
இந்தியாவின் முக்கியமான தொழில்துறையும், அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதுமான ஜவுளித்துறை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பருத்தி நூலிழையின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதே இந்த நெருக்கடிக்குக் காரணம். இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒரு கேண்டி (350 கிலோ) 23,000 ரூபாயாக இருந்த பஞ்சின் (சங்கர் 6 என்ற பருத்தி ரகம்)சந்தை விலை, இன்று 40,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
பருத்தி விலை உயர்வின் விளைவாக நூல் விலையும் உயர்ந்திருக்கிறது. பருத்தி விலை உயர்வைக் காரணம் காட்டி நூற்பாலை முதலாளிகள், நூலின் விலையை மேலும் கூட்டி விற்பதால் ஜவுளித்துறை கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இந்த வரைமுறையற்ற விலையுயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி கைத்தறி நெசவாளர்களும், சிறு விசைத்தறி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் உண்ணாவிரதப் போராட்டங்களையும், தொழில்நிறுத்தப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்திய ஜவுளித்தொழில் சம்மேளனம், தென்னிந்திய ஜவுளி ஆலைச் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முதலான பெரும் ஆலை அதிபர்களின் சங்கங்கள், பஞ்சு விலையைக் குறைக்கும் பொருட்டு பஞ்சு ஏற்றுமதிக்கு உடனே தடைவிதிக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். முதலாளிகளின் கோரிக்கை மனுவை அப்படியே நகல் எடுத்து அதன் கீழே கையொப்பமிட்டு, செப்.23 அன்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார், கருணாநிதி.
பஞ்சையும், நூலையும் ஏற்றுமதி செய்து விட்டால், துணியையும் ஆயத்த ஆடையையும் நாங்கள் எப்படி ஏற்றுமதி செய்ய முடியும் என்பதே இந்த ‘சுதேசிகளின்’ கவலை.
இந்த ஆண்டு இந்தியாவின் மொத்த பருத்தி (பஞ்சு) உற்பத்தி 295 இலட்சம் பேல்கள். (ஒரு பேல் என்பது 170 கிலோ). இதில் இந்திய மில்களின் தேவை 270 இலட்சம் பேல்கள். இதில் தமிழகத்திலுள்ள நூற்பாலைகளின் தேவை மட்டும் 100 இலட்சம் பேல்கள். உள்நாட்டு மில்களின் தேவைக்கு அதிகமாகப் பஞ்சு உற்பத்தியாகியிருக்கிறது என்ற போதிலும் பஞ்சின் விலை உயர்ந்து விட்டதால், ஏற்றுமதிக்குத் தடை விதிக்குமாறும், ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சின் மீது ஒரு கேன்டிக்கு 10,000 ரூபாய் சுங்கத்தீர்வை விதிக்குமாறும் கோருகிறார்கள், இந்திய ஜவுளி ஆலை அதிபர்கள்.
சந்தைதான் விலையை முடிவு செய்யும் என்றும், பருத்தி விலை குறைவாக இருக்கும் போது ஆதாயம் அடைந்த ஆலை அதிபர்கள், இப்போது விலை உயர்வால் விவசாயிகள் பயனடையும் போது அதைத் தடுப்பது நியாயமல்ல என்று விவசாயிகளின் நண்பனைப் போல முழங்குகிறார்கள், முன்பேர வர்த்தகம் நடத்தும் சூதாடிகள்.
“பருத்தி விலையேற்றத்தின் ஆதாயம் விவசாயிகளைச் சென்றடையவில்லை. 2007-ஆம் ஆண்டு முதல் பருத்திச் சந்தையில் முன்பேர வர்த்தகத்தை அரசு திறந்து விட்டுள்ளதால், பன்னாட்டு வர்த்தகச் சூதாடிகள் அடுத்த ஆண்டுக்கான விளைச்சலையும் முன்பேர வர்த்தகத்தின் மூலம் இப்போதே கொள்முதல் செய்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த ஆண்டின் துவக்கம் முதல் பருத்தி ஏற்றுமதியின் மீது இருந்த கட்டுப்பாடும் அகற்றப்பட்டுவிட்டதால், வர்த்தகச் சூதாடிகள்தான் ஏற்றுமதியால் ஆதாயம் அடைகிறார்கள் என்று சூதாடிகளைச் சாடுகிறார், இந்திய ஏற்றுமதியாளர்கள் அமைப்பின் தலைவர், ஏ.சக்திவேல்.
எடுத்துக்காட்டாக, சங்கர்-6 என்ற பருத்தி வகைக்கு அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,850. பெரும்பாலான விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை இதுதான். ஆனால், அதன் சந்தை விலையோ இன்று 4,500 ரூபாயைத் தாண்டி விட்டது. எனினும் கொள்முதல் விலையை உயர்த்த மறுக்கும் அரசு, பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காகத்தான் பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்திருப்பதைப் போல நடிக்கின்றது.
இப்போது முன்பேர வணிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் நூற்பாலை முதலாளிகளும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விதர்பா பருத்தி விவசாயிகள் கோருவதைப் போல பருத்திக்கான ஆதரவு விலையை 4,500 ரூபாயாக உயர்த்துவதை ஏற்றுக் கொள்வார்களா? பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையிலும் பருத்திக்கான ஆதரவு விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளித்தொழில் முதலாளிகள்தான். ஏற்றுமதியைத் தடுக்க சுங்கவரி போட வேண்டுமாம். ஆனால் உலகச் சந்தையில் விலை குறைந்திருக்கும் போது, இவர்கள் பஞ்சை இறக்குமதி செய்து உள்நாட்டு பருத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்களாம். அதற்கு மட்டும் சுங்கத்தீர்வை விதிக்கக் கூடாதாம்.
சர்வதேச அளவில் ஜவுளி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் சீனாவில் ஜவுளிக்கான உள்நாட்டுச் சந்தை விரிவடைந்திருப்பது, டாலருக்கு எதிராக சீன நாணயத்தின் மதிப்பு உயர்ந்திருப்பது போன்ற பல காரணிகளால் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், இந்திய ஜவுளித்துறை தற்போதைய மதிப்பான 3.27 லட்சம் கோடியிலிருந்து 2020-இல் 10.32 லட்சம் கோடிகளாக உயரும் என்றும் நாக்கில் நீர் சொட்டக் காத்திருக்கிறார்கள் இந்திய முதலாளிகள். இந்தக் கொள்ளை இலாபத்தை அறுவடை செய்வதற்குப் போதுமான பருத்தி குறைந்த விலையில் தங்களுக்குத் தேவைப்படுவதைத்தான், ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள் ‘உள்நாட்டுத் தேவை’ என்று சித்தரிக்கின்றன.
நம் மக்கள் தொகையில் 80 கோடிப் பேருடைய ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய். இந்த மக்களால் ஆண்டுக்கு 4 செட் வேட்டி, சேலை, கால்சட்டை, மேல்சட்டை, உள்ளாடைகள் வாங்க முடியுமானால், இந்தியாவின் சந்தை இவர்கள் தேடித் தவமிருக்கும் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆனால், ஜவுளி ஆலை முதலாளிகள் உள்நாட்டு உழைப்பாளி மக்களின் நுகர்வைப் பற்றிக் கவலைப்படவில்லை.
தங்களுடைய நலனை மக்களின் நலனாகச் சித்தரிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு மக்கள் தேவைப்படுகிறார்கள். விசைத்தறி நெசவாளர்களையும், ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களையும் கொத்தடிமையாக்கி, 12 மணி நேரத்திற்கும் மேல் கடுமையாகச் சுரண்டும் இந்தக் காருண்யவான்கள் பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தாவிட்டால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையிழப்பும், தற்கொலைகளும் நிகழும் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். முதலாளி வர்க்கத்தின் இந்த மோசடியை அம்பலப்படுத்தாமல், தொழிலாளி வர்க்கத்தை நிபந்தனையின்றி முதலாளிகளின் பின்னே அணிவகுத்து நிற்க வைக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.
விளைவு, “ஆடை ஏற்றுமதிதான் உங்களுக்கு வேலையைக் கொடுக்கும்” என்று கூறும் ஜவுளி ஆலை முதலாளிகளின் மோசடியில் தொழிலாளர்களும், விசைத்தறி நெசவாளர்களும் மயங்குகிறார்கள். பருத்தி ஏற்றுமதிதான் உங்கள் பஞ்சத்தைப் போக்கும் என்று கூறும் அரசின் சூதுக்கு விவசாயிகள் பலியாகிறார்கள். இந்தப்புறம் வீசினால் தொழிலாளிகளையும், அந்தப்புறம் வீசினால் விவசாயிகளையும் வெட்டும் கத்திதான் புதிய தாராளவாதக் கொள்கை என்பதை மக்கள் உணரும் போது மட்டுமே இந்த மறுகாலனியாக்கத் திணை மயக்கங்கள் மறைந்தொழியும்.
__________________________________
– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2010
__________________________________
ஜவுளித் தொழில் நெருக்கடி: முதலாளிக்கா, தொழிலாளிக்கா?…
பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனால் தற்கொலை செய்து கொண்ட சூழலிலும் பருத்திக்கான விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளி முதலாளிகள்தான்….
எந்த துறையும் முதலாளிகளின் தரப்பு நியாயத்தை மட்டுமே நம் முதலாளித்துவ அரசு நோக்குவதால் ஏற்படும் பிரச்சினைகள். அவர்களுக்கு ஓட்டு போடும் உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை மறுக்க அரசுக்கே உரிமை இல்லை…
இங்கு நடக்கும் பல விசயங்களை எடுத்து வைக்க முடியும். ஆனால் இன்று வரைக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றுக்காக பயந்து கொண்டு ஒன்று படாமல் இருப்பது தான் அரசியல்வியாதிகளுக்கு இறுதியில் லாபமாக இருக்கிறது,
நூற்பாலைகளின், பிரச்சனைகளை வினவு அலசவில்லை!
கடந்த 3 வருட காலமாகவே, கடுமையான மின் பற்றாக்குறையின் காரணமாக, தமிழக நூற்பாலைகளில், 55 – 60 சத உற்பத்தி மட்டுமே! ( பகலில் 2 – 3 மணி நேரமும், மாலை 6 – 10 பீக்கவர் வெட்டு: மீதியுள்ள நேரத்தில் 20 – 40 சத வெட்டு).
தமிழகத்தில் தான் நாட்டின் 50சத நூற்பாலைகள் உள்ளது! பஞ்சு ஸ்டாக் வைக்கும் திறன் கொண்ட 10 சத மில்கள், கடந்த 2 ஆண்டுகளாக, நல்ல லாபம் அடைந்துள்ள போதிலும், மீதியுள்ளவை , பஞ்சு விலையேற்றத்தாலும், மின் பற்றாக்குறை காரணமாகவும், கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன!
கடந்த 2 – 3 ஆண்டுகளில்,விவசாயிகளுக்கு பருத்தியின் விலை 20ரு இருந்து, தற்போது 42ரூபாயாக உயர்ந்துள்ளது!
உலக மார்க்கெட்டில்,நிலவும் விலையை விட 10 சத விலை அதிகமாகவே,இந்தியாவில் பஞ்சின் விலை உள்ளது!
விவசாயிகளின் நலம் காக்க, பஞ்சு ஏற்றுமதி தவிர்க்க இயலாது! இந்தியாவில் ஆண்டு முழுவதும், பருத்தி வரத்து இருப்பதில்லை! 90 சத வரத்து முழுவதும், அக்டோபர் முதல் ஜனவரி வரையிலேயே வந்து விடுகிறது! இதுவே பதுக்கலுக்கும், விலையேற்றத்திற்கும், காரணமாகி விடுகிறது!
எந்த ஒரு மூலப் பொருளிலும், விலை ஏற்றிறக்கம், சகஜமெனினும், பருத்தி/பஞ்சு விலை, தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது!
பஞ்சு பதுக்கலை சமாளிக்க, பஞ்சு ஏற்றுமதி செய்ய, தனியாருக்குத் தடை விதித்து, இந்திய பஞ்சு கழகத்தின் மூலமாக, மாதவாரியாக பிரித்து ஏற்றுமதி, செய்தல் வேண்டும்!
rightly said
அப்படியா சொல்லவே இல்ல…அப்புறம்….சாப்டாச்சா…
வினவு அண்ணே ,
ஒரு சந்தேகம் வெளிநாட்டில் நூல் விலை குறைவா இருந்தா இறக்குமதி செய்துக்கிறாங்கன்னு சொல்லப்பட்டதற்கு ஏதும் ஆதாரம் இருக்கா?
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க போகிறார்கள் திருப்பூரில் தீருவு என்ன சொல்லுங்கண்ணே –
வினவு தீர்வு சொன்னா அத இம்பிளிமெண்ட் பண்ணிடு(வீ)வாங்களா? சொல்லுங்க நொண்ணே.. சாரி அண்ணே…
கட்டுரை பிரச்சனையின் அடிப்படையான LPG பற்றி பேசுகிறது.
நூல், ஜவுளி, பின்னலாடை முதலாளிகள் ஏற்றுமதியில் கோடிகளில் புரள தொழிலாளர்களை 12மணி நேரம், 14மணி நேரம் சுரண்டுவதை கேள்வி கேட்கிறது.
பஞ்சு விலை ஏறிடுச்சுன்னு எதிர் தரப்பபினர்களுக்காக (முதலாளிகளுக்காக) வருத்தப்படும் தொழிலாளர்களை நட்பு அணியான விவசாயிகளின் தற்கொலைக்கு வருத்தப்படவும், அவர்களுக்காக போராடவும் அழைக்கிறது.
இத பத்தி ஏதாவது சொல்லுங்க அண்ணே!
உங்க மார்க்ஸிய அறிவ ரெண்டு கரண்டி எடுத்துவுடுங்க…
பிரச்சனைகளை ஆராய்ந்தால் போதும்
என்பது சூப்பர் அனுகுமுறையாக இருக்கே அண்ணே.
என்ன செய்யலாம் என்றால் விவசாயிகளோடு சேருங்கள் என்கிறீர்கள்
சரி சேரலாம் .
பின்னலாடை பெரும் ஆபத்தை சந்தித்து
உள்ளது இதற்கு என்ன செய்யலாம்
என்பதற்கு தீர்வு சொன்னா இம்லிமெண்டு செய்வீங்களான்னு கேட்கிரீங்க
அப்போ பிரச்சனையை மட்டும் பேசி
என்னாக போகுது அதான் எங்களுக்கு
தெரியுமே
//சொல்லுங்க நொண்ணே.. சாரி அண்ணே…//
எரிச்சலா இருக்கா அப்படித்தான் இருக்கும் ஏன்னா வினவ மட்டும்தான் செய்வீங்க நீங்க அதான் இந்த எரிச்சல்
Naanga Enna Pannanumnu Ninaikkireenga
Mr Thiyagu ?
எரிச்சலா எனக்கா??
ஹி ஹி ஹி…
சிரங்கு, சொறிய சொறிய சுகமாத்தான் இருக்கும்! கையை எடுத்தா பிறகு தான் ரண வேதனை!
இப்படித் தான் புண்’ணானதையும் பத்தி கவலைப்படாம கைய எடுக்காம சொறியனும்… நல்லா சொறிங்க!
ஆனா, சொறிஞ்ச கைய எங்க பக்கமா எடுத்துட்டு வர்ரீங்க பாருங்க…
அதான், பிரச்சனை எங்களுக்கு!
//Naanga Enna Pannanumnu Ninaikkireenga
Mr Thiyagu ?//
எங்கங்க மரியாதை பலமா இருக்கு !
நீங்கன்னா இந்த கட்டுரை எழுதியவர்
என்ன தீர்வு சொல்கிறார் என்பதும்
இந்த பிரச்சனை ஏற்கனவே இருக்கிறது
அதை வியாக்கியானம் மட்டும் செய்தால் போதுமா என்பதும் எனது கேள்வி
//உலகின் அனைத்து தத்துவஞானங்களும்
இந்த உலகை பல்வேறுவிதமாக வியாக்கியானம் செய்கின்றன ஆனால் அதை மாற்றுவதுதான் முக்கியமானது //
என்று காரல்மார்க்ஸ் சொல்லியிருக்காரே
Aiyaiyo..
Marx appadiyaa Solliyirukkiraar ?
_
intha Visayam ivvalavu Naalaa Engalukkellaam Theriyaama Pooche !
_
Katturai Ezuthina Thozarukkum,
Athai Veliyitta Vinavu Thozargalukkum Kooda Therinjirukka Vaaippillainu Ninaikkiren Ethukkum puja vukku Oru
Post Cardla Ezuthi Poodunga.
_
Appuram,
Tiruppurla intha Visayam Ungalukku Mattum Thaan Theriyumaa ?
aamaanna, athai Appadiye Oru Kalvetla Sethukku Athukku Pakkaththileye Neengalum Utkaarnthukkanga Appa Thaane Tirupur Vaasigalukku Visayam Puriyum.
_
Ennangnaa Naan Cholrathu Sari Thaanung ?
அடடே ரொம்பநேரமா நல்லாத்தானே பேசிட்டு இருந்தாரு
நாந்தான் தப்பா நினைச்சிட்டேனோ
————————-
சரி விடுங்க எந்திரனை கேட்டா சூப்பரா பேசுவீங்க
மெய் உலகத்தை கேட்டால் கிண்டல் செய்வீங்க
—————-
நடத்துங்க நடத்துங்க உங்களுக்கு தெரிந்ததை எழுதி இப்படியே ஓட்டுங்க
தியாகு ஒரு ஓடுகாலி அவரிடம் என்ன விவாதம் வேண்டிகிடக்கிறது.
அவர் பாட்டுக்கு சுகுணா->அ.மார்க்ஸ்->சோபா சக்தி-> பிரான்ஸ்->கூட்டுக்கவி அப்படின்னு போயிட்டாருல்ல, விட்டுது சனியன்னு போவீங்களா?
ஓடுகாலி தியாகு, வெட்டியா பேச்ச வளக்காம உங்க பிராண்ட் தீர்வை எழுதிட்டு ஜீப்புல ஏறி போயிட்டே இருங்க. OK
சுகுணா->அ.மார்க்ஸ்->சோபா சக்தி-> பிரான்ஸ்->கூட்டுக்கவி அப்படின்னு )))))
சகா, இங்க கூட்டுக்கவியென எழுதியிருப்பது எழுத்துப்பிழைதானே :)?
கவிராஜா… க.க.க போங்கள்!
அலோ மிஸ்டர் முத்து நான் ஓடு காலியா ஓடாத காலியா என்பது கேள்வி இல்லை
———————-
ஒரு கட்டுரை போட்டு இருக்கீங்க அதன் மேல கேள்வி கேட்டா என்மேல் வசவுல இறங்குறீங்க
அப்போ இனிமே வினவு அப்படிங்கிற பேர
மாத்திகங்க
—————————–
வழக்கம் போல நான் உங்க கட்டுரையை என் தளத்தில் கிழிக்கிறேன்
அப்புறம் ஏன் நீங்க வினவில் கேட்டு இருக்கலாமேன்னு புலம்பல்ஸ் கூடாது அதான் கேட்டேன்
———————–
கூட்டு கவிதை பத்தியெல்லாம் உங்களுக்கு பேச வக்கு இருக்கா கவிதை எழுதவாவது தெரியுமா அல்லது படிக்கவாவது புரிந்துகொள்ளவாது அதுதான் கிடக்கட்டும் கட்டுரைக்கு விளக்கம் கேட்டால்
சும்மா அவனே இவனேன்னு வசைபாடிகிட்டு
——————-
அலோவ் ஓடுகாலி தியாகு, அதுல கவி எழுத்துப்பிழைய்யா…. மத்த விசயத்தையெல்லாம் நீர் அந்த கூட்டுக்கும்பலின் அப்பர் எஃகோலானில் இணையும் போது புரிந்து கொள்வீர்… ஆனா உமக்கு இருக்கும் குமாஸ்தா மூளைக்கு அதுக்கெல்லாம் சான்ஸ் கிடைக்குமோ என்னவோ 🙁
போலித்தனம் – மழுங்கத்தனம் – மொண்ணைத்தனம் – For Dummies….!
ஒன்றைப் புரிந்து கொள்வதில் இருக்கும் மொண்ணைத்தனம் எப்படி சிந்தனையில் மழுங்கத்தனத்தை ஏற்படுத்தி, செயலில் போலித்தனத்தை உண்டாக்குகிறது என்பதை எனக்குப் புரிந்த
அளவில் விளக்கவே இந்த பின்னூட்டம். முதலில் ஜவுளித் தொழில் நெருக்கடி பற்றி வினவில் வெளியான பு.ஜ கட்டுரையை படித்திருப்பீர்கள் – அடுத்து அதை தனது பாணியில் ‘விமர்சித்து’
நன்பர் தியாகு எழுதியதையும் ஒருமுறை பார்த்து விடுங்கள் (கொஞ்சம் கஸ்ட்டம் தான்… லேசா வாந்தி வரும், மயக்கம் வரலாம், தலை சுத்தும்… ஆனாலும் பரவாயில்லை மூக்கைப்
பிடித்துக் கொண்டு படித்து விடுங்கள் )
வினவு பதிவில் “விவசாயிகள் பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடுக்க கூடாதென்றும் எழுதப்பட்டு உள்ளது” என்று நன்பர் தியாகு சொல்கிறார். ஆனால் பு.ஜ கட்டுரையில் எங்கும் அப்படிக்
குறிப்பிடவில்லை. மாறாக, பருத்தி ஏற்றுமதியைத் தடுக்கக் கோரும் முதலாளிகள், அதற்குக் காரணமாகச் சொல்வது உள்நாட்டுத் தேவை புறக்கணிக்கப்படுகிறது என்பதே. அப்படி
இவர்கள் சொல்லும் உள்நாட்டுத் தேவை என்பது, உள்நாட்டில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதையே – உள்நாட்டு ஜவுளித் தேவைக்கான உற்பத்தியை அல்ல. இன்றைய உலகமயச் சூழலில் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் என்பது மேல் நிலை வல்லரசுகளின் / முதலாளித்துவ நாடுகளின் நுகர்வை அடிப்படையாகக் கொண்ட ஏற்றுமதிப் பொருளாதாரமாக
உள்ளது – குறிப்பாக அமெரிக்கா எனும் ஒற்றை எஞ்சினில் இணைக்கப்பட்ட பெட்டிகளாக இருக்கிறது. தமது உள்நாட்டு சந்தையின் தேவையை ஊக்குவிப்பதாக இல்லை.
இதில், “பஞ்சு ஏற்றுமதியை நிறுத்து” எனும் கோரிக்கை முதலாளிகள் சார்பில் இருந்து வரும் போது அவர்களின் அந்தக் கோரிக்கை உள்நாட்டு ஜவுளித் தேவையை கருத்தில்
கொண்டோ விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டோ எழுவதல்ல. இது கட்டுரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது –
// இப்போது முன்பேர வணிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் நூற்பாலை முதலாளிகளும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விதர்பா பருத்தி விவசாயிகள் கோருவதைப் போல பருத்திக்கான ஆதரவு விலையை 4,500 ரூபாயாக உயர்த்துவதை ஏற்றுக் கொள்வார்களா? //
//நம் மக்கள் தொகையில் 80 கோடிப் பேருடைய ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய். இந்த மக்களால் ஆண்டுக்கு 4 செட் வேட்டி, சேலை, கால்சட்டை, மேல்சட்டை, உள்ளாடைகள் வாங்க முடியுமானால், இந்தியாவின் சந்தை இவர்கள் தேடித் தவமிருக்கும் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆனால், ஜவுளி ஆலை முதலாளிகள் உள்நாட்டு உழைப்பாளி மக்களின் நுகர்வைப் பற்றிக் கவலைப்படவில்லை. //
பு.ஜ கட்டுரை ஏற்றுமதியை ஆதரிக்கவில்லை – ஆனால், எதிர்ப்பு எழுவதன் பின்னுள்ள முதலாளிகளின் சுயநலனை இடித்துரைக்கிறது. உள்நாட்டு ஜவுளித் தேவையை உந்தித் தள்ளுவதன்
மூலம் ஏற்றுமதியைச் சாராத தொழில் வளர்ச்சியை சாதிக்க முடியும் என்பதை நேர்மறையில் நிறுவுகிறது. அதே நேரத்தில், விவசாயிகளுக்கு இந்த முன்பேர சூதாட்டத்தால் / ஏற்றுமதியால் பயன் ஏதும் இல்லை என்பதையும் பதிவு செய்கிறது – அது கீழே,
//எடுத்துக்காட்டாக, சங்கர்-6 என்ற பருத்தி வகைக்கு அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,850. பெரும்பாலான விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை இதுதான். ஆனால், அதன் சந்தை விலையோ இன்று 4,500 ரூபாயைத் தாண்டி விட்டது. எனினும் கொள்முதல் விலையை உயர்த்த மறுக்கும் அரசு, பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காகத்தான் பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்திருப்பதைப் போல நடிக்கின்றது. //
தேசியமுதலாளிகளின் நலனும் (உள்நாட்டுச் சந்தை) விவசாயிகளின் நலனும் (உரிய விலை) இணைந்திருக்க வேண்டும் என்பதே கட்டுரை எதிர்மறையில் ஏற்படுத்தும் மனப்பதிவு.
உள்நாட்டு தேவையை அதிகரிக்க வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் – அதற்கு நாட்டில் மிக அதிகளவில் வேலைவாய்ப்பைத் தரும் விவசாயத் துறை லாபகரமாக நடந்தாக வேண்டும் –
அதற்கு விவசாயிக்கு உரிய விலை கிடைத்தாக வேண்டும். இதற்கு ஒப்புக் கொள்ளாத முதலாளிகள், தமது சுயலாப நோக்கை மட்டும் குறிவைத்து ஏற்றுமதியை தடுக்கச் சொல்கிறார்கள்.
முன்பேர வர்த்தகத்தாலும் விவசாயிக்கு பாதிப்பு தான் – உள்நாட்டிலும் லாபம் கிடைக்காது என்று இரண்டு பக்கமும் இடிவாங்கும் மத்தளமாக விவசாயிகள் இருக்கிறார்கள்.
அடுத்து ஒரு அட்டைக் கத்தியை எடுத்து சுழற்றுகிறார் தியாகு,
//இதே நூல் பன்னாட்டு சந்தைய்டில் விலை குறைந்தால் முதலாளிகள் இறக்குமதி செய்து கொள்கிறார்கள் என புளுகுகிறார்கள்இறக்குமதி செய்யும் காசுக்கும் நாம் கூடுதல் விலை கொடுத்தே இங்கேயே நூலை வாங்கிவிடலாம் சரி எத்தனை சதவீதம் அவ்வாறு இறக்குமதி நடந்தது ஏதேனும் தரவுகள் இருக்கா என கேட்டாலும் பதில் இல்லை
//
//தொழிலாளர்கள் விவசாயிகளோடு கூட்டு சேரனும் என்றும் ஆகாத கோரிக்கையை முன்வைக்கிறார்கள் இங்கென்ன புரட்சியா நடந்து கொண்டு இருக்கிறது விவசாயிகளின் பிரச்சனைக்கு தொழிலாளர் களமிரங்க//
பருத்திக்கான் ஆதார விலையை இந்திய அரசு உயர்த்திய போது சர்வதேச சந்தையில் இருந்து பருத்தி பேல்களை இந்திய முதலாளிகள் இறக்குமதி செய்திருக்கிறார்கள். ஆதாரம் –
http://www.cotton247.com/marketplace/trade/?storyid=559
இதைத் தான் கட்டுரையும் சொல்கிறது –
//பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையிலும் பருத்திக்கான ஆதரவு விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளித்தொழில் முதலாளிகள்தான். ஏற்றுமதியைத் தடுக்க சுங்கவரி போட வேண்டுமாம். ஆனால் உலகச் சந்தையில் விலை குறைந்திருக்கும் போது, இவர்கள் பஞ்சை இறக்குமதி செய்து உள்நாட்டு பருத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்களாம். அதற்கு மட்டும் சுங்கத்தீர்வை விதிக்கக் கூடாதாம். //
அடுத்து தொழிலாளர்கள் விவசாயிகளோடு கூட்டு சேர்வது ஆகாத வேலை என்கிறார் திருவாளர் தியாகு. விவசாயிகளும் தொழிலாளர்களும் இணைவது என்பது விவசாயிகளுக்கு
உள்நாட்டிலேயே உரியவிலை கிடைக்கச் செய்யும் என்பதோடு, தொழிலாளர்களுக்கு உரிய கூலியையும் கிடைக்கச் செய்யும் – இது தான் உள்நாட்டின் தேவையை அதிகரிக்கச்
செய்யும். மாறாக, முதலாளிகளின் நலனுக்கான கோரிக்கையின் பின்னே தொழிலாளிகளை வால்பிடித்துச் செல்ல வைப்பது என்பது விவசாயிகள் வயிற்றில் அடிப்பதோடு, ஏற்றுமதிப்
சார்ந்த பொருளாதாரப் புதைகுழிக்குள் ( ஏன் ஏற்றுமதி சார்ந்த ஜவுளிப் பொருளாதாரம் ஒரு புதைகுழி என்பது தியாகுவுக்கு எப்படியும் புரியப்போவதில்லை) இழுத்து விடும்.
என்னோட மெக்கானிக் குரு தர்மா சொல்வாரு – “வண்டியப் பத்தி ஒன்னும் தெரியாதவனும் எல்லாம் தெரிஞ்சவனும் பிரச்சினையில்லை – அரைகுறையாத் தெரிஞ்சவன் தான்
தலைவலி” என்று. தியாகு அரைகுறையாகத் தெரிந்தவர் என்பதோடு அதையே ஒரு தகுதியாக நினைத்துக் கொண்டிருக்கிறார் – இது வெறும் தலைவலி இல்லை; மைக்ரோன்
தலைவலி..!
//இது தான் உள்நாட்டின் தேவையை அதிகரிக்கச்
செய்யும்.// vaangum sakthiyai athikarippathan moolam…
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் என்பது குறையாகாது! இந்தியாவின் 2வது பெரிய ஏற்றுமதி சார்ந்த தொழில் இது! விவசாயி-வியாபாரி-உற்பத்தியாளர்-ஏறுமதியாளர் எனும் சங்கிலி, தொடர் கொண்டது! சில ஆண்டுகள் முன் வரை, அத்தியாவசிய பொருள் தடை சட்டத்தின் கீழ் பருத்தி இருக்கும்வரை, பிரச்சனை ஏதுமில்லை! சட்டம் விலக்கப்பட்டதும், ஜவுளி சங்கிலியில், பதுக்கல்காரார் என்னும் புதுவரவு வந்து சேர்ந்த்தது!
நான்கு மாத காலத்தில், மட்டுமே கிடைக்கும், பருத்தியை,சிண்டிகேட் அமைத்து, ஜவுளித் தொழிலுக்குநேரடி சம்பந்தமில்லா பண முதலைகள்(உள்/அயல் நாடு), வாங்கிப் பதுக்கி, அரசின் துணை கொண்டு, சட்டங்களை சாதகமாக்கி, செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி, செயற்கையாக விலையேற்றி விட்டு, கொள்ளை லாவம் அடைகின்றனர்!பருத்தி மட்டுமல்ல இதர விவசாயப் பொருட்களும்,இதைப் போலவே, விலை ஏற்றப்படுகிறது!
இன்று, உலக பஞ்சு சந்தையே, சீனாவின் கையிலும், சரத் பவாரின் கையிலும் தான் உள்ளது! சீனாவிற்கு பஞ்சுத் தேவை அதிகம்! உலகம் முழுவதும், விவசாயத் தொழில் வீழ்ச்சிக்குப் பின், இந்தியப் பருத்தியின் தேவை, இன்று போட்டியாக மாறிவிட்டது! பருத்தி ஏற்றுமதியை அக்டோபர் 1-ல் , இருந்து நவம்பர் – 1க்கு,இந்தியா தள்ளி வைத்தவுடன், அன்றே உலகப் பருத்தி, சுமார் 7 – 10 சதம், விலை யேறியது!
தொடரும்!
Rammy,
//ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் என்பது குறையாகாது! //
உள்நாட்டுத் தேவையை கணக்கில் கொள்ளாத ஏற்றுமதியை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளும் பொருளாதாரம் குறையானது தான்.
எப்படி?
உலகளவில் நிகழும் ஏற்றுமதி என்பது பெரும்பாலும் அமெரிக்க நுகர்வை அடிப்படையாய் வைத்தே இயங்குகிறது. அமெரிக்க நுகர்வு என்பது இயற்கையான காரணிகளால் (தேவையை
ஒட்டி) எழுவது அல்ல. குறிப்பாக அமெரிக்காவில் உற்பத்தி சார் தொழில் அலகுகளை (சீனா, இந்தியா போன்ற) மூன்றாம் உலக நாடுகளிடம் தள்ளிவிடும் போக்கு உள்ளது.
ஏனெனில் ஒப்பீட்டளவில் அங்கே உற்பத்தி செய்வதைக் காட்டிலும் இங்கே உற்பத்தி செய்வது சல்லிசானது – லாபகரமானது. இது அங்குள்ள நடுத்தர வர்க்கத்தின் வாங்கும்
சக்தியை குறைக்கிறது. இதை உந்தித்தள்ள, அவர்கள் சப்-ப்ரைம் லோன், வரைமுறையற்று க்ரெடிட் கார்டுகள் கொடுப்பது என்று செயற்கையாக வாங்கும் சக்தியை உண்டாக்குகிறார்கள்.
திருப்பிச் செலுத்த இயலாத நிலையில், அங்கே நுகர்வு குறைந்து (மூன்றாம் உலக நாடுகளின்) ஏற்றுமதிசார் பொருளாதாரம் அடிவாங்குகிறது.
இது பற்றி வினவில் புதிய கலாச்சார கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர் “டவுசர் கிழிந்ததது” எனும் தலைப்பில் இருக்கும் என்று நினைக்கிறேன். முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.
உங்கள் பின்னூட்டத்தின் மற்ற அம்சங்களை ஒப்புக் கொள்கிறேன் – அதிலும் ‘பதுக்கல்காரர்கள்’ என்பவர்களை நீங்கள் வழக்கமான (பழைய எம்.ஜி.ஆர் படத்தில் அரிசி பதுக்கும்
தங்கவேலு போன்ற) பதுக்கல்காரர்களோடு ஒப்பிட்டுப் புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று அவதானிக்கிறேன். இவர்கள் அப்படியல்ல – ஒரு பொருள் உண்மையில் உற்பத்தியாவதற்கு
முன்பாகவே அதை ‘காண்டிராக்டுகள்’ மூலம் ‘பதுக்கி’ – பின் அதை சர்வதேச பங்குச்சந்தை சூதாட்ட கிளப்பில் ஏலம் விட்டு, அதன் உண்மையான மதிப்பிலிருந்து பல மடங்கு
அதிகரிக்கச் செய்கிறார்கள்.. வினவில் முன்பேர வர்த்தகம் பற்றி பொருளாதார கட்டுரைகள் வந்திருக்கும்; தேடிப் பார்த்து லிங்க் தருகிறேன்.
பிஸிக்கலாகவே பஞ்சு பதுக்கப் படுகிறது! அதுவும் அரசு குடோன்களில், அரசு பணம் கொண்டே! எப்படியெனில், கீ-லோன் அடிப்படையில், 25 சத முன்பணமும், வட்டியும் அரசு வங்கிகளில் கட்டி! பஞ்சு மட்டுமல்ல, இதரப் பொருட்களும்! காண்ட்ராக்ட் முறையானாலும்,யாரோ ஒருவர், பஞ்சை பதுக்கியே வைத்திருக்க வேண்டும்! நீங்கள், குறிப்பிட்டபடி ஆன் – லைன் வர்த்தகம், நடந்தாலும், பருத்தியைக் குறித்தவகையில் , மிகக் குறைந்த அளவே நடை பெறுகிறது!
போலித்தனம் – மழுங்கத்தனம் –
மொண்ணைத்தனம் – For Dummies….!
ஒன்றைப் புரிந்து கொள்வதில் இருக்கும் மொண்ணைத்தனம் எப்படி சிந்தனையில் மழுங்கத்தனத்தை ஏற்படுத்தி, செயலில் போலித்தனத்தை உண்டாக்குகிறது என்பதை எனக்குப் புரிந்த அளவில் விளக்கவே இந்த பின்னூட்டம். முதலில் ஜவுளித் தொழில் நெருக்கடி பற்றி வினவில் வெளியான பு.ஜ கட்டுரையை படித்திருப்பீர்கள் – அடுத்து அதை தனது பாணியில் ‘விமர்சித்து’ நன்பர் தியாகு எழுதியதையும் ஒருமுறை பார்த்து விடுங்கள் (கொஞ்சம் கஸ்ட்டம் தான்… லேசா வாந்தி வரும், மயக்கம் வரலாம், தலை சுத்தும்… ஆனாலும் பரவாயில்லை மூக்கைப்பிடித்துக் கொண்டு படித்து விடுங்கள் )
வினவு பதிவில் “விவசாயிகள் பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடுக்க கூடாதென்றும் எழுதப்பட்டு உள்ளது” என்று நன்பர் தியாகு சொல்கிறார்.நான் எழுதியது ://முதலில் பஞ்சுக்கான அரசு நிர்ணயிக்கும் விலை அடுத்து பஞ்சு ஏற்றுமதி அடுத்து அதன் உற்பத்தி பொருளான நூல் ஏற்றுமதி இந்த இரண்டு கச்சா பொருள்களின் ஏற்றுமதியானது சர்வதேச சந்தையில் இந்திய ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியை பெரிதும் பாதிக்கிறது என்கிற விசயமாகும் இதற்கு இந்த விசயத்தை அனுகிய நமது பு.ஜா பத்திரிக்கை சொல்வது
என்னவென்றால் ஆயத்தை ஆடைகள் அதன் சூழல் அது கோரும் பஞ்சு ஏற்றுமதி தடை எல்லாமேதிருப்பூரில் உள்ள முதலாளிகளின் கோரிக்கையாகவும்
ஆன்லைன் டிரேடிங்க் மூலம் விலை ஏறிய அனைத்து பொருட்களுக்குள்ளும் பஞ்சு இருப்பது ஏதோ தற்செயலானது மற்றும் தவிர்க்க முடியாதது போலவும் விவசாயிகள் பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடுக்க கூடாதென்றும் எழுதப்பட்டு உள்ளது சரி பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடுக்க கூடாது மற்றும் நூல் ஏற்றுமதியை தடுக்க வேண்டாம் என்பதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் ஆனால் பு.ஜ கட்டுரையில் எங்கும் அப்படிக் குறிப்பிடவில்லை. மாறாக, பருத்தி ஏற்றுமதியைத் தடுக்கக் கோரும்
முதலாளிகள், அதற்குக் காரணமாகச் சொல்வது உள்நாட்டுத் தேவை புறக்கணிக்கப்படுகிறது என்பதே. அப்படி இவர்கள் சொல்லும் உள்நாட்டுத் தேவை என்பது, உள்நாட்டில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதையே – உள்நாட்டு ஜவுளித் தேவைக்கான உற்பத்தியை அல்ல.
// உள்நாட்டின் ஜவுளி தேவைக்கான உற்பத்தி திருப்பூரில் நடக்கவில்லை என அனைவருக்கும் தெரியும் ஆனால் உள்நாட்டு தேவைக்கும் 40 சதவீதம் நடக்கிறது என்பது ராஜாவனஜ் அறிவாரா தெரியாது உள்ளாடைகள் இந்தியா முழுவதற்கும்
இந்தியாவில் முக்கியமாகதிருப்பூரில் தான் தயாரிக்கப்படுகிறது அது புஜ கட்டுரை எழுதிய தோழர் போட்டிருக்கும் ஜட்டி உட்பட இதில் எப்படி உள்நாட்டு உற்பத்தியே இல்லைன்னு சொல்கிறார்னு தெரியலை
//இன்றைய உலகமயச் சூழலில் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் என்பது மேல் நிலை வல்லரசுகளின் /
முதலாளித்துவ நாடுகளின் நுகர்வை அடிப்படையாகக் கொண்ட ஏற்றுமதிப் பொருளாதாரமாக உள்ளது – குறிப்பாக அமெரிக்கா எனும் ஒற்றை எஞ்சினில் இணைக்கப்பட்ட பெட்டிகளாக இருக்கிறது. தமது உள்நாட்டு சந்தையின் தேவையை ஊக்குவிப்பதாக
இல்லை.//
அதிலிருந்து தாவி அடுத்த கட்டமாக ஏற்றுமதி உற்பத்திதான் நடக்குதுன்னு சொல்வதன் மூலம் இந்த பிரச்சனையே ஏற்றுமதி தொடர் பெட்டி அமெரிக்காவுக்கு உற்பத்தி செய்தல் என நகர்ந்து செல்கிறார் அப்படி அல்ல ஏற்றுமதிக்கும் உள்நாட்டு
தேவைக்கும் சேர்த்தே உற்பத்தி செய்யப்படுகிறது நிற்க ஏற்றுமதி சார்ந்த முன்னேறிய நாடுகள் சார்ந்த உற்பத்தி என நினைத்துகொண்டு இந்த விசயத்தை அனுகி ஒரு தீர்வு சொல்லி முரண்பட்டு போகிறார்கள் இருவரும் (மனியும் ,ராஜாவும்)
பிரச்சனை கச்சாபொருள் ஏற்றுமதி, கச்சா பொருளை சார்ந்த உள்நாட்டு உற்பத்தி சம்பந்தப்பட்டது . உழுந்தில் தயாரிக்கபப்டும் அப்பளம் அதன் தயாரிப்புகள் கூட வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது இதில் உழுந்து ஏற்றுமதி என வந்தால் அப்பள தொழில்
படுத்துவிடும் அல்லது தேவையை கணக்கில் எடுக்காத ஏற்றுமதி என்பது உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும் .ஆக பிரச்சனையை கச்சாபொருள் , அதை சார்ந்த உற்பத்தி என விசயத்தை பார்க்கவேண்டும் என கோருகிறேன் அப்படி பார்த்தால் மட்டுமே எந்த ஒரு
கச்சா பொருள் ஏற்றுமதியும் நேரடியாக அந்த நாட்டில் நடக்கும் தொழிலை பாதிக்கும் என்பதை அவதானிக்க முடியும
//இதில், “பஞ்சு ஏற்றுமதியை நிறுத்து” எனும் கோரிக்கை முதலாளிகள் சார்பில் இருந்து வரும் போது அவர்களின் அந்தக் கோரிக்கை உள்நாட்டு ஜவுளித் தேவையை கருத்தில் கொண்டோ விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில்
கொண்டோ எழுவதல்ல. இது கட்டுரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது –
// இப்போது முன்பேர வணிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் நூற்பாலை முதலாளிகளும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விதர்பா பருத்தி விவசாயிகள் கோருவதைப் போல பருத்திக்கான ஆதரவு விலையை 4,500 ரூபாயாக உயர்த்துவதை ஏற்றுக்
கொள்வார்களா? //
பஞ்சு ஏற்றுமதியை நிறுத்து எனும் கோரிக்கை எழவில்லை ஏற்றுமதியை கட்டுபடுத்து மூன்றுமாதத்துக்கு ஒருமுறை அடுத்த பருவம் வரை நிறுத்தியும் உள்நாட்டு உற்பத்தி போக மிச்சமானதை ஏற்றுமதி செய்யவும்தான் கோருகிறோம் விவசாயிக்கு ஆதாரவிலையை கூட்டினால் ஏற்றுகொள்ளமாட்டோம் என முதலாளிகள் எங்காவது சொல்லி இருக்கிறார்களா அப்படி ஏற்றினால் கூட அதன் பாதிப்பு இந்தளவு கடுமையாக இருக்காது என்பது
நிஜம்
//நம் மக்கள் தொகையில் 80 கோடிப் பேருடைய ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய். இந்த மக்களால் ஆண்டுக்கு 4 செட் வேட்டி, சேலை, கால்சட்டை, மேல்சட்டை, உள்ளாடைகள் வாங்க முடியுமானால், இந்தியாவின் சந்தை இவர்கள் தேடித் தவமிருக்கும் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆனால், ஜவுளி ஆலை முதலாளிகள் உள்நாட்டு உழைப்பாளி மக்களின் நுகர்வைப் பற்றிக்
கவலைப்படவில்லை. //
//பு.ஜ கட்டுரை ஏற்றுமதியை ஆதரிக்கவில்லை – ஆனால், எதிர்ப்பு எழுவதன் பின்னுள்ள முதலாளிகளின் சுயநலனை இடித்துரைக்கிறது. உள்நாட்டு ஜவுளித் தேவையை உந்தித் தள்ளுவதன் மூலம் ஏற்றுமதியைச் சாராத தொழில்
வளர்ச்சியை சாதிக்க முடியும் என்பதை
நேர்மறையில் நிறுவுகிறது. //
ஏற்றுமதி சாராத தொழிலும் கச்சா பொருள் ஏற்றுமதியில் விழுந்து விடும் என்பதை அறிய முடியவில்லையா ? எதிர்ப்பு எழுவதன் பின்னால் முதலாளிகளின் சுயநலன் மட்டுமே இருக்கு என கருதுவதை அரைவேக்காட்டு பார்வை
என்கிறேன்
//அதே நேரத்தில், விவசாயிகளுக்கு இந்த முன்பேர சூதாட்டத்தால் / ஏற்றுமதியால் பயன் ஏதும் இல்லை என்பதையும் பதிவு செய்கிறது – அது கீழே,
//எடுத்துக்காட்டாக, சங்கர்-6 என்ற பருத்தி வகைக்கு அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,850. பெரும்பாலான
விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை இதுதான். ஆனால், அதன் சந்தை விலையோ இன்று 4,500 ரூபாயைத் தாண்டி விட்டது. எனினும் கொள்முதல் விலையை
உயர்த்த மறுக்கும் அரசு, பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காகத்தான் பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்திருப்பதைப் போல நடிக்கின்றது.
//
தேசியமுதலாளிகளின் நலனும் (உள்நாட்டுச் சந்தை) விவசாயிகளின் நலனும் (உரிய விலை) இணைந்திருக்க வேண்டும் என்பதே கட்டுரை எதிர்மறையில் ஏற்படுத்தும் மனப்பதிவு.//
ஏற்றுமதியும் உள்நாட்டு நலனும் இணைய என்ன செய்யவேண்டும் கட்டுபடுத்தப்பட்ட ஏற்றுமதி கொள்கை வேண்டும் அது கச்சா பொருளை பொருத்தவரையிலும் அதிகமாக மேலும் பனியனை பொருத்தவரை
அயல்நாட்டு ஆடை ரகங்கள் இந்தியாவில் விலை போவதில்லை இங்கு அதிகம் உள்ளாடைகள்தான் அதையும் திருப்பூர்தான் வழங்கிறது
//உள்நாட்டு தேவையை அதிகரிக்க வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் – அதற்கு நாட்டில் மிக அதிகளவில் வேலைவாய்ப்பைத் தரும் விவசாயத் துறை லாபகரமாக நடந்தாக வேண்டும் – அதற்கு விவசாயிக்கு உரிய விலை
கிடைத்தாக வேண்டும். இதற்கு ஒப்புக் கொள்ளாத முதலாளிகள், தமது சுயலாப நோக்கை மட்டும் குறிவைத்து ஏற்றுமதியை தடுக்கச் சொல்கிறார்கள். முன்பேர வர்த்தகத்தாலும் விவசாயிக்கு பாதிப்பு தான் – உள்நாட்டிலு
அவரே ஒப்புக் கொண்ட படி அவருக்கு புரிந்த ஒன்றை எழுதி இருக்கிறார். இதில் கேள்விகள் எதுவும் இல்லை என்பதை படிப்பவர்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். நேரத்தை இதில் வீண்டிக்க மாட்டீர்கள் என்னைப் போல என நம்புகிறேன்
பஞ்சு ஏற்றுமதிக்கு, குறைந்த அளவே,சுங்கத் தீர்வை விதிக்கும் அரசு, பஞ்சு இறக்குமதிக்கு 10 சதம் விதிக்கிறது!
போட்டி நாடான,சீனாவை நாம் ஒரு விதத்தில் பாராட்டியாக வேண்டும்! தம் நாடு கம்பெனிகளுக்குத் தேவையான, அனைத்து வகை மூலப் பொருட்களை, உலகில் எந்த மூலையில் இருந்தாலும்,எந்த தில்லாலங்கடி வேலை செய்தாவது, கொண்டு வந்து, அரசே மறைமுக உதவி செய்து சேமித்து விடும்!( குறைந்த பட்சம் ஒரு வருட ஸ்டாக் எப்போதும் கையிருப்பில் இருக்கும்)
2008-09 ம் ஆண்டு மட்டும், இந்தியா இந்த முறையை (ஜஸ்ட் ஸ்டாக் மட்டும்), இந்திய பஞ்சு கழகத்தின், வழியாக ஓரளவு, நிறைவேற்றியது! அதற்கு, காரணகர்த்தா,மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்!(போராளிக்களுக்கு ஆகாதப் பெயர்?!)
தற்போதையப் பிரச்சனை என்னவெனில், இந்தியாவில் கேரி-ஓவர் பருத்தி ஸ்டாக் பூஜ்ஜியத்திற்கு சற்றே அதிகம்! இன்னும் புதிய வரத்து சூடுபிடிக்கவில்லை! ஆனால்,இந்தியா ஆலைகளுக்கு, பஞ்சு கிடைப்பதற்கு முன்னரே, வெளிநாட்டிற்கு குறிப்பாக சீனாவிற்கு, ஏற்றுமதி செய்து விட வேண்டும் என்று, சரத் பவார் தலைமையில்,விவசாயிகளுக்கு ஆதரவு என்ற போர்வையில், ஒரு கும்பல், முனைப்புடன் இருக்கிறது!
இதில், ஒரு கொடுமையான ஜோக், என்னவெனில், பருத்தி அதிகம் விளையும்,குஜராத்தில் இருந்து, ஆலைகள் அதிகம் உள்ள, நம் தமிழகத்தை அடைய,பஞ்சு கிலோ ஒன்றுக்கு ரூ 4 முதல் 5 வரை செலவாகிறது.( வரி உள்பட). ஆனால், தொலைவில் உள்ள சீனத்திற்கு, ரூ 2க்கும் குறைவான செலவிலேயே சென்று விடும்! மேலை நாடுகளுக்கு, சீனாவில் இருந்து அனுப்பிய ஏற்றுமதி பெட்டகங்கள், திரும்பி காலியாக வரும்போது,வெட்டியாகச் செல்வதற்கு பதில்,குறைந்த வாடகையைப் பெற்றுக் கொண்டு, பஞ்சை ஏற்றிக் கொண்டு செல்கின்றது!
(இது 3 மாத முன்பு வரை நிலவரம்! தற்பொழுது ரூ2500/குவிண்டாலுக்கு , சுங்க வரி விதிக்கப் பட்டுள்ளது!)
தொடரும்!
Rammy,
//2008-09 ம் ஆண்டு மட்டும், இந்தியா இந்த முறையை (ஜஸ்ட் ஸ்டாக் மட்டும்), இந்திய பஞ்சு கழகத்தின், வழியாக ஓரளவு, நிறைவேற்றியது!//
மேற்கண்ட அம்சத்தில் முரண்படுகிறேன். எனினும் நீங்கள் உங்கள் வாதத்தை முழுமையாக வைத்த பின் நாளை மீண்டும் வந்து பதில் இடுகிறேன்.
பு.ஜ கட்டுரை முற்றிலும் தவறு என்று ட்விட்டரில் ஒரு சொம்பு கம்பு சுத்திக் கொண்டிருந்தது. அவரை இங்கே எதிர்பார்த்தேன் –
பரவாயில்லை, நாளை வாருவாராயிருக்கும். பார்க்கலாம்..
