
அண்ணா ஹசாரேவுக்கு பெருகி வரும் ‘ஆதரவைப்’ பார்த்தால் பயமாக இருக்கிறது. பெயிட் நியூஸ் புகழ் டைம்ஸ் நௌ சேனலில் தொடங்கி என்.டி.டிவியின் தரகு வேலை புகழ் பர்க்கா தத், மாஃபியா உலகத் தொடர்பு மற்றும் கறுப்புப் பண புகழ் பாலிவுட் நடிகர்கள், கவர்ச்சிப் பத்திரிகை புகழ் ஷோபா டே, ஆயிரம் ஆ.ராசாக்களுக்கு இணையானவர் என்று தொடர் மின் அஞ்சல்களினால் புகழடைந்துள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், எடியூரப்பா புகழ் பாரதிய ஜனதா, வசூல்ராஜாவில் இளைஞர்களை போட்டுத் தாக்கிய சீனா தானா புகழ் ராக்கி சாவந்த், மற்றும் மலேசிய ஊழல் புகழ் டத்தோ சாமிவேலுவின் ஒரே இலக்கிய நண்பர் ஜெயமோகன் என்று நாட்டில் வாழும் உத்தமர்கள் எல்லாம் அண்ணா ஹசாரேவை ஆதரிக்கிறார்கள்.
ஊருக்கு உழைத்த உத்தமராம் அண்ணன் ஆட்டோ சங்கரை மட்டும் இந்தக் கேடு கெட்ட அரசு தூக்கில் போடாமல் இருந்திருந்தால் அவரும் கூட ஆதரித்திருப்பார். இன்னொரு உத்தமரான ஹர்ஷத் மேத்தா நெஞ்சு வெடித்துச் செத்துப் போனதால் அவருக்கும் வாய்ப்புக் கிடைக்காமலேயே வைகுண்டம் போனது ஒரு சோகம் தான். ஆக்கிரமிப்புப் புகழ் அமெரிக்காவே ஆதரித்திருப்பதால் அவ்விடத்தின் விசேடத் தயாரிப்பான பின்லேடனும் கூட ஆதரித்திருப்பார். துரதிருஷ்டவசமாக அன்னாரும் அல்லாவின் சொர்க்கத்தை அடைந்து விட நேர்ந்து விட்டதால் பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பைத் தவற விட்டுள்ளார்.
உச்ச கட்டமாக, கடந்த சில நாட்களாக கற்பழிப்புகளின் தலைநகரம் என்று போற்றப்படும் தில்லி மாநகரத்தில் எந்த கற்பழிப்புச் சம்பவங்களோ கொலை சம்பவங்களோ இடம் பெறவில்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தில்லி நகரத்தில் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் துவங்கிய பின் குற்றச்சம்பவங்கள் 35% அளவிற்குக் குறைந்துள்ளதாக போலீசு உயரதிகாரிகளே தெரிவித்ததாக அச்செய்திக் குறிப்பில் காணப்படுகிறது. ஏதோ நல்லது நடந்தால் சரி தான். ஆனால், இந்த ‘நல்லது’ இன்னும் கொஞ்சம் நாட்கள் தொடர வேண்டுமானால் மேற்படி காரியங்களில் ஈடுபடும் யோக்கியர்களை ராம்லீலா மைதானத்திலேயே இருக்கச் செய்வது அவசியம். அதற்கு அண்ணா இன்னும் கொஞ்சம் நாட்கள் உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டும். அதற்கு காங்கிரஸ் மனது வைக்க வேண்டும்.
இவ்வாறாக நாடும் நாட்டிலுள்ள நல்லவர்களும் அண்ணாவின் பின்னே திரண்டிருப்பதாகவும் மான ரோசமுள்ளவர்கள் அனைவரும் இதில் தமது பங்களிப்பைச் செலுத்தியே வேண்டும் என்று ஊடகங்கள் கொலைவெறியோடு கூத்தடித்துக் கொண்டிருந்த சூழலில் தான் நமது வினவு தளத்தின் சென்னைப் பகுதி செய்தியாளர்களுக்கு அப்படி ஒரு யோசனை தோன்றியது. பதிவுலக புகழ் குருஜி போன்ற அறிவு ஜீவிகளே மெய்யுலகில் அண்ணாவின் போராட்டத்திற்கு ஆதரவு அலைமோதுவதாக சத்தியமடிக்காத குறையாக தெரிவித்திருந்ததால், நாம் சென்னையில் அண்ணா ஹசாரேவுக்காக நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தைச் சென்று பார்த்து வந்தால் என்னவென்று யோசிக்க, 20ம் தேதி என்று அதற்கு நாங்கள் நாள் குறித்தோம். தமிழகத்தில் அண்ணாவுக்காக ஊழலை எதிர்த்து சண்டமாருதம் செய்யும் அந்த கனவான்கள் யாரென்று அறிந்து கொள்வதில் ஒரு த்ரில் இருந்தது.
________________________________________________________________
சென்னை அடையாறு பகுதியில் இருக்கும் எல்.பி ரோட்டையும் அதில் அண்ணாவின் தமிழக ஆதரவாளர்கள் குழுமியிருக்கும் கட்டிடத்தையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. நாங்கள் காலை பத்துமணிக்கே சென்று விட்டோம். முகப்பிலேயே “குழந்தைக்குத் தேவை தாய்ப்பால். மக்களுக்குத் தேவை ஜன்லோக்பால்” என்கிற அரசியல் முழக்கத்தை ப்ளக்ஸ் பேனரில் பிரம்மாண்டமாகக் கட்டி வைத்து பீதியூட்டியிருந்தனர். சாலையோரங்களில் பளபளப்பான ப்ளக்ஸ் பேனரில் ஆத்திரம் பொங்க முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அண்ணா ஹசாரே ‘இந்தியனே எழுந்து வா’ என்று மிரட்டிக் கொண்டிருந்தார்.
கட்டிடத்தின் முன்பக்கம், சாலையோரமாக ஐ.டி துறையில் பணிபுரியும் சில அண்ணா ஆர்வலர்கள் நின்று கொண்டு தேசியக் கொடியை தேசபக்தியுடன் ஆட்டிக் கொண்டிருந்தனர். சேப்பாக்கத்தில் இந்தியா பாக்கிஸ்தான் மேட்சைப் பார்க்க வரும் ரசிகர்களைப் போல முகத்திலும் மற்றும் வெளியே உடல் தெரிந்த பாகத்திலெல்லாம் தேசியக் கொடியை வரைந்து வைத்திருந்தனர். வருவோர் போவோரிடமெல்லாம் “சார் சார் கரப்ஷனுக்கு எகென்ஸ்ட்டா ஒரே ஒரு சைன் பண்ணிட்டுப் போங்க சார்” என்று அழைத்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர் “கரப்ஷன்.. டவுன் டவுன்” என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.
சரியாக நாங்கள் நுழைந்த நேரமாகப் பார்த்து சாலையில் ட்ரைசைக்கிளில் காய்கறிகளை வைத்துக் கொண்டு சென்ற ஒரு வியாபாரியையும் கையெழுத்திட அழைத்தனர். சரியாகப் புரியாமல் குழம்பியவர், “இன்னாது இது” என்று விசாரித்தார். ‘சார் ஊழலை ஒழிக்க ஒரு கையெழுத்து…..” என்று ஒரு பெண் ஆர்வலர் இழுக்க, “அடப் போம்மே… வோட்டுப் போட்டே ஒழியல; கையெழுத்துப் போட்டா ஒழியப்போவுது” என்று விட்டு சைக்கிளை ஏறி மிதிக்க ஆரம்பித்தார். “இல்லிட்டரேட் மோரோன்” என்று அந்தப் பெண் ஆர்வலர் பக்கத்தில் நின்ற வட இந்திய ஆர்வலரிடம் முனகிக் கொண்டே முகத்தைச் சுளித்துக் கொண்டார்.
நாங்கள் கட்டிடத்தின் உள்ளே நுழைந்தோம். ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் தன்னார்வ இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பேஷன் பெரேடுக்கு வந்ததைப் போல் உடையணிந்து கொண்டு லேப்டாப்பும் ஐ.போனும் சகிதம் பரபரப்பாக குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களின் கழுத்திலும் இடையிலும் ஐ.டித் துறை ஊழியர்கள் அணிவது போல் புகைப்படத்துடன் கூடிய ஐ.டி கார்டுகள் தொங்கியது. அதில் ஒருவரை மடக்கி நிகழ்ச்சியைப் பற்றி விசாரித்தோம். “சார் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவா ஆறு நாளா இங்க உண்ணாவிரதம் இருந்திட்டு இருக்காங்க சார். லோக்கல் மீடியா கவரேஜ் கிடைக்கல சார். ஒன்லி நேஷனல் மீடியாஸ்” என்று விசனப்பட்டுக் கொண்டார். ஏற்பாடுகளைப் பற்றி கேட்டோம். “இங்கெ பண்ணிருக்க அரேன்ஞ்மென்ட்ஸ் எல்லாம் டொனேஷன் வந்ததிலேர்ந்து தான் பண்ணிருக்கோம். நீங்க உள்ளே போங்க அப்புறமா பேசுவோமே” என்று நகர்ந்தார்.
