Wednesday, June 7, 2023
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்ஸ்வயம் சேவக் அண்ணா ஹசாரே ஜீ !!

ஸ்வயம் சேவக் அண்ணா ஹசாரே ஜீ !!

-

அண்ணா ஹசாரே பிரஷாந்த் பூஷன்
அண்ணா ஹசாரே - பிரஷாந்த் பூஷன்

‘நல்லவனெப் போல இருப்பானாம் பரம அயோக்கியன்’ – கிராமப்புறங்களில் ‘நல்லவர்களைப் போல’ வேடமிடுபவர்களைக் குறித்த சொலவடை இது. நாமும் முன்பே சொன்னோம். நாம் சொன்னதை லேசுபாசாய் சந்தேகித்தவர்கள் யாரேனும் இருந்தால் உங்கள் சந்தேகத்தை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இதோ, கடந்த வாரம் ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதை அடுத்து அண்ணாவின் பக்த கோடிகள் போட்டுக் கொண்டு திரிந்த ‘நல்லவன்’ முகமூடி கிழிந்து தொங்குகிறது.

கடந்த பண்ணிரண்டாம் தேதி தனது அலுவலகத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த ப்ரஷாந்த் பூஷனை, இந்தர் வர்மா என்கிற இந்து பயங்கரவாதி கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். தாக்குதல் சம்பவம் நடந்த இடத்திலேயே மடக்கிப் பிடிக்கப் பட்ட இந்தர் வர்மா, தற்போது விசாரணைக் காவலில் இருக்கிறார். மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இவரது கூட்டாளிகளான தாஜிந்தர் பால் சிங் மற்றும் விஷ்னு குப்தா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏன் இந்தத் தாக்குதல்? சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ப்ரஷாந்த் பூஷன், அங்கே சமாதான முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லையென்றால் காஷ்மீர் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி அதனடிப்படையில் சுமூகமாக தீர்த்துக் கொள்வது சரியாக இருக்கும் என்றும், இதே விஷயத்தை முன்னாள் பிரதமர் நேருவும் கூட சொல்லியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பகுத்தறிவோடும் நியாய உணர்வோடு சிந்திக்கும் எவருமே இதில் இருக்கும் ஜனநாயகப்பூர்வமான உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய இராணுவத்தின் கோரத்தாண்டவங்கள் இன்று வரை தொடர்ந்து வருவதும் நாம் அறிந்தது தான்.

ப்ரஷாந்த் பூஷனின் மேற்கண்ட பேட்டியைத் தொடர்ந்து கடும் ஆத்திரமுற்ற இந்து பயங்கரவாதிகள், தங்களது ட்விட்டர் பக்கத்தில் ப்ரஷாந்த் பூஷனைத் தாங்கள் ‘தண்டிக்கப்’ போவதைக் குறித்து வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர். தாக்குதலுக்குப் பிறகு ட்விட்டர் தளத்தில் எழுதிய தாஜிந்தர், “அவன் என் தேசத்தைப் பிளக்க முயற்சித்தான்; நான் அவன் மண்டையைப் பிளக்க முயற்சித்தேன்” என்று எழுதியுள்ளார்.

தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இம்மூவருமே சங்பரிவார் பயங்கரவாத கும்பலோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். இதில், தாஜிந்தர் பால் சிங் பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவில் செயல்பட்டவர். எல்.கே அத்வானி உள்ளிட்ட அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களோடு தொடர்பில் இருந்துள்ளார். இவரும் இவரது இன்னொரு கூட்டாளி விஷ்னு குப்தாவும் சேர்ந்து இந்த வருடத்தின் துவக்கத்தில் ‘பகத்சிங் க்ராந்தி சேனா’ என்கிற ஒரு அமைப்பைத் துவக்கியிருக்கிறார்கள். பின்னர் இவர்களோடு ‘பிங்க் ஜட்டி’ புகழ் ஸ்ரீராம் சேணாவைச் சேர்ந்த இந்தர் வர்மாவும் இணைந்து கொள்கிறார்.

மேற்கண்ட சம்பவம் எதிர்பாராத ஒன்று இல்லை. சும்மா இருந்த தென்காசியில் சும்மா ஒரு எழுச்சியை உண்டாக்க சும்மா ஒரு குண்டு வைத்துப் பார்ப்போமே என்று சும்மா திட்டமிட்டு முயற்சித்துப் பார்த்த ‘நல்லவர்கள்’ அல்லவா இந்த ‘இந்து பயங்கரவாதிகள்’ . ஆனால், இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் இருக்கிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இணையதளங்களிலும் அதற்கு வெளிப்படும் எதிர்விணைகளில் அண்ணா பக்தர்களின் மேக்கப் இல்லாத ஒரிஜினல் முகம் வெளிப்பட்டுக் கொண்டிருப்பது தான் நாம் குறிப்பாக கவனிக்க வேண்டியது.

அண்ணா தீவிரமாக சர்க்கஸ் நடத்திக் கொண்டிருந்த காலங்களில் ‘எங்கள் நோக்கமே ஊழல் ஒழிப்பு ஒன்று தான். எங்களுக்கு அரசியல் சார்பே கிடையாதாக்கும்’ என்றெல்லாம் நீட்டி முழக்கியவர்கள் இவர்கள். இந்த அரசியலற்றவாதம் போற்றுதலுக்குரியதாக கருதப்பட்டது. அண்ணா ஹசாரேவின் கோரிக்கைகளில் இருந்த மொண்ணைத்தனம் கூட இந்த அரசியலற்றவாதத்தின் பின்னே தான் பதுங்கிக் கிடந்தது. நம்ம உள்ளூர் காக்கி டவுசர் ஜெயமோகனே ‘காந்தியவாதி’ அண்ணா ஹசாரேவை சீசன் பார்த்து ஆதரித்த போதும் கூட பார்வையாளர்களுக்கு சந்தேகிக்கத் தோன்றவில்லை. ஆனாலும் நாம், சென்னையில் கூடிய அண்ணா பக்தர்கள் பலரின் பட்டாபட்டி காக்கி நிறத்தில் பல்லிளித்ததை நமது நேரடி ரிப்போர்ட்டில் அப்போதே பதிவு செய்திருந்தோம்.

ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா தளத்தில் வெளியாகியிருந்த செய்திக் கட்டுரையின் மறுமொழிகளில் அண்ணா பக்தர்கள் அவரைத் தாளித்துக் கொட்டினர். ஆயிரக்கணக்காக நீளும் அந்த மறுமொழிகளில் அண்ணா கும்பல் போற்றும் அரசியலற்றவாதத்தின் கோர முகம் குறுக்கும் நெடுக்குமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளை கண்மூடித்தனமாய் ஆதரித்திருந்த அண்ணா ரசிகர்கள், ப்ரஷாந்த் பூஷனை சும்மா தாக்கியதோடு நிறுத்தியிருக்கக் கூடாது என்றும், அவரது எலும்புகளை ஒடித்திருக்க வேண்டுமென்றும் தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர். மேலும், ப்ரஷாந்த் பூஷன் மட்டுமில்லாமல் அருந்ததி ராய் போன்ற ஜனநாயக உணர்வுள்ள பிறரையும் குறிப்பிட்டு ‘வெட்டு, குத்து, கொல்லு’ பாணியில் வெறியைக் கக்கியிருக்கின்றனர்.

அரசியலற்றவாதமென்பதே தீவிர வலதுசாரி பிற்போக்கு சக்திகளின் முகமூடி தானென்பதற்கு இந்த சம்பவம் மிக அண்மைய உதாரணம். வேறு விதமாகச் சொல்வதானல், அரசியலற்றவாதமும் வலதுசாரி இந்து பயங்கரவாதமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தாம். உதாரணமாக, நமது மைலாப்பூர் ‘பார்த்தசாரதிகள்’ கூட அரசியலற்றவர்கள் தான். இவர்கள் எந்த கட்சியின் அரசியலோடும் தம்மை இணைத்துக் கொள்வதை பார்க்க முடியாது தான். தேவைப்பட்டால் பாரதிய ஜனதாவைக் கூட சில சந்தர்பங்களில் விமர்சிக்கவும் செய்வார்கள். ஆனால், எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் இவர்களின் சிந்தனையும் துக்ளக்கின் சிந்தனையும் ஆச்சர்யப்படுமளவிற்கு மிக எதார்த்தமாகவும் இயல்பாகவும் ஒத்துப் போவதை கவனித்திருப்பீர்கள். சிறுபாண்மையினர், தலித்துகள், இடஒதுக்கீடு, இந்தியா, இந்தி போன்ற குறிப்பான விஷயங்களில் இவர்கள் அப்படியே ஆர்.எஸ்.எஸ் பேசுவது போலவே பேசுவார்கள். இன்னும் விளக்கம் தேவைப்பட்டால் இரட்டைக் குவளை பிரச்சினை பற்றி நான்’காண்டு’களுக்கு முந்தைய தமிழ் வலைப்பதிவர்களில் ‘நூல்’ கம்பேனியார் உதிர்த்திருந்த முத்துக்களைத் தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.

