privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்!

ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்!

-


“கலியுகத்துல நாடு கெட்டுப் போச்சே”ன்னு அவாள்கள் அவ்வப்போது சபிப்பது வழக்கம். இந்த கலியுகப் புலம்பலில் மற்ற பிரச்சினைகளை விட இந்துத்தவத்திற்கு மட்டும் டன் கணக்கில் வில்லங்கம் வந்து சேர்கிறது. நித்தியானந்தா பள்ளியறை பலாபலன்களால் நாடே சிரிப்பாய் சிரித்த அதே பெங்களூருவில் இப்போது சீசன் 2வாக சிறிராம் சேனாவின் விவகாரம் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

ஜனவரி, 2009 இல் மங்களூரு பஃப்பில் குடித்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கி விரட்டியதில் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமானது சிரிராம் சேனா. அதற்கு முன் சிறுபான்மையினரை எதிர்த்து பல கலவரங்கள் செய்திருந்தாலும் மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கு ஏற்பட்ட அவமானமே பல தேசிய ஊடகங்களுக்கு கவலையாக இருந்தது. அந்தக் கவலையை சேனாவும் இலவசமான பிரபலமாக நன்கு அறுவடை செய்துகொண்டது. இப்போது இதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார். தெகல்கா – ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த வானரங்கள் வகையாய் சிக்கியிருக்கின்றன.

இந்த நடவடிக்கையின் படி ஒரு நிருபர் டம்மி ஆர்ட்டிஸ்ட்டாக அதாவது ஓவியனாக நடித்து முத்தாலிக்கை அணுகியிருக்கிறார். அதன்படி அவரது ஓவியக் கண்காட்சியை முத்தாலிக்கின் ராமசேனா வானரங்கள் அடித்து கலவரம் செய்தால் பிரபலமாகிவிடலாமென்றும், அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்பதே டீல். இதற்காக முத்தாலிக்கை மட்டுமல்ல அவரது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும் அந்த நிருபர் பார்த்திருக்கிறார். அவர்களும் அந்த கண்காட்சி முசுலீம்கள் இருக்கம் பகுதியில் இருந்தால் பிரச்சினையை பெரிதாக கொண்டு செல்லலாமென்று வழிகாட்டியிருக்கிறார்கள்.

உரையாடலிலிருந்து சில பகுதிகள்:

நிருபர்: நான் பிரபலமானால் எனது வியாபாரம் வளர்வதற்கு உதவியாக இருக்கும். இதைச் செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படுவார்கள், எனக்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள். இந்த கலவரத்திற்காக நான் போலீசில் புகார் கொடுக்கமாட்டேன், இது நமக்குள்ளே மட்டும் நடக்கும் விசயம். முன்பணமாக எவ்வளவு தரவேண்டுமென்று சொல்லுங்கள், கொடுத்துவிடலாம்.

(இந்த வேலையைச் செய்வதற்கு தயாரான முத்தாலிக் அதற்கான ஏற்பாடுகளை பெங்களூருவிலேயே செய்துவிடலாமென்று சம்மதிக்கிறார்.)

நிருபர்: ஐயா, இதை நான் உறுதி செய்து கொள்ளவேண்டும். உடனடியாக இல்லையென்றாலும் சில நாட்கள் கழித்துக் கூட நான் வருகிறேன். இதற்கு மொத்தமாக எவ்வளவு செலவு பிடிக்குமென்று தெரிந்தால் நான் அதற்கு ஏற்பாடு செய்து விடுவேன்.

முத்தாலிக்: நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எங்களது கிளைத் தலைவர்…..

நிருபர்: பெங்களூருவில்…?

முத்தாலிக்: ஆமாம், பெங்களூருவில்தான். அவர், வசந்த் குமார் பவானி, பலமான கை. அவரோடு அறிமுகமாகியிருக்கிறீர்களா?

(இறுதியில் முத்தாலிக் கலவரத்தை நடத்துவதற்கு ஒப்புதல் தந்த உடன் மிச்சிமிருந்த ஒரே வேலை தொகையை நிர்ணயம் செய்வதுதான். அதற்கு முத்தாலிக் தனது தளபதிகளான பிரசாத் அட்டாவர் (சேனாவின் தேசிய துணைத் தலைவர்), மற்றும் வசந்த்  குமார் பவானி (சேனாவின் பெங்களூரு தலைவர்) இருவரையும் சந்திக்க சொல்கிறார். இதில் அட்டாவர் என்பவனை சிறையில் சந்திக்கிறார் நிருபர்.)

நிருபர்: நாங்கள் பதினைந்து இலட்சமாக கொடுத்து விடுகிறோம்.

அட்டாவர்: ஆமாம் ஆமாம்? இருந்தாலும் நான் அதை கணக்கட்டு சொல்கிறேன்.

(நிருபர்கள் அட்டாவரை மங்களூர் சிறையில் இருமுறையும், பெல்லாரி சிறையில் ஒரு முறையும் சந்தித்து பேசுகிறார்கள். அட்டாவரும் மங்களூர் பஃப்பில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல செய்துவிடலாமென்று உறுதி கூறுகிறார்.)

அட்டாவர்: எவ்வளவு பணம் வேண்டுமென்று சொல்வேன்.

நிருபர்: கலவரத்திற்கு எத்தனை நபர்களை கொண்டுவருவீர்கள்?

அட்டாவர்: ஐம்பது.

நிருபர்: ஆக கலவரம் செய்ய ஐம்பது பேர் வருவார்கள்?

அட்டாவர்: நிச்சயமாக. மங்களூர் பஃப்பில் நடந்த மாதிரிதான்.

(ஆனால் கலவரத்தை எப்படி பக்காவாக நடத்த வேண்டுமென்று சொன்னவர் சேனாவின் பெங்களூரு தலைவர் பவானிதான். அவரது உரையாடலைப் பாருங்கள்.)

பவானி: கண்காட்சியைத் திறப்பதற்கு மும்தாஸ் அலியைக் கூப்பிட முடியுமா?

நிருபர்: யார் அது?

பவானி: அவர்தான் கர்நாட வக்ப் போர்டு உறுப்பினர்.

(விசயம் இப்படி நல்லபடியாக போய்க் கொண்டிருந்தாலும் முத்தாலிக் தனது இமேஜூக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதில் குறியாய் இருந்தார்.)

முத்தாலிக்: இதில் நான் நேரடியாக சம்பந்தப்பட முடியாது. இந்துத்துவ விழுமியங்களின் ஆதரவாளனென்று சமூகத்தில் எனக்கு ஒரு இமேஜ் இருக்கிறது.

நிருபர்: ஆனால் ஐயா, இது யாருக்கும் தெரியாது.

முத்தாலிக்: எல்லாம் சரிதான். ஆனால் எனது மனசாட்சி நான் ஏதோ தவறு செய்கிறேனோ என்று எச்சரிக்கிறது.

நிருபர்: எம்.எப். ஹூசைன் மற்றும் மற்றவர்களது கண்காட்சியில் என்ன செய்தீர்களோ அது போல.

முத்தாலிக்: ஆமா ஆமாம்.

நிருபர்: அதே மாதிரி என் கண்காட்சியிலும் நடக்க வேண்டும். அது பெங்களூருவின் சிவாஜி நகரிலோ, மங்களூருவிலோ இல்லை முசுலீம்கள் இருக்கும் எப்பகுதியிலும் இருக்கலாம்.

முத்தாலிக்: என்ன மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறார்கள்? அது மங்களூர், பெங்களூரு இரண்டிலும் செய்ய முடியும்.

நிருபர்: அறுபது இலட்சம் போதுமா?

முத்தாலிக்: இதை யார் உங்களுக்கு சொன்னார்கள்?

நிருபர்: வசந்த்ஜியுடன் பேசியிருக்கிறோம்.

முத்தாலிக்: பணத்தை நான் உறுதி செய்ய முடியாது. அது அவர்களின் (சேனாவின் மற்ற தலைவர்கள்) வேலை, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மேற்கண்ட உரையாடலிலிருந்து ராம சேனாவின் தலைவர் முத்தாலிக்கும் அவரது சகபாடிகளும் கூலிக்கு கலவரம் செய்பவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இனி பிரமோத் முத்தாலிக்கின் ஜாதகத்தைப் பார்க்கலாம்.

______________________________________________

கர்நாடக மாநிலம், பெலகாம் மாவட்டம், ஹுக்கேரியில் பிறந்த முத்தாலிக்கின் தற்போதைய வயது 47. பதிமூன்று வயதாக இருக்கும்போது 1975இல் ஆர்.எஸ்.எஸ்இல் சேர்கிறார். 2004இல் பஜ்ரங்க தள்ளின் தென்னிந்திய அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார். தேர்தல் அரசியலில் நுழைந்து ஒரு ஆளாக விரும்பினாலும் இவருக்கு பா.ஜ.க சீட்டு கொடுக்கவில்லை. இதனால் மனம் வெறுத்த முத்தாலிக் 2005இல் பஜ்ரங்தளத்தை விட்டு விலகுகிறார். அதே ஆண்டு சிவசேனாவின் கர்நாடக மாநில தலைவராக உருவெடுக்கிறார். பிறகு அதிலிருந்து விலகி 2006இல் ராஷ்ட்ரிய இந்து சேனாவை ஆரம்பிக்கிறார். மாநிலம் முழுக்க சுற்றுப் பிரயாணம் செய்து இந்துவெறிப் பேச்சாளராக பிரபலமாகிறார். இதில் மட்டும் இவர் மீது பதினொரு மாவட்டங்களில் வழக்கு இருக்கிறது. 2008இல் சிரிராம் சேனா ஆரம்பித்ததும்தான் முத்தாலிக் நாடு அறிந்த தலைவராக பிரபலம் ஆகிறார்.

முத்தாலிக்கின் சிறிராம சேனாவின் கைங்கரியங்கள் சில:

  • 2009 ஜனவரியில் இந்து கலாச்சாரத்திற்கு விரோதமென்று கூறி மங்களூர் பஃப்பில் பெண்களை அடித்து கலவரம் செய்தார்கள். இதில் முத்தாலிக்கும் 27 பேர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
  • ஆகஸ்ட்டு 2008 இல் சேனாவின் குண்டர்கள் எம்.எப்.ஹூசைனது கண்காட்சியை டெல்லியில் வைத்து தாக்கி கலவரம் செய்தார்கள்.
  • 2008 இல் மதமாற்றம் என்று குற்றம் சாட்டி கர்நாடகாவின் பல கிறித்தவ தேவாலயங்களை தாக்குகிறார்கள். 2009இல் ஆறு தேவாலயங்களை அடித்து நொறுக்குகிறார்கள்.
  • 2009 பிப்ரவரியில் காதலர் தினத்தை கொண்டாடுபவர்களை பிடித்து திருமணம் செய்து வைக்கப் போவதாக முத்தாலிக் அறிவித்தார். இதை எதிர்த்து சில பெண்கள் அமைப்புகள் முத்தாலிக்கு பிங்க் நிற ஜட்டியை அனுப்பி எதிர்ப்பு தெரிவித்தன. இது நாடெங்கும் ஆதரவை ஏற்படுத்தியது.

________________________________________

நுகர்வுக் கலாச்சாரத்தின் அங்கமாகிப் போன காதலர்தினம், பஃப் இரண்டையும் பாரதக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று முத்தாலிக் செய்த பிரச்சாரம் நடுத்தர வர்க்க பெற்றோர்களான இந்துக்களின் ஆதரவைப் பெறாமலில்லை. இளையவர்கள் இதை ஆதரிக்கவில்லை என்றாலும் பொதுவில் இந்துக்களின் சாம்பியனாக காட்டிக் கொள்ள இந்தப் போராட்டங்கள் கைகொடுத்திருக்கின்றது. மேலும் மேட்டுக்குடியின் நிகழ்ச்சி நிரலில் இத்தகைய தாக்குதல்கள் வந்த உடன்தான் தேசிய ஊடகங்கள் இதை கவனம் கொடுத்து முக்கியத்துவம் கொடுத்தன. மங்களூரு பஃப்பில் சுமார் 25 குண்டர்களை வைத்தே நடத்திய தாக்குதல் முத்தாலிக் பிரபலம் ஆவதற்கு போதுமானதாக இருந்தது.

இத்தகைய சிறு கும்பலை வைத்து ரகளை செய்யும் இந்தக் கூட்டத்தை இருக்கும் சட்டப்பிரிவுகளின் படியே கூட எளிதாக முடக்க முடியும். ஆனால் அதைச்செய்ய எந்த அரசும் துணியவில்லை என்பதை எந்த ஊடகங்களும் எழுதவில்லை. மேலும் கர்நாடகாவில் இருக்கும் பா.ஜ.க அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரவணைக்கும் வேலையை செய்து வந்தது. இந்துத்தவா கும்பலில் இருக்கும் தீவிர இளைஞர்களை அணிதிரட்டும் வேலையை இவர்கள் செய்துவருகிறார்கள் என்பது பா.ஜ.க கும்பலுக்கு ஒரு போட்டியாக இருக்கிறது.

காதலர் தினத்திற்கு, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, சிவசேனா என நாடு முழுக்க இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், இந்த சிறு கும்பல்களை அடக்காமல் அரசு விட்டுவைப்பதும், ஊடகங்கள் இவர்களை பிரம்மாண்டமான சக்தி உடையவர்களாக விளம்பரம் கொடுப்பதும் தான் இவர்கள் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றது.

காசுவாங்கிக் கொண்டு இவர்கள் எதுவும் செய்வார்கள்  என்பது கூட புதிதில்லைதான். ஏனென்றால் விசுவ இந்து பரிஷத்தின் வேதாந்தி கூட ஹவாலா ஊழலில் கேமராவின் முன்னர் சிக்கியவர்தான். விசுவ இந்து பரிஷத் இயக்கம்தான் நாட்டிலேயே மிக அதிகமான வெளிநாட்டுப் பணத்தைப் பெறும் தன்னார்வ அமைப்பாகும். இந்தப் பணத்திற்கு முறையான கணக்குகள் எதுவுமில்லை என்பதுகூட ஊடகங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

ஆர்.எஸ்.எஸ் இன் இந்துத்துவ வேகம் போதுமானதல்ல என்ற போட்டியின் விளைவாகத்தான் சிரிராம் சேனா, இந்துமக்கள் கட்சி போன்றோர் தோன்றி பிரபலமாகிறார்கள் என்பது உண்மைதான். ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நேரடியாக மறுகாலனியாதிக்கத்தின் மூலம் பெரும் ஆதாயத்தை அடையும் போது இந்தப் போட்டிக் கூட்டம் இந்துத்தவக் கற்பை முன்வைத்து இப்படி சில்லறை ஆதாயங்களை அடைகிறது. ஐ.பி.எல் ஊழலைக் காப்பதற்கு பா.ஜ.கவின் அருண் ஜெட்லி துணிவதும், பாரதா மாதாவின் கற்பைக் காப்பதற்கு காதலர் தினத்தை சிரிராம் சேன எதிர்ப்பதும் வேறு வேறல்ல.

இந்து மக்கள் கட்சி கூட தமிழ்நாட்டின் சிரிராம் சேனாதான். இந்த காவி லும்பன் கும்பல் சீரிரங்கத்தில் பெரியார் சிலையை இடித்த போதும், சிதம்பரத்தில் தீட்சிதர்களோடு சேர்ந்து கொண்டு தமிழுக்கு எதிராக களம் இறங்கிய போதும் இந்தக் காலிகளை நாங்கள் களத்தில் எதிர்கொண்டு பாடம் புகட்டினோம். ஆனால் இவர்களுக்கு தினமணி நடுப்பக்கத்தில் இட ஒதுக்கீடு செய்து ஆராதிக்கிறது. மற்ற பத்திரிகைகளும் இந்து மக்கள் கட்சி எது செய்தாலும் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுக்கின்றன.

பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். அது எப்படி என்பதைத்தான் இப்போது காமராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  1. ///இந்து மக்கள் கட்சி கூட தமிழ்நாட்டின் சிரிராம் சேனாதான். இந்த காவி லும்பன் கும்பல் சீரிரங்கத்தில் பெரியார் சிலையை இடித்த போதும், சிதம்பரத்தில் தீட்சிதர்களோடு சேர்ந்து கொண்டு தமிழுக்கு எதிராக களம் இறங்கிய போதும் இந்தக் காலிகளை நாங்கள் களத்தில் எதிர்கொண்டு பாடம் புகட்டினோம். ஆனால் இவர்களுக்கு தினமணி நடுப்பக்கத்தில் இட ஒதுக்கீடு செய்து ஆராதிக்கிறது. மற்ற பத்திரிகைகளும் இந்து மக்கள் கட்சி எது செய்தாலும் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுக்கின்றன/// இராயிரம் ஆண்டாய் இது கவிழ்ந்த இருழடா இருளய் அகற்ற வாளய் உருவடா.

  2. @@@பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும்@@@

    ஓ அப்படியா சேதீ.. இந்த லீனாப்போன..ச்சீய், வீனாப்போன மூளைக்கு இது புரியாம போச்சே?????

    • நீங்களும் சேவத்துலயும் முக்கியமான கட பஜாரிலும் நெறைய ஒவியம் வரைச்சு போடுறீக ஒங்க யாரும் அடிக்க வரலே என்கிற ஆதங்கம் ஒன்னு செய்யுவேம் அவுங்க அடிச்ச நீங்க திருப்பி அடிக்ககூடாது (நம்ம சி.பி.ம்.சி பி.ஐ மாதிரி) அப்பாத்தான் வீரத்தோட ஒங்கள அடிக்க வருவாய்ங்க

      • மருதமலை என்ற படத்தில் வடிவேலுவும் ஒரு ரவுடியும் போலீஸ் நிலையத்தில் உரையாடிய காட்சிதான் நினைவிற்கு வருகிறது. 

        இந்த காவிக் காலிக்கும்பலுக்கு பாடம் புகுத்துவது மற்றும் எதிர்கொள்வதென்பது அசலான கம்யூனிஸ்டுகளாகிய மகஇக வினரால்தான் முடியும். இது புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரிதான்

  3. இராமர் படத்துல ஜட்டியைப் போட்டு ச்சீ….ஜட்டியில் இராமர் படத்தைப் போட்டு இப்படி புண்படுத்துறேளே உங்களுக்கே ஞாயமா வினவு ?
    🙂

    • கிறிஸ்தவங்க வெப் சைட்டுல இந்து சாமிய அவமானப்படுத்தாம பூ மாலையா போடுவாங்க. இதுங்கள பத்தி நம்ம தான் விழிப்போட இருக்கனும்.

  4. இதிலிருந்து தெரிவது என்னவென்றால்…முத்தாலிக்குக்கு இந்துத்வம் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. பணம் வாங்கிக்கொண்டு இந்துக்களுக்காகப் போராடுவது போல் பாசாங்கு செய்கிறார் என்பதே.

    காங்கிரஸ் காரனிடம் பணம் வாங்கிக்கொண்டு ப.ஜ.க வுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தித் தோற்றவன் தான் இந்த முட்டா லிக். தெரிந்தோ தெரியாமலோ இவனை எக்ஸ்போஸ் செய்து இந்துத்துவத்திற்கு மாபெரும் உதவி செய்திருக்கிறீர்கள்.

    • //இதிலிருந்து தெரிவது என்னவென்றால்…முத்தாலிக்குக்கு இந்துத்வம் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. பணம் வாங்கிக்கொண்டு இந்துக்களுக்காகப் போராடுவது போல் பாசாங்கு செய்கிறார் என்பதே.///

      அப்போ இந்துக்களை வெடி குண்டு வைத்து கொன்று முஸ்லீம் வெறுப்பை உருவாக்கி அரசியல் ஆதாயம் அடையலாம் எனத் திட்டம் போட்டு தான் வைத்த குண்டில், தானே மாட்டிக் கொண்ட ஆர்எஸ்எஸ் பன்னிகளுக்கும் இதே லாஜிக் பொருந்துமில்லையா? (கோவா வெடி குண்டு)

  5. கடந்த காதலர் தினத்தையொட்டி நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் இளைஞர்கள் சிலர் பிரமோத் முத்தலிக்ககை தர தரவென தரையில் இழுத்து முகத்தில் கரியை பூசினார்கள். இது போன்ற எதிர் நடவடிக்கையை சிவில் சமூகம் செய்தால் தான் இந்த காவி கிரிமினல்களை பின்வாங்க செய்ய முடியும். இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் ராம் சேனா என்பது சரியான ஒப்பீடு. மத நல்லிணக்கம் என்பது மக்களிடம் இயல்பாக இருக்கும் ஒன்று. இந்து மக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ் கும்பலை ஒழிக்காமல் இது சாத்தியமில்லை.கருணாநிதி கூட அடிக்கடி மத நல்லிணக்கத்தை வளர்ப்போம் என்று சொல்கிறார். உண்மையில் வளர்க்க வேண்டியது மதச்சார்ப்ன்மையே தவிர மத நல்லிணக்கம் அல்ல.

  6. பாப்புலர் ஆகணும்மான என்ன செய்ய?
    பாப்புலர் ஆனவனை தேடிப் பிடி!
    பாரதமாதவுக்கு லூஸ்மோஷன்னு கொளுத்திப் போடு!
    பேதிக்கு வைத்தியம்னு கலவரத்துல காட்டு!
    அப்புறம் நீதான் டி.வியில மாஸ்டர்பீட்டு!
    பிறகென்ன இனி பிக்ஸ் பண்ணு ரேட்டை!
    ஆர்ட் எக்சிபிசனுக்கு இலட்சுத்தல ரேட்டு!
    டாஸ்மார்க் அளப்பறைக்கு ஆயிரத்துல ரேட்டு!
    அழகிய பெண் கவிதையின்னா இலவசம்ணு காட்டு!
    இந்துத்வ மகிமையை பூலோகம் பரப்பு!
    பாப்பானின் திறமைக்கு முத்தாலிக்தான் டாப்பு!

  7. ஜட்டியில் ராமர் படத்தை போட்டு ஒரு மததினரை இழிவு படுத்த வேண்டாமே.??

    யாரோ ஒருவன் செய்யும் தவறுக்கு ஒரு மதத்தின் கடவுளை இழிவு படுத்துவது அயோக்கியதனம் !!

    • மின்னது மின்னல்,

      முதலில் இந்துக்கள் என்று எல்லோரையும் ஒன்று சேர்ப்பது யதார்த்தமாகவே தவறு. இந்துக்கள் ஒன்று என்றால் அக்ரகாரமும், ஊருக்கு வெளியே இருக்கும் சேரியும் என்னவாம்? அடுத்து ராமன் என்ற கடவுள் இந்தி பேசும் மாநிலங்களின் பார்ப்பன மேல்சாதியினர் பகுதிகளைத் தவிர இந்தியாவில் வேறு எங்கும் கடவுளாக ஏற்கப்படவில்லை. இந்தியப்பழங்குடிகளை வேட்டையாடிதின் தொல்கதையே இராமயணம். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் பெரும்பான்மையினருக்கு இராமன் என்பவன் வில்லன். இந்த வில்லனை உங்கள் கடவுள் என்று மட்டும் சொல்லுங்கள். எங்களுக்கும், எங்கள் மக்களுக்கும் அவன் கடவுள் இல்லை.

      • எங்களுக்கும்,எங்கள் மக்களுக்கும் என்பது தமிழ் நாட்டில் உள்ள அனைவரையும் குறிக்காது சரியா?

        ராமரை கடவுளாக வணங்கு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு குடுங்கனு தான் சொல்கிறேன்…

        இதே ஜட்டியில் முட்டாலிக் படம் இருந்தால் நானும் கொண்டாடுவேன்

        • ஸ்ரீராம சேனாவின் தலைப்பிலேயே ராமன் இருக்கிறான். ஏதோ தீடிரென்று இந்தப் பெயர் வைக்கவில்லை. ரொம்ப நாளா ஊடகங்களில் அடிபட்ட பெயர்தான். அப்போதெல்லாம் எந்த ‘இந்துவும்’ கொதித்தெழாத மர்மென்ன? இப்போது கூட நீங்கள் ராமன் சேனா பெயரை மாற்ற வேண்டுமென்று சொல்லவில்லை. கர்நாடகாவிலும் அப்படி வீரமுள்ள ‘இந்து’ எவரும் அப்படி கோரமாட்டார்கள். பாபர் மசூதி இடிப்பும், அதை ஒட்டி இந்துமதவெறியர் நடத்திய கலவரமும், பல நூறு முசுலீம் மக்கள் கொல்லப்பட்டதும் கூட இந்த ராமன் பெயரில்தான். இப்படி ரத்தக் கறை படிந்த ராமனை எந்த இந்துவும் இதுவரை ஆட்சேபிக்கவில்லை. இதெல்லாம் இருக்கும்போது பிங்க் ஜட்டி ராமன் எவ்வளவோ மேல்.

      • இந்தியாவின் பெரும்பான்மையினருக்கு இராமன் என்பவன் வில்லன்.
        //

        ::)

      • உண்மை வினவு . இந்துக்கள் எல்லாம் ஒன்று என்றால் சில இடங்களில் தலித்துக்கள் கோவிலுக்குள் விடப்படுவதில்லையே அது ஏன்….சங்கரர்
        கல்லூரியில் பார்பனர்களுக்கு தனி விடுதி பூணல் இல்லை என்றால் தனி விடுதி …இங்கே ராமர் படம் இருக்கிறது என்று விமர்சனம் செய்பவர்கள்
        ஏன் அதை விமர்சனம் செய்வதில்லை

      • வினவு, உனக்கும் உங்கள் மக்களுக்கும் யார் கடவுள் என்று சொல்லுங்கள். நான் இழிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறன்.

        • மனிதனை மனிதனாக பார்க்கும் யாரும் கடவுள் தாண்ட , சில சமயம் நீ கூட இப்போ இழிவு பண்ணு டா 

      • ஏன்பா வினவு , இந்த பார்ப்பனீய கூடம் ஒரு முட்டாள் கூட்டம். ஏன் ராமனை கும்பிடுகிறார்கள். அவன் தான் க்ஷத்ரியனாசே.
        பாதி பிராமணனான ராவணன் தானே கும்பிடனும் . 

        அது என்ன “எங்களுக்கு எங்கள் மக்களுக்கும் அவன் கடவுள் இல்லை. ”  அப்படின்னு யார் உங்களுக்கு சொன்னங்க. ஊர்ல ராமன் பெற சொல்லி தான் ஏமாத்த  செய்ய முடியும், இராவணன் பெற சொல்லி எப்படி செய்யா முடியும்.

        இதே உங்க கடவுளான கார்ல் மார்க்ஸ், லெனின்  படாத ஜட்டில  போட்டா என்ன பீலிங்க்ஸ் காட்டுவீங்க !!!! செத்த பிணத்த ஒன்னு புதைக்கணும் இல்ல எரிக்கணும். அத எதுக்கு பதபடுதறீங்க ??? இது enna நம்பிக்கை. எங்க இதுல எல்லாரும் சமம்னு காமெடி நடத்துறீங்களே . ரஷ்ய ல் எ செத்தவன்  எல்லாத்துக்கும்  இப்படி தான் பண்நீங்கலாக்கும் .  ஊரை குத்தம் சொல்லறதுக்கு முன்ன கொஞ்சம் உங்க முதுகையும் பாருங்க. 

    • //யாரோ ஒருவன் செய்யும் தவறுக்கு ஒரு மதத்தின் கடவுளை இழிவு படுத்துவது அயோக்கியதனம் !!//

      மின்னுது மின்னல்,

      உங்களது உணர்வுகள் புரிகின்றன உங்களிடம் சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன.