சாராம்சமாக:
1.ஏற்றுமதி – அந்நிய ஏகாதிபத்தியத்தை நம்பி இருக்கிறது
அதற்கு வால்பிடிக்கிறது என சொல்லி
நேரா உள்நாட்டின் தேவைக்கு உற்பத்தி செய்யுங்கள்
என புஜ கட்டுரையில் சொல்லாமல் விட்டதை
சொல்லி பூர்த்தி செய்கிறார் ராஜா
ஆனால் ஏற்றுமதி என்பது அதை சார்ந்த வணிகம் என்பதும் மட்டுமல்ல
உள்நாட்டின் வணிகத்துக்கே கச்சா பொருள் கட்டுள் இல்லாத ஏற்றுமதியும்
ஆன்லைன் சூதாட்டமும் எதிரிகள் என்பதை காணாமல் விடுகிறார்
2.இனிமேல் ஏற்றுமதி சாராத புறாகூடுபோல தனியான ஒரு நாட்டை கட்டமைக்க
சோசலிச அல்லது புதியஜனநாயக நாட்டால் கூட முடியாது அப்போது சரியான
ஏற்றுமதி கொள்கை வகுக்க வேண்டும்
3.விவசாயிக்கும் அறிவுரை சொல்கிறேன் ஏற்றுமதி பத்தி முதலாளியையும் கேள்விகேட்கிறேன் லாபநோக்கம் பத்தின்னு சொல்லிட்டு முடிவா இதன் அடிப்படைகாரணம் அதற்கான தீர்வுன்னு கேட்டால் முழி முழின்னு முழிக்கிறார்கள்
தியாகு ! கொஞ்சம் சீரியசா மாத்திரம் பேசுபவர்களுக்கான இடம் இது என நினைக்கிறேன்
RajaVanaj!
ஏற்றுமதியே வேண்டாம் எனில், இறக்குமதியும் கூடாது! கச்சா எண்ணெய், சுமார் 70 சத இறக்குமதியே செய்யப் படுகிறது!
விவசாயத்திற்கு அடுத்த பெரியத் தொழில், ஜவுளித் துறையே! உற்பத்தியாகும் அனைத்து பொருட்களையும், உள்நாட்டிலெயே, விற்க முடியாது!(30 ரூபாய் ஜட்டியை, 3 வருடத்திற்கு உபயோகப்படுத்தும், காமெடி நடிகர் சுருளிராஜன் வகையைச் சேர்ந்தவர் நாம்!)
மதிப்புக் கூட்டப்பட்ட, பொருட்களை ஏற்றுமதி செய்தால், உள்நாட்டில் வேலை வாய்ப்பு பெருகும்! ஆலைகள் பெருகும்!பொருளாதாரம் மேம்படும்! தேவையான அன்னியச் செலாவணி கிட்டும்!
அதை விடுத்து மூலப் பொருட்களை, உள்நாட்டுத் தேவைக்குத் தராமல், ஏற்றுமதி செய்தால் என்னவாகும் என்பது, படிப்பவர்களின் மேலானா அறிவுக்கு! ஆங்கிலேய ஆட்சிக் காலம் நியாபகம் வருகிறதா?
ஜவுளித் தொழிலில், உள்நாட்டு உற்பத்தி யாளர்களுக்கு, கொள்ளை லாபம், என்பதெல்லாம், கட்டுக்கதை! சராசரியாக 3 – 5 சத லாபமே! 3 வருடத்திற்கு ஒரு வருடம்,நஷ்டம் ,கண்டிப்பாகா உண்டு! (சுழற்சி)
மூலப்பொருட்கள்,சம்பளம் ,வரிகள், மின்கட்டணம், உற்பத்தி பொருட்கள் — இவை எதையும்,தொழில் முனையும் ஒரு நபரால், நிர்ணயிக்க முடியாது! சந்தையும், தேவையும், அரசுமே, இவை அனைத்தையும், நிர்ணயிக்கிறது! தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு, விவசாயியைப் போலவே, ஜவுளி தொழில் முனைவரும், நிர்ணயிக்க முடியாது! (விதி விலக்குகள் உண்டு- இது பொதுவானவை)
தொடரும்!
Rammy,
// நீங்கள், குறிப்பிட்டபடி ஆன் லைன் வர்த்தகம், நடந்தாலும், பருத்தியைக் குறித்தவகையில் , மிகக் குறைந்த அளவே நடை பெறுகிறது//
இல்லை. தற்போது உலகளவிலான பருத்தி விலையில் ஏற்பட்டிருக்கும் அபரிமிதமான ஏற்றத்திற்கு முன்பேர வர்த்தக சூதாடிகளே காரணம் – இந்த சுட்டியில் அதைப் பற்றிய விரிவான
செய்தி ஒன்று உள்ளது – http://www.thehindubusinessline.com/2010/10/06/stories/2010100652931600.htm
நீங்கள் “யாரோ ஒருவர்” பதுக்கியே வைத்திருக்க வேண்டும் என்று சொல்வது, அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து சேமிப்புக் கிடங்குகளில் வைப்பதையும் – ஆன்லைன்
சூதாடிகள் செய்வதையும் ஒரே கோட்டில் வைத்துப் பார்ப்பது போல் உள்ளது (எனக்கு அப்படித்தான் புரிகிறது)- அந்த அம்சத்தைக் கொஞ்சம் விளக்குங்கள்.
மற்றபடி எனது பின்னூட்டம் எண் 32022-வில் இருக்கும் மற்ற கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொண்டதாகவே எடுத்துக் கொள்கிறேன்.
_______________________________________________________
கடைசி பின்னூட்டத்தில் நீங்கள் செய்திருப்பது வாதம் அல்ல – விதண்டாவாதம்…! 🙂
//ஏற்றுமதியே வேண்டாம் எனில், இறக்குமதியும் கூடாது! கச்சா எண்ணெய்,சுமார் 70 சத இறக்குமதியே செய்யப் படுகிறது!//
ஏற்றுமதியை ஒரு குற்றம் என்று யாரும் சொல்லவில்லை (தியாகு இப்படித்தான் புரிந்து கொண்டு உளருகிறார்). உள்நாட்டுத் தேவையைப் புறக்கணித்து விட்டு செய்யப்படும் ஏற்றுமதியைப்
பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.
இங்கே ‘தேவை புறக்கணிப்பு’ என்று நான் குறிப்பிட்டிருப்பதை கடைசியில் சொல்கிறேன்.
// உற்பத்தியாகும் அனைத்து பொருட்களையும், உள்நாட்டிலெயே, விற்க முடியாது!(30 ரூபாய் ஜட்டியை, 3 வருடத்திற்கு உபயோகப்படுத்தும், காமெடி நடிகர் சுருளிராஜன் வகையைச்
சேர்ந்தவர் நாம்!) //
ஏன் உள்நாட்டிலேயே விற்க முடியாது? நீங்கள் இங்கே சொல்லும் ‘உள்நாடு’ சுமார் ஒரு பில்லியனுக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு. உலக மக்கள் தொகையில்
ஆறில் ஒருவர் இங்கே இருக்கிறார் – எனில் இது எந்தளவுக்கு ஒரு பெரிய சந்தை…!?
ஆனால் இந்த சந்தையில் பப்பு வேகாது என்று நீங்கள் சொல்கிறீர்களே ஏன்? வாங்கும் சக்தி இல்லை – சரிதானா…
ஏன் வாங்கும் சக்தி இல்லை?
நாட்டில் சுமார் எழுபது சதவீதம் பேருக்கும் மேல் வேலை அளிக்கும் விவசாயமும் – அதற்கு அடுத்தபடியாக வேலை அளிக்கும் ஜவுளித்துறையும் தான் (பஞ்சு மில், பவர் லூம், ஜட்டி
கம்பெனி, துணி கம்பெனி etc etc)..
விவசாயத்துறையை எடுத்துக் கொண்டால், அத்துறையை விட்டே விவசாயி விரட்டப்படும் நிலை (depesentization) உள்ளது. விவசாயிக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லை –
விவசாயம் இனி எப்போதும் லாபகரமான தொழிலாக இருக்க முடியாது என்கிற ஒரு நிலைக்கு விவசாயிகளைத் தள்ளி விட்டு அவர்களை அத்துக் கூலிகளாக நகரங்களை நோக்கி
துரத்தப்படுகிறார்கள். விதைக்கும் விதையைக் கூட ஒரு சில பன்னாட்டுக் கம்பெனிகள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளார்கள் – உரம், பூச்சி மருந்து என்று எதுவும் கட்டுப்படியாகும்
விலையில் இல்லை. தக்கிமுக்கி விவசாயம் பார்த்து விளைவித்த பொருளுக்கு அடிமாட்டு விலை. இப்படி விவசாயத்தை விட்டு ஓடி வருபவர்கள் நகரங்களில் செக்கூரிட்டிகளாக,
கூலியாட்களாக….. ஏன் – தியாகுவின் கம்பெனியில் பீஸ் அடுக்கும் வேலையிலும் அவர்கள் தான் நிறைந்துள்ளனர்.
மொத்த மக்கள் தொகையில் எழுபதில் இருந்து என்பது சதவீதம் பேர் 20 /- சம்பாதிக்கும் நிலை.
இப்படியொரு நிலையில் மக்களை நிப்பாட்டி வைத்திருப்பதும் – அதை முதலாளிகள் கேப்பிடலைஸ் செய்வதுமாக (மைக்ரேட் ஆகி வரும் விவசாயக் கூலிகளை குறைந்த கூலிக்கு
சுரண்டிக் கொள்வது) உள்நாட்டுத் தேவையை அவர்களே திட்டமிட்டுப் புறக்கணித்துக் கொள்கிறார்கள். இப்படி இங்கே திருப்பூர் தொழிலாளர்களின் உழைப்பை (பனியனோடு சேர்த்து)
ஏற்றுமதி செய்யும் ஏஜெண்டுகளாக (தரகு) இருக்கிறார்கள் திருப்பூர் முதலாளிகள்.
தியாகு,
நீங்கள் கடைசியாக (சாராம்சமாக) சொன்னது –
//உள்நாட்டின் வணிகத்துக்கே கச்சா பொருள் கட்டுள் இல்லாத ஏற்றுமதியும் ஆன்லைன் சூதாட்டமும் எதிரிகள் என்பதை காணாமல் விடுகிறார் //
//.இனிமேல் ஏற்றுமதி சாராத புறாகூடுபோல தனியான ஒரு நாட்டை கட்டமைக்க சோசலிச அல்லது புதியஜனநாயக நாட்டால் கூட முடியாது அப்போது சரியான ஏற்றுமதி கொள்கை
வகுக்க வேண்டும்//
நான் அதற்கு முன்பு எனது பின்னூட்டத்தில் சொன்னது –
//உள்நாட்டுத் தேவையை கணக்கில் கொள்ளாத ஏற்றுமதியை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளும் பொருளாதாரம் குறையானது தான்.//
உங்களுக்கு கண் முன்னாடி தானே இருக்கிறது? மேலெ நான் சொன்னதுக்கு என்ன அர்த்தம்? உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்து விட்டு ஏற்றுமதி செய்யட்டுமே… உள்நாட்டுத்
தேவை முற்றிலுமாக பூர்த்தியாகி விட்டது என்று நீங்கள் சொல்லுங்கள் மேற்கொண்டு பேசலாம்…
நீங்கள் பின்னே சொன்னது –
//முடிவா இதன் அடிப்படைகாரணம் அதற்கான தீர்வுன்னு கேட்டால் முழி முழின்னு முழிக்கிறார்கள் //
நான் முன்னே சொன்னது –
//தேசியமுதலாளிகளின் நலனும் (உள்நாட்டுச் சந்தை) விவசாயிகளின் நலனும் (உரிய விலை) இணைந்திருக்க வேண்டும் என்பதே கட்டுரை எதிர்மறையில் ஏற்படுத்தும் மனப்பதிவு.
உள்நாட்டு தேவையை அதிகரிக்க வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் அதற்கு நாட்டில் மிக அதிகளவில் வேலைவாய்ப்பைத் தரும் விவசாயத் துறை லாபகரமாக நடந்தாக வேண்டும்
அதற்கு விவசாயிக்கு உரிய விலை கிடைத்தாக வேண்டும். //
// விவசாயிகளும் தொழிலாளர்களும் இணைவது என்பது விவசாயிகளுக்கு உள்நாட்டிலேயே உரியவிலை கிடைக்கச் செய்யும் என்பதோடு, தொழிலாளர்களுக்கு உரிய கூலியையும்
கிடைக்கச் செய்யும் இது தான் உள்நாட்டின் தேவையை அதிகரிக்கச் செய்யும் //
உங்களுக்கு கண்கள் நெற்றியின் கீழே – கன்னங்களுக்கு மேலே – முகத்தின் முன்பக்கத்தில் தானே உள்ளது?
உங்களோட அந்தப் பெரிய பின்னூட்டத்தைப் படிக்கவில்லை – முடியலை.. சத்தியமா சொல்றேன், தலையே சுத்துது.
இங்கே -Rammyன்னு ஒருத்தர் விவாதிக்கிறார் – நானும் அவரோடு விவாதிக்கிறேன். நீங்கள் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு ஏதாவது புரிந்து கொள்ள முயலுங்கள்.
இல்லையென்றால் தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளை எப்படிப் படிப்பது என்பதற்கு டியூசன் போய் பாருங்கள்.. பாதுகாப்பாக குமுதம் / விகடனில் இருந்து ஆரம்பியுங்கள்.
1.பஞ்சு என்ற கச்சாபொருளுக்கு விவசாயிக்கு ஆதாரவிலை அரசு கொடுக்க கூடாது என எந்த முதலாளி சங்கமும் கோரிக்கை விடுக்கவில்லை
2.பஞ்சு என்பது ஒரு கச்சா பொருள் அதை வரைமுறை இன்றி ஏற்றுமதி செய்ய கூடாது
3.அதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளார் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள்மேலும் எந்த ஒரு கச்சா பொருளும் ஏற்றுமதி என்பது கட்டுக்குள்
இருக்கவேண்டும்
4.ஏற்றுமதி என்பது அமெரிக்காவுக்கு வால்
பிடிப்பது ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை சார்ந்தது எனவே
உள்நாட்டுக்கு உற்பத்தி செய்யுங்கள் என
சொன்ன உங்கள் வாதம் தவறு
அதை ஏற்கனவே மறுத்து இருக்கேன்
அ) திருப்ப்பூரில் உள்நாட்டு உற்பத்தியும்
நடக்கிறது
ஆ) இதன் மூலம் ஏகாதிபத்தியத்துக்கு
வால்பிடிப்பது என ஒரு மொத்த ஏற்றுமதியையும் புறம்தள்ளாமல் ஏற்றுமதி
கொள்கை என்பது வகுக்கப்படனும்
மேற்குரிப்பிட்டவை எனது பாயிண்டுகள்
நிங்கள் படிக்கமுடியலை மயக்கம் வருதுன்னா ஒன்றும் செய்ய முடியாது
//பஞ்சு என்ற கச்சாபொருளுக்கு விவசாயிக்கு ஆதாரவிலை அரசு கொடுக்க கூடாது என எந்த முதலாளி சங்கமும் கோரிக்கை விடுக்கவில்லை //
அப்படியென்றால் MSPஐ அதிகரிப்போம் என்று சொன்னவுடன் ஏன் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யவேண்டும்?
//பஞ்சு என்பது ஒரு கச்சா பொருள் அதை வரைமுறை இன்றி ஏற்றுமதி செய்ய கூடாது //
யார் அப்படிச் செய்யச் சொன்னது பு.ஜவில் அப்படிச் சொல்லவில்லையே? இங்கே நாங்கள் சொல்வதெல்லாம்
ஏற்றுமதியோ இறக்குமதியோ இரண்டினாலும் விவசாயி பாதிக்கப்படுகிறார் என்று தான். ஏற்றுமதியை முதலாளிகள்
நிறுத்தச் சொல்வதன் பின்னுள்ள அரசியலைத் தான் கட்டுரை குத்திக்காட்டுகிறது.
//அ) திருப்ப்பூரில் உள்நாட்டு உற்பத்தியும்நடக்கிறது
ஆ) இதன் மூலம் ஏகாதிபத்தியத்துக்குவால்பிடிப்பது என ஒரு மொத்த ஏற்றுமதியையும் புறம்தள்ளாமல் ஏற்றுமதி
கொள்கை என்பது வகுக்கப்படனும் //
அட முருகப்பா… எனக்கேண்டா இந்த சோதனை? நான் என்ன கேட்டேன்…. உள்நாட்டு சந்தைத் தேவையை முழுவதுமாக
திருப்பூரின் உற்பத்தி பூர்த்தி செய்து விட்டதா? நூறுகோடி பேரும் ஆயத்த ஆடைகளை வாங்கிக் குவித்து வீட்டில்
இடமில்லாத நிலையில் தான் திருப்பூர் முதலாளி அமெரிக்க சந்தையை குறிவைத்திருக்கிறாரா?
நீங்க செய்யறதுக்குப் பேர் விவாதமா? கடுப்பேத்தாதீங்க புவர் ஆனர்…!
தியாகு,
நீங்க ட்விட்டர்ல விட்ட “உட்டாலக்கடி கிரி கிரி.. சைதாப்பேட்டை வட கறி” போன்ற தத்துவ முத்துக்களெல்லாம்
என்னுடைய பின்னூட்டத்தில் மறுக்கப்பட்டுள்ளதே… உங்க பதிவை வாபஸ் வாங்கிக் கொள்ள முடியுமா?
புரியலைன்னு சொன்னா நான் விளக்கமா உங்களோட “கருத்து” எப்படி தவறென்று நிறுவப்பட்டது என்று பாயிண்ட் by
பாயிண்டாக தனியாக கோணார் நோட்ஸ் எழுதனுமா?
வினவு மேலும் எங்கள் மேலும் உங்களுக்கு இருக்கும் கண்மூடித்தனமான வெற்று ஆத்திரத்தின் விளைவைப் பாருங்கள்…
இப்போது ஒரு முழு மூடராக – அம்மனமாக – நிற்கிறீர்கள். புரியலையென்றால் புரிந்து கொள்ள பொறுமையும் முயற்சியும்
வேண்டும்…. இனியாவது வளர்த்துக் கொள்ளப் பாருங்கள்….
//பஞ்சு என்ற கச்சாபொருளுக்கு விவசாயிக்கு ஆதாரவிலை அரசு கொடுக்க கூடாது என எந்த முதலாளி சங்கமும் கோரிக்கை விடுக்கவில்லை //
//அப்படியென்றால் MSPஐ அதிகரிப்போம் என்று சொன்னவுடன் ஏன் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யவேண்டும்?//
யுவர் ஆனர் ஏற்றுமதி செய்து பஞ்சு விலை அதிகமானதும் வாங்கிய முதலாளிக்கு
அடுத்தும் விலை ஏறபோகிறதென்றால் பயம் வருமா வராதா ?
ஒருபக்கம் ஏற்றுமதியை சப்பை கட்டு கட்டிட்டு மறுபக்கம் இறக்குமதி ஏன்னு கேட்கிறீங்களே
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்ச் அப்பா சிவனே
//பஞ்சு என்பது ஒரு கச்சா பொருள் அதை வரைமுறை இன்றி ஏற்றுமதி செய்ய கூடாது //
யார் அப்படிச் செய்யச் சொன்னது பு.ஜவில் அப்படிச் சொல்லவில்லையே? இங்கே நாங்கள் சொல்வதெல்லாம்
ஏற்றுமதியோ இறக்குமதியோ இரண்டினாலும் விவசாயி பாதிக்கப்படுகிறார் என்று தான். ஏற்றுமதியை முதலாளிகள்
நிறுத்தச் சொல்வதன் பின்னுள்ள அரசியலைத் தான் கட்டுரை குத்திக்காட்டுகிறது.//
பின்னுள்ள முன்னுள்ள அரசியலை குத்திகாட்டுவதைத்தான் நான் குத்தி காட்டினேன் பின்னுள்ள அரசியலை குத்தி காட்டுகிறேன்னு பேர்வழின்னு அடிப்படை பிரச்சனையான தொழிலாளர் ஜீவாதார பிரச்சனையான பஞ்சு ஏற்றுமதிக்கு கொடிபிடிக்காதீங்கன்னு
மறுபக்கம் இல்லை விவசாயிக்கும் சொன்னோம் என்பது பிறகு இல்லை
நேர்மறையா இதை நிருவுதுன்னு சொல்வது
இல்லை எதிர்மறையா இப்படி எடுத்தகாதீங்கன்னு சொல்வது
நடிகர் விசு தோத்தார் உங்க கிட்ட
ராஜா வனஜ்
//அ) திருப்ப்பூரில் உள்நாட்டு உற்பத்தியும்நடக்கிறது
ஆ) இதன் மூலம் ஏகாதிபத்தியத்துக்குவால்பிடிப்பது என ஒரு மொத்த ஏற்றுமதியையும் புறம்தள்ளாமல் ஏற்றுமதி
கொள்கை என்பது வகுக்கப்படனும் //
அட முருகப்பா… எனக்கேண்டா இந்த சோதனை? நான் என்ன கேட்டேன்…. உள்நாட்டு சந்தைத் தேவையை முழுவதுமாக
திருப்பூரின் உற்பத்தி பூர்த்தி செய்து விட்டதா? நூறுகோடி பேரும் ஆயத்த ஆடைகளை வாங்கிக் குவித்து வீட்டில்
இடமில்லாத நிலையில் தான் திருப்பூர் முதலாளி அமெரிக்க சந்தையை குறிவைத்திருக்கிறாரா?
//
ஆயத்த ஆடைகள் உள்ளூருக்கும் நடக்கிறது அதன் ரகம் இதென்ன பலதடவை சொல்லிட்டேன் அதில் தட்டுபாடு ஏற்பட்ட்டால் உள்ளாடைகள்
இறக்குமதி நடந்து இருக்கிறதா
சொல்வதை நல்லா படிச்சு பார்க்கனும் யுவர் ஆனர்
ஏற்றுமதி செய்யும் பனியன் என்பது
கேட்டகிரி 4 மற்றும் டேங்க் டாப் வகையறா நைட்டி பைஜாமா வெல்லாம்
நம்மூர் பெண்கள் போடமாட்டாங்க போட்டாலும் நம்மூர் ஆளுக வருடகணக்கில் அடுத்த செட் வாங்க மாட்டாங்க அதனால அவங்களுக்கு தேவை படுவது உள்ளாடை மட்டும்தான்
மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒரு பனியனை அதிகம்பட்சம் இரண்டுதடவைக்கு மேல உபயோகிப்பதில்லை அங்கு தேவை அதிகம் ஏற்றுமதி செய்கிறார்கள்
அதுக்கா உள்ளூர்காரன் கிழிக்கிற வரை
மெசினெல்லாம் நிறுத்தி வைக்க சொல்வீங்க போல ராசா
//நீங்க செய்யறதுக்குப் பேர் விவாதமா? கடுப்பேத்தாதீங்க புவர் ஆனர்…!//
மிஸ்டர் நீங்க செய்றதுக்கு பேரு ஆள காப்பாத்திர விவாதம் அல்லது சாணியடித்தல்
//மொத்த மக்கள் தொகையில் எழுபதில் இருந்து என்பது சதவீதம் பேர் 20 /- சம்பாதிக்கும் நிலை. //
ரு 20 ஒரு மணி நேரத்திற்கா? ஒரு நாளைக்கு என்றால், அது தவறான தகவல்! சந்தேகமிருப்பின், சாம்பிள் சர்வே எடுங்கள்!
//ரு 20 ஒரு மணி நேரத்திற்கா? ஒரு நாளைக்கு என்றால், அது தவறான தகவல்! சந்தேகமிருப்பின், சாம்பிள் சர்வே எடுங்கள்!//
ராம்மி நீங்க ரொம்ப லேட்டு.. பல பேரு ஏற்கனவே சாம்பிள் சர்வே (அரசும் சேர்ந்து) எடுத்துச் சொன்ன தகவல்கள்தான் இவை
Rajavanaj!
கிராமப் பொருளாதாரத்தில், விவசாயி மற்றும் விவசாய வேலையாட்கள் எனும் இரண்டு பிரிவுகள் உள்ளது…உமது பாஷையில் வர்க்கங்கள்!
1.பெரும்பாலான விவசாயிகள்(வயதானவர்கள்) இன்னும் கிராமத்திலேயே தான், நிலத்தை காபந்து செய்து கொண்டு இருக்கிறார்கள்! அவர்களின், பிள்ளைகள் கார்ப்பரேட் வேலைகளுக்கு, சென்று விட்டனர்!
2. 70 கள் வரை, தினக்கூலி முறையில், வேலை பார்த்த பண்ணையாட்கள்,80 களின் போது தங்களுக்குள், குழு அமைத்து, குத்தகை அடிப்படையில், தங்களின் சம்பளத்தை, நிர்ணயம் செய்யும் ஆற்றல் பெற்று, வேலை செய்ய ஆரம்பித்தனர். இன்று வரை, அது தொடர்கிறது!
90 களில், தாராளமயமாக்கலுக்குப்பின், தொழில் வளம் பெருகும் போது, தொழிற்சாலைகள்,உப நகரங்களில்,கிராமங்களுக்கு அருகாமையில், பெருக ஆரம்பித்தவுடன், பண்ணையாட்கள் அதிக உழைப்பு/குறைந்த வருவாய் தரும் விவசாயப் பணியில் இருந்து, மெல்ல விலகி, அதிக வருவாய் வரும், வேலை தரும், தொழிற்சாலைகளுக்கு செல்ல ஆரம்பித்தனர்.
பண்ணையாட்களின், படித்த பிள்ளைகள் தகுதிக் கேற்ற பிற வேலைகளுக்கும், படிக்காத பிள்ளைகளை, கொடுங்கோல் தொழில் செய்யும் ஜவுளி ஆலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இது தமிழகத்தில் விவசாயம், மெல்ல சரிந்ததன் கதை! தண்ணீர்/ மின் பற்றாக்குறை, இடைத்தரகர் ஆதிக்கம், விளைபொருட்களுக்கு எதிர் பார்த்த விலை கிடைக்காதது.. இவையெல்லாம் உப கதைகள்!
Rammy..!
உங்களோடான விவாதத்தின் போது என் நினைவலைகளில் வேறு ஒரு நன்பர் நிழலாடுகிறார். நீங்கள் அவராய் இருப்பின்… மிக்க மகிழ்ச்சி..! வேறு பெயர்களில் வந்தால் தரக்குறைவாய் என்னவேண்டுமானாலும் பேசி விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் மத்தியில் உங்களது இந்த நேர்மை பாராட்டத்தக்கது. நீங்கள் ‘அவராய்’ இல்லாவிட்டால்.. முந்தைய
வரியை மறந்து விடுங்கள்… 😉
எனது விவாதத்தின் மய்யப் பொருளாக.. கைக்கூலி அரசால் உள்நாட்டு சந்தை புறக்கணிப்பு (விவசாயம் அழித்தொழிப்பு – தொழிலாளிகளுக்கு உரிய கூலி இல்லாதது – இதன் மூலம் வாங்கும் சக்தியை ஒழித்தது) என்கிற அம்சத்தை முன்வைத்து முந்தைய பின்னூட்டங்களை இட்டிருந்தேன். இதன் இன்னொரு அம்சமானது உள்நாட்டு முதலாளிகள் (தேசிய முதலாளிகள்) ஒன்று தமது தொழிலை விட்டு ஓட வேண்டும் (பொவண்ட்டோ – டொரினோ – மாப்பிள்ளை வினாயகர்) அல்லது பன்னாட்டு முதலாளிகளின் நலனைக் காக்கும் தரகு முதலாளிகளாக
மாறியாக வேண்டிய கட்டாயமும் உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறேன். பருத்தியை நீ ஏற்றுமதி செய்யாதே – ஆனால், நான் பனியனை ஏற்றுமதி செய்வேன்; முதலாளிகள் தான் தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்கிற நிலை வரும் போது பருத்தி முன்பேர வணிகத்தை ஊக்குவிக்கவும் செய்தனர். இன்றைக்கு பருத்தி ஆன்லைன் டிரேடிங்கால் பாதிக்கப்பட்டோ ம் என்று அலறுகிறார்கள் பனியன் முதலாளிகளும் மில் முதலாளிகளும்…. இதே மில் முதலாளி சங்கத்தின் தலைவர் கிருஷ்ணராஜ வாணவராயர் தான் 2001ம் ஆண்டு கோவையில் வைத்து பருத்தி ஊகபேர வணிகத்தைத் துவங்கி வைத்தார் என்பதை நினைவூட்டுகிறேன்.
இது ஒரு முரண்பட்ட நிலை. இப்போதும் கூட அவர்கள் பருத்தி ஏற்றுமதியைத் தடைசெய்ய வேண்டும் என்று கோருவது விவசாயிகள் நலனைக் காக்க அல்ல – இதே முதலாளிகள், விதர்பா விவசாயிகள் லட்ச்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போதும் கறாராக குறைந்த விலைக்குத்தான் பருத்தியை கொள்முதல் செய்தனர் – அரசு குறைந்தபட்ச
ஊக்கத் தொகையை (Minimum Support Price) அதிகரித்ததும் உடனே இறக்குமதி செய்து கொண்டனர். இன்றைக்கு ஏன் இப்படிக் குதிக்கிறார்கள்? சர்வதேச அளவில் சூதாடிகளால் பஞ்சு பற்றிக் கொண்டதும் உள்ளூர் இளிச்சவாயர்களான விவசாயிகள் தலையில் கைவைக்க நினைக்கிறார்கள். இப்படி விவசாயத்தில் இருப்பவர்களின் உழைப்பையும் – விவசாயத்தை
விட்டு ஓடிவந்தவர்கள் உழைப்பையும் மலிவாக ஏற்றுமதி செய்வதை நாங்கள் தரகுத்தனம் என்கிறோம். இப்படி வல்லரசு நாடுகளின் பின்னிலமாக இந்த நாட்டை ஆக்கி வைத்திருப்பதை (இயற்கை வளங்கள் – உழைப்பு – தொழில்களின் தற்சார்பு அழிந்து ஏஜெண்டுகளானது) மறுகாலனியாதிக்கம் என்கிறோம்.
இதற்கு மாறாக அரசும் முதலாளிகளுமாக உள்ளூர் சந்தையின் வாங்கும் சக்தியை ஏன் தூண்டி விடக்கூடாது?
உங்களது கடைசி பின்னூட்டத்தின் கருத்துக்களுக்கு பதிலாக கீழே –
//1.பெரும்பாலான விவசாயிகள்(வயதானவர்கள்) இன்னும் கிராமத்திலேயே தான், நிலத்தை காபந்து செய்து கொண்டு இருக்கிறார்கள்! அவர்களின், பிள்ளைகள் கார்ப்பரேட் வேலைகளுக்கு, சென்று விட்டனர்!//
//70 கள் வரை, தினக்கூலி முறையில், வேலை பார்த்த பண்ணையாட்கள்,80 களின் போது தங்களுக்குள், குழு அமைத்து, குத்தகை அடிப்படையில், தங்களின் சம்பளத்தை, நிர்ணயம் செய்யும் ஆற்றல் பெற்று, வேலை செய்ய ஆரம்பித்தனர். இன்று வரை, அது தொடர்கிறது! //
இதற்கு ஏதாவது ஸ்டேடிஸ்டிக்ஸ் உள்ளதா? இல்லை என்று நான் சொல்கிறேன். விவசாயிகள் வேறு ‘நல்ல வாய்ப்புகள்’ கிடைத்து விவசாயத்தை விட்டு விலகவில்லை. அதே போல் தமக்குள் விவசாயக் கூலிகள் சங்கம் அமைத்து கூலியை நிர்ணயம் செய்யும் ஆற்றலைப் பெற்றுவிட்டதாக சொல்வதையும் ஒப்புக் கொள்ள இயலாது – இது எங்காவது ஓரிரு கிராமங்களில் (அதுவும் தமிழகத்தில் மட்டுமே) இருக்க முடியும். நீங்கள் விதிவிலக்குகளைப் பிடித்துக் கொண்டு மொத்த சித்திரத்தையும் காண மறுக்கிறீர்கள். கோவையில் இன்றைக்கும்
அருந்ததியினர் கவுண்டர்களின் நிலத்தில் கூலி வேலை செய்வது கட்டாயம் – இல்லை என்று மறுக்க முடியாது. கூப்பிட்டால் போய்த்தான் ஆக வேண்டும். நீங்கள் இதே பதிவுலகில் இருக்கும் கோவைப் பதிவர்களை ஒரு சாம்ப்பிளுக்காக ஆலாந்துரை, நாதே கவுண்டன்புதூர், மாதம்பட்டி, தொப்பம்பட்டி, தொண்டாமுத்தூர், நரசீபுரம், பொள்ளாச்சி, வேட்டைக்காரன்
புதூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் உள்ள சேரிகளில் சென்று விசாரித்து ஒரு ரிப்போர்ட் எழுதச் சொல்லலாம்.
ஓப்பீட்டளவில் முதலாளித்துவம் வளர்ந்த தமிழகத்தில் – அதுவும் தொழில் வளர்ச்சியில் முன்னோடியான கோவையிலேயே இது தான் நிலைமை என்றால், ஆந்திர ராயலசீமா, மற்றும் வடநாட்டில் நிலமை எப்படியிருக்கும்?
இது விவசாயக் கூலிகளின் நிலை. ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்து ஒரு போகம் விவசாயம் செய்யும் விவசாயியோ விவசாயம் நடக்காத பருவத்தில் திருப்பூர், பெங்களூர் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்வதும், பின்னர் பருவம் வரும் காலத்தில் மீண்டும் கிராமத்துக்குப் போய் பயிர் வைத்து விட்டு வருவதும்…. மீண்டும் அறுவடைக்காலத்தில் ஒரு பத்து நாள் விடுப்பில் போய் விட்டு வருவதுமாக இருக்கிறார்கள். ஒருவேளை இது தியாகுவுக்கு தெரிந்திருக்கலாம் – அவரும் திருப்பூர் தானே…
அதாவது விவசாயம் விவசாயியைக் காப்பாற்றிய காலம் போய் – இப்போது விவசாயி விவசாயத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். முற்றிலும் தலைமுழுகவும் மனசில்லை – தொடந்து நடத்தவும் முடியாது என்கிற இக்கட்டு…!
//90 களில், தாராளமயமாக்கலுக்குப்பின்,…….. தொழிற்சாலைகளுக்கு செல்ல ஆரம்பித்தனர்//
தலைகீழாகச் சொல்கிறீர்கள். விவசாயத்திலிருந்து விரட்டப்பட்டவர்களும், நிலபிரபுத்துவ கொடுமையிலிருந்து தப்பி ஓடிவந்தவர்களும் தாராளமயமாக்களுக்குப் பின் பெருகிய தொழிற்பட்டரைகளுக்கு எப்பேர்பட்ட ரிசௌர்ஸ் தெரியுமா? குறைந்து கூலிக்கு சுரண்டிக் கொள்ள இவர்கள் தான் வாய்ப்பானவர்கள். தாராளமயமாக்கள் இவர்களின் உழைப்பைச்
சுரண்டித் தான் அமெரிக்காவுக்கு டிசைன் டிசைனாக பனியன்களை மலிவு விலைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. அதில் கங்கானி வேலை பார்க்கும் சூப்பர்வைசர் வேலை செய்யும் சிலருக்கு இந்த வாய்ப்பு பறி போய் விடுமோ என்கிற பயத்தில் மேலே பின்னூட்டங்களில் உளறிக் கொண்டு அலைகிறார்கள்.
முகத்தை மூடும் கோழையல்ல!
ஒரே முக வரி தான்!
புது சரக்கே!
வன்முறை எதிர்ப்பாளன்!
கோவை குசும்பு மட்டும் கொஞ்சம்!
அறிமுகம் இது போதுமா? ராஜ் வனஜ்!
Good Rammy… Please continue your arguments. I will reply them 2morrow.
உள்நாட்டு தேவையும் விவச்சாயிக்கு உரிய
விலையும் எப்படி சேர்ந்து இருக்க முடியும்
என்றால் மொத்த உற்பத்தியும் உள்நாட்டை நோக்கி இருக்க வேண்வதேன்னு சொல்றீங்களா
அதான் சொல்லிட்டேனே தேவைக்கான உற்பத்தில் திருப்பூரில் நடக்கிறது .
உள்நாட்டு தேவை என்பது தனிரகமானது
அதுதான் உள்ளாடைகள் அவை தட்டுபாடு
இன்றி கிடைக்கிறது .
அடுத்து விவசாயிக்கு உரிய விலையை
அரசு வழங்குகிறது அதன் மீது எதிர்ப்போ கிளம்பவில்லை கிளம்பியதற்கு
ஆதாரம் இருக்கா?
வேறு எதாவது இருந்தால் சொல்லுங்கள்
//அடுத்து விவசாயிக்கு உரிய விலையை
அரசு வழங்குகிறது அதன் மீது எதிர்ப்போ கிளம்பவில்லை கிளம்பியதற்கு
ஆதாரம் இருக்கா? //
தம்பி தியாகு,
புதிய ஜனநாயகம் கட்டுரையில சுட்டி கொடுக்க முடியாது. ஆனா, நீங்கதான் எதையும் ஆழமா ஆய்வு செய்யிறவரு ஆயிற்றே? விவசாயிகள் மஹாராட்டிரா நாண்டட் முதல் பல இடங்களில் அரசின் பருத்தி விலை மோசடியை எதிர்த்து போராடி வருகிறார்கள். இதற்கென ஒரு இயக்கமே செயல்படுகிறது. ஆதாரம் இருந்தா மட்டும் தியாகு தம்பி ஒத்துக்குமா என்ன? அடுத்து இன்னொரு கேள்வி கேட்டு அதுக்கும் ஆதாரம் கொடுன்னு கேட்க்கும்… ஏன்னா சாரு ரொம்ப ஸ்டிரிக்க்ட்டு… ஸ்டிரிக்க்ட்டு… ஸ்டிரிக்க்ட்டு….
கோணக்கண்ணனுக்கு பாக்குறதெல்லாம் கோணலாத்தான் தெரியுமாம் என்ன செய்வது?
//கோணக்கண்ணனுக்கு பாக்குறதெல்லாம் கோணலாத்தான் தெரியுமாம் என்ன செய்வது?//
இதனைத் திருத்தி கோணப் புத்திக்காரனுக்கு பாக்குறதெல்லாம் கோணலாகத்தான் தெரியுமாம் என்று படிக்கவும்.
உடல் அவயக் குறைபாடுகளை குத்திக் காட்டப் பயன்படுத்தியதற்கு வருந்துகிறேன்.
//விவசாயிகள் மஹாராட்டிரா நாண்டட் முதல் பல இடங்களில் அரசின் பருத்தி விலை மோசடியை எதிர்த்து போராடி வருகிறார்கள். //
அரசை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகிறார்கள் நான் அதை சொல்லவில்லை
/அதன் மீது முதலாளிகள் எதிர்ப்பு கிளப்பவில்லை என சொல்லி இருக்கனும் //
தம்பி என அழைத்தமைக்கு நன்றி ,
ஆனால் பாருங்கள் இந்த கட்டுரையை காப்பாற்ற என்ன பாடு படுகிறீர்கள்
கட்டுரையை மைய்யமாக கொண்டு நான் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அசுரன்
Ungalukku Konjam
Kooda Soodu,
Soranaiye illaiyaa
Thiyaagu ?
_
ivvalavu Kevalamaaga
Adi Vaangiya Piragum
Vinavai Ethirkka
Vendum Enkira
Ore Kaaranaththirkaaga
Marubadiyum,
Marubadiyum
Kaippulla Kanakkaa
Meesaiya Murukka
Ungalukku
Vekkamaa illa ?
//மைய்யமாக கொண்டு நான் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அசுரன் //
ஒருவாட்டி ரிவர்ஸ்ல போய் எல்லா பின்னூட்டத்தையும் படிங்க தியாகு – மானத்த வாங்காதீங்க (அட.. உங்க மானத்தைத் தான் சொல்றேன்)
RajaVanaj
Asaththureenga
Vaazththukkal !
_
Unga Pazaya
Paani Vivaathaththai
Kaana
aavalaai irukkiren.
இந்த அமைப்பு தோழனுக்கு என்னை திட்டுவது ட்தவிர வேற வேலை அமைப்பில் கொடுக்கவில்லையா ?
////மைய்யமாக கொண்டு நான் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அசுரன் //
ஒருவாட்டி ரிவர்ஸ்ல போய் எல்லா பின்னூட்டத்தையும் படிங்க தியாகு – மானத்த வாங்காதீங்க (அட.. உங்க மானத்தைத் தான் சொல்றேன்)//
அட அவரு மையமான கேள்வியத்தான தேடிக்கிட்டு இருக்காரு…
இதுல பாருங்க, ஒரு தந்திரம் இருக்கு. அந்த தந்திரத்துக்கு தந்தை நம்ம சுனாபானா வடிவேலு அண்ணாச்சிதான்….
தம்பி ஏற்கனவே நமக்கும், அவிங்களுக்கும் வாய்க்கா தகராறா இருக்கு என்று ஆரம்பித்தால் உடனே என்ன வாய்க்காத் தகராறு என்று எதிர் கேள்வி கேட்டு முடிக்க வேண்டும். இதுதான் தந்திரம்.
இதப் பாத்து மத்தவங்க சிரிக்கிறது, நம்ம மானம் போவது பத்தில்லாம் கவலப்படக் கூடாதுங்கறது ரொம்ப முக்கியமான கண்டீசன். தியாகுத் தம்பி இதுல நெம்ப எக்ஸ்பெர்ட்டு.
மேட்டரு ஓவரு… தியாகு புலம்ப ஆரம்பிச்சிட்டாரு அல்லாரும் லூசுல விடுங்க. கொஞ்ச நேரம் அவரோட வேலைய முடிச்சிட்டு ஏறக்கட்டிருவாரு….
தோழர் அவரு தளத்திலும் போய் விவாதிங்க• 7 கமாண்ட் மொத்தம் வந்திருக்கு. 7 ஐயும் எழுதியது அவரே. பாவம்க• ஆயிரந்தான் இருந்தாலும் அவரு முன்னாளில் நம்ம ஆளுங்க• (இப்படித்தான் அதியமான் பலருட்டயும் சொல்றாருன்னா பாத்துக்கோங்களேன்)
கட்டுரையைக் காப்பாற்ற யாரும் எந்தப் பாடும் படவில்லை. கட்டுரை தவறு என்று சொன்ன உங்களது அரைவேக்கட்டுத்
தனம் இங்கே அம்மனமாய் நிற்கிறது. ஷேம் ஷேம் பப்பி ஷேம்…!
//நீங்க ட்விட்டர்ல விட்ட “உட்டாலக்கடி கிரி கிரி.. சைதாப்பேட்டை வட கறி” போன்ற தத்துவ முத்துக்களெல்லாம்
என்னுடைய பின்னூட்டத்தில் மறுக்கப்பட்டுள்ளதே… உங்க பதிவை வாபஸ் வாங்கிக் கொள்ள முடியுமா?//
என்னங்க இதுக்குத்தான் இந்த பாடா
சரியா பேசினா வாபஸ் வாங்கிடலாம் ஆனா
நீங்க புடிச்ச முயலுக்கு மூனுகால்னு நிக்கிறீங்க
//புரியலைன்னு சொன்னா நான் விளக்கமா உங்களோட “கருத்து” எப்படி தவறென்று நிறுவப்பட்டது என்று பாயிண்ட் by
பாயிண்டாக தனியாக கோணார் நோட்ஸ் எழுதனுமா?//
என்னங்க நீங்க கட்டுரை எழுதிய புஜ தோழனுக்கு திருப்பூரில் என்ன உற்பத்தி நடக்குது என்பதே தெரியவில்லை பிறகு முதலாளி தாரளாமயம் உலகமயம் வால்பிடித்தல்னு ச்வடால கட்டுரை எழுதவேண்டியது கேட்டால் அதை சொல்லவில்லை இதை நிருவவில்லைன்னு டபாய்க்க வேண்டியது
//வினவு மேலும் எங்கள் மேலும் உங்களுக்கு இருக்கும் கண்மூடித்தனமான வெற்று ஆத்திரத்தின் விளைவைப் பாருங்கள்…
இப்போது ஒரு முழு மூடராக – அம்மனமாக – நிற்கிறீர்கள். புரியலையென்றால் புரிந்து கொள்ள பொறுமையும் முயற்சியும்
வேண்டும்…. இனியாவது வளர்த்துக் கொள்ளப் பாருங்கள்…//
அலோ இப்பதான் நீங்க அம்மணமாகி நிக்கிறீங்க ஆனாலும் உங்க உதாருக்கும் அளவே இல்லாம போச்சு சார்
Mani,
Thavaraana
Thagavalgalai
Tharaatheergal !
Thiyagu Enkira intha
Lumban Entha
Kaalaththilum
Amaippil irunthathillai !
aanaal,
Thaan
Amaippil
irunthathaagavum
Piragu
‘Veliyeri’yathaagavum
Ayookkiyaththanamaana
Muraiyil
Pulugi Varugiraar.
Athaiyellaam
Namba Vendaam.
_
Naanum ivarum ore
Neraththil Thaan
Amaippukku
Arimugam aanoom,
Naan Amaippil
inainthu Seyalpatten
intha Naattaamai
inaiyavillai.
_
Piragu Pala
Kaaranangalaal
Ennaalum
Seyalpada
Mudiyavillai Eninum,
iyandra Vagayil Ellaam
Amaippukku
Uthaviyaaga
irukkalaam Endru
Aatharavaalanaaga
irukkiren.
_
aanaal Viraivil
Meendum Kalathirku
Varuven.
Enave,
intha Maamethai
Namathu Amaippil
Endraikkum
24 Mani Neram Kooda
Uruppinaraaga
irunthathu illai
Enbathai Meendum
Koorikkolgiren.
//என்னங்க நீங்க கட்டுரை எழுதிய புஜ தோழனுக்கு திருப்பூரில் என்ன உற்பத்தி நடக்குது என்பதே தெரியவில்லை //
இப்படியெல்லாம் பேசனும்னா அதுக்கு ஒரு தனி தில்லு வேணும். பின்ன சும்மாவா கோமனமே அவுந்து கெடந்தாலும் அங்கவஸ்திரத்த சரிபன்றதுன்னா அது பலே கில்லாடியால தான் முடியும்.. இல்லைன்னா அதுக்கு தியாகுவா இருக்கனும்.
தீர்வு சொல்லவே இவங்களால முடியாதுன்னு சொன்னீங்க – சொன்னோம்
கச்சா பொருள் ஏற்றுமதியை ஆதரிக்கறாங்கன்னு சொன்னீங்க – இல்லைன்னு கட்டுரைல இருந்தே எடுத்துக் காட்டினோம்
உள்நாட்டுக்கு மட்டும் எப்படி உற்பத்தி பன்றதுன்னு கேட்டீங்க – உள்நாட்டு சந்தைன்னா என்னான்னு டியூசன் எடுத்தாச்சு
பனியனை ஏற்றுமதியே செய்யக்கூடான்னு சொன்னீங்க – அப்படியில்லைன்னு கட்டுரையில் இருந்தும் பின்னூட்டங்களிலும் காட்டினோம்.
இது எதுக்குமே பதில் இல்லை… மாறா திரும்பவும் செத்து செத்து வெளையாட கூப்டறீங்க. சரி இருங்க வாறேன்… மேலே நீங்க விட்ட மறு-புருடாவுல என்னா இருக்குன்னு பாப்போம்..
//ஏற்றுமதி செய்யும் பனியன் என்பது கேட்டகிரி 4 மற்றும் டேங்க் டாப் வகையறா நைட்டி பைஜாமா வெல்லாம் நம்மூர் பெண்கள் போடமாட்டாங்க போட்டாலும் நம்மூர் ஆளுக வருடகணக்கில் அடுத்த செட் வாங்க மாட்டாங்க அதனால அவங்களுக்கு தேவை படுவது உள்ளாடை மட்டும்தான் மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒரு பனியனை அதிகம்பட்சம் இரண்டுதடவைக்கு மேல உபயோகிப்பதில்லை அங்கு தேவை அதிகம் ஏற்றுமதி செய்கிறார்கள் அதுக்கா உள்ளூர்காரன் கிழிக்கிற வரை மெசினெல்லாம் நிறுத்தி வைக்க சொல்வீங்க போல ராசா //
எங்களுக்கும் ஜூது தெரியும் தியாகு. நான் என்ன கேட்டேன் நீங்க என்ன சொல்றீங்க? திருப்பூரோட இப்ப உள்ள மொத்த உற்பத்தி சக்தியையும் பயன்படுத்தி இந்திய மக்கள் தொகை முழுவதற்குமான உற்பத்தியை செய்தாலே உங்களுக்கு அமெரிக்க சந்தையை சார்ந்திருக்க வேண்டிய தேவையெழாது. நான் பேசிக் கொண்டிருப்பது ஒரு பில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு சந்தையைப் பற்றி – நீங்கள் இதில் நூறில் பத்து பங்கு உள்ள ஒரு துக்கடா சந்தையைக்கு ஏற்றுமதி செய்து லாபம் அள்ளும் முதலாளிகளின் வாய்ப்பைப் பற்றி சொல்கிறீர்கள். ஆனால் அப்படிச் செய்ய விடாமல் தடுப்பது எது? இங்கே வாங்கும் சக்தி குறைவான சந்தை இருப்பது தான். அதைத் தூண்டிவிட எல்லோருக்கும் சாதகமான தீர்வு ஒன்றை முன்வைத்தேன் – அதை நீங்கள் பார்க்கவேயில்லை.
கட்டுரை முதலாளிகள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் நடித்து விட்டு – பெருவாரியான விவசாயிகளைக் காட்டி – தனக்கு சாதகமான முடிவை எடுக்க அரசை நிர்பந்திக்கிறது என்பதை விளக்கியுள்ளது. அதாவது பக்கத்து இலைக்கு பாயாசம் போல – நீங்களோ அதை அப்படியே திரித்து வரைமுறையற்ற கச்சாப் பொருள் ஏற்றுமதியை பு.ஜ ஆதரிக்கிறது என்று கூசாமல் புளுகுகிறீர்கள்… நீங்கள் சொன்னதை அப்படியே வரிமாறாமல் கட்டுரையில் இருந்து எடுத்துக் காட்டுங்களேன் – இதை நான் ஒரு சவாலாக வைக்கிறேன்.
வெக்கமாயில்லையா தியாகு?
//தொழிலாளர் ஜீவாதார பிரச்சனையான பஞ்சு ஏற்றுமதிக்கு கொடிபிடிக்காதீங்கன்னு//
அட அட அட… வழியுது தொடைங்க முதல்ல. ஏற்றுமதியும் லாபமும் முதலாளிகளின் ஜீவாதாரப் பிரச்சினை – கூலி தான் தொழிலாளிகளின் ஜீவாதாரப் பிரச்சினை. அதே லாபத்தை உள்நாட்டிலேயே சாதித்து முரையான கூலியையும் கொடுக்க முடியும் வாய்ப்பைப் புறக்கணித்து விட்டு ஏற்றுமதி செய்யும் தரகு வேலை பார்ப்பதை நாங்கள் விமர்சிக்கிறோம் – நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.. இன்னும் எதுக்கு தியாகு லெனினோட படமெல்லாம்? ஆபாசமா இருக்கு….
