திருமணத்திற்கு முந்தைய பாலுறவை ஏற்பதும், அதை பாதுகாப்பாக செய்யவேண்டுமெனவும் 2005ஆம் ஆண்டு குஷ்பு கூறியதை அடுத்து தமிழினவாதிகளும், தலித்தியவாதிகளும் காட்டிய எதிர்ப்பும், வழக்கும் வாசகருக்கு நினைவிருக்கலாம். தற்போது இந்த வழக்குளையெல்லாம் ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கும் உச்சநீதிமன்றம் கூடவே வயது வந்த ஆணும், பெண்ணும் உறவு வைத்திருப்பது அரசியல் சட்டம் அளித்திருக்கும் உரிமை என்றும் விளக்கம் அளித்திருக்கிறது. குஷ்பு சார்பில் பெண்ணியவாதிகள், பின்நவீனத்துவவாதிகளும், ‘கற்பு’ அணியில் தமிழினார்வலர்களும் அணிவகுக்கின்றனர். ஆனால் இந்த இருதரப்புமே தவறு என்பதையும் பாலுறவில் எது சரி என்பதை விளக்கி புதிய ஜனநாயகம் எழுதிய மிக முக்கியமான கட்டுரையை காலப்பொருத்தம் கருதி இங்கு பதிவு செய்கிறோம். விவாதத்திற்கும் அழைக்கிறோம்.
– வினவு
____________________________________________
இந்தியா டுடேயின் செக்ஸ் விற்பனையும், தமிழ்க் கற்பின் கூச்சல்களும்!
“பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் பேகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்” எனத் திரைப்பட நடிகை குஷ்பு, இந்தியாடுடே (தமிழ்) வார இதழில் சொல்லி வெளியான கருத்துகள், “”கற்பு” மற்றும் பாலியல் ஒழுக்கம் தொடர்பாக வாத பிரதிவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது.
இந்தியாடுடே வாசகர்களோடு முடிந்து போயிருக்க வேண்டிய இந்தக் கருத்தை, கருணாநிதி குடும்பத்தினரால் வெளியிடப்படும் தமிழ் முரசு இதழ், தனது வியாபார அரசியல் நோக்கத்திற்காக, “”தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்களா?” எனும் தலைப்பில் பரபரப்பூட்டும் செய்தியாக மாற்றியது. இதையடுத்து, தினத்தந்தி (24.9.05) நாளிதழுக்கு பேட்டியளித்த குஷ்பு, “”திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்பெண் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என அதிமேதாவித்தனமாகக் கேட்டு வைத்தார். இதையடுத்து, பா.ம.கவும், விடுதலை சிறுத்தைகளும் தமிழ் பெண்களை குஷ்பு அவமானப்படுத்தி விட்டதாகக் குற்றஞ் சுமத்தி, அவருக்கு எதிராகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பதோடு, அவருக்கு எதிராக கிரிமினல் வழக்குகளும் தொடுத்துள்ளன.
இந்தியாடுடே வெளியிட்டுள்ள இந்தக் கருத்துக் கணிப்பில், “”பெண்கள் மணமாகும்வரை கன்னியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு 66 சதவீதப் பெண்கள், “ஆம்’ என்று பதில் அளித்துள்ளனர். குறிப்பாக, சென்னையில் 82 சதவீதப் பெண்கள் திருமணமாகும்போது பெண்ணின் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்று கருத்து சொல்லியுள்ளார்கள். திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதை 71 சதவீதப் பெண்கள் தவறு என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேட்டுக்குடி திமிரோடு குஷ்பு கேட்டிருக்கும் கேள்விக்கு, இந்தப் புள்ளிவிவரங்களே முகத்தில் அடித்தாற் போல பதில் சொல்லி விடுகின்றன. ஆனால், பா.ம.கவும், விடுதலைச் சிறுத்தைகளும் போராட்டம் நடத்துவதற்கு வேறு பிரச்சினையே இல்லை என்பது போல, “நீதி’ கேட்டு குஷ்புவுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன.
நகர்ப்புறத்தைச் சேர்ந்த படித்த, வேலைக்குப் போகும் பெண்கள் கூட, மோசமான, பொறுப்பில்லாத கணவனிடமிருந்து மணவிலக்கு பெறத் தயங்கும்போது, கிராமப்புறங்களில், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் “”அறுத்துக் கட்டும் பண்பாடு” ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. கணவன் மோசமானவனாக, பெண் பித்தனாக இருந்தாலும், இந்த ஒழுங்கீனத்தைப் பொறுத்துக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் அவனுக்காகவே வாழ்வதுதான் “”கற்புடைமை” என்ற பண்பாட்டிற்கு நேர் எதிரானது, இது. “யாருடன் சேர்ந்து வாழ்வது?” என்று தீர்மானிக்கும் உரிமையை “கற்பு” தட்டிப் பறித்து விடுகிறது. ஆனால், மணமான மறுநாளே அறுத்துக் கொண்டு, தனக்குப் பிடித்த வேறொருவனுடன் சேர்ந்து வாழும் ‘கீழ் சாதிப் பெண்களை’ கிராமப்புறங்களில் காண முடியும்.
கறாராகச் சொன்னால், “கற்பு” சாதிகளைக் கடந்த தமிழ்ப் பண்பாடு அல்ல. சொத்துடைமை கொண்ட பார்ப்பன வேளாள சாதிப் பண்பாடுதான் “கற்பு”. இம்மேல்சாதி பண்பாட்டை, தொன்று தொட்ட தமிழர்களின் கலாச்சாரம் போல ஊதிப் பெருக்கியதில், இந்துத்துவாவாதிகள், திராவிடக் கட்சிகள், தமிழினவாதிகள், தமிழ் சினிமாக்களுக்கு முக்கிய பங்குண்டு. குறிப்பாக, “கீழ் சாதிகள்” “இந்து” என்ற போர்வையில் எவ்வளவு தூரம் பார்ப்பனமயமாக்கப்படுகிறதோ, அதற்கு நேர் விகிதத்தில் “கற்பு” என்ற பண்பாடு அச்சாதிப் பெண்கள் மீது திணிக்கப்படுகிறது.
பெரியார், அம்பேத்கர் வழிநடப்பவர்கள் என சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் வன்னியரான இராமதாசிற்கும், தாழ்த்தப்பட்டவரான தொல்.திருமாவளவனுக்கும் இந்த உண்மை தெரியாதா? இந்த உண்மைக்கு நேர் எதிராக அவர்கள் கற்பை தொன்றுதொட்ட தமிழ் கலாச்சாரம், பண்பாடு போல கொண்டாடுவது வரலாற்று மோசடி. பார்ப்பன வேளாளப் பண்பாடான கற்பிற்கு வக்காலத்து வாங்குவதன் மூலம், “கீழ் சாதி” பெண்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்த உரிமைகளை, அவர்கள் தட்டிப் பறிக்கின்றனர். மேலும், “கீழ்ச்சாதி”களைப் பர்ப்பன பண்பாட்டில் மூழ்கடிக்கும் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் வேலையை இவர்கள் சுலபமாக்கி விடுகிறார்கள்.
கட்டற்ற பாலுறவுக்கு கடைவிரிக்கும் தாராளமயம்!
“கற்பு”, “கன்னித்தன்மை” போன்ற பழைய சமூக கட்டுப்பாடுகள் மதிப்பீடுகளுக்கு எதிராக, “திருமணத்துக்கு முன்பே உறவு கொள்ளலாம்”, “கணவன் தவிர்த்த வேறு ஆடவனுடன் உறவு கொள்ளலாம்” என்பது போன்ற “பாலியல் புரட்சி’ கருத்துக்கள் (மேட்டுக்குடி) பெண்கள் மத்தியில் தோன்றுவதற்கு, தராளமயம்தான் மூலகாரணமாக இருக்கிறது. இதனைப் பாலியல் மருத்துவர்கள் தொடங்கி பெண்ணியவாதிகள் உள்ளிட்டு அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்த தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவது, ப.சிதம்பரமும், மன்மோகன் சிங்கும் மட்டும்தானா? பா.ம.க.விற்கு இதில் கொஞ்சம்கூடப் பங்கு கிடையாதா? கிட்டத்தட்ட கடந்த ஏழு ஆண்டுகளாக மைய ஆட்சியில் பங்கு பெற்று வரும் பா.ம.க., “தமிழ் பண்பாட்டிற்கு” எதிராக இப்படிப்பட்ட சீரழிவுகளைத் தோற்றுவிக்கும் தாராளமயத்தைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது முணுமுணுத்திருக்குமா?
ஒருபுறம் மேட்டுக்குடி பெண்களிடம் “”பாலியல் புரட்சி” கருத்துக்களைத் தோற்றுவிக்கும் தாராளமயம், இன்னொருபுறமோ அடித்தட்டு வர்க்கப் பெண்களின் “கற்புக்கே” உலை வைத்து விடுகிறது. தனியார்மயம் தாராளமயம் விவசாயத்தையும், கைத்தொழிலையும், சிறு தொழில்களையும் அழித்துக் கொண்டே போவதால், பிழைக்க வேறு வழியில்லாமல், அடித்தட்டு பெண்கள் விபச்சாரத்திற்குள் தள்ளப்படுவது தாராளமயத்தின் பின் அதிகரித்திருப்பதைப் பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
பல்வேறு அழகு சாதனப் பொருட்களைச் சந்தையில் இறக்கிவிட்டு, பெண்களை அழகுப் பதுமைகளாக மாற்றும் போக்கும் தாராளமயத்தின் பின்தான் தீவிரமாக நடந்து வருகிறது. ஊருக்கு ஊர் அழகிப் போட்டிகள் நடப்பதும், அதில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சிறுமிகள் தொடங்கி மணமான பெண்கள் வரை கலந்து கொள்ளுவதையும் தாராளமயத்திற்கு முன் நாம் கேள்விப்பட்டதுண்டா?
எந்த தாராளமயம் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டு அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்கும், பண்பாட்டிற்கும் உலை வைக்கிறதோ, அதே தாராளமயத்தை கெயில் ஓம்வட் போன்ற தலித் சிந்தனையாளர்கள், “தாழ்த்தப்பட்ட மக்களை உய்விக்க வந்த வழியாக”க் கொண்டாடுகிறார்கள். தொல்.திருமாவளவனோ பா.ம.க. இராமதாசு மூலம் தி.மு.க. கூட்டணிக்குள் நுழைந்துவிட காத்துக் கொண்டிருக்கிறார். அவர், தி.மு.க. கூட்டணிக்கு நுழைந்து விட்டால், “தமிழ் பண்பாட்டையும் தமிழச்சிகளின் கற்பையும்” பாதுகாக்கும் கேடயமாகத் தாராளமயம் மாறிவிடுமா?
எனவே, இவர்கள் ஒருபுறம் தாராளமயத்தை ஆதரித்துக் கொண்டு, மறுபுறம் “கற்பு’ என்ற “தமிழ் பண்பாட்டிற்காக”ப் போராட்டம் நடத்துவது பித்தலாட்டத்தனமானது
இந்தியா டுடேயின் தாராளமயச் சேவையும் பாலியல் சர்வேயும்
“செக்ஸ் பிரச்சினைகளை” கிளுகிளுப்பூட்டும் கட்டுரைகளாக எழுதிவரும் நாராயண ரெட்டி போன்ற மருத்துவர்கள் கூட, “திருமணத்திற்கு முன் செக்ஸ் போன்ற பாலியல் சுதந்திரங்கள் தேவையில்லாத ரிஸ்க்; ஆபத்தான சங்கதி” என்றே குறிப்பிடுகிறார்கள். ஆனாலும், இந்தியாடுடே வகையறாக்கள், இப்பாலியல் சுதந்திரத்தை எதிர்க்கும் அனைவரையும் ஒரே தட்டில் வைத்து, “பழமைவாதிகள், பத்தாம்பசலிகள், கலாச்சார காவலர்கள்” எனச் சாடுகிறார்கள்.
இந்திய ஓட்டுக் கட்சிகளிலேயே படுபிற்போக்கான இந்து மதவெறி பாசிஸ்டுகளை ஆதரித்து எழுதி வரும் பத்திரிகையான இந்தியா டுடே, இந்தப் பாலியல் சுதந்திரப் பிரச்சினையில், தன்னை கருத்து சுதந்தரத்தின் காவலனாகக் காட்டிக் கொள்கிறது. தாராளமயத்தின் பின், விபச்சாரம், பாலியல் சுற்றுலா சேவைத் தொழிலாக மாறிவிட்டதைப் போல, கருத்துக் கணிப்பு என்ற பெயரில் இந்தியா டுடே வெளியிட்டுள்ள வக்கிரமான கேள்விகள் கூட கருத்துச் சுதந்திரம் ஆகிவிட்டன.
இந்தியா டுடேயில் கருத்து சொன்ன குஷ்புவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் திருமாவளவன் ராமதாசு கூட்டணி, அவரைவிட வக்கிரமான கேள்விகளைக் கேட்டுள்ள இந்தியாடுடே பத்திரிகையை கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நடிகர் சங்க கட்டிடத்திற்குள் துடைப்பத்தை வீசிய அக்கூட்டணி, இந்தியாடுடே அலுவலகத்தின் மீது கை வைக்கத் துணியவில்லை.
அவர்கள் இந்தியா டுடேயைக் கண்டு கொள்ளாமல் விட்டதற்கு, ஒரு நடிகையை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் கிடைக்கும் மலிவான விளம்பரம், இந்தியா டுடேயை எதிர்த்து நடத்தினால் கிடைக்காது என்பது மட்டும் காரணம் அல்ல் அவர்களின் ஓட்டுச்சீட்டு அரசியலுக்கு இந்தியா டுடே போன்ற பிரபலமான பத்திரிகைகளின் ஆதரவு தேவை என்பதால்தான் மௌனமாக இருக்கிறார்கள். இந்தியா டுடேயை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால், அதில் விருந்தினர் பக்கம் எழுத மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்பது கூட திருமாவளவனின் வாய்க்குப் பூட்டு பூட்டியிருக்கலாம்.
