privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தன்னார்வ நிறுவனங்கள்மனித உரிமை வேடதாரி ''மக்கள் கண்காணிப்பகம்'' ஹென்றி டிபேனின் ரவுடித்தனம்!

மனித உரிமை வேடதாரி ”மக்கள் கண்காணிப்பகம்” ஹென்றி டிபேனின் ரவுடித்தனம்!

-

மதுரை சின்ன சொக்கிகுளத்தில் ஹென்றி டிபேன் என்பவரை செயல் இயக்குனராகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மக்கள் கண்காணிப்பகம்.கடந்த 02.10.2011 அன்று மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.வல்லரசு என்பவர் கொடுத்த  புகாரின் பேரில்  மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் குற்ற எண். 1697/2011-ல் இ.த.ச.பிரிவுகள் 147, 323, 355, 427,294(பி), 506(i) மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் 1989 ன் படி 1.ஹென்றி டிபேன், அவரது மனைவி 2. சிந்தியா டிபேன்,  மருமகன் 3. பிரதீப் சாலமோன்,  மகள் 4. அனிதா மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூங்கா நகரில் தூங்கா நிலைப் போராட்டம் !

கடந்த 01.10.2011 மாலை 6.00 மணி முதல் 02.10.2011 காலை 6.00 மணி வரை மதுரை அரசரடியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி வளாகத்தில்  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி  தூங்கா நகரில் தூங்கா நிலைப் போராட்டம் என்ற தலைப்பில் ஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பில் மரணதண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்  நாஞ்சில் சம்பத்,கொளத்தூர் மணி, தியாகு, சந்திரபோஸ்,  நாகை திருவள்ளுவன், வடிவேல் ராவணன் ,சிபிஜ மற்றும் சிபிஜ[எம்] அமைப்பினர் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர்  கலந்து கொண்ட இந்நிகழ்வில் கல்ஒட்டர்  சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக  வேன்களில் திரட்டி வரப்பட்டிருந்தனர்.பல்வேறு தமிழ் தேசிய, திராவிட, தலித், இடதுசாரி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர் வல்லரசு மீது தாக்குதல்

 இந்நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் துண்டறிக்கை விநியோகம் செய்து நன்கொடையும் திரட்டியவர் வழக்கறிஞர் வல்லரசு. இவர்தான் தற்போது ஹென்றி டிபேன் மீது புகார் கொடுத்து வழக்குப் பதியப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு நிகழ்ச்சிக்கு சென்ற வழக்கறிஞர் வல்லரசு அங்கு நடந்தது பற்றிக் கூறியது:

”நான் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்  கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எனக்கு 8 வயது இருக்கும்போது என் தந்தை கந்தசாமி இறந்து போய்விட்டார். 9 வயதில் என் தாயார் சுகந்தியும் இறந்து போய்விட்டார்.சிறுவயது முதல் அண்ணன், தம்பிகள் இல்லாமல் தாய், தந்தையரை இழந்து பல்வேறு நபர்களின் உறுதுணையுடன் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மதுரை  சொக்கிகுளத்தில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் என்கிற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். அங்கு மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநராகப் பணியாற்றி வருகிற திரு.ஹென்றி டிபேன் என்பவரின் மருமகனும் பணியாளருமான திரு.பிரதீப் சாலமோன் என்பவர் என்னிடம் பிரச்சனை செய்து வந்தார். இத்தகைய நிலையைத் தொடர்ந்து  நான் யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் கொடுக்க விரும்பாமல் பணியில் இருந்து என்னை விலக்கிக் கொண்டேன்.

மக்கள் கண்காணிப்பகத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்ற ஜான்வின்சென்ட் என்பவரிடம் ஜூனியராக உள்ளேன். ஜான்வின்சென்ட் நடத்துகிற தனி வழக்குகளுக்கு உதவி செய்து வந்தேன்.

இந்நிலையில் கடந்த  செப்டம்பர்  இறுதி வாரத்தில் மதுரையில் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு முன்பு மக்கள் கண்காணிப்பகத்தின் சார்பில் ஓர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவ்வார்ப்பாட்டத்திலிருந்த பிரதீப் சாலமோன் என்னிடம், பேனரைப் பிடி என்று சொன்னார். நான் மக்கள் கண்காணிப்பக ஊழியர் இல்லாததால் மறுத்தேன் .அதற்கு சாலமோன் என்னை ஆபாசமாகத் திட்டினார்.இதனால் எனக்கும் பிரதீப் சாலமோனுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதன்பின் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மரண தண்டனை ஒழிப்பு சம்பந்தமான தூங்காநிலை மாநாடு ஒன்றினை அக்டோபா 1ம் தேதி நடத்தினர். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரவு சுமார் 10.00 மணியளவில் இறையியல் கல்லூரி வளாகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு என் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டுத்  திரும்பும்போது என் வாகனம் உடைந்து கீழே கிடந்தது தொடர்பாக  பிரதீப்பிடம் கேட்டதற்கு உன்னை எவன்டா இங்கே வரச் சொன்னது என்று சொல்லி அவமானப்படுத்தினார்.

அதன்பின் நான் அங்கிருந்த மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றியிடம்  சார் உங்கள் மருமகன் எப்போது பார்த்தாலும் என்னை இழிவாகப் பேசுகிறார்,அவமானப்படுத்துகிறார்.தயவுசெய்து அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறினேன். அதற்கு ஹென்றி டிபேன் என் மருமகனை பற்றி எனக்குத் தெரியும்டா, நீ யாருடா புகார் கொடுப்பது, என்று கூறிக்கொண்டே என் கழுத்தை நெறித்து கீழே தள்ளிவிட்டார். பின்னர்  என் சட்டையைப் பிடித்து தூக்கி தரதரவென்று இழுத்துக் கொண்டே வெளியே போடா ராஸ்கல் என்று கத்தினார். நான் அவரது பிடியில் சிக்கிக்கொண்டு, சார் நான் ஒரு வழக்கறிஞர்  என்னை இப்படி பொதுக்கூட்டத்தில் வைத்து அவமானப்படுத்தாதீர்கள் என்று கெஞ்சினேன். அப்போது என் செருப்பு கழண்டு கொண்டது. நான் ஹென்றிடிபேனிடம் சார் என் செருப்பை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியதற்கு அவர் எடுப்பதற்குச் சம்மதிக்கவில்லை. வாடா என்று கூறிக்கொண்டே என்னை வெளிவாயில்வரை  இழுத்து வர அங்கு பிரதீப் சாலமோனும் பலரும் சேர்ந்து கொண்டு என்னைத் தாக்கினார்கள்.

பிரதீப் சாலமோனின் மனைவி அனிதா,ஹென்றியின் மனைவி சிந்தியா ஆகியோர் என்னைச் செருப்பால் தாக்க முயற்சித்தனர்.செருப்பு என் மேல் படாமல் கீழே விழுந்தது.உடம்பு மற்றும் காலில்  கடுமையான வலி ஏற்ப்பட்டது. அவசர போலிஸ் 100க்கு தகவல் சொல்லிப் புகார் கொடுத்தேன். நான் கடந்த 02.10.21011 முதல் 08.10.2011 வரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக  சிகிச்சை எடுத்தேன்.ஏற்க்கனவே பிளேட் வைக்கப்பட்டிருந்த எனது காலில் அடிபட்டதால் தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

இதனிடையே கடந்த 04.10.2011 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் என்னிடம் விசாரணை செய்வதற்காக காவல் உதவி ஆணையா திரு.கணேசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்தார். அவரது வாகனத்தை பின்தொடர்ந்து மக்கள் கண்காணிப்பகத்தின் வாகனமும் அதில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக பொறுப்பில் இருக்கக்கூடிய பிரபாகரன் என்பவர் உள்ளிட்ட  சிலரும் இருந்தனர். உதவி ஆணையர்  என்னிடம் என்ன நடந்தது என்று விசாரணை செய்த பின்பு ஹென்றி டிபேன்  செல்வாக்கு உள்ளவர். டிஸ்சார்ஜ் ஆகுங்கள் என்று சொன்னார்.

தற்போது தனக்கு இருக்கக்கூடிய செல்வாக்கு தொண்டு நிறுவன தொடர்புகள் இதெல்லாம் கொண்டு இப்பிரச்சனையை திசை திருப்புகிற முயற்சியிலும் ஹென்றிடிபேன் ஈடுபட்டு வருவதாக அறிகிறேன்.எனக்கு நீதி வேண்டும்”.

உயர்நிதி(!)மன்றக் கூத்து!    

மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து 04.10.2011 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமீன் கோரி வழக்கறிஞர் திரு.ஆறுமுகம் (வழக்கறிஞர் திரு.லஜபதிராயிடம் இளம் வழக்கறிஞராக இருந்தவர்)மூலம் மனுதாக்கல் செய்தனர்  ஹென்றி டிபேன் குடும்பத்தினர். போலிஸ் தரப்பில் ஆஜரானவர்  வழக்கறிஞர்  திரு.பாலசுப்பிரமணியன். மாலை 5.30 மணி வரை ஹென்றிடிபேனின் பிணை மனுவே கிடைக்கப்பெறாத வழக்கறிஞர் பாலசுப்பிரமணியத்திற்கு மக்கள் கண்காணிப்பக  வழக்கறிஞர்கள்தான் மனுவின் நகலையே கொடுத்தனர்.போலிஸ் வழக்கறிஞர்  பின்னாலே தான் மக்கள் கண்காணிப்பக  வழக்கறிஞர்கள் நின்றிருந்தனர். ஹென்றிடிபேன் மனு 10 வது வழக்காக இருந்தது. 8வது வழக்கு டி. லஜபதிராய் என்று அழைக்கப்பட்டவுடன் என்ன வழக்கென்று கேட்காமலேயே USUAL DIRECTION GRANTED என்று சொன்னார் நீதிபதி கர்ணன்.[வழக்கறிஞர் லஜபதிராய் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்வார்கள் என்று நீதிபதிக்குச் சொல்லப்பட்டிருந்தது போலும்.(ஹென்றி அண்ணே! உங்க அளவுக்கு சாமர்த்தியம் கர்ணனுக்கு இல்லண்ணே!கொஞ்சம் டிரெயினிங் குடுங்க!) நீதிமன்ற ஊழியர்கள், அரசு வழக்கறிஞர்கள்  இது வேறு வழக்கு என்று தெரிவிக்க, பின்பே நிதானத்திற்கு வந்த நீதிபதி 8 & 9 வழக்கிற்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு 10வது வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அப்போது பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்  வல்லரசு சார்பாக மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்  வாஞ்சிநாதன் ஆஜராகி புகார்தாரர் சிகிச்சையில் இருப்பதால் இவ்வழக்கில் பிணை உத்தரவு வழங்க கூடாது, மேலும் புகார்தாரர் மனுதாக்கல் செய்ய காலஅவகாசம் கொடுத்து வழக்கை திங்கட்கிழமையன்று ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.