//யுவர் ஆனர் ஏற்றுமதி செய்து பஞ்சு விலை அதிகமானதும் வாங்கிய முதலாளிக்கு அடுத்தும் விலை ஏறபோகிறதென்றால் பயம் வருமா வராதா ? //
அடடா… முதலாளிக்கு பயம் வர்றதுக்கு முன்னே உங்களுக்கு பயம் வந்திடுச்சு. நல்ல விசுவாசம் நன்றி தியாகு.
ச்சீய் இவ்ளோதானா நீங்க?
திரும்ப திரும்ப ஏற்றுமதி கொள்கை கொள்கைன்னு கூவிட்டு இருக்கேன் ஆனால் நீங்க வந்து மறுபடி மறுபடி
உள்நாட்டு தேவை பூர்த்தி ஆச்சான்னு கேட்கிறீங்க
வெட்கம் எல்லாம் உங்களுக்கு தேவை இல்லையோ
உள்நாட்டு தேவை பூர்த்தி ஆகலைன்னு
நிருவுங்க அல்லது பனியன் பத்தாம இறக்குமதி ஆச்சுன்னு நிருவுங்க
திருப்பூரில் மொத்தமா வெளிநாட்டு ஏற்றுமதிதான்ன்னு நிருபிச்சாதா ஆகும்
அதைவிடுத்து கதை பேசிட்டு காலத்த
ஓட்டாதீங்க
தப்பித்து ஓடறதுன்னு முடிவு எடுத்துட்டீங்க
தலை தெறியாம ஓடிடுங்க
Hi, hi..
Enna Thiyagu
Comediyaa ?
_
Saththiyamaa
Mudiyaladaa Saami 🙁
//இப்போது முன்பேர வணிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் நூற்பாலை முதலாளிகளும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விதர்பா பருத்தி விவசாயிகள் கோருவதைப் போல பருத்திக்கான ஆதரவு விலையை 4,500 ரூபாயாக உயர்த்துவதை ஏற்றுக் கொள்வார்களா? பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையிலும் பருத்திக்கான ஆதரவு விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளித்தொழில் முதலாளிகள்தான். ஏற்றுமதியைத் தடுக்க சுங்கவரி போட வேண்டுமாம். ஆனால் உலகச் சந்தையில் விலை குறைந்திருக்கும் போது, இவர்கள் பஞ்சை இறக்குமதி செய்து உள்நாட்டு பருத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்களாம். அதற்கு மட்டும் சுங்கத்தீர்வை விதிக்கக் கூடாதாம்.
//
SUNKAVARI PODA KUDATHA EEN KUDATHU ENA PESAAMAL IPPADI MODDA PAARPAAN KUDDAIYIL VIZHUTHA KATHAIYAA PEESUVATHE PULAIPPA POCHU
INTHA PPOINT THAN PARUTHI ETRRUMATHIKKU ATHARAVANATHUNNU NINAIKREN ILLAI ENTRRAN VILAKKAVUM
//தே லாபத்தை உள்நாட்டிலேயே சாதித்து முரையான கூலியையும் கொடுக்க முடியும் வாய்ப்பைப் புறக்கணித்து விட்டு ஏற்றுமதி செய்யும் தரகு வேலை பார்ப்பதை நாங்கள் விமர்சிக்கிறோம் – நீங்கள் ஆதரிக்கிறீர்//
என்னது தரகு வேலையா இதே தொழிலா உள்நாட்டில் லாபத்துடன் நடத்தமுடியும் அதை செய்கிறோம் என திரும்ப திரும்ப சொல்லியாச்சி செய்யவில்லை என்றால் உங்களுக்கும் எனக்கும் ஜட்டி கிடையாது இறக்குமதிதான் செய்யனும்
ஏற்றுமதி செய்ய தரகு வேலை பார்க்கிறேன் என்பது முட்டா ள் தனமான குற்றச்சாட்டு
ராஜவனஜ்,
பேசிக்கலி தியாகுவுக்கு ஏதோ அண்டர்ஸ்டேண்டிங் பிரச்சினை இருக்குங்க. நீங்க காது காதுன்னு சொல்லிட்டே இருக்கீங்க அவர் சம்பந்தா சம்பந்தமில்லாம கேது கேதுன்னு சொல்லிட்டு எதையோ உளறிக் கொட்டுறாரு. என்ன பேசுறோம்னு அவருக்கே தெரியல. என்ன எழுதறாருன்னு யாருக்குமே புரியல.
உங்க லெக்சர் அவர்ட வேகாது. இதுக்கு மொழி தெரியாத ஒரு அரேபியாக்காரனுக்கோ, ஆப்பிரிக்காரனுக்கோ மூச்சச் செலவழிச்சிருந்தா நீங்க சொல்ல வற்றதுல ஒரு 10%மாவது அவுங்களுக்கு புரிஞ்சிருக்கும்.
மிஸ் அண்டர்ஸ்டான்டு இப்படி சொல்லி சொல்லி எத்தன பேரை வினவில் இருந்து ஓட வச்சீங்க
ஹேய்… தியாகுங்கற பேருல நல்லவனாட்டம் பின்னூட்டம் போட்டுகிட்டிருக்கும் போதே காரல்மார்க்ஸ் பேருல போலியா வந்து அதியமானை அசிங்க அசிங்கமா திட்டி போட்ட பின்னூட்ட டவுசர் உருவப்பட்டு நீ அசிங்கப்பட்டதுதான் ஊருக்கே தெரியுமே அப்புறம் என்ன இங்க ஜிவாஜி வாயில ஜிலேபீன்னுட்டு???
அலோ முத்து அதியமான் என்கிற முதலாளி மேல பக்தியும் மரியாதையும் உங்களுக்கு தேவை எனக்கு தேவை படவில்லை அவரை திட்டியது அவர் பலதடவை என்னையும் அசுரனையும் திட்டியதற்கு எதிர்வினை
தியாகு பேரில வேண்டுமானாலும் அவரை திட்டத்தான் செய்வேன்
நீங்க வேண்டுமானால் அவர் போடும் பின்னூட்டங்களை அனுமதித்தும் அவரோடு விவாதித்தும் அவரை தாஜா செய்து வாழுங்கள்
//அதே லாபத்தை உள்நாட்டிலேயே சாதித்து முரையான கூலியையும் கொடுக்க முடியும் வாய்ப்பைப் புறக்கணித்து விட்டு ஏற்றுமதி செய்யும் தரகு வேலை பார்ப்பதை நாங்கள் விமர்சிக்கிறோம் – நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.. இன்னும் எதுக்கு தியாகு லெனினோட படமெல்லாம்? ஆபாசமா இருக்கு
//
//ஏற்றுமதியும் லாபமும் முதலாளிகளின் ஜீவாதாரப் பிரச்சினை – கூலி தான் தொழிலாளிகளின் ஜீவாதாரப் பிரச்சினை. //
ஏற்றுமதி இல்லாம கூலி கொடுக்க முடியும் என்பது சரிதான் அதற்கும் கச்சா பொருள் கட்டுகடங்காமல் ஏற்றுமதி செய்துட்டா முடியாது மேலும் ஏற்றுமதி செய்வதனாலும்
உள்நாட்டு தேவை பூர்த்தியாகவில்லை
தட்டுபாடு உள்ளதுன்னு நிருவலை நீங்க
உள்நாட்டில இத்தனை லட்சம் கோடி பேர்
இருக்கிறானே உற்பத்தி செய்தா என்னன்னு
திரும்ப திரும்ப கேட்கிறீங்க்
செய்துவருகிறோம்னு சொல்லியாச்சு
அதுவே கூலிக்கு போதும்னா ஏன் எ
ஏற்றுமதின்னு கேட்கிறீங்க
ஏன் ஏற்றுமதி கூடாது என்பதற்கு தக்க வாதமா தரகு முதலாளின்னு சொல்றீங்க
லாபம் அதிகம் வந்தால்தான் கூலி உயரும்
என்ற உண்மையை நம்ப மறுக்கிறீங்க
உதாரணமா ஒரு டெய்லர்கடையில் தைக்கும் டைலருக்கு சட்டைக்கு அம்பது ரூபாய் உள்ளூரில் கிடைக்குது ஆனால்
ஏற்றுமதியாகும் திருப்பூரில் இரண்டுமடங்கு அதிகம் அதனால் டெய்லர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளாது
கண்ணு இருக்கிறவன் இதை பார்ப்பான்
ஏற்றுமதி வேணான்னு சொல்லமாட்டான்’
அரைகுறை சிந்தனையாளனே இப்படி உள்நாட்டி உற்பத்தி மூலம் சம்பாதிச்சிடலாம்னு சொல்லு மழுப்புவான்
ஒருபக்கம் ஏற்றுமதியும் இன்னொரு பக்கம்
விவசாயத்துக்கான வளமான திட்டங்களும் இருந்தால் நாடு முன்னேறும்
ஏற்றுமதியை நிறுத்து உள்ளயே குடை என்றால் வெறும் கோமணம் கூட மிஞ்சாது
உள்நாட்டின் விவசாயம் வளரனும் என்பது
ஏற்றுமதி சார்ந்ததில்லை அது அரசு நிர்ணட்ரிக்கும் விலையை சார்ந்தஹ்டுன்னு
சொல்லிட்டு அதை உயர்த்தினால் போதும்னு சொல்லிட்டு
அதே நேரம் ஏற்றுமதியை முதலாளி எதிர்ப்பது அவனது லாபநோக்கம்தான்
என சொல்வதன் மூலம் என்ன சொல்கிறீர்கள் (கச்சா பொருள்)
ஏற்றுமதி சரி என்பதுபோலத்தானே
இல்லை இரண்டையும் தவறு என்கிறோம்
என்றால் உங்கள் தீர்வு இதுதான்
இந்திய சந்தைக்கு பஞ்சை கொடுத்து
இந்திய சந்தைக்கு உற்பத்தி செய்
என்பது
ஏன் லாபம் அல்லது கூலி அதிகம் கிடைத்தால் ஏற்றுமதி செய்யகூடாது
//ஏன் லாபம் அல்லது கூலி அதிகம் கிடைத்தால் ஏற்றுமதி செய்யகூடாது
//
சும்மா பஞ்சு ஏற்றுமதியை நாங்கள் ஆதரித்தோம்னு புருடா விடாதீங்க தியாகு. அப்படி கட்டுரைலையோ பின்னூட்டத்திலயோ யாருமே சொல்லலை – இதையாவது நிரூபியுங்க.
இதுக்கு முந்தைய பின்னூட்டத்தில் மற்ற விளக்கமான ‘டவுசர் கிழித்தல்’ அரங்கேறியுள்ளது. அங்கே போய் அழுது கொள்ளவும்
//திரும்ப திரும்ப ஏற்றுமதி கொள்கை கொள்கைன்னு கூவிட்டு இருக்கேன் ஆனால் நீங்க வந்து மறுபடி மறுபடி உள்நாட்டு தேவை பூர்த்தி ஆச்சான்னு கேட்கிறீங்க
உள்நாட்டு தேவை பூர்த்தி ஆகலைன்னு நிருவுங்க அல்லது பனியன் பத்தாம இறக்குமதி ஆச்சுன்னு நிருவுங்க திருப்பூரில் மொத்தமா வெளிநாட்டு ஏற்றுமதிதான்ன்னு நிருபிச்சாதா ஆகும்
அதைவிடுத்து கதை பேசிட்டு காலத்த ஓட்டாதீங்க //
நீங்க திரும்பத் திரும்ப கூவுகிற ஏற்றுமதிக் கொள்கை இன்னா நைனா?
உள்நாட்டுத் தேவை பூர்த்தியாகி விட்டதுன்னு நீங்க சொல்றீங்க – அப்படின்னா இந்தியாவின் நூறு கோடி மக்களும் ஒரே விதமாக ஜவுளி நுகர்வு செய்கிறார்கள் என்று அர்த்தம்.
ஆனா… அரசாங்க கணக்கு வேற மாதிரி சொல்லுதே நைனா….? இந்தியா என்கிற ஒரு தேசத்தில் வாழும் நூறு கோடிக்கும் மேலான மக்கள் தொகையில் 80% பேருக்கும் மேல்
ஒருவேளை சாப்பிடவே சோறு இல்லியாமே…? நீங்க இன்னா சொல்றீங்க…. அதெல்லாம் அவுங்களுக்கு போதுமான துணியை உற்பத்தி செய்துட்டோ ம் வீடே நெறஞ்சி கெடக்கு.. அடுத்து எங்க வேலை அமெரிக்கனுக்கு ஜட்டி மாட்டி விடறது தான்றீங்க.
அப்ப நீங்க சொல்றது ரைட்டா – அரசாங்கம் சொல்றது ரைட்டா….? பிரியலையே தல…. எஸ்கேப்பாகாம பதில் சொல்லுங்க பாப்போம்
இதுல என்னா சோக்குன்னா… இதையே நீங்களும் பலதடவை செல்வன் கிட்டயும் அதியமான் கிட்டயும் முத்தமிழ்ல வச்சி விவாதிச்சிருக்கீங்க. இந்த இடத்துக்குத் தான் உங்களை
தள்ளிக் கொண்டு வர இத்தனை நேரமா பொறுமையா காத்திருந்தேன். இப்போது உங்களுக்கும் HolyOxக்கும் ஒரே வித்தியாசம் – உங்க பிளாக்குல இருக்கிற லெனின் படம் தான்.
அட… வேட்டியே அவுந்துகிச்சி தலைல எதுக்கு துண்டு? கயட்டி வீசுங்க – சொம்மா சொகம்மா காத்து வீசும்..
விவசாயிக்கு விலை கிடைப்பதைப் பற்றி கவலைப்படாத – தொழிலாளிக்கு உரிய கூலி தராத – முதலாளியின் லாபத்துக்கான ஏற்றுமதியை இவரு தலைகீழா ஆதரிப்பாரம் – ரெம்ப
நல்லவராம். உள்நாட்டுத் தேவைக்கு இவர்கள் ஏற்கனவே உற்பத்தி செய்து லாபம் பார்க்கிறார்களாம் (கவனிங்க “லாபம்”) இப்போது உள்ள திருப்பூரின் முழு உற்பத்தி சக்திகளையும்
உண்மையான உள்நாட்டுத் தேவைக்கு உற்பத்தி செய்ய திருப்பி விடப்பட்டாலே அது முடியாது – ஓவர் லோட் ஆகும். தேவை தீர்லை என்கிறேன் (அரசின் வறுமை குறித்து ஆய்வுகளில்
இருந்தும் அதே முடிவுக்குத் தான் வரமுடியும்) இல்லை உள்நாட்டுத் தேவை தீர்த்து விட்டோ ம் – அடுத்து அமெரிக்க ஜட்டி தான் என்கிறீர்.
இதை நீங்கள் நிறுவ வேண்டும் என்றால்
1) உள்நாட்டுக்கான மொத்த தேவையையும் தீர்த்து விட்டோ ம் – எல்லா மக்களுக்குமான ஆயத்த ஆடை (உபயோகம் – விரைவிலான மறுசுழற்சி) தேவை நிறைவேறியது என்பதை
நிறுவுங்கள்
2) பாயிண்ட் நெம்பர் 1-ஐ நிறுவ முன்நிபந்தனை – இந்தியாவின் சந்தை வாங்கும் சக்தியுள்ள சந்தை என்பதை நிறுவுதல்.
அப்படியொரு சந்தை உருவாகவே தேசிய முதலாளிகளின் விவசாயிகளின் நலனும் இணைய வேண்டும். அதற்கு MSP விலையைக் கூட்டும் போது முதலாளி பஞ்சை இறக்குமதி செய்து விவசாயி வயிற்றில் அடிக்காமல் இருக்க வேண்டும் (அட… கட்டுரை இதைத் தானே சுட்டியது?) இதைச் சொன்னதற்குத் தான் நீங்கள் “ஆகாத வேலை” என்றீர்கள். அதைத் தான்
நான் தரகனின் குரல் என்றேன். புரிந்ததா?
போங்க சார்…. போய் புள்ள குட்டிகளப் படிக்க வைய்யிங்க.
விவசாயிக்கு விலை கிடைப்பதைப் பற்றி கவலைப்படாத – தொழிலாளிக்கு உரிய //கூலி தராத – முதலாளியின் லாபத்துக்கான ஏற்றுமதியை இவரு தலைகீழா ஆதரிப்பாரம் – ரெம்ப
நல்லவராம். உள்நாட்டுத் தேவைக்கு இவர்கள் ஏற்கனவே உற்பத்தி செய்து லாபம் பார்க்கிறார்களாம் (கவனிங்க “லாபம்”) இப்போது உள்ள திருப்பூரின் முழு உற்பத்தி சக்திகளையும்
உண்மையான உள்நாட்டுத் தேவைக்கு உற்பத்தி செய்ய திருப்பி விடப்பட்டாலே அது முடியாது – ஓவர் லோட் ஆகும். தேவை தீர்லை என்கிறேன்//
கூலி கிடைக்காமலா திருப்பூரில் ஏற்றுமதியும் உள்நாட்டு ஏற்றுமதியாக காதர் பேட்டையும் வளர்ந்துள்ளது திருப்பூருக்கு வந்தால் இதையெல்லம் சுத்தி பாருங்க உங்க நண்பர்க்ளை பார்ப்பதைவிட
திருப்பூரின் முழு உற்பத்தி சக்தியையிம் உள்நாட்டுக்கு இயங்கவில்லைன்னும்
அதனால் பற்றாகுறை இருக்குன்னும் நிரூபிங்க என்றால் கதையடிக்கிறீங்க
மறுபடியும் திருப்புவிடனும் மறிச்சு விடனும்னு பேசுறீங்க
திருப்பூரின் ஏற்றுமதி அறுபது சதவீதம் என்றால் உள்நாட்டு நுகர்வு நாற்பது சதவீதம் மேலும் ஈரோடு சந்தைக்குன்னும்
தயாரிப்பு நடக்குது .
வெளிநாட்டு பனியனேல்லாம் இன்னைகு
ஏரோட்ட்டும்நண்பனும் போட்டுட்டுஇருக்கான்
சரி பற்றாகுறை இருந்ததால் நிரூபிங்க என்றால் இந்தியாவின் வறுமைக்கெல்லாம்
திருப்பூர் தொழிலாளர்கள் பதில் சொல்லனும் என டாபாய்க்கிறீங்க
சோ ஸ்வீட் இதான் உங்க பாணி ஆர்குமென்ண்டா ராசா
//) உள்நாட்டுக்கான மொத்த தேவையையும் தீர்த்து விட்டோ ம் – எல்லா மக்களுக்குமான ஆயத்த ஆடை (உபயோகம் – விரைவிலான மறுசுழற்சி) தேவை நிறைவேறியது என்பதை
நிறுவுங்கள்
//
தீரவில்லை யாருக்கும் பனியன் இல்லைன்னு நிருவுங்கப்பா சும்மா சொரக்காய்க்கு உப்பில்லைன்னு சொல்லிட்டு இருக்கீங்க
தேவை தீரவில்லை அதனால் ஏற்றுமதி தேவை இல்லை எனும் உங்கள் வாதம்
அம்மணமாக நிக்குது
//பாயிண்ட் நெம்பர் 1-ஐ நிறுவ முன்நிபந்தனை – இந்தியாவின் சந்தை வாங்கும் சக்தியுள்ள சந்தை என்பதை நிறுவுதல்.
அப்படியொரு சந்தை உருவாகவே தேசிய முதலாளிகளின் விவசாயிகளின் நலனும் இணைய வேண்டும். அதற்கு MSP விலையைக் கூட்டும் போது முதலாளி பஞ்சை இறக்குமதி செய்து விவசாயி வயிற்றில் அடிக்காமல் இருக்க வேண்டும் (அட… கட்டுரை இதைத் தானே சுட்டியது?) இதைச் சொன்னதற்குத் தான் நீங்கள் “ஆகாத வேலை” என்றீர்கள். அதைத் தான்
நான் தரகனின் குரல் என்றேன். புரிந்ததா?//
உங்க பாயிண்டு நம்பர் ஒன்றை ஏற்கனவே அவுத்தாச்சு இரண்டாம் பாயிண்டு என்னவென்றால் தேசிய முதலாளிகளின் என்ற வார்த்தையை ஒருபக்கம் போட்டுவிட்டு அடுத்தபக்கம் அவர்களேஎ தரகுமுதலாளிகள் இவர்கள் விவசாயியை அவன் ஏற்றுமதிய எதிர்ப்பது தவறுன்னு சொல்வது உங்களுக்கு கைவந்த கலையோ
(என்ன கொடுமைன்னா இந்த கட்டுரைக்கு
மறுப்பு எழுத முதலாளிகளை ஆதரிக்க வேண்டியதாக் போனது அதையே நீங்க
முதலாளித்த்வ ஆதரவுன்னு சொல்லி தப்பிப்பது என நேர்மையில்லாமல் பேசுவது )
பஞ்சை ஏற்றுமதி செய்தும் தொழிலாளி வயிற்றில் அடிக்காதீர்கள் அப்போ இறக்குமதிக்கு தேவை இருக்காது
நீ தரகர் என சொல்லிட்டீங்க உங்களை என்ன சொல்வது
விவசாய முதலாளியை ஆதரிப்பவனை என்ன வார்த்தை சொல்லலாம்
//அப்படியொரு சந்தை உருவாகவே தேசிய முதலாளிகளின் விவசாயிகளின் நலனும் இணைய வேண்டும். அதற்கு MSP விலையைக் கூட்டும் போது முதலாளி பஞ்சை இறக்குமதி செய்து விவசாயி வயிற்றில் அடிக்காமல் இருக்க வேண்டும் //
தேசிய முதலாளிகளை இந்தியாவின் விவசாயிகளுக்கு எதிராக நிறுத்துவதை விடுத்து
இந்திய ஆளும் வர்க்கத்தை நிறுத்தவும்
அதன் சட்டையை பிடித்து கேள்வி கேட்கவும் வேண்டும்
அதை விடுத்து தொழிற்துறையும் ,விவசாயத்துறையும் ஏற்றுமதி செய்வதே தப்பு இரண்டு பேரும் செய்யாதீங்கன்னு சொல்லபடாது ராசா
விவசாய பொருட்கள் அனைத்தையும் ஏற்றுமதி செய்ய கூடாதுன்னோ
அதே நேரம் உற்பத்தி பொருள் அனைத்தையும் ஏற்றுமதி செய்யலாமுன்னோ சொல்லவில்லையே
(ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் என நிருவ நீங்கள் மெனக்கெடுவது அதற்காகத்தான்)
விவசாயபொருளின் எது கச்சா பொருளாக இருக்கிறது என்பதை அறிந்து அதன் மீது வர்த்தக சூதாட்டத்தை தடுங்கள் உள்நாட்டு தேவைக்கு போக ஏற்றுமதி செய்யுங்கள் என சொல்கிறேன் (இதை நீங்களும் சொல்கிறீர்கள்)
ஆனால் என்ன வித்தியாசம் விவசாயிகளுக்கு
ஆதாரவிலை கிடைக்காததே ஏற்றுமதி முதலாளியும் அவனது லாபவெறியும்னு மடைமாற்றிவிடுகிறீர்கள்
அடுத்து முழு உற்பத்தி பொருள் முழுவதையும் உள்நாட்டு தேவையை கணக்கில் எடுக்காமல் ஏற்றுமதி நடக்கவில்லை
இந்த சந்தையே தேவைக்கான உற்பத்தி சந்தை இல்லை லாபசந்தை எனும் பேச்சில்
இங்கே லாபம் கிடைக்காததால் ஏற்றுமதியில் மூழ்கி கிடக்கிறது திருப்பூர் என சொல்வீர்களானால் அப்படி இல்லை என்றேன்
தேவைக்கு ஏற்ப உற்பத்தி என்ற அலகில் நடக்கவில்லை என்றாலும் தேவைக்கு குறைவாகவே நடக்கிறது எனப்தற்கும் எந்த ஆதாரமும் வைக்கவில்லை
ஏன்னா 10 ரூபாயில் இருந்து பனியன் இன்றைக்கும் அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது காரணம் திரூப்பூர் மட்டுமே
ஆக தேவை குறைவு என நிரூபிக்க நீங்கள் வாங்கும் சக்தியை ஆதாரமாக கொண்டாலும்
அது இல்லாதப்ப எப்படி நிறைவேற்றி இருப்பீங்கன்னு சுத்தி வளைச்சு பேசினாலும்
வாங்கும் சக்தி வரும்வரை அனைத்து ஏற்றுமதியையும் நிப்பாட்டிட்டு போயிடனுமா
இந்திய நுகர்வு சந்தையின் வாங்கும் சக்தியை
மாற்றும் சக்தி இந்த ஜவுளி முதலாளிகள் கையிலா இருக்கிறது இல்லையே ( அப்படி சொல்வது செல்வன் வகையறா)
இந்திய விவசாயமும் அதன் வாங்கும் சக்தியும் அதளபாதாளத்தில் இருப்பதற்கு ஒரே காரணம் இந்த தாராளமய தனியார்மய்
சூதாட்ட பொருளாதாரம் என்கிறா பாயிண்டை விட்டுவிட்டீர்கள்
தொடரும்
een Thiyaagu
Engalonda
Maanaththai
Vaangureenga ?
_
Pesaama
Raavooda Raavaa
Thappichi oodi
Thalai Maraivaayidunga,
_
Naan Solrathu
Tirpurla irunthu
illeenga
Pathivulagilirunthu !
— Amaippu aatharavaalan.
இத கொஞ்சம் முயற்சி செஞ்சு பாருங்க. ரொம்ப எளிது.
http://www.google.com/transliterate/tamil
//என்ன கொடுமைன்னா இந்த கட்டுரைக்கு மறுப்பு எழுத முதலாளிகளை ஆதரிக்க வேண்டியதாக் போனது அதையே நீங்க முதலாளித்த்வ ஆதரவுன்னு சொல்லி தப்பிப்பது என நேர்மையி
ல்லாமல் //
வார்ரே… வா… தோபார்றா.. அண்ணன் வந்து, கட்டுரைக்கு ‘மறுப்பு’ தெரிவிக்க முதலாளிகளை ஆதரிக்க வேண்டியதாக போய்விட்டதாம். அப்படி போடு அருவாளை..! அதை நாங்க வந்து முதலாளித்துவத்துக்கு ஆதரவுன்னு சொன்னது தான் நேர்மையில்லையாம்.
இதுல பாருங்க, இவரு முதலாளிய ஆதரித்ததும் – முதலாளிக்கு லாபம் போயிருமேன்னு சொன்னதும் – முதலாளிக்கு பயம் வராதான்னு கேட்டதும் – விவசாயிக்கு உரியவிலையை முதலாளி தரமாட்டார்; நீ போய் அரசிடம் கேட்க வேண்டியது தானேன்னு சொன்னதும் – உள்நாட்டு முதலாளியும் விவசாயிலும் ஏன் இணையனும்; அது ஆகாதவேலைன்னு சொன்னதும் >-=>> கட்டுரையைக் குத்தம் சொல்லத்தானாம்.
நல்லா கவனிச்சா… நான் தொடர்ச்சியா விவசாயத்தை விட்டு ஓடி வந்தவர்களின் உழைப்பைச் சுரண்டும் திருப்பூர் முதலாளிகள் பற்றியும், திருப்பூரில் நடக்கும் உழைப்புச் சுரண்டல் பத்தியும் சொன்ன எதுக்குமே அண்ணன் வாயே திறக்கலை. ஏன்னா அண்ணனுக்கு அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை… ஏற்றுமதி பாதிப்பு – லாபம் பாதிப்பு – கங்கானிக்கு
தர்ற சம்பளம் பாதிப்பு (அதாவது சூப்பர்வைசர் சம்பளம்) – இந்த கண்ணியில அண்ணனோட பயமெல்லாம் அந்தக் கடைசி கண்ணியைப் பற்றித் தான். அதைத் தான் அண்ணன் இத்தனை நேரமா பதம் பிரிச்சி ‘சுக்குமி-ளகுதி-ப்பிலி’ன்னு இஸ்த்துகினு இருக்காரு.
அட ஏங்க இப்படி முதலாளிக்கு ஆதரவு தர்றீங்கன்னு நாம் சொன்னது தான் ‘நேர்மையில்லையாம்’.
தியாகு கேம் ஓவர்..! உங்களை ட்விட்டர் சந்திலிருந்து இங்கே ஓட்டிக் கொண்டு வந்ததன் நோக்கம் செவ்வனே நிறைவேறியது. அதையும் நீங்களே உங்கள் வாயால் பல இடங்களில் ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்து விட்டீர்கள். இந்தப் பின்னூட்டங்கள் இனிமே தியாகு யார் என்பதை எல்லோருக்கும் காட்டட்டும்…!
ஒருவன் எத்தனை தான் நடித்தாலும் என்றாவது ஒருநாள் சாயம் வெளுக்கத்தான் வெளுக்கும் என்பதற்கு நீங்களே உதாரணம்..!
இனியும் நீங்கள் இங்கே உளரலாம். அதையும் யாரும் அப்படியே விட்டுவிடப்போவதில்லை. நான் மீண்டும் வருவேன் – பதில் தருவேன். ஆனால் அந்த பதில்கள் உங்களை நோக்கி இருக்காது; இந்த விவாதங்களை நோக்கி வரும் பொதுவான வாசகர்களை நோக்கி இருக்கும். உங்களை முன்வைத்து அவர்களோடு தான் எனது உரையாடல்.
பி.கு- உள்நாட்டுச் சந்தை என்பதைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் “நாங்க பொம்மீஸ் நைட்டி வித்தோம்; ஜாக்கி ஜட்டி வித்தோம்” என்று நீங்கள் போட்டிருக்கும் பின்னூட்டத்தை வாசித்தேன். அதற்கு என் சௌகரியம் போல் வந்து பதில் சொல்வேன். இப்போதைக்கு அதிலிருந்து ஒரு ஸ்னிப்பெட் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் –
/திருப்பூரின் முழு உற்பத்தி சக்தியையிம் உள்நாட்டுக்கு இயங்கவில்லைன்னும் அதனால் பற்றாகுறை இருக்குன்னும் நிரூபிங்க என்றால் கதையடிக்கிறீங்க //
நான் ஒரு கருத்தைச் சொல்கிறேன் – அதற்கு ஆதாரமாக வாங்கும் சக்தியற்ற சந்தை என்பதை நிறுவ அரசின் ஆய்வுகளே உள்ளன என்கிறேன். அதை இல்லை என்று நீங்கள் மறுப்பதானால் அரசின் சர்வே ரிசல்ட்டுகள் பொய் என்று நிறுவ வேண்டியது உங்கள் கடமை. NSS ரிப்போர்ட்டை படித்து அது தவறு என்று வாதாட உங்களுக்கு என்ன தடை தியாகு?
நான் அப்புறம் வருகிறேன் என சொல்லி ஓடுதல் உங்களுக்கு புதிதில்லை ராசா
//NSS ரிப்போர்ட்டை படித்து அது தவறு என்று வாதாட உங்களுக்கு என்ன தடை தியாகு? //
Try this SIR…. I will be back..
தேவை குறைவு -என்பதை நிரூபிக்க முடியாமல் போனது வாங்கும்சக்தியை பற்றி பேச ஆரம்பித்து நீங்கள் மொத்த இந்திய பொருளாதாரமும் திட்டமிட்ட பொருளாதாரமாக இல்லை முதலாளித்துவ பொருளாதாரமாக இருக்குன் எனக்கு நிரூபிக்க தேவை இல்லை ராசா அது எனக்கு முன்னமே தெரியும்
வாங்கும் சக்தியை கூட்ட தொழிற்துறையினர் என்ன செய்யமுடியும் குறைந்தவிலைக்கு பனியனை விற்கமுடியும்
எவ்ளோ முடியும் அவ்ளோ குறைந்தவிலைக்கு நடைமுறையில் பனியன் கிடைக்கிறதே
2007வரை கட்டுபடுத்தபட்ட ஏற்றுமதிதான்
நடந்தது அப்போது பஞ்சும் ஏற்றுமதிஆகவில்லை பனியனும் பன்னாட்டு தேவைகளை கணக்கில் கொண்டு கோட்டா சிஸ்டம் மூலம் மட்டுமே ஏற்றுமதி ஆச்சு
அப்போ இருந்த வாங்கும் சக்தி இப்போ குறைஞ்ச்சு போச்சா இல்லையே அதிகரிச்சுதானே இருக்கு
இதே விவாதத்தில் விவசாயம் படுத்ததால் வேறு வழீல்லாமல் விவசாயம் தொழிலாளன் திருப்பூர் உட்பட தொழில்களுக்கு வருகிறான்
என்றீர்கள்
விவசாயம் அரசு ஆதாரவிலை கொடுக்காதது மற்றும் உரவிலை மற்றும் எவ்வளவு உழைச்சாலும் லாபமோ கூலியோ பெரிசா கிடைக்காதது என்கிற நிலையில் விவசாயி இருப்பது தொழில்துறையால் இல்லை
இந்த அரசால் அதன் தவறான போக்கால்
அதன் கொள்கைகளால்
விவசாய கூலிகளை திட்டமிட்டு தொழில் துறைக்கு விரட்டவில்லை அவர்களே நாள் கூலி 250 ரூபாய் ஆனதும் வருகிறார்கள்
வருடம் பத்தாயிரம் போனஸ் என நிலையான வேலைவாய்ப்பு என்பதாலும் வருகிறார்கள்
மேலும் தேனி முதலான ஊர்களின் நிலம்வைத்து இருப்பவர்களுக்கு ஆறுமாதம் வேலை இருக்கும் கிராமத்தில்மிச்சம் ஆறுமாதத்தில் சம்பாதித்து போக திருப்பூர்
நல்ல ஊர் என தெரிந்து வருகிறார்கள்
மாறாக நீங்கள் சொல்வதுபோல விவசாயத்தையும் விடமுடியாமல் தொழிலுக்கு வரவில்லை அப்படியே தலைகீழாக சொல்கிறீர்கள்
விவசாயம் தொழில் இரண்டிலும் இருப்பது அவர்களுக்கு லாபமாக இருக்கிறது .
மற்றபடி விவசாயம் சீரழிந்ததுக்கு எல்லாம்
இந்த முதலாளிகளை குத்தம் சொல்வதை விடுத்து போய் இந்திய அரசை ஓடுகாலி திமுக அதிமுக ஆட்சிகளை குற்றம் சொல்லுங்கள்
என்னடா முதலாளிக்கு வக்காலத்து வாங்குகிறான்னு சொல்லாதீங்க தொழிற்துறைக்கு சப்போர்ட்டா பேசுவது
முதலாளித்துவத்தை ஆதரிக்க அல்ல
நீங்கள் ஆட்சியை பிடித்தாலும் தொழிற்துறையை உள்நாட்டு தேவைக்கு மட்டும் பயன்படுத்திட்டு மிச்ச நேரம் தூங்க போட மாட்டீங்க ஏன்னா அபிரிமிதமான உற்பத்தி என்பதே தொழிலின் குணம்
விவசாயம் இடம் இருக்களவுக்குதான் செய்யமுடியும்
மேலும் பேசலலாம்
ஒவ்வொரு கேள்வியாக உடைய உடைய
நண்பர் ராசா போய் வாங்கும் சக்தியில்
உக்கார்ந்து விட்டார் இனிமே அதைதவிர
வேறு எதுவும் பேசமாட்டார் அவர்
சொன்னமாதிரி மகாஜங்களை பார்த்துதான்
விவாதிக்கனும் ராஜா சொன்ன விவசாய
பாதிக்கப்பட்டதானால் தொழில் வளர்ந்தது எனும் கேள்விக்கு
//நல்லா கவனிச்சா… நான் தொடர்ச்சியா விவசாயத்தை விட்டு ஓடி வந்தவர்களின் உழைப்பைச் சுரண்டும் திருப்பூர் முதலாளிகள் பற்றியும், திருப்பூரில் நடக்கும் உழைப்புச் சுரண்டல் பத்தியும் சொன்ன எதுக்குமே அண்ணன் வாயே திறக்கலை. ஏன்னா அண்ணனுக்கு அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை… ஏற்றுமதி பாதிப்பு – லாபம் பாதிப்பு – கங்கானிக்கு
தர்ற சம்பளம் பாதிப்பு (அதாவது சூப்பர்வைசர் சம்பளம்) – இந்த கண்ணியில அண்ணனோட பயமெல்லாம் அந்தக் கடைசி கண்ணியைப் பற்றித் தான். //
எல்லா தொழிலிலும் உழைப்பு சுரண்டல் இருக்கு அண்ணாத்தே சுரண்டல் உபரி இதையெல்லாம் இல்லேன்னு சொன்னா அதியமானும் செல்வனும் சிரிப்பாங்க
நீங்க கச்சாபொருள் ஏற்றுமதிக்கு கொடிபிடித்துவிட்டு இப்போது உழைப்பு சுரண்டல் கேடயத்தை ஏன் எடுக்கிறீர்கள் என சின்ன குழந்தைக்கு கூட தெரியும் அண்ணே
வேலை இழப்புதானே, கூலி இழப்புதானே
குறைந்த சதவீதம் பெரிசா விவசாயத்தை நம்பி இருக்கும் மக்கள் பெரிசான்னு மணி கேட்டதும் இதைத்தான்
அதற்கு நான் எப்பவோ கச்சாபொருள் மற்றும் உற்பத்தி பொருள்னு போட்ட பதில்லுக்கு ஏன் வாயை திறக்கவில்லை …………
ஏன்னா விவாதத்தின் அந்த பகுதிக்குள் போக நீங்க விரும்பலை என்பது தெரிகிறது
வேலை இழப்பு அதனால் தியாகுவின் வேலை இழப்பு அதனால் கட்டுரையை நொட்டை சொல்கிறார்னு சொல்லி சப்ப கட்டு கட்டுவதற்கு எதுக்கு மார்சியம் பொருளாதாரம் பேசனும்
கிளிசோசியம் சொல்லிடலாமே
அய்யா தியாகு ஏன் பேசுகிறார்
அவருக்கு வேலை போயிடும்
விசயம் அவ்ளோதான் கதவை இழுத்து மூடு காற்றுவரட்டும்னு கிளம்பிடுங்க
ஓம் புஜ புத்தகத்தை கீதை போல பாராயணம் செய்யுங்கள்
எனக்கும் கொஞ்சம் திருநீறு அனுப்புங்கள்
ஏற்றுமதி பாதிப்பு அல்ல தொழில்பாதிப்பு
வெளிநாட்டு நுகர்வு மட்டுமல்ல உள்நாட்டு நுகர்வும் இருக்கிறதுன்னு கீபோர்டில் அடித்து அடித்து அந்த கீகள் தேய்ந்து இருக்கும்
ஆக நீங்க பார்க்கிற எல்லா முயலுக்கும் மூனுகால்தான்
//நீங்க கச்சாபொருள் ஏற்றுமதிக்கு கொடிபிடித்துவிட்டு இப்போது உழைப்பு சுரண்டல் கேடயத்தை ஏன் எடுக்கிறீர்கள் என சின்ன குழந்தைக்கு கூட தெரியும் அண்ணே //
வெட்கம் மானம் ரோசம் சூடு சொரனை இருந்தால்…. பு.ஜ கட்டுரையோ இல்லை நானோ அல்லது விவாதித்த
தோழர்களோ கச்சாபொருள் ஏற்றுமதிக்கு எங்கே கொடி பிடித்தோம் என்பதைக் காட்ட வேண்டும்.
உங்களின் மற்ற உளரல்களுக்கும் – இதற்கும் சேர்த்து எனது பதில் நாளை வரும்…
ராஜா வனஜ்
அவர் லாஜிக்கா பேசுற மாதிரியே சீன் காட்டுறாரு. பட் வெத்து டப்பா என்பத தனியா ஆட விட்டீங்கன்னா அவரே ப்ப்ளிசிட்டி பண்ணிக்குவாரு. உள்நாட்டு உற்பத்திக்கும் என்ற வார்த்தையை வச்சே ஒரு கட்டுரை எழுதறக்காக இரண்டு நாள் ரகசியமா வச்சிருந்தாரு அந்த சங்கதிய• அத எடுத்து விட்ட அப்புறம்தான் எனக்கே நான் சீரியசா விவாதிச்சது இப்படி ஒரு #@#?! ஆ ன்னு புரிந்த்து. ஆகவே விவாதித்து டைம் வீண்டிக்க விரும்பல• உங்களுக்கு நிறைய டைம் இருந்தா கொஞ்சம் ?=+?! கிட்ட விவாதிங்க
//கச்சாபொருள் ஏற்றுமதிக்கு எங்கே கொடி பிடித்தோம் என்பதைக் காட்ட வேண்டும். //
//ருத்தி விவசாயிகள் கடனில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையிலும் பருத்திக்கான ஆதரவு விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளித்தொழில் முதலாளிகள்தான். ஏற்றுமதியைத் தடுக்க சுங்கவரி போட வேண்டுமாம். ஆனால் உலகச் சந்தையில் விலை குறைந்திருக்கும் போது, இவர்கள் பஞ்சை இறக்குமதி செய்து உள்நாட்டு பருத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்களாம். அதற்கு மட்டும் சுங்கத்தீர்வை விதிக்கக் கூடாதாம்.//
இதோ இருக்கே இதற்குமேல தொழில்துறைக்கு விரோதமா யாராவது பேசமுடியுமா
ஏற்றுமதி கூடாது என்கிறோம்
உங்க கட்டுரை என்ன சொல்லுதுன்னு மேல எடுத்து போட்டு இருக்கேன்
இந்தவரியை தனிதனியா பிரிச்சு நீங்க எத்தனை தடவை விவாதித்தாலும்
அது வெறும் வெங்காயத்தோலுமாதிரி
ஒன்றும் இல்லை தொழில் எதிர்ப்புன்னு காமிக்குது
இன்றைக்கும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராடிகொண்டு இருக்கிறாரகள்
பஞ்சை ஏற்றுமதி செய்யாதேன்னு
ஆமாம் வரி விதிக்க சொல்கிறோம்
அதை தொழிலாளர் கோரிக்க்கைதான் என்கிறோம்
பஞ்சு இறக்குமதி என்பதே ஏற்றுமதியின் விளைவு என்கிறோம்
உங்களுக்க் உங்க கட்டுரை எழுதிய தோழர்களுக்கும் கொஞ்சமாவது சூடு சொரணை இருந்தா நேரடியா சொல்லனும் ஏற்றுமதியை ஆதரிக்கிறீர்களா இல்லையான்னு அதை விட்டுவிட்டு
பாம்பும் சாககூடாது தடியும் நோக கூடாதென்றால் என்ன அர்த்தம்
அடுத்து வாங்கும் சக்தி இல்லைன்னு சொன்னீங்க
அப்போ நீங்களே உங்க வாயினால ஒத்துகிறீங்க பொருள் கிடைக்குது ஆனால் வாங்கும் சக்தி இல்லைன்னு
அதற்கு தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்
ஆகா ஒவ்வொன்றாக உங்கள் உழுத்து போன வாதங்கள் விழுந்ததும் உங்க கட்டுரை மண்ணை கவ்வியதும் வந்து பஜனை பாடுங்கம்
ஓம் புஜாவே நமக
என்று
இனிமேல் இதில்விவாதிக்க புதிய சரக்கோட வாருங்கள் ராஜாவனஜ்
தீபாவளி லீவுக்கு வந்தா திருப்பூருக்கு வாங்க நேரில விவாதம் நடத்தலாம்
//ராஜா வனஜ்
அவர் லாஜிக்கா பேசுற மாதிரியே சீன் காட்டுறாரு.//
அனானி சீன் காட்டுவது , ஒன்றுமில்லைன்னு
உதார் விடுவதெல்லாம் இங்கே உள்ள வாதங்களை படித்து பார்ப்பவர்களுக்கு தெரியும்
சோ உங்கள் கரகோசத்தை எழுப்பி
வீணா டைம்வேஸ்டு பண்ணாதீங்க்
அடேயப்பா! உங்க மார்க்சிய அறிவால் மன்மோகன்சிங்குக்கே மாரடைப்பு வந்துவிடப்போகிறது தியாகு!
///லாபம் அதிகம் வந்தால்தான் கூலி உயரும்
என்ற உண்மையை நம்ப மறுக்கிறீங்க////
லாபம் என்பது எப்படி எதிலிருந்து கிடைக்கபெறுகிறது/திரட்டப்படுகிறது என்று உங்கள் மார்க்சிய அறிவால் விளக்கிவிடுங்கள் தியாகு!
அனைத்தும் முற்றுப்பெற்றுவிடும்!
//// உங்கள் தீர்வு இதுதான் இந்திய சந்தைக்கு பஞ்சை கொடுத்து இந்திய சந்தைக்கு உற்பத்தி செய் என்பது.
ஏன் லாபம் அல்லது கூலி அதிகம் கிடைத்தால் ஏற்றுமதி செய்யகூடாது?
///////
இது ஆயத்த ஆடைகளுக்கு மட்டுமா?
கோடிக்கணக்கானோர் உடுத்த துணி இல்லாமல் (பட்டினி) இருந்தாலும் பரவாயில்லை, ஒரு சாரருக்கு லாபம்/அதிக கூலி கிடைத்தால் போதும் அதனால் எதையும் ஏற்றுமதி செய்யலாம். அப்படி தானா?
இதை சொல்லும் நீங்கள் பு.ஜ கச்சாப் பொருள்(பருத்தி) ஏற்றுமதியை ஆதரிப்பதாக புளுகுகிறீர்கள்…
பிரச்சனைக்கு தொழிலாளர்கள்-விவசாயிகள்-தேசிய முதலாளிகள் கூட்டினைவு தான் தீர்வை தரும், ஆனால் தேசிய முதலாளிகள் தங்களது (தரகு) நலனில் அக்கரை கொண்டே இப்போராட்ட்த்தை நடத்துகின்றனர் என்பதை தான் புஜ கட்டுரையும் விவாதித்த தோழர்களும் சொல்லி இருக்கிறார்கள்.
///தேசிய முதலாளிகளை இந்தியாவின் விவசாயிகளுக்கு எதிராக நிறுத்துவதை விடுத்து /////
இதை நீங்கள் நிறுபிக்கவேண்டும் தியாகு! உங்கள் பொய்யும் புளுகும் அதிகரித்துக்கொண்டே போகிறது…
/// விவசாயம் அரசு ஆதாரவிலை கொடுக்காதது மற்றும் உரவிலை மற்றும் எவ்வளவு உழைச்சாலும் லாபமோ கூலியோ பெரிசா கிடைக்காதது என்கிற நிலையில் விவசாயி இருப்பது தொழில்துறையால் இல்லை
இந்த அரசால் அதன் தவறான போக்கால் அதன் கொள்கைகளால்////
ஆக, விவசாயம் படுத்ததற்கு அரசு தான் காரணம்! அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை! ஆனால் அரசின் அதே கொள்கைகளால் நான் லாபமடைந்து கொள்வேன், எனக்கு லாபத்தில் குறை ஏற்படுமானால் மட்டும் போராடுவேன். அப்படிதானே?
//என்ன கொடுமைன்னா இந்த கட்டுரைக்கு மறுப்பு எழுத முதலாளிகளை ஆதரிக்க வேண்டியதாக் போனது அதையே நீங்க முதலாளித்த்வ ஆதரவுன்னு சொல்லி தப்பிப்பது என நேர்மையில்லாமல் //
அய்யோ ராமா!
வினவை எதிர்க்க, சாரி கட்டுரையை மறுக்க ஆர்.எஸ்.எஸ் காரனை கூட விவாதத்திற்காக ஆதரிக்கலாம்! சூப்பர்… (இதையும் உங்க நண்பர் அசாதி கிட்ட ஒரு தடவை கேட்டுகிட்டீங்கல்லே?!)
//// உங்கள் தீர்வு இதுதான் இந்திய சந்தைக்கு பஞ்சை கொடுத்து இந்திய சந்தைக்கு உற்பத்தி செய் என்பது.
ஏன் லாபம் அல்லது கூலி அதிகம் கிடைத்தால் ஏற்றுமதி செய்யகூடாது?
///////
இது ஆயத்த ஆடைகளுக்கு மட்டுமா?
கோடிக்கணக்கானோர் உடுத்த துணி இல்லாமல் (பட்டினி) இருந்தாலும் பரவாயில்லை, ஒரு சாரருக்கு லாபம்/அதிக கூலி கிடைத்தால் போதும் அதனால் எதையும் ஏற்றுமதி செய்யலாம். அப்படி தானா?//
1.பட்டினி கிடப்பது தொழிலாளர்கள் காரணமா
2.தொழிலாளியின் கச்சா பொருளை ஏற்றுமதி செய்துட்டா கோடிக்கணக்கான் பேர் நாலுவேளை சோறு திண்பானா
3. கோடிக்கணக்கானோர் உடுத்த துணி இல்லை அதனால் திருப்பூரின் பனியன் தொழிலை மூடிவிடலாமா திருப்பூர் கொடுக்கும் ஐந்து லட்சம்பேர் வேலை வாய்ப்பு பெரிதில்லை
என சொல்றீங்க
4.ஏற்றுமதி செய்வதால் நாட்டில் பஞ்சம் வந்துடுச்சா அல்லது கண்முன்னே தெரியும்
கச்சா பொருள் ஏற்றுமதியால் பஞ்சம் வருதா
அய்யா மார்க்சிய புலவரே சொல்லுங்கள்
//இதை சொல்லும் நீங்கள் பு.ஜ கச்சாப் பொருள்(பருத்தி) ஏற்றுமதியை ஆதரிப்பதாக புளுகுகிறீர்கள்…
//
//பிரச்சனைக்கு தொழிலாளர்கள்-விவசாயிகள்-தேசிய முதலாளிகள் கூட்டினைவு தான் தீர்வை தரும், ஆனால் தேசிய முதலாளிகள் தங்களது (தரகு) நலனில் அக்கரை கொண்டே இப்போராட்ட்த்தை நடத்துகின்றனர் என்பதை தான் புஜ கட்டுரையும் விவாதித்த தோழர்களும் சொல்லி இருக்கிறார்கள்.
//
நீங்கதான் தொழிலாளியும் முதலாளியும் சேரமுடியாதபடிக்கு பேசுறீங்க எப்படி தீர்வு
வரும்
///தேசிய முதலாளிகளை இந்தியாவின் விவசாயிகளுக்கு எதிராக நிறுத்துவதை விடுத்து /////
இதை நீங்கள் நிறுபிக்கவேண்டும் தியாகு! உங்கள் பொய்யும் புளுகும் அதிகரித்துக்கொண்டே போகிறது…
பஞ்சு ஏற்றுமதியை எதிர்ப்பது லாபம் குறைவுன்னு என்பதற்காகத்தான்னு போட்டு இருக்கே
//பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையிலும் பருத்திக்கான ஆதரவு விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளித்தொழில் முதலாளிகள்தான். ஏற்றுமதியைத் தடுக்க சுங்கவரி போட வேண்டுமாம். ஆ//
இந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு முதலாளிகள் அல்லது தொழில் துறையினர்தான் காரணம் என நிருவுங்கள் முதலில்
/// விவசாயம் அரசு ஆதாரவிலை கொடுக்காதது மற்றும் உரவிலை மற்றும் எவ்வளவு உழைச்சாலும் லாபமோ கூலியோ பெரிசா கிடைக்காதது என்கிற நிலையில் விவசாயி இருப்பது தொழில்துறையால் இல்லை
இந்த அரசால் அதன் தவறான போக்கால் அதன் கொள்கைகளால்////
ஆக, விவசாயம் படுத்ததற்கு அரசு தான் காரணம்! அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை! ஆனால் அரசின் அதே கொள்கைகளால் நான் லாபமடைந்து கொள்வேன், எனக்கு லாபத்தில் குறை ஏற்படுமானால் மட்டும் போராடுவேன். அப்படிதானே?//
ஏய்யா காதுகாதுன்னா வேதுவேதுங்கறீங்க
காரணம் அரசு என்றால் அரசின் சட்டையை பிடிக்க வேண்டியது விவசாயிகள்
தவறான பொருளாதார கொள்கையால் நாளைக்கு வேலை இழப்பு ஏற்பட்டால் அரசின் சட்டையை பிடிக்க வேண்டும் தொழிலாளர்கள்
நாங்க சம்பாதிச்சுக்கிறோம்னு சொல்லவில்லை
தொழில் நடக்க கச்சா பொருள் வேணும் அதை ஏற்றுமதி செய்துட்டா (வரன் முறை அற்று )
தொழில் நடக்காது என்பதே என்வாதம்
//என்ன கொடுமைன்னா இந்த கட்டுரைக்கு மறுப்பு எழுத முதலாளிகளை ஆதரிக்க வேண்டியதாக் போனது அதையே நீங்க முதலாளித்த்வ ஆதரவுன்னு சொல்லி தப்பிப்பது என நேர்மையில்லாமல் //
அய்யோ ராமா!
