privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விஅலாவுதீன் – ஒரு அற்புத விளக்கு !

அலாவுதீன் – ஒரு அற்புத விளக்கு !

-

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் ஜமாத்தாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் மணமகன் அலாவுதீன், மணமகள் ஷபனா ஆஸ்மி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற  சீர்திருத்த திருமணம் குறித்த செய்தியை புதிய ஜனநாயகம் இதழ் வெளியிட்டிருந்தது. அதனை வினவு தளத்தில் பிரசுரித்திருந்தோம். அச்செய்தியில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விவரப்பிழை குறித்து புதிய ஜனநாயகம் இதழுக்கும் தெரிவித்து விட்டோம்.

அப்பகுதியின் ஜமாத்தை சேர்ந்தவர்களும், ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட அப்பகுதி முஸ்லிம் மக்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்றும் மேற்கூறிய செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. “கிடையவே கிடையாது” என்று இதற்கும் சில பேர் மூச்சைக் கொடுத்து வாதாடினார்கள்.

கடைசியாக, தன்னுடைய திருமணம் மிகப்பெரிய விவாதப் பொருளாக  மாறியிருப்பதைக் கேள்விப்பட்ட மணமகன் அலாவுதீன், வினவு தளத்தில் தனது விளக்கத்தை அளித்தார். அது அவரது விளக்கமல்ல, வினவு செட்டப் செய்து போட்டது என்று அவதூறு புலனாய்வு செய்து கண்டுபிடித்து சில இசுலாமிய தளங்களில் கட்டுரைகள் எழுதினார்கள்.

விவகாரம் அதோடும் முடியவில்லை என்று தெரிகிறது. நேரில் வந்து ஆஜராகி விளக்கமளிக்குமாறு மணமேல்குடி ஜமாத்திலிருந்து தனக்கு தாக்கீது வந்திருப்பதாக அலாவுதீன் எங்களிடம் தெரிவித்தார். வளைகுடாவில் இருக்கும் ஷபனா ஆஸ்மியின் தந்தை அப்பாஸ் தவ்ஹீத் ஜமாத்தில் உறுப்பினர். நான் உறுப்பினர் இல்லை என்று அறிக்கை விடும்படி அவரையும் நிர்ப்பந்திக்கிறார்களாம். இந்த திருமணத்துக்கு சென்று கலந்து கொண்ட தவ்ஹீத் ஜமாத்தின் பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இவை குறித்தெல்லாம் நாங்கள் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சில நாட்களில் எல்லாவற்றுக்கும் முடிவு தெரியத்தான் போகிறது.

இவர்களுடைய அணுகுமுறையைக் கண்டு ஒருபுறம் கோபம் வருகிறது. இன்னொரு புறம் இசுலாமிய மக்களின் நிலைமையை நினைக்கும்போது வருத்தமாகவும் இருக்கிறது. தவ்ஹீத் ஜமாத்தோ, த.மு.மு.கவோ அல்லது பிற இசுலாமிய அமைப்புகளோ திமுக, அதிமுக யாரோடு வேண்டுமானாலும் கூட்டு சேருவார்கள். அவர்களுக்கு ஓட்டுப் போடச்சொல்லி இசுலாமிய மக்களை பத்தி விடுவார்கள். அவர்களோடு ரம்ஜான் கஞ்சி குடிப்பார்கள். அதிலெல்லாம் இவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர்கள் நேரடி இந்துமதவெறிக் கட்சியான பாஜகவுடனும், மறைமுக இந்துமதவாதக் கட்சியான காங்கிரசுடனும் கூட்டு சேர்ந்தவர்கள் என்பதும் இவர்களுக்கு பிரச்சினை இல்லை.

அவ்வளவு ஏன், தற்போதைய அலகாபாத் தீர்ப்பை கண்டித்து எந்தக் கட்சியும் பேசவில்லையே அதுபற்றி கேட்பதற்கும்  இவர்களுக்குத் துப்பில்லை. யாராவது ஒரு அலாவுதீன் கம்யூனிச அடையாளத்தோடு திருமணம் செய்து கொண்டால் அதுதான் இவர்களுக்கு பிரச்சினை. உடனே விசாரணை, ஒழுங்கு நடவடிக்கை எல்லாம் தூள் பறக்கிறது.

வரதட்சிணை வாங்கிய இசுலாமியர்கள், வட்டிக்கு விடும் இசுலாமியர்கள், லாட்டரி சீட்டு விற்றே ஜனாப் ஆன ஹாருண்கள், ஏழை முஸ்லிம்களை வளைகுடாவுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தும் முஸ்லீம் பெருமக்கள், ரஜினி கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் கலீல்ஜி போன்ற தலைவர்கள்… இவர்களையெல்லாம் தவ்ஹீத் ஜமாத் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். “நான் ஒரு கம்யூனிஸ்டு” என்று வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளும் அலாவுதீன்தான் இவர்களுக்குப் பிரச்சினை.

இந்தப் பிரச்சினையும், இன்று இந்த விவாதம் நடைபெறும் சூழலும் எங்களுக்கு 1980களை நினைவு படுத்துகிறது. அன்று குற்றவியல் நடைமுறைச்சட்டப்படி ஜீவனாம்சம் கோரிய ஷாபானு என்ற அப்பாவி வயோதிக முஸ்லிம் பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சி செய்தார்கள் இசுலாமிய அடிப்படைவாதிகள். உடனே பல்டியடித்த ராஜீவ் காந்தி ஷரியத் கோர்ட்டை கொண்டு வந்தார். அதனை சரிக்கட்டும் விதத்தில் இந்து அடிப்படைவாதிகளை தாஜா செய்வதற்காக 1986 இல் பாபர் மசூதியில் வைக்கப்பட்ட ராமன் சிலையை வழிபாட்டுக்குத் திறந்து விட்டார். விளைவு – நாடு முழுவதும் நாம் கண்டு வரும் இந்து வெறியின் கோரதாண்டவம்.

இன்று, அலகாபாத் நீதிமன்றம் அப்பட்டமான ஒரு கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்பை கொடுத்திருக்கிறது. அதனை எதிர்த்துக் கண்டிப்பதற்கு, இப்தார் விருந்து வைத்த எந்த ஓட்டுக் கட்சிக்கும் துப்பில்லை. அந்தக் கட்சிகளில் இருக்கும் இசுலாமியர்கள் எல்லாம் வெளியேறவேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் அறிவிக்குமா? அவர்களையெல்லாம் எந்த ஜமாத்தாவது விசாரிக்குமா? அலாவுதீன் மீது விசாரணை நடத்தப்போகிறார்களாம். இந்தக் கேலிக்கூத்தை என்னவென்பது?

இந்து மதவெறிக்கு எதிராக சமரசமின்றி குரல் கொடுக்கும் ம.க.இ.க வும் வினவு தளமும்தான் இவர்களுக்கு எதிரிகள். கேட்டால் “இந்து மதவெறியையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இசுலாமிய மக்கள் உங்களை நம்பி இல்லை” என்று ஜம்பமாக பதில் சொல்வார்கள். தங்களுடைய உரிமையைப் பாதுகாப்பது இசுலாமிய அமைப்புகளா, மதச்சார்பற்ற அமைப்புகளா என்று குஜராத் முஸ்லிம் மக்களிடம் அல்லவா கேட்கவேண்டும்? பெஸ்ட் பேக்கரி வழக்கு உள்ளிட்ட குஜராத் படுகொலை வழக்குளை உலகறியச் செய்த தீஸ்தா சேதல்வாத், ஒரு இறை நம்பிக்கையற்ற காஃபிர். மோடியை எதிர்த்து நிற்கும் பல மனித உரிமை ஆர்வலர்களும் கூட இறைநம்பிக்கையற்ற காஃபிர்கள்தான்.

இசுலாத்தை ஏற்றுக் கொள்ளாத, ஆனால் இசுலாமிய மக்களின் மீது பரிவும், அக்கறையும் கொண்ட எங்களைப் போன்ற காஃபிர்களுடன் ஒரு முஸ்லிம் என்ன விதமான உறவைப் பேண வேண்டும்? “இத்தகைய காஃபிர்களை நம்முடைய காரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்வது ஹராம் இல்லை. ஆனால் அந்த நச்சுப் பாம்புகளோடு நெருக்கமான சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத் போன்றோரின் கருத்து.

ஆனால் அது அப்படி இருப்பதில்லை. பேய் என்றும் பிசாசென்றும் சாத்தானென்றும் கம்யூனிஸ்டுகளைப் பற்றிய சித்திரத்தை தவ்ஹீத் ஜமாத்தார் உருவாக்கினாலும், எங்களுடன் நேரடியாகப் பழகும் சாதாரண முஸ்லிம் மக்கள் கம்யூனிஸ்டுகளின் நேர்மை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றால் கவரப்படுகிறார்கள். கல்வி வள்ளல்களின் நன்கொடைக் கொள்ளைக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி நாங்கள் போராடும்போது அதில் முஸ்லிம் மாணவர்களும் இருக்கிறார்கள்; தொழிற்சங்கத்தில் முஸ்லிம் தொழிலாளர்களும் இருக்கிறார்கள்; இவர்களுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தவ்ஹீத் ஜமாத்திடம் விடை இல்லை.

இவற்றுக்கு நியாயமான, அறிவுக்கு உகந்த தீர்வுகளைச் சொல்லும் கம்யூனிசக் கொள்கைகளின் பால் ஒரு இசுலாமியர் ஈர்க்கப்படுவதில் என்ன தவறு? அப்படி ஈர்க்கப்பட்ட பல முஸ்லிம் இளைஞர்களில் ஒருவர் தான் அலாவுதீன். நேற்று இந்துவாக, கிறித்தவனாக, ஆதிக்க சாதியாக, திமுக காரனாக, அதிமுக காரனாக, ஆர்.எஸ்.எஸ் காரனாக இருந்தவர்களெல்லாம்தான் கம்யூனிஸ்டுகளாக மாறியிருக்கிறார்கள். யாரும் காஃபிராகவே வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. பிறப்பால் இந்து உண்டு, முஸ்லிம் உண்டு, கிறித்தவன் உண்டு. ஆனால் பிறப்பால் யாரும் கம்யூனிஸ்டு இல்லை. கம்யூனிஸ்டுக்கு மகனாகப் பிறந்தாலும், அவனுக்கு கம்யூனிசத்தின் மீது பற்று இருந்தால் மட்டும்தான் கம்யூனிஸ்டாக வளர்வதற்கு முயற்சிக்கிறான்.

அலாவுதீனையே எடுத்துக் கொள்வோமே. அவர் குடிகாரரோ, பெண் பித்தரோ, சூதாடியோ, வட்டிக்கு விடுபவரோ இல்லை. வரதட்சிணையும் வாங்கவில்லை. அவர் செய்த ஒரே குற்றம் இசுலாமிய முறைப்படி திருமணம் செய்யாததுதான். “இசுலாமுக்கு எதிராக எதையாவது செய்தே தீருவது” என்று முடிவு செய்து அதற்காக தனது திருமணத்தை அவர் இப்படி நடத்தவில்லை. இதுதான் அறிவுக்கு உகந்தது, நாகரிகமானது என்று கருதுவதனால் சுயமரியாதை திருமணம் செய்திருக்கிறார்.

உருவ வழிபாட்டை எதிர்க்கும் இசுலாமை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக பகத்சிங், மார்க்ஸ், லெனின் போன்றோரின் படத்தை அவர் மேடையில் வைக்கவில்லை. அவர்கள் மனித குலத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் என்பதனால் மேடையில் வைத்தார். இன்னும் திப்பு சுல்தான், ஹசரத் மகல், இஷ்பகுல்லா கான் போன்றோரின் படங்களைக் கூட வைப்போம். அவர்கள் இசுலாமியர்கள் என்பதற்காக அல்ல, விடுதலைப்போரின் முன்னோடிகள் என்பதனால். பிறப்பால் இந்துக்களான எங்களது தோழர்கள் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு ஹசரத் என்றும் திப்பு என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஒருவேளை இப்படிப்பட்ட இசுலாமியப் பெயர்களை வைப்பதற்கு நாங்கள் தவ்ஹீத் ஜமாத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டுமோ?

அவ்வளவு ஏன், 1920களில் தென்னிந்தியாவுக்கு கம்யூனிசத்தை அறிமுகப்படுத்தியவரே பிறப்பால் முஸ்லீமான தோழர் அமீர் ஹைதர் கான் என்பவர்தான். அவர் போட்ட விதையில் முளைத்த சாத்தான்கள்தான் நாங்களெல்லாம். ஒருவேளை அன்று தவ்ஹீத் ஜமாத் இருந்திருந்தால், அவருடைய கதி என்ன, நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது!

புத்தனோ, கிறிஸ்துவோ, நபிகள் நாயகமோ அவரவர் காலத்தில் மனிதகுலம் எதிர்கொண்ட கேள்விகளுக்கு அவர்கள் சிந்தித்து விடையளித்தார்கள். அதற்குப் பின்னர் உலகில் தோன்றிய சிந்தனையாளர்கள் ஏராளம். இந்த மரபுகளின் நேர்மறையான அம்சங்கள் அனைத்தையும் வரித்துக் கொண்டு இன்றைய உலகத்தின் கேள்விகளுக்கு விடையளிப்பதுதான் கம்யூனிசம். ஏசுவிடமும், நபிகள் நாயகத்திடமும், புத்தனிடமும் அக்காலத்து மக்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். அவற்றுக்கெல்லாம் அவர்கள் சளைக்காமல் விடையளித்தார்கள். அதன் காரணமாகத்தான் அவர்கள் முன்னோடிகளாகவும், ஞானிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். சொல்வதைச் செய். கேள்வி கேட்காதே என்பது அவர்கள் கொள்கையாக இருந்திருந்தால் நமக்கு பைபிளோ, குர் ஆனோ கிடைத்திருக்காது. குண்டாந்தடி மட்டும்தான் கிடைத்திருக்கும். கேள்வி கேட்டு விடை தேடியவர்களின் வாரிசுகள் கம்யூனிஸ்டுகள். குண்டாந்தடிகளின் வாரிசுகள் மதவாதிகள்.

“எக்கேடு கெட்டும் போ. கண்ணுக்கு மறைவாக, ஊரை விட்டு ஓடிப்போய் எங்கேயாவது திருமணம் செய்து கொள்” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத்தாரின் கோரிக்கை. அலாவுதீன் அப்படி ஓடி, ஒளிந்து செய்யவில்லை. தனது சொந்த ஊரில் முஸ்லிம் மக்கள் மத்தியில், அவர்கள் அங்கீகாரத்துடன் செய்திருக்கிறார். “இசுலாத்துக்கு விரோதமான காஃபிர்கள் ஒன்றுகூடி சிவப்புக் கொடி ஏற்றி ஒரு திருமணத்தை நடத்த, நம்மாளுக அதை தட்டிக் கேட்க துப்பில்லைன்னாலும், கலந்து கொண்டு, வாழ்த்தி, பிரியாணியும் சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறார்களே, இப்படியே போனால் இசுலாத்தின் எதிர்காலம் என்ன?” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத் காரர்களின் கவலை.

தங்களுடைய கொள்கையின் மீது தவ்ஹீத் ஜமாத்தினருக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், “சுயமரியாதை திருமணம் ஏன் தவறு, இசுலாமிய திருமணம் எப்படி சரியானது” என்று மணமேல்குடியில் கூட்டம் போட்டு முஸ்லிம் மக்களுக்கு அவர்கள் விளக்கியிருக்க வேண்டும். “ஐந்து வேளை தொழுது, ரம்ஜானுக்கு நோன்பிருக்கும் உண்மையான முஸ்லிம்களாகிய நீங்கள் காஃபிர்கள் நடத்திய இந்த திருமணத்திற்கு எப்படி போனீர்கள்?” என்று அந்த மக்களிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அந்த மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறியிருக்க வேண்டும். தனது கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்கள், “ஊர்விலக்கம், ஜமாத் விசாரணை” என்று கோழைத்தனமாக எதற்கு குண்டாந்தடி எடுக்க வேண்டும்?

இசுலாமியர்களின் எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். இசுலாத்தின் எதிர்காலத்தைப் பற்றி தவ்ஹீத்துக்கு கவலை. சுயமரியாதை உள்ளவனை சும்மா விட்டால், தங்களுடைய கோட்டையில் விரிசல் விழுந்து விடும் என்பது அவர்கள் பிரச்சினை. திமுகவுக்கும், அதிமுகவுக்கும், காங்கிரசுக்கும் முஸ்லிம் மக்களின் சுயமரியாதையை பேரம் பேசலாம். அதில் தவ்ஹீத்துக்கு ஆட்சேபம் இல்லை. யாருடன் கூட்டணி வைக்கலாம், வைக்கக் கூடாது என்று குர் ஆனிலோ, ஹதீஸிலோ எதுவும் சொல்லப்படவில்லையே. எப்படி திருமணம் செய்யவேண்டும் என்பது பற்றித்தானே இசுலாமில் வழிகாட்டுதல் இருக்கிறது!

வீடு பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்டவன் கதையை கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது பார்க்கிறோம். முஸ்லிம்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தும் ஒரு பாசிசத் தீர்ப்பு வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டிருக்கிறது. “இதனை எதிர்த்துப் போராடும் ஒரு அமைப்பில் அலாவுதீன் என்ற நம் பையன் இருக்கிறானே” என்பது பற்றி ஒரு முஸ்லிம் மகிழ்ச்சி கொள்ளவேண்டுமா, அல்லது அவனை ஜமாத்தில் நிறுத்தி ஊர்விலக்கம் செய்யவேண்டுமா?

சாதிப்பஞ்சாயத்துகள், மதப்பஞ்சாயத்துகள் பலவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம். தவ்ஹீத் ஜமாத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுபவர்கள் நாங்கள் அல்ல. முஸ்லிம் மக்கள்தான். இசுலாம் என்றாலே தலிபான்தான் என்ற முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு, தங்களது நடவடிக்கை மூலம் வலு சேர்க்கிறது தவ்ஹீத் ஜமாத்.

இந்துக்கள் எல்லோருக்கும் நான்தான் அத்தாரிட்டி என்று ஆர்.எஸ்.எஸ் கூறுவதற்கும், முஸ்லிம்கள் எல்லோருக்கும் நாங்கள்தான் அத்தாரிட்டி என்று தவ்கீத் ஜமாத் கூறுவதற்கும் ஒரே ஒரு வேறுபாடுதான் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் என்பது பெரும்பான்மை மதம் சார்ந்த மதவெறி அமைப்பு. ஒருவேளை தவ்ஹீத் ஜமாத் இங்கே ஆட்சியில் இருந்தால், அலாவுதீனை கல்லால் அடித்துக் கொல்வதா, தூக்கில் தொங்கவிடுவதா என்பது குறித்துதான் ஆன்லைன் பிஜே யில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்.

அந்த வகையில் தவ்ஹீத் ஜமாத்தை இசுலாமிய மக்களுக்கு அடையாளம் காட்டிய அலாவுதீன் – ஒரு அற்புத விளக்குதான்!

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. அலாவுதீன் – ஒரு அற்புத விளக்கு !…

    தவ்ஹீத் ஜமாத் இங்கே ஆட்சியில் இருந்தால், அலாவுதீனை கல்லால் அடித்துக் கொல்வதா, தூக்கில் தொங்கவிடுவதா என்பது குறித்துதான் ஆன்லைன் பிஜே யில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்….

  2. இஸ்லாமிய அமைப்புகளைப் பற்றிய சரியான மதிப்பீட்டில் வந்துள்ள பதிவு. தோழர்களுக்கு நன்றி.
    தவ்ஹீத் அமைப்பைச் சேர்ந்த பீஜே. என்பவர் தவ்ஹீதைச் சேராத மற்ற முஸ்லீம்களை நரகத்தாளிகள் என்று குறிப்பிட்டுள்ளார். இது இவரின் தலிபானுக்குரிய மனோநிலையையேக் காட்டுகிறது.

    • உங்களிடம் ஒரு கேள்வி.. கம்யூனிசத்தை நீங்கள் நம்புகிறீர்கள். கம்யூனிசத்தை நம்பாதவர்களை என்னவென்று கூறுவீர்கள்? இல்லை அவர்களும் கம்யூனிஸ்ட்கள் தான் என்று கூற மாட்டீர்கள் தானே? அதே போல தான் நாங்கள் இஸ்லாத்தை நம்புகிறோம். ஏக இறைவனை (தௌஹீத்) நம்புகிறோம். எங்களுடைய நம்பிக்கையின் படி ஏக இறைவனை மட்டுமே நம்புகிறவர், வழிபடுகிறவர் சொர்க்கவாசி.. ஏக இறைவனை நம்பாதவர், வழிபடாதவர் நரகவாசி.. இதனை தௌஹீத் ஜமாஅத் சொன்னால் என்ன? சாதாரண நான் சொன்னால் என்ன? கம்யூனிசத்தில் நம்பிக்கை கொள்ளாத மக்களை நீங்கள் எப்படி கம்யூனிஸ்ட்களாக ஏற்றுக் கொள்வதில்லையோ அதே போல ஏக இறைவனை ஏற்றுக்கொள்ளாதவர்களை சொர்க்கவாசிகளாக ஏற்றுக்கொள்வதில்லை.. இதில் என்ன தவறு இருக்கிறது?

      • ரபீக்,

        நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் என்ன.. இங்கே இருக்கும் சமூகச் சூழல் என்ன… மனித சமூகம் எதிர்கொண்டு
        போராடி வீழ்த்த வேண்டிய எத்தனையோ அபாயங்கள் கண் முன்னே இருக்கும் போது.. இப்படி அம்புலிமாமாத்தனமாக
        “சொர்க்கவாசி… நரகவாசி….” என்னாங்க இது? இதெல்லாம் இப்ப ரொம்ப முக்கியமாங்க?

        எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பனுக்கு ஒரு வழின்னு சொல்வாங்க எங்க ஊர்பக்கம். இப்ப இசுலாமிய சமுதாயம்
        உலகளவிலும் இந்தியளவிலும் திட்டமிட்ட விசப்பிரச்சாரங்கள் காரணமாக தனிமைப்படுத்தப்படும் ஒரு சூழல் இருக்கும்
        போது, நீங்கள் பாசிஸ்ட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக இப்படி செய்வது இசுலாமியர்களுக்கே எதிரானது என்பதையாவது
        புரிந்து கொள்வீர்களா?

        சாதாரண உழைக்கும் இசுலாமியர்களின் பிரச்சினைகளும் உங்கள் பீ.ஜேவின் பிரச்சினையும் முற்றிலுமாக வேறு வேறானது.
        இன்னும் சொல்வதானால், முரண்பாட்டுக் கொள்வது. பாருங்களேன்… எதார்த்த வாழ்க்கையில் ஒரு முசுலீம் சந்திக்கும்
        பிரச்சினையை விட்டுவிட்டு எவருமே காணாத சொர்கம் யாருக்குன்னு ஒருத்தன் பேசுவது லூசுத்தனமா உங்களுக்கே தெரியலை?
        அந்த வகையில் பார்த்தால் சாதாரண உழைக்கும் முசுலீம்களுக்கு அணுக்கமானவர்கள் கம்யூனிஸ்டுகள் தான்.
        ஒரு வர்க்கமாகப் பார்க்கும் போது எங்கள் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் ஒன்றாக இருக்கிறது. இதை உணர்ந்துள்ள
        முசுலீம்கள் எங்களை நெருங்கி வருவதை பார்க்க பீ.ஜேவுக்கு சகிக்கவில்லை.

        ஒட்டு மொத்த இசுலாமியர்களுக்கெல்லாம் தானே கேள்வி முறையற்ற தண்டல்காரன் என்பது போன்ற தவ்ஹீத் ஜமாத்தாரின்
        போக்குகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் இந்துக்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வதற்கும் சாராம்சத்தில் என்ன வேறுபாடு இருக்கிறது?
        இப்படி ஒரு துருவத்தைத் தான் காக்கி டவுசர்கள் எதிர்பார்க்கிறார்கள் – டி.என்.டி.ஜேவின் செயல்கள் காக்கி டவுசரை எதிர்ப்பது
        போல ஆதரிப்பதாய் இருக்கிறது.

        பதிவை நிதானமான சிந்தனையில் இருக்கும் போது மீண்டும் ஒருமுறை வாசிக்கவும்.

        • அன்பின் சகோதரர் கார்கி,
          நான் பதிவிட்டது சகோதரர் கலை கூறியதன் பதில் மட்டுமே.. நான் நம்புகின்ற ஒன்றில் தெளிவாக இருப்பது என்னவிதத்தில் தவறு என்று தெரியவில்லை. நீங்கள் கம்யூனிஸ்ட் என்றால் அதன் அடிப்படையை பற்றி பிடித்திருக்க வேண்டும். அதனை விடுத்து அவர் சொன்னாலும் சரி இவர் சொன்னாலும் சரி, அது என்றாலும் சரி இது என்றாலும் சரி, பணக்காரன் என்றாலும் சரி, ஏழை என்றாலும் சரி, ஆனால் நான் கம்யூனிஸ்ட் என்று சொல்லி கொண்டீர்கள் என்றால் எவ்வாறு நகைப்புக்குரியதாக இருக்குமோ அதேபோல தான் நான் சொர்க்க நரகத்தை நம்புகிறேன்.. அதிலே உறுதியாக இருக்கிறேன்.. இதில் என்ன மடமை இருக்கிறது? எந்த விஷயத்தை பற்றி பேசுகிறோமோ அந்த விஷயத்தை மட்டும் விவாதியுங்கள்.

          உழைக்கும் இஸ்லாமியர்கள், உழைக்கத இஸ்லாமியர்கள், உழைக்கும் இந்துக்கள், உழைக்காத இந்துக்கள் என்று பேதம் பிரிக்க நான் வரவில்லை.. நீங்கள் கூறும் கம்யூனிசத்தை விட, நீங்கள் எதிர்க்கும் சுரண்டலை விட அதிகமாக இஸ்லாம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு கண்ணியம் அளிக்கின்றது, அவர்களின் மீதான சுரண்டலை எதிர்க்கிறது. “உழைப்பவனுக்குரிய கூலியை அவனுடைய வியர்வை காயும் முன்னரே கொடுத்து விடுங்கள் என்று கூறும் கண்ணியமான மார்க்கம் இஸ்லாம்.. உனக்கு எத்தனை விரும்புகிறாயோ அதனையே உன் சகோதரனுக்கும் விரும்பாதவரை உண்மையான இறை நம்பிக்கையாளராக முடியாது என்று எச்சரிக்கும் மார்க்கம் இஸ்லாம்.” நீங்கள் கூறும் கம்யூனிசம் என்ன கூறி இருக்கின்றது என்பதை கொஞ்சம் இங்கு விளக்குங்களேன்…

      • சொர்க்கவாசிகளாக சொல்லத்தேவையில்லை, அது உங்கள் வேலையும் இல்லை. அதே சமயம் நரகவாசிகள் என்று சொல்லச் சொன்னது யாருங்க?

        தமாசு பண்றீங்க.

      • ர ஃபீக்,
        ஏக இறைவனை நம்பாதவர் நரகவாசி என்று அவர்களுக்கு பெரிய மனதோடு தண்டனை கொடுக்கிறீர்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் கம்யூனிசத்தை ஏற்காதவர்களுக்காகவும் சேர்த்துத்தான் போராடுகிறார்கள். இதில் எது சரியானது?

        • சகோதரர் வினவு,
          சகோதரர் கலை அவர்களின் கருத்திற்கு எனது நம்பிக்கைப் படி நான் பதிலளித்தேன். மேலும் அநியாயமிழைக்கப்பட்ட எந்த ஒரு மனிதருக்காகவும் போராடும் எவருமே பாராட்டப்படக்கூடியவர்கள் தாம்.. அதனை நீங்கள் செய்தாலும் சரி.. இன்னும் தௌஹீத் ஜமாஅத் செய்தாலும், ஏனைய மாற்று கொள்கைச் சகோதரர்கள் செய்தாலும் ஏன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரே செய்தாலும் அது பாராட்டுக்குரியது தான். அதற்காக மேற்குறிப்பிட்ட அனைவரும் (நீங்களும் நானும் உட்பட) எது செய்தாலும் அதனை ஆதரிக்க, பாராட்ட வேண்டும் என்பது நற்சிந்தனையாளர்களின், நன்மக்களின் செயல் அல்ல..

          மேலும் சகோதரர் வினவு,
          நீங்கள் கம்யூனிஸ்ட் அல்லாதவருக்கும் அநியாயதிற்கேதிராக போராடுகிறீர்கள். நல்ல விஷயமே.. நீங்கள் இங்கு வசைபாடி இருக்கும் தௌஹீத் ஜமாஅத் உட்பட இஸ்லாமிய இயக்கங்கள் போராடி பெற்றனவே “சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு”.. அது அவர்கள் சார்ந்த இயக்கத்தினருக்கு மட்டுமான போராட்டம் என்று நினைத்தீர்களா? இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமானால், வீரியமாக களத்தில் இறங்கி போரடியவை இஸ்லாமிய இயக்கங்கள்.. ஆனால் அதன் பலன் என்னுடைய கிறித்தவ சகோதரர்களுக்கும் கிடைத்ததே.. இதனை நீங்கள் பாராட்டுவீர்கள? இல்லை மதம் சார்ந்த இயக்கங்கள் செய்ததனால் பயங்கரவாதம் என்று புறம்தள்ளுவீர்களா?

