உயிர் என்பதை பொருள்முதல்வாதத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட விடை காண முடியாத புதிராகச் சித்தரித்து வாதிட்டவர்களுக்கு இயற்கையின் இயக்கவியல் என்ற தனது நூலில் (1886) எங்கெல்ஸ் பதில் அளித்தார். இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இயற்கை விஞ்ஞானம் அன்று கண்டிருந்த முன்னேற்றங்களின் துணை கொண்டு ‘உயிர்’ என்பதற்கு எங்கெலஸ் அளித்த அற்புதமான பொருள்முதல்வாத விளக்கம் இது.

“புரதப் பொருட்களின் இருத்தலின் பாங்கே உயிர்…. இரசாயன ரீதியாகப் புரதப் பொருள்களைத் தயாரிப்பது என்பது எப்போதாவது வெற்றி பெறுமெனில் அப்போது அவை உயிரின் இயல் நிகழ்ச்சியை நிச்சயமாகவே வெளிப்படுத்தும்…”
“.. மனது – பொருள் என்பதையும் மனிதன் – இயற்கை என்பதையும் உடல் – ஆத்மா என்பதையும் வேறுபடுத்தி எதிர்நிலைப்படுத்துகின பொருளற்ற இயற்கைக்கு முரணான கருத்து மேலும் மேலும் சாத்தியமில்லாமல் போகும்.”
“புரதப் பண்டங்களின் ஆக்கம் அறியப்பட்டவுடன் உயிருள்ள புரதத்தைத் தயாரிக்கும் வேலையில் இரசாயனவியல் இறங்கும். மிகச் சாதகமான சூழ்நிலைகளில் எதை இயற்கை ஒரு சில வான்கோள்களில் செய்து முடிக்கப் பத்து இலட்சக் கணக்கான ஆண்டுகள் பிடித்தனவோ, அதைப் பொழுது விடிவதற்குள் இரசாயனவியல் சாதிக்க வேண்டும் எனக் கோருவது ஒரு மந்திரவித்தையைக் கோருவதற்கு ஒப்பாகும்.”
1886 இல் எதனை மந்திர வித்தை என்று எங்கலெஸ் குறிப்பிட்டாரோ, அந்த மந்திர வித்தையைச் சாதிக்கும் திசையில் இரசாயனவியல் இன்று வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
000

சிந்தடிகா – Synthetica . அமெரிக்காவின் கிரேக் வென்டர் என்ற விஞ்ஞானி தனது சோதனைக் கூடத்தில் மே, 20, 2010 ஆன்று உருவாக்கியிருக்கும் புதியதொரு நுண்ணுயிரின் பெயர். செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிர் என்ற பொருள்படும் வகையில் சூட்டப்பட்ட பெயர். சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி – சிந்தடிகா.
ஒரு நுண்ணுயிரின் (பாக்டீரியா) மரபணுக் குறியீடுகளுக்குரிய (டி.என்.ஏ) வேதியியல் மூலக்கூறுகளை செயற்கை முறையில் உருவாக்கி வைத்துக் கொண்டு, வேறொரு பாக்டீரியாவிலிருந்து அதன் மரபணுக்களை நீக்கிவிட்டு, எஞ்சியிருக்கும் அதன் கூட்டுக்குள் அவற்றை உட்செலுத்தி செயற்கை முறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய உயிர்தான் சிந்தடிகா.
சிந்தடிகா என்பது இயற்கை தனது இயக்கத்தின் போக்கில் தானே படைத்த புதியதொரு உயிரல்ல; ஏற்கெனவே இருக்கின்ற ஒரு உயிரின் மரபணுவை பிரதி எடுத்து குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டாலி ஆட்டினைப் போன்ற நகலும் அல்ல. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அல்லது தக்காளியைப் போன்றதும் அல்ல. இயற்கை படைத்த கூட்டுக்குள் நுழைக்கப்பட்டிருக்கும் செயற்கை என்று இதைச் சொல்லலாம்.
வேர்க்கடலையின் பருப்பை நீக்கி விட்டு தோலுக்குள்ளே செலுத்தப்பட்ட முந்திரிப் பருப்பைப் போன்றது இந்தப் படைப்பு. இந்த முந்திரிப்பருப்பு முந்திரியின் மரபணுவிலிருந்து நேரிடையாகப் படைக்கப்பட்டதல்ல. அந்த மரபணுவின் வேதியியல் மூலக்கூறுகளை சோதனைச்சாலையில் ஒன்றிணைத்து அதன் மூலம் உருவாக்கப்பட்டது. அந்த அளவில் இது உயிரற்ற சடப்பொருளிலிருந்து உருவாக்கப்பட்ட உயிர்.
மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டிரியாவின் குரோமோசோம் அமைப்பை கணினியின் உதவியுடன் பகுத்தாராய்ந்து, அவற்றின் மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) சுமார் 10 இலட்சம் வேதியியற் குறியீடுகள் கொண்ட மொழிக்கு மொழிபெயர்த்தனர் கிரேக் வென்டர் குழுவினர். பின்னர் அந்த வேதியியற் குறியீடுகளின் அடிப்படையில் வேதிப் பொருட்களை ஒன்றிணைத்து செயற்கையான மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) உருவாக்கினர். பின்னர் மைகோபிளாஸ்மா காப்ரிகோலம் என்ற பாக்டிரியாவிலிருந்து அதன் மரபணுத்தொகுப்பை ‘சுரண்டி’ எடுத்துவிட்டு, எஞ்சியிருந்த கூட்டுக்குள் (செல்) தாங்கள் உருவாக்கிய செயற்கையான மரபணுத் தொகுப்பில் சில மாற்றங்களும் செய்து உட்செலுத்தினர். இந்தப் புதிய கூட்டிற்குள் குடியேற்றப்பட்ட மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டீரியாவின் வேதியியற் பொருட்கள் கூட்டில் பொருந்தி, ஒரு புதிய உயிராக இயங்கத்தொடங்கின.
செயற்கையாக ஒரு மரபணுத்தொகுப்பை உருவாக்குவதற்கு அதன் வேதியியல் சேர்க்கையைக் கண்டறிதல்; அதனை வேறொரு செல்லில் உட்செலுத்தி, அவ்வாறு உட்செலுத்தப்பட்ட (செயற்கையான) மரபணுத்தொகுப்பின் இயங்குமுறையை தனதாக்கிக் கொள்ளுமாறு புதிய செல்லுக்கு(கூட்டுக்கு) புரியவைக்கத் தேவையான உயிரியல் மொழியைக் கண்டறிதல் – இவை இரண்டும்தான் வென்டர் குழுவினர் தீர்வு கண்ட பிரச்சினைகள்.
உடல் வேறு, உயிர் வேறு என்று கருதுகின்ற புராணங்களில் கூறப்படும் ‘கூடு விட்டுக் கூடு பாய்தல்’ என்ற புனைகதையை, நடைமுறையில் சாதித்துக் காட்டியிருக்கிறது இன்றைய அறிவியல். ராமசாமியின் உடலுக்குள் கோயிந்சாமியை நுழைத்து, இனி கோயிந்சாமியாகவே நடந்து கொள்ளவேண்டும் என்று ராமசாமியின் உடலுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதனை எளிமைப்படுத்திக் கூறலாம். ஆனால் செல் (உடல்) என்பது வெறும் கூடு அல்ல, மரபணு (டி.என்.ஏ) என்பதே உயிரும் அல்ல. இவற்றின் இயங்கியல் ரீதியான சேர்க்கையும், அவ்வாறு சேர்ந்திருத்தலின் பாங்குமே உயிர்.
தனக்கு வேண்டிய ஆற்றலை இயற்கையிலிருந்து தானே கிரகித்துக் கொள்வதையும், தன்னைத்தானே மறு உற்பத்தி செய்து கொள்வதையும் உயிரின் இலக்கணமாகக் கூறுகிறது அறிவியல். தன்னைத் தானே மறு உற்பத்தி செய்து கொண்டு பல்கிப் பெருகியதன் மூலம் இந்த இலக்கண வரையறையையும் நிறைவு செய்திருக்கிறது சிந்தடிகா.
குரோமோசோம் என்பது மரபணுக்களால் அனது; மரபணுக்கள் டி.என்.ஏ, ஆர்.என்.ஏக்களால் ஆனவை; டி.என்.ஏ, ஆர்.என்.ஏ க்கள் பரதத்தினாலும், புரதங்கள் அமினோ ஆசிட்டுகளாலும் ஆனவை. அமினோ ஆசிட்டுகள் வேதிப் பொருட்களால் ஆனவை என்பது ஏற்கெனவே அறியப்பட்ட அறிவியல் உண்மை. கிரேக் வென்டரின் குழு நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களைக் கொண்டே உயிரை உருவாக்கிவிடவில்லையெனினும், அந்தத் திசையை நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
எப்படிப் பார்த்தாலும், இயற்கை தன் போக்கில் உருவாக்கியவை அல்லது இறைவனால் படைக்கப்பட்டவை என்று நம்பப்படும் பல்லாயிரம் கோடி உயிரினங்களுக்கு அப்பால், மனிதன் தன் சொந்தக் கையால் உருவாக்கி, “இது நான் உருவாக்கியது” என்று அந்த உயிரிலேயே கையெழுத்தும் இட்டு வைத்திருக்கும் ஒரு புதிய உயிரினம் இது. ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற வகையிலான ‘போலச்செய்தலில்’ தொடங்கிய மனிதன், பறவையைக் கண்டான் பறவையைப் படைத்தான் என்பதை நோக்கியும், இதுவரை இல்லாதொரு புதிய பறவையையும் படைப்பான் என்பதை நோக்கியும் எடுத்து வைத்திருக்கும் அடி.
இந்தக் குறிப்பிட்ட ஆய்வுக்கு மட்டும் பத்து ஆண்டுகளும் 40 மில்லியன் டாலர்களும் செலவாகியிருக்கின்றன. கணினித் தொழில்நுட்பமும், அவற்றின் கணக்கிடும் வேகமும் பன்மடங்கு வளர்ந்திருப்பதனால்தான், பல இலட்சம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இயற்கை உருவாக்கியிருக்கும் இந்த நுண்ணுயிரின் கட்டமைப்பை, ஒரு பத்து ஆண்டுகளில் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.
உயிரைச் செய்றகையாக உருவாக்கும் ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகின்றன. ஒரேகானில் உள்ள ரீட் கல்லூரியின் தத்துவத்துறைப் பேராசிரியரும், முற்றிலும் இரசாயனப் பொருட்களிலிருந்தே செயற்கை உயிரை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் புரோட்டோ லைஃப் என்ற இத்தாலிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் பெடோ, “கடவுளின் ஏரியா என்று கருதப்படும் பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். உயிர் என்பது மிகவும் வலிமையானது. நாம் நினைப்பதைச் செய்யும்படி ஒரு உயிரைப் படைக்கமுடியுமானால், எல்லாவிதமான நல்ல காரியங்களையசும் செய்யலாம். பொறுப்புடன் நடந்துகொள்ளும் பட்சத்தில் ‘கடவுளின் வேலையை’ நாம் மேற்கொள்வதில் தவறில்லை” என்கிறார்.