உள்ளே ஒரு பெரிய ஹால். அதில் ஒரு பக்கம் மேடை போல அமைத்திருந்தனர். அதில் சிலர் அமர்ந்திருந்தனர். அதில் இரண்டு காவியுடைச் சாமியார்களைக் காண முடிந்தது. மூன்று இருபத்தோரு இன்ச் எல்.சி.டி டீவிக்கள் பொருத்தியிருந்தனர். அதில் டைம்ஸ் நௌ செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. பக்கத்திலேயே கடந்த ஆறு நாட்களாக சோறு தண்ணீர் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கென்று தனியே கழிப்பறை அமைத்திருந்தனர்.
சில அய்யராத்து மாமிகள் தங்கள் குழந்தைகளுக்கு நேரு ட்ரெஸ் போட்டு கையில் கொடியோடு அழைத்து வந்திருந்தனர். அந்தக் குழந்தைகளை வரிசையாக மேடையில் நிற்க வைத்து போட்டோ பிடித்துக் கொண்டனர். இது இரண்டாம் சுதந்திரப் போராட்டமல்லவா? நாளைப் பின்னே ‘நானும் கச்சேரிக்குப் போனேன்’ என்று பொளந்து கட்ட இது போன்ற ஆவணங்கள் அவசியமாயிற்றே? இதில் யார் குழந்தையை முன்னே நிறுத்தி முழுமையாக கவர் செய்து கொள்வது என்பதில் சுதந்திரப் போராளிகளின் தாய்மார்களுக்கும் லேசாக முட்டிக் கொண்டது. நாகரீக மனிதர்களல்லவா அதனால் உண்டான உள்ளக்கடுப்பை நாசூக்கான மொழியில் ‘ஷிட்’ என்று வெளியேற்றிக் கொண்டார்கள்.
நாம் மேடையை நெருங்கினோம். ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஒருவர் காலாற நடக்க எண்ணி எங்களைக் கடந்து சென்றார். ஐந்து நாள் சாப்பிடாமல் படு உற்சாகமாக காணப்பட்ட அவரை அணுகி பேச்சுக் கொடுத்தோம். “சார்… மொத்தல்லே ‘ஜன்லோக்பால்’ அப்படின்னா ஒரு சமஸ்கிருத வார்த்தை. ஏற்கனவே இருக்கற லோக்பால் வேஸ்டு சார். இப்போ.. நாம ஒத்தர் மேல கம்பளெயின்ட் கொடுக்கறோம்னு வைங்க. ஒருவேள அது ருஜுவாகல்லேன்னா நம்பளயே பிடிச்சு உள்ள போட்ருவான் சார். ஆனா பாருங்க இந்த ஜன் லோக்பால்ல அப்படியெல்லாம் சிட்டிசன்சுக்கு ப்ராப்ளம் இல்லை” என்று துவங்கியவரை நாம் இடைவெட்டினோம் –
“சரிங்க.. இப்ப பாத்தீங்கன்னா, ஸ்பெக்ட்ரம் ஊழலையே எடுத்துக்கங்களேன். டாடா அம்பானியெல்லாம் தான் இதனாலே பலன் அடைஞ்சிருக்காங்க. அவங்க கிட்ட இருந்து இந்த ஊழலாலே ஏற்பட்ட நட்டத்தை எப்படி வசூலிப்பதுன்னு ஜன்லோக்பால் ஒன்னும் சொல்லலியே. அதுமட்டுமில்லாம, ரிலையன்ஸே அண்ணா ஹசாரேவை ப்ரமோட் பன்ற டைம்ஸ் நௌவுக்கு விளம்பரமும் கொடுக்கறாங்க. இதைப் பத்தி என்ன சொல்றீங்க” என்றோம்.
“அதாவது சார்.. ஜன்லோக்பால் வந்தா நாட்டுக்கு நல்லது சார். அப்படி இல்லாட்டா அண்ணா ஹசாரே இவ்வளவு தூரம் போராட மாட்டாரே? வயசானவரு பாஸ் அவரு… புரிஞ்சுக்கங்க. ரிலையன்ஸைப் பொருத்தளவில இது அவங்களுக்கு பிஸினஸ் பாஸ். பொலிடீஷியன்ஸ் தான் இந்த மாதிரி டீலிங்ஸை பத்திரமா பாத்துக்கனும்.. ஏன்னா அதுக்குத் தானே அவங்களை எலக்ட் பண்ணிருக்கோம்? அப்படிச் செய்யாத போது ஜன்லோக்பால் அவங்களை தண்டிக்கும் பாஸ்”
“அது சரிங்க, ஆனா நீங்க சொல்றாப்ல பார்த்தா, ஆ. ராஜா வாங்கின லஞ்சத்தை மட்டும் ரெக்கவர் பண்ணித் தர்றது தான் ஜன்லோக்பாலோட வேலை. கூடவே அவருக்கு ஒரு அஞ்சு வருசமோ பத்து வருசமோ உள்ள வைப்பாங்க. ஆனா, அந்த ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடில வர்ற மத்த அமௌன்டெல்லாம் பிஸினஸ் தானா?”
“ம்ம்ம்… அது வந்து.. எனக்கு சரியா சொல்லத் தெரியலை.. ஆனா, ஜன்லோக்பால் வந்தா பிரச்சினை தீர்ந்துடும் அவ்ளோதான். சரி நான் கொஞ்சம் பிஸி. நீங்க எங்க வாலண்டியர்ஸ் யார்ட்டயாவது பேசிப்பாருங்களேன்” என்றவாறே எஸ்கேப்பாகப் பார்த்தவரைத் தடுத்து,
“சரி.. ஒரே ஒரு கேள்வி. ஜன் லோக்பால் அமைப்பால் ஊழல் பணத்தை இரண்டே வருசத்தில் ரெக்கவர் செய்ய முடியும்னு சொல்றீங்களே, சாதாரணமா இந்த மாதிரி பணமெல்லாம் ஸ்விஸ் வங்கில தானே போட்டு வைக்கிறாங்க? அந்த நாட்டு சட்டப்படி நீங்க கேட்ட போதெல்லாம் பணத்தைத் திரும்பத் தரமாட்டானே அதுக்கு ஜன்லோக்பால் என்ன வழி சொல்லுது?” என்று கேட்டோம்.
“ம்ம்ம்… அது சார்… அதெல்லாம் எனக்குத் தெரியாது சார். நீங்க ஆர்க்கனைசர் கிட்ட கேளுங்களேன்” என்று விட்டு விறுவிறுவென நடையைக் கட்டினார். அவர் சுத்தமாகக் களைப்பே இல்லாமல் படு உற்சாகமாகவும் தெம்பாகவும் இருந்தார். ஐந்து நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருந்தும் கூட இப்படி ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் ‘உண்ணா’விரதம் பற்றி வியந்து கொண்டே முதலில் சந்தித்த போராட்ட அமைப்பாளரைத் தேடிப் பிடித்தோம்.
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதாக அறிமுகப்படுத்திக் கொண்டவரிடமிருந்தும் மேலே உள்ள கேள்விகளுக்கு அதே விதமான பதில் தான் வந்தது. நாட்டில் நிலவும் ஊழலுக்கான காரணம் என்னவென்று கேட்டோம்,
” பாஸ்… இந்த நாட்டை ஆள்றது யார் தெரியுமா?” என்று விட்டு எங்களை உற்றுப் பார்த்தவர் எங்களிடம் இருந்து எந்த மறுமொழியும் வராதது கண்டு திருப்தியுற்றவராகத் தொடர்ந்தார் ” ரோமன் கத்தோலிக் கும்பல் தான் சார் இந்த நாட்டையே ஆள்றாங்க. முதல்ல இந்த சோனியா காந்திய நாட்டை விட்டுத் துரத்தினாலே ஊழல் ஒழிஞ்சுடும் சார்… க்ரிஸ்டியன் மிஷனரிஸோட சதி தான் சார் இப்ப நம்ம நாட்ல இத்தன ஊழல் நடக்கறக்கே காரணம்” என்று சொல்லி விட்டு ஏதோ பெரிய சதியைக் கண்டுபிடித்து விட்டவர் போல் பெருமையாகப் பார்த்தார்.