      1)
      பிஹாரில் பசு தோலை உரித்த ‘குற்ற’த்திற்காக 5 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் தோலை உரித்துக் கொன்றனர் ஆர்எஸ்எஸ் கும்பல், அவர்களை இழிவுபடுத்துவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

      2)
      கிராமங்களில் பொதுக் கிணற்றை பயன்படுத்துவது உள்ளிட்ட ‘குற்றங்க’ளுக்காக தலித் குடும்பங்கள் கொல்லப்படுவது போன்றவற்றை செய்பவர்களை இழிவுபடுத்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

      3)
      தனது மனைவியை வெறும் செக்ஸுக்கான சதைப் பிண்டமாக கருதி அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் ஒருவனை இழிவுபடுத்துவது பற்றிஎன்ன நினைக்கிறீர்கள்?

      4)
      தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண், ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த ஒருவனிடம் ஐ லவ் யூ சொன்னதற்காக அவளை குத்தி கிழித்து சித்திரவதை செய்பவனை இழிவுபடுத்துவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

      5)
      ஒருவன் பார்ப்பன சாதியில்லை என்பதாலேயே அவன் கோயிலில் பூசாரியாகக்கூடாது என்று விரட்டியடிப்பது, கொல்வது போன்றவற்றை செய்கின்ற ஒருவனை இழிவுபடுத்துவது பற்றிஎன்ன நினைக்கிறீர்கள்?

      6)
      தனது சாதி நம்பிக்கைகளை நம்பாதவர்களை விரட்டியடிப்பது, கொல்வது போன்றவற்றை செய்தவர்களை இழிவுபடுத்துவது பற்றிஎன்ன நினைக்கிறீர்கள்?

      7)
      சாதி சரியானது என்று சொல்பவனை இழிவுபடுத்துவ பற்றிஎன்ன நினைக்கிறீர்கள்?

      எல்லாவற்றுக்கும் இல்லாவிடினும் முதல் 5க்கும் மட்டும் கூட விளக்கம் சொன்னால் போதும் மின்னுது மின்னல். நம்மிடையே இருக்கும் புரிதல் போதாமையை சரி செய்ய உதவும்

      அன்புடன்,
      பூச்சாண்டி

      • 5.கருத்துகளுடன் ஒத்துபோகிறேன் தவறு செய்தவர்களை சாட்டையடி அடிப்பதில் தப்பு இல்லை

        அதே சமயம் பூச்சாண்டி திருடிவிட்டால் ஒட்டுமொத்த ம.க.இ.க வையும் கூண்டில் ஏற்றுவது சரியில்லையே?

        • Rama never felt guilty when he tortured Seeta. But he only bereaved for his brother’s demise and committed suicide. Did he really love his wife? Did he really put faith on his half-in-life, Seeta?

          When he was roaming around forest after Seeta was missing, He bereaved with lustful memories of Seeta. He worried about he is missing the pleasures of Seeta and he worried about Seeta changes his love towards Ravana. He even says “if he were in Ayodya he may not worry about Seeta is missing, because there are alternatives for pleasure available.” It is only the pleasure of flesh that defines Seeta to him. That is why didn’t bereave for her. Instead he bereaved for his brother, where true love bond them. Is this a right attitude to follow in today’s society?

          Laxmanan cut Soorpanagai’s (an Aboriginal Girl) nose and breast because a Suthra girl proposed her love to a Kshatriya Man. If we have to follow Ramayana customs today then we have to give the same punishment to one Woman. Her name is Umabharathi, who is a Suthra girl proposed Brahman Man Govindacharya. (http://www.tribuneindia.com/2000/20001010/nation.htm#10)

        • மகஇக பெயரைப் பயன்படுத்தி திருடும்போது மகஇக வேடிக்கை பார்த்தால் நீங்க சொல்வது போன்று கூண்டில் ஏற்றலாம். ஆனால்……..

        • இந்த ஐந்து(மற்றும் 7 தவறுகளையும்) தவறுகளையும் செய்துள்ள அந்த இழிவுபடுத்த வேண்டியவன் வேறுயாருமல்ல சாட்சாத் ராமனேதான்.(ஆதாரம் வால்மீகி ராமாயணம் ஒரிஜினல் வெர்ஷன்)

          மேதகு ராமன் செய்த தவறுகளுக்கு அவனை எவ்வாறு இழிவுபடுத்தலாம் என்றும் மின்னுது மின்னல் ஆலோசனை சொல்லலாம்:

          Rama’s achievements (Crimes) include:
          http://terrorinfocus.blogspot.com/2007/10/rama-rama.html

          · Suspected his Wife Seedha and insulted her in front of everybody with ugliest words we could find in dictionaries. He asked her to prove her chastity. (It is the first SATI case). He even suspected Lakshman, Bharadhan, and Hanuman etc.

          · Killed Sampookan only because he is a Suthra, who tried to worship god directly, which is against Brahmanism.

          · Killed many innocents (tribal people) only because they are against Varnasrama dharma and only because they are against their land being used for Brahmanic rituals.

          · Lakshman killed Dadagai’s son. Raman solace Lakshman that he killed a Suthra so no need to worry.

          · Before building the bridge he destroyed a Village at the request of Sea king, because untouchable (Panjamas) people of the village have used a common Well in that village.

          · Rama himself and by other characters been projected as a Diehard protector of Varnasrama Dharma. The whole text of Valmiki Ramayana is a proof for this. And Ramayana is the literary symbol of re-establishment of the caste society. All other personal characters of him are common to any praised historic beings.

          · Killed Vali and Dadagai in a most cowardly manner.

          · Lakshman cruelly cut Soorpanagai’s nose and breast when she
          expressed her love. It is definitely inhuman act.

          · He insulted and chafed old woman kooni. This is surely not a Noble character to embrace.

          We cannot consider one as a God only because he is good for his friends, brothers and he is loyal to his father. And when he is anti people, Anti women and pro caste, Pro Sati society, we should actually cast him away from our Society. Rama actually deserves this and that is one of the ways to redeem our old pride of casteless society. He is not a model to be followed.

        • ஒரு இந்து தீவிரவாதி தப்பு செய்து விட்டால்
          இந்துக்கள் அதற்கு ஆதரவோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லையெண்றால்
          ஒட்டுமொத்த இந்துக்களும் அதற்கு பொறுப்பா??

          இந்து என்று குறிப்பிட்டது உங்களை அல்ல 🙂

        • மின்னுது மின்னல் ,

          //ஒரு இந்து தீவிரவாதி தப்பு செய்து விட்டால்
          இந்துக்கள் அதற்கு ஆதரவோ எதிர்ப்பு
          தெரிவிக்கவில்லையெண்றால்
          ஒட்டுமொத்த இந்துக்களும் அதற்கு பொறுப்பா??//

          இதையே தான் மற்ற மதத்தினரும் கேட்கிறார்கள்.
          இப்படி மற்ற மதத்தினரை திட்டமிட்டு அவதூறு
          பரப்பினதில் உம்மா கூட்டம் தானேயா
          மன்னனிவகித்தது.வகித்துக்கொண்டு இருக்கிறது.

        • இங்க பூச்சாண்டி ரொம்ப பூச்சாண்டி காட்றார் .

          பெரியார் ஸ்கூல் ல ரொம்ப படிசுட்டார்  போல இருக்கு. 
          என்ன படிச்சதெல்லாம் தப்பு நு அவருக்கு தெரியல .
          சூர்பனகை “அபோரிகினல் கேர்ள் ” ஆம் . ரொம்ப சுத்தம்.

          இல்லாத கதைய நீங்களா கிளப்பி விடறீங்களே . கேக்கறவன் எவனுக்கும் ஒன்னும் தெரியாதுன்னு நீங்களே முடிவு பண்ணிகிறதா ??

           பாதி பாப்பாத்தி அவ தெரியுமா ?? மீதியும் அவங்க பங்காளி சஇடு தான். apadi தான் கதை எழுதி இருக்கு.  

           ஆஅம எனக்கு ஒன்னு புரியவே இல்ல. பூணுல் போட்ட பாப்பான் நான் தாண்டா பெரியவன் ன்னு சொன்னா இந்த க்ஷத்ரியன் வைசியன் எல்லாம் எப்படி நம்பினாங்க ?? அவனுங்க லும் ஏன் பூணுல் போடறானுங்க ?? 
          உங்களுக்கு தான் இந்த மந்திரம் வசியம் ல எல்லாம் நம்பிக்கை இருக்காதுன்னு நினைக்கிறன், வேற என்னவா இருக்கும் ?? ஓஹோ அவனுங்க எல்லாம் முட்டாள் அப்படி தானே ?? அத கார்ல் மார்க்ஸ் தானே  கண்டு பிடுச்சு சொன்னார் ?? ரைட் ங்கண்ணா புரிஞ்சுருச்சு 

          “ராம சென ”  பேர் வச்சு ஊற எமதறாங்க 
           அந்த ” திராவிடர் ” இந்த “திராவிடர் “நு  கூட தான் ஊற எமாதரங்க 
          எதாவது திராவிடன் படத்த ஜட்டில  போடறது ??
          கம்முநிசம் வர்க்க போராட்டம் நு உலகம் போற கலகம் பண்ணறீங்களே ? உங்களுக்கு காசு குடுக்கற சீனா உங்க பரம எதிரி அமெரிக்காவோட என்ன பண்ணிக்கிட்டு இருக்கு ?? என்ன உறவாடி கேடுகரீங்கள ?? நல்ல பிளான் தான். என்ன இப்போ நீங்க உறவாடற கூட்டம் எல்லாம் ஜாக்கிரதைய இருக்கணும்.   

  8. //பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். அது எப்படி என்பதைத்தான் இப்போது காமராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.//

    உள்குத்து ‘லீலை’ ‘மணி்’ மணியாய் அ’மேக’மாய் இருக்கிறது…

  9. அந்த ஏக இறைவனின் அமைதி நம்மீது நிலவட்டுமாக..

    தயவு செய்து வினவு இணையதளம் இந்த கட்டுரைக்கு பயன்படுத்தியிருக்கின்ற இராமர் படத்தினை நீக்கி விட வேண்டும். முத்தாலிக் மற்றும் இந்துத்துவ வெறியர்கள் செய்யும் அயோக்கிய வேலைக்கு கடவுளாக (பலராலோ அல்லது சிலராலோ) நினைத்து வணங்கப்படும் இராமரின் படத்தை கொச்சைப்படுத்துவது சரியல்ல.

    உங்களின் கம்யூனிச ஆசான்கள் காரல் மார்க்ஸ், ஸ்டாலின் மற்றும் மாசேதுங் படத்தை இவ்வாறு கொச்சைப்படுத்தினால் நீங்கள் சும்மா விடுவீர்களா? கவிதை எழுதியதற்கே லீனாவை அசிங்கப்படுத்திய நீங்கள்
    கடவுள் என்று மக்களால் உருவகப்படுத்தபட்டு வணங்கப்படுகின்ற இராமரை கொச்சைபடுத்துவது எந்த வகையில் நியாயம்? இராமரை பற்றி மாற்றுக் கருத்து இருந்தால் அதை ஆரோக்கியமான வகையில் வெளிப்படுத்த வேண்டுமேயொழிய இத்தகைய அருவருப்பூட்டும் படங்களை போட்டு அடுத்தவர்களின் மனங்களை காயப்படுத்துதல் சரியான வழியாக இருக்காது.

    ஆர்.எஸ்.எஸ் மற்றும் அவற்றின் விஷக் கிளைகளாக நாடு முழுவதும் பரவியுள்ள பல்வேறு இயக்கங்களாக இருக்கின்ற வி.எச்.பி, பஜ்ரங் தள், சனாதன் சேனா, சிறிராம் சேனா, இந்து முன்னணி , இந்து மக்கள் கட்சி போன்ற இந்துத்துவ இயக்கங்களின் அடிப்படை சிறுபான்மையினர்கள் மீதான வெறுப்பும் உயர் சாதிய அடுக்குமுறையை தக்க வைப்பதும் தான். எனவே அவர்கள் இந்த நாட்டை விட்டு துடைக்கப்பட வேண்டிய அழுக்குகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

    சொந்த இந்து மக்களையே குண்டுகள் வைத்து சாகடிக்க தயங்காதவர்கள் இந்த கருங்காலி காவிக் கும்பல்கள். குஜராத்தில் கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியை கொளுத்தியதே இந்த இந்துத்துவ கருங்காலிக் கும்பல்கள் தான். இதை தெஹல்கா வீடியோ அம்பலப்படுத்தியதை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. தென்காசியில் தங்கள் அலுவலகத்தில் தாங்களே குண்டுகள் வைத்துக் கொள்ளக் கூட தயங்காத இவர்களை இந்து மக்கள் முதலில் புறக்கணிக்க வேண்டும். சட்டம் இவர்களை தண்டிக்க வேண்டும். ஆட்சியாளர்கள் சட்டத்தை நிலைநிருத்துவார்களா?

  10. ஹாஹாஹா!

    நரியின் சாயம் வெளுத்து போச்சா!?
    காசுக்கு பீ திங்கிர நாய்களெல்லாம் ஆன்மிகம்/கலாச்சாரம் பேசுதா!?

  11. இன்றைக்கு பெரியார் பெயரை வைத்து இன்று பல அரசியல் கும்பல் கொள்ளை அடிக்கிறது என்பதற்காக பெரியார் படத்தை ஜட்டியில் போடலாமா? முதலில் சக மனிதனை மதிக்க பழகுங்கள். பார்பானர்கள் மட்டுமே இந்துக்கள் அல்ல. கலாசாரத்தை காசுக்கு விட்டுவிடாமல் இன்னும் என்னை போல பல பிற்படுத்தப்பட்டவர்களும் இந்து மதத்தில்தான் உள்ளோம். இந்து மதம் பார்ப்பானால் உருவாக்கப்பட்டது எனில் பிற மதங்களும் பிற நாட்டிலிருந்துதான் வந்தது. எனவே 1000 வருடத்திற்கு முன்னாள் போய் வாழ்வதை விட இப்ப நாட்டுல இருக்குற மக்களை மதிச்சி வாழ கத்துக்குங்க.

  12. யோவ் ஏன்யா எல்லாரும் டென்சன் ஆவுரீங்க.. சங்கரன் கோவணத்த காயவைக்க குச்சியில சுத்தி அத புனிதமாக்குன மாதிரி.. கிடைச்ச பிங்கு ஜட்டியில ராமர் படத்த பிரிண்டு பண்ணி ஸ்ரீராம் சேனாவோட ‘ஆண்’மீகத்துக்கு பாதுகாப்பு குடுத்திருக்காருய்யா முத்தாலிக்கு… வாங்குற 60 லட்சரூபாயில எல்லாருக்கும் பேண்டா வாங்கி குடுக்கமுடியும்???? விவரம் புரியாத ஆளா இருக்கீங்களே…. 

  13. இன்னும் புரியுற மாதிரி சொல்லனுமின்னா… பொந்து மதத்துல அழிக்குற கடவுள் சிவன், சிவனோட குறி லிங்கம் (என்னா மேட்சிங்கு…) லிங்கமுன்னா என்னான்னு நான் சொல்லி தெரிய வேண்டீதில்ல… எனக்கு தெரிஞ்ச வரைக்கும் லிங்கத்துக்கு பாதுகாப்பு ஜட்டிதான்… பொந்து மத்ததோட பாதுகாக்குற கடவுள் மஹாவிஷ்னு alais ராமன், படத்துல இருக்க இருக்கேவேண்டிய எடத்துல ‘பாதுகாப்பா’ இருக்காரு… வினவு ஜே கிருஷ்ணமூர்த்தியோட சூக்குமமா ஆன்மீகத்த புட்டு புட்டு வச்சிட்டீங்களே????? அட்டா அடட்டடா

    • அடடடா, அடடடட.. கலக்குறேள் கேள்விகுறி சாரே .. ரொம்ப நல்ல மாட்சிங் பண்ணறே சாரே. உன்ன மாதிரி ஆளுங்கதாம்லே இந்த வினவு கூட்டத்துக்கு லாய்க்கு. என்னா ஒரு thinnkingu . பொந்து கடவுளுக்கு பொறந்த அந்த கோவண கடவுள விட்டுடீங்களே. ஏன் அந்த கடவுள் தமிழ் கடவுளுனால்யா?

    • அய்யா கேள்விக்குறி , லிங்க வியாக்யானம் சூப்பர்.

       உங்க புனைபெயர்ல கூட அது ஓடிகிட்டு இருக்கே ?? என்ன தமிழ்ல இருக்கு…

      காமாலை கண்டவனுக்கு கண்ண்டதேல்லாம் மஞ்சள்லம் .
      அப்படியே அது ஆண்குறிய குறிச்சாலும், உங்களக்கு அதில என்ன பிரச்சனை ?? அது என்ன உடல் உறுப்பிலேயே மட்டமானதா  ???

      உங்க வர்ணனைல இருக்க வக்கிரம் உங்களுக்கே தெரியலையோ ?? 

      “லிங்கமுன்னா என்னான்னு நான் சொல்லி தெரிய வேண்டீதில்ல”

      சந்து போனதுன்னு பேசிட்டு என்ன decency  வேண்டிகிடகுது ???
      அது சேரி உன்ன்களுக்கு இந்த அர்த்த யார் சொன்னது ?? பெரியாரா  ??
      இல்ல சமஸ்க்ரிதம் தெரியுமோ ?? ஆயிரம் அர்த்தம் இருந்தாலும் உங்களுக்கு இது தான் வசதியா இருக்கு , என்ன செய்ய ??

  14. //பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். அது எப்படி என்பதைத்தான் இப்போது காமராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.//

    தமிழ்நாட்டு இப்ப என்ன நடக்குதுன்னு ஓரளவு புரியுது ..

  15. இராமனுக்கும் மகஇகவுக்கும் 10 பொறுத்தம்! சீறங்கத்துலேயே இராமன் படத்த கொளுத்துன ஆளுங்க அவங்க… என்னமோ ஜட்டியில இராமன் படத்த போட்டதுக்கு இப்படி பீல்பண்ணுறீங்களே.. இராமனை ஜட்டியில்லாம போடாம விட்டாங்களே அந்தமட்டுமாவது சந்தோசப்படுங்கடே!

  16. //பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். //

    தமிழ்நாட்டுல இப்ப என்ன நடக்குதுன்னு ஓரளவு புரியுது ..

  17. .
    ஜட்டி காப்பாளர்களுக்கு….

    சின்னப் புள்ளைங்க ஜட்டியில் மிக்கி மெளஸ் , டிஸ்னி ப்ரின்சஸ், சூப்பர்மேன் என்று கணக்கு வழக்கு இல்லாமல் இருக்கும்.

    தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் தெய்வம் ஜட்டியில் இருக்கக்கூடாதா?

    கல்யாண‌ நேரத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் யோனிக்கு காவலாக சில தெய்வங்களே இருப்பதாகச் சொல்கிறது.

    “ஆண் பெண் குறியிரண்டும் அயில்வேல் காக்க…பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க” என்று உடல் உறுப்புகளைக் வேல் காக்கிறது என்று கந்தர்சஸ்டி பாட்டு சொல்கிறது.

    ஆண்டாள் உருகி உருகி உடல் உறுப்புகள் எப்படி நோகின்றன என்று பாடுகிறார்.

    இவை எல்லாம் பக்தி.

    தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் தெய்வம் ஜட்டியில் இருக்குமாறு வினவு படம் போட்டால் தெய்வகுத்தமாம். என்ன கொடுமை?

    **

    கம்யுனிசச் சாமி கும்பிடும் வினவிற்கு..

    1. இதே போல் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த சிலர் செய்யும் பிரச்சனைக்கு ஜட்டியை விடுங்கள்…தூதரை அல்லது கடவுளை விடுங்கள்..சும்மா ஒரு கட்டிடத்தை படமாகப் இப்படிப்போட்டால் உங்களின் கதி?

    2. கம்யூனிச‌க் கடவுள்களை கவிதையில் யோனி குறியுடன் தொடர்பு படுத்திவிட்டார் என்று சொல்லி சாமியாடிய நீங்கள்,

    உங்கள் கம்யூனிசச் சாமிகளை ஜட்டியில் படமாகப் போட்டால் என்ன செய்வீர்கள்?

    ” உன் ஜட்டியில் கம்யூனிசச் சாமி படம் உள்ளதா?” என்று கூட்ட‌மாக வந்து கேள்வி கேட்பீர்களா? :-(((((((
    .
    .
    உங்களுக்கு ஒரு கம்யூனிசத் தலைவர்களின் மீது பக்தி. அவர்களை யோனி குறியிடன் யாராவது கவிதை சொன்னால் கடுப்பு வருகிறது.
    .
    இந்த ஜட்டியில் உள்ள படத்தில் உள்ள உருவங்களின் மீது சிலருக்கு பக்தி. அவர்களுக்கு கோவம் வருகிறது.

    same blood
    .

    • ராமனும் மார்க்சும் ஒன்னு….. அடடட்டா கல்வெட்டுக்கு என்னா அறிவு என்னா அறிவு… ஒன்னு பண்ணேன்.. உன் பொன் மொழியை கல்வெட்டுல பொரிச்சு வச்சுட்டு அது பக்கத்திலேயே நீயும் உக்காந்துக்க..வருங்கால சந்ததியெல்லாம் அத பாத்து படிச்சு விவரமாயிக்குவாங்க… 

      வந்துட்டானுங்க அறிவாளி பக்கெட்டுன்னு.. ஏன்யா, 2000 முசுலீம கொண்னு போட்டுட்டு மோடி அங்க ஜமாத்தா ஆட்சிக்கு இன்னொரு தடவ வற்றான் அதுக்கே இங்க எவனாலயும் ஒன்னும் புடுங்க முடியல..  படம் போட்டா என்னாத்த கயட்ட முடியும்.. மொதல்ல இந்த ஆர்எஸ்எஸ் வாந்தி எடுக்கறத நிறுத்துய்யா

      உலகத்துலேயே கம்மூனிச தலைவருங்களுக்கு  இணையா யாருமேல அவதூறு வந்திருக்குன்னு கொஞ்சம் சொல்லேன் பாப்போம்.. லீனாவுக்காக பலூன் ஊதறத்துக்கு முன்னால கொஞ்சம் என்ன நடந்திச்சுன்னு முழுசா விவரம் தெரிஞ்சுக்க… அறைகுறையா இங்க வந்து காத்த பிரிக்க வேணாம்… 

      • கேள்விக்குறி,

        அவ்வளவுதானா? இன்னும் திட்டலாம். பக்தர்களுக்கு கோவம்வரும்படி நான் நடந்து இருந்தால் மன்னித்து விடுங்கள். :-((

        **

        கம்யூனிசம் உங்களைவிட நான் அறிவேன். நான் ஆர் எஸ் எஸ் எஸா என்னவென்று அசுரனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

        மக்களுக்கு உழைக்க எனக்கு எந்த உருவங்களும் தேவை இல்லை.
        அது போல இறக்குமதிக் கொள்கைகள் எனக்குத் தேவையும் இல்லை.
        எந்த உருவங்களின் பக்தனும் அல்ல‌.

        .
        புனிதத்தை காயப்படுத்தினால் பக்தனுக்கு கோவம் வரும். உங்களுக்கு கேள்வி கேட்டாலே இந்த அளவு கோவம் வருகிறது.

        .
        .

        • “மக்களுக்கு உழைக்க எனக்கு எந்த உருவங்களும் தேவை இல்லை”
          மக்களுக்காக உழைப்பவனுக்கு ஒரு க்ண்ணோட்டம் வேண்டும். மக்களுக்காக போராடும் போராளிகளின் போராட்டங்களேல்லாம் ஆண்குறிகளின் சதிகள் என்று இழிவுபடுத்தப்படுவதை சகித்துக்கொள்ளமுடியாது.
          உருவங்களுக்காகத் தான் வினவு சாமியடியது என்றால் வினவுக்கு 24 மணிநேரமும் சாமியாடுவதைத் தவிர வேறு வேலையே இருந்திருக்காது.

        • //நான் ஆர் எஸ் எஸ் எஸா என்னவென்று அசுரனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.//

          இதைச் சொல்வதன் மூலம் தான் யாரென்று உணர்த்த விரும்பும் கல்வெட்டு கீழே உள்ளதையும் சொல்கிறார்.

          //எனக்கு எந்த உருவங்களும் தேவை இல்லை.
          அது போல இறக்குமதிக் கொள்கைகள் எனக்குத் தேவையும் இல்லை.
          எந்த உருவங்களின் பக்தனும் அல்ல‌. //

          அப்போ ஆர் எஸ் எஸ் போன்ற உருவங்களுக்கு எதிரியா நீங்கள்? ஆர் எஸ் எஸ் இல்லையெனில் நீங்கள் யார்? NGOவா?

    • // கம்யுனிசச் சாமி கும்பிடும் வினவிற்கு..

      1. இதே போல் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த சிலர் செய்யும் பிரச்சனைக்கு ஜட்டியை விடுங்கள்…தூதரை அல்லது கடவுளை விடுங்கள்..சும்மா ஒரு கட்டிடத்தை படமாகப் இப்படிப்போட்டால் உங்களின் கதி?

      2. கம்யூனிச‌க் கடவுள்களை கவிதையில் யோனி குறியுடன் தொடர்பு படுத்திவிட்டார் என்று சொல்லி சாமியாடிய நீங்கள்,

      உங்கள் கம்யூனிசச் சாமிகளை ஜட்டியில் படமாகப் போட்டால் என்ன செய்வீர்கள்?

      ” உன் ஜட்டியில் கம்யூனிசச் சாமி படம் உள்ளதா?” என்று கூட்ட‌மாக வந்து கேள்வி கேட்பீர்களா? 🙁 ((((((//

      கல்வெட்டுவின் வாதங்கள் அதி புத்திசாலித்தனமாக இருப்பதால் என்னால் பேசவே இயலவில்லை.

      இருந்தாலும் என்னோட மரமண்டைக்கு தோணியதை இங்க சொல்லிக்க விரும்புகிறேன்.

      ராமன் என்கிற சாதி வெறித் தலைவனின் சாதிவெறி நடவடிக்கைகளை மின்னுது மின்னலுக்கு பட்டியலிட்டுள்ளார் தோழர் பூச்சாண்டி..

      இதே போல ஏசு, நபி போன்றோர் மற்றும் கல்வெட்டுவின் வெறுப்புக்கு இரையான கம்யூனிச கடவுளர்கள் பற்றி கல்வெட்டு பட்டியலிட வேண்டும். இந்த அடிப்படையில்தான் ராமனை இழிவுபடுத்துகிறோம். இதை மின்னுது மின்னலும் ஒத்துக் கொண்டுள்ளார்.

      இதே போல ஏசு, நபிகள் பற்றி எதுவும் உள்ளதா? அவர்கள் அவர்களது காலத்தில் சமூக சீர்த்திருத்தவாதிகளாகவே இருந்துள்ளனர்,.

      அதே போல கல்வெட்டுவின் வெறுப்புக்கு ஆளான கம்யூனிச கடவுளர்களுக்கு இதே போல பட்டியல் போட வருமா?

      கல்வெட்டு போன்ற மானமுள்ள, சூடு சொரனையுள்ள நல்லவர் தமது பின்னூட்டத்தில் வழங்கிய தீர்ப்புக்கு ஆதாரம் வழங்குவாரா?

      அல்லது என்னோட வேலை எருமை மாடு மாதிரி சாணியடித்துவிட்டு கடந்து சென்று கொண்டே இருப்பதுதான் என்று ஓடிப் போவாரா?