வினவை எதிர்க்க, சாரி கட்டுரையை மறுக்க ஆர்.எஸ்.எஸ் காரனை கூட விவாதத்திற்காக ஆதரிக்கலாம்! சூப்பர்… (இதையும் உங்க நண்பர் அசாதி கிட்ட ஒரு தடவை கேட்டுகிட்டீங்கல்லே//
வினவ எதிர்ப்பது எனது முழுநேர வேலையாக்கிடுவீங்க போல
வினன்வையும் கைப்புள்ள மாதிரி ஆக்காம விடமாட்டீங்க போல
வினவில் வந்த சில விசயங்களை ஆதரித்து இப்போதும் பேச வந்தால் உதாரணம் அலாவுதின் திருமணம் உடனே நீபோய் புள்ள் குட்டிகளை படிக்க வைன்னு அமைப்பு தோழன் வந்து சொல்லுவாரு
ஆனா வினவ எதிர்க்கிறான்னு புளுகளையும் விடமாட்டீங்க நல்ல ஆளுங்கப்பா
தியாகு,
உங்களை நினைத்து எனக்கு கோபம் இருந்தது. இப்போதோ உங்களைச் சுற்றி இருப்பவர்களை நினைத்து எனக்கு பரிதாபமாய் உள்ளது. பாவம்….
சரி நீங்கள் சொன்ன மேட்டருக்குள் வருவோம் –
//ருத்தி விவசாயிகள் கடனில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையிலும் பருத்திக்கான ஆதரவு விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளித்தொழில் முதலாளிகள்தான். ஏற்றுமதியைத் தடுக்க சுங்கவரி போட வேண்டுமாம். ஆனால் உலகச் சந்தையில் விலை குறைந்திருக்கும் போது, இவர்கள் பஞ்சை இறக்குமதி செய்து உள்நாட்டு பருத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்களாம். அதற்கு மட்டும் சுங்கத்தீர்வை விதிக்கக் கூடாதாம்.//
இதோ இருக்கே இதற்குமேல தொழில்துறைக்கு விரோதமா யாராவது பேசமுடியுமா
ஏற்றுமதி கூடாது என்கிறோம்
உங்க கட்டுரை என்ன சொல்லுதுன்னு மேல எடுத்து போட்டு இருக்கேன்
//
கட்டுரை சொல்வது இதைத் தானா? அட முருகப்பா… இத்தனை நேரமா நான் ஒரு சுவர் கிட்டயா பேசினேன்? அடச்சே… ஏழர சொன்னது சரியாப்போச்சு. ம்ம்ம் இருக்கட்டும்
கடேசியா ஒரு முறை விளக்க முயல்கிறேன்.
பொதுவாக எழுதப்படும் கட்டுரைகளில் எதார்த்தத்தில் இருக்கும் நிகழ்வு – அதற்கு சமூகத்தில் இருக்கும் எதிர்விணை – அதைப் பற்றிய அலசல் – முடிவு என்பதாக இருக்கும்
என்று வைத்துக் கொள்ளுங்கள். (எதுக்கும் உங்க மரமண்டைக்கு ஒரு தடவை கிளியர் பன்னிடறேன் – எல்லா கட்டுரைக்கும் பார்முலா இது அல்ல; இந்த கட்டுரையும் இந்த வரிசையில்
தான் இருக்கும் என்று அர்த்தம் அல்ல) இப்ப இந்தக் கட்டுரைக்கு வாங்க –
இப்போது பு.ஜ கட்டுரை –
1) திருப்பூரில் நடந்த பருத்தி – பருத்தி நூலிழை விலையேற்றத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தை பதிவு செய்கிறது
2) அடுத்து விலைக் குறைப்புக்காக முதலாளிகள் சங்கள் வைக்கும் கோரிக்கையைப் பற்றி சொல்கிறது
3) அடுத்து முன்பேர வர்த்தக சூதாடிகள் விவசாயிகளின் நன்பன் போல் நடித்து பருத்தி ஏற்றுமதியை ஆதரிப்பதை விமர்சிக்கிறது
4) இதற்கு பதிலாக விவசாயிகளுக்கு சூதாடிகளால் பயன் இல்லை என்று முதலாளிகள் சொன்னதை பதிவு செய்கிறது
5) அடுத்து சூதாடிகளுக்கு ஆதரவாக விவசாயிகளின் நன்பன் போல் நடித்து விலை கிடைக்கத்தான் பருத்தி ஏற்றுமதியை அதரிக்கிறோம் எனும் அரசின் நிலையை குத்திக் காட்டுகிறது.
6) முன்பேர சூதாடிகளை இப்போது எதிர்க்கும் முதலாளி எப்போதும் விவசாயிக்கு நண்பனாக நடந்து கொண்டதில்லை என்பதை கட்டுரை அலசுகிறது ( MSP அதிகரிக்கும் போது
சர்வதேச சந்தையில் இருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து கொள்வது )
7) அடுத்து, ஜவுளித் தொழில் முதலாளிகள் உள்நாட்டு சந்தையை புறக்கணிப்பதைப் பற்றி சொல்கிறது கட்டுரை
8) அடுத்து, தங்களுடைய நலனை மக்கள் நலனைப் போல் முதலாளிகள் முன்னிருத்துவது பற்றி சொல்கிறது (தொழிலாளர்கள் சுரண்டப்படுவது பற்றியும் இந்த பகுதியில் சொல்கிறது)
9) கடைசியாக முதலாளியால் தொழிலாளி ஏமாற்றப்படுவதையும் – பருத்தி ஏற்றுமதி உங்களைக் காக்கும் என்று சொல்லும் அரசால் விவசாயி ஏமாற்றப்படுவதையும் கட்டுரை
பதிவு செய்கிறது
இவ்வளவு தான்….
இப்போது நீங்கள் மேலே உள்ளதில் 6வது பாயிண்ட் பற்றி கட்டுரையில் இருந்த ஒரு பத்தியில் இருந்து பாதியை வெட்டியிருக்கிறீர்கள் – நீங்கள் வெட்டியதற்கு சற்று மேலே
வேறு சில வரிகளும் உள்ளன –
//இப்போது முன்பேர வணிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் நூற்பாலை முதலாளிகளும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விதர்பா பருத்தி விவசாயிகள் கோருவதைப் போல பருத்திக்கான ஆதரவு விலையை 4,500 ரூபாயாக உயர்த்துவதை ஏற்றுக் கொள்வார்களா? //
யோக்கியர் என்றால் இதற்கு பதில் சொல்லி விட்டு நீங்கள் தொடர்ந்திருக்க வேண்டும். நமக்குத்தான் அதெல்லாம் பயக்கமில்லையே நைணா…
அடுத்து கட்டுரை நெடுக பல இடங்களில் பருத்தி ஏற்றுமதியை எதிர்க்கும் வரிகள் உள்ளன. பாயிண்ட் நெ-3 / நெ-9ல் அது சிறப்பாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரை தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்து போராடுவதையும் – விவசாயத்துறையின் நலனும் – உள்நாட்டு முதலாளியின் நலனும் ஒன்றிணைய வேண்டும் என்பதையும் –
இப்போது உள்நாட்டு முதலாளி விவசாயியை ஏமாற்றுவது பற்றியும் – அரசு கச்சாப்பொருள் (உங்களுக்குப் பிடித்த வார்த்தை) ஏற்றுமதியை ஊக்குவிப்பது விவசாயியை ஏமாற்றுவதற்காக
என்பதையும் – தொழிலாளர்கள் முதலாளியின் நலன் காக்கும் கோரிக்கைகளின் பின்னே அணிதிரளாக் கூடாது என்பதையும் – பேசுகிறது.
நீங்கள் காது காது என்று சொன்னதை வேது வேது என்று புரிந்து கொண்டீர்கள்…..
உங்களது மற்ற மூடத்தனமான கருத்துக்களும்.. உளரல்களும் மீண்டும் எனது சௌகரியம் போல வந்து கிழிக்கப்படும். இப்போதைக்கு என்ஜாய் மாப்ளே…! கேப்பீ.. தீபாவளீ….
தியாகு,
நாம் யாரும் உலகில் உள்ள எல்லாவற்றையும் புரிந்து கொண்டவர்களாகத் தான் பிறக்கிறோமா? இல்லை. ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கும் போது அதைப் பற்றி
தெரிந்தவர்களிடம் பேசி விளங்கிக் கொள்ள நிச்சயம் முயல்வோம்; இது எனக்கு விளங்கவில்லையென்று ஒப்புக்கொள்வோம் – இது அடிப்படை நேர்மை.
நீங்கள் ஒரு கட்டுரையில் அதியமானை போலியான பெயரில் வந்து வசைபாடுகிறீர்கள்; வினவு தோழர்கள் அந்த பின்னூட்டங்களை மட்டுறுத்துகிறார்கள். ஏன்? எம்மைப் போன்ற ஒரு
குரலிலும் தோற்றத்திலும் ஒருவன் எமது கருத்தியல் விரோதிகளோடு ஆபாசத் தாக்குதலில் இறங்குவது எமது நம்பகத்தன்மையைக் குலைக்கும் செயல். நீங்கள் செய்யவிழைந்ததும்
அது தான். உங்களுக்கு வினவின் மேல் பிரச்சினை ஏதும் தோன்றுவதற்கு காரணமேயில்லாத போது இப்படிச் செய்ய ‘பொறாமை’ என்பதைத் தாண்டி வேறு காரணங்கள் ஏதும்
எனக்குத் தோன்றவில்லை. அதிலிருந்து தகுந்த ஒரு வாய்ப்பிற்குக் காத்திருக்கும் நீங்கள் தொடர்ச்சியாக எங்கள் மேல் அவிழ்த்து விட்ட அவதூறுகள் எத்தனை எத்தனை? அதையெல்லாம்
இப்போது நீங்களே நினைத்தாலும் துடைத்து சுத்தம் செய்து விட முடியாது.
இப்போதும் இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ள முடியாமல் உங்கள் மூளையைத் திரை போட்டு மறைப்பது எது? வினவை எதிர்க்க முதலாளியைக் கூட ஆதரிக்கும் நிலைக்கு
உங்களைத் தாழ்த்தியது எது? வினவை எதிர்க்க ஆர்.எஸ்.எஸ் ஜெயமோகனைக் கூட பயன்படுத்திக் கொள்ளும் சீரழிந்த நிலைக்கு உங்களை இறக்கியது எது? இத்தனை நாட்களாக
நீங்கள் பேசியது / எழுதியது / விவாதித்தது எல்லாவற்றுக்கும் இங்கே உள்ள உங்களின் வார்த்தைகள் எதிராக நிற்கிறது தியாகு. உங்களைப் பார்த்து இவ்வார்த்தைகளும் இதற்கு
முன் நீங்கள் பேசியவைகளும் எள்ளி நகையாடுவதை நீங்கள் காணவில்லையா? இப்படி எல்லோரும் பார்த்திருக்க நிர்வாணமாய் நிற்பதை உணராத நீங்கள் – அதையே ஒரு தகுதியாக
நினைக்கிறீர்களே.. அதற்குப் பெயர் தான் மழுங்கத்தனம்…!
உங்களின் இந்த மழுங்கத்தனத்தை பஸ்ஸில் ஏற்பட்ட பிரச்சினையை வைத்தே தோலுரிக்கத்தான் நினைத்தேன்… ஆனால் அது பெண்கள் சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான விஷயமாக
இருந்ததாலும், அதன் தரமே அரசியல் ஏதுமற்ற குழாயடிச் சண்டையாக இருந்ததாலும் – ஒருவேளை இப்போது நீங்கள் நிற்கும் இந்தத் தோல்வியுற்ற நிலைக்கு அந்த சமயத்தில்
நிற்க நேர்ந்தால் நீங்கள் பாதுகாப்பாக “என்ன இருந்தாலும் பெண் அல்லவா…?” என்கிற செண்டிமெண்ட் குப்பைக்குள் முகம் புதைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்ததாலுமே
இத்தனை நாட்களாக காத்திருந்தேன். அதனால் தான் இந்தப் பிரச்சினை எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாகத் தெரிந்தது. உங்களை ட்விட்டரில் இருந்து இங்கே ‘தள்ளிக்கொண்டு’ வந்தேன். இந்த விவாதம் துவங்கியதும் ஜவுளித் தொழில் பற்றியும் திருப்பூர் பற்றியும் சில புள்ளிவிபரங்களை எடுத்து வைத்திருந்தேன் (ஒருவேளை தேவைப்படலாம் என்று நினைத்து). ஆனால்,
நீங்களோ அது எதற்கும் வாய்ப்பே தராமல் நீங்களாகவே அம்பலப்பட்டுவிட்டீர்கள்.
உங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு… எஞ்சியிருக்கும் அத்தனை அடையாளங்களையும் துடைத்து விட்டு முழுமையாக ஒரு சீரழிவுவாதியாக அடையாளம் காட்டிக் கொள்வது தான்.
இல்லையென்றால் நீங்கள் பேசியதற்கும் எழுதியதற்கும் நியாயமான சுயவிமரிசனம் செய்து கொண்டு மன்னிப்புக் கேட்கலாம் – ஆனால், உங்களின் சொந்த ஈகோ அதற்கெல்லாம்
இடம் தராது என்பதை நான் அறிவேன். நாற்பது ஆண்டுகளாக ஊறிய மொண்ணைத்தனமெல்லாம் நாலு நாள் விவாதத்தில் விலகிச் செல்வது கொஞ்சம் கடினம் தான்.
இந்தக் கட்டுரையை எழுதிய தோழருக்கு திருப்பூரின் உற்பத்தி என்னவென்றே தெரியாது என்று சவடால் அடிக்கிறீர்களே…. அதற்கு எத்தனை திமிரும் கொழுப்பும் தேவை?
அதையெல்லாம் இங்கே கரைக்கத்தான் போகிறோம்…. விடப்போவதில்லை!
தொடரும்…
ராஜா,
அதியமான் விசயத்தில் என்மீது தாகுதல் நடத்தியது அவர்தான் நானாக தாக்குதல் நடத்தவில்லை
அந்த சுட்டியில் உள்ள கமெண்டுகளை படிக்கவும்
மற்றபடி நீங்கள் நான் அம்மணமாக நிக்கிறேன் என புலம்புவது உங்கள் இயலாமையை கட்டுரையை காப்பாத்த
நீங்கள் பேசிய வார்த்தைகள் எல்லாம்
பொருந்தாத நட்டுகளாக நிற்கின்றன
மேலும் அதிக வேலைபளுவால்
நான் இந்தவிவாதத்தில் வரவில்லை
அதை ஒரு தகுதியாக கருதி எனக்கு
அட்வைஸ் செய்யாதீர்கள்
நிறைய அறிவுரை பெறவேண்டிய நிலையில்
இருப்பது நீங்களும் வினவும்தான்
Pinnoottam No 34 kku
Pathil Sollunga
Thiyagu.
எல்லாரும் கேட்டுக்கங்க… “அண்ணனும் ரவுடி தான்…”
பருத்தி ஏற்றுமதி செய்வதை பு.ஜ ஆதரித்ததுன்னு சொல்லி இம்பூட்டு நேரமா புரளிய கிளப்பிட்டு.. அது பொய்ன்னு
எடுத்துக் காட்டிய உடன் அண்ணனுக்கு “அதிக வேலைப்பளு…” வந்திடுச்சாம்..
போங்க. போய் அதையாவது ஒழுங்கா செய்யுங்க. சனியன் ஒழிஞ்சதுன்னு நாங்களாவது எங்க வேலையப் பாப்போம்
மேலும் கட்டுரை இப்படி எழுதப்பட்டுள்ளது என்கிற உங்கள் தற்போதைய விளக்கத்தை மறுபடி எடுத்து அதையும் முன்பே சொன்ன விளக்கத்தின் அடிப்படையில் தோலுரித்தால்
ஏற்கனவே பெற்ற முடிவுக்குதான் வரமுடியும்
அதைத்தான் நீங்கள் விரும்புவதாக இருப்பின்
அதை தொடர்ந்து செய்யலாம்
ஆனாலும் இந்த கட்டுரையின் சார்புநிலையை
நீங்கள் ஆதரிக்க மணி சொன்னதுதான் காரணம் என்றால் மணியும் விவாதிக்கலாம்
ஆனால் அவரும் மறைந்து இருக்கிறார்
இப்படி தொடர்ந்து விவாதம் செய்ய உங்களுக்கு நேரம் கிடைப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது
அடடா… கட்டுரை இப்படி எழுதப்பட்டுள்ளது என்கிற எங்கள் “தற்போதய” விளக்கமாம்ல…
அது தான் எப்போதைய விளக்கமும் தியாகு அண்ணே…
அது இன்னாது ஏற்கனவே “பெற்ற” முடிவு???? பருத்தி ஏற்றுமதியை ஆதரித்ததுன்னு நீங்க விட்ட உட்டாலக்கடியா?
அதான் அப்படியொரு வரியே இல்லைன்னு நிரூபித்தபின் உங்களுக்கு “வேலைப்பளு” கூடிடிச்சே…?
ஒரு ஆயிரத்தைநூறு வார்த்தைய படிச்சு புரிஞ்சுக்க துப்பில்லை… வந்துட்டாரு தூக்கிக்கினு.. இந்தக் கட்டுரையை
இத்தனை ஆயிரம் பேர் வாசித்திருக்கிறார்களே… ஒருத்தருக்காவது “பு.ஜ பருத்தி ஏற்றுமதியை ஆதரிக்கிறது” என்று
தோன்றியதா? அட… எப்பப்பார்த்தாலும் வினவை குற்றம் கண்டுபிடிப்பதையே வேலையாக வைத்திருப்பவர்களுக்குக் கூட
அப்படி தெரியலை – ஏன்னா அவங்க எங்களை எதிர்த்தாலும் கொஞ்சமாவது மூளை இருக்கு. உங்களுக்குத்தான் அதைக்
காக்கா தூக்கிட்டுப் போயிருச்சே…
போங்கண்ணே… போங்க. போய் அதிக “வேலைப்பளுவை” கவனிங்க. அதையாவது ஒழுங்கா செய்யுங்க.அ
//இப்படி தொடர்ந்து விவாதம் செய்ய உங்களுக்கு நேரம் கிடைப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது //
என்னா ஆட்டம் போட்டீங்க?? அத்தனை சுலபத்துல மறந்துட முடியுமா???
நீங்க உங்க பதிவுகள்ல நாலு மாசமா எழுதின ‘விமர்சனத்தோட’ தகுதி என்னான்னு எல்லாருக்கும் புரிய வேணாம்…?
நாலுபக்க கட்டுரையோட நாலு வரியை வெட்டி ஒட்டி கேணத்தனமா உளரிட்டு; யாரும் திரும்பிப் பார்க்கலைன்னதும்
“என்னோட விமர்சனத்தப் பார்த்து பயந்துட்டாங்க” “யாருக்கும் பதில் சொல்லத் தெரியலை” “நான் தான் ஜெயித்தேன்”
என்று எத்தனை சவடால்கள்…?
யாரும் பயப்படவில்லை. யாரும் ஒதுங்கிக் கொள்ளவும் முயலவில்லை. ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன். அது இது
தான். இனிமேல் சவடால் பேசுவதற்கு முன் கொஞ்சமாவது உங்களுக்கு உள்ளே கூசாது? கூசும்… கூச வேண்டும்.
அதற்குத் தான் இது.
.//யாரும் பயப்படவில்லை. யாரும் ஒதுங்கிக் கொள்ளவும் முயலவில்லை. ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன். அது இது
தான். இனிமேல் சவடால் பேசுவதற்கு முன் கொஞ்சமாவது உங்களுக்கு உள்ளே கூசாது? கூசும்… கூச வேண்டும்.
அதற்குத் தான் இது.//
இந்த சவடாலை விட்டுவிட்டு
நீங்கள் அம்பலபட்டு போனதை தொடருங்கள்
அதான் உள்நாட்டு உற்பத்தி தேவை பூர்த்தி ஆகலை என்கிற உங்கள் வாதத்தை நிரூபியுங்கள்
சும்மா சுயமா வெற்றி வெற்றி நீங்க கத்துவது பார்க்க சகிக்கலை
ஹிஹி…ஹிஹி…ஹிஹி…ஹிஹி….
அண்ணன் எப்பவுமே ஸ்டிரிக்டு ஸ்டிரிக்டு ஸ்டிரிக்டு…
அண்ணன் “பு.ஜ பருத்தி ஏற்றுமதியை ஆதரித்ததுன்னு” அருள் வாக்கு சொல்வார்; நாம் அப்படியில்லைன்னு நிரூபிக்கனும்.
நிரூபிச்சதும்….? அண்ணன் அடுத்த குசுவை விடுவார்… நாம அது மணக்குதுன்னு சொல்லிடனும்… அதான் அண்ணன் ஸ்டிரிக்டாச்சே..
அண்ணே… எங்களைப் பாத்தா உங்களுக்கு எப்படித்தெரியுது??? உங்கள மாதிரியே தெரியுதா?? அதான்.. லூசு மாதிரி!
கட்டுரையில் இந்திய சந்தையைப் பற்றி சொல்லியிருக்கு – Rammyக்கான என்னுடைய பின்னூட்டங்களிலும் இந்திய சந்தையைப் பற்றி சொல்லியிருக்கேன்… அதோட குறைவான
வாங்கும் சக்திக்கு ஆதாரமா NSS ரிப்போர்ட்டை குறிப்பிட்டிருக்கேன்…
ஆனா.. அண்ணன் ஒரே வார்த்தைல “அதெல்லாம் செல்லாது”ன்னு ஆலமரத்தடி பண்ணையார் கணக்கா சொல்லிட்டு ‘ஹேய்… ஜெவிச்சுப்புட்டேன் ஜெவிச்சுப்புட்டேன்’ன்னு
கூவிக்கினு துள்ளிக்கிட்டே ஓடுவாராம்.
ஏங்க… அதான் ஒரு ஆதாரத்தை வைச்சிருக்கேனே… அதைப் படிச்சிப் பார்த்து ஆதாரத்தோடும் தரவு ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் இல்லைன்னு நிராகரிக்க என்ன தடை?
இருங்க ஒரு ஷார்ட் கட் சொல்லித்தாரேன்…. ஒரு மூணு நாலு வருசம் முன்னாடி நாம் செல்வன் கிட்ட பேசியதற்கு செல்வன் வைத்த எதிர்விணைகளைக் காப்பி + பேஸ்ட் கூட
செய்யலாம். முத்தமிழ் குழுமத்தில் தேடிப்பாருங்க கிடைக்கலாம். என்னவொன்னு….. அந்த விவாதங்கள்ல நீங்களே இப்ப பேசறதுக்கு எதிர்மாறா பேசி இருப்பீங்க.
பரவால்ல விடுங்க தியாது… அதான் வெட்கம் மானத்தையெல்லாம் தாண்டிட்டீங்களே.. சும்மா அதை எடுத்து என்னோட வாதத்துக்கு எதிரா வைங்க – அதையும் நான் உடைக்கிறேன்.
இன்னோரு வழி இருக்கு – வெட்கத்தை விட்டு அதியமான் காலில் போய் விழுங்கள்; அவர் எதுனா பாயிண்ட் எடுத்துக் குடுப்பார் – இல்லைன்னா அவரே வருவார்… நாங்க அவரோடவே
நேரடியா பேசிக்குறோம்..
நீங்க எப்பவும் போல ஸ்ட்ரிக்டாவே இருந்துக்கங்க.
ராமா ராமா வாங்கும் சக்தி குறைவுன்னா
அதுக்கு தொழிலாளர்கள் என்ன செய்யனும்
என பலதடவை கேட்டாச்சு
கமெண்டுகளை முழுசா படியுங்கள்
தொழிலும் கச்சா பொருள் இல்லாமல் நடக்காதுன்னு சொல்லியாச்சு
அந்த கச்சா பொருள் உள்நட்டிலேயே முழுபொருளா கொடுக்கலாம்னு ஒரு சப்பை கட்டை வச்சீங்க ஏன் வச்சீங்க
முழு உற்பத்தியும் அமெரிக்காவுக்கு நடக்குதுன்னு சொன்னீங்க
இல்லைன்னு நிருபிச்சாச்சு அடுத்து
இதோ தீருவுன்னு சொல்லி உள்நாட்டுக்கு உற்பத்தி செய்யனுமுன்னு சொன்னீங்க
செய்கிறோம் சொன்னதும்
நிறம்பி வழியிதான்னு கேட்டீங்க இல்லையா
இல்லை பனியன் இறக்குமதி ஆகிறதான்னு கேட்டதும் வந்துட்டீங்க
வாங்கும் சக்திக்கு
அப்போ உங்க வாயால இருக்குது ஆனால் வாங்க முடியலைன்னு சொல்றீங்க
உள்நாட்டுக்கு உற்பத்தி நடக்கலை என்கிற வாதம் அம்பலமாகிவிட்டு
அம்மணமா நிற்குது
அடுத்து பேசுங்க பேசுங்க
புஜ கட்டுரை பருத்தி ஏற்றுமதியை ஆதரிக்கிறது என்பதை நீங்கள் பல முறை கேட்டும் நிறுபிக்கவில்லை. உங்கள் புளுகை ஆதாரத்துடன் மறுத்த பின் வருத்தம் தெரிவிக்கவில்லை…
நீங்கள், உள்நாட்டு தேவை பூர்த்தி ஆகவில்லை என்பதை நிறுபிக்க சொல்கிறீர்கள்.
அரசின் புள்ளி விவர கணக்கின் படியே நாளொன்றுக்கு ரூ.20 க்கும் குறைவாக வருமானம் பெறும் மக்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்களால் வாங்க முடியாது என்பதால், இது உள்நாட்டு தேவை கணக்கில் வராதா??
அடுத்து தோழர் ராஜா வனஜ் பின்னர் வந்து பதிலளிக்கிறேன் என்று சொன்னதற்கே “ஓடிவிடுங்கள்” என்று திமிர் தனமாக சொன்ன நீங்கள், இப்போது வேலைப் பளு, பல்லு வலி என்று ஈனத்தனமாக பின்வாங்குவது ஏன்???
கைப்புள்ளை கூட ‘ஒத்துக்கிர்ரேன்….’ ன்னுட்டு தான் ‘நெக்ஸ்டு மீட் பண்ரேன்’ ன்னு கிளம்புவாரு!!!
அப்ப நிங்க கைப்புள்ள கூட இல்ல, அவருகிட்டயும் அடிவாங்கும் (அவருக்கும்) அல்லக்கையா???
அடப்பாவமே…….
//நீங்கள், உள்நாட்டு தேவை பூர்த்தி ஆகவில்லை என்பதை நிறுபிக்க சொல்கிறீர்கள்.
அரசின் புள்ளி விவர கணக்கின் படியே நாளொன்றுக்கு ரூ.20 க்கும் குறைவாக வருமானம் பெறும் மக்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்களால் வாங்க முடியாது என்பதால், இது உள்நாட்டு தேவை கணக்கில் வராதா??
அடுத்து தோழர் ராஜா வனஜ் பின்னர் வந்து பதிலளிக்கிறேன் என்று சொன்னதற்கே “ஓடிவிடுங்கள்” என்று திமிர் தனமாக சொன்ன நீங்கள், இப்போது வேலைப் பளு, பல்லு வலி என்று ஈனத்தனமாக பின்வாங்குவது ஏன்???
கைப்புள்ளை கூட ‘ஒத்துக்கிர்ரேன்….’ ன்னுட்டு தான் ‘நெக்ஸ்டு மீட் பண்ரேன்’ ன்னு கிளம்புவாரு!!!//
அலோ மிஸ்டர் அக்காகி
உள்நாட்டு தேவை பூர்த்தியாகலைன்னு எதவச்சு சொல்றீங்கன்னு கேட்டா தப்பா
நளொன்றுக்கு இருபது ரூபாய் சம்பளம் வாங்குபவன் மற்றும் அந்த மக்களின் நிலமையை ,சம்பளத்தை உயர்த்தை தொழிலாளர்கள் என்ன செய்யனும்
தான் பார்த்து கொண்டு இருக்கும் தொழில் அழிஞ்சு போனாலும் பரவாயில்லைன்னு
கச்சா பொருள் ஏற்றுமதிக்கு கொடிபிடிக்கனுமா
கட்டுரை கொடிபிடிக்கவில்லை என்றால்
மக்களின் இந்த போராட்டத்தை பாராட்டி எழுதி பின் பிற்சேர்க்கையாக சொல்லலாம் முதலாளிகளும் பஞ்சு இறக்குமதி செய்து விவசாயியின் வயிற்றில் அடிக்காதீர்கள்
தொழிலாள்ர்களே உங்களை சுரண்டும் முதலாளியின் கோரிக்கைக்கும் போராடும் நீங்கள் உங்கள் கோரிக்கைக்கு மதிப்பளிக்காத முதலாளியின் மீது இதே ஒற்றுமையுடன் அணிதிரளுங்கள் என கட்டுரையில்
சொல்லப்பட்டு இருக்கா
என்ன சொல்லி இருக்கு இந்த போராட்டமே முதலாளிக்கான போராட்டம் என்பதுபோலல்லவா சொல்லி இருக்கு
இந்த கட்டுரையை காப்பாற்றும் வேலையை எத்தனை நாள் செய்வீங்க் நானும் பார்க்கிறேன்
நீங்க போய் உங்க படை பட்டாளத்தை எல்லாம் அழைச்சிட்டு வந்து ஒரு பொருளாதார ஆய்வு கட்டுரை எழுதுங்கள் ……………..
என்னது ஈனத்தனமா பின்வாங்கினேனா
யோவ் உன் நாக்கில வசம்ப வச்சு தேய்க்க
வேலை இருக்கின்னா தப்பா
உழைப்பு எதிரி நீங்கதாய்யா (ராசாவனஜ் பாசையில் )
மிஸ்டர் ராஜா,
என்ன பதில் சொல்லிட்டீங்க பொருத்தமான பதில்னு இப்படி ஓவர் அலட்டலோட பேசுறீங்கன்னு சத்தியமா புரியலை
உங்கள் பாயிண்டு நம்பர் ஒன்று இரண்டு
கடைசியா வச்ச வாங்கும் சக்தி எல்லாம்
தர்க்க ரீதியா உடைபட்டதும் கடைசியா
நீங்க தூக்கி கொண்டுவரும் தியாகுவின் முதலாளித்துவ
ஆதரவு நிலையையும் உடைத்தாகவேண்டும்
ஏனெனில் கிடைக்கும் எல்லா ஓட்டைகளிலும் தப்பிக்கும் பழக்கமுள்ள நீங்கள் இப்போது கச்சா பொருள் ஏற்றுமதி ஆதரவுக்கு சரியான காரணம் சொல்ல இயலாமல் போய் சேர்ந்து இருக்கும் இடம்தான் தியாகுவின்
முன்னாளைய கருத்துக்கள் இன்னாளைய கருத்துக்கள் அதற்கு முதலாளித்துவ
ஆதரவாளர்களின் சிரிப்பு என்கிற
இடம்
அய்யா ராசா எனது கருத்து நிலைபாடு மாற்றம் அதன் மூலம் நானே அம்பலபட்டு போனேன் என சொல்வது தவிர
நீங்கள் ஏற்கனவே வைத்த வாதங்களில்
எந்த சத்தும் இல்லை என்பது தெரிந்து விட்டது
திருப்பூரின் முழு சக்தியையும் உபயோகித்து
ஜட்டி தைக்கலாம் எனும் போதே
தெரிந்து விட்டது உங்களுக்கு அந்த கட்டுரையை சப்போர்ட் செய்ய வேறு என்ன சொல்வதென தெரியவில்லை
மணி எடுத்து கொடுத்த பாயிண்டுகளையும்
வைத்து உங்களால் ஏன் விவாதிக்க முடியவில்லை என வியக்கிறேன்
அந்த பாயிண்டில் மணியும் விவாதிக்கவில்லை அவரு அறிவுஜீவு
அவரு மட்டமே வேற ? 🙂
பாயிண்டுக்கு வருவோம் எனது ஆதரவு
முதலாளிக்குன்னு சொல்வது நீங்க வைக்கும் டக்கு அதுவும் பொய்
ஏன் என்றால் தொழில் துறையையும்
முதலாளியையும் பிரிச்சு எப்ப பார்க்கனும்
என்பது எனக்கு தெரியும்
இங்கு வள்ர்ந்துள்ள தொழில் வளர்ச்சிக்கு
முதலாளி மட்டுமே காரணம் என நான் சொல்லவில்லை மேலும் வீழ்ச்சி
முதலாளியை மட்டுமே பாதிக்காது
எனவும் நான் சொல்லவில்லை
என்பதால் உங்கள் வாதம் நாயடிபடுகிறது
இந்த இடத்தில்
இனிமேல் நீங்கள் பேச என்ன இருக்கிறது
அனானியா ஏன் வந்தீங்க வினவு ஏன் எதிர்த்தீங்க என பேச்சை வளர்த்துட்டு போவது தவிர உங்களுக்கு இந்த இடத்தில் வேறு வழியில்லை
ஏனெனில் பதிலுக்கு பதில் போட்டாச்சு என்கிற மூட நம்பிக்கை வாதி நீங்க
எனவே தொழிலையும் ஏற்றுமதியையும் ஒன்றினைக்கும் மற்றும் விவசாயத்தையும்
புரிந்துகொள்ள அடிப்படை கருத்துருக்கள்
உங்களுக்கு தேவை தவிர அடிப்ப்டையான
கருத்துக்களை புரிந்துகொள்ள நீங்கள் சார்புநிலை பற்றிய ஆட்டத்தில் இருந்து விடுபடாதவரை நிதர்சணம் ஒன்றாகவும்
கட்டுரை வேறொன்றாகவும் இருக்கும்
புதிய ஜனநாயகத்தில் வந்த அனைத்து கட்டுரைகளையும் விமர்சித்து நூலாக போடுகிறேன் -அந்த முயற்சியில் இறங்குவேன் எனது வேலை நிலமைகள்
ஆதரித்தால்
முடிந்தால் மறுத்து நூல் போடுங்கள்
//என்ன பதில் சொல்லிட்டீங்க பொருத்தமான பதில்னு இப்படி ஓவர் அலட்டலோட பேசுறீங்கன்னு சத்தியமா புரியலை //
இப்பயாச்சும் சொன்னீங்களே ‘எனுக்கு ஒன்னியுமே பிரியலை’ன்னு..
//கச்சா பொருள் ஏற்றுமதி ஆதரவுக்கு சரியான காரணம் சொல்ல இயலாமல் //
கட்டுரை பருத்தி ஏற்றுமதியை ஆதரித்தது என்று நீங்கள் சொன்னது புளுகு என்பதை கட்டுரையில் இருந்தே எடுத்துக் காட்டியபின்னும் இப்படி லூசு கணக்கா உளர ஒன்னு நிச்சயமா
தேவை…. அது தான் மழுங்கத்தனம்!
//திருப்பூரின் முழு சக்தியையும் உபயோகித்து
ஜட்டி தைக்கலாம் எனும் போதே //
திரும்ப ஒருவாட்டி கேட்கிறேன்… வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தா இப்படி நான் சொன்னதற்கு ஆதாரம் ப்பிளீஸ்…
அப்புறம் தொரை புத்தகம் போடப்போறீங்களாம்ல… பாவம்ங்க பேப்பரு… விட்றுங்க.
ஒன்னுமில்ல நீங்க புடிச்ச முயலுக்கு மூனுகால்
அந்த ஒரு கால் அந்த கட்டுரை இரண்டுகால் உங்களுக்கு இருப்பது .
கட்டுரை நல்லபடியா எழுதபட்டு இருக்கிறது
இந்தமாதிரி ஒரு அரசியல் பொருளாதார கட்டுரையை யாரும் எழுதி இருக்க முடியாது
காரல்மார்க்ஸ் எங்கெல்ஸ் வெளியிட்ட
கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையே பிச்சை வாங்கனும்
இந்த கட்டுரையை எழுதிய அறிஞர் மாதிரியான ந்
நபர்களை நான் வாழ்த்துகிறேன்னு சொல்லிடவா ?
இதே தங்களின் மேலான ஆசையெனில் அதை சொல்லிடுறேன்
சும்மா வந்து கட்டுரை அதை இப்படி சொன்னது இதை அப்படி சொல்கிறதுன்னு உளராதீங்க சார்
@@@@@
புதிய ஜனநாயகத்தில் வந்த அனைத்து கட்டுரைகளையும் விமர்சித்து நூலாக போடுகிறேன்
@@@@@
மறக்காமல் நூலில் நல்லா மாஞ்சா தடவவும் இல்லையெனில் யாரவது அரைடவுசர்கள் டீல் அடித்து உங்கள் மார்க்சிய பட்டத்தை அறுத்துவிடப்போகிறார்கள்….
நாராயணா…………………………………………………………………..மீ த எஸ்கேப்புடா நாராயணா
//மறக்காமல் நூலில் நல்லா மாஞ்சா தடவவும் இல்லையெனில் யாரவது அரைடவுசர்கள் டீல் அடித்து உங்கள் மார்க்சிய பட்டத்தை அறுத்துவிடப்போகிறார்கள்….//
என்ன தைரியம்னா நீங்க ஒரு நூல் வெளியிட்டா எவனும் கண்டுகொள்வதில்லை
எந்த கட்சிகாரனும் பதில் சொல்வதில்லை
அதனால் இவ்ளோ தைரியம்
////விமர்சித்து நூலாக போடுகிறேன்////
யப்பா, நீ உடுற நூல தான் ஏற்கனவே பாத்துட்டோமே. 🙂
நீர் முதல்ல உம்ம பிளாக்குல பிளேடு போடுறத நிறுத்திட்டு ஏதாவது உறுப்படியா எழுத பாரும். அப்பொறமா நூல் உடுறத பாக்கலாம்..
சேரிக்காரன் நான் எழுதுவதை நிறுத்தனும் என்பதுதான் உங்கள் நீண்ட நாள் ஆசையா
ஏய்யா வெக்கமாயில்லை எழுதுவதை நிறுத்துன்னு சொல்ல
நான் எழுதுவேன் எழுதாமல் இருப்பேன் என் இஸ்டம்
“ஒருதன் கக்கூஸ் போகும்போது வெள்ளரிக்காய் சாப்பிட்டானாம்
இன்னொருத்தன் கேட்டானாம் ஏய்யா சாப்பிட்டுகிட்டே வெளிய இருக்கன்னு
இவன் சொன்னானாம் நான் அதில தொட்டுகூட சாப்பிடுவேன் நீ மூடிட்டு போன்னு “
இந்த கதை உங்களுக்கு பொருத்தமா இருக்கும்
அய்யா அண்ட புளுகுணி தியாகு! நான் எப்ப உம்ம எழுதுறத நிறுத்த சொன்னேன்??
’ஏதாவது உறுப்படியா எழுத பாரும்’ ன்னு தானே சொல்லி இருக்கேன்!
வெள்ளெரிக்கா திங்குறது நீரா நானா??
வெளக்குமாறு சிரிப்பா சிரிக்குது 🙂
அதியமாந்தான் டேய் என ஆரம்பித்து வசவில் இறங்கிறார்
வெறுமனே காரல்மார்க்ஸ் என்ற பெயரில் வந்து திட்டினே என சொல்லி நீங்களும் தோழர்களும் சொல்லுவது பொய்
சுட்டியும் கமெண்டும் கீழே
————————————–
https://www.vinavu.com/2010/03/16/jeyamohan-dondu-raghavan/
டேய் [obscured],
எனது இந்த பதிவில் மிக விரிவாக எழுதியிருக்கிறேன் என்று முன்பே சுட்டி அளித்திருந்தேன் : http://nellikkani.blogspot.com/2009/11/blog-post.html ‘உபரி மதிப்பு என்னும் மாயயை’ ; அந்த பதிவில் வந்து விவாதிக்க துப்பில்லாமல், தொடர்ந்து தனிமனித தாக்குதல் செய்தால் இப்படி தான் திருப்பி பேசுவேன்.
Give respect and take respect. Ok.
வினவு : இது போன்ற [obscured] ‘புரியும்’ மொழியில் தான் பேச வேண்டிய கட்டாயம் இங்கு அடிக்கடி ஏற்படுகிறது.
Reply
Posted on 23-Mar-10 at 10:42 pm
பொய் பொய் பச்சை பொய், கோழை தியாகுவே
@@@@@
https://www.vinavu.com/2010/03/16/jeyamohan-dondu-raghavan/#comment-19491
யோவ் உனக்கு வேற வேலையே இல்லையா
லூசு மாதிரி உளறிட்டே இருக்க
@@@@@
என அதியமானை திட்டி துவங்கியதே நீர்தான்…அதற்கும் அதியமான் பொறுமையாக பதில் சொல்லியிருந்த வேளையில் மேலும் மேலும் நீர் அவரை திட்டவே அவர் திருப்பி திட்டியதை மட்டும் எடுத்துப்போட்டு ஏமாற்ற வேண்டாம்!
உம் போலி முகமுடியை அவிழ்த்து அம்மணமாக்கியவன் என்ற முறையில் உமது அயோக்கியத்தனங்களை அனைத்தும் அறிவேன்.. நான் விவாதத்தில் இல்லை என்பதால் பொய்களை அள்ளிவிடவேண்டாம்.
கேள்விக்குறி அதியமானை டஒருமையில் அழைத்தது நாந்தான் அதை இல்லையென சொல்லவில்லை பிறகு அவரு டே போடவும்
அவரை நான் திட்டவும் என விசயம் வளர்ந்தது
ஆமாம் அந்த நல்லமனிதனை திட்டியதற்கு உங்களுக்கு கோபம் வருதுன்னா ஆச்சரியம்தான் கேளுவிக்குறி
தோ பார்ரா.. முதல்ல அதியாமான்தான் திட்டினதுன்னு ஆதாரம் போட்டது,,, ஆப்பு வைச்ச உடனே இல்ல இல்ல நான் தான் போட்டேன்னு சொல்றது… ராஜா வனஜ், நோட் பண்ணுங்க நோட் பண்ணுங்க
/ஆப்பு வைச்ச உடனே இல்ல இல்ல நான் தான் போட்டேன்னு சொல்றது… ராஜா வனஜ், நோட் பண்ணுங்க நோ//
ஒருமையில் அழைத்தது நாந்தான் என சொல்லி இருக்கேனே அவருக்கெல்லாம் நீங்க நெம்ப மரியாதை கொடுப்பதும் அறிவேன் என்னய்யா ஆப்பு வச்சேன் வச்சேன்னு கத்துறீங்க
ஆப்பு வச்சிருக்கேன் ஆப்புவச்சுருக்கேன்னு
மீனா மாதிரி ஆடுவீங்க போல
//தொடர்ந்து தனிமனித தாக்குதல் செய்தால் இப்படி தான் திருப்பி பேசுவேன்.//
அது ஏன் சொந்த செலவில் சூனியம் வைக்கறதுல நீங்க அத்தனை பர்ட்டிகுலரா இருக்கீங்க தியாகு? எங்கேயோ கிடக்கிற ஆப்பில் போய் நீங்களே சொருகிக்கிறீங்களே….
அதான் அதியமான் தெளிவா சொல்றாரே “தொடர்ந்து தனிமனித தாக்குதல் செய்தால் இப்படித்தான் திருப்பி பேசுவேன்” என்று. அதையே எடுத்து காட்டி நான் நல்லவன்னு சொல்ல
எப்படிங்க உங்களுக்கு மனசு வருது….?
பார் யுவர் இன்பர்மேசன்… நான் அந்த சுட்டியை திரும்ப படிக்கவே இல்லை (அந்தக் கட்டுரையை அப்ப படிச்சது தான்) நீங்க அதுக்கு தேவையே இல்லாமல் பன்னிடுவிங்க
போலிருக்கே…
சிலம்பாட்டத்தில் ‘நிலைகலக்கி’ன்னு ஒரு வரிசை இருக்கு – அதில் எதிரி தன்னைத் தானே அடித்துக் கொள்ள வைக்கும் ஒரு முறையை சொல்லித் தருவார்கள்…. இப்பத்தான்
அதை நேரடியா பார்க்கிறேன்.. ஸோ பிட்டி ஆப் யூ மிஸ்ட்டர் தியாகு.
அண்ணே…. உங்களுக்கு ஏற்கனவே சொன்ன பதிலோட ஒரு பகுதி..
//1) திருப்பூரில் நடந்த பருத்தி – பருத்தி நூலிழை விலையேற்றத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தை பதிவு செய்கிறது
2) அடுத்து விலைக் குறைப்புக்காக முதலாளிகள் சங்கள் வைக்கும் கோரிக்கையைப் பற்றி சொல்கிறது
3) அடுத்து முன்பேர வர்த்தக சூதாடிகள் விவசாயிகளின் நன்பன் போல் நடித்து பருத்தி ஏற்றுமதியை ஆதரிப்பதை விமர்சிக்கிறது
4) இதற்கு பதிலாக விவசாயிகளுக்கு சூதாடிகளால் பயன் இல்லை என்று முதலாளிகள் சொன்னதை பதிவு செய்கிறது
5) அடுத்து சூதாடிகளுக்கு ஆதரவாக விவசாயிகளின் நன்பன் போல் நடித்து விலை கிடைக்கத்தான் பருத்தி ஏற்றுமதியை அதரிக்கிறோம் எனும் அரசின் நிலையை குத்திக் காட்டுகிறது.
6) முன்பேர சூதாடிகளை இப்போது எதிர்க்கும் முதலாளி எப்போதும் விவசாயிக்கு நண்பனாக நடந்து கொண்டதில்லை என்பதை கட்டுரை அலசுகிறது ( MSP அதிகரிக்கும் போது
சர்வதேச சந்தையில் இருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து கொள்வது )
7) அடுத்து, ஜவுளித் தொழில் முதலாளிகள் உள்நாட்டு சந்தையை புறக்கணிப்பதைப் பற்றி சொல்கிறது கட்டுரை
அடுத்து, தங்களுடைய நலனை மக்கள் நலனைப் போல் முதலாளிகள் முன்னிருத்துவது பற்றி சொல்கிறது (தொழிலாளர்கள் சுரண்டப்படுவது பற்றியும் இந்த பகுதியில் சொல்கிறது)
9) கடைசியாக முதலாளியால் தொழிலாளி ஏமாற்றப்படுவதையும் – பருத்தி ஏற்றுமதி உங்களைக் காக்கும் என்று சொல்லும் அரசால் விவசாயி ஏமாற்றப்படுவதையும் கட்டுரை
பதிவு செய்கிறது
இவ்வளவு தான்….
இப்போது நீங்கள் மேலே உள்ளதில் 6வது பாயிண்ட் பற்றி கட்டுரையில் இருந்த ஒரு பத்தியில் இருந்து பாதியை வெட்டியிருக்கிறீர்கள் – நீங்கள் வெட்டியதற்கு சற்று மேலே
வேறு சில வரிகளும் உள்ளன –
//இப்போது முன்பேர வணிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் நூற்பாலை முதலாளிகளும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களும், விதர்பா பருத்தி விவசாயிகள் கோருவதைப் போல பருத்திக்கான ஆதரவு விலையை 4,500 ரூபாயாக உயர்த்துவதை ஏற்றுக் கொள்வார்களா? //
யோக்கியர் என்றால் இதற்கு பதில் சொல்லி விட்டு நீங்கள் தொடர்ந்திருக்க வேண்டும். நமக்குத்தான் அதெல்லாம் பயக்கமில்லையே நைணா…
அடுத்து கட்டுரை நெடுக பல இடங்களில் பருத்தி ஏற்றுமதியை எதிர்க்கும் வரிகள் உள்ளன. பாயிண்ட் நெ-3 / நெ-9ல் அது சிறப்பாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
//
இந்த கட்டுரைக்கு என்னதான் புளிபோட்டு விளக்கி விளக்கி வச்சாலும் அது சாகபோகிற எம்சியார் பளிச்சுன்னு இருந்த மாதிரிதான் தெரியுது
அதையும் பார்த்துபுடுவோம்
————————————
1) திருப்பூரில் நடந்த பருத்தி – பருத்தி நூலிழை விலையேற்றத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தை பதிவு செய்கிறது
-சரி தப்பில்லை
—————————————-
2) அடுத்து விலைக் குறைப்புக்காக முதலாளிகள் சங்கள் வைக்கும் கோரிக்கையைப் பற்றி சொல்கிறது
————————–
ஓக்கே
—————————–
3) அடுத்து முன்பேர வர்த்தக சூதாடிகள் விவசாயிகளின் நன்பன் போல் நடித்து பருத்தி ஏற்றுமதியை ஆதரிப்பதை விமர்சிக்கிறது
———————————-
ம்ம்ம்
—————–
4) இதற்கு பதிலாக விவசாயிகளுக்கு சூதாடிகளால் பயன் இல்லை என்று முதலாளிகள் சொன்னதை பதிவு செய்கிறது
—————————-
ஓக்கே
———————-
5) அடுத்து சூதாடிகளுக்கு ஆதரவாக விவசாயிகளின் நன்பன் போல் நடித்து விலை கிடைக்கத்தான் பருத்தி ஏற்றுமதியை அதரிக்கிறோம் எனும் அரசின் நிலையை குத்திக் காட்டுகிறது.