“அப்ப கர்நாடகாவில் எடியூரப்பா செய்த ஊழலுக்கும் ரோமன் கத்தோலிக் தான் காரணமா?” என்று சிரிக்காமல் முகத்தை வைத்துக் கொண்டே கேட்டோம்.
“ஆங்.. அது வேற பாஸ். நீங்க மொத்தமா பார்க்கனும் பாஸ்.. இப்ப பாருங்களேன், படிச்ச நாம இப்படி கஷ்டப்படறோம்.. படிக்காத மக்களுக்கு எதுவுமே புரியலை பாத்தீங்களா… இங்க வந்திருக்கதில ஒத்தனாவது லோக்கல் ஆளு இருக்கானா சார்? இப்படி இருந்தா எப்படி சார் நாடு முன்னேறும்?” என்று நமது கேள்விக்கு பதில் அளிக்காமல் அடுத்த பிரச்சினைக்குள் தாவினார்.
” அப்படியா… ஆனா, ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு அடிப்படையாக அமைந்த சட்டங்களைப் போட்டதே பாரதிய ஜனதா ஆட்சியில தானே அதுக்கும் ரோமன் கத்தோலிக் தான் காரணமா?” என்று மீண்டும் அதே இடத்துக்கு வந்தோம்.
“சார்.. நீங்க கேட்டதையே கேட்கறீங்க.. முதல்ல ஒன்னு புரிஞ்சுக்கங்க. ஜன்லோக்பால் வந்தா பிரச்சினை தீரும். இப்ப அதை எதிர்க்கறது யாரு? காங்கிரஸ் தானே? சோனியா தானே? அப்ப இது ரோமன் கத்தோலிக் சதி தானே? ரிசர்வேஷன் கொண்டாந்ததிலேர்ந்து எல்லா பிரச்சினைக்கும் காங்கிரஸ் தானே காரணம்? பாருங்க சார்.. ஆ.ராசா மாதிரி ஒத்தரை மினிஸ்டர் ஆக்கினா ஊழல் நடக்கத்தானே செய்யும்? அமைச்சர் ஆக்கினது யாரு? சோனியா தானே? அதான் சொல்றோம்… பர்ஸ்ட்டு பேர்ப்பர்லாம் படிங்க சார். தோ.. நாங்க பாம்லெட்ஸ் கூட போட்ருக்கோம் படிச்சி பாருங்க” என்று பொங்கித் தள்ளியவரின் அரசியல் புரிதல் எமது தலைகளை 360 டிகிரிக்கு சுழற்றியடிக்கவே கேள்வியை மாற்றினோம்.
“சரிங்க லோக்கல் ஆளுங்க யாருமே பெரிசா வரலியே.. அதிகமா நார்த் இண்டியன் ஐ.டி வொர்க்கர்ஸா தெரியறாங்களே?” என்றோம்..
“ஏன்.. நான் கூட தமிழ் தான் சார்.. மொழியெல்லாம் பார்க்காதீங்க சார். இப்படிப் பாத்துப் பாத்து தான் தமிழ்காரன்னாலே நார்த்ல கேவலமா பாக்கறான். லோக்கல் சேனல்லெ பெரியளவில கவரேஜ் பண்ண மாட்றான்.. இதே சன் டி.வில ஒரு கவரேஜ் கிடச்சிருந்தா ஒரு பத்தாயிரம் பேராவது வந்திருப்பான்.. பட் அன்பார்சுனேட்லி கிடைக்கலே.. ஆனா இங்க வந்திருக்கவங்கெல்லாம் குவாலிட்டி பீபிள்.. தீஸ் பீபிள் கேன் மேக் சேஞ்சஸ்.. யு நோ? படிக்காதவன் வந்தா ஓக்கே.. வரலேன்னா அவனுக்கும் சேத்தே நாம தானே பார்த்துக்கனும்?” என்றார்..
“ஏன் டி.வி கவரேஜ் வேணும்? நேரா மக்களைப் பாத்து போராட்டத்துக்கு வரச் சொல்லி கூப்பிடலாமே?” என்று கேட்டோம்.
“நாங்க எல்லாமே வொர்க் பன்றவங்க. ஒன்லி சாட்டர்டே அன்ட் சன்டே லீவ். மோர் ஓவர், மத்த நாள்ல வேற பர்செனல் கமிட்மென்ட்ஸ் இருக்கும். சோ.. இதையே ஒரு வேலையா வச்சில்லாம் பண்ண முடியாதுங்க. நேரம் கிடைக்கும் போது பண்றோம். தட்ஸ் ஆல்.. சோ.. மக்கள் தான் டி.விலயோ நியூஸ்லயோ பாத்துட்டு வரணும்.. போய் சொல்லலாம் நேரம் கிடையாது. ஓக்கே?” என்றவாறே நகரப் பார்த்தவரிடம் அடுத்து ஒரு கேள்வியைப் போட்டோம்.
“ஜன்லோக்பால் மசோதாவையும் அண்ணா ஹசாரேவையும் ஆதரிக்கும் தேசியவாத காங்கிரஸில் இருந்து டைம்ஸ் நௌ சேனல், பர்க்கா தத், உள்ளிட்டு பலரின் மேலும் கூட முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளதே? பாரதிய ஜனதாவே பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட கட்சியாயிற்றே? இங்கும் கூட பல பாரதிய ஜனதா கட்சியினரையும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரையும் காண முடிகிறதே?”
“அதாவதுங்க… ஒரு நல்ல விஷயம் நடக்குது. அதுக்கு யார் சப்போர்ட் பண்ணா என்னா சார்? நல்லவனோ கெட்டவனோ ஒரு பொதுக்காரியம்னு வரும் போது சப்போர்ட் பண்ணா அதை ஏத்துக்கிடறது தானே புத்திசாலித்தனம்?” என்றார். எமக்கோ, ‘கோழி குருடா இருந்தா என்ன.. கொழம்பு ருசியா இருக்கா பாரு’ என்கிற கவுண்டமணியின் வசனம் காதுகளுக்குள் ரீங்கரித்தது.
“அப்படின்னா… ஆ.ராசாவும் சுரேஷ் கல்மாடியும் கூட ஜன்லோக்பாலை ஆதரிச்சா அந்த ஆதரவை ஏத்துக்கிடுவீங்களா?” என்றோம்
“…” பதில் எதையும் அளிக்காமல் எங்களைக் கடந்து சென்று விட்டார் அவர்.
__________________________________________________________
பார்ப்பனர்கள், வட இந்தியர்கள், பார்ப்பனராக துடிக்கும் சில மாநிறத் தோல் வசதியான தமிழர்கள் என்ற கூட்டத்தில் கருப்புத் தமிழன் ஒருவர் கூட இல்லை. மொத்த கூட்டத்தில் சுண்டி இழுக்கும் வெள்ளை நிறம் கொண்டோர் சுமார் 80 சதவீதம் இருக்கும். அவ்வகையில் இங்கு சராசரி தமிழர்கள் யாரும் கண்ணில் தென்படவில்லை. நாங்கள் பேசிய அனைவருமே சமச்சீர் கல்வியை கடுமையாக எதிர்த்தார்கள். இட ஒதுக்கீட்டை இகழ்ச்சியுடன் எதிர்க்கும் மனநிலை பலருக்கும் இருந்தது. இதைத்தாண்டி, ஈழம், மூவர் தூக்கு, விலைவாசி உயர்வு என எந்த பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் அறிந்திருக்கவில்லை அல்லது கவலைப்படவில்லை. மேலும் ஜன் லோக்பாலின் என்றால் என்ன, அதன் விசேசம் என்ன என்று அநேகமாக யாருக்கும் தெரியவில்லை.