      எனக்கென்னவோ இரண்டாவதைத்தான் அவர் இதுவரை செய்துள்ளதாக ஞாபகம்

      அசுரன்

      • //கம்யூனிசம் உங்களைவிட நான் அறிவேன். நான் ஆர் எஸ் எஸ் எஸா என்னவென்று அசுரனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.//

        அசுரன் தான் மேலே கேள்வி கேட்டுள்ளேன் பதில் சொல்லுங்கள். என்ன? உங்களது நடையை அப்படியே அடியொற்றி நானும் எதிர்வினை புரிந்துள்ளேன். நீங்கதான் ‘கருத்துரிமை’ காவ’லா’ளி ஆயிற்றே. பொறுமையாக பதில் சொல்லுங்கள்.

        • //தலைவரின் உருவத்தின் புனிதத்தைக் காக்க முயல்வீர்களா?
          அல்லது
          நம்பும் கொள்கையைச் செயல்படுத்த முயல்வீர்களா?

          “புனிதம் காக்க சொம்பெடுப்பேன்” என்றால் இராமனைக் கும்பிடும் கூட்டத்திற்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை இந்த விசயத்தில். //

          ஏதோ கம்யூனிச தலைவர்களை இதுவரை யாரும் கேள்வியே கேட்க்காதது மாதிரி பேசுகிறார் கல்வெட்டு. இதே வினவு தளத்தில் கூட பலர் விமர்சித்திதுள்ளனர். அதற்கும் பதில்தான் கூறப்பட்டுள்ளது.

          அவ்வாறு விமர்சனம் செய்தவர்களில் பேர்வாதி பேர் கல்வெட்டு மாதிரி முன்முடிவுடன் திமிர்பிடித்த சொல்லாடல்களை பயன்படுத்த வில்லை.

          அடிப்படையில் பணிவற்ற ஒருவனால் எந்த மாற்று கருத்தையும் வலுவுடன் விவாதிக்க முடியாது என்பதற்கு கல்வெட்டு ஒரு உதாரBஅம்

      • அசுரன்.

        1. கம்யூனிசம் ஏன் தோன்றியது?
        2. அதன் தேவை என்ன அது?
        3. எதை எதிர்த்தது அது?
        4. அதை எதிர்க்க வேண்டிய தேவை என்ன?

        என்று ..உங்கள் கையில் உள்ள இறக்குமதி சித்தாங்களின் மொழி பெயர்ப்புகளைப் படியுங்கள்.

        சித்தாங்களும் இசங்களும் ஒருவரின் வழி வந்தது என்பற்காக அவரை ஜன்னி வந்து தொழுதே தீருவேன் என்றால் தொழுது கொள்ளுங்கள்.

        ***

        பொண்டாட்டியை விரட்டிய இராமனை நான் கம்யூனிசத் தலைவர்களோடு ஒப்பிடுவது இரண்டு பேரின் பேரின் கொள்கைக்காக அல்ல.

        இரண்டையும் சாமியாகப் பார்க்கும் கருத்துக்காக. மக்களிடம் செல்ல வேண்டியது கருத்துக்களே அல்ல உருவங்கள் அல்ல.

        உங்களுக்கான கேள்வி

        தலைவரின் உருவத்தின் புனிதத்தைக் காக்க முயல்வீர்களா?
        அல்லது
        நம்பும் கொள்கையைச் செயல்படுத்த முயல்வீர்களா?

        “புனிதம் காக்க சொம்பெடுப்பேன்” என்றால் இராமனைக் கும்பிடும் கூட்டத்திற்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை இந்த விசயத்தில்.

        ===

        Vi> // ..அதி புத்திசாலி
        .. என்னோட வேலை எருமை மாடு மாதிரி சாணியடித்துவிட்டு கடந்து சென்று கொண்டே இருப்பதுதான் என்று ஓடிப் போவாரா?

        .. எனக்கென்னவோ இரண்டாவதைத்தான் அவர் இதுவரை செய்துள்ளதாக ஞாபகம்

        நன்றி அசுரன்.

        பக்தப் பதர்கள் இரசிகக் கண்மணிகளுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

        பக்தர் கூட்டங்களில் எந்த வித்தியாசமும் இல்லை.

        நீங்கள் ஒரு இசத்துக்கு பக்தராக இருக்கும் வரை நான் என்ன சொன்னாலும்..உங்கள் முன் முடிவு இப்படித்தான் இருக்கும்.

        நன்றி அசுரன்.
        நல்ல உரையாடல்.

        .

        • கல்வெட்டு எனது கேள்விகளுக்கு பதில் சொல்லும் நேர்மைட்யில்லையே உங்களிடம்

        • //நீங்கள் ஒரு இசத்துக்கு பக்தராக இருக்கும் வரை நான் என்ன சொன்னாலும்..உங்கள் முன் முடிவு இப்படித்தான் இருக்கும். //

          கம்யுனிச கடவுளை வழிபடுபவர்கள் என்று தோழர்களை முன்முடிவுட ன் அறிவிக்கும் அராஜகவாதி கல்வெட்டு நம்மை முன்முடிவுடன் அனுகுபவர்கள் என்று விமர்சிப்பது நகைச்சுவையே அன்றி வேறல்ல.

          கல்வெட்டுவிடம் குறைந்த பட்ச நேர்மையிருந்தால் கேட்டுள்ல கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும்

  18. முத்தாளிக்கை விமர்சிக்க இப்படி ஒரு படம் தேவையில்லை. தெகல்கா உண்மையை சொல்ல அப்படி ஒரு படத்தை போடவில்லை. தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம். அதை எடுத்து விடுங்கள்.

  19. //இந்து மக்கள் கட்சி கூட தமிழ்நாட்டின் சிரிராம் சேனாதான். இந்த காவி லும்பன் கும்பல் சீரிரங்கத்தில் பெரியார் சிலையை இடித்த போதும், சிதம்பரத்தில் தீட்சிதர்களோடு சேர்ந்து கொண்டு தமிழுக்கு எதிராக களம் இறங்கிய போதும் இந்தக் காலிகளை நாங்கள் களத்தில் எதிர்கொண்டு பாடம் புகட்டினோம். ஆனால் இவர்களுக்கு தினமணி நடுப்பக்கத்தில் இட ஒதுக்கீடு செய்து ஆராதிக்கிறது. மற்ற பத்திரிகைகளும் இந்து மக்கள் கட்சி எது செய்தாலும் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுக்கின்றன//

    இது ஊடகங்களின் மேலோட்டமான போக்கை காட்டுகிறது

  20. தக்க சமயத்தில் அருமையான பதிவு. சுகதேவ் குறிப்பிட்டிருப்பது போல “கடந்த காதலர் தினத்தையொட்டி நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் இளைஞர்கள் சிலர் பிரமோத் முத்தலிக்ககை தர தரவென தரையில் இழுத்து முகத்தில் கரியை பூசினார்கள்.” அந்த அற்புதக் காட்சியை கண்ட பொழுது எழும்பிய உவகை, தற்பொழுதும் ஏற்படுகிறது. ஏற்கெனவே கரி பூசப்பட்ட முகத்தில் தற்பொழுது ஓங்கியறைந்ததன் மூலம், தெஹல்கா ஏடு தனது கடுமையான, போராட்டமிக்க பத்திரிக்கைப் பயணத்தில் மீண்டும் ஒரு மைல்கல்லை நிறுவியிருக்கிறது. நாம் அனைவரும் அவசியம் தெஹல்காவுக்கு வாழ்த்துக் கடிதம் எழுத வேண்டும் என வேண்டுகிறேன். பல் பிடுங்கப்பட்ட்ட முத்தாலிக் பாம்பிற்கும் கூட அந்த வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி வைக்கலாம். என்ன இருந்தாலும், நோயாளிகளை ஒதுக்கி வைக்கக் கூடாதல்லவா?

    முத்தாலிக்கின் திருமுகத்தை சாரமாக தொகுத்து அம்பலப்படுத்தி, அதே வேளையில், கேமராவில் சிக்காத தமிழகத்து ‘ஓவியர்களின்’ கலைத் தாகத்தையும், தமிழக இந்து மக்கள் கட்சினருக்கும் அத்தகைய கலகக்கார ‘ஓவியர்களுக்கும்’ இருக்கக் கூடிய கொடுக்கல், வாங்கலையும் வெளிச்சமிட்டு காட்டி, ஒரு சாட்டையடி கட்டுரையை தக்க சமயத்தில் எழுதிய வினவுக்கு வாழ்த்துக்கள், நன்றி.

  21. இந்து makkal கட்சி yenbadhu tamizhnaatil paarppanargalaal நடத்தப்படும் வியாபார niruvanamalla , arjun sambath&kannan aakiyor paarppanarum alla tamizhargalaaga இந்து iyakkathil இருந்துகொண்டு eezha பிரச்சனையில் உண்மையாக seyalpadum unmai tamizhina unarvaalargal என்பதை குறுக்குபுத்தி ullavargal thavira unmai தமிழர்கள் arivaargal!leena மணிமேகலையை ,அவளது seyalai niyaayapaduththum yevarum unmaiyaana தமிழர்கள் அல்ல!

  22. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுமையான அநிதிகள் இலைக்கப்ப்படும்போதல்லாம் ‘நாமெல்லாம் இந்து ‘என்று பரப்புரை மேற்கொள்ளும் அத்வானி முதல் இங்கிருக்கும் ராமகோபாலன் வரை
    தன உடம்பில் உள்ள அத்தனை ஒட்டைகளைய்ம் பொத்திகொள்கிரர்கள்
    இந்துமதம், இந்து கடவுள் என்று சர்சை வந்து விட்டால் மனம் புண்பட்டு விட்டது என்று கொதிக்கிறார்கள். .இந்து மதம் , இந்துமதத்தை தாங்கி நிற்கும் கடவுள்கள் .. என்று அணைத்து குப்பைககலையம் அசிங்கபடுத்தி அதற்கு உன்டான பிம்பத்தை அடித்து நொறுக்குவதுதான் நமக்கு முன்னிற்கும் முதன்மையான வேலை.அந்த பணிஇல் நிற்கும் வினவுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

    i

    •  குட்டி. இத விட வேடிக்கையான ஒரு விஷயம் எங்க ஊருல நடந்துச்சு ப.ஜ.க இளைஞர் அணியில் இருக்கும் ஆதிதிராவிடரான ஒரு பேச்சாளர் வாஜ்பாய் வழும் அம்பேத்கர் அப்புடின்னு பேசினார் என்னத்த சொல்ல  

      • ஹைதர் அலி,
        அவர் அம்பேத்காரை படிக்காத
        கறுப்பு பார்ப்பனரக இருக்கலாம்

  23. இந்து மத வெறியர்கள் இப்படி அவர்கள் சொந்த முயற்சியில் அம்பலபட்டு போகும் தருணத்திலாவது அவர்களை பாராட்ட வேண்டும் என்பது போல இருக்கிறது. ஆர்,எஸ்.எஸ் மற்றும் அதன் தொங்கு சதைகளின் மன அமைப்பையும், செயல்பாட்டையும் அறிந்தவர்கள் யாருக்கும் இந்த ஸ்டிங் ஆபரேசன் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காது என்றே எண்ணுகிறேன். எனினும் இது நமக்கு தெரிந்த உண்மை என்ற புரிதலோடு விட்டுவிடக்கூடிய ஒன்றல்ல. தொடர்ந்து அடி விழ வேண்டும். பொதுவாக டி.வி விவாதங்களில் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கை மேலோங்கியே இருக்கும். ஆர்.எஸ்.எஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்கொள்ள ஆர்வமோ. விருப்பமோ அற்ற சி.பி.எம், காங்கிரஸ் தலைவர்கள் புலம்பல் வகைபட்ட மொன்னையான வாதங்களை வைக்கும் போது பார்ப்பவரை ஆத்திரம் கொள்ள வைக்கும். மணி சங்கர் அய்யர், மனீஷ் திவாரி ஆகியோர் மட்டும் விதிவிலக்கு. ஒரு NGO செயல்பாட்டாளரின் மொழி பிரயோகமும், உடல் மொழியும் பிருந்தா காரத்தினுடையது. இவர்களிடம் எதிர்பார்க்க வேறு என்ன இருக்கிறது. நேற்று இரவு பன்னிரண்டு மணிக்கு வரையிலும் தொடர்ந்து முத்தாலிக் செய்தி Headlines Today- யில் ஒளிபரப்பானது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  24. கலை..
    //மக்களுக்காக உழைப்பவனுக்கு ஒரு க்ண்ணோட்டம் வேண்டும். //

    கண்ணோட்டமும் சமுதாயப் பார்வையும் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை கலை.

    ஆனால் தலைவரின் படங்களை புனிதமாகப் பார்ப்பதும் கதையின் நாயகனை கடவுளாகப் பார்ப்பதும் ஒன்றே. அது மட்டுமே எனது கருத்து. எந்தக்காலத்திலும் பொண்டட்டியை சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்பிய கதையின் நாயகர்களை மனிதராகக் கூட பார்ப்பது இல்லை நான்.

    ===

    தலைவர்களுக்கு புனிதம் என்பது தேவை இல்லை.

    இந்திய அல்லது தமிழக மக்களின் தேவைகள் மற்றும் அவர்களின் நடப்புக்காலப் பிரச்சனைகளுக்கு வழிதேடும் புதிய சித்தாத்தங்களை உருவாக்கி போராட வேண்டுமே தவிர சர்வ ரோக நிவாரணிபோல இறக்குமதிக் கொள்கைகளின் கீழே இருந்துகொண்டு எல்லாவற்றுக்கும் கம்யூனிசக் கசாயம் கொடுக்கக்கூடாது.

    ==

    • எட்டு மணிநேர வேலைக்காக செந்நீர் சிந்தி போராடினார்கள் சிக்காகோ தொழிலாளர்கள். இதுவே மே தினமென்று போராட்ட தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எனினும் இது வெளிநாட்டு சரக்கு எனப்தால் கல்வெட்டு பாரத பண்பாட்டின் படி தொழிலாளிகள் 16 மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்பதையே பிரச்சாரம் செய்வார். அவரும் கூட அப்படித்தான் வேலை செய்வதாக கூறுகிறார்கள்.

    • பாரதப் பண்பாட்டின் பிதாமகன் கல்வெட்டின் பார்வைப்படி இந்தியாவின் தொழிலாளர் தினம் எது? பார்ப்பன புராணங்களில் தொழில்களின் குருவான விசுவகர்மாவின் ஜயந்திதான் தொழிலாளர் தினமாக கொண்டாட முடியும். இந்த தினத்தன்று தொழிலாளர்கள் பாரத பண்பாட்டின் படி பூஜை செய்து, படியளக்கும் ஆண்டவர்களான முதலாளிகள் காலுக்கு பாலாபிஷேகம் செய்து தொடர்ந்து கொத்தடிமைகளாக வேலை செய்வதாகவும், கம்யூனிசம் என்ற இறக்குமதி சரக்கைப் புறந்தள்ளி அது வாங்கித் தந்திருக்கும் எந்த தொழிலாளர் உரிமையும் வேண்டாமென்று உறுதி எடுத்துக் கொண்டு விசுவகர்ம ஜயந்தியை கொண்டாடவேண்டும். இதைச் செய்யாதவன் பாரத பண்பாட்டின், தமிழ் பண்பாட்டின் விரோதி என்று கல்வெட்டு அறிவிக்கிறார்.

      • .
        வினவு,

        தத்துவத்தைச் சொன்னவன் சாமியல்ல. சிந்தனையாளன்.
        அவனது சிந்தனகளைச் செயலாக்கம் செய்வதுதான் அவனுக்குச் செய்யும் மரியாதை.

        விஜயின் இரசிகனாய் இருப்பதும், இராமனைப் புனிதமாகக் கருதுவதும், எழுத்தைவிட்டுவிட்டு எழுத்தாளனுக்கு சொம்புதூக்குவதும் பிம்பங்களை தொழும் கேவலம்.

        அப்படித்தான் நீங்கள் உள்ளீர்கள் என்று சொன்னால் அதையெல்லம் விட்டுவிட்டு “நீங்கள் நம்பும் பாரதத்தையும்” அதன் பண்பாடையும் என்மீது ஏற்றிச் சொல்ல வேண்டாம். பாரதமும் அதன் பண்பாடும் உங்களின் நம்பிக்கையாக இருக்கலாம்.

        ********
        வர்ணாசிரமக் கீதையைப் படித்துவிட்டு இந்துவாக இந்துக் கடவுளுக்கு பக்தனாக இருப்பதும், பைபிள்படித்து கிறித்துவனாக மாறுவதும்,
        குரான் படித்து முஸ்லீமாக மாறுவதும் ..அப்படி மாறி அதன் காவலர்களாக இருப்பதும்….. கம்யூனிசக் கருத்துக்கள் பிடித்ததாலே கம்யூனிசவாதியாக நாமகரணம் செய்து கொண்டு , இராம பக்தர்கள் இராமனைக் காப்பதைப்போல் கம்யூனிசத் திருவுருவங்களை காப்பதும் ஒன்றே.

        நீங்கள் இல்லாவிட்டாலும்…
        நான் இல்லாவிட்டாலும் கம்யூனிசக் கருத்துக்கள் இருக்கும்.

        லீனா சொல்வதாலோ அதற்கு பங்கமும் அல்லது நீங்கள் சாமியாடிக் காப்பதாலோ அதற்கு சிறப்பும் வரப்போவது இல்லை.

        உரையாடல் கம்யூனிசக் கொள்கைபற்றியது அல்ல.
        இராமனைப்போல கம்யூனிசத் தலைவர்களின் உருவவழிபாட்டைப் பற்றியது. அதைப் பற்றி இதுவரை யாரும் பேசவில்லை. ஆனால் இப்படிச் சொல்லத் தெரிகிறது…….


        // கல்வெட்டு பாரத பண்பாட்டின் படி //
        // அவரும் கூட அப்படித்தான் வேலை செய்வதாக கூறுகிறார்கள். //
        // பாரதப் பண்பாட்டின் பிதாமகன் கல்வெட்டின் //
        // கம்யூனிசம் என்ற இறக்குமதி சரக்கைப் புறந்தள்ளி அது வாங்கித் தந்திருக்கும் எந்த தொழிலாளர் உரிமையும் வேண்டாமென்று உறுதி எடுத்துக் கொண்டு விசுவகர்ம ஜயந்தியை கொண்டாடவேண்டும். இதைச் செய்யாதவன் பாரத பண்பாட்டின், தமிழ் பண்பாட்டின் விரோதி என்று கல்வெட்டு அறிவிக்கிறார்.//

        * பாரதம் என்றால் என்ன என்று நான் கொண்டுள்ள கருத்து உங்களுக்குத் தெரியாது.

        * பண்பாடு என்றால் என்ன என்று நான் கொண்டுள்ள கருத்து உங்களுக்குத் தெரியாது.

        * விஸ்வகர்மா மற்றும் பார்ப்பனீயம் என்பதுபற்றி நான் கொண்டுள்ள கருத்து உங்களுக்குத் தெரியாது.

        ஆனால் … உங்களின் பொதுப்புத்தியில் இருக்கும் மலிவான கருத்துக்களை நான் கொண்டுள்ளதாக, என் மேல் ஏற்றிச்சொல்வது என்னமாதிரியான உரையாடல்?

        நான் யார் என்பதை நீங்களே தீர்மானம் செய்துவிட்டபின் எதற்கு கேள்வி?

        முத்தாலியின் சாயம் வெளுத்ததைப்போல பொதுப்புத்தியில் பாரதம் பண்பாடு என்று பேசும் உங்களின் சாயமும் இங்கே வெளுக்கிறது.

        பண்பாடு என்பது இறந்தகாலம் அதைச் சவங்கள்தான் காக்க நினைக்கும். வரலாற்றைத் தெரிந்து கொள்வது வேறு ,வரலாற்றில் வாழ நினைப்பது வேறு.

        பண்பாட்டில் இருக்க நினைப்பது கல்லறையில் வாழ நினைப்பதுபோல.
        அடிப்படை தெரியாத பொதுப்புத்தியாளர்களிடம் என்ன பேசுவது?

        எல்லாம் படியுங்கள் வினவு ஆனால் ஒரு இடத்திலேயே தேங்கி விடாதீர்கள். அப்படி தேங்குவதுதான் பக்தனாக மாறுவதன் முதல் அடையாளம்.

        நீங்கள் காக்க நினக்கும் மக்களுக்கு நல்லது என்று நீங்கள் நம்புவதை எல்லா இடத்தில் இருந்தும் தேடிக் கொடுங்கள்.

        கம்யூனிசக்கிணற்றில் மட்டுமே தண்ணீர் எடுப்பேன் என்பதும், எனது மதம் மட்டுமே சிறந்தது என்பதும் ஒன்றே.
        .

        • //அடங்குங்கள் வினவு.
          உங்கள் தெய்வங்களுக்கு கொடுக்கும் அடைமொழிகள் எனக்குத் தேவை இல்லை. என்னைக் கல்வெட்டு என்றே சொல்லலாம். அது போல உங்களின் பாரத நம்பிக்கையும் அதன் பண்பாட்டுக் குப்பைகளும் எனக்குத் தேவை அல்ல.//

          ஓ இதுக்கு மட்டும் கல்வெட்டுக்கு கோபம் வருகிறது? அப்போ அவர் புனிதமாக கருதும் நம்பிக்கை என்ன? அதை புண்படுத்தும் போது வரும் கோபம் ஏன்? அவர்தான் உருவமற்றவராயிற்றே? யார் எதை எப்படி சொன்னாலும் எருமை மாதிரி செல்பவராயிற்றெ என்று நினைத்தால் வினவை அடங்கு என்று அதட்டுகிறார்? இது எப்படி சாத்தியம்?

        • வேறொன்றுமில்லை நண்பர்களே, கல்வெட்டு போன்றவர்கள் யாருக்கும் பதில் சொல்ல தேவையற்ற புனித முற்போக்காளர்கள் என்பதுதான் அவரது இந்த திமிர்த்தனமான அனுகுமுறைக்கு அடிப்படை. இதுதான் அட்சரசுத்தமான குட்டிமுதலாளித்துவ அராஜகவாதம்.

          அராஜகவாதிகளின் புனித கூட்டணியில் இன்னுமோருவர். இவரைப்போன்றவர்கள் மக்கள் உரிமைக்குப் போராடிக் கொண்டிருக்கும் பொழுது ஓரமாய் நின்று எனக்கு எந்த இசத்திலும் நம்பிக்கை இல்லை என்று சுய விளம்பரம் செய்து கொண்டு மக்களுக்கும் அறிவுரை செய்து கொண்டிருப்பார்கள்.

        • நண்பர் கல்வெட்டு,

          கம்யூனிசம் என்ற வெளிநாட்டு சரக்கு எனக்கு தேவையில்லை என்று சொன்னது நீங்கள். அதன் பொருள் உள்நாட்டிலேயே உங்களுக்கு சரக்கு இருக்கிறது அல்லது தேடிக்கொள்வீர்கள் என்பதுவே. எனவே மே தினம் என்ற வெளிநாட்டு சரக்கை புறக்கணிக்கும் கல்வெட்டு அதற்கு மாற்றாக உள்நாட்டு சரக்கை எப்படி தயாரிப்பார் என்று பாவம் பார்த்து தேடிப்பிடித்து உதவி செய்யப் போய் அதை இப்படி உதாசீனம் செய்வது நியாயமா?

          வெளிநாட்டு சரக்கு என்ற பதம் அழுத்தமாக உங்கள் வாதத்தில் வந்து விட்டாலேயே அது சுதேசி நாட்டுப்ப்ற்றின் அடையாளமில்லையா? அதுவும் தவறு என்று சொன்னால் என்ன செயவது? இப்படி சொல்ல்லாம். வெளிநாட்டு சரக்கு அல்லது உள்நாட்டு சரக்கு எதுவும் கல்வெட்டுக்கு தேவைப்படாது. ஏனெனில் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைக்குரிய தீர்வை கல்வெட்டே அவரது சொந்த மூளையில் அவர் மட்டுமே யோசித்து கண்டுபிடித்து கூறுவார். இதைத் தவிர எந்த சிந்தனையும் அவரால் அடிமை சிந்தனை முறையே என்று சாபமிடப்படும். வெளிநாட்டு சரக்கான கம்யூனிசத்தை வைத்து பேசுபவர்கள் கல்வெட்டின் சுதந்திர மனப்பான்மையை புரிந்து கொள்ள முடியாது.

          இது ஓக்கேவா அருமை நண்பர் கல்வெட்டு?

      • .

        //வினவு..
        பாரதப் பண்பாட்டின் பிதாமகன் கல்வெட்டின் பார்வைப்படி இந்தியாவின் தொழிலாளர் தினம் எது?//

        அடங்குங்கள் வினவு.
        உங்கள் தெய்வங்களுக்கு கொடுக்கும் அடைமொழிகள் எனக்குத் தேவை இல்லை. என்னைக் கல்வெட்டு என்றே சொல்லலாம். அது போல உங்களின் பாரத நம்பிக்கையும் அதன் பண்பாட்டுக் குப்பைகளும் எனக்குத் தேவை அல்ல.

        தொழிலாளர் தினம் எனது ஒரு குறியீடு. மேதினம் என்பது உலக அள‌வில் ஒரு பொது அடையாளம் அவ்வளவே. கிராமத்தில் நெல் வயலில் கூலிக்காகச சணடை போட்டு மானபங்கப்பட்டு இறுதியில் வெற்றிபெற்ற எளிய தொழிலாளியின் பிறந்த நாளைக்கூட தொழிலாளர் தின அடையாள‌மாக வைத்துக் கொள்ளும் உரிமை அந்த கிராமத்திற்கு உண்டு. சிக்காகோ தெரியாவிட்டால் அதற்காக உழைப்பின்வலியும் உழைப்பின் மரியாதையும் தெரியாது என்று அல்ல.

        **

        குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் சிவகாசி பட்டாசு மற்றும் பரவலாக கொத்தடிமையாய் இருக்கும் செங்கல் சூளை, கல் குவாரி இப்போது அதிகமாகி வரும் கட்டிடட காண்ட்ராக்ட் ஒப்பந்த தொழிலார்களுக்கு இதே 8 மணி நேர வேலை சாத்தியமாகும்போது கொண்டாடிக் கொள்ளலாம் அந்த நாளை தமிழ் நாட்டின் உழைப்பாளர் தினமாக.

        சிக்காக்கோவில் நடந்துவிட்டது. அதனால் இராம‌நவமி போல மேதினத்தைச் சடங்காகத்தான் செய்வேன் என்றால் செய்து கொள்ளுங்கள் நீங்கள்.

        .
        .

        • கல்வெட்டு …. ””’தமிழக”” பாட்டாளி வர்க்த்துக்காக புரட்சிகர கம்யூனிஸ்டு இயக்கங்களான மகஇகவும் அதன் தோழமை அமைப்புகள் செய்ததை விட அதிகமாக நீங்க என்ன புடுங்கிட்டீங்க என்பதை இங்கே எழுதிவிட்டு பின்னர் க்ம்யூனிசத்தை விமர்சித்தால் அது நேர்மை….. அப்படி எழுதும் அளவுக்கு ஒன்றும் புடுங்கவில்லையா … இருக்கவே  ””புனிதமான””’ லீனா ஒவ்வொன்றாய் பிடுங்கிப்போட்ட யோனி மயிர்… அதில் கம்யூனிச அவதூறு பலூன்களை கட்டி பறக்கவிடுங்கள்…. வருடிவட நகங்கள் காத்துக்கிடக்கின்றன… 3க்கு 4 கோடுகள் இனாமாய் கிடைக்க வாய்ப்பும் உண்டு ….

        • “சிக்காக்கோவில் நடந்துவிட்டது. அதனால் இராம‌நவமி போல மேதினத்தைச் சடங்காகத்தான் செய்வேன் என்றால் செய்து கொள்ளுங்கள் நீங்கள்”.

