privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்ஸ்வயம் சேவக் அண்ணா ஹசாரே ஜீ !!

ஸ்வயம் சேவக் அண்ணா ஹசாரே ஜீ !!

-

அண்ணா ஹசாரே பிரஷாந்த் பூஷன்
அண்ணா ஹசாரே - பிரஷாந்த் பூஷன்

‘நல்லவனெப் போல இருப்பானாம் பரம அயோக்கியன்’ – கிராமப்புறங்களில் ‘நல்லவர்களைப் போல’ வேடமிடுபவர்களைக் குறித்த சொலவடை இது. நாமும் முன்பே சொன்னோம். நாம் சொன்னதை லேசுபாசாய் சந்தேகித்தவர்கள் யாரேனும் இருந்தால் உங்கள் சந்தேகத்தை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இதோ, கடந்த வாரம் ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதை அடுத்து அண்ணாவின் பக்த கோடிகள் போட்டுக் கொண்டு திரிந்த ‘நல்லவன்’ முகமூடி கிழிந்து தொங்குகிறது.

கடந்த பண்ணிரண்டாம் தேதி தனது அலுவலகத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த ப்ரஷாந்த் பூஷனை, இந்தர் வர்மா என்கிற இந்து பயங்கரவாதி கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். தாக்குதல் சம்பவம் நடந்த இடத்திலேயே மடக்கிப் பிடிக்கப் பட்ட இந்தர் வர்மா, தற்போது விசாரணைக் காவலில் இருக்கிறார். மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இவரது கூட்டாளிகளான தாஜிந்தர் பால் சிங் மற்றும் விஷ்னு குப்தா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏன் இந்தத் தாக்குதல்? சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ப்ரஷாந்த் பூஷன், அங்கே சமாதான முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லையென்றால் காஷ்மீர் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி அதனடிப்படையில் சுமூகமாக தீர்த்துக் கொள்வது சரியாக இருக்கும் என்றும், இதே விஷயத்தை முன்னாள் பிரதமர் நேருவும் கூட சொல்லியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பகுத்தறிவோடும் நியாய உணர்வோடு சிந்திக்கும் எவருமே இதில் இருக்கும் ஜனநாயகப்பூர்வமான உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய இராணுவத்தின் கோரத்தாண்டவங்கள் இன்று வரை தொடர்ந்து வருவதும் நாம் அறிந்தது தான்.

ப்ரஷாந்த் பூஷனின் மேற்கண்ட பேட்டியைத் தொடர்ந்து கடும் ஆத்திரமுற்ற இந்து பயங்கரவாதிகள், தங்களது ட்விட்டர் பக்கத்தில் ப்ரஷாந்த் பூஷனைத் தாங்கள் ‘தண்டிக்கப்’ போவதைக் குறித்து வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர். தாக்குதலுக்குப் பிறகு ட்விட்டர் தளத்தில் எழுதிய தாஜிந்தர், “அவன் என் தேசத்தைப் பிளக்க முயற்சித்தான்; நான் அவன் மண்டையைப் பிளக்க முயற்சித்தேன்” என்று எழுதியுள்ளார்.

தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இம்மூவருமே சங்பரிவார் பயங்கரவாத கும்பலோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். இதில், தாஜிந்தர் பால் சிங் பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவில் செயல்பட்டவர். எல்.கே அத்வானி உள்ளிட்ட அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களோடு தொடர்பில் இருந்துள்ளார். இவரும் இவரது இன்னொரு கூட்டாளி விஷ்னு குப்தாவும் சேர்ந்து இந்த வருடத்தின் துவக்கத்தில் ‘பகத்சிங் க்ராந்தி சேனா’ என்கிற ஒரு அமைப்பைத் துவக்கியிருக்கிறார்கள். பின்னர் இவர்களோடு ‘பிங்க் ஜட்டி’ புகழ் ஸ்ரீராம் சேணாவைச் சேர்ந்த இந்தர் வர்மாவும் இணைந்து கொள்கிறார்.

மேற்கண்ட சம்பவம் எதிர்பாராத ஒன்று இல்லை. சும்மா இருந்த தென்காசியில் சும்மா ஒரு எழுச்சியை உண்டாக்க சும்மா ஒரு குண்டு வைத்துப் பார்ப்போமே என்று சும்மா திட்டமிட்டு முயற்சித்துப் பார்த்த ‘நல்லவர்கள்’ அல்லவா இந்த ‘இந்து பயங்கரவாதிகள்’ . ஆனால், இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் இருக்கிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இணையதளங்களிலும் அதற்கு வெளிப்படும் எதிர்விணைகளில் அண்ணா பக்தர்களின் மேக்கப் இல்லாத ஒரிஜினல் முகம் வெளிப்பட்டுக் கொண்டிருப்பது தான் நாம் குறிப்பாக கவனிக்க வேண்டியது.

அண்ணா தீவிரமாக சர்க்கஸ் நடத்திக் கொண்டிருந்த காலங்களில் ‘எங்கள் நோக்கமே ஊழல் ஒழிப்பு ஒன்று தான். எங்களுக்கு அரசியல் சார்பே கிடையாதாக்கும்’ என்றெல்லாம் நீட்டி முழக்கியவர்கள் இவர்கள். இந்த அரசியலற்றவாதம் போற்றுதலுக்குரியதாக கருதப்பட்டது. அண்ணா ஹசாரேவின் கோரிக்கைகளில் இருந்த மொண்ணைத்தனம் கூட இந்த அரசியலற்றவாதத்தின் பின்னே தான் பதுங்கிக் கிடந்தது. நம்ம உள்ளூர் காக்கி டவுசர் ஜெயமோகனே ‘காந்தியவாதி’ அண்ணா ஹசாரேவை சீசன் பார்த்து ஆதரித்த போதும் கூட பார்வையாளர்களுக்கு சந்தேகிக்கத் தோன்றவில்லை. ஆனாலும் நாம், சென்னையில் கூடிய அண்ணா பக்தர்கள் பலரின் பட்டாபட்டி காக்கி நிறத்தில் பல்லிளித்ததை நமது நேரடி ரிப்போர்ட்டில் அப்போதே பதிவு செய்திருந்தோம்.

ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா தளத்தில் வெளியாகியிருந்த செய்திக் கட்டுரையின் மறுமொழிகளில் அண்ணா பக்தர்கள் அவரைத் தாளித்துக் கொட்டினர். ஆயிரக்கணக்காக நீளும் அந்த மறுமொழிகளில் அண்ணா கும்பல் போற்றும் அரசியலற்றவாதத்தின் கோர முகம் குறுக்கும் நெடுக்குமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளை கண்மூடித்தனமாய் ஆதரித்திருந்த அண்ணா ரசிகர்கள், ப்ரஷாந்த் பூஷனை சும்மா தாக்கியதோடு நிறுத்தியிருக்கக் கூடாது என்றும், அவரது எலும்புகளை ஒடித்திருக்க வேண்டுமென்றும் தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர். மேலும், ப்ரஷாந்த் பூஷன் மட்டுமில்லாமல் அருந்ததி ராய் போன்ற ஜனநாயக உணர்வுள்ள பிறரையும் குறிப்பிட்டு ‘வெட்டு, குத்து, கொல்லு’ பாணியில் வெறியைக் கக்கியிருக்கின்றனர்.

அரசியலற்றவாதமென்பதே தீவிர வலதுசாரி பிற்போக்கு சக்திகளின் முகமூடி தானென்பதற்கு இந்த சம்பவம் மிக அண்மைய உதாரணம். வேறு விதமாகச் சொல்வதானல், அரசியலற்றவாதமும் வலதுசாரி இந்து பயங்கரவாதமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தாம். உதாரணமாக, நமது மைலாப்பூர் ‘பார்த்தசாரதிகள்’ கூட அரசியலற்றவர்கள் தான். இவர்கள் எந்த கட்சியின் அரசியலோடும் தம்மை இணைத்துக் கொள்வதை பார்க்க முடியாது தான். தேவைப்பட்டால் பாரதிய ஜனதாவைக் கூட சில சந்தர்பங்களில் விமர்சிக்கவும் செய்வார்கள். ஆனால், எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் இவர்களின் சிந்தனையும் துக்ளக்கின் சிந்தனையும் ஆச்சர்யப்படுமளவிற்கு மிக எதார்த்தமாகவும் இயல்பாகவும் ஒத்துப் போவதை கவனித்திருப்பீர்கள். சிறுபாண்மையினர், தலித்துகள், இடஒதுக்கீடு, இந்தியா, இந்தி போன்ற குறிப்பான விஷயங்களில் இவர்கள் அப்படியே ஆர்.எஸ்.எஸ் பேசுவது போலவே பேசுவார்கள். இன்னும் விளக்கம் தேவைப்பட்டால் இரட்டைக் குவளை பிரச்சினை பற்றி நான்’காண்டு’களுக்கு முந்தைய தமிழ் வலைப்பதிவர்களில் ‘நூல்’ கம்பேனியார் உதிர்த்திருந்த முத்துக்களைத் தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.

இது ஒருபுறமிருக்க, ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா கும்பலின் பிற உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களும் பால் தாக்ரேவின் குரலாகவே ஒலித்திருக்கிறது. காஷ்மீரைக் காக்க உயிரையே தரத் தயார் என்று சவடால் அடித்த அண்ணா ஹசாரே, ப்ரஷாந்த் பூஷனைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். மேலும் அவர் தமது குழுவில் தொடர்வதைப் பற்றி குழுவின் மையக் கூட்டத்தின் வைத்து முடிவெடுப்போம் என்று அறிவித்துள்ளார். இதே போன்ற கருத்தையே கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால், சந்தோஷ் ஹெக்டே மேதா பட்கர் போன்ற பிறரும் தெரிவித்துள்ளனர்.

மிகச் சிக்கலான காஷ்மீர் விவகாரத்தைப் பொருத்தவரையில் தீர்வு எதுவாக இருக்க வேண்டுமென்றாலும் அது அம்மக்களின் விருப்பத்துக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகக் கோரிக்கையாகவும் விருப்பமாகவும் இருக்க முடியும். ஆனால், வல்லாத்தளையாக அந்த மக்களை தனது இரும்புப் பிடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அகண்ட பாரதக் கனவில் மிதக்கும் இந்து பயங்கரவாதிகள் காலம் காலமாக சொல்லி வருவது தான். இதைத் தான் இப்போது அண்ணா கும்பலும் அவரது ரசிகர் பட்டாளமும் வெளிப்படுத்தியிருக்கிறது.

ஆக, அரசியலற்றவாதமும் – மத பயங்கரவாதமும் அடிப்படையில் வேறு வேறானதல்ல என்பதை இச்சம்பவம் இன்னுமொரு முறை பொட்டிலடித்தாற் போல் உணர்த்தியிருக்கிறது. ஊழலை ஒழித்து இந்தியாவையே புரட்டிப் போட்டு விடுவோமென்று சவடாலடிக்கும் அண்ணா கும்பலின் ஊழல் பற்றிய புரிதலே அடிமட்டத்தில் இருப்பது ஒருபுறமென்றால், இவர்கள் பார்ப்பன இந்து பயங்கரவாதம், மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் போன்ற கேந்திரமான பிற விஷயங்களில் என்னவிதமான கருத்துக்களை வைத்திருக்கிறார்களென்பது வெகு சில சந்தர்பங்களில் தான் வெளிப்பட்டிருக்கிறது. முன்பு மோடியை அண்ணா ஹசாரே புகழ்ந்ததும் இப்போது ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதும் அவைகளில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இனிமேலும் அண்ணா ஹசாரே என்கிற இந்த இந்துத்துவ கோமாளியை நம்பி பின்னே செல்லத் தான் வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. இது முன்னாடியே தெரிந்ததுதானே. அவர்கள்(அன்னா காக்கி டவுசர் குழு) இப்படி நடந்து கொள்ளாவிட்டால்தான் ஆச்சரியம். பிரஷாந்த் பூஷன் அவர்கள் இப்போதாவது அந்த காக்கி டவுசர் குழுவில் இருந்து வெளியேறிவிடுவதுதான் அவருடைய முற்போக்கு சிந்தனையும், நேர்மையும் தவறாமல் இருப்பதற்கான வழியாகும். அவர் சமச்சீர் கல்விக்காக உயர் நீதிமன்றத்தில் வாதாடியபோதும், காஷ்மீர் பிரச்சினைக்காக குரல் கொடுத்தபோதும், அன்னா குழுவில் இருந்த மயான அமைதியின் போதே அவர் சிந்தித்திருக்க வேண்டும்.’அன்னா’ என்னதான் இது கட்சி சார்பற்ற குழு என்று பூசி மொழுக பார்த்தாலும்,இதன் மூலம் அவர் மறைமுகமாக ஆதரித்ததும்,இதனால் நேரிடையாக பயன் பெற நினைத்ததும் பெற்றுக்கொண்டிருப்பதும் பிஜெபி என்பது வெளிப்படை.ஆனால் அன்னாவும் அவரை ஆதரிக்கும் சங் பரிவார் கட்சிகளும் எதையெல்லாம் தமக்கு எதிரானதாக கருதிக் கொண்டார்களோ, அதையெல்லாம் தாம் உரம் போட்டு ஊட்டி வளர்க்கும் குழுவில் இருக்கும் ஒருவரே எதிர்த்து குரல் கொடுப்பதா எனும் வெறியில் நடந்ததுதான் இது. இதன் மூலம் அவர்கள் உடனடியாக எதிர்பார்ப்பது அன்னா குழுவில் இருந்து பூஷனின் வெளியேற்றம். ஏனென்றால் ஒருவேளை அவர்கள் உண்மையிலேயே இப்படி ஜனநாயகத் தன்மையுடன் காஷ்மீர் போராட்டத்திற்க்கு ஆதரவாக பேசுவோர் அனைவரயும் தாக்க வேண்டும் என நினைத்தால் முதலில் அருந்ததிராயைத்தான் தாக்கியிருக்க‌ வேண்டும். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது முதலில் பூஷனின் வெளியேற்றம். அதனால்தான் பூஷன் தாக்கப்பட்ட சம்பவம் அனைவரும் பார்க்கும்படி பேட்டியின் போது நடந்தது.Times now இதில் உள்குத்து உள்ளது என்று நிரூபிப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும் அருந்ததிராய் வீடு தாக்கப் பட்ட சம்பவத்தின் போது அதன் செயல்கள், அம்பி கோசுவாமியின் சங் பரிவார் ஆதரவு பேச்சு இந்த சம்பவத்தின் போது Times now பேட்டி ஏற்பாடாகிக் கொண்டிருந்தது இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது சந்தேகத்துக்குரியதுதான். அன்னா உட்பட அக்குழுவில் இருக்கும் மற்றவரை விடுங்கள் ஆனால் சுவாமி அக்னிவேஷ், மேதா பட்கர் ஆகியோர்கூட இன்னும்
    வாய் திறக்க மறுப்பதுதான் ஆச்சரியத்தக்க வகையில் இல்லையென்றாலும்
    எரிச்சலடைய வைக்கிறது. எனக்கு புரிந்த வரை பிரஷாந்த் பூஷன், அக்னிவேஷ், மேதா பட்கர், ஆகியோர் வெளியேறி அருந்ததிராயோடு சேர்ந்து
    ஒரு குழுவாக மாறி செயல்படுவதே மக்களின் மேல் அவர்களுக்கு உள்ள பற்று வெளிப்படுவதாக அமையும்.