முகத்தில் தேசியக்கொடி பெயிண்ட் அடிக்க ரூ.20, பதிவுக் கட்டணம் ரூ.20, ஸ்டிக்கர் ரூ.10 என்று உள்ளே நுழைபவர்கள் கட்டாயமாக மொய் எழுதவேண்டும். இதைத்தாண்டி நன்கொடை தனி. நன்கொடைகூட பத்து இருபது எல்லாம் பர்சில் பதுங்கிக் கொண்டு நூற்றில் தொடங்கி விழுந்தவாறே இருந்தது. டைம்ஸ் நௌ நேரடி ஒளிபரப்பிற்காக அவ்வப்போது ஒருவர் இயக்குநர் போல ஷாட்டை ரெடி செய்தார். காமரா முன்னர் அழகானவர்களை நிற்க வைத்து, காமரா பின்னால் இருவரை முழக்கமிட வைத்து, காமரா மேன் காமராவை ஷேக் செய்து எடுப்பது மூலம் ஏதோ பெரிய கூட்டம் இருப்பதாக செட்டப் செய்து காண்பித்தார்கள். ரோமன் கத்தோலிக்க சதி என்ற இரகசியம் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தொடங்கி அக்ரஹார மாமிகள் வரை பேசும் பொருளாக இருந்தது. வட இந்தியர்களோடு கொஞ்சம் ஆந்திர ஐ.டி கும்பலும் இருந்தது.
இதற்கிடையே “பாரத் மாதா கீ ஜே” “வந்தே மாதரம்” என்கிற கூச்சல்கள் காதைக் கிழித்துக் கொண்டு கிளம்பவே அது வந்த திசையை நோக்கிச் சென்றோம். அங்கே அண்ணாவின் ஆதரவாளர்கள் சிலர் நகரை பைக்கில் வலம் வந்து கொண்டிருப்பதன் ஒரு அங்கமாக இந்நிகழ்வு நடக்கும் இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். முன்னே சில பைக்குள் கடந்து சென்றதைத் தொடர்ந்து சில கார்களும் அந்த பவனியில் தொடர்ந்து வந்தன.
அதிலொன்றின் பின் சீட்டில் டீ ஷர்ட்டும் ஷார்ட்சும் அணிந்து அமர்ந்திருந்த ஒரு இளைஞர் வலது கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டியிருந்தார். அதில் ஒரு தேசியக் கொடியைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தார் – இடது கையில் பாதி குடித்திருந்த நிலையில் ஒரு கிங் பிஷர் பாட்டில்! பீரும் தேசியக் கொடியும் செம காம்பினேஷன்! பதிலவுலக குருஜியின் மெய்யுலக அறிவை எண்ணியும் ஒரு ஆச்சரியம் அப்போது வராமலில்லை.
காரின் உள்ளே ஏர். ஆர். ரகுமான் உச்சஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தார் – “வண்ட்டேஏஏஏ ஏமாத்தரம்ம்ம்ம்ம்…”
_____________________________________________________________
– வினவு செய்தியாளர்கள்
______________________________________________________
அன்னா பற்றிய வினவின் கட்டுரை எனக்கு ஏனோ 1975 -இல் நெருக்கடி நிலையை ஆதரித்து அதை எதிர்த்த jp ,காமராஜ்போன்றவர்களை பிற்போக்கு என்றும் அமெரிக்க கைகூலிகள் என்றும் mgr ,ப.சிதம்பரம் ,பக்தவத்சலம்,c .சுப்பிரமணியம் போன்றவர்களை சமதர்ம காவலர்கள் என்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்றும் வலது கம்யூனிஸ்ட் கள் வர்ணித்து பின்னர் செருப்படி பட்டது நினைவிற்கு வந்தது.
//அன்னா பற்றிய வினவின் கட்டுரை எனக்கு ஏனோ 1975 -இல் நெருக்கடி நிலையை ஆதரித்து அதை எதிர்த்த jp ,காமராஜ்போன்றவர்களை பிற்போக்கு என்றும் அமெரிக்க கைகூலிகள் என்றும் mgr ,ப.சிதம்பரம் ,பக்தவத்சலம்,c .சுப்பிரமணியம் போன்றவர்களை சமதர்ம காவலர்கள் என்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்றும் வலது கம்யூனிஸ்ட் கள் வர்ணித்து பின்னர் செருப்படி பட்டது நினைவிற்கு வந்தது.//
பொத்தாம் பொதுவா பேசுவதை விட கட்டுரை முன்னிறுத்தும் கேள்விகளுக்கு பதில் சொல்லலாமே? ஏன் அண்ணா அண்ட் கோ நழுவி ஓடியது போல்வே நீங்களும்…??
நீர் எழுதுவதே பொத்தாம் பொதுதானே…. உம்மிடம் எத்தனை படிப்பாளிகள் இருக்கிறார்கள்… சுத்தமாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் உம் அணியில் எத்தனை பேர்.. (ஆங்கிலம் தேவையில்லை என்று மழுப்பாதீர்… உம்ம மேற்கத்திய புரட்சியை இறக்குமதி பண்ணவே ஆங்கில அறிவு தேவை) ஏதோ நாலு அடையார் பாப்பானை பாத்துட்டு கிணற்றுத் தவளை மாதிரி பேசுகிறீர்…25 வருடங்களாக உம்ம கட்சி பெரியல்தான் ஆல் இண்டியா… ஆனால் தமிழகத்தில் சில மாவட்டத்தைக் கூட தாண்டவில்லை… உண்டா இல்லை…… நான் பிடித்த முயலுக்கு என்ற கதையை சொல்வதில் அர்த்தம் இல்லை
////உம்மிடம் எத்தனை படிப்பாளிகள் இருக்கிறார்கள்… ////
எத்தனை படிப்பாளிகள் என்பது முக்கியம் இல்லை மங்குனி பாண்டியரே …
இருக்கும் அனைவரும் எவ்வளவு உறுதியானவர்கள் என்பது தான் முக்கியம் .. புரியரதா வோய் …
////25 வருடங்களாக உம்ம கட்சி பெரியல்தான் ஆல் இண்டியா… ////
நீங்க ஆல் இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பத்தி பேசரேளா ?..
சாரி ஓய் .. இது அவா வெப்சைட் இல்ல … அவாளுக்கு ஆப்பு வைக்கிறவாளோட வெப்சைட் ..
அது உம்மால ஆயரம் ஜென்மம் எடுத்தாலும் முடியாதுன்னுதான் சொல்ல வர்றேன் புரியர்தோ…..
ஓய், இவர் ஏங்காணும் ஆயிரம் ஜென்மங்கள் எடுக்கனும் அதான் துரை 1978லேயே எடுத்துட்டாறோல்யோ…. அபிஷ்டு http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
குபிஸ்டு…எக்மோர்லேர்ந்து 22 பஸ் புடிச்சா எம்எச்ல எறக்கி விட்ருவா.. இல்லை இப்ப பேசற மாதிரி கண்டக்டர்கிட்ட பேசினா அவாளே எறக்கிவிட்ருவா…
அன்புள்ள பாப்பானுக்கு …
உங்கவாளுக்கு முன்னாடி தான் எங்க பெரியார் உங்க ராமனைச் செருப்பால் அடித்தார். அது உங்கவாளுக்கு ஆப்பு இல்லையா?..
உங்கவாளின் ஆஸ்தான கோவிலான சிரீரங்கம் கோவிலில் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தியது இவா.. அது உனக்கு ஆப்பு இல்லையா ?..
சிதம்பரத்துல நடுல குடுமி வளத்த குடிகார மொல்லமாரி நாய்களுக்கு வச்சோமே அதுக்கு பேரும் ஆப்பு தாண்டா..
இன்னும் இருக்கு .. பொறுத்திருந்து பாரு
வேங்கைப்பாண்டி….னீங்க எவ்வளவு இடித்தாலும்,பூணூல்கள் அசைந்து கொடுக்காது…கடைசி தமிழனின் கோமனம் உருவுவதுதான் பூணூல்களின் லட்சியம்
அண்ணா ஹசாரே. நாட்டுப் பற்று, சமூக நல ஆர்வம் மிக்க போராளி, எல்லாம் சரி பி.ஜே.பி ஆட்சியில் ஊழல் நடக்கும்போது எங்கே போனார். குரைந்தபட்சம் கேவலமான சவப்பெட்டி ஊழல் சமயமாவது ஒரு என்ட்ரி குடுத்திருக்கலாம் சரி அதுதான் இல்ல இவருவாழும் ஊர்ல ஆயிரக்கணக்கா முஸ்லிம்கள் கொல்லப்பட்டாங்களே அப்பவாவது ஒரு என்ட்ரி குடுத்திருக்கலாம். அப்பவெல்லம் இந்த சமூக நல ஆர்வம் எங்க போச்சு எல்லாம் rss + bjp செய்யும் வேலை
I don’t think so Indian. Its not correct to ask what did u do that time? instead ask what is your stand on these issues, and if he is not giving correct asnwers please ignore him.
