privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?

வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 6

சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசபக்தர்களுக்கும், தூக்குக் கயிற்றில் தொங்கிய தியாகிகளுக்கும் உயிர் கொடுத்த மந்திரச் சொல் வந்தே மாதரம்‘. தன்னிகரில்லா பாரதத் தாயின் மீது பக்தியையும், அன்பையும் தூண்டி எழுச்சியைத் தோற்றுவிக்கும் வந்தே மாதரதேசிய கீதத்தை கிறித்தவர்களும், முசுலீம்களும் பாட மறுக்கிறார்களே ஏன்?”

ஆர்.எஸ்.எஸ்.இன் நீண்டகால அவதூறுகளில் இதுவும் ஒன்று.

டந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வந்தே மாதரத்தைக் கட்டாயமாகப் பாடும் நடைமுறையை அவர்கள் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள். வந்தே மாதரத்தைப் பாட மறுக்கும் சிறுபான்மையினரைத் தேசத்துரோகிகள் என்று பெரும்பான்மை மக்கள் எளிதில் ஏற்கும் வண்ணம் பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். ஆகையால் வந்தே மாதரத்தையும் நாட்டுப் பற்றையும் இணைத்து இந்து மதவெறியாளர்கள் போட்டிருக்கும் இந்தப் பொய் முடிச்சை நாம் அவிழ்க்க வேண்டும்.

நாட்டுப் பற்று ஜெபத்திலா, சிறையிலா?

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியவர்களின் பெருமை, அவர்கள் ஒவ்வொரு நாளும் வந்தே மாதரத்தை உச்சசாடனம் செய்தார்களா என்பதில் இல்லை; தடியடி, சிறை, தூக்கு இன்னபிற கொடுமைகளை ஏற்றுக்கொண்டு தளராமல் போராடியதில்தான் இருக்கின்றது அவர்களது பெருமை. அதைத்தான் நாட்டுப்பற்று எனக்கூற முடியும். அதேசமயம் வெள்ளையர்கள் இருக்கும்வரை ‘ஷாகா’ சென்று கபடி விளையாடிய ஸ்வயம் சேவகக் குஞ்சுகள், ஒவ்வொரு நாளும் ‘வந்தே மாதரம்’ ‘பாரத் மாதாகி ஜெய்’ இரண்டையும் ஜெபம் செய்தார்களே ஒழிய, சுதந்திரப் போராட்டத்திற்காகத் தமது சுட்டு விரலைக்கூட அசைக்கவில்லை. சிறைக் கம்பிகளைக் கூடக் கண்டிராத கோழைகளும், துரோகிகளுமான இந்துமத வெறியர்கள், வந்தே மாதரத்தின் ஊடாக நாட்டுப்பற்றை பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?

பாரதமாதா கிடக்கட்டும், பாரதம் என்று இன்று அறியப்படும் இந்தியாவே உருவாயிராத காலம்தான் 19ஆம் நூற்றாண்டு. பல்வேறு வழிமுறைகளில் ஆட்சியதிகாரத்தை வெள்ளையர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்த காலம் அது. அதனால் அதிகாரமிழந்தவர்கள் அவர்களை எதிர்ப்பதும், அதிகாரம் பெற்றவர்கள் ஆதரிப்பதும் இடத்திற்கிடம் மாறுபட்டது. உதாரணத்திற்கு மராத்திய சிவாஜிக்குப் பின், பேஷ்வாக்களின் ஆட்சியில் தக்காணம் முழுவதையும் பார்ப்பன ‘மேல்’சாதி நிலப்பிரபுக்களும், வியாபாரிகளும் ஆண்டு அனுபவித்தனர். ஆங்கிலேயரின் வரவு பேஷ்வா ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. தமது சமூக மேலாண்மை பறி போனதைக் கண்ட மராத்திய சித்பவனப் பார்ப்பனர்கள், வெள்ளையர்களை எதிர்க்கத் துவங்கிய சூழ்நிலை இதுதான். திலகர், கோகலே, சாவர்க்கர் போன்ற சித்பவனப் பார்ப்பனர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களாக உருவான விதமும் அப்படித்தான்.

ஆங்கிலப் பிதாவிடம் வங்கமாதாகாதல்!

மராத்திய நிலைமை இப்படியிருக்க வங்கத்தின் நிலைமை நேரெதிராக இருந்தது. மொகலாயர் ஆட்சிக்குப் பின்னால் வங்கத்தை ஆண்ட முசுலீம் நவாப்புகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் – பார்ப்பன ‘மேல்’சாதியினர் தமது அதிகாரத்தை இழந்து தவித்தனர். எனவே, நவாப்புகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர். இந்தச் சூழ்நிலையை வைத்து 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ற பார்ப்பனர் ‘ஆனந்தமடம்’ என்ற நாவலை எழுதினர். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் ‘வந்தே மாதரம்’ (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்ற தாயை விளிக்கும் ‘வந்தே மாதரம்’ இப்படித்தான் தோன்றியது.

”நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய்விட்டது; சமூகம் போய்விட்டது; மானம் போய்விட்டது; குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க் கொண்டிருக்கிறது…” இது ‘ஆனந்த மடம்’ நாவலில் வரும் ஒரு உரையாடல். இதில் யாருடைய மதம் – சமூகம் – மானம் – குலம் – பிராணன் போய்விட்டது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த ‘ஆங்கிலப் பிதாவை’ அன்றைய வங்கத்துப் பார்ப்பன ‘மேல்’ சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தே மாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!

காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கரியமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன ‘மேல்’சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனிய இந்துத்துவக் கருத்தும் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருந்தன.

பஜனை நாட்டுப்பற்று எங்கேயுமில்லை!

இந்த இடத்தில் வாசகர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரிட்டன், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் போன்ற ஏகாதிபதியங்களின் ஆதிக்கத்தின் கீழ் பல ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் இருந்திருக்கின்றன. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம் விடுதலையும் அடைந்திருக்கின்றன. அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் கிறித்தவம், இசுலாம், பவுத்தம் என்ற பலவிதமான மதநம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர். லிபியாவின் ஓமர் முக்தா தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த இசுலாமிய மதப்பற்று கொண்டவர்; துருக்கியின் கமால் பாட்சாவோ மதச்சார்பற்றவர்.

சீனாவை ஆக்கிரமித்த ஜப்பானும், அடிமைப்பட்ட சீனாவும் பவுத்தமத நம்பிக்கை கொண்ட நாடுகள்தான். அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் மதமும், அடிமைப்படுத்தப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் மதமும் கிறித்தவம்தான்.

அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் மக்கள் தம்நாட்டைத் தாய்நாடென்றோ தந்தையர் நாடென்றோதான் அழைத்தார்கள். ஆனால், யாரும் கன்னி  மேரியைப் போலவோ, ஏசுவைப் போலவோ, புத்தரைப் போலவோ ஒரு படம் வரைந்து வைத்து குடம், சாம்பிராணி காட்டி, இந்தப் படத்துக்கு பஜனை பாடுபவன்தான் உண்மையான நாட்டுப்பற்று கொண்டவன் என்று கூறவில்லை. ஒரு மதத்தினர் மட்டுமே வாழும் நாடுகளில் கூட  நடக்காத இந்தப் பித்தலாட்டம், பல மதத்தினர் வாழும் இந்தியாவில் நடந்தது.

ரவிவர்மாவின் லட்சுமி காங்கிரசின் பாரத மாதா

கோயில்களின் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி, ”இதுதான் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி” என்று வரைந்து தள்ளினார் திருவதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவிவர்மா. இப்படி ‘மாதா’க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசிவரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் ‘விடுதலைக் கீதம்’ என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையத் செய்யாதா?

இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கை காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது. உருவ வழிபாடில்லாத, ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட கிறித்தவ, இசுலாமிய மதங்களைச் சேர்ந்த மக்கள் வந்தே மாதரம் பாடுவதன் மூலம் இந்துத் தெய்வங்களை வணங்க வேண்டும் என்பது இந்துமத வெறியர்களின் குரூரமான விருப்பம். பாட மறுக்கும்போது தேசவிரோதிகள் என்று பிரச்சாரம் செய்வது அவர்களது பாசிச நோக்கம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு.

பாரத மாதாவை விற்பவர்கள் யார்?

ஒரு நாடு என்பது அங்கு வாழும் மக்களை மட்டும்தான் குறிக்கும். நாட்டுப்பற்று என்பது அம்மக்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதை மட்டும் குறிக்கும். மக்களையும், அவர்கள் நலனையும் பற்றிக் கவலைப்படாத இந்து மதவெறியர்கள்தான் நாட்டை தெய்வம், படம், பூசை என்று சடங்கு முறையாக்கும் ”தேசபக்தி”க்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். ஆகையால் நாட்டை தெய்வமாக்குவதை அதுவும் பார்ப்பனத் தெய்வமாக மாற்றுவதை அனைவரும் எதிர்க்க வேண்டும்.

ஆகாசவாணியின் விடிகாலை ஒலிபரப்பில் கீறல் விழுந்த ரிக்கார்டாக ஒலித்துவந்த வந்தே மாதரத்தை, பிரேக் டான்சின் வலிப்புக்கேற்ப பாப்பிசை ‘வண்ட்டே மாட்றம்’ ஆக சோனி நிறுவனம் உலகெங்கும் வெளியிட்டிருக்கிறது. இன்னொருபுறம் மேல்நிலை வல்லரசுகளுக்காக நாட்டையே காட்டிக் கொடுத்து விற்கும் தரகனாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. இப்படி அரசியலிலும் பண்பாட்டிலும் பொருளாதாரத்திலும் ”பாரத மாதா”வை விற்பவர்கள் முசுலீம்களோ, கிறித்தவர்களோ அல்ல!

– தொடரும்

____________________________________________________________

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. அமெரிக்க காரனிடம் முதுகுக்கு பின்னால் பேரம் பேசுபவர்கள் இவர்கள், வந்தே மாதரம் மட்டும் எதற்கு இவர்களுக்கு.

    மற்றவர்களை தேச துரோகிகள் ஆக்குவதர்காகவோ.!

  2. தங்களுடைய பதிவுகளை தினமும் படிப்பவன் நான். தங்களின் கருதுக்கள் அனைத்தும் நடுநிலையாகவும் நல்ல தகவல்களை தருவதாகவும் உள்ளது. தஙளுடைய அனைத்து பதிவுகளையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாம்.
    தங்கள் பதிவுகள் சிறந்த முறையில் தொடர வாழ்த்துக்கள்..

  3. Naanum paakarem, thodarnthu Hinduism pathiye ezhudhiye kaalatha otriye, enna christians ennavo romba nallavanunga madhiriyum, muslim ellarum thyagigal madhiriyum project panreengale, ungalukku thiruttu Jegath casper,Thioruttu dinakaran, Vincent Selva kumar angel Tv, Fake muslim preiests across the counrtry avangala pathi theriyadha madhiriye bajana panreengale, innum ethana nalaikku??? If you had any guts you should expose christian fraud? just mentioning people like Dinakaran once in a bluemoon to win peoples trust and forgetting the followups altogether doesnt do vinavu any favor….

  4. நான் இந்துவோ, முசுலிமோ, கிருத்தவனோ அல்ல தமிழன், ஒரு இனத்தின் விடுதலை பாட்டு என்பது அந்த இனத்தின் தாய்மொழியில் இருக்க வேண்டும் ஆனால் சமற்கிருத மொழியில் உருவான தேசிய கீதம், தேசிய பாடல் போன்றவற்றை தமிழன் பாடுவது காலத்தின் அவமானம், இந்திய என்னும் கூட்டாட்சியில் தமிழ் இனத்திற்கு பாதுகாப்பில்லை, தமிழ் மொழிக்கு பாதுகாப்பில்லை
    தமிழ் கலாச்சாரம், தமிழ் மரபு, பண்பாடு, திருவிழாக்கள் என அனைத்தையும் இந்தியா மறைத்து வடநாட்டு மொழியான இந்தி, வடநாட்டு மக்களின் நலம் இதை மட்டுமே இந்தியா கவனம் செலுத்துகிறது, இதை மக்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்

    • Ennaya tamizh tamizhnu overa sound kodukureenga.. tamizh na enna komba molaikkudhu illa vera edhavadhu… vayula asingama varudhu.. ella mozhiyum onnu thaan.. Indiala irukka mozhi ellame samam thaan. Hindi learn panna enna koranja poiduvom? just learning a another language helps us to understand them in a better way and communicate freely with out any hassles. Its such a pity that tamils have been deprived of learning hindi by thos filthy politicians. Indiala matha endha statelayum poi paarunga. conductor, poti kada vechurkavan ellarum hindi pesuranga.. aana inga tamizh tamizhnu solraaangale thavira avanga thamizh ellam Kumudham, Dina thanthi , Vikatan levella thaan irukku. Can anybody tell us what harm does one have in learning a language???

