privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்உயிர்மைக்காரன் காடுகளை அழிக்கிறது தெரியுமாடே!

உயிர்மைக்காரன் காடுகளை அழிக்கிறது தெரியுமாடே!

-

நமக்கும் இந்த சிறுபத்திரிகைகாரவுகளுக்கும் எப்பவும் ஒத்துக்கிடாது பாத்துக்கிடுங்க! முன்னயாவது அப்பக்கைப்ப கொஞ்சமோ, நஞ்சமோ ஒருபாடு கிசுகிசு வெட்டுக இல்லாம வரும். ஊட்டி தளைய சிங்கம் மேட்டரு, குத்தாலத்துல அண்ணாச்சி விக்ரமாதித்யன் தண்ணியப் போட்டு பண்ணுண அலம்பல், ஜெயமோகன் யாரை அடிச்சாக, சாரு யாருகிட்ட அடிவாங்குனாகன்னு ஒரே ஜாலி ஜம்பர்தான். இவுகதான் சாகவரம் பெத்த இலக்கியம்னு எதை எதையோ சொல்லி பீலா விடுவாக. நம்மளக்க கேட்டா இவுகளோட கிசுகிசுதாதன் சாகாவரம் படைச்ச இலக்கயம்னு அந்த மகர நெடுங்குழைக்காதன் சத்தியமா சொல்லுவேன்.

ம்..ம்.. அதெல்லாம் ஒரு காலம். இப்ப பாத்தீகன்னா எல்லா கிசுகிசு சங்கதிகளையும் நெட்டுல சட்டுப்புட்டுனு எழுதி தள்ளுராகளா, அதுவும் பதிவுலகத்துல கீ போர்ட வச்சே டான்சாடுற நம்ம மொக்கைத் தம்பிமாரு இதுமாதிரியான நியூசெல்லாம் தினமும் ஊர் பூரா போன்ல கூப்ட்டு பத்த வச்சர்ராக. அதுல இருந்தே சிறு பத்திரிகைகள வாங்குறுத நிறுத்தி தொலைச்சாச்சு. பிறவு ஒவ்வொண்ணையும் 30 ரூபா, 50 ரூபா வாங்குறது தெண்டமுல்லா?

நேத்தைக்குத்தான் நம்ம கூட்டுக்காரவுக அவுகளும் என்னாட்டம் இலக்கியவியாதி சகவாசம் வச்சிருந்தவுகதான், இந்த மாசத்து உயிர்மைய கொடுத்தாக. என்னன்னு கொஞ்சம் மேஞ்சு பாத்தா, அடங்கொப்புறானே, என்னத்தைச் சொல்ல……!!!

ஆமா நைனா ஒவ்வொரு தபா நீ உயிர்மை வாங்கிக்கீறீயா, அதுல இன்னா ருக்கும்? அட்டையில மல்டி கலர் மாடுலேஷன். அதான்பா கருத்து கந்தசாமி டிசைன்! குற்றம், தேகம், வதை, இரவுன்னு என்னன்னமோ ராவா அட்ச்சு விடுவான். அப்பாலிகா தலையங்கம் பாத்தா மன்ஸ்ய புத்ரன் அண்ணாத்தே என்னமோ பயங்கரமா பொலிட்டிக்ஸ் பட்சவரு மேறி அவுத்து விடுவாறு, அப்பாலிக்கா நம்ம சாரு நைனா டப்பாகஞ்சிய சீம சாராய பாட்டில் ஊத்தி அட்ச மப்புல ஆறேழு பக்கத்துல சினிமா குனிமான்னு வாந்தி எடுப்பாரு, கொஞ்சம் அந்தாண்ட போனீன்னா இசை, அப்பால ஈரான் சினிமான்னு உடுப்பி அவியலாட்டம் உள்ள தள்ள ரொம்ப இம்சையா ருக்கும். புச்சா இன்னா பாத்தேன்னு கேக்குறீயளா…

மூணாவது பக்கதுல பாத்தீங்கன்னா உயர்மையில இருந்து இந்த வருசம் அறுபது நூலுங்க வருதாம், ஆறுக்கும் மேற்பட்ட வெளியீட்டு விழான்னு கன ஜோரா இருக்குங்க. என்னமோ போங்க, நம்ம கவி அம்பி மனுஷ்ய புத்திரனோட கம்பெனி இம்புட்டு பெருசா வளர்ந்து வருசத்துக்கு அறுபது புக்கு போடுறது சாதாரணமில்லிங்கோ; அப்படீன்னு தப்பா முடிவு செய்ஞ்சிராதீங்க சாமியோவ், கொஞ்சம் முழுசா படிச்சுபுட்டு ஒங்க கருத்த சொல்லுங்க.

முதல்ல பாத்தீகன்னா சுஜாதா நேர்காணல்னு ஒரு புத்தகம். அதுல கட்டிங் லைனா “ அவரது பரந்துபட்ட பன்முகத் தன்மை கொண்ட அக்கறைகளுக்கும் ஆளுமைக்கும் இன்னொரு சாட்சியம்” பளிச்சுனு போட்ருக்காக. ஏம்வே சங்க கால பெண்களை பேசிகிட்டு அப்படியே நைசா பாரிஸ் ஒயினைப் பத்தி பேசுனா அது பன்பட்டர்ஜாம் அக்கறையா? நல்லாருக்கு நைனா உங்க இலக்கணம்.

இந்த ஸ்ரீரங்கத்து பாப்பார ஐயங்காரு ஏதோ கம்யூட்டர பத்தி எழுதினாரு, கூடவே கதங்களயும் எழுதினாருங்கறதெல்லாம் இருக்கட்டும். அவரு ஏன் ஒரு லிபரல் பாயை பிடிச்சு தன்னோட புக் ரைட்ச கொடுத்துட்டு போகணும்? மத்யமர் கதைங்கள்ள இட ஒதுக்கீட்டை கேலி பண்ணி, பிராமண சங்கத்துல விருது வாங்கி, சங்க பரிவாரத்து ஜீக்களுக்கு நமஸ்காரம் போட்ட கையோட சலாம் அலைக்கும் பாய்னு புக் போட விட்டுருக்காருன்னா, அதுதாம்டே பார்ப்பன நரித்தந்திரம். சரி இதுக்காக நம்ம ம.புத்திரனை பாய்னு நினைச்சுக்காதீக. அவுக பாய் இல்ல பிசினஸ்மேன்.

இல்லேன்னா சுஜாதாவோட புக்குங்கள போட்டு, நைசா லைப்பரரிக்கு தள்ளி ஒரு பதிப்பக சாம்ராஜ்ஜியத்தையே உண்டாக்கிட்டாருல்லா, அதுதாம்டே பிசினஸ் தந்திரம். சரி இந்த பாய் எப்படி லைப்ரரி ஆர்டரு பிடிக்குராறு, எவனுக்காவது தெரியுமாடே?

போலே போக்கத்த மூதிகளா, இதுல என்ன இரகசியம் வேண்டிக் கிடக்கு? அப்படியே அந்த அறுபது நூலு நாயன்மாரு பட்டியலப்பாருடே…..

பதிவுலகத்துல இருக்குற சாதா, ஸ்பெசல் சாதான்னு எல்லா பயபுள்ளைகளும் தமிழச்சி தங்கபாண்டியன சாரு புக் பங்ஷன்னுல ஜொள்ளுவிட்டதை எழுதியிருக்கானுகல்லா, அந்த அம்மாதான் இந்த லைப்ரரி ஆர்டர் தேவதை…. எப்புடி?

“பாம்படம்” கரிசல்பூமியின் நினைவுப் பதிவுகள்னு ஒரு புத்தக விளம்பரம். நம்ம தேவதையம்மா எழுதினது. என்ன எழுதியிருப்பாக? “பாம்படமாம் பாம்படம், விருது நகரு பாம்படம், தங்கம் தென்னரசு பாட்டியோட பாம்படம், லைப்ரரி ஆர்டருக்கான பாம்படம்,” இதுதாம்டே விசயம். அடுத்து பாத்தா லைப்ரரி ஆர்டர் தேவதையப்பத்தி மத்த பயபுள்ளக ஆகோ ஓகோன்னு எழுதுன ஐஸ் பேக்டரியவே ஒரு புக்கா போட்டுரக்கானுக, “தமிழச்சியின் பதிப்புலகம் – சில மதிப்பீடுகள்” என்னாமா யோசிக்கிறானுக,,, டெரரால இருக்கு…. அது சரிடே பதிவுலகத்துல இருக்குற ஒரிஜினல் தமிழச்சி இவுகதான்னு குழிம்பிக்கிடாதீங்கடே, நம்ம அக்கா பாரீசுல இருக்காக அவுக வேற…

சரிதானுங்க, லைப்ரரி ஆர்டரோட அடுத்த குல்சா வி.ஐ.பி யாருன்னு தெரியுமாங்கோ? அவருதான் நம்ம வி.சிறுத்தைகளோட எம்.எல்.ஏ இரவிக்குமார். அடிக்கடி கருணாநிதி ஐயாவோட பக்கத்துல நின்னு “இந்தப்பூனையும் பிசா சாப்பிடுமா”ங்குற கதியில போஸ் கொடுப்பாருங்க. அவிகளுக்கென்ன, இப்பதான் ரியல் எஸ்டேட், பஞ்சாயத்துன்னு லைஃப்புல நல்லா செட்டிலாகிட்டாருங்கண்ணா. தமிழ்நாட்டுல இருக்குற இலக்கியவியாதிங்க எல்லாம் கவர்ன்மெண்டு காரியங்கள சாதிக்கணும்னா நம்ம எம்.எல்.ஏவைத்தான் தொடர்பு கொள்றாங்களாம்… அந்த படிக்கு ஐயாவோட நாலு புக்கு ரிலீசாகுதாங்க…

அண்டை அயல் உலகம்“னு ஒரு புத்தகம். இது ஜூனியர் விகடன்ல வந்ததுன்னு நினைக்கிறேனுங்க. அத பாத்தீங்கன்னா ஃபுல்லா நம்ம இந்திய அரசு வெளிநாட்டுக் கொள்கை என்னவோ அதயே ஏகப்பட்ட விவரங்களோட -அல்லாம் நெட்டுல சுட்டதுதாங்க – அடிச்சு விடுவாறு. இன்னைக்கு தமிழ்நாட்டுல பஞ்சாயத்து பண்றவங்க நாளைக்கு நீரா ராடியா அக்கா மாதிரி உலகத்துக்கே பண்ணனுங்குறதுக்கான டிரெயினிங்னு வச்சுக்கங்க. ஆக நம்ம எம்.எல்.ஏ புக்க போட்டுக்கிட்டா அவரு விட்டையோட மத்த விட்டைங்களையும் லைப்ரரிக்கு தள்ளிரலாங்குறதுதான் ஹமீது பாயோட திட்டம். புரிஞ்சுதுங்களா?

ஒரு காலத்துல இவுங்க எல்லாம் ஒரு கூரூப்பாத்தான் அலைஞ்சாங்க. எம்.எல்.ஏ அண்ணன் சேரிப்புயல் கட்சியில சேர்ரதற்கு முன்னாடி காலச்சுவடு அக்ரகாரத்துல நெய் பொங்கல் சாப்பிட்டுகிட்டு இருந்தாக. இப்போ ஒரு சம்மர்சால்ட் போட்டு கலைஞர் ஐயா வூட்டுக் டிகிரி காஃபி குடிக்கிறாங்கன்னா இந்த வளர்ச்சியை உயிர்மை பயன்படுத்தற மாதிரி காலச்சுவடு பயன்படுத்த முடியலைங்க.. அது தனிக்கதை…

இப்ப இந்த அறுபது நூலு நாயன்மாருங்கள்ள சிலர மட்டும் பாப்போம்..

இதுல முத நாயன்மாரு நம்ம சாரு மாமா.. மாமுவோட ஏழு புக்ஸ் இந்த வருடம் ரீலீசாம். இதுல 95 பர்சண்டேஜ் இந்த ஆண்டுல எழுதிக்கீறாராம். என்னா நைனா இது என்ன கட்டிங் மேட்டரா, பர்சண்டேஜ் கணக்கு கொடுத்துகினு…

இதுல முத நூலு தேகம்னு ஏதோ வதை நூலாம். சில பேரு அத சதை நூலுன்னு வியாக்கியானம் கொடுக்குறான். ஓசியில படிச்ச நம்ம தோஸ்த்துகிட்ட கேட்டா அல்லாம் குல்சா மேட்டராம். என்னபா இது அநியாயமா கீது? குண்டியடிச்சான், குஞ்ச ஆட்டுனான், நாக்க போட்டான்னு எழுதுனா அது உலக இலக்கியமா? நெட்டுல மூணு எக்ச போட்டா குல்சா மேட்டரெல்லாம் ஜல்சாவா கொட்டிகினு இருக்கும். இத ஒரு நாவலுன்னு போட்டு பங்ஷன் நடத்தி அதை நாப்பத்திநாலு வெட்டி பாய்ஸ் விமர்சனும்னு போட்டு… படுத்துராங்கப்பா….

செக்ஸ்னா அது ஐஞ்சு நிமிசத்து மேட்டரு, வந்தமா, முடிச்சமான்னு போறதுக்கே ஜனத்துக்கு டைம் இல்ல, அதப்போயி இந்த நைனா 26மணிநேரமும் பேசிக்கினு, எழுதிக்கினு, போய் ஒரு நல்ல டாக்டரப்பாருயா வெண்ணை!

அடுத்த புக்க பாத்தா அது நித்யானந்தாவோட அல்சா மேட்டரு.. இந்த சாமியத்தான் நம்ம நைனா ஒரு காலத்துல கும்பிட்டுகினு, அதயும் போட்டோ புடிச்சு போட்டு பி.ஆர்.ஓ வேல பாத்துகினு இருந்தாரு. அப்பாலிக்கா ரஞ்சிதா சீன் வந்துச்சா, உடனே நைனா நல்ல புள்ளயாட்டம் கூட்டத்தோட கூட்டமா குன்சா தர்ம அடி போட்டு எஸ்ஸாயிட்டாரு. நாஸ்டாவுல உப்ப போட்டு தின்னா இந்த நைனா இப்பிடி செய்யுமா?

சாமி அருள் வாக்கு சொன்னதையும் பிசினஸ் பன்றான், சாமி சரசமாடிச்சுன்னா அதயும் பிசினஸ் பன்றான், நைனா இது உனக்கே அசிங்கமா இல்ல? எபெட்டிஷ்னா என்னான்னு அல்லாருக்கும் டியூஷன் எடுக்குறிரீயே இதுதான்பா டிரிபிள் எக்ஸ் ஃபெட்டிஷ். இதெல்லாம் நைனாவோட குத்தமில்லப்பா. நைனாவுக்கு கூச்ச நாச்சமில்லாம சில குல்சா மொக்கைஸ் செம்பு தூக்குறான் பாரு, அவன பிடிச்சு கேக்கணும்.

கனவுகளின் நடனம்” இது நைனாவோட சினிமா புக்காம். நைனா சினிமாவப்பத்தி எழுதலேன்னு எந்த குயந்தை அழுதுச்சு? இந்த டிஜிட்டல் குப்பைங்கள புக்கா போடுறான்னா என்னா தைரியம்? இதுபோக நைனா எழுதுன அஜால் குஜால் இலக்கிய கிசுகிசுங்க எல்லாம் மூணு புக்சா வந்துருச்சாம். கனிமொழி வந்து காமராஜ் ஹால்ல பேசியாச்சா, இத வச்சே ஹமீது பாய் அல்லா புக்கையும் லைப்பரரிக்கு தள்ளிருவாரு…இனி இன்டருநெட்டுல பாக்க முடியாதவனெல்லாம் நைனா புக்க லைப்ரரியில படிச்சு பரலோகம் போவப் போறான். சாவுங்கப்பா…

ஸ்பெக்ட்ரல் ஊழல்ல லம்பா அடிச்சா கையோட கனி அக்கா காமராசர் ஹால்ல நைனா சாருவோட நட்ப பத்தி பேசுதுன்னா, என்னாத்தச் சொல்ல? அன்னிக்கு அங்கன சம்சா, காஃபிய முழுங்குன ஒரு பயலுக்கும் அக்காவோட ஊழல் கதக்கு ஒரு ஞாயத்தை கேக்கணும்னு தோணலையே?

அப்பால பாத்தா நம்ம எஸ்.ராவோட “துயில்” நாவல். இதுக்கு கட்டிங் லைனா என்னா கொடுத்துகிறான்னா, ” மனித உடல் என்னும் மகத்தான பிரபஞ்சத்தில் நிகழும் எண்ணற்ற விசித்திரங்களைப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல்”……

ஏம் வே எஸ்.ரா? இது உமக்கே ரொம்ப ஓவரா இல்லையா வே? மனித உடல்ல என்ன எழுவு விசித்தரத்த கண்டீரு? கக்கா, ஒன்னுக்கு, சளி, எலும்பு, தோலு, இதுதாம்வே எல்லாத்துக்கும் இருக்கு? இதுல ஆம்பளயாளுகன்னா விந்து, பொம்பள ஆளுகன்னா மென்சஸ்னு இதுல என்ன எழவுயா பிரபஞ்ச ரகசியம் இருக்கு? நீரு ஆ.விகடனுல தொடர் எழுனங்கறதுக்காக வீட்டுக்கு விருந்தினர் வந்தா சிரிக்கணும், தேத்தண்ணி கொடுக்கணும்னு காலனாவுக்கு தேறாததையெல்லாம் எழுதினீரு. அந்த கணக்கே இன்னும் முடியலேன்னா பாத்தா அதுக்குள்ள ஒரு நாவல எழுதிட்டீரு. நீரு எழுதுன வசனத்தையெல்லாம் பாலா குப்பைன்னு தூக்கி எறியிதாருன்னு சொல்லுதாக, உண்மையாவே?

எழுத்துங்குறது ஒரு புள்ளத்தாச்சி வலியோட பிரசவம் பாத்து குழந்தைய தர்ரது மாதிரி. அதை பிளாஸ்டிக் பொம்மை மாதிரி தயாரிச்சா அதுல என்னவே விசித்திர வெங்காயம் இருக்கும்?

சரி அடுத்த மேட்டர பாப்போம்.

இந்த அறுபது நூலு நாயன்மாருல்ல இந்த வாட்டி மாஸ்டர் பீஸ் என்ன தெரியுமா? ரசிகமணி டி.கே.சி கடிதங்கள்னு ஒரு புத்தகம். 944 பக்கமாம். 600 ரூபாய் விலையாம். முன்னாடி பதிஞ்சா 450 ரூபாயாம். இதுல அண்ணாச்சி மத்த தம்பிமார் 24 பேருக்கு எழுதின கடுதாசிங்க தொகுத்திருக்காங்களாம். இதுக்கு கட்டிங் மேட்டரா கரிசல் காட்டு செக்ஸ் தாத்தா கி.ரா எழுதுன முன்னுரையில இருந்து போட்டுருக்காக…..

” அவருடைய ஒரு கடிதத்தின் முடிப்பு இப்படி இருக்கும்….” ” என்னுடன் இருந்த நண்பர்களும் எல்லாருமாக நேற்றுப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். தங்கள் அண்ணியும் குற்றாலமும் ஆழ்வார்குறிச்சிக்குப் போயிருக்கிறார்கள். தங்கம் தென்காசி. ஆகவே நான் இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று சிவமே என்றிருக்கிறேன். பலராமும் துணைக்கு இருக்கிறார். அருவிச் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. மற்றபடி நிசப்தம். மணி காலை 3.3.0″

இதுமாதிரி 944 பக்கத்திலும் இருக்குதுன்னா அட கொலைகாரப் பாவிகளா, இந்த கருமாந்திரத்தை புக்கா போடுறதுக்கு எத்தனை ரீம் மேப்லித்தோ பேப்பர், அந்த பேப்பரை தயாரிக்கிறதுக்கு எத்தனை மரத்தை வெட்டி அழிச்சாங்களோ! உயிர்மை பதிப்பகம் காடுகள அழிக்குதுன்னு இப்பவாச்சும் விளங்குதா ஆக்கங்கெட்ட மூதிகளா?

டி.கே.சிக்கு ஏதோ அரசு குமாஸ்தா வேலைக்கு இன்டர்வியூ வந்துதாம். அன்னிக்கு காலையில அண்ணாச்சி கிளம்பும்போது குறுக்க பூனை ஏதோ வந்துச்சுன்னு கேன்சல் பண்ணிட்டராம். அவரு பெரிய ஜமீன்ங்கிறதுன்னால மாளிகை வீடு, தாமிரபரணி சோறு, அவியல்னு உபச்சாரம் பலமா இருக்கும். தமிழ்நாட்டு இலக்கியவியாதிகளை கூப்புட்டு தங்க வச்சு பேசி அழுகு பாத்தே இந்த மனுசன் காலத்தை ஓட்டியருக்காரு. அந்த பூனை மட்டும் அன்னிக்கு வரலேன்னா இந்த 900 பக்கம், ஏகப்பட்ட மரங்க எல்லாத்தையும் காப்பாத்தியிருக்கலாம்.

எங்கூருக்காரகுன்னு பாத்தா மானத்த கப்பலேத்துராரே? ஏலேய் காலையில மூணு மணிக்கும் நிசப்தமாத்தாம்டே இருக்கும், அருவின்னா சத்தம் இருக்காதாடே…இதையெல்லாம் ஒரு பெருசு கடிதம் எழுதி அதப்போய் புக்கா போடுறான்னா இந்த பாய்க்கு என்னா தைரியம்? இனி இந்த எழவும் லைப்ரரி ஆர்டருங்குற பேருல மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு தமிழ்நாடு முழுக்க போகப்போவுது..

இதுல உங்களுக்கு ஒரு எக்ஸ்குளூசிவ் மேட்டரு ஒன்னு சொல்லுதேன், யாருகிட்டேயும் சொல்லாதீங்க.. இந்த டி.கே.சி பேரன்ங்கள்ள ஒருத்தன் நம்ம கூட்டுக்காரனோட ஆபிசிலதான் வேல பாக்கனாம். அதுல என்ன விசேசம்னா அந்த பயபுள்ளைக்கு தமிழே படிக்க தெரியாதாம்… ஆக தமிழுக்கு தொண்டு ஆத்துன பெரிசு பரம்பரைக்கே தமிழ் தெரியாத போது அந்த பெருசு அப்பம் சாப்பிட்டு குசு விட்ட கதையெல்லாம் புத்தகமா நாம படிக்கணும்னா, ஒண்ணு மட்டும் சொல்லுதேன், இந்த தமிழ்நாடு நாசமா போகட்டும்லே…

இந்த புக்ஃபேருக்கு வாசல்லேயே காத்துக்கிடந்து எந்த பயபுள்ளையாவது இந்த புக்க வாங்கிட்டு வந்தீகன்னா புடிச்சு கடிச்சு வக்கப்போறேன், அம்புட்டு கொலைவெறியில இருக்கேன்…..