மற்றொரு சிறிய திருத்தம் – உலக வங்கி செய்யும் வேலை …
இவர்களின் மட்டரகமான பிழைப்பு என்னவென்றால் …
என் இடத்திற்கு வந்தார்கள்… என்னை கேட்காமல்… என் தொலை பேசி அழைப்பில் இருந்து மிஸ்டு கால் கொடுத்து கொண்டார்கள்… அது மட்டும் இல்லாமல் என் கை பேசி இல்ருந்தும்…
080-30088502 – என்ற எண்ணிற்கு…
பிறகு… பெருமையாக… நான் மட்டும் இன்றைக்கு… 55 மிஸ்டு கால் கொடுத்தேன்… என்று…
நாசமாய் போக அண்ணாவும் அவனது அடி பொடிகளும்…
வலத் கம்யூனிஸ்ட்களை செருப்பால் அடித்தது நாங்கள் தான் என்பதை சுலபமாக மறந்துவிட்டீரே !!..
வல்லாரைக் கீரை சாப்பிடவும் ..
ஹண்ணாவுக்குப் பின்னால் உள்ள கூட்டம் யார் என்பதற்கு இதற்கு மேலேயும் சான்று தேவையா? தங்களுக்கு பாதகம் என்பதால் இடஒதுக்கீட்டை எதிர்த்தபோது இந்தியாவே கொந்தளித்தது போல சீன் போட்டார்களே அதே சீன்தான் இப்போதும். நாயகன்தான் வேறு. பார்ப்பன உயர் சாதி மேட்டுக்குடியினரின் கூத்துதான் இது. சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும்.
கில்லி விளையாடிக் கொண்டிருக்கும் ‘டீம் ஹண்ணா’ கில்லாடிகளைக் கிழி கிழி என கிழித்துள்ளார் பிரபல உழுத்தாளர் அருந்ததிராய். அதையும் படியுங்கள். http://www.thehindu.com/opinion/lead/article2379704.ece?homepage=true
//சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும்.// இதுதான் தப்புக் கணக்கு. அண்ணா ரெண்டாம் முறை உண்ணா செய்ய முடிவு செஞ்சப்பவே டவுசர் கிழிஞ்சு போயிருந்தது. அதை தைப்பதற்கு ஏதுவாத்தான் கைது செஞ்சது மாதிரி பரபரப்பு கிளப்பி, ஒரு கூட்டத்த சேத்தாய்ங்க. இந்த நாடகம் அதன் இலக்கை அடையும் வரை அமெரிக்காவின் வழிகாடடுதலுடன் பாஜக-காங்கிரசு பங்களிப்புடன் சேமமாக நடைபெறும்.
அண்ணா சாதாரண நபரல்ல. அவருக்கென்று உலக வங்கி சில இலக்குகளை வைத்துள்ளது.
மிகச் சரியாக சொன்னீர்கள் ..
//தில்லி நகரத்தில் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் துவங்கிய பின் குற்றச்சம்பவங்கள் 35% அளவிற்குக் குறைந்துள்ளதாக போலீசு உயரதிகாரிகளே தெரிவித்ததாக அச்செய்திக் குறிப்பில் காணப்படுகிறது. ஏதோ நல்லது நடந்தால் சரி தான். ஆனால், இந்த ‘நல்லது’ இன்னும் கொஞ்சம் நாட்கள் தொடர வேண்டுமானால் மேற்படி காரியங்களில் ஈடுபடும் யோக்கியர்களை ராம்லீலா மைதானத்திலேயே இருக்கச் செய்வது அவசியம். அதற்கு அண்ணா இன்னும் கொஞ்சம் நாட்கள் உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டும். அதற்கு காங்கிரஸ் மனது வைக்க வேண்டும்.// காத்திரமானதொரு கட்டுரை. அரசியல் மட்டுமல்ல அழகியலும் மிகக் கச்சிதமாக வந்துள்ளது. குறிப்பாக மேலேயுள்ள வரிகள்..
(:D<-<
:-))))
அசாரேவுக்கு எதிராக அருந்ததி ராய், அருணா ராய்: சுற்றுலா போராளிகளுக்கு உண்மை போராளிகள் எதிர்ப்பு!
http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_22.html
அருள்,
ராமதாசும், அன்புமணியும் கூட இப்போது சுற்றுலா போராளிகள்தான், தெரியுமா?
தமிழன் அழைத்தால் எல்லாரும் வரவேண்டும், ஆனால் தமிழன் தமிழை தவிர எதையும் கண்டுகொள்ள மாட்டான், என்ன நியாம் சார் இது. நீங்களும் முன்நிற்க மாடீர்கள், முன் நிற்பவர்களையும் தலையெடுக்க விட மாட்டீர்கள்.
இத விடுங்க ஈழ பிரச்சனைக்காக கருணாநிதி மோசம் ஜெயலலிதா சரி என எல்லாம் மறந்து சொன்னதும் நாம் தான். பிரச்னை எதுவென்றாலும் போராட வேண்டும். அது ஈழமானாலும் சரி, பேரறிவாளனாலும் சரி, ஊழலனாலும் சரி.
I agree with you காரிவளவன். i am not with Anna and co. i have 100s of differnt views against Anna & co, still i was in street on aug 16th to support fight against corruption, unfortunatly, only 10 of us where standing on the road, in the same road today, 1000s of people are united to support this. i am sure that 100s of people there not for anna & co, there are there just to show the fight against corruption.
I was there in chennai, travelled from bangalore to support Tamilaruvi Maniyan, he has called a protest for the following,
1. Eeelam, 2. fight against corruption
on the spot he has included the death sentence against முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன்.
Howmany people were there? can you imagine?
Around 50, Maximum 100.
It is less than total no of polce people around? what does it say? i left to your imagination.
Why vinavu is not ready to atleast post such events in there website?
அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!பற்றிய கட்டுரை சில உண்மைகளை பளிச்செனக் கூறியுள்ளது. ஆனால் ஜாதியை நுழைக்காமல் இருந்திருக்கலாம். இப்போராட்டத்தை ஒரு நாடகம் எனும் போக்கில் காட்டாமலும் இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் எழுதியது போல் மீடியாக்கள்தான் இப்போலிகள் நடமாடக் காரணம். டிவி யில் வருவதையே முக்கிய காரணமாகக் கொண்டுள் சிலர் வருகிறார்கள் ஆனால் அனைவரும் அப்படியே அன்ர கருத்து தவறு. நன்கொடை பற்றி வீறாப்பாய் எழுதியுள்ள வினவு தளத்தின் கடைசி வரிகள் “வினவுக்கு நன்கொடை தாருங்கள்” ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமரே வாழ்க வாழ்க !!!
///// ஒன்லி சாட்டர்டே அன்ட் சன்டே லீவ். மோர் ஓவர், மத்த நாள்ல வேற பர்செனல் கமிட்மென்ட்ஸ் இருக்கும். சோ.. இதையே ஒரு வேலையா வச்சில்லாம் பண்ண முடியாதுங்க. நேரம் கிடைக்கும் போது பண்றோம். தட்ஸ் ஆல்..////
ஓய்வு நேரத்துலே எப்படி ஒரு நாட்டுப்பற்று ?? ஆஹா !!! 🙂
அந்த நாட்டுபற்றும் செப்டமபர் 13 முதல் காணாமல் போய்விடும். காரணம் ‘இன்டியன் சாம்பியன்ஸ் லீக்’ என்ற இருபது ஓவர் கிரிகெட் போட்டி தொடங்க இருக்கிறது. அண்ணா கூட்டம் அனைத்தையும் அன்று முதல்நீங்கள் ஸ்டேடியத்தில் பார்க்கலாம்.
வழக்கம் போல உங்க அரசியல் செயல்பாடு என்ன என்று தெரிவிக்காமல் ‘விளக்கம்’ கேட்கும் விதம் அருமை. இந்த பதிவ படிச்சா இந்த கமெண்ட் நினைவுக்கு வருது – https://www.vinavu.com/2011/01/19/pa-raghavan-kizhakku-rss/#comment-35910
//மலேசிய ஊழல் புகழ் டத்தோ சாமிவேலுவின் ஒரே இலக்கிய நண்பர் ஜெயமோகன் என்று நாட்டில் வாழும் உத்தமர்கள் எல்லாம் அண்ணா ஹசாரேவை ஆதரிக்கிறார்கள்.ஊருக்கு உழைத்த உத்தமராம் அண்ணன் ஆட்டோ சங்கரை மட்டும் இந்தக் கேடு கெட்ட அரசு தூக்கில் போடாமல் இருந்திருந்தால் அவரும் கூட ஆதரித்திருப்பார்.//ethukku sir intha statement…thevai illaama.. article ezhuthavendum endraal sambantham illaama ezhuthuveengala? Palarai Uthamara endru kelvi ketkum neengal uthamaraa???? Ungal Vinavu thalathin yogiyathai ennavendru anaivarukkum theriyum….