அரசுதரப்பு வழக்கறிஞர் புகார்தாரர் மருத்துவமனையில் இருந்து சென்று விட்டார் என்று பொய்யான தகவலைச் சொல்ல  அதை மறுத்து சிகிச்சையில் இருப்பதற்கான ஆவணங்களை வழக்கறிஞர்  வாஞ்சிநாதன் தாக்கல் செய்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி உத்தரவு வழங்குவதிலேயே முனைப்பாக இருந்து உத்தரவு வழங்குவதை எதிர்த்தால் நீதிமன்ற அவமதிப்பு எடுப்பேன் என்று சொல்ல, இந்த மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன், நீதிமன்ற அவமதிப்பை சந்திக்கத் தயாராக உள்ளேன் என்று வழக்கறிஞர்  வாஞ்சிநாதன் பதிலடி கொடுக்க அதையும் மீறி நீதிபதி கர்ணன் ஹென்றிடிபேனுக்கு ஆதரவாகப் பிணை உத்தரவு வழங்கினார்.

மேற்படி இச்சம்பவத்தில் ஹென்றிடிபேனால் போலீசு தரப்பு வழக்கறிஞரும், நீதிபதி கர்ணனும் விலைக்கு வாங்கப்பட்டிருந்தார்கள் என்பது அன்று (04.10.2011) நீதிமன்றத்தில் இருந்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தெளிவாகத்  தெரிந்தது.

ஹென்றிடிபேனுக்குப்  பிணை வழங்கிய நீதிபதி கர்ணன் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.கே.ஜி.பாலகிருஷ்ணனின் தம்பி பாஸ்கரனுக்கு சப்ளை அண்ட் சர்வீஸ் செய்து பணம் கொடுத்து பதவிக்கு வந்தவர் என்பது ஊரறிந்த உண்மை. நீதிபதி கர்ணன் அவர்கள் 04.10.2011 அன்று திருச்சி கே.என்.நேரு, கரூர் கே.சி.பழனிச்சாமி, நடிகை குஷ்பு, ஹென்றிடிபேன், பொட்டு சுரேஷ் ஆகியோருக்கு உரிய நீதி வழங்கி தனது தீபாவளி வசூலை சிறப்பாக முடித்துச் சென்றதை வழக்கறிஞர்கள் அறிவார்கள்.

இதற்கிடையில் எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலீசார் ஹென்றிடிபேன் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வல்லரசை மருத்துவமனையில் இருந்து வெளியேற நிர்ப்பந்தித்து வெளியேற்றி விட்டார்கள்.

இப்படியாக காவல்துறையுடனும், நீதித்துறையுடனும் கள்ளக்கூட்டு வைத்து செயல்பட்டு வரும் மக்கள் கண்காணிப்பக ஹென்றிடிபேன்தான் காவல் துறை சித்திரவதை மற்றும் நீதித்துறை ஊழலை எதிர்த்துப் போராடி வருவதாக நாடகமாடி வருகிறார்.

மக்கள் கண்காணிப்பகத்தில் குடும்ப ஆதிக்கம்!

ஹென்றி டிபேன்
ஹென்றி டிபேன்

ஹென்றி டிபேனின்  மக்கள் கண்காணிப்பகம் அடிப்படையில் ஒரு ஜனநாயக விரோத அமைப்பு. அங்கு ஹென்றி டிபேனும் அவரது குடும்பத்தினரும்தான் எல்லாம்.அவர்களை மீறி யாரும் பேச முடியாது.ஊழியர்களை எல்லாம் அடிமைகளாகத்தான் நடத்துவார்கள்.எதிர்க்கும் நபர்களை திட்டமிட்டுப் பழிவாங்கி விடுவார்கள். இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம்.2005 ஆம் ஆண்டு  ம.க.இ.க.தோழர்களிடம் பேசியதற்க்காக  ஹென்றி டிபேன் வழக்கமாக நடத்தும் தீவிரப் புலன்விசாரணையை(பெரிய துப்பறியும் சாம்பு!) சுயமரியாதையோடு எதிர்த்து நின்ற ஓட்டுநர் மோகன்குமாரிடம் ஓட்டுநர் உரிமத்தைப் பறித்துக் கொண்டு ,சம்பளமும் தராமல் வம்பு செய்ய ,பின்பு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலையீட்டின் பேரில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அதன் பிறகே  ஓட்டுநர் உரிமத்தைக் கொடுத்தார் இந்த மனித உரிமைக் காவலர் ஹென்றி டிபேன். பின்பு  தொழிலாளர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தார் மோகன்குமார்.அதன்பின் மக்கள் கண்காணிப்பகத்திற்க்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் உள்ள கள்ள உறவை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் பத்திரிக்கை மக்கள் கண்காணிப்பகத்தால் குன்னூரில் நடத்தப்பட்ட உலகமய ஆதரவுக் கூட்டப் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் அப்புகைப்படத்தை வழங்கினார் என்று குற்றம்சாட்டி அமுதா என்ற ஊழியரின் மெயிலை அவர் அனுமதியின்றி திருட்டுத்தனமாகப் பார்த்து,விசாரணை என்ற பேரில் சித்திரவதை செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்பு ஒரு நாள் விடுப்பு எடுத்ததற்க்காக ஆறு வருடங்களாய் மக்கள் கண்காணிப்பகத்திற்க்காக கடுமையாக உழைத்த உமா ராணி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.விளக்கம் தரக்கூட மக்கள் கண்காணிப்பக அலுவலகத்திற்க்குள் அனுமதிக்கப்படாமல் விரட்டியடிக்கப்பட்டார்.இப்படி ஹென்றி டிபேனின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் மிக நீளமானது.தற்போது வழக்கறிஞர் வல்லரசுவின் சீனியராக இருந்த ஒரே குற்றத்திற்க்காக 15 வருடங்கள் ஹென்றிக்காக பணியாற்றிய வழக்கறிஞர் ஜான் வின்செண்ட் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார். நெஞ்சில் இரக்கமற்ற கொடிய முதலாளிகள் கூட ஹென்றி டிபேன் போல் நடக்கத் துணிய மாட்டார்கள்.முன்னறிவிப்பின்றி டிஸ்மிஸ் செய்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பம் எவ்வளவு துன்பப்படும் என்பதை இந்த ஏ/சி அறைக் கோமான் அறிய மாட்டார் போலும். இதோடு  மக்கள் கண்காணிப்பகத்தில் பணிபுரியும் ஹென்றியின் மனைவி சிந்தியாவின் ஆணவம்,அதிகாரத் திமிர் ஊரறிந்தது.மக்கள் கண்காணிப்பகத்தில் தங்கிப் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சொந்த வேலைக்குப் பயன்படுத்துவது முதல் தனக்குப் பிடிக்காதவர்களை ஹென்றியிடம் போட்டுக் கொடுத்துப் பழிவாங்குவது வரை அத்தனையும் செய்வார் இந்தச் (ச்சீ……)சீமாட்டி.இதற்க்கடுத்து மகள் அனிதா,மருமகன் பிரதீப் என்று குடும்பக் குத்துவிளக்குகளின் அதிகார எல்லை நீளூம்.நல்ல வேலை ஹென்றிக்கு கருணாநிதியைப் போல் சில மனைவிகள்,பல குழந்தைகள்,பலப்பல பேரக் குழந்தைகள் இல்லை.தப்பித்தார்கள் மக்கள் கண்காணிப்பக ஊழியர்கள்!

மக்கள் கண்காணிப்பகம் பன்னாட்டு முதலாளிகளின் கள்ளக் குழந்தை!

ஹென்றி டிபேன்

ஹென்றிடிபேனின் மக்கள் கண்காணிப்பகம் அடிப்படையில் ஒரு ஏகாதிபத்திய கைக்கூலி அமைப்பு. உலகெங்கிலும் நடந்து வருகிற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுகின்ற மக்களையும்; மனித உரிமைகள் மீது ஆர்வம் கொண்டுள்ள ஜனநாயக சக்திகளையும் தங்களின் வலைப்பின்னலுக்குள் கொண்டு வருவதற்காகவே அமெரிக்க அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் அமெரிக்க கண்காணிப்பகம், ஆசியா கண்காணிப்பகம் என ஒவ்வொரு நாட்டிலும்  மனித உரிமை அமைப்புகளைக்  கட்டி இயக்கி வருகின்றன. அத்தகைய ஏகாதிபத்திய திட்டத்தின் ஓர் அங்கம்தான் ஹென்றிடிபேன் நடத்தி வரும் மக்கள் கண்காணிப்பகம் மற்றும் சித்ரவதைக்கு எதிரான பிரச்சாரம்.

அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் திணிக்கும் தனியார்மய பொருளாதாரக் கொள்கைகள் தான் உலகெங்கிலும்  மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து மக்களைச் சாவின் விளிம்பில் தள்ளுகின்றன. யாரைச் சமரசமின்றி எதிர்க்க வேண்டுமோ, அவர்களிடமே காசு வாங்கிக் கொண்டு மனித உரிமைகள் பற்றிப் பேசும் ஹென்றிடிபேனின் மக்கள் கண்காணிப்பகம் என்பது நண்பன் வேடத்தில் இருக்கும் துரோகி.மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் இணைந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வடிகால் ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க வேண்டும்; அரசியல் உணர்வைக் காயடிக்க வேண்டும் என்ற ஏகாதிபத்திய அரசுகளின் திட்டங்களை அவர்கள் சொல்லுகிறபடியே செயல்படுத்தும் ஒரு பொம்மைதான் மக்கள் கண்காணிப்பகம்.

இந்த பசுத்தோல் போர்த்திய புலிக்கு முற்போக்கு ,சிவப்புச் சாயம் பூசி அரசியல் அரங்கில் மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் அயோக்கியத்தனமான வேலையைத்தான் தமிழ் தேசிய, திராவிட, தலித், சி.பி.ஐ, சி.பி.எம். கட்சிகள் செய்கின்றன.

இவ்வாறாக மக்கள் கண்காணிப்பகம் அதன் தன்மையில் ஓர் ஜனநாயக விரோத, குடும்ப ஆதிக்க நிறுவனமாகவும்,ஹென்றி டிபேன் ஓர் கொடிய கார்ப்பரேட் முதலாளியாகவும்  இருந்து ஓர் பன்னாட்டு நிறுவனத்திற்க்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள நிலையில் அதை மனித உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பென்று கூற முடியுமா?

கூடுதலாக,

1] மக்கள் கண்காணிப்பகத்திற்க்கு பல நூறு கோடி ரூபாய் நிதி எங்கிருந்து வருகிறது?

2] என்ன நோக்கத்திற்க்காக நிதி வழங்கப் படுகிறது?

3] மக்கள் கண்காணிப்பகம் தொடங்கியதிலிருந்து இன்று வரை பெறப்பட்ட நிதி எவ்வளவு? கொடுத்தது யார்?உடன்படிக்கை விபரங்கள் என்ன?

4] நிதிகள் நிறுத்தப் பட்டால் தற்போது எடுக்கப்பட்ட போராட்டங்களின் நிலை என்ன?

5]ஆயிரங்களில்,லட்சங்களில் சம்பளம் பெற்று மனித உரிமைக்குப் போராட முடியுமா?

6] மக்கள் கண்காணிப்பகத்தின் கொள்கை,லட்சியம் என்ன? அடையும் வழிமுறைகள்,திட்டங்கள் என்ன?

7]  மக்கள் கண்காணிப்பகத்தோடு எந்த அடிப்படையில் தமிழ் தேசிய,திராவிட,தலித்,இடதுசாரி அமைப்பினர் இணைந்து பணியாற்றுகின்றனர்?

8] வழக்கறிஞர் வல்லரசு தாக்கப்பட்ட சம்பவம்,அதையொட்டி காவல்துறை,நீதித்துறை உடனான ஹென்றியின் உறவு குறித்து   மக்கள் கண்காணிப்பகம் கூறுவதென்ன?  அதன் தோழமை அமைப்பினர் நிலைப்பாடென்ன?

இவற்றிற்க்கு  மக்கள் கண்காணிப்பகம் மட்டுமல்ல ஏகாதிபத்திய நாடுகளிடம் பிச்சையெடுத்து ஹென்றி விட்டெறியும் எலும்புத் துண்டுகளுக்காக எச்சில் ஒழுக ஹென்றி டிபேனிடம் உறவு வைத்துள்ள பலரும் நேர்மையாகப் பதில் சொல்ல வேண்டும்.[ உண்மை அறியும் குழு கூட அமைக்கலாம்!

{அல்லது}

உண்மைகளை உலகத்திற்க்கு உரத்துச் சொல்ல ஹென்றி டிபேனும்,மக்கள் கண்காணிப்பகமும் தன்னை ஒரு பொது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்?  அதன் தோழமை அமைப்பினர் கூட இதற்கு முயற்சிக்கலாம்.செய்வார்களா?

____________________________________________

இணைப்பு: மக்கள் கண்காணிப்பகத்தில் பணியாற்றிய ஒருவரின் கடிதம்:

இரா.முருகப்பன்,

7, பாரதிதாசன் நகர், கல்லூரிசாலை, திண்டிவனம் – 604 001

———————————————————————————————————————

பெறல்:

திரு. ஹென்றி டிபென் அவர்கள்

இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம் – தமிழ்நாடு

சொக்கிக்குளம், மதுரை

பார்வை  : 02.06.06 நாளிட்ட நிர்வாகி அவர்களின் கடிதம்

ஐயா, வணக்கம்

பார்வையில் கண்ட கடித்ததில் நான் பணியை ராஜினாமா கடிதம் எழுதாமலும் ரூபாய் மூவாயிரம் கணக்கு நேர் செய்யாமலும் இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். மேலும் மதுரை அலுவலகத்திற்கு நேரில் வந்து கணக்குகளை ஒப்படைப்பு செய்யும் படியும் கேட்டுள்ளீர்கள்.

  1. நான் ரூபாய் மூவாயிரத்திற்கான கணக்கை நேர் செய்யத் தயாராக இருக்கிறேன்.
  2. நான் பணி செய்த காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2005க்கான ஊதியத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. பணி நீக்கம் செய்யப்படாத நிலையில் பிழைப்பூதியமும் வழங்கப்படவில்லை. தங்கள் நிறுவனத்திடமிருந்து எனக்கு வரவேண்டிய தொகையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  3. தங்களிடம் உள்ள என்னுடைய மேல்நிலை பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் செல்பேசியைக் கேட்டு பலமுறைக் கடிதம் எழுதிய பின்பு இவ்வளவு நாட்கள் கழித்து என்னிடம் ராஜினாமா கடிதம் கேட்டிருப்பது உள்நோக்கம் உடையதாகத் தெரிகிறது.
  4. அவசியம் கருதி நான் கேட்டபின்பும் தங்களுக்கு நான் தரவேண்டிய ரூபாய் மூவாயிரத்திற்கு பிணையாக என்னுடைய பள்ளிச் சான்றிதழை தாங்கள் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதும் மனித உரிமை மீறல் என்பதும் தாங்கள் அறிந்ததுதான். எந்த தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் பின்பற்றாத ஒரு நடைமுறையாகும்.
  5. நான் விகடன் குழுமத்தில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டத்தில் சேர நடைபெறும் நேர்காணலுக்கு என்னுடைய சான்றிதழ் தேவை எனக் கேட்டிருந்தேன். தாங்கள் சான்றிதழை அனுப்பாமல் பார்வையில் கண்ட கடிதத்தை அனுப்பியுள்ளீர்கள். மேற்படி விகடன் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் நான் பள்ளிச் சான்றிதழ் இல்லை என்ற காரணத்திற்காக தேர்வு செய்யப்படவில்லை எனில் அதன்முழுப் பொறுப்பும் தங்களையே சாரும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
  6. தங்கள் கடிதத்தில் என்னை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளீர்கள். நான் அலுவலகத்திற்கு வரும் பட்சத்தில் அவமானமும் உளரீதியான சித்திரவதையும் மன அழுத்தமும் சந்திக்க நேரிடும் என்பது என்னுடைய கடந்த கால நேரிடை அனுபவமாகும். நான் பணிபுரிந்த காலங்களில் இதுபோன்று சம்பவங்கள் நடந்ததை அறிவேன். தங்கள் நிறுவனத்தின் உளவியல் ரீதியான சித்திரவதையையும் அவமானத்தையும் தாங்காமல் பலர் ராஜினாமாக் கடிதம் கொடுத்துள்ளதையும் நான் அறிவேன். குறிப்பாக தலித்துகளான வனராசன், மோகன், சோபியா, செம்மலர் போன்றோரும் வரவேற்பரையில் பணியாற்றிய மகராசன், கோபால் உள்ளிட்ட இன்னும் பலருக்கு நேர்ந்தவற்றை நான் குறிப்பாக அறிவேன்.  மனித உரிமை நிறுவனம் என்ற அடையாளத்துடன் செயல்படும் தங்கள் அலுவலகத்திற்கு நான் வந்தால் எனக்கும் அத்தகைய நிலைதான் ஏள்படும் என்பதை நான் அறிந்தும் உணர்ந்தும் அனுபவித்தும் உள்ளேன். ஆகையால் என்னுடைய சான்றிதழ் மற்றும் செல்பேசியை வழங்கவும் கணக்கை நேர் செய்யவும் அலுவலகத்திற்கு நேரில் வர விருப்பம் இல்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
  7. தங்கள் அலுவலகத்தில் ஊழியர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும் ஊழியர்களின் சான்றிதழ்களை பிணையாக வாங்கி வைத்துக்கொள்வதையும் ஊழியர்கள் இடையே சாதியப்பாகுபாடு  கடைபிடிக்கப்படுவதையும் தலித் ஊழியர்கள் அங்கீகரிக்கப்படாததையும் மறைமுகமாக உளவியல் சித்திரவதைக்கு ஊழியர்கள் உள்ளாக்கப் படுவதையும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுவதையும் சக ஊழியர்கள் அச்சமின்றி ஒருவருடன் ஒருவர் பழக இயலாமல் ஒருவரை ஒருவர் நம்ப முடியாமல் எப்பொழுதும் அச்சம் நிறைந்த சூழ்நிலையில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டியதையும் நான் என்னுடைய சொந்த பிரச்சினையாக மட்டும் பார்க்கவில்லை. இதை ஒரு சமூகம் மற்றும் பொதுப் பிரச்சனையாக பார்க்க வேண்டியுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

இவண்
இரா.முருகப்பன், திண்டிவனம்
04.06.2006

நகல் :

10.06.06ல்      1.         –           கோ.சுகுமாறன்

2.         –           வழக்.பொ.இரத்தினம்

3.         –           வழக்.ராஜு

4.         –           திரு.அபிமன்னன்

12.06.06ல் தகவலுக்கான கடிதம்

5.         –           கொளத்தூர்.மணி

6.         –           பழ.நெடுமாறன்

7.         –           வழக்.இராபர்ட்

8.         –           புனிதப்பாண்டியன்

9.         –           தேவநேயன்

10.       –           வழக்.கே.சந்துரு

11.       –           தொல்.திருமாவளவன்

12.       –           பேரா.அ.மார்க்ஸ்

13.       –           பேரா.சே.கோச்சடை

____________________________________________________________________

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-தமிழ் நாடு –
மதுரை மாவட்டக் கிளை.
_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

  1. உண்மைகளை உலகத்திற்க்கு உரத்துச் சொல்ல ஹென்றி டிபேனும்,மக்கள் கண்காணிப்பகமும் தன்னை ஒரு பொது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்? அதன் தோழமை அமைப்பினர் கூட இதற்கு முயற்சிக்கலாம்.செய்வார்களா?