  2. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இனிமேலும் அண்ணா ஹசாரே என்கிற இந்த இந்துத்துவ கோமாளியை நம்பி பின்னே செல்லத் தான் வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது.
    சரியான பதிவு

  3. ######சும்மா இருந்த தென்காசியில் சும்மா ஒரு எழுச்சியை உண்டாக்க சும்மா ஒரு குண்டு வைத்துப் பார்ப்போமே என்று சும்மா திட்டமிட்டு முயற்சித்துப் பார்த்த ‘நல்லவர்கள்’ அல்லவா இந்த ‘இந்து பயங்கரவாதிகள்’#######

  4. “அண்ணா ஹசாரே என்கிற இந்த இந்துத்துவ கோமாளியை….” கோமாளி அல்ல. அண்ணா ஹசாரே ஒரு பயங்கரவாதிதான். உளவியல் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் அவரது முகத்தை படித்துப் பாருங்கள். உண்மை பளிச்சென புலப்படும்.

    • \\அண்ணா ஹசாரே ஒரு பயங்கரவாதிதான் – அவரது முகத்தை படித்துப் பாருங்கள் \\

      உதடுகள் பயங்கரவாதி என்று சொன்னாலும் உள்ளம் ‘அவரது முகம்’ (அவனது என்பதற்கு மாற்றாக..) என மரியாதை கொடுக்க சொல்லுகிறது… என்ன செய்வது மரியாதைக்குரிய பயங்கரவாதி போலிருக்கிறது… ஒரு வேலை போலி கம்யுனிஸ்ட் போல போலி பயங்கரவாதியோ…

  5. பாவம் ப்ரசாந்த் பூஷன் அன்னாவை நம்பி மோசம் போனதை நினைத்து வருந்த வேன்டியதுதான் sir why you should not use the tamil translating method as in ” dinamalr.com “. That seems to be simpler than this. This is my opinion. Kindly clarify.

  6. ஹிசார் தொகுதியில் பஜன்லால் ,சௌதாலா மகன்களுக்கிடையில் நடந்த கடும் போட்டியில் ஏற்கனவே மூன்றாவது இடத்தில் இருந்த காங்கிரசை நாங்கள் தான் தோற்கடித்தோம் என்று அண்ணா ஹசாரே குழு உளற ஆரம்பித்த போதே இவர்கள் கோமாளிகள் என்பதை நிருபித்துவிட்டார்கள்.

  7. Hi this is very good article which clearly explains the real intention and the face of Anna Team members. But i have one request do not use that word hindu bayangaravathigal. Many of Vinavu article trying to show Hindu religion as terrorist that means you are directly supporting other end. Have you ever used Muslim terrorist word, never i think.. why? If you use, they will kill you. Hindus will not do that, and they are little soft compare to other end. Do not provacte the general people who beleive hinduism. Good or bad we need one identity, fortunately or unfortunately we born in hindu religion so it is their in our blood, if you criticize more we also has to review your intention. Do you have dare to comment about Muslim? If you have find out some bad news which muslim did in these country. Then we will appreciate your effort. Yes really Vinavu concerned about all people not only to particular sector.

    • Karunagaran,
      please take time to read more blogs in this site. Your prejudicial thoughts might change.

      I believe you were equally furious when you read newspaper/magazine headlines when they mention ‘Muslim Terrorists’. Anyways, by Hindu terrorist, they refer to the sang parivar terrorists, not all hindus. 🙂

      //fortunately or unfortunately we born in hindu religion so it is their in our blood,//
      will you give a similar justification for casteism also? For e.g. I was born hindu, but it is no more in my blood.

      Would like to encourage you to read more in this site, before coming to conclusions.

  8. என்னாப்பா வர வர உன் மததுவேச பிஸினஸ் கட்டுரைகளுக்கு போதி வரவேற்ப்பு கிடைக்க மாட்டேங்குதேப்பா…பிஸினஸ் ரொம்ப டல்லாயிருச்சா…

    ஆமாமா, பிரித்தாலும் சூழ்ச்சி எத்தனனாள்தான் கைகுடுக்கும்…

    சரி அதவிடு காஸ்மீர இப்ப என்ன பன்னலாம், தீவிரவாதிகளிடம் கொடுக்கவேண்டுமா? அல்லது பக்கிஸ்தானிடம் கொடுக்க வேண்டுமா?

    சரி காஸ்மீர இந்த இரண்டு பக்கிகளிடமும் கொடுக்கக்கூடாது என்றால், அவன் அயோக்கியன், இந்துத்துவ கோமாளி மற்றும் தீவிரவாதியா…

    அப்படியே அருனாச்சலப்பிரதேசத்த சீனாவிடமும், தமிழ்நாட்ட இலங்கையிடமும் கொடுத்துரலாமா?

    னீ சொன்னாலும் சொல்லுவ…ஏன்னா காஸ்மீரில் உள்ளவர்கள் போராளிகள், அதில் ஒரு அப்பாவி தான் அப்சல் குரு, காசபு தம்பி ஒரு மாவீரன்…

  9. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் இதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.

    அருணாச்சலப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தேசபக்தி மிகுந்தவர்கள். அதனால்தான் அவர்கள் தங்களின் தொடர்பு மொழியாக இந்தியைப் பயன்படுத்துகின்றனர் என அத்வானி குறிப்பிட்டார்.

    அப்போது இந்திய அரசின் இந்தி-சீனி பாய் பாய் கொள்கையைப் பின்பற்றிவந்த நிலையில் சீன அரசு 1962 அக்டோபர் 20-ம் தேதி இந்தியா மீது போர் தொடுத்தது. இதனால் அப்போதைய பிரதமர் நேரு அதிர்ச்சி அடைந்தார் என அக்டோபர் 20-ம் தேதியை அத்வானி நினைவுகூர்ந்தார்.

    திடீர் சீனத் தாக்குதலுக்குப் பிறகு அருணாச்சல் தொடர்பான விவகாரங்களை பாஜக வெளிப்படையாக கையாண்டு வருகிறது என்று அத்வானி குறிப்பிட்டார்.

    அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் அல்லது சீன ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள எந்த பகுதி தொடர்பாகவும் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என அத்வானி உறுதிபடத் தெரிவித்தார்

    • பைய்யா, நீங்க அப்படியே கட்டுரைக்கு பதில் சொன்னா நல்லா இருக்குமே. ஏன்னா உங்கள மாதிரி அக்ரஹாரத்து அம்பிகள் நாட்டு பற்று என்கிற பேர்ல என்ன மாதிரியான கருத்தை வைத்துள்ளார்கள் என்பதை இங்கே வரும் புதியவர்கள் தெரிந்து கொண்டு உஷாராகிக் கொள்ளலாம் அதனால்தான்….அதுலயும் உங்கள மாதிரியான அம்பிகள் வர வர இப்ப எல்லாம் சும்மா பாகிஷ்தான், சீனான்னு,பாரின் டூர் போயிற்ரீங்களே தவிர,கட்டுரைக்கு பதில் சொல்றத குறைச்சுட்டாங்க. ஆனா இப்படி இருந்தா நாங்க என்ன பண்றது, உங்கள மாதிரி நாலு நல்லவங்க வந்து இப்பிடி நாத்தம்புடிச்ச கருத்துக்கள கூவம் ஆறு மாதிரி ஓட விற்றதாலதானே நம்மளோட கருத்துக்கள விரும்பி ஏத்துக்கிறாங்க. தம்பி பைய்யா சீக்கிரமா கட்டுரைக்கு சம்மந்தமா உங்க விலை உயர்ந்த(இல்லாத) கருத்த போடுங்க.

      • \\உங்கள மாதிரி அக்ரஹாரத்து அம்பிகள் நாட்டு பற்று என்கிற பேர்ல என்ன மாதிரியான கருத்தை வைத்துள்ளார்கள் என்பதை இங்கே வரும் புதியவர்கள் தெரிந்து கொண்டு உஷாராகிக் கொள்ளலாம்\\

        ஒரு முஸ்லிம் எப்படி கம்யுனிஸ்ட் ஆக முடியாதோ அதே போல அந்த அக்ரஹாரத்து அம்பி நாட்டுப்பற்று தவிர்த்து காஷ்மீர் விஷயத்தில் தீவிரவாதி ஆகிவிட முடியாது…

        \\நாத்தம்புடிச்ச கருத்துக்கள கூவம் ஆறு மாதிரி ஓட விற்றதாலதானே நம்மளோட கருத்துக்கள விரும்பி ஏத்துக்கிறாங்க\\

        என்னை பொறுத்தவரை வினவில் மருமொழியிடப்படும் அனைத்து கருத்துக்களுமே தர்க்க ரீதியாக அர்த்தம் பொதிந்தவையாக தான் உணர்கிறேன்… அவற்றை நாற்றம் பிடித்த அல்லது நறுமணம் வீசும் கருத்துக்கள் என்று வைகைப்படுத்தி அறியேன்… ஒரு வேலை உலகின் அரசியல் நாற்றங்களை வினவு வெளிச்சப்படுத்துவதால் பின்னூட்டங்களும் அத்தகைய நாற்றங்கலாகவே தெரிகிறதோ…

      • //பைய்யா, நீங்க அப்படியே கட்டுரைக்கு பதில் சொன்னா நல்லா இருக்குமே. //

        காஷ்மீர் மட்டுமல்ல இந்தியாவின் எந்தப்பகுடியையும் ஒரு தீவிரவாதிக்கோ, தீவிரவாதநாட்டுக்கோ, அல்லது ஒரு எதிரிநாட்டுக்கோ விட்டுத்தர மாட்டோம், பக்கிஸ்தானும், சீனாவும் ஆக்கிரமித்த காஷ்மீர் என்ன வளர்ச்சிப்பணிகளாநடக்கிறது, இந்தியாவிற்க்கு ஆப்பு வைக்கத்தானே வேலைநடக்கிறது, அட இலங்கையில் கூட சைனாக்காரன் அதத்தான செய்டுகிடுருக்கான்…

        காஷ்மீர் இந்தியாவில் இருக்கும் போதே அங்கிருக்கும் பூர்வகுடிமக்களான காஷ்மீரி பண்டிட்டுகளை மறுகுடியமர்த்த ஒரு உருப்படியான வழியையும் காணாம், மத வெறியர்களிடமும், தீவிரவாதிகளிடமும் சிக்கி அவர்கள் வாழ்க்கைநாசமானதுதான் மிச்சம், இதுல காஸ்மீர் இந்தியாவவைட்டு பிரிந்து போனால், அவர்கள் கதை முடிவது உறுதி..

        //அக்ரஹாரத்து அம்பிகள் நாட்டு பற்று என்கிற பேர்ல என்ன மாதிரியான கருத்தை வைத்துள்ளார்கள் என்பதை இங்கே வரும் புதியவர்கள் தெரிந்து கொண்டு உஷாராகிக் கொள்ளலாம் அதனால்தான்//

        உஙக தல வினவு மாதிரியே மொக்கயாப் பேசக்கூடாது, அமபிகளுக்கு மட்டும் இந்துத்வா சொந்தம்ல்ல, தோசப்பற்றும், மதப்பற்றும், மொழிப்பற்றும் கொண்ட எத்தனையோ மக்கள் இங்கு உண்டு…

        //சும்மா பாகிஷ்தான், சீனான்னு,பாரின் டூர் போயிற்ரீங்களே தவிர,கட்டுரைக்கு பதில் சொல்றத குறைச்சுட்டாங்க.//
        ண்ணனா னாங்க ஒன்னும் அங்க டூர் போலங்னா…னாளைக்கு நம்ம நாட்டுக்கே நம்ம டூர் போகுரநிலமை ஏற்படக்கூடாது அல்லவா? அதுக்குத்தானுங்கண்ணாவ்….

        //உங்கள மாதிரி நாலு நல்லவங்க வந்து இப்பிடி நாத்தம்புடிச்ச கருத்துக்கள கூவம் ஆறு மாதிரி ஓட விற்றதாலதானே நம்மளோட கருத்துக்கள விரும்பி ஏத்துக்கிறாங்க.//

        எது நாஙகளா மததுவேச கருத்துக்களூடன் கதைகளை எழுதி விடுவது, சொந்தநாட்டுக்குள்ளே தீவிரவாதம் பண்ணுவது, வாழும் இடமெல்லாம் தீவிரவாத்தை விதகைப்பது?