      • உனக்கு உன் தாய் மொழியான தமிழ் தெரியுமா? முதலில் தமிழை எழுத படிக்க பழகு. அதன் பிறகு மற்ற மொழிகளை கற்கலாம். மற்ற மொழிகளை கற்க கூடாது என்று எவரும் சொல்லப்போவதில்லை. முதலில் உன் தாய் மொழியை படி. நீ தமிழ் பண்டிதராக வேண்டாம். சாதாரணமாக படித்தால் போதும்.

        • Pasikkamala inga vandhu ezhudurrom ayyo kadavule indha jandhukkala enna panradhu???.. Idhaye karunanidhiyidam kel poi enya unga suyanalauthukkagqa matravargal oru languagea kathukka mudiyadhapadi panninanu…

          • Sorry for the typo..
            Padikkamala inga vandhu ezhudurrom ayyo kadavule indha jandhukkala enna panradhu???.. Idhaye karunanidhiyidam kel poi enya unga suyanalauthukkagqa matravargal oru languagea kathukka mudiyadhapadi panninanu… Atleast chennai has its fair share of private schools where hindi as a second language is available what about the plight of thousands of schools in the rurals and suburbs.. You can convenienly say nobody stopped you from learning. Ofcourse, those who live in city can learn spending their money but what about millions of people living in the outskirts. Aren’t those people migrating to places like Bangalore, Delhi, mumbai.. Particularly when they lack communicating in English Hindi could come in handy.. Its the duty of state government to ensure the best for its citizens is it or not??

            • தம்பீ, முதலில் ஏன் இங்கே இந்தி எதிர்ப்பு வந்ததுன்னு தெரிஞ்சுன்டு உன் கருத்தை சொல்லு..நல்லா இருக்கும்.. 1964 முதல் இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி..அதைக் கட்டாயம் படிக்கணும்னு இந்தி வெறியர்கள் சட்டம்போட முனைந்தபோது அந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு நாம் தக்க பதில் கொடுத்தோம்.. ஹிந்தி எத்தனை சதவீதம் பேரால் பேசப்படுகிறது? 25%? கடிபோலி, ஹிந்துஸ்தானி, மைதிலி, போஜ்பூரி, கட்வாலி,ஹரியான்வி, ராஜஸ்தானி என எல்லா மொழிகளையும் ஹிந்திதான்னு மட்டை அடி அடிக்காம ஹிந்தி எத்தனை சதவீதம் பேரால் பேசபப்டுதுன்னு சொல்லு.. நிற்க..இந்தியாவில் ஒரே தேசிய இனமா இருக்குது? இது தேசமே அல்ல..தேசிய இனங்களின் சிறைக்கூடம்..புரியுதா? தமிழ் ஒரு தேசிய இனம்..மலையாளம் ஒரு தேசிய இனம்..வங்காளம் ஒரு தேசிய இனம்..இந்த மாதிரி இருக்கச்சே ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் மொழியை அரச கரும மொழியா அறிவிக்கிறது அயோக்கியத்தனம் இல்லையா? இலங்கையிலே பாரு..2 தேசிய இனங்களுடைய மொழிகளும் ஆட்சிமொழியா இருக்கு..சிங்கப்பூரிலே மலாய்,சீனம்,ஆங்கிலம்,தமிழ் 4ம் தேசியமொழிகள்..இத்தனைக்கும் அங்க்ந்ந் 8 சதம்தான் தமிழர்கள்.. இப்படி இருக்கும்போது சும்மா கருணாநிதி மீது பாஞ்சு பிரான்டாம..சுயமா யோசிச்சுப் பார்..இந்தி படிச்சா எல்லோருக்கும் வேலை கிடைக்கும்..அப்படிங்கறது பொய்..அங்கேருந்துதான் நிறைய பேரு தென்னிந்தியாவுக்கு வேலைதேடி வாராங்க..மேலும் இந்தி பெல்ட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் கொடி கட்டிப் பறக்கு..லக்னோ மாணவன் இந்தி,இங்கிலீஸ், அறிவியல்,கணக்கு,சமூகவியல் னு 5 பாடம் மட்டும் படிச்சிட்டு 10 ஆம் வகுப்பு பாஸ் பண்ணும்போது நான் (தமிழன்) மட்டும் 6 பாடம் ஏன் படிக்கணும்? நான் இந்தி படிக்கத் தயார்-அவன் தமிழ் படிக்கத் தயார்னா..
              இந்தி என்ன மராட்டி கூட எவரும் கத்துக்குவாங்க..தேவையின் அடிப்படையில்..கன்யாகுமரி,ராமேஷ்வரம் ஊர்களில் தரைக்கடை வியாபாரிகள் அனைவருக்கும் இந்தி தெரியும்..ஏன்னா அது சுற்றுலாப்பயணிகளிடம் சரக்கு விற்க அவங்களுக்கு தேவை..அவங்க எந்தப் பள்ளியிலும் போய் இந்தி கற்கலை..தாராவிக்கு வேலை தேடிப்போகும் தமிழன் 1 மாதத்துக்குள் மராத்தி இந்தி கத்துக்குவான்..இதுவும் தேவை அடிப்படையில்தான்.. ஆனா எல்லோரும் இந்தி படின்னு சொல்றது பித்தலாட்டம்..7 கோடி தமிழனுமா தில்லிக்கு போறான்? இப்படியே போனா கோவில்ல சாமிகிட்டே பேச சம்ஸ்கிருதம் கத்துக்கணும்னு சொல்வே போல இருக்கு..வேணும்னா சாமி தமிழ் கத்துக்கட்டும்..முடியாதுன்னு முரண்டு பிடிக்கிற சாமி எனக்கு வேணாம்..நாடு கடத்துவோம்..

              • Anne, En inga vattiku vudra set tamizh pesaliya, Sowcarpetla covering naga vikkaravan tamizh pesaliya, Gulfi ice vikkaravan tamizh pesaliya, opanipuri podravan tamizh pesaliya?? avangalam ellam vada naatula varama spain mexicolendha vandhaanga. Naan kattayapaduthunatha edhirthiorukken keezha poi paaar. Sari un kannaku padiye, தாராவிக்கு வேலை தேடிப்போகும் தமிழன் 1 மாதத்துக்குள் மராத்தி இந்தி கத்துக்குவான்?? omedyy kemedy pannaliye..Ivanuga oru language supremacyoda alayuraanuga ivanunga 1 maasathula hindi kathukiraanungala.. kaadhu poo suthalam \poo malaye sutha koodathu…. இலங்கையிலே பாரு..2 தேசிய இனங்களுடைய மொழிகளும் ஆட்சிமொழியா இருக்கு..சிங்கப்பூரிலே மலாய்,சீனம்,ஆங்கிலம்,தமிழ் 4ம் தேசியமொழிகள்..இத்தனைக்கும் அங்க்ந்ந் 8 சதம்தான் தமிழர்கள்.. idhu vena othukkuren…singapore enna namma mylapore mandaveli, adyara setha enna size irukkomu avlo irukkuma? irundhalum vijaykanth rangeku percentage, statistics sona ungala paaratama irukka mudiyala…
                இப்படியே போனா கோவில்ல சாமிகிட்டே பேச சம்ஸ்கிருதம் கத்துக்கணும்னு சொல்வே போல இருக்கு..வேணும்னா சாமி தமிழ் கத்துக்கட்டும்..முடியாதுன்னு முரண்டு பிடிக்கிற சாமி எனக்கு வேணாம்..நாடு கடத்துவோம்..

                Paathengala, kadaisila unga favoutite topicku vandhuteenga.. idha idha idhathaan naan ethirpaarthen.. ponga poi karunanidhukku sombu adeenga nalla

            • இந்தி என்பது தேவையற்ற ஒரு கூடுதல் சுமைதான் மாணவர்களுக்கு, தோழர் இரணியன் சொன்னது போல இந்தியை தாய் மொழியாய் கொண்ட இந்தியர்கள் மிகவும் குறைவு. நான் மஸ்கட்டில் பணிபுரிந்து வருகிறேன் இங்கு பணிபுரியும் உ.பி, பீகார் தொழிலாளிகள் தங்களுக்குள் போஜ்பூரி மொழியிலேயே பேசி கொள்கின்றனர். அவர்களின் தாய் மொழி போஜ்பூரி, இந்தி அல்ல.லக்னோ போன்ற பெருநகரங்களில் இருந்து வரும் மிக சிறுபான்மையினரே இந்தியை தாய்மொழியாய் கொண்டுள்ளனர். இந்தி பேசும் நபர்களோடு தொடர்சியாய் பழகினால் இரண்டே மாதத்தில் கற்று கொள்ள கூடிய எளிமையான மொழி இந்தி. இந்தி தெரியாதவர்களுக்கு இந்தி பேசப்படும் இடங்களில் சிரமமென்பது இரண்டு அல்லது மூன்று மாதங்கள்தான். இந்த குறுகிய காலத்திற்காக பள்ளி சிறார்களை பல வருடங்கள் வதைப்பது தேவையற்றது.

      • I think this ‘Super’ never visited Kolkata, Rajastan and all. In kolkata only few person speak and understand Hindi. I bet this idiotic guy. If he really wants to know the fact he can check with his friends who visited Kolkata. Even in Rajastan, cities like Udaipur I saw many conductors who rarely understand Hindi. I bet this idiotic guy.

        Ask him to go to Surat in Gujarat. Only other state people speak hindi. Survey says that in Surat 85% of native people don’t understand Hindi. Think or at least try to know the fact before take vomit on the net ….

        • Is it so? maramanda… ive visited ahmedabad many times with my colleagues who are fluent in hindi, ive seen them conversing in hindi with the natives. If Ahmedabad (which is main city in gujarat, where all the businesses run) can speak hindi without any hassles why not chennai which is so called metropolitan.. have the 20 other states which have their language as well speak hindi lost their language completely??? , . So you wanna compare tamilnadu with yet westbengal for this linguistic inability.. great!!!

          • எதற்கெடுத்தாலும் ஜப்பானைப் பார், பிரான்சைப் பார், அமெரிக்காவைப் பார்ன்னு சொல்றீங்களடா ! அவனுங்க எல்லாம் அவனவன் தாய்மொழியிலதான்டா ஆய் கூட போறான்.

        • நிறைய மொழி கத்துண்டா என்ன பிரயோஜனம் சொல்லும் ஓய்..குருவிக்காரவா ஆறு பாஷைலாம் பேஷரா தெரியுமோ..அவாளை எல்லாம் அன்டர் செக்ரட்டரியாவோ, சர்வீஸ் கமிஷன் சேர்மனாவோ, வைஸ் சான்சலராவோ மாத்திடப் போறேளா? அப்புறம் என்னத்துக்கு நெறைய பாஷை கத்துக்கச் சொல்றேள்? ஒண்ணு பண்ணும் ஓய்…சிதம்பரம் நடராஜர் மாதிரி ஆளுங்களை அந்த அந்த ஊர் பாஷையைக் கத்துக்கச் சொல்லுங்கோ..அது போரும்…நம்பவா பல்லு விளக்காம சமஸ்கிருதத்துல முனங்கறதுல எத்தன கெட்ட வார்த்தன்னு ஜனங்களுக்காச்சும் புரியுமோ இல்லியோ…நம்ம ஸ்வாமிகள் இத்தனை பிடிவாதமா சமஸ்கிருதம்னு இருக்கலாம்..ஆனா சூத்திராள் அவா பாஷை மேலே பிடிவாதம் காட்டிறப்படாதா?