சரி இந்த பெருசு புத்தகத்துக்கு முன்னுரை எழுதுன கரிசல் செக்ஸ் தாத்தா கி.ரா இருக்காருல்ல… அவருக்கு மத்த இலக்கியவியாதிமாரு எழுதுன கடிதங்களையும் புக்கா கொண்டு வாராகளாம்… அடுத்து என்ன சாரு மாமாவுக்கு, மாமா சாரு எழுதிய நேஹா கடிதங்களா இல்ல டோண்டு இராகவன் கேள்வி பதிலா… நல்லா இருங்கடே !!!

அடுத்து பாத்தீகன்னா நம்ம ஃபீரிலேன்சு பத்திரிகையாளர் மணாவோட புக்காம். என்னண்டு பாத்தா… “கமல்ஹாசன்: நம்காலத்து நாயகன்” ண்டு தலைப்பு போட்டுருக்கான். கமலஹாசன் நாயகனில்ல, வில்லன்னு எந்த கபோதி சொன்னான்? இதுல கமலைப் பத்தி பிரபல ஆளுமைங் எழுதுன பதிவுகளும் போட்டாவும் வருதாம்.

திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை பிரஸ்ஸூங்களுக்கு போனா தெருவுக்கு ஒரு ரஜனி ரசிகன், கமல் ரசிகன், விஜய் ரசிகன், அஜித் ரசிகன்னு பிரிண்டாகுறதை பாக்கலாம். அதுல இல்லாத பதிவா, போட்டாவா…ஏம்டே இப்படி ஊரை ஏமாத்துரீக….நம்ம பாய் ஏற்கனவே “உன்னைப் போல ஒருவனில்” ஒரு பாட்டு எழுதுனத வச்சு கமலை ஒரு ஏகாந்த யோகியாக சித்தரிச்சு பரவசமான பார்ட்டி. அதுக்கு நன்றிக்கடன்தாம்டே இந்த புக்கு….

இதுக்கு அடுத்தாப்ல நம்ம தத்துவ அறிஞர் யமுனா ராஜேந்திரனோட மூணு புக்கு போட்டுருக்காக.. இதுல புரட்சி, உலக சினிமா, ஆவணப்படம்னு டைட்டிலெல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா அண்ணாத்தே எது எழுதுனாலும் காசியில ஆரம்பிச்சு கன்யாகுமாரி வரை இழுத்து இழுத்து பேசியே கொல்வாரே… முன்ன ஒரு தடவை உயிர்மையில பிழை திருத்தும் வேலை செய்யுற ஒரு நண்பரைப் பாத்தேன்.. அப்பதான் அவரு சொன்னாரு, “யமுனா ராஜேந்திரன் கட்டுரைகளை திருத்தி எழுதுற துக்கத்துக்குகூட மனுஷ்ய புத்திரன் சம்பளம் போறவே போறாது”ன்னு.. இந்த வாட்டி இந்த மூணுபுக்குக்கும் யாரோட லங்கோடு கிழிஞ்சதோ தெரியல..அவுகளுக்கு நம்ம அனுதாபங்களையாவது தெரிவிச்சுக்கிடுவோம்.

தமிழக மேலவை” ங்குற தலைப்புல கே.எஸ்.இராதாகிருஷ்ணன் புக்கு வருதாம். இது சத்தியாம லைப்புர்ரி ஆர்டருக்கான புத்தகம். அண்ணாத்தேயும் தி.மு.கவுல முக்கிய தலைங்குறதால பாய் இவர வச்சு வருசத்துக்கு ஐஞ்சு புக்காவது போடுவாறு. இனி “புதிய சட்ட மன்றம் கட்டிய கதை, மு.கவின் மாமல்லபுர விஜயம், அழகிரியின் டெல்லி வாசம்னு” புது புது புக்குங்க வரும். இதுகளையெல்லாம் வாசிக்கிறதுக்கு தமிழ்நாடு எத்தனை கொடுத்து வச்சுருக்கணும்!!!

வா.மு.கோமுங்கறவரோட இரண்டு நாவலும், ஒரு சிறுகதையும் வருதாம். இவரு யாருன்னு விசாரிச்சா நம்ம நைனா சாருவே இவர தன்னோட சீடன்னு அறிவிச்சிருக்கராம்ல. அப்படின்னா இவரும் ஜல்சா மேட்டரு ரைட்டரா, காலம் ரொம்ப கெட்டுப் போச்சு, வேற என்னத்தைச் சொல்ல?

அப்பறும் பழமொழி, கிராமம், விளையாட்டு, சாப்பாடு ன்னு வெரைட்டியான நூல்கள். ஒரு காலத்துல இதுங்களயெல்லாம் மணிமேகலைப் பிரசுரத்துலதான் பாப்போம்.. இப்ப உயிர்மையிலும் பாக்கலாம்.

வெள்ளைப் பல்லி விவகாரம்” என்ற தலைப்பில் லஷ்மி மணிவண்ணனின் சிறுகதை தொகுப்பு வருதாம். இந்த அண்ணன் யார்? ஒரு  காலத்துல மனுஷ்ய புத்திரன், கண்ணனோட காலச்சுவடு ஆசிரியர் குழுவுல இருந்தவர். தன்னோட வாழ்க்கையை மனுஷ்ய புத்திரன் பாழாக்கிட்டாருன்னு சொன்னவரு. இப்ப பாழாக்குனவரு புண்ணியத்துல புக்க கொண்டு வராறு.. இவனுங்க ஏன் அடிச்சுக்குறான், எப்படி சேந்துக்குறான்ன்னு ஏதாச்சும் புரியுதாடே?

விமலாதித்த மாமல்லன் கதைகள்” இது ஒரு சிறுகதை புக்காம். இவரும் கூட பிளாகுலயும், பஸ்சுலயும், டவிட்டர்லயும் என்னெல்லாமோ எழுதிப் பாக்குறாரு, ஒன்னும் களை கட்ட மாட்டேங்குது. இவரு மாமா சாருவை  திட்டிகிடந்த்தை பாத்து பீதியான நம்ம மொக்கைத் தம்பிமாறுங்க ஜெயமோகனுக்கு எதிரா பாய இவருக்கு கொம்பையும் சீவி மச்சி சாருன்னு பட்டத்தையும் வச்சி அவர்கையில ஒரு குச்சி ஐச கொடுத்திட்டாகளாம்… சரி இருக்கட்டும். மச்சி சாரு 83ல போட்ட புக்கே இன்னும் விக்காம இருக்காம். அதையே பதிவுலகத்துல ஃபிரியாக கொடுக்குறதுக்கு மச்சி சாரு ததிங்கிணத்தோம் போடுறாரு.. இந்த இலட்சணத்துல இவரு கதைங்க அல்லாம் ஒரே தொகுப்பா வருதுன்னா என்னா அர்த்தம்?

அதுல காமடி என்னன்னா இந்த மச்சி சாருவோட வாழ்க்கை இலட்சியம் ஜனாதிபதி கையால விருது வாங்குறதாம். சனாதிபதி கையில விருது வாங்குறது இருக்கட்டும். உயிர்மையில நூல் வெளியீட்டு விழா லிஸ்ட்ல பாத்தீகன்னா, சாரு, எஸ்.ரா, ரவிக்குமார், தமிழச்சி, மனுஷ்ய புத்திரன் மெயின் சாமிகளுக்கெல்லாம் தனித்தனி விழா. ஆனா நம்ம மச்சி சாரு புக்கெல்லாம் 12 புக் வெளியீட்டு விழாவுல கூட்டத்தோட கூட்டமா கலந்து பொச்சு… லோக்கல்லயே தனிக்கவனிப்பு இல்லேங்குற பட்சுத்துல இவரு தன்னை இன்டர்நேஷ்னல் பிகரா நினைச்சு கனவு காணுராரே, நமக்கே ரொம்ப கஸ்டாமா கீது…. காட் பிளஸ் அமெரிக்கா அண்டு மச்சி சார்!@!

புரியாட்டி இன்னொரு உதராணத்த பாப்போம். சேலம் சிவராஜ் வைத்தியர் கிழமைக்கு ஒரு ஊர்னு விஜயம் செய்வாரு. இதுல பெரிய சிட்டிங்களுக்கெல்லாம் முழு நாள ஒதுக்குவாறு. சில்லறை நகரங்களையெல்லாம் ஒரே நாளில் நாலைந்துன்னு பாப்பாரு, இப்ப நம்ம மச்சி சாரோட கதையும் அதுதான், இதுக்கும் மேல புரியலேன்னா சிட்டுக்குருவி லேகியம் வாங்கி விழுங்குலே…..

அடுத்து பத்து கவிதை தொகுப்பு, எப்பவும் வர்றதுதானேன்னு நெனக்காதீக இதுல நம்ம பதிவுலக அம்பிமாறு எழுதுனதும் இருக்காம். வெள்ளிக்கிழமை மாலை கொசு, கழுதை மட்டமும் கழுவாத புட்டமும், பீக்கடல் அப்படீன்னு பதிவமாருங்க டிஜிட்டல்ல கிறுக்கியதை எடுத்து மூணு புத்தகமா போட்டா ஒரு முப்பது பதிவுல விளம்பரம் இனாமா தேத்தலாம். அப்புறம் என்ன புரவலருக்கு புரவலர், விளம்பரத்துக்கு விளம்பரம், வியாபாரத்துக்கு வியாபாரம்… கூட்டிகழிச்சு பாருலே இந்த மார்கெடிங் கணக்கு சரியா வரும்… இதுதாம்லே மனுஷ்ய புத்திரன் ‘டச்‘சு

ஆமா, இதெல்லாம் வரும்போது ”எட்டு லார்ஜ் குடித்தது தப்பில்லை. அடுத்து குடித்த பியர்தான் பிரச்சனை” ன்னு நம்ம எலக்கிய குருஜி சுந்தரின் பஸ்மொழிகளெல்லாம் ஏன் வரலையின்னு கேட்கப்பிடாது. பதிவுலகம் ரத்த பூமி, பதிவர் மேட்டர்லாம் டச் பண்ணா அப்புறம் ரணகளம் ஆகும், ரத்த ஆறு ஓடும் .. பீ கேர்புல். என்னத்தாம்லே சொல்லிகிட்டேன்…

அடுத்து நம்ம ஹீரோவ பத்தி பாப்போம் அதாம்லே அம்பி பாய் மனுஷ்ய புத்திரன். அவுகளோட 120 கவிதைகள் 300 பக்கங்களுக்கு மெகா புக்கா வருதாம்லே.. சாம்புளுக்கு ஒன்னு

இதற்குத்தானா?

பார்க்காமலே
இருந்திருக்கலாம்

பார்த்தும்
பாராத்து போல போயிருக்கலாம்

பார்க்க வந்தது
உன்னையல்ல என்று சொல்லியிருக்கலாம்

பார்த்த பின்னே
பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்

பார்த்துப் பார்த்து ஏங்கவா
இவ்வளவு தூரம் வந்தது?

…………………………………………………….

தெரியாமத்தான் கேக்கறேன் பார்த்தான், பாக்கலேன்றத பின்னிப் பின்னி எழுத்திட்டு அது கவிதைன்னா அந்த கடவுளுக்கே அடுக்குமாலே..

“கக்கா போகலாம், போகாமலும் இருக்கலாம், போனாலும் பாதகமில்லை, தண்ணியிருந்தா கழுவலாம், இல்லாட்டி துடைக்கலாம், நாறினா ஓடலாம்,” ம்னு நான் என்டர் தட்டாத ஒரு கவிதை சொன்னா ஒத்துப்பியாலே?.. பொழப்ப பாருலே போக்கத்த மூதின்னு துப்பமாட்ட?

தி.மு.க. ஆதரவு பெருந்தலைகளை கொண்டு தன்னோட நூலக ஆர்டரை நைசா வளைச்சு பிசினஸ் சாம்ராச்சியத்தை சைசா தேத்தும் ‘பாஸ்’ மனுஷ்ய புத்திரன் கொண்டுவரும் 60 புத்தகங்களோட லட்சணம் இப்படித்தாம்லே பல்ல இளிக்குது. இதுக்காக்க எத்தன மரத்தை வெட்டிச் சாச்சாகளோ இதத்தாம்லே காடு அழியுதுன்னு சொல்லுதேன். இது சுற்றுச் சூழலுக்கு கேடு இல்லையா? இயற்கை வளமும், கருத்து வளமும் இப்படி வீணாபோவதை நாம ஆதரிக்கவாலே முடியும்… எதிர்க்கனும்லே…!

டிஸ்கி 1: பணி மாற்றமா, பணி உயர்வா, விசாரணையிலிருந்து விடுதலையா, ரியல் எஸ்டேட்டா, கட்டப் பஞ்சாயத்தா, நூலக ஆணைக்கு தள்ள வேண்டுமா, எதையும் புத்தகமாக போட வேண்டுமா – உடனே உயிர்மை பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். வெறும் பதினைந்து சதவீத கழிவைக் கொடுத்து உலகத் தரமான சேவையை பெறுங்கள்…

டிஸ்கி 2: இப்படி காடுகள் அழிந்தால் வெங்காய விலை எப்படி குறையும்?

டிஸ்கி 3: வினவு தளத்தில் வெளியாகும் படைப்புகள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!

________________________

– காளமேகம் அண்ணாச்சி
________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:


  1. உயிர்மைக்காரன் காடுகளை அழிக்கிறது தெரியுமாடே!…

    இந்த மாசத்து உயிர்மை’ல மூணாவது பக்கதுல பாத்தீங்கன்னா இந்த வருசம் புத்தக கண்காட்சி சமயம் அறுபது நூலுங்க வருதாம், ஆறுக்கும் மேற்பட்ட வெளியீட்டு விழான்னு கன ஜோரா இருக்குங்க….

  2. காள‌மேக‌ம் அண்ணாச்சி, “ந‌ச்”சுன்னு கேட்டீரு… ஆனா பாருங்க‌, வின‌வு கூட‌ இந்த‌ வார‌ம் எதோ புக் எல்லாம் வெளியிடுறாங்க‌ன்னு போன‌ ப‌திவுல‌ படிச்சேன். அதெல்லாம் ம‌ர‌த்தை வெட்டி பேப்ப‌ர்ல‌ இல்லாம‌ க‌ல்வெட்டுல‌யா இருக்க‌ப்போகுது… வாங்கி வீட்டுக்கு தூக்கிட்டு போற‌துக்கு ச‌ங்க‌ட்ட்ட்ட‌மா இருக்காது… 🙂

    • அதெப்படி வெண்பூ ?

      நாங்க எது செஞ்சாலும் சரியாத்தான் செய்வோம். உயிர்மைக்காரன் மாதிரி காடுகளை அழிக்க மாட்டோம். தெரியும்ல

    • ஜூ ஜூ …. என்ன செல்லம் வெண்பூ … உள்ள பொகையுதா ?..

      ஒரு இலக்கிய சொறிநாய் தன் சுய புராணத்தை எழுதுறதுக்கும் ஒண்ணுக்கும் உதவாததை இலக்கியம்ங்கிற பேருல எழுதுறதுக்கும் ஜால்றா போடுற போன்ற வெட்டி ரசிகர்களுக்கு எவ்வளவு தெளிவா சொன்னாலும் புரியாத மாதிரி தான் மறுபடியும் வந்து பீப்பீ ஊதப் போறிங்க ..

      இருந்தாலும் சொல்லுறேன். வினவு,கீழைக்காற்றில் வரும் புத்தகங்கள், சமுதாயத்தின் அவசியம். உயிர்மை வெளியிடும் புத்தகங்கள் சுயசொறிதலின் அவசியம்.

      • ஹி.. ஹி.. இன்னும் மாறவே இல்லையா நீங்க… எதிர்த்து எதாவது சொன்னா அனானியா வந்து திட்டுறதை… :)))

        இன்னும் பெட்டரா எதிர்பார்த்தேன்.. ஏன் பாஸ், கெட்ட வார்த்தை ஸ்டாக் தீந்து போச்சா இல்ல திருந்தீட்டீங்களா? 🙂

        அப்புறம் எனக்கு ஏன் பொகையணும்? தலைப்பை படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருந்தேன். அதோட டோக்கனாத்தான் இங்க வந்து கமெண்ட் போட்டேன்…

        BTW, கல்வெட்டு வெளியீட்டுக்கு வாழ்த்துகள்…

        • காடுகள் அழிக்கப்பட்டு தான் காகிதம் செய்யப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே..
          பதிவு அதை பற்றியா பேசுகிறது?

          அந்த காகிதத்தில் ஒன்றுக்கும் உதவாத கழுதை விட்டைகளை எழுதி வீணாக்குவதை பற்றி பேசுகிறது..

          முடிந்தால், உயிர்மையின் புத்தகங்கள் நாடிற்கும், மக்களுக்கும் மிக மிக அவசியமானவை என்று வாதிடுங்கள்.
          அல்லது
          கீழைக்காற்றின் வெளியீடுகள் மக்கள் பிரச்சனைக்கு அன்னியமானவை என்று மறுத்து வாதிடுங்கள்..

          மாற்று கருத்து என்ற பெயரில் oneliner களின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்…

          மேலும், உங்களை வினவில் யார் எப்போது திட்டினார்கள்? நீங்கள் வினவின் மீது அவதூறு கிளப்புவதாக குற்றம் சாட்டுகிறேன்…

          விவாதத்திற்கு வருவதாக இருந்தால் மேலும் பேசலாம், நண்பரே…

  3. Sir

    When i read this , i cant control my laugher.. Hilarious..
    Some of the lines ……

    ” பதிவுலகத்துல இருக்குற சாதா, ஸ்பெசல் சாதான்னு எல்லா பயபுள்ளைகளும் தமிழச்சி தங்கச்சிபாண்டியன சாரு புக் பங்ஷன்னுல ஜொள்ளுவிட்டதை எழுதியிருக்கானுகல்லா, அந்த அம்மாதான் இந்த லைப்ரரி ஆர்டர் தேவதை…. எப்புடி?”

    ” சாமி அருள் வாக்கு சொன்னதையும் பிசினஸ் பன்றான், சாமி சரசமாடிச்சுன்னா அதயும் பிசினஸ் பன்றான், நைனா இது உனக்கே அசிங்கமா இல்ல? எபெட்டிஷ்னா என்னான்னு அல்லாருக்கும் டியூஷன் எடுக்குறிரீயே இதுதான்பா டிரிபிள் எக்ஸ் ஃபெட்டிஷ். இதெல்லாம் நைனாவோட குத்தமில்லப்பா. நைனாவுக்கு கூச்ச நாச்சமில்லாம சில குல்சா மொக்கைஸ் செம்பு தூக்குறான் பாரு, அவன பிடிச்சு கேக்கணும்.”

    ” அடுத்து என்ன சாரு மாமாவுக்கு, மாமா சாரு எழுதிய நேஹா கடிதங்களா இல்ல டோண்டு இராகவன் கேள்வி பதிலா… நல்லா இருங்கடே !!!”

  4. //பதிவுலகம் ரத்த பூமி, பதிவர் மேட்டர்லாம் டச் பண்ணா அப்புறம் ரணகளம் ஆகும், ரத்த ஆறு ஓடும் .. பீ கேர்புல். என்னத்தாம்லே சொல்லிகிட்டேன்…// மிகவும் ரசித்தேன்

  5. ஆரம்பிசுடீங்களா உங்க காமெடி டைம்ம, எனி ஹொவ் தேங்க்ஸ் ,இந்த காமெடி நினைச்சு நினைச்சு சிரிக்கலாம் ,
    நம்ப செஞ்சா எல்லாம் ரைட்,வேற எவன் செஞ்சாலும் அது சமுக குற்றம்,உங்க குமுகாய அக்கறை அளவில்லாம போகுது , ஆல் தே பெஸ்ட்.
    பெட்வீன் வெண்பூ சொன்ன மாதிரி உங்க புக் எல்லாம் எப்பிடி கல்வெட்டு ,இல்ல பனையோலை அப்படி எதுலயும் வருதா என்ன ?
    அப்படி வித்தியாசமா வெளியிடற மாதிரி இருந்தா கீப் அஸ் போஸ்டட்

    • @ dr.rohinisivamani

      ஏனுங்க நீங்க அறிவாளியா? முட்டாளா?

      கட்டுரையின் தலைப்பை மட்டும் தான் படிப்பீங்களா? உள்ள என்ன இருக்குன்னு படிக்க மாட்டீங்களா?

      காடுகள் அழிக்கப்பட்டு தான் காகிதம் செய்யப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே..
      பதிவு அதை பற்றியா பேசுகிறது?

      அந்த காகிதத்தில் ஒன்றுக்கும் உதவாத கழுதை விட்டைகளை எழுதி வீணாக்குவதை பற்றி பேசுகிறது…

      பரமார்த்த குருவின் சீடர் போல கமெண்டு போட்டு எங்களை காமெடி என்கிறீர்களா? என்ன கொடுமை…
      அட இந்த பதிவு மெய்யாலுமே காமெடி/நையாண்டி தானுங்க… நீங்க ஏதோ புதுசா கண்டுபுடிச்சா மாதிரி….. கொடுமையிலும் கொடுமை..

  6. உயிர்மை பதிப்பகம் வெளியிடும் புத்தகங்கள் வெற்றி பெற வேண்டுமா, முடங்கி கிடக்கட்டுமா என்பதை தமிழ் வாசகர்கள் தீர்மானிக்கட்டும்.
    நாம் யார் புத்தக சந்தையின் தேவை அளிப்பை நிர்ணயிப்பதற்கு.
    அந்த வகையில் இந்தப் பதிவிற்கு எனது கண்டனம் மற்றும் வருத்தங்கள்.

    பதிவில் சில பத்திகளில் வந்துள்ள நெல்லை தமிழ் பிரயோகம் இயல்பாக வந்துள்ளது. நெல்லையில் மற்றும் சென்னையில் வாழ்ந்த ஒரு நபர் எழுதி உள்ளது போன்ற உணர்வு வந்துள்ளது.

  7. காளமேகம் அண்ணாச்சி
    கிழி கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்க போங்க. Repeat!!!

    When I Visited once to Uirmai on the Book Fair couple of years ago, The Sales men Pushed me a lot to Buy his Books, ( that time I was not Knowing “manush….” was the owner). Later I understood.

    I also became a Victim for couple of their Crap Books, Upon based on the so called “Cut Lines”.

    Nowadays I’m cautious.

    Friends Beware of them!!!!! Kudos to kaalamegam annachi!!