———————
ஓக்கே
——————
6) முன்பேர சூதாடிகளை இப்போது எதிர்க்கும் முதலாளி எப்போதும் விவசாயிக்கு நண்பனாக நடந்து கொண்டதில்லை என்பதை கட்டுரை அலசுகிறது ( MSP அதிகரிக்கும் போது
சர்வதேச சந்தையில் இருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து கொள்வது )
———————-
இந்த இடத்தில் எனது கேள்விகள் எழுந்தன மீண்டும் அவற்றை இங்கே வைக்கவேண்டியதில்லை
——————
7) அடுத்து, ஜவுளித் தொழில் முதலாளிகள் உள்நாட்டு சந்தையை புறக்கணிப்பதைப் பற்றி சொல்கிறது கட்டுரை
—————————–
ஹ ஹ இதையும் வேண்டிய அளவு உரிச்சாச்சு
—————————
அடுத்து, தங்களுடைய நலனை மக்கள் நலனைப் போல் முதலாளிகள் முன்னிருத்துவது பற்றி சொல்கிறது (தொழிலாளர்கள் சுரண்டப்படுவது பற்றியும் இந்த பகுதியில் சொல்கிறது)
——————————-
இதில் அவர்களது நலனை தொழிலாளர்களின் நலனை போல சொன்னாலும் அந்த போராட்டத்தின் பின்னால் தொழிலாளர்களின் நலன்
இருக்கிறது என்பதையும் மாற்றாக நீங்கள் வைக்கும் உள்நாட்டு தேவையை நோக்கிய உற்பத்தி தீர்வல்ல எனவும்
உள்நாட்டு ரகங்களும் வெளிநாட்டு நுகர்வும் ஒன்றுபோல் இல்லை எனப்துவும்
உள்நாட்டின் நுகர்வு உற்பத்திக்கு தேவையான அளவு இல்லை (அதான் ஒரு ஜட்டியை ஒரு வருடம் போடும் வழக்கம்)
அதனால் உள்நாட்டு உற்பத்தியே நடக்கவில்லை அமெரிக்காவுக்கு வால்பிடிக்கும் உறப்த்திதான் நடக்கிறது
என நீங்கள் இதை ஒட்டி சொன்ன பொய்யை அம்பல படுத்தியாச்சு
உள்நாட்டு உற்பத்தி நாற்பது சதவீதம் இங்குதான் நடக்கிறது
அதில்தான் நீங்க வந்து பனியன் குவிஞ்சு கிடக்கிதா அப்படின்னு கேட்க பத்தாமல்
பனியன் இறக்குமதி நடந்ததான்னு நான் கேட்ட அடுத்து நீங்க வாங்கும் சக்திக்கு
ஓட — (இந்த இடத்தில் வாங்கும் சக்தி
இல்லை அல்லது குறைவுன்னு நீங்க வாதம்
செய்தால் பொருள் இருக்கு கிடைக்குது
ஆனால் வாங்கமுடியலைன்னு தானே
அர்த்தம் என நான் வினவ)
அடுத்து தியாகு நீங்க முன்னாடி அப்படிஎல்லாம் பேசினீங்க அவங்க சிரிப்பாங்கன்னு நீங்க தியாகுவின் அம்பலத்துக்கு இறங்கினீங்க
ஏன்னா வேற பாயிண்டு இல்லை
கூடுதல் உபகாரமா காரல்மார்க்ஸ் ஐடி
அதியமான் திட்டல் என வழக்கமான
பஜனையையும் சேர்த்துட்டு வந்தீக
——————
9) கடைசியாக முதலாளியால் தொழிலாளி ஏமாற்றப்படுவதையும் – பருத்தி ஏற்றுமதி உங்களைக் காக்கும் என்று சொல்லும் அரசால் விவசாயி ஏமாற்றப்படுவதையும் கட்டுரை
பதிவு செய்கிறது
————————————-
இப்போது தொழில்துறை மாபெரும் சிக்கலில் இருக்கிறது அதற்கு கச்சா பொருள் ஏற்றுமதி எனும் பெருந்தீங்க உழைவைக்கிறது
கச்சா பொருள் ஏற்றுமதி எந்த தொழிலையும் செய்யவிடாது எனும் பாயிண்டின் அடிப்படையில்
திருப்பூரில் தொழிலாளர்கள் முதலாளி சங்கத்துடன் சேர்ந்து நடத்திய
போராட்டங்கள் சரியே என்கிற வாதத்தை
வைத்தேன்
அதை நீங்கள் இன்னும் முதலளியின் லாபத்துக்கு ஆதரவுன்னு
குற்றம்சாட்டி சாட்டி
கீபோர்டு தேய்ந்து போயிருக்கும்
இவ்வளவு தாங்க ராசா
வேற எதாவும் வறட்டு வாதம் இருந்தா வையுங்க
அண்ணன் முதல்ல கீழேர்ந்து மேல ஏறினாரு… இப்ப மேலேர்ந்து கீழ ‘ஏறுவாரு’..
கட்டுரை ஏற்றுமதியை ஆதரிக்கிறது என்றும் – இதன் மூலம் திருப்பூரின் தொழில் நசிவை ஆதரிக்கிறது என்றும் – தொழிலாளர்களுக்கு கட்டுரை எதிரி என்றும் கூசாமல் பேசினீர்கள்.
கட்டுரை எழுதிய தோழருக்கு திருப்பூரில் நடக்கும் உற்பத்தி என்னவென்றே தெரியாது என்று சவடால் விட்டீர்கள்…
இப்ப இன்னாடான்னா… அதெல்லாம் இல்லை – வெறும் புளுகு என்று நிறுவியதும்..
“ஓக்கே” “ம்ம்ம்ம்ம்” “ஹாங்க்…” “ஹேய்..” என்று ஒவ்வொரு பகுதிக்கும் (படிக்காமலே) பிட்டு பட ரீ-ரிக்கார்டிங் கணக்கா பின்னுரை எழுதறீங்க…
அண்ணனுக்கு மீசைல மண்ணே ஒட்டலையாம்; ஏன்னா மீசையே இல்லையாம்… அதனால குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டாதாம்.
//கச்சா பொருள் ஏற்றுமதி எந்த தொழிலையும் செய்யவிடாது எனும் பாயிண்டின் அடிப்படையில் திருப்பூரில் தொழிலாளர்கள் முதலாளி சங்கத்துடன் சேர்ந்து நடத்திய போராட்டங்கள் சரியே என்கிற வாதத்தை வைத்தேன் //
அதே திருப்பூரின் முதலாளிகளின் யோக்கியதை என்னவென்பதை கட்டுரையில் சொல்லியிருக்கிறார்கள் – பின்னூட்டத்தில் நான் சொல்லியிருக்கிறேன்.. எதுக்குமே பதில் இல்லை.
ஒரு கங்காணியின் தெளிந்த புத்தியோடு முதலாளியின் நலனுக்கு தொழிலாளர்கள் அணிதிரள்வதை ஆதரிக்கும் அதே நேரத்தில் முதலாளியை நிர்பந்தப்படுத்தி ஏற்றுமதியை நிறுத்தும்
அதே நேரத்தில் விவசாயிக்கு உரிய விலை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றூ தோன்றவில்லை.
ஏன்…..? அதே போராட்டத்தோடு உள்நாட்டு விவசாயிக்கு MSP அதிகப்படுத்தி தரும் உத்திரவாதத்தை கோரி ஒரு முழக்கம் வைக்கவில்லை… அதுக்கு தியாகு ஏற்கனவே பதில்
சொல்லிட்டாரு “முதலாளிக்கு பயம் வந்துட்டா என்னா செய்யிறது”ன்னு. முதலாளிக்கு பயம் வருவதற்கு முன்பாகவே தியாகுவுக்கு பயம் வந்து விடுகிறது…
ஒன்னு செய்யுங்க… நீங்க சொன்னாப்புல ஒரு நூல் விடுங்க.. கேள்விக்குறி சொன்னா மாதிரி மாஞ்சா போட்ட நூலா இருக்கட்டும்
//ஒரு கங்காணியின் தெளிந்த புத்தியோடு முதலாளியின் நலனுக்கு தொழிலாளர்கள் அணிதிரள்வதை ஆதரிக்கும் அதே நேரத்தில் முதலாளியை நிர்பந்தப்படுத்தி ஏற்றுமதியை நிறுத்தும்
அதே நேரத்தில் விவசாயிக்கு உரிய விலை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றூ தோன்றவில்லை.
ஏன்…..? அதே போராட்டத்தோடு உள்நாட்டு விவசாயிக்கு MSP அதிகப்படுத்தி தரும் உத்திரவாதத்தை கோரி ஒரு முழக்கம் வைக்கவில்லை… அதுக்கு தியாகு ஏற்கனவே பதில்
சொல்லிட்டாரு “முதலாளிக்கு பயம் வந்துட்டா என்னா செய்யிறது”ன்னு. முதலாளிக்கு பயம் வருவதற்கு முன்பாகவே தியாகுவுக்கு பயம் வந்து விடுகிறது…
ஒன்னு செய்யுங்க… நீங்க சொன்னாப்புல ஒரு நூல் விடுங்க.. கேள்விக்குறி சொன்னா மாதிரி மாஞ்சா போட்ட நூலா இருக்கட்டும்//
ஸ்ஸ்ஸ்ஸ்யப்பா
கருப்பா குட்டையா சுருட்ட முடி வச்சவன உனக்கு தெரியுமாடான்னு கேட்டமாதிரி இருக்கு ராஜாவனஜ் என்னை பாத்து கேட்கும் கேள்விகள்
தொழிலாளி அணிதிரள்வதே முதலாளியின் லாபத்துக்குத்தான் என்பதுதானே உங்க கட்டுரை சொல்லும் அடிநாதமான விசயம்
தொழிலாளி அணிதிரண்டதை ஏன் பாராட்டவில்லை மாறாக இந்த விசயமே
முதலாளிக்கு லாபம் போய்விடும் ஒரு விசயம் என்பதாகத்தானே இத்தனை தூரம் பேசினீர்கள்
உங்கள் வண்டவாளம்தான் தெரிந்துவிட்டதே
உதார் முக்கால் உண்மையல்லாதது கால்னு
முழுக்க முழுக்க நீங்கள் காப்பாற்றிய கட்டுரை
கடைசியாக உள்ள்நாட்டு சந்தை தேவைக்கு உற்பத்தி செய்ய முழு சக்தியையும் பயன்படுத்தனும் என உளரி எங்க உள்நாட்டு தேவைகள் பூர்த்தியாகவில்லையா என கேட்கையில் ஓடிப்போனது நீங்கள்தானே
இப்ப வந்து பிங்கி பிங்கி பாங்கின்னு கதை சொல்லிட்டு
அதான் முன்னமே சொன்னேனே திருப்பூரில் தொழில் மட்டுமல்ல கச்சா பொருள் என்றால் எல்லா தொழில் கச்சா பொருளும்தான்
தியாகு மட்டுமல்ல எல்லா உழைப்பாளர்களும்தான் என்று புரியாதா
உங்கிட்ட பேசியதற்கு தமிழ்மணியுடன் பேசிய விவாதமாவது ஒரு சீரிசையோடு நடந்தது
தான் பேசியதை புரிந்து கொள்ளவும் கேள்விகேட்கவும் தர்க்கபூர்வமா வாதாடவும் அவனுக்கு தெரிந்தது உங்களுக்கு தெரியவில்லை
(உடனே பாருய்யா தமிழ்மணிய ஆதரிக்கிறார்னு ஓடிவரக்கூடாது)
ஆக ராஜா நீங்கள் இப்படித்தான் இந்துத்துவாவாதிகளோடு பேசினீங்களா
சிரிப்புத்தான் வருது உங்க விவாதமுறைகளில்
//ஓக்கே” “ம்ம்ம்ம்ம்” “ஹாங்க்…” “ஹேய்..” என்று ஒவ்வொரு பகுதிக்கும் (படிக்காமலே) பிட்டு பட ரீ-ரிக்கார்டிங் கணக்கா பின்னுரை எழுதறீங்க… //
கட்டுரையின் ஓட்டையான விசயம் எதுன்னு எடுத்து சொல்லிட்யாச்சு இன்னும் இந்த உதார் மட்டும் குறையல உங்க கிட்ட ஏன்னா
இங்க நீங்களும் நானும் பேசிகிறோம்
நான் சொல்வதை நீங்க புரியாதமாதிரி நடிச்சு
நீங்க சொல்வதை நான் புரியாதமாதிரி நடிச்சா
விவாதம் பொருளற்று நீண்டு செல்லும்
எதுக்கும் வேற யாராவது பொதுவான ஆள கூட்டி வந்து மேலுள்ள கமெண்டுகளை படிக்க சொல்லுங்க
நான் பொதுவானவன் தானுங்கோ,
தியாகுவோட மொக்கை ரொம்ப அகோரமா இருக்குங்க. தாங்க முடியல. அவர் சீக்கிரமா நூல் வெளியிட்டா அதுவும் மஞ்சா தடவி வெளியிட்டா அத வைச்சி எங்க கழுத்த அறுத்துக்கிட்டு செத்து செத்து விளையாடுவோம்.
பொதுவானவன்
(வெளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சலம் மாதிரி தியாகுவோட மொக்கைக்கு பொதுவானவன் தீர்ப்பு சொல்றது இருக்கும்)
எனக்கு ஆரம்பத்திலேர்ந்து ஒன்று மட்டும் புரியவேயில்லை. கட்டுரையின் ஓட்டையை கண்டுபிடித்தேன், கட்டுரையின் தவறை சுட்டிக்காட்டினேன்.. அப்படின்னு இங்கே தியாகு சொல்றாரே.. அது என்னா ஒட்டை என்னா மேட்டருன்னு யாருக்காவது புரியுதா?
ஆரம்பத்துல பு.ஜ கட்டுரை பருத்தி ஏற்றுமதியை ஆதரிக்கிறது- எனவே அது தொழிலாளர் விரோதம் அது தான் கட்டுரையின் சாராம்சம் என்றார்.
எங்கே ஆதாரம் என்று கேட்டதற்கு, ஒரு பத்தியின் இடையிலிருந்து வெட்டி ஒட்டி ஒரு பகுதியை எடுத்து காட்டினார். நாம் அதன் முன்னும் பின்னும் இருந்த பகுதிகளைச் சுட்டிக்காட்டி அதன் அர்த்தம் அது அல்ல என்பதை நிறுவினோம்….
திரும்ப வந்து முதலில் இருந்து கட்டுரை ஏற்றுமதியை ஆதரிக்கிறது என்றார். எப்படி என்றோம் பதில் இல்லை.
திரும்ப வந்து முதலில் இருந்து கட்டுரை ஏற்றுமதியை ஆதரிக்கிறது என்றால். எப்படி என்றோம் பதில் இல்லை
திரும்ப வந்து முதலில் இருந்து கட்டுரை ஏற்றுமதியை ஆதரிக்கிறது என்றால். எப்படி என்றோம் பதில் இல்லை
System Alert:::: Atention! The above error repeated 1000 times. Please contact your service provider
இவர்களால் தீர்வே சொல்ல முடியாது என்றார். உள்நாட்டு முதலாளியின் விவசாயத்தின் நலனும் இணைவது என்பதைப் பற்றியும் உள்நாட்டு சந்தை பற்றியும் சொன்னோம்
ஜட்டி – கட் பனியன் – முண்டா பணியன் – இந்தியாவுக்கே நாங்க தான் பனியன் ஜட்டி மாட்டி விட்டோ ம் – என்கிறார்
ஜட்டி – கட் பனியன் – முண்டா பணியன் – இந்தியாவுக்கே நாங்க தான் பனியன் ஜட்டி மாட்டி விட்டோ ம் – என்கிறார்
ஜட்டி – கட் பனியன் – முண்டா பணியன் – இந்தியாவுக்கே நாங்க தான் பனியன் ஜட்டி மாட்டி விட்டோ ம் – என்கிறார்
System Alert:::: Atention! The above error repeated 1000 times. Please contact your service provider
அட… இத்தனை நாளாய் மார்க்சியவாதியாக நடித்திருக்கிறாரே.. சந்தை என்பதைப் பற்றிய புரிதல் எப்படி இருக்க வேண்டும்? ஒரு பத்தாங்கிளாஸ் மாணவனைப் போல இப்போது இப்படிச் சொல்கிறார் –
//இந்த இடத்தில் வாங்கும் சக்தி இல்லை அல்லது குறைவுன்னு நீங்க வாதம் செய்தால் பொருள் இருக்கு கிடைக்குது ஆனால் வாங்கமுடியலைன்னு தானே அர்த்தம் என நான் வினவ//
தேவை – அளிப்பு என்றால் என்ன. தேவை எழுவதற்கான முன்தேவை என்ன. சந்தையின் நுகர்வுத் தேவையை தீர்மாணிக்கும் காரணிகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஒன்றுமே
தெரியாத லூசு தான் இப்படி உளற முடியும். இதுக்காக இன்னொரு ட்யூசனை எடுக்க முடியாது..
கட்டுரை ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்பியிருந்தது –
//நம் மக்கள் தொகையில் 80 கோடிப் பேருடைய ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய். இந்த மக்களால் ஆண்டுக்கு 4 செட் வேட்டி, சேலை, கால்சட்டை, மேல்சட்டை, உள்ளாடைகள் வாங்க முடியுமானால், இந்தியாவின் சந்தை இவர்கள் தேடித் தவமிருக்கும் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆனால், ஜவுளி ஆலை முதலாளிகள் உள்நாட்டு உழைப்பாளி மக்களின் நுகர்வைப் பற்றிக் கவலைப்படவில்லை. //
இந்த நுகர்வைத் தூண்டுவதற்கான முன் தேவை என்னவென்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டியதை தியாகு “ஆகாத வேலை” என்கிறார். சரி.. அப்படியென்றால் “ஆகும் வேலை” என்னவென்று சொல்ல வேண்டியது யார் கடமை?
அதற்குத்தான் NSS ரிப்போர்ட்டை மறுத்து வாதாட முன்வருமாறு கோரினேன். இப்போ திரும்ப வந்து பொதுவான ஆளைக் கூப்பிடச் சொல்கிறார்.
கட்டுரையின் பேசு பொருள் என்னவென்றே உங்களுக்குத் தெரியவில்லை தியாகு. நீங்கள் “ஓக்கே” “ஓக்கே” என்று சொன்ன பகுதிகளில் தான் ஏற்றுமதியை எதிர்த்த வரிகளும், முதலாளிகளின் லாபவெறியைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது – அந்த விசயம் கூடத் தெரியாமல் தான் நீங்கள் “ஓக்கே” போட்டிருக்கிறீர்கள். ஓக்கே போட்டும் விட்டு, திரும்ப வந்து மறுபடியும் கட்டுரை ஏற்றுமதியை ஆதரிப்பதாக எழுதுகிறீர்கள் –
நீங்கள் முதலில் சொன்னதை நம்புவதா – இடையில் மாற்றிப் பேசியதை (ஓக்கே) நம்புவதா – கடைசியில் மீண்டும் மாற்றிப் பேசுவதை நம்புவதா? ப்ளீஸ்.. ச்சூஸ் த பெஸ்ட் ஆன்சர்!
எனக்குத் தெரிந்து பொதுவான ஆள் என்றால் யாராவது மரண தண்டனைக் கைதியைத் தான் தேட வேண்டும். அந்தாளு சாவறதும் ஒன்னு தான் உங்களோட பேசறதும் ஒன்னு தான். அப்படி யாராவது தெரிந்தால் தயவு செய்து நீங்களே அழைத்து வரவும்…
தியாகுவோட கருத்த சுருக்கமா சொன்னா அது முதலாளி இல்லாம தொழிலாளி இல்ல என்பதுதான். இததான் அதியமானும், மன்மோகன்சிங்கும் சொல்றாங்க.
விவசாயியையும், தொழிலாளியையும் இப்படி ஆத்துலயும் இல்லாம சேத்துலயும் இல்லாம மாட்டிவ்விட்டுட்டு இவனக் கேட்டா அவனச் சொல்றது, அவனக் கேட்ட இவனச் சொல்றதுன்னு மாத்தி மாத்தி லாபம் சேர்க்கும் முதலாளிகளையும், சூதாடிகளையும் கட்டுரை அம்பலப்படுத்தினா தியாகுவுக்கு கடுப்படிக்கிறது.
//தியாகுவோட கருத்த சுருக்கமா சொன்னா அது முதலாளி இல்லாம தொழிலாளி இல்ல என்பதுதான். இததான் அதியமானும், மன்மோகன்சிங்கும் சொல்றாங்க. //
பயங்கரமான கண்டுபிடிப்பா இருக்கே அப்படியா சொல்றாக
//நம் மக்கள் தொகையில் 80 கோடிப் பேருடைய ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய். இந்த மக்களால் ஆண்டுக்கு 4 செட் வேட்டி, சேலை, கால்சட்டை, மேல்சட்டை, உள்ளாடைகள் வாங்க முடியுமானால், இந்தியாவின் சந்தை இவர்கள் தேடித் தவமிருக்கும் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆனால், ஜவுளி ஆலை முதலாளிகள் உள்நாட்டு உழைப்பாளி மக்களின் நுகர்வைப் பற்றிக் கவலைப்படவில்லை. ////
அவர்களை மேல்சட்டை கால்சட்டை வாங்க வைப்பதற்கு தொழிலாளி என்ன செய்ய வேண்டும் ராசா
///அட… இத்தனை நாளாய் மார்க்சியவாதியாக நடித்திருக்கிறாரே..////
தியாகுவின் அடுத்த கட்ட நடவடிக்கை: பு.ஜ.தொ.மு வின் போராட்டத்தை கொச்சை படுத்தி கட்டுரை ஒன்னு தயராயிட்டு இருக்கலாம்.. (அப்போராட்டத்தை பற்றிய வினவு கட்டுரையை விமர்சிக்கிறேன் என்ற பெயரில்!)
எல்லாம் ஒரு அனுமானம் தான். இது மட்டும் சரியா இருந்தா எங்கேயோ போயிடுவீங்க தியாகு சார்! 🙂
சேரிக்காரன் உங்க அனுமானத்துக்கெல்லாம் எப்படி பதில் சொல்வது
சரி இனிமேல் வினவு எதிர்ப்பாவோ ,விமர்சனமோ வைக்கவில்லை என உறுதி கொடுக்கனுமா?
சொல்லுங்க அது உங்களை சந்தோசபடுத்துமா
இப்படி மொக்கையா எந்த விமர்சனுமும் இல்லாமல் வண்டி ஓட்ட நீங்க சாதாரண பதிவரா இருக்கலாம்
///சேரிக்காரன் உங்க அனுமானத்துக்கெல்லாம் எப்படி பதில் சொல்வது///
தியாகு, இங்க உங்களோட அனுமானத்துக்கெல்லாம் பதில் சொன்ன பிறகும், மீண்டும் வேதாளம் முருங்கை மரத்துல ஏறுன கதையா மொத இருந்து வர்ரீங்களே??? அது சாதாரண பதிவர் செய்யுற வேலை இல்லை தான் 🙂 😉
இந்த கற்பனை செய்யும் உரிமை கூட உங்களுக்கு மட்டும் தானா? வேற யாருக்கும் விட்டு கொடுக்கமாட்டீங்களா?
///நம் மக்கள் தொகையில் 80 கோடிப் பேருடைய ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய். இந்த மக்களால் ஆண்டுக்கு 4 செட் வேட்டி, சேலை, கால்சட்டை, மேல்சட்டை, உள்ளாடைகள் வாங்க முடியுமானால், இந்தியாவின் சந்தை இவர்கள் தேடித் தவமிருக்கும் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆனால், ஜவுளி ஆலை முதலாளிகள் உள்நாட்டு உழைப்பாளி மக்களின் நுகர்வைப் பற்றிக் கவலைப்படவில்லை.//
ஐரோப்பிய சந்தையை ஒதுக்கிவிடலாம்
நாளை முதல் இந்திய சந்தைக்கு தைக்கலாம்
செயல்திட்டம் என்ன ராஜா
உடனே சொல்லுங்கள்
அனைவரும் காத்திருக்கிறார்கள்
இந்திய ஜவுளி அமைச்சருக்கும் பிரதமருக்கும் பேக்ஸ் அனுப்பலாம்
இதில் சொதப்பினால் நான் உங்களை லூசுன்னு சொல்வதை தவிர வேறுவழியல்ல
ராஜாவனஜ் ,
உங்களுக்கு புரியவைக்க நான் முயற்சிக்கவில்லை ஏன்னா புரியும் உங்களுக்கு ஆனால் கட்டுரையை காப்பாத்தவும்
ஆயிரக்காணக்கான மக்கள் போராட வந்ததுக்கு வாழ்த்து சொல்லாமல் இந்த போராட்டமே முதலாளிக்கு லாபத்துக்கானதுன்னு சொன்ன மழுங்கத்தனம்
அதற்கு சாக்கா டி சக்திவேல் சொன்னது
விவசாயிக்கும் புத்திமதி சொன்னதுன்னு கட்டுரை அனைவருக்கும் அததை சொல்லி கடைசியில் கட்டுரை சொல்வது மொத்தமா கச்சா பொருள் ஏற்றுமதிக்கு எதிப்பே ப்லாபநோக்கம் தான்னு சொன்னது
(இப்படி சொல்லவில்லை என நீங்கள் சொன்னாலும் அதான் விசயமே அப்படி இல்லையெனில் இது சும்மா எல்லாத்தையும் நொட்டை சொல்லும் கட்டுரை
ஆக கூடியதும் தொழிலாளர் அரசையும் யூகவணிகத்தையும் எதிர்ப்பதையும்
பிரச்சனை அளவில் ஆதரிக்காததும் ஆன
இக்க்கட்டுரையை நீங்கள் காப்பாற்ற
இவ்வளவு மெனக்கெட மாட்டீர்கள்
இதை படிக்கும் ஒரு முதலாளித்துவ வாதிகூட ஆமாம் சரியாக எழுதப்பட்டதுன்னு சொல்லி இருப்பான் ஏன் சொல்லவில்லை
ஏன்னா அவங்களுக்கு தெரிகிறது எதுக்கு போய் பேசினா கும்பலா சேர்ந்து திட்டுவாங்கன்னு கம்முன்னு இருக்காங்க ரம்மி கூட தனது
விவாதத்தில் இருந்து வாபஸ் ஆகி ஆளையே காணோம்
நீங்களும் உங்க தோழர்களும் இனிமேல் இப்படியே கட்டுரைகள் எழுதி உங்கள் பொருளாதார அறிவையும் , நாட்டுநலனையும் மேம்படுத்துங்கள் நானும்வந்து அப்பப்ப ஒத்தடம் கொடுக்கிறேன்
ஆக ஒருவிசயம் நல்லா புரியுது மொத்தமா உங்க சிந்தனையின் அளவுகோல் இதான்னு நான் கூட என்னமோ எதோன்னு இருந்தேன்
சுத்தமா அம்பலமாகிடுச்சு
முடிந்தால் இனிமேல் நல்ல கட்டுரையாக எழுதுங்கள்
தற்போது சூரியன் நல்ல கட்டுரைகள் எழுதுகிறார் அதுபோல எழுத முயற்சியுங்கள்
இல்லைன்னா இதமாதிரி பேசி பேசி காலத்த ஓட்டுங்க
வாழ்த்துக்கள்
யாருக்காவது சந்தேகம் இருக்கா
மனநிலையை நல்லா வச்சிக்கிற (என்னோட )
நான் கொஞ்சநாள் வராம இருக்கேன்
//ரம்மி கூட தனது
விவாதத்தில் இருந்து வாபஸ் ஆகி ஆளையே காணோம் //
தீபாவளி வேலைகள் அதிகமென்பதால், கணிணியைத் திறக்கவில்லை, நண்பரே!
என்னுடைய நோக்கம், விவாதமல்ல!
கருத்துக்களை,பதிவு செய்வதே!
ஓக்கே ரம்பி உங்களுக்கு நேரமிருப்பின் இவர்கள் உளறி கொட்டியதில் ஏதேனும் பொருள் இருந்தால் அதுகுறித்து கருத்தை பகிருங்கள்
/./இந்தியாவில் 3,040 நூல் மில்களும், 40
லட்சம் கைத்தறிகளும், 17லட்சம்
விசைத்தறிகளும் இயங்கி வருகின்றன. 3.5
கோடி மக்கள் வேலை வாய்ப்பு
பெறுகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் 902 நூல் மில்களும்,
23 கூட்டுறவு ஆலைகளும் உள்ளன.
மொத்த பருத்தி சாகுபடி பரப்பில் 90%
பி.டி. பருத்தி பயிரிடப்படுகிறது.//
பருத்தி உற்பத்தியில் இந்தியா உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கிறது
ஆனால் நூல்விலை இரண்டு மாதத்தில் ஒரு கிலோவுக்கு 134 இல் இருந்து 200 ரூபயாக ஏறிவிட்டது எல்லாம்
பஞ்சு ஏற்றுமதியாளும் , ஆன்லைன் வர்த்தகத்தாலும்தான்
ஏற்றுமதி கட்டுப்பாடு தேவை என ஏன் சொல்கிறோம்னு புரிகிறதா
உலகத்திலேயே இரண்டாம் இடம் இருக்கும் இந்தியாவில் தொழில் நடத்த முடியவில்லை
இந்த 3.5 KOODI மக்கள் இங்குள்ள பஞ்சை நம்பித்தான் தொழில் செய்கிறார்கள்
ஏற்றுமதியை கட்டுபடுத்தி தொழிலை வளப்படுத்துவதா
அல்லது கச்சா பொருள் ஏற்றுமதி செய்து உள்நாட்டின் தொழிலை ந்சுக்குவதா எதுவென நீங்களே முடிவு செய்யுங்கள்
தியாகு கடைசியில் சொல்லி விட்டார் “மேடை கோணல்” என்று….!
எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் அடிநாதமான அரசியல் என்னவென்றே தெரியாத ஒரு அடிமுட்டாள் என்பதை தன்னைத் தானே நிரூபித்துச் சென்றுள்ளார். முதலாளிகள் ஒரு கோரிக்கை
வைக்கிறார்கள் – அந்தக் கோரிக்கையின் பின் அவர்களுக்கு உள்ள நேரடியான சாதகங்கள் / மறைமுகமான சாதகங்கள் என்று இரண்டு அம்சத்தையும் பரிசீலித்து – தொழிலாளர்கள்
முதலாளிகளின் கோரிக்கைக்கு அணிதிரளுவதை விட தமது நட்பு வர்க்கமான விவசாயிகளோடு இணைவதை முன்வைக்கிறது.
தியாகு தீர்வே இல்லையென்று சொல்லி புறக்கணிக்கும் இந்தியச் சந்தையின் எண்ணிக்கை அளவு அவர் தவம் கிடக்கும் அமெரிக்கச் சந்தையை விடப் பெரிது.
சந்தை பற்றி Rammyக்கு நான் அளித்த பதில்
//ஏன் உள்நாட்டிலேயே விற்க முடியாது? நீங்கள் இங்கே சொல்லும் ‘உள்நாடு’ சுமார் ஒரு பில்லியனுக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு. உலக மக்கள் தொகையில்
ஆறில் ஒருவர் இங்கே இருக்கிறார் – எனில் இது எந்தளவுக்கு ஒரு பெரிய சந்தை…!?
ஆனால் இந்த சந்தையில் பப்பு வேகாது என்று நீங்கள் சொல்கிறீர்களே ஏன்? வாங்கும் சக்தி இல்லை – சரிதானா…
ஏன் வாங்கும் சக்தி இல்லை?
நாட்டில் சுமார் எழுபது சதவீதம் பேருக்கும் மேல் வேலை அளிக்கும் விவசாயமும் – அதற்கு அடுத்தபடியாக வேலை அளிக்கும் ஜவுளித்துறையும் தான் (பஞ்சு மில், பவர் லூம், ஜட்டி
கம்பெனி, துணி கம்பெனி etc etc)..
விவசாயத்துறையை எடுத்துக் கொண்டால், அத்துறையை விட்டே விவசாயி விரட்டப்படும் நிலை (depesentization) உள்ளது. விவசாயிக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லை –
விவசாயம் இனி எப்போதும் லாபகரமான தொழிலாக இருக்க முடியாது என்கிற ஒரு நிலைக்கு விவசாயிகளைத் தள்ளி விட்டு அவர்களை அத்துக் கூலிகளாக நகரங்களை நோக்கி
துரத்தப்படுகிறார்கள். விதைக்கும் விதையைக் கூட ஒரு சில பன்னாட்டுக் கம்பெனிகள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளார்கள் – உரம், பூச்சி மருந்து என்று எதுவும் கட்டுப்படியாகும்
விலையில் இல்லை. தக்கிமுக்கி விவசாயம் பார்த்து விளைவித்த பொருளுக்கு அடிமாட்டு விலை. இப்படி விவசாயத்தை விட்டு ஓடி வருபவர்கள் நகரங்களில் செக்கூரிட்டிகளாக,
கூலியாட்களாக….. ஏன் – தியாகுவின் கம்பெனியில் பீஸ் அடுக்கும் வேலையிலும் அவர்கள் தான் நிறைந்துள்ளனர்.
மொத்த மக்கள் தொகையில் எழுபதில் இருந்து என்பது சதவீதம் பேர் 20 /- சம்பாதிக்கும் நிலை.
இப்படியொரு நிலையில் மக்களை நிப்பாட்டி வைத்திருப்பதும் – அதை முதலாளிகள் கேப்பிடலைஸ் செய்வதுமாக (மைக்ரேட் ஆகி வரும் விவசாயக் கூலிகளை குறைந்த கூலிக்கு
சுரண்டிக் கொள்வது) உள்நாட்டுத் தேவையை அவர்களே திட்டமிட்டுப் புறக்கணித்துக் கொள்கிறார்கள். இப்படி இங்கே திருப்பூர் தொழிலாளர்களின் உழைப்பை (பனியனோடு சேர்த்து)
ஏற்றுமதி செய்யும் ஏஜெண்டுகளாக (தரகு) இருக்கிறார்கள் திருப்பூர் முதலாளிகள்.
//
தியாகு இதன் எந்த அம்சத்துக்குள்ளும் செல்லவேயில்லை…. அவர் இதற்கு வெளியே நின்று கொண்டு “அதெப்படி…? அதான் நாங்க நைட்டி வித்தோம்… ஜட்டி வித்தோம்… ஜப்பான்ல
ஜாக்கிசான் கூப்டாக… அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்டாக…” என்று இழுக்கிறார்.
விவசாயத்தின் ஒட்டுமொத்த நலனைக் காப்பது என்பதன் ஒரு சிறிய பகுதி அதில் இருக்கும் பருத்தி விவசாயிகளின் நலனைக் காப்பது – அதற்கு முதலாளிகள் அதிக விலைகொடுத்து
உள்நாட்டில் இருந்து ஏன் பருத்தி கொள்முதல் செய்யக்கூடாது? ஏன் விலையை ஏற்றினால் இறக்குமதி செய்கிறார்? ஏனென்றால்.. அவருக்கு உள்நாட்டில் ஒரு சந்தை உருவாவதைப்
பற்றிய அக்கரை இல்லை. தனது தொழிலாளிகளுக்கே கூட குறைந்த சம்பளம் கொடுத்து தான் சுரண்டுகிறார். சரியாக சுரண்டுகிறோமா என்பதைக் கண்கானிக்க தியாகு போன்ற
கங்காணிகளை உருவாக்கி விட்டுள்ளார்கள்… இவர்களும் கிடைக்கும் நாலு எலும்புத்துண்டுக்காக வினவை எதிர்க்கிறேன் பு.ஜவை எதிர்க்கிறேன் என்று சிறப்பாகவே வாலாட்டிக் கொண்டு
அலைகிறார்கள்.
இந்த விவாதம் இப்படியொரு லாஜிக்கலான முடிவுக்கு வரும் என்பதை நான் எதிர்பார்த்தது தான்.
இந்த விவாதத்தின் நெடுக அவர் சொன்ன எதையும் அவரால் நிரூபிக்க முடியவில்லை; அட, குறைந்தபட்சம் கட்டுரை ஏற்றுமதியை ஆதரிக்கிறது என்று சொன்னதையாவது
நிரூபிப்பார் என்று பார்த்தால்.. ஆர்.எஸ்.எஸ் காரர்கள் எங்களைப் பார்த்துச் சொல்லும் அதே பழைய குற்றச்சாட்டைக் கையில் எடுக்கிறார் – “இவங்க எல்லாத்தையும் திட்டுவாங்க” ,,,
வினவை எதிர்க்க வேண்டிய தேவை வந்த போது ஆர்.எஸ்.எஸ் ப்ரச்சாரக் ஜெயமோகனை துணைக்கழைத்தவர் தானே… அந்த புத்தி வந்ததில் தவறொன்றும் இல்லை. ஏன்.. இப்போது
கூட மேலே அவரே கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தின் படி, வினவையும் கட்டுரையையும் மறுக்க வேண்டி தான் முதலாளிகளை ஆதரித்துள்ளதாக சொல்லியிருக்கிறார்…
எல்லோரும் நம்புங்க – மத்த நேரத்துல எல்லாம் அவரு நல்லவரு தான்…. வினவுன்னு வந்தா மட்டும் ஜெயமோகன், முதலாளி, இனி அடுத்து ராம கோபாலன் என்று யாரை வேண்டுமானாலும் ஆதரிப்பார். ஆனா நெம்ப நல்லவரு…
அப்புறம் தோழர் சூரியனின் கட்டுரை போல் பு.ஜ கட்டுரைகள் இருக்கட்டும் என்று அறிவுறை வேறு – அடத்தூ… தியாகு, உன்னால் தோழர் சூரியன் எழுதிய கட்டுரையின் ஒரே ஒரு
வார்த்தையையாவது நெருங்க முடியாது. அதன் ஒவ்வொரு வரியும் வார்த்தைகளும் செயல்பாட்டில் இருப்பவர்களிடையே எழும் சமரசப் போக்கை விமர்சித்து எரிக்கிறது.
உன்னைப் போன்ற லும்பன்கள் அதை எட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு “ஆஹா… அழகு அழகு” என்பதோடு போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான்.
இந்த விவாதத்தின் கடைசி பின்னூட்டமாக இது இருக்கும் என்று நினைக்கிறேன். தியாகு இது வரை வினவை “விமர்சித்து” வெளியிட்ட பதிவுகளின் யோக்கியதை இவ்வளவு தான்
தோழர்களே நன்பர்களே… இதன் எந்த இடத்திலாவது “விமர்சனம்” என்பதன் ஒரு சின்ன வெளிச்சமாவது உங்களுக்குத் தெரிகிறதா?
எதையும் படித்துப் புரிந்து கொள்ள முடியாத ஒரு மூளைச் சோம்பேரிக்கு வினவின் மேல் பொறாமை எழுந்தால் என்ன வரும்??? தியாகுவின் ‘விமர்சன’ பதிவு வரும்!
அரசியலற்ற முட்டாள்கள் அரசியல் கூர்மை கொண்ட கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தால் என்ன நடக்கும் ??? தியாகுவின் ‘விமர்சன’ பதிவு வரும்
சந்தர்ப்பவாத மலக்குட்டையில் ஊறிய பன்றிகளுக்கு நேர்மையான அரசியலைக் கண்டால் என்ன நடக்கும் ???? தியாகுவின் ‘விமர்சன’ பதிவு வரும்
இது தான் தியாகுவின் விமர்சனங்கள்… விவாதங்கள்.. பதிவுகள்… கவிதைகள் உள்ளிட்ட அவர் பேண்டு போட்ட அத்தனையின் சாராம்சமும்..
இதனால் தான் பன்றி புளுக்கை போட்டது போல வாரத்துக்கு பத்து பதிவுகளை அவர் வெளியிட்டாலும் அவைகளை எவரும் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. தன்னை ஏன் இந்தப்
பதிவுலகில் எவருமே வந்து ஆதரிப்பதில்லை என்பதை தியாகு சிந்தித்துப் பார்க்கட்டும். தனது பதிவுகளை ஏன் எல்லோரும் மொக்கை என்கிறார்கள் எனப்தையாவது சிந்தித்துப்
பார்க்கட்டும். அட, இப்போது கூட வினவை எதிர்த்து பதிவு போட்டும் கூட கல்லா கட்ட முடியாத சோகத்தில் ஏன் இருக்கிறீர்கள் தியாகு? உங்கள் பதிவுகளை எவருமே ( எங்கள்
எதிரிகள் உள்ளிட்டு) கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்களே ஏன் என்று யோசித்துப் பாருங்கள் தியாகு.. உங்களுக்கு விடை கிடைக்கலாம்..
எப்படியும் யோசிக்கும் அளவுக்கு உங்களுக்கு அறிவு இருக்காது என்று நான் உறுதியாக நம்புவதால்.. நானே பதிலைச் சொல்லி விடுகிறேன் –
“நீங்கள் ஒரு மொக்கை”
கடைசியில் வினவு எதிர்பென சொல்லி புலம்ப ஆரம்பித்து விட்டார் ராஜா
ஏனெனில் அவருக்கு இந்த சந்தை தவிர வேறு வழிகள் இல்லை
தர்க்க ரீதியாக விவாதிக்க தெரியாத முட்டாள் எப்படி அம்மணமாவான் என ராஜா காட்டிவிட்டார்
என்னை முட்டால் என சொல்வதற்கு அவர் தரும் ஆதாரம் எனது பிளாக்கின் கமெண்டுகளின் எண்ணிக்கை
இதை விட நகைச்சுவை இருக்க முடியுமா
மொண்ணதனம் அரசியல் பேசுகிறது
ஹ… யோக்கியர் வாரார் சொம்ப எடுத்து உள்ள வைங்கப்பா.
பழைய சினிமாவில் பார்த்திருப்பீர்கள் – யாராவது மனநலம் தவறியவரைப் பார்த்து யாராவது லூசு என்று சொல்வார்கள்;
உடனே அந்த ம.ந தவறிய கேரக்டர் சொல்லும் “நீ லூசு, உங்கப்பா லூசு, உங்க தாத்தா லூசு….”
அந்தக் காட்சிகளை மிஸ் பண்ணவங்க கவலைப் படாதீங்க, நம்ம தியாகு அண்ணன் அதைத்தான் இப்ப செய்யறார்.
ஒருத்தர் கூடவா தியாகு உங்கள் கருத்தை ஆதரிக்கலை?? நீங்க ஒருதரம் வினவைப் பார்த்து சொன்னீர்களே ஸ்டைலாக,
அதை இப்போது நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் – “பா…பூ…ம்”
தான் பேசிய விசயங்களில் நம்பிக்கையும் உறுதியும் இருந்தால் யார் ஆதரிக்கிறார்கள் எதிராக பேசுபவரைன்னு பார்க்க தேவை இல்லை
அது இல்லை உங்களிடம் மொத்தமா நீங்க பேசுவதற்கு எந்த சந்தும் இல்லாமல் அம்மணமானதும் முட்டாள் வினவ திட்டினான்னு வசவுல இறங்க ஆரம்பிச்சுட்டீங்க
இப்படித்தான் பேசுவீர்கள் என தெரியும் ஆனால் சாக்கடையில் களெறிய துணிந்துதான் எறிகிறேன் அதன் நாத்தம் வரத்தான் செய்யும்
என்ன செய்வது
தொடருங்கள் உங்கள் வசவை
அண்ணனுக்கு இதுல ஒரு சௌகரியம் என்னான்னா… நம்மோட பின்னூட்டங்களில் ஸ்டெப் பை ஸ்டெப்பா தோலுரிச்சதெல்லாத்தையும் அப்படியே போர்வை போட்டு மூடிட்டு, வினவு எதிர்ப்பைப் பத்தி கடேசி பின்னூட்டத்தில் சொன்னதை மட்டும் செலக்டிவா பேசி, அது தான் பிரச்சினைன்னு ஒரு பத்து நாளு பின்னால எல்லார்ட்டயும் சொல்லிக்கலாம்.
கவுரதைய காப்பாத்திக்கலாம்…
அண்ணே… நீங்க நெம்ம்ப்பா நல்லவருண்ணே…
//அண்ணனுக்கு இதுல ஒரு சௌகரியம் என்னான்னா… நம்மோட பின்னூட்டங்களில் ஸ்டெப் பை ஸ்டெப்பா தோலுரிச்சதெல்லாத்தையும் அப்படியே போர்வை போட்டு மூடிட்டு, வினவு எதிர்ப்பைப் பத்தி கடேசி பின்னூட்டத்தில் சொன்னதை மட்டும் செலக்டிவா பேசி//
எல்லா பின்னூட்டத்தையும் பேசியாச்சு பதில் சொல்லாமல் முடியாமல் விட்டது நீங்கள்தான்
கடைசியா சந்தாகா வினவு எதிர்ப்பை தூக்கிட்டு வறீங்க இது பார்வையாளர்களுக்கு தெரியும்
உங்களுக்கு தெரியும் ஆனால் நீங்களே நீதிபதி நீங்களே குற்றவாளி
மொத்தத்துல தியாகு சார் இந்த விவாதத்தை சம்பந்தமில்லாத திசைக்கு கொண்டு போயிட்டார்..அதுக்கு ராஜாவனஜ் சாரும் பலி.. இனி அடுத்து ஜல்லி சத்தம்தான் கேக்கும். அதுக்கு பதிலா மறுபடியும் மெயின் மேட்டர்ல விவாதத்தை கண்டின்யூ பண்ணா நாங்களும் வேடிக்கை பார்க்க வசதியா இருக்கும்
//உங்களுக்கு தெரியும் ஆனால் நீங்களே நீதிபதி நீங்களே குற்றவாளி//
நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்கலடா. எங்க போனாலும் கூடவே வருது.. பூச்சி மருந்து அடிச்சி கொல்லுங்கடா….
//மொத்த மக்கள் தொகையில் எழுபதில் இருந்து என்பது சதவீதம் பேர் 20 /- சம்பாதிக்கும் நிலை. //
MR.RAJAVANAJ AND MR.ASURAN,
could you please publilsh, supporting documents, if any?
//could you please publilsh, supporting documents, if any?//
இந்த சுட்டிகளில் சில விவாதங்களும், தகவல்களும் உள்ளன. கடைசி சுட்டியில் தேசிய கணக்கெடுப்பு நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின் படி 80% மக்கள் 20 ருபாயில் வாழ்கிறார்கள்.
https://www.vinavu.com/2010/07/22/indian-poverty/
https://www.vinavu.com/2009/07/15/tata/
http://in.reuters.com/article/idINIndia-28923020070810
இன்னுமொரு சுவராஸ்யமான விவாதச் சுட்டி
https://www.vinavu.com/2010/07/19/war-in-india/
ஒரு சின்ன விசயம்புரியாமல் வாசகர்கள் இருக்கமாட்டார்கள்
அரசு சொல்கிறது கச்சா பொருளை ஏற்றுமதி செய்யுங்கள் என
விவசாயிக்கு
தொழில் துறைக்கு நீ முடிஞ்சா
துணி ஏற்றுமதி செய் என்கிறது
இந்த புஜ தோழனும் இவர்களும்
சொல்கிறார்கள்
1.கச்சா பொருள் ஏற்றுமதியை எதிர்ப்பது முதலாளியின் லாப நோக்கம் என்று
2.உள்நாட்டு உற்பத்தி செய்யுங்கள் என்று
முதல் பாயிண்டில் அரசும் இந்த தோழர்களும் ஒன்றாகிறார்கள்
இரண்டாம் பாயிண்டில் வேறுபடிகிறார்கள்
அதாவது உள்நாட்டு சந்தைக்கு வாங்க தெம்பில்லை என தோழர்கள் சொல்கிறார்கள்
அதற்கு காரணம் அரசுதான்னு நாங்க சொல்கிறோம்
அடுத்து
இந்திய அரசை நாங்கள் எதிர்க்கிறோம்
தோழர்கள் இந்த விசயத்தில் முதலாளிகளை காரணம் காட்டி வியாக்கியானம் மட்டும் செய்கிறார்கள்
செயல்முறையாக அவர்கள் சொல்வது
உள்நாட்டு உற்பத்தின்னு
அதற்கு என்ன செய்யனும் தொழில்துறையினர் என்றால் மெளனம் பதிலாக வருகிறது
இதை படித்து புரிந்து கொண்டீர்கள் என்றால்
இவர்களும் அரசும் ஒரு புள்ளியில் ஒன்றிணைகிறார்கள்
அது என்னவென புரியும்
ஹஹஹஹஹ.. ஹொஹொஹொஹொ.. உய்ய்ய்ய்ய்…
பிளீஸ் கண்டினியூ மிஸ்ட்டர் தியாகு. எனக்கு நீங்க வேலையே வைக்கப் போறதில்லை இனிமே நீங்கள் வைப்பது எல்லாம் சொ.செ.சூ தான்.
வேடிக்கை பார்க்கிறவன், கவலையே படாதீங்க இப்ப அவரு தனக்குத் தானே ஆப்பு அடிப்பதைப் பற்றி கிளாஸ் எடுப்பார்.
ஏன்னா நான் எதுவும் பேச முடியாது
மண்டை காலி என்கிறார் ராஜாவனஜ்
ஆனா உங்க நிலமை இப்படி ஆகும்னு நினைக்கவேயில்லை
“ஆமா நீங்க ஏதும் பேச முடியாது மண்டைகாலி” இதை ஒத்துக்க மூணு நாளா?
இட் ஈஸ் ஓக்கே தியாகு. இப்போ Rammy விவாதிக்கறார் – நீங்க எம்பி எம்பி கைதட்டிட்டு ஓரமா நில்லுங்க.
சரி அவருக்கிட்ட போய் வாங்க போறீங்க சரி நானும் பார்கிறேன்
இதுக்கு மட்டும் தான் நீங்க லாயக்குன்னு அப்பலேர்ந்து சொல்றேன். இப்பத்தான் புரிஞ்சுக்கிட்டீங்க. நல்லா
கைதட்டினீங்கன்னா பிளேயர்ஸுக்கும் கொஞ்சம் உற்சாகமா இருக்கும்ல @ பந்து_பொறுக்கிப்_போடும்_சிறுவன்=தியாகு
//இப்பத்தான் புரிஞ்சுக்கிட்டீங்க. நல்லா
கைதட்டினீங்கன்னா பிளேயர்ஸுக்கும் கொஞ்சம் உற்சாகமா இருக்கும்ல @ பந்து_பொறுக்கிப்_போடும்_சிறுவன்=தியாகு//
உங்க கிட்ட பஞ்சரான பந்துதான் இருக்கு அப்புறாம் மண்டையில் இருக்கும் களிமண்ணை வச்சு என்ன கேம் விளையாட முடியுமோ அதை விளையாடுங்க
ஆமா அதை ஏற்கனவே எல்லாரும் பார்த்துட்டாங்க
ஒரு வேனை எடுத்துட்டு போய் உங்க ஆட்டத்துக்கு ஆள் சேருங்க
MR.RAJAVANAJ,
Please note the following link,regarding per capita income.
http://economictimes.indiatimes.com/news/economy/indicators/Indias-per-capita-income-jumps-105-to-Rs-44345-in-FY-10/articleshow/5995069.cms
Raammy,
அதில் குறிப்பிடும் ‘தனி நபர் வருமாணம்’ (Per captia Income) எப்படி கணக்கிடப்பட்டது? இப்படி –
//Per capital income means income of each Indian if national income is evenly divided among the country’s population of 117 crore. //
இது அந்தக் கட்டுரையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் மொத்த வருமாணத்தை மொத்த ஜனத்தொகையால் வகுத்துள்ளார்கள்… அந்த மொத்தத்தில் அம்பானியும்
பிரேம்ஜியும் வருவார் தானே?
நான் மேலே குறிப்பிட்ட NSS கூட கொஞ்சம் பழசு தான். ஆனால், சமீபத்தில் ஐ.நா சபையைச் சேர்ந்த குழுவொன்று
வெளிட்ட ஆய்வு முடிவுகளையும் சேர்த்தே பார்க்கலாம். வினவில் அது பற்றிய கட்டுரை வந்துள்ளது.
https://www.vinavu.com/2010/07/22/indian-poverty/
https://www.vinavu.com/2009/09/29/hunger-deaths/
https://www.vinavu.com/2010/05/12/hunger-deaths-children/
https://www.vinavu.com/2010/03/02/hunger2/
நீங்கள் மேலே நான் குறிப்பிட்ட கட்டுரைகளையும் அசுரன் அளித்த சுட்டியையும் வாசித்து உங்கள் வாதத்தை வையுங்கள். நான் மீண்டும் வந்து பதிலளிப்பேன்.
//மொத்தத்துல தியாகு சார் இந்த விவாதத்தை சம்பந்தமில்லாத திசைக்கு கொண்டு போயிட்டார்..அதுக்கு ராஜாவனஜ் சாரும் பலி.. //
என்ன சொல்றீங்க ராஜவனஜ் என்னை முட்டாள் என்கிறார்
ஒரு முட்டாள் எப்படி அறிவாளியின் திசையை மாற்றமுடியும்
அப்போ அவர முட்டாள் என்கிறீர்களா
ராஜா நான் எதுவுமே சொல்லவில்லை இதில்
இனிமேல் சொல்வதற்கு ஏதுமில்லை ராஜவனஜ் யாருன்னு அவர் ஆசைபட்டமாதிரி அவங்க ஆளே வந்து சொல்லிட்டு போயிட்டார்
வாழ்க வாழ்க ராஜாவனஜ்ஜின் டுபார்கூர் விவாதங்கள்
//அவங்க ஆளே வந்து //
இந்த “அவங்காளு” இருக்காரே அப்பப்ப ‘காரல்மார்க்ஸ்’ ‘பலூன்மாமா பஸ்’ ‘கம்யூனிசபூச்சாண்டி’ எனும் பல பெயர்களில்
உலாவுவாராம்.