          உலகத் தொழிலாளர்களுக்கு 8 மணிநேர வேலைநேரத்தை தன் இரத்தம் சிந்தி பெற்றுத் தந்த அந்த சிகாகோ தொழிலாளர்களை இதைவிடவும் கேவலப்படுத்திட முடியாது.

      • அதுதான் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைன்னு ஏற்கனவே இருக்குதே வினவு! 😉

        • கம்யூனிசம்ங்கறத சரக்குங்கிறீங்க, கசாயம்ங்கறீங்க…ம்ம்ம்.பொதுவுடைமை என்ன சீன தொழிற்சாலையில செஞ்சி ‘உற்பத்தி பொருளாயென்ன, குறைஞ்ச விலைக்கு இறக்குமதி பண்ண? அது ஒரு உணர்வு இல்லையா.

  25. “இதே போல ஏசு, நபிகள் பற்றி எதுவும் உள்ளதா? அவர்கள் அவர்களது காலத்தில் சமூக சீர்த்திருத்தவாதிகளாகவே இருந்துள்ளனர்,.

    இப்படி உங்கள் கட்சியின் ஆவணங்கள் சொன்னால் அவற்றை வெளியிடவும். ராமரை கடவுளாக தொழுபவர்கள், ராமயாணன் அறிந்ஜர்கள் ராமன் வாலியை கொன்றது சரியா தவறா போன்ற பட்டிமன்றங்களில் தகராறு செய்யவில்லை. உங்களிடம் இருப்பது வெறி.அது மத வெறியைப் போன்ற வெறி. ஆகவே இப்படி ஒரு படம் போடுவதால் வம்பு வரும் என்று எதிர்பார்த்து போடுகிறீர்கள். அதை அவர்கள் லட்சியம் செய்யாவிட்டால், நாய் குறைக்கட்டும் என்று விட்டு விட்டால் என்ன செய்வீர்கள். இப்படி ஒரு படம் போடுவதால் ராமரின் மீதான நம்பிக்கை பக்தி குறையுமா. பெரியார் அன்று என்ன செய்தார் என்று தெரியும்தானே இன்று தமிழ் நாட்டில் ராமன் புகழ் அதிகரித்து உள்ளது. ராமன் கோயில்கள் இன்றும் கட்டப்படுகின்றன.

  26. நீங்கள் லீனாவுக்கு செய்ததை அவர்கள் மற்றவர்களுக்கு செய்கிறார்கள் … வாழ்க

  27. பாரத பண்பாடு ,தமிழ் பண்பாடு என்று கூச்சளிடுவதேல்லாம் பார்பனீயத்தை தூக்கி நிறுத்தவே.பார்ப்பனீயத்தை தூக்கி நிறுத்திய அயோக்கியர்களில் முதன்மையானவன் ராமன் என்ற பேடி.
    கம்யூனிச கசாயம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தான் இன்றைய உலகம் போய் கொண்டிருக்கிறது.

  28. Arrested, Muthalik bats for BJP, he shared stage with political bigwigs day after attack

    With public outrage mounting over the attack on girls in a Mangalore pub, the Karnataka police today arrested Pramod Muthalik, president of the right wing Sri Rama Sene which claimed responsibility for the attack, along with other key leaders including vice-president Prasad Attavar, deputy convenor Subhash Padil. The BJP and Sangh Parivar sought to distance themselves from the Sri Rama Sene but Muthalik, always at the centrestage of politics, told reporters in Belgaum before his arrest that “the Congress is trying to politicise the situation to give the BJP a bad name” ahead of the Lok Sabha elections.Last Sunday, he addressed the Bahubhashik Brahmin Mahaadhiveshan (multi-lingual Brahmin meet) in Pune that was attended, among others, by Delhi Chief Minister Sheila Dikshit, Swami Ramdev, Suresh Prabhu and three Shankaracharyas. Muthalik spoke on why Brahmins should not marry outside the community fold.

    “We wanted to honour those who have done the community proud with the Brahmkirti Puraskar. While Sheila Dikshit beat all odds to win a second term in Delhi, Bahujan Samaj Party’s Satish Chandra Mishra pioneered the concept of social engineering in north India. Digambar Kamat is today the only other Brahmin CM besides Dikshit. This is the reason we invited them to the function,” Moreshwar Ghaisas Guruji, associated with drawing the invitees’ list for the two-day meet, told The Indian Express. Mishra failed to turn up, Kamat sent a deputy while Dikshit inaugurated the meet.
    Asked why she was there, Dikshit said: “I went there only because (Congress leader and Pune MP) Suresh Kalmadi insisted that I come. I went there only when I was told that Sushil Kumar Shinde had been honoured in one of the earlier meets of the organisation. How can anyone even think of me being a leader of any one community? If various associations like the Vaishya Samaj or some Muslim body invite me, I do go there,” she told The Indian Express.
    Asked if she saw Muthalik there, Dikshit said “as a leader” she meets “hundreds of people everyday”. “Am I expected to know everyone whom I meet? I didn’t know about the man you are talking about. But if he’s the same man behind the vandalism (in Mangalore), he needs to condemned in the strongest possible terms.”
    In Pune, there is talk that Kalmadi and the Congress tried to steal the thunder from the saffron parties by reaching out to the four-lakh Brahmin voter base there via the two-day gathering. Kalmadi was not available for comment.
    Ghaisas Guruji, who runs an institution to impart Vedic education in Pune, said: “While we were organising a local meet in Dharwad (in Karnataka), we were told Muthalik should be invited to the Pune meet because he had been doing good work among the Brahmins. We didn’t known about his background at all. We were taken aback when we learnt the truth about him from television.” — (With ENS reports from Pune, Bangalore)

  29. நண்பர் கல்வெட்டின் காலம் சரியாகப் பிடிபடவில்லை. இன்று உலகம் முழுவதும் மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளித்துவம் நடப்புக்கால பிரச்சினையில்லை என்கிறீர்களா! அல்லது இதற்கு மாற்று கம்யூனிசம் இல்லை என்கிறீர்களா! மக்களுக்கா உழைக்க இறக்குமதிக் கொள்கைகள் தேவையில்லை என்றால் கம்யூனிசம் மக்களுக்கானதல்ல என்கிறீர்களா! நாங்கள் ஒரு இசத்திற்கு பக்தர்கள் என்றால் அந்த இசம் செத்துவிட்டதா! தெளிவாகச் சொல்லவும். உழைக்கும் மக்களை நேசிப்பதின் மூலம்தான் கம்யூனிசக் கருத்துக்கள் பிடிக்க ஆரம்பிக்கும். போகிற போக்கில் ஒரு இந்து சிவசிவ என்று கன்னத்தில் அடித்துக்கொள்வதும் ஒரு கம்யூனிஸ்டு மக்களுக்காக போராடுவதும் ஒன்றா?  புதிய சித்தாந்த்த்தை உருவாக்க வேண்டும் என்றவர் உரையாடல் கம்யூனிச கொள்கை பற்றி அல்ல எனப் பின்வாங்கியது ஏனோ! நடப்புக்கால பிரச்சினைகளை களைய ஒரு புதிய சித்தாந்த்த்தை நீங்கள் உருவாக்கி முன்கை எடுங்களேன், அதில் தண்ணீர் எடுத்துப் பார்ப்போம் தாகம் தீருமா என்று.

    லீனாவிஷயத்தில் வினவின் எதிவினை ஏன் என்பதற்கு ”எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை” என்ற பதிவில் ந்ந்தா என்பவருக்கு வினவு எழுதிய மறுமொழியைப்(8.1) படிக்கவும். மீண்டும்மீண்டும் உருவகப் படுத்த முயல்வதினால் உருவகமாகிவிடாது

  30. //தலைவரின் உருவத்தின் புனிதத்தைக் காக்க முயல்வீர்களா?
    அல்லது
    நம்பும் கொள்கையைச் செயல்படுத்த முயல்வீர்களா?//

    கல்வெட்டு ஒரு பெண் பித்தன், பலரோட வாழ்க்கையை கெடுத்த அயோக்கியன் என்று சொல்லுவதை விடுங்கள், வெறுமனே அவரை பாரதப் பண்பாடு காக்கும் பிதாமகன் என்று சொன்னதற்கே ‘அடங்கு’ என்று கூறி வினவை மிரட்டுகிறார்.

    லீனாவோ உழைக்கும் மக்களையும், கம்யூனிச தலைவர்களையும், போராடுபவர்க்ளையும் செக்ஸ் வெறிபித்த ஆண்குறி என்று எழுதுகிறார். இதற்கு விளக்கம் கேட்டால் அதை தவறு என்றும் மதவாதிகள் என்றும் கூறி முத்திரை குத்துகிறார் கல்வெட்டு. அவருக்கு யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று இருக்கும் சூடு சொரனையற்ற தடித்த தோல்கள் இருக்கலாம். எமக்கு அவ்வாறு கிடையாது.

    இங்கு கூட ராமனை அவ்வாறு குறிப்பிட்டது தவறு என்று சாடி மின்னுது மின்னல் விளக்கம் கேட்ட பொழுது தோழர்கள் கொடுத்துள்ளனர். உழைக்கும் மக்களை அவமானப்படுத்தும் போது அவ்வாறு விளக்கம் கேட்க்கும் உரிமை கூட மக்களுக்கு கிடையாது என்று கூறுகிறார் கல்வெட்டு. நல்ல நியாயம்.

    அராஜகவாதத்தின் மறுமுனை மக்களின் ஜனநாயகத்தைக் கொல்வதே என்பது இங்கு சரியாகத்தான் இருக்கிறது.

  31. இப்படி உங்கள் கட்சியின் ஆவணங்கள் சொன்னால் அவற்றை வெளியிடவும். ராமரை கடவுளாக தொழுபவர்கள், ராமயாணன் அறிந்ஜர்கள் ராமன் வாலியை கொன்றது சரியா தவறா போன்ற பட்டிமன்றங்களில் தகராறு செய்யவில்லை. உங்களிடம் இருப்பது வெறி.அது மத வெறியைப் போன்ற வெறி. ஆகவே இப்படி ஒரு படம் போடுவதால் வம்பு வரும் என்று எதிர்பார்த்து போடுகிறீர்கள். அதை அவர்கள் லட்சியம் செய்யாவிட்டால், நாய் குறைக்கட்டும் என்று விட்டு விட்டால் என்ன செய்வீர்கள். ITHU THAN VINVUUUUUU.. PONGADA MUTTALKALA

  32. மதிப்புக்குரிய வினவு அவர்களுக்கு,
    இந்த சேனா பற்றி ஏன் வெவெவெகு சன பத்திரிகைகளில் உடனடியாக வரவில்லை?
    உங்களைப் போல் தேடுதல் இல்லாமல் இருக்கலாம்.
    போகட்டும்.
    நீங்களே இது பற்றி தகவல் (பிரஸ் ரிலீஸ் போல) தகவல் அனுப்பினால் என்ன?

  33. கலை லீனா விஷயத்தில் ம.க.இ.கவின் செயல்பாடுகள் குறித்து நான் சமாதானமாகி விட்டதாக இன்னும் சொல்லிக் கொள்ள வில்லை. வினவு பதிலளித்திருக்கிறார் அவ்வளவே. இந்த விஷயத்தில் எனது கேள்விகளை உங்களது தோழரிடம் நேரடியாகவே தெரிவித்திருக்கிறேன்.

    கல்வெட்டிற்கும் மற்றவர்களுக்கும் நடந்த உரையாடல் நல்ல வாசிப்பனுபவம். ஆனால் கேள்விக் குறி எடுத்த எடுப்பிலேயே வந்து கல்வெட்டைத் திட்ட ஆரம்பித்ததும்,  கடைசியில் சொன்ன எளக்காரமான பதிலும் இன்னமும் வினவு தளம் அல்லது அனைத்து தோழர்களும் ஆரோக்கியமான விவாதத்திற்கு தகுதியாகி விட வில்லை என்பதை தெளிவாய் உணர்த்துகிறது.

    • நத்தா !!! தோழர் அசுரனின் இந்த மறுமொழியை உங்கள் பாதாரவிந்தத்தில் சமர்பிக்கிறேன்

      /////வேறொன்றுமில்லை நண்பர்களே, கல்வெட்டு போன்றவர்கள் யாருக்கும் பதில் சொல்ல தேவையற்ற புனித முற்போக்காளர்கள் என்பதுதான் அவரது இந்த திமிர்த்தனமான அனுகுமுறைக்கு அடிப்படை. இதுதான் அட்சரசுத்தமான குட்டிமுதலாளித்துவ அராஜகவாதம்.அராஜகவாதிகளின் புனித கூட்டணியில் இன்னுமோருவர். இவரைப்போன்றவர்கள் மக்கள் உரிமைக்குப் போராடிக் கொண்டிருக்கும் பொழுது ஓரமாய் நின்று எனக்கு எந்த இசத்திலும் நம்பிக்கை இல்லை என்று சுய விளம்பரம் செய்து கொண்டு மக்களுக்கும் அறிவுரை செய்து கொண்டிருப்பார்கள்.///////

      பின்  குறிப்பு – கல்வெட்டின் இந்த திமிருக்குத்தான் 
      @@@@@
      கம்யுனிசச் சாமி கும்பிடும் வினவிற்கு..1. இதே போல் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த சிலர் செய்யும் பிரச்சனைக்கு ஜட்டியை விடுங்கள்…தூதரை அல்லது கடவுளை விடுங்கள்..சும்மா ஒரு கட்டிடத்தை படமாகப் இப்படிப்போட்டால் உங்களின் கதி?
      @@@@
      இந்த திமிருக்குத்தான் செருப்படி கிடைத்தது…  கம்யூனிஸ்டுன்னா கரண்டு கம்பம் மாதிரி எந்த நாய் வேணுமின்னாலும் கால தூக்கி ஒன்னுக்கு அடிச்சிட்டு போகலாம் அப்படித்தானே நந்தா.. நீங்க மட்டும் என்ன கேள்விக்குறியையும் வினவு தளத்தையும் தானே கேட்டீங்க கேட்டீங்க.. கல்வெட்டின் திமிரையும் உளரலையும் விமரிசனம் பண்ணலயே..???

      பின் பின் குறிப்பு – கல்வெட்டோட விவாதத்துல என்ன ஆராக்கியமிருந்துன்னு நான் உங்ககிட்ட சத்தியமா கேக்க மாட்டேன்

      பின் பின் பின்குறிப்பு — இன்னும் எத்தனை வருசத்துக்கு அமைப்புக்குள்ளார வராம தோழரிடம் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருப்பது… வயசாயிடப்போவுது நத்தா???? அப்புறம் இதுவும் சரியில்ல அதுவும் சரியில்ல எவனும் சரியில்லன்னு  இங்க கல்வெட்டு பினாத்துற மாதிரி ஆயிடும்.. ஏற்கனவே அதுக்கான சுவடுகள் தெரிய ஆரம்பிச்சாச்சு

      • கேள்விக்குறி,

        பதிவர் நந்தா நம்முடன் சில கருத்துக்களில் முரண்படுகிறார் என்பதாலேயே அவரை நீங்கள் விமர்சிக்கிற முறை, அவருக்கு மட்டுமல்ல, எனக்கும் எரிச்சலூட்டுவதாக உள்ளது. அவர் உரையாட, விவாதிக்க விரும்புகிறார். உங்கள் அணுகுமுறையோ உரையாடலை கசப்பானதாக மாற்றி, நம்மிடம் பேசிப் பிரயோசனமில்லை என அவர் உரையாடலை நிறுத்திக் கொள்ளவே வழி செய்யும். நீங்கள் உங்கள் அணுகுமுறையை மனம் திறந்து பரிசீலிக்க வேண்டுகிறேன். வினவு மற்றும் வேறு சில தோழர்களின் பொறுப்புணர்ச்சியுடன் கூடிய, கருத்து வேறுபாடுகள் கொண்ட வாசகர்களுடன் சாத்தியமான வரை ஒரு உரையாடலை கட்டியமைக்க முயல்கிற, அனாவசியமான சொற்களற்ற கருத்துச் செறிவான விவாத முறையை நீங்கள் அவர்களது பின்னூட்டங்களிலிருந்து பரிசீலித்து, உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன்.

      • இது சரி இல்லை கேள்விகுறி இன்னும் நீங்கள் பதில் சொல்லும் பக்குவம் வரவில்லை என்றே இருகிறீர். அமைப்பு என்பதால் அது சொல்லும் எல்லாம் சரி ஆகி விடாது.பிறகு மதத்திற்கும் அமைப்புக்கும் வித்தியாசம் கிடையாது.எப்படி சாமி கும்பிட வீட்டில் சொல்லி தண்டர்களோ அதே போல் இப்படி தன இரக்க வேண்டும் இதை தன செய்ய வேண்டும் என்பதும் கம்யூனிஸ்டு ஆகாது

    • நந்தா, நீங்கள் சமாதானம் ஆகிவிட்டதாக நானும் சொல்லவில்லை. வினவின் அம்மறுமொழியை படித்துப் பாருங்கள் என்றுதான் நண்பர் கல்வெட்டிடம் கூறினேன்.

  34. ///ஆனால் கேள்விக் குறி எடுத்த எடுப்பிலேயே வந்து கல்வெட்டைத் திட்ட ஆரம்பித்ததும்,  கடைசியில் சொன்ன எளக்காரமான பதிலும் இன்னமும் வினவு தளம் அல்லது அனைத்து தோழர்களும் ஆரோக்கியமான விவாதத்திற்கு தகுதியாகி விட வில்லை என்பதை தெளிவாய் உணர்த்துகிறது/// என்ன இப்புடி சொல்லிபுட்டீக என்னுடைய அனுபவத்திலிருந்து நிறைய உதரானங்களை சொல்ல முடியும் நான் முதன் முதலில் பின்னூட்டம் சீமான் விஷயத்தில் எழுதியபோது அய் கணினியில் என்னுடைய பெயர் தெரிகிறது ஹைதருன்னு என்னுடைய பெயர் தெரிகிறது அப்புடின்னு முதன்முறையாக பார்த்து சந்தோஷப்பட்டேன் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை பல்லி அப்புடின்னு சொல்லி ஒருவர் என்னுடைய எழுத்து பிழைகளை பார்த்து இப்புடி திட்டினார் 
    ///உன்னை மாதிரி அரைகுறை அறையவேககடுல்லாம் இருந்தா தமிழ் தேசியம் எங்க?// அதற்கு பிறகு வினவு போன் நம்பருக்கு நான் கூப்பிட்டு அப்பவியாக என்ன வினவு அண்ணே இப்புடி திட்டுறாங்க எனக்கு எழுத்து பிழை வருகிறது நான் பின்னூட்டம் எழுதமாட்டேன்னு சொன்ன போது வினவு சொன்னது எழுத்து பிழை பிரச்சனை இல்லை தோழரே துனிந்து எழுதுங்கள் நாங்கள் சாமளித்து படித்துக்கொள்கிறேம் என்று சொன்ன வார்த்தைகள் என்னை தகுதியடைய வைத்தன வினவுத்தளம் எற்படுத்தியிருக்கின்ற எழுத்து சுகந்திரம் மிகப்பெரிய புரட்சியாகவே நான் பார்க்கிறேன்.

  35. கேள்விக்குறி,
    ஏற்கெனவே சொன்ன கருத்துக்களோடு கூடுதலாக சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன். ஒரு ஆதரவாளருக்கும், ஒரு தோழருக்குமான வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்வது அவசியம். ஒரு தோழர் என்பவர் நமது எல்லா நிலைப்பாடுகள், கருத்துக்களுடனும் உடன்படுகிறவர். அதனால்தான் அவர் தோழராக இருக்கிறார். ஒரு ஆதரவாளர் என்பவர் நமது பல நிலைப்பாடுகளை ஆதரிக்கும் வேளையில், சில நிலைப்பாடுகளை எதிர்க்கலாம். மற்றொரு ஆதரவாளர் சில நிலைப்பாடுகளை ஆதரிக்கும் வேளையில், பல நிலைப்பாடுகளை எதிர்க்கலாம். எனினும், இருவரும் ஆதரவாளர்களே. இவ்வாறு நமது எல்லா நிலைப்பாடுகளுடனும் ஒத்துப் போகாத அதே வேளையில், நமது பல்வேறு நிலைப்பாடுகளை ஆதரிப்பதால்தான் ஒருவர் ஆதரவாளர் என்ற நிலையில் நிற்கிறார். எனவே, ஒரு ஆதரவாளரை நாம் விமர்சிப்பதற்கும், நமது எல்லா நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும் நிராகரிக்கும் ஒரு எதிரியை விமர்சிப்பதற்கும் துலக்கமான வேறுபாடு இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

    ஒரு ஆதரவாளர் எத்தகைய முறையில் நம் மீது விமர்சனம் முன்வைக்கிறார் என்பதிலிருந்து அவர் குறித்த அணுகுமுறையை தீர்மானிக்க வேண்டுமேயன்றி, ஒரு விமர்சனம் வைக்கிறார் என்பதற்காகவே, எதிரி மீதான கருத்துக் கூறலில் நாம் அவசியம் பயன்படுத்த வேண்டிய கடுமை, எள்ளல், குத்தல், கிண்டல் ஆகியனவற்றை ஆதரவாளரிடம் பயன்படுத்தக் கூடாது. ஒரு ஆதரவாளர் ஆளும் வர்க்க கருத்தை, எதிரியின் கருத்தையே கூட கூறலாம். ஆனால், குறிப்பிட்ட விசயத்தில் அவர் எதிரியின் கருத்தை கொண்டிருப்பதால், அவர் அனைத்து விசயங்களிலுமே நமக்கு மாறான கருத்துக்களையே கொண்டிருக்கிறார் என அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது.

    ஐக்கியம்-போராட்டம் என்ற அடிப்படையில்தான் ஆதரவாளர்களை அணுக வேண்டும். போராட்டம் எனும் அம்சத்தை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவது மட்டுமல்ல, எதிரியுடன் நிகழ்த்துவது போன்ற முறையில் போராட்டத்தை நடத்துவது மிகவும் கேடானதும், தவறானதுமாகும்.

    பதிவர் நந்தா எனக்கு நேரடி அறிமுகமில்லை. ஆனால், வினவில் அவரது பின்னூட்டங்களை தொடர்ந்து கவனித்து வரும் எவரும் அவர் நமது ஆதரவாளர் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். வினவின் எந்தக் கருத்தை ஆதரித்தாலும், அவர் அதனைப் பின்னூட்டமாக, சில சமயங்களில் முதல் ஆளாகக் கூட பதிவு செய்திருக்கிறார். அதே வேளையில் அவர் மாறுபடும் கருத்துக்களை, மனம் திறந்த முறையில், அரசியல் நேர்மையோடு உடனடியாக பதிவு செய்திருக்கிறார். இதுதான் அவரது நடைமுறை. இது மட்டுமல்ல, நமது கருத்துக்களில் மாறுபாடு கொள்வதும், அதனை பகிரங்கமாகத் தெரிவிப்பதும் ஒரு ஆதரவாளரது உரிமையாகும். சில ஆதரவாளர்கள் தமது எல்லாக் கருத்து மாறுபாடுகளையும் பகிரங்கமாக தெரிவிக்கவும், உரையாடவும் தயங்கலாம். சிலர் பகிரங்கமாக தெரிவிக்கவும், விவாதிக்கவும் செய்யலாம். சிலர் பின்னூட்டமாக இடலாம். சிலர் தனிமடலாக அனுப்பலாம். சிலர் தோழர்களிடம் நேரடியாக தெரிவிக்கலாம். இது அவர்களது விருப்பம் சார்ந்தது. ஆனால், இவ்வாறு விவாதிப்பது, விமர்சிப்பது அவர்களது உரிமை என்பதை நாம் நிபந்தனையின்றி அங்கீகரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

    எல்லா விவாதங்களிலும் ஒரு ஆதரவாளர் நமது கருத்துக்களை விவாத முடிவில் ஏற்றுத்தான் தீர வேண்டும் எனக் கட்டாயமில்லை. ஒரு நட்பு முரண்பாடு என்ற அடிப்படையில், அவர் தமது கருத்தில் தொடர்ந்து நீடிக்கலாம். ஆனால், அவர் ஏற்றுத்தான் தீர வேண்டும் என்ற தோரணையில், அவசியத்திற்கும் மீறி விவாதிப்பது, சொன்ன கருத்துக்களையே திரும்பத் திரும்பச் சொல்வது, கிண்டல் செய்வது, குத்தலாக, ஏளனமாகப் பேசுவது ஆகியனவற்றைச் செய்தால், நட்பு முரண்பாடு பகை முரண்பாடாகி அவர் நம்முடன் உரையாடலை நிறுத்திக் கொள்வது மட்டுமல்ல, அவர் நமக்கு எதிரான நிலைக்கும் சென்று விடுவார். மேலும், ஒரு தோழர் கைக்கொள்ளும் இந்த அணுகுமுறையின் விளைவாக, ஒட்டுமொத்த அமைப்புமே இத்தகைய அணுகுமுறையைத் தான் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கும் அவர் தள்ளப்பட்டு விடுவார். எனவே, இந்த ஒட்டுமொத்தக் கண்ணோட்டத்தில் நீங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று கோருகிறேன்.

    இந்த கருத்துக்களை உங்களை மாத்திரம் மனதில் வைத்து எழுதவில்லை. வேறு சில தோழர்களும் வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு அளவுகளில் இப்போக்கை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துமீறல் நடைபெற்ற இடங்களில், தனது சாத்தியத்தையொட்டி வினவு இதனை சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறது. எனவே, நீங்கள் வினவின் பல்வேறு விவாதங்களில் உற்சாகத்தோடு பங்கேற்கும் தோழர் என்ற முறையில் உங்கள் மீது உரிமையோடு இந்த விமர்சனத்தை முன்வைக்கிறேன்.

    உங்கள் விமர்சன முறையை ஒரு வரியில் சொல்வதானால், “மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதாகும்.” இந்த விமர்சன முறையின் மூலம், ஊசலாடும் ஆதரவாளர்களை நாம் இழப்பதும், நமக்குள் மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுவதும் தான் நிகழும். எனவே, தங்கள் விமர்சன முறையின் மீதான எனது விமர்சனத்தை, தங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ளாமல், நிதானமாக பரிசீலிக்க வேண்டுகிறேன்.

    • நந்தாவுக்காக களத்தில் இறங்கி இவ்வளவு பெயிய விமர்சனம் எழுதியிருக்கும் தோழர் போராட்டத்திற்கு நன்றி. உங்களைப்போன்ற அனுபவஸ்தர்கள்  வினவு தளத்தில் ஜல்லியடிக்கும் கம்யூனிச எதிரிகளுக்கு எதிராகவும் இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு எதிர்வினை அளித்தா ல்என்னைப் போன்றவர்கள் மல்லாக படுத்தோ குப்புற படுத்தோ துப்புற வேலை இருக்காது.

      நன்றி 

      • ஆதரவாளர்களை அணுகும் போக்கில்…போராட்டம் தோழரின் கருத்து சரியென்று கருதுகிறேன்.

        விவாதிக்கும் பொழுது…அணுகும் போக்கு எப்படியிருக்க வேண்டும் என்று வினவு பலமுறை வழிகாட்டியிருக்கிறார்.

        முன்பு வினவின் வாசகராய் இருந்தவர்.. இப்பொழுது அமைப்பில் வேலை செய்கிறவர்… வினவின் பின்னூட்டங்களில் விவாதிக்காமல்…’அடிக்கிற போக்கை’ சொல்லி.. இந்த போக்கு மாற்றப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டார். இந்த அனுபவத்தை வினவிற்கு மெயிலில் தெரியப்படுத்த சொல்லி, அப்பொழுது தெரிவித்தேன்.