          • சிறுபான்மை மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட ஏமாற்று சலுகைதான் இட ஒதுக்கீடு, அதையெல்லாம் பெரிய சாதனையாக நாங்கள் கருதவில்லை. மாறாக தொழிலாளர் பிரச்சினை, மாணவர் பிரச்சினை, பாலியல் பிரச்சினை போன்ற சமுக விசயங்களுக்கு எந்த மத அமைப்புகளும் போராடுவதில்லை. போராடவும் இயலாது. ஆக எல்லா மக்களை பாதிக்க கூடிய முக்கியமான பிரச்சினைகளுக்கு யார் போராடுகின்றார்களோ அதைபொறுத்துத்தான் அவர்களை எடை போடமுடியும். மற்றபடி நல்லது செய்தால் ஆர்.எஸ்.எஸ் ஐ கூட பாராட்டுவேன் என்ற உங்களது அப்பாவித்தனம் எங்களுக்கில்லை.

        • சகோதரர் வினவு,
          நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளை விட சக மனிதனை சகோதரனானாக, தனக்கு விரும்புவதை அவனுக்கும் விரும்பக்கூடிய மன நிலையை எற்படுதுதலே முக்கியமான போராட்டம் என்பது என்னுடைய எண்ணம்.. சக மனிதனை தன்னைவிட கீழாக நினைக்க கூடிய எண்ணமே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்..

          மேலும் ” நல்லது செய்தால் ஆர்.எஸ்.எஸ் ஐ கூட அப்பாவித்தனமாக பாராட்டுவேன்,, பிறருக்கு தீங்கு செய்தால் படுபயங்கரமாக கண்டிப்பேன் எதிர்ப்பேன்”

        • //வினவு
          ர ஃபீக்,
          ஏக இறைவனை நம்பாதவர் நரகவாசி என்று அவர்களுக்கு பெரிய மனதோடு தண்டனை கொடுக்கிறீர்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் கம்யூனிசத்தை ஏற்காதவர்களுக்காகவும் சேர்த்துத்தான் போராடுகிறார்கள். இதில் எது சரியானது//

          சகோதரர் வினவு
          நம்மை படைத்தவன் ஒருவன். வணக்கத்துக்கு உரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. இதை நம்பாதவர்கள் , நிராகரித்தவர்கள் நரகவாசிகள். இதை நாங்கள் நம்புகிறோம். நம்மிடம் வேலை செய்பவர்கள் நமக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர எல்லாருக்கும் விசுவாசமாக இருந்தால் அதை என்னவென்று சொல்வது. நாமே இவ்வாறு என்னும் போது நம்மை படைத்த இறைவன் தன்னை நம்பாத நிராகரிப்பாளர்களுக்கு நரகம் என்பதில் தவறில்லை தானே. தவ்ஹீத் ஜமாஅத், த மு மு க, இ த ஜ போன்ற முஸ்லீம் அமைப்புகள் ரத்த தானம், இலவச ஆம்புலன்ஸ் போன்ற உதவிகளை முஸ்லீம்கள் என பார்த்து செய்வதில்லை. முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் சேர்த்து தான் செய்கிறார்கள்.

      • அன்புள்ள ரபீக் முன்பு வினவில் நடந்த ஒரு விவாதத்தில் நான் எழுதிய பின்னூட்டங்களில் இரண்டை சமர்பிக்கிறேன்

        @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

        நாங்கள் கம்யூனிஸ்டுகள், எங்கள் பிள்ளைகளை நாங்கள் கம்யூனிஸ்டு என்று அழைப்தில்லை. அவர்கள் கம்யூனிஸ்டாய் இருப்பதும் இல்லாமலிருப்பதும் அவர்கள் முடிவு.

        நீங்கள் அப்படியா?

        உங்கள் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து இசுலாமை கற்று தெரிந்த்து ்புரிந்து அதை வாழ்க்கை நெரியாக ஏற்க முடிவு செய்யும் வரை உங்களின் பிள்ளைகளை முசுலிமென அழைக்காமலிருக்கும் நேர்மையும் துணிவும் உங்களுக்கு வருமா?

        @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

        பிறக்கும் போது எவனும் கம்யூனிச்டு இல்லை! அது அவன் வளர்ந்த பின்னர் அறிந்து புரிந்து தேர்ந்தெடுக்கும் அரசியல் பாதை.
        இசுலாம் அப்படியா?

        எருமைக்கு பிறந்தது எருமை என்பது போல முசுலிமுக்கு பிறந்தால் முசுலிம் என்பதுதானே உங்கள் விதி. இதற்கும் கவுண்டனுக்கு பிறந்தவன் கவுண்டன் என்பதற்கும் என்ன வித்தியாசம் சுயமோகம்மது அவர்களே?

        @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

        மேலும் பல சுவாரசியமான விவாதங்கள் படிக்க
        https://www.vinavu.com/2009/11/11/casteism-in-islam/

      • தவ்ஹீது சாராத பிற முஸ்லீம்கள் ஏக இறைவனை ஏற்றுக்கொண்டவர்கள் தானே. அப்படியிருக்க அவர்களையும் நரகத்தாளிகள் என்று தவ்ஹீது கூறுகிறதே ரபீக்.

    • நண்பர் ரஃபீக் ஏன் இந்த அவசரக்கோலம்? நான் கூறியதை சரியாகப் படிக்கவும். “தவ்ஹீதைச் சேராத மற்ற முஸ்லீம்களை நரகத்தாளிகள்” என்று பீஜே கூறியிருக்கிறார். என்பதற்கு விளக்கம் தரவும்.

      • சகோதரர் கலை,
        நான் அவசரப்படவில்லை என்பது எனது புரிதல்.

        “தவ்ஹீதைச் சேராத மற்ற முஸ்லீம்களை நரகத்தாளிகள்” என்று பீஜே கூறியிருக்கிறார்.” என்று தானே உங்களின் வாதம். இதற்கு விளக்கம் நான் ஏற்கனவே கூறி விட்டேனே.. பெரியவர், இஸ்லாமிய அறிஞர் பீஜே அவர்களின் நம்பிக்கைப்படி, எனது நம்பிக்கைபடி நிச்சயமாக “தவ்ஹீதைச் சேராத மற்ற முஸ்லீம்கள் மட்டுமல்ல எவருமே நரகத்தாளிகள்” தான்.. தௌஹீத் என்பதன் அர்த்தம் ஓரிறைக்கொள்கை என்பது மட்டுமே. ஒருவேளை நீங்கள் கூற விரும்புவது தௌஹீத் ஜமாத்தில் உறுப்பினராக இல்லாத மற்ற முஸ்லிம்கள் நரகவாசிகள் என்று அவர் கூறி இருந்தால் அது நிச்சயம் தவறானதே..

      • சிறு திருத்தம்,தவ்ஹீதை சார்ந்தவர்களை அல்ல ,ததஜவை சாராதவர்களை ‘முஸ்லிம்கள் இல்லை என்கிறார்.இந்த அதிகாரத்தை யார் கொடுத்ததென்று தெரிய வில்லை ,இறைவன் வரம்பு மீறுபவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை சற்று படிக்கவும்

        தரேக் துபாய்

    • கலை நண்பர் வினவு என்னை தோழர் என்று அழைத்ததற்காக உங்களுடைய தோழர்கள் மத்தியில் வந்த பரபரப்பை கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா? என்னமோ பள்ளபயல எப்புடிடா தேவருன்னு கூப்பிட போச்சுங்கிற ரேஞ்சுக்கு பேசியிருக்கிறார்கள் இது எந்த வகையான மதவேறி கலை

      • தோழர் ஹைதர் அலி, மற்ற தோழர்களைப்பற்றி நீங்கள் அவதூறு செய்கிறீர்கள். யாரும் நீங்கள் கூறும் பொருளில் மனதளவில் கூட அப்படி பேசமாட்டார்கள். குதர்க்கமாக பேசுவது என்று எதையும் வீசாதீர்கள்.

        • ஹைதரை எப்படி தோழர் என்று அழைக்க போச்சு என்று சாகித் கலையிடம் கேட்டிருக்கிறார் கலை என்னிடம் போனில் சொன்னது

          • நீங்க தோழரா இல்லையா என்றவிசயம் உங்களோடு பேசும் எனக்கு மட்டுமே தெரியும். இதை மற்ற தோழர்கள் அறியாமல் விளக்கம் கேட்பதில் என்ன தவறு?

        • ஹைதர்,
          மன்னிக்கவும் ஹைதர். சாகித் என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன். என்னிடம் வினவியது தோழர். சாகித் அல்ல மைதீன் என்ற தோழர்.
          வினவுத் தோழர் உங்களைத் தோழர் என வினவியதன் மூலம் மற்றத் தோழர்கள் “ ஹைதரை எப்படி தோழர் என்றழைக்கலாம்” என்று வினவை நெருக்கியதாக வினவுத் தோழர் கூறியதாக நீங்கள்தான் என்னிடம் முதலில் தெரிவித்தீர்கள். மேலும் தோழர் என்பது சாதி அடையாளத்தைப் போன்றதா என்றும் முஸ்லீம்களில் காபிர் என்றழைப்பது போன்றதா என்றும் கேட்டிருந்தீர்கள். அதற்கு, தோழர் என்றழைப்பது தவறாக எனக்குப்படவில்லை என்றும் நீங்கள் வினவுத் தளத்தில் பின்னூட்டமிடுவதால் தோழர் என்று அடையாளப்படுத்தப்பட்டால் உங்களுடைய கருத்துக்களால் மற்றவர்களுக்கு குழப்பமுண்டாகலாம் என்பதற்காக தோழர்கள் அவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் கூறினேன். அதன் பிறகே நான் சாகிதை தொடர்புகொண்டேன். அவரிடம்,நமது பொதுக்கூட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும், பத்திரிக்கைகள் விற்பனையின்போதும், பொதுமக்களுடனான சந்திப்பின் போதும் தோழர் என்றுதானே அழைக்கின்றோம் அது போன்று ஹைதரை தோழர் என்றழைப்பதில் என்ன தவறு என்று கேட்டதற்கு அவரும் அதனை ஆமோதிக்கவே செய்தார். தோழர் என்றழைப்பதிலெல்லாம் என்ன தவறிருக்கிறது என்றுதான் கூறினார். மற்றபடி நீங்கள் கூறியுள்ளது போல ”பள்ளபயல எப்புடிடா தேவருன்னு கூப்பிட போச்சுங்கிற ரேஞ்சுக்கு” யாரும் பேசவில்லை, யாரும் பரப்புரையும் செய்யவில்லை. உங்களுடைய கூற்று உள்நோக்கம் கொண்டது. இது வினவைக் கட்டம் கட்ட நினைக்கும் பலரின் செயலையே நினைவூட்டுகிறது.. வினவைக் கட்டம் கட்ட நினைத்தவர்களெல்லாம் அவர்களாகவே அம்பலப்பட்டுக்கொண்டனர் என்பதைத் தவிர அவர்கள் பெற்றது ஒன்றுமில்லை.
          ஹைதர் நாம் நட்பாகவே இருப்போமே

          • தோழரை கலை,

            தோழர் என்று நாம் அழைப்பது பொதுச்சொல் அல்ல. அது அரசியல் ரீதியானது. அதாவது புரட்சிகரக் கட்சியை ஏற்றுக் கொண்டு புரட்சியின் கடமையை நிறைவேற்றும் மனிதர்களுக்கிடையே நிலவும் உறவுதான் தோழமை. நாம் அந்த வித்தஃதில்தான் பயன்படுத்துகிறோம். தமிழ்ச்சூழலில் பொதுவில் தோழர் என்ற பயன்பாடு இருக்கிறது. அது வேறு. ஹைதர் அலியோடு நாங்கள் விவாதித்த வகையில் அவர் ஒரு போதும் மதவாதியாக பேசியதில்லை. சமூக, அரசியல் விடுதலைக்கு கம்யூனிசமே தீர்வு என்பதை அவர் ஏற்றுக் கொள்கிறார். உரிய நேரத்தில் அதை அமல்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார். ஆனாலும் அவரிடையே கொஞ்சம் இழுபறி இருப்பதும் உண்மைதான். இந்த போராட்டத்தில் அவர் ஒரு நல்ல தோழராக பரிணமிப்பார் என்ற நம்பிக்கையில்தான் அவரோடு தொடர்ந்து உரையாடுகிறோம். எனவே பின்னூட்டங்களை வைத்து மட்டும் ஹைதரை எடை போடாமல் இருப்பது நல்லது.

  3. […] This post was mentioned on Twitter by வினவு and sandanamullai, ஏழர. ஏழர said: அலாவுதீன் – ஒரு அற்புத விளக்கு ! http://bit.ly/d67oYh #VinavuRocks #MustRead #Retweet இஸ்லாமிய மதவெறியர்களை அம்பலப்படுத்தியிருப்பது அருமை […]

  4. இது மதம் சார்த்த பிரச்னை கவனமாக கையாளவும் – முதலில் நம் மனிதன் பின் இந்து முஸ்லிம்

  5. R .S .S இஸ்லாமியர்களை பற்றி சொல்வதை தான் வினவு கொஞ்சம் மாற்றி சொல்லி இருக்கின்றது. கம்யுனிசம் மக்களால் புறம்தள்ளப்பட்ட ஒரு வெத்து கொள்கை 1 நூற்றாண்டில் ஓங்கி வளர்ந்து கம்யுனிசம் பேசிய நாடுகளாலே ஓரம் கட்டப்பட்ட கொள்கை. சீர்திருத்த திருமணம் பற்றி வாய்கிழிய பேசும் வினவு இஸ்லாம் தான் சீர்திருத்த திருமணத்தை இந்த உலகுக்கு 1400 வருடத்திற்கு முன்பே அறிமுகபடுத்தியது என்பதை மறக்க வேண்டாம், நீங்கள் நடுநிலையாளர்கள் என்று தான் எது நாள் வரையில் நினைத்து வந்தோம் இப்போது தான் தெரிகிறது நீங்களும், மதவெறி சாதிவெறியர்கள் போல் இயக்கவெறி பிடித்தவர்கள் என்று. ஒரு ம.க. இ.க. தோழர் இஸ்லாமிய முறைபடியோ அல்லது ஹிந்து முறைபடியோ திருமணம் செய்தல் நீங்கள் ஒழுங்குநடவடிக்கை எடுப்பீர்கள மாடீர்களா? அலாதீன் நான் முஸ்லிம் இல்லை நான் கமயுனிசிட் என்று பகிரங்கபடுதி திருமணம் செய்தல் அவர்களை யாரும் கண்டுகொள்ள போவது இல்லை அது அவர் கொள்கை என்று விட்டு விடுவோம் இஸ்லாமிய சாயம் பூசிக்கொண்டு இரட்டை வேடம் போடும்போதுதான் பிரச்சனைகள் வருகின்றன. பிறப்பால் இஸ்லாமியனாக இருந்தாலும் அவர் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே உண்மையான முஸ்லிமாக ஆகமுடியும், இஸ்லாத்திற்கு மாறாக யார் செல்பட்டலும் அவர் ஹாரூனக இருந்தாலும் அவரைவிட கொம்பனாக இருந்தாலும் நாங்கள் விமர்சிக்கத்தான் செய்கின்றோம், தி. மு. க. ஆ. தி. மு.க, விற்கு ஒட்டுபோடுவதும் அலாதீன் செய்ததும் ஒன்றகமுடியது இது கொள்கை சார்ந்த பிரச்சனை, ஊருநீக்கம் என்பது எல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உடன்பாடில்லை இஸ்லாமிய கொள்கையை பிடிக்கவில்லை என்றால் அவரை யாரும் கட்டாயபடுத்த முடியாது. அனால் இஸ்லாத்தில் இருந்துகொண்டே அதற்குமாற்றமாக செயல்பட்டால் அதை கண்டிப்பாக தவ்ஹீத் ஜமாஅத் சுட்டிகாட்டும், அப்படி செய்வது மதவாதம் என்றால் நீங்கள் செய்வது இயக்கவதம்தானே.

    • @irshad
      அதென்ன​ //இஸ்லாத்தில் இருந்துகொண்டே அதற்குமாற்றமாக செயல்பட்டால்// என்பது. புரியவில்லை. ஒருவன் முஸ்லிம் ஆக​ இருந்தால் முற்போக்கு எண்ணங்களுடன் இருக்கக்கூடாதா? இது ஒரு violence of exclusion. நீங்கள் செய்வது அப்பட்டமான மனித​ உரிமை மீறல். ஒரு மனிதனுக்கு எந்த​ கடவுள் மீதும் நம்பிக்கை வைப்பதற்கும் அவன் சார்ந்துள்ள​ மதத்தை கேள்வி கேட்பதற்கும் உரிமை உள்ளது.

      • அன்பு சகோதரி சித்ரலேகா,
        “இஸ்லாத்தில் இருந்து கொண்டே அதற்கு மாற்றமாக செயல்பட்டால்” என்று சகோதரர் கூறி இருப்பதை இவ்வாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
        நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள்; அங்கு அவர்கள் வகுத்து வைத்துள்ள விதிமுறைகளை பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள்.. அதற்குரிய உரிமை நிச்சயமாக உண்டு.. ஆனால் அந்த விதிமுறைகள் உங்களுக்கு பிடிக்கவில்லை.. நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அந்த அலுவலகத்தில் வேலை செய்வதை விட்டு நின்று விட வேண்டும்..

        இல்லை நான் இந்த அலுவலகத்தின் ஒரு தொழிலாளியாக தான் நீடிப்பேன், ஆனால் அடுத்த அலுவலகத்தின் விதிமுறைகள் எனக்கு பிடித்திருப்பதால் நான் அவர்களுக்கு வேலை செய்வேன் என்று கூறுவீர்களாயின் அந்த அலுவலகத்தினருக்கு எந்த அளவுக்கு கோபம் வரும்? அதேபோல் தான், அந்த சகோதரருக்கு இஸ்லாத்தில் நம்பிக்கை இல்லை என்றல் நான் இஸ்லாமியன் அல்ல என்று வெளிப்படையாக அறிவித்து விட்டால் யாருக்கும் எந்தவொரு குழப்பமும் வரப்போவதில்லை.. கோபமும் ஏற்பட அவசியம் இல்லை.. நான் இஸ்லாமியனாக தான் அடையாளப்படுதுவேன் ஆனால் அதற்கு எதிராக செயல்படுவேன் என்பதில் எப்படி உடன்பாடு காண முடியும்??

        • மதங்களை ஒரு அலுவலகம் என்று வைத்துக்கொண்டால் நிர்வாகங்களுக்கெதிரான கொடுமைகளை களைய நிச்சயம் தொழிற்சங்கம் தேவை. அந்த தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தால் கட்டப்படுவதில்லை. அதை தொழிலாளர்கள்தாதன் கட்டுகிறார்கள். அதான் கம்யூனிசம்.

    • முகமது இர்ஷாத்,

      ஆர்.எஸ்.எஸ் ஐ ம்ட்டும் விமரிசத்தால் நாங்கள் நல்லவர்கள், இசுலாமிய மதவாதிகளை விமரிசித்தால் நாங்கள் கெட்டவர்களா? நல்லாருக்கு உங்க ஞாயம்

      இசுலாமியர்கள் பிறப்பால்தான் தீர்மானிக்கப்படுகிறார்கள். மாறாக வயது வந்து இசுலாமிய புனித நூல்களை கற்றுத் தேர்ந்து அவர்களுடைய சுயவிருப்பத்திலா இசுலாமியராக இருக்கிறார்கள? இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

      மற்றபடி லாட்டரிச் சீட்டு விற்ற ஹாருணை நீங்கள் இசுலாத்திலிருந்து நீக்கியதையோ, விசாரணை செய்த்தையோ கேள்விப்பட்டத்தில்லை. விவரத்தை அறியத் தரவும். கட்டுரையில் குறிப்பிட்டது போல ஜெயல்லிதா, கருணாநிதி கட்சிகளில் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் ம.க.இ.கவில் இருந்தால் மட்டும்தான் பிரச்சினை என்பதற்கு என்ன காரணம்?

      இசுலாத்தில் இருந்து கொண்டே இசுலாமிற்கு விரோதமாக இருப்பவர்களை தவ்கீத் ஜமாஅத் சுட்டிக்காட்டும் என்றால் நீங்கள்தான் உலக இசுலாமியர்களுக்கு அத்தாரிட்டி என்றாகிறது. உண்மையானல் முதலில் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அரபு ஷேக்குகள்தான். அலாவுதீன் அல்ல.

      • சகோதரர் வினவு,
        முதலில் இஸ்லாம் என்றால் அரபுலக ஷேய்க்குகள் என்ற மாயையிலிருந்து விடுபடுங்கள். நான் அரபி கிடையாது.. நான் இஸ்லாமியனாக இருக்க கூடாதா? சக இஸ்லாமியன் தவறான பாதையில் செல்கிரானேன்றால் நான் அவனை நேர்வழிப்படுத்த கூடாதா?

        நீங்கள் கூட லெனினின் வம்சத்தில், கார்ல் மார்க்சின் வம்சத்தில் பரம்பரையில் பிறக்கவில்லை.. நீங்கள் கம்யூனிசம் பேசுவது தவறென்று சொல்லலாமோ? ஏதேனும் ஒரு கம்யூனிஸ்ட் உங்கள் கொள்கைக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிராறேன்றால் அதனை ரஷ்யர்கள் தான் வந்து தடுக்க வேண்டும், கண்டிக்கவேண்டும் என்று கூற முனைவீர்களோ?

        • நான் கேட்க விரும்புவது. இந்த அரபு ஷேக்குகளை இசுலாத்தில் இருந்து யாரும் ஏன் நீக்க மாட்டேன் என்கிறார்கள்? அலாவூதீன் போன்ற ஏழைகள் மீது இருக்கும் சீற்றம் இந்த சுரண்டல் பேர்வழிகளிடம் ஏன் இல்லை?

        • சகோதரர் கேள்விக்குறி,
          சவுதி இளவரசர் அல்ல எவர் செய்தலும் குற்றம் குற்றம் தான்.. இறைவனுடைய கட்டளையும் அதுவேதான்.. எவர் அணு அளவு குற்றம் செய்திருந்தாலும் அதற்குரிய தண்டனையை சுவைக்காமல் செல்ல மாட்டார் என்று இறைவன் கூறுகின்றான்.. உங்களுக்கு இந்த உலகத்திலே எல்லாம் கிடைத்து விட வேண்டும் இல்லை என்றால் அது தர்மம் அல்ல என்று நம்புகிறீர்கள். எவர் இங்கு தப்பினாலும் இறைவன் முன்னர் மறுமை நாளிலே நிற்கும் போது எந்த விதத்திலும் தப்பிக்க இயலாது என்பதில் ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டுள்ளவர் நாங்கள். சட்டத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி தப்பினாலும் அங்கு தப்ப முடியாது எண்டு நம்புகிறோம்… சவுதி இளவரசர் என்பதால் அவர் தவறு செய்தாலும் அதனை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆண்டியும் அரசனும் ஒன்றுதான்.. நீதி வழங்கப்படுவதில், வழங்க வேண்டியதில் செல்வதாலோ, இனத்தாலோ, நிறத்தாலோ ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரும் இல்லை உயர்ந்தவரும் இல்லை.. இங்கு தப்பினாலும் அங்கு தண்டனை நிச்சயம்.

    • எனக்குத் தெரிந்தவரை கம்யூனிஸ்ட்டுகள் அந்தந்த மதத்தவரை அவரவர் மதத்தின் வழி வாழ்வதை மறித்துத் தடுப்பதில்லை. மாறாக அந்த மதங்களின் பிற்போக்கான, மற்றவர்களை பாதிக்கக் கூடிய மூடப் பழக்கங்களை கைக்கொள்ள வேண்டாம் என்று மட்டுமே குரலெழுப்புவார்கள். ஒரு மதத்தைச் சார்ந்தவர் மனத்தளவில் முற்றிலும் கம்யூனிஸ்ட்டாக மாறும் போது மதம் என்பது ஏன், எதற்காகத் தோன்றியது. அதன் சமூகப் பயன்பாடு என்ன என்று புரியும் போது அவர் மதத்தின் தீவிரத் தன்மையிலிருந்து தானாகவே விடுபடுகிறார். மற்றபடி கம்யூனிஸ்ட் கட்சியின் இந்துக்கள் பெரும்பாலோனோர் தாலி கட்டித்தான் கலியாணம் செய்கிறார்கள். அதற்கு கம்யூனிஸ்ட் தலைவர்களே வந்து தாலி எடுத்துக் கொடுக்கிறார்கள். இஸ்லாமியர் கம்யூனிஸ்ட்டாக இருந்தால் அவர் திருமணத்தில் வந்து ஒப்பந்தப் புத்தகத்தில் சாட்சியாக கையெழுத்திடுகிறார்கள். இதுதான் நடைமுறையாக இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் எல்லா மதங்களையும் மதிக்கிறார்கள். மதத்திலிருப்பவர்கள் தான் கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகளாகவே பார்க்கிறார்கள்.

      எனக்குத் தெரிந்த கம்யூனிஸ்ட் நண்பர் தன் குடும்பத்தினரை திருப்பதி அழைத்துச் சென்று தன் பையனுக்கு மொட்டை போட்டுக் கொண்டு வந்தார். அவருக்கு கடவுள் மேல் நம்பிக்கையில்லை. ஆனால் குடும்பத்தினரின் மேல் தன் கொள்கையைத் திணிக்கவும் இல்லை. அதற்காக அவரும் போய் ஏழுமலையானை தரிசிக்கவில்லை. குடும்பத்தினரின் மத விருப்பத்தையும் மதித்தார், அது மற்றவர்க்கு தீங்கிழைக்காத வழக்கம் என்பதால்.

    • நந்தினிக்கு பட்டுபுடவை எடுத்துக்கொடுத்து கோவில்பட்டிக்கு கூட்டிக்கொண்டுபோய்…… மன்மத பிரச்சாரகர் பாக்கரை ஒளித்துவைத்து காப்பாற்றியது தானே தவ்ஹீதும் அதன் தலைவர்களும் நிறுவனர்களும். அப்படியிருக்க வீண் ஜம்பம் எதற்கு இர்ஷாத்?

      • நந்து அப்படி மன்மத ராசா பாக்கர் போனதால தான் எவிடன்ஸ் கிடைச்ச பிறகு அவரை தவ்ஹித் ஜமாத்ல இருந்து நீகுனாங்க செல்லம். இது தெரியாதா? நீ ரொம்ப வெகுளியா இருக்கேமா நந்து.

        • நந்தினி விவகாரத்தில மூடிமறைச்சி காப்பாற்ற பிஜே முயற்சித்தாலும் மனமதன் …… சும்மா இருக்கமுடியுமா? கோவை சக்கிலாவோ… ஆமினாவோ விவகாரம் வர இதற்குமேலும் பொறுக்கமுடியாத ஹாமீம் போன்ற சில நல்ல உள்ளங்கள் மன்மதன் மீது நடவடிக்கை எடுக்காட்டா அம்பலப்படுத்துவோம் என்று மிரட்டினாலும் அஞ்சாத சிங்கம் பிஜே தலைப்பாகைக்கு வந்த ஆபத்து தலைக்கே வரும்போல என்று பிரச்சனை முற்றியதால்தான் பொதுக்குழுவை கூட்டி பாக்கரை வேறு வழியில்லைன்னு நீக்கினார்கள்.
          நீர் உண்மை அல்ல ”பொய்யே நீதான்”

        • இஸ்லாம் தான் முக்கியம், அரசியல் எனக்கு தேவையில்லை என் பிரகடனம் செய்துவிட்டு பாக்கரும் வெளியேறிய நேரம் பிரபலமானது. உள் மனதை அல்லாஹ்வை தவிர எவரும் அறிய மாட்டார்கள் என்பதை “பெண்பித்தன் பாக்கர்” நிரூபித்ததால் வெளியேற்றினார்கள். இஸ்லாம்தான் முக்கியம் என்ற நிலையில் பேராசையாரை, “கிக்” செய்து விட்டு வந்த பாக்கர், தனி கட்சி தொடங்கி மீண்டும் பேராசையாருடன், சேர்ந்து அரசியல் ரகளை நடக்கிறது. இவர்தான் இஸ்லாத்தை காக்க வந்த செம்மல்.

  6. எல்லா மத அமைப்புகளுமே மனிதனை பின்தள்ளி மதத்தினைத்தான் முன் வைக்கின்றன. இதில் ஆர்.எஸ்.எஸ், ஜமாத், சில கிருஸ்தவ அமைப்புகள் என யாரும் வித்தியாசமானவர்கள் இல்லை.