தாராளமயம் பெண்கள் மீது எத்தனையோ சுமைகளை ஏற்றி வைத்திருக்கிறது. பெண்களின் செக்ஸ் பிரச்சினை குறித்து வருடத்திற்கு இரண்டு, மூன்று இதழ்கள் கருத்துக் கணிப்பு வெளியிடும் இந்தியா டுடே, பெண்கள் மீது தாராளமயம் திணித்துள்ள சுமைகளைப் பற்றி ஒரேயொரு கருத்து கணிப்பாவது நடத்தியிருக்குமா?
இந்தியா டுடே, பெண்களின் செக்ஸ் பற்றி கிளுகிளுப்பூட்டும் படங்களோடு கருத்துக் கணிப்பு வெளியிடுவதற்கு காரணம், அதனின் வியாபார நோக்கம் மட்டும் அல்ல வாழ்க்கையை விதவிதமாக அனுபவிக்கத் துடிக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தின் பாலியல் கலாச்சாரத்தை, நடுத்தர வர்க்கப் பெண்களையும் தாண்டி கீழே கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற இந்தியா டுடேயின் வர்க்கப் பார்வைக்கும் முக்கிய பங்குண்டு.
திருமாவளவன் ராமதாசு கூட்டணியைக் கண்டிக்கும் பலரும், “குஷ்புவுக்கு கருத்துச் சொல்ல உரிமையில்லையா?” எனக் கேள்வி எழுப்புகிறார்கள். குஷ்புவுக்கு கருத்துச் சொல்ல உரிமையில்லையா என்பதல்ல இங்கே பிரச்சினை. இப்படிக் கேள்வி எழுப்புவதன் மூலம் இந்த அறிவுஜீவிகள் பலரும் மையமான விசயத்திற்குள் நுழையாமல் நழுவிக் கொள்கிறார்கள். மாறாக, பாலியல் சுதந்திரம், பெண்ணுரிமை என்பது குறித்து இந்தியா டுடேயும், குஷ்புவும் சொல்லியிருக்கும் கருத்துகள் சமூகத்திற்குப் பயனுள்ளதா என்பதுதான் மையமான கேள்வி.
தனிப்பட்ட ரீதியாகப் பார்த்தால் கூட, பாலியல் சுதந்திரம் போன்ற சமூகப் பிரச்சினைகளில் கருத்துக் கூறும் அளவிற்கு குஷ்புவிற்குத் தகுதியும், அனுபவமும் உண்டா? திரைப்படத் துறையில் பாலியல் ரீதியாகப் பெண்கள் சுரண்டப்படுவதை அம்பலப்படுத்தி ஒரு வார்த்தை இவர் பேசியதுண்டா? தனது சொந்தப் படத்தில் கூட நடிகைகளை அரைகுறை ஆடையுடன் நடனமாட விடும் ஒரு மேல்தட்டு காரியவாத நடிகையை, ஏதோ பெண்ணுரிமை போராளியை போல, இந்த அறிவுஜீவிகள் தமிழக மக்களின் முன் தூக்கிப் பிடிப்பது கேவலமானது.
‘கற்பும்’, காதலும், கட்டற்ற பாலுறவும் – எது சரி?
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட, தனது பாலியல் தேவைகளை இவ்வளவு பச்சையாகப் பேசியிராத மேட்டுக்குடி வர்க்கமும், அவர்களது பத்திரிகைகளும், இப்பொழுது அதைப் பெண்ணுரிமையாக, புதிய சமூக ஒழுங்காகப் பிரகடனப்படுத்துவதற்குக் காரணம், தாராளமயம் புகுத்தியிருக்கும் நுகர்வு வெறி கலாச்சாரம்.
தினந்தோறும் புதிது புதிதாகக் கேட்கும் இந்த நுகர்வு வெறி, உணவு, உடை, நுகர்வுப் பொருட்கள் ஆகியவற்றோடு மட்டும் நின்று விடுவதில்லை. பாலியல் உறவுகளிலும் தினுசுதினுசான வகைகளைக் கோருகிறது. அதுதான் வரைமுறையற்று பாலுறவு கொள்ளுதல் என்ற பழைய காட்டுமிராண்டி கால பாலுறவு பழக்கத்தை, நவீன பாலியல் சுதந்திரமாக — பாலியல் புரட்சியாக அறிமுகப்படுத்துகிறது.
குஷ்புவுக்கு ஆதரவாக துண்டறிக்கை வெளியிட்டுள்ள மாற்றுக் குரல்கள், “கால் சென்டர், கணினி தொழில் நுட்பம் போன்ற வேலைகள் ஆடவர்களுடன் பழகும் வாய்ப்பை அதிகரிக்கிறது… இத்தகைய சூழ்நிலை பெண்களின் பாலியல் நிலைகளிலும், பாலியல் தேர்வுகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது” எனக் குறிப்பிடுகிறது. இதற்குக் காரணம், இந்த நுகர்வு வெறிப் பண்பாடு தொழிலாளி வர்க்கத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான்.
குறிப்பாக, தாராளமயத்தின் பின் வந்துள்ள கால் சென்டர் போன்ற தகவல் தொழில் நுட்ப (நவீன மூளை உழைப்பு) தொழிற்சாலைகளில், ஊழியர் சங்கங்கள் இருக்காது; மாறாக, இந்தத் தொழில்கள் மொத்தமாகக் குவிந்துள்ள தொழில் நுட்ப பூங்காங்களுக்குப் போனால், நுகர் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் “ஷோரூம்களை”ப் பார்க்கலாம்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு ஆளெடுப்பதே, அழகிப் போட்டி ஸ்டைலில் நடத்தப்படுகிறது. இதனால், அங்கு புதிது புதிதாக அழகிகளும், அழகன்களும் வந்து போன வண்ணம் இருக்கிறார்கள். வேலைப் பளுவில் ஏற்படும் மனச்சோர்வைக் குறைக்க, “அவுட்டிங்” என்ற மேல்தட்டு “”பார்ட்டி” கலாச்சாரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால், மேல்தட்டு வர்க்கத்துக்கேயுரிய எல்லா பண்பாடுகளும், இவர்களிடம் தொற்றிக் கொள்கிறது. ஏற்கெனவே மனதளவில் பணக்காரர்களைப் போலவே வாழ ஆசைப்படும் நடுத்தர வர்க்க இளைஞர்கள், எளிதாக இந்தக் கலாச்சாரத்தில் மூழ்கி விடுகின்றனர்.
இந்த நவீன மூளை தொழிற்சாலையில் உள்ள வேலைப்பளு காரணமாக, கணவன் மனைவி இடையே பாலுறவில் பல சிக்கல்கள் தோன்றுவதாக மனநல மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கணவன் மனைவி இடையே உறவு சரியில்லாத பொழுது, சோரம் போவது எளிதாகி விடுகிறது. நகர்ப்புறத்தைச் சேர்ந்த படித்த, நடுத்தர வர்க்கத்து ஆண்பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக தகவல் தொழில்நுட்பம் இருப்பதால், இந்தக் கலாச்சாரத்தை மனதளவில் முன்னரே ஏற்றுக் கொள்ளும்படி, அவர்களது பழைய பாலியல் கருத்துக்களை மாற்றியமைக்கும் வேலையை இந்தக் கருத்துக் கணிப்புகள் செய்து விடுகின்றன.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் பிறக்க, அவர்கள் இருவர் இடையே ஏதோ ஒருவித ஈர்ப்பு இருந்தால் மட்டும் போதாது; இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்போம் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை குலைந்து போய்விட்டால், காதல் மரித்துப் போய், வாழ்க்கையே சவமாகிவிடும்.
பாலியல் புரட்சியோ, ஆண்பெண் இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்கத் தேவையில்லை என்பதை முன் நிபந்தனையாகக் கொள்கிறது. எனவே, இந்த உறவில் காதல் இருக்காது. காதல் இல்லாத உறவு நெறியுடையதாகவும் இருக்காது.
பாலியல் மருத்துவர்கள் பாலுணர்வை வெறும் உடல் சார்ந்த விசயமாகப் பார்க்கவில்லை. மனத்தின் பல்வேறு உணர்ச்சி நிலைகளின் ஒரு வெளிப்பாடே பாலுணர்வு எனக் கூறுகிறார்கள். ஆனால், பாலியல் சுதந்திரமோ ஆண்பெண் இடையேயான பாலுணர்வை வெறும் உடல் இச்சை சம்பந்தப்பட்ட விசயமாக குறுக்கி விடுகிறது. எனவே, இது அறியவிலுக்கே எதிரானதாகிறது. மேலும், காதல் போன்ற சமூக உறவுகள் இல்லாத காட்டுமிராண்டி காலத்தில், வெறும் பாலுணர்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆண் பெண் இடையே உறவு இருந்த நிலைக்கு, நாகரிக மனித சமூகத்தை தாழ்த்தி விடுகிறது.
பெண்ணின் கன்னித்தன்மை என்பதே முட்டாள்தனமானது என மருத்துவ அறிவியல் சாடுகிறது. ஏனென்றால், பெண்ணின் “கன்னித் திரை” மிதிவண்டி ஓட்டுவது, நீந்துவது போன்ற நடவடிக்கைகளால் கூடக் கிழித்து போய் விடக் கூடியது. குஷ்பு இந்த அறிவியல் அர்த்தத்தில் கன்னித் தன்மையை எதிர்பார்க்கக் கூடாது எனச் சொல்லவில்லை.
ஒருவரை நம்பி ஏமாந்து போகும் பெண்களையும், பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆட்பட்ட பெண்களையும் கன்னித்தன்மை இல்லாதவர்களாகக் கூறும் சமூகம், அவர்களை மானம் இழந்தவர்களாக, திருமணத்திற்குத் தகுதியில்லாதவர்களாகச் சாடுகிறது. இந்தப் பிற்போக்குத்தனங்களை எதிர்த்து, அதன் அடிப்படையில் கன்னித்தன்மையை எதிர்பார்க்கக் கூடாது என குஷ்பு கூறவில்லை. மாறாக, திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்வது தவறில்லை என்ற அடிப்படையில் தான் கூறியிருக்கிறார்.
பாலுறவில் சுய கட்டுப்பாடுடன் இருப்பது அடிமைத்தனமாகாது என லெனின் குறிப்பிடுகிறார். இந்த சுய கட்டுப்பாடு பெரும்பாலான இளைஞர்களிடையே கலாச்சாரமாகவே காணப்படுகிறது. ஆனால், பெண்ணியவாதிகள் இந்த சுய கட்டுப்பாட்டை மீறுவதுதான் சுதந்திரம் என்கிறார்கள். சுய கட்டுப்பாட்டை மீறி திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்ளலாம்; கணவன் அல்லாத வேறு ஆண்களுடன் உறவு கொள்ளலாம் என்பவர்கள் திருணத்தையே ஒதுக்கித் தள்ள வேண்டியதுதானே? ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் ஏன் வைக்க வேண்டும்?
“திருமணத்திற்கு முன்பே பாலுறவு வைத்துக் கொள்ளலாம்; திருமணமான பெண்கள், வேறு ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம்” என்பதை பெண்ணியவாதிகள், ஆணாதிக்கத்தை எதிர்த்த பெண் விடுதலையின் அம்சங்களாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். இது, நடைமுறையில், பல பெண்களோடு உறவு கொள்ள அலையும் ஆண்களுக்கு, தனது பெண்டாட்டி, அம்மா, சகோதரிகளின் “கற்பை”த் தவிர, மற்ற பெண்களின் “கற்பை”யெல்லாம் துச்சமாக மதிக்கும் ஆண்களுக்கு, பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகக் கைகொடுக்கும்.
பெரும்பாலான தமிழ் பெண்கள் “”கட்டுப்பெட்டித்தனமாக” வாழும் போதே, ஆண்கள் வழிதவறிப் போனதற்கு பெண்கள்தான் காரணம், அவர்கள் உடுத்தும் உடைதான் காரணம் எனப் பழிப்போடும் ஆணாதிக்கத் திமிருக்கு, இப்பாலியல் சுதந்திரம் பெண்களைச் சீண்டுவதற்கும், பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதற்கும் ஏராளமான வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பதில் முடியும்.
எதிர் எதிரான கருத்துக்களான ஆணாதிக்கமும், பெண் விடுதலையும் ஒன்றையொன்று அனுசரித்துக் கொண்டு சமாதான சகவாழ்வு முடியுமா? ஆண்கள், பல பெண்களோடு உறவு வைத்துக் கொள்ளலாம் எனும் பொழுது, பெண்களும் அப்படி இருக்கலாம் என்பது கேட்பதற்கு “மிகுந்த புரட்சிகரமானதாக”த் தோன்றினாலும், இதற்கும் பெண் விடுதலைக்கும் ஒட்டும் கிடையாது; உறவும் கிடையாது; ஒரு சீரழிவு, இன்னொரு சீரழிவை நியாயப்படுத்தி விடாது.
“ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நவீனக் குடும்பம், ஆணாதிக்கம் நிறைந்ததுதான். அவன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடியதுதான். இதைக் காட்டி குடும்பத்தையும், திருமணத்தையும் மறுக்கும் அராஜகவாதத்திற்குப் பதில் குடும்பம் மற்றும் ஆண் பெண் உறவுகளை ஜனநாயகப்படுத்துவதற்குப் போராட பெண்களைத் தூண்டிவிடுவதுதான் மாற்றுத் தீர்வாக அமைய முடியும். பெண்கள் இப்படிப்பட்ட போராட்டங்களை தமது அன்றாட வாழ்க்கையில் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நடைமுறை வாழ்க்கையில், கணவன் வேறாரு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பது தெரியவரும் பொழுது, பெரும்பாலான பெண்கள் பஞ்சாயத்துப் பேசியோ, போலீசு நிலையத்தில் கணவன் மீது புகார் கொடுத்தோதான் பிரச்சினையைத் தீர்க்கப் போராடுகிறார்களேயொழிய, வீம்புக்காக வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்வது கிடையாது. கணவனின் கள்ள உறவு காரணமாகவோ, பாலியல் சித்திரவதை வரதட்சணை கொடுமை காரணமாகவோ அவனுடன் இனியும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால், அவனிடமிருந்து பிரிந்து போய் தனியாக வாழுகிறார்கள்; இல்லை, மணவிலக்கு பெற்றுக் கொண்டு மறுமணம் கூடச் செய்து கொள்கிறார்கள்.
பிடிக்காத கணவனோடு சேர்ந்து சலிப்போடு வாழ்வதை விட, வேறொரு ஆணுடன் இரகசியக் கள்ள உறவு வைத்துக் கொண்டு போலித்தனமாக வாழ்வதைவிட, மணவிலக்கு பெற்று, மறுமணம் செய்து கொள்வது, பாலியல் சுதந்திரத்தைவிட, முற்போக்கானது மட்டுமல்ல் சமூக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், நியாயமானதும்கூட.
திருமணம், குடும்பம் ஆகியவற்றின் வரலாற்று வளர்ச்சி குறித்து ஆராய்ந்த எங்கெல்ஸ், “ஆண்களுடைய வழக்கமான ஒழுக்கக் கேட்டைப் பெண்கள் சகித்துக் கொண்டிருக்கும்படி கட்டாயப்படுத்துகின்ற பொருளாதார நோக்கங்கள் தமது வாழ்க்கையைப் பற்றிய கவலை, அதற்கும் மேலாக, தமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை மறைகின்ற பொழுது ஏற்படுகின்ற ஆண்பெண் சமத்துவம், பெண்கள் பல கணவர் முறைக்குப் போய் விடுவதைவிட, ஆண்கள் உண்மையிலேயே ஒருதார மணத்தைக் கடைப்பிடிப்பதற்கும் பேருதவி செய்யும்” என்று குறிப்பிடுகிறார்.
எங்கெல்ஸ் குறிப்பிடுகின்ற பெண்களின் கவலைகள் மறைய வேண்டும் என்றால், ஆணாதிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கின்ற, முதலாளித்துவ சமூகம் மறைந்து போக வேண்டும். இச்சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்கு பெண்களை அணிதிரட்ட, பாலியல் கருத்துக்களைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அவசியமே கிடையாது. “பெண்கள் உழைப்பு கொடூரமாகச் சுரண்டப்படுவது; பெண் கல்வி மறுக்கப்படுவது; வரதட்சணை சாவுகள்; வரதட்சணைக் கொடுமையால் திருமணம் தள்ளிப் போவது” எனப் பெண்களைப் பாதிக்கும் பிற பிரச்சினைகளை முன் வைத்தே அவர்களை அணிதிரட்டிவிட முடியும்.
தாராளமயம், மேட்டுக்குடிப் பெண்களைப் “பாலியல் சுதந்திரத்தை” நோக்கித் துரத்துகிறது என்றால், அடித்தட்டு வர்க்கப் பெண்களை சமூகப் புரட்சியை நோக்கி நெட்டித் தள்ளுகிறது. தாராளமயத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தின் வீச்சு அடுப்படியில் முடங்கிக் கிடக்கும் பெண்களைத் தெருவுக்கு இழுத்து விடுகிறது. சென்னை இராணி மேரி கல்லூரி மாணவிகள் நடத்திய போராட்டம் தமிழகத்தையே உலுக்கி எடுத்ததையும்; மணிப்பூர் மாநிலத்தில் வயதான தாய்மார்கள், இந்திய இராணுவத்தின் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து நடத்திய நிர்வாணப் போராட்டம் இந்தியாவையே உலுக்கி எடுத்ததையும் நாம் மறந்து விட முடியுமா?
அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்கள் மத்தியில் உருவாகி வரும் இப்புதிய பண்பாட்டை ஆதரித்து இந்தியாடுடே சிறப்பிதழ் வெளியிடாது. குஷ்பு கருத்துச் சொல்ல மாட்டார்; இப்புதிய பண்பாட்டை நாம் தான் அடையாளப்படுத்தி வளர்த்துச் செல்ல வேண்டும்.
ஆனால், இராமதாசும், திருமாவளவனும் “கற்பு என்ற தமிழ் பண்பாட்டைப் பாதுகாப்பதற்காக” அடித்தட்டு பெண்களைத் தூண்டிவிடுகிறார்கள். இந்தக் “கற்புடமை” பண்பாடு பெண்களை, சமூக உற்பத்தியிலும், வர்க்கப் போராட்டத்திலும் பங்கெடுத்துக் கொள்ள விடாமல் தடுத்து, அவர்களை அடுப்படியிலேயே முடக்கிவிடும் நயவஞ்சகம் நிறைந்தது என்பதை நாம் புதிதாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அதேசமயம், “கற்பு”க்கு எதிராக இந்தியாடுடே வகையறாக்கள் முன் வைக்கும் “பாலியல் சுதந்திரமோ” இளைஞர்களின் சிந்தனையை நஞ்சாக்கக் கூடியது!
___________________________________________________
நரியைப் பரியாக்கும் திருமா
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை ஜெயாவின் சோதிட மூடநம்பிக்கைக்காக அகற்றப்பட்ட பொழுது, “ஆண்களின் சொத்தாசைதான் கற்பு என்கிற கற்பிதத்தை உருவாக்கியது” எனப் புரட்சிகரமாக வாய்ச்சவடால் அடித்த திருமாவளவன், இப்பொழுது, “குஷ்பு இருப்பது கற்பைப் போற்றுகிற கண்ணகிகள் நடமாடும் தமிழ்நாட்டில் என்பதை மறந்துவிட்டுப் பேசியிருக்கிறார்.” (ஜூ.வி. 2.10.05) எனக் கற்பை ஏற்றிப் போற்றுகிறார். “கற்பு என்பது மானுட சமூகத்தின் பொது ஒழுங்காக வரையறுக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளது” என இந்தியாடுடே (அக்.12, 2005) யில் முன்னுக்குப் பின் முரணாகப் பிதற்றுகிறார்.
திருமாவளவனுக்கு, முன்பு திருடர் பாதையாகத் தெரிந்த தேர்தல் பாதை, இப்பொழுது தலித்துகளைப் பாதுகாக்கும் ஜனநாயகப் பாதையாக மாறிவிட்டதைப் போல, ஆணாதிக்க கருத்தியலான கற்பும், தமிழ்ப் பண்பாடாக, பொது ஒழுங்காக மாறிவிட்டது.
____________________________________________________
தங்கர்பச்சானின் ஆண்டைத்தனம்
இராமதாசும், திருமாவளவனும், “குஷ்புவுக்கு ஒரு நீதி, தங்கர்பச்சானுக்கு ஒரு நீதியா?” எனக் குமுறிக் கொண்டிருப்பதே, இப்போராட்டத்தின் பிற்போக்குத்தனத்தை மட்டுமல்ல, இவர்கள் நோக்கத்தையும் அம்பலப்படுத்திக் காட்டி விடுகிறது. “பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகள்” என தங்கர்பச்சான் கேவலமாகப் பேசியதால் அவர் நடிகர் சங்கத்தால், குஷ்பு, மனோரமா ஆகிய நடிகைகளின் முன் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார்” என்பது பிரச்சினையின் ஒரு பகுதிதான். இதனின் இன்னொரு பக்கத்தை சம்மந்தப்பட்ட இரண்டு தரப்புமே திட்டமிட்டே மூடி மறைத்து விட்டார்கள்.
தங்கர்பச்சான் சொந்தமாகத் தயாரித்த “சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நவ்யா நாயரின் ஒப்பனைக்காரப் பெண்ணுக்கு 600 ரூபாய் சம்பள பாக்கியைத் தராமல் தங்கர்பச்சான் இழுத்தடித்து வந்தார். படப்பிடிப்பு வேலைகள் முழுவதும் முடியப் போகும் நேரத்தில் கூட தங்கர்பச்சான் இந்த சம்பள பாக்கியைத் தராததால், நவ்யா நாயர் ஒப்பனைக்காரப் பெண்ணுக்கு சம்பள பாக்கியைக் கொடுத்தால்தான் நடிப்பேன் என நியாயமான முறையில் தனது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தங்கர்பச்சான், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், “பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகள்” எனத் திட்டித் தீர்த்தார். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி பாடல் ஒலிநாடா வெளியீட்டு விழாவில், “கோடி கோடியா ரூபாயைப் போடுறோம். கேவலம், 600 ரூபாய்க்கா ஒரு மேக்கப் போடுற பொம்பளெ ஷூட்டிங்கை கேன்சல் பண்ண வச்சிடுச்சின்னா இந்தத் தமிழ் சினிமா எப்படி உருப்படும்?” என இந்தத் தமிழ் படைப்பாளி தனது ஆணவத்தைக் கக்கியிருக்கிறார்.
வேலை செய்வதன் கூலி கேட்டால், அதைக் கொடுக்காமல் திமிராகப் பேசுவது ஆண்டைகளின் மனோபாவம். தங்கர்பச்சான் நடிகைகளை விபச்சாரி என்று கேவலப்படுத்தியதற்காக மட்டுமல்ல, அவரின் இந்த தொழிலாளர் விரோத ஆண்டை மனோபாவத்துகாகவும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். தனது திரைப்படங்கள் அனைத்திலும் பெண்ணடிமைக் கருத்துக்களை விற்பனை செய்து வரும், இந்தப் பிற்போக்கு வியாபாரியைத் தமிழர்கள் புறக்கணித்திருக்க வேண்டும். ஆனால், பாட்டாளி மக்கள் பெயரில் கட்சி நடத்தும் இராமதாசும்; மார்க்ஸ், அம்பேத்கர் என வாய்ச்சவடால் அடிக்கும் திருமாவளவனும், தங்கர்பச்சான் தமிழ் படைப்பாளி என்பதற்காகத் தண்டிக்கப்பட்டதாகப் பூசி மெழுகுகிறார்கள்.
இராமதாசும், திருமாவளவனும் தங்கர்பச்சானுக்காக வக்கீல்களாக மாறி வாதாடுவதற்கு, அவர் தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு நெருக்கமானவர் என்பது மட்டுமல்ல் அவர் வன்னிய சாதியைச் சேர்ந்தவர் என்பதும் முக்கிய காரணம். இறுதியாகப் பார்த்தால், தமிழ் பாதுகாப்பு என்பது, இப்படிப்பட்ட பிற்போக்கு ஆண்டைகளைப் பாதுகாப்பதுதானா?
_________________________________________________
– புதிய ஜனநாயகம், 2005ஆம் ஆண்டு
//இராமதாசும், திருமாவளவனும் தங்கர்பச்சானுக்காக வக்கீல்களாக மாறி வாதாடுவதற்கு, அவர் தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு நெருக்கமானவர் என்பது மட்டுமல்ல் அவர் வன்னிய சாதியைச் சேர்ந்தவர் என்பதும் முக்கிய காரணம். இறுதியாகப் பார்த்தால், தமிழ் பாதுகாப்பு என்பது, இப்படிப்பட்ட பிற்போக்கு ஆண்டைகளைப் பாதுகாப்பதுதானா?//
🙂 கூட்டம் சேர்ந்துவிட்டால் அப்பறம் தலைவர்கள் நாட்டாமைகள் தானே.
//பிடிக்காத கணவனோடு சேர்ந்து சலிப்போடு வாழ்வதை விட, வேறொரு ஆணுடன் இரகசியக் கள்ள உறவு வைத்துக் கொண்டு போலித்தனமாக வாழ்வதைவிட,//
அப்படிப்பட்ட கணவனுக்கு தெரியாமல் மனைவு பிற ஆண்களுடன் கள்ளத் தொடர்பை பாதுக்காப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று திருவாளர் டோண்டு சொல்லிவருகிறார்.
//மணவிலக்கு பெற்று, மறுமணம் செய்து கொள்வது, பாலியல் சுதந்திரத்தைவிட, முற்போக்கானது மட்டுமல்ல் சமூக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், நியாயமானதும்கூட.//
சரிதான், மண முறிவுகள் அனைத்திற்கும் பாலுறவு, கள்ளத்த் தொடர்பு பிரச்சனைகள் எதுவும் இல்லாத வேறு காரணங்களும் உள்ளன.
டோண்டூ’ஸ் நேம் did’nt found any where in the article. சொந்த கருத்துக்களை solo வாக சொல்லுங்கள் தைரியமாக!
இது ஒரு கேவலமான கட்டுரை!!!?. மைய பொருள் என்னவென்று விளங்கவில்லை. கடைசியில் யார் சரி என்று விளக்கவில்லை. வினவு குரூப் எந்த பக்கம் என்று தெரியவில்லை. கற்பிற்கும் பார்பனனுக்கும் ஏன் முடிச்சி போட்டாங்க என்று தெரியவில்லை. மொத்தத்தில் ஒரு கற்பிழந்த கட்டுரை.
நீங்கள் பார்ப்பனர்களை மட்டுமே திட்டுவதை பொழுதுபோக்காக கொண்டவர் என்ற நினைப்பை // இராமதாசும், திருமாவளவனும் தங்கர்பச்சானுக்காக வக்கீல்களாக மாறி வாதாடுவதற்கு, அவர் தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு நெருக்கமானவர் என்பது மட்டுமல்ல் அவர் வன்னிய சாதியைச் சேர்ந்தவர் என்பதும் முக்கிய காரணம். இறுதியாகப் பார்த்தால், தமிழ் பாதுகாப்பு என்பது, இப்படிப்பட்ட பிற்போக்கு ஆண்டைகளைப் பாதுகாப்பதுதானா?// இந்த வரிகள் மாற்றி விட்டது.