        • //காஷ்மீர் மட்டுமல்ல இந்தியாவின் எந்தப்பகுடியையும் ஒரு தீவிரவாதிக்கோ, தீவிரவாதநாட்டுக்கோ, அல்லது ஒரு எதிரிநாட்டுக்கோ விட்டுத்தர மாட்டோம், பக்கிஸ்தானும், சீனாவும் ஆக்கிரமித்த காஷ்மீர் என்ன வளர்ச்சிப்பணிகளாநடக்கிறது, இந்தியாவிற்க்கு ஆப்பு வைக்கத்தானே வேலைநடக்கிறது, அட இலங்கையில் கூட சைனாக்காரன் அதத்தான செய்டுகிடுருக்கான்…

          காஷ்மீர் இந்தியாவில் இருக்கும் போதே அங்கிருக்கும் பூர்வகுடிமக்களான காஷ்மீரி பண்டிட்டுகளை மறுகுடியமர்த்த ஒரு உருப்படியான வழியையும் காணாம், மத வெறியர்களிடமும், தீவிரவாதிகளிடமும் சிக்கி அவர்கள் வாழ்க்கைநாசமானதுதான் மிச்சம், இதுல காஸ்மீர் இந்தியாவவைட்டு பிரிந்து போனால், அவர்கள் கதை முடிவது உறுதி..//

          அப்பிடி வாங்க வழிக்கு…பாகிஷ்தான் அல்லது சீனா வால் உங்களுக்கு பிரச்சினை வரும் என்று நீங்கள் நினைத்து அதன் பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீர் இந்தியாவுடன் இணந்து இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் காஷ்மீர் மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்து கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நீங்களோ 60 ஆண்டுகளாகியும் பாகிஷ்தான் சீனா என்று காரணம் காட்டி இன்னும் அந்த மக்கள் அமைதி என்றால் என்ன என்று கேட்கும் நிலையிலேயே வைத்துள்ளீர்கள். பாகிஷ்தான் சீனா என்கின்ற புறக்காரணங்களால் மட்டுமே காஷ்மீர் மக்களுக்கு தேவையான அபிவிருத்தியை இந்திய அரசாங்கத்தால் செய்ய முடியவில்லை(60 ஆண்டுகளாக) என்பதை நமக்கும் முதலில் அந்த மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், அதே சமயம் அவர்கள் பாகிஷ்தான், சீனா ஆகிய நாடுகளின் உள் முகத்தையும் தெரிந்தே வைத்துள்ளார்கள். அதன் காரணமாகவே “no to india, no to pakistஹன்” என்கின்ற வாசகங்களை ஏந்தி போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் நீங்களோ அதெல்லாம் தெரியாது காஷ்மீர் எங்களுக்குதான் சொந்தம் என்று வடிவேலு கணக்காக அடம் புடிக்கிறீர்கள்.காரணம் கேட்டால் பிரிந்து சென்றால் அவர்கள் இதை விட அதிகமாக கஷ்டப்படுவார்கள் என்று உங்கள் நியாயத்தை கடந்த கால வரலாறுகளில் காட்டும்படியான சம்பவங்கள் எதுவும் இல்லை என்பதாலும், நிகழ்காலத்திலும் உங்கள் நியாயமானது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதால் வேறு வழி இல்லாமல் எதிர்காலத்திற்கு தள்ளி விடுகிறீர்கள்.மீறிக் கேட்டால் காஷ்மீரில் ஏதோ பண்டிட்டுகளுக்கு எதிராக‌ மதக்கலவரங்கள் ஓயாமல் ஒரு நாள் விடாமல் நடந்து கொண்டிருப்பது போல் ஐயோ….பண்டிட்டுகள் என்று இழுக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள்(பண்டிட்டுகள் விஷயத்தில் அதற்குள் நீங்கள் கேள்வி எழுப்பிய பின்பு செல்கிறேன்).

          //உஙக தல வினவு மாதிரியே மொக்கயாப் பேசக்கூடாது, அமபிகளுக்கு மட்டும் இந்துத்வா சொந்தம்ல்ல, தோசப்பற்றும், மதப்பற்றும், மொழிப்பற்றும் கொண்ட எத்தனையோ மக்கள் இங்கு உண்டு…//

          என்ன‌ விட்டா இந்துத்துவாங்கிற‌து உல‌க‌த்தில் உள்ள‌ அனைவ‌ருக்கும் தேச‌ப் ப‌ற்று என்ப‌தற்கு முன்நிப‌ந்த‌னை என்று சொல்வீர்க‌ள் போல‌வே.

          //ண்ணனா னாங்க ஒன்னும் அங்க டூர் போலங்னா…னாளைக்கு நம்ம நாட்டுக்கே நம்ம டூர் போகுரநிலமை ஏற்படக்கூடாது அல்லவா? அதுக்குத்தானுங்கண்ணாவ்….//

          அப்பிடீன்னா அவ‌ங்க‌ள‌ நிம்ம‌தியா வாழ‌ வ‌ழி செய்திருக்க‌ வேண்டும். இவ்வ‌ளவு நாள் அப்பிடி உங்க‌ளால் அந்த‌ ம‌க்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வ‌ழி செய்ய முடியாத‌ கார‌ண‌த்தால் அவ‌ர்களுடைய‌ ச‌ந்தேக‌த்தை போக்கி ந‌ம்பிக்கை த‌ரும் வித‌மாக‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமையை கொடுத்து அங்கே வாக்கெடுப்பு ந‌ட‌த்த‌ வேண்டும். அத‌ற்கும் உங்க‌ளுக்கு ப‌ய‌ம் என்றால் அந்த‌ ம‌க்க‌ள் ம‌ட்டும்(காஷ்மீர் மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்கள்) என்ன கேணயர்களா.

          //எது நாஙகளா மததுவேச கருத்துக்களூடன் கதைகளை எழுதி விடுவது, சொந்தநாட்டுக்குள்ளே தீவிரவாதம் பண்ணுவது, வாழும் இடமெல்லாம் தீவிரவாத்தை விதகைப்பது?//

          இருக்குற‌த‌ ம‌க்க‌ளுக்கு தெரிய‌ச் செய்தா தீவிர‌வாதம? ம‌த‌த்துவேஷ‌மா?

          இதையெல்லாம் மீறி திரும்ப‌வும் காஷ்மீர் எங்க‌ள் நாடு என்று நீங்க‌ள் ஆர‌ம்பித்தால் என‌க்கு ஒன்னுதான் தோனுது “பித்த‌லாட்ட‌க்கார‌ர்க‌ளின் க‌டைசி
          புக‌ழிட‌ம் தேச‌ப‌க்தி”

          • \\இதையெல்லாம் மீறி திரும்ப‌வும் காஷ்மீர் எங்க‌ள் நாடு என்று நீங்க‌ள் ஆர‌ம்பித்தால் என‌க்கு ஒன்னுதான் தோனுது “பித்த‌லாட்ட‌க்கார‌ர்க‌ளின் க‌டைசி புக‌ழிட‌ம் தேச‌ப‌க்தி”\\

            இந்தியாவில் உள்ள இந்துக்களும், கிறித்தவர்களும், சீக்கியர்களும், பௌத்தர்களும், ஜைனர்களும் இன்ன பிற மதத்தினை சேர்ந்தவர்களும் காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் என்பதில் உறுதியாக உள்ளனர்… ஏனெனில் அவர்கள் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமிதம் கொண்டுள்ளனர்..

            ஆனால் சுதந்திர இந்தியா வழங்கிய பாஸ்போர்டில் வளைகுடா சேக்கிடம் ஒட்டகம் மேய்த்தும், காரோட்டியும், மூட்டை தூக்கியும், கப்பல் கழுவியும் இன்ன பிற அடிமை வேலைகள் செய்யும் பத்தாவது மட்டுமே படித்த இந்த தற்குறி கொத்தடிமை கூட்டம் மட்டும் காஷ்மீர் பாக்கிஸ்தானுக்கு சொந்தம் என்று கூறுகிறது… அவுரங்கசீப் இருந்திருந்தால் நாட்டுப்பற்று என்றால் என்ன என்று தெரியாத இவனையெல்லாம் ஏன்டா மதம் மாற்றினோம் என்று தூக்குல தொங்கி இருப்பான்…

            • காஸ்மீரில் கொல்லப்படுவது முஸ்லீம்கள் தானே அது பற்றி இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், ஜைனர்களுக்கும் என்ன கவலை.
              அவர்கள் காஸ்மீரிகள் (முஸ்லீம்கள்) கொல்லப்படுவதை ரசிக்கிறார்கள். உங்கள் மொழியில் அது கண்டிப்பாக தேச பக்திதான். அப்புறம் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்று விட்டதே! . தேச பக்தி கொண்டாட்டங்கள் முடிந்து விட்டதா? இந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்று இருந்தால் அந்த தேச பக்திக்கு கூடுதல் மரியாதை.

              சுதந்திர இந்திய வழங்கிய பாஸ்போர்டில் கொத்தடிமை வேலை செய்பவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லீம் அல்லாதவர்கள் தான். காஸ்மீர பாகிஸ்தானிடம் கொடுக்க யாருப்பா இங்க பேசினா? முஸ்லீம்களை கொல்லாதீர்கள் என்று கூறினாலே அதன் பேர் தேசவிரோதமா? ஈழ தமிழனை கொல்லாதீர்கள் என்றால் அவன் தீவிர வாதியா? பெயரில் மட்டும் மனிதனாக இல்லாமல் மனித தன்மையுடன் சிந்திக்கவும் செய்யுங்கள்.

              எந்த வரலாற்று அடிப்படையில் காஸ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு பேசுங்கள்.

                • \\காஸ்மீரில் கொல்லப்படுவது முஸ்லீம்கள் தானே அது பற்றி இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், ஜைனர்களுக்கும் என்ன கவலை.\\
                  இந்த உலகில் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை நண்பரே…

                  \\அவர்கள் காஸ்மீரிகள் (முஸ்லீம்கள்) கொல்லப்படுவதை ரசிக்கிறார்கள்.\\
                  எப்படியா இப்படி எழுத முடிகிறது? கொலையை ரசிக்கும் எந்த கல் நெஞ்சத்தையும் நான் எந்த மதத்திலும் கண்டதில்லை…

                  \\கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்று விட்டதே! . தேச பக்தி கொண்டாட்டங்கள் முடிந்து விட்டதா?\\
                  நமது தேசிய விளையாட்டு ஆக்கி போட்டியில் இந்தியா தங்கம் வென்றால் நிச்சயம் கொண்டாடுவோம்…

                  \\காஸ்மீர பாகிஸ்தானிடம் கொடுக்க யாருப்பா இங்க பேசினா? \\
                  யாரும் பேசவில்லை! பேசாமலிருப்பது சந்தோசம்…

                  \\முஸ்லீம்களை கொல்லாதீர்கள் என்று கூறினாலே அதன் பேர் தேசவிரோதமா\\
                  இல்லை.. கொல்லுங்கள் என்று யாரும் சொன்னால் அது தான் மனித தன்மையற்ற குரோதம்…

                  \\ஈழ தமிழனை கொல்லாதீர்கள் என்றால் அவன் தீவிர வாதியா\\
                  இங்கு ஈழத்தை ஏன் இழுக்கிறீர்கள்… ஈழ விவாகரமும் காஷ்மீர் விவகாரமும் சம அந்தஸ்தில் வைத்து நடுநிலையாளர்களால் இன்று விமர்சிக்கப்படுவது ஈழத்தின் துரதிர்ஷ்டமே..

                  \\எந்த வரலாற்று அடிப்படையில் காஸ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு பேசுங்கள்\\

                  In the first half of the first millennium, the Kashmir region became an important center of Hinduism and later of Buddhism; later still, in the ninth century, Kashmir Shaivism arose….

                  \\அவுரங்கசீபிற்கு முன்பே இங்கு இஸ்லாம் வந்து விட்டதையா\\
                  ஒ வந்ததுதானோ… நான் கூட இங்கு தோன்றியதோ அல்லது பூர்வ குடிகளோ என நினைத்தேன்.. வந்தேறிகளா… !!!

                  • //வந்தேறிகளா// – நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். பூர்வ குடிகள். இஸ்லாம் நாங்கள் ஏற்றுக்கொண்ட மதம். மனிதாபிமானத்தை எழுத்துகளில் மட்டும் கொண்ட உம்மிடம் எல்லாம் இதனை விளக்கும் நிலையில் இருப்பது எமது துரதிஷ்டமே!!

                    //ஈழ விவாகரமும் காஷ்மீர் விவகாரமும்// – கொல்லப்படுவது அப்பாவிகள் தான்.

                    /யாரும் பேசவில்லை! / – உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி .

                    //எப்படியா இப்படி எழுத முடிகிறது? கொலையை ரசிக்கும் எந்த கல் நெஞ்சத்தையும் நான் எந்த மதத்திலும் கண்டதில்லை…// – ரசிக்கப்படாமல் எப்படி மோடிகளும், அத்வானிகளும் இங்கு கொண்டாட படுகிறார்கள்? உதாரண புருசனாக அடையாளம் காட்டப்படுகிறார்கள்? மோடியால் எப்படி இங்கு முதல்வராக தொடர முடிகிறது?

                    //இல்லை.. கொல்லுங்கள் என்று யாரும் சொன்னால் அது தான் மனித தன்மையற்ற குரோதம்…// – இது மோடிக்கும் பொருந்துமா?

                    • \\நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். பூர்வ குடிகள். இஸ்லாம் நாங்கள் ஏற்றுக்கொண்ட மதம்\\

                      எந்த வருடம் ஏற்று கொண்டீர்கள் என்று நினைவு இருக்கிறதா… அப்படி எத்தனை வருடத்துக்கு ஏற்று கொண்டுள்ளீர்கள்? ஒப்பந்தம் முடிந்த பின்னர் மறு ஆய்வு செய்து வேறு மதத்தை ஏற்று கொள்ள டெண்டர் விடுவீர்களோ… 🙂
                      இஸ்லாமை ஏற்று கொள்வதற்கு முன்னர் எந்த மதத்தில் இருந்தீர்கள்? சத்தியமாய் தெரியுமா? நீங்கள் ஏற்று கொண்ட எத்தனையாவது மதம் இஸ்லாம்?
                      நும் பல நூற்றாண்டு முன் வாழ்ந்த மூதாதையருக்கு மத நுகர்வில் இருந்த தெளிவும் சுதந்திரமும் உமக்கு இருக்கிறதா… பல வேறு மதங்களை நுகர்ந்தெரிந்து இஸ்லாமும் அவற்றுள் ஒன்றாக இருத்தினர்… அவ்வளவே…

                      \\ஈழ விவாகரமும் காஷ்மீர் விவகாரமும் – கொல்லப்படுவது அப்பாவிகள் தான்\\

                      ஈழத்தில் கொல்லப்படுவது,வதைக்கப்படுவது, சிதைக்கப்படுவது, சீரழிக்கப்படுவது அப்பாவி தமிழன்…
                      காஷ்மீரில் ராணுவத்தால் கொல்லப்படுவான் தீவிரவாதி…

                      \\மோடியால் எப்படி இங்கு முதல்வராக தொடர முடிகிறது?\\
                      ஒரு இந்திய பூர்வ குடி, மண்ணின் மைந்தன், இந்திய பாரம்பரியம் அறிந்தவன் , வந்தேறியல்லாதவன், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை உள்ளவன், பரத தாயை நேசிப்பவன் இந்தியாவில் முதல்வர் ஆக இருப்பது உங்களுக்கு என்ன எரிச்சல்… ?

      • Indha asad thaan metha padicha medhavi .. matha yaarukkum edhuvume theriyadhupa/// Paiya agraharathu Ambi ivaru hyderabad nijammu.. solla vandhuttaru…ungalalam indiala innum irukka vidrathe thappuda

        • //எந்த வருடம் ஏற்று கொண்டீர்கள் என்று நினைவு இருக்கிறதா… அப்படி எத்தனை வருடத்துக்கு ஏற்று கொண்டுள்ளீர்கள்? ஒப்பந்தம் முடிந்த பின்னர் மறு ஆய்வு செய்து வேறு மதத்தை ஏற்று கொள்ள டெண்டர் விடுவீர்களோ…
          இஸ்லாமை ஏற்று கொள்வதற்கு முன்னர் எந்த மதத்தில் இருந்தீர்கள்? சத்தியமாய் தெரியுமா? நீங்கள் ஏற்று கொண்ட எத்தனையாவது மதம் இஸ்லாம்?// – அது பற்றி உங்களுக்கு என்ன கவலை. அதனை உம்மிடம் விளக்க வேண்டிய அவசியமும் இல்லை.

