கள். பெரியார் தி.க காரர்கள் என்.எஸ்.ஏ வில் சிறை சென்றார்கள். சிதம்பரத்துல தீட்சிதனுக்கு காவல் நிற்கும் இந்து மக்கள் கட்சியை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள் எங்கள் தோழர்கள்.

சீமாட்டி என்ன செய்தார்? ஜீன்ஸ் பேண்டும், சே குவேரா டி ஷர்ட்டும் போட்டு திரியுறதெல்லாம் புரச்சிப் பெண்ணா? அப்படிப்பட்ட புரச்சிதான் நூத்துக்கணக்கில ஸ்பென்சர் பிளாசாலயும், சிட்டி சென்டர்லயும், ஸ்கை வாக்குலையும், மாயஜாலிலும் திரியுதே? அந்த டி சர்ட் புரச்சிக்கும் இந்தக் கவுஜைப் புர்ச்சிக்கும் என்ன வித்தியாசம்?

அயோத்தி கேஸ் முதல் குஜராத் கேஸ் வரை எதிலும் எந்த இந்து பாசிஸ்டும் தண்டிக்கப்படவில்லை. அதைக் கேக்க ஆளைக்காணோம். இல்லாத கேசுக்கு கண்டனக் கூட்டமாம். விற்காத படத்துக்கு புரடியூசரே காசு கொடுத்து பொதுநல வழக்கு போடச்சொல்லி படத்தை புரமோட் செய்யும் கதை மாதிரில்ல தெரியுது?

_________________________________________________

ஒரு விநோதமான பேச்சாளர் கலவை இந்தக் கூட்டத்தில் உரையாற்றப் போகிறது. த.மு.எ.க.ச (மார்க்சிஸ்டு கட்சியின் கலை இலக்கிய அமைப்பு) முந்திக் கொண்டு அறிக்கை விட்டிருக்கிறது.

இடது தீவிரவாதம் பேசும் ஒரு சிறு குழு இலக்கியவாதிகளை மிரட்டுவதாகவும், லீனாவையும் அப்படி மிரட்டியிருப்பதாகவும் கூறுகிறது அவர்களது கண்டன அறிக்கை. இராக் பற்றி கொச்சையாக எழுதிய ஒரு “படைப்பாளியிடம்” கவிதைக்கு பொருள் கேட்டோம். கவிதைக்கு அர்த்தம் கேட்பது குற்றம் போலும்! லீனாவைப் பற்றி எழுதியதோடு சரி. நேரிலெல்லாம் போகவில்லை. ஜெயலலிதா, லீனா மாதிரியான மாதர்குல மாணிக்கங்களை தனியாக சென்று சந்திக்கும் தைரியம் தீவிரவாதிகளான எங்களுக்கு கிடையாது. லீனாவின் சார்பில் லீனாவின் கவுஜைகளுக்கு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் விளக்கம் கூறிவிடுமானால் மகிழ்ச்சியே.

“உபரி என யோனி மயிரை விளித்தாய்..
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்..”

என்பன போன்ற கவித்துவம் வாய்ந்த வரிகளைத் தெரிவு செய்து விளக்கம் சொன்னால் கூடப்போதும்.

கலாச்சார போலீஸ் வேலைக்கு எதிராக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உறுதியாகப் போராடும் என்று தமிழ்ச்செல்வன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். நித்தியானந்தா என்ற பரிதாபத்துக்குரிய 32 வயது இளைஞனின் படுக்கையறை உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் தமிழ்ச்செல்வன் என்பது நமக்குத் தெரியும். அந்த பாக்கியம் வரதராசனுக்கும் கிடைக்கவில்லை, பால் சக்கரியாவுக்கும் கிடைக்கவில்லை.

சிங்குர், நந்திக்கிராமில் மக்கள் மீது ஏவப்பட்டது கலாச்சார போலீசு இல்லையே. அது சட்டம் ஒழுங்கு போலீசு. அந்தப் போலீசு மார்க்சிஸ்டுகளின் தோழன்.

கூட்டத்துக்கு ஆதவன் தீட்சண்யா வருகிறார். அவர் சிங்கள பாசிசத்தின் நண்பர். அதாவது, டக்ளஸ் தேவானந்தாவின் நண்பர். ஷோபா சக்திக்கும் நண்பர். இருந்தாலும் கலாச்சார போலீசை எதிர்க்கும் ஜனநாயகவாதி. எல்லாம் ஓ.கே தான். ஆனால் வரதராசனை கட்சிக்காரனுக கொன்னுட்டாங்கன்னு ஷோபா சக்தி எழுதியிருக்கிறார். ஆதவனுக்கு அதுவும் ஓ.கேயா இருக்கலாம். கட்சிக்கு ஓ.கேயான்னு தெரியவில்லை.

அப்புறம், சி.பி.ஐயின் தேவ. பேரின்பன் வருகிறார். பின் நவீனத்துவத்தின் கம்யூனிச எதிர்ப்பு முகமூடியைக் கிழித்து எழுதியவர். இந்த கவிதைக்கு அவரிடம்தான் பொருள் விளக்கம் கேட்கவேண்டும்.

காமெடி என்னவென்றால் பெண் கவிஞர்கள் பலரை இந்தப் பட்டியலில் காணவில்லை. அவர்கள் லீனாவை பெண்ணென்று ஒப்புக்கொள்ளவில்லையா அல்லது படைப்பாளியென்று ஒத்துக்கொள்ளவில்லையா தெரியவில்லை. இது தொடர்பான உண்மை அ.மார்க்சுக்குத்தான் தெரியும் என்கிறார்கள். எனவே அவர் அதை கூட்டத்தில் விளக்குவார் என்று நாம் நம்பலாம்.

சீமாட்டியின் உரிமை நிலைநாட்டு விழாவில் மொத்தம் 54 பேர் உரையாற்றுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பத்திரிகையில் கண்டுள்ள பெயர்களைப் பார்க்கும் போது கல்யாணப் பத்திரிகையில் போட்டிருக்கும் தாய்மாமன் லிஸ்ட்தான் ஞாபகத்துக்கு வருகிறது. இவுங்கள்லாம் தெரிஞ்சு வாராகளா, இல்ல இதெல்லாம் இந்த சீனுக்கு தேவையான “அட்மாஸ்பியர்”னு முடிவு பண்ணி லிஸ்டை அச்சடிச்சுட்டாங்களா தெரியல. ஆளுக்கு 10 நிமிடம் என்று வைத்தாலும் 540 நிமிடம். அதாவது பத்து மணி நேரம். மாலை 6 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

இருந்தாலும், நாங்கள் எல்லோர் பெயரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. நாலைந்து பேரைத்தான் இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறோம். “ஏண்டா என்னா ஏதுன்னு மேட்டரே தெரியாம எதுன்னாலும் பத்துப்பேர் கூட்டமா வாரீங்களே, உங்களுக்ககெல்லாம் வேற வேலயே கிடையாதா?” ன்னு வடிவேலு கேக்குற மாதிரி நாம கேக்க முடியாதில்லையா?

_______________________________________

தொழிலாளியை அடிப்பது படைப்பாளியின் உரிமை. 1700 ரூபாய் அபராதம் கட்டினால் போதுமென்பது ஷோபாசக்தி-லீனாவின் வாதம். அப்படி என்றால் அந்தப் படைப்பாளியை தொழிலாளி திருப்பி அடிக்க விரும்பினால், எவ்வளவு அபராதம் கட்டவேண்டியிருக்கும் என்பதற்கு அறிவாளிகள் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எப்படிப் பார்த்தாலும் தொழிலாளிகளின் உரிமையை விட படைப்பாளிகளின் உரிமை கொஞ்சம் மேம்பட்டதாகத்தான் இருக்க முடியும். எனவே, தமது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள விரும்பும் பெப்சி (தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்களின் சம்மேளனம்) தொழிலாளர்கள் 1700 ரூபாய்க்கு மேல் ஆயிரம், இரண்டாயிரம் கூடுதலாக எடுத்து வரவும்.

அடுத்தது கேள்வி பெண் படைப்பாளிகள் படைப்புரிமை பற்றியது. லீனாவின் கவிதையை வாசித்து, வாசிப்பு அனுபவத்தையும் கவிதை வெளிப்படுத்தும் உணர்வையும் செல்மா பிரியதர்சன் போன்ற கவிஞர்கள் நிச்சயமாக விளக்குவார்கள். கம்யூனிஸ்டுகளுக்கும், ஜிகாதிகளுக்கும், இந்து பாசிஸ்டுகளுக்கும் வேறுபாடு இல்லை என்பதை பெண்ணியப் பார்வையில் லீனாவும் கட்டுடைத்துக் காட்டுவார். கவிதை அறிவோ, ரசனையோ இல்லாத சராசரி உழைக்கும் பெண்கள் இவற்றைக் கேட்டு புதிய தரிசனங்களைப் பெறலாம்.

இறுதியாக, லீனாவின் கவிதையை தமது கொள்கையின் மீதும், தங்கள் மீதுமான தனிப்பட்ட தாக்குதலாகப் புரிந்து கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு: உபரி மதிப்புக்கும் யோனி மயிருக்கும், உற்பத்தி உறவுக்கும் தொப்புளுக்கும், அந்தரத்தில் தெறிக்கும் விந்துவுக்கும் கார்ல் மார்க்ஸின் பிரகடனத்துக்கும் உள்ள கவித்துவப் பிணைப்பு பற்றி “கம்யூனிசப் பாரம்பரியத்தில் பிறந்த” சீமாட்டி வகுப்பெடுப்பார்.

ஆமாம். தான் கம்யூனிச குடும்ப பாரம்பரியத்தில் வந்தவர் என்றுதான் லீனா சொல்லிக் கொள்கிறார். தேவர் மகன் தேவர், கவுண்டர் மகன் கவுண்டர் மாதிரி கம்யூனிஸ்டின் மகனோ, பேத்தியோ கம்யூனிஸ்டு என்று அம்மையார் நினைத்துக் கொண்டிருக்கிறார். போலி கம்யூனிஸ்டுகளும் அதை அங்கீகரித்து சீமாட்டியை தோழர் என்று அரவணைக்கிறார்கள்.

குரங்கையும் மனிதனையும் பிரிப்பது அறிவு. அந்த அறிவிலிருந்துதான் மனிதனின் படைப்புத்திறன் பிறக்கிறது என்று நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதற்காக விலங்குகளுக்குப் படைப்புத் திறனே கிடையாது என்று நாம் சொல்லி விட முடியுமா? இயற்கை அளித்திருக்கும் அந்தப் படைப்புக் உறுப்புக்களின் மீதே மையம் கொண்டிருக்கும் சிந்தனையை ‘படைப்பூக்கம்’ என்று அழைப்பது தகுமாயின்,

“கவிதை என்பதற்கு வேறு ஏதாவது பெயர் வை” என்று கோருகிறோம்.

__________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. அருமையான படைப்புக்கு மகிழ்ச்சி, செந்தழல் ரவிக்கு புரிந்ததில் டபுள் மகிழ்ச்சி, கீற்றுவில் மினர்வா கட்டுரையை வாசித்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி…………

    • வினவு நேத்து கூட்டத்துக்கு நானும் வந்தேன். படு அமர்க்களம். நிறைய துணுக்ஸ் சேகரிச்சு வச்சுருக்கேன். எப்ப கூட்டத்தோட ரிப்போட் போடுவீங்க.? சீக்கிரம் போட்டா பின்னூட்டத்துல கொஞ்சம் அடிச்சு ஆடலாம். சீக்கிரம் போடுங்க தோழரே!

  2. இக்கட்டுரை சரியாக புரியவில்லை. புரிந்த வரையிலும் சரியான பதிலாக தெரியவில்லை.

  3. மார்ச் 4 அன்று சோபா சக்தி பழி நாணுவார் கட்டுரையை வெளியிட்ட அன்றே அதை தன் தளத்தில் லீனா மறுபிரசுரம் செய்ததற்க்கான ஆதாரம் (சுட்டிகள்) இது .. இது மற்றும் இது இப்போது தீடேரென அந்த பக்கத்தை காணவில்லை.. ஹூம் .. ஏன் இந்த பதட்டம் லீனாவுக்கு?

  4. ஈழப் படுகொலையயே மறுத்த பாசிஸ்ட்டுப் பொறுக்கி, விளம்பரம்தேடி அமார்க்ஸு பொய்யா.. ஸாரி அய்யாவப் பத்தி ஒண்ணும் எழுதலியே.. சிம்பாலிக்கா படத்துல மட்டும் அவரு திருவுருவக் காமிச்சிருகீங்க.. என்ன சங்கதி?

    • மேற்கண்ட தோழர் அரைடிக்கெட்டின் இணைப்பிலுள்ள நண்பர்கள் ஜமாலன் மற்றும் பெருந்தேவி தளத்தில் வினவு சார்பில் இட்டுள்ள பின்னூட்டத்தை இங்கும் வெளியிடுகிறோம். இதன் நோக்கம் இந்த விவாதத்தை மற்றவர்களும் அறிய வேண்டும் என்பதற்காகவே. ஜமாலன், பெருந்தேவி இருவரும் இதை தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன்………

      அந்த பின்னூட்டம்

      அன்புள்ள பெருந்தேவி,ஜமாலன்
      அல்லது
      அன்புள்ள ஜமாலன், பெருந்தேவி

      //”அரசியல்சரி” நிலைப்பாட்டுக்கும் கவிதையாக அறிவிக்கப்பட்டிருக்கிற பிரதிக்கும் இடையே சில வார்த்தைகள்//

      அறிவிக்கப்பட்ட கவிதைக்கும் பின்னேயும், அரசியல் சரி நிலைப்பாட்டிற்கு பின்னேயும், இரண்டுக்கும் இடையே இருக்கும் ‘நடுநிலைமை'(எனக்குத் தெரிந்து நடுநிலை என்ற ஒன்றை எங்கேயும் கேள்விப்பட்டதில்லை அல்லது உணர்ந்து கொண்டதில்லை) தரப்புக்கு பின்னேயும் இருப்பது அரசியல்தான்.இப்படி தான் என்று போட்டு பேசுவது ‘நிலைப்பாட்டுவாதிகளுக்கு’வழக்கம்தான் என்பதைக்கூட நீங்கள் ஆராயலாம்.

      //ஒரு படைப்பாளி எதற்காக இலக்கியம் படைக்கிறார் என்பது நுட்பமான வாசிப்பாளனுக்கும், விமர்சகனுக்கும் அசட்டுத்தனமான கேள்விகளாக மட்டுமே இருக்கமுடியும்.//

      //இலக்கியம், கவிதை என்கிற முகாந்தரத்தில் ஒரு பிரதி வாசிக்கக் கிடைக்கும்போது, அதை அப்படித்தான் வாசிக்கவேண்டுமே தவிர எழுத்தாளரின் தனிப்பட்ட, சொந்த மற்றும் தொழில்ரீதியான வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைக் கணக்கிலெடுத்து அப்பிரதியை நிராகரிப்பது தவறு. //

      //ஈழம், போஸ்னியா இன்னும் எண்ணற்ற நாடுகளில் பாலியல் வன்புணர்ச்சி என்பது போரின், அரசின், இறையாண்மை அரசியல்களின் அதிகார ஆயுதமாகவே உள்ளது.//

      //தவிர, அரசு, எதிர்ப்பு, கலகம் இவை எல்லாவற்றிலும் அதிகாரம் செயல்படும் என்றாலும், இவற்றைச் சமன்படுத்துவதிலும் பிரச்சினைகள் உள்ளன. //

      //ஆண்மை, பெண்மை என்கிற முரண்களின் அடிப்படையிலான சமூக, கலாச்சார ஒழுங்குவிதிகள் ஒட்டுமொத்த உடல்களில் பதிவுறுத்தப்படுகின்றன, இருமைக்கட்டமைப்பில் உடல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த விதிகள்தான் இன்று எதிர்க்கப்படவேண்டியவை, வெளிப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டியவை. ஆனால் கவிதை விதிகளை நோகாமல் மேலோட்டமாக விளைவுகளை நோகிறது. //

      //குறிப்பாய் மார்க்சிய புரட்சியாளனை இங்கு எதிர் உடலாக முதன்மைப்படுத்துவதன் வழியாக பாலியலில் “தூய்மைவாத” கருத்துகள் கொண்ட மார்க்சியர்களை (மார்க்சியர்களின் இத்தகைய பார்வைகளில் நமக்கு விமர்சனம் உண்டு என்றாலும்), பாலுறவுக்காகவே அலைபவர்களாகச் சித்தரிக்கிறது. //

      //நாங்கள் அவதானித்தவரை இப்பிரச்சனையில் பேசப்பட்டவை எல்லாம் கவிஞர் லீனா மணிமேகலையை தனிப்பட்ட முறையில் தாக்குவது அல்லது போற்றுவது என்ற அளவிலேயே நின்றுபோனதே தவிர மொழி அர்த்தமாதல் குறித்த விவாதம் நடக்கவில்லை. இலக்கியம் சார்ந்த உரையாடலை முன்வைத்து இவ்வரிகளை அணுகவேண்டும். //

      நண்பர்களே, மேற்கண்ட உங்கள் மேற்கொள்களின் மொழிவிளையாட்டை நான் உணர்ந்த வரையில் “இடையே சில வார்த்தைகள்” என்ற பிரகடனத்தை தரிசிக்க இயலவில்லை.

      தான் மனச்சோர்வுறும் சமயங்களில் ஜமாலனனின் கட்டுரை உற்சாகத்தை டன் கணக்கில் வாரி வழங்குவதாக மகிழ்வுற்று கொண்டாடிய சீமாட்டி லீனா இனி தான் மொழிவிளையாட்டில் இல்லை என்பதை நினைத்து வருந்துவார். பாவம்.

      லீனா எப்படி கவிதை எழுதவேண்டும் என்றும், நிலைப்பாட்டுவாதிகள் எப்படி தவறாக விமரிசனம் செய்திருக்கிறார்கள் என்பதையும் குறித்து சற்றே அலூப்பூட்டும் விதத்தில் வகுப்பு எடுத்திருக்கிறீர்கள். இதனால் உங்களை பேராசிரியர்கள் என்று சுட்டியதாக தவறாக எடுக்க வேண்டாம்.

      ஆயினும் மேற்கண்ட மேற்கோள்களின் வழி நீங்கள் லீனாவைக் கைவிவிடவில்லை என்பதையும் நிலைப்பாட்டுவாதிகளை குறுக்கு விசாரணை செய்யவேண்டிய லா பாயிண்டுகளையும் அர்த்தம் குமைகின்ற மொழியில் எடுத்தியிம்பிருப்பதால்…………..