மு.க.(ஜோசப்) ஸ்டாலினிய,(குடும்ப)தேசிய கம்யுனிச,கருத்துப்படி,இதற்கு/“திருமணத்திற்கு முன்பே பாலுறவு வைத்துக் கொள்ளலாம்; திருமணமான பெண்கள், வேறு ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம்” என்பதை பெண்ணியவாதிகள், ஆணாதிக்கத்தை எதிர்த்த பெண் விடுதலையின் அம்சங்களாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். இது, நடைமுறையில், பல பெண்களோடு உறவு கொள்ள அலையும் ஆண்களுக்கு, தனது பெண்டாட்டி, அம்மா, சகோதரிகளின் “கற்பை”த் தவிர, மற்ற பெண்களின் “கற்பை”யெல்லாம் துச்சமாக மதிக்கும் ஆண்களுக்கு, பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகக் கைகொடுக்கும் அனுமதி வாங்கி தந்துவிடிர்கள் என்றால்,தலிவர் டாக்டர் கலைஞ்சர் அவர்கள் உங்களை பூப்போட்டு கும்பிடுவார்!.
குடும்ப வன்முறை சட்டம் ஒரு ஆண் எத்தனை பெண்களுடன் ஒரே நேரத்தில் “”சேர்த்து வாழலாம்”
திருமணத்துக்கு முன்பே உறவு கொள்ளலாம்”,
“கணவன் தவிர்த்த வேறு ஆடவனுடன் உறவு கொள்ளலாம்
என அங்கீகாரம் அளித்துள்ளது .
சென்னை உயர் நீதி மன்றம் பழனி vs மீனாக்ஷி என்கிற வழக்கில்
யார் யாரோடு வேண்டுமானாலும் உடல் உறவு கொள்ளும் நேரமே “”சேர்ந்து வாழுவதாக “” வரையறை செய்து அங்கீகாரம் அளித்துள்ளது.
குடும்பம் என்பது பெண்களை அடிமை படுத்தும் நிறுவனம் என பெரியார் கூறி உள்ளார் .
தமிழ் பண்பாடு எது என்பதை குஷ்பூ தற்போது நிருபித்து விட்டார் .
எனவே இனிமேல் யாரும் ஒரு பெண்ணிற்கு மேல் வைத்துகொள்ளும் ஆண்களை குறை கூற கூடாது.
இனிமேல் திருமணங்கள் குற்றமாக அறிவிக்க பட வேண்டும் .
வாழ்க பெண் விடுதலை !!
கள்ள காதல் கொலைகள் இருக்காது .
பெண் உரிமை வென்றது .
USA போல தந்தை இல்லாத சமுதாயம் மலருகிறது .
சுரேஷ்ராம், கட்டுரையை முழுசாப் படிச்ச மாதிரி தெரியலையே?
//ஒரு பெண்ணிற்கு மேல் வைத்துகொள்ளும் ஆண்களை குறை கூற கூடாது.// இதுல கூட ஒருபெண் எத்தனை ஆணை வேணாலும் வைச்சுக்கலாம்னு உங்களால் சொல்ல முடியவில்லை. ஏன்னா இந்த ஃபீரி செக்ஸ் விவகாரமே ஆண்களுடைய பொறுக்கித்தனத்துக்கு கொள்கை முலாம் பூசுகிறது.
பாலியல் பிரச்சினைகளில் சமூகத்தில் அடிமையாக இருக்கும் பெண்ணின் நிலைமையை வைத்துதான் சிந்திக்க வேண்டும். உங்களது நேரெதிர்
//ஒருபெண் எத்தனை ஆணை வேணாலும் வைச்சுக்கலாம்னு உங்களால் சொல்ல முடியவில்லை//
குடும்ப வன்முறை சட்டம் ஒரு பெண் எத்தனை ஆண்களுடன் ஒரே நேரத்தில் “”சேர்த்து வாழலாம்” என அங்கீகாரம் அளித்துள்ளது ..
சென்னை உயர் நீதி மன்றம் பழனி vs மீனாக்ஷி என்கிற வழக்கில் யார் யாரோடு வேண்டுமானாலும் உடல் உறவு கொள்ளும் நேரமே “”சேர்ந்து வாழுவதாக “” வரையறை செய்து அங்கீகாரம் அளித்துள்ளது.
சமூக அங்கீகாரம் கிடைத்து விட்டது .
.
சுரேஷ்ராம்,
நீங்கள் சொல்வதற்கு சட்ட அங்கீகாரம் இருக்கட்டும், ஒருவன் அல்லது ஒருத்தி பலருடன் உறவு கொள்வதை சரி என்கிறீர்களா,ஏன்? அடுத்து பெண்ண்டிமைத்தனம் கோலேச்சும் இந்த சமூகத்தில் இந்த கட்டற்ற உறவு ஒரு பெண்ணுக்கு அளிக்கும் சாதகம் என்ன? கொஞ்சம் விளக்குங்களேன்.
உன் மனைவியிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாயோ, அதை நீயும் அவளுக்கு கொடு!, இதுவே மனைவிக்கும்!
மிகச் சரி.
என் எதிர்பார்ப்பு சம உரிமை!. கொடுக்கவேண்டியது அவள் மட்டும் தான்!!
நீங்க குடுக்க மாட்டிங்களா?
அப்புறம் என்ன சம உரிமை !
அமோதிக்கிறேன்
சூப்பர் . இது இந்த உலகத்தில் உள்ள முட்டாள்களுக்கு நல்ல அட்வைஸ் . முதல்ல இந்த கான்செப்டா ஒரு ஆள் கிட்ட நடைமுறை படுதபபளகனும் . அப்பறோம் எல்லா மனித interaction la யும் கடைபிடிச்சா உலகம் செழிக்கும். this is the only way to establish lasting peace and justice in this world. not some world communist government.
நல்ல நினைவூட்டல் கட்டுரை.
மறுகாலனியாதிக்கம் தனது வளர்ச்சிக்கும் பரவலுக்கும் தேவைப்படும் போது பார்ப்பனிய கலாச்சாரங்களை வரித்துக் கொள்கிறது. பார்ப்பனியம்
தன்னை அழிவிலிருந்து காத்துக் கொள்ள மறுகாலனியாதிக்க சூழலில் வேறு தளத்தில் தனது நிறத்தை மாற்றிக் கொண்டு உறவாடுகிறது. இந்த
ஒட்டுவாரொட்டி உறவில் மறுகாலனியாதிக்கம் தனது நலனுக்காக சில சமயங்களில் பார்ப்பனிய கலாச்சாரத்தை தூண்டுகிறது (உம்- பண்டிகைக்
கால நுகர்வு, அட்சய திரிதியை போன்ற பார்ப்பன பண்டிகைகளின் வருகை). இந்த நுகர்வு வெறிக் கலாச்சாரத்தின் உடன் விளைவாக இயல்பான
உணர்வுகள் கூட நுகர்வுப் பண்டங்களாய் மாறுகிறது. விதவிதமான வகைமாதிரிகளைக் கோருகிறது.
இது இப்போதைய பார்ப்பன ஒழுக்கவாத விழுமியங்களை மீறி அதன் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் போது மட்டும் லேசான ‘முணுமுணுப்புகள்’
எழுகிறது ( மங்களூர் தாக்குதல், ராம் சேனே). மற்றபடி மறுகாலனியாதிக்கத்தை ஒரேயடியாக பகைத்துக் கொள்ள பார்ப்பனியம் தயாரில்லை.
அது அதனால் முடியக்கூடியதும் அல்ல. மறுகாலனியாதிக்கத்தோடான கள்ளக் கூட்டனி ஒன்று தான் பார்ப்பனியம் இனிமேல் நிலைத்து நிற்க
உள்ள ஒரே வாய்ப்பு.
மறுபுறம் பார்ப்பனியத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தலித்தியமும், இனவாதமும் (தமிழ் தேசியம்) கூட பார்ப்பனியம் ஏற்கனவே வகுத்துள்ள
(போலி) ஒழுக்கவாத விதிகளுக்கு உட்பட்டு தான் ஆட்டத்தில் இறங்கியுள்ளது. இந்த போலித்தனம் தான் குஸ்பு விவகாரத்தில் வெளிச்சத்துக்கு
வந்தது.
எப்படி பொருளாதார உறவுகளில் மறுகாலனியாதிக்கம் நடப்பில் செல்வாக்கோடு திகழும் நிலபிரபுத்துவத்தோடு (பார்ப்பனியம்) பெரும்பாலும்
முரண்பாடுகள் எழாமல் தவிர்த்துக் கொண்டு தனது தடத்தைப் பதிக்கிறதோ அதே போல கலாச்சார அலகுகளிலும் நடக்கிறது. தமது அஸ்திவாரமே
அசைந்து போய்விடுமோ என பார்ப்பனியம் அஞ்சும் ஒரு சில தருணங்களில் மாத்திரம் சிறு முனகல்களை எழுப்புகிறது. ஒட்டுமொத்தமான
பெரும் முரண்பாடுகளை அது தவிர்த்துக் கொள்கிறது. வேறு வழியில்லாத சூழலில் அது மறுகாலனியாதிக்கத்தோடு எவ்வகையிலான சமரசத்தையும்
செய்யத் தயங்காது.
அடிப்படையில் பார்ப்பனிய கலாச்சாரமே முதலாளித்துவ கலாச்சார விழுமியங்களைக் காட்டிலும் ஆகக் கேடு கெட்டதாகும். கண்ணில் கண்ட
பெண்களையெல்லாம் பெண்டாள நினைத்த இந்திரனையும் கிருஷ்ணணையும் தந்ததாயிற்றே. பெண்ணை உடமையாக பார்க்கும் பார்ப்பனிய
விழுமியம் அதே போன்று பார்க்கும் முதலாளித்துவத்தோடு எவ்வகையிலும் முரண்பட முடியாது.
அதன் மிக முக்கியமான தூணான ஏணிப்படி சமூக அடுக்கை தக்கவைத்துக் கொள்ள இது போன்ற சில்லறை விட்டுக் கொடுப்புகளுக்கு எப்போதுமே
தயாராகத்தான் இருக்கும்.
லீனா விவகாரத்தில் அவரது எழுத்தை பெண் உரிமையின் வெளிப்பாடாக பார்க்கும் போக்கு உள்ளது. இது பப் கலாச்சாரம் சுதந்திரம் என்று
கொண்டாடுவதைப் போன்றது தான். அவ்விவகாரத்தில் வினவின் விமர்சனங்களில் இருந்த இந்த அம்சத்தை கள்ளத்தனமாக புறக்கணித்தே இப்போது
வரை அவர்கள் வாதிட்டு வருகிறார்கள்.
“கற்பு” புனிதம் என்பவர்களும் “கற்பு” புனிதமில்லை என்பவர்களும் இப்படியாக ஒரே புள்ளியில் இணைகிறார்கள். இந்து மக்கள் கட்சி லீனாவுக்கு
எவ்வகையிலும் ஒரு அச்சுறுத்தலாக இருக்க நியாயமில்லை. லீனா சிம்பிளாக ‘உங்க பாஞ்சாலி செய்யாததையா நான் செய்து விட்டேன்’ என்று
ஒரே ஒரு கேள்வி கேட்டிருந்தாலே இ.ம.க அடங்கிப் போயிருப்பார்கள்.
“புளூ பிலிம் பாலியல் வேட்கைகளுக்கு ஒரு வடிகால் என்றும் அது தேவை என்றும் அப்படி அனுமதிப்பதே சுதந்திரம் என்றும் சொல்கிறார்கள் லீனா
பக்தர்கள் – அய்யய்யோ அது பாவமாச்சே என்றபடியே முக்காடு போட்டுக் கொண்டு இரசிக்கிறார்கள் முருகனடிமைகள் (பார்ப்பனியவாதிகள்).
இடையில் அது காட்டப்படும் அரங்குக்கு ஆபத்து வந்து விடும் சூழலில் கருத்துரிமைக்கு ஆதரவு எனும் பெயரில் தமது வக்கிரங்களை பாதுகாத்துக்
கொள்ள முனைகிறார்கள்” இந்த அம்சத்தை அசுரனின் பதிவில் அழகாக சொல்லியிருக்கிறார்.
உணமையான பெண்ணுரிமைக்கும் லீனாவுக்கும், குஸ்புவின் பாலியல் சுதந்திர கருத்துக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இன்னும்
சொல்வதானால் – பெண்ணை உடமையாகக் கருதும் போக்கை தகர்த்தெரியும் புரட்சிகர சக்திகள் இவ்விருவருக்கும் (பார்ப்பனவாதிகள் &
மறுகாலனியாதிக்க சூழல் உருவாக்கி விட்டுள்ள லும்பன்கள்) ஒரு பெரும் அச்சுருத்தலாகவே இருக்கும். புரட்சிகரமான பெண்ணுரிமைக்கு
இவர்கள் கேடு கெட்ட எதிரிகள். விதவிதமான பெயர்களில் (பின்னவீனத்துவம்) இவர்கள் ஒளிந்து வந்தாலும் அடிப்படையில் இவர்கள் கடுமையாக
எதிர்த்து தோற்கடிக்கப்பட வேண்டியவர்களே. சூழ்நிலையின் தேவைக்கேற்ப ஒழுக்கவாதம் பேசும் பார்ப்பனியவாதிகளோடு (உண்மைத்தமிழன்) கள்ளக்
கூட்டு அமைப்பதற்கும் இவர்கள் தயங்கமாட்டார்கள்
சுகுனா திவாகர் உள்ளிட்ட அந்தோனியார் பக்தர்களின் போலிப் பெண்ணுரிமையை தோலுரித்துக் காட்ட வினவு தளத்தில் மார்க்சிய பார்வையிலான
பெண்ணுரிமையை நிலைநாட்டும் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவர வேண்டும்.