        கம்யூனிச எதிரிகளை நீங்கள் தினமும் எதிர்கொள்வதினாலேயே…ஆதரவாளர்களை விமர்சிக்கும் போக்கை கேள்வி கேட்க கூடாது என்பீர்களா!

        • இல்லீங்க குருத்து நான் ‘என்னை’ கேள்விகேட்கக்கூடாதுன்னெல்லாம் சொல்லல,
          நந்தாவுக்கான காக்டெயில் தேவதை எதிர்வினையை விட நான் ஒன்னும் ”துப்பல்” அளவுகோலின் படி காஆஆஆரித்துப்பும் அளவிலான பதிலை நந்நாவுக்கு நான் எழுதவில்லை என்பதை மட்டும் உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்

    • விவாதத்தில் முகம் கோணுச்சி மூக்கு கோணுச்சின்னு எல்லாம் போக முடியாது. இந்த நந்தா என்பவர் எப்போதாவது கருத்து வேறுபாட்டுடன் ஒரு பின்னூட்டத்தை போடுவார் அதன் பிறகு டீசன்டாக போய் விடுவார். பிறகு வரவே மாட்டார். நான் இனி இங்கு பின்னூட்டம் போட மாட்டேன் என்று அறிவிக்கவும் வேறு செய்வார். அவர் என்றைக்கும் விசயத்தில் நின்று விவாதித்ததும் இல்லை. இவர்களுடைய மனம் கோணாதபடி எல்லாம் விவாதிக்க முடியாது என்ப‌தை முதலில் போராட்டம் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் இதற்காக இவ்வளவு பெரிய பின்னூட்டத்தை போடும் போராட்டம் அவர்கள். கேள்விக்குறி தன்னந்தனியாக நின்று விவாதித்த போதெல்லாம் எங்கே போனார் ?

      எனவே இறுதியாக நான் கூற வருவது என்ன என்றால். விவாதத்தில் இப்படி தான் சொல்ல வேண்டும் அப்படி தான் சொல்ல வேண்டும் என்றெல்லாம் இரு தரப்பிடமும் எதிர்பார்க்க முடியாது. யாருடைய மனமும் கோணாதபடி விவாதிக்கவும் முடியாது. பிளாக் உலகில் அசுரனிலிருந்து இது தான் அனுபவம். வேண்டுமானால் தோழர் போராட்டம் அவர் கூறுவதைப்போல விவாதித்து காட்டட்டுமே.

      • // இந்த நந்தா என்பவர் எப்போதாவது கருத்து வேறுபாட்டுடன் ஒரு பின்னூட்டத்தை போடுவார் அதன் பிறகு டீசன்டாக போய் விடுவார். பிறகு வரவே மாட்டார். நான் இனி இங்கு பின்னூட்டம் போட மாட்டேன் என்று அறிவிக்கவும் வேறு செய்வார்.//

        திருவாளர் கரன் என்னை உங்களுக்குத் தெரியுமா? இங்கே வினவு தளத்தில் இனி பின்னூட்டம் இட மாட்டேன் என்று எங்கே சொல்லி இருக்கிறேன் என்று ஒரே ஒரு இடத்திலாவது காட்டுங்களேன். நானாவது அதைப் பார்த்து திருந்திக் கொள்கிறேன். இப்போது என்றில்லை இதற்கு முன்பும் பல முறை தோழர்களின் பின்னூட்டத் தரம் குறித்து விமர்சித்திருக்கிறேன். என்றுமே தோழர் கேள்விக் குறி விவாதத்திற்குகந்த மொழியிலோ, குறைந்தபட்சம் அதற்கேற்ற விஷய அறிவுடனோ பேச முற்பட்டதில்லை என்பதை தெளிவாய் சொல்லிக் கொள்கிறேன். 
        கல்வெட்டுடன் அசுரன் செய்தது விவாதம். கேள்விக் குறி செய்ததற்குப் பெயர் விவாதமா?  முதலில் கேள்விக்குறி விவாதம் செய்யப் பழகிக் கொள்ளட்டும். அதற்குப் பின்பு அது சூடானதாகவோ, காட்டமான ஒன்றாகவோ இருக்கட்டும்.

  36. ///உங்கள் விமர்சன முறையை ஒரு வரியில் சொல்வதானால், “மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதாகும்.”///தோழர் போராட்டம் இது ரோம்ப ஒவாரக தெரிகிறது 

  37. போராட்டம் அவர்களுக்கு உங்கள் பின்னூட்டம் சரியாக இருக்கிறது

    • தியாகு இது உங்க சொந்த பின்னூட்டமா இல்ல அசாதி சுகுணா திவாகர் எழுதிக்கொடுத்ததா?

      • கேள்விக்குறி உங்கள் புரிதலுக்கு நன்றி
        இப்படியே இருங்க சூக்கிரம் புரட்சி வந்துடும்

        • அத பத்தி நீங்க ஏங்க கவலை படுறீங்க அது அதுக்காக வேலை செய்யுறவங்களோட கவலை… தெருவுல வேடிக்க பாத்தவங்க கருத்தையெல்லாம் யாரும் இங்க கேக்கல

        • அவ்வப்போது தோழர்களுக்கிடையில் எழும் சிறு சிறு கருத்துவேறுபாட்டு பிரச்சனைகளை பயன்படுத்து இப்படியெல்லாம் பின்னூட்டம் போட்டு கேவலமான முறையில் கோஷ்ட்டி சேர முயர்சிக்கும் உன்னை நினைத்து உனக்கே வெட்கமாக இல்லையா தியாகு ?

        • தோழர்கள் இரண்டுப்பட்டல் ஒனக்கு கொண்டாட்டம் இன்னைக்கி ஒனக்கு மகிழ்ச்சியான நாளுன்னு நேனைக்கிறேன்

  38. //தெருவுல வேடிக்க பாத்தவங்க கருத்தையெல்லாம் யாரும் இங்க கேக்கல//

    ஏனுங்க உள்ள இருப்பவங்க சொன்னாலும் கேட்கமாட்டேன்
    தெருவுல போரவன் சொன்னாலும் கேட்கமாட்டேன்னு
    கிளம்பிட்டீக

    நடத்துங்க நடத்துங்க

  39. //முறையில் கோஷ்ட்டி சேர முயர்சிக்கும் உன்னை நினைத்து உனக்கே வெட்கமாக இல்லையா தியாகு ?//

    கோஸ்டி சேர்ந்து என்னத்த கிளிக்க போறோமுனு சொல்லுங்க பனியன் கம்பெனி

    ஏற்கனவே இருக்கிற கோஸ்டு ஒன்னும் பண்ணல புதுசா எதுக்கு கோஸ்டி புடலங்காய் எல்லாம்

    ஆனா பாருங்க போராட்டம் சொன்ன கருத்துக்கு மட்டும் தெளிவா ஒரு மடல் வராது உங்க நண்பர்களிடம் இருந்து

    அவ்ளோதான் இயக்கவியல் பூர்வமான சிந்தனை அவர்களுக்கு

    மிச்சமெல்லாம் வாய்க்கு வந்தமாதிரி திட்டுவதுதான்
    இப்போ வினவு வந்தார்னா நான் போட்ட மடலெல்லாம் தூக்கி குப்பையில போடுவாரு

    ஆனா கேள்விகுறியின் சம்பந்தமில்லா மறுமொழிகள் மட்டும்
    துருத்தி கொண்டு நிக்கும்
    “அதான் பாட்டாளி வர்க்க ” சர்வாதிகாரம்

  40. //அராஜகவாதத்தின் மறுமுனை மக்களின் ஜனநாயகத்தைக் கொல்வதே என்பது இங்கு சரியாகத்தான் இருக்கிறது.//

    அசுரன் சரியா சொன்னார் அதைத்தான் கேள்விக்குறி செய்துட்டு இருக்கார்

    அசுரனுக்கு ஒரு விசயம் தெரியலை அவர்தான் அராஜகவாதி மாதிரி பேசுகிறார் என்ற விசயம்தான்

  41. //உங்களைப்போன்ற அனுபவஸ்தர்கள் வினவு தளத்தில் ஜல்லியடிக்கும் கம்யூனிச எதிரிகளுக்கு எதிராகவும் இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு எதிர்வினை அளித்தா ல்என்னைப் போன்றவர்கள் மல்லாக படுத்தோ குப்புற படுத்தோ துப்புற வேலை இருக்காது.//

    //இவ்வளவு பெரிய பின்னூட்டத்தை போடும் போராட்டம் அவர்கள். கேள்விக்குறி தன்னந்தனியாக நின்று விவாதித்த போதெல்லாம் எங்கே போனார் ?//

    கேள்விக்குறியும், கரனும் முன்வைத்த இந்தக் கருத்துக்களுக்கு நான் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். ஆம், நான் வினவின் எல்லாப் பின்னூட்ட விவாதங்களிலும் கருத்து சொல்வதில்லை. மேலும், பின்னூட்டமிடும் தெளிவாக அறியத்தக்க, முற்போக்கு முகமூடிணியந்த பலவண்ண கம்யூனிச எதிரிகளுக்கும் எதிராக எல்லா சமயங்களிலும் நான் விவாதத்தில் ஈடுபடுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்:

    1.ஜல்லியடிக்கிற எதிரிகள் பெரும்பாலும் தாங்களாகவே அம்பலப்பட்டு விடுகிறார்கள். ஆனால், ஆழமான கருத்தை முன்வைப்பது போல நடிக்கும், கம்யூனிச வெறுப்பில் வெந்து கொண்டிருக்கும் எதிரிகளுக்கு வினவு, அசுரன், இப்பொழுது இல்லையானாலும் சில காலம் முன்பு வரை ஏகலைவன், மா.சே போன்ற தோழர்கள் சாட்டையடி பதில்களை முகத்திலறைந்தாற் போல அளித்திருக்கிறார்கள். எனவே, நான் அதற்கு மேலும் கருத்து சொல்வது தோழர்கள் சொல்வதை வழிமொழிவது, அல்லது மீண்டும் சொல்வது என்பதாகவேதான் இருக்கும் என்பதால் நான் கருத்து சொல்லாமல் இருந்து விடுகிறேன். சில சமயங்களில் ரதி, சந்தனமுல்லை, வால்பையன் போன்ற நமது ஆதரவாளர்கள் கூட எதிரிகளுக்கு சரியான முறையில் பதிலளித்திருக்கிறார்கள். எனவே எனது நிலை சரியானது என்று கருதுகிறேன். அதே வேளையில், இதன் பொருள் கேள்விக்குறி போராடக் கூடாது, விவாதிக்கக் கூடாது என்பதல்ல. மாறாக, அவரது உற்சாகத்தை நான் அங்கீகரிக்கிறேன் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.அதே வேளையில் அவரிடம் உள்ள புரிதல் குறைபாடுகளை, தவறுகளை சுட்டிக் காட்டுவது சக தோழர் என்ற முறையில் எனது கடமை என்று கருதியே எனது விமர்சனத்தை முன்வைத்தேன். அவ்வாறு முன்வைத்தது சரியானது என்றும் கருதுகிறேன்.

    2. சில சமயங்களில், மிக அரிதாக, நான் சில விசயங்களில் எதிரிகளை வினவு, அசுரன் முதலான தோழர்கள் குறிப்பிடாத மற்றொரு கோணத்திலிருந்து திரை கிழிக்க எண்ணியும், எனது அலுவலக வேலை நெருக்கடிகள், அமைப்பு வேலைகள் காரணமாக ஏற்படும் நேரமின்மையின் காரணமாக, அவ்வாறு செய்ய இயலாமல் போகிறது. பின்னர் அந்தப் பதிவில் விவாதம் நின்று போன நிலையில், காலம் கடந்து பின்னூட்டமிடுவது பயனற்றது எனக் கருதி கைவிட்டிருக்கிறேன். இது எனது பணிச்சூழலின் விளைவு. இதனைத் தவிர்க்கவியலாது என்று கருதுகிறேன்.

    //நந்தாவுக்கான காக்டெயில் தேவதை எதிர்வினையை விட நான் ஒன்னும் ”துப்பல்” அளவுகோலின் படி காஆஆஆரித்துப்பும் அளவிலான பதிலை நந்நாவுக்கு நான் எழுதவில்லை என்பதை மட்டும் உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்//

    1. காக்டெயில் தேவதைக் கவிதை நந்தாவுக்காக எழுதப்படவில்லை. கவிதையின் கருப்பொருள் அல்லது ஹீரோயின் லீனா மணிமேகலைக்காகவே எழுதப்பட்டது. இதனை லீனா மணிமேகலையே தனது வரலாற்றுப் புகழ்பெற்ற கூட்டத்தில், எனது பெயரையும், அவ்வாறே கவிதை எழுதிய தோழர் கலகத்தின் பெயரையும் குறிப்பிட்டு ‘அங்கீகரித்தார்’. லீனாவுக்கு புரிந்ததை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருப்பது வருத்தமாக இருக்கிறது.

    லீனா விசயத்தில், நந்தா முதலான பிற ஆதரவாளர்களின் ஊசலாட்டத்தை,

    “கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கவலைப்படாதே,
    மிஞ்சிப் போனால்
    எழுதப்படும் ஒரு கட்டுரையையும்,
    பூதக் கண்ணாடியால் சலிப்பதற்கு
    நீதி தேவன்கள் காத்திருக்கிறார்கள்.
    கேள்விகளால் துளைத்து விடுவார்கள்.

    “இதற்கு ஆதாரம் என்ன? அதற்கு ஆதாரம் என்ன?”
    “ஏன் கொச்சை வார்த்தைகள்?”
    “நீங்களா இப்படி?”

    சட்டம் சட்டம்தான்,
    முகத்தில் சிறுநீர் கழித்தாலும்,
    கண்ணியவான்கள் வாழும் நாட்டில்
    கண்டபடி பேசக் கூடாது.
    கண்ணியமாக துடைத்து விட்டு,
    கண்ணியமாகத்தான் முறையிட முடியும்.” என்ற வரிகளின் மூலம் தோழமையோடு கண்டிப்பதையும் அந்தக் கவிதை கைவிட்டு விடவில்லை என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

    2. கேள்விக்குறியும், கரனும் எனது விமர்சனத்தை பரிசீலிப்பதில் அடிப்படையிலேயே ஒரு தவறு இருப்பதாகக் கருதுகிறேன். நான் முன்வைத்த விமர்சனம் நமது ஆதரவாளர்களுடனான நமது அணுகுமுறை பற்றியது. நமது எதிரிகளைக் குறித்த அணுகுமுறையில் நான் கருத்து மாறுபாடு இருப்பதாக நான் கூறவில்லை. மாறாக, “ஒரு ஆதரவாளர் எத்தகைய முறையில் நம் மீது விமர்சனம் முன்வைக்கிறார் என்பதிலிருந்து அவர் குறித்த அணுகுமுறையை தீர்மானிக்க வேண்டுமேயன்றி, ஒரு விமர்சனம் வைக்கிறார் என்பதற்காகவே, எதிரி மீதான கருத்துக் கூறலில் நாம் அவசியம் பயன்படுத்த வேண்டிய கடுமை, எள்ளல், குத்தல், கிண்டல் ஆகியனவற்றை ஆதரவாளரிடம் பயன்படுத்தக் கூடாது. ஒரு ஆதரவாளர் ஆளும் வர்க்க கருத்தை, எதிரியின் கருத்தையே கூட கூறலாம். ஆனால், குறிப்பிட்ட விசயத்தில் அவர் எதிரியின் கருத்தை கொண்டிருப்பதால், அவர் அனைத்து விசயங்களிலுமே நமக்கு மாறான கருத்துக்களையே கொண்டிருக்கிறார் என அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது.” என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். எனது விமர்சனத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே “அவசியம் பயன்படுத்த வேண்டிய” என்ற சொற்களை அழுத்தம் தந்து குறிப்பிட்டிருந்தேன். எனவே, எனது விமர்சனத்தை கேள்விக்குறியும், கரனும் சற்று நிதானமாகப் பரிசீலிக்கவும், விமர்சனத்தின் உள்ளடக்கத்தை உள்வாங்கிக் கொண்டு பதிலளிக்கவும் வேண்டுகிறேன்.

  42. நந்தா ஒரே ஒரு முறை உங்களோடு லைப்பாய் ரேஞ்சுக்கு ஆரோக்கியமாய் விவாதிக்க முயற்சித்தேன் அதுக்கு பதிலேதும் சொல்லாமல் உங்க தோழரிடம் நேரடியாக பேசிட்டேன்னு ஓடிவிட்டீர்கள் https://www.vinavu.com/2010/01/06/leena/#comment-15256 

    உங்களோடு ஆராக்கியமாய் விவாதிக்க முயற்சி எடுக்கும் வினவு உங்களுக்கு எழுதிய கீழ்வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லும் நேர்மையில்ல்லாத நீங்கள் 

    https://www.vinavu.com/2010/04/17/pala-rising/#comment-20870
    https://www.vinavu.com/2010/04/17/pala-rising/#comment-20871
    https://www.vinavu.com/2010/04/17/pala-rising/#comment-20872
    இங்கே வந்து
    https://www.vinavu.com/2010/05/14/sriramsena-camera/#comment-23080 

    @@@கலை லீனா விஷயத்தில் ம.க.இ.கவின் செயல்பாடுகள் குறித்து நான் சமாதானமாகி விட்டதாக இன்னும் சொல்லிக் கொள்ள வில்லை. வினவு பதிலளித்திருக்கிறார் அவ்வளவே. இந்த விஷயத்தில் எனது கேள்விகளை உங்களது தோழரிடம் நேரடியாகவே தெரிவித்திருக்கிறேன்.@@@

    அதாவது ஆரோக்கியமான விவாதத்தை உங்களிடம் எடுக்க முற்படுவோரிடம் விவாதிக்காமல் ஓடிவிடுவதை ஒரு கலையாக வளர்த்துவைத்துள்ளீர்கள், அதற்கு தோழரிடம் நேரடியாக பேசிவிட்டேன் என்ற கேவலமான காரணம் வேறு. 
    இப்படியாப்ட்ட நோயாளி விவாதிப்பாளரான உங்களுக்கு ஆரோக்கியமான விவாதங்களைப்பற்றி பேசுவதற்கு என்ன தகுதியிருக்கிறது??? 

    இதில் என்னைப்பற்றி இப்படி ஒரு கருத்து வேறு@@@என்றுமே தோழர் கேள்விக் குறி விவாதத்திற்குகந்த மொழியிலோ, குறைந்தபட்சம் அதற்கேற்ற விஷய அறிவுடனோ பேச முற்பட்டதில்லை என்பதை தெளிவாய் சொல்லிக் கொள்கிறேன். முதலில் கேள்விக்குறி விவாதம் செய்யப் பழகிக் கொள்ளட்டும். அதற்குப் பின்பு அது சூடானதாகவோ, காட்டமான ஒன்றாகவோ இருக்கட்டும்.@@@ 

    ”உங்களைப்போன்ற”  Champions of Mediocrity (அற்பவாதிகளின் அரசன்?) யின்/னின் சான்றிதழை வாங்குவது உங்களோடு விவாதிக்கும் ‘தோழருக்கு’ வேண்டுமானால் முக்கியமாக இருக்கலாம்.. எனக்கில்லை.. என்னைப்பொறுத்தவரை உங்களுக்கும் கல்வெட்டிற்கும் வித்தியாசமே கிடையாது.. அவரும் கட்டுரைகளை பாராட்டி பின்னூட்டம் எழுதியிருக்கிறார். வினவின் படைப்புகளை அவர் தளத்தில் பிரசுரித்திருக்கிறார் அதற்காக அவறது அவதூறுக்கும் உங்களது செயலின்மைக்கும் சலுகையெல்லாம் வழங்க முடியாது. உங்கள் (பன்மை)  அறிவு சீவித்தனத்தையெல்லாம் நீங்கள் மொக்கை பின்னூட்டம் போடும் பிற தளங்களில் போய் காண்பிக்கவும்.. வினவு இரும்படிக்கும் இடம் இங்கே முதுகெலும்பற்ற மண்புழு வகையறாக்களுக்கு வேலையில்லை.. you know invertebrates..the ones which lacks the spine !

    இறுதியாக உங்களைப் போன்றவர்களையெல்லாம் ஆதரவாளர்கள் என்று கருதும் தோழர்களுக்கு – தயவுசெய்து அமைப்பிடம் ஆதரவாளர்கள் என்பதற்கு என்ன விளக்கம் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வினவின் பதிவுகளில் நன்றாக இருக்கிறது என்று பின்னூட்டமிடும் நண்பர்கெல்லோரும் ஆதரவாளர்கள் என்றால் இன்னும் 2 வருடங்களில் நமது அமைப்புக்கு 1லட்சம் ஆதரவாளர்கள் கூட கிடைக்கலாம். 

    • “இறுதியாக உங்களைப் போன்றவர்களையெல்லாம் ஆதரவாளர்கள் என்று கருதும் தோழர்களுக்கு – தயவுசெய்து அமைப்பிடம் ஆதரவாளர்கள் என்பதற்கு என்ன விளக்கம் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.” என்று எனக்கு கட்டளையிட்டுள்ளீர்கள் அல்லது கருத்து சொல்லியுள்ளீர்கள். அவசியம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். தாங்கள் தங்களது விமர்சன முறை, தற்போது தாங்கள் எனது விமர்சனத்திற்கு அளித்து வரும் பதில்கள் ஆகியனவற்றை அமைப்பில் முன்வைத்து அமைப்பின் கருத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

  43. யார் ஆதரவாளர் என்றும் யார் உறுப்பினர் என்றும் பேசுவதற்கு ஏற்ற இடம் இதுவா … ஒரு பின்தங்கிய உற்பத்தி முறை நிலவும் நாட்டில் தோன்றும் குட்டி பூர்ஷ்வா வர்க்கத்திலிருந்து வரும் பாட்டாளி வர்க்க முன்னணிப்படைக்கு இது போன்ற கோட்பாடற்ற வாத்த்தில் சிக்கி திணறுவது ஒன்றும் புதிதல்ல

    . ஆனால் அதன் ஒரு இறுதிப்பகுதி தன்னளவில் அமைப்புகளுக்கு எதிரான சிறுகதையாடலுக்குள் திரும்புவதை அப்படை புரிந்து வினையாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.

    வினவு செய்ய வேண்டிய வினையை தன்வினையாக்குவதற்கு இப்பெரியவர்கள் தயாராக உள்ளனரா எனத் தெரியவில்லை..

  44. .

    வினவு,கலை,அசுரன்,கேள்விக்குறி ..அனைவருக்கும்….

    1.
    “மதம்” “இசம்” எதுவாக இருந்தாலும் அதை அப்படியே எல்லா இடத்திலும் நடைமுறைப்படுத்த முடியாது. இருக்கும் இடம், சூழல், தேவை பொறுத்து தேவையானவைகளைப் பொறுக்கி நமக்கான ஒன்றை நாமே சமைக்க வேண்டும். ஏதோ ஒரு நாட்டில் ஒன்று நடந்துவிட்டது என்பதற்காக ஒரு வரி மாறாமல் அப்படியே பேசிக்கொண்டு இருப்பதைததான் இறக்குமதிச் சரக்கு என்று நான் சொல்வது.

    குரானில் சொன்னது , “நேற்று இன்று நாளை” எல்லாத்துக்கும் பொறுந்தும் என்று சொல்வதும் , லெனின்,மார்க்ஸ்…. இன்னபிற தலைவர்கள் சொன்னது “அன்றைக்கும் இன்றைக்கும் சரி . மாற்றம் தேவை இல்லை” என்று நம்புவதும் ஒன்றே.

    2.
    தேவைகள்தான் இசங்களை உருவாக்குகின்றன. உருவான இசத்தை அப்படியே வைத்துக் கொண்டு தேவையைத் தேடி அலைவது , சாட்டை கையில் இருக்கிறது என்பதற்காக கார் ஓட்டும்போதும் சுழட்டி சக்கரத்தை அடிப்பேன் என்று சொல்வது சரியல்ல.

    இந்தியாவிலேயே எத்தனை கம்யூனிசக் கிளைகள்? கியூபா , வட கொரியா, சீனா என்று அவரவர் அவர் நம்பும் ஒன்றை கம்யூனிசமாக வரித்துக் கொண்டு உள்ளார்கள். சேயின் கடைசிக் கால கம்யூனிசக் கொள்கைகள் நம்பிக்கைகளை ஆராயுங்கள்.

    3.

    உங்களுக்குத் தெரியுமா? பெரியார் முன் மொழிந்த திராவிடம் / கடவுள் மறுப்பு கருத்துக்கள் அன்றைய ஆரிய கொடுமைக்கும்/ மூட நம்பிக்கைக்கும் எதிராக உள்ளூரில் சமைக்கப்பட்ட இசம். அந்த இசத்தில் அவர் கண்ட , அறிந்த , நம்பிய கருத்துக்களைப் போட்டு உருவாக்கினார்.

    அவர் முன்னெடுத்த அந்த அரசியல் இறக்குமதிச் சரக்கல்ல. அதனால்தான் அது மக்களை அடைந்தது.

    இந்தியா / தமிழ்நாட்டிற்கு என்ன தேவை என்பதைப் பட்டியலிடுங்கள். அந்தத்தேவையை அடைய எந்த வழிமுறை சிறந்தது என்று விவாதியுங்கள். தேவைக்கான புதிய இசத்தை உருவாக்குங்கள். ஒரு இடத்தில் தேங்கிவிடாதீர்கள்.

    4.

    லீனாவோ அல்லது யாரோ லெனின், மார்க்ஸ்… போன்ற கம்யூனிசத் தலைவர்களை கவிதையில் பயன்படுத்துவதும் நீங்கள் மன்மோகனை “மாமா பயல்” என்று சொல்வதும் இராமனை ஜட்டியில் போடுவதும் ஒரே மாதிரியான அரசியல்.

    இதைச் சொன்னால் “இராமனும் மார்க்ஸும் ஒன்றா என்கிறீர்கள். புரிந்து கொள்ளுங்கள்.

    எனது ஒப்பீடானது நீங்களும் லீனாவும் வெளிப்படுத்தும் அரசியல் அணுகுமுறையை ஒட்டியது மட்டுமே. அப்படிச் சொல்வதானால் இருவரும் ஒன்றா என்று கேட்பது , உரையாடலில் பன்முகத்தன்மை தெரியாமல் கேட்கும் கேள்வி.

    5.

    மேதினத்தைச் சடங்காகத்தான் எல்லாரும் செய்கிறீர்கள் என்று சொல்வேன். அப்படிச் சொல்வதால் அது உண்மையான சுதந்திரம் அடைந்த மற்றும் விதையிட்ட சிக்காகோ தொழிலார்களை அவமதிக்கிறேன் என்று பொருளல்ல.

    கொண்டாட என்ன கிழித்துவிட்டோம் நாம் ? என்று சுயபரிசீலனையே. ஏன் நிசமாகச் சாதித்துவிட்டு கொண்டாடக்கூடாது என்ற ஆதங்கமே. திருமணம் முடிந்தவர்கள் தேனிலவு கொண்டாடுகிறார்கள். மற்றவர்களிடம் திருமணம் முடியாமல் எதற்கு தேனிலவு என்று கேட்பது தேனிலவை அவமதித்தது ஆகாது.

    நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள். சென்னையில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய சட்டசபைக் கட்டிடத்தில் வேலை செய்த சித்தாள்கள் எல்லாம் 8 மணிநேரம் வேலை செய்தார்களா? சட்டசபைக் கட்டிடம் உதாரணம்தான் அது போல நிறைய. இழவு வீட்டில் இருந்து கொண்டு பக்கத்து ஊரில் விழா என்பதற்காக பாயசம் சாப்பிடச் சொல்கிறீர்களா? மேதினத்தை குறியீடாகக் கொள்ளாமல் சடங்காக ஆக்கியது சிக்காகோ தொழிலாளர்களா நாமா?