  8. நீர் எல்லாத்தையும் எல்லாரையும் நல்லா திட்டும்.. சுஜாதாவை பற்றி என்ன சொன்னாலும் அதனால் அவருக்கு எந்த இழுக்கும் இல்லை… ஒரே யொரு உதாரணம்… அன்னாரின் இரங்கல் கூட்டத்திற்கு எந்தவித விளம்பரமோ, பேனர்களோ இல்லாமல் நாரத கான சபையின் பெரிய அரங்கத்தில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் வந்ததே.. அமர இடமில்லாமல் எத்தனை நபர்கள் நின்று கொண்டிருந்தார்கள் என்பது உமக்குத் தெரியுமா…இதைவிட அவர் எழுத்தின் மேல் உள்ள மக்களின் ஈர்ப்புக்கு வேறு கட்டியம் தேவையா….? நமது தமிழ்ச்சூழலில் ஒரு சாதாரண எழுத்தாளனுக்கு அப்படி கூட்டம் வந்துவிடுமோ.. வேறு யாருக்காவது வந்திருக்கிறதா…உம்மிட்ம் அப்படிப்பட்ட மக்களால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்கள் உள்ளனரா.. உமது சர்ட்டிபிகேட்டை நீரே வைத்துக்கொள்ளும்… சுஜாதாவுக்குத் தேவையில்லை… let the caravan passes on…

    • ஆமா..நீங்க சொல்றது முற்றிலும் உண்மை.. அந்தக் கூட்டத்துக்கு நானும் போய் இருந்தேன். ஓவியர் ஜெயராஜ் (பெண்களை வரையும்போது மாரையும் தொப்புளையும் மறக்காமல் வரைந்து கலைச் சேவை செய்யும் கலாரசிகர்) தன்னுடன் சுஜாதா பழகியதை பேச ஆரம்பித்தார். எனக்கு 2 ஆட்கள் தள்ளி உக்காந்திருந்த ஒருத்தர் தாரை தாரையாக அழ ஆரம்பித்து விட்டார். 2 நிமிசம் கழித்து சுஜாதா சொன்ன ஒரு பாலியல் நகைச்சுவையை அதே ஜெயராஜ் சொன்னார். மேற்படி ஆசாமி குலுங்கிக் குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டார். ஆகா..இதுதான் சுஜாதாவுக்கு அவரின் வாசகர் செய்திருக்கும் சரியான மரியாதை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. கூட்டம் முடிந்த கையோடு ஓ ஹென்றி கதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன்.. உலகத்தில் ஓ ஹென்றிக்கு தோன்றிய அதே கற்பனை சுஜாதாவுக்கும் தோன்றியதை எண்ணிப்பார்த்தேன்.. உலகில்தான் எத்தனை அதிசயங்கள்.. ஆனால் ஓ ஹென்றி ‘பொம்பிளைகளால சுவற்றில் மூத்திரம் பெய்ய முடியுமா?’ங்கிற மாதிரி எல்லாம் கேக்கிற அளவுக்கு கற்பனை வளம் இல்லாதவர்தான்.. என்பதை எண்ணிப்பார்த்தால் சுஜாதாவின் மூத்திர கற்பனைக்கே நோபெல் பரிசு கொடுத்திருக்கலாம்.. போய்ச் சேந்துட்டாளே..

      • அலக்சாண்டா…. யாரோ ஒரு ஆள வச்சி அவன்தான் ரசிகன்னு சொல்ற உம்ம கோண புத்திய கடாசும்… அந்தாளு எத்தனயோ எளுதியிருக்காரு… உம்ம காமல கண்ணுக்கு அதுதான் தெரியுதுன்னு கண் டாக்டரய பாரும்… இல்லை மைண்ட் டாக்டர பாரும்….நீர் எத்தனை முறை அளுது பொறண்டாலும் தமிழ்ல repeat தமிழ்ல இனிமே ஒரு ஆள அவன் மாதிரி பொற்ந்து வரணும்… உம்மால முடியல… வினவும் இனி அப்படி ஒரு ஆள உருவாக்கி அவனுக்கு மார்க்சியம் சொல்லிக் கொடுத்து கர சேர்ரத்துக்குள்ள, அவன் மார்சசுவரிக்கே போயிறுவான்… உமக்கு வவுத்த கொட்சலா இருந்தா செலுசில் போடும்.. வினவுக்கும் கொடும்..

  9. Dear Kaalamegam,

    neenga intha pathiva eluthalennu yaaru kavala padala. eluthunathukkaagavum yaaru kavala pada porathilla.unga naataamai group venumna santhosapattukkattum. unga groupum books release panreenga neenga enna kathulaiya print panreeenga? athe paperla thaana… vitta kaluvruathu kooda wastenu pathivu poduveenga pola irukku.

    ithu oru cheap publicity thedum nokkamaakave karuthikren. ungal groupil silarin thangal pathippukalai puthakamaaka mudiyavillai allathu yaaru erkavillai endra iyalaamai allathu nirakarikkappathan vali,poraami,attaraaami,sirupillaithanaththin velippadaakave intha pathivai.karuthikren..

    apram,ungaloda nija peyarkaliyum, adayaalangalaiyum veliyida nenjil thiram irukkirathaa? yaaro eluthurathaa neengal pottu mandapathila eluthianatha podureenga. mundinthaal ithai eluthiya antha aasaami thannai velikaatti kollatum. paarkaalaaam. nermai atravrakal,aanamai atravarkal neengal.

  10. Hello bloggers, whoever publish books, maximum it will be in paper medium. When vinavu criticise you have to go through it deeply. What is the use of the junk materials? It will land only in the public libraries wasting the public’s money. But vinavu’s books will directly goes to the masses, and it will not swindle the public’s money. That is the difference.

  11. //அப்பம் சாப்பிட்டு குசு விட்ட கதையெல்லாம் புத்தகமா நாம படிக்கணும்னா, ஒண்ணு மட்டும் சொல்லுதேன், இந்த தமிழ்நாடு நாசமா போகட்டும்லே…//

  12. உம்ம வயித்தெரிச்சல வாந்தி எடுத்திருக்கீரு அண்ணாச்சி!! அதய நாங்க படிக்கனுமாம்ல.

  13. அய்யா, வினவு நீங்க இங்க பதிவு போட கணிப்பொறி முன்னால் உட்கார்ந்து மின்சாரத்தை பயன்படுத்திறீங்களே…உலக உருண்டை கொதிக்குது…இது தேவையா?

  14. சிரித்து சிரித்து வயிறு வலிக்கின்றது. நகைச்சுவையோடு சமூக அக்கறையில்லாத எழுத்துக்களை சமூக அக்கறையோடு கண்டித்த அழகு ! வினவு ! கலக்கறிங்க !

  15. //பார்க்காமலே
    இருந்திருக்கலாம்

    பார்த்தும்
    பாராத்து போல போயிருக்கலாம்

    பார்க்க வந்தது
    உன்னையல்ல என்று சொல்லியிருக்கலாம்

    பார்த்த பின்னே
    பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்

    பார்த்துப் பார்த்து ஏங்கவா
    இவ்வளவு தூரம் வந்தது?//

    “உழைப்பற்ற
    வார இறுதி நாளிலும்
    களைத்து
    உறங்க செய்ததது
    ஒரு ‘கவித’ புத்தகம்!”

  16. உங்கள் பதிவு நல்ல நடை. துணிவான கருத்துக்கள். வினவு திட்ட மட்டுமே செய்கிறது என்கிற குற்றச்சாட்டுக்களைத் தவிர்க்க உயிர்மை செய்த சில நல்ல விஷயங்களையும் பட்டியல் போட்டிருந்திருக்கலாம். வாசகர்கள் ஒப்பிட்டு உணர்ந்திருக்க வசதியாக இருந்திருக்கும். சிறுபத்திரிகையுலகம், பதிப்புலகம் நுகர்வியல் கலாச்சாரத்துக்கு வளைந்து போயிருக்கிறது. அதன் வெளிப்பாடுகள் தான் உயிர்மையின் ஜனரஞ்சக ஊசலாட்டம். சுஜாதா ஜனரஞ்சகமானது போல், குமுதம் ஆனது போல், உயிர்மையும் ஜனரஞ்சகமாக விரும்புகிறது.

    இன்னொன்றும் இருக்கிறது. சீரியஸ் லிட்டரேச்சர் அதாவது தீவிர தமிழ் இலக்கியம் என்பதாக தங்கள் எழுத்து பற்றிக் கருதுபவர்கள் அனைவரும் ‘உள்ளத் தேடல்களே’ அதி உன்னதமான இலக்கியம் என்கிற போக்கு உள்ளவர்களாகி வருகிறார்கள். அதனாலேயே இது போன்ற உள்ளக் கிடக்கைகளும், ஹேரிபாட்டரைப் போன்ற கற்பனைகள் கொண்ட கதைகளும் மட்டுமே தீவிர இலக்கியங்கள் என்கிற மனப்பிரமை கொண்டு அதற்குள்ளேயே உழலும் எழுத்தாளர்களும், எழுத்தாளர்களின் பிரபலத்தில் மயங்கி இவ்வெழுத்தாளர்களின் எழுத்துக்களும், அவர்கள் எடுத்துக்கொள்ளும் களங்களும் மட்டுமே உயர்ந்த இலக்கியம் என நம்பத் தலைப்படும் வாசகர்களும் ஏராளம்.

    இன்னொன்று அரசியல் கலந்து எழுதப்பட்டால் அது அவ்வளவு எளிதில் தீவிர இலக்கியம் என்கிற தகுதியை அடையவே முடியாத நிலை நிலவுவதும் ஒரு காரணம். வெரைட்டியாக எழுத எழுத்தாளர்கள் உருவாகததும் ஒரு காரணம். ஒரு விதத்தில் உயிர்மையின் இம்முயற்சியில் சலித்துப் போய் பிற்காலத்தில் குடும்பம், காதல், உள்ளத் தேடல் போன்ற வழக்கமான விஷயங்களைத் தாண்டி துணிவாக சமூகத்தை அலசி எழுதும் எழுத்தாளர்கள் உருவாகலாமோ?

  17. சமூகத்தின் அடிப்படையான பிரச்சனைகளைப் பற்றி எழுதினால் அது இலக்கியமாகாது- அது அரசியல், வெறும் பிரசாரம் என்றெல்லாம் திட்டி ஒதுக்கி வந்த கூட்டத்தின் கடைசிக் காவலாளி சு. ராமசாமி.

    அங்கே உருவாகி வளர்ந்து முற்போக்கான அரசியல் கருத்துக்களை முன்வைத்த படைப்புக்களை நிராகரித்து ஜெயமோகன் வகையான் வக்கிர அரசியலை மட்டும் கண்டும் காணாமல் விட்ட வெறும் புத்தக வியாபாரி தான் மனுஷ்ய புத்திரன். அவர் ஜெயலலிதா மீது 5-6 வருசம் முன்பு எழுதிய வசைபுராணத்தைக் காலச்சுவடு பெருமையுடன் வெளியிட்டது.
    அதைத் தூய இலக்கியக் கும்பல் கொண்டாடியது.

    நவீன (+ பின் நவீன) இலக்கியம் என்ற பேரில் வெளியில் எங்கெங்கோ கண்டதை எல்லாம் ஒழுங்காக விளங்கிக் கொள்ளாமல் தமிழுக்குள் கொண்டுவந்து கொட்டுகிறதும் வாசகனுக்கு விளங்காமையையே இலக்கியத் தகுதியாக்கித் தங்களைத் தாங்களே உயர்த்திதக் கொள்ளுவதும் இந்தக் கூட்டத்துக்குக் கைவந்த கலை.
    அடி மனதில் உள்ளது என்னவோ வெறும் வியாபாரம் தான்.

    அவர்களைச் கொல்லி என்ன பயன்? அறியாமையால் அவர்களை மெச்சித் திரிகிற ஒரு கூட்டம் இருக்கிறதே. அது திருந்தும் வரை அவர்கள் பாடு கொண்டாட்டம் தான்.

  18. வினவு நல்லாதானே இருக்கீங்க?? தலைல எதும் அடிப்பட்டுடுச்சா??
    சின்னபிள்ளைத்தனமா அநியாயத்தை எதிர்க்கிறோம்னு எல்லாத்துக்கும் எழுதி மரியாதைய குறைச்சுக்காதீங்க.
    விட்ட வினவு டீம்ல இருக்க 4 பேரை தவிர ஊர்ல ஒருத்தனும் யோக்கியன் இல்லன்னு சொல்லுவிங்க போல??

    • மதன் செந்தில்,

      தமிழக அரசின் நூலகத்துறை என்பது நமது மக்கள் பணத்தில் நடத்தப்படும் பொது நிறுவனம். இதில் கண்ட கண்ட குப்பைகளையும் கட்சி செல்வாக்கின் காரணமாக தள்ளுவதை நாம் எதிர்க்க வேண்டும் என்பதையே இந்தக் கட்டுரையின் சாரம் எடுத்துரைக்கிறது. அதில் என்ன தவறு?

  19. காளமேகம் அண்ணாச்சிக்கு இம்புட்டு இலக்கிய அறிவா! விழுந்து, விழுந்து சிரித்து, வியந்தும் போய்விட்டேன். அண்ணாச்சி அடிக்கடி எழுதனும்.

    விவாதிப்பவர்கள் சாரத்தைப் பற்றி விவாதித்தால் நன்றாக இருக்கும். அதென்னமோ தெரியுல! மாயமோ தெரியுல! சாரத்தை விட்டுபுட்டு வார்த்தைகளை பிடித்து தொங்குவது தான் பலருக்கு செளகரியமாக இருக்கிறது.

  20. சுஜாதாவிற்கு ஏராளமான வாசகர்கள் உண்டுதான். ஆனால் அவர் எழுதியவை எல்லாமே ஆஹா,சூப்பர் என்பது ஓவர். பல குப்பைகளையும் அவர் சந்தடிசாக்கில் வாசகன் மேல் வீசியுள்ளார். சாதிப்பெருமை,சாமிப்பெருமை,நாசூக்காக மற்றவர்களை மட்டம் தட்டுதல் எல்லாம் அவர் எழுத்தை தொடர்ந்து வாசித்தவனுக்குப் புரியும். சினிமாக்காரர்களில் அவருக்கு மணிரத்தினம், சங்கர் மட்டுமே உசத்தியானவர்கள். அவர்கள் சுட்டதெல்லாம் அவர் கண்களுக்குத் தெரியாது. காரணம் ஏன் என்பதை விளக்கிச்சொல்லி மற்றவர்களையும் சந்திக்கு இழுக்க இது இடமல்ல. உயிர்மை- பிரபலமானவர்களின் சகவாசம் வந்தாலே அவர்களுக்கு முதுகு சொரிந்துவிடும் குணமும் சேர்ந்து வரும் என்பதற்கு மனுஷ்யபுத்திரனும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்.

  21. எது இலக்கியம், எது குப்பை என்பதை யார் எந்த அடிப்படையில் தீர்மானிப்பது ? காலம் தான் சரியான் தீர்வு அளிக்கும். நீங்கள் அல்ல. ’மேட்டிமை திமிர்’ என்று அடிக்கடி சொல்வீர்களே, அது உங்களுக்கு தான் மிக மிக அதிகம் உள்ளது. பல கட்டுரைகளில் உள்ள தொனி மற்றும் பாணி அதைதான் மீண்டும் மீண்டும் சொல்கிறது.

    இப்பவே, இப்படி மேலோட்டம்மாக, வசைபாடுகிறீர்களே, உங்க குழு செம்புரட்சி செய்து ஆட்சி அதிகாரத்தை கைபற்றினால் என்ன செய்வீர்கள் ? உயிர்மையை முதலில் தடை செய்வீர்கள். மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்களை தடை செய்வீர்கள். பலரையும் கைது செய்வீர்கள். யார் ‘இலக்கியம்’ படைக்கலாம் என்பதை ’கட்சி’ தான் தீர்மானிக்கும். இதுதானே உங்களின் ‘மக்கள் ஆட்சி’. ஃபாசிசம் பற்றி நீங்க பேசறீங்க. சிரிப்பா இருக்கு.

    • எது இலக்கியம், எது குப்பை என்பதை தி.மு.க பெரிய மனிதர்களை வைத்து உயிர்மை தீர்மானிக்கிறது என்ற எளிய உண்மை கூட தங்களுக்கு தெரியவில்லை என்றால் கண்ணெதிரே உள்ள அநீதியைக்கூட தட்டிக்கேட்கமாட்டேன், ஆதரிப்பேன் என்றால் உழைக்கும் மக்களின் செம்புரட்சி கசக்கத்தான் செய்யும்.

      • //எது இலக்கியம், எது குப்பை என்பதை தி.மு.க பெரிய மனிதர்களை வைத்து உயிர்மை தீர்மானிக்கிறது என்ற எளிய உண்மை///

        இல்லை. தவறான வாதம். அப்படி எல்லாம் ’இலக்கியத்தை’ எந்த கொம்பனும் ‘தீர்மானிக்க’ முடியாது. வாசகர்கள் தான் நீண்ட கால நோக்கில் தீர்மானிக்கின்றனர். நூல்கள் விற்பது அவர்களினால் தான்.

        • //இல்லை. தவறான வாதம். அப்படி எல்லாம் ’இலக்கியத்தை’ எந்த கொம்பனும் ‘தீர்மானிக்க’ முடியாது. வாசகர்கள் தான் நீண்ட கால நோக்கில் தீர்மானிக்கின்றனர். நூல்கள் விற்பது அவர்களினால் தான்.//

          இணையத்தில் சரச சல்லாப இலக்கியம்தான் அதிகமாக விற்பனையாகிறது. இதனை தீர்மானிப்பதில் வாச்கரின் பங்கும், இணைய சல்லாப கும்பலின் பங்கும் என்னவிகிதத்தில் உள்ளது? அது ஏன் அப்படி இருக்கிறது?

      • //எளிய உண்மை கூட தங்களுக்கு தெரியவில்லை என்றால் கண்ணெதிரே உள்ள அநீதியைக்கூட தட்டிக்கேட்கமாட்டேன், ஆதரிப்பேன் என்றால் உழைக்கும் மக்களின் செம்புரட்சி கசக்கத்தான் செய்யும்//

        எது ’அநீதி’ தோழர் ? நீங்க அநீதி என்று சொன்னால் அதை உலகம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா ? நல்ல நீதி போங்க. ஃபாசிசம் என்றால் இதுதான். உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும். மற்றவர்கள் எல்லாம் கேனைகள் அல்லது அயோக்கியர்கள் என்ற எண்ணம் தான் ’மேட்டிமை திமிர்’.

        காலம் தான் சரியான் நீதிபதி. எது சரியானது, எது உன்னதமானது, எது மேன்மையான இலக்கியம் என்பதெல்லாம் பல நூற்றாண்டுகளில் தெளிவாகிவிடும்.

        • தமிழ்நாட்டில் என்ன சினிமா ஓடவேண்டும் என்பதை சன் டி.வி தீர்மானிக்கவில்லை, உங்களைப் போன்ற அப்பாவிகள்தான் என்பது தெரியாமல் போயிற்றே? ஹாலிவுட் படங்களோ, ஹாரிபாட்டர் இலக்கியமோ எது பார்க்கப்படவேண்டும் என்பதை அமெரிக்காவின் ஏகாதிபத்திய கட்டமைப்பு தீர்மானிக்கவில்லை, உங்களைப் போன்ற ஒன்றுமே தெரியாத நல்லவர்கள்தான் என்பது தெரியாமல் போயிற்றே,

        • வினவு,

          ரொம்ப புத்திசாலித்தனமாக போசறதா நினைபா ? சினிமா பற்றி இங்கு விவாதிக்கவில்லை. எது இலக்கியம், அதை யார் தீர்மானிக்கிறார்கள் என்பதை பற்றி.

          தமிழகத்தில் சன் குழுமம் monopoly நிலையை அடைந்துவிட்டாதுதான். மிக முக்கிய காரணம் Hathaway போன்ற MSO போட்டியாளர்களை அராஜகமாக கேபிளை அறுத்து அழித்ததுதான். மேலும் திருட்டு வீசிடி பெருகியதால், ஒரு படத்தை குறுகிய காலத்தில் பல நூறு தியட்டர்களில் வெளியிட வேண்டிய சுழல். தமிழ் நாட்டில் தான் இந்த நிலை.
          வல்லவனுக்கு வல்லவன் வருவான். பிறகு நீதி பிறக்கும்.

          ஆனாலும் ஒரு படம் வெற்றியடைய செய்வது இது போன்ற குழுமத்தால் முடியாது. ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விஜய் படமும் தோல்வி அடைகிறது.

          ///ஹாலிவுட் படங்களோ, ஹாரிபாட்டர் இலக்கியமோ எது பார்க்கப்படவேண்டும் என்பதை அமெரிக்காவின் ஏகாதிபத்திய கட்டமைப்பு தீர்மானிக்கவில்லை, உங்களைப் போன்ற ஒன்றுமே தெரியாத நல்லவர்கள்தான் என்பது தெரியாமல் போயிற்றே////

          இதை உளரல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வதாம் ? எந்த ’ஏகாதிபத்திய கட்டமைப்பும்’ இவற்றை தீர்மானிக்கவில்லை. அமெரிக்க அரசின் அராஜகங்களை பற்றி பல படங்கள், குறும்படங்கள், யூ டியூப் வீடியோக்கள் நிறைய உள்ளன. அவற்றை யார் ‘தீர்மானிக்கிறார்களாம்’ ?

          the problem with you people is ‘over simplification’ and ‘over generalisation’ with sweeping assumptions.

          More basic problem with you people is that you belive that marxism is a scientific concept with a sound basis. As Das Capital is full of lengthy derivations based on mathamatical models, etc, it sounds a like science, while in fact it is not.

          • புத்திசாலித்தனம் உங்களுக்கு மட்டுமே சொந்தமானதுங்குறது தெரியாமல் போயிற்றே…

            இலக்கியம் வேறு , சினிமா வேறு என்பதும் தெரியாமல் போயிற்றே…

            அதன்படி இலக்கியத்தை வாசகனும், சினிமாவை ஆக்சாபிளேடும் தீர்மானிக்கிறது என்பதும் தெரியாமல் போயிற்றே….

            திருட்டு வி.சி.டியை ஒழிக்கவே சன்.டி.வி ஏகபோகம் என்ற நல்லதை செய்கிறது என்பதும் தெரியாமல் போயிற்றே….

            வல்லவனுக்கு வல்லவன் வருவான், நீதி பிறக்கும் என்ற சங்கராச்சாரி அருளுரையும் தெரியாமல் போயிற்றே….

            அமெரிக்க அரசின் கொள்கையை ஆதரிக்கும் படங்களை விட எதிர்க்கும் குட்டி படங்களைத்தான் உலகில் அதிக மக்கள் பார்க்கிறார்கள் என்ற உண்மையும் தெரியாமல் போயிற்றே….

        • //திருட்டு வி.சி.டியை ஒழிக்கவே சன்.டி.வி ஏகபோகம் என்ற நல்லதை செய்கிறது என்பதும் தெரியாமல் போயிற்றே//

          i didn’t say that. you are twisting these. thiruttu DVDs exisit all over India. I clearly said Sun TV group had become a monopoly using illegal and unethical means. and some day they will pay for this. ok. that is the lesson from history. all fasicists and cronies fall one day. ok.