    -நிச்சயமாக செய்யமாட்டார்கள். சத்தியமாக நம்பலாம்

  2. DEAR COMRADES

    IT IS HIGHTIME BETTER VINAVU QUESTIONS THE ACTIVITIES OF THEOLOGICAL COLLEGE, ARASARADI MADURAI.ALSO POSSIBILITY THAT SOME MADURAI BASED DALIT OUTFITS HAVE
    RELATIONS WITH AMERICAN INTELLIGENCE AGENCIES

  3. ம.க.இ.க போன்ற புரட்சிகர மார்க்சிய – லெனினிய இயக்கங்களை ஏகாதிபத்தியக் கைக்கூலிகள் என்று மார்க்கிஸ்டுகள் (cpm)இது நாள்வரை கூசாமல் புளுகி வந்தனர். ஆனால் இன்று உண்மையான ஏகாதிபத்திய் கைக்கூலிகளிடம் மார்க்சிஸ்டுகள் (cpm)கொண்டுள்ள உறவு குறித்து அதன் அணிகள்தான் பதில் சொல்ல வேண்டும்.

    • வேண்டாம் வேண்டாம் சி பி எம் பதில் சொல்லவில்லையென்றாலும் பரவயில்லை. இல்லையென்றால் பதில் சொல்கிறோம் பேர்வழி என்று இதற்க்கும் ஒரு கழிச்சாடை விளக்கம் கொடுப்பார்கள் பாருங்கள், நம்மால் தாங்க முடியாது

  4. இந்த ஹென்றி மற்றும் அவரின் குடும்பத்தினர் செய்வது அராஜகம் மற்றும் பெரும் தவறு. ஆணவம் மிதமிஞ்சி, தலகணம் ஏறி, நடுனிலை தவறியவர்களின் செயல். அதிகாரம் மற்றும் பணம் கண்டபடி, முறையற்ற வழியில் சேர்ந்தால், மனிதன் இப்படி சீரழிகிறான்.

    ஆனால் உடனே அவரின் அமைப்பு, அன்னிய நாடுகளின் கைக்கூலி என்பதெல்லாம் ஓவர். மேலை நாடுகளில் பலரும், இந்தியா போன்ற நாடுகளில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை நிறுவனங்களுக்கு பெரும் நிதி அளிக்கின்றனர். நல்ல நோக்கத்துடன், மனித நேய அடிப்படையில் தான். ஆனல் அதை பெறும் பலரும் இங்கு அதை misuse செய்வது அதிகம்.

    இதுவரை அந்த நிறுவனம் செய்த செயல்பாடுகளை முழுசா ஆராய்ந்து பார்த்து, ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை சொல்லுங்களேன். கூடங்குளம், அமெரிக்காவுடன் 123 அணுசக்தி ஒப்பந்தம், இந்திய அமெரிக்க ராணுவ உறவுகள், ஈழப்பிரச்சனையில் அமெரிக்காவின் பங்கு பற்றிய அவர்களின் கோணம் : இவை பற்றி விரிவாக ஆராய்ந்து பின்பு பேசுங்களேன். இதில் அவ்வமைப்பின் நிலைபாடுகள் என்ன ?

    எதை பார்த்தாலும் சி.அய்.ஏ ஏஜண்ட் என்று சந்தேகப்படும் புத்தி முன்பு மிக அதிகமாக இருந்தது. வினவு இன்னும் அதில் இருந்து மீளவில்லை.

    • மனித உரிமை வேடதாரி ”மக்கள் கண்காணிப்பகம்” ஹென்றி டிபேனின் ரவுடித்தனம்!

      ” அவரின் அமைப்பு, அன்னிய நாடுகளின் கைக்கூலி என்பதெல்லாம் ஓவர். மேலை நாடுகளில் பலரும், இந்தியா போன்ற நாடுகளில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை நிறுவனங்களுக்கு பெரும் நிதி அளிக்கின்றனர். நல்ல நோக்கத்துடன், மனித நேய அடிப்படையில் தான். ஆனல் அதை பெறும் பலரும் இங்கு அதை misuse செய்வது அதிகம்.”

      அமெரிக்காவில் இலட்சக்கணக்கானபேர்கள் வேலைவாய்ப்பை இழந்து பட்டினியால் தெருவில் பிச்சை எடுக்கிறார்கள்,இந்தநிலையில் நல்ல நோக்கத்துடன், மனித நேய அடிப்படையில் உதவுகிறார்கள்,”கேக்கிறவன் கேனையன் என்றால் கேப்பையில் நெய் வடிகிறது” என்பது போல் உள்ளது.ஐந்தாம்படை வேலை பார்ப்பவர்களுக்கு கூலிதான் அமெரிக்கா கொடுக்கிறது.இவர்களுக்கு அதியமான்கள் ஆதரவு!!!

      • //அமெரிக்காவில் இலட்சக்கணக்கானபேர்கள் வேலைவாய்ப்பை இழந்து பட்டினியால் தெருவில் பிச்சை எடுக்கிறார்கள்,இந்தநிலையில் நல்ல நோக்கத்துடன், மனித நேய அடிப்படையில் உதவுகிறார்கள்,//

        that is only recent phenomenon. Aid from private groups and individuals as well as govt aid for various projects and development works have been going for decades. also many human rights institutions like Amnesty International, Human Rights Watch have been working for many many years.

        this madurai group seems to be there for nearly 20 years or so.

        //ஐந்தாம்படை வேலை பார்ப்பவர்களுக்கு//

        enna periya ayndham padai velai ? nonsense.

    • அதியமான் அவர்களே, ஹென்றி தவறானவர், ஆனால் அவரின் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு சரியானது என்ற உங்களின் வாதம் எப்படியிருக்கு தெரியுமா? நாளைக்கே இந்த அமைப்பு (ஏகாதிபத்திய வாரிசு) அவரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கப் போவது மாதிரி உள்ளது. ஜனநாயகப்படுத்தப்படாத அமைப்புகள் மட்டுமே இந்த கைக்கூலியை தூக்கிப்பிடிக்கிறார்கள் என்பது நூறு சதவீதம் உண்மை.

      • இரா.மணிகண்டன்,

        மிகவும் எளிமை படுத்துகிறீர்கள். எதையும் கருப்பு / வெள்ளையாகவே பார்த்து பழகிவிட்டீர்கள். அந்த இயக்கம் சரியானது / தவறனாது என்பதே மிகவும் எளிமைபடுத்துதல். கடந்த 20 ஆண்டுகளில் அவர்கள் எடுத்த நிலைபாடுகள், செய்த காரியங்களை முழுசா ஆராயாமல், பொத்தாம் பொதுவாக பேசுவது சரியாகாது.

        அமெரிக்கன் கல்லுரி விவகாரம், தூக்கு தண்டனை எதிர்ப்பு, மற்றும் பல இதர விசியங்களில் அவர்களின் நிலைபாடு சரியாகதான் படுகிறது. தனி மனித ஒழுக்கம் மற்றும் சகாக்களை நடத்தும் விதம் தான் கண்டனத்துக்குரியது. ஆனால் நான் சொல்ல வந்தது இதை பற்றி அல்ல. அந்த அமைப்பு, ஏகாதிபத்திய கைக்கூலி என்பது மிக மிக எளிமைபடுத்துப்பட்ட, ஆதரமில்லாத வாதம். 20 வருடங்களுக்கு மேல் இயங்கி வரும் ஒரு குழுவை திடிரென இப்படி முத்திரை குத்துவது பகுதறிவல்லவே. 20 வருடங்களாக அந்த அமைப்பில் பணி புரிந்து, இப்போது பழி வாங்கு நடவடிக்கையில், நீக்கப்பட்டிருக்கும் அந்த வழக்கறிஞரும் இப்படி தான் ‘கருதுகிறாரா’ என்ன ? 20 வருடங்களில் அக்குழுவை பற்றி முழுவதும் அறிந்திருப்பார்.

        ஒரு சில குழுக்கள், (அறிந்தோ, அறியாமலோ), மேறக்த்திய கைபாவைகளாக இருக்கலாம். ஆனால் அவை எவை என்று தெரியவில்லை. சகட்டுமேனிக்கு எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் இப்படி முத்திரை குத்தி, நிரகரிப்பது பகுதறிவல்ல. நீங்க வேண்டுமானால் அப்படி செய்து கொள்ளுங்க. எல்லோரையும் அப்படி எதிர்ப்பர்க்க முடியாது. உண்மையான சேவை செய்யும் பல நூறு குழுக்கள் உள்ளன. அதனால் பயன்பெறும் லச்சகணக்கான மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

        ம.க.இ.க அமைப்பு, சீனாவிடம் இருந்து ‘உதவி’ ரகசிய பெறுகிறது. இந்திய இறையாண்மையை, அமைதியை குலைக்க சீனாவின் சதிக்கு உடந்தையாக செயல்படுகிறது என்றும் சிலர் சொல்கிறார்கள். உடனே அதை உண்மை என்று அப்படியே எடுத்துகொண்டால் சரியாக இருக்குமா ? மெய் பொருள் காண்பது அறிவு.