  5. டுபாக்கூர் கம்மியுனிசம் பேசி அடுத்தவனை பிரைன் வாஷ் பண்ணி தெருவில் உண்டி குலுக்க விடும் வினவையே, எவனோ (ஹிந்து இல்லாத ஒருத்தன் ) பக்காவா பிரைன் வாஷ் பண்ணிக்கிட்டு இருக்கான். அதோட வெளிப்பாடுதான் இதேமாதிரியான வாரா வாரம் ஆரவாரமான கட்டுரைகள். , , ,
    போகட்டும் .

    வந்தே மாதரம் பாட்டை பாட மறுக்குறவன் தேச துரோகிதான்யா. அவன் ஹிந்துவா இருக்கும் பட்சத்தில். இது அவனோட சொந்த நாடு. அந்த அடிப்படைல அவன் பாடித்தான் ஆகணும். இல்லாட்டி அவன் ஹிந்து வா இருக்கவும் தகுதி இல்லை, இந்த நாட்டுல இருக்கவும் தகுதி இல்லை.

    மத்தபடி வேற மதத்தை சேர்ந்தவனை பாடுடான்னு எவனும் எங்கியும் வற்புறுத்தல. எதாவது ஆதாரமோ, சம்பவமோ காமிக்க முடியுமா உங்களால?

    இல்லாத ஒன்னை கற்பனை பண்ணிக்கிட்டு ,ஏன்யா வீணா புது புது பிரட்சினைய கிளப்புறீங்க?.

    அதுக்காக வந்தே மாதரம் பாடறவன் லாம் ஏதோ தீவிரவாதி மாதிரி நினைச்சுகுறீங்க. இது உங்க தாழ்வு மனப்பான்மையோட வெளிப்பாடுதான். அதோட இல்லாமல் அதை பாட கூடாதுன்னு சொல்றமாதிரி தான் இருக்கு உங்க கட்டுரை வரிகள்.

    அராபிய பாலைவனத்தில் வேலைக்கு போகும் ஒரு மைனோரிட்டி மதத்துக்காரன் தெரியாம ஏதும் தப்பு பண்ணிட்டன்னா , உடனே அந்த நாட்டு சட்டத்தை மதிச்சி தான் நடக்கணும்னு லா பேசும் இந்த நாட்டு ஆளுங்க, வந்தே மாதரம் விவகாரத்தையும் ஏன் அந்த கண்ணோட்டத்துல பார்க்க கூடாது?

    இது இந்தியா , இங்கே இப்படிதான்யா இருக்கும். புடிக்காதவன் அவன் அவன் பொழப்பை பார்த்துட்டு பொட்டி கட்டிட்டு கிளம்பி போங்களேன்,

    இதுதான், பொம்மை சாமியை கும்பிடுற மக்கள் அதாவது சைத்தானின் , பேயின் குழந்தைகள் உள்ள நாடாச்சே, அப்புறம் ஏன்யா தெரிஞ்சே இங்கே இருக்கீங்க?

    நீங்க யாரும் கிளம்ப மாட்டீங்க, நீங்க போனாலும் ஒருத்தனும் உங்களை கிட்ட சேர்த்துக்க மாட்டான், அடிச்சி தொரத்திடுவான்.

    உங்களுக்கே நல்லா தெரியும் இந்தியாவை உட்டா வேற எங்கியும் உங்க பஜனை செல்லாதுன்னு.

    ஏற்கனவே சுதந்திரம் கிடைக்கிறவரைக்கும் இங்கே கூடி கும்மியடிச்சிட்டு சுதந்திரம் கிடைச்சவுடனே தனியா போனனுங்கள்ள அவனுங்க நிலைமை எல்லாருக்கும் தெரியும்.

    பாகிஸ்தானை ஏதோ சொர்க்க பூமி மாதிரி சில பேர் நினைச்சிட்டு இருக்காங்க . அவங்கல்லாம் ஒரு பாகிஸ்தானியை நேரில் கூட பார்த்துருக்க மாட்டங்க. பழகி இருக்க மாட்டாங்க.

    தினம் தினம் சாவு, குண்டுவெடிப்பு, பஞ்சம் பட்டினி, இங்கே இந்தியாவுல இருக்குற மாதிரி அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ் லோயர் கிளாஸ் னு மூணு நாலு பிரிவெல்லாம் அங்கே கிடையாது, ரெண்டே கிளாஸ் தான். ஒன்னு மதம் சட்டம் னு சொல்லி ஏழையை சுரண்டிதின்னு வயிறு வளர்க்கும் ஒரு கும்பல், இன்னொன்னு அவன் சொல்றதை நம்பி அல்லாடும் மற்றொரு கும்பல். இதெல்லாம் உங்களுக்கு சொல்லி புரியாது. புரிஞ்சாலும் காட்டிக்க மாட்டீங்க .ஒக்கே .

    அடுத்து,

    “கோயில்களின் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி, ”இதுதான் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி” என்று வரைந்து தள்ளினார் திருவதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவிவர்மா.”

    அது சரி அப்போ , வேளாங்கண்ணி மேரி அம்மா சிலைக்கு பட்டு புடவை கட்டி மல்லிகை பூ வச்சி விட்டது எந்த ரொவி வர்மா?

    கிறுக்கு பசங்களா! தெய்வம் ங்குறது நீ எப்படி கற்பனை பண்ணிக்கரியோ அப்படிதாண்டா இருக்கும். நம்ம கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி புடவை கட்டி தெய்வத்தை நீங்க சொன்னா மாதிரி வரைஞ்சே இருந்தாலும் அதுல என்னா தப்பு இருக்க முடியும்?

    அடுத்தது,

    “உருவ வழிபாடில்லாத, ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட கிறித்தவ, இசுலாமிய மதங்களைச் சேர்ந்த மக்கள் வந்தே மாதரம் பாடுவதன் மூலம் இந்துத் தெய்வங்களை வணங்க வேண்டும் “.

    யாரு சார் சொன்னது? இப்படி உங்களுக்கு?

    அப்போ மேரி அம்மா சிலை, குழந்தை இயேசு சிலை, இயேசு சிலுவையில் அறையப்பட்டது மாதிரியான சிலை எதையெல்லாம் வச்சு கும்பிடறவன் கிறிஸ்தவன் இல்லாம வேற யாரு?

    எல்லா ஊரிலும் இருக்கும் வெவ்வேறு பெயருடைய தர்காக்கள் எந்த வகையை சேர்ந்ததுன்னு தெளிவா சொன்னீங்கன்னா வசதியா இருக்கும்.

    அப்புறம், எப்போ பார்த்தாலும் பார்பான் லாம் எங்கியோ வேற ஒரு நாட்டுலேர்ந்து வந்ததா சொல்லிக்கிட்டு திரியறீங்க ( நான் ஒரு நான் – பிராமின்). அப்படின்னா அது எந்த நாடு? அது இப்போ இருக்கா? இல்லை சுனாமி ல அழிஞ்சு போச்சா? அப்போ பார்பனோட மூதாதையர் , சொந்தக்காரன் லாம் அங்கே இருக்கானா? மரபணு சோதனை, ஜீன் டெஸ்ட் ரிசல்ட் லாம் ஒத்து போகுதா? தங்களோட புனித நகரம் னு சொல்லி அந்நிய நாடான அரேபியா, ஜெருசேலம் செல்லும் இசுலாமிய கிறிஸ்தவ மக்களை போல பார்ப்பானும் அங்கே புனித பயணம் போய்ட்டு வந்துகிட்டு இருக்கானா? வினவு கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும், எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்,

    வினவு,

    நீங்க என்னதான் எழுதினாலும், உங்க நோக்கம் நிறைவேற போறதில்லை,

    எத்தனையோ பேர் வந்துட்டு போய்ட்டான், இன்னும் இந்த மதத்தை ஒருத்தனாலும் அழிக்க முடியலை, இனிமேலும் முடியாது. ஒன்னு ரெண்டு அல்லைகைங்க அப்படி இப்படி இருந்தாலும் ஒன்னும் நடக்காது.

    மாதம்தோறும் கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்களும் ,அங்கே அவங்க அவங்க நிம்மதிக்காக சாமியை கும்பிடபோகும் பல கோடி மக்களுமே இதுக்கு சாட்சி.

    எவனையும் கட்டாய படுத்தி மதம் மாத்தனும் ங்கற அவசியமும் எங்களுக்கு இல்லை.அதே மாதிரி எங்க சாமியை கும்பிடாதவனை சைத்தான், பேயின் பிள்ளைகள் னு சொல்ற வழக்கமும் இல்லை.

    இதுதான்யா இந்த மதத்தின் ஸ்பெஷாலிட்டி , கழுதைகளுக்கு கர்ப்பூர வாசனை தெரியாமல் போறதுல ஆச்சர்யம் இல்லை.

    இத்தனைக்கு பிறகும், மத்த மதத்து காரங்க மேல எங்களுக்கு கோபமும் வர்ரதுல்ல, ஏன் தெரியுமா? அவங்க எல்லாருமே ஏதோ ஒரு காலத்துல இந்துவா இருந்தவங்க தான், எங்க முன்னாள் ஹிந்து சகோதரர்கள் தான்,

    பாவம், அரசாங்க வரி கட்ட முடியாம, தையல் மஷினுக்கும், பால் பவுடருக்கும், ஜாதி பிரட்சினைக்காகவும், ஓசி சுகத்துக்கும் இதேமாதிரி பல பல விஷயங்களுக்காக மதம் மாறினவங்க தான்.

    இந்த மாதிரி வாரம் ஒரு புது குழப்பத்தை கிளப்பி, ஒத்துமையா இருக்க நினைக்கிற முயற்சி பண்ற மக்கள் கிட்டே பிளவை ஏற்படுதாதீன்ங்க , ப்ளீஸ்,


    மாக்ஸிமம்

    • மாக்ஸிமம் -நன்றி.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்…

      ///இந்த மாதிரி வாரம் ஒரு புது குழப்பத்தை கிளப்பி, ஒத்துமையா இருக்க நினைக்கிற முயற்சி பண்ற மக்கள் கிட்டே பிளவை ஏற்படுதாதீன்ங்க , ப்ளீஸ்,//

      இதையேத் தான்நானும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்..இவன் வேலையே சண்டை மோட்டிவிடுவதுதான்..

    • ##வந்தே மாதரம் பாட்டை பாட மறுக்குறவன் தேச துரோகிதான்யா. அவன் ஹிந்துவா இருக்கும் பட்சத்தில். இது அவனோட சொந்த நாடு. அந்த அடிப்படைல அவன் பாடித்தான் ஆகணும். இல்லாட்டி அவன் ஹிந்து வா இருக்கவும் தகுதி இல்லை, இந்த நாட்டுல இருக்கவும் தகுதி இல்லை.##

      Hello மாக்ஸிமம் sorry… மாங்க
      தாலிபான்னுக்கு உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை..

    • ஆகா அற்புதம் என்ன நிதர்சனமான உன்மை…ஆல் அல்லக்கைஸ் அசெம்பில் கியெர்..

      ////வினவு,

      நீங்க என்னதான் எழுதினாலும், உங்க நோக்கம் நிறைவேற போறதில்லை,

      எத்தனையோ பேர் வந்துட்டு போய்ட்டான், இன்னும் இந்த மதத்தை ஒருத்தனாலும் அழிக்க முடியலை, இனிமேலும் முடியாது. ஒன்னு ரெண்டு அல்லைகைங்க அப்படி இப்படி இருந்தாலும் ஒன்னும் நடக்காது.

      மாதம்தோறும் கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்களும் ,அங்கே அவங்க அவங்க நிம்மதிக்காக சாமியை கும்பிடபோகும் பல கோடி மக்களுமே இதுக்கு சாட்சி.

      எவனையும் கட்டாய படுத்தி மதம் மாத்தனும் ங்கற அவசியமும் எங்களுக்கு இல்லை.அதே மாதிரி எங்க சாமியை கும்பிடாதவனை சைத்தான், பேயின் பிள்ளைகள் னு சொல்ற வழக்கமும் இல்லை.