கிரேக் வென்டரின் ஆய்வுக்கூடம், வேதிப்பொருட்களைக் கொண்டு தாங்கள் செயற்கையாக உருவாக்கிய மரபணுத்தொகுப்பினைக் குடியேற்ற, ஏற்கெனவே உள்ள இன்னொரு பாக்டீரியாவின் கூட்டினைப் பயன்படுத்திக் கொண்டனர். மார்க் பெடோவின் ஆய்வுக் குழுவோ, மரபணுக்களைக் குடியேற்றும் கூடுகளை செயற்கையான முறையில் தயாரிக்க முயன்று கொண்டிருக்கிறது. நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களிலிருந்தே உயிரை உருவாக்குவதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
000

2500 ஆண்டுகளுக்கு முன்னால் கடவுள் கோட்பாட்டை முன்வைத்த பார்ப்பனிய தத்துவஞான மரபினர், உலகாயதவாதிகளை (பொருள்முதல்வாதிகளை) பார்த்து, “ஜடப்பொருளிலிருந்து, அந்த ஜடப்பொருட்களின் குணங்களைப் பெற்றிராத புதிய குணங்ளைக் கொண்ட உயிர்ப்பொருள் என்பது எவ்வாறு உருவாக முடியும்?” கேள்வி எழுப்பினர். “ஜடப்பொருளான அரிசி புளிக்க வைக்கப்படும்போது போதை எனும் புதிய குணம் கொண்ட மதுவாக மாறுவதைப் போல பஞ்சபூதங்களின் சேர்க்கையில்தான் உயிர் உருவாகிறது” என்று அன்றிருந்த அறிவின் வளர்ச்சிக்கு ஒப்ப கருத்துமுதல்வாதிகளுக்குப் பதிலடி கொடுத்தனர் பொருள்முதல்வாதிகளாகிய சாருவாகர்கள்.
25 நூற்றாண்டுகளில் அறிவியல் வெகுதூரம் வளர்ந்து விட்டது. எனினும் இன்றும் கூட பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டு, நேரம் தவறாமல் மாத்திரையை விழுங்கிக் கொண்டிருக்கும் பாதிரிகளும், முல்லாக்களும், சங்கராச்சாரிகளும் படுக்கையை விட்டு எழுந்திருக்காத நிலையிலும் கூட, “என்னதான் இருந்தாலும் மனிதனால் ஒரு எறும்பைப் படைக்க முடியுமா? இறைவன் பெரியவன்” என்று கூறி போலித் தன்னடகத்துடன் ஏளனப் புன்னகை சிந்துகிறார்கள்.
எனினும், செயற்கை உயிரியல் (synthetic biology) என்றொரு ஆய்வுத்துறையே உருவாகிவிட்ட இன்றைய நிலையிலும் சிந்தடிகா உருவாக்கப்பட்ட பிறகும், விஞ்ஞானிகள் யாரும் ஆணவம் கொண்டு திரியவில்லை. புதியதைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத்தான் பழையதை ஆய்வு செய்வதும் கற்றுக்கொள்வதும் அவசியமானதாக இருக்கிறது. அந்த வகையில் செயற்கை உயிரைப் படைக்க முனைந்திருக்கும் விஞ்ஞானிகள்தான் இயற்கை படைத்திருக்கும் உயிர்களை ஆய்வு செய்வதிலும் அளப்பரிய ஆர்வம் காட்டுகிறார்கள். 400 கோடி ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பரிணாம வளர்ச்சியின் போக்கில் இயற்கை படைத்திருக்கும் உயிர்களையும், நுண்ணுயிர் செல்களையும் அவை பெற்றிருக்கும் ஆற்றலையும் வியப்புடன் விவரிக்கிறார்கள்.
“நம் விரலை உள்ளே விட்டால் அந்தக் கணமே தசையும், நகமும், எலும்பும் கரைந்து காணாமல் போய்விடும் அளவிற்கான திராவகங்களிலும் உயிர்வாழக்கூடிய நுண்ணுயிர்கள், மனிதர்களைக் கொல்வதற்குத் தேவைப்படுகின்ற அணுக்கதிர் வீச்சைக் காட்டிலும் 1500 மடங்கு அதிகமான கதிர்வீச்சினால் தாக்கிச் சிதறடிக்கப்பட்ட பின்னரும், தன்னைத்தானே தைத்துக் கொண்டு உடனே தன்னை மறுஉற்பத்தியும் செய்து கொள்ளும் ஆற்றல் பெற்ற நுண்ணுயிர்கள், மனிதனும் விலங்குகளும் உறைந்தோ, உருகியோ, சிதறியோ, மூச்சுத் திணறியோ அழிந்து விடக்கூடிய சூழல்களில் சர்வ சாதாரணமாக உயிர்வாழும் நுண்ணுயிர்கள் இயற்கையில் இருக்கின்றன. இயற்கையின் பல்லுயிர்ச் சூழல் குறித்து இதுவரை நாம் அறிந்திருப்பது ஒரு சதவீதம் கூட இல்லை என்பதே உண்மை. நாம் படைக்கவிருக்கும் செயற்கை உயிரிகள் என்னவிதமான பணிகளை செய்யும் ஆற்றல் பெற்றவையாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவற்றைக் காட்டிலும் பன்மடங்கு ஆற்றல் பெற்ற கோடிக்கணக்கான உயிரிகள் இயற்கையில் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கின்றன” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
“இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை… இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம், அதன் நடுவில் நிலைவாழ்கிறோம்.. இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைச் சரியாகப் பிரயோகிப்பதில், மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்ற உண்மையில்தான் இயற்கையின் மீதான நமது ஆளுமை என்பதன் பொருள் அடங்கியுள்ளது” என்றார் எங்கெல்ஸ்.
மதவாத அறிவிலிகளின் போலித் தன்னடக்கத்திற்கும் அறிவியலாளர்களின் தன்னடக்கத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான். “தன்னுடைய படைப்பைப் புரிந்து கொள்ளுவதற்கும், அதனை சிறப்பாக கையாள்வதற்குமான பரிசாக தேவன் மனிதனுக்கு அறிவை வழங்கியிருக்கிறான் என்பதற்கு இது (சிந்தடிகா) இன்னொரு நிரூபணம்” என்று மிகவும் அற்பத்தனமான முறையில் கடவுளை முட்டுக் கொடுத்து நிறுத்த முயன்றிருக்கிறார் இத்தாலிய கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல் அஞ்சலோ பாக்னசோ.
“தன்னைக் கடவுளாகக் கருதிக் கொள்வதும் கடவுளுக்கே உரிய படைப்பாற்றலை ஏந்திச் சுழற்றுவதும் மனிதனை காட்டுமிராண்டித்தனத்தில் தள்ளிவிடும். படைப்பவன் ஒருவன் மட்டுமே – அவன்தான் இறைவன் என்பதை விஞ்ஞானிகள் ஒருக்காலும் மறந்து விடக்கூடாது” என்றார் மோகேவெரோ என்றொரு பாதிரி. காட்டுமிராண்டித் தனத்தைப் பற்றிப் பேசும் யோக்கியதை கத்தோலிக்கத் திருச்சபைக்கு உண்டா என்பது ஒருபுறம் இருக்க, சிந்தடிகா குறித்த செய்தி வெள்வந்தவுடனே, ‘அழித்தல்’ தொழிலில் ஈடுபட்ட சங்கராச்சாரியும் கூட ‘ஆக்கல்’ தொழிலை பிரம்மனிடமிருந்து மனிதன் அபகரித்துக் கொண்டிருப்பது குறித்து தனது கவலையை வெளியிட்டிருக்கிறார்.
செயற்கை உயிரின் ஆக்கத்தின் மூலம், கடவுள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பை அறிவியல் மேலும் அடைத்து விட்டது. எனினும், கடவுள் கல்லறைக்குச் செல்ல மறுக்கிறார். காரணம், எந்த முதலாளித்துவம் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மூலதனமிடுகிறதோ, அதே முதலாளித்துவம் அறிவியலை தனது இலாப நோக்கத்துக்கான கருவியாகப் பயன்படுத்துவதன் மூலம், கடவுள் இன்னமும் உயிரோடிருக்க துணை செய்கிறது.
தனது கொள்ளை இலாப நோக்கத்துக்காக இயற்கை முதல் மனிதர்கள் வரையில் எதையும், யாரையும் அழிக்கத் தயங்காத முதலாளி வர்க்கம் அறிவியலின் துணை கொண்டு நடத்தியிருக்கும் அழிவு வேலைகளைக் காட்டி, படைப்புப் பணியை கடவுளிடமிருந்து மனிதன் பறித்துக் கொண்டால் நேரக்கூடிய விபரீதங்களைக் காட்டி நம்மை மிரட்டுகிறார்கள் மதவாதிகள். திருச்சபை கூறுவது போல அறிவியல் மனிதனிடம் சிக்கியிருக்கவில்லை. தம்மளவில் மனிதத்தன்மையை அகற்றியவர்களும், மனிதகுலத்திடமிருந்தும் அதனை அகற்ற விரும்புகிறவர்களுமான உலக முதலாளி வர்க்கத்திடம் சிக்கியிருக்கிறது அறிவியல்.
அணு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள், மரபணு மாற்ற விதைகள், புவி சூடேறுதல் மற்றும் இயற்கைப் பேரழிவுகளைத் தோற்றுவித்துள்ள உலக முதலாளி வர்க்கம், அறிவியலால் அகற்றப்பட்ட கடவுளை மீண்டும் அரியணையில் அமர்த்துகின்றது. மதவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருகிறது. இதன் விளைவாக, அறிவியலின் சாதனைகள் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் தருவதற்குப் பதிலாக அச்சத்தையும் அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கின்றன. சிந்தடிகா – இதற்கு விலக்கல்ல.
000
புதிய நுண்ணுயிரை வடிவமைத்து உருவாக்குவதைச் சாத்தியமாக்கியிருக்கும் இந்த முன்னேற்றத்தின் பயனாக, தொற்று நோய்கள் மற்றும் ஆட்கொல்லி நோய்களுக்கான புதிய தடுப்பு மருந்துகளை உருவாக்கலாம். பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற அழிக்க முடியாத கழிவுகளைக்கூட தின்று செரிக்கும் திறன் கொண்ட நுண்ணுயிர்கள், கரியமிலவாயுவை உறிஞ்சும் நுண்ணுயிர்கள், உயிரி எரிபொருளை (பயோ ஃப்யூவல்) உருவாக்கித்தரும் நுண்ணுயிர்கள் போன்ற பலவற்றையும் உருவாக்கலாம்.
அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம், வெவ்வேறு விதமான பணிகளைச் செய்யக் கூடிய சுமார் 2000 உயிரி உறுப்புகளின் டி.என்.ஏ குறியீடுகளைத் (BioBrick parts) பட்டியலிட்டுத் தொகுத்து வைத்திருக்கிறது. போல்ட், நட்டுகள், சக்கரங்கள், புல்லிகள், கியர்களை இணைத்து ஒரு எந்திரத்தை உருவாக்குவதைப் போல, இந்த உயிரி உறுப்புகளை வேண்டியவாறு இணைத்து ஒரு உயிரி எந்திரத்தை உருவாக்குவதென்பதே அங்கு நடைபெறும் ஆய்வின் நோக்கம். சிலிக்கான் தொழில் நுட்பத்துக்கு மாற்றாக, நுண்ணுயிர்களைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளும் நடைபெறுகின்றன.
உயிரித் தொழில்நுட்பம் வழங்கும் நேர்மறைப் பயன்கள் கற்பனைக்கெட்டாதவை. எனினும், இந்த அறிவியலும் தொழில்நுட்பமும் யாருடைய ஏகபோகத்தின் கீழ் இருக்கின்றன என்பதுதான் அறிவியல் வளர்ச்சி செல்லும் திசையையும் அதன் ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கான சாத்தியத்தையும் தீர்மானிக்கின்றன. பெரும் பொருட்செலவு பிடிக்கும் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது அமெரிக்க இராணுவத்தின் ஆராய்ச்சித் துறைகளோதான் கட்டுப்படுத்துகின்றன. உலகச் சந்தையின் மீது வர்த்தக ரீதியான ஏகபோக ஆதிக்கம் அல்லது இராணுவ மேலாதிக்கம் என்பவையே பெரும்பாலான ஆய்வுகளின் நோக்கத்தை தீர்மானிப்பவையாக இருக்கின்றன.
இந்நிறுவனங்களின் கூலி அடிமைகளாக உள்ள விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒரு கண்டுபிடிப்பின் பயன்பாடு குறித்தோ, அதன் எதிர்விளைவுகள் குறித்தோ தாங்கள் அறிந்த உண்மைகளை வெளியிட முடியாமல் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப் படுபவர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை நலனுக்கு ஏற்ப உண்மைகளைத் திரித்துக் கூறி சான்றளிக்கும் அறிவு நாணயமற்றவர்களாகவும் உள்ளனர்.