          ///அமெரிக்க அரசின் கொள்கையை ஆதரிக்கும் படங்களை விட எதிர்க்கும் குட்டி படங்களைத்தான் உலகில் அதிக மக்கள் பார்க்கிறார்கள் என்ற உண்மையும் தெரியாமல் போயிற்றே….///

          எதை மக்கள் பார்க்கிறார்கள் என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். நீங்களோ அல்லது அமெரிக்க அரசோ அல்ல.

          முதலில் உயிர்மை பற்றிய விவாதத்திற்க்கு direct answer சொல்ல முயல்க.

        • //எதை மக்கள் பார்க்கிறார்கள் என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். நீங்களோ அல்லது அமெரிக்க அரசோ அல்ல. //

          அதுதான் எப்படி மக்கள் தீர்மானிக்கிறார்கள்? அந்த ரகசியம் என்ன?

    • //எது இலக்கியம், எது குப்பை என்பதை யார் எந்த அடிப்படையில் தீர்மானிப்பது ? காலம் தான் சரியான் தீர்வு அளிக்கும். நீங்கள் அல்ல. ’மேட்டிமை திமிர்’ என்று அடிக்கடி சொல்வீர்களே, அது உங்களுக்கு தான் மிக மிக அதிகம் உள்ளது. பல கட்டுரைகளில் உள்ள தொனி மற்றும் பாணி அதைதான் மீண்டும் மீண்டும் சொல்கிறது.//

      நீங்க கூடத்தான் செம்புரட்சி பற்றியும், மக்களுக்கான இலக்கியம் பற்றியும் பலமுறை இது போன்ற அவமதிப்பான கருத்து சொல்லியிருக்கிறீர்கள். இவையெல்லாம் அவரவர் சார்பு நிலையிலிருந்து வருவது. வினவு தனது சார்பு நிலையை மறைத்ததில்லை. நீங்கள்தான் அதனை மறைத்துக் கொண்டு அனைவருக்கும் பேசுவது போல ‘மேட்டிமைத்தனத்துடன்’ அறிவுரை சொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளீர்கள்.

      • அதியமான் இப்போ சொன்னது:
        //எதை மக்கள் பார்க்கிறார்கள் என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். நீங்களோ அல்லது அமெரிக்க அரசோ அல்ல. //

        இப்படிச் சொல்லும் அதியமான் இதே கருத்தை தலைகீழாக முரன்பட்டு வல்லவனுக்கு வல்லவன் வந்து நீதி சொல்லுவான் என்று முரன்பட்டுள்ளார். அது இங்கே:

        அதியமான் கொஞ்ச நேரம் முன்ன சொன்னது:
        //தமிழகத்தில் சன் குழுமம் monopoly நிலையை அடைந்துவிட்டாதுதான். மிக முக்கிய காரணம் Hathaway போன்ற MSO போட்டியாளர்களை அராஜகமாக கேபிளை அறுத்து அழித்ததுதான். மேலும் திருட்டு வீசிடி பெருகியதால், ஒரு படத்தை குறுகிய காலத்தில் பல நூறு தியட்டர்களில் வெளியிட வேண்டிய சுழல். தமிழ் நாட்டில் தான் இந்த நிலை.
        வல்லவனுக்கு வல்லவன் வருவான். பிறகு நீதி பிறக்கும்.//

        இப்போ கேள்வி என்னவென்றால், மோனோபாலி செய்து மக்கள் எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானிக்கும் இவர்கள் தீர்மானிக்கிறார்களா? இல்லை ஒரு ருபா அரிசிக்கும், இலவச கலர் டிவிக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், நித்தியானந்தாவுக்கும், பங்காரு அடிகளாருக்கும் மயங்கும் மக்கள் தீர்மானிக்கிறார்களா?

        • //இப்போ கேள்வி என்னவென்றால், மோனோபாலி செய்து மக்கள் எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானிக்கும் இவர்கள் தீர்மானிக்கிறார்களா? இல்லை ஒரு ருபா அரிசிக்கும், இலவச கலர் டிவிக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், நித்தியானந்தாவுக்கும், பங்காரு அடிகளாருக்கும் மயங்கும் மக்கள் தீர்மானிக்கிறார்களா?//

          பன்னாட்டு நிறுவனங்கள் ஊடகங்களை தங்களது கையில் வைத்துள்ள நீர ராடியா சாட்சி. விக்கிலீக் எனும் சுதந்தர ஊடகத்தை முடக்கும் சர்வதேச ஊடக கூட்டணி மக்கள் எதை படிக்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள் என்பதற்கு சாட்சி. இது மாதிரி இன்னும் பல உதாரணங்கள் கொடுக்க முடியும்.

          என்ன செய்ய, நம்ம அதியமான் அண்ணாச்சிக்கு இணையம் பார்க்கும் 2% மக்கள்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் என்பதாகத்தானே புரிதல் உள்ளது? விக்கிலீக்கும், நீரா ராடியாவையும் விட -ஆசேஞ்சு செக்ஸ் வைத்துக் கொண்டதும், அ. ராசா கனிமொழி கிசுகிசுவும்தானே மக்களுக்குப் போய்ச் சேருகிறது?

          இதையெல்லாம் மக்கள்தான் தீர்மானகரமாக தேடிப்பிடித்து படிக்கிறார்கள், ரசனையை வளர்க்கிறார்கள் என்று நம்ப வேண்டும் நாம். இல்லையேல் நாமெல்லாம் பாசிஸ்டுகள். இப்படி சொல்வது சாட்சாத் அதியமான் அண்ணாச்சியேதான்

        • //இல்லை ஒரு ருபா அரிசிக்கும், இலவச கலர் டிவிக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், நித்தியானந்தாவுக்கும், பங்காரு அடிகளாருக்கும் மயங்கும் மக்கள் தீர்மானிக்கிறார்களா?///

          even though the ‘choice’ of people may be disagreeable to many of us here, let them choose on their own for whom they vote or what they buy or consume. No one has the right to force thru coercion people from buying or not buying what they CHOOSE. ok. certainly no communist dictator. ok.

        • //even though the ‘choice’ of people may be disagreeable to many of us here, let them choose on their own for whom they vote or what they buy or consume. No one has the right to force thru coercion people from buying or not buying what they CHOOSE. ok. certainly no communist dictator. ok.//

          மக்களே இந்த சுத்தபத்த லிபரேட்டிரனியனின் கற்பனாவாத அபத்தத்தை நான் இனி அம்பலப்படுத்தப் போவதில்லை.

          ஆண்டி அங்கிள் வைரஸ்கள், நீலப் படங்கள், செக்ஸ் வக்கிரப் படங்கள், போதை வஸ்துக்கள், டாஸ்மாக்குகள் என எல்லாவற்றையுமே அதியமான தடையின்றி அனுமதிக்க விரும்புகிறார் போலுள்ளது.

          சரியாகச் சொன்னால் முதலாளித்துவவாதி என்ற நிலையிலிருந்து இந்தப் புள்ளியில் இவர் அராஜகவாதி -அனார்ஜிஸ்டு என்று புள்ளிக்கு செல்கிறார். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து சிந்தித்தால் ஒன்று இந்தப் பக்கம் வந்து கம்யூனிஸ்டாகவோ அல்லது அல்லது அந்தப் பக்கம் போய் பாசிஸ்டாகவோ மாற வாய்ப்புள்ளது. பார்க்கலாம்.

          ஆனால், இன்னமும் கார்போரேட் டிக்டேட்டர்கள் மக்களின் ரசனையை தீர்மானிப்பது பற்றியும், மக்கள் இலக்கியம் என்று எதை இப்போது தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது பற்றியும் லிபரேட்டிரியனின் மேன்மையான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

        • //சரியாகச் சொன்னால் முதலாளித்துவவாதி என்ற நிலையிலிருந்து இந்தப் புள்ளியில் இவர் அராஜகவாதி -அனார்ஜிஸ்டு என்று புள்ளிக்கு செல்கிறார்.///

          சரியான உளரல். முதலில் libertarianism என்றால் என்னவென்று தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள்.

          /// இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து சிந்தித்தால் ஒன்று இந்தப் பக்கம் வந்து கம்யூனிஸ்டாகவோ அல்லது அல்லது அந்தப் பக்கம் போய் பாசிஸ்டாகவோ மாற வாய்ப்புள்ளது. பார்க்கலாம்.///

          மேலும் உளரல். உமது லாஜிக்கை என்னவென்பது !!!

          ////ஆனால், இன்னமும் கார்போரேட் டிக்டேட்டர்கள் மக்களின் ரசனையை தீர்மானிப்பது பற்றியும், மக்கள் இலக்கியம் என்று எதை இப்போது தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது பற்றியும் லிபரேட்டிரியனின் மேன்மையான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்////

          மக்களின் ரசனையை communist or fascist சர்வாதிகரிகள் தீர்மானிக்கும் முறையை விட இம்முறை மேல். கார்பரேட் டிக்டேட்டர்கள் என்ற சொல் முரணானது. கார்ப்ரேட் மார்கடிங் என்று சொல்லாம். சர்வாதிகாரம் எதுவும் இதில் இல்லை. free choice உண்டு. மாற்று கருத்துகள், ரசனைகளை யாரும் அதிகாரத்தின் மூலம் நசுக்கவில்லை.

          பல நூறு புதிய பதிப்பாளர்கள், ஆயிரக்கணக்கான புதிய நூலகள், லச்சக்கணக்கில் புதிய வாசகர்கள் இன்று உருவாகி உள்ளனர். சகல துறைகளை பற்றியும், அனைத்து கோணங்கள், கோட்ட்பாட்டின் அடிப்படையிலும் இன்று அலசல்கள், கருத்துக்கள் உள்ளன. சென்னை புத்தக கண்காட்சி இதற்க்கு சான்று. உங்க கீழை காற்று பதிப்பகமும் கூட சர்வ சுதந்திரமாக அனுமதிக்கபடுகிறது. அனைத்து தரப்பினரும் தான். தமிழகத்தை விட இன்னும் சுதந்திரம் அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் நாடுகள் பலவும் உண்டு.

      • //எது இலக்கியம், அதை யார் தீர்மானிக்கிறார்கள் என்பதை பற்றி. //

        இப்போ எனக்கு ஒரு பெரிய டவுட்டு, அதியமான் சொல்கிறார் எது இலக்கியம் என்பதை மக்கள் தீர்மானிக்கிறார்கள் என்று.

        சரி, இப்போ மக்கள் இலக்கியம் என்று எதை தீர்மானித்துள்ளனர் என்று கொஞ்சம் சொல்லுங்களேன் அதியமான் – அல்லது உங்களுக்கு சங்கடமா இருந்த லிபேரேட்டிரியன்?

      • //வினவு தனது சார்பு நிலையை மறைத்ததில்லை. நீங்கள்தான் அதனை மறைத்துக் கொண்டு அனைவருக்கும் பேசுவது போல ‘மேட்டிமைத்தனத்துடன்’ அறிவுரை சொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளீர்கள்///

        சார்பு நிலையை யாரும் மறைப்பதில்லை. தேவையும் இல்லை. மேட்டிமை திமிருடன் பேசுவது பற்றி தான் இங்கு சொன்னேன். முக்கியமாக நீர் பேசிய பேச்சுகளை பற்றி முத்தமிழ் கூகுள் குழுமத்தினரிடம் கேட்டுபார்க்கலாமா ? கருத்துகளை சொல்லும் முறை பற்றிதான் சொல்கிறேன். கருத்துரிமை பற்றி அல்ல.

        இந்த கட்டுரையில் ஏதாவது objective criticism கொஞ்சமாவது உள்ளதா ? வெறும் மேலோட்டமான வசைகள் மற்றும் தனிமனித தாக்குதல்கள். இதை தான் மேட்டிமை திமிர் என்று சொல்வார்கள்.

    • //பலரையும் கைது செய்வீர்கள். யார் ‘இலக்கியம்’ படைக்கலாம் என்பதை ’கட்சி’ தான் தீர்மானிக்கும். //

      இந்த கற்பனைகளை எத்தனை முறை பதில் சொல்லியும் மீண்டும் மீண்டும் கடை விரிக்கும் உங்களது அல்ப தந்தொரோபாயம் கண்டுதான் இங்கு நான் சிரித்து மகிழ்கிறேன். ஏதாவது உருப்படியான வாதங்கள் வையுங்கள்? கஞ்சி ஓவரா புளித்துவிட்டது.

      • Asuran,

        Only ignorant and the arrogant will laugh at history. It is a fact that thousands of writers and artists were banned or arrested by communist regimes in the past. that is what Vinavu group will do if and when it captures power. I find no denial of their objectives anywhere. in fact, one comrade named Thalapathi confirmed this in person during a blogger meet. He clearly stated that only the ‘committe’ will decide which books and authors will be allowed and what will be banned. that is your agenda. All i ask for is to some honesty and openness in declaring them here. Let us argue about its merits or demerits later.

        and this is what Lenin and other leaders did in the past :

        http://www.ibiblio.org/expo/soviet.exhibit/attack.html
        Attacks on Intelligentsia: Early Attacks

        • //ஆனால், இன்னமும் கார்போரேட் டிக்டேட்டர்கள் மக்களின் ரசனையை தீர்மானிப்பது பற்றியும், மக்கள் இலக்கியம் என்று எதை இப்போது தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது பற்றியும் லிபரேட்டிரியனின் மேன்மையான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.//

          ஆனா பாருங்க மக்களே, கொஞ்ச நேரம் வரை உயிர்மை பற்றிய மைய கேள்விக்கு பதில் சொல்லு வினவு என்று கேட்டுக் குதித்துக் கொண்டிருந்தார் அன்பு நண்பர் லிபரேட்டேரியன் அவர்கள். நானும் அந்தக் கேள்விக்கு வந்தே விவாதிக்கும் வகையில் மேலேயுள்ள எதிர்வினையை இட்டு சில பல பின்னூட்டங்கள் கடந்துவிட்டன.

          ஆயினும் லிபரேட்டேரியன் அவர்கள் துணைக் கோளைப் போல அந்தக் கேள்வியை சுற்றிச் சுற்றி வருகிறாரேயொழிய கேள்விக்கு வரவே மாட்டேன் என்கிறார்.

          அட சும்மா உள்ள வாங்க லிபரேட்டேரியன், நாம இப்படி விளையாடுறது இதென்ன மொத முறையா என்ன?…

        • Attacks on Intelligentsia: Renewed Attacks

          The pattern of suppressing intellectual activity, with intermittent periods of relaxation, helped the party leadership reinforce its authority. After 1923, when threats to the revolution’s survival had disappeared, intellectuals enjoyed relative creative freedom while the regime concentrated on improving the country’s economic plight by allowing limited free enterprise under the Lenin’s New Economic Policy.

          But in 1928, the Central Committee established the right of the party to exercise guidance over literature; and in 1932 literary and artistic organizations were restructured to promote a specified style called socialist realism. Works that did not contribute to the building of socialism were banned. Lenin had seen the need for increasing revolutionary consciousness in workers. Stalin now asserted that art should not merely serve society, but do so in a way determined by the party and its megalomaniacal plans for transforming society. As a result, artists and intellectuals as well as political figures became victims of the Great Terror of the 1930s.

          During the war against Nazi Germany, artists were permitted to infuse their works with patriotism and to direct them against the enemy. The victory in 1945, however, brought a return to repression against deviation from party policy. Andrei Zhdanov, who had been Stalin’s spokesman on cultural affairs since 1934, led the attack. He viciously denounced such writers as Anna Akhmatova, Boris Pasternak, and Mikhail Zoshchenko, who were labeled “anti-Soviet, underminers of socialist realism, and unduly pessimistic.” Individuals were expelled from the Union of Writers, and offending periodicals were either abolished or brought under direct party control.Zhdanov died in 1948, but the cultural purge known as the Zhdanovshchina continued for several more years. The noted filmmaker Sergei Eisenstein and great composers such as Sergei Prokofiev and Dmitrii Shostakovich were denounced for “neglect of ideology and subservience to Western influence.” The attacks extended to scientists and philosophers and continued until after Stalin’s death in 1953.

      • ////பலரையும் கைது செய்வீர்கள். யார் ‘இலக்கியம்’ படைக்கலாம் என்பதை ’கட்சி’ தான் தீர்மானிக்கும். ////

        இந்த வாதத்தை இந்த ஒரு பதிலுடன் முடித்துக் கொள்கிறேன். இதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு தகவல் பதிவு என்ற அளவில் இந்த பின்னூட்டம்.

        காந்தியவாதி ஹிமன்ஸு குமார் கைது, மனித உரிமைவாதி பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை, ஐரோம் சர்மிளி பத்து வருடங்களுக்கும் மேல் கைது, டெல்லி, குஜாராத் முதல் இந்தியாவெங்கும் பல அப்பாவிகள், ஜனநாயகவாதிகள், எழுத்தாளர்கள் கைது, கொலை, மிரட்டல், சீமான் எனும் சினிமா இலக்கியவாதி(ஒரு ஆர்க்யூமெண்டுக்கு வைச்சிகுவோம்பா).

        இதை செய்தவர்கள் யார்? யாருக்காக இதைச் செய்தார்கள்? பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே இவை செய்யப்பட்டன. அவற்றின் சுரண்டல், கொடுங்கோல்மையை அம்பலப்படுத்தியதற்காகவே ஒடுக்கப்பட்டவர்கள் இவர்கள் – இவர்களின் இலக்கியவாதிகளும் உண்டு.

        ஆனால் அதியமான் ஆருடம் சொல்லுவார்- நாளைக்கி ஒரு செம்புரட்சி வரும் அதுல நிறைய கைது செய்வாங்க, கொலை செய்வாங்க, இப்போ ‘இருக்குற’ மாதிரி ஜனநாயகமே இருக்காது – என்றெல்லாம். இந்த அரூடத்தை நம்பியோடர் நல்லவர், அல்லாதோர் பாசிஸ்டுகள். என்னவொரு எளிய வரையறை இல்லையா?

        அதியமானின் நம்பினால் நம்புங்கள்… நம்பிக்கைதான் வாழ்க்கை…

        • //காந்தியவாதி ஹிமன்ஸு குமார் கைது, மனித உரிமைவாதி பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை, ஐரோம் சர்மிளி பத்து வருடங்களுக்கும் மேல் கைது, டெல்லி, குஜாராத் முதல் இந்தியாவெங்கும் பல அப்பாவிகள், ஜனநாயகவாதிகள், எழுத்தாளர்கள் கைது, கொலை, மிரட்டல், சீமான் எனும் சினிமா இலக்கியவாதி(ஒரு ஆர்க்யூமெண்டுக்கு வைச்சிகுவோம்பா).

          இதை செய்தவர்கள் யார்? யாருக்காக இதைச் செய்தார்கள்? பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே இவை செய்யப்பட்டன. அவற்றின் சுரண்டல், கொடுங்கோல்மையை அம்பலப்படுத்தியதற்காகவே ஒடுக்கப்பட்டவர்கள் இவர்கள் – இவர்களின் இலக்கியவாதிகளும் உண்டு///

          Asuran,

          Genuine liberal democrats and libertarians too do not condone or support all these violations done by Indian govt. ok. What is happening in India is certainly not democratic nor real free market policies. Right to property of the poor farmers and tribals are violated freely here.
          But that is not possible in present day Europe or Canada where mines and factories are created till date in a democratic and fair manner. The lands are bought from the owners by the private companies directly. no govt intervention of SEZs. here land mafia in collusion with govt staff play a cruel game. ok.

          and India is not the same as W.Europe where there is maximum possible political and civil rights with minimum possible corruption. All are labelled as ‘capitalist democracies’ ; mere labels..

          our contention is that people like you who blindly support stalinism and maoism (under which even more terrible violations occur) have no moral right to talk about these violations.

        • //Genuine liberal democrats and libertarians too do not condone or support all these violations done by Indian govt. ok. What is happening in India is certainly not democratic nor real free market policies. Right to property of the poor farmers and tribals are violated freely here.//

          இந்தக் கருத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள். இந்த அடிப்படையில் நமது ஐக்கியம், இலக்கு சாத்தியமே.

          இந்தியாவின் இந்த பிரச்சினைக்கு மாற்று என ம.க.இ.க.வினர் சொல்வது புதிய ஜனநாயகப் புரட்சி. அது உங்களைப் போல, மா.சியைப் போல இந்தியாவில் ஜனநாயகம் வேண்டும் என விரும்புகிறவர்களுடனும், இன்னபிற ஜனநாயக அமைப்புகள்-கட்சிகளுடனும், புரட்சிகர சக்திகள் இணைந்து நடத்தும் புரட்சி ஆகும்.

          அது அடிப்படையில் – தேசிய விடுதலைக்காக போராடுபவர்கள் நிர்மானிக்கும் ஒரு முதலாளித்துவ ஜனநாயகமே ஆகும்.

          மேலும், கம்யூனிச ‘சர்வாதிகாரம்’ அல்லது பாட்டாளி வர்க்க ‘ஜனநாயகம்’ எனப்படும் அமைப்பில் மக்களுக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்துவது கலாச்சாரப் புரட்சி ஆகும். அது கோடாப்பாட்டளவில் அதியமான் – லிபரேட்டேரியன் முன் வைத்துள்ள கருத்தான ‘மக்களே எது சிறந்தது என தீர்மானிக்கிறார்கள்’ என்பதையே அளவுகோலாகக் கொண்டது – இதன் விளைவாகவே சீனாவில் சில பல அநீதிகளும் நிகழ்ந்தன.

          தவறு செய்யாமல் கற்றுக் கொள்ள இயலாது, கம்யூனிசமும்(முதலாளித்துவமும் கூட அதன் முதல் முயற்சிகளில் தவறுதலான பல சோதனைகளில் பாடம் கற்றே முழுமை பெற்றது) அதனை நடைமுறைப்படுத்தும் போக்கில் தவறுகள் செய்துள்ளது ஆனால் அதன் அடிப்படைக் கோட்பாடுகள் மிகச் சரி என்பதையே காலம் நிரூபித்துள்ளது.

          மக்கள் மீது நம்பிக்கை கொண்டவரா நீங்கள்? எனில் உங்களிடம் பாராதூரமாக முரன்பட எனக்கு எதுவும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

        • ////Genuine liberal democrats and libertarians too do not condone or support all these violations done by Indian govt. ok. What is happening in India is certainly not democratic nor real free market policies. Right to property of the poor farmers and tribals are violated freely here.////

          கண்முன் நடக்கும் இந்த அநீதிகளை ஒழிக்க உங்களது நடவடிக்கை/தீர்வு என்ன? அதற்காக போராடுபவர்களுடன் உங்களது ஐக்கியம் எவ்வகைப்பட்டதாக இருந்திருக்கிறது/இருக்கிறது?

        • //கண்முன் நடக்கும் இந்த அநீதிகளை ஒழிக்க உங்களது நடவடிக்கை/தீர்வு என்ன? அதற்காக போராடுபவர்களுடன் உங்களது ஐக்கியம் எவ்வகைப்பட்டதாக இருந்திருக்கிறது/இருக்கிறது?