கார்த்தி , சரி வினவு தளத்தோட யோக்கியதைதான் தெரியுதே அப்புறம் ஏன் சார் படிக்க வந்தீங்க , சரி வந்ததுதான் வந்தீங்க வேலை மெனக்கெட்டு கருத்தை வேற பதிவு செய்றீங்க 🙂 🙂 ம்ம்ம் உங்க அகராதிப்படி பார்த்தா கிரிக்கெட்டை பத்தி விமர்சனம் பண்ணா ” உனக்கு பேட் பிடிக்கத் தெரியுமா , பவுலிங் போடத் தெரியுமா” ந்னு கேட்பீங்க போல 🙂 சினிமாவப் பத்தி விமர்சனம் பண்ணினா ” உனக்கு படம் எடுக்கத் தெரியுமா ?” ந்னு கேட்பீங்க போல 🙂
// கிரிக்கெட்டை பத்தி விமர்சனம் பண்ணா ” உனக்கு பேட் பிடிக்கத் தெரியுமா , பவுலிங் போடத் தெரியுமா” ந்னு கேட்பீங்க போல சினிமாவப் பத்தி விமர்சனம் பண்ணினா ” உனக்கு படம் எடுக்கத் தெரியுமா ?” ந்னு கேட்பீங்க போல //
இதே கேள்விய இந்த பதிவின் ஆசிரியரிடமும் கேளுங்க மது.
தப்பு கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்களோ…..
தப்பை அனுசரித்தே செருப்படி வாங்கிக் கொண்டிருக்கும் நடுத்தரவர்க்கமோ ?..
//மலேசிய ஊழல் புகழ் டத்தோ சாமிவேலுவின் ஒரே இலக்கிய நண்பர் ஜெயமோகன் என்று நாட்டில் வாழும் உத்தமர்கள் எல்லாம் அண்ணா ஹசாரேவை ஆதரிக்கிறார்கள்.// யார் கண்டது வினவின் சொந்தபந்தங்கள் கூட எப்பவாவது லஞ்சம் கொடுத்திருக்கலாம் பெற்ரிருக்கலாம், ஆனால் அவரெல்லாம் நாட்டுக்காக போராடலாம் அவர் கருத்தை ஏற்காத யாருக்கும் நாட்டுக்காக போராடும் தகுதியே இல்லை.
இப்படிக்கு, பைசா பெராத தத்துவங்கலை பரப்பும், ஈயோட்டும் வினவின் அல்லக்கை.
உலகத்தின் ஒரே உத்தமர் வினவு வை பேட்டியெடுக்காத டிவிசேனலெல்லாம் ஒரு சேனலா?!?
“” பக்கத்திலேயே கடந்த ஆறு நாட்களாக சோறு தண்ணீர் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கென்று தனியே கழிப்பறை அமைத்திருந்தனர்.””
இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் நக்கல்.
Most people who fought for Tamil Eelam are not ready to hangup with Anna Hazare. Whether it is Eelam(ஈழம்) or Perarivaalan(பேரறிவாளன்) or Corruption, whatever is the problem we should STRUGGLE. Before you are Christian/Hindhu/Muslim or Tamilan/Malayali/North Indian we are INDIAN. And above all we all are human. Fight for Humanity and for our Rights.
அய்… இப்படி சந்துல சிந்து பாடுறது தானே வேணாங்குறது…!!! இந்திய வரலாற்றில் தமிழனின் பங்கு இதுவரை ஏதும் இல்லை என்ற ரீதியில் ரீல் சுத்துவதை நிறுத்துங்கள். ‘நான் இந்தியன்’ என்ற நினைப்பு தமிழனுக்கு எப்போதுமே உண்டு. ஆனால் ‘தமிழனும் இந்தியன் தான்’ என்ற நினைப்பு இந்தியாவுக்கு தான் இல்லாமல் போய்விட்டது. எனவே உங்கள் ஆட் காட்டிவிரலை சற்று எதிர்திசையில் திருப்புங்கள்.
sirappana katturai.
I’d rather not be Anna
Arundhati Roy
http://www.thehindu.com/opinion/lead/article2379704.ece?homepage=true
http://socialistplatform.blogspot.com/2011/08/arundhati-roy-anna-hazare-drama.html
ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு அடிப்படையாக அமைந்த சட்டங்களைப் போட்டதே பாரதிய ஜனதா ஆட்சியில தானே
at that time 1998 how many companies in india in telecomunication field..one company start service with infrastructure like tower construction all over india..so tat NDA govt give first come first service policy…but 2008 u saw in UPA period all over country got signal,,number of telephone company increse…raja is not only criminal sonia,p.chidambaram manmohon also involve they did not change tat rules,
இந்த நாட்டை ஆள்றது யார் தெரியுமா?” saw this link
http://www.indiaagainstcorruption.info/2011/07/antonia-maino/
ஸ்விஸ் வங்கில தானே போட்டு வைக்கிறாங்க? அந்த நாட்டு சட்டப்படி நீங்க கேட்ட போதெல்லாம் பணத்தைத் திரும்பத் தரமாட்டானே
who told this our cbi know all about this congress only not displayed the name of swiss bank money holder..because 28 lakhs core is congress man money….
//பார்ப்பனர்கள், வட இந்தியர்கள், பார்ப்பனராக துடிக்கும் சில மாநிறத் தோல் வசதியான தமிழர்கள் என்ற கூட்டத்தில் கருப்புத் தமிழன் ஒருவர் கூட இல்லை. மொத்த கூட்டத்தில் சுண்டி இழுக்கும் வெள்ளை நிறம் கொண்டோர் சுமார் 80 சதவீதம் இருக்கும். அவ்வகையில் இங்கு சராசரி தமிழர்கள் யாரும் கண்ணில் தென்படவில்லை//
http://twitter.com/#!/iPranesh/status/105688368985276417/photo/1
இந்த link கொஞ்சம் பாருங்க, இது அய்யராத்து மாமியா, இல்லை தமிழனின் குழந்தையா என உங்களுக்கு தெரியும். சும்மா சாதியையும் இனத்தையும் காட்டி பிரிவினையை கிளப்பாதீங்க சார்.
இப்போ இவ்ளோ பிரிவினை பார்க்கும் நீங்க எப்படி சார் ஈழ பிரச்சனைக்கு உலகமே உங்களுக்கு ஆதரவு தரணும்னு எதிர் பாக்குறீங்க?
//சும்மா சாதியையும் இனத்தையும் காட்டி பிரிவினையை கிளப்பாதீங்க சார்.//நீங்க வினவை திட்டுங்க தப்பில்லை. அதுக்காக இப்படி அடிமடியிலேயே கைவெச்சா எப்படி சார்? பிரிவினையைக் காட்டித்தானே வினவு வண்டியே ஓடுது! பின்ன நாமெல்லாம் ஒத்துமையா இருந்துட்டா அப்புறம் வினவுக்கு வேலையே இல்லை, உண்டியலும் வசூலாகாது, அப்புரம் எப்படி வண்டி ஓடும்?!?
ஆங்கிலேயனின் பிரித்தாளும் தந்திரம் போல இது கூட்டத்தை கலைத்தாளும் தந்திரம். ஊர் ரெண்டுபட்டாத்தானே இவங்களுக்கு சந்தோசம்?!?
ஆக ஈழப் பிரச்சனை என்பது வினவிற்கும், பார்ப்பனர்களுக்கும் இடையேயான பங்காளி சண்டை. அப்படித் தானே காரிவளவன்? வினவு என்ற ஒரு ஊடகம் இல்லாமல் இருந்திருந்தாலோ, அல்லது அது பார்ப்பனர்களை சாடாமல் இருந்திருந்தாலோ ஈழம் அமைய (தமிழரான?) நீங்கள் ஒரு துரும்பை தூக்கி போட்டிருப்பீர்கள். அப்படி தானே?
காரி வளவா, பீச்சாங்கரை போட்டோவை காட்டி யாரை ஏமாத்தறேள், விட்டா எல்பி ரோட் வரைக்கும் கடல் கொண்டுடுத்துன்னு சொல்லுவேள் போலருக்கே
பர்க்கா தத், ஷோபா டே, ராக்கி சாவந்த், ஜெயமோகன், ஆட்டோ சங்கர், ஹர்ஷத் மேத்தா, பின்லேடன்(இருந்திருந்தால்), சில அரசியல் கட்சிகள் போன்றோர் ஆதரவு கொடுத்தால் அவ்வியக்கம் தவறானதா?