தற்போது சிந்தடிகாவை உருவாக்கியிருக்கும் கிரேக் வென்டரின் தனியார் ஆய்வு நிறுவனம், எக்சான் மொபில் என்ற அமெரிக்கப் பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. சூழலிலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சி அதனை ஹைட்ரோ கார்பன்களாக மாற்றவல்ல கடற்பாசிகளை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின்படி நடைபெறும் ஆய்வு. எண்ணெய் வளங்கள் வற்றி வரும் சூழலில், கரும்பு, சோளம், ஜட்ரோபா போன்றவற்றிலிருந்தெல்லாம் தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளைக் காட்டிலும் மலிவானதாக இருக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் ஹைட்ரோ கார்பனிலிருந்து பெட்ரோலும் டீசலும் தயாரித்து எண்ணெய் விற்பனையில் உலக ஏகபோகத்தை அடைவதே எக்சான் மொபில் நிறுவனத்தின் நோக்கம்.
அதே போல, நுண்ணுயிர்களின் மரபணுக்களை செயற்கையாக திருத்தி அமைத்து, அவற்றிலிருந்து ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆய்விலும் நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு மருந்துக் கம்பெனியுடன் இணைந்து கிரேக் வென்டரின் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இரத்தப் புற்றுநோய்க்கான மருந்துகளைத் தயாரித்து வந்த இந்திய நிறுவனங்களை, காப்புரிமையைக் காட்டி தடுத்து நிறுத்தி, அம்மருந்துகளின் விலையை நூறு மடங்கிற்கு மேல் விலை உயர்த்தி விற்று வரும் நிறுவனம்தான் நோவார்ட்டிஸ்.
எக்சான் மொபில் நிறுவனமோ, புஷ் கும்பலுக்கு மிகவும் நெருக்கமானது; இராக் ஆக்கிரமிப்பின் பின்புலத்தில் இருந்தது. இத்தகைய நிறுவனங்கள் மேற்கூறிய கண்டுபிடிப்புகளை எப்படிப் பயன்படுத்தும் என்பதை விளக்கத் தேவையில்லை.
மருந்து நிறுவனங்கள் மட்டுமின்றி, உணவு தானிய வணிகத்தில் உலக ஏகபோகத்தை நிறுவிக் கொள்ளத் துடிக்கும் மான்சான்டோ முதலான பன்னாட்டு உணவுக் கழகங்களும் (Agri business corporations) உயிரி தொழில்நுட்ப ஆய்வுகளில் சிறப்புக் கவனம் செலுத்துகின்றன. இந்தியா முதலிய நாடுகளில் அரசுகள், ஆய்வுக் கூடங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ளின் துணையுடன் தமது ஆய்வுகளின் சோதனைக் களமாக ஏழைநாடுகளின் விவசாயத்தை மாற்றுகின்றன. மான்சான்டோவின் பி.டி விதைகள் இந்திய விவசாயத்தின் மீதும் விவசாயிகளின் மீதும் ஏவியிருக்கும் அழிவு நம் கண் முன் தெரிகின்ற சான்று.
ஆனால் இந்த அழிவைக்கூட “சொல்லி அழக்கூடாது, சொல்லாமல்தான் அழவேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக அறிவியல் ஆதாரம் இல்லாமல் பேசுவது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம்” என்று கூறும் சட்டமுன்வரைவை நிறைவேற்றுவதற்காக தயார் நிலையில் வைத்திருக்கிறது மத்திய அரசு.
செயற்கை கடற்பாசி இயற்கையான உயிர்ச்சூழலுக்குள் ஏவப்பட்டால் ஏற்படும் விளைவுகள் – பின் விளைவுகள் என்ன, அவை ஏவப்பட்டிருக்கின்றனவா இல்லையா என்பதைக் கூட எப்படித் தெரிந்து கொள்வது போன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள் சூழலியலாளர்கள். இந்தக் கேள்விகளுக்கு விடை காண பெரும் ஆராய்ச்சி தேவையில்லை. யூனியன் கார்பைடு நடத்திய போபால் படுகொலையும் தற்போது அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடாவின் கடற்பரப்பு முழுவதும் பரவி கோடிக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களைக் கொன்று கொண்டிருக்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெயும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரியும் உண்மைகள். செயற்கை உயிரிகளால் ஏற்படும் ஆபத்துகளை இவ்வாறு பளிச்சென்று நிரூபிக்கக் கூட முடியாது என்பதால், இத்தகைய ஆய்வுகளையே தடை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர் சூழலியலாளர்கள்.
விபத்துகள் மட்டுமல்ல. நுண்ணுயிர்களை எளிதில் கண்டு பிடிக்க முடியாத பேரழிவு ஆயுதங்களாகவும் ஏவ முடியும். இராக்கில் குறைந்த கதிர் வீச்சு கொண்ட அணு ஆயுதங்களையும், வியத்நாமிலும் கொரியாவிலம் ரசாயன ஆயுதங்களையும், இராக்கில் விசவாயுக் குண்டுகளையும் பயன்படுத்தியிருக்கும் அமெரிக்கா உயிரி ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடும். அவ்வகையில் இக்கண்டுபிடிப்புகள் அனைத்தையுமே அழிவு வேலையின் ஆயுதங்களாகப் பயன்படுத்த முடியும். பயன்படுத்தும்.
இப்பிரச்சினைக்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியையும், உலகமயமாக்கலையும் தொடர்ந்து உலக நாடுகளின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வணிகம் சார்ந்த அறிவுசார் சொத்துடைமை (TRIPS), புதிய கண்டுபிடிப்புகளின் மீது மட்டுமின்றி, தாவரங்கள், நுண்ணுயிர்கள் மற்றும் மரபணுக்கள் மீதும் கூட காப்புரிமை கோரும் அதிகாரத்தை உலக முதலாளித்துவத்திற்கு வழங்கியிருக்கிறது. வேம்பு மீது அமெரிக்க நிறுவனம் காப்புரிமை பெற்றதும், அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளும் நாம் அறிந்ததுதான். தாவரங்களை மட்டுமல்ல, மனிதனின் மரபணுக்களுக்கும் கூட காப்புரிமை பெற்று, அவற்றைத் தனிச்சொத்துடைமையாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது உலக முதலாளித்துவம்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிராட் (39) என்ற பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. கருப்பையிலும் தனக்குப் புற்றுநோய் வர அபாயம் உள்ளதா என்பதை மரபணுச் சோதனை மூலம் தெரிந்து கொள்ள எண்ணிய அந்தப் பெண், மிரியாட் என்ற சோதனைக் கூடத்தை அணுகினார். புற்றுநோயை உருவாக்கும் மரபணு அந்தப் பெண்ணின் உடலில் இருப்பது சோதனையில் தெரிய வந்தது. வேறோரு சோதனைக்கூடத்தில் மீண்டும் மரபணுச் சோதனை செய்து பார்த்து இதனை உறுதி செய்து கொள்ள கிராட் விரும்பினார். ஆனால் மரபு வழியில் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயை உருவாக்கும் இரு மரபணுக்களை முதன்முதலாகக் கண்டுபிடித்த மிரியாட் சோதனைக்கூடம், அவ்விரு மரபணுக்களுக்கு அறிவு சார் சொத்துடைமையை பதிவு செய்து வைத்திருந்தது. மிரியாட்டில் இந்த சோதனைக்கான கட்டணம் 1.5 இலட்சம் ரூபாய். இதைவிட மிக மலிவான கட்டணத்தில் இச்சோதனையைச் செய்வதற்கு பல இடங்கள் இருந்தும், அமெரிக்காவின் வேறெந்த சோதனைக்கூடத்திலும் இந்தச் சோதனையைச் செய்வதற்குத் மிரியாட் தடை பெற்றிருந்தது.
கிராட்டின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அமெரிக்க சிவில் உரிமை யூனியன் “உடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நிலையிலும் கூட மனிதனின் மரபணுக்கள் எனப்படுபவை இயற்கையின் அங்கங்களே. இவை புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல” என்று வாதிட்டன. மார்ச் 2010 இல் அமெரிக்காவின் ஒரு மாவட்ட நீதிமன்றம் கிராட் நிறுவனத்தின் இந்தக் காப்புரிமையை ரத்து செய்திருக்கிறது.
மிரியாட் போன்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களும், மருந்து நிறுவனங்களும் சுமார் 40,000 மனித மரபணுக்களுக்கு காப்புரிமை பெற்று வைத்திருக்கின்றன. இந்த தீர்ப்பை ரத்து செய்தால் மட்டுமே தங்களது ஆராய்ச்சியின் ‘பயனை’ ‘அறுவடை’ செய்ய இயலும் என்பதால் இத்தொழில் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்தத் தீர்ப்பை முறியடிக்க முயலும் என்பதில் ஐயமில்லை. சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறும் முயற்சி, மேற்கூறிய வழக்கில் பன்னாட்டு நிறுவனங்கள் வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக உதவும் என்றும் சில விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.
மனித மரபணுத் தொகுப்பு தொடர்பான ஆய்வில் முக்கியப் பங்கு வகித்த விஞ்ஞானியும், மனித மரபணுவின் மீது காப்புரிமை பெறும் முயற்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவருமான மான்செஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் சல்ஸ்டன் காழ்க்கண்டவாறு எச்சிரித்திருக்கிறார்: “சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறுவதற்காக கிரேக் வென்டர் கொடுத்துள்ள விண்ணப்பம், சிந்தடிகாவுக்கு மட்டும் காப்புரிமை கோரவில்லை. உயிரி தொழில்நுட்பம் தொடர்பான பல வகையான ஆய்வு முறைகளுக்கும் சேர்த்து காப்புரிமை கோருகிறது. இது நிராகரிக்கப்படவில்லையென்றால், உலகெங்கும் நடைபெறும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி முழுவதுமே கிரேக் வென்டர் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியே மொத்தமாக முடக்கப்பட்டுவிடும்”
சிந்தடிகாவை உருவாக்கிய கிரேக் வென்டர் எனும் விஞ்ஞானியே உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிகளின் எதிரியாக மாறி நிற்பதை இப்போது காண்கின்றோம்.
இப்போது அறிவியல் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட்டு நிறுத்துவது ஆண்டவனல்ல, அறிவு சார் சொத்துடைமை என்ற உலக முதலாளித்துவத்தின் கோட்பாடு. அறிவியலை அடக்கி ஆள்வது திருச்சபை அல்ல, முதலாளித்துவ உடைமை உறவை நிலைநாட்டுகின்ற ஏகாதிபத்தியம் அல்லது உலக வர்த்தகக் கழகம்.
உயிரின் வேதியல் மூலத்தை க் கண்டறிந்து, அதனை மாற்றியமைத்து, இதுவரை இல்லாத புதியதொரு உயிரை உருவாக்கவும் தலைப்பட்டுவிட்டது இயற்கை விஞ்ஞானம். உடைமை உறவின் சமூகப் பொருளாதார மூலத்தை மார்க்சியம் கண்டறிந்து சொல்லிய பின்னரும், அதனைப் புரிந்து கொள்ள இயலாத அறியாமையில் சமூகத்தை அமிழ்த்தியிருக்கும் ஏகாதிபத்தியம், உற்பத்தி சாதனங்களை மட்டுமன்றி உயிரணுவையும் தனிச்சொத்துடைமையாக்கும் திசையில் சமூகத்தை இழுத்துச் செல்கிறது.
இயற்கையின் 400 கோடி ஆண்டுக்கால ‘வரலாறு’, பொருள்முதல்வாத நோக்கில் விளக்கம் பெற்றுவிட்டது. சோதனைக்கூடத்தில் நிரூபிக்கப்பட்டும் விட்டது.