    இவர்கள் எப்போது மனிதன், மதத்தினை விட முக்கியமானவன் என புரிந்து கொள்கிறார்களோ அப்போதுதான் மதம் தொடர்பான பிரச்சினைகள் தீரும்..

    • /////எல்லா மத அமைப்புகளுமே மனிதனை பின்தள்ளி மதத்தினைத்தான் முன் வைக்கின்றன/// ஆம் சரியாக சொன்னீர்கள் ம.க.இ.க என்ற மர்க்ஸிய மத அமைப்பும் அப்படியே செயல்படுகிறது முசுலிம் காபிர் என்று முசுலிம்கள் பிரித்து பேசுவது போல் நம்ம சொங்கொடியும் எப்படி பிரித்து பேசுகிறார் பருங்கள், ///வணக்கம் தோழர்களே, நண்பர்களே,
      இந்த நூலகம் பகுதியில்
      நல்ல நூல்களை, செங்கொடி தளத்தில் பதிவிடும் நூல்களை, இயக்க வெளியீடுகளை, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை, ஆசான்களின் ஆக்கங்களை
      மின்னூல் (pdf) பதிப்பாக வெளியிட எண்ணியுள்ளேன்.
      தோழர்களுக்கு விரிவாக எடுத்துச்செல்ல வாய்ப்பாகவும், நண்பர்களுக்கு சிறந்ததொரு அறிமுகமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.//// இதில் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் என்ன வித்தியாசம் தோழமையில் கூட பிரிவா?

  7. அன்பின் வினவு சகோதரர்களுக்கு,

    ஷாபானு விவகாரத்தை போகிற போக்கில் தொட்டுச் செல்கிறீர்கள். இருவருக்கிடையில் கணவன் மனைவி உறவு (உரிமை) என்பது இல்லை என்று ஆகிவிட்டதென்றால் பெண்ணுக்கோ இல்லை ஆணுக்கோ எந்த அடிப்படையில் ஒருவருக்கொருவர் உதவி (ஜீவனாம்சமும் ஒருவகை உதவி தான்) செய்ய முடியும். கணவன் இல்லை என்றாகி விட்ட பின்பு அந்த மனிதரிடம் உதவி வேண்டுவது எந்த வகையில் நியாயம்? கணவன் என்ற உறவே இல்லை என்ற நிலையில் அவரிடம் உதவியை எதிர்பார்ப்பது ஏன்? திருமண பந்தம் முறிந்த பின்னர் கணவனாக இருந்தவரும் ஒரு அன்னியர் தான் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இல்லை முன்னாள் கணவர் என்ற உரிமை இருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா? இதை தான் உங்கள் கம்யூனிசம் சொல்லிக் கொடுக்கிறதா? எந்த உறவும் இல்லாத நிலையில் நானோ நீங்களோ ஒரு பெண்ணுக்கு சென்று மாதா மாதம் நான் உனக்கு பணம் தருகிறேன் பெற்றுக்கொள் என்று சொன்னால் நமக்கு என்ன மரியாதையை பெற்றுத்தரும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை..

    ஆனால் நீங்கள் கூறுகிற இஸ்லாமிய அடிப்படைவாதம் இதற்க்கு கூறுகிற தீர்வு என்ன என்று அறிந்திருக்கிறீர்கள? இல்லை நீங்கள் கூறுகின்ற புரட்சிகர திருமணங்களிலே அதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறீர்களா? “எந்த ஒரு ஆணும் பெண்ணுக்கு மணக்கொடை கொடுத்து மணமுடிக்க வேண்டும்” என்று இஸ்லாமிய அடிப்படைவாதம் சொல்வது உங்கள் கண்ணில் பட்டிருக்கின்றதா? நீங்கள் திட்டுகின்ற தௌஹீத் ஜமாஅத் இதனை ஆதரிக்கின்றதா? அதனை செயல்படுத்துவதில் முதன்மைப் படுத்துகிறதா? இல்லை நீங்களா?

    (இதனை எத்தனை இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்கள் என்று பதில் கேள்வி கேட்க வேண்டாம்.. பின்பற்றாதவர்களைப் பற்றி திட்டுவதென்றால் உங்களோடு சேர்ந்து நானும் திட்டுகிறேன் மிக மோசமாக…)

    • அய்யா ரபீக்கு,
      “…..பின்பற்றாதவர்களைப் பற்றி திட்டுவதென்றால் உங்களோடு சேர்ந்து நானும் திட்டுகிறேன் மிக மோசமாக…)” .

      ஏன் உங்களுக்குத் தெரியாதா யார் பின்பற்றாதவர்கள் என்று? இதுவரை எத்தனை பேரைத்திட்டியிருக்கிறீர்கள்? கொஞ்சம் பட்டியலிடுங்களேன்.

      ஊரான்.

      • சகோதரர் ஊரான்,
        திட்டுவது தான் உங்களின் நோக்கம் என்றால், தாரளமாக திட்டுவோம் வாருங்கள்.
        ஆனால் உங்களைப் போன்ற கம்யூனிஸ்ட்கள் வரதட்சணை இல்லாமல் செய்துள்ள திருமணங்களை விட நீங்கள் விமர்சிக்கின்ற தௌஹீத் ஜமாஅத் இஸ்லாமிய இளைஞர்களிடையே இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி செய்துள்ள வரதட்சணை இல்லா திருமணங்கள் எத்தனையோ மடங்கு. முதலில் அவர்களை பாராட்டி விட்டு பின்னர் செய்யாதவர்களை திட்டுவோமே தாரளமாக..

    • {{கணவன் இல்லை என்றாகி விட்ட பின்பு அந்த மனிதரிடம் உதவி வேண்டுவது எந்த வகையில் நியாயம்? கணவன் என்ற உறவே இல்லை என்ற நிலையில் அவரிடம் உதவியை எதிர்பார்ப்பது ஏன்?}}

      ஏங்க இதெல்லாம் சப்ப மேட்டர், இதக் கூடவா வெளக்கி சொல்லணும்?

      உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் alimony (‘ஜீவனாம்சம்’) சார்ந்த சட்ட விதிமுறைகளின் அடிப்படை இதுதான்:

      ஒரு பெண்ணோ ஆணோ திருமண உறவில் நுழையும்பொழுது, வெவ்வேறு கடமைகளை ஏற்கிறார்கள். உதாரணம்: பிள்ளை பெற்று குடும்பம் வளர்க்க வேண்டும் என்று அந்த ஆண் நினைத்தால் அதற்க்கு அந்தப் பெண்ணும் இசையும் பட்சத்தில், அவள் குறைந்தது ஒரு ஆண்டு காலத்தை அந்த பிள்ளையை பெறுவதிலும் வளர்பதிலும் செலவிட வேண்டும். ஒரு ஆண்டிற்குப் பிறகும் அந்தக் குழந்தையை தாயே உடன் இருந்து வளர்க்க வேண்டும் என்று அந்த ஆண் நிர்பந்தித்தால் அந்தப்பெண் மேற்கொண்டு தன் நேரத்தை செலவிட வேண்டும்.

      ஆக, (உதாரணம்) பத்தாண்டு காலம் தான் வேலையோ தொழிலோ (படிப்பிலோ) ஈட்யிருக்கக் கூடிய பொருளையும்/வளர்ச்சியையும் நேரத்தையும் அவள் குடும்பத்தை வளர்ப்பதில் செலவிட்டாயிற்று. கணவன் தன் மனைவியின் உணவு இருப்பிடத்திற்கு செலவு செய்தது போக மிச்சத்தை ஈடுகட்டத்தான் வேண்டும்.

      பிள்ளையே இல்லாத “குடும்பஸ்திரி” கூட தன் கணவனை ‘திருப்தி’ செய்யும் பொருட்டு வீட்டில் அடைந்து கிடந்தால் இன்னும் நட்டம். கணவனிற்கு சமைப்பது, பணிவிடை செய்வது என்று தன் எல்லா நேரமும் உழைப்பும் ஒரு ஆணிற்கே செலவிடப்படுகிறது. இதற்கான நட்டத்தை யார் ஈடு செய்வது?

      உதாரணம் (மேலும்): பொறியியல் படித்த, ‘நல்ல’ வேலையில் இருந்த பெண் ஒருத்தி கணவனிர்க்காக இரண்டாண்டுகள் ‘வீட்டில் இருந்து’ பின் விவாகரத்துப் பெற்றால், அவள் ஈட்யிருக்கூடிய பத்து லட்சம் ருபாய், எட்டியிருக்கக் கூடிய பனி உயர்வு என்று அனைத்திற்கும் கணவன் பதில் சொல்லி ஆக வேண்டும்.

      நீங்கள் “இதெல்லாம் தெரிந்து தானே பெண் இல்லறத்தில் நுழைந்தால்?” என்று விதண்டாவாதம் பேச முடியாது. இது ஒரு ஆணாதிக்க சமுதாயம், இதில் பெண்ணின் குரல் என்றுமே ஒடுக்கபட்டதுதான் என்பதை நினைவில் வைத்தே சட்டங்கள் இயற்றப்/மாற்றியமைக்கப் பட்டுள்ளன.

      காம்யுநிசமும், முதலீட்டியமும் (சமீப காலங்களில்) ஒன்றாக இணையம் சில புள்ளிகளுள் இதுவும் ஒன்று.

      மேலும் படிக்க: http://en.wikipedia.org/wiki/Alimony

      • சகோதரர் சுரேஷ்,
        மணக்கொடை என்ற ஒன்றை பற்றி குறிப்பிட்டிருந்தேன்.. அதனைக் கவனிக்கவில்லையா? தனக்கு இவ்வளவு மணக்கொடை வேண்டும் என்று கேட்டு பெற பெண்ணிற்கு உரிமையை இஸ்லாம் அளிப்பதை நினைவில் கொள்ளவில்லையா?
        மேலும் ஒரு பெண் விவாகரத்து வாங்கும் போது கர்ப்பமான நிலையில் இருந்தால், அக்குழந்தை பெறப்பட்டு அந்த குழந்தைக்கான செலவினங்களை ஏற்றுக்கொள்வது ஆணின் கடமை சகோதரரே…

        • மஹர் எதற்கு என்று ரபீக் சொல்லமுடியமா? பதில் சொன்னால் ஜீனாம்சம் பற்றி அவருக்கு விள்க்கலாம்.

        • மன்னிக்கவும், முஸ்லிம் மதத்திலோ, இந்து மதத்திலோ (வேறு எந்த மதத்திலோ) உள்ள “நியாயங்களைப்” பேச எனக்கு துளியும் விருப்பம் இல்லை. நீங்கள் கம்யுனிசத்தை முன்வைத்து illogical கேள்வி ஒன்றை எழுப்பியதால் பதில் சொன்னேன்.

          விவாகரத்து என்பது இரண்டு ஆண்டுகளிலும் நடக்கிறது, இருவது ஆண்டுகளிலும் நடக்கிறது. இருவது ஆண்டுகள் ஒரு பெண்ணின் வளர்ச்சியை மட்டுபடுதிய பின் ‘தலாக்’ செய்யும் கதைகள் நிறைய உள்ளன. தோராயமாக இருவது ஆண்டுகளுக்கான ‘முன்-நட்ட ஈடு’ தொகையாக திருமணத்திற்கு முன் 1 கோடி கேட்டால் கொடுப்பார்களா? இந்த ‘விலையை’ எப்படி ‘நடு நிலைமையோடு’ தீர்மானிப்பது? அதற்கென்று தனி consulting market analyst’கள் இருப்பார்கள் போலும். பெண்களை அடக்கி ஒடுக்கும் இஸ்லாம் போன்ற மதங்கள் இந்த விஷயத்தில் மட்டும் இவ்வளவு ‘இடம்’ கொடுக்கிறார்கள் என்றால் இது உலக அதிசயம் இல்லையா? இதை யாரும் பின் பற்றுவதில்லை என்று சொன்னால் பாதிக்கப் பட்ட பெண்ணிற்கு தீர்வு என்ன?

  8. சிந்திக்க வேண்டிய கேள்விகள்.நல்ல விளக்க கட்டுரை.ஆனால் நண்பர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் ஆரோக்கியமான விவாதத்தில் மட்டும் தீவிரமாக ஈடுபடுங்களேன்…

    //இந்தப் பிரச்சினையும், இன்று இந்த விவாதம் நடைபெறும் சூழலும் எங்களுக்கு 1980களை நினைவு படுத்துகிறது. அன்று குற்றவியல் நடைமுறைச்சட்டப்படி ஜீவனாம்சம் கோரிய ஷாபானு என்ற அப்பாவி வயோதிக முஸ்லிம் பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சி செய்தார்கள் இசுலாமிய அடிப்படைவாதிகள். உடனே பல்டியடித்த ராஜீவ் காந்தி ஷரியத் கோர்ட்டை கொண்டு வந்தார். அதனை சரிக்கட்டும் விதத்தில் இந்து அடிப்படைவாதிகளை தாஜா செய்வதற்காக 1986 இல் பாபர் மசூதியில் வைக்கப்பட்ட ராமன் சிலையை வழிபாட்டுக்குத் திறந்து விட்டார். விளைவு – நாடு முழுவதும் நாம் கண்டு வரும் இந்து வெறியின் கோரதாண்டவம்.//

  9. //சாதிப்பஞ்சாயத்துகள், மதப்பஞ்சாயத்துகள் பலவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம்//

    காரத் பஞ்சாயத்து? அதனால் பலியான தோழர் வரதராஜன் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

    //ஆர்.எஸ்.எஸ் என்பது பெரும்பான்மை மதம் சார்ந்த மதவெறி அமைப்பு.ஒருவேளை தவ்ஹீத் ஜமாத் இங்கே ஆட்சியில் இருந்தால், அலாவுதீனை கல்லால் அடித்துக் கொல்வதா, தூக்கில் தொங்கவிடுவதா என்பது குறித்துதான் ஆன்லைன் பிஜே யில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்.//

    உங்கள் தளத்தில் எதிர்வினையாளர்களை, ஒரு கூட்டமாக வந்து, ரவுண்டு கட்டி, அடிப்பது, என்ன வெறி கண்டு?

    • ரம்மி இக்கட சூடு உ.ரா.வரதராஜன் மரணமும் சி.பி.எம்மின் அரசியல் ஒழுக்கக் கேடும்!!
      https://www.vinavu.com/2010/03/05/wrv/

      போகட்டும் ரம்மி……..கருத்து விவாதத்தையெல்லாம் ஊர்விலக்கோடு ஒப்பிடுவது சரியா

      • பஞ்சாயத்துகள், எந்த ஒரு மார்க்கத்திலும், இயக்கத்திலும், விதி விலக்கல்ல, என்பதே என் கருத்து!

  10. அலாவுதீனுக்கும் சப்னா ஆஷ்மிக்கும் நடந்த திருமணம் சீர்திருத்தத் திருமணம்னு எப்படி சொல்லூரீங்க?

    சமவுரிமைதான் உங்கலோட அலவுகோள்னா, அலாவுதீன் சப்னா ஆஷ்மிக்கு சமவுரிமை கொடுதுட்டாருனு எப்படி சொல்லுரீங்க.இல்லை செங்கொடி பரக்கவிட்டுட்டாலெ சம உரிமை கொடுத்தாச்சினு வசிக்கலமா?.

  11. நானும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்தவந்தான் இன்றைக்கு எனக்கு இஸ்லாமிய மக்களை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்துப் பாசிஸ்டுகளால் முடக்கப்பட்டுள்ள இனமாக, ஒடுக்கப்பட்ட இனமாக இஸ்லாமிய மக்கள் இருந்த போதும் அந்த மக்களை இந்துப் பாசிசத்திற்கு எதிராக அணி திரட்டுவதற்குப் பதிலாக இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கே இஸ்லாமிய அமைப்புகள் மக்களை அணி திரட்டுகின்றன. இன்றைய இஸ்லாமிய இளைஞர்களிடம் சிறிதளவு முற்போக்கு அம்சங்களைக் கூட காண முடியவில்லை. தவிறவும் எல்லா சமூக, பொருளாதார, அடையாளப் பிரச்சனைகளையும் குரான் வழியாகவும், மசூதி வழியாகவும், ஜமாத் வழியாகவும் தீர்த்துக் கொள்ள நினைக்கிறார்கள். ஜன்நாயகம், சோஷலிசம் என்று பேசுகிற அல்லது அதோடு தங்களை இணைத்துக் கொள்கிற எவர் ஒருவருமே இஸ்லாமிய மக்களோடுதான் தோளோடு தோள் நிற்பார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது மக்கள் கலை இலக்கியக் கழகம் இந்துப் பாசிஸ்டுகளுக்கு எதிராக பரந்த அளவில் பிரச்சாரத்தை முன்னெடுத்து. பார்ப்பன ஜெயலலிதா ஆடு மாடு வெட்ட தடை கொண்டு வந்த போது ஆட்டை வெட்டி சிறு தெயவ வழிபாட்டுரிமைக்காக போராடிய்வர்கள் தோழர்கள்.

    ஆலய நுழைவுவுப் போராட்டம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் போராட்டம் என சூத்திரர்களின் வழிபாட்டு உரிமைக்காக போராடியவர்களும் அவர்கள்தான். அய்யா அப்படி எல்லாம் போராடினார்களே தவிற அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி நம்பிக்கையில்லாதகம்யுனிசத்தை நம்புகிற அவர்கள்தான் நமது வழிபாட்டு உரிமைக்காக போராடுகிறார்கள். ஆனால் அவர்கள் நமக்காக போராட வேண்டும், சிறை செல்ல வேண்டும். அடி உதை வாங்க வேண்டும். ஆனால் நம் மட்டும் மதப் பழக்கவழங்களை கிஞ்சித்தும் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஏன் இஸ்லாமியர் ஒருவர் கம்யூனிஸ்டாக இருக்க முடியாதா என்ன? எனக்கு அந்த தோழரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இது அரிதினும் அரிதான நிகழ்வு. இந்துப் பாசிஸ்டுகளிடமிருந்து இஸ்லாமிய மக்களை பாதுகாப்பதும் புரட்சிகர கம்யூனிஸ்டுகள்தான் அதே நேரம் மதம் என்னும் போதையிலிருந்து மக்களை மீட்டெடுப்பதும் அவர்கள் பணிதான். நான் அந்த தோழரை வாழ்த்துகிறேன். அன்பான இஸ்லாமிய மக்களே அடிப்படைவாதிகளுக்கு பலியாகாமல் ஜனநாயக சக்திகளோடு கைரோங்கள்.

    • தொம்பன்,
      /*ஏன் இஸ்லாமியர் ஒருவர் கம்யூனிஸ்டாக இருக்க முடியாதா என்ன? */
      ஒருவர் கம்யூனிஸ்ட் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருக்க முடியுமா?.அப்படி இருந்தால் அவன் கம்யூனிஸ்டா?

      • அலி,

        மதங்களைப் பொறுத்தவரை நாம் எதில் பிறக்கிறோமா அதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. எனில் இசுலாமியராக பிறந்து, இசுலாமிய பெயரில் வாழும் ஒருவர் தனது சமூகத்திடம் கம்யூனிசம் குறித்து பிர்ச்சாரம் செய்யலாமா, கூடாதா? தன்னளவுக்கு அவர் மக்களையும் மாறவேண்டுமென்று கோராவிட்டாலும் தனது கொள்கைக்கு தார்மீக ஆதரவையாவது திரட்டுவதற்கு உரிமை உண்டா, இல்லையா? கம்யூனிசத்தை ஏற்பதா, விலக்குவதா என்பதை இசுலாமிய மக்கள் முடிவு செய்யட்டும். அவர்கள் சார்பில் தவ்கீத் ஏன் செய்கிறது?

        • வினவு,

          தாராளமா பரப்பட்டும் ஆனால் அதுக்கு அவன் நான் இந்த கொள்கையில்தான் இருக்குறேன் அப்படினு சொல்லிட்டு பரப்பட்டும் ஏனா
          ஒருவன் இரண்டு வெவ்வேரான கொள்ககைகளில் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவன் கொள்கை பிடிப்பு இல்லாதவனு அர்தம்.

          • அலி,

            அலாவூதின் தனது கொள்கை கம்யூனிசம்தான் என்பதை எங்கே மறைத்தார்? யாரை ஏமாற்றினார்? முந்தைய கட்டுரையில் அவரது விளக்கத்தை படிக்கவில்லையா?

        • ////மதங்களைப் பொறுத்தவரை நாம் எதில் பிறக்கிறோமா அதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.//// இல்லை வினவு இல்லை

        • எப்படி உங்களின் குழந்தைகள் கம்னியூனிஸ்ட்கள் இல்லையே அதுபோல் என்னுடைய குழந்தையும் முசுலிமல்ல

          • ஹைதர் அலி இந்த பிரகடனம் உங்கள் குழந்தைகளுக்கு ம்ட்டும்தானா, இல்லை மற்ற இசுலாமிய மக்களின் குழந்தைகளுக்கும் சேர்த்தா?

        • “… நம் மீது மதம் திணிக்கப்படுகிறது. நான் பிறக்கும் போது எனக்கு எதுவும் தெரியாது. அப்படி இருக்கும் போது பிறப்பின் அடிப்படையில் மதத்தை பிரகடனப்படுத்துகிறார்கள். இது விவாதிக்கப் படவேண்டும்.” – முன்னால் இந்திய பிரதமர் வி பி சிங்.
          அருமையான விவாதம் வினவு.

        • பிறக்கும்போது ஒவ்வொறு குழந்தையும் இசுலாத்தில்தான் பிறக்கிறது, பெற்றோர்களே அவர்களை வழிகெடுக்கின்றனர் என்பதுதான் முகம்மது நபியின் பொன்ன்ன்ன்மொழி.

    • இந்து தீவிரவாதிகளுக்கு, இந்துக்களிடமே, பெரிய ஆதரவு இல்லை!
      இஸ்லாமிய தோழர்களே!
      அடிப்படைவாதிகளையும், பிற்போக்குதனங்களையும், மெல்ல விட்டு வெளியே வாருங்கள்!

      • சகோதரர் rammy,
        அடிப்படையே பிடிப்பு இல்லை என்றால் எதுவுமே சரியாக இருக்காது. அடிப்படியை விட்டு வர சொன்னால் எப்படி? பிற்போக்குத்தனம் என்று கூறியுள்ளீர்கள். எந்த பிற்போக்குத்தனம் என்று கூறலாமே..

        • வாழ்க்கையின் அனைத்து செயல்களுக்கும், மதத்தை/மார்க்கத்தை சார்ந்தே, செயல் பட வேண்டுமென்பது – அடிப்படை வாதம்!

          கால மாற்றங்களை, கருத்தில் கொள்ளாமல், பழமைவாதத்தை கேள்வி கேட்காமல், ஏற்றுக் கொள்வது – பிற்போக்குத்தனம்!

          மன்னிக்கவும்! இதைக் கேட்க! ஜமாது போன்ற அமைப்புகளின் பெரும்பாலான செயல்கள் கட்டைப் பஞ்சாயத்தை நினவு படுத்துவது ஏன்?
          மற்ற சமுதாயங்களில், இது போன்ற அமைப்புகள், இருக்கின்றனவா?
          community policing?

  12. திருமணம் என்பது தனிவுடமை தானே! திருமணத்தைப் பற்றி, பொதுவுடைமை சித்தாந்தம் என்ன சொல்லுகிறது, தோழர்களே!? (அமைதி! கிண்டல் அல்ல! இது என் மன வினவே!)

    • திருமணம் என்னும் சடங்கின் பெயரால் ஆணும் பெண்ணும் கூடி வாழும் உறவு என்பது தனியுடமை அல்ல சொத்துடமையின் துவக்கம். நமது கலாசார வழமைப்படி வரதட்சணை வாங்காமல் சடங்கு சாங்கியம் பார்க்காமல் சொத்துச் சேர்க்காமல் கூடி வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள் நண்பரே.

      • தனிவுடமையும், சொத்துடமையும் ஒன்றா? வேறா?

        //சடங்கு சாங்கியம் பார்க்காமல்…..கூடி வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்//

        இஸ்லாம் அனுமதிக்கிறதா என்பது தான்,இங்கு விவாதமே!

  13. தலை கால் புரியாமல் குத்திக்கும் இயக்க புரட்சியாளர்களே அலாவுதீன் (இஸ்லாத்தை விட்டு வெளியேறிய) ஒரு அணைந்த விளக்கு என்று தெளிவாக தெரிகிறது. இதற்கு ஏன்யா விவாதம். புரட்சி புரட்சி என்று திரியாமல் போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க போங்க

    • அய்யா அப்பாசு,

      “புள்ள குட்டிகள படிக்க வைங்க” என்று உபதேசம் செய்து கொண்டு இங்கே மூக்கை நுழைத்து எதைக்காப்பாத்தப் போரீங்க? அப்ப புள்ள குட்டிய விட்டுட்டீங்களா? இங்கே விவாதிக்கிறவங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்களா?
      ஆத்திரத்தில் உள்ள ஒருவனால் அறிவைப் பயன்படுத்த முடியாது என்பார்களே அது இதுதானோ. ஆத்திரத்தை அடக்குங்கள். அறிவுக்கு வேலை கொடுங்கள். கொஞசம் தெளிவு பிறக்கும். உங்களுக்குத்தான்.

      ஊரான்

  14. பொதுவாக மத அமைப்புகளிடம் இருக்கும் மிக மோசமான வழக்கம் இது. மத சட்டங்களுக்கு கட்டுப்படவில்லை என்றால் அவர்கள் செய்யும் முதல்வேலை ஊரை விட்டு தள்ளி வைப்பது. ஒரு சராசரி மனிதனால் இதை எதிர்கொள்ளவது மிக சிரமம். என்னதான் பொதுத்தளத்தில் விவாதித்தாலும், கேள்விகள் கேட்டாலும் மதங்கள் இன்று ஊன்றி வளர காரணம் “இறுதி சடங்குகள்” அவைகளால் மட்டுமே நடத்தப்படுகின்றன. இந்தவொரு காரணத்திற்காகவே மதங்களோடு உள்ள தொடர்பை துண்டித்துக்கொள்ள முடிவதில்லை.
    இந்தப் பிரச்சனையை பொறுத்தவரை நண்பர் அலாவுதீன் மிக யோசித்து தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும். நியாயம் கேட்கும் விதமாக வினவில் இப்படி ஒரு கட்டுரை வந்திருப்பதால் நண்பர் அலாவுதீன் மதத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை எனத் தெரிகிறது. அப்படி என்றால் நீங்கள் ஜமாத் விசாரணை(!) -க்கு சென்று அவர்களோடு சமரசம் செய்வது நல்லது.

    • இசக்கிமுத்து, ஜமாத் அமைப்பு என்பது வெறுமனே மதம் சார்ந்த அமைப்பு மட்டுமல்ல, உள்ளூரின் மக்கள் பஞ்சாயத்தாகவும் இருக்கிறது. எனவே அந்த ஊரின் குடிமகன் என்ற முறையில் அதில் இடம்பெறுவதும், அவரது தனிப்பட்ட கொள்கைகளும் பிரச்சினை அல்ல. அப்படி பிரச்சினை ஆக்குகிறவர்கள் தவ்கீத் போன்றவர்கள்தான்.

      • சகோதரர் வினவு,
        நீங்கள் தௌஹீத் அமைப்புகளின் வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். ஊரால் ஒதுக்கி வைக்கப்பட்டு, அடி உதைகளுக்கு ஆளான வரலாறு தௌஹீத் அமைப்பில் உள்ளவர்களுக்கு தான் உண்டே தவிர ஊர் ஒதுக்கம் செய்வது என்ற நடைமுறையில் கொஞ்சமும் தௌஹீத்வாதிகளுக்கு நம்பிக்கை கிடையாது. உங்களின் வாதங்களுக்கு பதிலளிக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கியதனால் அவர்களின் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்குமானால் மாற்றிக் கொள்ளுங்கள். இஸ்லாத்தை விமரிசிப்பதால் உங்களுக்கு அநீதம் இழைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.. நீங்கள் நல்லவற்றை செய்தால் மனமுவந்து பாராட்டுவோம். ஏனெனில் வல்ல இறைவன் கூறுவது,

        “*** ஓ நம்பிக்கையாளர்களே!… ”எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள், இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமாகும்”. (அல்குர்ஆன் 5:8) ***”

        • ர ஃபீக், இப்போது தவ்கீத் அமைப்புக்கு இங்கே அரசியல் அதிகாரமில்லை. இருந்தால் நீங்கள் அலாவூதினை இசுலாமிய சட்டப்படி என்ன தண்டனை கொடுத்திரூப்பீர்கள் என்று சொல்ல இயலுமா? அலாவூதீன் திருமணத்துக்கு சென்றது கூட குற்றம் என்றமுறையில் தனது உறுப்பினர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் தவ்கீத்தை எப்படி ஆதரிக்கிறீர்கள்? அலாவூதீன் அப்படி என்ன கொலை குற்றத்தை செய்துவிட்டடார்?

        • சகோதரர் வினவு,
          எனக்கு இதனைப்பற்றிய விபரம் அதிகமாக தெரியவில்லை.. சகோதரர் ஹைதர் அலி இதனைப் பற்றி விளக்குவார் என்று எதிர்பார்க்கிறேன்..