      மொழி விளையாட்டிற்கும், வாழ்வின் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கும் இடையில் எது பிரதானமானது, எது இரண்டாம் பட்சமானது, என்ற ‘அலுப்பூட்டும்’ மார்க்சிய இயங்கியலில் எழுதுவதற்கு ஆவலாக உள்ளோம். எப்போது என்பது தெரியவில்லை. நேரம்தான் என்றால் ஏற்பீர்களா?

      மற்றபடி எல்லோரையும் ஒரே போல விமரிசிப்பதாக நீங்களும் எங்களைக் கருதமாட்டீர்கள் என்ற தோழமையுடன்

      வினவு

  5. சபாஷ்! லீனாவுடன் நல்ல கூட்டணி! அத்தனையும் யோனிகள்.!லீனாவின் ராஜ்யத்தில் குறிகள் அனைத்தும் ஒழிக்கப்படட்டும்.கிருஷ்ணனின் லீலைகளை பக்தியுடன் வணங்கும் இந்து பக்தர்கள் லீனாவின் இந்து யோனியையும் விழுந்து வணங்கும் நாள் விரைந்து வரும்.அ.மார்க்ஸ் யோககு யோவாகவும் குக்கு குவாகவும் மாறும் வித்தை கற்றவர்.இவர்கள் மற்றவர்களுக்கு நிறையக் கற்றுக் கொடுப்பார்கள்.தமிழ்செல்வன் வேறு கூட்டணி கிடைக்கும் வரை இதில் இருப்பார்! ஜெய் யோனி சாரி லினி நோ லீனா !

  6. இதில் 99 % காழ்ப்புணர்ச்சியும், 1 % சங்கதியும் மட்டும் தெரிகிறது. அதுவும் சந்தியாகவே, உண்மையாக நிறுவப்படவில்லை. வினவு சமூகத்தை மேம்படுத்தும் கட்டுரைகளை எழுதுங்கள். தனி மனித தாக்குதல்கள் உங்களிடம் எதிபார்கவில்லை.

    • நாவன், இந்தக்கட்டுரையில் எது காழ்ப்புணர்ச்சி, எது தனி மனித தாக்குதல் என்று விளக்கினால் உங்கள் விமரிசனங்களை முழுமையாக புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி

  7. வரிக்கு வரி ஆமோதிக்கிறேன் தோழர். (தோழர் என்ற சொல்லை இதுவரை நான் உபயோகித்ததில்லை…நிறைய ஆசை இருந்தும்கூட… ஏனெனில் நானும் தரகு வர்க்கத்தினன் என்பதினால்)…. அப்புறம் எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவேயில்லை. யோனி என்பதை விட அதற்கு தமிழில் வேறு வார்த்தை இருக்கின்றதே….அதை உபயோகித்து கவிதை எழுதினால் கவுஜைப்புர்ச்சி சூப்பரா இருக்குமே… இதையும் யாராவது லீனாவுக்கு சொல்லுங்களேன்….

    • நண்பர் ராசாராமனே,

      தாங்கள் “தோழர்“ என்ற சொல்லை பயன்கொள்ளாததில் உள்ள நியாயம் உங்கள் ஆலோசனையை படித்ததும் புரிந்துக் கொள்ளமுடிகிறது

  8. அறிவும் ஆராச்சியும் கூட ஓர் அளவோடு இருத்தல் வேண்டும்.
    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இதற்கு சாட்சியாக உள்ளது இன்றைய தமிழினம். கல்தோன்றாக் காலத்து முன்தோன்றி மூத்த தமிழன், சங்கம்வளர்த்து வாழ்ந்த முதுபெரும் அறிஞன், இன்றைய உலகில் குடியிருக்க அவனுக்கென்று சொந்தமாக ஒரு குடில் இல்லை. இந்தக்கட்டுரையிலும் அதற்கான கருத்துக்களிலும் தமிழன் அறிவு கட்டுப்பாடின்றி மடைதிறந்து பாய்கிறது.

  9. //உன் வாதம் என்ன? உன் கருத்துக்கு யாரும் மறுப்பு சொல்லக்கூடாது. அல்லது நீ விரும்புகிற முறையில் விமரிசிக்க வேண்டும் என்பதுதானே! // இதுதான் உண்மையான vinavisam

    • மூட்டு அண்ணே, எப்பவாச்சும் உங்க விமரிசன சுதந்திரத்துல தலையிட்டிருக்கிறோமா, ஏண்ணே இப்படி பொய் சொல்றீங்க?

  10. தொடர்ச்சியாக இவ்விசயங்களை படித்து… கோடை வெயிலும் சேர்ந்து மண்டை காய்கிறது.
    வினவை எதிர்த்து கூட்டம் போடுவதற்கு.. சற்றும் சளைக்காமல்… எவ்வளவோ பிரயத்தனங்கள் செய்து… ஒருவரும் தன் பக்கம் நிற்காமல்.. நொந்து போன லீனாவுக்கு… இந்து மக்கள் கட்சியின் பெட்டிசன் உதவி செய்திருக்கிறது. கொடுக்க சொன்னதே ‘லீனாவாக’ இருப்பார் என நண்பன் சொன்னான்.

    லீனா இப்படி சிந்திக்ககூடியவர் தான் என அவர் பற்றிய செய்திகள் சொல்கின்றன.

  11. லீனாவிற்கு அவர் குழுவினரில் உள்ள ஒருவர் எடுத்து சொல்லுங்கள்! இது அவருக்காகவே விசேஷமாக தயாரித்து நடத்தப்படும் “கண்டனக்கூட்டம்” என்று! இல்லையெனில்.. ஒரு ஐமபடிக்கு ஒரு கட் அவுட்… அநேகமாக இந்நேரம் வாயிலில் ஆள் வைத்து கட்டிக்கொண்டிருக்க போகிறார். பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் இரு பக்கங்களிலும், லீனாவின் ‘அழகிய படங்களை” ஓவியக் காட்சிகளைப் போல(!) பார்வைக்கு வைத்துவிடப்போகிறார்.

  12. ஆக கடைசியில் லீனாவை எல்லோரும் சேர்ந்து பெரிய ஆளாக ஆக்கிவிட்டீர்கள்.கட் அவுட் வைக்காத கூறைதான்.போலிஸ்காரர்கள் கவிதையையும், கம்பெள்யிடையும் சேர்த்து குப்பை தொட்டியில் எறிந்தாலும் இதைப் பற்றி எழுதி எழுதி அவருக்கு ஆதரவு திரட்ட உதவியிருக்கிறீர்கள். இந்த நன்றிக்கடன்களை அவர் எப்படித் தீர்ப்பார்?:). ஆயிரம் பக்க நாவல் எழுதி உசுப்புவதை விட
    அம்ப்து வரி கவிதை எழுதி ஈசியாக உசிப்பிவிடலாம் என்பதை லீனா
    காட்டிவிட்டார். ஜமாலன்,பெர்ந்தேவி இருவரும் எழுதியுள்ளது என்ன
    மொழி, தமிழ் எழுத்துக்கள் போலிருக்கிறது, தமிழா என்று தெரியவில்லை.

  13. ஹா ஹா…. சூப்பர்!

    வினவு எழுதிய பிறகு அவரின் போர்ட் போலியோவை தூக்கினார், இப்ப சோபா சக்தி கட்டுரையை தூக்கி இருக்கார்! இன்னும் என்னத்த எல்லாம் தூக்க போறாரோ?? போறபோக்க பாத்தா கவித எழுதுறதையே விட்டுடுவாரோ?
    அப்படி ஏதாவது நடந்தால், கலகக்கார கவிதையை படிக்க ஆவலோடிருக்கும் ஆறு கோடி தமிழர்களின் சார்பாக வினவை கண்டிக்கிறேன்.!
    அப்புறம் லீனா எப்படி தன் பிளாக்குக்கு பார்வையாளர்களை வரவழைப்பார்!
    அய்யோ எனக்கு ஒன்னுமே புரியலையே….. சோபா சக்தி, சீ மன்னிக்கவும், அமார்க்ஸ் விளக்குவாரா??

  14. ///குரங்கையும் மனிதனையும் பிரிப்பது அறிவு. அந்த அறிவிலிருந்துதான் மனிதனின் படைப்புத்திறன் பிறக்கிறது என்று நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதற்காக விலங்குகளுக்குப் படைப்புத் திறனே கிடையாது என்று நாம் சொல்லி விட முடியுமா? இயற்கை அளித்திருக்கும் அந்தப் படைப்புக் உறுப்புக்களின் மீதே மையம் கொண்டிருக்கும் சிந்தனையை ‘படைப்பூக்கம்’ என்று அழைப்பது தகுமாயின்,

    “கவிதை என்பதற்கு வேறு ஏதாவது பெயர் வை” என்று கோருகிறோம்.//////////

    நச்….

  15. லீனா தனது ஆபாசக் கவிதைகளில் இத்தனை துணிச்சலாக கம்யூனிச ஆசான்களைக் கொச்சைப்படுத்தி எழுதுகிறாரே, எப்படி இது சாத்தியம் என்று முதலில் நானும் வியந்தேன். ஆனால் நாம் எல்லோரையும் விட லீனாவுக்குத்தான், தா.பாண்டியன், சி.மகேந்திரன் மற்றும் சி.பி.எம். காமெடியன்களின் தோலின் தடிப்பு பற்றி தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதன் விளைவே இப்படிப்பட்ட துனிச்சலை அவருக்கு வழங்கியிருக்கும் போலும். இத்தனை இழிவான வரிகளைக் கண்டபிறகும், கம்யூனிச ஆசான்கள் கொச்சைப்படுத்தப்பட்டிருப்பது அறிந்தபிறகும் லீனாவின் எழுத்துக்கு முறையான கண்டனத்தைக் கூட பதிவு செய்யத் திராணியற்ற கூட்டம், இன்று அந்த கழிசடை வரிகளுக்கு நியாயம் கற்பித்துக்கொண்டு வலம் வருகிறது என்றால் அவர்களின் மான உணர்வு குறித்து எழும் சந்தேகம் நியாயமானதுதானே!

    மேலும் இந்த கம்யூனிச போலிகளுக்கு அப்பால் கம்யூனிசத்திற்காக இயங்கும் ‘ஒரு சிறு குழு’ (சி.பி.எம்.மின் திக்கதிர் நமக்கு கொடுத்திருக்கும் அடையாளம்) இருப்பது குறித்து பாவம் லீனா அறிந்திருக்க மாட்டார் போலும்!

    மேற்குவங்கத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விரட்டப்படும் பழங்குடியின மக்கள் மாவோயிஸ்டுகளின் தலைமையில் போராடுகின்ற வர்க்கப் போராட்டத்தை, ”மம்தா-மாவோயிஸ்டு கூட்டு சதி…” என்பதாகத் திரித்து அதனையும் ஒரு ஓட்டுப் பொறுக்கும் குழாயடிச் சண்டைதான் என்கிற அளவுக்கு கீழாகக் காட்டிவரும் சிபிஎம்-கட்சி, லீனாவின் இப்பிரச்சினை குறித்தும் “இந்து மக்கள் கட்சியும், வாயளவில் இடது தீவிரவாதம் பேசுகின்ற சிறுகுழுவினரும் கூட்டு…” என்பதாக உருவகப்படுத்துகிறது.

    ஏற்கெனவே ஒரு முறை அதே தீக்கதிரில் “பல்லாவரத்தைச் சுற்றிய மலைப் பகுதிகளில் ஆயுதப் பயிற்சி எடுத்துவருவதாக….” ஆள்காட்டி வேலை செய்தது. லீனாவுக்காக நடத்தப்படும் இக்கூட்டம் மற்ற அனைவரையும் விட இந்த போலி மார்க்சிஸ்டுகளின் அரிப்புகளைச் சொறிந்து கொள்வதற்குத்தான் பயன்படும். லீனாவைவிட இந்த கம்யூனிச போலிகள்தான் நமது அரசியலால் சகல முனைகளிலும் அம்பலப்படுத்தப்படுகிறார்கள். நமது அரசியல் விமர்சனங்கள் லீனாவுக்கு மாறாத இரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், தா.பாண்டியன்களுக்கும் ச.தமிழ்ச்செல்வன்களுக்கும் புரையோடிப் போன, இரத்தமும் சீழும் வடியும் காயங்களை அல்லவா ஏற்படுத்தியிருக்கிறது! அந்த வலியின் முனகல்களைத்தான் இன்று மாலை அந்த அரங்கத்தில் கேட்டவிருக்கிறோம். ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.

    • ஏகலைவன் தோழரே ?!
      சி.பி.எம் மை விமர்சிப்பது இருக்கட்டும்
      உங்கள் பத்திரிக்கைகள் பு.ஜ மற்றும் பு.க வில் வாசகர் கடிதங்களை கூட நீங்கள் அனுமதிப்பதில்லை. நீங்கள் ஒன்றும் உங்கள் கட்சி அடிமைகளுக்கு மட்டும் பத்திரிக்கை நடத்தவில்லை பேருந்து,
      ரயில்கள் பொது இடங்களில் தான் உங்கள் பத்திரிக்கையை விற்பனை செய்கிறீர்கள் எனக்கு உங்கள் பத்திரிக்கைகளில் வரும் கட்டுரைகளுக்கு மாற்று கருத்து இருக்க கூடாதா ?
      நீங்கள் எழுதகூடிய அதே பக்க அளவுகளில் என்னிடம் பதில் இருக்கும் அதை உங்கள் பத்திரிக்கைகளில் பதிவு செய்ய அனுமதிப்பீர்களா
      ஏனென்றால் நீங்கள் தான் புதிய ஜனநாயகம், கலாச்சாரம் எல்லாம் பேசுபவர்கள்.
      உங்கள் பொது கூட்டங்களில் பார்வையாளனாக பங்கெடுக்கும்போது
      அசதியின்காரனமாக தவிர்ர்க்க முடியாமல் அல்லது தவிர்க்க விரும்பி
      தூங்குபவனை குச்சியை வைத்து தட்டி எழுப்பி தூங்காதிங்க தோழர் என்று எச்சரிப்பது எந்த வகை ஜனநாயகம் தோழர்
      உங்கள் கூட்ட உரைகளை கேட்பதற்கு தான் ஒருவர் வருவார் தூங்குவதற்கு அல்ல உடல் அசதியின் காரணமாக தூங்குவரை தட்டி எழுப்புவதை நிச்சயம் ஜனநாயகம் என்றோ உங்கள் உரிமை என்றோ சொல்ல முடியாது.
      அது ஒரு பாசிசம் .
      அதிகாரம் என்ற ஒன்று உங்களுக்கு இல்லாத போதே அல்லது அதிகாரம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உங்களுக்கு சாத்தியம் இல்லாத போதே இது போன்ற அதிகாரத்தை நீங்கள் கையில் எடுக்கும் போது muppathu aandukalukku melaaka அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் சி.பி.எம் enna seyvaarkal

      • //தூங்குபவனை குச்சியை வைத்து தட்டி எழுப்பி தூங்காதிங்க தோழர் என்று எச்சரிப்பது எந்த வகை ஜனநாயகம் தோழர்//

        தூக்கம் வந்தால் வேறெங்காவது சென்று தூங்குவதுதான் ஜனநாயகம். பெரும்பான்மை மக்கள் உணர்வுடன் விழித்து கூட்டம் கேட்கும் இடத்தில் எனது வசதிப்படி தூங்குவேன், சலம்புவேன், குதிப்பேன் என்று பெரும்பான்மையின் உணர்வைக் கெடுப்பது ரமேஸ்குமார் பார்வையில் ஜனநாயகமாம். உங்க டிக்ஸனரில எல்லாமே தலைகீழாக இருக்குமா மிஸ்டர் குமார்?

        உங்க வீட்டுக்குள்ளேயா வந்து தூங்காதே என்று தட்டியெழுப்பினார்கள் தோழர்கள்? தொழிலாளர்களிடம் ஐந்து பத்து என்று வாங்கி கூட்டம் நடத்தினால் ரமேஷ்குமார் மாதிரி ஆட்கள் வந்து அங்கு தூங்குவேன் என்று அடம்பிடிப்பதுதான் பாசிசம்

      • யப்பா ரமேசு, நீ எங்களிடம் வேறு எங்கேயோ பட்ட அடிக்கு இங்கே ஏதாவது மருந்து கிடைக்குமா என்று வந்திருப்பது புரிகிறது. நீ ரமேசு குமாரா அல்லது ரமேசுபாபுவா என்பதான கேள்விகளைத்தான், உமது மேற்கண்ட புலம்பல் வரிகள் ஏற்படுத்துகின்றன. நீ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ விசயத்திற்கு வருவோம்.

        இந்தப் பதிவுடன் தொடர்புடைய கருத்தென்று உங்களுக்கு ஏதுமிருந்தால் இங்கு பதிந்து விவாதிக்கலாம், புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களில் நீங்கள் கடிதமெழுதி தெரிவிக்க எண்ணுகின்ற கருத்துக்களை இங்கே வெளியிடப்படுகின்ற மின்னிதழ்களிலும் வெளியிட்டு விவாதிக்கலாமே, உங்களை யார் தடுத்தது? முதலில் அதற்கு முயலுங்கள் பிறகு பார்க்கலாம். உங்களது ஏனைய புலம்பல்களுக்கு தோழர் பூச்சாண்டி பதிலளித்திருக்கிறார், அது போதுமென்று கருதுகிறேன்.

        • நான் கேட்டது புதிய ஜனநாயகம் மற்றும
          புதிய கலாச்சாரம்
          இதழ்களில் ஏன் வாசகர் கடிதம் போடுவதில்லை
          என்றுதான் நீங்கள் அதீத ஜனாயகம் பேசுகிறீர்கள்
          அதனால்தான்
          உங்களிடம் கேட்கிறேன். முதலாளித்துவ
          பத்திரிக்கைகளில் இருக்கும் ஜனநாயகம் கூட
          உங்களிடம் இல்லை. உங்களிடம்
          அடிப்படை ஜனநாயகமே இல்லாத போது லீனாவை
          பற்றி பேசுவதற்கு என்ன உங்களுக்கு என்ன
          யோக்கியதை இருக்கிறது.
          நான் உங்களை மரியாதையுடன் நீங்கள் என்றே
          பதிவுருகிறேன் நீங்களோ நீ போ வா
          இது தான் உங்கள் இயக்கம் கற்று கொடுத்த
          மார்க்சியமா.
          நான் உங்களிடம் அடி வாங்கிட்டு செல்லவில்லை
          உங்கள் ஆபாசம், உங்கள் வக்கிரம் பிடிக்காமல்
          உங்கள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய ஆள்
          தான்
          எனக்கு கந்தர்வக்கோட்டை பெரியசாமி யார்
          என்றும் தெரியும் தஞ்சாவூர் ராவணன் யார்
          என்றும் தெரியும்
          வீராசாமி, மருதையன் இன்னும் உங்கள்
          யோக்கிய சிகாமணிகள் பற்றியெல்லாம்
          எனக்கு நல்லாவே தெரியும்
          நீங்கள் அனைவரும் எவ்வளவு பெரிய
          ஆணாதிக்கவாதி என்பதுவும் தெரியும்
          நிலவுடமை சிந்தனாவாதிகள் உங்கள் எவ்வளவு
          பேர் இருக்கிறீர்கள் என்பதுவும் எனக்கு
          தெரியும்.
          முதலில் உங்களை உங்கள் இயக்கத்தை நவீன
          படுத்துங்கள் அப்புறம்
          லீனா விஷயத்திற்கு வருவோம்.
          உங்களை போல் நானொன்றும் பெயருக்குள்
          ஒளிந்து கொள்ளும் ஆள் அல்ல
          அந்த ஈனத்தனம் உங்களுக்கு கை வந்த
          கலை
          கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்
          பெயரை பற்றி கேள்விஎழுப்பி திசை
          திருப்பும் திருகுதாளம்
          எல்லாம் எனக்கும் தெரியும்.