மனிதனின் சில ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு, பொருள்முதல்வாத நோக்கிலான மாற்றத்துக்காகவும் புதிய சமூகத்தின் தோற்றத்துக்காகவும் ஏங்கி நிற்கிறது. அதன் காரணமாகவே, அறிவியலும் தேங்கி நிற்கிறது. இந்தத் தேக்கத்தை உடைப்பதற்குத் தேவைப்படுவது – புரட்சி. இதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முடிபு.
____________________________________________
– மருதையன், புதிய கலாச்சாரம், ஜூலை – 2010
____________________________________________
//“இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை… இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம், அதன் நடுவில் நிலைவாழ்கிறோம்.. இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைச் சரியாகப் பிரயோகிப்பதில், மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்ற உண்மையில்தான் இயற்கையின் மீதான நமது ஆளுமை என்பதன் பொருள் அடங்கியுள்ளது”//
எவ்வளவு வியாபகமான, அருமையான பார்வை…
[…] This post was mentioned on Twitter by vinavu, vinavu, vinavu, vinavu and others. vinavu said: செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்? http://wp.me/pvMZE-28i RT Pls. […]
மிக மிக முக்கியமான பகிர்வு!
உயிர்காக்க விஞ்ஞானிகள் உயிரை கொடுத்து கண்டுபிடிக்கும் மருந்துகள் முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாரிக்க பயன்படுத்துவது கொலை குற்றத்திற்கு சமம்!
Wonderful artcile Vinavu! Thanks for sharing!
அற்புதமான கண்டுபிடிப்பு ………..நல்ல பதிவு தோழர்
ஒரு கை தேர்ந்த உயிரித் தொழில்நுட்ப வல்லுனர் கூட இவ்வகையான செய்திகளை இவ்வளவு எளிதாக புரிய வைத்திருக்க மாட்டார்…..
தோழர் மருதையனின் பல படைப்புகளில் மற்றுமொரு சிறந்த படைப்பு இது….கட்டுரைக்காக அவரின் தயாரிப்பு/ தரவுகள் பாராட்டப்பட வேண்டியவை.
செயற்கை உயிரியின் படைப்பை மார்ஸியக் கண்ணோட்டத்துடன்
விளக்கியது மட்டுமல்லாமல் இன்றைய அறிவியல் மேலும் வளராததற்கு தற்போதுள்ள முதலாளித்துவ சமூகமே காரணம் என்பதை விளக்கியதும் அருமை.
///இயற்கையின் 400 கோடி ஆண்டுக்கால ‘வரலாறு’, பொருள்முதல்வாத நோக்கில் விளக்கம் பெற்றுவிட்டது. சோதனைக்கூடத்தில் நிரூபிக்கப்பட்டும் விட்டது.
மனிதனின் சில ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு, பொருள்முதல்வாத நோக்கிலான மாற்றத்துக்காகவும் புதிய சமூகத்தின் தோற்றத்துக்காகவும் ஏங்கி நிற்கிறது. அதன் காரணமாகவே, அறிவியலும் தேங்கி நிற்கிறது. இந்தத் தேக்கத்தை உடைப்பதற்குத் தேவைப்படுவது – புரட்சி. இதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முடிபு.///
வரிகள் புரட்சி என்கிற இன்றய தேவையை நச்சென சொல்கிறது.
சில
மிகச் செறிவாகவும் எளிமையாகவும் எழுதப்பட்ட கட்டுரை. நன்றி.
மிக நன்றாகத் தமிழில் விளக்கியுள்ளார்.
//வேர்க்கடலையின் பருப்பை நீக்கி விட்டு தோலுக்குள்ளே செலுத்தப்பட்ட முந்திரிப் பருப்பைப் போன்றது இந்தப் படைப்பு. // ஏன் அந்த வேர்க்கடலைத் தோலையும் நீங்களே செய்ய வேண்டியதுதானே? செயற்கையா படிச்சேன் என்று மார்தட்டிக் கொள்ளும் நீங்கள் ஏன் ஏற்கனவே படைக்கப் பட்டிருக்கும் ஒரு உயிரை உபயோகிப்பதன் மூலம் அதைப் படைத்தவனிடம் பிச்சைக்காரர்களாக நிற்கிறீர்கள்? //இந்தக் குறிப்பிட்ட ஆய்வுக்கு மட்டும் பத்து ஆண்டுகளும் 40 மில்லியன் டாலர்களும் செலவாகியிருக்கின்றன. // ஏற்கனவே ஊருபட்ட பாக்டீரியாக்கள் இருக்குதே, இதைச் செய்யவா இவ்வளவு பணத்தை வீனடித்தீர்கள்? ஒருத்தன் நாய் மாதிரி குறைக்கிறான் என்றால் அதை காசு கொடுத்து பார்ப்பார்கள், ஆனால் ஊரிலே எக்கச் சக்கமாக நாய்கள் வீதியெல்லாம் குறைக்கும், அதை யாரும் பொருட் படுத்துவதில்லை. அட அதை விடு, செயற்கை முறையில் முதலில் அமீப, அப்புறம், கொசு, நாய் பூனை என்று மனிதன் வரைக்கும் வந்து விடலாம். மனிதனின்
உடல் விலை நூற்றி ஐம்பது ரூபாய் தானாம், இதைப் போட்டு ஐஸ்வர்யா ராய் மாதிரி ஒருத்தியை செய்து [இரவோடு இரவாகச் செய்ய கம்பியூட்டர் புரோகிராம் வந்திடுமில்ல!] அவளோடு வாழ்ந்திட்டு அடுத்த நாள் அதே வேதிப் பொருளாக மூட்டை கட்டி வச்சிடலாம், அப்புறம் ஒவ்வொருத்திக்கும் புராடக்ட் கோட் இணையத்தில் கிடைக்கும், அதைக்கொண்டு நாட்டில் எந்த பெண் வேண்டுமோ அவைளை உருவாக்கி ஆனந்தம் அடையலாம். அடுத்த நாள் இன்னொருத்தியை அதே மாதிரி செய்து பார்க்கலாம். உங்க கண்டுபிடிப்பு எங்கே போகுது பாத்தீங்களா? ஆண்டவன் என்ன அவ்வளவு இளிச்சவாயனா? உங்களால தன்னைத் தானே விருத்தி செய்து கொள்ளும், சுயமாகச் சிந்திக்கும் ஒரு உயிரை ஒருபோதும் உருவாக்க முடியவே முடியாது, இன்றைக்கு எழுதிவைத்துக்கொள்.
🙂
இந்தக் கட்டுரை படைப்புத் தொழிலிலிருந்து கடவுள் காலி செய்யப்பட்டதை மட்டுமல்ல அந்த இடத்தை முதலாளிகள் எடுத்துக் கொள்வதைப் பற்றியும் விமரிசனம் செய்திருக்கிறது. முதலில் கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு சண்டைக்கு வரலாமே?
கடவுளை திட்டறதுங்கிறது நம்ம ஆட்கள்கிட்டெ இருக்கிற fashion. முழுசா செயற்கை உயிரை முதலில் உருவாக்கட்டும். இது ஏறக்குறைய இருதய மாற்று சிகிச்சை மாதிரிதானே
K.Jayadeva Das,
Your comments are hilarious! 🙂
செயற்கை உயிரியைப்பற்றி சரியாக தெளிவாக அறீந்து கொள்ள ஒரு கட்டுரை, வழக்கம் போலவே தோழர் மருதையன்ன் இக்கட்டுரை ஒரு ஆவணக்கட்டுரை. மேலே ஒருவர் இதற்காக இக்கட்டுரைக்காக கோபத்திலிருக்கிறார். கடவுளின் வேலையை முதலாளிகள் எடுத்துக்கொள்ளும் செயலை அவர் எதிர்ப்பாரா என்பது சந்தேகமே
கலகம்
We know how to use the synthetic cells because we are a scientist not a common man like you ,there are many use full feature in this project you did’t not think that your thought are all around the silly things this one of the Major different from you and scientist.and one more thing one day WE CAN MAKE THE SYNTHETIC CELL SKINS ALSO you should note it
like to read this article in english. is it possible
ராகவன், இந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை. தமிழில் மட்டுமே வெளியாகி உள்ளது.
அருமையான அவசியமான பதிவு
தோழர் மருதையனுக்கு நன்றிகள்
ஏப்பா வினவு,
இப்புடி ஆரமிக்கர எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் ஒருநாள் எதோ ஒரு கார்ப்பொரேஷனோட கல்லா நிறைக்கறதுக்குதான் பயன்படும்.
அப்புடி என்னாதான் நீங்க ப்ரூவ் பண்றேன்னு துடிக்கறீங்க ??? இயற்கல வாழனும்ன்றீங்க…
அப்பொறம் லேப்-ல ஆட்டுகுட்டிய பண்ணியாச்சு, பாதிரி மூஞ்சில கரியபூசியாச்சு……இந்த எழவெல்லாம் எதுக்கு…????
இந்த அ(றி)வியல் இப்பொ உலகத்தெ அழிக்கற வழில ரொம்ப வேகமா போயிட்டு இருக்கு, இது இன்னும் புரியலேனா – நீங்களும் “ALL NATURAL ” – அப்ப்டின்னு போட்டிருக்கற கெமிக்கல கடைல வாங்கி தின்னுங்க….
அற்புதமான பதிவு. இந்த நூற்றாண்டுக்குள் உயிரின் ரகசியம் கண்டுபிடிக்கப்படும் என நம்புவோம்.
மிக அருமையான கட்டுரை
கடினமான செய்தியை வழக்கம் போல எளிமையாக கூறும் தோழர்..மருதையனுக்கு வாழ்த்துக்கள்
வினவில் கட்டுரைகள் மருதையன் எழுத வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
வினவு தோழர்கள் அதற்கான முயற்சி எடுக்க வேண்டும்.
Excellent article. Thanks to Mr. Maruthaiyan.
தமிழில் எளிமையாகக் கொடுத்துள்ள மருதையனுக்கு நன்றி
மேலும் அதிக தகவல்கள் வேண்டுவோருக்கும் துறை சார்ந்த பதிவர்களுக்காகவும்….
—————-
FIRST SELF-REPLICATING SYNTHETIC BACTERIAL CELL
http://www.jcvi.org/cms/research/projects/first-self-replicating-synthetic-bacterial-cell/overview/
look for ..
Press Release (Web | PDF)
Frequently Asked Questions (Web | PDF)
Fact Sheet: Ethical and Societal Implications/Policy Discussions about Synthetic Genomics Research (PDF)
Fact Sheet: Background/ Rationale for Creation of a Synthetic Bacterial Cell (PDF)
——————-
Dr Craig Venter Announces First Synthetic Living Cell
http://www.youtube.com/watch?v=eoqBSNmYJYI
Synthetic cell – groundbreaking science or unethical?
http://open.salon.com/blog/aliquot/2010/05/26/synthetic_cell_-_groundbreaking_science_or_unethical
Synthetic Genome Brings New Life to Bacterium
http://www.sciencemag.org/cgi/reprint/328/5981/958.pdf
Craig Venter unveils “synthetic life”
http://www.ted.com/talks/craig_venter_unveils_synthetic_life.html
.
காப்புரிமை என்பது தவிர்க்க முடியாதது. ஆராய்சிக்காக செலவழித்த பணத்தை வட்டியும் முதலுமாக எடுப்பது அதை மேலும் புதிய ஆராய்ச்சிக்கும் பயன்படுத்துவது. இது ஒரு இடியாப்பச் சிக்கல்.
*
ஆனால் மென்பொருள் உலகில் வந்துள்ள ஓப்பன் சோர்ஸ் முறை மற்ற அறிவியல் ஆராய்ச்சித் துறைகளிலும் வருங்காலத்தில் வளர்த்தெடுக்கப்படலாம்.
.
miga nalla pathivu miga nalla visayam somberigalin maththiyil ibbadipattavarkalaal than ulagukke vidivu
superb
Let me ask you this.
Can a scientist create a peanut from scratch? What I mean by “from scratch” is without using any materials provided by nature or God. Man can not even create a peanut. we can claim I created this and that. from what? from where? man needs a base product to create anything.