    6.

    நான் எந்த ஒரு இசத்துக்கும் என்னை ஒப்புக்கொடுத்தவன் இல்லை. தேவையின் பொருட்டு , நான் சரியென நம்பும் ஒன்றை என்னளவில் செய்வது. அது போல நான் சரியென்று நம்புவதை வேறுயாரேனும் முன்னின்று செய்தால், அவர்களுடன் அந்த ஒரு செயலுக்கு மட்டும் இணைந்து பணியாற்றி அது முடிந்தவுடன் நக‌ர்ந்து செல்வது ..இப்படித்தான் இருக்கிறேன்.

    *************

    அசுரன்,
    நான் உங்களின் கருத்துகளுக்கு சாதகமாகச் சொல்லும்போதெல்லாம் நான் ஆர். எஸ். எஸ் ஆகத் தெரியவில்லை. ஆனால் உங்களின் உங்களின் இஸ்டதெய்வங்கள் குறித்து பேசியவுடன் நான் ஆர். எஸ். எஸ் ஆகிவிட்டேன்.

    கடவுள் இல்லை என்று சொன்னாலோ அல்லது இட ஒதுக்கீடு தேவை என்று சொன்னாலோ கிந்தி தேசிய மொழியல்ல என்று சொன்னாலோ … தி.மு.க வாக அடையாளப்படுத்தப்படும் கொடுமையும் நீங்கள் செய்வதும் ஒன்று.

    உங்களிடம் நான் நடத்திய பழைய உரையாடல்களை எல்லாம் இப்போது நினைத்தால் , அது உங்களுக்குப் பிடித்தமானது (ஆதரவானது) என்ற ஒரே காரணத்தில் என்னை ஆர். எஸ். எஸ் ல் சேர்க்காமல் விட்டு வைத்திருந்தீர்கள் என்று நினைக்கிறேன்.

    கலை,
    உங்களிடம் உரையாடியது மகிழ்ச்சி.

    வினவு,
    களம் கொடுத்தமைக்கு நன்றி.

    கேள்விக்குறி,
    உங்களிடம் உரையாடியது மகிழ்ச்சி.

    ***

    • கல்வெட்டு இற்று விழுகிறது?

      //மதம்” “இசம்” எதுவாக இருந்தாலும் அதை அப்படியே எல்லா இடத்திலும் நடைமுறைப்படுத்த முடியாது. இருக்கும் இடம், சூழல், தேவை பொறுத்து தேவையானவைகளைப் பொறுக்கி நமக்கான ஒன்றை நாமே சமைக்க வேண்டும். ஏதோ ஒரு நாட்டில் ஒன்று நடந்துவிட்டது என்பதற்காக ஒரு வரி மாறாமல் அப்படியே பேசிக்கொண்டு இருப்பதைததான் இறக்குமதிச் சரக்கு என்று நான் சொல்வது.//

      இப்படித்தானே நண்பரே, பார்ப்பன இந்து மதம் காலந்தோறும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது. அப்படி அதை சமைத்தவர்களில் ஆதிசங்கரன் முதல் ஆர்.எஸ்.எஸ் வரை பலர் இருக்கிறார்களே. எனவே உங்கள் கோட்பாட்டின்படி நீங்கள் பார்ப்பனியத்தை ஆதரித்தே ஆகவேண்டும். அப்படி ஆதரிக்க முடியாது எனில் உங்கள் கோட்பாட்டை வெட்டவேண்டும். ‘மனிதாபிமானி’யான நீங்கள் அப்படி இரத்தம் தெறிக்க வெட்டமாட்டீர்கள் என்று நினைக்கிறோம்.

      அடுத்து ஏதோ ஒரு நாட்டில் நடந்துவிட்டது என்று வரிக்குவரி மாறாமல் எதை எங்கே எப்படி பேசினோம் என்று ஒரு ஆதாரத்தைக் கூட காட்டாமல் நீங்களே முடிவு செய்து கொண்டு வரிக்கு வரி பலரும் சொன்ன மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற புளித்துப் போன சொல்லாடலை வாந்தியெடுத்திருப்பது ஏன்? இதில் கூட சொந்த புத்தி வேலை செய்யாதோ? சிக்காகோவில் தொழிலாளிகள் எட்டு மணிநேரத்திற்காக போராடினார்கள், நாமும் போராடுவோம் என்று சொல்வது என்ன ஃபாரின் சரக்கு வாங்கி அடிப்பது போலவா இருக்கிறது? இதில் என்ன இறக்குமதிச்சரக்கு வெங்காயம்?

      //குரானில் சொன்னது , “நேற்று இன்று நாளை” எல்லாத்துக்கும் பொறுந்தும் என்று சொல்வதும் , லெனின்,மார்க்ஸ்…. இன்னபிற தலைவர்கள் சொன்னது “அன்றைக்கும் இன்றைக்கும் சரி . மாற்றம் தேவை இல்லை” என்று நம்புவதும் ஒன்றே.//

      லெனின், மார்க்ஸை விஞ்சிய பேரறிவாளர் கல்வெட்டு அவர்களே, இன்றைய சமகால பிரச்சினைகள் பற்றி அன்றே லெனின் ஆய்வு செய்து கூறியிருக்கிறார், அதை அட்சரம் பிசுகாமல் பின்பற்றுவோம் என்று எங்கே எப்போது கூறியிருக்கிறோம்? எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வை காரல் மார்க்ஸ் டாஸ் கேப்பிடலில் கூறியிருக்கிறார் என்று நீங்களாகவே ஒரு உளறலை அதுவும் கம்யூனிச எதிர்ப்பாளர் பலர் கூறும் அட்சரம் பிசகாத வாக்கியத்தை கடன் வாங்கிக் கொண்டு சொந்தமாக கண்டுபிடித்திருப்பது போல பேசுவது தாங்கமுடியாத சிரிப்பை வரவழைக்கிறது.

      மார்க்சியம் என்பது நீங்கள் உங்கள் சொந்த புத்தியில் மலிவாக கருதியிருப்பது போல ஜோசியமல்ல. அது சமூகத்தை ஆய்வு செய்வதற்கான கருவி. அந்தக் கருவியை வைத்து ஆய்வு செய்து குறிப்பிட்ட பிரச்சினைக்கு குறிப்பிட்ட தீர்வு என்று கண்டுபிடிப்பது கண்டுபிடிப்பவரின் சாமர்த்தியமே அன்றி அது கருவியின் மூலமல்ல. சமூகத்தை துல்லியமாக ஆய்வு செய்வதற்கு நாங்கள் மார்க்சியத்தை பயன்படுத்துகிறோம். அதை விட சிறப்பாக ஆய்வு செய்ய வேறு இசங்கள் இருக்கின்றன என்றால் அதை கல்வெட்டு ஆதாரத்துடன் பேசவேண்டுமே அன்றி சும்மா அலம்பக் கூடாது. உலகமாயக்கத்தில் ஏகாதிபத்தியங்களின் சுரண்டலைப் பற்றி மார்க்சியத்தின் உதவியுடன் நாங்கள் விளக்குகிறோம். அதெல்லாம் தப்பு என்றால் கல்வெட்டிசத்தின்படி இதை கல்வெட்டு விளக்கவேண்டும்.

      2.
      //தேவைகள்தான் இசங்களை உருவாக்குகின்றன. உருவான இசத்தை அப்படியே வைத்துக் கொண்டு தேவையைத் தேடி அலைவது , சாட்டை கையில் இருக்கிறது என்பதற்காக கார் ஓட்டும்போதும் சுழட்டி சக்கரத்தை அடிப்பேன் என்று சொல்வது சரியல்ல.//

      முட்டாள்களை தேவைகள் உருவாக்குவதில்லை. அவர்கள் தாங்களாகவே உருவாகிவிடுகிறார்கள். நடைமுறையில் பரிசோதித்து நிரூபிக்கப்பட்ட உண்மைகளே இசங்களாக நீடிக்க முடியும். தோல்வியடைந்தவைகள் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள்தான் போக முடியும். இறக்குமதி இசம் நல்லதல்ல என்ற கல்வெட்டிசம் என்ன தேவையிலிருந்து உருவாகியிருக்கிறது என்று கல்வெட்டு விளக்கினால் அவர் யார் என்பதை வினவு சொல்லாமலேயே வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். முதலில் தனது இசத்தையே விளக்க தெரியாத, கூரை ஏறாத கோழி வானம் ஏறி வைகுந்தம் போகுமென்று கனவு காணலாம். நனவில் அதனால் கூவத்தான் முடியும்.

      ராசிபலன் போன்ற ஜோசியப் புத்தகமாக மார்க்சியத்தை கல்வெட்டு கருதும் தேவையிலிருந்தே கல்வெட்டிசம் உருவாகிறது என்று வினவு சொல்கிறது. இப்படி உலகப் பிரச்சினைகளுக்கான தீர்வை ஜோசியப் புத்தகங்களிலிருந்தே அதுவும் உள்நாட்டு புத்தகங்களிலிருந்தே கண்டுபிடிக்க முடியும் என்ற இந்த தேவை கூட ஒரிஜினல் என்று கூற முடியாது. அரிசியை உணவாக உண்டு வாழும் கங்கைக் காவிரிக் கரை பார்ப்பனர்கள் கூட வரலாற்று ரீதியாக இப்படித்தான் சொல்லி வருகிறார்கள்.

      //இந்தியாவிலேயே எத்தனை கம்யூனிசக் கிளைகள்? கியூபா , வட கொரியா, சீனா என்று அவரவர் அவர் நம்பும் ஒன்றை கம்யூனிசமாக வரித்துக் கொண்டு உள்ளார்கள். சேயின் கடைசிக் கால கம்யூனிசக் கொள்கைகள் நம்பிக்கைகளை ஆராயுங்கள்.//

      கம்யூனிசத்தின் அ, ஆ கூடத் தெரியாத கல்வெட்டிசம் இப்படி பி எச்டி ரேஞ்சில் தைரியமாக பேசுவதுதான் அதன் சிறப்பம்சம். ” என்ன பெரிய மார்க்சியம், எல்லாம் எங்க வியாசன் எழுதாததா?” என்று கதாகலேட்சப உபன்னியாசர்கள் கூட பேசுவார்கள். எல்லாம் எமக்குத்தெரியும் என்று நக்கீரனிடம் கூட இறையனார் சீன் போடுவாரே அது போல. சேயின் கடைசிக் கால நம்பிக்கைகள் மட்டுமல்ல ஆரம்பத்திலிருந்தே அவருக்கு கம்யூனிசம் என்றால் தெரியாது. இதெல்லாம் என்றோ ஆய்வு செய்து முடிந்த விசயங்கள். கம்யூனிசத்தில் பல வகைகள் இருப்பது போலத்தோன்றலாம். ஆனால் அறிவியல் பூர்வமான கம்யூனிசம் என்பது வரலாற்றில் ஒன்றுதான். அதுதான் புரட்சியை சாத்தியமாக்கும் வல்லமை கொண்டது.

      சொத்துடமையற்ற சமூகத்தை உருவாக்க போகும் கம்யூனிசத்தில் அதே சொத்துடமை சமூகத்தின் சிந்தனைகள் பல ரூபத்தில் ஏன் கம்யூனிச ரூபத்தில் கூட வரலாம். மார்க்ஸ், முதல் மாவோ வரை எது உண்மைக் கம்யூனிசம், எது போலிக் கம்யூனிசம் என்ற விவாதமே மையமாக இருந்துள்ளது. இதெல்லாம் பொன்னியின் செல்வன் போன்ற ‘வரலாற்று நாவல்களை’ப் படித்து வரலாறுன்னா அதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மேதைகளுக்கு புரியவைக்க முடியாது.

      3.
      //உங்களுக்குத் தெரியுமா? பெரியார் முன் மொழிந்த திராவிடம் / கடவுள் மறுப்பு கருத்துக்கள் அன்றைய ஆரிய கொடுமைக்கும்/ மூட நம்பிக்கைக்கும் எதிராக உள்ளூரில் சமைக்கப்பட்ட இசம். அந்த இசத்தில் அவர் கண்ட , அறிந்த , நம்பிய கருத்துக்களைப் போட்டு உருவாக்கினார். அவர் முன்னெடுத்த அந்த அரசியல் இறக்குமதிச் சரக்கல்ல. அதனால்தான் அது மக்களை அடைந்தது. இந்தியா / தமிழ்நாட்டிற்கு என்ன தேவை என்பதைப் பட்டியலிடுங்கள். அந்தத்தேவையை அடைய எந்த வழிமுறை சிறந்தது என்று விவாதியுங்கள். தேவைக்கான புதிய இசத்தை உருவாக்குங்கள். ஒரு இடத்தில் தேங்கிவிடாதீர்கள்.//

      பெரியாரிசம் ஒரு சரியான சுதேசியிசம் எனும்பட்சத்தில் இன்று அது ஏன் தோல்வியடைந்தது? இதே பெரியார் ரசியாவில் சுற்றுப்பிரயாணம் செய்து கம்யூனிசமே மனித குலத்தின் விடுதலைக்கு வழி என்று சொன்னாரே அது கல்வெட்டிசத்திற்கு தெரியுமா? கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எனும் வெளிநாட்டு சரக்கை இதே பெரியார் தமிழில் புத்தகமாக வெளியிட்டாரே இதுவும் கல்வெட்டிசத்திற்கு தெரியுமா? நேர்மையான அறிவாளியான பெரியார் எந்தமுன்முடிவுமின்றி யதார்த்தமான பார்வையில் கம்யூனிசத்தை ஏற்கிறார். அதை அவரால் பின்பற்ற முடியவில்லை என்பது வேறு விசயம். ஆனால் அல்லாம் அறிந்த மேதை கல்வெட்டுக்கு பெரியாரும் தெரியவில்லை, கம்யூனிசமும் புரியவில்லை என்பதை எப்படிப் புரியவைப்பது? அதுவும் உள்நாட்டு இசத்தின் துணைகொண்டு எப்படி புரியவைப்பது.?

      4.
      //லீனாவோ அல்லது யாரோ லெனின், மார்க்ஸ்… போன்ற கம்யூனிசத் தலைவர்களை கவிதையில் பயன்படுத்துவதும் நீங்கள் மன்மோகனை “மாமா பயல்” என்று சொல்வதும் இராமனை ஜட்டியில் போடுவதும் ஒரே மாதிரியான அரசியல். இதைச் சொன்னால் “இராமனும் மார்க்ஸும் ஒன்றா என்கிறீர்கள். புரிந்து கொள்ளுங்கள். எனது ஒப்பீடானது நீங்களும் லீனாவும் வெளிப்படுத்தும் அரசியல் அணுகுமுறையை ஒட்டியது மட்டுமே. அப்படிச் சொல்வதானால் இருவரும் ஒன்றா என்று கேட்பது , உரையாடலில் பன்முகத்தன்மை தெரியாமல் கேட்கும் கேள்வி.//

      கல்வெட்டு நண்பர் லீனா பிரச்சினையை இப்படி ஒற்றைப் பார்வையில் புரிந்துள்ளதை என்னவென்று சொல்ல? அதைத்தான் கலை என்ற தோழர், வினவு சார்பில் நந்தாவிற்கு போட்டுள்ள பின்னூட்டத்தைப் படிக்கச் சொன்னார். கல்வெட்டிசம் கவுரவம் பார்க்காமல் அதை படித்து பார்க்கவும். அதில் சொன்ன மாதிரி இந்த உலகில் கம்யூனிச ஆசான்கள் போல அவதூறுகளுக்கு ஆளானவர்கள் எவருமில்லை. வினவில் கூட பலர் அதை செய்வதற்கு அனுமதித்தே இருக்கிறோம். எந்த அடிப்படையுமற்ற இந்த அவதூறுகளுக்கு தொடர்ந்து பதிலளித்தவாறுதான் இருக்கிறோம்.

      லீனா இந்த உலகில் அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து போராடும் சக்திகளை பெண்களை புணறும் ஆண்குறிகள் என்று கேலிசெய்துவிட்டு தன்னை மாபெரும் போராளியாக காட்டிக் கொள்கிறார். இதுதான் விசயம். இதுதான் விமரிசனம். இந்த விமரிசனத்தின் மூலம் தெரியாமல் கல்வெட்டிசம் தானே ஒரு காரணத்தை கற்பித்துக் கொண்டு அதன் மீது நின்று விமரிசனம் செய்கிறது. இதில் பன்மைத்துவம் என்ற எக்ஸ்டென்சன் வேறு! சாட்டை இருப்பதால் சக்கரங்களை அடிப்பது என்பதற்கு இதுதான் சரியான பொருத்தம். என்றாலும் இந்த உவமை கல்வெட்டிசத்தின் கண்டுபிடிப்பு. எங்களது சொந்த சரக்கல்ல.

      5.
      //மேதினத்தைச் சடங்காகத்தான் எல்லாரும் செய்கிறீர்கள் என்று சொல்வேன். அப்படிச் சொல்வதால் அது உண்மையான சுதந்திரம் அடைந்த மற்றும் விதையிட்ட சிக்காகோ தொழிலார்களை அவமதிக்கிறேன் என்று பொருளல்ல. கொண்டாட என்ன கிழித்துவிட்டோம் நாம் ? என்று சுயபரிசீலனையே. ஏன் நிசமாகச் சாதித்துவிட்டு கொண்டாடக்கூடாது என்ற ஆதங்கமே. திருமணம் முடிந்தவர்கள் தேனிலவு கொண்டாடுகிறார்கள். மற்றவர்களிடம் திருமணம் முடியாமல் எதற்கு தேனிலவு என்று கேட்பது தேனிலவை அவமதித்தது ஆகாது. நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள். சென்னையில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய சட்டசபைக் கட்டிடத்தில் வேலை செய்த சித்தாள்கள் எல்லாம் 8 மணிநேரம் வேலை செய்தார்களா? சட்டசபைக் கட்டிடம் உதாரணம்தான் அது போல நிறைய. இழவு வீட்டில் இருந்து கொண்டு பக்கத்து ஊரில் விழா என்பதற்காக பாயசம் சாப்பிடச் சொல்கிறீர்களா? மேதினத்தை குறியீடாகக் கொள்ளாமல் சடங்காக ஆக்கியது சிக்காகோ தொழிலாளர்களா நாமா?//

      முதலில் மே தினம் என்பது ஏதோ குடியரசு தினத்திற்கு மூவர்ணக்கொடி ஏற்றி மிட்டாய் கொடுத்து கொண்டாடுவது என்று கல்வெட்டு நினைத்துக் கொண்டால் அது மே தினத்தின் பிரச்சினையல்ல. ம.க.இ.கவைப் பொறுத்தவரை கடந்த பதினைந்து ஆண்டுகளாக மே தினத்தை மாபெரும் போராட்ட தினமாகத்தான் கடைபிடித்து பல போராட்டங்களை நடத்தி வருகிறது. அதனால் பல நாட்கள் சிறை சென்றதும் உண்டு.

      பகத்சிங்கிற்கு பொட்டு வைத்து ஆர்.எஸ்.எஸ் கும்பல் போற்றுதவற்கும் பகத்சிங்கை புரட்சியாளர் என்று புரட்சிகர கம்யூனிச அமைப்புகள் முன்னிறுத்துவதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. இதனால் பகத்சிங்கே மோசமென்று கல்வெட்டிசம் கருதினால் அதுதான் மே தினத்திற்கும்.

      மே தினத்தில் ஆரம்பித்த கோரிக்கை இன்றும் வெற்றிபெறவில்லை என்று போரடவேண்டுமென்று சொன்னால் அதான் மே தினம் தோற்றுவிட்டதே என்று வக்கணை பேசுவதற்கு பாரின் சரக்கு துணை அவசியம். உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற கோரிக்கையுடன் சட்டீஸ்கர் பழங்குடி மக்களை இன்று போராடவைத்திருப்பது கம்யூனிசம்தான், கல்வெட்டிசமல்ல. கீழத்தஞ்சையில் உழைத்தவனுக்கேற்ற கூலி வேண்டுமென்று விவசாயிகளை ஒன்றுதிரளவைத்து சங்கம் கட்டி போராடவைத்தது கம்யூனிசம்தான், கல்வெட்டிசமல்ல.

      மேதினத்தை போராட்ட தினமாக அன்றி கொண்டாட்ட தினமாக மாற்றுவதற்குத்தான் பல முதலாளிகள் விரும்புகின்றனர். போலிக் கம்யூனிஸ்ட்டுகளும் கூட அப்படித்தான் இருக்கின்றனர். புரட்சிகரக் கம்யூனிஸ்டுகள் அப்படி இல்லை. பொத்தாம் பொதுவாக மே தினத்தை பண்டிகை தினமென்று கூறுபவர்கள் அதை நெருப்பு தினமாக கடைபிடிப்பவர்களுடன் இணைய வேண்டும். மாறாக அன்று சன் டி.வியில் புதுப்படம் பார்த்தவாறே மே தினத்தை இகழ்வது கூட இழவு வீட்டில் பாயாசம் குடிப்பது போலத்தான்.

      6.
      //நான் எந்த ஒரு இசத்துக்கும் என்னை ஒப்புக்கொடுத்தவன் இல்லை. தேவையின் பொருட்டு , நான் சரியென நம்பும் ஒன்றை என்னளவில் செய்வது. அது போல நான் சரியென்று நம்புவதை வேறுயாரேனும் முன்னின்று செய்தால், அவர்களுடன் அந்த ஒரு செயலுக்கு மட்டும் இணைந்து பணியாற்றி அது முடிந்தவுடன் நக‌ர்ந்து செல்வது ..இப்படித்தான் இருக்கிறேன்.//

      கல்வெட்டிசம் சாரமாக கூறுவதின் பொருள் நான் அப்பட்டமான சுயநலவாதி, நான் என் வழியில் செல்வேன், நான் எனக்கு பிடித்த இனிப்பை சாப்பிடுவேன், நான் எனக்கு பிடித்த அப்பார்ட்மெண்டில் வாழ்வேன், நான் எனக்கு பிடித்த வெளிநாட்டிற்கு பயணம் செல்வேன், நான் எனக்கு பிடித்த படங்களைப் பார்ப்பேன்……….. ஆனால் நான் மற்றவர்களுக்காக எதுவும் செய்யமாட்டேன்….ஏனெனில் எனக்கு நான்தான் முக்கியம், நாமல்ல. இதைத்தான் கல்வெட்டிசம் என்று வினவு கூறுகிறது. என்றாலும் இது புதுச்சரக்கல்ல.

      • .
        நன்றி வினவு.

        கம்யூனிசம் என்பது யாருக்கும் பட்டா போட்ட சொத்தல்ல வினவு. அது போல கம்யூனிச மாற்றுப்பார்வைகளுக்கு யாருக்கும் யாருடைய தீட்சையும் தேவை இல்லை.

        உங்கள் புரிதலுக்கு என் ஒப்புதலோ அல்லது என் புரிதலுக்கு உங்களின் ஒப்புதலோ தேவை இல்லை.

        எனக்கு கம்யூனிசம் தெரியுமா என்பதை முடிவெடுக்கும் உரிமையை அகில வொலக கம்யீனிசக் க்ன்ட்ரோல் போர்ட் , வினவிற்கு காப்பிரைட் போட்டுக் கொடுக்காததால் நான் தப்பித்தேன். பேசாமல் வீரமணி பெரியாருக்கு செய்தது போல கம்யூனிச சித்தாந்தத்துக்கு இந்திய காப்பிரட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால் நீங்களே எல்லாருக்கும் உண்மையிலேயே கம்யூனிசம் தெரிகிறதா என்று பரீட்சை வைத்து கம்யூனிச தீட்சை வழங்கலாம்.

        எனக்கு கம்யூனிசம் தெரியாததையும் , பெரியாரைப் பற்றித் தெரியாததையும் கண்டுபிடித்த உங்களை வியக்கிறேன்.

        உலகெங்கும் கம்யூனிசம் வெற்றிபெற வாழ்த்துகள்.
        .

      • //அசுரன்,
        நான் உங்களின் கருத்துகளுக்கு சாதகமாகச் சொல்லும்போதெல்லாம் நான் ஆர். எஸ். எஸ் ஆகத் தெரியவில்லை. ஆனால் உங்களின் உங்களின் இஸ்டதெய்வங்கள் குறித்து பேசியவுடன் நான் ஆர். எஸ். எஸ் ஆகிவிட்டேன்.//

        உங்களை ஆர்.எஸ்.எஸ். என்று இதுவரை எங்கும் சொல்லவேயில்லையே?

        எனக்கு உருவங்கள் தேவையில்லை என்ற உங்களது கற்பனாவாத சுய ஜல்லி, எதை எப்படி கேவலப்படுத்தினாலும் நாம் ந்மது கருத்தை மட்டுமே சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் உங்களை எதிரிகளின் மொழியில் பேசும் போது நீங்களே கோபப்படுவது – இதன் மூலம் உங்களது சொந்த ந்டைமுறைத் தந்திரத்திற்கு விரோதமாக நீங்களே நடப்பது.

        இது போன்ற உங்களது சுயமுரன்பாடுகளைத்தான் அம்பலப்படுத்தியுள்ளேன். இந்த சுயமுரன்பாடுகள் உங்களது வார்த்தைகளிலேயே வெளித் தெரிய வேண்டும் என்று உங்களது கச்சாவான பின்னூட்ட மொழிநடையையே நானும் பயன்படுத்தினேன்.

        மற்றபடி உங்களது அரசியல் சார்பு நிலையை என்றைக்குமே நான் சந்தேகமுற மாட்டேன் நண்பரே… நாம் இணைந்தே தமிழ்மணத்தில் எதிரிகளுடன் மோதியுள்ளோம். அவையெல்லாம் பழைய கதைகளல்ல, நான் மறந்துவிடவும் இல்லை.

        அசுரன்

    • //லீனாவோ அல்லது யாரோ லெனின், மார்க்ஸ்… போன்ற கம்யூனிசத் தலைவர்களை கவிதையில் பயன்படுத்துவதும் நீங்கள் மன்மோகனை “மாமா பயல்” என்று சொல்வதும் இராமனை ஜட்டியில் போடுவதும் ஒரே மாதிரியான அரசியல்.

      இதைச் சொன்னால் “இராமனும் மார்க்ஸும் ஒன்றா என்கிறீர்கள். புரிந்து கொள்ளுங்கள்.

      எனது ஒப்பீடானது நீங்களும் லீனாவும் வெளிப்படுத்தும் அரசியல் அணுகுமுறையை ஒட்டியது மட்டுமே. அப்படிச் சொல்வதானால் இருவரும் ஒன்றா என்று கேட்பது , உரையாடலில் பன்முகத்தன்மை தெரியாமல் கேட்கும் கேள்வி.//

      கல்வெட்டினுடைய இந்தக் கருத்து எவ்வளவு அபத்தமானது?

      ரஜினி சோ முதல் ராமன் வரை பல்வேறு சுரண்டல்க்காரர்களை இழிவுபடுத்தி மக்களிடம் பேசுகிறோம், இங்கு தமிழ்மணத்திலும் பலரும் எழுதியுள்ளோம்.

      அவ்வாற்ன தருணங்களில் மேற்சொன்னவர்களின் ரசிகர்கள் நம்முடன் கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு விளக்கங்களும், ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. யாரையும் அராஜகவாதிகள் என்று விரட்டிவிடுவதோ அல்லது அப்புறமா கருத்துச் சொல்லு, வேறங்காவது போய் கருத்து சொல்லு என்று மிரட்டி தப்பிப்பதையோ தோழர்கள் செய்தது இல்லை.