          என்பதுவும்

        • பத்திரைக்கையில் வாசகர் கடிதம் போடாவிட்டால் உடனே அது ஜனநாயக விரோதமா அப்போ 2 வருசம் முன்னாடி வரைக்கும் வாசகர் கடிதம் வந்ததே அப்ப வரைக்கும் மகஇக ஜனநாயக அமைப்பு என்று ஏற்றுக்கொண்டிருந்தீர்களா? இதுதான் ஜனநாயகத்தின் அளவுகோலா., வாசகர் கடித பகுதி போட்டால் பாராட்டி வரும் கடிதங்களை பிரசுரிக்க முடியுமே அந்த வாய்ப்பை நழுவ விட்டது கூட ஜனநாயக விரோதமா?

          நாங்கள் மற்ற பத்திரிக்கையை போல மக்கள் தொடர்பற்று இல்லை ,மக்களிடம் பிரச்சாரம் செய்து விற்கிறோம், அதே பஸ்ஸ்டாண்ட் அதே ஊர் என தமிழகம் முழுதும் எப்போதும் எங்கள் தோழர்களை பத்திரிக்கை வாங்கும் படிக்கும் மக்கள் பார்க்கத்தானே செய்கிறார்கள் கருத்தை தெரிவிக்கத்தானே செய்கிறார்கள்.

          பேப்பர் விற்கும் விலையில் பத்திரிக்கை கொண்டு வருவதே சாத்தியமற்ற விசயமாயிருக்கிறது.. இதில் வாசகர் கடிதம் என்று ஒரு பக்கத்தை வீண்டிக்காமல் அதிலும் செய்தியை சொல்வது நல்ல விசயம்.

          அமைப்பிலிருந்து ஓடிப்போனவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் அப்படி ஓடிப்போய் எங்கே சேருகிறார்கள் என்பதிலிருந்துதான் அவர்கள் ஏன் ஓடிப்போனார்கள் என்பதை பரிசீலிக்க முடியும். உங்களுக்கு துணிவிருந்தால் நீங்கள் சார்ந்த அமைப்பின் பெயரை சொல்லவும்

          தோழமையுடன்

        • //////உங்கள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய ஆள்
          தான்///////

          இப்போதுதான் புரிகிறது. காதலிக்காக அரசியலைத் ‘தியாகம்’ செய்த முன்னாள் தோழர் ஒருவர் இருக்கிறார். ரமேஷ்குமாரின் புலம்பல்கள் அவரை மறுபடியும் ஏனோ நினைவுபடுத்துகிறது.

          இதனை நான் தவறாகவோ, கொச்சைப்படுத்தியோ சொல்லவில்லை, காதலியை அந்த அளவுக்கு மதிக்கின்ற பக்குவம் பெற்ற, பெண்ணியத்தைப் பாதுகாக்கின்ற அவரைப் போன்றவர்களை தவிர்க்கவியலாமல் நினைவுகொள்ள நேரிடுகிறது.

          காதலி பெரிதா, கொண்ட அரசியல் பாதை பெரிதா என்கிற பரிதவிப்பிலிருந்த அந்த முன்னாள் தோழர், அரசியலுக்காக காதலியை இழப்பது ஆணாதிக்கத் தன்மையாதலால், அரசியலை காதலிக்காக கைவிடுவது என்கிற ‘பெண்ணியம்’ சார்ந்த முடிவுக்கு வந்திருப்பார் போலும்!

          அந்த முன்னாள் தோழரின் தர்மசங்கடமான நிலையைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு என்னால் முடியாமல் போனதற்குக் காரணம், என்னிடமிருக்கும் ’ஆணாதிக்க’ப் புத்திதான் என்பதை உணர்த்திய ரமேஷ்குமாருக்கு நன்றி!

        • ரமேஷ் குமார் சார், வினவுல இவ்வ்வளு பெரிய வாசகர் கடிதங்கள், விவாதங்கள், அதற்குரிய தொழில் நுட்ப சேவைகள், பதிலுக்குப்பதில், அதற்குப் பதில், என்று இவ்வ்வளையும் இரத்த சாட்சியமாக வைத்துவட்டு எங்களுக்கு ஜனநாயகம் இல்லையே என்று பச்சைப்பொய் சொல்வது என்ன நியாயம் சார்?

        • காதலிக்காக‌ அரசியலை 'தியாகம்' செய்ததாய் சொல்லப்படுபவன் காதலிக்காக‌ அரசியலை 'தியாகம்' செய்ததாய் சொல்லப்படுபவன்

          நண்பர் ஏகலைவனுக்கு,

          இங்கு நடந்திருக்கும் பின்னூட்ட விவாதத்தை இப்போதுதான் கண்ணுற்றேன். மேலே ரமேஷ் குமார் என்ற பெயரிலான பின்னூட்டத்தை நான் இங்கு பதியவில்லை. ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் இருக்குமெனில் வினவு குழுவினரிடம் ஐ.பி முகவரியை வாங்கி சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

          எனக்கு தஞ்சை ராவணன் யார் என்றும் தெரியாது அப்படி தெரிந்தாலும் இங்கு வந்து அதை பேச வேண்டிய ஆட்காட்டித்தனமோ அல்லது அரைவேக்காட்டுத்தனமோ எனக்கு கிடையாது. நண்பர் ஏகலைவன், இனி இது போன்ற ஏதாவது உளறல் பின்னூட்டங்கள் வந்து அந்த சமயத்தில் என்னை பற்றிய நினைவு உங்களுக்கு வரும் பட்சத்தில் இயன்ற அளவுக்கு என்னுடைய மின்னஞ்சலில் உறுதிபடுத்திக் கொண்டு பின்பு கேலி பேசுங்கள். உங்களோடு ஒப்பிட முடியாவிட்டாலும் நானும் சில பணிகள் செய்திருக்கிறேன் என்பதன் பொருட்டாவது என‌க்கு இந்த சலுகையை தாருங்கள். மின்னஞ்சல் முகவரி உங்களுக்கு தெரியுமென நினைக்கிறேன். சமீப காலங்களாக அதிகமாக வலைப்பூக்கள் வாசிப்பதில்லை. எனவே நீங்கள் சொன்னால் மட்டுமே என்னால் விளக்கமளிக்க இயலும்.

          இன்று இந்த பின்னூட்டம் என் கண்ணில்பட்ட காரணத்தால் விளக்கமளிக்க முடிகிறது, இல்லாவிட்டால் ரமேஷ்குமார் போன்ற ‘மகா ஜனநாயகவாதிகள்’ எவனோ எப்படியோ போகட்டும் என்று கமுக்கமாக போய்விடுவார்கள். என் நினைவு உங்களை துன்புறுத்த, நீங்களும் என்னை வார்த்தைகளால் ‘காய்ச்சி’ எடுப்பீர்கள். இத்தளத்தில் நான் பின்னூட்டமிடுவதில்லை என்பதை மீண்டும் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன்., எனவே இது போன்ற உளறல் பின்னூட்டங்களுக்கு அடியேன் பொறுப்பாளியல்ல.,

          நன்றி

        • தோழர் ஏகலைவன் ஏன் இப்படி ஆதாரம் இல்லாமல் பேசுகிறீர்கள் ?
          அரசியல் வாழ்க்கையில் ஒருவர் தவறு செய்வது சாதாரன‌மானது தான், இவர் அப்படி என்ன தவறு செய்து விட்டார் ? காட்டியா கொடுத்துவிட்டார் ? இல்லையே. ஆனாலும் இது தவறு தான், தவறு செய்திருக்கிறார். எனினும் அது முடிந்து போன விசயமாகி விட்டது. அதை அவரும் தவறு என்றே உணர்கிறார் என்று கருதுகிறேன், எனவே மேற்கொண்டு அதை சரி செய்து கொண்டு மீண்டும் செயல்பட வருவது தான் தவறை உணர்ந்து கொண்டார் என்பதற்கான சான்று. நாம் அதற்கு தான் உதவி செய்ய வேண்டும். எனவே நாம் மீண்டும் மீண்டும் அதே பழைய விசயத்தை கிளர வேண்டியதில்லை. எனவே இனி வரும் நாட்களில் இதை நினவு படுத்தி பேசுவதை தோழர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  16. நீங்கள் லீனா கவிதை குறித்து எழுதிய விமர்சனம் அயோக்கியத்தனமானது அருவெருப்போட்டக்கூடியது.
    லீனா எழுதிய கவிதை ஆபாசம் கம்யூனிஸ எதிர்ப்பு என்றால் நீங்கள் அக்கவிதைக்கு எழுதிய விமர்சனம் கம் யூனிஸ பாசிசம்.
    செரால்டுக்கு குறி இல்லையா பாரதிராஜாவுக்கு குறி இல்லையா என்ற விமர்சனத்தை எந்த வகை இல் சேர்ப்பது.
    அது சரி உங்களுக்கு ஆபாசமாக தெரியும் ஒரு படைப்பு இந்து மக்கள் கட்சிக்கும் ஆபாசமாக தெரிகிறதே அது எப்படிங்க தோழர்

    • /////உங்களுக்கு ஆபாசமாக தெரியும் ஒரு படைப்பு இந்து மக்கள் கட்சிக்கும் ஆபாசமாக தெரிகிறதே அது எப்படிங்க தோழர்///////

      மேலே தோழர் நொந்தகுமரன் தெரிவித்திருப்பது போல இந்து மக்கள் கட்சியெல்லாம் ஒரு செட்டப்பாகக் கூட இருக்கலாம் ஐயா. இருப்பினும் இந்து மக்கள் கட்சி கம்யூனிச ஆசான்கள் இழிவுபடுத்தப்படுவதையும், சமூகவிடியலுக்காகப் போராடுகின்ற புரட்சியாளர்கள் இழிவுபடுத்தப்படுவதையும் எதிர்த்து வழக்கு பதியவில்லை, மாறாக லீனாவின் ஆபாசப்படைப்பு என்பதோடு அவர்கள் நின்றுவிடுகிறார்கள். லீனா எந்த தொழில் வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும், சமூக விடியலுக்கான புரட்சிக்காகப் போராடுபவர்கள் என்கிற அடிப்படையில் நாங்கள் கேட்கிறோம் எங்களை ஏன் இவ்வாறு இழிவுபடுத்துகிறீர்கள் என்று. எங்களை இழிவுபடுத்த லீனாவுக்கு உரிமையுண்டு என்றால் அதனினும் கடுமையாக எதிர்வினையாற்ற எமக்கும் உரிமையுண்டு, என்பதை தாழ்மையுடன் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றுக்கு, லீனாவால் பதில் சொல்லத் திராணியில்லை என்றால் அவரது பிரதிநிதியாக வந்து வாதிடும் நீங்களாவது பதில் சொல்லவேண்டும், ஐயா!

      • மார்க்ஸ், எங்கெல்ஸ், போன்ற ஆசான்களுக்கு
        நீங்கள் தான் அத்தாரிட்டியா
        அப்படியென்றால் அந்த அதாரிட்ட்யை
        உங்களுக்கு யார் கொடுத்தது

        • உங்களுக்கு உண்மையிலேயே அக்கரையும் சுரணையும் இருந்தால் இந்த கேள்வியை
          லெனின் பிராய்டை புணரவேண்டும் என்று எழுதிய லீனாவிடம் போய் முதலில் கேளுங்கள்

        • மார்க்ஸை பத்தி பேசினா மார்க்ஸியவாதி வராம வேற யார் வரணும்ன்னு எதிர்பாக்குற? அத்தாரிட்டிய யார் குடுக்கனும்ன்னு நினைக்குற?

          உலக மக்களின் விடுதலைக்காக தத்துவத்தை
          படைத்தவர்களை அவதூறு செய்யும் போது, அத்ததுவங்களை பின் பற்றுபவர்களும், மக்களை நேசிப்பவர்களும் தானே வருவார்கள்?
          அப்புறம் சிபிஎம் காரனா வருவான்?

          என்ன டா இது எழவாப் போச்சு, சித்தாந்தம் தான் பேச தெரியாது, லாஜிக்கா கூட பேச சொல்லி தரமாட்டாங்களா உங்க கட்சியில?

    • அண்ணே இங்கே என்ன நடக்குது ஏ இப்புடி கத்திகிட்டு கேடக்றிக

    • டேய் ரமேஷு பெரிய பருப்பு போல பேசுற ஏன் நீ லீனா யோனிய பார்திய.  இன்னும் செங்கடல் ல வேலை செஞ்ச யாருக்கும் பணம் தரள லீனையும் , ஜெரால்டும் கொள்ளை யடிக்கேரங்க. அது உனக்கு தெரியுமா. செங்கடல் படமே ராஜபக்ஷே, மன்மோகன் சிங்க், கலைஞர்ய புகழ்ல்றதுக்கு தான். 

    • அய்யா,

      இத்தனை நீண்ட கட்டுரைகளை வாசித்த பிறகும், இத்தனை நீண்ட விவாதங்களைப் பார்த்த பிறகும், இவை வெறும் குறிக்காக நடைபெறுகிற சண்டைதான் என்று மதிப்பிடுகின்ற ஞானக்கண் படைத்த நீங்கள், காரல்மார்க்ஸ் என்கிற பெயரை சாருநிவேதித்தா என்று மாற்றி வைத்துக் கொள்வது சிறப்பாக இருக்கும். உங்களுடைய ‘அத்தகைய’ அறிவுக்கும், திறமைக்கும் சாருவின் பெயர்தான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன் சாமி!

  17. அன்பின் தோழர்.,

    கடசியாக கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை க்ளிக்கினால்  ட்ரோஜன் ஹார்ஸ் என்ற வைரஸ் தரவிரங்கி கனினியில் இருப்பதான் எச்ச்சரிக்கை வருகிறது..உடனடி கவனம் தருக.

    • அன்புள்ள கும்க்கி நீங்கள் குறிப்பிட்டது கீற்று தளத்தின் சுட்டியை என்பதை தெரிந்து கொண்டோம், அதை நீக்கி விட்டோம். கீற்று நிர்வாகிக்கு மடல் எழுதியுள்ளோம். மிக்க நன்றி

      • //கடசியாக கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை க்ளிக்கினால் ட்ரோஜன் ஹார்ஸ் என்ற வைரஸ் தரவிரங்கி கனினியில் இருப்பதான் எச்ச்சரிக்கை வருகிறது.//

        கிருஷ்ண பரமாத்மாக்களின் வேலையோ?

  18. மனித உரிமைவாதி அ.மார்க்ஸ் முன்னிலையில் தோழர்களை அடிக்கப் பாய்ந்த லீனா மணிமேகலை.

    புரட்சிகரத் தோழர்களையும் மார்க்கிசியப் பேராசான் மார்க்சையும் மிக மோசமான முறையில் இழிவு படுத்தி லீனா மணிமேகலை மட்டகரமான கவிதை ஒன்றை எழுதியிருந்தார். அதற்கு வினவு தோழர்கள் எதிர்வினையாற்றியிருந்தார்கள். இதற்கிடையில் இந்து மக்கள் கட்சி லீனாவுக்கு எதிராக தமிழக காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை வழங்கியது. பாசிச இந்து மக்கள் கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு ஏதும் இல்லை. இந்நிலையில் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக மனித உரிமை வாதி என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் அ.மார்க்ஸ் ஒரு அரங்கங்கக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில் ராஜன்குறை, அ.மார்க்ஸ், சுகுணாதிவாகர், லீனா உட்பட இன்னும் சிலரைத் தவிற வேறு எவரும் லீனாவுக்காக வரவில்லை.

    மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் நாற்பது பேர் அக்கூட்டத்திற்குச் சென்றிருந்தனர். கூட்டம் தொடங்கியதும் அ.மார்க்ஸ்சிடம் ஜனநாயக ரீதியிலும் அமைதியாகவும் தோழர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். கேள்வி கேட்கும் உரிமையை மறுத்த மார்க்ஸ். தொடர்ந்து பேசுமாறு ராஜன்குறையை அழைத்தார். ஆபாசக் கவிஞர் லீனாவிடம் சில தோழர்கள் கேள்வி எழுப்பியதுமே அவர் பயங்கர உஷ்ணமாகி விட்டார். கடுமையான ரத்தக் கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள லீனாவுக்கு பிளட்பிரஷர் எகிற அ.மார்க்ஸ் முன்னிலையில் தோழர்களை கையோ ஓங்கியபடி அடிக்கப் பாய்ந்து விட்டார். ஜனநாயக ரீதியில் கேள்விகளை எழுப்ப வந்த தோழர்கள் அதிர்ந்து போய் அமைதியாகி. ராஜன் குறையை நோக்கி சில கேள்விகளை வீச அ.மார்க்ஸ் உடனே அரங்கத்தை விட்டு வெளியே போங்கள் என்று டென்ஷனாகி கத்த ஆகப்பெரிய ஜனநாயகவாதியின் அஹிம்சை முகத்தைக் கண்ட தோழர்கள் ஜனநாயக ரீதியில் கோஷமிட்டபடி அரங்கை விட்டு வெளியேறினார்கள்.

    http://inioru.com/?p=12299

    • இதையும் பார்ப்பேன், இதுக்கு மேலேயும் பார்ப்பேன் என்ற  தூள் பறக்கும் வசனங்களும்  லீனாவிடமிருந்து வந்ததாமே? வினவு அந்த கூத்தையும் கொஞ்சம் போடுங்க. உழகின் அழகிய முதல் பெண் இப்போது உலகின் அழகிய ரவுடிப்பெண்ணாக பரிணமித்ததை , அதற்கு கும்மியடித்த தமுஎச வை பத்தியும் படிக்க ஆவலாக இருக்கிறோம்.