வாழ்த்துக்கள் தோழர்களே..
இசக்கி
இனிய இசக்கி, உங்கள் பதிலில் பார்த்தீனியம் விஷச்செடி போல பார்ப்பன, பார்ப்பனீய வார்த்தைகள் மண்டியுள்ளது. //பார்ப்பனவாதிகள் &
மறுகாலனியாதிக்க சூழல் உருவாக்கி விட்டுள்ள லும்பன்கள்) ஒரு பெரும் அச்சுருத்தலாகவே இருக்கும். புரட்சிகரமான பெண்ணுரிமைக்கு
இவர்கள் கேடு கெட்ட எதிரிகள். விதவிதமான பெயர்களில் (பின்னவீனத்துவம்) இவர்கள் ஒளிந்து வந்தாலும் அடிப்படையில் இவர்கள் கடுமையாக
எதிர்த்து தோற்கடிக்கப்பட வேண்டியவர்களே. சூழ்நிலையின் தேவைக்கேற்ப ஒழுக்கவாதம் பேசும் பார்ப்பனியவாதிகளோடு (உண்மைத்தமிழன்) கள்ளக்
கூட்டு அமைப்பதற்கும் இவர்கள் தயங்கமாட்டார்கள்// கெளபீன தத்துவம் கூட பலவீனமின்றி தந்தருளுங்கள் உண்மைப்பெயரான புத்தி பிசகி எனும் முத்திரையில். கூடியவரை எவருக்கும் ( தங்களையும் சேர்த்து ) புரியா வண்ணம் இருத்தல் நலம். வாழ்க நின் தொண்டு!
எச்சூஸ்மீ
லெஸ் டென்சன் மோர் வொர்க் 😀
இதை… இதை…இதைத்தான் எதிர்பார்த்தேன்! சம்பந்தம் இல்லாம எழுதி ஜாதி வெறியை தூண்டி, எச்சதுப்பி வம்பிழுத்து எக்ச்கியூசும் கேட்டாச்சு. மோர் குடித்து டென்ஷன் குறை! மூளை ஒர்க் செய்யும்!!
எதற்கெடுத்தாலும் பார்பநீயமா , இந்த உலகத்துல எல்லா மதத்துலயும் பெண்ணின் கற்பு வேண்டபடுகிறது. இது எல்லா தந்தை வழி நகரீகதுளையும் சகஜம்.இப்போதைக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்பதே சமுகம் நிலைக்க வழி . பல பக்கம் நோக்கம் சிதைந்தால் மொத்த சமூகமும் சீர்கெடும்
இங்கேயும் மதம் தான் பிரச்சினையா? 🙁
சீனு கட்டுரையை முழுமைய படிக்காலன்னு டாக்டர் ஒங்கள பார்த்துதான் சொல்றார் மதம் என்கிற ஒரு வார்த்தையை சீனு இந்த கட்டுரையில் எங்கு இருக்கிறது கோஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்க
சொல்லட்டுமே…
//மதம் என்கிற ஒரு வார்த்தையை சீனு இந்த கட்டுரையில் எங்கு இருக்கிறது கோஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்க//
படிச்சு பாருங்களேன்…
நீளமான கட்டுரைகளைப் படிக்காமலேயே பலர் கருத்து சொல்கிறார்கள். உங்கள் நிலை என்ன என்பதைத் தெளிவாக சுருக்கமாக மூ ன்று வரிகளில் சொல்லி விட்டு விவாதம் போகும் திசையைப் பார்க்கலாம்.
Ithu kavithaiyaa allathu katturaiyaa enra karuththukke poka thevai illai. Ithu nitharsanam. Naanum Manam vedhumbukireen. Uzhaippukkaana payan kalavaadapadumo enru payapadukireen.
தோழர் -வினவு
உங்கள் கட்டுரை -தவறு !!!
//கிராமப்புறங்களில், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் “”அறுத்துக் கட்டும் பண்பாடு” ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. கணவன் மோசமானவனாக, பெண் பித்தனாக இருந்தாலும், இந்த ஒழுங்கீனத்தைப் பொறுத்துக் கொண்டு, வாழ்நாள் முழுவதும் அவனுக்காகவே வாழ்வதுதான் “”கற்புடைமை” என்ற பண்பாட்டிற்கு நேர் எதிரானது, இது. “யாருடன் சேர்ந்து வாழ்வது?” என்று தீர்மானிக்கும் உரிமையை “கற்பு” தட்டிப் பறித்து விடுகிறது. ஆனால், மணமான மறுநாளே அறுத்துக் கொண்டு, தனக்குப் பிடித்த வேறொருவனுடன் சேர்ந்து வாழும் ‘கீழ் சாதிப் பெண்களை’ கிராமப்புறங்களில் காண முடியும்.//
அறுத்துக் கட்டும் பழக்கம்- பல ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஒரு பழக்கம் -அது பெரும்பான்மையான -பிற்படுத்த மக்களிடமும் இருந்த ஒரு பழக்கம் !!!.
அந்த காலத்தில் சிறு வயதிலே- பத்து வயதுக்கு முன்னரே திருமணம் நடந்துவீடும்.அதனால் ஆண்களுக்கு(சிறுவனுக்கு ) ஆண்மை இருக்கீறதா /இல்லையா என்று தெரியாது?. பருவ வயதை அடைந்த பிறகு மணமகனுக்கு ஆண்மை இல்லை என்பதை அறிந்தால் -ஊர் பெரியவர்கள் மணமகனை அறுத்துக் கட்டி விடுவார்கள். அதன் பின் -பெற்றவர்கள் -பெண்ணுக்கு மறுமணம் செய்து வைப்பார்கள்.
அவளாக பிடிதவனுடன் -திருமணம் செய்யாமல் -சேர்ந்து வாழ முடியாது !!! கோவீளுக்கு நேர்ந்து -விட்ட -தேவதாசிகள் தான் -தனக்கு -பிடிதவனுடன் சேர்ந்து வாழ முடியும்
அந்த காலத்தில் நீதிமன்றம் இல்லாததால் -சமுக அங்கீகாரமாக அறுத்துக் கட்டும் பழக்கம் இருந்தது .இது எல்லா பிற்படுத்தப்பட்ட மக்களிடமும் இருந்த பழக்கம்.
இன்றும் தாழ்த்தப்பட்ட சாதியில் இந்த-பழக்கம் -கிராமங்களில் -உள்ளது என்று சொல்வது -கீழ்சாதி-தாழ்த்தப்பட்ட -மக்களை -நீங்கள் கேவலமாக -எழுதுவதாக உள்ளது !!!
உங்கள் கட்டுரை -கற்பை பற்றி சொன்ன -குஷ்பூவை -வீட -தாழ்த்தப்பட்ட -பெண்களை -ஒழுங்கீநமாக -சித்தரிகீறது!!!
இதை -வன்மையாக -கண்டிகீரன் !!!!
வினவு -நீங்கள் -ஆதரிக்கும்(!?) -புரட்சி -குழு -மாவோயிஸ்டு -வில் கூட -தலித் மக்கள் தான் அதிகம்.அவர்கள் -வீரத்திற்கும் -மானத்திற்கும் -ரோசதிற்கும் -பெயற்போனவர்கள் .அவர்களை -ஒழுங்கீநமாக -சித்தரிகிறது .
தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் -தோழர் -திருமா -அவரை சொல்ல -உங்களுக்கு -என்ன தகுதி இருகிறது ?
அவரால் தான் தமிழகத்தில் – தாழ்த்தப்பட்ட மக்கள் -எழுச்சி -அடைதிருகீரார்கள் !!!
தேர்தல் பாதையை -புறக்கணித்து -பல ஆண்டுகள் -இயக்கத்தை நடத்தி -பல சோதநைகலை அனுபவத்து -பின் ஆட்சி -அதிகாரம் தான் -தலித் மக்களை -முன்நேற்றும் -என்பதால் -தேர்தல் பாதைகு -தோழர் -திருமா வந்திருகீறார் !!!
-த சேகர்
மருதிபட்டி -அஞ்சல்
///தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் -தோழர் -திருமா -அவரை சொல்ல -உங்களுக்கு -என்ன தகுதி இருகிறது ?/// அவர் தேர்தல் பாதையை புறக்கனித்த போது ஒன்றாக செர்ந்து செயல்பட்ட ஒரு தகுதி போததா விமர்சனங்களை வரவேற்க வேண்டும் கண்டிக்க கூடாது மிஸ்டர் சேகர்
தோழர் -திருமா -அவர் அரசியலில் பத்து வருடம் முன்னாள் வந்து இருந்தால் -இப்போது MLA கூடுதலாக பெற்று இருக்க முடியும் !!!
தேர்தல் பாதையை புறக்கனித்ததாள் -என்ன பலன் ?
தலைமறைவு வாழ்க்கை -பல தோழர்கள் -சிறையில் -ஆதிக்க சாதி அதீகாரிகளின் கொடுமை -இதை தானே அன்று அவர்கள் பெற்றார்கள்
தேர்தல் பாதை வந்ததால் -எவ்வலூவோ சாதித்து இருகீரார்கள் !!
தலைமறைவு வாழ்க்கை -பல தோழர்கள் -சிறையில் -ஆதிக்க சாதி அதீகாரிகளின் கொடுமை -இதை தானே அன்று அவர்கள் பெற்றார்கள்
தேர்தல் பாதை வந்ததால் -எவ்வலூவோ சாதித்து இருகீரார்கள் !!
//தலைமறைவு வாழ்க்கை -பல தோழர்கள் -சிறையில் -ஆதிக்க சாதி அதீகாரிகளின் கொடுமை -இதை தானே அன்று அவர்கள் பெற்றார்கள்தேர்தல் பாதை வந்ததால் -எவ்வலூவோ சாதித்து இருகீரார்கள் !!//
இப்ப என்ன ஆதிக்க சாதி அதிகாரிகளோட கொட்டத்த ஓடுகிடாரோ ?
ஆதிக்க சாதி வெறியர்களோடு சேர்ந்து கொண்டு கரி சோறு தின்னுகிட்டு இருகிர்றாரு .இது தான் அவர் சாதிச்சது .இந்த பொலபுக்கு தூ ….
தோழர் 1985 இங்கு வி.சிறுத்தைகளது ஆதரவாளர் போட்டிருக்கும் கருத்துக்கு பதிலளிக்கும் போது மற்றவர்களை கருத்து ரீதியாக வெல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் பதிலளித்தால் நலம். தூ…போன்ற வசவுகளை பயன்படுத்துவதால் யாரும் நமது கருத்து சரி என்று எடுப்பதில்லை. தோழர்கள் விவாதிக்கும் போது கருத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் நலம். அல்லது உள்ளடக்கம்தான் முக்கியம், வடிவம் அல்ல. நமது கோபம் அடுத்தவரை புரியவைக்க வேண்டும் என்பதற்கு பதில் வெறுக்கவைப்பதாக ஆகிவிடக்கூடாது. பரிசீலிக்கவும்.
திருத்திக்கொள்கிறேன்….
அவர் என்ன சாதித்தார் என்பது -தலித் மக்களக்கு தெரியும் !!!
சாதிய அடக்கு முறைகள் வாட மாவட்டங்க்களில் குறைத்து இருகிறது !!!
ஏன் தலித்களுக்கு பல நல்ல திட்டங்களை சட்ட மன்ற /பாராளுமன்ற தில் வாதாடி பெற முடிகிறது -இந்த சட்ட மன்ற கூட்டதில் கூட – சட்ட மன்ற ஒருபீனர்கள் தங்கள் நிதியில் இருந்து – 19 சதவீதம் -ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்க அரசு ஆணை பிறப்பித்து இருக்றது -விடுதலை சிறுத்தைகளால் தான் .
. ஆங்கிலேய தலித்களுக்கு கொடுத்த 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் இன்று 1 லட்சம் தான் உள்ளது -இதை மீட்க போராடுவது யார் ?-கம்முனிஸ்டு கட்சியா ?-அவர்கள் தான் – பஞ்சமி நிலம் அபகரித்த -ஜெயா உடன் கூட்டணி வைக்க -ஏங்கி கொண்டு இருக்கீறார்கள் !!
பின் யார் மீட்பது ?- விடுதலை சிறுத்தைகளால் தான்!!!
விடுதலை சிறுத்தைகல்-இந்த முறை அதிக இடன்க்களை பிடித்து – பஞ்சமி நிலம் மீட்பார்கள் !!!
விடுதலை சிறுத்தைகளை தவீர -யார் தலிதுகலூகு உண்மையாக -குரல் கொடுகீரார்கள் !!! பதில் சொல்ல முடியுமா ?
//ஆங்கிலேய தலித்களுக்கு கொடுத்த 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் இன்று 1 லட்சம் தான் உள்ளது -இதை மீட்க போராடுவது யார் ?//
குறுகிய சிந்தனையோடு இருகாதிர்கள் இந்தியாவோட மொத்த நிலபரப்பு3,287,590 கிமீ² இந்த ஓட்டுமொத்த நிலபரப்பும் நம் அனைவருக்கும் சொந்தமானது .நிலபரப்பை கூறு போடுவர்களிடம் இருந்து நம் நாட்டை முழுவதுமாக மீட்க வேண்டும் என்ற சிந்தனைக்கு வாருங்கள் .தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்தால் மீட்க முடியாது .
போகாத ஊருக்கு வழி சொல்லாதங்க தோழர் !!!