இது ஒருபுறமிருக்க, ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா கும்பலின் பிற உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களும் பால் தாக்ரேவின் குரலாகவே ஒலித்திருக்கிறது. காஷ்மீரைக் காக்க உயிரையே தரத் தயார் என்று சவடால் அடித்த அண்ணா ஹசாரே, ப்ரஷாந்த் பூஷனைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். மேலும் அவர் தமது குழுவில் தொடர்வதைப் பற்றி குழுவின் மையக் கூட்டத்தின் வைத்து முடிவெடுப்போம் என்று அறிவித்துள்ளார். இதே போன்ற கருத்தையே கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால், சந்தோஷ் ஹெக்டே மேதா பட்கர் போன்ற பிறரும் தெரிவித்துள்ளனர்.

மிகச் சிக்கலான காஷ்மீர் விவகாரத்தைப் பொருத்தவரையில் தீர்வு எதுவாக இருக்க வேண்டுமென்றாலும் அது அம்மக்களின் விருப்பத்துக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகக் கோரிக்கையாகவும் விருப்பமாகவும் இருக்க முடியும். ஆனால், வல்லாத்தளையாக அந்த மக்களை தனது இரும்புப் பிடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அகண்ட பாரதக் கனவில் மிதக்கும் இந்து பயங்கரவாதிகள் காலம் காலமாக சொல்லி வருவது தான். இதைத் தான் இப்போது அண்ணா கும்பலும் அவரது ரசிகர் பட்டாளமும் வெளிப்படுத்தியிருக்கிறது.

ஆக, அரசியலற்றவாதமும் – மத பயங்கரவாதமும் அடிப்படையில் வேறு வேறானதல்ல என்பதை இச்சம்பவம் இன்னுமொரு முறை பொட்டிலடித்தாற் போல் உணர்த்தியிருக்கிறது. ஊழலை ஒழித்து இந்தியாவையே புரட்டிப் போட்டு விடுவோமென்று சவடாலடிக்கும் அண்ணா கும்பலின் ஊழல் பற்றிய புரிதலே அடிமட்டத்தில் இருப்பது ஒருபுறமென்றால், இவர்கள் பார்ப்பன இந்து பயங்கரவாதம், மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் போன்ற கேந்திரமான பிற விஷயங்களில் என்னவிதமான கருத்துக்களை வைத்திருக்கிறார்களென்பது வெகு சில சந்தர்பங்களில் தான் வெளிப்பட்டிருக்கிறது. முன்பு மோடியை அண்ணா ஹசாரே புகழ்ந்ததும் இப்போது ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதும் அவைகளில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இனிமேலும் அண்ணா ஹசாரே என்கிற இந்த இந்துத்துவ கோமாளியை நம்பி பின்னே செல்லத் தான் வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. இது முன்னாடியே தெரிந்ததுதானே. அவர்கள்(அன்னா காக்கி டவுசர் குழு) இப்படி நடந்து கொள்ளாவிட்டால்தான் ஆச்சரியம். பிரஷாந்த் பூஷன் அவர்கள் இப்போதாவது அந்த காக்கி டவுசர் குழுவில் இருந்து வெளியேறிவிடுவதுதான் அவருடைய முற்போக்கு சிந்தனையும், நேர்மையும் தவறாமல் இருப்பதற்கான வழியாகும். அவர் சமச்சீர் கல்விக்காக உயர் நீதிமன்றத்தில் வாதாடியபோதும், காஷ்மீர் பிரச்சினைக்காக குரல் கொடுத்தபோதும், அன்னா குழுவில் இருந்த மயான அமைதியின் போதே அவர் சிந்தித்திருக்க வேண்டும்.’அன்னா’ என்னதான் இது கட்சி சார்பற்ற குழு என்று பூசி மொழுக பார்த்தாலும்,இதன் மூலம் அவர் மறைமுகமாக ஆதரித்ததும்,இதனால் நேரிடையாக பயன் பெற நினைத்ததும் பெற்றுக்கொண்டிருப்பதும் பிஜெபி என்பது வெளிப்படை.ஆனால் அன்னாவும் அவரை ஆதரிக்கும் சங் பரிவார் கட்சிகளும் எதையெல்லாம் தமக்கு எதிரானதாக கருதிக் கொண்டார்களோ, அதையெல்லாம் தாம் உரம் போட்டு ஊட்டி வளர்க்கும் குழுவில் இருக்கும் ஒருவரே எதிர்த்து குரல் கொடுப்பதா எனும் வெறியில் நடந்ததுதான் இது. இதன் மூலம் அவர்கள் உடனடியாக எதிர்பார்ப்பது அன்னா குழுவில் இருந்து பூஷனின் வெளியேற்றம். ஏனென்றால் ஒருவேளை அவர்கள் உண்மையிலேயே இப்படி ஜனநாயகத் தன்மையுடன் காஷ்மீர் போராட்டத்திற்க்கு ஆதரவாக பேசுவோர் அனைவரயும் தாக்க வேண்டும் என நினைத்தால் முதலில் அருந்ததிராயைத்தான் தாக்கியிருக்க‌ வேண்டும். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது முதலில் பூஷனின் வெளியேற்றம். அதனால்தான் பூஷன் தாக்கப்பட்ட சம்பவம் அனைவரும் பார்க்கும்படி பேட்டியின் போது நடந்தது.Times now இதில் உள்குத்து உள்ளது என்று நிரூபிப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும் அருந்ததிராய் வீடு தாக்கப் பட்ட சம்பவத்தின் போது அதன் செயல்கள், அம்பி கோசுவாமியின் சங் பரிவார் ஆதரவு பேச்சு இந்த சம்பவத்தின் போது Times now பேட்டி ஏற்பாடாகிக் கொண்டிருந்தது இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது சந்தேகத்துக்குரியதுதான். அன்னா உட்பட அக்குழுவில் இருக்கும் மற்றவரை விடுங்கள் ஆனால் சுவாமி அக்னிவேஷ், மேதா பட்கர் ஆகியோர்கூட இன்னும்
    வாய் திறக்க மறுப்பதுதான் ஆச்சரியத்தக்க வகையில் இல்லையென்றாலும்
    எரிச்சலடைய வைக்கிறது. எனக்கு புரிந்த வரை பிரஷாந்த் பூஷன், அக்னிவேஷ், மேதா பட்கர், ஆகியோர் வெளியேறி அருந்ததிராயோடு சேர்ந்து
    ஒரு குழுவாக மாறி செயல்படுவதே மக்களின் மேல் அவர்களுக்கு உள்ள பற்று வெளிப்படுவதாக அமையும்.

  2. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இனிமேலும் அண்ணா ஹசாரே என்கிற இந்த இந்துத்துவ கோமாளியை நம்பி பின்னே செல்லத் தான் வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது.
    சரியான பதிவு

  3. ######சும்மா இருந்த தென்காசியில் சும்மா ஒரு எழுச்சியை உண்டாக்க சும்மா ஒரு குண்டு வைத்துப் பார்ப்போமே என்று சும்மா திட்டமிட்டு முயற்சித்துப் பார்த்த ‘நல்லவர்கள்’ அல்லவா இந்த ‘இந்து பயங்கரவாதிகள்’#######

  4. “அண்ணா ஹசாரே என்கிற இந்த இந்துத்துவ கோமாளியை….” கோமாளி அல்ல. அண்ணா ஹசாரே ஒரு பயங்கரவாதிதான். உளவியல் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் அவரது முகத்தை படித்துப் பாருங்கள். உண்மை பளிச்சென புலப்படும்.