    • லீனாவி யார் கூடவெல்லாம் படுத்தாய்
      என்ற பட்டியல் கேட்பதுவும் என் கூட
      படுக்க வருகிறாயா என்று கேட்பதுதான்
      அமைதியான கேள்விகளா நேற்று நடந்த
      நிகழ்ச்சியின் முழு வீடியோ பதிவையும்
      நெஞ்சில் மார்க்ஸ் இய உரமிருந்தால்
      வெளியுடுங்கள்.

      • அய்யா ரமேசு,உங்கள மாதிரியே ம க இ க கூட்டத்துல தூங்க உடமாட்டேங்குறாங்கன்னு யாரோ புகார் வாசிச்சாவுளாம், ஒருவேளை நீங்களா இருக்குமோன்னு ஒரு சந்தேகம். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். பிராய்டின் கருத்துக்களை அறிய லெனின்  பிராய்டை புணர வேண்டும் என்றால், பெண்ணியக்கருத்துக்களை அறிய யார் யார் யாரைப்புணர வேண்டும் என்பதையும் உங்க லீனா சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும். ஒருவரை புணர்ந்து ஒருக்கருத்தை பெறமுடியுமெனில் உங்கள் கருத்தை யாரைப்புணர்ந்து பெற்றீர்கள் என்பது மட்டும் எப்படி தனி நபர் தாக்குதலாக பார்க்க முடியும். போராளி, மார்க்சிய ஆசான் எல்லாரையும் ஆண்குறியா சித்தரிக்கும் லீனாவின் கருத்துக்கு நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ரமேஸ்(டைபி ரமேசா)
        மார்க்சிய ஆசான்களை, போராளிகளை, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களை கொச்சைப்படுத்தும் லீனாவை கேட்க ஆள் இல்லை. இங்க வந்து ஆட்டம் போடுகிறீர்கள். மார்க்சிய ஆசான்களை கொச்சைப்படுத்திய லீனாவுக்கு சப்போர்ட்டாக  களத்திலிறங்கிய தமுஎசவினரே எல்லாம் இந்து மக்கள் கட்சியில் ஐக்கிய மாகிவிட்டீரா என்ன? இது வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக எத்தை கூட்டம் லீனாவால் நடத்தப்பட்டது தமுஎச உதவியது? தொழிலாளியை கட்டி வைத்து அடித்த தோழர் லீனாவுக்கு தமுஎச தோழர்கள் சப்பைகட்டு நல்ல கதை.
        ஏன் தமுஎசவினரே தஸ்லிமா நஸ்ருதீனைப்பற்றி பேசுங்கள்? ஹூசேனைப்பற்றி பேசுங்கள், யார் தடுக்ட்தது. லீனாவின் யோனிக்கான ஆணுறுப்புக்கான சுதந்திரத்தை மட்டும் தான் பேசு வேன் என்றால் தங்களுக்கு பாலியல் மன நோய் இருக்குமா என மருத்துவரை அணுகவும்.

        //நெஞ்சில் மார்க்ஸ் இய உரமிருந்தால்
        வெளியுடுங்கள்//.எங்கே கிடைக்குமந்த உரம் ஒருவேளை நேத்து வரைக்கும் போயஸ் தோட்டத்துல காவல் காத்த காம்ரேடுகிட்ட கிடைக்குமோ என்னவோ???

      • ரமேஸ்குமார், நிகழ்ச்சிக்கு நீங்கள் போகவேயில்லை என்பது இந்த உளரலிருந்து தெளிவு.
        புரட்சிக்காரனெல்லாம் ஆண்குறியென்னும் பட்சத்தில் இந்திய சிபிஐ-சிமிஎம் உடன் உன்னுடைய அனுபவத்தை கூறு என்ற கேள்வி பதில் சொல்ல வக்கற்று போய் அடிக்க வந்ததிலிருந்து லீனாவின் கவித்துவ நேர்மையை எல்லோரும் விளங்கிக்கொண்டனர்
        வீடியோ எடுத்தது லீனாவின் கம்பேனி ஆட்கள், அவர்கள் வெளியிடும்போது (வெளிடயிட்டால்) உங்கள் பொய்யும் லீனாவின் சாமியாட்டமும் அம்பலமாகும்

    • அமைதியாக வெளியேறிய வீடியோ உள்ளது உங்களிடத்தில் அதை கொஞ்சம் வெளியிடுங்களேன் பார்ப்போம்

  19. “பெண் பிறக்கவில்லை; உருவாக்கப்படுகிறாள்.” என்று சிமோன் டி பாவா “The Second Sex” என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். பெண் என்ற உருவகம் பெண்ணின் உடலையும் தாண்டி பெண் எப்படியிருக்க வேண்டுமென்ற சமூக-கலாச்சார விழுமங்களால் உருவாக்கப்படுகிறது. அந்த விழுமங்களை கேள்வி கேட்டு பெண்களை வெறும் உடல்-பொருளாக பார்ப்பதை எதிர்த்து போராடுகிறார்கள் செயல்படுகிறார்கள் பெண்ணியவாதிகள். பெரியார் பெண்கள் தங்கள் கருப்பைகளையே களையவேண்டுமென்றார். ஆனால் மேகலை தன்னுடைய வார்த்தைகள் மூலம் (அவைகள் கவிதைகள் அல்ல) பெண்களை வெறும் தசைப்பிண்டங்களாகச் சுருக்கிவிடுகிறார். இது ஆணாதிக்க மனோபாவத்தை உள்வாங்கிச் செயல்படும் மனோபாவமே தவிர இதன் பெயர் பெண்ணியமல்ல. இதைச் சாருவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ”சுண்ணிய” எழுத்து என்றுதான் சொல்லவேண்டும்.

    இச்சையூட்டும் மஞ்சள் கதைகளை பெண் பெயரிட்டு எழுதி வாசகர்களுள் கிளுகிளுப்பை தூண்டும் மலினமான தந்திரத்தை கையாளும் ஆண் மஞ்சள் பத்திரிகையாளர்களை போலவே மேகலையும் எழுதுகிறார். அவரின் இத்தந்திரத்தை தன்னைச் சுற்றி ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தும் உக்தியாகவே கொள்ளவேண்டும். அதுமட்டுமே இருந்துவிட்டால் உடலரசியல் பேசும் வார்த்தைகளல்லாது (கவிதைகளல்லாது?) அவை வெறும் ’இன்ப எழுத்து’ என்று கூறிவிடுவார்கள் என்று அரசியல் என்ற மிளகு தூள் தூவிவிடுகிறார். நல்லகாலம் இந்த மேகலை மார்க்சிச புத்தகங்கள் படிக்கவில்லை. படித்திருந்தால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் வரும் காரல் மார்க்ஸ் ஏங்கெல்சின் புகழ் பெற்ற வாசகங்களான ”இதுவரையிலுள்ள வரலாறெல்லாம் வர்க்க போராட்டங்களின் வரலாறாகவே இருக்கிறது.” என்பதை “இதுவரையிலுள்ள வரலாறெல்லாம் ’ஆண்குறி யோனி’ இரண்டிற்குமிடையிலுள்ள போராட்ட வரலாறாகவே இருந்திருக்கிறது.” என்று மாற்றியிருப்பார். கம்யூனிச சமூகத்தில் பெண்களின் நிலை எப்படியிருக்கும் என்பதையும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் அழகாக கூறியிருப்பர். படித்தால்தான் தெரியும். ”ஈழ எட்டப்ப கழக” உறுப்பினர் சோபா சக்தியிடம் கேட்டால் அறைகுறையாகத்தான் புரியும்.

    தந்திரமிக்க இந்த மேகலை விரைவில் ஒரு சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினராக ஆகிவிடுவார் பாருங்கள்! அப்படியாகிவிட்டால் அவர் எப்படியிருப்பார்? இன்று அவர் ரசிகர்களுடன் நடத்திய கூட்டத்தில் அவர் நடந்துகொண்ட விதத்தை பார்த்தால் பக்கா பாசிஸ்டாகத்தான் இருப்பார் என்று ஆருடத்தில் நம்பிக்கையில்லாவிடினும் உறுதியாகக் கூறமுடியும்.

  20. லீனா மணிமேகலை, நாடார் இனத்தை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்.இலங்கைத் தமிழரான சோபாசக்தி ” நளவர் ஜாதி” என்று நினைக்கிறேன்.வ.ச.ஐ.ஜெயபாலனின் ஆராய்ச்சிப்படி, நளவர்கள்தான், நாடார்கள்!.பாரிஸ் சுகன் நளவர்.யாழ்ப்பாணத்தின் பெருப்பான்மையினராக உள்ள வெள்ளாளர்கள்,வெளி நாடுகளுக்கு குடியேறிய பிறகு,தற்போது யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையினராக இருப்பது, நளவரும்,தலிதுக்களுமே?.இவர்களின் உதவியில்லாமல் டக்லஸ் தேவானந்தாவால் வெற்றிப் பெற முடியாது!.சென்னையிலிருந்து இலங்கை அபிவிருத்தி? என்ற பெயரில் நிறைய வியாபாரங்கள் நளவர்களால் நடத்தப் படுகிறது!.

  21. லீனாவுக்காக இவ்வளவு பேசும் ரமேஷ்குமாரிடம் ஒரு கேள்வி… லீனா ஒரு கவிஞர் (அப்படித்தான் சொல்கிறார்), ஒரு பெண். அந்தக் கூட்டத்துக்கு அறியப்பட்ட பெண் எழுத்தாளர்கள் எத்தனை பேர் வந்திருந்தார்கள்? சரி… அதை விடுங்கள்…. யவனிகா சிறீராம், வசுமித்ர போன்றோர் தவிர்த்து, தமிழில் பிரபலமாக எழுதிக்கொண்டிருக்கும் வேறு எந்த எழுத்தாளாவது வந்திருந்தார்களா? பெண்ணெழுத்தின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்பதற்காக நடத்தப்படும் கூட்டத்தில் அதைத் தட்டிக் கேட்க எழுத்தாளர்கள் வந்திருக்கவேண்டுமே… முக்கியமான ஆட்கள் வராததிலிருந்து நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்?

    • அவர் ரசிகர்களுடன் நடத்திய கூட்டத்தில் இறுதியில் நடந்த இசை விருநதை பற்றி  கூறமுடியுமா

  22. எதை வேண்டுமானாலும் எழுதுவேன் என்று கிளம்பும் இந்த பேர்வழிகலுக்கு இது போதாது போலும்,நீங்க கிழிச்சி எடுங்க வினவு

  23. ஒரு படைப்பாளியை பார்த்து “சி.பி.ஐ., சி.பி.எம் கட்சிகளில் யாரோடு நீ படுத்திருக்கிறாய் என்று பட்டியல் போடு” என்று கேட்கும் அநாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் நீங்களெல்லாம் எப்படி கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்ள முடியும்?

    • ஏம்பா புரியாத ஆளா இருக்கியே நீ,  நான் லீனா, கால விரிச்சிகினு கீறது தான் என வேல, அப்பன், அண்ணன், தோழர், ஜிகாதி, சோல்ஜர் எல்லார் குறியும் பாத்தாச்சு எல்மாம் ஒரே மாதிரி கீது அப்டீன்னு அந்தம்பா தானேப்பா அவங்க ‘அனுபவத்த’ எழுதுனாங்க..  சரி பேப்பர்ல எழுதுன மேட்டர வாயால சொல்லு யாரு உன்ன மேட்டர் செய்ய சொல்ல லெனின், மார்க்ஸ், உபரி மதிப்புன்னு சொன்ன கேப்மாறி, சிபிஐ யா சிபிஎம்மா எந்த பரதேசி அதுன்னு கேட்டா…
      அது ஒரு தப்பா??? 

    • இது அவரே கவிதை எழுதி இருக்கிறாரே கவிதை எழுதியதை விளக்கம் கேட்டால் அதில் என்ன தவறு ………..கவிதை எவ்வளவு தரம் தாழ்ந்து உள்ளதே அதனால் கேள்விகள் சாட்டையை போல விழுக தான் செய்யும் …..எல்லாமே ஆண் குறிகள் என்று மார்க்ஸ் போன்றவர்களை இழிவு படுத்தினால் ………எத்தனை ஆண் குறிகளை பார்த்தீர்கள் என்ற கேள்வி வரத்தானே செய்யும் ……………

  24. நான் மணி

    ஒரு கட்சியுடனான அனுபவம் என்பது லீணா வுக்கும் அவரது ரசிக கண்மணிகளுக்கும் படுத்து எழுந்து வருவதுதான் என்றால் இதற்காக கோப்ப்பட வேண்டியவர்கள் சிபிஎம் ன் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் சிபிஐ மகளிர் அணியினர்தான்.

    • இந்த வெண்ணை வெட்டிகளை தோலுரிக்க தோழர் “நான் மணி” யின் உதவியை கோருகிறேன்!

      வாருங்கள் தோழர், உங்கள் சாட்டையை சுழற்றுங்கள்….

  25. மேற்படி ரோசாவின் பதிவு திமிரின் உச்சகட்டம். என்ன இருந்தாலும் பாப்பாரில்லையா – அவுக குசு வுட்டா கொஞ்சம் நாத்தம் அதிகமாத்தேன்
    இருக்கும் – பதிவு போட்டா திமிரும் கொழுப்பும் கொஞ்சம் ஏத்தமாத்தேன் இருக்கும்.

    இவனுக போற பக்கமெல்லாம் ஒன்னுக்கடிச்சிட்டு போவானுகளாம் (+போவாளுகளாம்) யாரும் என்னா ஏதுன்னு கேட்டா பிரச்சினை “தீவிர
    பரிமாணத்தை” அடைந்து விடுமாம். நடுவில் ஏன் கேள்வி கேட்கனும்னு பிடிவாதம் பிடிக்கறீங்கன்றாங்க – டேய் நீங்க எங்கடா நிகழ்ச்சி நிரல்
    வச்சிருந்தீங்க. மொத்தமா ஒன்றுகூடல் அப்படின்னு தானே நோட்டீஸ் போட்டீங்க? “ஒன்று கூடல்”னா என்னா அர்த்தம்? எல்லோரும் ஒன்னா
    கூடி மாத்தி மாத்தி சொரிஞ்சிட்டு போய்டுவீங்களா? கருத்து உரிமைக்காகத் தானே கூடறீங்க – அந்த இடத்துல தானே எங்க கருத்தையும்
    சொல்லனும்?

    முதல்லியே சொல்ல வேண்டியது தானே – “இந்தக் கூட்டம் எங்களோட கருத்து உரிமைக்கு மட்டுமேயான கூட்டம் (or ஒன்றுகூடல் whatever it is)
    இது தானே பாசிசம்? தங்கள் நிலைப்பாடுகளை தற்காத்துக் கொள்ள வக்கில்லாத அசிங்கங்கள் தான் அங்கே கவுஜர்கள் எனும் பெயரில் கூடி
    இருந்தனர். மொத்தமா ஒரு நாப்பது அம்பது பேருக்கு மேல தேற மாட்டார்கள் – இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் – “அங்கே
    வந்திருந்த எந்த ‘யோனி ஆதரவு’ கவுஜர்கள் தங்கள் வீட்டிலிருந்து யாரையும் அழைத்து வரவில்லை” அனேகமா வீட்ல டுபாக்கூர் உட்டுட்டு தான்
    வந்திருப்பானுகன்னு நெனைக்கிறேன்.

    கூட்டத்தை தடுக்க வேண்டுமா என்று எங்கள் தோழர்கள் சொன்னார்கள்? இல்லை. விளக்கம் கேட்டார்கள். கவிதை எழுதாதே என்றா நாங்கள்
    சொல்கிறோம் -விளக்கம் தானே கேட்கிறோம். உனது படைப்பை – அதன் பின்னுள்ள அரசியலை – விளக்க யோக்கியதை உனக்கு இல்லை
    என்றால் சொல்லி விடவேண்டியது தானே. சும்மா ஏண்டா மழுப்பறீங்க? பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் பெண்ணெழுத்து என்கிற
    பளபளப்பான ரேப்பருக்கு உள்ளே பீயைத் தானேடா சுருட்டி வைத்திருக்கிறீர்கள்.

    மனித குலத்தின் விடிவுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்த பெரும் ஆசான்கள் மேல் கொழுப்பெடுத்த ____ எல்லாம் சேறடிக்குமாம் –
    அது சுதந்திரமாம்.. அதை ஏன் என்று விளக்கம் கோருவது பாசிசமாம். உங்க டிக்சனரில எது பாசிசம் எது சுதந்திரம்? கொஞ்சம் வெளக்கமா
    சொல்லுங்க கவுஜர்களா – எனக்கு தலையே சுத்துது.

    எது கருத்து சுதந்திரம்? எது கருத்துரிமை? எது பாசிசம்?

    உங்களுக்குத் தெரியலைன்னா நான் வேற ஒரு அட்ரஸ் தாரேன் – அங்க போய் கேட்டுட்டு வந்து சொல்லுங்க. இல்லைன்னா உங்க யோனி / ஆண்
    குறி பட்டில்ல பாரத மாதாவையும் மோடி இராம கோபலன் பெயர்களையும் சேர்த்துப் பாருங்க. அவங்களே உங்க வீடு தேடி வந்து உங்களுக்குப்
    புரியும் விதத்தில் விளக்கம் சொல்லித் தருவார்கள் – கேட்டு எங்களுக்கும் சொல்லுங்கள்

    தன்னுடைய பாலியல் சாகச நடவடிக்கைகளை அந்த அம்மணி எழுதிக் கொள்வதைப் பற்றி எமக்குக் கவலை ஏதும் இல்லை. அந்த மாதிரியான
    இலக்கியம் வடிப்பதில் இந்த அம்மணியை விட திறமையான படைப்பாளி போலி டோ ண்டு தான் என்பது வேறு விசயம். நாம் ரோசா வசந்துக்கு
    இது நல்லாவேத் தெரிந்திருக்கும் – அவர் வேண்டுமானால் டூண்டுவை ஒரு சக படைப்பாளியாக லீனாவுக்கு அறிமுகம் செய்து வைத்துக் கொள்ளட்டும் . அந்த எலக்கியத்தை இணையத்தில் வெறியாகத் தேடிக் கொண்டிருக்கும் கொலைவெறி வாசகர்களுக்கு நல்ல இலக்கிய விருந்து கிடைக்கலாம்

    அப்பால நம்ம அந்தோனியாருக்கு ஒரு வேண்டுகோள்

    அடுத்த முறை நோட்டீஸ் போடும் போது பார்த்துப் போடுங்க மிஸ்டர் அந்தோனிசாமி.. நீங்க தெளிவா “உங்களோட கருத்து உரிமைக்காக
    மட்டும் ஆதரவாக சொறிந்து விட்டுக் கொள்ள நல்ல நகம் உள்ள முற்போக்கு கவுஜர்கள் தேவை” அப்படின்னு போட்டிருந்தீங்கன்னா
    எங்கள் வினவு தோழர்கள் வந்திருக்கவே மாட்டார்கள்.. பாவம் இவர்கள் அப்பாவிகள் நீங்கள் பொதுவாக கருத்துரிமை என்று நோட்டீஸ் அடித்ததைப்
    பார்த்து ஏமாந்து விட்டார்கள்.