I always believe Creator is always few notches greater than what is being created. In simple way, I can not create something far greater than me. Anything I create is lower than me. Same thing applies to every aspect of life. If human being is a super talented thing in the universe, then its creator is also much greater than human. You and I can call that as God or some Super Natural Power. We can not deny the existence of that. Period.
Sam…. you have not come up with an intelligent argument as you may like to assume… it is the age old scream of brain washed believers which might gain the approval of similar brain washed losers but not create a stir in the rational sphere…
but do not fret. all hope is not lost yet. you may still become a rational human being. all you have to do is extend your own so called argument to its logical conclusion and you will come to question the existence of that super natural power yourself.
simply put, if such a power exists even it could not have come into existence on its own, as you have so eloquently expressed, “a base product is needed to create anything”. now, this supernatural power should also have been created out of something if it exists at all. aand where did that base product come from? the cycle will become endless. if you want to stop it by saying that power always remained there on its own and it didnt have to be created, then all you have to do is open your eyes istead and understand that the universe existed on its own instead of your imaginarry power. once that minor tweaking is done to your basic understanding then everything else is consistent with scientific thought processs. you dont need god to explain anything at all.
அருமையான விளக்கம் வித்தகன் !
(once that minor tweaking is done to your basic understanding then everything else is consistent with scientific thought processs. you dont need god to explain anything at all.)
தெளிவான கட்டுரை மருதையன்.
திறந்தமனம் இருந்தால் புரிந்துகொள்வது எளிது.
நன்றி.
திரு வித்தகன் அவர்களே,
you have not come up with an intelligent argument as you may like to assume-என்பது உங்களுக்கும் பொருந்தும். இன்றைக்கு நம்பப் படும் Big Bang Theory-படி சில பில்லியன் வருடங்களுக்கு முன்னாள் Matter, Space, Time எதுவுமே இல்லை. அப்புறம் எப்படி //if you want to stop it by saying that power always remained there on its own and it didn’t have to be created, then all you have to do is open your eyes instead and understand that the universe existed on its own instead of your imaginary power// என்று வாதம் வைக்கிறீர்கள் என்று புரியவில்லை. இந்த பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு இல்லை, அப்புறம் பெருவெடிப்பு [Big Bang] மூலம் தோன்றியது என்று விஞ்ஞானமே கூறுகிறது, அனால் நீங்கள், “அது எப்போதுமே இருக்கிறது” என்று சொல்கிறீர்கள். இது முரண்பாடானது. “கடவுள்தான் எல்லாத்தையும் படைச்சருன்னா, அந்தக் கடவுளைப் படைச்சது யார்?” என்பது ஒன்னும் புத்திசாலித் தனமான கேள்வி இல்லை. இங்க கண்ணில் படும் ஒவ்வொன்னும் இன்னொன்னுல இருந்து தான் வருது, அதே விதி இதற்கெல்லாம் காரணமாக விளங்கும் மூலத்துக்கும் பொருந்தும் என்று கட்டாயம் இல்லை. நியூட்டனின் விதிகள் அணு உலகிற்குப் பொருந்த வில்லை, அதற்க்கு குவாண்டம் இயக்கவியல் வந்தது. மெதுவாகப் போகும் பொருட்களுக்கான விதிகள் அதி வேகத்தில் செல்லும் பொருட்களுக்குப் பொருந்த வில்லை, அதற்க்கு ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி கொள்கை வந்தது. காலம், மெதுவாகச் செல்லும், பின்னோக்கியும் செல்லும் என்பது போன்றவை கண்கூடாக நிரூபிக்கப் பட்டவை. ஒன்றாகப் பிறந்த இருவரில் ஒருத்தனுக்கு வயது அதிகம் இன்னொருத்தனுக்கு வயது கம்மி அல்லது கல்லறையில் இருந் எழுந்து வந்த கிழவன் இளைஞன் ஆகி பின்னர் திருமணம் செய்தான் என்றால் நம்புவீர்களா? ஆனால் அவையெல்லாம் Experiments மூலம் நிரூபிக்கப் பட்டவை.அதுபோல இங்கு காணும் விதிகள் படைத்தவனுக்கும் பொருந்தும் என்று கேட்பது எப்படி நியாயம்? ஒன்று உருவாக இன்னொன்று காரணமாக இருக்கும், அது இவ்வுலக விதி, படைத்தவனை பார்த்து நீயும் இவ்விதிக்கு கீழ் படிந்து நட என்று யாரும் சொல்ல முடியாது. If you find some cause which is the cause of everything but is not caused by anything else that is God, until you reach that cause keep searching.
//இந்த பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு இல்லை, அப்புறம் பெருவெடிப்பு [Big Bang] மூலம் தோன்றியது என்று விஞ்ஞானமே கூறுகிறது, அனால் நீங்கள், “அது எப்போதுமே இருக்கிறது” என்று சொல்கிறீர்கள். //
Big bang தான் பிரபஞ்சத்தின் தொடக்கமே. அது மட்டுமல்ல. காலத்தின் துவக்கமும் அதுதான். “Big bang” க்கு பத்து வருஷம் முன்னாடி…. என்றெல்லாம் சொல்ல எதுவுமே இல்லை. Big bang நடந்த அந்த மணித்தியாலம் மட்டுமே அனைத்து விதிகளும் காலமும் null and void. Big bang நடந்த உடனேயே ஒளியின் வேகம் 3 லட்சம் கி.மீ/ வினாடி. எல்லா இயற்பியல் விதிகளும் இப்போதும் எப்போதும் இருப்பது போல் அமுலுக்கு வந்தன. அதனால் பிரபஞ்சம் அறிவியல் விதிகளைப் பொருத்தவரை தானாகவே இருந்தது என்று வைத்துக் கொள்வது சரிதான். காரணம் அறிவியல் விதிகளும் பிரபஞ்சமும் சேர்ந்தே பிறந்தன.
//நியூட்டனின் விதிகள் அணு உலகிற்குப் பொருந்த வில்லை//
எந்தெந்த விதிகள் பொருந்தவில்லை? குவாண்டம் விதிகள் நியூட்டனின் எந்த சிந்தாந்தத்திற்கு முரண்படுகின்றன? சும்மா சொல்லாதீங்க. கணுக்காம விட்டுட மாட்டேன்.
//ஒன்றாகப் பிறந்த இருவரில் ஒருத்தனுக்கு வயது அதிகம் இன்னொருத்தனுக்கு வயது கம்மி அல்லது கல்லறையில் இருந் எழுந்து வந்த கிழவன் இளைஞன் ஆகி பின்னர் திருமணம் செய்தான் என்றால் நம்புவீர்களா? ஆனால் அவையெல்லாம் Experiments மூலம் நிரூபிக்கப் பட்டவை.//
அரைகுறையாக அறிவியலைப் படித்தால் இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமாகப் புரிந்து கொள்வீர்கள். வண்டி ஓட்டக் கற்றுக் கொடுக்கவே ஒரு திறமையான ஓட்டுனர் தேவைப் படும் போது theory of relativity ஐ எல்லாம் நீங்களாகவே படித்துப் புரிந்து கொள்ள முயற்சித்தால் அதுவும் புராணக் கதை அளவில்தான் மனதில் பதியும். நீங்கள் சொல்வது போல ஒரு experiment-உம் எங்கும் நடக்கவில்லை.அதனால் மனதை வருத்திக் கொள்ளாதீர்கள். இப்படியெல்லாம் பொய் சொல்லி ஒரு அறிவியல் கொள்கையை சிதைப்பதற்குப் பதில் பேசாமல் வேர்க்கடலைத் தோல் அளவிலேயே நீங்கள் பேசலாம். உலகிற்கு ஒரு இழப்பும் வராது.
//மெதுவாகப் போகும் பொருட்களுக்கான விதிகள் அதி வேகத்தில் செல்லும் பொருட்களுக்குப் பொருந்த வில்லை, அதற்க்கு ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி கொள்கை வந்தது//
சரியான காமெடிங்க!
//“அது எப்போதுமே இருக்கிறது” என்று சொல்கிறீர்கள். //
தப்பு ஜெயதேவ தாஸ். தானாகவே உருவாகியது என்றுதான் சொல்கிறேன். உங்கள் வசதிக்கேற்றபடி வளைக்காமல் சொல்லி இருப்பதைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
//Big bang நடந்த உடனேயே ஒளியின் வேகம் 3 லட்சம் கி.மீ/ வினாடி. எல்லா இயற்பியல் விதிகளும் இப்போதும் எப்போதும் இருப்பது போல் அமுலுக்கு வந்தன. // See Viththagan, You say “அமுலுக்கு வந்தன”, who is the one who implements this? Like when somebody switches ON a computer all the programmes start running, It may be Google Talk, Skype, Antivirus etc., The software is made already, and combined with hardware and Electric power it runs when a user switches on. My question is who Programmes and runs this cosmic computer? A dust particle has million of electrons. Science says not even a single electron originate on it own, it has to be taken from somewhere “as it is” OR is to be created by some energy [electron, positron pair production]. You can’t even create an insignificant particle which is one of millions of particles that reside in a dust without accountability, then how do you claim this universe itself came from nothing? [Universe: big Earth in a Big solar system, and sun itself is an insignificant star in a galaxy that contains millions and trillions of bigger stars and has a width of hundred of light years, and the universe contains millions and billions of such galaxies!]. You atheist guys are so intellligent, what is the logic by which you say all these came from nothing? Haa.. Ha.. Ha.. What created the laws of four forces of nature? [Gravitational, Electrostatic, weak & strong Nuclear forces]. Science says the Entropy will always go increasing. It means, the universe was ordered in the beginning and goes chaotic as times goes on but never in the reverse. Who kept things in the ordered manner in the beginning? All questions you guys never think about, just come out and abuse the drawbacks of regious systems and think yourself to be intelligent. Start finding answeres to all these questions, you will know God is there.
//Viththagan, You say “அமுலுக்கு வந்தன”, who is the one who implements this? Like when somebody switches ON a computer all the programmes start running, It may be Google Talk, Skype, Antivirus etc., The software is made already, and combined with hardware and Electric power it runs when a user switches on. My question is who Programmes and runs this cosmic computer?//
Excellent question. This is the question the ‘so called’ athiest afraid to ask and explore. Instead, they are hiding behind some ‘intelligent looking’ statements such as “அமுலுக்கு வந்தன”. If they are really keen to find the answers, they will never boast as “பழைய கடவுள் காலி!”. Sorry to say guys. You have to go a long way! You are too far off from the truch!
//See Viththagan, You say “அமுலுக்கு வந்தன”, who is the one who implements this? Like when somebody switches ON a computer all the programmes start running, It may be Google Talk, Skype, Antivirus etc., The software is made already, and combined with hardware and Electric power it runs when a user switches on. My question is who Programmes and runs this cosmic computer? //
Sigh!!!! I am tired Das. We are back to square one. If you want to assume someone switched on the computer, then the question of how that “someone” came into existence should also be addressed. If that someone/something should be assumed to have come into existence on its own, then universe could also be assumed to have come into existence on its own. Once universe is in existence then there is no need for that imaginary someone to explain any subsequent event. I promise you I wont take the bait anymore to continue this line of argument because you have forced me to say the same point four times.