          ///

          Asuran,

          First answer these questions for yourselves. Then you ask me or others this question.
          For example i support PUCL and other activists. but not fascists who call themselves communists. ok

        • ////கண்முன் நடக்கும் இந்த அநீதிகளை ஒழிக்க உங்களது நடவடிக்கை/தீர்வு என்ன? அதற்காக போராடுபவர்களுடன் உங்களது ஐக்கியம் எவ்வகைப்பட்டதாக இருந்திருக்கிறது/இருக்கிறது?

          ///
          //கண்முன் நடக்கும் இந்த அநீதிகளை ஒழிக்க உங்களது நடவடிக்கை/தீர்வு என்ன? அதற்காக போராடுபவர்களுடன் உங்களது ஐக்கியம் எவ்வகைப்பட்டதாக இருந்திருக்கிறது/இருக்கிறது?

          ///

          Asuran,

          First answer these questions for yourselves. Then you ask me or others this question.
          For example i support PUCL and other activists. but not fascists who call themselves communists. ok////

          இது அதியமானின்/லிபரேட்டேரியனின் அடுத்த காமெடி. நீங்க பியுசிஎல் ஐ சப்போர்ட் பன்னுவது இன்னைக்குத்தான் எனக்குத் தெரியும். உங்க சப்போர்ட்டை மனதுக்குள் வைத்திருந்தால் அதன் பெயர் சப்போர்ட் அல்ல. மேலும், இந்த அநீதிகளை எதிர்த்து யாருடன் ஐக்கியம், இதற்கு மாற்று என்னவென்பதைத்தான் வினவும் இன்னும் பல தோழர்களும் பல இடங்களில் ஏன் இந்த பதிவிலும் கூட வெளிப்படையாக எழுதியுள்ளனர்.

          மேற்சொன்ன இந்த கண்முன் நடக்கும் அநீதிகளுக்கு வெறும் வாய்மொழி சம்பிராதாயப் பூர்வ கண்டனங்களை மட்டும் வெளிப்படுத்தும் லிபரேட்டேரியன், இந்த அநீதிகளை எதிர்த்து வினவு உள்ளிட்ட முற்போக்கு-ஜனநாயகவாதிகள் களமிறங்கும் போதெல்லாம் முதலாளித்துவத்தின் புனிதம் காக்கும் நோக்கத்தை பிரதானமாக முன்னிறுத்தியே விவாதித்துள்ளார் லிபரேட்டேரியன்.

          இன்னிலையில் இந்த அநீதிகளை எதிர்க்கும் வழிவகைகள், அநீதிகளுக்கெதிரான ஐக்கியம், தீர்வு உள்ளிட்டவற்றை ரகசியமாக வைத்திருக்கும் லிபரெட்டேரியன் அவற்றை வெளியிட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  22. அண்ணன் அதியமான் எந்த பெயரில் வந்தாலும் தோழர் அசுரனுக்கு கரெக்டா புரிந்துவிடுகிறது–உடனே வந்துவிடுகிறார் — என்ன ஒரு பாசாப்பிணைப்பு

  23. அதியமான் சொல்வதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தில் இருந்த/இருக்கும் ரஷ்யா/சீனாவில், அங்கீகரிக்கப்பட்ட படைப்பாளிகள், நிராகரிக்கப்பட்ட படைப்பாளிகள் என்று கட்சியின் இலக்கியப் பிரிவு தீர்மானித்த வகையில்தான் இலக்கியம் அனுமதிக்கப்படுகிறது.

    இது, இன்றைய பெருநிறுவன குப்பை பரப்பும் சூழலை விட சிறந்ததாக இல்லை. ஆட்சியாளருக்கு ஏற்புடைய படைப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

    பெருநிறுவனங்களின் கட்டை உடைத்து அதற்கு மாற்றாக கட்சியின் ஆதிக்கத்தைக் கொண்டு வராமல், கட்சியின் கருத்துக்களை பிரச்சார அளவில் வைத்துக் கொண்டு மக்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிப்பது (அது ‘மோசமான’ தேர்வுகளாக இருந்தாலும்) சிறப்பான சூழலாக இருக்க முடியும்.

    ஆட்சி முறை மாறி, கம்யூனிச இயக்கங்களின் சர்வாதிகாரம் ஏற்பட்டால், இன்று நமக்கு இருக்கும், கருத்துரிமை, கலை உரிமை, அரசியல் உரிமைகள் அனைத்தையும் இழக்க வேண்டியிருக்கும். ஏழைகளுக்கும், நலிவுற்றவர்களுக்கும் இன்று உரிமைகள் இல்லை என்று சொல்வது சரியான பதிலாக இருக்க முடியாது. இருப்பதை எடுக்காமல், எல்லோருக்கும் உரிமைகள் கொடுப்பது கம்யூனிச சர்வாதிகார ஆட்சிமுறையில் சாத்தியம் இல்லை என்பதுதான் வரலாற்றுப் பாடம்.

    • மா சிவகுமார்//
      ஏழைகளுக்கும், நலிவுற்றவர்களுக்கும் இன்று உரிமைகள் இல்லை என்று சொல்வது சரியான பதிலாக இருக்க முடியாது.//

      அட நீங்களே கேள்விக்கேட்டு விட்டு, பதிலும் நீங்களும் சொல்லிவிடுரீங்க. நம்ம முதலாளித்துவ ஊடகங்கள் போல.இது தான் சர்வதிகாரம்.

    • மா சிவகுமார்//
      ஆட்சி முறை மாறி, கம்யூனிச இயக்கங்களின் சர்வாதிகாரம் ஏற்பட்டால், இன்று நமக்கு இருக்கும், கருத்துரிமை, கலை உரிமை, அரசியல் உரிமைகள் அனைத்தையும் இழக்க வேண்டியிருக்கும்.//

      சரியாக சொன்னீங்க.கண்டிப்பாக நிலபிரபுத்துவ,முதலாளித்துவ சிந்தனைகளின் மீது சர்வதிகாரம் தான்.ஏன்னென்றால் நூற்றில் முப்பது சதவிதம் கூட இல்லாத உழைக்கும் மக்களை சுரண்டும் சிந்தனைமுறைகளை எப்படி ஒரு பாட்டாளிவர்க்க அரசால் அனுமதிப்பது.

      • ///ஏன்னென்றால் நூற்றில் முப்பது சதவிதம் கூட இல்லாத, உழைக்கும் மக்களை சுரண்டும் சிந்தனைமுறைகளை, எப்படி ஒரு பாட்டாளிவர்க்க அரசால் அனுமதிப்பது.///

        Precisely. இதைதான் இங்கு வெளிப்படையாக அறிவிக்க கோரினேன். ’பாட்டாளி வர்க சர்வாதிகாரம்’ என்றால் என்னவென்று இங்கு வாசிக்கும் பலருக்கும் தெரிந்திரிக்கவில்லை. அதில் என்ன வகையான உரிமைகள் அனுமதிக்கப்பட்டிருக்கும், எவை மற்றும் யார் தடை செய்யப்படுவர் என்பதை வெளிப்படையாக, தெளிவாக, நேர்மையாக இன்றே அறிவிக்க வேண்டும். சுதந்திரம், ஜனனாயகம், ‘மக்கள் ஆட்சி’ போன்ற சொல்லாடல்களை வினவு மற்றும் இதர மார்க்சியர்கள் என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகின்றனர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். அதன் பிறகு அந்த சித்தாந்ததிற்க்கு ஆதாரவு கேட்டு நீங்கள் பிரச்சாரம் செய்யலாம். அதை யாரும் தடுக்கப் போவதில்லை. ஆனால் முழு உண்மையையும் முதலில் சொல்லுங்கப்பா. அதுதான் அடிப்படை நேர்மை.

      • நந்தன்,

        நாடாளுமன்ற மக்களாட்சி அடிப்படையிலான மேற்கத்திய அரசியல் முறை (நிலவுடமை, முதலாளித்துவ சிந்தனைகளை முன்நிறுத்தினாலும்), மாற்று சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கிறது.

        கம்யூனிச சர்வாதிகார ஆட்சியில் மாற்றுக் கருத்துக்களுக்கான இடம் முற்றிலும் மறுக்கப்படுகிறது. மாற்றத்துக்கான விதைகளை தன்னுள்ளே கொண்டிராத அமைப்பு ஆரோக்கியமாக இருக்க முடியாது. எல்லாக் கேள்விகளுக்கும் சரியான விடை கண்டுபிடித்து விட்டதாகவோ, எதிர்கால மாற்றங்களுக்கெல்லாம் விடை தங்களிடம் இருக்கிறது என்றோ ஒரு அமைப்பு சொன்னால் (மதங்கள்) அதை அறிவியல் அணுகுமுறை என்று எடுத்துக் கொள்ள முடியாது.

        • சிவக்குமார்//
          கம்யூனிச சர்வாதிகார ஆட்சியில் மாற்றுக் கருத்துக்களுக்கான இடம் முற்றிலும் மறுக்கப்படுகிறது. மாற்றத்துக்கான விதைகளை தன்னுள்ளே கொண்டிராத அமைப்பு ஆரோக்கியமாக இருக்க முடியாது. எல்லாக் கேள்விகளுக்கும் சரியான விடை கண்டுபிடித்து விட்டதாகவோ, எதிர்கால மாற்றங்களுக்கெல்லாம் விடை தங்களிடம் இருக்கிறது என்றோ ஒரு அமைப்பு சொன்னால் (மதங்கள்) அதை அறிவியல் அணுகுமுறை என்று எடுத்துக் கொள்ள முடியாது.//

          நீங்கள் கம்யூனிச சர்வதிகாரம் என்றால் என்ன என்பதைப்பற்றி தெரிந்துக்கொண்டு விவாதிப்பது நல்லது.சரி முதலாளித்துவ ஜனநாயகம் என்றால் என்ன? அது யாருக்கு ஜனநாயகத்தை அளிக்கிறது.யார் மீது சர்வதிகாரம் செலுத்துகிறது என்று பார்க்கவேண்டும்.மாற்றுக்கருத்து கம்யூனிசத்தின் ஆட்சியில் இடம் இல்லை என்பது என்னவென்று தெரிந்துக்கொள்வதுதான் அறிவாளித்தனம்.பிற்போக்கான நிலப்பிரபுத்துவ,முதலாளித்துவ சிந்தனையை எப்படி பாட்டாளிகளின் ஆட்சியில் அனுமதியளிப்பது?அதன் வளர்ச்சி என்பது முடிந்துவிட்டது.அதனால் இன்னும் சமுகம் வளர்ச்சி அடையமுடியாது.எல்லோருக்கான தேவைகளை அதனால் பூர்த்திசெய்ய முடியவில்லை என்றால் அதன் ஆட்சி,அதன் சிந்தனை இருப்பது பிற்போக்கானதும் இந்த சமுகத்திற்கு எதிரானதும்தானே.அதனால் பாட்டாளிவர்க்கத்தின் ஆட்சி என்பது அதற்கு முன்பு இருந்த எல்லா ஆட்சிகள்,செயல்கள்,சிந்தனைகளைவிட முற்போக்கானதும்,இந்த சமுகத்தை மேற்கொண்டு வளர்ச்சியில் நகர்த்துவதற்கும் இருக்கிறது.அது மட்டும் அல்லாமல் பாட்டாளிவர்க்கம் தான் மனித குலத்தையே சுரண்டும் வர்க்கத்தில் இருந்து விடுதலை செய்கிறது.

        • சர்வாதிகாரம் பற்றிய மா.சியின் இந்த குழப்பத்தை ஏற்கனவே ஒரு பதிவில் சுட்டிக்காட்டியிருந்தேன். நந்தனுக்கு உதவும் என்ற நம்பிக்கையில். ஒருவேளை மா.சிக்கும் உதவலாம்.

          https://www.vinavu.com/2010/07/29/commonwealth-games-india/#comment-27365

    • //ஏழைகளுக்கும், நலிவுற்றவர்களுக்கும் இன்று உரிமைகள் இல்லை என்று சொல்வது சரியான பதிலாக இருக்க முடியாது. ///

      மாசி,

      இது உலகில் உள்ள அனைத்து ‘முதலாளித்துவ ஜனனாயக’ நாடுகளுக்கும் அப்படியே பொருந்துமா என்ன ? உதாரணமாக டென்மார்க், ஸ்வீடன் போன்ற ஸ்காண்டினேவிய நாடுகளில் உள்ள ஏழைகள் மற்றும் நலிவுற்றவர்களுக்கும், இந்தியாவில் உள்ளவர்களுக்கும் ஒரே அளவில், ஒரே விதத்தில் பொருந்துமா ? many sweeping statements and gross generalisations.

      and the trouble with Vinavu comrades is that they view the world in pure ‘black and white’ terms. they have no concept of ‘shades of gray’ that exist everywhere.

    • //இது, இன்றைய பெருநிறுவன குப்பை பரப்பும் சூழலை விட சிறந்ததாக இல்லை///

      எது குப்பை என்று எதை வைத்து தீர்மானிப்பது ? இலக்கியத்தில் ’பெரு நிறுவன குப்பை
      பரப்பும்’ வகைக்களுக்கு உதாரணம் சொல்லுங்க. உயிர்மை வெளியிடுகள் அனைத்தும் இவ்வகைதானா ? அதில் நல்ல இலக்கியங்கள் எதுவும் எப்போதும் இல்லையா ?
      அல்லது பல நூறு பதிப்பகங்கள் வெளியிடும் அனைத்து படைப்புகளும் இதே வகைகளா ?
      மேலும் உயிர்மை பதிப்பகம் என்ன ‘பெரு நிறுவனமா’ ? அல்லது பெரு நிறுவனங்கள் (உதாரணமாக ஆக்ஸ்ஃபோர் யுனிவர்ஸிட்டி பிரஸ், பெங்குவின், போன்றவை) வெறும் குப்பைகளை மட்டும்தான் வெளியிடுகின்றனவா ? அவை குப்பைகளா அல்லது தரம் வாய்ந்தவைகளா என்று யார் எந்த அளவோள்படி எப்படி தீர்மானிப்பது ? அடிப்படை சுதந்திரம் என்றால் என்ன ? சொல்லுங்க நண்பா.

      • அதியமான்,

        கமல்ஹாசனின் தசவதாரமும் ரஜினிகாந்தின் எந்திரனும் முதல் பார்வையாளர் படத்தைப் பார்ப்பதற்கு முன்பே, ஓட்டப் பந்தயத்தில் பாதி தூரம் தாண்டி நிற்கும் ஆதாயம் அளவுக்கு விளம்பரப்படுத்தலையும் பரபரப்பையும் பெறுகிறார்கள்.

        அவற்றுடன் போட்டியிட வரும் தரமான ஒரு படைப்புக்கான இடத்தை பெரிதும் குறுக்கி விடுகிறார்கள். இது போன்ற குப்பைகளுக்கு பெரிய பட்டியலே தயாரிக்கலாம். மக்கள் தீர்மானிப்பார்கள் என்று நீங்கள் சொல்வது, மக்களை மூளைச் சலவை செய்ய பெருநிறுவனங்கள் கோடிகளைக் கொட்டும் ஆதாயம் சில படைப்புகளுக்கு மட்டும் இல்லாமல் இருக்கும் போதுதான் பொருந்தும்.

        there is no level playing field in a corporate dominated world. ரத்தன் டாடாவும், சுனில் மிட்டலும், அனில்அம்பானியும் கோடிகளைக் கொடுத்து தமக்கு சாதகமாக அரசுக் கொள்கைகளை அமைத்துக் கொள்ளும் சாத்தியம் இருக்கும் போது அவர்களுடன் போட்டியிட முயற்சிக்கும் சிறு நிறுவனம் (innovationல் அவர்களுக்கு இளைக்காத) தளிர் கூட விட முடியாமல் கருக்கப்பட்டு விடுகிறது.

        முதலாளித்துவத்தின் இயல்பின் படி சிலரின் கைகளில் மூலதனமும், வளங்களும் குவிந்து கொண்டே போகிறது. இதை தவிர்க்க உறுதியான அரசு தலையீடு தேவைப்படுகிறது.

        மா சிவகுமார்

    • //இது, இன்றைய பெருநிறுவன குப்பை பரப்பும் சூழலை விட சிறந்ததாக இல்லை. ஆட்சியாளருக்கு ஏற்புடைய படைப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.//

      அப்படித் தெரியவில்லையே மா.சி. சோவியத்தின் இலக்கியமும், சினிமாவும் உலகிற்கு செய்த பங்களிப்புகளை ஒரு சில வரிகளில் நிராகரிப்பது சரியல்ல மா.சி. அதுவும் குறிப்பாக இன்று வரை உலகின் எந்த நாட்டினாலும் இட்டு நிரப்ப இயலாத சோவியத் குழந்தை இலக்கியத்தின் இடத்தை மறந்துவிட்டு பேசுவது சரியல்ல மா.சி.

      • சோவியத் யூனியனில் இருந்த “கிளாவ்லிட்” என்ற சென்சார் அமைப்பு போல ஒரு அமைப்பை “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” ஏற்படுத்தும். அதன் பின் நாமெல்லோரும் “புதிய கலாசாரம்” மற்றும் “புதிய ஜனநாயகம்” மட்டும் தான் படிக்க வேண்டும். வேறு “முதலாளித்துவ குப்பைகளை” எல்லாம் படிக்க வேண்டிய கொடுமை இருக்காது.

        http://www.beaconforfreedom.org/about_project/history.html

  24. உயிர்மை, காலச்சுவடு போன்றவை நூல்களை வெளியிடப் படாது என்பதல்ல இங்குள்ள கட்டுரையின் வாதம்.

    இலக்கியத் தரம், தூய கலையும் இலக்கியமும் போன்ற பேர்களில் வணிகம் அப்பட்டமாக நடைபெயறுகிறது.
    அதைச் சுட்டிக்காட்டும் தேவை உள்ளது.

    எது குப்பை என்பது ஒருவரது உலக நோக்கைப் பொறுத்தது தான்.
    ஆனால், எது எந்த நலன் கருதி உருவாகிறது என்பதில் தகராற்றுக்கு அதிகம் இடமிருப்பதில்லை.

    ஒன்றைக் குப்பை என்போர் எந்த நிலைப்பாட்டிலிருந்து சொல்லுகிறார்கள் என்பதை விளங்கிக்கொண்டால் சொல்வதன் நியாயம் விளங்கும்.
    அந்த நிலைப்பாட்டினின்று தூர நின்று விவாதிப்பது ஊமையரும் செவிடரும் விவாதிப்பது போலத் தான்

  25. உயிர்மையின் பதிப்புலக வியாபாரத் தந்திரங்களிலும், எழுத்து மேதாவிகளின் வெளியீட்டு மார்க்கெட்டிங்கிலும் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், ஒரு கேள்வி மட்டும்.

    மனுஷ்ய புத்திரனின் கவிதையை வலிந்து மட்டம் தட்டுவது செயற்கையாகவும், எரிச்சலூட்டுவதாகவும் உள்ளது. அது கவிதை இல்லை என்றால் எது கவிதை என்ற விளக்கத்தையேனும் நீங்கள் விளக்கினால் நல்லது.

    கூடுதலாக, “சனிக்கிழமை கவிதைகள்” என்று ஒரு பகுதி வந்ததே, அது ஏன் நின்று போனது? எத்தனை பேர் அப் பகுதிக்கு தொடர்ந்து கவிதைகளாக எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்? கவிதைத் தளத்தில் இத்தகைய படைப்பு வறட்சி வினவில் நிலவுவதற்கு என்ன காரணம்?

    • நீங்கள் மெச்சும்படியாக மனுஷ்யபுத்திரன் படைத்த கவிதைகளைச் சொல்லுங்கள்.
      அவரை விடச் சிறப்பாக எழுதிய, ‘நிறுவன’ அங்கீகாரமற்ற பலரது கவிதைகளை நான் தருகிறேன்.

      • வேடிக்கையாக இருக்கிறது. ஒன்றை காளமேகம் இழிவுபடுத்துவது தர்க்கப் பொருத்தமற்று அபத்தமாக இருக்கிறது. எனவே எது கவிதை என விளக்குங்கள் எனக் கேட்டால், நீங்கள் மறுபடியும் தொடர்பே இல்லாமல் ஏதோ கேட்கிறீர்கள். என்ன சொல்வது?

    • வேடிக்கையானது ஏதென்றால் மனுஷ்யபுத்திரனுக்காக வரிந்துகட்டிக்கொண்டு வருகிற நீங்களே, மெச்சத்தக்கதாக நீங்கள் கருதும் அவரது ‘கவிதை’ எதையுமே குறிப்பிடத் தயங்குவது தான்.
      அவர் வெகு சராசரியான, விளம்பரத்தால் உயர்ந்த ஒரு ‘கவிஞர்’ என்பதை உங்களாற்கூட மறுக்க இயலவில்லை.

      • எத்துணை அபத்தமாக காளமேகம் எழுதினாரோ, அதே அபத்தத் தொனியில்தான் தங்கள் வாதமும் தொடர்கிறது. அய்யா சாமி, காளமேகம் குறிப்பிடும் கவிதையே நான் மெச்சும் கவிதைதான். போதுமா? நான் கேள்வி எழுப்பியதும், விவாதிக்க விரும்புவதும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் குறித்த எனது திறனாய்வையல்ல. காளமேகத்தின் திறனாய்வைத்தான். உண்மையைச் சொன்னால், மனுஷ்யபுத்திரனுக்காக வரிந்து கட்டிக் கொள்வதில் எனக்கு துளியும் ஆர்வமில்லாத போதும், அத்தகைய நிலைக்கு என்னைத் தள்ளி கொண்டு சென்றிருப்பது, காளமேகத்தின் கண்மூடித்தனமான விமர்சன முறை தான்.

        அந்தக் கவிதை எதன் பொருட்டு இத்துணை இழிவுபடுத்தப்படுகிறது, அதில் உள்ள பிழைதான் என்ன ஐயா? என வினவி, காளமேகத்தின் விமர்சன முறையில் உள்ள அபத்தத்தையே முன்வைத்தேன். இதற்கு நேரடியான பதில் கிடைக்குமா? அந்தக் கவிதையை முன்வைத்து விவாதிப்பது சாத்தியமாகுமா?

    • காளமேகத்தால் எரிச்சலூட்டப்பட்டு உங்களையே முட்டாளாக்கிக் கொண்டீர்கள் போலும்.

      அது நீங்கள் மெச்சுகிற கவிதை என்றால் நீங்கள் மெச்சக் கூடியவர்கள் வரிசையில் பல மட்டரகமான சினிமாப் பாடலாசிரியர்களுக்கும் இடமுண்டு.

      அது ஒரு சராசரிப் புலம்பல். அதில் புதிதாகவோ பயனள்ளதாகவோ ஒரு கருத்தும் இல்லை, கவித்துவமும் இல்லை.