          //காஷ்மீரில் ராணுவத்தால் கொல்லப்படுவான் தீவிரவாதி… // – உங்கள் விஷய ஞானம் மற்றும் மனிதாபிமானம் புல்லரிக்க வைக்கிறது.

          //ஒரு இந்திய பூர்வ குடி, மண்ணின் மைந்தன், இந்திய பாரம்பரியம் அறிந்தவன் , வந்தேறியல்லாதவன், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை உள்ளவன், பரத தாயை நேசிப்பவன்// – அவன் முதல்வராக இருப்பது உங்களை எப்படி குஷி படுத்துகிறது. எதிர்காலத்தில் இன்னும் பல முஸ்லீம்கள் கொல்லப்படலாம் என்ற உங்களது நப்பாசை தான். நீங்கள் தானே உங்கள் முந்தைய பதிலில் மனித நேயம் பற்றி பேசியவர். ஹா.. ஹா… ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

          பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட அத்வானி தானையா வந்தேறி.

          • //இஸ்லாமை ஏற்று கொள்வதற்கு முன்னர் எந்த மதத்தில் இருந்தீர்கள்?// – நிச்சயமாக இந்துவாக இருந்திருக்க மாட்டேன். ஏதோ ஒரு ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்திருப்பேன்.

            //பல நூற்றாண்டு முன் வாழ்ந்த மூதாதையருக்கு மத நுகர்வில் இருந்த தெளிவும் சுதந்திரமும் உமக்கு இருக்கிறதா// – எமது குரல் வளையை நெரித்து கொண்டிருந்த சாதிய அடிமைதனதிலிருந்து வெளியேறியதை கூட சகித்துக்கொள்ள முடியாத நீர் தெளிவையும் சுதந்திரத்தையும் பற்றி பேச அருகதை அற்றவர் .

            • \\நிச்சயமாக இந்துவாக இருந்திருக்க மாட்டேன். ஏதோ ஒரு ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்திருப்பேன்\\
              உங்களுடைய இந்து துவேஷம் நன்கு விளங்குகிறது… இந்துவும் இஸ்லாமும் மதங்கலேயன்றி சாதி அல்ல…எந்த மதம் என்று கேட்டால் ஏதோ ஒடுக்கப்பட சாதி என்று உளர்கிறீரே!!

              \\பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட அத்வானி தானையா வந்தேறி\\

              மோடி முதல்வரானது பற்றிய கருத்தில் அத்வானி எங்கே வந்தார்? இருந்தும் சொல்கிறேன்..
              அத்வானி பிறந்தது பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கராச்சியில்… 48 க்கு அப்புறம் தான்யா பாகிஸ்தான் என்ற நாடு வந்தது.. அதற்கு முன் பிறந்தவரை வந்தேறி என்று சொல்லும் உமது அறிவு மலைக்க வைக்கிறது..

              • ஒடுக்கப்பட்ட சாதியினரை உங்கள் சுய நலத்திற்காக நீங்கள் இந்து என்று அழைக்கிறீர்கள் என்பது வினவு மூலமான எனது புரிதல். இதில் நான் எங்கு உளறி விட்டேன்…

                //வந்தேறி// – இங்கு தான் அத்வானி வருகிறார். மோடி விசயத்தில் அல்ல.
                திருவள்ளுவர் இந்தியாவிலும் சரி பிரிட்டிஷ் இந்தியாவிலும் சரி பிந்தைய இந்தியாவிலும் சரி நாங்கள் இங்கே தான் இருக்கிறோம். உமது ஊனக்கன்னுக்கு நாங்கள் மட்டும் எப்படி வந்தேறிகளாக தெரிகிறோம். இதிலிருந்து உமது முஸ்லீம் துவேசம் தெரிகிறது.
                அப்புறம் மோடி பற்றிய விசயத்தில் உங்கள் மௌனம் உங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்கிறது. அவ்வளவு தான்.

                • \\ஒடுக்கப்பட்ட சாதியினரை உங்கள் சுய நலத்திற்காக நீங்கள் இந்து என்று அழைக்கிறீர்கள்\\

                  நீங்க தெளிவா புரிஞ்சுக்கலை பாய்… ஒடுக்கப்பாட்டவன் தான் இந்து என்று அழைக்கப்படுவதாக கூறினால் அப்பா பாப்பன், செட்டி, பிள்ளை, தேவர் மற்ற பிற ஒதுக்கப்படாத சாதி எல்லாம் இன்னா மதம்னு வினவு உங்களுக்கு சொல்லவே இல்லையா?

                  \\வந்தேறி – இங்கு தான் அத்வானி வருகிறார். மோடி விசயத்தில் அல்ல\\
                  அப்பாடா இப்பயவாது மோடி விசயத்தில் அத்வானியை தேவை இல்லாமல் இழுத்து அவரை திட்டும்போது இவரையும் திட்டும் குறுகிய மனப்பாங்கு இல்லாமல் போனால் மகிழ்வே…
                  \\நாங்கள் மட்டும் எப்படி வந்தேறிகளாக தெரிகிறோம்\\
                  ஏழாவது எட்டாவது வரலாறு புஸ்தகத்தை திறந்து பார்க்கவும்… சமச்சீர் கல்வியாம்ல ராஜ புத்திரர் வரலாறு, விஜய நகர பேரரசு வரலாறு வரைக்கும் இருக்கும் அப்புறம் ‘முகலாயர் படையெடுப்பு’ அப்படின்னு எதாவது இருக்கும் தேடிப்பாரும்…

                  • //நீங்க தெளிவா புரிஞ்சுக்கலை பாய்… ஒடுக்கப்பாட்டவன் தான் இந்து என்று அழைக்கப்படுவதாக கூறினால் அப்பா பாப்பன், செட்டி, பிள்ளை, தேவர் மற்ற பிற ஒதுக்கப்படாத சாதி எல்லாம் இன்னா மதம்னு வினவு உங்களுக்கு சொல்லவே இல்லையா?//

                    — ஒடுக்கப்பட்டவன் இந்து என்று அழைக்கப்படுகிறான் ஆனால் அவன் இந்து அல்ல என்பது எனது புரிதல். இதற்கும் உங்கள் பதிலுக்கும் என்ன சம்பந்தம்.

                    //ஏழாவது எட்டாவது வரலாறு புஸ்தகத்தை திறந்து பார்க்கவும்… சமச்சீர் கல்வியாம்ல ராஜ புத்திரர் வரலாறு, விஜய நகர பேரரசு வரலாறு வரைக்கும் இருக்கும் அப்புறம் ‘முகலாயர் படையெடுப்பு’ அப்படின்னு எதாவது இருக்கும் தேடிப்பாரும்…//

                    நேபாளம் என்ற இந்து நாடு இந்தியாவின் மீது படை எடுத்தால் அதனை ‘இந்துக்கள் படையெடுப்பு’ என்று சொல்வோமா… உங்கள் ஞானம் புல்லரிக்க வைக்கிறது. முகலாயர் படையெடுப்புக்கு முன் ஒருங்கிணைந்த இந்தியா என்ற ஒன்றே கிடையாது. வரலாற்று திரிபுவாதிகளின் பித்தலாட்டம் தான் நமது வரலாறு. உலகமும் அதன் வரலாறும் ரொம்ப பெருசு சார்… நீங்க எட்டாவது வரலாற்று புத்தகத்துடன் நின்று விட்டீர்கள் போலும்.

                    • //மோடி விசயத்தில் அத்வானியை தேவை இல்லாமல் இழுத்து அவரை திட்டும்போது இவரையும் திட்டும் குறுகிய மனப்பாங்கு இல்லாமல் போனால் மகிழ்வே…//

                      தேவை இல்லாமல் சமசீர் கல்வியை இங்கு இழுத்து வந்து திட்டும் உமது குறுகிய மனப்பான்மை எமக்கு வியப்பை தரவில்லை.

  10. \\மிகச் சிக்கலான காஷ்மீர் விவகாரத்தைப் பொருத்தவரையில் தீர்வு எதுவாக இருக்க வேண்டுமென்றாலும் அது அம்மக்களின் விருப்பத்துக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகக் கோரிக்கையாகவும் விருப்பமாகவும் இருக்க முடியும்\\

    திபெத் விவகாரத்திலும் இதே நிலை எடுப்பீர்களா?

    • //* திபெத் விவகாரத்திலும் இதே நிலை எடுப்பீர்களா? *//

      ஏதோ திபெத்தை வினவு வைத்திருக்கிற மாதிரி கேள்வி… அறிவை ஆர்.எஸ்.எஸ்.-மோடி-ஜெயலலிதாவிடம் அடகு வைத்து விட்டால் இப்படிதான் கேள்வி கேட்க தோணுமோ?

      • கொள்கை சார்ந்த கேள்விகளை பொது வெளியில் கேட்கும்போது அவை கொள்கை விளக்கங்களாக வெளிப்படும்… வினவுக்கும் தோழர்களுக்கும் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் சார்ந்த பொது கொள்கைகள் மட்டும் அல்லாது பல்வேறு உலக விடயங்களில் குறிப்பாக ருசியா, சைனா, அமெரிக்கா மற்றும் அநேக புவியல் நாடுகளின் அரசியல் நிலவரங்கள் மீதும் கொள்கை தெளிவு உண்டு… அக்கொள்கை தெளிவினை கேட்டு பெறுவதற்கு அறிவை அடகு வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை…

        திபெத்தை பற்றி வினவில் கட்டுரை வடிக்க அல்லது கேள்வி கேக்க வினவு திபெத்துக்கு சொந்தக்காரனாக இருக்க வேண்டும் என்று சொல்வதுதான் அறிவாளித்தனமோ…

        உங்கள் கூற்றுப்படி ஆர்.எஸ்.எஸ்.-மோடி-ஜெயலலிதா ஆகியோர் அறிவை அடகு பிடிக்கும் வேலை செய்பவர்களாக இருந்ததால் இன்றைய தேதியில் அதிகப்படியான மக்களின் அறிவை அடகு பிடித்து இந்தியாவின் மீப்பெரும் அறிவு செல்வந்தர்களாக ஆகி இருப்பார்… சுருக்கமாக சொன்னால் தலை சிறந்த அறிவாளி ஆகி இருப்பர்…

      • பல பிரதேசங்களுக்கு சுயநிர்ணய உரிமையளித்து அப்பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்ட ஸ்டாலினையும் கம்யூனிச ஆசானாக ஏற்றிருக்கும் வினவு, திபெத் விவகாரத்தில் மட்டும் மாறுபட்ட நிலையை எடுக்குமா என்ன.

        • //பல பிரதேசங்களுக்கு சுயநிர்ணய உரிமையளித்து அப்பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்ட ஸ்டாலினையும் கம்யூனிச ஆசானாக ஏற்றிருக்கும் வினவு,///

          சுயநிர்ணிய ‘உரிமையா’ ? கனவு கண்டீர்களா ? உக்ரேன், உச்பெக் போன்ற பழைய சோவியத் குடியரிசுகளின் வரலாறு படித்து பாருங்களேன். அம்மக்கள் ஸ்டாலின் பற்றி இன்றும் என்ன நினைக்கிறார்கள் என்று விசாரித்து பார்க்கவும். ராஜ்பக்ஸே பற்றி தமிழர்கள் ‘கருதுவதை’ போல் தான். முக்கியமாக உக்கேரியர்கள் ஸ்டாலினை மன்னிக்கவோ, மறக்கவோ தயாரில்லை. 1930களில், 40களில் உக்ரேனிய தேசியவாதம் மற்றும் உரிமைகள் மிக கொடூரமாக நசுக்கப்பட்டது. ரஸ்ஸியனைசேனன் என்றால் என்னவென்று தேடிப் படிக்கவும். போலந் நாட்டு மக்கள் இன்னும் கொடுமைக்கு ஆளானார்கள். வர்லாறு அறியாதவர்கள் தான் ஸ்டாலினை இன்னும் கொண்டாடுபவர்கள். ஹிட்லருக்கு ஒப்பான மனித விரோத குற்றங்கள் புரிந்தவர் ஸ்டாலின். 30 ஆண்டு காலம் சர்வாதிகாரியாக இருந்தார்.

  11. காஸ்மீர் விசியத்தில் அன்னாவில் ‘கருத்துடன்’ முரண்பட நிறைய உள்ளது. சரி. ஜன் லோக் பால் மசோதாவை விட அருணா ராய் அவர்களில் லோக் பால் மசோதா தான் சரியாக தெரிகிறது. ஆனால் லோக்பாலுக்கான போராட்டமே கூடாது மற்றும் அவர்கள் எல்லாம் கோமாளிகள் என்பது மேலோட்டமான, மூடத்தனமான வாதம்.

    கர்னாட்டாகாவில் லோக் ஆயுத்தா உள்ளது. அதன் ஆணையில் பேரில் தான் இன்று எடியுரப்பா பதவி இழந்து, உள்ளே போக வேண்டிய நிலை. லோக் பால் மசோதாவின் ஒரு அங்கம், மாநிலங்களில் லோக் ஆயுத்தாக்களை நிறுவுவது. இந்தியா முழுவது எல்லா மாநிலங்களிலும் இவை ஒழுங்காக நிறுவப்பட்டல் பல முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மாட்டுவார்கள். ஆனால் நீங்க தான் போராட்டமே வேஸ்ட் என்கிறீர்களே…

    அன்னாவின் நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. இனிமேல் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் இருக்காது.ஊழல்வாதிகளுக்கு கொண்டாட்டம் தான். business as usual. நீங்களும் இணைய்த்தில் தொடர்ந்து முழங்குங்க.

    அன்னா, பி.ஜெ.பியையும் எதிர்ப்பவர்தான். குஜாராத் போலிஸ் அதிகாரியை சமீபத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக மோடி கைது செய்ததை கடுமையாக சாடியிருக்கிறார். மோடியை ‘எச்சரித்தும்’ பேசினார். எனவே சும்மா முத்திரை குத்தாதீங்க. அவரின் ஆதாரவாளர்கள் பலரும் இந்துதுவர்கள் தான். காஸ்மீர் பற்றி hawkish மனோபாவம் கொண்டவர்கள் தான். இந்துத்துவர்கள் அல்லாத பல ’தேசியவாதிகளும்’ இதே நிலைபாடு கொண்டவர்கள். உடனே அவர்களை கோமாளிகள் என்பது லூஸுத்தனம். ஈழ விசியத்தில், கண்மூடித்தனமாக புலிகளை பலரும் ஆதரிக்கின்றனர். ஆனால் அவர்கள் இந்துத்துவத்தை ‘எதிர்ப்பவர்கள்’ ; புலிகளின் மீறல்களை கண்மூடித்தனமாக ஆதிர்ப்பவர்களை உடனே ‘கோமாளிகள்’ என்றால் எப்படியிருக்கும் ? ஒரு விசியத்தில் ஒரு நிலைபாட்டை எடுத்தாலே, உடனே அவர்களை இழிவாக பேசுவது இணையத்தில் தான் சர்வ சகஜம்,

    சரி,ஆனால் லோக் பால் தேவையா என்பது வேறு விசியம். அதை எப்படியாவது வர விடாமல் தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் செய்யும் சதி இனி வெற்றிதான். சரி, நாம் தொடர்ந்து இங்கு ஊழல் பற்றி கதைப்போம். கதைக்குதுக்கொண்டே இருப்போம்…

    • @ அதியமான்,

      “லோக் பால் மசோதாவின் ஒரு அங்கம், மாநிலங்களில் லோக் ஆயுத்தாக்களை நிறுவுவது. இந்தியா முழுவது எல்லா மாநிலங்களிலும் இவை ஒழுங்காக நிறுவப்பட்டல் பல முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மாட்டுவார்கள்.”