அவரைக் கண்டுபிடிக்க ஒரு எளிய வழி இருக்கு. அவர்ட்ட “காது காது”ன்னு சொல்லிப் பாருங்க, அவரு “வேது வேது”ன்னு தானே சொன்னீங்கன்னு கேப்பாரு.
அண்ணன் “அவங்காளு” ஒரு புதுமாதிரியான வடிவேலு. முதுகுவலின்னா கோயமுத்தூர்காரண்ட்ட அடிவாங்குவாரு,
கால்வலின்னா மதுரைக்காரண்ட்ட அடிவாங்குவாரு… அவருக்கு எல்லாமே ‘மஸாஸு’ பண்ணா மாதிரியே இருக்கும்.
ஆனா எல்லாரும் அண்ணன் “அவங்காளு” கிட்டே சூதானமா நடந்துக்கங்க – பேசிக்கிட்டே இருக்கும் போது பாஞ்சு
கொரலைய கடிச்சிப்புடுவாரு.
//இந்த “அவங்காளு” இருக்காரே அப்பப்ப ‘காரல்மார்க்ஸ்’ ‘பலூன்மாமா பஸ்’ ‘கம்யூனிசபூச்சாண்டி’ எனும் பல பெயர்களில்
உலாவுவாராம். //
raajavanaj க்கு என்ன பேசுறதுன்னே புரியலைப்பா
வினவு வந்து கமெண்டு பெட்டிய மூட போகிறார்
இவரோட உளரலை பார்த்துட்டு
அடி வாங்குவது அவர்தான்னாலும் அடுத்தவனை அடிச்சேட்டுன்னு உதார் விடுவதில் மிக வல்லவர்
ஏன்னா சொந்த ஊர் கோயம்புத்தூராச்சே
வினவு கமெண்ட் பெட்டியை மூட வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பம் என்று எனக்கும் தெரியும் தியாகு..
ஆனாலும் உங்கள் உளரல்கள் அப்படியே தான் இருக்கிறது – இருக்கும். எல்லோரும் எப்போதும் பார்க்கலாம்.
இப்படியே பு.ஜவை விமர்சித்து ஏதோ நூல் விடப்போறேன்னு சவுண்டு விட்டீங்க..? சீக்கிரம் போய் நூல் விடுங்க. அப்புறம்
வந்து நூல் ஏற்றுமதியாடிச்சி. அதுவும் புதிய ஜனநாயகம் சொல்லித்தான் நூல் ஏற்றுமதியாச்சின்னு ஒரு பத்து பதிவு செம்மலர்ல போட்டு அந்த பத்தையும் நீங்களே படிக்க வேண்டியதாய்டும். என்னோட எதிரிக்குக் கூட அந்த நிலைமை
வரக்கூடாதுன்னும் போது, ஒரு காமெடி பீஸுக்கு அந்த நிலைமை வரலாமா?
சீக்கிரம் நூல் விடுங்க; மாஞ்சா தடவி விடுங்க.
//வினவு கமெண்ட் பெட்டியை மூட வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பம் என்று எனக்கும் தெரியும் தியாகு.//
உங்க உதார் தாங்காம கமெண்டு பெட்டியை மூடலாம் என்றேன்
//இப்படியே பு.ஜவை விமர்சித்து ஏதோ நூல் விடப்போறேன்னு சவுண்டு விட்டீங்க..? சீக்கிரம் போய் நூல் விடுங்க. அப்புறம்
வந்து நூல் ஏற்றுமதியாடிச்சி. அதுவும் புதிய ஜனநாயகம் சொல்லித்தான் நூல் ஏற்றுமதியாச்சின்னு ஒரு பத்து பதிவு செம்மலர்ல போட்டு அந்த பத்தையும் நீங்களே படிக்க வேண்டியதாய்டும். எ//
செம்மலர் பாத்து இவ்ளோ கழியவேண்டியதில்லை நீங்க சொல்வதுபடி நான் எழுதுவது மொக்கையெனில்
தியாகு,
இது வினவு தோழர்கள் சீரியஸான விவாதத்திற்காக நடத்தி வரும் தளம் என்பதால் மிகுந்த பொறுமையுடன் இத்தனை நேரமாக விவாதித்துப் பார்த்தேன். வெட்டிப் பேச்சில் நீங்கள்
நல்ல ஆர்வத்துடன் உள்ளீர்கள்.
புதிய ஜனநாயகம் கட்டுரை பருத்தி ஏற்றுமதியை ஆதரிக்கிறது என்று சொன்ன ஒரே ஒரு ஸ்டேட்மெண்ட்டைக் கூட உங்களால் கட்டுரையின் வரிகளில் இருந்து எடுத்துக் காட்ட
முடியாத நிலையிலும் எந்த வெட்கமும் இல்லாமல் இப்படிப் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கிறீர்களே… கொஞ்சம் கூடவா உங்களுக்கு அருவறுப்புத் தோன்றவில்லை?
//கொள்முதல் விலையை உயர்த்த மறுக்கும் அரசு, பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காகத்தான் பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்திருப்பதைப் போல நடிக்கின்றது.//
//பருத்தி ஏற்றுமதிதான் உங்கள் பஞ்சத்தைப் போக்கும் என்று கூறும் அரசின் சூதுக்கு விவசாயிகள் பலியாகிறார்கள்//
மேலே உள்ளதெல்லாம் கட்டுரையில் இருக்கும் வரிகள் தான். இவற்றுக்குத் தான் நீங்கள் “ஓக்கே” சொல்லிவிட்டு திரும்பவும் வந்து பாடிய பல்லவியையே பாடினீர்கள். மாறாக பருத்தி ஏற்றுமதி செய்வது தான் தீர்வு என்று சொல்லும் ஒரே ஒரு வரியை உங்களால் காட்ட முடியவில்லை.
ஒரு ஆயிரத்தைநூறு வார்த்தைகளைப் படித்து புரிந்து கொள்ள முடியாத முழு மூடராக விளங்கும் நீங்கள் இப்படி இளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க ஆபாசமாகவும் அருவெறுப்பாகவும்
இருக்கிறது தியாகு. இதில் பொதுவான நபரைக் கூட்டி வா / எழுதிய தோழருக்கு திருப்பூரின் உற்பத்தி என்னவென்றே தெரியாது என்கிற வெட்டி ஸ்டேட்மெண்ட்கள் வேறு.
நானும் செண்ட்வின்னில் நாலு வருசம் வேலை பார்த்திருக்கிறேன் – எனக்கும் திருப்பூரின் முதலாளிகளைப் பற்றியும் தெரியும்… அவர்களின் சுரண்டல் பற்றியும் தெரியும்.. ஏன் திருப்பூரில்
இருக்கும் எந்தத் தொழிலாளியைக் கேட்டாலும் அதை கதை கதையாகச் சொல்வான். பருத்தி போச்சே பருத்தி போச்சே என்று அலறும் நீங்கள், லட்சக்கணக்கான விதர்பா விவசாயக்
குடும்பங்கள் தாலியறுத்த போது பருத்தியை இறக்குமதி செய்து கல்லா கட்டிய முதலாளிகளைப் பற்றி ஒரு வார்த்தை – ஒரே ஒரு வார்த்தை பேச முடிந்ததா? மனுஷன்னா கொஞ்சமாவது
ஈரம் வேண்டும் தியாகு. அட, உள்நாட்டில் இத்தனை பேர் செத்து சுண்ணாம்பா போறாங்களே அதைப் பற்றி அசால்ட்டாக “அதுக்கு முதலாளி என்னா செய்ய முடியும்.. போய்
அரசாங்கத்தைக் கேக்க வேண்டியது தானே” என்று சொல்ல எத்தனை திமிர்த்தனம் வேண்டும்?
த்தூ… நீங்களும் மார்க்சிஸ்ட்டு என்று சொல்லிக் கொண்டு அலைந்தீர்களே.. அதை நானும் நம்பிக் கொண்டு சில நாட்கள் உரையாடினேனே என்று நினைக்கும் போது எனக்கே
வெட்கமாக இருக்கிறது தியாகு.
இப்போதும் உங்களோடு பேசுவது என்னைப் பொருத்தவரையில் மலத்தைக் கிளறுவது போன்ற ஒரு அசூசையான உணர்ச்சியை உண்டாக்குகிறது. நாத்தம் குடலைப் பிடுங்குகிறது.
கருத்து வேறுபாடுகள் தோன்றுவது இயற்கை தான்; ஆனால் அதற்காக இல்லாதவொன்றை இருப்பது போல இட்டுக்கட்டுவதும் இருக்கும் ஒன்றை இல்லை என்று இட்டுக்கட்டுவதும் – அதையும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒருவன் செய்கிறானென்றால் அவனுக்கு அடிப்படையான வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லை என்று தான் அர்த்தம். தமிழில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் இருந்து தமிழ் தெரிந்த இத்தனை பேர் முன்னிலையில் அதில் சொல்லப்படாத ஒன்றை சொல்லப்பட்டுள்ளது என்று திரும்பத் திரும்ப ஒருவன் ஓதிக் கொண்டே இருக்க வேண்டுமென்றால் அவனுக்கு எந்தளவுக்கு மூளை செத்து போயிருக்கும்?
உங்கள் சுற்றத்தாரை நினைத்து வருந்துகிறேன் தியாகு. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை…. கடைசியாக பின்னூட்டம் போடுவது தான் விவாதத்தில் வெற்றி பெற்றதற்கான
அடையாளம் என்று நினைக்கக் கூடியவர் நீங்கள் – நானும் கடைசிப் பின்னூட்டம் எழுதப் போவதில்லை. இதற்கும் நீங்கள் திரும்பி வந்து எழுதப் போகும் பின்னூட்டத்திற்கான
பதில் நான் இதுவரை எழுதிய பின்னூட்டங்களில் நிறைந்து கிடக்கிறது – கட்டுரையிலும் இருக்கிறது. எனவே அதற்கான தேவையெதுவும் இல்லை. இதைத் தொடர்ந்து கவனித்து வரும் வாசகர்களுக்கு அது எப்போதும் ஒரு சாட்சியாக இருந்து கொண்டேயிருக்கும்.
நேரமின்மையால் நேரடியாக விவாதங்களில் தொடர்ச்சியாக பங்குபெறும் வாய்ப்புகள் குறைந்து போன காரணத்தால் தான் இத்தனை நாட்களாக ஒதுங்கி நின்று கவனிக்க மட்டுமே செய்து கொண்டிருந்தேன். ட்விட்டரில் நீங்கள் செய்த அலம்பல்கள் தான் என்னை இழுத்து வந்தது – அதற்காக உங்களுக்கு நன்றி. இந்த மூன்று நான்கு நாட்களில் என்னால் உங்களின்
ஓட்டாண்டித்தனத்தையும் சிந்தனை வரட்சியையும் போதுமான அளவிற்கு அம்பலப்படுத்தப் பட்டுள்ளது – இனிமேலும் நீங்கள் அடிக்கப் போகும் சலம்பல்களுக்கு ஒரு சாம்பிளாக – அதன்
தரம் எதை ஒத்தது என்று காட்டும் சாட்சியாக இந்தப் பதிவு இருக்கும். இதை நான் புக் மார்க் செய்துள்ளேன் – இனியும் நீங்கள் பு.ஜவையோ பு.கவையோ அல்லது இணையத்தில்
எழுதும் எமது தோழர்களையோ ‘விமர்சிக்கும்’ போது இந்த விவாதங்களை வாசகர்களுக்கு நினைவூட்டினாலே உங்கள் தரத்தைப் புரிந்து கொள்வார்கள். அந்த வகையில் நான்
மூன்று நாட்களாக செலவழித்த நேரம் பயனுள்ளதாகவே இருந்தது.
-ராஜாவனஜ்
http://vanajaraj.blogspot.com
அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத போது கோபம் வருகிறது பிறகு சே உன்கிட்டபோய்
பேசினேன்னு சொல்ல தோணுகிறது
அதைத்தான் செய்கிறார் ராஜா
1.அவர் என்னுடன் விவாதித்தற்கு காரணம்
எனது வினவு தள எதிர்ப்பு
2.என்னை முட்டாள் என நீருபிக்க வேண்டிய கட்டாயம்
இந்த இரண்டு விசயங்கள் உந்தி தள்ள ஒரு கட்டுரையை அதன் தவறைபற்றி விரிவாக பேசுவதில் இருந்து அவரை தடுக்கிறது
வினவு தள எதிப்பைத்தான் நான் செய்துவருகிறேன் என்று அவர் கூறுவது உண்மை அல்ல .
பொதுவாக வினவு எதிர்ப்பாளர்கள் புரட்சியை கேலிசெய்யும்போதும் சரி
தோழர்களை அட்ரஸ் இல்லாதவர்கள்
என சொல்லும்போதும்சரி நான் விவாதித்து
கேள்விகேட்டு இருக்கிறேன் இப்போதும்
வினவோ அசுரனோ இல்லாத வெளிகளில்
முதலாளித்துவ வினவு எதிர்ப்பு வாதிகளுடன் நான் விவாதித்து வருகிறேன்
வினவு செய்த இரண்டு பஞ்சாயத்திலும் அது விபரங்களை சரியாக திரட்டாமல்
பதிவு போடுவோம் என்று போட்டது அதன் அடிப்படையில் சிலர் பாதிக்கப்பட்டது என்கிற விசயங்கள் நடக்கும்போது நான் அதை பேசினேன்
அடுத்து வினவில் வந்த சில அரசியல் கட்டுரைகளை விமர்சித்தேன்
இதற்கு கோபப்படனும் என்றோ பழிதீர்க்கனும் என்பதோ அவசியம் இல்லை என கருதுகிறேன் ..
வினவு என்பதன் பெயரே வினவசொல்கிறது
ஆனால் அதை தப்பென்கிறார் எனது பழைய நண்பர்
விமர்சனங்கள் இல்லாமல் ஒரு கட்டுரையை பொன்னைபோல பாதுகாக்கமுடியுமான்னு ஒரு கம்யூனிஸ்டா எப்படி சிந்திக்கிறார்னு தெரியலை
அடுத்து என்னை முட்டாள் என நிரூபிக்க
அவர் ஏன் விரும்புகிறார்
நான் முட்டாள் என்றால் அவர் என்னுடன் இத்தனை கமெண்டுகள் அடித்து மெய்ப்பிக்க வேண்டிய அவசியம் ஏன் வருகிறது ., அவருக்கு நான் ஒரு மைக்ரேன் தலைவலியாகிப்போனேன்
எனவே என்னை தோலுரிக்க நினைத்து இருக்கிறார் அதன் விளைவும் இந்த விவாத்தில் வந்தது
இந்த விவாதத்தை ஆரம்பம்முதல் கடைசிவரை படிப்பவர் அனைவரும் புரிந்து கொள்வர் இதில் என்னை எந்தளவு மோசமா முட்டாள் மரமண்டை என திட்டனுமோ திட்டி இருப்பார்
இது ஒரு அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறை மனபான்மையை காட்டுகிறது
என்னை திட்டி அடக்கலாம் என்றால் முடியவே முடியாது .
அடுத்து என்னுடன் வாதிட்டு அடக்கலாம் என நினைக்கிறார் அதற்கு அவருக்கு ட்தொழில் துறை பற்றிய சரியான பார்வை வேண்டும்
இந்த புஜ கட்டுரைக்கு வருவோம் அது அதனளவில் சரியாக இல்லாத ஒரு கட்டுரை எப்படி என்பதுதான் நான் கேட்ட கேள்விகளும் அவர் பதில்களும் என விரவி கிடக்கிறது
அடுத்து என்னுடன் பழகியதை மிக கேவலமான ஒன்றாக அவர்கருதுகிறராம்
எனக்கு அப்படி திருப்பி சொல்ல மனம் இல்லை ஏனெனில் கொஞ்சநாள் என்றாலும்
நண்பன் நண்பனே நான் மாறாக அவருடன் பழகியமை மற்றும் அசுரன் போன்ற தோழர்களுடன் பழகியமை குறித்து பெருமை கொள்கிறேன் அவர்கள்
சீ போ என்றாலும் அவர்கள் தங்களது
சொந்த நலன் கருதி அப்படி இருக்கவில்லை எதோ ஒன்று அவர்களை பொதுநலன் நோக்கி தள்ளி இருக்கிறது அதற்கு தலை வணங்குகிறேன்
மேலும் நான் இனிமேலும் கட்டுரைகளை விமர்சிக்கத்தான் போகிறேன் தர்க்க பூர்வமாக பதில்களை தாருங்கள் என கேட்கிறேன்
என்னை முட்டாள் முட்டாள் என திட்டி திட்டி நீங்கள் முட்டாளாகி போகாமல்
இருங்கள் வாழ்த்துக்கள்
//மேலே உள்ளதெல்லாம் கட்டுரையில் இருக்கும் வரிகள் தான். இவற்றுக்குத் தான் நீங்கள் “ஓக்கே” சொல்லிவிட்டு திரும்பவும் வந்து பாடிய பல்லவியையே பாடினீர்கள். மாறாக பருத்தி ஏற்றுமதி செய்வது தான் தீர்வு என்று சொல்லும் ஒரே ஒரு வரியை உங்களால் காட்ட முடியவில்லை.
ஒரு ஆயிரத்தைநூறு வார்த்தைகளைப் படித்து புரிந்து கொள்ள முடியாத முழு மூடராக விளங்கும் நீங்கள் இப்படி இளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க ஆபாசமாகவும் அருவெறுப்பாகவும்
இருக்கிறது தியாகு. இதில் பொதுவான நபரைக் கூட்டி வா / எழுதிய தோழருக்கு திருப்பூரின் உற்பத்தி என்னவென்றே தெரியாது என்கிற வெட்டி ஸ்டேட்மெண்ட்கள் வேறு.
நானும் செண்ட்வின்னில் நாலு வருசம் வேலை பார்த்திருக்கிறேன் – எனக்கும் திருப்பூரின் முதலாளிகளைப் பற்றியும் தெரியும்… அவர்களின் சுரண்டல் பற்றியும் தெரியும்.. ஏன் திருப்பூரில்
இருக்கும் எந்தத் தொழிலாளியைக் கேட்டாலும் அதை கதை கதையாகச் சொல்வான். பருத்தி போச்சே பருத்தி போச்சே என்று அலறும் நீங்கள், லட்சக்கணக்கான விதர்பா விவசாயக்
குடும்பங்கள் தாலியறுத்த போது பருத்தியை இறக்குமதி செய்து கல்லா கட்டிய முதலாளிகளைப் பற்றி ஒரு வார்த்தை – ஒரே ஒரு வார்த்தை பேச முடிந்ததா? மனுஷன்னா கொஞ்சமாவது
ஈரம் வேண்டும் தியாகு. அட, உள்நாட்டில் இத்தனை பேர் செத்து சுண்ணாம்பா போறாங்களே அதைப் பற்றி அசால்ட்டாக “அதுக்கு முதலாளி என்னா செய்ய முடியும்.. போய்
அரசாங்கத்தைக் கேக்க வேண்டியது தானே” என்று சொல்ல எத்தனை திமிர்த்தனம் வேண்டும்? //
மொத்தமாக தர்க்க பூர்வவாதங்கள் முடிந்தபிறகு ராஜா இதைத்தான் சொல்கிறார்
நான் முதலாளிகளுக்கு கொடிபிடிக்கிறேன் என்று
அப்போ மூன்றுநாள் கடைஅடைத்து போராடிய இந்த ஊர் ஈரோடு மற்றும் சுற்றுபுற மக்கள் எல்லாம் முதலாளிக்காகவா போராடினார்கள்
ஒரு அம்பிகாவுக்கு குரல் கொடுக்கும் நீங்கள் இத்தனை லட்சம் மக்களின் போராட்டத்தை வாழ்த்தவோ அதன் பிறகு இந்த போராட்டம் முதலாளிகளின் நோக்கமும் உள்ளதென சொல்லவோ முடியாமல் உப்புக்கு சப்பா
ஒரு கட்டுரை எழுதிவிட்டு சரி தீர்வு சொல்லிங்கள் என்றால் என்னுடன் பேசுவது மலத்தை கிளருவது போல இருக்கிறதாம்
இந்த வினவு தளத்தில் எத்தனை பேர் படிக்கிறார்கள் நான் கேட்டதில் எதாவது தருக்கபிழை இருக்கிறது என சொல்லி நிரூபிக்க யாரும் வரவில்லை ஒருத்தர் வந்தார் அக்காகி அவருக்கு பதில் தனியே அடிக்கிறேன்.
அடுத்து வினவு தளத்தில் பொதுவாசகர்கள் நிறைய இருக்கிறார்கள் சரியான விசயங்களை வினவு எழுதும்போது மிகவும் சரி என சொல்லும் நல்லவர்கள் இருக்கிறார்கள்
அவர்களுக்கெல்லாம் அரசியல் சார்பு நிலை இல்லை அவர்களில் யாரேனும் வந்து தியாகு நீங்கள் சொல்வது தவறு என சொல்லி இருக்கனும் ஏன் சொல்லவில்லை
ஏன்னா அடிபடையாக எழுப்பப்பட்ட கேள்விகளில் தவறு இல்லை
/////லாபம் அதிகம் வந்தால்தான் கூலி உயரும்
என்ற உண்மையை நம்ப மறுக்கிறீங்க////
லாபம் என்பது எப்படி எதிலிருந்து கிடைக்கபெறுகிறது/திரட்டப்படுகிறது என்று உங்கள் மார்க்சிய அறிவால் விளக்கிவிடுங்கள் தியாகு!
அனைத்தும் முற்றுப்பெற்றுவிடும்!
//// உங்கள் தீர்வு இதுதான் இந்திய சந்தைக்கு பஞ்சை கொடுத்து இந்திய சந்தைக்கு உற்பத்தி செய் என்பது.
ஏன் லாபம் அல்லது கூலி அதிகம் கிடைத்தால் ஏற்றுமதி செய்யகூடாது?
///////
இது ஆயத்த ஆடைகளுக்கு மட்டுமா?
கோடிக்கணக்கானோர் உடுத்த துணி இல்லாமல் (பட்டினி) இருந்தாலும் பரவாயில்லை, ஒரு சாரருக்கு லாபம்/அதிக கூலி கிடைத்தால் போதும் அதனால் எதையும் ஏற்றுமதி செய்யலாம். அப்படி தானா?//
மேலுள்ளது அக்காகி போட்ட கமெண்டு
லாபம் என்பது எப்படி திரட்டப்படுகிறது எனகேட்கிறார்
லாபம் என்பது கூலி கொடுக்கபடாத உழைப்புதான் என்கிறார் மார்க்ஸ்
அதெப்படி ஏற்றுமதியில் லாபம் கிடைக்கும் என கேட்டால்
அதுதான் விலை ஒரு பனியனுக்கு உள்ளூரில்
150 ரூபாய்க்கு விற்க முடிந்தால் அதன் கூலி
உற்பத்தி செலவு 100 கூலி 25 உபரி அதாவது
கூலி கொடுக்கப்படாதட்து முதலாளி பாக்கெட்டுக்கு போவது 25
இதையே ஏற்றுமதி செய்தால் அதன் விலை சுமாராக 5 டாலர் என்றால் கூலி முதல் அளவுக்குத்தானே இருக்கும் என்றால் அதான் இல்லை
முதலாளிக்கு முதலாளி கூலி கொடுப்பதில் ஏற்படும் போட்டியும் தொழிலாளி கிடைக்காத ஒரு சூழலும் இதே பனியனுக்கு 250 ரூபாய் கிடைப்பதால் 25க்கு பதிலாக 50 ரூபாய் கூலியாக கொடுக்கிறான் முதலாளி
ஆக ஏற்றுமதிமூலம் கூலி அதிகம் கிடைக்கிறது
இல்லை அதிகநேரம் வேலைவாங்குவதால்தான் கூலி என்றால் அதுவும் இல்லை எட்டுமணிநேரத்துக்கு இருக்கும் கூலியின் இரண்டு மடங்கு வேலை வாங்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தரப்படுகிறது
அப்ப்டி தரப்படவில்லை எனில் இந்நேரம் திருப்பூர் காலி ஆகிடும்
இதன் மூலம் சொல்லவருது ஏற்றுமதி மட்டும் பஞ்சத்தை நீக்கிடும் எனப்தோ முதலாளி சுரண்டவில்லை என்பதோ அல்ல மாறாக
மேதாவி தியாகு,
லாபம் அதிகம் வந்தால்தான் கூலி உயரும் என்ற உண்மையை கண்டுபிடித்த மாமேதையே…
///லாபம் என்பது கூலி கொடுக்கபடாத உழைப்புதான் என்கிறார் மார்க்ஸ்////
அதிருக்கட்டும் லாபம் அதிகம் வந்தால்தான் கூலி உயரும் என்று எந்த ஆசான் சொன்னார்?
///அதெப்படி ஏற்றுமதியில் லாபம் கிடைக்கும் என கேட்டால்////
இதுக்கு நீங்க கொடுத்த விளக்கம் சத்தியமா எனக்கு புரியலீங்க… நான் உங்கள மாதிரி மேதாவி இல்லை பாருங்க!
சரி லாபத்தை அப்புறம் பாக்கலாம்! முதல்ல கூலி என்றால் என்ன? அதை புரியும் படி விளக்குங்களேன்.. (தயவு செய்து புளி போட்டு விளக்கிவிடாதீர்கள்)
*
லாபம் அதிகரித்தால், அதுவும் ஏற்றுமதியால் வரும் லாபத்தால் கூலி அதிகரிக்கிறது என்றால், இந்தியாவில் திருப்பூர் முதலாளிகள் மட்டுமா ஏற்றுமதி செய்கிறார்கள்?
தரகு முதலாளிகளும், ஹுண்டாய், நோக்கியா SEZ களும் ஏற்றுமதி தானே செய்கின்றன. ஏன் அந்நிறுவனங்களில் கூலி ஏறவில்லை? ஆகக்குறைவாக் இருக்கிறது? அவர்களுக்கு லாபம் இல்லையா? ஏன் அங்கு தொழிலாளர்களை 12 முதல் 14 மணி நேரம் கட்டாய வேலை வாங்குகின்றனர்?
///எட்டுமணிநேரத்துக்கு இருக்கும் கூலியின் இரண்டு மடங்கு வேலை வாங்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தரப்படுகிறது/////
இதை நீங்கள் நிறுபிக்க வேண்டும் தியாகு! அப்பட்டமாக புளுகக்கூடாது!
பெரும் நிறுவனங்களில் மட்டுமே அங்கும் நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டுமே இப்படி ஓவர் டைம் செய்தால் இரட்டை கூலி வழங்கப்படுகிறது.
இ.எஸ்.ஐ, பி.எஃப் ஐயே கொடுக்காத முதலாளிகள் இப்படி OTக்கு இரட்டை கூலி கொடுக்கின்றனர் என்பதெல்லாம் புளுகு.
ஏற்றுமதிக்கான உற்பத்தியில் விலை அதிகம் எனவே லாபமும் கூலியும் அதிகம் என்பதே
சரி இதற்காக பஞ்சு ஏற்றுமதி செய்யகூடாது என்கிறேனா
அல்லது ஆதாரவிலை கிடைக்க கூடாது என்கிறேனா இல்லை
கட்டுபடுத்தப்பட்ட ஏற்றுமதி வேண்டும்
உள்நாட்டு தொழில் பாதுகாக்கப்படவேண்டும்
இல்லை உள்நாட்டு உற்பத்தி செய்யுங்கள் என்பது சரியா
செய்வோம் என்கிறேன் செய்கிறார்கள் என்கிறேன் இல்லை எனில் பனியன் இறக்குமதி ஆனதற்கு ஆதாரம் தாருங்கள் என்கிறேன்
அதையெல்லாம் விட்டுவிட்டு தனிநபர் தாக்குதலி இறங்கலாமா
//விமர்சனங்கள் இல்லாமல் ஒரு கட்டுரையை பொன்னைபோல பாதுகாக்கமுடியுமான்னு ஒரு கம்யூனிஸ்டா எப்படி சிந்திக்கிறார்னு தெரியலை
//
நீங்கள் செய்தது விமர்சனமே கிடையாது. கட்டுரையில் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு நீங்களாக உங்கள் கற்பனை வெளியில் உலாவந்த போது
பிதற்றியது தான் உங்கள் மொழியில் “விமர்சனம்” என்றால், இதுவரை நீங்கள் வைத்த “விமர்சனங்களின்” தரம் என்னவென்பதை வேறு யாரும் விளக்கத் தேவையில்லை.
உங்களை முட்டாள் என்று நான் நிரூபிக்க முனைகிறேன் என்பதெல்லாம் உங்களைப் பற்றி நீங்களே வைத்துக் கொண்டிருக்கும் மிகை மதிப்பீடு. அப்படியாரும் நிரூபிக்கத்
தேவையே இல்லை – அந்தக் கஷ்டத்தை நீங்கள் யாருக்கும் வைக்கவேயில்லை.
பருத்தி ஏற்றுமதியை கட்டுரையும் ஆதரிக்கவில்லை – முதலாளிகளும் ஆதரிக்கவில்லை. ஆனால், இரண்டின் பின்னுள்ள நோக்கங்கள் வேறு வேறு. இது கட்டுரையில் மிகத் தெளிவாகவே
இருக்கிறது. பருத்தி ஏற்றுமதியை எதிர்க்கும் முதலாளி ஆடை ஏற்றுமதி தான் தொழிலாளர்களுக்கு வேலை தரும் என்று தொழிலாளர்களிடம் சொல்வது ஒரு மோசடி! இதற்கு
மாற்று என்னவென்பதும் கட்டுரையில் உள்ளது. தொழிலாளர்களை அணிதிரட்டிய சங்கங்கள், முதலாளிகள் குறைந்த கூலி கொடுத்து நடத்தும் உழைப்புச் சுரண்டலை கேள்விக்குள்ளாமல்
விட்டதை கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.
இத்தனை தெளிவாக இருக்கும் ஒரு கட்டுரையை வாசித்துப் புரிந்து கொள்ள முடியாத செத்த மூளைகள் திரும்பத் திரும்ப வந்து என் கேள்விக்கு யாருமே பதில் சொல்லலை – அதனால
நான் தான் ஜெயித்தேன் என்று கூவிக் கொண்டு அலைவது பார்க்க சகிக்கமுடியாததாக இருக்கிறது.
இந்த நிமிடம் வரைக்கும் பருத்தி ஏற்றுமதியை கட்டுரை ஆதரிக்கிறது – அதையே ஒரு தீர்வாக விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கிறது என்கிற குற்றச்சாட்டை தியாகுவால்
எடுத்துக் காட்ட முடியவில்லை. அது முடியவும் முடியாது.
மற்ற அவரது செண்டிமெண்டு கூச்சல்கள் அவர் மேல் பரிதாபத்தை வரவழைக்கத் தவறி விட்டது என்பதை தியாகுவுக்கு சுட்டிக் காட்டுகிறேன். தயவு செய்து வேறு விதமாக முயற்சிக்கவும்.
செண்டிமெண்டு கூச்சல் என்கிறார்
ஆனால் அறிவுபூர்வமாக பேசும் இடத்தில் வந்து செண்டிமெண்டு பேசுவதும்
செண்டிமெண்டு பேசுகிறாரே என பதிலளித்தால் வந்து கூச்சல் என சொல்வதும் அவர்தான்
//அறிவுபூர்வமாக பேசும் இடத்தில் //
தன்னம்பிக்கை இருக்க வேண்டியது தான்… அதுக்காக இப்படியா???? முடியல…
//பருத்தி ஏற்றுமதியை கட்டுரையும் ஆதரிக்கவில்லை – முதலாளிகளும் ஆதரிக்கவில்லை. ஆனால், இரண்டின் பின்னுள்ள நோக்கங்கள் வேறு வேறு. //
நோக்கத்தை விளக்கும் கட்டுரை சாராம்சமாக ஏற்றுமதி எதிர்ப்பே லாபத்துக்கானது என்கிறது அந்த அம்சத்தில் தொழிலாளர்களின் போராட்டத்தை கேலிகுள்ளாக்குகிறது
//நோக்கத்தை விளக்கும் கட்டுரை சாராம்சமாக ஏற்றுமதி எதிர்ப்பே லாபத்துக்கானது என்கிறது அந்த அம்சத்தில் தொழிலாளர்களின் போராட்டத்தை கேலிகுள்ளாக்குகிறது //
“நோக்கத்தை விளக்கும் கட்டுரை” என்றால் கட்டுரை பருத்தி ஏற்றுமதியை ஆதரிக்கவில்லை என்பதை
ஒப்புக்கொள்கிறீர்களா? அப்படியென்றால் இத்தனை நேரம் “கட்டுரை பருத்தி ஏற்றுமதியை ஆதரித்து தொழிலாளர்கள்
வயிற்றில் அடிக்கிறது” என்பது போல் நீங்கள் சொன்னது பொய் என்றாகிறது தியாகு..
சாராம்சமாக முதலாளிகள் ஏற்றுமதியை நிறுத்தக் கோருவதைப் பற்றித் தான் கட்டுரை பேசுகிறது. மாறாக பருத்தி
ஏற்றுமதியையே ஆதரிக்கவில்லை – அதை எதிர்க்கவே செய்கிறது.
நீங்க என்ன சொல்கிறீர்கள் தியாகு? முதலாளியின் கோரிக்கையை விமர்சித்தாலே பருத்தி ஏற்றுமதியை ஆதரித்ததாக
அர்த்தம் என்றா?
தொழிலாளர்களின் போராட்டத்தை கட்டுரை எங்கே கேலிக்குள்ளாக்கியது?
//முதலாளி வர்க்கத்தின் இந்த மோசடியை அம்பலப்படுத்தாமல், தொழிலாளி வர்க்கத்தை நிபந்தனையின்றி முதலாளிகளின் பின்னே அணிவகுத்து நிற்க வைக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.//
இந்த வரிக்கு என்ன அர்த்தம் தெரியுமா தியாகு? “நிபந்தனையின்றி” என்று கட்டுரையாளர் குறிப்பிடுவதைப் பற்றி
அந்தப் பத்தியின் முன்னும் பின்னும் விளக்கியிருப்பதை நீங்கள் படித்திருகக் வாய்ப்பில்லை.
இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களை முதலாளிகளின் பின்னே போலி கம்யூனிஸ்டுகள் நிற்க வைக்கும் முன் –
விவசாயிக்கு உரிய விலையையும், தொழிலாளிக்கு உரிய கூலியையும் நிபந்தனையாக வைத்திருக்கலாமே? அதைச்
செய்யவில்லை என்பதைத் தான் கட்டுரை குறிப்பிடுகிறது – உங்கள் செத்த மூளை புரிந்து கொண்டதைப் போல் அல்ல.
//ஏற்றுமதிக்கான உற்பத்தியில் விலை அதிகம் எனவே லாபமும் கூலியும் அதிகம் என்பதே //
இது ஒன்றே போதும். நீங்கள் பொருளாதாரத்தைப் புரிந்து கொண்டிருக்கும் முறையை நீங்களே சுய அம்பலப்படுத்திக் கொள்கிறீர்கள் தியாகு.
இங்கே உற்பத்திச் செலவுகள் குறைவு என்பதால் தான் ஏற்றுமதியே நடக்கிறது. இங்கே முறையான விலையில் பருத்தியைக் கொள்முதல் செய்து தமது தொழிலாளர்களுக்கு முறையான கூலியை முதலாளிகள் கொடுத்தால் அவர்களால் அமெரிக்கச் சந்தைக்கு குறைந்த விலையில் ஏற்றுமதி செய்ய முடியாது.
ஒரு சந்தையின் வலிமையும் அதில் பொருட்களின் தேவையும் அதற்கான உற்பத்தியை தீர்மாணிக்கும். இங்கே வாங்கவே சக்தியில்லாத ஒரு சந்தை உள்ளது – அந்த சந்தையின்
பெருவாரியானவர்கள் விவசாயப் பொருளாதாரத்தைச் சார்ந்தவர்கள் – இப்படி உள்நாட்டு முதலாளி முறையான விலையைக்கொடுக்காமல் ; MSPஐ அரசு உயர்த்தியவுடன்
இறக்குமதி செய்யும் முதலாளிகள் தான் அந்தச் சந்தையின் தேவை வளராமல் பார்த்துக் கொண்டு அதைப் புறக்கணிக்கிறார்கள். இது கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது –
//நம் மக்கள் தொகையில் 80 கோடிப் பேருடைய ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய். இந்த மக்களால் ஆண்டுக்கு 4 செட் வேட்டி, சேலை, கால்சட்டை, மேல்சட்டை, உள்ளாடைகள் வாங்க முடியுமானால், இந்தியாவின் சந்தை இவர்கள் தேடித் தவமிருக்கும் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆனால், ஜவுளி ஆலை முதலாளிகள் உள்நாட்டு உழைப்பாளி மக்களின் நுகர்வைப் பற்றிக் கவலைப்படவில்லை.//
பருத்தி ஏற்றுமதியைத் தடை கோரி தொழிலாளர்கள் இணைவதை நாம் எதிர்க்கவில்லை – கூடவே உள்நாட்டு விவசாயிக்கு உரியவிலையையும்; தொழிலாளிக்கு உரிய கூலியையும்
கொடுக்குமாறு ஏன் கோரவில்லை என்கிறோம். இப்படி முதலாளிக்கு வால்பிடித்துச் செல்ல போலி கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை அணி திரட்டுவதை கட்டுரை
விமர்சிக்கிறது. அது கீழே –
//தங்களுடைய நலனை மக்களின் நலனாகச் சித்தரிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு மக்கள் தேவைப்படுகிறார்கள். விசைத்தறி நெசவாளர்களையும், ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களையும் கொத்தடிமையாக்கி, 12 மணி நேரத்திற்கும் மேல் கடுமையாகச் சுரண்டும் இந்தக் காருண்யவான்கள் பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தாவிட்டால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையிழப்பும், தற்கொலைகளும் நிகழும் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். முதலாளி வர்க்கத்தின் இந்த மோசடியை அம்பலப்படுத்தாமல், தொழிலாளி வர்க்கத்தை நிபந்தனையின்றி முதலாளிகளின் பின்னே அணிவகுத்து நிற்க வைக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.
விளைவு, “ஆடை ஏற்றுமதிதான் உங்களுக்கு வேலையைக் கொடுக்கும்” என்று கூறும் ஜவுளி ஆலை முதலாளிகளின் மோசடியில் தொழிலாளர்களும், விசைத்தறி நெசவாளர்களும் மயங்குகிறார்கள். பருத்தி ஏற்றுமதிதான் உங்கள் பஞ்சத்தைப் போக்கும் என்று கூறும் அரசின் சூதுக்கு விவசாயிகள் பலியாகிறார்கள். இந்தப்புறம் வீசினால் தொழிலாளிகளையும், அந்தப்புறம் வீசினால் விவசாயிகளையும் வெட்டும் கத்திதான் புதிய தாராளவாதக் கொள்கை என்பதை மக்கள் உணரும் போது மட்டுமே இந்த மறுகாலனியாக்கத் திணை மயக்கங்கள் மறைந்தொழியும்.//
இப்படி அரைகுறைப் புரிதலில் ஒரு செத்த மூளை இருந்தால் ஏற்படும் விளைவு தான் பன்றி சாணம் போட்டது போன்ற பதிவுகள். அது தான் ‘விமர்சனம்’ என்று நம்பிக் கொண்டிருப்பது
உங்களின் அடிப்படை உரிமை எனும் அளவில் எனக்கு அது பற்றிக் கவலையில்லை – எம்மையும் அது தான் ‘விமர்சனம்’ என்று ஏற்கச் சொல்வது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக
இல்லையா தியாகு?
//ஏற்றுமதிக்கான உற்பத்தியில் விலை அதிகம் எனவே லாபமும் கூலியும் அதிகம் என்பதே //
இது ஒன்றே போதும். நீங்கள் பொருளாதாரத்தைப் புரிந்து கொண்டிருக்கும் முறையை நீங்களே சுய அம்பலப்படுத்திக் கொள்கிறீர்கள் தியாகு.
இங்கே உற்பத்திச் செலவுகள் குறைவு என்பதால் தான் ஏற்றுமதியே நடக்கிறது. இங்கே முறையான விலையில் பருத்தியைக் கொள்முதல் செய்து தமது தொழிலாளர்களுக்கு முறையான கூலியை முதலாளிகள் கொடுத்தால் அவர்களால் அமெரிக்கச் சந்தைக்கு குறைந்த விலையில் ஏற்றுமதி செய்ய முடியாது.
//
இதைத்தான் தவறு என்கிறேன் பஞ்சுக்கு முறையான ஆதாரவிலை கொடுத்தால் நிச்சயம் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது மாறாக் ஆன்லைன் வர்தகமும் ஏற்றுமதியும்தான் இன்றைக்கு கச்சா பொருளை அனுகமுடியாதபடி செய்துள்ளது
//ஒரு சந்தையின் வலிமையும் அதில் பொருட்களின் தேவையும் அதற்கான உற்பத்தியை தீர்மாணிக்கும். இங்கே வாங்கவே சக்தியில்லாத ஒரு சந்தை உள்ளது – அந்த சந்தையின்
பெருவாரியானவர்கள் விவசாயப் பொருளாதாரத்தைச் சார்ந்தவர்கள் – இப்படி உள்நாட்டு முதலாளி முறையான விலையைக்கொடுக்காமல் ; MSPஐ அரசு உயர்த்தியவுடன்
இறக்குமதி செய்யும் முதலாளிகள் தான் அந்தச் சந்தையின் தேவை வளராமல் பார்த்துக் கொண்டு அதைப் புறக்கணிக்கிறார்கள்.//
ஆதாரவிலை கொடுக்க கூடாது என முதலாளிகள் சொல்லவில்லை அவர்களும் தொழிலாளர்களும் இணைந்து போராடியதே
ஏற்றுமதியை கட்டுபடுத்து ஆன்லைன்வர்த்தகத்தில் இருந்து கச்சா பொருளை நீக்கு என்பதுதான்
இது கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது –
//நம் மக்கள் தொகையில் 80 கோடிப் பேருடைய ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய். இந்த மக்களால் ஆண்டுக்கு 4 செட் வேட்டி, சேலை, கால்சட்டை, மேல்சட்டை, உள்ளாடைகள் வாங்க முடியுமானால், இந்தியாவின் சந்தை இவர்கள் தேடித் தவமிருக்கும் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆனால், ஜவுளி ஆலை முதலாளிகள் உள்நாட்டு உழைப்பாளி மக்களின் நுகர்வைப் பற்றிக் கவலைப்படவில்லை.//
பருத்தி ஏற்றுமதியைத் தடை கோரி தொழிலாளர்கள் இணைவதை நாம் எதிர்க்கவில்லை – கூடவே உள்நாட்டு விவசாயிக்கு உரியவிலையையும்; தொழிலாளிக்கு உரிய கூலியையும்
கொடுக்குமாறு ஏன் கோரவில்லை என்கிறோம். இப்படி முதலாளிக்கு வால்பிடித்துச் செல்ல போலி கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை அணி திரட்டுவதை கட்டுரை
விமர்சிக்கிறது. அது கீழே –
//தங்களுடைய நலனை மக்களின் நலனாகச் சித்தரிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு மக்கள் தேவைப்படுகிறார்கள். விசைத்தறி நெசவாளர்களையும், ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களையும் கொத்தடிமையாக்கி, 12 மணி நேரத்திற்கும் மேல் கடுமையாகச் சுரண்டும் இந்தக் காருண்யவான்கள் பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தாவிட்டால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையிழப்பும், தற்கொலைகளும் நிகழும் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். முதலாளி வர்க்கத்தின் இந்த மோசடியை அம்பலப்படுத்தாமல், தொழிலாளி வர்க்கத்தை நிபந்தனையின்றி முதலாளிகளின் பின்னே அணிவகுத்து நிற்க வைக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.
விளைவு, “ஆடை ஏற்றுமதிதான் உங்களுக்கு வேலையைக் கொடுக்கும்” என்று கூறும் ஜவுளி ஆலை முதலாளிகளின் மோசடியில் தொழிலாளர்களும், விசைத்தறி நெசவாளர்களும் மயங்குகிறார்கள். பருத்தி ஏற்றுமதிதான் உங்கள் பஞ்சத்தைப் போக்கும் என்று கூறும் அரசின் சூதுக்கு விவசாயிகள் பலியாகிறார்கள். இந்தப்புறம் வீசினால் தொழிலாளிகளையும், அந்தப்புறம் வீசினால் விவசாயிகளையும் வெட்டும் கத்திதான் புதிய தாராளவாதக் கொள்கை என்பதை மக்கள் உணரும் போது மட்டுமே இந்த மறுகாலனியாக்கத் திணை மயக்கங்கள் மறைந்தொழியும்.//
இப்படி அரைகுறைப் புரிதலில் ஒரு செத்த மூளை இருந்தால் ஏற்படும் விளைவு தான் பன்றி சாணம் போட்டது போன்ற பதிவுகள். அது தான் ‘விமர்சனம்’ என்று நம்பிக் கொண்டிருப்பது
உங்களின் அடிப்படை உரிமை எனும் அளவில் எனக்கு அது பற்றிக் கவலையில்லை – எம்மையும் அது தான் ‘விமர்சனம்’ என்று ஏற்கச் சொல்வது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக
இல்லையா தியாகு?//
/– எம்மையும் அது தான் ‘விமர்சனம்’ என்று ஏற்கச் சொல்வது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக
இல்லையா தியாகு?////
உங்களை ஏற்கவோ மறுக்கவோ சொல்லவில்லை நான் எனது கருத்தை பதிவு செய்கிறேன்
மாறாக முட்டாள் என வசவில் ஈடுபடுகிறீர்கள்
எல்லா கச்சா பொருட்களின் விலையும் மலிவாக கிடைப்பதனால்தான் இந்த விலையை வைக்க முடிகிறது என்கிறார்
அப்படியெனில் இப்போது தொழில்துறையினர் என்ன செய்யனும் கச்சா பொருள் மலிவா கிடைக்குதுன்னு சொல்லி குறைந்தவிலைக்கு விற்க முடியாது
அடுத்து கச்சா பொருளின் விலையை கூட்ட என்ன செயல்திட்டம் என கேட்டேன் பதிலில்லை
ஆதாரவிலையை குறைக்கவும் தொழில்துறையினர் சொல்லவில்லை
நூல்விலை சுமார் 80 சதவீதம் ஏறியதும்மட்டுமே போராடவந்தார்கள்
அவர்களுடன் தொழிலாளர்களும் வந்தார்கள்
இது தவறு என்கிறீர்கள் இப்போது தொழிலாளர்கள் என்ன செய்யனும் செயல்திட்டம் சொல்லுங்கள் என்றேனே பதில் இல்லை
ஆதாரவிலையை அதிகப்படுத்துவதை முதலாளிகள் எதிர்க்கவில்லை என்று சொல்லும் தியாகு, ஆதாரவிலை அதிகரித்த
போது பருத்தியை முதலாளிகள் இறக்குமதி செய்தது ஏன் என்கிற கேள்விக்கு பதில் சொல்லும் தார்மீகப் பொறுப்பையும்
ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அதை எங்குமே செய்யவில்லை.
அதற்குப் பதிலாக, கட்டுரையில் தொழிலாளர்களை முதலாளிகளின் கோரிக்கைக்கு மட்டுமே ‘நிபந்தனையின்றி’
அணிதிரட்டுவதற்கு மாறாக ‘பருத்திக்கு நியாய விலை – தொழிலாளிக்கு உரிய கூலி’ என்கிற நிபந்தனையோடு
போராட அணிதிரட்டியிருக்க வேண்டும் என்று சொன்னதை வாசிக்காமல் –
//இப்போது தொழிலாளர்கள் என்ன செய்யனும் செயல்திட்டம் சொல்லுங்கள் என்றேனே பதில் இல்லை//
என்று சொல்கிறார். மேலே உள்ளதைத் தான் தியாகு முன்னர் எழுதிய பின்னூட்டம் ஒன்றி “ஆகாத வேலை” என்று
புறங்கையால் ஒதுக்கியுள்ளார். அதாவது, தியாகு மறைமுகமாகச் சொல்வது இது தான் – தொழிலாளர்கள் முதலாளிகளை
அவர்களின் (முதலாளிகளின்) கோரிக்கைக்காக நிபந்தனையின்றி ஆதரிக்க வேண்டும். ஏதோ கால் வயிறு கஞ்சியாவது
கிடைக்கிறதே என்று இருப்போம் என்றால், கட்டுரை வந்து நியாயமான கூலி நியாயமான விலை என்று முதலாளியின்
வயிற்றில் புளியைக் கரைத்து விடும் போலிருக்கிறதே என்கிறார்.
இதைச் சொல்ல தியாகுவுக்கு உரிமை இருக்கத் தான் செய்கிறது – ஆனால், அதையேன் ஒரு மார்க்சியவாதியாக
நடித்துக் கொண்டு சொல்ல வேண்டும்?
இந்த விவாதத்தை ஆரம்பத்தில் இருந்து பார்ப்பவர்கள் அறிவார்கள் நான் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் தப்பிக்கவில்லை என்பதை கடைசியாக
ராஜாவனஜ் வந்து இப்படி ஒரு ஆளிடமா விவாதித்தோம் என சொல்லவந்ததும்
ஒருமனிதனை காயப்படுத்தவா இவ்வளவு நேரம் பேசினோம் என்றானது
மேலும் மேலும் இந்த விவாதத்தை நீங்கள் வளர்த்தலாம் ஆனால் எனக்கு உடன்பாடில்லை என அவர் சொன்னார்
ஆனாலும் மீண்டும் வந்து ஆரம்பிக்கிறார்
இதற்கு பதில் சொல்லி நீட்டுவதா என யோசிகிறேன் ஏனெனில் இவை அவரை மேலும் மேலும் கட்டுரையை காப்பாத்துவதை நோக்கி தள்ளும் இதனால் மீண்டும் அவர் எரிச்சல் அடையலாம்
மீண்டும் வந்து உன்னை எப்படி எல்லாம் நினைசேன் நீ இவ்ளோதானா என பழைய பாட்டை பாடலாம் இது வாசிப்பவர்களுக்கு மிகவும் எரிச்சல் தரும் என்பதால்
இனிமேல் பதிலளிக்க வேண்டுமா என யோசித்து பதிலளிக்கிறேன்
இதற்கெல்லாம் ராஜாவனஜ் பதில் கொடுங்கள் என கேட்டால் மட்டுமே பதில் கொடுக்கலாம் என நினைக்கிறேன்
ஏனெனில் பதிலுக்கு பதில் சொல்லி என என்னை மீண்டும் அவர் திட்டலாம்
///பஞ்சு ஏற்றுமதியை தடைவிதிக்க கூடாது என்கிறார்கள்////
இதை நீங்கள் நிறுபிக்கவில்லை. கட்டுரை என்ன சொல்கிறது என்று ஆதாரத்துடன் தோழர்கள் எடுத்து சொன்னபிறகும், ஏற்றுமதியை தடைவிதிக்க கூடாது என்று இக்கட்டுரை சொல்வதாக நீங்கள் நம்புகிறீர்கள், அதனாலேயே தீர்ப்பும் எழுதுகிறீர்கள்.