2050 பற்றி பேசாதிதங்க!! , 2010 பற்றி பேசுங்க!!!
tsekar
கிராமத்துப் பெண்களுக்கு உள்ள அறுத்துக் கட்டுதல் ஒரு முற்போக்கான உரிமை என்றே கட்டுரை கூறுகிறது. குறிப்பிட்ட காரணங்களுக்காக கணவனுடன் வாழப்பிடிக்காத பெண்ணுக்கு இந்த உரிமை எளிதில் கிடைக்கும் விவாகரத்து போன்றது. இன்று இந்த பழக்கம் மறைந்து வருகிறது என்றால் அதனால் இந்த உரிமை கிராமத்துப் பெண்களுக்கு இல்லை என்றே பொருள். கட்டுரை சொல்ல வந்த விசய்த்தை நீங்கள் திருமாவின் பாச்த்தால் கவனிக்கவில்லையோ?
மற்றபடி திருமாவின் கண்ணகி கற்பு பாசமெல்லாம் தலித் பெண்களுக்கு மட்டுமல்ல எல்லாப் பெண்களுக்கும் எதிரானதுதான்.
முழுமையாக படித்தேன். சிற்றறிவுக்கு எட்டாமல் இருக்கலாம் .
Proponents of the women’s cause routinely attribute traits of low esteem, self pity, vagrancy, vulnerability and helplessness to all women and girls.
“To be a feminist is to acknowledge that one’s life has been regressed. The demand for granting preferential treatment to women is an admission on her part of her inferiority and there has been no need for such a thing in India as the women have always been by the side of men in Council and in the fields of battle…. We must have no mutual conflict in our homes or abroad. We must transcend differences. We must rise above nationalism, above religion, above sex.”- Sarojini Naidu(at the Fourth session of All India Women’s Conference, Bombay, 1930)
http://www.merinews.com/article/true-equity-network-ten—india/15795973.shtml
சுரேஷ்ராம்,
சரோஜினி நாயுடு மேற்கோளைக் காண்பித்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் விளங்கவில்லை, எதானாலும் தமிழில் பேசலாமே?
தோழர் -வினவு
//மணமான மறுநாளே அறுத்துக் கொண்டு, தனக்குப் பிடித்த வேறொருவனுடன் சேர்ந்து வாழும் ‘கீழ் சாதிப் பெண்களை’ கிராமப்புறங்களில் காண முடியும்.//
இந்த வரிகள் -கீழ் சாதிப் பெண்களை (மட்டும்) அவமதிபதாக -தேரியவில்லையா ?
அறுத்துக் கட்டுதல்-எல்லா சாதியிளும் -தேவர் ,வன்னியர் -இருந்தாளும் .அந்த சாதியை குறிபிட்டு எழுத முடியுமா ?
கமியுநீஸ்ட்டு தத்துவத்திலும் சாதியமா ?-வேதனை -தோழர்
தலித்கலே உங்கள் வீடுதலையை நீங்கள் தான் வென்று எடுக்க வேண்டும்!!!
உயர்வு நவீல்சி அணி -இக்கு மிக சிறந்த உதாரணம் !!!
///தலித்கலே உங்கள் வீடுதலையை நீங்கள் தான் வென்று எடுக்க வேண்டும்!!!/// என்ன சகோதரரே கேரளா மப்ள விவசாயிகள் தாழ்த்தப்பட்ட மக்களும் முஸ்லிம் விவசாயிகளும் செர்ந்து போராடிய மாதிரி நம்மளும் செர்ந்து போராடலாம் அப்புடின்னு நேனச்ச நீங்க ஜாதி வேறியேட தலித்களை மட்டும் போராட கூப்பிடுவது நியாயம சேகர்
//கணவனின் கள்ள உறவு காரணமாகவோ, பாலியல் சித்திரவதை வரதட்சணை கொடுமை காரணமாகவோ அவனுடன் இனியும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால், அவனிடமிருந்து பிரிந்து போய் தனியாக வாழுகிறார்கள்; இல்லை, மணவிலக்கு பெற்றுக் கொண்டு மறுமணம் கூடச் செய்து கொள்கிறார்கள்.பிடிக்காத கணவனோடு சேர்ந்து சலிப்போடு வாழ்வதை விட, வேறொரு ஆணுடன் இரகசியக் கள்ள உறவு வைத்துக் கொண்டு போலித்தனமாக வாழ்வதைவிட, மணவிலக்கு பெற்று, மறுமணம் செய்து கொள்வது, பாலியல் சுதந்திரத்தைவிட, முற்போக்கானது மட்டுமல்ல் சமூக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், நியாயமானதும்கூட// இப்படி இன்று சமுதாயத்தில் இன்று நடப்பது சரியானது என்றும் அந்த முற்போக்கான பழக்கம் அந்த மக்களிடம் ஏற்கனவே இருபதையும் தானே கட்டுரை எடுத்து கூறுகிறது .
எப்படி என்று உங்கள் கட்டுரை விளக்கவில்லை ?தனிப்பட்ட உங்கள் சாதிய கோபத்தை -திருமா -வின் மேல் வீண் பழி சொல்லாதிர்கள்
ஹைதர் அலி-
I welcome your suggestion
-t sekar
சரியாக சொன்னீர்கள் சேகர்! மானமாக, ரோஷமாக, வேஷமின்றி உழைப்பதால், ஏழையாக வாழும் பெண்கள் ஏராளம். கோழை மாதர் சாவுகளும் தாராளம்….இவர்கள் வாழ்வில் மாற்றமும், ஏற்றமும் பெற கட்சியோ, ஆட்சியோ அல்லது மகளிர் அணிகளோ முயலுமா?
.///ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் பிறக்க, அவர்கள் இருவர் இடையே ஏதோ ஒருவித ஈர்ப்பு இருந்தால் மட்டும் போதாது; இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்போம் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை குலைந்து போய்விட்டால், காதல் மரித்துப் போய், வாழ்க்கையே சவமாகிவிடும்///அருமையான வார்த்தைகள் என்னுடைய வாழ்க்கையை இங்கு வார்த்தைகளாய் படித்த சந்தோஷம் நன்றி நன்றி நன்றி.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் பிறக்க, அவர்கள் இருவர் இடையே ஏதோ ஒருவித ஈர்ப்பு இருந்தால் மட்டும் போதாது; இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்போம் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை குலைந்து போய்விட்டால், காதல் மரித்துப் போய், வாழ்க்கையே சவமாகிவிடும்.
பாலியல் புரட்சியோ, ஆண்பெண் இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்கத் தேவையில்லை என்பதை முன் நிபந்தனையாகக் கொள்கிறது. எனவே, இந்த உறவில் காதல் இருக்காது. காதல் இல்லாத உறவு நெறியுடையதாகவும் இருக்காது………..
இந்த வரிகள் பிற்போக்குத்தனமானது.
அண்ணே முற்போக்குன்ம என்னதுண்ணே என்க்கு சத்தியம தெரியால கொஞ்சம் சொல்லுங்க
டி.வி.எஸ்
ஏன் பிற்போக்குத்தனமென்று விளக்கவில்லையே? அடுத்து இது பிற்போக்கு என்றால் எது முற்போக்கு என்றும் சொல்லவில்லையே?
//பிடிக்காத கணவனோடு சேர்ந்து சலிப்போடு வாழ்வதை விட, வேறொரு ஆணுடன் இரகசியக் கள்ள உறவு வைத்துக் கொண்டு போலித்தனமாக வாழ்வதைவிட, மணவிலக்கு பெற்று, மறுமணம் செய்து கொள்வது, பாலியல் சுதந்திரத்தைவிட, முற்போக்கானது மட்டுமல்ல் சமூக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், நியாயமானதும்கூட//
correct…
“நச்” கட்டுரை
மொத்தத்தில் வினவு குரூப் க்கு பிடிக்காத அணைத்து பேரையும் திட்டுவதற்கு ஒரு சூப்பரான குஸ்பு கற்பு மேட்டர் கெடைசுடிச்சி பா. சுப்பெரப்பு ! கலக்குங்க. பேசாம நீங்க தனியா ஒரு navigation இந்த தளத்துல குடுத்துடுங்க. “பார்ப்பான் | திருமா | சீ பீ எம் | சீமான் | ராமதாஸ் | etc “. எப்போ எப்போ எல்லாம் திட்டனுமுன்னு தோணுதோ ( daliy தோணும் உங்களுக்கு) அப்போ அப்போ எல்லாம் திட்டி திட்டி எழுதுங்கப்பா. உங்களோட ரசிகர்களும் அப்போ அப்போ வந்து படிச்சி ரசிச்சி பின்னூட்டம் போட்டு ஒரே ஆனந்த கூத்தாட்டம் ஆடுவாங்க. உங்க ரசிகர்களுக்கு ரொம்ப easy யா இருக்கும்லா? என்ன வினவு க்ரூப்பு ..நான் சொல்லறது விளங்குதா?
வெட்டிபையா, மூட்டண்ணே நீங்களும் வினவு இரசிகர்தானே, அதை நீங்க மறுக்க முடியாதே? என்னதான் நீங்க வில்லங்கமா பேசுனாலும் தினசரி வினவுல வந்து கட்டுரையை படிச்சுட்டு இங்கயே பாசத்தோட காத்து கிடக்குறதுக்கு ஒரு தில்லு வேணும்ணே
வெட்டியா இருக்குறவனுக்கு எல்லா தளமும் ஒன்னு தாவே. என்ன மாதிரி பின்னோட்டம் போடுறவங்களுக்கு பதில் அளிக்கரதுகு தாவே தில்லு வேணும். ஆனாலும் பரவாஇல்லியே வெட்டிபயலுகும் பதில் போடுதியே… நீங்களும்வ் வெட்டியோ.? இல்ல பாசத்தோட காத்துகுனு இருகீயலோ?
@ 6.1.1.1 வினவு:
ஒருவன் அல்லது ஒருத்தி பலருடன் உறவு கொள்வதை சரி என்கிறீர்களா,ஏன்?
“ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நவீனக் குடும்பம்,”” சரி .
“” ஆணாதிக்கம் நிறைந்ததுதான். அவன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடியதுதான்””
.- சரியல்ல.பெண்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆணாதிக்க முலாம் பூசி ஆண்களை பழி வாங்குவது ஏற்க இயலவில்லை
ஆண் பெண் தனி நபர் உரிமை குடும்ப அமைப்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும் “”குடும்பத்தையும், திருமணத்தையும் மறுக்கும் அராஜகவாதத்திற்குப் பதில் குடும்பம் மற்றும் ஆண் பெண் உறவுகளை மேம்படுத்த (ஜனநாயகப்படுத்துவதற்குப் போராட) பெண்களைத் தூண்டிவிடுவதுதான்
மாற்றுத் தீர்வாக அமைய முடியும்””. வரவேற்கிறேன்
பெண்களை மட்டுமல்ல . ஆண்களும் சேர்ந்து செய்யலாம்
நான் கட்டுரையைப் படிக்கவில்லை. ரொம்ப நீளம். ருத்ரன் சொன்னமாதிரி, உங்கள் கருத்தை நச்சுன்னு மூனே வரியில் சொன்னா நல்லது.
என் கருத்து: சேம் சைஸ் எல்லாருக்கும் பொருந்தாது. உடல் ஒழுக்கமும் அதே.
நடிகர், நடிகர்கள், காபரே டான்ஸரகள் ஒழுக்கமும், குடும்பப்பெண்க்ள், ஆண்கள் ஒழுக்கமும ஒன்றாக இருகக் வேண்டும் என்பதில்லை.
இதை உணராததாலதால் இவ்ளோ சண்டை.
// பாலியல் சுதந்திரம், பெண்ணுரிமை என்பது குறித்து இந்தியா டுடேயும், குஷ்புவும் சொல்லியிருக்கும் கருத்துகள் சமூகத்திற்குப் பயனுள்ளதா என்பதுதான் மையமான கேள்வி. //
விவாதங்களைத் துவக்கி வைத்த வகையில் மிகப் பயனுள்ள கேள்வி. பயன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கருத்து சொல்லும் உரிமையை குஷ்புவிடமிருந்து யாரும் பறிக்க முடியாது.
குஸ்புக்கு பேச்சு உரிமை இருக்கிறது என்பதற்காக நம்ம ஆசை எல்லோரும் அப்படித்தானே என்று சொல்ல கூடாது சாதாரண மக்கள் சொன்னாகூட இது ஒரு பெரிய விசயம் இல்ல ஆனால் மக்களுக்கு ப்ரசியமான அல்லு ஒரு வார்த்தை சொல்லுவர்தற்கு முன் பலமுறை சிந்திச்சி அதனால வரும் நல்லது கெட்டது தெரியம்மா பேசின இப்படித்தான்
பல கோணங்களில் ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை.
ஆனால்….
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் பிறக்க அவர்கள் இடையே ஏதோ ஒருவித ஈர்ப்பு இருந்தால் மட்டும் போதாது. இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்போம் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும்… என்று எழுதியிருக்கிறீர்கள்.
பாலியல் ரீதியான தேவையை அடக்கிக்கொண்டு உண்மையாய் இருப்பதுதான் காதலா? என்ற கேள்வியை இந்த வாசகம் எழுப்புகிறது.
காதலையும், காமத்தையும் பிரித்துப் பார்க்கக் கூடாதா?
ஒங்க எல்ல பின்னூட்டமும் கேள்வியோடு நிற்கிறது நம்ம தருமி புலவர் மாதிரி கேள்வி மட்டும்தான் கேட்க தெரியும் போல முற்போக்குன்ன என்னானு கேட்டேன் பதிலில்லை சரி விடுங்க காதலையும் காமத்தையும் எப்புடி பிரிச்சு பார்ப்பது கொஞ்சம் வேளக்குங்க
கற்பு கட்டற்ற பாலுறவு…
“கற்பு”, கட்டற்ற பாலுறவு: குஷ்பு, திருமா, ராமதாஸ் – யார் சரி https://www.vinavu.com/2010/04/29/kuspu-i-today/trackback/…
இந்தியா டுடேயின் செக்ஸ் விற்பனையும், தமிழ்க் கற்பின் கூச்சல்களும்! நல்ல கட்டுரை! சரியான ஆய்வு வினவு ! ஆனால் சில கருத்துக்கள் கூறிய விதம் சரியில்லை. உதாரணமாக…..