      இதுதான்யா இந்த மதத்தின் ஸ்பெஷாலிட்டி , கழுதைகளுக்கு கர்ப்பூர வாசனை தெரியாமல் போறதுல ஆச்சர்யம் இல்லை.

      இத்தனைக்கு பிறகும், மத்த மதத்து காரங்க மேல எங்களுக்கு கோபமும் வர்ரதுல்ல, ஏன் தெரியுமா? அவங்க எல்லாருமே ஏதோ ஒரு காலத்துல இந்துவா இருந்தவங்க தான், எங்க முன்னாள் ஹிந்து சகோதரர்கள் தான்,

      பாவம், அரசாங்க வரி கட்ட முடியாம, தையல் மஷினுக்கும், பால் பவுடருக்கும், ஜாதி பிரட்சினைக்காகவும், ஓசி சுகத்துக்கும் இதேமாதிரி பல பல விஷயங்களுக்காக மதம் மாறினவங்க தான்.

      இந்த மாதிரி வாரம் ஒரு புது குழப்பத்தை கிளப்பி, ஒத்துமையா இருக்க நினைக்கிற முயற்சி பண்ற மக்கள் கிட்டே பிளவை ஏற்படுதாதீன்ங்க , ப்ளீஸ்,////

    • \\
      வந்தே மாதரம் பாட்டை பாட மறுக்குறவன் தேச துரோகிதான்யா. அவன் ஹிந்துவா இருக்கும் பட்சத்தில். இது அவனோட சொந்த நாடு. அந்த அடிப்படைல அவன் பாடித்தான் ஆகணும். இல்லாட்டி அவன் ஹிந்து வா இருக்கவும் தகுதி இல்லை, இந்த நாட்டுல இருக்கவும் தகுதி இல்லை.
      \\

      வந்தே மாதரம்.
      வருதே மூத்திரம்.
      எடுடா பாத்திரம்.
      குடிடா சீக்கிரம்.
      நாங்களும் பாடுவோமுல்ல.

      \\எத்தனையோ பேர் வந்துட்டு போய்ட்டான், இன்னும் இந்த மதத்தை ஒருத்தனாலும் அழிக்க முடியலை, இனிமேலும் முடியாது. ஒன்னு ரெண்டு அல்லைகைங்க அப்படி இப்படி இருந்தாலும் ஒன்னும் நடக்காது.

      மாதம்தோறும் கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்களும் ,அங்கே அவங்க அவங்க நிம்மதிக்காக சாமியை கும்பிடபோகும் பல கோடி மக்களுமே இதுக்கு சாட்சி.
      \\

      வித விதமா அம்மணக்..டி சாமிகள்.நாலு கையி. கூட ரெண்டு அல்லக்கை சாமிங்க. ஆளுக்கு கையிலநாலு கத்தி துப்பாக்கி அணுகுண்டு. போங்கடா. போயி உழுந்து கும்புடுங்க.
      \\
      பாவம், அரசாங்க வரி கட்ட முடியாம, தையல் மஷினுக்கும், பால் பவுடருக்கும், ஜாதி பிரட்சினைக்காகவும், ஓசி சுகத்துக்கும் இதேமாதிரி பல பல விஷயங்களுக்காக மதம் மாறினவங்க தான்.
      \\

      அட அண்ணாச்சி. உங்களுக்கு விவரமே தெரியாதா. மதம் மாறுனவங்கள்ளாம் படிப்பு, சாப்பாடு, சுயமரியாதை, சகோதர மனப்பான்மைக்காகத்தான் மாறுனாங்க. அவங்களாச்சும் பால் பவுடர் குடுத்தாங்க.நீங்க சாணிப்பாலும் சவுக்கடியும்தான் குடுத்தீங்க

      • வினவு. தயவு செய்து என் பின்னூட்டத்தை வெட்டு இல்லாமல் பதிவேற்றம் செய்யுங்கள். பிள்ளைக்கறி கேட்டதும் பக்தனின் மனைவியை பெண்டாளக்கேட்டதும் இந்து கடவுள்தான்.

        • வினவு இதை அழித்து விட்டார்கள். “சாமி அப்புறம் பசிக்குதுன்னு பிள்ளைக்கறி கேட்கும். சந்தோசமா இருக்க உங்க பொண்டாட்டிகளை கேட்கும். அப்படிப்பட்ட நல்ல சாமிங்க.”

      • சரியான செருப்படி…கலக்குங்க…!!!!!!!!! வாழ்த்துக்கள்

        https://www.vinavu.com/2011/06/29/yeddi-kumara/#comment-45024 -> இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பதில் இன்னும் சூப்பர். ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்கணும். இந்திய எங்கும் தெருத்தெருவா இதை போஸ்டர் அடிச்சு ஓட்டனும்னு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…

      • நான் கடவுள்,
        நண்பா இந்த ஆரிய மக்சிமம்தின் வர்ணாசிரமத்தின் கொள்கையை அறுத்து எறிவதற்கு, தீடான்மையை கொள்கையை அறுத்து எறிவதற்கு, இந்த தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு என்றும் உன்னுடன் உறுதியோடு நிற்போம் நண்பா, உன்னுடைய வரிகள் ஹிண்டுதுவாவின் இதயத்தை உடைத்து எறியடும். நன்றி .

    • ####அப்போ பார்பனோட மூதாதையர் , சொந்தக்காரன் லாம் அங்கே இருக்கானா? மரபணு சோதனை, ஜீன் டெஸ்ட் ரிசல்ட் லாம் ஒத்து போகுதா?###

      5 or 6 years back hereditary genetics research program was telecasted in National Geographic Channel, you must see that program first. I think that was BJP’s period, they banned the retelecast. In the program, they took DNA samples from Africa-india(madurai)-australia. and another one from Africa-Europe-India. the first one proved same DNA pattern from Africa-Madurai-Australia(Aborigines). Another proves North Indian connection……so, search the net….you fool “pops”

    • டுபாக்கூர் கம்மியுனிசம் பேசி அடுத்தவனை பிரைன் வாஷ் பண்ணி தெருவில் உண்டி குலுக்க விடும் வினவையே, எவனோ (ஹிந்து இல்லாத ஒருத்தன் ) பக்காவா பிரைன் வாஷ் பண்ணிக்கிட்டு இருக்கான். அதோட வெளிப்பாடுதான் இதேமாதிரியான வாரா வாரம் ஆரவாரமான கட்டுரைகள். , , ,
      போகட்டும் .

      வந்தே மாதரம் பாட்டை பாட மறுக்குறவன் தேச துரோகிதான்யா. அவன் ஹிந்துவா இருக்கும் பட்சத்தில். இது அவனோட சொந்த நாடு. அந்த அடிப்படைல அவன் பாடித்தான் ஆகணும். இல்லாட்டி அவன் ஹிந்து வா இருக்கவும் தகுதி இல்லை, இந்த நாட்டுல இருக்கவும் தகுதி இல்லை.

      மத்தபடி வேற மதத்தை சேர்ந்தவனை பாடுடான்னு எவனும் எங்கியும் வற்புறுத்தல. எதாவது ஆதாரமோ, சம்பவமோ காமிக்க முடியுமா உங்களால?

      இல்லாத ஒன்னை கற்பனை பண்ணிக்கிட்டு ,ஏன்யா வீணா புது புது பிரட்சினைய கிளப்புறீங்க?.

      அதுக்காக வந்தே மாதரம் பாடறவன் லாம் ஏதோ தீவிரவாதி மாதிரி நினைச்சுகுறீங்க. இது உங்க தாழ்வு மனப்பான்மையோட வெளிப்பாடுதான். அதோட இல்லாமல் அதை பாட கூடாதுன்னு சொல்றமாதிரி தான் இருக்கு உங்க கட்டுரை வரிகள்.

      அராபிய பாலைவனத்தில் வேலைக்கு போகும் ஒரு மைனோரிட்டி மதத்துக்காரன் தெரியாம ஏதும் தப்பு பண்ணிட்டன்னா , உடனே அந்த நாட்டு சட்டத்தை மதிச்சி தான் நடக்கணும்னு லா பேசும் இந்த நாட்டு ஆளுங்க, வந்தே மாதரம் விவகாரத்தையும் ஏன் அந்த கண்ணோட்டத்துல பார்க்க கூடாது?

      இது இந்தியா , இங்கே இப்படிதான்யா இருக்கும். புடிக்காதவன் அவன் அவன் பொழப்பை பார்த்துட்டு பொட்டி கட்டிட்டு கிளம்பி போங்களேன்,

      இதுதான், பொம்மை சாமியை கும்பிடுற மக்கள் அதாவது சைத்தானின் , பேயின் குழந்தைகள் உள்ள நாடாச்சே, அப்புறம் ஏன்யா தெரிஞ்சே இங்கே இருக்கீங்க?

      நீங்க யாரும் கிளம்ப மாட்டீங்க, நீங்க போனாலும் ஒருத்தனும் உங்களை கிட்ட சேர்த்துக்க மாட்டான், அடிச்சி தொரத்திடுவான்.

      உங்களுக்கே நல்லா தெரியும் இந்தியாவை உட்டா வேற எங்கியும் உங்க பஜனை செல்லாதுன்னு.

      ஏற்கனவே சுதந்திரம் கிடைக்கிறவரைக்கும் இங்கே கூடி கும்மியடிச்சிட்டு சுதந்திரம் கிடைச்சவுடனே தனியா போனனுங்கள்ள அவனுங்க நிலைமை எல்லாருக்கும் தெரியும்.

      பாகிஸ்தானை ஏதோ சொர்க்க பூமி மாதிரி சில பேர் நினைச்சிட்டு இருக்காங்க . அவங்கல்லாம் ஒரு பாகிஸ்தானியை நேரில் கூட பார்த்துருக்க மாட்டங்க. பழகி இருக்க மாட்டாங்க.

      தினம் தினம் சாவு, குண்டுவெடிப்பு, பஞ்சம் பட்டினி, இங்கே இந்தியாவுல இருக்குற மாதிரி அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ் லோயர் கிளாஸ் னு மூணு நாலு பிரிவெல்லாம் அங்கே கிடையாது, ரெண்டே கிளாஸ் தான். ஒன்னு மதம் சட்டம் னு சொல்லி ஏழையை சுரண்டிதின்னு வயிறு வளர்க்கும் ஒரு கும்பல், இன்னொன்னு அவன் சொல்றதை நம்பி அல்லாடும் மற்றொரு கும்பல். இதெல்லாம் உங்களுக்கு சொல்லி புரியாது. புரிஞ்சாலும் காட்டிக்க மாட்டீங்க .ஒக்கே .

      அடுத்து,

      “கோயில்களின் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி, ”இதுதான் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி” என்று வரைந்து தள்ளினார் திருவதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவிவர்மா.”

      அது சரி அப்போ , வேளாங்கண்ணி மேரி அம்மா சிலைக்கு பட்டு புடவை கட்டி மல்லிகை பூ வச்சி விட்டது எந்த ரொவி வர்மா?

      கிறுக்கு பசங்களா! தெய்வம் ங்குறது நீ எப்படி கற்பனை பண்ணிக்கரியோ அப்படிதாண்டா இருக்கும். நம்ம கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி புடவை கட்டி தெய்வத்தை நீங்க சொன்னா மாதிரி வரைஞ்சே இருந்தாலும் அதுல என்னா தப்பு இருக்க முடியும்?

      அடுத்தது,

      “உருவ வழிபாடில்லாத, ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட கிறித்தவ, இசுலாமிய மதங்களைச் சேர்ந்த மக்கள் வந்தே மாதரம் பாடுவதன் மூலம் இந்துத் தெய்வங்களை வணங்க வேண்டும் “.

      யாரு சார் சொன்னது? இப்படி உங்களுக்கு?

      அப்போ மேரி அம்மா சிலை, குழந்தை இயேசு சிலை, இயேசு சிலுவையில் அறையப்பட்டது மாதிரியான சிலை எதையெல்லாம் வச்சு கும்பிடறவன் கிறிஸ்தவன் இல்லாம வேற யாரு?

      எல்லா ஊரிலும் இருக்கும் வெவ்வேறு பெயருடைய தர்காக்கள் எந்த வகையை சேர்ந்ததுன்னு தெளிவா சொன்னீங்கன்னா வசதியா இருக்கும்.