        • பிறகெதற்கு தவ்ஹீதுவதிகள் அலாவுதின் சார்த்துள்ள ஊரின் ஜமாத்தை உசுப்பேத்திவிடனும்? அல்லது நாங்கள் உசுப்பேத்திவிடவில்லைன்னு அல்லாமீது சத்தியமா சத்தியம் செய்றோம்னு உங்களை ஏமாத்துகிறார்களா ரபீக்?

    • அலாவுதீனை இஸ்லாத்தை பின்பற்றததல் ஊர் விலக்கல் செய்தால் அந்த ஜமாத்தில் அங்கம் வகிப்பவர்கள் இஸ்லாமியர்களா ? என்ற கேள்வி எழும் ! ஏன் என்றால் மது சூதாட்டம் வட்டிவாங்குதல் செயலை செய்து .வருகின்றனர்

  15. கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் என மணமார்ந்த நன்றி

    • இந்த பின்னூட்டத்தை இப்படிக்கு நிஜாம் இடவில்லை என்று சொல்கிறார். இதை யார் இட்டார்கள் என்று தெரியவில்லை. இது போன்ற வேலைகளை கைவிடுமாறு சம்பந்தப்பட்ட ஆசாமியிடம் கேட்டுக் கொள்கிறோம்.

  16. நல்ல பதிவு…. மத அடிப்படைவாதிகள், எம்மதத்திலே பிளிறினாலும், ஒத்த குரலினராகவே பிளிறுகின்றனர். ஆனால், ஒரு தனிப்பட்டவரின் சொந்தவாழ்க்கை இத்துணை வாட்சுழற்றல்களுக்கு உள்ளாகியிருக்கவேண்டுமா என்பது ஒரு விசனத்துடனான கேள்வி.

    • பெயரிலி,

      அலாவூதினின் இந்த திருமணம் கூட பெரும் போராட்டத்துக்கிடையில்தான் நடந்த்து. இப்போது அவரை விசாரிக்க போகிறார்கள். இனிவரும் நாட்களும் இந்த போராட்டப்பாதை தொடரும்தான். இதை அவரும் அவரது குடும்பத்தினரும் மன உறுதியுடன்தான் எதிர்கொள்கிறார்கள். பொது நலனுக்காக அவரது கதை இங்கே விவாதமாகியிருக்கிறது. அது நல்ல விடயம்தானே?

  17. பீஜே வின் பேச்சுக்கள் என்னவோ சீர்திருத்தவாதியைப்போல இருந்தது முன்னர் எனக்கு, 2005௨006 -ல் அவரே எனக்கு அதைப்போக்கினார் “யார் சீட்டு அதிகம் தந்தாலும் அவர்கள் செய்த தவறை மன்னிப்போம்” என்றார்.

    எந்த தவறுகள்?

    1. செயாவின் பார்ப்பன பாசிசம்.
    2.பாஜகவுடன் செயாவும் கருணாவும் கூட்டு போட்டது.
    3.கோவை குண்டு வெடிப்பிறுப் பின் அப்பாவி பல முசுலீம்களை சிறையில் தள்ளி அவர்கள் இரு அரசுஏ கொடுமைப்படுத்தியது.

    இரு அரசுகளுமே பார்ப்பன பாசிசத்துக்கு வால் பிடித்தவையே. இதை மன்னிக்க / மறக்க நீ தயாராக இரு, அது உன் மானங்கெட்டத்தனம். அதை முசுலீம் மக்களின் பெயரால் செய்ய உனக்கு யார் அதிகாரம் தந்தது?

    அன்றாடம் முசுலீம் மக்கள் எந்த ஒரு பிரச்சினைக்கும் வாய் திறக்காத டி என் டி ஜே தேர்தல் என்றால் மட்டும் வாயை பிளக்கும். தோழர்கள் தான் தெருவில் , பேருந்து நிலையங்களில், ரயில்களில் பார்ப்பன பாசிசத்துக்கு எதிராய் முழங்குகிறார்கள். எப்போவாவது பீஜே தெருவில் மக்களிடம் பார்ப்பன பாசிசத்தை எதித்து பேசியிருக்கிறாரா? (தெரியாததாலேயே கேட்கிறேன்).

    எதற்கெடுத்க்டாலும் நாடாண்ட சமுதாயமே” என்கிறார்கள், என்னவோ முசுலீம் மன்னர்களின் ஆர்சியில் எல்லா முசுலீம் மக்களின் வாழ்வில் பாலாறு தேனாறு ஓடியது போல. அவர்கள் அன்ற் முதல் இன்று வரை ஒடுக்கப்பட்டுத்தான் கொண்டு இருக்கிறார்கள்

    கலகம்

    • ///எப்போவாவது பீஜே தெருவில் மக்களிடம் பார்ப்பன பாசிசத்தை எதித்து பேசியிருக்கிறாரா? (தெரியாததாலேயே கேட்கிறேன்).//// பார்க்க அறிவை இழப்பதற்கா ஆண்மீகம் என்ற தலைப்பில் பல ஆயிரம் மக்கள் முன்னிலையில் சங்கசாரியாரை கிழி கிழியேன்று கிழித்திருக்கிறார்

      • ஹைதர் அலி,

        எனில் கரசேவைக்கு ஆள் அனுப்பிய ஜெயலலிதாவை பி.ஜே ஏன் ஆதரித்தார்? பார்ப்பனிய எதிர்ப்புக்காகவா?

        • சகோதரர் வினவு, பெரியவர் பீஜே அவர்கள் தி.மு.க வையோ அல்ல அ.தி.மு.க வையோ ஆதரித்த காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியாதது போல் மற்றவர்களிடம் காட்டிக் கொண்டால் அது உங்களின் அறியாமையையே காட்டுகிறது. குறிப்பிட்ட ஒரு கட்சியை சார்ந்த தலைவர் முஸ்லிம்களுக்கு ஒரு துரோகத்தை செய்தால் அதற்காக அவரை (சாதாரண நபராக இருக்கும் பட்சத்தில் பிரச்சினை இல்லை.. ஆளும் கட்சியாக ஒரு அரசாங்கமாக வரும்போது) எதிர்த்துக்கொண்டே இருப்பதை விட அந்த சமயத்தில் சமுதாயத்தின் மற்ற நலன்களை அப்போதைய தேவைகளை மனதில் கொண்டு அவர் செய்த நல்லதற்காக ஆதரிப்பது ஒன்றும் தவறில்லை.. நீங்கள் சொல்வது போல கண்மூடித்தனமாக ஆதரிப்பது தான்கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஆனால் தயாநிதி மாறனை மேடையில் வைத்துக்கொண்டு அவரை, கலைஞரை இட ஒதுக்கீடு தந்ததால் மட்டுமே ஆதரிக்கிறோம்.. அதற்காக நீங்கள் செய்யும் அனைத்தையும் ஆதரிப்போம் என்று நினைக்க வேண்டாம் என்று அறைகூவல் விடுத்தவர் பெரியவர் பீஜே. காசுக்காக, சுய லாபத்துக்காக எதோ ஒரு கட்சியை ஆதரிக்க அவர் ஒருபோதும் சொன்னதில்லை.. இதனை நான் தௌஹீத் ஜமாத்தில் உறுப்பினராக இல்லை என்றாலும் உரக்க சொல்ல முடியும். ஜெயலலிதாவை ஆதரித்தால் அவர் கரசேவைக்கு ஆள் அனுப்பியது மன்னிக்கபடவில்லை.. மறக்கப்படவில்லை. கலைஞரை ஆதரித்தால் கோவையில் இஸ்லாமியர்களுக்கு அவர் அரசாங்கம் செய்த கொடுமைகளை மன்னிக்கவில்லை.

          மேலும் தௌஹீத் ஜமாதோ இன்ன பிற இஸ்லாமிய இயக்கங்களோ அரசியலில் தனித்து வெற்றி காண இயலாதென்பதால் அப்போதைய பிரச்சினைகளை வைத்து, கட்சிகளின் செயல்பாடுகளை வைத்து ஆதரிப்பதில் என்ன தவறு இருக்கிறது?

          மேலும் தனி மனிதர்களுக்காக நாம் மேடையில் அமர்ந்து இருந்தலும் அவருக்காக எழுந்து நின்று மரியாதை செலுத்தும் பழக்கம் என்பதை அறவே ஒழித்த இயக்கம் நீங்கள் விமர்சிக்கும் தௌஹீத் ஜமாஅத்.

        • //அந்த சமயத்தில் சமுதாயத்தின் மற்ற நலன்களை அப்போதைய தேவைகளை மனதில் கொண்டு அவர் செய்த நல்லதற்காக ஆதரிப்பது ஒன்றும் தவறில்லை.. //

          இது தான் ராமதாஸ் பாணி பச்சோந்தி அரசியல். பாருங்களேன், ஒன்னு ரெண்டு வார்த்தைகளை மட்டும் தான் மாற்றியிருக்கிறேன்.. அசப்பில் அப்படியே இல்லை?

          “அந்த சமயத்தில் வன்னிய சொந்தங்களின் ‘மற்ற’ நலன்களை அப்போதைய ‘தேவைகளை’ மனதில் கொண்டு அவர் செய்த
          நல்லதற்காக ஆதரிப்பது ஒன்றும் தவறில்லை…”

          குறிப்பு:- ‘மற்ற’ / ‘தேவை’ என்பதை கருணாநிதியும் ஜெவும் “எம்.பி பதவி” என்று மொழிபெயர்த்து புரிந்து கொள்வார்கள்.

          இதை அப்படியே தர்க்கப்பூர்வமாக நீட்டித்துப் பார்த்தால்…. நீங்கள் ஆர்.எஸ்.எஸ் உடன் கூட கூட்டனி கட்டிக் கொள்ள
          முடியும். மோகன் பாகவத் சும்மாங்காச்சுக்கும் “முசுலீம்கள் இந்த நாட்டு மக்கள். அவர்களுக்கு சம உரிமை கிடைக்க
          நாங்கள் பாடுபடுவோம். எனவே எங்களை ஆதரியுங்கள்” என்று சொன்னால் போதும்.. பீ.ஜே “அப்போதைய தேவைகளையும், மற்ற நலன்களையும்” கணக்கில் கொண்டு உரிய கூட்டனி முடிவை எடுத்து விடுவார்.

        • சகோதரர் கார்கி,
          நீங்கள் கூறும் ராமதாஸ் பாணி அரசியலுக்கும், பெரியவர் பீஜே அரசியல் கட்சிகளை தேர்தலில் ஆதரித்ததற்கும் வித்தியாசம் தெரியாமல் நீங்கள் இருக்க போவதில்லை.. ராமதாஸ் அவருடைய சொந்த நலனுக்காக கூட்டணி மாறுகிறார்.. எந்த ஒரு இடத்தில தனது சொந்த லாபத்திற்காக அரசியல் கட்சிகளை பெரியவர் பீஜே ஆதரித்தார்? சமுதாய நலன் மட்டுமே குறிக்கோள். அவர்களை ஆதரித்த போதும் அவர்களை கண்மூடித்தனமாக அவர்கள் செய்த எதனையும் ஆதரித்தவர் அல்ல.. குறிப்பிட்ட அந்த இரு கட்சிகள் மட்டுமே தமிழகத்தை ஆளாக்கூடிய கட்சிகளாக உள்ளன.. நம்மை ஆட்சி செய்யக்கூடிய ஒரு கட்சியிடம் ஆட்சிக்கு வந்தால் சமுதாயத்திற்கு இன்னின்ன கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி வாங்கிய பின்னரே ஆதரித்தார்… அரசியல் கட்சியினர் கொடுக்கும் வாக்குறுதிகளை மீறலாம்.. கடந்த தேர்தலில் தி.மு.கவை ஆதரித்ததற்கு காரணம் தாங்கள் கொடுத்த வாக்குறுதி என்பதாலேயே.. இட ஒதுக்கீடு அளித்தால் தேர்தலில் ஆதரவு தருகிறோம் என்ற வாக்குறுதி அளித்தனர்.. அவர்கள் தந்த காரணத்தால் ஆதரித்தார்.. ராமதாஸ் போல தனது சொந்த நலனுக்காக தன்னை நம்பியுள்ள கட்சியினரை மக்களை அடகு வைக்கவில்லை.. சமுதாயத்தின் நலனுக்காக மட்டுமே அந்த ஆதரவு இருந்தது. அதை விட்டு அவர்கள் சமூகத்திற்கு துரோகம் இழைத்தனர் என்பதற்காக அவர்கள் ஆட்சியாளர்களாக வரக்கூடிய நபர்கள் என்பதாலேயே ஆதரவு தரப்படுகிறது. அதை விடுத்தது ராமதாசுகோ விசயகாந்துகோ வைகோவிற்கோ காங்கிரசுக்கோ ஆதரவு அளிக்க வேண்டும் என்கிறீர்களா? ஒட்டு போடுவது நம் ஜனநாயக உரிமை என்பதும் அதனை தேவை இல்லாமல் தோற்பவர்களுக்கு போடுவதை விட்டு ஜெயிக்க கூடிய வாய்ப்புள்ளவர்களிடம் வாக்குறுதி பெற்று அவர்களுக்கு ஆதரவு அளிப்பதில் எந்த வித தவறு இருக்கிறது? மேலும் தேர்தலில் ஆதரித்ததற்காக அவர்கள் தவறு செய்யும் போது தட்டிக் கேட்பதிலும் தயங்காதவர் பெரியவர் பீஜே. அதனை தான் மேலேயே குறிப்பிட்டேன்.. மேடையிலேயே தாம் ஆதரிக்கும் ஒருவர் கலர் டிவி, ஒரு ரூபாய் அரிசி என்று அடுக்கி இதற்காக ஒட்டு போடுங்கள் என்று கேட்டபோது, இட ஒதுக்கீடு கொடுத்த காரணம் மட்டுமே உங்களை ஆதரிக்கும் காரணம் மற்ற எதுவும் இல்லை என்று முகத்தில் அடித்தால் போல சொல்வதற்கு தைரியம் வேண்டும்.. சொந்த நலன் இதில் இருந்திருந்தால் அவர்களை நோக்கி அவ்வாறு சொல்ல இயலுமா? என்றைக்காவது ஒரே மேடையில் ராமதாஸ் தான் ஆதரிக்கும் கட்சியினரிடம் முகத்தில் அடித்தால் போல அவர்களிடம் பேசிய ஒரு வரலாறு உண்டு என்று கூறுங்கள்?

          மேலும் எவர் சமுதாயத்திற்கு நல்லது செய்வார்.. சொன்னதை ஒட்டுக்க்காகவாவது பயந்து செய்வார் என்று எவரை நம்புகிறோமோ அவரை ஆதரிப்போம்.. அதை விடுத்தது ஆர்.எஸ்.எஸ். சொல்லும் வி.எச்.பி சொல்லும் ஒட்டு போடுவீர்கள என்று கேட்பது நியாயமா? அவர்களின் கொள்கையே சிறுபான்மையினரை எதிர்ப்பதே.. அதி.மு,க.வும் தி.மு.கவும் அப்படிப்பட்ட கொள்கைளை கொண்டுள்ளதா? எனக்கு தெரிந்து அவர்கள் அப்பட்டமாக அப்படிப்பட்ட கொள்கைகளை கொண்டிருப்பதில்ல்லை.. சமயங்களில் அவர்கள் செய்த பாதகங்களை நாம் ஒருபோதும் மறக்கவில்லை மறுக்கவில்லை.. அவைகளை நியாயப்படுத்தவில்லை..

        • @ரஃபீக்

          ////////குறிப்பிட்ட ஒரு கட்சியை சார்ந்த தலைவர் முஸ்லிம்களுக்கு ஒரு துரோகத்தை செய்தால் அதற்காக அவரை (சாதாரண நபராக இருக்கும் பட்சத்தில் பிரச்சினை இல்லை.. ஆளும் கட்சியாக ஒரு அரசாங்கமாக வரும்போது) எதிர்த்துக்கொண்டே இருப்பதை விட அந்த சமயத்தில் சமுதாயத்தின் மற்ற நலன்களை அப்போதைய தேவைகளை மனதில் கொண்டு அவர் செய்த நல்லதற்காக ஆதரிப்பது ஒன்றும் தவறில்லை../////////////////

          @@@@@@@@@@@@@@@@@

          அதாவது காலை நக்கி விடுவதில் தவறில்லை என்பதை சொல்ல வருகிறீர்களா ?..
          கோவையில் கருணா செய்த துரோகத்தை மறக்கவில்லையாம்.. ஆனால் ஆதரிக்கிறார்களாம்.
          பெரியவர் பீஜே அவர்களை வயதிற்காக வேண்டுமாயின் பெரியவர் என்று கூப்பிடலாம்.
          ஆனால் இந்தப் பண்பைக் கொண்டு பார்க்கையில் என்ன சொல்லிக் கூப்பிடலாம் என்று கூறவும் ?..

          //////////////////////////////////////////

        • @ரஃபீக்

          ஹ்ம்ம்…

          ராமதாஸ் கூட இப்படித்தான் சொல்கிறார். ”நான் எனக்காகவா கூட்டணி மாறுகிறேன்?. எனது வன்னிய மக்களின் நலனுக்காகத் தான் மாறுகிறேன்.”என்று கூறுகிறார்.

          பெரியவாள் பீஜே வும் இப்படித்தான் சொல்கிறார். ”நான் எனக்காகவா கூட்டணி மாறுகிறேன்?. எனது இஸ்லாமிய மக்களின் நலனுக்காகத் தான் மாறுகிறேன்.”என்று கூறுகிறார்.

          இருவருக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை எனக்கு ?.

          சிறுபாண்மையினரை ஒடுக்குவதைக் கொள்கையாக கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். , வி.ஹெச்.பி போன்றவர்களையா ஆதரித்தார்?.. என்று கேட்டுள்ளீர்கள்.

          எந்த ஓட்டுக் கட்சியில்(பி.ஜே.பி உட்பட) சிறுபாண்மையினரை ஒடுக்குவோம் என்று பகிரங்க கொள்கை கொண்டுள்ளனர் ?.. என்று எனக்குக் குறிப்பிட்டுக் கூறவும்.

      • அய்யா ரபீக்கு,

        “ஜெயலலிதாவை ஆதரித்தால் அவர் கரசேவைக்கு ஆள் அனுப்பியது மன்னிக்கபடவில்லை.. மறக்கப்படவில்லை. கலைஞரை ஆதரித்தால் கோவையில் இஸ்லாமியர்களுக்கு அவர் அரசாங்கம் செய்த கொடுமைகளை மன்னிக்கவில்லை”.

        எப்ப விசாரணை? விசாரணைக்குப்பிறகு அலகாபாத் தீர்பு மாதிரி இருக்காது என நம்புவோம்.

        ஊரான்

        • போறபோக்க பார்த்தா பிஜே பெட்டி வாங்க உடமாட்டீக போலிருக்கே. அரே அல்லா! தேர்தல் நெருங்குகிற நேரத்தில இப்படி ஓரு ஷைத்தான கிளப்பிட்டியே!

    • இது கொள்(ளை)கை சார்ந்த விஷயம் தோழரே. இர்ஷாத் எனபவரிடம் அந்த கொள்கைகளைப்பற்றி கேட்டுத் தெரிந்தகொள்ளலாம். இர்ஷாத் கொஞ்சம் சொல்லுங்களேன். நாங்களும் தெரிந்துகொள்கிறோம் அந்த கொள்ளையை மன்னிக்கவும் கொள்கையை.

  18. அன்புள்ள வினவு,
    முஸ்லீம் சமுதாயத்தை இரு கூறாக பிரித்த பிஜே மற்றும் தமுமுக வை ஒதுக்கிதள்ளுங்கள். இவர்கள் ஒன்றும் முஸ்லீம் சமுதாயத்தின் பிரதிநிதிகள் அல்ல. இவர்கள் மீடியாவும் அரசியல் பலமும் வைத்து முஸ்லீம் இளைஞர்களை வழிகேட்டில் விடுகிறார்கள்.

    ஆனால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஷாஹித்தை வைத்து எங்கள் மதத்தை தவறாக எழுதுவதை விடுங்கள். அவரவர் நம்பிக்கையை குலைக்க முற்படாதீர்கள். உங்களால் அதற்கான மாற்று நம்பிக்கையை கம்யூனிசம் மூலம் எக்காலத்திலும் புகுத்தமுடியாது. ஒரு கொள்கை என்பது எக்காலத்துலும் தோல்வி அடையக்கூடாது. ஆனால் உங்கள் கொள்கையின் வேர்கள் பலமிழந்துவிட்டனவே இதற்கு என்ன சொல்கிறீர்கள்.

    எங்களுக்கான கொள்கையில் நாங்கள் உறுதியாய் இருக்கிறோம். அதற்காகவே உயிர் வாழ்கிறோம். 1400 ஆண்டுகளாய் எங்கள் கொள்கையின் வீரியம் அப்படியே இருக்கிறது. நாங்களும் இருக்கிறோம். இதுவே நாங்கள் வெற்றியாளர் என்பதற்கு சாட்சி.

    • இஸ்லாமியராக இருந்தாலும் எப்படியோ ஒருவழியாக மதம், கொள்கைகள் எல்லாம் மனிதன் உருவாக்கியது தான் என்பதையாவது ஏற்றுக்கொள்கிறீர்களே. வாழ்த்துகள்.

      • இஸ்லாம் மதத்தை பற்றி இசக்கிமுத்துக்கு யாராவது டியூசன் எடுத்தால் நன்றாக இருக்கும். மொட்டதலையன் குட்டையில் விழுந்ததுபோல் பேசுகிறார் இசக்கி.

        முஸ்லீம்கள் பின்தொடரும் கொள்கை இறைகொள்கை அது மனிதனால் படைக்கப்பட்டது அல்ல. அதை ஏற்றுநடக்கும் மார்க்கம் இஸ்லாம் என்று மத த்திற்கு பெயர் வைத்ததே அக்கொள்கை எனும்போது. மதமும் கொள்கையும் மனிதனால் படைக்கப்பட்டது என நான் ஒத்துக்கொள்வதாக நீங்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது

        Better luck next time! இசக்கி

        • ‘மறை’பொருளாகிய இஸ்லாம் பற்றி உங்கள் அளவுக்கு தெரியாது. உண்மை தான்.
          //1400 ஆண்டுகளாய் எங்கள் கொள்கையின் வீரியம் அப்படியே இருக்கிறது.//
          அப்படி என்றால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு தான் இஸ்லாம் படைக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். என்னுடைய புரிதல் சரியா? சரி என்றால் நான் மேலே சொன்னதும் சரிதான்.

          மேலும் இந்த இறை, இறைபடைப்பு பற்றிய குப்பைகளை எல்லாம் ஏற்கனவே இங்கு நிறைய பேசியாகிவிட்டது. உங்கள் கோபம் புரிந்துகொள்ள கூடியது தான். நீங்கள் கொள்கை பிடிப்பு உள்ளவராகவே இருங்கள் 🙂

    • ////1400 ஆண்டுகளாய் எங்கள் கொள்கையின் வீரியம் அப்படியே இருக்கிறது. நாங்களும் இருக்கிறோம்./////

      நீங்களும் இருக்கிறீர்கள் .. ஆனால் எப்படி இருக்கிறீர்கள் ?..

      உங்களுக்காக யார் குரல் கொடுக்கிறார்கள் ?..

      எந்த ஓட்டுப் பொறுக்கி நாய் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து குரல் கொடுத்தான் ?..

      எந்த மீடியா தனது எதிர்ப்பை பதிவு செய்தது?..

      உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை பீஜேவும் இருப்பார் , த.மு.மு.க வும் இருக்கும். உங்கள் மதத்திலேயே ஊறிக் கொண்டு கிணற்றுத்தவளை போல் கத்திக் கொண்டே நீங்களும் இருப்பீர்கள். ஆனால் முன்னேற்றமடையப் போவது யார் ?.. உங்கள் தலைவர்களா ?.. இல்லை நீங்கள் அனைவருமா ?.

      இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கம் , என்று கூறும் எனதருமை இஸ்லாமியர்களே ..

      உங்கள் இஸ்லாத்தின் மார்க்கத்தையே அடிப்படையாகக் கொண்டு , சாதாரண மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து எங்காவது ஒரு இடத்தில் ஆர்ப்பாட்டமோ அல்லது போராட்டமோ செய்திருக்கிறீர்களா ?.. (உங்கள் இட ஒதுக்கீடு போராட்டத்தைத் தவிர)

      உங்களது மார்க்கத்தை நீங்களே உயர்த்திப் பிடிப்பதில்லை. உங்கள் மதத்திலிருந்து கோசம் போட ஒருவர் குறைந்து விட்டார் என்றதும் கூடிக் கும்மியடிக்கிறீர்கள் ?..

      இதைத் தான் நபிகள் எழுதி வைத்தாரா ?..
      எத்தனை கொடுமைகள் சாதியின் பெயரால் சுரண்டலின் பெயரால் நடக்கின்றன. அதை எதிர்த்து ஒரு குரல் எழுப்பியிருக்கிறீர்களா ?.

      இதில் இஸ்லாத்தை கம்யூனிசத்தோடு ஒப்பிடுதல் வேறு ?..

      மக்களுக்காக் போராடாத நீங்கள் எல்லாம் இதற்குத் தகுதியானவர்களா ?..

      ஒரு இஸ்லாமியன் தனக்காக் மட்டும் தான் போராடுகிறான். ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் தன்னைச் சுற்றி நடக்கும் அத்தனைக் கொடுமைகளுக்கும் எதிராகப் போராடுகிறான்.அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களுக்காகவும் போராடுகிறான்.

  19. இசுலாமிய அடிப்படைவாதம் – கடுங்கோட்பாட்டுவாதம் என்று சொல்வது சரியென்று நினைக்கிறேன் – தெளிவாக சிந்திக்கத் தெரிந்தவர்களைக் கூட இந்தளவுக்கு சுயமுரண்பாடுகளுடன்
    பேச வைக்கிறது என்பது ஒரு ஆச்சர்யம் தான்.

    இந்தளவுக்கு நியாயவாதம் பேசி அலாவுத்தீனின் குடும்பத்தாரை ‘விசாரித்து தீர்ப்பளிக்கும்’ பொறுப்பை தன்னிச்சையாக கையிலெடுத்துக் கொள்ளும் டி.என்.டி.ஜே, ஷேக்குகள் என்று
    வந்துவிட்டால் மட்டும் பம்முகிறார்கள்.. நெருக்கிப் பிடித்தால், ‘அவர்களெல்லாம் பெயர்தாங்கிகள்’ என்று நழுவுகிறார்கள்.

    ரபீக்கால் ‘பெரியவர், இசுலாமிய அறிஞர்’ என்று விளிக்கப்படும் பீ.ஜேவின் ராமதாஸ் பாணி பச்சோந்தி அரசியல் பற்றி வினவு கேள்வி எழுப்பியதற்கும் பதுங்கலே பதில்.

    உழைப்பவனுக்கு உரிய கூலியை வியர்வை காய்வதற்குள் கொடுக்கச் சொன்ன அல்லாவின் வார்த்தைகளை மீறி இன்றைக்கு பாஸ்போட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு இந்திய,
    வங்கதேச, இலங்கை நாடுகளைச் சேர்ந்த ஏழைகளை சுரண்டும் ஷேக்குகளை எத்தனை முறை விமர்சித்துள்ளார் பீ.ஜே?

    ஆன்லைன்பீஜேவில் அவர் செறுமியது முதற்கொண்டு வீடியோக்களை பதிவேற்றியிருக்கிறீர்களே… அவர் ஷேக்குகளை விமர்சித்ததை எதிர்த்து விடுத்த ‘ஃபத்வா’ வீடியோக்கள் எத்தனை
    பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது???

    செலக்டீவ் அம்னீஷியாவா?

    இந்து பயங்கரவாதிகளை / ஆர்.எஸ்.எஸ்ஐ நாங்கள் விமர்சிக்கும் போது கமுக்கமாக ரசிக்கும் நீங்கள், உங்கள் மேல் ஒரு விமர்சனம் என்றவுடன் ‘கம்யூனிஸ்டுகளும் ஆர்.எஸ்.எஸ் குரலில்
    பேசுகிறார்கள்’ என்று அப்படியே தோசையை திருப்பிப் போடுகிறீர்கள். இது எனக்கு எதை நினைவூட்டுகிறது தெரியுமா..? அவ்வப்போது வினவு தளத்தை எட்டிப் பார்க்கும் கத்துக்குட்டி காக்கி டவுசர்கள் “யேய்… தைரியம் இருந்தா முசுலீம் தீவிரவாதியை திட்டிப்பாரு…” என்று வாயைக் கொடுத்துப் புண்ணாக்கிக் கொண்டு போகும் நிகழ்வுகளை நினைவூட்டுகிறது.

    இசுலாமிய அடிப்படைவாதிகளும் இந்து பாசிஸ்டுகளும் இந்த அம்சத்தில் ஒருவர் அறியாமல் ஒருவருக்கு உதவிக்கொள்கிறீர்கள்.