        • //அந்த அமைப்பு, ஏகாதிபத்திய கைக்கூலி என்பது மிக மிக எளிமைபடுத்துப்பட்ட, ஆதரமில்லாத வாதம். 20 வருடங்களுக்கு மேல் இயங்கி வரும் ஒரு குழுவை திடிரென இப்படி முத்திரை குத்துவது பகுதறிவல்லவே. 20 வருடங்களாக அந்த அமைப்பில் பணி புரிந்து, இப்போது பழி வாங்கு நடவடிக்கையில், நீக்கப்பட்டிருக்கும் அந்த வழக்கறிஞரும் இப்படி தான் ‘கருதுகிறாரா’ என்ன ? 20 வருடங்களில் அக்குழுவை பற்றி முழுவதும் அறிந்திருப்பார்.//
          Mr. Athiyaman,
          Are you really invite that Advocate’s opinion? Do you have such a faith on him? Only your fond hope is that a person who received remuneration so far cannot say that, that is an imperialistic design. Nothing is done without purpose. Since I am dissenting their anti democratic approach from within, I am victimized now, like many others earlier.
          You are a political leader, sans fund. He received plenty, but nobody behind him, even cadres of the Citizens for Human Rights Movement (CHRM), their own brain child, except the nomadic tribes called Kal Ottars from some pocket, thanks to Mr. Radhakrishnan of CPI to show the strength in the demonstrations.
          You want to protect the organisation, not your friend Henri. Let it be. It is interesting, but Mr. Henri may not like it. Henri is People’s Watch. People’s Watch is Henri. Like India is Anna Hazare.

    • //மேலை நாடுகளில் பலரும், இந்தியா போன்ற நாடுகளில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை நிறுவனங்களுக்கு பெரும் நிதி அளிக்கின்றனர். நல்ல நோக்கத்துடன், மனித நேய அடிப்படையில் தான். //

      ஆடு நனையுதுனு ஓநாய் அழுவுதாம்..

      • யார் ஆடு, யாரு ஓநாய் ? :)))

        PURA என்ற தன்னாரவ அமைப்பு வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று, தமிழகத்தில் பல் இடங்களில் தொண்டு செய்கிறது. தி.க அமைப்பு அதற்க்கு ஆதரவாக இருப்பதை கடுமையாக கண்டித்து வினவு தளத்தில் முன்பு ஒரு கட்டுரையை பார்த்தாக நியாபகம். ‘கூட்டி கொடுப்பவர்கள்’ என்றெல்லாம் வசை வார்த்தைகள் இருந்தது.

        உதவி பெறும் லச்சக்கணக்கானவர்களிடம் போய், ”இதை எல்லாம் பெற்று ஏமார்ந்து விடாதீர்கள். புரட்சி உருவாகுவதை, மக்களின் ‘கோபத்தை’, தணிக்க ஏகாபத்தியவாதிகளின் சதி இவை” என்று பிரச்சாரம் செய்து பாருங்களேன். வசை வார்த்தகளை இன்னும் ‘தாரளாமாக’ கேட்க்கும் பாக்கியம் கிடைக்கும். :)))

        அரை பட்டினியில் இருக்கும் மனிதனுக்கு, இரண்டு வேளை சோறாவது கிடைக்க சிலர் முனைகிறார்கள். உதவுகிறார்கள். ஆனால் நீங்களோ, ‘பொறு தோழா, இன்னும் பத்து வருடத்தில் செம்புரட்சி உருவாக்கி, பிரியாணி விருந்து வைக்கிறோம்’ என்கிறீர்கள். ஆனால் அதுவும் கியாரண்டி இல்லை.

        மனிதர்களின், அமைப்புகளின் நோக்கங்களை முற்றிலும் ‘புரிந்து’ கொண்டது போன்ற பில்டப் உங்களை போன்றவர்களிடம் அதிகம். ஆனால் உங்கள் அனுமானம் பெரும்பாலும் தவறானது, முன்முடிவுகள் கொண்டது. பாரோனிய என்ற மனநோய்க்கு ஒப்பானது. நல்ல வேளையாக உங்க ‘கருத்துகளை’ அப்படியே ஏற்று கொள்ளும் அளவுக்கு மக்கள் லூஸுகள் அல்ல.

        • அய்யா அதியமானே! மேலை நாடுகளின் கண்கள் ஏன் எப்போதுமே எண்ணெய்வளம் உள்ள நாடுகளின் மீதும் இந்தியா போன்ற வளரும் மனித வளம் உள்ள நாடுகளின் மீதும் மட்டும் உள்ளது என்று சொல்ல முடியுமா?
          ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளின் மீது அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால் கடவுளின் ஆசி அவர்களுக்கு கிடைக்கும்.

    • கூடங்குளம், அமெரிக்காவுடன் 123 அணுசக்தி ஒப்பந்தம், இந்திய அமெரிக்க ராணுவ உறவுகள், ஈழப்பிரச்சனையில் அமெரிக்காவின் பங்கு பற்றிய அவர்களின் கோணம் : இவை பற்றி விரிவாக ஆராய்ந்து பின்பு பேசுங்களேன். இதில் அவ்வமைப்பின் நிலைபாடுகள் என்ன ?/
      Sorry Mr. Athiyaman, I thought that u r Athiyaman of ‘Athithamizhar Peravai’. Now I verified your profile. Interested in free market, astrology etc. Good.
      We can analyse only if they (People’s Watch) revealed any opinion on the subjects mentioned by you. I never come across that they discussed about Indo-American military pact, Role of US in Srilankan issue or 123 pact.Discussing those things will disentitle them to receive foreign funds. From where you heard that they have a particular stand on these issues? They are to be appreciated, because they are able to create such an image of political think tank among the business tycoons like you.

  5. நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது எங்கள் கல்லூரியில் மதுரை-ராமநாதபுரம் கிறித்தவத் திருச்சபையின் பேராயர். அயோக்கியன் கிறிஸ்டோஃபர் ஆசிர் க்கும், கல்லூரியின் அந்நாளைய முதல்வர் சின்னராஜ் ஜோசப்புக்கும் இடையே நிர்வாகப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டது. பின் நாளில் அப்பிரச்சினை பேராசிரியர்களையும், மாணவர்களையும் இரு குழுவாகப் பிரித்தது. பேராயரை ஆதரிக்கும் மாணவ-பேராசிரியர்கள் ஒருபுறம், முதல்வரை ஆதரிக்கும் மாணவ-பேராசிரியர்கள் ஒருபுறம். அப்பொழுது பெரும்பான்மையான பேராசிரியர்களும், மாணவர்களும் கல்லூரி முதல்வர் பக்கம் இருந்தார்கள். அவர்கள் பக்கம் நியாயமும் இருந்தது.
    அப்பொழுது மக்கள் கண்காணிப்பகமும், ஹென்றி டிபேனும் எங்களுக்கு (முதல்வரை ஆதரிக்கும் மாணவ-பேராசிரியர்கள்) ஆதரவாக அரங்கக் கூட்டங்கள் நடத்தினர்.நாங்கள் அனைவரும், மக்கள் கண்காணிப்பகத்தையும், ஹென்றி டிபேனையும் மனித உரிமைப் போராளிகளாகத்தான் பார்த்தோம். ஆனால் இப்பொழுதுதான் இந்த நரியின் உண்மை முகம் தெரிகிறது.
    மனித உரிமை பேசுபவர்களை உடனே நம்பி விடக்கூடாது என்பதற்கு இப்பிரச்சினை ஒரு சிறந்த உதாரணம். அம்பலப்படுத்திய வினவுக்கு நன்றி..

  6. இப்போதே மக்கள் கண்காணிப்பகத்தில் வேலை செய்யும் அனைவரும் ஒன்றுனைத்து போராடவில்லையெனில் அமுதா,மோகன்,வல்லரசை தொடர்ந்து இவர்களூம் அடிவாக்கும்
    நாள் வெகுத்தொலைவில் இல்லை.விழிததெழுங்கள் ஊழியர்களே.

  7. In the recent coverage of the Paramakudi shoot out, Henri Tipagne tried to appease Jayalalitha by saying that the Police atrocities might not have been got her sanction . He is a cheat and working more as a power broker of the Politicians and Corporate than savior of the affected people.

  8. பிரகாஷ் காரத் எழுதிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பற்றிய வெளியீடுகளை படிக்க சிபிம் உறுப்பினர்களுக்கு நினைவு படுத்தலாம்.

  9. வாய் தவரிய பேச்சு. தீர விசாரிக்கவும். ரொம்ப முற்போக்கா இருக்காதிங்க.

    • No tongue slip, Mr. Soosai, in the article. Mr. Henri only slipped from the projected dignity and lost his control. Family affection folded his eyes.
      Writer of the article also demands a fact finding into the whole episode. What’s the outcome of PW FACT FINDING team of experts? If they did not enter into the mission so far, now bail granted know, let them suggest names for being the members in the Committee. Terms of reference can be limited as to whether Mr. Vallarasu was attacked? By whom? Why?
      Ignorance can be excused. Deliberately being compromise in character for anticipated consideration is not good, especially for a mentor for human rights teachers.

      • Dear Comrade, Thanks for your comments. But, I would like to say, please read once again the article then let me know what actually the author wants to convey every one. I feel that it is some one’s irresponsible talk. Read, Reflect and come back for discussion.

        • Dear Maria,
          Do not think that people are responding without gone thro’ the article.
          YOU said to me to read once again the article then let you know what actually the author wants to convey every one. Article is in Tamil only, u can understand well. They ask for a fact finding team or for a public hearing. I am not the author of the article. Since they raised the issue on behalf of a victim who was subjected to torture and humiliation, and people like you responded to the article, I suggested for a fact finding. Terms of references are limited as to the allegation of attack on Vallarasu by Tiphagne’s family members. Do say yes or no.
          Later part of the article is their political stand and they questioned PW. I need not defend anyone. You need not be progressive, but do not be mouth piece of self styled ‘avataars’

          • Thanks. I would say, the author of the article is ‘onside’. If they want to do fact finding, it is their responsibility to do it and come up with the truth. But writing truth-less words without doing any proper findings from both side. I think they wrote this article only for the shake of their political stand. Also it clearly says, they used Mr. Vallarasu for their tool for this operation. Further, I would say they do not have any willpower to meet the issue legally. But they only want to cry through useless bit papers in the public. I can give a good example, I saw them in the court – it is shameful to tell about their arguments in the court. I do not know whether they know ‘how to argue in the court?’. I am not a lawyer.