    • \\அண்ணா ஹசாரே ஒரு பயங்கரவாதிதான் – அவரது முகத்தை படித்துப் பாருங்கள் \\

      உதடுகள் பயங்கரவாதி என்று சொன்னாலும் உள்ளம் ‘அவரது முகம்’ (அவனது என்பதற்கு மாற்றாக..) என மரியாதை கொடுக்க சொல்லுகிறது… என்ன செய்வது மரியாதைக்குரிய பயங்கரவாதி போலிருக்கிறது… ஒரு வேலை போலி கம்யுனிஸ்ட் போல போலி பயங்கரவாதியோ…

  5. பாவம் ப்ரசாந்த் பூஷன் அன்னாவை நம்பி மோசம் போனதை நினைத்து வருந்த வேன்டியதுதான் sir why you should not use the tamil translating method as in ” dinamalr.com “. That seems to be simpler than this. This is my opinion. Kindly clarify.

  6. ஹிசார் தொகுதியில் பஜன்லால் ,சௌதாலா மகன்களுக்கிடையில் நடந்த கடும் போட்டியில் ஏற்கனவே மூன்றாவது இடத்தில் இருந்த காங்கிரசை நாங்கள் தான் தோற்கடித்தோம் என்று அண்ணா ஹசாரே குழு உளற ஆரம்பித்த போதே இவர்கள் கோமாளிகள் என்பதை நிருபித்துவிட்டார்கள்.

  7. Hi this is very good article which clearly explains the real intention and the face of Anna Team members. But i have one request do not use that word hindu bayangaravathigal. Many of Vinavu article trying to show Hindu religion as terrorist that means you are directly supporting other end. Have you ever used Muslim terrorist word, never i think.. why? If you use, they will kill you. Hindus will not do that, and they are little soft compare to other end. Do not provacte the general people who beleive hinduism. Good or bad we need one identity, fortunately or unfortunately we born in hindu religion so it is their in our blood, if you criticize more we also has to review your intention. Do you have dare to comment about Muslim? If you have find out some bad news which muslim did in these country. Then we will appreciate your effort. Yes really Vinavu concerned about all people not only to particular sector.

    • Karunagaran,
      please take time to read more blogs in this site. Your prejudicial thoughts might change.

      I believe you were equally furious when you read newspaper/magazine headlines when they mention ‘Muslim Terrorists’. Anyways, by Hindu terrorist, they refer to the sang parivar terrorists, not all hindus. 🙂

      //fortunately or unfortunately we born in hindu religion so it is their in our blood,//
      will you give a similar justification for casteism also? For e.g. I was born hindu, but it is no more in my blood.

      Would like to encourage you to read more in this site, before coming to conclusions.

  8. என்னாப்பா வர வர உன் மததுவேச பிஸினஸ் கட்டுரைகளுக்கு போதி வரவேற்ப்பு கிடைக்க மாட்டேங்குதேப்பா…பிஸினஸ் ரொம்ப டல்லாயிருச்சா…

    ஆமாமா, பிரித்தாலும் சூழ்ச்சி எத்தனனாள்தான் கைகுடுக்கும்…

    சரி அதவிடு காஸ்மீர இப்ப என்ன பன்னலாம், தீவிரவாதிகளிடம் கொடுக்கவேண்டுமா? அல்லது பக்கிஸ்தானிடம் கொடுக்க வேண்டுமா?

    சரி காஸ்மீர இந்த இரண்டு பக்கிகளிடமும் கொடுக்கக்கூடாது என்றால், அவன் அயோக்கியன், இந்துத்துவ கோமாளி மற்றும் தீவிரவாதியா…

    அப்படியே அருனாச்சலப்பிரதேசத்த சீனாவிடமும், தமிழ்நாட்ட இலங்கையிடமும் கொடுத்துரலாமா?

    னீ சொன்னாலும் சொல்லுவ…ஏன்னா காஸ்மீரில் உள்ளவர்கள் போராளிகள், அதில் ஒரு அப்பாவி தான் அப்சல் குரு, காசபு தம்பி ஒரு மாவீரன்…

  9. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் இதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.

    அருணாச்சலப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தேசபக்தி மிகுந்தவர்கள். அதனால்தான் அவர்கள் தங்களின் தொடர்பு மொழியாக இந்தியைப் பயன்படுத்துகின்றனர் என அத்வானி குறிப்பிட்டார்.

    அப்போது இந்திய அரசின் இந்தி-சீனி பாய் பாய் கொள்கையைப் பின்பற்றிவந்த நிலையில் சீன அரசு 1962 அக்டோபர் 20-ம் தேதி இந்தியா மீது போர் தொடுத்தது. இதனால் அப்போதைய பிரதமர் நேரு அதிர்ச்சி அடைந்தார் என அக்டோபர் 20-ம் தேதியை அத்வானி நினைவுகூர்ந்தார்.

    திடீர் சீனத் தாக்குதலுக்குப் பிறகு அருணாச்சல் தொடர்பான விவகாரங்களை பாஜக வெளிப்படையாக கையாண்டு வருகிறது என்று அத்வானி குறிப்பிட்டார்.

    அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் அல்லது சீன ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள எந்த பகுதி தொடர்பாகவும் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என அத்வானி உறுதிபடத் தெரிவித்தார்

    • பைய்யா, நீங்க அப்படியே கட்டுரைக்கு பதில் சொன்னா நல்லா இருக்குமே. ஏன்னா உங்கள மாதிரி அக்ரஹாரத்து அம்பிகள் நாட்டு பற்று என்கிற பேர்ல என்ன மாதிரியான கருத்தை வைத்துள்ளார்கள் என்பதை இங்கே வரும் புதியவர்கள் தெரிந்து கொண்டு உஷாராகிக் கொள்ளலாம் அதனால்தான்….அதுலயும் உங்கள மாதிரியான அம்பிகள் வர வர இப்ப எல்லாம் சும்மா பாகிஷ்தான், சீனான்னு,பாரின் டூர் போயிற்ரீங்களே தவிர,கட்டுரைக்கு பதில் சொல்றத குறைச்சுட்டாங்க. ஆனா இப்படி இருந்தா நாங்க என்ன பண்றது, உங்கள மாதிரி நாலு நல்லவங்க வந்து இப்பிடி நாத்தம்புடிச்ச கருத்துக்கள கூவம் ஆறு மாதிரி ஓட விற்றதாலதானே நம்மளோட கருத்துக்கள விரும்பி ஏத்துக்கிறாங்க. தம்பி பைய்யா சீக்கிரமா கட்டுரைக்கு சம்மந்தமா உங்க விலை உயர்ந்த(இல்லாத) கருத்த போடுங்க.

      • \\உங்கள மாதிரி அக்ரஹாரத்து அம்பிகள் நாட்டு பற்று என்கிற பேர்ல என்ன மாதிரியான கருத்தை வைத்துள்ளார்கள் என்பதை இங்கே வரும் புதியவர்கள் தெரிந்து கொண்டு உஷாராகிக் கொள்ளலாம்\\

        ஒரு முஸ்லிம் எப்படி கம்யுனிஸ்ட் ஆக முடியாதோ அதே போல அந்த அக்ரஹாரத்து அம்பி நாட்டுப்பற்று தவிர்த்து காஷ்மீர் விஷயத்தில் தீவிரவாதி ஆகிவிட முடியாது…

        \\நாத்தம்புடிச்ச கருத்துக்கள கூவம் ஆறு மாதிரி ஓட விற்றதாலதானே நம்மளோட கருத்துக்கள விரும்பி ஏத்துக்கிறாங்க\\

        என்னை பொறுத்தவரை வினவில் மருமொழியிடப்படும் அனைத்து கருத்துக்களுமே தர்க்க ரீதியாக அர்த்தம் பொதிந்தவையாக தான் உணர்கிறேன்… அவற்றை நாற்றம் பிடித்த அல்லது நறுமணம் வீசும் கருத்துக்கள் என்று வைகைப்படுத்தி அறியேன்… ஒரு வேலை உலகின் அரசியல் நாற்றங்களை வினவு வெளிச்சப்படுத்துவதால் பின்னூட்டங்களும் அத்தகைய நாற்றங்கலாகவே தெரிகிறதோ…

      • //பைய்யா, நீங்க அப்படியே கட்டுரைக்கு பதில் சொன்னா நல்லா இருக்குமே. //

        காஷ்மீர் மட்டுமல்ல இந்தியாவின் எந்தப்பகுடியையும் ஒரு தீவிரவாதிக்கோ, தீவிரவாதநாட்டுக்கோ, அல்லது ஒரு எதிரிநாட்டுக்கோ விட்டுத்தர மாட்டோம், பக்கிஸ்தானும், சீனாவும் ஆக்கிரமித்த காஷ்மீர் என்ன வளர்ச்சிப்பணிகளாநடக்கிறது, இந்தியாவிற்க்கு ஆப்பு வைக்கத்தானே வேலைநடக்கிறது, அட இலங்கையில் கூட சைனாக்காரன் அதத்தான செய்டுகிடுருக்கான்…

        காஷ்மீர் இந்தியாவில் இருக்கும் போதே அங்கிருக்கும் பூர்வகுடிமக்களான காஷ்மீரி பண்டிட்டுகளை மறுகுடியமர்த்த ஒரு உருப்படியான வழியையும் காணாம், மத வெறியர்களிடமும், தீவிரவாதிகளிடமும் சிக்கி அவர்கள் வாழ்க்கைநாசமானதுதான் மிச்சம், இதுல காஸ்மீர் இந்தியாவவைட்டு பிரிந்து போனால், அவர்கள் கதை முடிவது உறுதி..