    மேலும், ‘இந்துக்கள் எல்லாம் ஒன்னு சாதி பார்க்காதே’ என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ் குரலுக்கும் ‘முசுலீம்களுக்குள்ளே உழைப்பவன் உழைக்காதவன் என்று பிரித்துப் பார்க்காதே’ என்கிற
    ரபீக்கின் குரலும் எனக்கு ஒன்று போலவே கேட்கிறது. நிதர்சனமாக இருப்பதை இல்லை என்று மறுக்கிறீர்கள்.. இருவருமே – ஒரே குரலில்..!

    • சகோதரர் கார்கி,
      நிச்சயமாக சொல்லுங்கள் ஆர்.எஸ்.எஸ் இந்துக்களுக்குள் சாதி இல்லை என்று கூறுவதும் முஸ்லிம்களுக்குள் பேதம் இல்லை என்று நான் கூறுவதும் ஒன்றா? நான் முஸ்லிம்களுக்குள் மட்டும் என்று கூறவில்லை, மனிதர்களில் இனத்தால், நிறத்தால், பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என்று தான் நான் கூறுகிறேன்.. எனக்கு இஸ்லாமும் அதனைத் தான் கற்று தருகிறது. மேலும் நம்பிக்கை, கொள்கை வேறு என்பதால் நீங்கள் உழைப்பதினால் உயர்வு அடைந்தாலும் உங்களை அவமதிப்பதாகவோ, ஒரு முஸ்லிம் அவனை உழைக்காவிட்டாலும் கூட அவனை மதிப்பதாகவோ எங்கும் நான் கூறவில்லையே.. சக மனிதனை சகோதரனாக பாவிக்க சொல்கிறது இஸ்லாம்.. எனக்கு கட்டளை இடுகிறது. எனக்கு விரும்புவதை அவனுக்கு விரும்ப சொல்கிறது.

      • //மனிதர்களில் இனத்தால், நிறத்தால், பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என்று தான் நான் கூறுகிறேன்.. எனக்கு இஸ்லாமும் அதனைத் தான் கற்று தருகிறது. //

        ரபீக்,

        இது உங்களது நம்பிக்கை. இஸ்லாம் இதையே கற்றுத் தருகிறது என்று நம்புகிறீர்கள். சரி, இந்தப் பதிவு மையப்படுத்தும் பிரச்சினை என்னவென்றால், இஸ்லாத்தின் பெயரில் பஞ்சாயத்து செய்யக் கிளம்பியுள்ள குண்டாந்தடிகளை எதிர்க்க வேண்டும் என்பதே ஆகும்.

        அவ்வகையில் நீங்கள் நம்பும் இஸ்லாமின் படி எல்லாரும் சமம் என்ற கொள்கைக்கு பொருத்தமாக, அதை நடைமுறையில் கொண்டு வருவதற்காக உங்களால் பெரிதும் மதிக்கப்படும் பிஜே அமைப்பினர் என்ன செய்கிறார்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

        அவ்வாறு நடைமுறையில் எல்லாரும் சமம் என்ற இந்தக் கொள்கையை செய்ய இய்லாத முஸ்லீம்கள் மீது பிஜே அமைப்பினர் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? விசாரணைகள் என்ன? பிஜே தளத்தில் அது போல எதுவும் விவாதம் நடந்த மாதிரி தெரியவில்லை( தமது கொள்கையை மீறுபவர்களை ம க இகவில் நடவடிக்கை எடுக்கின்றனர், விவாதம் செய்து அம்பலப்படுத்துகின்றனர்).

        அவ்வாறு பீஜே அமைப்பினர் எந்த நடைமுறையும் கொண்டவர்கள் இல்லையெனில் எந்த தார்மீக அடிப்படையில் நீங்கள் அவர்களை ஆதரிக்கிறீர்கள். உங்களது நம்பிக்கை என்பது இஸ்லாம் எல்லாரையும் சமம் என்று கருதுகிறது என்றால், பீஜேவினரின் நடைமுறை அவ்வாறில்லை என்று ஆகிவிட்டால் நீங்கள் பீஜேவினரை எதிர்ப்பீர்களா?

        அலாவூதின் மீது விசாரணை நடத்துவதும், அவரது மணவிழாவுக்குப் போன முஸ்லீம் மக்களை விலக்கி வைக்க முயல்வதும் சரியா?

        அசுரன்

    • ஷேக்குகளின் குற்றத்திற்கு குரல் கொடுப்பது இருக்கட்டும். பிஜேவுடைய குர்ஆன் பட தவ்ஹீத் அடையாளத்துடன் எதுவும் உள்ள வர சௌதி தடை செய்திருக்கிறத கண்டித்து ஒரே ஒருவரி எழுதச்சொல்லுங்களேன் பிஜேவை.

  20. “கம்யுனிசம் மக்களால் புறம்தள்ளப்பட்ட ஒரு வெத்து கொள்கை 1 நூற்றாண்டில் ஓங்கி வளர்ந்து கம்யுனிசம் பேசிய நாடுகளாலே ஓரம் கட்டப்பட்ட கொள்கை.” சீர்திருத்த திருமணம் பற்றி வாய்கிழிய பேசும் வினவு இஸ்லாம் தான் சீர்திருத்த திருமணத்தை இந்த உலகுக்கு 1400 வருடத்திற்கு முன்பே அறிமுகபடுத்தியது என்பதை மறக்க வேண்டாம், நீங்கள் நடுநிலையாளர்கள் என்று தான் எது நாள் வரையில் நினைத்து வந்தோம் இப்போது தான் தெரிகிறது நீங்களும், மதவெறி சாதிவெறியர்கள் போல் இயக்கவெறி பிடித்தவர்கள் என்று. ஒரு ம.க. இ.க. தோழர் இஸ்லாமிய முறைபடியோ அல்லது ஹிந்து முறைபடியோ திருமணம் செய்தல் நீங்கள் ஒழுங்குநடவடிக்கை எடுப்பீர்கள மாடீர்களா? அலாதீன் நான் முஸ்லிம் இல்லை நான் கமயுனிசிட் என்று பகிரங்கபடுதி திருமணம் செய்தல் அவர்களை யாரும் கண்டுகொள்ள போவது இல்லை அது அவர் கொள்கை என்று விட்டு விடுவோம் இஸ்லாமிய சாயம் பூசிக்கொண்டு இரட்டை வேடம் போடும்போதுதான் பிரச்சனைகள் வருகின்றன. பிறப்பால் இஸ்லாமியனாக இருந்தாலும் அவர் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே உண்மையான முஸ்லிமாக ஆகமுடியும், இஸ்லாத்திற்கு மாறாக யார் செல்பட்டலும் அவர் ஹாரூனக இருந்தாலும் அவரைவிட கொம்பனாக இருந்தாலும் நாங்கள் விமர்சிக்கத்தான் செய்கின்றோம், தி. மு. க. ஆ. தி. மு.க, விற்கு ஒட்டுபோடுவதும் அலாதீன் செய்ததும் ஒன்றகமுடியது இது கொள்கை சார்ந்த பிரச்சனை, ஊருநீக்கம் என்பது எல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உடன்பாடில்லை இஸ்லாமிய கொள்கையை பிடிக்கவில்லை என்றால் அவரை யாரும் கட்டாயபடுத்த முடியாது. அனால் இஸ்லாத்தில் இருந்துகொண்டே அதற்குமாற்றமாக செயல்பட்டால் அதை கண்டிப்பாக தவ்ஹீத் ஜமாஅத் சுட்டிகாட்டும், அப்படி செய்வது மதவாதம் என்றால் நீங்கள் செய்வது இயக்கவதம்தானே.:”

    • //தி. மு. க. ஆ. தி. மு.க, விற்கு ஒட்டுபோடுவதும் அலாதீன் செய்ததும் ஒன்றகமுடியது இது கொள்கை சார்ந்த பிரச்சினை//

      ராமர் கோயில் கட்ட செங்கல் கொடுத்தவளுக்கு ஓட்டுப் போடலாம் என்றால், குஜராத் முஸ்லீம்களை நரவேட்டையாட்டையாடியவனை பாதுகாத்தவனுக்கு ஓட்டுப்போடலாம் என்றால் உங்களது அந்த வெங்காய கொள்கைதான் என்ன?
      தன்னைக் கம்யூனிஸ்டு என பகிரங்கப்படுத்திக் கொண்டுதான் அலாவுதீன் திருமணம் செய்திருக்கிறார். இதில் என்னவிதமான கொள்கை பிரச்சினை உங்களுக்கு?

      • அலாதீன் உண்மையிலேயே அற்புத விளக்கு என்றல் அவர் என்ன செய்திருக்கணும் கம்யுனிச பெண்ணை அல்லவா மணந்திருக்க வேண்டும் எதற்காக இஸ்லாமிய பெண்னை மணந்தார் எதற்காக இஸ்லாமிய பதிவு புத்தகத்தை வரவழைத்தார். நீங்கள் செய்தது புரட்சி திருமணம் என்றல் மணமகனையும் மணமகளையும் மேடையில் ஏற்றி இருக்கவேண்டுமே இதுதான் உங்கள் புரட்சி திருமணத்தின் லட்சியமா இது புரட்சி திருமணம் இல்லை கள்ளத்தனமாக மேடையை அபகரித்த திருமண

        • அலாவுதீன் ஒரு அற்புத விளக்குதான். அந்த விளக்கு சுடர்விட்டதனால்தான் உங்களைப் போன்றவர்களின் முகங்களைப் பார்க்க முடிகிறது.
          அலாவுதீனுக்கு வாழ்த்துக்கள்.

          ஊரான்

  21. இஸ்லாமிய கடுங்கோட்பாட்டுவாதிகளுக்கு,

    இது நாள் வரை தான் நம்பிக்கை வைத்திருந்த இந்து மதத்தைத் துறந்து ஒரு தாழ்த்தப்பட்டவன் இஸ்லாம் முற்போக்கானது என அதை ஏற்றுக்கொண்டால் ஆதரிப்பீர்கள். ஆனால் இஸ்லாத்தைவிட பொதுவுடமைக் கோட்பாடு சிறந்தது என ஒரு இஸ்லாமியன் ஏற்றுக்கொண்டால் ஆத்திரமடைவீர்கள்.

    உங்களின் ஆத்திரத்திற்கான அடிப்படை ஜனநாக மறுப்பு என்கிற பாசிச சிந்தனையிலிருக்கிறது.
    ஆர்.எஸ்.எஸ்ஸின் பாசிச சிந்தனைக்கும் உங்களது சிந்தனைக்கும் வேறுபாடு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    மதம் ஒரு அபின் என்று காரல் மார்க்ஸ் சும்மா சொல்லவில்லை. உங்களைப் போன்றவர்களைப் பார்த்துதான் கொல்லியிருக்க வேண்டும்.

    ஊரான்.

  22. கேட்கப்பட்ட கேள்விக்கு விடை அளிக்காமல் வேறு விவாதத்தை தொடங்காதீர்கள் உங்கள் எல்லா கேள்விக்கும் எங்களிடம் விடையுள்ளது நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள் உங்கள் எல்லா கேள்விக்கும் நான் பதில் அளிக்கின்றேன்
    R .S .S . செய்யும் வேலையை தான் நீங்களும் செய்துகொண்டு இருக்கிறீர்கள் யாரோ ஒருசிலர் செய்யும் தவறை ஒரு சமுதாயத்தின் மீது திணித்து அந்த சமுதாயத்தையே கரைபடுதலாம் என்று நினைகிறீர்கள் தலிபானிசம் என்கிறீகள் R .S .S . குழலைதான் நீங்களும் ஊதுகிறீர்கள் ஒரு முற்போக்குவாதி என்று சொல்லிக்கொள்ளும் நீங்களே இப்படி சொன்னால் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உங்கள் கொள்கையில் நீங்கள் பிடிப்போடு இருந்தால் அது புரட்சி எங்கள் கொள்கையில் நாங்கள் பிடிப்போடு இருந்தால் அது உங்களுக்கு இகழ்ச்சியா? R .S .S கொள்கை பிராமணியர் தவிர, ஹிந்து உள்பட அனைவர்ககுக்கும் எதிரான கொள்கைதான் அதை எதிர்த்து போராடவேண்டியது அனைவர்களின் கடமை உங்ககுக்காக போராடுகிறோம் எங்களை நீங்கள் எதிர்கிறீர்கள் என்பது சிறுபில்லைதனமானது, நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் ஆதரிக்கவேண்டும் என்பது அறிவுசார்ந்த விஷயம் இல்லை, கொள்கை விஷயம் தவிர்த்து சமுதாய பிரச்சனைகளில் நீங்கள் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு நாங்கள் உங்களுக்கு அதரவு தருவோம்.

  23. இஸ்லாமிய நண்பர்கள்,

    இங்கு பேசிய விசயங்கள் அலாவுதீனை
    இஸ்லாத்தை விட்டு விலக்கி வைக்க
    சொல்லப்படும் காரணங்கள் அவர்
    இஸ்லாத்துக்கு நேர்மையாக இல்லை
    என்பதே

    நாங்கள் ஒரு நிறுவனம் எங்க நிறுவனத்திற்கு கட்டுபட்டால் இருக்கலாம்
    இல்லையேல் வெளியேறு என்பதைதானே

    இந்து பாசிச அரசின் கோர்டு தீர்ப்பை
    எந்த அரசியல் கட்சியும் எதிர்க்கவில்லையே கருணாநிதியோ
    இருவரும் ஏற்று கொள்ளும் தீர்ப்பு
    என்கிறார் .

    இது இஸ்லாமியர்களுக்கு விரோதமானது இல்லையா அப்போ கருணாநிதியை
    எதிர்த்து என்ன செய்ய போகிறீர்கள்
    அவர் வழங்கிய ஒரு சின்ன சலுகையை
    தூக்கி பிடிக்கும் நீங்க அவர் ஆடும்
    அழுகுணி ஆட்டத்தை ஏன் எதிர்ப்பதில்லை

    திருமணத்தின் போது மார்க்சிய மூலவர்களின் படத்தை வைத்த அலாவுதீன் உங்கள் எதிரியா

    ஒரு பக்கம் சலுகைகள் வழங்கி கொண்டு மறுபக்கம் உங்களின் குரல்வளையை நெரிக்கும் இந்த அரசு எதிரியா

    நியாயமாக நீங்கள் இந்த அரசைத்தானே
    விலக்கி வைக்கவேண்டும்.

    சமூகத்தின் பிரச்சனைகள் வேலை இல்லா திண்டாட்டம் ,ஊழல் ,அதிகார வெறி
    இவற்றினால் பாதிக்கப்படும் ஏழை இஸ்லாமியர்களுக்கு

    அன்றாடம் கூலி வேலைக்கு சென்று
    அரைவயிறு கால்வயிறு உண்ணும் ஏழையான இஸ்லாமியர்களுக்கு

    இந்து ஆதிக்க அரசால் ஒடுக்கப்படும்
    அனைத்து மதத்தவர்களுக்கு
    பதில் இஸ்லாத்தில் உள்ளதா

    நான் சொல்கிறேன் கம்யூனிசத்தில் உள்ளது
    உங்களிடம் பதில் இருந்தால் ஏன்
    அலாவுதீன் கம்யூனிசத்தை நேசிக்கிறார்
    அலாவுதீனை விட்டு விலகிவிட்டால்
    நீங்கள் மேற்கண்ட பிரச்சனைகளில்
    இருந்து விலகி சொர்க்கத்தில் இருப்பீர்களா?

    கம்யுனிசத்தில் தீர்வு இருக்கு அதுதான்
    போராடடும் வர்க்க சுரண்டலை முடிவுக்கு
    கொண்டு வரனும் என்கிற தீர்வு
    நடைமுறை சாத்தியமன தீர்வு அதுதான்
    வேறு தீர்வுகள் இருந்தால் சொல்லுங்கள் பேசலாம்

    ஒருவர் சொல்கிறார் உழைப்பவனுக்கு
    உரிய கூலியை அவன் வியர்வை காயும் முன் கொடுத்துவிடுங்கள் என்று
    //அப்படி கொடுக்காதவனை என்ன செய்யலாம்//
    ஒரு முஸ்லீம் சகோதரர்கு வேலைபாத்ததற்கு கூலி கிடைக்கவில்லை
    என்ன செய்வார் நேராக அங்கிருக்கும்
    தொழிற்சங்கத்துக்கு செல்வாரா அல்லது
    உங்கள் மத சங்கத்துக்கா?

    முதலாளி ஒரு முஸ்லீமாக இருக்கும் பட்சத்தில் வேண்டுமானால் அவரிடம்
    மதத்தில் சொல்லப்பட்டதை சொல்லலாம்
    அப்போதும் அது முதலாளியின் மத
    நேர்மையை சார்ந்த ஒன்றாகத்தான்
    இருக்கும் தவிர

    கூலிபெறவேண்டிய தொழிலாளியின்
    உரிமை சார்ந்ததாக இருக்காதே

    சில நேரங்களில் முதலாளியை உதைத்து
    கேட்க சொல்கிறது கம்யூனிசம்
    அதை மதம் என சொன்னால் உங்கள் பார்வை அப்படி அதற்கு நான் என்ன சொல்ல

    • சகோதரர் தியாகு..
      முஸ்லிம் முதலாளி தொழிலாளிக்கு கொடுக்க வேண்டியவற்றை நியாயமாக கொடுத்தால் அது மதம் சார்ந்துதான் இருக்கும் என்கிறீர்கள். மதத்தில் சொல்லப்பட்டதும் அது தானே.. உழைப்பவனின் வியர்வை காயும் முன்னர் கூலி கொடுத்து விடு என்றால் உழைப்பு வீணாகி விட கூடாது, உழைப்பவன் மதிக்கப் பட வேண்டும் என்று தானே அர்த்தம்.. இஸ்லாம் உழைப்பவனை கண்ணியபடுதுகிறது.. அதனை முதலாளிகளுக்கு கட்டளையாகவே சொல்கிறது.. இதில் என்ன தவறு இருக்கிறது? எங்காவது இஸ்லாம் உழைப்புக்கு தகுந்த கூலி கொடுக்காதே என்று கூறி இருக்கிறதா? உழைப்பவன் ஏழை அதனால் அவனுக்கு நியாயமாக கூலி கொடுக்கப்பட கூடாது என்று கூறி இருக்கிறதா? எதோ உங்களின் கம்யூனிசம் மட்டுமே உழைப்பை மதிக்கிறது போன்ற மாய தோற்றத்தை உருவாக்க நினைக்காதீர்கள்.

      இங்கு ஒரு முறைக்கு இருமுறை கூறிவிட்டேன்.. கருணாநிதி இட ஒதுக்கீடு கொடுத்ததால் அவரை தலையில் தூக்கி வைத்து ஆடவுமில்லை.. அவர் செய்யும் அநியாய செயள்கை மறைத்து அழுகுணி ஆட்டமும் போடவில்லை.. இதே இட ஒதுக்கீட்டில் முறைகேடு என்று தெரிய வந்த போது முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டம் நடத்தியதும் உங்களுக்கு தெரியும்.. கடந்த ஞாயிறு அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் அயோத்தில் தீர்ப்பை வரவேற்றதை கண்டித்து எச்சரித்தும் உங்களுக்கு தெரியும்.. ஏதோ மாமியார் உடைத்தால் மன்சட்டி கதையில் ஒரு போதும் இஸ்லாமிய சமூகம் இருக்க வில்லை.. ஏமாந்த காலம் எல்லாம் மலை ஏறிப் பொய் விட்டது… நோன்பு கஞ்சி குடிக்க வந்து எங்களை குல்லா போட்டு ஏமாற்றிய காலம் எல்லாம் மலை ஏறி போச்சு.. முக்கியமாக இங்கு விமர்சிக்கப்படும் தௌஹீத் ஜமாஅத் நோன்பு கஞ்சி குடிக்க அரசியல்வியாதிகளை கூப்பிடுவதே கிடையாது என்பது எவரும் அறியாயது அல்ல..

      இங்கு இன்று பாலை வனாந்திரத்தில் கஷ்டப்படும் மக்களாக முஸ்லிம் சமூக மக்கள் இருப்பதற்கு காரணம் கல்வி வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறாமல் விட்டதாலேயே.. அதனால் தான் இட ஒதுக்கீடுக்காக போராடுகிறோம்.. அதனை தந்ததற்காக நன்றி கடனாக கருணாநிதியை ஆதரித்தோம்…. தவிர அவர் ஒரு ரூபாய் அரிசி தந்ததாலோ இலவச டிவி தந்ததாலோ அல்ல..

      • அய்யா ரபீக்கு,

        “இஸ்லாம் உழைப்பவனை கண்ணியப்படுத்துகிறது.. அதனை முதலாளிகளுக்கு கட்டளையாகவே சொல்கிறது..” இந்த கண்ணியத்தை மீறுகின்ற திருச்சி, குடியாத்தம், வேலூர் பீடி
        அதிபர்களுக்கு எதிராகவும்; வாணியம்பாடி, ஆம்பூர், இராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை முதலாளிகளுக்கு எதிராகவும் கம்யனிஸ்டுகள்தானே கோராடிக்கொண்டிருக்கிறார்கள்.
        ஆண்டவனின் கட்டளையை மீறுகின்ற இந்த முதலாளிகளுக்கு எதிரான உங்களது விசாரணையை எப்போது தொடங்கப்
        போகிறீர்கள்? வயிற்றுப்பசி வந்தால்தான் தெரியும். ஆண்டவன் தேவையா அல்லது கம்யூனிஸ்ட்டுகள் தேயைா என்பது. இதை
        இஸ்லாமிய பாட்டாளிகள் தெளிவாகத்தான் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

        ஊரான்.

      • //இதில் என்ன தவறு இருக்கிறது? எங்காவது இஸ்லாம் உழைப்புக்கு தகுந்த கூலி கொடுக்காதே என்று கூறி இருக்கிறதா? உழைப்பவன் ஏழை அதனால் அவனுக்கு நியாயமாக கூலி கொடுக்கப்பட கூடாது என்று கூறி இருக்கிறதா? எதோ உங்களின் கம்யூனிசம் மட்டுமே உழைப்பை மதிக்கிறது போன்ற மாய தோற்றத்தை உருவாக்க நினைக்காதீர்கள். //

        நண்பரே ,

        நான் கேட்டது ஒரு எளிய விளக்கம்
        முதலாளி அனேக இடங்களில் அவ்வாறு ஊதியத்துக்கு ஏற்ற உழைப்பை தறுவதில்லை

        1.ஏன் தறுவதில்லை ?
        2.தராவிட்டால் என்ன செய்வது?
        3.அப்படி செய்யும்போது அவனது பதிலடி என்னவாக இருக்கும் ?
        4.முதலாளியின் இருத்தல் என்பது நிலையானதா , அதன் சமூக பொருளாதார காரணங்கள் என்ன
        5.தனிபட்ட ஒரு முதலாளி அல்லாமல் சமூகமே ஒரு சுரண்டல் வடிவமாக ஏன் இருக்கிறது
        6.இந்த சுரண்டல் வடிவம் தற்காலிகமானதா நிரந்தரமனாதா
        7.நிரந்தரமானதில்லை என்றால் அடுத்து என்னவாக மாறும் மாறவேண்டும்

        இதற்கெல்லாம் முடிந்தால் பதில் சொல்லுங்கள்

        அன்புடன்

        தியாகு

  24. ஆராய்ந்து அமைதியுடன் எழுதப்படுகிற ஒரு கட்டுரை போல இல்லை இந்த கட்டுரை, எங்களால் கீழ்த்தரமாய் நடந்து கொள்ளவே முடியும், நிதானம் எங்களிடத்தில் இல்லை என்று சொல்வது போல இருக்கிறது.

    இவ்வளவு விளக்கங்களும், பிரச்சினைகளும் எதற்கு, பேசாமல் என்ன நடந்தது, என்ன நடக்கின்றது, அதில் மணமகனின் கருத்தும் நிலையும் என்ன என்பதை ஒரு காணொளியாக பதிவு செய்துவிட்டால் பிரச்சினையில்லையே? அவர் எந்த ஊரில் இப்பொழுது இருந்தாலும் அதை செய்ய இயலுமே? சம்பந்தப்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் அந்த காணொளியில் தங்கள் தரப்பு பதிலையும் தரலாமே?

    இதில் மற்றவர்களை / அமைப்புக்களை / ஒரு மதத்தின் கோட்பாடுகளை / அதை வாழ்வில் செயல்படுத்த துடிக்கும் மக்களை ஏன் வீணாக வம்பில் இழுக்க வேண்டும்? அவர்களை இப்படி கொச்சைப்படுத்த வேண்டும்?இது எந்த வித சித்தாந்தம்?

  25. Dear Vinavu,
    Excellent article. After a short break, a straight hit. The essay makes sense.
    The questions raised by the article is right. Honest muslims should read this essay .
    It is the fact that communist comrades unselfish acts saved lot of people’s life and DIGNITY in this world. Muslims has to change and accept that COMMUNISM AND COMMUNIST are their friends and FUNDAMENTALIST are their enemies.

    WE HAVE TO BELIEVE IN SCIENCE . SOCIAL SCIENCE IS COMMUNISM .
    SOCIAL EVIL IS = RELIGION = FUNDAMENTALISM=FANATICS.
    ********************************************
    Congrats VinaVu for the heart (hard) hitting article.
    Translate this article to other regional languages also.

  26. அலாவுதீன் எந்த முறைப்படி திருமணம் முடிப்பதும் அவரது சொந்த விருப்பம். அதில் இஸ்லாமிய பெரியவர்கள் கலந்து கொள்வது அவர்களது சுயவிருப்பம், அந்த அலாவுதீன் மற்றும் அவரது குடும்பத்தாரோ தவ்கீத்காரராக இருந்தாலும் சரியே, அது அவர்கள் இஷ்ட்டம். இஸ்லாம் ஒரு நம்பிக்கை ஒரு வழி அதை அதன் சட்டங்களை நம்பி செயல்படுவது செயல் படமால் போவது அவர்கள் அவர்கள் விருப்பம். இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. இதில் அணி சேர்ப்பதோ, கூட்டம் சேர்பதற்கு எந்த தேவையும் இல்லை. இது இயக்க வெறியின் உட்ட்ச்ச கட்டம். அலாவுதீன் நாளைக்கு இந்து மதத்திற்கோ, கிறிஸ்தவத்திற்கோ மாற முடியும் அது அவரது நம்பிக்கை சார்ந்தது. இதனால் இதை பெரிய விஷயம் போல் யார் சித்தரித்தாலும் இது ஒருவகையில் மத வெறியாகவே பார்க்க முடிகிறது. உண்மையிலே தவ்கீத் ஜமாஅத் நீங்கள் எழுதி உள்ளது போல் சொல்லி இருந்தால், நடந்திருந்தால் இது அவர்களுக்கு பொருந்தும்.

    • அண்ணே புதிய தென்றல்,
      “தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்தவர்கள் அவர்கள் அமைப்பை தவிர வெளியில் உள்ள இஸ்லாமியனாக இருந்தாலும் அவர்களை பொறுத்தவரை இறைநிராகரிப்பலரே” ன்னு சொல்றாங்கன்னு நிறுவுங்க, உங்களுக்கு பொட்டு வைச்சதாச் சொல்லி வாங்குன காச விட அதிகமா கேட்டு tntj மேல வழக்கு தொடரலாம்.

    • puthiya thenral! (இப்படி சொன்னா போதுமா, இல்ல சுமைய்யாட தந்தை, நௌஷாத், டீச்சர்ட கணவன்-ல்லாம் சொல்லனுமா?)

      ABOOSUMAIYA Posted on 19-Oct-10 at 4:54 am:
      “தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்தவர்கள் அவர்கள் அமைப்பை தவிர வெளியில் உள்ள இஸ்லாமியனாக இருந்தாலும் அவர்களை பொறுத்தவரை இறைநிராகரிப்பலரே”

      ன்னு சொல்றாங்கன்னு நிரூபி, உங்களுக்கு பொட்டு வைச்சதாச் சொல்லி வாங்குன காச விட அதிகமா கேட்டு tntj மேல வழக்கு தொடரலாம்(ஏன்னா ஒனக்குத்தான்ஓசிக்காசுன்னா இனிக்குமே)

  27. வினவின் ஒரு பக்க சார்பு புலம்பல் நக்கீரனை ஒத்து இருக்கிறது. ஏன் என்ன நடந்தது என்பதை சரியான புலாணய்வு செய்யாமல். பாட்டி வடை சுட்ட கதை போல் புலம்பித்தள்ளியிருக்கிறார் இந்த வினவு. நேர்மையான வினவாக இருந்தால் சரியான உண்மைகளை இந்த அலாவுதீன் சம்பந்தமாக வெளியிட வேண்டும். பொய்களை கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க கூடாது. அலாவுதீன் இஸ்லாத்தில் இருப்பதாலும், இஸ்லாத்தை விட்டு வெளியேறினாலும் இஸ்லாத்திற்கும் நஷ்டம் இல்லை, இஸ்லாமியர்களுக்கும் நஷ்டம் இல்லை. இஸ்லாத்தை உலகம் அழியும் வரை யாராலும் களங்கப்படுத்த முடியாது. இது படைத்த இறைவனின் மார்க்கம் (கவனிக்க கம்னியூஸ்ட் மதவாதிகளே)இஸ்லாம் மதம் அல்ல மார்க்கம்(நேர்வழி). இஸ்லாத்தை விட்டு ஒருவன் வெளியில் சென்றால் அவனுக்குத்தான் நஷ்டம் (இம்மை மறுமை இரண்டிலும்). நாளைக்கே நான் கம்னியூஸ்ட்தான் முஸ்லிம் இல்லை (செங்கொடி, ஷாகித் போல்) என்று அறிவித்து விட்டு அவர் வேலையை பார்க்கச்சொல்லுங்கள். இதை பூதாகரமாக்கி நல்ல ஒரு தவ்ஹீத் அமைப்பை களங்கப்படுத்தி கொண்டு இருக்க வேண்டாம்.