      • @ corporal zero

        தங்களது தீர்ப்புக்கு மிக்க நன்றி. எனது முட்டாள்தனத்திற்கு வருந்துகிறேன். தங்களது சீரிய அறிவை நான் ஒரு போதும் எட்ட இயலாதென்றே கருதுகிறேன். எனது சிற்றறிவுக்கு எட்டியவரை, நான் படித்த மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், மாவோ, கார்க்கி, லூ சூன் யாரும் இத்தகைய முட்டாள்தனமான விமர்சன முறைகளில் ஈடுபட்டதில்லை. எனவே, தங்களது அதி உயர்ந்த மார்க்சியம் வாழ்க!

      • நீங்கள் யாரோ செல்லுவதைவெல்லாம் அபத்தமெனலாம். ஆனால் உங்கள் அபத்தம் சுட்டிக் காட்டப்படும் போது உங்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. என்ன செய்வது!
        ஏந்த அடிப்படையில் ம.பு.வின் முற்குறிப்பிட்ட கவிதையை மெச்சுகிறீர்கள் என்று சொல்ல உங்களால் இன்னமும் இயலவில்லை. மாக்ஸ் முதலானவர்களைச் சாட்சிக்கிழுத்து நழுவப் பார்க்கிறீர்கள்.
        காளமேகத்துக்குச் சவால் விட்டீர்களே. அத் தொடர்பில் இந்தச் சிறிய கேள்விக்குப் பதிலைச் சொல்லிவிட்டாவது போங்களேன்.

        பி.கு. 1
        ஓருவர் முட்டாளாவது பற்றி மாக்ஸ் முதலான அனைவரும விவாதங்களின் போக்கிற் சொல்லியுள்ளனர்.

        பி.கு. 2
        ஒருவர் முட்டாளாவது ஒரு சூழ்நிலையின் விளைவு. அது எல்லாருக்கும் நடக்கக்கூடியது தான். நீங்கள் ஏன் விலக்காக இருக்கவேண்டும்! எனவே கவலையை விடுங்கள்.

  26. அசுரன்,

    சோவியத் இலக்கியப் பங்களிப்புகளை நிச்சயமாக நிராகரிக்கவில்லை. பொழுதுபோக்கு பௌதீகமும், விளையாட்டு கணிதமும், உண்மை மனிதனின் கதையும் பள்ளிப் பருவத்தில் என்னை உருவாக்கிய முக்கியமான நூல்களில் சில :-). கம்யூனிச சீனாவில் படிக்கக் கிடைத்த படைப்புகளும் நிறையவே கற்றுக் கொடுத்திருக்கின்றன.

    நந்தன்,
    30% கூட இல்லாத தரப்பின் கருத்துக்களை ஒட்டு மொத்தமாகத் தடை செய்வதை விட, அதற்கு இடம் கொடுத்து மாற்றுக் கருத்து/பதில் அளிப்பது சரியாக இருக்க முடியும் என்பது என் கருத்து. அதில் என்ன இடைஞ்சல்கள் என்று நினைக்கிறீர்கள்?

    மக்களை எளிதில் மயக்கி விடும் என்றா? மக்களை கவரும்படி எழுதவும் படைக்கவும் பொதுவுடமை தோழர்களும் பழகிக் கொள்ள வேண்டியதுதானே. பழமைக் கொள்கைகளை இருட்டிப்பு செய்வதை விட எதிர் கொண்டு தோற்கடிப்பதுதான் நீண்டகால வெற்றியைத் தரும் என்று நான் நினைக்கிறேன்.

    நூற்றுக் கணக்கான இடுகைகளில் ஏற்படுத்தியதை விட அதிகமான பரபரப்பை ஒரு நகைச்சுவைப் பதிவு ஏற்படுத்தியிருக்கிறது பாருங்கள் 🙂

    அன்புடன்,
    மா சிவகுமார்

  27. சிவக்குமார்
    //நந்தன்,
    30% கூட இல்லாத தரப்பின் கருத்துக்களை ஒட்டு மொத்தமாகத் தடை செய்வதை விட, அதற்கு இடம் கொடுத்து மாற்றுக் கருத்து/பதில் அளிப்பது சரியாக இருக்க முடியும் என்பது என் கருத்து. அதில் என்ன இடைஞ்சல்கள் என்று நினைக்கிறீர்கள்?//

    நீங்கள் மாற்றுக்கருத்து என்று எதை சொல்றிங்க.நிலபிரபுத்துவ சமுகத்தின் அடையாளமான‌ சாதி இருக்கிறது. இதை ஒரு நேர்மையான ஜனநாயகவாதி ஏற்றுக்கொள்வானா? அதனை நியாயப்படுத்தி பிற்போக்குவாதிகள் கதைகள்,கவிதைகள்,சினிமா,புத்தகங்கள் போன்றவற்றின் உதவிக் கொண்டும், அதை மீண்டும் அதே வீரியத்துடன் அமுல்படுத்தவேண்டும் என்று யாராவது பிரச்சாரம் செய்வதையும்,அதற்காக போராடுவதையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீற்காளா?(இதற்கு சாதி இல்லை என்று பொருள்கொள்ளக்கூடாது)அதை அனுமதிப்பிற்களா? சொல்லுங்கள்

    • //நிலபிரபுத்துவ சமுகத்தின் அடையாளமான‌ சாதி இருக்கிறது. இதை ஒரு நேர்மையான ஜனநாயகவாதி ஏற்றுக்கொள்வானா? அதனை நியாயப்படுத்தி பிற்போக்குவாதிகள் கதைகள்,கவிதைகள்,சினிமா,புத்தகங்கள் போன்றவற்றின் உதவிக் கொண்டும், அதை மீண்டும் அதே வீரியத்துடன் அமுல்படுத்தவேண்டும் என்று யாராவது பிரச்சாரம் செய்வதையும்,அதற்காக போராடுவதையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீற்காளா?//

      ஏற்றுக் கொள்வேன்.

      ‘உங்கள் கருத்துடன் நான் உடன்படாமல் இருக்கலாம், ஆனால் அந்தக் கருத்தை வெளியிடுவதற்கா உங்கள் உரிமையை பாதுகாக்க நான் இறுதி வரை போராடுவேன்’. இதுதான் அடுத்தவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பதின் சாரம்.

      நிலப்பிரபுத்துவ சமூகத்தின் அடையாளங்கள் தீயவை என்றால், அதைச் சொல்லிப் புரிய வைக்க முடியாதா? அவர்கள் பிரச்சாரங்களுக்கு எதிர் பிரச்சாரம் செய்து முறியடிக்க முற்போக்கு கருத்துக்களுக்கு வலிமை இருக்க வேண்டும் அல்லவா?

      மா சிவகுமார்

      • உங்கள் கருத்துடன் நான் உடன்படாமல் இருக்கலாம், ஆனால் அந்தக் கருத்தை வெளியிடுவதற்கா உங்கள் உரிமையை பாதுகாக்க நான் இறுதி வரை போராடுவேன்’. இதுதான் அடுத்தவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பதின் சாரம்.

        நிலப்பிரபுத்துவ சமூகத்தின் அடையாளங்கள் தீயவை என்றால், அதைச் சொல்லிப் புரிய வைக்க முடியாதா? அவர்கள் பிரச்சாரங்களுக்கு எதிர் பிரச்சாரம் செய்து முறியடிக்க முற்போக்கு கருத்துக்களுக்கு வலிமை இருக்க வேண்டும் அல்லவா? //

        எதை புரியவைப்பிங்க?சாதியை அதன் விறியத்துடன் நடைமுறைப்படுத்த போராடுவது என்பது மனித தன்மையே இல்லாத செயல் என்று உங்களுக்கு தெரியுமா? மனிதனாகவே இல்லாத ஒருவனுக்கு ஏன் மனித நேயம் பார்க்கவேண்டும்.நீங்கள் என்ன உயர்சாதியை சார்ந்தவரா? சாதிக்கொடுமைகளைப்பற்றி தெரிந்தவராகவே தெரியவில்லை. சாதியை நடைமுறைபடுத்தப்போராடுவதே ஒரு சிலரின் ஆளுமைக்கான சர்வதிகாரம் தன்மையின் வெளிப்பாடுதான் இது கூட தெரியவில்லை.என்னத்த சொல்றது.உங்களுடைய இருப்பு உங்களை பேசவைக்கிறது.ஒரு சிலரின் நன்மைக்காக சர்வதிகாரம் செய்து பெரும்பான்மையானவர்களை ஒடுக்குவது சரி.அது ஜனநாயகம்.ஆனால் பட்டாளிவர்க்கம் தனது சர்வதிகாரத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு ஜனநாயகத்தை கொடுப்பதும்,நிலப்பிரவு,முதலாளித்துவவாதிகளின் மீது சர்வதிகாரம் செலுத்துவது மனித தன்மை மீறிய செயல் என்று சொல்வது போல் இருக்கிறது உங்கள் கருத்து. பாட்டாளிவர்க்க சர்வதிகாரம் தவறு என்றால் அதை தான் கம்யுனிஸ்ட்டுகள் செய்வார்கள்.அது தான் ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட,சுரண்டப்பட்ட வர்க்கங்களுக்கு விடுதலை கொடுக்கக்கூடியது.

  28. மருத்துவர் ருத்திரன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் :

    உங்கள் அபிமான எழுத்தாளரான ல.ச.ரா அவர்களிn படைப்புகளை பற்றி (முக்கியமாக அவரின் ‘அபிதா’ பற்றி) வினவு குழுவினர் ஒரு ‘literary criticism’ (அதாவது அவர்கள் பாணியில் ஒரு இலக்கிய விமர்சனம்) செய்து, அவற்றையும் சில பதிவுகளாகவும், பிறகு ஒரு சிறு நூலாக வெளியிட ஏற்பாடு செய்யும் படி வேண்டுகிறேன். அப்படி வெளியிடப்பட்டால், பல பிரதிகளை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொள்வேன்.

    ல.ச.ரா ஒரு பூஸ்வா எழுத்தாளரா அல்லது பாட்டாளி வர்க எழுத்தாளரா என்றும் வினவு குழுவினரிடம் கேட்டு சொல்லுங்களேன். முக்கியமாக, இந்தியாவில் எதிர்காலத்தில் வினவு குழுவின் தலைமையில் செம்புரட்சி நடந்தால், பிறகு ல.ச.ராவின் படைப்புகள் தடை செய்யப்படுமா அல்லது இன்று போல தாரளமாக அனுமதிக்கப்படுமா என்றும் கேட்டு சொல்லுங்களேன்.

    • அட அறிவாளி அதியமான்…

      சோசலிச ரஸ்யாவில் செப்புரட்சி நடப்பதற்கு முன் இருந்த பல எழுத்தாளர்களின் நூல்கள்/இலக்கியங்கள் புரட்சிக்கும் பின் பல பதிப்புகள் போடப்பட்டு அனைத்து நாட்டினருக்கும் அனுப்பபட்டிருக்கின்றன…
      இது தெரியுமா? தெரியாதா??
      அலெக்சாந்தர் புஸ்கின், தாஸ்தோவெஸ்கி, டால்ஸ்டாய்,அன்டன் செக்காவ், நிக்கலோய் கோகல், துர்கேனவ் இப்படி பலரின் எழுத்துக்கள் நமக்கு அறிமுகமானதிற்கு காரணமே சோவியத்தில் மலிவு பதிப்பாகா அச்சிடப்பட்டு, இங்கு மலிவு விலையில் கிடைக்கபெற்றது தான். இதை வசதியாக மறைத்துவிட்டு “செம்புரட்சிக்கு பின்” என்று புரட்டுகளை கூவுவது ஏனோ?

    • செம்புரட்சிக்கு பின் உண்மையான ஜனநாயகம் இருக்கும். அதாவது, தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், மக்கள் ஜனநாயக சங்கங்கள் மூலம் மக்கள் அனைவரும் அமைப்பு ரீதியாக திரட்டப்பட்டு, அதில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு மேல் உள்ள அமைப்புக்கு அனுப்பப்படுவார்கள்… இந்த முறை படிப்படியாக மேலே நாட்டை ஆளுபவர்கள் வரை செல்லும்… பிரதிநிதிகள் தவறிழைத்தால் திருப்பி அழைக்கும் உரிமையும் மக்களுக்கு வழங்கப்படும். இதை தான் நாங்கள் உண்மையான ஜனநாயகம் என்கிறோம்.

      இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படும் கமிட்டி, அதன் உறுப்பினர்கள் எதையாவது செய்தால் அதற்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று தானே பொருள்???

      இப்போது சொல்லுங்கள் செம்புரட்சிக்கு பின் பிற்போக்கு இலக்கியங்கள் தடை செய்யப்பட்டாலோ, அல்லது நீங்கள் பதறி கூவும் எதையோ செய்தாலும் அதை செய்வது யார் என்று… மக்களின்றி வேறு யார்?

      மேலும், ம.க.இ.க, வினவு தோழர்கள், நாங்கள் அனைவரும், இந்திய நிலைமைகளுக்கு முன்வைப்பது ஒரு மக்கள் ஜனநாயக புரட்சியை – புதிய ஜனநாயக புரட்சியை…

      குழந்தைக்கு சொல்வது போல சொன்னாலும், வினவை படிக்கும் போது மட்டும் இங்கேயும் அங்கேயுமாக மேய்ந்துவிட்டு, விக்கீபீடியாவை வரிக்கு வரி மேற்கோள் காட்டினால், இனி என்ன செய்வது?? நீங்களே ஜோசியம் பார்த்து சொல்லுங்களேன்!

      • @ மா.சி

        ///அவற்றுடன் போட்டியிட வரும் தரமான ஒரு படைப்புக்கான இடத்தை பெரிதும் குறுக்கி விடுகிறார்கள். இது போன்ற குப்பைகளுக்கு பெரிய பட்டியலே தயாரிக்கலாம். மக்கள் தீர்மானிப்பார்கள் என்று நீங்கள் சொல்வது, மக்களை மூளைச் சலவை செய்ய பெருநிறுவனங்கள் கோடிகளைக் கொட்டும் ஆதாயம் சில படைப்புகளுக்கு மட்டும் இல்லாமல் இருக்கும் போதுதான் பொருந்தும். //////

        இப்படி சொல்லும் நீங்களே, இப்படியும் சொல்கிறீர்கள்…

        ///நிலப்பிரபுத்துவ சமூகத்தின் அடையாளங்கள் தீயவை என்றால், அதைச் சொல்லிப் புரிய வைக்க முடியாதா? அவர்கள் பிரச்சாரங்களுக்கு எதிர் பிரச்சாரம் செய்து முறியடிக்க முற்போக்கு கருத்துக்களுக்கு வலிமை இருக்க வேண்டும் அல்லவா?/////

        இது எனக்கு முரன்பாடாக தெரிகிறது!

        மக்களை தீர்மானிக்கவிடாமல், சிலர் மூளை சலவை செய்து தீர்மானிக்கும் போக்கை எப்படி களைவது மா.சி…? அவர்களுடைய சுதந்திரத்தை சிறதளவேனும் தொடாமல் இதை செய்யமுடியும் என நம்புகிறீர்களா???

        மேலும், வினவு முன்வைக்கும் மக்கள் ஜனநாயக அரசில், மக்கள் பிரதிநிதிகள் ஆளும் போது, (பிரதிநிதிகள் தவறிழைத்தால் திருப்பி அழைக்கும் உரிமையுடன் மக்கள் இருக்கும் போது) பிற்போக்கு சக்திகள் மீது சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டால், அது எப்படி ஜனநாயக விரோதம் மா.சி? மக்களே தீர்மானிப்பதாக உங்களுக்கு ஏன் தெரிவதில்லை?

        விளக்குங்கள், மேலும் பேசுவோம்.

        • //அவர்களுடைய சுதந்திரத்தை சிறதளவேனும் தொடாமல் இதை செய்யமுடியும் என நம்புகிறீர்களா???//
          சோவியத் யூனியனில் ‘சுதந்திரத்தை’ எப்படி “லேசாக” தட்டினார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருப்பதனால் தானே இவ்வளவு பயப்படுகிறார்கள்.

          தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை ‘திரும்ப அழைக்கும்” உரிமையைப் பற்றி தோழர். ஸ்டாலின் அடித்த ஜோக்குகளை இங்கே காணவும்.

          http://www.marx2mao.com/Stalin/SS37.html

        • இதில எங்கேங்க ஜோக் இருக்கு?
          உங்க ‘(நான்-)சென்ஸ் ஆஃப் ஹியூமர்’ எனக்கு பல சந்தேகங்களைக் கொடுக்கிறது. இருந்தாலும் மிக அருமையான இந்த லிங்கை பகிர்ந்தமைக்கு நன்றி.

          (from the link)
          “If you take capitalist countries you will find that peculiar, I would say, rather strange relations exist there between deputies and voters. As long as the elections are in progress, the deputies flirt with the electors, fawn on them, swear fidelity and make heaps of promises of every kind. It looks as though the deputies are completely dependent on the electors. As soon as the elections are over, and the candidates have become deputies, relations undergo a radical change. Instead of the deputies being dependent on the electors, they become entirely independent. For four or five years, that is, until the next elections, the deputy feels quite free, independent of the people, of his electors. He may pass from one camp to another, he may turn from the right road to the wrong, he may even become entangled in machinations of a not altogether savoury character, he may turn as many somersaults as he likes — he is independent.

          Can such relations be regarded as normal? By no means, comrades. This circumstance was taken into consideration by our Constitution and it made it a law that electors have the right to recall their deputies before the expiration of their term of office if they begin to play tricks, if they turn off the road, or if they forget that they are dependent on the people, on the electors.

          This is a wonderful law, comrades. A deputy should know that he is the servant of the people, their emissary in the Supreme Soviet, and that he must follow the line laid down in the mandate given him by the people. If he turns off the road, the electors are entitled to demand new elections, and as to the deputy who turned off the road, they have the right to send him packing. (Laughter and applause.) This is a wonderful law.

          My advice, the advice of a candidate to his electors, is that they remember this electors’ right, the right to recall deputies before the expiration of their term of office, that they keep an eye on their deputies, control them and, if they should take it into their heads to turn off the right road, to get rid of them and demand new elections. The Government is obliged to appoint new elections. My advice is to remember this law and to take advantage of it should need arise. “

        • @ மா.சி
          //இப்படி சொல்லும் நீங்களே, இப்படியும் சொல்கிறீர்கள்…//

          இப்போதைய பெருநிறுவன முதலாளித்துவம் மாற்றப்பட வேண்டும் என்று உணர்கிறேன். அந்த மாற்றம் பெருநிறுவன முதலாளித்துவத்தை நம்புபவர்களுக்கு நிரந்தர வாய்ப்பூட்டு போடுவதன் மூலம் வர வேண்டும் என்று விரும்பவில்லை.

          //மக்களை தீர்மானிக்கவிடாமல், சிலர் மூளை சலவை செய்து தீர்மானிக்கும் போக்கை எப்படி களைவது மா.சி…? அவர்களுடைய சுதந்திரத்தை சிறதளவேனும் தொடாமல் இதை செய்யமுடியும் என நம்புகிறீர்களா???//

          மூளை சலவை செய்யப்படும் வாய்ப்புகள் இல்லாமல் மாற்றுத் தேர்வுகள் மக்களுக்கு இருக்க வேண்டும். மூளை செய்யத் தேவையான அளவுக்கு வளங்கள் ஒரே இடத்தில் சேர்வதைத் தடுக்கும் நெறிமுறைகள் இருக்க வேண்டும்.

          உதாரணத்துக்கு இந்தியாவில் செல்பேசி சேவையை எடுத்துக் கொள்ளுங்கள். அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் போட்டியைச் சந்திப்பதால், அது போடும் கோடுகளுக்குள்தான் மற்ற தனியார் நிறுவனங்கள் இயங்க வேண்டியிருக்கிறது. லஞ்சம் கொடுக்கும் மனிதர்களும், ஊழல் செய்யும் அதிகாரிகளும் இந்த முறையில் இருந்தாலும், அந்த தனிமனிதப் போக்கை கம்யூனிச அமைப்பிலும் (சீனா) முற்றிலும் தவிர்த்து விட முடியவில்லை.

          எந்த அமைப்பிலும் தலை நீட்டும் தனிமனித பேராசையை சமூகம் நிராகரித்து, பெருநிறுவனக் கனவுகள் இலக்காக ஏற்றுக் கொள்ளப்படாத சூழலை உருவாக்குவதுதான் ஊழலுக்கு லஞ்சத்துக்கும் தீர்வாக இருக்க முடியும். இதற்கான முயற்சிகளை மக்கள் அரசாங்கம் செய்ய வேண்டும்.

          //மேலும், வினவு முன்வைக்கும் மக்கள் ஜனநாயக அரசில், மக்கள் பிரதிநிதிகள் ஆளும் போது, (பிரதிநிதிகள் தவறிழைத்தால் திருப்பி அழைக்கும் உரிமையுடன் மக்கள் இருக்கும் போது) பிற்போக்கு சக்திகள் மீது சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டால், அது எப்படி ஜனநாயக விரோதம் மா.சி? மக்களே தீர்மானிப்பதாக உங்களுக்கு ஏன் தெரிவதில்லை?//

          நாடாளுமன்ற ஜனநாயகத்திலும் மக்கள் பிரதிநிதிகள்தான் ஆள்வதாக இருக்கிறது.
          மக்களும் சரி அவர்களின் பிரதிநிதிகளும் சரி 100% தவறற்றவர்களாக இருக்கப் போவதில்லை.

          முன்னேற்ற சக்திகளின் தொடர்ச்சியான மக்கள் தொடர்பு, கலைப் படைப்புகள், ஊடக முயற்சிகள் பிற்போக்கு சக்திகளின் முயற்சிகளுக்கு ஈடு கட்டுவதாக இருக்க வேண்டும். பிறரின் செயல்பாடுகளை முழுவதும் தடை செய்யாமல், அவற்றை எதிர் கொள்ளும் அளவுக்கு மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உறுதியும், திறமையும் வளர வேண்டும்.

          இது சாத்தியமில்லையா?

        • @மா.சி

          ///மூளை சலவை செய்யப்படும் வாய்ப்புகள் இல்லாமல் மாற்றுத் தேர்வுகள் மக்களுக்கு இருக்க வேண்டும். மூளை செய்யத் தேவையான அளவுக்கு வளங்கள் ஒரே இடத்தில் சேர்வதைத் தடுக்கும் நெறிமுறைகள் இருக்க வேண்டும். ///

          இந்த்கைய நெறிமுறைகளை, கட்சி ஏற்படுத்தி கொடுத்தால், அதை கருத்து சுதந்திரத்தை பறித்தல் என்கிறீர்கள்…

          ///இதற்கான முயற்சிகளை மக்கள் அரசாங்கம் செய்ய வேண்டும். ////

          இதை செய்யக்கூடிய அரசாங்கம் அமைவதை சர்வாதிகாரம் என்கிறீர்கள்..