        //அக்ரஹாரத்து அம்பிகள் நாட்டு பற்று என்கிற பேர்ல என்ன மாதிரியான கருத்தை வைத்துள்ளார்கள் என்பதை இங்கே வரும் புதியவர்கள் தெரிந்து கொண்டு உஷாராகிக் கொள்ளலாம் அதனால்தான்//

        உஙக தல வினவு மாதிரியே மொக்கயாப் பேசக்கூடாது, அமபிகளுக்கு மட்டும் இந்துத்வா சொந்தம்ல்ல, தோசப்பற்றும், மதப்பற்றும், மொழிப்பற்றும் கொண்ட எத்தனையோ மக்கள் இங்கு உண்டு…

        //சும்மா பாகிஷ்தான், சீனான்னு,பாரின் டூர் போயிற்ரீங்களே தவிர,கட்டுரைக்கு பதில் சொல்றத குறைச்சுட்டாங்க.//
        ண்ணனா னாங்க ஒன்னும் அங்க டூர் போலங்னா…னாளைக்கு நம்ம நாட்டுக்கே நம்ம டூர் போகுரநிலமை ஏற்படக்கூடாது அல்லவா? அதுக்குத்தானுங்கண்ணாவ்….

        //உங்கள மாதிரி நாலு நல்லவங்க வந்து இப்பிடி நாத்தம்புடிச்ச கருத்துக்கள கூவம் ஆறு மாதிரி ஓட விற்றதாலதானே நம்மளோட கருத்துக்கள விரும்பி ஏத்துக்கிறாங்க.//

        எது நாஙகளா மததுவேச கருத்துக்களூடன் கதைகளை எழுதி விடுவது, சொந்தநாட்டுக்குள்ளே தீவிரவாதம் பண்ணுவது, வாழும் இடமெல்லாம் தீவிரவாத்தை விதகைப்பது?

        • //காஷ்மீர் மட்டுமல்ல இந்தியாவின் எந்தப்பகுடியையும் ஒரு தீவிரவாதிக்கோ, தீவிரவாதநாட்டுக்கோ, அல்லது ஒரு எதிரிநாட்டுக்கோ விட்டுத்தர மாட்டோம், பக்கிஸ்தானும், சீனாவும் ஆக்கிரமித்த காஷ்மீர் என்ன வளர்ச்சிப்பணிகளாநடக்கிறது, இந்தியாவிற்க்கு ஆப்பு வைக்கத்தானே வேலைநடக்கிறது, அட இலங்கையில் கூட சைனாக்காரன் அதத்தான செய்டுகிடுருக்கான்…

          காஷ்மீர் இந்தியாவில் இருக்கும் போதே அங்கிருக்கும் பூர்வகுடிமக்களான காஷ்மீரி பண்டிட்டுகளை மறுகுடியமர்த்த ஒரு உருப்படியான வழியையும் காணாம், மத வெறியர்களிடமும், தீவிரவாதிகளிடமும் சிக்கி அவர்கள் வாழ்க்கைநாசமானதுதான் மிச்சம், இதுல காஸ்மீர் இந்தியாவவைட்டு பிரிந்து போனால், அவர்கள் கதை முடிவது உறுதி..//

          அப்பிடி வாங்க வழிக்கு…பாகிஷ்தான் அல்லது சீனா வால் உங்களுக்கு பிரச்சினை வரும் என்று நீங்கள் நினைத்து அதன் பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீர் இந்தியாவுடன் இணந்து இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் காஷ்மீர் மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்து கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நீங்களோ 60 ஆண்டுகளாகியும் பாகிஷ்தான் சீனா என்று காரணம் காட்டி இன்னும் அந்த மக்கள் அமைதி என்றால் என்ன என்று கேட்கும் நிலையிலேயே வைத்துள்ளீர்கள். பாகிஷ்தான் சீனா என்கின்ற புறக்காரணங்களால் மட்டுமே காஷ்மீர் மக்களுக்கு தேவையான அபிவிருத்தியை இந்திய அரசாங்கத்தால் செய்ய முடியவில்லை(60 ஆண்டுகளாக) என்பதை நமக்கும் முதலில் அந்த மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், அதே சமயம் அவர்கள் பாகிஷ்தான், சீனா ஆகிய நாடுகளின் உள் முகத்தையும் தெரிந்தே வைத்துள்ளார்கள். அதன் காரணமாகவே “no to india, no to pakistஹன்” என்கின்ற வாசகங்களை ஏந்தி போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் நீங்களோ அதெல்லாம் தெரியாது காஷ்மீர் எங்களுக்குதான் சொந்தம் என்று வடிவேலு கணக்காக அடம் புடிக்கிறீர்கள்.காரணம் கேட்டால் பிரிந்து சென்றால் அவர்கள் இதை விட அதிகமாக கஷ்டப்படுவார்கள் என்று உங்கள் நியாயத்தை கடந்த கால வரலாறுகளில் காட்டும்படியான சம்பவங்கள் எதுவும் இல்லை என்பதாலும், நிகழ்காலத்திலும் உங்கள் நியாயமானது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதால் வேறு வழி இல்லாமல் எதிர்காலத்திற்கு தள்ளி விடுகிறீர்கள்.மீறிக் கேட்டால் காஷ்மீரில் ஏதோ பண்டிட்டுகளுக்கு எதிராக‌ மதக்கலவரங்கள் ஓயாமல் ஒரு நாள் விடாமல் நடந்து கொண்டிருப்பது போல் ஐயோ….பண்டிட்டுகள் என்று இழுக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள்(பண்டிட்டுகள் விஷயத்தில் அதற்குள் நீங்கள் கேள்வி எழுப்பிய பின்பு செல்கிறேன்).

          //உஙக தல வினவு மாதிரியே மொக்கயாப் பேசக்கூடாது, அமபிகளுக்கு மட்டும் இந்துத்வா சொந்தம்ல்ல, தோசப்பற்றும், மதப்பற்றும், மொழிப்பற்றும் கொண்ட எத்தனையோ மக்கள் இங்கு உண்டு…//

          என்ன‌ விட்டா இந்துத்துவாங்கிற‌து உல‌க‌த்தில் உள்ள‌ அனைவ‌ருக்கும் தேச‌ப் ப‌ற்று என்ப‌தற்கு முன்நிப‌ந்த‌னை என்று சொல்வீர்க‌ள் போல‌வே.

          //ண்ணனா னாங்க ஒன்னும் அங்க டூர் போலங்னா…னாளைக்கு நம்ம நாட்டுக்கே நம்ம டூர் போகுரநிலமை ஏற்படக்கூடாது அல்லவா? அதுக்குத்தானுங்கண்ணாவ்….//

          அப்பிடீன்னா அவ‌ங்க‌ள‌ நிம்ம‌தியா வாழ‌ வ‌ழி செய்திருக்க‌ வேண்டும். இவ்வ‌ளவு நாள் அப்பிடி உங்க‌ளால் அந்த‌ ம‌க்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வ‌ழி செய்ய முடியாத‌ கார‌ண‌த்தால் அவ‌ர்களுடைய‌ ச‌ந்தேக‌த்தை போக்கி ந‌ம்பிக்கை த‌ரும் வித‌மாக‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமையை கொடுத்து அங்கே வாக்கெடுப்பு ந‌ட‌த்த‌ வேண்டும். அத‌ற்கும் உங்க‌ளுக்கு ப‌ய‌ம் என்றால் அந்த‌ ம‌க்க‌ள் ம‌ட்டும்(காஷ்மீர் மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்கள்) என்ன கேணயர்களா.