      அப்புறம், எப்போ பார்த்தாலும் பார்பான் லாம் எங்கியோ வேற ஒரு நாட்டுலேர்ந்து வந்ததா சொல்லிக்கிட்டு திரியறீங்க ( நான் ஒரு நான் – பிராமின்). அப்படின்னா அது எந்த நாடு? அது இப்போ இருக்கா? இல்லை சுனாமி ல அழிஞ்சு போச்சா? அப்போ பார்பனோட மூதாதையர் , சொந்தக்காரன் லாம் அங்கே இருக்கானா? மரபணு சோதனை, ஜீன் டெஸ்ட் ரிசல்ட் லாம் ஒத்து போகுதா? தங்களோட புனித நகரம் னு சொல்லி அந்நிய நாடான அரேபியா, ஜெருசேலம் செல்லும் இசுலாமிய கிறிஸ்தவ மக்களை போல பார்ப்பானும் அங்கே புனித பயணம் போய்ட்டு வந்துகிட்டு இருக்கானா? வினவு கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும், எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்,

      வினவு,

      நீங்க என்னதான் எழுதினாலும், உங்க நோக்கம் நிறைவேற போறதில்லை,

      எத்தனையோ பேர் வந்துட்டு போய்ட்டான், இன்னும் இந்த மதத்தை ஒருத்தனாலும் அழிக்க முடியலை, இனிமேலும் முடியாது. ஒன்னு ரெண்டு அல்லைகைங்க அப்படி இப்படி இருந்தாலும் ஒன்னும் நடக்காது.

      மாதம்தோறும் கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்களும் ,அங்கே அவங்க அவங்க நிம்மதிக்காக சாமியை கும்பிடபோகும் பல கோடி மக்களுமே இதுக்கு சாட்சி.

      எவனையும் கட்டாய படுத்தி மதம் மாத்தனும் ங்கற அவசியமும் எங்களுக்கு இல்லை.அதே மாதிரி எங்க சாமியை கும்பிடாதவனை சைத்தான், பேயின் பிள்ளைகள் னு சொல்ற வழக்கமும் இல்லை.

      இதுதான்யா இந்த மதத்தின் ஸ்பெஷாலிட்டி , கழுதைகளுக்கு கர்ப்பூர வாசனை தெரியாமல் போறதுல ஆச்சர்யம் இல்லை.

      இத்தனைக்கு பிறகும், மத்த மதத்து காரங்க மேல எங்களுக்கு கோபமும் வர்ரதுல்ல, ஏன் தெரியுமா? அவங்க எல்லாருமே ஏதோ ஒரு காலத்துல இந்துவா இருந்தவங்க தான், எங்க முன்னாள் ஹிந்து சகோதரர்கள் தான்,

      பாவம், அரசாங்க வரி கட்ட முடியாம, தையல் மஷினுக்கும், பால் பவுடருக்கும், ஜாதி பிரட்சினைக்காகவும், ஓசி சுகத்துக்கும் இதேமாதிரி பல பல விஷயங்களுக்காக மதம் மாறினவங்க தான்.

      இந்த மாதிரி வாரம் ஒரு புது குழப்பத்தை கிளப்பி, ஒத்துமையா இருக்க நினைக்கிற முயற்சி பண்ற மக்கள் கிட்டே பிளவை ஏற்படுதாதீன்ங்க , ப்ளீஸ்,


      மாக்ஸிமம்
      சரியாக சொன்னிர் நன்பரே இந்த கட்டுரை எழுதினவன் மட்டும் என் கையில் கிடைத்தால் வெட்டி வேள்வில போட்டுருவேன்

  6. Superya maximum,.. summa saravedi madhiri pesuna.. naatula pala vishayangal irukku kavalapada aana ivanunga innum madham jadhi, krishnar, ramarnu hinduism RSS thaandi ezhuda maatanga.. appadiye ezhuthunalum udane oru post hindu madathatha attack panniye irukku. What a hypocrites these people are….
    POli communistnu solrangale adhu ivanga thaan modhalla…

  7. //இந்து மதவெறியர்கள்தான் நாட்டை தெய்வம், படம், பூசை என்று சடங்கு முறையாக்கும் ”தேசபக்தி”க்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.//

    தேசபக்தியை இந்து வழிபாட்டு முறையாக மாற்றுவது கடுமையாக கண்டிக்கபடதக்கது, இம்மாதிரியான முறையில்தான் தேசபக்தியை வெளிபடுத்த வேண்டுமென்றால் சிறுபான்மையினருக்கு இந்தியா பாதுகாப்பற்ற அந்நிய நாடாகவே தோன்றும். இந்தியாவில் இருக்கின்ற எல்லோரும் இந்தி படிக்க வேண்டும் என்று சொல்வது பெரும்பான்மையான வட இந்தியரின் ஹிந்தி வெறி, வந்தேமாதரம் பாட வேண்டுமென்று சொல்வது இந்து வெறி. தேவ பாஷை சமஸ்கிருதம் போற்றி,ஹிந்தி படித்து,மாட்டு கறி மறுத்து, வந்தே மாதரம் பாடி இந்திய தேசபக்தி நிரூபிக்கபடுமானால், நிரூபிக்கபடுவது தேசபக்தி அல்ல, இந்து தேசிய வெறி.

    • இந்தியாவில் இருக்கின்ற எல்லோரும் இந்தி படிக்க வேண்டும் என்று சொல்வது பெரும்பான்மையான வட இந்தியரின் ஹிந்தி வெறி….

      Yet another merdivorous whacko…. What are you gonna lose by learning a new language????

      • Sari yaarum kattayapadutha vendam, kattaya paduthuvadhu enbathil enakkum udanpadu illai. Why dont tamils are so guarded against other languages thats one thing that puzzling?? Vera language kathukitta enna problem ???

  8. இன்னும் எத்தனைநாலுக்குத் தான் பழைய புரானமே பாட போரீங்க. தாங்கள் கூறும் மதம் தனி மனிதனோடு தொடர்புடையது.
    appo abdulkalam engeirunthar, polytics gulam nabi azad engirunthar, en exaple bollywood Khan’s enge irunthanga.Etc….
    namma indiyala arasiyalla irukara sakkadai nainga apdi pandranga…appuram enga kasimeerla kalavaram nadakuthu. anga ethavathu hindu politician irukana..rendu paryume muslims thane..
    Enna pirachinaina thngaloda suyanalathukaga madaththai oru karuviya avanga ubayogapaduthuranga….
    Athanala neenga ethavathu padhivu idarathunna aakapoorvama idunga..summa ithumathiri mudinthuponavatrai mathathin peyaral kilara vendam..

    endrum anbudan
    Boopathi..

  9. மக்கு மக்சிமம்,

    எதுக்கு நாங்க போகணும், நாங்க ஒன்னும் கைபர் கணவாய் வழியா வரலே . இது எங்க நாடு நீங்க வேண்டும் என்றால் உங்க காவி நேபாளத்துக்கு போங்க இது ஒன்னும் ஹிந்து நாடு இல்லை இது அனைவர்க்கும் பொதுவான நாடு.

  10. அதிபுத்திசாலி அஹமது,

    சரி நீங்க, கைபர் கணவாய் வழியா வரலை. அப்போ எது வழியா வந்தீங்க?

    கைபர் கணவாய் எங்கே இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? அதுக்கு ஆங்கிலத்துல பேரு என்னன்னு தெரியுமா? , மேப் ல காட்ட சொன்னா காட்ட தெரியுமா? அங்கேருந்து யாரு வந்தான், எப்போ வந்தான் ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா?

    எவனோ ஒரு பொறம்போக்கு திண்ணைல உட்கார்ந்து சொன்னதை கேட்டுட்டு லாம் கருத்து சொல்ல கூடாது பாஸ் .

    “இது எங்க நாடு நீங்க வேண்டும் என்றால் உங்க காவி நேபாளத்துக்கு போங்க இது ஒன்னும் ஹிந்து நாடு இல்லை இது அனைவர்க்கும் பொதுவான நாடு.”

    இதை நீங்க உள்ளன்போடு, சகோதரத்துடன் சொல்லி இருந்தா அதை நான் பாராட்றேன். சந்தோஷம்.

    மாறாக நீங்க எங்களையே நேபாளத்துக்கு பார்சல் பண்ணனும்னு நினைக்கறீங்க பார்த்தீங்களா?

    உங்களுக்கெல்லாம் இன்னும் நூறு , ஆயிரம் நரேந்தர் சிங்க் மோடி வந்தாலும் பத்தாது.

    மாக்ஸிமம்

    • மாக்ஸிமம்களின் அலறல் ஆறுதல் அளிக்கிறது. வினவின் ஒவ்வொரு கட்டுரையும் ஹிந்து கலாச்சாரத்தின் சாவு மணியாக அமையட்டும். வாழ்த்துக்கள் தோழர்.

      • இதுஅலறல் சத்தம் அல்ல….இந்த மண்ணின் மைந்தனுக்கு அலறத்தெரியாதுடா பெண்…

        ஹிந்து கலாச்சாரத்தின் சாவு மணியா? போடா டே காமிடி பீசு

        • உலகிலேயே மிகவும் கேவலமான மதம் இந்து மதம் தான்.. பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கருதும் ஒரு அயோக்கிய மதத்திற்கு வக்காலத்து வாங்கும் அம்பிகளே, உங்களிடம் இருந்து நாங்கள் எந்த உரிமையையும் எதிர்பார்க்க வில்லை.. மாறாக உங்களை வீழ்த்துவதுவதன் மூலம் அந்த உரிமைகளை நாங்களே பெற்றுக் கொள்வோம்..

          தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லரையாக்குவோம்!

          • Paarpom, paarpom…mela ukkanthu kadikkara kosuva kooda ungalala azhikka mudiyadhu apuram thaane madham ellam.
            Eppo indha thani madha thakuthalai niruthureergalo appo thaan neenga kandukollapadave vaippirikku.. ilainna neenga koovura koovukku ellam kaaka kooda varadhu…

            • Pirivinai erpaduthum sakthigalai , poli vesham potta arasiyal katchigal, samiyargal, amaipugalai makkale nasukkuvaargal adhukku oru example thaan the Himalayan defeat of most corrupt parties in the history of india, DMK and Congress..

    • மக்கு மக்சிமம்,
      முதல்ல உன்னுடைய ஆரிய வரலாறே தெரிச்சிகோ அப்பதான் கைபர் கணவாய் எங்கே இருகுதுனும் தெரியும்,
      வந்தே மாதரம் ஒன்னும் இந்தியா உடைய தேசிய கீதம் இல்ல முதல்ல தெரிச்சிகோ, எங்களுடைய தாய் நாட்டுக்காக எவ்ளவோ தியாகங்கள் பண்ணிடோம் இன்னும் பண்ண தயாரா இருக்கோம். உங்களுக்கெல்லாம் இன்னும் நூறு , ஆயிரம் நரேந்தர் சிங்க் மோடி வந்தாலும் பத்தாது. சூப்பர் அப்பு , முதல்ல இந்த மரண வியாபாரி மோடி டவுசர் கிழிய போகுது அப்புறம் வர மோடிய பாக்கலாம் . தன்னுடைய சொந்த நாட்டு மக்களை கொண்டு அதில் குளிர் காயும் கூட்டம் தான் இந்த சேவா சங்க கூட்டம் என்று இந்திய மக்கள் அனைவருக்கும் தெரியும். வினவின் அதிரடி தொடரட்டும் காத்திருப்போம்.

      • ஆமாம் இவர்கள் புனிதர்கள் அல்லவா? ஜெருசலத்திலிருந்து ஒடி வந்து இங்கு மதம் மாற்றூம் இவர்கள் புனிதர்கள் தான். அதே அரபு தேசத்திலிருந்து ஒடி வந்து இங்கு குண்டு வைக்கும் இவர்களும் புனிதர்கள் தான். பன்னி யாரடா? நாடு கடத்த சொல்லுர எங்க நாடு இந்த நாடுடா. இந்துநாடுடா.

  11. மாக்சிமம் சொல்வது மிகவும் சரி. வினவுக்கு பொல்லாத காலம் ஆரம்பமாயிடுச்சு..