      ஆனால், போராடும் மக்களையும், ஈரான் முதல் ஈராக், ஈழம் வரை உரிமைக்காக தலைமுறை, தலைமுறையாய் போராடி உயிர் நீப்பவர்களையும், அவர்களின் விடுதலைக்காக தியாகம் செய்த தலைவர்களையும் எந்த முகாந்திரமும் இன்றி தட்டையான மொழியில் செக்ஸ் வெறியர்கள் என்று எழுதும் ஒரு லும்பனை அவ்வாறான விளக்கம் கொடு என்று கோரி கேள்வி கேட்டால் அது மதவாதமாகக் கால்வெட்டுக்கு தெரிகிறது.

      இதைத்தான் ராமனையும், கார்ல்மார்க்ஸையும், போராடும் மக்களையும் ஒரே தட்டில் வைக்கும் அபத்தம் என்றும், அது சார்ந்த எதிர்வினைகளை ஒரே தட்டில் வைத்து மதவாதம் என்று விமர்சிக்கும் முட்டாள்த்தனம் என்றும் எடுத்துக் கூறியுள்ளேன்.

      இதே போல ஒப்பீடு செய்தால், அரசின் வன்முறையும், மக்களின் எதிர் தற்காப்பு வன்முறையும் ஒன்று, ஆதிக்க சாதியின் வன்முறையும், தாழ்த்தப்பட்ட மக்களின் வன்முறையும் ஒன்று. வன்முறை வன்முறைதான், எதிர்வினை எதிர்வினைதான் என்ற மாறாநிலை ஒற்றைப் பொருள் முடக்குவாதத்தில் கொண்டு போய் சேர்த்து விடும்.

      கல்வெட்டு சொல்கிறார், ஏன் இவ்வாறான அவதூறுகளை ஏறெடுத்துப் பார்க்கிறீர்கள் உங்களது கருத்துக்களை மக்களிடம் சொல்லுங்கள் போதும் என்று. அவ்வாறு இருக்க முடியாது நண்பரே. அவதூறு செய்பவரிடம் ஆதாரம் கேட்பதே எந்தவொரு முதுகெலும்புள்ளவன் செய்ய வேண்டிய கடமை. இல்லையேல் கேள்விகேட்க்கப்படாத அந்த அவதூறு நாளைய வரலாற்று ஆவனம் ஆகும். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
      லீனா ஒரு அல்ப விசயம் அதற்கு ஏன் இத்தனை ஆர்பாட்டம் என்று பேசும் நண்பர்களே, எமது தோழர்களின் ஆர்பாட்டம் லீனாவுக்காக அல்ல. போராடும் மக்களுக்காக, தியாகத் தலைவர்களுக்காக. ஆனால் லீனா என்ற அல்பை மற்றும் லும்பனுக்காக இன்று வரை ஆர்பாட்டம் செய்து வருபவர்கள் நீங்கள்தான். நாட்டில் ஆயிரம் பிரச்சினை இருக்கும் பொழுது லீனா என்ற அல்பை இன்றைய தேதி வரை ஒரு விவாதப் பொருளாக வலம் வருவதே இதற்கு சாட்சி. ஏனேனில் இங்கு லீனா ஒரு முகாந்திரம் மட்டுமே. அதற்கு பின் உள்ள அரசியல் அனைவருக்கும் கருத்துரிமை என்ற அராஜகவாத தர்க்கமே. இது பின்நவீனத்துவ அரசியல் ஆகும். இதுதான் கல்வெட்டுவினுடைய பின்னூட்டம் முழுவதிலும் தெரிகிறது. நான் ஒரு தனி சுதந்திர மனிதன்(அப்படி ஒருவன் இருப்பது சாத்தியமா?). யாருக்கும் பதில் சொல்லத் தேவையற்றவன். மக்களுக்கு சேவை செய்ய எனக்குத் தெரியும். அதை எப்படி செய்வதென்பதை நானே பார்த்துக் கொள்வேன். எந்த நாட்டின், எந்த சமுதாயத்தின் அனுபவங்களும் எனக்குத் தேவையில்லை, எனது சொந்த அனுபவமே எனக்குப் போதும், எனக்கு அமைப்பு, இசங்களில் நம்பிக்கையில்லை, அவையெல்லாம் இறக்குமதி சரக்கே (அப்படினா உள்ளுர் சரக்குன்னு ஒன்னு தனியா இருக்கா? எது உள்ளூர்? அதற்கான வரையறை என்ன? இப்போ தமிழ்நாட்டை தனி நாடா பிரிச்சுட்டாங்கன்னா அப்போ இந்தியா வெளியூர் ஆகிவிடும், அப்போ இந்திய தத்துவங்கள் அனுபவங்கள் வெளியூர் சரக்காகிவிடும். ஆக மொத்தத்தில் ஆளும் வர்க்கம் சொல்லும் வரையறைதான் கல்வெட்டின் தத்துவத்தை தீர்மானிக்கிறது என்பது எவ்வளவு அபத்தமானது?)

      இப்படி சுயத்தை முன்னிறுத்தும் தனிமனிதவாதம் அராஜக அரசியலே ஆகும். இது மனிதன் என்பவனின் கூட்டுச் செயல்பாடு, சமூகம் என்ற கருத்தாக்கம். மனித சமுதாயம் இயங்கும் விதம், வரலாறு இயங்கும் விதம் குறித்த அறிவியல் பார்வை என அனைத்தையும் தனிமனிதன் என்ற ஒற்றையடியில் நிராகரிக்கும் அராஜகவாதம் ஆகும். இந்த வாதத்தில்தான் பிடிவாதமாக கல்வெட்டு இயங்கிக் கொண்டிருக்கிறார்.

      அசுரன்

  45. பாயிண்டு பாயிண்டாக விமர்சனம் வைத்த கல்வெட்டு, வினவும் பாயிண்டு பாயின்டாக பதிலளித்தவுடன், “அப்ப நான் கிளம்பட்டுமா?” என்று கேட்டு உரையாடலை அவசரமாக முடித்துக் கொண்டதை, பன்முகத்தன்மையோடு இவ்வாறு விளக்கலாம்.

    1. இந்து மதப் புராணங்களின் அடிப்படையில், “நாராயண நாராயண” என நாரதர் கிளம்புவது போல் உள்ளது எனச் சொல்லலாம்.

    2. லோக்கல் மெட்ராஸ் பாஷையில், “நான் எதோ விட்டுப் பாத்தேன் மாமு, அவனுங்க பார்ட் பார்ட்டா ட்ரவுசரக் கழட்டுறானுங்க” என்று மெர்சிலாகி, ஜகா வாங்குவதாக சொல்லலாம்.

    3. மார்க்சிய மொழியில் சொன்னால், அம்பலப்பட்ட குட்டிமுதலாளித்துவ அராஜகவாதம், தனது கருத்துக்களுக்காக நின்று வாதாடும் விவாதப் நேர்மையோ, பொறுப்புணர்ச்சியோ கூட அற்று வெட்கமின்றி ஆட்டத்தை முடித்துக் கொள்ள ஆசைப்படுவதாக சொல்லலாம்.

    இந்த மூன்றில் எதை வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், பன்முகத்தன்மையோடு புரிந்து கொள்ளலாம். ஏற்றுக் கொள்ளலாம்.

    “எனக்கு கம்யூனிசம் தெரியுமா என்பதை முடிவெடுக்கும் உரிமையை அகில வொலக கம்யீனிசக் க்ன்ட்ரோல் போர்ட் , வினவிற்கு காப்பிரைட் போட்டுக் கொடுக்காததால் நான் தப்பித்தேன்.” என ரொம்ப அலட்டலாக பதில் சொல்லி தற்போது கண்ணியமாக விடை பெற விரும்புகிறார் மாமேதை கல்வெட்டு. ஆனால், முந்தைய பின்னூட்டத்தில், வினவைப் போன்ற ‘கட்சி மந்தைகளுக்கு’ கம்யூனிசம் தெரிந்திருக்காது என்ற ‘ஆழமான’ புரிதலோடும், ‘உள்ளார்ந்த’ அக்கறையோடும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய, இதுவரை யாருமே அறிந்திருக்காத, கல்வேட்டு சுயமாகக் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த உண்மைகளை, “”இந்தியாவிலேயே எத்தனை கம்யூனிசக் கிளைகள்? கியூபா , வட கொரியா, சீனா என்று அவரவர் அவர் நம்பும் ஒன்றை கம்யூனிசமாக வரித்துக் கொண்டு உள்ளார்கள். சேயின் கடைசிக் கால கம்யூனிசக் கொள்கைகள் நம்பிக்கைகளை ஆராயுங்கள்.” என சுருக்கமாக விளக்கிப் புரிய வைத்தார். எங்களுக்கு கம்யூனிசம் தெரியாது, சேயின் கடைசிக் கால கம்யூனிசக் கொள்கைகள் நம்பிக்கைகளை கல்வெட்டு சொல்லும் வரை நாங்கள் ஆராய்ந்திருக்கவே மாட்டோம், ஏதோ தெரிந்திருந்தாலும் அவரளவிற்கு கம்யூனிசம் தெரியாது என தாமாகவே முடிவெடுத்து அமல்படுத்தினாரே, நாம் எதைப் படிக்க வேண்டும் என வழிகாட்டி உதவி செய்தாரே, இதற்கான காப்புரிமையை ‘அகில உலக டிராட்ஸ்கி கண்ட்ரோல் போர்ட்’ அல்லது ‘அகில உலக அந்தோணியோ கிராம்சி போர்டில்’, அவர் வாங்கி வைத்துள்ளாரா என்பதை மட்டும் அவர் தெரிவிப்பது காப்பிரைட் குறித்த குழப்பங்களை தீர்க்க உதவும். மற்றபடி எங்களை போன்ற சாதாரணக் கம்யூனிஸ்டுகளுக்கு, அவர் தொடர்ந்து ‘இது தப்பு’, ‘அது தப்பு’, ‘இது மார்க்சியமல்ல, அது தான் மார்க்சியம்’ என அவ்வப்போது மார்க் போட்டு, தொடர்ந்து வழிகாட்ட வேண்டும் எனத் தாழ்மையோடு வேண்டுகிறேன். மக்கள் பிரச்சினைகளில் அல்லும் பகலும் அயராது போராடி வாழும் தியாக தீபமான அவர், தமது மாபெரும் கல்வெட்டிசத்தின் வழியில், புரட்சியை மிக விரைவாக சாதித்து உலகுக்கே வழிகாட்ட வேண்டும் என்பதுதான் எமது அவா.

    உலகெங்கும் கல்வெட்டிசம் வெற்றிபெற வாழ்த்துகள்.

  46. இந்திய ஒருமைபாட்டிற்கு பங்கம் விளைவிக்கும் இது போன்ற நாய்களை தூக்கிலிட வேண்டும். ஒருவரின் தனிப்பட்ட செயலுக்கு அவரின் சமுகத்தை குறைசொல்வது நியாயமன்று. ஆனால் அவர் இந்து அமைப்பு என்ற போர்வையில் கலவரத்தை தூண்டி மக்களிடையே பிளவுகளையும், வெறித்தனத்தையும், மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் நாசம் செய்வது மன்னிக்க முடியாத குற்றம். இதற்கு இந்து அமைப்பு உடன் பட்டிருந்தால் அதனை உடனே தடைசெய்ய வேண்டும்.

  47. அன்புள்ள வினவுக்கும், மக இகவுக்கும்,

    தமிழ் இந்து என்ற ஒரு தளம் நாட்டில் விஷத்தை பரப்பி வருகிறது.

    கம்யூனிஸத்துக்கு எதிர்ப்பாகவும், இஸ்லாம் கிறிஸ்துவம் போன்ற சிறுபான்மை மதங்களுக்கு எதிராகவும் விசத்தை பரப்பி வரும் இந்த தளத்தை தடை செய்ய வினவு ஆக முயற்சிகளை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

  48. முக்கியமாக பன்றிக்கறி தின்னசொல்லி பிரச்சாரம் செய்து சிறுபான்மையினரது மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறது. ஹலால் தின்னக்கூடாது என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறது.

    இந்த தமிழ்நாட்டு இந்து அமைப்பை உடனே தடை செய்யுங்கள்.

  49. chillsam
    4 June 2010 at 10:46 pm

    // thiruchchikkaaran, on June 4, 2010 at 22:31 Said:

    I read one article about an American evangalist, who listened to the voice of her conscience.

    http://www.tamilhindu.com/2010/06/being-missionary-showed-me-light/

    எனது இந்திய மிஷன் பயணம் பற்றிய குற்ற உணர்வுடன் நான் போராடிக் கொண்டிருந்தேன். நான் உண்மையில் அங்கு போய் என்ன செய்தேன்? ”தேவனின் நற்செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்தேன்!” அந்த இந்தியர்கள் தங்கள் மதத்தின் மீது எவ்வளவு பற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்தேன். அவர்களது கலாசாரத்திற்குள் எனது விசுவாச வெறியுடன் நான் அத்துமீறி நுழைந்திருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது. சொல்லப் போனால் அதன்மீது உண்மையில் எனக்கே நம்பிக்கை இருந்ததில்லை. //

    எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை தத்துவமே; காந்திஜி சொன்னவாறு ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவைப் போல வாழ்ந்திருந்தால் இந்தியா கிறிஸ்தவ நாடாகியிருக்கும்; ஒவ்வொரு இந்துவும் ராமனைப் போல வாழ்ந்திருந்தால் இந்தியா அமெரிக்கா போல மாறியிருக்கும்; ஒன்று மட்டும் நிச்சயம், இந்தியா என்ற நாட்டை உருவாக்கித் தந்த வெள்ளையனை நாம் மறக்கக்கூடாது..!

    ஆனாலும் இரட்சிப்பின் அனுபவம் என்பது தனிப்பட்டதாகும்; அதனை மற்றொருவரால் புரிந்துக்கொள்ளவோ புரியவைக்கவோ இயலாது;

    மனிதனுடைய மனம் இயல்பாகவே மாற்றங்களையும் சுவாரசியங்களையும் நோக்கி ஈர்க்கப்படுகிறது;

    மேற்கத்திய கலாச்சார பழக்கவழக்கங்கள் கிழக்கத்தியரை ஈர்ப்பதும் கிழக்கத்திய கலாச்சாரத்தின் குறியீடுகளான பரதம்,சங்கீதம் போன்றவை மேற்கத்தியரை ஈர்ப்பதும் காலச் சக்கரத்தின் சுழற்சியின் மாயமாகும்;

    ஆனாலும் வரலாறு முழுவதுமே மேற்கத்தியவரே ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்திருக்கிறார்கள்;

    இங்கே ஆரியர் வந்து ஆதிக்கம் செலுத்தவில்லையா?பௌத்தத்துக்கு எதிராக ஆதிசங்கரர் முதலாக புனிதப் பயணம் மேற்கொள்ளவில்லையா?
    வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது என்ற கோஷம் எழும்பவில்லையா?

    “தமிழ் ஹிந்து” தளத்தின் கட்டுரையைப் போலவே ஓராயிரம் கட்டுரைகளை நாங்களும் இங்கே தயாரிக்கமுடியும்;இந்து மார்க்கத்தின் மோசடிகளால் துன்பப்பட்டவர்களின் படுபயங்கரமான கதைகளை நாங்களும் விவரிக்கமுடியும்;

    இங்கே நண்பர்கள் அசோக்,ஹார்ட்ரூத் போன்றவர்களை வரப்போறவனெல்லாம் தர்ம அடி கொடுப்பதுபோல சகட்டுமேனிக்கு தாக்கிவிட்டுப் போனாலும் சற்றும் விட்டுக்கொடுக்காமல் தங்கள் நம்பிக்கையை தெளிவாக முன்னெடுத்துவைத்து நம்முடைய தலைவர் திருச்சிக்காரன் சொல்வதுபோல எந்தவித வெறுப்புக்கருத்துக்களுக்கும் இடங்கொடுக்காமல் நாகரீகமாக நடந்துக்கொண்டதற்கு பாராட்டுகிறேன்;வாய்மைக்கு அலங்காரம் தேவையில்லை;

    இங்கே இடப்படும் பின்னூட்டங்களை பொறுமையாக ஆராய்ந்து பார்த்தால் இந்து மார்க்கத்தின்மீது மரியாதையும் தெளிவும் வரும்படியான எந்த கருத்தும் கட்டுரையும் இடம்பெறவில்லை;மாறாகப் புலம்பல்களே அதிகமாக இருக்கிறது;

    ஒரு அறையில் 90 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது இரண்டே இரண்டு பேர்மட்டும் வந்து என்ன சாதித்துவிடமுடியும்?

    இதுவே இந்துமார்க்கத்தின் மார்க்கத்தின் மாபெரும் பெலவீனமாகும்;
    ‘ஒன் சரக்கு ஒசத்தியாக இருந்தா தன்னால வியாபாரம் நடக்கும்’ என்று புத்திசாலி வியாபாரி சொல்லுகிறான்;

    அதற்கேற்ப அசோக் அவர்களும் ஹார்ட்ரூத் (hard truth) அவர்களும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்து ஒழுங்கானதொரு யுத்தத்தை செய்திருக்கின்றனர்;”இன்று போய் நாளை வா” என்ற ராமனின் பெருந்தன்மையின்படி விதிமுறைகளுக்கேற்ப யுத்தம் செய்தனர்; இதைப்படித்து என்னைப் போன்ற அநேகர் மெய்யான தேவனைக் குறித்து அறிந்துக்கொண்டோம்;

    ஆனால் மெத்தப்படித்த ஞானிபோல வேடமிடும் திருச்சிக்காரனோ சரியான பச்சோந்தித்தனமாகவே செயல்பட்டிருக்கிறார்;அவர் மீசை நனையாம கூழைக் (கும்பிடு போட்டு) குடிக்க கடுமையாக முயற்சிக்கிறார்;
    கடவுள் இல்லையென்றும் அது ஒரு கான்செப்ட் மட்டுமே என்றும் சொல்லிக்கொண்டே உபன்யாசமும் நடத்துவார்;அவர் இங்கே பரப்பியுள்ள வெறுப்புக்கருத்துக்களையும் பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்களையும் அவருடைய முரண்பாடான ஸ்டேட்மெண்ட்டுகளையும் நான் தொகுத்துக் கொண்டிருக்கிறேன்;அது ஒரு தனி கட்டுரையாக விரைவில் வெளியிடப்படும்;

    இங்கே தனபால் அவர்கள் மட்டுமே சற்று ஆரோக்கியமான விவாதத்தை நடத்தியிருக்கிறார்;அவரிடம் சில காரியங்களைச் சொன்னால் அதற்கு பரியாசம் செய்யாமலும் இழிவுபடுத்தாமலும் கருத்தை ஏற்காவிட்டாலும் நட்பைப் பேணும் நற்பண்பைக் காண்கிறேன்;(அதற்குக் காரணம் அவர் இந்துவாக இருப்பதல்ல,நல்ல மனிதராக இருப்பதுதான்..!)

    // நாங்கள் கூறிய “அனைத்து மதமும் கடவுளை அடையும் பாதைகளே”- ஒரே கடவுளையே பலர் பல பெயர்களில் அழைக்கின்றனர் என்பது போன்ற இந்து மதத்தில் சொல்லப்பட்ட சமரசக் கருத்தையே நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை…//

    நண்பர் ஹார்ட்ரூத் (hard truth) அவர்களிடம் முன்வைக்கப்படும் மேற்கண்ட கருத்தானது, இது இந்து மார்க்கத்தில் எங்கும் சொல்லப்படவில்லை, அதாவது எந்த ஒரு குறிப்பிட்ட வேதத்திலும் கட்டளையாகச் சொல்லப்படவில்லை;ஆனாலும் இதற்கென்றே சில ஸ்பெஷல் கோட்வேர்டுகள் உண்டு;அவையாவன:ஐதீகம், மரபு,தத்துவம், நம்பிக்கை..இப்ப்டியாக;

    பல தெய்வக் கோட்பாடு என்பது பலதாரத் திருமணம் போல ஒரு கலாச்சாரம் சம்பந்தமான விஷயம்;ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை நாடி செல்லும்போது மார்க்க அறிஞர்கள் சமூகத்தில் பிரிவினைகளும் மோதல்களும் ஏற்படாமல் தவிர்க்கும் ஆலோசனையாகவே இந்த கருத்தை மக்கள் மனதில் விதைத்தார்கள்;

    ஆனாலும் அது நடைமுறையில் இல்லை;ஆனாலும் இதனைக் கருத்தில் கொள்ளாமல் முண்டக்கன்னியையும் முண்டகப்பெருமாளையும் தூக்கிச் சுமக்கும் பல்லக்கு ஆரியனிடமிருந்தே தருவிக்கப்பட்டது;அதில் அவனையும் சேர்த்தே நாம் சுமக்கிறோம்;சாமிக்கு மட்டுமா ஊஞ்சலாட்டம்,சாமியாருக்கும் சேர்த்துதானே..?

    மனிதனை மனிதன் சுமக்கும் அடிமைத்தனத்தையும் வர்ணா(சிரமத்தை)யும் ஒழிக்கவே மாற்றுப்பாதைகள் தேடப்படுகிறது; அதில் சிறப்பானதாக பெரும்பான்மையோர் ஏற்றுக்கொண்டது கிறித்தவமாகும்;அது ஒன்றே அறிவுபூர்வமானது,உணர்வுபூர்வமானது;

    ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட கரடுமுரடான பாதை வழியே நாம் விரும்பும் இடத்துக்கு சென்றுவந்தோம்;இப்போதோ நல்லதொரு புதிய பாதை தோன்றியிருக்கிறது;அதன் வழியே விரைவாக சுகமாக பயணம் நிறைவேறுகிறது;அதனை ஏற்கமறுத்தால் விரைவில் பழைய பாதை முடக்கப்படும்;அப்போது வருத்தப்படவேண்டியிருக்கும்;

    // அப்படி இருக்கும் பொது இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தேவன்,அவராலே அல்லாமல் வேறு கடவுளைக் கும்பிடுபவன் இறைவனை அடைவதில்லை,எரிநரகத்திற்கு தான் செல்வான் என்பது போன்ற பைபிள் கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்???. //

    ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்மை இறைவனாக அல்ல, நண்பனாகவே வெளிப்படுத்துகிறார்;அவர் நரகத்தைக் காட்டி யாரையும் பயமுறுத்தவில்லை; நரகம் என்பது தீயசக்திகள் வதைக்கப்படும் இடமாகும்;அந்த தீயசக்திகள் நாம் கண்விழித்துக் கொள்ளாமலிருக்க நம்மை உலகப் பிரகாரமான காரியங்களிலேயே நம்மை மூழ்கடித்து இறை ஒளியை அடையவிடாமல் மயக்குகிறது;

    நரகம் என்பது இனி சம்பவிக்கப்போகிறவைகளின் குறியீடு மட்டுமே; உதாரணமாக நம்முடைய பக்திமார்க்கத்திலும்கூட தீயவைகளையும் ஆகாதவைகளையும் கொளுத்தும் வழக்கமிருக்கிறது;நான் சொல்றத கேட்காவிட்டால் அந்த போலீஸ் மாமாகிட்ட பிடிச்சி குடுத்துவேன் என்பது போலல்ல இந்த நியாயத்தீர்வை;நியாயத்தீர்வை என்பது அவரவர் தேரிந்தெடுப்பு சார்ந்தது;

    கடவுள் யாரையும் அழிப்பதற்காகப் படைக்கவில்லை என்பதே சத்தியமாகும்; ஆனாலும் ஒருவனைக் குற்றவாளியாக்கி (’அப்சல்குரு’வைப் போன்ற ஒருவனை..!) தூக்கில் போடத்துடிக்கும் சமுதாயமா இறைவனின் நியாயத்தீர்வை தினத்தினைக் குறைகூறுகிறது..?

    எரிநரகத்துக்கு யார் செல்வான் என வேதம் கூறவில்லையா?
    இவரா பிடித்துத் தள்ளிவிடுவேன் என்கிறார்,இவனாக அல்லவா அதற்கு பங்காளியாகிறான்?

    // Murugan, on June 4, 2010 at 22:31 Said:

    இன்னா தனபால் சார்,அதான் அண்ணன் எழுதிகிறாரே,’ஹோலி இஸ்பிரிட்டு’ உள்ளார போனாத்தான் சரியாப் பிரியும்னு; அத்தொட்டு மொதல்ல பக்கத்துல எதுனா கடைக்கு போயி ‘ஹோலி இஸ்பிரிட்டு’ இருக்கானு பாருங்கோ;அத்தை வாங்கி உள்ள உடுங்க;அது உள்ளார போயி வொர்க் பண்ணாதான் ஒங்களுக்கு புரியும்னு சொல்லிகிறார், புர்யுதாணு பாருங்கோ.

    கிடைக்கலைனா அண்ணன் கிட்ட கேளுங்கோ, அண்ணான் உங்களுக்கு அனுப்புவாரு. ஏன்னா கண்டி எப்படியும் அண்ணனுக்குள்ள ஹோலி ஸ்பிரிட்டு வேலை செஞ்சு இருக்கும், இல்லாமலா எழுதுவாரு. தன்பால் சாருக்கு விருப்பம் இல்லைனா அவரை விட்டுடு, எனக்கு கொஞ்சம் அனுப்புப்பா. //

    பரியாசம் செய்வதன் மூலமும் வெறுப்புக்கருத்துக்களைப் பரப்பமுடியும் என்பதை இங்கே அறிகிறேன்;எனவே தான் இயேசுவானவர் கூறினார்,”பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.”(மத்தேயு.7:6)என்பதாக;மேலும் இயேசுவுக்கு எதிரான தூஷணம் மன்னிக்கப்படும்,பரிசுத்தாவியானவருக்கு எதிரான தூஷணம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை என்றும் கடுமையாக எச்சரிக்கிறார்;ஆனால் நாமோ இயேசுவானவரைப் போலவே விண்ணப்பிக்கிறோம்,”பிதாவே இவர்களுக்கு மன்னியும்,தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்”

    //santhosh, on June 4, 2010 at 22:31 Said:
    1) மறுபடியும் மறுபடியும் நச்சரித்தால் பிடுங்கல் தாங்காமல் ஒத்துக் கொள்ளலாம்.

    2) எரி நரகம் என்கிறதைக் காட்டி பயமுறுத்தினால் , கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவன் ஒத்து கொள்ளுவன்

    3) இதில் எதுவும் வொர்க் அவுட் ஆகாவிட்டால் கடைசியில் வைட்டமின் ப இருக்கவே இருக்கு. //

    “யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும் உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி.”(எரேமியா.11:13)

    இதுதான் இன்றைய உலகின் நிலை;ஆனாலும் குற்றங்கள் மட்டும் குறையவேயில்லை; அப்படியானால் தெய்வ பயம் யாருக்குமில்லை; மனதில் நிம்மதியில்லை;தொடர்ந்து எதிர்மறையான சம்பவங்களே நடக்கிறது;செலவில்லாமல் இறையருள் கிடைப்பதில்லை;

    எங்கு திரும்பினாலும் ஒரு கல்லை நட்டுவைத்துவிட்டு ஜனங்களை மிரட்டிக்கொண்டிருக்கும் திருடர்கள் யார்?ஏழை எளிய மக்களின் பக்தியையும் வாழ்வியல் அச்சங்களையும் காசாக்கி கசக்கிப் பிழியும் கொள்ளையர்கள் யார் என்பது தெரியாதோ?தோஷம் என மிரட்டுவதும் பரிகாரம் செய்தவுடன் தோஷம் விலகிவிட்டதாக வேஷமிடுவதும் பூஜாரிகளும் சந்நியாசிகளும் மந்திரவாதிகளும் குறிசொல்லிப்பிழைக்கும் முன்னாள் விபச்சாரிகளே..!