இந்த ‘நல்லது’ இன்னும் கொஞ்சம் நாட்கள் தொடர வேண்டுமானால் மேற்படி காரியங்களில் ஈடுபடும் யோக்கியர்களை ராம்லீலா மைதானத்திலேயே இருக்கச் செய்வது அவசியம் — அயோக்கியனெல்லாம் ராம்லீலா மைதானபதிற்கு போயிட்டது போல் சொல்லி இருக்கிறீர். — மக்கள் பெருந்தொகையில் பல இடங்களில் இருப்பதே குற்றம் குறைந்ததற்கு காரணம்.
\\“இல்லிட்டரேட் மோரோன்” என்று அந்தப் பெண் ஆர்வலர் முகத்தைச் சுளித்துக் கொண்டார்.\\—- அந்த பெண்ணின் தவறு எப்படி அண்ணா குழுவினரின் தவறாகும்?
\\பக்கத்திலேயே கடந்த ஆறு நாட்களாக சோறு தண்ணீர் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கென்று தனியே கழிப்பறை அமைத்திருந்தனர்.\\— தண்ணீர் உட்கொள்ளவில்லை என உங்களுக்கு தெரியுமா? உண்ணாவிரதமிருந்த அனைவரும் 6 நாட்களாக உண்ணாவிரதமிருக்கிறார்கள் என்று தெளிவாக தெரியுமா?
\\சில அய்யராத்து மாமிகள் தங்கள் குழந்தைகளுக்கு நேரு ட்ரெஸ் போட்டு கையில் கொடியோடு அழைத்து வந்திருந்தனர். \\ இங்கு சாதி சாயம் தேவையா? மற்ற சாதிக்காரர்கள் வரவில்லை என தெரியுமா?
\\சரிங்க.. இப்ப பாத்தீங்கன்னா, ஸ்பெக்ட்ரம் ஊழலையே எடுத்துக்கங்களேன். டாடா அம்பானியெல்லாம் தான் இதனாலே பலன் அடைஞ்சிருக்காங்க. அவங்க கிட்ட இருந்து இந்த ஊழலாலே ஏற்பட்ட நட்டத்தை எப்படி வசூலிப்பதுன்னு ஜன்லோக்பால் ஒன்னும் சொல்லலியே\\— ஜன லோக்பால் 2ஜி ஊழலை மட்டும் விசாரிக்கிறது இல்லை. எல்லா வகையான ஊழலையும் விசாரிக்கும் அமைப்பு. 2 ஆண்டுகளுக்குள் விசாரணையை முடித்து தீர்ப்பு தந்தாக வேண்டும். ஊழல்வாதி சிறைக்கு செல்லும் போது முறைகேடாக (ஊழல்) பெற்ற பணம் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு அரசாங்க கருவூலத்தில் சேர்க்கப்படும். ராசா, கருணாநிதி, சோனியா, டாடா, அம்பானி, அத்வானி, சுப்பன் எல்லோரும் இந்த அமைப்புக்கு சமம்.
\\ரிலையன்ஸே அண்ணா ஹசாரேவை ப்ரமோட் பன்ற டைம்ஸ் நௌவுக்கு விளம்பரமும் கொடுக்கறாங்க. இதைப் பத்தி என்ன சொல்றீங்க” \\—நிறைய பேர் பார்க்கும் நிகழ்ச்சிக்கு விளம்பரம் தருவது தான் நிறுவனங்களின் நோக்கமாக இருக்க முடியும். அந்த வகையில் தான் இந்த விளம்பரத்தை பார்க்கவேண்டும். ஊழல் செய்து டைம்ஸ் நௌ மாட்டினால் அவர்களுக்கும் சிறை தான்.
\\“ஏன் டி.வி கவரேஜ் வேணும்? நேரா மக்களைப் பாத்து போராட்டத்துக்கு வரச் சொல்லி கூப்பிடலாமே?” என்று கேட்டோம்.\\ நிறைய மக்களை சென்று அடைய ஊடகங்கள் சிறந்த வழி. நீங்க வலைப்பதிவு, செய்திஇதழ்கள் வைச்சிருக்கிறதும் இதுக்காக தானே..
//ஊழல் செய்து டைம்ஸ் நௌ மாட்டினால் அவர்களுக்கும் சிறை தான்.//
ஊழல் செய்த அம்பானி, டாட்டா எந்த சிறை கம்பியை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்…
//இங்கு சாதி சாயம் தேவையா?//
கண்டிப்பாக தேவை…
குறும்பன் அவர்களுக்கு, வினவின் கட்டுரைக்கு பலர் மறுப்பு சொல்லியும் வினவின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொலவில்லை. நீங்கள் மட்டும்தான் பதிலுடன் மறுமொழி கொடுத்துள்ளீர்க்கள். வாழ்துக்கள்.
ஊழல், ஊழல் என்று எல்லோரும் சொல்கிறார்களே அதன் காரணம் யார்? எங்கே? எப்படி? பார்தீர்களா?
ராஜாவின் ஊழல், கல்மாட்டி ஊழல் … இவர்கள் வெளியே தெரிகிரார்கள். ஊழல் செய்ய தூண்டியது டாட்டா, அம்பானி, … போன்ற பெரு முதலாளிகள் தன்னே?? பி.எஸ்.என்.எல் அல்லவே?
எங்கெல்லாம் தனியார் மயம் உள்ளதோ அங்கெல்லாம் போட்டி இருக்கும். போட்டியை வெல்ல குறுக்கு வழி தேடப்படும். அதில் ஒன்று தான் இந்த ஊழல். லாபம் ஒன்றை மட்டுமே குறிகோலாக கொண்டு செயல் படும் தனியார் நிறுவனங்கள் தான் ஊழலின் ஆரம்பம்.
ஆனால் அப்படி ஊழல் ஆரம்பமாய் உள்ள தனியார் நிறுவனங்கள் இந்த போராட்டதிற்கு அனைத்து உதவிகளை செய்கிரதே!!! அவர்கள் சிக்கியுள்ள 2Gயில் இருந்து தப்பிக்க இந்த போராடமோ? 2G யின் வேகம் குறைந்துள்ளது!!
அன்னா?! காந்தியவாதி தான்! காரணம், காந்தி இந்தியாவில் உள்ள (சாதி)அடிமைதனத்தை ஓழிக்காமல் மேட்டுகுடியின் அடிமைதனத்தை ஓழிக்க பாடுபட்டார், அதனால் இன்றும் அடிமைதனம் தொடர்கிரது. அடிப்படை அடிமைதனத்தை ஓழித்திருந்தால் இந்நேரம் இந்தியா நல்ல முன்னேற்றம் பெற்றிருக்கும். வினவிற்கு வேலையில்லாமல் போயிருக்கும். அடிப்படை அடிமைதனத்தை ஓழிக்காததால் இன்றும் அடிமைதனம் தொடர்வதை போல அடிப்படை ஊழலுக்கானவற்றை ஓழிக்காமல் மேலும் அதில் ஈடுபடுவோரை கொண்டே போராடி மீண்டும் ஒரு தானியங்கி அமைப்பை கொண்டு ஊழலை கட்டுபடுத்த நினைத்தால் சிறு சிறு நன்மைகள் கிடைக்குமே அன்றி பெருவாரியான பெருங்கொண்ட ஊழலுக்கு துணைதான்போகும்.
அன்னா செய்த ஒரு நல்ல காரியம். ஊழலுக்கு எதிராக அனைவரையும் பேச செய்தது. போராட்டகாரர்கள் தத்தமது ஏரியாக்களில் லஞ்சத்தை ஓழிக்க பாடு பட்டார்கள் என்றால் அது பெரிய விசயமே.
இவர்கள் தான், இவர்கள் வீட்டு பிள்ளைகள் தான் லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்ட வேண்டியது, போலிஸ் பிடிதால் 500 ரூ அபதாரம் அதை மறைக்க 50ரூ லஞ்சம். சற்று தள்ளி போய் போலிஸ்னாலே லஞ்சம் மாமுல் என்று கூப்பாடு போட வேண்டியது. லஞ்சம் ஓழிக என்று போராட வேண்டியது. ஊழலுக்கு எதிராக போராடுபவர்களில் பெருவரியானவர்கள் இந்த கூட்டத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
அன்னாவை வைத்து பி.ஜே.பி அரசியல் செய்கிறது, அர்.எஸ்.எஸ். மத துவேசம் செய்கிறது, பொதுவாக போராடும் கூட்ட ஊழல் என்றால் லஞ்சம் ஓழிந்துவிடும் என்று தப்பு செய்கிறது.