ஹாய் வித்தகன், என்ன இது விடிய விடிய ராமாயணம் கேட்ட கதையா இருக்கு. கிழவன் குமாரனானது, இரட்டையரில் ஒருத்தனுக்கு வயது அதிகம் இதெல்லாம் நம்மள மாதிரி பாமரப் பசங்களுக்கு புரியணுமேன்னு விஞ்ஞானிகள் சொல்லும் கதை. என்னோட பதிலில் பை-மீசான் பற்றி சொல்லியிருந்தேனே? அது தான் இரட்டையர் கதை. காலம் பின்னோக்கிச் செல்லுவதற்கும் இதே போல சோதனை முடிவுகள் உள்ளன. இவையெல்லாம் குவாண்டம் உலகில் மட்டுமே காண முடியும், அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடியாது. இயற்பியலில் MSc PhD பண்ணியிருந்தாலும் குவாண்டம் இயக்கவியல், ரிலேடிவிட்டி பத்தி நல்லா தெரிஞ்சவங்க கம்மி. ஐ.ஐ.டி, Institute of Mathematical Sciences, தரமணி, சென்னை IISc, Bangalore போன்ற இடங்களில் உள்ள பெரிய ஆட்களுக்கு மட்டுமே முழு விவரமும் தெரியும். மத்த எல்லா பயல்களும் பாமரர்கள்தான். ஆனா நான் சொன்னது அத்தனையும் நிஜம் நீங்க யாரை வேண்டுமானாலும் கேட்டுக்கலாம். முழுசா படிக்காம சும்மா புருடா விடுறேன்னு சொல்லி என்னை மட்டம் தட்ட வேண்டாம். இன்னொன்னு, நீங்க எப்ப பாத்தாலும் கடவுள யாரு படைச்சாங்கன்னு கேக்குறீங்க. ஒரு விஷயத்த நல்லா புரிஞ்சுக்குங்க. ஜடப் பொருள் இருக்கு [கல்லு, மண்ணு, காத்து எல்லாம்], பிரஞை உள்ளதும் இருக்கு [ பாக்ட்டேரியா, செடி கொடி, நாய், பூனை, மனுஷன் எல்லாம்]. இப்போ ஒவ்வொன்னுக்கும் ஒரு காரணம் இருக்கு. அந்த காரணத்துக்கு இன்னொரு காரணம் இருக்கு. கடைசியா எல்லாத்துக்கும் காரணம், [Ultimate Cause of all causes, which has no other cause] எதுவா இருக்க முடியும்ன்னு ஒரு கேள்வி வருது. அதுக்கு நீங்க சொல்வது முதலாவது என்று [ஜடம்]. அது சரியா? தப்பா? அத புரிஞ்சுக்க ஒரு விஷயத்தை யோசிங்க. ஒரு களிமண்ணு பொம்மை கூட ஒருத்தன் செஞ்சு வச்சாதான் வரும். தானா வராது. அதே மாதிரி, எந்த ஒரு சிக்கலான விஷயத்தையும் ஜடப் பொருளில் இருந்து செய்யணும்னா அதுக்கு பிரக்ஞை உள்ள ஒன்றால் தான் முடியுமே தவிர தானா ஜடப் பொருளால மாறிக் கொள்ள முடியாது. [கம்பியூட்டர், தொலைபேசி, படப்பிடிப்புக் கருவி என்று எதுவுமே தானா வராது, யாராவது சென்ச்சாத்தான் வரும்]. இப்போ நம்ம கண்ணு பக்க கேமரா மாதிரி வேலை பண்ணுது, இதயம் மாதிரி ஒரு பம்ப் மனுஷனாலயே செய்வது கஷ்டம், நம்ம மூளை மாதிரி கணினி எங்கே இருக்கு. விமானத்தை செய்தவங்க முதலில பறவையை பாத்துதானே செய்தாங்க? ஆக, ஜடத்தை அற்புதமாக மாற்ற பிரக்ஞை உள்ள ஒரு [Conscious Entity] உள்ளத்தால மட்டும் தான் முடியும். அதனால தான் சொல்லுறோம், இந்த பிரபஞ்சம் என்ற ஜடத்தை பின்னால் இருந்து முடுக்க, இயக்க ஒரு பிரக்ஞை உள்ளவர் ஒருத்தர் இருக்க வேண்டும் என்று. இப்போ கேட்பீங்க அவருக்கு என்ன மூலமுன்னு. சரி கேட்டுகிட்டே போங்க. கடைசியா நீங்க இதுதாண்டா கடைசி, இதுக்கு மேல எதுவுமே இல்லை என்று நிற்கப் போவது ஒரு பிரக்ஞை உள்ளவரோடத்தான் இருக்க முடியும், [Conscious Entity] ஜடப் பொருளா இருக்க முடியாது.
எல்லாத்துக்கும் பின்னால ஒன்னு இருக்கனும் என்றாலும் அந்த ஒன்னை மதங்கள் விவரிக்கும் விதம் சரியானதா? அது மனிதனாகவூம் அல்லது மனிதக் குனங்களைக் கொண்டதாகவூம் தானா இருக்கவேண்டும் பின்னால் இருப்பதை என்னென்று தெரியாத என்பதற்காக அதனை மடத்தனமாக விவரிக்க முடியூமா?
///In simple way, I can not create something far greater than me.///
There are parents who create sons and daughters who are more intelligent, more lovable and more talented than themselves.
Hi Viththagan,
Do you think I am just bluffing? Ha… Haa..Ha.. If you wish you can take any Physics fundamental book and verify everything I have told. According to Newton a system can have any energy, but in the quantum world the system can have not any energy but only allowed discrete energies. This is one deviation. Next, according to Newtonian mechanics, Force = Mass * Acceleration. But, when you accelerate an electron in a combined field of Electric & Magnetic in a double D shaped particle accelerator, after a certain speed this relationship was not found obeying. Newton assumed that the mass will remain same irrespective of the speed. But this not true, mass increases with speed. For a given strength of Electric and Magnetic field the electron gets accelerated in a circular path of predictable radius. The radius was more than predicted, because of the increase in mass of electron when it speeds up. This was solved by Einstein by his theory of Relativity. Next, the twin Paradox. [Two brothers, one who goes on a space journey is younger than one who stayed on earth: Imaginary story, but explains time dilatation]. The experimental proof is as follows: A particle called Pi-Meson which disintegerates into a Mu Meson and a Nutrino. On Earth this particle disintegerates so fast that it can travel only few meters of distance. Never beyond that. But the same Pi-Meson created in the upper atmosphere by cosmic radiation is able to reach earth safely travelling hundred of kilometeres. This was because Pi-Meson created by cosmic radiation that travels almost near speed of light lives longer, like a twin who goes at high speed living longer and hence survives the journey of hundreds of kilometers! Next about times reversal, I can not give any easy examples, you have to ask some of your friends who are good at theoretical Physics.
Jayadeva Das.
//ஒன்றாகப் பிறந்த இருவரில் ஒருத்தனுக்கு வயது அதிகம் இன்னொருத்தனுக்கு வயது கம்மி அல்லது கல்லறையில் இருந் எழுந்து வந்த கிழவன் இளைஞன் ஆகி பின்னர் திருமணம் செய்தான் என்றால் நம்புவீர்களா?//
Who came back from dead and grew younger? After he got married, did he end up turning into a kid and finish inside his dad’s testicles?
//மெதுவாகப் போகும் பொருட்களுக்கான விதிகள் அதி வேகத்தில் செல்லும் பொருட்களுக்குப் பொருந்த வில்லை, அதற்க்கு ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி கொள்கை வந்தது//
Believe me. You haven’t understood Theory of Relativity at all. Otherwise you would never have written the above.
மிக அருமையான கட்டுரை,,,,,,,,,,,,,,,,,,…
இலகு நடையில் புரியக்கூடியதாக எழுதிய இக்கட்டுரையாசிரருக்கு நன்றிகள். புதிய பல தகவல்களை பெற்றுக்கொண்டேன்.
வணக்கம். ஒரு எளிமையான, ஆழமான, தெளிவான அறிவியல் கட்டுரையை தந்தமைக்கு முதலில் திரு.மருதையன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும். விஞ்ஞான கண்டுபிடிப்பான சிந்த்தியாவை முற்றிலும் வேறு கோணத்தில் அணுகி, சிந்த்தியாவும் அதனை உருவாக்கிய வென்டரும் இவ்வுலகை எங்ஙனம் பாதிக்கிறார்கள் என்றும், தொடர்பான விஞ்ஞான காப்புரிமை அரசியலையும் தோலுரித்துக்காட்டுகிறது உங்கள் கட்டுரை!
சிந்த்தியா குறித்த ஒரு சிறு கட்டுரையை, அறிவியல் ஆய்வுச் செய்திகளை தொகுத்துக்கொண்டிருக்கும் என் வலையில் பதிவு செய்திருந்தேன்.
சுட்டி இங்கே: http://wp.me/pxVdN-17K
அதே சிந்த்தியாவைப் பற்றி தமிழிஷில் மற்றுமொரு பதிவைப் பார்த்து வாசிக்க வந்தேன். உங்களின் சொல்லாடல் அருமை. ஆங்கில தொழில்நுட்ப வார்த்தைகளை மொழிபெயற்க்க என் தமிழறிவு போதவில்லை. இப்பதிவின்மூலம் நிறைய தமிழ் சொல்லாடல்களை கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி.
மறுமொழிகளில் சில சிந்த்தியாவை அறவே வெறுப்பது போன்று இருப்பதுதான் வருத்தத்திற்க்குரியது! வித்தகன் அவர்களது மறுமொழி/எதிர்வினை தெளிவாகவும், என் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவும் இருப்பது கண்டு மகிழ்ச்சி (இப்படி பலர் நம்மிடையே இருக்கிறார்களே என்று!)
மேலும் இது போன்ற பல அறிவியல் கட்டுரைகளை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன். தங்கள் எழுத்துப்பணி மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பத்மஹரி,
http://padmahari.wordpress.com
very good article.very simple in narration.
Very good and highly informative article ! Good !
@வித்தகன்
sam ஆங்கிலத்தில் கேட்டிருந்தாலும் நீங்கள் தமிழிலேயே கருத்தை சொல்லலாமே.
ஆண்டவன் கொடுத்த ஆதாரப் பருப் பொருள் இல்லாமல் மனிதனால் எதைப் படைக்க முடியும் என்ற அதீத அறிவு தோய்ந்த கேள்வியை சாம் எழுப்பியிருக்கிறார். ஒன்றன் பின் ஒன்றாக ஆதாரப் பொருட்களை அடுக்கிக் கொண்டே சென்று விடை தெரியாத இடத்தில் “இங்குதான் கடவுள் எல்லாவற்றையும் தோற்றுவித்தார்” என்று சொல்ல்ல விழைகிறார்.
அதே வழியிலேயே சென்று, எந்த ஆற்றலுக்கும் ஆதாரப் பொருள் உண்டென்பதால் ஆண்டவன் என்ற ஆற்றல் உருவாக ஆதாரப் பருப் பொருள் என்ன என்ற கேள்வியை அவரே கேட்டுக் கொள்ளலாம். ஆண்டவனைப் படைத்தது யார்?
அந்தமும் ஆதியும் இல்லாத ஜோதியாக ஆண்டவன் என்ற ஆற்றல் தானாகவே உருவாகியிருக்கும், யாரும் படைக்கவில்லை என்று அவர் (இன்னும் பல கோடி மூளைச் சலவை செய்யப் பட்ட மானுடர்களைப் போல) நம்புவாரேயானால், அதே நம்பிக்கையைக் கொஞ்சம் வளைத்து, அண்டப் பெருவெளியில் பிரபஞ்சம் தானாகவே உருவாகியது என்று நினைத்தால் போதும். பிரபஞ்சம் உருவானது முதல் இன்று வரை நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அறிவியல் ரீதியான விளக்கம் தர முடியும். ஆண்டவன் என்ற புனை கதாபாத்திரம் தேவையே இல்லை.
புரட்சிக்கு பிறகான (இந்திய) சமூகம் எப்படி இருக்கும்? எப்படி இருக்கவேண்டும்? எப்படி இருக்காது? என்பது பற்றியெல்லாம் உங்களின் கருத்துகள்,விவாதங்கள் குறித்து அறிய ஆவல்.
migavum arumai, nanaraga puriyumapdi sollirunkeenga.