          //எது நாஙகளா மததுவேச கருத்துக்களூடன் கதைகளை எழுதி விடுவது, சொந்தநாட்டுக்குள்ளே தீவிரவாதம் பண்ணுவது, வாழும் இடமெல்லாம் தீவிரவாத்தை விதகைப்பது?//

          இருக்குற‌த‌ ம‌க்க‌ளுக்கு தெரிய‌ச் செய்தா தீவிர‌வாதம? ம‌த‌த்துவேஷ‌மா?

          இதையெல்லாம் மீறி திரும்ப‌வும் காஷ்மீர் எங்க‌ள் நாடு என்று நீங்க‌ள் ஆர‌ம்பித்தால் என‌க்கு ஒன்னுதான் தோனுது “பித்த‌லாட்ட‌க்கார‌ர்க‌ளின் க‌டைசி
          புக‌ழிட‌ம் தேச‌ப‌க்தி”

          • \\இதையெல்லாம் மீறி திரும்ப‌வும் காஷ்மீர் எங்க‌ள் நாடு என்று நீங்க‌ள் ஆர‌ம்பித்தால் என‌க்கு ஒன்னுதான் தோனுது “பித்த‌லாட்ட‌க்கார‌ர்க‌ளின் க‌டைசி புக‌ழிட‌ம் தேச‌ப‌க்தி”\\

            இந்தியாவில் உள்ள இந்துக்களும், கிறித்தவர்களும், சீக்கியர்களும், பௌத்தர்களும், ஜைனர்களும் இன்ன பிற மதத்தினை சேர்ந்தவர்களும் காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் என்பதில் உறுதியாக உள்ளனர்… ஏனெனில் அவர்கள் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமிதம் கொண்டுள்ளனர்..

            ஆனால் சுதந்திர இந்தியா வழங்கிய பாஸ்போர்டில் வளைகுடா சேக்கிடம் ஒட்டகம் மேய்த்தும், காரோட்டியும், மூட்டை தூக்கியும், கப்பல் கழுவியும் இன்ன பிற அடிமை வேலைகள் செய்யும் பத்தாவது மட்டுமே படித்த இந்த தற்குறி கொத்தடிமை கூட்டம் மட்டும் காஷ்மீர் பாக்கிஸ்தானுக்கு சொந்தம் என்று கூறுகிறது… அவுரங்கசீப் இருந்திருந்தால் நாட்டுப்பற்று என்றால் என்ன என்று தெரியாத இவனையெல்லாம் ஏன்டா மதம் மாற்றினோம் என்று தூக்குல தொங்கி இருப்பான்…

            • காஸ்மீரில் கொல்லப்படுவது முஸ்லீம்கள் தானே அது பற்றி இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், ஜைனர்களுக்கும் என்ன கவலை.
              அவர்கள் காஸ்மீரிகள் (முஸ்லீம்கள்) கொல்லப்படுவதை ரசிக்கிறார்கள். உங்கள் மொழியில் அது கண்டிப்பாக தேச பக்திதான். அப்புறம் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்று விட்டதே! . தேச பக்தி கொண்டாட்டங்கள் முடிந்து விட்டதா? இந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்று இருந்தால் அந்த தேச பக்திக்கு கூடுதல் மரியாதை.

              சுதந்திர இந்திய வழங்கிய பாஸ்போர்டில் கொத்தடிமை வேலை செய்பவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லீம் அல்லாதவர்கள் தான். காஸ்மீர பாகிஸ்தானிடம் கொடுக்க யாருப்பா இங்க பேசினா? முஸ்லீம்களை கொல்லாதீர்கள் என்று கூறினாலே அதன் பேர் தேசவிரோதமா? ஈழ தமிழனை கொல்லாதீர்கள் என்றால் அவன் தீவிர வாதியா? பெயரில் மட்டும் மனிதனாக இல்லாமல் மனித தன்மையுடன் சிந்திக்கவும் செய்யுங்கள்.

              எந்த வரலாற்று அடிப்படையில் காஸ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு பேசுங்கள்.

                • \\காஸ்மீரில் கொல்லப்படுவது முஸ்லீம்கள் தானே அது பற்றி இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், ஜைனர்களுக்கும் என்ன கவலை.\\
                  இந்த உலகில் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை நண்பரே…

                  \\அவர்கள் காஸ்மீரிகள் (முஸ்லீம்கள்) கொல்லப்படுவதை ரசிக்கிறார்கள்.\\
                  எப்படியா இப்படி எழுத முடிகிறது? கொலையை ரசிக்கும் எந்த கல் நெஞ்சத்தையும் நான் எந்த மதத்திலும் கண்டதில்லை…

                  \\கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்று விட்டதே! . தேச பக்தி கொண்டாட்டங்கள் முடிந்து விட்டதா?\\
                  நமது தேசிய விளையாட்டு ஆக்கி போட்டியில் இந்தியா தங்கம் வென்றால் நிச்சயம் கொண்டாடுவோம்…

                  \\காஸ்மீர பாகிஸ்தானிடம் கொடுக்க யாருப்பா இங்க பேசினா? \\
                  யாரும் பேசவில்லை! பேசாமலிருப்பது சந்தோசம்…

                  \\முஸ்லீம்களை கொல்லாதீர்கள் என்று கூறினாலே அதன் பேர் தேசவிரோதமா\\
                  இல்லை.. கொல்லுங்கள் என்று யாரும் சொன்னால் அது தான் மனித தன்மையற்ற குரோதம்…

                  \\ஈழ தமிழனை கொல்லாதீர்கள் என்றால் அவன் தீவிர வாதியா\\
                  இங்கு ஈழத்தை ஏன் இழுக்கிறீர்கள்… ஈழ விவாகரமும் காஷ்மீர் விவகாரமும் சம அந்தஸ்தில் வைத்து நடுநிலையாளர்களால் இன்று விமர்சிக்கப்படுவது ஈழத்தின் துரதிர்ஷ்டமே..

                  \\எந்த வரலாற்று அடிப்படையில் காஸ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு பேசுங்கள்\\

                  In the first half of the first millennium, the Kashmir region became an important center of Hinduism and later of Buddhism; later still, in the ninth century, Kashmir Shaivism arose….

                  \\அவுரங்கசீபிற்கு முன்பே இங்கு இஸ்லாம் வந்து விட்டதையா\\
                  ஒ வந்ததுதானோ… நான் கூட இங்கு தோன்றியதோ அல்லது பூர்வ குடிகளோ என நினைத்தேன்.. வந்தேறிகளா… !!!

                  • //வந்தேறிகளா// – நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். பூர்வ குடிகள். இஸ்லாம் நாங்கள் ஏற்றுக்கொண்ட மதம். மனிதாபிமானத்தை எழுத்துகளில் மட்டும் கொண்ட உம்மிடம் எல்லாம் இதனை விளக்கும் நிலையில் இருப்பது எமது துரதிஷ்டமே!!

                    //ஈழ விவாகரமும் காஷ்மீர் விவகாரமும்// – கொல்லப்படுவது அப்பாவிகள் தான்.

                    /யாரும் பேசவில்லை! / – உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி .

                    //எப்படியா இப்படி எழுத முடிகிறது? கொலையை ரசிக்கும் எந்த கல் நெஞ்சத்தையும் நான் எந்த மதத்திலும் கண்டதில்லை…// – ரசிக்கப்படாமல் எப்படி மோடிகளும், அத்வானிகளும் இங்கு கொண்டாட படுகிறார்கள்? உதாரண புருசனாக அடையாளம் காட்டப்படுகிறார்கள்? மோடியால் எப்படி இங்கு முதல்வராக தொடர முடிகிறது?

                    //இல்லை.. கொல்லுங்கள் என்று யாரும் சொன்னால் அது தான் மனித தன்மையற்ற குரோதம்…// – இது மோடிக்கும் பொருந்துமா?