///இதையடுத்து, தினத்தந்தி (24.9.05) நாளிதழுக்கு பேட்டியளித்த குஷ்பு, “”திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்பெண் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என அதிமேதாவித்தனமாகக் கேட்டு வைத்தார்///
===>இதில் ”’அதிமேதாவித்தனமாகக் கேட்டு வைத்தார்”” என்ற சொற்கள் எதோ அவர் இல்லாததை சொன்னது போல் உள்ளது. இதில் அதிமேதாவித்தனம் எங்கு வருகிறது? உண்மையைத்தானே சொன்னார். ஒரு இந்தியா டுடே என்ன வேணா கேக்கலாம் என்ன வேணா சொல்லலாம். ஒரு குஷ்பு சொல்லக்கூடாதா?
///இந்தியாடுடே வெளியிட்டுள்ள இந்தக் கருத்துக் கணிப்பில், “”பெண்கள் மணமாகும்வரை கன்னியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு 66 சதவீதப் பெண்கள், “ஆம்’ என்று பதில் அளித்துள்ளனர். குறிப்பாக, சென்னையில் 82 சதவீதப் பெண்கள் திருமணமாகும்போது பெண்ணின் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்று கருத்து சொல்லியுள்ளார்கள். திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதை 71 சதவீதப் பெண்கள் தவறு என்று குறிப்பிட்டுள்ளனர். மேட்டுக்குடி திமிரோடு குஷ்பு கேட்டிருக்கும் கேள்விக்கு, இந்தப் புள்ளிவிவரங்களே முகத்தில் அடித்தாற் போல பதில் சொல்லி விடுகின்றன///
===> இது “”மேட்டுக்குடி திமிரோடு குஷ்பு கேட்டிருக்கும் கேள்விக்கு”” இதில் திமிர் எங்கு இருக்கிறது. ஏன் குஷ்பு சொல்வது உண்மையாக இருக்கக்கூடாதா? அது எப்படி இந்தியா டுடே சொல்லுவது மட்டும் உண்மை என்று எடுத்துக்கொள்கிறீர்கள்?
===>At the outset, I question the validity of this study. This is NOT a scientific research study at all. It is just a crude opinion poll and not even close to a Gallup poll. That’s it. I say it is NOT scientific because there may be wording of questions bias, response and non-response bias, coverage bias, etc— இது மாதிரி செய்திகளை வெளியீட்டு இந்தியா டுடே தனது மேதாவித்தனத்தை காட்டவும் செக்ஸ் விற்பனையும் கூட்டவுமே இந்த கருத்துக் கணிப்பு. மேலும் இது மாதிரி கருத்துக் கணிப்புக்கு உண்மையை சொல்லும் மனதைரியமும் நம்மிடம் (ஆண்களையும் சேர்த்துத்தான்) இன்னும் வரவில்லை.அதுதான் உண்மையும் கூட.
///ஆனால், மணமான மறுநாளே அறுத்துக் கொண்டு, தனக்குப் பிடித்த வேறொருவனுடன் சேர்ந்து வாழும் ‘கீழ் சாதிப் பெண்களை’ கிராமப்புறங்களில் காண முடியும்.///
===>அது என்ன கீழ் சாதிப் பெண்களை’? ஏன் கிராமத்து பெண்கள் என்றால் போதாதா?
///சொத்துடைமை கொண்ட பார்ப்பன வேளாள சாதிப் பண்பாடுதான் “கற்பு”.///
===> இது உண்மை தான். ஆனால் கூடவே இவர்களுக்கு அறுத்துக்கொள்ள தைரியம் இல்லாமல் வெளியில் கள்ளக் காதலில் ஈடுபடுகிரர்ர்கள் என்றும் சொல்லலாமே? அதை சொல்ல என்ன பயம்? இதில் யார் உயரந்தவர்கள்? உண்மையை எதிர் கொண்டு மணமான மறுநாளே அறுத்துக் கொண்டு, தனக்குப் பிடித்த வேறொருவனுடன் சேர்ந்து வாழும் ‘கீழ் சாதிப் பெண் கள் தான். மேலும் நமது தமிழ் இலக்கியங்களிலும் முதலில் காதலில் ஈடுபட்டு அப்புறம் சாமாண் போட்டு விட்டுத்தான் திருமணமே செய்து கொண்டார்கள். கடைசியாக கீழ் சாதிப் பெண்கள் என்று கூறுவதை தவிர்க்கவும்.
///“கற்பு’ என்ற “தமிழ் பண்பாட்டிற்காக”ப் போராட்டம் நடத்துவது பித்தலாட்டத்தனமானது.///
===> நூற்றுக்கு நூறு உண்மை!
///இந்தியா டுடேயில் கருத்து சொன்ன குஷ்புவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் திருமாவளவன் ராமதாசு கூட்டணி, அவரைவிட வக்கிரமான கேள்விகளைக் கேட்டுள்ள இந்தியாடுடே பத்திரிகையை கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.///
====>உண்மை! அவர்களால் இந்தியா டுடேயுடைய ஒரு மXXயும் புடுங்க முடியாது. அது அவர்களுக்கும் தெரியும்…
////பிடிக்காத கணவனோடு சேர்ந்து சலிப்போடு வாழ்வதை விட, வேறொரு ஆணுடன் இரகசியக் கள்ள உறவு வைத்துக் கொண்டு போலித்தனமாக வாழ்வதைவிட, மணவிலக்கு பெற்று, மறுமணம் செய்து கொள்வது, பாலியல் சுதந்திரத்தைவிட, முற்போக்கானது மட்டுமல்ல் சமூக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், நியாயமானதும்கூட.///
====> அதைதான் நமது கிராமத்து பெண்கள் செய்கிறார்கள்…
================வினவுடைய கீழே உள்ள கருத்துக்கள் சரியானது அல்ல=============
///திருமாவளவன் ராமதாசு கூட்டணியைக் கண்டிக்கும் பலரும், “குஷ்புவுக்கு கருத்துச் சொல்ல உரிமையில்லையா?” எனக் கேள்வி எழுப்புகிறார்கள். குஷ்புவுக்கு கருத்துச் சொல்ல உரிமையில்லையா என்பதல்ல இங்கே பிரச்சினை. இப்படிக் கேள்வி எழுப்புவதன் மூலம் இந்த அறிவுஜீவிகள் பலரும் மையமான விசயத்திற்குள் நுழையாமல் நழுவிக் கொள்கிறார்கள். மாறாக, பாலியல் சுதந்திரம், பெண்ணுரிமை என்பது குறித்து இந்தியா டுடேயும், குஷ்புவும் சொல்லியிருக்கும் கருத்துகள் சமூகத்திற்குப் பயனுள்ளதா என்பதுதான் மையமான கேள்வி.///
===>அறிவுஜீவிகள் பலரும்–இது தேவை இல்லாத வார்த்தைகள். மையமான விசயம மற்றும் கருத்து சுதந்திரம் பற்றி எனது கருத்துக்கள்: இதன் அர்த்தம் நிறைய பேருக்கு சரியாக தெரியவில்லை. சமூகத்திற்கு பயனுள்ள கருத்துக்களைத்தான் ஒருவர் கூற வேண்டுமானால் எவனும் எதுவும் பேசவே முடியாது. சரி எது சமூகத்திற்கு பயனுள்ள கருத்து? என்ன அளவுகோல்? நீங்கள் யார் அதை நிர்ணயம் செய்ய? சமூகத்திற்கு பயனுள்ள கருத்துதான் ஒருவர் கூற வேண்டுமானால் எல்லா பத்திரிக்கைகளையும் ஒழிக்க வேண்டும். சினிமாக்களையும் ஒழிக்க வேண்டும். உங்களக்கு பிடித்த அறிவாளிகளின் பேச்சுக்களையும் ஒழிக்க வேண்டும். உங்களுக்கு பிடித்ததால் மட்டும் அந்த கருத்துகள் சமூகத்திற்குப் பயனுள்ளது ஆகிவிட முடியுமா? புராணங்கள் கூட சமூகத்திற்கு தேவை என்று நூற்றுக்கு 90 விழுக்காடு இந்துக்கள் கூறுகிறார்கள். அப்படி அவர்கள் கூறும் பட்சத்தில் உங்கள் கருத்துக்கள் எல்லாம் சமூகத்திற்கு பயனில்லை என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அவர்கள் வாதம் சரி என்று ஒத்துக் கொள்ளலாமா?
////தனிப்பட்ட ரீதியாகப் பார்த்தால் கூட, பாலியல் சுதந்திரம் போன்ற சமூகப் பிரச்சினைகளில் கருத்துக் கூறும் அளவிற்கு குஷ்புவிற்குத் தகுதியும், அனுபவமும் உண்டா?///
====>கட்டாயம் உண்டு. அவர்கள் என்ன சொன்னார்கள்..
///திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்” எனத் திரைப்பட நடிகை குஷ்பு, இந்தியாடுடே (தமிழ்) வார இதழில் சொல்லி வெளியான கருத்துகள், “”கற்பு” மற்றும் பாலியல் ஒழுக்கம் தொடர்பாக வாத பிரதிவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது.///
====> இதைத்தான் எல்லா டாக்டர்களும் சொல்லுகிறார்கள். குஷ்பு சொன்னது தான் தப்பு. அப்படித்தானே? சரி குஷ்பு சொன்னது தப்பு என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். உடனே நம்ம குஷ்பு சொல்லிட்டாங்க இனிமே நாம எல்லோரும் எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு அந்த வேலையை யாரு கிட்ட வேணா செய்யலாமுன்னு கிளம்பிடுவோமா. இல்லை அந்த அளவுக்கு தமிழனுங்க முட்டாளுங்களா இல்லை முண்டங்களா?
எனது வாதம் கருத்து சுதந்திரத்தை பற்றி: ஒருவர் பேசியதினால் நாம் என்றும் மாறப்போவதில்லை. அப்படி அவர்கள் பேசுவதும் தப்பு இல்லை.
In English, it is JUST 10 minutes fame. That was what Kushbu wanted; the media provided it; she utilized it; and Vinavu propagated it —Further–Word wide. As matured people we should take it as her “Freedom of Speech” and leave it as it is. Her comments and opinions will die down on its own.
இவ்வளவு ஏன்? குஷ்பு மீது வழக்கு வந்த வுடன் ஒரு தேங்காய் மூடி வைக்கோலுக்கு பதிலாக ஒரு நல்ல படித்த வக்கீலை வாதாட வைத்து இருக்க வேண்டும். குஷ்பு கோர்ட்டில் இதை மட்டும் சொல்லியிருந்தால் போதும்:
“” நான் நடிக்க வந்த பொழுது எனக்கு வயது பதினாறு. இப்பொழுது ஒரு இந்துவை திருமணம் செய்து நான் ஒரு இந்து வாக ஆகி எல்லா புராணம்களையும் படித்தேன். எவ்வளவு உண்ணதமான் கருத்துக்கள். எவ்வளவு தீர்க்க தரிசனம் நமது முன்னோர்க்கு என்று வியந்து இருக்கிறேன். இப்ப நடப்பதை அன்றே எழுதி வைத்துள்ளார்கள்: உதாரணமாக…ஓரின சேர்க்கை; திருமணத்திற்கு முன்பும் பெண்களுடன் ஜல்சா! திருமணத்திற்கு பிறகும் பிற பெண்களுடன் ஜல்சா! இது எல்லாம் இப்ப சகஜம். அதை அன்றே நமது முன்னோர்கள் புராணத்தில் எழுதியுள்ளார்கள். என்னே தீர்க்க தரிசனம் அவர்களுக்கு.
உதாரணமாக…
ஒரு சிவன் (ஆண்) + விஷ்ணு (ஆண்) = ஐய்யப்பன், ஒரு கடவுள். (ஓரின சேர்க்கை)
ஒரு நாரதர் (ஆண்) + விஷ்ணு (ஆண்) = அறுபது தமிழ் வருடங்கள். அதுவும் சம்ஸ்கிருத பெயரில்! (ஓரின சேர்க்கை). இந்த கண்ணராவி தான் தமிழ் வருடங்களின் பெயர்கள்!!!!!!!!!
கிருஷ்ணன் + ராதா அடித்த கூத்துக்கள். அப்புறம் ஆண்டாள்! அப்புறம் குந்தி! ஐவரைததாண்டி ஆறாவது! (திருமணத்திற்கு முன்பும் பெண்களுடன் ஜல்சா! திருமணத்திற்கு பிறகும் பிற பெண்களுடன் ஜல்சா! குந்தி எல்லா ஆண்களுடன் ஜல்சா! ).
ஜட்ஜ் ஐயா அவர்களே, இந்த புராணங்களைப் படித்த பின் நான் முழு இந்துவாக மாறிவிட்டேன். இந்த புராணங்கள் முழுவதும் உண்மை என்று உளமார நம்பி இந்த கருத்துக்களை கூறினேன். இது தப்பா ஜட்ஜ் ஐயா? நீங்களே கிருஷ்ணனும் ராதாவும் திருமணத்திற்கு முன்னால் ஜல்சா செய்தார்கள் என்று கோர்ட்டில் கூறினீர்களே? நான் சொன்னால் தப்பா?
தப்பு என் மீது இல்லை ஜட்ஜ் ஐயா அவர்களே. என்னை ஆட் கொண்ட புராணங்களில் மீது தான் தப்பு ஜட்ஜ் ஐயா அவர்களே.
எய்தவன் இருக்க அம்பை நோவதேன் ? நீங்களே சொல்லுங்கள் ஜட்ஜ் ஐயா அவர்களே?? இது தர்மமா நியாமா?
கூடவே இது மாதிரி குஷ்புவும் சந்துல பேந்தா உடலாம் ( பேந்தா எனபது ஒரு கோலி விளையாட்டு )
Kushu: My Lord, By the way, there is also a temple for me where I am the chief கடவுள்..