///தற்போது சிந்தடிகாவை உருவாக்கியிருக்கும் கிரேக் வென்டரின் தனியார் ஆய்வு நிறுவனம், எக்சான் மொபில் என்ற அமெரிக்கப் பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. சூழலிலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சி அதனை ஹைட்ரோ கார்பன்களாக மாற்றவல்ல கடற்பாசிகளை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின்படி நடைபெறும் ஆய்வு. எண்ணெய் வளங்கள் வற்றி வரும் சூழலில், கரும்பு, சோளம், ஜட்ரோபா போன்றவற்றிலிருந்தெல்லாம் தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளைக் காட்டிலும் மலிவானதாக இருக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் ஹைட்ரோ கார்பனிலிருந்து பெட்ரோலும் டீசலும் தயாரித்து எண்ணெய் விற்பனையில் உலக ஏகபோகத்தை அடைவதே எக்சான் மொபில் நிறுவனத்தின் நோக்கம்.//// but without the help and support from private financial capital (which is considered evil and villain), this experiment and brilliant invention would not have been possible in the first place. and anything wrong in the collabaration with Exon Mobil for develop new and cheap bio fuels ? and this old parrot cry of ‘monopoly’ has so far not materialised in many sectors and industries (but this shrill cry was sounded at all new inventions during the course of industrial capitalism). and what alternative does the author prescribe for development of cheap and new forms of bio – fuels ?
///இந்நிறுவனங்களின் கூலி அடிமைகளாக உள்ள விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒரு கண்டுபிடிப்பின் பயன்பாடு குறித்தோ, அதன் எதிர்விளைவுகள் குறித்தோ தாங்கள் அறிந்த உண்மைகளை வெளியிட முடியாமல் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப் படுபவர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை நலனுக்கு ஏற்ப உண்மைகளைத் திரித்துக் கூறி சான்றளிக்கும் அறிவு நாணயமற்றவர்களாகவும் உள்ளனர்./// nonsense. they are more freer than any ‘scientist’ in the former USSR days. and don’t forget that Vender, the inventor of this new ‘life form’ comes under the same category. Can Comrades explain the phenomenon called ‘Lysenkovism’ which was the ‘marxist’ method followed in scientific research under Stalin. Can you write in detail about the life and times of Lysenko of USSR and what happened to him finally and why ? and what exactly happened then ? do you have the intellectual honesty for this ?
லைசன்கோ பற்றி கதையடிக்கும் அதியமான் அவர்களுக்கு, இந்த விசயம் உள்ளிட்டு பல்வேறு ஆர்எஸஎஸ் அவதூறுகளை இவரது நண்பரும் பயங்கரவாதியுமான் நீலகண்டன் என்பவன் எழுப்பியதற்கு பதில் அளித்து முன்பு எழுதப்பட்ட கட்டுரை பற்றி அவருக்கும் தெரிந்திருக்கும். (நீலகண்டனது தலைமறைவை துரிதப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று இது)
அந்தக் கட்டுரையின் சுட்டி இங்கு. இதில் லைசன்கோவை வைத்து கம்யூனிசத்தின் மீது இன்று அதியமான் சுமத்த முயலும் அதே அவதூறுகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
சோசலிசமும் – பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_8142.html
first try to explain what Lysnekovism means and what happened to the scientists in USSR who differed with Lysneko and Stalin. if you have the intellectual honesty to explain this, then we can continue. and let the readers decide who is lying and covering up the truth. anyone can google for Lysneko and find the truth for himself. The world knows who the liars are and what truth is.
Athiyamaan,
first try to read the link given:
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_8142.html
I am not hear to teach you lessons on Science….
///இது நடந்தது கிட்டத்தட்ட திட்டமிட்ட படுகொலை – அபாயம் குறித்து பல முறை பலர் எச்சரித்தும், 33 பேராபயங்களை ஆய்வு குழு கண்டுபிடித்த பிறகு அவை அமெரிக்க கம்பனியில் சரி செய்யப்பட்டன் ஆனால் இங்கு இந்தியாவில் காஸ்ட் கட்டிங் என்ற பெயரில் இருந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்பும் பிடுங்கி விடப்பட்டது, சிறு சிறு கொள்கலன்களில் சேமிகக் வேண்டிய அதி அபயாமனா எம் சி எல் ரசாயனம் மொத்தமாக 40 டன் டேங்கில் சேமிக்கப்பட்டது, அதன் குளிர் சாதன வசதி காஸ்ட் கட்டிங் என்ற பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டது, நச்சுவாயு பில்டர்(ஸ்கரப்) பிடுங்கிவிடப்பட்டது, சிறு விபத்துக்கள் பல முறை நிகழ்ந்த பிறகும் எதுவும் செய்யாதது, போபால் படுகொலை நடந்து இன்ன தேதி வரை அதன் ரசாயன கூட்டு என்னவென்று ரகசியம் காப்பது, மாற்று மருந்து குறித்து ரகசியம் காப்பது, உலக அளவில் அன்றே நிராகரிக்கப்பட்ட அறிவியல் முறையில் சோதித்தறியாத பேரபாயகரமான தொழில் நுட்பத்தை உபயோகப்படுத்தியது. இவையெல்லாம் யூனியன் கார்பைடு அமெரிக்க தலைமையே செய்தது. /// true enough. and as i had clearly stated earlier, the management is the first accused and no justification for that. ok.
there was no exit policy in those license raaj days and UCIL was forced to maintain that plant. unlike US, where a loosing factory can be closed and liqudated. that was one of the factors. still regulations in US are very tough in safety aspects. nothing prevented Indians to follow the same. Why the hell were the procedures so lax here ? whom to blame for this ?
அதிகாரம் ஒரு முனையில் குவியும் போது (அது எந்த ‘சித்தாந்த’ அடிப்படையிலானாலும்), அது அதிகார துஸ்பிரயொகத்திற்க்கு வழிவகுக்கிறது என்பதே வரலாற்று பாடம். சோவியத் ரஸ்ஸியாவில், அனைத்து அதிகாரங்களும் ஒரு சிறு குழுவான பொலிட் பீரோவில் இருந்தது. ‘பாட்டாளி வர்க சர்வாதிகாரம்’ என்பது தியரி. உண்மையில் சர்வ அதிகாரங்களும் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தான் இருந்தது. (மிக முக்கியமாக ‘தூய’ கம்யூனிசம் நோக்கி செல்ல, இந்த ‘தற்காலிக’ சர்வாதிகாரம் ஒரு ‘பாதைதான்’ என்பது மாயை/கதை. நடைமுறையில் அதிகார மையங்கள் கரையாமல், இறுகும் என்பதே யாதார்த்தம்).
லைசென்கோ என்னும் விஞ்ஞானியின் வழிமுறைகள் மிக தவறானவை என்று பல ஆண்டுகள் கழித்து நிருபனமான. ஸ்டாலின் காலத்தில் அவற்றை மறுத்த / முரண்பட்ட இதர விஞ்ஞானிகள் பலரும் தண்டிக்கப்பட்டனர் / அழிக்கப்பட்டனர். நிகலோய் வாவிலோவ் பற்றி அசுரன் எழுதியாதை படித்தேன். மிக முக்கிய விஞ்ஞானியான அவர், ஸ்டாலினை கொல்ல ‘சதி’ செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு, பட்டினியால இறந்தார். 20 வருட காலம் மிக முக்கிய விஞ்ஞானியாக திகழ்ந்த அவர், ஸ்டாலினை கொலை செய்ய ‘சதி’ செய்த்தாக குற்றச்சாடு. பொய் குற்றச்சாட்டு என்பது மேலோட்டமாக பார்பவர்களுக்கே புரியும். சோவியத் ரஸ்ஸியாவில் ஸ்டாலினை கொல்ல சதி செய்ய ஒரு விஞ்ஞானி முயல்வது மிக பைத்தியக்காரத்தனம். மூடப்பட்ட நாடான சோவியத் ரஸ்ஸியாவில் அப்படி சதி செய்தால் என்ன கதியாவர் என்பதை அனைவரும் அறிவர். இதே போல பல பொய் குற்றசாட்டுகளை சுமத்தி பல விஞ்ஞானிகளும் நசுக்கப்பட்டனர்.
ஜெனிச்டிக்க்ஸ் என்ற விஞ்ஞானம் ‘பூஸ்வா’ முறை விஞ்ஞானம். அதனால் மக்களுக்கு பயன் இல்லை என்று பல ஆண்டுகள் ஜெனிட்டிக்க்ஸ் சோவியத் ரஸ்ஸியாவில் தடை செய்யப்பட்டது. பின்னாட்களில் தான் தடை விலக்கப்பட்டது. லைசென்கோ பின்னாட்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரின் ‘விஞ்ஞானம்’ போலியானது என்றும் நிருபனமானது.
In 1964, physicist Andrei Sakharov spoke out against Lysenko in the General Assembly of the Academy of Sciences:
He is responsible for the shameful backwardness of Soviet biology and of genetics in particular, for the dissemination of pseudo-scientific views, for adventurism, for the degradation of learning, and for the defamation, firing, arrest, even death, of many genuine scientists. [2]
லைசென்கோ என்னும் தனிமனிதனின் குறைகளை பற்றி பேசுவதை விட, அவரின் ‘வழிமுறைகள்’ தான் மிக சரியானவை என்று ஒரு நாடு ஏற்று, அவருடன் முரண்பட்டவர்களை, பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி, சிறையில் அடைத்து நசுக்கிய
முறை / அமைப்பு பற்றி பேசுவதுதான் சரி. ஜனனாயகம், மாற்று கருத்துகள், கருத்து சுதந்திரம் : இவற்றின் முக்கியம் பற்றி உணர இதுவே சரியான தருணம். விஞ்ஞான முறை என்பதை சர்வ அதிகாரம் கொண்ட ஒரு குழுவோ அல்லது ‘தலைவனோ’ முடிவு செய்வது எத்தகைய விபரீத விளைவை ஏற்படுத்தும் என்பதை நிருபிக்கிறது.
செஞ்சீனாவில், மாவோவின் ‘பரிசோதனைகள்’ இன்னும் கொடுமை. பொறியாளர்களையும், விஞ்ஞானிகளையும் நம்பாமல், தாந்தோன்றித்தனமாக, முட்டாள்தனமா, மாவோ வழிகாட்டிய படி, இரும்பு உருக்காலைகள் சிறிய அளவில் கிராமம் தோரும் உருவாக்கபாடு, மிக மட்டமான, பயனில்லாத எக்கு உருவாக்கபட்டது. அத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. ஏன் கைவிடப்பட்டது என்பதை மாவோயிஸ்டுகளும், வினவு தோழர்களும் ‘விளக்கு’வார்களா ?
With no personal knowledge of metallurgy, Mao encouraged the establishment of small backyard steel furnaces in every commune and in each urban neighborhood. Huge efforts on the part of peasants and other workers were made to produce steel out of scrap metal. To fuel the furnaces the local environment was denuded of trees and wood taken from the doors and furniture of peasants’ houses. Pots, pans, and other metal artifacts were requisitioned to supply the “scrap” for the furnaces so that the wildly optimistic production targets could be met. Many of the male agricultural workers were diverted from the harvest to help the iron production as were the workers at many factories, schools and even hospitals. Although the output consisted of low quality lumps of pig iron which was of negligible economic worth, Mao had a deep distrust of intellectuals and faith in the power of the mass mobilization of the peasants. Moreover, the experience of the intellectual classes following the Hundred Flowers Campaign silenced those aware of the folly of such a plan. According to his private doctor, Li Zhisui, Mao and his entourage visited traditional steel works in Manchuria in January 1959 where he found out that high quality steel could only be produced in large scale factories using reliable fuel such as coal. However, he decided not to order a halt to the backyard steel furnaces so as not to dampen the revolutionary enthusiasm of the masses. The program was only quietly abandoned much later in that year.
Substantial effort was expended during the Great Leap Forward on large-scale, but often on poorly planned capital construction projects, such as irrigation works often built without input from trained engineers.
no answers from Asuran or Vinavu or their comrades for this comment ? why not ?