////எத்தனை சதவீதம் அவ்வாறு இறக்குமதி நடந்தது ஏதேனும் தரவுகள் இருக்கா என கேட்டாலும் பதில் இல்லை /////
இதற்கு ராஜா வனஜ் பதில் அளித்து சுட்டி கொடுத்திருந்தார். நீங்கள் தான் அதை ஏற்கவுமில்லாமல், மறுக்கவுமில்லாமல், திரும்ப முதலில் இருந்து வருகிறீர்கள்.
///சரி என்ன தீர்வு என்றால்///
///உற்பத்தி, ஏற்றுமதி சார்ந்த பிரச்சனை என்பது முதலாளிகள் பிரச்சனை போலவும் தொழிலாளர்கள் விவசாயிகளோடு
கூட்டு சேரனும் என்றும் ஆகாத கோரிக்கையை முன்வைக்கிறார்கள் இங்கென்ன புரட்சியா நடந்து கொண்டு இருக்கிறது விவசாயிகளின் பிரச்சனைக்கு தொழிலாளர் களமிரங்க///
தீர்வை சொன்னாலும் அது ஆகாத வேலை என்கிறீர்கள்.
///உடன்பாடில்லை என அவர் சொன்னார் ஆனாலும் மீண்டும் வந்து ஆரம்பிக்கிறார்///
இதில் நீங்கள் ஆரோக்கியமாக விவாதித்ததை போல சீன் போடாதீர்கள் தியாகு! அருவருப்பாக இருக்கிறது.
உங்களுக்கு நண்பர்கள் என்று யாருமே இல்லையா? அசாதி என்ன ஆனார்? அவரிடமே இதை படிக்க சொல்லி கருத்து கேளுங்கள் தியாகு…
அக்காகி
////எத்தனை சதவீதம் அவ்வாறு இறக்குமதி நடந்தது ஏதேனும் தரவுகள் இருக்கா என கேட்டாலும் பதில் இல்லை /////
இதற்கு ராஜா வனஜ் பதில் அளித்து சுட்டி கொடுத்திருந்தார். நீங்கள் தான் அதை ஏற்கவுமில்லாமல், மறுக்கவுமில்லாமல், திரும்ப முதலில் இருந்து வருகிறீர்கள்.//
பஞ்சு இறக்குமதியை பற்றி ராஜாவனஜ் பேசுகிறார்
அதை நான் ஏற்றுகொண்ட கமெண்டு மேலேயே இருக்கிறது
நான் சொல்லும் இருக்குமதி உள்நாட்டு தேவை பூர்த்தியாகமால் ஏற்றுமதி செய்வதாக் சொல்லும் பனியனை பற்றி
பனியன் இறக்குமதி நடந்துள்ளதா என நான் கேட்டு இருக்கிறேன்
மீண்டும் ஒருமுறை சரியாக வாசிக்கவும்
இதற்கு மட்டும் பதில் சொல்லிடுறேன்
எனது முந்தைய கமெண்டு உறுதிமொழியை மீறி
//.ஆதாரவிலையை அதிகப்படுத்துவதை முதலாளிகள் எதிர்க்கவில்லை என்று சொல்லும் தியாகு, ஆதாரவிலை அதிகரித்த
போது பருத்தியை முதலாளிகள் இறக்குமதி செய்தது ஏன் என்கிற கேள்விக்கு பதில் சொல்லும் தார்மீகப் பொறுப்பையும்
ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அதை எங்குமே செய்யவில்லை. //
நல்ல கேள்வி ஆதாரவிலை அதிகரித்த போது அல்ல பருத்து ஏற்றுமதி அதிகமானவுடன் அடுத்து ஆன்லைன் வர்த்தகம் அதிகமானவுடன் தங்களால் தொழில் செய்ய முடியாத சூழ்நிலையில் இறக்குமதி தேவையானதுதானே
இது ஒன்றும் தேவைஅடிப்படையிலான சந்தை இல்லையே அதற்கு முதலாளிகள்
முற்றும் துறந்த முனிவர்கள் அவர்கள் எல்லாமே தொழிலாளர் நலத்துக்காக செய்கிறார்கள் என வாதிடவில்லை
இந்த கட்டுரையே சொல்வது என்னவெனில்
ஆதாரவிலை கிடைக்காததற்கு காரணமே முதலாளிகள் தான் என்கிறார்
ராஜாவும் பல இடங்களில் சொல்லி இருக்கிறார் என்ன ஆதாரம் என்றால் இறக்குமதி என்கிறார்
இறக்குமதி ஏற்றுமதிக்கு பின்னர் நடந்ததா
ஆன்லைன் வர்த்தகம் வரும் முன்னே நடந்ததா என ராஜாதான் நிரூபிக்க வேண்டும்
//அதற்குப் பதிலாக, கட்டுரையில் தொழிலாளர்களை முதலாளிகளின் கோரிக்கைக்கு மட்டுமே ‘நிபந்தனையின்றி’
அணிதிரட்டுவதற்கு மாறாக ‘பருத்திக்கு நியாய விலை – தொழிலாளிக்கு உரிய கூலி’ என்கிற நிபந்தனையோடு
போராட அணிதிரட்டியிருக்க வேண்டும் என்று சொன்னதை வாசிக்காமல் -//
எப்படி அணிதிரட்ட வேண்டும் எப்படி போராட வேண்டும் என்பதெல்லாம் சொல்லாமல் இந்த போராட்டமே முதலாளியின் லாபத்துக்கானதுன்னு சொல்லும் போது முதலில் இந்த போராட்டம் வரவேற்கதக்கது என சொல்லாமல் “ஜவுளிதொழில் தொழில் நெருக்கடி முதலாளிக்கா தொழிலாளிக்கா”
என பெரிய கேள்விகுறியுடன் ஆரம்பிக்கும் கட்டுரையை இவர் சொல்கிறார்
அது விசயங்களை ஆராய்ந்து தீர்வை மட்டும் சொல்லும் கட்டுரை என்று
//இப்போது தொழிலாளர்கள் என்ன செய்யனும் செயல்திட்டம் சொல்லுங்கள் என்றேனே பதில் இல்லை//
என்று சொல்கிறார். மேலே உள்ளதைத் தான் தியாகு முன்னர் எழுதிய பின்னூட்டம் ஒன்றி “ஆகாத வேலை” என்று
புறங்கையால் ஒதுக்கியுள்ளார். அதாவது, தியாகு மறைமுகமாகச் சொல்வது இது தான் – தொழிலாளர்கள் முதலாளிகளை
அவர்களின் (முதலாளிகளின்) கோரிக்கைக்காக நிபந்தனையின்றி ஆதரிக்க வேண்டும். ஏதோ கால் வயிறு கஞ்சியாவது
கிடைக்கிறதே என்று இருப்போம் என்றால், கட்டுரை வந்து நியாயமான கூலி நியாயமான விலை என்று முதலாளியின்
வயிற்றில் புளியைக் கரைத்து விடும் போலிருக்கிறதே என்கிறார்.
//
ஆகாத வேலை என சொன்னது இந்தியாவின் உள்நாட்டுக்கு மொத்த இயங்கு சக்தியையும் பயன்படுத்தனும் என சொல்லி ஏற்றுமதியே தேவைபடாத உள்நாட்டு சந்தை திறந்து கிடக்கிறது எனநீங்கள் சொன்னதுபோது சொன்னது
ஆகவே திரிக்காதீர்கள்
உள்நாட்டு சந்தை இருக்கிறதாம் ஆனால்
வாங்கும் சக்தி இல்லையாம்
வாங்கும் சக்தி இல்லை எனவும் சொல்கிறார் உள்நாட்டு சந்தைக்கு உற்பத்தி பண்ணுங்கள் என்றும் சொல்கிறார்
இது ஆகிறா வேலையா என வாசகர்களே முடிவு செய்யட்டும்
நியாயமான விலை முதலாளிக்கு புளியை கரைக்கவில்லை மாறாக முதலாளிகள் தொழிலாளர்கள் போராட்டம் இந்த திசையை நோக்கி அதாவது ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கட்டற்ற ஏற்றுமதியை நோக்கி தொடர்வது இந்த கட்டுரையாளருக்கும் உங்களுக்கும்தான் புளியை கரைத்துள்ளது
//இதைச் சொல்ல தியாகுவுக்கு உரிமை இருக்கத் தான் செய்கிறது – ஆனால், அதையேன் ஒரு மார்க்சியவாதியாக
நடித்துக் கொண்டு சொல்ல வேண்டும்?
இதை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறாது ஆனால் நீங்களும் கம்யூனிஸ்டு கட்சின்னு சொல்லிட்டு
தொழிலாளர் போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள்
என்னது இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா?
மொத இருந்து வா.. பொண்டாட்டி ஓடிப் போன கதையில இருந்து வா
என்ன கையப்புடுச்சு இழுத்தியா?
எப்படி மாத்தி மாத்தி சொன்னாலும், இது சுத்தி சுத்தி வர்ர ஒரே இடத்துக்கு வர்ற அழுகுணி ஆட்டம் என்பது தியாகுவுக்கு நன்றாகவே தெரியும்! ஆனாலும் வாசகர்களை அழைக்கிறார்….
///
//அதற்குப் பதிலாக, கட்டுரையில் தொழிலாளர்களை முதலாளிகளின் கோரிக்கைக்கு மட்டுமே ‘நிபந்தனையின்றி’
அணிதிரட்டுவதற்கு மாறாக ‘பருத்திக்கு நியாய விலை – தொழிலாளிக்கு உரிய கூலி’ என்கிற நிபந்தனையோடு
போராட அணிதிரட்டியிருக்க வேண்டும் என்று சொன்னதை வாசிக்காமல் -//
எப்படி அணிதிரட்ட வேண்டும் எப்படி போராட வேண்டும் என்பதெல்லாம் சொல்லாமல் இந்த போராட்டமே முதலாளியின் லாபத்துக்கானதுன்னு சொல்லும் போது முதலில் இந்த போராட்டம் வரவேற்கதக்கது என சொல்லாமல் “ஜவுளிதொழில் தொழில் நெருக்கடி முதலாளிக்கா தொழிலாளிக்கா”…///////
முதலாளியின் நலனுக்காக மட்டும் நடக்கும் போராட்டத்தை எப்படி ஆதரிக்க வேண்டும் என மா மேதை விளக்கினால் நலம்.
தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த கோரிக்கையும் இல்லாமல், நட்பு சக்தியான விவசாயிகளின் கோரிக்கையௌம் இல்லாமல், வேலை இழப்பு என்ற ஒரே காரணத்திற்காக (மிரட்டலுக்காக) முதலாளியின் பின்னால் போனால் அதை எப்படி வரவேற்பது என்று விளக்கினால் நன்று.
முதலாளிகள் தம் பின்னே தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்காக (ஐக்கியத்திற்காக) ஏதாவது தொழிலாளர் கோரிக்கைகள் (குறந்த பட்சமாவது) ஏற்கபட்டு ஐக்கியம் அமைக்கப்படவில்லை. மாறாக எனக்கு லாபம் குறைந்தால் உங்களுக்கு வேலை போகும் என்று மிரட்டி அணி திரட்டப்பட்டிருக்கின்றனர்.
இதை தான் மேதை தியாகு ‘லாபம் உயர்ந்தால் கூலி உயரும் என்கிறார்’.
ஒரே கட்டுரையில் கமெண்ட் போடும் போது எத்தனை பொய், புளுகு பித்தலாட்டம் செய்யமுடியுங்கிறதுல தியாகு ரெக்கார்டே படைச்சிட்டாரு… வாழ்க தியாகு, வளர்க உம் புகழ்! 🙂
///ஆகாத வேலை என சொன்னது இந்தியாவின் உள்நாட்டுக்கு மொத்த இயங்கு சக்தியையும் பயன்படுத்தனும் என சொல்லி ஏற்றுமதியே தேவைபடாத உள்நாட்டு சந்தை திறந்து கிடக்கிறது எனநீங்கள் சொன்னதுபோது சொன்னது
ஆகவே திரிக்காதீர்கள் //////////
ஸ்ஸ் யப்பா தியாகு! உங்கள் செம்மலரில் நீங்கள் கழிந்து வைத்ததில் இருந்து :
/உற்பத்தி, ஏற்றுமதி சார்ந்த பிரச்சனை என்பது முதலாளிகள் பிரச்சனை போலவும் தொழிலாளர்கள் விவசாயிகளோடு
கூட்டு சேரனும் என்றும் ஆகாத கோரிக்கையை முன்வைக்கிறார்கள் இங்கென்ன புரட்சியா நடந்து கொண்டு இருக்கிறது விவசாயிகளின் பிரச்சனைக்கு தொழிலாளர் களமிரங்க/
////உள்நாட்டு சந்தை இருக்கிறதாம் ஆனால் வாங்கும் சக்தி இல்லையாம்
வாங்கும் சக்தி இல்லை எனவும் சொல்கிறார் உள்நாட்டு சந்தைக்கு உற்பத்தி பண்ணுங்கள் என்றும் சொல்கிறார்/////
ஸ்ஸ் அப்பா மறுபடியுமா? தமிழ் புரியும் தானே?
/ஒரு சந்தையின் வலிமையும் அதில் பொருட்களின் தேவையும் அதற்கான உற்பத்தியை தீர்மாணிக்கும். இங்கே வாங்கவே சக்தியில்லாத ஒரு சந்தை உள்ளது – அந்த சந்தையின் பெருவாரியானவர்கள் விவசாயப் பொருளாதாரத்தைச் சார்ந்தவர்கள் – இப்படி உள்நாட்டு முதலாளி முறையான விலையைக்கொடுக்காமல்/
/முதலாளி வர்க்கத்தின் இந்த மோசடியை அம்பலப்படுத்தாமல், தொழிலாளி வர்க்கத்தை நிபந்தனையின்றி முதலாளிகளின் பின்னே அணிவகுத்து நிற்க வைக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்./
/தொழிலாளர்களை முதலாளிகளின் பின்னே போலி கம்யூனிஸ்டுகள் நிற்க வைக்கும் முன் – விவசாயிக்கு உரிய விலையையும், தொழிலாளிக்கு உரிய கூலியையும் நிபந்தனையாக வைத்திருக்கலாமே?/
இப்படி பலமுறை விளக்கிய பின்னும், ராஜா வனஜை நீங்கள் கட்டுரையை காப்பாற்ற பாடுபடுவதாக லூசுத்தனமாக உளருவதை என்னவென்பது?
////இதை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறாது ஆனால் நீங்களும் கம்யூனிஸ்டு கட்சின்னு சொல்லிட்டு தொழிலாளர் போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள்////////////
யப்பா உனக்கு என்ன தாம்ப்பா வேணும்?
ஆர்.எஸ்.எஸ் காரன் கட்டுரைய எடுத்து போட்டதுல இருந்து அவங்கள மாதிரியே பேசுறீங்களே?
“இந்த கட்டுரை தொழிலாளர் விரோத கட்டுரை என்று நான் நம்புகிறேன், அது அப்படி இல்லை என்று நீங்கள் நிறுவினாலும், அது என் நம்பிக்கை. அதனால் கட்டுரை தவறு” இப்படி ஒரு கமெண்ட் ஓரே ஒரு கமெண்ட் போட்டிருந்தா மேட்டர நாங்க எப்பவோ புரிஞ்சிருப்போம்ல… எதுக்கு இப்படி மாஞ்சு மாஞ்சு கமெண்ட் போட்டு லூசு பட்டம் எல்லாம் வாங்குறீங்க?
கட்டுரை பருத்தி ஏற்றுமதியை ஆதரிக்கிறது என்று சொல்லிப் பார்த்தார் – அதில் டவுசர் கியிந்து விட்டது.
கட்டுரை திருப்பூரின் தொழில் நசிவை வேண்டுகிறது என்று சொல்லிப் பார்த்தால் அதிலும் டவுசர் கியிந்து போனது.
இதையே மாற்றி மாற்றி சொல்லி செத்துச் செத்து விளையாடும் விளையாட்டை விளையாடி சோர்வாக்கி எஸ்கேப்பாகலாமா என்று பார்த்தார் அந்த உத்தியும் பல்லைக் காட்டிவிட்டது.
கட்டுரையை வாசித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இவரின் செத்த மூளைக்கு கெப்பாகிட்டி இல்லை என்று பளிச்சென்று நிரூபனம் ஆகிவிட்டது – அதைச் செய்ததும் அவரே தான்.!
இப்ப அண்ணன் என்னா சொல்றாருன்னா…
//தொழிலாளர் போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள் //
என்கிறார். இதையாவது நிரூபிப்பாரா என்று பார்க்கலாம். அதுக்கெல்லாம் வெட்கம் மானம் சூடு சொரனை ரோசம் வேண்டும்.
கட்டுரை போலி கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளர்களை நிபந்தனையின்றி முதலாளிகளின் பின்னே அணிதிரட்டியதைத் தான் விமர்சிக்கிறதேயன்றி – இந்தப் போராட்டத்தையே தவறு என்று சொல்லவில்லை. இதை நானும் முன்பே எனது பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டியும் இருக்கிறேன்.
ayyayyooo .. thiyaakuvoda tavusar kilinjiruchaa ?..erkanave avar koovanaththai kilicchittingka .. ippo tavusaraiyum kilichittingkalaaa …
thiyaaku uncle .. shame shame .. puppy shame …
//கட்டுரை போலி கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளர்களை நிபந்தனையின்றி முதலாளிகளின் பின்னே அணிதிரட்டியதைத் தான் விமர்சிக்கிறதேயன்றி – இந்தப் போராட்டத்தையே தவறு என்று சொல்லவில்லை. இதை நானும் முன்பே எனது பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டியும் இருக்கிறேன்//
தொழிலாளர்களின் கூலிக்கு என ஏற்படுத்த பட்டுள்ள ஒப்பந்தம் பற்றியும் பல்வேறு சலுகைகள் குறித்து சங்கங்களும் தொழிலாளர்களும் போட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்தும் சொல்லும் ஆவணம் உள்ளது அதை படித்து இருக்கிறீர்களா
ராஜாவனஜ்
//தொழிலாளர்களை முதலாளிகளின் பின்னே போலி கம்யூனிஸ்டுகள் நிற்க வைக்கும் முன் – விவசாயிக்கு உரிய விலையையும், தொழிலாளிக்கு உரிய கூலியையும் நிபந்தனையாக வைத்திருக்கலாமே?/
இப்படி பலமுறை விளக்கிய பின்னும், ராஜா வனஜை நீங்கள் கட்டுரையை காப்பாற்ற பாடுபடுவதாக லூசுத்தனமாக உளருவதை என்னவென்பது?//
அக்காகி ரொம்ப இண்டலிஜெண்டுவோ
தொழில் நலிவுக்கு காரணம் கட்டற்ற ஏற்றுமதி மற்றும் ஆன்லன் டிரேங் என்பது காணக்கிடைக்கையில் இந்த போராட்டத்தின் போது நியாயமான கூலி பிரச்சனையை ஒரு முன்நிபந்தனையாக்க தேவை இல்லை என்பது என் கருத்து
எப்போது நியயமான கூலியை நாம் முன்நிபந்தனை யாக்கலாம் என்றால்
1.ஒப்பந்தத்தில் உள்ள கூலியை மறுக்கும் போது
2.கூலியை குறைக்கும் போது அல்லது போனஸ் தராமல் இழுத்தடிக்கும் போது
3.மொத்தத்தில் ஐந்தாண்டுகாலம் வரை ஏற்படுத்தபட்ட ஒப்பந்தப்படி கூலி கொடுக்காமால் ஒப்பந்தம் காலவதியாகிப்போனால் நீங்கள் சொல்வதுபொபொல முதலில் ஒப்பந்தத்தை பற்றிய விச்யத்தை முந்நிபந்தனையாக கொண்டு போராடலாம்
அதற்கு நீங்களோ இந்த ராஜவனஜோ அல்லது புஜ தோழனோ ஒப்பந்தம் ஒன்று இருக்கிறதா இல்லையா என பார்த்து படித்து இருக்க வேண்டும் அது எப்போது காலாவதி ஆகிறது என்பதாவது தெரிந்து இருக்க வேண்டும்
ஒன்றும் தெரியாமல் இங்கவந்து குதிப்பதால் பயனில்லை
மேலும் முதலாளிகளை ஆதரித்ததால் இந்த் போராட்டத்தை நீங்கள் குறை சொல்கிறீர்கள் மற்றபடி இந்த போராட்டம் சரியானது என்றால்
கட்டுரையில் இந்த போராட்டத்தை வாழ்த்தி இருக்க வேண்டும்
அல்லது நீங்கள் சொல்வதுபோல முதலாளிகளின் வால்பிடிப்பது என்றால்
எந்த வகையில் நலிந்து சென்றுவிட்டது சங்கங்கள் என்ன கூலி கேட்கப்பட்டது எது தரவில்லை என்ன சலுகை கோரப்பட்டது எது தரப்படவில்லை இதெல்லாம் சொல்லப்பட்டு இருக்கனும்
சும்மா மொட்டபார்பான் குட்டையில் விழுந்த கதையா பேசகூடாது
முதலில் கூலி ஒப்பந்த ஆபணத்தை படித்தீர்களா எனும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் மைலார்டு
ராஜா,
மேலே இருக்கும் கமெண்டுகளில் நீங்கள் பதில் சொல்லாமல் ஓடிப்போன பல விசயங்கள் பல்லை இளிச்சுட்டு இருக்கு
எப்படி இந்த போராட்டம் முதலாளிகளின் வால்பிடிக்கும் போராட்டம் என நீங்கள்தான் விளக்க வேண்டும் .
//கட்டுரை பருத்தி ஏற்றுமதியை ஆதரிக்கிறது என்று சொல்லிப் பார்த்தார் – அதில் டவுசர் கியிந்து விட்டது.
கட்டுரை திருப்பூரின் தொழில் நசிவை வேண்டுகிறது என்று சொல்லிப் பார்த்தால் அதிலும் டவுசர் கியிந்து போனது.
இதையே மாற்றி மாற்றி சொல்லி செத்துச் செத்து விளையாடும் விளையாட்டை விளையாடி சோர்வாக்கி எஸ்கேப்பாகலாமா என்று பார்த்தார் அந்த உத்தியும் பல்லைக் காட்டிவிட்டது. //
இதில் நீங்கள் சொன்ன எல்லாமே ஒரே நேர்கோட்டில்தான் அமைந்துள்ளது
இதை பிரிச்சு பிரிச்சு சொல்வதால் என்ன பயன்
கூலி ஒப்பந்த ஆவணத்தைப் படிச்சிட்டு தான் வேறு பேச்சே பேச முடியும். ஏன்னா நம்ம சாரு நெம்ப ஸ்ட்ரிக்ட்டு!
திருப்பூரில் பீஸ் அடுக்கும் வேலை பார்ப்பவரில் இருந்து டெய்லர் வரைக்கும் – பேக்கிங் செக்சனில் இருந்து கங்காணி (அதான்.. சூப்பரு வைசரு) வரைக்கும் – கூலி என்பதை
முதலாளிகள் படு நியாயமாக பேசி ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள் என்கிறார் தியாகு. அந்த ஒப்பந்தப்படி நடக்காமல் போனால் கூலி உயர்வை தொழிலாளர்கள் கேட்கலாம்.
இல்லைன்னா ஏன் கேட்டு உயிரை வாங்குகிறீர்கள் என்கிறார்.
சரி தான்… திருப்பூர் முதலாளியை விட பக்காவான அக்ரிமெண்ட்டை SEZ முதலாளியும் தான் போடுகிறான். போட்ட ஒப்பந்தத்தை சரியாக மதித்து கூலியையும் கொடுக்கிறான்.
ஆனால்…. அது சரியானது தானா / முறையானது தானா என்பதில் தானே பிரச்சினை. ஆனால், இங்கே தியாகு தீர்ப்பை கொடுத்து விட்டார் – எல்லாம் சரியாத்தான் இருக்கு என்று.
சர்ர்ரீங் ஆப்பீசரு.. நீங்க சொன்னா சரி தான்.
//எப்படி இந்த போராட்டம் முதலாளிகளின் வால்பிடிக்கும் போராட்டம் என நீங்கள்தான் விளக்க வேண்டும் //
இப்படியெல்லாம் கேட்க வேண்டும் என்றால் குறைந்த பட்ச அறிவுநாணயம் கூட இல்லாத ஒரு சாக்டை பன்றியால் மட்டும் தான் முடியும் என்று நினைத்தேன். இப்போது
தியாகுவாலும் முடியும் என்று புரிந்து கொண்டேன். சரி.. அவரு சவுரியத்துக்கு முன்னே நாம் சொன்னதையே மீண்டும் ஒரு முறை Cntrl + C & Cntrl + V செய்து விடுகிறேன்.
இது அக்காகி சொன்னது –
//முதலாளியின் நலனுக்காக மட்டும் நடக்கும் போராட்டத்தை எப்படி ஆதரிக்க வேண்டும் என மா மேதை விளக்கினால் நலம்.
தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த கோரிக்கையும் இல்லாமல், நட்பு சக்தியான விவசாயிகளின் கோரிக்கையௌம் இல்லாமல், வேலை இழப்பு என்ற ஒரே காரணத்திற்காக (மிரட்டலுக்காக) முதலாளியின் பின்னால் போனால் அதை எப்படி வரவேற்பது என்று விளக்கினால் நன்று.
முதலாளிகள் தம் பின்னே தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்காக (ஐக்கியத்திற்காக) ஏதாவது தொழிலாளர் கோரிக்கைகள் (குறந்த பட்சமாவது) ஏற்கபட்டு ஐக்கியம் அமைக்கப்படவில்லை. மாறாக எனக்கு லாபம் குறைந்தால் உங்களுக்கு வேலை போகும் என்று மிரட்டி அணி திரட்டப்பட்டிருக்கின்றனர்.
இதை தான் மேதை தியாகு ‘லாபம் உயர்ந்தால் கூலி உயரும் என்கிறார்’. //
இது நான் சொன்னது –
//தொழிலாளர்களை முதலாளிகளின் கோரிக்கைக்கு மட்டுமே ‘நிபந்தனையின்றி’
அணிதிரட்டுவதற்கு மாறாக ‘பருத்திக்கு நியாய விலை – தொழிலாளிக்கு உரிய கூலி’ என்கிற நிபந்தனையோடு
போராட அணிதிரட்டியிருக்க வேண்டும் //
இது கட்டுரையில் இருந்து…
//தங்களுடைய நலனை மக்களின் நலனாகச் சித்தரிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு மக்கள் தேவைப்படுகிறார்கள். விசைத்தறி நெசவாளர்களையும், ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களையும் கொத்தடிமையாக்கி, 12 மணி நேரத்திற்கும் மேல் கடுமையாகச் சுரண்டும் இந்தக் காருண்யவான்கள் பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தாவிட்டால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையிழப்பும், தற்கொலைகளும் நிகழும் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். முதலாளி வர்க்கத்தின் இந்த மோசடியை அம்பலப்படுத்தாமல், தொழிலாளி வர்க்கத்தை நிபந்தனையின்றி முதலாளிகளின் பின்னே அணிவகுத்து நிற்க வைக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.
விளைவு, “ஆடை ஏற்றுமதிதான் உங்களுக்கு வேலையைக் கொடுக்கும்” என்று கூறும் ஜவுளி ஆலை முதலாளிகளின் மோசடியில் தொழிலாளர்களும், விசைத்தறி நெசவாளர்களும் மயங்குகிறார்கள். பருத்தி ஏற்றுமதிதான் உங்கள் பஞ்சத்தைப் போக்கும் என்று கூறும் அரசின் சூதுக்கு விவசாயிகள் பலியாகிறார்கள். இந்தப்புறம் வீசினால் தொழிலாளிகளையும், அந்தப்புறம் வீசினால் விவசாயிகளையும் வெட்டும் கத்திதான் புதிய தாராளவாதக் கொள்கை என்பதை மக்கள் உணரும் போது மட்டுமே இந்த மறுகாலனியாக்கத் திணை மயக்கங்கள் மறைந்தொழியும் //
இதெல்லாம் தியாகுவுக்குத் தெரியாமல் இருந்திருக்க நியாமில்லை. தெரியும்.. அதனால் தான் இப்போ வந்து “அதான் கூலி ஒப்பந்தம் இருக்கே… அதை நீங்க முதல்ல படிங்க”
என்று சொல்லி எஸ்கேப்பாக முடியுமா என்று பார்க்கிறார்.
முதலில் கட்டுரை பருத்தி ஏற்றுமதியை ஆதரித்து தொழில் நசிவு ஏற்பட வகைசெய்கிறது என்றார் – ஆதாரம் கேட்டதும் பம்மினார்.
அடுத்து “இது தொழிலாளர் போராட்டத்தை கொச்சை படுத்துகிறது” என்றார் – அதற்கும் ஆப்பு அடித்த பின் இப்போது “கூலி ஒப்பந்தம் படிச்சுப் பாத்தேள்னா பேசுங்கோ” என்கிறார்.
இப்போது தான் தியாகு ஒரு முதலாளியைப் போல் பேச ஆரம்பித்திருக்கிறார்.
நீலச் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் டும்
வாலு போயி கத்தி வந்தது டும் டும் டும் டும்
//நீலச் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் டும்
வாலு போயி கத்தி வந்தது டும் டும் டும் டும்//
யுவர் ஆனர்…. ஐ அப்ஜெக்சன் திஸ்ஸு அவுட்ரேஜியஸ் சங்கு(..ஸாரி ஸாங்கு)….
சிவப்பு சாயம் வெளுத்துப் போச்சி டிங் டிங் டிங் என்று தோழர் கலகம் சில காலத்திற்கு முன்பு இனிமையாக எழுதிய கவுஜையை நீலச்சாயம் என்று ராஜவனஜ் திரிப்பதை வன்மையாக கண்டுபிடிக்கிறேன் யுவர் ஆனர்….
//முதலில் கட்டுரை பருத்தி ஏற்றுமதியை ஆதரித்து தொழில் நசிவு ஏற்பட வகைசெய்கிறது என்றார் – ஆதாரம் கேட்டதும் பம்மினார்.
அடுத்து “இது தொழிலாளர் போராட்டத்தை கொச்சை படுத்துகிறது” என்றார் – அதற்கும் ஆப்பு அடித்த பின் இப்போது “கூலி ஒப்பந்தம் படிச்சுப் பாத்தேள்னா பேசுங்கோ” என்கிறார். //
கட்டுரை பருத்து ஏற்றுமதியை ஆதரிக்கிறது எவ்வாறு என்றும் இந்த போராட்டத்தை முதலாளிகளின் வால்பிடித்த போராட்டம் என சொன்னதை மறுத்து எவ்வாறு இது மக்கள் எழுச்சியான போராட்டம் என்றும் பல முறை சொல்லியாகிவிட்டது
இனிமேலும் வந்து அதுக்கு பம்மினார் இதுக்கு பம்மினார் என சொல்வது உங்கள் விதண்டாவாதத்தை காட்டுகிறது
கச்சா பொருள் ஏற்றுமதி என்பது ஏன் தவிர்க்கப்படவேண்டும் என சொல்லி அது எப்படி முதலாளிகளின் லாபத்துடன் மட்டும் சம்பந்தபட்டவிசயமல்ல அது தொழில் சம்பந்தபட்ட விசயம் என சொல்லி
அடுத்து நீங்கள் போன அனைத்து சந்துகளையும் (உள்நாட்டு தேவை , பருத்திக்கு ஆதாரவிலையை கிடைக்கவிடாமல் செய்தது )
அடைத்தபின் இப்போது வெறும் பம்பினார் தும்பினார்னு தேய்ந்த ரிக்கார்டை ஓட்டுகிறீர்கள்
சிலரை வெத்துவேட்டு என்பார்கள் வெறும் கரியை புஸ்சென்று சத்தத்தோடு உமிழும்
பிறகு அது புஸ்வானம் ஆகும்
உதாரணமாக மில்தொழிலாளர் பிரச்சனையை அதன் போராட்டத்தை பற்றி பேசும்போது அங்கே ஏற்படுத்தபட்ட ஒப்பந்தம் பற்றி ஒன்றுமே ட்தெரியாமல் பேச முடியுமா?
அப்படி பேசினால் அது கேலிகூத்தல்லவா
கூலி ஒப்பந்தம் கிடந்துட்டு போகுது
கூலி கொடுக்கிறானா என கம்பு சுத்தும்
ராஜாவனஜும் மற்றவர்களும்
திருப்பூரில் நடந்த போராட்டங்களின் வரலாறு கடுகளவும் தெரியாது இதிலிருந்து அம்பலமாகிறது
சுய அம்பலம் என்பது இதுதான்
தெரிஞ்சுக்க வேண்டியதில்லை என்பது திமிர்
தெரியாவிட்டால் தெரிந்துகொள்கிறேன் என்பதுதான் ஒரு கம்யூனிஸ்டு பேசும் பேச்சாக இருக்கும்
இதிலிருந்து இவர்கள் திமிர்தனம் மேலும் அம்பலமாகிறது
பார்ட் -1
இப்ப தியாகு கவுண்டமணி வேலை பார்க்கிறார். அதாவது ஒரு படத்தில் கவுண்டமணி வீட்டுக்குள்ளே அடிவாங்கிக் கொண்டே “ஆய் ஊய்” என்று சவுண்டு கொடுப்பாரே… அந்த வேலை!
அதனால், இது வரை நடந்ததை மேலோட்டமாக ஒரு சின்ன ரீ-கேப் பார்த்து விட்டு இப்போது அவர் புதுசா கூட்டி வந்திருக்கும் “கூலி ஒப்பந்தம்” பற்றியும் பார்த்து விடுவோம்.
தியாகு இந்தக் கட்டுரையை எதிர்த்து எழுதிய பதிவில் குறிப்பிட்ட வாசகம் இது – “விவசாயிகள் பஞ்சை ஏற்றுமதி செய்வதை தடுக்க கூடாதென்றும் எழுதப்பட்டு உள்ளது”
கட்டுரையில் குறிப்பிட்டுள்ள வாசகங்கள் இவை – 1) “கொள்முதல் விலையை உயர்த்த மறுக்கும் அரசு, பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காகத்தான் பஞ்சு ஏற்றுமதியை அனுமதித்திருப்பதைப் போல நடிக்கின்றது. ”
2) “பருத்தி ஏற்றுமதிதான் உங்கள் பஞ்சத்தைப் போக்கும் என்று கூறும் அரசின் சூதுக்கு விவசாயிகள் பலியாகிறார்கள்”
பருத்தி ஏற்றுமதியை ஆதரித்து கருத்து சொன்னது யார்..? அதற்கும் கட்டுரையிலேயே விடை இருக்கிறது – “குறைவாக இருக்கும் போது ஆதாயம் அடைந்த ஆலை அதிபர்கள்,
இப்போது விலை உயர்வால் விவசாயிகள் பயனடையும் போது அதைத் தடுப்பது நியாயமல்ல என்று விவசாயிகளின் நண்பனைப் போல முழங்குகிறார்கள், முன்பேர வர்த்தகம் நடத்தும்
சூதாடிகள்.”
கட்டுரை தெள்ளத் தெளிவாக பருத்தி ஏற்றுமதியால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லையென்பதையும், அதனால் முன்பேர வர்த்தக சூதாடிகள் தான் பயன் பெறுகிறார்கள் என்பதையும்
பதிவு செய்துள்ளது.
இது இப்படி இருக்க, நம் தியாகுவின் அறிவுக்கு இது எதுவுமே எட்டாததால் தொடர்ந்து தனது பின்னூட்டங்களில் ‘கட்டுரை பருத்தி ஏற்றுமதியை ஆதரிக்கிறது’ என்று தனது குருவி
மூளை புரிந்து கொண்டதற்கேற்ப வாதாடி வந்தார். நாம் அதை நெறுக்கிப் பிடித்து கேட்டதும்,
//பருத்திக்கான ஆதரவு விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளித்தொழில் முதலாளிகள்தான்// —> இப்படி கட்டுரையில் முதலாளிகளை விமர்சித்து எழுதியிருந்ததை
கட் பேஸ்ட் செய்து,
//இதற்குமேல தொழில்துறைக்கு விரோதமா யாராவது பேசமுடியுமா ஏற்றுமதி கூடாது என்கிறோம்// என்று சொல்கிறார்.
இதைத் தான் அவர் பருத்தி ஏற்றுமதிக்கு ஆதரவான பகுதியாக கட்டுரையில் இருந்து சுட்ட முடிந்த பகுதி. ஆனால், அந்த பத்தியில் பருத்தி ஏற்றுமதியைப் பற்றி பேச்சே இல்லை.
விவசாயிகள் பாதிக்கப்பட்டு நிற்கும் போது பருத்தியை இறக்குமதி செய்தீர்களே ஏன் என்று முதலாளிகளைத் தான் கேட்கிறது. முதலாளிகளை விமர்சித்ததையே மொத்த
தொழில்துறைக்கும் விரோதமானது புரிந்து கொண்டுள்ளார். இவர் மண்டையில் மூளை இருக்கிறதா இல்லை அது மாட்டுச் சாணியால் நிரப்பட்டுள்ளதா என்று சந்தேகமாக உள்ளது.
பருத்தி ஏற்றுமதியை கட்டுரை ஆதரித்தது என்று இவர் புலம்பியதற்கு இவரால் மொத்தமாக வைக்க முடிந்த ஆதரமே இவ்வளவு தான். அதுவும் எப்படி…? கட்டுரை முதலாளிகளை
விமர்சித்ததை தொழில்துறைக்கே விரோதமானதாக புரிந்து கொள்வது – இதைத் தான் இத்தனை ஆண்டுகளாக செல்வனில் இருந்து அதியமான் வரை செய்கிறார்கள். இப்படித் தான்
அவர்களும் புரிந்து கொண்டுள்ளார்கள்.
இனி அடுத்த பின்னூட்டத்தில் மற்றவை..
பார்ட் – 2
விவாதம் சந்தை பற்றித் திரும்பிய போது தியாகு உள்நாட்டு சந்தை பற்றிப் புரிந்து கொண்டிருந்த விதமும் அம்பலமானது. ஒரு மார்க்சியவாதியை விடுங்கள்… குறைந்தபட்சம் ஒரு
முதலாளித்துவவாதியின் அளவுக்குக் கூட சந்தையைப் பற்றிய அவர் புரிதல் இல்லை. இதோ தியாகு உதிர்த்த முத்து –
//நீங்கள் மொத்த இந்திய பொருளாதாரமும் திட்டமிட்ட பொருளாதாரமாக இல்லை முதலாளித்துவ பொருளாதாரமாக இருக்குன் எனக்கு நிரூபிக்க தேவை இல்லை ராசா அது எனக்கு முன்னமே தெரியும் வாங்கும் சக்தியை கூட்ட தொழிற்துறையினர் என்ன செய்யமுடியும் குறைந்தவிலைக்கு பனியனை விற்கமுடியும் எவ்ளோ முடியும் அவ்ளோ குறைந்தவிலைக்கு
நடைமுறையில் பனியன் கிடைக்கிறதே //
இந்திய பொருளாதாரம் முதலாளித்துவ பொருளாதாரமாக இருக்கிறது என்று நான் நிரூபிக்கப் பார்க்கிறேனாம்! அட ஆண்டவா….
தியாகு எப்படி சிந்திக்கிறார் பாருங்கள் – வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றால் பொருளை குறைந்த விலைக்கு விற்க வேண்டுமாம்…
அடுத்து உள்நாட்டுச் சந்தைத் தேவை பூர்த்தியாகி விட்டதற்கு தியாகு வைத்திருக்கும் அளவுகோல் என்ன தெரியுமா தோழர்களே…? அது வந்து… பனியன் இறக்குமதி ஆக வில்லையாம்..
அதனால் உள்நாட்டுத் தேவை நிறைவேறிவிட்டதாம். அதாவது, பற்றாக்குறை இருந்திருந்தால் வெளியில் இருந்து இறக்குமதி செய்திருப்பார்களே – நாங்கள் தான் இங்கேயே
தயாரித்து விட்டோ மே என்கிறார்.
இது தான் சந்தை பற்றிய தியாகுவின் புரிதல் என்பதால், தோழர்களே இதைப் பார்த்து எள்ளி நகையாடுவதோடு நாம் நிறுத்திக் கொள்ளலாம். மேற்கொண்டு எனக்கு சந்தை என்றால்
என்ன? போன்ற வகுப்புகள் எடுக்க விருப்பமில்லை.
பார்ட் – 3
முதல் இரண்டு அம்சத்திலும் தியாகுவின் யோக்கியதை பல்லைக் காட்டியதை அவர் உணர்ந்தாரோ இல்லையோ… இங்கே எல்லோருக்கும் நன்றாக நகைச்சுவையாக நேரம் போனது.
இப்படியே வந்து அடிக்கடி கோமாளித்தனம் பண்ணி எங்களைச் சிரிக்க வைய்யுங்கள் தியாகு. அடுத்து தியாகு சொன்னது “கட்டுரை தொழிலாளர்களின் போராட்டத்தைக்
கொச்சை படுத்தியது” என்று. அட… கட்டுரையில் எங்கே அப்படி எழுதப்பட்டுள்ளது என்று நான் 4ம் தேதி கேட்டதற்கு,
இப்போது 10ம் தேதி வந்து “தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம்” என்று பதில் அளிக்கிறார்.
கேட்ட கேள்வி என்ன… சொன்ன பதில் என்ன?
இது நான் கேட்டது –
////தொழிலாளர் போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள் //
என்கிறார். இதையாவது நிரூபிப்பாரா என்று பார்க்கலாம். அதுக்கெல்லாம் வெட்கம் மானம் சூடு சொரனை ரோசம் வேண்டும்.
கட்டுரை போலி கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளர்களை நிபந்தனையின்றி முதலாளிகளின் பின்னே அணிதிரட்டியதைத் தான் விமர்சிக்கிறதேயன்றி இந்தப் போராட்டத்தையே தவறு என்று சொல்லவில்லை. இதை நானும் முன்பே எனது பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டியும் இருக்கிறேன்.
//
மேலே உள்ள கேள்விக்கு தியாகு அளித்த பதிலைப் பாருங்கள் –
//எப்போது நியயமான கூலியை நாம் முன்நிபந்தனை யாக்கலாம் என்றால்
1.ஒப்பந்தத்தில் உள்ள கூலியை மறுக்கும் போது
2.கூலியை குறைக்கும் போது அல்லது போனஸ் தராமல் இழுத்தடிக்கும் போது
3.மொத்தத்தில் ஐந்தாண்டுகாலம் வரை ஏற்படுத்தபட்ட ஒப்பந்தப்படி கூலி கொடுக்காமால் ஒப்பந்தம் காலவதியாகிப்போனால் நீங்கள் சொல்வதுபொபொல முதலில் ஒப்பந்தத்தை பற்றிய விச்யத்தை முந்நிபந்தனையாக கொண்டு போராடலாம்
//
அட லூசே…. கட்டுரை தொழிலாளர் – விவசாய வர்க்க ஐக்கியத்தைக் கோருகிறதே அது உன் கண்ணில் இத்தனை நேரமுமா படவில்லை? அந்த ஐக்கியத்தை சாதிப்பதற்கு ஏதுவான
கோரிக்கைகள் ஏதுமின்றி தொழிலாளர்களை முதலாளிகள் பின்னே அணிதிரட்டி நிறுத்திய போலி கம்யூனிஸ்டுகளை விமர்சித்தால், இப்போ வந்து ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சு.
திருப்பூர் பனியன் கம்பேனிகளில் பெரும்பான்மையான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது கீழ் மட்ட அளவிலான வேலைகள் தான். அதுவும் தினப்படி 200 ரூபாயில் இருந்து
250 ரூபாய் கூலி என்று பேசி வாரக் கணக்கில் வாங்கிக் கொள்வார்கள். இதற்கு எந்தக் கம்பேனியும் ஒப்பந்தம் போடுவதுமில்லை – அந்த வேலைகள் நிரந்தரமானதும் இல்லை.
இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைகள் தான். இதிலேயே தியாகு இப்படி பச்சையாக புளுகுகிறார்.
அடுத்து திருப்பூர் பனியன் கம்பெனிகள் பெரும்பாலானவற்றில் தொழிற்சங்க உரிமைகள் இல்லை. எனக்குத் தெரிந்து எஸ்.வி மில்ஸ்(இப்போ பிரிமியர்ன்னு பேர் மாத்திட்டாங்கன்னு
நினைக்கிறேன் எஸ்.ஏ.பி பக்கத்துல இருக்கும்), எஸ்.பி அப்பாரல்ஸ் போன்ற ஒரு சில கம்பெனிகளில் பெயரளவிலான தொழிற்சங்கங்கள் உண்டு. 99% சதவீத கம்பெனிகளில்
தொழிற்சங்க உரிமை கிடையாது.
அட, தனது நட்பு வர்க்கமான விவசாயிகளுக்கு உரிய விலையைக் கொடுப்பதை வலியுறுத்துவதை விடுங்கள். தமது சொந்த வர்க்கக் கோரிக்கையைக் கூட முன் வைக்காமல் இப்படி
முதலாளிகள் பின்னே அணிதிரள்வதில் தொழிலாளி வர்க்கத்துக்கு என்ன தான் லாபம்? கீழ் மட்ட கூலி வேலைகளைச் செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு பணி
நிரந்தரம் கோரியிருக்கலாம், பணி பாதுகாப்பு கோரியிருக்கலாம், மிக முக்கியமாக தொழிற்சங்க உரிமை கோரியிருக்கலாம்… இதையெல்லாம் நிபந்தனைகளாக வைத்திருக்கலாம்…
இதே திருப்பூர் ஜீனா டெக்ஸில் நினைத்தால் கூலிக்கு ஆட்களைக் கூப்பிடுவதும் நினைத்தால் துரத்துவதுமாக எத்தனை முறை நிகழ்ந்துள்ளது? பாப்பீஸில் பீஸ் அடுக்கும் வேலையில்
இருக்கும் ஈரோட்டுப் பெண்களுக்கெல்லாம் கூலி ஒப்பந்தம் போட்டிருக்கிறானா பாப்பீஸ் முதலாளி?
திருப்பூரில் கூலி ஒப்பந்தம் இருக்கிறது – ஆனால் யாருக்கு? ஓரளவுக்கு மேனேஜ்மெண்ட்டில் இருப்பவர்கள், டிசைன் ஆர்டிஸ்டுகள், ஒருசில கம்பெனிகளில் மட்டும் டெய்லர்கள்…
மற்றபடி ஆகப் பெரும்பான்மையான கீழ்நிலைத் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தமும் இல்லை பணிப் பாதுகாப்பும் பணி நிரந்தரமும் இல்லை.
ஒரு வர்க்க கண்ணோட்டம் இல்லாத போராட்டத்தை – முதலாளிகளின் லாப நலனுக்கான போராட்டத்தை – குறைந்தபட்ச நிபந்தனைகளோடு ஆதரிக்கலாமே என்று கேட்டதை
மொத்த போராட்டத்தையும் கொச்சை படுத்துவதாக புரிந்து கொள்ளும் அளவுக்குத் தான் தியாகுவின் மூளை வேலை செய்கிறது.
தொடரும்….
______________
//ஒரு வர்க்க கண்ணோட்டம் இல்லாத போராட்டத்தை – முதலாளிகளின் லாப நலனுக்கான போராட்டத்தை – குறைந்தபட்ச நிபந்தனைகளோடு ஆதரிக்கலாமே என்று கேட்டதை
மொத்த போராட்டத்தையும் கொச்சை படுத்துவதாக புரிந்து கொள்ளும் அளவுக்குத் தான் தியாகுவின் மூளை வேலை செய்கிறது.
தொடரும்….//
ராஜா முதலில் திருப்பூரில் இருக்கும் உங்கள் தோழர்களிடம் நானே கொடுத்துள்ள ஒப்பந்த நகலை வாங்கி படிக்கவும்
நடந்த போராட்டங்களின் விபரங்களை கேட்டறியவும்
திருப்பூரின் கூலி உயர்வு போராட்டம் என்பது மிக சாதாரணமாக நடந்துவிடவில்லை அவ்வளவு எளிதில் கூலியும் பெற்றுவிடவில்லை அதற்கென ஒரு வரலாறு உள்ளது அந்த வரலாறு இரத்தம் சிந்திய தோழர்களின் வரலாறு
வேலை முடிந்து செல்லும் போது அடித்து கொல்லப்பட்ட தோழர் பழனிச்சாமி முதல்
போராட்டம் செய்யும்போது முதலாளிகளால்
அடித்து நொருக்கப்பட்ட எத்தனையோ தொழிலாளர்களின் இரத்தத்தால் வாங்கப்பட்டதுதான் இந்த கூலி
இன்றுவரை ஒரு சங்கம் கூட கட்டமுடியாத மக இக இங்கே தொழிலாளர்களுக்கு சிறு கல்லை கூட தூக்கி போடவில்லை என்பதோடு அவர்களது போராட்டத்தை முதலாளிகளின் வால்பிடிக்கும் போராட்டம் என்கிறது
சரி என்னதரவுகள் அடிப்படையில் சொல்கிறார்கள் என்றால் அதெல்லாம் படிக்க தேவை இல்லை என உளருகிறார்கள்
ஒரு தொழிலை புரிந்துகொள்ள அதன் போராட்டங்கள் எட்டபட்டுள்ள இலட்சினைகள் இன்னும் கிடைக்காத
நிரைவேறாக கோரிக்கைகள் என பலதும் இருக்கிறது அதை படித்துகூட பார்க்காமல் இங்கே வந்து கம்புசுத்தும் இவர்களை மொண்ணை மார்க்சியர்கள் என்பதில் தவறில்லை
//திருப்பூரில் கூலி ஒப்பந்தம் இருக்கிறது – ஆனால் யாருக்கு? ஓரளவுக்கு மேனேஜ்மெண்ட்டில் இருப்பவர்கள், டிசைன் ஆர்டிஸ்டுகள், ஒருசில கம்பெனிகளில் மட்டும் டெய்லர்கள்…
மற்றபடி ஆகப் பெரும்பான்மையான கீழ்நிலைத் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தமும் இல்லை பணிப் பாதுகாப்பும் பணி நிரந்தரமும் இல்லை. //
ஒரு ஒப்பந்தத்தை படிக்காமல் பேசும் உன்னைபோல லூசிடமா நான் விவாட்தித்தேன் வெக்கம் வெக்கம்
அடுத்து இவர்களுக்கு திருப்பூரில் தயாரிக்கப்படும் பனியன் வகைகள் அதன் மீதான நுகர்வு எந்த வகைப்பட்டவை எனப்தே தெரியவில்லை என அவர்கள் உள்நாட்டு சந்தைக்கு மொத்த உற்பத்தியையும் திருப்பி விடுங்கள் என சொல்லும்போது தெரிந்துவிட்டது
உள்நாட்டின் நுகர்வு என்பது உள்ளாடைகள் மட்டுமே வெளிநாட்டினர் நுகர்வு என்பது பனியனின் அனைத்து வகைகளுமே எனவும் ஒவ்வொரு சீசனுக்கும் தகுந்தாற்போல ஆடைகள் அணியும் மேற்கத்தியர்கள் தேர்ந்தெடுப்பது எல்லா சீசனுக்கும் வகைவகையாகும் பனியன் வகைகளை என்பதை உணராமல்
அவர்களின் தட்பவெட்ப கலாசார நுகர்வுதான் இந்த உற்பத்தியை தீர்மானித்து ஏற்றுமதியை தீர்மானித்தது
உள்நாட்டின் தேவைக்கு உற்பத்தி நடக்கிறது
ஆனால் ஒரே விதமான நுகர்வு என்பதாலும்
அதிகம் தேவை இல்லை என்பதாலும் இந்த உற்பத்தி ஒப்பீட்டள்வில் நாற்பது சதவீதம் உள்ளது
இதை கணக்கில் எடுக்காமல் லாபத்துக்காக ஏற்றுமதி செய்கிறார்கள் எனவே இப்போது கச்சாபொருள் ஏற்றுமதியும் லாபத்துக்காகவே எதிர்கிறார்கள் என உளறி கொட்டுகிறார்கள் .