    • அலாவுதீன்
      நாத்தீகன் அலாவுதீன் தான் சொல்லிடா ரே” நான் ஒரு கம்னிஸ்ட் “என்று. அவர் வேலையே இனி உங்களை கம்னிஸ்ட் டாக மாற்றுவதுதான் !

  28. அன்புள்ள தோழர்களுக்கும் , பின்னோட்டதிலுள்ளவர்களுகும்,
    அஸ்ஸலாமு அழைக்கும்

    மணமக்களுக்கு எனது திருமண நல்வாழ்த்துக்கள்.

    இவர்களின் திருமணம் தொடர்பாக கட்டுரைகளும் பின்னூட்டங்களும் வந்தமயமகுள்ளது.இது தொடர்பாக எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறன்.
    இஸ்லாம் குறித்து விவாதமாக இல்லாமல் தனிமனித,அமைப்பு,தன்னிலைவிளக்கம் பற்றியே முழக்க பேசபடுகிறது.

    இம்மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமுமில்லை -குரான் 2:256

    பெரியார் தாசன் இசுலாத்தை ஏற்றுக்கொண்டபோது இது போல் அவர்களிடம் விமர்சனத்துகுள்ளனர்.
    தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளனர்.மறுபதிப்பில் சரிசெய்ய புதிய ஜனநாயகம் இதழும் தெரிவித்து விட்டது.

    இசுலாமிய சமுகத்தில் ஒரு சீர்திருத்தத திருமணம்.இதன் அடிப்படையில் விவாதமில்லாமல் எதைபற்றியோ பேசபடுகிறது.இசுலாத்தைவிடுங்கள் கம்யூனிசம் சீர்திருத்ததை ஏற்றுகொள்கிறதா?
    சீர்திருத்தம் என்பது தன்னளவில் அகவயப்பட்ட கருத்துமுதல்வாதம் என்று தோழர்கள் அறிந்ததே.
    இசுலாம் மக்களைப் பிடித்தாட்டும் மதக் கடுங்கோட்பாட்டு நூலில் இன்ன அனாச்சாரங்கள் , சம காலத்துக்கு ஏற்க முடியாதவைகள் என்று பட்டியலிட்டு இதை மாற்றும் வகையில் இந்த திருமணத்தை தோழர் புரட்சிக்கு கிட்டத்தட்ட செய்தார் என்று எந்த விளக்கமுமில்லை.

    //இத்தகைய காஃபிர்களை நம்முடைய காரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்வது ஹராம் இல்லை. ஆனால் அந்த நச்சுப் பாம்புகளோடு நெருக்கமான சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது//
    கருத்தில் கொண்ட முரண்பாட்டுக்கும் கொள்கையிலுள்ள முரண்பாட்டுக்கும் வேறுபாடு உள்ளது.
    இறைம்றுப்பவர்கள் நம்பிகையளர்கள் இதுதான் . நாளை தோழர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது
    நிச்சயமாக நாமும் களத்தில் நிற்போம் நிற்கிறேன். ஓட்டு பொறுக்கும் கட்சிகளை நம்பாதே சரியான அரசியல் சொல்லும் அமைப்பை நம்பு என்று ம.க.இ .க வை அறிமுகப்படுத்தினார் பழனி பாபா.
    இன்று கிரீன் ஹன்ட் தொடர்பாக இசுலாமிய மக்கள் மத்தியில் எடுத்து சொல்லபடுகிறது.

    //இப்படியே போனால் இசுலாத்தின் எதிர்காலம் என்ன?” என்பதுதான் தவ்ஹீத் ஜமாத் காரர்களின் கவலை.//
    அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைகின்றனர். மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன். குரான்-61:8
    இதை பற்றிய கவலையில்லை.

    இயக்கவியலை கொண்டுதான் நாம் ஆய்வு செய்துள்ளோம்.இயக்கவியல் அடிப்படையில்

    கோட்பாடு அல்லது கோட்பாடுற்ற முறையில் விவாதிக்க தயாராகுள்ளோம்.

  29. அலாவுதீன் என்ற நண்பர் ஒரு அற்புத
    விளக்குதான் சந்தேகமில்லை ,

    வினவு ஆள்வைத்து வேண்டுமென்றே பின்னூட்டி இருக்கிறது என்ற சந்தேகத்தை கிளப்பி அதன்மூலம் இப்படி ஒரு திருமணமே நடக்கவில்லை என ருசுபிக்க பார்த்தார்கள்

    அதற்கு வினவின் விளக்கம் சரியாக உள்ளது
    இணைய வசதியும் அறிவு இல்லாத தோழரின் கருத்தை இன்னொரு தோழர் இடுவதில் தவறென்ன?

    இந்திய பாசிச அரசு , ஒத்தூதும் கருணாநிதி இவர்கள் எல்லாம் நண்பர்கள்
    புரட்சிகர சித்தாந்தம் எதிரி என நினைக்கும்
    இஸ்லாமியர்களை என்ன சொல்வது

    சமூக பொருளாதார பிரச்சனைக்கு உங்களிடம் தீர்வு இல்லையே அதனால்தானே
    அலாவுதீன் புரட்சிகர சக்திகளுடன் இணைகிறார்

    தீர்வு இருந்தால் சொல்லுங்கள் பேசுவோம்

    மற்றும்

    வியர்வை உலர்ந்தவுடன் கூலி கொடு என முதலாளிக்கு உத்தரவு போட்ட நீங்கள்

    கூலி கொடுக்காவிட்டால் என்ன செய்வதென்று
    அந்த ஏழைக்கு ஏதாகிலும் சொல்லி இருக்கீங்களா?

    • //வினவு ஆள்வைத்து வேண்டுமென்றே பின்னூட்டி இருக்கிறது என்ற சந்தேகத்தை கிளப்பி அதன்மூலம் இப்படி ஒரு திருமணமே நடக்கவில்லை என ருசுபிக்க பார்த்தார்கள் //

      இவ்வாறு எழுதுவது மண்டபத்தில் எழுதிக் கொடுத்தது ஆகாதா தியாகு? உங்களுக்கு மண்டபத்தில் எழுதுவதுதானே பெருங்குற்றம்? அதைத்தான் வினவை எதிர்ப்பதிலும் இஸ்லாம் பதிவர் செய்துள்ளார். உங்களுக்கும் அவருக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. மண்பானை பித்தளையைப் பார்த்து இளித்ததாம்.

      • ha ha மண்டபத்தில் ஆள் வைத்து எழுதியது அதை ஒத்துகொண்டது என்ற விசயங்களை இங்கே மறைக்கிறீர்கள் பூச்சாண்டி

        • மண்டபத்தில் எழுதிக் கொடுப்பதுதான் குற்றங்களிலேயே பெரிய குற்றம் என்று கருதும் கிளர்ச்சியாளர் தியாகு அவர்கள், அலாவுதீன் விசயத்திலும் அவ்வாறே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பூச்சாண்டி சமூகம் விரும்புகிறது.

          சுய முரன்பாடு தியாகுவிற்கு அழகல்ல. தியாகு சுயமுரன்பாடு கொள்வது என்பது என்னைப் பொறுத்தளவில் சூரியன் மேற்கே உதிப்பது போல நடக்க இயலாத காரியம். எனவே தயவு செய்து அலாவுதீனுக்கு எதிரான முடிவை தியாகு எடுக்க வேண்டும். முஸ்லீம் பிற்போக்குவாதிகளின் உரிமையை அவர் அங்கீகரிக்க வேண்டும்.

  30. ஒடுக்கப்படும் சமூகம் என்ற அளவில் சிறுபான்மை மதங்களை அதன் கடவுள்களை வழிபடுகிற எல்லா மக்களையும் கம்யூனிஸ்டுகள் ஆதரிப்பார்கள். ஆனால் மதம் அது எந்த மதமாக இருந்தாலும் அபிந்தான்.இஸ்லாமிய மக்கள் தங்களுக்காக போராடும் உண்மையான தோழர்களை கண்டுரணர வேண்டும்.

  31. Miga Sirappaana Katturai Vinavu Thozargalukku Vaazththukkal.

    Eninum Sila
    Visayangal Muzumaiyaaga
    Vilakkappadavillai
    Endru Karuthugiren
    Avai Vilakkappaduvathu
    Avasiyam.

    intha pathivil Vinavu Thozargal Ulloor Jamaad Enbathu Matham Saarntha ondru Alla Endrum Enave Communist Thozargal Thamathu Thirumanaththai Pathivu Seiya
    Jamad kaarargalai Azaippathu Thavaru Alla Endrum Kooriyullergal aanaal
    Pinnoottangali Palar Jamad Enbathu Matham Saarntha Amaippu Endru Kooriyullaargal
    Enave ithu Kuriththu Vinavu Thozargaloo Shakid, Senkodi, Askar Poondra Thozargaloo Vilakkam Alikka Vendum Endru Kettukkolgiren.
    Pirar Vilakkamalikkaavittaalum
    Vinavu Thozargal Vilakka Kadamai Pattavargal.

    Aduththathu Alavudin Pothuvaaga Thannai Communist Endru Sollikkolgiraar athu unmai endraal idakkaradakkalaaga Pesaamal Thelivaaga Thanathu Kadavul Maruppai Arivikka Vendum Endru Karuthugiren Athaavathu
    ‘Enakku allaavin Meethellaam Nambikkai illai Uzaikkum Makkalin Meethu Mattum thaan Nambikkai irukkirathu’
    Endru Mathavaathigalin Mandaiyil Uraikkum Padi Arivikka Vendum.

    Melum,
    intha Pirachanaiyil Madhavaathigalai aappadi off panna Vendum Endraal Thozar Alavudin ithil Neradiyaaga Karuththu Therivikka Vendum.
    Avarudaiya Karuththai Katturaiyaagavoo Allathu
    oli (Audio) Vadiviloo Pathivu Seithu Veliyidalaam
    Avvaaru Seiyaatha varai
    intha Pirachanai ooyaathu Endru Ninaikkiren.

  32. நன்பர் ரபீக்,

    //சமுதாய நலன் மட்டுமே குறிக்கோள்.//

    ஒரு சமுதாயத்தின் நலனை உத்தேசித்து அதனை பிரதிநிதித்துவப்படுத்துவதாய் சொல்லிக் கொள்ளும் இயக்கமொன்று அரசியல் அணிசேர்க்கைகளில் இறங்கும் போது, யார் எதிரி
    யார் நன்பன் என்றெல்லாம் பார்க்க வேண்டாமா? ஒரு சீர்திருத்தத் திருமணம் நடத்தி வைத்ததற்காக ம.க.இ.க மேலும் வினவு தளத்தின் மீதும் பாய்ந்து குதறும் உங்கள் சகோதரர்கள்
    சிலர், அதே நேரம் தமிழ்நாட்டில் இந்து பாசிஸத்தின் வடிவமாய் இருக்கும் ஜெயாவுடன் கூட்டு வைக்கும் பீ.ஜேவின் செயல்பாடுகளை விமர்சனக் கண் கொண்டு பார்ப்பதில்லை. ஏன்
    இப்போது மிக சமீபத்தில் கூட – தெகல்காவில் குஜராத் கலவரத்தைத் தூண்டிய கொலைகாரர்கள் அம்பலப்பட்டு மோடியின் பாசிச வெறி வெளிச்சமானபின்னும் – ஊரில் உள்ள
    பிழைப்புவாத அரசியல்வாதி கூட மோடியோடு தம்மை சம்பந்தப்படுத்திக் கொள்ள அஞ்சிய வேளையிலும் ஜெயா அவரை அழைத்து கவுரவப்படுத்தியுள்ளார். இங்கே பதிவின் அடிநாதமாய் தொக்கி நிற்கும் கேள்வியும் கூட இதைத் தொட்டுச் செல்கிறது – நீங்கள் தவிர்க்கிறீர்கள்.

    இசுலாமிய சமுதாயம் ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் ஒரு அங்கம் தான். தமது சமுதாயத்தின் அவ்வப்போதைய நலன் ஒன்றே நோக்கம் என்கிற சுயநல நோக்கின் பின்னே
    எவ்வகையான அணிசேர்க்கையையும் நியாயப்படுத்தி விடலாம். ஹிட்லர் முதன் முதலில் கம்யூனிஸ்ட்டுகளைக் கொன்றொழித்த போது அதை யூதர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள் – ஏனெனில் அதை எதிர்ப்பது அவர்களின் “அப்போதைய” நலனுக்குத் தேவையானதாக இல்லை. பின்னர் வரலாறு எப்படி திரும்பியது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே?

    அடுத்து, உங்கள் மதத்தினுள் ஏழை / பணக்காரன், உழைப்பவர் / உழைக்காமல் சுரண்டுபவர் என்கிற வர்க்க வேறுபாடுகளைப் பார்க்கக் கூடாது என்னும் கூற்று யாருக்கு நலம்
    சேர்க்கிறது? வட்டித் தொழில் செய்யும் முசுலீமின் வர்க்க நலனும் சாதாரணமாய் உழைத்துப் பிழைக்கும் ஒரு முசுலீமின் வர்க்க நலனும் வேறு வேறானது. மாறாக உழைக்கும்
    இந்து ஒருவனின் வர்க்க நலனும் இசுலாமியர் ஒருவரின் நலனும் ஒன்று தான்; இவ்விருவரின் எதிரிகளும் ஒன்று தான். எம்மைப் பொருத்தவரையில் உழைக்கும் வர்க்கத்தாரிடையே சாதி, மதம், இனம், மொழி போன்ற பிரிவினைகள் ஏற்படுவது சுரண்டும் வர்க்கத்தாரின் நலனுக்கே என்பதில் தெளிவாய் இருக்கிறோம்.

    இங்கே இப்போது சாராம்சமாய் இருக்கும் பிரச்சினை என்ன? ஒரு சீர்திருத்தத் திருமணத்தைச் செய்து கொண்டதற்காக உங்கள் சொந்த மதத்தில் பிறந்த ஒருவரையு, அவர்களின்
    பெற்றோரையும் சமூக விலக்கம் செய்யப் போவதாய் மிரட்டுகிறீர்கள். அதை நடத்தி வைத்ததற்காக இசுலாமியர்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் முதல் குரல் கொடுத்த ஒரு
    இயக்கத்தை நீங்களே வலிந்து விரோதித்துக் கொள்கிறீர்கள்.ஆர்.எஸ்.எஸ் எப்படி இந்துக்களின் ஏகப் பிரதிநிதி இல்லையோ அப்படியே டி.என்.டி.ஜேவும் இசுலாமியர்களின்
    ஏகப்பிரதிநிதி அல்ல. இது போன்ற கடுங்கோட்பாட்டுவாதிகளின் செயல்பாடுகள் எதிர்தரப்பினரின் எவ்வகையான தீவிரச் செயல்களையும் நியாயப்படுத்திவிடுவதோடு மொத்த
    சமுதாயத்தினின்றும் உங்களைத் தனிமைப்படுத்தி விடுகிறது. அதைத் தான் இந்தப் பதிவில் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். ஆனால், டி.என்.டி.ஜே / ஆர்.எஸ்.எஸ் போன்ற
    தீவிரத்தன்மையுடன் கடுங்கோட்பாட்டுவாதத்தை முன்வைக்கும் கும்பல்கள் பெருவாரியான மக்களால் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது.

    நீங்கள் அதை உணர்ந்து கொள்வதோடு, இசுலாமியரோ இந்துவோ கிருத்துவரோ.. பொதுவில் மக்களின் நலன் விரும்பும் அரசியல் இயக்கம் எதுவென்பதை அறிந்து அவர்களோடு
    இணைவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    After all…. வேலைக்குப் போய் உழைச்சாதாங்க அடுத்த வேளை சோறு… அல்லாவோ சிவனோ ஏசுவோ வந்து சோறு போடப்போறதில்லை. மறுமையை எவரும் பார்த்ததில்லை ரபீக்;
    அது உண்டோ இல்லையோ என்பதல்ல சராசரி மக்களின் கவலை. இம்மையில் தம்மை வாட்டும் அல்லல்களை யாரோடு சேர்ந்து எதிர்கொள்வது என்பதை மக்கள் தாமே
    தீர்மாணிப்பார்கள். சாதாரண மக்களுக்குத் தெரியும் இந்த எளிய உண்மை மாபெரும் மார்க்க ‘அறிஞர்களுக்கு’ விளங்குவதில்லை. அதனால் தான் ஏண்டா இந்தப் பயலுவ
    கம்யூனிஸ்டுகளோட போய் சகவாசம் வச்சிக்கறாங்களோன்னு தலைய பிச்சிக்கறாங்க. நீங்கள் தான் இது போன்ற ‘அறிஞர்களிடம்’ எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்..

    • //அதே நேரம் தமிழ்நாட்டில் இந்து பாசிஸத்தின் வடிவமாய் இருக்கும் ஜெயாவுடன் கூட்டு வைக்கும் பீ.ஜேவின் செயல்பாடுகளை விமர்சனக் கண் கொண்டு பார்ப்பதில்லை. //

      ம க இ கவோட சேர்ந்தா இடஓதுக்கீடு கிடைக்குமா? எம் பி எம் எல் ஏ சீட்டு கிடைக்குமா?

      அதி முக வுடன் கூட்டணி சேர்ந்ததால் முஸ்லீம்கள் ஒரு சில அங்குலமாவது முன்னேறிவிட்டனர் என்பது உமக்குத் தெரியாதா?

  33. தோழர் அலாவுனுக்கு வாழ்த்துக்கள்.

    என்றோ யாரோ ஒருவன் எழுதி வைத்ததைக்கொண்டு அதை ஆராயாமல் ஏன்?எதற்கு என்ற கேள்வி கேட்காமல் காட்டுமிராண்டிகளாக, இந்த நூற்றாண்டிலும் சொல்கிறார்கள் என்றால் சிரிப்புதான் வருது.
    ஒரு ஆண்னாதிக்கத்தையும்,கேடுகெட்ட அடிமைத்தனத்தையும் தீவிரமாக கற்பிக்கிறஒரு மதம் முஸ்லிம் மதம்தான்.இன்னும் பெண்ணடிமைதனத்தை அது பாதுகாக்கிறது.எதிர்கருத்துக்களை ஒடுக்குவதில் பழைய கிருத்துவ போப்பாண்டவர்களை நினைவுப்படுத்துகிறது.
    தினமும் வீண் டிவியை 8.30am பார்ருங்கள் இவர்களின் மதவெறியை தெரிந்துக்கொள்விர்கள்.இந்தியாவில் ஒடுக்கப்படும் முஸ்லிம்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தாலிபன்கள் ஆக்குவதே இவர்களின் லட்சியம் போல.
    கம்யுனிசம் வீழ்ந்துவிட்டது.தோற்றுவிட்டது.இனி இந்த உலகத்தை காப்பாற்றபோவது இஸ்லாம் தான் என்பது இந்த மரமண்டைகளின் எண்ணம். கண்ணா பூமிக்கு அன்றைவிட இன்று வயது அதிகம். முகமது நபியைவிட இப்பொழுது இருக்கும் மனிதன் சிறந்தவன்.அழிந்துக்கொண்டு இருக்கிற ஒரு நிலப்பிரபுத்துவ முறைகளின் மிச்சசொச்சம்தான் இந்த மதம். உலகை மீண்டும் கற்காலத்துக்கு கொண்டுபோகமுடியுமா?

      • ஹைதர் அலி இன்னும் இந்த கட்டுரை குறித்து நீங்கள் கருத்து சொல்லவில்லை. ஏன்? இல்லை மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியா?

        • அவரா எப்படி அதற்குள் சொல்லுவார்? தவ்ஹீதிலிருந்து இமெயில் வரவேண்டாமா!

  34. மிக அருமையான பதிவு. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர் எம்மதமாயினும் அவர்களுக்கான அரசியல் கம்யூனிசமே என்பது பல முறை பதியப்படவேண்டும்

  35. //எப்படி உங்களின் குழந்தைகள் கம்னியூனிஸ்ட்கள் இல்லையே அதுபோல் என்னுடைய குழந்தையும் முசுலிமல்ல//
    ஹைதர்,
    ஏட்டிக்கு போட்டியான உங்களது எழுத்து அதிர்ச்சியாக இருக்கிறது. உங்களுடைய குழந்தையை பள்ளியில் சேர்த்தபோது மதம் இன்னதென்று குறிப்பிட்டீர்களா? இல்லையா?

  36. அலாவுதீனை சமூக விலக்கம் செய்வதற்கு உள்ளூர் சமாத்திற்கு உரிமையோ அதிகாரமோ கிடையாது.இசுலாம் வலியுறுத்தும் ஐந்து கடமைகளான கடவுள் நம்பிக்கை, தொழுகை,நோன்பு,ஈகை,மக்க புனிதப் பயணம் ஆகியனவற்றை இசுலாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவர் செய்யவில்லை என்றால் இசுலாமிய நம்பிக்கையின்படி அதை கேள்வி கேட்கும் உரிமை ஆண்டவனுக்கு மட்டுமே உண்டு. பிற மனிதர்களுக்கு கிடையாது.ஏனென்றால் இவற்றை செய்யாமல் இருப்பது இறைவனுக்கு செய்த பாவங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன.பிற மனிதர்களுக்கு செய்த தீங்குகளுக்கு மட்டுமே மனிதர்கள் நியாயம் கேட்க முடியும்.

    நடைமுறையில் முசுலிம் சமாஅத்துகளை பொறுத்தவரை அந்த சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் என்ற ஒரு தகுதியே உறுப்பினராக இருக்க போதுமானது.மற்றபடி இசுலாமிய அறவியல்,ஒழுக்க நெறிகளை பேணி நடப்பவரா என்பது பற்றியெல்லாம் சமாஅத் கேள்வி கேட்பதில்லை.

    எனவே அலாவுதீன் மீது சமூகவிலக்கம் என்ற இந்திய குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குரிய நடவடிக்கையை உள்ளூர் சமா அத எடுக்காது என நம்புகிறேன்.அப்படியான நடவடிக்கை இசுலாத்திற்கும் எதிரானது.
    ”லக்கும் தீனுக்கும் வலியதீன்”என்ற திருமறை வசனம் ”உங்கள் மார்க்கம் உங்களுக்கு,எங்கள் மார்க்கம் எங்களுக்கு”என்று அறிவிப்பதன் மூலம் மனிதர்கள் அவரவர் நம்பிக்கையின்படி வாழ்வதற்கு உரிமை உண்டு என்பதே இசுலாமிய கொள்கை என தெளிவாக அறிவிக்கிறது.

  37. வினவு
    தவ்கீத் அமைப்பு மீது மிகுந்த வன்மம் கொண்டு இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது.
    கடவுள் மறுப்பு,இசுலாமிய நடைமுறைகளை பின்பற்றாதது ஆகியன இசுலாமிய குற்றவியல் சட்டத்தின்படி சாவுத்தண்டனைக்குரிய குற்றங்களல்ல.எனவே இசுலாமிய இயக்கமான தவ்கீத் அமைப்பு ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் அலாவுதீனுக்கு அப்படி ஒரு தண்டனையை வழங்கி விடாது.வழங்கவும் முடியாது. இப்போது சொல்லுங்கள்.
    \\ஒருவேளை தவ்ஹீத் ஜமாத் இங்கே ஆட்சியில் இருந்தால், அலாவுதீனை கல்லால் அடித்துக் கொல்வதா, தூக்கில் தொங்கவிடுவதா என்பது குறித்துதான் ஆன்லைன் பிஜே யில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்.//
    இப்படி எழுதுவது உங்களுக்கே மிகையாக தோன்றவில்லையா.

    \\1920களில் தென்னிந்தியாவுக்கு கம்யூனிசத்தை அறிமுகப்படுத்தியவரே பிறப்பால் முஸ்லீமான தோழர் அமீர் ஹைதர் கான் என்பவர்தான். அவர் போட்ட விதையில் முளைத்த சாத்தான்கள்தான் நாங்களெல்லாம். ஒருவேளை அன்று தவ்ஹீத் ஜமாத் இருந்திருந்தால், அவருடைய கதி என்ன, நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது//

    இப்போதுகூட எத்தனையோ இசுலாமிய சமூகத்தவர்கள் பொதுவுடைமை இயக்கங்களில் உள்ளனர்.அவ்வளவு ஏன்.பாசிச பா.ச.க.வில் கூட உள்ளனர்.அவர்களுக்கெல்லாம் ”நினைக்கவே நெஞ்சு நடுங்கும் அளவுக்கு என்ன கதியை”தவ்கீத் சமாத் ஏற்படுத்திவிட்டது.உங்களது இந்த கூற்றும் மிகைப்படுத்தல் அன்றி வேறில்லை.

    \\தவ்ஹீத் ஜமாத்தோ, த.மு.மு.கவோ அல்லது பிற இசுலாமிய அமைப்புகளோ திமுக, அதிமுக யாரோடு வேண்டுமானாலும் கூட்டு சேருவார்கள். அவர்களுக்கு ஓட்டுப் போடச்சொல்லி இசுலாமிய மக்களை பத்தி விடுவார்கள்//

    ”பத்தி”விட இசுலாமிய மக்கள் ஒன்றும் சிந்திக்கத்தெரியாத ஆடு மாடுகளல்ல.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் த.மு.மு.க.இசுலாமியர்கள் அதிகம் வாழும் தொகுதிகளிலேயே மோசமான தோல்வியை சந்தித்ததை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.உழைக்கும் மக்களே வரலாற்று நாயகர்கள் என்ற மார்க்சிய கருத்தை உங்கள் ஏடுகளை படித்தே நான் அறிந்து கொண்டேன் என்பதையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

    • vinavu group is another low class third grade group like any other political group trying to create low class contravarsies and make use to grow themselves like pmk party. so dont worry about these kind of articles…

    • திப்பு அவர்களே, பீஜே , தவ்ஹீது,தமுமுக போன்ற அமைப்புக்களை எந்த வழியில் நீங்கள் ஆதரிக்கிறீர்கள் ?..

      விளக்க முடியுமா ?..

      இன்று ஜிகாத் என்று கூப்பாடு போடும் இஸ்லாமிய அமைப்புகளின் முன்னாலைய நிலைமைக்கும் இன்று இந்த அமைப்புகளின் இன்றைய நிலைமைக்கும் என்ன வித்தியாசம்?..

      இவர்கள் விமர்னத்திற்கு அப்பார்ப்படவர்களா ?..

      இவர்கள் என்ன செய்தாலும் மதத்தின் பெயரால் அதனை சரி என்று கூறி விட வேண்டுமா ?.

      • செங்கொடி மருது அவர்களே,
        இந்த பின்னூட்டத்தில் நான் எழுதியுள்ள திறனாய்வுக்கு பதிலேதும் சொல்லாமல் விவாதத்தை மடை மாற்றுகிறீர்கள்.
        அலாவுதீன் திருமணம் குறித்த முதல் கட்டுரைக்கான எனது பின்னூட்டம் எண் 26 -ல் தவ்கீத் அமைப்பு பற்றி நான் எழுதியது.
        \\தவ்கீத் சமாத்தை பொறுத்தவரை இந்நிகழ்வு முழுவதும் அவர்களின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.மணமகன் கடவுள் மறுப்பாளர் என்று தெரிந்த பின்னும் தங்கள் புத்தகத்திலும் பதிவு செய்ய சண்டையிட்டதும்,மணமகனிடம் வாதம் செய்ததும்.சிவகங்கை மாவட்ட தவ்கீத் அமைப்பினரின் முதிர்ச்சின்மையை காட்டுகிறது.மணமகளின் தந்தை ஏதோ ஒரு வகையில் தவ்கீத் அமைப்புடன் தொடர்புடையவர் எனும்போது அவரது குடும்பத்தினரே தவ்கீத் பரப்புரையால் ஈர்க்கப்படவில்லை அதை ஏற்று செயல்படவில்லை என்பது தெளிவாகிறது.இது தமக்கு ஏற்பட்ட பின்னடைவு என்பதை அவர்கள் உணர வேண்டும்.//

        அடுத்து அலாவுதீனை சமூக விலக்கம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பற்றி நான் இந்த கட்டுரையின் பின்னூட்டம் எண் 36-ல் சமூக விலக்கம் செய்யக்கூடாது, செய்யவும் முடியாது.அது இசுலாத்திற்கும் எதிரானது என எனது வாதங்களை எழுதியுள்ளேன்.
        அவற்றையும் படித்துவிட்டு சொல்லுங்கள்.மதத்தின் பெயரால் என்ன செய்தாலும் திறனாய்வு இன்றி அவற்றை ஆதரிக்கிறேனா என்று.ஆனால் மக்கள் மீது மாளா காதல் கொண்ட பொதுவுடைமைவாதியான நீங்கள் ஒரு பிரிவு மக்களை ”பத்தி”விடுவது பற்றி ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்.