      அப்ப உங்க முதலாளிகளும் அதிகாரிகளும் தப்பி விடுவார்கள் இல்லையா ? இதைத்தானே ஐயா வினவு ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறார். இப்போதாவது ஒப்புக்கொண்டீரே,நன்றி !

      • //அப்ப உங்க முதலாளிகளும் அதிகாரிகளும் தப்பி விடுவார்கள் இல்லையா ? இதைத்தானே ஐயா வினவு ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறார். இப்போதாவது ஒப்புக்கொண்டீரே,நன்றி !///

        என்ன உளரல் இது ? மேலும் அதென்ன ‘உங்க’ முதலாளிகள், அதிகாரிகள். நீங்க என்ன செவ்வாய் கிரகத்திலா வாழ்கிறீர்கள் ? :))) அரசியல்வாதிகள் மாட்டும் போது, கூடவே ஊழல் அதிகாரிகளும், ஊழல் முதலாளிகளும் சேர்ந்தே தான் மாட்டுவர். (முதலாளிகளில் பல வகை உண்டு. ஊழல் செய்பவர்கள் இந்தியாவில் தான் அதிகம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் தான்.)

        வினவு ‘ஆரம்பத்திலிருந்து’ என்ன சொல்லிவருகிறது ? conspiracy nuts always see ‘conspiracy’ in anything and everything. இந்த ‘போராட்டமும்’ முதலாளிகள் மற்றும் ஊடகங்களின் ’சதிகள்’ என்ற மாபெரும் ‘உண்மையை’ தான் வினவு ‘கண்டுபிடித்து’ சொல்லி வருகிறது. ஆனால் மேதா பட்கர் போன்ற ஆர்வலர்கள் இப்போராட்டத்தை ஆதரித்தே வருகின்றனர். (கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எதோ ஒரு வகை லோக்பாலின் தேவை மற்றும் போராட்டத்தை மறுக்கவில்லை). லோக் ஆயுத்தா உருப்படியான வேலையை கர்னாடகத்தில் செய்துள்ளது. இந்தியா முழுவதும் அது சாத்தியாமானால் நல்லதுதானே. இல்ல இப்படியே தொடரட்டுமா ?

  12. வினவு தோழர்கள் மற்றும் இதர மார்க்சியர்களுக்கு ஒரு கேள்வி (ரொம்ப நாள கேட்க நினைத்தது) :

    கஸ்மீர் போன்ற ‘விடுதலை’ போராட்டங்களை ஆதரித்து, இந்திய மேலான்மையை, ராணுவ மீறல்களை ‘எதிர்க்கும்’ உங்கள் நிலைபாடுகளுடன் உடன்படுகிறேன். பாராட்டுகிறேன். (லிபர்டேரியன் என்று எம்மை சொல்லிக்கொள்கிறேன். சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் ஆதிக்க எதிர்ப்பு தான் இதற்க்கு அடிப்படை). உலகில் எந்த பகுதியிலும், எந்த கால கட்டத்திலும், இதே போல் ஒரு ஆதிக்கம் மற்றும் அடக்குமுறை நட்ந்தால், அதையும் இதே போல் பார்பட்சமில்லாமல் ‘எதிர்க்கும்’ மனோபாவம் உங்களுக்கு இருந்தால், மிகவும் பாராட்டுவேன். ஆனால் கம்யூனிசம் என்ற பெயரில், இதை விட கொடுமயான, வெளியே அதிகம் தெரியாத அடக்குமுறைகள் நடந்துள்ளன. அதை இன்றும் நியாயப்படுத்துகிறீர்கள். இரட்டை வேடம் தான் இது.

    ’முதலாளித்துவம்’ என்ற பெயரிலும் பெரும் கொடுமைகள், ஆதிக்கங்கள் நட்ந்துள்ளன. அதை கண்டிப்பதில் எமக்கு தயக்கமே இல்லை. இன்றும் தான். மீறல்களை யார் செய்தாலும், என்ன பெயரில் செய்தாலும் அவை தவறுகள் தான்.

    சோவியத் ரஸ்ஸியாவில் (அது ஸ்டாலினுக்கு பின் ‘சமூக ஏகாதிபத்தியமாக’ சீரழியும் முன்பு), ஸ்டாலின் காலங்களில், ரஸ்ஸியா தவிர இதர சோவியத் குடியரசுகள் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளை ஸ்டாலின் நசுக்கியத்தை இன்றும் வரலாற்று கட்டாயம் என்றே நியாயப்படுத்துகிறீர்கள். இது இரட்டை வேடம் தானே ? சமூக ஏகாதிபத்தியமாக சோவியத் ரஸ்ஸியா ஸ்டாலினுக்கு பின்பு சீரழியவில்லை. ஸ்டாலின் தலைமை தாங்கிய சுமார் 30 வருடங்களிலேயே அப்படி ‘சீரழிந்துவிட்டது’ என்பதே வரலாறு.

  13. யோவ் வினவு…. ஒன்னய மாதிரி ஆளெல்லாம் இருக்கிறதுனாலதான் இந்தியாவ இன்னும் கூறு கூறா போட்டு வித்துக்கிட்டு இருக்காங்க… வினவுவே பாகிஸ்தான் நாட்டுல இருந்து வெளியாகிற தமிழ் தெரிஞ்ச முஸ்லீம் பத்திரிக்கை என்று நான் சந்தேகிக்கிறேன்…

    உடனே வினவுக்கு ஜால்ரா தட்ரவங்க, கூஜா தூக்குறவங்க எல்லாம், “இவன் பேர பாத்தாலே தெரியுது.. இவன் அய்யரு, அதுனால இப்படில்லாம் பேசுறான்”னு சொல்ல ஆரம்பிச்சுருவாங்க… அவுங்கலுக்கெல்லாம் நான் அட்வான்ஸா சொல்லிக்கிறேன்.. நான் அய்யருமில்ல… அல்லாவுமில்ல…

    வினவுக்கு பொலப்பே இந்துக்கள சும்மா திட்டுறதுதான்… அட போங்கப்பா….

  14. இந்து மதத்துக்குத்தான் ஒரு தலைவனும் இல்ல, கேக்குறதுக்கு ஒருநாதியும் இல்ல… அதுனால இங்க நீங்க எல்லாரும் எப்டி வேணாலும் திட்டலாம்…

    எங்க, தைரியம் இருந்தா ஃபேஸ் புக்குல வந்து முஸ்லீம்க்கு எதிரா இல்ல அல்லாவ திட்டி ஒரு கட்டுரையோ இல்ல படமோ போட்டுப்பாருங்க… ஒங்கள போட்டுத்தள்ளீருவாய்ங்க… போங்கைய்யா நீங்களும் ஒங்க கட்டுரைகளும்… சே.. வெறுத்துப்போச்சு…

  15. வினவு,

    இது வரை பல பேருக்கு பூணூல் போடுவீர்கள் என்று தெரியும். ஆனால் நீங்கள் காக்கி டௌசரும் போட்டு விடுவீர்கள் என்று தற்பொழுது தான் தெரிந்து கொண்டேன் 🙂

    சரி அவர் டௌசராகவே இருந்து விட்டு போகட்டும்

    அன்னா ஒரு சாதாரண ஆளாக இருந்து மது விசயங்களை அவருடைய கிராமத்தில் ஒழித்து உள்ளார். அது மட்டும் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து நல்ல மகசூல் ஏற்பட செய்துள்ளார்.

    இத்தனை பெரிய கம்யூனிஸ்டுகள் என்ன கிழித்துள்ளீர்கள். ஏதாவது ஒரு கிராமத்தையாவது சீர்படுத்தி விவசாயம் அல்லது நீர் மேலாணமை போன்ற விசயங்களை செய்து உள்ளீர்களா?

    யாருக்குமே தெரியாத அன்னா ஹசாரேவை தூக்கி பிடித்தது கம்யூணிஸ் தீவிர வாதிகளை ஆதரிக்கும் முதளாலிதுவ மீடியாவான் NDTV யும், அப்ரகாமிய அடிவருடி CNN – IBN னும் தான்… இந்த போலி மதசார்பின்மை பேசி கொண்டு… போலி கம்யூனிஸ்டுகள் போடும் காசுக்கு நாக்கை தொங்க போட்டு கொண்டு அலையும் பரதேசி தொலைக்காட்சி கயவர்கள் எண்ணம் என்ன என்று தெரியாமல் இருக்க அந்த அளவுக்கு மூளை இல்லாதவர்கள் என்று மக்களை….வினவு நினைக்கிறதோ?

    RTI போன்ற பல விசயங்கள் மக்கள் போராட்டத்தினால் தான் வந்தது.

    கூலிக்கு வேலை பார்க்கும் அதாவது ஏகாதிபத்திய அல்லது முதலாளீத்துவ அடிமை நாய்களான போலி கம்யூனிஸ்டுகளால் குறைக்க / கடிக்க தான் முடியுமே தவிர, யாருக்கும் நல்லது செய்ய முடியாது

  16. இந்து பயங்கரவாதிகள் என்கிற வார்த்தைகளுக்கு பதில் இந்துத்துவ பயங்கரவாதிகள் என்று சொல்லவும். இந்து என்று சொல்லி வீணாக இவர்களுக்கு பலம் சேர்க்க வேண்டாம். இவர்கள் இந்துத்துவவாதிகள். ஒரு குறிப்பிட்ட மேல் சாதியினரின் பயங்கரவாததிற்கு ஏன் அனைத்து இந்துக்களையும் இழுக்க வேண்டும்?

  17. இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால் இதை பிராமண பயங்கரவாதம் என்று எழுதவும்.

  18. // அதன் காரணமாகவே “no to india, no to pakistஹன்” என்கின்ற வாசகங்களை ஏந்தி போராட்டம் நடத்துகின்றனர். //

    காஷ்மீர தண்ணி தெளிச்சு விட்டுட்டா அன்னிக்கு சாயங்காலமே ஜிலானியும், சலாஹுதீனும், மற்றுமுள்ள எல்லா உறவினர்களும், பாக்கிலுள்ள நட்டுகளும், போல்ட்டுகளும் காஷ்மீர் பள்ளத்தாக்கை பத்திரமா பாகிஸ்தாண்ட்ட சேத்துடுவா. சுதந்திரங்கேட்ட அமானுல்லாகான், இந்திய ஆதரவு ஒமர், அப்துல்லா அண்ட் ஃபேமிலி போட்டுத்தள்ளப் படுவார்கள். லடாக் லவுட்டப்படும் திபெத் மாதிரி. பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு எல்லாம் வீட்டுக்குப் போங்கன்னுடுவாவோய்..

  19. //காஷ்மீர தண்ணி தெளிச்சு விட்டுட்டா அன்னிக்கு சாயங்காலமே ஜிலானியும், சலாஹுதீனும், மற்றுமுள்ள எல்லா உறவினர்களும், பாக்கிலுள்ள நட்டுகளும், போல்ட்டுகளும் காஷ்மீர் பள்ளத்தாக்கை பத்திரமா பாகிஸ்தாண்ட்ட சேத்துடுவா. சுதந்திரங்கேட்ட அமானுல்லாகான், இந்திய ஆதரவு ஒமர், அப்துல்லா அண்ட் ஃபேமிலி போட்டுத்தள்ளப் படுவார்கள். லடாக் லவுட்டப்படும் திபெத் மாதிரி. பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு எல்லாம் வீட்டுக்குப் போங்கன்னுடுவாவோய்..//

    //பாகிஷ்தான் சீனா என்கின்ற புறக்காரணங்களால் மட்டுமே காஷ்மீர் மக்களுக்கு தேவையான அபிவிருத்தியை இந்திய அரசாங்கத்தால் செய்ய முடியவில்லை(60 ஆண்டுகளாக) என்பதை நமக்கும் முதலில் அந்த மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், அதே சமயம் அவர்கள் பாகிஷ்தான், சீனா ஆகிய நாடுகளின் உள் முகத்தையும் தெரிந்தே வைத்துள்ளார்கள். அதன் காரணமாகவே “no to india, no to pakistஹன்” என்கின்ற வாசகங்களை ஏந்தி போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் நீங்களோ அதெல்லாம் தெரியாது காஷ்மீர் எங்களுக்குதான் சொந்தம் என்று வடிவேலு கணக்காக அடம் புடிக்கிறீர்கள்.காரணம் கேட்டால் பிரிந்து சென்றால் அவர்கள் இதை விட அதிகமாக கஷ்டப்படுவார்கள் என்று உங்கள் நியாயத்தை கடந்த கால வரலாறுகளில் காட்டும்படியான சம்பவங்கள் எதுவும் இல்லை என்பதாலும், நிகழ்காலத்திலும் உங்கள் நியாயமானது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதால் வேறு வழி இல்லாமல் எதிர்காலத்திற்கு தள்ளி விடுகிறீர்கள்.//

    ஊங்களுடைய கேள்விக்கான பதிலான இவற்றை அந்த மறுமொழியிலேயே கொடுத்துள்ளேன், உங்ளுக்காக மீண்டும் ஒருமுறை எடுத்துக் கொடுத்துள்ளேன்.

      • //oindha aaloda vaasagam” pakistan zindabad india bagalabadh//

        திரு. பூ….சாத். மேலே நான் கொடுத்துள்ள மறுமொழிகளில் எந்த இடத்தில் பாகிஷ்தான் ஜிந்தாபாத் என்று கொடுத்துள்ளேன்(உண்மையில் அவ்வாறு நாங்கள் சொல்லவும் மாட்டோம்). ஏன் நீங்களாக ஒரு கற்பனயை உருவாக்கிக் கொண்டு அதில் இருந்து விவாதம் செய்கிறீர்கள். உண்மையில் உங்களுக்கு ஆரோக்கியமான் விவாதம் செய்ய வேண்டும் என்கின்ற என்ன‌மிருந்தால் என்னுடைய மறுமொழிகளில் இருந்து நேரடியாக கேள்விகளை கேளுங்கள்.