    அப்புறம் மிஸ்ட்டர் அந்தோனி – உங்க வீட்டுல பெண்டு புள்ளைகள் கிட்டே லீனாவின் கவிதைகளை அறிமுகம் செய்யும் போது அதில் வரும்
    “மார்க்ஸ்” எனும் பெயர் உங்களைக் குறிப்பிடவில்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டீர்கள் தானே?

    • அவதூறுகளின் மொத்த குத்தகை = வினவு.காம்.
      அந்தோனி அவங்க வீட்டு பெண்டு பிள்ளைகள் கிட்ட என்ன சொன்னாதான் உங்களுக்கென்ன? சொல்லாவிட்டால்தான் உங்களுக்கென்ன?

      த்தூ…இதெல்லாம் ஒரு பிழைப்பு!

      • புரட்சியாளர்களை, மார்க்ஸிய ஆசான்களை அவதூறு செய்ததை, அதன் பின் உள்ள அரசியலை விளக்க சொல்லி கேட்டால் சொல்ல துப்பில்லை….
        லீனா, சோபா சக்தியின் ’யை நக்கி பிழைக்கும் நீங்கள் எங்கள் பிழைப்பை பேசுகிறீர்களா?

        லீனா வை ஆதரிக்கும் ஒரு நாயும் இதுவரை கவிதைக்கு விளக்கமோ, அதை பொது மேடையில் வைக்க தயாரா என்பதையோ தெரிவிக்கவில்லை.

        லீனாவின் மார்க்ஸிய அவதூறு கவிதையை எதிர்த்ததற்கு எங்களுக்கு பாட்டாளிவர்க்க நலன் தவிர வேறெதுவும் இல்லை.

        ஆதரித்ததற்க்கான உங்கள் நலனை, அல்லது அவசியத்தை வெளிப்படையாக சொல்ல தயாரா?

        இந்த பிழைப்புவாத மொன்னை நாய்கள் லீனவுக்கு மட்டுமல்ல தேவைப்பட்டால் மார்க்ஸிய ஆசான்களுக்கும் ரசிகராவார்கள்…

        இந்த பிழைப்புக்கு என்ன பேருப்பா ராசா???

        • அது ராசா இல்ல ரோசா.., நேர்ல பாக்கும் போது கைய புடிச்சுகிட்டு, தோழர் நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னுங்க வேண்டீயது.. முதுகுக்கு பின்னால திட்ட வேண்டியது.. இதெல்லாம் ஒரு பொழப்பா.. அது சரி நம்பி பாக்கவந்த ஆள ஊத்தி கொடுத்து முக்குல குத்துனவனுக்கு இதெல்லாம் எம்மாத்தரம்???? எப்டி எப்டி இந்து மக்கள் கட்சியா?… ஒலகம் சின்னது மச்சி மறுபடியும் பாக்காமயா இருக்கபோறோம்??????

        • அட மொன்னை நாயே!
          நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சைக்கு இதெல்லாம் தேவையா??

          நான் கேட்கலிங்கோ… நம்ப கவுண்டரு ஒரு படத்துல கேட்டதுங்கோ

      • @@@அந்தோனி அவங்க வீட்டு பெண்டு பிள்ளைகள் கிட்ட என்ன சொன்னாதான் உங்களுக்கென்ன? சொல்லாவிட்டால்தான் உங்களுக்கென்ன? த்தூ…இதெல்லாம் ஒரு பிழைப்பு!@@@

        பெண்ணுரிமை சினிமா புரட்யூசர் ரெண்டு பொண்டாட்டி காரனாம்.. இதோட ஒரு மானங்கெட்டா பொழப்பு இருக்கமுடியுமா த்தூ த்தூ த்தூஊஊஊஊஊ…. கடுப்பேற்றுகிறார் யுவர் ஆனர் 🙁

        • ரெண்டு பெண்டாட்டி இருந்தா உங்களுக்கென்ன சார்? அது அவங்கவங்க பெர்சனல் விஷயம். அடுத்தவர்களின் படுக்கையறைக்குள் எட்டிப்பார்க்கும் அநாகரிகத்தை முதலில் கைவிடுங்கள். தனிமனித அவதூறுக்கு இதைவிட வேறு உதாரணங்கள் தேவையில்லை. ஒரு இணையதளம் இருந்தால் எதை வேண்டுமானாலும் எழுதுவீங்களோ?

        • என்னது பெட்ரூம் குள்ள எட்டி பாத்தேனா..சொல்லுக்கும் செயலுக்கும் முரண் இல்லாம இருக்கனுமின்னுதானே சொல்றேன்!!! சொந்த வாழ்கையில ஆயிரம் ஓட்டைய வச்சுகினு பொது வாழ்கையில நாடகமாடாதீங்கன்னு தானே சொல்றேன்…நீங்க தான் மாவோ ரசிகராச்சே உங்களுக்கு இது நல்லா புரியனுமே???

        • /////// ஒரு இணையதளம் இருந்தால் எதை வேண்டுமானாலும் எழுதுவீங்களோ? ///////////////

          இதப்பார்ரா….. வந்துட்டார்டோய் நாட்டாமை சொம்ப தூக்கிகிட்டு!

          நீங்க எத வேணும்னா எழுதுங்க, எதுக்கு மார்க்ஸ் மற்றும்
          புரட்சியாளர்களை இழிவுபடுத்துகிறீர்கள்? ன்னு கேட்டா கருத்து சுதந்திரத்திற்க்கு இங்கு இடமில்லைன்னு கண்டன கூட்டம் போடுறீங்க

          என்ன எழவுப்பா இது நீங்க சொன்னா கருத்து நாங்க சொன்ன ? இது எந்தூரு நாயமுங்க ராசா அல்ல(து) ரோசா?

    • ஆமா… இந்த கழிசடை கவிதைக்கு பொதுக்கூட்டமா போடமுடியும்? இல்ல இதக் கொண்டு போயி மக்களிடம் பிரச்சாரம் பண்ணமுடியுமா?

      ஏதோ நடுநிலையாளராக கூட்டத்திற்க்கு வந்திருந்ததைப் போல, இங்கு போலியில் புண்ணூட்டமிடும் மொன்னைகளே, கூட்டத்திற்க்கு வந்தது இரு தரப்பு மட்டுமே என்பது தெரியாதா? ஏண்டா தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா?

      வந்ததில் லீனாவின் கவிதையை எதிர்த்த எமது தோழர்களை தவிர ஆதரிக்கும் சிகமாணிகளை தவிர நடுநிலையாளர் என்று எவருமில்லை ஓரிருவரை தவிர…

      இவனுங்க அவங்களுக்குள்ளேயே பேசி, அவனுங்களே கேட்குறதுக்கு கூட்டம் நடத்தி இருக்கானுங்க பா…

      மேலும் இவனுங்க எல்லாம் லீனாவுக்கு வரிந்து கட்டி வரும் விளம்பரதாரர்களே! நடந்த கூத்தில் விளப்பர பிரியைக்கு மகிழ்ச்சி தான் என்று உளவுத்துறையின் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன…

      அதுக்கு தான் இவனுங்க எல்லாரும் கூவி கூவி படத்தை நூறு நா ஓட்டிடலாம்ன்னு பாக்குறானுங்க…

      இதுல கூட உங்களுக்கு சொந்த கருத்து இல்லையாடா பாவிங்களா? சன்டிவி டெக்னிக்க யூஸ் பண்றீங்களே??

  26. குரங்கு கைல பூமாலை மாதுரி இன்டர்நெட் கேடசிடுசி சமுகத்தை அழிக்க , சவிதா பாபி சைட் மாதுரி லீமா ஆன்டி ன்னு ஒரு அக்கௌன்ட் கோடா போடுங்க என்னத்த சொல்ல , இப்படித்தான் சாரு லதா 10 வருசத்துக்கு முந்தி சொல்லி ஒரு டீமா ஒருவக்கிணறு அதை இந்த ஆண்டி இப்ப இன்டர்நெட் ல செய்றாங்க என்ன சொல்ல

  27. லீனாவின் கருத்துரிமைக்காக பேசும் பலரும் கவிதையில் சொல்லப்படும் விசயங்களுக்கு நேரடி பொருள் கொள்ளக்கூடாது என்று ஒரு வாதத்தை வைக்கிறார்கள். அது பல வாசிப்பு சாத்தியங்கள் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு படைப்பு காழ்ப்புணர்வையே வெளிப்படுத்தாது என்று சொல்வார்கள் என்றால் ஜெயமோகன் நடத்திய இதழில் வெளிவந்த ஒரு கதையில் மனிஷ்யபுத்திரனை ஏளனம் செய்ததாக இவர்களில் ஒரு பிரிவினர் முடிவு செய்தது எப்படி? ஒருவர் அணியும் உள்ளாடையின் பிராண்டை இன்னொருவர் அறிய விரும்புவது அவ்வளவு நாகரிகம் இல்லை. படைப்பையும் நமது படைப்பாளிகள் இந்தளவுக்கு தான் மதிக்கிறார்களா? மேலும் இந்த இலக்கியப் பார்வை இங்கு வளர்ச்சியடைந்த ஒன்று இல்லை. 14 ஆம் நூற்றாண்டில் உருவானாலும் ஆங்கில இலக்கியம் வெகு வேகமாக, சமூக மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து வளர்ந்தது. அதில் ரொமாண்டிக் age முக்கியமானது. இகாலகட்டத்தின் முக்கிய எழுத்தாளர்கள் கோல்ரிட்ஜ் மற்றும் வேர்ட்ச்வோர்த். இயற்கை கவிஞர் என்று குறிப்பிடப்படும் Wordsworth ஒரு இலக்கிய கொள்கையையே வகுத்தார். அவற்றில் சில. A Poet is just an ordinary person talking to another person. 2. Poetry should be of common man’s language. 3. Its theme doesn’t need to be lofty. அதுகாறும் கவிதை குறித்து சராசரி மக்களுக்கு இருந்து வந்த அச்ச மனோபவத்தை நீக்கினார்கள். Latin, Greek அறிந்த மேட்டுக்குடி வர்க்கத்தின் உடைமை கவிதை என்ற பாத்தியதையை உடைத்து எறிந்தனர். நேற்றைய கூட்டத்தில் இலக்கிய வேடம் போட்ட பலர் கவிதையின் இந்த வரலாற்றை அறிந்திருப்பார்களா என்று தெரியவில்லை. கவிதை ஒரு கட்டத்தில் தேக்கமடைந்து நாவல் இலக்கியம் பிரபலமானது. அது விக்டோரியன் era . 19ஆம் நூற்றாண்டில் எழுத்தாளர்கள் மிகப்பெரும் அளவில் உருவாகி நாவல் இலக்கியம் படைத்தார்கள். இந்த வளர்ச்சிப் போக்கின் ஒரு பகுதியாக Death of the Author போன்ற கருது கோள்கள் பிறந்தன. ஆப்பிரிக்க இலக்கியவாதிகள் பலரும் இதனை காப்பி அடித்தனர். அப்போது சினுவா அச்சிபி என்னும் புகழ் பெற்ற ஆப்பிரிக்க எழுத்தாளர் தமது நாட்டு இலக்கியவாதிகளை எச்சரித்தார். உங்கள் ரீடர்ஸ் ஐரோப்பியர்கள் அல்ல ஆப்பிரிக்கர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் என்று உரைத்தார். இது பல நேரங்களில் நமது இலக்கியவாதிகளையும் சேர்த்து சொன்னதாகவெ எனக்குப்படுகிறது.

    • ஒரு கவிதை என்பது எதற்காக எழுதப்படுகின்றது? படைப்பாளி என்பவன் தன்னுடைய படைப்பை மற்றவர்களுக்காகத்தானே படைக்கிறான். அப்படியெனில் அப்படைப்பிற்கு விளக்கம் கேட்டால் ஏன் கோபம் வருகிறது? ஒரு வேளை வேறாளு கவிதையை தருமி மாதிரி மேட்டர் போடுறாங்களா?
      (ச்சே ச்சே அப்படி எல்லாம் இருக்காது இவ்வளவு கேவலமா நம்ம லீனாவத்தவிற யாரால எழுத முடியும்)
      என்னய கேட்கக்கூடாதுன்னா நீயே எழுதி பொத்தி வச்சுக்க வேண்டியதுதானே???இதையும் பார்ப்பேன், இதுக்கெல்லாம் பயப்படமாட்டேன் என்றால் அதையும்  கொஞ்சம் விளக்கினால் சரியாக  இருக்கும். இப்பவே இப்படீன்னா இதுக்கு மேல எழுதினால் யப்பா  எப்புடி இருக்கும்?
      இதை நேற்று கலகத்தில் இடப்பட்ட கருத்து
       இது மீறிய கருத்தெனில் பின்னூட்டத்தை வினவு நீக்கி விடலாம்

      //15.04.10. இக்சா அரங்கம், பாந்தியன் சாலையில் கருத்துக்களை புணர்வதற்கான சுதந்திரம் குறித்த அரங்கக்கூட்டம்.யார் யாரைப் புணர்ந்தால் கருத்தை பெற முடியும்  எனும் நீதி சொல்லும் லீனாதிபதி, இகூட்டத்தில்  சோபாவும் ஏனையோரும் யாரைப்புணர்ந்தால் கம்யூனிசம் கற்க முடியும் என்பதையும் சொல்லிவிட்டால் சிறப்பாக இருக்கும், மற்ற படி கூட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள் : ‍)//

      யாரையும் புணர்வதால் கருத்துக்களை பெறமுடியாது. கம்யூனிசம் கற்க மக்கள் மீதான நம்பிக்கை வேண்டும், உழைக்கும் மக்கள் மீதான நேசம் வேண்டும், இப்படி யோனிகளை அரிந்து கொண்டும் , ஆண்குறியை சொறிந்து கொண்டுமிருந்தால் கண்ணா நீ ஏதாவது படம் எடுக்கலாம் படம் சும்மா பிச்சுகிட்டு போகும்

  28. லீனாவின் வெளிப்பாடுகளை மனவியல் ரீதியான ஒன்றாகவும் பார்க்கவேண்டும். சில வருடங்களுக்கு முன் பெங்களூரில் ஒரு பெண் தன்னுடைய நிர்வாணக்கோலத்தை விதவிதமான கோணங்களில் வரைந்து கண்காட்சியாக வைத்திருந்தார். “எதற்கு இப்படி?” என்ற கேள்விக்கு அவர் சொன்னது “என்னை இப்படி வெளிப்படுத்த எனக்குப் பிடித்திருக்கிறது” பெண்களுக்கிடையேயான தெருச்சண்டைகளில் அந்தரங்க உறுப்புக்களைப் பற்றிய விவாதங்களை சர்வசாதாரணமாகக் கேட்க முடியும்.இவற்றை சாதாரணமாகச் சொல்லிக்கொண்டு போகையில் எந்த விவாதமும் இல்லை.அவற்றை இலக்கியம், படைப்பு என்றெல்லாம் பட்டியலிட முனையும்போதுதான் பிரச்சினை வருகிறது.’பெண்ணின் உடல்மொழி ஆபாசமா?’ என்ற பதிவில் இதுபற்றி மேலும் விரிவாக அலசியிருக்கிறேன். அந்தப் பதிவுக்கு;http://amudhavan.blogspot.com

    • அமுதவன் இங்கே பிரச்சனை பெண்ணின்  உடல் மொழியை சுற்றி நடக்கவில்லை, மாறாக அதன் ஊடாக கம்யூனிச பேராசான்களை கேவலப்படுத்துவதை, அதன் உள்ளார்ந அரசியல் கயமைத்தனத்தை, பற்றியதே. 

  29. //////ஆனாலும் பெண்கள் எழுதவேண்டும் என்பதற்கான எதிர்ப்பாய் இதை யாரும் திசை திருப்பாமல் இருக்க வேண்டும்.//////

    மேலே உள்ளது டாக்டர்.ருத்ரன் லீனாவுக்கு வினவின் எதிர்வினைக்கு இட்ட பின்னூட்டம்!

    டாக்டர் திருப்பி கூட்டமே போட்டு முடித்துவிட்டார்கள்…!

  30. லீனாவின் வெளிப்பாடுகளை மனவியல் ரீதியான ஒன்றாகவும் பார்க்கவேண்டும். சில வருடங்களுக்கு முன் பெங்களூரில் ஒரு பெண் தன்னுடைய நிர்வாணக்கோலத்தை விதவிதமான கோணங்களில் வரைந்து கண்காட்சியாக வைத்திருந்தார்.
    ஓ!!! இதில் என்ன மனவியல் சிறந்தவை அவையுமல்ல, கவிதைகள் இவையுமல்ல! மனவியல் ஓர் அறிவியல்:எல்லா மதத்திற்கும்

  31. இந்த அந்தோனியார் பக்தர்கள் குசும்பு என்பது ஊமைக் குசும்பு. பாருங்கள் நம்ம யோனியிஸ்டு பஜாரிக்கு கூஜா தூக்க தோழர் மாவோவின்
    பெயரை ஒரு அந்தோனியார் ரசிகன் பயன்படுத்துகிறான். மார்க்சியத்தைப் பேசிக்கொண்டே மார்க்சிய விரோதிகளுக்கும் வர்க்க விரோதிகளுக்கும் விளக்குப் பிடிக்கும் இவர்களின் அரசியலும் இசுலாமியன் பெயரை பச்சை குத்திக் கொண்டு காந்தியைக் கொன்ற கோட்சேயின் அரசியலும் வேறு
    வேறானதல்ல.

    இவர்களுக்கு முற்போக்கு என்பது ஒரு பாசன் (fashion). இன்றைக்கு இன்ன பிராண்டு ஜட்டி போட்டுக் கொள்ளவேண்டும், இன்ன பிராண்டு
    பனியன் போட்டுக் கொள்ள வேண்டும், இன்ன செண்ட் அடிக்க வேண்டும் – அப்படியே டீ சர்ட்டில் சேகுவேரா இருக்க வேண்டும். கருத்துரிமை
    பேச்சுரிமை என்று இந்த வெண்ணை வெட்டிகள் பேசுவதெல்லம் சும்மா ஸ்டைலுக்காத்தான். அந்தோனியாரின் பேட்டி இந்த வார ஆ.வியில்
    வந்திருக்கிறது. ஆகக் கீழ்தரமான ரவுடிகள் கேடிகள் தாதாக்கள் கொலைகாரர்களின் என்கவுண்டர் மரணங்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார்.
    இந்த கேவலத்துக்கு உண்மையறியும் குழு ஒன்றிலும் உறுப்பினராம். கொலைகாரர்கள் தாதாக்களின் உயிர்வாழும் உரிமைக்காகவும் செக்ஸ்
    எழுத்தாளினியின் ஆபாச எழுத்துரிமைக்காகவும் பேசும் மிஸ்டர் அந்தோனியாரே… நிதமும் அரசின் கொலைக்கரங்களால் கொல்லப்படும் எளிய
    உழைக்கும் மக்களுக்காக நீங்கள் எத்தனை போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறீர்கள்?