  38. சகோதரர் வினவு அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    பித்தலாட்டங்களை எந்தவித குற்ற உணர்வுகளும் இல்லாமல் துணிந்து செய்யும் உங்களை இனியும் வாசகர்கள் எப்படி நம்புவார்கள் என்று தெரியவில்லை.

    உங்கள் பித்தலாட்டத்தை சுட்டி காட்டிய பின்பும் வாசகர்களிடம் வருத்தம் தெரிவிக்காமல் இருப்பது என்ன விதமான நோய் என்றும் புரியவில்லை. ஸ்டாலினும், மாவோவும் இப்படிதான் நடந்து கொள்ள வேண்டுமென்று உங்களுக்கு சொல்லி கொடுத்தார்களா?

    இனி யார் உங்களை நம்ப போகின்றார்கள்? நீங்கள் எந்த பதிவை போட்டாலும் சரி, அந்த பதிவுகளில் யார் உங்களுக்கு ஆதரவாக பின்னூட்டமிட்டாலும் சரி, படிப்பவர்கள் அதனை சந்தேக கண்ணோடு தான் பார்ப்பார்கள்.

    அதெல்லாம் சரி, இந்த அளவு மக்களை ஏமாற்றும் நீங்கள் எந்த நம்பிக்கையில் மக்களை உங்களோடு வந்து விடுமாறு அழைக்கின்றீர்கள்? குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாத உங்களுக்கு புரட்சி செய்ய என்ன தகுதி இருக்கின்றது?…வெட்க கேடு…

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

  39. தோழர் வினவு, என்னுடைய பெயரில் வந்த பின்னூட்டத்தை மிகத்தெளிவாக ஜோடித்திருக்கிறீர்கள். கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி என நான் பின்னூட்டமிடவேயில்லை. அப்படி எப்படி அது மறைக்கப்பட்டது? வினவும் எல்லாரைப்போலத்தானா?

    என்னுடைய கருத்துடன் நான் லிங்க் கொடுத்த பின்னூட்டம் இது தான்

    வெளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சமாம்- தோழர் வினவு’க்கு மறுப்பு
    http://etiroli.blogspot.com/2010/10/blog-post_13.html

    இதையாவது மறைக்காமல் வெளியிடுங்கள்

  40. என் பெயர் பெரோஸ் .பாத்திமா & ஹம்ச ஆகிய முஸ்லீம் தம்பதியரின் மூன்றாவது மகன் நான் கோவை பகுதியை சேர்ந்தவன் தௌஹீத்வாதிகளிடம் ஒரு 4 கேள்விகள்
    1 அலாவுதீனின் திருமணத்தை எதிர்போரே எங்கள் கோவை பகுதியில் 100 க்கு 99 வரதச்சனை திருமணங்களே இனி அவர்களை என்ன செய்ய போகிறீர்கள்
    2 எங்கள் ஊர் அனைத்து ஜமாஅத் செயலாளர் ctc ஜப்பார் வருடா வருடம் பார்ப்பன ஜெ பிறந்தநாளுக்கு பாதம் பணிகிறோம் என போஸ்டர் அடிக்கிறாரே அதற்கென்ன செய்ய போகிறீர்கள்
    3 கோவை இரத்தினபுரி பகுதியில் ஜமாஅத் பொறுப்பில் உள்ள ஒருவரை (அவரின் இயற் பெயர் கூட யாருக்கும் தெரியாது)வட்டி பாய் என்றுதானே ஜமாதாரும் பகுதி மக்களும் விழிக்கின்றனர் அதற்கென்ன செய்ய போகிறீர்
    4 எல்லாத்துக்கும் மேலாக ஓ! இஸ்லாமிய ரச்சகர்களே கோவையில் குண்டு வெடித்த பொழுது 3 ஆண்டுகள் எந்த அமைப்பும் எட்டிகூட பார்க்காத பொது எங்கள் பகுதி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பாது காத்தது யாரு?
    தெரியவேண்டும் என்றால் வாருங்கள் கமூனிசத்தை ஆதரிப்பதால் இன்றளவும் என்னுடன் பிணக்கத்தில் இருக்கும் என் அன்னையிடம் கேளுங்கள் யாரென்று(குண்டு வெடித்த மறுநாளே கலவரக்காரர்களிடமிருந்து என் அன்னையை காப்பாற்றியவர்கள் cpm dyfi இளைஞர்கள்)
    நான் பொய்யான பெயரில் மறு மொழி அளிக்கவில்லை நீங்கள் கோவை பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
    நன்றி கொஞ்சமேனும் சுய பரிசோதனை செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் – பெரோஸ்
    இங்கயாவது எனக்கு பதில் சொல்லுங்க ப்ளீஸ்…………………….

  41. அலாவுதீன் எனும் மனிதர் அவரது விருப்பப்படியும் மணமகளின் விருப்பப்படியும்… அவர்கள் திருமணத்தை நடத்துகின்றனர்…

    அந்த திருமணத்தை கண்டு தண்டிக்க வேண்டும் என்பது எந்த நாட்டு சட்டப்படியும்… நியாயப்படியும் சரியான ஒன்றாக இருக்கப் போவதில்லை…

    இஸ்லாம் மதம் அலாவுதீன் என்பவரின் திருமணத்தை கண்டிக்க சொல்லியா இருக்கிறது?

    தனி மனிதர்களின் உரிமைகளுக்கு எதிராக, விருப்பங்களுக்கு எதிராக மதத்தை பயன்படுத்துபவர்கள் மத அடிப்படைவாதிகள்…

    திருமணம் என்பது தனி மனிதர்கள் தொடர்புடையது… அந்த மணமகனுக்கும்… மணமகளுக்கும் விருப்பம் மட்டுமே போதும்…

    இவர்கள் இஸ்லாமிய அப்பா அம்மாவிற்கு பிறந்த காரணத்தால் மட்டுமே… இவர்கள் இப்படித்தான் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்பது சர்வாதிகாரம்…

    மனிதர்களுக்காகதான் மதமே தவிர மதங்களுக்காக மனிதர்கள் இல்லை…

  42. அஸ்ஸலாமு அலைக்கும்,

    கம்யுனிஸ்ட்டுகள் சிந்திப்பார்களேயானால் இது அவர்களுக்கு உதவலாம்.

    குரான் மற்றும் நபிமொழியை படித்து பார்த்தால் இஸ்லாமிய கொள்கை வேறெந்த கொள்கையையும் (கம்யுனிசம் உட்பட) விட மேலானதென்று உங்களுக்கு புரியும். உங்கள் அறியாமையை போக்க கூடிய வைத்தியம் இஸ்லாம். உங்களை போன்றவர்களை எதிர் கொள்ள எங்கள் மார்க்கத்தினால் மட்டுமே முடியும். அதனால் தான் இன்றளவும் மக்களை மேலும் மேலும் கவர்ந்து தன்பால் அரவணைத்து கொண்டிருக்கின்றது…

    இஸ்லாத்தின் கொள்கைப்படி, ஒரு உண்மையான இஸ்லாமிய நாட்டில், சாதி கிடையாது, குழப்பம் கிடையாது, மொழி இன வேறுபாடு கிடையாது.

    ஒருவன் மற்றொருவனுக்கு சகோதரன். இறைவனின் பார்வையில் அனைவரும் சமம். இவனும் தனி நாடு கேட்க மாட்டான், அவனும் இவனை அடக்கியாள முனைய மாட்டான். இவன் அவனுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டேன் என்று சொல்லமாட்டான். இது எங்கள் மண் என்று சொல்ல மாட்டான். எல்லாம் இறைவன் கொடுத்தது. இது உனக்கும் எனக்கும் எல்லாருக்கும் சமம் என்று கூறுவான். அனைவரும் சந்தோசமாக இறைவன் காட்டிய வழி படி வாழ்வார்கள். யார் அப்படி வாழ்ந்து அதிக நன்மை செய்கின்றாரோ அவரே இறைவனுக்கு நெருக்கமானவர். சுவர்க்கவாதி.

    முஸ்லிமாகிய ஒருவன் முதலாளியாக இருப்பதால் அவன் உயர்ந்தவனாகி விடுவானா? அல்லது தொழிலாளி தான் தாழ்ந்தவனாகி விடுவானா?

    இஸ்லாத்தை பொறுத்தவரை, முதலாளி தான் முதலாளி என்பதால் சந்தோசமடையவும் மாட்டான்…தொழிலாளி தான் தொழிலாளி என்பதால் வருந்தவும் மாட்டான்.

    இங்கு வாழ்க்கை தரத்தை பார்த்து எவனும் உயர்ந்தவன் இல்லை.

    எவன் தெரியுமா உண்மையிலேயே உயர்ந்தவன், எவன் ஒருவன் பய பக்தியுடன் இருக்கின்றானோ அவன் தான். உண்மையான இறையச்சம் கொண்டவன் அடுத்தவனை என்றென்றும் நசுக்க நினைக்க மாட்டான். தன்னுடைய வளமான நிலைக்கு அடுத்தவரை கொண்டு வரவே நினைப்பான்.

    தூய்மையான இஸ்லாமை அனைவருக்கும் கொண்டு செல்லவே முனைப்புடன் செயல்படுகின்றோம். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வெற்றி பெறுவோம்.

    இந்த தொழிலாளி, முதலாளி என்பதெல்லாம் ஒரு show. அப்படி செய்கின்ற அரசியல் நிலைக்கவும் செய்யாது.

    கம்யுனிஸ்டுகளே சிந்தியுங்கள்…பொறுமையாக ஆழ்ந்து சிந்தியுங்கள். உண்மையை உணர்ந்து கொள்வீர்கள்.

    ஒரே ஒரு முறை குரானை திறந்த மனதுடன் படிக்க முன்வாருங்கள். aashiq.ahamed.14@gmail.com என்ற மெயில் ஐ.டிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். குரான் soft copy அனுப்பி வைக்கின்றேன்.

    உண்மையான இறைநம்பிக்கை மட்டுமே ஒருவனை நேர்வழியில் செலுத்தும்…

    நன்றி,

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    • சகோதரனா இருப்பான், சொர்கத்துக்கு போவான், சந்தோசமா இருப்பான்-ன்னு ஒரே ‘அவன்’ மயமா இருக்கே….’அவள்’ களையும் கொஞ்சம் லிஸ்டுல சேத்துக்கோங்க பாஸு. .

      • சலாம்,

        அண்ணனுக்கு என்னா அறிவு(?????????)…

        உங்கள் சகோதரன்,
        ஆஷிக் அஹ்மத் அ

      • அறிவுள்ள சகோதரா,

        நான் கேட்டதோட அர்த்தம் புரியலையா? கீழுள்ள குரான் 4 :3 ஆண்களுக்கு மட்டும் தானே சொல்லப்பட்டது.

        “அனாதைகள் விசயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடமையாக உள்ள அடிமைப் பெண்களை. இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. ”

        எல்லாரும் ஒண்ணுன்னு சொல்றவங்க, பெண்களுக்கும் அதைச் சொல்லியிருக்கலாமே, அடிமைகளுக்கும் அதைச் சொல்லியிருக்கலாமே?
        மொதல்ல, எல்லாரும் சகோதரன்னு சொல்றவனுக்கு எதுக்குயா அடிமை?

        • அதாவது ஏதாவது ஒரு தலைப்பை போட்டு ஒரு கட்டுரை போடவேண்டியது. அதுக்கு கீழே இஸ்லாத்தை பத்தி தப்பு தப்பா எழுத வேண்டியது. இந்த பதிலுக்கும் இந்த கட்டுரைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா? FULL குரானுக்கும் இங்கேயே விளக்கம் வேணுமாமா?

        • பிஸி பாய்,

          என்னோட பதில் கட்டுரைக்கானது அல்ல, மேலே உள்ள பின்னூட்டத்துக்கு. இங்க வந்து குரானுக்கு விளம்பரம் போட்டு போஸ்டர் ஓட்டினா கிளிச்சுத்தான் விடவேண்டியிருக்கும்.

          அப்புறம், இந்த வசனம் சம்மந்தமா பதிவு வந்தா மட்டும் விளக்கம் குடுத்துருவீங்க போல. ஏற்கனவே ஒரு பதிவுல குரான் 4 :3 -இன் விளக்கம் கேட்டு வெயிட்டிங்கில இருக்கு. இங்க பதில் சொல்ல வெக்கமா இருந்தா அங்க போயி சொல்லலாம்.

          லிங்க் கீழே.
          https://www.vinavu.com/2010/08/13/saudi-women-labours/

        • அடிமை முறை பற்றி குரான் சொல்லுதுnna எல்லாரும் அடிமை வைத்துக் கொள்ளுங்கல்னு அர்த்தம் இல்லை போர்க்கைதிகளை அடிமைகளாக்கி கொண்டு வருவது எல்லா அரசர்களிடமும் உண்டு. அடிமை முறை ஏற்கனவே இருக்கிற ஒரு சமுதாயத்துக்கு அறிவுரை கூற வரும் வசனம் அப்படி தான் வரும். போர்க்கைதிகளை வாடா என் சகோதரா என்று கட்டிப் பிடிக்க முடியாது. அவன் நம்ம இடுப்பில சொருகிட்டு போய்டுவான். சகோதரனே என்பது அன்புக்காக சொல்வது. விட்டால் சொத்தை எழுதி கொடுக்க சொல்வீர்கள் போலிருக்கே?

          ஒரு ஆண் நாலு மனைவிகளை வைத்து குழந்தை பெற்றால் அந்த குழந்தை எந்த அப்பனுக்கு பொறந்தது என்று சொல்லிவிட முடியும். உங்க பெண்ணுரிமைப்படி நாலு கணவர் இருந்தால் எவன் அப்பன்?

        • போரிடுபவன் தான் போர்க்கைதியாவான் . அவன் மனைவியையும் , மகளையும் எப்படி போர்க்கைதியாக்கலாம்? சரி போகட்டும், பெண்களைப் போர்க்கைதியாக்கினாலும், அவர்களை அடிமையாக்கி உறவும் கொள்ளலாம் என்று சொல்கிற மார்க்கத்தைத்தான் நீங்கள் அன்பை போதிக்கிற மார்க்கம் என்கிறீர்களா?

          இராக்கில் சந்தேகக்கைதியாக ‘அபு கிரைப்’ சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டு பல மாதங்களுக்குப் பின் சில இராக்கி தினார்களுடன் நடுத்தெருவில் இறக்கிவிடப்பட்ட அந்த சகோதரி பித்துபிடித்தவளாக வீட்டுக்கு வருகிறாள். என்னாச்சு என்று கேட்கும் போது அவள் சொல்கிறாள் – ‘அவர்கள் என்னைத் தொட்டு விட்டார்கள்’ .

          அந்தச் சகோதரியிடம் சொல்லிப்பாருங்களேன்… அபு கிரைப் சிறைவாசிகளிடம் சொல்லிப்பாருங்களேன் ஈழத்தில் வல்லுறவுக்கு ஆளான அந்தத் தாய்மார்களிடம் சொல்லிப்பாருங்களேன்… உங்கள் போர்க்கைதி வசனங்களை.

          அப்புறம், ஒரு ஆண் பல பெண்களை மணக்கலாம், ஆனால் பெண் செய்யக்கூடாது, ஏன்னா பிள்ளைக்கு அப்பன் யாருன்னு தெரியாம போயிடும்- ன்னு சொல்றீங்க. அதுதான் பிரச்சனைனா இப்போதான் DNA டெஸ்ட் இருக்கே. ஒருத்தனையே மணம் செய்தாலும், ஒரு பிள்ளைக்கு அப்பன் யாருன்னு அந்தத் தாய்க்குத் தான் தெரியும்.

          அடங்காத ஆசைக்காக பத்து பதிமூணு பெண்களை மணம் செஞ்சவங்களுக்காக நியாயம் வேற பேசுறீங்க, ஏன் உங்கள் மகளுக்கும் இதே நியாயத்தை சொல்வீர்களா? சொல்லமாட்டீர்கள், ஏனெனில் அந்தச் சகோதரி உங்களைச் செருப்பால் அடிப்பாள்.

        • அடடா! அடிமைப் பெண்ண ”கட்டிக்கண்ணு” தானே சொல்லிருக்கு ”வச்சிக்க”னு சொன்னா மாதிரி கொந்தளிக்கிறீங்களே! பார்க்க வசனம் திருமறை வசனம் 4.25 “உங்களில் எவருக்குச் சுதந்திரமான விசுவாசியான பெண்ணை மணமுடிக்கச் சக்தியில்லையோ? அவர்கள் விசுவாசியான அடிமைப் பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை மணமுடித்துக் கொள்ளலாம்.”

          அடிமைப் பெண்ணைக் கல்யாணம் கட்டினா அடிமை ஸ்டே்டஸ் மனைவி ஸ்டேட்டஸாக மாறாதா? உங்களுக்கு அது பொறுக்கவில்லையா?

          அன்னிக்காவது அடிமையை மனைவியாக்குகிறார்கள். இன்னிக்கு மனைவியை அடிமையாக்குகிறவர்கள் நம்முடன் இருக்கிறார்களே

          என் சகோதரி குரானை கற்றுணர்ந்தவள். டிஎனஏ டெஸ்ட் பத்தி நீங்கள் எழுதியதை படித்தால் இவ்வளவு மூளை மழுங்கியவர் எப்படி இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று தான் நினைப்பாள்.

          ஈராக்கை பாரு இலங்கைய பாருனு சொல்றதுக்கு பதிலா நீங்க டெய்லி தினத்தந்திய பாருங்க. மிருக் வெறி புடிச்ச மனுஸன் என்ன வேணாலும் செய்வான். எந்த நாட்டிலயும் செய்வான். எந்த மதத்திலயும் செய்வான்.

          பதிமுணு பொண்ணுங்கள கல்யாணம் பண்றாங்கனு கூசாம புளுகுறீங்களே இருந்துட்டுப் போகட்டும் கல்யாணம் தான பண்றோம் சின்னவீடு பெரியவீடு கூத்தியானு வச்சிக்கிடலை இல்லையா?

    • உங்களது இந்த பின்னூட்டம் எனக்கு வியப்பாக இருக்கிறது. அது, மக்குஇகவினர் என வசைபாடிய ஒருவரால் அதே மக்குஇகவினர் சிந்திப்பதற்காக ஒரு பின்னூடம் இடப்பட்டிருக்கிறதே என்பதற்காக அல்ல. இஸ்லாமிய அரசில் உயிர்வாழ காபிர்களுக்கு ஜிஸ்யாவை அருள்பாளித்த அந்த மகாத்தூயவனின் சமத்துவ பார்வையில் அமையவிருக்கின்ற அந்த இஸ்லாமிய அரசை எண்ணி வியப்பாக இருக்கிறது. ஒருவேளை அந்த இஸ்லாமிய அரசிற்கு நீங்கள் ஜனாதிபதி ஆவதாகக் கற்பனை செய்து கொண்டால், இந்திய மக்களின் துரோக தேசப்பிதாவிற்கு பிடித்த ஆட்சியாளரான, தன் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அண்டை நாட்டிலும் ஜிஸ்யாவை வசூலித்த உத்தமர் உமரின் வழியில் ஆட்சி புரிவேன் என்பதாக உங்களின் பதவிப்பிரமாணம் அமையலாம். பதவிப்பிரமானத்தை எண்ணி நீங்கள் ஆர்ப்பரிக்கலாம். ஆனால் அண்டைநாட்டு காபிர்கள் ஆர்ப்பரிக்கமுடியுமா!. உங்களின் உண்மையான இறையச்சம் ஜிஸ்யா வசூலிப்பதை தடுக்காது. ஒருவேளை அனைவரும் முஸ்லீமான பிறகு அமையவிருக்கும் அரசைத்தான் நான் கூறினேன் என்று நீங்கள் சறுக்கலாம். இறைவனின் பிடி நழுவிக்கொண்டும் சாத்தானின் பிடி இறுகிக்கொண்டும் இருக்கும் இவ்வேளையில் அது சாத்தியமில்லை. அது பற்றி உங்களுக்கு உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை.

      தவ்ஹீதும் தமுமுகவும் தங்களது மத மக்களுக்காக மட்டுமே போராடிக்கொண்டிருக்க மகஇகவினரோ எல்லோருக்குமாக போராடிக்கொண்டிருக்கின்றனர். உங்கள் மொழியில் show நடத்திக்கொண்டிருக்கின்றனர். இந்நிகழ்கால நிகழ்வுதான் நாளை சமத்துவ அரசு இஸ்லாமியர்களின் தலைமையில் அமையுமா? கம்யூனிஸ்டுகளின் தலைமையில் அமையுமா? என்பதற்கான ஒரு முன்னோட்டம்.

      • சகோதரர் கலை அவர்களுக்கு,

        அஸ்ஸலாமு அலைக்கும்,

        //அது, மக்குஇகவினர் என வசைபாடிய ஒருவரால்//

        நான் எப்போது எங்கே இப்படி கூறினேன் என்று தாங்கள் விளக்க முடியுமா?

        நன்றி,

        உங்கள் சகோதரன்,
        ஆஷிக் அஹ்மத் அ

      • சகோதரர் கலை அவர்களே,

        சலாம்,

        தங்களது பதிலுக்காக காத்திருக்கின்றேன். தாங்கள் எந்த அடிப்படையில் என் மீது குற்றம் சுமத்தினீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கின்றேன். பதில் சொல்லுவீர்களா? இல்லை நாங்களெல்லாம் போகிற போக்கில் அப்படி தான் சொல்லி விட்டு போவோம், எங்களிடம் நேர்மையெல்லாம் எதிர்பார்க்க கூடாது என்று கூறுவீர்களா?

        நன்றி,

        உங்கள் சகோதரன்,
        ஆஷிக் அஹ்மத் அ

        • ஆஷிக்,

          அத்திக்கடையான் தளத்தில் நீங்க இட்ட பின்னூட்டம்…

          //’புரட்சி’ என்ற பெயரில்…

          மூடக்கொள்கைகளில் இருந்து விடுபட்டு நல்லறிவு பெற்ற மக்களை தம் மூடக்கொள்கைகளினால் மூளைச்சலவை செய்து மீண்டும் அதே மூட நம்பிக்கை எனும் பழைய குப்பைத்தொட்டியில் போய் அவர்ளை தள்ளுகிறார்கள், இந்த ””மக்கு இக்கா மடையர்கள்”” அல்லது ‘புரச்சி கோமாளிகள்’.//

        • சகோதரர் கலை,

          சலாம்…

          இது என்ன புது நகைச்சுவையாக இருக்கின்றது. நீங்கள் கொடுத்திருக்கும் இந்த மறுமொழி நெத்தியடி முஹம்மது சொன்னதல்லவா? வேறொருவர் சொன்னதை நான் சொன்னதாக சொல்லுவது எந்த வகையில் நியாயம்?

          நன்றி,

          உங்கள் சகோதரன்,
          ஆஷிக் அஹ்மத் அ

        • //மறுமொழி நெத்தியடி முஹம்மது சொன்னதல்லவா//
          நெசமாலுமே நம்பிட்டேன் ஆஷிக்.

        • சகோதரர் கலை,

          சலாம்,

          உங்கள் பெயரில் வேறொருவர் பின்னூட்டமிடுகின்றார். கவனிக்கவும்.

          நன்றி….

          உங்கள் சகோதரன்,
          ஆஷிக் அஹ்மத் அ

        • //உங்கள் பெயரில் வேறொருவர் பின்னூட்டமிடுகின்றார். கவனிக்கவும்.//

          நெசமாலுமே இதையும் நம்பிவிட்டேன் நெத்தியடி!

        • சகோதரர் கலை,

          சலாம்…

          நீங்கள் யார் என்று காட்டியதற்கு நன்றி…

          உங்கள் சகோதரன்,
          ஆஷிக் அஹ்மத் அ

        • திரு ஆஷிக் அஹ்மத், உங்களிடம் நான் மேலே கேட்ட கேள்விக்கு பிசி பாய் என்பவர் பதிலளித்துள்ளார். அவரது பதிலோடு நீங்கள் முழுதும் ஒத்துப்போகிறீர்கள் தானே?

    • Fight non-Muslims
      This widely known verse orders Muslims to fight non-Muslims simply because they dont believe in the same God that Muslims do:

      “Fight those who do not believe in Allah, nor in the latter day, nor do they prohibit what Allah and His Messenger have prohibited, nor follow the religion of truth, out of those who have been given the Book, until they pay the tax in acknowledgment of superiority and they are in a state of subjection.”

      Qur’an 9:29
      This is a ultimate message telling in the qur’an that promoting TNTJ & TMMK…
      Alaudin realy is magic lamp.

  43. 22வது பின்னூட்டமான அன்னுவின் நியாயமான கேள்விகளுக்கு [i]செலக்டிவ் அம்னீஷியா[/i]வால் பாதிக்கப்பட்டுள்ள [b]வினவு[/b] எந்த பதிலும் தரவில்லை! என்பதை கலை/கார்க்கி/ஊரான் மற்றும் இன்னபிற ஜால்ரா அடிக்கும் கம்யுனிஸ்ட் கோ-மான்கள் கவனிக்க.

    அப்படியே மணமக்கள்/அவரின் பெற்றோரின் கருத்துக்களை தமக்கு சாதகமாகப் பெற்று காணொளியாக பதிந்தாலும் அவற்றால் அடிப்படை இறை நெறிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள இஸ்லாத்திற்கு எந்த இழிவும் இல்லை; மாறாக அடிப்படையற்ற கம்யூனிசப் போலிக் கொள்கைக்குத் தான் குந்தகம்.

    • அய்யா மாத்தியோசி அவர்களே,

      ”இஸ்லாத்திற்கு எந்த இழிவும் இல்லை” என்று உங்களையே சமாதானப்படுத்திக்கொண்டு பிறகு ஏன் ”செலக்டிவ் அம்னீஷியா”, ”ஜால்ரா”, ”கோமான்கள்” என்று ஆத்திரப்படுகிறீர்கள?. இஸ்லாத்தை இழிவு படுத்த வேண்டும் என்பது இந்கு விவாதப் பொருள் அல்ல. அலாவுதீன் செய்தது தவறு என்று உங்களைப் போன்றோர் வீண் வாதம் செய்வதாலேயே இந்த விவாதம் நீள்கிறது. மாறி வரும் உலகச் சூழலில் எல்லாமே மாற்றத்திற்குரியதுதான். அந்த மாற்றம் மனித குல நன்மைக்காக இருக்க வேண்டும் எனபதே மக்களை நேசிப்போரின் ஆசை. கொஞ்சம் மாத்தியோசிங்களேன். மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும்.

      ஊரான்

      • ஒருவர் செலக்டிவ் அம்னீஷியான்னு சொன்னா சாந்தம்; மற்றவர் சொன்னா ஆத்திரமா? உங்களின் செப்படி வித்தைகளை சுட்டிக்காட்டினால் வீண் வாதமா? நல்லாயிருக்கு உங்க கம்யூனல் நியாயம்!
        மாறி வரும் உலகச் சூழல்கேற்ப மாற்றிக் கொள்வதற்கு மனிதரால் இயற்றப்பட்டதல்ல; இறைவனின் நெறி என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.
        முதுகெலும்பிருந்தால் ஜால்ரா கோ-மான்கள், 22வது பின்னூட்டத்திற்கு வினவு பதிலளிக்க நிர்பந்தியுங்கள்.

        • மாற்றவே முடியாத ஒன்றில் இருந்துகொண்டு எப்படி மாத்தியோசிக்கமுடியும்?

  44. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் என்ன.. இங்கே இருக்கும் சமூகச் சூழல் என்ன… மனித சமூகம் எதிர்கொண்டு
    போராடி வீழ்த்த வேண்டிய எத்தனையோ அபாயங்கள் கண் முன்னே இருக்கும் போது.. இப்படி அம்புலிமாமாத்தனமாக
    “சொர்க்கவாசி… நரகவாசி….” என்னாங்க இது? இதெல்லாம் இப்ப ரொம்ப முக்கியமாங்க?

    எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பனுக்கு ஒரு வழின்னு சொல்வாங்க எங்க ஊர்பக்கம். இப்ப இசுலாமிய சமுதாயம்
    உலகளவிலும் இந்தியளவிலும் திட்டமிட்ட விசப்பிரச்சாரங்கள் காரணமாக தனிமைப்படுத்தப்படும் ஒரு சூழல் இருக்கும்
    போது, நீங்கள் பாசிஸ்ட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக இப்படி செய்வது இசுலாமியர்களுக்கே எதிரானது என்பதையாவது
    புரிந்து கொள்வீர்களா?