  12. ஹிந்து மத பெருமையை எல்லாம் எடுத்து சொல்லி ஒரு மாற்று மதத்தை சேர்ந்தவரை உன் மதத்துக்கு மாற சொல்லேன் பார்ப்போம்.உன்னை வேசி மகன் என்று சொல்லும் மதத்தை, உன்னை தீண்டத்தகாதவன் என்று சொல்லும் மதத்தை,உன் சாதியில் மட்டுமே திருமணம் செய்துகொள் என்று சொல்லும் மதத்தை,உன்னுடைய எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் நீ போன பிறவியில் செய்த வினைகள் தான் என்று சொல்லி இருக்கும் நிலைமையை கேள்வி கேட்காமல்அப்படியே ஏற்றுக்கொண்டு மக்களை லூசுப்…..களாக ஜோசியம் ராவுகாலம் அஷ்டமி நவமி தோஷம் பரிகாரம் யாகம் போன்ற அறிவியல் அடிப்படை அற்ற விஷயங்களை போதிக்கும் உன் மதத்தை தூக்கி குப்பையில் போட மினிமம் பகுத்தறிவே போதுமானது….

    • Well said Kalapiran2… Even animals won’t accept Hinduism in its true form. Chumma angaiyum ingaiyum polish pottu vellakaran silaperkitta intha mathatha sales pandranuga. Athuvum evlo kalathukkunu paarpom!

    • I second ur opinion really Mr. kalapiran. adhe thaan kartharngavaru thottaru aids,cancerlam, VDlam gunamayiduchunu solli oora emathara kootamum. Avaru siluvaila aranjum meendum uyirthezhunthu pavvigala mannichaarunu solli emathara kootam, jebakoottam pottu peyotrran, avi pudichu alavayara meetedukkureannu koovara kootatha thooki podavum Minimum பகுத்தறிவே போதுமானது….

      “Religion is a crutch for people not strong enough to stand up to the unknown without help. But, like dandruff, most people do have a religion and spend time and money on it and seem to derive considerable pleasure from fiddling with it”.- Robert Heinlein

  13. சில நாட்களாக எனக்கு வினவு அறிமுகம். இதில் பெரும்பாலான மக்கள் பிரச்சனைகளும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் ஒடுக்கு முறைகளும் அலசப்பட்டிருக்கின்றன. உதாரணமாக சிறுவன் தில்சன் கொலை, சமசீர் கல்வி பிரச்னை. மிக ஆழமான அற்புதமான கட்டுரைகள். இது போன்ற மக்கள் பிரச்சனையில் ஒரு துளி கூட ஆர்வம் காட்டாத மக்சிமம்களும், சீநிவாசங்களும் இந்து மதத்தை பற்றி பேசினால் அதற்கு பதிலளிக்க வக்கில்லாமல் தமது மினிமம் அறிவைக்கொண்டு மற்ற மதத்தினரை வசை பாட தொடங்கி விடுகின்றனர்.

    சிறுவன் ஒரு இந்து. கொலைகார ராணுவ தொழிலாளியும் இந்து. அதனால் இவர்கள் ராணுவ தொழிலாளிக்கு ஆதரவளித்து அமைதியாக இருந்து தேசப்பற்றை காட்டி விட்டனர். அதே சமயம் அந்த ராணுவ தொழிலாளி ஒரு முஸ்லிமாகவோ அல்லது கிறிஸ்டியன் ஆகவோ இருந்து விட்டால் போதும்…. அவ்வளவு தான்… சிறுவன் மேல் கொள்ளும் திடீர் அன்பால் அந்த ராணுவ தொழிலாளிக்கு எதிராக பொங்கி எழுந்து இருப்பார். இது போன்றவர்களால் தான் கேட்ட பெயர் என்று அவர் சார்ந்த மதத்தையும் பற்றி அவர்கள் வாயே கிழிந்து விடும் அளவுக்கு பேசியிருப்பர்…

    மக்சிமம்களே!.. உங்கள் மதத்தை பற்றி யாரும் பேசினால் நேரடியாக பதில் சொல்ல முடியாவிட்டால் சிறுவன் விசயத்தில் அமைதியாக இருந்தது போல் அமைதியாக இருந்துவிடுங்களேன். ஏன் என்றால் அது ஒன்றும் உங்களுக்கு புதிதில்லையே!!

  14. ஆயிரம் மோடிக்களை கூப்பிடும் மாக்சிமம் உன்னிடம் இரக்கம் எதிர்பார்க்க முடியாதுதான். உன் மதத்தை சார்ந்த அந்த சிறுவன் விசயத்திலும் நீ அது போன்று இருப்பது நீ உண்மையான இந்து தான் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நீ அப்படியே இருந்துகொள் அதனால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் அதனை தேசப்பற்று என்று மட்டும் சொல்லி மற்றவர்களை முட்டாள் ஆக்காதே!

  15. தேச நலனுக்கு எதிராக பேசும் காவி தீவிரவாதி மக்கு மாக்சிமத்தை நாடு கடத்த வேண்டும். அவனுக்கு தகுந்த நாடு இஸ்ரேல் அல்லது இலங்கை அல்லது சூடான் போன்றவை.

    • சரியாக சொன்னிர்கள் நண்பரே இந்த காவி மக்கு மக்சிமத்தை நாடு கடத்த வேண்டும் என்று, அதில் சின்ன வருத்தம் இவர்களுக்கென்று தனி நாடு எங்கு இருக்கிறது. இவர்கள் நாடோடி கூட்டம் என்று உங்களுக்கு தெரியாத,இவர்கள் இந்த உலகத்தில் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கேயும் மத கலவரத்தை தூண்ட கூடிய கயவர்கள். இவர்கள் அனைவரையும் தண்ணி இல்லாத வேறு கிரகத்திற்கு அனுப்ப வேண்டும் ப்ளிஸ்

  16. வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?

    1882ஆம் ஆண்டு வெளிவந்த “”ஆனந்த மடம்” எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் “வந்தே மாதரம்’. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.

    1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது “வந்தே மாதரம்’ பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.

    “”இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்” என்றும், “”இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்” என்றும் “”நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!” என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.

    “”இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை” என்றும் “”இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்” என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, “”பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!” என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.

    முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?

    வந்தே மாதரம் என்றால் “தாய்க்கு வணக்கம்’ என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.

    இந்தத் தாயைப் “”அகண்ட பாரத மாதா”வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை “தேசிய கீதமாக்க’ காங்கிரசுக் கட்சி முயன்றது.

    இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் “”வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது” என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

    1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் “”குடியரசு” பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

    நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் “பாரதமாதா’ என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?

    முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக “”ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்” என்றும் “”இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்” என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.

    நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் “வந்தே மாதரம்’ பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.

    வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் “”வண்டே… மாட்றம்” என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான “”சோனி”தான் “இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக’ இருக்க முடியும்.

    போலியான தேசபக்தி அரட்டைக் கச்சேரி செய்யும் காங்கிரசு கும்பலோ தாம் ஆண்ட ஐம்பது ஆண்டுகளில் அடுத்தடுத்து நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து, இந்திய ராணுவத்திற்கு போர் விமானம், போபர்சு பீரங்கி, நீர் மூழ்கிக் கப்பல் வாங்குவதிலும் ஊழல் செய்து திளைத்தது. அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, “வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி’ எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேச பக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா?

    ஒரு நாடு என்பது நாட்டு மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களையும் பண்பாட்டையும் குறிப்பதாகும். நாட்டு மக்களின் மீதும், நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன், அந்நிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராகவும், நாட்டு மக்கள் நலன் மீது மாளாக் காதலுடனும் போராடுவதே உண்மையான நாட்டுப் பற்றாகும். இதைச் செய்யாமல் தேசத்துரோக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டு, “வந்தே மாதரம்’ பஜனை பாடுவது நாட்டுப் பற்றாகாது.

    இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரத்தைவிட வேறு இரண்டு முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. அவை: சுபாஷ் சந்திரபோஸின் “”ஜெய்ஹிந்த்” மற்றும் பகத்சிங்கின் “”இன்குலாப் ஜிந்தாபாத்” 1929இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்தைக் கண்டித்துப் போராடும் விதமாக வெடிகுண்டு வீசியபோதும், பின்பு ராஜகுரு, சுகதேவுடன் தூக்கிலிடப்பட்டபோதும் பகத்சிங் முழங்கியது இதே “இன்குலாப் ஜிந்தாபாத்’தான். அத்தகைய தேசப்பற்றாளனின், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் பிறந்தநாள் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.

    “”புரட்சி ஓங்குக!” (இன்குலாப் ஜிந்தாபாத்!) என பகத்சிங் முழங்கிய முழக்கம்தான் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நூற்றாண்டும் புரட்சியின் நூற்றாண்டாக இருக்கப் போகிறதே அன்றி, இந்துவெறி தேசியவெறிக்கானதாக இருக்கப் போவதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் நாட்டுப்பற்றும் மதச்சார்பின்மையும் கொண்ட புரட்சியின் முழக்கம்தான் இனி நாடெங்கும் எதிரொலிக்கப் போகிறதே தவிர, ஏகாதிபத்திய கைக்கூலிகளின் வந்தேமாதரம் பஜனை அல்ல.

    நன்றி: புதிய ஜனநாயகம்

  17. பென்,
    இது அலறலா? தப்பான ஒரு விஷயத்தை மறுத்தா அதுக்கு பேரு அலறலா? என்னா ஆளுங்கய்யா நீங்க? அப்புறம் சாவு மணி அடிக்க என்கரேஜ் பண்றீங்களா? இங்கே கோவில் மணி அடிச்சிட்டு இருக்கறவரைக்கும் சாவு மணி எல்லாம் யாராலையும் அடிக்க முடியாது.

    ராவணன்,
    உங்க பேரு உண்மையிலேயே இராவணன் தானா? இல்லை ராமரின் எதிரி என்பதால் இந்த பேரை வச்சுக்கிட்டு எழுதறீங்களா? நீங்க கண்டிப்பா மாற்று மதத்தை சேர்ந்தவர்/ அல்லது தாழ்த்தபட்டவர் , உங்க எழுத்திலேயே தெரியுது. ஏன் இந்த கொலை வெறி?, போய் தண்ணி குடிங்க, அப்புறமா உரிமைய வாங்கலாம், கல்லறை கட்டலாம்.

    அஹமது,
    நான் கேட்ட கேள்விக்கு பதிலையே காணும்? ஜம்ப் ஆகி ஏதோதோ தியாகம், யாகம் னு லாம் உளருறீங்க!. நீங்க பண்ணின தியாகம் எல்லாம் நேத்திக்கு பாகிஸ்தான் பிரிவினைலேர்ந்து, இன்னிக்கு கசாப் வரைக்கும் தான் நாறுதே? போய் அதுக்கு ஒரு நல்லா பாரீன் சென்ட் இருந்தா வாங்கி அடிங்க!.

    உண்மை,
    நீங்க சொன்ன லிங்க் ல ஒரு குப்பையும் இல்லை, வேறே எதாவது வித்தியாசமா ட்ரை பண்ணுங்க.

    கலப்பிரான் நம்பர் டூ,
    மதம் மாத்தறது எல்லாம் எங்க வேலை இல்லை, அதுக்கு வேறே சில கும்பல் லாம் இருக்காங்க , அவங்களை போய் கன்சல்ட் பண்ணுங்க.! ராகுகாலம் எமகண்டம் லாம் பார்ததால நாங்க என்னா வீணா போய்டோம்?, அதை பாக்காத தால நீங்க என்னா நல்லா நிலைமைக்கு போய்டீங்க? கொஞ்சம் உங்க மினிமம் பகுத்தறிவை யூஸ் பண்ணி சிந்திச்சு பதில் சொல்லுங்க,

    வியாக்கி ,
    உங்க வியாக்கியானம் லாம் நல்லா தான் இருக்கு, நானும் உங்களை மாதிரிதான் வினவை கொஞ்ச நாளா படிச்சிட்டு, தேவைபடுற இடத்துல என்னோட கருத்தை, எனக்கு தோணினதை சொல்லிட்டு வர்றேன்.
    முன்னாடி கொஞ்சம் கொச்சை தமிழில் எழுதிக்கிட்டு இருந்தேன், இப்போ கொஞ்சம் ட்ரை பண்ணி சுத்த தமிழில் எழுத முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.
    நேரடியாக பதில் சொல்லாதது நானா? , நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இங்கே எனது கருத்துக்கு எதிர் கருத்துக்கு எழுதும் மற்ற ஆளுங்களா?
    ஒருத்தன் எல்லா விஷயமும் தெரிஞ்சவனா இருக்கணும்னு அவசியம் இல்லை, எல்லா கட்டுரைக்கும் கருத்து எழுதணும்கற கட்டாயமும் இல்லை.