    • யதார்த்தத்தை உரக்கச் சொன்னாலும் உங்க சுதந்திரக்கனவு காணும் உறக்கம் கலையல்லே. அப்படியெல்லாம் நடக்காது என்கிறீர்களா அல்லது நடந்தாலும் பரவாயில்லே இந்தியா வெளியேற வேண்டும் என்கிறீர்களா?

    • கற்பனையா என்ன வேண்டுமானாலும் எழுத முடியும்… கற்பனை குவியலாய் கோடிக்கணக்கான இணைய இணைப்புகள் இருக்கிறது… உண்மையான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமே…!!!

  20. //காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் பயங்கரவாதி, அம்மாநில அரசு பெண் உயரதிகாரி ஒருவரை மணக்கிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய பயங்கரவாத அமைப்பான ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்கத்துடன் (ஜெ.கே.எல்.எப்) தொடர்புடைய பரூக் அகமத் தர் என்ற கட்டாகாரட்டே என்பவர் , கடந்த 1990-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது காஷ்மீர் பண்டிட்டுகள் பலரை கொலை செய்தது உள்பட பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு தடா கோர்டில் நடந்து வந்தது. 16 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப்பின் கடந்த 2006-ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், அசபா அர்ஜூமந்த்கான் என்ற அரசு பெண் உயரதிகாரியை திருமணம் செய்ய உள்ளார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு அரசு பணியாளர்கள் தேர்வில் வெற்றி பெற்று அம்மாநில பொது நிர்வாகத்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் அடுத்த வாரம் நடக்கிறது.//

    இந்த நியுஸப்பாத்தீங்களா…இப்ப பத்துநிமிடம் முன்னால் பத்திரிக்கையில் வந்த செய்தி..பல அப்பாவி காஸ்மீர் பண்டிட்டுகளைக் கொன்ற ஒரு தீவிரவாதியை, எந்த ஒரு மனனெருடலும் இல்லாமல் மணக்கும் இந்திய அரசில் உயர் பதவியில் இறுக்கும் ஒரு பெண் எவ்வித வருத்தமும் இல்லாமல் மணக்கிறாள்..இவள ஏன் அர்சுப்பணியில் இருந்து தூக்கக்கூடாடது?

    அங்கிருக்கும் அம்மண்ணைன் மைந்தர்களையே கொன்று விட்டு அம்மண்ணை ஒரு தீவிரவாத நாடாக மாற்ற முயற்சிக்கும் தீவிரவாதிக்கு தனினாடு கொடுக்கவேனுமாம்…

    னம்ம பய எவனாவது பக்கிஸ்த்தான் போயி அஙக ஒரு 50 பேத்தக்கொன்னுட்டு,அஙக உள்ள ஒரு இந்துப்பெண்ண கல்யாணம் பண்ண முடியுமா?இப்ப சொல்லுஙக காஸ்மீரில் இறுப்பது அப்பவிகளா, தீவிரவாதிகளா?

    உலகத்தில் எஙு போனாலும் வாளைச்சுறுட்டிக்கிட்டு இருப்பது இல்லை, யாருக்காவது குண்டு வைக்க வேண்டியது, அப்படி யாரும் கிடைக்கலையா, சன்னி, சியான்னு சொந்த மதத்துக்குள்ளே குண்டு வச்சுக்கிட்டு சாகுரது…

    இல்லாங்காட்டி சர்வாதிகாரம், சாதாம், ஒசாமா மற்றும் கடாபி ஆகிய மாவீரர்கள் சாகும் போது எப்படி உயிர் பிச்சை கேட்டார்கள் என்பதை நாடரியும், ஆனால் உயிரோடு இருக்கும் போது ஆடிய ஆட்டம் கொஞமா,நங்சமா..

    • //காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் பயங்கரவாதி, அம்மாநில அரசு பெண் உயரதிகாரி ஒருவரை மணக்கிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய பயங்கரவாத அமைப்பான ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்கத்துடன் (ஜெ.கே.எல்.எப்) தொடர்புடைய பரூக் அகமத் தர் என்ற கட்டாகாரட்டே என்பவர் , கடந்த 1990-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது காஷ்மீர் பண்டிட்டுகள் பலரை கொலை செய்தது உள்பட பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

      இது தொடர்பான வழக்கு தடா கோர்டில் நடந்து வந்தது. 16 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப்பின் கடந்த 2006-ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், அசபா அர்ஜூமந்த்கான் என்ற அரசு பெண் உயரதிகாரியை திருமணம் செய்ய உள்ளார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு அரசு பணியாளர்கள் தேர்வில் வெற்றி பெற்று அம்மாநில பொது நிர்வாகத்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் அடுத்த வாரம் நடக்கிறது.//

      இந்த நியுஸப்பாத்தீங்களா…இப்ப பத்துநிமிடம் முன்னால் பத்திரிக்கையில் வந்த செய்தி..பல அப்பாவி காஸ்மீர் பண்டிட்டுகளைக் கொன்ற ஒரு தீவிரவாதியை, எந்த ஒரு மனனெருடலும் இல்லாமல் மணக்கும் இந்திய அரசில் உயர் பதவியில் இறுக்கும் ஒரு பெண் எவ்வித வருத்தமும் இல்லாமல் மணக்கிறாள்..இவள ஏன் அர்சுப்பணியில் இருந்து தூக்கக்கூடாடது?

      அங்கிருக்கும் அம்மண்ணைன் மைந்தர்களையே கொன்று விட்டு அம்மண்ணை ஒரு தீவிரவாத நாடாக மாற்ற முயற்சிக்கும் தீவிரவாதிக்கு தனினாடு கொடுக்கவேனுமாம்…

      னம்ம பய எவனாவது பக்கிஸ்த்தான் போயி அஙக ஒரு 50 பேத்தக்கொன்னுட்டு,அஙக உள்ள ஒரு இந்துப்பெண்ண கல்யாணம் பண்ண முடியுமா?இப்ப சொல்லுஙக காஸ்மீரில் இறுப்பது அப்பவிகளா, தீவிரவாதிகளா?

      உலகத்தில் எஙு போனாலும் வாளைச்சுறுட்டிக்கிட்டு இருப்பது இல்லை, யாருக்காவது குண்டு வைக்க வேண்டியது, அப்படி யாரும் கிடைக்கலையா, சன்னி, சியான்னு சொந்த மதத்துக்குள்ளே குண்டு வச்சுக்கிட்டு சாகுரது…

      இல்லாங்காட்டி சர்வாதிகாரம், சாதாம், ஒசாமா மற்றும் கடாபி ஆகிய மாவீரர்கள் சாகும் போது எப்படி உயிர் பிச்சை கேட்டார்கள் என்பதை நாடரியும், ஆனால் உயிரோடு இருக்கும் போது ஆடிய ஆட்டம் கொஞமா,நங்சமா..///

      ஒரு காஷ்மீரத்து பெண் உயரதிகாரி ஒரு கொலைகாரனை திருமனம் செய்து கொள்கிறார் அதனால் காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தக்கூடாது,இஷ்லாமியர்கள் எங்கு போனாலும் குண்டு வைக்கிறார்கள் அதனால் காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தக்கூடாது, சதாம்,பின்லேடன்,கடாபி, எல்லாம் சாகும் போது உயிர்பிச்சை கேட்டார்கள் அதனால் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கூடாது. இதுதானே பைய்யா… நீங்கள் சொல்ல வருவது. அருமையான விவாத முறை, அருமையான கருத்துக்கள். உங்களிடம் காஷ்மீரை சொந்தம் கொண்டாட வேர நியாயமான‌ காரணங்கள் எதுவுமே இல்லையோ…

      • சரி ஆசாத், உங்கள் வழிக்கே வருகிறேன், அண்ணாத்துரையும், கருனாய்னிதியும் தனித் தமிழ்னாடு கேட்டார்கள், அதை உடனே அவர்களுக்குக் கொடுத்திருந்தால் இன்று தமிழர்களின் நிலைமை என்ன? இலங்கையுன் போர் வந்திருக்கும்…

        தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்தவுடன், தகுதி இறுக்கொ இலலையோநமது சகோதர மானிலங்கல் அனைத்டும் கேட்கவிலலையா? ஏன்நாம் அன்று பேசிய தமிழை இன்று மலையாலமாகப் பேசிக் கொண்டிருக்கும் மலையாளிகள், தமிழை விட மலையாளத்திற்க்கு செம்மொழியாகும் தகுதி உண்டி என்று சொல்லவிலையா?

        தமிழ்னாட்டை இரண்டாகப்பிரிக்க வேண்டும் என்று ராமதாஸும்(உரிமம் – வடதமிழகம்), சேதுராமனும் (உரிமம் – தென் தமிழகம்) கேட்கவிலலையா? இவர்கள் இருவரும் கேட்டது என்னநாட்டுநலனுக்காகவா…

        தீவிரவாதிகள் குறைவான தமிழ்னாட்டிலேயே இத்தனை பேர் ஆதாயம் தேடத்துடிக்கும் போது, தீவிரவாதிகளின் புகழிடமான காஸ்மீரில் எத்தனை பேருக்கு ஆதாயம் உண்டு….தீவிரவாதிகளுக்கு கைக்கூலியாகவும், பக்கிஸ்தான் அபிமானியாவும், மத அபிமானியாகவும், உள்ள சிலபேர் சொல்வதனால் காஸ்மீருக்கு எந்த அதிகாரமும் தரக்கூடாது…

        தமிழ்நாட்டில் கூட அண்ணாவும், கலைங்கரும் கூத்துநடத்திக்கொண்டைருந்த போது அவனுக மந்திரப்பேச்சில் மயஙிக்கிடந்த மக்களிடம் ஓட்டெடுப்புநடந்திருந்தால் தமிழ்னாடு தனினாடாயிருக்கும், தமிழ் சிஙளப்பிரச்சனையில் ஒரு போரே உருவாயிருக்கும்..

        ஒரு மானிலத்திற்க்கு தனிமானில அந்தஸ்து கொடுத்தால் அப்புறம் காஸ்மீர் உலகத்தீவிரவாதிகளின் உல்லாசபுரியாகும், இப்ப அது இந்தியத்தீவிரவாதிகெளக்கு மட்டும் தான் உல்லாசபுரி..அருனாச்சலப்பிரதேசததில் சீனாவின் படைகள் இந்தியாவை குறிவைத்துநிற்க்கும்…குட்டி குட்டினாடுகளை அனைத்து அண்டைநாடுகளும் ஆக்கிரமிக்கும்…

        ஒருங்கினைந்த இந்தியாவே எமது பலம்…ஒரு இந்தியனினின் மனதில் இந்தியாவைப்பிரிக்கும் எண்ணமே வராது..

        • காஷ்மீர் இந்தியாவில் இருக்கும் போதே அங்கிருக்கும் பூர்வகுடிமக்களான காஷ்மீரி பண்டிட்டுகளை மறுகுடியமர்த்த ஒரு உருப்படியான வழியையும் காணாம், மத வெறியர்களிடமும், தீவிரவாதிகளிடமும் சிக்கி அவர்கள் வாழ்க்கைநாசமானதுதான் மிச்சம், இதுல காஸ்மீர் இந்தியாவவைட்டு பிரிந்து போனால், அவர்கள் கதை என்ன ஆகும்??

          அவரகள் இலஙகைத தமிழகள் போல் இனாழிப்பு செய்யப்படுவார்கள், ஒரு உண்மையான மண்ணின் மைந்தன், இந்தியாவையும், இம்மண்ணையும் உயிராய்நேசித்த்வன் அனியாயமாக் கொல்லப்படுவது தான் ம்ச்சமாகும்..

          • ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களின் விடுதலைக்காக அவர்களுடன் இணைந்து பண்டிட்களும் ஏன் போராடக்கூடாது?

  21. இப்போ யோசித்து என்ன பயன்? ஸ்பெக்ட்ரம் விஷயத்திலும்..கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட விதத்திலும்..சிந்தித்திருக்கணும்..செய்தார்களா? இவரிடம் இல்லாத பணமா? எதற்க்காக லட்சம் கோடிகள்..? தங்கத்தை தாளித்து சாப்பிடவா? வைரத்தை வறுத்து சாப்பிடவா? இப்படி ஓடி ஓடி ஏன் ஊழல் செய்யணும்? டெல்லிக்கும் சென்னைக்கும் பறந்து பறந்து பணத்தை கறக்கணும்? ஏன் இந்த பேராசை? அன்றைக்கு மஞ்ச பையோடு கையிலே காசில்லாமல்..டிக்கெட் பரிசோதகர் வந்து பிடித்துகொண்டு போய் ஜெயிலில் போட்டு விடுவார்களே என்கிற நடுக்கத்தோடு பயணம் செய்தபோது இவரிடம் இருந்தது சல்லிகாசு தேறுமா? இன்றைக்கு இவர் ஆசியாவின் முதல் பணக்காரர்..! எப்படி இது சாத்தியமாயிற்று..? தெரிந்ததுதான்..!! ஆனாலும் இன்றைக்கு மகளை சிறைக்கு அனுப்ப செய்த்தது எது? மகளை “வழிநடத்த” தவறியதா..அல்லது தன்னைபோன்றே பணத்தாசை பிடித்தாட்டட்டும் என்று விட்டுவிட்டதா? எவ்வளவுதான் பணம் இருந்தாலும் வயிறு என்னவோ ஒரு சாண் தானே? பேராசைக்கார “மைதாஸ்” என்கிற நபரே இவர் உருவிலே பிறந்துல்லானா? தனது வயதென்ன..? இந்த வயதிலே எப்படி “கவுரவமாய்” இருக்க வேண்டும்..? தன்மானம் என்பதை பற்றி சிந்திக்க தெரியாதா? அவையெல்லாமே பேச்சோடு மட்டும் தானா? தனது குடும்பத்தின் ஆதிக்கம்தான் தன்னை இந்த கீழ் நிலைக்கு கொண்டுவந்து விட்டது என்பதை புரியாதவரா? ஏன் கண்டிக்க மறுக்கின்றார்..? பாசமா? பணமா? ஆலமரமாய் இருக்கவேண்டிய ஓர் இயக்கம்..கட்சி…இன்றைக்கு மூன்றாம் தரத்திற்கு வருவதற்கு எது காரணம்? சிங்கிள் டீ குடித்து வேலை பார்த்த “அப்பாவி’ தொண்டர்களின் கதி என்ன இனி..? கட்சி மாற்றமா? அதைவிட இவரது “தலைமை’ மாற்றம் வேண்டும்..! ஊழல்..ஜெயில்..பெயில்..ஜாமீன்..கண்டிஷன் பெயில்..விசாரணை..தலைமறைவு..இவையெல்லாம் எந்த கட்சியினருக்கு வந்துள்ளது? ஏன் இந்த நிலை..கேவலம்தானே..? தன்மானம் அவசியம் அல்லவா..வாழ்வதற்கு..!! நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு என்று ஊரார் பேசும்படியா நடந்துகொள்வது..? ஒன்று தலைமை சிந்திக்கவேண்டும்…அல்லது கட்சியின் தொண்டர்கள் சிந்திக்கவேண்டும்…! ஹ்ம்ம்ம் இந்த இரண்டுமே நடவாது என்றால்..! திகார்..புழல்..பாளையங்கோட்டை..கடலூர்..சேலம்..என்று எல்லா ஜெயில் முன்னர் தவமாய் தவம் இருத்தல் மாற்றமுடியாதது..!! மகளை பார்க்க சென்றவர்..தலித் என்பதால் ராசாவை பார்க்காமல் அவருக்காக முயற்சிக்காமல் வருவது சரியா? தலைமைக்கு சுயநலம் மட்டுமே..தொண்டர்களுக்கு வேதனை இனி என்றென்றும்..! மரியா போன்றோர் போல இனி தொண்டர்கள் எல்லோருமே காணாமல் போவார்கள்..! கரைந்தோடுகின்றது கட்சி..! காணாமல் போவதற்கான அறிகுறி..! நல்ல சகுனம்..!