                    • \\நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். பூர்வ குடிகள். இஸ்லாம் நாங்கள் ஏற்றுக்கொண்ட மதம்\\

                      எந்த வருடம் ஏற்று கொண்டீர்கள் என்று நினைவு இருக்கிறதா… அப்படி எத்தனை வருடத்துக்கு ஏற்று கொண்டுள்ளீர்கள்? ஒப்பந்தம் முடிந்த பின்னர் மறு ஆய்வு செய்து வேறு மதத்தை ஏற்று கொள்ள டெண்டர் விடுவீர்களோ… 🙂
                      இஸ்லாமை ஏற்று கொள்வதற்கு முன்னர் எந்த மதத்தில் இருந்தீர்கள்? சத்தியமாய் தெரியுமா? நீங்கள் ஏற்று கொண்ட எத்தனையாவது மதம் இஸ்லாம்?
                      நும் பல நூற்றாண்டு முன் வாழ்ந்த மூதாதையருக்கு மத நுகர்வில் இருந்த தெளிவும் சுதந்திரமும் உமக்கு இருக்கிறதா… பல வேறு மதங்களை நுகர்ந்தெரிந்து இஸ்லாமும் அவற்றுள் ஒன்றாக இருத்தினர்… அவ்வளவே…

                      \\ஈழ விவாகரமும் காஷ்மீர் விவகாரமும் – கொல்லப்படுவது அப்பாவிகள் தான்\\

                      ஈழத்தில் கொல்லப்படுவது,வதைக்கப்படுவது, சிதைக்கப்படுவது, சீரழிக்கப்படுவது அப்பாவி தமிழன்…
                      காஷ்மீரில் ராணுவத்தால் கொல்லப்படுவான் தீவிரவாதி…

                      \\மோடியால் எப்படி இங்கு முதல்வராக தொடர முடிகிறது?\\
                      ஒரு இந்திய பூர்வ குடி, மண்ணின் மைந்தன், இந்திய பாரம்பரியம் அறிந்தவன் , வந்தேறியல்லாதவன், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை உள்ளவன், பரத தாயை நேசிப்பவன் இந்தியாவில் முதல்வர் ஆக இருப்பது உங்களுக்கு என்ன எரிச்சல்… ?

      • Indha asad thaan metha padicha medhavi .. matha yaarukkum edhuvume theriyadhupa/// Paiya agraharathu Ambi ivaru hyderabad nijammu.. solla vandhuttaru…ungalalam indiala innum irukka vidrathe thappuda

        • //எந்த வருடம் ஏற்று கொண்டீர்கள் என்று நினைவு இருக்கிறதா… அப்படி எத்தனை வருடத்துக்கு ஏற்று கொண்டுள்ளீர்கள்? ஒப்பந்தம் முடிந்த பின்னர் மறு ஆய்வு செய்து வேறு மதத்தை ஏற்று கொள்ள டெண்டர் விடுவீர்களோ…
          இஸ்லாமை ஏற்று கொள்வதற்கு முன்னர் எந்த மதத்தில் இருந்தீர்கள்? சத்தியமாய் தெரியுமா? நீங்கள் ஏற்று கொண்ட எத்தனையாவது மதம் இஸ்லாம்?// – அது பற்றி உங்களுக்கு என்ன கவலை. அதனை உம்மிடம் விளக்க வேண்டிய அவசியமும் இல்லை.

          //காஷ்மீரில் ராணுவத்தால் கொல்லப்படுவான் தீவிரவாதி… // – உங்கள் விஷய ஞானம் மற்றும் மனிதாபிமானம் புல்லரிக்க வைக்கிறது.

          //ஒரு இந்திய பூர்வ குடி, மண்ணின் மைந்தன், இந்திய பாரம்பரியம் அறிந்தவன் , வந்தேறியல்லாதவன், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை உள்ளவன், பரத தாயை நேசிப்பவன்// – அவன் முதல்வராக இருப்பது உங்களை எப்படி குஷி படுத்துகிறது. எதிர்காலத்தில் இன்னும் பல முஸ்லீம்கள் கொல்லப்படலாம் என்ற உங்களது நப்பாசை தான். நீங்கள் தானே உங்கள் முந்தைய பதிலில் மனித நேயம் பற்றி பேசியவர். ஹா.. ஹா… ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

          பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட அத்வானி தானையா வந்தேறி.

          • //இஸ்லாமை ஏற்று கொள்வதற்கு முன்னர் எந்த மதத்தில் இருந்தீர்கள்?// – நிச்சயமாக இந்துவாக இருந்திருக்க மாட்டேன். ஏதோ ஒரு ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்திருப்பேன்.

            //பல நூற்றாண்டு முன் வாழ்ந்த மூதாதையருக்கு மத நுகர்வில் இருந்த தெளிவும் சுதந்திரமும் உமக்கு இருக்கிறதா// – எமது குரல் வளையை நெரித்து கொண்டிருந்த சாதிய அடிமைதனதிலிருந்து வெளியேறியதை கூட சகித்துக்கொள்ள முடியாத நீர் தெளிவையும் சுதந்திரத்தையும் பற்றி பேச அருகதை அற்றவர் .

            • \\நிச்சயமாக இந்துவாக இருந்திருக்க மாட்டேன். ஏதோ ஒரு ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்திருப்பேன்\\
              உங்களுடைய இந்து துவேஷம் நன்கு விளங்குகிறது… இந்துவும் இஸ்லாமும் மதங்கலேயன்றி சாதி அல்ல…எந்த மதம் என்று கேட்டால் ஏதோ ஒடுக்கப்பட சாதி என்று உளர்கிறீரே!!

              \\பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட அத்வானி தானையா வந்தேறி\\

              மோடி முதல்வரானது பற்றிய கருத்தில் அத்வானி எங்கே வந்தார்? இருந்தும் சொல்கிறேன்..
              அத்வானி பிறந்தது பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கராச்சியில்… 48 க்கு அப்புறம் தான்யா பாகிஸ்தான் என்ற நாடு வந்தது.. அதற்கு முன் பிறந்தவரை வந்தேறி என்று சொல்லும் உமது அறிவு மலைக்க வைக்கிறது..

              • ஒடுக்கப்பட்ட சாதியினரை உங்கள் சுய நலத்திற்காக நீங்கள் இந்து என்று அழைக்கிறீர்கள் என்பது வினவு மூலமான எனது புரிதல். இதில் நான் எங்கு உளறி விட்டேன்…

                //வந்தேறி// – இங்கு தான் அத்வானி வருகிறார். மோடி விசயத்தில் அல்ல.
                திருவள்ளுவர் இந்தியாவிலும் சரி பிரிட்டிஷ் இந்தியாவிலும் சரி பிந்தைய இந்தியாவிலும் சரி நாங்கள் இங்கே தான் இருக்கிறோம். உமது ஊனக்கன்னுக்கு நாங்கள் மட்டும் எப்படி வந்தேறிகளாக தெரிகிறோம். இதிலிருந்து உமது முஸ்லீம் துவேசம் தெரிகிறது.
                அப்புறம் மோடி பற்றிய விசயத்தில் உங்கள் மௌனம் உங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்கிறது. அவ்வளவு தான்.

                • \\ஒடுக்கப்பட்ட சாதியினரை உங்கள் சுய நலத்திற்காக நீங்கள் இந்து என்று அழைக்கிறீர்கள்\\

                  நீங்க தெளிவா புரிஞ்சுக்கலை பாய்… ஒடுக்கப்பாட்டவன் தான் இந்து என்று அழைக்கப்படுவதாக கூறினால் அப்பா பாப்பன், செட்டி, பிள்ளை, தேவர் மற்ற பிற ஒதுக்கப்படாத சாதி எல்லாம் இன்னா மதம்னு வினவு உங்களுக்கு சொல்லவே இல்லையா?