    யோனியிஸ்டு-பஜாரி பொதுக்கழிவறையின் கிறுக்கல்கள் ரேஞ்சுக்கு படைத்திருக்கும் எலக்கியத்துக்கு ஆதரவாக அள்ளிக்கட்டிக் கொண்டு
    கிளம்பியிருக்கும் ரோசா அந்தோனியார் மற்றுமுள்ள முற்போக்கு கவுஜர்களே.. இதே இணையத்தில் உங்கள் யோனியிஸ்டை விட மிக அதிகமான
    எலக்கியத் தரத்துடன் எலக்கியம் படைத்துக் கொண்டிருந்த டூண்டுவின் எழுத்துரிமை சைபர் கிரைம் பிரிவினரால் முடக்கப்பட்ட போது எங்கே
    போயிருந்தீர்கள். அன்றக்கும் இதே அறச்சீற்றத்தோடு வந்திருக்க வேண்டியது தானே? பாவம் போலி டோ ண்டு ஒரு பெண்ணாகப் பிறக்கவில்லை என்பதோடு கார்ல் மார்க்சை அசிங்கப்படுத்தி எழுதினால் படித்த சீமாட்டிகளும் சீமான்களும் ஆதரவளித்து அறைக்கூட்டம் நடத்துவார்கள் என்னும் எளிய உண்மையை அறியாமல் மாட்டிக் கொண்டு விழித்தார். இன்றைக்கு புதிதாக யோனியிஸ்டாக அவதாரம் எடுத்துள்ள சுகுணா திவாகருக்கும் கூட அன்றைக்கு டூண்டுவின் எலக்கியத்துக்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும் எனும் அடிப்படை அறம் இல்லாமல் போனது போலி
    டோ ண்டுவுக்கு நேர்ந்து விட்ட கூடுதல் சோகம் தான்.

    இத்தனைக்கும் போலி டோ ண்டுவின் எலக்கியம் யோனியிஸ்ட்டின் எலக்கியத்தை விட மிக அதிகமான கச்சாவான மொழிப் பிரயோகத்தைக்
    கொண்டது. யோனியிஸ்டு வார்த்தைகளை பிச்சு பிச்சு எழுதுகிறார் என்றால் போலி டோ ண்டு பேராகிராப் பேராகிராப்பாக எழுதினார்.
    உங்களுக்கு ஆபாசத்தை ஆதரிக்க வேண்டும் – அதுவும் குறிப்பாக கம்யூனிஸத்தின் மேல் சேறு வாரி இறைக்கு ஆபாசத்தை தேடிப் பிடித்து
    ஆதரிக்க வேண்டும். அந்தோனியாரின் அரசியல் ஓட்டாண்டித்தனத்தை தொடர்ச்சியாக நாங்கள் அம்பலப்படுத்தியதன் அரிப்பை அவர்
    நேற்றைய கூட்டத்தின் ஊடாக சொரிந்து கொண்டிருக்கிறார் – அவ்வளவு தான் இதில் அந்தோனியாரின் அரசியல். வேறு கருத்துரிமை
    பெண்ணெழுத்து எல்லாம் சும்மா உட்டாலக்கடி.

    உங்களுக்கெல்லாம் வர்க்க விரோத கருத்துக்களை எழுத்துக்களை ஒரு உண்மையான கம்யூனிஸ்டுகள் எந்த கேள்வி வரைமுறையுமின்றி ஏற்றுக்
    கொள்வது மட்டும் தான் கருத்துரிமையின் அளவுகோலா? என்ன ஏதென்று ஏதாவது கேள்வி கேட்டுவிட்டாலே அது பாசிசமா? பதில் சொல்ல
    மாட்டேன் வெளியே போங்கள் என்று நீங்கள் சொன்னதும், யோனியிஸ்டு அடிக்கப் பாய்ந்ததும் தாண்டா உண்மையான பாசிசம்.. ஏண்டா எல்லாரும்
    மென்னு முழுங்கறீங்க.. நேரடியாவே நீங்கள் மக்கள் விரோதிகள் என்று அறிவித்துக் கொள்ள வேண்டியது தானே?

  32. இந்த பின்னூட்டங்களில் பெரும்பாலும் திட்டி எழுதாதவை மிக குறைவாக உள்ளது. இதை படிப்பவர்களுக்கு அதன் பின் உள்ள நாயத்தை யோசிக்க வைப்பதை விட நம்மை பற்றிய தவறான எண்ணங்களையே இவை ஏற்படுத்தும் என்பதை தயவு கூர்ந்து சிந்திக்க வேண்டுகிறேன்.

  33. ம.க.இ.க வினுடைய எதிர்ப்பை பெண் எழுத்திற்கு எதிரானதாக தெரியாமலோ, அல்லது வேண்டுமென்றே மடை மாற்றிவிடுகிறார்கள். அதனால் கல்வெட்டில் இல்லாததா! ஞானசம்பந்தர் காலத்திலிருந்தே இப்படி எழுதி இருக்கிறார்கள் என வியாக்கினம் செய்கிறார்கள்.

    சந்தர்ப்பவாதிகளை, பிழைப்புவாதிகளை, போலிகளை…இன்னபிற மக்கள் விரோத சக்திகளை தனது அரசியல் நிலைப்பாட்டிலிருந்து… அரசியல் ரீதியாக ம.க.இ.க. விமர்சனம் செய்கிறது. தனிமைப்படுத்துகிறது. அமுங்கியிருந்த பலரும் ம.க.இ.க வினருக்கு எதிராக களம் இறங்குகிறார்கள். இன்னும் பலர் அனானிகளாக உலா வருகிறார்கள்.

  34. ”தமக்குரிய பேட்டாவை ஒரு வாரமாக கேட்டும் பெறமுடியாத தொழிலாளிகள் படப்பதிவை எடுத்துச் சென்றுவிட்டதினால் படைப்பாளிகளுக்கு கடுப்பு.”
    ”டாடாவின் கனவை தனது மாநிலத்தில் நனவாக்க முடியவில்லையே என சிபிஎம்மிற்கு கடுப்பு”. இவர்களின் இருவரின் கடுப்பிற்கும் துடுப்பாக இருப்பவர்கள் தொழிலாளர்களும் விவசாயிகளும். இவ்விருவரும் இப்புள்ளியில்தான் இணைகின்றனரோ! 
    தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுக்கான சித்தாந்தமாக
    கம்யூனிசம் இருப்பதினால் இப்பெண் கம்யூனிச ஆசான்களை
    குறிவைத்திருக்கிறது. தோழர். ஏகலைவன் கூறியது போல சி.பி.எம்.
    காமெடியன்களின் தோலின் தடிப்பு பற்றி இப்பெண் தெளிவாகத்
    தெரிந்திருப்பதினால் ஆசான்களை அநாதைகள் என்று கருதியிருப்பார் போலும்.

    கண்ணியவான் அ.மார்க்ஸ் என்ன சொல்கிறார்?

    • கலை நீ கூட தான் உன் தோழர் வால் பையனை பிஞ்சில் பழுத்தது என்று நான் சொன்னதற்கு நீ திருப்பி என்னைய திட்டம என்னுடைய உயிர்க்கும் மேல் மதிக்கும் என் தலைவர் முஹம்மது நபியின் மனைவியை திட்டினாய் பதிலுக்கு நான் உன் ஆசான்களை அப்பவே திட்டியிருப்பேன் உன்னை மாதிரி படிச்ச முட்டளாக நான் இல்லை ஒ கம்னிச ஆசான்கள் அநாதையில்ல அப்புடின்ன முஹம்மது நபி மட்டும் அநாதைய 

      • மன்னிக்கவும் ஹைதர். 6 வயது சிறுமி ஆயிஷாவை ”என்னவென்று அழைக்கலாம்” என்று கேட்டது தவறுதான். 
        தூங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழிக்கும் 6 வயது சிறுமியை மணமுடித்த முஹம்மதுவை என்னவென்றழைக்கலாம் என்று வினவியிருக்கவேண்டும்

        • கலை – ஹைதர் ஒரு நிமிடம் … 1500 வருடங்களுக்கு முன்னர் சிறுவர் திருமணம் என்பது மனித சமூகத்தை பிடித்திருந்த ஒரு தவறான நோய். அது எல்லா இன மதத்தவரிடமும் இருந்த்து.. அதை நபிகள் சொல்லியிருந்தாலும் அது அவர் வாழ்ந்த சமூகத்தின் சூழல்  அவரின் சிந்தனையை தீர்மானித்ததின் விளைவே, மனித நாகரீகம் வளர வளர பல வழக்கங்கள் ஒழிந்து போனது, அதிலொன்று இது….
          குரானை பின்பற்றுகிறோம் பேர்வழி என இசுலாமியர் யாராவது 6 வயது குழந்தையை பெண்டாள இப்போது முனைகிறார்களா… நிச்சயம் இல்லை எனவே இதை மார்க்சிய நோக்கில் பரிசீலிக்க வேண்டுமே தவிர திராவிட கழகத்தின் கருத்துமுதல்வாத பாணியை கலை நீங்கள் பின்பற்றக்கூடாது
          ஹைதர் நீங்களும் இதற்காக வருந்த தேவையில்லை. புரிந்து கொண்டாலே போதும்

      • ஆசான்கள் பால்யவிவாகத்தை ஆதரித்தவர்கள் என்றால் தாராளமாக திட்டலாம். 

        • 6வயதில் திருமணம் முடித்தாக நீ அதராம் கட்டுப்ப இஸ்லாத்த கடாசி விட்டு உன்னுடைய ஆசானுடைய பெயரை வைத்துக்கொண்டு அந்த நிமிடம் முதல் நான் கம்னிஸ்ட் சும்ம அஸ்கர் அலி இன்ஞனியர் புத்தகத்த மட்டும் படிக்கம என்னைய மாதிரி எதிர்ப்பாளர் vsஅதரவாளர் இருபக்கமும் படி அப்புறம் எப்ப அந்த அதரத்த காட்டுற

      • உங்களுக்கு எல்லாமே நாங்கள் தான் எடுத்துத்தரனுமா? குரான் ஹதீஸ் எல்லாம் படிப்பீங்களா! இல்ல அலங்காரமா அலமாரியில வச்சி ஷோ காட்டுவீங்களா? பேருதான் ஹைதர் அலி. புஹாரி ஹதீஸ் எண்: 5133 மற்றும் 5134 ஐ படித்துப் பாருங்கள். வேறேதுனும் ஆதாரம் வேணுன்னாலும் கேளுங்க சொல்லிக் கொடுக்கிறேன்.

        • கலை நீங்க சொன்னது உன்மைதான் இப்போழுதுதான் புகாரி கிதபை படித்தோன் நல்ல பேர செலக்ட் பன்னுங்க 

        • ஹைதர் மேலே எனது பின்னூட்டத்தை பாருங்கள் https://www.vinavu.com/2010/04/14/leena-manimekalai/#comment-20924

  35. கம்யுனிசத்தை ஒழிக்கவேண்டும் என்று பல கைகூலிகள் அணிதிரள முயற்சிக்கிறார்கள்.போலி கம்யுனிஸ்டுகள்,கம்யுனிச ஆசான்களை கேவலப்படுத்துவதை ரசிக்கிறார்கள் ,வெட்கமில்லாமல் ஆதரிக்கிறார்கள்.மார்க்ஸ் பெயரை கூச்சமில்லாமல் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு இன்டர்நெட் எழுத்தாளர் இதற்க்கு தலைமை தாங்குகிறார்.மனித உரிமை மண்ணாங்கட்டி என்று பேசிக்கொள்கிறார்கள்.காரல் மார்க்ஸ் செத்துவிட்டார் இனி மார்க்சியத்தை புதைக்க வேண்டியது தான் பாக்கி என்பது இவர்களது திட்டம்.இணைய தளத்தில் மட்டுமல்ல வேறு எந்த தளத்திலும் இப்படிப்பட்ட கழிசடைகளை சந்திக்கும் துணிவு புரட்சிகர அணிகளுக்கு உண்டு .கவனமிருக்கட்டும்!

  36. திருவாளர் ரமேஷ் குமார் முதன்மையான கேள்வி என்ன. லீனா எழுதியது எந்த வகையில் சரி என்பது. அதனை பற்றி பேசாமல் புதிய ஜனநாயம் வாசகர் கடிதம் வைத்துள்ளதா இல்லையா என்று ஏன் மடையடைத்து பேச வேண்டும் .
    உண்மையில் வாசகர் கடிதம் வைத்துள்ள பத்திரிக்கைகள் ஜனநாயகமாக உள்ளதென்பதை நம்புகீர்களா. எத்தனை பத்திரிகைகள் தங்களை பற்றிய விமர்சனங்களை உள்ளபடியே எழுதுகின்றன (தீக்கதிர் உள்பட)
    ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் சில முன்னணியாளர்களை பெயர் சொல்லி அவர்களை பற்றி தெரிந்ததாக சொல்லி உள்ளீர்கள். சரி உங்கள் கூற்றுபடியே அவர்கள் என்ன அயோக்கியத்தனம் செய்தார்கள்.
    வக்கிரமான முறையில் கம்ய்னிச ஆசான்களை எழுதியது எழுத்து சுதந்திரமா, இதில் அரசியல் நோக்கம் இல்லையா. முதலில் உங்களுக்கு யார் மீது கோபம் வர வேண்டும். ஒருவேளை பிரகாஷ் காரதையோ, வரதராசனையோ, ராமகிரிஷ்ணனையோ சொன்னால்தான் உங்களுக்கு கோபம் வருமோ. பரிசீலனை செய்யுங்கள் .
    அல்லது தோழர் ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து எழுதியவனை கூச்சமே இல்லாமல் மேடை ஏற்றுவதுதான் கருத்து சுதந்திரம் என்று சொல்வீர்களேயானால் புரிந்து கொள்ளுங்கள் அது துரோகம்.
    ( நான் c p m விட்டு வெளியேறியவன் ஆனால் அது இங்கு விவாத பொருளல்ல )

  37. தோழர் ரமேஷ் உங்கள் பதிவிலிருந்து சில விடயங்கள்
    சரியா,தவறா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
    நீங்க தற்செயலாக / பார்வையாளனாக கூட்டத்துக்கு வந்து அசதியில் தூங்கிய தோழருக்காக பேசவில்லை ஏனெனில் அவ்வளவு அசதியுளும் கூட்டத்திற்காக வந்த தோழர் கம்பினால் தட்டி (உங்க வார்த்தையில் ) எழுப்பியதற்கு நன்றிதான் சொல்லுவார். ஒன்று நீங்க சொன்ன தகவல் வேண்டுமென்றே தேவையின்றி சொல்லியது அல்லது தூங்கிய நபரே நீங்கள்தான். இதில் எது சரி.

    அப்படி என்ன ஆபாசம் இந்த அமைப்பில் உள்ளது கொஞ்சம் சொல்வீர்களா , அதற்க்கு எதிராக எந்த வகையில் போராடி நீங்க அமைப்பை விட்டு வெளியே போனீர்கள். நேர்மையாக சொல்வீர்களா.
    இப்போது எந்த அமைப்பில் என்ன வேலை செய்து கொண்டிருகீர்கள் தெரிந்து கொள்ளலாமா
    ம க இ க வில் புனைபயர் இருக்கட்டும் இது உங்கள் ஒரிஜினல் பெயர் தானா

    முக்கியமான விடயம் உண்மையில் லீனாவை ஆதரிக்கீங்களா எதிர்க்குரீங்களா

  38. அருமையான கட்டுரை.ஒரு காலத்தில் லீனாவின் கவிதைகள் மீது மதிப்பு இருந்தது.வினவு படிக்க படிக்க புத்தியில் பதிந்திருக்கும் அவரை பற்றிய பிம்பம் உடைந்து விட்டது. சமீபத்தில் கூட அவர் குமுதத்தில் வினவுவில் என்னை பற்றி எழுதி இருக்கிறார்கள் என்று சொல்ல தைரியம் இல்லை. அப்படி தெளிவாக சொல்லிவிட்டால் வினவுவை படித்து சரியகதனே சொல்லியிருகிறார்கள் ஏன் இவர் இப்படி எதிர்வினை கட்டுகிறார் என்று எல்லா தரப்பினரும் ஏன் மஞ்சள் பத்திரிகையான குமுதம் வாசகர்களும் கூட தெரிந்து கொள்வார்கள்.இவர் பெண்ணியம் மற்றும் நேர்மை பற்றி பேச அருகதை இல்லை.

  39. ஹைதர் இஸ்லாமையோ அல்லது நீங்கள் மதிக்கும் தூதர் முஹம்மதுவையோ எள்ளிநகையாடவேண்டும் என்பது எனது நோக்கமல்ல. இஸ்லாம் கூறிய அனைத்தும் சரியானதுதான் என ”தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான்” என முஸ்லீம்கள் கூறுவதினாலேயே  சில சமயங்களில் தவிர்க்கமுடியாமல் அதுபோன்று எழுத நேரிட்டுவிடுகிறது. ஒருவேளை அவை உங்களையோ உங்களது சமூகத்தினரையோ புண்படுத்தியிருந்தால் (புண்படுத்தியிருக்கும்) திறந்த மனத்துடன் மன்னிப்புக் கோருகின்றேன். மேலும் இப்பதிவில் இவ்விவாதத்தை தொடராமல் இருப்பது நல்லது என்று நினைக்கின்றேன். 
    தோழர் கேள்விக்குறி அவர்களுக்கு நன்றி.

    • கலை நீங்க எங்கள எம்புட்டு வேறுப்பேத்துனாலும் உங்க ஆசான திட்டமா இருக்கிற நேர்ம உங்களுக்கு ஏ வரமட்டிகிது

      • அதியமான் எங்களுக்கு நிறைய சொல்லி தர்றரு அவதூறுகளை கூட நாங்கள் சொல்வதில்லை கவனித்திர்களா

        • அதியமான் சொல்லித் த்ருவது அவதூறு என்று நீங்களே ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள் நன்றி.

          நான் ஒன்றும் அவதூறாக கூறவில்லையே. ஆதாரத்துடன்(உங்களுடையதிலிருந்து) தான் கூறியிருக்கின்றேன்.