Judge: I know that very well madam Kushbu, sorry, God Kushbu, I have prostrated many times in front of your idol, and even done 100 times அங்கபிரதட்சிணம்….
இது மாதிரி கூத்து எல்லாம் தமிழ் நாட்டில் தினமும் நடப்பதால் தான் தமிழ் நாடு என்றோ எனது பார்வையில் தமிழ்க்காடாக மாறிவிட்டது. அல்லது நான் தமிழ் நாட்டை தமிழ்க்காடாக மாற்றிவிட்டேன்.
எனது தமிழ் காட்டின் blog address is given below:
http://tamilkadu.blogspot.com/
Please see that ; Both flowers and flames are welcome!.
வினவின் சேவை நாட்டிக்கு தேவை. ஆனால் சில மாற்றங்களுடன்…அதை அவர் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு…
என்றும் எப்போதும் அன்புடன்,
ஆட்டையாம்பாடி அம்பி!?
ஆட்டையாம்பாடி நண்பருக்கு
நீண்ட கருத்துக்கு நன்றி. கீழ்சாதி என்ற சொல்லை நாங்கள் பயன்படுத்துவதில்லை, கூடாது என்பதற்காகத்தான் அது அடைப்புக்குறிக்குள் வருகிறது. அடுத்து குஷ்பு சொல்லிய கருத்து பெண்ணுரிமையின்பாற்பட்டு சொன்னதில்லை. அவர் சொல்வதாகயிருந்தால் தமிழ்சினிமாவில் பெண்களைக் குதறும் கயவர்களை அடையாளம் காட்டியிருக்க வேண்டும். அடுத்து திருமணத்திற்கு முந்தைய உறவு என்பது யாருக்குப் பிரச்சினை என்ற கேள்விதான் கட்டுரையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. நுகர்பொருள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இந்த தடையற்ற பாலுறவு வலிந்து திணிக்ப்படுகிறது.
தோழர் வினவு அவர்களுக்கு அப்படியே கீழ்ஜாதி பெண்கள் என்று சொன்னாலும் தவறில்லை (அடைப்புகுறியில் தானே போட்டுள்லிர்கள்.) ஏனென்றல் என்னதான் கிராமத்து பெண்களாக இருந்தாலும் நம்பி கூறியது போல் பற்பநியத்தில் ஐக்கியமகிபோன வேளாளர் தேவர் இனங்களில் இது போதன்ற pennurimai பழக்கங்கள் என்றுமே இருந்ததில்லை. மீறிப்போனால் அவர்களுடைய ஸ்டைல் உங்களுகே தெரியும். மாறாக என்றும் அவர்கள் முற்போக்காக இருந்ததில்லை. ஒரே ஒரு விமர்சனம் கீழ் ஜாதி என்று சொல்வதற்கு pathilaaka thaalthapatta பெண்கள் என்று solliyirukkalam.
ஒருவன் கட்டிய தாலியை “அறுத்து” (Divorce) விட்டு ,வேறு ஒருவன் தாலி கட்டுதல்(Re-Marriage)
அறுத்து கட்டுதல் -உடல் உழைப்பை -வாழ்வு ஆதாரமாக கொண்ட -சத்திரிய -சூத்திர -குளத்தில் ஆதாவது -தலித் ,வன்னிய ,தேவர் -எல்லா சாதிஈளும் இருக்கும் பழக்கம்.
எதோ ஒரு சில கிராமங்கள்ல இருக்கலாம் அதுக்குக்க கிரமத்துல எல்லாம் அப்படி சொல்ல கூடாது நான் கூட கிராமம் எங்க ஊருல அப்படி ஒரு நிகழுவு இல்ல கணவன இழந்தவங்க கூட வழ வெட்டியா இருகாங்க இது டவுன் மக்கள் கிராமத்து மக்கள் மேல ஒரு கெட்டா அபிப்ர்யது உண்ட்டகுறது போல இருக்கு இந்த கட்டுரை
கற்பு என்பதை அறிவொழுக்கம், இறையுணர்வு எனப் பொருள்பட கூறியுள்ளார்கள். இந்த ஒழுக்க உணர்வு தற்போது மருவியுள்ளது. கற்பு ஒரு துவாரத்தின் அடைப்பு. அடைப்பு எடுபட்டால் கற்பும் போய்விடும். வேதம் புதிது அவ்வளவுதான்.
வினவு,
ஹைதர் அலி என்பவருக்கான எனது பதில்.
காதல் என்றால் என்ன என்பதே நமக்குத் தெரியவில்லை. திருமணம் என்பதை எப்படி பெண்ணடித்தனமாக வைத்திருக்கிறோமோ, அதே போலத்தான் காதல் என்ற பதத்தையும் பெண்களுக்கு எதிரான ஆயுதமாக ஆண்கள் பயன்படுத்துகிறோம்.
பல சுவைகளை நாக்கு விரும்புவதைப் போல, பல வண்ணங்களை கண்கள் விரும்புவதைப்போல, பல உடல்களை, இயக்கங்களை உடல் விரும்புகிறது.
ஆனால் இங்கு, உடல் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் வாய்ப்பு ஆண்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
ஆண், பல பெண்களை காதல் கொள்ளலாம், காமம் கொள்ளலாம். ஆனால் பெண் மட்டும் ஒரே ஆணுடன் மட்டுமே, காதல், திருமணம், காமம் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறாள்.
அடக்கி வைக்கப்படும் எதுவுமே அல்லது எவருமே திமிறி எழுவது இயல்பு.
இதன் வெளிப்பாடுதான் பெண்களின் வெளித் தொடர்புகள்.
மனம் ஒத்த காதலர்களுக்குள்ளே சுவை, வண்ணம், வேலை போன்றவற்றில் பல வேறுபாடுகள் இருக்கும் போது, காமத்திலும் வேறுபாடு நிச்சயம் இருக்கும்.
இதை வெளிப்படையாகச் சொல்வதற்குக் கூட இங்கே பெண்களால் முடியாது.
அவ்வளவு ஏன்,
என் அண்ணன் லவ் மேரேஜ் அண்ணியை இழுத்துக்கிட்டு ஓடி வந்துட்டாரு…. என்று சொல்லும் அதே ஆண், என் அக்காவைப் பத்திப பேசாதே, ஓடிப்போயிட்டாள் என்று குமைகிறான்.
ஆண் பெண் சரிசமாக இணைந்து, இயைந்து புரிய வேண்டிய காதல், காமம் ஆகியவற்றில் ஆளுக்கொரு நீதி.
இதே ரீதியில் யோசித்துப் பாருங்கள் காதல், காமம் என்றால் என்ன என்பதும், அவற்றைப் பிரித்துப் பார்க்க முடியாதா என்பதும் உங்களுக்கே புரியும்.
வினவு,
ஹைதர் அலி என்பவருக்கான பதில்.
முற்போக்கு என்பது என்ன என்று நாய்க்குட்டி (பின்னூட்டம் எண். ) படித்துப் பாருங்கள்.
மிக சரியான விரிவான கட்டுரை. வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்
சாதிகளாகப் பிளவுண்டு கிடக்கும் இந்திய சமூகத்தில் கற்பு எனும் மாயச்சங்கிலி சாதித்தூய்மையைக் காப்பதற்காகத்தான் இருக்கின்றது.
கள்ளக்காதல்தான் ஒரு பெண் கற்பிழந்துபோனதற்கு அடையாளமாகச் சொல்லப்படுகிறது.
சாதிகளின் இறுக்கத்தில் கட்டுண்டு கிடக்கும் கிராமங்களில் ஒரே சாதிக்குள் சோரம்போவதும், ஆசை நாயகர்களை வைத்துக் கொள்வதையும் அச்சாதி கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது.
ஏன், விசயம் தெரிந்த கணவன் கூட அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, பல இடங்களில்.
ஆனால் சாதி வேலி தாண்டிய உறவுகளை அப்பெண் ஏற்படுத்தும்போதுதான் ‘கற்பு’ பற்றிய கற்பிதங்களும், அது குறித்த தண்டனைகளும் பெண்ணுக்கு எதிராக செலுத்தப்படுகின்றன.
இது கள்ளக்காதலுக்கு மட்டுமல்ல ஒரிஜினல் காதலுக்கும் பொருந்தும் நிலையாகத்தான் சாதிய சமூகத்தில் உள்ளது.
ஒரே சாதிக்காரப் பையனைக் காதலித்தாலோ, கை கோர்த்து ஊர் சுற்றினாலோ ஒன்றும் சொல்லாத சாதி, அதே பையன் வேறொரு சாதியாக இருக்கும்பட்சத்தில் இருவருக்குமே தண்டனை கொடுத்து, கருணைக்கொலைக்காக சட்டத்தைத் திருத்தக் கோருகிறது.
ஆக கற்பு என்பது சாதித்தூய்மையைக் காக்க உருவாக்கப்பட்ட பார்ப்பனிய சித்தாந்தமே தவிர வேறல்ல.
வர்ணம் கடந்த உறவுகளுக்கு மனுதர்மம் விதித்திருக்கும் படிநிலை தண்டனைகளை ஆர யோசித்தால் இதன் சரடு தெளிவாகும்.
அறுத்துக்கட்டும் உரிமை கூட சொந்த சாதிக்குள் இன்னொருவனை தேர்ந்தெடுக்கத்தான் அனுமதிக்கிறதே ஒழிய சாதியைக் காப்பாற்றும் சற்றே நெகிழ்வான கற்புதான்.
தவறு நண்பரே ,பார்ப்பனர் ஆதிக்கம் வரும் முன்பு நம் தமிழ் சாதியில் கற்பு இல்லையா.கற்பு என்பது வாழ்கை நெறிமுறை, சமுகம் நல்லபடி செயல் படுவதில் ஒரு அங்கம் . திபுமணத்துக்கு முன்பு பல பேருடனும் உறவு வைத்துக்கொள்ளலாம் என்றால் ,பிறகும் உறவு வைத்துக்கொள்ளலாமே .இவை எல்லாம் குஷ்புவுக்கும் அவருக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கும் சரி ..அவர்கள் வளர்ந்த விதமும் .வாழ்கின்ற முறையையும் தான் அப்படி இருக்கலாம் ,ஆனால் அதைப் பரிந்துரைப்பதும் ,சரி என்று வாதிடுவதும் தவறு.மாண்பு மிகு நீதிபதிகள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லச்சொல்லுங்கள் .
வினவு,
பொதுவான சங்கதி.
புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகத்தில் வாசகர் கடிதம் கிடையாது. அதே போல பின்னோட்டம் இல்லாமலே வினவு வரலாம்.
இன்னொரு ஆலோசனை… குறைந்த பட்ச மாத சந்தா பெறலாம்.
கலிங்கன் சொல்லுவதுதான் சரி. முதலில் உங்கள் அக்கா தங்கைக்கு சொத்தை சமமாக பிரித்து கொடுங்கள் . அதன் பின் சமத்துவமும் வரும் வரதட்சனையும் ஒழியும். மனிதர்கள் நேர்மையாக இருக்க வேண்டும். சமூக புரட்சி என்று நேர்மையாக இருக்கும் பெண்களை தவறான வழிக்கு எடுத்து செல்லாதீர்கள் . ஆண்களையும் நேராக்க முயற்சி செய்யுங்கள்.
மிகுந்த கவனமாகவும் நேர்மையகவும் எழுதப்பட்டுள்ள கட்டுரை. நன்றி. காதல் என்பது மிருகங்கள் உலகில் ஆரம்பித்து மனிதர் வரை நீள்கிறது. காமத்தின் பரிணாம வளர்ச்சியே காதல். அதன் கால அளவுகள் மாறினாலும் காதல் மனிதனை காதல் உணர்வற்ற மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. காதல் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவத்தின் சமுதாய அமைப்பில் மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கையுடன் வாழ்வது முதலாளித்துவத்திற்கு உகந்ததல்ல. கணவன் மனைவி உட்பட. எனவே தான் அது பெண்ணியத்தை ஆண்களுக்கு எதிரானதாக நிறுத்துகிறது. எதிரிகளாக்குகிறது. ஊர் / குடும்பம் இரண்டுபட்டால் கூத்தாடி / முதலாளித்துவத்திற்கு கொண்டாட்டந்தான். இல்லையா !
பெண் ஆதரவு , ஏழை ஆதரவு , முதியோர் ஆதரவு இது போன்ற மற்றும் முதலாளித்துவம் போன்ற வார்த்தை சாளங்களை நாம் நிறுத்த வேண்டும் . உண்மையான சமத்துவத்தை நோக்கி பயணிக்க வேண்டும். நேர்மையை மக்களிடம் கொண்டு வர முயற்சியுங்கள் . அதிகமான சலுகை, அவர்களை வீணடிக்கும். நம்மிடம் தெளிவான ஒருமித்த கருத்து இல்லை. மதவாதிகள் போல் மத நூல்களை பின்பற்றும் அதே நிலையில் தான் நாம் வேறு புதிதாக பேச நினைக்க மனமில்லை. நாம் மதவாதிகளா ? தோழர்களா?
மதிப்புக்குரிய வினவு,
குஷ்பு – கற்பு – தீர்ப்பு…. கட்டுரை அளித்தீர்கள்.
அம்மணி மற்றும் கருணாவின் அரசியல் கற்பு பற்றி வினவு ஏதும் வினவவில்லையே..
எதிர்பார்க்கிறேன்.
இந்த துரோகி ராமதாஸ் ஒரு தமிழன் அல்ல.. அவன் ஒரு தெலுங்கு பச்சோந்தி . அவன் யார் கற்பு பற்றி பேச?
please read carefully and comment this is public media please respect people
ramadoss/thiruma/kushboo all are placed in same point business
ramdoss doing vanniyar businees
thiruma doing dhalit business
kusboo doing cinema business all of them need to do compramise to survive
wh
r