                  \\வந்தேறி – இங்கு தான் அத்வானி வருகிறார். மோடி விசயத்தில் அல்ல\\
                  அப்பாடா இப்பயவாது மோடி விசயத்தில் அத்வானியை தேவை இல்லாமல் இழுத்து அவரை திட்டும்போது இவரையும் திட்டும் குறுகிய மனப்பாங்கு இல்லாமல் போனால் மகிழ்வே…
                  \\நாங்கள் மட்டும் எப்படி வந்தேறிகளாக தெரிகிறோம்\\
                  ஏழாவது எட்டாவது வரலாறு புஸ்தகத்தை திறந்து பார்க்கவும்… சமச்சீர் கல்வியாம்ல ராஜ புத்திரர் வரலாறு, விஜய நகர பேரரசு வரலாறு வரைக்கும் இருக்கும் அப்புறம் ‘முகலாயர் படையெடுப்பு’ அப்படின்னு எதாவது இருக்கும் தேடிப்பாரும்…

                  • //நீங்க தெளிவா புரிஞ்சுக்கலை பாய்… ஒடுக்கப்பாட்டவன் தான் இந்து என்று அழைக்கப்படுவதாக கூறினால் அப்பா பாப்பன், செட்டி, பிள்ளை, தேவர் மற்ற பிற ஒதுக்கப்படாத சாதி எல்லாம் இன்னா மதம்னு வினவு உங்களுக்கு சொல்லவே இல்லையா?//

                    — ஒடுக்கப்பட்டவன் இந்து என்று அழைக்கப்படுகிறான் ஆனால் அவன் இந்து அல்ல என்பது எனது புரிதல். இதற்கும் உங்கள் பதிலுக்கும் என்ன சம்பந்தம்.

                    //ஏழாவது எட்டாவது வரலாறு புஸ்தகத்தை திறந்து பார்க்கவும்… சமச்சீர் கல்வியாம்ல ராஜ புத்திரர் வரலாறு, விஜய நகர பேரரசு வரலாறு வரைக்கும் இருக்கும் அப்புறம் ‘முகலாயர் படையெடுப்பு’ அப்படின்னு எதாவது இருக்கும் தேடிப்பாரும்…//

                    நேபாளம் என்ற இந்து நாடு இந்தியாவின் மீது படை எடுத்தால் அதனை ‘இந்துக்கள் படையெடுப்பு’ என்று சொல்வோமா… உங்கள் ஞானம் புல்லரிக்க வைக்கிறது. முகலாயர் படையெடுப்புக்கு முன் ஒருங்கிணைந்த இந்தியா என்ற ஒன்றே கிடையாது. வரலாற்று திரிபுவாதிகளின் பித்தலாட்டம் தான் நமது வரலாறு. உலகமும் அதன் வரலாறும் ரொம்ப பெருசு சார்… நீங்க எட்டாவது வரலாற்று புத்தகத்துடன் நின்று விட்டீர்கள் போலும்.

                    • //மோடி விசயத்தில் அத்வானியை தேவை இல்லாமல் இழுத்து அவரை திட்டும்போது இவரையும் திட்டும் குறுகிய மனப்பாங்கு இல்லாமல் போனால் மகிழ்வே…//

                      தேவை இல்லாமல் சமசீர் கல்வியை இங்கு இழுத்து வந்து திட்டும் உமது குறுகிய மனப்பான்மை எமக்கு வியப்பை தரவில்லை.

  10. \\மிகச் சிக்கலான காஷ்மீர் விவகாரத்தைப் பொருத்தவரையில் தீர்வு எதுவாக இருக்க வேண்டுமென்றாலும் அது அம்மக்களின் விருப்பத்துக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகக் கோரிக்கையாகவும் விருப்பமாகவும் இருக்க முடியும்\\

    திபெத் விவகாரத்திலும் இதே நிலை எடுப்பீர்களா?

    • //* திபெத் விவகாரத்திலும் இதே நிலை எடுப்பீர்களா? *//

      ஏதோ திபெத்தை வினவு வைத்திருக்கிற மாதிரி கேள்வி… அறிவை ஆர்.எஸ்.எஸ்.-மோடி-ஜெயலலிதாவிடம் அடகு வைத்து விட்டால் இப்படிதான் கேள்வி கேட்க தோணுமோ?

      • கொள்கை சார்ந்த கேள்விகளை பொது வெளியில் கேட்கும்போது அவை கொள்கை விளக்கங்களாக வெளிப்படும்… வினவுக்கும் தோழர்களுக்கும் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் சார்ந்த பொது கொள்கைகள் மட்டும் அல்லாது பல்வேறு உலக விடயங்களில் குறிப்பாக ருசியா, சைனா, அமெரிக்கா மற்றும் அநேக புவியல் நாடுகளின் அரசியல் நிலவரங்கள் மீதும் கொள்கை தெளிவு உண்டு… அக்கொள்கை தெளிவினை கேட்டு பெறுவதற்கு அறிவை அடகு வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை…

        திபெத்தை பற்றி வினவில் கட்டுரை வடிக்க அல்லது கேள்வி கேக்க வினவு திபெத்துக்கு சொந்தக்காரனாக இருக்க வேண்டும் என்று சொல்வதுதான் அறிவாளித்தனமோ…

        உங்கள் கூற்றுப்படி ஆர்.எஸ்.எஸ்.-மோடி-ஜெயலலிதா ஆகியோர் அறிவை அடகு பிடிக்கும் வேலை செய்பவர்களாக இருந்ததால் இன்றைய தேதியில் அதிகப்படியான மக்களின் அறிவை அடகு பிடித்து இந்தியாவின் மீப்பெரும் அறிவு செல்வந்தர்களாக ஆகி இருப்பார்… சுருக்கமாக சொன்னால் தலை சிறந்த அறிவாளி ஆகி இருப்பர்…

      • பல பிரதேசங்களுக்கு சுயநிர்ணய உரிமையளித்து அப்பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்ட ஸ்டாலினையும் கம்யூனிச ஆசானாக ஏற்றிருக்கும் வினவு, திபெத் விவகாரத்தில் மட்டும் மாறுபட்ட நிலையை எடுக்குமா என்ன.

        • //பல பிரதேசங்களுக்கு சுயநிர்ணய உரிமையளித்து அப்பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்ட ஸ்டாலினையும் கம்யூனிச ஆசானாக ஏற்றிருக்கும் வினவு,///

          சுயநிர்ணிய ‘உரிமையா’ ? கனவு கண்டீர்களா ? உக்ரேன், உச்பெக் போன்ற பழைய சோவியத் குடியரிசுகளின் வரலாறு படித்து பாருங்களேன். அம்மக்கள் ஸ்டாலின் பற்றி இன்றும் என்ன நினைக்கிறார்கள் என்று விசாரித்து பார்க்கவும். ராஜ்பக்ஸே பற்றி தமிழர்கள் ‘கருதுவதை’ போல் தான். முக்கியமாக உக்கேரியர்கள் ஸ்டாலினை மன்னிக்கவோ, மறக்கவோ தயாரில்லை. 1930களில், 40களில் உக்ரேனிய தேசியவாதம் மற்றும் உரிமைகள் மிக கொடூரமாக நசுக்கப்பட்டது. ரஸ்ஸியனைசேனன் என்றால் என்னவென்று தேடிப் படிக்கவும். போலந் நாட்டு மக்கள் இன்னும் கொடுமைக்கு ஆளானார்கள். வர்லாறு அறியாதவர்கள் தான் ஸ்டாலினை இன்னும் கொண்டாடுபவர்கள். ஹிட்லருக்கு ஒப்பான மனித விரோத குற்றங்கள் புரிந்தவர் ஸ்டாலின். 30 ஆண்டு காலம் சர்வாதிகாரியாக இருந்தார்.

  11. காஸ்மீர் விசியத்தில் அன்னாவில் ‘கருத்துடன்’ முரண்பட நிறைய உள்ளது. சரி. ஜன் லோக் பால் மசோதாவை விட அருணா ராய் அவர்களில் லோக் பால் மசோதா தான் சரியாக தெரிகிறது. ஆனால் லோக்பாலுக்கான போராட்டமே கூடாது மற்றும் அவர்கள் எல்லாம் கோமாளிகள் என்பது மேலோட்டமான, மூடத்தனமான வாதம்.

    கர்னாட்டாகாவில் லோக் ஆயுத்தா உள்ளது. அதன் ஆணையில் பேரில் தான் இன்று எடியுரப்பா பதவி இழந்து, உள்ளே போக வேண்டிய நிலை. லோக் பால் மசோதாவின் ஒரு அங்கம், மாநிலங்களில் லோக் ஆயுத்தாக்களை நிறுவுவது. இந்தியா முழுவது எல்லா மாநிலங்களிலும் இவை ஒழுங்காக நிறுவப்பட்டல் பல முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மாட்டுவார்கள். ஆனால் நீங்க தான் போராட்டமே வேஸ்ட் என்கிறீர்களே…

    அன்னாவின் நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. இனிமேல் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் இருக்காது.ஊழல்வாதிகளுக்கு கொண்டாட்டம் தான். business as usual. நீங்களும் இணைய்த்தில் தொடர்ந்து முழங்குங்க.