            • Dear Maria, Could you kindly post your comments in Tamil? This is not to make a personal attack ridiculing your lingustic skills in English, but only for the better understanding of your opinions, which is important because you are in a minority of people siding with henri and his ilk in this forum at least

                • அதற்க்காகத் தான் தமிழில் உங்களது கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
                  நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள வரிக்கு அர்த்தம் – “ஹென்றி மற்றும் அவர் கூட்டாளிகளை இந்த தளத்தில் ஆதரிக்கும் சிறுபாண்மையினரில் உள்ள உங்களது கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்வதற்காக …” hope i’ve made myself clear

                  • Dear Parthiban, How could you judge that I am from the minority? – It means – you are thinking that there are majority (!!!) supporting this. Some times it may be true since you are behind the mirror. I hope you will understand what I am trying to say. So try to be a common man and look the reality. Also try to capture the mistakes from both side and react upon the issue.

                    • there is no judging required – just count the number of people commenting here. i understood some parts of your comment but not all. you still choose not to comment in Tamil? if you have problems with vinavu’s transliteration facilities, there are other options – ever heard of Google IME for Tamil 🙂

            • The NATO army bombarded convoy of Qadhafi and later killed. Even no autopsy. We need not ask US to give their version. Here, the authors of the article said that they enquired many people. May not be you. Again every perpetrators or the accused have their version to extricate themselves.
              According to you, proper finding must say Henri is innocent, crusader now victimised by his opponents. Ma. Ka. E. Ka. have their political stand. What about People’s Watch, except tuning to the donors interest? You see this from victims perspective. Not Vallarasu, tomorrow if you are victimised, they lend their voice. To meet the issue legally is a responsibility cast upon the perpetrators.For complainant, state will assume the prosecution role. If their pamphlets are useless bit papers, what about those posters and hand bills designed at PW and printed and pasted with donors money in different names.
              About the court scenario, yours is pitiable. So many lawyers including Bar Secretary, Designated Senior Counsel hired, apart from so many non practicing instant lawyers who gathered there, the Government Advocate of High Court who is supposed to oppose the bail came out openly in support of accused. You need not shed crocodile tears for their poor performance in the court. We felt happy that young Advocate bravely come out against injustice. You people preached about the strict adherence of Prevention of Atrocities Act, but practiced in its breach.

        • இரா.முருகப்பன் 7, பாரதிதாசன் நகர்
          கல்லூரிசாலை
          திண்டிவனம் – 604 001
          ———————————————————————————————————————
          பெறல்
          திரு. ஹென்றி டிபென் அவர்கள்
          இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம் – தமிழ்நாடு
          சொக்கிக்குளம், மதுரை
          பார்வை : 02.06.06 நாளிட்ட நிர்வாகி அவர்களின் கடிதம்
          ஐயா, வணக்கம்
          பார்வையில் கண்ட கடித்ததில் நான் பணியை ராஜினாமா கடிதம் எழுதாமலும் ரூபாய் மூவாயிரம் கணக்கு நேர் செய்யாமலும் இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். மேலும் மதுரை அலுவலகத்திற்கு நேரில் வந்து கணக்குகளை ஒப்படைப்பு செய்யும் படியும் கேட்டுள்ளீர்கள்.
          1. நான் ரூபாய் மூவாயிரத்திற்கான கணக்கை நேர் செய்யத் தயாராக இருக்கிறேன்.
          2. நான் பணி செய்த காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2005க்கான ஊதியத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. பணி நீக்கம் செய்யப்படாத நிலையில் பிழைப்பூதியமும் வழங்கப்படவில்லை. தங்கள் நிறுவனத்திடமிருந்து எனக்கு வரவேண்டிய தொகையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
          3. தங்களிடம் உள்ள என்னுடைய மேல்நிலை பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் செல்பேசியைக் கேட்டு பலமுறைக் கடிதம் எழுதிய பின்பு இவ்வளவு நாட்கள் கழித்து என்னிடம் ராஜினாமா கடிதம் கேட்டிருப்பது உள்நோக்கம் உடையதாகத் தெரிகிறது.
          4. அவசியம் கருதி நான் கேட்டபின்பும் தங்களுக்கு நான் தரவேண்டிய ரூபாய் மூவாயிரத்திற்கு பிணையாக என்னுடைய பள்ளிச் சான்றிதழை தாங்கள் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதும் மனித உரிமை மீறல் என்பதும் தாங்கள் அறிந்ததுதான். எந்த தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் பின்பற்றாத ஒரு நடைமுறையாகும்.
          5. நான் விகடன் குழுமத்தில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டத்தில் சேர நடைபெறும் நேர்காணலுக்கு என்னுடைய சான்றிதழ் தேவை எனக் கேட்டிருந்தேன். தாங்கள் சான்றிதழை அனுப்பாமல் பார்வையில் கண்ட கடிதத்தை அனுப்பியுள்ளீர்கள். மேற்படி விகடன் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் நான் பள்ளிச் சான்றிதழ் இல்லை என்ற காரணத்திற்காக தேர்வு செய்யப்படவில்லை எனில் அதன்முழுப் பொறுப்பும் தங்களையே சாரும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
          6. தங்கள் கடிதத்தில் என்னை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளீர்கள். நான் அலுவலகத்திற்கு வரும் பட்சத்தில் அவமானமும் உளரீதியான சித்திரவதையும் மன அழுத்தமும் சந்திக்க நேரிடும் என்பது என்னுடைய கடந்த கால நேரிடை அனுபவமாகும். நான் பணிபுரிந்த காலங்களில் இதுபோன்று சம்பவங்கள் நடந்ததை அறிவேன். தங்கள் நிறுவனத்தின் உளவியல் ரீதியான சித்திரவதையையும் அவமானத்தையும் தாங்காமல் பலர் ராஜினாமாக் கடிதம் கொடுத்துள்ளதையும் நான் அறிவேன். குறிப்பாக தலித்துகளான வனராசன், மோகன், சோபியா, செம்மலர் போன்றோரும் வரவேற்பரையில் பணியாற்றிய மகராசன், கோபால் உள்ளிட்ட இன்னும் பலருக்கு நேர்ந்தவற்றை நான் குறிப்பாக அறிவேன். மனித உரிமை நிறுவனம் என்ற அடையாளத்துடன் செயல்படும் தங்கள் அலுவலகத்திற்கு நான் வந்தால் எனக்கும் அத்தகைய நிலைதான் ஏள்படும் என்பதை நான் அறிந்தும் உணர்ந்தும் அனுபவித்தும் உள்ளேன். ஆகையால் என்னுடைய சான்றிதழ் மற்றும் செல்பேசியை வழங்கவும் கணக்கை நேர் செய்யவும் அலுவலகத்திற்கு நேரில் வர விருப்பம் இல்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
          7. தங்கள் அலுவலகத்தில் ஊழியர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும் ஊழியர்களின் சான்றிதழ்களை பிணையாக வாங்கி வைத்துக்கொள்வதையும் ஊழியர்கள் இடையே சாதியப்பாகுபாடு கடைபிடிக்கப்படுவதையும் தலித் ஊழியர்கள் அங்கீகரிக்கப்படாததையும் மறைமுகமாக உளவியல் சித்திரவதைக்கு ஊழியர்கள் உள்ளாக்கப் படுவதையும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுவதையும் சக ஊழியர்கள் அச்சமின்றி ஒருவருடன் ஒருவர் பழக இயலாமல் ஒருவரை ஒருவர் நம்ப முடியாமல் எப்பொழுதும் அச்சம் நிறைந்த சூழ்நிலையில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டியதையும் நான் என்னுடைய சொந்த பிரச்சினையாக மட்டும் பார்க்கவில்லை. இதை ஒரு சமூகம் மற்றும் பொதுப் பிரச்சனையாக பார்க்க வேண்டியுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

          திண்டிவனம் இவண்
          04.06.2006
          நகல் :
          10.06.06ல் 1. – கோ.சுகுமாறன்
          2. – வழக்.பொ.இரத்தினம்
          3. – வழக்.ராஜு
          4. – திரு.அபிமன்னன்
          12.06.06ல் தகவலுக்கான கடிதம்
          5. – கொளத்தூர்.மணி
          6. – பழ.நெடுமாறன்
          7. – வழக்.இராபர்ட்
          8. – புனிதப்பாண்டியன்
          9. – தேவநேயன்
          10. – வழக்.கே.சந்துரு
          11. – தொல்.திருமாவளவன்
          12. – பேரா.அ.மார்க்ஸ்
          13. – பேரா.சே.கோச்சடை

  10. நண்பர்களே

    அமெரிக்கன் கல்லுரி மாணவ நண்பனே கல்லூரியில் நடப்பது உண்மையானவர்கள் யார் பொய்யானவர்க்கள் யார் என்று பிரித்து பார்த்த உங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ளவைகள் உண்மையா பொய்யா என்று ஆராயாமல் பேசுவது மிகவும் அபத்தமானது. உங்கள் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்க்காக பாடுபட்டவர்தான் ஹென்றி. ஆதர்க்காக யாரிடமும் அவர் பணம் வாங்கவில்லை. நீங்கள் சொல்கின்றீர்களே பன்னாடு முதலாளிகளின் பணத்தில் இருந்து தான் அனைத்து அதிக்காரிகளுக்கு புகார் அனுப்பி நீங்கள் இன்று உங்கள் படிப்பு தொடர பயன்படுத்தி உள்ளார்.மக்கள் கண்காணிப்பகம் பன்னாடு அளவில் பணம் பெற்றுதான் அரசு பயங்கரவாதத்தையும்/ காவல் துறை வன்முறைகளையும் எதிர்த்து வருகின்றது. சில துப்பு கெட்ட, பயந்தான் கொள்ளிகள அரசையோ/ காவல் துறைனரையோ கேள்வி கேட்க முடியாத/ நெஞ்சில் உரமில்லாத கோழைகள் தான் முதுகு பின்னால் நின்று பேசுவார்கள். அவ்வமைப்பு தவறு செய்துள்ளது என்றால் நீங்கள் இவற்றில் தவறு செய்துள்ளீர்க்கள் முகத்திற்கு நேர் சொல்லவேண்டும். அதை விட்டு அவரது குடும்பத்தையும்,தனி மனித மாண்பையும் சீர்குலைக்க முயல்வது சரியான/ நேர்மையான மனிதர்க்களாக எப்படி இருக்க முடியும். நீங்கள் எழுதிய இக் கட்டுரை கூட பன்னாட்டு தொழில் வளர்ச்சியில் தான் என்பதை மறக்க கூடாது.