    ஒன் (கல்லு)சாமிய தரிசிக்க பணம் கேட்கிறாய்,சிருஷ்டிக் கர்த்தாவை தரிசிக்க பணம் கொடுக்கிறேன்,யாரையா மோசடி பேர்வழி..?

    திருப்பதிக்குச் செல்லும் சாலையோரங்களில் குழந்தையையும் குட்டியையும் வைத்துக்கொண்டும் குடும்பங்கள் தவிப்பது அந்த சாமிக்குத் தெரியாதா?ஒரு நாளாவது அந்த அசையாத‌- உயிரற்ற- அலங்கரிக்கப்பட்ட கல்லாக சமைந்துவிட்ட -பெரிய‌வன் அந்த ஏழை பக்தர்கள் கனவில் வந்து என்னைத் தேடி ஏன் இவ்வளவு தூரம் வந்தாய் நான் உனக்குள் தானே இருக்கிறேன் என்று சொன்னதுண்டாடா,அல்லது பணத்தினால் என்னை வாங்கமுடியாது என்று இலஞ்சப்பணத்தையும் ஏழைகளின் இரத்தக்கறை படிந்த வட்டிப்பணத்தையும் பெற மறுத்ததுண்டா?

    // தனபால், on June 4, 2010 at 22:31 Said:
    திரு சந்தோஷ் அவர்களே,இந்த எரி நரகம் என்றக் கருத்து மிகவும் கொடுமையானது.அந்த எரி நரகம் என்பது நிரந்தரமாக ,முடிவில்லாமல் எரிந்துகொண்டிருக்க வேண்டியது தான்.கிருஸ்தவ மதத்தின் எந்தக்கருத்தை ஏற்றுக்கொண்டாலும் இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள என் இரக்க மனம் இடம் கொடுக்கவில்லை. //

    தனபால் அவர்களே,உங்களது இந்த கருத்தைப் படித்தவுடனே எனக்கு பீஷ்மரின் (அம்புப் படுக்கை) இறுதிக்கட்டமே நினைவுக்கு வந்தது;மேலும் கர்ணனை (கண்ணனின் சூழ்ச்சி) நினைத்து சிறுவயதில் அழுதிருக்கிறேன்; இந்த இந்து மத கருத்துக்களை உங்கள் இரக்கமனம் எப்படி ஏற்றுக்கொண்டது? இவையெல்லாமே ‘பாதுகாப்புப் படைவீரர்கள் பலி’ என்றும் ‘தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்’ என்றும் குறிப்பிடுவதைப் போன்ற மனநிலை சம்பந்தமான பார்வையே;ஆனாலும் “அன்பு ஒருக்காலும் ஒழியாது”

    // thiruchchikkaaran, on June 4, 2010 at 22:31 Said:

    நிரந்தரமாக எந்த ஒரு உயிரும் எரி நரகத்திலே கஷ்டப்படாது;எல்லா உயிர்களும் விடுதலை அடையும்;ஒரு உயிர் நரகத்தில் இருந்தாலும், காணாமல் போன ஆட்டை தேடுவது போல தேடி விடுதலை கிடைக்கும் என்பதாகவே இயேசு கூறி உள்ளார். இது பற்றி தனிக் கட்டுரை வெளியிடப் படும். //

    திருச்சிக்காரன் சொல்வதெல்லாம் பொய்,பொய்யைத் தவிர வேறில்லை; ‘உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்’ ராஸா..!
    “தேவன்,தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு,அவரைத் தந்தருளி,இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”(யோவான்.3:16)
    ஒருவனும் கெட்டுப்போவது தேவசித்தமல்ல என்றே வேதம் கூறுகிறது;ஆனாலும் கிருபையின் காலத்துக்குப் பிறகு நரகத்துக்கு வந்தாவது உன்னை மீட்டுவிடுவேன் என்று இயேசு ஒருபோதும் சொல்லவில்லை;

    அரசாங்கம் சில காலத்துக்கு முன்பு “மழைநீர் சேகரிப்பு” திட்டத்தை அறிவித்து அதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவையும் நிர்ணயித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்தியது;அதனை நிறைவேற்றாதவர்க்கு தண்டனையாக வீட்டு மின்சாரம் உட்பட அனைத்து சேவைகளும் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது;அது ஒரு பெரும்புரளியாக அவர்கள் தோற்றுப்போகவே காரணமானது தனிக்கதை;

    அதுபோலவே இந்த உலகைப் படைத்த “யாவே” கடவுள் ஒரு நாளை நியமித்து அந்த நாளில் இந்த உலகை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறார்;சிருஷ்டிகர் என்ற முறையில் அவருக்கு எல்லா உரிமையும் உண்டு;இதற்கான எச்சரிப்பின் அடையாளமாகவே எரிமலையும் பூகம்பமும் சுனாமியும் கட்டளையிடப்பட்டது;இவற்றை அவர் செய்யாவிட்டால் பின்னை யார் செய்தது?இது ஒரே நாளில் உலக முழுவதுக்கும் சம்பவிக்கும் போது நாங்கள் மத்திய ஆகாயத்தில் இருப்போம்;(என்ன சிரிப்பு வருகிறதா, அவரும் உன் பரிதாப நிலையினைக் கண்டு நகைக்கிறார்..!) இதெல்லாம் விஞ்ஞானமய்யா என ஆராய்ச்சி செய்துக்கொண்டிருப்போரும் சேர்ந்து உயிர்தப்ப ஓடுவர்;

    // athi karvitha, on June 4, 2010 at 22:31 Said:

    I have a nagging doubt since I visited this blog. When I pointed out USA, UK or other christian countries the bloggers say they are not christian countries. Could you please tell me which are Christian countries we can find in the atlaச்??? I thought Italy could be the one, but later I denied the answer ‘coz it has given birth to world’s notorious Mafia. The what else???Please, respond to this question.With love and peace, //

    கர்வம் பிடிச்ச டெட் (dead)கர்விதா, நான் டூட் (dude) என்பதால் நீ கவலைப்படவேண்டாம்;மானங்கெட்டுப் போய் ஆங்கிலேயன் காலை நக்கி அவன் மொழிய கத்துகிட்டு அவனுக்கு சொம்படிக்கப் போன உன்னை மாதிரி ஆளுங்கள விட சரியான கல்வியறிவு பெறமுடியாவிட்டாலும் சுயமுயற்சியினால் முன்னேறி என் மக்களுக்கே சேவை செய்யும் எண்ணற்ற தேச பக்தர்கள் இங்கே உண்டு;அவன் கலக்கிக் கொடுத்த பீரை குடிச்சிட்டு அவனுடைய நாத்தம் பிடிச்ச டையைக் கட்டிக்கிட்டு புனிதக் கலையான பரதத்தையும் சங்கீதத்தையும் வைத்து விபச்சாரம் பண்ணும் மேட்டுக்குடி பொறுக்கிகளைவிட நாங்கள் ஒன்றும் குறைந்துபோகவில்லை;

    கிறித்தவம் என்பது வாழ்க்கை முறையாகும்;அது எந்த ஒரு தேசத்துக்கும் சொந்தமானதும‌ல்ல;எந்த தேசத்தாலும் பரப்பப்படவுமில்லை; “உம்மைப் போல என்னை மாற்றும்” என நான் ஜெபிப்பேன்;இதுபோன்றதொரு ஜெபத்தை எந்த ஒரு இந்துவும் அனுமனையோ யானை முகத்தையுடையவனையோ நோக்கி செய்யமுடியாது;அப்படி நடந்துவிட்டால் காட்டிலாகா அதிகாரிகள் வந்து உங்கள் பெற்றோரை கைது செய்துவிடுவார்கள்;உங்க வீட்டுல ஆறு விரலுடன் ஒரு பெண பிறந்தால் ராசியானது என்பீர்கள்;ஆறு கையுடன் பிறந்தால்..?

    இறுதியாக மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்,வெறுப்புக்கருத்துக்களை பிரச்சாரம் செய்யாமல் நாகரீக சமுதாயத்துக்கு ஏற்ற வண்ணமாக பகுத்தறிவு மார்க்கமான இயேசுவின் வழி நடக்கவாருங்கள்;அப்போது தான் திருச்சிக்காரனின் ஆன்மா சாந்தியடையும்..!

  50. எனது பின்னூட்டத்தை மிகுந்த சகிப்புத்தன்மையுடன் வெளியிட்டதற்காக‌ “தமிழ்ஹிந்து”வின் நிர்வாகக் குழுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்;

    என்னுடைய பின்னூட்டமானது மற்றொரு தளத்துக்காக ஆயத்தமாக்கப்பட்டு இங்கேயும் பதிக்கப்பட்டது;

    எனவே நம்முடைய கட்டுரைக்குத் தொடர்பில்லாத சில காரியங்களுக்கும் பதில் சொல்லப்பட்டிருப்பது வாசகருக்குக் குழப்பத்தைத் தந்திருக்கலாம்;

    // AmruthaPutran
    4 June 2010 at 11:34 pm
    உங்களுக்கு ஹிந்து தர்மத்தை பற்றி பேசவே அருகதை இல்லை;
    சுத்தமான கங்கை நீரையும் காவேரி நீரை பருகுவனிடம் //

    சகோதரரே (என்றால் சக உதிரன் என்று அர்த்தமாம்…)
    நான் ஹிந்து தர்மத்தைப் பற்றிப் பேச முழு உரிமையுள்ளவன்;
    உங்களெல்லாரைக் காட்டிலும் அதிகம் உரிமையுள்ளவன்; ஏனெனில் என்னுடைய முன்னோர்கள் வெறும் 40 வருடத்துக்கு முன்பு வரையிலும் அனைத்து ஹிந்து தர்மங்களையும் நிறைவேற்றியவர்கள்;

    நாங்கள் பிறவியிலேயே கிறித்தவர்களல்ல;கங்கையையும்
    காவிரியையும் குறித்து நீங்கள் வைத்திருக்கும் உயர்ந்த எண்ணம்
    நல்லதுதான்;ஆனால் இன்றைய நிலையோ ஏற்கனவே “சன் டிவி”யில் ஒளிபர(பர)ப்பாகிவிட்டதே; மாசுபட்ட கங்கையையும் வறண்டுபோன காவிரியையும் குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை;

    vedamgopal
    5 June 2010 at 10:59 am
    // கிருஸ்துவத்தால் இலங்கை தமிழ்இனம் கண்எதிரே அழிக்கப்பட்டதை பார்த்தும் தெளிவுஏற்படவில்லை //

    இதென்ன புதுக்கரடி..?

    // கந்தர்வன்
    5 June 2010 at 2:12 pm
    வெகு நாட்களாக மௌனம் சாதித்து இப்பொழுது அந்த மௌனத்தை உடைக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்று தோன்றுகிறது.

    வெறிபிடித்த பாலைவனத்து காட்டுமிராண்டியர் சனாதன தருமத்தின் கருத்துக்களை அரையும் குறையுமாகக் folklore ரீதியில் கேட்டுவிட்டு, அந்த அரைகுறை அறிவையும் தங்கள் இஷ்டம்போல திருத்திக் கூறி, அத்துடனும் நில்லாமல் இங்கும் அங்கும் ஆபாசமான எண்ணங்களை நுழைத்து கூறப்பட்ட காட்டுமிராண்டி கலாச்சாரத்தின் வெளிப்பாடே “பழைய ஏற்பாடு” என்னும் புத்தகம்…
    [உதாரணம்:
    a. கடவுள் ஆதி தம்பதியினரை “மூடர்கலாகவே இருங்கள். ஞானத்தைத் தேடிச் சென்றால் கீழே தள்ளி விடுவேன்”;

    b. சகோதரர்கள் இருவர் (காய்ந் மற்றும் ஏபெல்) சமமாக தன்மீது அன்பு வைக்க, அவர்களிடம் பாரபட்சத்தைக் காண்பித்து அவர்களுக்குள் சண்டையை மூட்டியது;

    c. “உன்னுடைய பிள்ளையை பலியாக எனக்குக் கொடு”;

    d. “கானானிய தேசத்தில் உள்ள மக்களை அடியோடு கொன்று விடு. பெண், குழந்தை, சிசு, என்று வித்தியாசம் பார்க்காதே. ஒரு புழு பூச்சி புல் பூண்டு விடாமல் படுகொலை செய்து விடுங்கள்”].

    இந்த காட்டுமிராண்டி வர்கத்தின் வெளிப்பாடு அவர்களுடைய புத்தகத்தோடு நில்லாமல், வரலாறு முழுவதும் ரத்தத்தால் இவர்கள் கையொப்பம் இட்டுள்ளனர். குரூசெடுகள், யூத இனத்தவர்கள் மீது அளவில்லாத காழ்ப்புணர்ச்சியும் அவர்களைப் புறக்கணித்தது, ஹிட்லருக்கு ஆதரவளித்தது, //

    நண்பரே, நான் காட்டுமிராண்டியல்ல; உங்களைப் போலவே இந்த தேசத்தின் குடிமகன், குடியேறியவனல்ல;வந்தேறிகளான‌ ஆரிய தத்துவங்களின் அடிமைத்தளையிலிருந்து விடுபட்டவன்; ஆரிய வேதங்களில் ஆபாசமே இல்லையா?

    பழைய ஏற்பாட்டை அழகாக விவரித்துக்கொண்டே வந்து திடீரென யூதருக்கு வக்காலத்து வாங்கியதும் அதிர்ந்துப்போனேன்; பழைய ஏற்பாடு முழுவதும் யூதர்களின் வேதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும்; அதற்கும் கிறித்தவத்துக்கும் நேரடி தொடர்பு இல்லை;

    ஹிட்லர் யூதரை அழித்ததற்கும் ஆரியர் சிந்துசமவெளி நாகரீகத்தைத் தரைமட்டமாக்கியதற்கும் ஏதேனும் காரணம் தெரியுமா?

    ஹிட்லரின் “ஸ்வஸ்திக்” சின்னத்துக்கும் ஆரியருக்குமான பாரம்பரியத் தொடர்பை அறிவீர்களா?

    நீங்கள் குறிப்பிடும் கிறித்தவம் ரோம சாம்ராஜ்யத்தின் வழிவந்த மேற்கத்திய கிறித்தவமாகும்;அதைக் குறித்து நான் ஒன்றும் சொல்வதற்கில்லை;

    //நமது தேவர் ஏன் ஒரு அப்பாவியின் அப்பாவி மகனைப் பலியாகக் கேட்டார்? என் சிசு, பெண், வயதானவர் என்று கூடக் கருணை காட்டாமல் ஒரு வம்சத்தையும் ஒரு இனத்தையும் ஒரு நாட்டையுமே அழித்து தரைமட்டமாக்கச் சொன்னார்?- //

    பிள்ளைகளை பலிகொடுப்பதும் இன்னும் கர்ப்பிணி பெண்களை பலிகொடுப்பதும் இன்றைய நவீன யுகத்திலும் நம் நாட்டில் நடந்துக்கொண்டுதானிருக்கிறது;

    மிக அருகில் தமிழ்நாட்டில் கொல்லிமலையில் மந்திரவாதி கட்டளையிட்டான் என்பதற்காக தன் கர்ப்பிணி மனைவியை பலி கொடுத்தவனின் கதை எனக்குத் தெரியும்;

    அதுபோன்ற காட்டுமிராண்டிக் கலாச்சாரத்த்தில் வளர்ந்த ஆபிரகாமை சோதித்து நல்வழிப்படுத்த சர்வ வல்ல தேவன் சித்தங்கொண்டார்; ஆனாலும் அந்த பிள்ளை கொலைசெய்வதற்கு முன்னர் இறைவன் தடுத்துவிடுவதாக அந்த வரலாறு முடிகிறது;

    ஆனால் பாரதத்து கதைகளிலும் புராணங்களிலும் எண்ணற்ற கொலைகளை அவதாரங்களெடுத்து இறைவனே செய்கிறார்;முழு பூசணிக்காயை கைப்பிடிச் சோற்றில் மறைக்கப்பார்க்கிறீர்களே;

    இங்கே இறைவன் அவதாரமெடுத்து கொலைகளை செய்கிறார்;
    அங்கே அவதாரமெடுத்து வந்த இறைவன் கொலையானார்; மீண்டும் உயிர்த்தார்;அவர் சிந்திய இரத்தமே பாவ நிவர்த்தியானது என்பது உய(யி)ர் தத்துவம்;

    //சாண்டில்ய ச்மிருதியில் ஒரு திருஷ்டாந்தம் உள்ளது. அது சொல்வதாவது, “நமது நூல்களைத் தவறாக அணுகுபவருக்கு தவறான அர்த்தங்களே கண்ணுக்குத் தெரியும்” என்று. “மஞ்சள் காமாலை வந்தவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள்” என்று சொல்வார்களே, அதைப்போலத்தான்…//

    இந்த தத்துவம் பைபிளுக்குப் பொருந்தாதோ..?

    // எத்தனை இந்து உபன்யாசங்களில்,இந்துக் கோயில்களில் கிறித்தவ மதத்தைப் பற்றிய ஆபாசமான விமர்சனங்கள் செய்யப்படுகின்றன? //

    அய்யா நம்முடைய கோவில்களிலேயே கிரங்கடிக்குமளவுக்கு லீலைகளாகவும் திருவிளையாடல்களாகவும் உபன்யாசம் செய்து மக்களை மதிமயக்கி வைத்திருக்கிறோமே,அங்கு எதற்கு அபஸ்வரம் போல கிறித்தவத்தைப் பற்றிப் பேசவேண்டும்?

    கிறித்தவர்களை ஒடுக்க தனித்தன்மையுள்ள திட்டங்கள் போடப்பட்டு வேறுவழியில் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்;

    முதலாவது வாழ்வாதாரமான குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒடுக்குகிறோம்;கல்விச்சாலைகளிலும் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டிவிட்டு கிறித்தவ நிறுவனங்களை நலிவடையச் செய்கிறோம்;

    இன்னும் மருத்துவ உதவிக்காக வரும் ஏழைகளை அலைக்கழித்து விரட்டுகிறோம்;இப்படி அவர்கள் பேசிக்கொண்டே காலத்தைக் கழிக்க நாம் அமைதியாக செய்துமுடிக்க எத்தனையோ திட்டம் கைவசம் இருக்கிறது;அரசாங்கமும் அதிகாரிகளும் நம்ம ஆட்கள்தானே..!

    // இந்தியா என்ற நாட்டை உருவாக்கித் தந்த வெள்ளையனை நாம் மறக்கக்கூடாது..!//

    மேற்கண்ட கருத்து வஞ்சபுகழ்ச்சியாகச் சொல்லப்பட்டது;கட்டபொம்மன் பிறந்த அதே பூமியில்தானே எட்டப்பனும் வாழ்ந்தான்; மாவீரன் பிரபாகரன் வாழ்ந்த மண்ணிலேதான் துரோகியான கர்ணாவும் இருந்தான்;

    இந்திய சுதந்தரப் போராட்டம் வெல்லும் வரைக்கும் வெள்ளையனுக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தோர் ஆரியர்தானே..?

    வெள்ளையர் செய்த தீமையிலும் ஒரு நன்மை போல குட்டி குட்டி சாம்ராஜ்யங்களாக இருந்த இந்தியா ஒரு நாடாக கூட்டிச் சேர்க்கப்பட்டது என்கிறேன்;

    // காயீன் (Cain) தன்னுடைய நிலத்தில் விளைந்த பழங்களை ‘கர்த்தருக்குக்’ காணிக்கையாகக் கொண்டு வந்தார். ஆபேல் (Abel) தன்னுடைய ஆட்டுக்கூட்டத்தில் இருந்து முதல் கன்றுகளை காணிக்கையாகக் கொண்டு வந்தார். ‘கர்த்தருக்கு’ஆபேல் மேலும், அவன் தந்த பலி ஆடுகள் மேலும் தான் ஆசை இருந்தது. (Genesis, 4-ஆம் அத்தியாயம்). //

    வேதத்தைப் புரட்டவேண்டாம், நண்பரே; நான் மதிக்காத ஒன்று உங்களுக்குப் புனிதமாகத் தோன்றுவதைக் காட்டிலும் எனக்கு அதிக மேன்மையாக நான் போற்றுவதைக் குறித்து என்னைக் கேட்டால் நான் சொல்ல ஆயத்தமாக இருக்கிறேன்;

    நீங்கள் குறிப்பிட்டுள்ள வேதப்பகுதியில் பொருளைக் காட்டிலும் கொடுப்பவர் மனநிலையே சோதிக்கப்படுகிறது; இதற்கு இந்து வேதத்தின் சம்பவங்கள் சற்றும் சளைத்ததல்ல;நானும் திருவிளையாடல் படத்தினைப் பார்த்து ஏறக்குறைய மனப்பாடமே செய்து வைத்திருக்கிறேன், சரியா..?

    அதே தேவன் சில யுகங்கள் கழித்து சடங்கான காரியங்களை வெறுத்து உன்னுடைய பொருட்களல்ல,நீயே எனக்கு வேண்டும் என்று தம் அன்பையும் வெளிப்ப‌டுத்துகிறார்;(வாசிக்க:சங்கீதம்.50)

    // PP 5 June 2010 at 3:45 pm
    Mr.Chilsam,சும்மா கலக்கிட்டிங்க!ஆனா,இதை எல்லாம் படிச்சா கூட நிறைய ஹிந்துவுக்கு சொரணை இல்லாமல் இருக்கிறது தான் ஹிந்து மதம் ஓவரா கத்து குடுத்திட்ட அஹிம்சையின் பலவீனம். //

    நண்பர் பிப்ரப்பீப்பீ அவர்களே, வெயில் காலத்தில் சிரிப்பு மூட்டாதிருங்கள்; காந்திஜியைக் கொன்றது முதல் பாப்ரி மஸ்ஜிதை இடித்தது வரையிலான செயல்கள் அஹிம்சை செயல்களா? இதையா ‘இந்துத்வா’ என்கிறீர்கள்?

    //ஒரு பெண்ணுக்கு கல்யாணத்துக்கு முன்னால தகாத முறைல பொறந்து தன்னை கடவுளின் மகன் என்று பீதற்றி கொண்ட//

    நீங்கள் குறைசொல்வது கண்ணனையா,கர்ணனையா என்று எனக்கு விளங்கவில்லையே,சற்று கோபப்படாமல் விளக்குவீர்களா? சொம்புக்கும் கம்புக்கும் பொறந்தவன் இந்துபுராணங்களிலிருந்தால் மட்டும் கேள்விகேட்கமாட்டீர்களா?

    // உருவ வழிபாடு தவறு என்று சொல்லிக்கொண்டே தெருக் கோடியில் எல்லாம் இப்பொழுது மாதா சிலை முளைத்துக்கொண்டிருக்கிறது. //

    மாதா சிலை நிறுவுபவர்களை பக்தர்களைப் போலச் சற்று நெருங்கிச் சென்று கண்காணித்துப்பாருங்கள், அவர்கள் பிராமணீயத்தின் அடிமைத் தளையிலிருந்து ஆன்மீக விடுதலைப் பெற ஏங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள்;அவர்களுக்கும் பைபிளின் அடிப்படையிலான கிறித்தவத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;

    மேலும் இந்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுச் சொத்துக்களுடன் ஒப்பிடுகையில் இது இலட்சத்தில் ஒன்றுகூட தேறாது;

    இன்னும் திருச்சபையின் சொத்துக்களும் மோசடி பேர்வழிகளால்கொள்ளை போய்க்கொண்டிருக்கிறது என்பதே உண்மை;

    // ‘வெள்ளைக்காரன் இங்கு வந்த போது அவன் கையிலே பைபிளும் நம் கையில் நிலமும் இருந்தது ஆனால் இப்போது அவன் கையில் நிலமும் நம் கையில் பைபிளும் உள்ளது ‘ //

    நாமும் சொல்லலாம், ஆரியன் இங்கு வந்தபோது அவனிடம் மந்திரமும் தந்திரமும் நம்மிடம் சுதந்தரமான இயற்கை வழிபாடும் சமதர்ம சமுதாயக் கட்டமைப்பும் இருந்தது; தற்போதய நிலை உங்களுக்கே தெரியும்;

    தங்கள் கொள்கைகளை நிலைநாட்ட இந்த மண்ணில் ஆரியர் போட்ட வெறியாட்டம் வானத்தின் கீழே எந்த சமுதாயத்திலும் நடைபெற்றதில்லை; இன்றைக்கும் நம்மை ஆக்கிரமித்துள்ள விரியன்பாம்புகுட்டிகளே நம்முடைய மோதல்களுக்குக் காரணம்;

    ஒருபக்கம் நம்மை வெறியேற்றிக் கொண்டே அங்கே அமெரிக்க ஆதிக்க சக்திகளுக்கு நம்மை அடிமையாக்கிவிட்டது, உலகப் பொருளாதார தாராளமயமாக்கல் மாயை;

    இதற்கு முழுமுதல் காரணம் வாஜ்பாய் அரசாங்கமே, அதைத் தொடர்ந்து மன்மோகன்சிங் அரசாங்கம்… இதனால் ஒடுக்க‌ப்படும் மக்கள் செய்யும் புரட்சியே மாவோயிஸ்டுகள் வலுப்பெற காரணமானது; இங்கெல்லாம் கிறித்தவம் எந்தவகையிலும் பொறுப்பாகவில்லை;

    இங்கே பலர் சொல்வது போல கிறித்தவம் அதன் அடையாளங்களை இழந்து மெள்ள அழிந்துக்கொண்டிருக்கிறது;பிறகு எப்படி இந்தியாவில் பரவும்; வெளிநாட்டில் கிறித்தவம் அழிந்துப்போனால் இங்கே அதைப் பரப்பும் குழுக்களுக்கு உதவிகளும் நின்றுபோகுமே..?

    ஆம்,தற்போது எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாமல் இங்கே கிறித்தவ மார்க்கம் சுயாதீனமாக இந்திய தேச சட்டங்களுக்குக் கீழ்பட்டு நிர்வகிக்கப்படுகிறது என்பதே உண்மை;

    தற்போதய கிறித்தவ சபைகள் மேற்கத்திய கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்தரமான இந்தியத் தன்மையுடன் செயல்படத் துவங்கியிருக்கிறது; மாற்றங்களை விரும்பும் புதிய தலைமுறைக்கு நம்பகமானதொரு மாற்றாக இன்றைய கிறித்தவம் விளங்குகிறது..!

    //இப்போதாவது மன்னிப்பு கேட்க தயாரா? இல்லை இன்னும் வேண்டுமா? கிறித்துவத்தில் உள்ள துர்நாற்ற‌ம் வெளிப்படும்!//

    இதில் மன்னிப்பு கேட்க என்ன இருக்கிறது;தேசப்பிதாவைக் கொன்றவர்களே இன்னும் மன்னிப்பு கேட்கவில்லையே..?

    எல்லாமும் ஒரே சமுத்திரத்தில் சென்று சேருகிறது எனும் இந்துக்களின் தத்துவப்படியே கிறித்தவ துர்நாற்றம் சமுத்திரமான இறையன்பில் நிக்ரஹம் செய்யப்படும், தேவைப்பட்டால் நீங்களும் வந்து இணைந்துக்கொள்ளலாம்..!‌

  51. கல்வெட்டு லீணா விசயத்தில் செய்தது சரின்னுதான் பேசுவாங்க அப்படித்தான் பேசனும்

    அதுதான் காலத்தின் கட்டாயம்

  52. […] This post was mentioned on Twitter by ஏழர, ஏழர. ஏழர said: வினவில் கல்வெட்டுடன் ஒரு விவாதம் http://j.mp/cuuJmD (நடுவில் கல்வெட்டின் நக்கல்-கேகுறியின் திட்டில்களை பொறுட்படுத்தாமல் படிக்கவும்) @TBCD […]

Leave a Reply to appavi pothu janam பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க