அதியமான்.. மாவோவின் இரும்பு கண்டு புடிக்க செஞ்ச முயற்சியும் அதன் விளைவுகளை பத்தி பேசுற நீங்க நியாயப்படி இங்க போபால பத்தி பேசனும் அதுவும் இந்த நேரத்துல…
தவிரவும் 100 ஜோடி காலுக்காக 1லட்சம் ஜோடி செருப்பு உற்பத்தி செய்கிற முதலாளித்துவம் இந்த உலகத்தை, இயற்கையை, உழைப்ப்பை, மனிதனை அழிப்பதை விட அதிகமாக யாரும் அழித்துவிடமுடியாது. இந்த அராஜக உற்பத்தியை முதலாளித்துவத்திலிருந்து பிடுங்கி விட்டால் அது அரை சோசலிசம் என்பது உங்களுக்கு புரியாத என்ன?
Kelvikuri,
This is my old post about Bhopal disaster :
http://athiyaman.blogspot.com/2007/05/question-about-economic-polices-in.html
and getting fair compensation for the victims is more important than hanging Anderson. in 1989, nearly 480 million USD was given as compensation. (it was a huge sum in those days). our tragedy is that nearly 10 lac cases for claims were filed in the courts out of which nearly 50 % were found to be false claims and had to be rejected. it took nearly 15 years to dipose the false claims. such is the cynical nature of Indians..
No doubt Union Carbide is the first accused. but our officers from Industrial Inspection department are eqaully culpable. how the hell did they perform their safety audits ?
//லைசென்கோ என்னும் விஞ்ஞானியின் வழிமுறைகள் மிக தவறானவை என்று பல ஆண்டுகள் கழித்து நிருபனமான. ஸ்டாலின் காலத்தில் அவற்றை மறுத்த / முரண்பட்ட இதர விஞ்ஞானிகள் பலரும் தண்டிக்கப்பட்டனர் / அழிக்கப்பட்டனர்.//
இந்த வெண்ணை வெட்டி கருத்துக்குத்தான் முதல் பின்னூட்டத்தில் லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் டேப்ரிக்காடர் இன்னும் ஆப் ஆகவில்லை.
அடுத்த கட்டமாக கிரேட் லீப் பார்வெர்ட் பற்றி ஒரு வெண்ணை வெட்டி கருத்து. அதுக்கும் இதோ கீழே லிங்க் உள்ளது படிக்கவும்.
மாவோவின் பாய்ச்சல் பொருளாதாரமும், சீனாவின் சாதனையும்
http://www.monthlyreview.org/0906ball.htm
மாவோ – மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_22.html
//No doubt Union Carbide is the first accused. but our officers from Industrial Inspection department are eqaully culpable. how the hell did they perform their safety audits ?//
யுனியன் கார்பைடில் விபத்து எப்படி நிகழ்ந்தது என்று கூட தெரியாமல் அதன் வரலாறு தெரியாமால் வழக்கம் போல சல்லி அடிக்கிறார் அதியமான்.
அங்கு பயனபடுத்தப்பட்ட தொழில்நுட்பம் குறித்து பேசினால் இந்தியாவுக்கு இதுவே அதிகம் இதையெல்லாம்பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று ஸ்டேண்டர்ட் கருத்தை உதிர்ப்பார். இதைத்தானே மன்னுமோகனும் சொல்கிறான். ‘போபால்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் அதுக்கெல்லாம் நாம நிக்க முடியாது கட்ந்து போயிக்கிட்டே இருக்கனும்’ என்று.
அசுரன், யார் வெண்ணை வெட்டி என்று நீரே முழங்க வேண்டாமே ? என்னை கேட்டால், நீர் தான் வெண்ணை வெட்டி என்பேன். சரியா. முதலில், அன்று ரஸ்ஸியாவில் கொல்லப்பட்ட விஞ்ஞானிகள் பற்றி நேர்மையாக பதில் சொல்ல முயல்க. உமது லின்க்கில், நான் இங்கு எழுதிய விசியங்களுக்கு பதில் இல்லை. 1964இல் சார்க்வோவ் என்று ரஸ்ஸிய இயற்பிய விஞ்ஞானி (நஸ்ஸிய அணுகுண்டு தயாரிப்பில் முக்கிய பங்காற்றியவர். பல முறை விருதுகள் பெற்றாவர்) வெளிப்படையாக பேசியதை இங்கு கோட் செய்திருந்தேன். அதை விட என்ன ஆதாரம் வேண்டும் ?
மாவோவின் சாதனைகளை நீர் தான் மெச்சிக்க வேண்டும். Great Leap
Forward : அதன் விளைவாக கொல்லப்பட்ட பல கோடி மக்களை பற்றி இன்றைய சீனர் என்ன கருதுகின்றனர் என்று பேசலாமா ? முதலில் இரும்பு உருக்காலை விசியத்தில் இங்கு எழுதப்பட்டதற்ற்கு விளக்கம் அளிக்க முடியாமால், லிங்க் அளித்து கொல்றீக (இதே லிங்க் குற்றச்சாட்டு என்னை பற்றி மட்டும் சொல்வீக !!)
Ok. then try this link about the Great Leap Forward :
http://en.wikipedia.org/wiki/Great_Leap_Forward
and if you try to say anything about wiki, then i can say similar nasty things about you quoting wiki for povery levels in India. ok.
no doubt China developed economically during Mao’s long regime. but at what cost ? esp the terrible human cost ? and why all historians and marxists outside your tiny group differ from your views ? Esp the Chinese themselves. (don’t try to give me the bull about the present Chinese as revisionists and pseudos. they knew their past better than anyone.)
//and getting fair compensation for the victims is more important than hanging Anderson. in 1989, nearly 480 million USD was given as compensation. (it was a huge sum in those days). our tragedy is that nearly 10 lac cases for claims were filed in the courts out of which nearly 50 % were found to be false claims and had to be rejected. it took nearly 15 years to dipose the false claims. such is the cynical nature of Indians..//
நிவாரணம் முக்கியம்….. முதலக் கண்ணீருன்னு சொல்வாய்ங்க தெரியுமா அது இதுதான். உலகில் இது போல ஒரு விபத்து இது வரை நடந்ததே இல்லையென்ற அளவில் மிகக் கோரமான படுகொலை போபால் படுகொலை.
இது நடந்தது கிட்டத்தட்ட திட்டமிட்ட படுகொலை – அபாயம் குறித்து பல முறை பலர் எச்சரித்தும், 33 பேராபயங்களை ஆய்வு குழு கண்டுபிடித்த பிறகு அவை அமெரிக்க கம்பனியில் சரி செய்யப்பட்டன் ஆனால் இங்கு இந்தியாவில் காஸ்ட் கட்டிங் என்ற பெயரில் இருந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்பும் பிடுங்கி விடப்பட்டது, சிறு சிறு கொள்கலன்களில் சேமிகக் வேண்டிய அதி அபயாமனா எம் சி எல் ரசாயனம் மொத்தமாக 40 டன் டேங்கில் சேமிக்கப்பட்டது, அதன் குளிர் சாதன வசதி காஸ்ட் கட்டிங் என்ற பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டது, நச்சுவாயு பில்டர்(ஸ்கரப்) பிடுங்கிவிடப்பட்டது, சிறு விபத்துக்கள் பல முறை நிகழ்ந்த பிறகும் எதுவும் செய்யாதது, போபால் படுகொலை நடந்து இன்ன தேதி வரை அதன் ரசாயன கூட்டு என்னவென்று ரகசியம் காப்பது, மாற்று மருந்து குறித்து ரகசியம் காப்பது, உலக அளவில் அன்றே நிராகரிக்கப்பட்ட அறிவியல் முறையில் சோதித்தறியாத பேரபாயகரமான தொழில் நுட்பத்தை உபயோகப்படுத்தியது. இவையெல்லாம் யூனியன் கார்பைடு அமெரிக்க தலைமையே செய்தது.
ஆனால், இவரோ இந்திய அதிகாரிகள்தான் முதன்மை குற்றவாளிகளாம்.
மேலும், ஆண்டர்சனை தண்டிப்பதை விட நிவாரணம் முக்கியமாம். ச்சோ. ச்சோ.. என்னே மனிதாபிமானம். இன்னொரு போபால் இனி நடக்க விடமாட்டோம் என்று தமது எதிர்காலம், நிகழ்காலத்தை பணயம் வைத்து பாதிக்கப்பட்ட போபால் மக்கள் போராடி வரும் போது அதியமானும், பாசி-மன்மோகன் கும்பலும் மட்டும் நிவாரணம் முக்கியம் அமைச்சரே என்று கூவுவதில் சில சொந்த அணுகூலங்கள் உண்டு.
அடுத்த அடி என்னவென்றால் 480மில்லியன் டாலர் அன்று அதிகத் தொகையாம். உண்மையில் கேட்க்கப்பட்ட தொகை 3 பில்லியன் இதை வெளியே கட்டப்பஞ்சாயத்து செய்து அடிமாட்டுக்கு குறைத்தது ராஜீவ் அரசு. இதன்படி ஒரு தலைக்கு அன்றைக்கு கிடைக்கும் தொகை வெறும் 48,000 ரூபாய். இந்தத் தொகை இழிப்புடன் ஒப்பிடுகையில் அன்றைக்கும் கொசுறுத் தொகைத்தான். நான் இங்கு வெறும் 10,000 பேரை மட்டுமே கணக்கில் எடுத்து பேசுகிறேன். உண்மையில் செத்து போன 20,000 பேர் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பேர், நிலம், நீர், காற்று மாசுபாடு, நச்சு அகற்றுவது என்று இதற்கு தேவைப்படும் நிவாரணத் தொகையுடன் ஒப்பிடுகையில் 480 மில்லியன் டாலர் ஒரு டீச் செலவுக்குகூட காணாது.
//யுனியன் கார்பைடில் விபத்து எப்படி நிகழ்ந்தது என்று கூட தெரியாமல் அதன் வரலாறு தெரியாமால் வழக்கம் போல சல்லி அடிக்கிறார் அதியமான்./// யார் ஜல்லி அடிக்கிறார் என்ற விளையாட்டு வேண்டாமே. (இது போன்ற தனிமனித விமர்சனங்களை தவிர்பது நம் இருவருக்கும் நல்லது.) Union Carbide management till date maintains that it was caused by saboutage by some employee. read the link given as the first comment about Bhopal disaster in Vinavu recently. it is not clear how water got into the tanks of MIS. it is impossible normally. an experiment later proved it so. i am not sure of it, but doubts remain and full truth has not emerged till date.
and FACT fertisliser company was establised before WW 2. and you still harp on your pet theories of Americans trying to sell their outdated technology (which was used for ammunition manufacture for WW2). Our simple question is : how in the hell would you people have enabled dramatic increase in food production in India thru green revolution ? until then in the 60s, we were importing food grains from US. we lived from ship to mouth. read about that and first tell us a better method to INCREASE food production. or may be you prefer starvation and famine to Green reveloution. like the Ukranian Holdomor in 1930s.
அதியமான்…intellectual honesty எல்லாம் கம்மீக்களிடன் இன்னுமா நீங்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் ?
அதெல்லாம் இல்லாதவர்கள் தான் கம்மீக்கள் ஆகிறார்கள்….
//மாவோவின் சாதனைகளை நீர் தான் மெச்சிக்க வேண்டும். Great Leap//
ஆமாம். உங்களிடம் யாரும் அடை எதிர்பார்க்கவில்லையே? நீங்கள் டௌ கெமிக்கல்ஸின் சாதனைகளை மெச்சுங்கள். அதுவே பொருத்தம்
//it is not clear how water got into the tanks of MIS. it is impossible normally. //
இதுதான் அதியமானின் சார்பு வெளிப்படும் இடம். ரஸ்யா, சீனாவை தோண்டி தோண்டி கண்டுபிடிக்கும் அதியமான் சொந்த நாட்டு அவலத்துக்கு என்னான்னு தெரியலையே என்று அப்பாவியாக கேட்கிறார்.
இது ஒன்றும் ரகசியமல்ல. அங்கிருந்து வால்வுகள் துருப்பிடித்துள்ளன பராமரிப்பு, கண்காணிப்புக்கான முறைமைகள்(ஒரு மணீநேரத்துக்கு ஒரு முறை கண்காணிப்பது, கால