  11. \\நீங்கள் சொல்கின்றீர்களே பன்னாடு முதலாளிகளின் பணத்தில் இருந்து தான் அனைத்து அதிக்காரிகளுக்கு புகார் அனுப்பி நீங்கள் இன்று உங்கள் படிப்பு தொடர பயன்படுத்தி உள்ளார்.மக்கள் கண்காணிப்பகம் பன்னாடு அளவில் பணம் பெற்றுதான் அரசு பயங்கரவாதத்தையும்/ காவல் துறை வன்முறைகளையும் எதிர்த்து வருகின்றது//எப்பிடி….எப்பிடி….? எட்டப்பன் வெள்ளைக்காரனிடம் உதவி வாங்கி கட்டபொம்மனை எதிர்த்தது போலவா? சரிங்கண்ணே ….செய்யட்டும்……..
    \\சில துப்பு கெட்ட பயந்தான் கொள்ளிகள அரசையோ/ காவல் துறைனரையோ கேள்வி கேட்க முடியாத// அப்ப ஏண்ணே உயர்நீதிமன்றத்தில பெயில் வாங்கினாரு? யார் மீது போடுகிறாய் பொய் வழக்கு…..கைது செய்து பார் என்னை என்று கர்ஜிக்கலாமே! போலீசுக்கு அஞ்சாத புலிக்குட்டி!!!! கொஞ்சம் பயமாத்தேன் இருக்கோ…..!

  12. இணையத் தொழில்நுட்பத்தில் தேர்ந்த, பல்வேறு இணையதளப் பிரச்சாரங்கள் நடத்தும் ஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பகத்தினர் இக்கட்டுரையின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை முன்வந்து பதிலளிக்காத நிலையில் …….இக்கட்டுரை சரிதான் என ஒப்புக் கொள்கிறார்கள் எனக் கொள்ளலாமா?…………….

  13. //கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்//

    வினவு தனது மேற்குறிபிட்ட கடைபிடித்திருக்கிறதா? ஊருக்குத்தான் உபதேசமா? தனிமனித ஒழுக்கமற்றவர் மட்டுமே இதுபோன்று எழுதமுடியும். முற்போக்கு என்ற போர்வையில் மார்க்சையும் லெனினையும் அசிங்கப்படுத்த வேண்டாம்.

  14. மதுரை வாழ் நண்பர் ஒருவரின் கருத்து பின்வருவது..
    >>
    ஹென்றி டிபேன் பற்றிய பதிவு முழுக்க நியாயமானதல்ல. கடந்த 10ஆண்டுகளாக குறிப்பிட்ட தளங்களில் அவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவர் தலித் விரோத நிலைப்பாடு எடுத்தார். குடும்பத்தோடு அடித்தார் என்பது மிகவும் ஜோடிக்கப்பட்டது. என்.ஜி.ஓ.க்களுக்கிடையிலான காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கல் சம்மந்தப்பட்டதுதான் இது.
    >>
    வினவு இணையதளத்தில் கட்டுரைகள் எழுதும் போது பிரச்சனையை மிகைப்படுத்தல் இல்லாமல் எழுதவேண்டும் என்பது எனது வேண்டுகோள். பொதுவான என்ஜீஓக்களின் ஏமாற்றுவேலை என்பது ஒன்று. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்புகொண்டு அவரது தரப்புக் கருத்துக்களையும் சேர்த்துப் பதிவு செய்திருக்கவேண்டும்.
    இல்லாவிட்டால் வினவு தளத்திற்கு வேண்டிய ஒருவரின் பிரச்சனைக்கு நீங்கள் கட்டுரை எழுதிய மாதிரி ஆகிவிடும்.
    அது வினவின் நம்பகத்தன்மையை நாளடைவில் கேள்விக்குள்ளாக்கிவிடும்.

  15. வினவுக்கு,

    மனித உரிமை பதுகாப்பு மையத்தின் கொள்கை,லட்சியம் என்ன? அடையும் வழிமுறைகள்,திட்டங்கள் என்ன?

    இந்தியவின் வளர்ச்சிக்கு இவர்களின் பங்களிப்பு என்ன?

  16. /கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்//

    //வினவு தனது மேற்குறிபிட்ட கடைபிடித்திருக்கிறதா? ஊருக்குத்தான் உபதேசமா? தனிமனித ஒழுக்கமற்றவர் மட்டுமே இதுபோன்று எழுதமுடியும். முற்போக்கு என்ற போர்வையில் மார்க்சையும் லெனினையும் அசிங்கப்படுத்த வேண்டாம்//
    மரியா அவர்களே!
    தாங்கள் எந்த வரிகளைக் குறிப்பிடுகிறீர்கள் என்று சொன்னால் நல்லது.பதிலளிக்கிறோம்.மக்கள் கண்காணிப்பகத்தில் நடந்த பல கேவலமான சம்பவங்களை நாங்கள் நாகரீகம் கருதி தவிர்த்திருக்கிறோம்.மக்கள் கண்காணிப்பகத்தின் முன்னாள் ஊழியர்கள்,தங்கிப் படித்த மாணவர்களை அழைத்து ஒரு பொது விசாரணை நடத்தினால் ஒரு புத்தகமே போடலாம் என்கிற அளவிற்க்கு விசயங்கள் உள்ளது.கூடுதலாக மரியா அவர்கள் கட்டுரையின் மையமான விசயங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்காமல் நடைகுறித்து மட்டும் தெரிவிப்பது நேர்மை அல்ல.விமர்சனத்தை ஏற்றுப் பதிலளிப்பதே ஜனநாயகம்.விமர்சிக்கக் கூடாதென்பது சர்வாதிகாரம்.

    • விமர்சிக்ககூடாது என்ற வாதத்தை நான் முன்வைக்க விரும்பவில்லை. மாறாக மக்கள் கண்காணிப்பகத்தின் முன்னாள் ஊழியர்கள்,தங்கிப் படித்த மாணவர்களை முறையாக விசாரணை செய்யுங்கள். தாங்கள் கற்பனை செய்த அந்த ஏகாதிபத்திய கைக்கூலியிடம்தான் முன்னாள் ஊழியர்கள்,தங்கிப் படித்த மாணவர்கள் (யாரெல்லாம் தங்களிடம் தவறான தகவல்களைத்ட தந்தார்களோ)5 முதல் 15 ஆண்டுகள் வரை குப்பை கொட்டிக்கொண்டிருந்தார்கள் (பணி செய்தார்கள் அல்லது படித்தார்கள் என்றெல்லாம் கூறுவது தகாது). பணியில் சேர்ந்த தொடக்கத்திலேயே வராத சிந்தனை இத்தனை ஆண்டுகள் கடந்து அவர்களுக்கு தோன்றியிருப்பது ஆச்சிரியமாகவே உள்ளது.தாங்கள் தீர விசாரித்து விமர்ச்சனத்தை முன்வைப்பீர்கள் என்று நம்புகிரேன்.

  17. //மனித உரிமை பதுகாப்பு மையத்தின்

    இந்தியவின் வளர்ச்சிக்கு இவர்களின் பங்களிப்பு என்ன?//

    வினவில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் முக்கிய செயல்பாடுகள் அவ்வப்போது பதிவுசெய்யப்பட்டுள்ளது.கொள்கை,லட்சியம் ,அடையும் வழிமுறைகள்,திட்டங்கள் குறித்து மதுரை கே.கே.நகர் அப்பல்லோ மருத்துவமனை அருகில் உள்ள ம.உ.பா.மைய அலுவலகத்திற்க்கு வாருங்கள் விளக்குகிறோம்.

    • //6] மக்கள் கண்காணிப்பகத்தின் கொள்கை,லட்சியம் என்ன? அடையும் வழிமுறைகள்,திட்டங்கள் என்ன?//

      மக்கள் கண்காணிப்பகத்தின் முக்கிய செயல்பாடுகள் அவ்வப்போது பதிவுசெய்யப்பட்டுள்ளது.கொள்கை,லட்சியம் ,அடையும் வழிமுறைகள்,திட்டங்கள் குறித்து மதுரை 6 வல்லபாய் சாலை, சொக்கிகுளத்தில் அமைந்துள்ள அவர்களின் அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது அவர்களி இணையத்தளத்திலோ தெரிந்து கொளுங்கள். அலுவலகத்திற்க்கு வாருங்கள் விளக்குவார்கள்.