        • கலை இது உங்களுக்கு அவதூற தெரியல///முகம்மது நபி (ஸல்) அவர்கள் போர் ஒன்றிற்குச் சென்று திரும்பியதும் தமது வெற்றியை அறிவித்துவிட்டு “கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)” என்று கூறுகிறார்..சாகித்சாகித், எந்த ஹதீஸ் தொகுப்பில் – எத்தனையாவது ஹதீஸாக இது குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை தயவு செய்து தரவும்//////“….முகம்மது நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவின் கணவனரான அலியிடம் “என் மகளே ஆனாலும் பெண்கள் சொல்வதைக் கேளாதீர்கள்” என்று கூறியிருந்தாலும்….. ” – சாகித்.நண்பர் சாகித்… இதற்கும் நீங்கள் தக்க ஆதாரத்தை தருவீர்கள் என்று/// ஏம்பா சாகித் எங்கே பொயி தொலைஞ்ச வந்து இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லு 

  40. தயவு செய்து முதல்ல இதப் படீங்க சார்….

    இளகிய மனமுள்ளோர் இத படிக்காதீங்க : சக்தி

    சின்ன வயசுல ஒரு கதை சொல்வாங்க, ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஒரு அரக்கனோட உயிர், ஒரு கிளிட்ட இருக்கு, அந்த கிளிய ஒரு ராஜகுமாரன் போய் கொன்னுட்டு தன்னோட ராணிய காப்பாத்துனான்னு…

    கேள்விபட்டிருக்கீங்களா? கண்டிப்பா கேள்விபட்டிருப்பீங்க. ஏன்னா, அது சின்ன வயசு கதை.

    இப்ப பெரிய வயசுல ஒரு கதை சொல்றேன். ஒரு பாலம் தாண்டி, ஒரு கோயில் இருக்கு. அந்த பாலத்துக்கு அடியில ஒரே தண்ணி, கண்ணுக்கு எட்டுன தூரம் வரை தண்ணி. அத கடல்னு சொல்றாங்க. அந்தக் கடல்ல என்ன நடந்தாலும் யாருக்கும் எதுவுமே தெரியாது. அந்தக் கோயில்ல ஒரு சாமி இருக்கு. அந்த சாமியால கூட உதவ முடியாம கடலுக்கு பக்கத்துல நிறைய மக்கள் இருக்காங்க. உங்களப் போல, என்னப் போல … சொல்லப் போனா ஒரு லட்சம் மக்கள். எந்த ராஜகுமாரனும் இதுவரைக்கும் வந்தபாடில்ல.

    இத கேள்விபட்டிருக்கீங்களா?. கண்டிப்பா கேள்வி பட்டிருக்கமாட்டீங்க. ஏன்னா, அந்த மக்களோட வாழ்க்கை முறைக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஒரே ஒரு சம்மந்தம் வேணும்னா இருக்கும். அது என்னான்னு அப்புறம் சொல்றேன். இந்த கோயிலும், பாலமும், எங்க இருக்குன்னு யோசிச்சீங்களா? தெரியலேனா பரவாயில்லை, ரொம்ப யோசிக்காதீங்க. யோசிக்கிறதுக்கு இன்னும் நிறைய இருக்கு.

    அந்தப் பாலம் – பாம்பன் பாலம்

    அந்தக் கோயில் – ராமநாதசுவாமி கோயில்.

    அந்த ஊர் – ராமேஸ்வரம்.

    அந்த மக்கள் – நம்மளுடைய மீனவ மக்கள்.

    கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இருக்காங்க. அவுங்களுக்கு என்ன பிரச்சனைன்னு உங்ளுக்கு தெரியுமா? சொல்றேன். தெரிஞ்சுக்கோங்க.
    அவுங்களுக்கு பிரச்சனையே உள்ளூர்காரங்களும், அரசாங்கமும், பக்கத்து நாட்டுகாரனும் தான். யாருக்கு தான் பிரச்சனை இல்லைன்னு கேக்குறீங்களா?. நீங்க கேக்குறது கரெக்ட் தான். நமக்கெல்லாம் பிரச்சனைன்றது வீட்ல தண்ணி வரல, போலீஸ் சிக்னல்ல புடிச்சிட்டாங்க, இந்த மாசம் சம்பளம் 4 நாள் லேட்டாயிடுச்சு, கிரெடிட் கார்ட் பில்லுல வட்டி ஏறிட்டே போகுது, பத்து மணிக்கெல்லாம் டாஸ்மார்க்க அடச்சிடுறாங்கன்னு அடுக்கிட்டே போகலாம். நான் ஒண்ணும் யாரையும் தப்பா சொல்லல, நடமுறையில இருக்கிறது தானே. ஆனா, நமக்கு தினம் தினம் உயிர் போயிருமோன்னு பயப்படுற மாதிரி எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனா அது அவுங்களுக்கு இருக்கு.

    முதல்ல பக்கத்து நாட்டுக்காரன்ல இருந்து ஆரம்பிக்கிறேன். பக்கத்து நாட்டுக்காரன்னா, நம்ம எதிரி நாடுன்னு சொல்ற பாக்கிஸ்தான்னு நினைச்சுட்டீங்களா?. அவனக் கூட ஒரு வகையில சேத்துக்கலாம். அது ஏன்னு அப்புறம் சொல்றேன்.

    இவன் யாருன்னா, நம்ம நேச நாடுன்னு சொல்ற இலங்கை.

    நம்ம ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள்ள மீன்புடி தொழிலுக்கு போகும் போது தொழில பாக்க விடாம சித்ரவதை பண்ணி சாக அடிக்கிறதையே வேலையா வச்சிருக்காங்க. ஏன் இப்படி பன்னுறாங்கன்னு கேட்டீங்கன்னா? சிங்கள இனவெறியூட்டப்பட்ட இராணுவத்திற்கு தமிழர்கள் மேல ஒரு காழ்ப்புணர்ச்சி. இது தான் அடிப்படை பிரச்சனை. அதிலையும் இந்த கச்சத்தீவு எப்ப அவுங்க கைக்கு போச்சோ, அதுக்கப்புறம் தான் நம்மளோட மீனவர்களுக்கு ஆரம்பிச்சுச்சு பிரச்சனையெல்லாம்.

    மீதக்கதைய கர்பினிப் பெண்களோ, மனநோயாளிகளோ யாரும் படிக்காதீங்க.

    நம்ம மீனவர்கள்ட்ட கிட்டத்தட்ட 712 விசைப்படகுகளும், 1300 நாட்டுப் படகுகளும் இருக்குது. பெரும்பாலும் அதிகாலையிலும், இரவிலும் தான் இவுங்க மீன்பிடிக்க கடலுக்குள்ள போவாங்க. கடலுக்குள்ள போனவங்க ஒரு நாள் இல்ல ரெண்டு நாள்ல மீன் பிடிச்சிட்டு திரும்பி வந்துருவாங்க. இவுங்க போகும் போது நம்ம இந்திய கடற்படை என்ன பண்ணும்னா?, கார்ப்ரேட் கம்பெனி வாட்ச்மேனோட வேலைய பாப்பாங்க. மீனவர் அட்டை இருக்கா?, கள்ளக்கடத்தல் ஏதும் பன்றாங்களா? வேற என்ன என்ன இருக்குன்னு பாப்பாங்க.

    அவுங்களுக்கு முக்கியம் எல்லாம், விடுதலைப்புலிகள் யாராவது ஊடுறுவி வந்துடுவாங்களோன்னுதான். இதெல்லாம் தாண்டி கடலுக்குள்ள போனா, நம்ம கடல் பகுதியில மீனே கிடையாது. இந்திய எல்லை, சர்வதேச எல்லை, இலங்கை எல்லைன்னு கடல இஸ்டத்துக்கு கூறு போட்டு சொந்தம் கொண்டாடிட்டு இருக்காங்க. எல்லைகள் இது இதுன்னு ஒரு குறிப்பும் கிடையாது. நடுக்கடல். வெறும் தண்ணி மட்டும் தான். இருந்தாலும் மீனவர்களுக்கு எல்லை எதுன்னு நல்லாவே தெரியும். அப்புறம் ஏன் எல்லைய தான்டுறாங்கன்னு கேக்குறீங்களா?. நம்ம பகுதியில தான் மீனே இல்லையே.

    இலங்கை பகுதியில தான் நிறைய சதுப்பு நிலமும், பவளப் பாறையும் இருக்கு. அங்க தான் மீன்கள் இனப்பெருக்கம் அடைந்து நிறைய இருக்கு. மீனவர்கள் அங்க மீன் பிடிச்சிட்டிருக்கும் போது தான் இலங்கை கடற்படையினர் எங்கிட்டிருந்தாவது கண் இமைக்கிற நேரத்தில வந்து நிப்பாங்க. இலங்கை கடற்படையினர்ட்ட இருக்குறது அதிவேக இன்ஜின் கொண்ட ராட்சத இரும்பு போட். ரஸ்யா, சைனா ன்னு வேற வேற நாட்டுல இருந்து இறக்குமதி செய்து வச்சிருக்காங்க. அந்த போட்ட வச்சு நம்ம மீனவர்களோட விசைப்படக வேகமா அணச்சு ஓரமா ஒரு இடி இடிப்பாங்க. அவ்வுளவு தான், 8 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள போட்டோட ஓரப்பகுதி டைட்டானிக் படத்துல பனிக்கட்டியில இடிச்ச கப்பல் மாதிரி சேதத்துக்குள்ளாயிரும்.

    சில சமயத்துல முங்கக்கூட செங்சுரும். நம்ம ஊர்ல, தெருவுல விக்கிற நிறைய ஹாலிவுட் படம்லாம் பாத்திருப்பீங்க, நடுக்கடல்ல சண்டை, கொலைன்னு. அதெல்லாம் நீங்க நேர்ல பாக்கனும்னா ஹாலிவுட்லாம் போக வேண்டாம், நேரா நம்ம ராமேஸ்வரத்துக்கு வாங்க. உயிர் மேல ஆசை இல்லேனா யாருக்காது பணத்த கொடுத்து ஒரு போட் எடுத்து உள்ள போய் பாருங்க. சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் எவ்வுளவு நேரடி சம்மந்தம் இருக்குன்னு உங்களுக்கு தெரியும். யாரும் கூட்டிட்டு போக மாட்டாங்கனுலாம் கிடையாது, பணம் பாதாளம் வரைக்கும் பாயும் போது, தண்ணிலையா பாயாது.

    நடுக்கடல்ல யாரோட உதவியும் கிடைக்காது. கத்துனா கூட யாருக்கும் கேக்காது. மீசையே முலைக்காம கையில துப்பாக்கியோட நாலு, அஞ்சு சின்ன பசங்க கால தூக்கி “போட்” விட்டு “போட்டு” அழகா தவ்வி வருவாங்க. அவுங்களுக்கு சம்மந்தமே இல்லாம தடியா ஒரு பூட்ஸ் போட்டுக்கிட்டு வந்து அவுங்க கேக்குற முதல் வார்த்தை ,நீ இந்திய வேசி மகன் தானேடா?”.

    உங்கள யாராவது கெட்ட வார்த்த சொல்லி கூப்பிட்டா, என்ன பண்ணுவீங்க. அவுங்கள விட இன்னும் நாலு வார்த்த அதிகமா சொல்லுவீங்க. அதுக்கு மேல அடிதடி சண்டைன்னு போகும். அடுத்து போலீஸ் வருவாங்க. ஆனா கடல்ல எந்த போலீஸும் வராது, நேவியும் வராது. எல்லாத்தையும் சகிச்சுகிட்டு ஆமான்னு சொல்லிதான் ஆகனும். சிங்களவனுக்கு தமிழ் தெரியாதுன்லாம் நினைக்காதீங்க. இப்ப இருக்கிற, மாடர்ன் ஜென்ரேசன விட நல்ல பேசுவாங்க. மீனவர்கள் ஒத்துக்கிட்டாலும் அடுத்து அவுங்க படுற சித்ரவதையெல்லாம் நம்மாளால யோசிச்சுகூட பாக்க முடியாது.

    எல்லாத்தையும் நேரா நிக்க வச்சு அவுங்களோட உடையை கழட்ட சொல்வாங்க. அம்மனமா நிக்க வைப்பாங்க. உங்கள அப்படி நிக்க வச்சா என்ன பண்ணுவீங்கன்னு யோசிச்சு பாருங்க?. அதோட மட்டும் முடியாது. நம்ம இந்திய அரசாங்கம் போட்ட சட்டத்த இலங்கை அரசாங்கம் அராஜகத்தோட மீனவர்களோட சம்மதம் இல்லாம நிறைவேத்துது. என்ன சட்டம்னு கேக்குறீங்களா?.

    ஒரினச் சேர்க்கை சட்டம் தாங்க.

    நடுக்கடல்ல மீனவர்கள ஒருத்தருக்கு ஒருத்தர் ஹோமோ செக்ஸ் பண்ண சொல்லிட்டு “போட்டு” மேல போய் உக்காந்துப்பாங்க. மீனவர்கள் படும் கஷ்டத்த பாத்து, அவுங்க செயல் முறைய பாத்துட்டு “போட்ட” தட்டி தட்டி, அடிச்சு அடிச்சு பேயா சிரிப்பாங்க. நம்ம மீனவர்கள் எப்போதும் தொழிலுக்கு போகும் போது குடும்பமா தான் போவாங்க. அப்பா, அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன்னு எல்லாரும் ஒண்ணா தான் போவாங்க. ஏன்னா, எல்லாத்துக்குமே அது தானே தொழில். நம்ம ஊர் அரசியல எப்படி ஒரே குடும்பமா இருந்து பாத்துக்கிறாங்களோ அதே போலத்தான் அவுங்களுக்கும் மீன்புடி தொழில்.

    இதுல பல சமயம் குடும்பத்துக்குள்ளையே ஒருத்தருக்கு ஒருத்தர் ஹோமோ செக்ஸ் பண்ண நேர்ந்துரும். அப்பாவும் மகனும், மாமனாரும் மருமகனும், சித்தப்பனும் பெரியப்பனும்னு பாவமா மாட்டிப்பாங்க. இது என்னோட அப்பா, இது என்னோட சித்தப்பான்னு சொன்னாங்கனா அவ்வுளவு தான். வலுக்கட்டாயமா சேர வச்சிருவாங்க. இந்த சம்பவம் நடக்கும் போது ஒரு சிங்கள இனவெறியூட்டப்பட்ட இராணுவத்தினன்துப்பாக்கி வச்சுகிட்டு பக்கத்துலேயே நிப்பான். அவுங்க சரியா பண்ணலேனா, துப்பாக்கிய வச்சு குறியிலேயே தட்டுவான். வலியில துடிச்சாவோ, கதறுனாவோ திருப்பி திருப்பி அடி தான் இல்ல வேற யாரோடையாவது சேத்து விட்டுருவாங்க.

    சில சமயம், ஐஸ்கட்டி மேலையும் படுக்க வைப்பாங்க, படுக்க வச்சு இந்த லீலையெல்லாம் நடத்துவாங்க. இந்த கொடுமைய யார்ட்ட போய் சொல்ல முடியும் நீங்களே சொல்லுங்க. போலீஸ்ட்டையா? இல்ல கடற்படையிலையா? – அட்ப்போங்க, மீதக்கதைய தெரிஞ்சுக்கோங்க.

    அவுங்க இப்படி ஒரு சம்பவம் நடந்தாலும், எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு அடக்கி வச்சுட்டு, கரையில குடும்பம் காத்துட்டிருக்குன்னு, மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்புவாங்க.. இதோட முடியாது இவுங்களோட துயரம்.

    மீனவர்கள் எதுக்காக 200 லிட்டர் டீசல் போட்டுட்டு, இவ்ளோ கஷ்டப்பட்டு கடலுக்குள்ள வந்தாங்களோ அதுக்கே பங்கம் விளைவிச்சுருவாங்க. இவுங்க பிடிச்ச மீன்களை எல்லாம் கடல்ல தூக்கி குப்பைய கொட்டுற மாதிரி கொட்டிருவாங்க. மீன் வலையையும் சேத்து தூக்கி போட்டுருவாங்க. அந்த வலை எவ்வுளவுன்னு தெரியுமா உங்களுக்கு?… ரூபாய். உங்க கையில இருக்கிற மொபைல் ரேட்ட விட இது கம்மியா இருக்கலாம். ஆனா மாசத்துக்கு பத்து பதினஞ்சு தடவ வலை போச்சுனா, என்ன பன்னுவாங்க?. “வட போச்சேன்னு” சொல்ற மாதிரி “வல போச்சேன்னுலாம்” சொல்ல முடியாது. வழிகாட்டி கருவி, மொபைல், டீசல் கேன் எல்லாத்தையும் கையாண்டுருவாங்க. எதையும் தடுக்க முடியாது. ஒண்ணுமே பண்ணமுடியாது. மீறி ஏதாவது திமிருனாங்கன்னா, கொஞ்சம் கூட யோசிக்காம கடல்ல குதிக்க சொல்வாங்க. நீச்சல் தெரிஞ்சா தப்பிச்சாங்க, எதையாவது தொத்திகிட்டு கரைக்கு வருவாங்க, இல்லேன்னா அதோ கதி தான். மீனோட மீனா போகவேண்டியது தான். சில சமயத்தில் துப்பாக்கி குண்டு தான் பதில். சுட்டு கடல்ல தூக்கி போட்டுருவாங்க.

    பல சமயம் கைது பன்னிட்டு போயிருவாங்க, கைது பன்னிட்டு போனவங்கள்ள பிரிச்சு பிரிச்சு 20 நாள், 30 நாள் ஜெயில்ல வச்சுட்டு வீட்டுக்கு திருப்பி அனுப்புவாங்க. அந்த 20, 30 நாள்ள உள்ள நடக்கிற கொடுமையெல்லாம் போட்ல என்ன நடந்துச்சோ, அதே தான். 100 கிராம் சாப்பாட்டுல 150 கிராம் கல்ல போட்டு, பிசஞ்சு சாப்பட சொல்லுவாங்க. சாப்புட்டு தான் ஆகனும், இல்லேன்னா ஒரு மாசம் எப்படி தாங்குறது, சில பேர் தண்ணிய குடிச்சிட்டு இருந்தரலாம்னு நினச்சாலும் முடியாது. தண்ணி கூட தரமாட்டாங்க. மீறி தண்ணி கேட்டா, காமன் கக்கூஸ்ல இருக்கிற தண்னிய குடிக்க சொல்வாங்க. சில சமயத்துல அதையும் குடிச்சுத்தான் ஆகனும். இப்படியே இருந்தா நாங்க செத்துபோயிருவோம்னு” சொன்னா, உன்னைய சாகடிக்கிறதுக்கு தானே இங்க கூட்டிட்டே வந்திருக்குனு சொல்லுவாங்க, அதுக்கப்புறம் சிங்களத்துல வேற திட்டி அடிப்பாங்க. வீட்டுக்கு போவோமா, போமாட்டோமான்னு எதுவுமே தெரியாம ஒவ்வொரு ராத்திரியும் போகும். இப்படி தினம் தினம் பிரச்சனையை வச்சுகிட்டு கடலுக்குள்ள போய் தொழில் பாத்துகிட்டு இருக்காங்க.