  22. தமிழகத்தில் இத்தனை மனநோயாளிகள் இருப்பதை வினவு மூலம் தெரிந்து கொண்டேன். இஸ்லாமியர்களுக்கு அவர்கள் சமூகத்தில் நடக்கும் பிரச்சினை அனைத்துக்கும் காரணம் யூதர்கள் என்று Cஒன்ச்பிரச்ய் ட்கெஒர்ய் கை காட்டுவார்கள். அதே போல இங்கே பிராமண இந்துத்துவ பயம்கரவாதம் Cஒன்ச்பிரச்ய் ட்கெஒர்ய் படித்து மன நோயாளிகள் மகிழ்கிறார்கள்.

    எனது பார்வையில் அண்ணா ஹசாரே திருடனாக இருந்தால் தான் என்ன , கேட்பது நல்ல விஷயம் தானே!
    யார் கேட்கிறார் எனபது முக்கியமல்ல ? என்ன கேட்கிறார் எனபது தான் முக்கியம்

    பல நாடுகளின் கலாச்சாரத்தை அங்கு சென்றே வாழ்ந்து கற்ற ஒரு மன நலன் மருத்துவர் “கலாசார பரிவர்த்தனை ” நிகழ்ச்சி ஒன்றில் இதை கூறினார்.
    அமெரிக்காவில் “யார் கேட்கிறார் எனபது முக்கியமல்ல ? என்ன கேட்கிறார் எனபது தான் முக்கியம் ” அதனால் தான் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு கண்டு வளர்ந்தது.

    இந்தியாவில் என்ன கேட்கிறார் எனபது தான் முக்கியமல்ல! யார் கேட்கிறார் எனபது முக்கியம்! அதனால் தான் நல்ல தீர்வுகளை எட்ட முடிவதில்லை என்று.

    வினவு மன நோயாளிகள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    நான் ஒரு ஆரிய திராவிட கலவை. எனது பார்வையில் தீண்டாமை

    பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சண்டையாம். பறவைகள் வென்ற பொது எனக்கு இறக்கை இருக்கிறது நானும் பறவை தான் என்று சேர்ந்து கொண்டது வௌவால். விலங்குகள் வென்றபோது எனக்கு பற்கள் இருக்கிறது நானும் விலங்குதான் என்று சேர்ந்து கொண்டது வௌவால்.
    ஆதிக்க சாதி தான் இந்த வௌவால். இன்றைக்கு 2011 இல் கூட தீண்டாமை செய்து கொண்டே , இட ஒதுக்கீடு பெரும் புத்திசாலிகள் ஆதிக்க சாதிகளே!

    • @ரகு
      அன்னா திருடனாகயிருந்தால் என்ன என கேட்கிறீர்கள். அரசியல்வாதி திருடனுக்கும், அதிகார திருடனுக்கும் தேர்தல்தோல்வி அல்லது பதிவிநீக்கம் என்று தண்டனை தந்துவிடலாம். ஆனால் அன்னா குழுவினர் வந்திருப்பது போலிஸ்காரனின் வேடத்தில். உங்களைகாப்பாற்றபோகும் போலிஸ்காரர் அவர் என்று நினைத்துநீங்கள் அவரிடம் சரணடைந்தால் உங்கள் கோவணம் களவாடப்படும் (வெளியே தெரியாமல்). எல்லா பிரச்னைகளுக்கும் அன்னா குழுவினரே தீர்வு சொல்வது எவ்வளவு அபத்தத்தில் கொண்டுபோய்விடும். விமான பயணச்சீட்டில் முறைகேடு, போராட்டக்குழுவினருக்கு வந்த பணத்தை தன் சொந்த அறக்கட்டளைக்கு மாற்றிக்கொண்டது, அரசாங்க செலவில் வெளினாடு போய்படித்துவிட்டு படிப்பு முடிந்தவுடன் வேலையை ராஜினாமா செய்தது, இருநாடுகளுக்கிடையேயான கொளுந்துவிட்டு எரியும் காஷ்மீர் பிரச்சனையில் தாந்தோன்றித்தனமாக கருத்து சொல்வது என அன்னா குழுவினர் ஒவ்வொருவர் மீதும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இவர்களை யார் தண்டிப்பது? ஒரே ஒரு உண்ணாவிரதம் மூலம் தங்கள் கையில் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளலாம் என்பது மோசமான் முன்னுதாரணம். அன்னாவின் போராட்டத்தைநான் குறை கூறவில்லை. ஆனால் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரணாகிவிடக்கூடாது என்பதே என் பயம்.

  23. அன்னா குழுவினர் கேட்பதுபோல வரயிருக்கிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒருவேளை லோக்பால் மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்றிவிட்டால், அடுத்து வரயிருக்கிற 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் அடுத்து வரயிருக்கிற 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அன்னாவும் அவர் குழுவினரும் பிரச்சாரம் செய்வார்களா? அவர்கள் கேட்கும் லோக்பால் மசோதாதான் சர்வலோகநிவாரணமாயிற்றே. அதை கொண்டு வருவதால் மட்டுமே நாட்டில் உள்ள எல்லா ஊழல்களும் களையப்படும் என்று அவர்கள்நம்புவதால், அந்த சட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து தங்கள் பிஜேபி ஆதரவின்மையை நிரூபிப்பார்களா?

  24. @குணா

    அண்ணா ஹசாரே என்ற தனி மனிதனை பற்றி பேசி நேரத்தை வீணாகாமல் , அவர் கொண்டுவந்த தீர்வில் என்ன தவறு, என்ன என்ன மாற்றங்கள் தேவை? மாற்று தீர்வு என்ன ? என்பதே ஆரோக்கியமான விவாதம். அதுவே நாட்டுக்கு தேவை.

    ஆனால் ஊடகங்களில் நடப்பது என்ன ? உம்மை போன்ற வீணர்கள் அண்ணா ஹசாரே என்ற தனி மனிதனை பற்றி பேசி நேரத்தை வீணாக்கி மதம் சாதிகளை கலந்து கான்ஸ்பிரசி தியரி செய்து மகிழ்கிறீர்கள். இது ஒரு விதமான குறை காணும் மன நோய். களையப்பட வேண்டிய மன நோய்.

    அன்னபறவை கதை சொல்கிறேன் கேள். பாலும் தண்ணீரும் கலந்து வந்தாலும் பாலை மட்டும் உண்டு தன வழி செல்லும்.
    இந்த உலகம் முழுவதும் நன்மையையும் தீமையும் கலந்து தான் கிடைக்கும். பாலை மட்டும் பார்க்க தெரிந்தவனுக்கு உணவு கிடைக்கும். தண்ணீர் கலந்திருக்கிறது என்று தர்ர்கம் புரிந்து கொண்டு இருப்பவன் பசியோடுதான் இருக்க வேண்டும்.

  25. @ரகு
    அன்னா கொண்டுவந்த தீர்வில் என்னென்ன மாற்றங்கள் தேவை என்ற விவாதம் தேவை என்று சொன்ன நீங்கள் அடுத்த வரியிலேயே ஊடகங்களில் அந்த மாதிரி விவாதம் செய்பவர்களை வீணர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்.நான் சொல்ல வருவதை புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.
    லோக்பால் வேண்டி இன்றைக்கு அன்னா உண்ணாவிரதம் இருக்கிறார். நாளைக்கு வேறொருவர் வெறோரு காரணத்தை காட்டி 12 நாளைக்கு உண்ணாவிரதம் (குளுக்கோஸ் மற்றும் பிற சத்துபாணங்களை பருகிகொண்டே) உட்கார்ந்தால் உங்களைப்போல ஆட்கள் வேண்டுமானால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரியுங்கள்.
    “உம்மை போன்ற வீணர்கள் அண்ணா ஹசாரே என்ற தனி மனிதனை பற்றி பேசி நேரத்தை வீணாக்கி மதம் சாதிகளை கலந்து கான்ஸ்பிரசி தியரி செய்து மகிழ்கிறீர்கள்”என்று சொல்லியிருக்கிறீர்கள். இரண்டாம் உலகைப்போரைப்பற்றி பேசவேண்டியிருந்தால் இட்லர் என்னும் தனிமனிதனைபற்றி பேசியே ஆகவேண்டும். இந்திய சுதந்திர போராட்டத்தை பற்றிபேசினால் காந்தியைபற்றியும் பேசியே ஆகவேண்டும். ஊடகங்கள் வரிந்துகட்டிக்கொண்டு ஆதரிக்கின்றன என்பதற்காகவோ, நடுத்தர அல்லது மேல்தட்டு மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பதற்காகவோ எந்தவொரு அமைப்பையும் நான் ஆதரிப்பதில்லை. இவர்கள் மீது சாதி, மத, அரசியல் சாயம் பூசி மகிழ விரும்பவில்லை. ஆனால் ஒருவேளை இவர்கள் பிஜேபியின் சந்ததியினராயிருந்து நாளைக்கு இவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் சிறுபான்மையினத்தவருக்கு எதிராகவும் பேசமாட்டார்கள் என என்ன நிச்சயம்?
    என்னை பொற்த்த வரையில் அன்னா குழுவின்ர் கொண்டு வந்தது தீர்வே அல்ல, அது அன்னாவோடு கூட்டு சேர்ந்திருக்கும் சிலரது பொதுநல முயற்சி. ஆனால் அது சிறுபிள்ளையின் வெள்ளாமை. முறையாக வீடு வந்து சேராது. இது தவறான முன்னுதாரணம்.
    தனிமனிதரைப்பற்றி பேசகூடாது என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் எப்பாடுபட்டாவது லோக்பால் மசோதா இயற்றும் அன்னா குழுவில் ஒரு உறுப்பினராகிவிட்டால் உங்களுக்கு எல்லா குற்றங்களிலிருந்தும் விடுதலை கிடைத்தமாதிரிதானே.
    லோக்பால் மசோதா ஒரு தீர்வே அல்ல.நாட்டில் இருக்கும் எண்ணிலடங்கா சட்டங்களில் அதுவும் ஒன்று. தவறே நடப்பதை தடுப்பதற்கு இங்கே சட்டங்கள் இல்லை,நடந்தால் தண்டிப்பதற்கு மட்டுமே அவை இயற்றப்படுகின்றன. லோக் ஆயுக்தா இருக்கும்போதேதான் எடியூரப்பா தன் சித்து வேலைகளை கர்னாடகாவில் காட்டினார்.நான் கேட்பது எல்லாம் தவறுநடப்பதை குறைப்பதற்கு தேவையான வழிமுறைகள். உதாரணமாக சென்னையில் ஒருவர் வீடு கட்ட அனுமதி வேண்டி சி.டி.எம்.ஏ.விடம் விண்ணப்பித்தால் அவருக்கு இத்தனை நாட்களுக்குள் பதில்தரப்படவேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்படவேண்டும். ஒவ்வொன்றும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவேண்டும். டேபிளுக்கு டேபிள் ஆவணங்களை தள்ளிவிடும் சிகப்புநாடா முறை ஒழிக்கப்படவேண்டும். கருணை மனுமீது ஆளுனரோ குடியரசுத்தலைவரோ முடிவெடுக்க இறுதி கெடு இருக்கவேண்டும். இறுதிகெடு முடிவதற்குள் சரியான பதிலைதராத அதிகாரிமீதுநடவடிக்கை எடுக்க உரிமை. கொள்கைரீதியாக மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும், சட்டரீதியாக அல்ல. என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய சில யோசனைகள் இவை.
    என்ன சொல்கிறார்கள் என்பதைப்போலவே, சொல்வது யார் என்றும் அவசியம் பார்க்கவேண்டும். நாளைக்கு சிறையிலிருந்து ஆ.ராசா வெளியே வந்து ‘ஊழலில்லா அரசாங்கம் அமைவது எப்படி’ என்று கொள்கை விளக்கவுரை அளிப்பாரானால்நீங்கள் அப்போதும் வாய்பிளந்து கேட்டுகொண்டிருங்கள். என்னிடம் சொல்வதற்கு காக்காய் கதை,நரி கதை, பாட்டி வடைசுட்ட கதை என கைவசம்நிறைய இருக்கிறது. சாகவாசமாக சொல்வதற்கு இது ஏற்ற இடமல்ல.

  26. குணா
    இட ஒதுக்கீடு என்பதே ஒரு பித்தலாட்டம். எனது வௌவால் கதையை ஒரு முறை படி.

    //ஆனால் ஒருவேளை இவர்கள் பிஜேபியின் சந்ததியினராயிருந்து நாளைக்கு இவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் சிறுபான்மையினத்தவருக்கு எதிராகவும் பேசமாட்டார்கள் என என்ன நிச்சயம்? //
    ஒரு வேளை என்கின்ற சந்தேகத்தை யார் மீது வேண்டுமானலும் வீசலாம்.
    ஒரு வேளை சோனியா வெளிநாட்டு உலவுக்காரியோ?
    ஒரு வேளை அண்ணா அமெரிக்காவின் கை கூலியோ ?
    ஒரு வேளை மார்க்சிஸ்ட் கட்சி சீனாவுடன் இந்தியாவை இணைத்துவிடுமோ ?

    ஒரு வேளை என்பவனே எனது அன்ன பறவை கதை படி. நீ பசியோடு வாழ்வை கழிப்பாய்.

    // லோக்பால் மசோதா ஒரு தீர்வே அல்ல.நாட்டில் இருக்கும் எண்ணிலடங்கா சட்டங்களில் அதுவும் ஒன்று. //
    அட பாவி! அண்ணா ஹசாறேவை பற்றி அவ்வளவு விசயங்களை தேடி எழுதினாய் அதற்கு நேரம் இருக்கிறது.
    அவர் என்ன திட்டம் முன் வைத்து இருக்கிறார் என்பதை பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை!