-Balaji S
why back burning???
சூப்பருங்க, அன்னா ஹசாரே எக்கேடோ கெட்டுப்போறார். எப்படியோ ஒரு ரெண்டு ரோமன் catholics மனசுல பார்ப்பனர்களைப் பத்தி ஒரு வன்மத்தை வளத்துவுட்டா அதுவே போதும். இந்த கட்டுரை எழுதினதோட purpose சால்வுடு.
போன கட்டுரையில் வந்த பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் வக்கில்லை வழியில்லை எனவே அதை மறைக்கவும் கவனத்தை திசை திருப்பவும் புதிய போஸ்ட். நான் முன்பே சொன்னதுபோல இந்த போஸ்டில் புதிய செட் ஆட்களை, அதாவது ஜெயமோஹன், பார்ப்பனர், மேட்டுக்குடி சாத்துக்குடி என புதிய ஆட்களைதிட்டுகிறார்.
இவர்களும் இல்லாமல் இன்னும் புதிய செட் ஆட்களைட் திட்டி தான் அடுத்த பதிவு போடுவார். யாரைத்டிட்டுவது என இந்த போஸ்டிர்கு வரும் கமென்டைப் படித்து முடிவெடுப்பார். ஆனால் இந்த போஸ்டிலும் நம்முடைய நியாயமான கேள்விகளுக்கு பதில் இருக்காது.
அரசியல்வாதிகள் ஊழலிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஏதாவது பரபரப்பாகச்செய்வார்கள். அதுமாதிரி தான் நம் வினவு சாரும். இவரும் ஒரு கைதேர்ந்த அரசியல்வியாதிதான். ஆயிரம் லட்சம் கோடி குரைகளை நம் மீது சொல்வார். ஆனால் வேற்றுமைகளை மறந்து ஒன்று சேரும் மக்கள் நம்மைப்பற்றி சின்னதாக ஒரே ஒரு நல்ல வார்த்தை, ம்ஹும்! அதுதான் வினவு!
//போன கட்டுரையில் வந்த பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் வக்கில்லை வழியில்லை எனவே அதை மறைக்கவும் கவனத்தை திசை திருப்பவும் புதிய போஸ்ட்.//
போன போஸ்டுல உனக்கு கேட்டிருந்த கேள்விக்கு பதில் சொல்லாம ஓடிவந்துட்டு பொல்லாப்ப்பப் பாரு…. கொய்யால..
போன போஸ்டில் வினாவிடம் வினவிய வினாக்கள்:
நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லையே வினா?
சாம்பிளுக்கு ஒரு கேள்வி
##
மூன்றாவது விசயம், எடியூரப்பா பதவி விலகியதும், தனது பினாமியை வைத்து (ஜெயலலிதாவின் பன்னீர்செல்வம் போன்று) ஆட்சி செய்வதையும் தண்டனை, விசாரணை என்று சொல்வது மட்டரக ரசனை கொண்ட காமெடி எனில் இன்னொரு பக்கம் இந்த எடியுரப்பா ஊழலுக்கு காரணமான ரெட்டி சகோதரர்கள் உள்ளிட்ட இந்தியாவின் பாகசுர கம்பனிகளும், ஆ. ராசா ஊழலின் ஊற்றுக் கண்ணான அம்பானி, டாடா கும்பலும் இன்னும் சுதந்திரமாகத்தான் வலம் வருகிறார்கள் என்பதை அம்பானிதாசர் அதியமான் பேசாமல் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் மற்றவர்களும் பேசுவதில்லையே ஏன்? முதலாளிகளிடம் துட்டு வாங்கி போராடும் அண்ணாவின் ஜன்லோக்பாலில் இவை பற்றியெல்லாம் எந்த மசிருகளும் கிடையாது.
##
எல்லாக் கேள்விகளும் கீழே
#@@@
//உதாரணம் கர்நாடகாவின் லோகயுக்தா தான் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிக்கை தயாரித்து அவரை பதவியிறக்கியது. ஒது அரசு சாரா அமைப்புக்கு இதுவே பெரிய விஷயம்.//
முதல் விசயம் கர்நாடக லோக்பால் அண்ணாவின் ஜன் லோக்பாலால் வந்தது அல்ல. அது ஏற்கனவே இருக்கும் ஒரு அமைப்பே. இதைத்தான் வினவும் சொல்கிறது. ஏற்கனவே இருக்கின்ற சட்டங்களை வைத்தே ஊழலை ஒழிக்க வக்கில்லையே எனும் போது ஜன்லோக்பால் எனும் வெளுக்கமாத்து குஞ்சலம் மட்டும் என்ன கிழித்துவிடும் என்று.
இதில் சில விசயங்களை பார்க்க வேண்டியுள்ளது, அவை முறையே முதல் விசயம், இருக்கின்ற ஊழல் ஒழிப்பு சட்டங்களுக்கும் ஜன் லோக்பாலுக்கும் ஊழலை ஒழிப்பது என்ற அம்சத்தில் ஒரு வித்தியாசமும் கிடையாது.ஏனேனில் ஊழல் என்றால் என்னவென்பதை இவர்கள் வரையறுப்பதே மோசடியானது(ஜன்லோக்பால் உள்ளிட்டு).
இரண்டாவது விசயம், ஜன் லோக்பால் இல்லாத போதும் கூட கர்நாடகாவில் நடந்திருக்கின்ற விசயம் பாஜக காங்கிரசு அதிகாரப் போட்டியின் விளைவுதானேயன்றி வேறல்ல. ஏனேனில், சந்தோஷ் ஹெக்டே கர்நாடகாவில் நடக்கும் ஊழல் பற்றி பல வருடங்களாக கதறியழுது இப்போதுதான் அதுவும் காங்கிரசு பாஜக மோதலால்எடியூரப்பாவிற்கு விடுப்பு (விடுப்புதான்) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எழவை சாதிக்கத்தான் அண்ணா உண்ணா என்று குதிக்கிறீரக்ள் என்றால் இதற்கு பேசாமல் கடலில் மூழ்கி செத்து விடலாம். மேலும், சந்தோஷ் ஹெகடேவின் லோக்பால் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ள குமாரசாமி(ம.ஜ.த), காங்கிரசின் தரம்சிங்-எஸ்எம் கிருஷ்ணா இப்படி சர்வ கட்சி மாமாக்களும் தண்டிக்கப் படுவது என்றால் அது இந்தியாவின் மொத்த வோட்டுக் கட்சி அரசியலமைப்பையுமே சிறைக்குள் வைப்பதே ஆகும். அதன் பெயர் புரட்சியாகத்தான் இருக்குமே ஒழிய ஜன்லோக்பாலாக இருக்க முடியாது.
மூன்றாவது விசயம், எடியூரப்பா பதவி விலகியதும், தனது பினாமியை வைத்து (ஜெயலலிதாவின் பன்னீர்செல்வம் போன்று) ஆட்சி செய்வதையும் தண்டனை, விசாரணை என்று சொல்வது மட்டரக ரசனை கொண்ட காமெடி எனில் இன்னொரு பக்கம் இந்த எடியுரப்பா ஊழலுக்கு காரணமான ரெட்டி சகோதரர்கள் உள்ளிட்ட இந்தியாவின் பாகசுர கம்பனிகளும், ஆ. ராசா ஊழலின் ஊற்றுக் கண்ணான அம்பானி, டாடா கும்பலும் இன்னும் சுதந்திரமாகத்தான் வலம் வருகிறார்கள் என்பதை அம்பானிதாசர் அதியமான் பேசாமல் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் மற்றவர்களும் பேசுவதில்லையே ஏன்? முதலாளிகளிடம் துட்டு வாங்கி போராடும் அண்ணாவின் ஜன்லோக்பாலில் இவை பற்றியெல்லாம் எந்த மசிருகளும் கிடையாது.
மொத்தத்தில் பின்னூட்டம் நம்பர் 20ல் ஒருவர் சொன்னது போல லோக்பால் என்பது சாதா ‘ஆல் அவுட்’ ஜன் லோக்பால் என்பது ‘ஆக்சன் ஆல் அவுட்’ கொசுவைப் பொறுத்தவரை இவற்றிற்கு ஒரு வித்தியாசமும் கிடையாது. எப்போதும் போல ரத்தம் குடித்துக் கொண்டுதான் இருக்கும்(கொசு- டாடா, அம்பானி).
@@@
இப்போதைக்கு கர்நாடகா, பிஜேபி, லோகயுக்தா குறித்த உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். அதற்குமுன் என் முந்தைய பதிலையும் படிக்கவும். இத