    இதுல இந்தியா இலங்கை கிரிக்கெட் மேட்ச் நடந்தா கடலுக்கு பாதி பேர் போக மாட்டாங்க. ஏன்னு கேக்குறீங்களா?.

    கடலுக்குள்ள போனா இன்னைக்கு யாரு ஜெயிப்பாங்கன்றத முடிவ பொறுத்து அடி விழும். இந்தியா ஜெயிச்சுச்சுனா அடி செமத்தியா விழும், இந்தியா தோத்துறுச்சுன்னா அவமானம் மட்டும் மிஞ்சும். தோத்ததுனால ஏற்படுற அவமானம் இல்லங்க, நாலு அடி அடிச்சிட்டு, ட்ரஸ்ஸ கழட்டிட்டு அம்மனமா கரைக்கு அனுப்புவாங்க. கோனிப்பையை கட்டிட்டு தான் வருவாங்க. நம்ம என்ன பன்னுவோம், இங்க சச்சின் 100 அடிக்க மாட்டாரான்னு சாமிய கும்பிட்டுட்டு, டி.விக்கு விபூதிய தூவிட்டு, கடவுளே இந்தியா ஜெயிச்சரனும், சச்சின் 100 போட்டுரனும், “மேன் ஆஃப் த மேட்ச்” சச்சின் வாங்கிடனும்னு வேண்டிகிட்டு உட்காந்திருப்போம், இந்தியா டீம் மேல அவ்ளோ பற்று, டீவி முன்னாடி உக்காந்து கத்தியாவது பந்த ப்வுண்டரிக்கு போக வைக்கனும்றது தானே நம்ம வேலை. ஆனா, கடலுக்குள்ள, சச்சின் அடிக்கிற ஒவ்வொரு ஃபோருக்கும் மீனவர்கள் அடி தான் வாங்குறாங்க. இலங்கை விக்கெட் விழுந்துட்டா போதும் இங்க மீனவர்கள உட்கார வைத்து மீன் கூடைய தலையில கவுத்தி அடிப்பாங்க. சச்சினுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது, ஏன், நமக்கும் தான் என்ன சம்மந்தம் இருக்கு, நாம வழக்கம் போல ஐ.பி.எல் மேட்ச பாத்துட்டு, ப்ரீத்தி ஜிந்தா யார கட்டிபுடிக்கிறான்னு பாத்துகிட்டு, டெவென்ட்டி டெவென்ட்டி, மினி வேர்ல்ட் கப்பு, மெகா வேர்ல்டு கப்புன்னு எல்லா மேட்சுகளையும் பாத்துட்டு, இந்தியா மேல உணர்ச்சி பொங்க “சக் தே இந்தியா“, “சக் தே இந்தியா” ன்னு பாட்டு பாடிட்டு, ரிங்கிங் டோனா மொபைல்ல வச்சுட்டு, கூட்டம் கூட்டமா சேர்ந்து கூச்சல் போட்டு சந்தோசமா தானே இருக்கப் போறோம். அதுலையும் தான் என்ன தப்பு இருக்கு, நாமலும் இந்தியாவுல தானே இருக்கோம்.

    இது எல்லாத்தையும் தாங்கிட்டு கரைக்கு திரும்புனா, இந்தியா ஜெயிச்சுருச்சுன்னு இந்திய கடற்படை கொண்டாடிட்டு இருக்கும், எவ்வுளவு கடுப்பா இருக்கும். அந்த நிலைமைல நீங்க இருந்தீங்கனா என்ன பண்னுவீங்க? உங்க இந்திய பற்று, கிரிக்கெட் பற்றெல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு யோசிச்சு பாருங்களேன்?.

    அவுங்க இதெல்லாம் யோசிச்சாலும் ஒண்ணும் பன்ன முடியாது. எல்லாத்தையும் பொறுத்துகிட்டு, இலங்கை கடற்படை எங்கள அடிக்குறாங்கன்னு சொன்னா, நீங்க எல்லைய தான்டுனீங்களா?, ஏன் தான்டுனீங்க?, உங்கள விடுதல புலிங்கன்னு சந்தேகப் பட்டுருப்பாங்க, உங்க மீனவர் அட்டயெடுத்து காமிக்க வேண்டியது தானே?. இப்படி கேள்வியா கேட்டு சமாளிச்சுருவாங்க.

    இவ்வுளவு பிரச்சனைய வச்சிட்டு ஏன் தான் அவுங்க கடலுக்கு உள்ள போகனும்னு கேக்குறீங்களா?. இன்ஜினியரிங் படிச்ச உங்கள போய் ஹார்ட் ஆப்ரேசன் பன்ன சொன்னா பன்னுவீங்களா? இல்ல டாக்டருக்கு படிச்ச உங்கள கம்பியூட்டர்ல உக்காந்து கோடிங் எழுத சொன்னா எழுதுவீங்களா?. அதுவும் இல்லேனா பைக் மட்டும் ஓட்டத் தெரிஞ்ச உங்கள போய் கன்டெய்னர் ஓட்ட சொன்னா முடியுமா?….இப்படி நிறைய கேட்டுக்கிட்டே போகலாம். அதே தான் அங்கையும், தலைமுறை தலைமுறையா பன்னுன தொழிலை எப்படி விடமுடியும். போராட்டம் தானே வாழ்க்கையே…

    நான் நம்ம தெருவுல இறங்கி ஒரு வாக்கிங் பொய்ட்டு வருவோமே, இல்ல ஒரமா டெண்ட்ட போட்டுட்டு கத்திட்டிருப்போமே அந்த மாபெரும் போராட்டத்தலாம் சொல்லலை. இவுங்களோட தனிப்பட்ட வாழ்க்கைக்கான போரட்டம். பாக்கிஸ்தான்ல கூட அரெஸ்ட் பண்ணிட்டு போவாங்களே தவிற இப்படி அடிக்கலாம் மாட்டாங்க. ஒழுங்கா சாப்பாடு போட்டு, பத்திரமா வச்சுப்பாங்க, அப்புறம் ஒழுங்கா அனுப்பிவச்சிருவாங்க. ஆனா, நேச நாடுன்னு சொல்ற இந்த இலங்கை…..

    சரி, இந்த பிரச்சனையெல்லாம் நமக்கு நம்பிக்கையான அரசாங்கத்துட்ட சொல்லலாம்னு போவாங்க. நம்ம அரசாங்கமும் பதில் சொல்லும். நிறையவே சொல்லும். சமீபத்துல கூட 21 மீனவர்கள கைது பன்னிட்டாங்கன்னு வேலை நிறுத்தம்லாம் பன்னுனாங்க. ரித்தீஸ் சார்ட்ட போய் சொல்லிருக்காங்க. நான் உடனே உங்களுக்கு உதவுறேன்னு, சில காரியங்கள எல்லாம் பண்ணிருக்காங்க. நல்ல விசயம் தான். மீனவர்கள் சார்புல 10 பேர் சென்னைக்கு வந்து முறையிட, சென்னையிலிருந்து முக்கியமானவங்க எல்லாம் டெல்லிக்கு பறக்க, டெல்லியிலிருந்து அதிமுக்கியமானவங்க இலங்கைக்கு பறக்க, மீனவர்கள் வீடு திரும்புனாங்க.

    இதோட எல்லா பிரச்சனையும் முடிஞ்சிறுச்சு, இனிமேல் நீங்க தைரியமா கடலுக்குள்ள போலாம்னு நம்ம வணக்கத்துக்குறிய ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி மேடம் சொல்ல, எல்லாரும் நிம்மதியா கடலுக்கு போனாங்க. அன்னைக்கு மட்டும் எவனும் யாரையும் அடிக்கல. ஆனா, மறு நாள்ள இருந்து அடி, உதை எல்லாம் தொடங்கிடுச்சு. என்ன காரணம்னு யாருக்குமே தெரியல. இத திருப்பியும் ரித்தீஸ் சார்ட்ட போய் சொன்னாங்க. அதுக்கு ரித்தீஸ் சார், ” நமக்கு சொந்தமான இடம் கரையோரம் வேற ஒன்னு இருக்கு, அங்க போய் தங்கி மீன் பிடிங்க, ஒரு பயலும் உங்கள தொடமுடியாதுன்னு சொன்னார். பிறந்த இடத்த விட்டு , மண்ண விட்டு எப்படி போவாங்க? நீங்களே சொல்லுங்க,? அவுங்களுக்கு வேற உங்கள போல பைக், கன்டெய்னர் ரெண்டும் ஓட்டுவாங்கன்னு சொல்ல முடியாது. போட் மட்டும் தான் ஓட்டத் தெரியும். தொழிலும் அப்படித்தான்.

    இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், பிடிச்ச மீன விக்கனும்ல, அதுக்கு நாலு பேர் இருக்காங்க, கம்மியா மீன் பிடிச்சிட்டு வரும் போது அதிக விலை கொடுத்து வாங்கிப்பாங்க. அதிகமா மீன் பிடிச்சிட்டு வரும் போது, வலுக்கட்டாயமா கம்மியான விலைல வாங்கிப்பாங்க. இதையே தொடர்ந்து செஞ்சு, இப்ப அவுங்க வைக்கிறது தான் விலை. அவுங்க விக்கிறது தான் மீனு. அந்த மீனத்தான் நம்ம சாப்பிடுறோம், அது தான் நமக்கும் அவுங்களுக்கும் இருக்கிற ஒரே சம்மந்தம். இதுல நம்ம கடல்பகுதியில இருக்கிற ஒண்ணு ரெண்டு வகை மீனையும் பிடிக்காதன்னு வேற திடீர் திடீர்னு தடை போட்டுருவாங்க. கேரளாவுல தேங்காய் எண்ணையில பொறிச்சு சாப்புடுற பேச்சாலைன்ற மீன் இங்க நிறைய கிடைக்கும்.

    அந்த மீன பிடிக்காதன்னு சொல்லிருவாங்க. என்னன்னு விசாரிச்சு பாத்தா, அந்த மீனுக்கு நிறைய “ஈ” வருதாம். அதுனால கோயிலுக்கு வர்ற பகத்கோடிகள் எல்லாம் ரொம்ப கஷ்டப்படுறாங்கலாம். நீங்களே சொல்லுங்க செத்தது எதுவா இருந்தாலும் ஈ மொய்க்கத் தானே செய்யும். நாளைக்கு நம்மளே செத்து போயிட்டா “ஈ” மொய்க்காதா என்ன?… இதலாம் ஒரு பிரச்சனைன்னு இதுக்கு சட்டம் வேற. முக்கியமான பிரச்சனைய தீர்த்துவைக்க மாட்டேங்றாங்க. இந்த தடையெல்லாம் யாராவது சொல்லியா நம்ம ஹரிஹரன் கலெக்டர் சார் செஞ்சிருப்பாரு? உங்களுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க? தெரியலேனா இந்த அடுத்த கேள்விக்கு பதில் சொல்லுங்க.

    திருப்பதி போயிருக்கீங்களா நீங்க?. அங்க இருக்கிற உண்டியல பாத்திருக்கீங்களா?. லட்ட தவிற வேறு எதுவும் தெரியாதுன்னு சொல்றீங்களா? அதுல ஒண்ணும் தப்பு கிடையாது.

    ஜருகண்டி, ஜருகண்டின்னு விரட்டிட்டே இருப்பாங்க. ஆந்திரா கல்லாப்பட்டியே அது தானே. அதே போல தமிழகத்தோட கல்லாப்பெட்டியா ராமேஸ்வரத்த மாத்திடலாம்னு யாராவது நினைச்சாங்களோ என்னவோ தெரியல, அதுக்கு தடையா மீன்புடி தொழில் இருந்துச்சோ என்னவோ அதுவும் தெரியல. ஆனா கோவில சுத்தி இப்ப ஐயர் ஐய்யங்கார்கள் லாம் நிறைய ஆயிட்டாங்க. சாமி பக்கத்துலேயே உக்காந்து கும்பிட்டுக்கிட்டே காசு எண்ணனும்னு நினச்சாங்களோ என்னவோ. சரி காசு எல்லாத்துக்கும் தேவதானே. எவன் எவனோ, வெளி நாட்டுல இருந்து வரானுங்க. திடீர் திடீர்னு கம்பெனி ஆரம்பிச்சு, கோடி கோடியா உங்கள வச்சு சம்பாதிக்குறாங்க. எலும்புத்துண்டு மாதிரி எட்டாயிரம், பத்தாயிரம்னு உங்களுக்கு கொடுக்குறாங்க, அவுங்களுக்கே எவ்வுளவு விசுவாசமா இருக்கீங்க. ஆனா, நம்ம அரசாங்கம், மீனவ மக்கள தண்ணி தொலிச்சு விட்டுருச்சு.

    அப்படி என்ன அந்த தொழில்ல இருந்து அரசாங்கத்துக்கு பெருசா கிடச்சிருச்சுன்னு கேக்குறீங்களா? ஏதாவது கிடச்சாதான் செய்யனுமா என்ன?. ஆனா, கிடச்சும் செய்யலங்க.

    ராமேஸ்வரம் மீன்புடி தொழில் மூலமா அரசாங்கத்துக்கு ஒரு நாளுக்கு தோராயமா மூனு கோடி ரூபாய் வருமானம். நீங்க 12த்ல கணக்கு பாடத்துல பாஸ்னா, கொஞ்சம் யோசிச்சு பாருங்க, ஒரு வருசத்துக்கு எவ்வுளவு வருமானம்னு?. மீனவர்களும் பங்களா கட்டி கொடு, கார் வாங்கி கொடுன்னு மாமனார்ட்ட கேக்குறமாதிரி எல்லாம் கேக்கல. 1000 போட் நிப்பாட்ட இடமில்ல, புயல் காலத்துல போட் முட்டிக்கிட்டு, அடிபட்டு சேதமாகுது, ஒரு ஹார்பர் கட்டி கொடுங்கன்னு தான் கேக்குறாங்க. அதையும் இன்னைக்கு நேத்து கேக்கல, பத்து வருசமா கேக்குறாங்க.

    இவ்வுளவு பிரச்சனையும், இத்தன காலமா மத்திய அரசுக்கு யாருமே எடுத்துட்டு போலையான்னு கேக்குறீங்களா?.

    யார் இருக்கா எடுத்துட்டு போறதுக்கு.? மத்தியில இவுங்க குறையையும், கோரிக்கைகளையும், இவுங்க சார்பா எடுத்து வைக்க ஒரு அமைச்சர் கிடையாது. விவசாயத்துறை கீழ தான் மீன் துறை இருக்கு. ரெண்டு துறைக்கும் ஒரே அமைச்சர். ஆள் இல்லேன்றதுக்காக எதுவும் தெரியாம போகுதா என்ன? மீடியா போகாத இடமாங்க இல்ல, தெரு தெருவா, முக்குக்கு முக்குக்கு, ரூம் ரூமா போகுதே. இந்த அரசாங்கம் விசித்திரமானது தாங்க. எப்படின்னு கேக்குறிங்களா?

    காட்டுக்குபோயிருக்கீங்களாநீங்க? புலியபாத்திருக்கீங்களா?. நான் கேக்குறது விலங்குபுலிங்க?

    போலேனாலும் பரவாயில்லை பேராண்மை படம் பாத்தீங்களா, அதுல நம்ம ஜெயம் ரவி சார் காட்டுக்குள்ள ஒரு மிருகத்த கொன்னு தூக்கிட்டு வந்து பாட்டு பாடுவாரு. அதான் புலி. புலிகளோட எண்னிக்கை குறஞ்சுருச்சுன்னு அதுகல பாதுகாக்குறதுக்கு மத்தியில வனத்துறைய ரெண்டா பிரிச்சு புலிகளை காப்பாற்றுவோம்னு சொல்றதுக்கு ஒரு அமைச்சர் வரப்போகிறாராம்.

    ஒரு தொழிலையும், அந்த மக்களையும் காப்பாத்துறதுக்கு ஒரு அமைச்சர் கிடையாது. ஒரு மிருகத்த காப்பாத்துறதுக்கு ஒரு அமைச்சர். இது தான் மனுசனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடு போல.

    சரி விடுங்க கடவுளுக்கு மனுசன நரபலி எங்கேயாவது கொடுக்குறாங்களான்னு கேட்டா, ராமேஸ்வரம் போங்கனு சொல்வோம்.

    அடுத்த வீட்டுக் கக்கூசுக்குள்ள மூக்க நுழைச்சி மோந்து பாக்கிறத வுட்டுப்போட்டு, தில் இருந்தால் இதற்கொரு போராட்டம் நடத்துங்கோ மக்களே. அந்தப் போராட்டத்துக்கு நான் நார்வேயிலிருந்து எனது குடும்பம் குட்டியோட வர்ரேன். முடியுமா…? சும்மா பம்மாத்து விடுகிறதே உங்களுக்கு பொழப்பா போச்சு. வாரிசு அரசியல் இந்தியாவில நடக்குது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் மார்க்ஸியத்துக்கும் வாரிசு அரசியல் பண்ணுவீங்களென்பது இப்போதான் புரிகிறது. யோவ்… ஒழுங்கான கொம்யூனிஸ்ட் இப்படிய இல்லயடா நாதாரிங்களா. நிறைகுடம் தளம்பாது. அலவாக்கரைதான் கெம்பும். போங்கடா போக்கத்த பயலுகளே. மறைந்திருந்து எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனது மெயில் இதோ simon.vimal@yahoo.no … யார் வேண்டுமானாலும் பேச வாருங்கள். தொலைபேசி வேண்டுமா…. 00 47 71 70 27 47

    • கண்ணில் நீரை வரவழைத்து விட்டீர்கள் நண்பரே.வினவு தோழர்களும் ம.க.இ.க வும் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.போராட்டத்திற்கு நானும் வருகிறேன்.

  41. மதிப்புக்குரிய வினவு நண்பர்களுக்கு,
    லீனா மணிமேகலை அவர்களின் எழுத்திற்கான காரணம், அவர்களது வசதி வாய்ப்பு மற்றும் பேராசைகள் காரணமாக இருக்கக் கூடும் . அவரை புறக்கணியுங்கள்.
    உங்களைப் போன்ற தோழர்கள் அவரைப் பற்றி எழுதுவதே, அவருக்கு விளம்பரத்தைத் தேடித்தரும் ஆபத்து உள்ளது.

  42. வினவு தோழர்களே, ஒத்துவராத மறுமொழிகள் பிரிவில் வர வேண்டிய திருவாளர் அக்காகி அவர்களின் எழுத்துக்களை பொதுப் பிரிவில் வெளியிட்டிருக்கிறீர்கள். தவறை தயவு செய்து சரி செய்யவும்.

Leave a Reply to ஏகலைவன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க