உள்நாட்டு உற்பத்தியில் லாபமில்லை என்றால் மொத்தமா உற்பத்தியே நடக்காது
மேலும் உள்நாட்டு உற்பத்தியும் லாபத்துக்கானதே அதற்கும் பருத்தி போன்ற கச்சா பொருள் என்பது ஏற்றுமதியானால்
ஊக சந்தையில் விலை ஏறினால் ஒரு மயிரும் பிடுங்க முடியாது
அடுத்து கச்சா பொருள் ஏற்றுமதி என்பது லாபத்தை மட்டும் பாதிக்கிற விசயம் என்ற விசயம் இவர்களின் மூளை காலியானதை காட்டுவதுடன் தொழிலை பற்றிய இவர்களின் புரிதல் அம்பலமாகிறது
மேலும் வர்க்கசார்பு இதெல்லாம் பேசும்முன் நன்றாக தொழில் சார்ந்த விசயங்களை நன்கு ஊன்றி கவனிக்க தவறுவதாலும்
நாம் சொன்னதே சரி என வாதிடுவதாலும்
அடுத்தவனை முட்டாள் என நிரூபிக்க வாதிடுவதாலும் இவர்கள் மூடர்களாகவே இருக்கிறார்கள்
மேலும் மேலும் சொன்னதையே பார்ட் 1 2 என வரிசை படுத்தி சொன்னால் மட்டும்
ஒன்றும் புதிதாக ராஜாவனஜ் சொல்லப்போவதில்லை மேலும் இப்படி அடிக்கடி அம்பலப்பட்டு போவதால் இவர்களை பற்றி வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்
எங்களை வாசகர்கள் புரிந்து கொள்வது இருக்கட்டும், உம்மை புரிந்து கொள்ள இதற்கு பதிலளியுங்கள்..
தொழிலாளிகள்-விவசாயிகள் கூட்டணியை நீங்கள் ஆகாதவேலை என்று சொன்னதை அம்பலப்படுத்தியதற்கு…
///ஆகாத வேலை என சொன்னது இந்தியாவின் உள்நாட்டுக்கு மொத்த இயங்கு சக்தியையும் பயன்படுத்தனும் என சொல்லி ஏற்றுமதியே தேவைபடாத உள்நாட்டு சந்தை திறந்து கிடக்கிறது எனநீங்கள் சொன்னதுபோது சொன்னது
ஆகவே திரிக்காதீர்கள் /// என்று சொன்னீர்கள்…
ஆதாரமாக…
ஸ்ஸ் யப்பா தியாகு! உங்கள் செம்மலரில் நீங்கள் கழிந்து வைத்ததில் இருந்து :
/உற்பத்தி, ஏற்றுமதி சார்ந்த பிரச்சனை என்பது முதலாளிகள் பிரச்சனை போலவும் தொழிலாளர்கள் விவசாயிகளோடு
கூட்டு சேரனும் என்றும் ஆகாத கோரிக்கையை முன்வைக்கிறார்கள் இங்கென்ன புரட்சியா நடந்து கொண்டு இருக்கிறது விவசாயிகளின் பிரச்சனைக்கு தொழிலாளர் களமிரங்க////
இதை எடுத்து போட்ட பின் இதை பற்றி பேசாமல், எஸ்கேப் ஆவது யாரு தியாகு சார்???
ஒரே கட்டுரையில் கமெண்ட் போடும் போது எத்தனை பொய், புளுகு பித்தலாட்டம் செய்யமுடியுங்கிறதுல தியாகு ரெக்கார்டே படைச்சிட்டாரு… வாழ்க தியாகு, வளர்க உம் புகழ்!
இதற்கு பதில் சொல்லுங்கள்,
1) தொழிலாளிகள்-விவசாயிகள் கூட்டணி, சரியானதா? ஆகாத வேலையா?
2) (copy & paste): லாபம் அதிகம் வந்தால்தான் கூலி உயரும் என்ற உண்மையை கண்டுபிடித்த மாமேதையே…
///லாபம் என்பது கூலி கொடுக்கபடாத உழைப்புதான் என்கிறார் மார்க்ஸ்////
அதிருக்கட்டும் லாபம் அதிகம் வந்தால்தான் கூலி உயரும் என்று எந்த ஆசான் சொன்னார்?
///அதெப்படி ஏற்றுமதியில் லாபம் கிடைக்கும் என கேட்டால்////
இதுக்கு நீங்க கொடுத்த விளக்கம் சத்தியமா எனக்கு புரியலீங்க… நான் உங்கள மாதிரி மேதாவி இல்லை பாருங்க!
சரி லாபத்தை அப்புறம் பாக்கலாம்! முதல்ல கூலி என்றால் என்ன? அதை புரியும் படி விளக்குங்களேன்.. (தயவு செய்து புளி போட்டு விளக்கிவிடாதீர்கள்)
*
லாபம் அதிகரித்தால், அதுவும் ஏற்றுமதியால் வரும் லாபத்தால் கூலி அதிகரிக்கிறது என்றால், இந்தியாவில் திருப்பூர் முதலாளிகள் மட்டுமா ஏற்றுமதி செய்கிறார்கள்?
தரகு முதலாளிகளும், ஹுண்டாய், நோக்கியா SEZ களும் ஏற்றுமதி தானே செய்கின்றன. ஏன் அந்நிறுவனங்களில் கூலி ஏறவில்லை? ஆகக்குறைவாக் இருக்கிறது? அவர்களுக்கு லாபம் இல்லையா? ஏன் அங்கு தொழிலாளர்களை 12 முதல் 14 மணி நேரம் கட்டாய வேலை வாங்குகின்றனர்?
///எட்டுமணிநேரத்துக்கு இருக்கும் கூலியின் இரண்டு மடங்கு வேலை வாங்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தரப்படுகிறது/////
இதை நீங்கள் நிறுபிக்க வேண்டும் தியாகு! அப்பட்டமாக புளுகக்கூடாது!
பெரும் நிறுவனங்களில் மட்டுமே அங்கும் நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டுமே இப்படி ஓவர் டைம் செய்தால் இரட்டை கூலி வழங்கப்படுகிறது.
இ.எஸ்.ஐ, பி.எஃப் ஐயே கொடுக்காத முதலாளிகள், நியாயமான கூலியே இப்படி OTக்கு இரட்டை கூலி கொடுக்கின்றனர் என்பதெல்லாம் புளுகு.
///உள்நாட்டின் தேவைக்கு உற்பத்தி நடக்கிறது ஆனால் ஒரே விதமான நுகர்வு என்பதாலும் அதிகம் தேவை இல்லை என்பதாலும் இந்த உற்பத்தி ஒப்பீட்டள்வில் நாற்பது சதவீதம் உள்ளது////
உள்நாட்டில் 80 கோடிப்பேருக்கும் மேற்பட்டோர் நாளென்றுக்கு ரூ.20 க்கும் குறைவாக சம்பாதிக்கிறார்களாம். அவர்களுக்கான தேவை பூர்த்தியாகிவிட்டதா?
80 கோடி பேரின் வாழ்நிலை இவ்வளவு கீழே இருப்பதற்கு திருப்பூர் முதலாளிகள் என்ன செய்ய முடியும் என்றீர்கள். அதற்கு (விவசாயிகளுக்கு குறைந்த விலை, அவர்கள் தற்கொலை அனைத்திற்க்கும்) அரசின் கொள்கைதான் காரணம் என்றீர்கள்…
எனது கேள்வி: ஆக, விவசாயம் படுத்ததற்கும், இங்கு கோடிக்கணக்கானோரின் வாழ்நிலை இவ்வளவு கீழே இருப்பதற்கும் அரசின் கொள்கை தான் காரணம்! அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை! ஆனால் அரசின் அதே கொள்கைகளால் நான் லாபமடைந்து கொள்வேன். எனக்கு லாபத்தில் குறை ஏற்படுமானால் மட்டும் போராடுவேன். அப்படிதானே?
அப்படி பட்ட போராட்டத்தை, தனது சுய நலனுக்காகவும் (கூலி, வேலை நிரந்தரம்) இல்லாமல், மற்றவர்களின் நலனுக்காகவும் (விவசாயிகளின் நலன், உள்நாட்டு சந்தை) இல்லாமல், லாபம் குறைந்தால் வேலை இழப்பீர்கள் (தியாகுவின் மொழியில்: லாபம் அதிகமானால் கூலி அதிகரிக்கும்) என்ற ஓரே மிரட்டலுக்காக முதலாளியின் பின் அணிதிரள்வது எப்படி சரி என்று மேதை தியாகு விளக்கவும்!
///அவர்களின் தட்பவெட்ப கலாசார நுகர்வுதான் இந்த உற்பத்தியை தீர்மானித்து ஏற்றுமதியை தீர்மானித்தது ///
சந்தை பற்றிய உங்க புரிதலை மெச்சுகேங்க தல… 🙂
சரி! அப்ப இங்குள்ள குறைந்த கூலி அதில் எந்த பங்கையும் வகிக்கவில்லையா?
ஏங்க தியாகுங், பாத்துங்…. இப்புடி ஏத்திவிட்டு ஏத்திவிட்டே உம்ம ஒடம்ப ரணகளப்படுத்திடறாங்க~
//எனது கேள்வி: ஆக, விவசாயம் படுத்ததற்கும், இங்கு கோடிக்கணக்கானோரின் வாழ்நிலை இவ்வளவு கீழே இருப்பதற்கும் அரசின் கொள்கை தான் காரணம்! அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை! ஆனால் அரசின் அதே கொள்கைகளால் நான் லாபமடைந்து கொள்வேன். எனக்கு லாபத்தில் குறை ஏற்படுமானால் மட்டும் போராடுவேன். அப்படிதானே?//
ஆகா அரசின் கொள்கை காரணமே இல்லை என்பதன் மூலம் நீங்கள் தனியார் மயம் தாராளமயம் என்ற மன்மோகன் சிங்கின் கொள்கைக்கு சாமரம் வீசுகிறீரா?
இந்த கொள்கையால் நான் லாபமடைவேன் என்றும் அதே கொள்கை எனக்கு பயன் அளிக்காத போது எதிர்ப்பேன் என்றும் சொல்லவில்லை
கச்சா பொருள் ஏற்றுமதி என்பது வெறும் லாபம் சம்பந்தபட்ட விசயம் என நீங்கள் சொல்லி மேலும் கச்சா பொருள் ஏற்றுமதி எதிப்பதே லாபம் குறையும் என்ற ஒரே காரணம் என சொல்வதால் தொழில் என்பது லாபம் சம்பந்த பட்ட விசயம் அல்ல
கச்சா பொருள் என்பது பொதுவான ஒரு கமாடிட்டி அல்ல என விளக்க வேண்டியதானது
அடுத்து ஏற்றுமதியை எதிர்க்க துப்பில்லாமல் அந்த ஏற்றுமதி கொள்கை ஒன்றும் பெரியபாதிப்பை ஏற்படுத்தாது என்று நீங்கள் சப்பை கட்டு கட்டி இந்த போராட்டத்தை வெறும் முதலாளி நலன் சார்ந்ததுன்னு சொல்லி மூத்திர சந்துக்குள் போய் நிற்கிறீர்கள்
இப்படித்தான் அம்பலப்பட்டு போகிறீகள்
உங்கள் பாசையில் :
இதே கொள்கையால் விவசாயீ லாபமடையலாம் ஆனால் தொழிலாளி லாபமடைய கூடாது அல்லது முடியாது என்பதாகவே செல்கிறது அதுக்குத்தான் நீங்கள் சொல்கிறீர்கள்
லாபம் வேறு விலை வேறென்று
அதே சமயம் பருத்திக்கு கிடைக்கும் ஆதாரவிலையில் மட்டும் மெளனம் சாதிக்கிறீர்கள் எப்படி
ஏற்றுமதியில் கிடைக்கும் விலை மட்டும் கூலியை உசத்தாது
ஆனால் பருத்திக்கு கிடைக்கும் விலை கூலியை விவசாயிக்கு உசத்தும் என சுயமுரண்பாட்டில் விழுந்து விட்டீகள்
ஓக்கே ஓக்கே வாழ்க போலி கம்யூனிசம்
///ஆகா அரசின் கொள்கை காரணமே இல்லை என்பதன் மூலம் நீங்கள் தனியார் மயம் தாராளமயம் என்ற மன்மோகன் சிங்கின் கொள்கைக்கு சாமரம் வீசுகிறீரா?///
இதை நான் எப்போது சொன்னேன்?
திரும்ப திரும்ப பொய், பித்தலாட்டம்!!! இது தான் உங்கள் விவாத முறையா?
///விலையை விட்டு விட்டு கூலியையும் லாபத்தையும் பேசசொல்லும் மேதைகளுக்கு நான் சொல்வது எப்படி புரியும்///
ஹ ஹ ஹ….
கூலி, விலை லாபம் – என்ற மார்க்ஸின் மாபெரும் படைப்பை அசிங்கப்படுத்தாதீர்கள் தியாகு!
///விலை உயர்ந்தாலும் உயராவிட்டாலு கூலியை உயர்த்தி மட்டும் கேட்கலாம் ///
ஆக, விலை உயர்ந்தால் மட்டும் கூலிக்கு போராடவேண்டும், விலை உயராத போது விலைக்காக போராட வேண்டும். சரி தானே தியாகு??
உள்நாட்டில் விலை (சந்தை) இல்லையென்பதால் ஏற்றுமதி செய்கிறார்கள்… சரி, ஏன் உள்நாட்டில் விலை (சந்தை) இல்லை என்பதை பற்றி கவலை படமாட்டோம். அதாவது குறைவான கூலியும், விவசாயிகளுக்கு குறைவான விலையும் பற்றி கவலைப்பட மாட்டோம்.
கேட்டால் அவன் நூறு ஜட்டி போடுறான், நம்மாளு ஒன்னை தான் கிழியற வரை போடுறான் என்கிறீர்கள், இதை தீர்மானிப்பது பொருளாதாரம் இல்லையா? இங்குள்ள குறைந்த கூலி அங்கு குறைவான விலைக்கு (அ) அதிக லாபத்திற்க்கு வழி செய்யவில்லையா?
///லாபம் உயர்ந்தால் கூலி உயரும்///
///முதலாளிகளில் போட்டியினால் கூலி உயரும்///
இதை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே?? உங்கள் மார்க்ஸிய அறிவை பார்த்து மன்மோகன் சிங்கிற்கே மாரடைப்பு வந்துவிடும்!
///ஒரே கட்டுரையில் கமெண்ட் போடும் போது எத்தனை பொய், புளுகு பித்தலாட்டம்///
இதுக்கும் பதில் சொல்லுங்க தியாகு…
முதல்ல ஒன்னை சொல்ல வேண்டியது, அப்புறமா நான் அப்படி சொல்லவே இல்லைன்னு பல்டி அடிக்கிறது, அதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினால், நான் இப்படி சொன்னேன், இதுக்காக தான் சொன்னேன் என்று தத்து பித்து உளரவேண்டியது…
இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க ஆகாது டீ…..
ஏனுங்க தியாகு? இந்த கட்டுரைக்கு பிறகு வினவில் ஏகப்பட்ட கட்டுரைகள் வந்திருச்சே? ஒன்னையும் படிக்கலையா?
1) தொழிலாளிகள்-விவசாயிகள் கூட்டணி, சரியானதா? ஆகாத வேலையா?
விவசாயிகள் அல்லது அவர்களை சார்ந்த முதலாளிகள் கச்சா பொருளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தாத போது
அதன் அடிப்படையில் தொழில் நடக்க முடியாமல் வேலை இழக்கும் போது எப்படி கூட்டனி சாத்தியமாகும் என்பதை விளக்கவும்
அதாவது தொழில் போகக்கூடிய விசயத்தை கண்டுகொள்ளாமல் ஏற்றுமதிக்கு கொடிபிடிக்க எப்படி தொழிலாளரை திரட்ட முடியும் மேலும்
தொழிலாளர் நலனையும் விவசாயி நலனையும் ஒருகிணைந்து திரட்ட நீங்கள் சொல்வது போல ஏற்றுமதி என்பதே லாபம் சம்பந்த பட்ட விசயம் என
உளறினால் முடியாது இது ஆகாதவேலை
2) (copy & paste): லாபம் அதிகம் வந்தால்தான் கூலி உயரும் என்ற உண்மையை கண்டுபிடித்த மாமேதையே…
///லாபம் என்பது கூலி கொடுக்கபடாத உழைப்புதான் என்கிறார் மார்க்ஸ்////
அதிருக்கட்டும் லாபம் அதிகம் வந்தால்தான் கூலி உயரும் என்று எந்த ஆசான் சொன்னார்?//
விலை கிடைத்தாலும் கிடைக்கவிட்டாலும் கூலி உயர்த்தி வாங்கலாம் என எந்த ஆசான் சொன்னார் .
///அதெப்படி ஏற்றுமதியில் லாபம் கிடைக்கும் என கேட்டால்////
இதுக்கு நீங்க கொடுத்த விளக்கம் சத்தியமா எனக்கு புரியலீங்க… நான் உங்கள மாதிரி மேதாவி இல்லை பாருங்க!
//
சரி லாபத்தை அப்புறம் பாக்கலாம்! முதல்ல கூலி என்றால் என்ன? அதை புரியும் படி விளக்குங்களேன்.. (தயவு செய்து புளி போட்டு விளக்கிவிடாதீர்கள்)
//
விலையை விட்டு விட்டு கூலியையும் லாபத்தையும் பேசசொல்லும் மேதைகளுக்கு நான் சொல்வது எப்படி புரியும்
////நீங்கள் சொல்வது போல ஏற்றுமதி என்பதே லாபம் சம்பந்த பட்ட விசயம் என உளறினால்/////
லாப நோக்கிற்காக ஏற்றுமதி இல்லையென்றால் வேற என்னத்துக்கு ஏற்றுமதி செய்றாங்களாம்???
உங்க உளறலுக்கு ஒரு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு தியாகு!
அக்காகி உங்களுக்கு கண் நன்றாக தெரியுமா தெரிந்தால் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் போடாமல் சும்மா “சந்தைக்கு போகனும் ஆத்தா வையும் துட்டு கொடுன்னு” சொன்னதையே சொல்லிட்டு இருக்க மாட்டீங்க
மேலே உங்களுடன் நடந்த விவாதத்தில் நான் கடைசியாக் நிற்பது கூலி ஒப்பந்தம் என்ன சொல்லுது என்ன உடன்பாடு ஏற்படனும் என்பதை படித்தீர்களா என்ற என்னோட கேள்விக்கு பதில் சொல்லாம
மீண்டும் மீண்டும் வந்து கூலி விலை லாபம்னு ஜல்லி அடிப்பது ஏனோ
இந்த பதிவின் பின்னூட்டம் முழுவதிலும் ஒவ்வொரு தடவை கட்டுரை இதை சொல்கிறது அதை சொலிறது என்று புளுகியிருக்கிறீர்கள். ஒவ்வொருமுறை அம்பலப்படுத்தும் போதும் அதிலிருந்து நழுவி வேரொன்றை ஆரம்பித்து ஜல்லி அடித்துக்கொண்டு இருக்கீறீர்கள்….
உங்கள் விவாதம் இது தான்: என்ன கையப்புடிச்சு இழுத்தியா? இதுக்கு பதில் சொல்லு… சொல்லிட்டியா… சே என்ன கையப்புடிச்சு இழுத்தியா?
இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரத்துடன் புரிவது போல சுருக்கமாக எழுதவும்!
(பி.கு: அசாதி இல்லையின்னா கூட பரவாயில்லை தியாகு, குறைந்த பட்சம் உங்கள் மனைவி, குழந்தைகளையாவது உங்கள் விவாதத்தை படிக்க சொல்லி கருத்து கேளுங்களேன்! புண்ணியமா போகும்! )
அய்யா விலை உயர்ந்தால் தானாகவே கூலி உயரும் என நான் சொல்லவில்லை
அதற்கு கீழே யே போட்டு இருக்கிறேன்
முதலாளிகளில் போட்டியினால் கூலி உயரும் என்று மேலும் கூலி உயர்வுக்கான போராட்டங்களும் கூலியை உயர்த்தும் என உணருங்கள்
விலை அதிகம் கிடைத்த உடன் கூலியை உயர்த்திவிட முதலாளி முட்டாள் அல்ல
நெருக்கி போராடாமல் கூலியை வாங்க முடியாது
அடுத்து விலை உயர்ந்தாலும் உயராவிட்டாலு கூலியை உயர்த்தி மட்டும் கேட்கலாம் ஆனால் தரமுடியாத நிலையில் அவன் தொழிற்சாலைகளை மூடுவான் அதுதான் தற்போது திருப்பூரில் நடந்துவருகிறது
சரி கூலி உயர்வுக்கான போராட்டம் மற்றும் ஒப்பந்த நகல்களை படித்து விட்டீர்களா
அட, தியாகு இந்தப் படத்தை இன்னுமா ஓட்டிகினு இருக்கார்? அவர் கடைசியாக சந்தை பற்றி போட்டுள்ள ‘புண்ணூட்டங்களை’ இப்போ தான் பார்க்கிறேன்.
ஹப்பா…. கடந்த மூன்று நாட்களாக இருந்த நகைச்சுவை வறட்சியை ஐந்தே நிமிடத்தில் போக்கி விட்டார்.
தியாகு சார்வாள்… தயவு செய்து திரும்பவும் வந்து சந்தை / நுகர்வு / ஏற்றுமதி / இறக்குமதி / பொருளாதாரம் பற்றியெல்லாம் ஏதாவது ஒரு எழவைச் சொல்லி எங்களுக்கு கிச்சுக்கிச்சு மூட்டுங்க சார்வாள்..! ப்பிளீஸ்…
அக்காகி,
நம்ம சார் சமீபத்தில் அவர் பதிவுகளில் கழிஞ்சு வைத்துள்ள முத்துக்கள் சில – பார்க்கவும் / சிரிக்கவும் மட்டுமே – நீங்களும் சிரிங்க. யாம் பெற்ற இன்பம்….
// ஓப்பி அடிப்பது எப்படி //
இதான் தலைப்பு.. இதுல எல்லாமே டமாசு தான், இருந்தாலும் அந்தக் கடைசி பாயிண்டு இருக்கே….
//.நிர்வாகத்தை பற்றி கமெண்டு அடிப்பது நல்லதல்ல ஏதேனும் சண்டை வந்தால் நிர்வாத்தில் போய் உங்களுக்கு எதிரான சாட்சியாக நிற்பது நீங்கள் அடித்த கமெண்டே பதிலுக்கு உங்கள் எதிராலி நிர்வாகத்தை பற்றி அடித்த கமெண்டை நீங்கள் சொன்னால் எடுபடாது //
என்னா விசுவாசம்… என்னா விசுவாசம்???
//ஆடை பாதி ஆள் பாதி என்பது போல்
வேலை பாதி சீன் பாதி என நடை பயில வேண்டும் //
அடுத்து சம்பளத்தில் அட்வான்ஸ் கேட்ட ஒரு தொழிலாளிக்கு சார் செய்த அட்வைசு –
//அட்வான்ஸ் கொடுங்கள் வீட்டு வாடகை கொடுக்கனும் என கேட்ட கடைநிலை ஊழியருக்கு எனது அட்வைஸ்
நீங்கள் வாங்கிய பத்தாயிரம் ரூபாய் போனசில் ஏன் வாடகை கொடுக்கவில்லை பட்டாசு குவாட்டரை விட வாடகை முக்கியம் இல்லையா?//
இது கொஞ்சம் பழசு – http://thiagu1973.blogspot.com/2009/11/blog-post_07.html
http://thiagu1973.blogspot.com/2007/11/blog-post_9318.html
அந்தப் பழசுக்கு என்னோட புத்தம் புதிய கமெண்டு – “ங்கொய்யால நல்லவன் மாதிரியே சீன் போட்ருக்கான்யா…”
இப்பத்தான் தியாகு சரியான முடிவுக்கு வந்திருக்கார். இப்பத்தான் தலைப்பாகையைக் கழட்டியிருக்கார் – இதுல பாருங்க போன மாசமே கோவனம் அவுந்துகிச்சி.
Thiyagu, Please come back and entertain us.
யார் முற்றுப்புள்ளி வைப்பது என்பது, இன்னும் முடிவாகவில்லையோ?
இரு தரப்பும், வேறு திசையில் பயணித்தாலும், ஒரே வகை வாகனத்திலே தான் செல்லுகிறார்கள்!
வாய்மையே வெல்லும்!
பிடிவாதமே கொல்லும்!
//திருப்பூரில் கூலி ஒப்பந்தம் இருக்கிறது – ஆனால் யாருக்கு? ஓரளவுக்கு மேனேஜ்மெண்ட்டில் இருப்பவர்கள், டிசைன் ஆர்டிஸ்டுகள், ஒருசில கம்பெனிகளில் மட்டும் டெய்லர்கள்…
மற்றபடி ஆகப் பெரும்பான்மையான கீழ்நிலைத் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தமும் இல்லை பணிப் பாதுகாப்பும் பணி நிரந்தரமும் இல்லை. //
ஒப்பந்தம் என்பதை படிக்காமலேயே உளரும் ராஜாவனஜ் நீங்கள் சொல்வதை நிரூபியுங்கள்
அதான் கீழ்நிலை தொழிலாளிக்கு ஒப்பந்தம் இல்லை கொஞ்சமாவது நேர்மை உணர்ச்சி , வெக்கம் மானம் சூடு சொரணை இருந்தால்
ஹுக்கும் இவரு ஏற்கனவே சொன்னதையெல்லாம் நிரூபிச்சிட்டு வந்து நாங்க சொன்னதற்கு நிரூபனம் கேட்கிறமாதிரி பிலிம் போடுறாரு…
தியாகு,
திருப்பூரில் வேலை செய்யும் கடைநிலைக் கூலித் தொழிலாளி வரைக்கும் அந்தந்த நிறுவன முதலாளி ஒப்பந்தம் போட்டு தான் கூலி கொடுக்கிறாரா? பாக்கிங் செக்சனில் வேலை
பார்ப்பவருக்கும் கூலி ஒப்பந்தம் உள்ளதா? நான் அறிந்த வரையில் இல்லை.
இதை யார் வேண்டுமானாலும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். கீழ்மட்ட வேலைகளைக் காண்டிராக்டர்கள் கூட்டி வரும் தொழிலாளிகளை வைத்து தான் செய்து கொள்கிறார்கள்.
பிரச்சினை வர்க்க ஐக்கியம் பற்றியதும் தொழிலாளிகளின் சொந்த வர்க்க நலன் பற்றியதும்; அதைத் திருப்பி – ஒப்பந்தம் படிச்சியா என்று கேட்பதற்குப் பெயர் எஸ்கேப்பிசம்.
அட, விடுங்க தியாகு…. நீங்க சந்தை பற்றி, ஏற்றுமதிபற்றியெல்லாம் எதுனா சொல்லுங்களேன். தமாஷா பொழுது போகும்.
அப்புறம்… அட்வான்சு கேட்ட அந்த அப்பாவிக்கு வெறும் அட்வைசு மட்டும் தான் கொடுத்து அனுப்பினீங்களா இல்ல ‘பெரிய மனசு’ பண்ணி துட்டும் குடுத்தீங்களா? #டவுட்டு.
//திருப்பூரில் வேலை செய்யும் கடைநிலைக் கூலித் தொழிலாளி வரைக்கும் அந்தந்த நிறுவன முதலாளி ஒப்பந்தம் போட்டு தான் கூலி கொடுக்கிறாரா? பாக்கிங் செக்சனில் வேலை
பார்ப்பவருக்கும் கூலி ஒப்பந்தம் உள்ளதா? நான் அறிந்த வரையில் இல்லை.
இதை யார் வேண்டுமானாலும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். கீழ்மட்ட வேலைகளைக் காண்டிராக்டர்கள் கூட்டி வரும் தொழிலாளிகளை வைத்து தான் செய்து கொள்கிறார்கள்.//
ஹ ஹா மீசையில் மண் இல்லை என சொல்வது இதைத்தான் அதாவது ஒப்பந்தத்தை படிக்கவில்லை நீங்கள்
அதற்கு நேரடி பதிலும் இல்லை சுத்தி வளைச்சு பேசுறீங்க ஆகா இதல்லவோ எஸ்கேப்பு கிரேட் எஸ்கேப்பு
பஞ்சு இறக்குமதி ஆகலைன்னு சொன்னேன் பிறகு நீங்கள் சொன்னதும் நானும் விசாரிச்சு நான் சொன்னதில் இருந்த விபரபிழையை திருத்தி கொண்டேன்
அந்த நேர்மையில் கால்பங்கு கூட இல்லையே
(நேர்மை எருமை கருமை எல்லாம் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யத்தானோ )
ஓ மை காட்
//பஞ்சு இறக்குமதி ஆகலைன்னு சொன்னேன் பிறகு நீங்கள் சொன்னதும் நானும் விசாரிச்சு நான் சொன்னதில் இருந்த விபரபிழையை திருத்தி கொண்டேன் //
அட, இது எப்போ நடந்தது தியாகு சார்? எங்கியாவது கண்ணாடி முன்னெ நின்டு பேசினியளா?
கடைநிலை கூலித் தொழிலாளிகளுக்கு கம்பெனி நிர்வாகம் போட்டிருக்கும் கூலி ஒப்பந்தம் பற்றி சொன்னீங்க சரி. நான் தான் வெளியூரு… நீங்க திருப்பூர் தானே – ஏன் அப்படி
ஏதாவது கூலித் தொழிலாளிக்கு போட்டுக் குடுத்திருக்கும் ஒப்பந்தத்தை ஸ்கேன் செய்து வலையேற்றலாமே?
அடுத்து திருப்பூரில் கூலி வேலை லாபம் என்பதால் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு திருப்பூர் வந்திருப்பதாக சொன்னீர்களே.. அதற்கு ஏதாவது தரவு இருக்கா?
மாறாக, விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதால் விவசாயிகள் தொழில்நகரங்களுக்கு விரட்டப்படுகிறார்கள் என்பதற்கு தரவுகள் இருக்கு.. பி.சாய்நாத்தின் எத்தனையோ
கட்டுரைகள் இண்டியாடுகெதர் தளத்தில் இருக்கிறது. நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டிய ரெண்டாவது வேலை, பி.சாய்நாத்தின் கட்டுரை எதையாவது எடுத்து தர்க்கபூர்வமா
மறுத்து வாதாடனும்.
எங்க, ஆரம்பிங்க பார்க்கலாம்.
ஓக்கே… எல்லாரும் வாய் விட்டுச் சிரிக்க தயாராகுங்கள்…
///பஞ்சு இறக்குமதி ஆகலைன்னு சொன்னேன் பிறகு நீங்கள் சொன்னதும் நானும் விசாரிச்சு நான் சொன்னதில் இருந்த விபரபிழையை திருத்தி கொண்டேன்
அந்த நேர்மையில் கால்பங்கு கூட இல்லையே/////
அட ஆண்டவா! இந்த கருமாந்திரத்த கேட்கவா என்னய இன்னும் உயிரோட வெச்சிருக்க???
எப்ப சார் விபர பிழைய திருத்துனீங்க?
நீ அதெல்லாம் கேட்காத அக்காகி, சார் கனவுல கினவுல புலம்பியிருப்பாரா இருக்கும், சாரோட வீட்டுல விசாரிச்சு பாத்துக்கலாம்!
இதுக்கும் பதில் சொல்லுங்க தியாகு…
முதல்ல ஒன்னை சொல்ல வேண்டியது, அப்புறமா நான் அப்படி சொல்லவே இல்லைன்னு பல்டி அடிக்கிறது, அதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினால், நான் இப்படி சொன்னேன், இதுக்காக தான் சொன்னேன் என்று தத்து பித்து உளரவேண்டியது…
தொழிலாளிகள்-விவசாயிகள் கூட்டணியை நீங்கள் ஆகாதவேலை என்று சொன்னதை நாங்கள் அம்பலப்படுத்தியதற்கு…
///ஆகாத வேலை என சொன்னது இந்தியாவின் உள்நாட்டுக்கு மொத்த இயங்கு சக்தியையும் பயன்படுத்தனும் என சொல்லி ஏற்றுமதியே தேவைபடாத உள்நாட்டு சந்தை திறந்து கிடக்கிறது எனநீங்கள் சொன்னதுபோது சொன்னது ஆகவே திரிக்காதீர்கள் /// என்று சொன்னீர்கள்…
ஆதாரமாக…
ஸ்ஸ் யப்பா தியாகு! உங்கள் செம்மலரில் நீங்கள் கழிந்து வைத்ததில் இருந்து :
/உற்பத்தி, ஏற்றுமதி சார்ந்த பிரச்சனை என்பது முதலாளிகள் பிரச்சனை போலவும் தொழிலாளர்கள் விவசாயிகளோடு
கூட்டு சேரனும் என்றும் ஆகாத கோரிக்கையை முன்வைக்கிறார்கள் இங்கென்ன புரட்சியா நடந்து கொண்டு இருக்கிறது விவசாயிகளின் பிரச்சனைக்கு தொழிலாளர் களமிரங்க////
இதை எடுத்து போட்ட பின் இதை பற்றி பேசாமல், எஸ்கேப் ஆவது யாரு தியாகு சார்???
இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க ஆகாது…
ஓவரா கனவுல பினாத்திராதீங்க… வீட்டுல பிரச்சனையாயிரப்போகுது!
ஹ ஹா என்ன காமெடி கிங் ஆகிட்டீங்க ராஜாவனஜ்
என்னிடம் டாகுமெண்டு இருக்கு வலை யேற்றுகிறேன் அதற்கு முன்பு கடைநிலை ஊழியருக்கு கூலி ஒப்பந்தம் இல்லை என நீங்கள் சொன்னது எதன் அடிப்ப்டையில்
அதை சொல்லுங்கள்
//அப்புறம்… அட்வான்சு கேட்ட அந்த அப்பாவிக்கு வெறும் அட்வைசு மட்டும் தான் கொடுத்து அனுப்பினீங்களா இல்ல ‘பெரிய மனசு’ பண்ணி துட்டும் குடுத்தீங்களா? #டவுட்டு.//
பத்தாயிரம் போனஸில் குடித்துவிட்டு திரும்ப அட்வான்ஸ் கேட்பவனுக்கு பணம் மட்டும் கொடுத்தால் பத்தாது அறிவுரை முதலில் கொடுக்கனும் அதான் நிர்வாகம்
மிஸ்டர் அக்காகி கமெண்டு எண் 91 ஐ நீங்கள் பார்க்கவே இல்லையா
) தொழிலாளிகள்-விவசாயிகள் கூட்டணி, சரியானதா? ஆகாத வேலையா?
//விவசாயிகள் அல்லது அவர்களை சார்ந்த முதலாளிகள் கச்சா பொருளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தாத போது
அதன் அடிப்படையில் தொழில் நடக்க முடியாமல் வேலை இழக்கும் போது எப்படி கூட்டனி சாத்தியமாகும் என்பதை விளக்கவும்
அதாவது தொழில் போகக்கூடிய விசயத்தை கண்டுகொள்ளாமல் ஏற்றுமதிக்கு கொடிபிடிக்க எப்படி தொழிலாளரை திரட்ட முடியும் மேலும்
தொழிலாளர் நலனையும் விவசாயி நலனையும் ஒருகிணைந்து திரட்ட நீங்கள் சொல்வது போல ஏற்றுமதி என்பதே லாபம் சம்பந்த பட்ட விசயம் என
உளறினால் முடியாது இது ஆகாதவேலை//
////விவசாயிகள் அல்லது அவர்களை சார்ந்த முதலாளிகள் கச்சா பொருளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தாத போது////////////
யோவ் டுபாக்கூரு….
விவசாயிகள் ஏற்றுமதி சொய்றாங்களா? இதென்ன புது கதையா இருக்கு???
யாரையா விவசாயிகள் சார்ந்த முதலாளிகள் ன்னு சொல்றே?
ஊக வர்தக சூதாடிகளையா அப்படி சொல்றே??
உன் அறிவும் புரிதலும்…. என்ன கிரகமோ???
இந்த கட்டுரை விவசாயிகளுடைய நலனையும் – தொழிலாளர் நலனையும் இணைத்த கோரிக்கையை முன் வைத்து முதலாளிகளின் பின்னால் அணிதிரளலாம் என்று தானே சொல்கிறது???
முதலாளிகளின் பின்னால் அணிதிரளவேஎ கூடாது என்று கூறவில்லையே?
இப்ப பாரு.. பழைய படி முருங்கை மரத்துல ஏறுன கதையா… சுத்தி சுத்தி வர்ரே….
தோழர் அக்காகி,
கூல்… கூல்…. இது வாய் விட்டு எள்ளி நகையாட வேண்டிய நேரம். யொவ் டென்சன்? இதப் பாத்தீங்களா மொதலாளி
நிர்வாகத்தப் பத்தி என்னா சொல்றாப்லனு –
//அறிவுரை முதலில் கொடுக்கனும் அதான் நிர்வாகம் //
Mr.Thiyagu a.k.a Mothalaaleee….
உங்க நிர்வாகத் திறமையே திறமைங்க… உங்க அறிவுரைய வாங்கினு போன அந்த பாவப்பட்ட தொழிலாளி அதையே
வாடகையாக் கொடுத்துட்டாராம்… என்னியக் கூப்பிட்டு சொன்னாரு…
அக்காகி, தியாகு நம்மை ஏமாற்றவே மாட்டார். பாருங்களேன், இன்னும் நம்மை நல்லா சிரிக்க வைக்கப் போறார்.
என்னா பெட்டு…?
பாவம் ராஜாவனஜ் எந்த சந்திலும் ஒழிய முடியாமல் இப்போது எனது டிப்ஸ் பதிவை தூக்கிட்டு வருகிறார்
அவர்மேல் எனக்கு பரிதாபம்தான் வருகிறது
“ஆமாம் ராசா ஏன் இன்னும் மலத்தை கிளறுவதை விடவில்லை # டவுட்டு டவுட்டேய் “
தப்பிக்காமல் பதில் சொல்லவும் ராஜாவனஜ்
//என்னிடம் டாகுமெண்டு இருக்கு வலை யேற்றுகிறேன் அதற்கு முன்பு கடைநிலை ஊழியருக்கு கூலி ஒப்பந்தம் இல்லை என நீங்கள் சொன்னது எதன் அடிப்ப்டையில்
அதை சொல்லுங்கள் //
//பஞ்சையும், நூலையும் ஏற்றுமதி செய்து விட்டால், துணியையும் ஆயத்த ஆடையையும் நாங்கள் எப்படி ஏற்றுமதி செய்ய முடியும் என்பதே இந்த ‘சுதேசிகளின்’ கவலை.//
இந்த கட்டுரை அதை சொல்லவில்லை இதை சொல்கிறது இதை சொல்லவில்லை அதை சொல்கிறது என அக்காகி புரண்டு புரண்டு பார்கிறார்
பஞ்சையும் நூலையும் ஏற்றுமதி செய்துவிட்டால் நாங்கள் எப்படி ஏற்றுமதி செய்வது என்ற கேள்வியே நக்கலுக்கு உள்ளாகிறது மேற்கண்ட வரிகளில்
அதுதான் உண்மை “ பஞ்சை ஏற்றுமதி செய்துவிட்டால் நாங்கள் எப்படி தொழில் செய்வது என்ற கேள்விக்கு நேரடியான பதில் என்னவென்றால் மீண்டும் கட்டுரையை சுற்றிவருவார்கள்
ஆனால் ஒரு இடத்தில் கூட போராட்டம் சரியானதென்று சொல்லப்படவே இல்லை மாறாக
//தங்களுடைய நலனை மக்களின் நலனாகச் சித்தரிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு மக்கள் தேவைப்படுகிறார்கள். விசைத்தறி நெசவாளர்களையும், ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களையும் கொத்தடிமையாக்கி, 12 மணி நேரத்திற்கும் மேல் கடுமையாகச் சுரண்டும் இந்தக் காருண்யவான்கள் பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தாவிட்டால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலையிழப்பும், தற்கொலைகளும் நிகழும் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். //
இந்த வரி சொல்வது இந்த போராட்டமே அவர்கள் சித்தரிப்பதன் விளைவுதான் என்கிறது
ஆனால் அக்காகி வந்து என்ன சொல்கிறார்
//இந்த கட்டுரை விவசாயிகளுடைய நலனையும் – தொழிலாளர் நலனையும் இணைத்த கோரிக்கையை முன் வைத்து முதலாளிகளின் பின்னால் அணிதிரளலாம் என்று தானே சொல்கிறது???//
????????????//
பெரிய கொஸ்டின் மார்க்
பஞ்சையும் நூலையும் ஏற்றுமதி செய்வது
தொழிலை நசிய செய்துவிடும் எனும் வாதம் நக்கலடிக்கப்படுகிறது அல்லது தொடர்ச்சியான விவாதத்தில் லாபம் வேறு கூலிவேறு என பிச்சி எறியப்பட்டது அக்காகியின் விவாதத்தில் ஆனால் கடைசியில் இல்லையே நியயமான கோரிக்கை அடிப்படையில் ஆதரிக்கலாம் எனத்தானே சொல்கிறதுன்னு சுருதி இறங்கினார் அக்காகி
இதை கண்ணுள்ளவர்கள் காண்பார்கள்
ஆமென்
Thiyagu Ungalukku
Unmaiyileye Konjam
Kooda Valikkalaiyaa ?
-illai Valikkaatha Maathiri Nadikkireengalaa ?
_Thaniyaa een Mallukkattureenga Thunaikku ‘avara’ Kooppidungalen Avaroodaiyum Konjam Pesalaam!
பாவம் ராசாவனசும் , அக்காகியும் முக்குறாங்க போய் அசுரன் உட்பட அனைத்து சகாக்களையும் வரசொல்லுங்க அமைப்பு தோழர்
எனக்கு “மான ரோசமில்லையா “ என்றுதான் வழக்கமா கேட்பீங்க விவாதிக்க உங்க கிட்ட சரகில்லையா ?
ஓ சாரி மண்டையில மூளை இருந்தா தானே சரக்கு இருக்கும்
யாருக்குமே தெரியாம தவறைத் ‘திருத்திக்கிட்டாரு’ தியாகு அண்ணன்… அதுவும் எப்படி? கட்டுரையை அவர் எதிர்த்ததற்கு அவரால் மிக முக்கியமாக சொல்லப்பட்ட ஒரு காரணத்தை கபால்னு திருத்திக்கிட்டாராம்… அதைத் தான் நானும் மேலேர்ந்து தேடினு இருக்கேன் ஆப்டமாட்டேங்குது…
இப்ப என்ன சொல்றாருன்னா… “கூலி ஒப்பந்தம் பட்சியா இல்லையா?” என்பது தான் முக்கியப் பிரச்சினையாம்.
சரி… அதுக்கும் பதில் சொல்வேன்… ஆனால், அது தியாகுவுக்கு இல்லை. பொதுவான வாசகர்களுக்கு. ஏன்னா, இதை சொல்லி முடிச்ச பிறகு தியாகு கட்டுரையில் இருக்கும் புல்ஸ்டாப் / கமா போன்ற “தொழிலாளர் விரோத கருத்துக்கள்” வேறு எதையாவது கொண்டாருவாரு… பிக்காஸ் மக்களே, யூ நோ…. “அதுக்குப் பேரு தான் நிர்வாகமாமாம்”
ஓக்கேய்…
முதலில் ‘கட்டுரை பருத்து ஏற்றுமதியை ஆதரித்தது’ என்று சொல்லி அண்ணன் பல்பு வாங்கியது நேயர்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும். அடுத்ததாக அண்ணனே போய் ஒரு ப்யூஸ் போன இன்னொரு பல்பை எடுத்து வந்தார் – அது தான் ‘கட்டுரை தொழிலாளர் போராட்டத்தையே கொச்சைப் படுத்தி விட்டது’ என்பது.
அதற்கு நாம் கட்டுரையில் இருந்தே தொழிலாளர்களை எந்தக் கோரிக்கையும் இல்லாமல் நிபந்தனையற்று முதலாளிகள் பின்னே அணிதரட்டி நிற்க வைத்ததைதுள்ளதைத் தானே சொல்லப்பட்டுள்ளது என்று நிறுவினோம்..
உடனே அண்ணன், அதெப்படி தொழிலாளர்கள் கோரிக்கை வைப்பது? அதான் ஒழுங்கா சம்பளம் கொடுக்கறோம், போனஸ் கொடுக்கறோம் வேணும்னா சம்பள ஒப்பந்தத்தைப் பாருங்களேன்.. என்று ஆரம்பித்தார்.
சம்பள ஒப்பந்தத்தைப் பற்றியும் சொல்கிறேன், ஆனால் தொழிலாளர் கோரிக்கை என்றவுடன் அது சம்பளம், போனசு என்பதோடு மட்டும் நின்று விடக்கூடியதா? முதலில் தாமே ஒரு வர்க்கமாகத் திரளவும் அரசியல் உணர்வு பெறவும் உரிமைகளுக்கான கோரிக்கைக்குப் போராடவும் அடிப்படையான தொழிற்சங்க உரிமை தேவை – அடுத்து நீண்ட கால நோக்கில் பிற வர்க்கங்களோடான ஐக்கியம் தேவை – பணிப் பாதுகாப்பும், பணி நிரந்தரமும் தேவை – இதோடு சேர்த்து முறையான / நியாயமான கூலியும் தேவை.
இதையெல்லாம் கோரியிருக்கலாம் – கட்டுரையிலும் நிபந்தனையற்று அணி திரட்டியதைத் தான் கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனா, அண்ணன் மற்றக் கோரிக்கைகள் என்று நாம் சொன்னதை அப்படியே மறைத்து விட்டு “சம்பள ஒப்பந்தத்தில்” போய் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறார். சோமனூரில் ஒரு இருபத்தைந்தாண்டுகள் வாழ்ந்துள்ள அனுபவத்திலும், என்னைச் சுற்றி எத்தனையோ பவர் லூம்கள் நன்கு ஓடியதையும் வீழ்ந்து நசிந்ததையும் நேரில் கண்ட அனுபவத்திலும், இதே
திருப்பூரின் பனியன் கம்பெனிகளில் நான்கைந்தாண்டுகள் பணியாற்றிய அனுபவத்திலும் – எனக்குத் தெரிந்து கீழ்மட்ட தொழிலாளர்களுக்கு முறையான ஊதிய ஒப்பந்தங்கள் போடப்படுவதில்லை. “முறையான” என்பதை கவனிக்கவும்..!
தினக்கூலிகளுக்கும் வாரக்கூலிகளுக்கும் சம்பள ஒப்பந்தம் உண்டு என இவர் சொல்வதில் எந்தளவுக்கு உண்மை இருக்கும் என்பதை பொதுவான வாசகர்கள் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். இதே திருப்பூரில் ஏஜெண்டுகளால் வரண்ட தென்மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஒரு தொழிலாளிக்குரிய எந்த உரிமைகளும் மறுக்கப்பட்டு தான் திருப்பூரில் கடைநிலை கூலித் தொழிலாளிகளாக காலம் தள்ளி வந்தனர். இதோ, இப்போதும் ஒன்றும் நிலைமை மாறிவிட வில்லை – அன்று தென்மாவட்டத் தொழிலாளர்கள் என்றால் இன்று வட இந்திய தொழிலாளர்களை நிறைய காண முடிகிறது. இதில் முதலாளிகள் போடும் ஒப்பந்தமெல்லாம் எஜெண்டுகளோடு சரி – கீழ்மட்ட தொழிலாளர்களுக்கு இல்லை.
“சுமங்கலித் திட்டம்” என்று என்று சொன்னால் கோவை வாசர்களுக்குப் புரியும் – அதிலும் ஒப்பந்தம் இருக்கத் தான் செய்கிறது. இதையே கொஞ்சம் மேம்படுத்தி வேறு முறையில் தான் திருப்பூரில் அமுல்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதை என்னால் மெட்டீரியலாக நிரூபிக்க முடியும் – எனது சொந்த அங்காளி பங்காளிகளில் சிலரே எஜெண்டுகளாகவும் இருக்கிறார்கள் கடைநிலை கூலித் தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள். அடுத்த முறை நிச்சயமாக அதுபற்றி விசாரித்து ஒரு விரிவான ரிப்போர்ட் எழுத முயல்கிறேன்.
ஏன், இவர்களின் பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் போன்றவற்றை ஒரு கோரிக்கையாக முதலாளிகள் முன் வைத்திருக்கலாமே? கோரிக்கை என்றாலே தியாகுவுக்கு துட்டு தான் நினைவுக்கு வருகிறது – வர்க்க உரிமைகள் நினைவுக்கு வருவதில்லை – சரி, அதையாவது முறையான கூலி என்பது நினைவுக்கு வருதான்னு பார்த்தால், அலட்சியமாக “அதான்
ஒப்பந்தம் போட்டிருக்கோமே” என்று அலட்டல்…
பாவம் அட்வான்சு கேட்ட அந்த தொழிலாளி.
பொதுவான வாசகர்களே
ஆரம்பத்தில் இருந்தே இந்த ராஜவனசு உளறி கொட்டுகிறார்
1.கூலி ஒப்பந்தம் ஒன்று இருக்கு அதில் கடைநிலை ஊழியனுக்கு எதுவும் இல்லை என உளறினார் நெருக்கி புடித்ததும்
//சம்பள ஒப்பந்தத்தைப் பற்றியும் சொல்கிறேன், ஆனால் தொழிலாளர் கோரிக்கை என்றவுடன் அது சம்பளம், போனசு என்பதோடு மட்டும் நின்று விடக்கூடியதா? முதலில் தாமே ஒரு வர்க்கமாகத் திரளவும் அரசியல் உணர்வு பெறவும் உரிமைகளுக்கான கோரிக்கைக்குப் போராடவும் அடிப்படையான தொழிற்சங்க உரிமை தேவை – அடுத்து நீண்ட கால //
இன்னும் கடைநிலை ஊழியன் பத்தி அவர் சொன்ன தவறான கருத்தை திருத்தி கொள்ள்வில்லை ஏன்
அதான் ஈகோ அதான் திமிர்
அதை போக்க எத்தனை விவாதம் செய்தாலும் முடியாது அது தொழிலாளிக்காகத்தான் பேசுகிறோம் தான் முக்கியமல்ல என நினைக்கும் ஒரு கம்யூனிஸ்டால்தான் முடியும்
சரி ராசா வேற யாராவது இருந்தா கூட்டிட்டு வாங்க பேசுவோம் ஏன்னா உங்களுக்கு மேல்மாடி காலின்னு புரிஞ்சுடுத்து
//பாவம் அட்வான்சு கேட்ட அந்த தொழிலாளி.//
அடுத்து ராஜாவனசு இப்படித்தான் அம்பலமாகிறார்
அட்வான்ஸ் கேட்கும் போதெல்லாம் கொடுப்பது தொழிலாளர் நலனாம்
அட்வான்ஸ் கொடுக்கப்படவில்லை என்றால் அது முதலாளித்துவ ஆதரவாம்
ஹி ஹி
ராசா இந்திய தொழிலாளர் நல சட்டங்கள் அல்லது அகில உலக தொழிலாளர் நலக்குழு
அமைத்திருக்கும் விதிகள் என்ன சொல்லுதுன்னு போய் படிச்சுட்டு வாங்க