    உண்மை,
    தேச நலனுக்கு எதிரா பேசுவது நானா? இல்லை அஜ்மல் கசாபை வெளியே விட வேணும் னு அல்லும் பகலும் நினைக்கிற, துடிக்குற மத்த ஆளுங்களா?
    இல்லை, அந்நிய நாடுகளிடமிருந்து கோடி கோடியாய் பணத்தைவாங்கி கொண்டு இங்கே இருக்குற மக்களை மதம் மாத்தியே தீரணும்னு அலையிற இன்னொரு கூட்டமா?

    அஹமது,
    கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியலை, அடுத்தவங்க கூட சேர்ந்து ஜால்ரா அடிக்க வெட்கமா இல்லை? இந்து எந்த நாட்டுக்கு போய் எந்த மத கலவரத்தை தூண்டினான்? கொஞ்சம் இதையாவது தெளிவா சொல்லுங்க!

    பிரெண்ட்ஸ்,
    நான் எந்த மதத்தையும் தப்பா எழுதலை, மத்த மதங்களை பத்தி எனக்கு அவ்ளோவா தெரியவும் தெரியாது. நீங்க இந்து மதத்துல தப்பு னு சொல்ற அதே விஷயங்கள் மத்த மதத்துலயும் வேறே வேறே பேருல வடிவத்துல இருக்குன்னு தான் சொல்றேன். புரிஞ்சிக்க மாட்டேன்கறீங்க.

    வினவின் கருத்துக்கு எதிரா கருத்து எழுதினாலும் அதை வெளியிடும் வினவுக்கு தேங்க்ஸ்,


    மாக்ஸிமம்

    • மக்சிமம்,
      மற்ற மதத்தை பற்றி தப்ப பேசவில்லை என்று எழுதினீர்கள் மிக நன்று, நான் அடுத்தவர்களுக்கு ஜால்ரா போடுவதாக எழுதினீர்கள், தவறு என்னுடைய பழைய பதிவுகளை தயவு செய்து திரும்பவும் படிக்கவும் , நான் ஒருபோதும் ஹிந்து மதத்தை பற்றியோ அல்லது ஹிந்து மத நபர்களையோ தவறாக எழுதவில்லை. என்னுடைய எதிர்ப்பு எல்லாம் ஹிந்துத்துவ என்ற பாசிசத்தை பற்றித்தான் , இதுதான் இந்த தேசத்திற்கு எதிரி ,ஹிந்து மதம் வேறு ஹிந்துத்துவ வேறு, முதலில் நீங்கள் தெளிவுபடுத்தி கொள்ளுங்கள். மக்சிமம் நீங்கள் எப்பவுமே பாக்கிஸ்தான் அஜுமல் கசாப்பு என்று சொல்கிரிகள், கசாப்பு தவறு செய்தால் கண்டிப்பாக அவன் தண்டிகபடவேண்டியவன் ஆனால் அதற்கு முன்பு மலேகன், அஜ்மீர் தர்க்க .சமோஜுவடி எக்ஸ்பிரஸ், குண்டு வைத்த காவி சாமியார்கள், மும்பை கலவரம் பால்தாக்ரே, 2002 குஜராத் கலவரம் பிணம்தின்னும் மோடி இவர்களை தண்டிப்பது எப்போது எப்படி கசாபிற்கு முன்பு இவர்கள் குற்றவாளிகள், மக்சிமம்திற்கு புரிதால் சரி

    • கண்டிப்பா வினவுக்கு கோடானு கோடி நன்றிகள்… ஏனென்றால் உங்களை போன்ற மத வெறியர்களை, இன்னும் 1000 மோடிகள் (மனிதனே அல்லாத கொலைகார மாபாதகன்)வேண்டும் என்று கேட்கும் உங்களை போன்ற கொலை வெறி பாதகர்களை , உங்கள் பின்னூட்டத்தின் மூலம் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது…

      வினவின் பதிப்பை படிக்கும் போது கூட இந்து மதத்தின் மீது வராத வெறுப்பு உங்கள் பின்னூட்டத்தை படிக்கும் போது வருகிறது.

      இது போன்றவர்களின் பின்னூட்டத்தை தணிக்கை செய்யாமல் வெளியிட்டு அடையாளம் காட்டும் வினவுக்கு …கட்டாயம் நன்றிகள்…

    • பத்து பேருக்கு பதில் சொல்லும் மாக்சிமம் மக்கு! வந்தே மாதரம் முழு பாடலையும் படிக்காமலே பதிவை பார்த்ததுமே பின்னூட்டம் இடும் அளவுக்கு அறிவாளியா நீ.அந்தப்பாட்டுல துர்கா லட்சுமி அவுங்க ஆயா பேருல்லாம் வருது படிச்சுப்பார் ரேடியோவுல வர்ற நாலு வரிய மட்டும் கேட்டுட்டு அர்த்தம் தெரியாமலே எல்லாரும் பாடணும்னு சொல்லாதே.

    • அஜ்மல் கசாபை வெளியே விட வேணும் னு அல்லும் பகலும் நினைக்கிற, துடிக்குற மத்த ஆளுங்களா?……..டேய் மாக்சிமம் ———— நீ? அவன வெளியே விடணும்னு யார்ரா துடிக்கிறா எவனும் சொல்லாததை சொல்லற!!!!!.

      • உண்மைய சொன்னா உங்களுக்கு ஏன் வலிக்குது? உங்க வார்த்தைகளிலிருந்தே தெரிகிறது உங்களது தரம்..

        மாக்ஸிமம்

  18. Thats the one thing that impresses me with Vinavu. They are open to criticisms and alternate opinions.. Though they outsmanrt their detractors with the sheer no of jalras

  19. ஏகத்துவ கொள்கை பரப்பிய மூஸாநபிக்கு (Prophet Moses) துரோகம் செய்து பசு மாட்டை வணங்கி கிளம்பிய கூட்டம் தான் இந்த பிராமணன் (யூதன்) … இவனுக்கும் இந்தியாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. வந்தேரிகள்

  20. @ நான் கடவுள் / அஹமது / உண்மை / வியக்கி … உங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்…

  21. vande maataraM
    sujalaaM suphalaaM malayaja shiitalaaM
    sasyashyaamalaaM maataraM ||

    shubhrajyotsnaa pulakitayaaminiiM
    pullakusumita drumadala shobhiniiM
    suhaasiniiM sumadhura bhaashhiNiiM
    sukhadaaM varadaaM maataraM ||

    koTi koTi kaNTha kalakalaninaada karaale
    koTi koTi bhujai.rdhR^itakharakaravaale
    abalaa keno maa eto bale
    bahubaladhaariNiiM namaami taariNiiM
    ripudalavaariNiiM maataraM ||

    tumi vidyaa tumi dharma
    tumi hR^idi tumi marma
    tvaM hi praaNaaH shariire

    baahute tumi maa shakti
    hR^idaye tumi maa bhakti
    tomaara i pratimaa gaDi
    mandire mandire ||

    tvaM hi durgaa dashapraharaNadhaariNii
    kamalaa kamaladala vihaariNii
    vaaNii vidyaadaayinii namaami tvaaM

    namaami kamalaaM amalaaM atulaaM
    sujalaaM suphalaaM maataraM ||

    shyaamalaaM saralaaM susmitaaM bhuushhitaaM
    dharaNiiM bharaNiiM maataraM ||

    the English translation by Aurobindo is as follows:

    Mother, I bow to thee!
    Rich with thy hurrying streams,
    bright with orchard gleams,
    Cool with thy winds of delight,
    Dark fields waving Mother of might,
    Mother free.

    Glory of moonlight dreams,
    Over thy branches and lordly streams,
    Clad in thy blossoming trees,
    Mother, giver of ease
    Laughing low and sweet!
    Mother I kiss thy feet,
    Speaker sweet and low!
    Mother, to thee I bow.

    Who hath said thou art weak in thy lands
    When the sword flesh out in the seventy million hands
    And seventy million voices roar
    Thy dreadful name from shore to shore?
    With many strengths who art mighty and stored,
    To thee I call Mother and Lord!
    Though who savest, arise and save!
    To her I cry who ever her foeman drove
    Back from plain and Sea
    And shook herself free.

    Thou art wisdom, thou art law,
    Thou art heart, our soul, our breath
    Though art love divine, the awe
    In our hearts that conquers death.
    Thine the strength that nervs the arm,
    Thine the beauty, thine the charm.
    Every image made divine
    In our temples is but thine.

    Thou art Durga, Lady and Queen,
    With her hands that strike and her
    swords of sheen,
    Thou art Lakshmi lotus-throned,
    And the Muse a hundred-toned,
    Pure and perfect without peer,
    Mother lend thine ear,
    Rich with thy hurrying streams,
    Bright with thy orchard gleems,
    Dark of hue O candid-fair

    In thy soul, with jewelled hair
    And thy glorious smile divine,
    Lovilest of all earthly lands,
    Showering wealth from well-stored hands!
    Mother, mother mine!
    Mother sweet, I bow to thee,
    Mother great and free!

    the truer version of barat mata hari is this.
    and you expect everyone to sing this.
    f*** you.

  22. @ மாக்சிமம்

    இந்தப்பதிவுக்கு இப்படி விழுந்து விழுந்து reply பண்ணுறீங்களே, இதே வினவுல இருக்குற அடுத்த பதிவுகள் எதுலேயாவது உங்களுடைய மறுமொழி இருக்குதான்னு பாத்தா …வெறும் ஏமாற்றம்தான் மிச்சம்

    பாலியல் வன்முறைக்கெதிராக போராடிய வீரப்பெண்மணி தேவிக்கு சிறை! – இந்த பதிவைப்பற்றி நினைக்கிறீங்க…?

    இது போன்ற பதிவுகளுக்கும் உங்கள் மறுமொழியை தரலாமே?? அதுலேயாவது எதாவது உருப்படியா சொல்றீங்களான்னு பாப்போம்…

    • பார்த்தசாரதி அவர்களே!

      //ஒருத்தன் எல்லா விஷயமும் தெரிஞ்சவனா இருக்கணும்னு அவசியம் இல்லை//

      மக்சிமம் அதற்குரிய ஞானம் தனக்கு இல்லை என்று ஒதுங்கி கொண்டார். ஆனால் தில்சனுக்கும், தேவிக்கும் நடந்திருக்கும் அநியாயத்தை எதிர்பதற்கு ஞானம் தேவை இல்லை மனிதாபிமானம் போதும் என்று கூட அவர் விளங்கிக்கொள்ள வில்லை. இது போன்ற அரை குறைகள் தான் இந்து மதத்தை காப்பாற்ற அவதாரம் எடுத்திருக்கும் ஆனந்தாக்கள்…!!!

      கூத்தப்பா..!!

  23. All vinavu supporters, i dont understand why you are trying to attack with bad words someone who try to question back (like maximum, adiyaman). If you really want to justify, put all thoughts in Q & A format. Write all the maximum’s questions and your answers. And then put all your crisp questions, let him answer. Thats the good way of exchanging thoughts.

    • ஸ்ரீநிவாஸ் அண்ணே! நீங்க சொல்ற மாதிரி பண்ணிட்டா மட்டும் மக்சிமம்கள் ஒழுக்கமா பதில் சொல்லிடுவாங்களா? அவர்களுடைய வாத பிரதி வாதங்களை தாங்கள் வாசித்ததில்லை என நினைக்கிறேன்.

      அவர்கள் அனைவரும் இப்போது இந்து மதத்தை காப்பாற்றும் முயற்சியில் தோற்றுக் கொண்டு இருக்கிறார்கள்!