  18. //ஹென்றி டிபேன் பற்றிய பதிவு முழுக்க நியாயமானதல்ல// பகுதி நியாயமானதா? எது நியாயம்? எது நியாயமற்றது? என்று சொன்னால் பதிலளிக்கிறோம்.
    //கடந்த 10ஆண்டுகளாக குறிப்பிட்ட தளங்களில் அவரின் பங்களிப்பு மிக முக்கியமானது//
    இருக்கலாம்.ஆனால் எதிர்மறையில்தான்.எட்டப்பன்,தொண்டைமான்,நவாப்புகள்……போன்று…..
    //அவர் தலித் விரோத நிலைப்பாடு எடுத்தார். குடும்பத்தோடு அடித்தார் என்பது மிகவும் ஜோடிக்கப்பட்டது.////வினவு இணையதளத்தில் கட்டுரைகள் எழுதும் போது பிரச்சனையை மிகைப்படுத்தல் இல்லாமல் எழுதவேண்டும் என்பது எனது வேண்டுகோள்// சம்பவம் நடந்த அன்று இருந்த பலரையும் விசாரித்து, சம்பவம் தொடர்பான முரண்பாடான செய்திகளைத் தவிர்த்தே பதிவு எழுதப்பட்டது. நீங்கள் விசாரித்துப் பேசுங்கள்.
    //இதில் சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்புகொண்டு அவரது தரப்புக் கருத்துக்களையும் சேர்த்துப் பதிவு செய்திருக்கவேண்டும்//மோடி,சோனியா,ராஜபக்சேயைப் பற்றி எழுதினால் அவர்களைக் கேட்டுத்தான் எழுத வேண்டுமா?

    • //மோடி,சோனியா,ராஜபக்சேயைப் பற்றி எழுதினால் அவர்களைக் கேட்டுத்தான் எழுத வேண்டுமா?//

      உங்களின் சொந்த விமர்சனங்களை கேட்காமல் எழுதுங்கள். ஆனால் ஒரு பிரச்சனை அடிப்படையில் விமர்சிக்கின்றபொழுது இருபக்கமும் கேட்டுத்தான் எழுத வேண்டும். அதுதான் ஒரு சிறந்த முற்போக்கு இணைய இதழுக்கு அழகு.

  19. \\Further, I would say they do not have any willpower to meet the issue legally\\
    சட்டரீதியாக சந்திக்க முடியாதது நாங்களா? ஹென்றி கும்பலா? உயர்நீதிமன்றத்தில் நீதிபதி,அரசு தரப்பு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியத்தை செட்டப் செய்த யோக்கியன் யாரோ?பாதிக்கப்பட்ட வல்லரசு மருத்துவமனையில் இருக்கும்போதே டிஸ்சார்ஜ் என்று சொல்ல வைத்தது யாரோ?ம.உ.பா.மையத்தின் வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட வல்லரசு சார்பில் மனுத்தாக்கல் செய்ய காலாவகாசம்தானே கேட்டார்?பொய் சொல்லி உத்தரவு வாங்க முயற்சிக்கிறார்கள் என்றுதானே வாதிட்டார்.இது சட்டப்படியில்லையா?தங்களுக்குத் தெரிந்த சட்டப்படி இதில் எது தவறு என்று சொல்லுங்கள்?

  20. //I saw them in the court – it is shameful to tell about their arguments in the court. I do not know whether they know ‘how to argue in the court?’. I am not a lawyer//மரிய சூசை அவர்களே! தாங்கள் குறிப்பிடுவது மாவட்ட நீதிமன்றத்தில் ம.உ.பா.மைய வழக்கறிஞர் ஹென்றியை ஏகாதிபத்தியக் கைக்கூலி என்று கூறியதை.தாங்கள் ஹென்றியின் பிணைமனுவினைப் பார்த்தீர்களா? ஹென்றி தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முழுமையாகக் கேட்டீர்களா?ஹென்றியின் பிணைமனுவில் ஹென்றி நல்லவர்,வல்லவர்,மனித உரிமைப் போராளி,அந்த அமைப்பில் உறுப்பினர்,இந்த அமைப்பில் உறுப்பினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.அவரது வழக்கறிஞர்கள் புகார்தாரர் வல்லரசு தவறு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டவர் என்று புகார்தாரரின் குணம்,நடத்தை குறித்து வாதிட்டார்கள்.இந்தப் பிணைமனு,வாதங்களுக்கு புகார்தாரரின் வழக்கறிஞர் ஹென்றி ஒரு பிராடு,மனித உரிமை வேடதாரி என்று அவரது குணம்,நடத்தை குறித்துத்தானே வாதிட முடியும்?இதில் என்ன தவறு கண்டீர்கள்?உண்மையைச் சொன்னால் மூத்தவழக்கறிஞர் ஹென்றியின்(எந்த கோர்ட்டில்?)வழக்கறிஞர்களுக்குத்தான் வாதிடத் தெரியவில்லை.வல்லரசு எதற்க்கு நிகழ்ச்சிக்கு வந்தார்?என்று கேள்வி எழுப்பினார்கள்? ஊர் பூராம் போஸ்டர் ஒட்டி அனைவரும் வருக என்று சொல்லிவிட்டு.

  21. மரியா அவர்களே!…..முருகப்பன் கடிதம்…..கடைசிப் பின்னூட்டங்களுக்கு பதில் இல்லையா? ஹென்றி அண்ணன் கிட்டக் கேட்டுச் சொல்லுங்க………..

  22. அன்பான மக்கள் கண்காணிப்பக விசுவாசிகளுக்கும்
    தோழர்களுக்கும்,
    கள்ளமௌனம் சாதிக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும்,
    கண்டுகொள்ளாமல் இருக்கும் சி.பி.ய்.,சி.பி.ம்.,பெ.தி.க. தோழர்களுக்கும்,
    நான் சில கேள்விகளை முன் வைக்கிறேன்..???????.
    ????????
    மனித உரிமை கல்வி நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றும் முனைவர்.பேராசிரியர்.அய்யா.தேவசகாயம் அவர்கள் அங்கு பணிபுரியும் பெண்கள் மீது எத்தனை பாலியல் வன்முறைகள் புரிந்துள்ளார்? (ஆதாரம்: திருமதி.பூமா,மண்டல ஒருங்கிணைப்பாளர்,ம.உ.க.,விழுப்புரம் மண்டலம்.).
    ???????????????
    ஹென்றி மீடியாவுக்கு மட்டும்தான் சிரிப்பார்.மற்றபடி மனித உரிமை போலீசுக்காரர் அவர்.மிரட்டியே ஆளை மயக்கமடைய செய்வார் (ஆதாரம்: திருமிகு.வக்கீல்.கருணாநிதி.உயர்நிதிமன்றம்.)
    ????????????????????
    கணவன் மனைவியை பிரித்து நடுத்தெருவில் விடுபவர்கள் அங்கியணிந்த உளவியல் நிபுணர், (இவர பணி பணியாளர்களின் உள்ளகிடகை அறிந்து ஹென்றியீடம் போட்டுக் கொடுபதுதான்), பிரதிப் ,சிந்தியா,ஹென்றி.(ஆதாரம்: வேலையை விட்டு விரட்டப்பட்ட தோழர்.மணிமாறன். குடும்பம் இப்போ நடுத்தெருவில் நிக்குது. )

    ???????????????????????
    இதற்கு பதில் உண்டா???தலித் போராளியான ஹென்றி தன செய்த தவறை மறைக்க அவசரமாக பொது விசாரணை ஒன்றினை என் நடத்த வேண்டும்?????
    தாம் தலித் ஆதரவாளன் என தப்பட்டம் அடித்து கொள்ளவா ???????????

    தினமும் ஒரு போஸ்டர் தாமே அடித்து ஓட்டி தனக்கு தலித் அமைப்புகள் அதரவு தருவது போன்ற ஒரு சுழலை ஏன் உருவாக்குகிறார் ?????????
    இதில் பொதுவுடைமை இயக்கங்களும் தலித் அரசியல் இயக்கங்களும் போஸ்டர் ஒட்டாதது ஏன்????????????????

    ஹென்றி அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வினவை
    மகிழ்வுடன் படித்து கொண்டாடுகிறார்கள்.

    மரியசூசை,திரு போன்ற அடிவருடிகள் நேரடியாக பதில் சொல்லுங்கள். ம..க இ.க. வினர் உங்கள் வீடு கதவை தட்டமாட்டர்கள்.??????????????????????????????????/

    பெர்னாட்.

    • பெர்னாட்,
      இதை எழுதியது நீங்களா ?மிகவும் வியப்பாக உள்ளது.உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் சோறு போட்டவர் ,போட்டுக் கொண்டிருப்பவர் ஹென்றி அல்லவா? உங்களுக்கு எப்படி மனம் வந்தது? பேரா.தேவசகாயம் அவர்களா இப்படி பெண்களிடம் நடந்து கொண்டார்?மிகவும் வேதனையாகவும் வியப்பாகவும் உள்ளது.அப்பா ஸ்தானத்தில் உள்ளவர் இப்படி பண்ணலாமா? ஹென்றிக்கு மீடியா விளம்பரம் பிடிக்கும்,ரொம்பவே வெறியுடன் ஆசைபடுவார்.அனால் ஒரு மனிதனை மயக்கம் வரும் வரை விசாரிக்கக்கூடாது அல்லவா? எந்த விசாரிப்பு விசயத்தில் ஹென்றி மருமகன் ஸ்ரீமான் பிரதீப் களம் கட்டி வேலை செய்தாரம் உண்மையா? பாவம் கருணாநிதி அப்ப ஓடினவர் அப்புறம் பீப்பில்ஸ் வாட்சை திரும்பி பர்க்கவிலயமே?மணிமாறன் இயகத்த விட்டே ஓடிப்போனரமே?குடும்பத்த கெடுக்கலாமா?ஹென்றி குடும்பமே சேந்து கார் போட்டு போய் கெடுத்ங்கலமே?ஏன் பெர்னாட் பர்சனல் விசயத்தில தலை இடுவதுதான் monitoring and Intervention ?
      தோண்ட தோண்ட வருதே ? என்ன தான் நடக்குது அங்கெ?
      தயவுசெய்து தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டுசெல்லுங்கள்.
      நில அபகரிப்புக்கும் மனிதஉரிமை மீறல் நு சொல்றாங்க .
      ஹென்றி செய்ற மனித உரிமை மீறலை யார் தட்டி கேட்ப்பாங்க ??????
      மரியசூசை.

Leave a Reply to Maria பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க