    அன்னா, பி.ஜெ.பியையும் எதிர்ப்பவர்தான். குஜாராத் போலிஸ் அதிகாரியை சமீபத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக மோடி கைது செய்ததை கடுமையாக சாடியிருக்கிறார். மோடியை ‘எச்சரித்தும்’ பேசினார். எனவே சும்மா முத்திரை குத்தாதீங்க. அவரின் ஆதாரவாளர்கள் பலரும் இந்துதுவர்கள் தான். காஸ்மீர் பற்றி hawkish மனோபாவம் கொண்டவர்கள் தான். இந்துத்துவர்கள் அல்லாத பல ’தேசியவாதிகளும்’ இதே நிலைபாடு கொண்டவர்கள். உடனே அவர்களை கோமாளிகள் என்பது லூஸுத்தனம். ஈழ விசியத்தில், கண்மூடித்தனமாக புலிகளை பலரும் ஆதரிக்கின்றனர். ஆனால் அவர்கள் இந்துத்துவத்தை ‘எதிர்ப்பவர்கள்’ ; புலிகளின் மீறல்களை கண்மூடித்தனமாக ஆதிர்ப்பவர்களை உடனே ‘கோமாளிகள்’ என்றால் எப்படியிருக்கும் ? ஒரு விசியத்தில் ஒரு நிலைபாட்டை எடுத்தாலே, உடனே அவர்களை இழிவாக பேசுவது இணையத்தில் தான் சர்வ சகஜம்,

    சரி,ஆனால் லோக் பால் தேவையா என்பது வேறு விசியம். அதை எப்படியாவது வர விடாமல் தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் செய்யும் சதி இனி வெற்றிதான். சரி, நாம் தொடர்ந்து இங்கு ஊழல் பற்றி கதைப்போம். கதைக்குதுக்கொண்டே இருப்போம்…

    • @ அதியமான்,

      “லோக் பால் மசோதாவின் ஒரு அங்கம், மாநிலங்களில் லோக் ஆயுத்தாக்களை நிறுவுவது. இந்தியா முழுவது எல்லா மாநிலங்களிலும் இவை ஒழுங்காக நிறுவப்பட்டல் பல முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மாட்டுவார்கள்.”

      அப்ப உங்க முதலாளிகளும் அதிகாரிகளும் தப்பி விடுவார்கள் இல்லையா ? இதைத்தானே ஐயா வினவு ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறார். இப்போதாவது ஒப்புக்கொண்டீரே,நன்றி !

      • //அப்ப உங்க முதலாளிகளும் அதிகாரிகளும் தப்பி விடுவார்கள் இல்லையா ? இதைத்தானே ஐயா வினவு ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறார். இப்போதாவது ஒப்புக்கொண்டீரே,நன்றி !///

        என்ன உளரல் இது ? மேலும் அதென்ன ‘உங்க’ முதலாளிகள், அதிகாரிகள். நீங்க என்ன செவ்வாய் கிரகத்திலா வாழ்கிறீர்கள் ? :))) அரசியல்வாதிகள் மாட்டும் போது, கூடவே ஊழல் அதிகாரிகளும், ஊழல் முதலாளிகளும் சேர்ந்தே தான் மாட்டுவர். (முதலாளிகளில் பல வகை உண்டு. ஊழல் செய்பவர்கள் இந்தியாவில் தான் அதிகம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் தான்.)

        வினவு ‘ஆரம்பத்திலிருந்து’ என்ன சொல்லிவருகிறது ? conspiracy nuts always see ‘conspiracy’ in anything and everything. இந்த ‘போராட்டமும்’ முதலாளிகள் மற்றும் ஊடகங்களின் ’சதிகள்’ என்ற மாபெரும் ‘உண்மையை’ தான் வினவு ‘கண்டுபிடித்து’ சொல்லி வருகிறது. ஆனால் மேதா பட்கர் போன்ற ஆர்வலர்கள் இப்போராட்டத்தை ஆதரித்தே வருகின்றனர். (கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எதோ ஒரு வகை லோக்பாலின் தேவை மற்றும் போராட்டத்தை மறுக்கவில்லை). லோக் ஆயுத்தா உருப்படியான வேலையை கர்னாடகத்தில் செய்துள்ளது. இந்தியா முழுவதும் அது சாத்தியாமானால் நல்லதுதானே. இல்ல இப்படியே தொடரட்டுமா ?

  12. வினவு தோழர்கள் மற்றும் இதர மார்க்சியர்களுக்கு ஒரு கேள்வி (ரொம்ப நாள கேட்க நினைத்தது) :

    கஸ்மீர் போன்ற ‘விடுதலை’ போராட்டங்களை ஆதரித்து, இந்திய மேலான்மையை, ராணுவ மீறல்களை ‘எதிர்க்கும்’ உங்கள் நிலைபாடுகளுடன் உடன்படுகிறேன். பாராட்டுகிறேன். (லிபர்டேரியன் என்று எம்மை சொல்லிக்கொள்கிறேன். சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் ஆதிக்க எதிர்ப்பு தான் இதற்க்கு அடிப்படை). உலகில் எந்த பகுதியிலும், எந்த கால கட்டத்திலும், இதே போல் ஒரு ஆதிக்கம் மற்றும் அடக்குமுறை நட்ந்தால், அதையும் இதே போல் பார்பட்சமில்லாமல் ‘எதிர்க்கும்’ மனோபாவம் உங்களுக்கு இருந்தால், மிகவும் பாராட்டுவேன். ஆனால் கம்யூனிசம் என்ற பெயரில், இதை விட கொடுமயான, வெளியே அதிகம் தெரியாத அடக்குமுறைகள் நடந்துள்ளன. அதை இன்றும் நியாயப்படுத்துகிறீர்கள். இரட்டை வேடம் தான் இது.

    ’முதலாளித்துவம்’ என்ற பெயரிலும் பெரும் கொடுமைகள், ஆதிக்கங்கள் நட்ந்துள்ளன. அதை கண்டிப்பதில் எமக்கு தயக்கமே இல்லை. இன்றும் தான். மீறல்களை யார் செய்தாலும், என்ன பெயரில் செய்தாலும் அவை தவறுகள் தான்.

    சோவியத் ரஸ்ஸியாவில் (அது ஸ்டாலினுக்கு பின் ‘சமூக ஏகாதிபத்தியமாக’ சீரழியும் முன்பு), ஸ்டாலின் காலங்களில், ரஸ்ஸியா தவிர இதர சோவியத் குடியரசுகள் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளை ஸ்டாலின் நசுக்கியத்தை இன்றும் வரலாற்று கட்டாயம் என்றே நியாயப்படுத்துகிறீர்கள். இது இரட்டை வேடம் தானே ? சமூக ஏகாதிபத்தியமாக சோவியத் ரஸ்ஸியா ஸ்டாலினுக்கு பின்பு சீரழியவில்லை. ஸ்டாலின் தலைமை தாங்கிய சுமார் 30 வருடங்களிலேயே அப்படி ‘சீரழிந்துவிட்டது’ என்பதே வரலாறு.

  13. யோவ் வினவு…. ஒன்னய மாதிரி ஆளெல்லாம் இருக்கிறதுனாலதான் இந்தியாவ இன்னும் கூறு கூறா போட்டு வித்துக்கிட்டு இருக்காங்க… வினவுவே பாகிஸ்தான் நாட்டுல இருந்து வெளியாகிற தமிழ் தெரிஞ்ச முஸ்லீம் பத்திரிக்கை என்று நான் சந்தேகிக்கிறேன்…

    உடனே வினவுக்கு ஜால்ரா தட்ரவங்க, கூஜா தூக்குறவங்க எல்லாம், “இவன் பேர பாத்தாலே தெரியுது.. இவன் அய்யரு, அதுனால இப்படில்லாம் பேசுறான்”னு சொல்ல ஆரம்பிச்சுருவாங்க… அவுங்கலுக்கெல்லாம் நான் அட்வான்ஸா சொல்லிக்கிறேன்.. நான் அய்யருமில்ல… அல்லாவுமில்ல…

    வினவுக்கு பொலப்பே இந்துக்கள சும்மா திட்டுறதுதான்… அட போங்கப்பா….