      இந்து மதத்தில் இருக்கும் ஒரு நல்ல விசயத்தை சொல்லுங்கள்.. ஒரு உதாரண புருஷனை காட்டுங்கள் என்றால், முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகிறார்கள் என்று வெட்கமில்லாமல் பதில் கூறுகிறார்கள்.

  24. நண்பர்களே! பெரியார் இதோ இந்து மதத்தின் மற்றொரு இன்செஸ்ட் கதையை அம்பலப்படுத்துகிறார். இது கடவுளர் யார் என்னும் அவரது புத்தகத்தில் வெளிவந்துள்ளது. அதாவது பிரம்மன் என்பவன் இவர்கள் கொண்டாடும் படைப்புக்கடவுள். அவரது பொண்டாட்டி சரசுவதிதேவி என்பது பெரும்பான்மையானவர்களுக்கு தெரியும். தெரியாதது இன்னொன்று உண்டு. சரசுவதி பிரம்மனின் மகள். சரசுவதியை படைத்தவுடன் அவளது அழகில் மயங்கி காம இச்சையுடன் வருகிறான். அவளோ பலவாறு மறுத்துப் பார்க்கிறாள்.நீ என் தகப்பன். இது முறையன்று என்றெல்லாம் கூறுகிறாள். பிரம்மன் அதனால் விதியை திருத்தி எழுதுகிறான். என்னவென்று. இச்சை கொண்டால் மகளையும் சேர்ந்து கொள்ளலாம் என்று. சரசுவதி அதனால் நீராக உருமாறி ஓடிவிடுகிறாள். அவளை ஒருவாறாக கண்டுபிடித்து தனது இச்சைகளை தீர்த்துக் கொள்கிறான். பின்னர் போர் அடித்தவுடன் அவனது மகன் ஒருவனுக்கு சரசுவதியை மணமுடித்து கொடுக்கிறான். இவ்வாறாக போகிறது கதை. நீங்களே கூறுங்கள். இந்த பாப்பார பெருமக்கள் புளுபிலிம் இல்லாத குறையை இப்படி சரோஜாதேவி டைப் கதைகளை எழுதி படித்து புராணம் என்றெல்லாம் புளுகி இன்பம் அனுபவித்து நிவர்த்தி செய்துள்ளார்கள். இது புனிதமான மதமாம். காறி துப்புங்கள்.

    மாற்று மதத்தார்களே. இப்படிப்பட்ட கடவுளர்கள் உங்கள் மதத்தில் உள்ளனரா?
    அல்லது இப்படி மயிர்கூச்செரியச் செய்யும் பலான கதைகளாவது உண்டா?இன்னும் பல கதைகள் உள்ளன. படித்து விட்டு கூறுகிறேன். அதற்கான ஆதாரங்களையும் திரட்டி வருகிறேன்.
    பொறுமை காக்கவும்.

  25. நியாயமாக பார்த்தால் சீனுக்களும், பையன்களும் இந்த கருத்தை மறுத்து பதில் சொல்லி அல்லவா தங்கள் இந்து மத பற்றை காட்ட வேண்டும். இந்த விசயம் அவர்களுக்கு ஏற்கனவே தெரியுமோ என்னவோ?

    அதனால் தான் ‘மம்’ ஆகி விட்டார்கள்.

    ‘நான்கடவுள்இல்லை’ அவர்களே! எனக்கு ஒரு சந்தேகம். வந்தே மாதரத்தில் வரும் தேவி இந்த சரஸ்வதி தேவி தானோ ?

  26. @Super
    /Ennaya tamizh tamizhnu overa sound kodukureenga/
    தமிழ்நாட்ல கொடுக்காம அண்டார்ட்டிகாவிலா கொடுப்பாங்க
    / Indiala irukka mozhi ella mozhiyum onnu thaan.. Indiala irukka mozhi ellame samam thaan/
    சொல்லிட்டாருடா இந்திய சனாதிபதி,
    அப்ப இன்ன மைத்துக்காக இந்திய அரசு தேர்வுகள் அனைத்தும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் நடக்கின்றன,
    தமிழில் தேர்வு நடத்தினா இந்திய அரசுக்கு கொம்பு வந்திருமா, இல்ல தமிழ் வளர்ந்துவிடும் என்கின்ற பயமா?
    இந்தியில் தேர்வு நடத்த முடியம் என்றால் தமிழில் ஏன் கூடாது,
    அப்ப தமிழ் மக்கள் என்ன இரண்டாம் நிலை குடிமக்களா, இல்ல பிழப்பு தேடி இந்தியா வந்தேறியவர்களா,
    தமிழில் தேர்வு நடத்த போராட வேண்டியதிருக்கு.

    /Hindi learn panna enna koranja poiduvom? just learning a another language helps us to understand them in a better way/
    அதேதான், தமிழை படித்தால் அவர்கள் என்ன குறைந்து போய்விடுவார்களா,
    Both should be in win-win situation otherwise no use.
    தமிழன் எதற்கு இந்தியை படிக்க வேண்டும்
    இந்தி என்ன விஞ்ஞான மொழியா, அறிவியல் மொழியா, தொழிலில் துறையில் சிறந்த மொழியா, இல்ல இலக்கியத்தில் சிறந்த மொழியா.
    தமிழுடன் இந்தியை ஒப்பிடுவதே வேதனை.

    /Can anybody tell us what harm does one have in learning hindi language???
    HARM : Indiala matha endha statelayum poi paarunga. conductor, poti kada vechurkavan ellarum hindi pesuranga.
    This put hindi speaking people under special status,
    make them as 1st citizen of india, rest feel of inferiority of thier own language
    and fall down into 2nd class citizen.

    / people migrating to places like Bangalore, Delhi, mumbai Its the duty of state government to ensure the best for its citizens is it or not??/
    தமிழ்நாட்டுக்கு பிழப்பு தேடி எத்தனையோ வடநாட்டவர்கள் வருகிறார்கள்
    அவர்களை முதலில் தமிழ் படிக்க சொல்லுங்கள்
    அந்த மக்கள் பாடசாலையில் தமிழ் படிக்க அந்த மாநில அரசோ, நடுவன அரசோ தக்க நடவடிக்கை எடுக்கட்டும்

    அப்பறம் உங்க பேச்சுல அடிக்கடி கலைஞரை மேற்கொள் காட்டி ஏதோ தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றி விட்டதுபோல் பேசுகிறிர்கள், ஒன்றை மறந்துவிட கூடாது, அன்றைய போராட்டத்தில் பல ஆயிரம் பேர்கள் போராடினார்கள் என்பதை நினைவுகொள்ள வேண்டும், அன்றைய போராட்டத்தில் நூற்றுக்கும் மேலானோரை கொன்று குவித்தது உன் இந்திய இந்தி வெறி நாடு, ஆயிரத்துக்கும் மேலானோர் மேல் வன்முறை ஏவப்பட்டது
    இது ஆங்கிலேயேரின் அடக்குமுறையை விட கொடியது.

    தமிழனாகிய நான் எந்த மொழிக்கு எதிரானவன் அல்ல,
    இந்திய ஒற்றுமைக்காக தமிழின் உரிமையை, தமிழின் பெருமையை மறைத்து பேச இயலாது,
    அனைத்து மாநிலங்களும் இந்தியை ஆதரிப்பது அவர்களின் சொந்த முடிவு(நாளை இது மாறலாம்),
    அதற்காக தமிழனும் அதுபோல் இருக்கனும் சொல்வது மடத்தனம்.

    இந்தியை அனைத்து மாநிலங்களும் ஏற்றகொண்டார்கள் என்றால்
    இந்தியாவின் மொழியாக தமிழ், இந்தி என இரண்டு மொழியை மட்டும் வைத்து
    ஆங்கிலத்தை விருப்பத்தின் அடிப்படையில் வைத்துகொள்ளலாமே.

    பி-கு,
    கலைஞர் குடும்பத்தில் சிலபேர் பண்ணியுடன் சேர்வதற்காக
    பீ திண்றால் அதற்காக நாங்களும் திண்போம் என்பது மடத்தனம்,
    நம் தலைவன் தப்பு செய்வதால் நாமும் அதே தப்பை செய்வது சரியல்ல,
    வேறு தலைவனை தேர்வு செய்து நாட்டை நல்வழிபடுத்துவதே சாலச் சிறந்தது.

    நீயா நானா என்பது என் போராட்டம் அல்ல,
    ஒரு மொழியை படிப்பது அதன் முலம் சில நல்ல விசயங்களை தமிழில் கொண்டுவர பயன்படுமாயின் தவறு இல்லை
    ஆனால் அதைவிடுத்து தமிழை சீண்டி பார்ப்பது நல்லதல்ல

    • மக்கு பரணி வந்தேமாதரம் எழுதிய தாகூர் ஒரு வங்காளி அதனால அவர் அவருக்கு தெரிந்த வங்க மொழியில் எழுதினார்.நீ வேண்டும் என்றால் தமிழில் பாடு. திருக்குறளை உலக பொதுமறைனு சொல்றேம்

  27. //இப்படியே போனா கோவில்ல சாமிகிட்டே பேச சம்ஸ்கிருதம் கத்துக்கணும்னு சொல்வே போல இருக்கு..வேணும்னா சாமி தமிழ் கத்துக்கட்டும்..முடியாதுன்னு முரண்டு பிடிக்கிற சாமி எனக்கு வேணாம்..நாடு கடத்துவோம்..//
    ஞாயமா சொன்னீங்க இரணியன்.. இப்போ சொல்லுங்க.. சர்ச்சையும் மசூதியையும் நாடு கடத்தலாம் தானே? ஆங்கிலம் மட்டும் தான் பேசுவேன்னு சொல்ற இயேசு எதுக்கு? இல்ல, உருது தவிர எந்த மொழில கூப்டாலும் காது கேக்காத அல்லா தான் நமக்கு எதுக்கு?

    • இல்ல, உருது தவிர எந்த மொழில கூப்டாலும் காது கேக்காத அல்லா தான் நமக்கு எதுக்கு?//
      i disagree with this point. first of all its not urdu, its arabic. and second, islam is spread across the world and people wud travel from place to place for eg. people from India travel to Gulf countries, USA, UK, Africa, canada etc., an indian muslim will find it difficult to identify a mosque if they call for prayer in their native language and will be difficult to follow in the prayer as well. that is why they are following the language their prophet spoke as a universal language to avoid difficulty n confusion. only the “thozhugai” will be in arabic, whatever they want to ask their god can & will be done in their native language only….this is what i’ve learnt from my inter-religion research.

  28. //ஆங்கிலம் மட்டும் தான் பேசுவேன்னு சொல்ற இயேசு எதுக்கு?//

    Have you ever went to any Church? They use Tamil in worship and prayer. I have (till now) never visited a place where Tamil people using English in Church worship.

    //உருது தவிர எந்த மொழில கூப்டாலும் காது கேக்காத அல்லா தான் நமக்கு எதுக்கு?//

    That is not Urudu. It is Arabic. A valid point…

  29. “வந்தே மாதரம் ” பாடுவது இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவானது. இதனைப்பாடுவது எளிதானது மற்றும் இலக்கியமானது கூட. இத்னைப்பாட ஒவ்வொரு இந்தியனும் கொடுத்து வைத்துக்கவேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் பாடாமல் போகட்டும். ஆனால் அசல் இந்தியர்கள் கண்டிப்பாக “வந்தேமாதரம்” பாடவேண்டும். இப்பாடல் நமது நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாகும்.
    வந்தேமாதரம்!!!!!! வாழ்க பாரதம்!!!!!

  30. வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதிதான் ………பாட முடியாதுன்னா வேற நாட்டுக்கு போங்கடா இங்க இருந்து எங்க உசிர வான்காதீங்கடா…………………….

  31. இந்திய நாட்டு சட்ட திட்டங்களை மதிக்காத எவரும் இந்தியாவுக்கு தேவையில்லை பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்

  32. வினவு நடத்துபவர் ஒரு முஸ்லீம் வெறியர் என்று உறுதியாக தெரிகிறது …….

Leave a Reply to நான்கடவுள்இல்லை பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க