    சாதாரண உழைக்கும் இசுலாமியர்களின் பிரச்சினைகளும் உங்கள் பீ.ஜேவின் பிரச்சினையும் முற்றிலுமாக வேறு வேறானது.
    இன்னும் சொல்வதானால், முரண்பாட்டுக் கொள்வது. பாருங்களேன்… எதார்த்த வாழ்க்கையில் ஒரு முசுலீம் சந்திக்கும்
    பிரச்சினையை விட்டுவிட்டு எவருமே காணாத சொர்கம் யாருக்குன்னு ஒருத்தன் பேசுவது லூசுத்தனமா உங்களுக்கே தெரியலை?
    அந்த வகையில் பார்த்தால் சாதாரண உழைக்கும் முசுலீம்களுக்கு அணுக்கமானவர்கள் கம்யூனிஸ்டுகள் தான்.
    ஒரு வர்க்கமாகப் பார்க்கும் போது எங்கள் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் ஒன்றாக இருக்கிறது. இதை உணர்ந்துள்ள
    முசுலீம்கள் எங்களை நெருங்கி வருவதை பார்க்க பீ.ஜேவுக்கு சகிக்கவில்லை.

    ஒட்டு மொத்த இசுலாமியர்களுக்கெல்லாம் தானே கேள்வி முறையற்ற தண்டல்காரன் என்பது போன்ற தவ்ஹீத் ஜமாத்தாரின்
    போக்குகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் இந்துக்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வதற்கும் சாராம்சத்தில் என்ன வேறுபாடு இருக்கிறது?
    இப்படி ஒரு துருவத்தைத் தான் காக்கி டவுசர்கள் எதிர்பார்க்கிறார்கள் – டி.என்.டி.ஜேவின் செயல்கள் காக்கி டவுசரை எதிர்ப்பது
    போல ஆதரிப்பதாய் இருக்கிறது.

    பதிவை நிதானமான சிந்தனையில் இருக்கும் போது மீண்டும் ஒருமுறை வாசிக்கவும்.

  45. தவ்ஹீத் ஜமாத் இங்கே ஆட்சியில் இருந்தால், அலாவுதீனை கல்லால் அடித்துக் கொல்வதா, தூக்கில் தொங்கவிடுவதா என்பது குறித்துதான் ஆன்லைன் பிஜே யில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்…. it is government of TNTJ {pj} law

  46. தோழர்களே,
    அக்டோபர் பதினஞ்சு விசாரணை முடிஞ்சுதா? ரிப்போர்ட் ப்ளீஸ்…

    • கதை ரெடி பண்ண கொஞ்சம் டைம் கொடுங்கபா. அதுக்குள்ளே அவசரப்பட்டா கதை ஒழுங்கா வராது. வினவு செல்லம் நீ மெதுவா நல்லா ஸ்கிரிப்டா எழுதுமா.

  47. இஸ்லாமியர்களுக்கு போதுமான எதிரிகள் இருந்தாலும் புதிய எதிரிகள் தோன்றுகிறார்கள் (வினவை சொல்லவில்லை) உலகத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாமே….நல்ல வேலை இஸ்லாமியர்களை விமர்சிக்காமல் இருந்ததுக்கு நன்றி சொன்னாலும்…முறைப்படி நடக்காத திருமணத்தை அவர்கள் கண்டிதுள்ளர்கள் அவ்வளவுதான். கம்யுனிச கொள்கை உலகின் அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு அல்ல என்பதை நீங்கள் தெளிவாக அறிவீர்கள் அப்படியிருக்க அலாவுதீன் ஒரு அற்புத விளக்காக உங்களுக்கு தோன்றினாலும் அவரின் செயல்பாடு இஸ்லாமியர்களுக்கு ஒரு சங்கடம் தான்….

    • ஆம் நண்பரே ……எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வில்லை தான் ஆனால் இந்த முட்டாள்தனமான மதங்களை விட பெரும்பாலான பிரச்சினைகளுக்கு கம்யுனிசத்தில் தீர்வு நிச்சயம் உண்டு..

  48. feroz கேட்ட கேள்விக்கு இதுவரை தௌஹீத் ஜமாத்தார் பதில் சொல்லாமல் மௌனம் காப்பதின் பொருள் என்ன ?

  49. சில வாரங்களாக வினவு தவறான பாதையில் போவதாக எண்ணி இருந்தேன் ………ஆனால் வினவு சரியான பாதையில்தான் போகிறது…இந்த குல்லா போட்ட முல்லாக்களை திருத்தவே முடியாது…ஏதோ சலுகைகளுக்கு ஆசைப்பட்டு அப்பனோ…பாட்டனோ மதம் மாறி விட்டு….ஏதோ இந்த சீமந்த புத்திரர்களை [obscured] களிமண்ணில் செய்து உயிரூட்டி நேராக வானத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு ஏறிந்து விட்டதாக நெனப்பு….புரிந்து கொள்ளுங்கள் மக்களே எல்லா மதங்களுமே மனிதனால் உருவாக்கப்பட்டவையே…….ஹும்….1989 இல ரஷ்யா விட்ட பிழை..இப்ப கம்யுனிசம் மிதிபடுது…….ஒரு நாள் வெல்லும்.

  50. என்னொரு முட்டாள்தனமான மதம்……முதல் “எல்லாம்” வல்ல இறைவனாம்……பிறகு அவருக்கு போட்டியாக சாத்தானாம்….மனிதர்களை பலவீனமாக படைத்தாராம்,,,,,பிறகு தூதர்களை அனுப்பினாராம்….பலர் வழி தவற இறுதியவர் மூலம் மனிதர்களுக்கு மார்க்கத்தை பரப்பினாராம்…ஹையோ ஹையோ….இன்றைய டிஜிட்டல் ஏஜ் விஞ்ஞானிகள் நாளைய நானோ ஏஜ் மற்றும் எதிர்காலத்திலும் அறியவே முடியாதது தான் அந்த ‘supreme being ‘……அது நிச்சயமாக தனக்கு மேலாகவோ சமனாகவோ ஒன்றையும் கொண்டிருக்காது…maybe அப்படி ஒரு விஷயம் இல்லாமலே இருக்கலாம். ஆனால் அது நிச்சயமாக பெண்களை சோடி சோடியாக மணம் முடிக்க சொன்னதாகவோ போதை மருந்து புற்று நோய் போல் பரவி மக்களை மந்தத்துக்குள் மூழ்கடிக்க சொன்னதாகவோ இருக்க முடியாது. நிச்சயமாக. 😀

  51. @Abdul Rahman
    ////நம்மை படைத்தவன் ஒருவன். வணக்கத்துக்கு உரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. இதை நம்பாதவர்கள் , நிராகரித்தவர்கள் நரகவாசிகள். இதை நாங்கள் நம்புகிறோம். நம்மிடம் வேலை செய்பவர்கள் நமக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர எல்லாருக்கும் விசுவாசமாக இருந்தால் அதை என்னவென்று சொல்வது. நாமே இவ்வாறு என்னும் போது நம்மை படைத்த இறைவன் தன்னை நம்பாத நிராகரிப்பாளர்களுக்கு நரகம் என்பதில் தவறில்லை தானே.////

    தவறில்லைதான்……ஏன் அந்த எல்லாம் வல்ல படைப்பாளனுக்கு தன்னையே நம்பி நினைத்துக்கொண்டு இருக்கும்படி படைக்க என்னவாம்?
    நேரம் இல்லையாமா? எதுக்கு இந்த பலவீனம் ,சொர்க்க நரக பூச்சாண்டி?
    இதற்கு முதலில் பதில் வரட்டும்……

  52. அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானன்மும் உண்டாகட்டுமாக ..!!

    இங்கு நான் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன் இதன் பதிவின் மூலம் இஸ்லாமியர்களுக்கும் கம்யூனிஸ்ட் கலுக்குமாக திசை மாறி போகின்றது .நடப்பது தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் வினவு.இதில் எள்ளளவும் இஸ்லாத்திற்கு சம்பந்தம் கிடையாது.தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்தவர்கள் அவர்கள் அமைப்பை தவிர வெளியில் உள்ள இஸ்லாமியனாக இருந்தாலும் அவர்களை பொறுத்தவரை இறைநிராகரிப்பலரே.இன்றைய சூழலில் எங்களுக்காக தொடர்ந்து தோல் கொடுக்கும்,எங்கள் உரிம்மைக்காக போராடும் கம்யூனிஸ்ட்கலை நான் மதிக்கிறேன்.எண்ணம்மும் கருத்தும் திசை மாறாமல் பார்த்துக்கொள்ளவும் .

    தரேக் துபாய்

  53. விவாதம் திசை திரும்பி போகிறது இஸ்லாமியர்களுக்கும், கம்யூனிஸ்ட்கலுக்குமாக அது அப்படி இல்லை .நடப்பது தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் வினவு. இதில் எள்ளளவும் இஸ்லாத்திற்கு முஸ்லிம்களுக்கும்
    சம்பந்தம் கிடையாது. தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்தவர்கள் அவர்கள் அமைப்பை தவிர வெளியில் உள்ள இஸ்லாமியனாக இருந்தாலும் அவர்களை பொறுத்தவரை இறைநிராகரிப்பலரே. அதனால் உங்கள் விளக்கங்கள், விமர்சனங்கள் தவ்கீத் ஜமாஅத் குறித்ததாக இருக்கட்டும். இதில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எந்த சம்மந்தம் இல்லை.

    • அண்ணே புதிய தென்றல்,
      “தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்தவர்கள் அவர்கள் அமைப்பை தவிர வெளியில் உள்ள இஸ்லாமியனாக இருந்தாலும் அவர்களை பொறுத்தவரை இறைநிராகரிப்பலரே” ன்னு சொல்றாங்கன்னு நிறுவுங்க, உங்களுக்கு பொட்டு வைச்சதாச் சொல்லி வாங்குன காச விட அதிகமா கேட்டு tntj மேல வழக்கு தொடரலாம்.

      • மிஸ்டர் math புதிய தென்றல் என்ன எழுதி இருக்கு என்று நல்ல போகி படிங்கள் படித்துவிட்டு பிநோட்டம் பதில் சொல்லுங்கள். அலாவுதீன் எந்த முறைப்படி திருமணம் முடிப்பதும் அவரது சொந்த விருப்பம். அதில் இஸ்லாமிய பெரியவர்கள் கலந்து கொள்வது அவர்களது சுயவிருப்பம், அந்த அலாவுதீன் மற்றும் அவரது குடும்பத்தாரோ தவ்கீத்காரராக இருந்தாலும் சரியே, அது அவர்கள் இஷ்ட்டம். இஸ்லாம் ஒரு நம்பிக்கை ஒரு வழி அதை அதன் சட்டங்களை நம்பி செயல்படுவது செயல் படமால் போவது அவர்கள் அவர்கள் விருப்பம். இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. இதில் அணி சேர்ப்பதோ, கூட்டம் சேர்பதற்கு எந்த தேவையும் இல்லை. இது இயக்க வெறியின் உட்ட்ச்ச கட்டம். அலாவுதீன் நாளைக்கு இந்து மதத்திற்கோ, கிறிஸ்தவத்திற்கோ மாற முடியும் அது அவரது நம்பிக்கை சார்ந்தது. இதனால் இதை பெரிய விஷயம் போல் யார் சித்தரித்தாலும் இது ஒருவகையில் மத வெறியாகவே பார்க்க முடிகிறது. உண்மையிலே தவ்கீத் ஜமாஅத் நீங்கள் எழுதி உள்ளது போல் சொல்லி இருந்தால், நடந்திருந்தால் இது அவர்களுக்கு பொருந்தும்.

        • வேறவழியில்லாம ரெண்டுமுகமும் ஒண்ணுதான்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி.
          TNTJ சொல்வதா நீ எழுதியிருந்தது(TNTJக்கு எதிரான வெறியின் உச்சம்) தவறுதான்னு சொல்லிட்டுப்போவியா.
          அதவிட்டுட்டு லூசுத்தனாமான வெளக்கம் வேறு! ரொம்ப அறிவாளின்னு நெனப்பா? அடங்கு.
          பொட்டு வைச்சத தடுக்க திராணியில்லாம காசுவாங்கித் தின்னுட்டு இருக்கிறதைஎல்லாம் சொன்னா அசிங்கமாயிடும்.
          இதைக்கொஞ்சம் படி:
          http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/india_today/

        • உனது மற்றொரு முகமான puthiya thenral 24வது பின்னோட்டத்தில் 21-Oct-10 at 7:32 am நேரத்திலும் அதற்குமுன்னும் நான் பார்த்தபோது அங்கு நீ எழுதியிருந்ததைத்தான் வெட்டி,ஒட்டி TNTJகாரங்க அப்படி சொன்னாங்கன்னு நிரூபி, ஒன் சார்புல அவங்கமேல கேசுபோட்டு காசுவாங்கிதர்றேன்னு(ஏன்னா ஒனக்குத்தான்ஓசிக்காசுன்னா இனிக்குமே) முன்னாடி சொன்னேன். “நல்ல போகி படிங்கள் படித்துவிட்டு பிநோட்டம் பதில் சொல்லுங்கள்” எழுதுனபிறகு பாத்தா அப்படி எதுவுமே அங்க காணோம்! என்னய்யா செஞ்சே? நீயும் அவனுங்க ஆளா? இல்லேன்னா நீ எப்படி அவனுங்க சைட்ல ‘தகிடுதத்தம்’ செய்யமுடியும்!
          இனிமே screenshotதான் எடுத்து வைக்கணும். வாசகர்களா இவனுங்க கிட்ட சூதானமா இருந்துக்கங்க.

        • சுமைய்யாட தந்தை! (இப்படி சொன்னா போதுமா, இல்ல நௌஷாத், டீச்சர்ட கணவன்-ல்லாம் சொல்லனுமா?)
          //ABOOSUMAIYA: “தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்தவர்கள் அவர்கள் அமைப்பை தவிர வெளியில் உள்ள இஸ்லாமியனாக இருந்தாலும் அவர்களை பொறுத்தவரை இறைநிராகரிப்பலரே”Posted on 19-Oct-10 at 4:54 am//
          ன்னு சொல்றாங்கன்னு நிரூபி, உங்களுக்கு பொட்டு வைச்சதாச் சொல்லி வாங்குன காச விட அதிகமா கேட்டு tntj மேல வழக்கு தொடரலாம்.

      • math என்கிற பெயரில் எழுதும் நண்பரே நீங்கள் யாருன்னு எனக்கு தெரியாது ஒரு கருத்து வந்தால் கருத்துக்கு பதில் எழுதுங்கள். அதை விட்டு விட்டு சுயவிமர்சனங்கள் தேவையில்லை. நீங்கள் மட்டும்தான் உலகில் அறிவாளி மாதவன் எல்லாம் முட்டாள். நீங்கள் யாரா இருந்தாலும் உங்கள் உண்மை பெயரை சொல்லி எழுதலாம். என்னை பற்றி முகவரியோடு சொல்லும் நீங்கள் உங்கள் முகத்தையும் காட்டலாம். பெயரில்லா பிச்சை போல் சொல்ல வேண்டியது இல்லை. நீங்கள் வெறி கொண்டு நாகரிகம் இல்லாமல் எழுதியதில் இருந்து தெரிகிறது நீங்கள் யார் என்று. நீங்கள் காட்டி கொடுபவர்கள் என்று எல்லாரும் சொல்லும்போது நம்பவில்லை இப்ப விளங்குது உங்கள் லட்சணம்.

        • math நீங்கள் கருத்துக்கு பதில் சொல்லாமல் சுமையாவுடைய தந்தை, நவ்சாத், போட்டு வச்சான் காசு வாங்கினான்? நான் யாரு என்று வினாவில் உங்களிடம் யாராவது கேட்டார்களா? உங்களுக்கு என் மேல் விரோதம் இருந்தால் நாம ரெண்டு பெரும் பார்த்து கொள்ளலாம். நான் உங்களை சந்திக்க ரெடி. உங்களுக்கு வெறி தலைக்கு ஏறவில்லை என்றால் கருத்துக்கு பதில் சொல்லுங்கள். வெறி தலைக்கு ஏறிவிட்டது என்றால் உங்களை சந்திக்க நான் ரெடி அண்ணா. நீங்கள் யாரு என்று சொல்லுங்கள். உங்கள் திரு பெயர வினாவில் எழுதுங்கள் இல்லை போன் நம்பர எழுதுங்கள்.

  54. தோழர்களுகு செவ்வணக்கம், நல்லதொரு விவாதம் வளர்க வினவு ,
    தௌகிது ஜமாது நண்பர்கள் இதற்கு முன் தமுமுக வில் இருந்தார்கள்
    அப்பொழுது அவர்களுக்கு தெரிய வில்லய நாம் நரகவாசிகள் என்று .
    இப்பொழுது தௌகிது ஜமாது என்று ஆரம்பித்து இதுதான் சொர்ர்கவசிகள் இருக்கும் உண்மையான
    இஸ்லாமிய மதம் என்று சொல்லுகிறார்கள் அறிவு கெட்ட மடையன்கள் .
    communisham என்பது மதங்களை போன்ற நம்பிக்கை அல்ல
    அதை மதவாதிகள் புரிந்து கொள்ளுங்க

  55. math அண்ணன் நான் வினாவோட ஆளுதான் உங்கள மாதிரி உளவுத்துறையின் கைக்கூலி இல்லை. (math :என்னய்யா செஞ்சே? நீயும் அவனுங்க ஆளா? இல்லேன்னா நீ எப்படி அவனுங்க சைட்ல ‘தகிடுதத்தம்’ செய்யமுடியும்!இனிமே screenshotதான் எடுத்து வைக்கணும். வாசகர்களா இவனுங்க கிட்ட சூதானமா இருந்துக்கங்க.) math நீங்கள் “ரா” ஆளா? இல்ல CPCID. IB UDAIYA ஆளா? இவங்களிடம் இருந்து பணம் வாங்கல என்று உங்களுக்கு வருத்தமா?

  56. இந்தியா டுடையில் வந்த ஒரு பேட்டி ஆதாரமா எடுத்து போடும் சகோதரரே உங்கள் அறியாமையை எப்படி சொல்வது. இதே இந்தியா டுடே தான் முஸ்லிம்களை காலம் காலமாக தீவிரவாதிகள் என்று சித்தரித்து கருத்து போட்டார்கள். இப்ப நீங்கள் சார்ந்திருக்கும் ஒரு இயக்கத்திற்கு சாதகமா ஒரு பேட்டி போட்டால் அவன் பெரிய நல்லவன் மாதிரி. அதற்க்கு விளம்பரம் வேற. எங்கள் தலைவர் இப்படி கருத்து சொல்லி இருக்காரு என்று சொன்னால் போதும். அதை உடனே ஏதோ பெரிய நூறு சதவிதம் உண்மை செய்திகளை சொல்லும் ஒரு பத்திரிக்கையில் வந்தது போல். அதை மக்கள் ஆதாரமா எடுத்து கொள்வது போல சித்தரிக்க வேண்டாம். எப்போதும் ஒரே நிலைமை கடைபிடியூன்கள் சகோதரரே. தினமலர் , தின மணி எப்படியோ அது போல்தான் இந்தியா டுட.

    • பின்னூட்டங்கள்
      24.puthiya thenral
      55.aboosaumaiya
      aboosumiya
      61.saleem
      கூட இன்னும் ரெண்ட சேர்த்துக்க, ஆறுமுகம்னு ஏழாவது பெயர் கெடச்சிடும்.
      நீ என்ன ‘கோடீஸ்வரன்’ நிகழ்ச்சி தொகுப்பாளரா, நான் ரெடி, நீங்க ரெடியான்னு கேட்க?
      55.aboosaumaiya பின்னூட்டத்தில் நீ TNTJபற்றி சொன்ன அவதூறை( தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்தவர்கள் அவர்கள் அமைப்பை தவிர வெளியில் உள்ள இஸ்லாமியனாக இருந்தாலும் அவர்களை பொறுத்தவரை இறைநிராகரிப்பலரே
      Posted on 19-Oct-10 at 4:54 am ) உண்மைன்னு நிரூபி அல்லது முந்திரிக்கொட்டதனமா தப்பா சொல்லிட்டேன்னு ஒத்துக்க.அதவிட்டுட்டு… சும்மா உதார் விடுறே!
      இவ்ளோ பேசுற நீ உன் தலையில பொட்டு வைக்கும்போது மூளைய கழட்டி வைச்சுட்டா இருந்தே? அப்போ எங்கே போச்சு ஒன் வீரம்? திருந்துங்கடா.
      யாருக்கு வெறி தலைக்கு ஏறிடுச்சுன்னு நிதானமா உக்காந்து யோசி.
      நா ஒன்னும் TNTJகாரன் இல்ல; அத புரிஞ்சுக்கோ மொதல்ல. ஒன்னமாதிரி popular-frontகாரன் நல்லது சொன்னாலும் ஏத்துக்குவேன்.

      //மாதவன் எல்லாம் முட்டாள்//
      அப்டின்னு நா எப்பய்யா சொன்னேன்? வீணா ஏன் அவனை இழுக்குற 😉

      • சகோதரர் math அவர்களே அபூசுமையா என்ன தப்பா சொல்லிட்டார். (எங்கள் அமைப்பை தவிர வெளியில் உள்ள இஸ்லாமியனாக இருந்தாலும் அவர்களை பொறுத்தவரை இறைநிராகரிப்பலரே என்பதை நிருபிப்பாயா ) தர்ஹாவுக்கு போறவங்கள் யாரு? மௌலிது , கத்தம் பாத்திஹா, பண்றவங்கள் யாரு? இவர்கள் எல்லாரும் இணை வைகிறார்கள் என்பது உங்கள் சித்தாந்தாமா இல்லையா? காயல்பட்டினம் ஆலிம் ஒருவர் இப்ப தவ்கீத்ல இருக்காரா ஷிர்கில் இருக்காரா? அவர் காயல்பட்டினத்தில் தர்காவுக்கு முன்னாள் பாத்திஹா ஓதுவது போல் இணையதளங்களில் போட்டு நாரடிதீர்களே. ஷிர்க் முரசு புத்தகம் வேண்டுமா உங்களளுக்கு? இணை வைபவர்கள் யார்? நீங்கள் உங்கள் வாயால் கபிர் என்று சொல்லாவில்லை என்று சொன்னாலும் இணை வைபவர்கள் என்று வரிக்குவரி சொல்லி மற்றும் பேசி வருவது எல்லாரும் அறிந்ததே. இது இரண்டும் ஒரே அருத்தம் தான். சீயாக்கள் யாரு? சன்ன பெஷ்வர் யாரு? இவர்கள் பற்றி ஒரு மாத இதழ் பெட்டி எடுத்து போட்டதற்கே அவர்களை வழிகெட்டவர்கள் என்று சொன்ன கூட்டமாச்சே. நேர்வழியை விட்டு வழி கேட்டில் இருப்பவர்கள் யார்? அவர்கள் காபிர்களா இல்லையா? மத்த இயக்கங்களை பார்த்து வழிகெட்டவர்கள் என்று பேசி, எழுதியும் வரும் உங்கள் நிலைபடி வழிகெட்டவர்கள் காபிர்களா இல்லையா? கற்சிலைகளை வணங்குபவர்கள் மட்டும் தான் காபிரா? தர்ஹா வழிபாடு காபிர் இல்லையா? இப்ப கொள்கையை மாத்திடீன்களா? கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்களேன் சகோதரரே உங்களை பார்த்து நாங்கள் அப்படி சொல்லவில்லை நீங்கள் முஸ்லிம் சகோதரர்தான். அபூசுமையா சொன்ன கருத்துக்கு விளக்கம் கொடுங்கள் அதைவிட்டு ஏன் நீங்கள் அவர் சொந்த வாழ்கையில் உள்ளதை பற்றி அவர் குடும்பத்தை பத்தி அவர் பெயர் பற்றி வினாவில் எழுத காரணம் என்ன? நீங்கள் அவரோடு கொண்டுள்ள சொந்த பகையை நீங்கள் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை சார்ந்தவர் போல் காட்டி உங்கள் அரிப்பை தீர்கிரீர்கள் என்று நான் கருதுகிறேன்.

  57. math உங்கள் கருத்தை நாகரிகமாக சொல்ல உங்களுக்கு உரிமை உள்ளது. அடுத்தவர்களை பற்றி தரக்குறைவாக பேசும் உங்கள் நாகரிகம் என்னவென்று தெரியவில்லை. எனக்கு ஒன்றும் பெயரை மாற்றி எழுதும் அவசியம் இல்லை. நீங்கள் எந்த ஜமாத்தை சார்ந்தவர் என்பது முக்கியம் இல்லை. சொல்லபட்ட செய்திகளுக்கு நீங்கள் வந்து மறுமொழி சொல்லியதால் அது சம்மந்தமாக உங்களிடம் கேட்கப்பட்டது. பதில் இருந்தால் சொல்லுங்கள். அதை விட்டு விட்டு ஒருமையில் எழுதுவது நாகரிகம் இல்லாமல் எழுதுவதை உங்களுக்கு தெரியும் என்றால் அதை உங்கள் சொந்த பெயருடன் எழுதுவது சால சிறந்தது. நான் ஒன்றும் வீரன் என்று சொல்லவில்லை. நீங்கள் நல்ல நாணயம் உள்ள மனிதராக இருந்தால் அடுத்தவர்களை பற்றி சுயவிமர்சனம் செய்பவர்களா இருந்தால் பெயரை சொல்லிவிட்டு செயுங்கள் அது தான் நீதி. உங்களுக்கு நான் நிறைய விளக்கம் கொடுக்க முடியும் தனிப்பட்ட முறையில். எனது சொந்த வாழ்கையில் நடப்பதை பற்றி வினாவில் விவாதிக்க எனக்கு தேவையில்லை. நான் எழுதியது எந்த தனி நபரை பற்றியும் இல்லை. கொள்கை சார்ந்து எழுதிள்ளேன். அது சார்ந்து விளக்கம் கொடுக்க முடிந்தால் கொடுங்கள். நீங்கள் தான் முந்திரி கோட்டை மாதிரி நிதானம் இல்லாமல் கருத்து சொல்லி இருக்கீங்கள். மத்தவன் என்பது மாதவன் என்று தவறுதலாக tipe ஆகி உள்ளது மன்னிக்கவும். நான் ஒன்னும் முந்திரி கொட்டை மாதிரி கருத்து சொல்லவில்லை. எனக்கு என் கருத்தை சொல்ல உரிமை உள்ளது அதற்க்கு பதில் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு அநாகரிகமாக சுயவிமர்சனம் தேவை இல்லை. உங்கள் சுயவிமர் சனத்துக்கு பதில் இருக்கிறது அதை நான் வினாவில் பகிர தேவையில்லை. உங்களுக்கு தேவை என்றால் புதிய தென்றல் வந்து கேளுங்கள். நன்றி.

  58. மாத் வறட்டு வாக்குவாதம் செய்கிறார்.அவரிடம் விவாதம் செய்வது தேவை அற்ற ஒன்று ,தா தா ஜ செய்த கொலையையும் சரி என்று சொல்லும் ,பி ஜே வணக்கி…பி ஜே தான் அதிமுக்க வுடன் இருந்த பொழுது ஜே ஜே புகழவில்லைய ,திமுகவிடம் வந்தவுடன் கலைங்கரை புகழவில்லைய ,இன்று மன்மோஹனை பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய மாநாடே நடத்த வில்லைய.

    தமுமுக ரொம்ப நல்லவர்கல்ன்னு 2004 வரை சொல்லாத நேரம் இல்ல ஊரு இல்ல .இன்று என்ன சொல்லுறார்.அப்பறம் பாக்கர் நல்லவர்ந்ண்டாறு இப்போ கெட்டவர் பொம்பள பொருக்கி என்கிறார்.
    கம்யூனிஸ்ட் குற்றம் சுமத்தும் முன் ,சொந்த மாததுக்காகவும் நாட்டுக்காகவும் எதுவமே செய்யாமல் ,கூட்டம் கூடி பொழப்பு நடத்தும் பிஜே மற்றும் பிஜேபி கூட்டத்தை சேர்ந்தவர்களே ,இல்லாதவனுக்கும் ,அடிமைக்கூட்டத்திர்க்கும் சொந்தம் பந்தம் என்று எதையும் பாராமல் முஸ்லிம் உனக்காவும் இல்லாதவனுக்காக போராடும் கம்யூனிஸ்ட் பழிக்காதே.

    தலைவர் என்றால் யார் தெரியுமா நல்லக்கண்ணு வாழும் எடுத்துக்காட்டு தலைவர் ,ஜோதி பாசு ,ஜீவா ,சுயநலம் இன்றி பொதுநலம் கருதி மனித இனத்திற்காக போராடும் தலைவர்கள் இருக்கும் கட்சி,உங்களை போல் கொழப்பம் விளைவித்து பொழப்பு நடத்தும் கூட்டம் கிடையாது நாங்கள்

    தாதாஜா மக்களை எமாட்ட்ராதே ,கம்யூனிஸ்ட் பகைக்காதே

    siva

  59. ராஜன் திருமண விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதால் வினவு இதில் தலையிட்டு அமைதியை கொண்டு வர வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.

Leave a Reply to நந்தன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க