          மக்களுக்கு எது தேவை என்பதை அம்மக்களே தீர்மானிக்க வேண்டும், ஒரு கட்சியோ, கமிட்டியோ தீர்மானிக்க கூடாது என்றீர்கள்.
          மக்களே தேர்ந்தெடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்வதாக இருந்தாலும்…
          //மக்களும் சரி அவர்களின் பிரதிநிதிகளும் சரி 100% தவறற்றவர்களாக இருக்கப் போவதில்லை.// என்று சொல்லி… மீண்டும் நீங்கள் சொல்வதோ: பிறரின் செயல்பாடுகளை முழுவதும் தடை செய்யாமல், அவற்றை எதிர் கொள்ளும் அளவுக்கு மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உறுதியும், திறமையும் வளர வேண்டும்.

          திரும்ப திரும்ப ஒரே இடத்திற்கு வருகிறீர்கள் மா.சி…
          //மூளை சலவை செய்யப்படும் வாய்ப்புகள் இல்லாமல் மாற்றுத் தேர்வுகள் மக்களுக்கு இருக்க வேண்டும்.//
          அவர்கள் மூளை சலவை செய்யமுடியாத அளவுக்கு இப்போதிருக்கும் அவர்களின் சுதந்திரத்தை குறைக்கலாம்.. இல்லையா?
          அப்படி குறைப்பது, அவர்கள் மீதான தடை வரி கூட அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக நீங்கள் கூறலாம்… அவர்கள் மீதான தடையே பெருவாரியான மக்களின் விருப்பதேர்வாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் மக்களும் தவறு செய்யலாம் என்று மீண்டும் முதலில் இருந்து வந்தால், உங்கள் மீது சந்தேகம் வருகிறது…
          உங்களுடைய பிரச்சனை என்ன? பரிசீலிக்கவும்!

          ///நாடாளுமன்ற ஜனநாயகத்திலும் மக்கள் பிரதிநிதிகள்தான் ஆள்வதாக இருக்கிறது.////
          இதற்கு ஒன்றும் சொல்வதற்கில்லை… நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளா? இந்த ஜனநாயக முறையில் தானே நீங்களே முன்வைக்கும் மூளை சலவை மேட்டரெல்லாம் நடக்கிறது… நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் இது ஜனநாயகமா?
          என்ன கைய பிடிச்சு இழுத்தியா கதையாக திரும்ப திரும்ப முதலில் இருந்து வர முடியாதுங்க..

          மேலே, தோழர்.போதம்கின் எடுத்து போட்டிருக்கும் தோழர்.ஸ்டாலினின் உரையையும் படித்து விடுங்கள்…

          இந்த அமைப்பு முறையின் எல்லா பிரச்சனைகள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் நீங்கள், இந்த இழவெடுத்த நாடாளுமன்ற முறையில் எதையும் மாற்ற முடியாது என்று தெரிந்தும் இந்த அமைப்புக்குள்ளேயே எல்லாம் சரி செய்யப்படவேண்டும் என்று இந்த அமைப்பை காப்பாற்ற பாடுபடுவது ஏன்?

          எங்கேயோ கோளாறு இருக்கிறது.

          கம்யூனிஸ்டுகள் செய்தாலும் தவறு, மக்களே செய்தாலும், மக்கள் என்ன தவறே செய்யாதவர்களா என்று வாதம்.. இன்று இவ்வளவு அக்கிரமங்கள் நடக்கிறதே என்றால், அதை நான் ஒத்துக்கொள்கிறேன் என்கிறீர்கள். சரி அதை சரி செய்ய உண்மையான ஜனநாயகம் வேண்டும் என்றால், நீங்கள் சொல்வது ஜனநாயகம் இல்லை, இந்த அமைப்பு முறை தான் ஜனநாயகம் என்கிறீர்கள்.

          சரி, இப்போதிருக்கும் இந்த நாடாளுமன்ற முறை எப்படி ஜனநாயகமானது? சிறந்தது?
          நாங்கள் முன்வைக்கும் மக்கள் ஜனநாயகம் எப்படி தவறானது?

          நீங்களே ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து, திரும்ப திரும்ப ஒரு வட்ட பாதையில் செல்லாமல் பதிலளிக்குமாறு வேண்டுகிறேன்.

    • ராம், நீங்க கொடுத்த சுட்டியில் தோழர் ஸ்டாலினின் அருமையான உரை இருந்தது நன்றி.
      ஆனால் இதில் நீங்கள் என்ன ”ஜோக்குகளை” கண்டீர்கள்… எனக்கென்னவோ ‘ஒரு செருப்பு தைக்கும் தெழிலாளியின் மகனான ஸ்டாலினின் மீதான உங்கள் வயற்றெறிச்சலே புலப்படுகிறது.

      நாங்கள் இன்றைய சமூக பிரச்சனைகளை தீர்க்கத்தான் மார்க்சியத்தை பயன்படுத்துகிறோம், அதற்கே அவகாசம் போதவில்லை… ஆதனால் உங்களைப்போல கம்யூனிச பூதத்தை கண்டு அஞ்சி இன்னமும் 75 வருடங்களுக்கு முன்னால் சிக்கியிருக்கும் மெக்கார்த்தியிஸ்டுகளை மீட்கும் டைம் மெஷினை கண்டுபிடிக்க எங்களுக்கு நேரமில்லை. அதற்கான ஊக்கம் உங்களிடத்திலிருந்துதன் வரவேண்டும்.

      வாழ்த்துகள்

  29. @ மா.சி

    ///அவற்றுடன் போட்டியிட வரும் தரமான ஒரு படைப்புக்கான இடத்தை பெரிதும் குறுக்கி விடுகிறார்கள். இது போன்ற குப்பைகளுக்கு பெரிய பட்டியலே தயாரிக்கலாம். மக்கள் தீர்மானிப்பார்கள் என்று நீங்கள் சொல்வது, மக்களை மூளைச் சலவை செய்ய பெருநிறுவனங்கள் கோடிகளைக் கொட்டும் ஆதாயம் சில படைப்புகளுக்கு மட்டும் இல்லாமல் இருக்கும் போதுதான் பொருந்தும். //////

    ///இப்போதைய பெருநிறுவன முதலாளித்துவம் மாற்றப்பட வேண்டும் என்று உணர்கிறேன். அந்த மாற்றம் பெருநிறுவன முதலாளித்துவத்தை நம்புபவர்களுக்கு நிரந்தர வாய்ப்பூட்டு போடுவதன் மூலம் வர வேண்டும் என்று விரும்பவில்லை. ///

    இதை தான் சமூக வளர்ச்சியின் தேவை, தனிமனித விருப்பங்களில் மட்டும் இருப்பதைல்லை என்கிறோம்.

    எனக்கு இந்த அளவுக்கு மாறினால் போதும், இன்னும் கொஞ்சம் இதோ இது வரை என்று ஒரு தனி மனிதன் விருப்ப தேர்வின் படியெல்லாம் சமூக மாற்றம் சொன்ன படி கேட்காது… 🙂
    🙂

  30. அக்காகி,

    //இப்போதிருக்கும் இந்த நாடாளுமன்ற முறை எப்படி ஜனநாயகமானது? சிறந்தது?
    நாங்கள் முன்வைக்கும் மக்கள் ஜனநாயகம் எப்படி தவறானது?//

    அரசியலும், அரசமைப்புகளும் மக்கள் தமது சார்பாக பொதுவான பணிகளைச் செய்ய உருவாக்கும் ஒன்று. அதில் எல்லோருக்கும் பங்களிப்பும் வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும்.

    இன்றைய இந்திய நாடாளுமன்ற அமைப்பில் எல்லா மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் இருக்கின்றன. ஒருவரின் அரசியல் கருத்தின் காரணமாக அவரது உரிமைகள் பறிக்கப்படுவது இல்லை.
    1. 18 வயதான அனைவருக்கு தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உரிமை.
    2. தமது நம்பிக்கைகளை, கருத்துக்களை, கொள்கைகளை கடைப்பிடிக்கவும், சக மனிதர்களிடம் பரப்பவும் உரிமை இருக்கிறது.

    சகமக்களுக்கு எதிராக வன்முறை குற்றச் செயல்கள் (கொலை, கொள்ளை, மோசடி) செய்தவர்கள் தண்டனை பெற்று சிறைக்குப் போகிறார்கள். அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் தற்காலிகமாக மறுக்கப்படுகின்றன.

    பொருளாதார காரணங்களாலும், வாய்ப்பின்மையாலும் பலர் அதிகார பதவிகளுக்கு வர முடியாத நிலை இருந்தாலும், அப்படி வருவதற்கு சட்டப்படி எந்தத் தடையும் இல்லை. உதாரணமாக, வினவு குழுவினர் ஆட்சியைப் பிடிப்பதற்கு “சட்டப்படி” எந்தத் தடையும் இல்லை. நடைமுறைத் தடைகளை தாண்டுவதற்கான உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் போதும்.

    நீங்கள் சொல்லும் பாட்டாளி மக்களின் சர்வாதிகாரத்தில்,
    1. மாற்று அரசியல் கருத்துக்கள் உடையவர்களை சிறையில் அடைப்பது
    2. மாற்றுக் கருத்துக்களுக்கு வெளியிடும் இடத்தை மறுப்பது
    3. மாற்றுக் கருத்துக்கள் மக்களை சேராமல் தடுப்பது
    என்று அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

    எந்த ஒரு அமைப்பும் தன் மீதான விமர்சனங்களை முழுவதும் ஒடுக்குவது என்று செயல்படும்போது மாற்றத்துக்கான விதைகள் முளை விடாமலேயே கருக்கப்படுகின்றன.

    வினவு குழுவினரைப் போல, அன்றைய பாட்டாளி மக்களின் சர்வாதிகார அமைப்பை எதிக்கும் ஒரு குழுவினர் இயங்குவதே சட்ட விரோதமாக இருக்கும். இந்த அடிப்படை பழுதை நான் எதிர்க்கிறேன்.

    //அவர்கள் மீதான தடையே பெருவாரியான மக்களின் விருப்பதேர்வாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் மக்களும் தவறு செய்யலாம்//

    இன்றைய அமைப்பில், டாக்டர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பு, பெருவாரியான மக்களின் தேர்வில் ஏற்படுத்தப்பட்ட அரசமைப்பின் சட்டங்களுக்குட்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. அதைத் தவறு என்று சொல்ல எனக்கும் உங்களுக்கு உரிமையும் வாய்ப்பும் இருக்கிறது.

    பாட்டாளிகளின் சர்வாதிகார அரசு அந்த உரிமையை முற்றிலுமாக மறுக்கிறது.

    //போதம்கின் எடுத்து போட்டிருக்கும் தோழர்.ஸ்டாலினின் உரையையும் படித்து விடுங்கள்…//
    பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை சட்டத்தில் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமைப்பில் இருக்கும் குறைகளை நீக்க வேண்டும் – பிரதிநிதிகளைத் திரும்பப் பெறுதல், பெருநிறுவன ஆதிக்கங்களுக்கு எதிரான சட்டங்கள், அதிகாரப் பரவலாக்கம் இன்னும் பல.

    நீங்கள் முன்வைக்கும் அமைப்பைப் போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமூகங்களின் முன்னுதாரணம் எடுத்துக் காட்டும் பிரச்சனைகள் அந்த அமைப்பு நமது பிரச்சனைகளுக்குச் சரியான தீர்வாக இருக்க முடியாது என்று எனக்குச் சொல்கின்றன.

    //இதை தான் சமூக வளர்ச்சியின் தேவை, தனிமனித விருப்பங்களில் மட்டும் இருப்பதைல்லை என்கிறோம்.
    எனக்கு இந்த அளவுக்கு மாறினால் போதும், இன்னும் கொஞ்சம் இதோ இது வரை என்று ஒரு தனி மனிதன் விருப்ப தேர்வின் படியெல்லாம் சமூக மாற்றம் சொன்ன படி கேட்காது…//

    அக்காகி (அல்லது அசுரன் அல்லது வினவு) என்ற தனிமனிதனின் தேர்வு சிவகுமார் (அல்லது அதியமான்) என்ற தனிமனிதனின் தேர்வை விட எப்படி மேம்பட்டதாகிறது?

    அன்புடன்,
    மா சிவகுமார்

    • அக்காகி (அல்லது அசுரன் அல்லது வினவு) என்ற தனிமனிதனின் தேர்வு சிவகுமார் (அல்லது அதியமான்) என்ற தனிமனிதனின் தேர்வை விட எப்படி மேம்பட்டதாகிறது? //

      அதியமான் தேர்வு பலரை சுரண்டி வாழும் நிலப்பிரவுத்துவாதி,முதலாளித்துவாதிகளுக்கு ஆதரவாகவும்,உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் இருக்கிறது.

      அசுரன்,வினவு பதிவுகள் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகவும்,சிறும்பான்மையாக இருக்கும் இரத்த உறிஞ்சிகளான நிலபிரபுத்துவ,முதலாளித்துவவாதிகளின் மீது சரிவதிகாரத்தன்மை என்பது ஆரவாக உள்ளது.

    • @ ஜனநாயகம் பற்றி பேசுவோர்.. இதையும் படிச்சுடுங்க சாமிகளா..

      On 26th Jan. 1950,India will be an independent country. What would happen to her independence? Will she maintain or will she lose it again? This is the first thought that comes to my mind.It is not that India was never an independent country. The point is that she once lost the independence she had. Will she lose it a second time? It is this thought which makes makes me most anxious for the future. What perturbs me greatly is the fact that not only India has once before lost her independence, but she lost it by treachery of some of her own people.

      Will history repeat itself? It is this thought which fills me with anxiety. This anxiety is deepened by the realization of the fact that in addition to our old enemies in the form of castes & creeds, we are going to have many political parties with diverse and opposing political creeds. Will Indians place the country above their creed or creed above their country? I do not know, But this much is certain that if the parties place creed above country, our independence will be put in jeopardy a second time and probably be lost forever. This eventuality we all must resolutely guard against. We must be determined to defend our independence with the last drop of our blood!

      -Dr.BR Ambedkar

      • On 26th January 1950, we are going to enter into a life of contradictions. In politics, we will have equality and in social and economic structure, continue to deny the principle of one man one value. How long shall we continue to live this life of contradictions? How long shall we continue to deny equality in our social and economic life? If we continue to deny it for long, we will do so only by putting our political democracy in peril. We must remove this contradiction at the earliest possible moment else those who suffer from inequality will blow up the structure of democracy which this Constituent Assembly has so laboriously built up.

        -Dr.BR Ambedkar

        • ஏம்பா சேரிகாரரே கொஞ்சம் தமிழில் போட்டால் என்னவென்று தெரிந்துக்கொள்வேன்.”டஸ்சு புஸ்சுனு” இங்கிலீசுலப்போட்டா என்னப்பா சொல்வது புரியலாபா.நான் தமிழ் மீடியம்பா.

    • //அரசியலும், அரசமைப்புகளும் மக்கள் தமது சார்பாக பொதுவான பணிகளைச் செய்ய உருவாக்கும் ஒன்று. அதில் எல்லோருக்கும் பங்களிப்பும் வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும்.

      இன்றைய இந்திய நாடாளுமன்ற அமைப்பில் எல்லா மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் இருக்கின்றன. ஒருவரின் அரசியல் கருத்தின் காரணமாக அவரது உரிமைகள் பறிக்கப்படுவது இல்லை.//

      மா.சி. ஒரு அடிப்படையான விசயத்தை பரிசீலிக்கத் தவறுகிறார். இந்தியா அரசின் மக்கள் விரோத சித்தாந்த்தத்தை முறைப்படி படித்து பயிற்சி பெற்று இந்தியாவை ஆளும் அதிகார வர்க்கமானது நிரந்தர ஆட்சிப் பகுதியாகவும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உறுப்பாகவும், மக்களுக்கு எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியமற்ற-மக்களுக்கு மேலான ஒரு அதிகார உறுப்பாகவும் நிலவுகிறது.

      இத்தகையதொரு உறுப்பின் மீது மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர்களை தேர்ந்தெடுப்பதோ அல்லது அவர்களை திருப்பியழைப்பதோ இந்தியாவில் கிடையாது. போலீசு, கலெக்டர், நீதிபதி, சிறையதிகாரி, வி ஏஒ என மக்களின் வாழ்வில் நேரடி அதிகாரம் செலுத்தும், சட்டத்தை – ஒரு வேளை அது மக்களுக்கு சிறிதளவேனும் நன்மை செய்வதாகக் கொண்டாலும் – அதை விருப்பம் போல வளைத்து ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் இந்த ஆட்சி உறுப்பு பற்றி மா.சி. யின் கருத்து என்ன?

      இத்தகைய ஜனநாயக விரோத ஆட்சியுறுப்பு அவரது மாற்று ஜனநாயகத்தில் இருக்குமா?

      • இந்தியாவில் ஒவ்வொரு துறையையும் கட்டுப்படுத்துபவர்கள் துறைசார் அறிவும், பயிற்சியும், அனுபவமும் பெற்ற நிரந்தர அதிகார உறுப்பான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளாவர். இவர்கள்தான் நிரந்தர மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆட்சி உறுப்பு ஆகும்.

        உலகம்யக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி இந்தியர்களின் வாழ்வை சிதைத்தவர்கள் உலக வங்கியிடம் பயிற்சி பெற்ற இந்த அதிகார அமைப்புகளே.

        பசுமை புரட்சி முதல் இன்றைய திட்ட கமிசன், ஒற்றை அடையாள அட்டை வழங்கும் அமைப்பு வரை இந்தியர்களின் தலையெழுத்தை தீர்மானிக்கிறார்கள் இந்த அதிகாரிகள். காட், காட்ஸ் ஒப்பந்தம் முதல் 123 அணு ஒப்பந்தம், ராணுவ ஒப்பந்தம் வரை இவர்கள்தான் கையெழுத்து போடுகிறார்கள் பிறகு பாராளுமன்றத்தில் ரப்பர் ஸ்டாம்பு ஒப்புதல் பெறப்படுகிறது.

        இத்தகையதொரு பெருமை வாய்ந்த ‘ஜனநாயக’த்தை சிலாகிக்கும் மா.சி.க்கு எது மதி மயக்குகிறது என்பது ஆய்வுக்குரிய விசயமே.

        • மா.சி.யின் ஜனநாயக மயக்கத்தை தெளிக்கும் அருமருந்தாக பினாயக் சென் சிறைப்பட வேண்டியிருந்துவிட்டது துரதிருஷ்டவசமான விசயம்.

          இந்தியாவின் அரசியலமைப்புக் கட்டுமானத்தில் ஜனநாயகத்திற்கு கிஞ்சித்தும் இடமில்லை என்பதையும், நிரந்தர/சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகார உறுப்பே இங்கு அரசாட்சியின் தன்மையை தீர்மானிக்கிறது என்பதையும் உரசிப் பார்க்கும் உரைகல் – பினாயக் சென் தீர்ப்பு

          http://epw.in/epw/uploads/articles/15558.pdf

  31. @ நந்தன்,

    இது அம்பேத்கர், நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை..
    இன்னும் இந்த நாடு, ஜனநாயக நாடு தான்னு, பீத்திக்கறவங்களுக்கு போட்டது.

    நானும் தமிழ் மீடியம் தான்!
    உங்களுக்காக மொழிபெயர்க்கலாம் என்றாலும், அம்பேத்கர் தொகுதியில் இருக்க வாய்ப்பிருக்கிறது. தேடி பாருங்கள்…

  32. கம்யூனிஸ்டுகள் என்றாலே பாசிஸ்டுகள் என்கிறவர்களே முதலாளிகளின் கில்லட்டின் நிலப்பிரபுகள் கழுத்தில் பூமாலையா போட்டது? புரட்சி என்பது போர். வரலாற்றை மறுப்பது முன்னேற்றத்தை மறுப்பதாகும். l

  33. @ corporal zero

    திட்டமிட்டு மடத்தனமாக விவாதிக்கும் உங்களுக்கு எப்படி பதில் சொல்வது என்று புரியவில்லை. பெரியார் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அதனை விட சகிக்க முடியாததாக தங்களது வெற்று உதார்… நான் நழுவுகிறேன், தாங்கிக் கொள்ள முடியவில்லை என என்ன அக்கப்போராவது சொல்லிக் கொண்டிருங்கள்.

    • ராஜன் ஸாரே,
      நான் திட்டமிட்டு மடத்தனமாக வாதிக்கிறேன் என்கிறீர்கள்.
      உங்களால் திட்டமிடாமலே மடத்தனமாக வாதிக்க முடிகிறதே.
      சாதனை தான்!

      நீங்கள் கிளப்பிய பிரச்சனை தான் இது.
      ம.பு. எழுதிய ஒன்றை மெச்சுவதாகச் சொன்னீர்கள்.
      ஏன் அது மெச்சத்தக்க கவிதை என்று சொல்லத் தடுமாறுகிற நீங்கள் காளமேகத்திடம் சவால் விட்டீர்களே.

      “கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ்ப் பாட்டாச்சே” என்று புதுமைப்பித்தன் சொன்னது ம.பு. வகை எழுத்துகளுக்கு மட்டுமல்ல, அதையெல்லாம் சிந்தனையின்றி மெச்சுவோருக்கும் பொருந்துமல்லவா!

  34. @ corporal zero

    சரி. தங்களது அருமையான தீர்ப்பை கண்ட வெறுப்பில்தான் விவாதிக்க மறுத்தேன். தாங்கள் நான் ஏதோ தடுமாறுவதாக தொடர்ந்து நாடகமாடிக் கொண்டிருப்பதால் விவாதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    மனுஷ்ய புத்திரனின் கவிதை காதலின் தவிப்பை, ஒரு பெண்/ஆணின் அருகாமை உண்டாக்கும் உணர்வை, அதனில் உள்ள உறவின் சிக்கலை சொல்கிறது. இதில் என்ன தவறு? இது ஏன் ஒரு கவிதைக்குரிய தகுதியை இழந்து விட்டது?

    //அது ஒரு சராசரிப் புலம்பல். அதில் புதிதாகவோ பயனள்ளதாகவோ ஒரு கருத்தும் இல்லை, கவித்துவமும் இல்லை.//

    இது தங்களது மேலான கருத்து. ஆனால் எப்படி என்ற ஒரு கேள்விக்கு எந்தப் பதிலுமில்லை. கவிதை பயனுள்ளது என்பது எப்படி? கவிதை ஒரு உணர்வின் வெளிப்பாடு. அது புரட்சிக்கு பயன்படுவதா, இல்லையா என்பது வேறு. ஆனால், அது கவிதையே இல்லை, புலம்பல், புதிதல்ல என்பதெல்லாம் வறட்டுவாதத்தின் வெளிப்பாடு மட்டுமே.

    பாப்லோ நெரூதாவின் அற்புதமான புரட்சிகரக் கவிதைகளுடன், எண்ணற்ற காதல் கவிதைகளும் உண்டு. நெரூதாவின் காதல் கவிதைகளை என்னவென்று சொல்வீர்கள்? அவைகளும் சராசரிப் புலம்பல்களோ?