    சுருங்க சொல்கிறேன் கேள் !
    லோக்பால் சட்டம் அல்ல! அது ஒரு அமைப்பு! நீதி துறை, பாராளு மன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சம அதிகாரம் பெற்ற அமைப்பு!

    எதற்காக அந்த அமைப்பு ?
    தற்போது திருடனிடமே சாவி இருப்பது போல பாராளுமன்றம் சிபிஐ அமைப்பை ஆள்கிறது. அதனால் நடவடிக்கை எனபது அரசியவாதிகளின் விருப்பம் இருந்தால் மட்டுமே முடியும் என்ற நிலை. ஆனால் திருடும் அரசியல்வாதிகளே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா ? அதை தடுக்கவே இந்த அமைப்பு.
    சிபிஐ லோக்பாலின் கீழ் வரும்

    //லோக் ஆயுக்தா இருக்கும்போதேதான் எடியூரப்பா தன் சித்து வேலைகளை கர்னாடகாவில் காட்டினார்//
    காவல் துறை இருக்கும் போதே திருடத்தான் செய்வார்கள்

    //நாளைக்கு சிறையிலிருந்து ஆ.ராசா வெளியே வந்து ‘ஊழலில்லா அரசாங்கம் அமைவது எப்படி’ என்று கொள்கை விளக்கவுரை அளிப்பாரானால்நீங்கள் அப்போதும் வாய்பிளந்து கேட்டுகொண்டிருங்கள்.//

    கண்டிப்பாக கேட்பேன். “எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு ” அவன் சாதி குலம் மதம் திருடம் யோகியன் என்ற எந்த கேள்வியும் எனக்கு எழாது. எனக்கு தேவை அவர் கூர்வது போல ஊழலில்ல அரசாங்கம் அமைக்க முடியுமா? சாத்தியமா என்பதை பற்றிதான் சிந்திப்பேன்

  27. @கணமணி ரகு
    உனக்கு பதில் சொல்லியே நான் ஓய்ந்துவிடுவேன் போலிருக்கிறது. லோக்பால் என்பது ஒரு அமைப்பு என்பதும், அது வந்துவிட்டால் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் போல சுயமாக செயல்படும் ஒரு அமைப்பு என்ற வெங்காயம் என்பதை அறியாத பாமரன் அல்ல நான். நாலு பேர் உண்ணாவிரதம் உட்கார்ந்தால் ஒரு அமைப்பை உருவாக்கிவிடமுடியாது. அதை ஒரு சட்டமாக கொண்டுவரவேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதித்து, குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெறவேண்டிய நடைமுறை இருப்பதையேநான் அப்படி சொன்னேன்.
    “காவல் துறை இருக்கும் போதே திருடத்தான் செய்வார்கள்”
    ஆம். திருட்டையோ ஊழலையோ ஒழிக்கமுடியாது. எனவெ காவல்துறையை வலுப்படுத்தும் முயற்சியைத்தான் எடுக்கவேண்டுமே தவிர, இன்னொரு காவல்துறையை உருவாக்குவது வெட்டி செலவு. லோக் ஆயுக்தாவோ லோக்பாலோ ஒரு நிரந்தர தீர்வே அல்ல என்ற என் கருத்துக்கு மேற்கோள் காட்டி சொல்லுவதற்கு பொருத்தமான கதை ஏதும் கிட்டலையோ?
    “சிபிஐ லோக்பாலின் கீழ் வரும்”
    இப்போது பாராளுமன்றம்/பாராளுமன்றவாதிகள் செய்யும் தவறுகளுக்கு ஒத்து ஊதும் சிபிஐ உங்கள் கருத்துப்படி பார்த்தால் லோக்பால் என்ற வேறொரு முதலாளியிடம் சென்று அவர்களுக்கு நன்றியுடன் வாலாட்டவே செய்யும். தற்போது பாராளுமன்ற திருடர்களிடமிருந்து சாவி, லோக்பால் உறுப்பினர்கள் என்ற வேறோரு திருடகளிடம் போகிறது என்றுநான் சொல்கிறேன்..
    சிபிஐ என்ற அமைப்பை சுயாட்சி அமைப்பாக மாற்றுவதற்கு யாராவது போராடினால் அதற்கு என் ஆதரவு உண்டு.
    ஆனா, இவுங்க எவ்ளோ கேடி வேலை பாக்குறாங்க பாருங்க. அரசிடம் இருந்து சிபிஐ என்ற அமைப்பு லோக்பால் கீழ் வருமாறு பார்த்துக்கொள்வதன் மூலம், லோக்பால் உறுப்பினர்களின் தவறுகளை கண்டுக்கொள்ளாமல் இருக்கவைக்கும் முயற்சி இது.

    “ஒரு வேளை என்கின்ற சந்தேகத்தை யார் மீது வேண்டுமானலும் வீசலாம்”
    ஆமாங்க, இல்லையா பின்னே. நாளை வரும் மோசமான பின்விளைவுகளுக்கான உத்தேச வாய்ப்புகளைபற்றியும் இப்போதே யோசிக்கவேண்டுமில்லையா? ஒரு வேளை நீங்கள் புத்திசாலியாக இருந்து ஆக்கபூர்வமான விவாதத்திற்கு வருவீர்கள் என்ற எண்ணத்தில்தான் நானும் பக்கம்பக்கமாக பதில் கருத்து பதிந்து வருகிறேன்.
    தங்கள் பொதுத்தொண்டை, நாட்டுப்பற்றை அதீத ஆர்வத்தில் இருக்கும் சில தனிநபர்கள் ஒன்றுகூடி மக்கள் ஆதரவு பெற்ற அன்னாவை முன்வைத்து முன்மொழிந்ததே இந்த லோக்பால். இந்த அமைப்பினால் வரும் பின்விளைவுகளை சிந்திக்கிற திறன் இருக்கிறதா? இங்கே மூவர் உயிருக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவெற்றப்பட்டபின் காஷ்மீரில் அதன் தாக்கம் எப்படி மோசமான முன்னுதாரணமாக கொள்ளப்பட்டதை கண்டீரோ?
    லோக்பால் அமைப்பில் அன்னா குழுவினர் வைத்துள்ள வரைவு மசோதாவில் தனிப்பட்ட அறக்கட்டளைகளை விசாரிக்கும் அதிகாரம் இல்லை. ஏன்னா, இவர்கள் எல்லாருக்கும் அறக்கட்டளைகள் இருக்கின்றன. அறக்கட்டளைகள் வைத்திருப்பதாலேயே இவர்களைநான் குற்றம் சொல்லவில்லை. ஆனால் பூசண் போன்ற நிபுணர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மசோதா இந்த அறக்கட்டளைகளுக்கு மட்டும் சலுகை வழங்கியிருக்கிறது அவர்களை கண்காணிப்பில் இருந்து விலக்கவே என்பது கண்கூடு. லோக்பால் அமைப்பு அமைவதற்கு முன்பே தங்கள் தனிப்பட்ட நலன்களை கட்டிக்காக்க விரும்பும் இந்த அமைப்பு, பின்னாளில் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஓட்டுக்கேட்டு வரும் அரசியல்வாதிகள் கூட இந்த மாதிரிதான் யோக்கியன் அடையாளத்துடன் வருகிறார்கள், ஆனால் பின்னாளில் முகமூடியை கழற்றி வீசிவிடுகிறார்கள். உச்சநீதிமன்றநீதிபதிகள் மேலேயே அனாசியமாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் வந்துபோகின்றன். பெரிய பெரிய கார்ப்ரேட்நிறுவனங்களிடம் போராட்டகுழுவினர் பெற்றுக்கொண்ட அன்பளிப்புகளுக்கு ஈடாக அந்த நிறுவனங்கள் பின்னாளில் இவர்களை விலைக்கு வாங்குவதை யார் தடுப்பது? லோக்பால் அமைப்பே எங்களை விடுதலை செய்துவிட்டது என்று சொல்லி அவர்கள் மார்தட்டி பேசும்நிலை வராது என்று உறுதியாக சொல்ல முடியுமா?
    தேவை நிர்வாக கொள்கை சீர்திருத்தமே என்ற என் கருத்துக்கு தங்களின் கருத்து என்ன?

  28. குணா
    முதலில் //லோக்பால் மசோதா ஒரு தீர்வே அல்ல.நாட்டில் இருக்கும் எண்ணிலடங்கா சட்டங்களில் அதுவும் ஒன்று// என்று கூறினாய்.
    இப்போது அது அமைப்பு என்று தெரியும் என்று கூறுகிறாய். அதன் அதிகாரத்தை யார் கட்டுபடுத்துவது என்கிறாய்.

    ஆகா அண்ணா ஹசாறேவை திட்டுவதில் பிராமண பயங்கரவாதம் என்று காட்டுவதில் காட்டும் முனைப்பை
    அது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை. என்ன தீர்வு என்பதில் கவனம் செலுத்தாமல் , சொல்பவர் புத்தரா என்று ஆய்வு செய்து கொண்டே இருக்க வேண்டியது தான்.

    செக் அண்ட் பேலன்ஸ் என்றால் என்ன ? அதிகார பரவல் என்றால் என்ன என்பதை தேடி படியுங்கள்.
    சமூகத்தை பீடித்திருக்கும் இந்த குறை காணும் மன நோய் என்று தீருமோ?
    அரைகுறை அறிவு அழிவைத்தரும்.

    “குணம் நாடி குற்றமும் நாடி அதன் மிகை நாடி மிக்க கொளல் ”
    இந்த குரல் குணாவை குணபடுதுமா ?

  29. @ரகு
    கடந்த இருநாட்களாக நம் இருவருக்குமிடையில் நடக்கும் இந்த கருத்துப்போராட்டத்தில், யார் யாருடைய கருத்துக்களில் குற்றம் கண்டுபிடித்தது அதிகமுறை என்பதை மறுபடியும் முதலில் இருந்து படித்துப்பார்த்து, குறை சொல்லும் மனநோய் யாரை பீடித்திருக்கிறது என்று கண்டுபிடி. அன்னாவையோ அவரது குழுவினரையோ இப்போதும் குறை கூறவில்லை.சமூகத்தில்நடக்கும் குறைகளை களைவதற்கு அவர்கள் ஆர்வக்கோளாறில் கொண்டுவந்திருக்கும் முயற்சிதான் லோக்பால். அதில்நிறைகளை விட குறைகளே அதிகம். லோக்பால்நிறைவேற்றம் ஊழலுக்கு முற்றுப்புள்ளியாக மிகைபடுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
    //அண்ணா ஹசாறேவை திட்டுவதில் பிராமண பயங்கரவாதம் என்று காட்டுவதில் காட்டும் முனைப்பை
    அது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை. என்ன தீர்வு என்பதில் கவனம் செலுத்தாமல் , சொல்பவர் புத்தரா என்று ஆய்வு செய்து கொண்டே இருக்க வேண்டியது தான்//
    லோக்பால் மசோதா ஒரு தீர்வே அல்ல என்பதையே நான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு வருகிறேன். ஆனால்நீயோ, ஏதோ ஒரு படத்தில் வடிவேலு சொல்வதுபோல திரும்ப திரும்ப மனநோய் மனநோய் என்று பிதற்றுகிறாய். இதற்கு முந்தைய என் கருத்துப்பதிவில் லோக்பால் நிறைவேற்றப்பட்டால் நேரிடும் பின்விளைவுகளைப்பற்றி நான் எழுப்பிய சந்தேகங்களுக்கு லோக்பாலை பற்றி கரைத்து குடித்திருக்கும் நீ என்ன விளக்கம் தரப்போகிறாய்? பிராமண பயங்கரவாதம் என்ற சொல்லைநான் உபயோகப்படுத்தவேயில்லை. இன்னும் சொல்லப்போனால் சாதி, மத, இன பாகுபாடு காட்டி இந்த பிரச்சனையை அணுகவேயில்லை.நான் முன்பு கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் பட்சத்தில் உன் அடுத்த கருத்துக்கு பதில் தரவிரும்புகிறேன். அதெல்லாம் முடியாது, மனநோய் மனநோய் என்றுநீ திரும்ப திரும்ப உளறிக்கொண்டிருந்தால், மன்னிக்கவும், எனக்கு வேறு வேலைகளும் இருக்கிறது.

  30. அன்ன ஹசாறேவின் தீர்வை விமர்சனம் செய்தீர்கள்
    ௧. அது ஒரு அமைப்பு என்று தெரியவில்லை
    ௨. அதன் அதிகாரம் எப்படி கட்டுபடுதபடும் என்று தெரியவில்லை
    ௩. மாற்று தீர்வு தெரியவில்லை

    ஆனால் அவரது தீர்வு தவறு என்பதை மட்டும் தெரிந்து வைத்து இருகிறீர்கள். பலே

    நான் உங்கள் கருத்துகளில் குறை காணவில்லை பிழை கண்டேன்
    ஏன் என்றால் ஒன்றும் ஒன்றும் மூன்று எனபது பிழை.அதை தவறு என்று தான் கூற முடியும்

  31. Problem statement
    we have law but no law enforcement

    why Law is not enforced?
    People who steal(MP & MLA) control the body (CBI and Police) which is supposed to take action on those stealers (MP & MLA)

    why Law is not enforced on corporates & fraud NGO?
    They bribe MP & MLAs to get the subsidy

    why Law is not enforced on Govt employees?
    They share their bribe with MPS and MLAs

    Now ask yourself what is the root cause?
    People who steal(MP & MLA) control the body (CBI and Police) which is supposed to take action on those stealers (MP & MLA)

    Now ask yourself what should be your solution?

    Now Lets come to your Corporates and fraud NGOs. Whom will they bribe if nobody takes their bribe?
    If you fix the root problem others will eventually die down.

    And sometimes you cannot come up with hundred percent solution. So the iterative model will be implemented.
    Look at the first cellphone model and iphone now. how it evolves.
    Human body is not designed in one day.evolved from monkey it all started from a single cell.

    And if you say evertything to be solved in one go, I remember the Vivek comedy where the person with 100 disease will be asking just one pill to cure him. I pity you

  32. Raghu, Time will prove you wrong (that too very shortly). I am not against any changes towards betterment, but the change that you stick to, is not ‘the change’ which could change everything.

  33. Guna,
    If there are alternative Congress or Communist party or somebody could have already presented. It is just your ego that says “you are not the crowd follower and you are different” thoughts are stopping you. Time is the answer

  34. […] இந்த காணொளியை பாருங்கள்.நன்றி:வினவு.காம் In category: அரசியல், இந்தியா, காணொளிLeave a Comment Cancel […]

Leave a Reply to manithan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க