    //அது நீங்கள் மெச்சுகிற கவிதை என்றால் நீங்கள் மெச்சக் கூடியவர்கள் வரிசையில் பல மட்டரகமான சினிமாப் பாடலாசிரியர்களுக்கும் இடமுண்டு.//

    இந்த ஆழ்ந்த அனுமானத்தை எப்படிப் பெற்றீர்கள்? நீங்கள் சினிமாப் பாடல்களை ரசிப்பதே இல்லையோ? நானறிந்து பல ம.க.இ.க தோழர்கள் தாம் ரசித்த பல சினிமாப் பாடல்களை என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இன்னும் தெளிவாக சொல்கிறேன். தோழர் கோவனுக்கு “இது தானா?” என்று ‘சாமி’ படத்தில் வரும் பாடல், இசை மற்றும் பாடல் வரிகளுக்காக மிகவும் பிடித்த பாடல். என்னுடன் ஒரு முறை பேசுகையில் வெளிப்படுத்தினார். இதற்கு என்ன சொல்வது? இதனால் கோவன் மட்டமாகி விடுவாரா?

    மனுஷ்ய புத்திரனை நெரூதா என்று காலை நக்கும் சாரு நிவேதிதாவின் அல்பதனத்தின் மீதான சினம் வேறு. அதற்காக தர்க்கப் பொருத்தமின்றி அபத்தமாக விமர்சிப்பது என்பது வேறு. இந்தத் தவறைத்தான் காளமேகம் செய்துள்ளார் என்பதுதான் எனது விமர்சனம்.

  35. … விவாதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    நீங்கள் தான் விவாதம் பற்றிப் பேசினீர்கள். ஆனால் தொடக்கத்திலிருந்தே அக் கவிதையில் மெச்ச என்ன உண்டு என்று சொல்ல மறுத்தீர்கள். இதுவரை நீங்கள் பாவித்தளவு நிந்தனைச் சொற்களை நான் பாவிக்கவில்லை. ஒருவர் தன்னை முட்டாளாக்குவது என்பது, பொதுவாக, ஏமாந்து கவனமாகச் சிந்தினயாது அவசரப்பட்டுக் செயற்படுகிறதையே குறிக்குமே ஒழிய ஒருவரை முட்டாள் என்று அழைப்பதாகாது. யாரையும் முட்டாளென நான் அழைப்பதுமில்லை.
    .
    .
    … இது ஏன் ஒரு கவிதைக்குரிய தகுதியை இழந்து விட்டது?

    அது தகுதியை இழக்கவில்லை. அது கவிதையேயல்ல என்பது தான் என் மதிப்பீடு. மு.புவினது கூற்றின் உள்ளடக்கத்தை வைத்து நான் முடிவுக்கு வந்ததாகவும் பிற நோக்கங்கட்காக அதை நிராகரிப்பதாகவும் ஏன் வலிந்து பொருள் கொண்டுள்ளீர்கள்?
    உங்கள் எதிர்வினைகளைக் கவனமாக வாசித்துப் பாருங்கள்.
    .
    .
    … அது ஒரு சராசரிப் புலம்பல்.
    “பார்க்காமலே இருந்திருக்கலாம், பார்த்தும் பாராதது போல போயிருக்கலாம். பார்க்க வந்தது உன்னையல்ல என்று சொல்லியிருக்கலாம். பார்த்த பின்னே பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம். பார்த்துப் பார்த்து ஏங்கவா இவ்வளவு தூரம் வந்தது?” என்பதை வரிப் பிரிப்பின்றி வாசித்தப் பாருங்கள்.
    வாக்கியத்தை –அது எவ்வளவு கெட்டித்தனமாக இருந்தாலும்– வரி பிரித்து எழுதி அது கவிதையாகி விடாது.
    இக் கூற்றில் சராசரிக்கு மேலான ஒரு கவிதைக்குரிய என்ன சிறப்பும் எனக்குத் தெரியவில்லை.
    .
    புரட்சி பற்றியோ, கவிதையில் காதலுக்குத் “தடை” விதித்தோ ஒரு சொல்லும் நான் எழுதவில்லை.
    .
    .
    … நீங்கள் மெச்சக் கூடியவர்கள் வரிசையில் பல மட்டரகமான சினிமாப் பாடலாசிரியர்களுக்கும் இடமுண்டு…. நீங்கள் சினிமாப் பாடல்களை ரசிப்பதே இல்லையோ? etc., etc.

    மட்டமான சினிமாப் பாடலாசிரியனைத் தானே சொன்னேன். நல்ல பாடலே இல்லை என்றேனா?

    கொஞ்சம் பொறுமையாக வாசித்துப் பொருள் விளங்கி எழுதுவீர்களானால் வீண் பேச்சுக்கு இடமிராது.

    சாரு நிவேதிதாவைக் நான் கருத்திற் கூடக் கொள்ளவில்லை.

  36. தங்களது ஆழ்ந்த அனுமானங்களையும், அர்த்தமற்ற நிராகரித்தல்களையும் கேள்விக்குள்ளாக்கியவுடன், தாங்கள் கொள்ளும் தடுமாற்றம் தங்கள் பதிலிலேயே தெரிகிறது. ஆனால் நான் நிதானமாயிருக்க அறிவுரை பகர்ந்திருக்கிறீர்கள். தங்களது தொடர்ச்சியான பெரிய மனித அறிவுரைகளுக்கு நன்றி.

    குறிப்பிட்ட கவிதை குறித்த விவாதத்தை மையப்படுத்த வேண்டி, தங்களது பிற அறிவுரைகளுக்கும், விளக்கங்களுக்கும் பதிலளிக்கவில்லை.

    //என்பதை வரிப் பிரிப்பின்றி வாசித்தப் பாருங்கள்.
    வாக்கியத்தை –அது எவ்வளவு கெட்டித்தனமாக இருந்தாலும்– வரி பிரித்து எழுதி அது கவிதையாகி விடாது.
    இக் கூற்றில் சராசரிக்கு மேலான ஒரு கவிதைக்குரிய என்ன சிறப்பும் எனக்குத் தெரியவில்லை.//

    அய்யா, இதே விமர்சனத்தை எந்தப் புதுக்கவிதையை பார்த்தும், யார் வேண்டுமானாலும் வைக்கலாம். தோழர் மருதையனின் உரை வீச்சுக்கள், தோழர் துரை சண்முகத்தின் கவிதைகள் உட்பட. “வரி பிரிக்காமல் எழுதியிருந்தால் வெறும் உரைநடைதான் என்ற விமர்சனம்” புதுக்கவிதைக்கான கூறுகள் பற்றிய புரிதலற்ற மேலோட்டமான விமர்சனம். வேறு வகையில் சொன்னால், புதிய கலாச்சாரத்திலும், வினவிலும் இதுகாறும் வெளிவந்த அனைத்துக் கவிதைகளும் – ‘அது எவ்வளவு கெட்டித்தனமாக இருந்தாலும்’ – தங்கள் அளவுகோலின்படி கவிதைகளே அல்ல என்றுதான் கொள்ள வேண்டும். சரிதானா?

    • ராஜன்,
      நான் சொல்லாத விடயங்களுக்கு நான் விளக்கம் தர வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

      நான் கண்ட ‘புதுக் கவிதை’களில் பெரும்பாலானவை, கவிதை என்ற வகையில் மிகக் குறைபாடானவையே. அவ்வாறு நிகழக் காரணங்கள் பல. அவை இங்கு முக்கியமானவையல்ல.

      ம.பு. வெகு சராசரியான கவிஞர் என்பது பற்றியும் அவரைப் பற்றி உருவாக்கப்பட்ட படிமம் பற்றியுமே கட்டுரை பேசியது. கட்டுரையின் வாதத்தை வலியுறுத்த உதாரணமாகத் தரப்பட்ட கவிதை படு சராசரியானது. அதை நீங்கள் மெச்சினீர்கள்.
      என்ன அடிப்படையில் என்று தான் கேட்டேன்.

      அதை விடப் பன்மடங்கு அழகாகவும் செய்நேர்த்தியுடனும் காதல் ஏக்கத்தைக் கூறுகிற (புதுக் கவிதைகள் உட்பட்ட) பல கவிதைகளைப் படித்திருக்கிறேன்.

      ம.பு.வினது படைப்பின் அழகியற் போதாமையை வைத்தே என் கருத்தைக் கூறினேன்.
      உங்கள் அளவுகோல்கள் வேறாக இருக்கலாம். அவை என்ன என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

  37. நீங்கள் சொன்ன கருத்திற்கு அடிப்படையான அளவுகோலை வைத்துதான் நான் கேள்வி எழுப்பியிருக்கிறேன். அதற்கு பதில் சொல்லாமல், “சராசரியானது,” எனக் கிளிப்பிள்ளை போல கூறிக் கொண்டிருந்தால் என்ன பொருள்? நீங்கள் நழுவி ஓட எத்தனிக்கிறீர்கள் என்று சொல்லலாமா? “எந்த விமர்சனத்திலும் ஒரு சுயவிமர்சனம் அடங்கியிருக்கிறது” என்பதை ஏற்றுக் கொள்வீர்களேயானால், உங்கள் அளவுகோலை பு.க/வினவுக்கு பொருத்தும் போது மட்டும் பதில் ‘காமாசோமா’வென்று ஆகி விடுகிறதே?

    • அதிலே கவித்துவமாக எனக்கு ஒரு வரி கூடத் தென்படவில்லை.
      உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
      கேட்டு விளங்கிக் கொள்ள முயலுகிறேன்.

      (கடவுளர், பிசாசுகள் போன்று) இல்லாத ஒன்றை இல்லை என நிரூபிப்பதை விட, இருந்தால், இருப்பதை நிரூபிப்பது சாத்தியமல்லவா!

  38. நான் ஒன்று கேட்கிறேன், நீங்கள் தொடர்பே இல்லாமல் வேறொரு பதில் சொல்கிறீர்கள். நன்றி.

  39. திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன்:
    கட்டுரைக்குச் சம்பந்தமில்லாமல் எங்கெங்கேயோ போக நான் விரும்பவில்லை.

    கட்டுரை ம.புவின் “கவித்துவத்தை” மறுத்தது. அக் கருத்தை நீங்கள் மறுத்தீர்கள்.
    அந்த நிலையில் நான் குறுக்கிட்டு ம.பு. வெகு சராசரியான கவிஞர் என்றேன். நீங்கள் அதை மறுத்தீர்கள்.

    ம.பு.வை நீங்கள் மெச்சும்படியாக என்ன கவிதை எழுதினார் என்று கேட்டேன். ஓன்றைக் குறிப்பிட்டீர்கள்.
    அதில் கவித்துவமாக என்ன உள்ளது என்ற எனது கேள்விக்கு விடையைத் தவிர்த்து ஏதெல்லாமோ எழுதி வருகிறீர்கள்.
    .
    நம் முன்னாலுள்ள கட்டுரை தொடர்பான கேள்வி, நீங்கள் மெச்சும் ஆக்கம் கவித்துவமானதா இல்லையா என்பது மட்டுமே.
    உங்கள் அளவுகோல்கள் என்னுடையவற்றினிற்று வேறுபடலாம்.

    நீங்கள் மெச்சும் ஆக்கம் கவிதையேயல்ல என்பதற்கான என் விளக்கத்தைத் தந்தேன்.
    நீங்களோ அதில் என்ன கவித்துவம் உள்ளது என்று சொல்லத் தயங்குகிறீர்கள்.
    .
    உங்களுடைய கேள்வி-பதில் விளையாட்டு, கட்டுரைக்கும் நான் கூறிய கருத்துக்கும் சம்பந்தமற்ற திசையில் போவதில் எனக்கு ஒரு வியப்புமில்லை.

    நீங்கள் இந்த விவாதத்தை வென்றதாக ஒப்புக் கொள்வதில் எனக்கு ஒரு தயக்கமுமில்லை. (ஒப்புக் கொள்வதால் ஓருவரை மகிழ்வித்த திருப்தி என்றும் வைத்துக் கொள்ளலாம்).
    .
    மு. மேத்தாவின் கவிதை பற்றி ம.புவின் பேராசான் சுந்தர ராமசாமி சொன்னதாக நான் அறிந்தது: “மேத்தா இனித்தான் கவிதை எழுத வேண்டும்”. அது ஒரு வேளை ம.பு.வுக்கும் பொருந்தலாம்.
    .
    இத் தொடர்பில் இதற்கு மேற் சொல்ல எனக்கு எதுவுமில்லை என்பதால் “வெற்றி உங்களதே” என்று கூறி விடை பெறுகிறேன்.

    வணக்கமும் வாழ்த்துக்களும்– மகாகவி ம.புவுக்கும் சேர்த்து.

  40. தங்களது கண்ணோட்டத்தில், தங்களுக்கு வசதியான முறையில் தாங்கள் வழங்கிய தங்களது தொகுப்புரையில் உள்ள முரண்பாடுகளை, மழுப்பல்களை, சப்பைக்கட்டுகளை விவாதத்தை படிக்கும் எந்த வாசகரும் விளங்கிக் கொள்வார்கள். எனவே தாங்கள் மீண்டும் மீண்டும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் எழுதும் ஒரு கருத்திற்கு மட்டும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

    //நீங்கள் மெச்சும் ஆக்கம் கவிதையேயல்ல என்பதற்கான என் விளக்கத்தைத் தந்தேன்.
    நீங்களோ அதில் என்ன கவித்துவம் உள்ளது என்று சொல்லத் தயங்குகிறீர்கள்.//

    இது பச்சைப் பொய் என்பது உங்களை குறுகுறுக்கச் செய்யவில்லையா? அதில் உள்ள கவித்துவம், “காதலின் தவிப்பை, ஒரு பெண்/ஆணின் அருகாமை உண்டாக்கும் உணர்வை, அதனில் உள்ள உறவின் சிக்கலை சொல்கிறது.” என நான் தெளிவாக பதில் உரைத்தேன். ஆனாலும் நான் தயங்கினேன், மயங்கினேன் எனத் தொடர்ந்து பிலாக்கணம் பாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

    உண்மையில் தயங்கியதும், தற்போது ‘பெருந்தன்மையாக’ விட்டுக் கொடுப்பதான பாவனையில், விவாதத்திலிருந்து விலக நினைப்பதும் நீங்கள்தான். நீங்கள் மனுஷ்ய புத்திரனின் கவிதை மேல் வைத்த விமர்சனத்திற்கான அளவுகோலை வினவு, புதிய கலாச்சாரம் கவிதைகளுக்கு பொருத்த முடியுமா என்ற கேள்விக்கு இது வரை பதில் இல்லை. நீங்கள் முன்வைத்த ‘கவிதைக் கோட்பாட்டை’, (“வாக்கியத்தை –அது எவ்வளவு கெட்டித்தனமாக இருந்தாலும்– வரி பிரித்து எழுதி அது கவிதையாகி விடாது.”) நீங்கள் உயர்த்திப் பிடிப்பதாக நம்பும் வினவும், புதிய கலாச்சாரமும் கடைபிடிக்கிறதா என்று கேட்டவுடன், வெற்றியை எனக்கு பரிசளித்து விலகும் தங்களது தயாள உள்ளத்தைக் கண்டு உண்மையில் புல்லரிக்கிறது.

    கருத்துப் போராட்டத்தில் போலித்தனமான எக்காளத்துடன் விலகுவதை விட கடுமையானதாகத் தோன்றும் கேள்விக்கு விடையளிக்க முயல்வதும், சுயவிமர்சனக் கண்ணோட்டத்துடன் தன்னைப் பரிசீலிக்கத் தயாராவதும்தான் ஒரு கம்யூனிஸ்டின் இலக்கணம். வறட்டுவாதிகளுக்கு அது தேவையில்லை என்பது உண்மைதான்.

    • தோல்வியை ஒப்புக் கொள்ளுகிறேன்: உங்களை மகிழ்விக்க எனக்கு இயலாதுள்ளது.
      .
      எனினும் ஒரு இறுதி முயற்சி:
      .
      பார்க்காமலே
      இருந்திருக்கலாம்

      ஆஹா! என்ன அற்புதமான வரி! பர்ர்த்திருக்கலாம் என்று சொல்லாமல் “பார்க்காமலே இருந்திருக்கலாம்” என மறை பொருளாக எவ்வளவு நாசூக்காக உணர்த்தியிருக்கிறார்.
      முதல் வரியே (அல்லது இரண்டு வரிகளுமா?) கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் என்கிற மாதிரிப் பிரமாதம்!

      பார்த்தும்
      பாராத்து போல போயிருக்கலாம்
      என்ன அருமையான திருப்பம்! போனாளா, போனானா என்பதையா போயிருக்கலாம் என்பதையா போகலாமே என்றா கவிவேந்துகளின் வேந்தர்கோன் எழுதி இருப்பார்? இன்னும் எத்தனை எத்தனை சாத்தியப்பாடுகள்!
      நினைத்துப்பார்க்கவே நெஞ்சம் நிரம்பி வழிந்த உணர்ச்சி வெள்ளம் ஆறுகளையும் குளங்களையும் ஆழ்கடலையும் பேராழியைபயும் வளிமண்டலத்தையும் வான்வெளியையும் அண்டப்பெருவெளியையும் நிரப்புகிறது!
      பிய்ச்சுட்டாரையா! பிரமாதம்! அருமையான, செமத்தியான, ஜோரான, பேஷான, தடாலடியான………….
      இதற்கு மேல் சொற்கள் வரமாட்டேன் என்கின்றன.
      .
      எனவே மன்னிக்கவும். மறுபடியும் தோல்வியை ஒப்புக் கொள்ளுகிறேன் – ம.புவின் ‘கவிதை’யிடமும் தான்.

    • //“கக்கா போகலாம், போகாமலும் இருக்கலாம், போனாலும் பாதகமில்லை, தண்ணியிருந்தா கழுவலாம், இல்லாட்டி துடைக்கலாம், நாறினா ஓடலாம்,” ம்னு நான் என்டர் தட்டாத ஒரு கவிதை சொன்னா ஒத்துப்பியாலே?.. பொழப்ப பாருலே போக்கத்த மூதின்னு துப்பமாட்ட?// – இது ‘கவி’ காளமேகம் அண்ணாச்சி சொன்னது.

      “காதலின் தவிப்பை, ஒரு பெண்/ஆணின் அருகாமை உண்டாக்கும் உணர்வை, அதனில் உள்ள உறவின் சிக்கலை சொல்கிறது.” – என்ற கூறிய எஸ். ராஜன் அவர்களின் கவித்துவ இலக்கணத்தின் படி…

      “கழிக்க வேண்டியதின் தவிப்பை, ஒரு கழிப்பறையின் அருகாமை உண்டாக்கும் உணர்வை, அதனில் உள்ள ‘பிரிதலின்’ சிக்கலைச் 🙂 சொல்கிறது..” என்று பொழிப்புரை கூறி அதன் கவித்துவத்தைப் பாராட்டுகிறேன்.

      Corporal zero , நீங்களும் கவி காளமேகத்தை கொஞ்சம் பாராட்டுங்க, ப்ளீஸ்… ப்ளீஸ்…

      • ஒரு காவியத்துக்கு நயம் கூறிக் களைத்திருக்கிற வேளையில் இப்படி ஒரு சுமையை ஏற்றுவது நியாயமா போதெம்கின் அவர்களே!
        என்றாலும் கேட்டுவிட்டீர்கள்.
        .
        காளமேகம் கவிதை மலத்தைப்பற்றியதல்ல. இதைப் பலராலும் புரிந்துகொள்ள இயவவில்லை.

        அது சுற்றாடல் பாதுகாப்புப் பற்றிய நுண்ணிய கேள்விகளை எழுப்புவது.

        போகாமலும் இருக்கலாம், போனாலும் பாதகமில்லை,
        என்ற வரிகளில் வருகிற “போனாலும் பாதகமில்லை” என்பதைப் பின்னால் வரும் வரிகளுக்கும் பொருத்தி வாசிக்க வேண்டும்.

        “தண்ணியிருந்தா கழுவலாம்,
        இல்லாட்டி துடைக்கலாம்,
        நாறினா ஓடலாம்”

        “கழுவாமல் விட்டாலும் பாதகமில்லை” “துடைக்காமல் விட்டாலும் பாதகமில்லை” “நாறினா ஓடாமல் விட்டாலும் பாதகமில்லை” என்பன கூறப்படாமை கவிதையின் சிறப்பு.
        .
        இதன் பொருளென்ன?
        கழுவி நீரை வீணாக்காதே, துடைத்துக் காடுகளை அழிக்காதே, நாறினாலும் பொறுத்துக்கொள்.

        முழு நாடுமே நாற்றமடிக்கிறது என்பதை எவ்வளவு துல்லியமாகச் சொல்லி இருக்கிறார்.
        .
        என்றாலும் இக் கவிதை கவிவேந்துகளின் வேந்தர்கோன் ம.பு. கவிதைக்கு உறைபோடவும் தாணாது.
        .
        இந்த மாதிரி நயங்கூற எங்கே படித்தேன் என்று கேட்கிறீர்களா?
        பின்னவீனத்துவச் செம்மல்கள் தமிழவன், அமார்க்ஸ் (மார்க்ஸ் என்பதன் எதிர்ச்சொல்) எனும் பேருடைய பெருந்தகைகளிடம் அடியேன் கற்ற கைம்மண்ணளவு.
        .
        அதை விட இன்னொரு விடயம்:
        எஸ்.ராஜன் ம.புவை மட்டம்தட்டும் நோக்கத்துடனேயே இந்த விவாதத்தை இவ்வளவு தூரம் இழுத்தார் என ஐயுறுகிறேன்.

  41. வறட்டுத்தனம் அயோக்கியத்தனத்திற்கு, வெட்கங்கெட்ட பழிப்புகளுக்கு இட்டுச் செல்லும் பரிணாம வளர்ச்சியை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    • உங்களையே கண்ணடிமுன் நின்று அச்சொட்டாகவம் ம.புவை விடக் “கவித்துவமாகவும்” வர்ணித்துள்ளீர்கள்:
      “வறட்டுத்தனம் அயோக்கியத்தனத்திற்கு, வெட்கங்கெட்ட பழிப்புகளுக்கு இட்டுச் செல்லும் பரிணாம வளர்ச்சியை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறீர்கள். வாழ்த்துக்கள்.”

      பாராட்டுக்கள்

    • நீங்க பாட்டுக்கு சுயவர்ணனைன்னு சொல்லிட்டீங்க…

      அது அவரோட கவிதையா இருக்கப்போவுது…
      அப்புறம் அதுக்கும் ஒரு கவித்துவ விளக்கம் குடுக்க ஆரம்பிச்சா தாங்குவீங்களா நீங்க?

  42. Enda sethavara kooda vida maateengala?? sari sujatha pathi pesuriye , neenga ilakiyathula enna pudingiirukeengannu naanga therinjukkalama sir?? Just dont write things with jealousy. You spill venom against Sujatha jus because he happened to be from a brahmin community. I havent seen any posts condemning Fake godmen like Dinakaran family, Vincent Selvakumar,

Leave a Reply to jk பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க